privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கரவி ஸ்ரீநிவாஸ்: நாங்கள், அவர்கள்..........நீங்கள்?

ரவி ஸ்ரீநிவாஸ்: நாங்கள், அவர்கள்……….நீங்கள்?

-

From ரவி சீனிவாஸ் to “சுரணையற்ற இந்தியா”, 2008/08/04 at 7:04 மாலை

தலிபான்கள் புத்தர் சிலைகளை இடித்தனர், இஸ்லாமியர அல்லாதோரை பாரபட்சத்துடன் நடத்தினர், துருக்கியில் ஆர்மினிய கிறித்துவர் இனஒழிப்பு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
இதற்கெல்லாம் யார் சாரி சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் பிற மதத்தினர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குவீர்களா.

 

From ரவி சீனிவாஸ் to “சுரணையற்றஇந்தியா”, 2008/08/04 at 6:57 மாலை

2002ல்நடந்தது குறித்து நீங்கள் எழுதுங்கள்.மொகலாய படையெடுப்பில்நடந்ததிற்கு,இடிக்கப்பட்ட கோயில்களுக்கு பழி வாங்க,பழைய கணக்கைத் தீர்க்க பாப்ரி மசூதியை இடித்தோம் என்று அவர்கள் எழுதுவார்கள். இருவர் தர்க்கமும்ஒன்றுதான், கால அளவுதான் மாறுபடுகிறது. 2002ல் குஜராத்தில் நடந்ததற்கோ அல்லது நூறாண்டுகள் முன்பு நடந்ததற்கோ இன்று  பழிவாங்குகிறேன் என்று யாரையும் கொல்ல, பொதுச்செத்துக்களை சேதம் செய்ய, பிறருக்கு ஊறு விளைவிக்க யாருக்கும் உரிமை இல்லை.

அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 1979ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் தன் ஆதரவு அரசை நிறுவியது. அதுதான் முதல் தவறு. அதற்கு தொடர்ச்சியாக அமெரிக்கா-பாக் ஒத்துழைப்பில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயிற்சி பெற்று, சோவியத் ஆதரவு அரசிற்கு எதிராக போரிட்டனர்.உங்கள் தர்க்கத்தின்படி மூலவினை சோவியத் செய்த செயல் என்றல்லவா கொள்ள வேண்டும். அதை வசதியாக மறைத்துவிட்டு எழுதுவீர்கள்.

இந்த்துவம் இல்லாத பாகிஸ்தானில் ஏன் குண்டு வெடிக்கிறது, சூடானில் ஏன்இனப்படுகொலை நடக்கிறது,பாலஸ்தீனத்தில் ஏன் ஹமாஸும், PLO பிரிவும் மோதிக்கொள்கின்றன என்று கேட்டால் பதிலாக இந்தியா என்ற நாடு இருப்பதால்தான் குண்டுகள் வெடிக்கின்றன, இந்து என்றமதம் இருப்பதே பழி வாங்கும் உணர்வை தூண்டுகிறது. எனவே இந்தியாவை ஜிகாதிகளிடம் கொடுத்துவிட வேண்டும், காஷ்மீரையும் அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும், இந்துக்கள் இஸ்லாத்தினை ஏற்று கோயில்களை,தங்கள் வழிப்பாட்டுத்தலங்களை இடித்துத் தள்ள வேண்டும்என்று தர்க்கபூர்வமாகநீங்கள் எழுதினால் நான் வியப்படையமாட்டேன்.

 

From ரவி சீனிவாஸ் to கருகும் கனவுகள் !, 2008/08/04 at 6:25 மாலை

இந்தியாவில்தமிழ்நாடு மட்டும்தான் மதுவை அனுமதித்துள்ளதா, பிற மாநிலங்களில் 100% மதுவிலக்கு நிலவுகிறதா.மது உற்பத்தியும்,விநியோகமும்,நுகர்வும் பலமாநிலங்களில் இருக்கும் போது தமிழ்நாட்டில் ஆண்கள் குடிப்பதால்,சீக்கிரம்இறக்கிறார்கள் எனவே விதவைகள் எண்ணிக்கை அதிகம் என்பது ஏற்கத்தக்கதாக இல்லையே.நந்தனுக்கு இதுக் கூடப் புரியாதா?

“ஐ.நா சபையின் ஆய்வுப்படி இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில்ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம் (குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம்.அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே விதவைகளின் விகிதம்தமிழ்நாட்டில்தான் அதிகமாம்”

60+ வயதுகளில் விதவைகள் இல்லையா. அகில இந்திய விபரம் சராசரி என்றால் அதை வைத்துக் கொண்டு ஆரம்பகட்ட கருதுகோளைக் கூட வைக்கமுடியாது.மாநிலவாரியாக,
வயதுவாரியான தகவல் இல்லாமல் மொட்டைத்தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எழுதுவதை நம்ப படிப்பவர்களெல்லாம் முட்டாள்களா.

‘Why can’t you give information which says that drinking habit has improved the standard of living of the Indians (in particular Tamilians) or the society?’ I have not claimed that drinking has improved the standards of living.If you cant understand what I had written it is better you start agains from Class I.

‘It is because, in our society opportunity is not available equally to all. For example, Hindu religion tells that barber’s son has to do that work only’. For how long you will blame Hindu religion.Even the author states that workers from other countries in Asis go to Gulf in search of greener pastures. The problem lies not with Hindu religion but with lack of employment in many countries.

*******

வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள்!!, கருகும் கனவுகள், சுரணையற்ற இந்தியா ஆகிய வினவின் கட்டுரைகளுக்கு பதிவர் ரவி சீனிவாஸ் மேற்கண்டவாறு மறுமொழிகளை ஒரு தேர்ந்த அறிஞர் போல ஏராளமான விவரங்களுடன் எழுதியிருந்தார். அறிஞரின் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் பதிலளிப்பதைவிட அக்கருத்துக்களைத் தோற்றுவித்த அவரது இதயத்தைக் கேள்வி கேட்கிறது இப்பதிவு

ரவி சீனிவாஸ் ரொம்பவும் உணர்ச்சிவயப்படுகிறார். அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் தான் நடுநிலையாக சிந்திப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கவும் அவர் முயற்சி செய்கிறார். அதுதான் கொஞ்சம் அசட்டுத்தனமான முயற்சியாக இருக்கிறது. புத்தர் சிலையை இடித்ததற்கு தாலிபான்கள் சாரி சொல்லாதபோது, மோடி மட்டும் என்ன இளித்தவாயனா என்பதுதானே உங்கள் கேள்வி ரவி சீனிவாஸ்? அதை அப்படியே வெளிப்படையாகக் கேட்டிருக்கலாமே! மோடி ஒரு இந்து தாலிபான் என்பதை நாங்கள் மறுக்கவில்லையே1

2002 குறித்து நீங்கள் எழுதுங்கள், முகலாயர் அட்டூழியங்களுக்குப் பழிவாங்க மசூதியை இடித்த்தாக அவர்கள் எழுதுவார்கள், என்று குறிப்பிடுகிறீர்கள். நாங்கள் யாரென்பது தெரிந்ததுதான். அவர்கள் சங்க பரிவாரம். அதிருக்கட்டும். நீங்கள் யார்? இரண்டும் சாராத நடுநிலையாளரா? அப்படியானால் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். தினமணி வாசகர் கடிதங்களைத் தொடர்ந்து வாசித்தால் அந்த நடுநிலைக் கலையை நீங்கள் கற்றுத் தேறலாம்.

ஆப்கானிஸ்தானை ரசியா ஆக்கிரமித்தது நியாயம் என்று வினவு சொல்லவில்லையே. சொல்வீர்கள் என்று வாய்க்குள் வார்த்தையைத் திணித்து பிறகு அதற்கு பதில் சொல்கிறீர்கள். இது புத்திசாலித்தனமாகத் தோன்றும் தரம் தாழ்ந்த விவாதமுறை. சரி, ரசியா ஆப்கானை ஆக்கிரமித்தால் அமெரிக்கா ஒரு பின்லாடனை உருவாக்கித்தான் ஆப்கானுக்கு விடுதலை வாங்கித்தர வேண்டுமா? இந்த வாதத்தின் மூலம் பின் லாடன் உருவாக்கப்பட்டதற்கான நியாயத்தை நீங்கள்தான் வழிமொழிகிறீர்கள் என்பது கூடப் புரியவில்லையா உங்களுக்கு?

முன்பு நடந்ததற்காக இன்று பழிவாங்க யாருக்கும் உரிமை இல்லை, அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். என்று கூறுகிறீர்கள். அமெரிக்கா இராக்கின் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இராக்கில் எந்த ஒரு அந்நியநாடும் தலையிடுவதை ஏற்கமுடியாது என்று இந்திய அரசாங்கம் விட்ட அறிக்கையைப் போல இருக்கிறது இது. அல்லது பாரதிய ஜனதா கையும் களவுமாகப் பிடிபட்டுவிடும் சந்தர்ப்பங்களில், சோ தெரிவிக்கும் கண்டனத்தைப் போலவும் இருக்கிறது. சந்தேகம் இருந்தால் தெகல்கா வீடியோ பற்றி சோ வின் கருத்தைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் துக்ளக் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பது தெரியவரும்.

வரலாற்றுப் பழிதீர்ப்பது என்ற சொற்றொடரை இந்திய அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது யார்? அவ்வாறு பழிவாங்குவதை நியாயப்படுத்தி அந்த அரசியலால் நாட்டை இரத்தக்காடாக்கி ஆட்சியையும் கைப்பற்றியிருக்கிறது ஒரு கட்சி. அந்தக்கட்சியின் தலைவர்களைத் தண்டிப்பதைப் பற்றி நீங்கள் எழுதவில்லையே! இசுலாமிய தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பை நியாயப்படுத்தி வினவு எழுதவில்லை. அத்தகைய பழிவாங்கும் அரசியலுக்கான நியாயத்தை முன்மொழிந்தவர்கள் அல்லது வழிமொழிகிறவர்கள் சங்க பரிவாரத்தினர்தான். சங்க பரிவாரத்தைக் கண்டிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இசுலாமியத் தீவிரவாதிகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும், இல்லையென்றால் நீ ஜிகாத் கட்சியா, கோயில்களை இடித்து மசூதி ஆக்கிவிடலாமா என்று மிரட்டுவதும் ரொம்ப பழைய உத்தி.

என்ன செய்வது, நாசூக்காக இந்துத்துவா பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அருண் ஜேட்லி (பா.ஜ.க) முதல் ஸ்வபன்தாஸ் குப்தா (இந்தியா டுடே) வரையிலான ஜி க்கள் எல்லோருமே உணர்ச்சி வசப்படும்போது, வேட்டியை ஏத்திக் கட்டுகிறார்கள். உள்ளே இருக்கும் காக்கி அண்டர்வேர் தெரிந்துவிடுமே என்று அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதில்லை. உங்களை சங்க பரிவாரம் என்று முத்திரை குத்த விரும்பவில்லை. அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். மோடிக்கு ஓட்டுப் போட்ட எல்லோரும் சங்கபரிவாரத்தினர் என்றா சொல்ல முடியும்?

போகட்டும். டாஸ்மாக் மேட்டர் பற்றி ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? அது ஒரு செய்தியின் அடிப்படையிலான பதிவு (கருகும் கனவுகள்). ஆய்வுக் கட்டுரை அல்ல. மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளின் முன்னால் சந்திக்கும் டிராபிக் ஜாமை அன்றாடம் பார்ப்பதினால் அப்படி ஒரு ஆய்வு தேவையில்லை என்று கருதி விட்டோம். இதுதான் உண்மை. குஜராத்தில் 2002 இல் நடந்த்து கலவரமா இனப்படுகொலையா என்று முடிவுக்கு வருவதற்கு செத்தவர்கள் 2000 பேரா அல்லது 1986 பேரா என்ற புள்ளிவிவரம் அவசியமில்லை அல்லவா? அது போலத்தான் இதுவும்.

  1. It’s getting better and better.
    Vinavu is setting new standards for Polemical Blogging.
    I Expect the same kind of response from your side for all of your articles
    Hope it reaches Ravi&co.

  2. அருமையான பதிவு/ துணைபதிவு தோழர்கள் வினவு, அசுரன் மற்றும் அனைவர்களும்.

    இது குறித்து ஒரு தமிழ்க் குழுமத்தின் நடைபெற்று வந்த விவாதத்தில், நான் சொல்ல நினைத்தது அனைத்தும் தெள்ளத்தெளிவாக உங்கள் பதிவில் இருந்தது மகிழ்ச்சி. இந்தக் கட்டுரை உங்க‌ள் அனும‌தியின்றியே, அதில் நான் ப‌திவிட்டு இருக்கிறேன். ந‌ன்றி.

    வேறொரு பிரபலமான குழும‌த்தில் ந‌ண்ப‌ர் கென் அவ‌ர்கள் இதை இட்டிருந்தார்க‌ள். இது உண்மையிலேயே மிக‌ ஔஅருமையான‌/ ந‌டுநிலையான‌ அல‌சல் என்ப‌து என் க‌ருத்து.

    நன்றி, வாழ்த்துக்க‌ளுட‌ன்…

    KML ராஜ‌ன்

  3. just read the response of ravi&co. i am sure we all know why they write what.
    just for ravi’s information- drinking has become an index of the increasing standard of Tamils! just see the upmarket bars and the street side rooms, varnasramam is vanishing there, equality is exhibited there!

  4. /*தினமணி வாசகர் கடிதங்களைத் தொடர்ந்து வாசித்தால் அந்த நடுநிலைக் கலையை நீங்கள் கற்றுத் தேறலாம்*/

    super punch….

Leave a Reply to Anand பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க