privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை - டாக்டர்.ருத்ரன் !

ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !

-

குருநாதர்கள் ! பாகம் – 1 – முடிவறம்

g3அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்தலம் குகைப்பொந்துகளும் இல்லை. மலை உச்சிகளும் இல்லை. ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள். அவர்களைத் தேடிப்போக நீங்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். ஆம். ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததே இல்லை.

இந்தியா என்றழைக்கப்படும் உலகமயமாக்கப்பட்ட புதிய வணிகமாயையில் இந்தக் கில்லாடி குருநாதர்கள் ஒரு வளமான சந்தையைக் கண்டுகொண்டார்கள். விற்பனைக்கான சரக்கு அவர்களிடம் தயாராக இருக்கிறது. அதற்கேற்ப தேவையையும் அவர்களே உருவாக்கி விடுகிறார்கள். இத்தகையதொரு குருநாதரை உற்பத்தி செய்வதற்கான செலவும், அவர்களைச் சந்தைப்படுத்துவதற்கான செலவும் ஆன்மீக வாடிக்கையாளர்களின் பில்லில் சேர்க்கப்பட்டுவிடும். அதனாலென்ன, குருநாதர்களின் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. இந்த வியாபாரத்திற்கு ஆன்மீகத் தணிக்கையும் கிடையாது. லவுகீகத் தணிக்கையும் கிடையாது. வாடிக்கையாளர் கூட்டமோ அதிகரித்தபடியே இருக்கிறது.

முன்னொரு காலத்தில் இந்த ஆன்மீகப் பச்சடியின் ருசிகனாக இருந்தவன் என்ற முறையிலும், “இந்த ஆன்மீகச் சந்தையில் நாமும் குதித்தாலென்ன” என்று இதனைக் கூர்ந்து கவனித்த பொறாமையும் கூச்சமும் கொண்ட தொழில்முனைவன் என்ற முறையிலும் இந்த ஆட்டத்தை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். முழுமையாக கவனித்து வருகிறேன் என்றும் சொல்ல்லாம். ஆன்மீக வியாபாரத்தில் நுழைவது என்ற இந்தச் சவாலுக்குள் நுழையவிடாமல் என்னைத் தடுத்த்து வேறெதுவும் இல்லை. என்னுடைய இயல்புதான். இயல்பு என்றால், சுயமரியாதை குறித்துத் தெளிவு கொண்ட என் இயல்பு. கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கப்பட நேரும் அபாயம் குறித்து அஞ்சும் என் இயல்பு. ஆக, இந்தத் தொழிலில் குதிக்கவொட்டாமல் என் இயல்பே என்னைத் தடுத்துவிட்டது. அந்த வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் இதை எழுதுகிறாயா என்று கேட்கிறீர்களா, இருக்கலாம்.

இன்றைக்கு இந்தத் தொழிலில் முன்னணியாக இருக்கும் குருநாதர்களுக்கு முகத்தில் எவ்வளவு முடி இருக்கிறதோ, அதற்கு மயிரளவும் குறையாமல் எனக்கும் முகம் நிறைய முடி இருக்கிறது. எனவே இந்தத் தகுதியைப் பொறுத்தவரை நான் தேர்வில் நான் பாஸ் ஆகி விட்டேன். ஆனால் குருநாதர் ஆவதும், குருநாதராகத் தொடர்ந்து நீடிப்பதும் வெறும் முடிவறம் அல்லவே.! (முடிவறம் என்ற சொல்லின் பொருள் என்ன என்று திகைககிறீர்களோ!  குருநாதர்களைக் கூர்ந்து கவனித்து வந்த ஆதி நாட்களில் நான் கற்றுக்கொண்ட தந்திரங்களில் இதுவும் ஒன்று. அன்றாட வாழ்வின் உப்புச் சப்பில்லாத விசயங்களைப் பற்றிப் பேசும்போது, புரியாத மொழியில் புதிரான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அதனால்தான் வெறும் முடி சமாச்சாரம் என்று சொல்லியிருக்க வேண்டிய அற்ப விசயத்தை முடிவறம் என்று குறிப்பிடுகிறேன்.)

இந்தத் தொழிலில் இறங்குவது குறித்து நான் தீவிரமாக யோசித்து வந்தேன் என்ற காரணத்தினால், சந்தையில் விற்பனையாகும் குருநாதர்களைப் பல ரகங்களாக வகைப்படுத்தியிருக்கிறேன். முதலாவதாக இத்தகைய குருநாதர்களை பேசுபவர்கள், பேசாதவர்கள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முடி விசயத்தைப் பொருத்தவரை அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வளர்கிறதா, நல்லது. வளர மறுக்கிறதா, பரவாயில்லை. மழுங்கச் சிரைத்து விடலாம். முகத்தை மட்டுமல்ல, தலையையும். உங்கள் தலையை நீங்கள் மொட்டையடித்துக் கொள்கிறீர்கள், அடுத்தவன் தலையை மொட்டையடிக்கவில்லையே!

பேசும் குருநாதர்களைக் காப்பி அடிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். இந்த ரகத்தைச் சேர்ந்த குருநாதர்கள் ‘சுட்டு’ பேசுவதற்கு உதவியாக ரஜனீஷின் சரக்குகள் போதுமான அளவு இருக்கின்றன என்ற போதிலும், அதிகம் பிரபலமாகாத ஏதாவது சில மத இலக்கியங்களின் பெயர்களையாவது இத்தகைய குருநாதர்கள் தொடர்ச்சியாகப் படித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தங்களது ஞானோபதேசத்தைத் தடையின்றித் தொடர்ந்து வழங்க இது அவசியம். இது கொஞ்சம் சிக்கலான ஆட்டம்தான். இதில் கொடி நாட்ட வேண்டுமானால் முடி மட்டும் போதாது. மொழி ஆளுமையும் பேச்சுத் திறனும் வேண்டும்.

guru-p1பேசாக் குருநாதர் ஆவதற்கும் சில சிறப்புத் திறன்கள் தேவைப்படுகின்றன. கருத்தை வரவழைக்கும் கலையைக் கற்றுத் தேர்வதைக் காட்டிலும் பொருளை வரவழைக்கும் கலை எளிதில் கைவரக் கூடியதுதான். ஆனால் தங்க நகை போன்றவற்றை வரவழைக்க வேண்டுமானால் அது கொஞ்சம் சிரமம்தான். நகை சப்ளையை ரகசியமாக வைத்திருப்பதற்கு நீண்ட கால வணிக ஒப்பந்தங்கள் தேவைப்படும். அதற்கு பேரம்பேசும் திறனும் ரகசியம் குலையாத கட்டுக் கோப்பான அமைப்பைப் பராமரிக்கும் திறனும் வேண்டும். வி.ஐ.பி வாடிக்கையாளர்கள் வரும்போது வெறும் சாம்பலை மட்டும் கொடுத்து அனுப்ப முடியுமா? பகுத்தறிவாளர் என்று கூறப்படுபவரும் தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்பவருமான ஒரு பிரமுகரின் வீட்டில் நடந்ததைப் போல, மூன்று பேருக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்ததோடு மோதிர சப்ளை நின்று போகலாம். நாலாவது மோதிரத்தை எடு என்று இன்னொரு வி.ஐ.பி வந்து கழுத்தறுக்கலாம்.

நீங்கள் பேசாக் குருநாதர் வகையைச் சேர்ந்தவராக இருந்து, பொருளை வரவழைக்கும் கலையும் கைவராதவராக இருந்தால், பிரமித்து நிற்கும் பக்தர்களை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம், முத்தமிடலாம், காறித்துப்பலாம், உதைக்கலாம், உருளலாம். இந்த ஆட்டத்துக்கு விதியே கிடையாது. எல்லாம் செல்லுபடியாகும்.

குருநாதர்கள் என்றாலே ஆன்மீகக் கடத்திகள்தான். எனவே வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதி வேண்டும். நீங்கள் ஜென் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் முற்பிறவி மற்றும் வரும் பிறவிகள் குறித்துக் கோடி காட்டும் வகையில்தான் நீங்கள் பேசவேண்டும். நேற்றுவரை வெளித்தெரியாத, இன்று பிரத்தியட்சமாகிவிட்ட கடவுள் என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொள்ளப் பொருத்தமான தருணம் வரும் வரையிலும், வேறுவழியில்லை – குரு என்ற பட்டத்துடன் நீங்கள் நிறைவடையத்தான் வேண்டும். ஆனால் காத்திருத்தில் வீணாகிவிடுவதில்லை. உங்களுடைய சந்தைப்படுத்தும் திறன், ஆள் பிடிக்கும் திறன் ஆகியவற்றைப் பொருத்து ஓரிரு ஆண்டுகளில் கடவுளாகி விடலாம்.

முட்டாள்கள் மட்டுமே இந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள் என்ற போதிலும், நாம் இதனை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனென்றால் இது வெறும் முடி சமாச்சாரம் இல்லையே!

– தொடரும்

தொடர்புடைய பதிவுகள்:

Gurus

டாக்டர் ருத்ரன் பரவலாக அறியப்பட்ட மனநல மருத்துவர், எழுத்தாளர். பரவலாக அறியப்படாத ஓவியர். ‘வினவு’க்கு வாரம்தோறும் எழுதுவதாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதுவார். அதன் தமிழாக்கத்தை நாங்கள் தருகிறோம். இது மொழித்தடையைக் கடந்து இந்தியாவின் பிற பகுதிகளை அடைவதற்கான ஒரு முயற்சி. எனவே இதனை ஆன்மீக பலவீனர்களாக உள்ள உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.
இந்தத் தொடர் ஆன்மீகச் சந்தையைப் பற்றியது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் மதம் பண்டமாக்கப்படுவது அல்லது ஆன்மீகம் கார்ப்பரேட்மயமாக்கப் படுவது பற்றியது. அதாவது இத்தொடர் குரு நாதர்களைப் பற்றியது.
உங்கள் மறுமொழிகளையும், கேள்விகளையும் மட்டுமின்றி உங்கள் “ஆன்மீக பௌதிக” அனுபவங்களையும் வரவேற்கிறோம்.
டாக்டர் ருத்ரனின் வலைப்பூ முகவரி –http://rudhran.wordpress.com/
  1. உண்மையில் ருத்ரனின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் படிப்பத விட தமிழில் பட்டய கிளப்புகிறது,

    வினவு அவர்களுக்கு மிக்க நன்றி.எவ்வளவு பெரிய விசயத்தை எப்படி சிம்பிளாக விளக்குகிறார்?

  2. மருத்துவர் ருத்ரன் வினவு வில் எழுதுவதை மகிழ்வுடன் வரவேற்கிறேன். மதங்களை வைத்து கொழுத்துத்திரியும் இவர்களை ம‌னவியல் சாரங்களுடன் வெழுத்துக்கிழியுங்கள். ஆனாலும் ஒரு வேண்டுகோள் அந்த மதத்தை விமர்சித்தாயா? இந்த மதத்தை விமர்சித்தாயா? என சில கோமாளிகள் பொருளற்ற பின்னூட்டமிட இடங்கொடாமல் பெருமக்களை வலையில் வைத்திருக்கும் அனைத்து மதங்களையும் உங்கள் சாட்டை நுனிக்குள் கொண்டு வாருங்கள்.

    தோழமையுடன்
    செங்கொடி

  3. பாராட்டுக்கள் வினவு!
    மக்களின் முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் பயன் படுத்தி இவ்வாறான புரோக்கர்கள் புற்றீசல் போல் புறப்பட்டு வருகிறார்கள். மனிதனே மனிதனின் கால்களில் வீழ்ந்து வணங்குகிறான். வணங்கப் படுபவனும் “நான் கடவுள் இல்லை என்னை வணங்காதே!” என சொல்வதுமில்லை. கடவுளும் வந்து “பக்தா நான் இங்கல்லவோ இருக்கிறேன்!” என்று கூறுவதுமில்லை. அனைத்து மத புரோக்கர்களுக்கும் இது பொருந்தும். அப்பாவி மக்களை இவர்கள் காப்பாற்றப் போவதுமில்லை. ஆண்டவர் வந்திவர்களை இரட்ச்சிக்கப் போவதுமில்லை. தாங்கள் வெளியிடும் இவ்வாறான கட்டுரைகள் ஒரு சில முட்டாள்களையாவது திருத்தினால்தான் உண்டு!
    ரவி…………………..

  4. அருமையான கட்டுரை.. இதன் தொடர்ச்சியையும் எதிர்பார்க்கிறேன் – நன்பன் ஒருவனுக்கு கொடுக்கவேண்டியிருக்கிறது 🙂

    அவன் பல வருடங்களாக எனக்கு நன்பன் – ஒன்றாய் தின்று~ஒன்றாய் உறங்கி~உடைகளை மாற்றி… இப்படி.. ஆனால் அவனுக்கும் எனக்கும் புரியாத கண்ணுக்குத் தெரியாத மதில் சுவராய் நின்றது அவனது பக்தி… பக்தி என்றால் சாதாரண பக்தியல்ல இஸ்கான் குழுவில் அவன் இருந்தான்.. கடுமையான சைவ டயட் ( வெங்காயம் கூட சேர்த்துக் கொள்ள மாட்டான் ) நானும் அவனும் ஒன்றாய்த் தான் தங்கிக் கொண்டிருந்தோம்..

    இதில் அவனுக்கு பல அசௌகரியங்கள்.. நானோ கடும் நாத்திகவாதி.. தினமும் குறைந்தது முட்டையாவது கருவாடாவது உணவில் இருக்க வேண்டும். வாரம் இருமுறை மாட்டுக்கறி சேர்த்துக் கொள்ளாவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது.. மேலும் கடும் உடற்பயிற்சிகள் செய்து வந்ததால் எனக்கு நிறைய புரதம் தேவைப்படும்… நான் சாப்பிடும் போதெல்லாம் அவன் முகம் போகும் போக்கு இருக்கிறதே…..

    எப்போதும் என்னிடம் நிறைய அறிவுரைகள் சொல்வான். என்னை நான் வாழும் நரகத்தில் இருந்து மீட்பதே தன் கடமையாக சொல்லிக் கொள்வான். பெண்கள் பற்றியோ காமம் உடலுறவு பற்றியோ விளையாட்டாக ஏதாவது நான் பேச்செடுத்தாலே என்னை சுட்டெரிப்பது போல பார்ப்பான்.. அவனை நான் மெய்யாகவே ஒரு ஞானியின் உயரத்தில் வைத்திருந்தேன்.. இப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்த போது தான் மெல்ல மெல்ல சில விஷயங்கள் புலனானது…

    எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள் – “பார்ப்பானொருவன் தான் குசு விடுவது யாருக்கும் தெரியக் கூடாது என்று தண்ணீரில் மூழ்கிக் கொண்டே குசு விட்டானாம்.. தண்ணீர் கொப்புளித்துக் கொண்டு மேலே வந்து காட்டிக் கொடுத்து விட்டதாம்” என்று.. அதே கதை தான்…

    அவனது மற்றொரு பக்கம் தெரியவந்தது – அவன் இனையம் வாயிலாகவும் மற்ற பல வழிகளிலும் பல பெண்களோடு நட்பு கொண்டிருந்தான் – இதில் ஒன்றும் குற்றமில்லை தான்~ வயது ~ வாலிபம் ~ கெமிஸ்ட்ரி~ etc, etc,, இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் அவன் அதில் பாதிப் பேரிடம் காதலிப்பதாக ப்ரொபோஸ் செய்திருந்தான்.. மட்டுமல்லாமல் அவனுக்கு செக்ஸுவலாக பல குழப்பங்களும் இருந்திருக்கிறது.. அதற்கு அவன் இனையத்தில் விற்கும் நவீன சிட்டுக்குருவி லேகிய பார்ட்டிகளோடும் தொடர்பு வைத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான்.. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத சிலவும் உண்டு..

    மொத்தத்தில் அவன் உள்ளே அந்தரங்கத்தில் வேறாகவும் அதை மறைக்கும் ஒரு உத்தியாகவே பக்தியை வைத்துக் கொண்டிருந்ததும் புலனாகியது..

    ஒரு வருட காலம் அவனை கவனமாக~அவனுக்குத் தெரியாமலேயே~ கண்காணித்து அவனை முழுமையாகப் புரிந்து கொண்ட பின் மெல்ல மெல்ல அவனிடம் இது பற்றிப் பேச ஆரம்பித்தேன்.. ஆனால் அவனோ தனது பிரச்சினையின் வீரியத்தை முழுதும் உணராமல் இப்போதும் தன் பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறான்..

    உங்கள் தொடரும் கட்டுரைத் தொடர்களில்.. பக்தி / அதன் உளவியல் அடித்தளம் / சமூக பொருளாதார அடித்தளம்.. போன்றவற்றைக் குறித்து ஆழமாக எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

    முன்பே புதிய கலாச்சாரத்தில் இது குறித்து சில கட்டுரைகள் வந்திருக்கிறது – கடவுள் கைது செய்யப்பட்டார் ~ மகர ஜோதி ~ கார்பொரேட் சாமியார்கள் பற்றி தோழர் மருதையன் அவர்களின் ஒரு கட்டுரை – இவற்றையெல்லாம் அவனுக்கும் வாசிக்கக் கொடுத்திருக்கிறேன்… அப்போதெல்லாம் அவன் “இந்த கம்மீஸ்களே இப்படித்தான்.. இவிங்களப் பத்தி ஏற்கனவே எங்க பிரபுபாதா சொல்லிட்டார்” என்று முடித்துக் கொண்டான் :(((

    அவனுக்கு இந்தக் கட்டுரைத் தொடரை அனுப்ப வேண்டும் – ஒரு மனநல மருத்துவரிடம் இருந்து~ அதிலும் ஆன்மீக அனுபவம் உள்ள ஒரு மருத்துவரிடம் இருந்து – வரும் கட்டுரைகள் அவனிடம் எப்படியும் மாற்றத்தை உருவாக்கலாம்.

    **********************************************************************************

    எனது தனிப்பட்ட கருத்து –

    சீனத்தில் “யிங்-யாங்” என்று சொல்வார்கள் அல்லவா? அதாவது ஒரு Gong எப்படி ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு எதிர் புறத்தில் சென்ற வேகத்தையே ஆதாரமாகக்கொண்டு பயனிக்கிறதோ…. அதே போல் பக்தி என்பது நமக்குள் நாமே தவறு என்று நினைக்கும் ஒன்றிலிருந்து ( உதாரணம் காமம் ) எதிர்புறமாக செல்லும் ஒரு முயற்சி ( அதுவும் அந்தத் தவறையே ஆதாரமாய்க் கொண்டு ) என்றே நினைக்கிறேன்… எனவே பக்தர்கள் / சாமியார்கள் உள்ளூர சில கற்பிதங்களால் தவறென்று கருதப்படும் விடயங்களை ஆதாரமாகக் கொண்ட வெளிப்புற வேஷம் என்றே நினைக்கிறேன்..

  5. பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் இந்த பைத்தியம் ருத்ரனை முதலில் ஒரு நல்ல பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரிடம் சிகிச்சை எடுக்க சிபாரிசு செய்யுங்கள். அல்லது ஏர்வாடி அனுப்பவும்.

  6. நல்ல முயற்சி. தொடர வாழ்த்துக்கள்.

    டாக்டர் ருத்ரன் அவர்களின் தமிழ் நடை அலாதியானது.

    அவருடைய தமிழ் நடை -சின்ன சின்ன வாக்கியங்களாக, ஒரு வார்த்தை உருவினால் கூட அர்த்தம் புரியாததாக, கடின வார்த்தைகள் இல்லாமல் (ஆங்கிலத்தில் தான் டாக்டர் சிரமப்படுத்துகிறார் என கேள்விபட்டேன்) எளிய வார்த்தைகளில் விளக்குவார்.

    அவர் எழுதிய “உறவுகள்” பற்றிய புத்தகத்தை இதுவரை 30 மணமக்களுக்கு கொடுத்திருப்பேன்.

    இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், அவர் ஆங்கிலத்தில் எழுதுவார். நீங்கள் மொழி பெயர்ப்பதாக
    குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

    தொடர்ந்து அவரே தமிழில் வினவில் தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை இங்கு வைக்கிறேன்.

  7. மகிழ்ச்சியான செய்தி !

    மருத்துவர் ருத்ரனின் கட்டுரைகள் தமிழில் வராதது ஒரு பெரிய குறையாக இருந்தது. இப்போது வினவின் மூலம் அது சாத்தியமாகியுள்ளது . வினவுக்கு நன்றி!

  8. எனது அனுபவம்:
    இது போன்ற ஒரு அமைப்பில் ஆசிரியர் பயிற்சி வரை சென்றேன். பின் விலகி விட்டேன்.
    காரணம்:
    1. எனக்கு தெரியாத புதிய விஷயம் எதுவும் சொல்லித் தரப்படவில்லை.
    2. எனக்கு தெரிந்திருக்கும் அளவு கூட தெரியாதவர்கள் எனக்கு போதிக்கும் பணியில் இருந்தார்கள்.

    எனவே இறைவனை காண ஏஜெண்டுகள் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

  9. //பிரமித்து நிற்கும் பக்தர்களை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம், முத்தமிடலாம், காறித்துப்பலாம், உதைக்கலாம், உருளலாம். இந்த ஆட்டத்துக்கு விதியே கிடையாது. எல்லாம் செல்லுபடியாகும்//

    அருமை!!!!!!!!!!!

  10. மிக முக்கியமான பணியை எடுத்துள்ளீர்கள்!

    இதுவரை உங்கள் பணிகளிலேயே இதுதான் சிறந்தது என எனக்கு தெரிகிறது.

    நன்றிகள் உங்களுக்கும் டாக்டருக்கும்

  11. முழு பைத்தியம் ருத்ரனுக்கு முன்பாக முதலில் குருத்து போன்ற அரை பைத்தியங்களை பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரிடம் சிகிச்சை எடுக்க சிபாரிசு செய்யுங்கள். அல்லது ஏர்வாடி அனுப்பவும்.

  12. I have read many books, which says GOD is beyond mind.

    I can give proof from
    1.vallalar
    2.vedathri maharishi
    3. nithyanada paramahamsar
    4. Sri sri ravishankar
    ……

    psyc doctors are dealing with mind. I think they are failures to recover people from mental diseases.

    All these saints have formed yogas and kriyas. You can visit websites get help from it.

  13. //நீங்கள் பேசாக் குருநாதர் வகையைச் சேர்ந்தவராக இருந்து, பொருளை வரவழைக்கும் கலையும் கைவராதவராக இருந்தால், பிரமித்து நிற்கும் பக்தர்களை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம், முத்தமிடலாம், காறித்துப்பலாம், உதைக்கலாம், உருளலாம். இந்த ஆட்டத்துக்கு விதியே கிடையாது. எல்லாம் செல்லுபடியாகும்.//

    அருமை!
    இங்கும் பேராசை பிடித்தோரால் ஆமோகமாக நடக்கிறது.
    ஆத்மீக வியாபாரம்.

  14. உண்மை தான்…சிறு மாற்றம் ….நாங்கள் இறைவனை அடைய முயற்சிக்கிரோம் சிலர் அதன் பலன்கள் கண்டு திசை திரும்பிவிடுகிறார்கள்…….அதன் சோதனையும் மிக ஆழமானது…உண்மையான சிலரும் உண்டு. என்னால் குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை.

  15. வாருங்கள் ருத்ரன் அவர்களே ,உண்மையான ஆன்மீகம்,வணிக ஆன்மீகச் சந்தை பற்றியும் வேறுபடுத்தி விளக்குங்கள் .

    “முட்டாள்கள் மட்டுமே இந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள்”
    நன்றாக சொன்னீர்கள் !

  16. உலகத்திலேயே நாத்திக இயக்கம் ஒன்று தோன்றி, கள வேலைகள் செய்து, சமூகத்தில்
    ஒரு நல்ல ஆற்றலாய் இருப்பது, தமிழகம்.எல்லாம் பெரியாரின் ஆசி தான்.

    இப்படி சொன்னதும், நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.

    ஆனால், உள்ளே நடக்கும் விசயம் என்ன? ஊரெங்கும் பல சாமியார்கள் விரிந்து,
    பரந்து கிடக்கிறார்கள்.

    ஏதாவது, பெண் பாலியல் விவகாரம், பலி கொடுத்தல் சமாச்சாரமாய் கொஞ்சம் எல்லை மீறும் பொழுது மட்டுமே மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் லீலைகளை ஊடகங்கள் பட்டியலிடுகின்றன.

    என் சொந்தங்களிடத்தில், சமீபத்தில் ஒரு நிகழ்வு

    இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டு அம்மா நல்ல உழைப்பாளி. நடுத்தர வயதில், வரும் இடுப்புவலி, கழுத்துவலியால் துன்பபடுவது மாதிரி, அவரும் துன்பப்பட்டார்.

    குழந்தைகள் கவனிப்பு, வீட்டு வேலைகள் என காலையில் 5.30 க்கு எழுந்தால், இரவு 11.30 வரை வேலை தான். இடைக்காலத்தில், கணவரின் வருமானம் கொஞ்சம் உயர, அந்த அம்மா வேலைக்கு செல்வதை
    நிறுத்தினார்.

    அந்த அம்மாவின் நோய்க்கு மருந்து ‘ஓய்வு’. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, மதியம் ஒரு மணி நேரம் தூங்கினால், நிறைய ரீலீப் இருக்கும்.

    இடைக்காலத்தில், தன் தங்கையின் கைக்குழந்தையை ஒரு மாதம் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வர, அந்த ஒரு மணி நேர தூக்கம் போய், நிறைய தடுமாறி போய்விட்டார்.

    ஒரு மாதம் கழித்து எனக்கு செய்தி வந்தது.. அந்த அம்மாவின் வியாதிக்கு, ஒரு சாமியாரைப் பார்த்து, அமாவாசை நடுஜாமம் பூஜை செய்து, ஏதோ அந்த சாமியார் தாயத்து கொடுத்தனாம். அதற்கு அந்த
    சாமியார் போட்ட பில் ரூ. 6000.
    (அந்த அம்மா வேலை செய்த காலத்தில், இந்த தொகை 3 மாத சம்பளம்.)

    அதே சமயத்தில், அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஒரு மாதத்தில் முடிவுக்கு வந்தது.
    அவரும் ஓய்வு எடுத்து, சரியாகிவிட்டார்.

    நான் நாத்திகவாதி என்பதால், என்னிடம் இந்த விசயத்தை மறைத்துவிட்டார்கள்.

    இதை தெரிந்து கொண்டு, போனில் கேட்டேன். “பூசாரியைப் பார்த்தீங்க! பூஜையும் போட்டீங்க!
    இதே காலத்தில் மருத்துவரைப் பார்த்தீர்களா”

    ” பார்த்தோம்” என்றார்கள்.

    “அதுதான் பூஜை போட்டீங்களே! பிறகு எதற்கு மருந்தும், மாத்திரையும் எனக்கேட்டால்.”

    “நோய்க்கும் பார்க்கனும்! பேய்க்கும் பார்க்கனும்” என்றார்கள்.

    தலையடித்துக்கொண்டேன்.

    கார்ப்பரேட் சாமியார்கள் இதில் தனிவகை. லோக்கல் (ஆ) சாமிகள், ஆயிரத்தில், லட்சத்தில் புழங்கினால், இவர்கள் கோடிகளில் புழங்குகிறார்கள்.

    மருத்துவர் ருத்ரன் நல்லதொரு விசயத்தை தொடர்ந்து இருக்கிறார். வேலைகள் ஏதாவது காரணம் சொல்லி காலம் தாழ்த்திவிடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  17. வினவுக்கு ஒரு வேண்டுகோள், பின்னூட்டங்களில் அவதூறுடன் வந்தாலும், அவற்றில் பெயர் அளிப்பவர்களை இப்போது போலவே Strike-out உடன் அனுமதியுங்கள், அவர்களின் வருங்கால அறிவுக்கு உதவும்.

    மருத்துவரின் பதிவு குறித்து; (மன்னிக்க மருத்துவர் என்ற பெயரே கெட்ட வார்த்தையாகிப் போனாலும், இந்த சரியான வார்த்தைப் பயன்பாட்டை என்னால் மறுக்கமுடியவில்லை.) தெளிவான வார்த்தைகள், அவரின் புத்தகங்களைப் போல. இருபது ஆண்டுகள் கழிந்தாலும் அவரின் கருத்துக்கள் தெளிவாக இன்னமும் கூர்மையாக இருக்கின்றன, மருத்துவருக்கும் நன்றி, அவரின் எழுத்துக்களை தமிழில் கொணரும் உங்களுக்கும் நன்றி.

    //பகுத்தறிவாளர் என்று கூறப்படுபவரும் தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்பவருமான ஒரு பிரமுகரின் வீட்டில் நடந்ததைப் போல, மூன்று பேருக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்ததோடு மோதிர சப்ளை நின்று போகலாம். நாலாவது மோதிரத்தை எடு என்று இன்னொரு வி.ஐ.பி வந்து கழுத்தறுக்கலாம்// என்ன சொன்னாலும் கேட்கும் நிலையிலா அந்தப் பகுத்தறிவாளர் இருக்கிறார்? ஓட்டு கிடைக்குமென்றால் அவர் நிச்சயம் இதை மாற்றிப் பேசுவார். இப்போதெல்லாம் சாத்தானின் துணையை நாடத் துவங்கிவிட்டார் அந்தப் பகுத்தறிவாளர்.

    இந்தியாவில் தான் அப்படியென்றால், இங்கே அமேரிக்காவிலும், மக்களின் முட்டாள்தனத்தை பயன்படுத்தி பெரும் பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், கமாண்டோ(??) செல்வம், பீர் சையது சாகிப் எனப் பலர்.

  18. மிக நல்ல தொடக்கம் , அருமையான கட்டுரை . உண்மையிலேயே தமிழாக்கம் மிக அருமை.. வாழ்த்துக்கள் தோழர்களே..

  19. நல்ல முயற்சி. தொடருங்கள்.

    சென்ற வாரம், பரிசல்காரன் அவர்கள் பதிவில் போட்ட பின்னுட்டம் இது.

    //எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அதில் எதையும் துறக்காத ஒரு சாமியாரின் உபதேசங்கள். அரசியல்வாதிகள் அடிச்ச பணம் எல்லாம் ஜூஜூபி. ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, மாதா அமிர்தானந்தா, பங்காரு அடிகள், நாராயணியம்மா… லிஸ்ட் போய்கிட்டே இருக்கு. எல்லாரும் பில்லியன்ர்கள் முதல் இல்லாத வியாபாரம். கொழிக்கிறார்கள். இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? ஆடிட்டிங் எல்லாம் உண்டா?//

    இதைத் தவிர மக்களை முட்டாளாக்க, வித விதமான விளம்பரங்கள் தொலைக்காட்சியிலும்,
    பத்திரிக்கைகளிலும். இவர்களுக்கு முக்கியத்துவம் தர கூடாது. விளம்பரங்கள் போட கூடாது என்ற கொள்கையை பத்திரிக்கைகளும், தொ.காட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டும். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று ஓடும் மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. வித்வித யோகா பெயர்கள் (ஆளுக்கு ஒன்றாய் பிரித்துக் கொண்டார்கள்) நவரத்தின கற்கள், ரேக்கி, சைனா ஜோசியம், காந்த சிகிச்சை, வாஸ்து…. நினைவுல அவ்வளவுதான் இருக்கிறது. இந்த பிசினசு யார் வேண்டுமானாலும் தொடரலாம். முதலும் அதிகம் தேவையில்லை 🙂

    கடவுளை நம்புபவர்களுக்கு இடையில் ஏஜண்டுகள் எதுக்கு?

  20. ருத்ர‌னின் ராஜ் டிவி நிக‌ழ்ச்சிக‌ளையும் அத‌ன் பிற‌கு அவ‌ர் த‌மிழில் எழுதிய‌ சில‌ புத்த‌க‌ங்க‌ளையும் ப‌டித்த‌ அனுப‌வத்தில் அவ‌ரின் த‌மிழ் மொழி ந‌டை சிற‌ப்பானதாக‌ இருந்த‌து.இங்கு அவ‌ர் த‌மிழிலேயே எழுத‌ என்ன‌ த‌டை????

  21. ராஜாவின் பின்னூட்டத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது சரியான அணுகுமுறையல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு இன்றைய காலச் சூழலில் ஒரு முக்கியமான பிரச்சனையை நேர்மையோடு விவாதிக்கும் போது இத்தகைய திசை திருப்பல்கள் ஏற்கத்தக்கதல்ல.

  22. I appreciate Mr.Rudhran on this analysis. Kudos to Vinanvu. Nowa days Saamiyar business is very lucrative. Will give tremendous power/wealth/popularity. When some body becomes Giruji, he/she need not have to bother about morality/ethics and even if he/she does any crime, they can easily comeout bz all their discipiles are from only power center.( Police, judge, IAS,IPS,MLA,MPs) And these gurujis in a clinical precision catering to the different layers of the society. ( this guruji business offers huge potential in india. Hence each guruji doing business with particular clan of people) For example= Sankarachari, traditionaly adressing to upper caste especially brahmins. Bangaru addressing to middle/lower middle class especially non brahmin clan. Ravishankar addressing mainly to corporate people. And another guruji(Jakki) in TN claiming that he is doing “silent revolution”.What a comedy!!! Another comedian guruji by name kalki who is liberting the sinned soul by dancing. The similarties among these people are excellent communication/oratory skills. Their recipe is very clear 20% zen, 20% sufism 20%rajnessh 10% J krishnmurthy 30% from the so called sacred books from different religions geetha,bible.koran etc.. Depends on the guruji and needs of the particular clan this receipe formula will change. We have to ask each guruji’s financial balane sheet. how much money they earned? where are all the money? More education/awareness is essential at this hours for our foolish people.

  23. சில ஆண்டுகளுக்கு முன்பு வசூல் ராஜா படம் வந்த பொழுது கட்டிப்பிடி வைத்தியம் பேசப்பட்டது. பேச்சினிடையில், அப்பொழுது தான் சொன்னார்கள். அமிரிதானந்தமயி கட்டிப்பிடி ஆசிர்வாதம் தான் செய்கிறார்கள் என.

    அதன் பிறகு, அம்மா வருகை இந்த நாள், இந்த இடம் என்ற அறிவிப்பை பார்த்த பொழுது, போய் நாமும் ஒருமுறை கட்டிப்பிடித்து விட்டு வந்தால் என்ன என தோன்றியது. (அம்மா வயது உள்ள்வர்களை என்னய்யா நீ இப்படி பேசுற என்று ஒழுக்கவாதம் பேசுபவர்களுக்கு.. ஒரு நினைவூட்டுகிறேன். செக்ஸ் குயின் என பேசுகிறார்களே… ஷகிலாவுக்கும் தான் எங்க சித்தி வயசு).

    பிறகு, சுனாமி வந்த பிறகு, அமிர்ந்தானந்த மயி அம்மா 400 கோடி செலவில், வீடிழந்தவர்களுக்கு, அல்லது வீடற்றவர்களுக்கு கட்டித்தருவதாக அறிவிப்பு கேள்விப்பட்டதும் தான் தெரிந்ததது. இந்த அம்மா தமிழகர்களை மட்டுமில்லை. சர்வதேச அளவில் பலரை கட்டிப்பிடிச்சி ஆசிர்வாதம் செய்யுதுன்னு தெரிஞ்சது.

    ஒருமுறை மணியன் செல்வன் இந்த அம்மா படத்தை அழகாக வரைந்திருந்தார். பாருய்யா! எல்லா ஊடங்கங்களும் அவர்கள் அளவுக்கு ஆன்மீக சேவையிலும் ஈடுபடுகிறார்கள். அந்த சேவையின் மூலம், நன்றாக கல்லாவும் கட்டுகிறார்கள் என அறியவந்தேன்.

    புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார். ஆனா, இந்த புதுசா வந்த ஜக்கி சாமி “எல்லாவற்றிக்கு ஆசைப்படு” என புதுசா சொன்னார்.

    சாமியார்கள் பற்றி, ஏதோ கமெண்ட் போடனும் நினைச்சா, போய்கிட்டே இருக்கு.

    மானேஜர் முறைக்கிறான். அந்த ஆள், சாயிபாபா பக்தன். வாரவாரம் பஜன்ஸ் (பஜனை பாடல்கள்) பாட போவதாக, ஒருமுறை பெரிசா பீத்திகிட்டான். வந்து பார்த்தான்னா, நான் காலி. இத்தோட நிறுத்திக்கிறேன்.

  24. Stress நிறைந்த இக்காலங்களில், இது போன்ற குருனாதர்களின் பணி தேவையாகத்தான் இருக்கிறது. அனைவருமே போலிகள் அல்ல்து ஃப்ராடுகள் என்று பொதுப்படுத்தமுடியாது. இந்தியாவில் பிற துறைகளில் இருக்கும் அளவிற்க்கு இதிலும் போலிகள் மற்றும் பிராடுகள் உண்டுதான்.

    ஆனால் “Something is better than nothing” என்ற பழமொழி இங்கு பொருந்துகிறது. இந்துக்கள் என்ப்படும் மக்கள் இறைவன் பெயரை சொன்னால் தான் நன்கொடை அதிகமாக அளிக்கிறார்கள். இந்த குருனாதர்கள் அது போன்ற நன்கொடைகளை கலெக்ட் செய்ய ஒரு பாயின்டாக பணி செய்கிறார்கள்.
    சாய்பாபா பல நூறு கோடிகளுல் இலவச மருத்துவமனை மற்றும் குடினீர் திட்டங்களை அருமையாக செய்ல்படுத்துகிறார். அதே போல்தான் மேல்மருவத்தூர் மற்றும் ஆனந்தமாயி.

    இதில் ஊழல் மற்றும் திருட்டு எத்தனை சதம் என்பதுதான் பிரச்சனை. கருப்பு பணம் : இதில் வரும் நன்கொடைகளின் விளைவுகள் வேறு விதம்.

    ஷீரி ஷீரி ரவிசங்கர் பல அருமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி அக்கரை கொண்ட ஒரு அபூர்வ சாமியார் அல்லது குரு. பல சிறைச்சாலைகளில் தம் வகுப்புகளை இலவசமாக நடத்துகிறார். யோகா மற்றும் தியானம் / மூச்சு பயிற்சி உடல் மற்றும் மன்னலத்திற்க்கு மிக மிக நல்லது.

    இவர்களிடம் இருந்து நல்ல விசியங்களை மட்டும் எடுத்துக்கொள்வதுதான் விவேகமானது. பார்ப‌னீய‌ம்/ இந்துத்வம்/முதலாளித்துவம் என்ற‌ கோண‌த்தில் ம‌ட்டும் பார்த்தால் ப‌ய‌ன் இல்லை.

  25. “ஆன்மீக வியாபாரத்தில் நுழைவது என்ற இந்தச் சவாலுக்குள் நுழையவிடாமல் என்னைத் தடுத்த்து வேறெதுவும் இல்லை. என்னுடைய இயல்புதான். இயல்பு என்றால், சுயமரியாதை குறித்துத் தெளிவு கொண்ட என் இயல்பு. கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கப்பட நேரும் அபாயம் குறித்து அஞ்சும் என் இயல்பு. ஆக, இந்தத் தொழிலில் குதிக்கவொட்டாமல் என் இயல்பே என்னைத் தடுத்துவிட்டது. அந்த வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் இதை எழுதுகிறாயா என்று கேட்கிறீர்களா, இருக்கலாம்.”
    மிகவும் வெளிப்படியான கருத்துக்கள். உங்கள் நல் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

  26. //Stress நிறைந்த இக்காலங்களில், இது போன்ற குருனாதர்களின் பணி தேவையாகத்தான் இருக்கிறது. //

    அப்படியே விபச்சாரம், போதை உள்ளிட்ட பிற சமூக அனர்த்த சர்வ ரோக நிவாரண வஸ்துக்கள் குறித்து ஸ்ரீ ஸ்ரீ கேஆரனந்த் அதியாமான ஸ்வாமி அவர்களின் கருத்துரயை கேட்க ஆவலாக உள்ளேன்.

    ஜெய் பக்கிராம்…..

    கியிஞ்ச டவுசர்

  27. ருத்ரன் அவர்களுக்கு,

    வணக்கம். இதுமாதிரியான ஈ-மெயில்கள் முன் அனுமதியின்றி எதிராளியின் நேரத்தை எடுத்துக்கொள்பவை. அதற்கான மன்னிப்பை இப்போதே கேட்டுக்கொள்கிறேன்.

    வினவில் மொழிபெயர்க்கப்பட்டு வந்த குருநாதர் பாகம் – 1 னைப் படித்தேன். ஏற்கனவே கோவையில் ஒரு முறை பேச வந்தபோது ‘தியானம், யோகா எல்லாம் நல்லதுதான். ஆனால், யாருக்கு?!’ என்று கேட்டீர்கள். அதன் உள்ளர்த்தம் உணர்ந்து அதிர்ந்தது அரங்கு. அதன் நீட்சியாக இக்கட்டுரையை படிக்கிறேன். ஒத்த அபிப்ராயம் கொண்டவர்களைக் காண்கையில் ஏற்படும் குதுகலம் தங்களது எழுத்துக்களை வாசிக்கையில் ஏற்பட்டது. ஒரு வாசகனாக எனது நன்றிகளைப் பகிர்ந்து கொள்ளவே இத்தனி மடல்.

    மிக்க அன்புடன்,
    செல்வேந்திரன்
    கோயம்புத்தூர்
    http://www.selventhiran.blogspot.com
    i request all friends and comrades to comment in vinavu, i am also very thankful for the comments and suggestions. i have also taken adequate note of the criticism.

  28. Dear Dr. Rudhran, i am very much eagarly waiting for your subsequent chapters.

    Most of the youths have a ‘just taste it then trust it’ mind in this field.

    One of my brahmin friend having too many gurus in his life and he is justifying all. I don’t understand this. However, in material life he is sucessful, gives chance to preach others.

    I hope you will discuss these kind of matters in the forthcoming chapters.

    I will forward and introduce ‘vinavu and Dr Rudhran’s article to my thiest frinds.

    Thanks.

    With regards

    Venu

  29. ருத்ரன் அவர்கள் இன்றைய சாமியார்களை இரு வகையாகப் பிரித்துள்ளது போல நான் சாமியார்களை வேறு இரு வகையினராகக் கருதிவந்துள்ளேன்.

    முதல் வகை மதத்துடன், மத நிறுவனங்களுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள சாமியார்கள், எ.கா – சங்கராச்சாரியாகள், ஆதீனங்கள், மடாதிபதிகள்.

    இரண்டாவது வகை, மதத்தைச் சார்ந்து இருந்தாலும், மத நிறுவனங்களுக்குள் நேரடியாகப் போகாமல் தனக்கென தனியாக கோஷ்டி சேர்த்துக்கொள்ளும் குருஜிக்கள். (ருத்ரனின் இரண்டு பிரிவினரும் இதில் அடங்குவர்).

    முதல் வகைச் சாமியாராவது சற்று சிரமமான காரியம் என்பதால் ருத்ரன் அதற்கு முயற்சிக்காமல் விட்டுவிட்டார் என நினைக்கிறேன்.

    மற்றபடி கடவுள் பெயரைச் சொல்லி மக்களுக்கு நாமம் போடுவதில் இரு வகையினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை.

    இதில் சிலர், கிருபானந்த வாரியார், செத்துப் போன பெரியவாள் எல்லாம் நல்லவர்கள் இப்போதுள்ளவர்கள் மோசம் என்று கருதுகிறார்கள்.

    கழுதை விட்டையில் முன்விட்டை வேறு பின்விட்டை வேறா?

  30. ////Stress நிறைந்த இக்காலங்களில், இது போன்ற குருனாதர்களின் பணி தேவையாகத்தான் இருக்கிறது. //

    அப்படியே விபச்சாரம், போதை உள்ளிட்ட பிற சமூக அனர்த்த சர்வ ரோக நிவாரண வஸ்துக்கள் குறித்து ஸ்ரீ ஸ்ரீ கேஆரனந்த் அதியாமான ஸ்வாமி அவர்களின் கருத்துரயை கேட்க ஆவலாக உள்ளேன்.

    ஜெய் பக்கிராம்…..

    கியிஞ்ச டவுசர்

    ////

    உடல் மற்றும் மன நலத்திற்க்கு தீங்கானவை வெறுக்க
    / ஒதுக்க தக்கவை.

    உங்களுக்கு ஈடுபாடு இல்லாவிட்டால் அது உங்க உரிமை. ஆனால் லட்ச்சக்கணக்கானவர்களுகு ஈடுபாடும், பயனும் கிடைக்கிறது. அது அவர்களின் உரிமை. சட்ட விரோத நடவடிக்கைகள் எதாவது நடந்தால், அதை கண்டரிந்து, தண்டிப்பது அரசி / போலிஸ் மற்றும்
    ஆர்வல்களின் கடமை.

    ஸ்டாலின் மாவோ போன்ற ‘மாகன்களை’ தெயவமாக வழிப்படும் உரிமை உங்களுக்கு இருக்கிறதல்லவா. அதே போல் தாம் எனைய மக்களுக்கும் அவர்கள் விருப்படி வாழ உரிமை உண்டு.

    கம்யூனிசத்தை தீவிரமாக நம்புவதும் ஒரு வகை மதவாதம் தான். அறிவுசார் அணுகுமுறைகளை விட உணார்ச்சி சார்ந்த‌
    ‘தார்மீக’ கோபம் தான் அதிகம் வழினடத்தும்.
    பொன்னுலகத்திற்க்கு அது ஒன்றுதான் சரியான பாதை, தேவதூத‌ர்களின் மறுப்பக்கதை ஆதரத்துடன் நிறுபித்தாலும்
    நம்ப மறுப்பது, ‘எதிரி’ என்று ஒரு வர்கத்தை கற்பித்து, அதை வெறுப்பது. வெறுப்பு மற்றும் ஒரு மாபெரும் தலைவர்
    மீது தனிமனித துதி ; மாற்றாளர்கள் எல்லாம் அயோகியர்கள் அல்லது மூடர்கள் என்று கற்பிதம். மததிற்க்கும். கம்யூனிச‌
    பாணிக்கும் நிறையவே ஒற்றுமைகள். விளைவுகளும் பல பல மனித உரிமை மீறல்கள் தாம்.

  31. ஏம்பா அதியமான் கியிஞ்ச டவுசரு சாமியாருகள பத்திதானா கேட்டாரு…. பதில் சொல்ல முடியலேனா உடனே இப்படி முதலாளித்துவ பைபிள் வசனங்களை(மூட நம்பிக்கைகளை) அவிழ்த்துவிடுவதை ஸ்ரீ ஸ்ரீ அதியாமானந்த ஸ்வாமி எப்போதுமே செய்து வருகிறார். பாவம் அவரும் என்ன செய்வார்.

    முதலாளித்துவ மூட பக்தி இல்லையென்றால் அன்றாட வாழ்க்கை போராட்டத்தில் தற்கொலை செய்து கொள்வார் ஸ்ரீ ஸ்ரீ சுவாமிகள்.

    புரச்சி

  32. //ஆதரத்துடன் நிறுபித்தாலும்
    நம்ப மறுப்பது//

    உங்களுடன் ஒரே நகைச்சுவைதான் போங்கள். கடந்த சில வருடங்களாக நீங்களும் உங்களது கும்பலும் ஆதாரத்துடன் நீருபிக்க முற்பட்ட வரலாறை நாங்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

    புரச்சி

  33. உலக பொருளாதார மன்றத்தில் ஜக்கி வாசுதேவுக்கு என்ன வேலை? பொருளாதாரம் படிக்க போனரா! இல்லை போதை மருந்து வாங்க போனாரா! இல்லை பொருக்கி தின்ன போனாரா! கேட்டு சொல்லுங்க அதியமான்.

  34. Velen,

    why don’t you ask Jaggi yourself ? actually this is no big deal. Shri Shri Ravi Sanakr openly talks about the need for Liberalisation and privatisation and about the evils of statism. ok. and i fully agree with him and admire his courage in speaking out like this. ok.

    and Puratchi,

    i suppose your puratchi is only in Tasmark shop.
    Ok. you may continue to belive in your fool’s paradise.
    who cares..

  35. சரிங்க அதியமான், ஜக்கிகிட்ட நான் கேட்டுக்கறேன் எங்க ஊரு பக்கம்தான். நீங்க ரவிசங்கர் கிட்ட கிழே வரும் கேள்விகளை கேட்டு சொல்லுங்க.

    1. வாழும் கலை, உலக அமைதின்னு சொல்லிக்கிட்டு, யாழ்பாணம் போயி கூட்டம் போட்டு, வீடியோ எல்லாம் எடுத்தீங்களே, என்ன செய்தீங்க? அமெரிக்கா கிட்ட காசு வாங்கியாச்சா, இல்ல உளவு தகவல் எல்லாம் இந்தியா கிட்ட கொடுத்தாச்சா? யாழ்பாண இளைஞர்களை காயடிக்கற வேலை முடிந்ததா?

    2. நோபல் லாபி என்னாச்சு? ரிட்டர்ன் எவிடென்ஷ் பத்தலையாமா?

    3. நக்மா ஏன் வெளிய போனார்? டெக்னிக்கல் ப்ராப்ளமா?

    ஆன்மீகத்தில மீடியேட்டர் வேணும்ல, அதான் உங்களை கேட்க சொல்றேன். வருத்தம் இல்லையான, நிறைய கேள்விகள் வரிசையில் இருக்கு. டீலுக்கு ரெடியா அதியமான்.

  36. ஒபக்தர்களை போதையில் வைத்திருப்பதன் மூலம்தான் மதம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றது. பக்தி என்னும் போதை பக்தனின் உரிமை என்று அதற்காக வாதாடுவது ஜனநாயகம் என்றால் sress ஐ தோற்றுவித்த சமூக சூழல் எப்படி ஏற்பட்டது என நோய் நாடி அறிய முற்படாத ஜனநாயக மறுப்பை எந்த வகையில் சேர்ப்பது….

    உணர்ச்சி சார்ந்த தார்மீக கோபம் என்பது குஐராத் இந்து மத வெறியர்களுக்கு 2002 ல் வந்தது. பரிவாரங்களுக்கும் பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் ஆதிக்க சாதிகளுக்கும் இயல்பில் உள்ளது. உணர்ச்சி அறிவின் வேலையை மட்டுப் படுத்தும்தான். நீங்கள் ஆர்எஸ்எஸ் ஆ, அதிமுக வா, இந்து முன்னணியா என்ற பிரச்சினை இல்லை எதிரி முஸ்லீம் என உணர்ச்சி வயப்படும் இந்த இயல்பில்…. ஆனால் கம்யூனிஸ்டுகள் உணர்ச்சிவயப்பட்டு அல்லாமல் உணர்வு ரீதியாக அதாவது அறிவுப்பூர்வமாக சிந்தித்து அதுபற்றி விவாதித்து முடிவு செய்கின்றனர். அதில் சிறுதவறு நிகழ்ந்தாலும் போலிகளாக திரிபுவாதிகளாக அவதாரம் எடுத்துவிடுவர். மற்றபடி தனிமனித துதி என்பது பொதுவுடமை இயக்கத்தில் கிடையாது. ஒரு மனிதரை அவரது சமூக மாற்றத்திற்கான பங்களிப்பின் கீழ்தான் கம்யூனிஸ்டுகள் மதிக்கின்றான் அது மார்க்ஸ் ஆகவே இருந்தாலும்…மதம் ஆன்மீகம் போன்றவற்றுக்கும் கம்யூனிசத்துக்கும் விளைவு என்ன வகையில் ஒற்றுமை…. மனித உரிமை மீறலா… அதாவது கொள்ளை அடிப்பதற்கான உரிமை தரப்படாதது அல்லது மக்களை முட்டாள்தனத்தில் நீடிக்க விடும் உரிமை… நீங்கள் அதற்கு கூட பேசவில்லை… முதலாளிகள் ஏற்படுத்தும் அதிகப் பணிச்சுமையால் ஏற்படும் தொழிலாளிகளின் மன அழுத்தத்திற்கு உடனடி வலி நிவாரணியாக ஆல்கஹால் தருகின்றீர்கள்…. கம்யூனிஸ்டுகள் அதனை சமூக மருத்துவமாக கருதி அம் மன அழுத்தத்தை தோற்றுவிக்க கூடிய உற்பத்தி உறவுகளை மாற்ற விளைகின்றார்கள்…. அழுத்தத்திற்கு காரணமான பிஸ்டனை இழுக்காமல் கொள்ளளவை அதிகரிக்க புதிதாக ஒரு பாயில் தேவைப் படுகிறார் .. அவருடைய பெயர் அதியமான் என நினைக்கிறேன்ழ

  37. Dear Mr. Adiyamann,
    Coming to your points:-
    1) What is the role of the so called gurujis or brokers?
    2) Why these brokers wants to conform to only power center? ( Like magician bhaba visiting gopalapuram or silent revolutionist jakki close association with “poet” kanimozhi?
    3) Why the corporate guru ravishankar talks about srilankan crisis now ? In the past Has he opened his mouth against the atrocities happenings in India? Can we conclude that by speaking lankan crisis, he wants to address big international market for his business?

    If you say, these gurujis has done some donations/ helping society then its purely to establish their institution and exercise their power.( If magician bhaba contributes 200-300 Cr for water crisis in Chennai, imagine how much money he would have earned? And if he claims that he is saint why the publicity and conforming to power center?

    Marxisism, or stlanism or trostkisim etc… never encourages blind faith or followers. Rather these doctrines encourages Dialogue/Debate/Discussions and Discourses. ( That’s why blogs like vinavu posting all types comments)

    Again any religion/god never encourages rational mind to question. Rather all the religions inject fear/guilt/resentment in the mind.( Have u listed to paul dinakaran discourses…simply inducing guilt )
    The religion and the concept of god has been institutilised. To exercise power/ and to create wealth and to do all criminal activities, and to spread superstitions/dogmatic practices, these gurujis wants to have relationship with power. This Micro strategies of power spreads its wings across all the clans/communities of our society.

    Very Important- these gurujis emerged in large nos and in big scale only after 1991 post liberation period.( Like mobile stores/ Reliance retail stores)

    Hence guruji business is big evil in our present scenario. Also as a individual why we need guruji? Fundamentaly this is psychological problem? These psychological issues, Mr.rudhran is competent person to address.

    Let me give 2 quotes for you:
    1. I buried my god long before- Nietzche

    Last but not the least, let me quote from the same text, these are gurujis are using for their convenience:-
    2. If you happen to see Buddha on the road, kill him.- Zen

  38. //கம்யூனிஸ்டுகள் உணர்ச்சிவயப்பட்டு அல்லாமல் உணர்வு ரீதியாக அதாவது அறிவுப்பூர்வமாக சிந்தித்து அதுபற்றி விவாதித்து முடிவு செய்கின்றனர். அதில் சிறுதவறு நிகழ்ந்தாலும் போலிகளாக திரிபுவாதிகளாக அவதாரம் எடுத்துவிடுவர். மற்றபடி தனிமனித துதி என்பது பொதுவுடமை இயக்கத்தில் கிடையாது. ஒரு மனிதரை அவரது சமூக மாற்றத்திற்கான பங்களிப்பின் கீழ்தான் கம்யூனிஸ்டுகள் மதிக்கின்றான் அது மார்க்ஸ் ஆகவே இருந்தாலும்…மதம் ஆன்மீகம் போன்றவற்றுக்கும் கம்யூனிசத்துக்கும் விளைவு என்ன வகையில் ஒற்றுமை…. மனித உரிமை மீறலா… அதாவது கொள்ளை அடிப்பதற்கான உரிமை தரப்படாதது அல்லது மக்களை முட்டாள்தனத்தில் நீடிக்க விடும் உரிமை…/////

    // கம்யூனிஸ்டுகள் அதனை சமூக மருத்துவமாக கருதி அம் மன அழுத்தத்தை தோற்றுவிக்க கூடிய உற்பத்தி உறவுகளை மாற்ற விளைகின்றார்கள்…. ////

    கேட்கரதுக்கு நல்லதான் இருக்குது. ஆனா கடந்த 100 ஆண்டுகளில் விஞ்ஞான பூர்வமான கம்யூனிஸ்டுகளின்
    செய்லகளத்தாம் பார்த்தேமே. போதுமப்பா சாமி. இனி கிழக்கு அய்ரோப்பாவில் யாரும் இதை நம்ப மாட்டாங்க. one who refuses to learn from history is condemned to repeat it.

    ///அழுத்தத்திற்கு காரணமான பிஸ்டனை இழுக்காமல் கொள்ளளவை அதிகரிக்க புதிதாக ஒரு பாயில் தேவைப் படுகிறார் .. அவருடைய பெயர் அதியமான் என நினைக்கிறேன்ழ
    ///

    that is your opinion comrade. i guess i have some original ideas. i can easily conclude similar views about your originality !!

  39. Dear VAS,

    most of these gurujis started from zero and progressed thru thier intrinsic skill or charisma or whatever it is. they are not 100 % perfect and i had already commented about leakages in donations and about black money. in fact the situation in Amirathananda group is comparable to Kacnh mutt financial dealings.

    but something is better than nothing. you and i and all people chatting in this forum can never ever match the
    quantiy and range of serives offered for the poor and needy by these orgs. and people donate only when asked in the name of God and not in the name of poor or rationality or marxism. that is reality.

    do you think a starving leper will care for all these arguments ? he will only be grateful for the hands which help him. and millions of needy are serviced thru these gurus. in this corrupt India, this itself is something. can anyone here organise a free hosptial of the size in Melmaruvathoor or White field ? thru
    rational efforts and propaganda ? if feasinble then good.

    i find it useful if i can practise yoga and meditation. if you feel they are waste then that is your personal choice. that is all. no big deal.

  40. நூறு ஆண்டு கால கம்யூனிஸ்டுகள் தவறிழைத்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். அதற்கு கிழக்கு ஐரோப்பாவை துணைக்கு அழைத்தீர்கள். அங்கு கம்யூனிசம் நோக்கிய நகர்தல் நடைபெறவில்லை என்ற தகவலை குறைந்தபட்சம் தெரிந்து கொள்ளுங்கள் வரலாற்றிலிருந்து…
    ஒரு சித்தாந்தம் ஏன் தவறியது என்பதை எடைபோட நபர்களை மாத்திரம் எடைபோட முடியாது என நினைக்கிறேன். அந்த தத்துவமே குறைபாடு உடையதாக இருக்க வேண்டும். அப்படி எந்த இடத்தில் என நீங்கள் விளக்கலாம்… ஆனால் பக்தி இயக்க காலம் துவங்கி இன்று வரை பார்ப்பன இந்து மதம் தனது தத்துவ தளம் என எதனையும் நேர்மையாக கொள்ளாத நிலையை அது சுவீகரித்த மரபுகளில் இருந்தே விளங்க முடியுமே…
    எதுவுமே செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்யும் செம்புலிங்கம் சிறந்தவன் என்ற உங்களது நல்லெண்ணம் புரிகிறது. … இதில் செம்புலிங்கத்திடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது அல்ல முதல் பிரச்சினை…. செம்புலிங்கத்திற்கு முன்னால் அதனை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த மக்கள் நல அரசு என்ற கான்செப்டை மறைக்க நீங்கள் ஆடும் செப்படி வித்தை உங்களுக்கே நகைப்பைத் தரவில்லையா

  41. Dear.Mr.Athiyamann,
    MY COMMENTS IN THE BRACKET AND IN CAPITAL LETTERS.
    1. most of these gurujis started from zero( WHAT IS ZERO? CAN U EXPLAIN IN TERMS OF ANTHROPOLOGICALLY AND EPISTEMOLOGICALLY? EXPLAIN PLEASE) and progressed thru thier intrinsic skill( DEFINE THIS SKILL? PLEASE DONT TELL THAT THEY HAVE SEEN THE GOD IN DREAM …LIKE 10 COMMENDMANTS..ALL THESE GURUJIS ARE CLAIMING THAT… BE RATIONAL) or charisma ( IF YOU ACCEPT CHARISMA, THEN EVERYBODY SHOULD ACCEPT SHAKILA/VIJAY ETC.. AS GOD DEPENDS ON INDIVIDUAL PERCEPTION)or whatever it is.( WHATEVER MEANS PLEASE ELABORATE) they are not 100 % perfect( IF NOT 100% THEN HOW MUCH % THEY ARE CORRECT)and i had already commented about leakages in donations and about black money. in fact the situation in Amirathananda group is comparable to Kacnh mutt financial dealings. ( SO YOU CAN ACCEPT ONLY FRACTIONAL FRADULAENT AND NOT 100% CHEATERS)
    but something is better than nothing.( WHAT IS BETTER AND WHAT IS NOTHING) you and i and all people chatting in this forum can never ever match the
    quantiy and range of serives offered for the poor and needy by these orgs. and people donate only when asked in the name of God and not in the name of poor or rationality or marxism. that is reality.( THE POINT IS NOT THE PHILANTHROPY ACTIVITY. EVEN EVERY INDIVIDUAL ARE DOING TO THEIR CAPACITY…BUT ON WHAT IDEALOGY THESE GURUJIS ARE DOING.. BY SATISFYING 10% PEOPLE AND CORRUPTING MILLIONS OF PEOPLE AND CREATING A CLAN OF DICIPILES WHO CAN NOT QUESTION OR CAN NOT APPLY THEIR MIND..SIMPLY TO SURRENDER THE ONE SELF)
    do you think a starving leper will care for all these arguments ?( MY POINT IS, LEPER ALSO SHOULD BE EDUCATED AND SHOULD NOT BE EXPLOAITED IN THE NAME OF POWER/RELIGION/GOD… IF GURUJIS WANTS TO HELP MARGINAL PEOPLE THEY NEED NOT TAKE POWER/RELIGION) he will only be grateful for the hands which help him.( AGAIN INSTEAD OF RAISING HIS LIFE, THESE GURUJIS MADE THEM TO BEG AND MOREOVER EXPECTING THEM TO BE GRATEFUL TO GURUJI….WHAT A HUMILATION) and millions of needy are serviced thru these gurus.( NOT MILLIONS, FEW ARE ENJOYED BUT SIDEEFFECTS TO MILLIONS.. AND EVEN THIS MEAGRE SRVICE IS TO ESTABLISH THEIR REGIME/POWER) in this corrupt India, this itself is something. can anyone here organise a free hosptial of the size in Melmaruvathoor or White field ?( I DONT FIND ANY DIFFERENCE BETWEEN APOLLO HOSPITAL AND GURUJIS HOSPITAL… ONE IS CORPORATE EXPLOITATION AND ANOTHER IS RELIGIOUS EXPLOITATION) thru
    rational efforts and propaganda ? if feasinble then good.
    i find it useful if i can practise yoga and meditation.( THESE YOGA/MEDITATION WHAT FOR IT IS REQUIRED.. TO WHOM? THESE EXERCISES WILL IT BE APPLICABLE TO A LABOUR WHO IS CLEANING THE TOILET? OR PEOPLE WORKING MORETHAN 12 HOURS A DAY? MAY BE THESE YOGA ETC GOOD FOR THE PEOPLE ENJOYING IN A DAY 3 TIMES A FOOD, NICE FAMILY, GOOD EDUCATION, EXCELLENT HOUSE, GOOD BOOKS .. BUT THE BOOKS SHOULD NOT SCARE. IT SHOULD BE EASILY READABLE.. NOT MUCH OF BRAIN SQUEEZING…..ABOVE ALL THE BOOK ARE TO REFLECT MIDDLE CLASS MEDIOCRE MENTALITY ) if you feel they are waste then that is your personal choice. ( NOTHING PERSONAL… WE ARE TALKING ABOUT ONE SUBJECT.. IN THIS BOTH SELF AND OTHER HAS TO BE QUESTIONED IN A RATIONAL MANNER )that is all. no big deal.( THE BIG DEAL IS QUESTIONING THE PEOPLE WHO ARE ADVOCATING THE CRIMINAL GURUJIS)

  42. தியானம் / யோகா/ மூச்சு பயிற்சி போன்றவை என்னமோ ‘பணக்காரகளுக்கு’ மட்டுமே தேவை அல்லது
    பயில்கின்றனர். ஏழைகளுக்கு அதற்க்கு நேரமோ / பணமோ இல்லை என்பது போல ஒரு பில்டப் இங்கு.

    பல ஆயிரம் மத்திய வர்கம், ஏழைகள் (சிறை கைதிகள்) போன்றவர்களும் பயன் பெறுகின்றனர்.

    வ‌றுமை கொடுமைக‌ள் :அவ‌ற்றை ஒழிப்ப‌த‌ற்க்கான‌ வ‌ழி : இது வேறு விசிய‌ம்.

    ச‌ரி, இப்ப‌ என்ன‌ செய்லாம்கிறீக‌. அனைத்து குருஜீக்கள‌யும் தூக்கிலிட்டுவிட்டு, அவ‌ர்க‌ளின் நிறுவ‌ன‌ங்க‌ள், க‌ல்விச்சாலைக‌ள், ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், சேவைக‌ள் அனைத்தையும் அர‌சே ஏற்று ந‌ட‌த்த‌னுமா ? அதுதானே ஸ்டான்ட‌ர் க‌ம்யூனிச‌ வ‌ழிமுறை. செய்து பார்த்தால் தான் புரியும். த‌லைவ‌லி போய், திருகுவ‌லி வ‌ந்த‌ க‌தை..

    //// DONT FIND ANY DIFFERENCE BETWEEN APOLLO HOSPITAL AND GURUJIS HOSPITAL… ONE IS CORPORATE EXPLOITATION AND ANOTHER IS RELIGIOUS EXPLOITATION////

    sure, you will find no difference mate. because you are cozy and comfortable with money to spend in healthcare ; you are not in penury and not below poveryty line. hence you can afford to chat here cozily from your office or home.

    why don’t you argue this excellent point with the lacs of beneficaries of the free medical services of Whitefield hosptial or MElmaravathoor hosptial.

    If you wish that they should be closed down, then fine by me. why should i bother ?

  43. //.( THE BIG DEAL IS QUESTIONING THE PEOPLE WHO ARE ADVOCATING THE CRIMINAL GURUJIS)
    //

    First of all, i am not holding a brief for criminals. can u
    Prove that ALL gurujis are criminals ? then you can accuse. i find more criminals online than in real life.
    ok.

  44. //MY POINT IS, LEPER ALSO SHOULD BE EDUCATED AND SHOULD NOT BE EXPLOAITED IN THE NAME OF POWER/RELIGION/GOD… ///

    Excellent idea. why don’t you try freind instead of chatting here. you won’t do anything constructivre yourself. but accuse A:LL service minded organisations or people as ‘exploitators’ ;

    there are millions of such chatternboxes online.

  45. //THESE YOGA/MEDITATION WHAT FOR IT IS REQUIRED.. TO WHOM? THESE EXERCISES WILL IT BE APPLICABLE TO A LABOUR WHO IS CLEANING THE TOILET? OR PEOPLE WORKING MORETHAN 12 HOURS A DAY? MAY BE THESE YOGA ETC GOOD FOR THE PEOPLE ENJOYING IN A DAY 3 TIMES A FOOD, NICE FAMILY, GOOD EDUCATION, EXCELLENT HOUSE, GOOD BOOKS .. BUT THE BOOKS SHOULD NOT SCARE. IT SHOULD BE EASILY READABLE.. NOT MUCH OF BRAIN SQUEEZING//

    same logic applies to this internet and blogging too.
    the poor and helpless workers don’t benefit from it or have no use for all this. but you and me can afford to chat like this. so ? SO ?

  46. First of all, I never mentioned that these institutions should be taken over by the government.( Restructuring these institutions is another big subject..morethan me competent people can raise their opinions…) It clearly shows your prejudicious views.. because of this state of mind of yours, communism/marxisism is taboo to you. That’s is why instead of answering my basic philosophical ( anthropology/epistemology) questions, you are discussing in mediocre way…Had u known/read philosophy & politics in depth from oriental to western, you would not have asked some silly questions like can u do it or you and me are chatting in the blog etc….But To understand the criminal activities being done in these guruji institutions, a person can apply his rational mind and he need not have to read all books..

    If you have philosophical knowledge, you can understand the insignificance of god, ill-effects of religion, and the brokers role.
    If you have political knowledge, you can understand the violence of institutions/state and state apparatus role/ micro strategies power etc..

    Neither you have deep philosophical knowledge nor political knowledge. Philosophy/Politics is very serious affair.. Not for time passing or in your own words making fun as chatterbox. Hence I clearly mentioned that these “gurujis/god/religion” are only for “middle class mediocre mentality” people.

    My stand point is clear. After post liberation period, Religion and god are good commodities and have got excellent sale value. Hence these gurujis selling these commodities by mesmerizing the people, made the people to beg, made the people to depend on their institution. Above all, made the people to obey and made not to apply the mind.

  47. அதியமான் அவர்களே, ரவிசங்கர் குறித்து நான் கேட்ட கேள்வியை விட்டுடீங்கலே. இங்கிலீஷுல கேட்கனுமா.

  48. மனநல மருத்துவர்களுக்கு நிறைய காரணங்களால்
    மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்பு
    இருப்பதாகவும் நிறைய பேர் பாதிக்கப் பட்டு
    இருப்பதாகவும் அது தொடர்பாக நிறைய
    ஆராய்ச்சிகள் நடப்பதாகவும் சமீபத்தில் படித்தேன்.

    அதை ருத்திரர் உறுதி செய்யாமல் இருந்தால்
    சரிதான்.

    ஆசனம்,மூச்சு பயிற்சி,தியானம் மூன்றையும்
    அனைத்து மக்களும் செய்ய ஆரமித்து விட்டால்
    மருத்துவர்களிடம் அதுவும் ருத்திரர்
    போன்றவர்களிடம் கட்டாயம் மதிப்பும் கூட்டமும்
    குறைந்து விடும். இதனால் யாருக்கு நன்மை
    என்பதை விட யாருக்கு தீமை என என்ன
    வேண்டும்.

    ஆசனத்தையும் மூச்சுபயிற்ச்சியையும் தியானதையும்
    அதை சொல்லி கொடுப்பவருகளையும் பற்றி
    எழுதுவதற்கு முன் மனநல மருந்துகள்
    சாப்பிடுவதால் பூதமென கிளம்பும் பின்
    விளைவுகளை பற்றி பதிவுகளை எழுதாலாம்.

    இல்லை என்றால் சச்சின் டக் அடித்தாலும்
    சென்சுரி அடித்தாலும் அனைத்து டிவியிலும்
    தோன்றி அதுபற்றி அற்பதனமாய் ஆலோசனை
    செய்யும் மனநல மருத்துவ குழுவினரை
    பற்றி கிண்டலடிக்கலாம்.

    பத்திரிக்கைகளில் கசமுசா விஷயங்களுக்காக
    பக்கம்ஒதிக்கி அவற்றை மனநல மருத்துவர்
    மூலம் நிரப்பும் வியாபார தந்திரத்தை பற்றி
    எழுதலாம்.இதை உண்மையில் அவர்களை
    தான் எழுதுகிறார்களா அல்ல பத்திக்கை காரர்கள்
    அவர்களே தங்கள வாசகர்களுக்கு தகுந்த
    மாதிரி எழுதிக் கொண்டு அவர்களின் அழகான
    பெயரையும் புகைபடத்தையும்பயன் படுத்துகிக்
    கொள்கிறாரிகளா என்று சந்தேகம் எனக்கு.
    அதை பற்றி மனநல மருத்துவர் என்ற
    முறையில் எழுதலாம்.

    லட்சம் பேருக்கு ஒருவருக்கு இம்மாதிரி
    மனநிலை இருக்கும்என்று சொல்லி
    கீழ்தனமான செயல் பற்றி மருத்துவ கல்லுரியில்
    பாடம் எடுப்பதை பாடம் எடுக்கிறார் ஒரு
    மனநல மருத்துவர் ஒருவர் அதுவும் குழந்தைகள்
    முதல் பெரியவர் வரை பார்க்கும் காலை
    நேரத்திலேயே.இது யாருக்கு தேவை.இவற்றை
    பற்றி தைரியமாக எழுதலாம்.

    சில மனநல மருத்துவர்கள் அவர்களே
    மருந்துகடை வைத்துக் கொண்டு லோக்கல்
    மருந்துகளை எழுதுகிறார்கள்லோக்கல் மருந்துகள்
    50% வரை கமிஷன் தருவதால்பெரிய பணம்
    சுருட்டுகிறார்கள் .மிகப் பெரியமருந்து
    கம்பெனிகளிலேயே அரசாங்க விதிமுறைகளுக்கும்
    அவர்கள் மருந்து தயாரிப்புக்கும்
    பரிசோதனைக்கமும் இமாலய இடைவேளி
    இருக்கும் போது இவற்றின் தரம்
    பற்றி கேடக்கவே வேண்டாம்.இவற்றை பற்றி
    விழிப்பணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் எழுதலாம்.

    எழுதுவற்கு மனநல மருத்துவர் என்ற முறையில்
    எவ்ளவோ இருக்கிறது என்றாலும் அதில
    சாமியார்களை பற்றி எழுதுவதும்
    ஒன்றுதான்

    நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரமல்
    பொருப்புணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து
    எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

  49. வரவேற்கிறேன் மருத்துவர் ருத்ரன் அவர்களை. காஞ்சி சாமியார் முதல் கார்ப்பரேட் சாமியார் வரை எழுதுங்கள் .இதன் பின் உள்ள உளவியல் சமூக அரசியல் பொருளாதார காரணிகளை விளக்கி எழுதுங்கள்.

  50. ஆசனம், மூச்சு பயிற்சி, தியானம்
    எல்லாம் கெடுதல் தான் யாருக்கு?

  51. இவர்கள்(குருஜிகள்) என்ன பேசுகிறார்கள் என்றால் ஒரு மயிர் பிளக்கும் தத்துவ விசாரனை இல்லை.. அதே அரைத்த மாவு, ஆசை/ஈகோ விட்டொழித்தல்,அன்பு,சகோத்தரத்தவும்,பொறூப்பு..மற்றூம் உள்ளோளீ/தரிசனம் இத்யாதிகள்….தவிர..பாவம் தீர..தானம் செய்தல்..ரத்த தானம் செய்தல் இன்னும் விசேடம். இத சொல்வதற்கு இவர்கள் எதற்கு?..
    இதற்கு நாம் மூலப்பிரதிகளே படித்துவிடலாமெ?
    ( ஆனால் ஒடுக்க‌படும் ம‌க்க‌ளூக்கு மட்டும் அன்பு காட்டாதே!!)
    மற்றூம் ஒரு சாமியார் எல்லாவற்றூக்கும் ஆசை படு என்கிறார். நுகர்வொர் கலாச்சரத்தை ஊக்குவீக்கிறா? யார் கண்டது?
    இந்த மோசடிகளீ எப்படி பார்த்துகொண்டு சும்மா இருப்பது?
    தத்துவத்தின் அடிப்படை ” எல்லாவற்றாயூம் சந்தேகி”.தன் பின்னால் ஆட்டு மந்த கூட்டத்த சேர்த்துக்கொண்டு, யாவரையும் கேள்வி கேட்க விடாமல், மூள மழுங்கடி வேலை இது. ஆசை துறந்தவனுக்கு எதற்கு ஆடம்பர பங்களா? ஈகோ துறந்தவனுக்கு எதற்கு ஆட்டு மந்த கூட்டம்? தன் ஈகோவை சொறீந்து கோள்ளவா? இந்த பம்மாத்து வேலை எதற்கு? இது எல்லாமெ தன் நிறூவனத்த நிலநிறூத்தவா? அதிகாரத்தொடு ஒட்டு உறவாடுவது எதற்கு ? எல்லா கிரிமினல் வேலைகளீம் மடத்தில் செய்யவா? இவர்கள் தத்துவம், பொதுவில் நடக்கும் சமுக அவலங்கள பார்த்து சும்மா இருக்க செய்வது. தனி மனித சந்தோசமே முக்கீயம். சமுக அவலங்கள எதயும் கண்டுகொள்ளாதீர்.
    ஆனால் அவ்வபொது அரசியல் ஜல்லியடிப்பது (ரவி சங்கர்/லங்கா கச்செரி)..இந்த ஜல்லியடி வேலை அதிகாரத்தொடு ஒட்டு உறவாடுவதற்கும் மற்றூம் தன் வியாபரத்த பெருக்கி கொள்ளவதற்குதானெ? இந்த ஆசனம், மூச்சு பயிற்சி, தியானம் உடல் ஆறோக்கியத்திற்கு நல்ல‌துதான்.ஆனால் இது எல்லொருக்கும் சாத்தியமா? சோற்றூக்கெ வ‌ழி இல்லாத‌வ‌ங்க‌ளூக்கு எப்படி சாத்தியமாகும்?
    குருஜீய் தேடிப்போவ‌து என்ப‌து அடிப்ப‌டியில் உளவியல் சார்ந்த பிரச்சினை.திரு.ருத்ர‌ன் அவர்க‌ள் இத பற்றீ விலாவாரியாக எழுதினால் நல்ல‌து. இந்த வியாப‌ர‌ம் எல்லாம் ம‌தத்திலும் இருக்கிறது.ஆனால் இந்த்துவ சாமியார்க‌ள் நெடி/காரம் கொஞ்சம் தூக்க‌லாக‌வே இருக்கிறது.
    சாம்பிளூக்கு, எனக்கு தெரிந்த புரொக்க‌ர் லிஸ்ட்..

    1.சல்லாப குரு சங்க‌ராச்சாரி
    2.மோடி மஸ்தான் பாபா
    3. மொளன புரட்சியாளர் ஜ‌க்கி
    4.டிஸ்கோ டான்ச‌ர் கல்கி
    5.க‌ட்டி புடி அமிர்தா
    6.கார்ப்ப‌ரெட் ர‌வி
    7.முண்டாசு நித்தி(விக‌டனில் எழுதும் சாமி)
    8.த‌ங்க வேட்னட சாமி(வேலூர் தங்க‌க்கோவில் க‌ட்டின சாமி)
    9.நான் க‌டவுள் சிவ‌ச‌ங்க‌ர்(பாலா படம் இல்லெ..தன்னேய க‌டவுள் என்றூ கூறீக்கொள்ளூம் சாமி)
    மற்ற மதத்தீலிருந்து
    10.தேவ மய்ந்தன் பால் தினகர்.

    இப்ப‌டி இந்த லிஸ்ட் பெருக்கிகொண்டே போக‌லாம்……………

    இத்துட‌ன் நான் நிறூத்தி கொள்கிறேன்…

  52. vijay
    we are not beliving god & guruji but we are only now inner science chemistry action

    we planting a tree not religious we need only green nature of world

  53. VInavu,

    It will be more fruitful if Dr.Rudhran could include the Pasteurs who leverage the orphanage for their sexual desires and Mullas who marry unlimited teens for unlimited pleasures.

    Also, please moderate the feedback that is misleading the topic and aimed towards mainstream Hindus who follow a broader philosophy

    PARAMS

  54. ஆன்மீகச் சந்தை – டாக்டர்.ருத்ரன்…

    அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை… https://www.vinavu.com/2009/03/06/gurus/trackback/

  55. நிங்கள் ஏமாந்து விட்டு அவர்கள் மீது பழிபோடுவது உங்கள் குற்றத்தை மறைக்கும் முயற்சி

  56. மதம் என்பது மக்களை முறைப்படுத்த கொண்டு வரப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகளாகிவிட்டன.உலகம் முழுவதும் ஆத்திகவாதிகளே அதிகம்.ஆகவே தான்,விரைவில் அதை ஒழிக்க, விலக வைக்க மக்களால் முடியவில்லை.பெரியார் விதைத்த விதை 60 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் ஓரளவு பலன் அளித்துள்ளது.ஒரே இரவில் எந்த மாற்றமும் விளையாது..விதையை போடுவோம்.பேரன் காலத்தில் பலன் கிடைக்கும்.பெரியார் சிலைக்கு சூடம் காட்டும்,பக்தர்களை முதலில் திருத்துங்கள்.

  57. I agree fully with adhiyaman. these communists think they know everything and rest of the people are fools. without experiencing the bliss of yoga etc, these fools claim stupid things. i know they are good people who are wanting to help the society but their views on gurus are wrong. i agree 99 out of 100 religious gurus are frauds but you cannot include that the 100th one is a fraud too. they only want instant answers and show their wit to anyone who wants to put up their opinion. why dont you guys lash at fake athiests like MK, Veeramani etc.

  58. I want to say something on rudran’s view on osho…………

    “As controversies and cases piled up against him, he wanted to be called Osho, for some strange reason that he never disclosed. ”

    Osho said about his name and spoke on the Cases piled up by USA attornies..He never kept closed those things….Rudran may not aware of that.I his book press meet came as ‘Last testament vol.1 to 6

    “Though his intelligence is beyond dispute, his integrity has always been a subject of discussion.”
    Rudran is trying to justify osho’s intelligence….He accepts by saying that above,,,but,he tries to question the Osho ‘s Integrity…
    From my hearing ,reading Osho’s sppeches and books,I can say that he is really Integrated Person.Only Integrated person can contradict and keeping essential ,existential in his stream…An Unintegrated person always speaks without Contradiction…He is repeating like Parrot.He may be scholar,philisopher or Psycho analyst……

    ” I am willing to overlook his hoarding of cars and flamboyance of attire and attitude, but I cannot help wondering whether his claims of earlier incarnations were mystical in nature, or with the market in the mind.”
    People gave gifts ,cars and all possibilities a loving person can give to Osho…He is possessing those cars..he simply is accepting those kindness..Person who thinks about cars and luxuries surounded osho seems to be jealosuy,,,,,,otherwise,why one should care or speak about that,,..Being a judge is disease of psychoanalyst…

    “Just because I had a bad experience in the place, I am not going to decry or denounce his intellectual contribution to the literature in that genre. ”
    Idiots will be everywhere …inside commune too..Curious visitors may be hurted by Curious disciples .Only EGO gets hurted…if Rudran’s Ego gets hurted ,there should be somewhere wound in his mind…For that,Rudran is speaking against Osho contibution means,it shows his own blindness on the reality or truth….

    “I reiterate that my respect for the many wonderful things that I had learnt from this brilliant teacher, remains undiluted. It, however, is just respect for a teacher, not surrender to a master.”

    Rudran calls Osho as teacher….why? why he cannt be able to accept him as Master?? because,he is seeing osho as Intellectual person only…he may use informations in his business…..TO Accept one as Master consciously,one needs to surrendar EGO……More Egoist person cannt surrender his ego….That s y,Rudran’s statement is like that,,,,

    ” (i am reminded of a conversation i had with Jayakanthan on guru, in which he admonished me for calling him ‘one’ of my gurus; he then advised me to not declare any living person as my guru since they may, before dying, leave me shame-faced. Maybe one cannot rush to call even a dead teacher a guru!)”

    Before accepting one as Guru or master,One needs to enquire much enough through his speeches..Once one understands master,then there is no problem in accepting one as guru…Osho also used to insist frequently “BE SKEPTICAL :BE ENQURER”.he is not master like other fake masters are roaming all around expecting others to accept their theories,ideologies by belief

    Jayakanthan seems to more safety oriented person,cunning too….Otherwise,if one feels one master is right,he should have courage to declare person as master…fake masters are always in human history….out of 100 masters,99% are fake..osho used to say in his speeches…
    osho is saying ‘Understanding Fake as Fake is great step towards to Truth’…..

    Dead master becomes alive when his sayings are implemented or meditated in reality…

    I feeel that Rudran and Jayakanthan didnt feel beauty of meditation..or..They may think Concentration as meditation……

Leave a Reply to k.pathi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க