Skip to content

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் நடத்திய வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. National Aviators’ Guld தேசிய விமானிகள் அமைப்பு என்ற தொழிற்சங்கத்தை ஜெட் ஏர்வேசின் விமானிகள் ஆரம்பித்ததை ஒட்டி நிர்வாகம் இரண்டு விமானிகளை வேலைநீக்கம் செய்தது. மொத்தம் 750 விமானிகளில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விமானிகள் இந்த சங்கத்தில் இணைந்திருந்தனர். ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்ததற்காக இரண்டு சக ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது விமானிகளுக்கு கடும் ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி இந்த விமானிகள் சங்கம் கடந்த வாரத்தில் நோய்விடுப்பு என்ற பெயரில் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தது. சாதாரணமாக தொழிற்சங்கம் என்பது தொழிற்சாலைகளில்தான் இருக்கும் விமானிகளுக்கெல்லாம் எதற்கு சங்கம் என்று வெகுண்ட நிர்வாகமும் முதலாளியும் மேலும் இரண்டு விமானிகளை வேலை நீக்கம் செய்தனர். இதைக் கண்டு அஞ்சாத விமானிகள் தங்களது வேலை நிறுத்தத்தை காலவரம்பின்றி நீட்டித்தனர்.

வேலைநீக்கம் செய்த விமானிகளை பயங்கரவாதிகள் என்று தூற்றினார் ஜெட்ஏர்வேசின் முதலாளி நரேஷ் கோயல். தினமும் நாற்பது கோடி நட்டம் ஏற்படுவதோடு (ஐந்து நாள் நட்டம் 200 கோடியாம்), விமான நிறுவனத்தில் தொழிற்சங்கமெல்லாம் வந்து விட்டால் முதலிட்டாளர்கள் அச்சமடைவார்கள், என்றெல்லம் கணக்குப்பார்த்து கோயல் விமானிகளை புழுதிவாரித் தூற்றினார். ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்த ‘குற்றத்திற்காக’ விமானிகள் பயங்கரவாதிகளானார்கள். விமானங்களை வைத்து இரட்டைக் கோபுரத்தை தகர்த்தாகக் கூறப்படும் பின்லேடனுடன் இப்போது ஜெட் ஏர்வேசின் விமானிகளும் சேர்க்கப்பட்டனர்.

ஊடகங்களும் ரத்தான விமான சேவைகளால் பாதிக்கப்பட்ட மேட்டுக்குடியின் சொந்தக் கதை சோகக்கதைகளை சென்டிமெண்டாக போட்டுத் தாக்கி விமானிகளை வில்லன்களாக்க முயன்றனர்.

ஆனால் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் விமானிகள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவேண்டுமென தொடர்ந்து போராடினார்கள். இந்த போராட்டத்தால் ஜெட்ஏர்வேசின் ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மாற்று பைலட்டுகளை வைத்து, அல்லது வெளிநாட்டு பைலட்டுகளை வைத்தாவது சர்வீசை தொடரலாம் என கணக்கு போட்ட கோயலின் முயற்சி பலிக்க வில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் இருக்கும் அரசு மற்றும் மற்ற தனியார் விமானிகளும் இந்தப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளித்தனர்.

முதலாளிகளிடம் கோடி கோடியாய் பணமிருந்தாலும் தொழிலாளிகள் இன்றி ஒரு தொழிற்சாலை இயங்க முடியாது என்ற உண்மை இங்கேயும் வேலைசெய்தது. நான்கைந்து நாட்களுக்கு பின்னர் பணிந்து வந்த நிர்வாகம் தொழிலாளர்கள் ஆணையத்தின் தலையீட்டின் பெயரில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இரண்டு நாட்கள் நெடுநேரம் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு விமானிகளையும் மீண்டும் வேலையில் சேர்க்க முதலாளிகள் ஒத்துக் கொண்டனர். தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை அதை அங்கீகரிக்கும் முடிவை தொழிற்சங்கங்களை பதிவு செய்யும் அரசுப் பதிவாளரிடம் விடலாமென முடிவு செய்யப்பட்டது.

ஜெட்ஏர்வேசின் நிர்வாக இயக்குநர் சரோஜ் தத்தா ” சில தவறான புரிதலால் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அன்பில் விரிசல் வந்துவிட்டது.இனிமேல் எந்தப் பிரச்சினை வந்தாலும் நிர்வாக தரப்பில் ஐவரும், விமானிகள் தரப்பில் ஐவரும் அடங்கிய கமிட்டி பரீசீலிக்கும் இனி ஜெட் ஏர்வேசின் ஊழியர்கள் அனைவரும் அன்பான ஒரே குடும்பமாக செயல்படுவோமென” திருவாய் அருளியிருக்கிறார். வேறு வழியின்றி ‘பயங்கரவாதிகளை’ குடும்பத்தில் ‘அன்பாக’ சேர்த்த கருமத்தைப் பற்றி அவரோ கோயலோ மனதிற்குள் எப்படி புழுங்கியிருப்பார்கள் என்பதை நாம்தான் மெனக்கெட்டு ஊகிக்க வேண்டும்.

விமானிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் கிரீஷ் கவுசிக் தங்களால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும், நீக்கம் செய்யப்பட்ட நால்வரை மீண்டும் பணியில் சேர்த்தமைக்காகவும் நிர்வாகத்திற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

தாராளமயம், தனியார்மயத்தை அமல்படுத்திய உலகமயத்தின் முக்கிய விதியே தொழிலாளர் உரிமைகள், சலுகைகளை ஒட்டப் பறிப்பதே. இதற்குத்தான் பல சங்க உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டப் பிரிவுகள் மாற்றப்படுகின்றன அல்லது மாற்றுமாறு எல்லா தனியார் முதலாளிகளும் அரசை மிரட்டுகின்றனர். எல்லா நீதிமன்றங்களும் இத்தகைய வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கின்றன. சாதாரணமாக அரசு மற்றும் பொதுத்துறையில்தான் சோம்பேறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து அதுவும் தங்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதால் போராடுவார்கள் என தனியார்மய தாசர்கள் அவதூறு செய்வார்கள்.

ஆனால் தனியார் முதலாளிகளிடம்தான் தொழிலாளிகள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை ஹரியாணாவில் நடந்த ஹீரோ தொழிற்சாலை தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தையும் அதை போலீசு கொடூரமாக ஒடுக்கியதையும் நாம் அறிவோம். இங்கு சென்னையில் கூட ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்காமல் நிர்வாகம் சிலரை வேலைநீக்கம் செய்ததையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் அந்த தொழிலாளிகள் தமது தொழிற்சங்க உரிமைக்காக போராடி வருகிறார்கள்.

அரசு, பொதுத்துறையில் இருக்கும்  பணிப் பாதுகாப்பு இதர சலுகைகள்  என்பது தனியார் நிறுவனங்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. அப்படி சட்டப்படி கூட கோரக்கூடாது என்பதே முதலாளிகளின் உத்தரவு. பல பன்னாட்டு நிறுவனங்கள் கேட்பார் கேள்வியின்றி தமது ஊழியர்களை கொத்துக் கொத்தாய் வீட்டுக்கு அனுப்புவதும் அதை சட்டப்படி கூட தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலைதான் இந்தியாவில் நிலவுகிறது.

இந்நிலையில் முதலாளிகளின் அதி முக்கிய கேந்திரமான விமான நிறுவனத்தில் விமானிகள் ஒன்று சேர்ந்து தமது போராட்டத்தில் பாதி வெற்றியை ஈட்டியிருப்பது வரலாற்று சிறப்பு மிக்கதுதான். இவ்வளவிற்கும் இலட்சங்களில் ஊதியம் வாங்கும் மேட்டுக்குடி தொழிலாளிகள் என்றாலும் அவர்கள் தமது போராட்டத்தில் காட்டிய உறுதியும், கோரிக்கைகளை வென்றதையும் சாதரணாமாக பார்க்க இயலாது. மேலும் விமானிகள் ஸ்டரைக் என்பதால் போலீசைக் கொண்டெல்லாம் ஒடுக்க முடியாது என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். இதே வேலைநிறுத்தம் சாதாரண தொழிற்சாலை ஒன்றில் நடந்திருந்தால் முதலாளி வீசும் பணத்தை அள்ளிவிட்டு அரசின் ஆசியோடு போலீசு தொழிலாளிகளை பந்தாடியிருக்கும்.

ஆனால் ஆளும் வர்க்கத்தின் அடிமடியில் இருக்கும் முக்கிய துறைகளில் இப்படிப்பட்ட போராட்டங்கள் வந்தால் அது இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதாக இருக்கும்.

இந்த வேலைநிறுத்தத்தை வைத்து மற்ற தனியார் விமான முதலாளிகள் பயணிகள் கட்டணத்தை பலமடங்கு ஏற்றி பிளாக்கில் விற்று சுருட்டியது தனிக்கதை. இது அப்பட்டமாக வெளிப்படையாக நடந்தாலும் அரசு சும்மா கையக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு கடமைக்காக ஒரு விளக்க கடிதத்தை மட்டும் அனுப்பி முடித்துக் கொண்டது. ஏர் இந்தியாவில் மட்டும் இந்த காலத்தில் டிக்கெட்டுகள் பழைய கட்டணத்திலேயே விற்கப்பட்டன என்பதை வைத்துப் பார்த்தால் இந்தியாவிற்கு தேவை தனியார் துறையா, பொதுத்துறையா என்பது புரிய வரும்.

இந்த வேலைநிறுத்தத்தில் விமானிகள் பாதி கோரிக்கையைத்தான் வென்றிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமையை பதிவாளர் முடிவு செய்வார் என்று விட்டுக்கொடுத்திருப்பது சரியல்ல. அதேசமயம் தொழிற்சங்கங்களின் பதிவாளர் சட்டப்படி இந்த விமானிகள் சங்கத்தை அங்கீகரித்தே தீர வேண்டும். இருப்பினும் அரசும், முதலாளிகளும் கொல்லைப்புற வழியாக இந்த சங்கத்தை கருவறுப்பதை நிச்சயம் செய்வார்கள். மேலும் மற்ற தனியார் விமான முதலாளிகளும் இதனால் கதி கலங்கியிருப்பதால் அவர்களும் இந்த சங்கத்தை கருவிலேயே ஒழிக்க முயல்வார்கள்.

எது எப்படியிருந்தாலும் தங்களது ஒன்று பட்ட போராட்டமே முதலாளிகளை பணிய வைத்திருக்கிறது என்பதையும் வேலைநிறுத்தம் செய்ததற்காகவே தங்களை பயங்கரவாதிகள் என்று தூற்றிய கோயலையும் அவர்கள் எப்போதும் மறக்கக் கூடாது. முதலாளிகள் என்ற முழுப்பானைக்கு இந்த கோயல் என்ற ஒரு பருக்கை என்ன பதமென்பதை நாமும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

சங்கமாக சேர்ந்தால் நமது சங்கடங்கள் தீரும் என்ற அனுபவத்தை தொழிலாளிகளுக்கு முக்கியமான காலத்தில் உணர்த்திய ஜெட் ஏர்வேசின் விமானிகளுக்கு வாழ்த்துக்கள்!

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

தமிழிஷ் பயணாளர்கள் உங்கள் தமிழிஷ் கணக்கு விவரங்களை கொண்டு இன்ட்லியில் வாக்களிக்கலாம்

134 Comments

  1. ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவன பைலட்டுகளுக்கு பாராட்டுக்கள்.

    Posted on 15-Sep-09 at 12:50 pm | Permalink
  2. அர டிக்கெட்டு !

    இந்த சங்கத்தினை முதலாளிகளிடமிருந்து மட்டுமல்ல, சி.பி.எம் போன்ற ஓட்டுப் பொறுக்கி போலி கம்யூனிச கும்பலிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து ஐ.டி. துறை நண்பர்களுக்கு ரோஷம் வருதான்னு பார்ப்போம்

    Posted on 15-Sep-09 at 1:15 pm | Permalink
    • //சங்கமாக சேர்ந்தால் நமது சங்கடங்கள் தீரும் என்ற அனுபவத்தை தொழிலாளிகளுக்கு முக்கியமான காலத்தில் உணர்த்திய ஜெட் ஏர்வேசின் விமானிகளுக்கு வாழ்த்துக்கள்!//

      சங்கம் என்றாலே ஏதோ வேண்டாததுபோல அருவருப்பானது போலத்தான் நம்ம ஐடி ஊஊஊஊஉழியர்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தான் எவ்வளவு தான் ஒட்ட சுரண்டப்பட்டாலும் வாய் விட்டு கதறி அழக்கூடாது அப்படி அழுதால் தன் ஸ்டேடஸ் போவதாக நினைக்கிறார்கள். முதலாளி எலாவற்றையும் உருவி அம்மணமாய் நிற்கும் போதுதான் வருவார்களோ என்னவோ.

      கலகம்

      Posted on 15-Sep-09 at 3:47 pm | Permalink
  3. நாங்கு விமானிகளை மீண்டும் பணி அமர்த்தியது மட்டுமே தொழிலாளிகளுக்கு கிடைத்த வெற்றி. மாறாக தொழிற்சங்கத்தை அழித்தது ஜெட் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி. இனிமே, இவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் கூட்டுக் குழு தான் முடிவு எடுக்கும். ஐந்து பேர் ஜெட் நிர்வாகத்திலிருந்தும், ஐந்து பேர் விமானிகளிலிருந்தும் அமைக்கப்படுகின்ற குழு அது. மேலும், இனி வரும் பிரச்சினைகளை, இந்தக் குழு ஒன்று சேர்ந்து தான் முடிவு செய்யும். இதில் யாரின் கை ஓங்கி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இனிமேல், இப்படி ஒரு ஸ்டிரைக் நடக்க வாய்ப்பே இல்லாதவாறு அமைந்திருக்கிறது இவர்களின் ஒப்பந்தம்.

    தொழிலாளர்களின் ஒற்றுமையையும், விடா முயற்சியும் பாராட்டப்படவேண்டியவை என்றாலும், இது வெற்றியா தோல்வியா என்று யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும்.

    Posted on 15-Sep-09 at 1:16 pm | Permalink
  4. மாதம் ஒரு லச்சம் போல சம்பளம் வாங்கும் இவர்கள் தான் “தொழிலாளர்” களா ? :) ))
    செம்புரட்சிக்காக இவர்களில் யாராவது ஒருவராவது உழைபார்களா அல்லது கம்யூனிசத்தை
    ஆதரிப்பர்களா அல்லது உண்மையான ஏழை தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்பார்களா ?
    முக்கியமாக, இவர்களின் வீடுகளில் வேலை செய்யும் சமையல்காரர்கள், வேலைகாரகளை எப்படி
    நடத்துவார்கள் ? நல்ல கதை..

    தொழிற் சங்கங்கள் அமைவதை தடுக்க காரணம் : பழைய வரலாறுதான். தொழிற் சங்கங்களே கூடாது
    என்பது சரியல்லதான். ஆனால் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிற் சங்கங்கள் உருவானால், போக போக‌
    அந்நிறுவனம் அழிவது இயல்பு. ஏனெனில், நேர்மை இல்லா தொழிற் சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் அப்படி. பல பழைய நிறுவனங்கள் சீரழிந்த வரலாறு அப்படி.
    எஸ்.ஆர்.எம்.யூ ப‌ற்றி ஒரு விரிவான‌ ப‌திவு எழுதுங்க‌ள் பார்க்க‌லாம்.

    உண்மையான‌ தொழிலாள‌ர் வ‌ர்க‌ம் தின‌க்கூலிக‌ள் தாம். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அல்ல‌.

    Posted on 15-Sep-09 at 1:37 pm | Permalink
    • Sureshkumar

      I accept the K.R.Athiyaman voice.its true

      Posted on 15-Sep-09 at 3:44 pm | Permalink
    • அசட்டு அதியமானே!

      தினக்கூலிகள்தான் தொழிலாளிகள் என்று உளறியிருக்கிறீர்களே, மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளிகளெல்லாம் முதலாளிகளா? மார்க்சிய புரிதலில் தினக்கூலிகளெல்லாம் உதிரிப்பாட்டாளிகள். ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தரத்தொழிலாளர்களும்தான் தொழிலாளி வர்க்கம்.

      srmu கன்னையாவின் தொழிற்சங்கள் ஊழல் மிகுந்த கிரிமினல் சங்கம்தான். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரயில்வே துறை லாபகரமாக இயங்குகிறதே? இப்படிப்பட்ட ஊழல் சங்கங்கள் இருந்தால்தான் நிறுவனம் சிறப்பாக இயங்கும் என்பதுதான் உங்கள் லாஜிக் படி வருகிறது?

      பெரிய நிறுவனத்தில் தொழிற்சங்கம் இருந்தால் நிறுவனம் அழிந்து விடுமா? இன்றைக்கு அமெரிக்காவில் பிரம்மாண்டமான நிறுவனங்கள் திவாலானதற்கு தொழிற்சங்கங்கள் காரணமா இல்லை முதலாளிகளின் அபரிதமான லாபவெறி காரணமா? உளறுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் அசடே?;

      ஜெட் ஏர்வேசின் விமானிகள் விமானத்தை ஓட்டினால்தான் ஒரு இலட்சம் சம்பளம் மற்றும் நடுத்தர வர்க்க வாழ்க்கை கிடைக்கும். தவிர்த்து இவர்களெல்லாம் விமானங்களை வாங்கி முதலாளிகளாகவெல்லாம் முடியாது. தனத நடுத்தர வர்க்க வாழ்க்கை தவிர இவர்களும் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். வேண்டுமானால் இவர்கள் மேட்டுக்குடி தொழிலாளி வர்க்கம் என்று கூறலாம். வேலை செய்தால்தான் சம்பளம். இவர்களை கம்யூனிஸ்டுகளாக்கும் வேலையை ஜெட் ஏர்வேசின் முதலாளி கோயலே பார்த்துக் கொள்வான். விமானிகளை பயங்கரவாதிகள் என்று ஏசியவன்தானே அவன். தற்போது வேலை நிறுத்தம் செய்தது, சங்கம் கட்டியது இதெல்லாம் கூட கம்யூனிசத்தின் முதல் படிதான்.

      முதலாளிகளைப் பற்றியும் தெரியாமல், தொழிலாளிகளைப் பற்றியும் தெரியாமல் உளறுவதில் அசட்டு அதியமானுக்கு நிகர் அவரே!

      Posted on 15-Sep-09 at 5:13 pm | Permalink
      • லூசு பய‌ காளமேகம், (என்ன உனக்குதான் பேசத்தெரியுமா மவனே),

        ரயில்வே லாபமாக நடக்குதா ? அடிச்ச கொள்ளை போக கிடைக்கும் இது உமக்கு லாபமாத்தான்
        தெரியும். என்ன ஒரு லாஜிக் அப்பனே !! ரயில்வே ஒரு மோனோபலி. அது ஒரு காரணம்.
        அங்கு நடக்கும் “சுரண்டல்” பற்றி உனக்கு என்ன தெரியும் ? ஊழலின் அளவு ?
        அதையும் மீறி சில ஆண்டுகளாகதான் “லாபம்”

        மாத சம்பளம் வாங்கு அனைவரும் தொழிலாளர் வர்கமா ? மாதம் 10 லச்சம் வாங்கும் நிர்வாகிகள்
        பலர் உண்டு ? கேனையன போல உளர வேண்டாம். இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான்
        அதிகம். குறைந்த சம்பளத்தில், கூலியில் வேலை செய்கின்றனர். அவர்களை தான் குறிப்பிட்டேன்.

        சென்னையில் 70களில், 80களி நடந்தவை பற்றி உனக்கு என்ன வெங்காயமா தெரியும். பெரிசா பேச வந்திட்ட.

        ஒரு லச்சம் வாங்குபவர்கள் நடுத்தர வர்கமா ? அறிவு கொழுந்துயை நீர் !!

        இறுதியாக‌ : give respect and take respect. ok. or i can easily call you a bloddy fool and etc..

        Posted on 15-Sep-09 at 6:17 pm | Permalink
    • அ.அதியமானின் அசாத்திய கண்டுபிடிப்பு

      ஒரு இலட்சம் சம்பளம் வாங்குனா வீட்டுல வேல பாக்குத வேலைக்காரவுகளை தப்பா நடத்துவாகளாம். அப்புடினா முதலாளி அதியமான் அந்த மாதிரி வருமானம் வந்தா அல்லாத்தையும் தப்பு தப்பா நடத்துவாராம். பாம்பின் கால் பாம்பறியுமாமே? என்ன மக்கா புரியுதா?

      Posted on 16-Sep-09 at 10:46 pm | Permalink
  5. yazhini

    Let this struggle get contagious and spread across the globe !

    Posted on 15-Sep-09 at 2:39 pm | Permalink
  6. பாயாசம்

    //தொழிற் சங்கங்கள் அமைவதை தடுக்க காரணம் : பழைய வரலாறுதான். தொழிற் சங்கங்களே கூடாது
    என்பது சரியல்லதான். ஆனால் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிற் சங்கங்கள் உருவானால், போக போக‌
    அந்நிறுவனம் அழிவது இயல்பு. ஏனெனில், நேர்மை இல்லா தொழிற் சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் அப்படி. பல பழைய நிறுவனங்கள் சீரழிந்த வரலாறு அப்படி.
    எஸ்.ஆர்.எம்.யூ ப‌ற்றி ஒரு விரிவான‌ ப‌திவு எழுதுங்க‌ள் பார்க்க‌லாம். //

    ஐபிஎம் என்ற மிகப் பெரிய நிறுவனத்தில் அமெரிக்காவில் யூனியன் கட்டப்பட்டுள்ளது. http://www.endicottalliance.org/

    Posted on 15-Sep-09 at 2:44 pm | Permalink
    • நான் இந்திய நிலைமை பற்றி சொன்னேன். அய்.பி.எம் சங்கம் இங்கு போல ஊழல் மயமாகி, பொறுப்பில்லாமல் செய்லபடாது. ஆனால் யு.எ.டபள்யூ என்னும் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை சங்கத்தில் சில செயல்களால் தான் அமெரிக்க பெரும் கார் நிறுவங்கள் திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதே அமெரிக்காவில், உலகின் மிக பெரிய கார் நிறுவனமான டொயோட்டோவின் அமெரிக்க தொழிற்சாலைகள் அது போல் ஆகவில்லை. ஒப்பிட வேண்டிய விசியம்.

      80கள் வரை இந்தியாவில் தொழிலாளர் சங்கங்களின் செயல்பாடுகள் விரோதத்தை மற்றும் உற்பத்தியை அழிக்கும் வகையில் இருந்தன. முக்கியமாக இன்றும் மே.வங்காளத்தில் உண்டு. அவர்ளை “வேலை” வாங்க முடியாது. (அரசு துறையில் இந்த போக்கு மிக மிக அதிகம்). நேரில் அனுபவதிதால் தான் புரியும்.
      உடனே சுரண்டல் என்று கதைக்க வேண்டாம். 14000 போல மாத சம்பளம் வாங்கும் மே.வ அரசு ஊழியர்களின் நேர்மை மற்றும் வேலை செய்யும் மனோபாவம் பற்றி விசாரித்து பார்க்கவும். அம்மாநிலம்
      உருப்படாது என்று ஒரு கருத்து..

      Posted on 15-Sep-09 at 6:07 pm | Permalink
      • பாயாசம்

        //நான் இந்திய நிலைமை பற்றி சொன்னேன். அய்.பி.எம் சங்கம் இங்கு போல ஊழல் மயமாகி, பொறுப்பில்லாமல் செய்லபடாது. ஆனால் யு.எ.டபள்யூ என்னும் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை சங்கத்தில் சில செயல்களால் தான் அமெரிக்க பெரும் கார் நிறுவங்கள் திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதே அமெரிக்காவில், உலகின் மிக பெரிய கார் நிறுவனமான டொயோட்டோவின் அமெரிக்க தொழிற்சாலைகள் அது போல் ஆகவில்லை. ஒப்பிட வேண்டிய விசியம்.//

        ஒரு சில உதாரணங்களை வைத்து தொழில்சங்கங்கள் நிறுவனங்களை திவாலாக்கும் என்று அதியமான் சொல்கிறார்.

        ஆனால், இன்று
        அமெரிக்க பொருளாதாரம் திவால்க்கு சென்றுள்ளது. ஆட்டோ தொழில், வங்கிகள் என பல நிறுவனங்கள் மண்ணைக் கவ்வியுள்ளன. இதற்கு தொழிற்சங்கங்கள் காரணமல்ல. முதலாளிகள்தான் காரணம். முதலாளித்துவமத்தின் அடிப்படை முரன்பாடுதான் இதற்கு காரணம். ஆனால், அதியமான் இதனை எதிர்த்து குரல் கொடுக்க மாட்டார்.

        பாயாசம்

        Posted on 16-Sep-09 at 1:21 pm | Permalink
      • sahid

        இந்த செய்தியுனுள் அனைவருமே பொருளாதாரம் பற்றிய அடிப்படையை அறியாதவர்கள் போல் தெரிகிறது. பின்னோட்டங்கள் அனைத்தும் பிரச்சனையைப் பற்றி மட்டுமே தர்க்கம் செய்துள்ளனர். மூலகாரணம் பற்றிய கருத்தாக்கத்துடன் ஆழமாக இல்லை. முதலாளிகளின் திவால், ஜெட் ஏர்வேஸ் விமானி தொழிலாளியா போன்ற பிரச்சனைகளை தேவை- அளிப்பு, உழைப்பை விற்று பிழைப்பது, உழைப்பை வாங்குவது, உபரியை உடைமையாக்குவது மற்றும் சேமிப்பது முதலியான பொருளாதாரவிகலிருந்து ஆராயவேண்டும். விரைவில் இதுபற்றிய விதிகளுடன் இவ்விடுக்கையினுள் வருகிறேன்.

        Posted on 18-Sep-09 at 9:52 pm | Permalink
  7. elayaraja

    மாதம் ஒரு லச்சம் போல சம்பளம் வாங்கும் இவர்கள் தான் “தொழிலாளர்” களா ?

    Posted on 15-Sep-09 at 4:07 pm | Permalink
  8. சங்கமாக சேர்ந்தால் நமது சங்கடங்கள் தீரும் என்ற அனுபவத்தை தொழிலாளிகளுக்கு முக்கியமான காலத்தில் உணர்த்திய ஜெட் ஏர்வேசின் விமானிகளுக்கு வாழ்த்துக்கள்!

    Posted on 15-Sep-09 at 5:01 pm | Permalink
  9. //மாதம் ஒரு லச்சம் போல சம்பளம் வாங்கும் இவர்கள் தான் “தொழிலாளர்” களா ?//

    அடுத்து பாலியல் தொழிளாலர்கள் முன்னேற்ற சங்கம் அமைக்க வினவு பாடுபடுவார் என பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

    Posted on 15-Sep-09 at 5:12 pm | Permalink
    • காஷ்மீர், மணிப்பூர், ஈராக் பெண்களை வல்லுறவு கொள்ள வெறியாய் அலையும் மதி இந்தியா பாலியல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் நிரோத் குப்பைகளை அப்புறப்படுத்தும் கான்ட்ராக்டை எடுத்துக் கொள்வார் என கேள்வி!

      Posted on 15-Sep-09 at 5:18 pm | Permalink
  10. வினவு

    ஜெட் ஏர்வேஸ் கட்டுரை குறித்து மேலதிக தகவல்.

    93ஆம் ஆண்டு அரபு நாடுகளின் விமானங்களுக்கு டிக்கெட் விற்கும் ஏஜென்சி நடத்தி வந்த நரேஷ் கோயல் ஜெட் ஏர்வைஸை துவக்கினார். அப்போது ஆரம்பிக்கப்பட்ட ஈஸ்ட் வெஸ்ட் விமான நிறுவனம் மாஃபியாக்கள் தொடர்பால் மூடப்பட பின்பு ஆரம்பிக்கப்பட்ட சகாராவை கோயல் வாங்கிக் கொண்டு பல விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து மற்ற போட்டியாளர்களை சரிக்கட்ட கட்டணத்தை குறைத்துக் கொண்டு தனிப்பெரும் நிறுவனமாக உருவெடுக்க நினைத்தபோது பொதுவான பொருளாதார மந்தத்தால் கம்பெனி தள்ளாட ஆரம்பித்த்து. உடனே 1900 ஊழியர்களை வேலைநீக்கம் செய்தார். பின்னர் அதற்கெதிராக பொதுக்கருத்து உருவானதால் மீண்டும் சேர்த்துக் கொண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 2000ம் பேரை வெளியேற்றினார். இதனால் தம்மையும் வெளியேற்றக்கூடும் என்று அஞ்சியே பைலட்டுகள் சங்கம் ஆரம்பித்தனர். ஏகபோகமாக மாற நினைத்த கோயலின் பேராசையால் தற்போது ஜெட்ஏர்வேஸ் நட்டத்தில் நடக்கிறது. அகலக் கால் வைத்த இந்த முதலாளிக்காக பலர் வேலையிழந்த்துதான் மிச்சம்.

    Posted on 15-Sep-09 at 8:52 pm | Permalink
    • certain wrong concepts here : Goyal did not try to create monoploy. he successfully built up a new company and reduced ticket prices and increased efficiency. Until Jet came, IA and AI were the sole monoploy carriers within India and the prices and efficiceny were terrible. Suppose if free competition was NOT allowed in airlines, and things were the same as the 80s and before ? would there be cheap airlines and more efficency ? under cutting ticket prices is very common in this highly competitive sector all overt the world. hence chronic bankrupttcies and mergers, etc. We are new to all this. and will soon get used to this. If new airlines under cut and price themselves below cost of ops, then surely they will go bankrupt. no big deal and soon there will be balancing between costs and prices. Only the govt and corrupt politicians should be made to stand aside with stictly no intevention of help to the airlines. Let the cheapest and best comapanies win in the long run. that is the basis for free enterprise capitalism. the situation is very similar in Lorry market. constant bankruptcies and sell outs and price wars , etc. No one notices, because that is an old industry while new private airlines is new to Indians. and all this talk about monopoly is nonsense. and the piolts who got these jobs (and have signed the contracts with harsh terms and conditions) should be ready to loose them if the airlines loose money. similar job losses occur routinely in all sectors of economy. while new jobs are created parallely. and during boom times, there is acute shortage of experienced pilots, etc. it is always a balancing act and time will set all this right..

      Posted on 15-Sep-09 at 9:38 pm | Permalink
      • Sahid

        தொழிலாளிகலெல்லாம் ரவுடித்தனம்பன்றதும் ஒழுங்கா வேலை செய்யாம நட்டத்தை ஏற்படுத்துறதுமா இருக்காங்க. அப்படியிருந்தும் இந்த முட்டாள் முதலாளிங்க தொழிற்சாலைகளை தொடங்கி ஏன் நட்டப்படுறாங்கன்னு புரியலயே. மேற்குலக நாடுகள் அமெர்க்கா தொழிலாளிகலெல்லாம் பரவாயில்லாமல் இருக்கும்போது இந்த முட்டாள்கள் இந்தியாவுக்கு வந்து தொழில் தொடங்க அரசாங்கத்திடம் தெறந்துவுடு எங்களுக்குன்னு அழிசாட்டியம் பன்றது அடி முட்டாள் தனம் இல்லையா? இந்த முதலாளிகள நெனச்சா பாவமா இருக்கு அதியமான் அண்ணே. அறிவுகெட்டத்தனமா தொழிலாளிகள நம்பி நட்டப்படுகிறார்கள். சும்மா பணத்தை வச்சிக்கிட்டு கால்மேலே கால்போட்டுக் கொண்டு ராசாவாட்டம் உட்காந்து திங்காம. அதியமான் அண்ணே இனிமே யாராவது வந்தா எல்லா நடப்புகளையும் சொல்லி புத்தி சொல்லி காப்பாத்துங்கண்ணே. ஆங்கிலத்திலெல்லாம் பிச்சு உதறிங்க அண்ணே! அதனால எவ்வளவு அறிவுள்ளவர் நீங்கன்னு புரிஞ்சிகிட்டேன் அண்ணே! நானும் எல்லா “சுட்டி” யிலேயும் போயி உங்க அறுவுக்கூர்மைய விளம்பரப்படுத்துறே அண்ணே!

        (இது ஒரு எளிய சூத்தரம். விவரங்கள் விரைவில் எமது http://www.paraiyoasai.wordpress.com Blog- ல் வரவுள்ளது)

        Posted on 20-Sep-09 at 10:48 pm | Permalink
  11. chithragupthan

    ஜெட் ஏர்வேய்ஸ் விமானிகள் போராட்டம் பாராட்டுதலுக்குரியது, அதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கருத்துப் பரிமாற்றமாக இருக்க வேண்டுமே தவிர சாக்கடையில் கல்லை விட்டெறிந்தது போல் வார்த்தை நாற்றம் கூடாது, மாத சம்பளம் பெறுபவர்கள் அனைவரையும் காரைக்குடி சினா தானாவும், தற்போதைய பிரணாப் முகர்ஜியும் வருமானவரி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் தகர்த்து வைத்துள்ளனர், ரயில்வேயில் படிப்படியாக தனியார் மயம் வந்து கொண்டிருக்கிறது, தொழிற்சங்கங்கள் ஜாதி, தனி மனித விளம்பரங்களினால் பிளவு பட்டு பட்டு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் பல தொழிற்சங்க அமைப்புக்கள் முறை சாரா தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை தங்களது போராட்டத்தின் போது வலியுறுத்துகின்றன. தொழிற்சங்கங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்கிற உலகமயமாக்கல் நடவடிக்கையில் ஒன்று சேர்ந்து நியாயமான போராடும் அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்களே.

    Posted on 15-Sep-09 at 9:12 pm | Permalink
  12. //பாலியல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் நிரோத் குப்பைகளை அப்புறப்படுத்தும் கான்ட்ராக்டை எடுத்துக் கொள்வார் என கேள்வி!//

    நான் பேசியது பெண் பாலியல் தொழிளாலர்களை பற்றி , நிரோத் ஆண்கள்தான் உபயோகபடுத்துவார்கள் என நினைக்கிறேன் ,

    ஏண்ணே , சீனா ஏதும் பணம் தருவதில்லையா ?

    தொழிலை சேஞ்சு பண்ணிட்டீங்களா ? புரச்சி காண்டம் அள்ளும் காண்ராக்டை எனக்கே தாங்கண்ணே பிலீஸ் ..

    சும்மாவா , புரச்சி தொழிளாளிகள் உபயோகபடுத்தியதாச்சே ?

    Posted on 15-Sep-09 at 9:34 pm | Permalink
  13. tamil

    good article! congrats……

    Posted on 15-Sep-09 at 10:12 pm | Permalink
  14. வினவு தோழரே. அதியமான் சொல்வதில் பாய்ண்ட் இல்லையா என்ன ? லட்சக்கணக்கக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, விமானம் கிளம்பியவுடன் ஆட்டோ பைலட் போட்டுவிட்டு சரக்கு சாப்பிட்டுக்கொண்டு, கிளு கிளுப்பும் கொஞ்சலும் என்று ஜாலியாக பணியாற்றும் விமானிகளிடம் எங்கே தொழிலாளரை கண்டீர் ? எந்த விமானியாவது ஒரு சொட்டு வியர்வை சிந்தியதாக சொல்லமுடியுமா ? உடனே நீயும் ஏசியில் இருக்கிறாய், ஐடி துறையில் இருக்கிறாய் என்று என்மீது பிறாண்ட காளமேகத்திடம் சொல்லவேண்டாம். தனியார் விமானத்துறையில் சரக்குகளை கையாள்பவர்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ சங்கம் அமைந்து அதனை வினவு வெற்றியாக எழுதியிருந்தால் குறைந்தபட்சம் புரச்சியோ புளித்த ஏப்பமோ வரும் என்று நம்பியிருந்திருக்கலாம். கருத்து சொல்ல வருபவர்களை குதறுவதை நிறுத்தாவிட்டால் மெய்யாலுமே புரச்சி வரும் நாளைக்கு கடைப்பக்கம் யாரும் வராமல்போய்விடப்போகிறார்கள்…

    Posted on 16-Sep-09 at 4:01 am | Permalink
    • ஆர்.கே

      நன்பர் அதியமான் / செந்தழல் ரவி

      //விமானிகளிடம் எங்கே தொழிலாளரை கண்டீர் ?//

      மூலதனத்தை அண்டிப் பிழைப்பதால் ( இவர்கள் மூலதனத்தின் சொந்தக்காரர்கள் இல்லை) தொழிலாளர்கள் தான். ஆனால் ஒரு வர்க்கம் என்று பார்த்தால் ( ஓப்பீட்டளவில் தொழிலாளி வர்க்கத்தை விட அதிக சமூக அந்தஸ்த்து கொண்டவர்கள்) குட்டி முதலாளி வர்க்கமாகத்தன் வகைப்படுத்த முடியும்.

      இவர்கள் ஊசலாட்டம் மிக்கவர்கள். முதலாளி வர்க்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே முனைவார்கள் – ஆனால் முதலாளி வர்க்கம் எப்போதும் குட்டிமுதலாளி வர்க்கத்தை கீழ் நோக்கியே தள்ளும் ( இந்த சம்பவங்களிலும் கோயல் விமானிகளை தீவிரவாதிகள் என்று தூற்றியதை கவனியுங்கள்).. இவர்களும் தாங்கள் பாதிக்கப்படும் நேரத்தில் தமது சொந்த உரிமைகளுக்காக மட்டும் போராடிவிட்டு மீண்டும் முதலாளியோடு சமரசமாகும் வழியைத்தான் பார்ப்பார்கள் ( அதியமான் – hold your questions) – அதாவது தமக்காக போராடிய இவர்கள் வேலை இழந்த க்ரவுண்ட் ஸ்டாஃபுகளைக் கண்டுகொள்ளவில்லை.. அப்படிச் செய்யக்கூடியவர்களும் இல்லை..

      இதையெல்லாம் மீறி இந்த போராட்டம் சொல்லும் செய்தி ஒன்றுள்ளது..

      அந்த செய்தி ஐ.டி துறையினருக்கான பாடம்! ஒன்றுபட்ட போராட்டத்தின் பலத்தை ( ஒரு மாஃபியாவையே மண்டியிட வைத்த கூட்டு பலம்) ஐ.டி துறை அல்ப்பைகளுக்கு சொல்லித்தந்திருக்கிறது.

      Posted on 16-Sep-09 at 9:18 am | Permalink
      • ///அந்த செய்தி ஐ.டி துறையினருக்கான பாடம்! ஒன்றுபட்ட போராட்டத்தின் பலத்தை ( ஒரு மாஃபியாவையே மண்டியிட வைத்த கூட்டு பலம்) ஐ.டி துறை அல்ப்பைகளுக்கு சொல்லித்தந்திருக்கிறது./// :) )))))))))))) அய்.டி துறை “தொழிலாளர்கள்” மற்றும் அத்துறை எதோ உருப்படியா இருக்கறது பிடிக்கலையா ? சங்கம் உருவான நூற்பாலை துறையில் கடந்த கால வரலாறு எப்படி ?

        அய்.டி “தொழிலாளர்கள்” கண்டிப்பாக உங்க அரிய ஆலோசனைகளை கேட்க்க மாட்டாக என்பது திண்ணம். தேவையே இல்லை. சரி, இருக்கட்டும். இன்று, நேர்மையான, வெளிப்படையான ஒரு தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் சங்கத்தை காட்டுங்க பார்க்கலாம். உரிமைக்காக போராடுவதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் உரிமைளுக்காக‌ ‘மட்டும்’ போராடுவார்கள், கடமையை ஒழுங்காக செய்ய வேண்டியதன் தார்மீக அவசியத்தை பற்றி யாரும் பேசுவதில்லை ! நேர்மை இல்லாமல் எந்த புரட்சியையும் யாரும் எப்போதும் கொண்டுவர முடியாது. மாஃபியா போன்ற சங்கங்கள் தாம் மிக சகஜம். அரசு துறை பற்றி சொல்லவே வேண்டாம்.

        அமைப்புச்சாரா தொழிலாளர்களை பற்றி இவர்கள் “கவலை” படுவாதாக சொல்வது பொய். வேடதாரிகள் இவர்கள்.

        தோழர் வினவு,

        ஜெட் ஏர்வேய்ஸ் பைலட் கில்ட் “தோழர்களிடம்” உங்க வாழ்த்துக்களை நேரில் தெரிவித்து, உங்க குழுவின் கொள்கை மற்றும் நோக்கங்களை பற்றி அவர்களிடம் விளக்கிப் பாருங்களேன் !! :) )) பிறகு புரியும் : யார் உங்க “தோழர்கள்” என்று ; அவர்கள் உங்களை “எதிரிகளாகத்தான்” பாவிப்பார்கள். அருகே விட மாட்டார்கள்.
        வ‌ழ‌க்க‌ம் போல‌ நீங்க‌ தேர்ந்தெடுக்கும் “ந‌ண்ப‌ர்க‌ள்” உண்மையில் ந‌ண்ப‌ர்க‌ள் அல்ல‌. வெள்ளைய‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு “தோழ‌ர்” ; யான் எதிரி !! :) ))

        Posted on 16-Sep-09 at 11:54 am | Permalink
    • vikramathithan

      //புரச்சி வரும் நாளைக்கு//அழகான ஜீவனுள்ள ஆற்றை, சாக்கடைகள் பல காலம் ஆக்கிரமித்திருக்கும். சாக்கடை எவ்வளவு அழகு என சொல்லிக்கொள்கிற ஜென்மங்களும் உண்டு. மழை பொழிந்து, வெள்ளம் வரும் பொழுது, சாக்கடையால் எதிர்த்து நிற்க முடியாது. அது போல தான் புரட்சி.

      ‘எதுக்கு ஜீவனுள்ள நதி?’ என கவித்துவமாக கருத்து சொல்லிக்கொண்டு… நேரடியாவே சொல்லலாம்.

      இன்றைக்கு புரச்சி என கேலி பேசுவர்களை அல்லது எதிர்புரட்சி செய்பவர்களை கட்சி தான் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. புரட்சியை இறுகப்பற்றும் பொதுமக்கள், போகிற் போக்கில் இந்த நபர்களை மண்டையில் தட்டி உட்கார வைத்துவிடும்.

      இப்பொழுது முதலாளித்துவம் பக்கம் இருக்கிற இவர்கள், அன்றைக்கு ஜெயித்த புரட்சியின் பக்கம் சத்தமில்லாமல், வாலை சுருட்டி கொண்டு வந்துவிடுவார்கள்.

      அதுவரை இவர்களுக்கும் சேர்த்து நாம் தான் போராட வேண்டியிருக்கும்.

      Posted on 16-Sep-09 at 11:07 am | Permalink
    • reader

      //என்மீது பிறாண்ட காளமேகத்திடம் சொல்லவேண்டாம்//
      அடங்கொன்னியா… காளமேகம் இன்னொரு புரளி மனோகரா?

      Posted on 16-Sep-09 at 5:16 pm | Permalink
      • MamboNo8

        நீ ஜால்ரா வாசிக்கிரியாக்கும்… நோண்டு மாமா ஜமா சேக்க புரளிய பெத்தார் இங்கேதான் அள்ளக்கைகளுக்கும், அம்பிகளுக்கும் டின்னுகட்ட நாங்க இருக்கோமே அப்புறம் எதுக்கு நீயா வந்து கத சொல்லுத

        Posted on 16-Sep-09 at 6:02 pm | Permalink
    • எய்யா செந்தழல் ரவி நான் ஆரைப்போய் பிராண்டுதேனு புகார் சொல்லுதீக. கேள்விக்கு பதில் சொல்லுதது தப்புன்னு சொல்லுதீகளா? சரக்கடிச்சுட்டு சைக்கிளே ஒட்ட முடியாது இதுல ஏரோப்பேளேனெல்லாம் ரொம்ப அதிகமுனு தோணணும்லா? தொழிலாளின்னா சரக்கடிக்கமாட்டான்னு யாருவே உமக்கு சொல்லிக் கொடுத்தா? இங்க டாஸ்மார்க் வந்து பாரும். அல்லா தொழிலாளியும் குவார்ட்டரை ராவா முடிச்சுட்டுதான் வே டூட்டிக்கே போறாக. புரட்சின்னா முதலாளிக்குத்தான் வயிறு கலங்கும், உமக்கும் கலங்குதுன்னா எதாவது டாக்டரை பார்த்து உடம்ப பாத்துக்கணுமுலா. பிளேனை ஓட்டுறவன் அவன் பாட்டுக்கு சங்கத்தை கட்டி போராடுதான். அதுல உமக்கு ஏன்வே வயித்தெரிச்சல்? உலகத்துல அல்லா எடமும் சுத்திருக்கீக. ஆனா ராசா அதுக்கேத்த மாரி அறிவும் வளரணும்லா? இம்சையில தொப்புள் படத்தைப்போட்டு சமூக சேவை செய்தீக. இடையில தோழர் வினவுன்னு கூப்புடுதீக. ஒண்ணுமே புரியலை மக்கா

      Posted on 16-Sep-09 at 11:02 pm | Permalink
  15. பொருளாதார மந்தத்தினால், உலகம் முழுவதும் முதலாளித்துவத்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதை அப்படியே தொழிலாளர்கள் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சம்பளம் குறைப்பு, வேலை இழப்பு என நாளும் தொழிலாளர் வர்க்கம் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.தொழிற்சங்கம் கட்டுவது என்பதே சிரமமாகி கொண்டிருக்கும்
    இவ்வேளையில்.. இந்த போராட்டம் நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது. ஒற்றுமையாய் நின்று போராடி ஜெயித்ததற்காக வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.நடப்பு நிலைமைகளில், சமுதாய மாற்றம் அல்லது அனைத்துயும் புரட்டி போடும் புரட்சியை, மாத சம்பளத்த்ற்கு வேலை செய்யும்
    செந்தழல் ரவி “புரச்சி” என கேலி எள்ளல் பேசுவது.. அவர் மீது பரிதாபம் கொள்ள வைக்கிறது.

    Posted on 16-Sep-09 at 10:46 am | Permalink
  16. //சமுதாய மாற்றம் அல்லது அனைத்துயும் புரட்டி போடும் புரட்சியை, //

    புரட்டி புரட்டி 100 வருசம் ரசியாவிலும் , சீனாவிலும் கிழிச்சாச்சு , இனி இங்கதான் பாக்கி

    /மாத சம்பளத்த்ற்கு வேலை செய்யும்//

    உங்களுக்கெல்லாம் சீனாவிருந்து பல்க் பேமெண்ட் போல , மாசாமாசம் வாங்கறதில்லையோ

    Posted on 16-Sep-09 at 11:24 am | Permalink
    • //புரட்டி புரட்டி 100 வருசம் ரசியாவிலும் , சீனாவிலும் கிழிச்சாச்சு , இனி இங்கதான் பாக்கி// ஆமாம் மதி இண்டியா! நிறைய தொழிலாளி வர்க்கம் கிழிச்சுச்சு! அந்த நாட்டு தொழிலாளி வ்ர்க்கம் ஆட்சிக்கு வந்ததும், வாலைச் சுருட்டி ஒரு மூலையில் போய் உட்கார்ந்துச்சு!

      //
      உங்களுக்கெல்லாம் சீனாவிருந்து பல்க் பேமெண்ட் போல , மாசாமாசம் வாங்கறதில்லையோ

      // அவதூறு பிரச்சாரம் பண்ற உனக்கு அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து உனக்கு பணம் வருதோ!
      ஏன்யா உன்ன மாதிரியே எல்லாத்தையும் நினைக்கிற!
      விவாதம் செய்யும் பொழுது, நேரில் பேசும் பொழுது, என்ன மரியாதையோடு பேசுவோமோ! அந்த மரியாதையோடு தான் விவாதிக்க வேண்டும் என வழிகாட்டியிருக்கிறார்! அதனால் பொறுமையாக பேசுகிறேன்!

      இல்லையென்றால்… என்ன கிழிச்சுச்சு! என்று கேட்ட வாயை கிழித்திருப்பேன்.

      Posted on 16-Sep-09 at 12:23 pm | Permalink
  17. //இன்றைக்கு புரச்சி என கேலி பேசுவர்களை அல்லது எதிர்புரட்சி செய்பவர்களை கட்சி தான் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.//

    அய்யோ , கட்சி தண்டிக்கறதே தாங்க முடியல ,

    ரஷ்யாவில ஸ்டாலின் தண்டிச்ச 2 கோடி சொச்சமும் , சீனாவில மாவோ கலாச்சார புரச்சியுலயும் , தியாமன் சதுக்கத்துலயும் தண்டிச்ச தண்டிப்பும் போதாதா ?

    இல்ல , போல்பர்ட் வழியில கம்யூனிச தண்டிப்பு போதாதா ?

    அய்யோ அம்மா கொல்றாங்கப்பா

    Posted on 16-Sep-09 at 1:18 pm | Permalink
  18. //விவாதம் செய்யும் பொழுது, நேரில் பேசும் பொழுது, என்ன மரியாதையோடு பேசுவோமோ! அந்த மரியாதையோடு தான் விவாதிக்க வேண்டும் என வழிகாட்டியிருக்கிறார்! அதனால் பொறுமையாக பேசுகிறேன்!

    இல்லையென்றால்… என்ன கிழிச்சுச்சு! என்று கேட்ட வாயை கிழித்திருப்பேன்./

    இத பார்றா , யாருங்க உங்களுக்கு கனவுல வந்து அப்படி ஒரு அறிவுரை சொன்னது , மார்க்ஸா , மாவோவா ?

    கொஞ்சம் அசுரன் , வினவு வகையறா பதிவுகளை திருப்பி பாருங்க , எதிர் கருத்துகளை நீங்க மரியாதையா எதிர் கொண்ட லச்சணத்தை ,

    வந்துட்டாங்கையா செத்து சுண்ணாம்பா போன கம்யூனிச சொம்புக்கு கலர் அடிச்சுட்டு.

    Posted on 16-Sep-09 at 1:22 pm | Permalink
    • MamboNo8

      யோவ் மதி, சொந்த பேத்தி கூடவே அம்மணமா படுத்த காந்தி-ய-வாதி வழிவந்த நீ கையில எடுத்துகிட்டு கருத்து சொல்ல வந்ததுல ஆச்சரியமில்ல. உன்ன மாதிரி ஆளுங்களலெல்லாம் எவன் ஆட்சிக்கு வந்தாலும் நாக்கால பின்வாய கழுவ ரெடிய வருவீங்கன்னு பிரிட்டிஷ் வைசுராயே கனவு நனவு ஆதாரம் அம்மிக்கல்லோட வந்து சொல்லியாச்சு… நீ இப்பவே என்னா வேணுமின்னாலும் ஆடிக்கோ.. புரட்சிக்கு அப்புறம் உனக்கு குலாக்குதான்டி

      Posted on 16-Sep-09 at 4:36 pm | Permalink
  19. பாயசம்,

    தொழிற்சங்களின் தரம் பற்றி சொன்னேன். இந்தியாவை போல மேற்க்கில், இத்தனை மோசம் இல்லை.
    இந்திய தொழிற்சங்கங்கள் ஊழல் வசமாகி மற்றும் மாஃபியாவை போல ஆகி பல காலம் ஆகிவிட்டது. அதை தான் சொன்னேன். அனுபவஸ்தர்களிடம் பேசிப் பாருங்க. அமெரிக்காவின் ஜெனர்ல் மோட்டார்ஸ் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதற்க்கு அதன் தொழிற் சங்கமும் ஒரு முக்கிய காரணம் தான். அங்கு வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்து பாரும். ஆனால் டோயோட்டிவில் அப்படி இல்லை நிலைமை. ஒப்பிடத்தான் சொன்னேன்.

    பல‌ நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திவாலானதற்க்கான காரணிகளை விளக்கி
    எனது ஆங்கில சுட்டியை அளித்திருந்தேன். பார்க்க.

    உண்மையில் முதலாளித்துவ பொருளாதாரம் மொத்தமாக திவாலாகியிருந்தால், இந்த உரையாடல் சாத்தியமில்லை. :) )) மார்க்ஸ் சொன்னபடி பெரும் திவால் உருவாகவில்லை. அவர் சொன்னபடி “இறுதி” மந்தம் வரும் என்று நம்பிக்கொண்டிருங்கள் !! ஒவ்வொறு மந்தமும், முந்தய மந்தத்தை விட கொடுமையாக இருக்கும், பெரும் முதலாளிகள் ஒரு சிலர் மட்டும் மேலும் பெரிதாவர்கள், சிறிய தொழில்கள் படிப்படியாக அழியும் : இவை மார்க்ஸின் ஆருடம். ஆனால் இதுவரை அதற்க்கு நேர் மாறாகத்தான் நடக்கிறது. இந்த மந்தமும், படிப்படியாக முடிந்து கொண்டிருக்கிறது. பாடங்கள் கற்க்கப்படும். சிக்காலான காரணிகள் மற்றும் விளைவுகள் பற்றி ஆங்கில சுட்டி பார்க்கவும். பொருளாதார பாடங்கள் அவை. விவாதம் இன்னும் தொடர்கிறது. கியின்ஸ் வாதிகளுக்கும், மானிடரிஸ்டுகளுக்கும் இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மார்க்ஸிச பெருளாதார நிபுணர்களை இன்னும் யாரும் சீரியசா எடுத்துக்கொள்ளவில்லை !!

    Posted on 16-Sep-09 at 1:43 pm | Permalink
    • பாயாசம்

      //அவர் சொன்னபடி “இறுதி” மந்தம் வரும் என்று நம்பிக்கொண்டிருங்கள் !! //

      இறுதி மந்தமா? எங்கே சொன்னார்? எப்போ சொன்னார்?

      Posted on 16-Sep-09 at 2:37 pm | Permalink
  20. Payasam,

    http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

    and this is a recent mail :

    /////“Neoliberalism has reduced space for mass protests”
    http://www.hindu.com/2009/09/13/stories/2009091359780800.htm

    Dear Friends,

    It is nice to see the above news report. I was born in 1968 and have only vague impressions
    and images about the heydays of “socialism” in India which persihed in the 80s.

    A whole lot of words and phrases have disappeared from the vocabalry in public domain :

    socialsim, democratic socialism, concentration of economic power, monopoly, IMF dictated
    policies, etc. Thank God that these words are gone for good now !!

    Esp IMF : now that India has got rid of IMF for good, no need to castigate IMF for anything !!

    I can only imagine the impressions and ideas sowed deep into the public mindset thru
    mindless rabble rousers in many poliitcal parties which used the above words freely..


    Regards / அன்புடன்

    K.R.Athiyaman / K.R.அதியமான்

    Posted on 16-Sep-09 at 1:57 pm | Permalink
  21. பாயாசம்

    Mr. Athiyaman,

    And the Point here is:

    ////நான் இந்திய நிலைமை பற்றி சொன்னேன். அய்.பி.எம் சங்கம் இங்கு போல ஊழல் மயமாகி, பொறுப்பில்லாமல் செய்லபடாது. ஆனால் யு.எ.டபள்யூ என்னும் அமெரிக்க ஆட்டோமொபைல் துறை சங்கத்தில் சில செயல்களால் தான் அமெரிக்க பெரும் கார் நிறுவங்கள் திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதே அமெரிக்காவில், உலகின் மிக பெரிய கார் நிறுவனமான டொயோட்டோவின் அமெரிக்க தொழிற்சாலைகள் அது போல் ஆகவில்லை. ஒப்பிட வேண்டிய விசியம்.//

    ஒரு சில உதாரணங்களை வைத்து தொழில்சங்கங்கள் நிறுவனங்களை திவாலாக்கும் என்று அதியமான் சொல்கிறார்.

    ஆனால், இன்று
    அமெரிக்க பொருளாதாரம் திவால்க்கு சென்றுள்ளது. ஆட்டோ தொழில், வங்கிகள் என பல நிறுவனங்கள் மண்ணைக் கவ்வியுள்ளன. இதற்கு தொழிற்சங்கங்கள் காரணமல்ல. முதலாளிகள்தான் காரணம். முதலாளித்துவமத்தின் அடிப்படை முரன்பாடுதான் இதற்கு காரணம். ஆனால், அதியமான் இதனை எதிர்த்து குரல் கொடுக்க மாட்டார்.

    பாயாசம்//

    when you could comfortably conclude that Union is ruinous to industry, with few exceptional examples.

    Why couldn’t we conclude in the same way that Capitalism is a failure with all those big realities?

    I am not interested in arguing on other things.. they are open to your imagination… :-)

    Posted on 16-Sep-09 at 2:41 pm | Permalink
  22. ஆளவந்தான்

    //வினவு தோழரே. அதியமான் சொல்வதில் பாய்ண்ட் இல்லையா என்ன ? லட்சக்கணக்கக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, விமானம் கிளம்பியவுடன் ஆட்டோ பைலட் போட்டுவிட்டு சரக்கு சாப்பிட்டுக்கொண்டு, கிளு கிளுப்பும் கொஞ்சலும் என்று ஜாலியாக பணியாற்றும் விமானிகளிடம் எங்கே தொழிலாளரை கண்டீர் ? எந்த விமானியாவது ஒரு சொட்டு வியர்வை சிந்தியதாக சொல்லமுடியுமா ? உடனே நீயும் ஏசியில் இருக்கிறாய், ஐடி துறையில் இருக்கிறாய் என்று என்மீது பிறாண்ட காளமேகத்திடம் சொல்லவேண்டாம். தனியார் விமானத்துறையில் சரக்குகளை கையாள்பவர்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ சங்கம் அமைந்து அதனை வினவு வெற்றியாக எழுதியிருந்தால் குறைந்தபட்சம் புரச்சியோ புளித்த ஏப்பமோ வரும் என்று நம்பியிருந்திருக்கலாம். கருத்து சொல்ல வருபவர்களை குதறுவதை நிறுத்தாவிட்டால் மெய்யாலுமே புரச்சி வரும் நாளைக்கு கடைப்பக்கம் யாரும் வராமல்போய்விடப்போகிறார்கள்…//

    Repeatttttttttttttttttttttttttttttttttuuuuuuuuuuuu…… Super Maamu……

    Posted on 16-Sep-09 at 4:25 pm | Permalink
  23. MamboNo8

    இந்த அதியமானுக்கு தொழிலாளி யாருன்னு தெரியல முதலாளி யாருன்னு தெரியல, முதலாளித்துவமும் தெரியல, சோசலிசமும் தெரியல…. ஆனா எல்லாம் தெரிஞ்சமாதிரி ஒரே பினாத்தல். என்ன செய்ய சகவாசம் அப்படி, அரலூசு ஜெயமோகனுக்கு தெனோம் நாலு கடிதாசி எழுதினா இப்படித்தான், இன்னும் கொஞ்ச நாளுல அதியமான் பாயைப்பிரண்ட போவது உறுதி…..ஒரு 25 வருச பழைய அறிவ வச்சுகிட்டு எப்படித்தான் சமாளிக்கிறாரோ பாவம். இவர விட பாவம் இவரு கம்பேனி தொழிலாளரும் இவரு சம்சாரம் மற்றும் பசங்களும்….. எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு எதையும் தாங்கும் ஆன்ம பலத்தை அளுர்வாராக், ஆமென்.
    பி.கு – டேய் முண்டம் நேர்ல வாடா போன்ற அதியமானிசத்துக்காக காத்திருக்கிறேன்

    Posted on 16-Sep-09 at 4:56 pm | Permalink
  24. MamboNo8

    இங்கே செந்தழல் இரவி என்பவர் பின்னூட்டவாதிகளை திட்டக்கூடாது என ஆலோசனை வழங்குகிறார். மொக்கை பதிவிலேயே குழாயடி சன்டை நடக்கும் நரகலான்களுக்கு மத்தியில், ஆபாச பின்னூட்ட புகழ் ஆனானி குழுமத்தின் செயல்வீரர்களெல்லாம் புரட்சியின் மீது கரிசனம் கொண்டு வினவுக்கு அறிவுரை வழங்குவது நல்லதுதான்…. இன்று தமிழ் வலையுலகிலேயே போண்டா மாமாவை விட அதிகம் திட்டுவாங்கும் பதிவர் வினவுதான், வினவை மற்றவர்கள் திட்டும் போது முக்காடு போட்டுக்கொண்டு போனவர்கள் அதியமானுக்கு வக்காலத்து வாங்குவதுதான் செம காமெடி.. சாப்பிட்டு தூங்கி கழிவது போன்ற சமூக அக்கறை கொண்ட செயல்களின் மூலம் புரட்சி செய்பவர்களுக்கு புளித்த ஏப்பம் வரும்போது குலாக்கு கதவு திறந்தே இருக்கும் என்பதை பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்

    Posted on 16-Sep-09 at 5:07 pm | Permalink
  25. MamboNo8 என்ற போலி அய்டியில் இருந்து கேவலமாக எழுதும் நபர் யார், சென்னையில் எங்கு இருக்குறாய் என்று எமக்கு தெரியும் தான். சரக்கே இல்லாமல், வெறும் ஆபாசம் “மட்டும்” எழுதும் உம்மை நேரில் வரச் சொல்லி என்ன பிரயோசனம். இங்கு என்னுடன் உரையாட பல தோழர்கள் உள்ளனர். துஸ்டனை கண்டால் தூர‌
    விலகு என்ற பழமொழியும் அறிவேன். உம்மை போன்ற போலிகளால் தாம் தோழர்களுக்கும் அவப்பெயர் என்பதை உணரும் பக்குவம் உமக்கு என்றும் வராது.

    Posted on 16-Sep-09 at 5:15 pm | Permalink
    • MamboNo8

      //சரக்கே இல்லாமல், வெறும் ஆபாசம் “மட்டும்” எழுதும் //
      அபாண்டம், அவதூறு, அயோக்கியத்தனம்

      Posted on 16-Sep-09 at 5:56 pm | Permalink
  26. ஏன் என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை வினவு அவர்களே ? வியர்வை சிந்தாதவன் எப்படி தொழிலாளியாவான் ? அதற்கு மார்க்ஸியத்தில் இருந்து பதில் அளித்துள்ள தோழர், ஐடி துறை நன்பர்களுக்கு எப்பத்தான் ரோஷம் வருமோ என்று கவலைப்படுகிறார். ஒருவர் ஒரு படி மேலே போய் மாச சம்பளம் வாங்குபவன் என்கிறார். விமானிகள் ஒரு குட்டி முதலாளிகள் என்று ஒருவர் அரற்றுகிறார். என்ன அய்யா நடக்குது ? ஜமதக்னியும் தியாகுவும் அச்சுக்கோர்ப்பவரும் ஆகிய மூவரும் மட்டுமே முழுமையாக படித்த டாஸ் காப்பிட்டல்ஸில் இருந்து எந்த உதாரணமும் காட்டமுடியலையா ?

    Posted on 16-Sep-09 at 6:05 pm | Permalink
    • வினவு

      செந்தழல் ரவி

      வியர்வை சிந்துபவன் மட்டும்தான் தொழிலாளி என்பதும் உடலுழைப்பு மட்டும் செய்பவன்தான் தொழிலாளி என்பது மிகவும் பாமரத்தனமான பார்வை. நோக்கியா ஆலையிலும், டைட்டான் கடிகாரத் தொழிற்சாலையிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் நுணுக்கமாக வேலை செய்யும் தொழிலாளிகள் எவரும் வியர்வை சிந்துவதில்லை. மூளை உழைப்பும் கூட தொழிலாளர்களிடம் உண்டு. மார்க்சிய மொழியில் சொன்னால் தனது உழைப்பத்தவிர இழப்பதற்கு ஏதுமற்றவன்தான் தொழிலாளி. இன்றைக்கும் தன் உழைப்பு வேலையை வைத்தே தொழிலாளிகள் தங்களது வாழ்வை தேடிக் கொள்கிறார்கள். அதில் வீடு, வாகனம், முதலியவை கூட இருக்கலாம். ஆனால் இவையனைத்தையும் தனது உழைப்பை விற்றுத்தான் அவர் பெறுகிறார். இன்றைக்கு தொழிலாளர்களிடமும் வர்க்க வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் தொழிலாளியும், டி.வி.எஸ்ஸில் வேலை செய்யும் தொழிலாளியும் பாரிய அளவு வேறுபடுகிறார்கள். தொழிலாளிகளிடையே ஆலைத்தொழிலாளிகள், நிரந்தரத்தொழிலாளர்கள், ஒப்பந்த்த தொழிலாளர்கள், நடுத்தரவர்க்க தொழிலாளர்கள், மேட்டுக்குடி தொழிலாளர்கள் என்று வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.ஆனால் இவர்களை இணைக்கும் புள்ளி அனைவரும் தமது உழைப்பு விற்றே வாழ முடியும் என்பதுதான். இந்தப்பிரிவுகளில் கீழ்நிலைகளில் இருக்கும் தொழிலாளிகளிடம் இருக்கும் வர்க்க உணர்வு கோபம் மேல்மட்ட பிரிவினரிடம் இல்லை என்பது உண்மைதான்.

      ஆனால் உலகமயத்தின் தயவில் இவர்கள் அனைவருக்கும் வேலை பாதுகாப்பு குறைந்து வருகிறது. இந்த ஆண்டு பிரான்சின் நடந்த இரண்டு பிரம்மாண்டமான வேலை நிறுத்தங்களில் மொத்தம் 20 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் விமானிகளும், நகரசுத்தி வேலை செய்யும் தொழிலாளிகளும், மாணவர்களும், இளைஞர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டு தமது எதிர்ப்பை காட்டினர். அவர்களது கோரிக்கை நினைத்த மாத்திரத்தில் முதலாளி தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் தொழிலாளியை வேலை நீக்கம் செய்யக் கூடாது, பணிப்பாதுகாப்பு, தனியார்மய எதிர்ப்பு, திவாலாகும் முதலாளிகளுக்கு அரசு பணம் கொடுப்பதற்கு எதிர்ப்பு, முதலியனவாகும். மேற்கத்திய நாடுகளின் தொழிலாளிகள் மிகுந்த ஊதியத்தில் ஊழல்படுத்தப்பட்ட நேற்றைய நிலை இன்று இல்லை. அவர்களும் இன்று தெருவிற்கு வந்து போராடத் துவங்கியிருக்கிறார்கள்.

      விமானிகளது வேலையை மிகவும் வறட்டுத்தனமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். மற்ற பயணங்களை விட ஆபத்து அதிகம் உள்ள பயணம் என்பதால் விமானிகள் இருமடங்கு விழிப்புடன் தமது வேலையை செய்யவேண்டும். மற்ற வேலைபோல மனதை அலைபாயவிட்டு வேலை செய்ய முடியாது. இந்நிலையில் ஜெட் ஏர்வேசின் முதலாளி கண்டபடி தனது ஊழியர்களை வேலைநீக்கம் செய்துவரும் வேளையியல் இந்த விமானிகள் அதை தடுக்கும் பொருட்டு சங்கம் கட்டியதும், அதற்காக நான்கு பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதும், அதை எதிர்த்து அவர்கள் போராடியதும் வரவேற்க வேண்டிய விசயங்கள். இப்படி விமானி தொட்டு, ஆலைத்தொழிலாளி வரை ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் தாராளமயத்தின் கொடுமைகளை தடுத்து நிறுத்தலாம். விமானிகள் மேட்டுக்குடி தொழிலாளிகள்தான். ஆனால் அவர்களும் வேலை செய்தால்தான் விமானி. தங்களது சொந்த அனுபவத்தில் சங்கம் தேவை என்று அவர்கள் உணர்ந்த்தும், போராடியதும் யாரும் சொல்லிக் கொடுத்து வரவில்லை. இப்படித்தான் தொழிலாளி வர்க்கம் முதலாளிகளைப் பற்றி தனது சொந்த அனுபவத்தில் உணர்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்குவதில்லை. முதலாளித்துவ வர்க்கம் தனது நடவடிக்கையின் மூலமே தொழிலாளர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை மறைமுகமாக கற்றுக்கொடுக்கிறது.

      ஒரு மேட்டுக்குடி தொழிலாளிகளே இப்படி சங்கம் அமைத்து போராடும்போது இன்னும் வர்க்க உணர்வு அதிகம் உள்ள ஆலைத்தொழிலாளர்களுக்கு இந்த போராட்டம் நிச்சயம் உற்சாகத்தை கொடுக்கும். இறுதியில் பிரான்சு போல இந்தியாவிலும் எல்லா வகை தொழிலாளிகளும் சேர்ந்து போராடும் காலம் வரும்.

      Posted on 16-Sep-09 at 6:39 pm | Permalink
      • ஆர்.கே

        விமானிகளை பாட்டாளி வர்க்கம் என்று வகைப்படுத்த முடியுமா? அவர்களுக்கு கிடைக்கும் சமூக அந்தஸ்த்தையும் அவர்கள் உழைப்பின் தன்மையையும் கணக்கில் கொண்டால் அவ்வாறு வகைப்படுத்த முடியாதல்லவா?

        Posted on 16-Sep-09 at 7:02 pm | Permalink
        • வினவு

          ஆர்.கே,

          யார் தொழிலாளிகள் என்பதை கூடிய விரைவில் ஒரு தனி பதிவாக வெளியிடுகிறோம். இங்கே சுருக்கமாக சில விளக்கங்கள். நமது மார்க்சிய வரையறை படி உற்பத்தி கருவிகள் அல்லது சாதனங்கள் மீது உரிமையோ உடமையோ இல்லமல் தன் உழைப்பை மட்டும் விற்று வாழ்பவர்களையே பாட்டாளி வர்க்கம் அல்லது தொழிலாளி வர்க்கம் என்கிறோம். முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் மனிதனின் உழைப்பு குறைந்து கொண்டே போவதும் எந்திரங்களின் பணி அதிகரித்து வருவதும் ஒரு உண்மை. இது கஷ்டப்படும் தொழிலாளிக்காக முதலாளி செய்யும் கருணையல்ல. மாறாக குறைந்த செலவில் அதிக இலாபம் பார்ப்பதற்காகவே இந்த எந்திரமயமாக்கம். அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியும், உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியும் மற்றொரு காரணம். ஆரம்பத்தில் நீராவி ரயில் என்ஜினில் கஷ்டப்பட்டது போல இப்போதைய டீசல், புல்லட்டீன் ரயில் ஓட்டுநர்கள் கஷடப்படத் தேவையில்லை. இதனால் இவர்கள் தொழிலாளி வர்க்கம் இல்லை என்றாகி விடுவதில்லை. நவீன விசைத்தறி ஆலையில் எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதையே ஒரு தொழிலாளி கூர்மையாக கவனிக்கிறார். ஆனாலும் கைத்தறி தொழிலாளி போல இவரும் தொழிலாளிதான்.

          முன்னர் சொன்ன வரையறைபடி விமானிகள் உற்பத்தி சாதனங்கள் மீது உரிமை கொண்டவர்கள் அல்ல. தமது உழைப்பை விற்றே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களது ஊதியம் அதிகம் என்பதனாலேயே அவர்கள் தொழிலாளிகள் அல்ல என்பதல்ல. ஆனால் இந்தியாவில் கீழ்நிலைத்தொழிலாளியோடு ஒப்பிடும் போது விமானிகள் மேட்டுக்குடி தொழிலாளிகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம். இருவகை தொழிலாளிகளும் மார்க்சிய வரையறையின்படி ஒரு தன்மையையே அடிப்படையாக கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி ஒரு பெரிய காரில் கூட வரலாம். அவரும் நமது வரையறைபடி தொழிலாளிதான். ஆனால் முதலாளித்துவ நாடுகளில் மூலதனமும் உழைப்பும் தெளிவாக பிரிந்து இருப்பதால் அங்கே முதலாளி, தொழிலாளி பிரிவினையும் தெளிவாக இருக்கிறது. நம்மைப்போன்ற முதலாளித்துவம் நிறைவடையாத நாடுகளில் அந்த தெளிவு இருக்காது. எனவேதான் தொழிலாளிகளிடம் கூட பல படிப்பிரிவுகளை காண்கிறோம். இப்போது ஜ.டி துறையில் இருப்பவர்கள் கூட மூளை உழைப்பு தொழிலாளர்கள்தான்.முதலாளித்துவ நெருக்கடி காரணமாக அவர்கள் மீது வேலைச்சுமை அதிகரிப்பதும், சம்பளம் வீழ்ச்சியடைவதும் இப்போது நடக்கிறது. ஆனால் ஐ.டி.துறை ஊழியர்கள் தம்மை தொழிலாளிகள் என்று கருதுவதில்லை. காரல் மார்க்சின் மொழியில் சொன்னால் தொழிலாளிகள் தன்னிலை வர்க்கமாகவும் (அதாவது வர்க்க உணர்வின்றி), தனக்கான வர்க்கமாகவும் ( வர்க்க விழிப்புணர்வு கொண்ட)- class in itself, class for itself- இருக்கிறார்கள். விமானிகளையும், ஐ.டி ஊழியர்களையும் தன்னிலை உணராத வர்க்கமாக இருப்பதாக சொல்லலாம்.

          ஆனாலும் இந்திய தனியார் விமான நிறுவனங்கள் விமானிகளின் சம்பளத்தை குறைத்து வரும் வேளையில், பணிபாதுகாப்பு இன்றியும் இருக்கும் சூழ்நிலையில் ஜெட் விமானிகள் சிறிதாவது தங்களை உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இந்த வேலைநிறுத்தமும் அவர்கள் அமைத்த சங்கமும் விளக்குகிறது.

          Posted on 16-Sep-09 at 9:00 pm | Permalink
      • வினவு – நல்ல விளக்கம்.

        ***
        இறுதியில் பிரான்சு போல இந்தியாவிலும் எல்லா வகை தொழிலாளிகளும் சேர்ந்து போராடும் காலம் வரும். *** பிரான்சில் கடைநிலை தொழிலாளி வேலை இழந்தாலும் அரசாங்கத்திடம் இருந்து வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு வருடத்திற்காவது பணம் கிடைக்கும். இங்கு சாவு தான். ஆதலால் இந்தியாவின் கடைநிலை மக்களின் வாழ்க்கை தரமும் முன்னேறிய பிறகு இவ்வாறான ஸ்டிரைக் வரலாம் :) -

        Posted on 16-Sep-09 at 7:32 pm | Permalink
      • senthil

        http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1330140

        தோழர்களே:

        இந்த கட்டுரை குறித்து உங்கள் கருத்துகள் அனுப்பவும். இந்த கட்டுரையை தமிழில் வெளியிடவும் ஆர்வம். இதை தமிழில் செய்து உங்கள் இணைய தளத்தில் வெளியிட்டாலும் சரி.

        செந்தில்

        Posted on 25-Oct-09 at 7:04 am | Permalink
    • ஆர்.கே

      ரவி,

      உங்களுக்கு நான் கொடுத்த பதிலில் ஏதாவது புரியலையா?

      //டாஸ் காப்பிட்டல்ஸில் இருந்து எந்த உதாரணமும் காட்டமுடியலையா ?//

      தேவையில்லை!

      மார்க்சியம் ஒரு set of formulas and rules இல்லை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் மேனுவலைப் புரட்டி Error code உடன் Match பண்ணிக் காட்டினால் தான் நம்புவீர்களா என்ன? இங்கே விமானிகள் தொழிலாளி வர்க்கமா இல்லையா என்பது மைய்யமான பிரச்சினையில்லை; இந்தப் போராட்டம் சொல்லும் சேதி என்ன என்பது தான் பிரச்சினை!

      அதியமான்,

      டாட் காம் பஸ்ட், என்ரான் தொடங்கி சத்யம் தொட்டு இப்போதைய நெருக்கடி வரைக்கும் எல்லாவற்றுக்கும் சங்கமாகத் திரண்டது தான் காரணமா?

      அதியமான், நீங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும் கோணம் தவறாக இருக்கிறது. பலவிடங்களில் நடந்த விவாதங்களூடாக உங்கள் தொழில் / ஸ்தாபனம் குறித்து நீங்களே வெளியிட்ட கருத்துக்களைக் கொண்டு… உங்களை ஒரு தேசிய முதலாளி என்ற அளவில் புரிந்து வைத்திருக்கிறேன் (அது தவறாகக் கூட இருக்கலாம் என்று இப்போது யோசிக்கிறேன்) ஒரு தேசிய முதலாளிக்கு தனது மூலதனத்தின் மேல் வரும் தாக்குதல் குறித்து இருக்கும் குறைந்தபட்ச கவலை கூட எங்கும் வெளிப்பட்டதில்லை என்பது எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் தான்.

      உங்கள் விவாதங்கள் எல்லாமே ரெப்படிஷன்கள் தான் – Repeated claims. எதையாவது தவறு என்று நிறுவினால் அதே விஷயத்தை வேறு வார்த்தைகளில் சொல்லும் ஏதாவது சுட்டியுடன் வருவீர்கள்.

      Posted on 16-Sep-09 at 6:45 pm | Permalink
      • //டாட் காம் பஸ்ட், என்ரான் தொடங்கி சத்யம் தொட்டு இப்போதைய நெருக்கடி வரைக்கும் எல்லாவற்றுக்கும் சங்கமாகத் திரண்டது தான் காரணமா? // i didn’t generalise like that RK. I was talking about the bankruptices of Standard Motors, Mumbai Mills, etc which closed due to militant labour strikes in the past. it is a long history. and my arguments may look repetitive simply beause the same points and issues are debated here. and it is your opinion that my angle is wrong. and vice versa !! pls read my english posts and other tamil blogs fully for a whole some view.

        Posted on 16-Sep-09 at 8:14 pm | Permalink
      • பாயாசம்

        //Standard Motors, //

        ஸ்டாண்டார்ட் மோட்டார்ஸ் திட்டமிட்டு இந்திய தரகு முதலாளிகளால் ஒழிக்கப்பட்டது(AC முத்தையா என்று நினைக்கிறேன்). அங்குள்ள தொழிலாளர்களின் ஒற்றுமையும், கார் உற்பத்தியில் நவீன வசதிகளை சொந்தமாக உருவாக்கியதும் வரலாறு. இது டாடா, மாருதி போன்றவற்றுக்கு போட்டியாகிவிடும் என்று திட்டமிட்டு ஒழிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

        Posted on 17-Sep-09 at 10:48 am | Permalink
      • பாயாசம்,

        ஸ்டான்டர் மோட்டார்ஸ் திவலானதற்க்கு, பல காரணிகள். அவற்றில் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்கள், வேலை நிறுத்தங்களும் ஒன்று. ஏ.சி.முத்தையா நேர்மையில்லாதவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் கடையசியாகத்தான் நிர்வாக இயக்குனார் ஆனார் என்று நினைக்கிறேன்.
        போட்டிக‌ளை ச‌மாளிக்க‌ தொழிலாள‌ர்க‌ள் ஒத்துழைப்பு இல்லை என்ப‌தும் ஒரு கார‌ணி. நிர்வாக‌
        சீர்கேடும் ஒரு கார‌ணி. ஆனால் மாருதி நிறுவ‌ன‌ம் ஒரு அர‌சு கூட்டு நிறுவ‌ன‌ம். அதை இங்கு
        குறை சொல்ல‌ ஆதார‌ம் இல்லை.

        இன்னும் ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ள் பெய‌ர்க‌ள் நியாப‌க‌ம் இல்லை. அம்ப‌த்தூர் தொழில்பேட்டையில் 90க‌ள் வ‌ரை தொட‌ர்ந்து இது போன்ற‌ அம‌ளிதான். ப‌ந்த‌, கேரோ போன்ற‌வை அன்று போல் இன்று இல்லை என்ப‌து ஆறுத‌லான‌ விசிய‌ம். மும்பாய் ந‌க‌ரினில் இருந்த‌ ப‌ற்ப‌ல‌ நூற்பாலைக‌ள் இன்று மூட‌ப்ப‌ட்ட‌த‌ற்க்கு,
        த‌ட்டா ச‌ம‌ந் என்ப‌வ‌ர் த‌லைமையில் 80க‌ளில் ந‌ட‌ந்த‌ ஒரு நெடிய‌ தொழிலார் போராட்ட‌ம் ஒரு முக்கிய‌ கார‌ணி.
        எம‌து சொந்த‌ ஊரான க‌ரூரில் : க‌ரூர் மில்ஸ் ம‌ற்றும் செட்டிநாடு சிமென்ட் போன்ற‌ இரு நிறுவ‌ன‌ங்க‌ள‌யும் அன்று ஒரு வ‌ழி ப‌ண்ணினார்க‌ள். க‌ரூர் மில்லை இன்று இல்லை. முற்றாக‌ அழிந்து விட்ட‌து. எல்.ஜி.பி நிறுவ‌ன‌ம், பிர‌ச்ச‌னைக‌ளை ச‌மாளிக்க‌ முடியாம‌ல் கோவைக்கு சென்று விட்ட‌து. இவ‌ற்றின் மொத்த‌ விளைவு, ப‌ல‌ ஆயிர‌ம் தொழிலாள‌ர்க‌ள் வேலை இழ‌ந்த‌துதான்.

        ஒரு முன்னால் தொழிற்ச‌ங்க‌ த‌லைவ‌ர் என்னிட‌ம் முன்பு கூறிய‌து :

        “..த‌ம்பி, இந்த‌ க‌ம்யூனிஸ்ட் யூனிய‌ன் நிர்வாகிக்கு ஏதாவ‌து ஒரு பெரிய‌ தொழிற்சாலையில் முன் க‌த‌வுக‌ளை விரிய‌ திற‌ந்து இருந்தால், ம‌ன‌ம் ப‌த‌ப‌தைக்கும். அத‌ன் எதிரே உள்ள் டீக்க‌டை பெஞ்சில் அம‌ர்ந்து கொண்டு, இதை எப்ப‌டி மூட‌லாம் என்று ச‌தா “சிந்த‌னை” செய்வார். பிற‌கு ஒரு சிறு பிர‌ச்ச‌னையை பெரிதாக்கி, தொட‌ர் வேலை நிறுத்த‌ம், கேரோ என்று உருவாக்கி, லாக் அவுட் செய்ய‌ வ‌ழி செய்து, அந்த‌ தொழிற்சாலையை இழுத்து மூடி, மெயின் கேட்டை பூட்டி, பெரிய‌ பூட்டாக‌ அதில் மாட்ட‌செய்தால் தான், ம‌ன‌ம் அமைதிய‌டையும் !!” :) )

        80க‌ள் வ‌ரை ந‌ட‌ந்த‌தை அறிந்த‌வ‌ர்க‌ளுக்கு நித‌ர்ச‌ன‌ங்க‌ள் புரியும். மே.வ‌ங்க‌ம், கேர‌ள‌த்தில் இன்றும் புதிய‌ முத‌லீடுக‌ள் வ‌ள‌ர‌ இவை த‌டையாக‌வே உள்ள‌ன‌.

        Posted on 17-Sep-09 at 12:13 pm | Permalink
  27. //அமெரிக்காவின் ஜெனர்ல் மோட்டார்ஸ் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதற்க்கு அதன் தொழிற் சங்கமும் ஒரு முக்கிய காரணம் தான். அங்கு வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்து பாரும். ஆனால் டோயோட்டிவில் அப்படி இல்லை நிலைமை. ஒப்பிடத்தான் சொன்னேன்.// ஒரு துறையை தனியார் மயமாக்க வேண்டுமென்றால் அதாவது, முதலாளிகள் லாபம் அடைய வேண்டுமென்றால், ஆளும் வர்க்கம் செய்யும் முதல் காரியம் – ஊழல் மயமான் ஊழியர்கள் மூலம் அந்த துறையையோ, தொழிலகத்தையோ நாசம் ஆக்கி, பொதுத்துறைக்கு எதிராக ஒரு பொதுமக்கள் எதிர்ப்பை உருவாக்குவது தான். அதனால்தான் இந்தியாவில் அரசு நிறுவனங்கள் ஊழல் மயமாக உள்ளன. மேலும் இந்த உக்தியை தென்னெமெரிக்காவில் தண்ணீர் விநியோகத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். குடிநீர் விநியோகம் முழுவதையும் தனியார் மயப்படுத்தியதன் விளைவு – இறுதியில் கார்டு போட்டால்தான் தண்ணீர் வரும் என்ற நிலை. தண்ணீர் எடுக்க எடுக்க, கார்டில் காசு குறையும். இதனை எதிர்த்து தென்னெமெரிக்க மக்கள் போராடி இதிலிருந்து மீண்டிருக்கிறாகள். ஆனால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டுமே ஒழிய அதற்காக முதலாளிகளிடம் தாரை வார்க்க கூடாது.

    மேலும், ஜெனரல் மோட்டார்ஸ், எங்கள் கிளையண்ட் தான். எங்களிடம் கதைவிட வேண்டாம். ஜெனரல் மோட்டார்ஸின் திவாலானதற்கு காரணம், முதலாளிகளின் சுகபோக வாழ்க்கை மற்றும் அதன் பங்குதாரகளுடைய லாப வெறிதான்.

    http://www.usatoday.com/money/autos/2009-05-31-gm-mistakes-bankruptcy_N.htm

    இதனை பார்த்தால் தெரியும் ஜெனரல் மோட்டார்ஸின் வீழ்ச்சிக்குக் காரணம் யார் என்று ?

    மேலும், அதியமான ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், ஆகஸ்ட் 15 பதிவில் அசுரன் கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்கவில்லை இவர். இவர் காட்டிய ஆதாரங்கள் எல்லாம் மோசடியான – இண்டர்பிரிடேஷன் ஆதாரங்கள். ஆனால் நேரடியான ஆதாரங்களை இவர் இதுவரை தரவே இல்லை. ஆனால் அதியமான் சுட்டிக்கு சுட்டி தாவி வருகிறார்.

    இறுதியாக ஆகஸ்ட் பதிவில் நான் கேட்ட கேள்வி :

    /புள்ளிவிவரங்களின் தரம் மற்றும் ஆழம் பற்றிய கலிஃபோர்னிய பல்கலைகழக ஆய்வு அறிக்கை சுட்டியை பல முறை அளித்தும் அதை பற்றி விவாதிக்காமல் இப்படி பேசுவதுதான் உமது பகுத்தறிவா ?// அசுரனுடைய பதில், இண்டர்பிரடேழன் அற்ற நேரடியான புள்ளிவிவரங்களைத் தரவும். ஆர்பிஐ இன் டேட்டா நேரடியானது. ஆனால் உமது சுட்டிகளிலுள்ள விடயங்கள் நேரடியானவை அல்ல. மோசடியான வறுமைகோடு முதலானவைகளை இது உபயோகப்படுத்துகிறது.

    அசுரன் :

    ஏனேனில் இவை விலைவாயி உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி உட்பட பல்வேறு குழப்பமான விசயங்களின் மீது எழுப்பட்ட குறைபாடான கணக்கீடு.

    இதே இடத்தில் RBIயின் புள்ளிவரத்தை பாருங்கள் மிக எளிமையாக நேரடியாக மொத்த தானிய அளவை மக்கள்தொகையால் வகுத்து வந்த அளவை முன் வைக்கிறது. இது எனக்கு சரியானதாகவே படுகிறது. இது நேரடி புள்ளிவிவரம். எந்த வொரு கணக்கீட்டு அடிப்படையிலான இண்டர்பிரடேசன் அல்ல.

    Posted on 16-Sep-09 at 7:07 pm | Permalink
    • ***
      மேலும், ஜெனரல் மோட்டார்ஸ், எங்கள் கிளையண்ட் தான். எங்களிடம் கதைவிட வேண்டாம் ***

      அறிவுடை நம்பி – இந்த வாக்கியத்தின் மூலம் தாங்கள் கூற விரும்பியது என்ன ?

      Posted on 16-Sep-09 at 7:26 pm | Permalink
  28. அறிவுடை நம்பி,

    ஜென்ரல் மோட்டர்ஸின் உற்பத்தி செலவு டோயோட்டவை விட மிக மிக அதிகம். காரண‌ம சம்பளம் மற்றும்
    இலவச ஹெல்த் கேர் இன் சுமைகள். அதனால் குறைந்த உற்பத்தி செலவுடை பிற நிறுவனங்களுடன் சமீப காலங்களாக போட்டி போட முடியாவில்லை. திவாலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணி. நிர்வாகிகளின் தவறுகளும் காரணிகள் தாம். எனது அமெரிக்க நண்பன் ஜி.எம் இற்க்கு பிராஜக்ட் செய்கிறவன் தான். ஜி.எம் டெக்னீசியன்கள் ஒரு நாள் செய்யும் வேலையை ஒரு வாரம் போல செய்கின்றனர். மேலும் கடுமையான் சங்க விதிகளின் படி, ஒருவரின் வேலையை, அவர் வரும் வரை வேறு யாரும் செய்ய கூடாது. இது போன்ற பல முட்டாள்தனமான விதிகள். அதன் மொத்த விளைவு, உற்பத்தி செலவு அதிகரித்து, தொடர் நஸ்டம்.

    //ஒரு துறையை தனியார் மயமாக்க வேண்டுமென்றால் அதாவது, முதலாளிகள் லாபம் அடைய வேண்டுமென்றால், ஆளும் வர்க்கம் செய்யும் முதல் காரியம் – ஊழல் மயமான் ஊழியர்கள் மூலம் அந்த துறையையோ, தொழிலகத்தையோ நாசம் ஆக்கி, பொதுத்துறைக்கு எதிராக ஒரு பொதுமக்கள் எதிர்ப்பை உருவாக்குவது தான். அதனால்தான் இந்தியாவில் அரசு நிறுவனங்கள் ஊழல் மயமாக உள்ளன. மேலும் இந்த உக்தியை தென்னெமெரிக்காவில் தண்ணீர் விநியோகத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். குடிநீர் விநியோகம் முழுவதையும் தனியார் மயப்படுத்தியதன் விளைவு – இறுதியில் கார்டு போட்டால்தான் தண்ணீர் வரும் என்ற நிலை. தண்ணீர் எடுக்க எடுக்க, கார்டில் காசு குறையும். இதனை எதிர்த்து தென்னெமெரிக்க மக்கள் போராடி இதிலிருந்து மீண்டிருக்கிறாகள். ஆனால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டுமே ஒழிய அதற்காக முதலாளிகளிடம் தாரை வார்க்க கூடா/////

    என்ன‌ ஒரு விள‌க்க‌ம் ? :) ) பொதுத்துறை ஊழல் மயமானது முதலாளிகள் செய்த சதியா ? அறிவு கொழுந்தையா நீர். இந்த அரிய விளக்கத்திற்க்கு ஆதாரம் காட்ட முடியுமா ? பொது துறை என்றாலே, ஓனர்ஷிப் இல்லாமல், பொறுப்பற்ற நிலை உருவாகும். ஓ.பி அடிப்பார்கள். ஊழல் மெல்ல உருவாகும். சோவியத் ரஸ்ஸியாவில் (எந்த முதலாளியும் இல்லாத நாடு அப்போது) பொதுத் துறை சீரழந்த வரலாறு பற்றி படித்து பாரும். உடனே திரிபுவாதிகள் என்று கதைக்க வேண்டாம். குடினீர் விநயோகத்தை தனியார் மயமாக்குவது வேறு. ஒப்பீடே தவறு. மேலும் இத்துறையை தனியார் மயமாக்க வேண்டாம் என்ற மாற்றுக் க‌ருத்து சந்தை பொருளாதார வல்லுனர்களில் உண்டு. எல்லா துறைகளையும் தனியார் மயமாக்க சொல்லவில்லை. திறந்த் போட்டி அதிகம் உள்ள துறைகளைதாம் சொல்கிறோம். போக்குவரத்து, உற்பத்தி துறை போல.

    //மேலும், அதியமான ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், ஆகஸ்ட் 15 பதிவில் அசுரன் கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்கவில்லை இவர். இவர் காட்டிய ஆதாரங்கள் எல்லாம் மோசடியான – இண்டர்பிரிடேஷன் ஆதாரங்கள். ஆனால் நேரடியான ஆதாரங்களை இவர் இதுவரை தரவே இல்லை. ஆனால் அதியமான் சுட்டிக்கு சுட்டி தாவி வருகிறார்.////

    என்னை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நீர் சொல்லி உணர்ந்து கொள்ளும் அளவில் தாம் உம் தோழர்களின் ‘பகுத்தறிவோ’ ? :) ) சொந்த புத்தி யாருக்கு இல்லையோ ? :) ) எனது மிக முக்கிய ஆதாரமான அந்த கலிபோர்னிய பல்கலை கழக ஆய்வு அறிக்கை (இன்டெர்பிரெட்டேஸன் பற்றியது) மற்றும் அமர்தியா சென் மற்றும் எஃப்.ஏ.வோ விவரங்கள் பற்றி அசுரன் இதுவரை பதிலிக்காமல் ஓடிவிட்டார்.
    அவை நேரடியான ஆதரங்கள் தாம். வாசகர்களுக்கு புரியும். ஓ.கே.

    Posted on 16-Sep-09 at 8:06 pm | Permalink
    • அசுரன்

      //எனது மிக முக்கிய ஆதாரமான அந்த கலிபோர்னிய பல்கலை கழக ஆய்வு அறிக்கை

      (இன்டெர்பிரெட்டேஸன் பற்றியது) மற்றும் அமர்தியா சென் மற்றும் எஃப்.ஏ.வோ விவரங்கள்

      பற்றி அசுரன் இதுவரை பதிலிக்காமல் ஓடிவிட்டார்.//

      எனது ஆதாரங்களை, கருத்துக்களை மிக வெளிப்படையாகவே முன் வைத்தேன். 30 பக்க

      டாகுமெண்டுக்கு லிங்க் கொடுத்து ஆதாரம் இருக்கு படிச்சுக்கோ என்று

      சோம்பேறித்தனமாக(அல்லது எஸ்கேப்பிசமாக்) சொல்லவில்லை.

      இது போல நீங்கள் கொடுத்து நான் நேரம் செலவழித்து படித்த முந்தைய உங்களது

      டாகுமெண்டுகளில் ஒன்றும் தேறவில்லை என்பதை பதிவு செய்த பிற்பாடுதான் உங்களது

      மேற்படி ஆதாரம் குறித்து எனது தயக்கத்தை வெளிப்படுத்தினேன்.

      அந்தளவுக்கு உங்களுக்கு அக்கறையும் ஆர்வமும் உள்ளது எனில் மேற்சொன்ன

      ஆதாரங்களில் என்ன உள்ளது என்பதை எளிமையாக, சாரமாக நாங்கள் தொகுத்துக் கூறுவது

      போலவே முன் வைக்கலாமே? இதையும் ஒரு கோரிக்கையாக உங்களிடம் முன் வைத்த

      பொழுது ஓடிப் போய் ஒளிந்து கொண்டீர்கள்.

      கொஞ்ச நாள் அமைதியாக அவதனிக்கலாம் என்றால் இதுதான் சாக்கு என்று புரளி

      கிளப்புகீறீர்கள்.

      அது சரி, ஏற்கனவே கொடுத்த எந்த ஆதாரங்களுக்கும் பதில் சொல்லவில்லை நீங்கள். ஆர் பி ஐயினுடைய ஆதாரமே எனக்கு ஜுஜுபி என்று எஸ்கேப் ஆனவர்தானே நீங்கள்.

      அசுரன்

      Posted on 17-Sep-09 at 11:01 am | Permalink
  29. // நீ இப்பவே என்னா வேணுமின்னாலும் ஆடிக்கோ.. புரட்சிக்கு அப்புறம் உனக்கு குலாக்குதான்டி
    //

    தயவு செய்து புரச்சி சிஷியர்கள் உட்பட யாரும் சத்தமாக சிரித்துவிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளபடுகிறார்கள் .

    Posted on 17-Sep-09 at 9:41 am | Permalink
  30. அசுரன்,

    நல்ல சமாளிக்கிறீக. அதே ஆர்.பி.அய் புள்ளிவிவரம் வறுமை அளவு 1991க்கு பின் வெகுவாக குறைந்துள்ளதை பற்றிய புள்ளிகளை நான் அளித்தேனே ! அது டுபாக்கூர் என்றீர்கள். ஆனால்
    அதே ஆர்.பி.அய் இன் பிற தகவல்களைதான் ஆதரமா நீங்க காட்டுறீக. சரி, இருக்கட்டும்,
    அந்த கலிபோர்னிய பல்கலைகழக ஆய்வு அறிக்கை, 30 பக்கம் எல்லாம் இல்லை. சுமார் 7 இருக்கும். படிக்க முனைந்தால் படிக்கலாம். அது இந்த டுபாக்கூர் விசியத்தை ஆராய்ந்து, பின் விஞ்ஞானபூர்வமான முடிவுகளை அளிக்கிறது. முடிந்தல் படித்துவிட்டு விவாதிக்கவும்.

    இறுதியாக, இந்த நூலை படித்து பாரும் :

    India after Independence” by Bipan Chandra and others of JNU ; they are marxist historians but realistic and candid in their assesment of post 1991 reforms and the effects. it is a highly acclaimed book. the effects of planning and the need for 1991 reforms, effects, etc are clearly brought out in the large volume. there are dozens of the other books like this, but i prescribe this as it is from a Marxist bastion JNU and the authors are left leaning historians who cannot be accused of “rightists” ; ok.

    Posted on 17-Sep-09 at 11:41 am | Permalink
    • அசுரன்

      /நல்ல சமாளிக்கிறீக. அதே ஆர்.பி.அய் புள்ளிவிவரம் வறுமை அளவு 1991க்கு பின் வெகுவாக குறைந்துள்ளதை பற்றிய புள்ளிகளை நான் அளித்தேனே ! அது டுபாக்கூர் என்றீர்கள். ஆனால்
      அதே ஆர்.பி.அய் இன் பிற தகவல்களைதான் ஆதரமா நீங்க காட்டுறீக. சரி, இருக்கட்டும்,/

      அப்படியா… எனக்கு ஞாபகம் இல்லையே எங்கே திரும்ப கொடுங்கள்.

      Posted on 17-Sep-09 at 12:37 pm | Permalink
    • அசுரன்

      //அந்த கலிபோர்னிய பல்கலைகழக ஆய்வு அறிக்கை, 30 பக்கம் எல்லாம் இல்லை. சுமார் 7 இருக்கும். படிக்க முனைந்தால் படிக்கலாம். அது இந்த டுபாக்கூர் விசியத்தை ஆராய்ந்து, பின் விஞ்ஞானபூர்வமான முடிவுகளை அளிக்கிறது. முடிந்தல் படித்துவிட்டு விவாதிக்கவும்././

      அவசியமில்லை நண்பரே,

      உங்களுக்கு மிக அக்கறையாக தோன்றுகிற விசயங்களை நீங்களே தொகுத்து கொடுங்களேன். அவற்றையும் அவுட் சோர்ஸ்தான் செய்வீர்களா? மேலும், உங்களது முந்தைய சுட்டிகள் எதிலும் இதுவரை ஒரு துளி கூட தொடர்புடைய ஆதாரங்களோ அல்லது உருப்படியான புள்ளிவிவரங்களோ கொடுக்கப்படவில்லை என்பதே எனது அனுபவங்களாக இருக்கும் பொழுது ஏன் எனது நேரத்தை விரயமாக்க வேண்டும்? எனக்கு இதை விட மிக முக்கியமான வேலைகள் பல உள்ளன.

      சுட்டிகளை மட்டுமே கொடுப்பது இது வரையான உங்களது வாத முறையாக உள்ளதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. தொகுப்பாக உங்களது வாதங்களை வலுப்படுத்தும் வகையில் படித்தவற்றை முன் வையுங்கள் பிறகு பார்க்கலாம்.

      அசுரன்

      Posted on 17-Sep-09 at 12:41 pm | Permalink
      • அசுரன்

        //anyway, you can try to read that JNU book in future. also why no word about that detailed interview of Amratya Sen ?//

        Why should I bother about Amartya sen? You yourself claim that Amartya is our Favorite. Have we ever said that?

        This also one of your lies like the one on pre1980 socialism. Why should I respond to that?

        Amartya sen is neither a socialist nor a Leftist. He can be a liberal capitalist. I posted his quote on Famine and food security and his claims on failures of your so called development oriented reforms. That doesn’t mean he is our favorite. I have even quoted Manmohan to deny your arguments.

        It is your responsibility to deny your own masters words on LPG. Alas, you have never done that till date.

        Asuran

        Posted on 17-Sep-09 at 1:12 pm | Permalink
  31. தோழர் வினவு,

    ////நமது மார்க்சிய வரையறை படி உற்பத்தி கருவிகள் அல்லது சாதனங்கள் மீது உரிமையோ உடமையோ இல்லமல் தன் உழைப்பை மட்டும் விற்று வாழ்பவர்களையே பாட்டாளி வர்க்கம் அல்லது தொழிலாளி வர்க்கம் என்கிறோம்/////

    அப்படியா ! அப்ப, ஒரு 25000 “முதலீட்டில்” மூன்று தையல் மிஷின்கள் வாங்கிப் போட்டு, இரண்டு
    தையல்காரர்களை வேலைக்கு அமர்த்தி, சொந்த தொழில் செய்யும் ஒருவர் “முதலாளி’ வர்கமா ? அவரிடம் வேலை பார்க்கும் இரண்டு தையல்காரர்கள் தாம் தொழிலாளர் வர்கமா ? எனென்றால் உற்ப‌த்தி சாத‌ன‌ங்களின் “உரிமையாள‌ர்” அந்த‌ குட்டி முத‌லாளி தானே ?

    இந்த “மேட்டுக்குடி” தொழிலாள‌ர்க‌ளான‌ விமானிக‌ளின் வீடுக‌ளில் வேலை பார்க்கும் வீட்டு வேலைக்கார‌க‌ள் எந்த‌ வ‌ர்க‌ம் ?

    ச‌ரி, செம்புர‌ட்சிக்கு அப்புற‌ம், இந்த ‘மேட்டுகுடி’ தொழிலாள‌ர் வ‌ர்க‌ தோழ‌ர்க‌ளையும், குட்டி முத‌லாளிக‌ளையும் என்ன‌ செய்வ‌தாக‌ உத்தேசம் ? இப்ப‌வே தெளிவாக‌ விள‌க்கிவிட்டால் உம‌க்கு மிக‌ புண்ணிய‌மாக‌ போகும் !! ஏன்னா, புர‌ட்சிக்கு பின், யாராவ‌து ஒரு “தோழ‌ர்” இந்த‌ இரு சார‌ரும், பூஸ்வா ம‌னோபாவ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் தாம், அத‌னால் அவ‌ர்க‌ளை முகாம்க‌ளில் அடைத்து “திருத்த‌” வேண்டும் என்று கிள‌ப்பிவிட‌லாம். எதுக்கும் முன்னாடியே சொல்லீடீக‌னா, இவ‌ர்க‌ளும் “த‌யாரா” இருப்பாக‌..

    Posted on 17-Sep-09 at 11:53 am | Permalink
    • வினவு

      அதியமான்,

      முதலாளித்துவ சித்தாந்தத்தை அடி முதல் முடி வரை நேசிக்கும் உங்களைப்போன்றவர்கள் எம்மை தோழர் என்று அழைப்பது கூச்சமாக உள்ளது. வினவு என்றே அழைக்கலாம். முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் உங்களைப்போன்ற சிறு முதலாளிகள் யாரும் கிடையாது. அவர்களை அழித்து விட்டுத்தான் எகபோக மற்றும் பெரு முதலாளிகள் உருவாயினர். நீங்கள் காட்டிய எடுத்துக்காட்டின்படி அந்த தையல் உரிமையாளார் சிறு முதலாளிதான். அவர்களிடம் வேலை செய்பவர்கள் தொழிலாளிகள்தான். இந்த சிறு முதலாளிகள் பெரு முதலாளிகளால் சுரண்டப்படுவார்கள் என்பதால் அவர்களும் பாட்டாளி வர்க்கத்தின் நேச சக்திகள்தான். புரட்சிக்கு முன்னாடி உள்ள நிலையையே உங்களால் புரிந்து கொள்ளத போது பரட்சிக்கு பிறகு உள்ள விசயங்களெல்லாம் சொல்லிப்புரிய வைக்க முடியாது. கூரையேறி கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுண்டத்துக்கு போக முடியுமா?

      Posted on 17-Sep-09 at 12:11 pm | Permalink
      • Azad

        மிக சரியாச் சொன்னீர்கள் தோழர். அதியமான் வெயிட் மாடி செம்புரட்சி வருது.

        Posted on 17-Sep-09 at 12:51 pm | Permalink
    • அசுரன்

      //அப்படியா ! அப்ப, ஒரு 25000 “முதலீட்டில்” மூன்று தையல் மிஷின்கள் வாங்கிப் போட்டு, இரண்டு
      தையல்காரர்களை வேலைக்கு அமர்த்தி, சொந்த தொழில் செய்யும் ஒருவர் “முதலாளி’ வர்கமா ? அவரிடம் வேலை பார்க்கும் இரண்டு தையல்காரர்கள் தாம் தொழிலாளர் வர்கமா ? எனென்றால் உற்ப‌த்தி சாத‌ன‌ங்களின் “உரிமையாள‌ர்” அந்த‌ குட்டி முத‌லாளி தானே ?//

      இப்படியாப்பட்ட சிறுமுதலாளிகள் மேற்கு நாடுகளில் இருப்பதாக நம்புவோமாக….

      Posted on 17-Sep-09 at 12:44 pm | Permalink
      • வினவு மற்றும் அசுரன்,

        நான் அமெரிக்காவில் சிலிகான் பள்ளத்தாக்கில் வசிக்கிறேன். இந்த மாதிரி “சிறு முதலாளிகள்” அனேகம் பேர் இங்கே உண்டு. டாக்சி வைத்திருப்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், வீட்டுக்கு கூரை போடுபவர் என்று நிறைய தொழிலதிபர்கள் உண்டு. ஒரு நாலைந்து பேர் வேலை செய்யலாம். என் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்கு கூரை போடும் சிறு முதலாளி, இன்னொருவர் landscaper) இரண்டு வீடு தள்ளி இருப்பவர்தான் என் வீட்டை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பெருக்கி துடைக்கிறார். நீங்கள் நிறத்தை பற்றி எதுவும் தவறான முன் முடிவுக்கு வரக்கூடாது என்பதால் மட்டுமே இதையும் சொல்கிறேன் – இந்த மூவரில் ஒருவர் மெக்சிகோவிலிருந்து குடியேறியவர். இருவர் லோகல் வெள்ளை அமெரிக்கர். வருமான வரி கட்டும்போது இந்த சதவிகித வரி கட்டுபவர்களில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள், எத்தனை பேர் தொழில் செய்கிறார்கள், எத்தனை பேர் ஸ்டாக் மார்க்கெட்டில் பணம் பண்ணுகிறார்கள் என்று புள்ளி விவர்ணகள் இங்கே உள்ள வரி ஸாஃப்த்வேரில் கிடைக்கும். இப்போது எனக்கு சரியாக ஞாபகம் இல்லை – ஆனால் இங்கே இருக்கும் சுய தொழில் செய்பவர்களில் பெரும் பங்கு இப்படித்தான் என்றும், அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட ஒரு பத்து சதவிகித பேர் இப்படிப்பட்ட சிறு முதலாளிகள் என்றும நினைவு. என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

        அமெரிக்காவில் பல இடங்களில், துறைகளில் சிறு முதலாளிகள் அழியத்தான் செய்கின்றனர். சிறு மளிகை கடைகள், சிறு விவசாயிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் பல துறைகளில் புதிது புதிதாக உருவாகிக்கொண்டும் போகிறார்கள். நூறு வருஷங்களுக்கு முன் இருந்த அமெரிக்காவில் “சிறு” விவசாயிகள் இன்றிருப்பதை விட பல மடங்கு அதிகம். ஆனால் அன்றைக்கு யாரும் மக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் franchise வைத்திருந்தது கிடையாது. அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்கு service தொழில்கள் – லாண்டரி, கார் மெக்கானிக், appliance ரிப்பேர், வீட்டுக்கு தரை போடுபவர், டென்டிஸ்ட் இந்த மாதிரி தொழில் செய்பவர்கள் நிறைய.

        அப்புறம் அளவுகள் கொஞ்சம் வித்தியாசமானவை. இந்தியர்களுக்கு ஆச்சரியாமாக இருக்கலாம் – 950 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தால் அவர் “சிறு” விவசாயி! நம்மூரில் 100 ஏக்கர் இருந்தால் பண்ணையார்.

        Posted on 17-Sep-09 at 2:51 pm | Permalink
      • அர டிக்கெட்டு !

        ஆர்.வி, சேவைத்துதுறையின் வளர்ச்சி என்பது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என கொள்ள முடியுமா? அது வீழ்ச்சி என்பது என் கருத்து.
        வேறு எதுவும் வேலை கிடைக்காமல், பலர் இப்படி வசதியுள்ளவர்களுக்கு சேவை செய்து பிழைப்பதை நாம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பார்க்கலாம். ஒரு வால்மார்ட் வந்தால் 10 அண்ணாச்சி கடை திவாலாகும். அவர்கள் ஒன்று வால்மார்டுக்கு வேலைக்கு போகலாம் இல்லை இது போல சேவைத்துறையில் ஈடுபடலாம்.

        சேவைத்துறையையும் சிறு முதலாளியத்தையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. சேவைத்துறையில் இருப்பவர்கள் அவர் டாக்ஸி வைத்திருக்கம் டிரைவரோ அல்லது ஜேனிடர் சர்வீஸ் செய்பவரோ அல்லது லேன்ட்ஸ்கேபிங் செய்பவரோ அவர் வாழ்க்கையில் தொழிலாளர் வர்கத்தை சார்ந்தவர், சிந்தனையில் தன்னை முதலாளி என கருதிக்கொள்ளலாம்.. அவர் இஷ்டம்

        நான் அதியமானை கூட முதலாளி என ஏற்றுக்கொள்ளவில்லை.

        Posted on 17-Sep-09 at 3:15 pm | Permalink
      • அரை டிக்கெட்,

        // சேவைத்துறையையும் சிறு முதலாளியத்தையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. //
        இது உங்கள் definition – அதியமான், வினவு, அசுரன் ஆகியோரின் definition வேறாக தெரிகிறது. சிறு அளவில் முதலீடு செய்து, தொழிலுக்கு தேவையான சில கருவிகளை வாங்கி, குறைவான பணியாளர்களை வைத்து தொழில் நடத்துபவர்கள் சிறு முதலாளிகள் என்று அவர்கள் கருதுதவாதகவும், வினவு மற்றும் அசுரன் அத்தகையவர்கள் மேலை நாடுகளில் இல்லை, பெரு முதலாளிகள் அவர்களை விழுங்கிவிட்டார்கள் என்றும் நினைக்கிறார்கள். மற்ற மேலை நாடுகளை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அமேரிக்காவில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்பது என் அனுபவம். என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் கண்டவர்களும், வருமான வரி ஸாஃப்த்வெர் சொல்லும், எனக்கு மங்கலாகவே நினைவிருக்கும், புள்ளி விவரங்களுமே என் கருத்துக்கு காரணம். நான் இதை பற்றி படித்ததோ, பெரிதாக சிந்தித்ததோ இல்லை.

        மற்றும் சேவைத்தொழில் வளர்ச்சி வீழ்ச்சி என்று சொல்லி இருந்தீர்கள். நான் சேவைத்தொழில் பற்றி போன மறுமொழியில் எந்த கருத்தும் சொல்லவில்லை. :-) இதைப் பற்றி விவாதிக்கும் தளம் இது இல்லைதான், ஆனால் சேவைத்தொழில் வீழ்ச்சி இல்லை என்பது என் கருத்து.

        Posted on 17-Sep-09 at 8:57 pm | Permalink
  32. ///முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் உங்களைப்போன்ற சிறு முதலாளிகள் யாரும் கிடையாது. அவர்களை அழித்து விட்டுத்தான் எகபோக மற்றும் பெரு முதலாளிகள் உருவாயினர்/// is it so ? i disgaree. there ARE small and tiny entrepreuners in developed nations. esp in services sector. in manufactuing the economics of scale plays a vital part and hence small units should give way to large units where ever possible. like when tractors and powerlooms replaced plough and handlooms in India slowly. it is part of the process and no big issue at all. no one is complaining there in the west, like you do here. ok. i was kidding you about post revolution scenrio. !! just for fun. We know what happened in the past and what is possible in the future too. just pulling your leg !!. but the grim truth is that millions of innocents were suppressed and jailed and killed in post revolutionary phase in USSR and China, in the name of purges, etc.

    Posted on 17-Sep-09 at 12:19 pm | Permalink
  33. செந்தில்

    இக்கட்டுரை கூறவருவது யார் தொழிலாளி, யார் முதலாளி என்பதல்ல மாறாக தொழிற்சங்கத்தின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

    தோழமையுடன்,

    செந்தில்.

    Posted on 17-Sep-09 at 1:07 pm | Permalink
  34. ////அதியமான்,

    முதலாளித்துவ சித்தாந்தத்தை அடி முதல் முடி வரை நேசிக்கும் உங்களைப்போன்றவர்கள் எம்மை தோழர் என்று அழைப்பது கூச்சமாக உள்ளது. வினவு என்றே அழைக்கலாம். /////

    நண்பர் வினவு,

    என்ன இப்படி சொல்லீட்டீங்க. நீங்க என்னை விட வயதில் மூத்தவரா அல்லது இளயவரா என்று தெரியாததால், தோழர் என்று அழைக்கிறேன். மேலும் தோழர் என்ற சொல், கம்யூனிஸ்டுகள் ஒருவரை ஒருவர் அழைக்க ‘மட்டும்’ பயன்படுத்த கூடிய ‘தனியுடைமை’ சொல்லா என்ன ? !! தோழமை உணர்சி உடையவர்கள் அப்படி அழைக்கலாமே. எழுத்தாளர் பாமரன், எம்மையும், பலரையும் அன்புடன் தோழர் என்று தான் விளிப்பார் ! எம் கொள்கைகளை அறிந்தவர் தாம் அவர் !

    முதலாளித்துவ கொள்கைகளை “நேசிக்க” வில்லை. அவை விஞஞான பூர்சமானது என்று தெரிந்தால், அவற்றை ஏற்கிறேன். புவியீர்ப்பு போன்ற இயற்பிய விதிகளை “நேசிப்பதால்” யாரும் அதை ஏற்பதில்லையே !
    உண்மைகள் என்று நம்புவதால், நிருபிக்கப்பட்டதால் ஏற்கிறோம். அவ்வளவு தான். மனிதனேயம் என்பது
    இடதுசாரிகளுக்கு மட்டும் சொந்தமல்ல. வறுமை, பசி, அடக்குமுறைகள் அழிய எம்மை போன்றவர்கள்
    ஏற்க்கும் வழிமுறைகள் தாம் வேறு. உங்கள் வழிமுறைகள் வேறு. மற்றபடி தோழமை உணர்வு, அறம், மனிதனேயம் நம் அனைவருக்கும் பொதுவானதுதான்..

    Posted on 17-Sep-09 at 1:57 pm | Permalink
  35. Anonymous

    //***
    மேலும், ஜெனரல் மோட்டார்ஸ், எங்கள் கிளையண்ட் தான். எங்களிடம் கதைவிட வேண்டாம் ***

    அறிவுடை நம்பி – இந்த வாக்கியத்தின் மூலம் தாங்கள் கூற விரும்பியது என்ன ?//

    அதாவது நண்பரே ! ஜிஎம்முடைய பிராஜெக்ட்களை நாங்கள் தான் செய்கிறோம். ஜிஎம் எம்பிளாய்களோடு நாங்கள்தான் சேர்ந்து பணி செய்கிறோம். பணியாளர்களுக்கு ஜிஎம் நிறைய சலுகைகள் வழங்கினாலும், ஜிஎம்ம்முடைய பின்னடைவுக்கு காரணம், பணியாளர்கள் அல்ல. மாறாக,

    1. 0% இண்டிரஸ்ட்டில் வாகனங்களை கடனில் வழங்கியது மூலமாக 3000 – 8000 கோடி டாலர்கள் வராக்கடன். இதனால் வாகனங்களின் விலையை மற்ற கம்பெனிகளுடன் போட்டி போடும் அளவு குறைக்க இயலாமை.

    2. EV1 என்ற எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை திடீரென இடைநிறுத்தியது ஆனால் டொயெட்டோ இந்த தொழில் நுட்பத்தை தனது வாகனத்தில் உபயோகித்து லாபமடைந்தது.

    3. ஜிஎம் உடைய கேஸ் கெளவ் எனப்படும் ஜிமெக் கை விற்றது, ஒரு மிகப்பெரிய நிர்வாக தவறு.

    4. வீட்டு வசதி கடன் கொடுத்து மாட்டியது.

    5. தோல்வியில் முடிந்த பியட் கம்பெனி விவகாரம். பியட்டை வாங்கி, 4.4 மில்லியன் டாலர்களுக்கு நஷ்டம்.

    6. கார் தொழிலை விட்டு விட்டு டிரெக் தொழிலி இறங்கி நஷ்டம்.

    - என ஏகப்பட்ட விடயங்கள் இருக்கும் போது, தொழிலாளர்களின் சங்கம் சம்பளம் என்பதெல்லாம் வெறும் பிதற்றல்கள்.

    Posted on 17-Sep-09 at 2:15 pm | Permalink
  36. //**
    மேலும், ஜெனரல் மோட்டார்ஸ், எங்கள் கிளையண்ட் தான். எங்களிடம் கதைவிட வேண்டாம் ***

    அறிவுடை நம்பி – இந்த வாக்கியத்தின் மூலம் தாங்கள் கூற விரும்பியது என்ன ?
    // எங்கள் கம்பெனியில் ஜிஎம் அக்கவுண்டில் நண்பர்கள் பணிபுரிகிறார்கள்.

    ஜிஎம்முடைய தோல்விக்கு காரணம், தொழிலாளர்களின் சம்பளம் அல்ல மாறாக பல தவறான நிர்வாக முடிவுகள்தான்.

    1. 0% வட்டியில் வாகனங்களை வழங்கி, 8000 கோடி டாலர்கள் நஷ்டம்

    2. EV1 கார் நுட்பத்தில் முதலீடு செய்து திடீரென அதனை நிறுத்தியது. ஆனால் டொயெட்டோ இந்த தொழில்நுட்பத்தினை தமது வாகனங்களில் பயன்படுத்தி லாபம் அடைந்தது.

    3. ஜிஎம்மின் காமதேனு எனப்படும் ஜிமெக்கை விற்று நஷ்டம் அடைந்தது.

    4. பியட் கார் கம்பெனியை வாங்கி 6.4 மில்லியன் டாலரில் நஷ்டம் அடைந்தது.

    5. டிரெக் மார்கெட்டில் பிரகாசமான வணிகம் உண்டு என நம்பி அதில் அதிக முதலீடு செய்து ஏமாந்தது

    என்று நிறைய காரணங்கள். ஆனால், லாபம் வரும்போதெல்லாம் தங்கள் திறமை என்று போனஸ் பல கோடிகளை விழுங்கி விட்டு, நஷ்டம் வந்தால் தொழிலாளர்களின் தலையில் கட்டுவது அதியமான் முதலாளிகள் குணம்தான். அதனால்தான் அதியமான் ஜிஎம் தொழிலாளர்களை குறை சொல்கிறா.

    2.

    Posted on 17-Sep-09 at 2:32 pm | Permalink
  37. //என்ன‌ ஒரு விள‌க்க‌ம் ? :) ) பொதுத்துறை ஊழல் மயமானது முதலாளிகள் செய்த சதியா ? அறிவு கொழுந்தையா நீர்.// நான் சொன்ன விடையத்தை மீண்டும் படித்து பாருங்கள். ஒரு துறையை தனியார் மயமாக்க வேண்டுமெனில் ஆளும் வர்க்கம் செய்யும் முதல் காரியம் அதனை ஊழல் மயப்படுத்துவதுதான் என்றேன். இது முதலாளிகளின் பங்காளி “அதிகாரிகளின் வேலை”/ நீங்கள் சொன்ன அத்தனை ஒழுங்கீன வேலைகாரர்களும் ஒரு துறையை ஊழல்மயப்படுத்துவதின் தொடர் விளைவுகள். விளைவு, பொதுமக்கள் மத்தியில் அந்த துறையை தனியார் மயப்படுத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு அதிகமாகும்.

    அசுரன் சொன்னமாதிரி , உங்கள் கலிபோர்னியா ஆய்வின் முடிவுகளை புள்ளி விவரங்களை உங்கள் மொழியில் – உங்கள் பின்னூட்டத்தில் வெளியிடுங்கள். அதற்குதான் அசுரனும் நானும் மற்றவர்களும் காத்திருக்கிறோம்.

    Posted on 17-Sep-09 at 2:42 pm | Permalink
  38. //////என்ன‌ ஒரு விள‌க்க‌ம் ? :) ) பொதுத்துறை ஊழல் மயமானது முதலாளிகள் செய்த சதியா ? அறிவு கொழுந்தையா நீர்.// நான் சொன்ன விடையத்தை மீண்டும் படித்து பாருங்கள். ஒரு துறையை தனியார் மயமாக்க வேண்டுமெனில் ஆளும் வர்க்கம் செய்யும் முதல் காரியம் அதனை ஊழல் மயப்படுத்துவதுதான் என்றேன். இது முதலாளிகளின் பங்காளி “அதிகாரிகளின் வேலை”/ நீங்கள் சொன்ன அத்தனை ஒழுங்கீன வேலைகாரர்களும் ஒரு துறையை ஊழல்மயப்படுத்துவதின் தொடர் விளைவுகள். விளைவு, பொதுமக்கள் மத்தியில் அந்த துறையை தனியார் மயப்படுத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு அதிகமாகும்./////// அதுதான் எப்படி என்கிறேன் ? ஏதாவது ஆதாரத்துடன் விளக்க முடியுமா ?
    அரசு துறை நிறுவனங்களில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் நேர்மையை
    குலைக்க என்ன சதி, எப்படி செய்யப்பட்டது. அல்லது அது இயல்பாக,
    எந்த “ஆளும் வர்க சதி” இல்லாமல், உருவானதா ?

    கூட்டுறவு நூற்பாலைகள் மற்றும் சர்கரை ஆலைகள், அய்.டி.பி.எல்,
    டாமின் போன்ற அரசு நிறுவங்கள் ஊழல் மயமானது சதியாலா ?
    எப்படி ? உமக்கு அனுபவ அறிவு பத்தாது என்றுதான் சொல்ல வேண்டும்.
    ஓய்வு பெற்ற, ஒரு நேர்மையான அரசு துறை அதிகாரி யாரிடமாவது
    இதை பற்றி விவாதித்து பாருங்க. புரியலாம்.

    முதலாளிகளே இல்லாத நாடானா, வட கொரியாவின் பொதுத்துறை நிலை
    மிக கொடுமையாக சீரழந்து விட்டது. எப்படி ? என்ன சதி ?
    உமது கற்பனா சக்தி மிக அருமை !!

    Posted on 17-Sep-09 at 2:57 pm | Permalink
  39. ஆதாரமா ? தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் விநியோகத்தை இப்படிதான் சீரழித்தார்கள். பொது துறையின் அவலட்சணத்தால் நொந்து போன மக்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தண்ணீரை தனியார் மயமாக்கினார்கள். ஆனால் இறுதியில், கார்டு போட்டால்தான் தண்ணீர் என்ற நிலைமைக்கு வந்து விட்டது. நீங்கள் ஒரு குவளை தண்ணீர் பிடித்தாலும், உங்கள் கார்டில் காசு குறைந்து விடும். பிறகு நீங்கள் ரீசார்ஜ் செய்யவேண்டும். இறுதியில் மக்கள் கடும் போராட்டங்களின் பின்பு இதற்கு தீர்வு கண்டார்கள்.

    தமிழரங்கத்தில் இருந்து :

    தனியார்மயத்தைச் சாதிக்க உலகவங்கி கையாளும் உத்திகள் நரித்தனமானவை. ஏற்கெனவே இலவசக் குடிநீர் வழங்கி வரும் அரசு முதலில் கட்டணம் விதிக்கத் தொடங்கவேண்டும். பிறகு கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போக வேண்டும். “கட்டணம் அதிகம் அரசின் சேவை மோசம்” என்ற கருத்து மக்களுக்கு ஏற்படத் தொடங்கியவுடனே “தரமான சேவை’ என்று கூறி தனியார்மயத்தை அறிமுகப்படுத்தும் வேலையையும் அந்த அரசே முன்நின்று செய்ய வேண்டும் — இதுதான் தண்ணீர் தனியார்மயத்திற்கு உலகவங்கி போட்டுத் தந்திருக்கும் பாதை. தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, போக்குவரத்து என்று எல்லாத் துறைகளையும் தனியார்மயமாக்குவதற்கு இதே பாதைதான் நமது நாட்டிலும் பின்பற்றப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    1998இல் தலைநகரம் ஜோகனஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் குடிநீர் விநியோகம் சூயஸ், விவென்டி, பைவாட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளில் மீட்டர் பொருத்தப்பட்டது. மீட்டர் விலை 7500 ரூபாய். தண்ணீர்க் கட்டணம் மாத வருவாயில் 30 சதவீதத்தை விழுங்கியது. 4 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் இரண்டே ஆண்டுகளில் 1 கோடி மக்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய தனியார் காவல்படையுடன் தண்ணீர்க் கம்பெனி ஊழியர்கள் வந்து இறங்கி குழாய் இணைப்பைத் துண்டிப்பதும் அந்த இடத்தில் கலவரம் வெடித்து ரத்தக் களரியாவதும் அன்றாட நடைமுறையானது.

    வீட்டில் குழாய் வசதி இல்லாமல் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் குடிசைவாழ் மக்களையும் பன்னாட்டுக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. அவர்களிடம் காசு பிடுங்க ப்ரீ பெய்டு கார்டு (செல்போனுக்கு உள்ளதைப் போல முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பெறும் அட்டை) முறையை அமலாக்கின. குழாயின் மீட்டரில் அட்டையைச் செருகினால் தண்ணீர் வரும். அட்டையில் காசு தீர்ந்துவிட்டால் தண்ணீரும் நின்று விடும்.

    “கையில காசு வாயில தண்ணி” என்ற இந்த வக்கிரமான முறை காரணமாக ஏழைகள் குளம் குட்டைகளிலிருந்து மாசுபட்ட தண்ணீரைக் குடிக்குமாறு தள்ளப்பட்டனர். கார்டு முறை அமல்படுத்தப்பட்ட ஆறே மாதத்தில் குவாசுலூ நகரில் காலரா தொடங்கி தலைநகர் வரை பரவியது. இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 265 பேர் இறந்தனர். முன்னர் அதேநகரில் வெள்ளை நிறவெறி ஆட்சியின்போது காலரா பரவி 24 பேர் இறந்ததால், நிறவெறி அரசு 9 பொதுக் குழாய்களை அமைத்திருந்தது. அந்தக் குழாய்களுக்கும் மீட்டர் போட்டு சாவு எண்ணிக்கையை 265 ஆக்கியது “கறுப்பின’த் தலைவரின் ஆட்சி.

    தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து “உடையுங்கள் மீட்டரை சுவையுங்கள் தண்ணீரை” என்ற மக்கள் இயக்கம் அங்கே பரவத் தொடங்கியதும் பயந்து போன அரசு, குழாய் இணைப்புள்ள வீடுகளில் “ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் இலவசம். அதற்கு மேல் காசு” என்று அறிவித்தது.

    குடிக்க, குளிக்க, துவைக்க எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு இது எப்படிப் போதும்? “5 நாளுக்கு ஒருமுறை குளி, ஒரு நாளைக்கு 2 தடவைக்கு மேல் கக்கூசுக்குத் தண்ணீர் ஊற்றாதே” என்று பிரச்சாரம் செய்தது அரசு. கழிவறைக்கு இப்போது பழைய செய்தித்தாளைப் பயன்படுத்துகிறார்கள் ஏழைமக்கள்.

    இதை எதிர்த்து மக்கள் குழாய்களை உடைக்கத் தொடங்கியதால், குடிசைப் பகுதிகளில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வருவது போல குழாய்களுக்குள் அடைப்பான்களை வைத்து விட்டன தண்ணீர்க் கம்பெனிகள்.

    மக்களின் போராட்டம் தொடர்கிறது. தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டதனால் “கறுப்பின’ ஆட்சியில் 73% கறுப்பின மக்களுக்கு குடிநீர் இல்லை. 97% வெள்ளையர்கள் தண்ணீரை அனுபவிக்கிறார்கள்.

    தென் ஆப்பிரிக்காவில், கறுப்பின அரசைக் கொண்டே வெள்ளை நிறவெறியைப் புதிய வடிவத்தில் அமல்படுத்த வைத்திருக்கிறது தனியார்மயக் கொள்கை.

    இந்த இணைப்பினைப் பார்க்கவும். தண்ணீர் தனியார்மயம்: உலகெங்கும் எதிர்ப்பு! உலகெங்கும் தோல்வி!

    அதியமான் கவனிக்கவும் — நான் சொல்ல வருவது, தண்ணீர் பிரச்சனைப் பற்றி அல்ல – மாறாக அதிகார வர்க்கம் எப்படி ஒரு துறையை தனியார் மயமாக்க எப்படி எப்படி எல்லாம் வித்தைகள் காட்டுகிறார்கள் என்பதுதான். இந்த ஆதாரம் போதுமா ? அதியமான் ???

    Posted on 17-Sep-09 at 4:02 pm | Permalink
  40. மாக்ஸிமஸ்

    முதலாளித்துவ பத்ரிக்கையான தின மணியின் இன்றைய தலையங்கம்!
    உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.

    கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

    இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், “பரிசு’ என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

    இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

    அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

    இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

    அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய “ஃபைசர்’ நிறுவனம்-

    வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி “வையோக்ஸ்’ என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-

    இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

    கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது…

    எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்…

    ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?
    வினவுதான் கம்யூனிசம்! தினமணிக்கு என்ன நேர்ந்தது? அவர்களின் தவறுகளை அவர்களாலேயே மூடிமறைக்க முடியவில்லை.அதியமான் போன்றோர்கள் எதற்க்காக இவ்வளவு மூச்சு வாங்குகிறார்கள் என்றுதான் புரியவில்லை!

    Posted on 17-Sep-09 at 4:22 pm | Permalink
  41. kavin

    என் வறுமை எந்த கோட்டில் வருகிறது
    விவசாயம் பட்டுப்போனதால்
    சிங்காரச் சென்னையிலே பாலம் கட்டும்
    தொழிலாளியானோம்.
    ஒரு நாள் ரூ.200. கையில் கிடைத்ததோ
    ரூ150. பரவாயில்லை
    கட்டினோம் பாலங்களை. ஒட்டிக்கொண்டது
    ஆஸ்துமா.
    மூச்சிறைக்க கட்டினோம் பாலங்களை.
    புழுதிகளுடனும் கிருமிகளுடனும்
    உறவுகொண்டோம்.
    பையனுக்கும் நோய் என்றனர்.
    நாங்கள் கட்டிய பாலத்திலே
    பென்சு கார் போனது
    நான் பெத்த மகன் பாடையிலே போனான்.
    பார்த்துச் சொல்லுங்கள் கணினி
    கனவான்களே
    என் வறுமை எந்த கோட்டில் வருகிற‌து.

    Posted on 17-Sep-09 at 4:26 pm | Permalink
  42. வடகொரியாவின் பொருளாதாரம் முதலாளித்துவ நாடுகளே ஆச்சரியம் அடையும் விதத்தில் உள்ளது.

    ஜிடிபி வளர்ச்சி

    2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008
    1.3 % 3.7 % 1.2 % 1.8 % 2.2 % 1.0 % 1.6 % 1.8 % 3.7 %

    மற்ற நாடுகளின் பொருளாதாரங்கள் மைனசில் செல்லும்போது, வட்கொரியாவின் பொருளாதாரம் ஏறுமுகமாக உள்ளது.

    http://en.wikipedia.org/wiki/North_Korea#cite_note-66

    http://www.hani.co.kr/arti/english_edition/e_international/212761.html

    experts from this article is

    1. in 2005, North Korea was ranked by the FAO as an estimated 10th in the production of fresh fruit[74] and as an estimated 19th in the production of apples.

    2. It has substantial natural resources and is the world’s 18th largest producer of iron and zinc, having the 22nd largest coal reserves in the world.

    3. It is also the 15th largest fluorite producer and 12th largest producer of copper and salt in Asia.

    4. Other major natural resources in production include lead, tungsten, graphite, magnesite, gold, pyrites, fluorspar, and hydropower.[5]

    ஆக சீனாவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் ஒதுக்கிய் நிலையிலும், சாத்தானின் தேசம் என்று கடுமையாக அமெரிக்காவால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, பொருளாதார தடைகள் உள்ள நிலைமையிலும், வடகொரியா மக்களின் ஆதரவினால் முன்னணியில் தான் உள்ளது.

    Posted on 17-Sep-09 at 4:40 pm | Permalink
  43. அருமையான பதிவு. ஆங்கில செய்தி ஊடகங்களின் சாமியாட்டம், குறிப்பாக CNN-IBN-னுடைய கூஜாவுக்கே உரிய கோபத்தையும் சற்று அழுத்தமாக சுட்டிக் காட்டியிருக்கலாம். மேலும். நீங்கள் கூறியொருப்பது போல, இதே வேலைநிறுத்தம் சாதாரண தொழிற்சாலை ஒன்றில் நடந்திருந்தால் முதலாளி வீசும் பணத்தை அள்ளிவிட்டு அரசின் ஆசியோடு போலீசு தொழிலாளிகளை பந்தாடியிருக்கும். ஏன், இதே ஜெட் ஏர்வேஸின் தரை ஊழியர்கள் கோயலுக்கு ஆதரவாக நின்றதைப் பாருங்கள். ஜெட் ஏர்வேஸின் தரை ஊழியர்கள் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் கூட கடுமையாக ஒடுக்கப்பட்டிருப்பார்கள். மேலும், சஞ்சய் நிருபம்-மின் lobbying குறிப்பிட்ட அளவுக்கு பயன்பட்டிருக்கிறது என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

    Posted on 17-Sep-09 at 7:27 pm | Permalink
  44. அறிவுடை நம்பி,

    தண்ணீர் போன்ற துறைகளில் தனியார் மயம் தேவையில்லை என்று தெளிவாக ஏற்கெனவே குறிப்பிட்டுருந்தேன். படிக்காத மாதுரி நடிக்கிறீர். அதே போல ஜி.எம் திவாலுக்கு, நிர்வாகத்தினரின்
    தவறும் முக்கிய காரணம், கூடவே சங்கத்தில் கடுமையான விதிமுறைகளும் காரணம் என்றும் தெளிவாக எழுதியுள்ளேன். படிக்கவில்லையா அல்லது ? உமது சுட்டிக்கு நன்றி. அதை நேற்றே நான் படித்து, சேமித்து வைத்துக்கொண்டேன். தமிழாக்கம் செய்து மெணக்கட்டிருக்க வேண்டாம் !!
    ஃபோர்ட் மற்றும் கிறிஸ்லர் கார் கம்பெனிகளும் தடுமாறுகின்றன தான். டெட்ராயிட் பகுதியில் இருக்கும் இந்த பிக் 3, 20 வருடங்களுக்கு ஒரு முறை திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டு, அரசின் பண் உதவியோடு, மறுவாழ்வு பெறும். அவற்றின் சங்களின் பிடிவாதமான போக்கும் இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணி.
    லீ அயோக்காவின் சுய சரிதம் படித்து பாருங்கள். இது போன்ற அரசு உதவிகளை சந்தை பொருளாதார நிபுணார்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். திவாலாக அனுமதித்து, பின் புதிய கம்பெனிகள் உருவாகி, எஃபிசியன்ஸ் அதிகரித்து, உற்பத்தி செலவுகளை டோயோட்டொ போல குறைத்து, செயல்பட விட்டுவிட வேண்டும் என்பதே அவர்களின் கருத்து. ஒ.கே. அமெரிக்காவில் நடப்பது எல்லாம் சரியான தீர்வுகள் அல்ல.
    வங்கிகளை “மட்டும்” காக்க வேண்டிய நிர்பந்தம். எனெனில் அவை மொத்த பொருளாதாரத்தை பாதிக்கும். நிழல் உலகம் அது. நிஜ பொருளாதாரம் உற்பத்தி மற்றும் பிற சேவை துறைகள் தாம். பணம் மற்றும் வட்டி விகுதங்கள் ஃபெட் எனப்படும் அரசின் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுவதன் ஒரு விளைவு இது. மேலும் பல சிக்கலான அம்சங்கள் பற்றி எனது ஆங்கில பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.

    வ‌ட‌ கொரியா ப‌ற்றி உம‌து அறியாமை விய‌க்க‌ வைக்கிற‌து. அதே விக்கியில் இதையும் பார்க்க‌வும் : http://en.wikipedia.org/wiki/Human_rights_in_North_Korea

    வ‌ட் கொரிய‌ ஒரு ந‌ர‌க‌ குழி. திற‌ந்து விட்டால் ப‌ல‌ ல‌ச்ச‌ம் ம‌க்க‌ள் சீனாவிற்க்குள் அக‌திக‌ளாக‌ ஓட‌ த‌யார்.
    ப‌ஞ்ச‌ம் தொட‌ர் க‌தை. அமெரிக்கா ப‌ல‌ கால‌மாக‌ உணவு உத‌வி வ‌ழ‌ங்கி தாங்கி பிடிக்கிற‌து :

    http://abcnews.go.com/International/story?id=1952301&page=1

    Posted on 17-Sep-09 at 8:24 pm | Permalink
    • பாயாசம்

      //அதியமான் கவனிக்கவும் — நான் சொல்ல வருவது, தண்ணீர் பிரச்சனைப் பற்றி அல்ல – மாறாக அதிகார வர்க்கம் எப்படி ஒரு துறையை தனியார் மயமாக்க எப்படி எப்படி எல்லாம் வித்தைகள் காட்டுகிறார்கள் என்பதுதான். இந்த ஆதாரம் போதுமா ? அதியமான் ???
      //

      அறிவுடைநம்பி குறிப்பிட்டது மேலே உள்ளதன் அடிப்படையில். அறிவுடைநம்பியின் பின்னூட்டத்தின் கடைசிப் பகுதியை அதியமான் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      Posted on 18-Sep-09 at 1:18 pm | Permalink
  45. அறிவுடை நம்பி,

    தண்ணீர் போன்ற துறைகளில் தனியார் மயம் தேவையில்லை என்று தெளிவாக ஏற்கெனவே குறிப்பிட்டுருந்தேன். படிக்காத மாதுரி நடிக்கிறீர். அதே போல ஜி.எம் திவாலுக்கு, நிர்வாகத்தினரின் தவறும் முக்கிய காரணம், கூடவே சங்கத்தில் கடுமையான விதிமுறைகளும் காரணம் என்றும் தெளிவாக எழுதியுள்ளேன். படிக்கவில்லையா அல்லது ? உமது சுட்டிக்கு நன்றி. அதை நேற்றே நான் படித்து, சேமித்து வைத்துக்கொண்டேன். தமிழாக்கம் செய்து மெணக்கட்டிருக்க வேண்டாம் !! ஃபோர்ட் மற்றும் கிறிஸ்லர் கார் கம்பெனிகளும் தடுமாறுகின்றன தான். டெட்ராயிட் பகுதியில் இருக்கும் இந்த பிக் 3, 20 வருடங்களுக்கு ஒரு முறை திவால் நிலைமைக்கு தள்ளப்பட்டு, அரசின் பண் உதவியோடு, மறுவாழ்வு பெறும். அவற்றின் சங்களின் பிடிவாதமான போக்கும் இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணி. லீ அயோக்காவின் சுய சரிதம் படித்து பாருங்கள். இது போன்ற அரசு உதவிகளை சந்தை பொருளாதார நிபுணார்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். திவாலாக அனுமதித்து, பின் புதிய கம்பெனிகள் உருவாகி, எஃபிசியன்ஸ் அதிகரித்து, உற்பத்தி செலவுகளை டோயோட்டொ போல குறைத்து, செயல்பட விட்டுவிட வேண்டும் என்பதே அவர்களின் கருத்து. ஒ.கே. அமெரிக்காவில் நடப்பது எல்லாம் சரியான தீர்வுகள் அல்ல.
    வங்கிகளை “மட்டும்” காக்க வேண்டிய நிர்பந்தம். எனெனில் அவை மொத்த பொருளாதாரத்தை பாதிக்கும். நிழல் உலகம் அது. நிஜ பொருளாதாரம் உற்பத்தி மற்றும் பிற சேவை துறைகள் தாம். பணம் மற்றும் வட்டி விகுதங்கள் ஃபெட் எனப்படும் அரசின் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுவதன் ஒரு விளைவு இது. மேலும் பல சிக்கலான அம்சங்கள் பற்றி எனது ஆங்கில பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.

    வ‌ட‌ கொரியா ப‌ற்றி உம‌து அறியாமை விய‌க்க‌ வைக்கிற‌து. அதே விக்கியில் இதையும் பார்க்க‌வும் : http://en.wikipedia.org/wiki/Human_rights_in_North_Korea

    வ‌ட் கொரிய‌ ஒரு ந‌ர‌க‌ குழி. திற‌ந்து விட்டால் ப‌ல‌ ல‌ச்ச‌ம் ம‌க்க‌ள் சீனாவிற்க்குள் அக‌திக‌ளாக‌ ஓட‌ த‌யார். ப‌ஞ்ச‌ம் தொட‌ர் க‌தை. அமெரிக்கா ப‌ல‌ கால‌மாக‌ உணவு உத‌வி வ‌ழ‌ங்கி தாங்கி பிடிக்கிற‌து : http://abcnews.go.com/International/story?id=1952301&page=1

    Posted on 17-Sep-09 at 8:44 pm | Permalink
  46. மேக்ஸிமஸ்,

    ஆம். அமெரிக்க மருத்துவ, மருந்து மற்றும் இன்ஸுரன்ஸ் துறைகளில் பல ஊழல்கள் மற்றும் சிக்கல்கள் உள்ளன. அவை தான் கேபிடலிஸம் என்று யாரும் சொல்லவில்லை. கனடா போன்ற நாடுகளை பாருங்களேன். அதை பற்றி பேச மாட்டீங்கிறீக ?

    அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் முதல் பிரச்சனை : இந்திய மற்றும் பல நாடுகளின் மருத்துவர்களை (இந்திய பொறியாளர்களை போல அல்லாமல்) அமெரிக்காவினுள் அனுமதிக்க பலமான தடைகளை உருவாக்கி வைத்துள்ளனர். அவர்களின் சங்கம் ஒரு மூடிய அமைப்பு. புதிய போட்டியாளர்களை அனுமதிக்க மறுக்க பல வழிகளை கையாளும் ஒரு கில்ட்.

    அமெரிக்க மருத்துவ இன்ஸுரன்ஸ் துறை மிக மிக சிக்காலானது. அது சரியான மாடல் அல்ல. பால் கிரிக்மேன் போன்ற பொருளாதார அறிஞர்கள் அதை கடுமையாக விமர்சிக்கின்றனர். புரிந்து கொள்வது மிகவும் சிரமம். பல கோணங்கள் மற்றும் அம்சங்கள் உள்ளன. கனடா அல்லது மே.அய்ரோப்பா மாடல் மேலானாது.
    இன்னும் விவாதம் மற்றும் மாற்றங்கள் நடந்து கொண்டுள்ளது.

    அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவங்களின் “குற்றங்கள்” அய் தடுக்க அங்கு பலமான எஃப்.டி.ஏ என்ற அமைப்பு உள்ளது. அதன் செயல்பாடுகளை பற்றியும், மாற்றங்களை பற்றியும் தொடர் விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

    தொடர் சீர்திருத்தம் அங்கு ஜனனாயக முறையில் தொடர்கிறது. இந்தியா போல வாய் சொல் விவாதங்கள் மட்டும் அங்கு இல்லை.

    ஆனால் இதே மருந்து கம்பெனிகள் பல மிக மிக மிக முக்கியமான மருந்துகளை பெரும் முயற்சியிளும், செலவிலும் கண்டு பிடித்து, பிளேக், பெரிய அம்மை, போலியோ, காலரா, கான்ஸர், இருதைய நோய்கள் மற்றும் பல பல நோய்களை வெல்ல வழி செய்த வரலாற்றை மறக்க வேண்டாம். போக போக போட்டிகளினால் மருந்தகள் விலை குறைவது சந்தை பொருளாதாரத்தில் அடிப்படை அம்சம். ஒரு சில நிறுவனங்கள் செய்யும் தவறுகளை “மட்டும்” வைத்துக் கொண்டு மொத்த துறையை பற்றி ஒரு இறுது முடிவு செய்வது சரியல்ல. மேலும்…..

    Posted on 17-Sep-09 at 9:45 pm | Permalink
  47. ஒரு லட்சம் சம்பளம் வாங்கிணாலும் தொழிளாளிதான் அவன் நல்லவந்தான்,

    10 பேருக்கு வேலையும் கொடுத்து வீட்டுக்கு மாதம் பத்தாயிரம் கொண்டுபோக முடியாமல் தவித்தாலும் அவன் முதளாளிதான் , அவன் அழிக்கப்படவேண்டியவந்தான் ,

    என்னா ஒரு அறிவு ? வினவு வாழ்க

    Posted on 18-Sep-09 at 5:06 pm | Permalink
  48. அதியமான் கவனிக்கவும் — நான் சொல்ல வருவது, தண்ணீர் பிரச்சனைப் பற்றி அல்ல – மாறாக அதிகார வர்க்கம் எப்படி ஒரு துறையை தனியார் மயமாக்க எப்படி எப்படி எல்லாம் வித்தைகள் காட்டுகிறார்கள் என்பதுதான்.

    Posted on 20-Sep-09 at 12:51 pm | Permalink
  49. அதியமான் ஆதாரம் கொடுங்கள் (பதிவில் நேரடியான விவரங்கள் தேவை. சுட்டிகள் வேண்டாம்). நான் மென்க்கெட்டு சுட்டியிலுள்ள விடயங்களை பதிவில் கொண்டு வந்தது, அசுரன் சொன்னது போல சுட்டிக்கு சுட்டி அலைகழித்து, ஓரு எஸ்கேபிஸ்டாக இருக்க வேண்டாம் என்றுதான்.

    Posted on 20-Sep-09 at 12:56 pm | Permalink
    • அறிவுடைநம்பி,

      என்ன பெரிய ஆளும்வர்க சதி ? உளரல். ஊழல் மயமானதற்கு எந்த சதியும் காரணம் அல்ல. ஊழலை குறைத்து, டெலிவரி ஒழுங்காக செய்யவே தனியார் மயம் வழிமொழியப்பட்டது. அது ஒரு முயற்சிதான். ஆனால் சில துறைகளில், ஊழல் மிகுந்த நாடுகளில், தலைவலி போய் திருகுவலி வந்த கதையானது. அவ்வளவுதான்.
      போட்டிக‌ள் சாத்திய‌மில்லாத‌ துறைக‌ளில் இப்ப‌டி ஆக‌ வாய்பு உள்ள‌து. ஆனால் வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ளில், மின்சார‌ விந‌யோக‌ம் வெற்றிக‌ர‌மாக‌ த‌னியார் துறையால் செய்ய‌ப்டுகிற‌து. கார‌ண‌ம் அங்கு வெளிப்ப‌டை த‌ன்மை ம‌ற்றும் நேர்மை அதிக‌ம்.
      செக்ஸ் அன்ட் பால‌ன்ஸ‌ஸ் உள்ள‌ன. அடிப்ப‌டை ஜ‌ன‌னாய‌க‌ம் பெரிதும் உள்ள‌து..

      நியாய‌மாக‌ பார்த்தால், இந்தியா ந‌க‌ர‌ங்க‌ளில் த‌ண்ணிர் விந‌யோக‌ம் த‌னியார்ம‌யப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் தான். த‌ண்ணீரி விநியோக‌த்தில் மாந‌க‌ராட்சிக‌ளில்,
      ந‌க‌ராட்சிக‌ளில் ந‌ட‌க்கும் ஊழ‌ல் என்ன‌ ச‌தியால் விளைந்த்தா ? உள‌ர‌ல். கான்ட்ராக்ர்ட‌ர்க‌ளிட‌ம் ல‌ஞ்ச‌ம் வாங்கி, ம‌ட்ட‌மான‌ பைப்புக‌ள் போடு வ‌ழிவ‌கை செய்த‌வ‌தில் துவ‌ங்கி, புதிய‌ இணைப்பு வாங்க ல‌ஞ்ச‌ம் ம‌ற்றும் அனைத்து இட‌ங்க‌ளிலும் கூடிய‌ வ‌ரை ல‌ஞ்ச‌ம் இருப்ப‌து ஓப‌ன் ஸீக்ர‌ட் தான். இதில் என்ன‌ பெரிய‌ ச‌தி, வெங்காய‌ம். ஆனால் த‌னியார்ம‌ய‌மாக்கினாலும் பிர‌ச‌னை வேறுமாதிரி உருவாகும் என்ப‌தால் விமொச‌ன‌ம் இல்லாம‌ல் அப்ப‌டியே ஏற்றுகொள்கிரோம்.

      இந்தியாவில் ப‌ல‌ துறைக‌ளில் ந‌ட‌ந்த‌வ‌ற்றை ப‌ற்றி எழுதிய‌த‌ற்கு ப‌தில் எழுதாம‌ல் தென் ஆப்பிரிக்காவில் த‌ண்ணிர் வின‌யோக‌ம் ப‌ற்றி ம‌ட்டும் ப‌தில் எழுதுவ‌துதான் அறிவுடைமையோ ? நூற்பாலைக‌ள், கூட்டுற‌வு வ‌ங்கிக‌ள், கூட்டுற‌வு துறை, ம‌ற்றும் பொதுத்துறைக‌ள் இன்று ஊழ‌ல் ம‌ய‌மாக‌ என்ன‌ ச‌தி யார் எப்ப‌டி செய்தார் என்று விள‌க்க‌லாமே ? அர‌சு தொழில் அல்ல‌தே சேவைகளை செய்ய‌ முனைந்தால், அங்கு ஊழ‌ல் ப‌ல‌ வ‌ழிக‌ளில் உருவாகும் என்ப‌தெ அடிப்ப‌டை. அதுதான் மூல‌க்கார‌ணி.
      போக்குவ‌ர‌த்து துறையில் இரு அங்க‌மான‌ ப‌ஸ் ம‌ற்றும் லாரி போக்குவ‌ர‌த்த‌ ஒப்பிட்டாலே தெரியும்..

      யாரு எஸ்கேபிஸ்டு ? ப‌டிக்க‌ முடியாவிட்டால் தொட‌ர‌ வேண்டாமே.
      வ‌ட‌ கொரியா ப‌ற்றி நீர் அளித்த‌ “அதார‌ம்” போல‌த்தான் நான் நேர‌டியாக‌ காபி பேஸ்ட் ப‌ண்ண வேண்டுமா ? அதை ப‌ற்றி மூச்சே இல்லை. உம்மை வ‌ட‌ கொரியாவிற்கு ஏற்ம‌தி ப‌ண்ணும் ! :) ))

      Posted on 20-Sep-09 at 1:18 pm | Permalink
  50. அதியமான் ! நான் சொன்ன வந்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. By nature, இந்தியா போன்ற அரை காலனிய நாடுகளில் அரசு துறை என்றால் ஊழல் படிந்து இருப்பதற்கு காரணம், அரசு துறைகளை மக்கள் வெறுக்க வேண்டுமென்பதற்காகவும், சுதந்திரத்திற்கு பிற்பாடு இந்தியா வெள்ளையனுக்கு கங்காணி வேலைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் பிரிட்டன் உருவாக்கிவிட்டுப் போன இந்தியா ஆளும்வர்க்கம். இந்த ஆளும்வர்க்கத்தால் அரசு துறைகளில் ஊழல்.

    இந்த ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால், இதனை மக்கள் மயப்படுத்த வேண்டும். மாவோ இதனை கலாச்சாரப்புரட்சி மூலம் சாதித்தார்.

    ஆனால் நீங்கள் சொல்வது, திருடுபவனையே நகைக்கு காவல் வைக்க வேண்டுமென்றும், பூனையையே பாலுக்கு காவல் வைக்க வேண்டுமென்றும் சொல்கிறீர்கள்.

    ஆக அரசுதுறைகளில் ஊழல்மயமாகி இருப்பது, மக்களிடம் இருந்து அன்னியப்படுவதுதான்.

    தற்போது உள்ள சீனா மற்றும் வடகொரியா ஆகியன திரிபுவாத கம்பியுனிஸமாக உள்ளன. சீனாதான் இன்று உலகெங்கும் அமெரிகாவினை மிஞ்சும் வகையில் முதலீடு செய்யும் மிகப் பெரிய முதலாளித்துவ நாடாக உள்ளது. ஏன் அமெரிக்காவிலெயே சீன முதலீடுகள்தான் அதிகம்.

    இதற்கு காரணம், மாவோவிற்கு பின்பு வந்த போலி கம்பியுனிஸ்டுகள்தான்.

    Posted on 21-Sep-09 at 12:44 pm | Permalink
    • No, you are over simplifying Arivu. there is a close co-relation between economic freedom and corruption as proved by this scientific survey from Heritage foundation :

      http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

      and you are ill informed and naive to fall for Mao’s “cultural revloution” ; that was primariy based on his power struggle to get rid of his “opponents” ; rest is mere hogwash ;read more about that.

      Revisionists : how do they emerge in ALL post revolutionarly nations ? because of the contradictions and abuses created in the name of “dictatorship of the prolateariat” ; it is human nature and is INEVITABLE. for communism to succeed, all the people should be converted into true communists. that is impossible and against basic human nature. men are not like bees or ants : to put in their best efforts for the sake of “commune” and take whatever the commune gives them as their share or salary. Profit motive and ego drive are basic human nature and is impossible to suppress in the long run. there are more complex pyschological aspects in this subject…

      Posted on 21-Sep-09 at 12:52 pm | Permalink
  51. //and you are ill informed and naive to fall for Mao’s “cultural revloution” ; that was primariy based on his power struggle to get rid of his “opponents” ; rest is mere hogwash ;read more about that.// அதியமான், மாவோ, கலாச்சாரப்புரட்சியை நடத்துவதற்கு முன்போ ஆட்சியைப் பிடித்து இருந்தார். நீங்கள் சொல்வது போல கலாச்சாரப்புரட்சி மூலம் ஆட்சியதிகாரத்தைப் பெறவில்லை. அல்லது கலாச்சாரப்புரட்சியின் பின்பு ஆட்சி அதிகாரத்தைப் பெறவில்லை.

    மாறாக ஸ்டாலின் காலத்து தவறுகள் மூலம் (இந்த தவறுகள் ஏன் நேர்ந்தன என்று கம்புனிஸ்டுகள் நேர்மையான விவாதம் செய்துள்ளார்கள் – இரண்டாம் உலக யுத்ததின் சீரழிவுகளுக்குப் பிறகு, 22 நாடுகளின் இராணுவங்கள் தந்த கடும் அழுத்தத்தால் அனைவரையும் கட்சிக்குள் ஸ்டாலின் அனுமதித்தார். அவர்கள் உண்மையான் கம்பியுனிஸ்டுகளை கொன்றொழித்தார்கள்), பாடம் கற்றுக் கொண்ட மாவோ, யார் உண்மையான கம்பியுனிஸ்டுகள், யார் போலிகள் என்று கண்டறியும் பொறுப்பை மக்களிடமே விட்டார். ஏனெனில் மக்களுக்கு தெரியும் யார் திருடுகிறார்கள் என்று ?. அப்போதுதான் ஆட்சியில் அமர்ந்துள்ள சீன கம்பியினஸக் கட்சியில் ஊழல்வாதிகள் ஊடுருவாமல் இருப்பதற்காக மாவோ நடத்திய பொறிமுறைதான் கலாச்சாரப்புரட்சி.

    Posted on 21-Sep-09 at 1:12 pm | Permalink
    • அறிவுடைநம்பி,

      ///மாறாக ஸ்டாலின் காலத்து தவறுகள் மூலம் (இந்த தவறுகள் ஏன் நேர்ந்தன என்று கம்புனிஸ்டுகள் நேர்மையான விவாதம் செய்துள்ளார்கள் – இரண்டாம் உலக யுத்ததின் சீரழிவுகளுக்குப் பிறகு, 22 நாடுகளின் இராணுவங்கள் தந்த கடும் அழுத்தத்தால் அனைவரையும் கட்சிக்குள் ஸ்டாலின் அனுமதித்தார். அவர்கள் உண்மையான் கம்பியுனிஸ்டுகளை கொன்றொழித்தார்கள்), ////

      ஒத்துக்கொண்டதற்க்கு நன்றி. ஆனால் இது முழு உண்மை அல்ல. 22 நாடுகளின் ராணுவம் எப்படி அழுத்தம் கொடுதார்கள் ? அதற்க்கும் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கும் என்ன சம்பந்தம் ? இது போன்ற பாசிச படுகொலைகள் மற்றும் வதைமுகாம்கள் பற்றிதான் நான் தொடர்ந்து எழுதுகிறேன். இதை பற்றி “நேர்மையான” விவாதம் அசுரனிடமும் மற்ற தோழர்களிடமும் செய்து பாருங்களேன் !!

      மாவோவின் வரலாறு அறிவேன். அவரின் நீண்ட பயணம், 1959இல் பெரும் பாய்ச்சல் திட்டம் போன்றவை பற்றி கொஞ்சம் தெரியும். ஓ.கே. ரஸ்ஸியாவை பார்த்து மாவோ பாடங்கற்றாரா ? நல்ல கதை. 1959இல் மாவொன் விவசாய மற்றும் இரும்பு தொழில் பற்றிய “பரிசோதனைகளை” செய்ய வேண்டாம் என்று ரஸ்ஸியர்கள் மன்றாடினார்கள்.
      ஏனெனில் அவற்றின் விளைவுகள் பற்றிய அனுபவ அறிவு ரஸ்ஸியர்களுக்கு இருந்தது.
      ஆனால் மாவோ யாருடை அறிவுரையும் கேட்க்க விருப்பமில்லாத ஒரு சர்வாதிகாரி.
      விஞ்சானிகள், பொறியாளர்களை பூஸ்வா சதிகார்கள் என்று நம்ப மறுத்து தானே
      அணைகள், சிறு இரும்பாலைகள் என்று “வடிவமைத்து” பெரும் நாசத்திற்க்கு வழிவகுத்தார். http://en.wikipedia.org/wiki/Great_Leap_Forward

      கலாச்சார புரட்சி : யார் போலி, யார் உண்மை கம்யூனிஸ்ட் என்பதை எந்த அளவுகோல்கள் படி யார் எப்படி தீர்மானிப்பது. ஆர்பிட்டரியாக, கட்டுபாடு, விவாதம் இல்லாமல் ஒரு மதவெறி போன்ற மிருகவெறியை இளம் செம்படையிணருக்கு ஊட்டி, வெறி கொள்ள செய்து, பல லச்சம் அப்பாவிகளையும் தாக்க ஏவினார் மாவோ.
      பல மாணவர்களும் தாக்கப்பட்டனர். கல்லூரி விடுதியின் மேல் மாடியிலிருந்து லிங் ஜியோபாங்கின் மகன் தூக்கி வீசப்பட்டு முடவனாக்கப்பட்டர். அவரின் தந்தை மீது விமர்சனங்களுக்கு இது தான் “தண்டனையா” ? உள்கட்சி ஜனனாயகம் என்பது இதுவல்ல. மார்கிஸ அறமும் அல்ல இது. ஒரு வகையான ஃபாசிச மதவாதம். மாவோதான் அதன் கடவுள். http://en.wikipedia.org/wiki/Cultural_Revolution

      இங்கு இணைய‌ உல‌கில், ஸ்டாலின் குரு என்ற‌ ஒரு (கோவை) இளைஞ‌ர், ம‌.க‌.இ.க‌ வின‌ரை “போலிக‌ள்” என்கிறார். ப‌திலுக்கு அவ‌ரை ஒரு போலி அல்ல‌து அரைகுறை என்ற‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள். இதுவே ஒரு அதிகார‌ம் கொண்ட‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி ஆட்சி ந‌ட‌த்தும் நாடாக‌ இருந்தால் என்ன‌ ஆகும் ? ப‌ல‌ரையும் போலி என்று ச‌க‌ட்டுமேனிக்கு முத்திரை குத்தி, த‌ண்டிப்பார்க‌ள். ஜ‌ன‌னாய‌க‌ம், ச‌ட்ட‌ம், நீதி என்ப‌வை பூஸ்வாக்க‌ளின் எமாற்று வேலை என்று நீங்க‌ ந‌ம்பிக்கிட்டிருக்கீக‌. ஆனால் இவ‌ற்றை இழ‌ந்தால் தான் இவ‌ற்றின் அருமை புரியும்..

      Posted on 21-Sep-09 at 2:38 pm | Permalink
      • ஜான்

        அதியமான்! நிரபராதிகளை தண்டிப்பதையும், கொல்வதையும் மட்டும் வைத்து கொண்டு கம்யூனிசத்தை நீங்கள் நிராகரிக்க விரும்பினால். அதற்காக முதலில் முதலாளித்துவத்தை செத்தபின்னும் தூக்கிலிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மூலதனத்துக்காக நடந்த போர்களும், கொலைகளும, சிறைகளும், சித்திரவதைகளும் conservative estimate படியே, கம்யூனிச அவதூறு கொலை எண்ணிக்கைகளை விட மிக அதிகம். இதை ஒப்புக்கொள்ளும் நேர்மை உமக்கு இருக்கிறதா? இருந்தால் மேலே பேசுங்கள்..

        Posted on 21-Sep-09 at 3:20 pm | Permalink
  52. ஜான்,

    தாரளமாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சொல்லாடல் தான் பிரச்சனை. ஏகாதிபத்தியம்,
    ஃபாசிசம், காலனியாதிக்கம், அடிமைபடுத்தும் ஆதிக்கம் : இவை உண்மையான சுதந்திர சந்தை பொருளாதார, ஜனனாயக பாணி “முதலாளித்துவம்” அல்ல.
    முதலாளித்துவம் என்ற வார்த்தை பல இதர விசியங்களோடு குழப்பபடுகிறதுதான் பிரச்சனை. அடிப்படை ஜனனாயகம், பாராளுமன்றம், அடிப்படை உரிமைகள், பேச்சு சுதந்திரம், பாரபட்சமற்ற நீதி அமைப்பு : இவை தான் லிபரல் ஜனனாயகத்தில் அடிப்படைகள். இதில் சொத்துரிமை சார்ந்த முதலாளித்துவம் ஒரு அங்கம்.

    1945க்கு முன் இருந்த ஜெர்மனி மற்றும் ஜப்பான் வேறு, அதன் பின் இருக்கும் ஜெர்மனி வேறு. இரண்டும் “முதலாளித்துவ” நாடுகள் என்று தான் அன்றும், இன்றும் வர்ணிக்கப்படுகின்றன. அதனால் தான் இந்த குழப்பம். அன்று, இந்த‌ இர‌ண்டு நாடுக‌ளும் ஏகாதிப‌த்திய‌வாதிக‌ளாக‌ இருந்த‌ன‌. இன்று அங்கு லிப‌ர‌ல் ஜ‌ன‌னாய‌க‌ம். நார்வே, டென்மார்க் போன்ற‌ நாடுக‌ள் தான் ச‌ரியான‌ அமைப்புக‌ள். அவ‌ற்றையே யான் வ‌ழிமொழிகிறேன்.

    சர்வாதிகாரம், ஏகாதிப்ப‌திய‌ம், அட‌க்குமுறை, கால‌னியாதிக்க‌ம் : இவை முத‌லாத்துவ‌ அடிப்ப‌டைக‌ளில் “ம‌ட்டும்” உருவாவ‌தில்லை. க‌ம்யூனிச‌ம் என்ற‌ பெய‌ரில் / அடிப்ப‌டையிலும் உருவாகும். கிழ‌க்கு அய்ரோப்பா ம‌ற்றும் ஆசிய‌ குடிய‌ர‌சுக‌ளை சோவிய‌த‌ ர‌ஸ்ஸியா ந‌சுக்கிய‌தும் ஏகாதிப‌த்திய‌ம் தான்.

    ///அதியமான்! நிரபராதிகளை தண்டிப்பதையும், கொல்வதையும் மட்டும் வைத்து கொண்டு கம்யூனிசத்தை நீங்கள் நிராகரிக்க விரும்பினால்./// அந்த‌ அமைப்பில் அது மிக‌ இய‌ல்பபாக‌ நிக‌ழும் என்ப‌தே அடிப்ப‌டை உண்மை. பாராளுமன்ற விவாதம், எதிர் கட்சிகள் ம‌ற்றும் அடிப்ப‌டை உரிமைக‌ள் தேவை இல்லை என்று மார்கிஸ்டுக‌ள் ந‌ம்புவ‌தால் தான் இப்ப‌டி உருவாகி கொடுகோல்க‌ளாக‌ உருமாறுகின்ற‌ன‌. அடிப்ப‌டை ஜ‌ன‌னாக‌ம் என்ப‌த‌ன் அருமை புரிவ‌து க‌டின‌ம். ஏற்ற‌ தாழ்வுக‌ளை ஒழிக்க‌, வ‌றுமையை ஒழிக்க‌ அடிப்ப‌டை ஜ‌ன‌னாய‌க‌த்தை ப‌லி கொடுக்க‌ வேண்டும் என்று முனைந்தால், எதிர்ம‌றையான‌ விளைவுக‌ளே ஏற்ப‌டும். வ‌றுமையும் ஒழியாது. இதுதான் வ‌ர‌லாறு த‌ரும் பாட‌ம்.

    Posted on 21-Sep-09 at 3:36 pm | Permalink
  53. //ஒத்துக்கொண்டதற்க்கு நன்றி. ஆனால் இது முழு உண்மை அல்ல. 22 நாடுகளின் ராணுவம் எப்படி அழுத்தம் கொடுதார்கள் ? அதற்க்கும் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கும் என்ன சம்பந்தம் ? இது போன்ற பாசிச படுகொலைகள் மற்றும் வதைமுகாம்கள் பற்றிதான் நான் தொடர்ந்து எழுதுகிறேன். இதை பற்றி “நேர்மையான” விவாதம் அசுரனிடமும் மற்ற தோழர்களிடமும் செய்து பாருங்களேன் !!//

    அதியமான் ! புலிகள் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பில் இறங்கியதற்கும், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள் போலுள்ளது ?. சரி சொல்கிறேன். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு, சோவியத்தே நிர்மூலமானப் பின்பு, ஏறத்தாழ இரண்டு கோடிப் பேர் கொல்லப்பட்ட பின்பு, கட்சியில் ஏற்பட்ட ஆள்பற்றாகுறையால், அனைவரையும் உறுப்பினராக ஸ்டாலின் அனுமதிக்கிறார். அதற்கு முன்பு வரை, ஒருவரின் நடத்தை, கருத்து முதலானவை அவரைப் பற்றி தொடர் கண்காணிப்புக்கு பின்பே கட்சியில் சேர்ப்பார்கள். இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபின்பு, அமெரிக்க அணியின் தொடர் நெருக்குதல்களாலும், 22 நாடுகளின் இராணுவங்கள் முதல் உலக யுத்தத்தின் பின்பு கொடுத்த போர்களாலும், ஜாருக்கு விசுவாசமான வெண்படையின் தாக்குதல்களாலும் ஆள்பலம் குறைந்த கம்பியுனிஸ கட்சியில் அனைவரையும் இணைக்கிறார். இதில் உள்ளே நுழைந்த போலிகள், ஸ்டாலினுக்கு பின்பு ஆட்சியையே பிடிக்கிறார்கள். உண்மையான கம்பியுனிஸ்டுகளைக் கொல்கிறார்கள். இதற்கு காரணம் யார் பதுக்கல்காரர்கள், மக்கள் விரோதிகள் என்று தெரியாததும், அதனை முடிவு செய்யும் இடத்தில் போலிகள் இருந்ததும் ஆகும்.

    இந்த நிலையை வெல்ல அல்லது இதிலிருந்து மீண்டு வர மாவோ, கலாச்சாரப் புரட்சியின் மூலமாக , மக்களை அதிகாரத்தில் பங்கெடுக்க வைத்தார். மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள், கெட்டவர்கள், யார் திடீர் பணக்காரர்கள் என்று. இதனால்தான், ஸ்டாலினிடமிருந்து மாவோ பாடம் கற்றார் என்றேன்.

    //1959இல் மாவொன் விவசாய மற்றும் இரும்பு தொழில் பற்றிய “பரிசோதனைகளை” செய்ய வேண்டாம் என்று ரஸ்ஸியர்கள் மன்றாடினார்கள்.
    ஏனெனில் அவற்றின் விளைவுகள் பற்றிய அனுபவ அறிவு ரஸ்ஸியர்களுக்கு இருந்தது/// விகிபிடியாவை மொழிபெயர்ர்பு செய்ததற்கு நன்றி. சீனா ஒரு விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கின்ற ஒரு நாடு. அதனை தொழில்துறையில் வெற்றிகரமாக மாற்றியவர் மாவோ. http://www.monthlyreview.org/0906ball.htm.

    ரஸ்யர்கள் சீனத்துடனான தொடர்புகளை துண்டித்தது, ஸ்டாலினிற்கு பிறகு, சோவியத் ஒரு வெற்று சமூக ஏகாதிபத்தியமாக திரிந்தத பின்பு – அதாவது போலிகளான குருஷேவ், கார்ப்பசேவ் முதலான கரசேவ்களின் பின்பு. இந்த போலிகள் ஸ்டாலினைப் பற்றி அவதூறு கிளப்பியதால் இவர்களை மாவோ அம்பலப்படுத்தியதால்தான் ரஷ்யர்கள் திரும்ப பெறப்பட்டார்கள். விகியில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஏன் அதியமான் ஒரு கம்பியுனிஸ்ட் என்று நான் கூட விகியில் ஒரு பதிவு போடலாம் :)

    //விவாதம் இல்லாமல் ஒரு மதவெறி போன்ற மிருகவெறியை இளம் செம்படையிணருக்கு ஊட்டி, வெறி கொள்ள செய்து, பல லச்சம் அப்பாவிகளையும் தாக்க ஏவினார் மாவோ../// ஆதாரம் கொடுங்கள் அதியமான். நான் மாவோ படுகொலைகள் புரியவில்லை என்பதற்கு ஆதாரம் கொடுத்துள்ளேன். (நன்றி அசுரன்)

    மேலும் அசுரனின் மற்றைய பதிவு :

    மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
    உடனே அசுரனின் இருந்து ஒரு இணைப்பை கொடுப்பதுதான் விவாதமா என்று கேட்காதீர்கள். இதில் ஆதாரங்களோடு சொல்லி உள்ள விடயங்களை ஆதாரங்களோடு மறுங்கள் பார்ப்போம்.

    இதற்கு முன்பு நாங்கள் உங்களிடம் உங்கள் கலிபோரினியா சுட்டியின் விவரங்களை (உங்கள் மொழியில்) எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்த விரும்பிகிறேன்.

    Posted on 22-Sep-09 at 4:55 pm | Permalink
    • /// இதில் உள்ளே நுழைந்த போலிகள், ஸ்டாலினுக்கு பின்பு ஆட்சியையே பிடிக்கிறார்கள். உண்மையான கம்பியுனிஸ்டுகளைக் கொல்கிறார்கள். இதற்கு காரணம் யார் பதுக்கல்காரர்கள், மக்கள் விரோதிகள் என்று தெரியாததும், அதனை முடிவு செய்யும் இடத்தில் போலிகள் இருந்ததும் ஆகும். ///// I see. how were the so called pollihal identified and on what basis ? the methods used were arbitary and utterely unobjective or fair. petty vengences and jealosies within party structure was used to get rid of many many innocents. and Stalin;s worst crimes date back to pre WW 2 decades ; esp the 30s when forced collectivisation killed millions. and his purges uleashed a reigh of terror. Only a tiny section of communists lie MaKaIKa groups still cling to the blnd belief that Stalin’s actions are justified and the west had used it as propoganda ; the modern day historians of all shades (incl prominent marxiist historians ) and the peope of erstwhile USSR belive otherwise. try taking a tour of old USSR region and see for yourself. you can’t fools a whole nation into beliving something false and untrue. Stalin became parnoid and elimiated many of his close and old collegues like Bukarin, Trostsky. It was nothing but power struggle. and have you any idea about the life of Alexender Solzehtian ;

      http://athiyaman.blogspot.com/2008/08/aleksandr-solzhenitsyn-is-dead-at-89.html

      and regarding proof for Mao’s killings : you refuse to read those wiki links while you expect me to read asurans or accept your wiki links about N.Korea ? wiki is much maligned but is a good reference and starting point in any issue. it gives an good overview and introduction and many many links. there is enough proof within those two links i had given. or you may take a tour of China for yourself and find out for yourself.

      Posted on 22-Sep-09 at 9:07 pm | Permalink
      • அறிவுடைநம்பி,

        முதலில் இதற்க்கு பதில் சொல்லுங்க, பார்க்கலாம் : 1930களில் ஏன் சோவியத் ரஸ்ஸியா மூடிய நாடாக இருந்தது ? இன்று போல பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களை தாராளமாக அனுமதித்து இருந்தால் உண்மைகள் பல தளங்களில் இருந்து வெளியே வந்திருக்குமே. ராஜபக்ஷே அரசும் இதே போல பன்னாட்டு பார்வையாளர்களை, பத்திரிக்கையாளர்களை தடுத்து வைத்திருக்க்கிறது.
        பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை. இன்றும் வ‌ட‌ கொரியா, மைன்ம‌ர் போன்ற‌ நாடுக‌ள் மூட‌ப்ப‌ட்டு தான் உள்ள‌ன‌. பார்வையாளர்க‌ள், ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் அனும‌தி இல்லை. எனென்றால் உண்மைக‌ள் வெளி வ‌ந்துவிடுமே ! ஸ்டாலின், மாவோ கால‌த்திலும், பிற‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலும், ச‌ர்வாதிகார ஆட்சிக‌ளில் இது மிக‌ ச‌க‌ஜ‌ம். ம‌டியில் க‌ன‌ம் இருந்தால் தானே ப‌ய‌ம். பின் ஏன் அந்த‌ “மூடிய‌” இரும்புத் திரை ?

        அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் செய்யும் தவறுகளை (உள் நாட்டிலும், வெளி நாட்டிலும்) உடனடியாக வெளிச்சதிர்க்கு கொண்டு வர பல வகையான ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதே போல கம்யூனிச நாடுகளில் அனுமதிக்க ஏன் தடை ?
        என்ன பயம் ? அப்படி அனுமதித்திருந்தால் இன்று அவதூறு என்ற சொல்லாடல் தேவை இல்லையே !

        Posted on 22-Sep-09 at 9:36 pm | Permalink
  54. அதியமான் ! உங்கள் ஆஸ்தான எழுத்தாளர் சோல்யெட்சினுடைய யோக்கியதைப் பற்றி உம்மிடம் நிறைய பேசி ஆகிவிட்டது.

    சோல்சனிட்சின் : “அவலத்தில்” பிறந்த இலக்கிய அத்வானி

    துரோகியின் மரணம்

    உங்கள் பதிவினைப் படித்தேன். அதிலுள்ள விடையங்களுக்கு மேலுள்ள பதிவில் வரிக்கு வரி விடைகள் அளிக்கப்பட்டுள்ளன.

    //how were the so called pollihal identified and on what basis ? the methods used were arbitary and utterely unobjective or fair. petty vengences and jealosies within party structure was used to get rid of many many innocents//

    திருவாரூரில் தேங்காய் பொறுக்கியவர்கள் (திமுக), மைசூரில் வைத்தியம் பார்த்தவர்கள் (அதிமுக), ஏன் வலது இடது என இரண்டு போலிகள் என்று இவர்களின் வாழ்க்கையே இவர்கள் மக்கள் விரோதிகள் என்று சொல்கிறது. இதனை மக்கள் பார்க்கிறார்கள், தீர்மானிக்கிறார்கள். இவர்கள் எந்த அளவுகோல்களை பயன்படுத்திகிறார்களோ அதே அளவுகோல்தான் போலிகளை கண்டுபிடிக்க சீனர்களும் பயன்படுத்தினார்கள்.

    உங்கள் புகாரின், டிரோவ்ஸ்கி இவர்களே ஒத்துக்கொண்டிருக்கின்ற விடையம் – ஸ்டாலின் லெனிற்குப் பிறகு கட்சியில் பெரும்பான்மையாக (டிரோவ்ஸ்கியின் ஆதரவுடன்) தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது.

    இன்னொன்று, டிரோவ்ஸ்கி செஞ்சேனையின் தளபதி மற்றும் ஸ்டாலின்கால கொடுமைகள் என்று நீங்கள் (தவறாக) சித்தரிக்கும் களையெடுப்புகள் எல்லாம் திராவ்ஸ்கியும் செய்தார் !!

    இதைப் பற்றி புதிய ஜனநாயகம் ஒரு புத்தகத்தையே வெளியிட்டுள்ளது. இதனை ஆன்லைனில் படிக்கலாம் (http://www.keetru.com/literature/essays/sundararamasamy_7.php).

    இவர்கள் சொன்ன கம்பியுனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் திறந்து விடப்பட்டபோது இவர்களின் சொன்ன பொய்யின் ஆதாரங்கள் எல்லாம் புஸ்வாணமாகிப் போனது.

    ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் ஏன் போக வேண்டும் ? இதோ ரஷ்யாவில் கம்பியுனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் ஆதர்வு பெருகி வருகிறது. மாஸ்கோவில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    http://kalaiy.blogspot.com/2009/07/blog-post.html

    Posted on 23-Sep-09 at 1:42 pm | Permalink
  55. //you refuse to read those wiki links while you expect me to read asurans or accept your wiki links about N.Korea ? wiki is much maligned but is a good reference and starting point in any issue. it gives an good overview and introduction and many many links. there is enough proof within those two links i had given. or you may take a tour of China for yourself and find out for yourself..// அதியமான், நான் உங்கள் அனைத்து விக்கி லிங்குகளையும் படித்துவிட்டுத்தான் பதிலளித்தேன்.விக்கி என்பது ஒரு விவரத் தொகுப்பு. நீங்கள் கூட அதில் “இந்தியாவின் பொற்காலம் – முதலாளித்துவம்”) என்று ஒரு பதிவு எழுதி அதற்கு ஆதாரமாக நெல்லிக்கனியிலும், அதியமான் ஆங்கிலப்பதிவிலிருந்தும் லிங்குகள் தரலாம். அதுவல்ல பிரச்சனை.

    ஆதாரங்கள் ஆதாரங்கள் ?????? – உங்கள் லிங்கில் (சோல்யெட்சின் பற்றியது) உள்ள விவரங்களை வரிக்கு வரி ஆதாரங்களோடு புள்ளி விவரங்களோடு மறுத்து எழுதிய பதிவுகளை முன்பு கொடுத்துள்ளேன். நீங்கள் இந்த பதிவில் உள்ள விவரங்களை மறுக்கும் ஆதாரங்களைத் தாருங்கள்.

    Posted on 23-Sep-09 at 1:46 pm | Permalink
  56. //1930களில் ஏன் சோவியத் ரஸ்ஸியா மூடிய நாடாக இருந்தது ?//

    //அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் செய்யும் தவறுகளை (உள் நாட்டிலும், வெளி நாட்டிலும்) உடனடியாக வெளிச்சதிர்க்கு கொண்டு வர பல வகையான ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.//

    அப்படியா அப்படியானால் அமெரிக்காவின் அடியாள் இஸ்ரேலில், வீடியோ சம்பந்தமான ஒரு இயக்கம் – இஸ்ரேல் படைகளின் அட்டூழியங்களை செல்போன் கேமராவில் படம் பிடித்து, நீதிமன்றங்களில் தண்டனை வாங்கி கொடுப்பது நடக்கிறதே அது ஏன் ?

    மாஸ்கோ சதி வழக்கு கூட, அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாகதான் நடந்தது. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடிக்கப்பட்டார்கள் என்ற வாதங்களை எல்லாம் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளரே மறுத்து இருக்கின்றார்.

    Posted on 23-Sep-09 at 2:35 pm | Permalink
    • sure those trial were covered by world media. do you have any idea how the “confessions” were extracted from the accused ? i heartily wish you were a witness in the jail when these confessions were taken. Many decades later the confession and conviction of Nicoloi Bukarin (who was Stalin;s close comrade and a top leader) was set aside as false and extracred under torture by USSR.

      you are evading my basic question about freedom of expression and freedom of press in USSR in those days. Why no one was allowed to see the Siberian camps ? why no one was allowed to trave freely within USSR , esp in Ukraine during famine and forced collectivisation. two women jourlaists of US orgin were jailed in N.Korea recently for probing N.Kore’a reality. Bill Clinton had to personally visit N.Korea to get their relase. same is happeining in IRan. Israel may be an agressor now and kill inncent Palestinians. but it is an open nation and there is full and free coverage of all events within it. there is an active and bitter debate among Israelis about policy. it is a functional democracy unlike USSR. you have no idea about the past terror then.

      Posted on 23-Sep-09 at 4:26 pm | Permalink
  57. Arivudainambi, you are a hypocrite as you quote wiki for your for arguements about N.Korea in this very post some days ago, yet ridicule wiki as false. you haven’t read thru those two wiki links i had given about Mao;s cultural revolution or Great leap forward. i can give you a million other non wiki links which you may term as false propoganda. as for Rayaharan, he is a nut and a fascisit who refuses to publish my replies about many issues and esp Solzhentian in his blog. tru to read thru that wiki link about Solzehtian and think objectively. he is like one the unfortunate inmates in Vanni camps now. only he went thru even more terrible experiences and torture. that was for real. and he was a real patriot and a communist who fought as brave soldier in WW 2 against Nazis. he was arrested for flimsy reasons. You and your comrades can belive whatever you want. i don’t care and history will record the truth and not false propoganda. ok. and try to learn about Stalin’s times from many other sources and books, esp leftist historians. these events have been discussed deeply in the past and only a handful of people like you and your comrades refuse to accept truth. npo big deal. you can cling to all your ‘belief;s for eternity.

    Posted on 23-Sep-09 at 3:42 pm | Permalink
    • அறிவுடை நம்பி,

      சோல்ஸின் எனது ஆஸ்தான எழுத்தாளரா ? இப்படி பேசுவது அறிவீனம். அவரை பற்றி நீரும் உனது தோழர்களுன் எழுதவதுதான் உண்மை ; சோல்சின் ஒரு போலி, பொய்யர் என்றி நீர் சொன்னால், அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் நான். அப்படித்தானே ? எதற்க்கு இத்தனை விவாதம். வெளியே, அறிவுலகில், வரலாற்று பேராசியர்கள், சிந்தனையாளர்களிடம் கேட்டு தெளிவடையுங்கள். கம்யூனிசத்தை ஏற்றுக்கொள்ளும் இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்களும் உங்களை போல பிதற்றுவதில்லை. வேண்டுமானல் விசாரித்து அறிந்து கொள்ளும். சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் நடந்த “தவறுகளை” பற்றி அவர்களும் பேசுகிறார்கள். உலகில் எங்கும் உண்மையான சோசியலிச அமைப்பை நோக்கிய நகர்வு இன்னும் நடக்கவில்லை. இனிமேல் தான் வரலாம் என்று நம்புவர்களும் அவர்களில் பலர் உண்டு. இராயகரன் சொன்னால், அதுதான் இறுது தீர்ப்பா ? அவரின் அறிவு ஞானம் தான் இங்கு சிர்ப்பாக சிரிக்கரதே. பல அடிப்படை விசியங்களில் கேனத்தனமாக எழுதுபவர் அவர். நான்கு பதிவுகள் அவரை பற்றி மட்டும் இங்கு !!
      படிக்கவில்லையா ?

      Posted on 23-Sep-09 at 4:17 pm | Permalink
  58. // you are a hypocrite as you quote wiki for your for arguements about N.Korea in this very post some days ago, yet ridicule wiki as false.//அதியமான், விகியின் லிங்கை கொடுத்த நான் , விக்கி எப்போதும் சரியானது என்று வாதிக்கவில்லையே. அது ஒரு இன்பர்மேடிவ் என்பதற்காகத்தான் தந்தேன். மேலும் வடகொரியாவின் கடந்தகால வளர்ச்சியைப் பற்றிச் சொன்ன நான், அதன் நிகழ்காலத்தைப் பற்றியும் சொல்லி உள்ளேன்.

    //தற்போது உள்ள சீனா மற்றும் வடகொரியா ஆகியன திரிபுவாத கம்பியுனிஸமாக உள்ளன. சீனாதான் இன்று உலகெங்கும் அமெரிகாவினை மிஞ்சும் வகையில் முதலீடு செய்யும் மிகப் பெரிய முதலாளித்துவ நாடாக உள்ளது. ஏன் அமெரிக்காவிலெயே சீன முதலீடுகள்தான் அதிகம்.//

    // i can give you a million other non wiki links which you may term as false propoganda. //

    புள்ளிவிவர ஆதாரங்களைக் கொடுங்கள் – சோல்யெட்சினுடைய புள்ளிவிவரங்கள் எப்படி மேற்சொன்ன சுட்டிகளில் அம்பலப்பட்டனவோ, அதுமாதிரி நீங்கள் மேற்சொன்ன பதிவுகளை அம்பலப்படுத்துங்களேன்.

    // and he was a real patriot and a communist who fought as brave soldier in WW 2 against Nazis. he was arrested for flimsy reasons. //

    அப்படியா ? உங்கள் உத்தமர் அப்படியெனில் ஏன் வியட்நாம் யுத்தத்தை ஆதரித்தார் ?

    சோல்சனிட்சினோ “அமெரிக்கா ஆண்மையை இழந்து விட்டது” என்று கூறி வியத்நாமிலிருந்து பின்வாங்கியதற்காக அமெரிக்காவைக் கண்டித்தார். வியத்நாமில் சிக்கிய அமெரிக்கப் போர்க்கைதிகளுக்கு “கம்யூனிஸ்டுகள் இழைக்கும் கொடுமை’யை அமெரிக்கர்களுக்கே விளக்கி, “ராம்போ சினிமா’க்களுக்கான திரைக்கதையை வழங்கினார்.

    அதியமான் ! எந்த விவாதமானாலும் நீங்கள் இறுதியில் அடைக்கலமாவது ஏன் ஸ்டாலினைப் பற்றி, மாவோவினைப் பற்றிய அவதூறாக உள்ளது ?

    பின்குறிப்பு : கூகிளில், அதியமான் vs அசுரன் என்று தேடிப் பார்த்தேன். அம்மாடியோவ் ! முடியவில்லை அதியமான் ! உண்மையிலேயே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பழ்மொழிக்கு இனிமேல் அதியமான் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம் போலுள்ளது.

    Posted on 23-Sep-09 at 4:26 pm | Permalink
    • /// உண்மையிலேயே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பழ்மொழிக்கு இனிமேல் அதியமான் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லலாம் போலுள்ளது./// அது நான் சொல்ல வேண்டியது. நீவிர் அல்ல‌. ஓ.கே.

      சோல்சென்ஸின் வியட்நாம் யுத்தம் பற்றி ஒரு கருத்து சொன்னால் அவரின் கடந்தகால‌
      வரலாறு பொய்யாகிவிடுமா ? கம்யூனிசம் உலகில் பரவினால் கொடுமை தான் நிகழும் என்று
      அவர் அனுபவ ரீதியாக நம்பினார். உமக்கும் அது போன்ற “அனுபவம்” நிகழ்ந்தால் தான்
      புரியும்.

      விக்கிய‌ ப‌த்தி நீர் இப்ப‌டி சொல்கிறீர். நான் அளித்து சுட்டிக‌ளும் ஒரு அறிமுக‌த்திற்க்காக‌த்தான்.
      ப‌டிக்க‌ இஸ்ட‌மிருந்தால் ப‌டிக்க‌லாம்.

      ஈ.டி.எஸ் இல் வேலை செய்துகொன்டிருந்தால் இப்ப‌டித்தான் நினைக்க‌த் தோன்றும்.
      1990க்கு முன் உங்க‌ நிறுவ‌ன‌ம் இந்தியாவில் நுழைந்திருக்க‌ முடியாது. உங்க‌ தோழ‌ர்க‌ள்
      அனைத்து ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளையும் எதிர்த்தார்க‌ள். இன்று ? அவ‌ர்க‌ள் பேச்சையே
      தொட‌ர்ந்து கேட்டு, உட்டிருக்க‌ கூடாது போல‌ தோன்றுகிற‌து !! :) )

      Posted on 23-Sep-09 at 4:35 pm | Permalink
      • கேள்விக்குறி

        அதியமான் அவர்களே
        // கம்யூனிசம் உலகில் பரவினால் கொடுமை தான் நிகழும் என்றுஅவர் அனுபவ ரீதியாக நம்பினார். உமக்கும் அது போன்ற “அனுபவம்” நிகழ்ந்தால் தான் புரியும்//
        இன்று உலகில் கம்யூனிசமோ, சோசலிசமோ மயிறவுக்கு கூட இல்லை. அதுவும் வல்லரசுகில் நிச்சயம் இல்லை, (ஏதாவது ஓஞ்சு போன மூன்றாவது உலகத்தில் இருக்கலாம்) ஆனாலும் எங்கும் கொடுமை, எதிலும் கொடுமை, போர் பட்டினி, பஞ்சம், வறுமை, நோய்… இவையெல்லாம் ஏன் முதலாளித்துவம் பரவிய இடங்களிலும் இருக்கின்றன? இல்லை இவைகளை ஒழித்துக்கட்ட முதலாளிகள் ஏன் முயலவில்லை. பு.த.செ.வி – புரியவில்லை தயவு செய்து விளக்கவும்

        Posted on 23-Sep-09 at 4:59 pm | Permalink
      • கேள்விக்குறி,

        உமது கேள்விக்கு நான் நேற்றே பதிலித்துவிட்டேன். மீண்டும் அதே கேள்வி. பழைய பதிலையே படித்துக்கொள்ளவும் !!

        Posted on 23-Sep-09 at 5:05 pm | Permalink
      • கேள்விக்குறி

        அதியமான் அவர்களே,
        நேற்று நீங்கள் அளித்து சுட்டியை பார்த்தேன் அது நீங்கள் நம்பும் அளவுக்கு எனக்கு விளக்கவில்லை அல்லது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே தயவு செய்து எனக்காகவும் வினவு வாசகர்களுக்காகவும் அதன் மைய கருத்துக்களை எழுதவும். நன்றி

        Posted on 23-Sep-09 at 5:07 pm | Permalink
  59. //you are evading my basic question about freedom of expression and freedom of press in USSR in those days// அப்படியா ? என் முந்தைய பதிவில் இருந்து,

    மாஸ்கோ சதி வழக்கு கூட, அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாகதான் நடந்தது. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடிக்கப்பட்டார்கள் என்ற வாதங்களை எல்லாம் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளரே மறுத்து இருக்கின்றார்.

    Posted on 23-Sep-09 at 4:39 pm | Permalink
  60. ட்ராட்ஸ்கி தவிர, சோவியத் யூனியனிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த விசாரனை வெளிப்படையாக நடந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்களும், அன்னாலூயி ஸ்றாங், டி.என்.ப்ரீத் போன்ற மேற்கத்திய முன்னணி நாளேடுகள் மற்றும் இதழ்களின் பிரதிநிதிகளும் இந்த விசாரனையை கவனித்தனர்.

    Posted on 23-Sep-09 at 4:42 pm | Permalink
    • Arivu, are you really pretenting to not to understand my question about freedom of press, etc then ? the trials were DELIBRATELY held under world media. sure. no arguments. but my basic queston was about freedom to report what was going on in the camps, etc. try this if you can :

      http://en.wikipedia.org/wiki/Gulag#Literature and Solzentian was not alone. there were many many others who had similar tortuterous experiences.

      Posted on 23-Sep-09 at 5:02 pm | Permalink
  61. http://www.yarl.com/forum3/index.php?showtopic=29549&mode=threaded

    Posted on 23-Sep-09 at 4:44 pm | Permalink
  62. //but my basic queston was about freedom to report what was going on in the camps, etc. try this if you can :// அதியமான், அனைத்து ஊழல்களும் மக்கள் பெயராலேயே நடத்தப்படுகின்றன. ஏன் தமிழகத்தில், முதலாளிகள் நடத்தும் பத்திரிக்கைகள், ஈழப்பிரச்சனையில் என்ன செய்தன ? சிங்களனவிடம் வாங்கிக் கொண்டு இருட்டடிப்பு செய்தார்கள், செய்கிறார்கள். பொம்பளைச் சாமியார் ஜெயந்திரனனை சுவாமிகள் என்கின்றனர். ஒரு மார்சிச மக்களின் அரசாங்கம் நடக்கும் ஒரு நாட்டில் இந்தமாதிரி அநீதிகளை எல்லாம், மக்களின் பெயரால், பொதுநலனின் பெயரால் நடப்பதை அனுமதிக்க முடியாது.

    மேலும் பொதுவுடைமை என்பதே, முதலாளிகள் முதல் போட முடியாத உலகம். எதுவும் மக்கள் கமிட்டிகளால்தான் நடக்கும். அங்கே போய் முதலாளிகள் இல்லை – முதலாளிகள் நடத்தும் பத்திரிக்கைகள் இல்லை என்றால் என்ன வென்று சொல்வது ?

    ஆனால் நீங்கள் சொல்லும் அந்த இரும்புத் திரை உடைந்த பின்பு இன்றைய நிலையில் ரஷ்யாவின் நிலை :

    இந்த உடைந்த இரும்புத் திரை மக்களுக்கு எந்த விதமான ஜனநாயகத்தை வழங்கியுள்ளது என ஆராய்வோம். இன்று திடீர் என பொருட்களின் விலை 380 வீதத்தால் அதிகரிக்க, வேலையின்மை 20 வீதத்தால் அதிகரித்துள்ளது. பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. 1992 இல் 23 லிவாவாக இருந்த டொலர் 1993 இல் 45 லிவாகவும் 1994 இல் 95 இல் 75 லிவாகவும் 96 இல் 150 ஆகவும் 97 இல் 1000 லிவாகவும் திடீர் என அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் 500 லிவாவாக இருந்த டொலர் பெப்ப்pரவரியில் 1000 லிவாவாக அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஓய்வு ஊதியம் பெறும் ஒருவனின் சம்பளமாக 4000 லிவாக மதிப்பு (4 டொலர்) இழந்து போயுள்ள அதேநேரம் ஒரு தொழிலாளியின் சம்பளம் 20 000 லிவாவாக (20 டொலரால்) மாறியுள்ளது இதைக் கொண்டு பிச்சைக்கார வாழ்க்கையை வாழ்ந்த மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக மார்ச் மாதம் பொருட்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோப்பியின் விலை ஓர் ஓய்வ+தியம் பெறுபவரின் சம்பளத்துக்கு சமனாக அதாவது 4000 லிவாவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மாட்டு இறைச்சியின் விலை 2600 லிவாவாகவும் 700 கிராம் ரொட்டி விலை 155 லிவாகவும் அதிகரித்துள்ளது.

    சோவியத் காலத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை – 10000. ஆனால் இப்போது 15 இலட்சம்.

    Posted on 23-Sep-09 at 6:46 pm | Permalink
  63. அறிவுடைநம்பி,

    கேட்ட கேள்விக்கு சரியான பதில் தாரம மழுப்புறீக. சோவியத் ரஸ்ஸியாவினுல் முதலாளித்துவ பத்திரிக்கைகளை நடத்த சொல்லவில்லை. (மடத்தனமான எண்ணம்) ; உலக பத்திர்க்கை நிருபர்கள், மற்றும் பார்வையாளர்களை தாரளமாக அனைத்து இடங்களுக்கும் அனுமதிக்க ஏன் மறுத்தனர் ? இன்றும் மைன்மார் மற்றும் வட கொரியாவில் அதே நிலை. ஒப்பிட்டு பார்க்கவும். குலாக்குகள் என்ற அந்த முகாம்கள், உக்ரேனிய பஞ்சம் பற்றி உலக பத்திர்க்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் (இந்தியா போன்ற நாடுகளில் இருந்து) அனுமதித்தால் என்ன பெரிய சதி நடத்தி, ஸ்டாலின் ஆட்சியை கவிழ்த்துவிடுவார்களா என்ன ?
    உண்மைக‌ளை இரும்புத்திரைக்கு பின் ம‌றைப்ப‌த‌ற்காவே அனும‌திக்க‌வில்லை என்ப‌து மிக‌ எளிமையான‌ ப‌தில்.
    இதை உண‌ர‌ பெரிய “அறிவு” தேவையில்லை. உண்மையில் “அறிவுடைய‌வ‌ர்க‌ளுக்கு” புரியும்.

    சோவியத ரஸ்ஸியா வீழ்ந்த பின் நிகழ்ந்த சீரழிவுகள் பற்றி உம்மை விட அதிகம் அறிவேன். 70 ஆண்டுகள்
    ஒரு சர்வாதிகார ஆட்சி நடந்தால் இறுதி விளைவுகள் இப்படிதான் இருக்கும். குமுளேட்டிவ் எஃபெக்ட் என்பார்கள். ரஸ்ஸியாவோடு பிரான்ஸ் அல்லது ஜெர்மனியை ஒப்பிடுக. மூன்று நாடுகளும் 100 ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய ஒரே நிலையில் தான் இருந்தன. பின் ?

    அதிகாரம் ஒருமுகப்படுத்தப்பட்டால் இப்படிதான் ஆகும். ஒரு மத்திய கமிட்டி வசம் அத்தனை அதிகாரமும் குவிந்து, எதிர்கட்சிகள், விவாதம், பேச்சுரிமைகள் நசுக்கப்பட்டால் இப்படி தான் ஆகும்.

    இந்தியாவும் கடும் சீரழந்தற்க்கு இது போன்ற அதிகாரம் ஒரு முனையில் குவிக்கப்பட்டதே ஒரு முக்கிய காரணம். அது என்ன பெயரில் நடந்தாலும் சரி. இங்கு பொருளாதார அதிகாரம் டில்லியில் குவிக்கப்பட்டு அதன் விளைவாக ஊழல் மிக மிக அதிமாகி, சீரழிந்தோம். பார்க்க : http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

    Posted on 23-Sep-09 at 8:32 pm | Permalink
  64. அதியமான் ! உங்கள் அறிவின் திறன் கண்டு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. மற்ற நாடுகளிலுள்ள எந்த முதலாளித்துவ பத்திரிக்கைகள் அல்லாத – கம்பியுனிஸ பத்திரிக்கைகளை ஸ்டாலின் அனுமதிக்கவில்லை என்று பட்டியல் போடுங்கள். முதலாளித்துவ அகிலம் சார்ந்த பத்திரிக்கைகளை அனுமதிக்க வேண்டியது இல்லை.

    உங்கள் குமுலேடிவ் தியரி கண்டு மயக்க மயக்கமாய் வருகிறது : 70 வருட சர்வதிகாரத்திற்கு பின்பு வந்த அவலங்கள் ஸ்டாலின் காலத்தில் ஏன் இல்லை ?. முதலாளித்துவ நாடுகளே ஸ்டாலின் 5 வருட திட்டங்களின் குறிக்கோள்களை 4 மற்றும் 1/2 வருடங்களிலேயே அடைந்ததை ஒப்புக்கொள்கிறார்கள்.

    சரி 70 வருட சர்வாதிகாரத்தின் அவலங்களை 1990 களில் இருந்து 2009 இன்று வரை (19 வருடங்கள்( குறைந்து வராமல் ஏன் நித்தம் நித்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது ?

    சரி கடந்த 60 வருடமாக இந்தியா என்ன புடுங்கியது என்று உங்கள் கலிபோர்னியா சுட்டியையே விளக்கமாக உங்கள் மொழியில் சொல்லுங்களேன் ?

    Posted on 24-Sep-09 at 3:26 pm | Permalink
    • அறிவுடைநம்பி,

      உமது பதிலை கண்டுதான் சிரிப்பு வருகிறது. நிருபர்களை மட்டும் அல்ல், பார்வையாளர்களை அனுமதிக்க மறுப்பது பற்றி பதில் கூறாமல் வெறும் பேச்சு. உம்மை போன்றவர்களை அந்த குலாக் முகாம்களின் அடைத்திருக்க வேண்டும். சொன்னால் புரியாது !!

      ///உங்கள் குமுலேடிவ் தியரி கண்டு மயக்க மயக்கமாய் வருகிறது : 70 வருட சர்வதிகாரத்திற்கு பின்பு வந்த அவலங்கள் ஸ்டாலின் காலத்தில் ஏன் இல்லை ?. முதலாளித்துவ நாடுகளே ஸ்டாலின் 5 வருட திட்டங்களின் குறிக்கோள்களை 4 மற்றும் 1/2 வருடங்களிலேயே அடைந்ததை ஒப்புக்கொள்கிறார்கள்.///

      இதை பற்றி உக்ரேனிய பஞ்சத்தின் மடிந்த மக்களின் சந்ததிகளுடம் பேசிப் பார்க்கவும். பிறகு யாருக்கு மயக்கம் வரும் என்று தெரியும். பல பல லச்சம் மக்களை கொன்றழித்துதான் “முன்னேற்றம்” கொண்டுவர வேண்டுமானல், முதலில் உம்மை போன்றவர்கள் பலியானால எப்படி இருக்கும். ஸ்டாலின் பற்றி கிழக்கு அய்ரோப்பாவில் இன்று யாரும் உம்மைப் போல மெச்சிக்கொள்ளவில்லை. இட்டலரை பார்பது போலதான் இன்றும் பார்க்கிறார்கள். யாரும் இங்கு போல ஸ்டாலின் என்று பெயர் வைத்துக்கொள்வதில்லை. அந்த குலாக் பற்றிய சுட்டிகளை படிக்க மாட்டீர். மறுக்க மாட்டீர். ஆனால் அவதூறு என்று ஒரு வார்த்தைய மட்டும் பிரயோகிப்பீர்.

      ரஸ்ஸியாவோடு இணையாக 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜெர்மனி, ஃபிரான்ஸ் பற்றி ஒப்பிடச் சொன்னேனே ? அந்நாடுகள் இன்று வளமாகவும், ஊழல் மிக குறைவாகவும் இருப்பது எப்படி ?

      ///சரி கடந்த 60 வருடமாக இந்தியா என்ன புடுங்கியது என்று உங்கள் கலிபோர்னியா சுட்டியையே விளக்கமாக உங்கள் மொழியில் சொல்லுங்களேன் ?////

      இந்தியா 60 வ‌ருட‌மாக‌ என்ன‌ புடிங்கிய‌தா ? உம்மை போன்ற‌ “புடிங்கிக‌ளை” ஈ.டி.எஸ் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌ணியாற்ற‌ வ‌ழி செய்த‌து. அது மிக‌வும் த‌வ‌று என்றுதான் ப‌டுகிற‌து. 1991 முன் இருந்த‌து போல‌ அனைத்து ப‌ன்னாடு நிறுவ‌ன‌ங்க‌ளையும் அனும‌திக்காம‌ல், முத‌லில் இந்த‌ நிலையிலேயே தொட‌ர்ந்து, க‌ம்யூட்ட‌ர்க‌ளை இந்தியாவிற்க்குள் அனும‌திக்க‌ ம‌றுத்து, அய்.டி துறையா வள‌ராம‌ல் செய்திருக்க‌ வேண்டும்.
      அதுதான் தோழ‌ர்க‌ளின் அன்றைய‌ கோரிக்கைக‌ளும். த‌ப்பா போன‌தால் தான் இந்த‌ புடிங்கிக‌ள் இன்று இப்ப‌டி……
      வக்கிருந்தால், க‌லிஃபோர்னியா ப‌ல்க‌லைக‌ழ‌க‌ சுட்டியை ப‌டிக்க‌வும். அசுர‌ன் அமைதியாக‌ க‌வ‌னித்துகொண்டு வ‌ருவ‌து ஏன் என்று உம்மை போன்ற‌ அரை வேக்காடுக‌ளுக்கு புரியாது. உருப்ப‌டியா வேறு ஏதாவ‌து செய்வ‌துதான் உத்த‌ம‌ம்..

      Posted on 24-Sep-09 at 6:23 pm | Permalink
  65. அதியமான், விசாரணைகளின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். நீங்கள் கேட்டது, பத்திரிக்கையாளர்கள் அனுமதி ஏன் இல்லை என்றுதான். அதற்குதான் பதில் சொன்னேன்.

    நீங்கள் சொன்ன உக்ரேன் பஞ்சங்களின் முதலாளித்துவ கூப்பாடுகள் இன்று முறியடிக்கப்பட்டுள்ளன. அதனை ஒரு கம்பியுனிஸ்ட் அல்ல நேர்மையான ஒரு
    பத்திரிக்கையாளர்தான் (கனடாவைச் சார்ந்தவர்) அம்பலப்படுத்தியுள்ளார். நாங்கள் கேட்டமாதிரி நான் ஏற்கனவே சொன்ன லிங்குகளில் (ஸ்டாலின் பற்றிய அவதூறூகளை) அம்பலப்படுத்தியவைகளை நீங்கள் ஆதாரங்களோடு மறுங்கள் பார்க்கலாம்.

    இந்தியா இன்று தாராளமயம் இல்லை என்றால், ஸ்டாலின் ரஷ்யா போன்று பணிப்பாதுகாப்பு, சுரண்டல் இல்லாமல் வாழ்ந்திருப்பேன்.

    மீண்டும் மீண்டும் ஆதாரங்கள் இல்லாத வெற்று கருதுகோள்களைதான் சுட்டி வருகிறீர்கள்.

    அசுரன் உங்களிடம் கலிபோர்னியா பதிவின் விடயங்களை அவரைப் போன்றோ, என்னைப் போன்றோ உங்கள் மொழியில் உங்கள் பின்னூட்டத்தில் இடுங்கள். பிறகு பார்க்கலாம். இல்லாவிட்டால், சுட்டிக்கு சுட்டி தாவிக் கொண்டே இருப்பீர்கள்.

    Posted on 24-Sep-09 at 6:54 pm | Permalink
    • அறிவுடைநம்பி,

      ///அதியமான், விசாரணைகளின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். நீங்கள் கேட்டது, பத்திரிக்கையாளர்கள் அனுமதி ஏன் இல்லை என்றுதான். அதற்குதான் பதில் சொன்னேன்.////

      இதுதான் பதிலா ? அய்யா, நான் இந்த வழக்கு பற்றி மட்டும் கேட்கவில்லை. இன்று இந்தியாவில், இஸ்ரேலில் இருக்கும் பத்திர்க்கை சுதந்திரம் போல, அன்னிய பத்திர்க்கையாளர்கள், பார்வையாளர்கள் (அப்ஸேர்வர்ஸ்) அனுமதிக்கவே இல்லை. ஏன் ? முகாம்களில் ? வன்னி முகாம் பற்றி நமக்கு ஓரளவு தெரிகிறது. ஆனால் சைப்பிரியா பற்றி அன்று…

      ///நீங்கள் சொன்ன உக்ரேன் பஞ்சங்களின் முதலாளித்துவ கூப்பாடுகள் இன்று முறியடிக்கப்பட்டுள்ளன.////

      அப்ப‌டியா ? இதுதான் ம‌றுப்பா ? ஏன் விண் விவாத‌ம். உக்ரேனிய‌ர்க‌ள் தான் முடிவு சொல்ல‌ வேண்டும்.
      த‌மிழ‌ர்க‌ள் தான் ராஜ‌ப‌க்சே ப‌ற்றி சொல்ல‌ முடியும். அது போல‌. யாராவ‌து வ‌ர‌லாற்று ஆசிரிய‌ரிட‌ம் கேட்டு “தெளிவ‌டைய‌வும்” ; try to know about the term holodomor. and you prefer Stalin’s USSR : good and you certainly deserve to live in such a nation under such a leader. yes. sure !!!

      Posted on 24-Sep-09 at 7:09 pm | Permalink
  66. தொழிற்சங்கமோ அல்லது விமானிகளோ வென்றிருக்கலாம், ஆனால் தோல்வி ஏற்பட்டது பயணிகளுக்கு அல்லவா? போராட்டம் எங்கு இருக்க வேண்டும்? சரிவர தொழிளார்களை கவனிக்கத, நிறுவனத்தின் மேல் தொழிற்சங்கத்தின் போராட்டம் இருக்க வேண்டும், ஒரு நிறுவனமே தள்ளாடிகிட்டு இருக்கும் போது, இப்படி போரரட்டம் ஏனோ? ஐடி ஊழியர்கள் இப்படி போராடனும் என்று எதிர்பார்க்கிறீர்களா வினவு?

    Posted on 27-Sep-09 at 11:21 pm | Permalink
  67. ஒரு சிறு விண்ணப்பம், நீங்கள் மறுமொழிக்கு http://openid.net/add-openid பயன்படுத்தலாம் அல்லவா? ஏன் என்றால் இங்கு அனைத்து தகவல்களும் போலியாக யார் பெயரிலும் தர முடியும்.

    Posted on 27-Sep-09 at 11:32 pm | Permalink
    • வினவு

      நண்பர் மஸ்தான்,

      இணையத்தில் கட்டுரையை வாசித்து மறுமொழிவது இன்னமும் பலருக்கு புதியதாகவும் சிக்கலாகவும் இருக்கின்றது,
      அனைவரையும் மறுமொழிய ஊக்குவிக்கும் வழியாகத்தான் இந்த எளிமையான முறையை கையாள்கிறோம்.

      நட்புடன்
      வினவு

      Posted on 29-Sep-09 at 12:12 am | Permalink
  68. அதியமான் !

    இதோ, இந்தியாவில் வறுமைப் பற்றிய ஒரு ஆய்வு :

    http://www.vinavu.com/wp-content/uploads/2009/09/india-hunger-2.gif

    Posted on 29-Sep-09 at 1:29 pm | Permalink
  69. “கோவை ப்ரிகால் நிர்வாகியை அடித்து கொன்ற தொழிலாளர்கள்”

    கூகுள் குழுமம் பண்புடனில் ஒரு விவாதம் :

    http://groups.google.co.in/group/panbudan/browse_thread/thread/3e67e1c886b51fc4/ce1ef0ec7f61c98e#ce1ef0ec7f61c98e

    Posted on 29-Sep-09 at 7:47 pm | Permalink
    • அஸ்கர்

      தொழிலாளர்கள் கலகம் செய்வதற்குறிய சூழ்நிலையை முதலாளிகளே உருவாக்குகின்றனர். 

      Posted on 29-Sep-09 at 8:46 pm | Permalink
      • கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

        முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

        அன்பார்ந்த தொழிலாளர்களே!

        கடந்த செப். 21ந் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜே.ஜார்ஜ் என்பவன் தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் “வன்முறை – பேராபத்து” எனறு அலறுகிறது. ஊடகங்கள்: தொழிலாளர்களை பயங்கரவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கின்றன.

        அமைச்சர்களோ தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்கள் போல பேசுகின்றனர். கோவை நகரமே கலவரபூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

        தொழிலாளர்கள் பயங்கரவாதிகளா? முதலாளி வர்க்கம் தினந்தோறும் தொழிலாளர்கள் மீது ஏவி விடுகின்ற கொடூரங்களை அனுபவித்த எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவை பிரிக்கால் ஆலை நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளை அறிந்த எவரும் தொழிலாளர்களை வ்னமுறையாளர்கள் என்று சொல்லமாட்டார்கள்.

        மேலும்….

        http://mahasocrates.blogspot.com/2009/10/blog-post.html

        Posted on 01-Oct-09 at 8:15 pm | Permalink
      • சரிதான். இப்படி ஒரு படுகொலையை நியாபடுத்தினால், எதை வேண்டுமானாலும், யாரும்
        நியாப்படுத்தலாம் தான். இதை அப்பட்டமாக நியாயப்படுத்தும் ‘மனிதனேயர்கள்’, செம்புரட்சி
        உருவானால், இது போன்ற எத்தனை லச்சம் ‘முதலாளித்துவ கைக்கூலிகளை’ போட்டு தள்ளுவார்கள் ?

        சரி, இருக்கட்டும். ‘முதலாளித்துவ பயங்கரவாதத்தை’ (அது பிரிக்காலில் என்ன ரூபத்தில் இருக்கிறது என்று
        ஆண்டவனுக்குத்தான், ஸாரி, கார்ல் மார்க்ஸுக்குதான் வெளிச்சம்) எதிர்க்கும் வழிமுறை இதுதானா ?
        இத‌ன் மூல‌ம் என்ன‌ சாதிக்க‌ போகிறார்க‌ள் ? என்ன‌ அற‌த்தை போதிக்கிறார்க‌ள் ? இத‌ன் மூல‌ம் ஏதாவாது
        உருப்ப‌டியான‌ தீர்வை உருவாக்க‌ முடியுமா ? தோழ‌ர் வின‌வு, நீங்க‌ சொல்லுங்க‌ளேன்.

        Posted on 01-Oct-09 at 10:27 pm | Permalink
  70. பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை – முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு

    Posted on 30-Sep-09 at 8:12 pm | Permalink
    • முதலாளித்துவ பயங்கரவாதத்தின் எதிர்வினையா இது ? நல்ல கதை.
      இந்தியாவில் தினமும் பல லச்சம் அமைப்பு சாரா தொழிளார்கள்
      வேலை இழக்கின்றனர். பல லச்சம் பேர்கள் புதிய இடங்களில் வேலையில்
      சேர்கின்றனர். கூடையில் சுமந்து பழம் / மோர் / இதர பண்டங்களை
      விற்கும் அன்றாடங்காய்ச்சிகள் : இவர்களுக்கெல்லாம் இல்லாத‌
      ஜாப் செக்யூரிட்டி, அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு ‘மட்டும்’
      வேண்டும் என்பது அறிவுடைமையும் அல்ல, அறமும் அல்ல.

      அந்த பிரிகால் நிறுவனம், பல இதர நிறுவனங்களை போல‌
      திவாலாகி, அனைவரும் வேலை இழந்தால் ??

      ஈ.டி.எஸ் நிறுவனத்தில் கூட சர்வசாதராணமாக லே.ஆஃப் நடக்கிறது.
      அதற்காக நிறுவன அதிகாரியை அடித்து கொல்வீர்களா என்ன ?
      அது சரி, இன்னும் பத்தாண்டுகளில் நீங்களும் ஒரு உயர் அதிகாரியாகி,
      பலரையும் லே ஆஃப் செய்ய வேண்டிய சூழ்னிலை உருவானால், இதே
      ‘ட்ரீட்மென்ட்’ கொடுக்கலாமா ?

      ஏர் இந்தியா பைல‌ட்டுக‌ள் இப்போது ஸ்ட்ரைக் செய்கின்ற‌ன‌ர்.
      அவ‌ர்க‌ளும் செங்கொடி பிடிக்க‌ வேண்டுமா ?

      Posted on 30-Sep-09 at 8:50 pm | Permalink

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!