privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைதியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

-

தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

ஜெயலலிதா, சுப.தங்கவேலன், ரித்திஸ், விஜயகாந்த் போன்றோரின் அருகிலேயும், மு.க.ஸ்டாலின் அழகிரிக்கு நடுவிலேயும் தியாகி இமானுவேல் சேகரனின் உருவப் படம் பிளக்ஸ் பேனர்களில் பளபளக்க அவரின் நினைவு நாள் முளைப்பாரி, பால்குடம், வேல்குத்துதல், மொட்டையடித்தல் போன்ற சடங்குகளுடன் ஒடுக்கப்படுவோரின் விழாவாகவும் கோலகாலமாகவும் கடந்த மூன்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வரும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய போலிச் சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது இராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத்  தொடங்கினார்.

அன்றைய நாளில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். காமராஜர் இவரைச் சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். ஓட்டுக் கட்சிகளுக்கேயுள்ள பார்பனியத் தன்மை இவரை இதிலிருந்து வெளியேறச்செய்து விடுகிறது. 1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில்  தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த முத்துராமலிங்கத் தேவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.

இக்கொலைக்காக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பார்வார்டு பிளாக் என்ற கட்சிக்குத் தாவி அக்கட்சியையும் தேவர் சாதிக் கட்சியாக மாற்றியவர் இந்த முத்துராமலிங்கத் தேவர். நான்கு வர்ணங்களைக் கூறி தனது பிறப்பையும் தன் சாதி மீது திணிக்கப்பட்டுள்ள பார்பனியத்தின் தீண்டாமையையும் எதிர்த்து போராடியவர் அல்ல இவர். அதனை தனது முதுகில் சுமந்துகொண்டே பிறசாதிகளின் மீது தீண்டாமையை திணித்தவர்.  இவரின் சாதிய ஆதிக்கத்திமிரை புதுப்பிக்கவே தேவர் குரு பூசை நடத்தப்படுகிறது.  ஒடுக்கப்படுவதற்கு எதிராக போராடுவதும் ஆதிக்கத்திமிரை நிலைநாட்டப் போராடுவதும் ஒன்றாக முடியுமா? தேவர் பூசை நடத்தப்படும் 3 நாட்களும் தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்ன நடக்குமோ என்று பயபீதியுடன் இருக்கும்படியான சூழ்நிலையை   உருவாக்கித் தேவர் பூசை நடத்தப்படுகிறது. போக்குவரத்தை தடை செய்தல், திறந்திருக்கும் கடைகளை உடைத்தல், செல்லும் வழியெல்லாம் தாழ்த்தப்பட்டோரை தரம் தாழ்ந்த சொற்களால் வம்புக்கிழுத்து கலவரம் செய்தல் ஆகியன இப்பூசைக்கான பொருள்களாக உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சண்முகையா பாண்டியன் இராமநாதபுரத்தில் நடத்திய தனது தேவர் சாதிய மாநாட்டிற்கு வாகனங்களில் வந்தவர்கள், வரும் வழியில் பரமக்குடிக்கருகில் உள்ள சரசுவதி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒரு வயதான மூதாட்டி, ஒரு குழந்தை மற்றும் சில பசுமாடுகளை வெட்டிக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்வினையாக மாநாட்டுக்கு வந்த வாகனங்களை மறித்து  தேவர் சமூகத்தினர் சிலரை கொலை செய்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகுதான் தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களைக் கண்டு அஞ்சினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.

“நாய், பன்றிகளுக்குக்கூட இரத்தம் சிவப்பாகத்தான் உள்ளது. அதற்காக அதுகளுடன் உறவு வைத்துக்கொள்ளவா முடியும்” என்று தேவர் சாதியத் திமிரைக் கக்கியவன் இந்த சண்முகையா பாண்டியன். இன்றும் அவரது பொதுக்கூட்டங்களிலும் கிராம நிகழ்ச்சிகளிலும் இது ஒலிபெருக்கியில் ஒலிபரப்படுகிறது. காமம் தலைக்கேறி தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாளும்போது (வன் புனர்வு)மட்டும்  நாயும் பன்னியும் புனிதமடைந்த மனிதப் பிறவியாகத் தெரியுதாமோ?

இமானுவேல் சேகரனின் கொலைக்குப் பிறகு உடன் நடந்த கலவரத்தில் தேவர் சாதியினர் 8 பேர் காமராஜர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவிடமான தூவல் என்ற ஊரில், கொல்லப்பட்டவர்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும் தேவர் சாதி வெறியனுமான பி.டி.குமார் கடந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியப் பின் “இதற்குப் பழிக்குப் பழிவாங்கியேத் தீருவோம்” என்று உறுதி மொழி எடுத்தான். அதற்கான திட்டமிடலும் செய்து வந்தான். அதனாலேயே அவனை தேவர்குரு பூசைக்கு செல்லும் வழியில் தாக்கத் தாழ்த்தப்பட்ட மக்கள் திட்டமிட்டனர். ஆனால் அவன் சற்று பின் தங்கியதால் முன் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி அடையாளமறியப்படாமல் தாக்கப்பட்டுவிட்டார்.

ஆனாலும் இதற்குப் பழிவாங்க சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் வின்சென்ட் என்பவர் பேரூந்து நிறுத்தத்தில் தேவர் சாதி வெறியர்களால்  ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். வெள்ளையன், கணேசபாண்டியன், செல்லத்துரை மைக் செட் ஊழியரான அறிவழகன்  என்று கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கொலைப்பட்டியல் நீண்டு கொண்டேதான் உள்ளது.  இதற்கு எதிர் வினையாகத்தான் பள்ளர் அல்லது தேவேந்திர குல தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை மற்றும் கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.

தான் கைகாட்டிய இடத்தில் ஓட்டுப் போட்டது, தானே ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக ஓட்டுப் பெட்டியை நிரப்பியது, காலில் உள்ள செருப்பையும் தோளில் உள்ள துண்டையும் கையில் எடுத்துக் கொண்டு “அய்யா” என்று கைகட்டி கூலியற்ற சேவகம்  செய்யவைத்தது இன்னும் பிற பிற ஒடுக்குமுறைக்கெல்லாம் உட்பட்டிருந்தவர்கள் அதனை மறுத்தால் சும்மா விட்டுவிட முடியுமா?

திருவாடானைக்கருகில் உள்ள கப்பலூர் கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்த தேவர் சாதியைச் சேர்ந்த கரியமாணிக்கம் என்பவர் காலத்தில் ஓட்டுச் சாவடி எப்படியிருந்தது என்றுகூடப் பார்த்ததில்லை. இன்று அவரது மகன் இராமசாமி எம்.எல்.ஏ. காலத்தில் சற்று முன்னேறி ஓட்டுச்சாவடி உள்ளே சென்று பார்க்கும் அறிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் ஓட்டுக்களைப் பதிவு செய்வது இராமசாமி அவர்களின் அடியாட்கள். “நானும் இந்நாட்டின் ஒரு குடிமகன்” என்ற உணர்வை ஒடுக்கப்பட்டோர் புதுப்பித்துக் கொள்ள ஆடடித்து, பட்டைச் சாராயம் கொடுத்து கருணைமிக்க விருந்து கொடுக்கப்பட்டுவிடும். தேர்தல் அதிகாரிகளின் சூட்கேசுகளும் பூத் ஏஜென்ட்டுகளின் பைகளும் நிரப்பப் பட்டுவிடும்.

சாதிய ஏற்றத் தாழ்வற்ற சகோதரத்துவ கொள்கையுடைவர்கள் நாங்கள் என்று கூறும் இசுலாமியர்களும் நாட்டுக்குள்ளேயே ஒரு நாடுவைத்து அரசாளும் இவர்களுக்கு துணைபோவதும் நாட்டுநடப்பாகத்தான் உள்ளது.

அம்மாவிற்காக ஒரு பேரூந்தை எரித்ததால் தேர்தலிலே சீட்டுக் கிடைத்து இளையான்குடித் தொகுதியில் வ.து.நடராஜன் வெற்றி பெற்றது எப்படித் தெரியுமா? ஆனந்தூர் மற்றும் இராதானூர் பகுதியைச் சுற்றியுள்ள ஒடுக்கப் பட்டோர்களுக்கெல்லாம் வெறும் மிச்சர் பொட்டலம் கொடுத்து “உங்கள் ஓட்டுக்களை எல்லாம் நாங்கள் போட்டுக் கொள்கிறோம்” என்று திருப்பி அனுப்பப் பட்டதால்தான்

இவ்வாறெல்லாம் ஜனநாயகம் செழிப்பாக இருந்த இடத்தில் இன்று எதிர்த்து போராடினால் கையைக் கட்டிக்கொண்டு அவர்களால் வேடிக்கைப் பார்க்க முடியுமா?  அதனால்தான் தேவர் குரு பூசை அவரின் நினைவிடமான, பசும்பொன் பகுதி மக்களால் மட்டும் கொண்டாடபட்டு வந்த நிலையில் அரசியல் கட்சிகளில் உள்ள தேவர் சாதியத் தலைவர்களாலும் தேவர் சாதிய அமைப்புகளாலும் தனது ஆதிக்கம் பறிபோவைதைச் சகிக்க  முடியாமால் அதனைத் தடுக்க தமிழகம் தழுவிய விழாவாக மாற்றி சாதிய உணர்வை கடந்த பத்தாண்டுகளாக நெருப்பு மூட்டி வளர்க்கின்றனர்.

ஜெயலலிதா, கருணாநிதி,மு.க. ஸ்டாலின், புதிய அரசியல் அவதாரம்  விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னணி நடிகை நடிகர் பட்டாளம் என விதி விலக்கின்றி அனைவரும் தேவர் பூசையில் தவறாமல் கலந்து கொள்கின்றனர். ஆனால் இமானுவேலின் நினைவு நாளைப்பற்றி வாயைக்கூட திறப்பதில்லை.

ஓ. பன்னீர் செல்வத்தை தன்னுடை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தபோது “நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது சாதிய அரசியலை பகிரங்கமாக கூறுவதற்கு ஜெயலலிதா தயக்கம் காட்டியதே இல்லை.

போலீசின் மாட்சிமையையும் அறிந்துக் கொள்ளாமல் ஜனநாயகத்தின் வலிமையை புரிந்துகொள்ள முடியாது. “நாயுடனும் பன்னியுடனும் உறவு கொள்ள முடியுமா” என்ற தேவர்சாதி வெறியன் சண்முகையா பாண்டியனின் பேச்சு ஒலி நாடா அவரது பொதுக்கூட்டங்கள் தோறும் ஒலிபரப்பப்படுகிறது. இராமநாதபுரத்தில் இவர் நடத்திய மாநாட்டிற்கான  சுவர் விளம்பரத்தில் ஒரு மனிதனின் தலையை வீச்சரிவாளால் வெட்டுவது போலவும் அதிலிருந்து இரத்தம் சொட்டுவது போலவும் வரைந்திருந்தனர். ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்ற கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் முழக்கத்தை எழுதினாலே பயங்கரவாதம், தீவிரவாதி என்று வழக்குப் போட்டுச் சித்திரவதை செய்யும் போலிசிற்கு இச்சுவரெழுத்தும் பேச்சும் வன்முறையைத் தூண்டுவதாகத் தெரியவில்லை. கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றனர்.

தேவர் பூசைக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அவர்களின் வெறிக்கூச்சலையும் கடை உடைப்புக் கலவரங்களையும் கைகட்டி வேடிக்கையும் பார்க்கும் போலீசு, இமானுவேல் சேகரனின் நினைவு நாளன்று நினைவிடத்துக்கு வருபவர்களை வழிமறித்து “சோதனை” என்ற பெயரில் பயபீதியூட்டி முடிந்தவரை தடுக்கப்பார்க்கிறது. இவ்வாண்டு இவ்வாறு பார்திபனூரில் போலீசு தடுத்ததால் கண்ணீர் புகைக் குண்டு வீசுமளவுக்கு கலவரம் ஏற்பட்டது. அவ்வாறு ஆதிக்க சாதியினர் தடுத்து கலவரம் செய்யும் பொழுதும் பாதுகாப்புத் தராமலும் கலவரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மறுக்கிறது.

ஜனநாயக அரசாங்கங்களும் தேவர் பூசையை அரசு விழாவாகக் கொண்டாடி மகிழ்சியடைகிறது. அரசு எந்திரமான போலீசு தனது அறிவிக்கப்படாத கொள்கையாக் கொண்டு ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.

ஆனால் “காலச் சக்கரம்” இதனை தொடராக அனுமதிக்க முடியாததல்லவா! முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் தடுத்துவிட முடியாது!  பல ஆண்டுகளாக சிறு அளவில் நடத்தப்பட்டு வந்த இமானுவேல் சேகரனின் நினைவு நாள் விழாவும் கடந்த 3 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தேவர் பூசைக்கு எதிராக அதே பார்பனியச் சடங்குகளுடன் நடத்தப்பட்டாலும் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவே இவ்விழா உள்ளது. இவர்களிடையேயுள்ள பார்பனியக் கலாச்சார பழக்கமும், சொத்துடைத்த பணக்கார வர்க்கமும் பார்பனியக் கலாச்சாரப் பாதையில் இழுத்துச் செல்லும் சமூகச் சூழ்நிலையாக உள்ளது.

அதனால் இன்று ஓட்டுக்கட்சிகள் பலவும் தலைவர்கள் செல்லாமல் பகுதியிலுள்ள எம்.எல்.ஏக்களையோ அல்லது இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைவர்களையோ இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பங்கேற்கச் செய்கின்றனர். ஆனால் தங்களுடைய தலைவர்களின் படத்துடன் இமானுவேல் சேகரனின் படத்தையும் அச்சிட்டு பேனர்களாக நிறுத்தியுள்ளனர். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக வேடமிடுகின்றனர்.

தம் தொகுதிகளில் ஆதிக்க சாதியுணர்வைத் தூண்டி ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஓட்டுக் கட்சியிலுள்ள ஆதிக்க சாதியின் தலைவர்கள், சாதிய ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் போராடி கொலையுண்டு தன்னுயிரை தியாகம் செய்த இமானுவேல் சேசகரனின் கல்லரையில், மலர் வளையம் வைத்த கையின் மணம் மாறாமல் கொலை செய்தவனின் கல்லரையிலும் மலர் வளையம் வைத்து சாதி ஆதிக்கத் திமிரை புகழ்வதும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கொலை செய்தவனே கொலை செய்யப்பட்டவனின் நினைவு தினத்தை கொண்டாடும் அதிசயமல்லவா இது! சாதிய ஒடுக்குமுறைக்குக் கட்டுப்பட்டு ஓட்டுப்போட்டது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் பரிமாணத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாலும், அனைத்து கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசுவதாலும் இப்படிப்பட்ட செண்டிமென்டல் கபட நாடமும் ஓட்டுக் கட்சிகளுக்குத் தேவையாக உள்ளது.

ஓட்டுக் கட்சிகளின் கபட நாடகங்களையும் தன் ஜாதிக்குள்ளேயே உள்ள நவீன பணக்கார வர்கத்தின் சூழ்ச்சியையும் உணர்ந்து கொள்ளாது “ஆட்டை பலி கொடுத்தவன் அதனையே சாமிக்கும் படைப்பதுபோல்” ஒடுக்கப்பட்ட மக்கள், முளைப்பாரி எடுப்பது வேல் குத்துவது போன்ற பார்பனிய கலாச்சாரதிலும், சீரழிவுக்குக் கலாச்சாரத்திலும் மூழ்கடிக்கப்பட்டு சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான அரசியல் போராட்ட உணர்வுகளை இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியாக வெளிப்படுத்துகின்றனர். இமானுவேல் சேகரனின் தியாகம் பார்பனியத்தின் காலடியில் அடகு வைக்கப்படுகிறது.DECORAM போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தம் பங்கிற்கு களமிறங்கி சோறு தருகிறோம் பால் தருகிறோம் என்று அரசியல் உணர்வற்றவர்களாக மாற்றுகிறது.

சாதிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட பசும்போன் தேவரின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடுவது என்னவகை நியாயம்? இது ஜனநாயக அரசாங்கமா? அல்லது மனு தர்ம அரசாங்கமா? இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதும் தேவர் பூசையை அரசு விழாவிலிருந்து நீக்குவதுமே ஜனநாயக நடவடிக்கையாக இருக்கமுடியும். சும்மா அம்பேத்காரைப் போற்றுவதும் பெரியாரின் வாரிசுகள் என்று வாய் கிழிய கத்துவதும் கதைக்குதவாது.

பன்னெடுங்காலமாக சாதிய ஒழிப்பைத்தான் ஒடுக்கப்பட்டோர் வேண்டுகின்றனர். சாதிய ஒடுக்குமுறையை நிலைநாட்டுபவர்கள் ஆதிக்க சாதியினரே.  ஓட்டுக் கட்சிகளின் புதிய அவதாரமான சமரசப் போக்கெல்லாம் சாதிய ஒழிப்பைத் தராது. அதனால் ஒடுக்கப்பட்டோர் தம்மிடமும் உள்ள பார்பனியக் கலாச்சாரங்களைக் களைந்து பிற சாதிய உழைக்கும் மக்களுடன் சாதியம் பாராமல் ஒன்றிணைந்து முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தலைமையின் கீழ் ஆதிக்க சாதிய வெறியர்களுக்கெதிராகப் போர்குணமிக்க அரசியல் போராட்டங்களை நடத்தாமல் முளைப்பாரி எடுப்பதும் மொட்டை அடிப்பதும் சாதி ஒழிப்புக்கு தீர்வாகாது.

-கட்டுரையாளர்கள் தோழர்கள் சாகித், ஆனந்த்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

இந்து மதம் கேட்ட நரபலி !

ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!

முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

  1. தேவர்சாதி வெறிக்கெதிராய் தலித் மக்களின் போராட்டம்!…

    தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்! https://www.vinavu.com/2009/09/18/emmanuel-sekaran/trackback/

  2. அவசியமான அருமையான செய்தி தொகுப்பு. வாழ்த்துக்கள் தோழர் சாகித், ஆனந்த்.

    • அருமை உங்கலை போன்ரோர்கல் இருக்கும் வரை ஜாதி என்பது எப்பொலுதும் அழியாது. இந்த கட்டுரையை எலுதியவரே ஒரு ஜாதி வெரியர் என்ரு சொல்லலாம். யேன் யென்ரால் இரந்த வர்கலை பட்ரி அவதூரு பரப்புவது என்பதெ ஒரு அனகரிகமன செயல். இந்த கட்டுரையால் பல்வெரு ஜாதி வக்குவதந்தான் அதிகம். இதை புரிந்து கொல்லாத மன்னிக்கவும் முட்டல்கல் இருக்கும் வரை இதை பொன்ரு யார் கட்டுரை எலுதினலும் அதர்கு ஆதரவும் எதிப்பும் உன்டாகும். ஒருவர் ஒரு பொய்யை உரக்க சொன்னால் அது உன்மை ஆகது. தனக்கு என்ரு சுயநினைவு இல்லாதவர் யார் என்ன சொன்னாலும் எட்ரு கொல்வர்கல். யெப்பலுதும் யெசித்து செயல் படுங்கல். ஒட்ருமை யென்பது ஒருநால் உன்டாகும் . இந்த கட்டுரையை எலுதியவர்கு ஒரு வென்டுகொல் இதைனீக்கி விடுங்கல் இதை வைத்துநீஙகல் ஒரு பிலவைதான் உன்டக்குகிரீர்கல் ஒட்ருமையை அல்ல. என்னுடய எழுத்து பிழைகலை மன்னிக்கவும் ” வீரமற்ற விவேகம் கோழைத்தனம் விவேகம் அற்ற வீரம் முரட்டுத்தனம் ” மறத்தமிழன் N.K.பாலா

  3. தென் மாவட்டங்களில் நடக்கும் உண்மைகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்திருக்கும் கட்டுரையாளர்களுக்கு நன்றி. இது போன்ற கட்டுரைகள் வினவில் அடிக்கடி வரவேண்டும்.

  4. வினவு குழுவினருக்கு,

    இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை பற்றி அதிகம் தெரியாத எனக்கு இந்த பதிவு ஓரளவு விவரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி!

    இ. சேகரன் கொலைக்கு ஏதாவது வழக்கு போடப்பட்டதா? என்ன ஆயிற்று?

    காமராஜர் காலத்தில் நடந்த துப்பாக்கி சூடு என்றால் ஒரு ஐம்பது வருஷம் ஆகி இருக்கும். அதற்கு போன வருஷம் பி.டி. குமார் பழி வாங்க திட்டமிட்டாரா? என்ன ஒன்றும் புரியவில்லையே?

    நீங்கள் சொல்வதில் – இந்த ஷன்முகையா பாண்டியன் விவகாரம், வெள்ளையன் கொலை போன்றவற்றுக்கு எவ்வளவு தூரம் ஆதாரம் உள்ளது? இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் நிரூபிக்க முடியாத விஷயங்களா? இல்லை ஆதாரம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையா? இல்லை ஆதாரமே கிடையாதா?

    • பி.டி.குமார் தூவல் கிராமத்தில் ஐவர் கொலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு தேவர் குரு பூசைக்குச் செல்லும்போது, தாழ்த்திவைக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள பகுதியான கீழக்கன்னிச்சேரி வழியாக தேவர் குரு பூசைக்குச் செல்லுபவர்களுக்கு தடையிருந்தும் அவ்வழியாகச் சென்றான். காவல் துறையினரும் தடுக்கவில்லை.

    • அறிவுஜீவி நிலையில் ஆர்வி எந்த வகையினைச்சார்ந்தவர் என்பது புரியவில்லை. படித்த பட்டம் பெற்று உயர் நிலையில் உள்ள நிறுவனமொன்றில் கைநிறைய சம்பளம் வாங்கும் தொழிலாளியாக அல்லது உயர் தொழில் சார்ந்த நிறுவனம் ஒன்றை நடத்துபவராக பார்பனீயம், முதலாளித்துவம், தொழிலாளி, வாழக்கையின் கஷ்டம், சமூக நடைமுறைகள் ஏதும் அறியாது நகரங்களில் வாழும் “பொதுவான நல்லவர்கள்”, இந்த சமூகமே தன்னைப்போல் தான் வாழ்வதாகவும் என்னைப் போல் சிலர்தான் பிரச்சனையைக் கிளப்பி சமூகத்தை கெடுப்பதாக நினைக்கின்றனர். ஆர்வியும் இந்த வகையைச் சார்ந்தவரா? அல்லது எடக்கு மடக்கான கேள்விகளை எழுப்பி பலரும் சந்தேகமற்று புரிந்து கொள்ளச் செய்வோம் என்று நினைப்பவரா? அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாமல் கேள்விகளை எழுப்புகிறாரா என்பது புரியவில்லை.

      அவரது “கூட்டாஞ்சோறு” -ல் பார்பனீயம் என்று சொல்லுவதே தவறு என்ற கருத்துக்கு எரிஞ்சியூர் பண்ணையார் கோபாலக் கிருஷ்ணனின் தீவைப்பு சம்பவத்தை எடுத்துக்காட்டு தந்தபோது அந்த எடுத்துக்காட்டுக்குள் பதில் தராமல் கருணாநிதியின் அரசை கவிழ்க்க நான்கு பேர் கூடி சதி செய்தால் அதனை பார்பனீயத்தின் சதி என்று கூறுவதா என்று வேறு கேள்விக்கு தாவிவிட்டார். அப்பொழுது, இது ஒரு அரை லுசு போல (தவராக நினைக்க வேண்டாம். மனதில் பட்டதைச் சொல்லியுள்ளேன்) என்று தொடராமல் விட்டுவிட்டேன். எமது கட்டுரைக்கு 50 ஆண்டுகளுக்குப்பின் பழிக்கப் பழி சபதமா என்ற கேள்வி அப்பாவித்தனமாக தெரிவதால் முந்தையதற்கும் இக் கேள்விக்கும் பதில் எழுதியுள்ளேன்.

      கருணாநிதியின் அரசை “சூத்திரன் ஆளக்கூடாது” என்ற அடிப்படையில் பார்பனரல்லாத வேறு உயர் சாதியினரால் சதி செய்யப்பட்டாலும் அது பார்பனீயச் சதி என்றுதான் பொருளாகும். ஏனெனில் சூத்திரன் நாடாளக்கூடாது என்பது மனு தர்மம்(சட்டம்). அதனை நிலை நிறுத்த செய்யப்பட்ட சதி இது. எனவே இது பார்பனீயச் சதியாகும். மாறாக ஜெயலலிதா, இராமதாசு மற்றும் திருமாவளனுடன் கூட்டுச் சேர்ந்து அதிகாரம் மற்றும் பொருளாதாரச் சுருட்டலுக்காக சதி செய்தால் அதனை எவரும் பார்பனீயச் சதி என்று கூறமாட்டார்கள். அதுவே ஜெயலலிதா சங்கராச்சாரியார் மற்றும் துக்ளக் சோவுடன் சதி செய்து கவிழ்க்க முயற்சி செய்தால் அதனை பார்பனீயச் சதி என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது? ஜெயலலிதா சங்கராச்சாரியார் மற்றும் துக்ளக் சோவுடன் சதி செய்து சதியை மறைக்க இராமதாசுவையும் திருமாவையும் இணைத்துக் கொண்டாலும் பார்பனீயச் சதி தான். இவை எடுத்துக்காட்டுக்களுக்காக மட்டும் தரப்பட்டாலும் அரசியலில் பார்பனீயச் சதி என்பது மறுக்க முடியாத பங்காற்றவே செய்கிறது. ஜெயலலிதா முதன்முறை தமிழகத்தின் முதலமைச்சரா ஆனபோது “இது நம்மாவாள் ஆட்சி” என்று பார்பனர்கள் அறிவித்து விழா கொண்டாடியதும் ஒரு சான்றாக உள்ளது. பார்பனீயச் சதியால் ஓட்டுவாங்குகிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம். பார்பனீயச் சதி உள்ளதா இல்லையா என்பதே இதன் சாரம்.
      இன்னுமொரு எளிமையான எடுத்துக்காட்டனைத் தருகிறேன். எமது தோழர்கள் ராஜாங்கம், முகம்மது ஷபி, கணேசன், ஆனந்த் என்ற நால்வரும் ராகுல்காந்தி சிவகங்கை வந்தபொழுது இலங்கையில் நடந்த போருக்கான இந்திய பங்களிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டினர். அதனால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்த தோழர்களை வேனில் வைத்து பாதுகாத்த போலீசு சித்திரவதை செய்தது. அப் போலீசுக்காரர்களில் சிவகங்கை மாவட்டத்தின் கட்டிக்குளம் என்ற ஊரினைச் சேர்ந்த முத்துக் கருப்பன் என்ற போலீசு தோழர்களின் சாதிப் பெயர்களைக் கேட்டு தாக்கினான். சொல்ல மறுத்த தோழர்கள் அடி தாங்காது அவரவர் சாதியைக் கூறிய போது பள்ளர் என்று கூறியத் தோழர்களை கூடுதலாக தாக்கினான். காரணம் முத்துக்கருப்பன் மறவர் சாதியைச் சேர்ந்தவன். எமது தோழர்களுக்கும் முத்துக் கருப்பனுக்கும் எவ்வித தொடர்போ முன் பகையோ இல்லை. ஆனால் பள்ளர் சாதி என்பதற்காகத் தாக்கப்பட்டனர். மனு தர்மம் செய்த சாதிய மோசடியின் அடிப்படையில் சாதி வெறியில் தாக்கிய இவனது செயலை பார்பனீய வெறி என்றுதானே கூறமுடியும்? மார்க்சிய கோட்பாட்டினை அடிப்படையாக்க கொணடு ஒருவர் செயல்பட்டால் அதனை கம்யூனிசம் என்று கூறுவது போல் இதனை பார்பனீயம் என்றுதான் கூற வேண்டும்.
      அடுத்த இவரது கேள்வி 50 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப் பழியா என்பது. கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மறப்பதற்கு தனிப்பட்ட இருவரின் பகைமையால் நடந்த கொலையல்ல இது. கொலை செய்யப்பட்டவர்களின் நலனுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழியும் அல்ல இது. சாதிய கட்டுமானத்தின் பின்விளைவு இது.
      1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசாங்கத்தாலும், அனைத்து கட்சிகளாலும் பொன்விழா நினைவுநாள் கொண்டாடியதை நீங்கள் அறிவீர்களா? இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும், எவரின் வளங்களைக் வெள்ளையன் கொள்ளையிட்டானோ அவர்களின் நாட்டிலேயே அவனது சொத்துக்களும் நிறுவனங்களும் தொடராக உரிமையுடன் செயல்பட இழந்தவர்களே பாதுகாக்கின்றனர். கொள்ளையிட்டவனுடன் வர்த்தக ஒப்பந்தம் போடுகின்றனர். அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு ஆக்கிரமிப்பு போர்களுக்கு படை அனுப்புகின்றனர். ஆனால் 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டபோதும் மக்களை ஏமாற்ற வெள்ளையனே வெளியேறு என்று விழா கொண்டாடுகின்றனர். இப்படிப்பட்ட அதிசயமெல்லாம் நடக்கும்போது பி.டி.குமாரின் சபதம் ஒரு அதிசயமில்லை.
      ஆயிரம் ஆண்டுகளானாலும் சாதி ஒழியாதவரை பழையதை நினைவூட்டி சாதிவெறியூட்டுவது நிற்கப்போவதில்லை. ஏறக்குறை 150 ஆண்டுகளுக்கு முன் மன்னர்களாகவும், படைத்தளபதிகளாகவும், படை வீரர்களாகவும் இருந்ததை நினைவூட்டி “ஆண்ட பரம்பரை இன்னும் ஆளுவதில் என்ன குறை” என்று முழங்கும்போது 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை கையிலெடுப்பது அதிசயமில்லை. தன் சாதிய மக்கள் சுமை தூக்கும் தொழிலாளியாக, சாக்கனாங் கடைகளில் மது ஊற்றிக் கொடுக்கும் தொழிலாளியாக கடின வாழ்க்கை நடதத்துவதற்கு காரணமான இந்த அரசாங்கங்கள் மற்றும் பொருளாதார அமைப்பிற்கு எதிராக போராடவிட்டாலும் பரவாயில்லை. அரசாங்கங்களுடன் இணைந்துகொண்டு தன் சாதிய மக்களின் முதுகில் சவாரி செய்கின்றனர். இவர்கள் தமது அதிகாரத்திற்காக சாதி வெறியைத் தூண்ட எவ்வளவு பழைமையானதையும் கையிலடுப்பது சாத்தியமா என்ற கேள்விக்கே இடமில்லை.

      அடுத்ததாக வின்சென்ட் போன்றவர்களின் கொலைக்கு ஆதாரம் கேட்டுள்ளார். வின்சென்ட் கொலை ஒருபுறம் இருக்கட்டும். பல நூற்றாண்டுகளாக சாதியப் படுகொலைகளும் தீவைப்புகளும் நடந்து வரும் வரலாற்றை இவர் படித்ததில்லையா? நாட்டு நடப்புகளை செய்தி ஊடகங்களில் இவர் பார்த்தது இல்லையா? வின்சென்ட் போன்றவர்களின் கொலைகள் மட்டும் அபூர்வமாக எங்கேயோ ஒரு இடத்தில் நடந்த கொடுரமா? இதற்கு ஆதாரம் கேட்பது அறிவுடைய செயலாகத் தெரியவில்லை. இவர் ஒரு வரியில் என்ன ஆதாரம் என்று கேட்டுவிடலாம். கட்டுரையைத் தருபவர்கள் அச்செய்தியின் நம்பகத் தன்மையை நிருபிக்கும் பொறுப்புள்ளவர்கள். அதனால் ஆதாரங்களைத் ஒன்று திரட்டித் தர நிறைய வேலை செய்ய வேண்டும். இது போன்ற கேள்விகள் பல வேலைகளினூடே சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் மீது தேவையில்லாது வேலைப் பழுவைக் கூட்டி ஒதுங்கி ஓடச்செய்துவிடும். ஆதாரங்கள் அவசியமான ஒன்று என்றால் இவரது கேள்வி நியாயமானதே.

      எது அவசியமானது? எடுத்துக்காட்டாக காஞ்சி சங்கரமடம் ஜைனர்களிடமிருந்து அடித்துப் பிடுங்கியதைக் கட்டுரையில் எழுதியுள்ளேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பலரும் அச்செய்தினை அறிந்திருந்தாலும் அதனையறியாத ஒருவர் ஆதாரங்களைக் கேட்டால் அதற்கான ஆதாரங்களான நூல்கள், ஆவணங்கள் போன்றவற்றை நேர்மையான முறையில் கட்டுரையாளர் தரவேண்டும். ஏனெனில் இது பழமையான ஒரு நிகழ்வு. நடப்பில் உள்ள செய்தி ஊடகங்களிலும் வந்துள்ளவைகளுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பது சரியல்ல என்று நினைக்கிறேன். கட்டுரையின் குறிப்பான விஷயம் சாதிய ஓடுக்குமுறைதானே தவிர வின்சென்ட் போன்றோரின் கொலைகள் அல்ல. சாதிய ஒடுக்குமுறைக்கோ அல்லது இமானுவேல் சேகரனின் செயல்பாடுகளுக்கோ அல்லது முத்துராமலிங்கத்தின் சாதிய வெறிக்கோ ஆதாரம் கேட்டிருந்தால் நியாயமானதாக இருந்திருக்கும்.

      வின்சென்ட் போன்றோரின் கொலைகளின் பட்டியல்கள் மிக நீளமானது. அவைகளுக்கெல்லாம் வழக்குகள் உள்ளன. பல வழக்குகள் தள்ளுபடி செய்பட்டு பழிவாங்களும் நடந்துள்ளன. பல வழக்குகளில் போலீசு இன்னும் வலை வீசித் தேடி வருகிறது. இவைகள் அனைத்திற்கும் ஆவணங்களை அருங்காட்சியகத்தில் தூசிதட்டித் தேடித் தருகிறேன். அவைகளைப் பெற்றப் பிறகு ஆர்வி மேடையிலேறி 10 நிமிடம் சாதியத்திமிருக்கு எதிராக உரையாற்றுவாரா? விதண்டா வாதத்திற்காக கேட்கவில்லை. ஒரேவரியில் எழுப்பப்படும் கேள்வியால் அடுத்தடுத்த ஆக்கப் பூர்வமான வேலைகள் முடக்கப்பட்டாலும் அதற்குப் பலனாக ஏதும் நடந்தால் மன நிறைவு கிடைக்குமல்லவா! அதற்காகத்தானே நாம் பாடுபடுகிறோம்.

      • சாகித்,

        வினவு தளத்தில் நான் தாக்கப்படுவது புது விஷயம் இல்லை. ஆனால் நான் என்ன context என்றே தெரியாமல் முழிப்பது புது விஷயம். என் பின்புலம், பார்ப்பனீயம் என்ற சொல் எல்லாம் எதற்கு விவாதிக்கப்படுகிறது என்றே தெரியவில்லை. நீங்கள் சமூகத்தை கெடுப்பதாக நான் எங்கே சொன்னேன் என்றும் தெரியவில்லை. நீங்கள் யாரென்றே தெரியாதே! இந்த பதிவை எழுதியதற்கு நன்றி வேறு தெரிவித்திருந்தேன்! // இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை பற்றி அதிகம் தெரியாத எனக்கு இந்த பதிவு ஓரளவு விவரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி! //

        ஒரு சிறு விளக்கம். நான் வினவு தளத்துக்கு வருவது குறைந்துவிட்டது. நீங்கள் என்னை பற்றிய எழுதிய மறுமொழி இப்போது மறுமொழிகள் column -இல் இல்லை. சாதாரணமாக நான் புது பதிவுகளையும் புது மறுமொழிகளையும் மட்டுமே skim செய்பவன். உங்கள் விமர்சனத்தை almost miss செய்துவிட்டேன்.

        சரி கேட்டுவிட்டீர்கள். என் பின்புலத்தை சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் ஒரு அரைக் கிழம். பட்டப் படிப்பு படித்திருக்கிறேன். அமேரிக்காவில் வாழ்கிறேன். பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். இவை எதுவும் வினவு தளத்துக்கு relevant இல்லை என்று நம்புபவன். பரிபூரண கருத்து சுதந்திரம், consistent application of a value system என்பதில் பெரும் நம்பிக்கை உள்ளவன். இது மட்டுமே relevant என்று நம்புபவன். வினவு தளத்தின் மீது எனக்கு உள்ள விமர்சனங்கள் பொதுவாக இவற்றை வினவு உடைப்பதால் ஏற்படுபவை.

        சில மாதங்கள் முன்பு வரை கூட்டாஞ்சோறில் வரும் மறுமொழிகளுக்கு எல்லாம் பதில் எழுதிவிடுவேன். உங்களுக்கு எழுதவில்லை என்றால் கவனக்குறைவுதான். சரி இப்போதாவது சொல்லிவிடுவோம் என்று பார்ப்பனீயம் பதிவில் உங்கள் பேரை தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி என்னதான் கேட்டீர்கள்? கீழ்வெண்மணி மகா அநியாயம் என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. In fact, சில மணி நேரங்களுக்கு முன்தான் இந்த பதிவை எழுதினேன் – http://koottanchoru.wordpress.com/2009/09/21/நாவல்களில்-கீழ்வெண்மணி/

        கருணாநிதி, ஜெ, சோ பற்றிய பாரா குழப்புகிறது. மனு நீதியை நிலை நாட்ட செய்யும் சதிகளும், பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் செய்யும் சதிகளும் பார்ப்பன சதிகள் என்று சொல்ல வருகிறீர்களா?

        உங்கள் “எளிமையான எடுத்துக்காட்டு” புரிகிறது. // மனு தர்மம் செய்த சாதிய மோசடியின் அடிப்படையில் சாதி வெறியில் தாக்கிய இவனது செயலை பார்பனீய வெறி என்றுதானே கூறமுடியும்? // என்று கேட்டிருந்தீர்கள். ஏன் ஜாதீய வெறி என்றால் புரியாதா? மோசடி ஜாதீய மோசடி; வெறி ஜாதி வெறி; ஆனால் உங்களால் செயலை ஜாதீய வெறி என்று சொல்ல முடியாது, பார்ப்பனீய வெறி என்றுதான் கூற முடியும். ஏன்? என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

        அறிவுடைநம்பி என்பவர் எழுதிய மறுமொழிக்கு சில மணி நேரம் முன்தான் மறுமொழி எழுதி இருந்தேன் – அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இங்கே திருப்பி தருகிறேன். // நான் தலைநகரங்களில் வசிப்பவர்களை capitalist என்று வரையறுக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். capitalist இல்லாதவர்களும் capitalist ஆகும் ஒரு tendency இருக்கிறது என்று சொன்னால் அது எப்படி புரிந்து கொள்ளப்படும்?// பழைய தமிழ் வார்த்தைகளான பள்ளன், பறையன், காந்தி எடுத்துக் கொடுத்த ஹரிஜன் போன்றவை இன்று அடுத்தவர் மனதை புண்படுத்தக்கூடாது என்று ஒதுக்கப்படுகின்றன. எதோ ஒரு ஐம்பது ஆண்டுகளாக சொல்லப்படும் பார்ப்பனீயம் என்ற வார்த்தை மட்டும் கடவுளே வந்து சொன்னது, அதை விடமாட்டேன் என்று அடம் பிடிப்பது ஏன்?

        போன வருஷம் மசூதி இடித்ததற்கு இந்துக்களை பழி வாங்குவேன் என்றால் புரிகிறது. பல நூறு வருஷத்துக்கு முன் கோவில் இடித்ததற்கு பழி வாங்க மசூதியை இடிப்போம் என்றாலும் புரிகிறது. துப்பாக்கி சூட்டுக்கு யாரை பழி வாங்க? அரசையா? போலீசையா? துப்பாக்கி சூட்டுக்கும் தலித்களுக்கும் என்ன சம்பந்தம்? உங்கள் சொல்லாட்சி குழப்பிவிட்டது. நீங்கள் ஜாதி வெறி என்றே எழுதி இருக்கலாம். இது பழி வாங்குதல் அல்ல.

        // அடுத்ததாக வின்சென்ட் போன்றவர்களின் கொலைக்கு ஆதாரம் கேட்டுள்ளார். //
        உங்கள் புரிதல் தவறானது. நீங்கள் முதல் வரியை மட்டுமே // நீங்கள் சொல்வதில் – இந்த ஷன்முகையா பாண்டியன் விவகாரம், வெள்ளையன் கொலை போன்றவற்றுக்கு எவ்வளவு தூரம் ஆதாரம் உள்ளது? // படித்தது போல இருக்கிறது. உங்களை ஆதராம் கொடுக்க சொல்லவில்லை என்பது அடுத்த சில வரிகளையும் படித்திருந்தால் புரிந்திருக்கும் – // இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் நிரூபிக்க முடியாத விஷயங்களா? இல்லை ஆதாரம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையா?நீங்கள் சொல்வதில் – இந்த ஷன்முகையா பாண்டியன் விவகாரம், வெள்ளையன் கொலை போன்றவற்றுக்கு எவ்வளவு தூரம் ஆதாரம் உள்ளது? இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் நிரூபிக்க முடியாத விஷயங்களா? இல்லை ஆதாரம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையா? இல்லை ஆதாரமே கிடையாதா?//

        கலைஞர் ஊழல் பேர்வழி என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான் – ஆனால் அதை நிரூபிப்பது கஷ்டம். ஜெ ஊழல் பேர்வழி என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. உங்கள் முப்பாட்டனும் என் முப்பாட்டனும் வீட்டு பெண்கள் மீது அதிகாரம் செலுத்தினார்கள் என்பது அனேகமாக உண்மையாக இருக்கும். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இதில் இது எந்த வகை என்று சொல்லுங்கள் என்று கேட்டதை தவறாக புரிந்துகொண்ட பொங்கிவிட்டீர்கள்.

        பொதுவாக வினவு தளத்தில் ஒருவர் இப்படி நடந்தது என்று சொன்னால் அது by default , உண்மை என்றுதான் எடுத்துக் கொள்வேன். அப்புறம் 10 நிமிஷம் பேசுவீர்களா என்று கேட்டிருந்தீர்கள். நீங்கள் மேடை அமைத்துக் கொடுத்து, நானும் அந்த மேடைக்கு பக்கத்தில் இருந்தால் என்ன தடை? என்ன, 10 நிமிஷம் கோர்வையாக பேச வருமா என்று தெரியாது.

      • தேவரின் குரு பூஜையை முக்குலதோர் மட்டும் வழிபடுவதில்லை.நீங்கல் கருதும் தாழ்தபட்டோரும் தான் வழிபடுகிரார்கல். They go to pasumpon and worship him for 3 days. they also respect him as god. after then only we go to there for worship. This is because Lord thevar heplped them a lot. he gave them his palmriya for surviving. I dont know where are you from. before comment Lord thevar clear urself about him. i am here to know about Mr. Immanuel. U have mentioned because of Kamarajar he joint in Forward Block party. I clear you, that there was conflict between Mr.Nethaji and Mr.Gandhi. So that Nethaji came out separately from the Congress party and started Forward Black party. Even Mr. Gandhi also from Dalit Obviously ours lord Thevar supported him at the begining.you have mentioned that we controled Naadar caste. But this is false. Our lord thevar helped to Mr.Kamarajar for his M.L.A election. so that he was elected as an M.L.A by his support only. I m from madurai. there some pallars around my home but we have relationship with them friendly. Moreover i have some friends from dalit. I go to their home and have tea. he ill come to my home and havin tea in same vessels which we are using in my home. Boss everything because of money now. As a common man in india i just suggest you that Instead of thinking to be against us. plan to develop ur childs education make them as Dr. Ambetkar. Dr.Ambedkar was insulted at begining. but same paarpanas respected him after became a Lawyer. If u want help ur society do these things. after 20 yrs ur society will become wealthy.

        Ivan

        Indian

    • அய்யா ஆர்வி அவர்களே!
      உங்களைத் திட்டவேண்டும் என்பதற்காக //லூசுப்பய// என்றச் சொல்லை பயன்படுத்தவில்லை. அருகிலுள்ள நண்பர்களிடம் என்னடா லூசு பய மாதிரி பேசுறே என்று சொல்லுவது போன்ற உணர்வுடன்தான் எழுதினேன். அதனாலேயே அடைப்புக்குள் தவறாக நினைக்க வேண்டாம்… என்று எழுதியியுள்ளேன். அதுவும் தங்களுக்கு மனவருத்தை தந்திருந்தால் எனது தவறை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்கிறேன். சில நேரங்களில் விவாதத்தின் சூட்டினால் மரியாதைச் சொற்களுக்கு பதிலாக ஒருமைச் சொல் வந்துவிடும். எடுத்துக் காட்டிற்கு அஸ்கர் என்பவர் தங்களுக்கு ஒருமையில் மறுமொழி செய்தது போல். அவரும் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதனால் நேரடியான வன்மையானச் சொற்களால் திட்டினால் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும். கருத்துப்பரிமாற்றத்துக்கு அதிக நேரம் ஒதுக்கலாம். தொழில் முறை தட்டச்சு பயிலாதவர்களுக்கு எளிதான வாய்புத் தருவாக அமையும். எனக்காகவும்தான் கூறுகிறேன்.
      பழிக்கு பழி வாங்குவோம் என்பதே பி.டி.குமாரின் சபதம். அந்த சபதம் யாரை பழிவாங்க என்பதை குறிப்பிடாவிட்டாலும் எளிதாக புரிந்துக் கொள்ளக் கூடியதுதானே!

      கொலைகள் பட்டப்பகலில் நடந்திருந்தாலும் போலீசு துணையுடன் சாட்சிகள் மிரட்டப்பட்டு வழக்கம்போல நீதி மன்றம் தள்ளுபடி செய்ததே பெரும்பாலான வழக்குகளின் நிலை. இந்த வகையில் ஒவ்வொரு வழக்குகளின் தீர்ப்புகளின் சொற்களையும் தனிப் புத்தகமாக வெளியிடலாம்.

      சோ, சங்கராச்சாரியார் பார்பனர்கள் என்பதால் பார்பனீயச் சதி என்று கூறுவதில்லை. ஆர்எஸ்எஸ் என்பது மனு தர்மத்தை நிலைநாட்ட அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் கால் ஊன்ற வழிவகை செய்ய ஆலோசனை நடத்தப்பட்டதால் அது பார்பனீயச் சதியாகியது. சோ, சங்கராச்சாரியாரின் உரைகளெல்லாம் இதற்கு சாட்சிகளாக உள்ளன.
      பார்பனீயம் என்றச் சொல் பார்பனர்களையும் சேர்த்து சுட்டுவதால் வெறுமனே சாதி வெறி என்று கூறினால் போதாதா என்பதுதானே உங்கள் கேள்வி?

      அகமதியாக்கள் என்ற இசுலாமியப் பிரிவைச் சேர்ந்த (சாதியைச் சேர்ந்த என்று கூடச் சொல்லலாம். காரணம் சாதி என்பதற்கான நடைமுறை என்னவோ அது அத்தனையையும் தான் உயர்நத பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களும் நடைமுறை படுத்துகின்றனர்) பெண் புதைக்கப்பட்டப் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட வன்முறை இசுலாமியக் கோட்பாட்டின் அடிப்படையைக் கொண்டு நடத்தப்பட்டது. இசுலாமியர்களில் பெரும்பான்மையினர் இதை ஆதரித்து இருக்காவிட்டாலும் அவர்களின் பெயரால் இது நடத்தப்பட்டது. இதற்கு தலைமை ஏற்றவர்களின் வெறிச் செயல் என்றோ அல்லது தலைமை ஏற்ற அமைப்புகளின் வெறிச் செயல் என்றோ மட்டும் கூறமுடியாது. தலைமை ஏற்ற அமைப்பின் பெயரை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் இவர்களை கோட்பாடுவே வழி நடத்துவதால் இச் செயலை இசுலாமிய மதவெறி என்றுதான் கூறமுடியும். அவ்வாறில்லாமல் மாற்றுச் சொற்கைளப் பயன்படுத்தினால் சந்தர்ப்ப வாதத்தில் சறுக்கி விழுகிறோம் என்றே பொருள்படும். இதற்கு எதிராக குரல் கொடுக்காதவர் தன்னை ஜனநாயகவாதி என்று கூறிக் கொள்ள முடியாது.
      தாங்கள் பார்பனக் (பார்ப்பனராக) குடிப்பிறப்பாக இருப்பதால் பார்பனீயம் என்ற சொல் உங்களுக்கு இசைவற்றதாகத் தெரிகிறது என கருதுகிறேன். இசுலாமிய குடிப்பிறப்பில் பிறந்து நாத்திகனாக, கம்யூனிஸ்ட்டாக வாழும் நான் என்னெதிரில் இசுலாமிய மத வெறியர்கள் என்று எவராவது கூறினால் நான் வருத்தப்படக் கூடாது. அப்படியில்லாமல் எனக்கு நெருடல் துளி அளவேனும் ஏற்பட்டால் இன்னும் நான் மதத்தின தாக்கத்தில் இருந்துக் கொண்டு மாற்று மதங்களை விமர்சிப்பவர்களுடன் கூடிக்குலாவ ஜனநாயகம் வேடமிட்டவன் என்பதை விளகமாக கூறவேண்டுமோ?

      அகமதியாக்கள் பிரச்சனையில் அஸ்கர் என்பவர் இசுலாமியக் குடிப்பிறப்பாக இருந்தாலும் “இசுலாமிய மதவெறியும் ஆர்எஸ்எஸ் மதவெறியும் ஒன்றுதான். இரண்டிற்கும் வேறுபாடில்லை” என்று துணிச்சலாக கூறியுள்ளார். இவர் ஜனநாயகவாதி. இப்படிப்பட்டவர்களால்தான் இந்த சமுதாயத்தை மாற்ற முடியம்.
      தமிழில் பாடினால் தீட்டு என்பது மொழி வெறியா? சாதி வெறியா? அல்லது தியாகராயரின் வெறிச் செயலா?
      21ஆம் நூற்றாண்டின் முன்னேற்றத்தை கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளிலுள்ள உங்கள் சாதியினரின் நடைமுறைகளை தெருவில் இறங்கிப் பாருங்கள். 21ஆம் நூற்றாண்டு என்றால் என்ன என்று பிறகு சொல்லுங்கள்.

      பார்ப்பனீயம் என்பது சாதிய சிந்தனையற்றவர்கைளக் குறிக்காது. ஆர்வியும் அவ்வாறில்லாத ஜனநாயகவாதியாக இருப்பார் என்பேதே எனது எதிர்பார்ப்பு. மேடையில் ஏறி சாதியத்திற்கு எதிராக பேசவும் தயார் என்ற உங்களின் அறிவிப்பே போதும். தாங்கள் உங்களை முழுமையான ஜனநாயகவாதியாக மாற்றிக் கொள்ளும்வரை அவ்வாறான சங்கடமான செயல்களில் உடனே ஈடுபட வேண்டும் என்பது எமது விருப்பமல்ல.

      எமது விருப்பம் மாற்றம் மட்டுமே! மாறுவோம் உலகை மாற்றி அமைப்போம்!

      • ஸாஹித்,

        சில விஷயங்களை தெளிவுபடுத்தியதற்கு நன்றி!

        நீங்கள் லூசுப்பய என்று சொன்னதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதை விட பல மடங்கு கடுமையான வசவுகளை, தனி மனித தாக்குதல்களை இங்கே பார்த்தாயிற்று. நீங்கள் லூசு என்றால் நான் பைத்தியமாக ஆகிவிடப்போவதில்லை. நீங்கள் அட என்ன புத்திசாலி என்றால் நான் பெரும் அறிவாளியாகவும் மாறிவிடப் போவதில்லை. இது உங்கள் கருத்துரிமை. நீங்கள் தவறான தகவல்களை கொடுத்துவிட்டு அந்த தவறை ஒத்துக்கொள்ளவும் மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் ஒழிய பொதுவாக நான் கடுப்பாவதில்லை. அஸ்கர் ஒருமையில் அழைத்ததிலும் ஒரு பிரச்சினையும் இல்லை. அவரிடம் எல்லா இடத்திலும் ஒருமை இல்லாவிட்டால் மரியாதை என்று இருந்தால் consistent ஆக இருக்குமே என்று மட்டுமே சொன்னேன். 🙂

        ஆனால் இன்னும் கொஞ்சம் idle curiosity பாக்கி இருக்கிறது. எதற்காக என் பின்னணி, பார்ப்பனீயம் என்ற சொல் எல்லாம் இங்கே கொண்டுவரப்பட்டது? நீங்கள் சமூகத்தை கெடுப்பதாக நான் எங்கே சொன்னேன்? என் பார்ப்பனீயம் பதிவில் என்ன கேட்டீர்கள், நான் பதில் சொல்லவில்லை? வெறும் idle curiosity -தான். ஏதோ தவறாக சொல்லிவிட்டீர்கள் என்றால் நீங்கள் எதையும் விளக்க வேண்டியதில்லை. 😉 பிரச்சினை எதுவும் இல்லை.

        வினவு கூட சமீப காலமாக எதையாவது சொல்லிவிட்டு அது தவறு என்று காண்பித்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். 🙂 அஹ்மதியா பதிவில் நடந்த விஷயம்.

        பெரிய விஷயம் இல்லை, இருந்தாலும் தெளிவாக்க மீண்டும் சொல்கிறேன். பழிக்கு பழி வாங்குவது என்று பி.டி. குமார் சபதம் செய்ததாக நீங்கள் எழுதவில்லை. துப்பாக்கி சூட்டுக்காக பழிக்கு பழி என்று எழுதி இருந்தீர்கள். பி.டி. குமார் எதற்காக பழி வாங்க நினைத்தார் என்பது உங்கள் கட்டுரையின் மையப் புள்ளியை எந்த விதத்திலும் மாற்றவில்லை. தவறாக புரிந்துகொள்ள, தேவை இல்லாமல் குழம்ப, வாய்ப்பிருக்கிறது என்பதை மட்டுமே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

        பார்ப்பனீயம் பற்றிய இந்த வார்த்தைகளை மிகுந்த தயக்கத்துடனே எழுதுகிறேன். விவாதம் திசை திரும்ப வாய்ப்பிருக்கிறது. நான் எந்த ஜாதியில் பிறந்தவன் என்பதை குறிப்பிடுவதே எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விஷயம். இங்கே சிலர் டேய் நீ குடுமி, நீ அம்பி, உன் ஜெநோடைப்பில் பிரச்சினை என்றெல்லாம் எழுதாவிட்டால் நானும் வீம்புக்காக நான் பிறந்த ஜாதியை குறிப்பிட்டிருக்க மாட்டேன். பார்ப்பனீயம் என்று நீங்கள் சொல்வது ஜாதி பிரச்சினைகளுக்கு பார்ப்பனர்கள் மட்டும் காரணம் என்று சொல்வது போல இருக்கிறது. ஜெர்மானியம் என்றால் நாசிசம் இல்லை. இஸ்லாம் என்றால் தீவிரவாதம் இல்லை. தேவரியம் என்றால் ஜாதி வெறி இல்லை. அப்படி நீங்கள் என்ன சொன்னாலும் அதையும் நான் எதிர்க்கத்தான் செய்வேன். பார்ப்பனீயம் என்பது சாதீய சிந்தனை இல்லாதவர்களை குறிக்காது என்று நீங்கள் சொல்வது காபிடலிசட் என்பது டெல்லியில் வாழ்பவர்களை மட்டுமே குறிக்கும் என்று நான் பழக்கத்தில் இருக்கும் வார்த்தைக்கு புதிதாக ஒரு வரையறையை ஏற்படுத்துவது போன்றது. சாதீயத்தை பார்ப்பனீயம் என்றுதான் சொல்ல வேண்டும், ஜாதேயம் என்று சொன்னால் உலகம் குடி முழுகிவிடும் என்ற பிடிவாதம் ஏன்?

        அப்புறம் தஞ்சாவூருக்கு பல முறை போயிருக்கிறேன். ஒன்றும் பார்த்ததில்லை. பார்ப்பனர்களில் ஜாதி வெறி இல்லாதவர்கள் இல்லை என்பது என் வாதம் இல்லை. எல்லா ஜாதிகளிலும் இருப்பதை விட பார்ப்பனர்களில் சதவிகிதப்படி அதிகம் இல்லை, அவர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது தவறு என்பதுதான். பறையனுக்கு பள்ளன் இளக்காரம் என்று நீங்கள் அறியாதவரா?

    • intha katturai alithiyavam periya poi pesuvan pola thevar imanu velai kolai seiya villai pakain karamaka thevar samuthayathai sernthavarkalal kolai seiyya pattar thevar patriya books padinga avara pathi therium avar oru ma manithar theiviga manithar antru

  5. நண்பர் ஆர்வி,

    பெயர்களைச் சரியாக உச்சரிக்கவும். 🙂

    இம்மானுவேல் சேகர்(ன்- அல்ல) , முத்துராமலிங்கத் தேவன் (ர்-அல்ல)

    பாயாசம்

  6. அருமையான கட்டுரை. ஆதிக்க சாதி சங்கங்களை தனது வாக்கு வங்கி அரசியலுக்காக, அவர்களை ஆதரிக்கும், கட்சிகளும் முக்கிய ஒதுக்கப்பட வேண்டியவர்களே!
    //காமராஜர் காலத்தில் நடந்த துப்பாக்கி சூடு என்றால் ஒரு ஐம்பது வருஷம் ஆகி இருக்கும். அதற்கு போன வருஷம் பி.டி. குமார் பழி வாங்க திட்டமிட்டாரா? என்ன ஒன்றும் புரியவில்லையே?//
    என ஆர்.வி. கேட்பது போல் எனக்கும் தோன்றியது. அந்த பகுதி கொஞ்சம் விளக்கப்பட வேண்டும்.

  7. ஒடுக்கப்பட்டவன் என்கிற போர்வையில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக விக்ஷம் கக்கும் அம்பி ‘நிழலுடன்’ ஒரு சூடான விவாதம்.

    http://vrinternationalists.wordpress.com/2009/09/15/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/

  8. Very informative. Even though I grew up near Madurai we were never taught or talked about this history. The contemporary history taught in school should be changed to include this kind alternate views also.Otherwise overwhelming majority of the kids have no idea of what their immediate ancestors went through. But having said that your armed revolution or any other violence will not solve this problem. Kids should know about the sins their forefathers committed and the system should work on NOT forgetting but forgiving the old sins. That way we can make sure it never happens again.
    Anyway thanks for the informative article

  9. கோடாலிக் காம்புகள்.

    நல்ல பதிவு. தோழர் சாகித், ஆனந்த் இருவருக்கும் எனது பாராட்டுகள். தோழர் இம்மானுவேலும் முத்துரமாலிங்கமும் தங்களது சாதிக் கொடியை நட்டு வைத்துக் கொண்டு சண்டை போட்டார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். அப்போது போலிஸ் மந்திரியாக இருந்தவர் கக்கன்.

    இம்மானுவேல் தனக்கு சமமாக உட்கார்ந்து விட்டார் என்று… முத்துராமலிங்கத் தேவர் தனது ஆட்களுக்கு கண்ஜாடை காட்ட; கூட்டம் முடிந்து வெளியே வந்த இம்மானுவேல் சேகரனை முத்துராமலிங்கத் தேவரின் ஆட்கள் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டி கூறு போட்டார்கள். அப்படி ஒரு சாதி வெறி பிடித்த கும்பல் அவர்கள். இன்னும் திருந்தாத இவர்கள்தான் தமிழனின் வளர்ச்சியை தடுக்கும் உன்மையான கோடாலிக் காம்புகள்.

    • முதுகுளத்தூரிள் பேச்சுவார்த்தை முடித்து பரமக்குடி வந்தபின்பு இரயில்வேபீடர்ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் வைத்து சாதி வெறி நாய் கலால் இமானுவேல் கொலை செய்யப்பட்டார், மதுரை பேருந்து நிலயத்தீலல்ல.

  10. மோதிக் கொள்ளும் அந்த இரண்டு ஜாதிகளும் தான் அடி முட்டாள்கள் என்று எண்ணியிருந்தேன் ஆனால் அதனினும் முட்டாளாக இந்த கட்டுரையாளர் இருக்கிறார்.”குரு” பூசைகளை மாறி மாறி நடத்தி அடித்துக் கொண்டால் தீர்வு வந்து விடுமா? அந்த ஜாதிகளில் உள்ளவர்களுக்கு எல்லாம் கிடைத்து விடுமா ?.கல்வி,இருக்க வீடு,சுகாதாரம் ,வாழ்க்கைத் தரம் பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா ? அதற்கு ஏதுனும் அமைப்பை நிறுவி தாழ்த்தப் பட்ட மக்களிடம் ஏதேனும் வேலை செய்திருக்கீர்களா ? அதெல்லாம் செய்ய மாட்டீர்கள் அதை விட்டு ஏ.சி அறைகளில் அமர்ந்துகொண்டு எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுகிற வேலையை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.இதில் ஆடு நனைகிறது என்று ஓநாய் வேறு (சாகித்) அழுகிறது .குரு பூசை போன்றவைகள் வெறும் கெத்து காட்டு கிற வேலை தானே தவிர அதனால் அந்த மக்களுக்கு ஒரு போதும் எந்த பயனும் இல்லை.

    • எழில் அவர்களே, இந்த பதிப்பை முழுவதும் படித்தேன் ஆனால் உங்களின் கமெண்ட் தான் தெளிவான முடிவுரை போல் இருந்தது.
      இந்த பதிப்பை எழுதியவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளது உங்கள் திருவாசகம்.  
      // ஆடு நனைகிறது என்று ஓநாய் வேறு (சாகித்) அழுகிறது .குரு பூசை போன்றவைகள் வெறும் கெத்து காட்டு கிற வேலை தானே தவிர அதனால் அந்த மக்களுக்கு ஒரு போதும் எந்த பயனும் இல்லை.// 
      உண்மையான் செய்தி, மக்களுக்கு பயனுள்ளதாக எழுதுவதை விட்டுவிட்டு
      சாதி வெறி பதிப்பை எழுதி வெந்த புண்ணில் வேளை பாச்சிகிறார்கள்.

      “தேவரும் தேவேந்திரும் ஒன்றே” என்று  Dr. N. சேதுராமன் அவர்கள் கூறுகிறார் 
      ஆதிக்க சாதியினர் என்று நீங்கள் சொல்லும் அவர்களே அடங்கிவிட்டர்கள். ஆனால் இவர்கள்தான் சாதி பத்தி பேசி ஆதிக்கம் செய்கிறார்கள். 
      மறைந்தவர்களை பற்றி பேசுவது மனித மாண்பு அல்ல 
      போயி வேள இருந்த பாருங்க இல்லன்ன சும்மா இருங்க அதைவிட்டு இந்த மாதிரி சாதி வெறி பதிப்பை எழுதி சதி அல்லது  சாதியை வளர்க்க வேண்டாம் சாகித், ஆனந்த் அவர்களே 

      • தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறி குறிப்பாக தேவர் சாதி வெறி இல்லையா என்ன? ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன் தேவர் குருபூஜை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துன்பங்களை அளிப்பவர்கள் சேதுராமனின் அல்லக் கைகள்தானே? தேவரும் தேவேந்திர்ரும் ஒன்று என்றால் சேதுராமன் எதற்காக தேவர் சாதி சங்கத்தை நடத்துகிறார்? தேவேந்திர இளைஞர் யாருக்காவது அவரது குடும்பத்து பெண்ணை மணம் செய்தால் இந்த ஒன்று என்ற பிராடு முழக்கத்தை நம்பலாம். இன்னும் திமிரோடு வாழும் சாதி வெறியைக் கண்டிப்பது சதியா இல்லை அதை சமத்துவம் என்ற பெயரில் மறைப்பது சதியா? தோழர் சாகித் சாதி, மத நம்பிக்கைகளைத் துறந்த ஒரு கம்யூனிசத் தோழர். இன்றும் இசுலாமிய மதவாதிகள் அவருக்கு மிரட்டல் விட்டவாறுதான் இருக்கிறார்கள். அவரை ஒநாய் என்று இழித்து ரசிப்பது உங்களது கோர மனப்பான்மையைக் காட்டுகிறது. சாதி வெறி வேண்டாம் என்ற கருத்து இருந்தால் முதலில் தேவர் பூஜையை நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையென்றால் இன்றைக்கும் அடங்கிப்போகாமால் கொந்தளிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிற உழைக்கும் மக்களுடன் சேர்ந்து அந்த சாதி வெறிக்கு தக்க பாடம் புகட்டி சமாதி கட்டுவார்கள்.

        • அன்பான இன்றய நண்பர்களே இந்த சாதி என்ற வார்தை நம் வாழ்கைஇல் தேவைஇல்லை . மனிதநேயம் வளர வழி செய்வோம் . அதிகம் படித்த மருத்துவ மேதைகள் கண்டுபிடித்த கிருமிதான் AIDS . அது பொல இந்த சாதி .சாதி ஒழிக என்ற பயரில் வெரியை தூண்டாதீர்கள் . நாம் யாருக்ம் தாழ்ந்தவர்கள் இல்லை நமக்கு தாழ்ந்தவர்கள் இல்லை

        • தென் மாவட்டங்களில் அடங்கிப் போகும் தேவேந்திரர்களைக் காண முடியாது வினவு!
          கார்த்திக் கூறுவதில் நல்ல செய்தியும் இருக்கிறது.

        • Dear Vinavu Comrades , I regret that again and again you are fueling the fire . The so called upper caste people in the region are extremely poor and socially backward. among them thevar rose and he was admired by both tribes . He never coo perated with the colonial government and opposed to the Justice party consisted of rich and powerful people ( Raja sir Annamalai chettiar, pattiveeran patti soundra pandi nadar )in that region . The same people to protect their interests joined congress and in a short time they became patriots under Kamaraj nadar. Kamaraj also protected The wealthy merchants of Virudu nagar ( Who were exploiting the poor farmers of the region and selling adulterated foods ) and also thefire industry and match industry owners also supported Kamaraj nadar . The anti establishment Thevar was a nuisance to their machinations and bitter ness and rivalry was created among the two tribes . I would like to ask you which college Immanuel studied and during which years he was in armed forces and also there is a theory that he partook in freedom struggle also . He was a member in Luthereran church and promised an M L A seat by Kama raj and he converted to HINDU religion and made his name Sekharan and was a trouble maker in parama kuddi Bazar . he went to the meeting and due to his rivalry in the Bazar he got murdered and later there was a worst state terrorism in Ram nad district and Thevar raised his voice and after 11 days his name was implicated and the trial was conducted and the judge ananda krishnan Aiyangaar declared that It was a shear political vendetta on the part of the govt he is still remembered by many people and why Vinavu is partial and communal like Pro sinhala Janatha vimukthi permuna which claims it selfa leftist organisation . working claas is supposed to consists of all castes and groups not scheduled castes alone d

      • karthick,

        தென்மாவட்டங்களில் போய் சென்று பாரும். ஆதிக்க சாதியினர் பற்றி தெரிந்துகொள்வீர்கள்.

        தோழமையுடன்,

        செந்தில்.

    • தங்களின் விமர்சனங்களூக்கு பதில் தருகிறேன். ஆனால் அதற்கு முன் தாங்கள் என்னை ஓநாய் என்று வருணித்தற்கு தெளிவான காரணத்தை கூறவும்.

    • Ezhil,

      Guru pooja not for showing cinema. This is for Thanksgiving, and reminding them with worship for their sacrifice. I am talking for Both Lord thevar and Mr. Immanuael.

  11. தோழர்கள் ஆனந்த் மற்றும் சாகித்தின் கட்டுரைக்கு பாராட்டுக்கள். ஒரு கருத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். முத்துராமலிங்கத்தின் குருபூசையை நடத்துபவர்களின் நோக்கம், சாதியாதிக்கத்தை நிலைநாட்டுவதுதான்.ஆனால், இமானுவேல்சேகரனின் குருபூசையை நடத்துபவர்களின் நோக்கம்,சாதியாதிக்கத்தை ஒழிப்பதாகத்தான் இருக்கமுடியும். கொலைசெய்தவனின் சமாதியிலும் மலர்வளையம் வைத்துவிட்டு கொலைசெய்யப்பட்டவரின் நினைவிடத்திலும் மலர்வளையம் வைக்கும் சாதி வெறியர்களின் நடிப்பை நம்பி நாம் ஏமாந்து விடக்கூடாது. இந்த சாதிவெறியர்களின் பகட்டான விளம்பரங்கள் போலித்தனமானது. இமானுவேல்சேகரனுக்கு மலர் வளையம் வைப்பவர்கள் அவரைக் கொலைசெய்த சாதிக்கு எதிராகப் பேசுவார்களா? ‍ தெக்கூர்பிச்சை.

  12. government ungaluku neraya salugaigal valanguthu (compare to other caste) athai stop panna sollunga naanga unagala samama nenekirom.Matravangaluku(other caste) enna salugaigal kodukirarkalo athaiye ungalukum koduka sollunga naanga ungala samama madhikirom. Ethuku thanithohuthi endrellam irukkuthu ellavatraiyum podhu thohuthiyakkatum appam naanga unagala samama nenekirom.

    • hi have you know the history you know u r enjoying the freedom who gave it ? British…Who got it from them ? your forefather’s…..Like that Quotas are given by the British….Who got it from them By our Leader Dr.B.R Ambedkar So Would u like to be a slave to the British Again no no….Like that Quotas are our Birth Right Know one have the rights to talk about

  13. நல்ல கட்டுரை. ஆனால் :

    ////தம் தொகுதிகளில் ஆதிக்க சாதியுணர்வைத் தூண்டி ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஓட்டுக் கட்சியிலுள்ள ஆதிக்க சாதியின் தலைவர்கள், சாதிய ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் போராடி கொலையுண்டு தன்னுயிரை தியாகம் செய்த இமானுவேல் சேசகரனின் கல்லரையில், மலர் வளையம் வைத்த கையின் மணம் மாறாமல் கொலை செய்தவனின் கல்லரையிலும் மலர் வளையம் வைத்து சாதி ஆதிக்கத் திமிரை புகழ்வதும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கொலை செய்தவனே கொலை செய்யப்பட்டவனின் நினைவு தினத்தை கொண்டாடும் அதிசயமல்லவா இது! ////

    இது போன்ற மிக நீண்ட வாக்கியங்கள் குழ்ப்பி, அர்தத்தை மாற்றிவிடுகின்றன. இந்த வாக்கியத்தில், இமானுவேல் சேகரன் சாதிய ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்தார் என்பது போல அர்த்தம் உருவாக்குகிறது. எனவே, எளிமையான, சிறிய வாக்கியங்களால் கட்டுரைகளை அமைக்கவும்.

    எழில் சொன்னபடி, குரு பூசை இமானுவேல் சேகரன் அவர்களுக்கு செய்வதால் பெரிய நன்மை எதுவும் வரப்போவதில்லை. வீண் பகையுணர்சி அதிகரிக்கவே வழி செய்யும்.
    நாடார் சாதி மக்கள் அமைதியாக, படிப்படியாக கடந்த 50 வருடங்களில் உழைத்து, படித்து, தொழில் செய்து முன்னேறியதை போல தலித்துகளும் முயல்வது தான் சரியான வழி. இட ஒதுக்கீட்டை சரியாக பயன்படுத்திகொள்ள முயல வேண்டும்..

    • தங்களின் சுட்டிக்காட்டலுக்கு சுயவவிமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். நான் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக இல்லாததால் இப்படிப்பட்ட குழப்பம் தரும் சொற்றெடராக அமைந்துவிட்டது.

      இன்று ஒடுக்கப்பட்டவார்கள் ஓரளவேனும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறத் தொடங்கியுள்ளது போராடினதால்தான். அதனால் சாதிய ஒடுக்குமுறை தொடரும்வரை எதிர் போராட்டஙகள் அவசியம் தேவை.

      • டெய், என்னடா பொராட்டம் வெஙாயம்?
        ஒரு மனுஷன் தன்னயும் த்ன்னை சார்ந்தவஙலயும் முன்னெர செஇதா அது பொது.

    • அதியமான் அவர்களே. குருபூசையில் நன்மை தீமை எல்லாம் பார்க்கமுடியாது, காலம் காலமாய் மிதி வாங்கியவனுக்க்க்குத்தான் வலி தெரியும். இட ஒதுக்கீடு யாரிடம் கேக்கச்ச்சொல்ரீங்க …டாட்டா,அம்பனி,மிட்டல்கிட்டேயா? இல்ல பல பண்ணாட்டு கம்பெனி கிட்டயா?..அய்யா..போகாத வூருக்கு வழி காட்டாதீங்க….

      • என்னைப் பற்றி உங்களது பின்னூட்டங்களில் குறிப்பிட்டதற்கு திரு அதியமான் ,கார்த்திக் அவர்கள் இருவருக்கும் நன்றி.அனைவருக்கும் மொத்தமாக எனது முதல் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக ,அதற்கான விமர்சனங்களுக்கு பதிலாகவும் இதை எழுதுகிறேன்.சாதி பிரச்சினையை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.இவ்வாறு எழுதுவது பிரச்சினையை மேலும் மேலும் வளர்க்குமே தவிர அதற்கு தீர்வு தராது. தேவர் குரு பூசைக்கு எதிராக சேகரன் குரு பூசையை கொண்டாடுவது என்பது வாதத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் அது எந்த தீர்வையும் தராது.இது தேவர் சாதி வெறிக்கு எதிராக தலித் சாதி வெறி என்ற அளவில் முடியுமே தவிர சாதி வெறியை ஒழிக்கவே முடியாமல் தொடர்ந்து மோதிக்கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கடத்தி விடும்
        நாடார் சாதி மக்கள் எவ்வாறு சாதி ஒடுக்கு முறையை வென்றார்கள் ? அவர்கள் தங்களின் வளர்ச்சியிலேயே குறியாக இருந்து தான் சாதித்தார்கள் அவர்கள் இவ்வாறு குரு பூசையா நடத்த்திக் கொண்டு இருந்தார்கள் ?.இன்று தேவர் சாதியினரை விட பல மடங்கு முன்னேறிச் சென்றுவிட்டார்கள்.இம்மாதிரியான செயல்கள் அஜித் – விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது மாதிரியான முதிர்ச்சி அற்ற செயல்களே.தேவர் குரு பூசையை முதலில் நிறுத்த சொல்லுங்கள் என்று வினவு கூறி இருக்கிறார் அய்யா ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஒரு முட்டாள் தனத்திற்கு இன்னொரு முட்டாள் தனம் எப்படியா தீர்வாகும் ? அவன் முட்டாள் தனம் செய்கிறான் ஆகவே நானும் முட்டாள் தனத்தை பதிலுக்கு செய்வேன் என்று சொன்னால் எங்கே போய் முட்டிக் கொள்வது ?
        அதனால் தான் மீண்டும் கூறுகிறேன் தலித் மக்களை முன்னேற்ற வேண்டுமானால் அவர்களின் கல்வி,பொருளாதாரம்,தொழில் என்று முன்னேற்ற சிந்தனைகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர மோதல் சிந்தனைகளை அல்ல.
        என்னைப் பற்றி சொல்ல விரும்புகிறேன் நான் இந்த மோதிக் கொள்ளும் இரண்டு சாதிகளையும் சேராதவன்.அந்த பகுதியையும் சேராதவன்.இட ஒதுக்கீடு அம்பானிகளிடமா கேட்க முடியும் என்று நாகராசன் என்பவர் கேட்கிறார் இவருக்கு அரசாங்கம் தரும் கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு பற்றி எதுவும் தெரியவில்லை போலும்.

        சாகித் அவர்களே உங்கள் மனம் புண் பட்டிருந்தால் வருந்துகிறேன்.இங்கே நடக்கும் சாதி மோதல்களில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை.நீங்கள் முதலில் இஸ்லாத்தில் நடக்கும் ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம்,இன்னும் உலகில் ஜிகாத் நடத்தும் முட்டாள் தனமுள்ள ஒரே மதமாக இருக்கும், தங்களை தமிழர்களாக கருதாமல் இஸ்லாமியர்கள் தனி என்று கருதும் மன நிலை பற்றி எழுதுங்கள் அப்பொழுது நாங்கள் உங்களின் நேர்மையை ஏற்றுக் கொள்கிறோம்.நீங்கள் அவ்வாறு செய்ய முனைந்தால் விரைவில் உங்களுக்கு ஒரு பாத்வா நிச்சயம்.ஆனால் இந்த விசயத்தில் மட்டும் இந்த முற்போக்கு வாதிகள் ஒரு கள்ள மவுனத்தையே பதிலாகத் தருவார்கள் .

        நீங்கள் இவ்வாறு தேவை இல்லாமல் எழுதுவது இது பின்னர் தேவர் இஸ்லாமியர் மோதல் என்று இன்னொரு முட்டாள் தனத்திற்கு வழி கோலும் என்று நான் அச்சப் படுகிறேன்

        நன்றி மீண்டும் சந்த்திப்போம்

      • எழில் அவர்களே! நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் கருத்தை நாகரீகமாக அதாவது கேவலமான சொற்களில்லாது கூறுங்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை. அப்படி வருத்தப்படுவதும் நேர்மையாகாது. ஒருவர் வருத்தப்படுவார் என்பதற்காக உண்மையை மறைக்கவோ நமது கருத்தை கூறாமல் இருக்கவோ வேண்டிய அவசிமில்லை.

        நான் எனது 15 ஆவது வயதில் நடைமுறையின் பித்தலாட்டங்களைக் கண்டு இசுலாத்தைவிட்டு வெளியேறியவன். 24 வயதில் இசுலாமியக் கோட்பாட்டடினை நிறைந்த அளவு அறிந்துக்கொண்டு முழுமையான ஒரு கம்யூனிஸ்டாக மாற்றிக்கொண்டவன். காலீது என்பவரின் கெள்விக்கு அடுத்து தந்துள்ள எனது மறுமொழியை தாங்களும் படித்துக் கொள்ளுங்கள்.

        பூனை கண்ணைக்கட்டிக் கொண்டு உலகமே இருண்டுவிட்டதாக நினைத்ததாம். அதுபோல் உள்ளது உங்கள் கருத்து. கலவரம் தொடங்குமா தொடங்காதா என்பதை நடைமுறைதான் வழி நடத்தும். “நான் அவனில்லை” என்று கூறுவதைவிட நடப்புகளை அறிந்து அதனை மாற்ற முயற்சிப்பதே கலவரத்தை தடுப்பதற்கான வழி. அதைவிட்டு விட்டு இழி படுத்தப்படுவதை கைகட்டி வாய்பொத்திக்கொண்டு காசுபணம் நிறைய சம்பாதித்து ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறிக் கொள்ளனும் என்று வரட்டுத்தனமாக சித்திக்கக் கூடாது. உங்களைப் பற்றி எதுவும் எழுதிவிடக்கூடாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதினா மட்டும் உச்சி மோந்துக்குவீங்க. அப்படி ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதினா இந்துக்கலெல்லாம் கலவரம் செய்ய மாட்டாங்களோ?

        தங்களுக்கு மேலும் சந்தேகம் எழுந்தால் நடந்த நிகழ்சிகைளக்கூட அம்பலப் படுத்துகிறேன். அது இக்கட்டுரைக்குத் தேவையில்லை என்பதால் விரிவாக எழுதவில்லை.

        அதியமான், கார்த்திக் ஆகியோருக்கும் இதே பதில்தான்.

      • நண்பர் எழில், நாத்திகர் ஒருவர் கீழ் சாதி மக்களின் இறை ஊர்வலம் மேல்சாதி தெரு வழியாக செல்வதற்கு நீடிக்கும் தடைக்கு எதிராக போராடி கீழ் சாதி மக்களுக்கு அந்த உரிமையை பெற்று தருவது என்பது அந்த சமயத்தில் முதன்மையான தேவை… அதை தவிர்த்து, இறை நம்பிக்கையே ஒரு முட்டாள்தனம், இதனை பின் பற்றும் முட்டாள்களுக்காக எதற்கு நான் போராட வேண்டும் என நினைப்பது சரியானது அல்ல. அதே போலதான் இந்த குரு பூசை விவகாரங்களும் நோக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து…

      • எழில் ஆவர்களே அரசாங்கம்தான் பண்னாட்டு கம்பெனி களுக்கும் ,உள் நாட்டு தரகுமுதலை களுக்கும், நம் நாட்டை பங்கு போட்டு தந்துட்டானே… தடுக்க்க்கி விழுந்து எழுந்தா கல்வி வியாபார கடைகள்,[பள்ளி கல்லூரிகள்] ப.யூ.பள்ள்ளிகள் மூடுவிழா..பொதுத்துரை அனைத்தும் தனியாருக்கு . அரசு?..சும்மாபேருக்கு, மேல் உதடு இல்லாதவனை புல்லாங்குழல் வாசின்ற மாதிரி இருக்கு இட ஒதுக்கீடு.

      • //நாத்திகர் ஒருவர் கீழ் சாதி மக்களின் இறை ஊர்வலம் மேல்சாதி தெரு வழியாக செல்வதற்கு நீடிக்கும் தடைக்கு எதிராக போராடி கீழ் சாதி மக்களுக்கு அந்த உரிமையை பெற்று தருவது என்பது அந்த சமயத்தில் முதன்மையான தேவை//

        பகத். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதிக்கசாதியினருக்கிணையான வழிபாட்டு உரிமையைப் பெற்றுத் தருவதன் மூலம் இன்னும் ஒரு ஆதிக்க சாதி உருவாகக் காரணமாக இருக்க நாத்திகன் என்ற முறையில் நான் விரும்பவில்லை. கடவுள் வழிபாடு செய்யும் உரிமை யாருக்கெல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் அதை தனக்கே தனக்கு என வைத்துக் கொண்டு அவ்வுரிமை இல்லாதவர்களைத் தாழ்வாக நடத்துவது பல்லாயிரம் ஆண்டுகால மனித வரலாறு. வழி பாட்டில் சம உரிமை என்ற பெயரில் இன்னும் ஒரு சில நவீன பார்ப்பனர்களை (neo brahmins) உருவாக்குவது மூடத்தனம். என்னை மதிக்காத சாமியை நான் ஏன் மதிக்க வேண்டும் என்று கேட்டு, போயும் போயும் பூசனை செய்யும் உரிமைக்குப் போராடும் வேளையில் கல்வியிலும், கலையிலும், வணிகத்திலும், விளையாட்டிலும் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேறுவதுதான் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சரியான வழி. இதற்கு உதவுவது நாத்திகர்களுக்கு உகந்தது. ஆதிக்க சாதியினர் மணியடிக்கட்டும், தீபம் காட்டட்டும். எக்கேடு கெட்டும் போகட்டும்.

        இந்தக் கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பிடப்பட்ட குழுவினர் (இனத்தவர்கள் என்று சொல்வது ஏதோ தேவர்களும் தலித்துகளும் வேறு வேறு குரோமோசோம் எண்ணிக்கை உள்ளவர்கள் என்று நம்புவது போல் இருக்கிறது) ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதை கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். ஆதிக்க சாதியினருக்கு தாழ்த்தப் பட்ட மக்கள் மீது சக மனிதன் என்ற மரியாதை இல்லாததே இதற்கெல்லாம் காரணம். ஆதிக்க சாதியினர் திருந்தாதவரை, தாழ்த்தப் பட்டவர் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாத வரை – சொல்ல வருத்தமாக் இருக்கிறது – இந்தப் பிரச்சினைகள் இன்னும் குறைந்த பட்சம் நூறு வருடங்களாவது தொடரும் என்றே நான் நினைக்கிறேன்.

      • ஐயா எழில்,
        மதி இந்தியாவுக்கு பின் உள்ள என் பதிலை படித்துக்கொள்ளுங்கள். பொருளாதாரம் பற்றிய புரிதல் தங்களிடம் இல்லாததால் இவ்வாராக நீங்கள் பதில் எழுதியுள்ளீர்கள். இது பற்றி வேறு கட்டுரையில் விவாதிப்பபோம். எனது அடிமை-அது அல்லாவின் ஆணை என்ற புத்தகத்தை படியுங்கள். கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கும்.

  14. Thanks for Mr. sadiq & Anand for essay of community Leader Imanuvel. Dr. Sethuraman has said Devar & Devendran are equal then why he didn’t attend the Imanuvel’s 52nd Anniversary Function held on 11th Sept.’2009.

  15. nalla karuthu, neenga sama urimai ketkiringaaa, athu kandipa kidaikum . athuku neenga seiya vendiyathu enna na? govt. valangum thalthapatta makkaluku kidaikum salukaikala vittu vida vendum .. athu mattum ungaluku kevalam ilaiyaa… OBC ku enna Scheme oo Athuthan SC kum nu thariyamaaa sollu SC Kotta enkaluku vendam ena sollu
    nanum usanthavan ena sollu…. mudiuma unnal athu…………………

  16. வாழ்த்துக்கள் தோழர் சாகித், ஆனந்த்.
    சிறப்பான கட்டுரை

  17. வாய்யா,மறவர்குலமாணிக்கமே, நாங்க மதிக்கிறோம்னு சொல்ற‌திலேயே உன் சாதிவெறி தெரியுதே! முதல்ல உன் வீட்டு மாடு செத்தா நீ தூக்கு;உன் வீட்டு பொணத்துக்கு நீயே குழி வெட்டு; நீயே எரி; நீயே கொட்டையும் அடி; நீயே மொட்டையும் அடி,அப்பறமா நீ எங்களை மதிக்கலாம். குப்பை அள்றது,சாக்கடை அள்றது, மலம் அள்றது…உள்பட இன்னும் பல வேலைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லாமலேயே உங்களுக்கு கொடுத்திடலாம். என்ன சம்மதமா? சலுகை கொடுக்காதேன்னா, நீ ஏன் பேக்குவேடு[பி.சி],மோஸ்டுபேக்குவேடு[எம்.பி.சி],சீர்மரபினர்ன்னு சலுகை கேட்டு அரசாங்கத்தைப் புடிச்சிக்கிட்டு தொங்குறியே ஏன்? ‍

    நரகாசூரான்பரம்பரை‍‍‍‍ ‍‍‍‍

  18. yaru unna antha velaiyaellam panna solra.Nee pannatha naangale ethuva irunthalum parthukirom.Unmailey villagela mattum ulla ST candidates than innaikum mela varama kastapaduranga…..avankalukku govt ella salugaiyum pannatum…i wil appreciate that but oru sila villagela SC candidates and cityla ulla SC candidates ellarum well setteleda than irukiranga avangaluku ethuku GOVT help pannanum? Neenga unmailey thiramai irunthal ellarkitayum samama ethirkondu (study wise,job wise,lifestyle wise,characterwise,behaviourwise,…….etc) seyalpadunga……….athavitutu Muthuramalingathevar ayya nallavara kettavaranu aaraichi panniktu………thiyagi immanuvel sekarana theivamaakka nenekirathum entha vithathula niyayam. Ithu 2009 ……….intha timela 1963 layum athuku munnadiyum iranthavangala pathi ippa aen aaraichi pannureenga. Ippavellam naangellam silenta than irukkom thevai illama pirachanaiya uruvaakatheenga.Neengellam innaikum kinatril vaalum thavalaithan…………….illaiyina itha pathi innum pesuveengala…………world la tamilnadu matum naadu kidayathu……….india mathuri evalavo countries irukku angellam ponga velai parunga lifestyla change pannunga…….appam ellarum respect kodupanga neengalum change aahuveenga……..ellarum change aahuvaanga. Itha vitutu puranam pesinal …………………entha changeum varaporathilla naangalum summa irukka porathulla………………………..

    • மறவன் அறிவது,
      ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் – தன
      ஊற்றுப் பெருக்கால் உலை கூட்டும்
      சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
      கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

      திரித்துக் கூறப்பட்ட உண்மைகள் இன்று வரலாறாக கற்பிக்கப் படுகின்றது.
      ஆனால் நீண்டநாட்களுக்கு மூடிவைக்க முடியாது.
      நாம் எல்லாம் தாய்-பிள்ளை என்றுதான் தேவர் நினைத்து வைத்திருந்தார்.
      பாழாய்ப் போன அரசியல் சூத்திரதாரிகள் இரண்டு இனங்களைப் பிரித்து வெற்றி கண்டுவிட்டனர்.
      இனி வரும் காலத்திலாவது விழித்துக் கொள்வோம்.
      டாக்டர்.சேதுராமன், ஐயா.பொன்.பரமகுரு போன்றவர்கள் இதனைப் புரிந்து வைத்துள்ளார்கள்.
      இப்பொழுது நகைமுகன் அவர்களும் “தேவர்-தேவேந்திரர்” ஒற்றுமைக்கான நல்ல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
      டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கும் இது பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டுள்ளன.
      நாம் என்றுமே ஆக்க சக்திதான்!

      சந்தனக் கட்டையை எவளவு தேய்த்தாலும் அது நல்ல வாசனையைத்தான் தரும்.
      அது போன்று உங்கள் படிப்பு- உங்கள் பிறப்பு இவை இறப்பு வரை சிறக்கவேண்டும்.
      கனிஇருப்ப காய் கவர்ந்தற்று.
      “எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுவனே அல்லாமல்
      யாதொன்றும் வேண்டேன்.”
      krish.kanegendran

  19. Neenga passport eduthu foreign countries ellam poga koodathunu yarum solla maatanga……………..antha mathuri solrathuku yarukkum rights kidayathu…………….GOVT evalavu salugaigal valankuthu………..studies…….interviews….oppurtunities.(railway departmentla yaru athigama work panra?……) ithai ellam use panni mela vara parunga. Thevai illama thevar apdi ipdinu sollatheenga. Ella saathikaranukum avan avan saathi mela patru undu athu intha genmathila aliyathu but oru naal kandippa aliyum, aana atha parka nama irukka maatom.MUDHALIL UNGA LIFE STYLA CHANGE PANNUNGA APRAM ELLAM AUTOMATICA CHANGE AAGUM.

    • டேய், கூமுட்டை ஒனக்கு ஒரு எழவுமே தெரியாது போலத்தெரியுது. ஊர விட்டுப் போகச் சொல்றீயா. இன்னும் உங்க சாதித்திமிர் அடங்கலியேடா. இரண்டாம் நரகாசுரன்.

  20. /*** சாதிய ஏற்றத் தாழ்வற்ற சகோதரத்துவ கொள்கையுடைவர்கள் நாங்கள் என்று கூறும் இசுலாமியர்களும் நாட்டுக்குள்ளேயே ஒரு நாடுவைத்து அரசாளும் இவர்களுக்கு துணைபோவதும் நாட்டுநடப்பாகத்தான் உள்ளது. ***/

    நீங்கள் இந்த இடத்தில் குறிப்பிடுவது எதைப்பற்றி என்று எனக்கு புரியவில்லை. தயவு கூர்ந்து தாங்கள் விளக்கவும்.

    • திருவாடானைத் தொகுதியைச் சேர்ந்தது கப்பலூர். இத்தொகுதி எம்.எல்.ஏ. இராமசாமி. இவர் கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். இப்பகுதி கப்பலலூர் நாடு என்று அவர்களால் அழைத்துக் கொள்கின்றனர். உஞ்சனை, எழுவன் கோட்டை, எரவுச்சேரி, ஆப்பநாடு, காணாடு, கல்வாரி நாடு என்று இன்னும் பல நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுடைய அம்பலங்கள் மாலை அனுப்பினாத்தான் பிற சாதி மக்கள் திருமணம் செய்ய முடியும். திருமணமும் செல்லுபடியாகும். மீறி திருமணம் செய்தால் அவர்களை ஊரைவிட்டு அந்த சாதி மக்கள் தள்ளிவைத்துவிட வேண்டும். கப்பலூர் ராசா இராமசாமிபத்தி கட்டுரையில் தந்துள்ளேன். இந்த ராசாவுக்குத்தான் தொண்டி, எஸ்பி பட்டினம் போன்ற பகுதியிலுள்ள இசுலாமியர்கள் ஓட்டுப் போடுவாங்க. ஜமாத்துகலெல்லாம் கண்டிஷனா சொல்லிவிடும். அது மட்டுமில்லை. மறவர்களை வாங்க அண்ணே என்று விளிப்பதும் ஒடுக்கப்பட்டவர்களை ஏய் சுப்பு இங்க வா, போ என்று ஒருமையில் அழைப்பபதும் நடைமுறையில் உள்ளது. ஒரு 16 17 வயது சிறுவன்கூட அப்படி அழைப்பதும் சாதாரணம்.

      இது இன்றைக்குள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் செல்லுபடியாக வில்லை. அதனால் “அய்யா என்று ஒருவார்த்தைக்கு மறு சொல்லு சொல்ல மாட்டாய்ங்க. இன்னிக்கு என்னான்னா பதிலுக்கு பதில் பேசுறாய்ங்க” என்று ஆதங்கப் படுபவர்கள் நிறைய உண்டு. இசுலாமிர்கள் அதிகமுள்ள கடரற்கரைச் சார்ந்த பகுதிகள் முழுவதும் இவ்வாறு உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். பாண்டிச்சேரி போன்ற நகரங்களில் கூட நிலபுலன்கள் வைத்துள்ளவர்களிடம் இந்த பண்பாடுதான் உள்ளது. புதிய தலைமுறையில் சிறிது மாற்றம். விவசாயம் சாராத தொழிலுக்கு மாறிவிட்டவர்களிடம் மட்டும் இது குறைந்துள்ளது. இதுவே எமது கட்டுரையின் சுட்டிக்காட்டலுக்கான அடிப்படை. கட்டுரைக்கு இது முக்கிய கருப்பொருள் இல்லாததால் விரிவாக எழுதவில்லை.

  21. The article seems to be an outburst devoid of facts. In addition, this article doesn’t provide any constructive suggestion for the oppressed to look forward and improve.

    //அன்றைய நாளில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர்// Please go to Nadar Bazar in Kamuthi, you will find suppressed Harijans (this is what Mahatma Gandhi used) working for them and calling the Nadars as IYYA. As stated in the article, Nadars were also suppressed alongwith Harijans, but look, where Nadars are and there is a lesson for the suppressed.

    //இக்கொலைக்காக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பார்வார்டு பிளாக் என்ற கட்சிக்குத் தாவி அக்கட்சியையும் தேவர் சாதிக் கட்சியாக மாற்றியவர் இந்த முத்துராமலிங்கத் தேவர்//
    Thevar was the president of Forward Bloc (Tamil Nadu unit) in 1948. The article states that Thevar was expelled from Congress after 1957. I don’t know how can Kamarajar can expel someone, who was not his party?

    Thevar Jeyanthi and Kurupujai have been celebrated since his death. The number of people gathering in pasumpon is increasing year by year. This is an unfortunate fact. I wish Thevar people focus on their studies and employment instead of developing hatred against a particular community.

    The problem lies amongst the Harijans. J. K. Rithis belongs to thevar community, the Harijans voted heavily for him, because he gave lot of money. Had harijans voted for Brisilla Pandian and showed the strength, people would have taken you seriously. I don’t think anybody is going to take Harijans seriously anymore. Instead of writing this kind of articles, spend time with the harijan kids and educate them. You will be celebrated one day.

  22. நண்பர்களே,

    உங்களைப் பார்த்தே எழுதத் துவங்கினேன்.
    உங்களிலிருந்தே பயணத்தைத் துவக்குகிறேன்.
    என் பிளாக்கிற்கு வருகை தந்து தங்களின் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
    http://yogarajbabu.blogspot.com/
    மிகுந்த நேசத்துடன்
    யோகராஜ் பாபு.

  23. tholar Sathik avarkale, romba nalla katturai, Nantri, itharkku VINAVUkkum en nantri. Neengal ontrai suththamaka maranthuvitteerkal allathu ariyavillai entru ninaikkiren, Intha Mukkulaththor saathiyinar thalithkalai mattum illai, pira saathi makkalaiyum adimaiyaaka vaiththullanar, thalithkalaivita kevalamaaka nataththukiraarkal, ithu varanta thenmaavattangal illai, Nagai, Thanjai maavattaththil, miratti ivarkaludaiya nilangkalai vangi kondu, avarkalin thennanthoppileye avarkalukku kudisai kattikodutthu, thotta velai parkkavaikkiraarkal. Tea kadaiyil thani class ullathu. Ithu thambikottai entra oorin innum natanthukondullathu. innum pala kathaikal ullathu. thalthapatta inaththinaraavathu paravaillai, ivarkalukku pOraata yarum illai, kaaranam ivarkal thaalththapattavarkal illai. perumbalum koolivelaiye ivarkalin tholil. Thamilaaraay naam ontrinaiyaavittal nam inam vata indiya parpanarkalaal seekkirame alikka paduvom. ithan thodakkamthaam Ealem.

    • நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

      நாடார்கள் முன்னேறியதற்கு பிரதான காரணங்களோடு அவர்கள் உழைப்பைச் சொல்ல வேண்டும். 25 காசுதான் லாபம் என்றாலும், ஆவின் பால்பாக்கெட்டுகளை போய் வாங்கி வந்து விற்பார்கள். அவர்கள் குடும்பமே கடையைச் சுற்றி கடை வேலைகள் செய்து கொண்டு இருக்கும். கடும் உழைப்பாளிகள்.

      இன்னொரு காரணம் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. பக்கத்து வீட்டுப் பெரிசு ஒன்று சொன்னது – காமராஜர் ஆட்சிக் காலத்தில் ‘வளர்ந்தவர்களான’ வசந்த் அண்ட் கோ, குமரி ஆனந்தன் முதலானோர். காமராஜர் காலத்தில் ஆட்சியின் மூலம் பெற்ற பணத்தை வைத்து இப்படி (நாடார் சமூக உணர்வோடு) வளர்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. கண்ணதாசனும் வனவாச்த்தில் இதனைத்தான் சொல்லி இருப்பதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் இது மட்டும் காரணம் அல்ல – நாடார்களுடைய கூட்டிழைப்பு இருந்தால் தான், இந்த மாதிரி பணம் இருந்தால் கூட ஜெயித்து இருக்க முடியும்.

      ஆனால், இப்போது ரிலையன்ஸ், சுபிக்சா முதலானோர், இந்த மக்களின் வயிற்றில் அடிக்க வந்து விட்டனர்.

  24. நாடார் சமூகத்தினரின் விடுதலை வெறுமனே காசுபணம் சப்பாதித்ததால் மட்டுமல்ல. அவர்களும் கடுமையான போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதில் மிகப்பெரிய போராட்டம் தோல்ச்சீலை போராட்டம். அதற்கான பெரியாரின் பங்களிப்பு மகத்தானது. தனது சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கிறித்துவத்திற்கு மாறியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்கள். அதனால் ஆர்.எஸ்.எஸ் சின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மண்டைக்காடு கலவரங்களை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? நிறைய அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அதியமான், கார்திக், எழில் போன்றவர்களே!

  25. Dear irantaamnarakasuran,
    Unnaiye evenda oora vitu poga sonnadhu….loosu……unakellam arive kidayatha……….onnu sonthama yosikanum or solratha ketkanum………intha rendum ippa varaikum illathathinalthane ippa varaikum neenga apdiye irukkireenga. Foreign poi ulaichu unnoda family statusayum unnoda samoogathoda statusayum oru nalla nilamaiku kondu vantha ellarum respect kodupanga……ellame maaridumnu sonnen……………….athai vitutu naanga sandai potu pirachinai pannuvomnu nenecheenganna …….athu sariyana vali kidaythu………..Unakku oru visayam solren ……..neengellam pesura madurai and pasumpon districtla irunthu (thevar caste people) evalavo peru kastapatu velai parkiranga avanga familya gavuravama vachukiranga……….(ivangellam oora vita vanthutanga?)…………so loosuthana nee think pannatha

  26. Dear irantaamnarakasuran,

    Singapore,qatar, dubai,oman,bahrain,kwait,saudi…………..ingellam madurai…ramnad….pasumpon….sivagangai area many people(thevar community) are working here(hard work).Do you know gulf countries climate……..? ………………………………what do you mean by narakasuran…………………….samoogathuku kedu vilavippavan….so alikkapada koodiyavan……………….read mahaparatham…there its mention

    • ராம்னாடு சரி,சிவகங்கை சரி, பசும்பொன் னுன்னு போட்டிரிக்கியே அப்பிடி ஒரு மாவட்டம் எங்கப்பா இருக்கு? உள் நாட்டுல வேலை செய்து பொழக்க முடியாத கொடும ஏன் இன்னும் இருக்குன்னு கொஞ்சம் யோசி. நீ ஏதோ சாதிகடந்தவன் மாதிரிப் பேசுறீயே, உன் சாதிக்காரனோட உக்காந்து பேசயில அடுத்தவன என்ன்மாதிரித் தரக்குரவாப்பேசுர. மேலவளவு, கீழவெண்மனி, தின்னியம்,தாமிரபரணீ,….எவ்வளவு ஊரு, பாப்பப்பட்டி, கீரிப்பட்டி…. எவ்வளவு அக்கிரமம். சட்டக்கல்லூரில போட்டபோடுலதான கொஞ்சமாவது பயப்பட ஆரம்பிச்சிரிக்கீக. ……இது தொடரும். ‍ மூன்றாம் நரகாசுரன்.

      • நரகசுரா சட்ட கல்லூரி பத்தி சொன்னிக அதுல இருந்தெ புரின்சுகிரனும் ஒவ்வொரு இடமும் விதிதியாசம தான் இருக்கு அதனல ஒட்டு மொத்தமா எல்லாரையும் ஒரெ மதிரிநெனைக்க குடாது. இரந்தவர்கலை வைத்து வாக்கு வாதம் பன்னுவது எல்லாம் வீன். முடிந்தால் அவனை உன்னஒடு இனை இல்லை என்ரால் வழிவிடுங்கல். இனி வரும் தலை முரையவது ஒட்ருமையக இருக்கட்டும்

  27. Dear devander, You only sucking others not other people.We are only fucking you so dont use any these type of(suck) word,it will shame for you because it will effect for you only…………………..(this is your word…………… if u want 2 suck other that is ur wish but Devendrars r not ready to show u).

  28. நடப்பை அப்படியே சொல்லும் மிக வலிமையான கட்டுரை (வழக்கமான புதிய ஜனநாயகன் ட்ரேட் மார்க் மாமாபயல் போன்ற இன்னபிற வார்த்தைகள் இல்லாத கட்டுரை )

    நிஜமாகவே அங்கே இதுதான் நடக்கிறது .

    ஆனால் எனக்கு எழிலின் பின்னூட்டம் மிகச்சரி என தோன்றுகிறது ,

    சாகித் , மற்ற தோழர்கள் எல்லாம் உங்க மதத்துக்குள்ள போய் பிரச்சாரம் பண்ண முடியாது , அது ஏன் என்று உங்களுக்கும் தெரியும் ,

    அதிலிருந்து வெளியே வந்த உங்களை போன்றவர்கள்தான் செய்ய முடியும் , அதை முதலில் முழுதாக செய்ய முயலுங்கள்

  29. சாகித்,

    நாடார்கள் போராட்டம் “மட்டும்” செய்துகொண்டிருந்தால், இன்றும் பெரிய விமோச்சனம் ஏற்பட்டிருக்காது.
    காசு, பணம் சம்பாதிப்பதை பொத்தாம் பொதுவாக சொல்யிருக்கிறீர்கள். முதலில் அவர்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்தவம். ஏராளமான கல்வி நிலையங்கள் அமைத்து, கல்வி அறிவு பரவ வழிவகை செய்தனர். அடுத்த‌து மிக‌ முக்கிய‌மாக‌ அவ‌ர்க‌ளின் ஒற்றுமை. நாடார் உற‌வின் முறை என்று ; த‌மிழ‌க‌த்தின் ப‌ல‌ ப‌குதிக‌ளில் சென்று சிறு வ‌ணிக‌ம் முத‌ல் ப‌ல‌ இத‌ர‌ தொழில்க‌ள் வ‌ரை க‌ற்றி, ஆர‌ம்பித்து வ‌ள‌ர்ந்த‌ன‌ர்.
    த‌ன் உற‌வின‌ர் ம‌ற்றும் சாதி இளைஞ‌ர்க‌ளை த‌ம்முட‌ன் சேர்த்துகொண்டு வ‌ள‌ர்ந்த‌ன‌ர். த‌மிழ்நாடு மெர்க‌ன்டைல் வ‌ங்கி, ஹெச்.சி.எல் போன்ற‌ பெரும் நிறுவ‌ன‌ங்க‌ளை நிறுவின‌ர். ஹெச்.சி.எல் க‌ம்பெனி ந‌ட‌த்தும் எஸ்.எஸ்.என் பொறிய‌ல் க‌ல்லூரிதான் இன்று த‌மிழ‌க‌த்தின் மிக‌ சிற‌ந்த‌ க‌ல்லூரியாக‌ (கிண்டி, அண்ணா பொறிய‌ல் க‌ல்லூரியை விட‌ சிற‌ந்த‌தாக) க‌ருத‌ப்ப‌டுகிற‌து. அதில் சேர‌ ந‌ன்கொடை கிடையாது. மெரிட் ம‌ட்டும்தான். ப‌ல‌ ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு ஸ்கால‌ர்ஷி மான்ய‌ம் அளிக்க‌ப்ப‌டுகிற‌து. மிக‌ அருமையான‌ த‌ர‌ம் ம‌ற்றும் சேவை. ஜேப்பியாரின் நிறுவ‌ன‌ங்க‌ள் இருக்கும் அதே சாலையில் தான் இதுவும் உள்ள‌து !!

    இது போல‌ அறிவின் துணை கொண்டு, உழைத்து முன்னேறுவ‌து தான் விவேக‌ம். இல்லை, போராட்ட‌ம் ம‌ட்டும் தான் செய்வோம், என்றால் மேற்கொண்டு பேச‌ என்ன‌ இருக்கு ? அன்னிய முதாலாளிகள் பற்றிய உங்க‌ ம‌றுமொழிக‌ள் பார்த்தேன். ப‌தில் சொல்லும் அள‌விற்க்கு அதில் ஒன்றும் இல்லை. தொழிலாள‌ர்க‌ள் ர‌வுடித்த‌ன‌ம் என்று நான் சொன்னேனா ? ஊழ‌ல் மிகுந்த‌ தொழிற்ச‌ங்க‌ங்க‌ள், நேர்மையில்லாம‌ல் ஓ.பி அடிக்கும் தொழிலாள‌ர்க‌ள் ப‌ற்றி சொன்னேன். வார்த்தைக‌ள் மாறும் போது அர்த்த‌ம் மாறும். உங்க‌ளின் புரித‌ல் மேலோட்ட‌மான‌து. அன்னிய‌ முத‌லீடுக‌ள் அனும‌திக்க‌ப்ப‌டும் முன் 80க‌ள் வ‌ரை இருந்த‌ சூழ‌ல் ப‌ற்றிதான் சொன்னேன். அன்று ந‌ட‌ந்த‌ தொட‌ர் வேலை நிறுத்த‌ங்க‌ளின் விளைவுக‌ள் ம‌ற்றும் த‌ன்மைக‌ள் ப‌ற்றி…

    • எஸ்.எஸ்.என் பொறிய‌ல் க‌ல்லூரியில் சேர பத்து பன்னிரெண்டு லட்சங்கள் கேட்கின்றனர் (management seat). நன்கொடைகள் கிடையாது என்பது நல்ல காமடி.

      >>எஸ்.எஸ்.என் பொறிய‌ல் க‌ல்லூரி….. அதில் சேர‌ ந‌ன்கொடை கிடையாது

    • தமிழ்நாட்டில் பெரும்பாலானோரின் பெயரில் இருந்து சாதிப்பெயரை நீக்கியது பெரியாரின் இயக்கம். ஆனாலும் சிலர் இன்றும் சாதி பெயர் விகுதியை பெருமையுடன் சேர்த்து கொள்கின்றனர். எஸ்.எஸ்.என் கல்லூரி சிவ நாடார் சாதி விகுதியை பெருமையுடன் வைத்திருப்பது அறியாமையா? சாதி வெறியா?

    • அதியமான் அவர்களுக்கு போராட்டமுன்னு சொன்னாலே ஆத்திரமாவருது அவர் கருத்து வெற்றி பெர அவரும் போராடுராரூ, நாடார்கள்போராடினார்கள் உழைத்தார்கள்,வளர்ந்தார்கள் உண்மை. இப்ப உறவின் முறையை ,,வளர்ச்சியை காப்பாத்திக்க ,ரிலையன்சோட,வால்மார்ட்டோட,போராடவேன்டிய கட்டத்துக்கு அவுங்க தள்ளப்பட்டுட்டாங்க அறிவை கொண்டு உழைத்து முன்னேர சொல்ரீங்க எப்படி?அம்பானி மாதிரி திருட சொல்ரீங்களா?

      • நாகராசன்,

        சிறுபிள்ளைதனமான மறுமொழிகளுக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டதால், அதிகம் எழுதுவதில்லை !
        போராடவே கூடாது என்று நான் சொன்னேனா ? ரிலையன்ஸ் ஃப்ரெர்ஸ் பற்றிய பூச்சாண்டிகள் இன்னும்
        ஒயல போல. அவை துவக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் அண்ணாசி கடைகள் அழியவில்லையே ! ரிலையன்ஸ் ஃப்ரெஸில் வாங்கும் மக்கள் ஒரு குறிப்பிட்ட சதம் தான். பெரும்பாலானோர், முக்கியமாக சேரிகளில் வசிக்க்கும் ஏழைகள் லோக்கல் மளிகை கடைகளில் தான் வாங்குகிறார்கள். மிக குறைந்த அளவில் சரக்குகள் கிடைக்கும். கடனும் கிடைக்கும். இது ரிலையன்ஸ் ஃபெரெஸில் சாத்தியம் இல்லை. மளிகை கடைகளை அழிக்க முடியாது. அதன் மார்க்கட் வேறு. மேலும் ரிலையன்ஸின் போட்டியினால், விலை குறைந்தால், வாங்கும் மக்களுக்கு மிக நன்மைதான்.
        அப்படியே மளிகை கடைகள் முற்றாக அழிந்தால், அதன் உரிமையாளர்கள் பட்டினி கிடந்து செத்துவிட மாட்டார்கள். வேறு தொழில்களுக்கு இயல்பாக மாறுவார்கள். டிராக்டர் முதன் முதலில் வந்த போது, ஏர் உழுபவர்களுக்கு வேலை போயிற்று. விசைதறியினால், கைத்தறி குறைந்தது. அது போலத்தான் அனைத்து வகை மாற்றங்களும்.

      • அதியமான் அவர்களே, உலகின் துன்பங்களை நீக்க வந்த சர்வரோக நிவாரணியான முதலாளித்துவத்தில் சேரிகள் ஏன் இருக்கின்றன. பு.த.செ.வி ( புரியவில்லை தயவு செய்து விளக்கவும்)

      • கேள்விக்குறி,

        முதலாளித்துவம் ஒரு சர்வ ரோக நிவாரணி அல்ல. வறுமையின் அளவை வெகுவாக குறைக்க அதை விட
        சிறந்த முறையை மனிதன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மாற்று சித்தாந்தங்கள் எல்லாம் : தலைவலி போய் திருகுவலி வந்த கதையானது..

        இந்த சுட்டியை பார்க்கவும் :
        http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

        வறுமையை முற்றாக ஒழிக்க முதலில் அடிப்படை ஜனனாயகம், ஊழலற்ற அரசு எந்திரம் தேவை. ஸ்கான்டினேவிய நாடுகளான டென்மார்க், ஸ்வீடன் போன்றவை ஓரளவு சொல்லாம்.

        ராணுவத்திற்க்கும், இன்னும் பல தேவையில்லாத துறைகளிலும் அரசுகள் செலவு செய்யும் பணத்தை, வறுமை ஒழிப்பிற்க்கு பயம் படுத்தினால் ஓராளவு விமோசனம் பிறக்கும். ஆனால் 100 % வறுமையை ஒழிக்க இதுவரை எந்த அமைப்பிலும் முடியவில்லை. மிக மிக கடும் வறுமையில் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் ஓரளவு மேம்பட, அவர்களின் சதவீதத்தை மிக மிக மிக குறைக்க், அரசு உதவிகள் தேவை. முதலில் அதற்க்கு அரசிடம் போதிய நிதி வேண்டும். மேலும்..

      • //அன்னிய‌ முத‌லீடுக‌ள் அனும‌திக்க‌ப்ப‌டும் முன் 80க‌ள் வ‌ரை இருந்த‌ சூழ‌ல் ப‌ற்றிதான் சொன்னேன்.// அதியமான் அவர்களே! ஜான் பெர்கின்ஸ்-ன் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலைப் படிக்கவும்

      • சாகித்,

        அந்த புத்தகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதில் இந்தியாவின் அன்னிய முதலீடுகள் பற்றி எதுவும் இல்லை. எனெனில் அது போன்ற ஹிட்மேன்கள் இந்தியாவில் “தேவை”யில்லை. ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள், ஒரு சில (ஜனனாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கு இல்லாத) நாடுகளில் இது போன்ற ஹிட்மேன்களை அனுப்பி, அயோக்கியத்தனம் செய்வதால், அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், அனைத்து நாடுகளிலும் இப்படி செய்வதாக சொல்லமுடியுமா ? குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் அனைத்து அமைப்புகளிலும் இருப்பார்கள். அதற்க்காக மொத்த சமூகமும் குற்றவாளிகள் என்று கருதமுடியுமா என்ன ?

        அன்னிய முதலீடுகள் வந்த்தாள் நாம் மிகுந்த நன்மை அடைந்தோம், பல வழிகளில. 80கள் வரை இருந்த நிலவரம் உங்களுக்கு தெரியாது. அன்று இருந்த வேலைவாய்ப்பு, வறுமை அளவு, அன்னிய செலவாணி இருப்பு, அன்னிய கடன் மற்றும் பாதுகாப்பற்ற நிலை, ரூபாயின் ஸ்திரத்தன்மை : இவை பற்றி இன்றைய இளைஞர்களுக்கு முழுவிபரம் தெரியவில்லை.

      • புத்தகத்தை முழுமையாகப்படியுங்கள் பொருளாதாரம் பற்றி வேறொரு கட்டுரையில் விவாதிப்போம்.

    • ஒற்றுமை, கல்வி, கடுமையான உழைப்பு என்பதெல்லாம் வெறும் கற்பனைகள். ஐஏஎஸ் படித்தவனையும் சாதி சொல்லி இழிவு படுத்தப்படுவதை தாங்கள் அறிந்ததில்லையா? நாடார்களின் மாற்றத்திற்கு அவர்களின் உழைப்பு ஒருகாரணமாக இருந்தாலும் அரசியல் பின்புலம் அவர்களுக்குச் சாதகமாக உதவியதால்தான். அதனாலேயே காமராஜரை சாதிக்காக நின்றவர் என்று அன்றைய காங்கிரசுக்காரர்களே குற்றம் சுமத்தினர். அது ம்ட்டுமல்ல. நாடார்களுக்கும் தேவர் சாதியினருக்கும் ஓங்கியிருந்த முரண்பாடு பள்ளர்களுக்கும் தேவர்களுக்குமாக திசை திரும்பியதும் ஒருகாரணம்.
      அந்த நாள் முதல் இன்று வரை பள்ளர்கள், பறையர்கள், அருந்ததியர்களின் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் துரோகத்தையே அம் மக்களுக்கு பரிசாகத் தருவதும் ஒரு காரணம்.

      • ///ஒற்றுமை, கல்வி, கடுமையான உழைப்பு என்பதெல்லாம் வெறும் கற்பனைகள்.////

        அப்படியா ??? !!!

        காமராஜர் இல்லாமல் இருந்தாலும் நாடாரக்ள் இன்று முன்னேறியிருப்பார்கள்..

      • //ஒற்றுமை, கல்வி, கடுமையான உழைப்பு என்பதெல்லாம் வெறும் கற்பனைகள். ///// அப்படியா ??? !!!

        காமராஜர் இல்லாமல் இருந்தாலும் நாடாரக்ள் இன்று முன்னேறியிருப்பார்கள்..

  30. தியாகி இம்மானுவேல் சேகரனை பற்றியும், ஆதிக்க சாதி வெறியையும் தெளிவாக விளக்குகிறது கட்டுரை.

    பெரும்பாலும் ஆதிக்க சாதியினரும், தாழ்த்தப்பட்டவர்களும் விவசாயிகளாகவும், விவசாய கூலிகளாகவும் கிராமத்தில் உள்ளனர். ஒரே மாதிரியான பண்பாடுகள் பல இருந்தும், ஆதிக்க சாதியினரின் சாதி திமிர் மட்டும் குறைவதில்லை. இது படித்தவனுக்கும், படிக்காதவர்களுக்கும் பொதுவாகவே இருக்கிறது.

  31. நல்ல கட்டுரை.
    இக்கட்டுரை ஜாதி துவேஷத்தை தூண்டுவதாக நினைக்கும் நண்பர்கள் முதலில் தன் வாழ்நாள் முழுதும் ஜாதிவெறியையே அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த முத்துராமலிங்க தேவனைப் பற்றி படியுங்கள். வெறி உங்களைய்றியாமலே உருவாகும்.

  32. வர வர வினவில் சாதி நாற்றம் அடிக்க ஆரம்பித்துவீட்டது.. வினவு ப்ளீஸ் திருந்துங்கள்…….

  33. // இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதும் தேவர் பூசையை அரசு விழாவிலிருந்து நீக்குவதுமே ஜனநாயக நடவடிக்கையாக இருக்கமுடியும்//

    How will caste system get eradicated from society if we do this??

    • பெரியார் அவர்களின் சிந்தனைப்படி தமிழ்நாடு இந்தியாவுடன் சேராமல் தனியாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட சாதி விழாக்களை நீக்குவதன் மூலம் நிச்சயமாக சாதியை ஒழித்திருக்கலாம். ஆனால் ஒன்றுபட்ட இந்த போலி இந்திய தேசியத்திற்குள் அது சாத்தியமுமல்ல அதற்கு இந்த முதலாளித்துவ சமூகமும் அதில் அங்கமாய் விளங்கும் ஆதிக்க சாதியினரும் அனுமதிக்கப்போவதுமில்லை.

      தோழமையுடன்,

      செந்தில்.

    • சன்முகா அவர்களே!
      நிச்சயமாக முழுமையாக ஒழியாதுதான். ஆனால் சமுகத்தில் அவர்களும் மனிதர்கள்தானே? அவர்களுக்கும் மானம் ரோசம் இருக்கத்தானே செய்யும். அதனை நாம் பாராமுகமாக இருந்தால் நாம் மனிதர்களா? மதங்களோ சாதிகளோ ஒழியாதவரை சாதிக்கலவரமும் மதக்கலவரமும் ஓயப்போவதில்லை என்பதற்றாக மதவெறி சாதிவெறி தாக்குதலுக்கு ஆளாகுபவர்களைப் பார்த்து நல்லா படட்டும் என்று வேடிக்கை பார்கக முடியுமா?

    • இரண்டுமே தேவை அற்றது.
      ஏனெனில், அரசியல் வாதிகளுக்கு என் தீனி போடவேண்டும்?
      முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு
      இது போன்ற விழாக்களால் எந்த பயனும் இல்லை

  34. மரியாதைகுரியவர் போல உள்ளவரை அதற்க்கு உரியவர் தானா என்ற மறு பரிசீலனை செய்யவைக்கிறது

    • கடவுள் ஒருவர பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…………நீங்க என்ன சொன்னாலும் அவர கடவுள் மட்டும் தான் …..இம்மானுவல் உங்க கடவுள் ….தேவர் எங்க கடவுள் அவளோ தான் …………….

    • தம்பி, இதனால் தி.மு.க./ அ.தி.மு.க../ தி.தி.மு.க./ காங்கிரஸ்/ பார்வர்ட் ப்ளாக் போன்ற கட்சிகளுக்குதான் இலாபம்.
      குடு வைப்பதினால் எந்த சமூகமும் முன்னேறிவிடாது.
      பொருளாதாரம், கல்வி, அரசியல் இன்னும் பலவிஷங்களில் முன்னேற முயற்சி செய்யுங்கள்.
      ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை உயர்த்தினால், அது சமூகத்தின் வளர்ச்சி.

  35. உலகில் பாதி பல்லன் சாதி , தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை குலவிபட்டி ,by இம்மனுவேல்வீரா

    • ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் – தன
      ஊற்றுப் பெருக்கால் உலை கூட்டும்
      சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
      கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

      திரித்துக் கூறப்பட்ட உண்மைகள் இன்று வரலாறாக கற்பிக்கப் படுகின்றது.
      ஆனால் நீண்டநாட்களுக்கு மூடிவைக்க முடியாது.
      நாம் எல்லாம் தாய்-பிள்ளை என்றுதான் தேவர் நினைத்து வைத்திருந்தார்.
      பாழாய்ப் போன அரசியல் சூத்திரதாரிகள் இரண்டு இனங்களைப் பிரித்து வெற்றி கண்டுவிட்டனர்.
      இனி வரும் காலத்திலாவது விழித்துக் கொள்வோம்.
      டாக்டர்.சேதுராமன், ஐயா.பொன்.பரமகுரு போன்றவர்கள் இதனைப் புரிந்து வைத்துள்ளார்கள்.
      இப்பொழுது நகைமுகன் அவர்களும் “தேவர்-தேவேந்திரர்” ஒற்றுமைக்கான நல்ல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
      டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கும் இது பற்றிய விவரங்கள் அனுப்பப் பட்டுள்ளன.
      நாம் என்றுமே ஆக்க சக்திதான்!

    • அது மண்ணில் பாதி மறவர் சாதி..

      இதையும் copy அடிட்சசா குருபூஜை மாதிரி

  36. இந்தியாவும்,இலங்கையும் ஒரே பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் இருந்தபோதே தற்போதைய “நாடுகளாக!” உருப்பெற்றன!.தற்போதைய பல பிரச்சனைகள்,”அந்த நிர்வாகத்திலிருந்து” விடுதலைப்? பெற்ற போது அமைந்த தோற்றுவாயாகவே உள்ளன.
    இந்தியாவின் “காங்கிரஸ் அரசாங்கமும்”,இலங்கை “சிங்கள அரசாங்கமும்”,இலங்கைத் “தமிழ்த்? தலைமைகளும்” இந்த காலனித்துவ நிர்வாகத்திலிருந்து உதித்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஆகும்!.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு “இவர்களிடையே இணக்கப்பாடு ஏற்ப்படாமையினாலேயே” இலங்கைப் பிரச்சனை வெடித்தது.
    இந்திராகாந்தி ஒரு தெற்காசிய சுதேசி?(போலி) போல்,இலங்கைத் தமிழ்த் தலைமைகளை கையாண்டார்.இது இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார நிர்பந்தமே தவிர,காங்கிரஸ் வெளிப்பாடு அல்ல.காங்கிரஸ் நிர்வாகம் என்பது,தற்போதைய “இலங்கை தமிழ்த்? தேசிய கூட்டமைப்பு” போன்றதே!.இதில் எங்குமே “மக்கள் சக்தி” தொழில் மயப்பட்டதாக தெரியவில்லை.இடையில் விடுதலைப் புலிகள் என்றும்,இயக்கங்கள் என்றும்,சோசியலிச? தமிழீழம் என்றும் ஆயுத போராட்டம் நடத்தி ஓய்ந்த பிறகு பலர் தற்போது “போஸ்ட்மார்ட்டம்” செய்கிறார்கள்.இதில் பல இணைய தளங்களில்,”லண்டன் ஈராஸ்” ரவி சுந்தரலிங்கம்,தேசம்நெட் ஜெயபாலன்,இனியொரு சபாநாவலன்,போன்றவர்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் “யாழ்ப்பாணம்” என்ற சொல்லுக்கு சில விளக்கங்கள் தேவை.முல்லைதீவு,வன்னி,போன்ற அழகான தமிழ்ச் சொல்லான இது காலனிய ஆதிக்கத்திற்கு முன்பு,ஒரு சகோதரத்துவ “வேரின்” பிரதிபலிப்பாக இருந்தது.காலனித்துவ ஆதிக்க காலத்தில் “உள் முரண்பாடுகளின்” ஊற்றுக்கண்ணாக மறுவியது!.இதில் சபாநாவலன் என்பவர்,புலம்பெயர் இலங்கைத்தமிழர்களை,தொழிலாளர்களாக நிலை நிறுத்துவதற்கு,அவர்கள்,”ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் கடுமையாக உழைக்கிறார்கள் என்கிறார்.அவர்கள் தாங்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில்,ஒழுங்காக வரி கட்டி பதினாறு மணிநேரம் உழைக்க வில்லை,பிடிபட்டால் பல ஆயிரம் டாலர்கள் அபராதம் கட்டக்கூடிய “ரிஸ்க்” எடுத்து “பிளாக்கில்தான்” வரிகட்டாமல்,டாய்லட் கழுவுவது,உணவு விடுதிகளில் சமைப்பது,மூளை தொழிலாளிகளாக,போன்ற வேலைகளை செய்கிறார்கள்.இதை விட நல்ல வேலை,இந்திய – இலங்கை சம்பளத்தில்,தாய் நாடுகளில் வேலை கொடுத்தால் செய்யமாட்டார்கள்.இப்படி சேர்த்த பணத்தில்,”ரிஸ்க்” எடுத்து,மெர்சிடஸ் பென்ஸ்,பி.எம்.டபிள்யூ. கார்களை வாங்கி ஓட்டுவதற்கும்,ஈவிரக்கமில்லாமல் கொலை செய்து,தங்கள் அகதி அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இயக்கங்களுக்கு பணம் கொடுக்கவுமே செலவழிப்பதை போதையாக கொண்டுள்ளனர்(எல்லாம் “எக்சேஞ்ச் ரேட்” செய்த புண்ணியம்).இங்கிருந்தே,இலங்கைத் தமிழர் பிரச்சனையின் பிரத்தியேக கனவான,”சக மனிதனை அடித்து சாப்பிடும் “CANNIBALISM” கருக் கொள்கிறது!.
    இதை பல்வேறு வல்லரசு சக்திகள்,புரிந்தோ புரியாமலோ,சரியாக கையாண்டே,விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டியுள்ளனர்.
    இதைப் படிப்பவர்கள் தமிழர்களாக இல்லாத பட்சத்தில் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை.தமிழர்களாக இருந்தால்,இத்தகைய “CANNIBALISM” சத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முன்னேற்ப்பாடு செய்து கொள்வது நல்லது!.

  37. ….இந்த “CANNIBALISM” சத்தின்,மூலம் என்ன?,தற்போது அது எங்கே மையம் கொண்டுள்ளது?.
    நிச்சயமாக அது ஐரோப்பாவில்தான்!,மையம் கொண்டுள்ள இடம் “ஆப்கானிஸ்தான்”!.
    இது அமெரிக்க வெளிவிவகார கொள்கையாக உருண்டு திரண்டு,ப.சிதம்பரம்,இலங்கைத்தமிழ் உருத்திர குமார்(ஹார்வர்ட)போன்றவர்கள் மண்டையில் “கல்வி அறிவாகி” இயல்பான இயங்கியலாக,இந்த இயங்கியல் சக்கரத்தில்,சட்டிஸ்கர்,வன்னி மக்கள் போன்ற பூர்வீக குடிகள் நசுக்கி அழிக்கப்படுகின்றனர்(அவதார்?).
    அதாவது,1980 களில் தி.மு.க. கட்சிக்குள் இருந்தவர்களுக்கும் அப்போது,இலங்கைத் தமிழ் விடுதலை? இயக்கங்களைப் பற்றியும் அறிந்தவர்களுக்கு தெரியும்,தி.மு.க. தலைவரின் குடும்பம்,கட்சிகாரனிடமே கடன் வாங்கும் நிலையில் இருந்த நடுத்தரவர்க நிலையும்,இலங்கைத் தமிழ் இயக்கங்களின் தலைமைகள் “அனைவரின் பொருளாதார நிலையும்!”.தற்போது இவர்களெல்லாம் “பில்லியன் டாலர்கள்” ரேஞ்சுக்கு பேசும் நிலை எப்போது வந்தது?.இந்திய “புதிய பொருளாதாரக் கொள்கை” தாராளவாதத்தை நோக்கி அடியெடுத்து வைத்தபோது,இவர்கள் “இயங்கியலில்” மக்கள் சக்தி தொழில்ப்பாட்டின்,”மதிபின்மையை உணர்ந்து”,தங்களுக்கு வாய்த்த தரகு முதலாளித்துவ சந்தர்ப்பத்தை,தங்கள் தனிப்பட்ட பொருளாதார(குடும்ப) முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி விட்டனர்!.இந்த மாபெறும் அலையில்,இந்தியாவில் மாபெரும் கலாச்சார அடித்தளமிருந்தாலும்,இலங்கையில் ஒருவித “புத்தமத தேசியம்” இருந்தாலும் இந்த “எரியும் வீட்டில் பிடுங்கித் தின்னிகள்” சமூக கட்டுமானத்தை சிதைக்க முடியாமல்,தங்கள் நலத்தை மட்டும் பேண முடிந்தது!.ஆனால்,இலங்கைத் தமிழர் விஷயத்தில்(ஒட்டு மொத்த தமிழர் விஷயத்தில் என்றும் கொள்ளலாம்) இத்தகைய சமூக அடித்தளம் இல்லாததாலும்,அரசியல் தொழில்ப்பாடுகள்,தன்னலம் கொண்ட தனிநபர்களின் கூட்டாக இயங்கியதாலும்,சமூக கட்டமைபு சிதைந்து போனது!.இது “CANNIBALISM” மாக மறுவி நிற்கிறது!.
    அடுத்தவர்கள் இந்த,ராஜா? அண்ணாமலை செட்டியார்கள்,”எச்சில் கையால் காக்காய் ஓட்டி அறியாத இந்தக் கும்பல்(PLUTOCRACY)” தமிழ்நாட்டு அரசியல் வாதிகளில் “புதிய பணக்காரர்களுக்கு” அறிவுறுத்துவது “உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ,அதற்கு தகுந்த அளவு குதிரைகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்பது”(அரபு நாடுகளில் பெண்களைப் போல).சில தலைமுறைகளுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்த இவர்கள்( மாட்டு பாலை கறந்து விற்கலாமே,குதிரையில் என்னத்த கறக்கிறது?),ஆற்காட்டு நவாப்பாவது வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து பயந்து,குதிரைகளை பராமரித்து வந்தான்.இவர்கள்,குதிரையை தொட்டுப் பார்த்ததே,காலனித்துவ ஆட்சி காலத்தில்தான்!.விஷயத்திற்கு வருவோம்,”தரகு முதலாளிகள் தேவையில்லை”!.
    சிம்சன் ஆனாலும்,டி.வி.எஸ். ஆனாலும்,த இந்து ஆனாலும்,புலம் பெயர் இலங்கைத் தமிழர் ஆனாலும்,ஐரோப்பியரை காப்பியடித்தே “தமிழ் நடுத்தர வர்கங்களை” ஏமாற்றி வருகிறார்கள்!.கவலை வேண்டாம்,இவர்களிடையே ஒற்றுமை ஏற்ப்படாது என்பது நிறூபிக்கப்பட்டு விட்டது!.
    பல விதமான அரசியல்,இயங்கியல் போக்குகள் “மக்கள் சக்தி” தொழில்ப் படாமலேயே நகருகின்றன,அதன் உச்சக்கட்ட நிலைதான் “இலங்கையின் முள்ளிய வாய்க்கால் வன்னி மக்கள் படுகொலை!”.வே.பிரபாகரன் இராஜீவ் கந்தியை கொன்றதால்தான் இத்தகைய ஒரு நகர்வு ஏற்ப்பட்டது,அதனால்,”அந்த மக்கள் படுகொலையினால் ஏற்ப்பட்ட பச்சாதாபத்தினால்” புலன் பெயர்ந்த இலங்கைத்தமிழரின் கவுரவத்தை(STATUS-QUO) காப்பாற்றும் வகையில் ஏதாவது ஒரு தீர்வை கொடுங்கள்!,என்ற வகையிலேயே தற்போதைய இலங்கைத் தமிழர் தலைமை நகர்ந்துக் கொண்டிருக்கிறது!.ஆனால் இலங்கைத் தமிழ் சமூக அமைப்பில் “உருபெற்றுவிட்ட” “CANNIBALISM” தான் ஒரு சமூக கட்டமைப்பிற்குள் புகுந்து படுகொலை நடத்தும் அளவுக்கு “இயங்கியல் நகர்வுக்கு அணுசரணை” வழங்கியுள்ளது என்பதே யதார்த்தம்!.
    இந்த இயங்கியல் சக்கரம் அதே திசையில்தான் அடுத்த கட்டத்திற்கும் நகருகிறது என்பது என்னுடைய கணிப்பு!.
    ஆகவே இந்த இயங்கியலின் “அச்சு” நிலைக் கொண்டிருக்கும் “ஐரோப்பிய சிந்தனை உலகில்” இது பற்றியான விழிப்புணர்வு எங்கே இருக்கிறது என்பதை உணர வேண்டும்!.
    நிச்சயமாக “ஆப்கானிஸ்தானிலிருந்து”,துருக்கிய,அமெரிக்க,ஜெர்மன் படைகளை வெளியேற சொல்லும்,”உண்மையான இடதுசாரி சக்திகளாக” இவர்களை அடையாளம் காணலாம்!(original-sozial.de).
    தமிழ்நாட்டை பொறுத்தவரை,”CANNIBALISM” சத்தை தவிர்க்க வேண்டும் என்றால்,முதலில் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தை அரசியல் அதிகாரத்திலிருந்து “அகற்றி வைக்க வேண்டும்”!.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எத்துணை நூறு ஆண்டுகள் வேண்டுமானாலும் அவர்களின் குடும்பம் ஆண்டுக் கொள்ளட்டும்!.இயங்கியலின்,அடுத்தக் கட்டமான,”இரண்டாம் முள்ளிய வாய்க்காலை”,புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் நடத்துவதை இந்த நகர்வு தடுக்கும் என்பது என் கணிப்பு!.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு,புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள்,எத்துணைப் பேரையும் கொன்று,எவ்வளவு கோடியாவது சம்பாதித்துக் கொள்ளட்டும்!.

    இதை நடத்திக் காட்டிதான் பாருங்களேன்!!.

  38. manam katha maravana da maruthu pandiyar thozhanada ……thenpandi singamada ,then thamizh padum thangamada …….im proud to be thevan da……nanbargalae nam eruvarum eru nathigal……ondru sernthal no way for dmk and admk…..please under stand that ……we hav to stop the family politics of j.j and karunanidhi ………

  39. வினவுக்கு நன்றி…

    தேவர் பூஜையை தடை செய்வதும், இம்மானுவேல் சேகரன் பூஜையை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம். என்னே ஒரு அரசியல்…..சூப்பர்

  40. அது சரி நான் பெரியாரின் பேரன், பாட்டாளியின் தோழன் நானே மரத்தமிழன், பிளைவுட் தமிழன் என முழங்கும் திரு சீமான் அவர்களுக்கு இந்த தேவர் பற்றி நிஜமாகவே தெரியாதா? பின் ஏன் அவரின் தம்பி படத்தில் முத்துராமலிங்க தேவர் படத்தை காண்பித்தார். அல்லது சீமானும் ஆதிக்க வெறி பிடித்தவர் தானா?

  41. சந்தனக் கட்டையை எவளவு தேய்த்தாலும் அது நல்ல வாசனையைத்தான் தரும்.
    அது போன்று உங்கள் படிப்பு- உங்கள் பிறப்பு இவை இறப்பு வரை சிறக்கவேண்டும்.
    கனிஇருப்ப காய் கவர்ந்தற்று.
    “எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுவனே அல்லாமல்
    யாதொன்றும் வேண்டேன்.”
    krish.kanegendran

  42. karaippar karaithaal kallum karraium ……..ithu palamozhi ….ana thevar mozhi thannila eluthuna eluthu …munnukku pin murana pesium thevar evanda thevar …perukku pinnala jathi pera poduravan oru thalaivanaa …..avana poi ivala periyavana pesa thinga ……right now.now today devendrar community peoples occupied all tactics..he is a software engineer ,,doctor , magistrate,IAS and all levels ,so then they cant able to show their partialities …we are also ready to give the answers for all queries with loyally and legally …then we needs then we show our talents to violently and illegally ..[obscured]

  43. இப்ப தமிழ்நாட்ல ஜாதி சங்கம் இல்லாத ஜாதிய காட்டுங்க,சலுகை,ஜாதிய ஒழிக்க போறேன்னு அரசு காசுல மஞ்சள் குளிச்சு,அரசு வேலை வாங்கி அங்கயும் ஜாதி சங்கம் வச்சு ஜாதிய வளக்குற நாய எல்லாம் என்ன செய்வது?(குறிப்பு:அரசு வேலை பார்ப்பவர்களில் வேறு எந்த ஜாதியினருக்கும் சங்கம் கிடையாது)
    எனவே இங்க எல்லாரும் ஜாதி வெறியன் தான்,சுயநலவாதி தான்,இத ஒருத்தன் பண்ணா ஜாதி வெறி,அடுத்தவன் பண்ணா சீர்திருத்தமா?

  44. சலுகைகளுக்காக மட்டும் ஜாதியையை பயன்படுத்துபவனும் ஜாதி வெறியனே…
    இது ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம்,ஒரு தலித் பெண்,சென்னையை சேர்ந்த ஒரு தலித் பையனை காதலிததிர்க்கு அந்த பெண் வீட்டில் எதிர்ப்பு,காரணம் அவன் ஜாதி ரீதியில் இவர்களை விட தாழ்த்த பட்டவனாம்…மத்த ஜாதி காரன ஜாதி வெறியன்னு சொல்ல என்ன தகுதி இருக்கு?

    • //ithu rombha thappu…………worng information..//

      எது ரொம்ப தப்பு, எது தப்பான தகவல்னு சொன்னா நல்லா இருக்கும்…

  45. கட்டுரையளர்களுக்கு

    என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லவும்

    இங்கே பள்ளர்கள் எப்படி தேவேந்திரர்கள் ஆனார்கள்

    பள்ளர்கள் தங்களை விட கீழ் —— பறையர்களை
    மதிக்கின்றனரா

    கடந்த ஆண்டுகளில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு சென்ற திருமாவளவன் பட்ட கஷ்டம் தெரிந்து இருக்கும்

    இக்கட்டுரையாளர் கண்டிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்து இருப்பார் என்னை போலவே

  46. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒரே தியாகியாக இம்மானுவேல் சேகரனை முன்னிறுத்தி பொதுமக்களை அச்சுறுத்துவதே எங்கள் இனத்தில் வேலை இல்லாது இருக்கும் இளைஞர்களின் வேலை… பரமக்குடியில் உள்ள காட்டுப்பரமகுடி என்ற இடத்தில் எஸ்.சி. ஜாதியில் பிறந்த எனக்கு, இம்மானுவேல் சேகரன் என்ன தியாகம் செய்தார் என்று, இதுவரை யாரும் சொன்னதே இல்லை…. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இதுபோல வேலையத்த வேலையை எங்கள் இளைஞர்கள் செய்வது வேதனையாக இருக்கிறது… பலியானவர்களுக்கு அரசு ஒரு லட்சம் இழப்பீடு எல்லாம் தரக்கூடாது. வீம்பாக போய் போலீசை அடித்தால் சுடத்தான் செய்வார்கள். நிதி கொடுத்து இவர்களை போன்றவர்களை ஊக்குவிக்க கூடாது. அடுத்து, ஜான் பாண்டியன். இவர்லாம் எங்களுக்கு தலைவரு… இவரு என்ன நல்லது செஞ்சாரு…யாருக்காவது தெருஞ்சா சொல்லுங்க… அரசு அடுத்த வருடம் இது போன்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது…எந்த குரு பூஜைக்கும் அனுமதி அளிக்க கூடாது. ஒரு எஸ்.சி. பொண்ணா இருந்து நான் இதை சொல்றேன். கேவலமான விஷயம் என்னன்னா… மகாகவி பாரதியாரோட விழா நேற்று.. அதை யாரும் கொண்டாடல… தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜைல எவ்ளோ கலாட்டா… எனக்கு என்ன கேள்வினா, இம்மானுவேல் சேகரன் தவிர வேற யாரும் நல்ல படித்த, பண்பான, மக்கள் நலம் விரும்புகிற, எஸ்.சி. மக்களை முன்னேற்ற நினைக்கிற தலைவர்கள் யாரும் இல்லையா…??? இது தான் கேவலத்திலேயே சிறந்த கேவலம். யோசிங்க… நடந்த கலவரத்துல, எஸ்.சி. இனத்தில பிறந்த ஒரு வாத்தியார், போஸ்ட் மாஸ்டர், கண்டக்டர், லேப் டெக்னிசியன், அக்ரி ஆபிசர், இஞ்சினியர், டாக்டர் இப்படி யாரும் பங்குபெற்றிருக்க மாட்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கெல்லாம் வேலை இருக்கிறது. வெட்டி வேலை பார்க்க நேரம் இல்லையே… so, அரசாங்கம் வெட்டிபயலுக நடத்துற கூத்துக்கு இனியும் இதுமாதிரி அனுமதி வழங்க கூடாது…

    it’s not my comment,just read from dhinamalar,reaturned by some one in lady name

  47. வராகமூர்த்தி என்று ஒரு கடவுள் அவதாரம். அந்த அவதாரத்தின் கலியுக அவதாரம் தினமலர்.
    அது தனக்கு காலையில் படைக்கப்படும்……… த்தை திண்ணாமல் இருப்பதில்லை.

  48. இமானுவேல் சேகரனின் பட்ரிய வரலரு உன்மை தகவல் சரியக தெரியவரவில்லை

    1957

    மதிப்புரை
    முதுகுளத்தூர் கலவரம்
    வரலாற்றின் குருதி எழுதிய வரைபடம்
    பழ. அதியமான்
    முதுகுளத்தூர் கலவரம்
    ஆசிரியர்: தினகரன்
    தொகுப்பும் மதிப்பும்: கா. இளம்பரிதி
    வெளியீடு: யாழ்மை
    134, மூன்றாம் தளம், தம்புசெட்டித் தெரு
    பாரிமுனை, சென்னை 600 001
    இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2006
    பக் 120, விலை ரூ. 70.

    1957 பொதுத் தேர்தல் – அதற்கடுத்த இடைத் தேர்தல் – அவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் சார்பில் கலந்துகொண்டவர் இம்மானுவேல் சேகரன். மறவர்கள் சார்பில் உ. முத்துராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேல் அவர்களின் தலைமை குறித்து விவாதம் எழுந்ததாகத் தெரிகிறது. கூட்டறிக்கைக்குத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகளை வெளியிடும் சமாதானத் திட்டத்தோடு கூட்டம் ஒருவகையாக முடிந்தது. மறுநாள் இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அக்கொலையின் தொடர்ச்சியாக இரு சமூகத்தினரிடையே மோதல் மூண்டு அது ஏறக்குறைய ஒரு மாத காலம் நீண்டது. பல மனித உயிர்கள் பறிபோயின. நாசமான சொத்துகள் இரு தரப்பிலும் இருந்தன. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாக முதுகுளத்தூர் தமிழக வரலாற்றில் பதிவானது.

    தமிழகத்தை உலுக்கிய மிக முக்கியமான சாதியக் கிளர்ச்சிகளுள் ஒன்றான இந்தக் கலவரத்தின் மூலகாரணம் என்ன? முடிவு எது? இவை குறித்துப் பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், காங்கிரஸ்காரர் தினகரன் சம்பவக் காலத்திலேயே எழுதி வெளிவந்த நூலின் புதிய அண்மைப் பதிப்பு ‘முதுகுளத்தூர் கலவரம்’ என்ற இந்நூல்.

    ‘உதடசைந்தால் உயிர் போய்விடுமே என்று உலகமே பயந்தபோது உண்மையைச் சொன்னால் ஒன்றுமே வராது’ என்று தவறாக நினைத்து, உண்மையைச் சொல்லி உயிரை மாய்த்துக்கொண்ட தினகரனின் இந்நூல் பின்வரும் விஷயங்களை விரிவாகப் பேசுகிறது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து மறவர்களின் சரித்திரம், 1932-1939; 1947-1957 ஆகிய காலகட்டங்களில் இராமநாதபுரம் பகுதியின் அரசியலில் சாதியத்தின் பங்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை, இம்மானுவேலின் படுகொலை, அதனால் ஏற்பட்ட கலவரம், அரசியல் தலைவர்களின் கருத்துகள், விளைவுகள் என்ற நிரலில் நூல் ஆக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக அமைந்துள்ளவை நூலைக் காட்டிலும் முக்கியமானவை. மனித உரிமைகள் சர்வதேச மன்னிப்பு ஸ்தாபன காங்கிரஸ் ஒன்றின் அறிக்கை (1984), தேவர் தொடர்பான வழக்கின் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றின் தமிழ் வடிவம் (1940கள்), முது குளத்தூர் சேம நலச் சங்கத்தாரின் மனு (1957), இக்கலவரம் பற்றிய தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சரின் சட்டசபை அறிக்கை (1957) முதலியவை அந்தப் பின்னிணைப்புகள்.
    அப்போதைய தமிழக முதல்வரும் இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான காமராஜ், முதுகுளத்தூர் கலவரம் இருபது வருடங்களாக இருந்துவரும் நாள்பட்ட சமூகப் பிரச்சினையின் விளைவு என்றார். “இந்தச் சதித்திட்டம் மதுரையிலும் விருது நகரிலும் உள்ள சிலரால் ரகசியமாய் வகுக்கப்பட்டது. ஹரிஜனங்களில் ஒரு பகுதியினருக்குப் பணம் கொடுத்து இந்தக் கலகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது ஆளும் காங்கிரசின் சதி” என்றார் முத்துராமலிங்கத் தேவர் (பக். 40).

    (இந்நிலப்பகுதியில் மிகப்பல ஊர்களில் விரிந்து கிடந்த விவசாய நிலத்திற்குச் சொந்தக்காரராய் இருந்த தேவர் அந்நிலங்களின் பயிர் ஏற்றத்திற்குப் பல்வேறு நிலைகளில் தொடர்பு உள்ளவர்களைப் பகைத்துக்கொள்ள வாய்ப்பு மிகக் குறைவு. அந்த விவசாயக் கூலிகளைத் தம் கீழ் வைத்துக்கொள்ள வேண்டி அவர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். எனவே தேவர், எந்த இனத்தைக் கலவரத்திற்குக் காரணமாகச் சுட்டுகிறார் என்பதை மேற்கண்ட குறிப்பிலிருந்து நாம் உணர முடியும்.)
    காமராஜ் அமைச்சரவையில் உள்துறையைக் கவனித்துவந்த எம். பக்தவத்சலம், அரசியல், வகுப்புவாதம், நிர்ப்பந்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துப் பிடித்த ராட்சஸப்பிண்டம் இக்கலவரம் என்றார். நிலப்பிரபுத்துவ முறை இன்னும் நீடிப்பதாய் நினைத்துக்கொண்ட ஒரு சமூகத்தின் மேலாண்மையின் விளைவு என்று பொருள்பட நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் கருத்துரைத்தார்.

    சாதிகள் இருக்கும்வரை இந்தச் சண்டைகள் தீராது எனக் கலவரத்தின் ஆணிவேரைப் பிடித்தார் பெரியார். இப்படிச் சமூகத்தின் பலரும் இக்கலவரம் பற்றி பல்வேறு விதமாகக் கருத்து வெளியிட்ட நேரத்தில், ‘கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும் நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்’ என்று இக்கலவரக் காரணம் பற்றிய (முன் எண்ணத்தோடு) ஒப்புதல் வாக்குமூலத்தோடு, இந்நூலாசிரியர் எழுத முனைந்திருக்கிறார். “காங்கிரஸ் கட்சியின் கீர்த்தியைக் கெடுக்க, சென்னை சர்க்காரின் திறமையைப் பழிக்க, தமிழ் மக்களின் மானத்தைப் பறிக்க வந்த இந்தச் சம்பவங்கள்” (பக். 23) என்று காங்கிரஸ் கட்சி, ஆட்சி ஆகியவற்றுக்கு நேர்ந்துவிட்ட இழுக்கை, தமிழ் மக்களின் மானத்தின் பேரால் துடைப்பதாகச் சொல்லித் தன் நூலைத் தொடங்குகிறார். தொடர்ந்து பல இடங்களிலும் கட்சியின் செயல்களை நியாயப்படுத்தும் தொனியிலேயே நூல் நகர்கிறது. நூலின் பக்கங்கள் 36, 38, 45, 51, 70 எனப் பல இடங்களில் இதற்கான சான்றுகளைப் பார்க்க முடியும். கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் அவருக்கு நெருக்கமான கட்சிசார்ந்த உறவு இருந்திருக்கிறது. ‘இந்தக் கொலைக்கொள்ளி மனிதனைக் காங்கிரஸ் கட்சியில் கொண்டுவந்து சேர்த்தது யார்? என்று ஒரு சமயம் இராஜாஜி என்னிடம் கேட்டார்’ என்று தேவரைக் குறிப்பிட்டு தினகரன் எழுதியுள்ளார் (பக். 39). ஒரு கட்சியில் ஒரு குறிப்பிட்ட குழுவின் உள் இடைவெளிகளைப் பெரிதுபடுத்தி, சம்பந்தப்பட்டவரின் செல்வாக்கைக் குறைக்கும் நுண் அரசியலின் விளைவு இந்தக் கேள்வி என்பது தினகரனுக்குத் தெரியாமலா இருக்கும்? இருந்தும் இதை எழுதுகிறார்.
    கலவரப் பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டபோது, களத்தில் பேசிய பேச்சுகளை நூலாசிரியர் வியந்து போற்றும் வரிகள், அவரது காங்கிரஸ் பார்வையை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கம்யுனிஸ்ட் கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கிண்டல் செய்வதும் கட்சிச் சார்பை நன்கு வெளிப்படுத்துகிறது. எனவே, தினகரனின் இந்தப் பிரதியைக் காங்கிரஸ் கட்சியை, ஆட்சியைக் காப்பாற்ற எழுதப்பட்டதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. தினகரனின் முன்வரலாறும் அதை உறுதி செய்கிறது. குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக ஒரு கட்சியில் இயங்கிய, ‘பெரிதும் கட்சி சார்ந்த’ எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று தினகரனைக் கருதலாம்.
    கட்சிக்கு எதிராக அரசியல் செய்வதால் தேவர்மீது கோபம் கொண்டிருந்த காங்கிரஸ் தினகரன் மூலம் இந்தப் பிரதியை எழுதியிருக்கலாம். முது குளத்தூர் பயங்கரம் என்ற நூலை எழுதிய டி. எஸ். சொக்கலிங்கம் பிள்ளையின் பொருத்தப்பாட்டையும்விட மறவரான தினகரன் இது பற்றி எழுதுவது உயர்ந்தது என்று காங்கிரஸ் தலைவர் காமராஜ் நாடார் நினைத்திருக்கலாம்.

    இந்நூலின் பின்னிணைப்பாகியுள்ள சிறு பிரசுரம் ஒன்று, இந்திராகாந்தியின் படத்தை அட்டையில் பிரசுரித்துக்கொள்ளும் அளவுக்குக் கட்சி சார்ந்த பிரசுரமாக உள்ளது. இச்சம்பவம் குறித்த உள்துறை அமைச்சரின் அரசு அறிக்கையும் கட்சியின் பார்வையிலேயே உருவாகியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய தன்மை கொண்ட இரண்டு எழுத்துருக்களை நூலில் இணைத்ததன் மூலம் கட்சி சார்ந்த தொனி நூலில் மிகுதியாகிவிட்டது. மற்ற பின்னிணைப்புகளான நீதிமன்றத் தீர்ப்புகள் இந்தப் பேராயப் பேரொளியின் முன் மங்கிவிட்டன.

    சாதிய ஒடுக்குமுறையின் எதிர்ப்புப் போராட்டமாக இந்தக் கலவரத்தைப் பார்க்கும் இந்நூலின் பதிப்பாளர்கள், ஆவணப்படுத்தப்படாத வரலாற்று மீட்பாகவே இதைக் கருதுகிறார்கள். ஆசிரியர் தினகரன் எப்படிச் சுயசாதி மறுத்துச் செயல்பட்டாரோ அப்படிப் பிற்படுத்தப்பட்டவர்கள் உயிர்த் தியாகம் செய்யுமளவிற்குச் சுயசாதி வெறியை எதிர்த்து வினையாற்றுவதுதான் தலித்தியத்திற்குச் செய்யும் முக்கியப் பங்களிப்பு எனும் கருத்தை முன்வைத்து நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள். பதிப்பாளர்களின் பார்வையில் தினகரனின் இந்த நூல் தலித்தியத்திற்கு ஆதரவான நூலாக மாறி உள்ளது. எந்தச் சமூகத்திலும் எழுதப்படாத வரலாறுகளே எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இப்படிப்பட்ட மூலங்களிலிருந்தே நாம் உறிஞ்சி எடுக்க வேண்டியுள்ளது. ஆவணப்படுத்தாமல் அழிந்துகொண்டிருக்கும் இந்த வகை வரலாறுகள் உருப்பெற்று மேலெழும்போது, அதுவரையில் நிலவிய மைய நீரோட்ட வரலாறு முற்றிலும் தன்னை இழந்து காலக் கண்ணாடி முன் அம்மணமாய் நிற்கும்.
    தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களின் வரலாறு வைக்கம், சேரன்மாதேவிப் போராட்டங்களாக வரலாற்றில் மறைந்துகிடக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியின் விதைகள் சித்தனூர், கண்டதேவி, வடுகனி, இரவுசேரி, முதுகுளத்தூர், கொடியங்குளம், தாமிரபரணிக் கரை எனப் பல இடங்களில் புதைந்து கிடக்கின்றன. அவை வெளிக் கிளம்பி, பெரிய மரமாகி, காற்றை நிரப்பும்போது வரலாறு முற்றிலும் மாறி நிற்கும்.

    அரை நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட நூலை இன்றைய காலத்தோடு இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரைகள் இரண்டும் பிற்படுத்தப்பட்டவர்களைத் தலித்தியத்திற்கு எதிராக நிறுத்துகின்றன. இதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், விதிவிலக்காக, முதுகுளத்தூர் கலவரம் உள்பட இன்றுவரை அநேகப் பிரச்சினைகளில் தலித்தியத்திற்கு ஆதரவு சக்தியாகப் பெரியாரும், இந்தத் தினகரன் போன்ற சுயசாதி அபிமானமற்ற பிற்படுத்தப்பட்டவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இவர்கள் மிகச் சிலர்.

    பிற்படுத்தப்பட்டவர்களில் தலித்திய ஆதரவு சக்தியாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இந்த நூலின் நோக்கங்களில் ஒன்று என்றால் இந்நூல்வழி கிடைக்கும் அதன் வெற்றி உடனடியானதல்ல.

    ஏற்கனவே, கடந்த 50 வருடங்களாகச் சமூகத்தில் செல்வாக்கு செலுத்திவந்த, நாட்டின் தபால்தலை வரை சென்றுவிட்ட சிலரது பண்புருக்களை இந்நூல் கடுமையாக அசைத்திருக்கிறது. ஒரு சாராரின் உயர்வுக்குக் காரணமானாலும் அது யார் பலியில் நிகழ்ந்திருக்கிறது என்பதை இந்நூல் சொல்லாமல் புரியவைத்துவிட்டது. தென் மாவட்டங்களில் பேச்சு வழக்கில் புழங்கிவரும் சொல்லாடல்களுக்கு அச்சு வடிவம் தந்துள்ள பிரதி இது. களப் போராட்டத்துக்கான அறிவுப் பின்புலத்தை வலுவடையச் செய்யும் திசையில் இந்நூல் பெரும்பணி ஆற்றும்.
    ஒரு குறிப்பிட்ட கலவரம் பற்றிய இந்த ஆவணம் மறவர் – பள்ளர் மோதலில் மறவர்களுக்குத் தலைமை தாங்கியவரின் செயற்பாடுகளை விளக்குகிறதே தவிர, அவரது முந்தைய குற்றப் பரம்பரைச் சட்ட நீக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளை ஒதுக்கிப் புறந்தள்ளவில்லை. ஆனால் அவற்றில் கலந்துள்ள சாதிய உணர்வுகளை உணர்த்திச் செல்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் வாசக மனத்துக்குள் கட்டமைக்கும் பிம்பம் மிகக் கடுமையாக இருக்கும். பதிப்பாளர்கள் திறமையானவர்கள்.

    முதுகுளத்தூர் கலவரத்தைப் பள்ளர்களுக்கு எதிரான தேவரின் செயற்பாடாகப் பார்ப்பதும் நாடார்களின் சூழ்ச்சியாகக் கணித்துப் பயனடைந்தது நாடார்கள் எனச் சொல்வதும் காமராஜ் அவர்களின் அதிகார அரசியலின் ஒரு நிலையாக விவரிப்பதும் முதுகுளத்தூர் கலவரம் பற்றிய பல்வேறு கருத்து நிலைகள் ஆகும். அரசியல், சமூக ஈடுபாடு மிக்க ஒரு வேளாண் பேராசிரியர் (என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது) சொன்னது போலப் பள்ளர்கள் இன்று தேவேந்திரர் என்றும் மள்ளர் என்றும் ஆதிக்க சாதியினர் என்றும் கருதிக்கொள்ளும் அளவிற்குப் போர்க் குணம் மிக்க சக்தியாக வளர்ந்திருப்பதற்கு இந்தக் கலவரம் உதவியது என்பதுதான் கண்கூடான உண்மை.

    தென் மாவட்ட சாதிக் கொத்தில் மறவர், நாடார், பள்ளர், பறையர், சக்கிலியர் என்னும் வகைப்பாட்டில் முதல் நால்வர் பல்வேறு உரிமைப் போராட்டங்களின் ஊடாகக் கல்வி, பொருளாதார, அரசியல் ஏணியில் ஏறத் தொடங்கிவிட்டனர். இப்போது ஏணியின் பல படிக்கட்டுகளில் அவர்கள் மாறிமாறி இருக்கலாம். ஆனால், ஏணியின் அடிவாரத்தைக்கூட அடையாமல் அந்தக் கொத்தின் கடைசிப் பகுதி இருக்கிறது.

    வண்ண மை சேர்க்கப்பட்ட முத்திரைகளுடன் நண்பர்கள் காத்திருக்கும் சூழலில் இம்மாதிரியான நூல்களுக்கு அதன் உள்ளடக்கம், நிரல் முறை, ஆவணங்களின் நம்பகத்தன்மை, தகுதி, சூழல், முன்வைக்கும் வாதங்கள் சார்ந்த முழு விமர்சனங்களை அவ்வளவு எளிதில் எழுதிவிட முடியாது. இத்தகைய அரசியல் நூலின் விமர்சனங்களைப் பிரதிக்கு வெளியே உள்ள அம்சங்களே பெரிதும் தீர்மானிக்கின்றன. அதுவும் ஒருவகையில் சரிதான். அர்த்தம் பிரதியிலா இருக்கிறது?

    னெச்ச்ட்ffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff
    னெச்ட் கட்டுரை

    ஜெயலலிதா, சுப.தங்கவேலன், ரித்திஸ், விஜயகாந்த் போன்றோரின் அருகிலேயும், மு.க.ஸ்டாலின் அழகிரிக்கு நடுவிலேயும் தியாகி இமானுவேல் சேகரனின் உருவப் படம் பிளக்ஸ் பேனர்களில் பளபளக்க அவரின் நினைவு நாள் முளைப்பாரி, பால்குடம், வேல்குத்துதல், மொட்டையடித்தல் போன்ற சடங்குகளுடன் ஒடுக்கப்படுவோரின் விழாவாகவும் கோலகாலமாகவும் கடந்த மூன்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது.
    பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வரும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய போலிச் சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது இராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
    அன்றைய நாளில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். காமராஜர் இவரைச் சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். ஓட்டுக் கட்சிகளுக்கேயுள்ள பார்பனியத் தன்மை இவரை இதிலிருந்து வெளியேறச்செய்து விடுகிறது. 1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த முத்துராமலிங்கத் தேவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.
    இக்கொலைக்காக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பார்வார்டு பிளாக் என்ற கட்சிக்குத் தாவி அக்கட்சியையும் தேவர் சாதிக் கட்சியாக மாற்றியவர் இந்த முத்துராமலிங்கத் தேவர். நான்கு வர்ணங்களைக் கூறி தனது பிறப்பையும் தன் சாதி மீது திணிக்கப்பட்டுள்ள பார்பனியத்தின் தீண்டாமையையும் எதிர்த்து போராடியவர் அல்ல இவர். அதனை தனது முதுகில் சுமந்துகொண்டே பிறசாதிகளின் மீது தீண்டாமையை திணித்தவர். இவரின் சாதிய ஆதிக்கத்திமிரை புதுப்பிக்கவே தேவர் குரு பூசை நடத்தப்படுகிறது. ஒடுக்கப்படுவதற்கு எதிராக போராடுவதும் ஆதிக்கத்திமிரை நிலைநாட்டப் போராடுவதும் ஒன்றாக முடியுமா? தேவர் பூசை நடத்தப்படும் 3 நாட்களும் தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்ன நடக்குமோ என்று பயபீதியுடன் இருக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கித் தேவர் பூசை நடத்தப்படுகிறது. போக்குவரத்தை தடை செய்தல், திறந்திருக்கும் கடைகளை உடைத்தல், செல்லும் வழியெல்லாம் தாழ்த்தப்பட்டோரை தரம் தாழ்ந்த சொற்களால் வம்புக்கிழுத்து கலவரம் செய்தல் ஆகியன இப்பூசைக்கான பொருள்களாக உள்ளன.
    சில ஆண்டுகளுக்கு முன்னர் சண்முகையா பாண்டியன் இராமநாதபுரத்தில் நடத்திய தனது தேவர் சாதிய மாநாட்டிற்கு வாகனங்களில் வந்தவர்கள், வரும் வழியில் பரமக்குடிக்கருகில் உள்ள சரசுவதி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒரு வயதான மூதாட்டி, ஒரு குழந்தை மற்றும் சில பசுமாடுகளை வெட்டிக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்வினையாக மாநாட்டுக்கு வந்த வாகனங்களை மறித்து தேவர் சமூகத்தினர் சிலரை கொலை செய்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகுதான் தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களைக் கண்டு அஞ்சினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.
    “நாய், பன்றிகளுக்குக்கூட இரத்தம் சிவப்பாகத்தான் உள்ளது. அதற்காக அதுகளுடன் உறவு வைத்துக்கொள்ளவா முடியும்” என்று தேவர் சாதியத் திமிரைக் கக்கியவன் இந்த சண்முகையா பாண்டியன். இன்றும் அவரது பொதுக்கூட்டங்களிலும் கிராம நிகழ்ச்சிகளிலும் இது ஒலிபெருக்கியில் ஒலிபரப்படுகிறது. காமம் தலைக்கேறி தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாளும்போது (வன் புனர்வு)மட்டும் நாயும் பன்னியும் புனிதமடைந்த மனிதப் பிறவியாகத் தெரியுதாமோ?
    இமானுவேல் சேகரனின் கொலைக்குப் பிறகு உடன் நடந்த கலவரத்தில் தேவர் சாதியினர் 8 பேர் காமராஜர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவிடமான தூவல் என்ற ஊரில், கொல்லப்பட்டவர்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும் தேவர் சாதி வெறியனுமான பி.டி.குமார் கடந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியப் பின் “இதற்குப் பழிக்குப் பழிவாங்கியேத் தீருவோம்” என்று உறுதி மொழி எடுத்தான். அதற்கான திட்டமிடலும் செய்து வந்தான். அதனாலேயே அவனை தேவர்குரு பூசைக்கு செல்லும் வழியில் தாக்கத் தாழ்த்தப்பட்ட மக்கள் திட்டமிட்டனர். ஆனால் அவன் சற்று பின் தங்கியதால் முன் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி அடையாளமறியப்படாமல் தாக்கப்பட்டுவிட்டார்.
    ஆனாலும் இதற்குப் பழிவாங்க சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் வின்சென்ட் என்பவர் பேரூந்து நிறுத்தத்தில் தேவர் சாதி வெறியர்களால் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். வெள்ளையன், கணேசபாண்டியன், செல்லத்துரை மைக் செட் ஊழியரான அறிவழகன் என்று கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கொலைப்பட்டியல் நீண்டு கொண்டேதான் உள்ளது. இதற்கு எதிர் வினையாகத்தான் பள்ளர் அல்லது தேவேந்திர குல தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை மற்றும் கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.
    தான் கைகாட்டிய இடத்தில் ஓட்டுப் போட்டது, தானே ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக ஓட்டுப் பெட்டியை நிரப்பியது, காலில் உள்ள செருப்பையும் தோளில் உள்ள துண்டையும் கையில் எடுத்துக் கொண்டு “அய்யா” என்று கைகட்டி கூலியற்ற சேவகம் செய்யவைத்தது இன்னும் பிற பிற ஒடுக்குமுறைக்கெல்லாம் உட்பட்டிருந்தவர்கள் அதனை மறுத்தால் சும்மா விட்டுவிட முடியுமா?
    திருவாடானைக்கருகில் உள்ள கப்பலூர் கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்த தேவர் சாதியைச் சேர்ந்த கரியமாணிக்கம் என்பவர் காலத்தில் ஓட்டுச் சாவடி எப்படியிருந்தது என்றுகூடப் பார்த்ததில்லை. இன்று அவரது மகன் இராமசாமி எம்.எல்.ஏ. காலத்தில் சற்று முன்னேறி ஓட்டுச்சாவடி உள்ளே சென்று பார்க்கும் அறிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் ஓட்டுக்களைப் பதிவு செய்வது இராமசாமி அவர்களின் அடியாட்கள். “நானும் இந்நாட்டின் ஒரு குடிமகன்” என்ற உணர்வை ஒடுக்கப்பட்டோர் புதுப்பித்துக் கொள்ள ஆடடித்து, பட்டைச் சாராயம் கொடுத்து கருணைமிக்க விருந்து கொடுக்கப்பட்டுவிடும். தேர்தல் அதிகாரிகளின் சூட்கேசுகளும் பூத் ஏஜென்ட்டுகளின் பைகளும் நிரப்பப் பட்டுவிடும்.
    சாதிய ஏற்றத் தாழ்வற்ற சகோதரத்துவ கொள்கையுடைவர்கள் நாங்கள் என்று கூறும் இசுலாமியர்களும் நாட்டுக்குள்ளேயே ஒரு நாடுவைத்து அரசாளும் இவர்களுக்கு துணைபோவதும் நாட்டுநடப்பாகத்தான் உள்ளது.
    அம்மாவிற்காக ஒரு பேரூந்தை எரித்ததால் தேர்தலிலே சீட்டுக் கிடைத்து இளையான்குடித் தொகுதியில் வ.து.நடராஜன் வெற்றி பெற்றது எப்படித் தெரியுமா? ஆனந்தூர் மற்றும் இராதானூர் பகுதியைச் சுற்றியுள்ள ஒடுக்கப் பட்டோர்களுக்கெல்லாம் வெறும் மிச்சர் பொட்டலம் கொடுத்து “உங்கள் ஓட்டுக்களை எல்லாம் நாங்கள் போட்டுக் கொள்கிறோம்” என்று திருப்பி அனுப்பப் பட்டதால்தான்
    இவ்வாறெல்லாம் ஜனநாயகம் செழிப்பாக இருந்த இடத்தில் இன்று எதிர்த்து போராடினால் கையைக் கட்டிக்கொண்டு அவர்களால் வேடிக்கைப் பார்க்க முடியுமா? அதனால்தான் தேவர் குரு பூசை அவரின் நினைவிடமான, பசும்பொன் பகுதி மக்களால் மட்டும் கொண்டாடபட்டு வந்த நிலையில் அரசியல் கட்சிகளில் உள்ள தேவர் சாதியத் தலைவர்களாலும் தேவர் சாதிய அமைப்புகளாலும் தனது ஆதிக்கம் பறிபோவைதைச் சகிக்க முடியாமால் அதனைத் தடுக்க தமிழகம் தழுவிய விழாவாக மாற்றி சாதிய உணர்வை கடந்த பத்தாண்டுகளாக நெருப்பு மூட்டி வளர்க்கின்றனர்.
    ஜெயலலிதா, கருணாநிதி,மு.க. ஸ்டாலின், புதிய அரசியல் அவதாரம் விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னணி நடிகை நடிகர் பட்டாளம் என விதி விலக்கின்றி அனைவரும் தேவர் பூசையில் தவறாமல் கலந்து கொள்கின்றனர். ஆனால் இமானுவேலின் நினைவு நாளைப்பற்றி வாயைக்கூட திறப்பதில்லை.
    ஓ. பன்னீர் செல்வத்தை தன்னுடை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தபோது “நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது சாதிய அரசியலை பகிரங்கமாக கூறுவதற்கு ஜெயலலிதா தயக்கம் காட்டியதே இல்லை.
    போலீசின் மாட்சிமையையும் அறிந்துக் கொள்ளாமல் ஜனநாயகத்தின் வலிமையை புரிந்துகொள்ள முடியாது. “நாயுடனும் பன்னியுடனும் உறவு கொள்ள முடியுமா” என்ற தேவர்சாதி வெறியன் சண்முகையா பாண்டியனின் பேச்சு ஒலி நாடா அவரது பொதுக்கூட்டங்கள் தோறும் ஒலிபரப்பப்படுகிறது. இராமநாதபுரத்தில் இவர் நடத்திய மாநாட்டிற்கான சுவர் விளம்பரத்தில் ஒரு மனிதனின் தலையை வீச்சரிவாளால் வெட்டுவது போலவும் அதிலிருந்து இரத்தம் சொட்டுவது போலவும் வரைந்திருந்தனர். ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்ற கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் முழக்கத்தை எழுதினாலே பயங்கரவாதம், தீவிரவாதி என்று வழக்குப் போட்டுச் சித்திரவதை செய்யும் போலிசிற்கு இச்சுவரெழுத்தும் பேச்சும் வன்முறையைத் தூண்டுவதாகத் தெரியவில்லை. கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றனர்.
    தேவர் பூசைக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அவர்களின் வெறிக்கூச்சலையும் கடை உடைப்புக் கலவரங்களையும் கைகட்டி வேடிக்கையும் பார்க்கும் போலீசு, இமானுவேல் சேகரனின் நினைவு நாளன்று நினைவிடத்துக்கு வருபவர்களை வழிமறித்து “சோதனை” என்ற பெயரில் பயபீதியூட்டி முடிந்தவரை தடுக்கப்பார்க்கிறது. இவ்வாண்டு இவ்வாறு பார்திபனூரில் போலீசு தடுத்ததால் கண்ணீர் புகைக் குண்டு வீசுமளவுக்கு கலவரம் ஏற்பட்டது. அவ்வாறு ஆதிக்க சாதியினர் தடுத்து கலவரம் செய்யும் பொழுதும் பாதுகாப்புத் தராமலும் கலவரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மறுக்கிறது.
    ஜனநாயக அரசாங்கங்களும் தேவர் பூசையை அரசு விழாவாகக் கொண்டாடி மகிழ்சியடைகிறது. அரசு எந்திரமான போலீசு தனது அறிவிக்கப்படாத கொள்கையாக் கொண்டு ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.
    ஆனால் “காலச் சக்கரம்” இதனை தொடராக அனுமதிக்க முடியாததல்லவா! முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் தடுத்துவிட முடியாது! பல ஆண்டுகளாக சிறு அளவில் நடத்தப்பட்டு வந்த இமானுவேல் சேகரனின் நினைவு நாள் விழாவும் கடந்த 3 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தேவர் பூசைக்கு எதிராக அதே பார்பனியச் சடங்குகளுடன் நடத்தப்பட்டாலும் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவே இவ்விழா உள்ளது. இவர்களிடையேயுள்ள பார்பனியக் கலாச்சார பழக்கமும், சொத்துடைத்த பணக்கார வர்க்கமும் பார்பனியக் கலாச்சாரப் பாதையில் இழுத்துச் செல்லும் சமூகச் சூழ்நிலையாக உள்ளது.
    அதனால் இன்று ஓட்டுக்கட்சிகள் பலவும் தலைவர்கள் செல்லாமல் பகுதியிலுள்ள எம்.எல்.ஏக்களையோ அல்லது இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைவர்களையோ இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பங்கேற்கச் செய்கின்றனர். ஆனால் தங்களுடைய தலைவர்களின் படத்துடன் இமானுவேல் சேகரனின் படத்தையும் அச்சிட்டு பேனர்களாக நிறுத்தியுள்ளனர். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக வேடமிடுகின்றனர்.
    தம் தொகுதிகளில் ஆதிக்க சாதியுணர்வைத் தூண்டி ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஓட்டுக் கட்சியிலுள்ள ஆதிக்க சாதியின் தலைவர்கள், சாதிய ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் போராடி கொலையுண்டு தன்னுயிரை தியாகம் செய்த இமானுவேல் சேசகரனின் கல்லரையில், மலர் வளையம் வைத்த கையின் மணம் மாறாமல் கொலை செய்தவனின் கல்லரையிலும் மலர் வளையம் வைத்து சாதி ஆதிக்கத் திமிரை புகழ்வதும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கொலை செய்தவனே கொலை செய்யப்பட்டவனின் நினைவு தினத்தை கொண்டாடும் அதிசயமல்லவா இது! சாதிய ஒடுக்குமுறைக்குக் கட்டுப்பட்டு ஓட்டுப்போட்டது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் பரிமாணத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாலும், அனைத்து கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசுவதாலும் இப்படிப்பட்ட செண்டிமென்டல் கபட நாடமும் ஓட்டுக் கட்சிகளுக்குத் தேவையாக உள்ளது.
    ஓட்டுக் கட்சிகளின் கபட நாடகங்களையும் தன் ஜாதிக்குள்ளேயே உள்ள நவீன பணக்கார வர்கத்தின் சூழ்ச்சியையும் உணர்ந்து கொள்ளாது “ஆட்டை பலி கொடுத்தவன் அதனையே சாமிக்கும் படைப்பதுபோல்” ஒடுக்கப்பட்ட மக்கள், முளைப்பாரி எடுப்பது வேல் குத்துவது போன்ற பார்பனிய கலாச்சாரதிலும், சீரழிவுக்குக் கலாச்சாரத்திலும் மூழ்கடிக்கப்பட்டு சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான அரசியல் போராட்ட உணர்வுகளை இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியாக வெளிப்படுத்துகின்றனர். இமானுவேல் சேகரனின் தியாகம் பார்பனியத்தின் காலடியில் அடகு வைக்கப்படுகிறது.DஏCஓறாM போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தம் பங்கிற்கு களமிறங்கி சோறு தருகிறோம் பால் தருகிறோம் என்று அரசியல் உணர்வற்றவர்களாக மாற்றுகிறது.
    சாதிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட பசும்போன் தேவரின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடுவது என்னவகை நியாயம்? இது ஜனநாயக அரசாங்கமா? அல்லது மனு தர்ம அரசாங்கமா? இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதும் தேவர் பூசையை அரசு விழாவிலிருந்து நீக்குவதுமே ஜனநாயக நடவடிக்கையாக இருக்கமுடியும். சும்மா அம்பேத்காரைப் போற்றுவதும் பெரியாரின் வாரிசுகள் என்று வாய் கிழிய கத்துவதும் கதைக்குதவாது.
    பன்னெடுங்காலமாக சாதிய ஒழிப்பைத்தான் ஒடுக்கப்பட்டோர் வேண்டுகின்றனர். சாதிய ஒடுக்குமுறையை நிலைநாட்டுபவர்கள் ஆதிக்க சாதியினரே. ஓட்டுக் கட்சிகளின் புதிய அவதாரமான சமரசப் போக்கெல்லாம் சாதிய ஒழிப்பைத் தராது. அதனால் ஒடுக்கப்பட்டோர் தம்மிடமும் உள்ள பார்பனியக் கலாச்சாரங்களைக் களைந்து பிற சாதிய உழைக்கும் மக்களுடன் சாதியம் பாராமல் ஒன்றிணைந்து முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தலைமையின் கீழ் ஆதிக்க சாதிய வெறியர்களுக்கெதிராகப் போர்குணமிக்க அரசியல் போராட்டங்களை நடத்தாமல் முளைப்பாரி எடுப்பதும் மொட்டை அடிப்பதும் சாதி ஒழிப்புக்கு தீர்வாகாது.
    -கட்டுரையாளர்கள் தோழர்கள் சாகித், ஆனந்த்.

  49. தேவரைக் கொண்டாடினால் தேவர் சாதி வெறியாம்,. ஆனால் இவர்கள் இமானுவேலை கொண்டாடுவார்களாம். ஆனால் இவர்கள் தலித்தாம். இவர்களுக்கு சாதிவெறியே இல்லையாம். சாதிக்கு எதிராய் போராடுகிறார்களாம். இவர்கள் தேவரைப் பற்றி கூறுவதிலிருந்தே தெரிகிறதே எத்தனை தூரம் இமானுவேல் சாதிக்கு ஜிங்ஜாங் அடிப்பது.

    நடுநிலையோடு இருப்பவனுக்கும், தேவன்களுக்கும் எங்கள் குல தெய்வம் பசும்பொன் தெய்வதிருமகன் பற்றி தெரியும். நீங்கள் இமானுவேலுக்கு வக்காளத்து வாங்க எங்கள் தேவரை சாதி வெறிபிடித்தவன் என்று கூறாதீர்கள்…

    • முக்குலத்தாரே, சூத்திரர்களுக்கெல்லாம் வரலாறு ஒரு கேடா என்று பாரப்பனர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பார்த்தால் உங்களுக்கெல்லாம் சரித்திரம் ஒரு கேடா என்றுதான் சொல்லவெண்டும்.
      உண்மையில் இந்த உலகை உருவாக்கும் உழைப்பாளிகளின் சரித்திரம்தான் உண்மையான சரித்திரமாக பதிவு செய்யவேண்டும்.

  50. முதலில் வினவு தளத்தில் இட்ட தலைப்பே தவறு.தேவர் என ஒரு இனத்தை குறிப்பிட்டுவிட்டு எதிர்தரப்பை தலித் என குறிப்பிடுவது தவறு.அப்படி எனில் தலித்தில் உள்ள மற்றா இனங்கள் போராடுகிறதா…தேவரினத்திற்கு எதிராக இல்லையே…பிறகு ஏன் தலித் என குறிப்பிட்டீர்கள்.தேவேந்திரர் என குறிப்பிடுங்கள்.அல்லது பள்ளர் என குறிப்பிடுங்கள்.

    • நீங்கள் சொல்வது தான் கரெக்ட். பள்ளனை பள்ளன் என்று தான் கூப்பிடனும். வேற எப்படி கூப்பிட??

      • கர்நாடக தேவர் சங்கம், உன் பாட்ட்டானோ, முப்பாட்டனோ அல்லது உன் பாட்டியோ , முப்பாட்டியோ எங்காவது கிராஸ் ஆக வில்லை என்று உறுதியாக கூற முடியுமா ? தேவன்னா, உனக்கு என்ன ரெண்டு இருக்கா.?

  51. thayavu seidhu sariyana thagavalai pathivu seiyungal IMMANUVEL SEKARAN THALITH KALIN THALAIVAR ALLA AVA DEVENTIRAR KALIN THALAIVAR IVARKALEA GURU POOJAL NADATHUKIRARGAL THALITHUGAL NADATHAVILLAI…

  52. முதலில் வினவு தளத்தில் இட்ட தலைப்பே தவறு.தேவர் என ஒரு இனத்தை குறிப்பிட்டுவிட்டு எதிர்தரப்பை தலித் என குறிப்பிடுவது தவறு.அப்படி எனில் தலித்தில் உள்ள மற்றா இனங்கள் போராடுகிறதா…தேவரினத்திற்கு எதிராக இல்லையே…பிறகு ஏன் தலித் என குறிப்பிட்டீர்கள்.தேவேந்திரர் என குறிப்பிடுங்கள்.அல்லது பள்ளர் என குறிப்பிடுங்கள். உன் ஜாதி பெயர் சொன்னால் தின்டாமை மட்ர ஜாதி பெயர் சொன்னால் தின்டாமை இல்லையா

  53. உன்னை தாழ்த்தப்பட்டவன் என்று நீதான் முடிவெடுக்க வேண்டுமேயொழிய மற்றவன் அல்ல-முடிவெடு.

  54. சாதியத்தையும், மூட நம்பிக்கையும் ஒழிப்பதற்கு, சமூக பொருளாதார அறிவியல் விழிப்புணர்வு அவசியம்.

    நீங்கள் எழுதும் கட்டுரைகள் தேவர் ஜாதியினர் படித்தாலும், அவர்களுக்கு உண்மையை உணர்த்தி சமத்துவத்தையும், மனிதர் அனைவரும் ஒன்று என்பதை உணர்த்துவது போன்றும் இருக்க வேண்டும்.

    திரு.முத்துரமலிங்கமும் திரு.இம்மானுவேல் சேகரனும், இறந்து புதைத்து வருடங்கள் ஓடி விட்டன. இரண்டு குருபூஜைகளும் அர்த்தம் அற்றவை.

    திரு. முத்துராமலிங்கம் அவர்களிடம் தலித் சமுதாயத்திற்காக சில போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் எடுத்துக்காட்டு,மீனாக்ஷி அம்மன் கோவில் ஆலய பிரவேசம் செய்ய துணை நின்றுள்ளார், தனது சொத்துக்கள் அனைத்தையும் தலித்துக்களுக்கு எழுதி வைத்துள்ளார்,. ஆயுனும் அவரது ஆதிக்க சாத்திய குணமும் இருந்துள்ளது, இதற்க்கான காரணம் குறித்தும், மத சமூக அரசியல் பொருளாதார கரணங்கள் குறித்தும், விவாதிக்கலாம்.

    அத்தகைய தடைக்கற்களை விடுத்தது நமது தலைமுறை எப்படி முன்னேறுவது என்று ஆரோக்கியமான நடுநிலையான விவாதமாக இருந்திருக்கும் என எதிர் பார்த்தேன்.

    (இதை கூறினால் நான் தேவர் இனத்தை சேர்ந்ததாக கற்பனை கொள்வீர்கள், அம்பேத்கர் கருத்துக்களால் கவரப்பட்டவன் என்றால் என்னை தலித் என்பீர்கள், பாலஸ்தீன் தரப்பு வாதம் நியாமானது என்றல் என்னை இஸ்லாமியன் என்பீர்கள்.) உங்கள் கற்பனைக்கு நான் வேலி போடப்போவது இல்லை.

    பார்ப்பனீயத்தை எதிர்த்து போராடுவோம், பார்ப்பனர்களை எதிர்த்து அல்ல.

    தேவரின ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்து போராடுவோம், தேவர் இன மக்களை எதிர்த்து அல்ல.

    பார்ப்பனரும்,தேவரின மக்களும், தத்தம் மூடத்தனமான அடையாளங்களை துறந்து, இந்த முன்னற்ற பாதையில், நம்முடன் பயணிக்க வேண்டியவர்கள். அவர்களும் பயணித்தால் தன இது சமதர்மதிர்கான போராட்டமாகும், இல்லையென்றால், இது ஜாதியை வளர்க்கும் அரசியல் ஆகிவிடும்.

    மனிதனின் கழிவை பன்றி தின்னும், பன்றியின் கழிவை மனிதன் தின்று பழி தீர்க்க வேண்டும் என்பது போல் உள்ளது இந்த கட்டுரை.

    வினவு வலைதளத்தின் அறிமுகம் கிடைத்தது, நல்ல தளம், முன்னேற்ற கருத்துக்கள் உள்ள தளம் என மகிழ்ந்தேன். இந்தப்பதிவு, சற்றே என் நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களாக.

  55. பிள்ளைமார் சாதியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தார்கள் என்கீறீர் அதற்கான ஆதாரம் தேவை.

Leave a Reply to kanegenthiran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க