Skip to content

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து.

பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.

தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.

அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.

காரணம் எதுவாக இருப்பினும் படத்தின் வில்லன் ‘ஜனநாயகம்’. ஜனநாயகம் என்ற இந்தக் கருதுகோள் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது?

பப்பட் ஷோவில் முசாரப்பின் பயங்கரவாதத்தை கையாளத் தெரியாத கோழிமாக்கான் புஷ், குண்டு வெடிப்பு பயங்கரவாதம் ஆகியவற்றால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படும் முதலமைச்சர் (கருணாநிதி), ஜனநாயகத்தின் அதிகாரத்திற்க்கு கீழ்ப்படியுமாறு மோகன்லாலிடம் கூறும் முதுகெலும்பில்லாத தலைமைச் செயலாளர், எதிர்கால முதல்வராக விரும்பும் விஜயகாந்தைப் போன்ற மட்டமான ஒரு நடிகன்… இவர்கள்தான் ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக படத்தில் சித்தரிக்கப்படுபவர்கள்.

இவர்கள் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள், தூங்கி வழியும் எஸ்.ஐ முதலான கீழ் வர்க்கத்தினரும் (சாதியும்தான்) எள்ளி நகையாடப்படும் ஜனநாயகத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

இவர்கள் எள்ளி நகையாடத் தக்கவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி. இவர்களை எள்ளி நகையாடும் கதாநாயகன் யார் என்பதுதான் விசயம்.

அதிகாரத்தின் இந்தக் கீழ்த்தரமான ஜனநாயகத்தின் கீழ் பணியாற்றுமாறு சபிக்கப்பட்டிருக்கும் மோகன்லால், மனைவியை மறந்து மரணத்தை தழுவத் தயாராக இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி, நடமாடும் உருட்டுக் கட்டையான முஸ்லீம் அதிகாரி….அப்புறம் நம்முடைய காமன்மேன் ஆன கிருஷ்ண பரமாத்மா. இவர்கள்தான் கதாநாயகர்கள்.

இவர்களுடைய கோரிக்கை? அதை மோகன்லால் சொல்கிறார், “எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத அதிகாரம்”. அந்த அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும் பட்சத்தில் பயங்கரவாதத்திலிருந்து மக்களை அவர்கள் பாதுகாப்பார்களாம்.

அரசியல் குறுக்கீடுகள் அற்ற அதிகாரம்! இந்த சொற்றொடரை அநேகமாக எல்லா  துக்ளக் இதழ்களிலும் நீங்கள் படித்திருக்க்கலாம். இத்தகைய அதிகாரத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வழங்காததனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்துமே புழுத்து நாறுகிறது என்பதுதான் ‘சோ’ வர்க்கத்தின் கருத்து. இவர்களை இன்னும் கொஞ்சம் சுரண்டினால் ‘தகுதியான’ ஐ.ஏ.எஸ் ஆக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பிப்பார்கள்.

அர்சத் மேத்தா முதல் அமெரிக்காவின் சப்-பிரைம் மோசடிக்கான சூத்திரத்தை உருவாக்கிய எம்.ஐ.டி கோல்டு மெடலிஸ்டுகள் வரையிலான எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இவர்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை சில்லறை அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்தான் பயங்கரவாதம் தலையெடுக்கவும், தலைவிரித்தாடவும் காரணம். ஆகவே அதிகார வர்க்கத்திற்க்கு முழு அதிகாரம் வழங்கினால் அடுத்த கணமே பயங்கரவாதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள்.

அத்வானி முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வரையிலான பலராலும் பல்லாயிரம் முறை கூறப்பட்டு மக்களுடைய பொதுப்புத்தியில் இந்தப் பொய் உறைய வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அசாதாரமான ரவுத்திரம் கொண்டு நான்கு பேரை குண்டு வைத்து கொலை செய்யும் இந்தப் படத்தில் குற்றவாளிகளின் ‘கொடுரமான’ குற்றங்களையோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்ட காமன்மேனின் துயரத்தையோ கோடம்பாக்கத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் நியாயப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கவில்லை. ‘நியாயம்’ மக்களுடைய மூளைகளில் ஏற்கனவே உறைந்திருப்பதால் தீர்ப்பு மட்டுமே தேவையாய் இருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.

யங்கரவாதிகளை கொடிய மிருகங்களுக்கு ஒப்பிட்டு கமலஹாசன் சாடவில்லை. அவர்களை கரப்பான் பூச்சிகளுக்கு ஒப்பிடுகிறார். இந்தக் கொலை கரப்பான் பூச்சிகளை நசுக்குவதைப் போல முக்கியத்துவம் அற்றது. அந்த உயிர்கள் வெறும் பூச்சிகள். இந்தப் பூச்சிகளைக் கொலை செய்த கையோடு தக்காளி பையுடன் வீட்டிற்குப் போய் மணக்க மணக்க சாப்பிட முடியும் – லாக்கப்பில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதியை அடித்துக் கூழாக்கிவிட்டு இரவில் மனைவியைத் தழுவும் அதிகாரியைப் போல. கரப்பான் பூச்சிகள்! சாதரண மனிதர்களையும் சிறு குற்றவாளிகளையும் ஏன் மொத்தக் குடிமக்களைப் பற்றியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டிருக்கும் கருத்து இதுதான்.

அதை கமலஹாசன் சொல்கிறார். ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல” என்கிறார். புத்திசாலித்தனம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்படுவது எவ்வளவு விகாரமாக இருக்கிறது? பிக்பாக்கட் – ஒரு கரப்பான் பூச்சி, முட்டாள். ஹர்ஷத் மேத்தா – புத்திசாலி. பயங்கரவாதிகளை படுபயங்கரமாக சித்தரிப்பதற்காக அல்கைதா சர்வதேசத் தொடர்பு என்றெல்லாம் அடுக்கி பீதியூட்டும் அதே வர்க்கம் அவர்களை நசுக்கப்பட வேண்டிய அற்ப ஜந்துக்களாகவே கருதுகிறது. இந்தக் கருத்தில் மோகன் லாலுக்கும் மற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் காமன்மேனுக்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. காமன்மேன் என்பவன் போலீஸ் மேன் மோகன்லாலின் ஆல்டர் ஈகோ. அதனால்தான் இறுதிக் காட்சியில் கிட்டத்தட்ட கமலின் காலில் விழுகிறார் மோகன்லால்.

கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது.

ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?

போலீசு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளில் ஏன் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன? ஏனென்றால் குற்றவாளிகளை லாக்கப்பில் அவர்கள் ஏற்கனவே தண்டித்து விடுகிறார்கள். அப்புறம் இரண்டு மாதம் ரிமாண்டு. போலீசைப் பொறுத்தவரை தீர்ப்பு தண்டனை எல்லாம் முடிந்து விட்டது. நீதிமன்றம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத அசவுகரியம். அதனால்தான் அலட்சியம்.

ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு “அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை.

1947க்கு முந்தைய இந்து முசுலீம் கலவரங்களில் இருதரப்பிலும் பல அட்டூழியங்கள் நடந்தன. அதன்பின் இந்தியாவில் சிறுபான்மையாகிவிட்டதால் திருப்பியடிக்கும் சமூக வலிமையை இசுலாமிய சமூகம் இழந்திருந்தது. 90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் இந்து மதவெறியர்களைப் போல கற்பழிப்பு, உயிரோடு எரிப்பு முதலான சமூகமே நடத்தும் கலவரங்களில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது. இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம். இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது. ஆனால் பார்வையாளர்கள், பதிவுலகில் விமரிசனம் எழுதிய பலரும் இது குறித்தெல்லாம் அக்கறைப்படவில்லை என்பது இந்த படம் தோற்றுவித்திருக்கும் அபாயகரமான பிரச்சினையாகும். இவர்களின் அக்கறையின்மை என்பது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த ஊடகங்களின் பொய்யான புனைவுகளில் நிலைகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கவுசர்பானுபோல கீதாபென் என்ற இந்துப்பெண் தனது முசுலீம் கணவனை காப்பாற்றப்போய் இந்து மதவெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதுவும் குஜராத் இனப்படுகொலையில் நடந்த உண்மைதான். ஒரு முசலீமின் விந்து கரு ஒரு இந்துப்பெண்ணின் கருப்பையில் நுழைவதா என்ற அளவுக்கு இந்து மதவெறி குஜராத்தில் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் முசுலீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்துப்பெண்களுக்கு எதிராக இந்துப்பெண்களின் ‘கவுரவத்தை’ காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இந்துமதவெறியர்கள் வட இந்தியாவில் நடத்துகிறார்கள். இந்த சமீபத்திய வரலாற்றின் துயரங்களை தெரிந்து கொண்டால்தான் கமலின் ‘இந்துவுக்கு நடந்தால் என்ன, முசுலீமுக்கு நடந்தால் என்ன’ என்று பேசும் ‘தத்துவ அயோக்கியத்தனத்தை’ புரிந்து கொள்ளமுடியும்.

கவுசர்பானுவின் கதையை கேட்டு உருகி பழிவாங்க நினைத்தால் குஜராத்தின் மோடியையோ, அதற்கு உதவியாக இருந்த போலீசு, அதிகார வர்கக்த்தையோ பழிவாங்கியிருக்க வேண்டும். மாறாக இந்த அநீதிகளை இந்த நாட்டின் சட்ட அரசியல் அமைப்பு தண்டிக்கவில்லை என்று பொறுமி இசுலாமிய தீவிரவாதம் குண்டுவெடிப்பின் மூலம் எதிர்வினையாற்றுகிறது. கமலோ, கவுசர்பானுவின் துயரத்தையே திருடி இசுலாமிய தீவிரவாதிகளுக்கு குண்டு வைக்கிறார். அதற்காக மொட்டை மாடியிலிருந்து ஆவேசப்படுகிறார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

னால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?

ராகேஷ் ஷர்மாவால் எடுக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை விவரிக்கும் பைனல் சொலியூஷன் (FINAL SOLUTION) என்ற ஆவணப்படத்தின் இறுதியில் ஒரு ஐந்து வயது முசுலீம் சிறுவன் பேசுகிறான். தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று சர்மா கேட்கிறார். அதற்கு அவன் தான் ஒரு போலீசாக வர விரும்புவதாக கூறுகிறான். ஏன் என்று கேட்கிறார் சர்மா. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று மழலை மொழியில் கூறுகிறது அந்தக் குழந்தை.

கலவரங்களை கண்ணால் கண்டு மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒரு குழந்தையே இப்படி பேசுகிறது என்றால் இசுலாமிய பயங்கரவாதம் ஏன் குண்டு வைக்காது? இந்த யதார்த்தத்தை கமல் கேலிசெய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார். காமன்மேன் ஆர்.எஸ்.எஸ்-ஐ விஞ்சுகிறார்.

இரா.முருகனின் அசட்டுத்தனம் காரணமாகவும் கமலின் திமிர்த்தனம் காரணமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற இத்தகைய சில வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒருவேளை இவை இல்லை என்றாலும் இது ஒரு இந்துத்வ பாசிஸ்ட் திரைப்படம்தான். இந்திய அரசும் அதிகார வர்க்கமும் தன்னியல்பாக இந்துத்வத்தை வரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடு என்ற கோரிக்கையே நடைமுறையில் ஒரு இந்துத்வ கோரிக்கைதான். தங்களுடைய சொத்து சுகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பச்சையாக முதலாளிகள் எந்தக் காலத்தில் கோரியிருக்கிறார்கள்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கோருவார்கள், கூறுவார்கள். அதுதான் இது, இதுதான் அது. காஷ்மீர் முதல் கோவை வரை முசுலீமாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதை வெறும் கதையல்ல. நீதிமன்றங்களில் நீருபிக்கப்பட்ட உண்மை.

காஷ்மீர், குஜராத், கோவை, புலிகள் அனைத்திலும் அதன் அரசியல் காரணங்கள் கழுவி நீக்கப்பட்டு வெறும் பயங்கரவாதம் என்று பேசப்படும் வக்கிரத்தை கமலும் செய்கிறார். இந்த பயங்கரவாத விளக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இசுலாம் பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்தப்படம் ஒடுக்கப்படும் மக்களுக்கெதிராகவும் தன்னை காட்டிக் கொள்கிறது.

மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜிவ் காந்தியின் கொலை எல்லாம் மறக்கப்பட்டதாக கமல் கவலைப்படுகிறார். மாறாக இதைச் சொல்வதன்மூலம் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தையும் மறக்கச் சொல்கிறார். அதன்மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரே வரியில் பயங்கரவாதமாக மாற்றப்படுகிறது. குண்டு வெடிப்புகள் குறித்து மக்கள் மறக்கிறார்கள் என்று கவலைப்படும் கமல் கோவை காவலர் செல்வராசு கொலைக்குப்பின் நடந்த முசுலீம் எதிர்ப்பு கலவரத்தையோ, குஜராத் இனப்படுகொலையையோ மக்கள் மறந்து விட்டதாக கவலைப்படவில்லை. ஏனெனில் இந்துமதவெறியர்கள் எதைக் கவலைப்படவேண்டுமென நினைக்கிறார்களோ அவைதான் கமலின் கவலையும் கூட.

எல்லாவற்றிலும் அரசியல் காரணங்களை கழுவிவிட்டு பயங்கரவாதமாக சித்தரிப்புது ஒன்று. இரண்டாவதாக இந்த பயங்கரவாதங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாது, எதிர்பயங்கரவாதத்தினால்தான் முறியடிக்க முடியும் என்பது. மூன்றாவது இந்த பாசிச முறையை பெருமைப்படுத்துவது. இது ஏதோ முசுலீம், ஈழம் பற்றி மட்டுமல்ல, நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதம், இந்தியாவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதம், இப்படி எல்லாவற்றையும் பயங்கரவாதமுத்திரை குத்துவது யாருக்கு சேவையளிக்கிறது?

லகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம் படத்தின் தீவிரவாதி சொல்வது போல காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துமதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை  குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?

பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. கமல் முன்வைக்கும் பாசிச அரசு வந்தாலும் இந்த எதிர்வினைகளை அடக்கிவிடமுடியாது. மாறாக இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கே அந்த பாசிசம் பயன்படும்.

90களின் ஆரம்பத்தில் நடந்த பம்பாய் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த சிவசேனாவின் பங்கை மறுக்கும் விதமாக இந்து, முஸ்லீம் இருதரப்பினரும் கலவரம் செய்ததாக மணிரத்தினத்தின் பம்பாய் படம் சித்தரித்திருந்தது. இதைக்கண்டித்து ம.க.இ.கவும் சில இசுலாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அதன் பிறகு இந்தப் பணியை தொடர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் முசுலீம் தீவிரவாதத்தை வைத்து வெளிவந்துவிட்டன. இந்தப் படங்களின் நாயகர்கள் காஷ்மீருக்கும், பாக்கிற்கும் சென்று முசுலீம் பயங்கரவாதிகளை அழித்து வந்தார்கள். அப்படித்தான் பொதுப்புத்தியிலும் “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முசுலீம்கள்தான்” என்று அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.

து இசுலாமிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காலத்தில் வாழ்க்கைப்பிரச்சினைகள் , தற்கொலைகள், வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லா அரசுகளும் அதற்கு மாற்றாக பயங்கரவாதங்களை எதிரிகளாக வைத்து மக்களைக் காப்பாற்றுவதாக சித்தரிக்கின்றன. அமெரிக்காவில் வீடுகளை ஜப்தியில் இழப்பதை விட ஆப்கானில் பின்லேடனைத் தேடுவது முக்கியமானது; விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட காஷ்மீரில் இராணுவத்தை குவித்து மக்களை ஒடுக்குவது முக்கியமானது; இலங்கையில் பொருளாதாரம் போரினால் ஆட்டம் கண்டாலும் புலி ஆதரவாளர்களை முற்றிலும் ஒழிப்பது என்பதற்காக இராணுவத்தை இரண்டுமடங்காக பெரிதுபடுத்துவது முக்கியமானது, தொழிலாளிகள் இழந்து வரும் தொழிற்சங்க உரிமைகளைவிட தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது முக்கியமானது…

இப்படித்தான் உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன. முதலாளித்துவத்தால் ஊழல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போன தங்களது வளர்ப்பு பிள்ளைகளான அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஆளும் வர்க்கங்கள் அப்புறப்படுத்திவருகின்றன. கரப்பான் பூச்சிகளான மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் காட்டிலும், புத்திசாலிகளான தொழில்முறை அதிகாரவர்க்கத்தின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிற்கு ஓட்டுப்போடும் உரிமை வந்த காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கரை பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் மூப்பனார்கள், வாண்டையார்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும், அவர்களுக்கு ஏழுதலைமுறைக்கு சொத்து இருப்பதால் பொதுப்பணத்தில் கைவைக்க மாட்டார்கள் என்றும் ஒரு பிரச்சாரம் அடிமை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. சலூன் கடைக்காரனும், டீக்கடைக்காரனும் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் வாங்காமல் என்ன செய்வான் என்று காங்கிரசுகாரர்களும் சோ முதலானோரும் அன்றும் இன்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அதே பாட்டுக்கு புது மெட்டு போடப்படுகிறது. மன்மோகன் சிங்கும், மான்டெக் சிங் அலுவாலியாவும், நந்தன் நீலகேணியும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே அவர்களுக்குரிய விசேட தகுதியாகிவிட்டது. கமலும் கூட மோகன்லால்களிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரியானது என இந்தப்படத்தில் வலியுறுத்துகிறார்.

அதனால்தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தப்படம் முசுலீம் எதிர்ப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அடிப்படையில் இது பாசிச மனோபாவத்தை ஆதரிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனி முசுலீம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும், ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கும் நாயகர்கள் தேவையில்லை, காமன்மேனே போதும் என்கிறது உன்னைப் போல் ஒருவன். முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் (இந்து) நடுத்தரவர்க்கம் கூடவே பாசிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கும் கொண்டுவரப்பட்டிருப்பதால் திரையரங்கில் அத்தகைய வசனங்களுக்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!

__________________________________________________

பின்குறிப்பு:

குஜராத் கலவரத்திற்கு நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை” என்று ஒரு ம.க.இ.க தோழர் கேட்டதற்கு அப்படியெல்லாம் கட்டளை போட்டு கவிதை வராது என்று கூறிய மனுஷ்ய புத்திரன் அது பற்றி தனி கட்டுரையே எழுதியிருக்கிறார். படத்தில் இரக்கமற்ற போலீசு அதிகாரியாய் வரும் ஆரிப் எனும் இளைஞன் தனது உருட்டுக்கட்டையால் குற்றவாளிகளை விசாரிப்பதற்கு உதவி செய்வான். இறுதிக் காட்சியில் விடுபட்ட தீவிரவாதியையும் சுட்டுக்கொல்வான். ஆரிஃப்பின் உருட்டுக்கட்டை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பயன்பட்டதோ அதே அளவு மனுஷ்யபுத்திரனது பாடலும் பயன்பட்டிருக்கிறது. அந்தப்பாடல் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்த்து என்று அவரே குறிப்பிட்டுள்ளதால் அது கூலிக்கு மாரடிக்கும் குண்டாந்தடி அல்ல உணர்வுப்பூர்வமான குண்டாந்தடி என்று பாகுபடுத்திப் பார்ப்பதே நியாயமானது.

மல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள் – அவசியம் படிக்க வேண்டியவை


Print

349 Comments

  1. கேள்விக்குறி

    அருமையான அலசல். தெளிவான கட்டுரை. அனைத்து விமர்சனங்களையும் உண்மைத்தமிழன் உபயத்தில் படித்து மறை கழன்டு போன நிலையில் உங்கள் கட்டுரை சரியான வாதத்தை முன்வைத்துள்ளது.

    பாசிசம்தான் படத்தின் சாரம், இதைத்தான் ஆங்கில மீடியாக்களும், துக்ளக் சோக்களும், சத்யம் தேட்டர் விசிலடிக்காத குஞ்சுகளும் இத்தனைநாள் பேசிவந்தனர் இனி கமல் உபயத்தில் அனைவரும் பேசுவர். 

    இங்கே கமலுக்கு செருப்பாக உழைக்கும் போலி கம்மூனிஸ்டு கட்சியின் இணைய தளபதி மாதவராஜ், இலக்கியச் செம்மல் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட கோடம்பாக்கத்து ‘முற்போக்காளர்’களை அம்பலப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குறியது.

    Posted on 01-Oct-09 at 11:44 am | Permalink
  2. அப்பாடா..! எங்கடா அண்ணன் கோபத்தைக் காணோமே.. லிஸ்ட்ல சேர்ககணுமேன்னு காத்துக்கிட்டிருந்தேன்.. வந்திருச்சு.. தேங்க்ஸ்ண்ணே..!

    Posted on 01-Oct-09 at 11:44 am | Permalink
    • கேள்விக்குறி

      உண்மைத்தமிழன் அண்ணே, உங்க பணி சிறப்பானது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சினிமாவின் அனைத்து விமர்சனங்களையும் ஒரு தொண்டு போல தொகுத்து வைத்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி. 

      Posted on 01-Oct-09 at 11:50 am | Permalink
    • குப்பைத்தொட்டி நாராயணன்

      //வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!//

      இந்த வரிகள் உண்மைத் தமிழன் அண்ணாச்சிய நோக்கி எழுதப்பட்டது மாதிரி இருக்கே….

      Posted on 01-Oct-09 at 12:19 pm | Permalink
    • vaasakan

      paroyosai.wordpress.com il oru vimarsanam ullathu.athaiyum searththukkollavum.@ vaasakan

      Posted on 01-Oct-09 at 5:13 pm | Permalink
  3. [[[சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.]]]

    அட அண்ணன் இந்த அளவுக்கு சினிமா ரசிகரா..? ஆச்சரியமா இருக்கு..!

    Posted on 01-Oct-09 at 11:47 am | Permalink
  4. எது எப்படியோ படம் நல்லா இருக்கு. எல்லார் மனதில் இருக்கும் விஷயத்தைத் தான் படம் சொல்கிறது. ஒண்ணுமே இல்லாத சாதாரண படத்துக்கும் பல கற்பனை அர்த்தங்கள் சொல்லி இரண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுத முடியும்னு நிரூபித்திருக்கிறார் வினவு. வாழ்த்துக்கள் !

    உன்னைப் போல் ஒருவன் நிச்சயமாக நம்மைப் போல் ஒருவன் தான்!

    Posted on 01-Oct-09 at 11:56 am | Permalink
    • கேள்விக்குறி

      என்ன எழுதியிருக்காங்கன்னு கூட படிக்காம ஒரு கருத்தை எழுதிடமுடியும் எனவும், அதுக்கான அறிவு நாணயமெல்லாம் தேவையேஇல்லை என கூச்சமே இல்லாமல் உணர்த்தியிருக்கிறார் கபிலன். வாழ்த்துக்கள

      Posted on 01-Oct-09 at 12:09 pm | Permalink
      • தலைமுறை

        நீங்கள் என்ன குறிப்பிடுகிறீர்கள் (கேள்விக்குறி, வினவு)??
        முசுலீம் தீவிரவாதமே இல்லை என்கிறீர்களா???

        அவர்களின் தீவிரபயங்கரவாதத்திற்கு அளவே இல்லை.
        இது பல இடங்களில் நடைபெறுகிறது.
        இலங்கை உட்பட, அவர்கள் தமது மதம் பரப்புவதர்காக எதையும் செய்வார்கள். இது அனுபவப்பட்டவனுக்கு தெரியும்.
        இங்கு மாதம் 5முறை வரும் பத்திரிகைகளில் புதிய முசிலீம் பெயர்கள் இந்துப்பெயரிலிருந்து.
        நீங்கள் இவ்வாறு மார்க்சியம் பேசிக்கொண்டு இருங்க. உங்களையும் வெட்டி மாற்றுவார்கள்…
        நன்றி.

        Posted on 02-Oct-09 at 5:39 pm | Permalink
      • கோபால ஆரிப்

        முஸ்லிம், கிருஸதுவத்தை அழிப்பற்கே மதக்கலவரங்களை உண்டுபண்ணி பல உயிர்களை அழிக்கும் இந்துக்களும் தீவிரவாதிகளே இதை ஏன் யாரும் உணர்வதில்லை. அவர்கள் கலவரகார்கள் அல்ல, இந்து தீவிரவாதிகளே. மதத்தை கட்டாயம் கொண்டு எவராலும் பரப்ப இயலாது. இது ஆதிகாலம் அல்ல. மதியுடன் சிந்தித்தல் வேண்டும். இல்லையேல் வேறித்தனமும், நரித்தனமும் தான் மிஞ்சும்.

        Posted on 18-Oct-09 at 10:53 am | Permalink
    • கபிலன் ,
      நாட்டுல முக்காவாசி பேர் காசு வாங்கிகினு தான் ஒட்டு போடுறாங்க !
      அதை வச்சி எல்லாரும் செய்யுறதை நீயும் செஞ்சா நீ ஒரு பேமானி ! இல்லை உனக்கு மூளை இருக்குதுனா அது தப்புனு சொல்லணும். அந்த மாரி இது தப்புனு சொல்லுறதுக்கு தானெ இவ்வலோ பெருசு கட்டுரை எழுதிக்கீது வினவு. அதை வுட்டுனு அல்லாரும் என்ன நினக்கிறாங்களோ அதை கமல் சொல்லுறானாம். இவுரு ஏத்துகினாராம். நீ எல்லாம் கம்பூட்டெரு முன்னாடி உக்காந்துனு கீர. கருமம் கருமம்

      Posted on 01-Oct-09 at 12:31 pm | Permalink
      • இந்தப் படத்துல சொன்னதுல எது உண்மை இல்லைன்னு சொல்லுங்க. நாட்டுல நடக்காததையா இந்தப் படம் சொல்லி இருக்கு ? அடடா, பல தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சொன்னது எல்லாம் மக்களிடம் எடுபடல. இந்தப் படத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு நச்சுன்னு மேட்டர் சொல்லி இருக்காரேன்னு உங்களுக்கு எல்லாம் ஒரு வித புகைச்சல்! அவ்வளவே!

        ஆமாங்க கம்புயூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு இருக்க கருமம் தாங்க நான். வயிற்றுப் பிழைப்பு வேற வழி இல்லை !

        Posted on 01-Oct-09 at 12:55 pm | Permalink
  5. அற்புதமான ஒரு விமர்சனம். வாழ்த்துக்கள் வினவு.

    Posted on 01-Oct-09 at 12:04 pm | Permalink
  6. சுஜாதா பார்ப்பன நரி இல்லமல் கூட இந்த அளவுக்கு கமல் யோசிக்கிறானா ?
    எனெக்கென்னவோ துக்ளக் மொட்டை சோமாறி மேல கொஞ்சம் சந்தேகம்.

    Posted on 01-Oct-09 at 12:15 pm | Permalink
  7. ஐயா,

    கமல் ஒன்றும் டாக்குமென்ரி படம் எடுக்கவில்லை, அவர் பணத்திற்க்கு படம் எடுப்பார் அல்லது விருதுக்கு எடுப்பார். இப்போது உள்ள டிரண்டுக்கு ஏற்றார் போல எதை சொன்னால் விலை போகும் என யோசிக்கும் வியபாரம் தான். கமல் மட்டுமல்ல The Kingdom, Body of Lies and Bombay, fanaa முதலான பல படங்கள் இந்த வியபாரத்தை முன்வைத்தே எடுக்கப் ப்டுகின்றன. இதே படத்தில் மோடியை, காஷ்மீரில் அத்து மீறும் இந்திய ராணுவத்தை சாடினால் படத்திற்க்கு தனிக்கை சான்றிதழ் கூட கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் தியேட்டாரில் ஒட்ட முடியாது என்பது கமலுக்கு நண்றாக தெரியும். உண்மையை சொல்லி பிழைப்பை கெடுத்துக் கொள்ள கமல் என்ன முட்டாளா? 

    Posted on 01-Oct-09 at 12:19 pm | Permalink
    • இது கமலின் அயோக்கியத்தனத்தை காப்பாற்றுகிற வாதம்! கமல் ஒரு தேர்ந்த வியாபாரி மட்டுமல்ல!

      Posted on 01-Oct-09 at 5:58 pm | Permalink
    • really you are DAMN WELL SHAHUL, i know all people are run behind of money., when i think and try to follow the moral code of life, everybody ask me ( includes my family)., how much you hve in your bank? and for your kind info., kamal and rajini are good friends and rajini is main attraction of VIAJY TV’s kamal function., now i have to ask one quesitons., kamal have many good and loyal frineds like rajini in cinema fields., then why rajini…?? because if rajini feliciate kamal, that will give the LOT OF ADVERTISEMENTS for TV., SURVIVAL OF FITTEST.

      Posted on 03-Oct-09 at 12:50 pm | Permalink
    • கோபால ஆரிப்

      சரியாக சொன்னீர்கள்…. நண்பரே..

      Posted on 18-Oct-09 at 10:59 am | Permalink
  8. நானே எப்பவோ இந்த ம.க.இ.க கிட்ட இருந்து தப்பிச்சி ஓடி வந்து கஷ்டப்பட்டதுக்கு இப்பதான் என் வாழ்க்கையில், ஏதோ கமல் தயவாலே ஒளி தெரியுது. இனிமே தான் செட்டில் ஆக ஆரம்பிச்சிருக்கேன். அது அந்த ம.க.இ.க மருதையனுக்கு பொறுக்கல ! பொறாமை புடிச்சவனுங்க !

    Posted on 01-Oct-09 at 12:22 pm | Permalink
  9. “மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது ”

    சின்னப் புள்ளத் தனமா இருக்கு…உலகறிந்த உண்மையை இந்தப் படம் சொல்லி இருக்கிறது. இதில் எது பொய்? இஸ்லாமிய தீவிரவாதம் பொய்யா?

    “அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. ”
    இந்தப் படத்தில் மொத்தமாக அனைவரையும் பயங்கரவாதியாக காட்டவில்லை. ஆரீப் என்ற இளைஞன் தீவிரவாதியை சுட்டு வீழ்த்தும்போது அரங்கில் ஏற்பட்ட கரகோஷத்தைக் கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
    இட்லி சுடுவது எப்படின்னு ஒரு பதிவு போட்டீங்கன்னா கூட, சாதி, இந்து மத வெறி, பாசிசம், துக்ளக் சோ இதெல்லாம் இல்லாம வினவு எழுதமாட்டார் : )

    Posted on 01-Oct-09 at 12:23 pm | Permalink
    • கேள்விக்குறி

      கபிலன் உங்களுக்கு உண்மையிலேயே நமது நாட்டின் மீது அக்கரையும், தீவிரவாதத்தின் மீது வெறுப்பும் இருந்தால் உடனடியாக உங்களைப்போல் ஒருவனான கமல் காட்டிய வழியில் டுப்பு டுப்புன்னு தீவரவாதிய சுட்டுத்தள்ள வேண்டியதுதானே? ஏன் இங்க உக்காந்து பின்னூட்டம் எழுதி நேரத்தை வீண்டிக்கிறீர்கள்?

      Posted on 01-Oct-09 at 12:34 pm | Permalink
      • ஐயா,

        லெனினையோ, மார்க்சையோ பின்பற்றி இருந்தால் நீங்கள் சொல்வது போல நடந்து இருக்கலாம். மாவோயிஸ்டாகவோ, டாவோயிஸ்டாகவோ,டுபாகூரிஸ்டாகவோ இருந்து ஆயுதங்களை ஏந்தி சர்வாதிகாரத்தை கையில் எடுத்திருக்கலாம். ஆனா, நாங்க ஜனநாயகத்தை நம்புறவங்க. பலருடைய மனக்குமுறலை இந்தப் படம் சொல்லி இருக்கிறது என்று தான் சொல்ல வந்தேன்.

        Posted on 01-Oct-09 at 12:50 pm | Permalink
      • கேள்விக்குறி

        கபிலன், மறுபடியும் சொல்லுறேன், கட்டுரையை முழுசா வாசிங்க.. இங்கே கமல் தன்னை ஒரு காமன் மேன் என அறிமுகம் செய்து கொண்டு நீங்கள் நம்பும் ஜனநாயகத்தை பீச்சாங்கையால் ஒதுக்கிதள்ளி அதனிடத்தில் பாசிச சர்வாதிகாரத்தை முன்வைக்கிறார். அதுதான் இங்கே விளக்கப்பட்டிருக்கிறது. உங்களது இசுலாமிய தீவிரவாத கண்ணாடி அதை பார்ப்பதை தடுக்கிறது. இது தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் விமர்சனம் இல்லை, பாசிசத்தை எதிர்க்கும் விமர்சனம். நீங்கள் தான் இந்த படத்தை ஆதரிப்பதன் மூலம் தீவிரவாதத்தையும் பாசிசத்தையும் ஆதரிகிறீர்கள். 

        Posted on 01-Oct-09 at 1:08 pm | Permalink
      • சரி அப்படின்னா ஒன்னு பன்னுங்க, நீங்களும் ஒரு மொட்டைமாடியை தேர்வு பன்னி லேப்டாப் சகிதமாக போய் நாலு தீவிரவாதிகளை தீர்த்துக்கட்டுங்க. நாட்டுக்கு நல்லது பன்னினதாகவும் இருக்கும், படம் கூறும் நீதிக்கு ஏற்ப ந‌டந்து கொண்டது போலவும் இருக்கும்.கபில போல இந்த படத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய முதல் காரியம் இது தான்.
        அதை விடுத்து வெறுமனே மனம் குமுறி குமுறி ஆகப்போவது என்ன ?

        Posted on 01-Oct-09 at 2:06 pm | Permalink
      • ஐயா சூப்பர்லிங்க்ஸ்,
        இது குழந்தைத் தனமான விவாதம். இந்தியன் படம் அனைவருக்கும் பிடிக்கும். அதற்காக, அந்தப் படத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் கத்தி தூக்கிட்டு அலையனும்னு அர்த்தமுங்களா ஐயா ?

        Posted on 01-Oct-09 at 3:10 pm | Permalink
    • பாயாசம்

      குண்டு வைத்ததில் இந்து பயங்கரவாதியும் இருக்கிறான். அது பற்றி கபிலனும், கமலும் மௌனமாக இருக்கிறார்கள்.

      Posted on 01-Oct-09 at 2:21 pm | Permalink
      • குஜராத் முஸ்லீம்

        எங்க குடும்பத்த கொத்தோட கொன்னானுங்க அப்பல்லாம் கமலும், கபிலனும் எந்த படமும் எடுக்கல. இந்த உலகறிந்த உண்மையை தெஹல்கா அம்பலப்படுத்தியது. அப்பயும் கபிலன், கமல் ரெண்டு பேரும் ஆளக் காணும்.

        ஆனா, இதுக்கு எதிர்வினையா முஸ்லீம் இளைஞர்கள் குண்டு வைச்சாங்க. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்து பயங்கரவாதிகளும் குண்டு வைச்சு அந்த பழியையும் முஸ்லீம்கள் மீது போட்டாங்க. இப்போதான் கமலும், கபிலனும் இண்ட்ரோ ஆகிறார்கள். அதுவும் முஸ்லீம் பயங்க்ரவாதி குண்டு வைச்சத மட்டும் பேசுவானுங்களாம். அந்த சாக்குல ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் பயங்கரவாதி போலவும், கேலிக்குரியவர்கள் போலவும் சித்தரிப்பார்களாம். இதெல்லாம் உண்மை என்பதால் இதை சாக்காக வைத்து எல்லா ஜனநாயக அடிப்படைகள் மீதும் எச்சில் துப்புவார்களாம்.

        இத கேள்வி கேட்கவும் கூடாதாம்.

        நல்ல ஜனநாயகம்

        Posted on 01-Oct-09 at 2:34 pm | Permalink
        • Balaji

          யாரும் டைம் பாஸ் காக பாம் வைப்பது இல்லை. அவன் அவன் கோபத்துக்கு அவன் அவன் காரணம். அது கோயம்புதூர் ஆகட்டும், குஜராத் ஆகட்டும். பசங்களுக்கு அன்பை சொல்லி கொடுங்கப்பா.

          Posted on 20-Jan-10 at 2:26 am | Permalink
      • ஐயா பாயாசம்,
        ஐயகோ, இந்துவாகிய கரம்சந்தைக் கொன்றுவிட்டான் என்று எம்மில் யாராவது கதறினோமா? தப்பு செய்பவன் எந்த சமயமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, அப்படியே கமல் இந்தப் படத்தில் நீங்கள் சொல்வது போல் இந்து வெறி பிடித்தவன் என்றால், கரம்சந்தை ஏன் கொல்ல வேண்டும் தோழரே ?

        Posted on 01-Oct-09 at 3:16 pm | Permalink
      • ஒரு பத்திரிக்கை, ஒரு நியூஸ் சேனல் விடாம இந்த சம்பவத்தை பற்றி ஒரு வருடம் உலகமே கிழி கிழி என கிழித்தது உங்களுக்கு நினைவில்லையா ? நந்திதா தாஸ் குஜராத் சம்பவத்தைப் பற்றி படம் எடுக்க வில்லையா? எல்லோருமே கண்டித்த சம்பவம் தான் குஜராத் கலவரமும், அதற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பும்.

        சமயக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுப் பாருங்கள், உண்மையான பிம்பம் தெரியும்.

        Posted on 01-Oct-09 at 3:23 pm | Permalink
      • //குண்டு வைத்ததில் இந்து பயங்கரவாதியும் இருக்கிறான். அது பற்றி கபிலனும், கமலும் மௌனமாக இருக்கிறார்கள்.//

        சனாதானவாதிகளை பயங்கரவாதிகளாக ஒத்துக்கொள்ளும் தைரியம் எல்லாம் அவாளுக்கு கிடையாது. படத்தில் கரம்சந்த் லாலா என்கிற பெயர் மட்டும்தான் சனாதான பெயர். கரம்சந்த் லாலாவை பற்றிய அறிமுகத்திலேயே “Community and Currency – Agnostic” என அவனை நாத்திகன் என்று சொல்லிவிட்டார்கள். அதாவது ஒரு இந்து சனாதானவாதி பயங்கரவாதியாக இருக்க முடியாது என்கிற ஆர்.எஸ்.எஸ் வாதத்தை மெய்ப்பிக்க முயற்சித்திருக்கிறார்கள்

        Posted on 01-Oct-09 at 4:18 pm | Permalink
      • Karthik

        hmm payasam,

        You people dont even understand the real thing. And people like u are confused with ur religion. Here Terrorism and terrorist are not belongs to any religion or community. They are terrorists. I dont know why muslims are thinking that terrorists are muslims so they need to be supported. First u people see the humans as humans and whoever is doing wrong things is need to be punished. no matter its hindu or muslim. Like this movie said, the if u kill a muslim terrorist then u should be a hindu or if u plant a bomb then u are a muslim. One of the most disgrace person u are to live in this planet.

        People whoever supports the terrorism/Religious fights are the one needs to be eliminated from this world.

        If u talk about this movie people are asking why u don’t take movie about gujarat carnage.. I need to say first stop supporting terrorists with their religion. Both Mody and whoever planted bomb in coimbatore and bombay are equally the terrorists. Please take tag of religion from them.

        Posted on 08-Oct-09 at 12:23 pm | Permalink
    • குஜராத் முஸ்லீம்

      ஏன்யா கபிலன் நீதான் சுத்தமான ஜனநாயகவாதியாச்சே, டுப்பாக்கினா பிடிக்காதே? பிறகு ஏன் கமல்ஹாசன் துப்பாக்கியால சுடனும்னு சொல்லுகிற படத்தை ஆதரிக்கிறாய்?

      நீதான் நியாயவான் ஆச்சே? அப்புறம் ஏன் அயோத்தியில் மசுதியை இடித்து, கலவரம் செய்து இஸ்லாம் பயங்கரவாதத்துக்கு இந்தியாவில் தூபம் போட்டு வளர்த்த அத்வானி, மோடி, வாஜ்பேயி மாதிரியான பயங்கரவாதிகளை தண்டிப்பது பற்றி பேச மாட்டேன் என்கிறாய்?

      Posted on 01-Oct-09 at 2:37 pm | Permalink
      • பாயாசம்

        கரம்சந்த் என்ன பயங்கரவாதியா? அவர் கபிலன் மாதிரி ஒரு காரியவாதி. கபிலன் எப்படி காரியவாதி என்ற கேள்விக்கு அவர்தான் நிரூபனம் கொடுக்க வேண்டும். ஏனேனில் வெகு சுலபமாக முஸ்லீம் மக்களின் மீதே மொத்தமாக பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு அவ்ர்கள் அதனை நிரூபிக்க வேண்டும் என்று இந்து பயங்கரவாதம் நிர்பந்திப்பதையே இந்த படமும் வாந்தியெடுத்துள்ள நிலையில், அதனை உண்மை உண்மை என்று கூறி கபிலன் கதறும் போது அவரையும் நாம் காரியவாதி என்று கூறி நீருபிக்க நிர்பந்திப்பதில் தவறில்லை. ஏனேனில் அதுதான் கபிலனின் ஜனநாயகம், கமலின் பாசிசம்.

        மேலும், இதுவரை குண்டு வைத்தவர்கள் முஸ்லீம்கள் மட்டுமே என்று பேசிய படத்தை கண்மூடித்தனமாக ஆதரித்த கபிலன் பின்வரும் கருத்தை கூறியிருந்தார்:
        //எது உண்மை இல்லைன்னு சொல்லுங்க. நாட்டுல நடக்காததையா இந்தப் படம் சொல்லி இருக்கு ? //

        நாம் கமல் சொல்லியுள்ள அரை உண்மைகளுக்குப் பின்னால் உள்ள முழு உண்மைகளைப் பேசியவுடன் கரம்சந்தை காப்பாற்ற வரக் கோரி அழைக்கிறார் கபிலன்.

        கபிலனும், கமலும் அர்த்தம் பொதிந்த மௌனம் சாதித்த இடங்களை சுட்டியிருந்தேன் அவை குறித்தும் காரியவாதி கபிலன் பதில் சொல்லுவார் என்று நம்புகிறேன்

        Posted on 01-Oct-09 at 3:24 pm | Permalink
      • பாயாசம்

        //ஒரு பத்திரிக்கை, ஒரு நியூஸ் சேனல் விடாம இந்த சம்பவத்தை பற்றி ஒரு வருடம் உலகமே கிழி கிழி என கிழித்தது உங்களுக்கு நினைவில்லையா ? //

        அப்படியா? எனது நினைவுகள் இருக்கட்டும். உங்களது நினைவுகளில் இருந்து சிறிது எடுத்துக்காட்டுங்கள். குமுதம் மட்டுமே தமிழ்நாட்டில் எழுதியது அதுவும் இல கனேசன் தெஹல்கா அம்பலப்படுத்தியதை பொய் என்று குறிப்பிட்டு எழுதிய கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டது.

        Posted on 01-Oct-09 at 3:29 pm | Permalink
      • ஐயா பாயாசம் அவர்களே ,

        பைசாவிற்காகவும், தன் சுயநலத்துக்காகவும் ஒரு விஷயத்தைச் எப்படியாவது செய்பவன் தான் காரியவாதி. கரம்சந்த் என்ன பயங்கரவாதியா என்று கேட்கிறீர்கள். சரி. நீங்க சொல்லுங்க…கரம்சந்தை யாராக காண்பித்தால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று சொல்லுங்கள். வேண்டுமென்றால் உங்கள் ஆசைக்காக அவர் பெயரை மட்டுமாவது கரம்சந்த் என்று வைக்காமல் மோடி என்று வைத்திருந்தால் நீங்கள் சந்தோஷம் அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

        Posted on 01-Oct-09 at 3:55 pm | Permalink
      • பாயாசம்

        //ஐயா பாயாசம் அவர்களே ,

        பைசாவிற்காகவும், தன் சுயநலத்துக்காகவும் ஒரு விஷயத்தைச் எப்படியாவது செய்பவன் தான் காரியவாதி. கரம்சந்த் என்ன பயங்கரவாதியா என்று கேட்கிறீர்கள். சரி. நீங்க சொல்லுங்க…கரம்சந்தை யாராக காண்பித்தால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று சொல்லுங்கள். வேண்டுமென்றால் உங்கள் ஆசைக்காக அவர் பெயரை மட்டுமாவது கரம்சந்த் என்று வைக்காமல் மோடி என்று வைத்திருந்தால் நீங்கள் சந்தோஷம் அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
        //

        வெட்னெஸ்டே என்ற படத்தை கமல் தமிழில் எடுத்தார் இதே நேரத்தில் பர்சானிய என்றொரு படம் குஜராத் இந்து பயங்கரவாதத்தை பற்றிய படம் அதில் கமல்ஹாசனால் விவாகரத்து செய்யப்பட்ட அவரது முன்னாள் மனைவி சரிகா நடித்திருந்தார்.

        ஒருவேளை சரிகா நடித்ததினால்தான் அப்படத்தை கமல் தமிழில் எடுக்கவில்லையோ?

        அவர் வெட்னெஸ்டேவை தேர்வு செய்தது ஏன், அவர் ஏன் பர்சானியாவை தேர்வு செய்யவில்லை இதில்தான் கரம்சந்த் என்னவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கலாமென்பதும் அடங்குகிறது.

        Posted on 01-Oct-09 at 4:33 pm | Permalink
    • பாயாசம்

      /சாதி, இந்து மத வெறி, பாசிசம், துக்ளக் சோ இதெல்லாம் இல்லாம வினவு எழுதமாட்டார் : )//
      பதிவுல கூட சாதி, இந்து மத வெறி, பாசிசம், துக்ளக் சோ இதையெல்லாம் அம்பலப்படுத்த விடமாட்டார் கபிலன். ஏன்னா கபிலனுக்கு பதிவுலகம் என்பது இட்லி சுடுவது மாதிரி.

      இட்லி சுடுறத பத்தி பதிவு எழுதுவயா வினவு இனிமே? சுட்டுப் பொடுவேன் சுட்டு….

      Posted on 01-Oct-09 at 2:52 pm | Permalink
      • பாயாசம்

        ஒரு பேச்சுக்கு வைச்சுக்கவோம், கபிலன் திருடிட்டார். அவர் ஒரு திருடன் என்பது உலகறிந்த உண்மையாகிவிட்டது. இன்னிலையில் இஸ்மாயில் என்பவன் தானும் திருடிவிட்டு அந்த பலியை கபிலன் மீது போடுவதோடல்லாமல் ஒட்டுமொத்தமாக கபிலனுடைய ஊரே திருட்டுப்பய ஊருன்னு பிரச்சாரம் செய்கிறார். இன்னிலையில் இஸ்மாயில் இப்படி மோசடி செய்வது தெரிந்துவிடுகிறது.

        இந்த நேரத்தில் இஸ்மாயிலோட நண்பன் குமீர்ஹாசன் இந்து திருடனான கபிலன் போன்றவர்களை சுட்டுத் தள்ளுவதுதான் தீர்வு என்று படம் எடுக்கிறார் எனில் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டதுதான் இந்தப் படமும்.

        இந்த இடத்தில் நான் கபிலனாக இருக்க நேர்தால் குமீர்ஹாசனுக்கு ஒரு குண்டும், இஸ்மாயிலுக்கு ஒடு குண்டும் இன்னேரம் பார்சல் அனுப்பியிருப்பேன்.

        ஆனால், பாவம் ஒரிஜினல் கபிலன் ஜனநாயகவாதி எனவே அவர் திரைப்படத்தை ஆதரிப்பார். என்ன இருந்தாலும் தப்பு தப்புதானே…..

        Posted on 01-Oct-09 at 3:54 pm | Permalink
    • லெனின் (எ) செந்தில்

      ஏங்க கபிலன், காஷ்மீர்ல மக்களுக்கு நடக்குற கொடுமைக்கெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம் தான் காரணமா? 90களில் நடந்த பம்பாய் கலவரத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் தான் காரணமா? குஜராத் கலவரத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் தான் காரணமா? திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்திற்கு இந்து அல்லது முஸ்லிம் பெயர் வைத்து அவரை தீவிரவாதியாக காட்டினால் அந்த மதத்தவர் அனைவரும் நிஜ வாழ்வில் தீவிரவாதியா? என்னங்க பேசுறிங்க… முதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை புரிந்து கொள்ளுங்கள், அதன் பிறகு தீவிரவாதத்திற்கு யார் காரணம் என்று பின்னூட்டமிடுங்கள்.

      Posted on 02-Oct-09 at 6:13 pm | Permalink
      • ஐயா அது சரி,
        ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா மூலம் ஏதோ கொஞ்சம் அமெரிக்க ஏகாதிபத்யம் தெரியும் தான். உண்டு தான். அவர்கள் சொல்வதும், இங்கு கம்யூனிஸ்டுகள் சொல்லும் அமெரிக்க ஏகாதிபத்யமும் வேறு. மார்க்ஸ் சொன்ன கொள்கையை நாலு பேரு நாலு விதமா புரிஞ்சுகிட்டு, நாலு வெவ்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் ? மாவோயிஸ்டுகளுக்கு சப்போர்ட் பண்றதா வேணாமான்னு முடிவெடுக்க முடியல, சீனாவை எப்படி அணுகுவது என்ற முடிவும் சரிவர எடுக்கத் தெரியல…எப்படி பெரியார் தொண்டர்களுக்கு பார்ப்பனீயம், அப்படித் தான் கம்யூனிசத் தொண்டர்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்யம் !

        ஆனால், நம் வேட்டியிலேயே கையை விடும் சீனாவைப் பற்றி கமுக்கமாக இருக்கிறீர்களே…? ஈழத்துக்கு இந்தியாவைக் காட்டிலும் முழு சப்போர்ட் தெரிவித்த சீனாவை தமிழுணர்வு என்ற ரீதியிலும் நீங்கள் எதிர்க்க வில்லையே?

        Posted on 03-Oct-09 at 12:01 am | Permalink
  10. //90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் .//
    அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாமா?
    //இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம்//
    என்ன சொல்லனும்னு நீங்களே சொல்லுங்க?அப்படி மதம் பேதமின்றி சொல்வது தவறா?.மக்களை குழ்ப்பி மீன் பிடிக்க நினைக்கலாமா?.
    பல இடங்களில் உங்கள் புரிதலில் தவறு இருக்கிறது.

    Posted on 01-Oct-09 at 12:48 pm | Permalink
  11. அர டிக்கெட்டு !

    ‘குணா’ கமல் ரசிகன் என்ற வகையில் இந்த கட்டுரையை இரண்டு பாறைகளுக்கிடையே நின்று உரக்கக்கூவி வரவேற்கிறேன்.

    உ.போ.ஒ அல்லது ஆல்டர் ஈகோ எனும் இந்த திரைப்படத்தின் மூலமான ‘எ வெட்நெஸ்டே’ எனும் படத்தை பார்த்து நாலு நாளைக்கு குமட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவு கேவலமான படம். இருந்தாலும் பம்பாய்காரனுக்கு இருக்கும் உலக அறிவுக்கு அதுதான் வரும் என நினைத்தேன்,

    ஆனா அதைவிட விகாரமாக பாசிசத்தை கதையில் வைத்து, கைய காலை தூக்கி கஷ்டப்பட்டு அர்ஜூனும், விசயகாந்தும், சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணாவும்  வாங்கின வாங்காத அப்ளாசையெல்லாம், காஸ்டியூம் கூட மாத்தாம மொத்தமா வாங்கினாரு பாரு அவர்தான்யா உலக நாயகன் ( பேருலேயே கன் இருப்பது பியூர்லி கோஇன்சிடன்டலா?)  

    இனிமே சினிமாவுக்கு கதை ‘ரெடி’ ஒரு வசதி, ரூம் போட்டு சிந்திச்சு ஈரோவுக்கு கோபம் வரதுக்கு ஜஸ்டிபிகேஷன் தேட தேவையில்லை, அப்படி போர போக்குல உ.ப.ஒ போஸ்டர ஈரோ பாக்குற மாதிரி காமிச்சாபோதும், பாகிஸ்தான் மேல அனுகுண்டு கூட போடலாம். எவன் கேக்கறது….காமன் மேனா கொக்கா

    Posted on 01-Oct-09 at 1:00 pm | Permalink
  12. நியாயமான விமர்சன வினவு!

    படத்தில் அந்தப்பெண் கருவறுக்கப் பட்ட இடத்தைக் கூட குஜராத் எனக் குறிப்பிடாமல் நார்த் இண்டியா என பொத்தாம் பொதுவாக கூறும் கோழைதான் கமலின் காமன் மேன்.

    வலைத்தளத்தில் உ.போ.ஒ க்கு ஆதரவாக விமர்சனம் எழுதியவர்களில் ஒருவரும் கூட அவர்கள் அறிந்த முஸ்லீம்களில் எத்தனை பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு கூட உன்னைப் போல் ஒருவனின் கோழை ரசிகர்கள் ஒருவரும் பதில் கூறவில்லை!

    மொத்தத்தில் உன்னைப் போல் ஒருவன் பெரும்பான்மை என்கிற அரணுக்குப் பின் நின்று பாசிசத்துக்கு அதரவாக போரிடும் ஒரு தொடைநடுங்கி.

    Posted on 01-Oct-09 at 1:19 pm | Permalink
    • அறிவுடைநம்பி

      என்ன அரைவேக்காட்டு கபிலன் ஐயா?

      உறையூர்காரனின் கேள்விகளுக்கு பதில்கள் இருக்கிறதா உங்களிடம்.

      Posted on 01-Oct-09 at 2:14 pm | Permalink
      • பாயாசம்

        கபிலன் மாதிரியான தேச பக்தர்களின் தேச பக்தியின் அதிகபட்ச எல்லை என்னவென்பதைத்தான் சுகுணாதிவாகரின் பதிவு விளக்கியுள்ளது. இத அவர் சொன்னதும் சொன்னார் அகில பதிவுலக தேச பக்த ஆத்மாக்களும் பொங்கி எழுந்துவிட்டனர்.

        பாரத மாதாவின் சைசு என்னவென்று விளக்கி ஹாலிவுட் கலக்கல் பாலா என்ற அல்பை, கவுஜை ஒன்றை எழுதி தனது தேச பற்றை விளம்பரப்படுத்தியிருந்தது இதில் தனி நகைச்சுவை(பாரத மாதாவின் சைசு 36 இல்லையாம். பாவம் 10 தானாம்). பாரத மாதாவின் சைசு என்ற பதத்தை வைத்து சுகுணா முன்னிறுத்துகின்ற அரசியலைக் கூட எதிர்கொள்ள வழியின்றி, அதையும் 10-12-10 அல்லது 34-36-34 என்ற பெண்களின் சைசாக பார்க்கும் வக்கிரத்தை மட்டுமே ஹாலிவுட்டும் அவரது நட்பு தேச பக்தர்களும் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த வகையிலும் வழக்கம் போல சோ கால்டு பாரத மூதேவியை… ஸாரி மாதாவை அவமானப்படுத்தியிருப்பது தேச பக்தர்கள்தான்.

        http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_22.html
        முதலில் இந்த ‘காமன் மேன்’ என்னும் கருத்தாக்கமே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்த காமன்மேனுக்கு 3000 முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது கோபம் வராதாம், வாழ வேண்டிய ஒரு கல்லூரிப் பெண் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும்போது கோபம் வராதாம், ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் ஒரு இனத்தின் மீது படுகொலைகள் ஏவப்படும்போது கோபம் வராதாம், பிறகு எப்போதுதான் கோபம் வருமாம்? தான் பயணிக்கிற பேருந்தில், ஓடும் ரயிலில், தக்காளி வாங்கும் மார்க்கெட்டில், முக்கிப் பேள்கிற டாய்லெட்டில் குண்டு வெடித்தால் மட்டும் கோபம் வருமாம். சக மனிதர்கள் குறித்து எந்த அக்கறையுமற்று இருப்பவனுக்குப் பெயர் காமன்மேனா, டாபர்மேனா? இந்த காமன்மேனுக்குக் குண்டு வெடிப்பதுதான் பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த குண்டையும் காமன்மேனில் தலையில் கொண்டு போய்ப் போடுங்கள், மரணபயம் போகும்.

        Posted on 01-Oct-09 at 2:45 pm | Permalink
      • //பாயாசம்:
        கபிலன் மாதிரியான தேச பக்தர்களின் தேச பக்தியின் அதிகபட்ச எல்லை என்னவென்பதைத்தான் சுகுணாதிவாகரின் பதிவு விளக்கியுள்ளது. இத அவர் சொன்னதும் சொன்னார் அகில பதிவுலக தேச பக்த ஆத்மாக்களும் பொங்கி எழுந்துவிட்டனர்.
        பாரத மாதாவின் சைசு என்னவென்று விளக்கி ஹாலிவுட் கலக்கல் பாலா என்ற அல்பை, கவுஜை ஒன்றை எழுதி தனது தேச பற்றை விளம்பரப்படுத்தியிருந்தது இதில் தனி நகைச்சுவை(பாரத மாதாவின் சைசு 36 இல்லையாம். பாவம் 10 தானாம்). பாரத மாதாவின் சைசு என்ற பதத்தை வைத்து சுகுணா முன்னிறுத்துகின்ற அரசியலைக் கூட எதிர்கொள்ள வழியின்றி, அதையும் 10-12-10 அல்லது 34-36-34 என்ற பெண்களின் சைசாக பார்க்கும் வக்கிரத்தை மட்டுமே ஹாலிவுட்டும் அவரது நட்பு தேச பக்தர்களும் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த வகையிலும் வழக்கம் போல சோ கால்டு பாரத மூதேவியை… ஸாரி மாதாவை அவமானப்படுத்தியிருப்பது தேச பக்தர்கள்தான்.
        //
        உங்கள் தேச பக்த்தி எங்களுக்கு நல்லா புரியதுங்கன்ணே.
        பாயாசம் தான் சரியான தேசபக்தர்,மற்றவர்கள் எல்லாம்…….
        அவர்கள் சொன்ன “உன் இந்தியா” பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.

        Posted on 01-Oct-09 at 3:34 pm | Permalink
      • பாயாசம்,
        தவறை.. தவறு என்று கூட உங்களால் உணரமுடியவில்லையே..

        Posted on 01-Oct-09 at 3:37 pm | Permalink
      • ஐயா, அறிவுடைநம்பிக்கும், உறையூர்க்காரருக்கும்,

        நாங்கள் அரைவேக்காடு தான் ஐயா. முழுவதாய் விஷயம் தெரிந்த யாராவது ஒருவர் இருந்தால் அவர் எங்கு இருக்கிறார் என்று மட்டும் சொல்லுங்கள்.

        ஹாஹா…அந்தப் படத்தில் வசனங்களே மிகக் குறைவு. அதுவும் பல இடங்களில் பல வசனங்கள் விழுங்கப்பட்டு, அப்படியே புரிய வைக்க முயன்றிருக்கிறார்கள். இந்தப் பதிவின் உள்ள நீளம் கூட மொத்தப் படத்தின் வசனம் இருக்குமா என்பது சந்தேகமே !

        சொல்ல வந்தது தீவிரவாதம். நல்ல நறுக்குன்னு சொல்லி இருக்கார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். இன்னொரு படத்துல கலவரத்தைப் பற்றி சொன்னார்னா, நீங்க நினைக்குற அளவுக்கு விளக்கமா சொல்லுவார்.

        அதெப்படி, இதுவரை வந்த பெரும்பாலான படங்களில், கமல் அதிகம் தாக்கிப் பேசியது இந்து சமயத்தவரைத் தான். எல்லோரும் அமைதி காத்துக் கொண்டிருந்தீர்கள். கலை ஞானி, உலக நாயகன் என்று புகழ்ந்தீர்கள். திடீரென்று அவர் இந்து ஃபாசிஸ்ட் ஆயிட்டாருங்களா ஐயா?

        Posted on 01-Oct-09 at 3:40 pm | Permalink
      • அறிவுடைநம்பி

        இன்னும் கேள்விக்கான விடைகள் வரவில்லை கபிலன் ஐயா. உங்களுக்கு தெரிந்த முஸ்லிம்களில் (வேலூரில் முஸ்லிம்களுக்கா பஞ்சம்) எத்தனை பேருக்கு மூன்று மனைவிகள்? கருவறுக்கப்பட்ட இடம் குஜராத் என்று சொல்வதில் என்ன தயக்கம்? என்கிற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும்.

        மேலும் மூன்றாவது பீவி என்கிற சொல் விழுங்கப்படாது, ஆனால் குஜராத் என்கிற சொல் மட்டும் விழுங்கப்படும். எதை விழுங்க வேண்டும் எதை வாந்தி எடுக்க வேண்டும் என்பதில் பார்ப்பனீய அடிப்படையிலே சிந்தித்திருக்கிறார்கள் என்பது தான் பேசுபொருள்

        Posted on 01-Oct-09 at 4:06 pm | Permalink
      • பாயாசம்

        //சொல்ல வந்தது தீவிரவாதம். நல்ல நறுக்குன்னு சொல்லி இருக்கார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். இன்னொரு படத்துல கலவரத்தைப் பற்றி சொன்னார்னா, நீங்க நினைக்குற அளவுக்கு விளக்கமா சொல்லுவார்.//

        அப்படில்லாம் அவர் எடுத்ததே இல்லை. இனிமே எடுப்பார் என்று இப்போது எடுப்பதற்கு சப்பை கட்டு கட்ட முடியாது.

        நக்சலிசம் பத்தி படம் எடுக்காம, போலீஸ்க்காரன பத்தி குருதிப் புனல் எடுத்தார் அதில் அவதூறு

        சாதிவெறி பத்தி படம் எடுக்காம தேவர்மகன் எனும் சாதிவெறி படம் எடுத்தார் அதில் காரியவாதம்

        ஹேராமை ஒரு முஸ்லீமின் பார்வையில் வேண்டாம், ஒரு மதச்சார்பற்றவனின் பார்வையில் கூட எடுத்திருக்கலாம் ஆனால் ஆர் எஸ் எஸ்க்காரனின் பார்வையில் எடுத்தார் அது இந்துத்துவம்

        இதோ இப்போது பயங்க்ரவாதம் பற்றிய படம் என்ற பெயரில் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு கருத்தியல் அடிப்படையும், பாசிசத்திற்கு வலிமையும் கொடுக்கும் பாசிசவாதியாக இருக்கிறார்.

        இப்படி இதுவரை இவர் செய்ததெல்லாம் விளக்கெண்ணைய் மண்டி வேலையாக இருக்கும் போது இனிமேல் ஒருப்படியாக எடுப்பார் என்று கபிலன் வகையாறா வேண்டுமானால் நம்பிக் கொண்டிருக்கும்.

        Posted on 01-Oct-09 at 4:13 pm | Permalink
      • பாயாசம்

        //
        ன்ன “உன் இந்தியா” பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.
        //

        சுரேஸ்குமார்,

        ‘உன் இந்தியா’தான் காஸ்மீரிலும், வ்டகிழக்கிலும் வாங்கிக் கட்டிக்கும் என்பதை குறிக்கும் முகமாக செருப்பு சைஸ் பத்து என்று குறிப்பிட்டார் சுகுணாதிவாகர். மேலும், ‘உன் இந்தியா’ ஈழத் தமிழர் குலை அறுத்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘என் இந்தியா’வினர் விவசாயிகள் ஒரு லட்சம் பேர் இதுவரை தற்கொலை செய்து செத்து போயுள்ளனர். இதுவரை எந்த தேச பக்தனும் இந்த பயங்கரவாதம் குறித்து வாய் திறக்கவில்லை. இதில் சைஸ் பத்து கவுஜை வேறு….

        என் இந்தியாவினர் செத்த போதெல்லாம் மொக்கைகளையு, சினிமா விமர்சனங்களையும் மட்டுமே எழுதி வந்த நீங்கள் ‘உன் இந்தியாவின்’ சைஸ் குறித்து பேச்சு வெளி வந்தவுடன் கொதித்துவிட்டீர்கள். எனில் உன் இந்தியா, என் இந்தியா பிரிவு இருப்பது உண்மைதானே?

        //
        பாயாசம்,
        தவறை.. தவறு என்று கூட உங்களால் உணரமுடியவில்லையே..//

        தவறை தவறு என்று முழுமையாக ஆய்வு செய் என்று கூறுகிறோம். அரைகுறையாக செய்து ஒருத்தன் மீது மட்டும் பலி போடுவோம் என்று எஸ்கேப் ஆகி தேசபக்தி கோசம் போடுறீங்க் நீங்க.

        தவறை தவறு என்று ஒத்துக் கொள்பவர் எனில் நான் குறிப்பிட்டிருந்தவற்றில் நீங்கள் தவறு என்று கருதுபவற்றை பட்டியலிட்டு தவறு என்று உரக்கக் கூறுங்கள். இதோ நானும் கூறுகிறேன். இஸ்லாம் அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் ஒழித்துக் கட்ட வேண்டிய தவறுகள். ஆனால் அதன் பெயரில் இந்து பயங்கரவாதமும், பாசிசமும் நியாயப்படுத்தப்படுவது அனுமதிக்க மாட்டேன்.

        Posted on 01-Oct-09 at 4:23 pm | Permalink
      • எனக்குத் தெரிந்து மூன்று மனைவி வைத்த இஸ்லாமியர்களை நான் பார்த்ததில்லை. ஜிகாத் புரிபவர்களான முஜாகிதீன்களுக்கு அப்படி உண்டு என்பதை டாகுமெண்ட்ரீயில் பார்த்ததாக ஞாபகம். இந்த மூன்றாவது பீவி என்பதை தவிர்த்திருக்கலாம்.
        ஒன்று அது உண்மையில் குஜராத்தில் நடந்ததா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது சென்சாருக்காக குஜராத் பெயர் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.

        Posted on 01-Oct-09 at 4:27 pm | Permalink
      • கேள்விக்குறி

        தசரதனுக்கு 60,000 பொண்டாட்டி, பாஞ்சாலிக்கு 5 புருஷன், முருகனுக்கு 2 கண்ணனுக்கு தெரிஞ்சு 2, சிவனுக்கு 2 என இந்து மத புராணங்களும் கடவுளும் கூடத்தான் பல தார மணங்களை பேசுது.. சென்சாரு கமலு மூளையில இருக்காறா? 

        Posted on 01-Oct-09 at 4:35 pm | Permalink
      • கருப்பன்

        //எனக்குத் தெரிந்து மூன்று மனைவி வைத்த இஸ்லாமியர்களை நான் பார்த்ததில்லை. ஜிகாத் புரிபவர்களான முஜாகிதீன்களுக்கு அப்படி உண்டு என்பதை டாகுமெண்ட்ரீயில் பார்த்ததாக ஞாபகம். இந்த மூன்றாவது பீவி என்பதை தவிர்த்திருக்கலாம்.//

        ஒரு வாதத்திற்காக ஜிகாதிகளுக்கும் முஜாகிதீன்களுக்கும் மட்டும்தான் மூன்று பீவிகள் இருப்பார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் படத்தில் அப்துல்லா என்பவன் தன்னுடைய மூன்றாவது பீவி கலவரத்தில் கொல்லப்பட்ட பிறகுதான் தீவிரவாதி ஆகிறான். அதாவது அவன் ஜிகாதியாக முஜாகிதீனாக ஆவதற்கு முன் உங்களைப் போல் சாதாரண குடிமகனாக இருந்தபோதே மூன்று மனைவிகள் இருந்த்தாக காட்டப்பட்டிருக்கிறது. இதைப் பொய் பிரச்சாரம் என அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது. இதைப் புரிய வைக்கவே உங்களிடம் இவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது.

        //இந்தப் படத்துல சொன்னதுல எது உண்மை இல்லைன்னு சொல்லுங்க. நாட்டுல நடக்காததையா இந்தப் படம் சொல்லி இருக்கு ? //

        மேலே உள்ள இரண்டு வாக்கியங்களும் நீங்கள் எழுதியவைதான். இவை இரண்டிற்கும் உள்ள முரண்பாடுகள் உங்களுக்கு தெரிகிறதா?

        Posted on 01-Oct-09 at 4:42 pm | Permalink
      • பாயாசம்,
        உன் இந்தியா என்று சொல்வது தவறு இல்லையா?

        உன் இந்தியா என்றால் அவர் இந்தியர் இல்லையா?.மதத்தையும் தீவிரவாதத்தையும் ஒன்று சேர்த்து பார்ப்பது தவறு என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை.
        ஆனால் உன் இந்தியா விழயத்தில் வாழ்க உங்கள் ஒற்றுமை.வாழ்க ஜன நாயகம்.

        Posted on 01-Oct-09 at 4:47 pm | Permalink
      • பாயாசம்

        //எனக்குத் தெரிந்து மூன்று மனைவி வைத்த இஸ்லாமியர்களை நான் பார்த்ததில்லை. ஜிகாத் புரிபவர்களான முஜாகிதீன்களுக்கு அப்படி உண்டு என்பதை டாகுமெண்ட்ரீயில் பார்த்ததாக ஞாபகம். இந்த மூன்றாவது பீவி என்பதை தவிர்த்திருக்கலாம்.
        ஒன்று அது உண்மையில் குஜராத்தில் நடந்ததா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது சென்சாருக்காக குஜராத் பெயர் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.//

        கபிலன்,

        தவறை தவறு என்று உங்களால் உணர முடியவில்லையே

        Posted on 01-Oct-09 at 4:49 pm | Permalink
      • பாயாசம்

        //பாயாசம்,
        உன் இந்தியா என்று சொல்வது தவறு இல்லையா?
        //

        சுரேசு,

        நாங்கள்ளாம் வெளிப்படையாக சொல்லிவிட்டோம், நீங்க சொல்லவில்லை….

        இதோ உங்களது இந்தியாவும், எனது இந்தியாவும் வெளிப்படும் இடம்:

        //சுரேஸ்குமார்,

        ‘உன் இந்தியா’தான் காஸ்மீரிலும், வ்டகிழக்கிலும் வாங்கிக் கட்டிக்கும் என்பதை குறிக்கும் முகமாக செருப்பு சைஸ் பத்து என்று குறிப்பிட்டார் சுகுணாதிவாகர். மேலும், ‘உன் இந்தியா’ ஈழத் தமிழர் குலை அறுத்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘என் இந்தியா’வினர் விவசாயிகள் ஒரு லட்சம் பேர் இதுவரை தற்கொலை செய்து செத்து போயுள்ளனர். இதுவரை எந்த தேச பக்தனும் இந்த பயங்கரவாதம் குறித்து வாய் திறக்கவில்லை. இதில் சைஸ் பத்து கவுஜை வேறு….

        என் இந்தியாவினர் செத்த போதெல்லாம் மொக்கைகளையு, சினிமா விமர்சனங்களையும் மட்டுமே எழுதி வந்த நீங்கள் ‘உன் இந்தியாவின்’ சைஸ் குறித்து பேச்சு வெளி வந்தவுடன் கொதித்துவிட்டீர்கள். எனில் உன் இந்தியா, என் இந்தியா பிரிவு இருப்பது உண்மைதானே?
        //

        Posted on 01-Oct-09 at 4:51 pm | Permalink
      • அறிவுடைநம்பி

        மூன்று பீவி முரண்பாட்டை கருப்பன் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

        //ஒன்று அது உண்மையில் குஜராத்தில் நடந்ததா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது சென்சாருக்காக குஜராத் பெயர் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.//

        கமல் போன்ற ஒரு அறிவுஜீவிக்கு தெளிவு இல்லை என்பது நம்பத் தகுந்ததாக் இல்லை. சென்சார் என்பது குஜராத்துக்கு மட்டும்தானா கோவை, மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூருக்கு எல்லாம் கிடையாதா?. கோவை, மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்புகள் மட்டும்தான் தீவிரவாதம் மும்பை, கோவை, குஜராத் கலவரங்கள் தீவிரவாதம் இல்லை என்று சப்பைக் கட்டும் முயற்சியா?

        Posted on 01-Oct-09 at 4:54 pm | Permalink
      • ஐயா,

        அதே கமலஹாசன் தான்
        அவ்வை சண்முகியில், ஐயர் வீட்டில் சமைக்க ஒரு இஸ்லாமியரை அமர்த்துவார்.
        அன்பே சிவம் – கிறித்துவத்தைக் கருணையாக பாவித்து, இந்து சமயத்தவரை வில்லனாக பழித்திருப்பார். அதுவும் அதில் இந்து வில்லனாக நடித்தவர் நாசர்.

        காதலா காதலா – இந்தப் படத்தில் நீங்கள் சொல்லும் விஷயங்களை கொடுமையாக ஆபாசமாக, பெரியார் தொண்டனை விட நாகரிகமில்லாமல் விவரித்தவர் கமல்.

        அந்த காலத்துல நம்முடைய முப்பாட்டன்கள் பெரும்பாலானோர்க்கு இரண்டு மூன்று மனைவியர் உண்டு என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். அது அப்போதிருந்த வாழ்க்கை முறை. குழப்பிக் கொள்ள வேண்டாம்.

        Posted on 01-Oct-09 at 4:56 pm | Permalink
      • “ஒன்று அது உண்மையில் குஜராத்தில் நடந்ததா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது சென்சாருக்காக குஜராத் பெயர் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.”

        “அறிவுடைநம்பி :
        சென்சார் என்பது குஜராத்துக்கு மட்டும்தானா கோவை, மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூருக்கு எல்லாம் கிடையாதா?. கோவை, மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்புகள் ”

        ஐயா அறிவுடைநம்பி,
        நான் சொன்னது சட்டச் சிக்கலை. குஜராத்தில் அந்த சம்பவம் நடந்தது எனக் குறிப்பிட்டால், படமெடுத்தவருக்கு நோட்டீசு அனுப்பலாம், நிரூபிக்கச் சொல்லி. அதனால் பெயர் குறிப்பிடாமல் இருக்கலாம். மேலும், கோவை, ஸ்ரீபெரும்புதூர் போன்றவை நடந்த சம்பவங்கள், மறுக்கவோ, நிரூபிக்கச் சொல்லவோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் குஜராத்தை இழுத்தால் சென்சார் பாயும் என்ற பயம் தான்.

        ஐயா கருப்பன்,

        இது சின்னப் புள்ளத் தனமா இருக்குங்க. நீங்க சொல்றத வைத்துப் பார்க்கும் போது, இஸ்லாமியர்கள் யாருக்கும் 3 மனைவியே கிடையாது என்று கூறுகிறீர்கள். நான் பார்த்ததில்லை என்று சொன்னேன். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், கிறீத்துவர்கள்,நாத்திகர்கள் பலருக்கு இரண்டு மூன்று மனைவியர் உண்டு. Exceptions ஐ உதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று தான் சொன்னேன். எல்லா விஷயங்களையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்காதீர்கள்.

        Posted on 01-Oct-09 at 5:17 pm | Permalink
      • கருப்பன்

        //நான் சொன்னது சட்டச் சிக்கலை. குஜராத்தில் அந்த சம்பவம் நடந்தது எனக் குறிப்பிட்டால், படமெடுத்தவருக்கு நோட்டீசு அனுப்பலாம், நிரூபிக்கச் சொல்லி. அதனால் பெயர் குறிப்பிடாமல் இருக்கலாம். மேலும், கோவை, ஸ்ரீபெரும்புதூர் போன்றவை நடந்த சம்பவங்கள், மறுக்கவோ, நிரூபிக்கச் சொல்லவோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் குஜராத்தை இழுத்தால் சென்சார் பாயும் என்ற பயம் தான்.//

        அதாவது சென்சார் என்கிற சட்ட அமைப்புகளும் இந்த்துத்துவாவிற்கு ஆதரவாகதான் இருக்கும் என்கிற உண்மையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

        தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு உண்மையையும் ஓப்புக்கொண்டிருக்கிறீர்கள். குஜராத், மும்பை, கோவை கலவரங்கள் போன்ற பயங்கரவாதங்களை படங்களில் காட்டினால் கூட இந்துத்துவா பொறுத்துக் கொள்ளாது. சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் சட்டபூர்வமனான பயங்கரவாதம. அந்த குற்றவாளிகள் மீது தடா, பொடா போன்ற சட்டங்கள் எல்லாம் பாவிக்கப் படாது. ஆனால் குண்டுவெடிப்புகள் சட்டத்திற்கு எதிரான பயங்கரவாதம . அவர்களுக்கு மட்டும்தான் சிறைத் தண்டனை மரணதண்டனை எல்லாம். இந்த நிலையில் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்?

        முஸ்லிம்கள், அவர்களது நான்கு மனைவியர்கள், அவர்களது இருப்பத்தைந்து குழந்தைகள் இவர்களை எல்லாம் வேரறுக்க வேண்டும் என்று கதைக் கட்டி வெறுப்பை விதைக்கும் இந்துத்துவாக்களின் வாதத்தை வழிமொழிவது போலத்தான இருக்கிறது அந்த மூன்று பீவி சமாச்சாரம்.

        “Exception are not Examples” என்பது உண்மைதான். ஆனால் கமல் exception களைதானே examples ஆக எடுத்துக் கொண்டு படம் எடுத்திருக்கிறார். அதைப் பற்றி பேசாமல் வேறு எதைப் பற்றி பேசுவது.

        Posted on 01-Oct-09 at 6:02 pm | Permalink
      • லெனின்

        //எதை விழுங்க வேண்டும் எதை வாந்தி எடுக்க வேண்டும் என்பதில் பார்ப்பனீய அடிப்படையிலே சிந்தித்திருக்கிறார்கள் என்பது தான் பேசுபொருள்//

        காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இந்து என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன. இதுதான் பார்ப்பனத்தின் பார்வை.

        Posted on 02-Oct-09 at 6:35 pm | Permalink
  13. அஸ்கர் 

    அருமையான விமர்சனம். .இவ்விமர்சனத்தை எதிர்க்கும் நண்பர்கள் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து இதுபோன்று ஒரு படம் எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? 

    Posted on 01-Oct-09 at 1:31 pm | Permalink
    • பாயாசம்

      //அன்பே சிவம் – கிறித்துவத்தைக் கருணையாக பாவித்து, இந்து சமயத்தவரை வில்லனாக பழித்திருப்பார். அதுவும் அதில் இந்து வில்லனாக நடித்தவர் நாசர்.//

      ஓஹே அதனால்தான் இல கனேசன் பாராட்டினாரோ?

      Posted on 01-Oct-09 at 5:14 pm | Permalink
    • தாராளமாக ஆதரிப்போம். ஆனால், இப்போது படம் எடுத்து அவர்களை வேடிக்கைப் பொருள் ஆக்குவது முக்கியமல்ல, அடைபட்டிருக்கும் தமிழர்களை மீட்பதிலே தான் கவனம் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

      Posted on 01-Oct-09 at 5:43 pm | Permalink
      • அஸ்கர் 

        நான் கேட்பது புலிகளை அவர்களை ஆதரித்த மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்தால்?

        Posted on 07-Oct-09 at 3:25 pm | Permalink
  14. தம்பிதுரை

    //
    2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன.
    //

    இதற்கு சாட்சி எது ? எங்கு நடந்தது அந்த கருவறுப்பு சம்பவம் ?

    கதைகள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், நிகழ்ந்தது அது தானா என்பது தெரிந்தாகவேண்டும் ! சும்மா கதையைவைத்து, முடிவுகள் எடுக்க முடியாது.

    Posted on 01-Oct-09 at 1:32 pm | Permalink
    • கேள்விக்குறி

      தம்பிதுரை, அந்த சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சி இருக்கிறது. அவர்கள் கோர்டு போலீஸ் ஷ்டேஷன், என்ஜீயோ என எங்கு போயும் நியாயம் கிடைக்கவில்லை, அவர்கள் தமிழகத்துக்கு வந்து மேடை ஏறி குமுறிய காட்சிகள் சி.டி வடிவில் கிடைக்கிறது. 

      Posted on 01-Oct-09 at 1:37 pm | Permalink
      • தம்பிதுரை

        சுட்டி கொடுங்கள். எப்பேற்பட்ட கருவருப்பு நடந்தது என்று தெரியும். டீஸ்டா செடல்வாத் அம்மா இப்படித்தான் கதை சொல்லி துலுக்கர்களை உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கினார்.

        http://timesofindia.indiatimes.com/news/india/NGOs-Teesta-spiced-up-Gujarat-riot-incidents-SIT/articleshow/4396986.cms

        Posted on 01-Oct-09 at 6:29 pm | Permalink
      • கருப்பன்

        அப்படியென்றால் பாபு பஜ்ரங்கி மாற்று அடையாளத்தில் இருந்த தெகல்கா குழுவினரிடம் தனது வீரதீர பிரதாபங்களை விவரித்தது எல்லாம் பொயயா?. உங்கள் அரை டவுசர்கள் எல்லாம் வெறும் வாய்ச் சொல்லில்தான் வீரர்களா?

        Posted on 01-Oct-09 at 6:43 pm | Permalink
      • கருப்பன்

        இது எழுத்து வடிவம்.

        http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107After_killing.asp

        இது காணொளி வடிவம்.
        http://www.youtube.com/watch?v=mfnTl_Fwvbo

        Posted on 01-Oct-09 at 6:47 pm | Permalink
      • தம்பிதுரை

        அவர்கள் வாய்ச்சொல்லின் வீரர்களாகவே இருக்கட்டும். குண்டு வைத்துக் கொல்பவர்களின் கு*டியை நக்கும் நாய்களாக இருப்பதைவிட அது எவ்வளவோ மேல்.

        Posted on 01-Oct-09 at 6:52 pm | Permalink
      • கருப்பன்

        //குண்டு வைத்துக் கொல்பவர்களின் கு*டியை நக்கும் நாய்களாக இருப்பதைவிட அது எவ்வளவோ மேல்.//

        ஆகா! அரை டவுசர்களின் பண்பையும் நாகரீகத்தையும் பார்க்கும் இதுவல்லவோ கலாச்சார தேசியம் என புல்லரிக்கிறது.

        Posted on 01-Oct-09 at 6:58 pm | Permalink
      • தம்பிதுரை

        உங்களுக்குத்தான் கலாச்சாரமும் கிடையாது தேசியமும் கிடையாதே, பிறகு உமக்கு என்னவோய் அதில் அக்கறை. உங்கள் கு.ந வேலையை சிறப்பாகச் செய்து போடும் எலும்புத்துண்டைக் கடிக்கவும்.

        Posted on 01-Oct-09 at 7:06 pm | Permalink
      • கருப்பன்

        பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் நீங்கள் யாருக்கு கு.ந வேலையை செய்கிறீர்கள் என்பதுதான் ஊரறிந்த ரகசியம் ஆச்சே! நீங்க அவா எச்சிலையில் விழும் புளியோதரையும், அக்கார வடிசலையும் சப்புக் கொட்டி தின்றுவிட்டு அந்த நன்றிக்கு நன்றாக குரைத்து விட்டு போங்கள்

        Posted on 01-Oct-09 at 7:24 pm | Permalink
    • கேள்விக்குறி

      கவுசர் பானுவை விடுங்கள், அபலைப் பெண், ஒரு முசுலீம் (முன்னாள்) காங்கிரஸ் எம்.பி ஐயே போலீசு முன்னிலையில் துடிக்க துடிக்க பகுதி பகுதியாய் வெட்டிக் கொன்ற இந்து தீவிரவாதிகளின் கொடுரத்தை அறிவீர்களா?

      Posted on 01-Oct-09 at 1:44 pm | Permalink
      • தம்பிதுரை

        அது எப்படி விட முடியும். உசுப்பேத்த சொல்லப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு குண்டு வைப்பதை நியாயப்படுத்துகிறார்களே.. அதற்கு உங்களைப்போன்றவர்களுமல்லவா துணை புரிகிறீர்கள். பொய்யின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் வெறுப்பு இஸ்லாமியத் தீவிரவாதம். அதைத் தடுக்க துப்பு கெட்டவர்கள் உங்களைப்போன்ற கம்யூனிஸ்டுகள்.

        Posted on 01-Oct-09 at 6:56 pm | Permalink
      • கருப்பன்

        உசுப்பேத்தப்பட்ட கதைகள் என்று எதை சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

        பிரம்மன் தலையில் இருந்து பிறந்தவன் பார்ப்பான், தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன். இதில் குலம் மாறி பிறந்த ஈனப்பிறவிகள் பள்ளன் பறையன். இதையெல்லாம் நம்பாதவன் மிலேச்சன் , தேசத் துரோகி என்று சொல்லும் கதைகளையா?

        Posted on 01-Oct-09 at 7:10 pm | Permalink
      • தம்பிதுரை

        3 பொண்டாட்டி வைத்திருக்கும் துலுக்கனைத் தெரியுமா…என்று கேட்கிறீர்கள். அதே போல் பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம் ?

        அவன் தலையிலிருந்து பொறந்ததாகச் சொன்னானாம் இவர்களெல்லாம் வாயில் விரலைவத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தார்களாம். சின்னப்பப்பாக்கள் இவர்கள். உங்கள் முன்னோர்கள் (உம் தாத்தா, பாட்டி) மேல் இவ்வளவு கீழ்தரமாக எண்ண உங்களால் எப்படி முடிகிறது ? அதைத்தான் அவர்கள் உமக்குச்சொல்லிக்கொடுத்தார்களா ?

        Posted on 01-Oct-09 at 7:28 pm | Permalink
      • கருப்பன்

        ”ஐயங்காராக பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன” என்று கூகிளிட்டு பாருங்கள் விடை கிடைக்கும்.

        Posted on 01-Oct-09 at 7:48 pm | Permalink
      • தம்பிதுரை

        http://www.google.com/search?q=%E0%AE%90%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9&ie=utf-8&oe=utf-8&lr=lang_en

        Posted on 01-Oct-09 at 8:30 pm | Permalink
      • கேள்விக்குறி

        யோவ் ஆர்.எஸ்.எஸ் லூசு Spelling Mistake பண்ணா எப்படி இப்புடு சூடு
        http://www.google.com/search?hl=en&q=%E0%AE%90%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&lr=lang_en&aq=f&oq=&aqi=g-p1

        Posted on 01-Oct-09 at 8:38 pm | Permalink
      • தம்பிதுரை

        சரி, அதில் ஒன்றும் அவர் தலையிலிருந்து பிறந்தவர் என்று எங்குமே எழுதவில்லையே. கேள்வி, எந்த பார்ப்பான் தலையிலிருந்து பிறந்ததாக நம்பிகிட்டு இருக்கான் என்பது தான். அதற்கு பதில் இல்லை. எவனோ ஒரு பார்ப்பானைக்காட்டி இப்புடி நளுவுறீகளே அறிவு சீவிகளே.

        Posted on 01-Oct-09 at 9:14 pm | Permalink
      • கருப்பன்

        பார்ப்பான் பிரம்மாவின் நாவிலிருந்து பிறந்தவன் என்று சனாதானப் புனித நூல்கள் கூறுகின்றது. அதை நம்பும் ஒருவனால்தான் நான் ஐயங்காராக பிறந்ததற்கு பெருமை படுகிறேன் என்று பகிரங்கமாக பீற்றிக்கொள்ள முடியும். மற்றபடி நான் OBC/SC/ST யாக பிறந்ததற்கு பெருமைபடுகிறேன் என்று யாராவது சொல்லியிதாக மேற்கோள் காட்டுங்களேன் பார்ப்போம்.

        Posted on 01-Oct-09 at 9:45 pm | Permalink
    • லெனின்

      //அதே போல் பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம் ?//

      பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டவேண்டும் என்றால் அவன் வாயில் இருந்து அப்படிப்பட்ட வார்த்தை வந்தால்தான் அது உண்மை என்று நம்புவீரா? அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை அவர்க்கு நேர்ந்த அனுபவங்களை தெரிந்து கொள்ளுங்கள். நானும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் தான் (I am a SC Pallan).

      Posted on 02-Oct-09 at 7:06 pm | Permalink
      • thongadurai

        //அதே போல் பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம் ? //
        Ex1: Dixita pappaan of Chidamparam
        Ex 2: Papan put court case against all caste archagar law

        //அது எப்படி விட முடியும். உசுப்பேத்த சொல்லப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு குண்டு வைப்பதை நியாயப்படுத்துகிறார்களே.. அதற்கு உங்களைப்போன்றவர்களுமல்லவா துணை புரிகிறீர்கள். பொய்யின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் வெறுப்பு இஸ்லாமியத் தீவிரவாதம். அதைத் தடுக்க துப்பு கெட்டவர்கள் உங்களைப்போன்ற கம்யூனிஸ்டுகள்.//
        according to Durai
        advani and his Monkey team destruct Babri Masjit is a Lie.
        Those who killed, Raped, Tortured in Gujarat have done that to themself
        Malegoan Bomp and other RSS Bomp incidents are actually Cinema Shootings.

        Podan.. PappanaDurai

        Posted on 02-Oct-09 at 10:59 pm | Permalink
  15. BARARI

    padaththai membokkaka paarkkamal avalkal manathil unmaiyileye irukkum ul nokkaththai alasi miha sirantha murayil ungal vimarsanam irukkirathu. eththanai murai sonnaalum kalvanukku puththi kavattiyile endra solluku erppa kabilanai pondra paasisangal koyapals pola sonnathaiye solvaarka.ungal pani thodara vaazthukal.

    Posted on 01-Oct-09 at 1:44 pm | Permalink
    • thongadurai

      //அது எப்படி விட முடியும். உசுப்பேத்த சொல்லப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு குண்டு வைப்பதை நியாயப்படுத்துகிறார்களே.. அதற்கு உங்களைப்போன்றவர்களுமல்லவா துணை புரிகிறீர்கள். பொய்யின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் வெறுப்பு இஸ்லாமியத் தீவிரவாதம். அதைத் தடுக்க துப்பு கெட்டவர்கள் உங்களைப்போன்ற கம்யூனிஸ்டுகள்.//
      according to Durai
      advani and his Monkey team destruct Babri Masjit is a Lie.
      Those who killed, Raped, Tortured in Gujarat have done that to themself
      Malegoan Bomp and other RSS Bomp incidents are actually Cinema Shootings.

      Podan.. PappanaDurai

      //அதே போல் பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம் ? //
      Ex1: Dixita pappaan of Chidamparam
      Ex 2: Papan put court case against all caste archagar law

      Posted on 01-Oct-09 at 10:52 pm | Permalink
  16. அன்காமன் மேன்

    பாசிசத்தில் அரசை கேள்விக் கேட்கக்கூடாது. கம்யுனிஸ்ட் ஆட்சியிலும் கேள்வி கேட்கக் கூடாது. தீவீரவாதிகளைக் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பான காமன்மேன். பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை, கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியை கேள்வி கேட்பவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பீர்கள் நீங்கள்.
    ரஷ்யா,சீனாவில் புரட்சிக்குப் பின் நடந்தது இத்தகைய கொலைகள்தானே. டிராட்ஸ்கி உட்பட பலரை
    கொன்றது ஸ்டாலினியம். அடிப்படையில் நீங்களும், காமன்மேனும் வன்முறையை, கொலைகளை நியாயப்படுத்துபவர்கள். யாரை எங்கு என்பதில் மைனர் வேறுபாடு. இதுதான்

    மேட்டர். காமன்மேன் தீவிரவாதியைக் கொன்றால் பாசிசம். கம்யுனிசத்தின் பெயரில் யாரைக் கட்சி-கம்-ஆட்சி
    கொன்றாலும் அது சரிதான். உங்களுக்கும் சட்டம், முறையான நீதி, மனித உரிமைகளில் நம்பிக்கை கிடையாது.காமன்மேனுக்கும்தான்

    ஆக உங்களுக்கும் காமன்மேனுக்கும் ஆறு வித்தியாசம் கூட கிடையாது. வினவும்,காமன்மேனும் பிரதர்ஸ்-கம்-’காம்ரேட்ஸ்’

    Posted on 01-Oct-09 at 1:54 pm | Permalink
    • MamboNo8

      அனானிகாமன் மேன், உங்களோட காமன் மேன் தனது கருத்தை சினிமாவா எடுத்து வச்சிருக்காரு…நீங்க வினவு மேல சுமத்துற குற்றச்சாட்டுக்கு ஏது ஆதாரம்? இப்படி வலிஞ்சு வலிஞ்சு எழுதற நரித்தனத்த கமலும் முருகனும் செஞ்சது போக இப்ப நீங்க வேறயா? போங்கய்யா போய் எதாவது உருப்படியான பாயின்டோட வாங்க

      Posted on 01-Oct-09 at 2:03 pm | Permalink
  17. MamboNo8

    கேள்விக்குறி தூள் கெளப்புறீங்க….enjoy

    Posted on 01-Oct-09 at 2:04 pm | Permalink
  18. Anonymous

    VINAVU = 1/2 TICKET = KELVIKKURI = ???????

    Posted on 01-Oct-09 at 2:33 pm | Permalink
    • கேள்விக்குறி

      இதென்னயா அநியாமா இருக்கு, உன்னைப்போல் ஒருவன்னு ஒருத்தன் வந்தா எல்லோரும் அவனோட அடயாளப்படுத்திக்கிறீங்க, நாங்க வினவோட ஒத்துப்போனா கேள்வி கேக்குறீங்களே, சரி பரவாயில்ல, ஒரு பாசிஸ்டோட அடயாளப்படுத்தாம விட்டீங்களே

      Posted on 01-Oct-09 at 2:39 pm | Permalink
      • Nagaraj

        அய்யா.. எல்லாஞ்சரி.. அவரே இந்தப் படம் சுமாரா ஓடுனா போதும்னு நெனச்சேன் அது பயங்கரமா பிச்சிக்கிட்டு ஓடுதுன்னு சொல்றார்.. ஒருத்தன் கத எளுதனாலும் படம் எடுத்தாலும் 100 சதம் பெரும் புர்ச்சியா இருக்கணும்னு எதிர்ப்பார்க்கக்கூடாது.. அந்தாளு ஒரு படத்த காப்பியடிச்சு எடுத்தார்.. உனக்குப் புடிக்கலன்னு போ… நீர் மட்டும் என்னவாம்.. பிரிக்கால் அதிகாரிய யாராவது கொல பண்ணா.. அத ஆதரிக்கலயா… அந்தம்ம அருந்ததி ராய் ஒரு கட்டுரையில சீன அடக்குமறைய பத்தி சொன்னத எடிட் பண்ணி வெளியிட்டீரே.. அப்ப ஒம்ம நியாயம் எங்க போச்சு.. அப்பம் எல்லாரும்தான் ஒரு சார்ப்பா பேசுறிங்க.. கேட்டா தொழிலாளி என்ன பண்ணாலும் சரின்னு சொல்ல வேண்டியது… என்ன நியாயமோ…

        Posted on 01-Oct-09 at 7:45 pm | Permalink
  19. சிறப்பான ஆழமான விமர்சனம். சற்று தாமதமானதும் கூட !!!

    Posted on 01-Oct-09 at 2:46 pm | Permalink
  20. இவ்வளவு விரிவாக விளக்கமாக விமர்சனம் எழுதியும் சிலருக்கு அது மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது என்றால்.அதற்கு இந்த‌ ரசிக மனப்பாண்மை தான் காரணம்.நாளைக்கு கமல் மோடியை ‘நேரடியாக’ ஆதரித்தால் அதையும் கூட ரசித்து ஏற்றுக்கொண்டு நியாயம் பேசும்.இது போன்றவர்களின் கருத்துக்கள் ஒழித்துக்கப்பட்டப்பட வேண்டும்.

    Posted on 01-Oct-09 at 2:49 pm | Permalink
  21. இதுவரை வந்தவற்றிலிருந்து வேறுபட்டு புதிய பார்வைகளை முன்வைக்கும் விமர்சனம். சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. எழுதிய தோழர்களுக்கு நன்றியும், வாழ்த்தும்!

    Posted on 01-Oct-09 at 2:54 pm | Permalink
  22. Anonymous

    VINAVU = 1/2 TICKET = KELVIKKURI = PAAYAASAM = ???????

    Posted on 01-Oct-09 at 2:57 pm | Permalink
  23. பாயாசம்

    Anonymous = லூசு…

    Posted on 01-Oct-09 at 3:16 pm | Permalink
  24. ********* ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

    அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே? ********** வினவு – நீங்கள் அறிவாளி :) -

    Posted on 01-Oct-09 at 3:25 pm | Permalink
  25. கருப்பன்

    //படத்தில் அந்தப்பெண் கருவறுக்கப் பட்ட இடத்தைக் கூட குஜராத் எனக் குறிப்பிடாமல் நார்த் இண்டியா என பொத்தாம் பொதுவாக கூறும் கோழைதான் கமலின் காமன் மேன்.

    வலைத்தளத்தில் உ.போ.ஒ க்கு ஆதரவாக விமர்சனம் எழுதியவர்களில் ஒருவரும் கூட அவர்கள் அறிந்த முஸ்லீம்களில் எத்தனை பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு கூட உன்னைப் போல் ஒருவனின் கோழை ரசிகர்கள் ஒருவரும் பதில் கூறவில்லை!//

    கபிலன் போன்ற பார்ப்பனீய தேசபக்தர்களிடம் இதற்கெல்லாம் பதிலை எதிர்பார்க்க முடியாது. அவர்களைப் பொறுஏனென்றால் அதைக் குடித்துதானே உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்த்தவரை கொசுக்களை ஒழிக்க கொசுமருந்தை அடித்தால் போதும். அதற்கு காரணமான் இந்துத்துவா சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டாம். கள்.

    Posted on 01-Oct-09 at 3:38 pm | Permalink
    • தம்பிதுரை

      கருப்பன் என்ற இந்து வெறுப்பன் அவர்களே,
      //
      படத்தில் அந்தப்பெண் கருவறுக்கப் பட்ட இடத்தைக் கூட குஜராத் எனக் குறிப்பிடாமல் நார்த் இண்டியா என பொத்தாம் பொதுவாக கூறும் கோழைதான் கமலின் காமன் மேன்.
      //

      அப்படி ஒரு சம்பவம் தே#&*ள் டீஸ்டா செடல்வாத் கற்பனையில் தான் நிகழ்ந்தது.
      ஆதாரம் :
      http://timesofindia.indiatimes.com/news/india/NGOs-Teesta-spiced-up-Gujarat-riot-incidents-SIT/articleshow/4396986.cms

      Posted on 01-Oct-09 at 7:23 pm | Permalink
    • Balaji

      It has been a while since Indian movies have moved away from being a stage for Political Ideas. Nor does a common man expect movies to fulfil that role. Unnai Pol Oruvan is a thriller that is interesting and entertaining. Thrillers need good and evil to work. And the problem is when people like you take them way too serious. This is not a movie review. You have reviewed your interpretation.

      Posted on 20-Jan-10 at 2:50 am | Permalink
  26. கருப்பன்

    //படத்தில் அந்தப்பெண் கருவறுக்கப் பட்ட இடத்தைக் கூட குஜராத் எனக் குறிப்பிடாமல் நார்த் இண்டியா என பொத்தாம் பொதுவாக கூறும் கோழைதான் கமலின் காமன் மேன்.

    வலைத்தளத்தில் உ.போ.ஒ க்கு ஆதரவாக விமர்சனம் எழுதியவர்களில் ஒருவரும் கூட அவர்கள் அறிந்த முஸ்லீம்களில் எத்தனை பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு கூட உன்னைப் போல் ஒருவனின் கோழை ரசிகர்கள் ஒருவரும் பதில் கூறவில்லை!//

    கபிலன் போன்ற பார்ப்பனீய தேசபக்தர்களிடம் இதற்கெல்லாம் பதிலை எதிர்பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை கொசுத் தொல்லையில் இருந்து விடுபட கொசுமருந்து அடித்தால் போதும். அதற்கு காரணமான இந்துத்துவா சாக்கடையை ஓன்றும் செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த சாக்கடையில் விழும் மனக்கழிவுகள்தானே அவர்களுக்கு உணவு

    Posted on 01-Oct-09 at 3:45 pm | Permalink
    • “கபிலன் போன்ற பார்ப்பனீய தேசபக்தர்களிடம்”
      ஹையா…இது என்ன மைனாரிட்டி திமுக அரசு மாதிரியா : )
      ஐயா கருப்பன் அவர்களே,
      இதெல்லாம் தூக்கி பரணை மேல் போடுங்கள். இப்ப இருக்க பிரிவுகள் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் பணம் படைத்தவனுக்கும் ஏழைக்கும் தான். வழக்கமான பெரியார் பாட்டை பாடாதீங்கோ.

      Posted on 01-Oct-09 at 4:14 pm | Permalink
      • கருப்பன்

        தேவைப்படும் போது உன்னைப் போல் ஒருவனின் இந்துத்துவாவை தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனீயவாதி, ஏழைப் பணக்கார வித்தியாசம் பேசும் சோஷலிஸ்டு என உருமாறி அந்நியனையே மிஞ்சிவிட்டீர்கள்.

        கொசுக்களை ஓழிக்க கொசு மருந்தை அடித்தால் மட்டும் போதுமா அல்லது அதற்கு காரணமான திறந்தவெளி சாக்கடைகளை (இந்துத்துவா என படிக்கவும்) ஒழிக்க வேண்டுமா நேரடியாக விவாதிக்கவும்.

        Posted on 01-Oct-09 at 4:28 pm | Permalink
      • ஐயா கருப்பன்,

        மூக்கு சலிக்கு மூக்கை வெட்டுங்கள் என சொல்கிறீர்கள் நீங்கள்
        விக்ஸ் தடவினாலே போதும் என்பது எங்கள் கருத்து!

        Posted on 01-Oct-09 at 5:20 pm | Permalink
      • கேள்விக்குறி

        நம் மூக்கில் பிடித்த சளிக்காக கண்ட மூக்கையெல்லாம் வெட்ட வேண்டும் என்று இந்த படம் சொல்கிறது… நீங்கள் என்னடான்னா….?

        Posted on 01-Oct-09 at 5:26 pm | Permalink
    • கருப்பன்

      மூக்குச் சளிக்கு காரணமான கிருமிகளை, வைரஸ்களை ஒழிக்க Amoxycillin, Cetrizine போன்ற ஆண்டிபையாட்டிக், ஆண்டி அலர்ஜிக் மருந்துகளை உட்கொள்ளவேண்டும் என்பது முறையான வைத்தியம்.

      மூக்குசளிக்கு விக்ஸ் தடவ வேண்டும் என்பது அரைவேக்காட்டுத்தனம். மூக்கையே அறுக்க வேண்டும் என்பது பாசிசம் இந்துத்துவாத்தனம்.

      Posted on 01-Oct-09 at 5:35 pm | Permalink
      • கருப்பன்

        இங்கு மூக்கு என்பது முஸ்லிம்கள், சளி என்பது தீவிரவாதம், கிருமி வைரஸ்கள் இந்துத்துவாக்கள். உங்களைப் போன்றவர்களுக்கு தெளிவாக விளக்கிச் சொன்னால்தானே புரியும்..

        Posted on 01-Oct-09 at 5:42 pm | Permalink
      • ஐயா கருப்பன்,
        நாம் சொன்ன உதாரணத்தை நமக்கே திருப்புகிறீர்.
        23 ஆம் புலிகேசியில் வருவது போல
        ராஜ தந்திரங்களைக் கரைத்து குடித்தவனடா நீ புலிகேசி… க க போ… : )

        Posted on 01-Oct-09 at 6:04 pm | Permalink
      • கருப்பன்

        உங்கள் உதராணங்களுக்குதானே விடையளிக்க முடியும். விடையளிக்க முடியாத பட்சத்தில் 23ம் புலிகேசி இழுத்து பசப்பும் அளவிற்கு எல்லாம் எங்களுக்கு ராஜதந்திரம் தெரியாதே!

        Posted on 01-Oct-09 at 6:24 pm | Permalink
      • தம்பிதுரை

        கான்சரை மூக்குச்சளி என்று நினைப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.

        Posted on 01-Oct-09 at 7:00 pm | Permalink
      • கருப்பன்

        கான்சரை கலாச்சார தேசியம் என்பவர்கள் பாசிஸ்டுகள்

        Posted on 01-Oct-09 at 7:17 pm | Permalink
      • தம்பிதுரை

        கலாச்சாரமும், தேசியமும் இல்லாத கம்மினாட்டிகளுக்கு கம்யூனிஸ்டுகளுக்கு அதன் மேல் எவ்வளவு அக்கறை பார் ?

        Posted on 01-Oct-09 at 7:37 pm | Permalink
      • கருப்பன்

        கலாச்சாரம் என்பது மொழி சார்ந்தது, மதம் சார்ந்தது அல்ல. “ஓரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி” என்பதெல்லாம் இந்தியா என்கிற பல்மொழி, பல்வேறு இனம், மற்றும் வேறுபட்ட மத நம்பிக்கையுடைய நாட்டில் கலாச்சார தேசியம் ஆகாது.

        Posted on 01-Oct-09 at 8:14 pm | Permalink
  27. கேள்விக்குறி

    கபிலன் நீங்கள் எப்படி இந்த படத்தை இரசித்தீர்கள் என்று சொன்னால் தேவலாம் ஏனென்றால் ஸ்ரேயாவின் மார்புகளுக்காக கந்தசாமி பார்க்க போனேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்……

    Posted on 01-Oct-09 at 4:21 pm | Permalink
    • பாயாசம்

      விக்ஸ் தடவினால் மூக்கு சலி போகும் என்பதே ஒரு மூட நம்பிக்கை. சலி போக வேண்டும் என்பதற்கு என்ன மருந்தோ அதுதான் சரி. விக்ஸ் ஒரு நிவாரணி மட்டும்தான் அது தீர்வு அல்ல.

      உன்னைப் போல ஒருவனோ வியாதி. இந்த சமுகத்தை பிடிக்கக் காத்திருக்கும் பாசிச வியாதி

      Posted on 01-Oct-09 at 5:22 pm | Permalink
      • “விக்ஸ் தடவினால் மூக்கு சலி போகும் என்பதே ஒரு மூட நம்பிக்கை.”

        ஐயோ…இப்போதெல்லாம் மருத்துவர்கள் சொல்வதைக் கூட பகுத்தறிவு ஜீவிகள் ஒப்புக் கொள்வதில்லையோ ?

        “விக்ஸ் ஒரு நிவாரணி மட்டும்தான் அது தீர்வு அல்ல”

        6 மாதத்திற்கு ஒரு முறை மூக்கு சலி வந்து அவஸ்தைப் படுத்துகிறது. எனக்கு வாழ்நாள் முழுவதும் சலியே பிடிக்காத மாதிரி ஒரு மருந்து(வலி நிவாரணி அல்ல) இருந்தா சொல்லுங்களேன். மூக்கை வெட்டிக்க மட்டும் சொல்லாதீங்க.

        Posted on 01-Oct-09 at 5:38 pm | Permalink
      • கருப்பன்

        //6 மாதத்திற்கு ஒரு முறை மூக்கு சலி வந்து அவஸ்தைப் படுத்துகிறது. எனக்கு வாழ்நாள் முழுவதும் சலியே பிடிக்காத மாதிரி ஒரு மருந்து(வலி நிவாரணி அல்ல) இருந்தா சொல்லுங்களேன். மூக்கை வெட்டிக்க மட்டும் சொல்லாதீங்க.//

        உங்கள் ரத்தத்தில் Eosinophil அளவு (நமது காண்டெக்ஸ்டில் இதை மதவெறி என்று அழைக்கலாம்) அதிகரிப்பதால் வருவதே சளி (தீவிரவாதம்). ரத்தத்தில் Eosinophil அதிகமாக ஏதாவது allergy (ஆர்.எஸ்.எஸ், அல்-உம்மா ) யான பொருளை நீங்கள் சுவாசித்திருக்க அல்லது உட்கொண்டிருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு எவை எவையினால் அலர்ஜி ஏற்படுகின்றதோ அவற்றிலிருந்து விலகியிருந்தால் சளி ஏற்படாது. அதற்காக மூக்கை அறுக்க வேண்டிய அவசியமில்லை.

        Posted on 01-Oct-09 at 8:51 pm | Permalink
    • படம் நன்றாக இருந்தது. விறுவிறுப்பாக இருந்தது.

      “ஸ்ரேயாவின் மார்புகளுக்காக கந்தசாமி பார்க்க போனேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்……”
      2 நிமிட ரசனைக்காக 2 1/2 மணி நேரத்தை அடகு வைக்க முடியாதே : )

      Posted on 01-Oct-09 at 5:31 pm | Permalink
  28. கேள்விக்குறி

    நாளைக்கு ஒரு கரம்சந்துக்கு பிறந்தநாள்…அவருதான் மோகன்தாஸ் கரம்சந்த், நம்ம தேச பிதா, அவர கொன்னது ஒரு ‘இந்து’ தீவிரவாதி… ஆனா யாராவது அப்படி சொல்றானா… காந்தியை கொன்னது கோட்சே…அவ்ளோதான்

    ஊரு கூடி வேடிக்க பாக்க பாபர் மசூதிய கடப்பாற போட்டு இடிச்சாங்க ஆர்.எஸ்.எஸ் ‘இந்து’ தீவிரவாதியில்ல ‘கரசேவகர்கள்’ பக்தர்கள்

    ஆனா இந்திரா காந்திய கொன்னது சத்வந்தும் பியாந்தும் இல்ல சீக்கியன்… 
    பம்பாயில் சுட்டது காசாப் இல்ல முஸ்லீம்…

    போங்கடா நீங்களும் உங்க ‘இந்து’யாவும் அப்புடின்னு யாரும் சொல்லக்கூடாது..சொன்னா காமன் மேன் வந்து சுட்டுப்புடுவார் சுட்டு

    Posted on 01-Oct-09 at 4:32 pm | Permalink
    • பாயாசம்

      //போங்கடா நீங்களும் உங்க ‘இந்து’யாவும் அப்புடின்னு யாரும் சொல்லக்கூடாது..சொன்னா காமன் மேன் வந்து சுட்டுப்புடுவார் சுட்டு//

      சூப்பர்…

      Posted on 01-Oct-09 at 5:18 pm | Permalink
    • ஐயா கேள்விக்குறி,

      தாராளமா சொல்லுங்க…அதான் பேச்சுரிமை….ஆனா, குண்டு போடாதீங்க…அப்படியே குண்டு போட்டாலும் ஒரு டார்கெட் வச்சு போடுங்க…யாரு எதிரியே அவங்களை போடுங்கள்…..ஒண்ணுமே தெரியாத அப்பாவி மக்களை கொன்று குவிக்காதீர்கள். இதுவே தீவிரவாதம்!

      Posted on 01-Oct-09 at 5:25 pm | Permalink
      • கேள்விக்குறி

        அதையேதான் நானும் சொல்கிறேன், இசுலாமிய வெடிகுண்டு தீவிரவாததை ஒழிக்க அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனம். ஆனால் நீங்கள் இந்து தீவிரவாதம் என்று ஒன்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடுமட்டுமல்லாமல், தீவிரவாத பீதியூட்டி பாசிசத்தை முன்வைக்கும் படத்தை ஏற்கிறீர்கள், பாசிசத்தின் காலடியில் ஜனநாயகம் நசுக்கப்படுவதை காண மறுக்கிறீர்கள். 

        இந்த பாசிசத்தினால் எந்த தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு வளர்க்கவே செய்யும்… அப்போது பீதியடையும் பாசிசம் கண்ணில் படும் காமன் மேன்களையெல்லாம் கண்ணம்மாபேட்டைக்கு அனுப்பும். இதுதான் வேண்டும் என்கிறார் கமல்… நீங்கள்

        Posted on 01-Oct-09 at 5:38 pm | Permalink
      • முசுலீம்கள் அப்பாவிகள் இல்லையா ?
        மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலீம்
        மக்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள்
        அப்பாவி பொது மக்கள் இல்லையா ?

        சொல்லுங்க கபிலன்.

        Posted on 01-Oct-09 at 5:39 pm | Permalink
      • இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

        Posted on 01-Oct-09 at 5:52 pm | Permalink
      • superlinks :”முசுலீம்கள் அப்பாவிகள் இல்லையா ?
        மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலீம்
        மக்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள்
        அப்பாவி பொது மக்கள் இல்லையா ?

        சொல்லுங்க கபிலன்.”

        கொல்லப்பட்ட முஸ்லிம்கள் அப்பாவி பொது மக்கள் தான். இதனைச் செய்தவர்கள் காட்டு மிராண்டிகள் தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை : ( !

        Posted on 01-Oct-09 at 5:58 pm | Permalink
      • கருப்பன்

        //தாராளமா சொல்லுங்க…அதான் பேச்சுரிமை….ஆனா, குண்டு போடாதீங்க…ஒண்ணுமே தெரியாத அப்பாவி மக்களை கொன்று குவிக்காதீர்கள். இதுவே தீவிரவாதம்!//

        கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது

        //அப்படியே குண்டு போட்டாலும் ஒரு டார்கெட் வச்சு போடுங்க…யாரு எதிரியே அவங்களை போடுங்கள்…..//

        குஜராத்தில் பார்ப்பனீயவாதிகள் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு எது எது முஸ்லிம்கள் வீடு என்று குறிவைத்துக் கொன்றார்களோ, அந்த மாதிரி கொல்லுங்கள் என்கிறார்.

        குஜராத்தில் பார்ப்பனீயவாதிகளுக்கு காவல்துறை மற்றும் அரசாங்கம் உறுதுணையாக இருந்தது போல ஒரு செள்கரியம் எல்லாருக்கும் கிடைக்காதே கபிலன்.

        மேலும் மும்பை கலவரத்தின்போது ஹரி மஸ்ஜித்திலும், சுலைமான் பேக்கரியிலும் அப்பாவி முஸ்லிகளை கொன்று குவித்த காவல்துறை அதிகாரிகள் இன்றைய தினம்வரை தண்டிக்கப்படாமல் சுதந்திரமாகதான் இருக்கிறார்கள். அவர்களின் நிழல்களைக் கூட நெருங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வேறு.

        Posted on 01-Oct-09 at 6:16 pm | Permalink
      • கருப்பன்

        1992-93 ல் மும்பை கலவரங்களில் ஈடுப்பட்ட சிவசேனாவினரையும், ஹரி மஸ்ஜித்துலும் சுலைமான் பேக்கரியிலும் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுக் குவித்த காவல்துறை அதிகாரிகளையும் உன்னைப் போல் ஒருவன் பாணியில் உடனே தண்டித்திருந்தால், ் 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் நிகழாமல் போயிருக்கும். காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களை தவிர்த்த இந்தியாவில் முதல் தீவிரவாத சம்பவம் மும்பை தொடர் குண்டு வெடிப்பு அதுதான் என்பதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்ல என்று நினைக்கிறேன்.

        Posted on 01-Oct-09 at 6:38 pm | Permalink
      • தம்பிதுரை

        ஆக, 92 ல் நடந்த பாபர் சர்ச்சைக்குறிய கட்டிடம் இடிப்பு நிகழ்த்தியவர்களை உடனடியாக கொன்றிருந்தால் 93 மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்காது..சரியா கருப்பன் ?

        அப்படி கொன்ற பிறகும் 93ல் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருந்தால் நீர் என்ன சொல்வீர் ?

        கஷ்மீரை விட்டுக்கொடுக்கவேண்டும் என்பீரா… ? இல்லை ஷரியத் சட்டைத்தை அமலாக்கவேண்டும் என்பீரா ?

        Posted on 01-Oct-09 at 7:45 pm | Permalink
      • கருப்பன்

        அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும் பிறகு அவர் அத்தையா இல்லை சித்தப்பாவா என்பதை முடிவு செய்யலாம்.

        Posted on 01-Oct-09 at 7:55 pm | Permalink
      • தம்பிதுரை

        அதைச் சொல்ல வேண்டியவன் நான். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகியிருப்பார் என்று கற்பனை செய்வது நீர். சும்மா பிளேட்டைத் திருப்பிப் போடாதீர்.

        Posted on 01-Oct-09 at 8:28 pm | Permalink
      • கருப்பன்

        பழ்மொழியை சுட்டிக்காட்டும் உரிமை கூட உஙக்ளுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு கிடையாது. இதைத்தான் நாங்கள் பாசிசம் என்கிறோம்.

        Posted on 01-Oct-09 at 8:37 pm | Permalink
      • தம்பிதுரை

        வெட்டிப்பேச்சு பேசும் வெறும் பயலாயா…நீர்.

        மேட்டர் பத்தி கேட்டா பதிலக்காணோம், தப்பிக்க வழி பாசிசம், பாயாசம் என்று சொல்லி ஓடிவிடுகிறீர்கள்.

        Posted on 01-Oct-09 at 9:16 pm | Permalink
    • கருப்பன்

      இன்னும் காஷ்மீர மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுயநிர்ணய அதிகாரமே இன்னும் வழங்கப்படவில்லை. குறைந்த பட்சம காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் “Armed forces Special Act” எனப்படும் காட்டுமிரான்டித்தனமான சட்டத்தை திரும்ப பெற முடியுமா?. The field must be levelled before the game starts என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களிடம் விவாதித்து ஒரு நன்மையும் இல்லை.

      Posted on 01-Oct-09 at 8:01 pm | Permalink
      • தம்பிதுரை

        Absolutely. முதலில் ஆர்டிகிள் 370 ஐ ரத்து செய்யச் சொல்லவும். பின்னர் சொந்த நாட்டிலே அகதிகளாக்கப்பட்ட கஷ்மீர் பண்டிதர்களை குடியமர்த்தவும். பின்னர் ஆஃப்கானிஸ்தான் வழியாக வந்து ஜிஹாத் செய்யும் துலுக்கர்களை விரட்டவும். அப்பொழுது தான் Level playing field கிடைக்கும். அதுவரை zip it.

        Posted on 01-Oct-09 at 10:12 pm | Permalink
      • கருப்பன்

        முதலில் காஷ்மீர மக்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்புகிறார்களா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்தவும். அவர்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க் விரும்பும்பட்சத்தில் ஆர்டிகிள் 370 யை நீக்குவது பற்றி விவாதிக்கலாம். ஒரு பெண்ணை அவள் சம்மதமில்லாமல் ஒருவனுக்கு மணமுடிக்கவே சட்டம் இடம் தருவதில்லை. ஆனால் பலகோடி மக்களை ராஜா ஹரி சிங் என்ற ஒரு முட்டாள் பார்ப்பனன் எடுத்த முடிவை வைத்து 60 ஆண்டு காலமாக வம்படியாக பிடித்து வைத்திருப்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை!

        Posted on 01-Oct-09 at 11:38 pm | Permalink
        • Balaji

          அப்படியே எங்க தெருவுக்கும் சுதந்திரம் கிடைக்குமானு கேட்டு சொல்லுங்க ப்ளீஸ்

          Posted on 20-Jan-10 at 2:34 am | Permalink
      • பலவேசம்

        //Absolutely. முதலில் ஆர்டிகிள் 370 ஐ ரத்து செய்யச் சொல்லவும். பின்னர் சொந்த நாட்டிலே அகதிகளாக்கப்பட்ட கஷ்மீர் பண்டிதர்களை குடியமர்த்தவும். பின்னர் ஆஃப்கானிஸ்தான் வழியாக வந்து ஜிஹாத் செய்யும் துலுக்கர்களை விரட்டவும். அப்பொழுது தான் Level playing field கிடைக்கும். அதுவரை zip it.//

        Please read Article No 7 of the Agreement between Kashmir King and Indian Government. Don’t assume Kashmir is part of India

        Posted on 02-Oct-09 at 10:56 pm | Permalink
  29. Ananth

    Loosu payan… padama review pannu not the background of the film…

    Posted on 01-Oct-09 at 5:06 pm | Permalink
  30. அருமையான அலசல். வாழ்த்துக்கள்.

    “ஆனால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?”

    இதை படிக்கும் பொழுது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில் இதனை ஒத்த கருத்தை எமது ப்ளாகிலும் (http://theanarchyfix.wordpress.com) இப்படம் பற்றிய விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளோம். படித்து உமது கருத்தையும் தெரிவிக்கவும்.

    Posted on 01-Oct-09 at 5:09 pm | Permalink
  31. vaasakan

    unnaippol oruvan =r.s.s aip pol b.j.p.

    Posted on 01-Oct-09 at 5:20 pm | Permalink
  32. பதிவுக்கான படம் (ஓவியம்) சிறப்பாக இல்லை தோழர்.அது இருப்பதற்கு எடுத்து விடலாம் என்பது என் கருத்து. ‌

    Posted on 01-Oct-09 at 5:29 pm | Permalink
    • பாயாசம்

      //பதிவுக்கான படம் (ஓவியம்) சிறப்பாக இல்லை தோழர்.அது இருப்பதற்கு எடுத்து விடலாம் என்பது என் கருத்து. ‌//

      நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது….

      Posted on 01-Oct-09 at 5:36 pm | Permalink
  33. விவாதத்தில் பங்கு கொண்ட கேள்விக்குறி,பாயாசம், கருப்பன் குஜராத் முஸ்லிம், சூப்பர்லிங்க்ஸ் ,அறிவுடை நம்பி, உறையூர்காரன் அனைவருக்கும் நன்றி. உங்களின் மனம் புன்படும்படி ஏதாவது பேசி இருந்தால் மன்னிக்கவும்.
    நன்றி!

    Posted on 01-Oct-09 at 6:16 pm | Permalink
    • கபிலன்,

      என்ன இப்படி? நன்றியுரை சொல்லிட்டீங்க! விவாதத்தில் என்ன புரிஞ்சிகிட்டீங்கன்னு சொன்னா, நாங்களும் தெரிஞ்சுப்போம்.

      Posted on 01-Oct-09 at 6:27 pm | Permalink
      • இந்து Vs இந்து அல்லாதவர்களின் கருத்து மோதல்கள் இவை. திராவிடன், பகுத்தறிவாளன், கம்யூனிஸ்ட், முற்போக்கு, சைடுபோக்கு,வயிற்றுப்போக்கு என எவராக இருந்தாலும் இந்து சமயத்தவரைப் புண்படுத்தி சுகம் காணும் வழக்கம் ரொம்ப நாட்களாக நடந்து வருகிறது. ராசா..நாங்களும் கொஞ்சம் இருக்கோம்…கொஞ்சம் பார்த்து செய்யுங்கன்னு சொல்லத் தான் வந்தேங்க.

        அவரவர் என்ன நினைக்கின்றனர் என்ற உணர்வும் தெரிந்தது. நேரில் பேசினால் கூட இவ்வளவு தெரிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன்.

        இந்த விவாதத்துல இருந்து என்ன தெரிஞ்சுதுன்னா…நான் இன்னும் படிக்க வேண்டிய மேட்டர் எக்க செக்கமா இருக்குன்னு தெரியுது
        : )

        தனிப்பட்ட எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

        அவரவர் கொள்கை அவரவருக்கு ! அதில் தலையிடுவதில்லை, நம்மை இழிவுபடுத்தாதவரை !

        நன்றி!

        Posted on 01-Oct-09 at 11:49 pm | Permalink
      • கேள்விக்குறி

        கபிலன் நீங்கள் சொல்வது தவறு, இது பாசிஸ ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்குமான கருத்து மோதல்.

        Posted on 02-Oct-09 at 1:37 am | Permalink
      • தோழரே கேள்விக்குறி,

        இதுவரைப் பார்த்ததில் இங்கு வாதம் செய்பவர்கள் இரண்டு வகைப்படுவர்

        1. நான் முதலில் சொன்னது போல இந்து Vs இந்து அல்லாதவர்.

        2. பகுத்தறிவு,பெரியார் திராவிடன்,முற்போக்கு என்ற வார்த்தைகளுக்கு, பார்ப்பனீய எதிர்ப்பு என்கிற பெயரில் இந்து சமயத்தவரை இழிவுபடுத்துதலும், இந்திய எதிர்ப்பும் தான் அர்த்தம் என்று பெரியார் முதல் காலா காலமாக, தங்கள் காலத்தை ஓட்ட, ஆழ் மனதில் பதிய வைத்துள்ளவர்கள்.

        இந்த இருவருக்கும், எந்த ஒரு விஷயத்தை எடுத்து அலசினாலும், தங்கள் குறிக்கோளான இந்து சமயத்தவரை இழிவுபடுத்துவது எப்படி?, பார்ப்பனரை அசிங்கப்படுத்துவது எப்படி? இந்தியாவை எதிர்ப்பது எப்படி? போன்ற கருத்துக்களை உள்ளே நுழைப்பது எப்படி? என்பதிலேயே கவனம் அதிகமாக இருக்கிறது. சாதாரண ஒருவனாக, இந்த வாதங்களை சற்று வெளியில் இருந்து பாருங்கள் புரியும். அப்படியே சமயத்தை நீக்கிவிட்டு, நாத்திகனாக இந்தப் படத்தைப் பார்த்தால், குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றவர்களைக் காமன் மேன் தந்திரமாக கொள்கிறார். இதை பாசிசம் என்று சொல்கிறது தங்கள் வாதம்.

        அதனாலேயே தான், இட்லி சுடுவது எப்படி? என்ற பதிவு எழுதினாலும், அதில் கூட இப்படி பட்ட கருத்துக்களே வெளிப்படும் என்று சொல்லி இருந்தேன்.

        Posted on 02-Oct-09 at 7:45 am | Permalink
    • கருப்பன்

      கமல் என்கிற கலைஞன் மேல் இருந்த அதீத அபிமானத்தினால் அவருடைய கருத்துகள் உங்களுக்கு நியாயமாகவே தெரிந்திருக்கலாம். அதை தெளிவுப் படுத்தவே முயன்றேன். எனது கருத்துகள் அனைத்தும் பாசிசம் மற்றும் இந்துத்துவாவிற்கு எதிரானது மட்டுமே, கபிலன் என்கிற தனிமனிதனுக்கு எதிரானதல்ல.

      Posted on 01-Oct-09 at 7:40 pm | Permalink
      • பாயாசம்

        //இந்து சமயத்தவரை இழிவுபடுத்துதலும், இந்திய எதிர்ப்பும் தான் அர்த்தம் //

        இந்து என்று யாரைச் சொல்கிறார் கபிலன்?

        இந்தியா என்று எதைச் சொல்கிறார் கபிலன்?

        Posted on 08-Oct-09 at 1:19 pm | Permalink
  34. puthiyavan

    Inthappadathai paarthathilirundu vinavin vimarsana katuraikaga kathirunthen en manathil vodiya karuthukkalai thoguppaga kodutha vinavirku en nantri.Inthappadathai parthuvittu veliye varumpoludhu en nanber koorinaar padam bore aanal kamal seivadu sari polathan thonuthu endru koorinaar melum padam parthu poi kondiruntha kooli velai seiyum pamara makkalo vonume puriyala inga kodutha 70rubayai (saatharana vakuppu tickkete 70rupai) kuvotor vangi voothiginu nimathiya thoonkirupean pa endru koorikkonde sendrargal aaga motham pamaramakkalai kulapi suyanala naduthara varka makkal manathil niyaya paduthuvathil kamal rss yenna hittleraium minchivittar aanal nammai eamatra mudiyuma padam partha piragu eanakul ealumbiya niraya kelvikal matravarukku ean puriyavillai eanenral naam communisum ennum sariyana paathaiel selkirom kamal pondra indhu matha veriyarkalluku sariyana paadam pukattuvom nandri vinavu.

    Posted on 01-Oct-09 at 6:26 pm | Permalink
  35. கமலின் இந்துத்துவா சார்பு பல படங்களில் வெளிப்பட்டிருக்கிறது!

    காமன்மேன் என கான்செப்ட் கிடைத்ததும், உற்சாகத்தில், தனது கருத்துக்களை எல்லாம், காமன்மேனை வைத்து, சொல்லிட்டார்!

    எப்பவும் இந்த மாதிரி பிடித்த கதையை (ஹேராம் போல) தானே இயக்கி, வடிவ அளவில் சொதப்பது தான் கமலோட பழக்கம். என்னவோ தெரியல! வேறு ஒருத்தரை போட்டுட்டாரு!

    தாமதமாய் வந்தாலும், தெளிவான விமர்சனம். வினவுக்கு நன்றி.

    Posted on 01-Oct-09 at 6:33 pm | Permalink
  36. அஸ்கர் 

     ” தசாவதாரம் ஒரு சிக்கலான விட‌யத்தை எளிமையாக சொல்லப்பட்டது. கேயாஸ் தியரியை நான் ஒரு தீர்வாக உபயோகிக்கவில்லை (விஞ்ஞான) தத்துவமும், கோட்பாடும் தீர்வாக கருதமுடியாது. சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது. டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது. நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கில்லாத‌ உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன்”.இது தசாவாதாரத்திற்குப் பிறகு இந்து நாளிதழுக்கான ஒரு பேட்டியில் கமல் கூறியது. இவர் கூறியதிலிருந்து இவரின் அறிவியல் அறியாமையை நாம் விளங்கிக்கொள்ளமுடியும். இருந்தபோதிலும் இவர் தன்னை ஒரு அதிமேதாவிவியாகவே வெளிப்படுத்திக்கொள்கிறார். மேலும் தன்னை ஒரு நாத்திகன்(!) கம்யூனிஸ்ட்(!) என முற்போக்குவாதியாகவும் காட்டிக்கொள்ளும் இவர், தனது பார்ப்பனசார்பை தனது படங்களில் பளீரென்றில்லாமல் நாசுக்காகவே வெளிப்படுத்துவார். இவர் ஒரு குள்ளநரி. கேயாஸ் தியரி,டார்வினிசம்,நியூட்டன் பற்றியெல்லாம் தெரிந்த இவருக்கு இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது இந்துமத பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு எதிர்வினை தான் என்பது மட்டும் தெரியாமல் போனதுதான் வியப்பாக உள்ள‌து. இஸ்லாமியர்களின் இந்த(தீவிரவாதம்)எதிர்வினை அவர்களுக்கு ஒரு தீர்வை தராது. இதுபோன்ற கழிசடைகளின் வருமானத்திற்கும்,இந்துத்துவாவை பரப்புவுவதற்குமே உதவும்.அவர்கள்(இஸ்லாமியர்கள்) மகஇக அல்லது வேறு ஏதேனும் புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்துதான் இந்துத்துவாவின் தாக்குதலை முறியடிக்கமுடியும். 

    Posted on 01-Oct-09 at 7:35 pm | Permalink
  37. ivalavau thooram alasuvatharku indha padathil enna irukrathenru theriyavillai…. idhu matrum oru padam avalavuthan………….

    Posted on 01-Oct-09 at 7:52 pm | Permalink
  38. அந்நியன்

    உருப்படியாக எதையும் படைக்கத் தெரியாத, படைக்கிற அடுத்தவரையும் ஊசிப்போன கருத்துகளால் காயப்படுத்திகிற கையாலாகாத நபும்சகனின் புலம்பல். இதெல்லாம் சோவியத் ரஷ்யா சென்று பிச்சை எடுக்கத்தான் லாயக்கு

    Posted on 01-Oct-09 at 8:39 pm | Permalink
  39. கேள்விக்குறி

    ஒரே ஒரு ஆர்.எஸ்.எஸ் பன்றி வந்து இங்கே குத்தாட்டம் போடுகிறது… பன்னிங்கன்னா கூட்டமா வருமின்னு எங்க கஞ்சா பாபா சொன்னது பொய்யா போச்சே…அச்சச்சோ…ஒரு வேள பிரியாணி ஆகிடுமிங்கற உண்மை தெரிஞ்சதனால மத்த பண்ணிங்க எஸ்கேப்பு ஆயிடுச்சோ?

    Posted on 01-Oct-09 at 8:40 pm | Permalink
  40. தொடர்ந்து திரைப்படங்களில் நடக்கும் முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்திற்கு இப்படம் ஒரு மைல்கல்.ஆனால் தமிழை விட ஹிந்தியில் ரொம்ப மோசமாக சிதிரிக்கப்பட்டும் முஸ்லிம் சமூகம் சட்ட ரீதியிலான அல்லது சாதரண எதிர்ப்பை கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் சோகம்.

    இப்படம் வெளி வருவதற்கு முன் நான் எழுதிய வலைப்பதிவு..

    http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_1700.html

    Posted on 01-Oct-09 at 9:41 pm | Permalink
  41. ungalil oruvan

    Mr/Ms. Vinavu I have a question for you. How many blog posts you have written on the hypocrisy of Pakistan on punishing the criminals who plotted the 26/11 attacks. You write so many posts criticising India and when it comes to Pakistan or islamic terrorism or islamic fundamentalism your scales are uneven. Why. If islamic fundamentalism is just a response to hindu fundamentalism in India then why there are bomb blasts by islamic terrorists in Indonesia or in Iraq.
    Why Taslima was shunted out of Bangladesh. Was it not because of the fact that she exposed how Hindus were discriminated against in Bangladesh by muslims and how they were attacked by muslims there after Dec 6,1992. Finally the whole world knows that Kamal is an atheist and he does not wear sacred thread,
    nor sports a tuft in real life. In the film also the character is not shown wearing sacred thread or sporting a tuft. Still the picture shows that he is wearing a sacred thread and sporting a beard. Do you atleast know
    that many non-brahmins who are vaishnavas apply thiruman in their forehead. What has srivaishnavism
    or brahmins in general have to do with the film or which the ideas espoused by the ‘common man’ in the film. Your caricaturing them is in no way different from that of hindutva brigade, only the community and symbols differ Both use stereotypes and project one community as enemy.

    Posted on 01-Oct-09 at 11:06 pm | Permalink
    • கருப்பன்

      If Hindu fundamendalism is the cause of terrorism in India, American imperialism in the cause at the world level. Why U.S have vetoed all the resolutions brough against Israel in the UN? Why US is interfering in middle east? Why did it patronised Saddam Hussain against Iran and then Osama bin Laden against USSR? Needless to say Saddam and Osama are ex- CIA patron?

      //Why Taslima was shunted out of Bangladesh//
      Why Deepa Mehta was attacked by Hindutva goons while shooting the movie “Water” in varanasi? Why were Parzania and Firaq were banned in Gujarat?

      Was it not because they exposed the evils of Hindutva and the RSS goons?
      You are worried about bangladeshi when your own brothers (may be you consider pakistani and bangladeshi hindus as brothers than muslims in india. In that case you have no locus-standi to discuss this subject) in India were killed by Shivsainiks in Mumbai after Dec 6, 1992.

      Not Kamal. even Vinayak Damodar Savarkar is was athiest. Mohammed Ali Jinnah was an athiest. Didn’t they nurture sectarian idealogies and weren’t they responsible for the partition? An athiest can be a fascist too.

      It is not the brahmins who are having anything to do with the movie. It is the brahminism and the organisations like RSS which are headed by brahmins which are spreading hatred in the country arousing communalism are being condemend here.

      Posted on 02-Oct-09 at 12:03 am | Permalink
    • கேள்விக்குறி

      எக்ஸ்கியூஸ்மீ மை டியர்… இராக்கில் இருப்பது விடுதலை போராளிகள் தீவிரவாதிகள் இல்லை… இன்டோனேசியா உலகிலேயே பெரிய இசுலாமிய நாடு அங்கே மிதவாத இசுலாமியர்களுக்கும் இசுலாமிய பிற்றோக்கு பாசிஸ்டுகளுக்கும் பிரச்சனை.. கமல் கயமைத்தனமாக எல்லோரையும் இசுலாமிய தீவிரவாதம் என்று சொன்னார்.. நீங்கள் வழிமொழிகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட தஸ்லிமாவுக்கு ஆதரவாக வந்தவர்களும் நாங்கள்தான். இந்துத்துவத்துக்கு பாசிசத்தன்மையை வழங்குவதில் பார்ப்பனிய பூனூலுக்கு ஒரு முக்கிய பாத்திரம் உண்டு…அதுதான் உங்கெல்லாரையும் விட நான் உயர்ந்தவன் எனும் கருத்தாக்கம்.. இங்கே கமல் அதைத்தானே படம் முழுவதும் சொல்லியிருக்கிறார்.. நியாய்ப்படி மிச்சலின் டயர் பொம்மை போல, எகிப்திய மம்மி போல பூனூலால் உடல் பூராவும் சுற்றி காண்பித்திருக்கவேண்டும். 

      Posted on 02-Oct-09 at 1:58 am | Permalink
  42. ungalil oruvan

    ‘பம்பாயில் சுட்டது காசாப் இல்ல முஸ்லீம்’
    He is a Pakistani, trained in Pakistan and was sent as part of a team with orders to kill as many people as possible. The whole world knows that islamic jihadi groups with support of agencies of Pakistan govt. were behind this plot. He was not an ordinary criminal who killed for money or valuables.He had instructions to kill and create chaos. It was a preplanned attack. Why do you twist the issue as if it is muslim vs non-muslim. it is pakistan vs india.

    Posted on 01-Oct-09 at 11:15 pm | Permalink
    • கேள்விக்குறி

      சரிம்மா அப்ப பாகிஸ்தான் தீவிரவாதின்னு சொல்லு ஏன் முஸ்லிம் தீவிரவாதின்னு சொல்லுற? 

      Posted on 02-Oct-09 at 1:47 am | Permalink
  43. கேள்விக்குறி

    முக்கிய அறிவிப்பு… தோழர்கள் ஆர்.வி, வித்தகன், கலகம், ஆர்.கே., விடுதலை, ளிமாகோ, மரண அடி, மா.சே, ஜான், சர்வதேசியவாதிகள், சாதிக், போராட்டம்….இன்னும் நான் மறந்த பிறர் ஆகியோர் எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்.

    Posted on 02-Oct-09 at 1:36 am | Permalink
    • ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல”

      கண்டிப்பாய் அறிவு இருக்காது பூணூல் வாங்கினால் அறிவும் இலவசமாம்

      மிக மிக சிறப்பான விமர்சனம். அதைவிட சிறப்பான கருத்தாழம் மிக்க வரைபடம்(ஓவியரே பட்டய கிளப்பிட்டீங்க). உன்னைப்போல் ஒருவனின் மிஸ்டர் பொதுஜனம் போல் தான் பலரும் பேசுகிறார்கள். “தீவிரவாதிகளை சுட்டுதள்ளணும் சார், குழந்தை குட்டின்னு பாக்கக்கூடாதுன்னு”.

      கோவை குண்டுவெடெடிப்பில் குற்றவாளிகளாக்கப்பட்ட அப்பாவிகள் பலர் இன்னும் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்க, அதற்கு காரண கர்த்தாக்களோ பாஞ்சாலிக்கு புடவைக்கட்டிக்கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.

      ஹே ராம் இல் தன் மனைவியை முசுலீம் வன்புணர்ச்சி செய்ததால் பயங்கர வாதத்தை கையிலெடுத்ததை சொன்ன கமலுக்கு அதே போல் பலர் பாதிக்கப்பட்டு அதனால் குண்டு வைத்த முசுலீம் “தீவிர்ர வாதியை” பற்றி படம் எடுக்க முடியுமா என்ன?

      கேள்வியே அபத்தம் தான் பூனூலில் சங்கமிக்கும் இந்த பொது ஜனங்கள் கும்மியடிப்பார்கள் மக்களின் ரத்தத்தை ருசித்தபடியே.

      Posted on 02-Oct-09 at 10:06 am | Permalink
      • கலகம்,

        இங்கேயும் பூநூல்தானா? பூணூலை விட்டு வெளியே வாங்க!

        Posted on 06-Oct-09 at 11:28 am | Permalink
    • கேள்விக்குறி,

      ரொம்ப பிசியோ? ஒன்றும் எதிர்வினையே காணோமே?

      Posted on 06-Oct-09 at 11:26 am | Permalink
  44. வினவு சொல்வது என்ன என்ற என்னுடைய புரிதல் இதுதான்.

    கமலஹாசனும் இந்த படமும் தவறானவை. ஏனென்றால்:
    1. பே ப்ர்செச்ஸ், சட்டம், விசாரணை, நீதிமன்றம், ஜனநாயகம் போன்றவற்றில் நம்பிக்கை இலாத/இழந்த நாயகன் எல்லாவற்றுக்கும் சுட்டுத் தள்ளுவதுதான் தீர்வு என்ற முடிவை முன் வைக்கிறார்.
    2. சுட்டுத் தள்ளுவது முஸ்லிம்களை மட்டுமே. இது முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற மாயையை உருவாக்குகிறது. அவர்களில் பெரும் பகுதியினர் தீவிரவாதத்துக்கு துணை போகாதவர்கள், தீவிரவாதத்துக்கு நகர்ந்ததற்கு அவர்களின் தனிப்பட்ட இழப்புகள் காரணமாக இருக்கலாம், (இல்லாமலும் இருக்கலாம்) என்ற நிதர்சனத்தை இந்த சினிமா வியாபாரத்துக்காக மறைக்கிறது. ஒரு டோக்கன் ஹிந்து தீவிரவாதியை காட்டினாலும் அது சும்மா லுலுலாயி. Political correctness-க்காக மட்டும் காட்டப்படுகிறது.

    பதிவை அவசர அவசரமாகத்தான் படிக்க முடிந்தது. அதுவும் 150 மறுமொழிகளில் வெகு சிலவற்றை மட்டுமே படிக்க முடிந்தது. என் புரிதலில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று வினவு குழுவினரோ இல்லை இசைந்த கருத்துள்ளவர்களோ சொல்ல முடியுமா? உதவியாக இருக்கும்.

    நானும் இப்போதெல்லாம் இங்கே வருவது குறைந்துவிட்டது. வினவு குழுவினரும் என் கேள்விகளுக்கு பதில் சொல்வது அற்றே போய்விட்டது. அஹ்மதியா பிணம் பற்றிய பதிவில் என்னைப் பற்றி கடுமையாக குற்றம் சாட்டினார்கள். அவர்கள் புரிதல் எப்படி தவறு, இது தவறு என்று நீங்களும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் மறுத்து எழுத வேண்டும் என்று மூன்று நான்கு முறை எழுதினேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு நேரப் பிரச்சினையாக இருக்கலாம் என்று விட்டுவிட்டேன். எனக்கும் நேரப் பிரச்சினை இருக்கிறது :-) . ஆனால் இது முக்கியமான பதிவு, விவாதிக்க வேண்டிய கருத்துகள் நிறைந்தவை என்று நினைக்கிறேன். வினவு குழுவினர் இது சரியான புரிதல், இல்லை இன்னென்ன தவறுகள் இருக்கின்றன என்று சுருக்கமாக சொன்னால் உதவியாக இருக்கும்.

    Posted on 02-Oct-09 at 1:49 am | Permalink
    • // பே ப்ர்செச்ஸ், சட்டம், விசாரணை, நீதிமன்றம், ஜனநாயகம்… //
      பே ப்ர்செச்ஸ் இல்லை Due Process. :-) கூகிள் D,u,e என்ற எழுத்துகளை எப்படித்தான் பே என்று மாற்றுகிறதோ?

      Posted on 02-Oct-09 at 1:53 am | Permalink
    • கேள்விக்குறி

      ஆர்.வி அது இந்து தீவிரவாதி இல்லை முசுலீம் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் இந்து வியாபாரி.. பொலிடிகல் கரெக்ட்னெஸ் என்னும் ஒரு போலியான டிசன்சியை கூட இந்த படம் தகர்த்து தேவையற்றதாக்கி விட்டதுதான் இதன் சாதனை

      Posted on 02-Oct-09 at 2:03 am | Permalink
  45. Proud Capitalist

    All you Naxalites / Communists should be dealt in the same manner as in this film.  Vinavu, ara ticket, pandian, raheem, marudhaiyan, ma . ka . e ka, vi vi mu, pu ja tho mu, etc etc …..all of you are the same roaches as Islamic fundamentalists.

    I got the inspiration from this great Film. 

    Posted on 02-Oct-09 at 4:17 am | Permalink
  46. கமல் ரசிகன்

    ஹிந்தி படத்தில் இருப்பதை போல அப்படியே வசனம் இருந்திருந்தால் கமலுக்கு இந்த விமர்சனம் வந்திருக்காது. மேலும், கமல் நேரடியாகவே இந்த படத்தில் முஸ்லீம்களுக்கு சொரிந்து கொடுத்து இந்துக்களை கிள்ளிவிட்டும் மத விளையாட்டு விளையாடி இருக்கிறார். 

    Posted on 02-Oct-09 at 6:45 am | Permalink
  47. சற்று தாமதமான பதிவுதான் என்றாலும் ஆழமான இலக்கியம் போன்றதொரு விமர்சனம். உன்னைப்போல் ஒருவன் என்கிற பாசிச கழிசடைக்கும், இந்துவெறி அயோக்கியர்களுக்கும் கிடைத்த பெரும்பேறு இவ்விமர்சனம். 

    ///கமல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?///

    மலத்தையும் சந்தனத்தையும் ஒன்றெனக் கருதி எடுத்து பூசிக் கொண்டு அவ்வப்போது அம்பலமாகும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுபோன்ற சமூகவிரோத பாசிச திரைப்படங்களுக்கு விருது கொடுப்பதற்காகவும் அதன் மூலம் தமது படைப்பாளித் தோலர்களுக்கு வாய்ப்பு பெறுவதற்காகவும் சி.பி.ஐ.எம் என்கிற போலி கம்யூனிச கட்சியால் நடத்தப்படும் த.மு.எ.க.ச. வின் விருது விரைவில் உன்னைப்போல் ஒருவனுக்குக் கிடைக்கும். தமிழ்ச்செல்வனுக்கே விருது கொடுத்து கவுரவித்த முதலாளித்துவ மீடியாக்களுக்கு இதன்மூலமாகத்தானே நன்றிக்கடன் செலுத்த முடியும்?!

    விருது கொடுக்கவிருக்கும் த.மு.எ.க.ச.வுக்கும் ஒலக நாயகன், காமன்மேன் கமலுக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Posted on 02-Oct-09 at 11:10 am | Permalink
  48. இந்த படத்தை பற்றிய பதிவிற்க்கு இதுவரை 161 பின்னுட்டங்கள். ஆனால் மிக முக்கிய பதிவான There is a new comment on the post “இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?”.
    http://www.vinavu.com/2009/09/29/hunger-deaths/ : இதற்க்கு 38 பின்னூட்டங்கள் தாம். பெரிய விவாதமும் அங்கு இல்லை. கமல் படம், பார்பனீயம் / மதவாதம், இன்ன பிற விசியங்களில் இருக்கும் ஆர்வம், அடிப்படை விசியங்களில் பலருக்கும் இல்லை போல.

    Posted on 02-Oct-09 at 11:15 am | Permalink
    • unmaisudum

      Paarpaniyam, kamal padam ivatravi vittaal, the so called pakutharivaathalikal (like the ones who writes in vinavu cannot survive…… intha topic vaithu pithatri , vayiru kaluvathu silarin pizhaippu. athai yetharkku kedukka vendum

      Posted on 02-Oct-09 at 3:46 pm | Permalink
    • thongadurai

      //இதற்க்கு 38 பின்னூட்டங்கள் தாம். பெரிய விவாதமும் அங்கு இல்லை. கமல் படம், பார்பனீயம் / மதவாதம், இன்ன பிற விசியங்களில் இருக்கும் ஆர்வம், அடிப்படை விசியங்களில் பலருக்கும் இல்லை போல.//

      Unmaiythaan… Sad….

      Posted on 02-Oct-09 at 10:49 pm | Permalink
  49. சினிமா ரசிகன்

    எல்லாம் ஆடை உடுத்தி நடந்தால் நாம அம்மனக்கட்டை யாய் நடக்க வேண்டும். அப்ப தான நாலு கமெண்ட் சேர்த்து விழும்.

    அது ஏன் சைனா காரனோ , ரஷ்யனோ , சிங்களவனோ வந்து நம்ப நாட்டுல குண்டு வைக்க மாட்டேங்குறான் ?

    மொதல்ல இந்த கேள்வி க்கு பதில சொல்லுங்க.

    ” பெரும்பாலான முஸ்லிமும் தீவிரவாதிங்க இல்ல. ஆனால் பெரும்பாலான தீவிரவாதீங்க முஸ்லிம் தான். “

    Posted on 02-Oct-09 at 2:22 pm | Permalink
    • கருப்பன்

      நீங்க இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க…

      உயர்ஜாதி ஹிந்துக்கள் எல்லாம் பங்குசந்தையில் ஊழல் செய்வதில்லை. ஆனால் பங்குசந்தை ஊழல் செய்பவர்கள் எல்லாம் உயர்ஜாதி இந்துக்களாக இருக்கிறார்கள்.

      பார்ப்பனர்கள் எல்லாம் கோவில், மடங்களில் காமலீலை புரிவதில்லை. ஆனால் கோவில், மடங்களில் காமலீலை புரிபவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.

      பணக்காரர்கள் எல்லாமே சாமியார்களாக இருப்பதில்லை. ஆனால் சாமியார்கள் எல்லாம் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

      பி.ஜே.பி காரர்கள் எல்லாம் ஜின்னாவை புகழ்வதில்லை. ஆனால் ஜின்னாவை புகழ்பவர்கள் எல்லாம் பி.ஜே.பி காரர்களாகவே இருக்கிறார்கள்.

      Posted on 02-Oct-09 at 4:11 pm | Permalink
      • Anonymous

        வெறுப்பன்,
        பங்குச்சந்தை ஊழலால் உன் உயிர் போகுமா ?
        காமலீலை செய்வதால் உன் உயிர் போகுமா ?
        சாமியாரால் உன் உயிர் போகுமா ?
        ஜின்னாவைப் புகழ்வதால் உயிர் போகுமா ?

        இல்லை.

        ஆனால் குண்டுவெடித்தால் உயிர் போகும்…இது உலக நியதி. குண்டு வைப்பவன் தீவிரவாதி. பெரும்பான்மைத் தீவிரவாதிகள் இஸ்லாம் என்ற மதத்தின் பெயரைச் சொல்லியே செய்கிறார்கள்.

        உன் போன்ற மாங்காய்கள் தமிழகத்தில் ஒரு லாரியில் ஏத்தும் கூட்டம் தான் இருப்பீர்கள். பேச்சு மட்டும் வடிவேலு மாதிரி “நாங்கள்ளாம்…” என்று இருக்கிறது…மூடு.

        Posted on 02-Oct-09 at 7:14 pm | Permalink
      • கருப்பன்

        டேய் முட்டாள்,

        குண்டு வைத்தால் மட்டும்தான் உயிர் போகுமா?. வீடுகளில் பெட்ரோல் ஊற்றி எரிப்பதால் உயிர் போகாதா. திரிசூலத்தைக் கொண்டு குத்தினால் உயிர் போகாதா?

        பங்குசந்தை ஊழலில் பணத்தை பறிக்கொடுத்தவனெல்லாம் நடைபிணமாகதானே திரிகிறான்.

        மாலேகான் குண்டுவெடிப்பிற்கு பண உதவி செய்தவன் ஒரு சாமியார், அதை செய்து முடித்தவள் ஒரு சாமியாரினி. இவர்களால் உயிர்கள் போகவில்லையா?

        மேலும் உங்கள் பொய்ப்பிராச்சாங்களை உங்களுக்கே திருப்பிவிட்டால் வலிக்கிறதா?

        Posted on 02-Oct-09 at 7:48 pm | Permalink
  50. Radhakrishnan N

    Kamal has a magnificent image among Tamil cinema fans.But if he copies something they are not being discussed in open. Kamal claimed that his “Thevar Magan” might be awarded Oscar or a nomination.But many knew that “Thevan Magan” was just the exact copy of GOD FATHER but here in the Tamil film caste colour was provided to the already tense South Tamilnadu audience.
    Copying may be accepted in some way but adding caste colour to the “just copying work” and making oscar claims for the film is utter nonsense and atrocious !
    Your overview on this new film is really worth reading!

    Posted on 02-Oct-09 at 3:22 pm | Permalink
  51. Radhakrishnan N

    Many scenes in Thevar Magan have been taken scene by scene as they appear in Godfather film.
    For example, the death scene of Sivaji Ganesan in Thevar Magan can be compared with the death
    scene of Marlon Brando in Godfather where in both cases the senior actors were dying surrounded by their grandchildren.
    The hero of Godfather comes from Italy with his own dreams to live but after seeing the criminal nature of his father’s lifestyle wanted to avoid them but he was attracted and absorbed in the same way of life when he spends sometime with his father.
    The Tamil film also depicts the same story and Kamal comes in with girl he loves and join his father in the village.

    He also start to perform the duties of a caste leader in the course of time he spends his time in his village.
    In the tamil film the hero marries a girl of the choice of his family.
    The duets ,love story,caste colour are the extra things in Thevar Magan but all other matter is the copied one

    Posted on 02-Oct-09 at 3:49 pm | Permalink
  52. Anonymous

    தூக்குத் தண்டனை கைதிகளுக்காக போராட்டம் நடத்த: ஒரு மில்லியன் டாலர்கள்
    துலுக்கத் தீவிரவாதிகளை விடுவிக்க போராட்டம் நடத்த: 500000 டாலர்கள்.
    கவர்மெண்ட் கட்டும் அணைகளை கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்த: 250000 டாலர்கள்.
    மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய: வெறும் 100000 டாலர்கள் மட்டுமே

    புத்தாண்டு சிறப்பு சலுகை 50% டிஸ்கவுண்டுடன் கூடிய பாக்கேஜ் உண்டு.

    அழைக்கவேண்டிய நபர்கள்:

    அருந்ததி சுசான்னா ராய்
    எஸ்.ஏ.ஆர்.கீலானி
    டீஸ்டா செடல்வாத்

    பாகிஸ்தானிலிருந்து போன்கால்கள் இலவசம்.

    Posted on 02-Oct-09 at 4:49 pm | Permalink
  53. Proud Capitalist

    Vinavu, ara ticket, kalagam, karuppan, santhippu, thamarai, kalagam, ma ka e ka, vi vi mu , pu ja tho mu,

    What do you say for this ????? What was the crime of the kids???????

    http://thatstamil.oneindia.in/news/2009/10/02/india-16-people-killed-in-naxal-attack-in-bihar.html

    Posted on 02-Oct-09 at 4:58 pm | Permalink
  54. bmurali80

    வினவு,

    60 ஆண்டு சீனக் ‘கம்யூனிஸ்ட்’ கொண்டாட்டம் பற்றி இப்பவாவது எழுதுவீங்களா ?

    Posted on 02-Oct-09 at 5:07 pm | Permalink
  55. Abdul Rahim

    Dai, do u have any sense. U r a bloddy FASCIST accusing Hindus, Brahmins, Americans. Do u get money fr Islamic Terrorist to write like this Bullshit ? Were you sucking when 200 Hindus were burnt alive by the Muslims in Godhra ? That’s the starting point for the Gujarat Riots… What Kamal shows in his movie is correct….. I am secular Muslim and i love my country India… Suckers and Fascists like you should be ithrown out of thos country…

    Posted on 02-Oct-09 at 6:35 pm | Permalink
    • thongadurai

      //Were you sucking when 200 Hindus were burnt alive by the Muslims in Godhra ? //

      Truth No1: Those who burnt alive not by Muslims

      Truth No2: Those who burnt alive were RSS Hindu terrorists returning from Karseva. Hence it is not an issue burning Mental pigs like that.

      Posted on 02-Oct-09 at 10:45 pm | Permalink
      • நண்பரே, எதையாவது சொல்ல வேண்டும் என்று பொய் உரைக்காதீர்.
        நானாவதி கமிஷன் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இரயிலில் இருந்தது இந்து யாத்ரீகர்கள். கொன்றவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும். ரயில் பெட்டியை கொளுத்தியவுடன், அதிலிருந்தவர்கள் வெளியே வர முயன்றதாகவும், அதைத் தடுக்க கொலைவெறிக் கும்பல் கல்லால் எறிந்து தப்ப முயன்றவர்களையும் தீயிலேயே கருக வைத்தனர் என்பதையும் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறது நானாவதி கமிஷன்.

        Posted on 02-Oct-09 at 11:35 pm | Permalink
      • கருப்பன்

        நானாவதியை நியமித்தது மோடி. ஊதியம் கொடுக்கும் எஜமானனுக்கு தனது விசுவாசத்தை காட்டியிருக்கிறார் நானாவதி.

        லாலு நியமித்த கமிஷனின் ரிப்போர்ட்டையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். அதற்கு எதிர்மாறாக இருக்கும். இதில் எது உண்மை எது பொய்யென்பதை ஒரு நடுநிலைமை ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.

        சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கவேண்டியதுதான்.

        1984 டெல்லி வன்முறைகளிலும், 1993 மும்பை, 2002 குஜராத் கலவரங்களிலும் தங்கள் முகமூடிகள் கிழிந்துவிடும் என்கிற பயத்தில் தான் என்னவோ “Roman Statute of International Criminal Justice” ஓப்பந்தத்தில் காங்கிரஸ் பா.ஜ.க என இரு அரசுகளுமே கையெழுத்திடவில்லை.

        Posted on 03-Oct-09 at 12:16 am | Permalink
      • thongadurai

        //Truth No2: Those who burnt alive were RSS Hindu terrorists returning from Karseva. Hence it is not an issue burning Mental pigs like that.//

        கபிலன்,

        how about this? If you are comfortable when Kamalhasan killing terrorists. Why cannot I am be least bothered when RSS terrorists burnt alive(accident or conspiracy doesn’t matter)?

        Posted on 03-Oct-09 at 12:27 am | Permalink
      • நண்பரே கருப்பன்,
        ஓய்வு பெற்ற நீதிபதியான நானாவதி கமிஷன் ரிப்போர்ட்டை நம்ப மாட்டீர்கள், மோடி அரசு அமைத்த SIT (Special Investigation Team) ஐ நம்ப மாட்டீங்க. அதே நானாவதி கமிஷன் பஞ்சாப் படுகொலை சம்பந்தமா ஒரு ரிப்போர்ட் கொடுத்தது, அதை ஒப்புக் கொள்வீர்கள். சஞ்சார் கமிட்டி ரிப்போர்ட்டை ஒப்புக் கொள்வீர்கள்.டெஹல்கா மற்றும் NGOக்கள் உள்குத்து வெளிக்குத்து அம்பலப்படுத்தப்பட்ட பிறகும், அதைத் தான் நம்புவீர்கள்.

        உங்களுக்கு என்ன மோடி தான் கொலை செய்தார் என எழுதும் ஒரு ரிப்போர்ட்டை மட்டும் தான் நம்புவேன் என்று சொல்கிறீர்கள். இதுக்கெல்லாம் என்ன பண்ண முடியும் சொல்லுங்க.

        Posted on 03-Oct-09 at 1:13 pm | Permalink
      • Mr.Thongadurai,

        Its ridiculous gentleman. In the movie,Kamal has killed the terrorists who are already found guilty. I am not in anyway supporting the communal riots happened in Gujarat. It is highly condemnable. We are highly concerned irrespective of whether a Hindu is Killed or Muslim is Killed. RSS is a cultural organisation, ofcourse with the agenda of Hindutva. RSS is not branded as terrorist organisation in any country including Islamic countries.

        Posted on 03-Oct-09 at 1:24 pm | Permalink
      • கருப்பன்

        நான் குற்றவாளியாக இருக்கும் ஒரு வழக்கை நான் சொல்லும் நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என நான் கேட்டால் ஒத்துக் கொள்வீரா?
        அதுபோலதான் நானாவதி ஆணையமும்.

        சோவும் குருமூர்த்தியும் எழுதுவதுதான் உண்மையென நினைப்பவர்களுக்கு தருண் தேஜ்பாலும், ராம் புண்யானியும் பொய்யர்களாகதான் தெரிவார்கள்.

        58 பேர் கொல்லப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் எத்தனை பேர் பொடாவில் கைதானவர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள். ஆனால் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட கலவர வழக்குகளில் பொடாவில் கைதானவர்களின் எண்ணிக்கை 0. இதுவே சொல்லவில்லையா மோடி அரசின் நடுநிலையான விசாரணையின் அவலட்சணத்தை?

        Posted on 03-Oct-09 at 7:17 pm | Permalink
      • லெனின்

        //RSS is not branded as terrorist organisation in any country including Islamic countries.//

        ஏங்க தோழர் கபிலன், RSS ஒரு தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொல்கிறீர்களே, பின்னர் ஏன் அந்த இயக்கத்தை ஒரு காலத்தில் தடை செய்தார்கள்?

        Posted on 04-Oct-09 at 12:37 am | Permalink
    • thongadurai

      Who is this Hindus? Those who not allowed in Chidamparam? Who not allowed Inside temples? Who not allowed to become Archagar?

      RSS dogs/pigs are supporting Dixitas and Papan who put court case on All caste archagar.

      Posted on 03-Oct-09 at 7:29 am | Permalink
      • thongadurai

        //RSS is a cultural organisation, ofcourse with the agenda of Hindutva. RSS is not branded as terrorist organisation in any country including Islamic countries.//

        The Cat has came out… Anybody can dealt this

        Posted on 03-Oct-09 at 3:38 pm | Permalink
      • thongadurai

        //RSS is not branded as terrorist organisation in any country including Islamic countries.
        //
        When RSS is doing Bomping, Mass Murders, Communal unrest in India why should some other country ban RSS in their country?

        When ideology of RSS itself is ruling India how come will it get banned in India?

        It is only from people loving democracy can kill these RSS terrorist pigs.

        Posted on 03-Oct-09 at 6:02 pm | Permalink
  56. Kumar

    I feel all muslims are terrorist.

    Posted on 02-Oct-09 at 7:45 pm | Permalink
    • கருப்பன்

      The first terrorist of independant India is a chitpavan brahmin. So I feel all brahmins are terrorists

      Posted on 02-Oct-09 at 7:54 pm | Permalink
      • ஹபீப் ரஹ்மான்

        thalaivaaaa………karuppan…….summa pinni pedal edukkureengka…..adi…dhool…attakaasam. kalakkitteengka.

        Posted on 04-Oct-09 at 2:38 am | Permalink
  57. Proud Capitalist

    When you naxalites can kill a CEO of companies (Pricol, Noida co), why can’t we kill some of the roaches???

    What is the answer to this incident???

    http://thatstamil.oneindia.in/news/2009/10/02/india-16-people-killed-in-naxal-attack-in-bihar.html

    You people are converting India to another Cambodia.

    Posted on 03-Oct-09 at 5:11 am | Permalink
  58. பதிவுக்கு நன்றி தோழர். பதிவும் நன்று.

    Posted on 03-Oct-09 at 12:07 pm | Permalink
  59. KARUMAM

    Well Balanced Review .. fine…

    காமன் மேன் ஆக ‘நாசர், அல்லது ரஜனி நடித்திருந்தால் உங்கள் விமர்சனம் எப்படி இருக்கும்….
    அதையும் வெளியிடுங்கள். வினவு…

    Posted on 03-Oct-09 at 12:36 pm | Permalink
  60. அஸ்கர் 

    திருவாளர் கபிலன்,   முஸ்லீம்கள் குண்டு வைக்கக்கூடாது என நாங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் கூற உங்களுக்கு அருகதை கிடையாது.. வைக்கக்கூடாது எனக் கூறும் நாங்கள் ஏன் கூடாது வேறு என்ன செய்யவேணடும் என்ற ஒரு மாற்றுத்தீர்வை முன் வைக்கின்றோம்.தீவிரவாதம் என அலறும் நீங்கள் அவர்கள் வேறு என்ன செய்ய வேன்டும் என உங்களால் கூறமுடியுமா?.    முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரித்து படம் எடுங்கள் யார் வேண்டாம் என சொன்னது! ஏன் முஸ்லீம்கள் குண்டு வைத்ததிலிருந்து படத்தை தொடங்குகிறீர்கள்? ஏன் குண்டு வைத்தான் என்பதிலிருந்து தொடங்கவேண்டியதுதானே?ஒரு படத்தின் இறுதியில் வில்லனை கதாநாயகன் கொலை அல்லது கைது செய்கிறான் என்றால் அது ஏன் என முன்னரே விளக்கப்பட வேண்டும்தானே? வெறுமனே கொலை செய்வதாக படம் எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?  அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள் என ஆதங்கப்படுகிறீர்கள்.  இதற்காக அவர்கள் தூக்கிலிட‌ப்பட‌ வேண்டியவர்கள்தான்.  ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்,  ராமன் கோயில் கட்டப்போகிறேன் பேர்வழி என ர(த்)தயாத்திரை மூலம் சென்ற இடமெல்லாம் அப்பாவிகளை கொன்றானே,உங்களைப் போன்றோரைக்கூட கூமுட்டையாக்கி வைத்திருக்கிறானே அந்த கிழட்டுநாயை முதலில் தூக்கில் போடுங்கள். ஏற்றுக்கொள்கிறோம். (உங்கள் கூற்றுப்படியே) கோத்ரா இரயிலை முஸ்லீம்கலே எரித்துருந்தாலும் எரித்தவனை தண்டிக்காமல், அதிகாரத்தையும் RSS  காலிகளையும் ஏவி கொடூரமான முறையில் அப்பாவிகளை கொன்றானே RSS கோழை அவனை முதலில் சுட்டு தள்ளுங்கள். ஏற்றுக்கொள்கிறோம். மக்களிடம் கோர்ட்டு தீர்ப்புக்கு கட்டுப்படு கட்டுப்படு எனக் கூவுகிறது சனநாயக அரசு கட்டுப்படமாட்டேன் என்கிறது RSS அதை முதலில் தடை செய்யுங்கள். ஏற்றுக்கொள்கிறோம்.  RSS இல்லையென்றால் இந்தியாவில் மதக்கலவரங்கள் இல்லை. 

    Posted on 03-Oct-09 at 4:56 pm | Permalink
    • நண்பரே ஆஸ்கர்,

      முஸ்லீம்கள் குண்டு வைக்கக்கூடாது என நாங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் கூற உங்களுக்கு அருகதை கிடையாது”

      இது ஏங்க…..நாங்க ஏங்க கேட்கக் கூடாது…?

      சரிங்க….நீங்க சொல்ற மாதிரியே ஆர்.எஸ்.எஸ். ஐ, வி.எச்.பியை, பஜ்ரங் தள் ஐ தூக்கில் போட்டு விடுவோம். அப்பொழுதாவது தீவிரவாதம் இருக்காது என்று உறுதி அளியுங்கள், அதற்கும் நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் அதன் பிறகு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஜிகாத் புரிய மாட்டார்கள் என என்ன நிச்சயம் ? உங்களுடைய சட்டைப் பையிலேயே காரணத்தை வைத்துக் கொண்டு, வெளியில் இருப்பவர்களை குறை கூறுதல் என்ன நியாயம் ஐயா ?

      உங்களுடைய கூற்று ரொம்ப அநியாயமா இருக்குங்க ஆஸ்கர். குஜராத்திற்கு முன்னாடி தீவிரவாதமே இல்லைங்களா? பம்பாய், கோயம்புத்தூர் என இந்திய முழுவதும் குண்டு வெடித்ததின் நோக்கம் என்னாங்க ஐயா…..உடனே…நாங்கள் அடிமைப்பட்டுள்ளோம்….அது இதுன்னு கதை விடுறத முதல்ல விடுங்க…..இந்து சமயத்தைப் பற்றி பல சமயத்தவரும் பலவாறு தூற்றியும், நாம் எந்த சமயத்தையும் தூற்றாமல் அமைதி காத்து வருவதிலேயே நீங்கள் எங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

      ஏதோ இந்தியாவில் மட்டும் தான் தீவிரவாதம் இருப்பதாக பேசுவது ரொம்ப காமெடிங்க..இந்த அமைப்புகளே இல்லாத இடத்துல தீவிரவாதமே இல்லையா ? உலகம் முழுவதும் இருக்கும் தீவிரவாதக் குழுக்கள் எல்லாம் யாருங்க ? எதுக்கு அப்பாவிகளை கொள்கிறார்கள் ?

      மனசாட்சியோட பேசுங்க ஐயா…..முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாதுங்க.

      Posted on 04-Oct-09 at 1:08 am | Permalink
      • thongadurai

        //திருவாளர் கபிலன், முஸ்லீம்கள் குண்டு வைக்கக்கூடாது என நாங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் கூற உங்களுக்கு அருகதை கிடையாது.. வைக்கக்கூடாது எனக் கூறும் நாங்கள் ஏன் கூடாது வேறு என்ன செய்யவேணடும் என்ற ஒரு மாற்றுத்தீர்வை முன் வைக்கின்றோம்.தீவிரவாதம் என அலறும் நீங்கள் அவர்கள் வேறு என்ன செய்ய வேன்டும் என உங்களால் கூறமுடியுமா?. முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரித்து படம் எடுங்கள் யார் வேண்டாம் என சொன்னது! ஏன் முஸ்லீம்கள் குண்டு வைத்ததிலிருந்து படத்தை தொடங்குகிறீர்கள்? ஏன் குண்டு வைத்தான் என்பதிலிருந்து தொடங்கவேண்டியதுதானே?ஒரு படத்தின் இறுதியில் வில்லனை கதாநாயகன் கொலை அல்லது கைது செய்கிறான் என்றால் அது ஏன் என முன்னரே விளக்கப்பட வேண்டும்தானே?//

        Thambi Kabilan,

        Gundu vaippathai Oru Muslimaaga ethirkkirar Askar, aanaal oru Indu enru sollikkollum ungkalathu vaayil irunthu so called Cultural Organization RSS terrorist patri pidunguvathey periya velaiyaga ullathu. Melum RSS terrorist meethu entha oru nadavadikkaiyum ithuvarai illaiye een enrum ningal ketpatharku thayaar illai. Piragu entha munchiyai vaithukkondu Terrorism enru pulampukirergal? enru nanbar Askar ketkirar.

        Posted on 04-Oct-09 at 6:07 am | Permalink
      • அஸ்கர் 

        குழந்தையை கிள்ளிவிட்டவன் ஏன் குழந்தை அழுகிறது என்று கேட்பது அயோக்கியத்தனம். 
        1991 அத்வானி அவர்களின் ரதயாத்திரை சோம்நாத்திலிருந்து 1992 பாப்ரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் பம்பய் கலவரத்திற்கு!(படுகொலை) பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு.1996 கோவை கலவரத்திற்குப் பிந்தையதுதான் 1998 கோவை குண்டிவெடிப்பு.2002 குஜராத் கலவரத்திற்கு!(படுகொலை) பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு. மற்றும் வாரனாசி,தென்காசி,பெங்களூர்,ஹைதராபாத்,மாலேகான்,டெல்லி போன்ற குண்டுவெடிப்புகள்.இவற்றுக்கெல்ல்ல்ல்லாம் முந்தையது.*ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணின் யோனியிலும் இந்துக்களின் விந்தை நிரப்பி புனிதப்படுத்துங்கள் ‍- உங்கள் குரு கோல்வால்கர்*கட்டுண்டு கிடந்த நமது சுன்னிகளை நாம் இன்று அவிழ்த்துவிட்டோம். பீபீக்களின் இறுக்கமான யோனிகளை நாம் அகட்டிவிட்டோம் ‍- உங்கள் VHP என்ற‌ வானராப்படையின் துண்டறிக்கை. ‍ இது ஒரு சிறு உதாரணம்தான் திருவாளர்.கபிலன். முழுவதையும் படிச்சா உங்களுக்கு mood ஏறும்,முஸ்லீமுக்கு BP ஏறும். உங்களுக்கு mood  ஏறுனா கற்பழிக்கிறீங்க, அவங்களுக்கு BP ஏறுனா ரத்தக்குழாய்(குண்டு)வெடிக்குது. எல்லாம் இயற்கைதானே திருவாளர்.கபிலன்.
        “இந்து சமயத்தைப் பற்றி பல சமயத்தவரும் பலவாறு தூற்றியும், நாம் எந்த சமயத்தையும் தூற்றாமல் அமைதி காத்து வருவதிலேயே நீங்கள் எங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்”எந்த சமயம் உங்களைத் தூற்றுவது? எனக்கு புரியலையே கபிலன். கிறித்தவனையும் முஸ்லீமையும் ஏற்கனவே எரிச்சிக்கிட்டு இருக்கீங்க, மேற்கொண்டு ஏதாவது பேசி மறுபடியும் எரிவானுங்களா என்ன‌? உங்கள் சமயத்தை தூற்றுவது நாத்திகரும் கம்யூனிஸ்டுகளுந்தான்னு நினைக்கிறேன். இவங்க சமயமா? இவங்க இந்து சமயத்தை பற்றி தெரிஞ்சிகிட்டதாலதான் அதிலிருந்து பிய்ச்சிகிட்டு வெளியே வந்துட்டோம்னு சொல்றாங்க. ஆமாம் கபிலன் நாம எல்லோரும் ஒரே இந்துசமயம்னு சொல்றீங்களே அதைப்பத்தி உங்களுடைய எல்லா மக்களுக்கும் சொல்லியிருக்கீங்களா? தாழ்த்தப்பட்டவனை நம்(உன்)மதம் சூத்திரன் என்று சொல்லுகிறது அதன் அர்த்தம் இதுதான் என அம்மக்களிடம் வெளிப்படையாக கூறமுடியுமா உங்களால்?  தமிழ் மொழி சூத்திரன் மொழி, தீட்டு மொழி என நம் (உன்) இந்து (பார்ப்பன) மதத்தில் உள்ளது என மேடை ஏறி முழங்க முடியுமா? உங்கள் சமயத்தில் உள்ள‌வனை நீங்களே தூற்றுறீங்களே திருவாளர்.கபிலன். இவ்ளோ அயோக்கியத்தனத்தையும் வைத்துக்கொண்டு அமைதியா இல்லாம வெங்காயமா உரிக்க முடியும். 
        பாகிஸ்தான்ல குண்டு வெடிக்குது இந்தோனேஷ்யாவில் குண்டு வெடிக்குது ஈராக்குல குண்டு வெடிக்குது அமெரிக்காவுல குண்டு வெடிக்குது நாம இதைப்பற்றி பிறகு விவாதிக்கலாம். முதலில் நம்முடைய‌ நாட்டில் ஏன் குண்டு வெடிக்குது அதற்கு என்ன தீர்வுன்னு சொல்லுங்க? திருவாளர் கபிலன்.
         சில இடங்களின் குண்டு வெடிப்பிற்கு இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள‌னர். சூரத்தில் குண்டுகளை வைத்து பயங்காட்டியது மோடியின் செயல் என்று பூரி சங்கரசாச்சாரியார் குற்றம் சாட்டியிருக்கிறார்.மாலேகான் குண்டு வெடிப்பில் இந்திய இராணுவத்தின் தொடர்பு கூட அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன் போலீஸே குண்டு வைத்ததாக அவர்களே கூறிய ஒரு சம்பவம். “புதுக்கொட்டை கால்ஸ் சாராய ஆலைக்கெதிராக போராடிய அப்பகுதிவாழ் உழைக்கும் மக்களிடையே அப்பகுதியின் இன்ஸ்பெக்டர்(பெயர் தெரியவில்லை) கூறியது, நீங்கள் மகஇக வினருடன் சேராதீர்கள். அவர்கள் தீவிரவாதிகள். எங்களாலேயே அவர்களை பிடிக்கமுடியாது. அவ்ர்களை பிடிக்க நாங்களே ஏதேனும் ஒரு இடத்தில் குண்டு வைத்துவிட்டு அவர்கள் பெயரை சொல்லித்தான் பிடிப்போம்.” இதை அம்மக்களை பயமுறுத்துவதற்காக கூறியாதாகக் கொண்டாலும் இதில் உண்மையில்லாமல் இல்லை. மரத்துல இருந்தது பொந்துக்குள்ல இருந்தது கழிவறைக்குள்ள இருந்தது என்று கைப்பற்றபடும் வெடிக்காத குண்டுகள் இவர்கள் வைப்பதுதான். வைத்தவனுக்கு தானே தெரியும் எங்கெங்கு உள்ள‌து என்று. 
        பூசணிக்காயை நான் மறைக்கவில்லை மறைக்க விரும்புவது நீங்கள்தான்.

        Posted on 04-Oct-09 at 4:54 pm | Permalink
    • ஹபீப் ரஹ்மான்

      sakotharaaaaaaa………superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.

      Posted on 04-Oct-09 at 2:35 am | Permalink
      • Proud Capitalist

        OK, Muslims, A direct question to you:

        How did the Hindu population in Pakistan and Bangaladesh came down to 1%  and 10% within 50 years???

        What is wrong if we also follow the “methods” by your brothers in Pakistan, Bangaladesh, Turkey (to Armenians and kurds)?

        Posted on 04-Oct-09 at 8:27 pm | Permalink
  61. narakaasuranparamparai

    கமல் ஒரு தேர்ந்த சினிமா தொழில் விற்ப்பனராக இருக்கலாம், ஆனால் அரசியலில் அவர் ஒரு சோ மொட்டை அதாவது கூமுட்டை யென்பதை விளக்குவதாக இருந்தது வினவின் விமர்சனம். கமலகாசய்யர் அரசியலில் நுழைந்தால் ராமகோபாலய்யர். ‍‍=>வெங்காயம்

    Posted on 03-Oct-09 at 5:42 pm | Permalink
  62. kkr

    Great Work . We need this at this critical juncture. Creative directors are not interested in making films which can expose the poor medical infrastrucure ,Rising Food cost,zero social security etc etc.these are the real terrorist killing people every day. every day common worker is facing with increasing work pressure , people are fed up with rising tablet cost which is putting the knife over their throat and the educational institutions poor standards and high fees ……. there is lot of issues…but the media is trying to fool the people .. AND I AM DEEPLY SADDNED BY the above chat blogs by many persons who have written in so many FUNNY names and discussing the subject in an eccentric way. and i am worried deeply because of another issue…. that is….. if ViNAVU write critizises about muslim brothers they very soon come and appear in vinavu and tear the vinavu apart and eescape….. but this time Vinavu has stood steadily ,firmly, clearly ,honestly for muslim brothers and sisters… but where are these muslim bloggers GONE.. i dislike their dis honest way …. it is paining in the heart ….

    Posted on 03-Oct-09 at 6:46 pm | Permalink
  63. rajan

    Vrey good and very good commands

    Posted on 03-Oct-09 at 7:11 pm | Permalink
  64. NO

    அன்பான நண்பர் திரு வினவு மற்றும் அவரைவிட இனிமையான நண்பர்களே,

    என்ன சார் அங்க கடிச்சு இங்க கடிச்சு கடைசில ஒரு சினிமா படத்தை பதம் பார்த்துட்டீங்க? உங்க புரட்சி கடைசியில் இங்க வந்து நின்று போச்சு. OK OK..கமல், சினிமா, பாசிசம் இதெல்லாம் உங்களிடமிருந்து கொட்டவில்லைஎன்றால்தான் ஆச்சிரியம்! கிடக்குது கமல் எனும் பாசிச பிணம் தின்னி (உங்கள் ஸ்டைல்லுல). அத்த உடுங்க,விடயத்திற்கு வருவோம்.

    இந்த மாதிரி மக்கா target எல்லாம் உட்டுட்டு ஏன் சார் அறிஞர் அண்ணாவை பதம் பாத்துட்டீங்க? ஏன் அவரு சீனாக்காரனோ இல்லாட்டி ரசியகாரனோ இல்லேன்னு கோவமா? எல்லோரையும் இப்படி உட்டு தாக்கி கடைசில இப்போ அறிஞர் அண்ணாகிட்ட வந்திருக்கிறீர்கள்! அவரு என்ன சார் பாவம் பண்ணாரு?

    சரி உடுங்க. பாவ புண்ணியம், நல்லது கேட்டது, நேர்மை ஞாயம், இதயெல்லாம் பார்த்தா நம்ம எழுதுறோம்! ஏதோ காலையில வந்தோமா, அன்னைக்கு கணக்குக்கு, ஸ்டாலின தவிர, மாவோ தவிர, லெனின் தவிர, மற்ற சில கொடுங்கோல் சர்வதிகாரர்களை தவிர எல்லோரையும் போட்டு வாய்க்கு வந்தபடி வசை பாடித்தானே நமக்கு பழக்கம்!!! அதே நேரத்துல திருமா வளவனைப்பற்றியும் அவர் கட்சியைப்பற்றியும் கண்டபடி எழுதினீர்கள்! என்ன எழுதினீங்க, பிழைப்பு வாத…மற்றும் *&&%*^ போன்று பல பொன்னான வார்த்தைகளால் அவருக்கு அர்ச்சனை செய்தீர்கள்!

    இந்த அர்ச்சனை ஆனந்த கீதத்தில், ஒரு முக்கியமான செய்தியை பற்றி நீங்க வாயையே