வெண்மணிச் சரிதம்
அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி
கறவை மாடும் கண்திறவாத அதிகாலை
சேவல் கூவும் முன்னே
பண்ணையின் கொம்பூதும்.
மடையின் கைநீரள்ளி முகம் கழுவி
வயலுக்கு ஓடவேண்டும் கூலிவிவசாயி.
இரண்டாவது கொம்பொலிக்கு
நெஞ்சுக் கலயம் உடையும் வண்ணம்
கஞ்சிக் கலயத்துடன் ஓடவேண்டும் பெண்கள்
கழனிக்குள் இறங்கியவுடனேயே
“ஓ” வெனும் ஓசையெழுப்பி
உழைக்கத் தொடங்கியதை
நிலவுடமையாளனின் உலை மனதில்
பதிய வேண்டும் உழைக்கும் மக்கள்.
நாற்றங்கால் சேற்றுத் தண்ணீரில்
உச்சிக்கு வந்த கதிரவன் தட்டுப்படும்போதே
சோற்றுக் கலயத்தை தொட அனுமதியுண்டு.
வெறும் வயிற்றில் துடித்து விழும்
வியர்வையின் சூடு பட்டு
வயல் நண்டு துடித்தோடும்.
களைத்த விரல்களுக்கு
பழஞ்சோறு இதமாகும்.
ஓரிரு பருக்கைகளுக்கு
உதடுகள் தடுமாறும்
பட்டமிளகாயும், உப்பும்
பரிதாபப்பட்டு நீராகாரத்தில் விழுந்த சூரியனும்
தொட்டுக்கை.
சூரியனிருக்கும் வரைச் செய்யும்
“கொத்து வேலை” எப்போதாவது,
அரிக்கேன் விளக்கொளியில்
கண்ணெரியும் வேலை எப்பொழுதும்.
நீளும் வேலையின் முடிவில்
நிலவு காய்த்து விடும்…
அல்லி மலர்ந்து
குளம் ஆவியிழந்துவிடும்..
வேலை முடிந்ததும் நேரே
குடிசைக்கு போகவியலாது
பண்ணையார் வீட்டில் பல
’வெட்டிவேலை’ கூப்பிடும்
வரப்பு காயாமல் வைத்தவன் பிள்ளை
தாய்ப்பாலுக்கு ஏங்கி
உதடுகள் காய்ந்து வெடித்திடும்.
படியாள் வீட்டு அடுப்புச் சாம்பலும்
பண்ணை வயலுக்கே சொந்தம்!
கூலி விவசாயி குடிசையிற் படர்ந்த சுரைக்காயும்
பண்ணையார் அடுப்படிக்கே சொந்தம்!
இதைவிடக் கொடுமை,
பண்ணையடிமைகள் முதலிரவும்
பண்ணையார் படுக்கைக்கே சொந்தம்!
இமைகளை நிமிர்த்தி.. எதிர்த்துப் பார்த்தால்
”சவுக்கடியும்”, ”சாணிப்பாலும்” தண்டனை
இதுதான் அன்றைய நிலப்பிரபுத்துவ தஞ்சை.
———-
தஞ்சைத் தரணியெங்கும் தனிப்பெரும் கோயில்கள்…
திருத்தலப் பெருமை பேசும் தடித்தடி சாமிகள்…
எல்லையில்லா சக்தி கொண்டதாய் சொல்லப்படும்,
எந்தவொரு தெய்வமும்
பண்ணையாதிக்க பாதகத்திற்கெதிராய்
புல் ஒன்றையும் புடுங்கக் காணோம்!
விவசாயத் தொழிலாளர்
விளைவித்த உபரியில்
கோயிலும், கூத்தியாளுமாய்
சாமியும் கும்மாளமடித்தது
நிலப்பண்ணைகளோடு.
மண்டையோட்டில் பசியாறும் மகேசனுக்கே
இரவு, பகல் பாராது படியளந்தனர்
அண்டைவெட்டும் விவசாயத் தொழிலாளர்.
இந்த லட்சணத்தில்,
உலகுக்கே படியளக்கிறானாம் ஈசன்!
உண்மையில்.. அவனது உமையம்மையின்
உண்டை கட்டிக்கும்
உழைத்துக் கொட்டுபவன் கூலி விவசாயி.
கட்டிய மனைவிக்கு
சோறுபோட வக்கில்லாதவனுக்கு
கட்டிய கோயில்கள் எத்தனை… எத்தனை…
பொறிதட்டிப் போய் உழைப்பாளர் பிடுங்கிவிட்டால்
எனும் பயத்தில் கட்டிய கதைகள் எத்தனை… எத்தனை…
சிவன் சொத்து குல நாசமாம்- பல
குலங்களை அழித்தே சிவனுக்கு சொத்து!
எனும் உண்மையை விவசாய நிலம் பேசும்!
எல்லோர்க்கும் ஈசனல்ல… இவன்
பொல்லாத பண்ணைகட்கு காவல் நின்று
ஏழை விவசாயிகள் மேல்
ஏவப்பட்ட அல்சேசன்.
கடவுளின் பெயரால்,
இனாம்தார், பிரம்மதேயம் எனும் பெயரில்
ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்து
”கலம் கலமாய்”
கூலி விவசாயி குலங்களை அறுத்து
பண்ணையடிமைகள் உழைப்பை
வெண்ணையாய் நக்கின
பார்ப்பன நகங்களும், சூத்திர மடங்களும்
வெள்ளம், புயலால்
விளைச்சல் குறைந்தால்,
கூலிவிவசாயி அளக்கும்
வாரம், குத்தகை அளவு குறைந்தால்
கூலியின்றி அவர் வயிற்றிலடித்த மடங்கள்.
கோபுரத்தினின்று அவர் விழுந்து செத்த
சைவக் கொலைகள்!
இசைவான நெல்லளக்காத குற்றத்திற்காக
கசையடிகள் கொடுத்திட்ட காட்சிகளை
காட்டிநிற்கும் சோழமண்டல சிற்பங்கள்!
தஞ்சை வடபகுதி;
தருமபுரம், திருப்பனந்தாள்,
அகோபில சங்கரமடம்,
தஞ்சை தென்பகுதி;
மதுக்கூர், பாப்பன்காடு
சிக்கவலம் ஜமீன்தார்கள்
தஞ்சை நடுப்பகுதி;
வடபாதி மங்கலம், நெடும்பலம்
கோட்டூர், வலிவலம், குன்னியூர்
பூண்டி, உக்கடை, கபிஸ்தலம்
எங்கும் பண்ணையாதிக்கத்தின் கொடும் பலம்.
கபிஸ்தலமும் குன்னியூரும்
காங்கிரசுப் பண்ணைகள்.
வடபாதியும், நெடும்பலமும்
நீதிக்கட்சி பண்ணைகள்.
ஏழை கூலிவிவசாயிகள் சுயமரியாதைக்காக
எந்தத் ’திராவிடமும்’ பேரியக்கம் கண்டாரில்லை,
தாழ்த்தப்பட்ட விவசாய வர்க்கத்திற்காக
’தலித் தம்பிரான்களும்’ ஓரியக்கம் விண்டதில்லை.
எதிர்த்துக் கேட்பாரில்லை…
’பார்ப்பன, சூத்திரப்’ பண்ணையம்
என ஏங்கிக் கிடந்த கழனியெங்கும்
செங்கொடி இயக்கம் துளிர்த்தது!
சேற்றினில் நடுங்கிய கைகளில் ஒரு..
சிவப்புத் திமிர் முளைத்தது,
”அடித்தால் திருப்பி அடி!
ஏண்டி என்றால்.. ஏண்டா எனக் கேள்!
சாதி சொன்னால் மோதி நட!
உழுபவர்க்கே நிலம் சொந்தம்
உழைப்பவர்க்கே அதிகாரம்!”
எனக் கம்யூனிச இயக்கம்
கற்றுக் கொடுத்தது, களத்தில் விளைந்தது.
சுகந்தை என்றும், அமிஞ்சி என்றும்
பள்ளு என்றும், பறை என்றும்
பழிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை
அதே ஊரில் தோழர் என்று நிமிர வைத்தது.
அகந்தை கொண்ட ஆதிக்க சாதியுணர்வை
அடியறுத்து
விவசாய சங்கமாய் ஒன்றிணைத்தது.
தென்பரை சேர்ந்தது
விதைநெல்லாய் கம்யூனிசம்
தஞ்சைக் கழனியெங்கும்
நடவு செய்தார் சீனிவாசராவ்.
விடுமோ பண்ணைகள்,
அவர் தலைக்கு விலை வைத்தனர்.
அவரோ.. தலைமறைவான போதும்
ஊருக்கு பல தலைகளை உருவாக்கிக் கொண்டே போனார்!
நெற்பயிற் காத்தது
அவர் ரகசிய பயணம்
வரப்பின் நெருஞ்சியும் இளகிடும்
அவர் ராத்திரி கால்தடம்
நீளும் வர்க்கப் போராட்டத்திற்கு
நிலவும் ஒத்துழைத்து
அவரை ஆற்றுப்படுத்திய
அமாவாசைக் கூட்டங்கள்.
களப்பால் குப்பு, தனுஷ்கோடி,
மணலூர் மணியம்மை.. இன்னும்
பெயர்கள் பலவாய் காய்த்தன செந்நெல்.
சங்கையே நெறித்த போதும்
விவசாய சங்கமே உயிரென
காவிரிப்படுகை கனன்று முழங்கின.
வேறுவழியின்றி…
கூலியுயர்வு, கொத்தடிமைத் தடை,
வாடா, போடி, சவுக்கடி, சாணிப்பால் நிறுத்தம்
என பண்ணைகள் கொஞ்சம் பதுங்கின.
சோழநாடு சோறுடைத்து
என்பதென்ன சிறப்பு!
ஆங்கே… கம்யூனிசம்
நிலப்பண்ணைகள் அதிகாரமுடைத்தது
உழைக்கும் வர்க்கத்தின் உயிர்ப்பு!
நேற்று வரை…
தன் நிழல் திரும்பிப் பார்க்கவே
தயங்கி நடந்த சேரிகள்…
பண்ணையை நிமிர்ந்து கேள்வி கேட்பதும்
பணிதல் மறந்து
சுயமரியாதையாய் வாழ்ந்து பார்ப்பதும்…
கூலி உயர்வை விட,
கொதிப்பேறியது ஆண்டைகளுக்கு.
தாழ்த்தப்பட்டவர்
என்பதற்காய் மட்டுமல்ல,
அரைலிட்டர் கூலி
அதிகம் கேட்டாரென்பதற்காய் அல்ல
தம்மை எதிர்க்கும் அரசியல் சக்தியாய் ஆனது கண்டு,
சாதியால் தகர்க்க முடியாத
செங்கொடி அமைப்பாய்..
உழைக்கும் மக்கள் எழுந்தது கண்டு
கலக்கமடைந்தனர் நிலப்பிரபுக்கள்.
வேரோடிய கம்யூனிசத்தின்
போராட்ட அழகோடு
பூத்துக் கிடந்தது வெண்மணி
தீராத வன்மத்துடன்
அதைத் தீக்கிரையாக்க
தருணம் பார்த்தன பண்ணைகள்.
தோதாக அதன் கால்களுக்கு
செருப்பாய் கிடந்தன
தேசிய, திராவிடக் கட்சிகள்..
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு
திசம்பர் இருபத்தைந்தாம் நாள் இரவு
அய்யோ!
ஆம்பல் பூத்த எங்கள் கீழவெண்மணி
சாம்பல் பூத்தது.
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
எனும் பண்ணைமிருகம் ஊரில் நுழைந்தது.
முதலில்.. அவன் கண்ணை உறுத்திய
செங்கொடியை வெட்டிச் சாய்த்தான்,
அவன் வர்க்கமடக்கிய
விவசாய சங்கத்தை திட்டித் தீர்த்தான்
”ஊரையே கொளுத்துங்கடா.. வெட்டிச்சாயுங்கடா”…
தீ நாக்கை திசைகளில் சுழட்டினான்.
அவன் வெறிப்பார்வைதனைப் பார்த்து
தெருநாய்கள் குரைப்பற்று ஓடியது.
கூடுகள் அடைந்த பறவைகளோ
குஞ்சுகள் கதற, திசை தேடியது
வேலியோரத்து திசம்பூர் பூ
வெந்து பிணமாய் நாறியது.
அய்யய்யோ… ஏனையில் கிடந்த பிள்ளையின் குரல்
எரிந்து, கருகி அடங்கியது.
தப்பியோட இராமய்யன் குடிசையில்
தஞ்சமடைந்த நாற்பத்தி நான்கு பேரை
வெளியே தாழிட்டு குடிசையோடு கொளுத்தினான்
கோபால கிருஷ்ண நாயுடு.
நெருப்புக்கும் இரக்கம் வந்து
நின்று விடுமோ எனப் பயந்து
மேலும், மேலும் எண்ணையை ஊற்றி
எரிதழல் மூட்டினான்.
எரியும் நெருப்பையும் தாண்டித்
தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என
ஒரு தாய் வெளியில் தூக்கி எறிந்தாள் குழந்தையை.
இதயமிழந்த இரிஞ்சூர் கும்பலோ
தப்பியக் குழந்தையை துண்டாய் வெட்டி
எரியும் குடிசையில் எறிந்து மகிழ்ந்தது.
வர்க்கப் போருக்கு
இனி வாரிசே இல்லையென
திமிரில் சிரித்தான் இரிஞ்சூர் நாயுடு
திரும்பச் சிரித்தது உயர்நீதி!
காரோட்டும் கவுரமான கைகள்
இப்படியொரு காரியத்தை செய்யாதென
விடுதலை செய்து
கொடூரன் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு
ஆரத்தி எடுத்தது நீதிமன்றம்.
கூலி உயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டுச் செத்தான்… என
வசனம் பேசிய தி.மு.க. அரசும்
வழக்கை அத்தோடு புதைத்தான்.
இந்த அநியாயத்தை
எந்தத் தெய்வமும் கேட்கவில்லை….
கடைசியில்..
இருஞ்சூர் நாயுடு விதிவலியை
நக்சல்பாரியே முடித்தான்.
நெருப்பினில் வேகாத
வெண்மணிக் கனவை…
புதைத்திட வியலாத வர்க்கத்தீயை
வளர்ப்பவர்க்கு மட்டுமே
வெண்மணி சொந்தம்
வெண்மணிச் சமர்க்களத்தில்
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு
ஏன் அமர்க்களம்?
போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு
வெண்மணி பக்கம் வீரவணக்கம்.
போராடும் விவசாயிகளுக்கு
நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு.
மிட்டா,மிராசை எதிர்த்தவர்களுக்கு
வெண்மணியில் மலர் வளையம்
டாட்டா கம்பெனியை எதிர்ப்பவர்களுக்கு
மேற்கு வங்கத்தில் சமாதி.
போயசு பண்ணைக்கு
புளுக்கை வேலை செய்யும் இடதும்,வலதும்
இருஞ்சூர் பண்ணையை எதிர்த்துப் போராடிய
தியாகிகள் பெருமையைத் தீண்டுவதா?
போலிக் கம்யூனிஸ்டுகளின் பாழும் முகத்தில்
காறித் துப்புது செங்கொடி!
இறந்தவர் சாதியை
சொந்தம் கொண்டாடும் பல இயக்கங்கள்
ஆனால் …இறந்தவர் லட்சியம்
சொந்தம் கொண்டாட நக்சல்பாரிகள்!
வெண்மணித் தீ அடங்கவில்லை இன்னும்
ஊரையே கொளுத்துகிறது உலகமயம்…
ஊரைவிட்டுத் துரத்துகிறது விவசாயம்..
தப்பித்து தஞ்சமடையும் குடிசைகளை
எரிக்கிறது நகரமயம்…
கைத்தொழில் ஒடித்து, சிறுகடை பிடுங்கி
கொத்தடிமையாக்கும் தனியார் மயம்…
நகரங்கள் தேடி.. நாடுகள் ஓடி
இனியும் தப்பிப்பிழைக்க வழியின்றி
விவசாயிகளை எரிக்கிறது தாராளமயம்..
இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
இன்னும் சாகவில்லை..
இருங்காட்டுக் கோட்டையில்
ஹூண்டாயாய் சிரிக்கிறான்..
ஆயிரம் வேலிகள் வளைத்து
டாட்டாவாய் நெறிக்கிறான்..
இனாம்தார் அம்பானியாய்
எல்லா பக்கமும் அறுக்கிறான்..
கோக், பெப்சியாய்
நம் குளம், ஆறுகள் குடிக்கிறான்..
குடிசையில் படர்ந்த பூசணி அல்ல..
அதன் விதையும் எனக்குச் சொந்தமென
மான்சாண்டோவாக பறிக்குறான்..
இனி தப்பிக்க வழியில்லை..
என்ன செய்யப் போகிறீர்கள்?
கேட்கிறார்கள் வெண்மணித் தியாகிகள்
வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகளே
பதில் சொல்லுங்கள்!
– துரை.சண்முகம்
தொடர்புடைய பதிவுகள்
- வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!
- நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!
- பஞ்சாப் : தாழ்த்தப்பட்டோரின் கலகம்!!
- திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு
- லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!
- போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
மனத்தின் சினம் நுணுக்கமாய்த் தொனிக்கும் வரிகள் ..எழுதுவதைப்பாராட்டிவிட்டு கைகள் பிசைந்துகொண்டே இருக்கும்..
வரலாற்றை சொல்லும் கவிதைவரலாற்றை உருவாக்க சொல்லும் கவிதை
போராடி உயிர் நீத்த தோழர்களுக்கு வீரவணக்கம்…
சலனமில்லா குளம் கல்லெறிந்தவுடன் சற்று சலனமடைவதுபோல்,கவிதையைப் படிக்கும்பொழுது சற்று கலகமடையும் மனம் முடித்தவுடன் குற்றவுணர்வில் மீண்டும் மவுனமாகிறது.
நாம் ஏன் இன்னும் மவுனமாகவே இருக்கின்றோம். “பதில் சொல்லுங்கள்” என்பதற்கு நம் பதில் மவுனம்தானோ. இன்னும் எவ்வளவு குருதிகள் சிந்த வேண்டும் நம் மவுனம் கலைய. ஒருவேளை நாமெல்லாம் முனிவர்களின் வாரிசுகளோ! வார்த்தைகளால் பாராட்ட எழுதப்பட்டல்ல கவிதையல்ல இது, நம்மை போராட அழைக்க, நம் மவுனத்தைக் கலைய எழுதப்பட்ட கவிதை.
ெவண்மணியின் வெண்சினத்தை
அரசியல் அரிதாரத்தில்
அழுத்தி அவலமாக்கி
வயிறு வளர்க்கும் வெட்டியான்களை
அம்பலப்படுத்தியது உங்கள் கவிதை….
எரிந்து நாங்கள் கரிக்கட்டைகள் ஆகவில்லை,
வர்க்கப் போராட்டத்தில் வயிரமாகக் காத்திருக்கும் கரிக்கட்டைகள்!
கரிக்கட்டைகள் எங்களை தீட்ட உங்கள் கவிதை ஆயுதமானது.
வெண்மணிக்கு வீர வணக்கம் .. இந்த போலி புரட்சியாளர்கள் இடம் இருந்து செங்கொடியை பாதுகாக்க முடியவில்லை . குறைந்தபட்சம் உன் தியாகத்தை காப்பற்ற பாடுபடுவோம்… சி பி எம் மீது குறை சொல்ல வில்லை என்றால் தன வர்க்க போர் முழுமை அடையாது இந்த பன்னாட்டு கைகூலிகளுக்கு… இந்த நிமிடம் வரை எம் மக்களுக்கு நல்லது என்று செய்யாத இந்த போஸ்டர் புரட்சி கும்பல் , ஆடு நனையுதே என்று அழும் ஓநாய் போல , உன் தினத்தை கொச்சை படுத்தும் விதமாக கவிதை என்ற பெயரால் தனது குறுங்குழுவாத செயலை நியாயப் படுத்தி உள்ளது … இன்று காலையில் கூட என் தோழன் வங்கத்தில் படுகொலை செய்யப்படுகிறான், அவன் என்ன முதாலாலியா .. கொள்கை ரீதியாக போரட்ட வக்கற்ற இவர்கள் தினம் தனம் என் தோழனை கொன்றுவருகிறார்கள்..இவர்கள் செய்வதும், இரிஞ்சிய்ர் மிருகம் செய்ததற்கும் வித்தியாசம் என்ன? அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழியற்ற என் தோழர்களை கொன்ற இப்பவிகளை வரலாறு நிச்சயம் மன்னிக்காது .. வாழ்க வெண்மணி தியாகிகள், வாழ்க தோழர் சீனிவாச ராவ் …
புரட்சிவாதி என்ற முகமுடியுடன் வந்திருக்கும் ரமேஷ் பாபுவே !யார் பன்னாட்டு கை கூலி? மேற்கு வங்கத்தில் விவசாயிகளின் ரத்தத்தில்சிறப்பு பொருளாதார மன்றம் எழுப்ப முயன்ற சிபீஎம் கை கூலியா? இல்லைகோக் எதிர்ப்பு, ரிலையன்ஸ் எதிர்ப்பு போராட்டங்களும்,பரப்புரைகளும் நடத்திய உண்மையான கம்யூனிஸ்டுகளான மகஇக கைகூலியா?
அம்பானிக்கு ஆள் பிடித்து போராட்டங்களை காட்டி குடுப்பவனை உமது தோழன் என்கிறாய், உங்களை போன்ற போலிகள் பாட்டாளிகளுக்கு தோழனாக முடியாது , அம்பானி வீட்டு நாய் எப்படி பாட்டாளியின் தோழனாக முடியும்
போலி சீபிஎம் கொலைகார நாய்களே! வங்கத்தில் நீங்கள் நடத்திய படுகொலையின் இரத்தவாடை நாடு முழுவதும் நாறுகிறது.
உங்கள் கம்யூனிஸ்டு முகமுடி கிழிந்து ரொம்ப நாள் ஆகிறது.
தேவன் ஜெயந்தியில் போய் மண்டியிட்டு வணங்குவது, ஜெயலலிதாவீட்டில் எச்சிலை பொறுக்குவது, காருணாநிதி காலை வருடி கொண்டு நாக்கை தொங்க போட்டு கொண்டு நிற்பது, த்தூ… நீங்களெல்லாம் கம்யூனுஸ்டு,
செங்கொடி தூக்கி போட்டு விட்டு போயி ஆர்,எஸ்எஸ் ல சேர்ந்து பொறுக்கி திங்கற வழிய பாருங்கய்யா போலி கசுமாலங்களே !
மிகச்சிறப்பான கவிதை
நிலபிரபுத்துவம்,மறுகாலனியம்
பார்ப்பனீயத்தோடு இந்த போலிகளும்
கொளுத்தப்படுவார்கள்
அப்போது
அவர்களின் கதறல்களையும்
சேர்த்துப்புதைப்போம்.
ஊரே காரித்துப்பினாலும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சேப்புதுண்டால மூஞ்ச மற்சிகினு வந்திடுறாங்களே சிபிஎம் சகாக்கள்?? ஆனா ஒன்னு இதே மாதிரி ஒரு விவசாய எழுச்சிய நீங்க நக்சல்பாரில நசுக்கப்போயிதானே நீங்க அம்பலப்பட்டு போனீங்க.. அதுக்கு உங்களுக்கு வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் சொல்லும் அதே நேரத்தில் நன்றி சொல்லியே ஆகனும்.
வெண்மணி சரிதம் எழுச்சியோடு வந்திருக்கிறது.
“செங்கொடியை தூக்கியெறியுங்கள். நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இணைந்து, மஞ்சள் கொடியை ஏற்றுங்கள். உங்களுக்கு வேண்டிய ‘எல்லாமும்” தருகிறோம்” என ஆசை வார்த்தைகளை நிலபிரபுக்கள் சொன்னார்கள்.
‘உயிர் போனாலும், செங்கொடியை விட மாட்டோம்” என்றார்கள் மக்கள்.
கவிஞர் சொல்கிற படி… ஆண்டைகளுக்கு சேவை செய்கிற சிபிஎம்-ஆ வாரிசுகள். வாய்ப்பேயில்லை.
அவர்களின் வாரிசுகள் நக்சல்பாரிகள் தான்.
68 வாக்கில் கூலி ஏழை விவசாயிகளின் வாழ்க்கை நிலைமை – உழைப்பின் துயரம் – பண்ணையார்களின் கொடிய அடக்குமுறை – இவையெல்லாம் ஒரு நாவலைப்போல விரிகிறது.
கடவுளர்க்கே படியளக்கும் விவசாயிகளை பார்ப்பனர்களும் பண்ணையார்களும் எப்படி ஒட்டச் சுரண்டி வாழ்ந்தார்கள் என்பதை படம்பிடத்துக் காட்டும்போது உழைக்கும் மக்களின் துயர வரலாறு தெரிகிறது.
வெண்மணியின் பச்சை நெருப்பில் குளிர்காயும் போலிக் கம்யூனிஸ்டுகளையும், இறந்தவ்ர்கள் தனது சாதிக்காரர்கள் என்பதற்காக சொந்தம் கொண்டாடி சாதியச் சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடும் தாழ்த்தப்பட்ட சாதியத் தலைவர்களை அம்பலப்படுத்தும்போது – வர்க்க அரசியல் மிளிர்கிறது.
இருஞ்சூர் பண்ணை இறந்ததாய் நினைக்க வேண்டாம் – பன்னாட்டு நிறுவனங்களையும் நாம் விரட்டியடிக்க வேண்டும் என்று ஒப்பிட்டுக் கூறும்போது அரசியல் கட்டுரையாக நமை அணி திரட்டுகிறது.
மொத்தத்தில், வெண்மணித் தீ…. ஆழ்ந்த உறக்கத்தை உரசிப் பற்ற வைக்கும் ஒரு நல்ல கவிதை.
### ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு
திசம்பர் இருபத்தைந்தாம் நாள் இரவு
அய்யோ ### இந்த வரிகளை தீண்டும்போது கண்ணீர் துளிர்த்ததை தவிர்க்க முடியவில்லை. ஒரு புதரை சீவித்தள்ளுவது போல் சீவித்தள்ளிவிடவேண்டும் என்ற உணர்வு அழுத்தமாய் மேலோங்குகிறது. நாடே வெண்மணியாய் மாற்றப்படும்முன் தெருவில்இறங்கு என்று அந்த வர்க்கப்போரின் தியாகிகள் நம்மை பணிப்பது போல் உணர்கிறேன்! வாழ்த்துக்கள் தோழர்.துரை.சண்முகம்!
வெண்மணியின் நெருப்புநம்முள் கனலை மூட்டட்டும்இன்னும் திறக்கப்படாத கதவுகளைதேடித்தேடி தட்டட்டும்.
செங்கொடி
[…] தொடர்புடைய பதிவுகள் 1.வெண்மணிச் சரிதம் […]
நீண்ட நாட்களுக்குப்பிறகு படிக்கும்போதும் படித்தபின்னும் மனதில் ஒரு சுமையை ஏற்றிய உரைவீச்சு, இன்றதிகாலை இதை வாசித்ததிலிருந்து எனது உலகம் மறுபடியும் சீராக இல்லை.. அமைதியாக போய்க்கொண்டிருந்த எனது வாழ்க்கையை குழப்பிவிட்ட பாவம் கவிஞரை சும்மாவிடாது ;-(
கீழவெண்மணியின் கொலையாளிகளை அன்றைய தி.மு.க. அரசு காப்பாற்றியது.
அரியான பெண் ருசிகா வழக்கில் தற்கொலைக்குக் காறணமான காவல்துறை அதிகாரிக்கு முறையான தண்டனை பெற்றுத்தர அனைத்து ஆங்கில தொலைக்காட்சிகளும் முயற்சிக்கிறது.
http://devapriyaji.wordpress.com/2009/12/25/ruchikaa-vs-dinakaran/
ஆனால் தினகரன் அலுவலகத்தில் கமெரா முன் தாக்கிய குற்றவாளிகள் அனைவரும் விடுதலை.
தா.கிருட்டிணன் கொலை வழக்கும் அப்படியே.
தமிழ்நாட்டில் ஒரு நல்ல மீடியாவே கிடையாதா.
[…] வெண்மணிச் சரிதம் […]
[…] மேலும் 0 கருத்து | டிசம்பர் 25th, 2009 at 8:17 pm under திரட்டி […]
தீ பரவட்டும்
சாகும் வரம் 44 பேருக்கு தந்தான்
சாகா வரம் தனக்கு வாழ்நாள் என்றான்
நினைவு நாள் தனக்கு வரும் அது
தன்னால் செத்த அதே கொலை நாளாகும்
கொடுத்தவன் நாங்கள் கும்பிட்ட சாமி
உன் குல தெய்வமும் தான்
மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி!
http://vrinternationalists.wordpress.com/2009/12/25/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/
வரலாற்றை சொல்லும் கவிதைவரலாற்றை உருவாக்க சொல்லும் கவிதை
போராடி உயிர் நீத்த தோழர்களுக்கு வீரவணக்கம்…
இன்று டிச 26
தோழர் மவோ 166-வது பிறந்தநாள் விழா சிறப்பு படம்
தோழர்களின் பார்வைக்கு
http://vitudhalai.files.wordpress.com/2009/12/mao116.jpg
இன்று டிச 26தோழர் மவோ 116-வது பிறந்தநாள் விழா சிறப்பு படம்தோழர்களின் பார்வைக்கு http://vitudhalai.files.wordpress.com/2009/12/mao116.jpg
கீழ்வெண்மணி சம்பவத்தில் கருகிச் செத்தோரின் கோரப் பட்டியல்:
பெண்கள் 19 (12 பேர் திருமணமானவர்கள், 7 பேர் கல்யாணமாகாத இளம் பெண்கள்); பச்சிளங் குழந்தைகள் 20 (7 ஆண் குழந்தைகள், 7 பெண் குழந்தைகள், ஆணா? பெண்ணா? என்று அடையாளம் காண முடியாத குழந்தைகள் 6); கிழவர்கள் 3; துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11.
கைக்குழந்தையை மார்போடு அணைத்துப் பால் கொடுக்கும் பொழுதே தாய் கருகிவிட்டாள் – சாவிலும் தாய்மையை மறக்க முடியவில்லை – குழந்தையை நழுவவிடவில்லை – தாயின் மார்பில் வாய்வைத்தே ஒட்டிக் கருகிக் கிடந்த அந்த கோரக் காட்சியைக் கண்டு கதறாதவர் யாரும் இருந்திருக்க முடியாது.
ஆழமானதும், உணர்வெழுச்சி மிக்கதுமான கவிதை… சினத்தின் வழியே சொற்கள் அழகும், வீர்யமும் பெற்று ஒளிர்கின்றன… “சாமக் கோழி கூவும் நேரத்துல நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம்” பாடலை நினைவில் எழுப்புகிறது கவிதையின் துவக்கத்தில் எழும்பி நிற்கும் படிமங்கள்…ஆனால் கவிதையின் தொடர்ச்சியில் படிமங்கள் குறைந்தும், மறைந்தும் விட்டன… “எல்லோர்க்கும் ஈசனல்ல… இவன் பொல்லாத பண்ணைகட்கு காவல் நின்று ஏழை விவசாயிகள் மேல் ஏவப்பட்ட அல்சேசன்.” என்ற வரிகள், தேவையற்ற வரிகளாகத் தோன்றுகின்றன. மொத்தத்தில், செறிவானதும், தொடர்ந்து நமது பிரச்சாரங்களில் பயன்படத்தக்கதுமான சிறப்பான கவிதை. தோழருக்கு நன்றி!
தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதை நெஞ்சை உருக வைத்தது.வெண்மணி தியாகிகளை நினைவில் ஏந்தி பண்ணை அடிமை முறைக்கு எதிராக போராடுவோம்.உழுபவனுக்கே நிலம் சொந்தம்!உழைபவருக்கே அதிகாரம்!
படைப்புகளை எப்படி அனுப்புவது ?
selva, உங்கள் படைப்புகளை vinavu@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள், மேலும் விவரங்களுக்கு https://www.vinavu.com/2009/08/22/poems-intro/
all naxal bastards like vinavu who exploit the poor and downtrodden should be castrated and exiled to go and live in the land of mao tht is china..It will bring prosperity to yhe poor of india.
//கோக், பெப்சியாய்
நம் குளம், ஆறுகள் குடிக்கிறான்..
குடிசையில் படர்ந்த பூசணி அல்ல..
அதன் விதையும் எனக்குச் சொந்தமென
மான்சாண்டோவாக பறிக்குறான்..
இனி தப்பிக்க வழியில்லை..
என்ன செய்யப் போகிறீர்கள்?//
கேள்வி
எதிரே நிற்கிறது பதில் தான் இல்லை
மிக சிறப்பான கவிதை தோழர்
இதுவும் கடந்து போகும் என்ட்ரு கடந்து செல்லும் என் இனமான சமூகமே எதிர் காலம் உன்னை கேழ்வியால் வாட்டும் என்பதை மரந்து விடாதே…
நெஞ்சருக்கும் கவிதை
நினைவுகளாய் உயிரை உலுக்கும்
வெஞ்சமர் புரிய இத்தருணம் வேட்கை பீறிடுகிறது.