Skip to content

ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

vote-012“காக்கிச்சட்டை கிரிமினல்கள்”என நாம் போலீசாரைக் குற்றம் சுமத்தும்பொழுது, அது பற்றி முகம் சுளிப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் (மறைந்து போன) ருச்சிகா கிர்ஹோத்ரா என்ற சிறுமியின் கதையை அறிந்துகொள்ள வேண்டும்.

ருச்சிகா கிர்ஹோத்ரா 1990-இல் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகர் அருகிலுள்ள பஞ்சகுலா பகுதியில் வசித்து வந்தார்.  அச்சிறுமிக்கு, எதிர்காலத்தில் தானொரு மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வர வேண்டும் என்ற கனவு இருந்ததோடு, அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். அச்சமயத்தில்,எஸ்.பி.எஸ்.ரத்தோர் அரியானா மாநிலக் கூடுதல் போலீசு தலைமை இயக்குநராகவும், அரியானா மாநில டென்னிஸ் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தான்.  “ருச்சிகாவைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்கிக் காட்டுவதாக” அச்சிறுமியின் பெற்றோர்களிடம் கூறிவந்த ரத்தோர், இது தொடர்பாகத் தன்னை வந்து சந்திக்க ருச்சிகாவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டான்.

இதன்படி, ருச்சிகா தனது தோழி ஆராதனாவை அழைத்துக்கொண்டு, ஆகஸ்டு 12, 1990 அன்று ரத்தோரைச் சந்திப்பதற்காக, அவனது அலுவலகத்திற்குச் சென்றார். ஆராதனாவை ஏதோவொரு சாக்கு சொல்லி வெளியே அனுப்பிய ரத்தோர், அதன்பின் சிறுமி ருச்சிகாவிடம் தனது வக்கிரத்தைக் காட்டத் தொடங்கினான்.  ஆராதனா போன வேகத்திலேயே திரும்பிவிட்டதால், ரத்தோர் தனது வக்கிர விளையாட்டை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது.  ரத்தோரின் வக்கிரப் புத்தியைப் புரிந்து கொண்ட ருச்சிகா, தனது தோழியோடு தப்பித்து வெளியே ஓடிவிட்டார்.

ருச்சிகா, சம்பவம் நடந்து இரண்டொரு நாட்கள் கழித்து, ரத்தோரின் பாலியல் தாக்குதலைத் தனது பெற்றோரிடமும், தனது தோழி ஆராதனாவின் பெற்றோரிடம் கூறினார்.  அவர்கள் இது குறித்து மாநில அரசிற்கும், போலீசு உயர்அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர்.  அப்பொழுது அரியானா மாநிலப் போலீசு தலைமை இயக்குநராக இருந்த ஆர்.ஆர்.சிங் இப்புகார் குறித்து விசாரணை நடத்தி, அடுத்த மாதமே அது குறித்த அறிக்கையை மாநில அரசிடம் அளித்தார்.

அவ்வறிக்கை ருச்சிகாவின் புகாரை உண்மையென உறுதிப்படுத்தியிருந்த போதும், அரியானா மாநில அரசு அவ்வறிக்கையின்படி ரத்தோரின் மீது நடவடிக்கை எடுக்காததோடு, அறிக்கையினை வெளியிடவும் மறுத்துவிட்டது.  அதேசமயம், ரத்தோர் தனது வரம்பற்ற போலீசு அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ருச்சிகாவின் குடும்பத்தை வேட்டையாடத் தொடங்கினான்.

ருச்சிகா ‘ஒழுங்கீனம்’ காரணமாகப் பள்ளியில் இருந்து வெறியேற்றப்பட்டார்.  அவரது சகோதரன் ஆஷு கிர்ஹோத்ரா மீது 11 திருட்டு வழக்குகள் போடப்பட்டன.  ரத்தோர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெறுமாறு ருச்சிகா, ஆராதனாவின் பெற்றோர்கள் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராலும், ரத்தோர் ஏவிவிட்ட குண்டர்களாலும் மிரட்டப்பட்டனர்.  ஆஷு கிர்ஹோத்ரா சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டார்.  இந்தத் துன்புறுத்தல்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலையும் பொறுத்துக் கொள்ள முடியாத பதி னான்கே வயதான சிறுமி ருச்சிகா 1993, டிசம்பரில்  பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.  ருச்சிகாவின் பெற்றோர் போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, சண்டிகரை விட்டுவெளியேறி தலைமறைவாக வாழத் தொடங்கினர்.

அதேபொழுதில் காக்கிச்சட்டை கிரிமினல் ரத்தோருக்கு மாநிலப் போலீசு தலைமை இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  ஆராதனாவின் பெற்றோர் ஆனந்த் பிரகாஷும் மாது பிரகாஷும் போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரித் தொடர்ந்து போராடினர்.  அரியானா மாநில உயர்நீதி மன்றமும், அதன்பின் உச்சநீதி மன்றமும் இப்புகாரில் தலையிட்ட பிறகுதான், 1999 ஆம் ஆண்டு டிசம்பரில் ரத்தோர் மீதான புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோடு, வழக்கு விசாரணையும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.  அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 21, 2009 அன்றுதான் ரத்தோருக்கு ஆறு மாதக் கடுங்காவல் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  இதற்குள் ரத்தோர் பணியிலிருந்து கௌரவமாக ஓய்வு பெற்றுக் கொண்டு போய்விட்டார்.

சட்டப்படி பார்த்தால், ரத்தோரின் மீது சுமத்தபட்டுள்ள குற்றச்சாட்டிற்கு இரண்டு ஆண்டுகள்வரை தண்டனை   அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், ரத்தோரின் வயோதிகத்தைக் காரணமாகக் காட்டி, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படாமல் கருணை காட்டப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி, ரத்தோர் மீது சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகள் – ருச்சிகாவின் பெற்றோரை மிரட்டியது, ஆஷு கிர்ஹோத்ரா மீது பொய் வழக்கு போட்டது, ருச்சிகாவைத் தற்கொலை செய்யுமாறு தூண்டியது – அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.  நீதிமன்றம் தனது சாயம் வெளுத்துப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பேருக்கு தண்டனை அளித்திருக்கிறது.  ரத்தோர் பத்தொன்பது ஆண்டுகளாக தண்டிக்கப்படாமல் அரசின் பாதுகாப்போடு சுற்றிவந்தது மட்டுமல்ல, இந்தப் பஞ்சு மிட்டாய்த் தீர்ப்பும் அருவெறுக்கத்தக்கதுதான்!

-புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

Print

12 Comments

  1. yogan

    ரத்தம் கொதிக்கிறது .அயோக்கிய ராஸ்கல் அவன் .

    Posted on 10-Feb-10 at 10:38 am | Permalink
  2. puli

    அந்த நாய நேற்று ஒரு தோழர் கத்தியால குத்துனத பார்த்து மகிழ்ந்தேன்.ஆனா நெஞ்சில குத்தாம மூஞ்சில குத்திட்டாரு அதான் வருத்தம்

    Posted on 10-Feb-10 at 12:39 pm | Permalink
  3. senthil

    //அந்த நாய நேற்று ஒரு தோழர் கத்தியால குத்துனத பார்த்து மகிழ்ந்தேன்.ஆனா நெஞ்சில குத்தாம மூஞ்சில குத்திட்டாரு அதான் வருத்தம்//

    மன்னிக்கவும் நண்பரே! அவனை குத்த வேண்டிய இடம் நெஞ்சு இல்ல

    Posted on 10-Feb-10 at 2:05 pm | Permalink
  4. அந்த …. பையன் மட்டும் என்னெதிரில் வந்தான் செத்தான். அவன எல்லாம் விட்டு வச்சிருக்கிற நம்ம நாட்டு சட்டத்த நான் என்னன்னு சொல்றது.

    Posted on 10-Feb-10 at 3:23 pm | Permalink
  5. routhirampalagu

    அவன் நம்மை எல்லாம் பார்த்து sirippathu porukkaamal thaan vaayil kuthinaar polum…

    Posted on 10-Feb-10 at 3:45 pm | Permalink
  6. இவன்

    அதெப்படி அவன் கத்தியால் குத்தலாம்?இது சனநாயக நாடு..யார் வேண்டுமானாலும் எதுவும் செய்யலாம்.ஆனா; அதிகாரத்தில் இருக்க வேண்டும்.இந்த இளைஞ்சன் மற்றும் பசி(அதான் ப சிதம்பரம்)இன் மேல் செருப்பெரிந்தவன் ஆகியோர் இந்த சன நாயக நாட்டிற்கு இழுக்கு.ஆந்திர ஆளுநர் இந்த வயதிலும் புகுந்து விளையாடினாலும் சன நாயகம் அவரை காப்பாற்றி விட்டது.அதே போல் இந்த கேடு கேட்டரதோர் தப்பித்து விடுவது உறுதி.அட எதுக்குபா கத்தி ?துப்பாக்கி எங்கே?

    Posted on 10-Feb-10 at 7:58 pm | Permalink
  7. நண்பர்களே,

    ஒரு ரத்தோர் மட்டுமல்ல, நாடு முழுவதும் காவல் துறையில் ரத்தோர்கள் நிரம்பி வழிகிறார்கள். நெஞ்சிலோ அல்லது வேறெங்கோ குத்திவிடுவது முக்கியமானதல்ல. இவைகளுக்கு எதிராக நாம் என்ன செய்யவேண்டும்? என்று சிந்திப்பதே முக்கியமானது.

    செங்கொடி.

    Posted on 10-Feb-10 at 8:02 pm | Permalink
  8. communist

    நல்ல ஜனநாயகம்… நல்ல அரசாங்கம்… ???????????????

    Posted on 11-Feb-10 at 7:51 pm | Permalink
  9. போலீஸ் நாய்களை மக்களிடத்தில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தனும்
    இந்த அரசு இயந்திரம் அதிகாரவர்க்கம் எந்த அளவிற்கு நாறி போய் உள்ளது என்பதை உணர வைத்து “மக்களே மக்களை அளுவது” என்ற உண்மையான ஜனநாயத்தை புரிய வைக்க வேண்டும்.

    இவர்கள் நமக்கு மேலானவர்கள் இல்லை நமக்கு சேவகம் செய்ய வேண்டியவர்கள் என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

    பெருபாண்மையான‌ மக்கள் இந்த கொடுமைகளை எதிர்த்து போராடும் பொழுது தான் மாற்றம் வரும்.

    பெண்கள் இப்பொழுது வள்ர்ந்து விட்டார்கள் எல்லா துறையிலும் அவங்கதான் என்று புலம்பும் ஆண்களிடம் “ருச்சிகா கிர்ஹோத்ரா”வை பற்றிய இந்த கட்டுரையை படிக்க தரனும்.

    Posted on 11-Feb-10 at 8:14 pm | Permalink
  10. nogod7

    இவருக்கு அவரின் நண்பர்கள்.உறவினர்களிடம் இருந்து ஒரு எதிர்ப்பும் வரவில்லை பார்த்திர்களா.அப்போ அவர்களும்
    இதற்க்கு உடன்பாடுதான் போல் உள்ளது?

    Posted on 14-Feb-10 at 6:42 pm | Permalink
  11. தன் பெண் வயது உள்ள ஒரு பெண்ணை பாலியலுக்கு அழைத்தது தன் பெண்ணையே அழைத்ததுக்கு தான் சமம் இது தான் போலீஸ் புத்தி காவல் துறை உங்கள் நண்பன் …..நாய

    Posted on 11-Mar-10 at 6:22 pm | Permalink
  12. jani

    anth naya nado rodeil vithu suitu kola vandum

    Posted on 12-Mar-10 at 2:16 am | Permalink

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!