Skip to content

சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!

vote-012நடிகர் ஜெயராம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறிய தடித்த தமிழச்சி குறித்த நகைச்சுவை தரமானது அல்ல, சற்று ஆபாசமானதுதான். பொதுப்புத்தியில் இத்தகைய நகைச்சுவை, சாதாரண மக்களை கேலிசெய்யும் பார்வை ஊடுறுவியிருக்கும் போது ஜெயராமை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்? ஒருவேளை ஜெயராம் தமிழச்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறும் வேலைக்காரி என்று கூறியிருந்தால் இப்போது குதிப்பவர்கள் யாரும் துள்ளமாட்டார்கள். வேலைக்காரிகளைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படப்போகிறார்கள்?

நாட்டில் கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த தொலைக்காட்சி நேர்காணலை புலனாய்வு செய்து கண்டு பிடித்து பிரதியை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கிய சிகாமணிகள் யாரென்று தெரியவில்லை. பத்திரிகைகள், தமிழ் சானல்கள் எல்லாம் இதை உலக மகா பாதகம் போல கட்டியமைத்தன. ஈழத்தமிழன் சாவதை வேடிக்கை பார்த்த தமிழர் தளபதிகள் எல்லாம் அறிக்கைகளின் மூலம் களத்திலறங்கி ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் கிளப்பிவிட்டார்கள்.

பொதுச்சூழல் இப்படி வாகாக மாறியிருப்பதைப் பார்த்து காகிதப்புலி சீமானின் தம்பிகள் ஜெயராமின் வீட்டை போலீஸ் பாதுகாப்புடன் தாக்கிவிட்டு புறநானூற்றுத் தமிழனின் பெருமையை மீட்டு வந்தார்கள். ஒன்றுக்கு இரண்டாக ஜெயராம் மன்னிப்பு கேட்டதால் இந்தப்பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

தமிழனை 24 மணிநேரமும் ஆங்கிலத்தாலும், தமிங்கிலத்தாலும் இழிவு படுத்தும் வேலையை சன்னும், கலைஞரும் செவ்வனே செய்து வருகின்றன. இதையே பெரியதிரையில் கோடம்பாக்கம் செய்து வருகிறது. கோடம்பாக்கத்து கவிராயர்கள் எல்லாம் அர்த்தமில்லாத லாலாக்கு டோல்டப்பிமா பாடல்களையும், அப்பட்டமான ஆங்கில வரிகளுக்கிடையில் சில தமிழ்வார்த்தைகளைச் சேர்த்தும் பாடுகிறார்கள். ரிலையன்ஷ் பிரஷ் பெயர்ப்பலகை ஆங்கிலத்திற்கு 90 சதவீதத்தையும், தமிழுக்கு போனால் போகிறதென்று பத்தையும் ஒதுக்கியிருக்கிறது.

தனது படங்களில் கறுப்பான தமிழச்சிகளைப் புறக்கணித்து பாவனா போன்ற வெள்ளையான மலையாள நடிகைகளை பயன்படுத்தும் சீமானின் வீரத்தம்பிகள் தாக்கியிருக்க வேண்டுமென்றால் இவர்களைத்தானே பின்னியிருக்கவேண்டும்? அத்தகைய வீரமெல்லாம் அவர்களிடம் இல்லையென்பதைவிட அப்படி சிந்திப்பதற்கு மூளைகூட அனுமதி தராது. அப்படி சுயதணிக்கை செய்து கொண்டு தமிழைக் கொல்லும் தளபதிகளின் தயவில் வெற்றுக்கூச்சல் போடுவதுதான் அண்ணன் சீமானின் அரசியல் போலும். ஆனால் அந்த வெற்றுக்கூச்சலைக்கூட தெற்காசிய முதலாளியாகிவிட்ட கருணாநிதி அனுமதிக்க மாட்டார் என்பது வேறு விசயம்.

இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி இப்போது மலையாளிகள் தமிழர்களை இழிவுபடுத்துவதாக பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மலையாளப்படங்களில் வேட்டி சட்டை அணிந்த தமிழ் பாத்திரத்தை வைத்து கிண்டல் செய்வார்களாம். பாண்டிக்காரர்கள் என்று பட்டப்பெயர் வைத்து தமிழர்களை காட்டான்கள் என்று சித்தரிப்பார்களாம். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் என்பதைத் தாண்டி என்ன முக்கியத்துவம்? இல்லை அவை உண்மையென்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் அதற்குப் பதில் தமிழ்ப்படங்கள் மலையாளிகளை எவ்வாறு சித்தரிக்கின்றன?

மும்தாஜ், ஷகிலா உள்ளிட்ட நடிகைகளை பெரிய மார்புடைய மலையாளப் பெண்களாகக் காட்டி காமத்திற்கு அலையும் சேச்சிகளாக விவேக்  உணரவைப்பது மட்டும் போற்றத்தக்கதா? விவேக்கின் இந்த நகைச்சுவைக்கு ஒரு சமூக அடிப்படையும் இருக்கத்தான் செய்கிறது. “மலையாளப் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிது, காம உணர்ச்சி அதிகம், கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சுலபமாக சேச்சிகளை வளைக்கலாம், அல்லது சேச்சிகள் இன்பத்திற்காக அலைவார்கள், அங்கே கள்ள உறவு அதிகம்” இப்படித்தான் தமிழக இளைஞர்களிடம் மலையாளச் சேச்சிகளைப் பற்றி பொதுக்கருத்து நிலவுகின்றது.

தமிழனைக் காட்டானாக சித்தரிப்பதைவிட இது கேவலமில்லையா?  இதையெல்லாம் ஒரு புகாராக மலையாளிகள் என்றும் சொன்னதில்லையே? மலையாளிகள் தமிழனது உருவத்தையும், வடிவத்தையும் கேலிசெய்வதற்கும் தமிழர்கள் மலையாளிகளின் ஆளுமையையும், பண்பையும் கேலி செய்வதற்கு பாரிய வேறுபாடு இருக்கிறது. முன்னது நகைச்சுவையாகவும் பின்னது காழ்ப்புணர்வாகவும் வெளிப்படுகிறது. ஊர்மேயும் தமிழ் ஆண் மனம் மலையாளப் பெண்களை கற்பனையில் வன்புணர்ச்சி செய்வதுதான் ஆகக் கேவலமான ஒன்று.

வெளியிடப்படும் புதுத்தமிழ்ப்படங்கள் எல்லாம் கேரளாவின் எல்லா நகரங்களிலும் ஓடுகின்றன. இங்கு வெற்றி பெறும் அல்லது கவனத்தைப் பெறும் முக்கியமான படங்கள் அங்கும் பாராட்டப்படுகின்றன. முக்கியமாக கேரளாவில் ஓடும் தமிழ்ப்படங்களை பார்ப்பது மலையாளிகள் என்பதுதான் முக்கியம்.

ஆனால் சென்னையில் வெளியிடப்படும் நல்ல மலையாளப்படங்களை மலையாளிகள் மட்டும்தான் பார்க்கிறார்கள். பலான மலையாளப்படங்களை மட்டும் தமிழர்கள் பார்க்கிறார்கள். அதுவும் மாமனாரின் இன்ப வெறி, காமக்கொடூரன் போன்று தமிழர்களை சுண்டி இழுக்கும் சுத்தமான தமிழ்ப் பெயர்களுடன். தமிழ், மலையாளத்தின் சினிமா கொடுக்கல் வாங்கலின் தரம் இப்படித்தானே இருக்கிறது?

இன்னும் கேராளவின் கிரன் தொலைக்காட்சியில் தமிழ்ப்படங்கள் ஓடுகின்றன. பாடல் போட்டிகளுக்கு வரும் மலையாளப்பாடகர்கள் பிரபலமான தமிழ்ப்பாடல்களைப் பாடுகிறார்கள். 80,90களின் சாதாரண மலையாளிகளது விதம்விதமான வாழ்க்கைகளைச் சித்தரிக்கும் நல்ல மலையாளப்படங்களின் பொற்காலம் என்றால் அந்த பொற்காலத்தை தமிழ் மசாலா ஃபார்முலாவிற்குள் கொண்டு வந்ததுதான் தமிழ் படங்கள் கேரளத்திற்கு செய்திருக்கும் தொண்டு. தமிழில் கிளாமர் போட்டியில் தோல்வியடைந்த நடிகைகளை மலையாளத் திரையுலகம் குடும்பப் பாங்கானா பாத்திரங்களுக்கு பயன்படுத்துமென்றால், மலையாளத்தில் குடும்பப் பாங்கான பாத்திரங்களை நடிக்கும் இளம் நடிகைகளை கவர்ச்சி கன்னிகளாய் பிரபலமாக்குவதுதான் தமிழ்த் திரையுலம் செய்யும் எதிர்வினை.

சித்ரா, சுஜாதா உள்ளிட்ட மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏராளமான பின்னணிப் பாடகர்கள் தமிழ்ப்படங்களுக்காக பாடியிருக்கிறார்கள். அது போல தமிழ்ப்பாடல்கள் மட்டுமல்ல இளையராஜாவும் கேரளத்தில் பிரபலம். தமிழக அரசியல் செய்திகள் கூட மலையாளப் பத்திரிகைகளில் முதன்மையாய் இடம்பெறும். கேரளச்செய்திகள் அப்படி இங்கு இடம்பெறாது. ஜெயா, கருணாநிதி பற்றி சராசரியான மலையாளி அறிவானென்றால் இங்குள்ளோருக்கு நம்பூதிரிபாடும், நாயனாரும், கருணாகரனும், அச்சுதானந்தனும் அதிகம் தெரியாது என்பது உண்மையுங்கூட.

மொத்தத்தில் கேரளம் பொருளாதாரத் தேவைகளுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு வகைகளுக்கும் தமிழகம் என்ற பெரிய அண்ணனைத் தொடரும் சிறிய தம்பியாகத்தான் வாழ்கிறது. அதனால்தான் தமிழகத்தைப்பற்றி ஒரு சராசரியான மலையாளி அறிந்து வைத்திருக்கிறான். கொச்சி துவங்கி திருவனந்தபுரம் வரை நீங்கள் தமிழில் பேசியபடி எங்கும் செல்லலாம். வரலாற்றிலும், மொழியிலும், தேசிய இனத்திலும் தமிழிலிருந்து பிரிந்து வளர்ந்த இனம்தானே அது? அப்போது தமிழும் கூட ஒரு தேசிய இனமாக தலையெடுத்திருக்கவில்லை. அத்தகைய தொல்குடி உறவு இன்றும் தொடர்கிறது என்பதை வெத்துவேட்டு தமிழ் வீரர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

நல்லது, கெட்டதுகள் எல்லாம் எல்லா தேசிய இனங்களுக்கும் சொந்தம்தான். ஒன்று முன்னேறியது, மற்றது பிற்போக்கானது என்றெல்லாம் இல்லை. தமிழில் பார்ப்பனிய எதிர்ப்பு வலுவாக இருந்தது என்றால் கேரளத்தில் அப்படி இல்லை. கேரளத்தில் இடதுசாரி இயக்கம் வலுவாக இருந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கே கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவதும், சங்கராச்சாரியை கைது செய்வதும் நடக்க முடிந்தது என்றால் கேரளத்தில் நடக்க வாய்ப்பில்லை. தொழிற்சங்க உரிமை கேரளத்தில் பலம் வாய்ந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை.

அதனால்தான் தினசரி உடலுழைப்புக் கூலிவேலைக்கு கேரளத்தில் ஊதியம் அதிகம் என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள். சொரணைபடக் கூறுவதென்றால் இங்கு தமிழனது சுரண்டலால் வாழ முடியாமல் தமிழர்கள் கேரளத்திற்கு படையெடுக்கிறார்கள். கேரளத்தில் கல்வியறிவும், பெண்ணுரிமையும் அதிகம் என்றால் தமிழகம் பெண் சிசுக்கொலைகளோடுதான் இன்னும் இருக்கிறது. இப்படி மாற்றி மாற்றி இரண்டு மாநிலங்களும் மற்றதின் நல்ல விசயங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள ஏராளமிருக்கின்றன.

முல்லைப்பெரியாறு பிரச்சினை முற்றிலும் கேரள அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினை. அதற்கு கணிசமான மக்கள் பலியாகியிருந்தாலும் அதை வைத்து மட்டும் மலையாளிகளை எதிரிகளென்று சித்தரிப்பது அயோக்கியத்தனம். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமல்படுத்தினால் அணையின் எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து குடியேறிய சில ஆயிரம் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதற்காகவே கேரள அரசியல்வாதிகள் அதை அயோக்கியத்தனமாக எதிர்க்கிறார்கள். இதை வைத்து தமிழகத்தின் மீதான வெறுப்பை கேரள மக்களிடம் ஏற்படுத்தவும் முயல்கிறார்கள். அனால் கேரளத்தின் அன்றாட வாழ்க்கையில் தமிழகத்தை புறக்கணித்து விட்டு ஒரு நாள் கூட வாழ முடியாது.

எல்லா உயிராதாரப் பொருட்களும் இங்கிருந்துதான் கேரளத்திற்கு செல்கின்றன. அதை வைத்து கேரளத்தின் எல்லையில் இருக்கும் தமிழக விவசாயிகள் பயனடைகிறார்கள். நாமக்கல்லின் கோழிக்கும் முட்டைக்கும் கேரளாவும் ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது. இதை வைத்து கேரளத்திற்கு பொருட்கள் அனுப்புவதை நிறுத்தவேண்டுமென சில தமிழினவாதிகள் மிரட்டுகிறார்கள். அப்படி நிறுத்தினால் முதலில் பாதிக்கப்படுவது இங்குள்ள விவசாயிகள்தான். சொல்லப்போனால் அவர்களே அதை முதலில் எதிர்ப்பார்கள். கேரள மக்களிடம் தமிழகத்தின் நியாயத்தைச் சொல்லி புரியவைக்கும் சாதகமான நிலை வாழ்க்கையில் உள்ளது. அதே சமயம் இதற்கு எதிராக இருக்கும் கேரள போலிக் கம்யூனிஸ்டுகளை முல்லைப்பெரியாறு விசயத்தில் அம்பலப்படுத்துவதும் அவசியம்தான்.

நமது தரப்பு நியாயத்தை புரியவைப்பதற்காக கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகை போராட்டம் கூட கடைசிபட்சமாக நடத்தலாம் என்றாலும் இருமாநில மக்களின் நலனை வைத்தே அதை முடிவு செய்யவேண்டும். அதை வைத்து தமிழனவாதிகளும் – வெறியர்களும் ஆதாயம் அடைவதை பெருங்கேடாக நினைத்து முறியடிக்க வேண்டும்.

எம்.கே. நாராயணன், சிவசங்கர்மேனன் என்ற உயர் அதிகாரிகளை வைத்து மலையாளத்துக்காரர்கள் ஈழத்திற்கெதிராக சதி செய்வதாக முன்னர் பல அறிவாளிகள் பேசினார்கள். அப்படி சதி செய்தற்கு இது என்ன செல்வராகவனின் ஃபேன்டசி படமா என்ன? அவர்கள் இந்திய அரசின் அதிகாரிகள். இந்திய முதலாளிகள் – அதிகார வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுபவர்கள். அவர்களுக்கெல்லாம் தேசிய இனமென்ற அடையாளமெல்லாம் கிடையாது. அவர்கள் இடத்தில் தமிழ்பேசும் தமிழர்கள் அதிகாரிகளாக இருந்திருந்தால் அவர்களும் அதேதான் செய்திருப்பார்கள்.

விடுதலை இராசேந்திரனும், மணியரசனும் ஒரு பெரும் மலையாள அதிகாரிகளின் பட்டியலை வைத்து அப்போது இதை மாபெரும் கண்டுபிடிப்பாகவும் ஈழத்தின் துயருக்கு முக்கிய காரணமென்றும் சித்தரித்து வந்தார்கள். ஒரு அதிகார வர்க்கத்தின் இயங்குதன்மையைக் கூட புரிந்து கொள்ளாத இவர்களது முட்டாள்தனம் ஆச்சரியமளிக்கக் கூடியது. பாசிச ஜெயாவை வைத்து புலிகளுக்கு தப்பான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பின்பு தங்களது தவறுகளை மறைக்க இப்படி மலையாள துவேசத்தை எடுத்துக் கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளை துரத்த வேண்டுமென்று பெ.மணியரசன் தலைவராக இருக்கும் தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யார்? சென்னையை எடுத்துக் கொண்டோமானால் இங்கிருக்கும் மலையாளிகளில் ஆண்களில் பெரும்பாலானோர் தேநீர்க்கடையில் வேலை செய்பவர்களாகவும், பெண்களில் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களாகவும் இருக்கின்றனர். இவர்களையா துரத்த வேண்டும்?

குறிப்பான விவசாய வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ அற்ற கேரளத்தில் வாழ்ந்து பிழைக்க முடியாது என்றுதான் பலரும் பல இடங்களில் குடியேறி வேலை செய்கின்றனர். முன்னர் போல வளைகுடா நாடுகளுக்கு சென்று பிழைப்பது இப்போது சாத்தியமில்லை என்ற காரணத்தினால் இத்தகைய இடப்பெயர்ச்சி முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இது மலையாளிகளுக்கு மட்டுமல்ல எல்லா மாநில மக்களுக்கும் ஏன் தமிழர்களுக்கும் கூட உண்டு.

சென்னையில் தேநீர்க்கடை வைத்திருக்கும் மலையாளிகளும் அங்கே வேலை செய்யும் மலையாளிகளும் அல்லும் பகலும் கடின உழைப்புடனே நாட்களைத் தள்ளுகிறார்கள். அதிகாலையில் ஆரம்பிக்கும் வேலை நள்ளிரவு வரை ஒயாது. குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு இங்கு எந்திரவாழ்க்கை வாழ்ந்து கொண்டு சென்னை மாநகரம் முழுமைக்கும் எல்லா நேரமும் இனிய தேநீர் வழங்கும் இந்த மக்களைப் பார்த்து வெளியேற்றுவோம் என்று சொன்னால் அந்த முண்டங்களை எதைக் கொண்டு அடிப்பது?

கையேந்தி பவனில் சம்சாவும், ஜிலேபியும் விற்கும் இந்தி பேசும் சிறுவனும் அம்பானியும் ஒரே தேசிய இனமா என்ன? இப்போது சென்னையின் அன்றாட வாழ்க்கையில் பல இன மக்களும் கலந்து விட்டார்கள். இரவுக் காவலுக்கு நேபாளத்துக் கூர்காக்கள், குழிதோண்ட கன்னட உழைப்பாளிகள், தொழிற்சாலைகளில் பீகார் இளைஞர்கள், காங்கீரீட் கலவைக்கு தெலுங்கு தொழிலாளர்கள், பாலீஷ் வேலைக்கு ராஜஸ்தான் தொழிலாளிகள், ஒட்டல் வேலைக்கு வடகிழக்கு இளைஞர்கள் என்று பார்த்தால் இங்கே மட்டுமல்ல முழு தமிழக நகரங்களிலும் இந்தக் கலப்பு நடந்தேறி வருகிறது. இதேபோல தமிழக தொழிலாளிகளும் கேரளா, பெங்களூர், மும்பை என்று செல்கிறார்கள்.

இப்படி தேசிய இனம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றாகத் திரளும் கண்கொள்ளாக் காட்சி மறுகாலனியாதிக்கத்தின் விளைவு என்றாலும் இந்த ஒன்று கலப்பைக் கொண்டாட வேண்டாமா? ஆனால் உழைத்துப்பிழைக்க வந்த இந்த உழைப்பாளிகளைக் கூட தமிழின் பெயரால் வெறுப்புணர்வு கொண்டு பார்க்கிறார்கள் என்றால் அவர்களை என்ன செய்வது?

இந்தியாவில் மொழிகளும், தேசிய இனங்களும் விதவிதமாக பிரிந்திருந்தாலும் வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாக ஒன்றாக இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தேசிய இன அடையாளங்களைக் கடந்து ஒன்றானால்தான் அதே அடையாளமின்றி வர்க்க ரீதியாக சுரண்டும் முதலாளிகளை எதிர்க்க முடியும். சென்னையில் முதல்முறையாக ம.க.இ.க தோழர்கள் கிரீன் ஹண்டுக்கெதிரான பிரச்சார இயக்கத்திற்காக இந்தியில் துண்டுப் பிரசுரம் போட்டு வடமாநிலத் தொழிலாளர்களிடம் விநியோகித்தார்கள். போதுமான கல்வியறிவு இன்றி அதை எழுத்துக்கூட்டிப் படித்த தொழிலாளிகளுக்குத்தான் எத்தனை ஆர்வம்? தங்களடமிருந்த நிதியை மனமுவந்து அளித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். அவர்களது வாழ்க்கைக்கு தொடர்பேதுமில்லாத மத்திய இந்தியாவின் மலைவாழ் மக்களுக்கு ஆதரவான அவர்களது புரிதல்தான் இந்த ஒற்றுமையின் பலம். சட்டீஸ்கரின் ஆதிவாசிக்காக, தமிழ்நாட்டுத் தமிழன் பீகாரின் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்வதுதான் இந்த இனிய ராகத்தின் வெளிப்பாடு.

அலைந்து திரிந்து ஒரு தேநீர்க்கடையில் ஒதுங்கி சூடாக, ஸ்டாராங்காக ஒரு தேநீர் குடிக்கும் போது அது நமது சேட்டன் போட்ட தேநீர் என்ற உழைப்பின் சுவையை நீங்கள் உணர்ந்திருந்தால் இந்த மலையாள துவேசத்தை வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டும். மலையாளிகளைத் துரத்தவேண்டும் என்று எக்காளமிடும் சிறு கூட்டத்தை நிர்மூலமாக்க வேண்டும். இது தேநீருக்கு செய்யப்படும் நன்றிக்கடன் அல்ல. உழைக்கும் மக்கள் தங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டிய வர்க்க ஒற்றுமை. அந்த ஒற்றுமைதான் இந்தியாவின் எல்லாச்சாபக்கேடுகளையும் வீழ்த்தும் வல்லமையைக் கொண்டிருக்கிறது.

vote-012

தொடர்புடைய பதவுகள்

தமிழிஷ் பயணாளர்கள் உங்கள் தமிழிஷ் கணக்கு விவரங்களை கொண்டு இன்ட்லியில் வாக்களிக்கலாம்

307 Comments

  1. //தமிழில் பார்ப்பனிய எதிர்ப்பு வலுவாக இருந்தது என்றால் கேரளத்தில் அப்படி இல்லை//

    நம்பூதிரி எதிர்ப்பு இயக்கம்?!

    Posted on 11-Feb-10 at 11:59 am | Permalink
    • தமிழ்ப்படம்

      ஐயோ!!! இந்த அநியாயத்த தட்டிக்கேட்க இங்க யாருமே இல்லையா?????????

      Posted on 11-Feb-10 at 6:50 pm | Permalink
    • தமிழ்ப்படம்

      இந்த வார்தையை கேரளாவில் வசிக்கும் ஒரு தமிழ் நடிகன் மலையாளிகளைப் பார்த்துக் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் ??? அவன் வீடுமட்டுமல்ல அனைத்து தமிழர்களின் வீடுகளும் நொறுக்கப்பட்டிருக்கும்.

      Posted on 11-Feb-10 at 7:01 pm | Permalink
      • Subramanian

        நிச்சயமா கேரளாவில் இந்தமாதிரி ஒன்றும் நடந்திருக்காது. தமிழ் நடிகன் கூறினதை சொல்லி கொஞ்சம் விவாதங்கள் தின பத்திரங்களில் பார்க்கலாம், அல்லது television சேனலில் பார்க்கலாம். வேறே ஒன்றும் நடந்த்ருக்காது, நடக்காது. மலையாளிகள் ஆத்திரம் குறைவாக மனப்பக்குவமாக நடந்திருப்பார்கள் 

        Posted on 19-Feb-10 at 9:52 pm | Permalink
    • திருவள்ளுவர்

      ”தமிழர்களை இழிவுபடுத்தும் மலையாளத் திரையுலகம்!” இவ்வாறு எந்த மலையாளிகளாவது கட்டுரை எழுதுவானா?

      இந்த தமிழனுங்கதான் இப்படி “சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!” கட்டுரை எழுதி இவனுங்களே, இவனுங்களுக்கு ஆப்பு வைப்பானுங்க. என்ன இருந்தாலும் ஜெயராம் பேசியது தவறுதான். அவனுக்கு யாரும் சார்பாக பேசவேண்டாம்.

      Posted on 12-Feb-10 at 2:12 pm | Permalink
      • Mayannan

        ஒரே ஒரு முறை நீவிர் கேரளா பக்கம் சென்று சும்மா சைட் மட்டும் அடிச்சிட்டு வராம, கண்ணை திறந்து அந்த samudhaayathai purinthu kolla முயற்சி pannunga…

        Posted on 26-Feb-10 at 10:49 am | Permalink
    • கேள்விக்குறி

      இங்கே பின்னூட்டம் இட்டிருக்கும் தமிழினவெறியர்களுக்கும் அவர்கள் குறை செல்லும் கன்னட, மலையாள இனவெறியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, மதவெறியில எப்படி நல்ல மதவெறி என்று ஒன்று இல்லையோ அது போலத்தான் மொழி- இன வெறியிலும். அதை உணரும் நல்ல உள்ளங்களுக்கு இந்த கட்டுரையை நான் டெடிகேட் செய்கிறேன்

      Posted on 14-Feb-10 at 11:33 am | Permalink
      • எழில்

        அண்ணே வணக்கம் என்ன மறுபடி மறுபடி எழுத (அடிக்க)தூண்டறீங்க .எவ்வளவு அடிச்சாலும் தாங்கறீங்க நீங்க ரொம்ப நல்லவங்க.என்ன மறுபடி மறுபடி இழிவு படுத்தி எழுதுனாலும் பரவாயில்ல.இந்த பிரச்சினையில் எனது நிலை தெளிவானது.
        “நீங்கள் ஒரு குரூரமான ஆக்கிரமிப்பை எதிர்கொள்கையில், உங்களின் எதிர்ப்பு அழகானதாக இருக்க முடியாது”- –தாரிக் அலி
        செயராமன் கருத்து குரூரமான வன்முறை அதை அழகாக எதிர்த்து கொண்டிருக்க முடியாது என்பது தான் எனது நிலை நான் சொன்னது இன உணர்வின் அடிப்படையிலானது தவிர அது வெறி அல்ல.எதற்கெடுத்தாலும் ஒரு லேபல் ஓட்டாதீங்க.
        நான் சொல்ல வர்றது நம்மள மத்தவங்க எப்படி பாக்கறாங்க அப்படின்னு நேரடியான அனுபவத்துல இருந்துதான்.நீங்க எவ்வளவு தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் கேரளாவுல யோ கருநாடகவுல யோ எந்த ஆதரவும் கெடைக்காது அப்படி ஏதாவது அங்க போய் அதிகம் பேசினா அடி உதைக்கும்  அவங்க தயங்க மாட்டாங்க.உங்களோட செயல் எல்லை தமிழ் நாட்டளவுல மட்டும் தான் இருக்கு.அதனால தான் உங்களுக்கு குறுகிய பார்வை தான் இருக்கு.பிரச்சினயோட மைய புள்ளிய விட்டுட்டு விலகி கருத்து சொல்றவங்கள இழிவு படுத்தியே முடக்க நெனைக்கறீங்க.அதனால தான் கொஞ்சம் கடுமையான வார்த்தைகள பயன் படுத்த வேண்டியதா இருக்கு.இப்படி தனக்குள்ளே பிரிஞ்சு அடிச்சுக்கறது தான் தமிழனோட தலை விதி.
        அடையாள சிக்கல் அப்படிங்கறது இன்னிக்கு உலகம் பூரா நடந்துகிட்டு இருக்கு.தேசிய இனங்களை ஒடுக்கி ஒரே கட்டமைப்பா இருக்கலாம் நு நெனச்ச சோவித் union நிலை என்ன ஆச்சு.மொழி அளவுல சிறு வேறுபாடு மட்டும் இருக்கற செக் -ஸ்லோவாக் நாடுகள் ஏன் பிரிஞ்சது ?.தகவல் தொழில் நுட்பம் உலகத்தை ஒரு கிராமமா மாத்திருசுனு சொன்னா ஏன் புதுசு புதுசா நாடுகள் உருவாகிட்டே இருக்குது ?
        கிரீன் ஹன்ட் ல நீங்க சட்டிஸ்கர் மக்களுக்கு போராடறது இருக்கட்டும் அதுக்கு முன்னாடி ஈழ பிரசினையில நீங்க மத்த மாநில உழைக்கும் மக்கள் கிட்ட ஆதரவு கேட்டு அணுகி இருக்கலாமே ? அவங்களுக்கெல்லாம் ஈழம்கிற புரிதல்  புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம் அதற்கு எதிரா போர் நடக்குது அப்படிங்கற அளவுல தான்.நானே என்னோட அலுவலக நண்பர்கள் கிட்ட விளக்கி சொன்னா பின்னாடி தான் அவங்களுக்கு  ஓரளவு உண்மை தெரிஞ்சது.நீங்க இதை ஏன் செய்யல ? அத கொஞ்சம் தெளிவா விளக்க முடியுமா ? அதனால தான் நான் மறுபடியும் சொல்றேன் தமிழ் நாட்ட தாண்டி எங்கயும் உங்க செயல்பாடுகளே இல்ல.அப்படி நீங்க அணுகினாலும் உங்களுக்கு சுத்தமா ஆதரவு இருக்காது வேண்ணா அடி உதை கெடைக்கலாம்.இங்க பிழைக்க வர்ற தொழிலாளிகளுக்கு வேற வழி இல்ல அதனால ஏதோ உங்களுக்கு ஆதரவு பண்றதா நீங்க நெனச்சுட்டு இருக்கறீங்க. நீங்க சொல்ற புரட்சி, அழித்தொழிப்பு வேலைகள களத்துல இறங்கி செஞ்ச தோழர் தியாகு கடைசில அப்படி ஒன்னு சாத்தியமே இல்லன்னு ஒரு புரிதலுக்கு ஏன் வந்தார் ?  அங்க தான் மொழி பிரச்சினை முன்னாடி வந்துச்சு அந்த எதார்த்தத உணர்ந்தனால தான் இன்னிக்கு தமிழ் தேசியம் பக்கம் போயிட்டாரு.உடனே அவர போலி கம்ம்யுநிஸ்ட் அப்படின்னு  லேபல் ஓட்ட வேண்டாம்.
        நீங்க சில விசயங்கள்ல உண்மையா இருக்கீங்க அத நான் ஒத்துக்கிறேன் ஆன அதுக்காக நாங்க மட்டுமே எல்லாத்துக்கும் அதாரிட்டி அப்படின்னு எல்லாத்தையும் திட்டறது எப்படின்னு தான் கேட்கிறேன் ?
        உங்களோட இயங்கு தளம் ஒரு வரையறைக்கு உட்பட்டது.உங்களுக்கு நீங்களே  வகுத்துருக்கிற எல்லைகளை தாண்டி நீங்க சிந்திக்கறதே இல்லை.உங்களோட செயல் திட்டத்த கொஞ்சம் வினவுலையே தெளிவா ஒரு பதிவாகவோ பல பதிவுகளாகவோ எழுதுனா கொஞ்சம் நல்லா இருக்கும் 
        என்னோட கேள்விகள் இது தான் 
        1.நீங்க நடத்தப் போற புரட்சி எப்ப வரும்? அதற்கு கால நிர்ணயம் என்ன ? அதனோட வேலை திட்டம் எந்த அளவுல இருக்குது ?
        அதற்கு தேவையான ஆள் பலம், அறிவு பலம், கருவி பலம், எல்லாம் எப்படி திரட்ட போறீங்க ?
        2. அதனோட எல்லை எந்த அளவுல ? இந்திய அளவுலையா ? தமிழ் நாட்டளவுலையா ? இந்திய அளவுல அப்படினா அதுக்கு எந்த மொழிக்காரன் தலைமை ஏற்பான் ? மொழி பிரசினையில நீங்க என்ன நிலை எடுக்கறீங்க ?
        3.தமிழ் நாட்டத் தாண்டி எங்க எல்லாம் நீங்க செயல் படறீங்க ? மத்த மொழிகள்ல எல்லாம் வினவு இருக்குதா ? அங்கெல்லாம்  உங்களுக்கு  ஆதரவு  எப்படி  ?
        4.வெறும் உழைக்கும்  மக்கள் மட்டுமே பங்கு கொண்டா அந்த புரட்சி வெற்றி பெறுமா ?
        5. பாட்டாளி வர்க்க “சர்வாதிகார ” அரசு அமைஞ்ச பின்னாடி அதுல அதிகார அமைப்பு ,நிர்வாகம் எல்லாம் எப்படி அமையும் ?
        உடனே மார்க்ஸ் அ துணைக்கு கூப்படாதீங்க.அவர் கனவு கண்ட தேசம் எங்கயுமே அமையுல இனிமேலும் ம.க.இ.க வினாலாயோ அல்லது வினவுனாலையோ அது சாத்தியமே இல்ல.உடனே தமிழ் தேசியத்த பத்தி நீங்க கேக்கலாம்.மொழி அடிப்படையில மக்கள் ஒன்றாக இணையறது கண்டிப்பா நடக்கும் ஆனா நீங்க கனவு காண்கிற வர்க்க ஒற்றுமை இந்திய அளவுல நடக்கவே வாய்ப்பு இல்ல 
        இத உணருகிற காலம் வரும் அப்பொழுது நீங்கள் எங்களோடு தான் வருவீர்கள் அல்லது சூழலில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டிருப்பீர்கள் 
        நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் செயராமனுடன் இருப்பதாகத் தான் அர்த்தம். நடு நிலை என்ற ஈர வெங்காயம் எல்லாம் எங்களிடம் இல்லை.எளிதில் துரோகம் செய்யும் இயல்புடைய மக்களுக்கு கடுமையான நிலைப்பாடுகள் தான் தேவை.அவர்களிடம் தொடர்ந்து நாம் மென்மையாக பேச முடியாது.
        இவ்வளவு தூரம் மலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கற நீங்க என்னிக்காவது ரயில் பயணம் எல்லாம் போயிருக்கிறீங்களா ? ரயில்வே ல அவங்க அடிக்கற கொட்டம்,எல்லா ரயிலையும் அவங்க ஊருக்கே அவங்களுக்கு சாதகமா திருப்பி விடறதா எதிர்த்து என்னிக்காவது பேசி உள்ளீர்களா ?
        கேரளா,மலையாளிகளுக்கு ஆதரவாக சி.பி.எம் கட்சி உடைய நிலைப்பாடு செயல்பாட்டு அளவுல இருக்கு நீங்க  கருத்தளவுல இருக்கிறீங்க அவ்வளவு தான் ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை 

        Posted on 14-Feb-10 at 2:44 pm | Permalink
        • கேள்விக்குறி

          எழில், இந்த பிரச்சனையில் என்னுடைய நிலைப்பாடு இதுதான், ஜெயராம் என்ற மலையாளத் திரையுலகின் தமிழ் நடிகனுடைய கருத்து கேவலமானது, கண்டிக்கப்படவேண்டியது. அவருடைய கருத்தை பணத்திமிர் கொண்ட ஒருவன் தனது வீட்டு வேலைக்காரியை பேசிய பேச்சாக பார்ப்பதுதான் சரியானதென்றாலும் அவர் மலையாளத்திரை நடிகராகிப்போனதால் இனப்பிரச்சனையாக பத்திரிக்கைகள் திசைமாற்றிவிட்டது… அந்த நோக்கில் பார்த்தால் கூட அவர் ஒரு தனிநபர், அவர் ஒட்டுமொத்த மலையாள இனத்தின் கருத்தை பேசியுள்ளார் என்பது அறிவியலற்ற வாதம் ஜெயராமினுடைய கருத்தை கண்டிக்கும் நாம் அவர் தமிழரை பேசியதைப்போலவே மலையாள இன மக்களை கேவலமாக பேசினால் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். ஜெயராம் என்னும் ஒருவரை முன்னிருத்தி ஒட்டுமொத்த மலையாள சமூகத்தையே கேவலமாக பேசுவதும் எழுதுவதும் எந்த வகையில் நியாயம். நாம் பேசுவது சரியென்றால் அவர் பேசுவதும் சரிதானே? நாம் இத்தனை பேர் மலையாளிகளை திட்டுவது சரியென்றால் அத்தனை மலையாளிகள், கன்னடர்கள் நம்மைத்திட்டுவதும் சரியே, அவர் அவர் இனம் அவரவருக்கு மேன்மை என்று விட்டுவிடலாமா?

          மனிதனிலேயே உயர்வு தாழ்வு இல்லையெனும்போது மனிதர்களாளான இனத்தில் மட்டும் மேன்மை எப்படி வந்தது?

          நான் ஒன்றும் மலையாளிகளில் இனவாதிகள் இல்லையெனவில்லை, தமிழனை, கன்னடனை இழிவாக கருதுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், தமிழ்நாட்டிலும் கொல்டியென்றும், கொலையாளியென்றும் பேசுபவர்களைப்போல! ஆனால் இனவெறியர்கள் மிக சிறுபான்மையினர், பெரும்பான்மைமக்கள் இனவாதிகள் அல்லர், சகஇனத்துடன் சுமூகமான உறவை பேணுவதையே விரும்புகின்றனர். ஜெயராமினுடைய கருத்தைக்கூட சில மலையாள நட்சத்திரங்கள், பத்திரிக்கைகள், பிளாகர்கள் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனரே. ஜெயராம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை ஒட்டி கேரளத்தில் ஒன்றும் தமிழர்களை விரட்டும் இனக்கலவரம் தோன்றிவிடவில்லையே… அதுபோலவே சீமானுடைய நடவடிக்கையை தமிழர்கள் கண்டிப்பதன் மூலம் நம்முடைய நல்லென்னத்தையும் நிரூபிக்கவேண்டும். அதுதான் சரியான வழி. ஜெயராமோ சீமானோ இதுபோன்ற சிறு சிறு சம்பவங்களையெல்லாம் பத்திரிக்கைகள் ஊதிப்பெருக்கி இனங்களுக்குள் விரோதத்தை வளர்கின்றனர், அதை முறியடித்து இனங்களுக்குள் இணக்கத்தை பேண வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

          இல்லை என் இனம் உசத்தி அடுத்தவன் மட்டம் என்றால் தமிழினவாதிளுக்கும், மலையாள இனவாதிகளுக்கும் என்ன வித்தியாசம், வட்டால் நாகராஜூவுக்கும், பால் தாக்கரேக்கும், என்ன வித்தியாசம். சீமான் செய்வது சரியென்றால், பால்தாக்கரேவும், ஏன் சிங்களஇனவாதிகள் கூட சரியானவர்களாகிப் போகமாட்டார்களா??? இனவாத அரசியலில் நல்ல இனவாதம் கெட்ட இனவாதம் என்று ஒன்று உன்டா என்ன? சிங்கள பேரினவாதம் தன்னாட்டிலேயே போர்செய்து தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று அடிமையாக்கியதைப்போல சீமான் தலைமையில் படையெடுத்து, தமிழ்நாட்டிலுள்ள கேளர, கருநாடக, தெலுங்கு, இந்தி மக்களைக் கொன்று விரட்டுவதே இனவாதம் வெற்றியடைய உலகம் அறிந்த ஒரே வழி. ஆனால் ஜெர்மனி, இசுரேல், ருவான்டா, போஸ்னிய அனுபவங்களை தமிழினவாதிகள் மட்டும் பார்ப்பதில்லை, கன்னட, மலையாள, தெலுங்கினவாதிகளும் பார்க்கின்றனர், அவர்கள் ஊர்களிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். என்ன செய்யலாம்?????

          Posted on 14-Feb-10 at 7:15 pm | Permalink
        • எழில்

          நன்றி அண்ணே.இப்பதான் இவ்வளவு பக்குவமா சொல்றீங்க.உங்களோட கருத்துல எனக்கும் உடன்பாடு தான்.இனவாததுல நல்லது கெட்டதுன்னு ஒன்னும் இல்ல தான்.மலையாள எழுத்தாளர்கள் சக்கரியா ,தேவன் போன்றவர்கள் உண்மை நிலையை அவ்வப்போது தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.
          ஆனால் எங்கு பிரச்சினை ஆரம்பிக்கறது என்றால் செயராமனை கண்டித்து அதன் விளைவுகளை பற்றி தெளிவாக ஒரு பதிவெழுதி விட்டு பின்னர் நாம் தமிழர் இயக்கத்தின் செயல்பாட்டை கண்டித்திருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் நீங்கள் எடுத்த உடனே வரிக்கு வரி அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல் எழுதி விட்டு ஏதோ போனால் போகிறதென்று மென்மையாக கண்டித்திருக்கிறீர்கள்.இது கட்டுரையின் உள்நோக்கத்தையே “கேள்விக்குறியாக்குகிறது ” .இதை நீங்கள் சேலம் ரயில்வே கோட்டம்,முல்லை பெரியாறு போன்ற பிரச்சினைகளின் போது மலையாள இனவாதத்தை கண்டித்து ஆவேசமான தலைப்பை எழுதி ஒரு பதிவு எழுதி இருந்தீர்கள் என்றால் உங்கள் நடு நிலைக்கு எந்த பங்கமும் வந்திருக்காது. தமிழர்களின் இனவாதம் என்பது மற்ற இனவாதங்களின் ஒரு விளை பொருள் தான்.கடைசி தெரிவாக இதற்குள் நுழைகிறார்கள்.நாம் தொடர்ந்து ஏமாற்ற படுகிறோம் என்று நமது பொது புத்தியில் இருக்கிறது.
          மேலும் செயராமனை போல நாமும் பேசுவது சரியா என்று கேட்கிறீர்கள் இல்லை தவறுதான் ஆனால் இதை பக்குவமான வார்த்தைகளில் கண்டித்திருக்கலாம்.இது ஒரு எதிர் வினை என்ற அளவில் எடுத்துகொள்ளப் பட்டிருக்கலாம்.சீமான் ஒன்றும் எல்லா மலையாளிகளையும் உடனே வெளியேத்த வேண்டும் என்றா சொன்னார் ? இல்லையே .
          தமிழர்கள் செய்யும்போது கடைசியாக மட்டும் அது இனவாதமாக பார்க்கப் படுகிறது மற்றவர்கள் செய்தால் அது இன உணர்வு என்று ஆகிவிடுகிறது.
          தனிப்பட்ட மலையாளியோ,கன்னடனோ,தெலுங்கனோ யாரும் இனவாதிகள் அல்ல.அவரவர்  பொது புத்தியில் என்ன இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்.முல்லை பெரியாரில் இவ்வளவு சண்டித்தனம் செய்யும் கேரளாவை கண்டித்து இது போன்ற எந்த நிகழ்வும் இல்லையே அப்போது தமிழர்கள் அமைதியாகத்தானே இருந்தார்கள்/இருக்கிறார்கள்.இவ்வளவு நாள் அதை பாத்து கொண்டிருக்கும் சராசரி தமிழனின் மனதில் என்ன எண்ணம் ஓடிகொண்டிருந்திருக்கும் ? அந்த எண்ணம் தான் இன்று பெட்ரோல் குண்டுகளாக வெளிப்படுகிறது.இதை நான் ஆதரிக்கவில்லை தான் ஆனால் இது ஒரு பதிலடி அவ்வளவே,இதற்க்கு அவர்கள் மீண்டும் நம்மை தாக்கினால் விளைவு மோசமாக இருக்கும்.பதிலடி கிடைக்கும் என்று தெரிந்தால் தான் எதிரி பயப் படுவான்.அன்று ஒகேனக்கல் பிரச்சினையில் வழக்கத்திற்கு மாறாக தமிழகம் கொஞ்சம் அதிகம் கொதித்தது அதனால் கன்னடர்கள் தணிந்தார்கள்.அப்பொழுது இங்கு எல்லைப்புற மாவட்டங்கள்,தேனி,பெரியகுளம் போன்ற தமிழகத்தின் நிரந்தர பச்சை பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் கன்னட ஒக்கலிகர்கள்,வாட்டாள் நாகராஜின் இனத்தவரான குரும்பர்கள் எல்லாம்  எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதித்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் சங்கத்தின் மூலமாக கன்னட இனவெறியர்களான,நாராயண கௌடா,வட்டாள் நாகராஜிடம் பேசி இருக்க வேண்டும் . இனி அதெல்லாம் மாறத்தான் போகிறது தமிழ் நாட்டில் உள்ள கன்னடர்களும் கன்னட வெறிக்கேதிராக பேசவேண்டும்.இல்லை என்றால் அவர்கள் பேச வைக்கப் படுவார்கள்.இனங்களுக்குள் ஒற்றுமை என்பது எதுவரை ?அல்லது அதன் வரையறை என்ன ? உரிமைகளை விட்டுத் தந்துவிட்டு ஒற்றுமை என்பது தேவையா ?அதற்க்கு பெயர் ஒற்றுமை அல்ல இளிச்சவாயத்தனம்.அது இனிமேல் நடக்காது.நமது உரிமைகள் பாதிக்கப்படும் வரை சீமான் போன்றவர்களுக்கு ஆதரவு நிச்சயம் அதிகரிக்க தான் செய்யும்.அது தவிர்க்க முடியாதது.எத்தனை நாள்தான் மறு கன்னத்தையே காட்டி கொண்டிருக்க முடியும் அதற்க்கு நாங்கள் காந்தி அல்லவே !.
          நான் கோவையில் கடந்த மாதம் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு தமிழர் கைக்குழந்தையுடன்  என்னருகில் அமர்ந்திருந்தார்.பேருந்தில் ஏறிய மலையாள மாணவர்கள் யாரைப்பற்றியும் கவலை இல்லாமல் திமுதிமுவென்று ஏறி  அவர் மேல் இடித்தார்கள் உடனே அவர் மலையாளிகள்  செய்யும் அடாவடியை என்னிடம் வருத்தப்பட்டு பட்டியலிட்டார் இது தான் சராசரி தமிழனின் மன நிலை.இது இன்னும் அதிகரிக்கத் தான் போகிறது குறைய வாய்ப்பு இல்லை
          தமிழ் நாடு இல்லாமல் மலையாளிகளால் இருக்க முடியாது ஆனால் அவர்கள் உதவியின்றி நாம் இருக்க முடியும்.இங்கே நீங்களும் நானும் விவாதிப்பது சராசரி தமிழனை எட்டப் போவதில்லை சராசரி தமிழனை பொறுத்தவரை சீமான் செய்தது சரி.
          தமிழ் நாட்டில் மற்ற மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகமாகி விட்டது என்றால் உடனே மற்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்கிறார்களே என்ற கேள்வி வந்து விடுகிறது.நாங்கள் அங்கு வரத் தயார் தான் அங்குள்ள கன்னடர்கள், மலையாளிகள்,தெலுங்கர்கள் அனைவரும் வெளியேறினால் நாங்கள் வரத் தயார் தான் இதை நான் கன்னட பதிவர்களிடமே தெரிவித்தேன்.நம்மால் வேற்று இனத் தவர் உதவியின்றி வாழமுடியும் என்று நான் நம்புகிறேன்.இதற்க்கு ஜப்பான் மாதிரியை எடுக்கலாம் அவர்கள் மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லை அவர்களும் இடம் பெயர்வதில்லை இந்தியா என்ற அமைப்பு மற்ற மாநிலத்தவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது நமக்கு பாதகமே அதிகம்.நதி நீர் பிரச்சினைகளில் நாம் வேறு வேறு நாடுகளாக இருந்தால் நிச்சயம் ஒரு தீர்வை எட்டியிருக்க முடியும் எப்படி பாகிஸ்தானுக்கு நாம் தண்ணீர் சரியாக வழங்குகிறோமே அதைப் போல.இது பிரிவினை  கோரிக்கை அல்ல நமக்கு நீதி கெடைக்கும் வரை “சீமான் விளைவுகளை” தடுக்க முடியாது என்பது தான் 

          Posted on 14-Feb-10 at 11:08 pm | Permalink
  2. INIAVAN

    இனம் மதம் மொழி என்ற பெயரால் வெறுப்புணர்வை போதித்து பிரிவினை உண்டாக்கும் அனைத்து சக்திகளும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

    Posted on 11-Feb-10 at 12:03 pm | Permalink
  3. Anonymous

    அருமையான கருத்துகள்.. பாராட்டுக்கள்.

    Posted on 11-Feb-10 at 12:06 pm | Permalink
    • setan

      போடா டுபுக்கு

      Posted on 11-Feb-10 at 6:39 pm | Permalink
    • தமிழ்ப்படம்

      அதெல்லாம் இருக்கட்டும். தமிழர்களை உறிஞ்சி, தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ்த்திரையுலகம் எப்போது “முல்லைப் பெரியார் அணைக்காக” போராட்டம் நடத்தி தமிழ் மக்களுக்குத் தண்ணீர் பெற்றுத் தரப் போகிறது??? (நிச்சயம் ஜெயராம் தமிழ் திரையுலகம் சார்பில் கலந்து கொள்வார்). என் தாய் மொழி தமிழ், நான் வீட்டில் பேசுவது தமிழ். என்பிள்ளைகள் படிப்பது தமிழ் நாட்டில் (கவனிக்க: படிப்பது தமிழல்ல)…………..

      Posted on 11-Feb-10 at 6:57 pm | Permalink
  4. சரியான பார்வையுடன் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை. தோழமை வாழ்த்துகள். ஞாநி

    Posted on 11-Feb-10 at 12:20 pm | Permalink
    • கற்பவன்

      துரோணர் வாயால் பிரம்மரிஷி பட்டம்; சங்கரன்(ஞாநி) வாயால் வாழ்த்து, சரியான பார்வை கொண்டவர்கள் என்ற சர்டிபிகேட்…சூப்பர்..கலங்குறீங்க தோழர்களே.

      Posted on 11-Feb-10 at 6:26 pm | Permalink
      • கேள்விக்குறி

        என்ன செய்வது கற்பவன்???? சீமான், திருமா போன்ற கழிசடைகளின் பாராட்டுகளை பொறுத்துக்கொண்டது போலவே ஞானியுடைய பாராட்டையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்

        Posted on 11-Feb-10 at 6:34 pm | Permalink
        • கற்பவன்

          பாராட்டுக்களையே பொறுத்து ஏற்றுக் கொண்ட தோழர்கள். அட அட, எங்கேனும் கண்டதுண்டா இது போன்ற பண்பாளர்களை. அதே சமயத்தில் இதில் ஒரு உண்மை இருக்கிறது தோழரே, அவரவர் தம்முடைய கருத்துக்களுக்கு தோதாக கட்டுரை வரும் போதும், செயல்பாடுகள் அமையும் போதும் உங்களை பாராட்டத்தானே செய்கிறார்கள். உங்களுடைய இந்த கட்டுரை சங்கரன் அவர்களுடைய கருத்துக்களுக்கு அமைவாக அல்லது நெருக்கமாக வந்திப்பதால் திருவாளர் சங்கரனுக்கு குதூகலம் போலும்.

          Posted on 11-Feb-10 at 7:47 pm | Permalink
        • வினவு

          கற்பவன், நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. எல்லாக் கருத்துக்கும் மாறுபாடில்லை என்று சொல்லிவிட்டு உங்கள் கருத்து என்று ஏதோ சொல்ல முனைகிறீர்கள். அது என்னவென்று சுருக்கமாக தெளிவாக கூறமுடியுமா?

          Posted on 11-Feb-10 at 8:26 pm | Permalink
        • கற்பவன்

          ஜெயராமுடைய பேட்டி ஒரு முக்கியத்துவமில்லாதது என்று நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள், சாம்பல் என்ற யாரும் அறியாத பத்திரிக்கையில் வெளியான ஒரு கூட்டுக் கவிதை முக்கியமானதாகவும், ஈராக் யுத்தத்தை இழிவுபடுத்துவதாகவும் உங்களுக்கு தோன்றியதே, ஒரு தொலைக்காட்சியில் ஜெயராம் தெரிவித்த இந்த கருத்து எப்படி முக்கியத்துவமற்றதாக ஆகும் என்று நான் கேள்வி எழுப்பினேன். பதில் இல்லை. ஜெயராம் வீட்டில் வீரம் காண்பித்தவர்கள் சன்.டிவியின் முன்னால் காண்பிப்பார்களா என்று நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு, ஈராக் யுத்தத்தை இழிவு படுத்தியதாக சங்கர் ராம சுப்ரமணியத்திடம், விக்ரமாதித்தியனிடமும் வீரம் காண்பித்த நீங்கள். ‘ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க, எனக்குள்ள யுத்தம் தொடங்கிடுச்சு இங்க..’ என்று பாடல் எழுதி ஈராக்கை கேவலப்படுத்திய‌ வைரமுத்துவின் வீடேறி வீரம் காண்பிப்பீர்களா? என்று கேட்டேன் பதில் இல்லை. தமிழன் சுரண்டுவதால்தான் இங்குள்ள உழைக்கும் தமிழன் கேரளத்திற்கு ஓடுவதாக நீங்கள் எழுதினீர்கள். அப்படியானால் உலகமயமாக்கத்தால் தொழிலாளி ஓடுகிறான் என்று பேசுகிறீர்களே அதெல்லாம் ச்சும்மாவா, என்று கேட்டேன், அதற்கு நீங்கள் தொழிலாளி ஓடுவதற்கு உலகமயமாக்கமும் காரணம், தமிழனும் காரணம் என்று மாங்காயும் புளித்தது, வாயும் புளித்தது என்ற பாணியில் பதில் சொன்னீர்கள். எல்லோரும் தமிழர்களே என்ற பாமரக் கருத்து எனக்கு கிடையாது, தமிழனுக்குள்ளும் வர்க்கம் உண்டு ஆனால் உலகமயமாக்கமும் சுரண்டுகிறது, தமிழனும் சுரண்டுகிறார்கள் என்கிறீர்களே, எல்லா இனத்து ஒடுக்கும் வர்க்கத்தவர்னும் தன் இனத்தை சேர்ந்தவனை சுரண்டத்தானே செய்வார்கள், அதற்காக தேசிய இன உணர்வென்ற ஒன்று இல்லையென்றாகிவிடுமா என்று கேட்டேன்.

          இவ்வளவும் உங்களை போன்ற கற்றறிந்த பண்டிதர்களுக்கு புரியாமல் போனது, என்னுடைய துரதிருஷ்டமே. சரி போகட்டும் இவ்வளவும் புரியாமல் போனாலும் உங்களுடைய எல்லாக் கருத்துக்கும் நான் மாறுபாடில்லை என்று சொல்வதாக மட்டும் உங்களுக்கு புரிந்திருக்கிறது. ஆனால் உங்களது எல்லா கருத்துக்களுக்கும் நான் மாறுபாடில்லை என்று எப்போது சொன்னேன் என்றுதான் எனக்கு புரியவில்லை.

          Posted on 11-Feb-10 at 10:11 pm | Permalink
        • வினவு

          கற்பவன்,

          தனித்தனியான உங்கள் கருத்துக்கள் மூலம் மையமாக என்ன சொல்ல வருகின்றீர்கள்?

          கூட்டுக்கவிதைக்கு எங்களது கண்டனத்தைத்தான் தெரிவித்தேமே தவிர அதை தமிழக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை என்று ஏற்கனவே எழுதியும் பதிலில்லை என்கிறீர்கள்.

          ஜெயராம் வீட்டில் வீரத்தைக் காண்பித்தவர்கள் சன்.டிவியை தாக்க வேண்டாம், கண்டித்து அறிக்கை விடச்சொல்லுங்கள் பார்ப்போம். கலைஞரை தொடாமல் தமிழனது சுரணையை எழுப்புவதுதான் சீமானது வீர அரசியல்.

          வைரமுத்து என்றல்லமொத்த சினிமாவும் இப்படி பல்வேறு பிரச்சினைகளை இழிவு படுத்தித்தான் வருகிறது. மொத்த திரையுலகையும் அவ்வப்போது அம்பலப்படுத்தித்தான் வருகிறோம். கோக்குக்கு ஆதரவாக ராதிகா களமிறங்கியபோது அவரது வீட்டின்முன் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறோம். பெப்சி – படைப்பாளிகள் பிரச்சினையின் போது கோடம்பாக்கத்தில் சினிமா தொழிலாளர்களை அணிதிரட்டி படைப்பாளிகளை விமரிசித்திருக்கிறோம்.

          உலகமயமாக்கம் பற்றியும் எல்லா இனத்திலும் சுரண்டுபவன் இருப்பான் என்பதையும் வினவு மறுக்கவில்லை. தேசிய இன உணர்வு என்ற ஒன்று இருப்பதையும் மறுக்கவில்லை. ஆனால் அந்த உணர்வு சக இனத்து உழைக்கும் மக்களை வெறுப்பதாக ஆனால் அது இனவெறி என்பதைத்தான் சொல்கிறோம். இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பது வேறு, இந்தி பேசும் ஏழைத் தொழிலாளர்களை எதிர்ப்பது வேறு. இரண்டையும் தேசிய இன உணர்வு என்று செய்ய முடியாது.

          கூட்டிக்கழித்துப் பார்த்தால் தேசிய இன உணர்வு என்ற ஒன்றை ஏற்கிறீர்களா இல்லையா என்று தெளிவாக கேட்டிருக்கலாம். அதற்கு ஈராக்கிற்கும், உலகமயத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லையே நண்பரே?

          Posted on 11-Feb-10 at 10:28 pm | Permalink
        • கற்பவன்

          ஜெயராமை உதைக்க வேண்டும் என்று சொல்ல வருகிறேன், அதே சமயம் கேரளத்து உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இங்குள்ள எவனாவது பேசினால் அவனை உதைப்பதற்கும் கண்டிப்பதற்கும் அவர்களுக்கும் உரிமை உண்டு என்பது அடியேனின் கருத்து, நீங்கள் சொல்லுங்கள் ஜெயராமை உதைக்க வேண்டுமா இல்லையா? இந்த கட்டுரையோ சர்வதேசியம் பேசுகிறேன் என்ற பெயரில் ஜெயராமுக்கு வக்காலத்து வாங்குகிறது, இது வாசகர்களை குழுப்பும் முயற்சி என்கிறேன் நான். ஜெயராம் பேட்டியை முக்கியமற்ற ஒன்று நீங்கள் புறங்கையால் தள்ளுகிறீர்களே, ஈராக்கை பற்றி எழுதியது மட்டும் முக்கியத்துமுடையதாக எப்படியாகியது என்று கேட்டேன், அதற்கு நீங்கள் சொல்லுகிறீர்கள், நாங்கள் அதையும் முக்கியமாக நினைக்கவில்லை, நினைத்திருந்தால் பத்திரிக்கையில் எழுதியிருப்போம், மக்களிடம் கொண்டு போயிருப்போம் என்று, கண்டனம் மட்டுமே தெரிவித்தோம் என்கிறீர்களே, அதற்கு வீடு புகுந்து ‘சனநாயக நெறி’யோடு விவாதித்து வற்புறுத்தி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய முக்கியத்துவமற்ற அந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்தீர்கள். மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று சொல்லுகிறீர்கள், ஆனால் நீங்கள் அந்த கூட்டுகவிதையை அங்குள்ள மக்களுக்கு பிரதியெடுத்து கொடுத்ததாக அல்லவா நான் கேள்விப்பட்டிருக்கிறேன், பத்திரிக்கையில் எழுதுவதை காட்டிலும் துண்டறிக்கை கொடுப்பது பிரதி எடுத்து கொடுப்பது என்பது வீச்சானதல்லவா? அப்படியிருக்கும் போது மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று எப்படி இப்போது வாய் கூசாமல் பேசுகிறீர்கள்.

          //’ஜெயராம் வீட்டில் வீரத்தைக் காண்பித்தவர்கள் சன்.டிவியை தாக்க வேண்டாம், கண்டித்து அறிக்கை விடச்சொல்லுங்கள் பார்ப்போம். கலைஞரை தொடாமல் தமிழனது சுரணையை எழுப்புவதுதான் சீமானது வீர அரசியல்.//

          பாருங்கள் நீங்கள் அடிப்பதற்கு வாகான இடத்தில் என்னை வந்து நிறக சொல்லி வற்புறுத்துகிறீர்கள். சீமானது அரசியலுக்கு ஜவாப்தாரியாக சொல்லுகிறீர்கள். அய்யா சீமானின் அரசியலுக்கு பரிந்து பேசுவது என் வேலையல்ல, சீமான் ஒரு சமயத்தில் இராமதசை போய் பெரியாரோடு ஒப்பிடும் அளவிற்கு போனவர்தான், அது எனக்கு அருவெறுப்பை கொடுத்ததுதான், ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், இங்கு பேசப்படும் விசயம் ஜெயராமின் கருத்து, அது ஏற்படுத்திய விளைவு.

          வைரமுத்து விசயத்தை பற்றி ஏன் பேசினேன் எனில் நீங்கள் சன் டி.வியை போய் நாம் தமிழர் இயக்கத்தவர் அடிப்பார்களா என்று கேள்வி எழுப்பியதை மறுத்து, ஈராகை பற்றி இழிவு படுத்தியதாக ஒருவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ‘சனநாயக நெறி’ப்படி விவாதித்து எழுதி வாங்கிய நீங்கள். வைரமுத்து வீடேறி எழுதி வாங்க முடியுமா? என்பதே என் கேள்வி அதற்கு நீங்கள் சொல்லும் பதில் நாங்கள் சினிமாக்காரர்களையும் விமர்சித்திருக்கிறோம். நீங்கள் சினிமாவை விமர்சித்திருப்பது யாரும் அறியாததா என்ன? கேள்வி சங்கர் ராம சுப்பிரமணியனிடம் நடந்தது போல் வைரமுத்துவிடம் உங்களால் நடக்க முடியுமா என்பதே. அது முடியாதவர்கள் ஏன் அடுத்தவர்களை போய் சன். டி.வி யை உடைப்பியா என்று சண்ட பிரசண்டம் செய்ய வேண்டும். கலைஞரை எதிர்த்து கண்டன அறிக்கையாவது விடச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று சொல்லுகிறீர்கள், சீமானை காவந்து செய்வதற்காக சொல்லவில்லை ஒரு தகவலுக்கு சொல்லுகிறேன், செம்மொழி மாநாட்டை கருணாநிதி அறிவித்த பொழுது அதனை விமர்சித்து ஒரு காட்டமான அறிக்கை சீமான் வெளியிட்டதாக நினைவு.

          /ஆனால் அந்த உணர்வு சக இனத்து உழைக்கும் மக்களை வெறுப்பதாக ஆனால் அது இனவெறி என்பதைத்தான் சொல்கிறோம்.//

          எனக்கு ஒரு கேள்வி ஒரு சக தேசிய இனத்து உழைக்கும் மக்களை காக்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் அந்த சக தேசிய இனத்திலிருந்து கொண்டு மற்ற தேசிய இனத்தை இழிவுபடுத்தும் ஒருவனை காப்பதற்கு என்ன பெயர் அய்யா?

          Posted on 12-Feb-10 at 11:31 am | Permalink
        • எழில்

          இரண்டகர்கள் தான் கற்பவன் அவர்களே !! வரலாற்று காலத்தில் எட்டப்பன் கொஞ்சம் முன்பு “கருணாக்கள்” இப்போ வினவு காலம் மாறலாம் துரோகிகள் மாறுவதில்லை

          Posted on 12-Feb-10 at 1:36 pm | Permalink
        • துரோகிகள் – பழைய தேர்தலில் அம்மையார் துரோகி, இந்த தேர்தலில் கருணாநிதி துரோகி, மன்னார்குடி வகையறாவும் தியாகி, திடீர் நண்பர் பொன்சேகாவும் தியாகி. எச்சில் காசும் பிச்சை பதவியும் அளித்தால் நாளை ராஜபட்சேவும் தியாகி. இப்படித்தேர்தலுக்கு தேர்தல் துரோகிகளை மாற்றும் நீங்களல்லோ தமிழினத்துக்கு நிர்ந்தர துரோகிகள். 

          Posted on 12-Feb-10 at 1:45 pm | Permalink
        • mani

          எது துரோகம்
          விமர்சித்தாலே துரோகமா ?
          நம்ப வச்சு கழுத்தறுத்த‌
          நாடாளுமன்ற தேர்தல் துரோகமில்லையா..?!

          கருணாநிதி துரோகி… ஜெயா மாமி நல்லவா
          ஜெயின் கமிசன கேட்டுப்பாரு
          தொன்னூறுகளின் முற்பாதியில்
          உயிரோட, மனசிலாவது ரோசத்தோட‌
          இருந்த இனவாதிகள கேட்டுப்பாரு..
          துரோகியா, எதிரியான்னு
          காலமே பதில் சொல்லும்.

          Posted on 12-Feb-10 at 2:44 pm | Permalink
        • வினவு

          கற்பவன்,
          //ஜெயராமை உதைக்க வேண்டும் என்று சொல்ல வருகிறேன், அதே சமயம் கேரளத்து உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இங்குள்ள எவனாவது பேசினால் அவனை உதைப்பதற்கும் கண்டிப்பதற்கும் அவர்களுக்கும் உரிமை உண்டு என்பது அடியேனின் கருத்து, நீங்கள் சொல்லுங்கள் ஜெயராமை உதைக்க வேண்டுமா இல்லையா?//

          ஜெயராமை உதைக்க வேண்டும் என்பதற்கு முன்னால் ஜெயராம் யார்? தமிழனா, மலையாளியா? அவர் தனது தாய்மொழி தமிழென்று கூறுகிறார். உங்கள் விருப்பப்படி அவர் மலையாளி என்றே வைத்துக்கொண்டாலும் அது ஜெயராம் என்ற தனிநபரின் கருத்தா? இல்லை மலையாளிகளின் பிரதிநிதி என்ற கருத்தா? ஜெயராம் மலையாளிகளின் பிரதிநிதி என்றால் அந்தத் தகுதியை யார் கொடுத்த்து? அடுத்து ஜெயராமை உதைக்க வேண்டுமென்றால் அது யார் உதைக்கப்போகிறார்கள்? அவர்கள் தனிநபராக உதைக்கவேண்டுமா? இல்லை தமிழர்களின் தன்மானம் காக்க வந்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக உதைக்க வேண்டுமா? அந்த உதை நபர் தமிழர்களின் பிரதிநிதி என்ற தகுதியை யார் கொடுத்த்து? தமிழ் மக்கள் அப்படி கொடுத்திருக்கிறார்களா?

          இங்கு கேரள உழைக்கும் மக்களை இழிவு படுத்திப்பேசினால் அவனை உதைப்பதற்கு கேரள மக்களுக்கு உரிமை உண்டு என்கீறீர்கள். அப்படி கேரள மக்கள் உதைக்கும்போது சகதமிழன் அடிபடுவதைக் கண்டு சகதமிழர்கள் பொங்கி எழுவார்களே? எப்படி எழக்கூடாது என்று எப்படி உத்தரவு போடுவது? எண்ணிக்கையில் பார்த்தால் கேரளாவைவிட தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகம். இப்படி அதிகமான தமிழர்கள் மலையாளிகளை தாக்க வந்தால் குறைவாக இருக்கும் மலையாளிகள் என்ன செய்வது? உதவிக்காக அமெரிக்காவிடம் செல்ல்லாமா, இல்லை கன்னடம், சிங்களம் என்று அருகாமை மக்களிடம் உதவி கோரலாமா?

          Posted on 12-Feb-10 at 1:53 pm | Permalink
        • கற்பவன்

          //ஜெயராமை உதைக்க வேண்டும் என்பதற்கு முன்னால் ஜெயராம் யார்? தமிழனா, மலையாளியா?அவர் தனது தாய்மொழி தமிழென்று கூறுகிறார். உங்கள் விருப்பப்படி அவர் மலையாளி என்றே வைத்துக்கொண்டாலும் ?//

          அவருடைய தாய் கும்பகோணத்தை சேர்ந்தவர், தந்தை பாலக்காட்டை சேர்ந்தவர், வளர்ந்தது முழுக்க கேரளத்தில்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் அவருடைய குடும்பம் வளசரவாக்கம் குடிவந்தது, இந்த தகவல் சில நாட்களுக்கு முன்பாக விஜய் டி.வியில் ஒரு பேட்டியில் ஜெயராம் கூறியது. பேட்டி கண்டவர் ம.க.இ.க மேடையில் முழங்கிய ‘பெயரியல் & ராசிக் கல்’ புகழ் பெரியார்தாசன். அந்த பேட்டி கூட மலையாளி தமிழர் உரையாடலாக தற்செயலாக அமைந்திருந்தது எனவேதான் அந்த பேட்டியை முழுமையாக கவனித்து பார்க்க நேர்ந்தது. தான் பாதி மலையாளி பாதி தமிழன் என்று கூறியவுடன் பெரியார்தாசன் சிரித்துக் கொண்டே கிண்டல் செய்யும் தொனியில் அங்க படம் வரும்போது மலையாளின்னு சொல்லுவீங்க, இங்க படம் வரும் போது மேடையில தமிழன்னு சொல்லுவீங்க என்றார், அப்படித்தான் என்பது போல ஜெயராம் சிரித்தார். எனினும் தான் வளர்ந்தது முழுக்க பாலக்காடு என்ற முறையில் தான் ஒரு மலையாளி என்றே குறிப்பிட்டார். அந்த பேட்டியில் பெரியார்தாசனோடு சேர்ந்து கேள்வி எழுப்பிய டெல்லி கணேஷ் முட்டாள்தனமாக ஜெயராமை கிண்டல் செய்வதாக நினைத்து கொண்டு அது என்ன மலையாளிகள் மட்டும் தனி இங்கிலீஷ் பேசுகிறீர்கள் ‘கோஃபி, ‘ஓஃபீஸ்’ என்று கேட்க போக உடனே ஜெயராம் நீங்களும்தான் பேசுகிறீர்கள் ‘காப்பி’, ஆபீசு’ என்று கிண்டல் செய்தார், உடனே பெரியார்தாசன் கொஞ்சம் சுதாரித்தவராக நாங்க பேசுற இங்கிலீஷ் ‘ஆங்கிலோ சாக்சன்’ உச்சரிப்பு கொண்டது என்று ஏதோ சொன்னார். அந்த பேட்டியில் நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல தமிழ் சினிமா சேச்சிகளை காட்டும் விதம், டீக்கடை நாயாராக காட்டுவது என்று பலவற்றை சொல்லி குறைப்பட்டுக் கொண்டார் ஜெயராம். சரி, ஒரு சாதாரண பேட்டியில் வெளிப்பட்ட இவ்விசயங்கள் ஜெயராம் மலையாளியா? தமிழரா என்று மதிப்பிடுவதற்கு போதுமானது என்று கருதுகிறேன். எனவே என்னுடைய ‘விருப்பப்படி’ ஜெயராமை நீங்கள் மலையாளி என்று கொள்ள வேண்டியதில்லை. எதார்த்தம் எதுவோ அதையே கொள்ளுங்கள்.

          //அது ஜெயராம் என்ற தனிநபரின் கருத்தா? இல்லை மலையாளிகளின் பிரதிநிதி என்ற கருத்தா? ஜெயராம் மலையாளிகளின் பிரதிநிதி என்றால் அந்தத் தகுதியை யார் கொடுத்த்து? அடுத்து ஜெயராமை உதைக்க வேண்டுமென்றால் அது யார் உதைக்கப்போகிறார்கள்? அவர்கள் தனிநபராக உதைக்கவேண்டுமா? இல்லை தமிழர்களின் தன்மானம் காக்க வந்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக உதைக்க வேண்டுமா? அந்த உதை நபர் தமிழர்களின் பிரதிநிதி என்ற தகுதியை யார் கொடுத்த்து? தமிழ் மக்கள் அப்படி கொடுத்திருக்கிறார்களா?//

          ஜெயராமின் கருத்து மலையாளிகளால் விரும்பி நேசிக்கப்படும் ஒரு நடிகரின் கருத்து. அது திமிர் பிடித்த தறுதலை ஒன்றின் தனிப்பட்ட கருத்தெனினும் பொது தளத்தில் அது முன்வைக்கப்படும் பொழுது அதற்கு தகுந்த முறையில் எதிர்வினையாற்றப்படவேண்டுமா இல்லையா?

          //இங்கு கேரள உழைக்கும் மக்களை இழிவு படுத்திப்பேசினால் அவனை உதைப்பதற்கு கேரள மக்களுக்கு உரிமை உண்டு என்கீறீர்கள். அப்படி கேரள மக்கள் உதைக்கும்போது சகதமிழன் அடிபடுவதைக் கண்டு சகதமிழர்கள் பொங்கி எழுவார்களே? எப்படி எழக்கூடாது என்று எப்படி உத்தரவு போடுவது? எண்ணிக்கையில் பார்த்தால் கேரளாவைவிட தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகம். இப்படி அதிகமான தமிழர்கள் மலையாளிகளை தாக்க வந்தால் குறைவாக இருக்கும் மலையாளிகள் என்ன செய்வது? உதவிக்காக அமெரிக்காவிடம் செல்ல்லாமா, இல்லை கன்னடம், சிங்களம் என்று அருகாமை மக்களிடம் உதவி கோரலாமா?//

          உதைப்பது என்றால் படை நடத்தி வந்தோ அல்லது வண்டி கட்டிக் கொண்டோ வந்தா உதைப்பார்கள். கேரள மக்கள் அனைவரும் ஒரு சேர திரண்டு வந்து ஒண்டிக் ஒண்டி நின்று, கடைசியில் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் தமிழர்கள் ஜெயிப்பதற்கு இது என்ன மனோகர் காலத்து நாடகமா? போங்க பாஸ் நீங்க ரொம்ப காமெடி பன்றீங்க,

          Posted on 12-Feb-10 at 2:49 pm | Permalink
        • நெத்தியடி முஹம்மத்

          ///ஜெயராமின் கருத்து மலையாளிகளால் விரும்பி நேசிக்கப்படும் ஒரு நடிகரின் கருத்து. அது திமிர் பிடித்த தறுதலை ஒன்றின் தனிப்பட்ட கருத்தெனினும் பொது தளத்தில் அது முன்வைக்கப்படும் பொழுது அதற்கு தகுந்த முறையில் எதிர்வினையாற்றப்படவேண்டுமா இல்லையா?///—-கண்டிப்பாக வேண்டும்.

          எழுத்தால், நாவால், கரத்தால் தம் கண்டனத்தை தமிழர்கள் தெரிவிக்கிறார்கள். கரத்தால் கண்டனம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், வினவின் எதிரிகள். ஆக, வினவு, வழக்கம்போல எழுத்தால் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, கண்டனம் தெரிவிக்கவேண்டியவர்களை அதற்கு அருகதையற்றவர்கள் என்று தம் பதிவால் நையப்புடைத்துள்ளார். வினவுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயராம் எவ்வளவோ மேல் போல ஆகிவிட்டது இப்போது….

          Posted on 12-Feb-10 at 3:22 pm | Permalink
        • கேள்விக்குறி

          நெத்தியடி தமிழக மக்களால் விரும்பி நேசிக்கப்பட்ட முத்துக்குமாரை கோழை என்றும் பயித்தியம் என்று சொன்ன உங்கள் வாய் இப்போது ஜெயராமுக்கு எதிராய் வினை செய்யப் பேசுகிறது, பேசட்டும், ஆனால் உங்கள் உளரல்களை சீரியசாக எடுத்துக்கொண்டால் தமிழர்களை இழிவு படுத்திமைக்க்காக உங்கள் வாயிலும் கூட பெட்ரோல் குண்டு வீசலாம், எதர்க்கும் சீமானுக்கு உங்கள் விலாசத்தை அனுப்பி வையுங்கள். ஆட்டோ அனுப்புவார்

          Posted on 12-Feb-10 at 3:57 pm | Permalink
        • நெத்தியடி முஹம்மத்

          //கோழை என்றும் பயித்தியம் என்று சொன்ன உங்கள் வாய்//

          நிரூபிக்க வேண்டும்….

          Posted on 12-Feb-10 at 4:32 pm | Permalink
        • கேள்விக்குறி

          எதர்காக இந்த ஆதாரம் கேட்கும் நாடகம் ……கூர்ந்து முத்துக்குமார் மன்னித்து விடு கட்டுரையின் ஒத்துவராத மறுமொழிகள் பகுதியை பாருங்கள். உங்கள் ‘சகோதரர்’ ஷாஜஹானின் உளரல்களும் அதையெல்லாம் தொகுத்து நீங்கள் வெளியிட்ட மலரும். அப்படியேத்தானே இருக்கின்றன.. அது உங்களுக்கு தெரியாதா?

          Posted on 12-Feb-10 at 4:57 pm | Permalink
        • கேள்விக்குறி

          முத்துக்குமார் கோழை என்ற உங்கள் பழைய கருத்தை நீங்கள் மாற்றிக்கொண்டிருந்தால் ””முத்துக்குமார் தமிழரின் வீரத்தியாகி”” என்று இந்த பின்னூட்டத்தில் பதிலளித்தால், உங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு எனது பின்னூட்டத்தை நீங்கசெசொல்லி வினவுக்கு கடுதாசி போட நான் தயார். நீங்கள் தயாரா???

          Posted on 12-Feb-10 at 4:59 pm | Permalink
        • நெத்தியடி முஹம்மத்

          —-அப்படியா, ரொம்ப நல்லதாய்ப்போச்சு, போய் பார்த்துவிட்டு வந்து நிரூபிக்கவும். இல்லையேல், இனி இங்கு பின்னூட்டமே போடா வரக்கூடாது, உலகமகா பொய்யரே…

          பொய் சொன்னதுக்கு முதலில் என்னிடம் நீங்கள் மன்னிப்பு கேட்கத்தயாரா?

          Posted on 12-Feb-10 at 5:08 pm | Permalink
        • கேள்விக்குறி

          நெத்தியடி, கண் பார்வை கோளாரா… அதான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே
          முத்துக்குமார் கோழை என்ற உங்கள் பழைய கருத்தை நீங்கள் மாற்றிக்கொண்டிருந்தால் ””முத்துக்குமார் தமிழரின் வீரத்தியாகி”” என்று இந்த பின்னூட்டத்தில் பதிலளித்தால், உங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு எனது பின்னூட்டத்தை நீங்கசெசொல்லி வினவுக்கு கடுதாசி போட நான் தயார். நீங்கள் தயாரா??? தயாரா???? தயாரா?????

          Posted on 12-Feb-10 at 7:07 pm | Permalink
        • நெத்தியடி முஹம்மத்

          ஜெயராம் சொன்னதை எதிர்த்து ‘உங்கள் எதிரி’ சீமான், தீக்குளித்து தற்கொலை செய்திருந்தால் ””சீமான் தமிழரின் வீரத்தியாகி”” என்று நீங்கள்/வினவு ஒத்துக்கொள்வீர்கள். தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவீர்கள். ஆனால், அச்செயலை நான் எதிர்ப்பேன்.

          அப்பட்டமாய் என்மீது பொய் சொன்ன வாய் இன்னும் தன் பொய்யை பொய் என்று ஒத்துக்கொள்ளவே இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.

          மனிதன் என்றால் கொஞ்சமாவது…….

          Posted on 12-Feb-10 at 8:28 pm | Permalink
        • mani

          நிரையை ஒட்டி போங்க பாய்

          Posted on 12-Feb-10 at 8:39 pm | Permalink
        • கேள்விக்குறி

          நெத்தியடி, உடைத்து சொல்லுங்க முத்துகுமார் தியாகியா இல்லையா. நான் தியாகி என்று சொல்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?????

          Posted on 12-Feb-10 at 8:43 pm | Permalink
        • நெத்தியடி முஹம்மத்

          //கோழை என்றும் பயித்தியம் என்று சொன்ன உங்கள் வாய்//
          —-சொன்னவர் யார்…?

          Posted on 12-Feb-10 at 8:44 pm | Permalink
        • கேள்விக்குறி

          நெத்தியடி நீங்க முத்துக்குமாரை தியாகின்னு ஒத்துகிட்டா இந்த கீபோர்ட உங்க காலாய் நெனச்சு தொட்டு மன்னிப்பு கேக்க நான் ரெடி? நீங்கதான் ஒத்துக்க மாட்டேங்கறீங்க அதான் ஏன்னு புரியல??????

          Posted on 12-Feb-10 at 8:47 pm | Permalink
        • காளமேகம்

          நெத்தியடிபாய், தம்பி கேள்விக்குறி எவ்வளவு ஞாயமா மல்லுக்கட்டுது, உங்க வாயால முத்துக்குமார தியாகின்னு சொல்லி ஆட்டத்த நல்ல படியா முடிச்சுக்கிடுங்க, நாங்க எல்லாரும் ஆசைப்படுதோம்லா

          Posted on 12-Feb-10 at 9:13 pm | Permalink
        • நெத்தியடி முஹம்மத்

          என்னா அண்ணாச்சி….
          ///ஜெயராம் சொன்னதை எதிர்த்து ‘உங்கள் எதிரி’ சீமான், தீக்குளித்து தற்கொலை செய்திருந்தால் ””சீமான் தமிழரின் வீரத்தியாகி”” என்று நீங்கள்/வினவு ஒத்துக்கொள்வீர்கள். தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவீர்கள். ஆனால், அச்செயலை நான் எதிர்ப்பேன்///
          —- உங்களுக்குமா நான் சொல்வது புரியவில்லை…

          உங்க பொய்யன் தம்பி, தன் லூஸ்டாக் பொய்யை மறைக்க ஏதோ உளறிக்கொட்டுறார்ணா நீங்களுமா…

          Posted on 12-Feb-10 at 9:58 pm | Permalink
        • கேள்விக்குறி

          ஜனங்களே ஈழத்தமிழனுக்காக தீக்குளிச்ச முத்துக்குமார தியாகின்னு சொல்ல இந்த நெத்தியடி முஹம்மதுவுக்கு வாய் வரல அதெல்லாம் ஏன்னு கேக்க மாட்டீங்களா????? இதுதான் நீங்க முத்துக்குமாருக்கு செய்யும் மரியாதையா?????

          Posted on 12-Feb-10 at 10:23 pm | Permalink
        • கேள்விக்குறி

          நெத்தியடி, முத்துக்குமார நீங்க தியாகின்னு சொல்லி நான் உங்கள பத்தி சொன்னது பொய்யென நிரூபியுங்களேன் .. என்ன தயக்கம்???

          Posted on 12-Feb-10 at 10:49 pm | Permalink
        • கேள்விக்குறி

          ‘ முத்துக்குமார் ஒரு தியாகி’ மூன்றே வார்த்தை சொல்லுங்கள் …அது போதும் பாய் அது போதும்..

          Posted on 12-Feb-10 at 10:52 pm | Permalink
        • ஈழப்போராட்ட்த்தின் பாரிய பின்னடைவுக்குப் பிறகு, புதிய ஜனநாயகத்தின் ”வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை” என்கிற வெளியீட்டையும் புதிய கலாச்சாரத்தின் ”தமிழனென்று சொல்லடா வர்க்க உணர்வு கொள்ளடா” – எனும் அருமையானதொரு கட்டுரையையும் தொடர்ந்து தமிழினவாத வெற்றுக் கவர்ச்சியில் மூழ்கிக்கிடக்கும் ஒரு சில இளைஞர்கள் தெளிவு பெறுவதற்கும், அவர்கள் பரிசீலித்து மீள்வதற்கும், இனவாத உணர்வை வர்க்க உணர்வாக்கி சரியான வழியில் செல்வதற்கும் அரசியல் ரீதியில் வழிகாட்டும் மற்றுமொரு கட்டுரை இது. முதற்கண் எனது பாராட்டுக்களை வினவு தோழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

          இதில் பேசுபொருளாக சினிமாக்கழிசடைகள் ஜெயராமும் விவேக்கும் சீமானும் ஆகிப்போனது, இனவாதப்பார்வைக்கும் வர்க்கப்பார்வைக்கும் இடையிலுள்ள பாரிய வேறுபாடுகளையும் வர்க்கப்பார்வையின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்வதற்கு பெரிதும் உதவியுள்ளது. அந்தவகையில் இந்த ’மாபெரும் மக்கள் பிரச்சினை’யை முன்னெடுத்த ’பச்சைத் தமிழர்’களுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். இங்கு வந்து சண்டபிரசண்ட்த்தில் இறங்கியிருக்கும் தமிழினவாத நண்பர்கள் கட்டுரையின் மையப்பொருள் குறித்த முறையான மறுப்பேதும் பதியாமல் இருப்பது அவர்களின் அரசியல் முன்னோடிகள் அவர்களுக்கு கற்றுத்தந்த பாடமகும். அறிவு நாணயம் ’மிக்க’ பெ.மணியரசன் முதல் விடுதலை ராசேந்திரன் வரை உள்ள அனைவரது அனுகுமுறையும் இங்கு கருத்து பதிந்து கொண்டிருக்கும் தமிழினவாதிகளின் அனுகுமுறையைவிட எந்த வகையிலும் மேலானது அல்ல.

          நமது ஆணித்தரமான வாதங்களுக்கு நேர்மையான பதிலைப் பதியமுடியாமல் பல்லிளிக்கும் நிலையில் தமிழினவாதிகள் கைக்கொள்ளும் ‘பேராயுதம்’ ம.க.இ.க.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டுவதுதான். சரி பிறருக்கு பார்ப்பன பட்டம் சூட்டுகின்ற அளவுக்கு இவர்களது அன்றாட அரசியல் என்ன பார்ப்பன எதிரிப்பில் கோலோச்சுகின்றதா என்று ஆராய்ந்தால் வெறும் வருத்தம் தான் மிஞ்சுகிறது. இதில் பெ.தி.க.வைக்கூட சற்று ஒதுக்கி வைப்போம். திருவாளர் மணியரசனின் பார்ப்பன எதிர்ப்பு அரசியலைக் கொஞ்சம் கவனித்தால் நமக்குப் புல்லரிக்கிறது.

          நமது வாசகர்கள் அறிந்த தில்லைப்போராட்டம் குறித்து அதிகம் விளக்கத் தேவையில்லை. சிவனடியார் ஆறுமுகசாமி என்ற தமிழன் பாடக்கூடாது என்கிற சாதித்தீண்டாமைக்கு எராகவும், குறிப்பாக தமிழ்பாடக்கூடாது என்கிற மொழித்தீண்டாமைக்கு எதிராகவும் ம.க.இ.க., உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள் நட்த்திக் கொண்டிருக்கும் போராட்டமும் தொடர் வெற்றிகளும்கூட அனைவரும் அறிந்த்தே. இதில் விஷயம் என்ன வென்றால், தீட்சிதபார்ப்பன ரவுடிகளை அம்பலப்படுத்தி தில்லை வீதிகளில் எமது தோழர்கள் பிரச்சார இயக்கம் நட்த்திக்கொண்டிருந்தபோது, அதே தில்லையின் மற்றொரு வீதியில், நமது தமிழினப்போராளி மணியரசனின் த.தே.பொ.கட்சியின் தமிழ்க்காப்பணியின் சார்ப்பாக சேக்கிழார் செந்தமிழ் விழா அதே தில்லைத் தீட்சிதப்பார்பன பொறுக்கிகளின் ஆசியுரை மற்றும் அருளுரையுடன் ’இனிதே’ நடைபெற்றது. இதனைக் கண்டித்து எமது தோழர்கள் அதே அரங்கத்தினுள் சென்று அவர்களை அம்பலப்படுத்தி துண்ட்றிக்கை விநியோகித்தார்கள். இந்த பார்ப்பன பாதந்தாங்கிகள்தான் இவர்களது சந்தர்ப்பவாத போக்கை நாம் விமர்சிக்கும் போது நமக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, மடைமாற்றிவிட்த் துடிக்கிறார்கள்.

          நமது விமர்சன்ங்கள் ம.க.இ.க.வின் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து எழுதப்படுவதை அனைத்திலும் பார்க்கலாம். அது அறிவிக்கப்பட்ட ஒன்று. ஆனால், இங்கு எதிர்கருத்துக்களைப் பதிந்துவரும் தமிழ்னவாத நண்பர்கள் அமைப்புச் சார்பற்றவர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்வதன் மூலம், அவர்களது அரசியலை நாம் நெருக்கிப்பிடித்து அம்பலப்படுத்துவதிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். எனினும் தமிழ்னவாதிகள் பல்வேறு அமைப்புகளாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் கண்டிக்காமலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இணைந்தும் இருப்பதனால் அவர்களை ஓரணியாகவே நாம் கருதிக்கொள்ளலாம். பார்ப்பன பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவான கருத்தைக் கொண்டிருக்கும் தமிழினவாதியான பழ.நெடுமாறனை பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொள்கின்ற சீமான் முதல் பெரியாரின் அரசியல் வாரிசாகத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் பெ.தி.க.தலைவர்கள் வரை எவரும் புறக்கனிப்பது கிடையாது. என்ன இருந்தாலும் தமிழினம் விடுதலை பெறவேண்டுமென்றால் சற்று நெளிவு சுளிவுகளோடு நடந்துகொள்ள வேண்டியது அவசியமில்லையா! அதற்காக்க் கொஞ்சம் ’பகுத்தறிவு’டன் பார்ப்பனியத்தை அனுசரித்து நடந்துகொள்ளுதலும் கூட அவசியம்தானே!!

          அதேபோல ஆதிக்க சாதிவெறியன் முத்துராமலிங்கத்தின் ‘குருபூஜை’க்கு சென்று வரும் சீமானை வேறெந்த தமிழினவாத அமைப்பும் கண்டிப்பது கிடையாது. ஒரு பேச்சுக்குக்கூட, இன உணர்வுள்ளவனாக தமிழன் திரட்டப்படுவதற்கே சாதியும் மதமும் பெருந்தடையாக இருக்கும்போது, சாதி-மத அடையாளங்களுக்கு எதிராக்க் கடுமையாகப் போராட வேண்டிய கடமையையாவது உணர்ந்து செயல்படவேண்டுமல்லவா? ஒரு ஆதிக்க சாதிச் சார்புள்ளவன் எப்படி அனைத்து சாதித் தமிழனையும் ஒருங்கிணைத்து இனவிடுதலைக்காக போராட முடியும்? சீமானுக்குள் இருக்கும் ஆதிக்க சாதிச் சார்புக்கும், மணியரசன் அணியினரின் பார்ப்பன சார்புத் தன்மைக்கும், தமிழினப் பற்றுக்கும் உள்ள ஒற்றுமை காத தூரமல்லவா! இது ஜெயாமாமிக்கும் ஈழத்திற்கும் உள்ள ’ஒற்றுமை’யைப் போன்ற மோசடியாக அல்லவா தோன்றுகிறது!!

          எனவே, ஆதிக்க சாதி-மத-வர்க்க சார்புடைய தமிழ்னவாதிகள் மக்கள் விடுதலையைப் பெற்றுத்தருவார்கள் என்பது கானல்நீர்தான் என்பதில் அய்யமில்லை. இப்போதைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் காலத்தில், தமிழினவாதம் காலாவதியாகிக் கொண்டிருக்கும் அந்திமக்காலத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. அது இவ்வளவுநாள் குற்றுயிரும் கொலையுயிருமாக நீடித்துக் கொண்டிருந்த்தற்கு ஈழப்போராட்டம் ஒரு காரணமாக இருந்த்து. ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்குப் பிறகு, தனது இருத்தலைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் சினிமாக்கழிசடைகளின் உதவாக்கரைப் பேச்சுக்களை ஏதோ தமிழகத்தின் முதன்மையான பிரச்சினைபோல் சித்தரித்து தமது தமிழின உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்கிறது. எனினும் இன்னல்களில் உழலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிரந்தரமானதொரு விடியலை வழங்கவிருக்கும் புரட்சியினை நோக்கிய நமது போராட்டங்களுக்கு இடையூறாக இருக்கின்ற, உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக ஒருங்கிணைப்பதைத் தடைசெய்யத் துடிக்கின்ற இதுபோன்ற இனவெறி அரசியலை நாம் சரியாக அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவோம். தொடர்ந்து போராடுவோம்.

          Posted on 15-Feb-10 at 4:41 pm | Permalink
        • எழில்

          //எனவே, ஆதிக்க சாதி-மத-வர்க்க சார்புடைய தமிழ்னவாதிகள் மக்கள் விடுதலையைப் பெற்றுத்தருவார்கள் என்பது கானல்நீர்தான் //
           சரி அவ்வாறே வைத்துக் கொள்வோம்,நீங்கள் எப்பொழுது புரட்சியை நடத்தி விடுதலையை பெற்று தரப் போகிறீர்கள் ? கடவுளே இல்லை என்று சொல்லும் நீங்கள் கடவுள் வழிபாடு போன்ற உங்களது பார்வையில் ஏகாதி பத்திய கூறுகளில் கவனம் செலுத்திகொண்டிருந்தால் எப்பொழுது முழுமையான உங்களது முன்னோர்கள் செய்த (படுகொலை) புரட்சிகளை நிகழ்த்த போகிறீர்கள் ? ஆந்த்ரா மாதிரி நீங்களும் எப்ப கெளம்பப் போறீங்க ?

          இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டீங்க ஏன்ன “உள்ள ” போக வேண்டி இருக்குமே ? ஆனா பெ.தி.க ,சீமான் ஆட்கள் அதற்கெல்லாம் பயமில்லாம சந்திக்கறாங்க அதுதான் உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு 
          //
          இப்போதைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் காலத்தில், தமிழினவாதம் காலாவதியாகிக் கொண்டிருக்கும் அந்திமக்காலத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. அது இவ்வளவுநாள் குற்றுயிரும் கொலையுயிருமாக நீடித்துக் கொண்டிருந்த்தற்கு ஈழப்போராட்டம் ஒரு காரணமாக இருந்த்து.//

          சரி உலகத்துல எந்த நாட்டுல மார்க்ஸ் கண்ட கம்யுனிசம் உயிரோட இருக்குது 

          முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் நு மார்க்ஸ் சொன்னார் ஆனா அது கம்யுனிசத்துக்கு எப்பவோ குழி வெட்டி,சவபெட்டியில் போட்டு மூடி கடைசி ஆணி யையும் அடிசுருச்சு.

          முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்ட சிக்கல் களிருந்து மீண்டு வந்தது வரும் ஆனா கிழக்கு ஐரோப்பிய கம்யுனிச பேரழிவுக்கு பின் அது புதைக்கப் பட்ட இடத்தில் இன்று மரமே முளைத்தாயிற்று.

          எவ்வளவு அம்பலப் பட்டு போனாலும் நீங்க மன உறுதி மட்டும் இழக்கல நாங்களும் ரௌடி தான்னு வடிவேலு காமெடி பண்ற மாதிரி நாங்களும் கம்யுனிஸ்டுகள் தான் ரொம்பத்தான் காமெடி பண்றீங்க சார் 

          Posted on 15-Feb-10 at 11:47 pm | Permalink
        • ளிமாகோ

          எழில்,

          கிழக்கு ஐரோப்பா எல்லாம் இருக்கட்டும். இங்கன தமிழ் நாட்டுல எல்லா மக்களும் போலி தமிழ் தேசியத்திற்க்கு மங்களம் பாடி, சில வருசம் திதியும் குடுத்து இப்ப மறந்தும் போயிட்டாங்க…

          நீங்க உங்க தமிழ்தேயத்திற்க்காக கவலப்படுங்க…
          கம்யூனிசத்தை நாங்க பாத்துக்கறோம்!

          Posted on 16-Feb-10 at 11:01 am | Permalink
        • எழில்

          அதைத் தான் நாங்களும் சொல்றோம் நீங்க கம்யுனிசத்த பத்தி மட்டும் கவலைப் படுங்க தமிழ் தேசியத்த நாங்க பாத்துக்கறோம்

          Posted on 16-Feb-10 at 3:43 pm | Permalink
        • rajiv

          தமிழர்கள் பொறுமைசாலிகள் என்பது மீண்டும் நிருபிக்கப் பட்டிருகிறது, அதனால் தான், இதைப் போன்ற கட்டுரை உங்களால் எழுத முடிகிறது. தேசிய இன விடுதலை என்று தெளிவான ஒரு கொள்கை கம்னிஸ்ட் கொள்கையில் உண்டே, அதை எப்பொழுதாவது உங்களால் சொல்லமுடிகிறதா ? அந்த உண்மையை சொலமுடியவில்லை. ஏன் என்றால், உங்கள பார்பன தலைமை அதை அனுமதிக்காது. இல்லையா ? பின், எந்த அடிப்படையில் போலி கம்முனிசம் பேச வருகிறீர்கள் ?

          Posted on 16-Feb-10 at 10:53 pm | Permalink
        • புகழேந்தி

          //ஆனா பெ.தி.க ,சீமான் ஆட்கள் அதற்கெல்லாம் பயமில்லாம சந்திக்கறாங்க அதுதான் உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு //ஆமா..ஆமா..பெதிக வோட வீரமும் நேர்மையும் எப்பேர்ப்பட்டது தெரியுமா? மே மாசம் ரெட்ட இலைக்கு ஓட்டுக் கேட்டு வந்தாங்க..தெரூத் தெரூவா..அப்போ ராயப்பேட்டையில் அதிமுக பேச்சாளர்களையூம் மேடையேத்துனாங்க..அவங்களில் –அதாவது மேடையிலே ஏறினவங்களில் ஒருத்தர், பெரியார் திக பெருந்தொண்டர் பத்ரி நாராயணன் கொலையில் சம்பந்தப்பட்டவர்..அவர் துரோகிகளால் கொல்லப்பட்டபோது அந்த அதிமுக காரங்க வீடுகளில் பூந்து அடிச்சவங்க பெதிக தொண்டங்கதான்..அதே கொலைகாரங்களை தங்களது மேடையில் ஏத்தினவங்க பெதிக தலைவருங்க.. இதோடவா..அந்த தேர்தலில் (மே௨௦௦௯) திமுககார ரவுடிங்க..பெதிககாரங்களை அடித்து உதைத்து பெரியார் சிலையையும் சேதப்படுத்தினாங்க..அப்பாவி பெதிக தொண்டருங்க மேல பல பொய்க்கேசுகளைப் போட்டு திமுக அலைக்கழிச்சது..அதே திமுக பொறுப்பாளர்களிடம் மேடை அமைக்க நன்கொடை வாங்கி இப்ப பொங்கல் விழா கொண்டாடுனது தலைமை..விழா முடிஞ்சபிறகு பெதிக தலைவர்கள் அனைவரும் திமுக கவுன்சிலர் துரையோடு டப்பாங்குத்து டான்சு ஆடினாங்க..தெருவே வேடிக்கை பார்த்தது.. அடிபட்டு மிதிபட்டு வந்தது பெதிக தொண்டனுக..அடிச்சவன் கிட்டயே காசுவாங்கி அவனோட குத்துஆட்டம் போடுவது கொள்கைச் சிங்கங்களான தலைமை.. நேர்மையை விட்டுவிடுவோம்..இதில் வீரம் என்று ஏதாவது காட்ட முடியுமா?.. ஈழம், தமிழினம்..எல்லாம்..அப்பப்ப கூலிக்கு மாரடிக்கிறதுக்கு பெதிகவுக்கு தேவை..ஆனா தேவையானப்ப எல்லாம் சமரசமும் கூட்டும் செய்துகொள்வாங்க..கோயமுத்தூரிலயும், உளவுத்துறையிலும் மலையாளி ஆதிக்கம் பார் அப்படிம்பாங்க..ஆனா எம்ஜிஆர் மாதிரி புலிகளுக்கு உதவுனவங்க யாருன்னு போஸ்டர் போடுவாங்க..எம்ஜிஆர் என்ன உகாண்டா இனத்தவரா? இதை எல்லாம் கேட்டோம்னா..மக இக பார்ப்பனத் தலைமை..அப்படிங்கிறது..ஆனா வ.கீதா. அ.மங்கை இவங்களை எல்லாம் புகழ்ந்து எழுதுவது..நேர்மையற்ற சந்தர்ப்பவாதம் இல்லையா இது? வ.கீதா என்ன பழங்குடியினரா? அ.மங்கை என்ன தலித்தா? அப்ப எல்லாம் பிறப்பைக் கணக்கில் எடுக்காம, தங்களை விமர்சனம் செய்யும்போது மட்டும் பிறப்பை அளவுகோலாகத் தூக்கிக் கொண்டு அலையிறது..முதலில் கம்யூனிஸ்டுகளை / ம க இ க வை விமர்சிக்கிறது இருக்கட்டும்.. பெதிகவின் திட்டம் என்று ஏதாவது இருக்குதா? தேசிய இன விடுதலைக்கு அதூ வைத்திருக்கும் திட்டம் என்ன?
          புகழேந்தி.

          Posted on 16-Feb-10 at 12:31 pm | Permalink
        • mani

          புரட்சி பற்றிய உங்களது கருத்துக்களை லாஜிக் ஆனது என்றே வைத்துக் கொள்வோம். புரட்சி என்பது லாஜிக் இல்லாத நடைமுறை என்பது உங்களது கருத்து என்றால் அதனை நேர்முறையில் தெரிவிக்கலாமே.. அதுலயும் குழப்பமா

          உள்ள போகிறதுக்கு பயம் அப்படிங்கிறத நீங்க கம்யூனிஸ்டுகள்ட பேசிக்கிட்டு இருக்கீங்க• உங்களுக்கெல்லாம் கருணாநிதி வந்த பிறகுதான் தைரியம் வந்திருக்குன்னு உங்களுக்கு தெரியுமா.. 91 மே 21 ல் நீங்க எல்லாம் எங்க ஒளிந்திருந்தீர்கள் என நீங்கள்தான் சொல்ல வேண்டும். அதுக்கு எத்தனை எத்தனை என்எஸ் ஏக்கள் என்றெல்லாம் கணக்கே கிடையாது. அதுதான் தைரியம்.

          பெதிக பற்றி எல்லாம் பேசுவது கொஞ்சம் தேவையில்லாத வேலைதான். அவங்க 91-96 வரையில் ஜெயா ஆதரித்த வீரமணியுடன் இருந்தவர்கள். அந்த நேரத்தில் ஈழம்னு சொன்னாலே அம்மா தடா போடும். அப்பல்லாம் கம்னு இருந்துட்டு ஜெயிக்கிற கட்சி கூட கூட்டணி வைக்க மாட்டேனுட்டாருன்னு காரணம் சொல்லிட்டு வீரமணிட்ட இருந்து லாஜிக் ஆன பெரியாரி ய கொள்கையுடன் பிரிந்தவர்கள். அவங்க தைரியத்த வளர்ப்புமகன் கல்யாணத்துலயே பாத்திருக்கலாம்.

          தமிழின உணர்வு கொஞ்சம் மக்களிடம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு தேவர் தேசியம் தேடுகின்ற சீமானின் தைரியம் பழைய ஜெயா ஆட்சியில் எங்கே போயிருந்த்து. குறிப்பாக முதல் (91-96) ஆட்சியில் என்பதை முதலில் அவரிடம் கேளுங்கள்.

          மக்களின் உணர்ச்சிகளுக்கு வால்பிடிப்பதை விட மக்களின் விடுதலைக்கான தேதி குறிக்கப்படாத புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவதைத்தான் தோழர்கள் செய்துவருகிறார்கள். திட்டமிட்ட வேலைப்பாணி இல்லாதவர்கள் எப்போதும் உள்ளே போவதில் உள்ள வீரத்தை மாத்திரமே உச்சிமோந்து கொண்டிருக்கலாம். கம்யூனிசுட்டுகளுக்கு அது சாத்தியமில்லை எனக்கருதுகிறேன்.

          கம்யூனிசம் என்ற சமூக அமைப்பு இதுவரை உலகத்தில் தோன்றவில்லை. இந்த எளிய உண்மை வெறும் உணர்ச்சிகளை மாத்திரமே நம்பி அதற்கு கொள்கை உருவம் கொடுப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் புரிந்து விடாது. முதலாளித்துவம் தானே மீண்டுவரும் என்பது இதோ ஈழம் அதோ இந்திய ஆதரவில்லாமல் ஈழம் என்று பேசிய பழம்பெருமையை ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்ச சமகால பொருளாதார அறிவு உடைய எவரும் இதனை ஒத்துக்கொள்ள முடியாத போது தாங்கள் எந்த முறையில் இதனை வந்தடைந்தீர்கள் என லாஜிக் ஆக விளக்க முடியுமா.. அதே போல கம்யூனிசம் ஏன் தோற்றே தீர வேண்டும் என்பதையும் லாஜிக் உடன் விளக்க முடியுமா… இதற்கான அடிப்படை விசயங்கள் தெரியாவிட்டாலும் உதவ தயாராக இருக்குறேன்.

          முடிந்தால் வடிவேல் காமடி அளவிற்கு நாங்களும் கம்யூனிஸ்டுகள் என்று அவர்கள் சொல்வது எந்த அடிப்படையில் நீங்கள் முடிவுசெய்தீர்கள் என விளக்கினால் நிரலாளர்களின் லாஜிக் ஐ புரிந்து கொள்ள முடியும்

          Posted on 16-Feb-10 at 12:32 pm | Permalink
        • நெத்தியடி முஹம்மத்

          ///கம்யூனிசம் ஏன் தோற்றே தீர வேண்டும் என்பதையும் லாஜிக் உடன் விளக்க முடியுமா… ///….லாஜிக்குடன் விளக்கப்பட்டிருக்கிறது இங்கே…. முடிந்தால், படித்துவிட்டு ஆதாரத்துடன் மறுக்கலாமே…
          http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html

          Posted on 16-Feb-10 at 1:47 pm | Permalink
        • mani

          பார்ப்பன இந்துமத வெறியன் + முசுலீம் அடிப்படை வாதி = தமிழ் தேசியவாதி

          Posted on 17-Feb-10 at 12:18 pm | Permalink
        • கலை

          கம்யூனிசத்தை மறுக்கும் நீங்கள் எதனை முன்வைக்கிறீர்கள் அதன் தத்துவத்தை, அதன் கொள்கைகளை, அதன் பொருளாதார திட்டங்களை மக்களிடையே வெளிப்படையாக விளக்கி ஒட்டுமொத்த மக்களையும் உங்களால் அணிதிரட்ட முடியுமா?

          Posted on 18-Feb-10 at 10:08 am | Permalink
        • Corporal Zero

          “முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் நு மார்க்ஸ் சொன்னார் ஆனா அது கம்யுனிசத்துக்கு எப்பவோ குழி வெட்டி,சவபெட்டியில் போட்டு மூடி கடைசி ஆணி யையும் அடிசுருச்சு.”

          அப்படின்னா நம்ம இந்திய எசமானருங்க நேபாளத்தில போயி என் இம்சை பண்ணறாங்க?
          America Castroவே கவுக்க முடியமே திண்டாடுதே! என்?

          பூனே கண்ணே முடிக் கொண்டா பூலோகம் இருண்டு போவுமா மியா மியா, எழில் மியா.

          Posted on 16-Feb-10 at 5:09 pm | Permalink
        • எழில்

          நேபாளத்துல இந்திய,சீன அரசுகளுக்கு தேவை ஒரு பொம்மை ஆட்சி.மன்னன் இந்திய கைக்கூலியாகவும் மாவோயிஸ்டுகள் சீன கைக்கூலியாகவும் இருக்கிறார்கள் இது தான் அங்க பிரச்சினை.பனிப் போருக்கு பின்னாடி காஸ்ட்ரோவ எல்லாம் யாரும் கண்டுக்கறதே இல்ல.ஏன்ன அவரால பயனடைஞ்ச சோவியத் ஒன்றியம் செத்து போச்சு பூனை கண்ண மூடினாலும் உலகம் இருளும் கம்யுனிஸ்டுகள் கண்ணை முடிக் கொண்டாலும் இருளுமே அண்ணே 

          Posted on 16-Feb-10 at 10:41 pm | Permalink
        • வினவு

          எழில், உங்களுக்கு வரலாறு, அரசியல், நாட்டுநடப்பு எதுவும் போதுமான அளவுக்குத் தெரியவில்லை. உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால் அவற்றை கற்று தருவதற்கு எங்களுக்கு பிரச்சினையில்லை. உங்கள் மேல் உள்ள அக்கறையால் இதை எழுதுகிறோம். வினவோடு தொடர்புகொள்ளுங்கள்.(91) 97100 82506 அல்லது vinavu@gmail.com

          Posted on 17-Feb-10 at 10:58 pm | Permalink
        • கேள்விக்குறி

          நெத்தியடி, முத்துக்குமாரை தியாகி என்று சொல்ல உங்களுக்கு கூச்சமாயிருந்தால் உங்கள் சகோதரர் ஷாஜஹானையோ அல்லது தலைவர் பீ. ஜைனுல் ஆபிதீன் (பி.ஜே?) கூட சொல்லச்சொல்ல்லாம் இல்லையெனில் ஆன்லைன் பி.ஜே இணையத்தளத்தில் ‘முத்துக்குமார் ஒரு தியாகி’ என்று ஒரு அறிவிப்பு கூட போடலாம். உங்கள் இஷ்டம் பாய்

          Posted on 12-Feb-10 at 10:55 pm | Permalink
        • வில்லவன்

          கற்பவன்,

          நானும் உங்களை மாதிரித்தான், இந்த சர்வதேசியவாதிகளின் அணுகுமுறையால் நொந்துபோய் வெளியே வந்து (சத்தியமாக அரசியல் காரணமாகத்தான் சொந்தப் பிரச்சனைக்காக வெளியேறவில்லை), தற்போது சதாசர்வகாலமும் இத்தமிழ்ச் சமூகத்தை எப்படிக் கடைத் தேற்றுவது என சிந்தித்தும், படித்தும் வருகிறேன். இழவு, எனது தேடலில் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் அமைப்பது எப்படி என்றும், தனித் தமிழ்நாட்டுப் புரட்சியை எப்படிச் செய்வது என்றும், இந்த மர மண்டைக்கு எட்ட மாட்டேன் என்கிறது. உங்களுடைய ஆராய்ச்சியைச் சீக்கிரம் முடித்து என் போன்றவர்களின்எதிர்பார்ப்பை உடனே பூர்த்தி செய்யுங்கள். இடையில் ஏதாவது கண்டுபிடித்தீர்களானால் தயவு செய்து கீழ்கண்ட எனது முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

          இங்கணம்
          இந்த உலகத்தில் தமிழ்ச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, எதற்கும் சமரசம் செய்யாமல் போராடக் காத்திருக்கும் உங்களைப் போன்றதொரு பச்சைத் தமிழன்.
          odiponavan@gmail.com

          Posted on 14-Feb-10 at 4:22 pm | Permalink
        • அய்யா வில்லவன் அவர்களே!

          உங்களது பெயரையும் பின்னூட்டக்கருத்தையும் பார்த்தவுடன் சட்டென எனது முந்தைய நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்து தொலைக்கிறார். காதலிக்காகவும் அற்ப விஷயங்களுக்காகவும் தமது அரசியலையே பலிகொடுத்த அந்த நண்பரின் நினைவு ஏனோ வந்து செல்கிறது.

          என்னதான் அற்புதமான தோழராக அவர் இருந்திருந்தாலும் அரசியல் அரிச்சுவடிகளில் அவரும் ஒரு ‘கற்பவன்’தான் என்பதை நான் இப்பதிவின் பின்னூட்டங்களினூடாகத் தெரிந்துகொண்டேன்.

          பொதுவாக சமூகப் பொறுப்புமிக்க புரட்சிகர அரசியலில் சமரசமற்று நீடித்து செயல்படுவதற்காக தோழர்கள் ஒவ்வொருவரும் இழந்தது ஏராளம். ஆனால், எந்த சூழ்நிலையிலும் தமது அரசியலை இழப்பீடாக வைக்க அவர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். அற்ப காரணங்களுக்காக அரசியலைக் கைவிட்டதும், சந்தர்ப்ப வாதக் கருத்துக்களைக் கைக்கொண்டதையும் நினைத்தால் அருவெறுக்கத் தோன்றுகிறது. அன்றாட அரசியல் நடவடிக்கைகளில் நான் சந்திக்கின்ற எண்ணிறந்த நண்பர்களில் எளிதில் மறக்கவியலாதவராக, கசப்பான அனுபவப்பாடங்களைத் தந்த அந்த நண்பர் நினைவில் வந்து தொலைக்கிறார். ஏதோ இந்த பதிவுக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் இங்கே இதனைப் பதிந்துள்ளேன்.

          தோழமையுடன்,

          ஏகலைவன்.

          Posted on 15-Feb-10 at 9:25 pm | Permalink
        • பிரபாவதி

          எது முக்கியமானது என்பதை அதன் எல்லை வீச்சை மாத்திரம் வைத்துப் பார்ப்பது முதன்மையானதா அல்லது அக்கருத்தின் சரி, தவறிலிருந்து அணுகுவது அல்லது அவதூறை மதிப்பிட்டு தட்டிக் கேட்பது முதன்மையானதா

          வைரமுத்துவின் பாடல் ஒன்று பிரபலமானதானதாக நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. இன்னமும் பாடலின் ஆரம்ப வரிகள் மற்றும் திரைப்படம் எது என்பது பற்றியெல்லாம் நீங்கள் சொல்லவில்லை. மேலும் அந்தப் பாடலில் ஈராக் பெண்களை அவதூறு செய்துதான் பாடல் எழுதப்பட்டிருந்த்தா என்பது பற்றி நீங்கள் எதுவும் சொல்ல‍வில்ல… மேலும் அந்த‌ வைர‌முத்து பாட‌ல் வெளிவ‌ந்த‌ கால‌ம் ஈராக் போர் ந‌ட‌ந்த‌ போதா என்ப‌தையும் குறிப்பிட‌ வேண்டும். கூடுத‌லாக‌ அந்த‌க் கால‌த்தில் நீங்க‌ள் சொம்பு தூக்கிய‌து எந்த‌ இட‌த்தில் என்ப‌தையும் குறிப்பிட்டால் உப‌யோக‌மாக‌ இருக்கும்.

          த‌க‌வ‌லுக்காக‌ வீர‌ம் காண்பிப்ப‌து என்ற‌ பொருளில் க‌ம்யூனிஸ்டுக‌ள் செய‌ல்ப‌டுவ‌தில்லை. அது ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ சொல்லை உல‌குக்கு ஈந்த‌ இன‌த்தை ஒரு அற்ப‌த்த‌ன‌ம் இழிவுப‌டுத்த‌ நினைத்த‌ ஒன்றுக்கு, விடுத‌லைப் போராட்ட‌த்தை கொச்சைப்ப‌டுத்த‌ நினைத்த‌ ஒன்றுக்கு அத‌ன் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அனைவ‌ரும் சேர்ந்து செய்திருக்க‌ வேண்டிய‌ ஒன்று. என்ன‌ செய்ய•. ஈழ‌ம் கிடைக்குமானால் நாம்தான் காசுமீர் ம‌க்க‌ளின் போராட்ட‌த்தைக் கூட‌ காட்டிக் கொடுத்து விடுவோமே… ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்துவ‌து ஜ‌ன‌நாய‌க‌த்திற்கான‌ போராட்ட‌மா அல்ல‌து கூட்டிக் கொடுத்த‌லா என்ப‌து முக்கிய‌மில்லையா…

          வாயில் ஏற்ப‌டும் புளிப்பு ஏப்ப‌த்திற்கு வயிற்றில் சுர‌க்கும் அமில‌மும் கார‌ண‌ம், மாங்காயும் கார‌ண‌ம் என்ப‌து அறிவிய‌லின் எளிய‌ ப‌டிக்க‌ட்டுக‌ளில் ஏறிப்பார்த்த‌ அனைவ‌ருக்கும் தெரிந்த‌ உண்மை.

          சொம்படித்த நேரத்தில் நீங்கள் கொஞ்சம் அவர்களிடம் சிலவற்றை வாங்கிப் படித்திருக்கலாம். ஏகாதிபத்தியத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்குமான முரண்பாடு என பிரதானமானதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படின்னா வேற என்ன இருக்குன்னு அன்றைக்கே கேட்டிருந்தால் இன்றைக்கு ஒரு பணிவுடன் கேட்க வேண்டிய சந்தேகத்தை விமர்சனம் என்று நினைத்து சிறுபிள்ளைத்தனமாக கேட்டிருக்க மாட்டீர்கள். இதனை இந்த இடத்தில் முழுதும் விளக்க முடியாது என நினைக்கிறேன்.

          தமிழ் தேசியம் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். அப்படின்னு ஒன்னு இருந்தா அதுக்கு நிலப்பிரபுத்துவமும், ஏகாதிபத்தியமும் சம அளவில் எதிரிகளாக இருக்க வேண்டும்தானே. கற்பு, சாதி, போன்றன வும், ஹிலாரி வந்தால், ஒபாமா வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையும்தானே தமிழ் தேசியத்தில் வழிநடத்தியது. அப்புறம் உங்க தேசியம் அமெரிக்க சார்பு தமிழ் தேசியமா, சைவ வேளாள தேசியமா, பால் தாக்கரே ஆதரவு பெற்ற அகண்ட பாரத தமிழ் தேசியமா, ஜெயா மாமியின் அண்ணாயிச தமிழ் தேசியமா, அல்லது ரா ஸ்பான்சர்டு தமிழ் தேசியமா, … முடியலீங்க•.. தேசியத்த முதலாளித்துவத்தின் கோரிக்கையாக்க முடியாம நிலப்பிரபுத்துவத்திடம் மண்டியிட வச்சுட்டீங்களே.. அப்புறம் என்ன வெங்காய போலி தேசியம்…

          தேசிய இன உணர்வு இருந்தால் ஏன் முல்லைத் தீவில் போர் நடந்த போது யாழ்பாணம் அமைதியாக இருந்த்து.

          Posted on 12-Feb-10 at 1:34 am | Permalink
        • ஜார்ஜூ புஸ்

          அன்புள்ள பிரபாவதி மேலே அருமை அண்ணன் mani அவர்கள் சொன்னதை வாசியுங்கள்
          http://www.vinavu.com/2010/02/11/tamil-malayalam/#comment-17149
          இந்த கசுமாலங்களை விட்டுத்தள்ளுங்கள்

          Posted on 12-Feb-10 at 1:47 am | Permalink
        • mani

          எல்லாரும் அப்படித்தான நண்பரே. கருத்தின் அடிப்படையில்தானே ஒன்றுபடுகிறார்கள். நீங்க கூட கருத்து மாறுபட்டுதானே சொம்ப கீழ வைத்தீர்கள். வேற எதுக்காகவாவது சொம்ப கீழ வச்சீங்களா

          Posted on 12-Feb-10 at 9:01 pm | Permalink
        • Anonymous

          தோழர் மணிக்கு சொம்பை பற்றி விவாதிப்பது என்றால் அவ்வளவு அலாதி இன்பம் போலிருக்கிறது. அவருடைய சிந்தனையெல்லாம் சொம்பை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. அவர் மீண்டும் மீண்டும் இதையே பேசிக்கொண்டிருப்பதை பார்த்தால் இந்த சொம்பு விவாதத்திற்குள் இழுத்து வந்து நம்மை கோபப்படுத்தி கடைசியா ‘அண்ணன் அவரோட அரசியல பேசிட்டாரு’ என்று சுபம் போட்டு முடித்துவிடலாம் என்று கருதுகிறார் போலும். முத்திரை குத்துவது, பட்டப்பெயர் கொடுப்பது, என்று இந்த விவாதம் போய் சேரும் இடம் நமக்கு தெரிந்ததுதானே. இந்த கலைகளிளெல்லாம் எனக்கும் மணி போன்ற தோழர்கள் அளவுக்கு அனுபவம் கிடையாது என்பதோடு, அவர்கள் அளவுக்கு ‘கூட்டு உழைப்புக்கும்’ ஆள் கிடையாது என்பது மிகப் பெரும் குறைதான். சரி சரி தோழர் போடுங்கள் நேரமாகிறது ‘சுபம்’ கார்டு போட்டு முடிச்சிடுங்க, அந்த பிழைப்புவாதி முத்திரைய‌ மறந்துடாதீங்க, தமிழினவாதி, கழிசடை, சந்தர்ப்பவாதி போன்று எல்லாவற்றை கலக்கி ஒரே முத்திரையா குத்துங்க, இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.

          Posted on 12-Feb-10 at 10:23 pm | Permalink
        • mani

          சொம்புகள் மீது எனக்கு எப்போதும் பற்று இருந்த்தில்லை. மற்றபடி நீங்கள் சொன்னதால் உங்கள் மொழியில் பேச முயற்சி செய்தேன். சரியை சரி எனச் சொல்ல கூட்டு உழைப்பு தேவையா என நீங்கள்தான் சொல்ல வேண்டும். இதில் மிகப் பணிவுடன் கலை என்ற சித்தரிப்பு வேறு வைத்துள்ளீர்கள். என்ன செய்யவது நியாயத்தை கூட தமிழினவாதிகளிடம் கலைஞர்கள் வந்துதான் சொல்ல வேண்டும் போலத் தெரிகின்றது.

          சொம்பு என்ற பதம் தனிப்பட்ட நபரான உங்களை நோக்கி வரும்போது மாத்திரம் நீங்கள் கோபம் அடைவீர்கள். ஆனால் பல்லாயிரம் மக்கள் நோக்கி நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் சொன்னால் கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டு சொம்பையாக இருக்க வேண்டும். என்னே ஒரு உயர்ந்த ஜனநாயகப் பண்பு… தமிழ்தேசிய வாதம் கற்றுத் தந்த நிலப்பிரபுத்துவ என்று சொல்ல்லாமா அல்லது நிலப்பிரபு ஸ்பான்சர்டு ஜனநாயகம் என்று கூட சொல்ல்லாமா..

          அதெல்லாம் இருக்கட்டும். ஐயன்மீர்… யான் கேட்ட கேள்வி அறிவீரோ… தகைசான்ற சான்றோனாகிய தாம் இவ்விடம் விட்டு அகண்றமைக்கு முதன்மையான முரண்பாடு என்ன என்று உரைக்கலாமா… அதனைக் கேட்டால் நான் ஒரு ஜனநாயகவாதிக்கு சொன்ன மறுமொழியை உங்களுக்கும் சொல்வேன் என முடிவுசெய்வதைப் பார்த்தால் உமது முரண்பாடு கூட அத்தகைய மாபெரும் ஜனநாயகத்தால்தான் வந்த்தோ என அச்சம்தான் மேவுகிறது.

          சுபம் கார்டு போட்டது நான் இல்லை. வாயை மூடு என்பது உங்கள் பார்வையில் சுபம் கார்டு இல்லாமல் போவதும், அதே பார்வையில் அண்ணன் அவரு அரசியல பேசிட்டாரு என்பது சுபம் கார்டாக தோன்றுவதும் சந்தர்ப்பவாதமில்லை என நீங்களே நிரூபிக்கலாமே.. முத்திரை குத்தி எனக்கு என்ன இலாபம். நான் மக்களோடு உங்களோடும்தான் பேச விரும்புகிறேன். வீரப்பெருமித கனவு தரும் போதையோடு என்னால் வீதியில் நடமாட முடியாது.

          அது எப்படி உங்களைப் பற்றி ஒரு கேள்வி வந்தால் சுபம் கார்டை வலியத் தேடிப் போய் வீரம் பேச முடிகின்றது. இதற்கு கூட்டு உழைப்பு தேவை இல்லைதான். ஆனால் ஒரு கூட்டுக் களவாணித்தனம் கூடவா துணை வராது.

          வாய்ப்பிருந்தால் முன்னர் புதிய கலாச்சாரத்தில் வெளியான மகிழ்ச்சியின் தருணங்கள் என்ற கட்டுரையை கூட்டாக இல்லாமல் தனியாக உட்கார்ந்தே படித்துப் பாருங்கள். அது உங்களுக்கு சொந்த வாழ்க்கைக்கு போன பலரும் மா.லெனிய இயக்கம் குறித்து அவதூறு பேசிட முயல்வதை சரியாக உரித்துக் காண்பித்திருக்கும். அது உங்களுக்கு உதவுமா என்பதை நீங்கள் சுபம் கார்டு போடாமல் விவாதிப்பதில்தான் முடிவு செய்ய முடியும்.

          அப்புறம் ஒன்று. தோழர் என்றெல்லாம் அழைக்காதீர்கள். நானெல்லாம் சொம்பு தூக்கிதானே… சுயமாக சிந்திக்க தெரியாத சொம்பு தூக்கியான மணி என்ற சொம்பு தூக்கி (சர்வதேசிய அல்லது இந்திய தேசிய … உங்கள் விருப்ப்ப்படி) என்றே கூப்பிடுங்கள். அதுதான் எனக்கு நல்லது.

          Posted on 13-Feb-10 at 5:11 pm | Permalink
  5. குட்டிபிசாசு

    சமூகம் இருக்கும் நிலைமையில் இப்படி வெட்டித்தனமான இனபெருமை பேசுபவர்களை என்னென்று சொல்லுவது. சீமான் பெரியாரின் வாரிசு என்று சொல்லிக்கொண்டுதிரிகிறார். இவர் உண்மையான தாக்கரே வாரிசு. 

    Posted on 11-Feb-10 at 12:35 pm | Permalink
  6. மிக சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள்..!!

    Posted on 11-Feb-10 at 12:36 pm | Permalink
  7. கருப்பன்

    அய்யா ஜெயராமின் கருத்துக்களை தேசிய இனக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்கிறீர்கள். சரிதான். ஆனால் இந்த இடுகையின் ஒரு இடத்தில் கூட வேலைக்காரியை வெறும் உடலாக பார்க்கும் அந்த ஆதிக்க மனப்பான்மைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே?

    Posted on 11-Feb-10 at 12:40 pm | Permalink
    • வினவு

      கருப்பன், கட்டுரையின் முதல் பத்தியிலேயே

      // நடிகர் ஜெயராம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறிய தடித்த தமிழச்சி குறித்த நகைச்சுவை தரமானது அல்ல, சற்று ஆபாசமானதுதான். பொதுப்புத்தியில் இத்தகைய நகைச்சுவை, சாதாரண மக்களை கேலிசெய்யும் பார்வை ஊடுறுவியிருக்கும் போது ஜெயராமை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்? ஒருவேளை ஜெயராம் தமிழச்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறும் வேலைக்காரி என்று கூறியிருந்தால் இப்போது குதிப்பவர்கள் யாரும் துள்ளமாட்டார்கள். வேலைக்காரிகளைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படப்போகிறார்கள்?// என்று குறிப்பிட்டுள்ளோம். ஆபாசம் என்ற பதம் நீங்கள் சொல்லும் பொருளையும் உள்ளடக்கியதே. மற்றபடி இந்த விசயம் கட்டுரையின் மையப்பொருளுக்கு அதிகம் தேவையில்லை என்பதால் விரித்து எழுதவில்லை.

      Posted on 11-Feb-10 at 12:55 pm | Permalink
      • movendhan

        //பொதுப்புத்தியில் இத்தகைய நகைச்சுவை, சாதாரண மக்களை கேலிசெய்யும் பார்வை ஊடுறுவியிருக்கும் போது ஜெயராமை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்? //

        //ஒருவேளை ஜெயராம் தமிழச்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறும் வேலைக்காரி என்று கூறியிருந்தால் இப்போது குதிப்பவர்கள் யாரும் துள்ளமாட்டார்கள்.//

        வேலைக்காரிகளை இழிவு படுத்தும் போக்கு பொதுப்புத்தியில் ஊறியிருக்கும் போது இப்போது குதித்தவர்கள் ஏன் துள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? முதல் வரியிலேயே ஏன் இந்த முரண்பாடு?

        Posted on 15-Mar-10 at 12:10 am | Permalink
  8. கல்ப் தமிழன்

    நல்ல கட்டுரை தான். எதற்கும் வளைகுடா நாடுகளில் பார்த்துவிட்டோ அல்லது விவரங்கள் கேட்டோ கூட எழுதியிருக்கலாம்.

    Posted on 11-Feb-10 at 12:42 pm | Permalink
  9. Nagaraj

    கண்களை பனிக்க வைத்த ஒரே கட்டுரை இந்த நுாற்றாண்டி்ல் இதுதான்

    Posted on 11-Feb-10 at 12:43 pm | Permalink
  10. ANONYMOUS

    இந்த உபதேசம் தமிழர்களுக்கு மட்டும் இலவசமாக கிடைக்கிறது ….!காவிரியில் தண்ணீர் கேட்பது கூட கர்நாடக உழைக்கும் மக்களை கேவலத்தும் செயல்தான் போலும் !நாத்திக பரப்புரை கூட வியர்வை சிந்தி மணி அடிக்கும் பார்ப்பன உழைக்கும் வர்க்கத்தை புண்படுத்தும் செயல்தான் என்று நினைக்கிறேன் !உங்கள் ஆதரவுக்குரலை மார்வாடிகளுக்கும் நீடித்து ….மனிதநேயத்தை மார்க்ஸ் சொன்ன வழியில் காக்க வேண்டுகிறேன் நன்றி!!!

    Posted on 11-Feb-10 at 12:49 pm | Permalink
    • Nagaraj

      ////இந்த உபதேசம் தமிழர்களுக்கு மட்டும் இலவசமாக கிடைக்கிறது ….!காவிரியில் தண்ணீர் கேட்பது கூட கர்நாடக உழைக்கும் மக்களை கேவலத்தும் செயல்தான் போலும் !நாத்திக பரப்புரை கூட வியர்வை சிந்தி மணி அடிக்கும் பார்ப்பன உழைக்கும் வர்க்கத்தை புண்படுத்தும் செயல்தான் என்று நினைக்கிறே///////
      நீர் இப்படியே நினைச்சுக்கிட்டு இரும்.. உமக்குத் தேவை என்ன எதிர் தரப்பு ரத்தம்தானா…? அப்பறம் நமககும் ராசபக்சக்கும் என்னய்யா வித்யாசம்?

      Posted on 11-Feb-10 at 1:31 pm | Permalink
      • சின்ன பையன்

        நீங்கள் முடிவாக என்ன சொல்ல வருகிறீர்கள் ஜெயராம் செய்தது தப்பா இல்லையா? தமிசச்சிகளை கொச்சிபடுத்திய நபரை கண்ணடித்த தமிழர்கள் தமிழின வெறியர்கள் என்றால், சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக்கை திட்டும் நீங்கள் மலையாள வெறியன் என்று கூறலாமா?

        Posted on 11-Feb-10 at 5:50 pm | Permalink
        • Nagaraj

          ////நீங்கள் முடிவாக என்ன சொல்ல வருகிறீர்கள் ஜெயராம் செய்தது தப்பா இல்லையா? தமிசச்சிகளை கொச்சிபடுத்திய நபரை கண்ணடித்த தமிழர்கள் தமிழின வெறியர்கள் என்றால், சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக்கை திட்டும் நீங்கள் மலையாள வெறியன் என்று கூறலாமா?//
          செயராம் சொன்னதை எவன் நியாயப் படுத்துவான். அவன் சொல்றது தவறுதான் ஆனால் நல்லவர்கள் தீயவர்கள் என்பது மொழி ரீதியாகத்தான் இருப்பார்களா என்பதுதான் கேள்வி.. ஏசு சொல்வதைப் போல உங்களில் நல்லவர்கள் அந்த வேசி மீ
          எறியுங்கள் என்பதைப் போலத்தான் சொல்ல வேண்டியிருக்கிறறது என்ன செய்ய…?

          Posted on 15-Feb-10 at 12:59 pm | Permalink
        • மண்ணாங்கட்டி

          மலையாளி வெறியன் என்பதைவிட,வினவு இணையத் தளம்,ஒரு உள்குத்து,உள்வன்முறை(இலங்கைத் தமிழார்? போல்
          இணையத்தளம் என்பதில் சந்தேகமில்லை!.

          Posted on 20-Apr-10 at 12:13 pm | Permalink
  11. //நாட்டில் கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த தொலைக்காட்சி நேர்காணலை புலனாய்வு செய்து கண்டு பிடித்து பிரதியை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கிய சிகாமணிகள் யாரென்று தெரியவில்லை.

    உண்மையே சொன்னீங்க.

    Posted on 11-Feb-10 at 12:52 pm | Permalink
  12. புலிக்குட்டி

    poda poooooooo , vinavu unakku arivae illaya namma sakothariya thappa solluran athu tamil veriya – nee thiruntha matta

    Posted on 11-Feb-10 at 12:53 pm | Permalink
  13. Vijay

    வெரி குட்.

    Posted on 11-Feb-10 at 1:50 pm | Permalink
  14. ஜெயராம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டியது அவர் வீட்டு வேலைக்கார பெண் niடம்தான். பாசிச்டுகளிடம் அல்ல.

    ///அதனால்தான் தினசரி உடலுழைப்புக் கூலிவேலைக்கு கேரளத்தில் ஊதியம் அதிகம் என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள். சொரணைபடக் கூறுவதென்றால் இங்கு தமிழனது சுரண்டலால் வாழ முடியாமல் தமிழர்கள் கேரளத்திற்கு படையெடுக்கிறார்கள். //// What percentage ? The number of Malayalis migrating out of Kerala in search of jobs are too high when compared to the labourers of TN/ Kerala border areas, who migrate to Kerala farms for jobs. Also see :

    http://nellikkani.blogspot.com/2009/03/blog-post_12.html சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்

    Posted on 11-Feb-10 at 1:54 pm | Permalink
  15. தமிழ் பெண்களை ஜெயராம் இழிவுபடுத்திவிட்டாராம் ! உடனே இந்த போராளி சீமான் போராடக் கிளம்பி விட்டாராம், அவரை சில தலைவர்களும் அடிபொடிகளும் கூட‌ ஆதரித்துக் கொண்டு பின்னால் ஓடுகிறார்கள். தமிழ் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதற்கு எதிராக இவருக்கு இன்றைக்கு மட்டும் எப்படி கோபம் வருகிறது ? இன்றைக்கே கூட‌ தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது ? முதலில் இந்த தமிழ் ராஜ்தாக்ரே தனது தாக்குதலை சினிமா துறையில் தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் தமிழ் இயக்குனர்களிடமிருந்து துவங்கட்டும். அதன் பிறகு இது போன்ற சாகசங்களை எல்லாம் செய்யட்டும். அதற்கு முன்னால் தமிழ் மக்களை மொட்டையடித்து, தாலி அறுத்து, கொள்ளையடித்து விட்டு தமிழ்நாட்டில் துணிச்சலாக வாழ்ந்துவரும் கொளைக்காரி பாப்பாத்தி ஜெயலலிதா ஈழம் பெற்றுத்தருவார் என்று எந்த நம்பிக்கையில் அந்த பாசிஸ்ட் பின்னால் போனார், நம்மையும் வரச்சொன்னார் என்பதை விளக்க வேண்டும். பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை ஒரு பார்ப்பன பாசிஸ்ட்டை ஆதரிக்கச் சொன்ன தனது செயலுக்கு முதலில் இந்த சீமான் விள‌க்கமளிக்க‌ வேண்டும். அதாவது தனது நேற்றைய தவறான‌ நடைமுறைக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு அதன் பிறகு தமிழ் மக்களை பற்றியும் தமிழ் பெண்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள‌ இழிவுகளை பற்றியும் கர்ஜ்ஜிக்கட்டும்.

    Posted on 11-Feb-10 at 1:57 pm | Permalink
  16. நஜி

    நல்ல கட்டுரை, ஆனால் ஜெயராம் தமிழ்மக்களை கொஞ்சம் இழிவு படுத்துவதைப் போன்றும், கேரளக் காரர்களை கொஞ்சம் உயர்த்தியுமே பேசி வருகிறார். அவருடைய பல பேட்டிகளில் இதை நீங்கள் கவனிக்க முடியும்,

    //வெளியிடப்படும் புதுத்தமிழ்ப்படங்கள் எல்லாம் கேரளாவின் எல்லா நகரங்களிலும் ஓடுகின்றன. இங்கு வெற்றி பெறும் அல்லது கவனத்தைப் பெறும் முக்கியமான படங்கள் அங்கும் பாராட்டப்படுகின்றன. முக்கியமாக கேரளாவில் ஓடும் தமிழ்ப்படங்களை பார்ப்பது மலையாளிகள் என்பதுதான் முக்கியம்// மேலும், அவர்கள் தமிழ் படங்களை விரும்பி பார்ப்பதற்கு காரணம், மலையாளத்தில் வெளிவரும் குறைவான படங்களும், தமிழை அவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதாலும் தான். நம் கண்டனத்தை தெரிவித்து தான் ஆக வேண்டும். அது ஜெயராமுக்கு எதிரானது, மலையாளிகளுக்கு எதிரானது அல்ல. எனினும் எல்லைமீறியது தவறானது தான்.

    Posted on 11-Feb-10 at 2:03 pm | Permalink
  17. PUNJAB Ravi

    Vinavu, I RATE THIS ARTCLE AS THE BEST ONE OF ALL.The authour has really exposed the so called tamil abhimanis and psycho people like SEEMAAN,Thiruma who talk volumes about tamil rights,. YES it is the world of fittest that survive and we should not have any animosity towards the brethern who have migrated for earning their bread,.. This is particularly high in TN whereas in North it is quite non existent..I have lived in Delhi and punjab for several years and I am still unable to forget the hospitality and the warmth I enjoyed there. Anyway thanks for publishing a very very sensible article,..

    Posted on 11-Feb-10 at 2:06 pm | Permalink
  18. NANBAN

    வாழ்த்தப்பட வேண்டிய, வரவேற்கப்பட வேண்டிய மிக அருமையான கட்டுரை.

    Posted on 11-Feb-10 at 2:07 pm | Permalink
  19. NANBAN

    இப்படியே அடுத்தவர்கள் நம்மை ஏளனம் செய்து கொண்டிருப்பது எதனால்..
    நம்மிடம் இருக்கும் ஒற்றுமையின்மையே..

    எல்லா மாநிலத்திலும் அவரவருக்கு அவரவர் மொழி மேல் பற்று இருக்கின்றது.
    நமக்கு பற்றை விட ஆண்டாண்டு காலமாக அரசியல்வாதில்வாதிகள் நம் தலையில்
    அடித்து உரமேற்றிய ‘மற்ற மொழிகளின் மீது வெறுப்பு’ எனும் குணம் அதிகமாக
    இருக்கின்றது.
    எப்படி நமக்கு மற்றவர்கள் மரியாதை தருவார்கள்.
    ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு பயந்து கொண்டு ஒட்டுப்போடுவோம்.
    சிதம்பரம் தோற்றுப்போனாலும்..ஜெயிக்க வைப்பார்கள்…பார்த்துக் கொண்டு
    இருப்போம்.
    உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இலங்கையில் படும் இன்னல்களைக் கண்டு நம்மால்
    என்ன செய்ய முடிந்தது. உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் நம்
    அரசியல்வாதிகள் வளர்வார்கள். அதுவும் நம்மால். நம் கையாலாகாத்தனத்தால்.

    பெரியார் அணை விவகாரத்தில் அவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கின்றார்கள்.
    ஒரு மலயாளிக்கு இங்கு சிரமம் என்றால் உதவ எத்தனயோ சங்கங்கள். டெல்லியில்
    நர்சுகளுக்கு பிரசனை வந்த போது முதலமைச்சர் நேரடியாகத் தலையிடுகின்றார்.

    இதெல்லாம் நம் தமிழ் நாட்டில் நடக்குமா.

    Posted on 11-Feb-10 at 2:09 pm | Permalink
  20. ajith

    எங்க ஊர்ல ஒரு சொல் வழக்கு உண்டு, அது “ இந்த மாதிரி எழுதுவதற்கு பதிலா………………………………………….”. நாலு மளையாளிட்ட பழகிபார்த்துவிட்டு எழுதுங்க,

    Posted on 11-Feb-10 at 2:10 pm | Permalink
  21. Mudiyalai

    We have only two community.high class and low class.correct?

    Posted on 11-Feb-10 at 2:14 pm | Permalink
  22. Sriram

    மிக நல்ல கட்டுரை. நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று புரியவில்லை. சீமான், தங்கர் பச்சான் போன்றோருக்கு வேறு வேலை இல்லை என்றால் பொழுது போக இப்படி எதாவது பிரச்சினையை கையில் எடுத்து கொள்கிறார்கள். இவர்களை யார் திருத்துவது?

    Posted on 11-Feb-10 at 2:22 pm | Permalink
  23. NANBAN

    //எங்க ஊர்ல ஒரு சொல் வழக்கு உண்டு, அது “ இந்த மாதிரி எழுதுவதற்கு பதிலா………………………………………….”. நாலு மளையாளிட்ட பழகிபார்த்துவிட்டு எழுதுங்க,//

    இத சொல்றதுக்கு முன்னாள ராமதாஸ், சீமான், திருமா, குருமா கூட நாலு நாள் பழகிப் பாருங்க

    Posted on 11-Feb-10 at 2:32 pm | Permalink
  24. உங்கள் வாசகன்

    அருமையான கட்டுரை தோழர்

    Posted on 11-Feb-10 at 2:59 pm | Permalink
  25. புலிக்குட்டி

    I have one doubt VINAVU is malayali ya !?????????

    Enna oru malayali ennoru malayaliya vittu kodukka mattan

    Posted on 11-Feb-10 at 3:08 pm | Permalink
    • ரியல் என்கவுண்டர்

      வினவு யார்?
      எனக்குத் தெரிந்த புலனாய்விலிருந்து……
      பார்ப்பனியத்தை விமரிசித்தால் இனத்துவேஷி
      இந்துமதத்தை விமரிசித்தால் மதத்துரோகி
      இசுலாத்தை விமரிசித்தால் கூமுட்டை
      சாதி ஆதிக்கத்தை விமரிசித்தால் ஒற்றுமை குலைப்பவன்
      தலித்தை விமரிசித்தால் ஆதிக்கவாதி
      போலிப்பெண்ணியத்தை அம்பலப்படுத்தினால் ஆணாதிக்கவாதி
      ஆணாதிக்கத்தை எதிரத்தால் பெண்ணியவாதி
      மார்க்சியத்தை ஆதரித்தால் ஸ்டாலினியவாதி
      போலிக்கம்யூனிஸ்டுகளை விமரிசித்தால் சி.ஐ.ஏ கைக்கூலி
      புலிகளை விமரிசித்தால் சிங்களன்
      தமிழினவாதிகளை விமரிசித்தால் இனத்துரோகி
      மலையாளிகளை ஆதரித்தால் மலையாளி
      ஆம்.
      மக்களை நேசித்தால் வினவு
      வினவு ஒரு கம்யூனிஸ்ட்

      Posted on 11-Feb-10 at 3:38 pm | Permalink
      • mohan

        //வினவு யார்?
        எனக்குத் தெரிந்த புலனாய்விலிருந்து……
        பார்ப்பனியத்தை விமரிசித்தால் இனத்துவேஷி
        இந்துமதத்தை விமரிசித்தால் மதத்துரோகி
        இசுலாத்தை விமரிசித்தால் கூமுட்டை
        சாதி ஆதிக்கத்தை விமரிசித்தால் ஒற்றுமை குலைப்பவன்
        தலித்தை விமரிசித்தால் ஆதிக்கவாதி
        போலிப்பெண்ணியத்தை அம்பலப்படுத்தினால் ஆணாதிக்கவாதி
        ஆணாதிக்கத்தை எதிரத்தால் பெண்ணியவாதி
        மார்க்சியத்தை ஆதரித்தால் ஸ்டாலினியவாதி
        போலிக்கம்யூனிஸ்டுகளை விமரிசித்தால் சி.ஐ.ஏ கைக்கூலி
        புலிகளை விமரிசித்தால் சிங்களன்
        தமிழினவாதிகளை விமரிசித்தால் இனத்துரோகி
        மலையாளிகளை ஆதரித்தால் மலையாளி
        ஆம்.
        மக்களை நேசித்தால் வினவு…
        வினவு ஒரு யூனிஸ்ட்//
        வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொயால…

        Posted on 11-Feb-10 at 4:42 pm | Permalink
        • மரண அடி

          வாங்குன காசுக்கு கொலைக்கறடா பரதேசி!

          Posted on 11-Feb-10 at 5:25 pm | Permalink
  26. NANBAN

    //I have one doubt VINAVU is malayali ya !?????????

    Enna oru malayali ennoru malayaliya vittu kodukka mattan//

    அந்த ஒற்றுமை நமக்கும் வேணும்குரத உணர்த்தத்தான் இந்தக் கட்டுரையே.. இப்பவாவது புரியூதா…புலிக்குட்டி…இல்ல பூனக் குட்டி…

    Posted on 11-Feb-10 at 3:24 pm | Permalink
  27. நாராயணன் மலேசியா

    தமிழனுக்கு கொஞ்சம் வீரம் துளிர்த்தாலே உடனே நியாயம் பேசி அதை கிள்ளிவிட துடிக்கும் போக்கு தமிழர்கள் மத்தியில் மட்டுமே இருக்கு. சீமானுக்கு கோபம் வந்ததில் என்ன தப்பு.தடி தமிழச்சி எருமை என்று உம் தாயரைச் சொன்னால் துடிக்க மாட்டாயா? இனி எவனாவது தமிழனை பழித்துப் பேசுவானா? மலையாளிகளால்தான் ஈழத்தமிழன் அழிந்தான்.
    எந்தப் போராட்டம் நடத்தினாலும் உடனே அதைக் கொச்சைபடுத்துவது உம்மைப் போன்றவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. உணர்வு பொங்கவில்லையானால் ஒதுங்கிநில்லுங்கள்.

    Posted on 11-Feb-10 at 3:44 pm | Permalink
    • வினவு

      நாராயணன் மலேசியா,
      எது தமிழனின் வீரம்?
      அப்படி வீரமிருந்தால் தமிழரை இழிவுபடுத்தும் சன் டி.வியைத்தானே தாக்கவேண்டும்? ஜெயராம் பேசியதை வினவு எங்கேயும் நியாயப்படுத்தவில்லை. அதைவைத்து சாதாரண மலையாளிகளை விரட்டவேண்டும் என்ற இனவெறியைத்தான் கண்டிக்கிறது. ஈழத்தமிழன் அழிவதற்கு காரணம் மலையாளிகள் அல்ல, இந்திய அரசுதான் மூலம். இந்திய அரசை எதிர்க்க முடியாதவர்கள்தான் இப்படி மலையாளிகள் காரணமென்று சுயதிருப்தி கொள்கிறார்கள்.

      Posted on 11-Feb-10 at 4:02 pm | Permalink
      • நாராயணன்(மலேசியா)

        மேனனும் நாராயணனும் இலங்கைக்கு பறந்து பறந்து எதுக்கு
        போனார்களாம். இந்திய அரசு என்பது ஜடமல்ல. அதை வழி நடத்தும்
        மலையாளிகள் தாம். உம்முடைய ஆதங்கம் புரிகிறது. சீமானுக்கு
        வந்த வீரம் அனைவருக்கும் வரவேண்டும். ஏன் சன் டிவியை நீங்க
        தாக்கக்கூடாதா?

        Posted on 16-Feb-10 at 10:41 am | Permalink
    • Kalaivanan

      Do you mean that only because of Shiv Shankar Menon,MK Naryanan,the tamil people of Lanka died??? The home minister have complete control over the above said two officials and if i’m not wrong, the Home minister hails from TamilNadu….

      Posted on 12-Feb-10 at 4:15 pm | Permalink
    • Sivasegaram

      தமிழ் மக்களை வைத்துப் பிழைக்கிற ஒரு தமிழ் வியபரக்க் கூட்டத்தால் தான் ஈழத் தமிழன் அழிந்தான். அக் கூட்டம் வை. கோ., நெடுமாறன், கருணாநிதி குடும்பம் முதல் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் மேட்டுக்குடிகளையும் உள்ளடக்கும்.
      மலையாளிகள் சிலரைத் திட்டி இந்த மோசக் காரர்களைக் காப்பாற்ற முயலாதீர்கள்

      Posted on 16-Feb-10 at 4:57 pm | Permalink
  28. playboy

    அப்டியா……….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! …………………….?????????????????????????????????????????????????????

    Posted on 11-Feb-10 at 4:00 pm | Permalink
  29. எழில்

    அடி முட்டாள் தனமான கட்டுரை!!.

    எதிரிகளை விட துரோகிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதுவும் வினவு போன்ற தமிழினத் துரோகிகளிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை.பார்பநீயத் தலைமையை கொண்டிருக்கும் வினவு ஒரு மலையாள பார்பானை மென்மையாக மயிலறகால் வருடி கண்டித்து விட்டு தமிழனை முட்கம்பி கொண்டு அடித்துள்ளீர்கள் இது தான் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டதென்பது.
    //தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள் //

    //குறிப்பான விவசாய வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ அற்ற கேரளத்தில் வாழ்ந்து பிழைக்க முடியாது என்றுதான் பலரும் பல இடங்களில் குடியேறி வேலை செய்கின்றனர் // இந்த இரண்டு கருத்துக்களும் போதும் கட்டுரையாளர் ஒரு அடி முட்டாள் என்பதை நிரூபிக்க !! இப்பொழுது நேரம் இன்மையால் உங்களது முழு வாதத்தையும் தவிடு பொடியாக்க பின்பு வருகிறேன்.!!

    Posted on 11-Feb-10 at 4:08 pm | Permalink
    • வினவு

      எழில்,
      கருணாநிதி, ஜெயா போன்ற ‘தமிழ்’ ஆண்டைகளிடம் சேவை செய்து கொண்டு தமிழனுக்காக கொதிக்கும் அட்டைக்கத்திகளை நிறையப் பார்த்துவிட்டோம். தமிழினை இழிவுபடுத்தும் பெரிய கைகளிடம் பம்மிக்கொண்டு பார்ப்பனத் தலைமை என்ற நமத்துப்போன ஆயுத்துடன் சண்டைக்கு வருபவர்களை ஊதியவாறே விழ வைக்கலாம். கட்டுரையை தவிடு பொடியாக்குவதாக பில்டப் எல்லாம் எதற்கு? எப்போது வேண்டுமனாலும் வாருங்கள், சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதை நாங்கள் எப்படி தடுக்க முடியும்?

      Posted on 11-Feb-10 at 4:16 pm | Permalink
      • prabunath

        எழில் அவர்கள் தெளிவாக கூறியும் உங்களுக்கு புத்தி வரவில்லை
        என்றல் ,நான் எப்படி எழுதுவது.தமிழன் மட்டுமே அடுத்த இனதிற்கு வக்காலத்து வாங்குபவன். ஏன் உங்களை (ஹிந்து ராம் ,ஜெ,,சோ ,ஞானி)
        போன்றவர்களை பார்பனர்கள் என்று அனைவரும் திட்டுகிறார்கள் என்பதை தற்போதுதான் உணர்ந்தேன் . பவம் உங்களால் உங்கள் இனமே திட்டுவங்குது . எழில் தயவுசெய்து உங்கள் பணியை தொடருங்கள் .என் போன்ற சிவந்து பெருத்த னைகள் திருந்தட்டும்

        Posted on 17-Feb-10 at 4:10 pm | Permalink
        • mani

          எழிலை தாங்கள் கிண்டல் செய்வது சரியில்லை.

          Posted on 17-Feb-10 at 5:16 pm | Permalink
        • எழில்

          நன்றி பிரபு.ஆனா பாருங்க இந்த மணி மாதிரி மணியடிக்கிற நபர்கள் மட்டும் எப்படியாவது என்ன இழிவு படுத்தி ஏதாவது சொல்லிட்டே தங்களோட அரசியல தொடரலாம் நு நெனைக்கறாங்க.தங்களுக்குன்னு எந்த கொள்கையும் இல்லாம இழிவு படுத்தரதையே ஒரு கொள்கைன்னு இருக்கற இதெல்லாம் ஒரு பொழப்பா ? இந்த மணி மாதிரி ஆட்களோட விவாதம் பண்றதுங்கறது மன நிலை சரியில்லாதவன்களோட விவாதம் பண்றதுக்கு சமம்.இனிமேல் இந்த பக்கம் வராதீங்க.

          Posted on 17-Feb-10 at 8:27 pm | Permalink
        • கருத்து கேட்டவன்

          எழிலய்யா, உங்க பிழைப்புவாதத்தை பற்றி கேட்டால் பதில் செல்லவில்லை, இங்கே என்னவோ கொள்கையின்னு சத்தம் கேக்குதே.. உங்களுக்கு கொள்கையெல்லாம் இருக்கா? இருந்தா அது என்ன, மக்களுக்கு தமிழினவாதத்தின் மூலமா என்ன தீர்வு சொல்ல வற்றீங்கன்னு வெளிப்படையா அறிவிக்கலாமே? அதுக்கும் பயமா

          Posted on 17-Feb-10 at 8:40 pm | Permalink
        • எழில்

          அய்யா கருத்தாளரே நீங்க கேட்கிற பிழைப்பு வாதத்துக்கு
          ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன்.வாதங்களுக்கு நான்
          பதில் சொல்லலாம் ஆனால் விதண்டாவாதத்துக்கு முடியாது
          நீங்கள் வெறுத்து போனவனாகத்தான் தெரிகிறீர்கள் உங்களது
          கருத்துக்களை கொஞ்சம் இருத்து பார்த்தால் அதில் கருத்து
          ஏதும் இருப்பதாகத்தான் தெரியவில்லை.வெறும் சக்கை தன இருக்கிறது
          தொடர்ந்து இந்த ஒரே மாதிரியான பல கேள்விகளுக்கு
          பதில் சொல்லிக்கொண்டிருப்பது அலுப்பையும் மனச்சலிப்பையும்
          தருகிறது.இதனால் கருத்து கேட்பவர்களின் கேள்விகளுக்கு எனது பதிலாக
          “பரிசுத்தமானவற்றை நாய்களுக்கு கொடாதேயும்;பன்றிகளின் முன் முத்துக்களை சிதற விடாதேயும்;” என்ற
          விவிலிய வார்த்தைகளை நினைவூட்டி நிறைவு செய்கிறேன்

          Posted on 17-Feb-10 at 10:30 pm | Permalink
        • கடுப்பாகிப்போனவன்

          எழில் இங்கே கம்யூனிச தோழர்கள் முதல் கம்யூனிச எதிர்பாளர்கள் வரை, உங்களிடம் கொள்ளகையை பற்றி கேட்ட கேள்விகளுக்கும் சரி, நீங்கள் இங்கே பறைசாற்றும் தமிழ்தேசிய கருத்துக்களை நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையில் பின்பற்றாமல் இருப்பதை பற்றிய கேள்விகளுக்கும் சரி, நீங்கள் பதில் நேரடியாக பதில் சொல்லவேயில்லை 

          இனஅரசியல்ஆர்வலர்களில் தங்கள் கொள்கையை கடைப்பிடிக்காமலேயே இருப்பவர்கள்தான் அதிகம் எனவே நீங்கள் தனியானவர் இல்லை, இன அரசியல் எழுச்சியாக பேசுவதற்காகவும், ஒரு விதமான ரொமான்டிக் கற்பனைகளை வளர்க்கவும் உதவுமேதவிரா நடைமுறை காரியத்தில் எந்த பயனும் தராது. இதை நீங்களும் உணர்ந்துதான் உள்ளீர்கள். அது எனக்கு புரியாமல் இல்லை, 

          எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடில்லையெனில், உங்கள் அரசியல் கொள்கைகளை இங்கே நீங்கள் விவாதத்துக்கு உட்படுத்தலாம்.

          Posted on 17-Feb-10 at 11:08 pm | Permalink
    • கேள்விக்குறி

      இந்த எழித் தம்பி இருக்கே சரியான அவசரக்குடுக்கை, அன்னிக்கு முதலாளித்துவம் தான் இணையத்த கொடுத்திச்சுன்னுது, இப்ப பூனைகுட்டி ஆனகுட்டிங்குது. இந்த பூனையவே பாக்காம தீடீருனு ஒரு நாள் வினவ பாசிஸ்டுன்னு சொல்லிச்சு.. நம்ம கோ்யமுத்தூர் பக்கமா இருந்துகிட்டு இந்த தம்பி இப்படி கொஞ்சமும் பணிவு இல்லாம திட்டிகிட்டிருக்கே.

      ஆதாரத்தோட எதுவும் பேசனும் இல்லன்ன அமைதியா போயிடனும், அவசரப்பட்டு வாங்கிகட்டிக்க கூடாது

      Posted on 11-Feb-10 at 4:29 pm | Permalink
    • mani

      …//தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள் //

      //குறிப்பான விவசாய வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ அற்ற கேரளத்தில் வாழ்ந்து பிழைக்க முடியாது என்றுதான் பலரும் பல இடங்களில் குடியேறி வேலை செய்கின்றனர் // இந்த இரண்டு கருத்துக்களும் போதும் கட்டுரையாளர் ஒரு அடி முட்டாள் என்பதை நிரூபிக்க !!….

      ஏநுங்கன்னா முன்னாடியும் பின்னாடியும் உள்ள வாக்கியங்கள சேத்து படிக்க நுங்கன்னா

      Posted on 11-Feb-10 at 4:32 pm | Permalink
  30. எழில்

    தமிழ் ஆண்டைகளிடம் சேவை செய்யறோமா? நான் எப்போ சொன்னேன் உங்களிடம் ? கம்யுனிச பேரழிவின் கடைசி பென்ச் இல் நிச்சயமாக உங்களுக்கு ஒரு இடம் உண்டு

    Posted on 11-Feb-10 at 4:27 pm | Permalink
    • கேள்விக்குறி

      தம்பி எழில் அவங்க உங்கள சொல்லலப்பா, செயா மாமிக்கு காவடி எடுக்கும் நெடுமாறன்லேருந்து சீமானு வரை்கஃகும் உள்ள கருமாந்திரம் புடிச்சவனுங்கள பத்தி செல்லுறாங்க

      Posted on 11-Feb-10 at 4:32 pm | Permalink
      • காளமேகம்

        தம்பி கேள்விக்குறிஆபிசுக்கு வேணா மட்டம் போட்டுக்க. இன்னைக்கு இனவாதக்காரவுக வந்தாகன்னா இரண்டுல ஒன்னு பாத்துக்கிடனும். எதுக்கெடுத்தாலும் இனத்துரோகிங்கிறாக என்னமோ இவுக வெட்டிக்கிழிச்ச மாதிரி..அதுகிடக்கட்டும். இன்னும் நம்ம நெத்தியடிபாயைக் காணமே? எதுனாச்சும் சொல்லி ஒத்துவரும் மறுமொழி போடுவாகளே?

        Posted on 11-Feb-10 at 4:40 pm | Permalink
        • கேள்விக்குறி

          அண்ணாச்சி, மத்த ஊரு காரங்கள விட திருநவேலிகாரவங்கதான் இந்த மலையாளி பிரச்சனைய பத்தி ஞாயமா பேசமுடியும், நீங்க என்ன சொல்றீங்க???

          Posted on 11-Feb-10 at 4:46 pm | Permalink
        • காளமேகம்

          நெல்லை மாவட்டத்துக்காரவுக நிறையப் பேர் கேரளாவுல எஸ்டேட் வேலை பாக்குறாக. இங்கத்த எஸ்டேட் கூலியைவிட அங்க அதிகம்னு சொல்லுவாக. அதுபோக மத்த தொழிலாளிமார் உரிமையும் உண்டுமாம். பிள்ளைகளுக்கு கூட அங்க தமிழுல படிக்க கேரள கெவர்ன்மெண்ட ஏற்பாடு செஞ்சிருக்காம். 

          Posted on 11-Feb-10 at 4:55 pm | Permalink
        • எழில்

          அப்பறம் எதுக்கு மலையாளி இங்க வந்து தேநீர் கடை வெக்கறான் அங்கேயே எஸ்டேட் ல வேலை செய்ய வேண்டியது தானே. இங்க தான் இருக்குது சூட்சுமம் கடிமான வேலை செய்ய தமிழன் வேணும் அந்த சோம்பேறி மலையாள நா…..களுக்கு.அப்பறம் நம்மளையே பட்டி நு திட்டுவானுக இதுக்கு ஆதரவா பேசறதுக்கு ஒரு கூட்டம் இதெல்லாம் ஒரு பொழப்பு

          Posted on 11-Feb-10 at 5:10 pm | Permalink
        • கேள்விக்குறி

          இன்னிக்கு இனவெறி புடிச்ச தமிழனுங்க நிறையா பேரு பெங்களூரு சாஃப்டுவேர் கம்பேனியில குப்ப கொட்டாறுனுங்க.. ஏன் வந்து இங்க டீக்கடை வக்கலாமே…அதான் சுலபமான வேலயாச்சே

          Posted on 11-Feb-10 at 5:19 pm | Permalink
      • manushandaa

        சீமான் பற்றியும் அவரின் தியாகம் பற்றியும் வுங்களில் யாருக்கும் தெரியவில்லை அன்பு நண்பர்களே வொருவன் வுன்மையாக போராடும்போது அவனின் தியாகத்தை கேவலப்படுத்தாதீர்கள்

        Posted on 18-Feb-10 at 2:07 pm | Permalink
    • வினவு

      ‘ஈழத்தாய்’ பாசிச ஜெயாவுக்காக செம்பு தூக்கியவர்களில் நீங்கள் இல்லையா? இல்லை என்றால் வாழ்த்துக்கள். இருந்தால் ஆழ்ந்த அனுதாபங்கள்.

      Posted on 11-Feb-10 at 4:33 pm | Permalink
  31. http://voipadi.blogspot.com/2010/01/blog-post.html
    இதையேதான் நானும் மேல் கூறிய முகவரியில் இடுகையாக புத்தாண்டு அன்று அளித்துள்ளேன் .

    Posted on 11-Feb-10 at 4:34 pm | Permalink
  32. எழில்

    இந்த கேள்விகுறி அண்ணன் எப்பவுமே ஆதரத்தோட பேச மாட்டாரு எதையுமே கேள்வி கேக்கறதோட நிறுத்த கூடாது அதுக்கு பதில் சொல்லவும் தெரியனுங்கோ

    நீங்க எப்பவுமே திட்டற உங்க கம்முநிசதுக்கு சவக் குழி தோண்டிய அமெரிக்க “ஏகாதிபத்தியம்” தனது ராணுவ தேவைகளுக்காக தான் முதலில் வலையமைப்பு (நெட்வொர்க்) என்று கண்டு பிடித்தது ஆதாரம்

    http://en.wikipedia.org/wiki/Internet#History

    Posted on 11-Feb-10 at 4:44 pm | Permalink
    • கேள்விக்குறி

      அட எழில் தம்பி நான் அன்னிக்கு என்ன சொன்னேன்????
      http://www.vinavu.com/2009/06/22/mp/#comment-10309
      @@@@@அப்படியா! Ezhil தம்பி, நீங்க எழுதியிருக்கர அதிகப்பிரசங்கித்தனமான கருத்திலிருந்து உங்களுக்கு புரட்சி, பூர்சுவா, முதலாளித்துவம் இதபத்தியெல்லாம் ஒன்னுமே தெரியாதுன்னு தெரியுது, சரி வந்துடிங்க ஒரு விசயம் தெரிஞ்சுகிட்டு போங்க…

      இணையம்கறது முதலாளித்துவம் கண்டுபிடிச்சது இல்ல, அது உங்களையும் என்னையும் போல சாதாரண மனுசங்க கண்டு பிடிச்சது. இப்படி மனித ஆற்றலையும் உழைப்பையும் கொண்டு உருவாகும் சாதனங்களை மனித குல மேப்பாட்டுக்காக இலவசமாக இலவசமாக பயன்படவேண்டும் என்ற லட்சியத்தை நோக்கியதுதான் புரட்சி… காசிருக்கரவனுக்கு மட்டும்தான் பயன்பாடு என்ற அநீதிதான் முதலாளித்துவம்.

      பணிவு வேணும் தம்பி இல்லன்ன குண்டு சட்டியல குதிரைதான் ஓட்ட முடியும்… அதப்பத்தி லக்கி எதாவது எழுதியிருக்காரா பாருங்க@@@@@

      அன்னிக்கே சொன்னேன்ல பணிவு வேணுமின்னு.. பாருங்க வீராப்பா போனிங்க, எதுவுமே கத்துக்காம குண்டு ச்டடியில இன்னமும் குதிர ஓட்டிகிட்்டிருக்கிங்க.,. இன்னமும் உங்களுக்கு புரட்சி, பூர்சுவா, ஏகாதிபத்தியம், கம்யூனிசம், முதலாளித்துவம் இதபத்தியெல்லாம் ஒன்னுமே தெரியாம மறுபடி மறுபடி அசிங்கப்பட்டு போரீங்க…

      Posted on 11-Feb-10 at 4:53 pm | Permalink
      • எழில்

        அண்ணே வாதத்தை திசை திருப்பாதீங்க நான் கொடுத்த ஆதாரத்துக்கு பதில் வேற ஆதாரம் இருந்தா கொடுங்க வெறும் கேள்வி அறிவு மட்டும் இருந்த போதாது அண்ணே அதுக்கு “கல்வி அறிவும் ” கொஞ்சம் வேணும்

        Posted on 11-Feb-10 at 4:59 pm | Permalink
        • கேள்விக்குறி

          சரி உனக்கு புரியும் மொழியில் பேசலாம்! அதற்கு முன்னால் நான் கேட்கும் சில் விளக்கங்களை கொடுக்கும் அறிவு உனக்கு இருக்கிறதா பார்ப்போம்.
          ஏகாதிபத்தியம் என்றால் என்ன???
          முதலாளித்துவம் என்றால் என்ன????
          சோசலிசம் என்றால் என்ன?????
          புரட்சி என்றால் என்ன?????
          கம்யூனிசம் என்றால் என்ன?????
          அரசியல் என்றால் என்ன????
          தமிழினவாதம் என்றால் என்ன????
          தேசிய இனம் என்றால் என்ன?????

          இப்போதைக்கு இது போதும்..

          இதிலுள்ள கேள்விகளுக்கு உன்னால் விளக்கம் எழுதமுடியுமென்றால் உன்னிடம் நான் உரையாடுவது புரியும அளவுக்காவது உனக்கு அறிவிருக்கிறது என்று பொருள்… உனது மூளை நசுங்கிக்கொண்டிருக்கிறது என்று பொருள், நாற்காலியை விட்டு உடனே எழுந்திரு…

          Posted on 11-Feb-10 at 5:13 pm | Permalink
      • எழில்

        இணையத்தை கண்டு பிடிச்சது யாருன்னு நான் சொன்னதுக்கு பதில் சொல்றது விட்டுட்டு மறுபடி மறுபடி திசை திருப்பறது எப்பவுமே உனக்கு கை வந்த கலை.நீ (பகல்,இணைய ) கனவு கண்டுக்கிட்டுருக்கிற புரட்சி எப்ப வரும்னு ஒரு டெட்லைன் சொல்லு மத்ததுக்கு நான் விளக்கம் தர்றேன்

        Posted on 11-Feb-10 at 5:27 pm | Permalink
        • வினவு

          எழில், கட்டுரை மலையாளிகளை இனவெறியுடன் அணுகுவது பற்றியது. அதை விட்டுவிட்டு இந்த இணைய ஆராய்ச்சி எதற்கு? நீங்கள் இந்த இடுகையுடன் வேறுபடும் விசயங்கள் பற்றி விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

          Posted on 11-Feb-10 at 5:33 pm | Permalink
        • கேள்விக்குறி

          இணையத்தை மனிதன் கண்டுபிடித்தான் என்கிறேன் நான், இல்லை என்கிறீர்களா? பின் என்ன சிவபெருமான் மாதிரி இணையம் சுயம்புவாக உதித்ததா?

          Posted on 11-Feb-10 at 5:36 pm | Permalink
        • கேள்விக்குறி

          வினவு எழில் தானொரு அடிமுட்டாள் என்பதை இங்கே நிரூபி்தஃதுக்கொண்டிருக்கிறார் விடுங்களேன்….

          Posted on 11-Feb-10 at 5:38 pm | Permalink
  33. mani

    தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய‌ வேண்டுகோள்…

    த‌யவுசெய்து தமிழ்தேசியவாதிகள் அல்லது அனுதாபிகள் பேசுவதற்கு பதில் சொல்ல முயற்சி செய்யாதீர்கள். அந்த அரசியலுக்கு இனிமேல் இயங்குவதற்கான தளம் இல்லாத்தால் அது தனது கடைசிப்பிடி எங்காவது கிடைக்காதா என பள்ளத்தில் விழுந்த கிழவனைப் போல இருக்கிறது. அதனால்தான் அது துக்க வீடு. அந்த துக்க வீட்டில் போய் அறிவுசார் விசயங்களை விவாதிக்க முயல வேண்டாம் எனக் கருதுகிறேன். துக்க வீட்டில் வேப்பிலையை நெருங்கிய உறவினர்க்கு தின்னத் தந்தால் துக்கம் குறையும் என்பது தின்னத் தருபவர்களின் நம்பிக்கை. அதற்கு அறிவியல் விளக்கமெல்லாம் கேட்க்க் கூடாதுதானே..

    ஆகவே சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவர்கள் பேசுகின்ற துக்க வார்த்தைகளுக்கு காது கொடுக்க கடவோம். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே … ஆமென்.

    Posted on 11-Feb-10 at 4:45 pm | Permalink
    • கேள்விக்குறி

      மணி, பின்னீட்டீங்…

      Posted on 11-Feb-10 at 5:23 pm | Permalink
      • puli

        என்ன வலையா? கொண்டு போய் சிங்கள,மலையாள மீனவன் கிட்ட கொடுங்க தமிழ் நாட்டோட மீன் வளத்த கொள்ளயடிக்கட்டும்

        Posted on 12-Feb-10 at 6:51 pm | Permalink
        • mani

          கையில கொள்கையில்ல‌
          வாயில துப்பாக்கி இருக்குது
          புலித்தலம ஞாபகத்துக்கு வருது
          அண்ணன் பூட்டுப் போடுறாரு
          ஜெயா மாமி பொடா போடுவாங்க‌
          ராஜீவ் செத்தப்ப இவங்கள்லாம்
          இனமானம் பேசுனாங்க‌
          தைரியத்த பத்தி இவங்க‌
          தனியா புத்தகம் கூட போடுவாங்க‌

          கேக்குறவம் மட்டுமில்ல‌
          யோசிக்க தெரிந்தவனும்
          கேணயனா இருக்குற வரைக்கும்

          Posted on 12-Feb-10 at 7:27 pm | Permalink
  34. FAAZ

    //.பார்பநீயத் தலைமையை கொண்டிருக்கும் வினவு ஒரு மலையாள பார்பானை மென்மையாக மயிலறகால் வருடி கண்டித்து விட்டு தமிழனை முட்கம்பி கொண்டு அடித்துள்ளீர்கள் இது தான் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டதென்பது.//

    தவிடு பொடியாக்ரேனு சொல்லிக்கிட்டு …????

    எண்ணய்யா இது. விவரங்கெட்டத்தனமான பேச்சா இருக்கு..

    இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஜோக்கு இது தான் யா…

    Posted on 11-Feb-10 at 4:56 pm | Permalink
    • எழில்

      என்ன வெவரம் கெட்டதனம் நு சொல்றீங்களா ? உங்களோட கருத்து தான் முட்டாள் தனமா இருக்கு

      Posted on 11-Feb-10 at 5:01 pm | Permalink
      • puli

        எழில் விடுங்க இதுங்களுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டம்னா நம்மள நாமே கேவலபடிதிக்கிற மாதிரி.பேரே கேள்விக்குறி அவரு கேள்விதான் கேட்பாரு நம்ம கேட்டா பத்தில்லாம் சொல்லமாட்டாரு.

        Posted on 12-Feb-10 at 5:30 pm | Permalink
        • mani

          பாப்பாத்தி தலைமையில் ஈழம் வாங்கலாமுன்னா
          பார்ப்பனர் தலைமையில புரட்சி நடத்த கூடாதா

          சங்கராச்சாரிக்காக அவங்க யாரும் வக்கலாத்துக்கு வரல
          பிரேமானந்தா சூத்திரங்கிறதுக்காக பழிவாங்கிறாங்க என்றாய்
          பார்ப்பனியம் யாரிட்ட இருக்குது.

          பிறப்புதான் எல்லாத்தையும் தீர்மானிக்குதுங்கிற•.
          அதையேதான் மனுவும் சொன்னான்.
          புறச்சூழலை மாற்றுவதன் மூலமும், அகநிலையில் போராடுவதாலும்
          மாற்றிடலாம்னு சொன்னா
          எதுவுமே மாறாதுங்குற•.
          அது அறிவியல்ல தோத்துப் போன கொள்கை
          க‌டவுள் நம்பிக்கை உள்ள பாப்பாரக் கொள்கை

          அதுக்கு பேரு பார்ப்பனியம்.
          அது உங்க தலமயில மட்டுமில்ல‌
          உங்க தலமயிருக்குள்ளயும் இருக்குது.

          Posted on 12-Feb-10 at 7:24 pm | Permalink
  35. FAAZ

    ////தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள் //

    //குறிப்பான விவசாய வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ அற்ற கேரளத்தில் வாழ்ந்து பிழைக்க முடியாது என்றுதான் பலரும் பல இடங்களில் குடியேறி வேலை செய்கின்றனர் // இந்த இரண்டு கருத்துக்களும் போதும் கட்டுரையாளர் ஒரு அடி முட்டாள் என்பதை நிரூபிக்க !! இப்பொழுது நேரம் இன்மையால் உங்களது முழு வாதத்தையும் தவிடு பொடியாக்க பின்பு வருகிறேன்.!!//

    மேற்சொன்ன கருத்துகளில் என்ன தவறு நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியமா நண்பரே??

    Posted on 11-Feb-10 at 5:09 pm | Permalink
    • எழில்

      அதில் உள்ள உள்முரண் தெரியலையா ? எதுக்கும் உங்க தமிழ் அறிவை மறுபடியும் தமிழ் வாத்தியார் கிட்ட பொய் “பிரஷ் அப்” பண்ணுங்க

      Posted on 11-Feb-10 at 5:14 pm | Permalink
      • கேள்விக்குறி

        எழில், இன்னமுன் நீங்க எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெட்டியாக திட்டிக்கொண்டு அனைவரது நேரத்தையும் வீண்டித்துக்கொண்டிருக்கீங்க. இந்த கட்டுரைக்கு உறுப்படியாக மறுப்பு எழுத முடியுமென்றால் தாராளமாக வாதம் செய்யலாமே.

        இவ்வளவு பின்னூட்டம் போட நேரமிருக்கு இன்னுமா தவிடு பொடியாக்க நேரமில்ல..???? நேரமில்லையா???? சரக்கில்லையா????

        Posted on 11-Feb-10 at 5:21 pm | Permalink
  36. Malayala Tamilan

    அன்பின் வாசகர்களுக்கு jaffna thamilan oru malayalathamilan ennpathu yavarum neveer ariveerhala? Annan Pirabaharanum Oru malayalathamilan.Innrum nam thamil pesumpothu malayala action than varum athiham pavikkum sollum kooda malayala sollu.
    e.g “peechati “nam yallpanathil pavipathu, ithu thamillil “kathi”.
    ivaru othiham, tamil film have lot of influence now in jaffna due to the now we are not using our old word as similler to malayalam.

    Posted on 11-Feb-10 at 5:15 pm | Permalink
    • Sivasegaram

      இது முற்றிலும் சரியல்ல. ஒரு சில சொற்களை வைத்தும் Malabar citizens
      என்று சட்டத்தில் வருவதை வைத்தும் இம் மாதிரி முடிவுகட்கு வர முடியாது.
      வணிக, தொழில் உறவுகட்கும் மொழியில் ஒரு பங்குண்டு.
      ஆனல் இலங்கையில் கணிசமான கேரள செல்வாக்கு உண்டு. மட்டக்களப்பில் அது பண்பாட்டில் வலுவாகவுள்ளது.

      இலங்கையில் வாழ்ந்தத மலையாளிகளின் பங்களிப்பு எச் சமூகத்தினர்க்கும் தீங்கனதல்ல.

      Posted on 16-Feb-10 at 5:19 pm | Permalink
  37. FAAZ

    மேற்சொன்ன கருத்துகளில் என்ன தவறு நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியமா நண்பரே??

    Posted on 11-Feb-10 at 5:16 pm | Permalink
  38. FAAZ

    //அதில் உள்ள உள்முரண் தெரியலையா ? எதுக்கும் உங்க தமிழ் அறிவை மறுபடியும் தமிழ் வாத்தியார் கிட்ட பொய் “பிரஷ் அப்” பண்ணுங்க//

    நண்பா… தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் கூலிப்பணிக்காரர்கள்தான். தமிழ் நாட்டில் கிடைப்பதை விட அங்கு கூடுதல் சம்பளம் கிடைப்பதால் வேலை செய்கின்றார்கள்.

    கேரளாவில் நூறு சதவீதம் கல்வியறிவு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாதா. அவர்கள் எல்லாம் நல்ல வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு செல்கின்றார்கள். கேரளாவில் கூலிப் பணிக்கு ஆள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
    இதைத்தான் வினவு சொல்கிறார். இதில் என்ன முரண்பாடு?

    Posted on 11-Feb-10 at 5:22 pm | Permalink
    • எழில்

      ஆக மலையாளி எல்லாம் வெள்ளை காலர் வேலை மட்டும் தான் செய்வான் இந்த இளிச்ச வாயத் தமிழன் அவனுக கேவலம்னு நெனைக்கற எல்லா வேலையும் செய்யனும் அது தானே உங்க எதிர்பார்ப்பு. மலையாளிகளிடம் எனக்கு நேரடியான அனுபவம் இருக்கிறது நான் கொச்சின் இல் பல மாதங்கள் இருந்திருக்கிறேன் அங்கே தமிழர்கள் எப்படி குடிசைகளில் எந்த vasathiyum illaamal vaazhkiraarkal enbathayum paaththirukkiren

      Posted on 11-Feb-10 at 5:37 pm | Permalink
      • கேள்விக்குறி

        FAAZ, அங்கே கூலிக்கு ஆள் இல்லை என்பதனால் இங்கிருந்து போகவில்லை, இங்கே கூலி குறைவு என்பதனால் போகிறார்கள்… எழில் கேளராவில் தமிழக குடிசையில் இருக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் என்ன மாளிகைகளிலா இருக்கின்றார்கள், அங்கே கூலி அதிகம் என்பதால் அங்கே போகிறார்கள், இதில் உங்கள் பிரச்சனை என்ன???

        Posted on 11-Feb-10 at 5:49 pm | Permalink
        • எழில்

          aama naan bangalore la thaan irukken.ennoda mozhip patra nee ina veri nu sonnaa aama naan ina veriyan thaan unnap pola oru thurogi alla

          Posted on 11-Feb-10 at 6:37 pm | Permalink
        • கேள்விக்குறி

          எழில் சொல்ப அட்ஜஸ்ட் மாடி குரு… நான் எப்ப மொழிப்பற்ற இனவெறின்னு சென்னேன், தமிழ் வாழ்க என்பது மொழிப்பற்று… மலையாளிய விரட்டுங்கறுது இனவெறி.. நீங்க எப்படி????

          Posted on 11-Feb-10 at 6:41 pm | Permalink
        • எழில்

          angayum thamizhan malayaalikalaal sorandath than padukiraan thamizharkal kuraintha cooli thaan vaanguvaarkal endru naan kochin il iruntha pothu oru malayali sonnaan. ithu thaan athiga cooli tharum latchanam

          Posted on 11-Feb-10 at 6:45 pm | Permalink
        • கேள்விக்குறி

          எழில்…தமிழ்நாட்ட விட கேரளாவுல கூலி அதிகம் ஆனா கேராளா காரனுக்கு குடுக்கறதவிட கம்மி, அதனால இங்கிகிருந்து அங்க போறாங்க கேரளா முதலாளி சுரண்டறாங்க… அதே மாதிரி உத்தர் பிரதேசத்திலேருந்து இங்க கார்பென்டர் வேலைக்கு வற்றாங்க, அங்க விட இங்க கூலி அதிகம் ஆனா தமிழ்நாட்டு வேலையாட்களுக்கு கொடுப்பதை விட கம்மி, அதனால தமிழ்நாட்டு முதலாளிங்க சுரண்டறாங்க… இதத்தான் நாங்க சொல்லுறோம், முதலாளின்னு வந்தா தமிழ்நாடு கேரளா எல்லாம் ஒன்னு, தொழிலாளின்னு வந்த எல்லாரும் ஒன்னு… அது சரி..குறைந்த கூலிய எதிர்த்தா நீங்க முதலாளித்துவத்த எதிர்க்கனுமே???? பரவாயில்லையா????

          Posted on 11-Feb-10 at 6:54 pm | Permalink
        • கம்மீனிஸ்டை காயடிப்போர் சங்கம்

          மானங்கெட்ட தமிழ் தீவிரவாதி எழிலே, நக்கல் நாய்ங்க சீனாவுல வாங்கறான்னா நீ யார்கிட்ட காசு வாங்குற. தமிழ்நாட்டுல வந்து விவசாயம் பண்ணவேண்டீதானே எதுக்குடா பேங்ளூர்ல பொட்டிதட்டி கன்னடகாச வாசங்கற. அப்ப உன் தமிழ்மானம் எங்க போச். மான ஈனம் இல்லாத தமிழ் திராவிட முன்டம். பதில் சொல்லுடா.
          நக்கல் தீவிரவாதி, முஸ்லீம் திவிரவாதி, தமிள் தீவிரவாதி எல்லா தீவிரவாதியும் வந்து போறதுக்கு வினவு தீவிரவாதி துணை. நல்லா நடுத்துறீங்கடா தீவிரவாத தளம்

          Posted on 15-Feb-10 at 11:34 pm | Permalink
      • எழில்

        டை காயடிக்கற கம்மனாட்டி மூடிட்டு போ.விவாதம் பண்ற அளவுக்கு அறிவில்லாத அடி முட்டாள் நீ.சும்மா திட்டரதையே பொழப்ப வெச்சுரக்கற பொறம்போக்கு.அது கன்னடன் கொடுக்கற காசு இல்லைட மானம் கெட்டவனே அது உலக அளவுல நெறைய நாட்ல இருந்து வர்ற பணம் டா முட்டாள் உன்ன மாதிரி மர மண்ட கூ க்கு அதெல்லாம் எங்க தெரிய போகுது உன்ன விட நானும் கீழ எறங்கு வேண்டா பன்னாடை 

        Posted on 16-Feb-10 at 8:44 am | Permalink
        • எழில்

          தமிழ்னு ஒழுங்க எழுத தெரியாத ப …சி க கா ச 

          Posted on 16-Feb-10 at 8:47 am | Permalink
  39. mahesh

    மலையாளிகள் இங்கு வந்து சம்பாதிச்சிட்டு அங்கே போய் சேர்த்து வைகிறார்கள்.இங்கே மலையாளி முதல்வராக ஆக முடியும்.ஒரு தமிழன் அவர்கள் மொழியில் ஒரு பாண்டி அங்கே முதல்வராக முடியுமா?

    Posted on 11-Feb-10 at 5:27 pm | Permalink
  40. வெற்றிவேல்

    தோழர்களே உங்கள் வீட்டில் யாருக்கும் டீ போடத்தெரியாதா? மலையாளிகள் வரும் வரைக்கும் தமிழ்நாட்டில் யாரும் தேனீர் குடிக்காமலா இருந்தார்கள்?
    உழைக்கும் மக்களை ஒன்று சேர்ப்பது முக்கியம் தான். அதற்காக என் தாயைப் பழித்தவனை ஒன்றுமே செய்யக் கூடாதா?

    சரி, வேலைக்காரியை அவதூறாகப் பேசிய ஜெயராமனுக்கு எதிராக நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? இறுதியாக ஜெயராமனை என்னதான் செய்யலாம் என்று நீங்களே சொல்லிவிடுங்கள். வேண்டுமானால் அவரை அழைத்து ஒரு பாராட்டு விழா நடத்தலாமா? ஆற்று மணலை எடுத்தால் தங்களுடைய மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று தமிழ்நாட்டில் மணல் திருடும் மலையாளிகள், தங்கள் மாநில தொழிற்சாலை கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுகிறார்களே, இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

    பெ. மணியரசன் வெளியாரை வெளியேற்றுங்கள் என்று சொல்லிவருகிறவர்தான். ஆனால் அதற்காக பால் தாக்கரே, ராஜ் தாக்கரே போல் அவர் ஒன்றும் வன்முறையை விதைக்கவில்லையே. தமிழ்த் தேசியத்தை கட்டமைக்கப் பார்க்கிறார். அது தவறா? தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தை மறந்துவிட்டு தமிழர்கள் எதை சாதித்துவிட முடியும்? வெளிமாநிலத்தில் இருந்து கூலி வேலைக்கு ஆட்களை அழைத்து வருவதே அவர்களுக்கு குறைவான கூலி கொடுத்து ஏமாற்றி விடலாம் என்பதற்குத்தான். உள்ளூரில் தொழிலாளிகளுக்கும் துரோகம் வெளிமாநில ஆட்களுக்கும் துரோகம். தமிழக சட்டப் பேரவை புதிய கட்டட கட்டுமானப் பணியில் வெளிமாநிலத்தில் இருந்து தான் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் அங்கு நடந்த விபத்தில் கூட வெளிமாநிலத்தவர்கள் காயம் அடைந்த செய்தி வெளியானது. நம்முடைய வரிப்பணத்தில் தங்கள் கல்லாவை கட்டுவதற்கு வெளிமாநிலத்தவர்களை அழைத்து வந்து ஏமாற்றுகிறார்கள். இதற்காக நீங்கள் குரல் கொடுக்கலாமே? தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்கிறார்கள் . வர்க்க அரசியல் பேசும் நீங்கள் உங்கள் அரசியலை சரியாகச் செய்யுங்கள். அப்போது தான் தமிழ்ச் சமூகம் முன்னேற்றப்பாதையில் செல்லும்.

    Posted on 11-Feb-10 at 5:43 pm | Permalink
    • வினவு

      வெற்றிவேல்

      தமிழ்நாட்டு தேனீர்க்கடைகளில் உள்ள தமிழர்களை வெளியேற்றிவிட்டா மலையாளிகள் வேலைசெய்கிறார்கள்? தமிழன் அந்தவேலையை விட ஊதியம் அதிகமுள்ள வேலைக்கு போவதனால்தானே இது நடந்திருக்கிறது. உங்கள் தாயை தினமும் சன்னும், கலைஞரும் இன்னும் எல்லா பிரபல தமிழ் பத்திரிகைகளும்தான் பழிக்கிறது. அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?

      கேரளாவுக்கு மணல்வாரிக் கொடுப்பது தமிழனதளபதிகளின் அல்லக்கைகள்தானே. இந்தியாவுக்கே மேற்கத்திய நாடுகளின் கழிவுகள் கப்பல் கப்பலாக வந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு கூட அப்படி வந்த்து உண்டு. பெ.மணியரசன் இப்போது மலையாளிகளை வெளியேற்றுவோம் என்று சொல்கிறார்? அவர் பார்வையில் டீக்கடை மலையாளிகள்தான் வில்லன்கள். இது அப்பட்டமான இனவெறியன்றி வேறென்ன?

      தமிழரின் தேசிய இன அடையாளம் எது? ரிலையன்ஸ் பிரஷ்ஷா, மெகாமார்ட்டா, ஷாப்பிங்மால்களா, சன் டிவியா, குமுதமா, எந்திரன் படமா…..எது?
      தமிழரின் தேசிய இன அடையாளத்தை வைத்து நீங்கள் திரட்டப்போவதை சற்று விளக்க முடியுமா?

      Posted on 11-Feb-10 at 6:08 pm | Permalink
      • வெற்றிவேல்

        மேற்கத்திய நாடுகளின் கழிவுகள் இந்தியாவில் கொட்டுவது, சன் டிவி அதன் குழும இதழ்களின் தமிழ்ச் சேவை, தமிழினத் தளபதிகளின் அல்லக்கைகள் பற்றிய விழிப்புணர்வு உங்களைப் போலவே எல்லோருக்கும் உண்டு. ஜெயராமனை என்ன செய்யலாம் என்ற நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லையே.

        Posted on 12-Feb-10 at 11:55 am | Permalink
        • புலிக்குட்டி

          எனக்கு என்னமோ வினவு தான் ஜெயராம் மாதுரி
          நடிக்கிறருன்னு தெரியுது .

          Posted on 12-Feb-10 at 1:45 pm | Permalink
        • வினவு

          வெற்றிவேல்,
          ஜெயராமின் அருவருத்தக்க பேச்சை ஒரு நடிகனது கொழுப்பு மிகுந்த திமிர் என்ற வகையில் கண்டிக்கவேண்டும். ஆனால் அவரை மலையாளிகளின் பிரதிநிதியாகவைத்து கண்டிப்பதும், அதை வைத்து மலையாளிகளை வெறுக்கச் சொல்வதும், இங்கிருக்கும் உழைக்கும் மலையாளிகளை வெளியேற்றச் சொல்வதும் என்ன வகை நீதி?

          Posted on 12-Feb-10 at 1:57 pm | Permalink
  41. எழில்

    yove ennoda pinnoottam thamizhla vara maattengathu site la aetho problem allathu vaera aethaachchum sathiya ?

    Posted on 11-Feb-10 at 5:46 pm | Permalink
  42. கற்பவன்

    //நாட்டில் கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த தொலைக்காட்சி நேர்காணலை புலனாய்வு செய்து கண்டு பிடித்து பிரதியை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கிய சிகாமணிகள் யாரென்று தெரியவில்லை.//

    நாட்டில் கோபப்படுவதற்கு ஆயிரம் விசயங்களிருந்தும், ‘சாம்பல்’ என்ற யாருமே அவ்வளவாக பார்த்திருக்காத‌ பத்திரிக்கையில், ஈராக் பற்றிய‌ ஒரு கூட்டுக் கவிதை எழுதிய விக்ரமாதித்தியனையும், சங்கர் ராம சுப்பிரமணியணையும் தேடிப்பிடித்து, ‘ஈராக் போராட்டத்தை இழிவுபடுத்திவிட்டார்கள்’ என்று ஓவர் எஃபக்ட் கொடுத்து, வீடுபுகுந்து மிரட்டி எழுதி வாங்கிய ம.க.இ.க சிகாமணிகளை விட இந்த தன்மானப்பிரச்சணையை ஊதிவிட்ட சிகாமனிகள் யோக்கிய குறைவானவர்கள் அல்ல‌.

    //பொதுச்சூழல் இப்படி வாகாக மாறியிருப்பதைப் பார்த்து காகிதப்புலி சீமானின் தம்பிகள் ஜெயராமின் வீட்டை போலீஸ் பாதுகாப்புடன் தாக்கிவிட்டு//

    ஜெயராம் வீட்டை தாக்கப்போனவர்களுக்கு போலீசே பாதுகாப்பு கொடுத்ததா, எவ்வளவு அற்புதமாக ஜோடிக்கிறீர்கள். ஒருவேளை அங்கு போலீசார் நின்ற காரணத்தினாலேயே அவர்களின் பாதுகாப்போடுதான் அந்த தாக்குதல் நடந்தது என்று நிறுவ முயற்சிக்கிறீர்களா? அப்படியானால் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாம், தியாகராயர் ஆராதனை விழாவில் புகுந்து நீங்கள் கலகம் செய்த‌ ஒரு பழைய செய்தி ஒன்றை உங்களின் பழைய பு.ஜ இதழ்களில் படித்திருக்கிறேன். அந்த நிகழ்வில் பல பார்ப்பனர்கள் கூடியிருந்த நிலையில்தான் உங்கள் தோழர்கள் அந்த கலகத்தை செய்தார்கள். எனவே பார்ப்பனர்கள் பாதுகாப்புடந்தான் நீங்கள் அக்க்லகத்தில் ஈடுபட்டீர்கள் என கூறலாமா?

    //அதனால்தான் தினசரி உடலுழைப்புக் கூலிவேலைக்கு கேரளத்தில் ஊதியம் அதிகம் என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள். சொரணைபடக் கூறுவதென்றால் இங்கு தமிழனது சுரண்டலால் வாழ முடியாமல் தமிழர்கள் கேரளத்திற்கு படையெடுக்கிறார்கள்//

    அடப்பாவமே, உலகமயமாக்கம் இளைஞர்களை நாடோடியாக்குகிறது, அடித்து துரத்துகிறது என்றெல்லாம் நரம்பு புடைக்க பேசினீர்களே தோழர்களே, தமிழனின் தலையை தடவ வேண்டும் என்று வந்தவுடன், ஏகாதிபத்தியத்திற்கும் உங்களுக்குமிருந்த(மக்களுக்கும்) முரண்பாடு பின்னுக்குப் போய் தமிழன் தான், இன்னொரு தமிழன் இடம்பெயர்வதற்கு காரணமாகிறான் என்று எழுத வேண்டிய தேவை உங்களுக்கு வந்துவிட்டதோ? சரி இருக்கட்டும், இங்கு பல கேரளர்கள் வந்து வயிறுபிழைத்திருக்கிறார்களே அவர்களும் கேரளத்தானுடைய சுரண்டல் பொறுக்க இயலாமல்தான் இங்கு வந்திருக்கிறார்களா? அதையும் கொஞ்சம் சொரணைபட சொல்லுங்களேன்.

    இந்த கட்டுரையின் முன் பாதி ஜெயராமுக்கும், மலையாளிகளுக்குமான வலிந்த வக்காலத்து, நீ ரொம்ப ஒழுங்கா என்று தமிழர்களை பார்த்து செய்யும் எக்காளம், இரண்டாவது பாதி மேலே நாங்கள் எழுதியதெல்லாம் உழைக்க மக்களுக்கான அடிப்படையில்தான் என்ற நியாயப்பாடு.

    கடைசியா ஒரு டவுட்டு தோழர், தலைமையில கூட வேணாம், உங்க உழைக்கும் வர்க்கத்து லிஸ்டுலயாச்சும் ‘கறுத்து தடித்த(எருமை போன்ற‌) தமிழச்சி’ இருக்காளா? இல்லையா?

    Posted on 11-Feb-10 at 5:51 pm | Permalink
    • கேள்விக்குறி

      அதெல்லாம் சரி அய்யா மானமில்லா சீமான் எதுக்காவ அப்புறம் மலையாள, சிங்கள, பார்ப்பன நடிகர்களை வச்சு சினிமா எடுக்கறாப்புல அவரு லிஸ்டுல கறுத்து தடித்த(எருமை போன்ற‌) தமிழச்சி’ இருக்காளா? இல்லையா?… இல்ல அப்படிப்பட்ட தமிழச்சிங்கள படத்துல போட்டா சினிமா ஓடாதுன்னு கொள்கையை கொன்னு பொதச்சுட்டாறா???

      Posted on 11-Feb-10 at 6:04 pm | Permalink
      • கற்பவன்

        அத சீமானுக்கிட்டதாங்கய்யா கேட்கனும். கட்டுரையில் நீங்க வரிஞ்சு கட்டிக்கிட்டு மலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கியிருக்குற அளவுக்கு கூட‌ நான் என்னோட பின்னூட்டத்துல சீமானுக்கு வக்காலத்து வாங்கலயே அய்யா, மேலே நான் போட்டிருக்கிற எல்லா விசயங்களையும் படிச்சு பார்த்து கருத்து சொன்னீங்கன்னா அடியேனும் தண்யனாவேன்..

        Posted on 11-Feb-10 at 6:16 pm | Permalink
        • கேள்விக்குறி

          கட்டுரைக்கு சம்பந்தமேயில்லாத ஈராக்கையும் திருஐயாரையும் பேசுகிறீர்கள், தொடர்புள்ள சீமானை பற்றி பேச மறுக்கிறீர்கள்… நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற விசயங்கள் விதன்டாவாதங்கள் அறிவு பூர்வமான விவாதத்துக்கு உகந்தது அல்ல என்பது அடியேனின் கருத்து

          Posted on 11-Feb-10 at 6:28 pm | Permalink
        • கற்பவன்

          கட்டுரையோடு சம்பந்தமாக எழுதியதாக தானே அய்யா என்று சிற்றறிவுக்கு தெரிகிறது. சீமானை பற்றி பேசுவது மட்டும்தான் இக்கட்டுரைக்கு சம்பந்தமான ஒன்றோ? சரி விடுங்கள் ‘விதன்டாவாதங்கள் அறிவு பூர்வமான விவாதத்துக்கு உகந்தது அல்ல’ என்ற உங்களின் தீர்ப்பை ஏற்று, அறிவுபூர்வமான விவாதத்திற்கு தகுதி இல்லாதவனாக ஒதுங்கியிருந்து தங்களது அறிவு பூர்வமான விவாதங்களை வேடிக்கை பார்க்கிறேன், வழக்கம் போல. நன்றி

          Posted on 11-Feb-10 at 7:03 pm | Permalink
    • வினவு

      கற்பவன்,

      விக்ரமாதித்யன், சங்கர்ராம சுப்பிரமணியனிடம் வீடு புகுந்து மிரட்டி வாங்கவில்லை அந்த மன்னிப்பை. அது ஜனநாயகமுறையில் நடத்தப்பட்ட விவாதம், போராட்டம். மேலும் இந்தப்பிரச்சினையை நாங்கள் தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. அவ்வ்வளவு ஏன் எங்கள் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளில் கூட இந்த செய்தி வெளிவரவில்லை என்பதிலிருந்தே இதன் முக்கிய்த்துவத்தை நீங்கள் உணரலாம். ஆனால் இலக்கியவாதிகள் அதை இன்னும் நினைவுவைத்திருப்பதிலிருந்து அவர்களுக்கு அது முக்கியத்துவம் உடையது என்பது புரிகிறது.

      ஜெயராம் இருக்கும் வளசரவாக்கம் வீடு ஒருமுட்டுச்சந்தில் உள்ளது. தெருமுனையில் போலீஸ் ஜீப், வீட்டு அருகில் போலீசார் இருக்கையில் இது போலீசின் கட்டுப்பாட்டுக்குமீறி நடந்திருக்க முடியாது. மற்றபடி எங்களது கேள்வி ஜயராம் வீட்டில் வீரம் காண்பித்தவர்கள் சன்.டிவியின் முன்னால் காண்பிப்பார்களா என்பதே.

      இடம்பெயர்விற்கு உலகமயமாக்கமும் காரணம். இங்கு ‘தமிழன்’ குறைந்த கூலி கொடுப்பதும் காரணம். ஒன்றை வலியுறுத்துகையில் மற்றதை ஏன் விட்டுவிட்டாய் என்று கேட்பது சரியல்ல. உங்களைப்போல கற்ற பண்டிதர்கள் ராமதாஸ், கருணாதி, ஜெயா போன்ற ஏ.சி தமிழர்களுக்கு செம்பு தூக்கும்போது நாங்கள் வெளியில் வெயிலில் வதைபடும் கருப்பு தமழனுக்கு பாடுபடுவதில் ஆச்சரியமில்லையே?

      Posted on 11-Feb-10 at 6:18 pm | Permalink
      • கற்பவன்

        //விக்ரமாதித்யன், சங்கர்ராம சுப்பிரமணியனிடம் வீடு புகுந்து மிரட்டி வாங்கவில்லை அந்த மன்னிப்பை. அது ஜனநாயகமுறையில் நடத்தப்பட்ட விவாதம், போராட்டம். மேலும் இந்தப்பிரச்சினையை நாங்கள் தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. அவ்வ்வளவு ஏன் எங்கள் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளில் கூட இந்த செய்தி வெளிவரவில்லை என்பதிலிருந்தே இதன் முக்கிய்த்துவத்தை நீங்கள் உணரலாம். ஆனால் இலக்கியவாதிகள் அதை இன்னும் நினைவுவைத்திருப்பதிலிருந்து அவர்களுக்கு அது முக்கியத்துவம் உடையது என்பது புரிகிறது.//

        அது எந்த அளவுக்கு ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட விவாதம் என்று தெரியும் தோழரே. காலையில் விடிந்தும் விடியாத நேரத்தில், சங்கர் ராம சுப்பிரமணியனின் வீட்டில் செஞ்சட்டை அணிந்த பத்து தோழர்கள் புடை சூழ தான் அந்த சனநாயக விவாதம் நிகழ்ந்ததென்றும், பின்பு விக்ரமாதித்தியனோடு ‘சனநாயக விவாதம்’ நிகழ்த்தப்பட்டது என்றும் தெரியும். நீங்கள் ஏன் இந்த விசயங்களை உங்கள் பத்திரிக்கைகளில் எழுதவில்லையெனில் சங்கர் ராம சுப்ரமணியனையும், விக்ரமாத்தியனையும் யாரென்றே படிப்பவர்களுக்கு தெரியாது என்பதுதான், ஒரு வேளை நீங்கள் எழுதியிருந்தால் சாம்பல் என்ற பலர்(நானும்) அவ்வளவாக கேள்விக்கூடபட்டிராத ஒரு பத்திரிக்கையில் வெளியான‌ கவிதைக்காகவா இவ்வளவு களேபாரம் என்ற பலர் சிரித்திருக்கவும் கூடும். கறுத்து தடித்த தமிழ் வேலைக்காரியை ஜெயராம் கிண்டல் செய்யும் ஒரு பேட்டி முக்கியதுவம் இல்லாததாக தோன்றும் போது. ‘சாம்பல்’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்த கவிதை மட்டும் ஏன் உங்களுக்கு முக்கியத்துவம் உடையதாக தோன்றியது.

        //ஜெயராம் இருக்கும் வளசரவாக்கம் வீடு ஒருமுட்டுச்சந்தில் உள்ளது. தெருமுனையில் போலீஸ் ஜீப், வீட்டு அருகில் போலீசார் இருக்கையில் இது போலீசின் கட்டுப்பாட்டுக்குமீறி நடந்திருக்க முடியாது. மற்றபடி எங்களது கேள்வி ஜயராம் வீட்டில் வீரம் காண்பித்தவர்கள் சன்.டிவியின் முன்னால் காண்பிப்பார்களா என்பதே.//

        இதே பாணியில் எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது தோழரே, ஈராக் யுத்தத்தை இழிவு படுத்தியதாக சங்கர் ராம சுப்ரமணியத்திடம், விக்ரமாதித்தியனிடமும் வீரம் காண்பித்த நீங்கள். ‘ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க, எனக்குள்ள யுத்தம் தொடங்கிடுச்சு இங்க..’ என்று பாடல் எழுடிய வைரமுத்துவின் வீடேறி வீரம் காண்பிப்பீர்களா? அந்த முக்கியத்துவமில்லாத ‘நிகழ்விலிருந்தே’ மீண்டும் கேள்வி கேட்டதற்காக என் மீது கோபப்படவேண்டாம்.

        //இடம்பெயர்விற்கு உலகமயமாக்கமும் காரணம். இங்கு ‘தமிழன்’ குறைந்த கூலி கொடுப்பதும் காரணம். ஒன்றை வலியுறுத்துகையில் மற்றதை ஏன் விட்டுவிட்டாய் என்று கேட்பது சரியல்ல. //

        தோழர் ஒரு விசயத்தை சொல்லிக் கொள்கிறேன் எல்லோரும் தமிழர்கள் என்ற ‘பாமர’ பார்வை எனக்கில்லை. ஆனால் அதே சமயம் ‘இடப்பெயர்விற்கு உலகமயமாக்கமும் காரணம் இங்கு ‘தமிழன்’ குறைந்த கூலி கொடுப்பதும் காரணம்’ என்ற பதத்தை கொஞ்சம் விளக்கு சொல்லுங்களேன், புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

        //உங்களைப்போல கற்ற பண்டிதர்கள் ராமதாஸ், கருணாதி, ஜெயா போன்ற ஏ.சி தமிழர்களுக்கு செம்பு தூக்கும்போது நாங்கள் வெளியில் வெயிலில் வதைபடும் கருப்பு தமழனுக்கு பாடுபடுவதில் ஆச்சரியமில்லையே?//

        தோழர் உங்கள் அளவுக்கெல்லாம் நான் கற்ற பண்டிதன் கிடையாது, தன்னடக்கத்திற்கு அல்ல உண்மையே அதுதான். மேலும் சொம்பு தூக்கும் திருப்பணியை நான் இதுவரையில் நீங்கள் குறிப்பிடும் ஏ.சி தமிழர்களுக்கு செய்ததில்லை. இடதுசாரி இயக்கத்திற்கு சில காலம் சொம்பு தூக்கிவிட்டு ஒதுங்கிவிட்டேன். சர்வதேசிய முறையில் எனக்கு சொம்பு தூக்க தெரியாமல் போன துர்பாக்கியம்தான் அதற்கு காரணம் தோழர்.

        Posted on 11-Feb-10 at 6:57 pm | Permalink
        • mani

          சொம்பு தூக்குறவங்களால இங்க இருக்க முடியாது.
          அதுக்கு வேற இடம் இருக்கு.. அங்கதான் நீங்க சரியாப்
          போய் சேருவீங்கன்னு நினைக்கேன்.
          நீங்களே ஒத்துக்கிட்டதாலதான் என்னோட‌
          கருத்த பதிவு செய்தேன்

          குறைந்த கூலிக்கும், சரியான கூலிக்கும்
          வித்தியாசம் தொழிற்சங்கத்துல இருக்கு.
          அது நமக்கு புரியாது
          ஏன்னா நாம பொட்டி தட்டுறவுங்க•..
          விவசாயக் கூலிக்கு விலை நிர்ணயம்
          செய்றது தமிழ்நாட்டுல வேலைக்கு ஆகுதா
          அதுக்கு அங்க வேலைக்கு ஆகதுக்கு
          மலையாள வெறி காரணமா..

          ஈராக்குல யுத்தம் முடிந்து போச்சுன்னு
          நீங்க கூட சொல்ல்லாம்.
          அது கருத்து.
          அவதூறுன்னா வேற•
          அத நீங்க அவன்ட பாக்கலாம்
          அதுக்கு வேற என்ன செய்றது
          ஜ‌னநாயகம், தேசியம் பேசதுக்கு
          ஈராக்க அவதூறு பண்றவன
          அடிக்காம இருக்க முடியுமா

          Posted on 11-Feb-10 at 7:17 pm | Permalink
        • கற்பவன்

          //சொம்பு தூக்குறவங்களால இங்க இருக்க முடியாது. அதுக்கு வேற இடம் இருக்கு.. அங்கதான் நீங்க சரியாப் போய் சேருவீங்கன்னு நினைக்கேன். நீங்களே ஒத்துக்கிட்டதாலதான் என்னோட கருத்த பதிவு செய்தேன்//

          அப்படி தெரியலீங்களே மணியன்னே, சர்வதேசிய சொம்பு தூக்குறவங்களுக்கு இங்கு நல்ல கிராக்கிங்கிற மாதிரியில்ல தெரியுது.

          //குறைந்த கூலிக்கும், சரியான கூலிக்கும் வித்தியாசம் தொழிற்சங்கத்துல இருக்கு. அது நமக்கு புரியாது ஏன்னா நாம பொட்டி தட்டுறவுங்க•.. விவசாயக் கூலிக்கு விலை நிர்ணயம் செய்றது தமிழ்நாட்டுல வேலைக்கு ஆகுதா அதுக்கு அங்க வேலைக்கு ஆகதுக்கு மலையாள வெறி காரணமா..//

          அண்னே இங்க செயல்படுறது உலகமயமாக்கம்தானே.. எல்லா தேசிய இனத்துக்குள்ளயும் வர்க்க முரண்பாடு இருக்கத்தான் செய்யுது, ஒருத்தனை ஒருத்தன் சுரண்டுறது எல்லா தேசிய இனத்துலயும் உள்ளதுதான் தமிழினத்துலயும் அப்படித்தான், மலையாள தேசிய இனத்திலும் அப்படித்தான். இப்படி ஒரு தேசிய இனத்துக்குள் சுரண்டல் இருப்பதனால் அந்த தேசிய இனமோ அதன் அடிப்படைகளில் ஒன்றான‌ மன உணர்வோ இல்லையென்று ஆகிவிடாது இல்லையா? அதற்குள் அதே தேசிய இனத்தை சேர்ந்த அந்த சுரண்டல் கும்பலையும் உள்ளடக்க முடியுமா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லமுடியும்.

          //ஈராக்குல யுத்தம் முடிந்து போச்சுன்னு நீங்க கூட சொல்ல்லாம். அது கருத்து. அவதூறுன்னா வேற• அத நீங்க அவன்ட பாக்கலாம் அதுக்கு வேற என்ன செய்றது ஜ‌னநாயகம், தேசியம் பேசதுக்கு ஈராக்க அவதூறு பண்றவன அடிக்காம இருக்க முடியுமா//

          மணியண்ணே, வைரமுத்து எழுதுன அந்த பாட்ட நீங்க முழுசா கேட்கலன்னு நினைக்கிறேன். ஈராக் யுத்தத்தையும், ஒரு பெண்ணுடைய உடல், மற்றும் காதலையும் ஓப்பிட்டு பாடுகிற அருவெறுப்பான, கொடூரமான கற்பனை அது. அது ஒரு கருத்து என்றால் இவர்கள் எழுதியதும் கருத்துதானே. அந்த ‘கருத்தும்’ கூட ம.க.இ.க தோழர்கள் வழிதான் எனக்கு தெரிய வந்தது. ஆனால் வைரமுத்து ‘கருத்தோ’ பலரது வாயாலும் இன்றும் பாடப்பட்டு கொண்டிருக்கிறது.

          Posted on 11-Feb-10 at 7:40 pm | Permalink
        • mani

          (…அதற்குள் அதே தேசிய இனத்தை சேர்ந்த அந்த சுரண்டல் கும்பலையும் உள்ளடக்க முடியுமா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லமுடியும்….)

          முதலாளிய சேர்க்காத தேசியப்புரட்சி
          கற்பவனின் கற்பனைக்கு சாத்தியம்
          இத எங்க படிச்சாரு.. எப்படி கண்டுபிடிச்சாரு
          சமூக அறிவியலின் அரிச்சுவடியை
          படிக்க வேண்டியது யாரு

          (..அந்த ‘கருத்தும்’ கூட ம.க.இ.க தோழர்கள் வழிதான் எனக்கு தெரிய வந்தது. …)

          இதுக்கு பேரு கிசுகிசு இல்ல•..
          கற்றவனை நம்புவோம்.. பாரதி ஞாபகத்துக்கு வரல‌
          பாட்டைக் கேட்டேன்.. பதில் இல்ல•.
          காலத்த கேட்டேன்.. கணக்கு இல்ல•.
          க‌னடாவில் வாங்கின‌
          ஈழத்துக்கான காசு மாதிரில்லா
          இவங்க கணக்கு இருக்குது.

          (..சர்வதேசிய சொம்பு தூக்குறவங்களுக்கு இங்கு நல்ல கிராக்கிங்கிற மாதிரியில்ல தெரியுது…)

          பிரபாகரனுக்கு சொம்படிக்கிறத விட‌
          சர்வதேசியத்துக்கு உண்டியல் தூக்கலாம்
          சொம்படிச்சவன்க என்ன பண்ணாங்க‌
          அமைதிப்படை மணிவண்ணன் ஆனாங்க‌
          கற்றவனுக்கு உண்டியல் சொம்பு
          மக்கள் எல்லாம் சொம்பைங்க•..
          பிரபாகரன் செத்துட்டார்னு சொன்னாலே
          பிரிச்சு மேஞ்சிருவாரு
          முள்வேளி மக்கள் அவருக்கு
          அதுக்கு பின்னாலதான்
          இது ராம வழிபாடுன்னா
          என்னேயே பாப்பாங்கிறயாம்பாரு..

          Posted on 13-Feb-10 at 12:35 pm | Permalink
    • mani

      கான மயிலாட கண்டிருந்த வான்கோழி….

      Posted on 11-Feb-10 at 6:49 pm | Permalink
    • mani

      அமெரிக்கா இங்க வந்தவுடன மூப்பனாரு ஒளிஞ்சுக்கிட்டாரு…
      அதுனால அவரு நல்லவராயிட்டாரு..
      சாதி ஆதிக்கத்த விட்டுட்டாரு…
      அவரு தமிழருங்கிறதால பிரதமராக விட மாட்டேன்னுட்டாங்க•.

      கருணாநிதி எதிரி, கருணாநிதி க்கு ஜெயா மாமி எதிரி
      எதிரிக்கு எதிரி நண்பன்.. அதுனால
      ஓட்ட குத்து … ஈழம் வரும்.

      கோபாலகிருஷ்ண நாயுடுவும் தமிழன்,
      மேலவளவு முருகேசனக் கொன்னவங்களும் தமிழங்க•.
      அப்புறம் எப்படி தமிழன் தமிழன விரட்டுவான்.
      வெண்மணிக்கு நாயுடுவக் காப்பாத்தி தீர்ப்பு தர
      இந்த ஐடியாவும் ஜட்ஜூக்கு தெரியாம்ப் போச்சே..

      Posted on 11-Feb-10 at 7:05 pm | Permalink
      • tamizhan

        //கோபாலகிருஷ்ண நாயுடுவும் தமிழன்//

        நாயுடு என்றாலே தெலுங்கர் என்று தான் அர்த்தம்..எப்படி எதுவுமே தெரியாம பேசறீங்க ?/ :)

        Posted on 20-Feb-10 at 11:08 am | Permalink
  43. தமிழினத்தின் வீரமகனாக காட்டிக் கொள்ளும் சீமானுக்கு ஆதரவாக வந்திருக்கும்   நண்பரகளிடம் சில  கேள்விகள்,  தமிழ் பற்றுள்ள சீமான் தன்னுடைய தம்பி படத்திற்கு பூஜா என்ற சிங்களக்காரியை ஏன் நாயகியாக நடிக்கவைத்தார்?    படத்தின் நாயகனும் தமிழன் கிடையாது மாதவன் என்கிற பார்ப்பான்,.  தனது திரைப்படங்களில் பார்ப்பானையும், சிங்களக்காரியையும், கேரளாக்காரியையும் நடிக்கவைப்பது ஏன்? இதைத்தான் சொல்லில் ஒண்ணு செயலில் ஒண்ணு என்பார்கள்.      சரி இவ்வளவு தமிழுணர்வுள்ள சீமான் மலையாள இனவெறி பிடித்த எம்.ஜீ.ஆருக்கு நினைவுநாள் சுவரொட்டியை நாம் தமிழர் இயக்கம் சார்பாக ஒட்டுவது ஏன்?     எம்.ஜீ.ஆரின் ஆட்சியில்தான் வீரப்பனை விசம் வைத்து கொன்று விட்டு சுட்டு கொன்றதாக புருடாவிட்ட விஜயக்குமார் போன்ற மலையாள அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு வகையில் விஜயக்குமார் எம்.ஜீ.ஆரின உறவினர் என்பது குறிப்பிடதக்கதுமுல்லை பெரியாறு பிரச்சனையில் அன்றே தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது ,    மலையாளி     எம்.ஜீ.ஆரின் அண்ணாயிச ஆட்சிதான், இந்த துரோகி,  எம்.ஜீ.ஆருக்கு சுவரொட்டி ஒட்டும் மர்மம் என்ன?

     
    முதலில் ஜெயராம் என்கிற கழிசடை ஒரு மலையாளியே இல்லை அவன் ஒரு பார்ப்பனன், ஒரு வேளை அவன் மலையாளியாக இருந்தாலும் கூடபணத்திமிர் பிடித்த மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த ஒரு கூத்தாடியின்கருத்தை ஒட்டு மொத்த மலையாளிகளின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது!

    கட்டுரை சரியான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.

    Posted on 11-Feb-10 at 5:53 pm | Permalink
  44. இட்லிவடையில் இருந்தது… அப்படியே உங்கள் பார்வைக்கு

    //தமிழ் சினிமாக்களில் வேலைக்காரிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர்? தமிழ் சினிமாக்களில் வரும் டீக்கடைக் காட்சிகளில் நடிக்கும் மலையாள சேச்சிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர் ? இதற்காக மலையாள இனமானவர்கள் தினம் ஒரு போராட்டமா நட்த்தி வருகின்றனர் ? ஈழ இனமானப் புயல் சீமான் ஒருமுறை, இந்திய இலங்கை கிரிக்கெட் போட்ட பார்ப்பவர்கள் அனைவரும் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் இல்லை எனக் கூறினாரே ? தமிழகத்தில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் அனைவரும் அப்படியென்றால், தமிழக மக்கள் தொகையில் அநேகரும் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் இல்லை என்று தானே அர்த்தம் ? இது தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா ? இனமானத் தமிழர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?

    தற்போது இலங்கை விஷயங்கள் முடிந்துவிட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை. அக்குறையை சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜெயராம் நிவர்த்தி செய்து சோம்பிக் கிடந்த இனமானப் பற்றாளர்களுக்கு பெரிய வேலை கொடுத்தார். என்ன வேலை ? ஜெயராமுக்குக் கண்டனம், போஸ்டர் கிழித்தல் என்று வழக்கம் போல் துவங்கி அவரது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை எறிந்துள்ளார்கள். தமிழ் பற்றை எப்படி பற்ற வைப்பது ? இப்படி தான்.

    ஜெயராம் சொன்னது தப்பு தான், ஆனால் அதே சமயம் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டார், அதை முதலவரும் ஏற்றுக்கொண்டு விட்டார். தீர்ந்தது பிரச்சனை! ஆனால் இவர்களுக்கு பிழைப்பு நடத்த வேண்டுமே அதனால் அதை ஊதி ஊதி பெரிது படுத்துகிறார்கள்.. வாய் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைத்தால் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” என்று சொல்ல மூச்சு இருக்காது. இது இரண்டு பேருக்கும் பொருந்தும்!

    Posted on 11-Feb-10 at 5:58 pm | Permalink
  45. ////முதலில் ஜெயராம் என்கிற கழிசடை ஒரு மலையாளியே இல்லை அவன் ஒரு பார்ப்பனன், ஒரு வேளை அவன் மலையாளியாக இருந்தாலும் கூடபணத்திமிர் பிடித்த மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த ஒரு கூத்தாடியின்கருத்தை///

    இப்படி பேசுவதுதான் பார்பனியாவாதம். ஜெயராம் பேசியது தவறுதான். ஆனால் உண்மையில் மிக மனிதனேயம் உள்ள மனிதர் அவர். பல காலமாக பல அனாதை குழந்தைகள் காப்பங்களுக்கு சத்தமில்லாம பெரும் உதவிகள் செய்கின்றார். உடனே
    பூஸ்வா, சுரண்டல், கூத்தாடி என்ற டைலாக்குகள் வேண்டாமே. அவரால் முடிந்த
    உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அப்படி செய்யாமலும் இருக்கலாம்.
    இன்றைய சூழ்னிலையில் இது போன்ற மனிதனேயர்களின் செயல்களை கொண்டு ஒருவரை எடை போடலாம்.

    Posted on 11-Feb-10 at 6:04 pm | Permalink
  46. சரியாக சொல்லியிருக்கிறீர்கள்!

    சிவாஜியில் ‘அங்கவை சங்கவை ‘ ஜோக்கிற்கு ரசித்து சிரித்தவர்கள் இப்போது ஏன் கோபப்படுகிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை!

    Posted on 11-Feb-10 at 6:05 pm | Permalink
    • mani

      நக்கல் ஜாஸ்தி உங்களுக்கு. குசும்பு…
      இப்படியெல்லாம் கேட்டா ரஜினி வீட்டு முன்னாடி குறிஞ்சிப்பாட்டு நாடகம் புகழ் மங்கை, இன்குலாப் தலைமைல தமிழ்தேசிய வாதிகள் எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்கன்னு நினைத்தீர்களா … ம்.. சும்மா கிஜூகிஜூ முஉட்டாதீங்க

      Posted on 13-Feb-10 at 5:26 pm | Permalink
  47. NO

    விடத்தை துப்பும் நல்லபாம்பொன்று
    விரித்து வைத்ததாம் நல்ல கடையொன்றை

    வந்தவரை பார்த்து
    நஞ்சிருக்கு உனக்குள்
    கொஞ்சமிது என்றாலும்
    நெஞ்சு நிறைய முகர்
    நன்றாகிவிடுவாய் நான் கூறுகிறேன்
    நல்லவர் பிரதிநிதி நாங்கள்
    நிஜம்தான் சொல்வோம்

    என வாய்மொழிவலை விரித்ததாம்

    வந்த, வேலை இல்லாதவனும்
    வாயிலில் நின்ற, வம்பாளனும்
    வாருங்கள் வாருங்கள்
    எங்கள் அறிவுரையை கொஞ்சம் கேளுங்கள்
    வெட்கமிலாமல் அதையும் பார்த்து எங்களைப்போல ஆடுங்கள்
    என கத்தி பார்த்ததாம்
    புரட்சி பீடத்திற்கு குத்தகையும் கேட்டதாம்

    கண்டபடி கடிக்கும் இந்த காழ்ப்புணர்ச்சி பாம்பு
    வன்மத்தை வாழ்க்கை முறையாக வழிவகுத்த இவர்களின் மாண்பு
    வன்முறையில் பிறந்து அதில் வானுயர வளர்ந்து
    மேல்நாடன் சொன்னதை மட்டுமே நல்லதென புனைந்து

    நாட்டில் நடுக்கும் நல்லவைகளை மறந்து
    உண்மை பேசும் பழக்கத்தை உறுதியாக துறந்து
    மக்களின் காலாச்சாரங்களை கண்டபடி இகழ்ந்து
    கொலைகார சர்வாதிகாரிகளை கடுவுளார்போல புகழ்ந்து
    நல்ல தளம் ஒன்றை செய்தார் விடம் விற்கும் இந்த விஷமக்காரர்

    தரம் ஒன்று இருக்குதாம் அதை தவரவிட்டவரை மட்டுமே எதிர்குதாம்
    என கரம் கொள்ளாது கிலோ மீட்டர் கணக்கில் கதை விடும் வினவுக்காரர்

    இவர் கண்டிக்கிரார்களாம் கல்லெறியும் ரௌடிகளை
    இவர்கள் விமர்சிக்கிரார்களாம் மாற்றானின் சாடல்களை!

    நல்ல நகைச்சுவை போங்கள், பாம்புக்கு விடம் உபரியாம்
    வேண்டுமென்போருக்கு அதை வாரி வழங்குவதில் சுவை மிகுதியாம்

    சாகடிகப்பட்டான் ஜார்ஜ் எனும் ஒரு அப்பாவி
    விட்டார்களே அதிலென்ன பாவம் என்றொரு கொட்டாவி

    தலை அருக்கப்பட்டான் பிரான்சிஸ் இந்துவார் என்ற காவலாளி
    பாவப்பட்ட அவனும் இவர்களுக்கு வெறும் கோமாளி

    வீட்டை கொளுத்தினார்களாம், வீம்பாம், வேடமாம்
    பார்த்தல் புரியாதா, அது தவறென்று தெரியாதா?

    தூற்றி தூற்றியே காலம் தள்ளும் வகையறாக்கள்
    வீறு கொண்டு எழுந்தனவாம்
    வெட்டிப்பயல் நால்வர் வன்முறை செய்ததை பார்த்து
    கொட்டகையில் கூத்துக்காட்டும் ஒரு காளானின் கருத்தைக்கேட்டு

    தூற்றுதால் தவறென்றார், தாக்குதல் தவறென்றார்
    வன்முறை தவறென்றார், வம்படி தவறென்றார்
    சொல்லவந்ததில் மீதி மட்டும் விட்டுப்போனதாம்

    அது தவரென்றாவது அதை அவர்கள் செய்யாததனால்!

    Posted on 11-Feb-10 at 6:14 pm | Permalink
  48. வினவு ,

    இது உங்கள் வழக்கமான புரச்சி பூச்சாண்டு கட்டுரை இல்லை ,

    கொஞ்சநாளா நல்ல கட்டுரைகள் வருகின்றன , (சினிமா தவித்த)

    மிக மிக நேர்மையாக நம்மை பற்றி நம் அழுக்கை பற்றி எழுதப்பட்ட கட்டுரை .

    Posted on 11-Feb-10 at 6:18 pm | Permalink
  49. Kalidas

    வெரி குட். நல்ல பதிவு 

    Posted on 11-Feb-10 at 6:45 pm | Permalink
  50. செலம்பண்ணன் ராமசாமி

    ஆனைகட்டியில் ஒரு முதலியார் ஒரு மலயாலத்துகாரன் ஒவ்வொரு முறை ஊராட்சி தலைவராக இருந்து கொள்ளலாம் என்று முடிவான பிறகு மலையாலத்துகாரர்களுக்கு பொறுக்காமல் அந்த தமிழனை கொலை செய்து விட்டார்கள்.ஆனால் இங்கே நம் தமிழ் நாட்டில் ஒரு மலயாலத்துகாறரை நாம் முதன் மந்திரி ஆக வைத்தோம்.கேரளாவில் ஒரு தமிழன் என்றைக்கும் முதல் அமைச்சர் ஆக முடியாது

    அவனுக்கு போய் வக்காலத்து வாங்குகிறீர்களே

    Posted on 11-Feb-10 at 7:35 pm | Permalink
  51. செலம்பண்ணன் ராமசாமி

    Vivek keep it up! you are right

    Posted on 11-Feb-10 at 7:38 pm | Permalink
  52. பெயரிலி

    ’சென்னையில் முதல்முறையாக ம.க.இ.க தோழர்கள் கிரீன் ஹண்டுக்கெதிரான பிரச்சார இயக்கத்திற்காக இந்தியில் துண்டுப் பிரசுரம் போட்டு வடமாநிலத் தொழிலாளர்களிடம் விநியோகித்தார்கள். போதுமான கல்வியறிவு இன்றி அதை எழுத்துக்கூட்டிப் படித்த தொழிலாளிகளுக்குத்தான் எத்தனை ஆர்வம்? தங்களடமிருந்த நிதியை மனமுவந்து அளித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். அவர்களது வாழ்க்கைக்கு தொடர்பேதுமில்லாத மத்திய இந்தியாவின் மலைவாழ் மக்களுக்கு ஆதரவான அவர்களது புரிதல்தான் இந்த ஒற்றுமையின் பலம். சட்டீஸ்கரின் ஆதிவாசிக்காக, தமிழ்நாட்டுத் தமிழன் பீகாரின் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்வதுதான் இந்த இனிய ராகத்தின் வெளிப்பாடு.’

    அட்ப்பாவிகளா கூலி வேலைக்கு வந்தவர்களிடமும் உண்டியல் குலுக்கிவிட்டீர்களா :( . சட்டீஸ்காரின் ஆதிவாசி பெய்ரைச் சொல்லி தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டு பீகாரின் இளைஞர்களிடம் உண்டியல் குலுக்கும் நீங்கள் பேசாமல் வியாபாரம் செய்யலாம். கீரின் ஹண்ட் என்றால் இதுதான் கீரின் ஹண்ட் :) .

    ஜயராம் எதையோ சொல்லிவிட்டு மன்னிப்பு இரு முறை கேட்டுவிட்டார், மணியரசன் வழக்கம் போல் உளறுகிறார் என்றால் நீங்கள் எல்லோர் மீதும் அன்பு காட்டும் கருணாமூர்த்திகளா இல்லை வெறுப்பு கூடாது, யாரையும் சாதி சொல்லி திட்டக் கூடாது என்று எழுதும் குழுவினரோ அல்ல என்பது எங்களுக்குத் தெரியாதா. தேவர் சாதி மீது வெறுப்பினை கக்கும் எத்தனை பதிவுகளை எழுதியிருப்பீர்கள். உங்களால் வெறுக்கப்படுபவர்களை எப்படி யெல்லாம் எழுதியிருக்கிறீர்கள் உதாரணமாக ‘முதலில் ஜெயராம் என்கிற கழிசடை ஒரு மலையாளியே இல்லை அவன் ஒரு பார்ப்பனன், ஒரு வேளை அவன் மலையாளியாக இருந்தாலும் கூடபணத்திமிர் பிடித்த மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த ஒரு கூத்தாடியின்கருத்தை ஒட்டு மொத்த மலையாளிகளின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று எழுதியிருப்பது உங்கள் கும்பலில் உள்ள ஒரு ஆசாமிதானே. சீமான் தன் படங்களில் பூஜாவை மட்டும்தான் அல்லது மாதவனுக்கு மட்டும்தான் வாய்ப்புத் தந்துள்ளாரா. மாதவன் பார்ப்பான், தமிழன் கிடையாது என்று சொல்லும் உங்களுக்கும், மணியரசன் கும்பலுக்கு வித்தியாசம் யாரை வெறுக்கிறீர்கள் என்பதில்தான். மலையாளி துவேசம் கூடாது என்பவர்கள் பார்பன துவேசம்,தேவர் சாதி மீதான துவேசம் வேண்டும் என்பதைத்தானே பிரச்சாரம் செய்கிறீர்கள்.

    Posted on 11-Feb-10 at 7:50 pm | Permalink
  53. //ஒருவேளை ஜெயராம் தமிழச்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறும் வேலைக்காரி என்று கூறியிருந்தால் இப்போது குதிப்பவர்கள் யாரும் துள்ளமாட்டார்கள். வேலைக்காரிகளைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படப்போகிறார்கள்?//

    நானும் அதையே தான் நினைத்தேன்!

    Posted on 11-Feb-10 at 8:05 pm | Permalink
  54. Unmai

    மிக மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டுரை .வினவிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை .நீங்கள் மலையாளிகளிடம் பழகியது இல்லை என்பதை காட்டுகிறது.அவர்களை போல ஒரு சுயநலம் மிக்க கூட்டம் வேறு எங்கும் காண முடியாது .

    Posted on 11-Feb-10 at 9:48 pm | Permalink
  55. நெத்தியடி முஹம்மத்

    ஒரு தனி மனிதர், ‘தன் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் தமிழர்கள் எல்லாம் எங்கே மலையாள சேனல் பார்க்கப்போகிறார்கள்’ என்ற நினைப்பில் முட்டாள்த்தனமாக ஒரு லூஸ் டாக் விட்டு, பின்னர் தவறு வன்முறையின்மூலம் உணர்த்தப்பட்டு பின்னர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். வேலைக்காரர்களிடம் அல்ல, தமிழர்களிடம். ஏனென்றால் அவருக்கே தெரிந்திருக்கிறது தன் கிண்டலின் இலக்கு. அப்போதே சாப்டர் குளோஸ்.

    ஆக, மலையாளிகள் மொத்தமுமாய் சேர்ந்து தமிழரை அப்படி சொல்லவும் இல்லை. (அப்படியானால், இப்பதிவு சரியே). சொன்ன அந்த நடிகர் மொத்த மலையாளிகளுக்குமோ அல்லது கேரளாவுக்கோ அத்தாரிட்டி அல்ல. ஆனால், தனி நபருக்கு எதிரான கண்டனத்தை நயவஞ்சகமாக மலையாளிகளுக்கு எதிரான போராட்டமாக திருப்பியவரிடம் ஒரு நாலாந்தர பிழைப்புவாத சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் முகம் வெளிப்பட்டது. அதை குத்திக்குதறி கிழிப்பதை விடுத்து, அந்த கேவலமான முகத்தை அங்கீகரித்து அதன் நீட்சியாக, இப்பதிவின்மூலம் தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் சண்டையை மூட்டிவிடுவதில் என்ன லாபமோ…! எனவே, சந்தர்ப்பவாதிகளை கிழிக்காத இந்த பதிவின் இலக்கு புரிகிறது. இது முற்றிலும் பிழைப்புவாத சந்தர்ப்பவாதம்.
    –நெ’முஹம்மத்.

    Posted on 11-Feb-10 at 10:04 pm | Permalink
    • வினவு

      நெத்தியடி,

      பதிவு, சந்தர்ப்பவாதம், கிழித்த, பிழைப்புவாதம் என்று எல்லா வார்த்தைகளையும் அவியலாக்கி தாங்கள் எழுதியிருக்கும் கவிதை மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்குமாறு பணிவுடன் கோருகிறோம்.

      Posted on 11-Feb-10 at 10:33 pm | Permalink
      • நெத்தியடி முஹம்மத்

        முதற்கண் என் மறுமொழியை வெளியிட்டமைக்கு நன்றி.

        மலையாளிகளை விமர்சிக்க தமிழர்களுக்கு அறுகதை இல்லை என்று சொல்லியதில் இருந்த நேர்மை(இது கார்க்கியின் 3இடியட்சில் காணாமல் போயிருந்தது), ஒரு தனிமனிதருக்கு எதிரான கண்டனம் மலையாளிகளுக்கும் தமிழருக்கும் இடையேயான சண்டையாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ‘செயலை’ எதிர்க்காமல் அதை நியாயப்படுத்துவிதமாய் தூபம் போட்டும் பதிவு எழுதி ‘அச்செயலுக்கு’ உறுதுணை புரியும் உங்கள் செயலை ‘என்னவென்று சொல்லலாம்’ என்று எனக்கு தெரியவில்லை என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.

        Posted on 11-Feb-10 at 10:55 pm | Permalink
        • கேள்விக்குறி

          கிழிந்தது போங்கள், திரீ இடியட்ஸ் படத்தை பற்றிய அனுபவத்திலும் கார்க்கி இந்த இனவெறியெல்லாம் அடிப்படை உழைக்கும் மக்களுக்கு கிடையாது என்பதையும், மேல்தட்டு வர்க்கங்களுக்கு உரிய பண்புதான் அது என்றுதான் கூறியிருந்தார், வினவும் இங்கே அதையேதான் சொல்கிறார், பார்பனியத்திடம் சரண்டைந்த இசுலாம் பதிவு போட்டது முதலி நெத்தியடி தலைப்பை மட்டும் தான் வாசிப்பார் போலிருக்கிறது.

          Posted on 11-Feb-10 at 11:33 pm | Permalink
      • கேள்விக்குறி

        வினவை திட்டவேண்டும் என்ற ஒரே அஜென்டாவோடு அஹமதியா கட்டுரையிலிருந்து புன்னூட்ட்டம் போடும் புண்ணியவானிடம் அர்த்தம் கேட்டால் எப்படி… ஏதாவது சொல்லிட்டு போகட்டும், எங்களுக்கும் ஒரு என்டர்டெயின்மென்ட் வேண்டாமா??? அறிவாளி மாதிரி உளருவது NO வோட ஸ்டைல், உளருவது மாதிரி உளருவது நெத்தியடி ஸ்டைல். பட் ஒன்லி ஒன் பீலிங் டிரைவிங் தெம்… காண்டு காண்டு காண்டு

        Posted on 11-Feb-10 at 11:26 pm | Permalink
        • கேள்விக்குறி

          அது மட்டுமல்ல, 3idiots பற்றிய பதிவு வடநாட்டவர் சிலர் தென்னாட்டவர்மீது கொண்டுள்ள வெறுப்பை எதிர்த்து எழுதப்பட்டது, இது தமிழ்நாட்டில் சிலர் மலையாளி்களின் மீதுகொண்டுள்ள வெறுப்பை எதிர்த்து எழுதப்பட்டது, இதில் என்ன குற்றம் கண்டீர் நெத்தியடி????

          Posted on 11-Feb-10 at 11:52 pm | Permalink
    • கேள்விக்குறி

      நிரூபித்துவிட்டார்…. மீண்டும் மீண்டும் குப்புற விழுந்து நெத்தியில் அடிபடும் முஹம்மத் தான் என நெத்தியடி முஹமம்த் மீண்டும் நிரூபித்து விட்டார். பதில் எழுதும் அளவுக்கு தகுதியோ, பொருளோ, உண்மையோ இல்லாத இந்த காண்டு கஜேந்திரனுடைய மறுமொழியை ‘அப்படியே வைத்திருக்கவும்’ போக்கும்வரத்துமாக இருப்போருக்கெல்லாம் ஒரு நல்ல காமிக் ரிலீஃபாக இருக்கும்.

      இப்படிக்கு குறி…கேள்விக்குறி?????

      Posted on 11-Feb-10 at 10:47 pm | Permalink
  56. subu

    ஜெயராம் ஒரு தமிழ் பார்பனர். அவர் மலையாளி அல்ல.

    Posted on 11-Feb-10 at 10:17 pm | Permalink
  57. balu

    வினவு  மிகவும் அற்புதமான கட்டுராய்   நடுநிலையாக  எழுதபட்டுள்ளது  

    பாலு  வேலூர் i

    Posted on 11-Feb-10 at 10:24 pm | Permalink
  58. vasanthan

    ////////எம்.கே. நாராயணன், சிவசங்கர்மேனன் என்ற உயர் அதிகாரிகளை வைத்து மலையாளத்துக்காரர்கள் ஈழத்திற்கெதிராக சதி செய்வதாக முன்னர் பல அறிவாளிகள் பேசினார்கள். அப்படி சதி செய்தற்கு இது என்ன செல்வராகவனின் ஃபேன்டசி படமா என்ன? அவர்கள் இந்திய அரசின் அதிகாரிகள். இந்திய முதலாளிகள் – அதிகார வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுபவர்கள். அவர்களுக்கெல்லாம் தேசிய இனமென்ற அடையாளமெல்லாம் கிடையாது. அவர்கள் இடத்தில் தமிழ்பேசும் தமிழர்கள் அதிகாரிகளாக இருந்திருந்தால் அவர்களும் அதேதான் செய்திருப்பார்கள்.

    ————————————————————————————————————————————
    சொந்த பிள்ளைக்கும் , பக்கத்துக்கு வீடு பிள்ளைக்கும் உள்ள வித்தியாசம் தான் ஒரு தமிழன் ஈழத் தமிழார் பிரச்சனையை கையாள்வதும் , ஒரு மலையாளி கையாண்டதும …. வினவின் மீது ஆரம்பதில் இருந்த ஈர்ப்பு முழுவதும் குறைந்து விட்டது.

    Posted on 11-Feb-10 at 11:13 pm | Permalink
  59. Kri

    Dear Vinavu, the last few sentences of the article was moving and tears was the response. this is one of the best article i ever read in Vinavu. i will rate this author as a best true Indian. my sincere thanks to the author of the above article. salutes to him.

    Posted on 11-Feb-10 at 11:21 pm | Permalink
  60. எழில்

    அய்யா வினவு, கேள்விகுறி உங்க வாதங்களை இப்பொழுது தவிடு பொடியாக்குகிறேன்.வினாவிற்கு எதிலுமே மேலோட்டமான வரட்டுத்தனமான பார்வை தான் இருக்கிறதே தவிர எதிலும் ஆழ்ந்த புரிதலோ பரந்து பட்ட அறிவோ இல்லை என்பதை நீங்கள் வைக்கும் அடாவடியான அருவெறுக்கத் தக்க தலைப்பு புரட்சிகளின் மூலமே உணர முடியும் அதற்கு இந்த கட்டுரையின் தலைப்பும் ஒரு சாட்சி நான் எதையும் தர்க்கத்துக்கு முன் நிற்கிறதா என்று பார்த்து முடிவெடுக்கிறேன் ஏனெனில் நான் கணினி நிரலாளன்.
    உங்களது முட்டாள்தனமான வாதங்களும் எனது பதில் எறிகணைகளும்.
    1.தலைப்பு : சேச்சிகளை இழிவு படுத்தும் விவேக் –இதற்கும் ஜெயராம் கூறிய ஆபாசமான கருத்துக்கும் அதற்கு தமிழின உணர்வாளர்கள் நடத்திய எதிர்வினைக்கும் என்ன சம்பந்தம் விவேக் அ எதுக்கு சம்பந்தம் இல்லாம உள்ள இழுக்கறீர்கள் அய்யா ? இது தான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதா ? அந்த மாதிரி இழிவு படுத்தும் காட்சிகள் இரு மொழிப் படங்களிலும் உண்டு எனும்போது அதையும் கண்டித்திருக்க வேண்டுமே ? ஏன் செய்ய வில்லை ?
    2. நாட்டில் கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது //  ஆமா ஆயிரம் பிரச்சினைகள் இருக்குது அதற்காக இதை ஒதுக்கி விட முடியுமா ?உங்களுக்கு வேண்டுமானால் சொரணை  இல்லாமல் இருக்கலாம் ஆனால் மான உணர்வு உள்ள தமிழன் இதை எதிர்க்காமல் இருக்கமாட்டான் உங்களுக்கு வேண்டுமானால் மானமும் இல்லாமல் உணர்வும் இல்லாமல் இருந்து விட்டுப் போங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது .?
    3 . //காகிதப்புலி சீமானின் தம்பிகள் ஜெயராமின் வீட்டை போலீஸ் பாதுகாப்புடன் தாக்கிவிட்டு //. என்னது சீமான் காகிதப் புலியா ? அவர்கள் காகிதப் புலி என்றால் உங்களை என்ன வென்று சொல்வது ? இணையத்தில் சில முட்டாள் தனமான கட்டுரைகளை எழுதுவதன் மூலம் வர்க்க ஒற்றுமையும் புரட்சியும் நிகழ்ந்து விடும் என்று நம்பும் நீங்கள் என்ன உண்மையான புலியா ? உங்களுக்கு தான் புலி என்றாலே ஒவ்வாமை தானே அப்பறம் எதற்கு அந்த உவமை ? நீங்களும் தான் துண்டு பிரசுரமும்,போஸ்டர்களும் ஒட்டுகிறீர்கள் இதன் மூலம் உங்களை காகித எலிகள் என்று அழைக்கலாமா ?அவர்கள் களத்தில் இறங்கி எதிர் வினை புரிந்துள்ளார்கள் அதனால் தான் செயராமன் கதறி மன்னிப்பு கேட்டான் இல்லை என்றால் மீண்டும் மீண்டும் அவன் அவ்வாறே பேசுவதை தொடர்ந்திருப்பான்.உங்களால் கையாலாகவில்லை என்றால் சும்மா இருங்கள் அதை விடுத்தது (இணைய) மூலையில் இருந்து கொண்டு குலைக்காதீர்கள்.
    4. தமிழனை 24 மணிநேரமும் ஆங்கிலத்தாலும், தமிங்கிலத்தாலும் இழிவு படுத்தும் வேலையை சன்னும், கலைஞரும் செவ்வனே செய்து வருகின்றன. //  இப்பொழுது இந்த கேள்வியை கேட்கும் நீங்கள் ஏன் இதை எதிர்த்து இவ்வளவு காலம் போராடாமல் இருக்கிறீர்கள் ? பிணையில் வெளிவர முடியாத வழக்கு  வரும் என்று பயமா ? அவர்களுக்கு பயம் இல்லை வழக்கை சந்திக்கிறார்கள் 
    5.தனது படங்களில் கறுப்பான தமிழச்சிகளைப் புறக்கணித்து பாவனா போன்ற வெள்ளையான மலையாள நடிகைகளை பயன்படுத்தும் சீமானின் //  நடிகர் நடிகைகளை முடிவு செய்வது என்பது இயக்குனர் மட்டுமல்ல தயாரிப்பாளரும்,நடிகரும் சேர்ந்து தானே சில விதி விலக்குகள் இருக்கலாம் ஆனால்,  அந்த படங்களில் எவ்வாறு நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா ?
    6.//பாண்டிக்காரர்கள் என்று பட்டப்பெயர் வைத்து தமிழர்களை காட்டான்கள் என்று சித்தரிப்பார்களாம். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் என்பதைத் தாண்டி என்ன முக்கியத்துவம்? // அய்யா இழிவு படுத்தி நடக்கிற சம்பவங்கள் கூட உங்களுக்கு மிகைப் படுத்தப் பட்ட நகைச்சுவை ஆகத் தெரியுதா ? இதுவும் மலையாளிகளோட பொதுப் புத்தியிலே இருக்குது நான் பல மலையாளிகளோட பழகும்போதே அதை உணர்ந்தேன் இதில் எனக்கு நேரடியான பட்டறிவே உள்ளது அய்யா .
    7.//மும்தாஜ், ஷகிலா உள்ளிட்ட நடிகைகளை பெரிய மார்புடைய மலையாளப் பெண்களாகக் காட்டி காமத்திற்கு அலையும் சேச்சிகளாக விவேக்  உணரவைப்பது மட்டும் போற்றத்தக்கதா? //அப்படி என்றால் இவ்வளவு காலம் நம்மை இழிவு படுத்தும் படங்களுக்கு எதிராக நீங்கள் போராடி இருக்கிறீர்களா ? அட்லீஸ்ட் ஒரு கண்டனமாவது தெரிவிதிருக்கிரீர்களா ?i8. //மலையாளிகள் தமிழனது உருவத்தையும், வடிவத்தையும் கேலிசெய்வதற்கும் த