privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!

2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 7

வீட்ல யாரது?” கதவைத் தட்டியதும் உள்ளே கலகலவென்று கேட்டுக் கொண்டிருந்த பெண்களின் குரல்கள் கப்சிப் என அடங்கி சில வினாடிகள் அமைதியாகக் கழிந்தன.

“மீண்டும் வீடல யாரது?” என்று கேட்டதும் “யாரு?” என்று உள்ளிருந்து பதில் வினாவாக கேட்க…
“நான்தான் சாகித் வந்திருக்கிறேன். கஹாரின் இருக்காங்களா?”
“அவுங்க கடைக்கு போயிருக்காங்களே” பதிலாக பெண்குரல்.
அந்தக்குரல் எனது நண்பனுடைய துணைவியாரின் குரல் எனபது பழக்கப்பட்ட எனக்கு எளிதாக அடையாளம் தெரிந்தது.

“எப்ப வருவாங்க?”
“கொஞ்சம் நேரமாகும் என்று சொல்லிட்டுப் போனாங்க”
“அப்படியா! வந்தவுடன் நான் வந்துட்டுப் போனதாக சொல்லுங்க. அப்புறமா வர்ரேன்”
“சரி சொல்றேன்.”
கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்.
_____________________________________________

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன், 1980களின் வாக்கில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இசுலாமியர்களின் வீடுகளுக்குச் செல்லும் ஒரு ஆடவரின் அனுபவம் இப்படியாகத்தானிருக்கும். பெரும் நகரங்களில் சற்று வேறுபாடாக கதவுகளில் மாட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் சங்கிலிக்கு அந்தப் பக்கமிருந்து சிறிது நீக்கப்பட்ட இடைவெளியில் பதில் கிடைக்கும். அதுவே சந்திக்கச் சென்ற நபர் வீட்டிலிருந்தால் கதவைத் திறந்து யார் என்று பார்ப்பதுக்கு முன்னே வீட்டினுள் தாராளமாக புழங்கிக் கொண்டிருந்த பெண்கள் உள் அறைகளுக்கோ அல்லது அடுப்படிப் பக்கமோ ஒதுங்கிக் கொண்ட பிறகே உற்ற நண்பராக இருந்தாலும், அந்நிய ஆண்களாக, ஓரளவு பழக்கமுள்ள உறவினர்களாக எவராக இருந்தாலும் வீட்டினுள் வரவேற்கப்படுவர். மாமா, மச்சான், சித்தப்பா என்று நெருங்கிய ஆனால் குடும்ப உறவில் அதிக தொடர்புள்ளவர்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு.

உங்களின் நண்பர் உங்களை வரவேற்று உட்காரச்சொல்லி பேசிக் கொண்டிருக்கும்போது உங்களுக்காக தேனீர் தயாரிக்கச் சொல்லியிருந்ந்தால் அதனைத் தயாரித்துக் கொண்டுவரும் உங்கள் நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “ஏங்க, டீ கொண்டு வந்திருக்கேன்” என்று சொன்னதும், உங்களின் நண்பர் சென்று தேனீர் டம்ளரை பெற்றுவந்து உங்களுக்குத் தருவார். அல்லது வீட்டில் பருவமடையாத சிறுமிகளிருந்தால் அவர்கள் எடுத்து வருவர். நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “ நல்லா இருக்கீங்களா? ஊட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா?” என்று நலம் விசாரிப்பார். அநேகமாக அவர் பேசிய சொற்கள் அவ்வளவாகத்தானிருக்கும்.

நண்பரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஓடிவந்து “மாமா” என்று மடியில் உட்கார்ந்து கொள்ளும் அவரது மகள் பர்ஹானா பருவமடைந்து விட்டதால் தாய்க்கு அருகில் நின்று கொண்டே “மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.
____________________________________________

பொதுவாக இசுலாமியர்கள் ஒரு சிறு நடைப்பகுதி தலைவாசலில் இருக்குமாறுதான் தங்களின் வீடுகளைக் கட்டுவர். 70, 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுக்கட்டு முற்றம் உள்ள வீடுகளாக இருந்தாலும் தலைவாசல் பகுதியில் ஒரு அடைப்புச் சுவர் இருக்கும். இதுவே அந்நிய ஆடவர்களுக்கான எல்லையாக இருந்தது.

ஆனால் தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர். சமூக குற்றச்சாட்டுக்களும், உலமாக்களின் கண்டிப்புகளும் ஒரு ஆணோ பெண்ணோ மாற்றங்களை விரும்பினாலும் தடுக்கும் சக்திகளாக இருந்தன.

உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன. வண்ணாரப்பேட்டை ஜான் பாட்சா (இவர் மாந்திரீகர்) வீதியில் இருந்த அவருடைய லைன் வீடுகளில் (17வீடுகள் _ 1974களில் உள்ள நிலை) ஒரே ஒரு அறையும் அடுப்பாங்கரையாக இருந்த முன் நடையையும் தவிர மறைந்துகொள்ள அல்லது மறைத்துக்கொள்ள ஏதும் அற்ற இல்லங்களில் வசித்த இசுலாமியர்களின் பண்பாடும், திருச்சி குத்பிஷா நகர் பீடி சுற்றும் தொழிலாளர்கள், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில் புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில் வாழும் அன்றாடங்காச்சிகள், பாலையங்கோட்டை பீடி சுற்றும் தொழிலாளர், ஓட்டு மண்வீடும் சில முந்திரி (நிலஅளவு 16 முந்திரி 1 ஏக்கர்) நிலமும் உடைமையாகக் கொண்ட இசுலாமிய விவசாயக் குடும்பங்கள் என தமிழமெக்கும் இவர்களின் பண்பாடு வேறாகத்தானிருந்தது.

எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.

உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.

இசுலமியப் பெண்களுக்கிடையே பண்பாடுகளின் மாற்றம், முன்னேற்றம் அகியவற்றினைப் பற்றி முழுமையாக எழுதவேண்டுமானால் இந்த சிறு கட்டுரை போதாது. சமூக நலன் கருதி இப்படிப்பட்ட விரிவான ஒரு ஆய்வு வேண்டும். இது இங்கு முடியாது. மிகவும் பிரச்சனைக்குரிய முதன்மை தரக்கூடிய சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
__________________________________________

புர்கா

இசுலாமியப் பெண் எனள்ற விவாதம் தொடங்கினாலே முதன்மைப்படுத்தப்படும் பொருள் புர்காவாகத்தான் உள்ளது. தஸ்லிமா நஸ்ரினுடைய புர்கா பற்றி ஒரு கட்டுரையை கன்னடத்தில் மொழிபெயர்த்து (கன்னட நாளிதழ் நன்று) வெளியிட்டதற்காக லத்திஜார்ஜ் துப்பாக்கிசசூடு என்று பெரும் கலவரமே கர்நாடகாவின் பல நகரங்களில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. வினவில் கூட சுமஜ்லா என்ற பிளாக்கரின் புர்கா பற்றிய தம்பட்டத்தாலும் சூடான விவாதம் நடந்துள்ளது. இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?

பொதுவாக எந்த மதத்தினராக அல்லது மதம் சாராதவர்களாக இருந்தாலும் தங்கள் வீட்டு பெண்களை எவராவது சைட் அடித்தாலோ, இல்லை சாதாரணமாக பார்த்தாலோ அல்லது காதலித்தாலோ ஏற்றுக் கொள்வதில்லை. தொண்டி என்ற சிறு நகரத்தின் வாலிபர்கள் பிற மதத்தின் பெண்களை சூன்காளி (அழகிய பெண்) பூதிகாளி (அசிங்கமான பெண்) என்று ஒன்றுகூடி விமர்சித்தாலும் தன் மதத்தினுடைய பெண்களை அவ்வாறு நாலுபேர் நின்று கமெண்ட் அடிக்கவிடுவதில்லை. தகராறுதான்! அடிதடிதான்! இதே நடைமுறையில் சைட்அடித்துக்கொண்டு திரிந்து இன்று அப்பாவாக தாத்தாவாக மாறியுள்ளவர்களும் தங்கள் வீட்டுப் பெண்களை பிறர் கமெண்ட் அடிக்க விடுவதில்லை. இது எல்லா சமூகத்தினருக்கும் பொதுவானதுதான். ஆனால் பிற மதத்தினரிடம் தன் வீடு என்று சுருங்கியுள்ள உணர்வு இசுலாமியர்களிடம் தம் சமூகம் என்று விரிந்துள்ளது. அதற்காக இசுலாமிய வாலிபர்களும் குமரிகளும் தமக்குள் ஒருவர் ஒருவரை காதலிப்பது இல்லையா என்று கேட்க வேண்டாம். அதனையும் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

இந்த சைட் அடிக்கும் பிரச்சனைதான் “புர்கா” என்றதும் இசுலாமியர்களை கொதித்தெழவைக்கிறது. சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.

கண்கள் தவிர பிறவற்றை மறைக்க வேண்டும், திரை மறைவுக்குப் பின் நின்றே அந்நிய ஆடவர்களுடன் உரையாற்ற வேண்டும், என்று கோட்பாடு கூறினாலும் நடைமுறை அவ்வாறு இல்லை. புர்காவின் இன்றைய நிலைதான் என்ன? பொதுவாக தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் இந்த கருப்பு வண்ண புர்கா அணியும் பழக்கமில்லை என்பது நாம் அறிந்ததுதான். பத்தானியர்கள் (பட்டாணியர்கள்) என்றழைக்கப்படும் உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்களே அதிகம் அணிந்தனர். அதுவும் அவர்களிடம் ஒரு சடங்குத்தனமான மனநிலை இருக்கிறதேயொழிய கடவுள், கோட்பாடு, சொர்க்கம் என்ற உணர்விலெல்லாம் அணிவது இல்லை.

தமிழ் முசுலீம்களிடம் கருப்பு அங்கி என்ற பண்பாடு முற்றிலும் இல்லாவிட்டாலும் வெள்ளை வேட்டியை தமது கலர் சேலைக்குமேல் சுற்றிக்கொண்ட வழக்கமிருந்தது. இன்று அந்த வெள்ளைவேட்டி அகன்றுவிட்டது. கருப்பு அங்கி அல்லது எதுவும் இல்லை (சேலை, சுடிதார் போட்டுக்கொண்டுதான்) என்ற நிலை பொதுப்பண்பாக மாறியுள்ளது. குமரிப் பெண்கள், பள்ளி கல்லூரிகளுக்கு படிக்கச் செல்வது அத்திபூத்தது போன்று அரிதாக இருந்த அன்றைய நிலையில் புர்கா அணிந்து சென்றதில்லை. ஆனால் பரவலாக இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

மூன்று சகோதரிகளுடன் மட்டும் பிறந்து கல்லூரிக்குச் செல்லும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா தன் தமக்கைகளிடம் “இந்த பாரு யார் என்ன சொன்னாலும் பெரியவங்க சொல்லிட்டாங்க என்பதற்காக அப்படியே ஏத்துக்கக்கூடாது. நாமும் சிந்தித்து பார்க்கனும். ஆனாலும் அவர்களிடம் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காம காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகிட்டு நம்ம காரியத்தை சாதிக்கனும்” என்று கூறுகிறார். கணினித் துறையில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் இவரும் இவரது தந்தைக்கும் புர்கா என்பதில் நம்பிக்கை இல்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக வேண்டாமே என்பது அவர்களின் கருத்து. இவரின் தாய்வழி சுற்றம் எந்த பெண்களையும் பருவமடைந்த பிறகு பள்ளிக்கூடம் அனுப்பியதில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஸகனாஸ் கணினித் துறையில் பொறியியல் வல்லுனர். புர்கா இல்லாமல் கல்லூரிக்குச் சென்றதில்லை. கை நிறைய சம்பளம் வாங்கும் பணிக்குச் செல்லும் போதும் புர்கா அணியவே செய்வார். புர்கா பற்றி பெருமையாகவும் சொன்னவர்தான். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது ஒரிசாவைச் சார்ந்த மாணவரைக் காதலித்து முஸ்லீமாக ஒரு திருமணச்சடங்கு, ஒரிசா சென்று கணவரின் குடும்பத்தினருக்காக ஒரு இந்துமத திருமணச் சடங்கு. இன்று தாய் வீட்டுக்கு வந்தால் புர்கா, தனது வீட்டிலும் பணியிடத்திலும் அது இல்லை. பிள்ளைகளுக்கும் இரண்டிரண்டு பெயர்கள்.

மதுரைச் சேர்ந்த பாத்திமா, ராகேஷ்ஷுடன் இந்துவாக மாறித் திருமணம் செய்தார். திருச்சியைச் சேர்ந்த பானு, அகஸ்டின் தங்கராஜுடன் கிறித்தவராக மாறி திருமணம். இவர்களும் புர்காவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். இன்று குடும்ப உறவுகளும் தொடரத்தான் செய்கிறது.

திருமணவிழா மண்டப்பத்திலே 18 வயது ஜுவைரியா புர்காவுடன் “வணக்கம் தோழர்” என்று எமது தோழர்களுக்கு கை கூப்பி வரவேற்கிறார். திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.

அன்று ஜவுளிக்கடை, நகைக்கடை, வளையல்கடை போன்றவற்றிற்கு மட்டும் ஆண்களுடன் சென்றுவந்த பெண்கள் இன்று தனியாகவும்
சென்றுவருகின்றனர். கடைத்தெருவுக்கு செல்லும் பெண்களை “ஊர் மேய்பவள்” என்று இழித்துரைத்த காலம் கண்ணாடி பெட்டகத்திற்குள் ஒளிந்து கொண்டுவிட்டது. அன்றாடத் தேவைகளுக்கு ஆண்களே கடைத்தெருவுக்குச் செல்லும் காலமும் மலைஏறிவிட்டது. காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது. இதுவே அவர்களின் புர்கா பற்றிய கோட்பாடு சார்ந்த இன்றைய யதார்த்த மதிப்பீடுக்குச் சான்றாக உள்ளது. இன்னும் ஏராளமான சான்றுகளை நாம் காணலாம்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் இலக்கு 30, 35க்குள் உள்ள பெண்கள் மட்டுமே. சற்று வயதானவர்கள் தம் நிலையில் மாற்றமில்லாமலயே தொடரமுடிகிறது. புர்கா அணிபவர்களோ, “புர்காதானே அணிந்துவிட்டு போகிறோம், ஆனால் நாங்கள் வேலைக்கு போவதையே, படிப்பதையோ தடுக்க முடியாது” என்கின்றனர். இன்று பரவலாக இதில் மட்டுமே என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும் இசுலாமியப் பெண்கள் வேலை செய்வதை நாம் காண்கின்றோம். அவர்கள் அணியும் புர்காவே இதற்கு சாட்சியாகவும் உள்ளது.

________________________________________

பெண் உழைப்பு

“ஆண்கள், பெண்களை நிர்வகிப்பவர்கள். பெண்கள் உங்களுக்கு விளைநிலங்கள்” என்று குர்ஆன் கூறுகிறது. உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்.

ஆமினாம்மாள்! நெல் அவித்து அரிசி விற்பதில் கடந்த 40 ஆண்டுகாலமாக தன் காலத்தை கழித்துக் கொண்டிருப்பவர். தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து மேன்மைமிக்க குடும்பங்களுக்கு சேவை செய்து வயிறு பிழைக்கும் ஜமால்மாமி நடுத்தர வர்க்கத்தினராக வளர்ந்து வறுமையின் காரணமாக தொழில் செய்து பிழைப்பவர். இவர்களின் பண்பாடு வேறாகத்தான் உள்ளது. பருவமடைந்த அல்லது பருவம் அடையாத, திருமணமான அல்லது விதவைகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாத பெண் உழைப்பு சமூகத்தின் கட்டாயமாகிவிட்டது.

“தானும் உயர்குடியே. தமக்கென்று ஒரு தராதரம் உள்ளது. தராதரத்திற்கேற்ற சமூகத்துடன்தான் நாம் பழக வேண்டும்” என்று கருதுபவர்கள், முதலாளித்துவப் பண்பாட்டினை செரித்துக்கொண்டு தாங்கள் வறுமையில் வாடினாலும் முதலாளித்துவம் வழங்கும் சமூக மதிப்பீடுகளுடன் உறவாடவே விரும்புகின்றனர். இதனை குட்டி முதலாளித்துவ பண்பாடு என்று சொல்லலாம். ஆனால் புதிய பொருளாதாரத்தால் விழுங்கப்பட்டு சாறுபழியப்பட்ட சக்கைகளாக வெளித் தள்ளப்பட்ட பின் இவர்களும் உழைக்கும் பெண்கள் அணியில் (தமது தராதர மதிப்பீட்டின் உண்மைநிலை உணர்ந்து) ஒன்றிணைகின்றனர். அகலத்திறந்த கதவுகளில் தஞ்சமடைகின்றனர். சமூக மதிப்பீடுகளும் மாறிவிட்டன..

ஃபாத்திமா. இவர் மின்னணு பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பறக்கும் படையில் ஒரு அதிகாரியாக கைநிறைய சம்பளம் வாங்கும் தொழில். கணவர் ஒரு ஆசிரியர். இவருக்கு வெளிநாட்டில் மிகவும் உயர்ந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது. வீடு, கார், குடும்பத்திற்கான விசா என்று அனைத்தும் வழங்கப்படும் வேலை. கணவரை, வேலையை விட்டுவிட்டு உடன்வர அழைக்கிறார். ஆனால் “பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே ‘பொட்டையைப்’ போல் பிரிந்து வாழ்வதா?” சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்.

பாத்திமாவோ “எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது” என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது. அது “இருவர் சம்பளத்திலும் சொகுசாக வாழ்ந்த வாழ்க்கையை இழக்க முடியுமா” என்ற கனியில்பட்டு பறித்தெடுத்துவிட்டது. இன்று இவர்கள் வெளிநாட்டில் கோடிஸ்வரர்களாக!.

நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர். இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை.

_________________________________________

தலாக் – விவாகரத்து

ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது. இதற்கு சாட்சிகள் தேவையில்லை. அல்லாவே சாட்சியாக உள்ளதால் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே சமூகம் உள்ளது. ஒருவன் சச்சரவினால் ஏற்பட்ட கோப உணர்ச்சியின் உந்துதலில் இப்படி தலாக் செய்து விட்டாலும் அது விவாகரத்து ஆனதாகவே கருதப்படும். அவன் மனம் மாற்றம் அடைந்து இவ்வாறு செய்துவிட்டதாக வருந்தினாலும் தலாக் தலாக்தான். அவன் விரும்பினாலும் மீண்டும் இணைந்து வாழ முடியாது. ஏனெனில் இவ்வுறவு சமூக கட்டுமானத்தினுடைய ஆளுகையின் கீழ் உள்ள உறவு.

இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.

ஆனால் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆண் தலாக் செய்தால் தான் கொடுத்த மகர் தொகையை (திருமணத்தின்போது ஆண் பெண்ணிற்கு வழங்கப்படும் பொருள்) இரட்டிப்பாக்கித் தரவேண்டும். இது கோட்பாடு. நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன. ஜீவனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.

குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு. நடைமுறையில் ஒரு சிலர் அவ்வாறு தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டாலும் பலரும் அதனால் ஏற்படும் மறுமண வாழ்க்கைகான இடையூறுகளைக் கணக்கிட்டு ரொக்கத் தொகைக்கு விலை பேசிவிடுகின்றனர். ஆனால் சம்பாதிக்கும் பருவத்தில் உள்ள ஆண்பிள்ளைகளாக இருந்தால் ஆண்களின் பாசம் கரைகடந்து ஷரியத் சட்டம் கோலேச்சுகிறது. கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். அதுவே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பது இல்லை.

பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. “கல்லானாலும் கணவன்…” மலை ஏறிக் கொண்டிருக்கிறது.

______________________________________________________

இத்தா : காத்திருத்தல்

இத்தா என்பது பற்றிய விரிவான விளகத்தை பறையோசையில் கர்பப்பை இல்லாவிட்டாலுமா! படித்துக் கொள்ளுங்கள். அன்றும் இன்றும் என்ற ஒப்பீட்டை மட்டும் பார்ப்போம். இதன் மதிப்பீடு நானறிந்த வரையில் அன்றும் இன்றும் மாறவே இல்லை. கோட்பாட்டின்படி சிறிதும் பிசகாமல் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர அது தொடர்பான வேறு எதனையும் சான்றாக நான் படிக்கவுமில்லை. பார்க்கவும் இல்லை. அது அன்றைய நடைமுறையாக இருந்தால் அது இன்று இல்லை என்பது மட்டுமே மாற்றமாகும். இந்தியச் சூழ்நிலையில் அன்று “வெள்ளை புடவை” இந்துமதத்தைப் போல இவர்களும் அணிந்தாலும் இன்று அது நடைமுறையில் இல்லை.

தன் கர்பப்பையில் உள்ளதை மறைக்க வேண்டிய அவசியமற்ற காலச் சூழ்நிலையிலும், அது அவசியம் தான் என்றால் அறிந்துகொள்ள மிக நவீன கருவிகள் இருக்கும் இந்தக் காலத்திலும் இத்தா இன்னும் ஏன் தொடர்கிறது? கணவன் இறந்துவிட்ட துயரத்தில் உள்ள பெண் அந்த பசுமையான வாழ்க்கையின் நினைவாக இந்த இத்தாவை ஒரு சுமையாக கருதுவதில்லை. அது தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களும் இதில் தலையிட்டதும் இல்லை. அது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் இத்தாவைக் கடைபிடிக்கும் நிலையிலும் மாற்றம் இல்லை. விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை. எனவே இப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்தவர் எவரேனும் இருந்தால் இங்கே எழுதுங்களேன்.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும் அவரின் மரணத்திற்குப்பின் அவரது மனைவி ஆயிஷா அரசியலில் மிகவம் முக்கியமான பங்காற்றத் தொடங்கியதிலிருந்து இன்று வரை மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டேதான் வருகின்றன. இந்த மாதம் மகளிர் மாதமாக உள்ள நிலையில் ஒவ்வொரு இசலாமியப் பெண்களும் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளையும் அதன் காரண காரியங்களையும் தன்சுய விருப்பு வெருப்புக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்து பெண்களின் உரிமைகளைப் பெற பங்காற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கைக்கும் இம்மாற்றத்திற்கும் இடையில் முடிச்சுவிழாமல் இதுவேறு அதுவேறு என பிரித்திட்டு செயலாற்ற வேண்டும்.

– சாகித்

http://paraiyoasai.wordpress.com/
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. இஸ்லாமியப் பெண்களின் இன்றைய வாழ்நிலையை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது கட்டுரை. வாழ்த்துக்கள்.

    • ‘Mangalore pub, girls to blame’ மங்களூர் பாரில் தண்ணி அடித்த பெண்களை அடித்து உதைத்த ராம் சேனவினரின் விடியோவை பாருங்கள்.

    • சகோதரி நந்தினி அவர்களுக்கு அன்பு இஸ்லாமிய சகோதானின் வாழ்த்துக்கள்.
      தங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் இஸ்லாம் போதிக்கும் உடை ஒழுங்குகளை பற்றி இன்று விவாதம் ஏற்பட்டிருக்கும் காரணம் என்ன? இன்றைய ஆபாச உலகில் பெண்களை போகப்பொருளாகவும், வக்கிமாகவும் பார்க்கும் சூழழ் அதற்கு காரணம் பெண்களின் கவர்ச்சியான உடைகள் பெண்களின் பாதுகாப்பான உடைகளைபற்றி இன்று பல மேலைநாட்டு பெண்களே போற்றிப்புகழும் நிலை காரனம் ஆண்களின் கொள்ளிக்கண்களிளிருந்து தப்பிக்க அதுவே சிறந்தது என அனைவரும் உணர்வதுதான் இதனை கட்டாயமாக்க பல பல்களைகழகங்களும் முயற்ச்சித்ததும் தங்களுக்கு தெரியுமென நினைக்கின்றேன். உங்களுக்கு இந்த அன்புச்சகோதரனின் வேண்டுகோள் நீங்களும் உங்களை இதுபோன்ற உடலைமறைக்கும் ஆடையால் அழங்கரித்துப்பாருங்களேன் நீங்கள் கண்டிப்பாக இதனுடைய அருமையையும் கண்ணியத்தையும் உனருவீர்கள்…. வாழ்த்துக்கள் சகோதரி

    • தோழ(ழிய)ரே,

      உணவு உடை கல்வி காதல் திருமணம் சொத்துரிமை சமூக அங்கீகாரம் நிர்வாகம் ஆகியவற்றில் எந்தக்குறைபாடு நிவர்த்திசெய்யப்படவேண்டும் ?

      quranist@aol.com

    • இஸ்லாமிய பெண்களை பற்றி எழுத வேண்டுமானால் அப்பெண்களிடம் கேட்டு எழுத வேண்டும் மனதில் தோன்றியதை எழுதி விட்டு இஸ்லாமிய பெண்களை பற்றி எழுதியதாக சொல்வது எற்றுக்கொள்ள முடியாது இஸ்லாமிய பெண்கள் இஸ்லாமிய சட்டப்படி வாழ்ந்தால அது அவர்களின் முழு சுதந்திரமாகத்தான் இருக்கும் மேலும் அவர்கள் விரும்பியே அப்படி வாழ்கின்றார்கள் 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஒரு ஜீவனாகவே நினைக்காத காலத்தில் பெண்களுக்கு திருமணத்தில் அவர்கள் இஷ்ட்டப்படி நடக்க நபிகள் நாயகம் அவர்கள் வழி வகை செய்தார்கள் திருமணத்தை ரத்து செய்யும் உரிமையையும் பெண்களுக்கு கொடுத்தார்கள் சொத்துரிமையை பெண்களுக்கு கொடுத்திருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே பள்ளி வாசல்களுக்கு பெண்களும் வரும் அனுமதி வழங்கப்பட்டது அக்காலக்காட்தத்திலேயே எனவே இஸ்லாம் மட்டுமே பெண்களுக்கான முழு உரிமையையும் கொடுத்துள்ளது கணவன் இறந்தால் உடன் கட்டை ஏற வேண்டும் என்று சொலக்கூடிய மதத்தை பின் பற்றக்கூடியவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக பேசுவது எர்ப்புடையதாக இருக்காது திருமணம் வரை தகப்பனையும் திருமணத்திற்கு பிறகு கணவனையும் சார்ந்து இருக்க சொல்லும் மதத்தை ஏற்று கொண்டு வாழ்பவர்கள் முழு சுதந்திரத்தை பெண்களுக்கு கொடுத்திருக்கும் மார்க்கத்தை விமர்சனம் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது கர்ப்ப பைக்கு சுதந்திரம் வேண்டும் என்று சொல்ல கூடிய காட்டு மிராண்டிகள் சுதந்திரத்தை பற்றியும் இஸ்லாமிய பெண்களை பற்றியும் பேசுவதற்கு முன் சற்று சிந்தித்து பார்க்க வேண்டுமாய் கேட்டு கொள்கின்றேன்

  2. இன்றைய செய்தித் தாள்களை எடுத்து வாசியுங்கள்.. எத்தனை கள்ளக் காதல் சம்பந்த பட்டவை.. அதிலும் நண்பர்களின் மனைவி, சகோதரி இவர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக தான் அதிகம் அறியப்படுபாவை.. 99% பாலாகவே இருந்தாலும் ஒரு % விஷம் கலந்து விட்டாலும் அது விஷம் தான்.. எத்தனையோ நல்ல நண்பர்கள் இருந்தாலும் சமய சந்தர்ப்பங்களால் சபலம் என்னும் விஷம் கலந்து விட்டால் என்ன ஆகும் என்பதை யோசித்து விட்டு அவர்கள் உங்களை வரவேற்கும் முகத்திலே, பதிலளிக்கும் விதத்திலே என்ன தவறு இருக்கிறது என்பதை சிந்தியுங்கள்.. அடுத்தவன் வீட்டு பெண் வழி தவறினால் செய்தி.. தன் வீட்டு பெண் தவறி சென்றால்? 
    FYI,
    தலாக் பற்றிய ஆதாரங்கள் இல்லாமல் யாரோ சொல்பவற்றை கேட்பாவற்றை வைத்து கொண்டு எழுதி இருக்கிறீர்கள்.. நீங்கள் கூறுவது போல மூன்று முறை ஒரு சேர தலாக் என்று கூறினாலும் அது ஒரு தடவை கூறியதாகவே கருதப்படும்.. மேலும் இதில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக உரிமை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.. மேலும் தலாக் என்பது இறைவனால் வெறுக்க தக்க கூடியதும் ஆகும்.. இதனை எவ்வளவு முறை எடுத்து கூறினாலும் ஏற்பதற்கு உம் போன்ற அறிவு ஜீவிகளுக்கு என் தான் மனம் மறுக்கிறதோ தெரியவில்லை..

    • வீட்டுக்குள் மறைத்து வைத்தால் கள்ள உறவுகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றலாம் என்று உங்களைப் போல யாரும் பெண்களை இந்த அளவுக்கு இழிவு படுத்த முடியாது. உங்கள் வாதப்படி இந்த சிறை பாதுகாப்பு பெண்ணுக்கு மட்டும்தான். உங்களைப் போன்ற ஆண்கள் மற்ற மதத்தினர் வீடுகளுக்குச் சென்று பெண்களுடன் நேருக்கு நேர் சந்தித்து பேசுவது மட்டும் குற்றமில்லையா? இந்தக் கஷ்டத்துக்கு அல்லா பெண்களை படைக்காமலேயே இருந்திருக்கலாம்.

      • நண்பர் வினவு,அடுத்த வீடுகளுக்கு சென்று அந்த வீட்டு பெண்களுடன் நேருக்கு நேர் சந்தித்து பேசுவது எந்த இடத்தில் அனுமதிக்க பட்டுள்ளது? அடுத்த வீடுகளுக்குள் செல்லும் முறை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று அறிந்து வைத்திருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.. பரவாஇல்லை.. அடுத்த வீடுகலுக்குள் நுழையும் முன் சலாம் கூறுங்கள்.. அதுவும் வீட்டு வாசலுக்கு முன்னால் நின்று வீட்டில் உள்ளவரை அழைக்காதீர்கள்.. அவர்கள் பதில் கூறியதும் அவர்கள் வீட்டில் ஆண்கள் இல்லை என்றால் வெளியிலிருந்தே தகவல் கூறி விட்டு வந்து விடுங்கள் என்று தான் ஆண்களுக்கு இஸ்லாம் அறிவுரை கூறுகிறது.. அதே போல் பெண்களுக்கும் தான்.. அங்கே பெண்கள் இல்லை என்றால் திரும்பி விடுங்கள் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.. தயவு செய்து நன்கு விளக்கமாக படித்து விட்டு பதில் இடுங்கள்.. இதை மீறுபவர்களால் இஸ்லாம் அனுமததிக்கிறது என்று ஆகி விடாது..

        • வீடு தீப்பிடித்து எரிகிறது. கணவன் வெளியூர் சென்றிருக்கும் இரவில் திருடன் வீட்டினில் நுழைகிறான். இந்த சந்தர்ப்பத்தில் இசுலாமியப் பெண்கள் அண்டை வீட்டுக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஆண்களை நேருக்குநேர் சந்தித்து உதவி கேட்பது இசுலாத்தின்படி விரோதமானது. எனவே அந்தப் பெண்கள் இசுலாத்தை காப்பாற்றுவதற்காக நெருப்புக்காகவும், திருடனுக்காகவும் சாகலாம். வேறு வழி?

        • நண்பர் வினவு, அருமையான வாதங்களை எடுத்து வைத்தீர்கள்.. இப்போது என்னவாயிற்று? வீடு தீப்பிடித்து எரிகிறது என்ற போது மட்டும் அல்ல, வேறு எந்த வித அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும் (திருடனோ ஏதோ வீஷா ஜந்துக்கலோ நுழைந்திருந்தால்) சென்று காப்பாற்ற கூடாது என்று கூறும் மடத்தனமான கட்டுப்பாடுகள் உள்ள மார்க்கம் அல்ல இஸ்லாம்.. மேலே நான் கூறியவை சாதாரண சூழ்நிலைகளில் கதை பிடிக்க வேண்டியவை.. அசாதாரண நிலைகளில் அல்ல.. உயிர் பிழைக்க பன்றியின் மாமிசத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்றால் பன்றியின் மாமிசம் உண்பதற்கு அனுமதி வழங்க பட்டிருக்கும் போது.. நீங்கள் கூறும் சூழ்நிலைகளில் உயிர் காப்பாற்ற பட வேண்டி, செல்வங்கள் காப்பாற்ற பட வேண்டி அந்நிய ஆண்கள் வீட்டினுள் நுழைவது தவறில்லை.. அதை யாரும் தடுக்கவும் இல்லை..

          • எவை சாதாரண சூழ்நிலைகள், எவை அசாதாரண சூழ்நிலைகள் என்ற பட்டியலை ஆண்டவன் அளித்திருக்கிறானா? அசாதாரண சூழ்நிலைகளில் உணர்ச்சி மிக்க ஆண்களின் பார்வையில் பெண்கள் பட்டுவிட்டு பிரச்சினை ஆகிவிட்டால் என்ன செய்வது? கேஸ் சிலிண்டர் தொழிலாளி, கார்பெண்டர், பிளம்பர் முதலாளன தொழிலாளிகள் சமையலறை வரை வந்து வேலை செய்ய வேண்டியிருந்தால் பெண்களை வெளியூருக்கு அனுப்ப வேண்டுமா? ஆண்கள் இல்லாத வீட்டில் வாழும் இசுலாமியப்பெண்கள் இந்தப்பிரச்சினைகளை சமாளிக்க மார்க்கம் ஏதும் வழி சொல்லியிருக்கிறதா?

            • அசாதாரண சூழ்நிலைகளில் கூட பெண்களை போக பொருளாக பார்க்கும் ஈன தனமான கேடு கெட்ட ஆண்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.. அப்படியெனில் நம் பெண்கள் என்ன உடை அணிந்திருந்தாலும் எந்த நிலையிலும் எங்கு இருந்தாலும்  இது போன்ற வக்கிர புத்தி கொண்டவர்களால் பாதிப்பு வருமேனில் என்ன செய்வது? நீங்கள் கூறுவது போல் அந்த நெருக்கடியான சூழ்நிலைகளிலும் பெண்களை உணர்ச்சி வடிக்காலாக பார்ப்பவர்கள், தங்கள் அங்கங்கள் தெரியும்படி பெண்கள் இருந்தால் என்ன செய்வார்கள்? நீங்கள் கேட்ட கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருக்கிறது… நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள அல்ல ஏற்று கொள்ள மறுகிறீர்கள்.. தவறே நடக்காது என்று சொல்லவில்லை.. தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று தான் கூறுகிறோம்.. 

              • நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக அல்லது சமூகம் பற்றிய அக்கரையுள்ளவராக (நம்ம முதலாளி அதியமானைப்போல) மாறிப்பாருங்கள் உங்களது பார்வை மாறலாம்

                • நாங்கள் நேர்மையான மனிதனாக இருந்து கொண்டுதான் சிந்திக்கிறோம் மற்றும் சமூகம் பற்றி சிந்திக்க ஒரு கம்யூனிஸ்டாக அல்லது மதவாதியகவோ மாற வேண்டிய தேவையில்லை.

            • //கேஸ் சிலிண்டர் தொழிலாளி, கார்பெண்டர், பிளம்பர் முதலாளன தொழிலாளிகள் சமையலறை வரை வந்து வேலை செய்ய வேண்டியிருந்தால் பெண்களை வெளியூருக்கு அனுப்ப வேண்டுமா? ஆண்கள் இல்லாத வீட்டில் வாழும் இசுலாமியப்பெண்கள் இந்தப்பிரச்சினைகளை சமாளிக்க மார்க்கம் ஏதும் வழி சொல்லியிருக்கிறதா?//

              மேற்படி வேலைகளை பெண்களே செய்கின்ற சூழலும் தற்போது பெருவாரியாக உருவாகியுள்ளது. இஸ்லாத்துக்கு நேர்ந்த அபாயத்தை பார்த்தீர்களா? வீட்டுக்கு வரும் ஆண்களை தடுக்கலாம், அல்லது பெண்களை அடைத்து வைக்கலாம். பெண்களே வீடு வீடாகச் சென்றால் அந்தக் கொடுமையை எந்த அல்லாவிடம் சொல்லி அழுவது….. அவ்…..

        • சகோதரி, உங்களின் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி.. நாம் எல்லோரையும் வல்ல இறைவன் நேர்வழியில்  செலுத்தி நற்கூலி வழங்குவானாக..

      • இஸ்லாம் பொதுவா ஒரு விசயத்துகு பொதுவான வழிமுறைகள்தாம் கூறும் வினவுக்கு அது புரியவில்லை

        இருபத்தி நாலுமணி நேரமும் தீப்பிடித்து எரிவது , அபாயம் நிகழ்வது இதை பற்றியும் அப்போ என்ன செய்ய சொல்லுது இஸ்லாம் என சொல்லி மொத்த மத போதனையையும் ஒன்றும் இல்லை என சொல்வது இதுதான் செய்கிறார்

    • //மனைவி, சகோதரி இவர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக தான் அதிகம் அறியப்படுபாவை.. 99% பாலாகவே இருந்தாலும் ஒரு % விஷம் கலந்து விட்டாலும் அது விஷம் தான்.. எத்தனையோ நல்ல நண்பர்கள் இருந்தாலும் சமய சந்தர்ப்பங்களால் சபலம் என்னும் விஷம் கலந்து விட்டால் என்ன ஆகும் என்பதை யோசித்து விட்டு அவர்கள் உங்களை வரவேற்கும் முகத்திலே, பதிலளிக்கும் விதத்திலே என்ன தவறு இருக்கிறது என்பதை சிந்தியுங்கள்.. அடுத்தவன் வீட்டு பெண் வழி தவறினால் செய்தி.. தன் வீட்டு பெண் தவறி சென்றால்?//

      இதில் சொல்லப்பட்டுள்ளவை எல்லாமே பெண்களுக்குத்தான். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்பதாகத்தான் ரபிக் சொல்லியுள்ளார். ஆணுக்கு இல்லையா என்று வினவு கேள்வி கேட்டால் மழுப்புகிறார்.

      • ஆண்களுக்கும் கற்பு இல்லையென்று நான் கூறவில்லை.. புர்காவை பற்றி கேட்டீர்கள்.. அது பெண்களின் கண்ணியத்தை காக்கவே அணிய சொல்கிறோம் என்பதை பலமுறை விளக்கியாயிற்று.. “உங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளுங்கள் உங்கள் வெட்க தலங்களை பேணி கொள்ளுங்கள்” என்று இரு பாலருக்கும் தான் அறிவுரை கூற பட்டிருக்கிறது.. தயவு செய்து கொஞ்சம் இஸ்லாதில் என்ன கூறி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. யாரோ கூறினார் யாரோ செய்தார் என்பதெல்லாம் வைத்து கொண்டு இஸ்லாம் பெண்ணின் பெருமையை காக்கவில்லை கண்ணிய படுத்தவில்லை என்று கூற வேண்டாம்..

        • கண்ணியத்தின் அளவுகோலை பெண்கள் நிர்ணயணம் செய்யட்டுமே… ஏன் அதை ஆண்கள் நிர்ணயம் செய்யவேண்டும். ஒரு பெண் தான் கண்ணியகமான உடை அணிந்திருப்பதாக உணர்ந்தால் அவள் புர்க்ஹா அணியவேண்டிய நிர்பந்தம் எதற்கு..

        • அப்போ உங்க வீட்ல சமைக்கிறது யாருங்க? உங்களால பெத்தது யாருங்க. புள்ள பெக்குறது எவ்ளோ சிரமம்? எதுதுக்க வேண்டியதுதானே? அவ என்ன உங்க பிள்ளைய சுமக்குற கூலி ஆளா?

          உங்க மனைவியோ பிள்ளையோ 2 பீஸ்ல வெளிய போகனும்ன அனுமதிப்பீன்களோ? தன மானம் இல்லாதவன் இதையும் செய்வான்?

  3. இசுலாமிய சமூகத்தில் காணப்படும் பெண்ணடிமைத்தனம் முற்றாக களையப்பட வேண்டும். ஏனைய சமூகங்களில் பெண்களுக்கு ஆதரவாக எழும் குரல்கள், இசுலாமிய பெண்கள் விடயத்தில் அடக்கி வாசிப்பது துயரமானது. பெயரளவில் குர்ஆனில் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக இசுலாமிய சகோதரர்கள் வாதம் புரிந்தாலும் இஸ்லாத்தில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் கடுமையாகவே உள்ளது. ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை- அது எந்த மதத்து ஆணாக இருந்தாலும். ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை முடிவு செய்யும் அவசியம் எந்த மதகுருவுக்கும் இல்லை. இருக்கவும் கூடாது. அப்படி இருக்கிறது என்றால் அங்கு பெண்ணடிமைத்தனம் இருக்கிறது என்றே அர்த்தம்.

    • நானும் நெறைய பேரிடம் பெண் உரிமை பேசுபவர்களிடம் பேசினால் ஆடை பற்றி தான் பேசுகிறார்கள் .அதுவும் புர்கா பற்றி….. அதனால் தான் இன்றைக்கு சச்சு வரைக்கும் வந்து நிக்குது இன்னும் தொடரும் பெண் தன்னை முழுமையாக ஆடை அணியாவிட்டால் …….

      • நடக்கும் அணைத்து தவறுக்கும் பெண் தான் காரணம் என்ற தொனியில் இருக்கிறது. பெண் முழுமையாக உடை அணிந்தால் தான் ஆண்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள் போலும்… எப்படி இஸ்லாம் பற்றி மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்று நீகள் நினரிகிரீர்களோ அது போல் பெண் உரிமை பற்றி உங்களுக்கு எதுவும்ம் தெரியவில்லை என்று தான் நினைக்க தோன்றுகிறது.

    •  // ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை- அது எந்த மதத்து ஆணாக இருந்தாலும். ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை முடிவு செய்யும் அவசியம் எந்த மதகுருவுக்கும் இல்லை. இருக்கவும் கூடாது// சரியாக சொன்னீர்கள், எந்த ஆணுக்கும், எந்த மதகுருவுக்கும் அந்த உறிமை இல்லை ஏனென்றால்  பெண் எவ்வாரான ஆடயை உடுத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும்  என்பதை அந்த பெண்ணையும், உங்களயும், என்னையும் படைத்த இறைவனே நிர்னயித்து விட்டபொது அதை மாற்ற யாருக்கும் உறிமை இல்லை

      • பெண் வாழ்க்கையையும், உடையையும் இறைவன் நிர்ணயித்து விட்டானா? அப்படி என்றால் எல்லாம் இறைவனுக்கு தெரிந்துதான் நடக்கிறது. ஈராக்கில் மக்கள் கொல்லப்படுவதும், பாலஸ்தீனில் தாய்மார்கள் கண்ணீரில் வாழ்வதும், கூட இறைவனின் அருள்தான் போலும். ஆண்டவன் கூட ஆண்களுக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை பெண்கள் புரிந்து கொண்டால் உங்களைப் போன்ற பச்சையான ஆணாதிக்கவாதிகள் இப்படி தைரியமாகப் பேச முடியாது.

        • பர்தா அணிவதால் மட்டும் ஒரு பெண் அடிமைபடுத்த
          படுவதாக நினைகிறீர்கள்.முதல ஒன்னை தெருஞ்சுகுங்க
          இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல மார்கம். ஒரு மனிதன்
          இந்த ஒலகத்துல எப்படி வாழனும் என்று சொல்லிதருவதுதன்
          இஸ்லாம். ஒரு பிறந்த குழந்தை முதல் இறந்த மனிதர்
          வரைக்கும் உலகில் உள்ள அனைவருக்கும் எல்லா
          விஷயங்களையும் ஒரே மாதிரியாக சொல்லித் தருகிறது
          அப்படி இருக்க ஒரு ஆண் எப்படி டிரஸ் பண்ணனும்னு
          குரான் ல இருக்கு. அது போல் ஒரு பெண் எப்படி டிரஸ்
          பண்ணனும்னு சொல்லி இருக்கு.இதுல அடிமைத்தனம்
          எங்கே இருக்கு?

          • சகோதரி பாத்திமாவே
            இவர்களால் தங்கள் மத பெண்களை உடை விசயத்தில் கண்ணியமாக இருக்க வைக்க முடியவில்லை தங்களால் முடியாத விசயத்தை சுதந்தரம் என்று சொல்கிறார்கள் அவர்களுக்கு அது வெட்கட்கேடாக இருக்கிறது அந்த காழ்ப்புணர்ச்சி வெறுப்பு பொறாமைனாலேயே மற்றவர்கள் எப்படி கௌரவாமாக இருக்க அனுமதிப்பதா என்று தான் பர்தா பெண்ணடிமை என்று புலம்புகிறார்கள்
            நிர்வாணமாக இருப்பவர்கள் உடை அணிந்தவர்களை பைத்தியம் என்று சொல்வது இயல்புதான்

    • இப்போதைக்கு பெண் சுதந்திரம் முழுமையாக உள்ள நாடு என்பது உங்க பார்வையில் அமெரிக்காவை எடுத்துக்குவோம். குரான் இறங்கிய 1400
      வருசங்களுக்கு முன்னாடி அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடந்தது. பெண்களுக்கும் நம்மை போல் ஆன்மா இருக்குமா? அப்பவே பெண்கள் உங்களில் ஒரு அங்கம் என்று உரக்க பறை சாற்றியது குர்ரான் மட்டும்தான்.பெண்களுக்கு சொத்து உரிமை உண்டா? என இப்போகூட நாம் விவாதம் செய்து கொண்டு இருக்கோம். அப்பவே பெண்களுக்கு சொத்து urimai தந்த மார்க்கம் எங்க மார்க்கம்.

      .

      • ஒரு அடிமை சொன்னானாம் நான் நன்றாககத்தானிருக்கிறேன், எனகு எல்லா சுதந்திரமும் இருக்கிறது. இன்னொருவன் கேட்டானாம் “அப்ப எதுக்கு தினமும் ஆண்டை உன்னை செருப்புலேயே அடிக்குறாரு?”மறுபடியும் அடிமை சொன்னானாம் “அவரு என்ன அடிக்குறது எனக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னு”

        மார்க்கமாம் மார்க்கம் காஷ்மீரிலே பாதிக்கப்படும் முசுலீம் மக்களுக்கு  ஒன்றையும் பிடுங்காத மார்க்கம். ஈராக்கிலே பெண்கள் ஆக்கிரமிப்பு பட்டைகளால் பாலியல் வன்புணர்ச்சசி செய்யப்பட்ட போடு வேடிக்கை பார்த்த மார்க்கம். ஆப்கனில் போராடும் மக்களின் ரத்த சகதிக்கு தீர்வு சொல்லாத மார்க்கம். ஊங்களுடையது மட்டுமல்ல எந்த மதமும் உழைக்கும் மக்களுக்காக போராடும் பமக்களுக்காக துரும்பையும் கிள்ளிப்போட்டதில்லை.
        கேட்டால் புஷ் முதல் எதிர்த்த வீட்டு பாய் வரைக்கும் ஒண்ணா மறுமையில தீர்ப்பு சொல்லுவாங்களாம். கேட்டுகிட்டு வாயில புளி சோத்தை அடக்கிகிட்டு இருக்கணுமாம். அய்யா , போராடாதே, கேட்காத எல்லாம் அல்லா சொல்லியிருக்கிறார்ன்னு சொல்கிறீர்கள் சரி எதுக்கு முசுலீம் தனி இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்? 
        காஷ்மீர் மக்களிடம் போய் எல்லாம் அல்லா பார்த்துப்பார்ன்னு சொல்லிடாதீங்க அவுங்க எதுல அடிப்பாங்கனே தெரியாது சார்.
        குர்ரானில் இப்படி 11.20க்கு ஒருத்தன் அல்லாவுக்கு எதிராக வினவில் மறு மொழி போடுவான்னு எழுதி இருக்கிறதா?

        கலகம்

        • கலகம்,
          அருமை. இவர்களுக்கு புரியும்னு நினைக்கிறீர்களா!
          இவர்கள் எல்லாம் ஒரு 5 வருடம் தலிபான் ஆட்சியின் சுதந்திரத்தை அனுபவிக்கவேண்டும்.

        • எந்த ஒரு இடத்தில் போராட கூடாது நியாயம் கேட்க கூடாது என்று உள்ளது என்பதை ஆதாரத்துடான் எடுத்து கூறினாள் நாங்களும் அதை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.. செய்வீரா நண்பரே?

        • தற்ப்போது இந்தியாவின் அடிமைகள் தலித் மக்கள்
          பீ அள்ளுவது,நாத்ததை சுத்தம் செய்வது எல்லாம்
          தலித்துகள். இதுவும் ஒரு அடிமைதான்.

  4. முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார்..
    சாகித்

    சாகித், எந்த ஹதீஸ் தொகுப்பில் – எத்தனையாவது ஹதீஸாக இது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை தயவு செய்து தரவும்..

  5. ஷாகித் உன்னிடம் விவாதம் செய்ய முடியாது ஏன் என்றால் நீ கிட்ட தட்ட ஈமானை விட்டு வெளிஏறிவிட்டாய் .இன்ஷா அல்லா வில் மீட் ஜட்ஜ்மென் டே.

    • ஹையோ ஹையோ..

      இது என் காதுக்கு எப்படி ஒலிக்கிறது தெரியுமா மிஸ்டர் முஸ்தபா ?

      கலி முத்திடுதுடா அம்பி..
      எல்லாத்தையும் ஈஸ்வரன் பாத்துண்டுதான் இருக்கறன்
      என்று தின்னையில் உட்கார்ந்துகொண்டு புலம்பும் பார்ப்பானுடையதைப் போலவே இருக்கிறது. இதை மதத்துக்கு மொழிபெயர்த்துக்கொண்டால் உங்களுடைய மறுமொழி விவாதம் செய்ய வக்கற்ற இசுலாமிய பார்ப்பானுடைய புலம்பல்.

      கடைசியாக ஆர்.எஸ்.எஸ் மதவெறியனுக்கும்
      இசுலாமிய மதவெறியனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை
      ஒரு பிரிவு சிறுபாண்மை என்பதைத்தவிர.

      • பிற மதத்தவர்களிடம் அளஹிய முறையில் பேசுங்கள்(தர்க்கம் செயும்போது கூட ) என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. உங்களை போல் அறிவிலிகளிடம் விதண்டா வாதம் செய்வது வீண் வேலை.

        • இஸ்லாமிய பெண்ணாக பிறந்ததில் , வாழ்வதில் ,
          இறபபதில் பெருமை கொள்கிறேன்.

        • எங்களைப் போன்ற அறிவிலிகளையும் மதித்து வந்து அரிய கருத்துக்களை பதிந்து விட்டு போனதற்கு நன்றி பாத்திமா. என்ன இந்த அறிவிலிகளிடம் விவாதித்ததற்காக ரஃபீக்குக்கு மட்டும் இறைவன் நற்கூலி வழங்க ஆசிர்வதித்திருக்கிறீர்கள். எங்களுக்கு என்ன தண்டனை என்பதையும் சொல்லியிருக்கலாம். கூடவே கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள உண்மையான இசுலாமிய பெண்களின் வாழ்க்கை ப்ற்றியும் தங்களது மேலான கருத்துக்களை சொல்லியிருக்கலாம்.

    • நான் எப்பொழுது உன்னிடம் எனக்கு இறை நம்பிக்கை உள்ளஹ்டு என்று கூறினேன்?

  6. வினவு கு.நாக்களே…செத்தீங்கடா நீங்க.
    தமிழ்நாடு தவுஹீது ஜமாத்து வந்து மாத்து மாத்து என்று மாத்துவார்கள். வாழ்த்துக்கள்.

    • நீ என்ன ஆர் ஸ் ஸ் கூட்டத்திலிருந்து வந்தவன? மாத்து மாத்து என்று மாத்த? எல்லாம் இந்து மதவெறி கூட்டம்தான். இந்து மதவெறி கூட்டம் எப்படி நடந்து கொள்கிறது என்று யு டி பில் பார் தெரியும்.
      http://www.youtube.com/watch?v=_3Ksj0FwEdI

  7. “….முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும்….. ” – சாகித்.

    நண்பர் சாகித்… இதற்கும் நீங்கள் தக்க ஆதாரத்தை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.. ஏனெனில் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் (ஹதீஸ்) ஏராளமானவை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மூலமாக அறிய பட்டிருக்கின்றன..  

  8. shahid ezudiya hadeedu engu enda edattil erukiradu enru vilakkuvadai vida avargal solvaru sariya enru sari partu velieduvadu vaiaittalattin urimaiyalari velai pls enda oru vishayamaga erundalum aaraindu badippil edavum

  9. வினவு ஐயா,

    நம்ம மாவோயிஸ்ட் பெண்கள் சீனியர் ஆண் மாவொயிஸ்ட்களால், தினம் கற்பழிக்கப்பட்டு சொல்லொணா சித்ரவதைக்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்,இஸ்லாமிய பெண்களை விட இருண்ட வாழ்க்கை வாழ்ந்து வ்ருகின்றனர்.அவர்களைப் பற்றி உருக்கமாக ஒரு பதிவு போடும் படி வேண்டிக்கொள்கிறேன்.

    • நம்ம மாவோயிஸ்ட் பெண்கள் சீனியர் ஆண் மாவொயிஸ்ட்களால், தினம் கற்பழிக்கப்பட்டு சொல்லொணா சித்ரவதைக்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்appadi

      enga nadandhiruku nu sollunga brother?

      • சகோதரர் nijam அவர்களூக்கு ////நம்ம மாவோயிஸ்ட் பெண்கள் சீனியர் ஆண் மாவொயிஸ்ட்களால், தினம் கற்பழிக்கப்பட்டு சொல்லொணா சித்ரவதைக்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்appadi
        enga nadandhiruku nu sollunga brother?////>>>> இது மட்டமான அவதூறு இது போன்று அவதூறு சொல்லியவருக்கு மவோயிஸ்ட்களை பற்றி ஒன்றும் தெரியாது என்பது விளங்குகிறது இவர் கீற்று அல்லது செங்கொடி தளத்தில் உள்ள பதிவான, தோழர்களின் போராட்டக் களத்தில் நான் – அருந்ததி ராய் அவர்களின் கட்டுரையை படித்தால் ஒரளவு விளங்கி கொள்வர்கள் என்று நினைக்கிறேன்

    • அய்யா தயவுசெய்து அவதூறு சொல்வதை விட்டு விடுங்கள் நேர்மையான முறையில் விவாதிங்கள்

  10. ///இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை.///// — நச் .. ” இசுலாமிய பெண்களின் விடுதலையை பாட்டாளி வர்க்கம் தீர்மானிக்கட்டும்.”

  11. பெண் அவள் மனம், தாய் அவள் பாசம்

    உரவில் உரிமை, மதம் பிடித்த/ போட்ட விலங்கு

    அறியாதவர்களாக இருக்கவேண்டாம்

    பெண் தாய் மதம் தாண்டி பொதுவில் வைப்போம்

  12. தமிழ் முசுலீம்களிடம் கருப்பு அங்கி என்ற பண்பாடு முற்றிலும் இல்லாவிட்டாலும் வெள்ளை வேட்டியை தமது கலர் சேலைக்குமேல் சுற்றிக்கொண்ட வழக்கமிருந்தது. இன்று அந்த வெள்ளைவேட்டி அகன்றுவிட்டது. கருப்பு அங்கி அல்லது எதுவும் இல்லை (சேலை, சுடிதார் போட்டுக்கொண்டுதான்) என்ற நிலை பொதுப்பண்பாக மாறியுள்ளது. ————————————————-
    நண்பருக்கு நீங்கள் எந்த யுகத்தில் உள்ளீர்கள்? கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெண்களிடத்தில் புர்கா (கருப்பு நிற அல்லது வேறு நிற முழு அங்கி) அணியும் பழக்கம் இருந்தது இல்லை… ஆனால் இன்று அந்த நிலை மாற்றம் பெற்று வீட்டை விட்டு வெளியே செல்லும் போது புர்கா அணிந்து செல்லாத பெண்களின் எண்ணிக்கை விரல் விட்டு என்னும் அளவிற்கு குறைந்துள்ளத்தை கவனிக்க தவறி இருப்பது ஏனோ? நாகரீக வளர்ச்சி என்பது இல்லாத காலத்தில் (10 வருடங்களுக்கு முன்னர் இன்றைய நிலயை விட குறைவு) புர்க்கா என்றால் என்னவென்றே அறியப்படாத சமூகம் இன்று அதை (உங்கள் பார்வையில் கட்டாய படுத்தி) அணிகின்றதே.. இன்று இருப்பதை விட அந்த கால கட்டத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதை நான் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. 

    எதனை பெண்ணடிமை என்று கூறுகிறீர்கள்? அவர்களை, அவர்களின் மானத்தை பாதுகாக்க கண்ணியமான முறையிலே (….அது கருப்பு நிற அங்கி தான் என்றில்லை.. ஆனால் அவர்களின் அங்கங்கள் ஆண்களை கிளர்ச்சி ஊட்டாத நிலையில் உள்ள நீங்கள் கூறும் சுடிதார் என்றாலும் சரி.. )ஆடை அணியுங்கள் என்று சொல்வது பெண்ணடிமை தனமா? இல்லை ஆடை சுதந்திரம் என்று நீங்கள் கூறுவது போல அவர்களின் அங்கங்களை வியாபாரமாக்கூவது பெண்ணடிமை தனமா? சொல்வதற்கு மன்னிக்கவும்.. நடுநிலை வாதி, பெண்ணியத்தை காக்க வந்த கண்னியவான்கள் என்று கூறும் நீங்கள் மேற்கத்திய நாடுகளில் வாழும் பெண்களை போல 2 பீஸ் உடை அணிவித்து உங்கள் வீட்டு பெண்களை வெளியில் நடமாட அனுமதிக்க தயாரா? சூரிய குளியல் என்ற பெயரிலே நிர்வாணமாக உங்கள் வீட்டு பெண்களை கடற்கரையிலே (மெரீனா பீச்சில்) உலவ விட தயாரா? கேட்டால் அது அவர்களின் கலாசாரம் என்று கூறாதீர்கள்.. நமது நாட்டு சேலையும் சுடிதாரும் மேற்கத்திய மக்களுக்கு புர்காவை போன்றவை தான்.. 

    சமீபத்தில் தமிழ் நாளிதழ் (தின தந்தி என்று ஞாபகம்) ஒன்றில் வந்த செய்தி.. “வேலைக்கு போகும் பெண்கள் பாடும் அவஸ்தைகளை.. தங்கள் மனக் குமுரல்களை வெள்ளிப்படுத்தியது பற்றி அவர்கள் போலீஸ் கமிஷ்னாறிடம் முறையிட்ட செய்தி” அது… நான் ஏற்கனவே கூறியது போல அடுத்தவன் வீட்டு பெண்களுக்கு எனும் போது அது செய்தி ஆகி விடுகிறது.. இதே சம்பவம் நம் வீட்டு பெண்களுக்கு நடந்தால் உங்களின் நிலை என்ன? நம் வீட்டு பெண்களை அடுத்தவன் பார்த்தாலே கோபம் வருகிறதே.. இதில் அவர்களின் மீது கை வைக்கிற சந்தர்ப்பத்தை நாமே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீரா?

    • ரபீக், கிளர்ச்சியூட்டும் உடைகளைப் பெண்கள் அணிந்தால் ஆண்களுக்கு ஏன் வெறி வருகிறது? அதற்கு காரணம் யார்? அல்லாதான். இப்படி ஆண்களையெல்லாம் காமவெறி பிடித்த விலங்குகளாக படைத்தது அல்லாவின் குற்றம். எனவே அல்லாவை இனியாவது ஆண்களுக்கு உணர்ச்சியைக் குறைத்து படைக்கச் சொல்லுங்கள். அப்படிப் படைத்தால் இந்த பர்தா எனும் சாக்குப்பையை பெண்கள் அணிந்து சித்திரவதைப்பட வேண்டிய அவசியமில்லை.

      • Thayavu senchi ellattayum unga karikki uthavatha kammunisa sithanthattulerthu parkatheenga.
        oru sammoogathappathi vimarsikka ethahaya ulappai neenga athukku sengeenga?

      • உணர்சிய அதிகரிகத்தான் அல்லா சுன்னத் பண்ணி வட்சிடாறு…அதான் பெண்களுக்கு  இந்த நிலைமை …அல்லாவ ரொம்ப பேசாதிங்க கோவிச்சுக்க போறாரு … 

        • உங்க சிவன் லிங்கமும் சுன்னத் பண்ணியதுதான்
          அதான் சிவன் லிலை தாங்க முடியவில்லை
          பார்வதிக்கு அதான் ஒரே வெட்டு லிங்கம் தனியாக
          வந்து பூமியில் விழுந்து விட்டது

        • சிவன், பார்வதி இந்த கருமாந்திரத்தின் மீதெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது .
          நான் ஒரு இயற்கை அவ்ளோதான் …
          இந்த பிரபஞ்சம் yellam எப்படி உருவானது ?இதனுடைய எல்லை தான் என்ன ? என்பதை கண்டுபிடிப்பது தான் நமது வேலை .புரியுதா முகமூத் …
          சும்மா அல்லா ,குல்லா,சிவன் ,பார்வதி ,குடுமி ,இயேசு,கொசுன்னு அடங்குங்கப்பா .. 

      • நண்பர் வினவு அவர்களே,ஆண்கள் காம வெறியர்கள்என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள்.. எந்த ஒரு பாலினத்திற்கும் அதன் எதிர் பாலினத்தின் மீது கவர்ச்சி உண்டு என்பதை ஞாபகமூட்டி கொள்ளுங்கள்.. ஒரு பெண் அரை குறை ஆடையில் வருவதானால் ஆண்களுக்கு கிளர்ச்சி ஏற்படுவது போல ஒரு ஆண் அரை குறை ஆடையில் ஒரு பெண்ணேதிரே சென்றால் அந்த பெண்ணுக்கும் கிளர்ச்சி உண்டாகவே செய்யும்… ஆண்களிடம் உள்ள சில பாகங்கள் பெண்ணிற்கு கிளர்ச்சி ஊட்ட கூடியவை.. பெண்ணிடம் உள்ள சில பாகங்கள் ஆணுக்கும் கிளர்ச்சி ஏற்படுத்த கூடியவையே.. அதனால் தான் அந்த பாகங்களை மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.. நீங்கள் கூறுவது போல பெண்களுக்கு மட்டும் தான் புர்கா கட்டாயம் என்று இல்லை.. ஆண்களுக்கும் அது பொருந்தும்.. பெண்கள் அணிகின்ற புர்கா நீங்கள் கூறுவது போல நமது வழக்கத்தில் பெரும்பாலும் (கருப்பு நிற) முழு அங்கியாக உள்ளது.. பெண்களும் ஆண்களும் தத்தமது வெட்க தளங்களை பேணிக் கொள்ள வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் இன்று சில பெண்கள் புர்கா என்றால் கருப்பு நிற முழு அங்கி என்ற கோணத்தில் அதனில் மிகுந்த வேலை பாடுகளைக் கொண்டும் உள்ளங்கங்கள் தெளிவாக தெரியும் படி (see through/transparent)  அணிவது மிகுந்த வேதனைக்குறியது.. வன்மையாக கண்டிக்க தக்கது..

        • ஆண்களுக்கு உணர்ச்சி, கிளர்ச்சி அதனால் பாலியல் வன்முறை, அதனால் பெண்கள் புர்கா அணிதல்…….இந்தப் பிரச்சினைக்கெல்லாம் மூலம் என்ன நண்பர் ரஃபீக்? எல்லாம் இறைவனின் படைப்பு விபரீதம்தானே? ஏன் இறைவன் இதை சரி செய்யக் கூடாது?

          இப்படிக் கேட்டால் இயற்கையின் படைப்பு காரணம் என்கிறீர்கள். ஒன்று இன்றைய சமூகப் பிரச்சினைகளை யதார்த்தமாக பார்த்து தீர்வுகளை செய்யவேண்டும். அதற்கு மதம், புனித நூல் என்று போனால் இப்படித்தான் மாறி மாறிப் பேச வேண்டும்.

          மொத்தத்தில் ஆண்களும் கடவுளும் சேர்த்து அமைத்திருக்கும் கூட்டணியில் பெண்தான் அவதிப்படுகிறாள். அதை புரிந்து கொள்வதற்கு எந்த மத புனித நூலையும் உருப்போட்டு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

          • நீங்கள் பிறக்கும் போது ஆடையுடனா
            பொறந்தீர்கள் வினவு அவர்களே???..பிறகு எதற்கு அந்த ஆடை அதை உதறி விட்டு நிர்வாணமாக அலைய வேண்டியது தானே. இந்த உணர்ச்சி , கிளர்ச்சி இதுலாம் ஏன் வருது?? சரி வரலன்னு நிருபிசிற வேண்டியது தானே.

    • /அவர்களின் அங்கங்கள் ஆண்களை கிளர்ச்சி ஊட்டாத நிலையில் உள்ள நீங்கள் கூறும் சுடிதார்// அதாவது மற்ற ஆடைகள் எல்லாம் ஆண்களை கிளர்ச்சி ஊட்டுகின்றன என்கிறீர்கள். அதெப்படி சில வெளிநாட்டு குடிவரவு திணைக்களங்களில் பெண் அதிகாரிகள் ஜங்கி தெரிய உடுத்திக்கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்கும் போது பலருக்கு தொடை நடுங்குகிறது? அப்போது ஏன்  கிளர்ச்சி வரவதில்லை?  

      • /// அப்போது ஏன்  கிளர்ச்சி வரவதில்லை/// மஹம்மது ஹூசைன் அத ஒ அப்பனுக கிட்டத கேட்கனும் சொந்த மனைவிட்ட கிளர்ச்சி வராம ஊரு ஊருக்கு கோவில கட்டி கோவிலுக்கு வர ஒ அப்பனுகளுக்கு சேவ செய்ய தேவதாசிகள் என்று உருவாக்கி கிளர்ஸ்சியோட ஸாரி பக்தியோட போக முடிஞ்சதுனு நீதான் சொல்லனும்

        • எந்த ஒரு இடத்தில் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லையோ, கேள்வியின் தன்மையை புரிந்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லையோ, அங்கே உன்னைப் போன்றோர் இப்படித்தான் பேசுவர். இப்பேச்சு அடிப்படை அறிவேனும் சிறிதும் இல்லாததன் விளைவால் வருகிறது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது என்பதால் ஆத்திரம் வரவில்லை ஹைதர் அலி. பரிதாபப் படுகிறேன். நீ கூறும் இஸ்லாம் உன்னை எந்தளவிற்கு உயர்ந்தவனாய் உன்னை ஆக்கியுள்ளது என்று நீயே நினைத்து பார். நீயே சொரிந்துவிடும் வார்த்தைகளையும் திரும்பி வாசித்துப்பார். 

    • “ஆண்களை கிளர்ச்சி ஓடாத வகையில் பெண் உடை அணியவேண்டும்” ….. ஆஹா என்ன அற்புதமான கருத்து…. அய்யா மதிப்பிற்குரியவரே, மற்ற பெண்களை சஹோதரியாக பாவிக்க வேண்டும் என்று எந்த வேதத்திலும் கூறவில்லையோ ???? பிரச்சனை உடையிலா, ஆண்களின் கீழ்த்தரமான எண்ணத்திலா ???

    • Mr. Rafique nan teriamadan kekuren aangaluku matum adutha pengalai pakade, talai kunindu sel apadinu verum vaarthai podumnu irukumbodu pengaluku matum edarku ipadi udai aniya kataya padutha venmdum.Avangaluku verum varthaiyoda niruthi irukalame. Burka inaiku prabalama aanadala yarum uduthala, neenga force panadaladan uduthuranga.Neenga unga ponnuku kataya paduthama irundu parunga avanagla uduthurangalanu.Verum kuran padichitu ada ethukitu avanga uduthurangalanu pakalam. Nanum muslim familyla irundu vandavan, niraya muslim pengaludan palagiavan. adanala nan urudia solren they are wearing burka just becas of force and to escape from othrs mouth. Burka podalana anda ponna thituradum kataya paduturadum seireengale thappu seira aangaluku enna senju irukeenga. Marumaila avangaluku thandanai kidaikumna burka podada pengalukum marumaila thandanai kidaikatum neenga moodikitu unga velaya parunga.

  13. ஐயா,
    தாங்கள் இன்னமும் இஸ்லாத்தை பற்றி முழுமையாக விளங்காமல் தான் இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்கள் என்பது தெளிவாகிறது,

    யார் சொன்னது உயர் மட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் ஏழை விவசாய்களை மதிப்பதில்லை என்று. இங்குள்ள பிரச்சினை எனவேன்றால் யாருமே ஒரு கொள்கையை பார்க்க வேண்டுமே அல்லாது. இந்த நாட்டில் வாழ்ந்து இங்குள்ள கலாசார சீர்கேட்டில் வாழ்ந்து வரும் (உ : வரதட்சணை) முஸ்லீம் மக்களை பார்க்க வேண்டாம்.

    சகாத் என்பது ஏழை வரி தான் தெர்யுமா அதை ஒரு பணக்கார முதலாளி தரவில்லை என்றால் அவருக்கு உள்ள நிலை என்ன தெரியுமா? உலகில் உள்ள அணைத்து நாடுகளும் இது போன்ற ஒன்றை பின்பற்றினால் வறுமை வருமா? உலகில் உள்ள அணைத்து நாடுகளும் சகாத் போன்ற ஒரு வழியை சரியான நிர்வாகத்தின் கீழ் செயல் படுத்தினால் வறுமையை நிச்சயமாக ஒழித்து விடலாமா முடியாதா?

    இங்கு ஒரு பேச்சு வழக்கமே உள்ளது என்னவெனில் எப்போதுமே ஏழைகள் தான் இஸ்லாத்தை தூக்கி நிறுத்துபவர்கள் என்று, மேலும் இறை தூதர் அவர்கள் கவலை பட்டது முக்கியமானது தனது சமுதாயத்திற்கு சோதனையாக இந்த செல்வம்தான் என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு செல்வம் தனது மக்களை வழி கெடுத்து விடுமோ என்று பயந்தார்கள்.

    ஒரு தூய இஸ்லாமியன் ஒருவன் நேற்று என்ன மதத்தில் இருந்தாலும் இன்று தனது சகோதரனாய் இருக்கும் போது அவன் ஜாதி, மதம், இனம், மொழி, கருப்பு, வெள்ளை, ஏழை, பணக்காரன், என்று பார்ப்பதில்லை, அவளவு ஏன் இன்று தாழ்ந்த சமுகத்தில் இருந்து வந்த எத்தனையோ மத குருமார்களின் பின்னால் தான் நாங்கள் தொழுகிறோம்.

    முதலில் பர்தா என்பதன் அளவுகோல் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வெளியில் தெரியும் உறுப்புகளை தவிர மற்றவற்றை மறைத்து கொள்ள வேண்டும். அதாவது முகம், கை மணிக்கட்டு , கால் பாதம். ..
    அறிவியலின் படி பெண்களுக்கு தொடுதலின் மூலமும் ஆண்களுக்கு பார்த்தலின் மூலமும் தான் காமம் மேலிடுகிறது. ஆக ஆண்களின் கண்களுக்கு பெண்களின் கூந்தல் கவர்ச்சிதான் என்பதை நாம் அனைவரும் ஒத்து கொள்வோம். மற்ற பெண்களின் உறுப்புகளின் நிலை என்ன என்பதை நமக்கு தெரியும். அதனால் அதை ஏன் மறைக்க வேண்டும் என்றும் நீங்கள் கேட்க மாடீர்கள் என்று நினைக்கிறன்.

    டெல்லியில் தொடர்ந்து நடக்கும் கற்பழிப்புகளுக்கு காரணமாக கமிஷனர் சொல்லும் போது பெண்கள் தங்கள் ஆடைகளை சரியாக உடுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். (அதற்காக பர்தா அணிந்தவரை பாலியல் வன்முறைக்கு ஆளாக மாட்டார்கள் என்று அர்த்தம் அல்ல. அது ஒரு வன்முறை , ஏன் வீட்டில் இருந்தாலும் கூட நடக்கும் பாலியல் வன்முறை. ) அதற்கு அர்த்தம் பெண்கள் மறைக்கவேண்டியதை மறைக்கவேண்டும் என்று.
    இதை 1400 வருடங்களுக்கு முன்னால் மனித அறிவை படைத்த ஒருவனால் சொல்லப்பட்டு அதை செயல் படுத்தினால் தப்பா?, நிச்சயமாக எந்த ஒரு ஆணும் யோக்யன் இல்லை நான் உட்பட (இறைதூதர்கள் தவிர). இது தான் ஆண்கள் பற்றிய நிலை.

    இந்த உடையுடன் ஒரு பெண் உழைக்கலாம் ஒரு தப்பும் இல்லை. சூழ்நிலை நிர்பந்திக்கும் போது. எனது மனைவி B.A. படித்தவள் , நான் எனது திருமணத்திற்கு பிறகு கேட்டேன் நீ வேளைக்கு செல்ல விருப்பமா என்று அவள் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டாள். நான் என்ன செய்ய?

    தலாக் எனபது மூன்று முறை ஒரே தடவை சொல்வதல்ல. மூன்று தவணைகளில் அதாவது 6 மாதத்திற்கு ஒரு முறை, முதல் தடவை சொன்னால் பிறகு விருப்பம் இருந்தால் சேர்ந்து கொள்ளலாம், அதே போல் தான் இரண்டாவது தடவையும், ஆனால் மூன்றாவது தடவை சொன்ன பிறகு அந்த வாய்ப்பு அவனுக்கு கிடையாது. ஏனனில் முதல் இரு தடவையே அவன் முழுவதுமாக பரிசீலித்து இருக்க வேண்டும்.
    ஆனால் பெண்களுக்கு ஒரு ஆணை பிடிக்க வில்லை என்றால் முதல் தடவையே அது ரத்து செய்யப்படும். உதாரனதிருக்கு ஒரு சம்பவம் இறை தூதர் அவர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பெண் இறை தூதர் சமூகம் வந்து “இறைவனின் தூதரே என் கணவர் நடதைலோ நான் எந்த குறையும் காண வில்லை என்னை மிகவும் நன்றாகவே நடத்துகிறார் எனக்கு எந்த குறையும் வைக்க வில்லை ஆனால் நான் இவரோடு வாழ்ந்தால் இறைவனுக்கு மாறு செய்து விடுவேனோ என்று நான் பயப்படுகிறேன் என்று சொன்னாள்(அதாவது அவளது கணவர் ஆண்மை இல்லாதவர் என்று நாசூக்காக சொன்னாள்), அதற்கு இறை தூதர் நீ அவரிடமிருந்து மகராக(மணக்கொடை)பெற்ற அந்த தோட்டத்தை அவருக்கு திருப்பி கொடுத்து விடுகிறாயா? சரி என்றவுடன் இந்த நிமிடத்தில் இருந்து அந்த திருமணம் ரத்தானது என்று சொன்னார்கள்.
    இது தான் உண்மை நிலை

    இத்தா பற்றி தாங்கள் சொன்ன சம்பவம் எந்த நூலிலுருந்து தாங்கள் எடுத்தீர்கள் என்று சொன்னால், அது பற்றிய நிலையை நான் தங்களுக்கு தெரிவிப்பேன்.
    நீங்கள் சரி என்றால் பொது விவாதத்திற்கு தாங்கள் தயாரா? பொது மக்கள் முனிலையில் வைத்து கொள்வோம்.

      • எல்லாம் தெரிந்த அவருக்கு, உமர் காலிஃபா முத்தலாக்கையும் ஒரேதடவையாக சொல்லிவிட வேண்டும் என்று சரியத் சட்டத்தை மாற்றிவிட்டது தெரியாது போலும். என்ன செய்வது. அவர் எல்லாம் தெரிந்த மேதாவியாச்சே. தலாக் பற்றிய எனது கற்பனையை உங்களுக்கு அருகிலுள்ள இமாம்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதனை இங்கே பகிர்ந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்எல்லாம் தெரிந்த அவருக்கு, உமர் காலிஃபா முத்தலாக்கையும் ஒரேதடவையாக சொல்லிவிட வேண்டும் என்று சரியத் சட்டத்தை மாற்றிவிட்டது தெரியாது போலும். என்ன செய்வது. அவர் எல்லாம் தெரிந்த மேதாவியாச்சே. தலாக் பற்றிய எனது கற்பனையை உங்களுக்கு அருகிலுள்ள இமாம்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதனை இங்கே பகிர்ந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்

        • ,/// உமர் காலிஃபா முத்தலாக்கையும் ஒரேதடவையாக சொல்லிவிடவேண்டும் என்று சரியத் சட்டத்தை மாற்றிவிட்டது தெரியாது போலும்/// சாகித் அவர்களே இஸ்லாமிய சட்டங்களை முதல் கலீபா அபூபக்கர் இராண்டாம் கலீபா உமருக்கொ மாற்றி அமைப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை இந்த விஷயங்களை பி ஜெ தன்னுடைய குறுந்தகடில் பேசி இருக்கிறார் உங்களுக்கு தேவை என்றால் தொன்டிtntjஅபீஸில் பெற்றுக்கொள்ளலாம் நான் குர்ஆன் ஹதீஸ் அய்வு செய்யும் மாணவன் என்ற முறையில் இரண்டு விஷயங்கள் தான் இஸ்லாம் ஆகும் ஒன்று குர்ஆன் மற்றொன்று ஹதீஸ் (முஹம்மது நபியின் சொல்.செயல்.அங்கிகாரம்) இவையல்லமால் உமர் சொன்னாலும் சட்டமாகாது பி ஜெ சொன்னலும் சட்டமாகாது உங்களுடைய வாதமேல்லாம் பி ஜெ அவர்களை சுற்றியே இருக்கிறதே ஏன்? உங்களுடைய வாதங்கள் எல்லாம்(குர்ஆன் ஹதீஸ்). இஸ்லாமிய அடிப்படை சம்பந்தமாக இல்லை நீங்கள் ஹதீஸ்கள் என்று இந்த பதிவில் குறிப்பிட்ட ஒரு சில சம்பவங்கள் ஹதீஸ் கிதாபுகளில் இல்லை(நான் இங்கே அரபு நாட்டில் குர்ஆன் ஹதீஸ் மற்றும் பல புத்தகங்கள் வாசிக்கும் நூலகத்தில் பகுதி நேர வேலை பார்க்கிறோன்) அதனால் எனக்கு அய்வு செய்ய நேரமும் வசதியும் இருக்கிறது உங்களுக்கு நேரமும் வசதியும் இருந்தால் நீங்கள் ஹதீஸ் என்று எடுத்து வைத்த கனவனை இழந்த பெண்கள் மொட்டையடிக்கசொன்ன ஹதீஸை காட்டுங்கள் மற்றபடி இந்த ஊருல இப்பிடி நடக்குது அந்த ஊருல அப்புடி நடக்குது இதுலாம் எனக்கு தேவையும் இல்ல அது இஸ்லாமிய அடிப்படையும் அல்ல உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறோன். ம.க.இ.க பற்றி புரியாத சில நன்பர்கள் சீனாவுல என்ன நடக்குது பாரு வடகொரியல என்ன நடக்குது பாரு என்று விளங்கமால் பின்னூட்டமிடுவது போல் இருக்கிறது உங்களுடைய பதிவு 

        • //மற்றபடி இந்த ஊருல இப்பிடி நடக்குது அந்த ஊருல அப்புடி நடக்குது இதுலாம் எனக்கு தேவையும் இல்ல அது இஸ்லாமிய அடிப்படையும் அல்ல உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறோன். ம.க.இ.க பற்றி புரியாத /சில நன்பர்கள் சீனாவுல என்ன நடக்குது பாரு வடகொரியல என்ன நடக்குது பாரு என்று விளங்கமால் பின்னூட்டமிடுவது போல் இருக்கிறது உங்களுடைய பதிவு// சரியான கேள்வி ஹைதர் நன்றி

    • //நிச்சயமாக எந்த ஒரு ஆணும் யோக்யன் இல்லை நான் உட்பட (இறைதூதர்கள் தவிர). இது தான் ஆண்கள் பற்றிய நிலை.//

      ஐயா நீங்கள் யோக்கியர் இல்லை என்று பேசுங்கள். அது என்ன எல்லா ஆண்களும்? அப்படி எல்லா ஆண்களையும் ஏன் அல்லா யோக்கியனாய் படைக்கவில்லை?

      • )நீங்களே நாட்டில் நடக்கும் எல்லாவற்றுக்கும் (அதாவது கொலை கொள்ளை வெள்ளம் வன்முறை கலவரம்)  அல்லாதான் காரண‌ம் என்கிறீர்களா
        ஷேக் உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் இப்படி ஏறுகிறதே உங்கள்அல்லா ஏதாவது ஸ்பெஷலாக உங்களுக்கு படி அளக்கிறாரா? அரிசி பதுக்கலுக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதற்கும் உங்கள் அல்லாதான் காரணமெனில் அவனை கட்டி வைத்து அடிப்பது என்ன தவறு?  நாங்களோ அதற்கும் அல்லாவுக்கும் ஏனைய சாமிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறோம்.நீங்கள் தான் இல்லாத ஒருவனை பிடித்து  குற்றவாளியாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு வர்க்கத்தின் தேவைக்காக இன்னொரு வர்க்கம் கசக்கிபிழியப்படுகிறது என்கிறோம். உங்கள் அல்லாவை நீங்களே இப்படி குற்றவாளி ஆக்கிவிட்டு  நாங்கள் நிந்திப்பதாக கூறுவது சரியா?

        கலகம்

      • ஐயா,
        ஒரு பொது சட்டத்தை ஒரு நாடு இயற்றும் போது அதில் நல்லவர்கள் இருகின்றார்கள் என்பதற்காக ஒரு சட்டத்தை அமல் படுத்தாமல் இருக்க முடியுமா? திருடனுக்கு கடுமையான தண்டனை இந்தியாவில் என்று சொன்னால் இங்குள்ள மற்ற அனைவரையும் அவமானப் படுத்துவதாக ஆகுமா? சாதரணமாக சமூகத்தில் உள்ள ஆண்களை கருத்தில் கொண்டு தான் இறைவன் அவ்வாறு சட்டத்தை இயற்றி உள்ளான். நமது இந்தியாவில் அன்றாடம் நடப்பவைகளை உற்று நோக்கும் தாங்களுக்கு நான் ஒன்றும் உதாரணம் சொல்ல வேண்டியதில்லை என்று நினைகிறேன். உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளே தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண்கள் விசயத்தில் நடந்து கொண்ட விதங்கள் 100 தாண்டும் என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல அவளவு ஏன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் மெய் காவலர்கள் 2 பேர் ஒரு பெண்ணை கற்பழித்தது நாடே அறியும் அவர்கள் மனதில் அப்படி ஒரு காமம் உள்ளது என்று யாருக்காவது தெரியுமா?, தயவு செய்து பொதுவாக யோசித்து விட்டு சொல்லுங்கள். ஐயா நான் ஒத்து கொள்கிறேன் சில சமயம் பெண்களை கண்டால் தடுமாறுவதும் பின்பு இறைவன் ஒருவன் நம்மை பார்கிறான் என்று நான் எனை சரி செய்வதும் தினந்தூரும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்னை போல் மற்ற அனைவரும் முன் வருவதில்லை அது தான் பிரச்சினை. ஆனால் நீங்கள் சரியான ஆள் என்று நான் ஒத்து கொள்கிறேன். மற்ற ஆண்களுக்கு தாங்கள் கியாரண்டீ கொடுக்க முடியுமா? எந்த ஆணுடைய மனதில் எப்படி வன்மம் இருக்கும் என்று யாருமே சொல்ல முடியாது.
        மேலும் தாங்கள் கேட்ட ஏன் அல்லாஹ் எல்ல ஆண்களையும் அப்படி படைக்கவில்லை என்ற கேள்விக்கு நான் ஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும் அதற்கு இது சமயம் அல்ல தாங்கள் தயவு கூர்ந்து ஒரு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள். உங்களுக்கு விளக்க வேண்டியது எங்கள் கடமை.

        • ஷபீக்,

          அரபு நாடுகளில் அதாவது இசுலாமியத் தூதர் முகமது நபி வாழ்ந்த மண்ணில் வீட்டு வேலைக்கு வரும் ஏழை நாட்டுப் பெண்களை வக்கிரத்துடன் கடித்துக் குதறுவது அங்கே உள்ள அக்மார்க் அரேபிய முசுலீம்கள்தான். இதைப் பற்றிய நெஞ்சை அறுக்கும் உண்மைக் கதைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இதற்கு காரணம் என்ன?

          அரபு நாடுகளில் எல்லாப் பெண்களும் புர்காவுடன்தான் வாழ்கிறார்கள். இசுலாமிய ஆண்கள் எல்லாம் மதத்தை உங்களை விட தீவிரமாக பின்பற்றுகிறார்கள். விளைவு என்ன? ஏழைப்பெண்களின் வாழ்வு சின்னாபின்னாமாவதுதான்.

          ஆகவே இந்த ஏழைப்பெண்களை குதறும் கயவர்கள் அதற்கு துணை போகும் மதம் இதைப்பற்றிக் கேட்டால் மதத்தை நியாயப்படுத்துவதற்உ முனையும் ஆண்கள்……. சகிக்க முடியவில்லை.

          உண்மைகளை நேரிட்டு ஏற்கத் தயங்கும் மதவாதம் எப்போதும் தன்னை சீர்திருத்த முனைவதில்லை. மாறாக அநியாயங்களுக்கு துணை போவதுதான் வரலாறு. இந்த வரலாறு இனி நடக்காது.

      • ஐயா வினவு அவர்களே நீங்கள் கேடீர்களே எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்று, அதற்கு பதில் இன்றைய செய்திய்லேயே உள்ளது தயவு செய்து இதை கிளிக் செய்து படித்து பாருங்கள், இதை கருத்தில் கொண்டு சட்டம் இயற்றினால் ஏன் வரிந்து கொண்டு வருகுரீர்கள் http://thatstamil.oneindia.in/news/2010/03/23/12-yr-old-raped-neighbours-cousin.html

      • நண்பர் வினவு, அல்லாஹ் மனிதர்களை பலவீனமாகத்தான்

        படைத்துள்ளான். அவன் நேர்வழியை பின்பற்றுவதற்காக அல்லாஹ் இஸ்லாமை உலக மக்களுக்கு தன இறைததூதர் மூலம் பரிபூரண

        படுத்திவிட்டான். ஈருலக வெற்றிக்கு இஸ்லாம தீர்வு

        இதனை நீங்கள்
        விளங்கிக்கொள்ளுங்கள். புகழனைத்தும் எல்லாம் வல்ல allahvukae

    • //உலகில் உள்ள அணைத்து நாடுகளும் சகாத் போன்ற ஒரு வழியை சரியான நிர்வாகத்தின் கீழ் செயல் படுத்தினால் வறுமையை நிச்சயமாக ஒழித்து விடலாமா முடியாதா?//

      உலகநாடுகளுக்கு உபதேசம் செய்வது இருக்கட்டும். இந்தியாவில் உள்ள முசுலீம்களின் பெரும்பான்மையினர் ஏழைகள்தான். இந்தியாவில் உள்ள பணக்கார முசுலீம்கள் முதலில் இந்த ஏழ்மையை ஒழிக்கலாமே? தமிழ்நாட்டில் உள்ள கோடிசுவர முசுலீம்கள் ஏன் ஏழ்மையை ஒழிக்கவில்லை? மசூதி வாயிலில் பிச்சை எடுக்கும் மக்களிடம் சில்லறைகளை தூக்கி எறிந்து விட்டால் ஏழ்மையை ஒழித்துவிடுவதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். கஷ்டம். இந்த அளவுக்கு மதம் ஒரு மனிதனை முட்டாள் ஆக்கும் என்று பார்த்த்தில்லை.

      • ஐயா,
        நான் உபதேசம் செய்ய வரவில்லை ஒரு நல்ல வழியை மக்களுக்கு அணைத்து வகையிலும் உபோயோகப்படகூடிய வழியை அமல் படுத்தலாமே என்று நான் சொன்னால் தாங்கள் அது பற்றி விவாதிக வேண்டுமே தவிர யோசிக்காமல் பேசுகிறீர்கள். தங்களை போன்றவர்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு பொருளாதார கொள்கைகளை விவாதிக்க வேண்டும் ஆனால் ஒரு கொள்கை சார்புடையவர்கள் என்று தங்களை நிரூபித்துள்ளீர்கள். உங்களுக்கு தெரியுமா இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் உள்ள அணைத்து முஸ்லீம்களும் சகாத் கொடுத்துதான் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய தொகையை சரியாக அல்லாது சிறிது குறைவாக செலுத்துவார்கள். ஆனால் இஸ்லாமிய அரசு இருந்தால் அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக வசூலிக்கும். எந்த ஒரு மார்கமாவது ஏழை வரியை கட்டாயமாக்கி உள்ளதா? நான் என்ன சொல்கிறேன் எல்லா முஸ்லீம்களும் நல்லவர்கள் இல்லை அவர்கள் சார்ந்திருக்கும் கொள்கையைத்தான் குறை சொலாதீர்கள் அது பற்றி ஆராய்ந்து விட்டு சொல்லுங்கள், maaris bukail, stefensen, pithaal, michel heart இவர்களை போல. மசூதி வாசலில் பிச்சை எடுப்பவர்கள் பற்றி பேசாதீர்கள் அதற்கு முஸ்லீம்கள் தான் காரணமா தாங்கள் இப்படி ஒரு சார்பாக இருக்காதீர்கள், நாத்தில் பிச்சை காரர்கள் இருபது அந்நாட்டை ஆள்பவர்கள் செய்யும் தவறு. மலை போல் உற்பத்தி இருந்தும் விநியோகம் சரி இல்லாத காரணத்தால் தான் இந்த ஏழ்மை என்று உங்களுக்கு தெரியாதா? ஏதேது ஒரிசாவில் மக்கள் பட்டினியால் இறந்தது கூட முஸ்லீம்கள் தான் என்று நீங்கள் சொல்வீர்கள் போல. நிச்சயம் இஸ்லாமிய மேலாண்மையில் வறுமை ஒழிக்கப்படும்.

        • ஷபீக் இப்போதே இசுலாமிய மேலாண்மையில் பல நாடுகள் உள்ளது. அதன்படி வறுமையை ஒழித்த நாடுகள் எவை? தூய இசுலாமியக் கொள்கையின் படி வாழும் நாடுகள் எவை? கொஞ்சம் விளக்குகங்களேன்.

        • சகாத் என்பது முஸ்லீம்களுக்குள்ளேயே கொடுத்துக்கொள்வது. அது எப்படி ஏழைகளுக்குத் தீர்வாகும். 

      • ஐயா, ஏழைகள், ஏழைகள் என்று நீங்கள் சொல்லி மக்களின் மனதை கவருவதாக நினைக்க வேண்டாம், சத்தியமாக அடிமைகளையும், ஏழைகளையும், சமூகத்தில் நலிந்தவர்களையும் தூக்கி நிறுத்துவதற்காக 1400 வருடங்களுக்கு முன்னரே போர் அறிவித்தது இஸ்லாம் தான். நீங்கள் உண்மையிலேயே ஏழைகளுக்கு உதவுவீர்கள் என்று சொன்னால் தயவு செய்து முஸ்லீம்களிடம் ஏழை வரியை கட்டாயமாக வசூலிக்க உதவுங்கள். பிற சமுதாயத்தில் போய் கேட்டு பாருங்கள் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. (எனக்கு தெரிந்து நல்லவர்கள் மற்ற சமுதாயத்தில் உள்ளனர் ஏழை படிப்பிற்கு உதவுகிறார்கள்) ஆனால் இதையே நீங்கள் கட்டாயமாக்க முடியுமா? ஆக நாங்கள் தான் ஏழைகளை பற்றி ஆழ்ந்த கவலை கொள்கிறோம்.

        • //ஆக நாங்கள் தான் ஏழைகளை பற்றி ஆழ்ந்த கவலை கொள்கிறோம்.//

          நீங்கள் கவலை கொண்டு அல்லா இருப்பதை உறுதிப்படுத்தவாவது ஏழைகள் தேவை என்று சொல்கிறீர்களா?

          ஆக, ஏழை இருக்கும் இடமெல்லாம் எங்கள் இறைவன் அல்லா இருப்பான். ஆகவே, ஏழைகள் இருக்க வேண்டும் என்பதே உமது அவா என்று இதனை புரிந்து கொள்ளலாமா?

        • Quran is for Slavery and Quran is for Poverty

          see these dung rolls from this book.

          16:71 And Allah hath favoured some of you above others in provision. Now those who are more favoured will by no means hand over their provision to those (slaves) whom their right hands possess, so that they may be equal with them in respect thereof. Is it then the grace of Allah that they deny ?

          16:75 Allah coineth a similitude: (on the one hand) a (mere) chattel slave, who hath control of nothing, and (on the other hand) one on whom we have bestowed a fair provision from Us, and he spendeth thereof secretly and openly. Are they equal ? Praise be to Allah! But most of them know not.

          16:76 And Allah coineth a similitude: Two men, one of them dumb, having control of nothing, and he is a burden on his owner; whithersoever he directeth him to go, he bringeth no good. Is he equal with one who enjoineth justice and followeth a straight path (of conduct) ?

      • இது தான் கிருத்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக உணருகிறேன். கிருத்துவ மிஷனரிகள் கல்வி மற்றும் தங்களுக்கு உள்ள பண பலத்தின் மூலம், ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தேடி எடுத்து அவர்களுக்கு கல்வியும், அடிப்படை தேவைகளுக்கு பணம் சம்பாதிக்கும் வழிகளையும் உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் தாங்களாகவே கிருத்துவத்தை ஏற்க வைக்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்கள் என்ன தான் பணக்காரர்களாக இருந்தாலும், அரபு தேசங்களில் உள்ளவர்களுக்கு, அவர்கள் சொல்வதை கேட்க இங்கே ஆட்கள் வேண்டும். அவ்வளவு தான்.

        இங்குள்ள இஸ்லாமியர்கள் அரபு தேசங்களுக்கு உழைக்க ‘வேலைக்காரர்களாக’ மட்டுமே செல்கின்றனர், இல்லையா?

      • வாதம் பண்றவங்கல்ட பேசலாம் அனா விதண்டா வாதம் பன்றவங்கள்ட
        பேச முடியாது

  14. இஸ்லாமிய பெண்களுக்கான சொத்துரிமை பற்றி ஏதும் பதிவர் சொல்லவில்லையே? //தலாக் தலாக் தலாக்// – பதிவர் கற்பனயில் இருந்து இறங்கி எப்போது களத்திற்கு செல்லபோகிறார்?

  15. இதை பிரசுாித்தவர் முஸ்லிமாக தொியவில்லை. இருந்தாலும் இஸ்லாத்தை முதலில் நன்றாக விளங்கிக்கொள்ளவேண்டும். பிறகு அதை வெளிப்படையாக பேசவேண்டும். தான் அறைகுறையாக இருந்துகொண்டு பேசுவது அறிவுள்ளவனுக்கு அழகல்ல. புர்காவைப்பற்றி பேசினார் தன்னுடைய மனைவியின் அழகை பிற மனிதர் பார்த்து ரசிப்பதை விரும்பக்கூடியவராக இருப்பார் என்று நினைக்கிறேன் அப்படி இருந்தால் நடிகைகள் போல் ஆடை அணிந்து தன் குடும்பத்திலுள்ளவர்களை அவர் வெளியில் கொண்டுவரட்டும் அது அவருடைய விருப்பம். இஸ்லாமிய பெயர் தாங்கிய சில பெண்கள் மாற்று ஆண்களோடு வாழுகிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான இஸ்லாமிய பெண்களாக இருக்கமுடியாது. கோடியில் ஒருத்தி தவறு செய்தாள் என்பதற்காக இஸ்லாமை தவறாக முடியாது. நீ முட்டாளாக இருப்பதினால் உன்னுடைய குடும்பம் முட்டாளாக இருக்கவேண்டும் என்பதில்லையே. தலாக் 3முறை சொன்னால் உடனே பிாிந்து விடவேண்டும் என்று சொன்னாய் அது முற்றுலும் தவறு. ஒரு ஆண் 3முறை தலாக் கூறுவது என்பது 3தவணைகளில் கூறுவது என்று அர்த்தம் ஆனால் பெண்ணுக்கு ஒரு தலாக்கே போதுமானதாகும். ஆணை விட பெண்ணுக்கே இஸ்லாம் நிறைய சலுகைகள் வழங்கியிருக்கிறது. அன்பரே நீர் உண்மையிலேயே இஸ்லாமியனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாத்தைப் பற்றி அறியாமல் விளங்காமல் இனிமேல் கூறாதீர் முதலில் இஸ்லாத்தைப் பற்றி நன்றாக ஆய்வு செய்து பிறக கூறுங்கள். இறைவன் உங்களுக்கு நேர்வழியைக் காட்ட நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    • //ஆணை விட பெண்ணுக்கே இஸ்லாம் நிறைய சலுகைகள் வழங்கியிருக்கிறது.//

      உண்மைதான், பொண்டாட்டியை எப்படி அடிக்க வேண்டும் என வேறு எந்த மதமாவது சொல்லியிருக்கிறது, ஆனால் இஸ்லாம் சொல்லியிருக்கிறது!

      http://dharumi.blogspot.com/2010/02/blog-post.html

      இதில் யூடியூப் லிங்க் இருக்கு! இறையடியான் பின்வாங்காமல் அல்லாவுக்கு ஏன் இந்த பிற்போக்குதனம் என்று விளக்க வேண்டும்!

      • வால் பையன், ஆம் இஸ்லாம் சொல்லி இருக்கிறது.. அப்போது கூட வெளி மனிதர்க்கு தெரியாமல் கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறது.. அடிப்பதாக இருந்தால் கூட முகத்தில் அடிக்க கூடாது என்று தான் சொல்கிறது.. இதில் என்ன தவறு இருக்கிறது? ஒவ்வொரு ஆணும் தன்னுடைய மனைவிக்கு பொறுப்பாளி.. இஸ்லாத்தை சிறிது ஒதுக்கி வைப்போம்..சாதாரணமாக ஒருவருடைய மனைவி அவளது கணவனுக்கு மரியாதை குறைவு செய்கிறாள் இல்லை துரோகம் செய்கிறாள் என்று வைத்து கொள்வோம்.. அதற்கு அந்த ஆண் என்ன செய்வான்? அவளை கூப்பிட்டு வைத்து போதனைகள் செய்வான் என்று கூற வேண்டாம்… தனது மனைவியை கண்ணா பின்னா வென்று அடிப்பான். எந்த இடம் எந்த சூழ்நிலை என்றோ எதை வைத்து அடிக்கிறோம் என்றோ பார்ப்பதுண்டா? சில சமயங்களில் கொலை கூட நடப்பதுண்டு…. இதனை சரி என்று கூறினீர்கள் என்றால் எங்கே உங்களின் பெண்ணுரிமை வியாக்கியணங்கள்? எங்கே சென்றது பெண்ணுரிமை? எங்கே சென்றது பெண்ணின் மதிப்பு? 
        இப்போது இஸ்லாம் கூறுவதை சிந்தியுங்கள்… எதில் நியாயம் இருக்கிறது? எதில் பெண்ணுறிமை இருக்கிறது? எதில் பெண்ணிற்கு கண்ணியம் இருக்கிறது என்று?

        • //இஸ்லாம் கூறுவதை சிந்தியுங்கள்… எதில் நியாயம் இருக்கிறது? எதில் பெண்ணுறிமை இருக்கிறது? எதில் பெண்ணிற்கு கண்ணியம் இருக்கிறது என்று?/

          பெண்ணுக்கு மட்டும் கண்ணியம் காத்து, ஆணை ஊர்மேய அனுமதிக்கும் இஸ்லாம் சிறந்த மதம்! எல்லா புறம்போக்கு ஆண்கலும் உடனே இஸ்லாத்தை தழுவுங்கள்! உங்கள் மனைவியை நீங்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்து அடிக்கலாம், போலிஸ் வந்தாலும் இஸ்லாமிய சட்டம் என்று சொல்லி எங்களுக்கு அல்லா அனுமதியளித்திருக்கிறார் என்று சொல்லி தப்பித்து கொள்லலாம்!

          சேஷாசலம் இஸ்லாத்துக்கு மாறியதற்கு இப்படி தான் எதாவது காரணம் இருக்கும்! விளங்குமடே!

        • ரஃபீக், மனைவிக்கு மறியாதை குறைவு, துரோகம் செய்யும் கணவனை அவனது மனைவி அடித்து மொத்தலாம் என்று ஏன் குர்ஆன் சொல்லவில்லை? இந்த பாகுபாடு ஏன்?

      • அய்யா வால்..ஆண்கள் ஊர்மேய அனுமதிக்கப்பட்ட எதாவது ஒரு ஆதாரத்தை காட்டுங்களேன்.. ஊர்மேந்தது நிரூபிக்கப்பட்டால் கல்லால் அடித்து கொள்ள வேண்டும் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.. கொஞ்சம் தெளிவாக படித்து விட்டு வாருங்கள்… இப்படி நீங்க அரை குறைய படிச்சி விளங்கி இருந்தா ஒட்டு மொத்த உலகமும் நல்லா விளங்கிடும்…

        • ஆண்களுக்கு ஊர்மேய விடாமல் தடுக்கும் கவச குண்டலம் எதையாவது இஸ்லாம் பரிந்துரைத்திருந்தால் அதன் நடுநிலைத்தன்மை எமக்கு விளங்கும்

    • //புர்காவைப்பற்றி பேசினார் தன்னுடைய மனைவியின் அழகை பிற மனிதர் பார்த்து ரசிப்பதை விரும்பக்கூடியவராக இருப்பார் என்று நினைக்கிறேன் அப்படி இருந்தால் நடிகைகள் போல் ஆடை அணிந்து தன் குடும்பத்திலுள்ளவர்களை அவர் வெளியில் கொண்டுவரட்டும் அது அவருடைய விருப்பம்.//

      இறையடியான் வளைகுடா நாடுகளில் உள்ள கொழுப்பெடுத்த ஷேக்குகள் எல்லா நாட்டு பெண்களையும் வேட்டையாடி நாசப்படுத்துகிறார்களே, தைரியமிருந்தால் அந்த ஷேக்குகளை இசுலாத்தில் இருந்து வெளியேற்றிப் பாருங்கள். அதற்கு உங்கள் இறைவன் உங்களுக்கு துணைபுரிவாரா? மாட்டார். அரபு ஷேக்குகள் உலக மக்களைக் கொள்ளையடித்த எண்ணைப் பணத்தில்தானே உங்கள் அல்லா வசதியாக வாழ்ந்து வருகிறார். அதனால் தனது பரவலர்கள் என்ன ஆட்டம் போட்டாலும் அதை இசுலாத்தின் பெயரால் நியாயப்படுத்துவதற்குத்தான் அவர் முனைவார். உங்களைப் போன்ற அடிமுட்டாள்களையும் அப்படித்தான் பழக்கி வைத்திருக்கிறார்.

      • பள்ளப்பட்டியில் இருக்கும் கந்துவட்டி முசுலீம்களை உங்கள் அல்லா என்ன செய்வான்? உழைக்கும் மக்களை ஒடுக்கும் முசுலீம் பண்ணையாரை உங்கள் அல்லா என்ன செய்வான்?  மறுமையிலே வெப்பத்திலியே நெருப்பிலே போடுவானா?  என்ன கொடுமை இது உழைக்கும் முசுலீம் மக்களை வாழ்க்கையில்  பொருளாதார படுகுழியில் தள்ளியஅல்லாவுக்கு நீங்கள்  என்ன தரப்போகிறீர்கள்?  நீங்களே சொல்லுங்கள்
        உண்மையான உலகிலிருந்து பேசுங்கள், போலியான வேடத்தில் எத்தனை நாட்கள் இருக்கப்போகிறீர்கள்? 

      • நண்பர் வினவு,அரபுலக ஷேக்குகள் செய்தாலும் சரி அடுத்த வீட்டில் இருக்கும் அப்துல்லா செய்தாலும் சரி.. தவறு என்றால் தவறு தான்.. அவர்கள் அரபுலக ஷேக்குகள் என்பதால் தண்டனையில் இருந்து தப்பி விட முடியாது.. அவர்கள் எந்த விதத்தில் நமக்கு மேன்மையானவர்கள்? “அரபியும் அரபி அல்லாதவரும் வெள்ளையாரும் கருப்பாரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவருமில்லை தாழ்ந்தவருமில்லை” என்பதே இஸ்லாமிய கோட்பாடு.. 
        பள்லப்பட்டியில் வட்டி கொடுத்து வியாபாரம் செய்தாலும், உழைக்கும் வர்க்கத்தினை சுரண்டும் முதலாளிகளும் சரி அவர் தண்டனைக்கு உரியவரே… 
        உங்களுக்க்கு மறுமை நாளை பற்றிய நம்பிக்கை இல்லை.. அதனால் அவர்களுக்கு தண்டனை இங்கே கேட்கிறீர்கள்.. இங்கு தப்பினாலும் அங்கு தப்ப முடியாது என்பதை ஆநித்தாரமாக நம்புகிறோம்.. அதனால் எங்களுக்கு அந்த கேள்வி எழவில்லை.. 
        உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.. நம்பை போன்ற மனிதர்கள் தம் இயற்றினோம் குற்றவியல் சட்டங்களை.. சமூகத்தில் பெரிய மனிதர் ஒருவரை கொலையோ இல்லை அவருக்கு பாதகமோ செய்பவருக்கு அதிக பட்ச தண்டனை கிடக்கிறது.. ஆனால் ஒரு சாதாரண நபரை கொலை செய்தவனுக்கு அதிக பட்சம் ஆயுள் தண்டனையோ இல்லை அதை விட குறைவனதோ கிடைக்கிறது.. சமூகத்தில் பெரிய மனிதர் செய்யும் தவறுக்கு சில சமயம் தண்டனையே கிடைப்பதில்லை.. இதற்கு என்ன தீர்வு? உடனே அல்லா ஏன் தண்டனை கொடுக்கவில்லை என்று கேட்காதீர்கள்… நீங்களும் நானும் சேர்ந்து இயற்றிய சட்டத்தின் மூலம் தண்டனை கொடுக்க இயலவில்லை ஏன்? “நாம் வைத்திருக்கும் சட்டத்தின் மூலம் கொலை நடந்த அடுத்த விநாடியே கொலைகாறனுக்கு மரண தண்டனை குடுக்க முடியுமா? நீதிமன்றத்தில் விசாரணை நடந்த பின்னரே தண்டனை பற்றி அறிய இயலும்.. அதே போல் தான் இங்கு என்னதான் தப்பிதாலும் ஏக இறைவன் முன்னால் விசாரிக்க படும் போது தப்பிக்க இயலாது.. அங்கு விசாரணையில் அணு அளவும் தப்பிக்க இயலாது.. குற்றம் செய்திருந்தால் தண்டனை.. அது அரபுலக ஷேக் ஆனாலும் சரி.. பல்லபத்தி வாட்டி வியாபாரி ஆனாலும் சரி.. அதே போல் நல்லவை செய்து இருந்தால் அதற்குரிய பரிசுகளும் பதவிகளும் சுக போகங்களும் கண்டிப்பாக கிடைத்தே தீரும்.. அது நானாக இருந்தாலும் சரி..”

        • இறைவன் முன்னால் விசாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் இப்போது அரபு ஷேக்குகள் போடும் கொட்டத்தை நீங்கள் வேண்டுமானால் கண்டு கொள்ளாமல் போகலாம். ஆனால் அநீதிகளை எதிர்த்து போராடும் மக்கள் அப்படி எல்லாம் அல்லா பார்த்துக் கொள்வான் என்று முடங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் இது அவர்களின் வாழ்வா சாவா பிரச்சினை.

          அதனால்தான் ஈராக்கிலோ, பாலஸ்தீனிலோ, இல்லை காஷ்மீரிலோ உள்ள மக்கள் தங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்யும் இராணுவத்தஃதை இறைவன் பார்த்துக் கொள்வான் என்று சும்மா இருக்கவில்லை. தங்களால் இயன்ற அளவு போராடுகிறார்கள். அப்படிப் போராடும் மக்களை உங்களைப் போன்ற மதவாதிகள் அல்லாவின் பெயரால் சும்மா இருக்கச் சொல்கிறீர்கள். இப்படியாக அநீதிக்கு துணை போவதுதான் மதங்களின் பணி என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.

        • Mr.Rafiq,

          Please be come into the real world,please do not talk about ideal Islam or ****** any religion.i am still living in Arabic country (Saudi and Bahrain).i understand ****** Muslim of Saudi Arabic and ****** Bahrain Arabic.u are talking about ideal ****** Islam,please understand the real situation.do u know that how ex-pats are treated in Saudi and Bahrain by ****** MUSLIM ARABI.Please do not escape , ****** islam is not allowed to do this kind ****** things.We understood ,but why all ****** Saudi and Bahrain Muslim behave like PSYCHO to other EX-PATS(Irrespective of nationality except European and american).Still saudi kingdom is allowed to drinks alhacol (Saraku) to European and american in confined area for week end celebration.do you think that Saudi is still is holy land. ****** i know since i am living ****** Saudi more that 4 years.These people are just follow ****** Islam rules for sake of ****** survive.I can ensure and assure it 100% sure.

        • //அரபியும் அரபி அல்லாதவரும் வெள்ளையாரும் கருப்பாரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவருமில்லை தாழ்ந்தவருமில்லை//

          Let us see what Ali Sina has to say about this.

          மக்களாட்சி என்றால் சமத்துவம். ஆனால் சமத்துவம் இஸ்லாமுக்கு ஒவ்வாது. இஸ்லாமில் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களுக்கு சமமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல. முஸ்லிமல்லாதோர்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை. புத்தகத்தின் மக்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள்) அடங்கி இருந்து, பாதுகாப்பு வரியை (ஜிஸ்யா) செலுத்தினால், இரண்டாம் தர குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இஸ்லாமிய நாடுகளில் வாழ அனுமதிக்கப் படுவார்கள். ஆனால், இயற்கை வழிபடுபவர்கள், சிலை வழிபடுபவர்கள், நாஸ்திகர்கள் போன்றோர் முழு மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். குரானின் கட்டளையின்படி சிலை வழிபடுபவர்கள் கண்ட இடங்களில் கொல்லப்படவேண்டும். (QQ9:5)

          ஏப்ரல் 9 , 2002 பதிப்பில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சௌதி அரேபியாவில் இருக்கும் ரத்தப்பணம் என்ற கருத்தைப் பற்றி ஒரு கட்டுரையை பிரசூரித்திருந்தது. ஒருவர் கொல்லப்பட்டால் கொல்வதற்கு காரணமானவர் கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடாக பின்வருமாறு நிர்ணயிக்கப் பட்ட தொகையை ரத்தப்பணமாக கொடுக்க வேண்டும்.

          கொல்லப்பட்டவர் ரத்தப்பணத்தொகை (ரியால்கள் )

          * முஸ்லிம் ஆண். 100,000
          * முஸ்லிம் பெண். 50,000
          * கிறிஸ்துவ ஆண். 50,000
          * கிறிஸ்துவ பெண். 25,000
          * இந்து ஆண் 6,666
          * இந்து பெண் 3,333

          இந்த படிநிலையில் ஒரு முஸ்லிம் ஆணின் உயிர் ஒரு இந்து பெண்ணின் உயிரைவிட 33 மடங்கு உயர்ந்தது. இந்த படிநிலை இஸ்லாமிய மனித உரிமைகளின் வரையறையின் படியும் குரான், ஷரியா (இஸ்லாமியச் சட்டம்) அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமில் சமத்துவம் என்ற கருத்தே இல்லாத போது, மக்களாட்சியைப் பற்றி எப்படி பேசமுடியும்?

          To read the full article (இஸ்லாம் ஒரு பாசிசம்): http://tamil.alisina.org/?p=22

      • நம்பிக்கை கொண்டொர்களே, நீங்கள் பொறுமையை கொண்டும் முயற்சியை கொண்டும் இறைவனிடம் உதவி தேடுங்கள் என்று தான் இஸ்லாம் கூறுகிறதே தவிர முயற்சி இல்லாமல் பொறுமையாக மட்டும் இருந்து கொண்டு இறைவன் உதவி செய்வான் என்று இருக்க சொல்லவில்லை..

        • செயல்களில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது எனபது நபிமொழி. ஆக எந்த sheik ஆனாலும் அவர்களை எதிர்த்து குரல் கொடுப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை, ரபீக் அவர்களே இங்கு நடக்கும் விவிஆதங்கள் அத்தனையும் ஒன்றை விட்டு ஒன்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் ஒன்றுக்கு விளக்கம் சொல்வீர்கள். அதை தொடர்ந்து வேறு ஒரு திசையில் இருந்து கேள்வி வரும் , இதற்கு முடிவு இல்லை . சரியான வழி பொது கலந்தாய்வு தான். அப்பொழுதுதான் நண்பர்களுக்கு புரிய வைக்க முடியும். அதை வலியுறுத்துங்கள்

        • அப்படி முயற்சி எடுத்து இதுவரை எத்தனை அரபு ஷேக்குகள் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்? ஒருவர் கூட இல்லை. காரணம் என்ன?

        • நண்பர் வினவு,

          உங்கள் வாதபடி எடுத்து கொண்டால், தவறு நடந்த மறு நிமிடமே அதற்கான தண்டனையை தவறு செய்தவன் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்லுவது போல் அதற்கான நியாயம் கிடைத்து விட்டது என்று பொருள்.. ஆனால் இறைவனின் விசாரணை என்பது ஒரு புறம் இருக்கட்டும்… இவ்வுலகிலே நீங்கள் நீதிமன்றம் அமைத்து விசாரித்து தவறு நடந்த (உதாரணமாக) ௧௦ வருடங்கள் கழித்து தண்டனை கொடுக்கிறீர்கள் என்றால்.. அந்த 10 வருடங்கள் தண்டனையில் இருந்து அவன் தப்பித்ததற்காக என்ன சொல்ல போகிறீர்கள்? சில சமயம் இங்கே விசாரணையில் சிலர் தப்பிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.. 
          உங்கள் வாதப்படி தண்டனை வழங்க ஒரு நாள் தாமதம் ஆனாலும் நீங்கள் சொல்வது போல் தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்பித்ததாகவே பொருள் கொள்ளப்படும்.. 
          ஆனால் நாங்கள் நம்புகிற நியாய தீர்ப்பு நாளன்று எந்த ஒரு ஆன்மாவும் அது செய்த நன்மைக்கும் தீமைக்கும் கூலி பெற்றே ஆகும் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் இவ்வுலக தண்டனை கிடைக்காதது பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை.. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..

  16. இந்த கட்டுரையாளர் எங்கு சென்ரு விட்டார்? அல்லது பதித்தோர் எங்கே? ஏன் பதில் கூற வில்லை? அவர்களால் பதில் கூற முடியாது! பதில் இல்லை!
    ஒரு பதிப்பு வெளியிடும் பொழுது அதில் உள்ள கருத்துகள், செய்திகள் உண்மையானதா என்று ஆராயாமல் வெளிட்டு விட்டு திரு திரு என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள். இஸ்லாம் பெண்களை பற்றி எவளவு உயர்வாக பேசுகின்றது இவர்கள் அதை இழிவாக சித்தரிக்கிறார்கள். அன்றும் இன்றும் பெண்கள் தான் அதிகமாக இஸ்லாத்திற்கு வருகின்றார்கள், வருபவர்கள் உங்களை மாதுரி அரைவேக்காடு இல்லை மாறாக திருக்குரானையும் ஹதிசயும் நன்றாக படித்து உணர்ந்து இஸ்லாத்தில் இணைகின்றார்கள், இவர்கள் இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக தான் அதை ஆராய்ந்தார்கள் மாறாக அவர்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். உண்மை எப்படி இருக்க உண்மைக்கு புறம்பான தகவலை பதித்துவிட்டு நீங்கள் யாரும் எளிதில் தப்பிவிட முடியாது. இன்று இஸ்லாமிய மக்கள் திருக்குரானையும் ஹதிசயும் நன்றாக ஆராய்ந்து தான் அதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். இனிமேலாவது பதிப்பவர்கள் இது போல் அரைவேக்காட்டு கட்டுரையெல்லாம் பதிப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நலம் பயக்கும் விஷயங்களில் ஈடுபடவும்.
    கேள்வி கேட்ட சகோதரர்களுக்கு பதில் தரவும் மீண்டும் இணைகின்றேன்.

    • ஃபரூக், கட்டுரையில் உண்மை வாழ்க்கைச்சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதற்கு பதில் சொல்ல முடியாமல் நீங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் சொல்லப்பட்ட புனித நூல்களுக்கு ஏன் ஓடுகிறீர்கள்? இன்றைய வாழ்க்கையில் ஒரு இசுலாமியப் பெண் அடையும் அவலங்களைப் புரிந்து கொள்ள வெறும் மனிதநேயம் மட்டுமே போதுமானது. அது கூட உங்களிடத்தில் இல்லை.

      • ஐயா, உண்மையில் எங்களுக்கும் உங்கள் போன்ற கவலை தான் அதாவது இபோளுதுள்ள பெண்கள் இஸ்லாத்தை பற்றி முழிமையாக அறியத்தான் காரணத்தால் தான் இப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று. அதன் காரணம் அவர்கள் முழுமையாக இஸ்லாமிய வழிகாட்டலில் இல்லை என்பதன் காரணத்தால் தான். நாங்களும் அதற்காக தான் உழைக்கிறோம். நீங்களும் வாங்களேன் முஸ்லிம் பெண்கள் அல்ல உலக பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் சேர்ந்து உழைக்கலாம், ஏன் என்றால் ஒரு நல்ல முஸ்லிம் உலகில் உள்ள அணைத்து மக்களுக்களின் நல வாழ்விற்காக உழைக்க வேண்டிய கடமை உள்ளது. இதை படிக்கும் முஸ்லிம் சகோதரர்கள் உணர்வார்கள். ஏன் என்றால் யார் ஒருவர் இவுலகில் ஒரு மனிதரை வாழ் வைத்தால் அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்,(திருக்குர்ஆன்). ஆனால் நீங்கள் வினாவாக இருந்து கொண்டு இந்த வேலையே செய்ய முடியாது, நீங்கள் எங்களை ஆரத்தழுவி கொள்ளுங்கள் நாம் உலக அமைதிக்காக கைகோர்த்து நடப்போம்.

        • இசுலாத்தின் வழிகாட்டலில் பெண்கள் பாதுகாப்பாய் வாழும் நாடு எது? சவுதி அரேபியாவா?

        • நண்பர் வினவு,முதலில் அரபுலக மாயையில் இருந்து விடுபட்டு வாருங்கள்..

        • நபிகள் நாயகம் அவதரித்த மண் உங்களைப் பொறுத்தவரை மாயை என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. பிறந்த மண்ணிலேயே இசுலாமிய மதம் மாயையாக மாறிவிட்டபடியால் நாமாவது இனி உண்மை எது என்று புரிந்து கொள்ளலாமே?

        • ரபிக் அவர்களே,

          மூஸ்லீம் பெண்கள் தர்காக்களுக்கு ஏன் செல்லக் கூடாது என்று உள்ளது?

          • பூச்சாண்டி இங்கு விவாதத்திற்கு வரும் இசுலாமிய நண்பர்களோடு உரையாடலை அர்த்தமுள்ள வகையில் தொடரவேண்டும். முடிந்த அளவு பொறுமையுடன் விவாதிப்பது நல்லது. அல்லாவுக்கு கிளுகிளுப்பு என்றெல்லாம் பேசுவது அவர்களை சினமுறச் செய்யுமே தவிர சிந்திக்க வைக்க உதவாது. எனவே அந்த வரியை நீக்குகிறோம். தொடர்ந்து விவாதியுங்கள்

            • //அல்லாவுக்கு கிளுகிளுப்பு என்றெல்லாம் பேசுவது அவர்களை சினமுறச் செய்யுமே தவிர சிந்திக்க வைக்க உதவாது. எனவே அந்த வரியை நீக்குகிறோம்.//
              🙂

        • பெண்கள் மட்டுமல்ல ஆண்களையும் தற்காவிற்கு செல்ல கூடாது என்று தான் கூறுகிறோம்.. ஏன் இன்னும் ஒரு படி மேலே போய் தர்கவே கூடாது என்கிறோம்..

        • நண்பர் வினவு,

          அரபுலக மாயை என்று நான் குறிப்பிட்டது அங்கு வாழும் ஷேக்க்குகள் செய்யும் எல்லாமே இஸ்லாமியம் என்று நீங்கள் கூறியதால் தான்.. நபிகள் பெருமகனார் அரபு மண்ணிலே பிறந்தார் என்பதற்காக அரேபிய மண்ணில் நடக்கும் எந்த ஒரு தவறும் நியாயமே என்று எந்த ஒரு இஸ்லாமியனும் கூறுவதில்லை.. ஏற்கனவே நான் கூறியது போல தவறு செய்த எந்த ஒருவனும் தண்டனையில் இருந்து தப்பிக்க இயலாது என்பதில் ஆநித்தாரமான நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்…

        • //நீங்களும் வாங்களேன் முஸ்லிம் பெண்கள் அல்ல உலக பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் சேர்ந்து உழைக்கலாம், ஏன் என்றால் ஒரு நல்ல முஸ்லிம் உலகில் உள்ள அணைத்து மக்களுக்களின் நல வாழ்விற்காக உழைக்க வேண்டிய கடமை உள்ளது//

          this is ideal for any ****** rekegion.

          But what is reality pls think of it.

    • நண்பரே,

      உங்களிடம் ஒரு கேள்வி. மனிதன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இறைவன் குரானை வழங்கினாரா? அல்லது மனிதனின் எண்ணத்திற்கேற்ப பிறகு குரானை வழங்கினாரா?

      • திருக்குரான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டவே அருளப்பட்டது. அது ஒரு வழிகாட்டி நேர்மையாக சிந்திப்போருக்கு. வினவு ரசிகர்களுக்கு அதன் மகத்துவம் புரிய தெளிவான & நேர்மையான சிந்தனை வேண்டும்.

    • //அன்றும் இன்றும் பெண்கள் தான் அதிகமாக இஸ்லாத்திற்கு வருகின்றார்கள்//

      that is your assumption Mr Farroq.But the reality is not like as you said in the comment.please hear the others voice(comment) also.

  17. மிகச் சிறந்த கட்டுரை! கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துகள்.! 
    கட்டுரையில் ஆசிரியர் கூறிய வெள்ளை நிற உடையின் பெயர் துப்பட்டி. ஒரு போர்வையை விட சற்று சிறியதாக இருக்கும். இன்றும் 50 ௦ வயதிற்கு மேற்பட்ட பெண்கள் , பல இடங்களில் அதனைத்தான் அணிகின்றனர். இதர பெண்கள், கருப்பு நிற புர்கா அணிகின்றனர். புர்காவிற்கு வக்காலத்து வாங்கும் ஒரு சிலர், புர்காவில் நடைபெறும் மாற்றங்களை கவனிக்காதது போல் இருந்து விடுகின்றனர். இன்று 25 வயதிற்கு மேற்பட்டு  35 வயதிற்கு குறைவான பெண்கள் அணியும் புர்காக்கள், பல ஆடம்பர வேலைப்பாடுகளுடன், கைகளை மறைக்கும் பகுதி see-through என்னும் வடிவில் அமையப்பெற்றவை. அப்படியெல்லாம் இல்லை என்று கூறுபவர்கள் ஒரு முறை தஞ்சை, திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று வந்தால் தெரியும். சென்று வந்த பின்பும், அப்படியெல்லாம் நான் பார்க்கவில்லை என்று கூறினால் உங்களை அல்லாஹ் இல்லை ஒரு நல்ல கண் மருத்துவர்தான் காப்பாற்ற வேண்டும்.
    see-through புர்கா அணியும் பெண்கள், சமூகக் கட்டமைப்பிற்கு அன்றி விரும்பித்தான் அணிகிறார்கள் என்று கூறுவீர்களா? இன்று புர்கா அணியும் பெண்களின் எண்ணிக்கைக் கூடியிருக்கிறது என்று கூறுபவர்கள், எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் என்று உலகிற்குத் தெரியும். இப்பொழுது கல்லூரி செல்லும் இஸ்லாமியப் பெண்களில் ஒரு சிலர் தவிர, மற்றவர்கள் கல்லூரிகளுக்கோ மற்றப் பகுதிகளுக்கோ செல்லும்போது புர்கா அணிவதில்லை. ஆனால் , ஏதேனும் திருமணங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக புர்கா அணிந்தே செல்கின்றனர். திருமணங்களுக்கு மட்டும் புர்கா அணிய வேண்டிய அவசியம் குறித்து உரையாடுவார்களா?
    வச்சா குடுமி, சிரைச்சா மொட்டை என்று ஒரு சொலவடை உண்டு. அதுபோல் இவர்களுக்கு அணிந்தால் புர்கா இல்லாவிட்டால் பிகினி. விதண்டாவாதம் பேசும் இதுபோன்ற வெத்துவேட்டு ஆசாமிகளுக்கு புர்கா விட்டால் பிகிநிதான். அதனால் அவர்களைக் குறித்துப் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.
    இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பேசக்கூடாது,  என்று ஒரு ரெடிமேட் பதில் வைத்திருப்பவர்கள் இங்கும் வந்து சில தத்துவ முத்துக்களை உதிர்த்து விட்டு சென்றுள்ளனர்.  யாருக்கு அய்யா இஸ்லாத்தை பற்றி ஒன்றும் தெரியாது? இரு தலாக்குக்கு  இடைப்பட்ட காலம் 6 மாதங்கள் என்று எங்கே அய்யா இருக்கிறது? இரு தலாக்குக்கு இடைப்பட்ட காலம் ஒரு மாதம்தானே? முதல் மாதம் படுக்கையைப் பிரிக்க வேண்டும்; இரண்டாம் மாதம் பேச்சை நிறுத்தவேண்டும் என்றெல்லாம்தானே இருக்கின்றது. படுக்கையைப் பிரிக்கவேண்டும் என்பது எந்த பார்வையில் கூறப்பட்டது என்று இஸ்லாம் அறிந்த நீங்கள்தான் கூறுங்களேன். இஸ்லாமியர்களைப் பார்த்து இஸ்லாத்தைத் தெரிந்துக் கொள்ளாதீர்கள் என்று கூறுகின்றீரே, அது இது போல் 6 மாதங்கள் என்று உளறும் நபர்களைப் பார்த்து என்று கூறியிருந்தால், மிகவும் பொருத்தமாயிருக்கும் என்று எண்ணுகின்றேன். 
    ஜகாத் என்பது ஏழை வரி. சரி. ரஜினிப் படத்திற்கு டிக்கட் வாங்குவதற்கு அடித்துப் பிடித்துக் கொண்டு வருபவர்களைப் போல், ஏழைகளையும்  கம்புக் கட்டி அதற்குள்ளாக வரச்செய்து 10, 10 ரூபாயகலாகக் கொடுப்பீர்களே, அது என்ன ஏழைகளை வாழ வைக்கும் வழியா? தங்கள் பகுதியில் தன்னுடைய பணத்திமிரைக் காட்டிக்கொள்ள நடைபெறும் ஒரு செயல்தானே. இன்னும் தமிழகத்தில், கூட்ட நெரிசல் ஏற்படும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. அதனால் பிழைத்து இருக்கின்றீர்.
    இன்னொரு நண்பர், ஆணை விடைப் பெண்ணுக்கே அதிக உரிமை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அது குறித்துப் பேசத் தொடங்கினால், இவர்களின் ஆணாதிக்க முகத்திரை வெகு எளிதாகக் கிழிந்து விடும். இருந்தாலும், இந்தக் கட்டுரையில் விவாதித்த ஒன்றின் தொடர்பாய் ஒரு கேள்வி. படுக்கையைப் பிரிக்க ஆணுக்கு அறிவுறுத்திய இஸ்லாம், அதே உரிமையை பெண்ணுக்கும் வழங்கி இருக்கிறதா?
    தொடர்வோம்.

    • ஐயா, பெண்ணுரிமை வாதிகளே சமஉரிமை எதில் வேண்டும் என்கிறீர்கள்? விரும்பிய அரை குறை ஆடை, ஆண்களுடன் உல்லாசமாக சுற்றுவது, மது அருந்துவது என்று எல்லாம் இன்றைய இளைய தலைமுறை எவ்வாறு கட்டுபடட்ட்று மேற்கத்திய கலாச்சார மோகத்தினால் சீரழிந்து கொண்டிருக்கிறது இன்று நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இதுதான் நீங்கள் கேட்கும் சமஉரிமை. இதில்

      இஸ்லாத்தில் மனித குலத்திற்கு கேடு தராத விஷயங்களில் கவனம் செலுத்தி பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது பெண்களுக்கு சம உரிமை வழங்கவேண்டும் நீங்கள் முற்படும் பொழுது ஒன்றை மட்டும் நீங்கள் நிறுபித்து காட்டுங்கள் அதாவது ஒரு குழந்தை உங்கள் மனைவி சுமக்கட்டும் மறு குழந்தை நீங்கள் சுமக்கமுடியுமா? இதுவல்லவா சமஉரிமை. கொடுக்க வேண்டிய விஷயத்தில் மட்டும்தான் சமஉரிமை கொடுக்கமுடியும். எல்லாவற்றிலும் சமஉரிமை என்பது சாத்தியமில்லை இன்று தெரிந்துகொண்டு; பேச வேண்டும் என்பதற்காக பேசக்கூடாது. சிந்தியுங்கள் செயல்படுங்கள்!

      • //சிந்தியுங்கள் செயல்படுங்கள்!//

        அடடே! சிந்திக்கிறதுன்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு!

        சம உரிமை என்றால் ஆணுக்கு சமமாம மதிப்பது என்று அர்த்தம்!
        குழந்த பெத்துக்கோ, குமுறடிச்சு படுத்துக்கோன்னு கேனதனமா உளரக்கூடாது!

        நான் ஒரு லிங்க் கொடுத்துருக்கேனே, அது யார் கண்ணுக்காவது தெரியுதா!?

        • வேறொன்றுமில்லை! அவர்கள் பிற்போக்குவாதிகள். அப்படிதான் பேசுவார்கள். பெண்களுக்கு சம உரிமைக் கோருபவர்கள் எல்லாம் முற்போக்குவாதிகள் என்று PJ ஒருமுறைக் கூறினார். நாமெல்லாம் முற்போக்குவாதிகள் என்றால், அவர்கள் பிற்போக்குவாதிகல்தானே!

      • வச்சா குடுமி சிரைச்சா மொட்டை வகை நண்பரே! 
        http://www.onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/pj_makan/
        பாக்கரோடு இருந்த அந்தப் பெண் புர்கா அணியாமல் இருந்தாரா? அல்லது பாக்கர்தான் புர்காவின் மாண்புத் தெரியாதவரா?

        • நண்பர் கும்மி அவர்களே,வாச குடுமி சிறச்சா மொட்டை என்று நாங்கள் கூறவில்லை… சேலையின் இடுக்குள்ளே பெண்ணின் அழகை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை வழங்க சொல்கிறீர்… ஆனால் என் மனம் மறுக்கிறதே.. எம் பெண்ணுடைய கண்ணியத்தை மானத்தை காப்பது என்னுடைய கடமை அல்லவா? அதனை செய்யாதே என்றால், பெண்ணிடம் கூற கூடாது என்றால், யார் பெண்ணின் பெருமையை மாண்பை கண்ணியத்தை காக்க

    • தோழர் சாகித்தின் எழுத்துக்கள் எப்போதும் போலவே சிறப்பு, சில நாட்களுக்கு முன்பு ஒரு முசுலீம் கருத்தரங்கிற்கு சென்றேன். என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்தேன். எற்கனே குர்ரான் குறித்து மதவெறி அடிமைகளின் கர்ஜனைகளை  பறையோசையிலும், செங்கொடிதளத்திலும்  கேட்டிருப்பதால் காய்ச்சல் வரவில்லை. எல்லாவற்றிற்கும் முகமது நபிதான் தீர்வு சொல்லியிருக்கிறார். இசுலாம் தான் தீர்வு. என்று பிதற்றிக்கொண்டு இருந்தார்கள். அப்பவே அவர் சொல்லிட்டார். அப்பவே அவர் செஞ்சுட்டார், கிழிச்சுட்டார் இப்படியே எத்தனை நாளைக்கு படத்தை ஓட்டுவார்கள் தெரியவில்லை. கருத்தரங்கிறு சென்றவுடனே அது குறித்து தோழர் சாகித்துக்கு சொல்லவேண்டுமென்று நினைத்தேன். பார்த்தால் பதிவாக வினவில் எழுதியிருக்கிறார்.
      மறுமையில் கிடைப்பதைப்பற்றி ஒருவர் மிகவும் சீரியசாக பேசிக்கொண்டிருக்க எனக்கோ சிரிப்புதான் வந்தது. மறுமையைப்பற்றி பேசுகிறவர்கள் தற்போதைய அரிசி பருப்பு விலைக்கு என்ன காரணம் எனப்தைப்பற்றி கடைசி வரை சொல்லவே இல்லை.
      தோழமையுடன்கலகம்

      • உங்களுக்கு முடிந்தால் கூருங்களேன்?
        மறுமை பயம் உங்களுக்கு இருந்து இருந்தால் இந்த அரிசு பருப்பு விலை ஏறி இருக்காது, மறுமை பயம் இல்லாத காரனத்தினால்தான் இங்கு பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று பதுக்கி வைத்து விலையை ஏற்றுகிறது, அதனால்தான் பொய், பித்தலாட்டம் போன்ற அனைத்து தீய செயல்களும் அரங்கேறி வருகிறது. நம்மை ஒருவன் கேள்வி கேட்டு தண்டிப்பான் என்று நினைத்தால் இந்த தவறுகள் நடக்க வாய்ப்பில்லை.

        • அப்படியா இந்தப் பயம் எண்ணெய் விலையை ஏற்றி கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு ஏவல் வேலை செய்யும் அரபு ஷேக்குகளுக்கு ஏன் இல்லை? இல்லை அவர்களுக்கு இசுலாமிய மத நம்பிக்கை இல்லையா?

        • ரொம்ப சந்தோசம் அய்யா,உங்களுக்கு மறுமை பயம் இருக்கிறதா இல்லையா? மறுமை பயம் உள்ள உண்மையாna முசுலீமுக்கும் அரிசி பருபு விலையை ஏற்றிய துரோகி அல்லாவை என்ன செய்யலாம்?
          அருமை இதெல்லாம் ஒரு பதில் அது சூப்பர்ன்னு சொல்ல ஆள் வேறு
          கலகம்

      • நண்பர் வினவு… மறுபடி மறுபடி அரபுலக ஷேக்க்குகளை பற்றியே நீங்கள் சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள்.. அரபிகள் செய்வததினால் எவையும் இஸ்லாம் ஆகி விடாது.. அவர்கள் குற்றம் செய்தால், இறைவனுக்கு பயம் கொள்ளாமல் இருந்தால் முழு இஸ்லாமியார்களும் அவ்வாறு தான் என்று  அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அவர்களுடையது.. அதற்கும் இசிலாதிற்க்கும் என்ன சம்பந்தம்?குறுகிய வட்டத்தில் உங்களை அடைத்து கொள்ள வேண்டாம்.

        • ரஃபீக்

          அரபுகளைக் கேட்டால் முழு இசுலாம் ஆகிவிடாது என்கிறீர்கள். அப்போ முழு இசுலாமானா ஒரு நாடு கூட இல்லையா? எனில் 1400 ஆண்டுகளாக இசுலாத்தின் படி வாழக்கூடிய ஒரு நாட்டைக்கூட உருஉவாக்க முடியவில்லை. பிரச்சினைகளும் தீரவில்லை. என்றால் நாம் மதத்தை பிடித்துத் தொங்கிக் கொண்டு ஏன் அலையவேண்டும்?

        • எந்த ஒரு நாடும் எந்த ஒரு தனி மனிதனும் இஸ்லாத்தை முறையாக பின்பற்றவில்லை என்றால் அது அந்த நாட்டின், மனிதனின் கோளாறா? இல்ல இசிலாதின் கோளாறா?ஒரு இயந்திரம் இருக்கிறது.. அதை இவ்வாறு தான் உபயோக படுத்த வேண்டும் என்று முறையை அதை தயாரித்த நிறுவனம் அளித்து இருக்கிறது.. இப்போது நான் அத்தனை சரியான முறையில் உபயோக படுத்தாமல் கன்னாபின்னாவென உபயோகப்படுத்தி விட்டு அந்த இயந்திரம் பழுததடைந்து விட்டால் அது யாருடைய குற்றம்? அந்த நிறுவனத்தின் மீதுள்ள குற்றமா இல்லை என்னுடையாதா? இஸ்லாம் அழகான நெறிமுரைகளை வகுத்து தந்திருக்கிறது.. அதை நான் பின்பற்ராமல் இஸ்லாம் தவறு என்று சொன்னால் நான் தவறா இல்ல இஸ்லாமா?

          • சரி ரஃபீக் இசுலாம் சரி என்பதற்கு என்ன அளவு கோல்? நாடா, மக்களா, புனித நூலா, எது? எழுத்தில்தான் பார்க்க வேண்டும், நடைமுறையில் அல்ல என்பதா? இல்லை 1400 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பார்க்க வேண்டும் என்றா? தூய இசுலாத்தை எடுத்துக் காட்டும் விதமாக ஒரு நாடு கூட இல்லாமல் போனது ஏன்?

            • இஸ்லாம் சரி என்பதற்கு அளவுகோல் கேட்கிறீர்கள்.. சத்தியமாக கூறுகிறேன் அது இங்கே வாழும் இஸ்லாமியாரை விட அரபு தேசதவரை விட இறை வேதமாகிய குரானும் நபீகளுடைய வாழ்க்கை முறையும் தான்.. கேட்கலாம் இங்கே வாழும் இஸ்லாமியரோ அரபு மக்களோ முழுமையான இஸ்லாமியர் இல்லைய என்று.. அவ்வாறு இருந்திருந்தால் நீங்கள் இந்த கேள்வி கேட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது..

              • ரஃபீக்

                குரானையும் நபிகளையும் விட்டால் ஒரே ஒரு இசுலாமியர் கூடக்கிடையாது என்றால் முக்கியமாக அதில் ஒரு ஆண் கூடக்கிடையாது என்றால் பெண்களை மட்டும் இப்படி மதத்தின் பெயரால் கட்டுப் பெட்டியாக்கி வைத்திருப்பது என்ன நியாயம்? ஆண்களுக்கு விலக்கு பெண்களுக்கு விதி என்பது எப்படி சரி?

                • முதலில் ஒன்றை திருத்தி கொள்ள விரும்புகிறேன்… இங்குள்ள எல்லாரும் உண்மையான இஸ்லாமியர் அல்ல என்று சொன்னதை பெரும்பாலோர் என்று திருத்தி கொள்கிறேன்.. தவறுக்கு மன்னிக்கவும்.. 
                  நண்பர் வினவு, ஆண்களுக்கு கட்டுப்பாடு இல்லை பெண்களுக்கு மட்டும் தான் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள்.. இஸ்லாம் அப்படி கூறவில்லை.. கண்களால் பார்க்கும் ஆபாச பார்வையே விபசாரம் என்று கூறுவது இஸ்லாம்.. விபச்சரத்திற்கு இஸ்லாம் கூறும் தண்டனை என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன்… தங்கள் வெட்க தளங்களை பேணி கொள்ளட்டும் என்றும் தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளட்டும் என்றும் ஆண்களுக்கும் சேர்த்து தான் இஸ்லாம் கூறுகிறது..

                  • தூய இசுலாமியமும் உழைக்கும் பெண்களும்!!

                    செங்கல் சூளையில் வேலை செய்யும் பெண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது ஹதர் அலிக்குத் தெரியும். முக்கியமாக விலகிக் கிடக்கும் சேலை, தூக்கிச் செருகிய உள்பாவாடை என்றபடிதான் அந்த கடுமுழைப்பு வேலைகளைச் செய்ய முடியும். இந்தச் செங்கல்கள் ஒரு இசுலாமியர் வீடு கட்டுவதற்கு பயன்படுகிறது.
                    வீடு கட்டும் பணியில் கூட சித்தாள் வேலை செய்யும் பெண்கள் அப்படித்தான் வேலை செய்கிறார்கள். இப்படி இசுலாத்திற்கு விரோதமாக பெண்களை நடத்தி விட்டு வீடு கட்டலாமா? கட்டலாம். ஏனெனில் மதத்தை விட இருப்பிடம் முக்கியமானது.

                    தூய இசுலாமியர்கள் சாப்பிடும் அரசியை விளைவிக்கும் பெண்களும் ‘அலங்கோலமான’ உடையோடுதான் வயலில் வேலை செய்யமுடியும். புர்கா அணிந்து ஒரு நாற்றைக்கூட நட முடியாது. இத்தகைய அரிசியை சோறாக உண்ணலாமா? உண்ணலாம். ஏனெனில் மதத்தை விட பசி முக்கியமானது.

                    அந்தக் காலத்து எடுப்புக் கக்கூசிகளிலிருந்து தூய இசுலாமியவாதிகள் கழித்த மலத்தை சுமந்து செல்லும் பெண்களும் புர்கா அணிந்து அந்த வேலையைச் செய்ய முடியாது. இதை அனுமதிக்கலாமா? அனுமதிக்கலாம். இல்லையென்றால் அந்த வேலையைச் செய்வதற்கு எந்த இசுலாமியனும் சம்மதிக்க மாட்டார். மதத்தை விட சுத்தம் முக்கியமானது.

                    தூய இசுலாமியவாதிகளின் வீட்டிற்கு காய்கள், பழங்கள், கீரைகள், மீன்களைச் சுமந்து வரும் பெண்களும் தமது மாராப்பு விலகியிருப்பது குறித்தெல்லாம் கவலைப்பட்டால் வயிற்றுக்கு சோறு கிடைக்காது. இந்தப் பெண்களிடமிருந்து இந்தப் பொருட்களை வாங்கலாமா? வாங்கலாம். ஏனெனில் மதத்தை விட வாழ்க்கை முக்கியமானது.

                    எனில் தூய இசுலாமியவாதிகளின் தூய்மை எங்குள்ளது? அதில் இணையத்தின் கீஃபோர்டில் மட்டும் உள்ளது. அதை விட்டு தெருவில் இறங்கிப் பார்த்தால் இசுலாத்தின் படி வாழமுடியாது.
                    இந்த உழைக்கும் பெண்கள் இப்படி வேலை செய்வது குறித்து தூய இசுலாமியவாதிகள் என்ன சொல்வார்கள்? அதற்குத்தான் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்ய வேண்டும், குடும்பத்திற்கு சம்பாதிப்பதை ஆண்கள் மட்டும் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். இந்த சாதாரண உண்மை கூடத் தெரியாமல் அந்த உழைக்கும் பெண்கள் இப்படி அலங்கோல உடையோடு வேலை செய்ய என்ன காரணம்? தூய இசுலாமியவாதிகளின் கருத்துப்படி அந்த உழைக்கும் பெண்கள் சினிமா பார்த்து ஜாலியாக செலவு செய்வதற்குத்தான் இப்படி வேலை செய்வாதாக கூறுவார்கள்.

                    இப்படி உழைக்கும் பெண்களின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு சுகபோகமாய் வாழும் அந்த தூய இசுலாமியவாதிகள் தங்கள் வீட்டு பெண்களை மட்டும் புர்கா, வீட்டுச்சிறையில் வைத்து ஆண்டவனின் கட்டளைப்படி பாதுகாப்பாக வாழ வைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதுதான் மதக்கடமை. மற்றபடி இந்த மதக்கடமை சொகுசாக பின்பற்றப்படுவதற்கான எல்லா வேலைகளையும் அந்த உழைக்கும் பெண்கள் செய்வார்கள். ஆம். உழைப்பவனுக்கு மதமில்லை, உழைப்புதான் பெருமை.. உட்கார்ந்து தின்பவனுக்கு மதமுண்டு, மதம்தான் பெருமை.

                    • Great! மதம் தான் பெருமை என்று உட்கார்ந்து தின்னவாறே Wife-battering for Dummies என்ற புத்தகம் வாசிக்கலாம்.

                    • “அந்த உழைக்கும் பெண்கள் இப்படி அலங்கோல உடையோடு வேலை செய்ய என்ன காரணம்? தூய இசுலாமியவாதிகளின் கருத்துப்படி அந்த உழைக்கும் பெண்கள் சினிமா பார்த்து ஜாலியாக செலவு செய்வதற்குத்தான் இப்படி வேலை செய்வாதாக கூறுவார்கள்.” – வினவு
                      நண்பர் வினவு, கூறுவார்கள் என்று சொல்கிறீர்.. கூறி இருக்கிறார்களா? கூறி இருந்தால் அது தவறு மட்டும் அல்ல கண்டிக்க பட கூடியதும் தான்.. ஏனெனில் அது உழைப்பையும் பெண்களையும் கேவலப்படுத்துகிறது.. 
                      ஆனால் நீங்கள் அடிப்படையிலே முரண்டு பிடிக்கிறீர்கள்.. எந்த ஒரு இடத்திலும் இஸ்லாமியர் அல்லாத, இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றாத, உதாசீன படுத்துகிற நிறுவனங்களிடம் நபர்களிடம் வியாபாரம் செய்வதை இஸ்லாம் என்றைகுமே தடுத்தது இல்லை.. ஏனெனில் உங்களுடைய மார்க்கம்(மார்க்கம் என்றால் வழி) உங்களுக்கு எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு என்று கூறுவது இஸ்லாம்.. அவர்களிடம் எடுத்து கூற இயலுமே தவிர கட்டாய படுத்த இயலாது.. இஸ்லாமும் எந்த ஒரு இடத்திலும் கட்டாய படுத்துமாறும் கூறவில்லை.. (There is no compulsion).  நீங்கள் கூறுவது போல,  இசுலாத்திற்கு விரோதமாக பெண்களை நடத்தி விட்டு வீடு கட்ட வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை.. இசுலாத்திற்கு விரோதமாக பெண்களை நடத்தி விட்டு சோறு உண்ண வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை.. மலம் அள்ளும் தொழில் உட்பட எந்த ஒரு தொழிலையும் இழிவாக இஸ்லாம் கூறியதில்லை… (உடனே திருட்டு,விபசாரம் ஆகியவை தொழில் என்று கூற வேண்டாம்) இசுலாத்திற்கு விரோதமாக பெண்களை நடத்தி விட்டு கறி மீன் சாப்பிட இஸ்லாம் போதிக்கவில்லை.. அவர்களால் உடை அவ்வாறு தான் உடுத்த இயலும் என்றால் ஆண்களுடைய பார்வையை தாழ்த்திக் கொள்ள இஸ்லாம் அறிவுறுதுகிறது.. இஸ்லாமியர்கள் தம் வீடு பெண்களை சிறை வைக்கிறார்கள் என்று மனம் போன போக்கில் சொல்லி விட்டு போக வேண்டாம்..  பொதுவாக எல்லோருக்கும் சொல்லி கொள்ள ஆசை படுவது.. இஸ்லாம் எல்லா பெண்களையும் அவர்கள் உடைகளை அழகாக அங்கங்களை வெளியில் தெரியா வண்ணம் உடுத்த சொல்கிறது.. நீங்கள் பெண்ணுறிமை என்ற பெயரில் இஸ்லாமியர் வீட்டு பெண்களின் அங்க அழகுகளையும் ரசிக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள்.. சிந்தித்து பாருங்கள்.. இஸ்லாம் பெண்ணுறிமையை பேணுகிறதா இல்லை நீங்களா என்று?

                    • ரஃபீக் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் எழுதியிருக்கிற பதில் உங்களுக்கே நிறைவாகப் படுகிறதா? அந்த உழைக்கும் பெண்களை பயன்படுத்திக் கொள்வது மற்ற மார்க்கத்தினரோடு செய்யும் வியாபாரமா? அங்கங்களை மறைத்து விட்டு இசுலாமிய முறைப்படி நீங்கள் இசுலாமியப் பெண்களையே அந்த வேலைகளைச் செய்ய வைக்கலாமே? அப்படி முடியாது என்றால் அதற்கு மற்ற ‘மதத்து’ உழைக்கும் பெண்கள் வேண்டுமா? கவனியுங்கள் நீங்கள் வசதியாக வாழ்வதற்கு மற்ற பெண்கள் அங்கங்களைக்காட்டி வேலைசெய்யவேண்டும். உங்கள் மதத்தின் புனிதத்தை காப்பாற்றுவதற்கு உங்கள் வீட்டு பெண்கள் புர்காவோடு முடங்க வேண்டும். இதுதான் உங்கள் நீதியா? மற்ற உழைக்கும் பெண்கள் அங்கங்களைக்காட்டி அவதிப்படும் அந்தச் சேவைகள் எங்களுக்கு வேண்டாமென்று கூட நீங்கள் கூறவில்லை. அவை வேண்டும். அவை இல்லாமல் வாழ முடியாது என்பதெல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் அப்படி அலங்கோலமாக வாழும் பெண்கள் இசுலாத்தின் படி கீழானவள். ஏனெனில் தனது அங்கங்களை காட்டி ஆண்களுக்கு கிளர்ச்சியை தூண்டுகிறாள் என்று அவர்களை இழிவாகவும் பேசுகிறீர்கள். மிக மிக வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருக்கிறது ரஃபீக் உங்கள் மதவாதம்.

                    • நண்பர் வினவு,முதலில் இந்த முஹம்மது ஹுஸைன் எனும் பெயரில் எழுதி கொண்டிருப்வரை சற்று காண்தியுங்கள்.. வார்த்தை பிரவாகம் தவறாக இருக்கையில் கண்ணியம் மீறப்பட்டு விடும்.. இங்கு பெண்ணுறிமையை பெண்களின் கண்ணியத்தை பற்றி விவாதிகையில் அவர்களை அசிங்க படுத்தும் முகமாக (தவறு எந்த பெண் செய்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவறானாலும் எந்த மத நம்பிக்கை கொண்டோராகினும்) அவர்களை கேவலாப்டுத்தும் முகமாக கருத்துகள் வெளியிடுவது இந்த திரியின் நோக்கதையே பாழ் படுத்தி விடும்… என்னால் கண்ணியத்தை பேனா இயலாது என்ற நிலை வரும் போது நான் சாற்றி ஒதுங்கி இருப்பதையே விரும்புகிறேன்.. காரணம் நான் கோபத்தில் எதாவது வார்த்தை விட்டு விட்டால் அதையே காரணமாக கொண்டு பார்த்தீர்களா எந்த ஒரு இஸ்லாமியனும் இப்படித்தான்.. ஏன் எனக்கு (என்னால் எம் சமூக மக்களுக்கு) தீவிரவாத பட்டம் கிடைத்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை..அதைத் தான் அந்த போலி ஆசாமியும் விரும்புவது..

                    • இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவரவாதிகள் அல்லர். அதனை நான் முழுமையாக ஏற்கிறேன். எல்லா முஸ்லீம்களையும் தீவிரவாதிகளாகப் பார்போரையும் எதிர்க்கிறேன். ஆனால் ஒரு முஸ்லிமானவன் செய்யும் எந்த தவறையும் அதன் சரி பிழை பாராமல், நியாயப்படுத்த முனையும் மதவாத மனநோயாலர்களை எதிர்க்கிறேன்.  எதனையும் சரி பிழை பாராமல், நியாயம் அநியாயம் அறியாமல் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் மனநிலை கொண்டவர்களாக இஸ்லாமியர்களே இன்று உலகெங்கும் இருக்கின்றனர். எனக்கு மட்டுமல்ல, இன்று உலகில் பல்லிணத்தவர்களும் இஸ்லாமியர்களை இழிவாகப் பார்க்க வைப்பதே இந்த குணம் தான். நாம் இங்கே கூறுவது இவ்வாறான பிற்போக்கு குணங்களில் இருந்து முதலில் வெளிவாருங்கள். உங்கள் மனங்களில் ஆழ விதைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய குரான் வசனங்களுக்கு அப்பால் எத்தனை யோ உண்மைகள் உள்ளன.  

                    • அட முஹம்மது ஹுசைன்///திருகுர்ஹானில் இப்ராஹிம் என்பவை நேர்மையாளாராக அல்லாஹ் பார்ப்பதாக குர்ஹான் கூறுகிறது. இப்ராஹிமுடன் தமது புதல்வியர் இருவரும் மாறி மாறி உடலுறவு கொண்ட சம்பவமும் உள்ளதே. அதெப்படி அப்படியான கேடுகெட்ட ஒருவனை அல்லாஜ் நேர்மையாளன் என்கிறா?// நீ மட்டும் இந்த வசனம் குர்ஆனில் இருக்கிறது என்று நிறுபித்து விட்டால் அடுத்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வேளியேறி ஹைதர் என்ற என்னுடைய பெயரை மாற்றி உன்னுடைய சொந்த பெயரான ராம் அல்லது கிருஷ்ணன் என்று வைத்துக்கொள்கிறோன் நீ நேர்மையானவானக இருந்தால் பொட்டபய மாதிரி ஒடி ஒளியாம எனக்கு அந்த குர்ஆன் வசன என்னோடு பின்னூட்டமிடு நீ பதில் சொல்லவில்லையேன்றால் நீ பொட்டபய என்பது எல்லாருக்கும் தெரிந்துவிடும் அம்பி எனக்கு சம பெத தான தண்டம் இதுல எல்லாம் நம்பிக்கையில்லை விரைவில் உன்னுடைய பதிலைக்கன்டு மதமற கத்திருக்கின்றோன்

                    • திருகுரான் வானத்தில் இருந்து விழுந்தது இல்லை ஹய்தர் அலி பீப் விட்டட். அது இபராஹிசம் எனும் மதக் குறிப்புகளையும், யூதாயிசம் மதக் குறிப்புகளையும் கொப்பியடித்து எழுதப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் இப்ராஹிசம் வழி வரும் மதம். அனால் தமது வசதிக்கு ஏற்ப இப்ராஹிம் மகளுடன்  உறவுக்கொண்ட சம்பவத்தை கொப்பயடித்தவன் விட்டுவிட்டிருக்கலாம். அல்லது கொப்பி அடித்த வேகத்தில் தவர விட்டிருக்கலாம். வேண்டுமானால். இப்ராஹிசம், யுதாயிசம், நூல்களை எடுத்துப்பார் புரியும். இயேசுவை ஒரு நபியாகத்தானே இஸ்லாம் கூறிக்கொள்கிறது. அதிலும் அது உள்ளது. 

                    • ///யுதாயிசம், நூல்களை எடுத்துப்பார் புரியும்./// மஹம்மது பருப்பு விட்டட்.நல்லவேல எங்கள் முன்னோர்களான பர்ப்பனர்கள் ஈரானில் யுதர்களாக இருந்து கைபர் கனவாய் வ்ழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் அவர்கள் கையோடு கொண்டு வந்த வேதம் பழமையான யுதவேதமான மனுதர்மத்தில் இருக்கிறது படித்து தெரிந்துக்கொள் என்று சொல்லியிருந்தால் நல்லயிருந்திருக்கும் படிக்க என்ன காதுல கேட்டலே ஈயாத்த காய்ச்சி ஊத்தனுமுனுல சொல்லிவய்ங்க குர்ஆனுல காட்ட முடியலனு ஏத்துக்கிட்டு போ கேள்வி கேட்டதான ஒ வன்டவாளம் தெரியும்

                    • நாயே

                      நடுத்

                      தெருவில்

                      நின்றி குலைத்து கொண்டிருக்கிறாய்.

                    • 304. ‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர். ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

                      புகாரி Volume:1 Book:6

                      நபிகள்நாயகம் (ஸல்) அவர்களே பெண்களுக்கு மூளையும் குறைவு, மார்க்க பற்றும் குறைவு என்று நிரூபித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு எது நல்லது என்று ஆண்களுக்குத்தான் தெரியும்

                    • இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா காந்தியாருக்கும் மூளை குறைவா ரஹிமியா கான்? ஒரு தமிழ்பெண்ணான நவநீதம் பிள்ளை அவர்கள் மனித உரிமை ஆனையத்தின் தலமை நிறைவேற்று அதிகாரியாக உள்ளாரே, அவருக்கும் மூளைக் குறைவா ரஹிமியா கான்? இஸ்லாம் மார்க்கம் நமது பெண்களை குறைத்து மதிப்பிட்டதால் தான் இஸ்லாமியப் பெண்களின் ஆற்றலும் திறமையும் வெளிக்கொணரப்படாமலே போய்க்கொண்டிருக்கிறது? இருபத்தி ஒராம் நூற்றாண்டிலாவது கொஞ்சம் அறிவாகச் சிந்துக்கத் தொடங்குக்குங்கள். இன்ஷா ஹல்லா!

                    • சரியான கருத்து…….. யூதர்களின் பொய்களை முழுமையாக அப்படியே நகலாக்கம் செய்யப்பட்டது 

                    • சகோ ரபிக் நம்மைப்போல் கண்ணியம் இவர்களுக்கு வராது, இவர்கள் மனம் போன போக்கில் போகிறவர்கள், இவர்களிடத்தில் கண்ணியத்தை எதிபார்ப்பது?????? நாம் நம்மால் முடிந்த வரை பொறுமை இழக்காமல் விளக்கம் கொடுப்போம், அவர்களும் ஒரு நாள் நேர்மையாளனாக எல்லாம் வல்ல இறைவன் நாடினாலே ஒழிய! அவர்கள் நேர்வழிக்கு வரமாட்டார்கள். அல்லது நெத்தியடி மாதுரி ஒதுங்கி இருக்கவேண்டியதுதான்.

                    • ”அவர்களால் உடை அவ்வாறு தான் உடுத்த இயலும் என்றால் ஆண்களுடைய பார்வையை தாழ்த்திக் கொள்ள இஸ்லாம் அறிவுறுதுகிறது.”

                      இது உங்களுடைய கருத்தா? அல்லது இறைவனுடைய வஹீயா? 
                      பெண்கள் எவ்வாறு உடை உடுத்தவேண்டும் என்பதை வசனம் 33:33 மற்றும் 33:59 யை எதுத்துப்பாருங்கள்.

                    • //இஸ்லாம் எல்லா பெண்களையும் அவர்கள் உடைகளை அழகாக அங்கங்களை வெளியில் தெரியா வண்ணம் உடுத்த சொல்கிறது.. நீங்கள் பெண்ணுறிமை என்ற பெயரில் இஸ்லாமியர் வீட்டு பெண்களின் அங்க அழகுகளையும் ரசிக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள்.. சிந்தித்து பாருங்கள்.. இஸ்லாம் பெண்ணுறிமையை பேணுகிறதா இல்லை நீங்களா என்று?
                      //

                      அப்புறம் ஏனய்யா, புர்கா பற்றி எதாவது எழுதினாலோ, பேசினாலோ வெடித்து கிளம்புகிறீர்கள்? அல்லது நீங்கள்தான் என்றாவது இது போல புர்காவை பெரிய பிரச்சினையாக பேசும் போலி இஸ்லாமியர்களை(உங்கள் கருத்துப்படி) கண்டித்துள்ளீர்களா?

                      விசயம் இப்படி இருக்கையில் நாங்கள்தான் எழுத வேண்டிய நிலைமை உள்ளது.

                    • சபாஸ். அப்படி போடுங்க அருவாள.

                      விவாதம் ரொம்ப சீரியசா போகுது. அதனால் இந்த இடத்திற்க்கு பொருத்தமாக பாடல் இது : (விடியோ / ஆடியோ லிங்க கிடைச்சா யாரவது இங்கு அதன் சுட்டிகளை தாங்க மக்களே ) :

                      (பராசக்தி (1952) சிவாஜி கணேசன், கலைஞர்
                      கூட்டணியில் ஒரு புதிய திருப்புமுனையை
                      படைத்த அருமையான படம். (எனது விருப்ப
                      படங்களில் / பாடல்களில் ஒன்று) ;
                      அதில் வரும் ஒரு சூப்பர் பாடல்.
                      எழுதியவர் : உடுமலை நாராயண கவி )
                      ”தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
                      காசுமுன் செல்லாதடி – குதம்பாய்
                      காசு முன் செல்லாதடி.
                      ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
                      காசுக்குப் பின்னாலே – குதம்பாய்
                      காசுக்குப் பின்னாலே.
                      சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
                      சாட்சி கோர்ட்டு ஏறாதடி – குதம்பாய்
                      சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
                      பைபையாய் பொன் கொண்டோர்
                      பொய் பொய்யாய் சொன்னாலும்
                      மெய் மெய்யாய் போகுமடி – குதம்பாய்
                      மெய் மெய்யாய் போகுமடி.
                      நல்லவரானாலும் இல்லாதவரை
                      நாடு மதிக்காது – குதம்பாய்
                      நாடு மதிக்காது.
                      கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
                      வெள்ளிப் பணமடியே – குதம்பாய்
                      வெள்ளிப் பணமடியே
                      ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – காசு
                      காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
                      உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
                      உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
                      முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே – காசு
                      முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
                      கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பிணத்தைக்
                      கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பணப்
                      பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே”

                    • சகோதரர் ரபிக், இவர்களிடம் என்னதான் நேர்மையாக விவாதம் செய்தாலும் அவர்கள் சிந்தனை எல்லாம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டதான் முடியுமே தவிர வேறொன்றும் தெரியாது. தெரிந்து கொண்டு மறைக்கிறார்கள். பல முறை புர்கா என்பது என்ன என்று விளக்கியும், மறுபடியும் மறுபடியும் செவிடன் காதில் ஒதிய சங்காகத்தான் கருப்பு அங்கி கருப்பு அங்கி என்று அடம் பிடிக்கிறார்கள். எந்த வேலை செய்தாலும் தன அங்கக்களை மறைக்க முடியும். சேற்றில் நாற்று நட இடுப்பு, மற்றும் சில அங்கங்கள் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, அது போல் ஒவ்வொரு தொழிலுக்கும் கைதான் முக்கியமே தவிர இவர்கள் வெளியில் தெரிய விடும் அங்கக்கள் அல்ல. நானும் விவசாயிதான் எனக்கும் அந்த தொழில்களை பற்றி நன்கு அறிந்துதான் கூறுகிறேன்.

                      நடு நிலையான மனிதன் நேர்மையாக சிந்தித்தால் உண்மைகள் விளங்கும், இங்கு நடுநிலை என்பது ஒரு சதவிகிதம் கூட கிடையாது. இது வரை கேட்ட கேள்விகளுக்கு ஒரு ஆதாரம் கூட தர முடியவில்லை. மாறாக அவர்கள் கேள்வி கேட்கிறார்கள் ஏன் 1400 வருடங்களுக்கு பின் செல்கிரிர்கள் என்று, ஆனால் இவர்கள் இஷ்டத்திற்கு திருகுரானையும் ஹதிஷையும் மிகைப்படுத்தி இஸ்லாத்தில் கூறப்படாத விஷயங்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதுதான் இவர்கள் வேலை. இதுவரை கேட்கப்பட்ட கேள்விகள்: 1. பெண்களுக்கு முடியை மழிக்க சொன்னது.
                      2. தலாக்கை மூன்று முறை ஒரேநாளில் கூறுவது. இன்னும் பல கேள்விகள் உங்களிடத்தில் கேட்கப்பட்டிருந்தாலும் இது கட்டுரயில் ஆதாரமாக சொல்லியிருப்பதால் நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால் ஆதாரத்தை திருக்குரானிலும் ஹதிஷிலும் இருந்து தர வேண்டும். இல்லை என்றால் இந்த கட்டுரைக்கும இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நேர்மையானவர்கள் புரிந்து கொள்வார்கள். இதை விட்டு விட்டு உண்மை நிலவரம் பர்தா அணிந்த பெண்கள் அடிமைப்படுத்த படுகிறார்கள் என்று பிதற்ற வேண்டாம். இன்னும் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் பர்தா அணிந்தவர்களும், சவூதி சேக்குகளும், தொப்பி அணிந்தவரும், தாடி வைத்தவரும் இஸ்லாமியன் அல்ல! மாறாக மேலே சொன்ன அனைத்து அம்சங்களும் பொருந்தி திருக்குரானையும் ஹதீஷையும் (திருக்க்குரானுக்கு மாற்றமில்லாத) மதித்து வழி நடப்பவர்தான் இஸ்லாமியன்.

                    • புர்கா அணிவதே மடமைதான். புர்காவை அணிந்துக்கொண்டு சில நாடுகளுக்கு முக்கியமாக ஐரோப்பிய தேசங்களுக்கு அழைத்துச்சென்றால் விசேடமாக உள்ளே அழைத்து முகமூடியை கலட்டி காட்டச் சொல்வார்கள். இது உண்மையில் முகமூடி திருடனோ என்று பல குடிவரவு அதிகாரிகளை திகைக்க வைக்கிறது.

            • அந்த காலம் வெகுதொலைவில் இல்லை, சீக்கிரமே வந்து விடும், நானும் உணகலைபோல் உள்ளோரும் இல்லாமல் போகலாம் ஆனால் உண்மை தாமதமாக வந்தாலும் நிரந்தரமானது. இப்பொழுது உண்மை கசக்கிறது அது இனிக்கும் காலம் நிச்சயமாக வரும், வந்து கொண்டுதான் இருக்கிறது (தமிழ் நாட்டில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்), யுவான் ரிட்லி (இரோப்பிய எழுத்தாளர்) இன்னும் பல

        • தவறுகளை சுட்டிக்காட்டினால் அது மனிதர்களின் தவறு மதத்தின் தவறு இல்லை என்கிறீர்கள். இப்படியே நீட்டித்தால் தவறுகளை திருத்த முடியாத மதம் எதற்கு?

        • //மனிதனின் கோளாறா? இல்ல இசிலாதின் கோளாறா?ஒரு இயந்திரம் இருக்கிறது.. அதை இவ்வாறு தான் உபயோக படுத்த வேண்டும் என்று முறையை அதை தயாரித்த நிறுவனம் அளித்து இருக்கிறது.. இப்போது நான் அத்தனை சரியான முறையில் உபயோக படுத்தாமல் கன்னாபின்னாவென உபயோகப்படுத்தி விட்டு அந்த இயந்திரம் பழுததடைந்து விட்டால் அது யாருடைய குற்றம்?///

          1400 வருடங்களாக அந்த இயந்திரத்தை ஒருவரும் சரியாக உபயோகப்படுத்த இயலவில்லை எனில், அந்த இயந்திரம் ஆயிரம் தான் சிறப்பானதாக புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அது உடைச்சல்தான், குப்பைத்தொட்டிக்கு பார்சல் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்

        • சரியாக பின்பற்ற முயற்சி செய்யவில்லை என்பது தான் பொருளே தவிர இயலாது என்பது உங்களின் கருத்து மட்டுமே..

  18. ///முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார்..சாகித்சாகித், எந்த ஹதீஸ் தொகுப்பில் – எத்தனையாவது ஹதீஸாக இது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை தயவு செய்து தரவும்//////“….முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும்….. ” – சாகித்.நண்பர் சாகித்… இதற்கும் நீங்கள் தக்க ஆதாரத்தை தருவீர்கள் என்று/// ஏம்பா சாகித் எங்கே பொயி தொலைஞ்ச வந்து இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லு 

  19. இது முழுக்க முழுக்க அவருக்கு தெரிந்த வற்றை வைத்து எழுதபட்டு உள்ளது .இஸ்லாம் என்ன சொல்கிறது இது பற்றி என்று எழுதியவர் ,கவனம் செலுத்த தவறிவிட்டார். அவர் செய்த மிக பெரிய தப்பு. யார் வேண்டுமானாலும் இஸ்லாத்தை பற்றி விமர்சர்ணம் செய்தது அந்த காலம் .இனி இஸ்லாத்தை பற்றி உங்கள் பார்வைக்கு எது தவறாக படுகிறதோ எங்களிடம் கேளுங்கள், உங்களுக்கு ஆதாரத்துடன் விளக்கம் தருகிறோம்.தயவு செய்து உங்கள் சொந்த அறிவை ,இஸ்லாம் கூறுவதாக எழுத வேண்டாம் .

  20. நல்ல கட்டுரை. இணையத்தில் இஸ்லாமிய நண்பர்களுடன், இஸ்லாமிய வழக்கங்கள் பற்றி விவாதிப்பது waste of time எனப்தை உணர்ந்திருக்கிறேன். கண்டிப்பாக புரிந்து கொள்ள மாட்டார்கள். நன்கு படித்து, நல்ல வேலையில், வெளி உலக அனுபவம் ஓரளவு கொண்ட இளைஞர்களின் மனோபாவம் அதிர்ச்சி அளித்தது. கிராமங்களில், வயதான, அதிகம் படிப்பறிவில்லாத, பழமையில் ஊறிய முதியவர்கள் அப்படி இருப்பது ஆச்சரியம் அல்ல. ஆனால் இணையத்தில் எழுதும் அளவிற்க்கு வாசிப்பனுபவம் உள்ளவர்களின் மனோபாவம் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. Religion is opium to the people என்று மார்க்ஸ் மிக சரியாக சொல்லியிருக்கிறார். Brain washing goes on.

    • அடிப்படை ஆதரமட்ட்ற கட்டுரயை புகழும் அளவுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு உங்களை போல் ஆட்களித்தில் புரையோடிப்போயுள்ளது.

      • இல்லை. அப்படி அல்ல. உங்களை போன்றவர்களுடன் விவாதம் செய்வது பற்றி நான் மிக சுருக்கமாக இங்கு கூறியது மிகவும் சரியென்றே உங்கள் மறுமொழி நிருப்பிக்கிறது.

        • இணையத்தில் வாசிக்கும் பழக்கம் அதிகமானத்தால் தான் இப்போது முன்பை விட அதிகதிமாக இறை அச்சத்தை என்னுள் காண்கிறேன்.. முன்பெல்லாம் தொழச் சொன்னார்கள் தொழுதோம். (வாரமொரு முறை.. நாளொரு முறை..) இன்று ஏன் எதற்கு என்று சிந்திக்க ஆரம்பித்ததால் தான் தினமும் ஐந்து வேளை தொழ ஆரம்பித்திருக்கிறோம்.. அதை கதை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.. உங்கள் போன்றவர்களின் கருத்துகளை கொண்டு இது எதற்காக இது என்ன காரணத்திற்காக எந்த சூழ்நிலையில் என்று விளக்கம் பெற்றத்ன் விழைவு தான் முன்பை விட அதிகம் அதிகமாக இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றுவதற்கு முயற்சியும் செய்து கொண்டிருக்கிறோம்..

    • முதலாளி,
      மிகச் சரியாகவே சொல்லியுள்ளீர்கள். ஒரு சின்ன திருத்தம், பழமையில் ஊறிய முதியவர்களுக்கு கூட புரியவைத்துவிடலாம், ஆனால் இந்த மண்டைக்கனம் கொண்ட இணைய இஸ்லாமிய இளைஞர்களுக்கு புரியவைப்பது என்பது கனவில் கூட நடக்காது.

  21. ”மதம் ஒரு பித்து” ”கடவுள் ஒரு போதை” என்பது இங்கு மீண்டும் ஒரு முறை நிறுபிக்க பட்டு உள்ளது….

  22. உலகில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் நாடு இந்தோனீசியா. உலகெங்கும் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரியும் பெண்களும் இந்தோனேசியப் பெண்கள் தான். இந்தோனேசியப் பெண்களில் ௯௯% முஸ்லிம் பெண்கள். இவர்கள் தாம் பணிப்புரியும் நாடுகளில் பர்தாவைப் போட்டுக்கொண்டு வேலைசெய்தாலும், உலகில் காம இச்சைகளுக்கு முதலிடம் கொடுக்கும் பெண்களும் இவர்கள் தான். இவர்களில் திருமணம் முடித்தவர்கள், குழந்தைகள் உள்ளவர்கள், கன்னிப்பெண்கள் என எவராக இருந்தாலும் ஒரே மாதிரியானவர்கள் தான். சொல்லப் போனால், இந்தியாவில் பெண்களை ஆண்களே பின்னால் சென்று காதலிப்பார்கள். ஆனால் இந்தோனேசியா பெண்கள் தாமாகவே ஆண்களை தேடி அழைபவர்களாக உள்ளனர். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு பணிப்புரிய வரும் இவர்கள் தமது இச்சை அடங்களுக்காக தமது மாதம் சம்பளத்தை என்றாலும் தாரை வார்த்து காதலன் எனும் பேரில் உள்ளவனுக்காக கொடுத்துவிடுவர். காதலன் வேறு ஒருத்தியை தேடி சென்றுவிட்டால் இவர்களும் இன்னொருவனை தேடிச்செல்வர்.   இப்படியான போக்கை நீங்கள் வெளிநாடுகளில் இந்தோனேசியா பெண்கள் வாழும் பகுதிகளில் இருந்திருந்தால் உணர்ந்திருப்பீர்கள். உணர்வு என்பதும் உணர்ச்சி என்பதும் எல்லோருக்கும் உள்ளதுதான். சும்மா, முஸ்லீம் என்றால் மட்டும் கற்புக்கரசிகளாய் நினைப்பது எவ்வளவு தவறு என்பதை நான் சிங்கப்பூர் வந்தப் பின் தான் அறிந்துக்கொண்டேன்.

  23. “ஹிச்டரி ஆப் ட்ராஸ்” எனும் புத்தகம் வாசித்துப்பாருங்கள். உலகில் வாழ்ந்த மக்கள் தாம்தாம் வாழும் வெப்ப குளிர் நிலைகளுக்கு ஏற்பவே உடை உடுத்தும் வழக்கு வந்துள்ளதை அறியலாம். குளிரில் வசித்தவன் கம்பளி ஆடை அணிந்தான். இந்திய வெப்ப வலையத்தில் வாழ்ந்தவன் சேட்டு போடாமலேயே பழக்கப்பட்டான், பாலைவனப் பகுதியில் வசித்தவன், புழுதியில் இருந்து தம்மை காக்க முகத்தை மூடி உடல் மறைத்து உடுத்தும் வழக்கைக் கொண்டான். அங்கே ஆண், பெண் இருபாலருமே முழு உடமபையும் மறைத்து உடுத்தியதற்கு காரணம் அதுதான். ஆனால் இது தெரியாத சிலர் மரியாதையான உடை என கொளுத்தும் வெய்யிலில் நெத்தி வேர்வை … வடிய முழுக்க மூடிக்கொண்டு உடுத்துவது இஸ்லாமிய பண்பாடு என்கின்றனர். இஸ்லாம் அல்லாதவர்களும் பாலைவனப்பகுதியில் வசித்தவர்கள் அப்படி தான் உடுத்தனர் என்பதை ஏனோ இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தவிர பர்தா என்பது ஒன்றும் ஒழுக்க சீல உடையல்ல. பர்தாவை அணிந்துக்கொண்டு ஒழுக்கமற்று வாழும் சமுதாயமாகவும் முஸ்லீம்களே இருக்கின்றனர் என்பதற்கு இந்தோனிசியா பெண்கள் நல்ல உதாரணம். ஆண்களுக்கு பாக்கிஸ்தானியர் நல்ல உதாரணம் 

    • ”புழுதியில் இருந்து தம்மை காக்க முகத்தை மூடி உடல் மறைத்து உடுத்தும் வழக்கைக் கொண்டான். அங்கே ஆண், பெண் இருபாலருமே முழு உடமபையும் மறைத்து உடுத்தியதற்கு காரணம்.

      ” இது பாலைவன மணல் பகுதியில் செல்லும்போதுமட்டும்தான் அவ்வாறு உடுத்தினர். ஊர்களுக்குள் அவ்வாறு முகத்தை மறைத்து உடுத்தியதில்லை. மேலும் பெண்களுக்கான ஹிஜாப் உடை பற்றிய வசனம் கூறப்பட்டதற்கு முக்கியமானவர் உமர். இவர்தான் முஹம்மதிடம்,அன்னிய ஆண்களிடமிருந்து முஹம்மதின் மனைவிகளை மறைத்துக்கொள்ள ஹிஜாப் உடையை சிபாரிசு செய்கிறார். புஹாரி; 402 . அதன் பிறகே வசனம் 33;59 முஹம்மதால் கூறப்படுகிறது.

  24. //ஸ்லாத்தை பற்றி விமர்சர்ணம் செய்தது அந்த காலம் .இனி இஸ்லாத்தை பற்றி உங்கள் பார்வைக்கு எது தவறாக படுகிறதோ எங்களிடம் கேளுங்கள், உங்களுக்கு ஆதாரத்துடன் விளக்கம் தருகிறோம்.// நல்லது நண்பரே! திருகுர்ஹானில் இப்ராஹிம் என்பவை நேர்மையாளாராக அல்லாஹ் பார்ப்பதாக குர்ஹான் கூறுகிறது. இப்ராஹிமுடன் தமது புதல்வியர் இருவரும் மாறி மாறி உடலுறவு கொண்ட சம்பவமும் உள்ளதே. அதெப்படி அப்படியான கேடுகெட்ட ஒருவனை அல்லாஜ் நேர்மையாளன் என்கிறா?

  25. //இறை தூதர் அவர்கள் கவலை பட்டது முக்கியமானது தனது சமுதாயத்திற்கு சோதனையாக இந்த செல்வம்தான் என்று சொன்னார்கள்.// அட! ஐரோப்பியன் வாகனத்தைக் கண்டுப்பிடித்து அதற்கு பெற்றோல் தேவை என்பதை கண்டுப்பிடிக்காவிட்டால், அரேபியா மட்டுமல்ல மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ளவனெல்லேம் எல்லாம் பாலைவன மண்ணைத்தான் திங்கோனும்..  

    • இப்ராஹிம் தனது மனைவியை கானான் நாட்டு மன்னனுக்கு கூட்டிக்கொடுத்து செல்வம் சேர்த்த வரலாறு உள்ளதே. 

    • அட சாஹித், தெரிந்தால் எழுது…இலஎன்றல் எதாவது சினமா நடிகையை பற்றி எழுது…மதம் ,சமூகம் விசயத்தில் விவரம் கேட்டு எதாவது எழுதாதே…உனக்கு எதாவது தெரிந்தால் சரி..சொந்த சகோதரிகளின் மர்மங்களை சார்யின் இடுக்கில் ரசிக்கும் ஈன பிறவி..உனக்கு இஸ்லாமை பற்றி என்ன தெரியும் .. நீயா ஒரு மதம் தொடங்கி , அதில் நீ ஒருவனக இருந்து மாற்றம் செய்ய வேண்டியது தானே…

      • இடுப்பை கண்ணிலிருந்து மறைக்க புர்கா போடலாம், உர சாக்கு போடலாம், கோணிப்பை போடலாம்.. இல்லை கண்ணை பிடுங்கலாம் மனதால் அந்த இடுப்பைப் பற்றி நினைக்க ஒரு ஆணுக்கு என்ன தடை… மனதுக்கு ஏது காண்டம்?????

        • “உங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளுங்கள்” – இத்தனை இஸ்லாம் கூறி இருக்கிறதா இல்லையா என்பதை நன்றாக தெரிந்து கொண்டு கருத்துகளை பதியுங்கள்..

      • .சொந்த சகோதரிகளின் மர்மங்களை சார்யின் இடுக்கில் ரசிக்கும் ஈன பிறவிகள் நாங்கள் அல்ல. தான் வளர்த்த மகனின் மனைவியை தலாக் செய்ய வைத்து மருமகளை மணம் செய்துகொண்டவர்தான் முஹம்மத். ஏன் இவர் ஏதேனும் சாவித்துவாரத்தில் பார்த்திருப்பாரோ! இதற்கென்னடா விளக்கம் உங்கள் மார்க்கத்தில்.

  26. அட முஹம்மது ஹுசைன்///திருகுர்ஹானில் இப்ராஹிம் என்பவை நேர்மையாளாராக அல்லாஹ் பார்ப்பதாக குர்ஹான் கூறுகிறது. இப்ராஹிமுடன் தமது புதல்வியர் இருவரும் மாறி மாறி உடலுறவு கொண்ட சம்பவமும் உள்ளதே. அதெப்படி அப்படியான கேடுகெட்ட ஒருவனை அல்லாஜ் நேர்மையாளன் என்கிறா?// நீ மட்டும் இந்த வசனம் குர்ஆனில் இருக்கிறது என்று நிறுபித்து விட்டால் அடுத்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வேளியேறி ஹைதர் என்ற என்னுடைய பெயரை மாற்றி உன்னுடைய சொந்த பெயரான ராம் அல்லது கிருஷ்ணன் என்று வைத்துக்கொள்கிறோன் நீ நேர்மையானவானக இருந்தால் பொட்டபய மாதிரி ஒடி ஒளியாம எனக்கு அந்த குர்ஆன் வசன என்னோடு பின்னூட்டமிடு நீ பதில் சொல்லவில்லையேன்றால் நீ பொட்டபய என்பது எல்லாருக்கும் தெரிந்துவிடும் அம்பி எனக்கு சம பெத தான தண்டம் இதுல எல்லாம் நம்பிக்கையில்லை விரைவில் உன்னுடைய பதிலைக்கன்டு மதமற கத்திருக்கின்றோன் 

    • நீ மதம் மாறாதே! மனிதனாக மாறு. அரேபியக் கழுதையின் காலில் காய்மென்றால், துடிக்கும் உன் மனது, நீ பிறந்து வளர்ந்து தாய் நாட்டின் மேல் கொள். உன் இனமான தமிழனோடு உறவாக வாழ். நீ மதம் மாற நினைத்தாலும் வெட்டப்பட்ட ஆணுருப்பை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்ய வேண்டிய கட்டாயம் வரும். எனவே அதனை தவிர்த்து விடு. .  

      • Stupid , fool, idiot எனும் சொற்கள் எல்லாம் “முட்டாள்” என்பதற்கான சொற்கள் தான். இன்னொரு சொல்லும் உண்டு அது “beef witted’, அதுவும் முட்டாளை குறிக்கும் இன்னொரு சொல் தான். மாடு அதிகம் சாப்பிடுபவனுக்கு மூளை வளர்ச்சி குன்றி போய் beef witted ஆகிவிடுவான். எனவே மாடு சாப்பிடாதே. ஆனால் மாடு சாப்பிட்டால் காமக் கிளர்ச்சி அதிகம் என்பது உண்மைதான். அதற்கு சிறந்த உதாரணம் அரேபியன் முதல் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தானியர் வரை தெளிவாகின்றன. தன் பொண்டாட்டியை வீட்டுக்குள் முக்காடு இட்டு மூடி வைத்து விட்டு ஊர் ஊராக கேவல உறவில் விபச்சாரிகளின் பின்னால் முன்னனியில் நிற்பவர்கள். எல்லாம் மாடு சாப்பிடுவதால் வரும் கிளர்ச்சி. அடடே மாடு சாப்பிடும் ஆண்களின் கிளர்ச்சி இப்படி என்றால், பாதையில் எவளுடையவாவது இடுப்பு தெரிந்தால், ஆசை கிளம்பிவிடுவதாகவும், சமுதாய சீர்கேடுகளுக்கு உடையே காரணம் என்றும் பேசுகிறீர்களே, உங்கள் வீட்டுக்குள் தங்கை, அம்மா, மகள் யாராவது ஆடை கொஞ்சம் அகன்ற நிலையில் இருந்து விட்டால் என்ன நடக்கும்? மாடு சாப்பிட்டதன் விளைவு வெளியில் வந்துவிடுமா? அதே மாட்டை தினமும் சாப்பிடும் பெண்களின் நிலை என்ன? உள்ளூர் சண்டையா? வீட்டுக்குள் விபரிதமா?

        • அதே மாட்டை தினமும் சாப்பிடும் பெண்களின் நிலை என்ன? உள்ளூர் சண்டையா? வீட்டுக்குள் விபரிதமா? வீட்டுக்குள் நுழையும் லெப்பைகளின் விளையாட்டு வித்தைகளுக்கு வாய்ப்பாகி விடுமடா 

        • ஹைதர் ஆழி கேட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள் முஹம்மது ஹுஸ்ஸைன் என்னும் நண்பரே.. கேட்ட கேள்விக்கு பதில்.. அதை விட்டு சொந்த மன் அந்நிய மன் என்று பிதற்ற வேண்டாம்.. ஆதாரத்துடான் கூறினால் ஏற்று கொள்ள தயாராகவே இருக்கிறேன் நானும்//

        • Mohamed Hussain .. இசுலாமிய மதவெறியறை தாக்க மூளையற்ற ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்கள் வைக்கும் முட்டாள்தனமான வாதங்களை வைக்க வேண்டாம், உங்கள் மாட்டுகறி உதாரணம் சுத்த பேத்தல். மரமண்டை என்று நம்மூரில் சொல்வதை போலத்தான் அது…
          மாடுகளை தெய்வமாக கும்பிடுவதனால் ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் கழட்டி விடவில்லை,இந்த உலகமே மாட்டிறைச்சி தின்னும் ஏழை உழைப்பாளி மக்களின் பிச்சைதான்..   

        • அடடா என்ன ஒரு ஆதாரம்.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்ட பாக்கு கிலோ இவ்வளவு தான்னு சொல்லுதிய.. இஸ்லாம் என்ன கூறுதுன்னு கேட்ட பைபிள்ள இப்படித்தான் இருக்குன்னு சொன்னா ஆதாரம் ஆகுமா? பைபிள் தான் கட்டு கதை நெறய இருக்குன்னு நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டு இருக்கோமே.. அது அவ்வளவும் உண்மை தான்னா ஏன்யா இஸ்லாம் வந்துச்சு… இப்படியே சொல்லிட்டு திரிஞ்சீயண்னா என்னத்த சொல்ல?

        • “இஸ்லாத்தின் கொள்கை” என்கிறீர்கள். இஸ்லாத்தினர் கடைப்பிடிக்கும் கொள்கையும், அதனோடுடனான வரலாறும் எப்படி வந்தன? எல்லாம் “இப்ராஹிசம்” எனும் கேவலாமான கொள்கையினையும், அம்மதத்தினரின் வரலாற்று கதைகளியும் கொண்டே இஸ்லாம் எழுந்தது என்பது ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதில்லை? இப்ராஹிசம் விதைத்த ஆதாம் ஏவாள் கதை, நோவாவின் பிரளயம், குஞ்சி வெட்டி இறைவனுடன் ஒப்பந்தம், பலதார மணம், பெண்ணடிமை, கொத்தடிமை கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள். போதாமைக்கு இப்ராஹிமையும் ஒரு நபியாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இப்ராஹிமின் வரலாறும் குரானில் உள்ளது. இப்ராஹிம் எனும் பெயரையும் இஸ்லாமியர் வைத்துக்கொள்கின்றனர். இப்ராஹிம் ஒரு நேர்மையாளன் என இறைவன் அழைத்ததையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் இப்ராஹிம் தனது மகள்கள் இருவருடன் ஒரு இரவு மூத்தவள், இரண்டாவது மகளுடன் மறுநாள் என மாறிமாறி உறவு கொண்டதாக உள்ள கதையை மறைக்கிறீர்கள். முதலில் குரான் வானத்தில் இருந்து விழுந்தது என்று கூறுவதை விட்டுவிட்டு, எவன் எப்படி தனக்கேற்ற விதத்தில் இப்ராஹிசம் குறிப்புகளை குரானாக எழுதி உலகை ஏமாற்றுகிறான் என்று கண்டுப்பிடியுங்கள். இஸ்லாம் என்பவரின் மண்டையில் கொஞ்சமாவது அறிவு வரட்டும்

      • மும்மது உசைன் என்ற பெயரில் வந்துள்ள ஆர் எஸ் எஸ் கங்காணியை அடிச்சு விரட்டுங்கப்பா.. .கொசுக்கடி தாங்கல

        • என்ன பூச்சாண்டி, பதில் சொல்ல திராணியில்லையா? எந்த ஒரு கருத்தையும் நியாயத்துடன் அனுகும் அறிவும் மனப்பக்குவமும் இல்லாதவர்கள் என்பதை அடிக்கடி வெளிப்படுத்தி விடுகிறீர்கள். மண்டையில் மயிர் இருந்தால் மட்டும் போதாது. உள்ளே உள்ளே கொஞ்சம் கொஞ்சம் அது இருக்க வேண்டும். அதுதான் மூலை

      • Mohamed Husain நீ முஸ்லிம் பொய்யான முஸ்லிம் பெயரில் பின்னூட்டம் எழுதுவதை நிறுத்து.

  27. என் பெண்டாட்டி மூடிக்கொண்டு போனால் உனக்கு ஏன் வலிகிது. தேவை என்றல் உன் பொண்டாடியை திறந்து போட்டுகொண்டு போகசொல்லு யார் கேட்க போற.

  28. அன்புள்ள வினவு,

    பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதை நாங்கள் எந்த காரணம் கொண்டும் விவாதிக்கப்போவதில்லை. எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளபடியும், அல்லாஹ் எங்களுக்கு போதித்தபடியும் நாங்கள் நடந்துகொள்கிறோம். அவ்வளவுதான்.
    நபிகள் நாயகம்(ஸல்) பெண்கள் மூடிக்கொண்டு செல்லவேண்டியதில்லை என்று சொல்லியிருந்தால் அதனையும் பின்பற்றுவோம். ஆண்கள் மூடிக்கொண்டு செல்லவேண்டும் என்று சொல்லியிருந்தால் அதனையும் பின்பற்றுவோம். இறையச்சம் என்பது அதுதான். காலத்துக்கு ஒன்றும், காரணத்துக்கு ஒன்றும் மாறும் சட்டங்களல்ல அல்லாஹ்வின் சட்டங்கள்.
    நன்றி

    • நண்பரே,
      பூமிக்கு அடியில் உள்ள பெட்ரோல் பற்றியும், அதனால் உலகின் ஏழை மக்கள் அவதிப்படுவது பற்றியும், இந்த எண்ணெய்க்காக பல போர்கள் நடந்தது பற்றியும், இதனால் பாலஸ்தீன மக்களின் விடுதலை கிடைக்காதது பற்றியும் கூடத்தான் அல்லாவின் சட்டங்கள் எதுவும் சொல்லவில்லை. எனவே இவற்றைப் பற்றி கண்டுகொள்ளாமல் தினசரி ஆண்டவனை மட்டும் தொழுதுவிட்டால் போதுமானது. பாவம் மக்கள்.!!

      • இணையத்தைப் பற்றி மட்டும் அல்லா சொல்லியிருக்கிறாரா? அல்லது அதி ல் வினவு தளம் அல்லாவையே சில்லி பீப் போடும் கட்டுரைகள் இடுவது பற்ற்றித்தான் அல்லா சொல்லியிருக்கிறாரா? பிறகு ஏன் அன்பர்கள் இதனையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டு இங்கு விவாதிக்கிறார்கள்?

      • இந்தியாவிற்கு அணுகுண்டை உருவாக்கிக்கொடுத்த அப்துல் கலாம் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழப் பள்ளிக்கு போயிருந்தால், குண்டூசியையும் கண்டுப்பிடித்திருக்க முடியாது. உழைத்தால் தான் உயர்வு. கற்றால் தான் பட்டம். தொடர் முயற்சி தான் வெற்றி. அறிவுடன் சிந்தித்தால் தான் தெளிவு. சும்மா, ஐந்து நேர தொழுகை ஓதிக்கொண்டிருந்தால் மத்திய கிழக்காசிய நாடுகள் மாதிரி மண்டையில் மயிர் உள்ளவன் மட்டும் என்று தான் கூறிக்கொள்ள வேண்டியதாக இருக்கும் 

  29. Mohamed ஹுசைன்//திருகுர்ஹானில் இப்ராஹிம் என்பவை நேர்மையாளாராக அல்லாஹ் பார்ப்பதாக குர்ஹான் கூறுகிறது. இப்ராஹிமுடன் தமது புதல்வியர் இருவரும் மாறி மாறி உடலுறவு கொண்ட சம்பவமும் உள்ளதே. அதெப்படி அப்படியான கேடுகெட்ட ஒருவனை அல்லாஜ் நேர்மையாளன் என்கிறா?//
    அது மட்டுமா, ஆதாம் ஏவாளுக்கு பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் கூடத்தான் கேவலமான உறவு வைத்திருக்கவேண்டும். அப்படிப்பட்ட நிலையை உருவாக்கிய அல்லாஹ்வை குற்றம் சொல்லாமல், அந்த பிள்ளைகளையா குற்றம் சொல்லமுடியும்? , ஆகவே இப்ராஹிமை அப்படி உடலுறவு செய்யவைத்த அல்லாஹவை குற்றம் சொல்லாமல் இப்ராஹிமையா குற்றம் சொல்ல முடியும்? ஆகவே இப்ராஹிம் நேர்மையாளர்தான். அல்லாஹ்தான் கிறுக்கு..

    பரிணாமவியல் சொல்வது போல ஒரு கூட்டம்தான் மெல்ல மெல்ல மனிதர்களாக மாறியது. ஒரு ஆள் மனிதராக திடீரென்று மாறவில்லை. இது எவ்வளவுதான் முஸ்லீம்களுக்கு புரியவைக்க முயன்றாலும் முடியாது. குரங்குகள் கூட சகோதரர்களோடு அல்லது தாய்தந்தையரோடு உறவு வைப்பதில்லை எனும்போது, எப்படி மனிதர்கள் வைத்திருக்கமுடியும்? ஆனால், பைபிள், குரானில் மனிதர்களை கேவலமாகத்தான் காட்டும். கர்த்தர், அல்லாஹ் என்று கற்பனை செய்தால் அப்படித்தான் கேவலமாக முடியும்.

  30.  எதையும் வாதிட்டு தெளிவு பெறும் மனப்பக்குவத்தை எப்பொழுதுமே குரான் இஸ்லாமியர்களுக்கு வழங்கவில்லை. மதம் எனும் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் மட்டும் தான். மதவாத மனநோயாளர்கள் ஆகிப் போனார்கள். தமிழ்நாட்டில் பிறந்து  தமிழ் பேசி வாழ்ந்தாலும், எங்கேயோ கிடக்கும் அரேபியனுக்கு சொம்பு தூக்கிகிகளாகிப் போனார்கள். பாவமப்பா நீங்கள்  

  31. இஸ்லாம் என்றால் என்ன?  எழுதும் வழக்கு எப்போது ஏற்பட்டது? எழுதியவற்றை புத்தகமாக தொகுக்கும் காலம் எப்போது ஏற்பட்டது? அறிவிருந்தால் சிந்தித்துப்பார்க்கவும், சிந்திக்க முடியுமானால் பொதுஅறிவு புத்தகங்களில் கற்றுக்கொள்ளலாம்.  அல்லாஹ் வானத்தில் இருந்து புத்தகத்தைப் போட்டான் என்று கூறிக்கொள்வது எத்தனை முட்டாள் தனம்????? 

  32. ஒரு இந்து, கிருஸ்தவன் ஒரு நல்லக் காரியத்தின் போது கடவுளை நினைத்து காரியத்தை ஆரம்பிப்பான். ஆனால் முஸ்லீம்கள் ஒருவனை பழியிடும் போதும் “பிஸ்மில்லாஹ் இர்ரஹ்மான் இரஹீம்” என அல்லாவின் திருநாமத்தால் என பழிக்கொடுக்கிறான். இது எத்தனை அயோக்கியத் தனம்??? முதலிரவு அன்றும் பிஸ்மில்லாஹ் சொல்லித்தான் ஆரம்பிக்கவேண்டுமோ?????

    • முதலிரவு அன்றும் பிஸ்மில்லாஹ் சொல்லித்தான் ஆரம்பிக்கவேண்டுமோ????? அதை பற்றி உன் சிவன் சிவன்னிடம் கேள் அவர்களின் லிலை பற்றி உன் விட்டு பெண்கள்…

      • சிவன் என்பது எப்படி கற்பனையோ, அதேபோல் அல்லாஹ் என்பதும் கற்பனை என்று வெளியே வா முத்து பாண்டி. நான் அதைவிட லீலைக்காரன் தெரியுமோ அம்பி. ஒன்றா இரண்டா இந்தோனீசியா இஸ்லாமியப் பெண்கள் என்னம்மா கம்பனி குடுக்குறாள்கள் தெரியுமா? நீ கினற்று தவளையாய் இந்தியா எனும் வட்டத்துக்குள்ளேயே இருந்தால் ஒன்னும் தெரியாது. கொஞ்சம் வெளிநாடுகளுக்கு வந்து பார். எனக்கு மட்டுமல்ல எந்த நாட்டவனானாலும் அவளுகள் அப்படி கம்பனி கொடுப்பாள்கள். பல இந்திய பசங்கள் இங்கே வேலைக்கு போவதே இல்லை. காசும் கொடுத்து, எல்லா வசதிகளையும் அவளுகளே செய்து தருவாள்கள். ஆனால் நீ செய்யும் வேலையை ஒழுங்கா செய்யவேண்டும். இல்லையினா மாடு வேளி தாண்டிரும்.

        • மவனே எனக்கும் தெரியும்.நீ உன் வீட்டு மாட்டை
          கவனி அறுத்துக்கொண்டு ஓடிவிடும். இந்தோனிசிய
          பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள் .அவர்கள்
          இன்னும் பழைய இந்துமத பழக்க வழக்த்தை மாற்றி
          கொள்ளவில்லை.அவர்கள் முழுமையா மாறினால்தான்
          நீ இஸ்லாமியனாக இருந்தாலும் சமனை கொடுக்க
          மாட்டர்கள்.

        • //இந்துமத பழக்க வழக்த்தை மாற்றிகொள்ளவில்லை.// இந்தோனிசியர்களில் பெரும்பாலோனோர் இந்துக்களாக ஒருக்காலத்தில் இருந்துள்ளனர் என்பது உண்மைத்தான். ஆனால் இன்று உலகில் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட நாடும் இந்தோனேசியா தான். இவர்களை ஏன் குரான் சரியான நெறிப்படுத்தவில்லை என்பதே எனது கேள்வி.  தவிர இந்து மத பழக்க வழக்கங்களில் திளைத்தவர்கள் என்றால், நீயும் நானும் இன்னமும் இந்து பழக்க வழக்கங்களில் திளைத்தவர்கள் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் இந்திய தேசத்தில் உள்ளவனெல்லாம்,  இந்துக்களாகவோ அல்லது அதையொத்த சமய வழிப்பாட்டுகளில் இருந்து பிற்பகுதியில் மதம் மாறியவர்கள் தான். அப்படியே இல்லை, நாங்கள் அரேபியர் காலம் தொட்டே இஸ்லாமியர்கள் என்று நீ கூறுவதானால், இவற்றை சற்று வாசித்து உணர்ந்துக்கொள்ளலாம். அரேபியன் வர்த்தகத் தொடர்புகளுக்கு சென்ற எந்த நாட்டுக்கும் அரேபியப் பெண்களையும் அழைத்துச்சென்றதில்லை. தனது பெண்களை மூளையில் முக்காடிட்டு மூடி வைத்துவிட்டு சென்ற இடங்களில் எல்லாம் சேற்றில் இறங்கிக்கொள்ளும் ரகம். அவனுகளிடன் எந்தக்கட்டுப்பாடும் எப்போதுமே இருந்ததில்லை. அவ்வாறு வந்த இடத்தில் அவன் வழி தோன்றியதாக எவனாவது கூறிக்கொள்வானானால் அவன், அரேபியன் சேறு பூசிக்கொண்டதால் பிறந்த ஹராஹாங் குட்டிகளாக மட்டுமே இருக்க முடியும். முத்துப் பாண்டி நீ எப்படி? 

    • சில இந்துகள் சாமிய கும்பிட்டு கொலைகள் கூட சொய்தர்கள் ,குஜராத் உதாரணம்

  33. நல்ல இடுகை ……..பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்????? ஆண்களுக்கும் அப்போ சட்டம் இருக்க வேண்டுமே ……ஆண் என்றால் கதவு திறந்து பேசுவதும் பெண் என்றால் உள் இருந்து பதில் சொல்வதும் , இதிலேயே தெரிகிறது ஆண் ஆதிக்கம் ………..!!!! நல்ல பகிர்வு

  34. மத்தியக் கிழக்கு நாடுகளின் மூத்த மதம் “இப்ராஹிசம்”.  அதுதான்  உலகத்தில் உள்ள எல்லாப் பொய்களுக்கும் புரட்டுக்களுக்கும் காரணமான  மதமும் அதுதான். அது கட்டவிழ்த்த கதைகளில் ஒன்று தான் ஆதாம் ஏவாள் கதை. பழத்தை சாப்பிட்டாதால் ஆசை எழுந்து அம்பு பாய்ந்த கதை. அந்த மதம்தான் முதன் முதலில் “சாத்தான்” எனும் ஒரு கற்பனை எதிரியைக் கட்டவிழ்த்ததும்.  “இப்ராஹிசம்” மதம் அல்லாதோரை எல்லாம் சாத்தான் என அழைத்தனர். “Ibrahism Religion” பார்க்கவும். http://chaos1.hypermart.net/fullsize/wrwestfs.gifஇப்ராஹிசம் மதத்தில் தான் ஆணுருப்பின் நுனியை வெட்டுத்தல், பெண்களை அடிமைப்படுத்தல், சாதாரண ஏழை மக்களை அடிமைகள் என சித்தரித்தல், மந்திரம், மாய வித்தைகள் என நீண்ட வரலாற்றைக் கொண்டது. இதன் வழி தோன்றிய மதம் “யூதாயிசம்”. அதன் பின்னாரான பல கதைகளையும் இணைத்து உருவாகின. யூதாயிசத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் உலகில் உள்ளனர். யூதாயிசம் மதமும் உள்ளது. யூதாயிசம் வழி வந்த மதங்களே கிருஸ்தவம் இஸ்லாம் போன்றன. “இப்ராஹிசம்” கட்டவிழ்த்து கற்பனை கதைகளையே தொடர்ந்தும் நம்பி பின்பற்றி வருகின்றன. பைபிளில் கூறப்படும் “பழைய டெஸ்டிமொனி” முழுதும் “இப்ராஹிசம், யூதாயிசம்” தோற்றுவித்த கதைகள். அவைகளில் சில:1. முதல் மனிதன் ஆதாம் எவாள் 2. சாத்தான்3. வெள்ளப்பெருக்கு நோவா கதை4. நோவா-கடவுள் உடன்படிக்கை5. இப்ராஹிம் சந்ததியினர்6. நரபழியிடல்7. பணிப்பெண்ணுடன் உறவு கொண்டு சந்ததி தோற்றுவித்தல் (16-2)8. சொந்த மனைவியை அடுத்தவனுக்கு கொடுத்து செல்வம் சேர்த்தல் (12-15,16)9. ஆண் உருப்பின் நுனி வெட்டுதல். (ஜெனிசஸ் 17-26)10. ஆடவருடன் உறவு கொள்ளுதல் (19-5)11. தந்தையுடன் புதல்வியர் உறவு கொள்ளல் (ஜெனிசஸ்: 19-32)இப்படி பல கதைகளை “இப்ராஹிசம்” கொண்டுள்ளன. அதையே கடவுளின் புனித நூலாக கருதிவிரும் கிருஸ்தவர்களும், கிருஸ்தவ வழியில் கிட்டத்தட்ட 1600 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இஸ்லாமும் பின்பற்றி வருகின்றன.  

    • அப்ப நீங்க உடும் கதை ராமயணம்,இது முழுக்க முழுக்க இந்திய இந்துகளை
      முட்டாள் ஆக்கிய ஆரியகள், உலகம் பிறந்தது, முதல் மனிதன் ஆதாம் ஏவாள் இதான் உண்மை,இதை நம்பாதவன் முட்டாள்.

      • கொஞ்சம் விட்டா எல்லா மனிதனும் ஆதாம் ஏவாளில் இருந்து தான் வந்தார்களுனு சொல்லினிட்டே இருக்கியே முத்து பாண்டி. இந்தியாவில் தென்னை மரம் இருக்கு. நல்லா பாரு அமெரிக்காவிலும் தென்னைமரம் இருக்கு. ஆப்பிரிக்காவிலும் இருக்கு. இதெல்லாம் ஒரு இடத்தில் இருந்து தான் ஒவ்வொரு நாடுகளுக்கு பரவினுச்சி? அல்லது யாரோ ஒருத்தன் கொண்டு போய் ஒவ்வொரு நாட்டிலயும் நட்டுபுட்டு வந்தானா?  இன்னும் கொஞ்சம் யோசிச்சு பாரு பீப் விட்டட் நைனா, எத்தனை மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடிகள்  ஒரே இணத்துக்குரியவை எத்தனையோ நாடுகளில் இருக்கே எப்புடிப்பா?

  35. //உலகம் தோன்றியது முதல் இறைவனால் அருளப்பட்ட முதல் மார்க்கம்    http://albaqavi.com/home/?p=56

  36. பகுத்தறிவு வாந்திகளே! 

    குறங்குல இருந்து மனிதன் வந்தாங்கிற கேவலமான நிரூபிக்கபடாத கோட்பாட நீ ஏத்துக்கும்போது இஸ்லாம் சொல்லுற வாழ்க்கை தத்துவஙகள நாஙக ஏத்துக்கிறதுல என்ன தப்பு.
    எவ்வளவு சொன்னாலும் இஸ்லாமியர்களுக்கு புறியாதுன்னு சலிச்சுக்கறியே இஸ்லாத்த பத்தி எவ்வளவு சொன்னாலும் உனக்கு புறியுதா??  எங்க புறிந்தா தான் அப்துல்லா (பெரியார் தாசன்) போல இஸ்லாத்த ஏத்துக்குவியே!!!!!!!!!
    ஆனா ஒன்னு! அதிகமா இஸ்லாத்த விமர்சிக்கிறவங்கதான் அதிகமா அத ஏத்துக்கிட்டிருக்காங்க! உனக்கும் ஒரு நாள் தெளிவு கிடைக்கும், இன்ஷா அல்லா

  37. நாடுகள் உடன்படிக்கைகள் செய்துக்கொள்கின்றன. நிறுவனங்களும் செய்துக்கொள்கின்றன. சில தனிமனிதர்களும் உடன்படிக்கைகள் செய்துக்கொள்வதுண்டு. அது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆண்டவன் இப்ராஹிம் அவர்களுடன் எப்படி உடன்படிக்கை செய்துக்கொண்டார் தெரியுமா? [obscured} நுனுயை வெட்டி அல்லாஹும் இப்ராஹிம் இருவரும் செய்துகொண்டனர். எத்தனை அற்புதமான உடன்படிக்கை அது அடா  அடா  !! [obscured} = சுன்னத்து. உடன்படிக்கை 

    • //நாடுகள் உடன்படிக்கைகள் செய்துக்கொள்கின்றன. நிறுவனங்களும் செய்துக்கொள்கின்றன. சில தனிமனிதர்களும் உடன்படிக்கைகள் செய்துக்கொள்வதுண்டு. அது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆண்டவன் இப்ராஹிம் அவர்களுடன் எப்படி உடன்படிக்கை செய்துக்கொண்டார் தெரியுமா? [obscured} நுனுயை வெட்டி அல்லாஹும் இப்ராஹிம் இருவரும் செய்துகொண்டனர். எத்தனை அற்புதமான உடன்படிக்கை அது அடா அடா !! [obscured} = சுன்னத்து. உடன்படிக்கை //

      ஆதாரம் இருந்தால் சமர்ப்பிக்கவும்.

  38. மதவெறி போதை கண்களை மறைக்க தம்மைத்தாமே கேவலப்படுத்தி, அம்பலப்படுத்திக்கொள்ளும் மதவெறியர்களே உங்களின் பிற்போக்குகள் அனைத்தையும் மறைத்துக்கொண்டிருக்கும் திரைகள் அனைத்தையும் களைந்தெரிந்து மிருகங்களை ஒத்த‌ முழு அம்மண நிலையை நீங்கள் விரைவில் அடைய‌ உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  39. இந்த கட்டுரை ஏன் இசுலாமிய அடிப்படைவாதிகளிடம் இப்படி ஒரு பீதியை கிளப்பியுள்ளது????? இத்தனைக்கும் இதில் இசுலாத்தை பற்றியெல்லாம் பெரிய விமரிசனமில்லை, இசுலாமிய பெண்கள் முன்னைக்காட்டிலும் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள், முன்னேற துடிக்கிறார்கள் என்பதை ஒரு பறவைப்பார்வையாய் அருமையாக ஆசிரியர் தொகுத்திருக்கிறார். அந்த மையமான விசயத்தை அம்போ என விட்டுவிட்டு வழக்கம் போலவே சாபம், திட்டு, புலம்பல், நாங்க அதுவாக்கும் இதுவாக்கும எச்சட்றா எச்சட்றா….

    why the hell are you guys so vulnerable????????

  40. பக்கத்து வீட்டு ரஹீனா பேபியை காதலிக்கும் போது இஸ்லாத்திற்கு மாறினால் அவளை கைப்பிடிக்கலாம் எனும் எண்ணம் இருந்தது. ஆனால் தொழில் வாய்ப்புக்காக உக்ரைன் வந்தப் பின் இஸ்லாத்துக்கு மாறாமலே இஸ்லாமியப் பெண்கள் சலுகை தருகிறாள்கள். வீட்டு வாடகை முதல் அனைத்து தேவைகளையும் அவளுகளே செய்து தருகிறாள்கள். நண்பர் ஹுசேன் கூறியது போல் இந்தோனேசியா பெண்கள் தான். முக்காடு இட்டு மூளையில் வைப்பதால் ஒன்றும் கட்டுப்பாடு வந்துவிடாது. ஓடுற குதிரையை பந்தயத்தில் விட்டு பார்க்கோனும், வீட்டை விட்டு வெளியில் வேலை வாய்ப்புக்கு வரும் இடங்களில் தான் இஸ்லாமியப் பெண்களின் உண்மை கட்டுப்பாடு தெரிகிறது. எல்லாம் மாடு உண்பதால் வரும் விளைவு என்றே  நினைக்கிறேன். இந்தியனுக்கு வெள்ளைத் தோல் மேல் மோகம். இந்த வெள்ளை இந்தோனீசியப் பெண்களுக்கு வெள்ளை கருப்பு தோல் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஏ.கே 47 இருந்தால் போதும் 

    • இங்க Mohamed Hussain பேருல எழுதும் ஆள்மாறாட்ட ஆர்.எஸ்.எஸ் அம்பியை கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கப்பா.. முசுலீம திட்டனுமின்னா வந்துட்டாங்க ஆட்டிகினு.. மானங்கெட்ட பயலுக.. உன் சங்கராச்சாரி சீரங்கம் உசாவுக்கு பிரம்ம முகூர்தத்துல கால் மேல கால் போட்டாரே அவருக்கு நீயா சப்ளை ப்ண்ண … அட பீஃப் பிரைய சொன்னேன்…

      • என்ன கேள்விக்குறி எனது கேள்விகள் உங்களுக்கு கேள்விக்குறிகளாக உள்ளனவா? சிந்தியுங்கள் செயல்படுங்கள். ஜப்பான் எனும் ஒரு ஒற்றை நாடு எத்தனை வளர்ச்சியுடன் முன்னோக்கி செல்கிறது! உலகின் பாதி நாடுகள் இஸ்லாமிய தேசங்களாக இருந்தும், பொருளாதார வளர்ச்சி இருந்தும் அறிவு ஜீவிகள் குன்றிப் போனது எதனால் என சிந்தியுங்கள். பெண்கள் என்போர் வெறும் ஆண்களின் கழிவு நீர் அகற்றிகள் அல்லர். அவர்களும் எல்லாத்துறையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் அறிவும் பெற்றவர்கள்.  அவர்களை அடக்கி கட்டுப்படுத்துவது குரான், பைபில், பகவத் கீதை எதுவானால் கக்கூஸில் போடுங்கள். அல்லது வெள்ளைக்காரணுக்கு கொடுங்கள் அது அவனது குண்டி துடைக்க உதவட்டும்..  

    • உங்கள் நோக்கம் என்ன? பொதுவில் பெண்களைக் கேவலப்படுத்துவதுதானா?

    • அய்யா முஹம்மத் ஹுஸைன் என்ற பெயரில் எழுதும் நண்பரே.. உம்முடைய வழியிலே வருகிறேன்.. நீங்கள் கண்ட ஏதோ புர்கா அணிந்த பெண் தவறு செய்கிறாள்; இந்தோணேசிய பெண் தவறு செய்கிறாள் என்பதற்காக புர்கா அணிந்த பெண்களும் அனைத்து இந்தோநேசிய பெண்களும் தவறு செய்பவர்கள் என்று பொருள் கொண்டால்…. (சொல்வதற்கு மன்னிக்கவும்) தமிழ்நாட்டிலே வாழும் ஏதோ ஒரு பெயர் தெரியாத தமிழச்சி தவறு செய்தால், (உதாரணத்திற்கு நண்பர் வால்பையன் தனது 14 வது வயதில் தனது ஆண்மையை நிரூபிக்க காரணமான அந்த பெண்ணால்.. இதை அவரே பகிரங்கமாக ஒத்து கொண்டது. அதனால் குறிப்பித்தேன்) எல்லா தமிழச்சிகளும் தவறு செய்பவர்கள் என்று கூறுவீர்களா? ஏதோ ஒரு இந்திய பெண் வெளிநாட்டில் தவறு செய்தால் அனைத்து இந்திய பெண்களும் தவறு செய்பவர்கள் என்று கூறுவீரா? முதலில் உமது உண்மையான பெயருடன் உரையடடலாமே.. தமிழனுக்கு தனது அடையாளத்தை மறைக்கும் குணம் கிடையாது..

      • சரியாகச் சொன்னாய் ரபீக், ஒழுக்கத்திற்கும் புர்காவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. உங்களுடைய வாதம் சிறப்பானது. 
        நன்றி

        • நண்பரே கலை, நான் எந்த ஒரு இடத்திலும் அவ்வாறு கூறவில்லையே.. ஏன் என் பெயரில் இல்லாததை இட்டு காட்டுகிறீர்.. ஏதோ ஒரு பெண் தவறு செய்தால் ஒட்டு மொத்த பெண்களையும் ஒழுக்கமிழ்லாதவர் என்று கூறுவீரோ? சேலை கட்டிய ஒரு பெண் தவறு செய்தால் சேலை கட்டிய பெண்களுக்கும் ஒழுக்கததிற்க்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவீரா? உங்கள் ஊரில் ஏதோ ஒரு பெண் தவறு செய்தால் உங்கள் ஊரில் உள்ள அனைத்து பெண்டிரும் தவறு செய்வதற்கே பிறந்தவர்கள் என்று கூறுவீரா? பெண்ணியம் காக்க வந்தவர்கள் என்று போற்றி கொள்ளும் நீங்கள் முதலில் பெண்களை மரியாதையாக நினைக்க கற்றுகொள்ளுங்கள்..

      • எல்லா நாட்டிலும் தவறு செய்யும் பெண்கள் உள்ளனர் தான். அதற்கு ஆடை ஒன்றும் காரணமல்ல. ஒரு பெண் கண்ணியமானவளாக வாழ்வதற்கு அவளது மனக்கட்டுப்பாடுகள் தான் காரணமாக முடியும். ஆனால் முஸ்லிம் பெண்களின் கட்டுப்பாட்டுக்கு புர்காதான் காரணம் என்பது சுத்த பேத்தல். வீட்டுக்குள் முக்காட்டிட்டு மூளையில் இருக்கும் வரை எந்த பெண்ணின் ஒழுக்கமும் எவருக்கும் தெரியாது. ஓடுற குதிரையை பந்தயத்தில் விட்டு பார்க்க வேணும். அதாவது வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களை பாருங்கள் அவர்களது நடத்தை தெரியும். மேல நான் கூறியது புர்கா அணிந்தாலும் தவறு செய்பவள் செய்யவே செய்வாள். வீட்டில், ஊரில் அஞ்சி வாழ்பவள், வேறு நாட்டு சூழலில் துணிந்து செய்வாள் என்பதைத்தான் விளக்கியுள்ளேன். புர்கா எனும் ஆடைதான் பெண்களின் கற்புக்கு காப்பரண் எனும் தட்டை வாதத்தில் இருந்து வெளியே வாருங்கள்

        • Hi I know you are a sane man. But why do you say ‘தவறு செய்யும் பெண்கள்’. What do you mean by this? Why do you judge a consensual sex as Wrong?. You need to cleanse yourself still more. Thanks for understanding. I admire your arguments. Keep it up.

      • அட ரபீக்கு, அங்கே ஒருத்தர் முத்து பாண்டி எனும் பேரில வக்காலத்து வாங்கிட்டு இருக்கான். எவனாவது ஒருத்தன் முஸ்லிம் பேரில் அதுவும் முஸ்லிமானின் ஊறிப்போனக் கருத்துக்களுக்கெ எதிர் கருத்து விட்டால், அவனை முஸ்லீம் என்றே ஏற்காத மனநிலையில் இருந்து தானே இந்த கருத்துகள் வருது. ஒட்டுமொத்தத்தில் எல்லா முஸ்லீம்களும் ஒரே மாதிரித்தான் சிந்திபானுகள் எனும் பொது புத்தி தானே அது. அட ரபீக் பீப் விட்டட் முதலில் அந்த தட்டை வாதத்தில் இருந்து வெளியே வாப்பா

      • //தமிழனுக்கு தனது அடையாளத்தை மறைக்கும் குணம் கிடையாது.// அங்கே இலங்கையில் இருக்கும் முஸ்லீம்கள் தமிழ் மொழி பேசிக்கொண்டு, தமிழ் வழி கல்வி கற்றுக்கொண்டு, அம்மாவை உம்மா எனும் எழுதிக்கொண்டு, தமிழனே இல்லை என்கிறானே அதெப்படி? போடுற தொப்பிக்கு எப்படி ஒரு முகப்பு இல்லையோ, அப்படி எந்த அரசியல் இலாபத்துக்காகவும் எதனையும் செய்யும் ஈனப்பிரவிகளாயிருக்கும் இவனுகளை என்னன்னு சொல்றது? 

        • அஸ்ஸலாமு அழைக்கும் Mr Mohamed Hussain ongalukku yaru per வச்சது? alagana பேர. ana poruththam இல்லாத இடத்துல இருக்கு. இலங்கையில் உள்ள முஸ்லிம்களை பத்தி பேச ஒங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. முதலில் எப்படி பேசவது என்று கற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்.

        • அஸ்ஸலாமு ஆழைக்கும், ////இலங்கையில் உள்ள முஸ்லிம்களை பத்தி பேச ஒங்களுக்கு எந்த உரிமையும் இல்ல./// உரிமையை எங்கிருந்து வாங்க வேண்டும் நைனா? வர்த்தகத் தொடபுகளுக்காக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னாசியா நோக்கி வந்த அரேபியர்கள் இந்தியா நோக்கித்தான் வந்தனர். இந்தியாவில் தான் தமது வர்த்தகத்தைத் தொடர்ந்தனர். இந்தியருக்கும் அரேபியருக்குமான தொடர்பு வழுப்பெற்ற பின் தான் அரேபியன் இலங்கைக்கும் அப்பப்போது சென்று வந்தான். இந்தியரான நாம் இஸ்லாத்திற்கு மார்க்கத்தை கடைப்பிடித்தாலும் தமிழன் என்று தானே சொல்லிக்கொள்கிறோம். நம் நாட்டுக்கு வந்த அரேபியன் இலங்கைக்கு போனதால், இலங்கையில் உள்ள தமிழனில் கொஞ்சப் பேர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவிக்கொண்டு தன்னை தமிழனே இல்லை என்கிறானே அது எப்படி? உண்மையில் இது நியாயமா? வரலாறு தெரியாவிட்டால் மீண்டும் ஒரு முறை நன்றாக படித்துத் தெளியவும். அரேபியன் எந்த நாட்டுக்கும் வர்த்தகப் பயணத்தை மேற்கொள்ளும் போது அரேபியப் பெண்களையும் அழைத்துச் சென்றாதாக எந்த வரலாறும் இல்லை. தப்பித்தவறி அங்குள்ள பெண்களுடன் ஒரு கலப்பு உறவு ஏற்பட்டிருந்தால் கூட அவர்கள் எல்லாம் அராஹாங் குட்டிகளே தவிர அரேபியரின் வழித்தோன்றல்கள் என்பது பிழைத்தானே? 

      • Those who talk about purka.My questionto you.**** You insist that the woman should cover her body except eyes,wrist and foot to protect from the evil eyes of other men.I 100% agree.Now suppose your wife is going another wman with purka.(You may say no we do not allow our woman to go without us)Will you be able identify her.

        Infact your wife will say who is going with another man next to you “see this idiot does not know who am I”.

        Another question – **** Allah says that he has created this world and everything in 6 days.I fully agree with you.Now what was he doing after creating this world for so long.There is scientific evidence that human kind was existing even before islam and PBUH.It;s a real comedy that Allah took 6 days to create the world and 23 yeras to give quran.Highly idiotic thing is he has given to a man who is ileeterate.How did he remeber everything,what ever has been given by allah thorugh n angel.and put them as a book..
        If Allah thinks he can create billions of PBUH.Why was he waiting for PBUH???I know why?Bcause he was goond like Mullah Oamr of Afghanistan.He was pissed off by seeing the people following other religions and worshipping idols.etc.He wanted to start his own religion and invented this islam.He kileed and tortured whoever does not want to join his party.This is what common sense tells you.*****Another funny thing that if you pray other than Allah you will go to heaven and you will virgins and live in a beautiful villa with garden etc.You guys then pary all the time Allah only.Why you get marry now you will egt them in heaven.There is an instatnt lottery in islam For that you need not enter in to any scheme.You have to die as a martyr only.Allah will be waiting in heaven with this virgins for you.

        Another question islam allows a man to marry up to 4 wives.Why?Any justification????Why not the same rule applies to a woman??To all those who are die hrd followers will you agree to give your daughter/sister as bride to man who is having 3 wives because it is allowed in islam.

  41. வினவு தோழர்கள் தங்கள் விவாதங்களை மையத்துக்கு திருப்புமாரு கேட்டுக்கொள்கிறேன்.

    • ஆம். பல சமயங்களில் இது போன்ற ’இஸ்லாமிய வழக்கங்கள்’ பற்றிய பதிவில் ஏன் தான் பின்னூட்டம் இட்டு mail subscribe செய்தோம் என்று நொந்துக்க வைக்கும் அளவிற்க்கு செல்கின்றன. Inbox நிரம்பி வழிந்து, சில நாட்களில் பின்னூட்டங்களை unsubscribe செய்ய வேண்டிய கட்டாயம், சில பதிவுகளில். ஆள விடுங்க சாமி என்று சொல்லும் அளவிற்க்கு. இந்த பதிவிலும் அப்படி ஆகாமால் காக்க அல்லாவை பிராத்தனை செய்கிறேன். இன்ஸா அல்லா.

      • எந்த ஒரு விஷயமும் சரி என்று படுகையில் அதை தவறென்று கூறுபவருடன் கருத்து மோதல் தொடர்ந்து கொண்டிருக்கவே செய்யும்… நீங்கள் எதை எழுதினாலும் அதை அப்படியே வாசித்து விட்டு அதியமான் mail inbox  நிரம்பி விடும் என்பதற்காக அப்படியே விட வேண்டும் என்று சொல்ல வருகிறீரா? எந்த ஒரு இடத்தில் நியாயம் இருப்பதாக தெரிகிறதோ அதை ஆதரித்து கருத்துகள் வந்து கொண்டே தான் இருக்கும்.. நீங்கள் உங்கள் தரப்பில் நியாயத்தை உணர்ந்தது போல

  42. தோழர் கேள்விக்குறிக்கு, ஆங்கிலேயனுக்கு அரிசி + ரைஸ் எனும் சொல்லை மட்டும் தமிழர்கள் வழங்கவில்லை. அரிசியை, விவசாயத்தையே முதன்மையத் தொழிலாகக் கொண்ட ஏழை பாட்டாளிகளின் வழியினராகவே தமிழர் வாழ்ந்தனர். தமது விவசாயப் பணிகளுக்கு மாடு பேருதவியானது. உயிருள்ள இயந்திரமானது. இதனால் அதனை மதிக்கும் வழக்கும் தமிழர்களிடையே தோன்றியது. அது வேறு விடயம். தவிர மாட்டை கடவுள் என கூறுபவன் நானல்லன். ஆர்.எஸ்.எஸ் அடிவருடியும் நானல்லன். 

  43. சகோதரர் ரபீக் அவர்களுக்கு நான் அலுவலக வேலையில் இருப்பதால் இப்பொது என்னால் பின்னூட்டம் போடமுடியவில்லை மற்றபடி நீங்கள் ஒரே சமயத்தில் இறுமுனை தக்குதல்களை எதிர்கோள்ளும் விதம் மிக அருமை மாலை ஆறு மணிக்கு மேல் கண்டிப்பாக நான் கேட்ட கேள்விகளை தெடர்வேன் அவர்களுடைய ஒவ்வோரு கேள்விக்கும் பதில் சொல்லுவேன் இன்ஷா அல்லாஹ்

    • மிக்க நன்றி ஹைதர் அலீ அவர்களே.. ஏதோ என்னால் இயன்ற அளவு விளக்கம் கொடுக்கிறேன்.. இதை புரிந்து கொண்டு எவரேனும் ஒருவர் நேர்வழி பெற சிந்தித்தாலும் போதுமே என்ற நப்பாசையில் தான்… வல்ல இறைவன் நாம் எல்லோரையும் நேர் வழியில் வாழ விழைவானாக..

  44. பொதுவில் ஆண்களும் பெண்களும் ஒழுக்கமற்றவர்கள் அவர்களை ஒழுக்கமாக்க ஒரு மதம் வேண்டும் என்ற தட்டையான புரிதலினால் பேசப்படும் வாதங்களுக்கு பதில் பேசுவது வெட்டி வேலை. 

    ஒழுக்கத்தை தீர்மானிப்பது அவரவர் வாழ்நிலையும் வர்க்கமுமே அன்றி மதமில்லை! கட்டுரையாளர் கூட ஏழை மற்றும் நடுத்தர வர்க்த்து முசுலீம்களை ஒப்பிட்டு அழகாக விளக்கியுள்ளார். அதனைக்கூட புரிந்து கொள்ளாமல் பேசினால் எப்படி 

  45. ஒரு சில முஸ்லிம்கள் தவறு செய்கின்றகள் என்பதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தவறானவர்கள் என்பது எந்த விதத்தில் நியாயம். ரஞ்சிதா, சிவகாசி ஜெயலட்சிமி,புவனேஸ்வரி , பிரேமானந்தா, கல்கி போன்ற எல்லோருமே இந்துக்கள் தான் அதனால் எல்லா இந்துக்களும் நடத்தை கெட்டவர்கள் என்று ஆகிவிடுமா?

    • ஒரு சில முஸ்லிம்கள் தவறு செய்கின்றகள் என்பதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தவறானவர்கள் என்பது எந்த விதத்தில் நியாயம்// உலகில் மற்ற மதத்தவர்களை விட இஸ்லாமியர்கள் மட்டுமே மதத்தால் ஊறிப்போய் பீப் விட்டட் ஆனவர்கள். கொளுத்தும் வெய்யிலில் ஆண்கள் சேட்டை கலட்டிக்கொண்டு இருக்கும் போதும், நெற்றி வியர்வை .. வடிய முக்காடு போட்டுக்கொள் என்று பெண்களை கட்டாயபடுத்தும் மதம். அரேபியப் பெண்களே இன்று அதற்கெதிராகக் குரல் கொடுக்கத் துணிந்துவிட்டனர். ஆனால் இஸ்லாம் எனும் மாயையில் வீழ்ந்தோர் அவற்றின் நியாத்தன்மையை புரிந்துக்கொள்ள முடியாமல் உள்ளனர் என்பதே சாபக்கேடு.  இங்கே நான் ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தவறானவர்களாக கூறவில்லை. எல்லா மனிதர்களைப் போன்றவர்களே முஸ்லீம்களும். ஆனால் அவர்களை பீப் விட்டட் ஆக்குவது இஸ்லாம் எனும் குரான் விதைக்கும் மூடக்கருத்துக்கள் தான். குரானின் சரி பிழைகளை ஆய்ந்து அறியாது வெறுமனே அதனை சுத்தம் செய்ய முனையும் பொது புத்தியும் ஒருங்கே எல்லா இஸ்லாமியர்களிடமும் காணப்படுவது தான். இஸ்லாமியப் பெண்கள் இஸ்லாமிய தேசங்களை விட்டு வெளியேறியவுடன் அதிக சுதந்திர விரும்பிகளாகவும், உல்லாச விரும்பிகளாகவும் காரணமும் அதுதான்.  

  46. //சினமுறச் செய்யுமே தவிர சிந்திக்க வைக்க உதவாது. எனவே அந்த வரியை நீக்குகிறோம். தொடர்ந்து விவாதியுங்கள்//

    ஏற்றுக் கொள்கிறேன். இனி கவனமுடன் பின்னூட்டமிடுவேன்

  47. மும்மது உசைனை குப்பைத் தொட்டிக்கு அனுப்ப வேண்டி விண்ணப்பிக்கிறேன். அவர் விவாதத்தை பெருவாரியாக திசை திருப்பி சென்று விட்டார்.

    • எந்த கருத்துக்கும் பதில் சொல்ல திராணியற்ற நிலையில் குப்பைத் தொட்டிக்கு அனுப்பச்சொல்வதும், அடித்து நொறுக்குவதுமே உங்கள் கொள்கையாகிவிட்டது. அறிவு எனும் சொல்லையே குரான் விழுங்கிவிட்டதால் அது உங்களிடம் இல்லை என்றும் ஆகிவிட்டது. 

      • சல்மான் ருஸ்தி இஸ்லாத்திற்கு எதிராக எழுதிய கருத்துக்களுக்கு இதுவரை எந்த அறிவுள்ள இஸ்லாமியனாலும் ஏன் பதில் சொல்ல முடியவில்லை உங்களால்? கருத்தை கருத்தால் எதிர்ப்பதை விட்டுவிட்டு, கண்ட இடத்தில் மரணத் தண்டனை வழங்கும் படியான தீர்ப்பை ஏன் இஸ்லாமிய மதவாத நாடுகள் விடுத்தன? அறிவுத்திறன் அற்றதால் தானே?

        • அய்யா அடுத்தவன் பெயரில் வரும் தன்மானமில்லாத இழி பிறப்பே..  (மற்ற நண்பர்கள் மன்னிக்கவும்.. காரணம் பிறப்பு சரியாக இருந்தால் தன்னுடைய அடையாளத்தை மறைத்து கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் வருவதில்லை.. முக்கியமாக தமிழனுக்கு தன்னுயிரை விட தன்மானம் பெரிது) முதலில் உன்னுடைய சொந்த பெயரில் சொந்த முகவரியில் வா..

        • அடையாள அட்டை, பாஸ்போர்ட் இலக்கம், கோத்திரம் எல்லாம் அறிவித்துக்கொண்டு கருத்தாடத் தேவையில்லை ரபீக் நானா. முகம்மது ஹூசேனை என்பது எனது பெயர்தான். ஆனால் என்ன நான் இஸ்லாம் மார்க்கத்தை கடைப்பிடிப்பதில்லை. காரணம் இந்து, கிருஸ்தவம் போன்ற மதங்களில் எதிர்கருத்திட்டு வாதிடும் அளவுக்கேனும் ஒரு இஸ்லாமியனால், தனது மதக்கோட்பாடுகள் குறித்து எந்த கருத்தும் வைக்க முடியாது. மாற்றுக் கருத்துக்களை யாரும் கூற முடியாது. இஸ்லாம் கோட்டுக்குள்ளே மட்டும் தான் வாழவேண்டும் எனும் கட்டாயக் கட்டுப்பாடை யாரும் மீறக்கூடாது. வளர்ந்து வரும் உலகில் சொந்தமாகவும் சிந்திக்க விடாத ஒரு மார்க்கம் எதுக்கு என்று ஒதுக்கித் தள்ளிவிட்டேன். ஆனால் பெயர் மட்டும் அவலட்சணமாக ஒட்டிக்கொண்டுள்ளதை இட்டு நானும் கவலைப்படுகிறேன். இணையத்தில் பெயர்மாற்றுவதற்கான பதிவகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்

        • ***************பக்கத்து வீட்டு ரஹீனா பேபியை காதலிக்கும் போது இஸ்லாத்திற்கு மாறினால் அவளை கைப்பிடிக்கலாம் எனும் எண்ணம் இருந்தது*************
          மேற்கண்ட தத்துவ முத்தை உதிர்த்தது யாரென்று நான் தேடி கொண்டிருக்கிறேன்… அப்போ அந்த முஹம்மத் ஹுஸ்ஸைந் என்னும் பெயரில் வந்த வீணா போன வெங்காயம் நீங்கள் தான் என்று தவறாக எண்ணி விட்டேனோ?

        • சல்மான் ருஸ்தி இஸ்லாத்திற்கு எதிராக எழுதிய கருத்துக்களுக்கு இதுவரை எந்த அறிவுள்ள இஸ்லாமியனாலும் ஏன் பதில் சொல்ல முடியவில்லை //
          அப்ப நீ இஸ்லாமியன இருந்தால் பதில் சொல்.இல்லை
          என்றல் உன் பெயரை மாற்று .

        • முத்துப் பாண்டி, அப்படி பதில் கூறக் கூடிய அறிவுக் களஞ்சியமாகவோ அல்லது சரியான விளக்கங்களை முன்வைத்து வாதிடக்கூடிய கருத்துக்களோ இஸ்லாத்தில் இருந்திருக்குமானால் நான் மட்டுமல்ல உலகு வாழ் இஸ்லாமியர்கள் எல்லோரும் தமது கருத்துக்களை  முன்வைத்து சல்மான் ருஸ்தியின் கருத்துக்களை பொய்யென நிரூபித்திருப்பர். ஆனால் அப்படி நிரூபிப்பதற்கான எந்த அறிவியல் சமூகவியல் கருத்துக்களும் குரானில் இல்லை. இப்ராஹிசம் பரப்பிவிட்ட பொய் பரப்புரைகளே அவை. இங்கே நான் மட்டுமல்ல எந்த கொம்பனாலும் இஸ்லாத்தின் கூற்றுக்களை நியாயம் என நிலைநிறுத்த முடியாது. 

  48. ஏன்யா இவ்வளவு வக்காலத்து வாங்கிரிர்களே உங்கள் கடவுளிடம் முரயிடவேண்டியதுதானே அல்லா அல்லா நீயபார்த்து இவர்களுக்கு நல்ல புத்திகொடு. பண்ணி தின்னாம பார்த்துக்க பார்த்தவை பத்தி பதிவு ஏத்தம பத்துக்க சிகப்பு புத்தகத்தை படிக்காம பத்துக்க குறிப்பா அறிவு வளராம பத்துக்க அப்பதான் 1400 வருடத்துக்கு முன்ன வந்த புன்ன இப்பவும் நொண்டி மனந்துக்கலம் என்னு. ஏன்யா அவருக்கு இல்லாத சக்தியா???????? உங்களிடம் உண்டு நீங்க தான் அல்லாவ நம்புவதில்லை அதுதான் அவருக்காண்டி நீங்க வக்காலத்து வாங்கிறிங்க.காலத்துக்கு காலம் மாறும் மதமும் கடவுள் கோட்பாடும் இப்ப அல்லாவா முஸ்லிமா இருக்கு நாளைக்கு “அல்லாவே வந்தாலும்”தான் விட்ட தவறை உணர்ந்து தக்கொலை செய்துகொள்வார்.மதமும் கடவுட் கோட்பாடும் இவுலகில் நிரந்தரமில்லை.மானுடகாதலை தவிர.arivaal அழகுணர்

  49. //நீங்கள் பெண்ணுறிமை என்ற பெயரில் இஸ்லாமியர் வீட்டு பெண்களின் அங்க அழகுகளையும் ரசிக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள்.//

    பார்த்துகோங்க வினவு! பர்தா பற்றி பேசினால் டூ பீஸில் போக சொல்றோம்னு அர்த்தம் பண்ணிகிறவங்களை என்ன சொல்வது! சுடிதார், சல்வார் எல்லாம் மறைக்கும் உடையல்ல! அவை அப்படியே மறைத்தாலும் பர்தா போடாட்டி அது இஸ்லாம் பெண்ணல்ல என்பது தான் இவர்களது புரிதல், சமூகத்தில் மற்ற மனிதர்களை போல் வாழலாமே என்றால் இல்லை நாங்கள் இப்படி தான் பிற்போக்குதனமா பேசுவோம், திரிவோம் என்கிறார்கள்!

    பொண்டாட்டியை அடிப்பதை கூட ஒரு மதம் சொல்லிதருமா என்றால், நல்ல விசயம் தானே என்கிறார்கள்! 1500 வருடத்திற்க்கு முன் இருந்த அடிமைத்தனம், பிற்போக்குதனத்தை வாழும் சூழ்நிலைகேற்ப மாற்றி கொள்ளாமல் அப்படியே தான் கடைபிடிப்போம் என்பது முடக்குவாதம்!

    நாம என்ன தான் புரியவைக்க முயன்றாலும் அங்கே கொஞ்சம் கூட ஏறாது, ஏன்னா அது ஓட்டைபாத்திரம், பார்பானை கூட திருத்திறலாம் போல, இவர்கள் அதைவிட மோசமான நிலையில் இருக்கிறார்கள்!

    • //பர்தா பற்றி பேசினால் டூ பீஸில் போக சொல்றோம்னு அர்த்தம் பண்ணிகிறவங்களை என்ன சொல்வது! சுடிதார், சல்வார் எல்லாம் மறைக்கும் உடையல்ல!  அவை அப்படியே மறைத்தாலும் பர்தா போடாட்டி அது இஸ்லாம் பெண்ணல்ல என்பது தான் இவர்களது புரிதல்//

      அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான்

    • அய்யா வால் பையன் மற்றும் கும்மி அவர்களே, நான் ஏற்கனவே கூறியாவற்றை நீங்கள் படிக்கவில்லையா இல்லை படிக்க மனம் இல்லையா? சுடிதார் ஸல்வார் கூடாது என்று எங்கே கூறினோம்.. தான் அங்க அழகுகளை வெளிப்படுத்தாமல் அணியும் எந்த உடையும் புர்க்காவே தான்.. முதலில் புர்கா என்றால் கருப்பு நிற அங்கி என்பதிலிருந்து வெளி வாருங்கள்.. மேலும் கருப்பு நிற முழு அங்கியிலும் தனது அங்க அழகுகளை வெளிப்படுத்துமாறு போட்டு கொண்டாலும் அத்தனை புர்கா இல்லை என்றே தான் நாங்கள் கூறுகிறோம்… அதற்காக சுடிதார் என்ற பெயரில் இறுக்கமாக அழகுகள் எடுப்பாக தெரியும் வண்ணம் போட்டு கொண்டால் அது புர்கா ஆகாது..

      • //ஏற்கனவே கூறியாவற்றை நீங்கள் படிக்கவில்லையா இல்லை படிக்க மனம் இல்லையா? சுடிதார் ஸல்வார் கூடாது என்று எங்கே கூறினோம்//

        இஸ்லாமிய பெண்களீன் அங்கங்களை ரசிக்கவே நாங்கள் பர்தாவை பிற்போக்குதனம் என்கிறோம் என இதற்கு முன் பின்னூட்டம் போட்டது நீங்கள் தான்!

        //சுடிதார் என்ற பெயரில் இறுக்கமாக அழகுகள் எடுப்பாக தெரியும் வண்ணம் போட்டு கொண்டால் அது புர்கா ஆகாது..//

        ஆகா உங்களுக்கு அது எப்படியாவது புர்கா ஆக வேண்டும், இல்லையென்றால் மறுமையில் அல்லா உங்கள் டவுசரை அவுத்து விடுவார் என்ற பயம்!

        பத்தாம் வகுப்பு படிக்கும், 50 இஸ்லாமிய சிறுமிகளையும், 50 இஸ்லாமிய சிறுவர்களுக்கும் ஐ.கியூ டெஸ்ட் எடுப்போம், யார் அதிக மார்க் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்! சிறுமிகள் அதிக மார்க் வாங்கினால் அவர்களுக்கு ஆண்களை விட அதிக அறிவு இருக்கிறது என்று ஒப்பு கொண்டு அவர்கள் சுதந்திரத்தில் உடை அணிய அனுமதிப்பீர்களா!?
        புஜபல பராக்கிரமம் மிக்க ஆணாதிக்கவாதிகளே!

        ஒருத்தன் தெரியாம நாசமா போறது வேற, வீம்புக்கு நாசமா போறது வேற! மதவாதிகள் என்ன லிஸ்டுன்னு ஊருக்கே தெரியும்!

        • **********ஆகா உங்களுக்கு அது எப்படியாவது புர்கா ஆக வேண்டும், இல்லையென்றால் மறுமையில் அல்லா உங்கள் டவுசரை அவுத்து விடுவார் என்ற பயம்! *********அய்யா வால்பையன், புர்கா என்றால் என்ன என்பதை விளக்கி கூறியும் அந்த வார்த்தை தான் உம்மை உசுப்பி விடுகிறதா? முதலில் புர்கா என்னவென்றால் விளங்கி கொள்ளும்… அந்த வார்த்ைத்தான் பிரச்சினை என்றால் வேறு எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்.. தவறு யார் செய்தாலும் தவுஸர் காலத்துவது மட்டுமல்லஅவர்களின் வால் அல்லாவின் முன்னர் விசாரணையில் ஒட்ட நறுக்கப்படும் என்பதையும் நாங்கள் பரிபூரணம்கஅ நம்புகிறோம்..***********இஸ்லாமிய பெண்களீன் அங்கங்களை ரசிக்கவே நாங்கள் பர்தாவை பிற்போக்குதனம் என்கிறோம் என இதற்கு முன் பின்னூட்டம் போட்டது நீங்கள் தான்***********அங்கங்களை மறைத்து கொள்ளுங்கள் என்று நாங்கள் கூறுகிறோம்.. நீங்கள் மறைக்க கூடாது என்கிறீர்.. இதில் என்ன அர்த்தத்தை நான் புரிந்து கொள்வது?

      • இஸ்லாமிய பெண்களின் அங்கங்களை ரசிக்கவே நாங்கள் பர்தா அணிவது பிற்போக்குதனம் என்று கூறுவது போல் இருந்தது உங்கள் முந்தய பின்னூட்டம், மீண்டும் ஒருமுறை அதை பார்க்கவும்!

  50. அஸ்ஸலாமு அலைக்கும் ….
    கட்டுரையை எழுதிய சாகித் & அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு விபரத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

    இஸ்லாம் இறைவனின் மார்க்கம். அந்த இறைவன் தனித்தவன். அவனே படைப்பவன், பாதுகாப்பவன், அழிப்பவன், மீண்டும் படைக்கும் ஆற்றல் பெற்றவன் எவரையும் எதனையும். இறைவன் தனது இறுதி தூதருக்கு வழங்கிய இறுதி வேதமே குர் ஆன். இறுதி தூதர் முகம்மது நபி இறைவனின் வழிகாட்டுதல் படி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். குர் ஆன் மற்றும் நபியின் வாழ்க்கை வழிமுறை வழிகாட்டுதலை எவர் பின்பற்றி வாழ்கிறாறோ அவர் மறுமையில் வெற்றி பெற்றவராக சொர்க்கம் புகுவார்.

    குர் ஆன் மற்றும் நபியின் போதனைபடி இவ்வுலகில் வாழ்ந்தால் ஏழையாக இருந்தாலும் அவர் மறுமையில் சொர்க்கத்தை பெற்றுக்கொள்வார். இல்லையேல் நாட்டை ஆண்ட மன்னராக இருந்தாலும் சொர்க்கத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்.

    சாகித் அவருக்கு ஆதரவாக உதாரணங்களை சொன்னார். எனக்குத் தெரிந்த ஒரு சகோதரி தனக்கு பார்க்கப் பட்ட மாப்பிள்ளை புர்கா அணியக்கூடாது என்ற சொன்னதால், அந்த மாப்பிள்ளையையே வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

    சாகித்யுடைய கட்டுரையில் ஏகப்பட்ட அபத்தங்கள் உள்ளது. நான் உங்களை கேட்டுக்கொளவது, இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு முன்பு அதனுடைய அடிப்படையான குர் ஆனை படியுங்கள், தமிழ் மொழிபெயர்ப்பில் அறுநூறு பக்கங்களே உள்ளது.

    மிகப் பிரபலமான நாத்திகவாதியாக இருந்த பெரியார் தாசன் அப்துல்லாஹ்வாக மாறியது குர் ஆனை படித்து தான். முஸ்லிம்களை பார்த்து அல்ல என்று அவரே கூறி இருப்பது இதற்கு பெரியச் சான்று.

    அன்புடன்
    அனீஸ் முனவ்வர்

    • //குர் ஆன் மற்றும் நபியின் போதனைபடி இவ்வுலகில் வாழ்ந்தால் ஏழையாக இருந்தாலும் அவர் மறுமையில் சொர்க்கத்தை பெற்றுக்கொள்வார். இல்லையேல் நாட்டை ஆண்ட மன்னராக இருந்தாலும் சொர்க்கத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்.//

      வாங்க அனீஸ் முனவ்வர், திரும்பவும் உலகம் உருண்டைன்னு முதல்ல இருந்து பேசுவது கடினம். பின்னூட்டங்களை எல்லாம் பொறுமையாக படித்து விட்டு அப்புறம் விவாதியுங்கள். உங்க கருத்தைப் பார்த்தால் உங்கள் வாழ்க்கையில் குர்ஆனைத்தவிர வேறு எதையும் படித்ததில்லை என்று தெரிகிறது. அதுவும் கூட அல்லா சொன்னது என்று நீங்கள் திருப்தி அடையலாம்.

      போகட்டும், ஏழைகளுக்கு மறுமையில் சொர்க்கம் அதுவும் இசுலாமியராக இருந்தால்தான் என்று உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. உங்கள் நண்பர் ரஃபீக் இது கூடத் தெரியாமல் வறுமையை ஒழிக்கலாம் என்றெல்லாம் பேசுகிறார். எப்படியோ இந்த உலகில் ஏழைகள் இருப்பதை குர்ஆன் நியாயப்படுத்துகிறது. இது பணக்காரர்களுக்கு நல்ல சேதி. ஆனால்அந்த ஏழைகள் இந்த மதக்குப்பைகளை தூக்கி வீசிவிட்டு தங்கள் வாழ்க்கையை சுரண்டும் இகலோக முதலாளிகளை எதிர்த்து போராடித்தான் வருகிறார்கள். ஒரு நாள் அதை நிறைவேற்றவும் செய்வார்கள். அதனால் உங்கள் புனித நீதி அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாது. ஆனால் இதை நீங்கள் எந்தக் கால்த்திலும் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் ஒரு சோகமான நகைச்சுவை. என்ன சிரிக்கவும் முடியவில்லை, அழவும் முடியவில்லை.

    • இந்த கட்டுரையை எழுதியது சாகித் என்ற ஒரு இந்து வெறியர்,ஒரு உண்மையான முஸ்லிம் இப்படி எழத மாட்டான்.

    • இஸ்லாம் இறைவனின் மார்க்கம். அந்த இறைவன் தனித்தவன். அவனே படைப்பவன், பாதுகாப்பவன், அழிப்பவன், மீண்டும் படைக்கும் ஆற்றல் பெற்றவன் // இறைவன் எப்போது எங்கு எவரிடம் அப்படி கூறினான்?  எல்லாவற்றையும் படைத்தவன் அவனென்றால், அவனை படைத்தது யார்? 

    • எனது உறவு பையன்ஒருவனுக்கு பெண்பார்த்போது அப் பெண் புர்கா போடச் சொல்லக் கூடாது என்று கண்டிஷன் போட்டே திருமணம் செய்துக்கொண்டார்

      • அவ்வாறான பெண்கள் நிறையவே இருக்கின்றனர். ஹாங்காங்கிற்கு அன்மையில் சென்றிருந்தேன் அங்கே, ஹாங்கா தமிழ் சங்கத் தலைவர் மொகமது யூனூஸ் அவர்களை சந்தித்தேன். அவர் இஸ்லாம் மார்க்க நெறிகளில் மிகவும் பற்றுக்கொண்டவர். அரேபிய நாட்டு அரசுடன் பல மில்லியன் நிதி உதவி பெற்று பள்ளிவாசல் ஒன்றையும் கட்டியவர். ஆனால் அவரது மூத்த மகள் பிரஞ்சு காரரை காதலித்து இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார். இரண்டாவது மகள் இங்கிலாந்து காரரை விரும்பி அவருடன் வாழ்க்கை நடத்துக்கிறார். ஹாங்காங் சட்டத்தின் படி பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தாமாகவே சுயமாக முடிவெடுக்கும் சட்டங்களைக் கொண்டுள்ளதால், அவராலேயே அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படியான பல நிகழ்வுகளை நான் ஹாங்காங்கில் பார்த்தேன். மாறி வரும் உலக ஒழுங்குகள் மதவாத மனநோயாலர்களுக்கு மட்டுமே இன்னமும் புழப்படுகின்றதில்லை. 

    • அனீஸ் முனவ்வர், இஸ்லாம் எதோ கட்டுக்கோப்பான மார்க்கம் என்று நினைத்து அதனை தழுவி, குரானை படித்து அதன் ஓட்டைகளும் ஓட்டு மாட்டு வித்தைகளும், சமுதாயத்திற்கு உதவாது இன்னும் சொல்லப்போனால் ஒரு சமுதாயத்தை முற்று முழுதாக மழுங்கடிக்கும் விஷமே குரான் என்று விட்டு வீசியெறிந்த என்னைப் போன்றோர் பட்டியலை நீங்கள் ஏன் எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை? சல்மான் ருஸ்தி போன்றவரும் இஸ்லாத்தைப் பின்பற்றி அதன் ஒழுக்கேடுகளை நூலாக எழுதிக்காட்டி விட்டு வெளியேறியவர்கள் தானே, அதனை ஏன் குறிப்பிடுகிறீர்கள் இல்லை?

      • முதல்ல நீ உன் பொண்டாட்டி வேற ஒருத்தன் கூட போகம பத்துக்க
        மத வெறி பிடித்த நாயே

  51. நண்பர் வினவு,ஏதோ நீங்கள் கூறுவது போல உலகெங்கிலும் இஸ்லாமியாரின் வீட்டு பெண்கள் எந்த வேலையும் செய்வதில்லை என்பது போலவும் காஷ்மீறில் ஆப்பிள் தோட்டங்களில் எல்லாம் இஸ்லாமியர் அல்லாத வீடு பெண்கள் மட்டுமே வேலை செய்வது போலவும் பேசுகிறீர்கள்.. நீங்கள் உ.பி. போன்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை முறையை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.. நீங்கள் சொல்வது போல அதைவிட மோசமாக வறுமைய்யிலே வாடும் அவர்களும் உழைக்கும் வர்க்கத்ினர் தான்.. “”***************ஆனால் அப்படி அலங்கோலமாக வாழும் பெண்கள் இசுலாத்தின் படி கீழானவள். ஏனெனில் தனது அங்கங்களை காட்டி ஆண்களுக்கு கிளர்ச்சியை தூண்டுகிறாள் என்று அவர்களை இழிவாகவும் பேசுகிறீர்கள்******************** வினவு.”””””இப்படி நான் எங்கே கூறினேன்..  
    “*********************நீங்கள் வசதியாக வாழ்வதற்கு மற்ற பெண்கள் அங்கங்களைக்காட்டி வேலைசெய்யவேண்டும். உங்கள் மதத்தின் புனிதத்தை காப்பாற்றுவதற்கு உங்கள் வீட்டு பெண்கள் புர்காவோடு முடங்க வேண்டும்***********************-வினவு” 
    நீங்கள் கூறுவது உங்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா? அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தியது போலவும் எங்கள் வீட்டு பெண்கள் அவ்வாறு வேலை செய்ய ஆசை பட்டு அதனை நாங்கள் தடுத்தது போலவும் இருக்கிறது உங்கள் வாதம்… அந்த பெண்களும் கண்ணிய படுத்த பட வேண்டும் என்று தான் கூறுகிறோமே தவிர அவர்கள் இழிவு படுத்த பட வேண்டும் எங்கள் வீடு பெண்களை அடிமை படுத்த வேண்டும் என்று கூறவில்லை… இதில் எங்கே இருக்கிறது மதவாதம்.. 
    நீங்கள் உங்கள் மனத்தை தொட்டு சொல்லுங்கள்.. நீங்கள் குறிப்பிடும் அந்த பெண்கள் அவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இயல்பிலேயே மென்மையானவர்களாக மேன்மையானவர்களாக இருக்க கூடிய பெண்கள் அவ்வாறு கஷ்டப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா? அவர்களின் பொறுப்புகளை, கஷ்டங்களை ஆண்கழகிய நாம் ஏன் எடுத்து செய்ய கூடாது? அதனை என்றாவது சிந்தித்து பாருங்கள்.. அதற்குரிய விழியை வழியை கண்டு பிடியுங்கள்… 

    • ரொம்பக் கஷ்டம் ரஃபீக்

      அந்தப் பெண்களை கண்ணியப்படுத்துவது என்றால் அவர்கள் கண்ணியம் என்பதெல்லாம் தெரியாத முட்டாள்கள் என்றும் அதை நாகரீகத்தில் கொட்டை போட்ட ரஃபீக் போன்ற மேன்மக்கள்தான் வகுப்பு எடுப்பார்கள் என்றால் இதைவிட அவர்களைக் கேவலப்படுத்த முடியாது. இதற்கு உ.பி, காஷ்மீரெல்லாம் போக வேண்டாம் ரஃபீக், ஒருநாள் நீங்களும் உங்கள் வீட்டுப் பெண்களும் அந்த உழைக்கும் பெண்களின் வீட்டில் வாழ்ந்து செங்கல் சுட்டு, மலத்தொட்டியை சுத்தம் செய்து எல்லாம் வேலையையும் பாருங்கள். கண்ணியம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும். வாழ்வதற்காக அல்லும் பல்லும் போராடி எந்த வசதியுமில்லாமல் வாழம் அந்த மக்கள் இருப்பதால்தான் உங்களைப் போன்ற கண்ணியவான்கள் சிறப்பாக வாழ்கிறீர்கள். அவர்கள் அப்படி வேலை செய்ய விட்டால் உங்கள் கண்ணியம் காணாமல் போய்விடும்.

      அடுத்து அந்த உழைக்கும் பெண்களின் கஷ்டத்திற்கு நிவாரணமாக ஆண்கள் அந்த வேலையை எடுத்துச் செய்யவேண்டும் என்கிறீர்கள். ஏன் உழைக்கும் வர்க்கத்து ஆண்களெல்லாம் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு ஹாயாயக பொழுதைக் கழிக்கிறார்கள் என்ற நினைப்பா? உங்கள் வாழ்க்கையில் குர் ஆனைத் தவிர எதையும் நீங்கள் கண்டதில்லை போலும். ஏழைகள் வீட்டில் ஆணும் பெண்ணும் சேர்ந்ந்து உழைத்தால்தான் கால் வயிற்றுக் கஞ்சியாவது குடிக்க முடியும். பிள்ளைகளையும் காப்பாற்ற முடியும். இது ஏழைகளுக்கு மட்டுமல், நடுத்தர வர்க்கத்துக்கும் பொருந்தும். ஒரு வாதத்திற்கு இதை மாற்ற வேண்டுமென்றால் இசுலாமிய ஆண்கள் எல்லாம் அந்த வேலையை செய்து சம்பளத்தை மட்டும் அந்த ஏழைப் பெண்களுக்கு கொடுத்தால் அவர்களும் ‘கண்ணியமாக’ வாழ முடியும். சரி மலக்குழிக்குள் இறங்குவதற்கு எத்தனை இசுலாமிய ஆண்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

  52. //அவர்களின் பொறுப்புகளை, கஷ்டங்களை ஆண்கழகிய நாம் ஏன் எடுத்து செய்ய கூடாது? //

    ஆமா, எதாயிருந்தாலும் ஆம்பளைங்க தான் செய்யனும்! மீறி பெண்கள் தாமாக செய்வதாக முன் வந்தால் குரானில் அல்லா சொன்னது போல் அடிக்க வேண்டும்! அதற்காக நமக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் நித்திய கன்னிகளில் குறைவிருக்காது! அவர்கள் நமக்கே நமக்கு! நபிகளே சொல்லியிருக்கிறார் நரகத்தில் அதிகமாக பெண்கள் தான் இருப்பார்கள் என்று, அதற்கு அர்த்தம் அவர்கள் பிறப்பாலேயே பாவபட்டவர்கள் அவர்களை பற்றி இம்புட்டு தூரம் பேசுவதே தப்பு! கிடக்குது கழுதைங்க என்று நாலு சாத்து சாத்தி மூலையில் முடக்கி விட்டு நாம் தொழப்போகலாம் வாங்க! நமக்காக சொர்க்கத்தில் நித்திய கன்னிகைகளும், நமக்கு பூமியில் எவையெல்லாம் மறுக்கபட்டதோ அவையெல்லாம் பல மடங்காகவும் காத்திருக்கிறது! இங்கே எவன் எப்படி நாசமாய் போனால் நமகென்ன! நமக்கு தேவை நித்திய கன்னிகைகள்! இங்கே இருப்பெதெல்லாம் சனியன்கள்! வாங்க தொழ நேரமாச்சு போகலாம்! அல்லா நமக்காக நித்திய கன்னிகைகளை உருவாக்கி டெமோ பார்த்து கொண்டிருப்பார்! நாம் தொழுது அவரை உற்சாக படுத்துவோம்!

  53. //அவர்களின் வால் அல்லாவின் முன்னர் விசாரணையில் ஒட்ட நறுக்கப்படும் என்பதையும் நாங்கள் பரிபூரணம்கஅ நம்புகிறோம்//

    எனக்கும் அந்த சந்தேகம் உண்டு! எப்படி அவர்கள் சொர்க்கத்தில் நித்தியகன்னிகளாகவே இருக்க முடியும்! கால்வாசி வெட்டப்பட்டவைகளை சொர்க்க வாசலில் முழுவதும் வெட்டிவிடுவார்கள் போல! என்ன தான் குரானை பின்பற்றினாலும் அல்லா ஆப்பு தான் வைப்பார் உங்களுக்கு!

    //அங்கங்களை மறைத்து கொள்ளுங்கள் என்று நாங்கள் கூறுகிறோம்.. நீங்கள் மறைக்க கூடாது என்கிறீர்.. இதில் என்ன அர்த்தத்தை நான் புரிந்து கொள்வது?//

    நாங்க மறைக்கக்கூடாதுன்னு சொன்னோமா!?
    எங்கப்பா இருக்கு அப்படியொரு பின்னூட்டம்!

    உடைகளில் எதற்கய்யா மதச்சாயம் என்று தானே கேட்கிறோம்!, சல்வாரும், சுடிதாரும் முழுவதுமாக உடலை மறைக்க கூடியது தானே!, பின் எதற்க்கு நான் இஸ்லாம் பெண் என்று போர்டு மாட்டி கொள்வது போல் பர்தா என்று தானே கேட்கிறோம்!, அல்லாவை மகிழ்விக்க நீங்கள் செய்யும் கேலி கூத்துகள் இன்னும் எத்தனை எத்தனையோ!?

  54. ///முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார்..சாகித்சாகித், எந்த ஹதீஸ் தொகுப்பில் – எத்தனையாவது ஹதீஸாக இது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை தயவு செய்து தரவும்//////“….முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும்….. ” – சாகித்.நண்பர் சாகித்… இதற்கும் நீங்கள் தக்க ஆதாரத்தை தருவீர்கள் என்று/// ஏம்பா சாகித் எங்கே பொயி தொலைஞ்ச வந்து இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லு 

  55. ஐயா,வினவு, அதியமான், கலை, பூச்சாண்டி அவர்களே, தாங்கள் தயவு கூர்ந்து பொது விவாதத்திற்கு ஏற்ப்பாடு செய்யுங்கள்/ ரபீக், மற்றும் இஸ்லாமிய அழைப்பு பணியில் உள்ளவர்களை அழைத்து வருகிறோம். இங்கு விவாதம் வேறுமாதிரி செல்கிறது.

  56. வினவு அவர்களுக்கு ஆரம்பமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை ஏனோ? உங்கள் வலைத்தளத்திற்கு பொறுப்பெற்று சாகித் சொன்ன அவதுறு விஷயங்களுக்கு என்ன பதில் முஹம்மது பெண்களை மொட்டை அடிக்க சொன்ன விஷயம் மருமகன் அலியிடம் தன் மகள் சொன்னாலும் பெண் பேச்சை கேட்கக்கூடாது என்று சொல்லியது பதில் வரட்டும் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நான் கண்டிப்பாக பதில் பின்னூட்டமிடுகின்றோன்

    • //வினவு அவர்களுக்கு ஆரம்பமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை ஏனோ? உங்கள் வலைத்தளத்திற்கு பொறுப்பெற்று சாகித் சொன்ன அவதுறு விஷயங்களுக்கு என்ன பதில் முஹம்மது பெண்களை மொட்டை அடிக்க சொன்ன விஷயம் மருமகன் அலியிடம் தன் மகள் சொன்னாலும் பெண் பேச்சை கேட்கக்கூடாது என்று சொல்லியது பதில் வரட்டும் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நான் கண்டிப்பாக பதில் பின்னூட்டமிடுகின்றோன்//
      ஏன் மத்த கேள்விகளுக்கு பதில் இல்லையா உங்களிடம்? கட்டுரையின் மைய்யமான் விசயம் இஸ்லாம் மதத்தின் பெண்ணடிமைத்தனம் மூடத்தனங்கள் பற்றியது. அது குறித்து விவாதிப்பதில் தங்களுக்கு என்ன சிரமம்?

  57. //திருக்குரான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டவே அருளப்பட்டது. அது ஒரு வழிகாட்டி நேர்மையாக சிந்திப்போருக்கு. வினவு ரசிகர்களுக்கு அதன் மகத்துவம் புரிய தெளிவான & நேர்மையான சிந்தனை வேண்டும்.//

    ஆமாம், இனிமேல் எல்லோரும் குரானில் சொல்லியபடி நேர்மையாக பொண்டாட்டியை அடியுங்கள்!. குரான் காட்டும் நேர்வழியில் சென்றால் தான் சொர்க்கத்தில் நித்தியகன்னிகை கிடைக்கும், வினவு தல்ம படிச்சா புத்தி வந்து நாடு உருப்படும்! அதுவா நமக்கு முக்கியம்! நித்தியகன்னிகைகள் தான் முக்கியம்!

  58. இவர்கள் என்னதான் அடம்பிடித்தாலும், இலைமறை காயாக ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்கின்றனர். இஸ்லாத்தைப்  பின்பற்றும் பெண்களுக்கு, புர்கா என்பது மதரீதியாகத் திணிக்கப்பட்ட ஒன்று என்பதை.
    மதரீதியாக தம் மீது திணிக்கப்பட்ட ஆடையை சமூகச் சூழல்களைக் கொண்டு அணிந்தாலும், இஸ்லாமியப் பெண்கள் தமக்கு ஒவ்வாத நேரங்களில் அணிந்து கொள்வதில்லை, என்பதை இவர்கள் அறிந்தாலே, பெரும்பாலான பெண்களுக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகிவிடும். முகம், மணிக்கட்டு, கரண்டைக்கால் ஆகிய பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளை மூடவேண்டும் என்று குர் ஆனும், இஸ்லாமிய பிற்போக்கு அறிஞர்களும் கூறினாலும் see-through புர்கா அணிவதன் மூலம், தங்களுடைய உடை விஷயத்தில் பிறர் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்பதை   நாசூக்காகவேனும் அவர்கள் அறிவுருத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். 

  59. ///பொண்டாட்டியை அடியுங்கள்!///வால்பையன் நீங்க பிஞ்சிலே பழுத்து பதினான்கு வயதிலே உங்க ஆன்மையை நிறுபித்தது போல இப்பவும் உங்கள் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யுங்க மனித ஒழுக்கம் வேளங்கிடும்

    • ஹைதர்,
       வால்பையனை பிஞ்சிலே பழுத்தவர் என்றால் முஹம்மதின் மனைவி ஆயிஷாவை என்னவென்று அழைப்பீர்கள்

      • முஹம்மதின் மனைவி ஆயிஷாவை என்னவென்று அழைப்பீர்கள்//
        ஹலோ ,கலை இது தேவை இல்லாத கருத்து . உங்களின் இந்து
        வெறி இதில் நன்றாக தெரிகிறது.

  60. ///பொண்டாட்டியை அடியுங்கள்!///வால்பையன் நீங்க பிஞ்சிலே பழுத்து பதினான்கு வயதிலே உங்க ஆன்மையை நிறுபித்தது போல இப்பவும் உங்கள் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யுங்க மனித ஒழுக்கம் வேளங்கிடும்//

    அண்ணே! நான் எதையும் ம்றைப்பதில்லை, மேலும் எனது மணவிசயம் பற்றிய விபரங்கள் எனது நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்!,

    தனிமனித ஒழுக்கம்,
    துரோகம் ஆகியவை மத சம்பந்தபட்டதல்ல, மனிதம் சம்பந்தபட்டது, என் மனைவிக்கு தெரியும் நான் இப்போது எப்படி என்று!? வேறு யாருக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறீர்கள்!

  61. வால் பையன் உங்க நன்பர்கள் உங்க வேகத்துக்கு இனையாக பதில் கொடுத்தால் நல்லயிருக்கும் நேத்துல இருந்து இந்த பதிவு சம்பந்தம கேள்வி கேட்கிறோன் பதிலில்லை வினவு எங்கே? சாகித் எங்கே? என் கேள்விக்கு பதில் எங்கே? மக்கள் இசை பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. தூங்கிறிய நடிக்கிறிய ரங்கநாதா 

  62. இஸ்லாமிய பெண்களின் இக்கால நிலையை கட்டுரையாளர் மிகச் சிறப்பாகவே விளக்கியிருக்கிறார், ஒன்றைத்தவிர இஸ்லாத்தில் பெண்களுக்கான சொத்துரிமை. இங்கு புர்கா, வீடுகளின் அமைப்பு, இத்தா, தலாக் போன்றவற்றைப் பற்றி எழுதியிருந்தாலும் இஸ்லாமிய ஆண்கள் புர்காவைப் பற்றி மட்டுமே விவாதம் செய்வது பாலுணர்வு பற்றிய பிரச்சினை இன்னும் இஸ்லாமியர்களிடையே தீர்க்கப்படாமலிருப்பதையே காட்டுகிறது. சேலையின் இடைவெளியினுள்ளே தெரியும் பெண்ணின் உடலை பார்த்து மகிழும் கயவன் ஆண் என்றாலும்கூட இவர்கள் பெண் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். (விபச்சார வழக்கில் பெண் மட்டுமே குற்றவாளியாக்கப்படுவதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.) இத்தா சட்ட்த்தில் கூட பாதிக்கப்படுவள் பெண்தான். தாலக் சொல்வதில் கூட பாரபட்சம். சொத்துப் பிரிவினையில், ஒரு ஆணுக்கு இரு பெண்களின் பங்கு எனவும், இறந்துவிட்ட ஆணாக்கு குழந்தையில்லாமல் சகோதரி இருந்தால் சகோதரிக்கு சொத்தில் பாதிப்பங்கு, மாறாக பெண் இறந்துவிட்டால் அப்பெண்ணின் சொத்து முழுவதையும் சகோதரன் அனுபவிக்கலாம். இதிலிருந்து கடவுள் ஒரு ஆண் என்பதும் அவருக்கு உருவம் இருக்கிறது என்பதும் புலனாகிறது.(கடவுளை படைத்தவர்கள் ஆண்கிழவர்கள் என்பது வேறுவிஷயம்)
    ஆண்கிழவர்கள் என்றதும் வித்தகன் ஞாபகத்திற்கு வருகிறார். வித்தகனது கட்டுரை என்னாயிற்று?

    • கடவுள் ஒரு ஆணாகத்தான் இருக்க முடியும்,இந்து மதத்தில் வேண்டும் என்றல் பெண்ணும் கடவுலாக இருக்கலாம்.

  63. //வால் பையன் உங்க நன்பர்கள் உங்க வேகத்துக்கு இனையாக பதில் கொடுத்தால் நல்லயிருக்கும் நேத்துல இருந்து இந்த பதிவு சம்பந்தம கேள்வி கேட்கிறோன் பதிலில்லை வினவு எங்கே? சாகித் எங்கே? என் கேள்விக்கு பதில் எங்கே? மக்கள் இசை பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. தூங்கிறிய நடிக்கிறிய ரங்கநாதா //

    அவைகள் பற்றிய போதிய தகவல்கள் எனக்கு தெரியாததால் நான் அமைதியாக இருக்கிறேன்! அந்த தகவல்களை அவர்கள் வந்து தரும் வரை நாம் உரையாடலாமே!

  64. //ஹைதர்,
    வால்பையனை பிஞ்சிலே பழுத்தவர் என்றால் முஹம்மதின் மனைவி ஆயிஷாவை என்னவென்று அழைப்பீர்கள்//

    நூறுவருடத்திற்கு முன்பு வரை கூட பால்ய விவாகம் இந்தியாவில் இருந்தது, பிற்போக்கில் திளைந்திருந்த அரேபியாவில் இதெல்லாம் ஒரு விசயமா! விடுங்க தலைவா!

    • நீங்கள் சென்னையில் இருப்பதால் உங்களுக்கு ஒருவரை நன்கு தெரிந்திருக்கும். பெயர் கமரா ரபீக் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு கமரா சப்ளையர். சில வருடங்களில் கோடிஸ்வரரானவர். இவர் உண்மையில் என்ன வியாபரம் பன்னுகிறார் தெரியுமா? ஹாங்காங்குக்கும் சிங்கப்பூருக்கும் பெண்களை அழைத்துச்சென்று விபச்சார தொழிலில் சேர்த்து விடுவது தான். அதிலும் அவர் சொல்லும் நியாயம் என்ன தெரியுமா? தான் எப்போதும் இஸ்லாமியப் பெண்களை அவ்வாறு அழைத்துச்செல்வதில்லையாம். எவ்வளவு நல்ல குணம் பாருங்கள்! 

      • இன்னொருவர் அம்பிகா ஹாட்டல் அருகில் வடபழனியில் டைம் சோன் பெயரில் லைட் கடை வைத்திருக்கிறார். இவர் எந்த நேரமும் தொப்பியுடன் இருப்பார். அவ்வளவு மதப்பற்று. ஆனால் இப்படியான கேவலாமான தொழில்களை தான் தினமும் வெளிநாடுகளில் செய்துவருகிறார். இப்படி நிரையப் பேரை எனக்குத் தெரியும். இவர்களுக்கு தொப்பி ஒரு பாதுக்காப்பு அவ்வளவு தான். மற்றப்படி கடைந்தெடுத்த காலிப்பயலுகள். எந்தளவு மோசமானவர்கள் என்று பாருங்கள். முஸ்லீம் அல்லாத பெண்களை மட்டும் வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று விபசாரத்தில் விடுவது? இவனுகள் செய்யும் எல்லா கேடுக்கெட்ட செயல்களை மதம் சார்ந்தே செய்கிறானுகள் எனும் போது இவனுகளை என்ன செய்யலாம்? 

  65. வால் பையன் நன் பகுதி நேரமாக ஒரு நூலகத்தில் வேலை செய்கிறோன் இப்போது வேலைக்கு கிளம்பிவிட்டோன் வந்ததும் வினவு தளத்தில் உடனடியாக இனைகிறோன் நன்றி

  66. //வால் பையன் உங்க நன்பர்கள் உங்க வேகத்துக்கு இனையாக பதில் கொடுத்தால் நல்லயிருக்கும் நேத்துல இருந்து இந்த பதிவு சம்பந்தம கேள்வி கேட்கிறோன் பதிலில்லை//

    இங்கே முன்வைக்கப்பட்ட பல விஷயங்களை நீங்கள்தான் கண்டும் காணாதது போல் செல்கின்றீர். இங்கே கேக்கப்பட்ட  இந்த கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்.
    1. திருமணம் தவிர மற்ற சமயங்களில் (கல்லூரி போன்ற இடங்களுக்கு செல்லும்போது) புர்கா அணியாத இஸ்லாமியப் பெண்கள், உடை தொடர்பான  குர் ஆனின் வசனங்களை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?
    2. இங்கே, ஒரு இஸ்லாமியர்  கூறியதுப் போல் இரு தலாக்குக்கு இடைப்பட்ட காலம் 6 மாதங்கள் அல்ல, 1 மாதம்தான் என்பதை.
    3.  ஆணுக்குப் படுக்கையைப் பிரிக்க அறிவுறித்திய குர் ஆன், பெண்ணுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை என்பதை.
    4. பாக்கர் விஷயத்தில், புர்கா என்ன செய்தது? அல்லது ஏன் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பை வழங்கவில்லை?
    5. ஜகாத் என்னும் பெயரில் கம்புக் கட்டி, ஏழைகளை அதன் வழியாக வரச் செய்து, 10, 10 ரூபாயாக கொடுக்கும் பணத்திமிர் பல இடங்களில் பட்டவர்த்தனமாய் நடைபெறுகிறது என்பதை.
    இவற்றுக்கெல்லாம் நீங்கள் உங்கள் மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லுங்கள். 

  67. இறை அச்சம் என்பதே அடிப்படை நம்பிக்கையாக கொண்டவர்களிடம் விவாதிக்கிறீர்கள். அவர்களுக்கு எல்லாம் மத நம்பிக்கையை கொண்டே மதிப்பிடப்பட வேண்டும். சுகுணா திவாகர், அப்துல்லாகவா மாறிய பெரியார்தாசன் a.மார்க்ஸ் போன்றவர்களிடம் விவாதியுங்கள்.இவர்கள் இஸ்லாத்தினை ஆதரிக்கிறார்கள். எனவே அவர்கள் தரப்பு வாதம் புரியும். பத்வா என்ற பெயரில் மரண தண்டனை விதிப்பது மணித் உரிமை மீறல் அல்ல என்பது விளங்கும்.

  68. //இதை விட்டு விட்டு உண்மை நிலவரம் பர்தா அணிந்த பெண்கள் அடிமைப்படுத்த படுகிறார்கள் என்று பிதற்ற வேண்டாம்//

    உண்மை நிலவரத்தை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லையோ?

  69. குஜராத் கலவரத்தில் முசுலிம் கற்ப்பிணிப் பெண்ணை ஆர்.எஸ்.எஸ் காலிகள் கற்ப்பழிக்கும் போது வராத அல்லா எதற்க்குத் தேவை?

    • அந்த ஆர்.எஸ்.எஸ் கருங்காலிகள் அல்லாவின் காலை உடைத்துவிட்டதால், அவரால் நகரமுடியாமல் போயிருக்கலாம்.

    • குஜராத் கலவரத்தில் முசுலிம் கற்ப்பிணிப் பெண்ணை ஆர்.எஸ்.எஸ் காலிகள் கற்ப்பழிக்கும் போது வராத அல்லா எதற்க்குத் தேவை?//
      இதுல்லாம் முட்டள்தனமா வாதம்.

      • மஹாராஜா,
        எப்படி முட்டாள்தனமாகும். முஹம்மது செய்த போர்களுக்காக தேனீக்களையும் எரிகற்களையும் அனுப்பி அல்லா உதவி செய்யவில்லையா? 

  70. வினவு, தூங்குவது போல நடிக்கும் இவர்களை எழுப்ப முயன்று நொந்து நூடுல்ஸாகிக்கொண்டிருக்கும் உங்களை எல்லாம் நினைத்தால் பாவமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் கட்டுரையாளாருக்கு…!!

  71. அதியமான், இந்த முட்டாள்தனமான விவாதங்களுக்கு நீங்கள் சப்பைக்கட்டு கட்டுவீர்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. வினவு எழுதிவிட்டதாலேயே சூரியன் கிழக்கே உதிப்பதை மறுத்து பேசவேண்டும் என்றில்லை. சிந்தித்து சொல்லுங்கள். 

  72. இஸ்லாமிய நண்பர்களே! இந்த வெட்டி பசங்களுக்கு பதில் அளித்து உங்கள்
    நேரத்தை வீனாக்காதிர்கள். இந்து மத நண்பர்களே உங்களுக்கு இஸ்லாம்
    பற்றி தெரிய வேண்டும் என்றல் இஸ்லாமிய வெப்சைட் நிறைய உள்ளது .

  73. குரான் பூமி தட்டை என்கிறது .என்ன எழுதி என்னே பயன்.?
    கலை ,அதியமான் , சபாஸ். அப்படி போடுங்க !
    அதியமான்!
    மிக பொருத்தமான பாடல் ! இதை கலைஞ்சர் எழுதியதேன்றே இது வரை எண்ணினேன் !
    ”தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
    காசுமுன் செல்லாதடி – குதம்பாய்
    காசு முன் செல்லாதடி.
    …நல்லவரானாலும் இல்லாதவரை
    நாடு மதிக்காது – குதம்பாய்
    நாடு மதிக்காது…

    முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே – காசு
    முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பிணத்தைக்
    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பணப்
    பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே”

    சூப்ரோ சூப்பர் !!!

    • “குரான் பூமி தட்டை என்கிறது” .

      எந்த இடத்தில் குரானில் இப்படி உள்ளது என்று சொல்ல முடியுமா? ஏன் இப்படி மாற்றமாகவே பொய் உரைக்கிரீர்கள்?

  74. கலை ,அதியமான், அப்படி போடுங்க !!

    அதியமான் !
    அருமையான பாடல் .

    ”தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
    காசுமுன் செல்லாதடி – குதம்பாய்
    காசு முன் செல்லாதடி.
    ..

    நல்லவரானாலும் இல்லாதவரை
    நாடு மதிக்காது – குதம்பாய்
    நாடு மதிக்காது.
    ….

    ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – காசு
    காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
    உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
    உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
    முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே – காசு
    முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பிணத்தைக்
    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பணப்
    பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

    ”சூப்பரோ சூப்பர் !!!!

  75. முழு பின்னூட்டங்களையும் படித்ததில். ரஃபீக் உங்கள் பொறுமையான அணுகுமுறை பிடித்திருந்தது. மொத்தத்தில் பெண்களை கண்ணியமாக உடுத்த சொல்கிறிர்கள். அதை மேல் நாட்டினரும் சொல்கிறார்கள். இந்துக்களும் சொல்கிறார்கள். நாட்டுக்கு நாடு இனத்திற்கு இனம் அதன் அளவு மாறுபடுகிறது. அமெரிக்காவில் அலுவலக கண்ணியமான உடை – பேன்ட் சட்டை – கைகள் முகம் கூந்தல் தெரியும், அல்லது கவுன் – கால்கள் தெரியும்.. இந்தியாவில் சேலை சூடிதார் – இப்போது பேன்ட் சட்டையும். என்ன சேலை யானால் இடுப்பு தெரியும். இது அல்ல பிரச்சினை. உடை உடலை மறைக்க வில்லை ஆனால் – ஆண் காமப்பார்வை பார்ப்பான் பெண் கேட்டுப்போவாள் என்கிறீர்களே அதில்தான் பிரச்சினை. எந்த மதத்தை தழுவி இருந்தாலும் – பெண் – நினைத்தால் முடியும். ஒரு வீட்டு வேலைக்காரனோடு ஹைதரபத்துக்கு வந்த சௌதி பெண் முழுக்க மறைத்தும் நினைத்ததை முடிக்கவில்லையா?இங்கு மனம் என்பது தான் தோன்றித்தனமானது – ஏனெனில் சிந்திக்கும் தகுதி ஆணுக்கோ பெண்ணுக்கோ கிடையாது. அவர்கள் உடலை மறைத்துவிட்டால் – நல்லவர்களாக இருப்பார்கள். இல்லையானால் அவ்வளவுதான் என்கிறீர்கள். சிந்தனைகள் ஒரு சிறு வட்டத்தில் இருந்த 1400 வருடங்களுக்கு முன் அது சரியாக இருந்து இருக்கலாம். இப்போது?
    கத்தரிக்கா போட்டமா – கடத்தெருவுக்கு அனுப்பனுமானு இருந்த விவசாயி – இன்னிக்கி – மரபணு பத்தி தெருஞ்சிருக்க வேண்டி இருக்கு. இப்பவும், உடை மனுஷன கெடுத்திடும்னா – ஒரு லட்சம் பேர் குட்டை பாவாடை போடுற சென்னையில – ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கற்பழிப்பா நடக்குது? இல்லையே? முதல்ல மனித மனம் – இடுப்பு சேலை மடிப்பில இருந்து எப்பவோ வெளிய வந்துடிச்சி – ஒவ்வொரு நாளும் எப்படி பிழைக்க – எனும் ஏக்கத்தில் இருக்கிறது. அடுத்து பெண்களை மூன்று வகையாக பிரித்து அடித்து வைப்பதுதான் சரி என்று காட்டிய – கத்தார் வீடியோ பதிவிற்கு – ஆமாம் என்கிறீர்கள். அப்படியானால் – பெண்களை அடித்துதான் திருத்த வேண்டுமா? அவர்களுக்கு மூளை இல்லை என்கிறீர்களா? இதுதான் அடிப்படை தவறு. அந்த பதிவில் – அல்லாஹ் ஆணுக்காக பெண் என்றும் ஊடர்த்தம் வருகிறது – அப்படியா? நீங்களும் அந்த பெண்களை கஷ்டப்படுத்தாமல் ஆண்கள் இதை செய்யலாம் என்கிறீர்கள். பெண்களால் முடியாதா என்றால் – ஆமாம் நீ குழந்தை பெற்றுக்கொள் என்கிறீர்கள். அது முடியாது என்று நினைக்கிறீர்களா? க்ளோனிங் படித்ததில்லையா? ஆண் தேவையே இல்லை – பெண்ணும் தேவை இல்லை. இன்குபடேரும் ஒரு செல்லும் போதும் குழந்தை உருவாக. இந்த காலத்தில் போய் – இது மாதிரி வாதமா? வினவின் கேள்வி – தற்போதைய samooga soozhal. உங்கள் pathilkaL 1400 varudam munthaiyathu அல்லது aduththa vazhvu paRRiyathu.

  76. பர்தா அணிவது சுகாதாரக் கேடு – மருத்துவர்கள்
    சூரிய வெளிச்சம் படாமல் உடல் இருப்பதால், பெரும் சுகாதார கேடு விளைகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

    சூரிய வெளிச்சம் உடல் மீது படுவதால், உடல் வைட்டமின் டி தயாரிக்கிறது. இப்படி சூரிய வெளிச்சம் விழாததால், ஏராளமான பெண்களுக்கு வைட்டமின் டி குறைவு ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு காரணமாகிறது.

    கறுப்பு நிறமுள்ளவர்கள் (உடல் தோலில் மெலனின் அதிகம் உள்ளவர்கள்) இந்த விட்டமின் தயாரிப்பது இயற்கையிலேயே குறைவு. அவர்கள் உடலை மூடினால், இன்னும் தீவிரமான வைட்டமின் டி பற்றாக்குறையால் எலும்புகள் வலுவிழந்து போகும் என்று எச்சரிக்கிறார்கள்.

    எலும்புகள் பலமிழந்தால், சிறுவயதிலேயே கால்கள் வலு இழந்து வளைந்து போகும் என்று எச்சரிக்கிறார்கள்.

    இது போல புர்கா அணியும் பெண்களிடையே மிகவும் அதிகமாக ரிக்கட்ஸ் வியாதி இருக்கிறது.

    புர்காவை போடச்சொன்ன அல்லாஹ் கூடவே இந்த பெண்களுக்கு சூரியவெளிச்சம் இல்லாமல் தானாக விட்டமின் டியை உருவாக்கும் உடலையும் கொடுத்திருக்கலாம். (அல்லான்னு ஒன்னு இருந்தாத்தானே?)

    http://news.bbc.co.uk/2/hi/health/1154211.
    http://ezhila.blogspot.com/2008/05/blog-post_8146.html

    http://www.thisislondon.co.uk/news/article-23404811-details/Women+in+hijabs+'need+sunlight+or+risk+illness'/article.do

    • இதெல்லாம் நம்பமுடியாது. நீ என்ன பர்தாவுக்குள் போய் அவர்களுக்கு ரிக்கட் வந்திருக்கிறதா? கால் வலய்ந்திருக்கிறதா என்று பார்த்தாயா?
      விட்டமின் டிக்கு நாங்கள் மாத்திரை சாப்பிக்கிறோம். நீ ஒன்னும் எங்கள் வீட்டு பொண்ணுங்களுக்கு கவலைப்படாண்டாம்.
      உலகத்தில் உள்ள அனைவரும் அல்லாவின் வழியை பின்பற்றவேண்டும். அதுவரைக்கும் போரிடுங்கள் என்று கூறியிருக்கிறார் எங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகம். அது போல வினவும் பெரியார்தாசன் மாதிரி இஸ்லாத்தில் இணைவார். இல்ல்லையேல் இணைக்கப்படுவார்.

      • உலகத்தில் உள்ள அனைவரும் அல்லாவின் வழியை பின்பற்றவேண்டும். ////அதுவரைக்கும் போரிடுங்கள் என்று கூறியிருக்கிறார் எங்கள் உயிரினும் மேலான நபிகள் நாயகம். அது போல வினவும் பெரியார்தாசன் மாதிரி இஸ்லாத்தில் இணைவார். இல்ல்லையேல் இணைக்கப்படுவார்.///தப்பும தப்பு உலகத்தில் உள்ள அனைவரும் அல்லாவின் வழியை பின்பற்றவேண்டும். அதுவரைக்கும் போரிடுங்கள் என்று கூறியிருக்கிறார் அப்படி வசனமே குர்ஆனுல இல்ல. 2வது விஷயம் இனைவர் அல்லது இனைக்கப்படுவர் இதுவும் தவறு (இஸ்லாத்தில் எவ்வித வற்புறுத்தல்லும் இல்லை.குர்ஆன்) மறுபடிக்கும் குடுமி முசுலிம் பேருல எட்டிப்பார்க்குது ஜக்கிரதை 

        • ஏனுங்க, குடுமிகளுக்குத்தான் படிக்க தெரியுமா? நாஙகளெல்லாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

          The Qur’an:
          Qur’an (9:29) – “Fight those who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya with willing submission, and feel themselves subdued.” Suras 9 and 5 are the last “revelations” that Muhammad handed down.

          Qur’an (9:5) “But when the forbidden months are past, then fight and slay the Pagans wherever ye find them, and seize them, beleaguer them, and lie in wait for them in every stratagem (of war); but if they repent, and establish regular prayers and practice regular charity, then open the way for them…” Prayer and charity are among the Five Pillars of Islam, as salat and zakat. See below.

          Qur’an (9:11) – (Continued from above) “But if they repent and establish worship and pay the poor-due, then are they your brethren in religion” This confirms that Muhammad is speaking of conversion to Islam.

          Qur’an (2:193) – “And fight them until persecution is no more, and religion be only for Allah. But if they desist, then let there be no hostility except against wrong-doers.” The key phrase is to fight until “religion be only for Allah.”

          From the Hadith:

          Sahih Muslim (1:33) The Messenger of Allah said: “I have been commanded to fight against people till they testify that there is no god but Allah, that Muhammad is the messenger of Allah…” The last part is the Shahada, or profession of faith in Islam.

          Sahih Muslim (19:4294) – “When you meet your enemies who are polytheists [Christians…], invite them to three courses of action. If they respond to any one of these, you also accept it and withhold yourself from doing them any harm. Invite them to (accept) Islam; if they respond to you, accept it from them and desist from fighting against them … If they refuse to accept Islam, demand from them the Jizya. If they agree to pay, accept it from them and hold off your hands. If they refuse to pay the tax, seek Allah’s help and fight them”

          Bukhari (8:387) – “Allah’s Apostle said, ‘I have been ordered to fight the people till they say: ‘None has the right to be worshipped but Allah.’ And if they say so, pray like our prayers, face our Qibla and slaughter as we slaughter, then their blood and property will be sacred to us and we will not interfere with them except legally and their reckoning will be with Allah.'”

          Bukhari (53:392) – “While we were in the Mosque, the Prophet came out and said, “Let us go to the Jews” We went out till we reached Bait-ul-Midras. He said to them, “If you embrace Islam, you will be safe. You should know that the earth belongs to Allah and His Apostle, and I want to expel you from this land. So, if anyone amongst you owns some property, he is permitted to sell it, otherwise you should know that the Earth belongs to Allah and His Apostle.”

          Bukhari (2:24) – “Allah’s Apostle said: “I have been ordered (by Allah) to fight against the people until they testify that none has the right to be worshipped but Allah and that Muhammad is Allah’s Apostle, and offer the prayers perfectly and give the obligatory charity, so if they perform a that, then they save their lives and property from me except for Islamic laws and then their reckoning (accounts) will be done by Allah.”

          Bukhari (60:40) – “…:And fight them till there is no more affliction (i.e. no more worshiping of others along with Allah).” ‘Affliction’ of Muslims is explicitly defined here being a condition in which others worship a different god other than Allah. Muslims are commanded to use violence to ‘rectify’ the situation.

          Bukhari (59:643) – “Testify that none has the right to be worshipped except Allah, or else I will chop off your neck!” Words of a military leader that Muhammad sent on an expedition with the mission of destroying a local religion in Yemen.

          Ibn Ishaq 959 – Then the apostle sent Khalid bin Walid… to the Banu al-Harith and ordered him to invite them to Islam three days before he attacked them. If they accepted then he was to accept it from them, and if they declined he was to fight them. So Khalid set out and came to them, and sent out riders in all directions inviting the people to Islam, saying, “If you accept Islam you will be safe.” So the men accepted Islam as they were invited. The text goes on to say that Khalid taught the al-Harith about Islam after their “conversion,” proving that it was based on fear of slaughter rather than a free and intelligent decision.

  77. http://www.flex.com/~jai/satyamevajayate/women.html
    Wondrous Treatment Of Women In Islam
    T he purpose of this article is to show how the barbaric nature of Islam manifests itself in the cruel treatment of women.

    1. Lets start with the “great” Mohammed himself, the founder of this “fabulous” faith. Mohammed was married to Khadija Bibi, his employer and 15 years his senior. At that time Mohammed was 25 years old. He was Khadija Bibi’s third husband. Khadija Bibi was a widow when she married Mohammed. For the first time in his life, Mohammed enjoyed a luxurious life.

    டு know more…
    http://www.faithfreedom.org/Articles/abulkazem/Women_in_Islam.htm

  78. தம்பி ரவி,

    சரியா படிச்சு பாருங்க. நான் வினவு சொன்னதை மறுக்கவில்லை. கட்டுரையை பாராட்டி தான் எழுதியிருந்தேன். அவ்வப்போது ‘நல்ல’ கட்டுரைகளை பாராட்டி எழுதிகிறேன்.

  79. மதம் போர்வையை அகற்றி வெளியே வாருங்கள். மதவாத மனநோயாலாராய் தொடர்ந்தும் இறாதீர்கள். மனித சிந்தனையுடன் சிந்தியுங்கள் தெளிவு பெறலாம். உலகில் அதிகமான நாடுகளாக முஸ்லீம் நாடுகள் இருந்தப் போதும் அறிவுத்திறன் அற்றுப் போனதற்கு காரணமே இந்த மதவாத மனநோய் தான். அனைவரையும் ஒன்றாய் கருதுங்கள். இயல்பாய் பழகுங்கள் அறிவுப்பெறலாம். பெண்களையும் உலகில் சம உரிமையுள்ளவர்களாக மதியுங்கள். அவர்களிடம் இருக்கும் ஆற்றல்களுக்கு, பெண்ணடிமை விலங்கிட்டு, குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே உங்களை பார்க்கத் தூண்டும் குரானை கக்கூஸில் போடுங்கள்.  

  80. யோகன்,

    இந்த பாடலை கலைஞர் எழுதியிருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும் தான். அவரின் ‘கொள்கைகளை’ மிக சரியாக வெளிப்படுத்தும் பாடல் தான் இது !!
    பராசக்தி படத்தில் அவர் எழுதிய புகழ் பெற்ற பாடல் : “கா கா கா, ஆகாரம்…”
    அவைகளை இங்கு கேட்டு மகிழலாம் :

    http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001758

  81. நான் இக்கட்டுரையை இசுலாமியக் கோட்பாடின் பெண்ணடிமைத்தனத்தை விமர்சித்து எழுதலாம் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் கோட்பாடுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்காமல் அதைவிட பயனுள்ள ஒன்றை எழுதவேண்டும் என்று சிந்தனை இரண்டு மூன்று நாளாக அலைக்கழித்தது. சராசரியாக 30 ஆண்டுகளுக்கு முன் உள்ள இசுலாமியப் பெண்களின் நிலை, தற்போதய நிலை பற்றி சுருக்கமாக எழுதுவோம் என்று தோன்றியது. எழுதியபிறகு படித்துப்பார்த்த தோழர் ஜமீல் “இத படிச்சிட்டு இந்த மாற்றத்தையும் தடுக்க ச்ண்டைபோடப் போறாங்க” அதனால் தேவையான்னு யோசிங்க என்றார். மாற்றத்தை எந்தக் கொம்பனாலும் தடுத்துவிட முடியாது. ஆனால் “தமது நிலையை உணர்ந்து தாம் செய்வது சரி, தாம் செய்யாது பிறர் செய்வது தவறு என்று வரட்டுத்தனமாக கோட்பாடுகளுக்குள் நின்றுகொண்டு பேசுபவர்களுக்கு பதிலுரைக்க இக்கட்டுரை உதவும்” என்று நான் கருதுவதாக கூறினேன். எடுத்துக்காட்டாக இக் கட்டுரையில் குறிப்பாக குறிப்பிடவேண்டும் என்று நினத்திருந்து மறந்து விட்ட புர்காவின் பெருமைபேசிய ஸுமஜ்லா அவர்களை எடுத்துக்கொள்ளலாம். 30 ஆண்டுகளுக்குமுன் கல்லூரிக்குச் சென்று படிப்பதும் பிளாக்கர்ஸ் மீட்டிங்கில் கலந்துகொள்ளவதும் ஒரு இசுலாமியப் பெண்ணால் சாத்தியமா என்று சற்றும் சிந்திக்காமல் புர்கா போடாத பெண்கள் ஒழுங்கங்கெட்டவர்கள் எனபதுபோல் இன்று இவர் எழுதியுள்ளார். அவருடைய அந்த வாதம்போல் எதுவும் பிறரிடம் தாக்கம் ஏற்படுத்திவிடக்கூடாது எனபதற்காகவும், பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தைரியமாக எதிர்கொள்ள உதவும் என்றே நினைத்து இக்கட்டுரையை எழுதினேன்.

    இக்கட்டுரையின் கதாபாத்திரங்கள் கற்பனை அல்ல. அதுபோல சரியா தவறா என்றும் சர்சையையும் நான் முன்வைக்கவில்லை. நிகழ்வுகள் சரியா தவறா எனபதை படிப்பவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்துக்கொள்ளும் வகையிலேயே எழுதியுள்ளேன். மாற்றம் எற்பட்டுள்ளதற்றகான உடன்பாடு உணர்வை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளேன். அது ஒருவகையில் “சரி” என்று விவாதிப்பதுபோலிருந்தாலும், உணர்வைக்கூட வெளிப்படுத்தாமல் புரட்சியை நேசிக்கும் எம்போன்றவர்களால் மொட்டையாக எழுத முடியாது.
    ஆனால் இசுலாமிய பின்னூட்டக்கார்கள் தரப்பட்டுள்ள நிகழ்வுகளின் மீது தமது கருத்துக்களை முன்வைக்காமல் “பழையகுருடி, கதவைத்திறடி” என்று புர்காவின் சிறப்புக்குள்ளும், ஆதாரம் தா, சரியா தெரிந்துகொண்டு எழுதனும், நேரடி விவாத்த்திற்கு தயாரா என்று பல்லவி பாடத்தொடங்கிவிட்டனர். இவர்களுடைய விவாதம் செய்யும் பண்பு குறித்து இங்கே கொஞ்சம் படிக்கவும்.நான் கடவுள்
    எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்ததுபோல் விவாதிப்பதும், ஆதாரம்தா என்று கேட்பதும், ஆதாரத்தை முன்வைத்தால் “அப்படியா என்குத்தெரியல. நீங்க அவரோட வந்து விவாதீங்க” என்று மழுப்பிவிட்டு ஓடிவிடுவதும். 28 வருடமாக நான் அனுபவிக்கும் ஒன்றுதான. மொட்டையடித்ததற்கு ஆதாரத்தை நான் தருவதிருக்கட்டும். அதற்குமுன், அப்படி மொட்டையடித்திரந்தால் அது சரியா தவறா என்று எல்லாம் தெரிந்த ஞானியான அவர் தைரியமாக கூறுவாரா?

    பிஜேவுடன் நேரிலே விவாதிக்கத் தயாரா என்று தேய்ந்த ரிகார்டா வீச் வீச்சின்னு கத்திக்கிட்டு இருக்கும் இவராவது நான் கேட்கும் பின் வரும் கேள்விக்கு பதில் வாங்கித் தருவாரா?
    பெண்ணடிமைகளை கண்டவர்களும் காமக்கண்ணோடு பார்பதைக் தடுக்கவும், பெண்ணடிமைகளின் காமத்தேவையை பூர்த்தி செய்வதற்றாகவும் அவ்வடிமைகளை முகம்மதுநபி கரிசனத்துடன் எஜமானர்களுக்கு காம்க்கிழத்தியாக்கினார்கள் என்று பிஜே அவர்கள் தமது குர்ஆன் மொழிபெயர்ப்பில் குறிப்பு எழுதியுள்ளார்! அதுபோல் ஆண் அடிமைகளுடைய காமத்தேவையை பூர்த்தி செய்ய முகம்மதுநபி என்ன செய்தார்கள் என்று பதில் வாங்கித்தாருங்களேன். அல்லது அபூஹூரைரா என்பவரை காயடித்துக்கொள்ள முகம்மது நபி சொன்னதுபோல் ஆணடிமைகளுக்கு காயடித்தார்களா? என்பதை தெளிவுபடுத்துங்களேன்.
    பிஜேவகையராவில் ஒருவர் மிரட்டலும், மற்றொருவர் அவர்களின் புனிதத்தையும் வெளியிட்டுள்ளனர். பிரச்சார மன்மதன் பாக்கர், நந்தினிக்கு பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்து கோவில்பட்டிக்கு ஜல்சா பயணம் போனதை இவர்கள் அறிவார்களா? அறிய மாட்டார்களா? என்று தெரிய வில்லை. ஏனெனில் அணிகளை கமுக்கமாக ஏமாற்றுவதிலும் கிள்ளாடிகள் இவர்களின் தலைவர்கள்:
    பார்க்க வீடியோ http://www.youtube.com/watch?v=hxO_cY9tHEQ

    தலாக் தலாக் தலாக் பற்றி ஒருவர் விமர்சித்துள்ளார். எல்லாம் தெரிந்த அவருக்கு, உமர் காலிஃபா முத்தலாக்கையும் ஒரேதடவையாக சொல்லிவிட வேண்டும் என்று சரியத் சட்டத்தை மாற்றிவிட்டது தெரியாது போலும். என்ன செய்வது. அவர் எல்லாம் தெரிந்த மேதாவியாச்சே. தலாக் பற்றிய எனது கற்பனையை உங்களுக்கு அருகிலுள்ள இமாம்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதனை இங்கே பகிர்ந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

    எல்லாம் தெரிந்த இன்னொரு புத்திசாலி தலாக் மற்றும் குலா பற்றிய வேறுபாடு என்ன என்றுகூடத் தெரியாமல், ஒரு பெண் முகம்மதுநபியிடம் முறையிட்டுள்ள நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுத்தந்து தலாக் பற்றி நான் தெரிந்துகொண்டு எழுதவேண்டும் என்கிறார். என்னே அறிவு!
    நண்பர் ஒருவர் துப்பட்டா பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளார். நான் குறிப்பிட்டுள்ள வெள்ளை வேட்டி வேறு. இந்த துப்பட்டா வேறு. துப்பட்டா என்பது பத்தானியர்களின் புர்கா பண்பாட்டு உடை. ஓரளவு பத்தானியர்கள் கலக்கப்பட்ட இடங்களிலும் சில (நூற்றாண்டுகளுக்குமுன்) பர்மா அகதிகளாக வந்தவர்களிடம் மட்டுமே இந்த துப்பட்டா. நண்பர் குறிப்பிட்டுளதுபோல் தஞ்சை, ஒரத்தநாடு, மதுக்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், வாணியம்பாடி, பாண்டிச்சேரி, கோட்டக்குப்பம், கூனிமேடு, கீழக்கரை போன்ற பகுதிகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளன. தமிழர்களாகவே தமிழ் பண்பாட்டுடன் வாழ்ந்தவர்களிடம் வெள்ளை வேட்டி என்பதுகூட அரிதாகவே இருந்தது. எடுத்துக்காட்டாக கீழக்கரை துப்பட்டா. கீழக்கரையைச் சுற்றறியுள்ள ஏர்வாடி, இராமநாதபுரம், உத்திரகோசமங்கை, சிக்கல் போன்ற எல்லா ஊர்களிலும் வெள்ளை வேட்டி அல்லது கலர்சேலைதான். இன்று கருப்பு அங்கி முளைக்கத் தொடங்கியுள்ளது.

    இசுலாமியப் பெண்களின் சொத்துடமைப்பற்றி எழுத மறந்தே போனேன். அடுத்த ஒன்றில் விரிவாக எழுதுகிறேன். இண்டர்நெட் வசதி குறைபாடாக உள்ள பகுதியில் வசிப்பதால் உடனுக்குடன் பதிலிட முடியவில்லை. அதற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துக்களை பரிமாறுபவர்கள் உங்களைச்சுற்றியுள்ள அனுபவங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து இக்கட்டுரையின் நர்பகத்தன்மையை சரியா தவறா என்று அப்பெண்களுக்கு எடுத்துக்காட்டவும்.

  82. அல்லாவுக்காக வாதிட நீங்கள் யார்!!!!!!!! அவரை விட பலம் கொண்டவர்களா நீங்கள் ஏன் அவர்மீது பாரத்தை போட்டுவிட்டு நடப்பதை பார்த்து கொண்டிருக்கவிரும்பவில்லை ஏன் உங்களுக்கே அவர் மீது நம்பிக்கை இலையா?????????/

    • என்னடா ஹதர் அலி,  அடிக்கடி நீ பீஃப் விட்டட் என்பதை எடுத்துக்காட்டிக்கிட்டே இருக்கேடா. எதனதும் நியாயத்தன்மைகளை ஏற்று அதை உணரும் மனப்பக்குவம் இல்லை என்பதை அடிக்கடி உணர்த்துகிறாய். அது சரி! அவை எங்கே இருக்கப்போகிறது. அரேபியனுக்கு சொம்பு தூக்கியே நொந்து போனவனடா நீ,,,

      • ///அரேபியனுக்கு சொம்பு தூக்கியே நொந்து போனவனடா நீ,/// பருப்பு விட்டட் மஹம்மது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1960களில் சன்டை நடந்த போது ஒரு கட்டத்துல சீனா ஜெயிச்சுரும் என்ற நிலை வந்தபோது வேக வேகமாக சைனா மொழி கத்துக்கிற எத்தனித்தது என்ன ஒரு பருப்பு மூள வேள்ளக்கரா ஆங்கில மொழியை கத்துக்கிட்டு வேள்ளக்கரானுகளுக்கு சொம்பு தூக்கிய அழகேன்ன சொம்பு தூக்கிக்கி எல்லோரும் சொம்பு தூக்கியாத்தன் தெரியும் உன்னுடைய பிரவிகுனம் அது,

        • என்னா ஹைதர் அலி இங்கேயும் நீ மண்டையில ஒன்னுமில்லனு காட்டிட்டப்பா! அரேபியக்காரன், நம்ம இந்தியாகாரான் மாதிரி சீனாகாரன் வெள்ளைக்காரனுகளுக்கு யாரும் சொம்பு தூக்குவதில்லையப்பா, அவனுக குண்டி கழுவுவதில்லைப்பா, டிஷுவால தொடச்சிக்கொள்ளும் ரகம். வேணும்னா கொஞ்சம் டிஷூ கடதாசி எடுத்துக்கிட்டு போய் அவனுக பின்னால் நில்லு, எண்ட சின்ன ராசா

  83. உண்மை நிலவரத்தை ஒத்துக்கொள்வதில் பலருக்கும் இங்கே தயக்கம் இருக்கிறது. அதனால்தான் பதிவிற்கு சம்பந்தமில்லாத பலவற்றையும் இங்கே எழுதியுள்ளனர். அவர்கள் என்னதான் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
    சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, இஸ்லாமிய ஆண்கள், தங்களுடைய பிரதான உடையாக கைலியே அணிந்து வந்தனர். பேன்ட் அணிந்தவர்களை 11 என்று  கிண்டலடித்தும் வந்தனர். (பேண்டின் அமைப்பும் 11 என்ற எண்ணின் அமைப்பும் ஒரே மாதிரி தோற்றமளிப்பதால்). அந்தக் காலகட்டத்தில் திருச்சியில் தங்கி கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள், விடுமுறை காலத்தில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும்போது, பேன்ட் அணிந்தே ஊருக்குக் கிளம்புவார்கள். ஒரு கைலியையும் உடன்  எடுத்துச்சென்று,   அவர்கள் சொந்த ஊருக்கு முந்தைய ஊரில் இறங்கி, கைலியை மாற்றிக்கொண்டு செல்வார்கள். ஆனால் இன்று அது போன்ற நிலை ஏதுமில்லை. கிராம மக்களின் மனநிலையும் ஆண்களின் மனநிலையும் மாறிவிட்டது. தங்கள் சொந்த ஊரிலும் பேன்ட் அணிந்தே செல்கின்றனர்.
    அதுபோலவே, பெரும்பாலான இளம் இஸ்லாமியப் பெண்களும், தங்களுடைய உறவினர்கள் வரக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே புர்கா அணிந்து செல்கின்றனர். இன்னும் சில வருடங்களில் அதுவும் மாறிவிடும். 
    மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் அந்த காலகட்டத்தில் காணாமலே போயிருப்பர்

    • ///உண்மை நிலவரத்தை ஒத்துக்கொள்வதில் பலருக்கும் இங்கே தயக்கம் இருக்கிறது. அதனால்தான் பதிவிற்கு சம்பந்தமில்லாத பலவற்றைய///ஒரு தயக்கமும் இல்ல கும்மி நம்ம விவாதித்துக்கொண்டிருக்கும் போது உடரறுத்துக்கொண்டு முசுலீம் பெயரை வைத்துக்கொண்டு ஒருRSSநாய் வந்துவிட்டது அது முதுகுல குத்ர குரூப் அதனால உடனே திரும்பி பார்க்க வேண்டிய சூழல் சாகித்திடம் ஆதராம் கேட்டிருக்கிறோன் அது வந்த பிறகு அடுத்த நகர்வு உங்களுடைய கேள்வியை நோக்கி தான்

      • ஷாஹித் தனது பதிலை இங்கேக் கொடுத்துவிட்டாரே நண்பரே! இங்கே நாம் விவாதிப்பது இஸ்லாமியப்பெண்ணின்  சில வருடங்களுக்கு முந்தைய நிலையும், இன்றைய நிலையும்தானே! அப்படியெனில் இன்றைய உண்மை நிலவரத்தை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம். ஷாஹித் சில பகுதிகளில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து பதிலளித்துள்ளார். நானும் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பதிலளித்துள்ளேன். அவை ஏற்புடைவனவா இல்லையா என்றே நீங்கள் கூறாமல் வேறு விஷயங்கள் குறித்தே பேசி வருகிறீர்கள். 

  84. ///எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்ததுபோல் விவாதிப்பதும், ஆதாரம்தா என்று கேட்பதும், ஆதாரத்தை முன்வைத்தால் “அப்படியா என்குத்தெரியல. நீங்க அவரோட வந்து விவாதீங்க” என்று மழுப்பிவிட்டு ஓடிவிடுவதும். 28 வருடமாக நான் அனுபவிக்கும் ஒன்றுதான. மொட்டையடித்ததற்கு ஆதாரத்தை நான் தருவதிருக்கட்டும். அதற்குமுன், அப்படி மொட்டையடித்திரந்தால் அது சரியா தவறா என்று எல்லாம் தெரிந்த ஞானியான அவர் தைரியமாக கூறுவாரா?/// சாகித் இங்கே பின்னூட்டம் வர எல்லோரும் பி ஜெ ரசிகரும் இல்ல பி ஜெ இஸ்லாத்திற்கு முழு அத்தாரிட்டியிம் இல்ல உன்னுடைய 28வருட அனுபவத்தையும் பொய்யாக்க ஒரு சான்ஸ் அதராத்த கொடு நீ உன்மையானவன் இஸ்லாத்தியுள்ள கோபத்தில் RSSமாதிரி அவதூறு சொல்பவன் இல்லை என்பதை புரிந்துக்கொள்கிறோன் 

  85. ///ஹய்தர் அலி பீப் விட்டட்/// மஹம்மது பருப்பு விட்டட் பருப்பு தின்ற உன் மூளை என்னம்மா வேலை செய்யுது வராலற திரும்பி பாத்த தெரியும் திருவிதங்கோடு சமஸ்தானத்துல ஒ அப்பானுக தமிழ் பெண்களை மார்புசிலை போடவிடம தடுத்து மார்பு வளர்ச்சிக்கு ஏர்ப வரி வசூலித்த திறமையேன்ன மலபார் முசுலிம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் நிலத்துக்காக போராடியபோது ஒ இனம் நம்பூதிரிகள் வேள்ளக்கரான் கால நக்னது என்ன பொன்டாட்டிகள கூட்டி குடுத்த திறமையேன்ன இப்பவும் அமேரிக்க கால நக்குறது உன்னுடைய அறிவே அறிவு .

  86. ஹைதர் அலி, உன்னப் பார்க்க பரிதாபமா இருக்குப்பா! உனக்கு குரானும் தெரியல்லை. குரான் எப்படி வந்ததும்னு தெரியல. எதையும் தெரிஞ்சிக்கும் மனநிலையிலும் நீயில்ல. ஒரு மனுசன மதம் எந்தளவிற்கு கீழ்த்தனமானவனா ஆக்குது என்பதற்கு நீயே சிறந்த உதாரணம். இன்ஷா அல்லாஹ்

  87. இந்த விவாதத்திற்கு தொடர்பற்ற பதிவு.இருந்தாலும் நாம் விவாதிக்கும் தாய்மொழி தொடர்பானது.மதுரை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் வெற்றியாக இன்று முதல் தமிழில் வாதிடலாம் ஆனால் தமிழில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் இடையே வாய்மூலமான ஒப்பந்தம் ஏற்ப்பட்டுள்ளது.ஒப்பந்தப்படி இன்று தமிழை அரங்கேற்றினோம்(தில்லையில் செய்தது போல).இது பின் வழி உரிமை என்றாலும் வேறு வழியில்லை.இன்றும் தாய் மொழியில் சட்டப்படி வாதிட முடியாத இடம் உயர்நீ்திமன்றமே.இந்த லட்சணத்தில் செம்மொழி மாநாடு வேறு !.

  88. வீம்பு செய்பவர்களிடம் விதண்டா வாதம் செய்வதைவிட, காணாமல் விட்டுவிடுவதே மேல்.

  89. ஒன்று சொல்கிறேன் நன்றக கேட்டுக்கொள்ளுங்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையான அறிவு இல்லாமல் எழுத வேண்டாம் ப்ளீஸ் அது மட்டுமல்ல வீண் விவாதங்கள் பஹைமையை உண்டு பண்ணும் அல்லா ellorukkum நேர் வலி காட்டுவானாக ஒருவருடைய பண்பாட்டையும் மதக் கொள்கையையும் இழிவாக பேச யாருக்கும் அதிகாரம் இல்லை ப்ளீஸ் நிறுத்தி கொள்ளுங்கள்

  90. இது (அல்லாஹ்வின்) திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் : 14:10)

    அறிவு ஜீவிகளே : இஸ்லாத்தைப்பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு. இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களும் – வெறுப்பாளர்களும் சொல்வதை கேட்டு ஆய்வுத்தன்மை இல்லாமல் விவாதம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். விவாதம் என்றால் பூரணமாக தெரிந்து கொண்டு வரவேண்டும். வெறுப்பை மூலதனமாக கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கிறீர்கள். – அப்துல்லாஹ்

  91. இது (அல்லாஹ்வின்) திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் : 14:10)
    புர்க்கா – பெண்கள் என்று விவாதம் செய்யும் அறிவு ஜீவிகளே! இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு கிடைத்த சுதந்திரம்போல் வேறு எந்த மதத்திலும் சுதந்திரம் கிடையாது. இஸ்லாமிய பெண்கள் எல்லாம் எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று போர்க்கொடி தூக்கியது போலவும் நாங்கள் களமிறங்கி சுதந்திரத்தை வாங்கி தரப்போகிறோம் என்ற ரீதியில் விவாதம் செய்பவர்களே. முதலில் இஸ்லாமிய பெண்கள் தவிர மற்ற பெண்களுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுங்கள். மனிதர்களை படைத்த வல்ல அல்லாஹ் (இறைவன்) தாராளமாக இஸ்லாமிய பெண்களுக்கு சுதந்திரத்தை வழங்கி இருக்கிறான். நீங்கள் வந்து போராடி வாங்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பிற மத பெண்களுக்காக குரல் கொடுத்து போராடுங்கள். – அப்துல்லாஹ்

    • முதலில் இந்த காணொளிகளை பாருங்கள். அதற்கு முன் ஒரு வேண்டுகோள் மதவாத மனநோய் எனும் கண்ணாடியைக் கலட்டி விட்டு பாருங்கள்http://www.youtube.com/watch?v=lMCJqADcLc0&feature=PlayList&p=FAAFC0663A3B88FD&playnext=1&playnext_from=PL&index=4

  92. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகின்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

    //////இசுலாமிய சமூகத்தில் காணப்படும் பெண்ணடிமைத்தனம் முற்றாக களையப்பட வேண்டும்.//// இஸ்லாமிய பெண்கள் சுதந்திரம் கிடைக்காமல் இருந்தால் அல்லவா? போராடப்போகிறார்கள்.முதலில் இஸ்லாமிய பெண்கள் தவிர மற்ற பெண்களுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுங்கள். மனிதர்களை படைத்த வல்ல அல்லாஹ் (இறைவன்) தாராளமாக இஸ்லாமிய பெண்களுக்கு சுதந்திரத்தை வழங்கி இருக்கிறான். நீங்கள் வந்து போராடி வாங்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பிற மத பெண்களுக்காக குரல் கொடுத்து போராடுங்கள். – அப்துல்லாஹ்

    • மும்பை இசுலாமிய மாநாட்டில் குலாவை தலாக்போல் கருதவேண்டும் என்று போர்கொடியை தூக்கியதும் அக் கொடி அடித்து சோறுக்கப்பட்டதும்  உமக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. த்தது பித்துன்னு உளராதே.

    • சுல்தான், ///இது பெண்களை தங்களின் காமாந்தக கண்களுக்கு விருந்தாக்கத் துடிக்கும் திமிர் பிடித்த ஆண் மேலாண்மையின் வக்கிர உணர்வு/// தொடர்ந்தும் ஒரு எல்லையைத் தாண்டி உங்கள் எண்ணங்கள் போகாமை நினைத்து வருந்துகிறேன். பர்தா அல்லாத உடையுடன் செல்வதால் பெண்களை காமக்கண்ணோடு பார்ப்பதாகக் கூறுகிறீர்களே? இத்தாலி தேசத்திற்கு சென்று பாருங்கள், கடற்கரையில் ஆணும் பெண்ணும் நிர்வானமாக திரிவதைக்காணலாம். அங்கே பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள் என்பதால் அதைப் பார்க்கும் ஆண்களுக்கு எல்லாம் நட்டமாய் எழுந்து நிற்கிறதா என்று? அதற்கென்று அங்குள்ளவர்களை ஆண்மையில்லாதவர்கள் என்று கூறிவிடவேண்டாம். இங்கே நான் சொல்ல வருவது, இஸ்லாமியப் பெண்களை ஆடையில்லாம் போகச்சொல்வதல்ல. இஸ்லாமியரின் உடைதான் வக்கிரத்தை கட்டுப்படுத்துகிறது எனும் தட்டையான வாதம் முற்றிலும் பிழையானது என்பதாகும். பிரசவத்திற்கு போகும் எந்தவொரு பெண்ணினதும் பெண்ணுருப்பில் கைபடாமல் டாக்டர்கள் குழைந்தை பேறு பார்க்க முடியாது. பெண்ணுருப்பு காண்பதால் எல்லா டாக்டர்களுக்கும் நட்டமாகிவிடுகிறதா?   எந்த ஒரு சமூகக் கேடுக்கும் உடைதான் காரணம் என்று திட்டவட்டமாக கூற முடியாது.  பர்தாவை உடுத்திக்கொண்டிருக்கும் எத்தனையோ விடுகளுக்குள் நடைப்பெற்ற முறைகேடுகளும் ஊடங்களூடாக அறியக்கூடியதாக தானே இருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு சென்று பர்தா அணிந்துக்கொண்டு பணிப்பெண் தொழில் செய்யும் எத்தனைப்பேரை இஸ்லாமிய மதவாத மனநோய் நாயினம் பலித்தீர்த்து வருகிறது? கொஞ்சமாக பொதுஅறிவுடன் சிந்தியுங்கள். இஸ்லாமிய மதவாத நோயில் ஊறிப்போன நாடுகளுக்கு வெளியே இஸ்லாமியர் என்றாலே ஒரு கேவலத்தின் சின்னமாகவும் மண்டையும் ஒன்றும் இல்லாதவனாகவும் பார்க்கும் நிலையை உங்கள் போன்றோரே உருவாக்கி வருகின்றனர். 

  93. இந்த கட்டுரையாளர் மிகவும் அருமையாக இஸ்லாமிய பெண்ணடிமைத்தனம் மாறி வருகிறது என்பதை விளக்கிக்கூறியுள்ளார். உண்மையில் உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப எல்லாம் மாறி தான் வருகின்றன. மதவாத மனநோயாலார்கள் மட்டுமே தொடர்ந்து ஊறிப்போன வாதங்களில் திளைத்து நிற்கின்றனர். இஸ்லாம் உருவான சவுதி அரேபியப் பெண்களே இன்று பிற ஆண்களுடன் வெளிச்செல்லுவதும், பொது இடங்களில் உணவு உண்பதற்கும் தம்மை தயாராக்கி வரும் நிலை உருவாகி வருகிறது. இதோ இந்த காணொளியைப் பார்க்கவும் http://www.youtube.com/watch?v=Em4Z4L02BWA&feature=related

    • சவூதி அரேபியாலயே மாறிட்டாங்க இல்ல. அதனாலேயே, இவங்களும் மாறிடுவாங்க. கவலைப்படாதீங்க முகம்மது ஹுசேன்.

  94. Singing without music. Music is considered to be forbidden in Islam. இந்தியாவுக்கு பெருமைத் தேடி தந்ததே ஏ.ஆர் ரஹ்மானின் இசை. ஆனால் இஸ்லாம் இசையை தடைச்செய்கிறது என்றால் இது என்ன மார்க்கம்? பார்க்கவும் http://www.youtube.com/watch?v=_kbvvZs_0Zc  (4.42) 

    • உருவப் படங்களும் கூடாது. ஆனால் இசுலாமியத் தலைவர்களின் படங்களும் திருமணவிழாக்களில் வீடியோவும கண்ணைக் கவருகிறது.

      • சாகித் உங்களோட இஸ்லாமிய அளவு கோல் எது? பர்தா? இஸ்லாமிய பெயர்? இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. உங்களைப்போன்றோர் இஷ்லாமியப்பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் என்று நினைத்தால்! அதற்கு இந்த மார்க்கமும், நாங்கலும் பொறுப்பல்ல! உங்களுக்கு சிறந்த அறிவும், ஒழுக்கமும் இருந்தால், உங்களைபோன்றோர்களை அழைத்துக்கொண்டு நேரடி விவாதத்திற்கு வாருங்கள். அதை விட்டு விட்டு எங்கோ, எவனோ எழுதிய சுபியிச கற்பனைககதைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு, கோடானகோடி மக்கள் பின்பற்றும் நேர்மையான மார்கத்தை இழிவு படுத்த வேண்டாம் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறேன்.
        உங்களுக்கு சிந்த்திக்கூடிய ஆற்றல் இருந்தால் நீங்கள் எழுதி இருப்பது பெயர்தாங்கி இஸ்லாமியருடைய செயல்களும் வரலாறுமே தவிர உண்மையான இஸ்லாமியப் பெண்களைப் பற்றியதல்ல என்று புரியும். மற்றும் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் படித்து விட்டு குரானில் அப்படி சொல்லிருக்கிறது இப்படி இருக்கிறது என்று உங்களுடைய வசதிக்கு ஏற்ப கருத்துகளை மாற்றி எழுத வேண்டாம். என்னுடைய இந்த மேலே எழுதி உள்ள கருத்து ஒரு நேர்மையான மனிதருக்கு என்று நம்புகிறேன்.

  95. வயதான கிழவனும் சின்னச் சிறு பெண்ணை மணம் செய்துக்கொள்ளலாம். குரான் சுரா 61-1

  96. எங்களுடைய அரசியல்,வாழ்க்கை உட்பட எல்லாமே மthaத்தினால் தீர்மானிகப்படுகிறது என்று வாதிடும் போது மதத்தினை விமர்சிப்பது அவர்களுக்கு பிடிப்பதில்லை. எனவே விவாதம் இப்படி போய்க் கொண்டே இருக்கும். முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய தனி நபர் சட்டமா மாற்ரப்பட்டலும் போது இங்கே மாற்றம் கூடாது என்பார்கள். 2002 ம ஆண்டு குழ்ந்தை திருமணத் தடுப்பு சட்டத்திலிருன்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க கோரியது AIMPLB. நம்புவதற்கு கடினம் இதுதான் உண்மை. ஜாகிர் நாயக் என்பவரின் உரைகளை keளுங்கள். இன்று முஸ்லிம்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ள மத பரப்புரையாளர் அவர். கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது மார்க்க விரோதம், பரிணாமவாதம் பொய் என்பார்,. இப்படி சொல்பவர் அறிவாளி என்று இணையத்தில் எழுதும் பல முஸ்லிம்கள் கருதுகிறார்கள். அவர்களிடம் என்ன சொன்னாலும் அthe பதில்கள்தான் வரும்.PJonline போன்ற தளங்களைப் படித்தால் எப்படி அவர்கள் யோசிக்கிறார்கள் என்பதை புரிந்-து கொள்வீர்கள். எனவே முதலில் படியுங்கள்.

  97. #

    *
    o

    பர்தா அணிவதால் மட்டும் ஒரு பெண் அடிமைபடுத்த
    படுவதாக நினைகிறீர்கள்.முதல ஒன்னை தெருஞ்சுகுங்க
    இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல மார்கம். ஒரு மனிதன்
    இந்த ஒலகத்துல எப்படி வாழனும் என்று சொல்லிதருவதுதன்
    இஸ்லாம். ஒரு பிறந்த குழந்தை முதல் இறந்த மனிதர்
    வரைக்கும் உலகில் உள்ள அனைவருக்கும் எல்லா
    விஷயங்களையும் ஒரே மாதிரியாக சொல்லித் தருகிறது
    அப்படி இருக்க ஒரு ஆண் எப்படி டிரஸ் பண்ணனும்னு
    குரான் ல இருக்கு. அது போல் ஒரு பெண் எப்படி டிரஸ்
    பண்ணனும்னு சொல்லி இருக்கு.இதுல அடிமைத்தனம்
    எங்கே இருக்கு?

    #
    3.3
    fathima says:
    March 23, 2010 at 11:03 pm

    இப்போதைக்கு பெண் சுதந்திரம் முழுமையாக உள்ள நாடு என்பது உங்க பார்வையில் அமெரிக்காவை எடுத்துக்குவோம். குரான் இறங்கிய 1400
    வருசங்களுக்கு முன்னாடி அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடந்தது. பெண்களுக்கும் நம்மை போல் ஆன்மா இருக்குமா? அப்பவே பெண்கள் உங்களில் ஒரு அங்கம் என்று உரக்க பறை சாற்றியது குர்ரான் மட்டும்தான்.பெண்களுக்கு சொத்து உரிமை உண்டா? என இப்போகூட நாம் விவாதம் செய்து கொண்டு இருக்கோம். அப்பவே பெண்களுக்கு சொத்து urimai தந்த மார்க்கம் எங்க மார்க்கம்.

    .

  98. பர்தா அணிவதால் மட்டும் ஒரு பெண் அடிமைபடுத்த
    படுவதாக நினைகிறீர்கள்.முதல ஒன்னை தெருஞ்சுகுங்க
    இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல மார்கம். ஒரு மனிதன்
    இந்த ஒலகத்துல எப்படி வாழனும் என்று சொல்லிதருவதுதன்
    இஸ்லாம். ஒரு பிறந்த குழந்தை முதல் இறந்த மனிதர்
    வரைக்கும் உலகில் உள்ள அனைவருக்கும் எல்லா
    விஷயங்களையும் ஒரே மாதிரியாக சொல்லித் தருகிறது
    அப்படி இருக்க ஒரு ஆண் எப்படி டிரஸ் பண்ணனும்னு
    குரான் ல இருக்கு. அது போல் ஒரு பெண் எப்படி டிரஸ்
    பண்ணனும்னு சொல்லி இருக்கு.இதுல அடிமைத்தனம்
    எங்கே இருக்கு?

    ழுமையாக உள்ள நாடு என்பது உங்க பார்வையில் அமெரிக்காவை எடுத்துக்குவோம். குரான் இறங்கிய 1400
    வருசங்களுக்கு முன்னாடி அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடந்தது. பெண்களுக்கும் நம்மை போல் ஆன்மா இருக்குமா? அப்பவே பெண்கள் உங்களில் ஒரு அங்கம் என்று உரக்க பறை சாற்றியது குர்ரான் மட்டும்தான்.பெண்களுக்கு சொத்து உரிமை உண்டா? என இப்போகூட நாம் விவாதம் செய்து கொண்டு இருக்கோம். அப்பவே பெண்களுக்கு சொத்து urimai தந்த மார்க்கம் எங்க மார்க்கம்.

    .

  99. இஸ்லாத்தில் வற்புறுத்தல் இல்லை என்பது ஒரு ஏமாற்றுவேலை. இஸ்லாத்தின் படி தக்கியா.
    நாங்கள் அவ்வளவு கேனையர்கள் இல்லை.
    Additional Notes:
    Following his flirtation with preaching relative peace and tolerance at Mecca – a 13-year disaster that netted less than 100 followers (mostly friends and family) – Muhammad changed tactics during the last ten years of his life, as he obtained power. Near the end, he summed things up for his followers by telling them that he had been commanded by Allah to fight unbelievers until they spoke the Shahada (profession of faith in Islam).

    During his later years, Muhammad did not seem at all bothered by conversions that were made under obvious duress. Mecca was a city whose residents and leaders detested him. Yet nearly all of them “converted” to Islam the day that he conquered them with an army so dominant that little resistance was offered. These even included his sworn enemies of Abu Sufyan and his wife Hind. Anyone who is familiar with their life to that point would find it quite a stretch to believe that their “religious epiphany” just happened to coincide with the sword at their throat (according to Muhammad’s biographer, the exact words spoken to Abu Sufyan during his “acceptance” of Islam were “Submit and testify that there is no God but Allah and that Muhammad is the apostle of Allah before you lose your head” – Ibn Ishaq 814).

    Meccans who would not change their religion were forcibly expelled from the city following that last Haj (Quran 9:5). The Christians and Jews living in Arabia suffered the same fate on Muhammad’s order (after his death). The choice was given to them to either accept Islam or leave their land at the point of a sword (Sahih Muslim 19:4366).

    The Jews at Khaybar were not at war with Muhammad when he ordered his warriors to attack them. Even his faithful son-in-law, Ali, whom he chose to head the mission was somewhat perplexed as to the pretext on which they were to assault this peaceful farming community so far away from Medina:

    Muhammad said: ‘Proceed on and do not look about until Allah grants you victory’, and Ali went a bit and then halted and did not look about and then said in a loud voice: ‘Allah’s Messenger, on what issue should I fight with the people?’ Thereupon he (the Prophet) said: ‘Fight with them until they bear testimony to the fact that there is no god but Allah and Muhammad is his Messenger’ (Sahih Muslim 31:5917)

    The Jews were caught entirely be surprise, of course. Their wealth was stolen and their women and children distributed as slaves by the prophet of Islam to his men. Muhammad even took a woman for himself (after ordering the death of her husband).

    Before his death, Muhammad sent his warriors against pagan Arab tribes, such as the al-Harith, demanding that they either convert to Islam or be wiped out (they opted for the Religion of Peace). On his deathbed, he cursed Christians and Jews (Bukhari (8:427)).

    Muslims are taught to follow in the way of Muhammad. A Muslim under the reign of Umar put it this way “Our Prophet, the Messenger of our Lord, has ordered us to fight you till you worship Allah Alone or give Jizya (i.e. tribute)” Bukhari (53:386). Down through the centuries Muslims have forced Christians, Jews, Hindus, Buddhists, Zoroastrians, pagans and others to accept Islam, either by bluntly offering them death as an alternative, or by making their lives so miserable (ie. taxes, denial of rights…) that the conquered convert to Islam under the strain.

    Forced conversions persist among extremists. Recently in Egypt, a Christian girl was kidnapped and told that she would be raped if she did not convert. Another notable case was the kidnapping and forced videotaped conversion of two FOX reporters in Gaza in September, 2006. Neither of these examples of forced conversion was condemned by Islamic organizations, even in the West.

    Since Muslims believe so sincerely that their religion is truth, they often can’t help but feel, on some level, that forced conversion is more of a favor done to the subject – a case of the end justifying the means.

    It is very important to note the critical role that Jizya plays in Islamic teaching. Paying a “tax” to Muslims is the only avenue of escape for those who don’t want to leave their religion. This answers the question of why Muhammad, his companions, and subsequent Muslim armies didn’t force everyone to convert to Islam.

    As Muhammad realized with the Jews of Khaybar, who were allowed to keep their farming community provided they directed the profits of their labor to him, it was often more lucrative to leave local economies in place rather than killing everyone male who wouldn’t convert. This became the loose rule for the Muslim armies that swept across Christian, Jewish, Persian, Hindu and Buddhist lands in the decades that followed. The money that was collected was then used to further Islamic expansion.

    As Muhammad put it: “My sustenance is under the shade of my spear, and he who disobeys my orders will be humiliated by paying Jizya” (another translation: “My provision has been placed under the shadow of my spear, and abasement and humility have been placed on the one who disobeys my command.”) The hadith has been quoted by al-Qaeda and is found in the original version of Bukhari and Ahmad (5114 or 4869, depending on the translation).

    Another point to keep in mind is the distinction between speaking and believing. Muslims are commanded to fight unbelievers until they say they believe in Allah (or pay the Jizya), but there seems to be a tacit understanding that belief itself can’t be forced (ie. “there is no compulsion in religion”). Nevertheless, once a subjugated individual outwardly converts to Islam under the strain of taxes and discrimination, they are not allowed to recant upon penalty of death. Their children must also be raised Muslim. And, if they aren’t, then it is a sign of apostasy – subject to death.

    This is how Islam managed to spread so successfully within conquered populations to ratios in the high 90th percentiles over native religion.

    • அனனி அதனை கொஞ்சம் தமிழ் மொழியில் எனக்காக மாற்றி தரமுடியுமா சகோதரர் அனானி

  100. முஸ்லிம்கள் யாரும் அதிக உணர்ச்சிப் பட்டு தங்களுடைய நேரத்தை இங்கே வீணடிக்க வேண்டாம். எங்கெங்கு இஸ்லாம் தாக்கப்படுகிறதோ அங்கெல்லாம்,யார் தாக்குகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சியும் கோபமும் இருக்கின்றது என்பதையும் தான் சார்ந்திருக்கும் மதமும் இஸமும் இஸ்லாம் அளவுக்கு வளர்ச்சியும் ஆதரவும் பெறவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு மாறவேண்டிய அளவுக்கு அவர்களின் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொண்டு இவர்களைவிடவும் அறிவாளிகளும் அதிகாரத்தில் இருந்தவர்களும் முயன்று அழிக்கமுடியாமல் தோற்றுப் போன சரித்திரங்கள் எண்ணற்றவை. அது இவர்களுக்கும் தெரியாததல்ல. ஆதலால் ஜஸ்ட் லைக் தட் என உதறிவிட்டு உங்கள் வேலையை கவனிக்கலாம.

    • யாரும் உணர்ச்சி வசப்படாதீங்க செக்கு மாடாவே இருங்க.ஆமா …….அது என்னங்க பகுத்தறிவு?

  101. எந்த மத கோட்பாடுகளுக்கும் இந்த அளவு விவாதங்கள் நடக்குமா? இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா? . நீங்களெல்லாம் உங்க மனம் போன போக்கில் வாழ்றீங்க . நாங்க இறைவன் காட்டிய வழியில் வாழ்கிறோம். தயவு செய்து குரான் , பைபிள் , உங்களின் வேதங்கள் படிங்க . நீங்க எல்லோருமே நேரான வழிக்கு திரும்பிடுவீங்க.

    வீட்டுக்குள் பெண்களை இஸ்லாம் சிறைவைகவில்லை என்பதற்கு உதாரணமே புர்கா தான் . அந்நிய ஆண்களுக்கு முன் வெளியில் வரும்போது தான் புர்கா அணிகிறோம்.

    இஸ்லாம் பெண்களை வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்ல வில்லை. மாறாக போக தேவை இல்லைன்னு தான் சொல்லி இருக்கு. வேலைக்கு போய்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் இத்தாவில் இருக்கும் பெண் கூட வேலைக்கு போகலாம்.

    ஆணுக்கு பெண் அடிமைன்னு இஸ்லாம் எங்கும் சொன்னதில்லை. கணவனுக்கு கட்டுப்பட்டு இருங்கள் என்பது பெண் அடிமை என்றால் தாயிக்கு மகனை கட்டுப்பட சொல்ல்வது ஆண் அடிமையா? இது என் உங்கள் கண்களுக்கு புலப்பட வில்லை? ஒரு நாட்டுக்கு இரண்டு தலைவர்கள் எப்படி இருக்க முடியாதோ? அது போல் தான் வீட்டுக்கும். தாய் இருந்தால் பெண் தலைவி . கணவன் இருந்தால் ஆண் தலைவன்.
    குரானில் கூறப்பட்ட எந்த வசனமும் மனிதனுக்காக , மனிதன் நிம்மிதியாக வாழ வேண்டும் என்பதற்காக சொல்ல பட்டது . நாம் அதை மீறி நடப்பதல் மட்டுமே துன்பம் ஏற்படுகிறது. மேல் குறிபிட்டுள்ள அத்தனை பின்னூட்டங்களையும் படிங்க. எம் இஸ்லாமிய சகோதர்களின் கண்ணியமும் , மற்றவர்களின் இயலாமையினால் வார்த்தைகள் பிறழ்ந்து பேசுவதையும் காண்பீர். வார்த்தைகளிலே இத்தனை கண்ணியத்தை இஸ்லாம் ஏற்படுத்தீனால் வாழ்க்கை யில் கேட்கவா வேண்டும்?

  102. One experience that was particularly educational was when I dressed up? as a Muslim woman for a drive along Crenshaw Boulevard with three Muslim men as part of a newsmagazine project. I wore a white, long-sleeved cotton shirt, and a flowery silk scarf that covered my head, which I borrowed from a Muslim woman. Not only did I look the part, I believed I felt the part. Of course, I wouldn’t really know what it feels like to be Hijabed-I coined this word for the lack of a better term-everyday, because I was not raised with Islamic teachings.

    HIJAB AS OPPRESSION: A SUPERFICIAL AND MISGUIDED VIEW
    I consciously chose to be Hijabed because I was searching for respect from men. Initially, as both a Women’s Studies major and a thinking female, I bought into the Western view that the wearing of a scarf is oppressive. After this experience and much reflection, I have arrived at the conclusion that such a view is superficial and misguided.
    THE MOST LIBERATING EXPERIENCE OF MY LIFE
    I covered up that day out of choice, and it was the most liberating experience of my life. I now see alternatives to being a woman. I discovered that the way I dress dictated others’ reaction towards me. It saddens me that this is a reality. It is a reality that I have accepted, and chose to conquer rather than be conquered by it. It was my sexuality that I covered, not my femininity. The covering of the former allowed the liberation of the latter.by Kathy ChinThis article was originally published in Al-Talib, the newsmagazine of the Muslim Students’ Association of the University of California in Los Angeles (UCLA) in October 1994. At the time of its publication, Kathy Chin was a senior at UCLA majoring in Psychobiology and Women’s Studies.

  103. ஒவ்வுருவருக்கும் சிந்திக்கும் திறனை வழங்கியிருப்பதாக சொல்லும் அல்லா பெண்களும் தாங்களே சிந்தித்து தமகேற்ற உடையை அணிய ஏன் உங்கள் அனுமதிக்க மறுக்கிறது?இந்த உடையை தான் அணிய வேண்டும் என சொல்வது சிந்திக்காதேஇதைமட்டுமே அணி என்று கூறுவதாக அர்த்தமாகிறதல்லவா?ஒரே கேலி கூத்துதான் அனைத்து மதங்களும்..
    .
    .
    கேட்டால் பல கள்ள உறவுகள் மிகுந்து வரும் கால கட்டத்தில் பெண்களை படுதா போட்டு மூடி வைப்பதே சிறந்தது என்கிறீர்கள்.அப்போது ஆண்கள் மட்டும் அதிகபட்சமாக நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது எந்த ஊர் ஞாயம்?
    .
    .
    ஒவ்வொரு மதமுமே ஒரு கேலி கூத்து,.
    அல்லா ஒரு தனி இடத்தில சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்..ஒ இவன் இசுலாமியனா ?அவனுக்கு மட்டும் நாம் அருள் புரிய வேண்டும்
    மற்றொரு இடத்தில சிவன் மற்றும் பல கோடி தேவர்கள அமர்ந்து கொண்டு ஒ இவன் இந்துவா?இவனுக்கு நாம் அருள் புரியவேண்டும்.
    அதே போல் இயேசுவும்..
    அப்போது உங்கள் அல்லா ஒரு இந்துவுக்கு அருள் புரிய மாட்டாரா?உலகை படைத்தார் அல்லா என்கிறீர்கள்..அப்போது இந்து மதம் மற்றும் பிற மதங்களையும் அவர்தான்படைத்தாரா ?அப்படியானால் ஏன்?எதற்கு?
    இப்படி நான் கேள்வி கேட்பது கூட உங்கள் அல்லா ஒன்றை கொயர் நூறில் எழுதி வைத்திரிக்கிராரோ ?

  104. ரஃபீக் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் எழுதியிருக்கிற பதில் உங்களுக்கே நிறைவாகப் படுகிறதா? அந்த உழைக்கும் பெண்களை பயன்படுத்திக் கொள்dfggfgfgவது

  105. முதலில் முஹம்மது ஹூசைன் என்ற பெயரில் மறைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். வெரியனின் கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டாம். ஏனென்றால் அவனின் குறிக்கோள் அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் கொண்ட அரைவேக்காடு. கருத்துக்களால் எதிர் கொள்ள முடியாமல் இப்படி கோயபல்ஸ் மாதிரி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பும் இவன்களை என்ன செய்ய. கருத்துக்களுக்கு நேர்மையான முறையில் பதில் சொல்ல தெரியாமல் பொட்டப்பய மாதிரி. பிற மத கடவுகள்களை திட்டாதே என்ற கண்ணியமிக்க மார்க்கத்தில் உள்ளவர்கள் நாங்கள். உன்னை மாதிரி கட படி புரளி பேசி மக்களிடம் விசத்தை விதைப்பவர்கள் அல்ல நாங்கள். இவர்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு புர்கா, தலாக், இத்தா. இதுதான் பெண்களை அடிமைபடுத்தி வைப்பதாக சொல்கிறார்கள். அதற்கு முன்னால் சில விளக்கங்கள் உண்மைகள் சொல்கிறேன் கேளுங்கள்.

    மனிதர்களை தொழில் முறையில் பிரித்து மனிதர்களை ஜாதி வாரியாக பிரித்து மனதிர்களை தெருவில் கூட நடக்கக்கூடாது, கோயிலுக்குள் நுழையக்கூடாது, வீட்டிற்குள் வரக்கூடாது என்று பலகாலமாக கேவலமாக
    மனிதனை நடத்திக்கொண்டிறிக்கிறார்கள். இன்றளவும் அந்த ஜாதிப்பேயை அழிக்க முடியவில்லை. ஆனால் ௧௪௦௦ வருடத்திற்கு முன்பே எல்லா மனிதனும் ஒண்ணுதான் எல்லோரும் சமம். ஆண்டான், அடிமை, கருப்பன், வெள்ளையன் எல்லோரையும் ஒன்றாக ஆக்கினது இந்த மார்க்கம் தான். இன்றளவும் எந்தவித பேதமும் இல்லாமல் இருக்கிறார்கள். உங்களால் கொண்டு வர முடிந்ததா?. விதவை திருமணத்தை 1400வருசத்துக்கு முன்பே கொண்டு வந்த மார்க்கம் இது, உடன்கட்டை அது இது என்று விதவைகளை ஒதுக்கி வைத்து வீட்டில் முடக்கிய சமுதாயம் எது. இன்றைக்கு தான் மறுமணம் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் வருது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அப்போதே கொண்டு வந்த மார்க்கம். இன்றைக்கு தான் நீங்கள் சட்டமாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    பெண்களை டியூப்டாப்ஸ், மைக்ரோடியூப் டாப்ஸ் நாகரீகம் என்று பெண்களை மட்டும் அரைகுறை ஆடைகளுடன் உலவவிடுவது பெண்களை நீங்கள் கண்ணிய படுத்துகிறீர்களா? இல்லை இழிவுபடுத்து கிறீர்களா? இன்று பெண்களை ஒரு போகப்பொருளாக சினிமாவும் கமர்ஷியல் உலகமும் பயன்படுத்து கொண்டிருப்பதை ஏன் பெண்கள் இயக்கம் கண்டிக்கிறீர்கள். அதுவும் பெண்ணுரிமைதானே என்று அந்த பெண்ணியக்கத்தை நீங்கள் கண்டிக்க வேண்டியது தானே? . அப்படி உடை உடுத்துவது அந்த பெண்ணின் உரிமைதானே பிறகு அந்த போஸ்டர்களை அழிப்பதும் கண்டிப்பதும் எந்த விதத்தில் நியாயம். கண்ணியமாக உடை உடுத்துங்கள் என்று தான் குரான் சொல்கிறது. ஆனால் புரியாத முஸ்லிம்கள் கூடுதலாக உடைகளை அணிந்து வருகிறார்கள். ஆனால் இன்று அதுவும் மாறிவருகிறது. ஆண்கள் முழுக்கை சட்டை முழு கால்சட்டை அணிந்து வருகிறான். ஆனால் பெண்களுக்கு மட்டும் அங்கங்கே அங்கங்கள் தெரிய ஆடை அணிவது ஏன். அது கவர்ச்சியாக காட்டப்படுவதால் தானே. ஒரு ஆண் வெறும் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு உட்காரலாம். அது யாரையும் ஈர்க்காது யாரையும் அது சலனப்படாது. ஆனால் ஒரு பெண் இது மாதிரி அணிந்து வீட்டிலோ வெளியிலோ உலவ முடியுமா? அது மற்றவர்களை சலனப்படுத்துமா படுத்தாதா?. பர்தாவிற்கு எந்த விதமான நிறமோ, அளவோ இல்லை. முகம் முன்கைகளை தவிர ஏதாவது ஆடைகளால் மறைத்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறது. சுடிதார் கூட கண்ணியமான உடைதான். கூடுதலாக தலையை சிறு துணியால் மறைத்து கொண்டு வேலைக்கு போகலாம், வெளியில் வரலாம். ஒழுக்கம் என்பது இஸ்லாத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றே. ஆண்கள் தவறு செய்தாலும் பெண்கள் தவறு செய்தாலும் தண்டனை ஒன்றே? இதில் ஆண்களுக்கு எந்த விதி விலக்கும் இல்லை. தலாக் பற்றி மற்ற நண்பர்கள் தேவையான விளக்கம் கொடுத்து விட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்கள் மட்டும் விளக்கம் கேட்டால் சொல்லப்படும்.

    சிலர் பருப்பு விலை ஏறுது, கலவரம் வருது, இனக்கலரம் வந்து மனிதர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்க அல்லா என்ன பண்றார் அப்படின்னு அறிவூபூர்வமான கேள்வி என்று அபத்தமாக கேட்கிறார்கள். இதற்கும் குரானில் பதில் இருக்கிறது. இறைவன் மனிதனையும் படைத்தான், விலங்குகளையும் படைத்தான். ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஒரு வித்தியாசத்தையும் கொடுத்திருக்கிறான். அதுதான் ஆறாவது அறிவு. சுயமாக சிந்தித்து செயல் படுவது. அல்லாவே எந்த பிரச்சனையும் இல்லாமல் உன்னை வாழ வைப்பதற்கு உனக்கு ஆறாவது அறிவு தேவையில்லை. ரோபோ விலங்கு மாதிரி படைத்து விட்டு போய்விடுவான். அந்த அறிவை வைத்து நீ எப்படி செயல்படுகிறாய் என்பது தான் இறைவன் உனக்கு கொடுத்திருக்கும் பரிட்சை. மனிதன் தான் மனிதனை விலங்குகளுக்கு கீழாக நடத்துகிறான், ரத்தம் ஓட்டுகிறான், பதுக்கல் செய்கிறான். அதை தடுப்பதற்கும் உனக்கு அறிவை கொடுத்திருக்கிறான். உங்களுக்கு ஏற்படும் தீங்குகள் எல்லாம் நீங்களாக ஏற்படுத்து கொண்டதுதான். நீங்களாக திருந்துதர வரை இறைவன் உங்களை நேர்வழி படுத்த மாட்டான். எப்படி வாழ்வது என்று ஒரு மறையையும் அதுதான் குரானையும் கொடுத்து எப்படி வாழ்வது என்று வாழ்ந்தும் காட்டிவிட்டு சென்றிருக்கிறார். இப்படி நடந்தால் ஒழுங்கா இருக்கலாம் இல்லன்ன நீ வழிகெட்டு போய்விடுவாய் என்றும் சொல்கிறது. கேட்டு கொண்டால் உங்களுக்கு நல்லது இல்லையென்றால் எங்கேடு கெட்டு போங்கள் யாரையும் பலவந்தப்படுத்த வில்லை. இறைவன் தெளிவாக குரானின் அறிவித்து விட்டான். இந்த மார்க்கத்தில் எந்த வித மான நிர்பந்தம் இல்லை. விரும்பியவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் இல்லை என்றால் அது உங்கள் இஷ்டம் என்று விட்டுவிட்டது. வட்டி வாங்காதே, பெண்களுக்கு உரிய உரிமையை அவர்களுக்கு
    கொடுத்து விடு,(சொத்து, மறுமணம், குலா முறையில் ஆண்களை விட்டுவிடுதல் அதற்கு காரணம் சொல்லத் தேவையில்லை. பெண்களை மணக்கும் முன் அவர்களுக்கு உரிய மஹர் கொடுக்க வேண்டும், மலையளவு கொடுத்திருந்தாலும் திருப்பி கேட்க அனுமதியில்லை, வரதட்சணை வாங்க்கூடாது…..இன்னும் பல) ஜகாத் என்னும் ஏழை வரி, அண்டை வீட்டாரை நேசி, இன்னும் பல பல… இப்படியெல்லாம் செய்ய சொல்லி மார்க்க கட்டளையாக சொல்கிறது.

    இதற்கு மேலும் புரிய வில்லை என்றால் மூடர்களுடன் விவாதிப்பது வீண் என்று விட்டு விட வேண்டியதுதான்.

  106. நம் அனைவரின் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாஹட்டும் !

        வினவு இந்த இஸ்லாமிய பெண்கள் பற்றி நீங்கள் எழுதியுள்ள இந்த கட்டுரயில் இருந்து சிலவற்றிக்கு நான் ஒரு இஸ்லாமியன் என்ற அடிபடயில் ஒரு சில வற்றிக்கு நான் பதில் கூற விரும்புஹிறேன் .
    குரிப்பஹா ‘ தலாக் ‘ , ‘ஹிதா’ .

    முதலில் இந்த முதலாக் பற்றியது !

     ‘தலாக் , தலாக் , தலாக் ‘ என்று கூறுவது  என்பது மூன்று தவனைகலாஹா 
    மட்டுமே . அதாவது மூன்று தவணை என்பது ஒவ் ஒரு தவணைக்கும் மூன்று மாத இடைவெளி . இந்த இடை பட்ட காலத்தில் தனது மனைவியுடன் சமரசம் ஏற்பட்டால் சேர்ந்து கொள்ளலாம் . மூன்றாவது சொல்லிவிட்டால் திருமண உறவு என்பது முறிந்து விடும். இந்த சட்டம் ஆண்களுக்கு .
    பெண்கள் என்றால்( குலா ) ஒரு மாதம் தவணை. இது தலாகிர்கான இஸ்லாமிய சட்டம் .( அதாவது விவாஹறது  சட்டம் ). ஒருவன் அல்லது ஒரு ஜமாஅத் முன்று தலாகையும் ஒரே முறையில் சொன்னாலும் அது ஒரு முறை சொன்னதாஹவே பொருள் . அந்த விவாஹறது என்பது இஸ்லாமிய சட்டத்திற்கு விரோதமானது . 

    இரண்டாவதஹா ‘ஹிட்தா’ 

         இஸ்லாம் ஹிட்தா ஒரு காரனதிர்க்கஹா மட்டும் சொல்லவில்லை .அதாவது கர்ப்ப பை மட்டும் அல்ல . பெண்ணின் உடல் நிலை , கணவனின் நினைவிலிருந்து விடு பட்டு மறுமணம் செய்ய ,இதுபோன்று பல காரனகளுக்கஹா இந்த ஹிட்தா இறைவனால் கொடுக்கப்பட்டது .

    மேலும் இதில் நீங்கள் ” முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர அது தொடர்பான வேறு எதனையும் சான்றாக நான் படிக்கவுமில்லை. பார்க்கவும் இல்லை ”

    என்று எழுதி உள்ளீர்கள் இது எந்த போர் முடிந்து முஹம்மது நபி கூறினார்கள் என்று எங்களுக்கு நீங்கள் குற வேண்டும் . இஸ்லாம் பெண்கள் மொட்டை அடிப்பது ஹராம் என்று குறியுள்ள பொது நீங்கள் இதை எந்த வரலாற்று (ஹதிஸ்) அடிப்படையில் குறி உள்ளீர்கள். இதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் .

    அடுத்து
    முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்”

     என்று கூறியிருந்தாலும் அவரின் மரணத்திற்குப்பின் அவரது மனைவி

    ஆயிஷா அரசியலில் மிகவம் முக்கியமான பங்காற்றத்

    தொடங்கியதிலிருந்து இன்று வரை மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டேதான்

    வருகின்றன”” இந்த கர்த்துக்கும் நான் உங்களுடன் முரண் படுஹிறேன் . இஸ்லாம் பெண்களின் பேச்சை கேக்ககுடாது என எங்கும் குற வில்லை .
    எந்த விசயதிருகும் பெண்களிதம் ஆலோசனை கேக்கவும் குருஹிறது . இதற்கும் நீங்கள் தஹுந்த ஆதாரம் காட்ட வேண்டும்.

        

  107. புர்கா முஸ்லிம் முக்காடு கிறிஸ்துவர் ஒழுங்காக கட்டிய சேலை இந்து எதுவானலும் சரி ஒரே ஒரு செல் போன் எல்லா ஆண் பெண்களையும் கெடுத்து குட்டி சுவரா ஆக்கிடுது இத தினமும் எல்லா இடத்திலும் பாக்குறோம் ஏன்னா மனித நாய்ங்க புத்தி அப்படி இதுல எத போட்டு மூடி வச்சாலும் வீணா போற நாய்ங்க போய்க்கிட்டுதான் இருக்கும் நமக்குத்தான் சுயக்கட்டுபாடு வேணும் .

  108. அந்த ஊரில் வழக்கம் இந்த ஊரில் வழக்கம் என்பதெல்லாம் இஸ்லாம் அல்ல இஸ்லாமிய சட்டம் என்ன சொல்கிறது (அதன் படி பலர் வாழ வில்லை என்பது வேறு விஷயம் ) என்பதுதான் தங்களின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் ஆகும் .

  109. ///ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. “கல்லானாலும் கணவன்…” மலை ஏறிக் கொண்டிருக்கிறது/// கீழ்த்தரமான அப்பட்டமான அவதூறு சாகித் ஒரு பொய்யான் என்பதை நிருபிக்கிறார் நபிகள் நாயகம் காலத்திருந்தே பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்யும் உரிமை நடைமுறையில் இருக்கிறது ஆதாரம். புகாரி ஹதீஸ் என் 5276 .எதோ சமூக முன்னேற்றமடைந்ததால் இவ்வுரிமை இருப்பதாக தைரியமாக பொய்யை அவிழ்த்து விடுகிறார் இதற்கு சாகித்திடம் பதிலை எதிர்பார்க்கிறேன் ______________________________________________________

  110. ஒருவன் பார்த்தால் ஒரு பெண்ணின் கற்பு போய் விடும் என்று கறுத்த துணியால், பெண்களை மூட சொன்ன நபி, ஒரு உலக மகா முட்டாள். நபிகள் ஒரு சந்தேக பேர்வழி. தன் குழந்தை மனைவி ஆயிஷாவை கூட சந்தேகப்பட்டார். நபிகளின் கடைசி காலத்தில், அவரால் இயலாத காலத்தில், அவர் மனைவிகள் பிறரிடம் போனார்கள். (ஆதாரம்: கதீஸ்) அவர் மனைவிகளை பலர் ஆட்டை போட நினைத்தார்கள். அதிலிருந்து காப்பாற்ற அத்தனை மனைவிகளையும், கறுத்த துணியால் மூடினார். அதை இப்போதும் நீங்கள் செய்வது சரியா? அவர் செத்த பிறகு அவரின் மனைவிகளை யாரும் கல்யாணம் செய்ய கூடாது என்று ஒரு கள்ள வசனம் மூலம் தடுத்தார். அடுத்தவன் செத்த உடன் அவன் மனைவியை கட்டியவர், தான் செத்த பிறகு, தன் மனைவிகள் பிறரை கட்டுவதை தடுத்து ஏனோ? இது சுயநல குணம். ஒரு சந்தேகப்பேர்வழி செய்த கிறுக்கு தனத்தை நீங்களும் தொடர்வது சரியா?

      • Basha,

        அவர் சொல்வது உண்மையா பொய்யா என்பதை முதலில் சொல்லுங்கள். நபி இறந்தபோது அவரது மனைவி(!) ஆய்ஷாவுக்கு என்ன வயது. விதவை திருமணம் பற்றி முழங்கிய நபி(அல்லது அல்லா), அந்த பெண் வேறு யாராவது ஆணை திருமணம் செய்வதை ஏன் தடுத்தார். நபியின் மற்ற மனைவிகள் அவர் செத்தபின்பு மறுமணம் புரிந்து கொண்டார்களா? அதை நபி (அல்லது அல்லா) அனுமதித்தாரா? இல்லையென்றால் பிறகு என்ன பெரிய சீர்திருத்தத்தை நபி செய்தார் என்பதை விளக்குங்கள்.

  111. புர்கா… முஸ்லிம் பெண்களே! எதிரே வரும் நீங்கள் எதைப்பார்க்கிறீர்கள்?. என்னையா? என் குழந்தைகளையா? என் மனைவியையா? நீங்கள் எதிரியா? நண்பியா? கிட்டத்தட்ட கருப்புக்கண்ணாடி பொருத்தப்பட்ட அறைக்குள்ளிருந்து வெளியே நோட்டமிடும் வசதியைப்பெற்றிருக்கிறீர்கள். நேருக்கு நேர் கண்களை சந்திக்கும் அரைகுறை ஆடை அணிந்த பெண் எவ்வளவோ மேல். ஒன்று மட்டும் நிச்சயம். மாற்றமே இல்லாத ஒன்றை உயிரற்றது என்றுதான் சொல்லவேண்டும். அது மதமாகவே இருந்தாலும்.

  112. சாகித் அவர்களின் கற்பனை கட்டுரையில் ஏதோதோ உளரிக்கொட்டியுள்ளார் உதாரனத்திர்க்கு முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு ‘கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)’ என்று கூறுகிறார்.. இந்த நபிமொழியெல்லாம் இவர் எதிலபடித்தார் என்று தெரியவில்லை ஏதோ வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று தன் விஷக்கருத்துக்களை கக்கியுள்ளார் இதலாம் இஸ்லாமிய எதிர்ப்பு வாதிகளின் திட்டமிட்ட பொய் பரப்பல்களேதவிர வேறொன்றுமில்லை முஸ்லிம்கள் மிகவு; தெளிவாகவே இருக்கின்றார்கள் முஸ்லிம்கள் யாரிடமிருந்தும் பாடம் படிக்கவேண்டிய சூழலில் இல்லை என்பதை இதனைபடிக்கும் அன்பர்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்

  113. சாஹித்,

    மிகவும் நன்றி. நாங்கள் சொல்ல நினைத்தவற்றை நீங்கள் சொல்லியதற்கு.

  114. முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் வாழ்வியல் முறைப்படி நடந்து கொள்வதாலும் அவர்களது வாழ்க்கை முறைகளை இஸ்லாமிய அடிப்படையில் மாற்றிக் கொள்வதாலும் வெளியில் உள்ளவர்களுக்கு என்ன நஷ்டம் ஏற்படுகிறது என்று தான் புரியவில்லை. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாக உள்ளது.

    பிற சமூகத்தவர்களின் உள் விவகாரங்களில் முஸ்லிம்கள் ஒரு போதும் தலையிடதிருந்தும் எங்களது ஒழுங்கங்கள் மீது மட்டும் ஏன் அவர்களது வக்கிரப் பார்வையை தினிக்க முயல்கிறார்கள் என்று தெரிய வில்லை.

    இருபாலரும் கலந்துள்ள இடங்களில் மாணவியை ஆசிரியர், சக பணியாளரை மேலதிகாரி, பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர், நண்பனின் மனைவியை சகோதரியை, அன்டை வீட்டாரின் மனைவியை என்று பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். இது போன்ற தவறுகளுக்கு யார் காரணம்?

    பிற மதத்தவரின் அறிவுக்குப் பொருந்தாத அலகு குத்துவது, சவுக்கால் அடித்து சித்திரவதை செய்வது, தீ மிதித்தல் போன்ற சடங்குகளை முஸ்லிம் எப்போதாதவது ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை விமர்சித்திருப்பார்களா? மாட்டார்கள்! காரணம் பிற மதத்தவர்களின் வழிபாட்டு உரிமைகளை விமர்சிப்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

    முஸ்லிம்கள் பின் பற்றும் இஸ்லாமிய வாழ்க்கை முறையால் சமூகத்தில் மலர்ச்சி ஏற்படுமே தவிற எந்த நிலையிலும் பிறரது உரிமையில் கைவைக்காது.

    எப்பவுமே நாங்க நாங்க தான் நீங்க நீங்க தான்.

    விருப்பு வெருப்புகளை மறந்து கொஞ்சம் யோசித்து பார்த்து சில நாள்கள் நடைமுறை படுத்தி பாருங்கள்… அதன் பிறகு புரியும்.

    • உங்களை போல பலர் இருப்பதால் தான் ஒரு பெரியார் , திரு வி கா , பாரதியார் என யாரும் இஸ்லாமில் தோன்ற வில்லை …. பல மதங்கள் முதல் தனமான கொள்கையுடன் தான் தோன்றியது ..ஆனால் மனிதனின் வளர்சிகேற்ப மதமும் பக்குவப்படவேண்டும் இல்லை என்றல் அது முட்டாள் தனமாக மாறிவிடும் .. ஹிந்து மதத்தில் பல மூட நம்பிக்கைகள் இருந்தது …அவைகளில் பல இன்று மாறிவிட்டது …இன்னமும் செல ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் சூன அந்த மூட பலகங்களும் மாறிவிடும் …எனேன்றால் ஹிந்துவில் பலர் மற்றவர்கள் சொல்லுவதை கவனிகின்றர்கள் …

      முஸ்லிம் மதத்தில் நீங்கள் பல வெறித்தனமான கொள்கை வைபதால் பல இல்லசுகள் இஸ்லாம் மதத்தை வெறித்தனமாக எடுதுகொல்கின்றர்கள் …இதன் வில்லைவு எதில் பொறுமை இல்லபது, தீரவததிற்கு அடிமைஆகுவது , அவர்கள் திறமை வீனகுவது, மற்ற மததிரருடன் கலந்து கொள்ளாமல் போகுவது …என ஒரு ஆரோக்கியம் இல்லாத சமுதாயம் உருவாகுவது தான் …..

      தவிர இங்கு ப்ர்ச்சன்னை முஸ்லிமோ , ஹிந்துவோ இல்லை பெண்கள் நெல்லை தான் … என் குழந்தை நான் என்னவேணும் நாளும் செய்வேன் நீ யார் கேட்பது என்று கூறுவது தவறு

  115. நேற்று ஒரு செய்தி. ஆப்கானிஸ்தானில் தாலிபான் மதவெறியர்கள் ஒரு கர்ப்பினிப்பெண்ணை சவுக்கால் அடித்து தலையில் சுட்டு கொலை செய்திருக்கிறார்கள். காரணம், அந்த பெண் ஒழுக்கம் கெட்டவளாம்.

    ஏன் அந்த பெண்ணை கர்ப்பமாக்கியவர்களை இவர்கள் ஒன்றும் செய்யவில்லை?ஆணுக்கும் இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது என்று சொல்பவர்கள் இது போன்ற தண்டனைகளை ஆண்களுக்கு கொடுக்கும் செய்திகளை இங்கே சொல்லலாமே.

    பின்னூட்டங்களில் மதவெறிதான் தெரிகிறது.

  116. \\ஆம். உழைப்பவனுக்கு மதமில்லை, உழைப்புதான் பெருமை.. உட்கார்ந்து தின்பவனுக்கு மதமுண்டு, மதம்தான் பெருமை.\\

    Hi vinavu,

    Great senetence ,

  117. \\ஆம். உழைப்பவனுக்கு மதமில்லை, உழைப்புதான் பெருமை.. உட்கார்ந்து தின்பவனுக்கு மதமுண்டு, மதம்தான் பெருமை.\\

    Hi vinavu,

    Great senetence ,

    • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; “ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது [நூல்;புஹாரி,எண் 2072 ] அண்ணே kaanan இதையும் கொஞ்சம் படியுங்கள்

  118. அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3

    சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது. பரிகாரம் எனும் அடிப்படையில் அடிமைகளின் விடுதலை குறித்து குரான் பேசினாலும், அடிமையை வைத்திருப்பதும், அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்துவதும் மத அடிப்படையில் குற்றச் செயலல்ல.
    i am not a muslim,christin,hindu
    i am marxist

  119. வீட்டுக்குள் மறைத்து வைத்தால் கள்ள உறவுகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றலாம் என்று உங்களைப் போல யாரும் பெண்களை இந்த அளவுக்கு இழிவு படுத்த முடியாது. உங்கள் வாதப்படி இந்த சிறை பாதுகாப்பு பெண்ணுக்கு மட்டும்தான். உங்களைப் போன்ற ஆண்கள் மற்ற மதத்தினர் வீடுகளுக்குச் சென்று பெண்களுடன் நேருக்கு நேர் சந்தித்து பேசுவது மட்டும் குற்றமில்லையா? இந்தக் கஷ்டத்துக்கு அல்லா பெண்களை படைக்காமலேயே இருந்திருக்கலாம்.

  120. இசுலாத்தில் மதரீதீயாக ஒடுக்கப்படும் பெண்களும், ஏழைகளும், அஹமதியாக்களும் ஒன்று சேர்ந்து மதவெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போர்க்குணமிக்க முறையில் போராட்டங்களைத் துவக்க வேண்டும். அப்போதுதான் இசுலாமிய வெறியர்களை மக்கள் அரங்கில் வைத்துத் தண்டிக்க முடியும். மதத்தின் உள்ளேயே மாற்றுப் பிரிவினைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதென்றால், அது என்ன வெங்காய மதம்?

  121. ஈராயிரம் ஆண்டுப் பழமைவாத ஆணாதிக்கத் திருவள்ளுவர் (!?),

    “மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணாத்தோன்றல் மதி” – ( திருக்குறள் 1119)

    நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பாய் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல் என்கிறார்.

    இன்னொரு பழமைவாதியான சீத்தலைசாத்தனார் சொல்கிறார்:

    ‘மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம்
    பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர்’ (மணிமேகலை, சிறைசெய்காதை, வரி 45)

    கற்புடைய பெண்ணை ‘மழைவளம் தரும் பெண்’.அவள் தான் பிற ஆடவரை நினைக்க மாட்டாள் என்பது மட்டுமல்லாமல்,பிற ஆடவரின் மனதில் ஆசையை ஏற்படுத்தவும் மாட்டாள் என்று பெண்ணடிமைவாதம் பேசுகிறது மணிமேகலை!

    என்ன கொடுமை இது வினவு சார்?

    1) http://athusari.blogspot.com/2007_03_01_archive.html
    2) http://athusari.blogspot.com/2010/01/blog-post.html
    3) http://athusari.blogspot.com/2006/05/blog-post_17.html
    4) http://athusari.blogspot.com/2005/10/blog-post_06.html
    5) http://athusari.blogspot.com/2005/09/blog-post_11.html

  122. அவர்களைப் பழமைவாதிகள் என்று குற்றஞ்சாட்டுவதை விட அவர்கள் தங்கள் கலத்தின் சமூகத்தின் ஆணாதிக்க விழுமியங்களை எவ்வளவு தூரம் ஏற்றனர் அல்லது மறுத்தனர் என ஒப்பியல் முறையில் ஆய்வது தகும்.

    பவுத்தம் அதன் காலச் சூழலில் முற்போக்கான ஒரு பங்கை ஆற்றியது. ஆனால் அது எக்க் காலத்துக்கும் போதுமானதல்ல.

    வள்ளுவரைக் கம்யூனிஸ்ட்டாகவும் சீத்தலைச் சாத்தனாரைப் பெண் விடுதலையாளராகவும் காட்ட முனைகிற சமகாலத்தவர்கள் தாம் குற்றத்திற்குரியோர்.

  123. //அதற்கு இறை தூதர் நீ அவரிடமிருந்து மகராக(மணக்கொடை)பெற்ற அந்த தோட்டத்தை அவருக்கு திருப்பி கொடுத்து விடுகிறாயா? சரி என்றவுடன் இந்த நிமிடத்தில் இருந்து அந்த திருமணம் ரத்தானது என்று சொன்னார்கள்.
    இது தான் உண்மை நிலை//

    So if she is in the position to survive from the தோட்டm ,she has to return back .It means that islam measures human values in term of money or property.

      • Mr.Zero,
        Do you believe that islam provide full security to women,where are you??in which world u r living,boss pls come to the real world boss.don’t deceive yourself boss.truth is more powerful than anything in the world.k.pls understand the real world and real things.what’s happening here do u know?? Ins-ha allah we believe only humanity (not ***** religion based on ***** religion leader or priest)we are not against the god but we are supporting the human rather than ***** unknown god.

      • Mr Minus
        I only commented on the impertinence of Kannan’s remark.
        Islam has been more understanding than other major religions towards women in some respects, especially the right to divorce and remarry, and the right to property.
        But it failed to transcend the oppressive nature of its environment. So did every religion in male dominated society.
        No religion has allowed women their rightful place in society, but to single out one, and without justification, is simply not on!
        .
        I trust that you can do without shooting your mouth before understanding what the other person says: It spares you the misery of looking stupid.

  124. Dress code:

    24:31. And tell the believing women to lower their gaze and keep covered their private parts, and that they should not show-off their beauty except what is apparent, and let them cast their shawls over their cleavage. And let them not show-off their beauty except to their husbands, or their fathers, or fathers of their husbands, or their sons, or the sons of their husbands, or their brothers, or the sons of their brothers, or the sons of their sisters, or their children that come after them, or those who are still their dependants, or the male servants who are without need, or the child who has not yet understood the composition of women. And let them not strike with their feet in a manner that reveals what they are keeping hidden of their beauty. And repent to God, all of you believers, that you may succeed.

    Hysterectomy:

    65:4. As for the women who have reached menopause, if you have any doubts, their interim shall be three months. And as for those whose menstruation has ceased by hysterectomy, and for those who are already pregnant, their interim is until their surgery/parturition.

    quranist@aol.com

  125. குருடன் கண்ட யானையாக இந்த கட்டுரை உள்ளது, இஸ்லாத்தை பொறுத்தவரை சட்ட திட்டங்களுக்கு தான் முன்னுரிமை, பிடிக்கவில்லையென்றால் இஸ்லாத்தை விட்டு வெளியேறலாம், இஸ்லாத்தில் இருந்து தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை, எனக்கு தெரிந்து எந்த பெண்ணும் புர்காவால் அடிமை ஆகிவிட்டேன் என்று சொன்னதில்லை, மாறாக சோசலிசம் பேசும் பலர் சினிமாவில் பெண்களை போகப்பொருளாக பார்ப்பதை விட கேவலம் உலகில் எங்கேயும் இல்லை, நீங்க கண்டு மகிழ்வதற்கு எண்கள் பெண்கள் ஊறுகாய் அல்ல

  126. முஹம்மதின் ஸல் அவர்களின் கற்பனை அல்ல இஸ்லாம், இறைவன் மனிதனுக்கு தந்த அருட்கொடை இஸ்லாம்

  127. எனக்கு இன்னமும் புரியல, புர்கா போடுற பொண்ணுங்க தான சொல்லணும் புரக்க எங்களை அடிமைப்படுத்துதுன்னு, ஆம்பளைங்களும், புர்கா போடாத பொண்ணுங்களும் ஏன் கூவுறாங்க?

Leave a Reply to Mohamed Hussain பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க