பெரியார்தாசன் இசுலாத்திற்கு மதம் மாறியது அவரது சொந்த விடயமென்றாலும், தமிழகம் அறிந்த நாத்திக, பார்ப்பனிய எதிர்ப்பு பிரச்சாரகர் என்பதனால் “ஏன் மாறினீர்கள்” என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. பதில் சொல்வது அவரது கடமை.
சமீப ஆண்டுகளில் சேதுக்கால்வாய் விவகாரம், சங்கராச்சாரி கைது, தில்லை போராட்டம் போன்றவை தொடர்பான ம.க.இ.கவின் கூட்டங்களில் அவர் உரையாற்றியிருக்கிறார்.
2002லிருந்து அவர் குர்ஆனை ஆய்வு செய்ததாக இப்போது கூறுகிறார். ஆனால் இது தொடர்பாக ம.க.இ.க தோழர்களிடம் அவர் ஏதும் உரையாடியதில்லை. பெரியார்தாசன் குறித்து வேறு விதமான விமரிசனங்கள் சிலருக்கு இருந்தாலும் யாரும் அவரது மத எதிர்ப்பு பார்வை மீது ஐயம் கொண்டதில்லை. எனவே அவரது இந்த முடிவு பலருக்கும் விடை தெரியா புதிர்தான்.
தோழர் சாகித் இந்தப் பிரச்சினைக்காக அவரது சொந்த முயற்சியில் பெரியார் தாசன் என்ற அப்துல்லாவிடம் மதம் மாறிய காரணம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். பெரியார்தாசனிடம் சாகித் எழுப்பும் கேள்விகளுக்கு அப்துல்லா அளிக்கும் பதில்கள் எப்படியிருக்கின்றன என்பதறிய ஒலிப்பதிவை கேளுங்கள்.
– வினவு
_______________________________________________________
“மக்காவுடைய மண்ணை எடுத்து
சொர்க்கத்தோட தண்ணியை ஊத்தி
சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை
அது பொம்மை இல்ல பொம்மை இல்லை
மனிதன் என்பது உண்மை.”
களிமண்ணை நீர்கொண்டு பக்குவப்படுத்தி அழகான பொம்மையை செய்து பககுவமா சுட்டு உயிர்கொடுக்கப்பட்டவன் இந்த மனிதன் என்று குர்ஆன் கூறுகிறது. அதுபோல ஏதோ ஒரு காரணத்தால் அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன், கேள்விமேல் கேள்விகளால் உருக்குலைந்து விடாமலிருக்க இசுலாமிய அமைப்புகள் இனி யாராக இருந்தாலும் முன் கூட்டியே கேள்விகளை அனுப்பினால்தான் பெரியார்தாசனின் பேட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் என்று ஒப்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறிய அடுத்த நாளே எஸ்.எம்.எஸ்.களும் இ.மெயில்களும் என்னை துளைத்துவிட்டன. வீடியோவும் பலரால் அனுப்பப்பட்டது. பார்த்ததும் அதிர்ச்சிதான். இசுலாமியராக மாறியதற்கான வலுவான காரணங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்த்ததில் இசுலாமியர்களின் வழமையான “இறைவன் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன், மரணத்திற்குப்பின் வாழ்க்கை உண்டுண்ணு நம்புகிறேன், கடவுள் என்று ஒருவன் இல்லை என்றால், இல்லை என்று சொன்னாலும் இருக்கு என்று சொன்னாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை, கடவுள் இருந்துவிட்டால் நம்பிக்கை கொள்ளதாவன் நரகத்திற்கு போகனுமே” போன்ற சொத்தை வாதங்களை அந்த வீடியோவில் கூறுகிறார்.
ஆனாலும் “2002லிருந்து குர்ஆனை ஆய்வு செய்தேன், நபியின் வாழ்க்கையை படித்தேன், அதனால் இசுலாத்திற்கு வந்தேன்” என்றும் சொல்வதால் அவர் அப்துல்லாவாக (அல்லாஹ்வின் அடிமையாக) மாறியதற்கான நமது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பேட்டி எடுக்க வேண்டும் என ஆவல் ஏற்பட்டது.
ஏதோ ஒரு வெளிநாட்டிலுள்ள ஒருவராக இருந்திருந்தாலும், பலரால் அறியப்படாத, பலருக்கு நாத்திகத்தை பிரச்சாரம் செய்யாத ஒரு நபராக இருந்திருந்தாலும் வழமையான ஒன்றாக கருதி சும்மா இருந்துவிடலாம். ஆனால் தர்க்கவியல் படித்தும், பிரச்சாரம் செய்தும் பல ஆயிரக்கணக்கானோரை நாத்திக வழிக்கு கொண்டு வந்த பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதற்கு வலுவான காரணம் ஏதும் இல்லாமலிருக்க முடியாது. புத்தமதத்திற்கு இவர் வி.என்.சித்தார்தாவாக மாறியதும், புத்தருடைய “தம்மம்” என்ற நூலைப்பற்றி டாக்டர் அம்பேத்தார் எழுதிய “புத்தரும் அவருடைய தம்மமும்” என்ற நூலை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். புத்தரின் அந்தநூல் சுமார் 2500ஆண்டுகளுக்கு முன்பே இயற்றட்டப்பட்ட சிறந்த நூலாகும். அப்படிப்பட்ட அவர் தலைவிதி தத்துவத்தை போதிக்கும் மதங்களில் ஒன்றான இசுலாத்திற்கு சென்றது ஏன்?
நான் பிரபலமில்லாத ஒருவன் என்பதால் “நாளைவிடியும்” பத்திரிகைக்காக அவரிடம் பேட்டியெடுக்க அப்பத்திரிக்கையின் ஆசிரியர் அனுமதியுடன் முயற்சி செய்தேன். அது போல பெரியார்தாசனுக்கு இப்பொழுதுள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் (எஸ்.எம்.எஸ்.ஆல் துளைத்தவர்கள்தான்) பேட்டி எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முயற்சித்தேன்.
தற்சமயம் பெரியார்தாசனின் பிரச்சார திட்டங்களை ஒழுங்கமைப்பவர் என்று சென்னை பூந்தமல்லிக்கு அருகில் நூம்பல் என்ற இடத்தில் உள்ள காசிபுல் ஹுதா என்ற அரபிக்கல்லூரியின் பேராசிரியர் திரு ஜலீல் என்பவரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவர் “கேள்வி என்ன? எந்த நோக்கத்திற்காக கேட்கப்படுகிறது என்று முன்கூட்டியே சொன்னால்தான் பேட்டிக்கான நேரம் ஒதுக்கப்படும்” என்று கறாராக கூறிவிட்டார். “முன்கூட்டியே கேள்வியைச் சொன்னால், நீங்கள் பதில் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து நாங்கள் பதில் பெறுவதாகத்தானே இருக்கும்” என்று கேட்டபோதும் “அப்படியல்ல, இருந்தாலும் அதற்கு மாற்றும் இல்லை என்று கூறிவிட்டார்.
2002-லிருந்து 8 வருடமாக குர்ஆனை ஆய்வு செய்தவருக்கு முன்கூட்டியே என்ன கேள்வி என்று தெரியவேண்டும் எனக் கூறுவது நமக்கு சந்தேகத்தை உருவாக்கியது எனினும் பரவாயில்லை கேள்வியை முன்கூட்டியே கொடுப்பதனால் மட்டும் இவர் அறிவு பூர்வமாக பதில் கூற முடியாது என்பதால் கேள்விகளை தொலைபேசி மூலமாக சொல்லிவிட்டோம். ஆனாலும் இரண்டு நாளாக பதில் ஏதும் கிடைக்காததால் மீண்டும் திரு.ஜலீலை தொடர்புகொண்டதில் பெரியார்தாசன் மறுத்து விட்டதாகவும் மேலும் பெரியார்தாசன் புத்தமதத்திற்கு போனது, மற்றும் குர்ஆன்களை ஆய்வு செய்து அடுக்கி வைத்துள்ளது, போன்றவர்களை எல்லாம் குறிப்பிட்டு, “அவர் அறிவாளிதான் ஆனாலும் விவாதங்களை தவிர்க்க விரும்புகிறார்” என்பதுபோல் பதில் கூறினார். (அதற்கும் என்னிடம் தொலைபேசி உரையாடலின் பதிவு உள்ளது).
இவரிடம் தொடர்பு கொள்வதற்கு முன்தினம் பலமுறை தொலைபேசியில் முயற்சி செய்தும் ஜலீல் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால் பெரியார்தாசனிடமே நேரடியாக தொலைபேசியில் பேசினேன். அது என்னவென்று இந்த ஆடியோவைக் கேளுங்கள். அவரிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகளும் இத்துடன் உள்ளது. படித்துக் கொள்ளுங்கள்.
பெரியார்தாசனிடம் உரையாடிய மறுநாள் கோவை குர்ஆன் அறக்கட்டளையின் சார்பாக குர்ஆனின் புதிய பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது. அதில் என்னுடைய முதல் கேள்விக்கு பதில் சொல்லியுள்ளார்.
“சிலபேர் நம்மிடம் மனிதனை களிமண்ணால் படைத்ததாக குர்ஆன் சொல்கிறதே என்று கேட்கின்றனர். களிமண்ணில் படைத்ததாக குர்ஆன் சொல்லவில்லை. களிமண்ணை சுட்டு படைத்ததாகவும் கேட்கின்றனர். குர்ஆனில் எங்கேயும் சுட்டதாக வரவில்லை. களிமண்ணின் சாரத்திலிருந்து படைத்தான் என்றுதான் குர்ஆன் கூறுகிறது” என்று உரையாற்றியுள்ளார். இப்பேச்சின் ஆடியோ இன்னும் வெளிவரவில்லை.வந்ததும் வாசகர்களுக்கு வழங்கப்படும். அவர் சொன்னது சரிதானா என்பதை கேள்விகளில் உள்ள குர்ஆன் சான்றுகளுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
இருந்தாலும் இவரின் இந்த மதமாற்றத்திற்கு ஏதேனும் வலுவான காரணமில்லாமல் இருக்க முடியாது. ராகுல் சாங்கிருத்தியன் போல் தன்னையும் கருதிக்கொண்டு, புத்தமதத்திற்கு சென்று புத்தமதத்தை நன்கு அறிந்துகொண்டு புத்தரின் நூலை இவர் மொழிபெயர்த்தது போல இசுலாத்திற்கு சென்று இசுலாத்தை நன்கு தெரிந்து கொண்டு இசுலாத்தைப்பற்றிய தமது ஆய்வை எழுதலாம் என்று சென்றிருப்பாரோ?
ஆய்வு செய்தே இசுலாத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லும் இவர் “நான் புதுசு எனக்கு தெரியாது மௌலவிகளிடம் கேளுங்கள்” என்றெல்லாம் முரண்பாடாக கூறுகிறார். எனவே நாத்திகத்தை வீழ்த்திவிட்டது இசுலாம் என்று இசுலாமியர்கள் பெருமை கொள்வதற்கு ஏதுமில்லை என்பதற்கு அவரது உரையாடலே சான்றாக உள்ளது.
______________________________________________________
அவரிடம் கேட்க முயற்சிக்கப்பட்ட கேள்விகள்:
பெரியார் தாசனாக இருந்து ஆப்துல்லாவாக மாறியுள்ள தாங்கள் 2002-லிருந்து குர்ஆனை ஆய்வு செய்து இசுலாமிய மதமே சரியான மதம் என்று முழுவதுமாக நம்புவதாக கூறியுள்ளீர்கள். குர்ஆன் கூறும் சில வசனங்களுக்கான எமது கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?
- அல்லா மனிதனை களிமண்ணிலிருந்து படைக்கப் போவதாக வானவர்களிடம் (மலக்குகளிடம்)அறிவிப்புச் செய்துவிட்டு, உரமான களிமண்ணால் உருவத்தைச் செய்து, அதனை தட்டினால் சத்தம் வரும் பக்குவத்திற்கு சுட்டு, அதன் பிறகு தன்னிடமிருந்து உயிரை அதற்குக் கொடுத்தான் என்று குர்ஆன் கூறுகிறது.
அ) களிமண்ணிலிருந்து படைக்க இருப்பதை அறிவித்த வசனம் 38;71
ஆ) களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனங்கள் 6;2, 22;5, 23;12, 30;20, 32;7, 33;11, 38;76
இ) ஈரக் களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனம் 37;11
ஈ) அதனை சுட்டால்தான் ஈரமற்று, தட்டினால் ஓசைவரும். அதனால் சுட்டதற்குறிய ஆதாரத்திற்குறிய வசனங்கள் 15;26, 15;28, 15;33
ஊ) அதன் பிறகே உயிர் கொடுத்தான் என்பதற்குறிய வசனங்கள் 15;29, 38;72
அறிவியலின் பரிணாமக் கொள்கை இதற்கு எதிராக உள்ளது என்பதை நாம் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். எனவே மனிதனை படைத்துள்ளது தொடர்பாக குர்ஆன் கூறுவது பற்றி தங்களின் கருத்து என்ன?
- ஆதமும், ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட ஹவ்வாளும், சொர்க்கத்தில் தடுக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்ததினால்தான் அவர்களது பாலுறவு உறுப்புகள் வெளிப்படுத்தப்பட்டு இலை தழைகளைக் கொண்டு மூடிக்கொண்டனர்.
இதற்கான குர்ஆன் வசனங்கள் 20; 118 மற்றும் 121, 70;20, 22, 27
அதே குர்ஆன் ஆதமுடைய ஆன்மா அமைதியற்று அலைந்ததாகவும், அந்த ஆன்மா சாந்தியடையவே ஹவ்வாள் என்ற பெண்ணை படைத்ததாகவும் கூறுகிறது.
இதற்கான குர்ஆன் வசனங்கள் 7;189, 30;21
ஆனால் பாவக் கனியை உண்டபிறகே பிறப்புறுப்புகளை வெளிப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. அப்படி என்றால் ஆதமுடைய ஆன்மா எந்த வகையில் அமைதியற்று இருந்தது? பாவம் செய்வதற்கு முன் ஹவ்வாள் எதற்காகப் படைக்கப்பட்டார்?
- பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.
ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.
இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327
அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?
- கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.
இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208
அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?
- “குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.
இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320
இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?
_________________________________________________
தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:
தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:
தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:
தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:
____________________________________________
– சாகித்
தொடர்புடைய பதிவுகள்
அப்துல்லாஹ் போல் மிக பெரிய தாசன்கள் தான் இந்த பூமியில் வாழ தகுதியானவர்கள். பெரியார்தசன் பெரிய தாசந்தான்யா. எம்புட்டு கைமாறிச்சு. மொழி படிக்கயில்ல என்பது ஆறுதல். தெரிந்ததும் தெளிவீர்.
இங்கே விவாதம் செய்ய வரும் இசுலாமிய நண்பர்கள் கவனத்திற்கு!
இந்த பதிவை நான் வாசித்த வரையிலும், குரானையும், இசுலாமையும் விமரிசனம் செய்வது மையமான இலக்காக இல்லை மாறாக, பெரியார்தாசன் என்ற ஊரறிந்த நாத்திகவாதி இசுலாமியறாய் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பின்னர், இசுலாமிய ஆதரவு ஊடகங்கள் பெரியார்தாசனே மாறிவிட்டார், இசுலாமே சிறந்தது என்று புரிந்து கொண்டார் என்றெல்லாம் எழுதியதால் அவர் உண்மையிலேயே புரிந்து கொண்டாரா இல்லையா என்பதை அறியும் ஒரு முயற்சியே இந்த உரையாடல்… முடிவில் அவர் நேர்மையாக தனக்கு இன்னமும் எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டதால்.. அவர் மதமாறிய காரணம் இசுலாம் சிறந்தது என்று புரிந்துகொண்டதனால் அல்ல என்பது உறுதியாகிவிட்டது. வேறு காரணங்களைப்பற்றி நமக்கு அக்கறையில்லை, அது அவர் சொந்த விசயம்..
தயவு செய்து வழக்கம் போல இசுலாத்துக்கு எதிரான பதிவு என கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டாம் என கோருகிறேன்
நன்றி
தோழர் அவர்களே,
இஸ்லாம் மார்க்கம் என்பது சிறந்ததே, இஸ்லாமிய மார்க்கம் உலக மக்களுக்காகவே இறைவனால் உருவக்கபட்டது. உங்களுக்கு குர்ஆன் வசனம் சம்பந்தமாக எந்த சந்தேகங்கள் இருக்கிறது நீங்கள் உலமா PJ அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
செயீக் மைதீன் அவர்களே நீங்கள் குர் ஆன் வசிக்கத்தேரியாத
இந்தக்க கேள்விகள் பெரியார்தாசனிடம் கேட்கப்படுவதில் இன்னுமொரு நியாயமும் உண்டு… இதே போன்ற பார்ப்பனிய கட்டுக்கதைகளை நார்நாராய் கிழித்து தொங்கப்போட்டவர் அவர்… தர்ர்க்க ரீதியாக ஒரு விசயத்தை நிராகரித்த பெரியார்தாசன் தர்க்க ரீதியாக நிரூபிக்கவும் வேண்டும் என்று கேட்பது சரிதானே நண்பர்களே????
இறைவன் நாடினால் விரைவில் உங்களுக்கு பதில் அளிப்பார்.
தோழர் செங்கொடியின் இந்த பின்னூட்டம் முதலில் இருப்பது தான் சரியானது https://www.vinavu.com/2010/04/19/periyardasan-islam/#comment-21135
தோழர் சாகித் ஒரு அருமையான பணியை செய்திருக்கிறார்.அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார், இவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் என்று அவ்வப்போது செய்திகள் சுற்றுக்கு வரும் அப்போதெல்லாம் இவர்கள் புளகமடைந்து கொள்வார்கள். எங்கள் மதம் அறிவியல் மதம் என்பதும் அவ்வளவு பெரிய ஆளே மதம் மாறிவிட்டார் நீயென்ன? என்பதும் இவர்களின் வழக்கமான உத்தி. நெருக்கிப்பிடித்துப்பார்த்தால் அறிவியலைப் போலவே பெரியார் தாசனும் பல்லிளித்துவிட்டார். இஸ்லாத்தை புரிந்து அவர் மாறவில்லை என்பது அவர் பேச்சிலேயே வெளிப்படுகிறது. இதில் அவர் முரண்பாடாகவே இருக்கிறார்.
ஏனென்றால் சவுதியில் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன் என்று அவர் பேசிய பேச்சில் கம்யூனிசத்தை விமர்சித்திருந்தார், அதாவது உலகிற்கு கம்யூனிசம் பயன்படாது இஸ்லாம்தான் பயன்படும் எனும் பொருளில். அந்த அளவிற்கு இஸ்லாமிய கொள்கைகளை ஆய்வுசெய்து சிறந்தது என்றுகண்டு மாறியவருக்கு இப்போது அதெல்லாம் எனக்கு தெரியாது உலமாக்களிடம் கேளுங்கள் என்கிறாரென்றால்; சவுதி உரையில் அவர் சொன்னது முழுக்க பொய். அல்லது இன்று சொல்வது பொய். இரண்டில் ஒன்று தான் மெய்யாக இருக்கமுடியும். பெரியார்தாசன் நான் தயாரில்லை என்று கூறிவிட்டார். இங்கு பின்னூட்டமிடுபவர்கள் எது பொய் எது மெய் என்று விளக்குவார்களா?செங்கொடி
தோழர் செங்கொடி அவர்களே அப்துல்லாஹ் அவர்கள் இப்பொழுதுதான் இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார் இன்ஷா அல்லா விரைவில் உங்களுக்கு அவர் பதில் அளிப்பார் அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தை இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
வாங்க…..வாங்க….வாங்க……
இஸ்லாமுக்கு வாங்க…….4000 சவுதி ரியல் அள்ளிட்டு போங்க…. வாங்க…..வாங்க…..
இது சவுதி,ரியாத் சிட்டி சென்டரில் நடக்கும் ஒரு ஆள் பிடிக்கும் விளையாட்டு…. பெரியார்தாசனுக்கு என்ன பணக்கஷ்டமோ…பாவம்…அமுக்கிட்டானுங்க… ….அவரும் இப்போ பே பே பே ன்னு முழிக்கிறார்…
நீங்கள் கூறுவதற்கு ஏதேனும் அல்லது யாரேனும் ஆதாரமாக இருகிறர்கள சகோதரர் கைப்புள்ள.. ஆதாரத்துடன் கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.. இல்லையேல் ஒரு தனி மனிதனை பற்றி தவறான கருத்துகளை பரப்பிய குற்றத்திற்கு ஆளாவீர்கள்..தனி மனித சுதந்திரத்தை பேண விரும்பும் ம.க.இ.க சகோதரர்கள் கவனிக்கவும்..
1980களில் மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்துக்குள் நுழைந்தபொழுதும் இதே கருத்தை – சங்பரிவார் பரப்பி தோல்விக்கண்டது..அதே வழிமுறைகளை ம.க.இ.க தோழர்களும் கடைபிடிப்பது சரியா?
அவர்கள் காசுக்க்காக மதம் மாறியிருந்தால் – மீனாட்சிபுரம் ..25 வருடங்களுக்கு பிறகும் ரஹமத் நகராக நிலைத்திருக்குமா.?
(இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்)
”1980களில் மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்துக்குள் நுழைந்தபொழுதும் இதே கருத்தை – சங்பரிவார் பரப்பி தோல்விக்கண்டது..அதே வழிமுறைகளை ம.க.இ.க தோழர்களும் கடைபிடிப்பது சரியா?”
இங்கு பின்னூட்டமிடுபவர்களெல்லாம் மகஇக தோழர்களா?
நிங்கள் சென்னதற்க்கு என்ன ஆதாரம் என்னைய்யா???
கைப்புள்ள என்பது ஊரை ஏமாற்றும் வடிவேலுவின் கேரக்டர் பெயர்
இங்கேயும் அது உண்மையாக்க பட்டுள்ளது
நீர் சொல்ற மாதிரி காசுக்காக ஆள் பிடித்து மதம் மாற்றியாக வேண்டிய கேவலமான நிலையில் இஸ்லாம் இல்லை
அமலாவினுடைய மறுமொழி முட்டாள்த்தனமானது.
சகோதரர் வினவு,
இஸ்லாத்தின் மிது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வை தான் உங்களின் இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.
உண்மையிலேயே உங்களுக்கு இஸ்லாத்தைக் குறித்து விளக்கம் தெரிய வேண்டும் எனில், இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த அளிம்களிடம் கேட்க வேண்டும்.
௮ ஆண்டுகளாக குரானை ஆய்வு செய்த உடன் எல்லாக் கேள்விகளுக்கும் ஒருவர் பதில் குறி விட வேண்டும் என்ற கட்டாயமில்லை. இஸ்லாத்திற்கு மாற ஆயிரம் காரணங்கள் வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நிருபிக்கப்படாத டார்வின் கொள்கையைத் துக்கித் தலையில் வைத்து ஆடுபவர்கள், உண்மையிலேயே தங்கள் கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தால், திறந்த விவாதத்திற்குத் தயாராக வேண்டும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு உள்ளதா? உங்களைப் போன்றவர்களை மேடையில் நேருக்கு நேர் சந்திக்க தமிழ்நாடு தௌஹித் ஜமாஅத் எப்போதும் தயாராகவே உள்ளது. உங்களுக்குத் துணிச்சல் இருந்தால் தொஹித் ஜமாத்துடன் நேருக்கு நேர் மேடையில் விவாதம் புரிய முன் வாருங்கள்.
இல்லையேல், நிங்கள் குருவதைஎல்லாம் வேத்துவேட்டுகலகத் தான் மக்கள் எடுத்துக் கொள்வர்.
//திறந்த விவாதத்திற்குத் தயாராக வேண்டும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு உள்ளதா?//
இங்க மூடிய விவாதமா நடக்கிறது? இங்கேயே விவாதம் செய்ய வேண்டியதுதானே? சும்மா உதார் வுடக் கூடாது
நேரடி விவாதத்திற்கு வந்தால் தான் உங்களின் உளரல்கள் மக்கள் மத்தியில் கட்ட முடியும் ????
lakum dheenukkum valiaya dheen… (ungaludaya markam ungalukku… ennudaya markam enakku…)…. ariyathavanin pathivu than meley ullathu….
இஸ்லாத்தில் அனைவருக்கும் அமைதி என்று கூருகிரீர்ர்களே எனக்கு ஒரு டவுட். இதை கேட்டால் இஸ்லாம் பற்றி முழுமை யாக புரியவில்லை மன்னகட்டி என்று சமாளிக்க வேண்டாம். நான் கடுவுளை நம்பாதவன். உங்கள் குரானில் இருபதுக்கும் அதிகமான இடங்களில் அல்லாவை கடுவுளாக ஏற்காதவர்களை கொள்ள வேண்டும் குத்த வேண்டும் நெருப்பால் துன்புறுத்த வேண்டும் அவர்களின் குடும்பங்களி விரட்டி அடிக்க வேண்டும் என்று உள்ளது. இப்படி இருக்கும் போது அமைத்து யாருக்கு இஸ்லாமியர்களுக்க இல்லை அதை நம்பதவர்களுக்கா !
Torment to Non-believers:
SURA 4.56: (As for) those who disbelieve in Our communications, We shall make them enter fire;
so oft as their skins are thoroughly burned, We will change them for other skins, that they may taste the chastisement; surely Allah is Mighty, Wise.
Allah causes you to disbelieve and then he punishes you for that
2.7 Allah has set a seal upon their hearts and upon their hearing and there is a covering over their eyes, and there is a great punishment for them.
No friends with parents / siblings if not believers
9.23: O you who believe! do not take your fathers and your brothers for guardians if they love unbelief more than belief; and whoever of you takes them for a guardian, these it is that are the unjust.
Friends with Jews, Christians…
5.51: O you who believe! do not take the Jews and the Christians for friends; they are friends of each other; and whoever amongst you takes them for a friend, then surely he is one of them; surely Allah does not guide the unjust people.
Gruesome Amputations
Said he (Pharaoh): You believe in him before I give you permission; most surely he is the chief of you who taught you the magic, so you shall know: certainly I will cut off your hands and your feet on opposite sides, and certainly I will crucify you all. (External link: Dhimmi Watch)
Fight non-believers
9.123: O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil).
Kill non-believers
4.89 : They desire that you should disbelieve as they have disbelieved, so that you might be (all) alike; therefore take not from among them friends until they fly (their homes) in Allah’s way; but if they turn back, then seize them and kill them wherever you find them, and take not from among them a friend or a helper.
Killing Idolaters
9.5: So when the sacred months have passed away, then slay the idolaters wherever you find them, and take them captives and besiege them and lie in wait for them in every ambush, then if they repent and keep up prayer and pay the poor-rate, leave their way free to them; surely Allah is Forgiving, Merciful.
Islam Acceptable:
3.85: And whoever desires a religion other than Islam, it shall not be accepted from him, and in the hereafter he shall be one of the losers.
No friends from outsiders
3.118: O you who believe! do not take for intimate friends from among others than your own people; they do not fall short of inflicting loss upon you; they love what distresses you; vehement hatred has already appeared from out of their mouths, and what their breasts conceal is greater still; indeed, We have made the communications clear to you, if you will understand.
No friends with non believers
3.28: Let not the believers take the unbelievers for friends rather than believers; and whoever does this, he shall have nothing of (the guardianship of) Allah, but you should guard yourselves against them, guarding carefully; and Allah makes you cautious of (retribution from) Himself; and to Allah is the eventual coming.
Believers make superior friends
4.144: O you who believe! do not take the unbelievers for friends rather than the believers; do you desire that you should give to Allah a manifest proof against yourselves?
God a plotter
8.30: And when those who disbelieved devised plans against you that they might confine you or slay you or drive you away; and they devised plans and Allah too had arranged a plan; and Allah is the best of planners.
Anti Jewish verses
5.82: Certainly you will find the most violent of people in enmity for those who believe (to be) the Jews and those who are polytheists, and you will certainly find the nearest in friendship to those who believe (to be) those who say: We are Christians; this is because there are priests and monks among them and because they do not behave proudly.
Idolaters are unclean just because they are idolater
9.28: O you who believe! the idolaters are nothing but unclean, so they shall not approach the Sacred Mosque after this year; and if you fear poverty then Allah will enrich you out of His grace if He please; surely Allah is Knowing Wise.
Forcing non-believers to pay tax
9.29: Fight those who do not believe in Allah, nor in the latter day, nor do they prohibit what Allah and His Apostle have prohibited, nor follow the religion of truth, out of those who have been given the Book, until they pay the tax in acknowledgment of superiority and they are in a state of subjection.
The Torment of Hell for infidels (Jews, atheists, and unbelieving infidels)
43: Surely the tree of the Zaqqum,
[Sinners, eat Zaqqum to intensify the torment of the Khati’un
(Koran Sura 69:36-37); it tastes like Like molten brass…]
44: Is the food of the sinful
45: Like dregs of oil; it shall boil in (their) bellies,
46: Like the boiling of hot water.
47: Seize him, then drag him down into the middle of the hell;
48: Then pour above his head of the torment of the boiling water:
49: Taste; you forsooth are the mighty, the honorable:
50: Surely this is what you disputed about.
51: Surely those who guard (against evil) are in a secure place,
52: In gardens and springs;
53: They shall wear of fine and thick silk, (sitting) face to face;
54: Thus (shall it be), and We will wed them with Houris pure, beautiful ones.
55: They shall call therein for every fruit in security;
56: They shall not taste therein death except the first death,
and He will save them from the punishment of the hell,
57: A grace from your Lord; this is the great achievement.
58: So have We made it easy in your tongue that they may be mindful.
2.62, 5.69 : All except Muslims / Jews/Christians / Sabeans will go to hell
Surely those who believe, and those who are Jews, and the Christians, and the Sabians, whoever believes in Allah and the Last day and does good, they shall have their reward from their Lord, and there is no fear for them, nor shall they grieve.
Smite the neck and cut fingertips of unbelievers
8.12: When your Lord revealed to the angels: I am with you, therefore make firm those who believe. I will cast terror into the hearts of those who disbelieve. Therefore strike off their heads and strike off every fingertip of them.
Smite the neck of unbelievers
47.4: So when you meet in battle those who disbelieve, then smite the necks until when you have overcome them, then make (them) prisoners, and afterwards either set them free as a favor or let them ransom (themselves) until the war terminates. That (shall be so); and if Allah had pleased He would certainly have exacted what is due from them, but that He may try some of you by means of others; and (as for) those who are slain in the way of Allah, He will by no means allow their deeds to perish.
Severe Punishment for atheists
10.4: To Him is your return, of all (of you); the promise of Allah (made) in truth; surely He begins the creation in the first instance, then He reproduces it, that He may with justice recompense those who believe and do good; and (as for) those who disbelieve, they shall have a drink of hot water and painful punishment because they disbelieved.
5.10: And (as for) those who disbelieve and reject our communications, these are the companions of the name.
5.86: And (as for) those who disbelieve and reject Our communications, these are the companions of the flame.
Severe Punishment for non-believers
22.19: These are two adversaries who dispute about their Lord; then (as to) those who disbelieve, for them are cut out garments of fire, boiling water shall be poured over their heads.
22.20: With it shall be melted what is in their bellies and (their) skins as well.
22.21: And for them are whips of iron.
22.22: Whenever they will desire to go forth from it, from grief, they shall be turned back into it, and taste the chastisement of burning.
Severe Punishment for non-believers
72.23 : (It is) only a delivering (of communications) from Allah and His messages; and whoever disobeys Allah and His Apostle surely he shall have the fire of hell to abide therein for a long time.
98.6 : Surely those who disbelieve from among the followers of the Book and the polytheists shall be in the fire of hell, abiding therein; they are the worst of men.
Punishing non-believers of Hereafter
17.10 : And that (as for) those who do not believe in the hereafter, We have prepared for them a painful chastisement.
Punishing for rejecting faith
3.91 : Surely, those who disbelieve and die while they are unbelievers, the earth full of gold shall not be accepted from one of them, though he should offer to ransom himself with it, these it is who shall have a painful chastisement, and they shall have no helpers.
Unbelievers go to hell
4.140 : And indeed He has revealed to you in the Book that when you hear Allah’s communications disbelieved in and mocked at do not sit with them until they enter into some other discourse; surely then you would be like them; surely Allah will gather together the hypocrites and the unbelievers all in hell.
7.36 : And (as for) those who reject Our communications and turn away from them haughtily — these are the inmates of the fire they shall abide in it.
Partial Believers go to hell too
4.150 : Surely those who disbelieve in Allah and His apostles and (those who) desire to make a distinction between Allah and His apostles and say: We believe in some and disbelieve in others, and desire to take a course between (this and) that.
4.151 : These it is that are truly unbelievers, and We have prepared for the unbelievers a disgraceful chastisement.
4.152 : And those who believe in Allah and His apostles and do not make a distinction between any of them — Allah will grant them their rewards; and Allah is Forgiving, Merciful.
Sadistic punishments
56.41 : And those of the left hand, how wretched are those of the left hand!
56.42 : In hot wind and boiling water,
56.43 : And the shade of black smoke,
56.44 : Neither cool nor honorable.
Punishment for apostates
16.106 : He who disbelieves in Allah after his having believed, not he who is compelled while his heart is at rest on account of faith, but he who opens (his) breast to disbelief — on these is the wrath of Allah, and they shall have a grievous chastisement.
3.86 : How shall Allah guide a people who disbelieved after their believing and (after) they had borne witness that the Apostle was true and clear arguments had come to them; and Allah does not guide the unjust people.
3.87 : (As for) these, their reward is that upon them is the curse of Allah and the angels and of men, all together.
3.88 : Abiding in it; their chastisement shall not be lightened nor shall they be respited.
3.89 : Except those who repent after that and amend, then surely Allah is Forgiving, Merciful.
3.90 : Surely, those who disbelieve after their believing, then increase in unbelief, their repentance shall not be accepted, and these are they that go astray.
Allah will commit genocide
17.16-17: When we decide to destroy a population, we send a definite order to them who have the good things in life and yet transgress; so that Allah’s word is proved true against them: then we destroy them utterly. How many generations have we destroyed after Noah? And enough is thy Lord to note and see the Sins of his servants.
Allah boasts about His as genocide
21.11: How many were the populations we utterly destroyed because of their inequities, setting up in their place other peoples.
Allah instructs Islamics to heap up a mountain (of corpses) of non believers
8.37: In order that Allah may separate the impure from the pure, Put All the impure ones (Non-Muslim — atheists, Jews), one on top of the another in a Heap and cast them into Hell. They will be the ones to have lost.
இது சூடுபிடிக்கும்
அன்பான முஸ்லிம் நண்பர்களுக்கு!!!!!!! தயவுசெய்து இப் பிரச்சனையை அல்லாவிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் நடப்பதை பாருங்கள்.அப்படி இல்லைன்னு பதிவேத்த வந்திங்கன்ன நீங்க அல்லவை நம்ப இல்லைன்னு அர்த்தம்.
according to my knowledge no one can read quran exept muslims, so how can he research quran before he convert to the islam??
who said no one can read quran … தமிழ் மொழி பெயர்ப்புகள் இருக்கின்றன
ஒன்னும் புரியலையே……ம்ம்ம்ம்ம்ம்ம்
குரங்கில் இருண்டு மனிதன் வந்தான் என்று சொன்னால் நம்புகிறிர்கள் அப்படி என்றால் இப்போ எத்தனை குரங்கு மனிதனாகி விட்டது என்று சொல்ல முடியுமா உங்களால்.அறிவியல் என்பது மாறக்குடியது இன்று சரி என்பார்கள் நாளை அதை மறுப்பார்கள்.இயற்கை அழிவு என்றால் என்ன.உங்களால் இயற்கைக்கு எதிராக ஏதாவது பண்ண முடிந்ததா.உலகம் மட்டும் அண்டம் எப்படி படைக்க பட்டு இருக்கிறது என்று நீங்கள் பார்க்க வில்லையா.மனிதன் ஏன் பிறக்கிறான் பிறகு ஏன் மரணிக்கிறான் பிறகு அவனுடையது என்ன என்பதை சிந்திக்க மாட்டிர்களா.நீங்கள் உங்கள் வாதத்தில் உண்மையாளர்கள் என்றால் நேரடி விவாதத்திற்கு வாருங்கள் இல்லை என்றால் அமைதியாக இருங்கள்.எவ்வளவோ பணம் சம்பாரிதலும் ஒரு நாள் அனைவரும் மரணிக்க கூடியவர்-களே.ஏன்னா தான் பணம் இருந்தாலும் மரணத்தை தடூக்க முடியாது.மரணம் வருவதற்கு முன் உன்னை திருத்திகொல்.இறைவன் ஒருவனே மட்டும் வணங்கு.
காலித்…. உங்களுக்குப் புரியவைக்க முயற்சிக்கிறேன்… கொஞ்சம் ஒத்துழையுங்கள்… பரிணாம வளர்ச்சி என்பது ஒரு நேர்கோட்டைப் போன்றது அல்ல. பல கிளைகள் கொண்டது.
பலகிளைகள் கொண்ட ஒரு மரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு கிளைகள், அவற்றிலிருந்து பிரியும் ஆயிரக்கணக்கான தண்டுகள், அவற்றின் முனையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான இலைகள் இவற்றை உருவகப் படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது இம்மரத்தைக் காட்டி முனையில் இருக்கும் இலை எது என்று எப்படி சொல்வீர்கள்? அந்த பல்லாயிரம் இலைகளுமே அம்மரத்தின் எல்லைக் கோடுகள்தானே?
இப்போது பரிணாம வளர்ச்சி. பரிணாம வளர்ச்சியில் அமினோஅமிலங்கள் ஓரணு உயிராகி, அவை பல அணு உயிராகி, இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களாக ஆனது கிளைகள் பரவிய காலம். அவற்றிலிருந்து செடிகளும், பறவைகளும், விலங்குகளும் உருவானது சிறு கிளைகளும், தண்டுகளும் உருவான காலம். அதிலிருந்து பாலூட்டிகள் உருவானது இலை பிரிந்த காலம்.
மனிதனும் குரங்கினமும் ஒரு சிறு கிளையிலிருந்து பிரிந்த இரு வெறு தண்டுகளின் முனையில் இருக்கும் இலைகள். இருவருக்கும் மூதாதையர் ஒருவரே. ஆனால் இப்போதைய குரங்கும் இப்போதைய மனிதனும் அவரவர் வந்த பாதையில் வெவ்வேறு மாதிரியாக பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டனர். இனிமேல் குரங்கிலிருந்து ஒரு உயிரினமும், மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து வேறு ஒரு உயிரினமும் தோன்றுவர். இந்த இலை நுனிகளிலிருந்து வேறு தனிக் கிளைகள் தோன்றும்.
இது பல இலட்சம் ஆண்டுகளாகத் தொடரும் மாற்றம். மானுட வாழ்வில் நேரடியாக உணர முடியாது. உதாரணமாக, காது மடல்கள் – அவை தேவையில்லை என்பதால் – சில லட்சம் ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியின் விளைவாகத் தேய்ந்து விடும். அதற்காக நாளை பிறக்கும் குழந்தைக்குக் காது இருந்தால் அறிவியல் சறுக்கி விட்டதாக எண்ணக் கூடாது.
உயிரியல் படித்துப் பாருங்களேன். ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.
அருமையான விளக்கம் வித்தகன்
Then tell me Mr. Vittan at present 2010 any new species araived from existing one or any species trying to change their life style??????????????????????tell me at least one with proof…..
ஃபாஹ்த்… சுருக்கமாக சொன்னால், காலப் பெருவெளியில் கடந்த காலத்தை மட்டுமே பார்க்க முடியும். அதை வைத்து எதிர்காலத்தை கணிக்கலாமே தவிர, உடனடியான இறந்தகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அவ்வப்போதே உடைக்க முடியாது. உயிரியல் ஆராய்ச்சியில் இதுவே முழுமையான உண்மை.
உங்களுக்காக ஒரு உதாரணம். எயிட்ஸ் எப்படி எப்போது வந்தது என்பதில் ஒரு சில கேள்விகள் பாக்கி இருக்கின்றன. உண்மையாகவே கடந்த 35-40 ஆண்டுகளில் தான் அந்த நோய் தலை தூக்கியிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டால் அதுவும் ஒரு புது வகையான உயிராதாரமாகவோ அல்லது ஏற்கனவே இருந்த ஒரு உயிராதாரத்தின் ஜெனெடிக் மாறுபாட்டின் வடிவமாகத்தான் இருக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் போன்ற இதுவரை அதிகம் அறியப் படாத நோய் வகைகளும், ஒன்று இது காலம் கண்டறியப் படாத உயிராதாரமாகவோ அல்லது மியூடேட் ஆன புது வகை உயிராதாகமாகவோ இருக்கலாம்.
அவற்றைப் புதிய உயிரினங்கள் என்று வைத்துக் கொண்டு, மாறும் உயிரினங்களுக்கு உதாரணம் தருவது இன்னும் சுலபம். ஆப்பிரிக்க மனிதர்களுக்கும், பனி துருவங்களில் வாழும் மனிதர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் இதை விளக்கும். பல இலட்சம் ஆண்டுகளாக ஒரே வகை வாழ்க்கை முறையைப் பின் பற்றியதாலும் வேறு இனங்களுடன் கலந்து இனப்பெருக்கம் செய்யாததாலும் இவ்வகைப் பழங்குடி மக்களின் ஜெனெடிக் தகவல்கள் வழிவழியாக அழியாமல் பரம்பரை சொத்து போல கைமாறி வந்திருக்கின்றன.
மனிதர்களுக்கு உள்ளேயே குளிரைத் தாங்கிக் கொள்ளும் படியான தோல் அமைப்பு ஒரு வகையினருக்கும், கால்சியம் அதிகமான உடல் அமைப்பு (எலும்பு, பற்கள் உறுதியாக) ஒரு வகையினருக்கும் இருப்பது அவர்களது இடம் பொருள் சூழலுக்கு ஏற்ப மாறியிருப்பதைக் காண முடியும். உடலில் உள்ள ரோமத்தின் அடர்த்தி, உயரம், எல்லாமே இடத்துக்கு இடம் மாறுவதிலும் பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் ஒளிந்திருக்கிறது. இவர்களுக்குள் இனப்பெருக்கம் நடப்பது மூலம் உருவாகுவது ஒரு புதுவகை உயிரினம் என்று கருதலாம். உதாரணமாக கறுப்பர் – வெள்ளையர், சீனர் – மாயன் பழங்குடியினர் கலப்பில் பிறப்பது மனிதர்கள்தான் ஆனாலும் அவர்கள் புதுவகை இனத்தவர்கள். பாமரேனியனுக்கும் அல்சேஷனுக்கும் புது நாய்க்குட்டி பிறப்பது போல.
நீங்களும் நானுமே கூட பல இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனிலிருந்து எவ்வளவோ வேறு பட்டிருக்கிறோம். முதுகெலும்பு நிமிர்ந்ததிலிருந்து, நகக் கூர்மையும் விரல் நீளமும் குறைந்ததிலிருந்து, கோரைப் பல் வரிசை மாற்றம் வரை பல வேறுபாடுகள். இந்த மாற்றங்கள் நான் முன்பே சொன்னது போல பரம்பரைக்குப் பரம்பரை மிக மிகச் சிறிய அளவிலேயே நடக்கும். இதை அவதானிக்க பல கால இடைவெளியில் கிடக்கும் ஆதாரங்களை ஒப்பிடுவதன் மூலமே முடியும்.
ஒரு குறிப்பிட்ட பழப் புழுவிடம் பரிணம மாற்றங்கள் வெகு வேகமாக நடப்பதை சோதனை மூலம் நிரூபித்து இருக்கிறார்கள். அடுத்தடுத்து இனப்பெருக்கம் செய்விக்கப் பட்டு கிட்டத்தட்ட 27 தலைமுறை இந்த வகைப் புழுக்களை ஒரே நேரம் உற்பத்தி செய்து ஒப்பிட்டு இருக்கிறார்கள். அந்த 27ஆவது தலைமுறை புழுவை முதல் தலைமுறைப் புழுவுடன் சேர வைத்த போது உடலில் சுரக்கும் திரவங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாமல் இறப்பதையும் பார்த்திருக்கிறார்கள். உடல் அமைப்பும் சுரக்கும் திரவங்களும் அந்தப் புழு வகையில் சில பரம்பரைகளுக்குள்ளேயே அவ்வளவு வேறுபடுகின்றன.
ஒருவேளை நீங்கள் கால இயந்திரம் கண்டுபிடித்துப் பின் நோக்கி சென்று கிளியோபாட்ராவுடன் உறவு வைத்துக் கொண்டால் அவரோ நீங்களோ உடனடியாக இறக்கலாம். (இதை சும்மாதான் சொல்கிறேன்)
என்கைய ஆளையே காணோம்?
வித்தகன் ,
அருமையான பதில் ..
வித்தகன் உங்களிடம் இன்னும் வித்தகம் உள்லதா??????GRD
Excellent explanation from vitthagan, keep it up 🙂 🙂
நண்பர் வித்தகன் அவர்களே,அறிவியல் என்பது மனிதன் தன் சிந்தனைக்கு உற்பட்டு கூறுவது. எப்போ வேண்டோமனாலும் மாறுபட்டு கூறுவான் உத்தரனதுகு பூமி முதலில் தட்டை என்றும் பிறகு உருண்டை என்றும் பிறகு கோல வடிவு என்றும்.அறிவியல் பரிணாம வளர்ச்சி என்பது தொடரனும் ஆனால் முடிய கூடாது.குரங்கு மனிதனாக வேண்டும் இல்லை என்றல் மனிதன் வேர் ஒரு புதிதான படைப்பாக மாற வேண்டும்.நீங்கள் சொல்லும் உதாரணம் மரத்தின் கிளைகள் பின் இலைகள்…..இந்த இலை நுனிகளிலிருந்து வேறு தனிக் கிளைகள் தோன்றும்…என்று நீங்கள் சொல்கிறிர்கள் அப்படியானால் இப்பொழுதும் அது தொடர வேண்டும்.தொடர்கின்றதா?.இஸ்லாம் இதற்கு எல்லாம் தெளிவாக விளக்கம் தருகின்றது நீங்கள் சொல்லும் அறிவியல் சான்றுடன் மேலும் விவரங்களுக்கு http://www.tamilislam.com/science/index.htm குரான் படித்துப் பாருங்களேன். ரொம்ப சுவாரசியமாக தெளிவாக இருக்கும்.சிந்திக்ககூடிய மக்களுக்கு குரான் நேர்வழி காட்டியாக இருக்கிறது…. உங்களுடன் விவாதம் பண்ண வரவில்லை மாறாக சத்தியம் எது என்று நண்பர் புரிந்து கொள்ள வென்றும் என்பதே என்னுடைய விருப்பம்.
நண்பர் அல்லாவின் சேவகரே! அறிவியலின் சிறப்பே அது empirical evidence ஐ அடிப்படையாகக் கொண்டு இருப்பதுதான். நீங்கள் எந்த அறிவியல் கருத்தையும் ஆதாரத்துடன் மறுக்கலாம். புவியீர்ப்பு விசை உண்டென நியூட்டன் சொன்னால் போய்யா டுபுக்கு என்று சொல்லலாம். மேலே தூக்கி எறியும் பந்து ஒரு தடவை கீழே விழாமல் மேலேயே தங்கி விட்டால் நியூட்டனை செல்லமாக புண்ணாக்குத் தலையா என்றே அழைக்கலாம். யாரும் உங்கள் தலையை எடுத்து விட மாட்டார்கள். ஆனால் அப்படி நிகழாத வரை நியூட்டன் சொன்னதுதான் சரி. அவர் கருத்து பலவித சோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அவர் இல்லையேல் விமானம் இல்லை, செயற்கைக் கோள் இல்லை, பூமியை சந்திரனும், கோள்கள் சூரியனையும் சுற்றுவதற்கு விளக்கமும் இல்லை. அறிவியலின் அழகே எந்த ஒரு தத்துவமும் நிரூபிக்கப் படும் வரை தவறு. நிரூபிக்கப் பட்டாலோ, அடுத்த கட்டத்துக்கு மனித இனத்தைக் கொண்டு செல்லும் அஸ்திவாரமாகிவிடும்.
மதப் புத்தகங்களில் சொல்லியிருப்பது அப்படி இல்லை. அந்தப் புத்தகங்களில் இருப்பதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. கேட்டால் உயிரை விடவேண்டியதுதான்.
பரிணாம வளர்ச்சித் தத்துவம் ஒரு காலத்தில் அறிஞர்களாலும், பின்னர் சாமானியர்களாலும், இப்போது மதவாதிகளாலும் கேள்வி கேட்கப் பட்டது/ படுகிறது. ஆனால் இன்று வரை நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் – fossils, DNA mapping, culturan anthopological studies – எல்லாமே பரிணாம வளார்ச்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. சர்க்கரை நோய்க்கும், இரத்த அழுத்ததிற்கும், மூட்டு வலிக்கும் சாப்பிடும் மருந்துகள் இவை பரம்பரை நோய்கள் என்பதைப் புரிந்து கொண்டதால்தான் குணப்படுத்தும் வீரியம் கொண்டவையாகத் தயாரிக்கப் படுகின்றன. வீட்டில் வைக்கும் கொசு மருந்தில் மாறும் வீரியமும், மாறுபட்ட கலாச்சார மக்களின் இட மாற்றத்திற்கும், சுற்றுச் சூழல் மாசு படும் போது வெவ்வேறு உயிரினங்கள் எப்படி சமாளிக்கும் அல்லது அழியும் என்பதை புரிந்து கொள்வதற்கும், கருவில் இருக்கும் சிசுவின் எதிர்கால நோய்கஆளிப் பிறக்கும் முன்னே தடுக்கவும் பரிணாம வளர்ச்சியின் புரிதல் பேருதவி செய்கிறது.
ஆனால் மதப் புத்தகங்களில் சொல்லியிருப்பவை எதுவுமே நிரூபிக்கப் படாமல் கண்மூடித்தனமாக நம்பப் படுகின்றன. அண்ணன் யாரு தெரியுமில்ல என்ற உதார்தான் கேட்குமே தவிர அண்ணன் சொன்னது எந்த வகையில் உண்மை என் யாரும் கேள்வி கேட்பதே இல்லை. அண்ணனுக்கு எல்லாம் தெரியும் என்பதோடு விவாதம் முடிந்து விடுகிறது. உங்களுக்கு இத்தளத்தில் என் கருத்துக்களுடன் பரிச்சயம் இருந்தால் நான் இஸ்லாத்தை மட்டுமின்றி எல்லா மதங்களையும் குறிக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
பரிணாம வளர்ச்சித் தத்துவம் ஆதாரங்களில்ருந்து உருவான அறிவியல் உண்மை. பதிலை எழுதி விட்டு அதன் பின் பொருத்தப் பட்ட விளக்கம் அல்ல.
அறிவியல் அறிவு இல்லாதது ஒரு குறையாகக் கருதப் படும் வரை பெரும்பான்மைச் சமூகம் அதனால் மறைமுகமாகப் பயன் பெறுமே (மருந்துகள், தொலை தொடர்பு சாதனங்கள்) தவிர, எதற்கு யாரிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று புரியாமல் தடுமாறத்தான் செய்யும். கல்வி ஒன்றுதான் இந்த இருண்ட வாழ்விலிருந்து வெளி வர ஒரே வழி.
நண்பர் வித்தகன் அவர்கள் ——நியூட்டன் இல்லையேல் விமானம் இல்லை, செயற்கைக் கோள் இல்லை, பூமியை சந்திரனும், கோள்கள் சூரியனையும் சுற்றுவதற்கு விளக்கமும் இல்லை. அறிவியலின் அழகே எந்த ஒரு தத்துவமும் நிரூபிக்கப் படும் வரை தவறு—நியூட்டன் இருகிரதைதான் கண்டு பிடிது சொன்னாரே தவிர அவர் ஒன்றும் உருவாக வில்லை.அந்த சிந்தனையை கொடுத்தது யார். ஏன் மனிதன் இறக்கிறான் அதன் பிறகு அவனுடையது என்ன,ஏன் உங்கள் அறிவியலால் மரணத்தை தடுக்க முடிய வில்லை,ஏன் மரணித்தவரை உயிர் கொடுத்து எழுப்ப பட முடிய வில்லை.சாதாரண மழையை கூட கணித்து சொல்லு முடிய வில்லை.எப்போ வானிலை அறிக்கை சொன்னாலும் ஒரு உறுதி இல்லை.நாளை என்ன நாடாகும் என்று உங்கள் அறிவியலால் சொல்ல முடியுமா.முடிந்த பிறகுதான் உங்களால் உகிக்க முடியுமே தவிர இயற்கை என்று நீங்கள் சொல்லும் அந்த அழிவை உங்களால் தடுக்க முடியாது.அறிவியல் என்பது மனிதனும் சிந்தனை அறிவை பொருத்தது,இன்று ஒனேனு சொல்லுவான் நாளை அது மாறு படும்.உனக்குள்ளே பல அத்தார்சிகள் இருக்கிறது அதை முதலில் சிந்தித்து பார்.இஸ்லாம் சிந்திக்க வேண்டாம் என்று ஒரு போதும் சொல்ல வில்லை.சிந்திக்க கூடிய மக்களுக்கு இஸ்லாம் நேர் வழி காட்டுகிறது.இறைவன் குரானில் கூறுகிறான் நீங்கள் சிந்திக்க மாடிர்களா உங்கள் இதயங்கள் என்ன பூட்ட போடபட்டுள்ளது என்று.அதனாலே முதலில் இஸ்லாத்தை பற்றி தெரிந்து பிறகு பேச கேட்டுகொள்கிறேன்.
//இறைவன் குரானில் கூறுகிறான் நீங்கள் சிந்திக்க மாடிர்களா உங்கள் இதயங்கள் என்ன பூட்ட போடபட்டுள்ளது என்று//
குர்ரன்ல கொஞ்சம் திருத்தும் பண்ணுங்க, உங்கள் “மூளை “பூட்டா போட்டுள்ளது என்று .இதயத்த வட்சு தான் சிந்திகிரீங்களா?
நண்பர் 30/03/௧௯௮௫ அவர்களுக்கு, அரபிக் மொழி-இல் க்ஹல்ப் என்றால் இரண்டை குறிக்கும் மூளை, அறிவு சிந்தித்து அறியகூடிய இடம் என்று.
செர்வரே, ஏமய்யா பொய் சொல்கிறீர் மூளைக்கு கீழ்காணும் அரபிச் சொற்களே உள்ளன.
1. دماغ2. مخ3. فهم4. ذكاء5. شخص شديد الذكاءஇத்யம்
1. قلب2. لب3. محور4. فؤاد5. عواطف6. ذاكرة7. شخصية المرء8. ضمير وجدان
நண்பர் அல்லாவின் சேவகருக்கு…
நியூட்டன் மட்டுமல்ல யாரும் எதையும் உருவாக்கவில்லை. எனக்கு அது தெரியும். இருப்பதைப் புரிந்து கொள்வதில் தெளிவு இல்லையெனின் வாழ்க்கை இருளடிக்கும். அறிவியல் தான் அதற்கு ஒரே வழி.
மரணம் என்பதைத் தடுப்பது பிறப்பைத் தடுக்க முடியாத வரை இயலாத காரியம். இவ்வுலகின் பிரிக்க முடியாத அங்கம் பிறப்பும் இறப்பும். அதைத் தடுத்து எதுவும் சாதிக்கப் போவது இல்லை. வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடம் ஏது? மரணத்திற்குப் பின் எதுவும் இல்லை. அதைப் பற்றி யார் சொல்லியதும் உண்மையும் இல்லை.
உங்களுக்குத் தெரிந்தது மத போதகம். எனக்குத் தெரிந்தது அறிவியல். நமக்குல் பொதுவில் சேரும் புள்ளி எதுவும் இருக்க வாய்ப்பில்லை. உயிரியல், இயற்பியல், வேதியியலில் அடிப்படை அளவில் உங்களுக்கு சந்தேககங்கள் இருப்பின் என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்க ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு பதிலுக்கு எந்த மதத்தின் போதகமும் வேண்டாம். மற்றபடி என் அன்பும் நல் வாழ்த்துக்களும் உங்களுக்கு.
——மரணம் என்பதைத் தடுப்பது பிறப்பைத் தடுக்க முடியாத வரை இயலாத காரியம். இவ்வுலகின் பிரிக்க முடியாத அங்கம் பிறப்பும் இறப்பும். அதைத் தடுத்து எதுவும் சாதிக்கப் போவது இல்லை. வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடம் ஏது?—-மக்கள் தொகை அதிகமானதால் தான் புது புது கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கிறான்.உத்தரனதுகு நெல் பயிர்கள் முன்னாடி எல்லாம் பயிரிட்டு அறுவடை செய்ய 6 மாதங்கள் ஆகும் இப்போ 60 நாள்களில்.மக்கள் தொகை அதிகமானதால் கடல் நீரை குடி நீர் ஆக்குகிறான் மேலும் நிறைய சொல்லலாம் நண்பா.அறிவியல் என்பது மனிதன் சிந்தனைக்கு உற்பட்டு சொல்லகுடியது.நீங்கள் இயற்கை அழிஉகள் என்று சொல்கிர்களே அதுதான் என்ன.பூமி எப்படி படைக்க பட்டது,வானங்கள் எப்படி முகடோகளாக உயர்த்த பட்டது,மலைகள் எப்படி பூமி-இல் நட்டபட்டுள்ளது. நர்ச்சதிரங்கள் மேலும் பல பல விசயங்களை அறிவியலின் மூலம் இப்போ நீங்கள் சொல்வதை விட மிக தெளிவாக 1450 வருடத்துக்கு முன்பு இஸ்லாம் கூறி இருகிறதே அது அந்த காலத்தில் எப்படி சாத்தியம் என்று கொஞ்சம் சிந்திக்க மாட்டிர்களா நண்பர்களே…..இஸ்லாம் சொல்லும் விசயங்களை சிந்தித்து பாருங்கள் உங்கள் அறிவியலின் துணையோடு….http://www.tamilislam.com/science/index.htm
பிரதர் Servant of Allah:
“ஏன் உங்கள் அறிவியலால் மரணத்தை தடுக்க முடிய வில்லை,ஏன் மரணித்தவரை உயிர் கொடுத்து எழுப்ப பட முடிய வில்லை.சாதாரண மழையை கூட கணித்து சொல்லு முடிய வில்லை.எப்போ வானிலை அறிக்கை சொன்னாலும் ஒரு உறுதி இல்லை.நாளை என்ன நாடாகும் என்று உங்கள் அறிவியலால் சொல்ல முடியுமா.”
தவறிருந்தால் மன்னிக்கவும், அறிவியலின் வளர்ச்சியால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது எனக்கு தெரிந்த சிறு உதாரணம் அம்மை, polio, நிலவில் தண்ணீர் கண்டுள்ளோம், டைனோசோர் இனம் அழிந்தது போல் விண்கல்லால் மனித இனம் அழியும் வாய்ப்பு குறைவு, அணுக்கருவி கொண்டு விண்கற்களை அளிக்கும் தொழில் நுட்பம் வளருகிறது. நிச்சயம் பாதகங்களும் ஏற்படுகின்றன. ex: global warming etc. நிச்சயம் கடவுள் மனிதனின் கையாலகாத தனத்துக்கு பழி போட, மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி. எந்த மத நூலும் மழை பூகம்பம் எல்லாம் எப்போது வரும் என்று சொல்லவில்லை. அவை அனைத்தும் பூடகமாக எழுதப்பட்டவை, எப்படி வேண்டுமானாலும் திருப்பலாம். like poet nastordam. World says he predicted everything in his poems. (some where said at 1990 world war 3 will come) தர்க ரீதியாக அறிவியல் மட்டுமே நிரூபிக்கிறது. all the equipments that man creates today do have some life span, beyond they they do not work or even before that they fail due to some defect in manufacturing. does that meant the creater man is GOD? No, same is the case for all living things, ( trees, tortoise live longer than humans, do they worship god? just because the one who worship/trust god live longer than an atheist?)
//வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடம் ஏது? மரணத்திற்குப் பின் எதுவும் இல்லை. அதைப் பற்றி யார் சொல்லியதும் உண்மையும் இல்லை.//
இல்லை. மரணத்திற்கு பிறகு எதுவும் இல்லை என்பதும் கற்பனையே. மரணத்திற்கு பிறகு சொர்க்கம்/நரகம் என்னும் கற்பனை போல.
அதற்காக, மரணத்திற்கு பிறகு சொர்க்கம்/நரகம் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம் என்றாலும், ‘அது தான் உண்மை’ என்று பிதற்றுவதும், வலிந்து திணிப்பதும் தான் பிரச்சினையே…
//உங்களுக்குத் தெரிந்தது மத போதகம். எனக்குத் தெரிந்தது அறிவியல். நமக்குல் பொதுவில் சேரும் புள்ளி எதுவும் இருக்க வாய்ப்பில்லை.//
:))
சரி! உலகம் உருண்டை என்பதையாவது நம்புகிறாரா, அல்லாவின் சேவகன்?
//பூமி எப்படி படைக்க பட்டது,வானங்கள் எப்படி முகடோகளாக உயர்த்த பட்டது,மலைகள் எப்படி பூமி-இல் நட்டபட்டுள்ளது. நர்ச்சதிரங்கள் மேலும் பல பல விசயங்களை அறிவியலின் மூலம் இப்போ நீங்கள் சொல்வதை விட மிக தெளிவாக 1450 வருடத்துக்கு முன்பு இஸ்லாம் கூறி இருகிறதே அது அந்த காலத்தில் எப்படி சாத்தியம் என்று கொஞ்சம் சிந்திக்க மாட்டிர்களா நண்பர்களே…..//
இதை பத்தியெல்லாம் குரானில் என்ன சொல்லியிருக்கிறது என்று தெரியாது. ஆனால், “தெளிவாக” என்று நீங்கள் சொல்வது தான் உதைக்கிறது.
//இப்போ 120 கோடி மக்கள் என்றால் 10 வருடத்துக்கு முன்னாள் 90 கோடி…இப்படியே போக போக கடைசி-இல் ஒரு ஜோடிலே வந்து நிற்கும்.அதுனலேதன் இஸ்லாம் சொல்கிறது நாம் எல்லாரும் ஒரு தாய்,ஒரு தகப்பனுக்கு பிறந்து பெருகியவர்கள் என்று.//
அப்போ அந்த ‘ஒரு’ தாய், தகப்பனுக்கு பிறந்தவர்கள் தங்களுக்குள் புணர்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாமா?
அருமையான பதில் வித்தகன். இன்னொரு விஷயம் நமக்கு மேல் ஒருவர் என்றால். பிறகு அவருக்கு மேல் யார் என்ற கேள்வியும் எழும். எதற்கு என்ன பதில் சொல்வார்கள் உலமாக்கள்.
அத எல்லாம் கேட்ட நம்மள கொன்றுவாங்க ..
30/03/1985 லீனா மணிமேகலைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இவ்வளவு நீ முசுலீம்களை கேவலப்படுத்தியும் யாரும் ஒன்ன திட்டல இதுல இவர கொன்றுவாங்காளம்
//முஸ்லீம் என்று அலறி ஆணுறை அணிந்தாய்கீழே இழுத்துஉப்பை சுவைக்க சொன்னேன்///
உனக்கும் மணிமேகலைக்கும் ஒரு ஒற்றும இருக்கு அவ பெண்ணியம் என்று சொல்லி பெண்களை கேவலப்படுத்திக்கிட்டு திரிற நீ ம.க.இ.க காரனை கேவலப்படுத்திக்கிட்டு திரியற
தோழர் ஹைதர் அலி ,
உங்கள் உடம்பில் ஓடுற ரத்தமும் ,எனுடம்பில் ஓடுற ரத்தமும் சிவப்பு நிறம்தான் ,இதில் என்ன முஸ்லீம் ,ஹிந்து ,கிறிஸ்டின் ….மதங்களை மறப்போம் மனிதம் வளர்ப்போம் .
உங்களுடைய வயதை ஒட்டிய தோழர் பிச்சை எடுக்கிறார் அதுவும் நீங்கள் தொழுகை நடத்தும் மாஸ்க்கு கு வெளியே ..இதையெல்லாம் கண்டு உங்கள் மனம் கொதிக்கவில்லையா ?நீங்கள் சாகும் போது என்னுடைய வயதை ஒட்டிய நண்பர் பிச்சை எடுக்க கூடாது ,என்னுடைய வயதை ஒட்டிய நண்பர் அடிமையாக இருக்க கூடாது ,என்னுடைய வயதை ஒட்டிய நாண்பர் திருட கூடாது என்று உறுதி எடுத்து கொள்ளுங்கள் …மனிதனுடைய அருமை புரியும் …
நமக்கு மேல் ஒருவர் என்றால். பிறகு அவருக்கு மேல் யார்…கடைசி-இல் விடை ஒன்றுலே தான் வந்து நிற்கும் நண்பா.உடரனதுகு இப்போ 120 கோடி மக்கள் என்றால் 10 வருடத்துக்கு முன்னாள் 90 கோடி…இப்படியே போக போக கடைசி-இல் ஒரு ஜோடிலே வந்து நிற்கும்.அதுனலேதன் இஸ்லாம் சொல்கிறது நாம் எல்லாரும் ஒரு தாய்,ஒரு தகப்பனுக்கு பிறந்து பெருகியவர்கள் என்று.
அந்த ஒரு ஜோடி எப்படி வந்தது கொஞ்சம் விளக்கவும்….
நண்பர் 30/03/1985 அவர்களே உங்களுக்கு அந்த ஒரு ஜோடி எப்படி படைக்க பட்டது மேலும் பல விபரங்கள் தெரிந்துகொள்ள இந்த வெப் லிங்க் முலாம் அறிந்து கொள்ளுங்கள் http://www.tamilislam.com/science/index.htm
நண்பரே ,
அந்த வெப்சைட் ஒனும் விளங்கமட்டேங்குது ..
அந்த ஜோடி எப்படி உருவானது என்பதை இங்கே தெளிவாக விளக்கவும் …
நண்பர் 30/03/1985 அவர்களே, இந்த வெப் சைட்-இல் உள்ளதை எதை உங்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை.அறிவியல் ஆதரதுடன் இந்த வெப் சைட்-இல் விவரிது உள்ளார்கள்.அதையே உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை,சிந்தனையுடன் தெளிவான மனதுடன் படித்தல் உண்மை புரியும்.http://www.tamilislam.com/science/index.htm இந்த சைட்-இல்.உங்கள் கேள்வி-இல் இருந்து புரிகிறது நீங்கள் சுய சிந்தனை இல்லாதவர் என்றும்.உண்மை இன்னது என்று தெரிந்தும் விதண்டா வாதம் பன்னகுடியவர் என்று.இதையே புரிய தெரிலே நீங்கள் எல்லாம் அறிவியலை பத்தி பேசுகிறிர்கள்.
antha வெப் சைட் ல உள்ள எழுத்துக்கள் எல்லாம் ஜிலேபிய பிச்சு போட்ட மாத்ரி இருக்கு
Well explained.
அய்யா பெயரில் மட்டும் வித்தகரே பரிணாம தத்துவம் எந்த அளவுக்கு முட்டாள் தனமானது என்பதை கீழ் கண்ட சுட்டியில் போய் தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.harunyahya.com/en.m_categorie_76.php
அறிவியலாலையே பொய் என நிருபிக்கப் பட்ட பரிணாம கொள்கையை இன்னும் நம்பி கொண்டிருக்கீங்க. பரிணாம கொள்கையை நிரூபிக்கும் வகையில் இதுவரை எந்த ஒரு படிமங்களும்(fossils) கண்டுபிடிக்க படவில்லை. இதுவரை கண்டுபிடிக்க பட்டுள்ள அனைத்து படிமங்களூம் இறைவனின் படைப்பு கொள்கையையே நிரூபிக்கின்றன
//இயற்கைக்கு எதிராக ஏதாவது பண்ண முடிந்ததா//
நிறைய தேடி அலைய வேண்டியதில்லை. செய்மதியிலிருந்து பூமியின் இருளான பக்கத்தை படம் பிடித்திருக்கிறார்கள் பாருங்கள். நிலப்பகுதிகள் எல்லாம் ஒரே வெளிச்சமாயிருக்கும்.. 😀
what nogod7 said ?
இயற்கை அழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது படைத்த இறைவனை தவிர.எச்சரிகை செய்ய முடியும் அந்த அழிவு ஆரம்பித்த பிறகுதான்.கணிப்பு என்பது மாறக்கூடியது.இந்த உலகம் ஒரு நாள் அழியகூடியதே.மனிதன் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்.இந்த உலகில் மரண பிடி-இல் இருந்து தப்பியவர்கள் யாரும் இல்லை.எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
“எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.”
இந்த கருமத்த அடிக்கடி கேட்டும் படித்தும் தொலைக்க வேண்டி இருக்கு. யாராவது வில்ல வாரியா என்ன புகழுர அளவுக்கு செய்றாருன்னு சொல்லுங்கப்பா அப்படியே அந்த *எல்லா* துக்குள்ள அடங்கியிருக்குற சின்ன சின்ன புகழ்களை வரிசை படுத்தி சொல்லுங்கப்பா !!!
சும்மா கிண்டல் பண்ணனும்நு சொல்ல கூடாது … அதன் அர்த்தம் உண்மையிலேயே உங்களுக்கு விளங்க வில்லையா ?? அவர்கள் நம்பும் கடவுள்
இந்த universe -ய் படைத்தது இருக்கிறார் இன்னும் பல அதிசயிக்க தக்க இயற்கை விஷயங்கள் இருக்கின்றன.. ஒருவர் கடவுள் தான் இவற்றை படைத்தார் என்று நம்பும் பொது அவருடைய பெருமைஏய் சொல்வதற்காகவும் …. தன்னுடைய கர்வத்தை அகற்றுவதற்காகவும் சொல்ல படும் ஒன்று … as vivekanandhar said, what you speak .. you become… they keep telling this so that they wont get pride over the trivial things they do or achieve… (this is up to my knowledge…)
ஓ..இம்புட்டு தான் இதன் அர்த்தமா !! நான் கூட இந்த உலகத்துல இருக்க அம்புட்டு அநியாயம், அநீதி, ஏற்ற தாழ்வு, கொடூர மனித மிருகங்கள், நோய்கள் எல்லாத்தையும் படச்சதுக்கு புகழுரானுங்கலோனு தப்பா புரிஞ்சுகிட்டேன்
நண்பர் ஜெ பி அவர்கள் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற வாக்கியத்திலிருந்து “அப்படி என்ன இறைவன் செய்து விட்டார், எல்லா புகழும்
அவருக்கு உரித்தாகுவதற்கு? என்று விளக்கம் கேட்டுள்ளார், ஏதோ எனக்கு தெரிந்த இறைவனின் சில சாதனைகளை சொல்ல விரும்புகிறேன்.
1 ) நண்பர் ஜெ பி யை, ஒரு கேவலமான அசுத்தமான நீர் துளியிலிருந்து, ஒரு நல்ல மனித பிறப்பாக படைத்திருக்கிறார். ( சிலர் தனது
கேவலமான நீரை, கழிவறைகளில் வெளியாக்குவதுண்டு. சிலர் தங்களுடைய மனைவியின் பால் செலுத்தினாலும், அவை அனைத்தும் குழந்தையாக
ஆகாமல் போவதும் உண்டு. )
2 ) நண்பர் ஜெ பி யை, ஒரு நல்ல பெற்றோருக்கு பிறக்க வைத்திருக்கிறார். ( சில மேலை நாடுகளிலும், ஏன் நமது நாட்டிலும் கூட சில
குழந்தைகள் எந்த காதலனுக்கோ, எந்த கள்ள காதலனுக்கோ, எந்த கணவனுக்கோ, பிறந்த குழந்தை என்று குழம்பி கொண்டிருக்கும் நிலையில்
….)
3 ) நண்பர் ஜெ பி யை, ஒரு குருடனாகவோ, கை ஊனமாகவோ, அல்லது மற்ற ஊனம் ஏதுமின்றி படைத்துள்ளார் அல்லவா?
4 ) மேலும் நண்பர் ஜெ பி பல முறை பேருந்தில் பிரயாநித்திருப்பார் . அப்பொழுது நமது நிலை வண்டியின் ஓட்டுனரை சார்ந்திருக்கும் .பலர்
சென்ற பேருந்துகள், ஆற்றிலோ, மரத்திலோ சென்று நிற்கிறது. நண்பர் ஜெ பி சென்ற பேருந்து, அப்படி ஒன்றும் ஆகாமல், நல்ல நிலையில்
சென்று இருப்பது நல்ல விஷயம்.
5 ) உலகில் எத்தனையோ படிபரிவில்லாதவர்கள் இருக்க, ஏன் காட்டு வாசிகள் கூட இருக்க, நண்பர் ஜெ பி யை, ஒரு நல்ல கல்வி
கற்றவராகவும், மேலும் இணையத்தளத்தில் கமென்ட் எழுதும் ஆற்றலையும் கூட தந்திருக்கிறான் இறைவன்.
6) மேலும் நண்பர் ஜெ பி யை, சோமாலியா போன்ற வறுமை, கொடுமை நிகழும் நாட்டிலோ, இந்தோனேசியா போன்ற வறுமை நாட்டிலோ அல்லது ஏன் நம் அண்டை நாடான இலங்கையில்( சிங்களனுக்கும் , பிரபாகரனுக்கும் இடையில் மாட்டி சாகாமல் , அல்லது அகதியாக ஆஸ்திரேலியா செல்லு பொழுது இந்தோனேசியா கடல் ரோந்து போலீசில் பிடிபட்டு துன்பம் அனுபவிக்காமல் அல்லது தமிழ்நாட்டிற்கு சிகிச்சைக்காக விமானத்தில் வந்து திருப்பி அனுப்பபடாமல்) பிறக்க வைக்காமல் நம் தமிழகத்தில் பிறக்க வைத்து ஒரு சின்ன சாதனை படைத்திருக்கிறான் இறைவன் என்று நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன அனைத்தும் கடவுள் படைத்ததா…..
உங்களுக்கு அது கேவலமானதாக இருந்தால் அதை
வெட்டி எடுத்து விட வேண்டியதுதானே….
தோழர் வெளிச்சம் :
“சிங்களனுக்கும் , பிரபாகரனுக்கும் இடையில் மாட்டி சாகாமல் , அல்லது அகதியாக ஆஸ்திரேலியா செல்லு பொழுது இந்தோனேசியா கடல் ரோந்து போலீசில் பிடிபட்டு துன்பம் அனுபவிக்காமல் அல்லது தமிழ்நாட்டிற்கு சிகிச்சைக்காக விமானத்தில் வந்து திருப்பி அனுப்பபடாமல்”
அப்போ நீங்க மேல சொன்ன அல்லாரும் கடவுளை நம்பாதவங்க அல்லது தங்களுக்கு இவ்ளோ கஷ்டம் ஏன் நடக்குது அப்டின்னு யோசிக்கதவங்க அப்படியா? ஒருவேளை அவங்க எல்லாரும் இந்த கஷ்டமெல்லாம் கடவுள் கொடுத்ததுன்னு எத்துக்கனுமா? இந்த கஷ்டத்தின் போதெல்லாம் அவங்க எல்லாரும் கடவுளிடம் நிச்சயம் வேண்டிஇருப்பாங்க. ஏன் காப்பாற்றப்படலை? ஏன் உங்கள் கடவுள் சமுதாயத்தை இப்படி ஏற்றதாழ்வுகளோட படைக்கிறார்? தீயவன் வாழ்வதும் நல்லவன் தாழ்வதும் கடவுள் செயல்ன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கனுமா?
இந்த கஷ்டங்களை கண்டும்காணாம போவதற்கு ஆதி மனிதன் கண்டு பிடிச்ச “நொண்டி சாக்குதான்” கடவுள்….
//நண்பர் ஜெ பி யை, ஒரு நல்ல பெற்றோருக்கு பிறக்க வைத்திருக்கிறார். ( சில மேலை நாடுகளிலும், ஏன் நமது நாட்டிலும் கூட சில
குழந்தைகள் எந்த காதலனுக்கோ, எந்த கள்ள காதலனுக்கோ, எந்த கணவனுக்கோ, பிறந்த குழந்தை என்று குழம்பி கொண்டிருக்கும் நிலையில்
….)
//
எப்படி, அரேபிய கீப்புகளுக்கு பிறந்தவர்கள் போலவா?
(கீழ்தரமான கமென்ட். அதனால் உங்க ஸ்டைலிலேயே பதில் சொல்றேன்).
எல்லாத்துக்கும் கடவுள் தான் காரணமோ (வறுமை ,சாவு)
அட என்ன தம்பி இப்படி இருக்கீங்க ?..
உங்களுக்கு அறிவியல் தான் மனப்பாட பாடமாக போனது என்று நினைத்தால் …வரலாறுமா ?.. வெள்ளம் வருவதை தடுத்தது இல்லையா ?.. இல்லை .. மின்னல் தாக்குதலில் இருந்து காப்பாற்ற உபகரணங்கள் கண்டுபிடிக்கப் பட வில்லையா ?..
தம்பி .. குரானை மட்டும் படிச்சா போதாதுபா …கொஞ்சம் அறிவியலும் படிங்க .. சும்மா அப்துல் கலாம் மாதிரி புத்தகத்துல இருக்குறத மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணாதிங்க …
Dear Brothers and Sisters,
if you want know about science in Islam please check the web link for more details.
http://www.tamilislam.com/science/index.htm
khalid டைம் வெஸ்ட் பன்னாதுப்பா.கிளம்பு கிளம்பு
🙂
உபநிடதங்களில் விவாதிக்க தயார்
எத்தனை பேர் தயார் என்றார் பெரியார் தாசன்
இப்போ இஸ்லாம் எனும் இன்னொரு மதத்தின் பிடியிக்
விழுந்து விட்டார்
எல்லா மதங்களும் வர்க்க சுரண்டலை பின்புலமாக கொண்டதுதானே
மறுபடியும் தியாகுவ இங்கேவாவது சொந்த பெருல வந்ததுக்கு நன்றி ஆமா கொன்டைய மறைக்க முடியாம காரல் மார்க்ஸ் பேருல வரலைய
அலோ என் பெயரை யாருங்க இழுத்தது
ஹைதர் அலி என்னாச்சு கேள்விக்கு பதில் எங்கே
அட நீங்க இல்லீங்க அது கொன்ட உள்ள காரல் மார்க்ஸ் அங்காடிதெரு படவிமர்சனத்துல மறுபடியும் படவிமர்சனம என்று இழுத்தரே அந்த காரல் மார்க்ஸ்
//நிருபிக்கப்படாத டார்வின் கொள்கையைத் துக்கித் தலையில் வைத்து ஆடுபவர்கள்//
இன்னாது டார்வின் கொள்கை நிரூபிக்கப்படலையா ? அரெ பக்வான்..!!!
ரவி டார்வின் கொள்கை என்ன வென்று உம்மக்கு தெரியுமா? குரான் என்ன சொல்கிறான் இறைவன் மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம் என்கிறான்.
who said its proved dear….. it is similar to the ghost research….
//அரெ பக்வான்..!!!//
ஹா… ஹா…
நேரடி விவாதத்திற்கு http://www.onlinepj.com
வினவு எதையும் புரிந்துகொன்று சொல்வது நல்லது நீ ௮ ஆண்டுகளாக குரானை ஆய்வு செய்த உடன் எல்லாக் கேள்விகளுக்கும் ஒருவர் பதில் குறி விட வேண்டும் என்ற கட்டாயமில்லை. இஸ்லாத்திற்கு மாற ஆயிரம் காரணங்கள் வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நிருபிக்கப்படாத டார்வின் கொள்கையைத் துக்கித் தலையில் வைத்து ஆடுபவர்கள், உண்மையிலேயே தங்கள் கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தால், திறந்த விவாதத்திற்குத் தயாராக வேண்டும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு உள்ளதா? உங்களைப் போன்றவர்களை மேடையில் நேருக்கு நேர் சந்திக்க தமிழ்நாடு தௌஹித் ஜமாஅத் எப்போதும் தயாராகவே உள்ளது. உங்களுக்குத் துணிச்சல் இருந்தால் தொஹித் ஜமாத்துடன் நேருக்கு நேர் மேடையில் விவாதம் புரிய முன் வாருங்கள்.
இல்லையேல், நிங்கள் குருவதைஎல்லாம் வேத்துவேட்டுகலகத் தான் மக்கள் எடுத்துக் கொள்வர்.உங்களுக்குத் துணிச்சல் இருந்தால் தொஹித் ஜமாத்துடன் நேருக்கு நேர் மேடையில் விவாதம் புரிய முன் வாருங்கள்.
அறிவிப்பு:
இங்கு வரும் பல இசுலாமிய நண்பர்கள் எதற்கெடுத்தாலும் பகிரங்க விவாதத்திற்கு வரத்தயாரா என்று உதார் விடுவது வழக்கமாக இருக்கிறது. அது தொடர்பான விளக்கம்.
எங்களைப் பொறுத்தவரை மதவெறியர்களையும், மதவாதிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதையே செய்வோம். மாறாக சரிக்கு சமமாக அவர்களுடன் விவாதம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஏனெனில் மதவாதிகள் எவரும் மதச்சார்பின்மையை அதாவது மதம் என்பது தனிப்பட்ட விசயம், அதை பொது அரசியல் வெளிக்குள் கொண்டு வரக்கூடாது என்ற கொள்கை கொண்டவர்களல்ல. இப்படி மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற குறைந்த பட்ச விடயங்களோடு கூட உடன்பாடு இல்லாத அளவுக்கு மதவெறி முத்தியிருக்கும் மனிதர்களை மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிப்பதே சரியானது.
ஆர்.எஸ்.எஸ் முதலான இந்து மதவெறி அமைப்புக்களை பகிரங்க மேடையில் விவாதித்து முறியடிப்பது எப்படி சாத்தியமில்லையோ, முட்டாள்தனமானதோ அது போன்று முசுலீம் மதவாதிகளோடும் அப்படி விவாதிக்க முடியாது. இந்தியாவில் இந்துமதவெறி பாசிசம் தலைதூக்கியிருக்கும் காலத்தில் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் இசுலாமிய மக்கள் வேறு, இசுலாமிய மதவாதிகள் வேறு. எனவே இந்துமதவெறியை முறியடிக்கும் நோக்கில் இசுலாமிய மக்களை பிற உழைக்கும் மக்களோடு அணிதிரட்டுவோம். அதற்கு தடையாக இருக்கும் மதவாதிகளை முறியடிப்போம். இதுதான் வினவின் நிலை.
நீங்கள் அம்பலபடுதுங்கள் அது சரியே… ஆனால் நீங்கள் போகிற போக்கில் கூறிவிட்டு போவது போல் போகாமல் அவர்களோடு தர்கா ரீதியாக விவாதம் செய்யலாமே…
இங்கே விவாதம் தானே நடக்கிறது?
\\“ஏன் மாறினீர்கள்” என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. பதில் சொல்வது அவரது கடமை.\\
\\எங்களைப் பொறுத்தவரை மதவெறியர்களையும், மதவாதிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதையே செய்வோம். மாறாக சரிக்கு சமமாக அவர்களுடன் விவாதம் செய்ய வேண்டிய தேவையில்லை\\ என்ன அளவுகோல்? அவருக்கு ‘கடமை’, உங்களுக்கு ‘தேவையில்லை’. வாழ்க உழைக்கும் மக்கள் சர்வதிகாரம். வாழ்க மார்க்ஸ்சிய, மாவோ, லெனிய கோயபல்சுகள்.
வாழ்க நபிகள் கோயபல்சுகள் !
மிக சரி
there is absolutely no difference between islam believers
and makkal kalai illakiya kalagam, right extremes and left
extremes is joining in a same line.
மீண்டும் அய்யா இப்ராஹிம் , நாங்கள் மதவெறியர்களுடன்தான் நேரடியாக விவாதிப்பது வெட்டிவேலை என்று சொல்கிற்றோம், பெரியார்தாசனை நாங்கள் மதவெறியறாய் கருதவில்லை…. இன்னமும்…
மேலும் அவர் பார்ப்னிய இந்துமத்ம் எவ்வளவு கேவலமாது என்று பேசியிருக்கிறார் அல்லவா அதுபோல இசுலாம் எப்படி சிறந்த்து என்று அவர் நிரூபிக்க வேண்டாமா நண்பரே????
இந்துத்துவாதிகள் நீங்கள் கூப்பிடுவதற்கு காத்திருப்பது போல் பதில் தருகிறிர்கள் நீங்கள் தள கீழ நின்னாலும் அவர்கள் மதத்தை பற்றி விவாதிக்க வரமாட்டார்கள் காரணம் எல்லாம் குப்பைன்னு தெரியும் இப்போ உங்களை மாதிரி உப்பு சப்பு இல்லாத கரணம் சொல்ல வேண்டியது உண்மையிலயே மதவாதிகளை மக்களுக்கு அம்பலபடுத்துவது தான் உங்கள் நோக்கம் என்றால் நீங்களாகவே அவர்களை விவாதத்திற்கு அழைத்திருக்க வேண்டும் மக்களும் உங்கள் விவாதத்தை கண்டு யார் சொல்வது சரி என்று உண்மையை விழங்கி இருப்பர் அதற்க்கு வக்கில்லை புதுசா இஸ்லாத்தை ஏற்றவரிடம் பெரிய பருப்பு மாதிரி கேள்வி கேக்குறிங்க எத எங்கே கேக்குனுமோ அத அங்க கேக்கணும் அட தெரியாதவள் ரோடு கோணல இருக்குன்னாலம் அதுமாதிரி இருக்கு உங்க கத ஐயோ பாவம்
ayub, ஏன் இவ்வளவு பதட்டம்… நாங்க மதவெறியற்களை மதிப்பதில்லை, அதனால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விவாதிப்பதில்லை, ஆனால் உங்க கூடவோ, ரஹீம் கூடவோ விவாதிப்பதில எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல, ஏன்னாக்க உங்கள மதிக்கிறோம், தோழமையோட பாக்குறோம்… இப்ப பெரியார்தாசன் இருக்காறே, நீங்க அவருகிட்ட நாங்க பருப்பு மாதிரி கேள்விகேக்கறதா சொல்றீங்க ஆனா அவரு எங்க மேடையிலேயே மதங்களில் ஒரு மன்னாங்கட்டியும் இல்லன்னு பேசினாரு அதான் ஏதாவது மன்னாங்கட்டி ஆம்ப்டிச்சான்னு கோக்குறோம்..
Those who want an open debate on Islam should visit the following website where
two Quaranic scholars (one a native of Iran whose mother tongue is Arabic and now a non-muslim and the other an orthodox muslim from Pakistan). engaged in a very meaningful debate. Both these gentlemen are well versed in Arabic language in which the Holy Koran was revealed. I don’t think either Periar Dasan or any Indian Muslim have such command over Arabic language to understand the nuance of each
verse of the Holy Koran:
http://www.faithfreedom.org/
இன இழிவு நீங்க இஸ்லாமே மருந்துன்னு சொன்ன – பெரியாரிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்விகள்..
பெரியார் ஏன் அவ்வாறு சொன்னார் என்று இதுவரை பகுத்தறிவு இயக்கத்தினரல் கூட அலசப்படாத கேள்விகள்..பெரியார்தாசனிடமாவது இப்பொழுதாவது கேட்கப்பட்டிருக்கிறதே வாழ்த்துக்கள்..
இன வேற்றுமை களைய மட்டும்தான் அவர் மதம் மாற சொன்னார். அப்போதைய சூழ்நிலை அப்படி. அப்பவும் அவர் கடவுள் இருக்கிறார்னு சொல்லலை. அம்பேத்கர் மதம் மாறவும் அதுதான் காரணம்.
//இன இழிவு நீங்க இஸ்லாமே மருந்துன்னு சொன்ன – பெரியாரிடம்//
இன இழிவு நீங்குவது ஓகே. ஆனா, இஸ்லாமில் மத இழிவு இருக்கே…
///மக்கள் இசை பாடல் ஒன்னு எச்சரிக்க எச்சரிக்க எச்சரிக்க அந்த RSSகாரன் வரந பத்தவய்க்க கையில் எடுத்து வரந தீப்பட்டிய பத்தவய்க்க///
முதலில் இஸ்லாத்தை பற்றி முழுமையாக புரிந்து விவாதத்திற்கு வாருங்கள் ,,பிரவுண் உடல் பாதுககபட்ட சரிதிரம் ,,,தேன் உற்பத்தி ,மற்றும் இதைபோல் பல சம்பவங்கள் அதிசெயங்கள் ஆச்சரியங்கள் ,,குரானில் கூறப்பட்டுள்ளது ,,அதை அறிவியல் உலகமும் விஞ்ஞானிகளும் ஒத்துகொண்ட உண்மையாகும் ,,வஸ்ஸலாம் ,,,,,
முதலில். முதலில். இஸ்லாத்தை படித்து விட்டு வாருங்கள் சலிப்புயா. boring பெரியார்தாசனின் மொழியில் சொல்வதனால் allalakuuuuuuuuuubillaaakuuuuu ………….(இந்து தத்துவம்மொன்பது இந்திய தத்துவமல்ல)
இங்கு வரும் பல இசுலாமிய நண்பர்கள் எதற்கெடுத்தாலும் பகிரங்க விவாதத்திற்கு வரத்தயாரா என்று உதார் விடுவது வழக்கமாக இருக்கிறது.
உதாருல்லாம் கிடையாதுங்க..பெரியார் திராவிட கழகத்தினருடன் தவ்ஹீத் ஜமாத் நடத்திய விவாதத்தை பற்றி கேள்விப்பட்டீங்களா.. இல்லையா..?
கீழ்க்கண்ட இணைப்பில் இலவசமாக டவுன்லோடு செய்யலாம்
http://www.tntj.net/?p=7001
லீனா கூட்டத்துலெ முஷ்டியை தட்டி.. அப்படித்தானய்யா நீங்கள்ளாம் உதார் விட்டீங்க..
டியர் சாதிக்,
அல்லா வ நம்பி அய்யா அவர்கள் இஸ்லாத்தை நம்பி வந்திரிகிறார்,இஸ்லாத்தில் விவாதம் இல்லை என்று அவரே சொல்லுகிறார். அவர ஏன் தொந்தரவு செயஹிரீர்கள் ? நீங்கள் ஒரு உண்மையான முஸ்லிம் ஆஹா இருந்திரிந்தால் நீங்கள் இப்படி அவரிடம் பேச மாடீர்கள். உங்களுக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை மறந்து பேசாதீர்கள். தயவு செய்து அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், பாசிச சக்திகளிடம் பணத்துக்காக போய் இஸ்லாத்தை விட்டு விடாதீர்கள்.
//எங்களைப் பொறுத்தவரை மதவெறியர்களையும், மதவாதிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதையே செய்வோம். மாறாக சரிக்கு சமமாக அவர்களுடன் விவாதம் செய்ய வேண்டிய தேவையில்லை// — கோயபல்சுகும் உங்களுக்கும் என்ன வித்யாசம்?
நபிகளுக்கும் கோயபல்சுக்கும் என்ன வித்தியாசம் ?
உனக்கும் தோழர் கேள்விக்குறிக்கும் என்ன வித்தியாசம் நீ உணர்ச்சி வசப்பட்ட அரவேக்காடு கேள்விக்குறி சமூக அக்கரையுள்ள தோழர்
சரிங்க தோழர் ..
மத போதை தலைக்கு ஏறிடுச்சு போல …ரொம்ப உணர்ச்சி வசபடதிங்க .நபிகள யாரும் தூக்கிட்டு போய்டமாட்டாங்க!
அட இவ்வளவு நேரம் போதக்காரன்கிட்டய பேசிக்கிட்டு இருந்தே நபி மெளத்த போயி 1400வருசமாச்சு இதுல இவரு வந்து துக்கிட்டு போயிடுவாருன்னு பயப்புடுரமாக்கும்
தோழர் மார்ச் 30, ஹைதர் அலி மதவெறியர் அல்லர், அவரது பின்னூட்டங்களை தொரடர்ந்து வாசித்து வந்தால் எவருக்கும் அது புரியும்
உங்கள் வாதத்தில் தர்க்கம் இல்லை,
இங்கு விவாதத்திற்கு வரும் இசுலாமிய நண்பர்களோடு உரையாடலை அர்த்தமுள்ள வகையில் தொடரவேண்டும். முடிந்த அளவு பொறுமையுடன் விவாதிப்பது நல்லது. மற்றபடி நபியையும் அல்லாவையும் ஏசுவதும் கிண்டல் அவர்களை சினமுறச் செய்யுமே தவிர சிந்திக்க வைக்க உதவாது. என்று வினவு கூறியதை வழிமொழிகிறேன். தயவு செய்து அந்த வழிகாட்டலை பின்பற்றவும்
இங்கு விவாதத்திற்கு வரும் இசுலாமிய நண்பர்களோடு உரையாடலை அர்த்தமுள்ள வகையில் தொடரவேண்டும். முடிந்த அளவு பொறுமையுடன் விவாதிப்பது நல்லது. அல்லாவுக்கு கிளுகிளுப்பு என்றெல்லாம் பேசுவது அவர்களை சினமுறச் செய்யுமே தவிர சிந்திக்க வைக்க உதவாது. எனவே அந்த வரியை நீக்குகிறோம். தொடர்ந்து விவாதியுங்கள்
அன்புள்ள ஹைதர், புதியதாய் விவாதிக்கும் இளம் தோழர்களுக்கு தங்களின் வாதத்தை முன்வைப்பதில் இதுபோன்ற தவறுகள் நேருகின்றன.. முகம் தெரியா ஊடகமென்பதின் பிரச்சனைகளில் ஒன்று கூட என சொல்லலாம்.. நீங்களும் உணர்ச்சிவசப்படாமல் தவறுகளை விமர்சனம் செய்யுமாரு கோருகிறேன்…
நன்றி கேள்விக்குறி அவர்களே நான் தவறாக எழுதியிருந்தல் மன்னிக்கவும்
ok,கேள்விகுறி
நல்ல விவாதம் .இங்கே கருது சொல்லுகிற நண்பர்களுக்கு ஒரு வார்த்தை.வினாவுக்கும் சேர்த்துதான்.இரண்டு தனிதனி குரான் வசங்களி எடுத்துக்கொண்டு முரண்பாடாகவோ இல்லை தப்பர்த்தமோ கொள்ளவேண்டாம்.உதரணமா நபி மொழி லே நல்ல மனிதன் யார் என்கிறே கேள்விக்கு ஒவ்வரு விதமா முஹம்மத்(ஸல்) பதில் சொல்லி இருப்பாரு. ஒரு இடத்துலே பொய் சொல்லாம இருக்கிறவன் தான்னு ,இன்னொரு இடத்துலே பெற்றோர்களை கவனிப்பவன் ன்னு,இன்னொரு இடத்துலே தொழுகையை நிலை நாட்டுவான் ன்னு.கேள்வி கேட்குரே ஆளுக்கு எந்த குணம் குறைவா இருக்கோ அதையே பதிலஹா சொல்லி இருப்பாரு.குரான் லேயும்…ஒரு இடத்துலே காபிர்களை கொள்ளுங்கள் நு சொல்லி இருக்கும்.இந்த வசனம் போருக்கு முன்பாக தங்களை தாக்கவரும் எதிரி படைகளின் வலிமையை எண்ணி முஹம்மத்(ஸல்)சோர்ந்து இருந்த பொது எதிரிகளை எதிர்த்து போரிட ஒரு போர்வீரனுக்கு கட்டளையிடுகிறே மாதிரித்தான்.அதற்கடுத்த வசனத்தில்,குழந்தைகளை,பெண்களை,வயது முதிர்ந்தவர்களை பாதுக்காப்பஹா வெளிஎரே விட்டு விடுங்கள் ன்னு சொல்லுது.ஆக குரான் படித்த மட்டும் போதாது.அத புரிஞ்சுக்க வசனம் இறக்கப்பட்ட சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெரியார் தாசனுக்கு ரியல் எஸ்டேட் விளம்பரம் சூடுபிடிக்கள அதான் முஸ்லீம் கு தாவிவிட்டார் ,ரொம்ப பணகஷ்டம் போல தெரியுது ,அவரை விட்டு விடுங்கள் …
ம.க.இ.க காரன் மாதிரி பேசு ரஸ் காரன் மாதிரி அவதுறுகளை அள்ளி வீசாதே
RSSகாரன் மாதிரி அவதூறுகளை அள்ளி வீசாதே
அவதூறு இல்லை இது தான் உண்மை ..
நீ RSSகாரன் இல்லை அதற்கும் ஒருபடி மேலே
பெரியார் தாசனுக்கு ரியல் எஸ்டேட் விளம்பரம் சூடுபிடிக்கள அதான் முஸ்லீம் கு தாவிவிட்டார் ,ரொம்ப பணகஷ்டம் போல தெரியுது ,அவரை விட்டு விடுங்கள் —-அனானி
மீனாட்சி புரத்துல தாழ்த்தப்பட்டவர்கள் முஸ்லிமாகி – மீனாட்சி புரம் – ரஹமத்நகராகிய போதும் …பெட்ரோ டாலர் கொட்டு..கொட்டுன்னு கொட்டினதாலதான் தாழ்த்தபட்டவங்க முஸ்லிமானாங்கன்னு…இதே கதையத்தான் சொன்னாங்க..
பெரியார்தாசன் புத்த மதம் மாறிய பொழுது யாரும் இப்படி பொலம்பல..முஸ்லிமானதும் இப்படி பலரையும் பொலம்ப விட்டுட்டாரே…
பெரியார் தாசன் இப்புடி திடீர்னு ஒரு குறிப்பிட்ட கடவுள் சார்பு நிலையை எடுத்திருப்பது இவ்வளவு நாளாக பெர்யரின் கொள்கைக்குள் இருந்து குளிர் காய்ந்ததும் ,இனிமேல் கடவுள் இருக்கிறார் இருக்கிறார் என்ற கொள்கையுடன் சேர்ந்து குளிர் காயப்போகிறார் .அவருக்கு தேவை சூடு .அந்த சூட்டை தணிக்க அவருக்கு தேவை ஒரு வடிகால் .இஸ்லாமில் அவருக்கு நிச்சயம் கிடைக்கும் ,அந்த மார்க்கதில்தான் ஏழு பேரை திருமணம் செய்து கொள்ளலாம் ,கிழவனுக்குகூட பெண் கிடக்கும்.மற்றபடி ஆராய்ச்சி ,கொள்கை இதல்லாம் சுத்த டுபாக்கூர் .
///கீழ்க்கண்ட இணைப்பில் இலவசமாக டவுன்லோடு செய்யலாம்////
என்னது உங்க தளத்துக்கு வந்து பாக்கனுமா?
ஏற்கனெவே “பன்றி- ஒரு இஸ்லாமிய பார்வை” ங்ற ஒரு பதிவ ஏதோ எழவெடுத்த தளத்துல படிச்சு, சிரிச்சு பக்கத்துல ஒக்காந்திருக்குறவங்க கிட்ட பயித்தியகார பட்டம் வாங்கினது பத்தாதா???
யப்பா, யாரும் தயவு செஞ்சு அந்த பக்கம் போயிடாதீங்க!
டார்வின் பரிணாமக் கொள்கை நிரூபிக்க பட வில்லையா??
இங்கே சென்று தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.. http://richarddawkins.net/thegreatestshowonearth
பெரியார் தாசனிடம் கேட்க்கப் பட்ட கேள்விக்கு அவரே பதில் தர வேண்டும்..அதுதான் நியாயமானதும் கூட..
பாரதி பரிணாம வழர்ச்சி நிரூபிக்கப்பட்டது என்றால்? நீங்கள் கூறும் வாதப்படி குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்து இருந்தால்! குரங்கின் இதயமும் மனிதனின் இதயமும் ஒன்றாக அல்லது ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். அப்படி எதாவது நிருபித்து இருந்தால் சொல்லுங்கள் ஏழைப்பட்ட மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மாறாக பன்றியின் இருதயம் மனிதன் இதயத்தை ஒத்து இருக்கிறது என்றும் கூடுதல் கவனம் செலுத்தினால் மனிதனுக்கு பொறுத்த முடியும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.
FAROOK
சின்ன வயசுல எடுத்த போட்டோவுலயும், இப்ப எடுத்த போட்டோவுல இருக்குறவரும் ஒன்னும் சொல்ல வர்றீங்க. ஆனா பாருங்க, ரெண்டு பேரோட சட்டையும் ஒன்னா இருக்காது, இல்லையா?
அன்புள்ள வித்தகன் எனக்கு தெரிந்தவரை குரங்கிலிருந்து பரிணாமித்தவன் மனிதன் என்பதுதான் டார்வீனியம் இங்கு பலர் பேசுவது தவறாக படுகிறது, குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதை இனம் (primate) என்று டார்வின் சொன்னதாகத்தான் நான் புரிந்துவைத்திருக்கிறேன். இதை நீங்கள் விளக்கமுடியுமா?
பன்றியின் porcine valve மனிதனின் இருதய வால்வை விட சிறியது. அறுவை சிகிச்சையின் போது மனிதனின் இருதய வால்வின் அளவு சுருங்கிவிடும். சுருங்கிவிடும் அளவிற்கு ஏறக்குறைய பன்றியின் porcine valve பொருந்தி வருவதினாலே மருத்துவர்கள் இதனை பயன்ப்டுத்துகின்றனர். இதற்கு முன் மாட்டினுடைய வால்வை பயன்படுத்திவந்தனர்.
அன்புள்ள கேள்விக்குறி… ஒரு பெருங்கிளை வழிவந்த சிறு
கிளைகள் தான் மனிதர்களும் குரங்குகளும் என்பது பரிணாம வளர்ச்சியின் சரியான புரிதல்தான். இதைக் கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் இவர்களெல்லாம் அசட்டுத் தனமான கேள்விகள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.
வித்தகன் நம்ம நிறைய பேசவேண்டியது இப்போழுது அலுவல வேலையாக இருக்கிறேன்
Response to Richard Dawkins…
http://adamdeen.blogspot.com/
http://www.youtube.com/watch?v=bFTsNaL-Zg0
http://hamzatzortzis.blogspot.com/2010/01/dawkins-delusion-response-to-richard.html
மேற்க்கண்ட விவாதத்தை நான் அந்த சி.டி வாங்கி (ஓசியில்தான்) பார்த்தேன்..
பெரியார் திராவிடர் கழகத்தினர் – அவர்களின் கருத்துகளை இன்னும் அறிவியல்பூர்வமாக – ஆனித்தரமாக வைத்திருக்கலாம்.வாய்ப்பை தவறவிட்டு விட்டனர்..
கோமாளித்தனமாக யாராவது – ஏதாவது சொல்வதை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள் ..
நானும் வினவு தளத்தை பார்த்து பல தடவை சிரித்து இருக்கிறேன்
அந்த எழவெடுத்த தளத்தையும் பதிவையும் சொல்லுங்க ப்ளீஸ் . லேட் ஆனாலும் படிச்சி சிரிக்கணும் போல இருக்கு.
நல்ல வேளை இப்பதிவில் புர்கா பற்றி எதுவும் இல்லை.
இப்பதிவு சேஷாசலம் என்ற பெரியார்தாசன் என்ற சித்தார்த்தன் என்ற அப்துல்லா இஸ்லாமிற்கு தனது தேடலின் முடிவினால் போனாரா அல்லது ஒன்றும் தெரியாத வெங்காயமாகத்தான் போனாரா என்பதுதான். இதில் நேரிடையாக விவாதிக்க வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் அப்துல்லாவை வரச்சொல்லுங்கள். கேள்விகள் தயாராகத்தான் இருக்கின்றன. அவர் 8வருடமாக குரானை நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டும் படுத்துக்கொண்டும் படித்தேன் என்று கூறினாலும் தனக்கு அதிலிருந்து ஒரு வெங்காயாமும் தெரியாது என்கிறார் அல்லது அதில் சரக்கில்லை என்கிறாரோ!. இருந்தபோதிலும் “என்னை ஒன்னும் தெரியாத முட்டாள்னு நினச்சுடாதீங்கோ” என்று வேறு பயமுறுத்துகிறார். எப்படியோ அவருக்கு கப்ருஸ்தானில் இடம் கொடுப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தால் சரிதான். விளக்கமெல்லாம் கொடுக்க முடியாது என்று இவரால் கூறமுடியாது. இவரின் நாத்திக பேச்சால் பல ஆயிரம் பேரை தவறாக வழிகெடுத்திருக்கிறேன் என்று இவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்போ எப்படி அய்யா நேர்வழிக்கு போனாய் என்ற அவர்களின் கேள்விக்கு பதில் சொல்வது தானே நேர்மை! மறுப்பது மதவாதிகளின் பித்தலாட்டத்தைப் போலுள்ளது.
//எப்படி அய்யா நேர்வழிக்கு போனாய் என்ற அவர்களின் கேள்விக்கு பதில் சொல்வது தானே நேர்மை// குரான்னை படித்தேன் என்று சொன்னாரே.
பிறகு ஏன் விளக்கம் சொல்ல தயங்குகிறார் ?
இப்பதான் நீ ம.க.இ.க காரன்
வினவு நண்பரே.. அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. ஒரு விடயத்தை, கோட்பாட்டை, கொள்கைகளை தவறென்று கூறுகிறீர்கள்.. அதை இன்னொரு நபர் மறுக்கிறார்.. நேரடியாக விவாதிப்போம் என்று உங்களை அழைக்கிறார். ஆனால் நீங்கள் நான் சொல்லுவதை சொல்லி கொண்டு தன இருப்பேன் எழுதுவதை எழுதி கொண்டு தான் இருப்பேன் என்று அடம் பிடிப்பது நன்றாகவா இருக்கிறது? கருத்துக்களை உதிர்பதற்கும் அவற்றை எதிர்பதற்கும் சம உரிமை உள்ளதல்லவா? நீங்கள் எவ்வாறு ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை பொய்ப்பிக்க முயற்சி செய்கிறீர்களோ அதைப்போல அவற்றை மெய்பிக்க அடுத்தவருக்கும் உரிமை உள்ளது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். எந்த ஒரு பிரச்சினை ஆகட்டும் கருத்து வேறுபாடு ஆகட்டும், அதனை சாம்பந்த பட்ட இருவரும் நேருக்கு நேர் பேசுவதானால் விவதிபதணல் மட்டுமே விடை காண முடியும்.. அதை விடுத்து நான் ஒரு புறம் எழுதி கொண்டே இருப்பேன் நேரிடையாக விவாதிப்பது இயலாது என்று நீங்கள் இன்னும் கூறுவீர்களாயின் நாங்கள் விடுத்த விவாத அழைப்பை நீங்கள் ஏற்க மருபீர்கலாயின் அதனை செவிடன் காதில் ஊதிய சங்கு போல என்றெண்ணி நங்கள் விலகி கொள்வது தான் சால சிறந்தது.. நீங்கள் கொண்ட கொள்கை சரியென நிரூபிக்க படுமாயின் அதனை ஏற்று கொள்ளவும் தயாராக இருக்கிறோம் நண்பரே.. அதை விடுத்து எங்களின் கொள்கை கோட்பாடுகள் சரியெனும் பட்சத்தில் உங்களின் நிலை என்ன?
ரபீக்,
இசுலாமிய பெண்களின் வாழ்க்கை நிலை பற்றிய கட்டுரைக்குப்பிறகு இப்போதுதான் பின்னூட்டமிடுகிறீர்கள். இடையில் எவ்வளவோ சமூக விசயங்களைக் குறித்த கட்டுரைகள் வந்திருந்தாலும் நீங்கள் அதைப் பற்றி ஏதும் சொன்னதில்லை. இதுதான் உங்களுடைய சமூகப்பற்று என்றால் இப்படித்தான் இசுலாம் உங்களை பழக்கப்படுத்தியிருக்கிறது எனில் வருத்தப்படுகிறேன்.
மதவாதிகளுடன் விவாதிப்பதை விட அம்பலப்படுத்துவதே தேவையானது என்ற விளக்கத்திற்கு உங்களிடமிருந்து பதிலில்லை. அடுத்து உங்களுடன் விவாதிக்கலாம் என்று தொலைபேசியில் அழைக்கச் சொல்லி உங்கள் நண்பர் மூலம் கேட்டுக்கொண்டதற்கு நீங்கள் உடன்படவில்லை. உங்களைப் போன்ற நண்பர்களை நாங்கள் மதவெறியர்களாக கருதுவில்லை என்றாலும் ஆன் லைன் பி.ஜே போன்றவர்களை மதவெறியர்களாகத்தான் கருதுகிறோம்.
மற்றபடி வினவில் இடும் சமூக அக்கறைக்குரிய விசயங்களைப் பற்றி நீங்கள் இதுவரை பேசவில்லை என்பதால் முதலில் அதை மாற்றுங்கள். அதன்பிறகு அனைவரின் மீதும் சாந்தி, சமாதனம் உண்டாவதை சொல்வதற்கு தகுதி வரும் என்று நினைக்கிறேன். நன்றி
நண்பர் வினவு அவர்களே, மற்ற விஷயங்களில் (சமூக மேம்பாடு பற்றிய, அனச்சரங்கள் பற்றிய விஷயங்கள்) உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லையே.. நீங்கள் கூறுவது போல உழைக்கும் வர்க்கத்தினரின் வியர்வையை மதிக்க இஸ்லாம் கூறி இருக்கிறது.. andai வீட்டாருடன் நல்லுறவு பேணச் சொல்கிறது.. சக மனிதனை சகோதரனாக பாவிக்க சொல்கிறது.. உங்களுடன் கருத்து வேறுபாடு இல்லாத விஷயங்களில் நாம் ஏன் விவாதம் புரிய வேண்டும் தர்க்கம் செய்ய வேண்டும்.. நீங்கள் இஸ்லாத்தின் பால் கொண்டிருக்கும் கருத்து வேறுபாடுகளினால் மட்டுமே நாம் கருத்துகளை பரிமாறி கொள்ள வேண்டி இருக்கிறது.. மேலும் என்னை பொறுத்த மட்டில் அடுத்த மத நம்பிக்கைகளை அவர்களின் கொள்கை கோட்பாடுகளை விம்பர்சனம் செய்ய விருப்பம் இல்லை.. நீங்கள் கூறுவது போல எனக்கு எந்த ஒரு நண்பரிடமிருந்தும் நீங்கள் என்னுடன் அலை பேசியில் பேச விழைந்ததாக செய்தி இல்லை.. அதனை போல நான் இன்னும் இஸ்லாத்தினை கற்று கொண்டு தான் இருக்கிறேன்.. உங்களுடன் விவாதம் புரியும் அளவுக்கு அதில் நான் பாண்டித்தியம் பெற்றிருக்க வில்லை.. எனக்கு தெரிந்த விஷயங்களில் நான் உங்களோடு கருத்து பகிர்கின்றேன் அவ்வளவே.. நான் கூறுவது என்னவெனில் உங்களோடு நேருக்கு நேர் விவாதம் புரிய இஸ்லாத்தினை பற்றி தேர்ந்த அறிவு பெற்ற ஒரு சில மக்கள் தயாராக இருக்கும் பொது என்னிடம் விவாதிப்பதை போல நினைத்து நீங்கள் விவாதிக்கலாமே.. அதன் மூலமாக உங்களை சார்ந்தவரும் எங்களை சார்ந்தவரும் மென்மேலும் விளக்கங்களை பெற்று கொள்ளலாமே.. ஒருவரை தவறென்று சொல்லும் போது அவர் தரப்பு அதை மறுக்கிறது.. நேருக்கு நேரே விவாதிப்போம் யார் தவறென்று புரிந்து விடும் என்று கூறுகிறார்கள்.. இதிலே உங்களுக்கு என்ன தயக்கம் என்பதே என் கேள்வி..
மதவாதிகளுடன் விவாதிப்பதை விட அம்பல படுத்துவதே மேல் என்பது உங்களுடைய கருத்து.. நீங்கள் அம்பல படுத்தலாம் உங்களுக்கு தாராள உரிமை இருக்கிறது.. அனால் உங்களால் அம்பல படுத்தும் ஒருவர் நேருக்கு நேர் இருந்து பேசுவோம் யாருடைய கொள்கை தவறு எவருடைய கொள்கை சரி என்று தீர்மானிப்போம் என்கிறார்.. நீங்கள் அவர்கள் தவறென்று எழுதி கொண்டு இருக்க தான் போவேன் என்கிறீர்கள்..அனால் அவர்களோ நீங்கள் நேரிடையாகவே உங்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுங்கள் நங்கள் எதிர் வாதம் செய்கிறோம் என்பதில் உறுதியாக இருகிறார்கள்.. நீதிமன்றங்களில் கூட காவல் நிலையத்தில் வழக்கு பற்றிய பதிவுகள் குறிப்புக்கள் இருந்தாலும் வாதியும் எதிர் வாதியும் நேருக்கு நேர் விவாதித்து யார் சரி யார் தவறு என்று நிரூபிக்க சந்தர்பம் அளிக்க படுவது நடைமுறை.. அதுதான் நியாயமும் கூட.. அல்லது வாதி தனது பதிவை காவல் நிலையத்தில் பதிவு செய்து விட்டார் . நீங்கள் உங்கள் பதிலை எழுதி கொடுங்கள்.. இவருடைய பதில்களை வைத்து தீர்ப்பு கூற படும் என்று கூறினால் நீங்கள் ஏற்று கொள்வீர்கள?
நேரடியாக பேச நினைப்பதை இங்கேயே பதியவும்
athane?!!! why can you debate over here? this is a written proof for all the users to come..
VINAVU,PERIYARISM and Periyardasan both are a profession for this man ! If ISLAM IS great it doesn’t NEED BRAND AMBASSADOR LIKE this old man who has shuffled his faiths many a time. Am a a broad minded HINDU(ungalukku pudikkattalum !) these type of persons do cause harm and annoyance to BROAD MINDED MUSLIM BRETHERN ! Anyway It is a good exposure of a confused Old man who always want to remain in lime light by hook or CROOK! .This periyarist earlier has reportedly was onTV endorsing lucky stones ! What a great milestone for periyarism,..
PAAVAM IVARAI PONDRA NABARGALIN VARUGAYAL ISLAM AZHUKKADAINDHU POHIRADHU,.. Insha Allah .But VINAVU YOU ARE REALLY DOING A GR8 JOB OF EXPOSING THESE TYPE OF FELLOWS ! ! ! CHEERS !!!!
PAAVAM IVARAI PONDRA NABARGALIN VARUGAYAL ISLAM AZHUKKADAINDHU POHIRADHU.. PUNJAB RAVI
you don’t have the right to worry or comment about it..because you are the people who wanted to maintain the purity of the HINDU DHARMA by not allowing the fellow SC/ST hindus in to the temple,,
Anna, Appadinna convert aanavangalukku edhukkunna reservation venumnu case podranga ? JADHI/MADHAM ellathayum vidunga . Saga manidhanai nesikka pazhagunga. Adhu dhan unmayana Kadavul. paavam ; Ella periyaristungalukkum moonjiyile EEE Aadalai . VINAVU UNGA SEVAI THODARATTUM. PL ALSO WRITE AN ARTICLE ABOUT THESE EVANGALISTS ! CHEERS ! ! !
மற்ற பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த நீங்கள் எங்களுக்கும் தந்தாக வேண்டும் என்று பேராசிரியர் அப்துல்லாவை நிர்பந்திக்கும் அருமை நண்பர் சாகித் அவர்களே.. நீங்களும் இங்கே பல மாதங்களாக வருடங்களாக எழுதி கொண்டிருகிறீர்கள்.. நாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்தால் மட்டும் முடியாது என்று மாறுகிறீர்கள்.. ஆகா உங்களுக்கு உங்களிடத்திலே முரண்பாடு உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..
ரபிக் அவர்களே ! ஏன் நேரடியாக வந்து விவாதிக்க வேண்டும் என்கிறீர்கள் ? இஙகே விவாதிக்கலாமே ? பணம் வந்தபிறகு பண்டமாற்றம் எதற்கு ?. இதயங்களை இணைக்கின்ற இணையம் என்கீறார்களே ? நீங்கள் சென்னையில் இருக்கின்றீர்கள் ? நான் தூத்துக்குடியில் இருக்கின்றேன். நாம் இருவரும் விவாதிப்பது சாத்தியமா ? எனக்கு 4 மணிக்கு விவாதிக்க முடியும். உங்களுக்கு அப்போது வேலை இருக்கும். சரி , அப்படியே விவாதிப்பதாகக் கொள்வோம். ஒரு விடையத்தை விவாத்தித்தால், மற்ற விடையங்களை எப்போது விவாதிது முடிப்போம் ? அதற்கு பதிலாக, வினவினுடைய கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் கொடுங்களேன் ? ஆக உலகம் முழுவதும் இருக்கின்ற மக்கள் – உங்கள் விவாத்ததை தெரிந்து கொள்ளலாமே ? மாறாக, நேரடியான விவாதத்திற்கு வாருங்கள் என்பது ஒரு சாக்குதான். ஏன் செங்கொடியின் சிறகுகளில் உங்கள் விவாத நெருப்புகளை வீசுங்களேன் ?. அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். என்பது பழமொழி. நீங்கள் விவாததிற்கு கூப்பிடும் லட்சணம் இதுதான்.
வீடியோ எடுக்கணும் என்று தோழர் சாகித் கேட்டாரே? எழுத்தில் எப்படி வீடியோ?… செங்கொடியின் சிறகுகளில்… இளிக்கிறது இங்க http://www.onlinepj.com
அய்யா இப்ராஹிம் , நாங்கள் மதவெறியர்களுடன்தான் நேரடியாக விவாதிப்பது வெட்டிவேலை என்று சொல்கிற்றோம், பெரியார்தாசனை நாங்கள் மதவெறியறாய் கருதவில்லை…. இன்னமும்…
மேலும் அவர் பார்ப்னிய இந்துமத்ம் எவ்வளவு கேவலமாது என்று பேசியிருக்கிறார் அல்லவா அதுபோல இசுலாம் எப்படி சிறந்த்து என்று அவர் நிரூபிக்க வேண்டாமா நண்பரே????
இந்து மதத்தில் மறைமுகமாக எத்தனை பெண்ணுகளை வேண்டுமானாலும் வெச்சுக்கலாம் ,இஸ்லாத்தில் ரைட் ராயலாக ஏழு பேரை வெச்சுக்கலாம் அவ்வளவுதான் வித்தியாசம் .
you can go to any place and shout ,but if somebody invites for a discussion you cant,why
அடி வாங்கிடுவீங்கன்னு பயமா !? ஐயோ பாவம் !?
அடி வாங்கிடுவீங்கன்னு பயமா !? ஐயோ பாவம் !?-
PRINCE
பி.ஜே – பெரியார் திராவிட கழக விவாத சி.டி யை பாருங்கள்..விவாதம் எவ்வளவு கண்ணியமாக நடந்தது என்று..
கேலி கிடையது .இழக்காரம் கிடையது..இரட்டுற மொழிதல் கிடையாது..திமிர் பேச்சு கிடையாது..தெனாவெட்டு கிடையாது..
பயப்படாமல் பாருங்கள்..
aiyo, if venavu or mkek is oen minded they wouldnt have deleted some of my omments,ur coward bigots
அய்யா அறிவுடைநம்பி,
செங்கொடியின் சிறகுகள் தளத்தில் நடைபெறும் விவாதகளம் சென்று சற்று உற்றுப் பாருங்கள் – செங்கொடி பதில் தராமல்… கொடி அறைக் கம்பத்தில் பறக்கிறது..இதுதானா நீங்கள் எழுத்து விவாதத்திற்கு கூப்பிட்ட லட்சனம்..
i cant see any difference between islam believers and makkal kalai illakiya kalagam both are bigots.
இஸ்லாத்திலிருந்து வெளியேறினார் பெரியார்தாசன்மதங்கள் அனைத்தும் மண் – காரசார பேட்டி
கட்டுரையை விட உரை டாப்புங்ணாதோழர் சாகித் நல்லா கேள்வி கேட்டிங்க ஆனால் அபாயதுல்லாபதிலுக்கே வர மாட்டிக்கறாரே ஒரு இடத்துல் நான் இன்னும் குரானு படிக்கவே இல்லைங்கறாரு இன்னொரு இடத்துல குரான ஏஏஏத்திகிட்டேங்கறாருமனுசன் கொழம்பி கடக்கறாரு ,
இவையெல்லாம் பிரபலமாவே இருக்கணும் அப்படீங்கற நோ(ய்)க்கத்துல செய்யறதுபெரியாருக்கு அப்பறம் நாந்தான் பெரியார் கொள்கைய பேசறேன்னு சன் டீவியில இரமாகோபாலன் கூட நடந்த விவாத்துல 6,7 வருடங்களுக்கு முன்ன சூளுரைத்தவர்தான் இன்று 1978லயே நான் திராவிட கழகத்துல இருந்து வெளிய வந்துட்டேன்னு ‘பிட்’ட போடுறாரு , அப்டி பட்டவரு அப்பயே எனக்கு நாஸ்திக கொள்கையில நாட்டமில்லனு கருத்த பதிவு செஞ்சிருந்தா அது நியாயம்.இன்னும் கொஞ்ச நாளில் இவரை எல்லோரும் மறந்து விடுவார்கள் பிறகுநன்றாக கவனியுங்கள் சில ஆண்டுகளுக்கு பின் இஸ்லாமிலிருந்து வெளியேறிபிரபலமாவார் , அந்த சூழலுக்கேற்றார் போல் விளக்கம் கொடுப்பார்,அது ஒரு வேளை இப்படியும் இருக்கலாம்.
இஸ்லாத்திலிருந்து வெளியேறினார் பெரியார்தாசன்மதங்கள் அனைத்தும் மண் – காரசார பேட்டி
திராவிடர் கழகத்தில் இருந்தால் தான் நாத்திக கொள்கைகளை பேச வேண்டும் என்றிருகிரத சகோதரர் விடுதலை.. ம.க.இ.க சகோதரர்களும் நாத்திக கொள்கையில் உள்ளவர்கள் தான் என்று நான் நினைத்திருந்தேன்.. ம.க.இ.க சகோதர்கள் விளக்கவும்..
அட உங் கொக்கா மக்கா…. இவங்களோட பேச முடியாதே அண்ணாச்சி விட்டிருங்கப்பா… வீணா பிரசர் தான் கூடும் . அறியாமையால் இவளவு பேர் இருக்கிறார்களே என்று …
1 . சரி எல்லா மதத்தையும் அறிந்து விட்டு வர வேண்டும் என்கிறீர்களே நீங்கள் வேறு மதங்களின் வாசல் படியை கூட மிதித்ததில்லை என்று நினைக்கிறேன் …– அப்துல் கலாமை தவிர ….
2 .எதோ குர் ஆண் தான் பெரிய அறிவியல் புத்தகம் என்று நினைத்தால் எங்கே வாதிடுவது . வாதிடுபவன் முதலில் சில அடிப்படை தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் . ஏற்றுக்கொள்ளும் தன்ம்மை இல்லை ..
3 . அறிவியலை பற்றி கதைப்பதட்க்கு தகுதியற்றவர்கள் கதைப்பது தாங்க முடியவில்லை . இறைவன் ,இறைவன் தான் படைத்தான் என்ற ஒரு எண்ணத்தில் நிற்ப்பவன் அறிவியலை சிந்திப்பதில்லை .
4 . ரொம்ப பிடிச்சது // nogod7says: அன்பான முஸ்லிம் நண்பர்களுக்கு!!!!!!! தயவுசெய்து இப் பிரச்சனையை அல்லாவிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் நடப்பதை பாருங்கள்.அப்படி இல்லைன்னு பதிவேத்த வந்திங்கன்ன நீங்க அல்லவை நம்ப இல்லைன்னு அர்த்தம்///
சரியா சொனீங்க தலைவா முதலில் தன்னை நம்பாமல் எதற்க்கும் அல்லா என்ற இறைவன் பெயரை சொல்பவர்களை ஹி ஹி … இதற்க்கும் அழ பார்ப்பார் எண்டு போக வேண்டியது தானே..
மரியாதைக்குரியவர் :- அப்துல்கலாம் இருக்கும் நாட்டில் இது போன்றவர்கள் இருப்பது கொடுமை .
முதலில் போய் இந்து சமயத்தின் பவுத்த சமயத்தின் வழி காட்டல் படி தன்னை அறிதல் ” அகம் பிரம்மாஸ்மி ” அர்த்தத்தை தேடுங்கோ ஊய் …
இதை விட ஒன்றை எவன் சொல்லீட முடியும் .
அப்துல் கலாம் ஒரு கோமாளி
. ” அகம் பிரம்மாஸ்மி” – நண்பரே ஒரு வார்த்தை சொன்னாலும் சும்மா நச்சுன்னு சொன்னேங்க ம்ம் . . . ” அகம் பிரம்மாஸ்மி” .
மரியாதைக்குரியவர் :- அப்துல்கலாம் இருக்கும் நாட்டில் இது போன்றவர்கள் இருப்பது கொடுமை …சுதர்சனம்
அய்யா சுதர்சனம்,…
பாசிச பா.ஜ.க ஆட்சியிலே பாராளுமன்றத்தில் வீர்சவர்க்கார் படத்தை தெறந்து வச்சாரே.. அவரையா.. ”மரியாதைக்குரிய” என்கிற அடைமொழியோடு கூப்புடுறீங்க..அட்றா சக்கை..அட்றா சக்கை..அட்றா சக்கை….
///அட உங் கொக்கா மக்கா…. இவங்களோட பேச முடியாதே அண்ணாச்சி விட்டிருங்கப்பா… வீணா பிரசர் தான் கூடும் . அறியாமையால் இவளவு பேர் இருக்கிறார்களே என்று /// புரட்சி என்பது மலை நேர பொழுதுபோக்கு அல்ல மிஸ்டர் சுதர்சன் பிரசர் கூடுவதற்கே பயந்த எப்புடி …
புரட்சி என்பது மலை நேர பொழுதுபோக்கு அல்ல மிஸ்டர் சுதர்சன் பிரசர் கூடுவதற்கே பயந்த எப்புடி …
இன்னொரு முக்கியமான விஷயம் ..இதை எல்லாம் கண்டு பிடிச்சவன் .. உங்க மத நம்பிக்கைல இருந்து ரெண்டு அடி முன்னாடி வச்சி யோசிச்சதுனால தான் கண்டு பிடிக்க முடிஞ்சது .. அல்லா காப்பாதுவாறு ,, இயேசு வந்து தூக்கிடுவாறு .. சிவா பெருமான் வந்து நட்டிடுவாறு நு போத்திக்கிட்டு உக்காந்திருந்தா இந்நேரம் ஒன்னும் கிடைச்சிருக்காது ..புரியுதா ?…. உடனே .. உங்க சாமி தான் அந்த அறிவை கொடுதுசுனு கதை விட ஆரம்பிக்காதிங்க சாமிகளா .. அதுக்கு பதில் உங்க சாமி வெள்ளம் மின்னலையே விடாம இருக்கலாம்ல நு நாங்க மறுபடியும் கேள்வி கேப்போம் .. போங்க தம்பி .. பொய் உங்க புள்ள குட்டிகளையாவது .. அறிவியல் படிக்க வைங்க …
பணத்துக்கு விலைபோன, கோடான கோடி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த துரோகி . . . . . .இவனை எல்லாம் . . . . . ஓகே, இப்பவாது நம்புங்கள் மக்களே . . . . . கடவுள் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு மதம் ஜாதி பாகுபாடு இல்லை . நம்பிக்கையே கடவுள் , கடவுளே வாழ்க்கை . நம்பிக்கை இல்லை எனில் வாழ்க்கை இல்லை.
voted
ஒன்றே ஒன்று சொல்லலாம். பெரியார்தாசன் – அப்துல்லாவாக மாறிய பிறகு இப்படி சொன்னார்”ஜமாத்தில் இருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டும். ஜமாத்தில் மொத்தமே மூன்று பேர்கள் என்றால் அதிலும் நான்கு கட்சி. உலகளவில் சதி செய்து முஸ்லிம்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி விட்டார்கள்.
” பெரியார்தாசனாய் இருந்த போது ஒட்டு மொத்த சமுதாயத்தை நினைத்தார். அப்துல்லாவாக மாறிய பிறகு ஜமாத்தை பற்றி மட்டும் நினைக்கிறார். இதை தான் வளர்ச்சியாக, அவர் கருதினால் கருதி விட்டு போகட்டும். ஆனால் ஒன்று, பகுத்தறிவு கேட்கும் எந்த கேள்விக்கும் அவரால் பதில் சொல்ல முடியாது.
i thought u will open for a discusion , no one can change a fundamentlist, and ur…………
u will delete this comment also , i pity u guys, take care,oh pavam marx and his theory it is in wrong peoples hand.
எனது பின்னூட்டம் ரொம்ப நீளமாகப் போய்விட்டது. மன்னிக்கவும். இதனால் இப்பக்கத்தின் நீளம் அதிகமாகிவிட்டால் இங்கிருந்து எடுத்து விடும் முன் அப்பதிவை நண்பர்கள் ஃபாஹ்துக்கும் காலிதுக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைக்குமாறு வினவு தோழர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் வினவு,
உங்களிடம் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என்று கேட்டதற்கு எந்தப் பதிலையும் காணோமே? உங்களிடம் நேர்மை இல்லை என்பதற்கு இது ஒன்று போதும்.
மிண்டும் கூறுகிறேன், உங்களுக்குத் துணிச்சல் இருந்தால் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கும் தொஹிது ஜமாத்துடன் நேருக்கு நேர் மக்கள் முன்னிலையில் விவாதத்திற்கு வாருங்கள். உண்மை எது என்பதை அங்கு தெளிவிப்போம்.
இங்கேயே உண்மையை சொன்னால் கடவுள் கண்ணை குத்திவிடுவாராக்கும் !!??
//கடவுள் இருந்துவிட்டால் நம்பிக்கை கொள்ளதாவன் நரகத்திற்கு போகனுமே” போன்ற சொத்தை வாதங்களை அந்த வீடியோவில் கூறுகிறார்.//
இந்த வாதத்தில் என்ன சொத்தையை நீங்கள் கண்டீர்கள் வினவு?
அதை விளக்கமாக சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமே?
“நம்பிக்கை அடிப்படையில்” தேர்வு செய்தேன்; மொழியினை முழுவதுமாக படிக்க வேண்டியுள்ளது, அம்மொழி எனக்குத் தெரியாது, படிக்கிறேன் என்று கூறுகிறார்.
இதில் என்ன தவறை நீங்கள் கண்டீர்கள் வினவு?
நாகரீகத்தைக் குழி தோண்டி புதைக்கும் வகையில் தனி மனிதன் மீது வரம்பு மீறியுள்ளீர்கள். அதனைப் பெரிய சாகசம் போன்று பதிவு வேறு. வெட்கமாக இல்லை?
தோழர் அப்துல்:
“நாகரீகத்தைக் குழி தோண்டி புதைக்கும் வகையில் தனி மனிதன் மீது வரம்பு மீறியுள்ளீர்கள். அதனைப் பெரிய சாகசம் போன்று பதிவு வேறு. வெட்கமாக இல்லை?”
முதல் வரியிலே வினவு விடை அளிதிரூக்கிறார் கவனியுங்கள்:
பெரியார்தாசன் இசுலாத்திற்கு மதம் மாறியது அவரது சொந்த விடயமென்றாலும், தமிழகம் அறிந்த நாத்திக, பார்ப்பனிய எதிர்ப்பு பிரச்சாரகர் என்பதனால் “ஏன் மாறினீர்கள்” என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. பதில் சொல்வது அவரது கடமை.
தோழர் சாகித் ஒரு அருமையான பணியை செய்திருக்கிறார்.
அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார், இவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் என்று அவ்வப்போது செய்திகள் சுற்றுக்கு வரும் அப்போதெல்லாம் இவர்கள் புளகமடைந்து கொள்வார்கள். எங்கள் மதம் அறிவியல் மதம் என்பதும் அவ்வளவு பெரிய ஆளே மதம் மாறிவிட்டார் நீயென்ன? என்பதும் இவர்களின் வழக்கமான உத்தி. நெருக்கிப்பிடித்துப்பார்த்தால் அறிவியலைப் போலவே பெரியார் தாசனும் பல்லிளித்துவிட்டார். இஸ்லாத்தை புரிந்து அவர் மாறவில்லை என்பது அவர் பேச்சிலேயே வெளிப்படுகிறது. இதில் அவர் முரண்பாடாகவே இருக்கிறார். ஏனென்றால் சவுதியில் ஏன் இஸ்லாத்திற்கு மாறினேன் என்று அவர் பேசிய பேச்சில் கம்யூனிசத்தை விமர்சித்திருந்தார், அதாவது உலகிற்கு கம்யூனிசம் பயன்படாது இஸ்லாம்தான் பயன்படும் எனும் பொருளில். அந்த அளவிற்கு இஸ்லாமிய கொள்கைகளை ஆய்வுசெய்து சிறந்தது என்றுகண்டு மாறியவருக்கு இப்போது அதெல்லாம் எனக்கு தெரியாது உலமாக்களிடம் கேளுங்கள் என்கிறாரென்றால்; சவுதி உரையில் அவர் சொன்னது முழுக்க பொய். அல்லது இன்று சொல்வது பொய். இரண்டில் ஒன்று தான் மெய்யாக இருக்கமுடியும். பெரியார்தாசன் நான் தயாரில்லை என்று கூறிவிட்டார். இங்கு பின்னூட்டமிடுபவர்கள் எது பொய் எது மெய் என்று விளக்குவார்களா?
செங்கொடி
எது அருமையான பணி செங்கொடி தான் பேசுவதை தனக்கு தெரியாமல் ஒலிப்பதிவு செய்து இப்புடி வலைத்தளத்தில் பதிவேற்றி கேவலப்படுத்தப்போகிறார்கள் என்று தெரியாமல் வேள்ளந்தியாக பேசுவதை திறமைய (கிரிமினல் புத்தியேட) ஒலிப்பதிவு செய்தது அருமையான பணி அவருட்ட ஒரு வர்த்த சொன்னிங்காள அய்யா நீங்கள் பேசுவதை பதிவு பன்னி வலைத்தளத்தில் பொட போகிறேம் என்று எழை உழைக்கும் பெண்கள் வீட்டில் மறைவ குளிக்கிறதுக்கு வசதி இல்லாம கொல்லையில் திறந்த வெளியில் குளிப்பதை மறைந்து வீடியோ எடுத்து பாலான வலைத்தளங்களில் இங்க பாரு ஆன்டி அம்மனம குளிக்கிறத அப்புடின்னு தலைப்பு பொடுறவய்ங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் நேர்மையான மார்க்கிஸ்ட்ட இருந்த பெரியார்தாசனை நேருக்குநேர் விவாதம் பன்னி நாம் பேசுவ்தை வீடியோ அல்லது ஆடியோ எடுத்துக்கொள்வம் என்று ஒப்பந்தம் போட்டு அதில் பேசக்கூடிய (இருவருக்கும் தெரிந்து)ஆடியோவை வேளியிட்டுருந்தால் அது சிறந்த பணி RSSகாரன் மாதிரி முதுகுல குத்திட்டு வீரமாம் கொள்கையாம்
இஸ்லாமில், கடவுளுக்கு “அல்லா” என்று பெயர் வர காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
கடவுள் என்பதற்கு அரபிப்பதம் அதுதான். இது கூட தெரியலியா அய்யோ ஐயோ
பாவம் அவர் என்ன செய்வர் அவர்க்கும் பணம் தேவை ….
இங்கு விவாதம் செய்தால் இணைய வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும். நேரடியாக வாருங்கள். உங்கள் வாதங்கள் எங்கள் வாதங்கள் மோதட்டும். யார் வெற்றி பெற்றார் என்பது அதன்பின் மக்களுக்கு தெளிவாக தெரியும். அது க்களாக காலமெல்லாம் இருக்கும். வாறீங்களா? இல்ல ஒழிஞ்சுக்கிறீங்களா? இங்கு நீங்கள் பெரியார்தாசனை கருவாயக்கொண்டு இஸ்லாத்தைத்தான் விமர்சித்திருக்கிறீகள். அதனால் பெரியார்தாசனைத்தாண்டி பொறுப்பை நாங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. பெரியார்தாசன் பற்றி எங்கள் நிலைப்பாடு என்ன என்று எங்கள் இணையத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
எப்ப வாறீங்க?
ஹிந்து மதத்தை விமரிசிப்பதற்கு பெர்யர்தாசன் என்ன வடமொழி படித்து அதில் கரை கண்டு வேதங்களை முழுசாக படித்த பிராக விமர்சனம் செய்தார். தமிழில் படித்து தானே செய்தார். பிறகு ஏன் குரான் படிக்க மட்டும் அரபி படிக்க வேண்டும் என்று சப்பை கட்டு கட்டுகிறார். ஏன் குரான் மற்றும் மற்ற இஸ்லாமிய நூல்கள் தமிழில் இல்லையா…இல்லை தமிழில் இருப்பவற்றை கொண்டு விவாதம் செய்ய முடியாத …ஏன் இந்த சப்பை கட்டு…பௌத்தம் மதம் மாறுவதற்கு முன் அவர் பாலி மொழி கற்றார?
அரபு படிக்க தெரிந்தல் மட்டும் தான் அதில் உள்ள அர்த்தம் மட்டும் கருத்து அறிய முடியும்
அப்படி வாங்க வழிக்கு.. அரபி தெரியலேன்ன இஸ்லாத்த்த புரிஞ்சுக்க முடியாத? என்ன கொடும சார் இது…அப்போ அரபி தெரியாத முஸ்லிம் எல்லாம் இஸ்லாத முழுசும் புரியாதவங்க? எதோ இருக்குன்னு மத்தவங்க(அரபி படிச்சா முஸ்லிம்) சொன்னத கேட்டுகினு முஸ்லிமா மாறிட்டங்க..கடவுளோட கருத்த எந்த மொழி ல சொன்ன என்னங்க…அத என் அரபி படிக்கல ..அதனால தெரியலன்னு சும்மாவா அடிச்சு விடுறீங்க…இது எதோ மார்க்கெட்டிங் மாதிரி தெரியல..?
ஹிந்து மதத்தை விமரிசிப்பதற்கு பெர்யர்தாசன் என்ன வடமொழி படித்து அதில் கரை கண்டு வேதங்களை முழுசாக படித்த பிராக விமர்சனம் செய்தார்.///
ஹிந்து மதத்தை விமரிசிப்பதற்கு கண்டிப்பா வடமொழி தெரிய வேண்டுமா அப்படி என்றால் எல்லாருக்கும் தெரியுமா. அல்லது உக்களுக்கு தான் தெரியுமா. i saw the video in side the temple(he now the north language)
நான் சொன்னதேயே என்கிட்டே சொலதீங்க ரெஹ்மான் ..எந்த ஒரு மதத்தையும் புரிந்து கொள்ள அதன் தாய் மதம் தெரியவேண்டிய அவசியம் இல்லை..அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களே முக்கியம்…
நீங்க சொல்வதை பார்த்தல் christian அக இருக்க hebrew வும், ஹிந்து வாக இருக்க வடமொழியும், முஸ்லிம் அக இருக்க அரபியும் தெரிய வேண்டும் என்பதை போல் உள்ளது…நான் எந்த மதத்தையும் தூக்கி பிடிப்பவன் அல்லன்…நீர் இவ்வளவு பேசுறீங்கலே உங்களுக்கு முதலில் அரபி தெரியுமா?
i now dear. i am in uae.
//அரபு படிக்க தெரிந்தல் மட்டும் தான் அதில் உள்ள அர்த்தம் மட்டும் கருத்து அறிய முடியும்//
அவ்வாறெனில் இஸ்லாம் தான் சரியான மதம் என தேர்ந்தெடுத்தது எப்படி? இன்னும் கொஞ்சம் காலம் அரபி படித்த பின் பிற்பாடு இஸ்லாத்தை ஆய்வு செய்த பின் மதம் மாறியிருக்கலாமே. எதற்காக இஸ்லாத்தை ஆய்வு செய்துதான் மாறினேன் என்று கூறினார். விளக்குவீர்களா?
//அறிவியலின் பரிணாமக் கொள்கை//
பரிணாமக் கொள்கையை அறிவியலில் சேர்த்துட்டாய்ங்களா? எப்ப? சொல்ல்ல்லவேயில்லை!!!???
ஆதாரப்பூர்வமா நிரூபிக்கப்பட்டவை மட்டுமே அறிவியல்னு சொல்லிட்டிருந்தாய்ங்களே? இப்போ கற்பனைக் கதைகளையும் சேர்த்துக்கிறாங்களா? அப்படின்னா சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் எல்லாம் இனிமேல் அறிவியல் பாடப் புத்தகங்களில் பார்க்கலாம் என்று சொல்லுங்கள். மனிதனின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி ‘பறக்கும் மனிதன்’தான் என்பதை டார்வின் சொல்ல மறந்து விட்டாரா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,
இந்த கண்றாவி தளத்தில் எந்த ஒரு பின்னூட்டமும் போடக் கூடாதென்றே முடிவு செய்திருந்தேன். ஏனெனில் தமக்கு எதிரான கருத்து வரும்போது அதை இருட்டடிப்பு செய்வதில் வினவு தளம் தமிழ்ஹிந்து தளத்தின் தம்பி மாதிரி செயல்படும். அவர்கள் இந்துத்துவா கும்பல்கள். இவர்கள் கம்யூனிசக் கும்பல்கள். அவ்வளவு தான் வேறுபாடு.
நேரடி விவாதம் சம்பந்தமாக வினவு தளத்தினர் அடித்த காமெடி தாங்க முடியாமல் தான் இங்கு கருத்து போடவே வந்தேன். /* எங்களைப் பொறுத்தவரை மதவெறியர்களையும், மதவாதிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதையே செய்வோம்.*/ தங்களுடைய சட்டியில் சரக்கு இல்லை என்பதை வினவும் மக்கு இ .க (ம.க.இ.க) வும் எவ்வளவு நாகரிகமாக சொல்கின்றன. இந்த நாகரிகம் நம்ம செங்கொடிக்கு இல்லாமல் போச்சே என்று நினைக்கையில் வருத்தமாகத்தான் இருக்கின்றது.
ரபீக் என்ற சகோதரருடன் வினவு விவாதிக்க தயாராம். ஆனால் பிஜே அவர்களுடன் விவாதிக்க தயார் இல்லையாம். சத்தியம் கையில் இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்கலாம் என்று யாராச்சும் வினவுக்கு எடுத்து சொல்லுங்கப்பா. நம்ம கேனக்குறி மற்றும் இதர ஜால்ராக்கள் வினவுக்கு எடுத்து சொல்லலாம். என்ன பண்ணுவது பாவம் வினவு. பிஜே வுடன் விவாதித்தால் கம்யூனிச டவுசர் கிழிஞ்சு போய்விடுமே என்ற பயவுணர்ச்சி தான் வினவையும் மக்கு இ க வையும் விவாதத்தில் இருந்து விலகி செல்ல வைக்கின்றது. பாவம் செங்கொடி நேரடி விவாதம் நடக்கும் போது தன்னுடைய கம்யூனிச டவுசர் கிழியாமல் எப்படி பாதுகாக்க போகின்றாரோ தெரியவில்லை. இல்லை ஒரு வேளை வினவை பின்பற்றி அவரும் நேரடி விவாதத்திற்கு வர மறுத்து விடுவாரோ?
வலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,//
//வலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
//
என்னய்யா இதெல்லாம்? எதுனா திட்ரிங்களா…
//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,//
அப்படின்னா தை மாசம் உச்சி வெய்யில் மண்டைய போலக்குதுன்ன்னு சொல்றாரு…
மறைச்சு திட்டுரதுக்கு நாங்க என்ன பாப்பயங்கள இராண்டு சகோதரர்களும் எங்களுக்குள்ள வாழ்த்து சொல்லிகிறம்ப இந்த சுகந்திரம் கூட இல்லைய வர வர உங்க சர்வதிகாரம் ஒவரப்பொச்சு
என்ன சாஜஹான் .. எதுக்கு இந்த தளத்தில் பின்னூட்டம் இடக்கூடாது என்று நினைத்து இருந்தீர்கள் ?.. டவுசரை கிழித்து சுண்ணாம்பு தடவி விடுவார்கள் என்றா ?..சரி தம்பி … உனக்கு வினவு நேரடி விவாதத்துக்கு வரணும் வரணும் நு சொல்றியே … இங்க இருக்குற விவாதத்துக்கு முதலில் பதில் சொல்லு .. உங்க அல்லா சாமி நீங்க சொன்ன மாதிரியே மக்களை மண்ணுல இருந்து உருவாக்கி .. உயிர் கொடுத்தாருன்னு வச்சிக்கிடுவோம் .. அரேபியா ல மட்டும் என்பா உயிரை உருவாகினாறு?..
அமெரிக்காவுல , இந்தியாவுல லாம் .. இஸ்லாமியர்கள் பூர்விகம் என் இல்லாம போய்டுச்சு ?.. உங்க சாமிக்கு பவர் .. அரேபியால மட்டும் தான் இருக்கா ?.. ஒட்டகத்தை பார்த்தால் தான் படிக்கிறதுக்கு மூடு வருமோ ..
இல்லை இந்தியாவுல .. இந்து சாமி யோட சண்ட போட்டு தோற்றுப் போய் புறமுதுகு காட்டி ஓடினாரா ?.. இல்லை அமெரிக்கால ஏசு சாமிகிட்ட காலுல விழுந்து உயிர் பிச்சை வாங்கிட்டு வந்தாரா ?..
அங்கெல்லாம் உங்க சாமி கொஞ்சம் தன்னோட கெத்த காமிச்சு மனுசன (இஸ்லாமியனை ) படசிருக்க வேண்டியது தான ?..
இந்த சந்தேகம் எனக்கு எல்லா மத்தது சாமி மேலயும் இருக்கு .. ஒன்னு நீ பதில் சொல்லு .. இல்லை .. வேற மதத்துக்கார மச்சான்களையும் பதில் சொல்ல சொல்லு … அதுசரி .. அப்புறம் யாரு அந்த பீஜே … கூப்டு .. இந்த கேள்விக்கு சுத்தி வளைக்காம நேரடியா பதில் சொல்ல சொல்லு .. முடியலைனா … நேரடி விவாதம் நு கூவாம ஓரமா நில்லு …
அது எப்புடி அரேபியாவுல படச்சருன்னு புது கத உடுங்றிங்க
சரி .. எங்க படைச்சாரு நு நீங்களே சொல்லுங்க பாஸ் .. ஆனா கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே ?..
இங்கு வருகிற ஒரு சில முசுலீம்களையும் நீ மதவாதியாக மாத்திருவ போல ஏ உனர்ச்சிவசப்படுற
அப்போ முஸ்லீம்கள் மதவாதி இல்லையா பாஸ் ?..
சரி பாஸ் .. என் கேள்விக்கு கொஞ்சம் பதில் மட்டும் சொல்லுங்க பிளீஸ் …
கொஞ்சமா கும்பிட்டாலும் ,அதிகமா கும்பிட்டாலும் மதவாதி மதவாதிதான் ….
ஷாஜஹான் அண்ணே வணக்கம், சவுக்கியமா… பாத்து ரொம்ம்ம்ம்ப நாளாச்சே… பீ.ஜே இப்ப மதவெறிய பிரச்சாரம் செய்வத விட்டுட்டு டவுசர் கிழிக்குற வேலைக்கு போயிட்டாருன்னு நீங்க சொல்றத கேக்க வருத்தமாத்தான் இருக்கு.. என்ன செய்ய வெறிபுடிச்சா கடசியா அடுத்த லெவலுக்கு போயிதானே ஆகணும்… எதுக்கும் நீங்க அவர பாக்க போகும் போது ரெண்டுக்கு மூணு ஜட்டியா போட்டு போங்க.. சூதானமா போங்கன்னே…வேறென்ன சொல்ல…???
அப்துல்லா ? உங்கள் எந்த கேள்விக்கு செங்கொடி பதிலளிக்கவில்லை ? பட்டியலிடுங்கள். நேரடியாக விவாதத்திற்கு வாருங்கள் போன்ற வெட்டி கேள்விகளுக்கு செங்கொடி பதிலளிப்பதில்லை
நேரடி விவாதம் என்றால் தலை தெறிக்க ஓடும் ம.க.இ.க வெறியர்களுக்கு சில விளக்கங்களுக்காக இந்த லிங்க்ஸ்.
லிங்க் 1 :
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/368/
லிங்க் 2 :
http://onlinepj.com/books/arthamulla_kelvikal/
( 11 மற்றும் 12 வது தலைப்பில் படிக்கவும்)
லிங்க் 3 :
http://onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/nathika_vivathaththin_pinnani/
ஷாஜூ, மதவெறி பிடித்த மூதேவிகளிடம் விவாதிக்க மாட்டோம் என்று வினவு சொல்லிவிட்ட விளக்க லிங்க் https://www.vinavu.com/2010/04/19/periyardasan-islam/#comment-21002
அப்புறம் நெத்தியிடியை கேட்டதாக சொல்லவும், உங்களவுக்கு உம்மனாமூஞ்சியில் அவரு, நல்ல சென்ஸ் ஆஃப் ஹியூமர் உண்டு அவருக்கு
சாஜஹான் … வணக்கம் … முதல் லிங்க் கு பதில் இதோ …
மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை … உண்மை தான் ,,, மனிதன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பொழுது இருக்கும் குரங்கை ஓத முகமாக தான் இருந்திருக்கிறான் .. அது அனைவராலும் ஆராய்சியாலர்களாலும் நிரூபிக்க பட்ட ஒன்று ,,
அவ்வாறு குரங்கை ஓத இனம் மரத்தில் இருந்து தரையில் உணவு திங்க ஆரம்பித்த பொது .. அதற்கு இருந்த வாலின் உபயோகம் இல்லாமல் போனது .. அறிவியலால் நிரூபிக்க பட்ட உண்மை என்ன வெனில் .. எந்த ஒரு உறுப்பும் செயல் அற்று போய் இருக்கும் பட்சத்தில் , அதாவது அதை உபயோகப்படுத்தாமல் வைக்கும் பட்சத்தில் அந்த உறுப்பு தன தன்மையையோ அல்லது .. அந்த உருபே வோ காலப்போக்கில் மறைந்து விடும் .. இதற்கு சரியான் உதாரணம் .. மனிதனுக்கு உள்ள குடல் வால் . ஆணின் மார்பகம் .. ஆணின் மார்பகத்தில் பால் சுரப்பிகள் வேலை செய்யாமல் போனதுக்கு காரணம் அதை அவன் உபயோகப் படுத்தாததால் தான் …
உங்களுக்கு தெரிய வில்லை என்றால் தெரிய வில்லை என்று சொல்லி விட்டு போகணும் .. இப்படி தானே தன தலையில் சாணியை அள்ளி வூற்றிக்கொல்லக் கூடாது ..
நான் கூட பீஜே நா பெரிய புரட்டுவாதினு நினச்சேன் .. இப்போதான் தெரியுது .. சிந்தனை குறைந்த வாதி நு .. நல்லா மூளைக்கு சத்துள்ள ஆகாரம வாங்கி கொடுங்க ..
அப்புறம் அந்த லிங்க் ல .. உங்க அல்லா எப்படி .. களிமன்ன சுட்டு செஞ்சார்னு சொல்லாம போய்ட்டாரோ பாஸ் …
லிங்க் ௨ ல ஒன்னும் பெருசா சொன்ன மாதிரி தெரியல .. எந்த கருத்தை படிக்கணும்னு சொல்லுங்க பாஸ் … தழிப்பை சொல்லுங்க .. ரேஸ் ல குதிரைக்கு சொல்ற மாதிரி நம்பரை மட்டும் சொல்லாதிங்க ?..
மிகப் பெரிய அறிவாளிகளான (சிரிப்பு வருவதை அடக்க முடியவில்லை) மக்கு இ க காரர்கள் கவனிக்க. நேரடி விவாதத்திற்கு ஏன்யா வர மாட்டேங்குரீங்கன்னு கேட்டால் நாங்க மதவெறியர்களிடம் பேச மாட்டோம் என்று ரொம்ப அறிவாளித்தனமா ( கேனத்தனமா னும் வச்சுக்கலாம்) வினவு பதில் சொல்லுது. ஆனால் ரபீக் என்ற முஸ்லிம் சகோதரருடன் விவாதிக்க வினவு தயாராம். பிஜே வுக்கும் ரபீக்குக்கும் என்னய்யா வித்தியாசம்? ரெண்டு பெரும் அதிக மார்க்க பற்றுள்ள முஸ்லிம் தானே. பெரியார்தாசனை பேட்டி எடுக்க கிளம்பிய நம்ம சாகித் பாய் அப்படியே தன்னுடைய குரங்கு படைகளை[(டார்வின் தியரி படி மனிதக் குரங்குகள்) சத்தியமா மக்கு இ க காரங்களை சொல்லலைங்கோ) நேரடி விவாதத்திற்கும் அழைத்து சென்றால் நல்லது. இம்பூட்டு அறிவா இருக்குற சாகித் மற்றும் மக்கு இ க காரங்க நேரடி விவாதத்தினில் கலந்து கொண்டு பிஜே போன்ற மதவெறியர்களை வீழ்த்தி விடலாமே. அது சரி சட்டில இருந்தா தானே ஆப்பைல வரும் னு சும்மாவா சொன்னாங்க. நாங்கலாம் பக்கம் பக்கமா வீர வசனம் மட்டுமே எழுதுவோம். நேரடிக் களம் என்றால் தலை தெறிக்க ஓடி விடுவோம் என்று சொல்லாமல் சொல்லிருக்கும் வினவு மக்கு இ க கும்பல்களின் அறிவுத்திறன் புல்லரிக்க வைக்கின்றது.
அய்யோ பாவம் இந்த கொடுமைய கேட்க்க யாரும் இல்லையா ?
வாய கேளரத
@@பிஜே வுக்கும் ரபீக்குக்கும் என்னய்யா வித்தியாசம்? @@
ரபீக் நேர்மையா உழைச்சு வாழ்க்கை நடத்துறார். இசுலாமிய மதத்தை அவர் வாழ்வை வழிநடத்தும் ஒரு வழிமுறையாக பின்பற்றிவருகிறார்..
ரபீக் போல கோடிகணக்கான முசுலீம்கள் உள்ளனர், அவர்கள் நேர்மையாக உழைத்து பிழைக்கின்றனர் ஓசியில் காலனா கிடைத்தாலும் சீண்ட மாட்டார்கள்… ஆனால் மதவெறி பிரச்சாரகர்கள் நிலையோ வேறு மதத்தை முதலீடாக போட்டு வியாபாரம் செய்யும் தந்திரக்காரர்கள் அவர்கள் எல்லா மதத்திலும் விரவியிருக்கிறார்கள் … மிகச்சிறுபான்மையினராக இவர்கள் இருந்தாலும் வலுவானவர்கள், பெரும்பான்மை மக்களிடமிருந்து இவர்களையும் இவர்கள் அமைப்புகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும்
நாங்கள் கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள் அல்ல, கடவுள் எங்கள் முதன்மையான எதிரி கிடையாது.. எல்லா விதமான சுரண்டல் அமைப்புகள்தாம் எங்கள் எதிரி .. அந்த சுரண்டல் அமைப்புகளை வலுப்படுத்தும், அதற்கு சேவை செய்யும் ஆட்களும் எதிரியே.. மதமும் ஒரு சுரண்டல் அமைப்புத்தான்.. இருந்தாலும் இப்போது இந்தியாவில்
பார்பனிய மதத்தை போல இசுலாமிய மதம் ஒரு பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்து சமூகம் தழுவிய ஒரு சுரண்டல் அமைப்பாக மாற வாய்ப்பில்லாத காரணத்தால் ஆர்.எஸ்.எஸூக்கு நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை தவ்ஹீது ஜமாதுக்கோ அல் உம்மாவுக்கோ கொடுப்பது இயலாது, அப்படி ஒரு சூழல் வரும்போது அதற்கேற்ற ஆயுதங்கள் தெரிவு செய்யப்படும் ..
இப்போதைக்கு இவ்ளவுதான் நைநா, பீஜேகிட்ட இதை தாராளமாய் கம்யூனிகேட் செய்யலாம்…he can relax for some time….
சகோதரர் கேள்விகுறி,
நான் நேர்மையாக உழைத்து உண்ணும் வர்க்கத்தை சார்ந்தவன் என்று நீங்கள் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி.. அவ்வாறு என்னை வாழ வைத்து கொண்டிருக்கும் ஏக இறைவனுக்கே எல்லா புகழும்… அனால் இந்த நேர்மையை, உழைத்து உண்ணும் மாண்பை எனக்கு கற்று கொடுத்தது நீங்களோ இல்லை கம்யூனிசமோ இல்லை.. மாறாக இஸ்லாத்தின் மூலமாகவே நான் அதனை கற்று கொண்டேன்.. இஸ்லாம் என்னை நேர்மையாக வாழ சொல்கிறது.. அடுத்தவரை மதிக்கும் பண்பினை சொல்லி தருகிறது.. ஆனால் நீங்களும் அவ்வாறே இருகிறீர்கள் உங்களை சார்ந்தவரும் அவ்வாறே இருகிறார்கள் எனும் போது மிக்க மகிழ்ச்சி.. ஆனால் நீங்கள் பெரியவர் பீஜே அவர்களை மதத்தின் பெயரால் மக்களிடம் சுரண்டி வாழ்கை நடத்துபவர் என்று கூறி இருகிறீர்கள்.. இதற்கு தகுந்த ஆதாரம் உங்களிடம் உண்டா? அடுத்தவர் மீது அவதூறு பழி கூறுவதற்கு தான் உங்களின் கம்யூனிசம் கற்று கொடுதிருகிரத? அவருடன் ஒப்பிடும்போது நான் மிகவும் சிறியவன் வயதிலும் அறிவிலும். எவர் ஒருவர் தனது மதத்தினை பிரசாரம் செய்தலும் அவர் அம்மததினை வைத்து சுரண்டல் வாழ்க்கை வாழ்பவர் என்று அனுமானிக்கும் உங்களின் விசாலமான என்ன ஓட்டத்தை நினைக்கையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.. மதத்தின் பெயரால் ஒரு சில ஈன பிறவிகள் செய்யும் செயல்களை பார்த்து எல்லோரையும் அதே அளவுகோலை கொண்டு மதிப்பிடுவது என்பது தான் உங்களின் நிலையா? மாற்றி கொள்ளுங்கள் சகோதரரே…
இன்னும் சொல்கிறேன்.. நீங்களும் நானும் இங்கு எழுதி கொண்டிருபதணல் எந்த ஒரு பயனும் விழைய போவதில்லை.. நீங்கள் கூறி இருகிறீர்கள் உங்கள் பீஜே விடம் கூட கேட்டு எனக்கு சொல்லுங்கள் என்று.. அதை தான் நாங்களும் கூறுகிறோம் அவரும் தயாராகவே இருக்கிறார்.. நீங்களே நேரிடையாக அவரிடம் கேட்டு விட்டால் எல்லாவற்றிற்கும் விளக்கம் கிடைத்து விடும்.. எவருடைய கொள்கை சரி என்று.. என்னிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வியை ஏன் அவரிடத்திலே அவர் போன்ற இஸ்லாத்தின் அறிவு மேலோங்க பெற்ற நபர்களிடம் நேரிடையாக கேட்க கூடாது? இதை தானே எல்லோரும் விரும்புகின்றனர்.. நீங்கள் என்னிடத்தில் இது போன்ற கேள்விகளை கேட்பதினால், விவாதிப்பதால் எவ்வித பயனும் இல்லை.. காரணம் நான் வயதிலும் இஸ்லாத்தினை பற்றிய அறிவிலும் மிக மிக சாதரணமானவன்.. குறைந்தவன்.. நீங்கள் சரி என்று சொல்லுங்கள் அவரிடத்திலே நீங்கள் நேரிடையாக பேச, விவாதிக்க விரும்புகிறீர்கள் எவ்விடத்திலே விவாதிக்கலாம் என்று அறிய பெற்று தருகிறேன்.. நண்பர் வினவிற்கும் இது பொருந்தும்… கரணம் அவர் என்னிடம் அலை பேசியில் விவாதிக்க விரும்பியவர் என்று கூறி இருக்கிறார்..
நீங்களும் மிக்க அறிவு உடைய பெற்றவர்கள்.. பெரியவர் பீஜே வும் இஸ்லாத்தினை பற்றி மிக்க அறிவு உடையவர்..
அறிவு மேலோங்க பெற்ற சான்றோரிடம் விவாதிப்பது கலந்துரையாடுவது என்பது மட்டுமே தெளிவு கிடைபதர்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.. உங்களின் பதிலை எதிர்நோக்கி உள்ளேன்
அண்ணாத்தே..
சுரண்டலுக்கு ஆப்படிக்கும் விதமாக – புரோகிதத்தை தடுத்த ஒரே மதம் இஸ்லாம் என்பது தங்களுக்கு தெரியாதா..
சுரண்டல் அமைப்பை எதிர்த்து போராடா ஆயுதங்கள் தயார் செய்யப்படும் என்று ‘டயலாக்” விடுமுன் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..எவ்வளவோ நவீன ஆயுதங்களோடு ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து – ரஷ்ய ஆதரவு அரசை நிறுவ பல ஆண்டுகளாக தாங்கள் எடுத்த முயற்சி தவிடுபொடியானதே.. ஏதேச்சதிகார அமெரிக்காவிற்கு ’வியட்னாமில்’ ஆப்பு வைக்கப்பட்ட மாதிரி ஆப்கனில் ரஷ்யாவிற்கு ஆப்பு வைக்கப்பட்டதை இவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டீர்களே.?.
யோசித்து டயலாக் விடுங்க அண்ணாத்தே..
அது எப்படி சாஜகான், வெக்கமே இல்லாம மறுபடியும் நேரடி விவாதத்துக்கு கூபுடுரிங்க ?.. கொஞ்சம் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் கூபிடுங்க .. உங்களுக்கு தெரியலை நீங்க வெறும் குரான மட்டும் படிச்சா முட்ட(டாள்) கோஸ் நா , உங்க பீஜே விடம் கூட கேட்டு எனக்கு பதில் சொல்லுங்க .. இங்கயே .. பதில் சொல்ல வாக்கு இல்லையாம் .. இவருக்கு ம.க.இ.க ல இருந்து பாத்து பேரு நேரடி விவாதத்துக்கு வரணுமாம் .. சந்திரமுகி படத்துல வர காமெடி தான் ஞாபகம் வருது …. ( ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தானாம் .. அவனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் …அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம் … தூ …) இத நாங்க சொல்லலைங்க … ரசினிகாந்து சொன்னாருங்க ..
அல்லாவின் சேவகரே,
“நீங்கள் சிந்திக்க மாடிர்களா உங்கள் இதயங்கள் என்ன பூட்ட போடபட்டுள்ளது என்று.அதனாலே முதலில் இஸ்லாத்தை பற்றி தெரிந்து பிறகு பேச கேட்டுகொள்கிறேன்.”
சிந்திக்கச் சொன்ன அல்லா ஏன் இதயத்திற்கு பூட்டு போட்டுள்ளதா,என வினவுகிறார் என்று நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா!
வாங்க தம்பி கேனைக்குறி [கேனைக்குறி வினவின் ஜால்ராக்கள் சங்கத்தின் தலைவர் (அல்லது) வினவே இவராக இருக்கலாம். அவதாரங்களை யாரறிவார்? ] இறைவன் கருணையினால் நலம். நீங்க எப்படி இருக்குறீங்க? அப்புறம் உங்க தோழி லீனா நலமா? ஆசான் காரல் மார்க்ஸ் நலமா? பிஜேவாச்சும் மதவெறி பிரச்சாரம் செய்யுறார். உங்க மக்கு இ க வினவு லாம் லீனாவுக்கு சமமா சோக்கான குறி கவிதைகள் எழுதுறதா கேள்விப்பட்டேனே. உண்மையா கேனக்குறி? ஆசான்கள் மேல லீனா வீசிய ரோமங்களை (எவ்வளவு கண்ணியமா வார்த்தை யூஸ் பண்ணிருக்கேன் பார்த்தியா தம்பி கேனக்குறி) எல்லாம் தண்ணீர் விட்டு கழுவியாச்சா? ஆக மொத்தத்தில் விவாதத்திற்கு வராமல் கம்யூனிச டவுசர் கிழியாமல் வினவு அன்ட் மக்கு இ க கிரேட் எஸ்கேப்பு. செங்கொடிக்கும் கொஞ்சம் சொலிக் கொடுப்பா கேனக்குறி எப்படி தப்பிக்கிறதுன்னு. இல்லேன்னா செங்கொடி பாட்டுக்கு நேரடி விவாதத்தில் வந்து கம்யூனிச டவுசரை கிழிச்சுக்க போகுது.
“செங்கொடிக்கும் கொஞ்சம் சொலிக் கொடுப்பா கேனக்குறி எப்படி தப்பிக்கிறதுன்னு.”
நீங்க சொல்றத பாத்தா செங்கொடி விவாதத்திற்கு வந்துடப்போறாரோன்னு பயப்படரமாதிரியில்ல இருக்கு!
மதவெறியர்களை விவாதித்து ஒழிக்க முடியாது, மக்கள் ஆதரவுடன் ஓட ஓட விரட்டி காட்டுக்குள் விரட்டுவதுதான் சரி என்பதை மேலே கண்ட பாசிச ஸாஜகான் சர்மா நிரூபித்திருக்கிறார். மதவெறியர் ஷாஜகான் சர்மா ஒழுங்கா மரியாதையா பேசுவதா இருந்தா வா, இல்லேனா போ, கேனக்குறி என்று அடாத முறையில் பேசுவதாக இருந்தால் இங்கு உனக்கு இடமில்லை ஓடிவிடு. சகாதரர் ஹதர் அலி அவர்கள் இது பற்றி விளக்கம் அளிக்குமாறு கோருகிறோம். தோழர் கேள்விக்குறியை மட்டமாக பேசும் ஷாஜகான் சர்மாவை ஹைதர் அலி நியாயமாக குறுக்கு விசாரணை செய்யவேண்டும். அப்புறம் யார் மதவெறியர் என்பதையும் ஹைதர் புரிந்திருப்பார் என்று நம்புகிறோம்.
வினவு நீங்க ஏன் இப்படி கோவப்படறீங்க… நானே இத்தன நாளா ஷாஜூவ காணோமின்னு வருத்ததுல துரும்பா இளைச்சு வளையல் ஒட்டியானமா ஆகுற அளவுக்கு போயிட்டேன்னா பாருங்களேன்…. இன்னிக்கு நேத்தா ஷாஜு என்ன திட்டறாரு… அவரு என்னைய திட்றதும், நான் அவர கலாய்கறதும் எப்போதும் நடக்கறதுதானே… இதுல போய் ஹைதர கோக்குறீங்களே விடுங்க தோழர்… சீரிசான விவாதத்துல ஒரு காமெடி வேணாமா.. என்ஜாய் பண்ணுங்க
நன்பர் வினவுக்கு உங்கள் விவாதம் நடக்கும் போது கணினி முன்பு நான் இல்லை பகுதி நேர வேலை(நூலக வேலை) பார்க்க பொய்விட்டேன் 47வது பின்னூட்டம் 49வது பின்னுட்டத்தை துரதிஷ்டவசமாக நான் முன்பே படிக்கவில்லை சகோதரர்கள் நேர்மையாகத்தான் விவாதிப்பர்கள் என்ற அசட்டு நம்பிக்கையும் ஒரு காரணம் சகோதரர் ரபீக் அவர்களுக்கும் ஷாஜஹானுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு இப்போழுது நான்கு புரிகிறது வினவு தளத்தின் ஊடாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் நன்றி வினவு
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு,
பொதுவாகவே நான் கண்ணியமான வார்த்தைகளையே
பயன்படுத்துவேன். யார் கண்ணியம் தவறுகிறார்களோ
அவர்களை அவர்கள் என்ன வார்த்தை கொண்டு சொல்லுகிரார்க்ளூ அந்த வார்த்தையை கொண்டு திருப்பி சொல்லுவதில் தவறில்லை. வரம்பு மீறியது அவர்கள் தான். எனவே நானும் வரம்பு மீறுகிறேன். இங்கே நல்லவர்கள் வேடம் தரிக்கும் வினவு அண்ட் கேள்விக்குறிகளின் இலட்சணத்தை இந்த லிங்கில் சென்று பாருங்களேன். தெரியும். பின்னர் நீங்கள் முடிவு செய்யுங்கள் யார் இந்த விளையாட்டை தொடங்கி வைத்தது என்று .
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_27.html
அல்லது வினவு ஒத்து வராத மறுமொழிகளில் சென்றும்
பார்க்கலாம்.
அய்யா ஷாஜஹான் நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஆணால் பாதி உண்மை, அதாவது குறிப்பிட்ட பதிவில் உங்களையும் உங்கள் பாஸ்ஐயும் கேவலப்படுத்தி நான் மறுமொழி எழுதினேன். அதுவும் கூட நீங்கள் ம.க.இ.க வை சந்தர்ப்பவாதிகள் என்று திட்டி எழுதிய மறுமொழிக்கு பதிலாக… அந்த பின்னூட்டத்தை வினவு குப்பைத்தொட்டியில்தானே போட்டிருக்கிறது. அதிலிருந்தே வினவுக்கு என்னுடைய கருத்தில் / மொழியில் உடன்பாடில்லை என்று தானே பொருள். இதில் என்ன ஜனநாயக குறைவு கண்டீர். தனது தோழர்களே ஆனாலும் தவறை வினவு கண்டிக்காமல் இல்லையே!
இப்போது மீதி உண்மைக்கு வருவோம்… எனக்கு தெரிந்து வினவு தளத்தில் நீங்கள் எழுதிய முதல் மறுமொழி இதுதான்
https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/#comment-12349
இதில் சம்பந்தமே இல்லாமல் என்னை எதற்காக திட்டி எழுதினீர்கள்
ஆக பிரச்சனையை துவக்கி வைத்த புண்ணியவான் நீங்கள்தான் ஐயா
மேலும் இந்த பதிவிலும் துவக்கத்திலேயே என்னை திட்டித்தான் நீங்கள் எழுதுகிறீர்கள், இதிலிருந்தே நீங்கள் என்மீது வன்மம் கொண்டிருப்பது தெளிவு. ஆக இது போன்ற அரை உண்மைகளை நீங்கள் பேசி நியாயப்படுத்துவதனால் உங்கள் தரப்பு மேலும் வீஈஈஈஈஈக்காகிப்போகும்.
உசார் உசார்
ஷாஜூ லீனா அவ யோனி மயிற புடுங்கி உன் ஜிஹாதி மேலயும்தான் போட்டா நீங்கதான் அங்க ஒன்னும் கேக்காம சொரண கெட்டுப்போய் கிடக்கீங்க….இன்னா ஜொள்ளா???
./// உண்மையா கேனக்குறி? ஆசான்கள் மேல லீனா வீசிய ரோமங்களை (எவ்வளவு கண்ணியமா வார்த்தை யூஸ் பண்ணிருக்கேன் பார்த்தியா தம்பி கேனக்குறி) எல்லாம் தண்ணீர் விட்டு கழுவியாச்சா?/// என்ன ஷாஜஹான் இவ்வளவு அசிங்கம இஸ்லாம் இததான் நமக்கு கத்துகுடுத்துருக்க(எவன் கையாலும் நாவலும் அன்டை வீட்டுக்கரான் பாதுகாப்பு பெறவில்லையே அவன் உண்மை முஸ்லிம் இல்லை என்று முஹம்மது நபி (ஸல்) சொல்லவில்லைய அழகிய முறையில் விவாதம் செய்யும் இலச்சனம் இதுவ
டார்வினின்
பரிணாமக் கொள்கைகள் புரியாதவர்களுக்கு
http://richarddawkins.net/thegreatestshowonearth
அன்பு வினவு சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//எங்களைப் பொறுத்தவரை மதவெறியர்களையும், மதவாதிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதையே செய்வோம். மாறாக சரிக்கு சமமாக அவர்களுடன் விவாதம் செய்ய வேண்டிய தேவையில்லை//
என்ன ஆயிற்று உங்களுக்கு. என் சகோதரர்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்தால் என்ன அழகாக (??) விடை அளித்திருக்கிறீர்கள். இதை எழுதும் போது தாங்கள் சிறிது கூட சிந்திக்கவில்லையா?. அவ்வப்போது நீங்கள் அடிக்கும் இதுபோன்ற உச்சக்கட்ட காமெடிகள் தான் உங்கள் மீது தவறான எண்ணங்களை உண்டாக்கிவிடுகிறது…
உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹ்மத் அ http://ethirkkural.blogspot.com
நித்தியானந்தா, பெரியார்தாசன் ரெண்டுபேருக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை, இருவரும் மக்களை ஏமாற்றிய கயவர்கள், வெவேறு வழிகளில். அவன் சாமி இருக்குன்னு ஏமாத்தினான் இவன் இல்லைன்னு ஏமாத்தினான்…
அன்பு பாரதி அவர்களுக்கு,
தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…
//டார்வினின்பரிணாமக் கொள்கைகள் புரியாதவர்களுக்குhttp://richarddawkins.net/thegreatestshowonearth//
டார்வினின் பரிணாமக் கொள்கைகள் புரிந்தவர்களுக்கு…
http://ethirkkural.blogspot.com
உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹ்மத் அ
mrஷாஹித் இஸ்லாத்தை தெரிய வேண்டும் யன்றால்ஆலிம்களிடம் கேளுங்கள் pj விவாதத்திற்கு கூப்பிட்டால் ஓடிஒளியும் உங்கள்கூட்டம் பெரியார் தாசனைமட்டும் நேரடி விவாதத்திற்கு அழைப்பது ஏன் ஒரு கொள்கையை ஏற்றுகொன்றால்பணத்திற்காக யன்று அவரைமனவேதனைபடுத்துவது அவரின் சுய மரியாதையில் விளையடுவதுதனே
உங்கள் பீஜே வை .. வளவள கொளகொள வென பேசாமல் நச்சுன்னு பதில் சொல்ல சொல்லுங்க பாப்போம் ?..அந்த மத வெறியர் இணையத்தில் போட்டிருக்கும் பதிலை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது ,..மதம் உச்சி மண்டைக்கு ஏறி .. டார்வின் கொள்கையை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் மூளையை குழம்ப செய்து விட்டதா ?.. அல்லது .. டார்வின் கொள்கை புரிந்தும் ,… மதத்தினால் வரும் ஆதாயங்களை கணக்கில் கொண்டு புரிந்து தவறான பிரச்சாரம் செய்கிரார என்று தெரிய வில்லை …
நீங்கள் வேணும்னா உங்க பீஜே வை விவாதிக்க சொல்லுங்க இங்கே …
நன்றி ஆஷிக் அஹ்மத் அண்ணன் அவர்களுக்கு..
“ஷாஜஹான் says: பெரியார்தாசனை பேட்டி எடுக்க கிளம்பிய நம்ம சாகித் பாய் அப்படியே தன்னுடைய குரங்கு படைகளை[(டார்வின் தியரி படி மனிதக் குரங்குகள்)”
இந்த சகோதரர் பரிணாமக் கொள்கை பற்றி பிழையான புரிதலோடு இருக்கிறார்..மேலும் பல சகோதரர்கள் அவ்வாறான பிழையான புரிதல்களோடு இரிக்கின்றனர்..அதற்காகவே அவ்விணைப்பைக் கொடுத்தேன்..
மற்றும் அறிவியல், குரான் பைபிள் சொல்லும் கடவுளை அதாவது எல்லம் வல்ல மனிதனை உரினங்களை படைத்த????(விலா எலும்பு மற்றும் களிமண் மூலம் படைக்கப்படவற்றை முற்றும் முழுதாக நிராகரிக்கிரது பரிணாமக் கொள்கை) நிராகரிகிறது..
அறிவியல் உண்மைகளைக் ஆதாரங்களுடன் கண்டறியும் மானுடத்தின் வளர்ச்சிப்போக்காகவே நான் கருதுகிறேன்..
நீங்கள் தந்த இணைப்பில் இக்கேள்வியைக் காண்கிறேன்
“நீங்கள் குரானையோ அல்லது பைபிளையோ கடவுளின் வார்த்தைகள் இல்லை என்று மறுக்கலாம், வாதிக்கலாம். ஆனால் கடவுளே இல்லை என்று எப்படி சொல்லுவீர்கள்?”
ஆக நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள்..குரான் பைபிள் அடிப்படைகள் அறிவியல் மூலம் நிராக்ரிக்கப் படிகிறது..
உங்கள் பிரச்சனை கடவுள்??? அது என்ன? எந்த மாதிரிக் கடவுள்?? தெரியாத விடை கண்டுபிடிக்க முடியாத விடயத்தை “எக்ஸ்” கணியமாக கொள்வர் அறிவிலாளர்..அந்த வகியிலேயே அவர்கள் கடவுள் என்னும் பதத்தை பாவிப்பதாக கருதுகிறேன்.. நிச்சயமாக மதங்கள் சொல்லும் கடவுளை அல்ல…இது எனது புரிதல்..
அன்பு பாரதி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
தங்கள் மீதும், தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…
சற்று தெளிவாக விளக்க முயற்சிக்கிறேன் (இன்ஷா அல்லாஹ்). ஒத்துழையுங்கள். அதேசமயம் உங்கள் நேரத்தையும் அதிகமாக வீணாக்க மாட்டேன். சில கேள்விகள் மற்றும் விளக்கங்கள், அவ்வளவுதான்.
நாத்திகர் (Atheist) என்றால் கடவுள் (அல்லது கடவுள்கள்) என்ற concept டை மறுப்பவர். இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். அவர்கள் கடவுள் இருக்கிறார் (அல்லது நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது) என்று நம்புவார்கள், ஆனால் மதங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் முதல் பிரிவைச் சேர்த்த நபராக இருந்தால் மேற்கொண்டு படியுங்கள்.
1. நீங்கள் கடவுள் இல்லையென்று இப்படி மறுப்பீர்கள்?
a) பரிணாம வளர்ச்சி கோட்பாடு கடவுளை மறுக்கவில்லை. அதனால் நீங்கள் அதனை ஆதாரமாக காட்டமுடியாது. b) இயற்பியல் ரீதியாகவும் கடவுளை மறுப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. c) ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுள் இல்லையென்று சொல்லமுடியாது.
இதையெல்லாம் நான் சொல்லவில்லை, நீங்கள் சுட்டி கொடுத்தீர்களே, அந்த சகோதரர் டாகின்சும், Talk Origins தளமும் தான் சொல்லுகின்றன. அதற்காகத்தான் என்னுடைய அந்த பதிவின் சுட்டியை கொடுத்தேன் (http://ethirkkural.blogspot.com/). என் பதிவில் தெளிவாக விளக்கியிருப்பதாகவே நினைக்கிறேன்.
அதனால் தான் நான் மறுபடியும் கேட்கிறேன், நீங்கள் நாத்திகராக இருப்பதற்கு என்ன ஆதாரத்தை வைத்திருக்கிறீர்கள்? ஒரு ஆதாரமும் இல்லாமல் நான் நாத்திகன் என்று நீங்கள் சொன்னால் அதற்கு பெயர் Blind Faith. நீங்கள் நாத்திகத்தை கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள் என்று பொருள்.
ஒருவேளை, கடவுள் இருந்தாலும் இருக்கலாம், ஆனால் மதங்களை நம்ப மாட்டேன் (அல்லது குரானையோ பைபிளையோ நம்பமாட்டேன்) என்று நீங்கள் சொன்னால் அதற்கு வேறு பெயர் இருக்கிறது.
ஆக, இனி சிந்திக்க வேண்டியது நீங்கள் தான். இன்ஷா அல்லாஹ், சிந்திப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்களை தனிப்பட்ட முறையில் ஏதாவது தவறாக நான் சொல்லியிருந்தால் இறைவனுக்காக என்னை மன்னித்துவிடுங்கள்.
Thanks and take care…
உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹ்மத் அ aashiq_14@hotmail.comhttp://ethirkkural.blogspot.com/
அன்பின் ஆஷிக் அஹ்மத் அண்ணனுக்கு..
எனக்கு விளக்கம் அளிப்பதற்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி..
நான் தெளிவாகத்தானே எனது நிலைப்பாட்டை சொல்லியுள்ளேன்..
மதங்கள் கூறும் கடவுளை அறிவியல் நிராகரிக்கிறது..சாதாரண பகுத்தறிவுள்ள மனிதால் கூட முடியும். இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி தொழில் நுட்ப வசதிகளுடன் ஆராயும் போது எல்லா உருவாக்கத்திற்கும் ஓர் சக்தி இருக்கவேண்டும்( அதைத்தான் அறிவியலாளர்கள் குறிப்பிடும் எக்ஸ் கணியம் போல் என குறிப்பிட்டேன் ) என்னும் கருதுகொளுக்குள் சரணடைய வேண்டியுள்ளது..(இது தற்கால அறிவியல் வளர்ச்சி தரவுகளை கருத்தில் கொண்டு மட்டும்) ..நிச்சயமாக மதங்கள் கூறும் கடவுள் அல்ல..இந்த வகையில் நோக்கும் பொது கடவுள் என்னும் சொல்லானது மதத்தால் வேறு பொருளாகவும் அறிவியலால் வேறு பொருளாகவும் பாவிக்கப்படுவதாக கருதுகிறேன்.. ஆகவே நிச்சயமாக நாத்திகன் ஆத்திகன் என்பது மதக்கடவுளை நம்ம்பும் நிங்கள் பொருள்கொள்ளும் விதம் வேறு என்ன நினைக்கிறேன்..மொத்தத்தில் நான் பகுத்தறிவுவாதி (தற்காலிக நாத்திகன் என சொல்லலாமா?)என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். !! மற்றும் நிருபிக்கப்படாத கடவுளை முற்றும் முழுதாக நம்பும் உங்களை blind faith என நான் கருத முடியுமா? ive add u in my email id..plzz accept me! we can share our thoughts there..thank you brother!!
எங்கள் சகோதரன் ?!?.. ஆசிக் அகமதுவுக்கு … உங்கள் கடவுள் மனிதனை படைத்தார் எனில் , உலகம் முழுவது இஸ்லாமியர்கள் மட்டும் அல்லவா இருந்திருக்க வேண்டும் ?… அது எப்படி … கிறிஸ்தவன் , இயேசு உலகத்தை படைத்தார் நு சொல்றான் , இந்து , ஆதி பராசக்தி (மேல்மருவத்தூர் ?!!?) உலகத்தை படைத்தார் நு சொல்றாங்க ..
எப்டி உங்க சாமி களி மண்ணுல இருந்து மனுசனை வுருவாக்கும் போது ., இப்போ இருக்குற இஸ்லாமியர்களை உருவாக்குனதும் களி மண் தீர்ந்து போயடுசோ ?..
அன்பு பாரதி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹூ…
தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி. தங்களுடைய பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை. இது சகஜமான விசயம்தான். கருத்துவேறுபாடுகள் நம்மை கற்றுக்கொள்ள தூண்டும். ஆக, இது ஆரோக்கியமான முன்னேற்றம்தான்.
நான் இப்போதெல்லாம் எடுத்த எடுப்பிலேயே பரிமாண கோட்பாட்டின் அபத்தங்களை எடுத்துக்காட்ட முயற்சிப்பதில்லை. அப்படியே அது சரியென்றாலும், அது கடவுளை மறுக்காது, அதனை துணையாகக் கொண்டு நாத்திகர்கள் கடவுளை மறுக்க முடியாது என்று விளக்கவே விரும்புகிறேன். முதலில் இதை அவர்கள் ஒப்புக்கொண்டால் பிறகு அந்த கோட்பாட்டின் அபத்தங்களை எடுத்து வைக்க முயல்வேன். இதற்கும் அதிக நேரம் எடுக்காது. சில அடிப்படை கேள்விகள் அவ்வளவுதான்.
தாங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சி எடுத்ததற்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே..என்னுடைய ஜிமெயில் id, aashiq.ahamed.14@gmail.com. இதற்கும் ஒரு invitation அனுப்புங்கள். இறைவன் நாடினால் ஏற்றுக்கொள்கிறேன். கருத்துக்களை பரிமாறி கொள்வோம்..இன்ஷா அல்லாஹ்…
தங்களுடைய நேரத்திற்கும், நேர்மையான பதிலுக்கும் நன்றி…
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…
Thanks and Take Care…
Your Brother,Aashiq Ahamed Ahttp://ethirkkural.blogspot.com/
மக்கள் இசை பாடல் ஒன்னு எச்சரிக்க எச்சரிக்க எச்சரிக்க அந்த RSSகாரன் வரந பத்தவய்க்க கையில் எடுத்து வரந தீப்பட்டிய பத்தவய்க்க
அஸ்ஸலாமு அலைக்கும் இது தன் அழகிய விவாதமுறை நன்றி ஆஷிக்
ஷேஷாச்சலமாயிருந்து பெரியர்தாசனாகி சித்தார்தநாய் மாறி அப்துல்லாவாய் பரிணமிக்கும் பரமபிதாவே! நீ கர்த்தராய் கன்வர்டாய் கப்சா விடப்போவது எப்போது?
தோழர்களே,
http://karunthinai.blogspot.com/2009/04/blog-post (கருந்திணை) என்ற வலைப்பூவில் ம.க.இ.க வுக்கும் – பெரியார்தாசனுக்கு உள்ள உறவை கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்கள்
த.மு.எ.ச வின் உறுப்பினர்கள் ‘தண்ணியடித்து’த் திரியும் போக்கை விமரிசிப்பதைப் போல, பெயரியல் பேராசானையும், ரியல் எஸ்டேட் கம்பெனி விளம்பரத்தையும் தூக்கிப்பிடிக்கும் பெரியார்தாசனை விமர்சனம் செய்து புதிய ஜனநாயகத்திலோ, புதிய கலாச்சாரத்திலோ எழுதுவீர்களா? பெரியார்தாசன் எதற்கு உங்களுக்கு? பெரியாரிஸ்டுகளை கூட்டம் கூட்டவும், பெரியாரியல் வேடம் தரிக்கவும் தானே, பெரியாரியல் மரபை முன்னிறுத்தவும் தானே?. இது ஒரு உத்திதான். குற்றம் சொல்லவில்லை. உண்மையா இல்லையா சொல்லுங்கள்? பெரியார்தாசனுக்கும் ரூம் போட்டு கொடுத்து ‘தண்ணியடிக்க’ காசு கொடுத்து கூட்டங்களுக்கு அழைத்து வருகிறீர்களே உங்களுக்கும் த.மு.எ.சவிற்கும் என்ன வேறுபாடு?
GO TO THIS LINK ( copy AND paste in full ) and study about your FOOLISH EVOLUTION and DARWINISM which is the RELIGION OF ATHIEST and PAGANS……..
http://us2.harunyahya.com/Detail/T/EDCRFV/productId/1375/THE_COLLAPSE_OF_THE_THEORY_OF_EVOLUTION
கிழக்கத்திய நண்பரே,
ஹாருண் யஹ்யா குறித்த என்னுடைய பழைய பது ஒன்று. படித்துப்பாருங்கள். அவருடைய கட்டுரையை மொழிபெயர்த்து தரமுடியுமா? முடியுமென்றால் இன்னும் விரிவாக அது குறித்து எழுத உதவியாக இருக்கும்.http://senkodi.wordpress.com/2009/01/09/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/
செங்கொடி
ஆஹா வினவு என்னமாய் அருமையாக சனநாயகம் பேசுகிறது. கேவலமாக பேச ஆரம்பித்தது யார் வினவு? உங்களது ஒத்துவராத மறுமொழிகளில் இருந்து ஆய்வை தொடங்கலாமா? கேள்விக்குறி (இவரே வினவாகவும் இருக்கலாம்) போன்றவர்கள் பயன்படுத்திய கேவலமான சொற்களில் பாதியளவு கூட நான் பயன்படுத்தவில்லையே. இதில் சகோதரர் ஹைதர் அலியை வேறு பஞ்சாயத்திற்கு கூப்பிடுகிறது வினவு. சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு நீங்கள் வினவுக்கு புதியவர். பழைய கட்டுரைகளில் இருக்கின்ற மறுமொழிகளை எல்லாம் ஒரு தடவை பார்த்து விட்டு உங்களின் கமெண்ட்டை போடவும். இந்த மக்கு இ க கும்பல்கள் ஆளுக்கு தகுந்தார் போல நடிப்பவர்கள். இதை மட்டும் உங்களின் கவனத்திற்கு வைக்கின்றேன்.
மேலும் இவர்களிடம் உண்மை சத்தியம் நேர்மை எல்லாம் இருந்தால் இஸ்லாத்தை இணையத்தில் விமர்சிபப்தை விட நேரடியாக வந்து சகோதரர் பிஜே போன்ற மார்க்க அறிஞர்களுடன் விவாதிக்கலாம். அதை எல்லா பொது மக்களும் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம். சகோதரர் ஹைதர் அலி அவர்கள் வினவு குழுவினரிடம் நேரடி விவாதத்திற்கு வர சொல்லி எடுத்து சொல்லவும். ஏன் பயப்படுகின்றார்கள்? இதை ஹைதர் அலி ஒரு முறை யோசிக்கவும்.
கண்ணியமான வார்த்தை பயன்படுத்தினால் நானும் கண்ணியமான வார்த்தை பயன்படுத்துவேன். வரம்பு மீறிய வார்த்தைகள் வினவு மற்றும் ஜால்றாக்களிடமிருந்து வந்தால் நானும் வரம்பு மீறிய வார்த்தைகளையே பயன்படுத்துவேன். எவர் வரம்பு மீறுகிறாரோ அதே அளவிறு வரம்பு மீற இஸ்லாம் அனுமதி அளித்திருப்பதை சகோதரர் ஹைதர் அலி கவனத்தில் கொள்ளவும்.
ஷாஜஹான் நீங்கள் சொல்லுவது உண்மை தான். கேள்விக்குறிக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதுதான் “அசிங்ககுறி”.
மூட்டா ஊ அண்ணே, நீங்க எப்ப எங்கிட்ட முதல்ல செருப்படி வாங்குனீங்கன்னு ஞாபகம் இருக்கா? .. இருக்காது நான் சொல்றேன்… ஆதாவது நான் ஒருத்தரோடு நியாயமான ஒரு விசயத்துக்கு விவாதிக்கும் போது அங்கே வந்து நீங்கள் என்னை ஒரு Pedophile குழந்தைகளை வண்புணர்ச்சிக்கு உள்ளாக்குபவன் என்று கூறியதால் துவங்கிய வினை அது .. ஆதார சுட்டி https://www.vinavu.com/2010/01/19/questions-vithagan-3/#comment-15655
இதுக்கப்புறம் எத்தனை முறை வந்து என்ன திட்டியிருப்பீங்க.. என்னவோ அப்பாவி மாதிரி சீன் போடறீங்களே… கொஞ்சம் அடங்குங்க….
இன்னிக்கு தன்னிலை விளக்கம் தர நாள் போல இருக்கு… ஹூம்..
சீன போடுவது தங்கள் வேலை தான் என்று அனைவருக்கும் தெரியும் அசிங்ககுறி அவர்களே. என்னுடைய பின்னூட்டத்துக்கு அசிங்கமாக எழுதுவதை வாடிகையாகதான் நீங்கள் கொண்டுளீர்கள் என்பது அனவருக்கு தெரியும். வீணாக கொந்தளிக்க வேண்டாம். ஒத்துக்கொள்ளுங்கள் முதலில்.
நீ என்ன pedophile ன்னு சொல்லுவே நான் பதிலுக்கு உனக்கு மரியாத கொடுக்கனுமா.. நல்ல கதை இது
தங்களை போன்றவர்களின் (போன்றவர்களிடம்)
மரியாதையை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்
கேள்விகுறி அவர்களே. வீணாக கற்பனையை
வளர்க்க வேண்டாம். அப்படி எதிர்பார்த்தால் அது
மரியாதை என்ற வார்த்தைக்கே அவமானம்.
ஷாஜஹான் உங்களுக்கு கொஞ்சூண்டு ஞானம் இருந்தால் தேவலாம், ஒத்துவறாத மறுமொழி என்பது குப்பைத்தொட்டி தானே? தகுதியில்லா பின்னூட்டங்களை வினவு அங்கே அனுப்பி வைக்கும் போது
அதிலிருந்து நீங்கள் வினவை எப்படி விமர்சிக்க முடியும்???
@@வரம்பு மீறிய வார்த்தைகள் வினவு மற்றும் ஜால்றாக்களிடமிருந்து வந்தால் நானும் வரம்பு மீறிய வார்த்தைகளையே பயன்படுத்துவேன். எவர் வரம்பு மீறுகிறாரோ அதே அளவிறு வரம்பு மீற இஸ்லாம் அனுமதி அளித்திருப்பதை சகோதரர் ஹைதர் அலி கவனத்தில் கொள்ளவும்.@@
எனக்கு தெரிந்து வினவு தளத்தில் நீங்கள் எழுதிய முதல் மறுமொழி இதுதான் https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/#comment-12349 இதில் சம்பந்தமே இல்லாமல் என்னை எதற்காக திட்டி எழுதினீர்கள்ஆக பிரச்சனையை துவக்கி வைத்த புண்ணியவான் நீங்கள்தான் ஐயா
அது சரி.. ஒருத்தன் திட்டினா திருப்பி திட்டுவது இயல்புதானே அதுக்கு எதுக்கு இசுலாத்த வம்புக்கு இழுக்குறீங்க.. ??? போகட்டும் ஆபிசுல உங்க ஓனர் வரம்புமீறி திட்டினாலோ, கவர்மென்ட் ஆபிஸ்ர் வரம்பு மீறினாலோ இதே இசுலாமிய முறைப்படி வரம்பு மீறி திட்டுவீங்களா இல்ல பம்முவீங்களா???
@@இந்த மக்கு இ க கும்பல்கள் ஆளுக்கு தகுந்தார் போல நடிப்பவர்கள்@@
இதையேன் நடிப்பவர்கள் என்று பார்க்கவேண்டும், நாங்கள் தான் தெளிவாகவே சொல்லிவிட்டோமே, வர்க்க எதிரிகளை நாங்கள் மதிப்பதில்லை, மதவெறியர்களை மதிப்பதில்லை… மற்றபடி உழைக்கும் மக்கள் அவர்கள் எந்த மதமாயினும் எங்கள் தோழர்களே…. ஹைதர் எனக்கு எழுதிய முதல் பின்னூட்டம் இது
https://www.vinavu.com/2010/02/05/goa-tamil-padam/#comment-16913
இதற்கு என் பதிலையும் பாருங்கள. மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்பது மனித இயல்பு நீங்களோ நெத்தியடியோ என்னை மதிக்கவில்லை, நானும் அப்படியே. the matter begins and ends there….
@@@மேலும் இவர்களிடம் உண்மை சத்தியம் நேர்மை எல்லாம் இருந்தால் இஸ்லாத்தை இணையத்தில் விமர்சிபப்தை விட நேரடியாக வந்து சகோதரர் பிஜே போன்ற மார்க்க அறிஞர்களுடன் விவாதிக்கலாம். @@@
ஆன்லைன் பீ.ஜே இசுலாமிய மார்க்க அறிஞர் என நீங்கள் கருதுகிறீர்கள் ஆனால் இசுலாமிய அமைப்புகளிலேயே பலர் அவ்வாறு கருதவில்லையே.. சரி உள்குத்து விவகாரம் இப்போது தேவையில்லை.. அவர் ஒரு மதநம்பிக்கையாளர் அல்ல மத அடிப்படைவாதி.. Islamic Fundamentalist.. நாங்கள் அடிப்படைவாதிகளை மதிப்பதில்லை, அவர்களுடன் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை.. இப்போதைக்கு அவர்களை புறக்கணித்து உழைக்கும் இஸ்லாமிய மக்களை இதுபோன்ற அடிப்படைவாத சக்திகளிடமிருந்து மீட்பதை மட்டும் கவனிக்கலாம், ஒரு வேளை RSS போல TNTJ ஒரு அரசியல்-சமூக ஒடுக்குமுறை சக்தியாக பரிணாமித்தது என்றால் (இந்தியாவில் அது சாத்தியமில்லை) அப்போது போராட்டங்கள் வேறு வடிவில் இருக்கும். இந்த நிலைபாடு உங்களுக்கு புரியும்… புரியவில்லையெனில் கேளுங்கள் மீண்டும் சொல்கிறேன்… அதை விடுத்து பயம் என்றெல்லாம் பிதற்ற வேண்டாம், ஜெயலலிதாவை விட பி.ஜெ ஒன்றும் பெரிய ஆளெல்லாம் இல்லை அந்த ஜெயாவின் ஆட்சியில் அவரை எதிர்த்து அதிக போராட்டம் செய்தவர்கள் நாங்களே… கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் உட்பட…. புரிகிறதா??
“”””””- – – – – அவர் ஒரு மதநம்பிக்கையாளர் அல்ல மத அடிப்படைவாதி.. Islamic Fundamentalist.. நாங்கள் அடிப்படைவாதிகளை மதிப்பதில்லை, அவர்களுடன் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை – – – – “”””” – கேள்விகுறி..
சகோதரர் கேள்விக்குறி, அடிப்படைவாதிகளை நீங்கள் மதிப்பதில்லை என்று கூறுகிறீர்கள்.. நிச்சயமாக தாங்கள் ஏதோ ஒரு எண்ண ஓட்டத்திலே அவ்வாறு கூறி இருக்க வேண்டும்.. ஆனால் நிச்சயம் அதுவே உங்களின் கொள்கையாக இருக்காது என்று நம்புகிறேன்..
எந்த ஒரு விஷயத்திலும் கொள்கையிலும் அடிப்படையை நம்புவதே அக்கொள்கையில் நாம் கொண்டிருக்கும் பற்றை பறை சாற்றும்.. ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு என்பது கணிதத்தின் அடிப்படை.. இந்த அடிப்படையை விடுத்து அதில் நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் எவ்வாறு நகைப்பாக இருக்குமோ அதே போல நீங்கள் சொல்வது இருக்கிறது… உங்களையே எடுத்து கொள்ளுங்கள்.. கம்யூனிசத்தின் அடிப்படை என்பது உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமையை பேணுவது.. அவ்வளவு தானே.. இதிலிருந்து தானே மற்ற ஏனைய சித்தாந்தங்கள் ஏற்படுத்த பட்டன.. அந்த அடிப்படையை நீங்கள் பின்பற்றவில்லை எனில் நீங்கள் எப்படி கம்யூனிசவாதி ஆக முடியும்? அதே போல பெரியவர் பீஜே தன்னுடைய மதத்தில் மார்க்கத்தில் அடிப்படை கொள்கைகளை பற்றி பிடித்து கொண்டு இருக்கிறார்.. இஸ்லாமிய அடிப்படைவாதியாக இருக்கிறார்.. எந்த ஒரு விடயத்திலும் அடிப்படையில் பிடிப்பு இல்லாமல் போனால் தான் அங்கே மாறுபாடுகளும் வேற்றுமைகளும் தோன்றும்.. ஆக பெரியவர் பீஜே ஒரு மத அடிப்படை வாதியாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?
நீங்கள் ஒரு கம்யூனிச அடிப்படை வாதி.. உங்களிடம் நாங்கள் கம்யூனிச கொள்கைகளை கேட்டறிவது சிறந்ததா? இல்லை கம்யூனிசத்தில் நம்பிக்கை மட்டும் (அடிப்படை பிடிப்பு இல்லாமல்) கொண்டிருபவரிடம் கேட்டு அறிவது சிறந்ததா? உங்களிடம் விவாதிப்பது சிறந்ததா? இல்லை இதனை பற்றிய அடிப்படை தெரியாமல் கேட்டறிதல் மட்டும் கொண்ட கம்யூனிச சித்தாந்தங்களை நம்புபவரிடம் விவாதிப்பது சிறந்ததா?
நீங்கள் கம்யூனிசத்தில் அடிப்படை வாதி என்பதில் உங்களுக்கு எவ்வளவு பெருமிதம் இருக்கிறது.. அதே அடிபடைவதியாக மதத்தினில் மார்கதினில் இருந்தால் மட்டும் என்ன குற்றம்?
ரபீக் நான் மார்க்சிய அடிப்படைவாதியெல்லாம் இல்லீங்க… எல்லா அடிப்படைவாதங்களுக்கு எதிரானவன்…
தோழர் வினவு… தயவு செஞ்சு அடிப்படைவாதம்னா என்னன்னு ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.. என்னால எளிமையா அத விளக்க முடியும்னு தோணல…
எல்லா அடிப்படை வாதங்களுக்கும் எதிரான சகோதரர் கேள்விக்குறி.. இதற்கு மேல் பதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை..
ஏதேனும் ஒரு கொள்கை அல்லது கோட்பாட்டில் நாம் இருப்போமே ஆனால் அதனுடைய அடிப்படையை நன்றாக தெரிந்து புரிந்து இறுக பற்றி கொண்டு இருந்தால் தான் அந்த கோட்பாட்டில் நிற்க முடியும் நின்று மற்றவர்களுக்கு அதை உணர்த்த முடியும்..
என்னுடைய தயை கூர்ந்த வேண்டுகோள்.. நீங்கள் எந்த கொள்கையிலும் இருக்கலாம் அது உங்களின் உரிமை.. ஆனால் அந்த கொள்கையினுடைய அடிப்படையை பற்றி கொள்ளுங்கள்.. ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..
தம்பி கேள்விக்குறி , நீங்க கொடுத்த லிங்க் ல எங்க நான் உங்களை திட்டிருக்கேன்னு காட்ட முடியுமா? வினவு தான் எனக்கு பதில் சொல்லணும் வேற யாரும் பதில் சொல்ல தேவை இல்லை என்பதை தான் நான் அங்கு சொல்லிருக்கேன். இதுல எங்கய்ய உன்னை திட்டிருக்கேன். இப்போ சோதிக்கக் வேண்டியது உங்களுடைய ஞானத்தை தான் கேள்விக்குறி.
நான் ம.க.இ க வை கூப்பிட்டது அடிதடிக்கு இல்லை. நேரடி விவாதத்திற்கு ஐயா. நேரடி விவாதம் என்பது இரண்டு தரப்பின் வாதங்களை பொது மக்கள் முன் எடுத்து வைப்பது. பொது மக்களே யார் தவறு யார் சரி என்று முடிவு செய்து கொள்வார்கள். சரியா கேள்விக்குறி ? இப்போ உங்க அறிவை தான் சோதிக்கணும் போல கேள்விக்குறி. இதுக்கு எதுக்கு ஜெயா கருணா என்று பீலா வேற?
டிஎன்டிஜே மதவெறி அமைப்பு போல காட்ட முயற்சிக்கும் உங்களின் குள்ள நரி வேலை எடுபடாது கேள்விக்குறி. எங்காவது பிற மத சகோதர சகோதரிகளுக்கு எதிராக சிறு துரும்பையாவது பிஜே வோ அல்லது டிஎன்டிஜே வோ செய்திருக்கிறது என்பதை கேள்விக்குறி நிரூபிக்க முடியுமா? ஆனால் ரயில் கவிழ்ப்பு பள்ளிக்கூடத்தில் குண்டு போடுவது போன்ற அப்பாவி மக்கள் பாதிக்கும் வேலைகளை நக்சல்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தினசரி செய்திதாள் படிக்கும் யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனால் டிஎன்டிஜே இப்படி செய்திருக்கின்றதா? அலல்து அதை ஆதரித்தாவது டிஎன்டிஜே பெசியிருக்கின்றதா? இப்போ சொல்லுங்கள் கேள்விக்குறி யார் வெறி எடுத்த அமைப்பு?
தம்பி கேள்விக்குறி, இங்கே வந்து நான் கருத்து போட்டால் பதிலுக்கு என்னை அல்லவா நீங்கள் சாட வேண்டும். ( சாடுவது மட்டும் தானே உங்களின் பிரியமான பொழுது போக்கு என்பதை வினவின் பழைய கமேன்ன்ட்டுகளை எடுத்து பார்ப்பவர்களுக்கு புரியும்) ஆனால் இந்த தளத்திற்கு சற்றும் சம்பந்தப்படாத சகோதரர் பிஜே அவர்களை எவ்வளவு கண்ணியக்குறைவாக நீங்களும் மற்ற ஜால்ராக்களும் இங்கே விமர்சித்திருக்கின்றீர்கள். தனிமனித தாக்குதல்களை தொடர்ந்து செய்வதில் வினவின் ஜாலராக்கள் தான் முன்னணியில் இருக்கின்றீர்கள். திருப்பி நாங்கள் சொல்லிவிட்டால் உடனே வினவுக்கு கோபம் வந்து விடுகின்றது. இது எந்த ஊரு நியாயம் கேள்விக்குறி?
தனிமனித தாக்குதல்களை தொடர்ந்து செய்வதில் வினவின் ஜாலராக்கள் தான் முன்னணியில் இருக்கின்றீர்கள். @@@@
என்னை திட்டுபவரை நான் திருப்பி திட்டுகிறேன் இதில் உமக்கென்னையா பிரச்சனை… இதேயே தானே இசுலாமிய கோட்பாட்டின் படி செய்வதாக நீங்கள் சொல்கிறீர்கள்… https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/#comment-12349 இங்கே ஜட்டி போட்டது போடாதது என்று துவங்களும் உங்கள் வார்த்தைகள் வசவு இல்லையெனில் என்ன வேதமா..
நீங்க மக்கு இக வினவு ஜால்ரான்னு பேசினா நான் ஆண்லைன் பீஜெவ பேசுவேன்… அதனால give and take respect my dear…
@@@டிஎன்டிஜே மதவெறி அமைப்பு போல காட்ட முயற்சிக்கும் உங்களின் குள்ள நரி வேலை எடுபடாது கேள்விக்குறி. எங்காவது பிற மத சகோதர சகோதரிகளுக்கு எதிராக சிறு துரும்பையாவது பிஜே வோ அல்லது டிஎன்டிஜே வோ செய்திருக்கிறது என்பதை கேள்விக்குறி நிரூபிக்க முடியுமா? @@@
ஷாஜஹான், நான் சொன்னதை நீங்க முழுசா எழுதல… tntj உறுவான வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும்
@@ஒரு வேளை RSS போல TNTJ ஒரு அரசியல்-சமூக ஒடுக்குமுறை சக்தியாக பரிணாமித்தது என்றால் (இந்தியாவில் அது சாத்தியமில்லை) அப்போது போராட்டங்கள் வேறு வடிவில் இருக்கும்.@@@
ஆக இதிலிருந்து tntj வை உடனடியாக எதிரக்க வேண்டிய ஒரு பிரதான சக்தியாக நாங்கள் இப்போது கருதவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதனால வரமாட்டோம்னு தெரிஞ்சுகிட்டு தில்லிருந்தா வான்னு உதார்விடுவதை விடுத்து வேறு பிழைப்பை பார்க்கவும்
சகோதரர் ஷாஜஹான் நாம் மற்றவருடன் கலந்துரையாடும் பொது நமது நம்பிக்கை சம்பந்தப்பட்ட உணர்வுகளை அவர்கள் நகைப்புகுள்ளக்கும் போது, நம்முடைய உறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நகைப்பை ஏற்படுத்தும் போது சற்று பொறுமையை கையாள்வோம்.. ஏனெனில் நிச்சயமாக வல்ல இறைவன் பொறுமையாளர்களுடனே இருக்கிறான். அதையும் அவர்கள் மீறும் போது மதிக்க தெரியாத போது நீங்கள் கூறுவது போல வரம்பு மீறுதலில் தவறில்லை..
மேலும் சகோதரர் ஷாஜஹான், நீங்கள் கேட்டிருக்கும் அதே கேள்வியை நானும் கேட்டிருக்கிறேன்.. இதுவரை சகோதரர் வினவும் சரி சகோதரர் கேள்விக்குறியும் சரி பதில் அளிக்கவில்லை..
“பெரியாரிஸ்ட் ஆக இருந்த பேராசிரியர் அப்துல்லா இஸ்லாத்திற்கு மாறியதும் பணம் பெற்று கொண்டு மாறியதாக கூறினார்கள்.. அதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டேன்.. பதில் இல்லை.. இங்கு பதிளிடுபவர்கள் எல்லாம் ம.க.இ.க காரர்கள் இல்லையென்று கூறுகிறார்கள்.. அனால் அவ்வாறு சொல்பவர்களை ஏன் வினவும் கேள்விக்குறியும் கண்டிக்கவில்லை.. பெரியவர் பீஜே வை மதத்தின் பெயரால் சுரண்டி பிழைப்பவர் என்று கேள்விகுறி கூறினார்… உண்மையா என கேட்டதற்கு ஆதாரம் இல்லை.. ” – இவை எல்லாம் தனி மனித உரிமைகள் சம்பந்தப்பட்டவை.. இவற்றை பேணுவதில் காப்பாற்றுவதில் ம.க.இ.க சகோதரர்களுக்கும் பங்கு உள்ளது என்பது என் எண்ணம்.. அவ்வாறே அவர்களும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்..
உடனே நங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் எங்கே என்று கேட்க வேண்டாம்.. அவை கொள்கை சம்பந்தப்பட்டவை.. அதற்கு நேரிடையாக விவாதம் அறிஞர் பெருமக்களாகிய உங்களுக்குள் நடக்க வேண்டியது.. என்னுடன் விவாதிக்க தயாராக இருக்கும் சகோதரர்கள், விவாதத்திற்கென தயாராக உள்ள பெரியவர் பீஜே போன்ற அறிஞர் பெருமக்களுடன் விவாதிப்பது சாலவும் சிறந்தது.. அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்..
சகோ.பிஜே மதவெறியராம். இதை எங்கு போய் சொல்லி அழ என்றே தெரியவில்லை? மக்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்காக “இஸ்லாமே ஓர் இனிய மார்க்கம்” என்ற நிகழ்ச்சியை பல ஊர்களில் நடத்திக் கொண்டு வருகின்றார். அதில் கலந்து கொண்டு கேள்விகளை கேட்பவர்கள் எல்லாம் இஸ்லாமிய மதத்தை சாராதவர்கள் தான். என்ன புரியுதா கேள்விக்குறி?
அப்புறம் சகோ பிஜே ஊரான் வீட்டு காசில் உட்கார்ந்து தின்னும் அற்பர் அல்ல என்பதை மன்னடி வீதிக்கு சென்று வரும் யாரும் அறிந்து கொள்ளலாம். மண்ணடியில் தன மகனின் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து தன் தேவையை பூர்த்தி செய்து கொள்பவர் அவர். ஆனால் வினவுக்கு மற்றும் கேள்விகுரிக்கெல்லாம் எங்கிருந்து வருமானம் வருகின்றது? கொஞ்சம் விளக்க முடியமா? ஒரு வேளை நீங்கள் உழைத்து சம்பாதித்தாலும் சகோ பிஜே மீது நீங்கள் இங்கே சொல்லிய அவதூறுகளுக்கு என்ன பதில் தரப்போகின்றீர்கள் கேள்விக்குறி?
மதத்தின் பெயரால் அமைப்பு துவங்குவீர்கள் கேட்டால் நாங்கள் அடிப்படைவாதிகள் இல்லை என்பீர்கள், உங்களுக்கே சிரிப்பு வரல…
நான் எப்போ பி.ஜெ உழைத்த சம்பாதிக்கவில்லை என்று சொன்னேன் ஷாஜஹான்?? என்ன பேத்தல் இது.. ஒரு வேளை @@@@ மதவெறி பிரச்சாரகர்கள் நிலையோ வேறு, மதத்தை முதலீடாக போட்டு வியாபாரம் செய்யும் தந்திரக்காரர்கள் @@@ என்று சொன்னது உங்களுக்கு அப்பிடி தோன்றியிருந்தால் இதில் என்ன தவறு என்று நீங்கள் சொல்ல வேண்டும்
தம்பி கேள்விக்குறி,
உங்க வாதம் முன்னுக்கு பின் முரனா இருக்கே.
/* நான் எப்போ பி.ஜெ உழைத்த சம்பாதிக்கவில்லை என்று சொன்னேன் ஷாஜஹான்?? என்ன பேத்தல் இது.. ஒரு வேளை @@@@ மதவெறி பிரச்சாரகர்கள் நிலையோ வேறு, மதத்தை முதலீடாக போட்டு வியாபாரம் செய்யும் தந்திரக்காரர்கள் @@@ என்று சொன்னது உங்களுக்கு அப்பிடி தோன்றியிருந்தால் இதில் என்ன தவறு என்று நீங்கள் சொல்ல வேண்டும்*/
அப்போ உங்க கருத்துபப்டி உழைத்து சாப்பிடும் சகோ பிஜே மதவாதி இல்லை. ஆகையால் நீங்கள் அவருடன் நேரடி விவாதத்திற்கு போக போகின்றீர்கள் தானே கேள்விக்குறி?
ஷாஜஹான் அவர்களே …
நீங்கள் எதனையாவது இறை தூதர் ?
இதுல என்ன முரண் இருக்கு ஷாஜஹான்? ஏன மதவெறியையும் உழைப்பையும் போட்டு குழப்பிக்கிறீங்க, குஜராத் மதக்கலவரத்தை வழிநடத்தியவனெல்லாம் என்ன உக்காந்து சாப்பிட்டவனா.. அதுல எத்தனையோ பேரு பெரிய படிச்சு பெரிய வேலேல இருக்குறவன்தான்.
MR.. PAGAN , ATHIEST …….
Pl see this INVITATION and GO DIRECTLY TO ASK QUESTIONS YOU HAVE ASKED HERE..
http://www.islamkalvi.com/portal/wp-content/uploads/2010/04/yanbu.gif
என் நம்பர் 9994500540
கடவுள் மறுப்பாளனாக நேரடி விவாதத்திற்கு அழைக்கிறேன்!
குரானில், சொர்க்கத்தில் பெண்களுக்கு எத்தனை நித்திய கன்னிகர்கள் கிடைப்பாங்கன்னு உங்க குருமார்களை கேட்டுகிட்டி ஈரோடு வந்து சேருங்க!
வாலு சார், அது செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போறவங்க கவலைப்பட வேண்டிய விஷயமாச்சே..!
//அது செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போறவங்க கவலைப்பட வேண்டிய விஷயமாச்சே..!//
ஏகபட்ட லிங்க் கொடுத்து படிக்க சொன்னாங்க, யாராவது கேட்டு சொல்ல சொல்லுங்களேன்! சொர்க்கத்தில் ஆணுக்கு நித்திய கன்னிகைகள் கிடைக்கும்னு சொன்னா அல்லா ஏன் பெண்களுக்கு என்ன கிடைக்கம்னு சொல்லல! அப்போ அல்லாவுக்கு பெண்கள் மேல் அக்கறையில்லையா!?
பர்தா போட சொன்னது பெண்களை காப்பாற்றவா!? ஆண்களின் அடிமைகளை(பெண்கள்) காப்பாற்றவா!?
//அப்போ அல்லாவுக்கு பெண்கள் மேல் அக்கறையில்லையா!?//
அதத்தானுங்க சொல்றேன்.. அது செத்தபிறகு சொர்க்கத்துக்குப் போற முஸ்லிம் பெண்கள் கவலைப்பட வேண்டிய விஷயமாச்சே! வால் பையனுக்கு இதுல என்ன அக்கறை?
இவுங்க கூட உரையாடினா நமக்கும் அடைப்புகுறி வியாதி வந்துரும் போலயே!
//அதத்தானுங்க சொல்றேன்.. அது செத்தபிறகு சொர்க்கத்துக்குப் போற முஸ்லிம் பெண்கள் கவலைப்பட வேண்டிய விஷயமாச்சே! வால் பையனுக்கு இதுல என்ன அக்கறை?//
சேஷாசலம் எப்படி நாசமா போனா எனகென்ன என்று தான் இருந்தேன், இஸ்லாமிய நண்பர்கள் பதிவு போட்டு உலகத்தையே புரட்டி போட்டுடோம் என்பதாக கொக்கரிக்கும் முன்னர்!, ஆனால் இப்போ அப்துல்லா முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லும் பொழுது மொத்த குரானும் டுபாக்கூர் தானோ என கேள்வி எழுகிறது!, ஆண்களுக்கும் சொல்லாமல் விட்டிருந்தால் யார் கேட்கபோறாங்க, ஆணுக்கு மட்டும் போட்டிருக்கு, ஏன் பெண்ணுக்கு இல்லை என்று தானே கேட்கிறேன்! சந்தாகத்தை அங்கே போய் கேட்க சொன்னவர்கள் தயவுசெய்து அங்கே கேட்டு சொல்ல சொல்லுங்கள் அப்பாவி!, இல்லையென்றால் பாவி ஆகிவிடுவீர்கள்! இஸ்லாத்தை பழித்த குற்றம் உங்களுக்கும் வரும், உங்களுக்கு கிடைக்கும் நித்திய கன்னிகளுக்கு மொழுக்கட்டீர்(தலை) என்று இருக்கும் பரவாயில்லையா!?
டாக்டர் அப்துல்லாஹ்வின் பதிலுக்குப் பிறகுதான் திருமறைக் குர்ஆன் டுபாக்கூர்ன்னு கேள்வி எழுகிறதா?
இதற்கு முன்பு சரியாக இருந்ததோ? ஏன் இந்த முரண்பாடு உங்களிடம்? உங்களின் வாதம் எல்லாம் கேள்வியோடதான் நிக்குமோ?
இவ்வலைதளத்தின் கேள்விக்கான பதில் கீழ்கண்ட வலைதளத்தில்…
http://kuddusa35.blogspot.com/2010/04/blog-post.html
இந்த லிங்க்ல உள்ள கதைய படிச்சா சிரிப்பு தான் வருது …
மண்ணில் இருந்துதான் உருவாகப்படான் என்றால் மண்ணை மட்டும் உணவாக உட்கொள்ள வேண்டியது தானே .ஹலால் பிரியாணியை மட்டும் சக்கை போடு போடுக்ரிங்க ..எவளவு ஆடு பலியிடபடுகிறது இதையெல்லாம் (ஆடு )உங்க அல்லா படைகலியா ?மனிதனுக்கு ஒரு நியாயம் ஆட்டுக்கு ஒரு நியாயமா ?
மனிதனுக்கு ஒரு நியாயம் ஆட்டுக்கு ஒரு நியாயமா ?-
அனானி.
இல்லீங்கோ அனானி..இனிமேல் உங்களையும் – ஆட்டையும் ஒன்னாவே-ஒன்னுக்குள்ள ஒன்னாவே நெனச்சுக்குறோம்..அதுவரைக்கும் நீங்க கசாப்பு கடைப்பக்கம் போகதீங்க -ஆடுன்னு நெனச்சு உங்களை அறுத்து தலிகீழா தொங்கவிட்டிட போறாங்கோ
மனிதனுக்கு தேவையான உணவு எங்கே இருந்து வருகிறது
எல்லாம் மண்ணில்ருந்துதான் வருகிறது ஆடு ,மாடு மற்றும் சில
பிராணிகள் மனிதன் உண்பதுக்கு படைக்கபட்டது இது இஸ்லாமியருக்கு
மட்டும் அல்ல,இந்த மனிதகுலத்துக்கே படைக்கபட்டது .ஹலால்
அல்லத உணவு (பன்னி ) இதனால் பல நோய் வரும் என்று
உங்களுக்கு தெரியும் போன ஆண்டு “பன்றி காய்சல் உலத்தேயே!
பிரட்டி போட்டது நினைவு இல்லையா?
//எல்லாம் மண்ணில்ருந்துதான் வருகிறது ஆடு ,மாடு மற்றும் சிலபிராணிகள் மனிதன் உண்பதுக்கு படைக்கபட்டது இது இஸ்லாமியருக்குமட்டும் அல்ல,இந்த மனிதகுலத்துக்கே படைக்கபட்டது//
ஒரு உயிரினமும் பிற உயிரினத்தை சார்ந்துதான் வாழமுடியும் இதுதான் இயற்கை. இதில் மனிதன் விதி விளக்கு கிடையாது .மனிதனும் பிற விலங்கிற்கு இறை தான் .பசியோடு இருக்கும் சிறுத்தை புலியிடம் நீங்கள் மாட்டிவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான் .அங்கே அல்லாவும் கிடையாது குல்லாவும் கிடையாது .நீங்கள் நல்ல உணவாக்கப்படுவீர்கள் .இது தான் இயற்கை .
இந்த வீடியோ வை பாருங்கள் ஒரு குட்டி காட்டெருமை சிங்கங்களிடம் இருந்து தப்பிப்பதை.
http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM
சிங்கத்துக்கு பசி காடெருமைக்கு உயிர் முக்கியம் .நீங்களும் இதைபோல் மாட்டிவிட்டால் துநியைவிரித்து தொழுகை நடத்துவீர்களா ?நூற்றுகனகான மனிதர்கள் கட்டையும்,கம்பையும் கொண்டு விரட்டினால் மட்டுமே நீங்கள் பிளைபதற்கு சாத்தியம் உண்டு .இது உங்களுக்கு எனக்கு மட்டும் இல்ல எல்ல உயிரினங்களுக்கும் பொருந்தும் .போராட்டம் இருந்தால் தான் வாழமுடியும் .
//இஸ்லாமிய நண்பர்கள் பதிவு போட்டு உலகத்தையே புரட்டி போட்டுடோம் என்பதாக…//
சேஷாசலம் அப்துல்லா ஆனதற்காக இஸ்லாமிய நண்பர்கள் ஏன் உலகத்தையே புரட்ட வேண்டும்? இவர்கள் யாராவது போய் அவரை இஸ்லாத்திற்கு கட்டி இழுத்து வந்தார்களா? பேராசிரியர் அப்துல்லாவே சுயமாக ஆராய்ந்து சிந்தித்து எடுத்த முடிவு இது என மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்காக பேரா. அப்துல்லா ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் ஏன் இஸ்லாத்திற்கு மாறினார் என்று விளக்கம் கேட்க வினவு, சாகித் எல்லாம் ‘இந்திய மதமாற்ற அத்தாரிட்டி’களா என்ன? இவங்களோட கேள்விக்கெல்லாம் அவரு ஏன் பதில் சொல்லனும்? அவருக்கு வேற வேல இருக்காதா?
குர்ஆனில் உள்ள சில வசனங்களுக்கு சகோதரர் அப்துல்லா விளக்கம் சொல்லவில்லை என்றால் குர்ஆன் டுபாக்கூர் ஆயிடுமா? அவர் விளக்கம் சொல்லவில்லை என்றால் யார் விளக்கம் சொல்கிறேன் என்கிறார்களோ அவர்களிடம் போய் விளக்கம் கேளுங்கள் சார்.
இலவசமா ப்ளாக் கிடைக்குதுங்குறதுக்காக இவிய்ங்க பண்ற நாட்டாமை அலப்பறை தாங்கலை..! ஒரு பதிவுக்கு 100 ரூபா, ஒவ்வொரு கமெண்டுக்கும் 10 ரூபான்னு யாராவது சார்ஜ் பண்ணாங்கன்னா துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு அத்தனை பேரும் ஓடி ஒளிவாங்க!
போய் வேல வெட்டியை பாருங்க சார்!
நேரடி விவாதத்திற்கு வர மாட்டோம். ஆனால் நாங்க பக்கம் பக்கமா வீர வசனம் மட்டுமே பேசுவோம் என்பதை தெளிவா சொல்லிடலாமே?
ஒரு உதாரணம் யாரையும் புன்படுத்தவதற்கு அல்ல.
ஒரு “எக்ஸ்” என்ற பேருடைய ஒருவன் “ஒய்” என்பவனின்
மனைவியை வேசி என்று நாள்தோறும் சொல்லிக் கொண்டிருக்கிறான். அப்போ “ஒய்” எக்ஸ் கிட்ட வந்து என்னுடைய மனைவி வேசி என்று நிரூபி என்று சொல்கிறான். அதுக்கு “எக்ஸ்” அதெல்லாம் என் வேலை இல்லை நான் பாட்டுக்கு உன் மனைவி வேசி என்று சொல்லிக்கிட்டு இருப்பேன் என்று சொன்னால் அந்த “எக்ஸ்” ஐ நாம் என்ன செய்வோம் ?
அப்படித்தான் இருக்கு நம்ம கேள்விக்குறி வாதமும். நாங்க பாட்டுக்கு எதாச்சும் எழுதுவோம். நேரில் வந்து எழுதியதை நிரூபி என்று சொன்னால் அதெல்லாம் நாங்க வர மாட்டோம் என்று சொன்னால் இவர்களுடைய நேர்மையை இங்கு வருகின்ற வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும். என்ன ஹைதர் பாய் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் இவர்களுடைய நேர்மையை பற்றி.
ஷாஜஹானின் உதாரணம் அவரின் தரத்தை காட்டுகிறது.. மற்றபடி இசுலாமை இவ்வளவு கேவலமாக ஒரு உதாரணத்துக்கு கூட நான் சொல்லவில்லை..
தம்பி கேள்விக்குறி, நான் எடுத்துக்காட்டியது ஒரு உதாரணத்திற்கு தான். அந்த “ஒய்” இடத்தினில் உங்களை கூட நான் ஒரு உதாரணத்திற்கு சொல்லியிருகக் முடியும். ஆனால் கண்ணியம் கருதி நான் தவிர்த்து விட்டேன். எனவே நான் சொல்ல வந்த கருத்தை திசை திருப்பாமல் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிக்கவும்.
அவருக்கு திசைதிருப்பி என்று இன்னொரு பெயரும் வைக்கலாம்.
சகோதரர் கேள்விக்குறி..
பின்னூட்டம் எண் 23 – இதனை சற்று மீண்டும் வாசியுங்களேன்.. நான் தெளிவாக நேரிடையாக உங்களிடம் கேட்டேன்.. நீங்கள் எங்கள் கொள்கைகளை தவறென்று எழுதி கொண்டே இருகிறீர்கள்.. நாங்கள் நேரிடையாக குற்றச்சாட்டுகளை கூறுங்கள் பதில் கூறுகிறோம் விவாதிப்போம் என்கிறோம்.. என்று…அதற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை.. ஆனால் சகோதரர் ஷாஜகான் சற்று கடுமையாக ஒரு உதாரணத்தை கூறியதற்கு அவரை பற்றி குறை கூறி இருகிறீர்கள்.. நீங்கள் ஒன்றை கவனிக்க மறந்து விட்டீர்கள்.. அவரும் அந்த உதாரணத்தை கூறுவதற்கு வருந்தி இருக்கிறார்..
சகோதரர் ஹைதர் கவனிக்க. கேள்விக்குறியின் தரம் இந்த கேள்வியிலிருந்தே நீங்கள் புரிந்திருப்பீர்கள். அந்த “ஒய்” இடத்தினில் கேள்விக்குறியின் பெயரை என்னால் போட்டு இந்த உதாரணத்தை சொல்லியிருக்க முடியும். ஆனால் கண்ணியம் கருதி விட்டால் கேள்விக்குறி என்னை அப்படி இருக்க விட மாட்டார் போல.
சகோதரர் ரபீக் அவர்களுக்கு நான் ஆரம்பத்தில் கண்ணியமாக தான் கருத்தை போட்டேன். ஆனால் அவர்கள் வரம்பு மீறினார்கள். நானும் வரம்பு மீறினேன். வேண்டுமானால இந்த தளத்தினில் நான் போட்ட அத்துனை கமேன்ட்டுகளையும் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரரே. இவர்களுடைய வண்டவாளங்களை நன்கு அறிந்த சகோ நெத்தியடி முஹம்மது வந்தால் இன்னும் கேள்விக்குறியின் முகமூடி கிழியும்.
ஷாஜஹான் உங்கள் உதாரணமே முதலில் ஒரு ஓட்டை, அதாவது இங்கே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது…. நீங்கள் என்னவோ விவாதமே நடக்காதமாதிரி புளுகுகிறீர்கள்.. நீங்கள் சொல்லும் ஒரு நபரிடம் விவாதிக்க முடியாது என்று சொல்ல எங்களுக்கு உரிமையில்லையா.. அதான் காரணத்தை பலமுறை விளக்கி சொல்லியாச்சே..
அப்புறம் வரம்பு மீறுவதை பெரிது படுத்தவேண்டாம் என்று நான் வினவிடம் சொல்லியை நீங்கள் கவனிக்கவில்லையா?? எனக்கு உங்கள் மேல் ஒருகோபமும் இல்லை… நீங்கள் திட்டினால் நான் திட்டுவேன், நீங்கள் மரியாதையாக பேசினால் அப்படியே… இந்த மேட்டர இத்தோட விடுங்க.. ரபீக்கும், ஹைதரும் இத புரிஞ்சிகிடுவாங்க..
நீங்கள் சொல்லும் ஒரு நபரிடம் விவாதிக்க முடியாது என்று சொல்ல எங்களுக்கு உரிமையில்லையா.. அதான் காரணத்தை பலமுறை விளக்கி சொல்லியாச்சே. – கேள்விக்குறி..
சகோதரரே.. இப்போது நீங்கள் கூறிய கருத்து சகோதரர் சாகித் அவர்களின் பதிவிற்கு முற்றிலும் சரியான பதிலடியாக அமைந்துள்ளது.. அவரிடம் பேராசிரியர் அப்துல்லா அவர்கள் விவாதிக்க முடியாது இயலாது என்று தெளிவாக கூறி விட்ட பின்னரும் நீங்கள் அவர் பதிலளிக்க வேண்டும் என்று மல்லு கட்டி கொண்டு இந்த பத்திவை போட்டிருக்கிறீர்கள்.. ஆனால் உங்களிடம் விவாதத்திற்கு வாருங்கள் என்று அழைத்தால் முடியது என்று மறுகிறீர்கள்.. முரண்பாட்டின் மொத்த உருவகமாக இது தெரியவில்லையா?இனி சகோதரர் சாகித் கேள்விக்குறியின் பதிலை கொண்டு திருப்தி அடைவார் என்று நம்புகிறேன்..
சகோதரர் ஷாஜகான்.. சில ஸ்மயங்களில் பொறுமை இழப்பது தடுக்க இயலாத காரியம் ஆகிவிடும் மற்றவர் வரம்பு மீறும்போது.. ஆக வரம்பு மீறுபபவரிடத்த்ில் நீங்கள் வரம்பு மீறுவதை தவறென்று சொல்லவில்லை.. இருந்தும் மிக்க பொறுமை காக்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைத்தேன் அவ்வளவு தான்..
ரபிக் பெரியார்தாசன் எங்க்ள மேடையிலேயே அனைத்து மதங்களையும் கடவுள்களையும் வேதங்களையும் புராணங்களையும் விமரிசனம் செய்துள்ளார், பல ஆயிரம் பேரை நாத்திகராய் மாற்றியுள்ளார்… அவருக்கு பதில் சொல்லும் பொறுப்பு உள்ளது, அதே நேரத்தில் மறுக்கும் உரிமையும் உள்ளது… பதிவிலேயே சொல்லியிருக்கும்படி எத்தனையோ பேர் இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள் அவர்களையெல்லாம் போய் கேட்பதில்லையே..
பெரியார்தாசன் கதை வேறு.. ஒரு வேளை நான் பி.ஜெ வுடன் சேர்ந்து இசுலாமிய பிர்ச்சாரம் செய்து வந்து திடீரென இஸ்லாத்திலிருந்து விலகிவந்து இசுலாம் சரியில்லை என்று பேசினால் எந்த ஒரு நிலையில் இருப்பேனோ அந்நிலையில் பெரியார்தாசன் இருக்கிறார்.
எனவே உங்கள் கேள்வியில் தர்க்க நியாயம் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
தெளிவா சொல்லுங்க கேள்விக்குறி சகோ. பிஜே மதவாதியா? இல்லை அடிப்படைவதியா? இல்ல உழைத்து சம்பாதித்து சாப்பிடும் ஒரு சாதாரண முஸ்லிமா? பிஜே உழைத்துத் தான் சாப்பிடுகிறார் என்பதை நான் ஆதாரத்துடன் இங்கு சொல்லிருக்கேன். வேண்டுமானால் மண்ணடிக்கு சென்று கன்பர்ம் பண்ணிக்குங்க கேள்விக்குறி.
எப்போ சகோ ரபீக் போல சகோ ஹைதர் போல உழைத்து சம்பாதிக்கும் சகோ பிஜே விடம் நேரடி விவாதத்திற்கு செல்ல போகின்றீர்கள் கேள்விக்குறி? ஒரு வேளை அடுத்ததாக வேறு எதுவும் நேரடி விவாதம் செல்லாமல் இருக்க காரணங்களை தேடிக் கொண்டிருகிண்றீர்களா கேள்விக்குறி?
உழைத்து தின்றாலும் உழைக்காமல் தின்றாலும் சரி மத அடிப்படைவாதி, மதவாதி, மதவெறியாளன் எல்லாம் ஒன்னுதான்,… நான் ஏற்கனவே சொன்னபடி மதம்தான் மூலதனம் இவர்கள் செய்வது மதவியாபாரம். இதுபோன்ற மதவாதி, மத அடிப்படைவாதி, மதவெறியாள, மத வியாபாரிகளை நாங்கள் மதிப்பதில்லை, எனவே அவர்களிடம் விவாதிப்பதில்லை. ஹைதரையும், ரபீக்கையும் ஏன் உங்களையும், மதிப்பதினால் உங்களுக்கு பதில்சொல்லிக்கொண்டிருக்கிறேன்…
@@ஒரு வேளை RSS போல TNTJ ஒரு அரசியல்-சமூக ஒடுக்குமுறை சக்தியாக பரிணாமித்தது என்றால் (இந்தியாவில் அது சாத்தியமில்லை) அப்போது போராட்டங்கள் வேறு வடிவில் இருக்கும்.@@@
இதை எத்தனவாட்டி சொல்வது… புரியுதா இல்லையா????
TNTJ என்பது ஒடுக்குமுறை சக்தி அல்ல.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகின்ற ஒரு இயக்கம்.. நான் ஏற்கனவே கூறியது போல சக மனிதர்களை பற்றிய உங்களின் அளவுகோல் தவறான பார்வையில் இருக்கிறது.. ஒருவர் மதத்தில் தீவிர பற்றுள்ளவராக இருபதினால் உங்களின் மதிப்பை அவர்கள் பெற முடியாது என்பதை உற்று நோக்கினால் உங்களிடம் மதங்களை பற்றிய காழ்புனற்சியே இருக்கிறது என்பதை தவிர வேறொன்றும் இல்லை என்பது என்னுடைய அவதானிப்பு..
ரபீக் அதுதான் இந்தியாவில் அதற்கு சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறேனே… தவிர எனக்கு மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சியெல்லாம் இல்லை, மதம் மக்களுக்கு அபின் என்ற கார்ல் மார்க்சின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அது மிகவும் பொருட்செறிவுகள்ள சொற்றொடர்.
வினவு, மதப்பற்றுக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் என்ன வித்தியாசம் என்று தயவு செய்து எழுதவும்.
மதப்பற்று என்பது தனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் கடவுள், மதத்தை நம்புவர்கள் சமூக, அரசியல் தளத்தில் மதத்தை விலக்கி வைப்பவர்கள்.
மத அடிப்படை வாதம் என்பது தனிப்பட்ட வாழ்வை விடுத்து சமூக, அரசியல், பொது தளத்தில் தன் மதத்தை மட்டுமே வைத்து பேசுபவர்கள்.
இந்த அடிப்படையில் கம்யூனிச ஆட்சியில் மதப்பற்று தடை செய்யப்படாது. ஆனால் மத அடிப்படை வாதம் தடை செய்யப்படும்.
இசுலாமிய அடிப்படைவாதிகளின் ஆட்சியில் எல்லா நாத்திகர் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் தூக்கிலேற்றிக் கொல்லப்படுவார்கள்.
இந்த உலகில் ஏழை நாடுகளில் உள்ள முசுலீம் அமைப்புகள், இயக்கங்கள் எல்லாவற்றிற்கும் சவூதி அரேபியாவின் வஹாபி ஷேக்குகளின் எண்ணெய் பணம் நன்கொடையாக கொடுக்கப்படுகிறது. ஆதாரம் வேண்டுவோர் எங்கள் சகோதரர் ஹைதர் அலியிடம் விளக்கம் பெறலாம். இந்த ஷேக்குகளின் பணம் என்பது ஏழை நாடுகளின் இரத்தத்தை உறிஞ்சி சேர்த்த இரத்தப் பணமாகும். இது பெருமளவு அமெரிக்காவில் மூலதனமிடப்படுவதோடு சிறிய பகுதி ஏழை முசுலீம்களை மத அடிப்படை வாதத்தில் மூழ்கடிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே இசுலாமிய உழைக்கும் மக்கள் இந்த டாலர் ஷேக்குகளையும் அவர்களது பினாமிகளான ஆன்லைன் பி.ஜேக்களையும் தூக்கி எறியவேண்டும். அப்போதுதான் அவர்கள் சமூகத் தளத்தில் விடுதலை அடைவதற்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைய முடியும்.
களிமண்ணில் சுட்டு பிறந்தவன்தான் மனிதன் என்றும், பரிணா வளர்ச்சி பொய்யென்றும் தூற்றும் இந்த கோமாளிகளிடம் எதை வைத்து விவாதிப்பது? குர்ஆனை வைத்து எம்.பி.பி.எஸ் பாடத்திட்டம் மாற்றப்பட்டால் மக்களின் கதி என்ன?
//களிமண்ணில் சுட்டு பிறந்தவன்தான் மனிதன் என்றும், பரிணா வளர்ச்சி பொய்யென்றும் தூற்றும் இந்த கோமாளிகளிடம்….//
நானு முன்னமே இந்த கேள்வியை கேட்டேன். யாருமே பதில் சொல்லலீங்களே?
//பரிணாமக் கொள்கையை அறிவியலில் சேர்த்துட்டாய்ங்களா? எப்ப? சொல்ல்ல்லவேயில்லை!!!???
ஆதாரப்பூர்வமா நிரூபிக்கப்பட்டவை மட்டுமே அறிவியல்னு சொல்லிட்டிருந்தாய்ங்களே? இப்போ கற்பனைக் கதைகளையும் சேர்த்துக்கிறாங்களா? அப்படின்னா சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் எல்லாம் இனிமேல் அறிவியல் பாடப் புத்தகங்களில் பார்க்கலாம் என்று சொல்லுங்கள். மனிதனின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி ‘பறக்கும் மனிதன்’தான் என்பதை டார்வின் சொல்ல மறந்து விட்டாரா?//
மனிதனின் பரிணாம வளர்ச்சி பறக்கும் மனிதன்தான். சந்தேகமே இல்லை, அனால் அதை அவன் உடல் ரீதியாக அடையவில்லை. மாறாக அறிவின் துணை கொண்டு பறக்கும் கருவிகளை கண்டறிந்தான். எனவே உடல்ரீதியாக பறக்கும் மனிதனாக மாறமாட்டான். அணைத்து வளர்சிகலும் அறிவுபூர்வமானவை. பரிணாம வளர்ச்சி உடல் ரீதியாக உறைந்துவிட்டதே உண்மை.
சபாஷ் அப்பாவி…
’அறிவாளி’களின் பதிலை விரைவில் அவலுடன் எதிர்ப்பார்த்துகொண்டிருக்கிறேன்
அய்யா வினவு,
பரிணாமக் வளர்ச்சி கொள்கையை எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்துல சேர்த்துட்டாங்களாய்யா? எந்த அறிவாளிங்க எப்ப சேர்த்தாங்க?
சகோதரர் வினவு.. நான் பெரியவர் பீஜே விற்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்… நீங்கள் கூறுகிறீர்கள் அவர் அரபு ஷேக்க்குகளின் பினாமி என்று.. எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினீர்கள்.. எத்தனையும் ஆதாரத்தொடு கூறுங்கள்.. போகிற போக்கில் வசை பாடி செல்வது உங்களை போன்ற அறிவு ஜீவிகளுக்கு போது வாழ்வில் உள்ளவருக்கு அழகல்ல.. நாங்கள் அறிந்த வரை அரபுலக ஷேக்க்குகலிடமிருந்து பணம் பெறுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கும் இயக்கத்தை சேர்ந்தவர்.. அந்த விதியினை உருவாக்கிய மக்களில் ஒருவர்.. நன்றாக புரிந்து வைத்து கொள்ளுங்கள்.. எந்த கொள்கையிலும் அடிப்படையை பேணாதவன் அந்த கொள்கையை பற்றி கொண்டு வெகுநாள் இருக்க இயலாது.. நீங்கள் கம்யூனிச அடிப்படைவாதி தான்.. ஏனெனில் கம்யூணிசத்தை உயிர் மூச்சாக கொண்டுள்ளீர்கள்.. அதே அடிப்படியில் நீங்கள் கூறுகின்ற பெரியவர் பீஜே உம் அடிப்படை வாதியக இருப்பதில் தவறில்லை.. அரபிகலின் பணத்தில் தான் இஸ்லாம் வளர்கிறது.. வாழ்கிறது என்பதை மாற்றிகொள்ளுங்கள்.. இஸ்லாம் நம்பிக்கை அடிப்படையில் உள்ள கொள்கை.. இங்கு பணத்திர்கோ மனிதர்களுக்கோ முக்கியத்துவம் இல்லை.. கொள்கை மட்டுமே..
If you want a video i will send you a video. Let me your email id
this reply to Mr. rafiqu that is the video evidencnce for pj getting money from southi
சகோதரர் சாகித் அவர்களுக்கு,
rafiq.miyan@gmail.com
இது தான் என்னுடைய மின்னஞ்சல் முகவரி.. உங்களுடைய வீடியோ ஆதாரத்தை எதிர் பார்கிறேன்..
பொறுத்து பொறுத்து பார்த்தார் பெரியார் தாசன். நல்ல விலை கிடைத்ததும் விலை போய் விட்டார் . நல்ல காசு பார்த்திருப்பார். விடுங்கள் பிழைத்து போகட்டும். படுகிழவன் வயதில் தான் புத்தி வந்ததாம். அப்ப இவ்வளயு காலமும் ஊரை ஏமாற்றி வந்து இருக்கின்றார். இதுவும் ஏமாற்ரளுக்கான ஆரம்பமோ என்னவோ.
the
வயிறு எரியுது அப்படித்தானே நல்ல ஒ வயிறு எரியட்டும் வயித்தேறிச்சல்லுல ஒரு கிலோ அரிசியை கொட்டுன வேந்துரும் போல விக்கிற வேல வாசியுல்ல ஒனக்கு மட்டும் கேஸ் மிச்சம்
//இந்த அடிப்படையில் கம்யூனிச ஆட்சியில் மதப்பற்று தடை செய்யப்படாது. ஆனால் மத அடிப்படை வாதம் தடை செய்யப்படும்.//
அப்படிங்களா? சீனாவுல உய்குர் பகுதியில ஏதோ பெரச்னையாமே? என்ன நடக்குது அங்கே?
//இசுலாமிய அடிப்படைவாதிகளின் ஆட்சியில் எல்லா நாத்திகர் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் தூக்கிலேற்றிக் கொல்லப்படுவார்கள்.//
மறுபடியும், அப்படிங்களா? சவுதி அரசு இஸ்லாமிய அடிப்படைவாத அரசுன்னுதான் சொல்றாங்க.. ஆனா தோழர் செங்கொடி அங்கேதான் பொழப்பு நடத்துறாராமே? பத்திரமா இருக்காருல்ல?
அடுத்து செங்கொடிக்கு மிரட்டலா…. அடடா என்ன கவித்துவம்.
//அடுத்து செங்கொடிக்கு மிரட்டலா…. அடடா என்ன கவித்துவம். //
அடடா… இப்படி கூடவா இதை புரிஞ்சுப்பீங்க? சவுதிக்குப் போனா அங்கே நாத்திகர் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள தூக்குல போட்ருவாங்கன்னு வினவுக்கு தெரிஞ்சுருக்கு. அது தெரியாம செங்கொடி அங்கே போய் மாட்டிக்கிட்டாரோன்னுதான் கேட்டேன்.
அப்பாவி….
No political parties or labor unions are permitted to exist. In the 1990s Arab Socialist Action Party and the Communist Party of Saudi Arabia were disbanded and their members were released from jail, after agreeing to cease and desist their political activities என்பது உங்களுக்கு தெரியுமா????
ரபிக், நாங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்தான் போராடுகிறோம், இந்த நிலையில் முன்பு நான் இதே தளத்தில நான் கேட்ட கேள்விகளை உங்களிடமும் கேட்கிறேன்
1) இங்க வந்து வினவை திட்டி நூறு பின்னூட்டம் போட்ட இவங்க, இதே தளத்துல வந்து இந்து மதவெறிய விசமா கக்குற ஆர்.எஸ்.எஸ், அம்பிகள எதுத்து ஏன் ஒரு பின்னூட்டம் கூட போடல ஏன்???
2) இவங்க ஆதரவாளர் ஷேக்தாவூத் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மதவெறிய திட்டி எழுதனவிட அதிகமா வினவ திட்டித்தானே எழுதிகிட்டிருக்காரு.. அது ஏன்னு நீங்க யோசிசீங்களா????
3) ம.க.இ.க இங்க இந்துமதவெறிக்கு எதிரா களத்துல நிக்குற முதலும் முக்கியமுமான அமைப்பு, எங்களத்தான் மொதோ ஒழிக்கனுமுன்னு எல்லா ஆர்.எஸ்.எஸ். காரணும் ஸ்டேட்மென்டு விட்டாச்சு.. இப்ப இணைய இசுலாமிய மதெவெறியங்களுக்கும் நாங்கதான் மொத டார்கெட்டு ….அது ஏன்????
4) குஜராத் கலவரத்தை கண்டிச்சு தமிழகமெங்கும் கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டுல ‘பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு’ .நடத்துனது நாங்கதானே, அப்ப இந்த மதவெறி பிடிச்ச கூட்டம் ஏன் சும்மா அப்பவே எங்கள கண்டிச்சு எழுதவேண்டியதுதானே ???
5) குஜராத்துல பாதிக்கப்ட்ட இசுலாமியர்களை கொண்டுவந்து ரத்த சாட்சியமா தமிழக மக்கள் முன்னிலையில நிறுத்தி இந்து மதவெறி பயங்கரவாதிகள அம்பலப்படுத்தினப்போ இந்த ஆளுங்க எங்க போனாங்க??
6) ஆப்கான் தாக்குதலுக்கு இணையான தாக்குதல்தானே தன்டகாரண்ய பழங்குடிக்கு மேல நடக்கு, அதுக்கு எதிரா போராடரவங்க எங்க தோழர்கள்தானே.. அதபத்தி ஏன் இந்த மதவெறி புடிச்ச கூட்டம் வாயே திறக்கறதில்லையே …ஏன் அவங்க ஒடுக்கப்பட்டவங்க இல்லையா??
இன்னும் இது போல நிறையா சொல்லலாம்… இதிலேருந்து நீங்க TNTJ வ அளந்து பாருங்க…
சகோதரர் கேள்விக்குறி.. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் நியாயமானாதே..
***1) இங்க வந்து வினவை திட்டி நூறு பின்னூட்டம் போட்ட இவங்க, இதே தளத்துல வந்து இந்து மதவெறிய விசமா கக்குற ஆர்.எஸ்.எஸ், அம்பிகள எதுத்து ஏன் ஒரு பின்னூட்டம் கூட போடல ஏன்???*****
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள தவறி விட்டீர்கள்.. மாதவெரியை விஷமாக கக்குபவர்கள் என்று அவர்களை கூறி விட்டீர்கள்.. நாங்கள் உங்களிடம் விஷத்தை கலக்கவில்லை.. புகட்டவில்லை.. நீங்கள் அவர்களையும் விமர்சிக்கின்றீர்கள்.. எங்களையும் விமர்சிக்கின்றீர்கள்.. ஆனால் நாங்கள் உங்களை உங்கள் விமர்சனங்களை நேரிடையாக வைத்து கலந்துரையாடுவோம் என்று தானே அழைக்கின்றோம்.. மற்றபடி “அடுத்தவருடைய கடவுளர்களை தித்டாதீர்கள்.. அவர்கள் அல்லாவையும் திட்டுவார்கள்..” என்ற இறைவனின் கட்டளைக்கினங்க அடுத்தவருடைய மாத நம்பிக்கைகளில் நாங்கள் விமர்சனம் செய்வதில்லை.. செய்யவில்ல்லை.. “அடுத்தவருடைய தந்தையை நீங்கள் திட்டினீர்கள் என்றால் அவர்கள் உங்களுடைய தந்தையை இகழ்வார்கள்” என்று இஸ்லாம் கூறி உள்ள படியால் எங்களுடைய மரியாதையை நாங்கள் காப்பாற்றி கொள்ள வேண்டி அடுத்தவருடைய நம்பிக்கைகளை குறை கூறுவதில்லை..
******2.இவங்க ஆதரவாளர் ஷேக்தாவூத் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மதவெறிய திட்டி எழுதனவிட அதிகமா வினவ திட்டித்தானே எழுதிகிட்டிருக்காரு.. அது ஏன்னு நீங்க யோசிசீங்களா????*******
எனக்கு அத்தனை பற்றிய அறிவு இல்லை.. அவர் என்ன கூறினார்.. எதனால் கூறினார் என்று தெரியவில்லை..
*****3) ம.க.இ.க இங்க இந்துமதவெறிக்கு எதிரா களத்துல நிக்குற முதலும் முக்கியமுமான அமைப்பு, எங்களத்தான் மொதோ ஒழிக்கனுமுன்னு எல்லா ஆர்.எஸ்.எஸ். காரணும் ஸ்டேட்மென்டு விட்டாச்சு.. இப்ப இணைய இசுலாமிய மதெவெறியங்களுக்கும் நாங்கதான் மொத டார்கெட்டு ….அது ஏன்????*******
மதவெறிக்கு எதிர்த்து நீங்கள் செயல்படுவதில் மகிழ்ச்சி.. அம்மத வெறியானது அடுத்தவரை துன்புருத்த்லுக்கு உட்படுதுமாயின் அது கண்டனத்திர்குறியது தண்டனைக்கு உரியது.. இப்ப இணைய இசுலாமிய மதெவெறியங்களுக்கும் என்று கூறி இருக்கிறீர்கள்.. என்னை பொறுத்தமட்டில் நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் அதனை நேரிடையாக வையுங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து கூறுகிறோம் என்பதே எல்லோரும் கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.. உங்களை தரக் குறைவாகவோ இல்லை எதிரியாகவோ நினைப்பதில்லை.. எம்மீது விமர்சனம் வைக்கப்படும் போது அதனை சரி செய்வது நியாயத்தை நிரூபிக்க நினைப்பது தவறில்லை..
******4) குஜராத் கலவரத்தை கண்டிச்சு தமிழகமெங்கும் கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டுல ‘பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு’ .நடத்துனது நாங்கதானே, அப்ப இந்த மதவெறி பிடிச்ச கூட்டம் ஏன் சும்மா அப்பவே எங்கள கண்டிச்சு எழுதவேண்டியதுதானே ???
5) குஜராத்துல பாதிக்கப்ட்ட இசுலாமியர்களை கொண்டுவந்து ரத்த சாட்சியமா தமிழக மக்கள் முன்னிலையில நிறுத்தி இந்து மதவெறி பயங்கரவாதிகள அம்பலப்படுத்தினப்போ இந்த ஆளுங்க எங்க போனாங்க??*******
குஜராத் கலவரத்தை கண்டித்த மட்டில் உங்களை ஏன் நாங்கள் கண்டிக்க வேண்டும்.. நீங்கள் மட்டுமல்ல என்னோடு சேர்ந்து பெரும்பாலான இந்து மத சகோதரர்களும் கண்டித்தனரே.. அநியாயத்தை தட்டி கேட்பதில் நீங்கள் முந்திக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.. நீங்களும் கண்டனங்களை பதிவு செய்தீர்கள்.. நாங்களும் செய்தோம்.. எல்லா இயக்கங்களும் டீஎன்டீஜே உட்பட எல்லோரும் போராட்டங்களி நடத்தினார்கள்..
******6) ஆப்கான் தாக்குதலுக்கு இணையான தாக்குதல்தானே தன்டகாரண்ய பழங்குடிக்கு மேல நடக்கு, அதுக்கு எதிரா போராடரவங்க எங்க தோழர்கள்தானே.. அதபத்தி ஏன் இந்த மதவெறி புடிச்ச கூட்டம் வாயே திறக்கறதில்லையே …ஏன் அவங்க ஒடுக்கப்பட்டவங்க இல்லையா??*******
அவர்களும் ஒதுக்க பட்டவர்கள் தான்.. நசுக்க பட்டவர்கள் தான்.. மிதிக்க பட்டவர்கள் தாம்.. ஆனால் அவர்களை விட மோசமான நிலையில் உள்ள இஸ்லாமிய சமூக மக்களை அவர்களின் வாழுவாதாரத்தை உயர்த்த வேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கிறதே.. எம் சமூக மக்களிடத்திலே புரையோடி இருக்கும் மூட நம்பிக்கைகளை களைய வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறதே.. இதனை நாங்கள் செய்தாக வேண்டும் இல்லையா?
மேலும் நீங்கள் கூறியுள்ள மேற்கண்டவை யாவும் அரசியல் சம்பந்தப்பட்டவை ஆதலால் இந்த பதிவுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாலும் அதற்கான சந்தர்ப்பம் அமைக்கையில் நாம் அதனை பற்றி பேசலாம்..
இப்போது பத்திவை பற்றி மட்டுமே நேரிடையாக கலந்துரையாடுவோம் .. பதிவு கொள்கை சம்பந்த பட்டது.. யாருடைய கொள்கை சரி என்பதில் தான்…
//எம் சமூக மக்களிடத்திலே புரையோடி இருக்கும் மூட நம்பிக்கைகளை களைய வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறதே.. இதனை நாங்கள் செய்தாக வேண்டும் இல்லையா?//
என்னை கொடுமை சரவண்ணன் இது?
ரபிக் மதம் வேறு அரசியல் வேறு என்று நீங்கள் கருதுவதாலேயே நீங்கள் அடிப்படைவாதியல்ல என்பது தெளிவாகின்றது…. மத அடிப்படைவாதிகள் கருத்து வேறு மதம்தான் அவர்கள் அரசியலின் மையம்.. அதுதான் அடிப்படைவாதம் … நாங்கள் அடிப்படைவாதிகள் இல்லையென்பதனால்தான் சாதிமத கொள்கை வித்தியாசம் இல்லாமல் எந்த ஒடுக்கப்பட்ட மக்க்ள பாதிக்கப்படும்போது நாங்கள் அதை எதிரத்து போராடமுடிகிறது… மத அடிப்படைவாதிகளாள் தங்கள் மத்த்தை தாண்டி சிந்திக்க முடியதில்லை..
சகோதரர் கேள்விக்குறி…
மதம் வேறு அரசியல் வேறு என்பது உங்களுடைய எண்ணம். இசிலாதை பொருத்தவரை அப்படி அல்ல.. இஸ்லாம் அரசியலுக்கும் வழிமுறையை வகுத்து கொடுத்திருக்கிறது.. ஆனால் நீங்கள் மேற்கோளிட்ட யாவும் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லை என்பதாலேயே நான் விவாதிக்க விரும்பவில்லை என்று கூறினேன்.. நபிகள் பெருமகனார் அரசியலிலும் ஆன்மீகத்திலும் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியே சென்றுள்ளார்.. அரசியல் வாழ்க்கையும் வேண்டும் அதே நேரத்தில் ஆன்மீகத்திலும் விலக கூடாது.. கொள்கை என்பது இதில் மிகவும் முக்கியம் சகோதரரே.. கொள்கையை விட்டு தடம் புரள செய்யும் அரசியல் தேவை இல்லை என்பது என்னுடைய கருத்து..
சரி ரபீக் மதமும் அரசியலும் ஒன்று என நீங்கள் கருதினால் எனது ஒரு ஐயத்தை தீர்த்து வையுங்கள். அனைவரையும் சகோதரர் என்று அழைக்கும் இசுலாமில் ஏன் மற்ற மதங்களை போலவே ஏழை பணக்காரர் வித்தியசம் உள்ளது.. அந்த வித்தியாசத்தை இசுலாமிய முறைப்படி நீங்கள் எப்படி தீர்க்கப்போகிறீர்கள்???
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு எல்லாம் சமய சந்தர்ப்பங்களை கொண்டும் (வெகு சில வேலை திறமைகளை கொண்டும்) உருவாக்கப்பட்டவை.. முதலில் இஸ்லாமியர் ஆகி விட்டால் சமூக ஏற்ற தாழ்வுகள் (இன மொழி சாதி) பற்றிய பாகுபடுகள் நீங்கி விடும் என்பது மட்டுமே.. அதற்காக ஏழை பணக்காரன் வித்தியாசம் போய் விடும் என்பதல்ல.. இஸ்லாமை ஏற்று கொள்ள நம்பிக்கை மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர பணம் முதலிய எதிர்பார்ப்புகள் அல்ல.. இஸ்லாம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தை ஒழிக்குமா என்றால் நிச்சயம் ஒழிக்கும்.. ஒவ்வொரு பணக்காரனும் தனக்கு அளிக்கப்பட்ட செல்வதிற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.. தர்மம் செய்தாக வேண்டும்.. வசதி குறைந்தவர்களின் வாழுவாதாரத்திற்கு உதவி இருக்க வேண்டும்.. உதவி செய்யபெற்ற ஏழையும் அந்த உதவியை கொண்டு அதில் வரும் பணத்தை கொண்டு தான் முயற்சியுடன் உழைத்து முன்னேற வேண்டும்.. இதை தான் இஸ்லாம் கூறுக்கிரது.. வெறுமனே உதவியை மட்டும் பெற்று கொண்டு ஒன்றும் செய்யாமல் ஏழையாகவே இருப்பது இசிலாதின் குற்றம் அல்ல… அதே போல பணக்காரனும் அடுத்தவருக்கு உதவி செய்யாமல் இருப்பது அவனுடைய குற்றமே தவிர இஸ்லாத்ின் குற்றம் அல்ல.. ஆனால் அவ்வாறு தனது செல்வதை கொண்டு அடுத்தவருக்கு உதவி செய்யாமல் இருந்தவன் நாளை மறுமை நாளிலே அதற்குரிய பதிலை இறைவனிடம் கொடுத்தாக வேண்டும்..
ரபிக், உங்களுகடைய இந்த பதிலை நாம் விவாதிக்கலாம்… , விவாதத்தில் மற்றவர்களும் கலந்து கொண்டால் நலம்… வெளியில் செல்லவேண்டியிருப்பதால் சில மணிநேரத்தில் எழுதுகிறேன்…
கேள்விகுறி – முர்கணும் முதலையும் கொண்டது விடா! மத யானைகளுடன் மல்லுகட்டதே! do not treat them as ur equals. their mental evolution is retarded because of religion. One important request to vinavu – please reduce these kind of frivilous postings. I am expecting an acerbic posting on IPL from Vinavu team. There are bigger social diseases to be cured than Seshachalam & his delusions.
சகோதரர் கேள்விக்குறி.. சகோதரர் ஷாஜஹான் நேரிடையாக கேட்டு விட்டார்.. உங்களின் பதில் என்ன?
ரபீக் மேலே சொல்லியிருப்து புரியவில்லையா?
மன்னிக்கவும் சகோதரர் கேள்விக்குறி.. நான் பதில் தரும் முன்னர் உங்களின் பதில் வந்து விட்டதை நான் கவனிக்கவில்ல்லை..
அட இதுக்கு ஏங்க மன்னிப்பெல்லாம்.. don’t be so formal
அஸ்ஸலாமு அலைக்கும்
மண்ணடி எந்த வருடத்தில் இருந்து கடை இருக்கிறது என்று சொல்ல முடியுமா
அனைத்து நண்பர்களுக்கும் நான் தான் nogod7 நானும் கடவுளில்லை என்று தான் இருந்தேன் ஆனா மேலே முஸ்லிம் நண்பர்கள் திறமையா வாதம் பன்னினாங்க அதனால அல்லாவுக்கு ஒரு சக்தியும் இல்லை என்று முடிவு பன்னி மேலே இருக்கும் முஸ்லிம் நண்பர்களை சக்தயுள்ளவர்களாக மதித்து நான் அவர்களை கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்.
எனக்கு பதில் சொல்ல ஒரு இஸ்லாமியரும் இல்லையா!? இல்லை நான் கேட்டது கேள்வியே இல்லையா!?
என்னங்கய்யா இது, விஞ்ஞான மார்க்கம் இஸ்லாம்னு சொல்றிங்க, கேள்வி கேட்டா பதிலை காணோம்!
//எனக்கு பதில் சொல்ல ஒரு இஸ்லாமியரும் இல்லையா!? இல்லை நான் கேட்டது கேள்வியே இல்லையா!?//
இறப்பிற்கு பின் சொர்க்கம் நரகம் உண்டு என்ற நம்பிக்கை உடைய, முஸ்லிமான, பெண்னுக்கு வர வேண்டிய சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கிறது. இந்த மூன்று பிரிவில் நீங்கள் எந்தப் பிரிவு என்பதை சொல்லவேயில்லையே?
சகோதரர் வால் பையன்.. முதலில் கடவுள் உள்ளாரா இல்லைய என்பதை நீங்கள் முடிவு செய்து விட்டால் நீங்கள் கேட்ட அந்த கேள்விக்கான பதில் கிடைத்து விடும்.. கடவுளே இல்லை என்று கூறி கொண்டிருக்கும் நீங்கள் சொர்ககம் நரகம் பற்றியோ அங்கு உள்ள சுக துக்கங்களை பற்றியோ ஐயம் கொள்ள தேவை இல்லை.. ஆக உங்களுக்கு இப்போது முதலில் தேவையான பதில் கடவுளை பற்றியது.. அதற்காக நேரடி கலந்துரையடலுக்கு அறிஞர் பெருமக்கள் தயாராக இருக்கின்றனர்… முதலில் அத்தனை பற்றி முடிவு செய்யலாமே?
அறிஞர் பெருமக்களே !
முதலில் நீங்கள் தொழுகை நடத்தும் மாஸ்க் கு வெளியே உள்ள பிச்சைகாரர் கலை (நம் ரத்தங்களை)உங்களுக்கு நிகராக வாழ வையுங்கள் ..
நான் உள்ளேன் ஐயா
eppadi
என் கேள்விக்கு பதில் சொல்லக்கூடாதுன்னு அல்லா சொல்லிட்டாரா!?
அப்பாவி சார், மெட்ராசுல அப்போலோன்னு ஒரு ஆசுபத்திரி இருக்கு அசப்புல பாத்தா அரேபியா மாதிரி இருக்கும் அவ்வளவு ஷேக்குங்க கூட்டம் மஸ்கட்லேருந்தும் பிற அரபு நாடுகளிருந்தும் வைத்தியம் பாத்துக்க வருவாங்க.. என் கேள்வி என்னன்னா நோய் வந்தா எம்பிபிஎஸ் படிச்ச டாக்டர் கிட்ட வரீங்க, அவர் பரிணாம வளர்ச்சிய ஏத்துகிட்டு தப்பான அறிவிய புரிஞ்சவராச்சே பேசாம மக்கத்து மசூதியில இருக்குற உலமாக்கிட்ட போனீங்கன்னா அவர் முட்டிக்கு ஆபரேசன் பண்ண போறாரு..
இங்கு அறுபது முழம் ஆதமமுடைய மகன் ஆறு அடியாக மாறியது எப்படி என்ற கேள்விக்கும் விந்தனுவுக்கும் அண்டனுவுக்கும் உயிர் இருக்கா என்ற கேள்விக்கும் எந்த இஸ்லாமியரும் பதில் சொல்லக்காணமே. பரிணாமம் பாடத்தை படிக்காவிட்டால் மருத்துவ சான்றிதழ் இஸ்லாமியராக இருந்தாலும் கிடைக்காது என்பது தெரியுமா உங்களுக்கு ?
நன்பர் சாகித் நான் கேட்ட அதாரங்களுக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலிலும் இல்லையே உங்களுக்கு வேட்கம இல்ல
///எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்ததுபோல் விவாதிப்பதும், ஆதாரம்தா என்று கேட்பதும், ஆதாரத்தை முன்வைத்தால் “அப்படியா என்குத்தெரியல. நீங்க அவரோட வந்து விவாதீங்க” என்று மழுப்பிவிட்டு ஓடிவிடுவதும். 28 வருடமாக நான் அனுபவிக்கும் ஒன்றுதான. மொட்டையடித்ததற்கு ஆதாரத்தை நான் தருவதிருக்கட்டும். அதற்குமுன், அப்படி மொட்டையடித்திரந்தால் அது சரியா தவறா என்று எல்லாம் தெரிந்த ஞானியான அவர் தைரியமாக கூறுவாரா?/// சாகித் இங்கே பின்னூட்டம் வர எல்லோரும் பி ஜெ ரசிகரும் இல்ல பி ஜெ இஸ்லாத்திற்கு முழு அத்தாரிட்டியிம் இல்ல உன்னுடைய 28வருட அனுபவத்தையும் பொய்யாக்க ஒரு சான்ஸ் அதராத்த கொடு நீ உன்மையானவன் இஸ்லாத்தியுள்ள கோபத்தில் RSSமாதிரி அவதூறு சொல்பவன் இல்லை என்பதை புரிந்துக்கொள்கிறோன்///உங்களுக்கு நேரடிய போன் பன்னி பேசிய போது நான் கொஞ்சம் வேலய இருக்கே 3ன்று நாட்களில் அதாரம் தருகிறேன் என்று சொன்னீர்களே எங்கே அந்த நேர்ம
எந்த இஸ்லாமிய நாடுகளிலாவது மத சுதந்திரம் உள்ளதா ? அந்த நாடுகளில் முஸ்லிம் ஒருவன் அவனே விருபபட்டும்கூட மதம் மாற முடியாது .எல்லா இஸ்லாமிய நாடுகளில் அந்த நாட்டின் சட்ட திட்டங்களின் படி ஒரு முஸ்லிம் மத மாறமுடியாது . மாற்று மத பரப்புரைக்கு அனுமதி கிடையாது ,( நான் பெரியார்தாசனின் இஸ்லாமிய மத மாற்றத்தை எதிர்கவில்லை . அது அவரின் தனிப்பட்ட விருப்பம் . மனசாட்சி சுதந்திரம் .) . பெரியார்தாசன் மதம் மாறிய சவுதி அரேபியாவில் முஸ்லிம் ஒருவன் மதம் மாறினால் தூக்கு தண்டனை . இதை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் . அமெரிக்க , ஐரோப்பிய , இஸ்லாமிய தவிர்த்த ஆசியா நாடுகளில் இந்தியா உட்பட ( இங்கும் கூட ஹிந்துத்வா அமைப்புகள் இஸ்லாமிய நாடுகளில் உள்ளதை போல மதம் மாறும் உரிமையை பறிக்க முயல்கின்றன ) நாடுகளில் மத சுதந்திரம் உள்ளது .(மதத்தை பற்றி பேச , பரப்ப மற்றும் மாற்ற உரிமை உள்ளது .
மலேசியா பொயி பாத்துயிருக்கிய (ஒராங் கீல) ௮௦௦௦ங்க 8000கோவில் இருக்கு பாத்திகோப் முருகன் கோவில் பொயிருக்கிய (பில்லா படத்துல அஜித் ஆடுவரே)அந்த எட்ந்தப்ப
ஸாரி ஒராங் கீல என்னனு சொல்ல மறந்துட்டேன் மலாய் மொழியில் லுசுபயன்னு அர்த்தம்
இஸ்லாமிய நாடுகளில் கோயில் இருகிறதா , சர்ச் இருகிறதா என்று
நான் கேட்கவில்லை , முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் ஒருவன் அவனே விரும்பினாலும் மதம் மாறமுடியுமா ? முஸ்லிம்களை மதம் மாற்ற
பிற மதத்தவர்களுக்கு அனுமதி உண்டா ? முஸ்லிம் ஒருவன் தான்
வெளிபடையாக நாத்திகன் என்று அறிவிதுகொள்ள முடியுமா ? அல்லது
தான் இஸ்லாத்தில் விட்டு நீங்கியவன் என்று வெளிபடையாக கூற முடியுமா ?
தோழருக்கு நன்றி!
பெரியார்தாசனே இஸ்லாத்திற்கு வந்துவிட்டார் என்ற முஸ்லீம்களின் ஆரவாரத்திற்கு இப்பதிவு சரியான பதிலடியாக இருக்கும் என நினைக்கின்றேன் இயற்கையா? இறைவனா! என்பதற்கு அறிவியலார்கள் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்க அவ்வொவ்வொன்றிலும் இறைவனைக் காணாதபோது மதப்பற்றாளர்கள் அக்கண்டுபிடிப்புகளையே தங்களுக்கானதாக வளைத்துக்கொள்ள வசன வார்த்தைகளுக்கு பல்வேறு அர்த்தங்கள் கொடுக்க முனைகின்றனர். அதில் ஒன்றே இதயத்தை குறிக்கும் ”கல்ப்” என்ற அரபிச் சொல்லிற்கு மூளை என்ற மற்றொரு பொருள் உண்டு என முஹம்மதின் ரசிகன் இங்கே நமக்கு பூ சுற்றுகிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதனுக்கு இருந்த்தைவிட தற்போதைய மனிதனுக்கு மூளையின் அளவு பெரிதாகிக்கொண்டே வருகிறது. இதனால் முன் மண்டையின் அளவும் பெரிதாகிறது. இது தற்போதைய மனிதன் அதிகமாக சிந்தனை செய்வதின் காரணமாக ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி. பரிணாமத்தை மறுப்பவர்கள் ஆதமின் மண்டை ஓட்டை எடுத்து ஆராய்ந்து பார்க்கலாம். ”நான் பறக்க நினைக்கின்றேன் உடனே எனக்கு இறக்கை வந்துவிடுமா” என அறிவின் உச்சியில் நின்று பரிணாமம் பற்றிய தமது புரிதலை விளக்கி புல்லரிக்க வைக்கிறார் பீஜே. இவரை நம்பித்தான் விவாத்த்திற்கு அழைக்கின்றனர் நமது சகோதர்ர்கள். எப்படித்தான் சமாளிக்கப் போகிறாரோ தோழர்.செங்கொடி.
தன்னைத் தானே படைத்துக்கொண்ட இறைவன் பிறகு ”லவ்ஹூல் மக்பூல்” என்ற பலகையையும் ஒரு எழுதுகோலையையும் தான் படைத்திருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து படைப்புகளும் படைக்கப்படுவதற்கு முன்பே இப்பலகையில் எழுதிவிட்டானாம். தான்தோன்றி இறைவன் தான்தோன்றி யதையும் தான்தோன்றி யபிறகு எழுதினானா! அல்லது தான்தோன்றி யதற்கு முன்பே எழுதிவிட்டானா! ஏனென்றால் படைத்த அனைத்தும் எழுதபட்டுவிட்டதாககூறினால் தன்னைத்தானே படைத்துக்கொண்டு தான்தோன்றி யதைப் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டுமல்லவா! 20-04-2010. மாலை 5.03 மணிக்கு தோழர். கேள்விக்குறியை சகோதர்ர் ஷாஜஹான் தம்பி கேனைக்குறி என்றுதான் அழைப்பார் என்று அப்பலகையில் இறைவனால் எழுதப்பட்டுவிட்டால் வேறெப்படி அழைப்பார். இது ஷாஜஹானின் தவறா என்ன. தான் எழுதியதை மறந்துவிட்டு இறைவன்தான் ஷாஜஹானை தண்டிக்கிறார் என்றால், வினவு நீங்களுமா இதை புரிந்துகொள்ளவில்லை. (விதி.ஆதாரம்.புஹாரி.6594)
ஒவ்வொரு இஸ்லாமியப் பதிவு இடும்போதும் நேரடிவிவாதத்திற்கு வா நேரடிவிவாத்த்திற்கு வா என வினவு முழுதும் ஒரே இரைச்சல். இப்பதிவில் குரான் வசன ஆதாரங்களுடனே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தெரிந்தால் பதில் கூறுங்கள். இல்லையென்றால் ஆலிம்களிடம் கேட்டு எழுதுங்கள் அதுவும் முடியவில்லையென்றால் எனக்கு குரானும் தெரியாது ஹதீதும் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். இவருடைய பிளாக்குல எதிர்க்குரலா ரிச்சர்டு டவுக்கின்ஸ் பற்றியெல்லாம் எழுதுவாராம், விவாதம் செய்ய ம்ட்டும் பீஜேக்கிட்ட போங்கன்னு சொல்லுவாராம். பிறகு ஏன் உன்னுடைய பிளாக்குல சத்தியமார்க்கம்னு சவுண்டு வுடுற.
இஸ்லாம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தை ஒழிக்குமாம். ஏழைகளில் சிலர் முஹம்மதிடம் தங்களுடைய ஏழ்மையை பற்றி முறையிட அவரோ இறைவனை 3*33 முறை புகழுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்கிறார். ஜகாத் உலகம் அழியும் வரைக்குமான கடைமை. அவ்வாறாகின் ஏழை உலகம் அழியும் வரையில் இருக்கவேண்டும்.
மீண்டும் தோழருக்கு நன்றி!
//200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதனுக்கு இருந்த்தைவிட தற்போதைய மனிதனுக்கு மூளையின் அளவு பெரிதாகிக்கொண்டே வருகிறது. இதனால் முன் மண்டையின் அளவும் பெரிதாகிறது.இது தற்போதைய மனிதன் அதிகமாக சிந்தனை செய்வதின் காரணமாக ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி//
மனிதன் 200 வருடமாகத்தான் சிந்திக்கிறானா? கி.மு. காலத்திலெல்லாம் சிந்திக்களையாக்கும். மனிதன் படைக்கப்பட்ட காலத்திலிருந்து உங்கள் வார்த்தையில் பரிணாமம் அடைந்த காலத்திலிருந்து மூளை வளர்ச்சி அடைந்திருந்தால்……….. நினைக்கவே பயம்மா இருக்கு. மண்டைமட்டும் தனி கோலளவு பெரிதாகி இருக்கணுமே. எல்லாரும் இன்னிக்கி ஹாலிவுட் பட creation மாதிரி அல்ல திரிவார்கள். ரொம்ப தமாஷா இருக்குப்பா.
இந்த மாதரி கற்பனைகளை…. போதும் விட்டுவிடுங்கள். டார்வினிசமே கற்பனைதான் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சுட்டி டீவி பாத்த உங்க அறிவுக்கு அப்படித்தான் தமாஷா இருக்கும். புர்காவப் பத்தி பேசுனா பிகினி போடவான்னு கேட்பீங்க, குரங்குல இருந்து மனிதன் வந்தான்னு சொன்னா எங்க மத்த குரங்கெல்லாம் மனுசங்களா மாறல்லன்னு கேட்பீங்க. பல வருஷமா இதே டயலாக்கத்தானே பேசிக்கிட்டு இருக்கீங்க..
அன்பு சகோதரர் கலை அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அழைக்கும்,
//ஒவ்வொரு இஸ்லாமியப் பதிவு இடும்போதும் நேரடிவிவாதத்திற்கு வா நேரடிவிவாத்த்திற்கு வா என வினவு முழுதும் ஒரே இரைச்சல். இப்பதிவில் குரான் வசன ஆதாரங்களுடனே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தெரிந்தால் பதில் கூறுங்கள். இல்லையென்றால் ஆலிம்களிடம் கேட்டு எழுதுங்கள் அதுவும் முடியவில்லையென்றால் எனக்கு குரானும் தெரியாது ஹதீதும் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்//
என்ன சொல்லுகிறீர்கள் நீங்கள்? இதுநாள் வரை பல இணைய தளங்களில் நாங்கள் பதிலளித்து நீங்கள் பார்க்கவில்லையா?, இல்லை இந்த தளத்தில் தான் பார்க்கவில்லையா? உங்களைப் போன்ற கம்யுனிஸ்ட்களுக்கு பொய்கள் அழகில்லேயே.
சரி, நீங்கள் கேட்டது போன்று நானும் கேட்கிறேன். பரிணாமவியல் கோட்பாடு கடவுளை மறுக்காது. அதை ஏன் நீங்கள் கடவுளை மறுக்க பயன்படுத்த வேண்டும்? அல்லது உதவிக்கு கொண்டு வர வேண்டும்?
அதெல்லாம் சரி, இயற்பியல் ரீதியாக கடவுளை மறுக்க என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்?. உலகம் என்றால் உயிரினம் மட்டும் இல்லையே?
இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள், இல்லையென்றால் விஞ்ஞானிகளை கேட்டு கூறுங்கள். அப்படி முடியவில்லை என்றால், நான் சும்மாதான் கடவுளை மறுக்கிறேன், என்னிடம் ஆதாரங்கள் இல்லை, எனக்கு தெரிந்தது இவ்வளவுதான், எனக்கு பரிணாமவியல் பற்றியும் தெரியாது, இயற்பியல் பற்றியும் தெரியாது, ஏன் அறிவியலை பற்றியே தெரியாது என்று ஒத்துக்கொள்ளுங்கள். ஒரு ஆதாரமும் இல்லாமல் சும்மா இங்கே வந்து நான் நாத்திகன் என்று ஏன் சவுண்ட் விடுகிறீர்கள்?
கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக காரணங்கள் இருந்தால் எடுத்து வையுங்கள், இல்லையென்றால் தயவு கூர்ந்து போய் ஆராயுங்கள்.
நன்றி…
தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்…
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
aashiq.ahamed.14@gmail.com
http://ethirkkural.blogspot.com
“சரி, நீங்கள் கேட்டது போன்று நானும் கேட்கிறேன். பரிணாமவியல் கோட்பாடு கடவுளை மறுக்காது. அதை ஏன் நீங்கள் கடவுளை மறுக்க பயன்படுத்த வேண்டும்? அல்லது உதவிக்கு கொண்டு வர வேண்டும்?”
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டவன் என்பதுதான் பரிணாமமா?
அன்பு சகோதரர் கலை அவர்களுக்கு,
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்
1. தங்களுக்கு என்னுடைய கேள்வி என்னவென்றே புரியவில்லையா? நான் என்ன கேட்டேன், நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்? என்னுடைய கேள்விகள் நேரடியாக, தெளிவாக இருக்கிறதென நினைக்கிறேன். வழவழ கொழாகொழா என்று பதிலளிப்பது சிந்திப்பவர்களின் செயளில்லையே சகோதரரே.
பரிணாமம் உண்மையென்றே வைத்துக்கொள்வோம். அப்படியே ஆனாலும் பரிணாமவியல் கடவுளை மறுக்காது என்று Talk Origins தளம் கூறுகிறது. அப்படி இருக்க, நீங்கள் ஏன் கடவுளை மறுக்க பரிணாமவியலை துணைக்கு அழைத்து வர வேண்டும் என்பது என்னுடைய கேள்வி. அப்படி நீங்கள் அதை துணைக்கு அழைத்தால், உங்களுக்கு பரிணாமவியல் பற்றி தெளிவான புரிதல் இல்லை என்று தான் அர்த்தமாகிறது.
கடவுளை மறுக்க பரிணாமவியல் போதும் என்று நீங்கள் நினைத்தால், அது உங்களுடைய தனிப்பட்ட கருத்தாகுமே தவிர, அதற்கும் அறிவியலுக்கும் சம்பந்தமில்லை. ஆக, கடவுளை மறுக்க பரிணாமவியல் ஒத்துவராது.
2. இயற்பிலை பற்றி கேட்டதற்கு பதில் சொல்லவே இல்லையே சகோதரரே. அது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.
அறிவியல் ரீதியான பதிலுடன் வாருங்கள்.
3. ஆக மொத்தத்தில், கடவுளை மறுக்க அறிவியல் ரீதியாக ஒரு
காரணமும் இல்லை உங்களிடம். தயவு கூர்ந்து ஆராய்ந்து நேரடியான பதிலோடு வாருங்கள். அதுவரை “agnostic” ஆக இருங்கள். எந்த வித ஆதாரமும் இல்லமால் நீங்கள் atheist என்று சொன்னால் அதற்கு பெயர் “குருட்டு நம்பிக்கை”…
பரிணாமவியலின் மறு பக்கம் என்ற கருத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். நேரம் கிடைத்தால் வந்து பாருங்கள்…
http://ethirkkural.blogspot.com/
நன்றி…
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
//உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்” — குரான் 49:13//
எதுக்கு பய பக்தியா இருக்கணும் ?
இந்த பயபக்தி தான் அடிமைத்தனத்துக்கு முதல் சுழி …
எந்த வித ஆதாரமும் இல்லமால் நீங்கள் தேசத் என்று சொன்னால் அதற்கு பெயரும் “குருட்டு நம்பிக்கை” தான், இல்லையா?
ஆஷிக்,
நான் கேட்டது ஒரே ஒரு கேள்விதான். உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லையென்றால் மீண்டும் ஒருமுறை விளக்கமாக கேட்கிறேன். பரிணாமவியல் கோட்பாடு கடவுளை மறுக்காது என்றால் மனிதன் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குரான் கூறுவது பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையிலா?
மூளை பெரிதகிறதா அப்படியா?அது தான் பரிணாம வளர்ச்சியா?மகிழ்ச்சி!குரானிலிருந்து அப்படி என்ன கேள்வியை கேட்டுப்புட்டிங்க…நாங்க திணறி திரிவதற்கு!குர்ஆனில் சொல்லப்படாத பாவக்கனி விவரத்திற்கு நங்கள் எப்படி பதில் சொல்ல முடியும்.ஒரு உயிரிலிருந்து மனித குலம் தோன்றியதாக அறி..வி..ய..லா..லாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கலாமே!உண்மையா?அறிவியல் என்பது இஸ்லாத்தை பொறுத்த வரையில் குழந்தை பருவத்தில் உள்ளது.அதன் தேவை இஸ்லாத்திற்கு இல்லை.
//Author: ஹைதர் அலி
Comment:
நன்பர் சாகித் நான் கேட்ட அதாரங்களுக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலிலும் இல்லையே உங்களுக்கு வேட்கம இல்ல//
நான் கேட்ட கேள்விக்கும் தான் உங்களிடமிருந்து ஒரு பதிலும் இல்லை!
இந்து பாசிஸ்டுகளும் பரிணாமவியலை ஆதரிக்கிறார்கள்.
கம்யூனிஸ பாசிஸ்டுகளும் பரிணாமவியலை ஆதரிக்கிறார்கள்.
புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!
http://www.tamilhindu.com/2010/04/birdfeeder-evolution-of-new-species/
ஹாரூன் யாஹ்யா சரியாகவே சொல்கிறார். பரிணாமவியல் என்பது நாஸ்திகர்கள், பாகன்களது சதித்திட்டம்.
அன்பு சகோதரர் sahid அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்
//ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?//
தெளிவாக, ஆணித்தரமாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் திரும்ப திரும்ப அதே கேள்வியை கொண்டு வரும் போது சலிப்பு தான் ஏற்ப்படுகிறது. இப்போதெலாம் இந்த கேள்வியை கிருத்துவ மிசனரிகள் கூட கேட்பதில்லை (Sperm பற்றி கேட்டிருக்கிறீர்களே, அதையும் இந்த லிஸ்டில் சேர்த்து கொள்ளுங்கள்)
தாங்கள் இந்த கேள்வியை கேட்கும் முன் அறிவியலை இந்த கேள்வியோடு தொடர்பு படுத்தி பார்த்தீர்களா? இல்லை உங்களுக்கு தோன்றியதை வந்து எழுதிவிட்டீர்களா?. பரிணாம வளர்ச்சி என்ற மாயா ஜாலத்தை நம்புகிறவர்களிடம் அறிவியலை எதிர்பார்க்க முடியாது தான்.
ஆம், அந்த ஹதித்கள் ஆதம் (அலை) அவர்கள் 90 அடி (60 cubits) இருந்ததாக சொல்கின்றன. அதனால் என்ன பிரச்சனை? உங்களுக்கு அதில் குழப்பம் என்றால் இந்த சுட்டியை காணவும்.
http://www.answering-christianity.com/adam_90_feet_tall.htm
இன்ஷா அல்லாஹ், என்னுடைய தளத்தில் இதைப் பற்றி எழுதுகிறேன்.
அதெல்லாம் சரி, கடவுள் இல்லையென்று சொல்லுகிரீர்கலாமே?, டாகின்ஸ் முதற்கொண்டு அதை முழுவதுமாக ஒத்துக்கொள்ளவில்லையே?, தயவுகூர்ந்து கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரங்களை கொடுங்கள். பரிமாண வளர்ச்சி கோட்பாடு கடவுளை மறுக்காது (அது உண்மையாக இருந்தாலும் கூட), இதற்கு ஆதாரம் Talk Origins என்ற ஒரு தளம் இருக்கிறதே அதை பாருங்கள். கடவுளை மறுக்காத கொள்கையை கொண்டு வந்து தயவு கூர்ந்து கடவுளை மறுக்காதீர்கள். அது அறிவுக்கு ஒத்து வராது.
அதுசரி, உலகம் என்றால் உயிரினம் மட்டும்தானா?, இயற்பியல் ரீதியாக கடவுளை மறுக்க என்ன ஆதாரம் இருக்கிறது. டாகின்ஸ் இல்லையென்று சொல்லிவிட்டார். இதற்கு அதாரம் அவருடைய GOD DELUSION புத்தகத்தில் 157 வது பக்கத்தை பாருங்கள். ஆக, இயற்பியல் ரீதியாகவும் கடவுள் இல்லை என்று மறுக்கமுடியாது.
ஆக, தயவுகூர்ந்து அறிவியல் ஆதாரங்களை தாருங்கள் கடவுள் இல்லையென்று மறுப்பதற்கு. முடியவில்லை என்றால் Agnostic ஆக இருங்கள். நாத்திகர் என்ற போலி வேஷம் வேண்டாம். சிந்திக்கும் மனிதர்களுக்கு அது அழகல்ல.
இறைவன் உங்களுக்கு நேர்வழியை காட்டட்டும்…
நன்றி…
உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹ்மத் அ http://ethirkkural.blogspot.comaashiq.ahamed.14@hotmail.com
சலாம்,
நான் கொடுத்த அந்த லிங்க், அந்த தளத்தின் முகப்பிற்கு செல்கிறது. ஏன் என்று தெரியவில்லை. அதனால் தாங்கள் தயவு கூர்ந்து
http://www.answering-christianity.com
என்ற முகவரிக்கு சென்று அங்கே “site Search” என்ற பகுதியில் “Adam 90 feet” என்று தேடினால் அந்த பக்கம் வந்து விடும்.
தங்கள் நேரத்தை வீணாக்குவதற்கு மன்னிக்கவும்.
இது எதிர்பாராதது…
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நேரடி ரசிகர்களுக்கு,
விவாதம் என்றால் அது நேரடியானது தான் மற்றதெல்லாம் கோழைத்தனம் என்று தங்களின் மதக்கொள்கையைப்போல் நம்பிக்கொண்டிருப்பவர்களை விவாதம் என்பதன் பொருளை அதன் சீரிய முறையில் உணரச்செய்வது சற்று கடினமானது தான். அவர்களைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒருவருடன் விவாதிப்பதுதான் விவாதமாகப்படும். இதே தளத்தில் நேரடி விவாதத்திற்கும் ஆயத்தமாக இருக்கிறோம் பொருத்திருங்கள் என்றதும், உங்கள் இயக்கத்தில் வேறு யாருமே இல்லையா? என குதித்தவர்கள் உண்டு. ஆனால் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே நேரடி எனும் பொருளில் பயன்படுத்துபவர்களுக்கு இவைகள் முரணாக தெரிவதில்லை. நேரடி விவாதத்திற்கும் ஏனைய விவாதங்களுக்கும் இடையிலிருப்பது வடிவ வேறுபாடுதான் என்பதைக்கூட உணரும் நிலையில் இவர்கள் இருப்பதில்லை. எல்லா விவாத முறைகளிலும் சில குறை நிறைகள் இருக்கின்றன. என்றாலும் ஆழமாகவும் அறிவார்த்தமாகவும் விவாதிப்பதற்கு சிறந்த வடிவம் இணைய எழுத்து வடிவம் என்பதை மறுக்க நினைப்பவர்கள் அதற்கான காரணங்களை கூறலாம். குறிப்பிட்ட ஒருவருடன், குறிப்பிட்ட ஒரு வடிவிலான விவாதம் தான் விவாதம் அதற்கு ஆயத்தமாக இல்லாத எவரும் தங்கள் மதத்தை விமர்சிக்கக் கூடாது என்று கூறினால் அதை பிதற்றல் என்பதற்கும் மாத்திரைக்குறைவாகத்தான் மதிக்க முடியும்.
இவர்கள் நேரடி என குறிப்பிடும் அந்த ஒருவரும் நேரடியாக விவாதிப்பதை மட்டுமே கொள்கையாக கொண்டவரா? இல்லை. அவரது வலைத்தளத்தில் அனேக எழுத்து விவாதங்கள் இருக்கின்றன, நடக்கின்றன. அப்படி இருக்கும் போது இதற்கு மட்டும் எழுத்தில் வரமாட்டோம் என வீம்பு பிடிப்பது ஏன்? கடந்த சில வாரங்களாக அப்துல்லா தாசனை ஒப்பிக்காத இஸ்லாமிய இணைய தளங்கள் இல்லை எனும் அளவிற்கு பரப்புரைகள் படபடத்தன. எல்லாம் எழுத்து வடிவில். ஆனால் அந்த அப்துல்லாதாசன் சவுதியிலும் இங்கும் முரண்பட்டுப் பேசுகிறார் என்றும், அவரின் மனமாற்றத்தின் பின்புலம் குறித்து எங்களிடம் பதிலளிக்க மறுக்கிறார் என்றும் விளக்கி ஒரு இடுகையிட்டால் நேரடி என குதிக்கிறார்கள்.
இவர்களிடம் ஏன் விவாதிக்க வேண்டும்? இணையத்தில் ஒரு கட்டுரை எழுதப்படுகிறது என்றால், அதன் கருத்துகளோடு உடன்பட மறுப்பவர்கள், தங்களது மறுப்பை தெரிவிக்கலாம், அல்லது தங்களுடைய தளத்தில் (இருந்தால்) மறுப்பை வெளியிடலாம், அல்லது அவ்வாறு வெளியிட தங்களால் இயலவில்லை என்றால் இயன்றவர்கள் மூலம் வெளியிடலாம் அல்லது வெளியிடச்செய்யலாம். இவைகளை செய்யாமல் இன்னாரோடு நேரடியாக விவாதித்துவிட்டு வாருங்கள் என்பது எந்த விதத்தில் நேர்மையானது? இவர்கள் குறிப்பிடும் அவரோ த்ன்னுடைய தளத்தில் யாரோடும் நாம் விவாதிக்க தயாராக இருப்பதால் என்னுடன் வந்து விவாதிக்காமல் தங்களது தளத்தில் இஸ்லாம் குறித்து எழுதக்கூடாது எனும் பொருளில் அறிவிப்பு வைத்திருக்கிறார். இவர் என்ன இஸ்லாத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியா? இவரிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் இஸ்லாம் குறித்து எழுத வேண்டுமா?
அந்த ஒருவருடன் நேரடி விவாதம் செய்யுங்கள் வலியுறுத்துவதன் பின்னாலிருப்பது என்ன? கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை என்பது முதலாவது. அடுத்தது அவர் எப்படியாவது பதில் சொல்லி மிகைத்துவிடுவார் என இவர்கள் நம்புவதால் இப்படி எழுதுவதை விட்டும் இஸ்லாம் தூய்மையானது எனும் சுயதிருப்தி. அதோடு கொசுறாக தன் அகத்தை (ஈகோ) திருப்திப்படுத்திக்கொள்வது.
சில தகவல்கள்:
1) சவுதியில் 1980களின் பிற்பகுதியில் நஜ்ரான் பகுதியில் மறைமுகமாக செயல்பட்டதாக கூறப்படும் ஒரு கம்யூனிசக் குழு (பூர்வீக யெமனியர்களை கொண்டது) ராணுவத்தால் சுற்றிவளைத்து கொல்லப்பட்டது. இன்றும் சவுதியில் ஒருவன் தன்னை ஏதோ ஒரு மதத்தை, கடவுட் கொள்கையை பின்பற்றுவதாக கூறிக்கொள்ள முடியும், ஆனால் கடவுள் மறுப்பாளனாக, நாத்தீகவாதியாக, கம்யூனிசவாதியாக சொல்லிக்கொள்ள முடியாது என்பதுதான் நிலை. சாதாரண சவுதிகள் கூட ஒருவனால் கடவுளை மறுத்து வாழமுடியும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாமல் அறியாமல் இருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தம்.
2) இங்கு சிலர் மனிதனின் படைப்பு குறித்த குரானின் விளக்கங்களுக்கு சுட்டிகளை தந்திருக்கின்றனர். இது குறித்து நானும் முன்னர் ஒரு இடுகை இட்டிருந்தேன். இங்கு சொடுக்கி அதை படித்துக்கொள்ளலாம். முடிந்தவர்கள் பதிலளிக்கலாம்.
http://senkodi.wordpress.com/2008/12/11/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/
தோழமையுடன்
செங்கொடி
நன்பர் செங்கொடி சாகித் இஸ்லாத்தை துறந்து உங்களின் தோழனாக மாறிய பிறகு முஸ்லீம்காளல் சாகித்துக்கு கொடுக்கப்பட்ட தொந்தரவுகளுக்கும் பெரியார் தாசன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக நீங்கள் கொடுக்கும் இம்சைக்கும் வித்தியாசம் இருப்பாதக எனக்கு தெரியவில்லை முற்போக்கு அப்புடி இப்புடின்னு பிதற்றிக்கொண்டு திரிய உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறத இதுல டயலாக்குலாம் குறைச்சல் இல்ல கம்னிஸ்ட்டுக்கு பிறக்கும் பிள்ளை கம்னிஸ்ட் ஆக முடியாது அவனை கம்னிஸ்ட் என்று சொல்லி வளர்ப்பதில்லை அந்த பையன் சுயமா சிந்தித்து வழியை தேர்தெடுக்கவேண்டும் இதுலாம் என்ன எழுத்துல மட்டும் தானா
///விவாதம் என்றால் அது நேரடியானது தான் மற்றதெல்லாம் கோழைத்தனம் என்று தங்களின் மதக்கொள்கையைப்போல் நம்பிக்கொண்டிருப்பவர்களை விவாதம் என்பதன் பொருளை அதன் சீரிய முறையில் உணரச்செய்வது சற்று கடினமானது தான். அவர்களைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒருவருடன் விவாதிப்பதுதான் விவாதமாகப்படும்///ஆமா நீங்க எப்புடி திருட்டுத்தனம விவாதிக்கீறிர்கள் என்பதற்கு பெரியார் தாசன்னுக்கு தெரியம எடுத்த ஆடியோ தான் சாட்சி
நண்பர் ஹைதர் அலி,
தொலைபேசியில் பேசுவது பதிவு செய்யப்படும் சாத்தியம் உள்ளது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றுமில்லை. சில வேளைகளில் இதுபோன்ற வழிகளில் தான் உண்மைகள் அம்பலமாகின்றன. குஜராத் பயங்கரங்கள் தெகல்காவினால் அம்பலப்படுத்தப்பட்டதும் இதே வழியில் தான். உங்களின் அளவுகோலை அதற்கு பொருத்துவீர்களா?
செங்கொடி
ஹைதர் அலி,
இந்த ஆடியோ பெரியார்தாசனுக்கு தெரியாமல் எடுத்ததாக தெரியவில்லை. நன்றாக கவனித்து பார்த்தால் 4 வினாடிக்கு ஒரு முறை ‘பீப்’ ஒலி கேட்கும். இது இருவருக்கும் தெரியும். இப்போதுள்ள சட்டத்தின் படி, பேசுபவருக்கு தெரியாமல் எல்லாம் பதிவு செய்ய முடியாது. அப்படி பதிவு செய்ய சில விசேஷ மென்பொருள் வேண்டும்.
http://peacetrain1.blogspot.com/2010/04/blog-post_21.ஹ்த்ம்ல்
இப்படி பயங்காட்டி இஸ்லாத்துக்கு ஆள் புடிக்கிறதுக்கு நாக்கை புடுங்கிகிட்டு சாவலாம்! அந்த பதிவில், எனக்கு தெரியாது எல்லாரும் சொன்னாங்க நானும் சொன்னேன் என்று இருந்தால் பொடனி மேல இரும்பு கம்பியால் அடி விழும்னு இருக்கு! அப்போ பெரியார்தாசனுக்கும் அதே கதி தானா!?, அன்பே உருவான கடவுள் தான் படைத்த மக்களுக்காக ஒரு நரகத்தை உருவாக்குவானால் அவன் எப்படி அன்பே உருவான கடவுளாக இருக்க முடியும்!, இவ்வளவு கொடூரமான கடவுளை தானே முதலில் எண்ணை சட்டியில் போடு வறுக்க வேண்டும்!, எனக்கு இன்னோரு சந்தேகமும் உண்டு, இந்த கதையெல்லாம் எப்படி இஸ்லாமியர் நம்புறாங்க, அவுங்களுக்கு சிந்திக்கவே தெரியாதா!?
//இப்படி பயங்காட்டி இஸ்லாத்துக்கு ஆள் புடிக்கிறதுக்கு நாக்கை புடுங்கிகிட்டு சாவலாம்!// எங்கே பயங்கட்டி ஆள் புடிக்கிறங்க?? கெஞசம் ஆதாரத்துடன் விளக்குங்கள்?? இல்யேன்றால் நிங்கள் சென்னாதை?? செய்யுங்கள்? உங்கள் கூடாரத்தில் ஆள் இல்யேன்றால் கூடாரத்தில் சத்தம்? போடுங்கள் ஏன் நாவு தடுமாற்றும்? இஸ்லாத்தின் வீரிய வளர்ச்சியினால் உங்களுங்கு கடுமையாக பதிப்பு ஏற்ப்பட்டுள்ளது?
84 வது பின்னூட்டத்தில் நான் கொடுத்த சுட்டியில் மால்வேர் இருப்பதாக தெரிவதால் அங்கே பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும்! அங்கே காப்பி செய்து இங்கே கேள்வி கேட்கலாம்! இப்படியிருந்தாலும் ஆல் இன் ஆலில் இன்று ஒரு பதிவு உறுதி!
//’முஃமின்களான கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களையும் விலைப்பெண்களாகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக்கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து மணமுடித்துக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.’ (5.5)//
http://tamilislam25.blogspot.com/2010/04/blog-post_04.ஹ்த்ம்ல்
மேற்கண்ட பதிவில் இருக்கும் அந்த வசனத்துக்கு என்னப்பா அர்த்தம்!
யூத, கிறிஸ்துவ பெண்னை மஹர் கொடுத்து கல்யாணம் பண்ணிக்கோ, அதுவும் கற்புடய பெண்ணா என பார்த்து, அதுக்கு என்ன மீட்டராயா வச்சிருக்கிங்க, ஆம்பளைக்கு மட்டும் ஏன் கற்பு இல்ல, சரி அடுத்த மேட்டருக்கு வாங்க! அவர்களை விலைபெண்ணாகவோ, ஆசைநாயகியாகவோ வைத்து கொள்ளாது என்றால் மற்றவர்களை அவ்வாறு வைத்து கொள்ளலாம் என்று தானே அர்த்தம்!
காறி துப்பனும் போல தோணுது, உங்க மதத்தையும் கடவுளையும் பார்க்கும் போது.
எந்த குர்ஆனுலப்ப இந்த வசனத்த பாத்த எனக்கு அந்த டெக்ஸ அப்புடியே பின்னூட்டம எழுதி அனுப்புங்க வால் பையன் அப்புறம் யார் யார் மேல காறி துப்புறதுன்னு முடிவு பன்னுவேம்
சகோதரர் வால்பையன்,,
குறிப்பிட்ட ஒருவரை கொலை செய்யாதே என்று சொன்னால் மற்றவரை எல்லாம் கொலை செய்யலாம் என்ற நிலையில் உங்களின் சிந்தனை இருந்தால் அதை என்னவென்று சொல்வது..
அப்பெண்களை வைபாடிகளாக வைகதீர்கள் அவர்களுடன் விபச்சாரம் புரியாதீர்கள் என்றால் மற்றவர்களுடன் அவ்வாறு இருங்கள் என்று கூறுவதாக நீங்கள் புரிந்து கொள்ளும் பொது உங்களின் சிந்தனை ஓட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை மிக தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது..
“உங்களின் எண்ணங்களின் அடிப்படையிலேயே உங்களின் செயல்களும் அமைகின்றன”
வால்பையன் ஒரு சிறுமை புத்தி உடையவன். இவனை போன்றவர்களின் பின்னூட்டத்திற்கு பதில் போடுவதை தவிர்க்கவும். அப்படி போடுவதால் கடைசியில் இப்படிதான் முடியும். சிறுமை புத்தியை முளையிலேயே தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது.
ஒரு வேளைச்சோறு இல்லாம மனிசன் செத்துக்கு இருக்கான்.. இங்கால அவனவன் ஏதோ கொசு வ கொல்ற மாதிரி மனிசன சாவடிச்சிக்கிட்டு இருக்கான்.. இங்கால மேல்தட்டு வர்க்கம் அதுட நிகழ்ழ்ச்சி நிரலுக்கு ஏத்த மாதிரி சுரண்டிக்கு இருக்கு… இப்பிடி எத்தனையோ தல போற பிரச்சினைகள் நம்மள சுத்தி இருக்கு.. இதெல்லாம் விட்டுட்டு… அஞ்சு காசுக்கு உப்பு பெறாத இந்த விசயத்த போட்டு இந்த உருட்டு உருட்டுறீங்களே மக்கா???????????? போய் பொழப்ப பாப்பீகளா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இதில் ஒரு நண்பர் சொன்னது போல, ” உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம் ” அவ்வளவுதான் ……… முடிஞ்சது..
உண்மையை சொன்னீர்கள்
பதிவின் லிங்க் கொடுத்திருக்கிறேன்!
அங்கே என் பின்னூட்டமும் இருக்கு!
(அத்தியாயம் அல்மாயிதா 5வசனம்5 நம்பிக்கை கொண்டகணவனில்லாதபெண்களையும் உங்களுக்கு முன் வேதம்கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக்கொள்ளாமலும் விபச்சாரம் செய்யாமலும் கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது) இதுதான் அரபு அர்த்தத்தேட நான் குர் ஆனில் நேரடியாக பார்த்த மொழிபெயர்ப்பு.
இங்கே கற்பு தவறமால் என்று ஆண்களை நோக்கி சொல்லப்படுகிறது அந்த கலத்துல அரபிகள் கணவன் இழந்த பெண்களை வைப்பாட்டிய வச்சுக்கிட்டு விபச்சாரம் பன்னிக்கிட்டு திரிசய்ங்க அவிய்ங்க நெறிப்படுத்தி முறைய கல்யாணம் பன்னிக்கங்கட என்று சொன்னதுக்கு நீங்க காறி துப்புவிக குர்ஆன் வசனத்த தவற நீ விளங்கி கிட்டதுக்கு நான் தான் உன் மூஞ்சியில்
வால் பையன்,
ஹைதர் கூறுவது சரியானதுதான். இவ்வசனத்தில் ”நம்பிக்கைக் கொண்ட பெண்கள்” என்பது ஓரிறைக் கொள்கையுடையவர்களை மட்டுமே குறிக்கும். இயேசுவை வணங்கும் கிறித்தவர்களையோ, காளைக்கன்றை வணங்கும் யூதர்களையோ குறிக்காது.
வால்பையன் தோழர்.கேள்விக்குறியின் ஆலோசனையை பின்பற்றலாமே.
மொத்தம் எத்தனை மொழிபெயர்ப்பு தாம்பா இருக்கு! இதுக்கு நான் அரபியே கத்துக்கலாம் போலயே!
ரோம்ப வருத்தப்பதீக அரபு மொழி தெரிஞ்ச தோழர் கலையிடம் நான் சொன்ன வசனம் சரிய என்பதை செக் பன்னிகங்க உங்க போன் நம்பர் மட்டும் தான் குடுத்திங்க அப்படியே ஒங்க வீட்டு அட்ராஸ் கொடுத்த நான் உங்களுக்கு அரபி மூலத்தோட உள்ள தமிழ் குர்ஆன் கன்டிப்ப அனுப்பி வைக்கிறேன்
//[55:47] But for him who fears to stand before his Lord there are two Gardens
[55:55] They will recline on couches above carpets, the linings of which will be of thick brocade. And the ripe fruit of the two Gardens will be within easy reach.
[55:57] Therein will also be chaste maidens of modest gaze, whom neither man nor Jinn will have touched before them
[55:63] And besides these two, there are two other Gardens
[55:71] Therein will be maidens, good and beautiful
[55:73] Fair maidens with lovely black eyes, well-guarded in pavilions
[55:75] Whom neither man nor Jinn will have touched before them
[56:23] And there will be fair maidens with wide, lovely eyes,
[56:35] And they will have noble spouses
[56:37] And made them virgins,//
இப்போதைக்கு துடைச்சிகிட்டேன்னு வச்சிக்குவோம்!, இருந்தாலும் நான் மொதல்ல துப்புனது மதத்தையும், கடவுளையும் தான், இஸ்லாமியர்கள் மூஞ்சியில இல்ல! மேல நான் கொடுத்த வசனங்கள் சரியா! இல்ல தவறான மொழி பெயர்ப்பா!
அதன் அர்த்தம் என்ன!?
சத்தியம எனக்கு இங்கிலிஷ் தெரியாது 13வயசுல ஜவுளிக்கட வேலைக்கி வந்த்ட்டேன் தயவுசெய்து தமிழில்
ஹைதர் வால்பையன், குரானை ஆராய்ச்சி செய்வதை விட இன்றைய சமூகத்தில் மதத்தின் தேவை/பயன்பாடு பற்றி விவாதித்தால் பயன் தரும்.
வாங்க கேள்விக்குறி வினவுல புதுச இதற்கு பிறகு இராண்டு பதிவு கேடக்குது அத நான் இன்னும் படிக்கவேயில்லை இதுக என்ன படிக்க விட்டதான இதுகட்ட விவாதம் பன்னவே நேரம் சரிய இருக்கு
//Fair maidens with lovely black eyes, well-guarded in pavilions//
Cheer leaders???
/”உங்களின் எண்ணங்களின் அடிப்படையிலேயே உங்களின் செயல்களும் அமைகின்றன”//
நான் தானப்பா காஃபிர் வித்தியாசம் பார்த்துகிட்டு இருக்கேன்!
ஒரு பதிவுல இருந்து தான் நான் இங்கே எடுத்து போட்டேன்! நானாவா எழுதினேன்! அதுல இருந்தது அப்படி தானே இருக்கு!
//சத்தியம எனக்கு இங்கிலிஷ் தெரியாது 13வயசுல ஜவுளிக்கட வேலைக்கி வந்த்ட்டேன் தயவுசெய்து தமிழில்//
எனக்கும் தெரியாது! படிச்ச புள்ளைங்க யாராவது சொல்லுங்கப்பா!
சொர்க்கத்தின் வாழ்வு அது.அதை பெற நீங்கள் ஒரு இறை நம்பிக்கையாளராக வேண்டும்.மனிதனை மரத்தை கல்லை இன்னும் பிற உலகியல் பொருள்களை வணங்குபவர்கள் இறைனம்பிக்கையளர்கள் அல்ல கவனத்தில் கொள்ளவும்.
நண்பா!ஆத்திரம் அறிவுக்கு எதிரி என்றொரு சொல் உள்ளது மறக்காதே.அறிவு இயல் என்பது பரிணாம கொள்கையோடு புதைக்கப்பட்டதை போல் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதே!பரிணாமத்தை எதிர்த்து வெளயாகியுள்ள அறிவியலை என்ன செயலாம்?ஒரு உயிரிலிருந்து மனிதன் தோன்றி இருக்கலாம்?எனும் அறிவியல் ஆய்வுகளை என்ன என்று கூறி மறுப்பது? குர்ஆனில் பாவக்கனி என்று எங்கே சொல்ப்பட்டுள்ளது?ஒரு மரத்தின் அருகில் நெருங்க கூடாது.இது கட்டளை!கட்டளை மீறல் தான் குர்ஆனில் பாவமாக சுட்டி காட்டப்படுகிறது?இதில் பழமோ மரமோ பாவமானது எப்படி?ஆதம் அறுபது அடியாய் பிறந்தார் சந்தேகமில்லை.இது பரிணாம வளர்ச்சிக்கு எப்படி ஒத்து போகிறது?பரிணாம வளர்ச்சி என்றால் வளர்வது குறைவதல்லவே?அறிவியலை கூட முழுமையாய் வாசிக்காமல் கட்டுரையா!பெரியார் தாசனால் நிலை குலைந்துள்ள உங்களின் மனதை உணர்வை மதிக்கிறேன்.அதை விட உங்களின் மீது அன்பு கொண்டு இஸ்லாம் பால் அழைக்கிறேன்.அங்கு நீங்கள் தேடும் பல வினாக்களுக்கு விடையும் விவரமும் கிடைக்கும்.
//ஆதம் அறுபது அடியாய் பிறந்தார் சந்தேகமில்லை.இது பரிணாம வளர்ச்சிக்கு எப்படி ஒத்து போகிறது?பரிணாம வளர்ச்சி என்றால் வளர்வது குறைவதல்லவே?//
அய்யய்யோ, கிளிஞ்சுது போங்க. பரிணாம வளார்ச்சியில் அளவுகோள் ‘காலம்’, உயரம் அல்ல…
ஒட்டக சிவிங்கியின் கழுத்து ஆதமின் 60 அடி என ஒப்பிடும் கட்டுரையாளரை விமர்சிக்க வக்கில்லாத சீனு கிளிஞ்சது போ என புதிய விளக்கத்தை பரிணாமத்திற்கு தருகிறார்.பரிணாம தத்துவத்தில் பிரிக்க முடியாத ஒரு பகுதி நுண்ணுயிரிலிரு ந்து பாலூட்டியாய் மனிதக்குரங்காய் மனிதனாய் மாறுவதெல்லாம் காலத்தின் கோலம் மட்டுமா? இல்லை உடல் சார் ந்த வளர்ச்சியும் சேர் ந்ததா?தயவு செய்து கட்டுரையோ மறுமொழியோ எழுதுபவர்கள் படித்துவிட்டு தெரி ந்து கொண்டு எழுதுங்கள்.
அதெல்லன் சரி. அனால் களிமண்ணிலிருந்து உங்கள் இறை மனிதனை படைத்ததாக கூறுகிறார்களே. அது சாத்தியமா? ஏனன்றால் எனக்கு தெரிந்த ஒரு நல்ல மனம் படைத்த தம்பதியர்க்கு குழந்தை இல்லை. மருத்துவம் கை விரித்துவிட்டது. களிமண்ணிலிருந்து ஒரு குழந்தை தருவித்து தந்தால் அவர்கள் உங்களுக்கும் உங்கள் இறைக்கும் விஸ்வசமயிருப்பார்கள். எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள். களிமண் பொம்மையுடன் வர தயரயிருக்கிரர்கள். தயை செய்யுங்கள்
எல்லாம் பணம் தான்……………
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் சமயம். எந்த புரட்சிக்கும் எந்த மதமும் வழி கோலியது இல்லை. அணைத்து சமயங்களும் எதிர் புரட்சி செய்து, வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் தடையாகத்தான் இருந்துள்ளன. இந்த சாக்கடையில் பெரியார்தாசன் விழுந்திருக்கிறார். நரகலில் விழுந்த பின்னும் நல்ல அரிசியை தேடுவது சரியல்ல. இந்த பெரியார்தாசன் சாமானிய, உழைக்கும் மக்களின் துரோகி, எல்லா சமய ஏஜெண்டுகள் போலவே. இந்த பிழைய்ப்பு நாயும் பிழைக்கும். இதுக்கு எதற்கு பெரியாரை அசிங்கபடுத்தினாய் படுபாவி.
– மார்ஸ் ரோஸ்
அவர் எங்க இருந்தாலும் கொழப்பத்துல தான் இருக்கார் காரணம் அடிமைத்தனத்தை எதிர்த்த பெரியாருக்கே தாசனாக இருந்தவர் தானே அவர் பாவம் பச்ச மண்ணு அவர விட்ருங்க பாவம் அழுதிரபோறாரு
இப்படி தெளிவாக கிறிஸ்த்தவர்கள் ஆராய்ந்து எழுதும்போது இன்னும் என்ன வேண்டிட்கிடக்குதாம்…
விவாதிப்பதில் வரும் தோல்விகளை மறைக்க முடியவில்லை மறுக்கமுடிவதில்லை ……..
ஏன் அந்த எழுத்தாளரை கொலை செய்ய முயற்சிக்கவேண்டும் ????
http://isakoran.blogspot.com/
பெரியார்தாசன் இதை படித்தால் ஒருவேளை கிறிஸ்தவனாகுவாரோ ????
இந்த முட்டைக்கு மயிர் புடுங்குற வேலை எதுக்கு? நம்புறியா நம்பு
புடிக்கலையா விடு இல்லையா ஏதாவது ஒரு பொது எடத்துல விவாதம் பண்ணு சும்மா இந்த நிழல் சண்டை எதுக்கு? யாருக்கு என்ன பிரயோஜனம் சொல்லுங்க. இல்லனா திருப்பியும் முட்டைக்கு மயிர் புடுங்குங்க வணக்கம்
இங்கு பின்நூட்டமிடம் இசுலாமியர்கள் எவ்வளவு திறமையாக வாதம் புரிந்தாலும் இஸ்லமிய குரானிய சிந்தனை கழிவுகளுக்கு தத்துவ/அறிவியல் முலாம் பூச முனைந்தாலும் தங்களது வாதத்தினாலேயே அம்பலப்பட்டு (அம்மண ?) விடுகிறார்கள்.
எல்லா மத மூட நம்பிக்கைகளையும் சரி சமமாக எதிர்க்கும் இடமாக வினவு இருக்கிறது இது தொடர வாழ்த்துகிறேன்.உலகில் ௧௦௦ கோடி முஸ்லிம்கள் இருந்தும் இஸ்லாம் வெறும் 60 லட்சம் யூதர்களிடம் வெற்றி பெற முடியாததிற்கு காரணம் இவர்களின் அறிவுக்குப் புறம்பான குரான் கொள்கைகளும் இஸ்லாம் எல்லாத்தையும் தரும் என்ற மூட நம்பிக்கையும் தான் காரணம்.
எழில்…
எப்பொழுதோ -எங்கேயோ முஸ்லிம்களிடம் வெட்டிவம்பு வளர்த்து செமத்தியா பதிலடி வாங்கி கிட்டு – இங்க வந்து ’குய்யோ – முறையோன்னு’ பொலம்புறீங்கன்னு மட்டும் உங்கள் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது..
எழில்..60லட்சம் யூதர்கள்கிட்ட முஸ்லீம்களால் வெற்றி பெற முடியல அப்படின்னு – நீங்க சொன்னா – ஒன்னு உங்களுக்கு வரலாறு தெரியவில்லை தெரியல அல்லது நீங்கள பொய் சொல்றீங்க ..இரண்டில் எது என்று நீங்களே முடிவு பண்ணிக்கீங்க
யூத இஸ்ரேலுக்கு பின்னால் அணிவகுத்திருக்கும் அமெரிக்க-பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வல்லரசு சக்திகள் – உங்கள் காமாலை கண்ணுக்கு எப்படி தெரியாமல் போனது..செலக்டீவ் அம்னீஷியா?
அடக்குமுறை செய்யும் இஸ்ரேலின் அதி நவீன ஆயுதங்களை – எதிர்த்து ’நாயை’ அடிக்க நாம் பயன்படுத்து ‘கற்களோடு’ போராடும் எம் பலஸ்தீன சிறுவர்களை-பெண்களை தொலைக்காட்சியில் பார்த்ததே இல்லையா..?
மிகக்கடுமையான அடக்குமுறைகளை – சித்திரவதைகளை எதிர்த்து எழுச்சியுடன் போராடும் மனத்திடத்தை-துனிவை குரான்தான் கொடுத்திருக்கிறது..
//எல்லா மத மூட நம்பிக்கைகளையும் சரி சமமாக எதிர்க்கும் இடமாக வினவு இருக்கிறது இது தொடர வாழ்த்துகிறேன்//
அடேடே.. நம்ம எழில் அண்ணாத்தை! இஸ்லாம் மீதும் கிருஸ்துவம் மீது அவதூறு பரப்புவதற்காகவே இந்து நியூஸ் நெட்வொர்க் என்ற வலைப்பதிவு நடத்திக் கொண்டிருக்கும் அதே இந்துத்துவ எழில் அண்ணாத்தைதானே இவரு?
நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் விவாதம் நடக்கும் இந்த இடத்தில் நாத்திகர் தரப்பில் எப்படி வந்தார் இந்துத்துவ எழில்? சம் திங் ராங்…! எழில் அண்ணாத்தை இப்போ நாத்திகத்திற்கு மாறிட்டாரா அல்லது இந்த வலைப்பதிவை நடத்துபவர்கள் போலி நாத்திகர்களா? இந்த காலத்துல யாரையுமே நம்ப முடியலேப்பா…. ஒரே முகமூடிகளின் கூட்டமா இருக்குது.
பெரியார்தாசன், மதமாற்றம் பற்றி பெரியார் – தங்கள் தளத்தில், பெரியார் முழோக்கத்தில் பெரியார் திகவினர் எழுதியுள்ளதையும் வினவு தளத்தில் வெளியிடவும்.
பரிணாம வாதம் இன்றைய அறிவியலில் மறுக்க முடியா உண்மை. கிறித்துவர்கள் அதை எதிர்த்தாலும் முஸ்லிம்கள் எதிர்த்தாலும் அறிவியல் மாறாது. அறிவியலுக்கு கடவுள் தேவையில்லை,சொர்ர்கம், நரகம் இதெல்லாம் தேவை இல்லை. முட்டாள் முஸ்லிம்கள் முட்டாள் கிறித்துவர்கள் எதிர்ப்பு – இதை மீறி அறிவியல் வளரும். பெட்ரோல் இருந்-தாலும் அதை பயன்படுத்த அறிவியல் தேவை. இன்று genome ஐ பகுத்து அறிகிறோம், மதவாதிகள் எல்லாம் அறிந்தவர்கள் அல்லர். பெரியார்தாசன் இனி என்ன பேசினாலும் மதவாதிகள் சொல்வதை மீறி பேச முடியாது. அவருக்கு என் அனுதாபங்கள். பிஜே , ஜாகிர் நாயக் போன்றவர்களை போல் இன்னொரு பிரச்சாரகர் என்ற அளவில் இருப்பார். தன் சுய aடையாளம் இல்லா மனிதரை நாம் என்ன செய்ய முடியும்.
முட்டாள் முஸ்லிம்கள் அறிவியலுக்கு எதிரியா என்ன இப்புடி சொல்லிட்டிக 12ம்13ம் நூற்றாண்டில் கிருஸ்துவ சபைகள் அறிவியலுக்கு எதிராக இருந்தபோது இஸ்லாமியார்கள் அறிவியல் புரவலர்களாக இருந்தது வ்ராலாற்று உண்மை
ஹைதர் சொல்வது முற்றிலும் உண்மை, உலகில் முதல் நிறுவனமயமாக்கப்பட்ட மதமான கிறுத்துவம் இரத்தத்தில்தான் வளர்ந்தது…. பழைய உலகத்து கடவுள்களும் மனிதர்களிளும் மதங்களும் அழிக்கப்பட்டதோடு அவர்களின் விஞ்ஞான அறிவியலும் அழிக்கப்பட்டது. எதிர்ப்பார் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த இந்த நிலையில் இசுலாமிய அரசின் தோற்றம் மிகப்பெரும மாற்றத்தை கொண்டுவந்தது. சிலுவைப்போர் (crusades) உக்கிரமாகத்துவங்கிய கட்டமும் அதுதான். அச்சமயங்களில் உலகின் முற்போக்கான மதம் இசுலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க எதிரப்பும், புதிய முற்போக்கான கருத்துக்களும், ஐரோப்பாவெங்குமுள்ள அறிஞர்களை ஈர்த்தன, இசுலாமிய மன்னர்களும் அவர்களுக்கு புரவலர்களாக இருந்து திருச்சபையிடமிருந்து அவர்களையும் அறிவியலையும் காத்தனர்.
இன்றைய மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்கை இசுலாம் ஆற்றிய காலகட்டம் அது, ஆனால் அதன் சமூக பயன்பாடு ‘மறுமலர்ச்சி’ காலத்தில் முடிவுற்றது. மறுமலர்ச்சிக்கு பின்னர் தோன்றிய முதலாளித்துவ புரட்சியும் ஜனநாயகம் என்ற கருத்தும் உலகில் மதத்தின் தேவையை அரசியல்-சமூக அரங்கிலிருந்து அகற்றிவிட்டது… மூலதனம் அந்த இடத்தை பிடித்துவிட்டது.
இஸ்லாமியர்கள் தங்கள் மார்க்கத்தை இதுவரை மதம் என்று சொன்னதில்லை இது ஒரு வழிமுறை எப்படி நீங்கள் கம்னிஸத்தை மதம் என்று சொல்லமட்டிர்களே அதுபோல் நாங்களும் சிறந்த வழிமுறை என்று நம்புகிறேம் இந்த நூற்றாண்டின் சவால்களுக்கு இஸ்லாம் எதிர்சவலாக திகழும் முதலாளித்துவ வட்டி அடிப்படையிலான வாங்கிகளுக்கு மாற்றாக மக்களை சுரன்டமால் வட்டியில்லாத இஸ்லாமிய வாங்கி தீர்வு இல்லையா முஹம்மது நபி நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் என்று சொன்னார்கள் நன்மையேன்றால் உலக மக்களுக்கு எதுவல்லாம் நன்மையே அதை செய்ய ஒரு முஸ்லிம் கடமைப்பட்டுருக்கிறான் தீமையேன்றால் பிடி கத்திரிக்காய் தீமை என்றால் அதை ஒரு முஸ்லிம் தனது முழு பலத்தையும் பிரயேகித்து தடுக்கவேண்டும் மூலதனம் நன்மையாக இருக்குமாயின் அதையும் பின்பற்ற வேண்டும்
ஹைதர் இதைக் கொஞ்சம் படியுங்கள்.
http://senkodi.wordpress.com/2010/04/25/cave-bhuddah/#comments
//பரிணாம வளர்ச்சி உடல் ரீதியாக உறைந்துவிட்டதே உண்மை. //
அட.. இது கூட நல்லாயிருக்கே..! நல்லா கதை சொல்றீங்கப்பா. ம்.ம்.ம்.. அப்புறம்?
pj idam thangal vivatham seiungal neengal unmaiyalar endru therium….
ஸ்ஸலாமு அலைக்கும்
தோழர் சாகித் நீங்கள் என்ன நினைத்து அவ்ர்ரிடிம் கேள்வி துருவி துருவி கேட்டுகின்றேர்கள் இப்படி கேட்டபது முசில்ம்க்கு அழகா எனக்கு ஒங்களை பார்த்தால் முஸ்லிம் என்று ய=தோன்ற வில்லை ஒரு இந்து கேள்வி கேட்டபது போல் இருகின்றன,
நீங்கள் என்ன அல்லாஹ்வா யார் முசில்ம் மாறினாலும் இவ்வாறுதான் கேட்ட்பிர்களா.
நீங்கள் உண்மையுல்லா முஸ்லிம் என்று தோன்ற வில்லை ஒரு போர் களத்தில் நம் சகப்பகளுக்கு பயப்பட்டு கலிம்ம சொன்னார்கள் அபோது தோழர்கள் இவர்கள் பாய்ந்து போய் கலிம்ம சொல்லுகின்றார்கள் என்று நபி ஸல் அவர்களிடிம் சொன்னார்கள் அதற்கு நபி ஸல் அவர்கள்.
அவர்கள் உள்ளத்தை அல்லாஹ் அறிவான். இந்த ஹதிஸ் உங்களுக்கு நினைவு வர வில்லை.
நீங்கள் கேள்வி கேட்பதை பார்க்கும் பொது யாரோ உங்களுக்கு பின்னால் துண்டி விடுகின்றார்கள்.
நீங்கள்உண்மையுள்ள முஸ்லிம் என்று நான் சந்தேகம் படுகின்றேன்
இதற்க்கு எனக்கு பதில் தாருங்கள்.
குறிப்பு
நான் ௧௫ வருடத்துக்கு முன்னாள் இஸ்லாம் மாறியவன்
போன் ஸ்பீச் ௩ போர்மட்
http://rapidshare.com/files/384133722/Zahid-Periyardhasan.zip
http://rapidshare.com/files/384133722/Zahid-Periyardhasan.zip
Phone speech MP3 format download it
இங்குள்ளவர்கள் இஸ்லாமியர்களாய் வாழாததால் வரும் எண்ணற்ற பிரச்சினைகளில் சாஹிது போன்ற இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் பரப்பப்படும் அவதூறுகளில் இதுவும் ஒன்று . ஆராய்ந்ததினால் அப்துல்லாவாக மாறிவிட்டார் .கூடிய விரைவில் இன்ஷா அல்லாஹ் வல்லபேசன்களும் மாறுவார்கள் .அதுவரை இதை போன்ற விதண்டா வாதங்களும் அரங்கேறிக்கொண்டே இருக்கும்
தோழர்(?) சாஹிதுவின் மற்ற படைப்புகளை பார்தாள் பெரியார்தாசன் இஸ்லாத்தை ஈற்றுக்கொண்டது அவரது சொந்த விஷயம் இல்லையாம் சாஹிடுவின் கட்டுரைகளில் காணப்படும் கணவன் மனைவி பிரச்சினைகள் ,பெண்களின் பாதுகாப்பு விஷயங்கள் போதுப்பிரசினையம் என்னங்க உங்க கண்ணாடி விசயதுக்கு விஷயம் மாறுபடுது நல்ல ஆராய்ச்சி தான் போங்க தோழர்(?)
கடவுள் மறுப்பு கொள்கையுடன் மஞ்சள் துண்டு போடும் காலத்தில் பெரியார் தாசன் ஒன்றும் விமர்சிக்கும் அளவுக்கு செய்யவில்லை. கடவுள் நம்பிக்கையுடன் மூட பழக்க வழக்கத்திற்கு அடிமை படாமல் வாழ தனிப்பட்ட மனிதனிற்கு உரிமை உண்டு எப்படி பெண்ணுரிமை விளக்கப்படுகிறதோ அதே போல் . சுய மாரியாதை இல்லாத இடத்தில் மானமுள்ள ஒருவன் எப்படி இருக்க முடியாதோ அதே போல் தான் இதுவும். எனவே மாரியாதை கொடுக்காதவர்களுக்கு நாம் எப்பவும் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் அது தான் இது என்று நினைக்க தோன்றுகிறது. சாதியைத்தை ஒழிக்க வழி கண்டு பிடியுங்கள் பின் மதம் மாறுவது அதுவாக நிற்கும்.
இந்த லூஸ் பையான் விசயத்த விட்ட்டு நம்ப சமுக அவலங்களை சரி
இந்த பரதேஷி
நாய்களிடம்
இருந்து
நாட்டை
காப்பாற்றும்
பணியல் அக்கறை செலுத்தோம்
எனில் இந்தமாதிரி
கலுசடைகள்
உள்ளே
நுழையாது
(இவன். P D அல்ல
KD )
முஸ்லிம் தோழர்களே.இவர்களுக்கு இவர்களின் புத்திக்கு புரியும் படி பதிலளியுங்கள்.இஸ்லாத்தை பற்றிய தவறான செய்திகளை வைத்து கொண்டு வாதங்கள் புரியும் வினவு மற்றும் சாஹிட் போன்றவர்கள் இஸ்லாம் பற்றிய இன்னும் நிறைய படிக்க வேண்டும்.
////////////////இந்த அடிப்படையில் கம்யூனிச ஆட்சியில் மதப்பற்று தடை செய்யப்படாது. ஆனால் மத அடிப்படை வாதம் தடை செய்யப்படும்.//////////////////////////
சீனாவிலும்,ரஷ்யாவிலும்,செசன்யாவிலும்,போஸ்னியாவிலும் லட்சகணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்து விட்டு இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது.மிஸ்டர் வினவு.
ஐயா factன்னு பேரு வச்சுகினு ஏன் இப்படி பினாத்திங்????
சகோதரர் சாகித்.. உங்களின் கவனத்திற்கு…
எங்கே உங்களின் வீடியோ ஆதாரம்? காத்திருக்கிறேன்.. எப்போது கிடைக்கும்?
=========31 மே, 2010 10:25 am அன்று, Paraiyoasai Pathippaham எழுதியது:===========
தங்களின் மின்னஞ்சல் கிடைக்கபெற்றது சகோதரர் சாகித் .. வீடியோ அனுப்பியதற்கு மிக்க நன்றி சகோதரரே..
வெளிநாட்டினை சார்ந்த ஒருவரிடம் உழைப்பு ஏதுமின்றி தனக்கு இருக்கும் செல்வாக்கினை உபயோக படுத்தி பணம் பெறுவது என்பது சுத்த அயோக்கிய தனம்.. அதனை போன்று இவரும் பெற்றிருந்தால் அது நீங்கள் சொல்வதனை போல மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துவது என்றாகி விடும்… ஆனால்?
நீங்கள் அனுப்பிய இந்த வீடியோ வில் உள்ளது யாதெனில் பெரியவர் சம்சுல்லுஹா என்பவர் வெளிநாட்டினை சார்ந்த ஒருவரிடம் சம்பளமாக பணம் பெற்றிருக்கிறார்.. வெளிநாட்டினை சார்ந்த ஒருவர் நம்முடைய பகுதியிலே ஒரு பள்ளிவாசல் கட்டுகிறார்.. அதற்காக ஒருவரின் பொறுப்பினில் (பெரியவர் சம்சுல்லுஹா) விட்டிருக்கிறார்.. ஆக அந்த பள்ளிவாசல் கட்டுமான பணியினை மேற்பார்வை செய்து வருவதற்காக சம்பளம் பெற்றிருக்கிறார்.. இது எந்த வகையில் குற்றம் என்று நீங்கள் கூற வருகிறீர்கள்? ஒருவரின் உழைப்புக்கு கூலி பெறுவது குற்றம் எனில் உங்களின் நிலைமையை பார்த்து பரிதாப படத்தான் முடியுமே அன்றி வேறொன்றும் செய்ய இயலாது..
மேலும் இதன் மூலம் தாங்கள் கூற வருவது பீஜே பணம் வாங்கினர் என்பது தானே? நீங்கள் அனுப்பிய வீடியோ விலேயே இருக்கிறது அவர் வெளிநாட்டு ஆட்களை சந்திக்க கூட விரும்புவதில்லை மேலும் மற்ற யாரும் அதற்கான முயற்சி எடுத்தாலும் அனுமதிப்பதில்லை என்று… இதனை கூட நீங்கள் புரிந்து கொள்ள இயலாதவராக உள்ளீர்கள் என்று நினைக்கையில் பரிதாபமாக உள்ளது..
மேலும் நீங்கள் அதிகமாக அந்த வீடியோவில் சேர்த்து இருந்தா விஷயங்கள் யாவும் ஒரு தனி மனிதனை பற்றிய குற்றச்சட்டுகளுக்கான விசாரணை.. அதிலே அவருடைய தன்மானத்தை காக்கும் பொருட்டு அவரை எங்கும் பிரசாரத்திற்கு அனுப்பாமல் கால தாமத படுத்தி விசாரணை முடிந்த பின்னர் எவர் பக்கம் நியாயம் உள்ளதோ அதனை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற நிகழ்வுகள்.. மேலும் அதிலே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றம் நிரூபிக்கப்பட்டு அமைப்பில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்.. நீங்கள் கூறுவது போல மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால் அமைப்பில் அவருடைய நிலையை கருத்தில் கொண்டு மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டு அவரை காப்பாற்றி இருக்க முடியும்… ஆனால் கொள்கை மட்டுமே பிரதானம் என்பதனால் தானே அவர் தூக்கி எறியப்படுகிறார்.. இதன் மூலம் தங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும்… இஸ்லாத்தை பொறுத்தவரையில் ஆண்டியும் ஒன்று தான் அரசனும் ஒன்று தான்.. எவர் தவறு செய்தாலும் தண்டனைக்கு உரியவரே.. சமுதாயத்தில் அவர் பெரிய இடத்தில இருந்தாலும் நன்மதிப்பை பெற்றவராயினும் தண்டிக்கபடுவர்…
ஏக இறைவன் உங்களையும் என்னையும் நேர்வழியில் வாழ வைப்பானாக என்ற பிரார்த்தனையுடன்,ரபிக் .
இதுபோன்ற அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதென்பது ”இந்தா வச்சுக்க” என்பதாக வராது. மத ஆலயங்கள் கட்டுவதற்கோ, கல்விக்காகவோ, அநாதைக் குழந்தைகள் பராமரிப்புக்காகவோ அல்லது கல்யாணமாகாத பெண்களுக்காகவோ என்றுதான் வரும். இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியதுதான்.
மேலும் பீஜே வெளிநாட்டவர்களை(அரபியர்ளை) சந்திக்காததற்கு. ” அவர்களை நேரடியாக சந்தித்தால் தீவிரவாதியென்று முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயத்தினாலே தான் என்று விளக்கம் கூறியிருக்கிறார். வீடியோவை நன்றாக பார்க்கவும்.
சகோதரர் கலை.. அவ்வாறு பயந்ததினால் என்ன குற்றம் உள்ளது? வெறும் அரபி எழுத்துக்கள் இருந்தன என்பதை ஆதாரமாக காட்டி எதனை இஸ்லாமியர்கள் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் என்பது தங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.. சந்திக்க மாட்டோம் என்று மட்டும் கூறவில்லை.. எந்த ஒரு வெளிநாட்டவரிடம் இருந்தும் இயக்கத்திற்காக சொந்த செலவினங்களுக்காக கை ஏந்துவதில்லை என்பதையும் பெரியவர் பீஜே பலமுறை தெளிவாக விளக்கி உள்ளார்.. அதையும் கருத்தில் கொள்ளுங்கள்..
மேலும் “இந்தா வச்சுக்க” என்று கொடுக்காமல் நீங்கள் மேற்கூறிய விஷயங்களுக்காக தான் கொடுக்கப்படும் என்பதை நீங்கள் கூறி இருகிறீர்கள்.. வெறும் பத்தாயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் அந்த பெரியவர்.. நீங்கள் கூறுவது போல பள்ளிவாசல் கட்டுவதற்காக என்ற பெயரில் பணம் வந்து அதனை கட்டாமல் இவர்கள் சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தியது போலல்லவா இருக்கிறது உங்களின் குற்றச்சாட்டு.. இன்னும் தெளிவாக்கி கொள்ளுங்கள்.. பள்ளிவாசல் கட்டுவதற்காக பணம் வந்தது உண்மை.. பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டதும் உண்மை.. இதில் எங்கு இருக்கிறது தனி நபரின் மத சுரண்டல்?
மேலும் உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. அவர் (பெரியவர் சம்சுல்லுஹா —- குறித்து கொள்ளவும் நீங்கள் கூறியது போல பீஜே அல்ல) நான் சம்பளமாக பெற்றேன் என்று கூறும் இடத்தில மட்டும் எடிட் செய்து வீடியோ தயாரிப்பது என்பது உசிதமல்ல.. அதன் முன்னும் பின்னும் நடந்த உரையாடலையும் சேர்த்து பார்தீர்கலையின் உங்களுக்கு உண்மை என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகி விடும்.. காண வேண்டுமெனில் TNTJ.நெட் சென்று காணுங்கள்… அங்கு நம் போன்றவர்களுக்ககவே வீடியோ திறந்த நிலையிலேயே உள்ளது.. தாரளமாக பார்த்து கொள்ளலாம்..
பள்ளிவாசல் கட்டுவதற்காக பணம் வந்தது உண்மை.. பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டதும் உண்மை.. இதில் எங்கு இருக்கிறது தனி நபரின் மத சுரண்டல்?
அரபி கொடுத்த(வெளிநாட்டிலிருந்து வந்த) பணத்திற்கு கணக்கு வைத்திருக்கிறீர்களா?
பி.ஜே பணம் வங்குனாத காட்டுப்பான்னு சொன்ன ஷாம்சுல் லூஹா சம்பளம் வாங்குனறுன்னு சாகித் வீடியோ அனுப்புனார ரோம்ப நல்ல மனுசன இருக்குறரே நம்ம சாகித்
சகோதரர் சாகித் அவர்களுக்கு,
“rasaiashok@gmail.com ”
இது தான் என்னுடைய மின்னஞ்சல் முகவரி.. உங்களுடைய வீடியோ ஆதாரத்தை எதிர் பார்கிறேன்..
ஆன்லைன் பிஜே என்ற தளத்தில் நேரடி விவாதத்திற்கு உங்களை அழைக்கின்றாரே….. தோழர்கள் ஏன் மவுனம் காக்கின்றனர்.
நலம் விரும்பி அண்ணே, மதஅடிப்படைவாதிகளுடன் நாங்க விவாதிக்க விரும்பலைன்ன பிறகு, விவாதிக்க வான்னா என்ன அர்த்தம்னே???? இப்போ ஆர்.எஸ்.எஸ் அரடவுசருங்களோட யாராவது மூளையிருக்கறவன் விவாதம் செய்வானா??? அது மாதிரிதானே?? புரியுதான்னே?
நீங்க விவாதிக்க விரும்பளைங்கறது உங்க சொந்த விருப்பம்.
ஆனா
இவ்வளோ புரட்சி பண்ணுறவங்க கொஞ்சமாவது விவாதிச்சுட்டு வாங்க. நெரிய கட்டுரை எழுதுறதுக்கு மேட்டர் கிடைக்கும். பிகு பண்ணாதீங்க.
நாதிகம் பெசுபவர்களே, அனைவருன் இங்கு வாருங்கள்,
ஒரே ஒரு அற்ப கேள்வி, இதற்கு பதில் தாருங்கள், கண் இமைகள் இருகின்ட்ரன அல்லவா, அவைகள் கண்கலுக்கு பாதுகாப்பு, அவைகள் தேவை யென பரிணாமத்திற்கு யார் சொல்லி கொடுத்தது, அது அறிவு உல்ல ஒருவனால் உருவாக்க பட வில்லையெனில், கண்கலுக்கு மட்டும் எதர்கு இமை, வாயிற்கு யென் இமை இல்லை, மூக்கிர்க்கு எதர்கு இமை இல்லை, கண்கலுக்கு மட்டும் எதற்கு பாதுகாப்பு.
இன்னொரு கேள்வி, குழந்தை பிறந்த உடன் தாயின் மார்பகதில் பால் எப்படி சுரக்கிரது, யார் சொல்லி கொடுத்தது தாயின் மார்புக்கு, குழந்தைக்கு பால் தேவை என்று. தானாக உருவான உலகம், எப்படி அய்யா குழந்தையின் தேவையை புரிந்து கொள்கிறது,நாதிகம் பேசுபவர்கள் இதர்கு பதில் தந்தால், அடுத்த கேள்விக்கு செல்லலாம்.
@ Faisal
பாலூட்டிகளுக்கு இமை இருக்குன்னா, எல்லா உயிரினங்களுக்கும் இமை இருக்குன்னு அர்த்தம் இல்ல!
புத்திசாலிதனமா கேள்வி கேக்குறதா நினைச்சு நீங்களே வந்து மாட்டிகிறிங்க, இமை தனியாக உருவாகவில்லை, முழுவதும் ரோமமாக இருந்து தேவையற்ற ரோமங்கள் மறைந்த போது, வியர்வையிலிருந்து கண்ணை பாதுகாக்க புருவமும், தூசியிலிருந்து பாதுகாக்க இமையும் தங்கிவிட்டது!
தலை முடியை விட , இமை முடி அதிக சென்சிடிவ் என்பதை தொட்டு பார்த்து உணருங்கள் தோழரே!
இதற்கு பெயர் மாட்டிகொள்வது என்றால் நான் தினம்தொரும் மாட்டிகொல்ல தயார், எதர்காக கண்களை பாதுகாக்க வேண்டும், இது யாரால் செய்யப்படுகிறது, மனிதனாலா! இயற்கையாலா! அறிவு இல்லாத இயற்கை கண்ணை ஏன், எப்படி பாதுகாக்க வேண்டும் தோழரெ!! நீண்களே மாட்டிகொண்டீர்கள்.
என் இரண்டாவது கேள்விக்கு பதில் வரவில்லயெ அதற்கும் பதில் எதிர்பார்க்கபடுகிறது,
ஒரே நாளில் உருவானதல்ல உயிரினங்கள்!
கண்ணுக்கு பாதுகாப்பு இமை என்றால் ஏன் சில உயிரிங்களுக்கு இமைகள் இல்லை! காரணம் அவைகளுக்கு அது தேவையில்லை, அல்லது வேறு மாதிரியான பாதுகாப்பு அமைப்பு அமைந்து விட்டது!
கங்கையில் இருக்கும் ஒரு வகை மீனுக்கு கண்பார்வை இல்லை, இது சில ஆண்டுகளாக தான், காரணம் நீரில் அருகிலிருப்பதை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் மாசு! அதன் பார்வைக்கு பதிலாக வேறு புலன்கள் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்!
பரிணாமம் உயினத்தின் தேவை குறித்து வளர்ந்து கொள்வது!, களிமண்ணிலிருந்து செய்து வந்ததல்ல!
சீனா பகுதி மக்களுக்கு ஏன் கண் பகுதி உள் குழிக்குள் இல்லாமல் மேலேட்டமாக இருக்கிறது, பல நூற்றாண்டுகளாக பனியுகத்தில் மூடபட்டு இருந்தது சீனா! அவர்களுக்கு வியர்வைக்கு வேலையில்லை, அதனால் புருவமேட்டு பகுதியின் தேவையில்லை!
சாத்தியகூறுகளை ஆராய்ந்து பாருங்கள், என் வலையில் பரிணாமம் என்ற தலைப்பில் எழுதி கொண்டிருக்கிறேன்!
//ஒரே நாளில் உருவானதல்ல உயிரினங்கள்!//
ஏன் எல்லா உயிரினன்களும் முலுமையான உடல் அமைப்பில் இருகின்ரன?
//கண்ணுக்கு பாதுகாப்பு இமை என்றால் ஏன் சில உயிரிங்களுக்கு இமைகள் இல்லை! //
என்த உயிரிணம் என்று பட்டியல் தர முடியுமா?
//கங்கையில் இருக்கும் ஒரு வகை மீனுக்கு கண்பார்வை இல்லை, இது சில ஆண்டுகளாக தான், காரணம் நீரில் அருகிலிருப்பதை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் மாசு!//
அதற்கு பெயர் ஊனமா! அல்ல பரிணாமமா!
//அதன் பார்வைக்கு பதிலாக வேறு புலன்கள் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்!//
ஆரம்பிக்குமா! எதை அடிப்படையாக வைத்து கூருகிறிர்கள்?
//களிமண்ணிலிருந்து செய்து வந்ததல்ல!//
உங்கள் பரிணாமம் படி பார்த்தாலும், அனைதிற்கும் ஆதி மண்ணே!!
//என் வலையில் பரிணாமம் என்ற தலைப்பில் எழுதி கொண்டிருக்கிறேன்!//
உங்களுடைய கருத்துக்கள் நாகரீகமான முறையில் இருந்தால் அங்கும் வருவேன்.
//ஏன் எல்லா உயிரினன்களும் முலுமையான உடல் அமைப்பில் இருகின்ரன?//
400 வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் இல்லை, ஆனால் அப்போதைய மனிதனுக்கு அது முழுமையான வாழ்க்கை போல் தான் தோன்றியது, அதே நிலை தான் தற்ப்பொழுது உங்களுடயது!, ஒவ்வோரு நாளுமே மாற்றங்கள் எல்லா உயிரினத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன!
//கண்ணுக்கு பாதுகாப்பு இமை என்றால் ஏன் சில உயிரிங்களுக்கு இமைகள் இல்லை! //
என்த உயிரிணம் என்று பட்டியல் தர முடியுமா?//
ரோமங்கள் இல்லாத உயிரினங்களுக்கு இமைகள் இல்லை, உதா;பாம்பு!
//கங்கையில் இருக்கும் ஒரு வகை மீனுக்கு கண்பார்வை இல்லை, இது சில ஆண்டுகளாக தான், காரணம் நீரில் அருகிலிருப்பதை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் மாசு!//
அதற்கு பெயர் ஊனமா! அல்ல பரிணாமமா!//
மரபணு மாற்றமே பரிணாமம், ஒரு புலன் செயலிலத்தலும் , நிகராக வேறு ஒரு புலன் சக்தி அதிகரித்தலும் பரிணாமத்தின் அங்கமே!
பாம்புகளுக்கு செவிபுலன்கள் சக்தி குறைவு, காரணம் பல சந்ததியினர் மண்ணுக்குள் வாழ்ந்ததால், ஆனால் அவற்றால் நில அதிர்வையும், எதிரியின் உடல் வெப்பத்தையும் துள்ளியமாக கணிக்க முடியும்!
//உங்கள் பரிணாமம் படி பார்த்தாலும், அனைதிற்கும் ஆதி மண்ணே!!//
உடல் 70% நீரால் ஆனது, களீமண்னால் அல்ல!
//உங்களுடைய கருத்துக்கள் நாகரீகமான முறையில் இருந்தால் அங்கும் வருவேன்.//
நாங்கள் கண்ணாடி போல் தான் எயல்படுகிறோம், வினையை பொறுத்தே எங்கள் எதிர்வினை அமையும்!
If you dont know something. It cannot be said that it is because of god. I dont understand logic behind this. Human being is the product of evolution which took place and still taking place for billions of years. Every living creature on earth devoloped structures to cope with its environment. There is no god behind this. Everything happens by its own way. If some one survives the crash, people say it is because of god. He/she survived that crash it, Nothing more than that. Human is like any other animal on earth they die in some years. There is no spirit for the body. It dies with the body. Which is any other planet on universe. Everything happens spontaneously without any reason. But people are so afraid of everything and not ready to accept the death. It is natural phenomenon. People who wants to benefit out this created religion. Which gives life after death. Every religion in this world says about that. christianity-salvation by trinity. Islam- Salvation by allah, Hindu- Moksha by either siva or vishnu. I would say religion is outcome of fear of death and day-to-day problems. They get motivated by these religious people to follow their religion to come over these problems. This is my view. Thanks
Dinesh
//400 வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் இல்லை, ஆனால் அப்போதைய மனிதனுக்கு அது முழுமையான வாழ்க்கை போல் தான் தோன்றியது,//
மின்சாரம் என்பது மனிதனின் அறிவால் விளைந்த ஒன்று, அதை பரிணாமத்திற்கு உதாரணம் தருவது சரியானது அல்ல, மனித வரலாறு 10000 வருடங்களுக்கு மேலாக உல்லது, மனிதனின் எந்த ஒரு உருப்போ பாகங்களோ பரிணாம வளர்ச்சி பெற வில்லயா, அந்த உதாரணம் உங்களுக்கு கிடைக்க வில்லையா!
சரி, மனிதனால் ஏன் பறக்க முடியவில்லை, மனிதனுக்கு பறக்க வேண்டிய தேவை இல்லாயா! பல ஆயிரம் வருடம் பறக்க விரும்பிய மனிதனுக்கு விமானத்தை உருவாக்க முடிந்தது, ஆனால் ரக்கை முளைக்க வில்லயே ஏன்,
//ஒவ்வோரு நாளுமே மாற்றங்கள் எல்லா உயிரினத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன!//
நடைமுறையில் ஒரு மாற்றங்கள் கூடவா உங்கலுக்கு கிடைக்க வில்லை
// மரபணு மாற்றமே பரிணாமம், ஒரு புலன் செயலிலத்தலும் , நிகராக வேறு ஒரு புலன் சக்தி அதிகரித்தலும் பரிணாமத்தின் அங்கமே!//
மரபணுவில் ஏற்படும் மாற்றதிற்கு பெயர் Mutation , நீங்கள் கூரும் பரிணாமத்திற்க்கு அடிப்படை இதுதான், ஆனால் பரிணாமம் நிருபிக்க படவில்லை. அறிவியல் படி, உயிரினத்தில் ஏற்படும் வேதியியல் பாதிப்புகள், கதிர் இயக்க பாதிப்புகள், virus போன்ற காரணங்களால் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது, இதனால் எந்த முலு உடலும் மாராது, மாறாக சிதைந்தே போகும், ஏனேனில் இந்த உடல் முலுமையான கட்டமைப்பில் உல்லது, மனிதன் பல வருடம் போராடி தற்பொது தான் ரோஜாவின் நிரத்தை மாற்றி இருக்கிறான், அப்படி இருக்க இந்த உடலை முலுமையான மனிதனாக மாற்றியது எது, மனிதனின் உடற்கூரு, DNA அமைப்பு போன்றவைகளை படித்து விளங்கிய எவனாலும் அதன் வியக்கதக்க அமைப்பு பார்த்து இவை தானாக உருவானது என்று கூறவே முடியாது, இன்னும் உங்கலுக்கு புரிய வில்லையெனில், DNA, Genome பற்றி படித்தல், முழு விவரம் அறிந்து கொள்ளலாம்,
//
மின்சாரம் என்பது மனிதனின் அறிவால் விளைந்த ஒன்று, அதை பரிணாமத்திற்கு உதாரணம் தருவது சரியானது அல்ல, மனித வரலாறு 10000 வருடங்களுக்கு மேலாக உல்லது, மனிதனின் எந்த ஒரு உருப்போ பாகங்களோ பரிணாம வளர்ச்சி பெற வில்லயா, அந்த உதாரணம் உங்களுக்கு கிடைக்க வில்லையா!//
புலன்கள் என்பது உறுப்பல்ல, அதே போல் பரிணாம வளர்ச்சி உறுப்புகளில் மட்டும் தான் நடைபெற வேண்டும் என்பதும் கட்டாயமல்ல! மனிதனின் அதிகபடியாய அறிவு வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியில் தான் சேரும்!
//சரி, மனிதனால் ஏன் பறக்க முடியவில்லை, மனிதனுக்கு பறக்க வேண்டிய தேவை இல்லாயா! பல ஆயிரம் வருடம் பறக்க விரும்பிய மனிதனுக்கு விமானத்தை உருவாக்க முடிந்தது, ஆனால் ரக்கை முளைக்க வில்லயே ஏன்,//
வாழ அடிப்படை தேவை தான், மாற்றத்திற்கு உதவுமே தவிர, நிறைய சாப்பிட ஒருவன் ஆசைபடிகிறான் என்பதற்காக ரெண்டு வாய் வராது!, வாழும் தேவையை பட்டியலிடுங்கள்!
//நடைமுறையில் ஒரு மாற்றங்கள் கூடவா உங்கலுக்கு கிடைக்க வில்லை//
நிறைய எழுதியுள்ளேன்!, பாருங்கள் வால்பையன் ப்ளாக்கில்!
//இன்னும் உங்கலுக்கு புரிய வில்லையெனில், DNA, Genome பற்றி படித்தல், முழு விவரம் அறிந்து கொள்ளலாம்,//
சிறு மாற்றம் அவர்களது சந்ததினருக்கு தொடர்ந்து அதே ஜீன்களை கொடுத்து, அதே இனத்தை சேர்ந்த மற்ற விலங்கலிருந்து வித்தியாசபடுத்துகிறது, அது தான் பரிணாமத்தின் அடிப்படை தத்துவம்!, நான் படிச்சிகிட்டு தான் இருக்கேன்! நீங்களும் படிக்க வேண்டும் என்பதே என் அவா!
//புலன்கள் என்பது உறுப்பல்ல, அதே போல் பரிணாம வளர்ச்சி உறுப்புகளில் மட்டும் தான் நடைபெற வேண்டும் என்பதும் கட்டாயமல்ல! மனிதனின் அதிகபடியாய அறிவு வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியில் தான் சேரும்!//
அறிவு வளர்ச்சி மரபியலுடன் தொடர்புடையதா? ஒரு விங்ஙானியின் மகன் விங்ஙானியாகதான் இருப்பானா? ஒருவருக்கு மரபியல் படி மூன்று கண்கள் எனில் (DNA கோடிங்கில் அப்படி இருந்தால்) அவனுடைய சந்ததிக்கும் மூன்று கண்கள் தான் இருக்கும். பரம்பரையாக வரக்கூடியது தான் மரபியல், குலப்பிகொள்ளதிர்கள்,
//வாழ அடிப்படை தேவை தான், மாற்றத்திற்கு உதவுமே தவிர, நிறைய சாப்பிட ஒருவன் ஆசைபடிகிறான் என்பதற்காக ரெண்டு வாய் வராது!, வாழும் தேவையை பட்டியலிடுங்கள்!//
அடிப்படை தேவை எனில், இவ்வுலகில் அனைத்து உயிரினங்கள் வாழ அடிப்படை தேவை இருக்கதான் செய்கின்றன, இவ்வுலகில் 1.7 மில்லியன் வகை உயிரினங்கள் உள்ளன, அப்படி ஒரு உயிர் அடிப்படை தேவை இல்லை யெனில் இடம் பெயருமே தவிர வேரு ஒரு உயிராக மாராது. அப்படி இடம் மாறும் உயிரினங்கள் அவ்விடத்திற்க்கு தகுந்தார்போல தங்களின் செயல்கலிலும், உணவிலும் மாற்றம் இருக்குமே தவிர மரபியலில் மாற்றம் இருக்காது,
உங்கள் பதிலிலயே ஒரு கேள்வி, கண் காது எல்லாம் இரன்டு இருக்கையில், வாய் மட்டும் எதற்கு ஒன்று. ஒரு வேலை இரண்டு வாய் உருவாகி ஒன்று மட்டும் போதும் என்று பரிணாமம் தெரிந்துகொன்டதோ!! அல்லது யெதோ ஒரு சக்தி திட்டமிட்டு உருவாக்கியதா!!
//ஒரு சக்தி திட்டமிட்டு உருவாக்கியதா!!//
அது படைப்புவாத நம்பிக்கை!
ஒரு சக்தியும் அப்படி கிடையாது!
//அது படைப்புவாத நம்பிக்கை!//
படைப்புவாத நம்பிக்கை என்பதற்காக, கண்ணை மூடிகொண்டு பொய் என்று சொல்ல முடியாது.
ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, அனுமானங்களை புரந்தள்ளி, யோசித்து பாருங்கள்.
//ஒரு சக்தியும் அப்படி கிடையாது!//
நாங்கள் இருக்கு என்பதை அதாரத்துடன் சொல்லும்போது, இல்லை என்பதையும் ஆதாரத்துடன் சொல்ல முற்படலாமே!!
//நாங்கள் இருக்கு என்பதை அதாரத்துடன் சொல்லும்போது, இல்லை என்பதையும் ஆதாரத்துடன் சொல்ல முற்படலாமே!!//
அதை தான் எனது ப்ளாக்கில் செய்து கொண்டிருக்கிறேன்!
Assalamu Alaikkum,
In quran says, sky was protected with 7 layers , but scientist discovered now only sky has 7 layers , but quran mentioned this 1400 years before itself.How it is possible ..?
நண்பரே,
உங்களுக்கும் அமைதி உண்டாகட்டும் எங்கே ,எப்போது,எந்த அறிவியலாளர்கள் கண்டு பிடித்தார்கள் .அது குறித்த விஷ்யங்களை கூறுங்கள்
I don’t know why you people are fighting like this. There is a website run by muslims who came out of Islam where every Koranic verse is explained in minute detail. Just visit the site to know such muslims views on Islam and its founder. I specifically request Mr.Periardasan to visit http://www.faithfreedom.org
sorry i do’t have tamil software,
entha vivatham avanga, avanga karuthai thinikkathan seiyuthu, yarum or mudivukku vara mudiyaliye?
dears, if you have any doubt of ISLAM please check with http://www.onlinepj.com. all humanbeings want peaceful life. if you want peacefull and god approved life the one and only way ISLAM
ethu thava elathai visayam?abdullah thaliva solukirar.bt vandum eanda avar kolapurar/pariyar pathi elorukum tarium/maniyamaiyai vachikitu erunthathu.vivatham panukiravan kerukan/yar entha vibasarien magan sathik?avar thaliva sollur 1978 el erunthu nan thekala elanu sollurar/evan famous aga vandum andru avara problm panukiran/poda kuna.pati kodurathu avar istem/dai sathiq ni entha hinduku poranthava?entha patiya katu katu na unku vimarsanam aluthuran/vanthay 15 days agalanu solurar/apam sathiq pooi soluran/
கொஞ்சம் இந்த தளத்தையும் பாருங்க அய்யோ அய்யோ அங்கேயும் உண்மை தெரிஞ்சுருச்சு போல
http://www.onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/abthullaavuku_madal/
pls click the link
pls click the link
http://www.answering-christianity.com/hadiths_of_the_fly.htm
நன்றி பெரோஸ்,ஷேக்
அதுக்குள்ளே சாயம் வெளுத்து போச்சே.ஒரு இடத்திலேயும் ஒழுங்கா இருக்கமாட்டாரா இந்த சேஷாச்சல பெரியார் தாச சித்தார்த்த அப்துல்லா அவர்கள், பி ஜேவை புலம்ப வைத்து விட்டாரே.
அருமையான சுட்டி..
பெரியார்தாசனா இது? அய்யோ பயங்கரம். பின்னணியில் என்ன நடந்திருக்கிறது என்று தெரியவில்லை, என்ன இரகசியமோ? இந்து மதம் புத்த மதம் ஆகியவற்றில் இருக்கின்றவர்கள் இந்துமத சட்டத்தால் நிருவகிக்கப்படுகிறார்கள். ஆனால் இசுலாமியர்கள் இசுலாமிய மதச்சட்டங்களால் நிருவகிக்கப்படுகிறார்கள். அந்தச் சட்டத்திற்கும் இந்தச்சட்டதிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எனவே அவருடை தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலில் ஏதோ ஒன்று தப்பிப்பதற்கு புகலிடமாக இசுலாம் அமைந்திருக்கலாம். ஒரு ஊகம் தான். பாவம் பரிதாபப்படுகிறோம் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
here we are talking about the individual Periyardasn-
for long time he misuse the name of Periyar for his personal gain, now he changed to—-
only for his personal gain. He is not worthy person, discuss about him.
IS there any one have guts to ask our cheif minister to ask about using yellow towel? u cant?
To changing towards any religion is all about human ,individual values and decisions. But god id remains equal to one.
இந்த வலைத்தளத்தை பாரீர்
http://www.islam-watch.org
இந்து மதத்தை விட மிக அதிக பாசிச கொள்கைகள் வெளிக்கொணரும் ஒரு தளம்
பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு கடவுளை வணங்கவேண்டும் என்கிற நிர்பந்தம் எந்த உயிரினங்களூக்கும் இருந்ததில்லை,எனவே கடவுளை(?)வணங்கத் தேவையில்லை.அதனால் கடவுள்(?)இப் பூமிக்கு அவசியமில்லை அவசியமில்லாத ஒன்றை நினைப்பதை விட்டுவிட்டு மனிதனின் நாளைய முன்னேற்றத்திற்கான அறிவியல் தேடல்களில் பங்கெடுத்துக் கொள்வதே எதிர் கால சந்ததியர்களை வாழவைக்கும்.
அன்புடன் இனியவன்….
islathirkku varuvatharkku .,just 1 step only allah + nabi ,namba vendum + marumai .,.,avvalave piraku anaithum vilankum .,.,
To know about true mohamMadism please visit the following sites.
http://www.faithfreedom.org
http://www.alisina.org
An ex-muslim called Ali Sina and other ex-muslims expose Islam wonderfully. A must for all non-muslims and also for future ex-muslims.
பெரியார்தாசன் எதற்கு மதம் மாறினார் என்று எனக்கு தெரியாது ஆனால் islam என்பது கடவுளக்கு மட்டும் அடிபணிதல் ஆகும் (submission to god alone) இதை யார்ரு செய்தாலும் அவர் தான் முஸ்லிம் ok matterku வருவாம்,.அழ quran ( இறுதி ஏற்பாடு) மனிதன் மண்ணால் படைக்க பட்டான் என்று கூறகிறது இதற்கு meaning liquid அல்லது gasal படைக்க பட்டு இருத்தால் புவிஈர்ப்பு விசை அடக்க மாட்டான் பூமில் ஒரு இடத்தில attagamattan so மனிதன் மண்ணால் பட்டைக பட்டுள்ளன் உள்ளன் .தமிழ் மொழிதான் ஆதி(adam language ) மொழியாக vendum என்று neekukiran.மனிதன் மண்ணால் படைக்க பட்டதால் தான் மனிதன் என்று அழைக்கபடுகிறான்.இங்கிலீஷ் மென்(that mean tamilae மண்ணு).adamku(namma areathan adam tamil nadu) nam anathayum katrukuduthan அல் குரான் இறுதி ஏற்பாடு)இது perthan பகுத்து அறிவது kaduvulu pukal anaithum onther one sivan parvathi than i think adam yaval
எங்க நானாவ பார்த்து இவ்வளவு கேக்குறீகளே……அவுக மாதிரி பணம் குடுப்பீகளா…????
periyardasan is not an ordinary man. he is the man who wants to do any thing with thorough and deep knowledge in that particular work. that is why he went to Buththism for the shake of translating some books written by dr.ambedkar.he had to clarify his doubts and some terms regarding the buththism. as he is an atheist no one from that particular religion will help him.no religion will disclose its secrets to person from other beliefs. this is the real reason. after fulfilling his objective, he came out from it. in the same way he has gone to another religion as he wants to do some research work in that particular religion.that’s all. world is going to see his early exit in the near future. that will surely happen. this is the real periyarthasan. no need to doubt him.