இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.
தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.
எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன்முதன்மைப் பணி.
கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.
ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
_____________________________________________
இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு!
1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.
1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.
உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.
ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.
________________________________________________
கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு!
இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.
தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.
பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.
இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.
அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.
இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.
கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.
அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.
மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.
இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.
______________________________________________________________
விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!
தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம் தெரியாது.
பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் கிடைக்கும் பொருளை வாங்குவது நுகர்வோர் வழக்கம். அதன்படி தமது பானங்களை மட்டுமே கடைக்காரர் விற்க வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தமது வர்த்தகக் கொள்கையாக வைத்திருக்கின்றன. கடைக்காரருக்கு குளிர்பதன பெட்டியை மலிவு விலையில் அல்லது இலவசமாய் வழங்குவார்கள். முதல் மிச்சம் என கடைக்காரர் நினைப்பார். ஆனால் கோக் அல்லது பெப்சி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், அதை விற்றே கடன் அடைக்க வேண்டும், அதனால் அதிகமாக அந்த பானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்ற சுழலில் தாம் சிக்குவோம் என்பதை அவர் அறியமாட்டார். மேலும் பெயர்ப் பலகைகள், சுவர்க்கடிகாரம், பனியன், தொப்பி என்ற பரிசுப் பொருட்கள், முதல் கொள்முதல் இலவசம் போன்ற சலுகைகளாலும் கடைக்காரர்களை அவர்களை அறியாமலே விலை போக வைத்துவிட்டனர்.
தமது பானங்கள் போகாத புதிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு தாதா ஏஜெண்டுகளை வைத்திருக்கின்றனர். தாதாக்கள் அப்பகுதியைப் பழக்கிய பிறகு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சந்தையைத் தொடருவர். உணவகங்கள், பெரும் அங்காடிகள், திரையரங்குகள் போன்ற பெரிய விற்பனையாளர்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து தமது குளிர்பானங்களை மட்டும் விற்க வைக்கின்றனர்.
புது தில்லியில் பி.வி.ஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கிற்கு 60 இலட்சமும், பம்பாயின் ஸ்டெர்லிங் திரையரங்கிற்கு 30 இலட்சமும் கொடுத்த பெப்சி சமீபத்தில் மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிற்கும் ஒருபெரும் தொகை கொடுத்து தனது பாட்டில்களை மட்டும் விற்க வைத்திருக்கிறது. கோக், பெப்சி இரண்டும் இதற்காக மட்டும் வருடந்தோறும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றன.
குளிர்பான விற்பனையில் பாட்டில்கள் சுழற்சி அதாவது பாட்டில் தொழிற்சாலை – கடை – மீண்டும் தொழிற்சாலை என இடையறாமல் பயணம் செய்வது முக்கியம். ஒரு வருடத்தில் ஒருபாட்டில் 10 முறையாவது விற்கப்பட்டால்தான் லாபம். இதில் 30 சதவீதம் பாட்டில்கள் உடைபடும். மீதி சுற்றிவரும். அப்படி சுற்றி வரும் தனது எதிர் நிறுவன பாட்டில்களை முடக்குவதற்கு இந்நிறுவனங்கள் ஏராளமான சதி வேலைகள் செய்கின்றன.
அடுத்து குளிர்பானத் தயாரிப்பு – விற்பனைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக இந்நிறுவனங்கள் பாதியை மட்டும் முதலீடு செய்கின்றன. மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலம் முதலீடு செய்ய வைக்கின்றன. பெப்சி – கோக்கின் ரசாயன கரைசல் கூழ் (எசன்ஸ்) மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும். கூழை நீரில் கலந்து பாட்டிலில் விற்பதற்கென்றே உலகம் முழுவதும் பிராந்திய அளவில் ஏராளமான பாட்டில் தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் கோக்கிற்கு 60, பெப்சிக்கு 26 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கோக் மட்டும் பாதியை சொந்தமாகவும் மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வைத்திருக்கின்றது.
இத்தகைய பாட்டில் தொழிற்சாலைகளின் அதிபர்கள் கோக் கோருகின்ற அளவு முதலீடு செய்ய வேண்டும். கோக் பானங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒப்பந்த விதிகள். தற்போது இத்தொழிற்சாலைகளை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி வருகிறது கோக். சிலரை பாதி பங்குகளை தருமாறு கட்டளையிடுகிறது. கோக்கின் மிரட்டலை எதிர்த்து 23 அதிபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். “எங்களை அதிக முதலீடு செய்ய வைத்துவிட்டு, இப்போது ஒப்பந்தத்தை ரத்துசெய், அல்லது விற்றுவிடு” என்று கோக் மிரட்டுவதாக பூனா பாட்டிலிங் தொழிற்சாலை அதிபர் தனது வழக்கில் கூறியிருக்கிறார்.
அதே போன்று மொத்த வியாபாரிகளும் கோக்கினால் அச்சுறுத்தப்பபடுகின்றனர். தமிழக நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேஷ், “கோக்கின் அநீதியான வர்த்தகப்படி எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. எதிர்த்துக் கேட்டால் வேறு வணிகர்களை நியமனம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்” என்கிறார்.
இது போக பெப்சியும், கோக்கும் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். தனது நிர்வாகிகளை கோக் விலைக்கு வாங்குவதாக பெப்சி வழக்குத் தொடுத்திருக்கிறது. இதில் பெப்சிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் இன் அருண் ஜெட்லி, “2000 கோடி முதலீடு செய்திருக்கும் பெப்சிக்கு இழைக்கப்படும் அநீதி” என்று நீதிமன்றத்தில் உருகினார். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பபடி ஒரு ஊழியர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையை தடை செய்ய முடியாது” என்று கோக் திருப்பியடித்தது. பெப்சியும், கோக்கின் பானங்களைத் தயாரித்து வந்த குஜராத், கோவா பாட்டில் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கியிருக்கிறது. இப்படி இருவரும் தங்களது வியாபார மோசடிகளுக்காக இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.
இப்போது குடிநீர் என்றாலே ‘மினரல் வாட்டர்’ என்றாக்கி விட்டார்கள். இந்தியாவின் மினரல் குடிநீர் சந்தை மதிப்பு 1250 கோடி ரூபாயாகும். வருடந்தோறும் 100 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இத்துறையையும் அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.
இதற்கு மேல் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். ஆய்வகம், சரக்கு லாரி கட்டும் பனிமணை, பழரச உற்பத்தி, காய் – கனி பண்ணை, நொறுக்குத்தீனி, டப்பா உணவு ஏற்றுமதி என ஏராளமான திட்டங்களையும் வைத்திருக்கின்றன. இந்தியாவின் 15 கோடி நடுத்தவர வர்க்க மக்களைக் கொண்ட வலுவான சந்தையைக் கைப்பற்றுவதை தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பம் ஒருமாதம் பல நூறு ரூபாய்களை தங்களுக்கு மொய் எழுதவேண்டும் என்பதே அவர்களது இலக்கு.
கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்தைக் கள் ஊற்றி மதி மயங்க வைக்கும் வித்தைக்காக பல விளம்பர படைப்பாளிகள் பெப்சி – கோக்குக்காக உழைக்கின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு மட்டும் இரு நிறுவனங்களும் தலா 50 கோடியை கட்டணமாகக் கொடுக்கின்றன. இதுபோக வானொளி, ஏனைய விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஷாருக்கான், டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற நிழலுலக நட்சத்திரங்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
“உலக அளவில் கொள்ளையடிக்க உள்ளுர்ககாரனாக வேடம் போடு” என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டும் செயல் திட்டம். அதற்கேற்ப தங்களது விளம்பரங்களுக்கு அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கோக் ஆந்திராவில் சிரஞ்சீவியையும், தமிழ்நாட்டில் விஜயையும், பெப்சி தமிழகத்தில் மாதவனையும், தெலுங்கில் கல்யானையும் விளம்பரங்களில் இறக்கியிருக்கின்றன. இனி இன்பத் தமிழிலும் சுந்தரத்தெலுங்கிலும் “என்ஜாய் கொக்கோ கோலா, ஏ தில் மாங்கே மோர் – ஆஹா”வும் கவிதையாய் பொழியும்.
இதுவும் போக டி ஷர்ட், தொப்பி, கிரிக்கெட், சினிமா ஸ்பான்சர், மூடி சேகரிப்பு, ஹாலிவுட் – மல்யுத்த நட்சததிரங்களின் ஸ்டிக்கர்கள், அறிமுக விலை தள்ளுபடி, சென்னையில் இட்லிக்கு கோக் இலவசம், மும்பையில் சப்பாத்திக்கு இலவசம், பெங்களூருவில் பிஸ்ஸா வாங்கினால் பெப்சி கேன் இலவசம் என மேட்டுக்குடியைக் கவர ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.
____________________________________________________________
இது அமெரிக்காவின் குளிர்பானக் கம்பெனிகள் இந்தியாவில் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு போர்!
3 ஷிப்ட்களில் 150 தொழிலாளிகள் வேலைபார்த்த காளிமார்க்கின் விருதுநகர் பாட்டில் தொழிற்சாலையில் இன்று இருபது பேர், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்கின்றனர். தென் மாவட்டங்களில் இன்று காளிமார்க்கை பரிதாபமான ஒரிரு பெட்டிக் கடைகளில் மட்டும் காணலாம். திருச்சியில் வின்சென்ட் குளிர்பான அலுவலகப் பெயர் பலகை பாழடைந்து சவக்களையுடன் காணப்படுகிறது. மதுரை மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானம் தமது திரையரங்குகளில் கூட விற்க முடியாத அவல நிலையில் இறந்து வருகிறது. காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற பன்னீர் சோடா நிறுவனங்களை இனி தொல்பொருள் ஆராய்ச்சியில்தான் தேட வேண்டும். மோரும், இளநீரும், போஞ்சியும், பானகமும் அருகி வருகின்றன. நீராகாரம் என்பது என்னவென்றே நகர்ப்புற இளைஞர்களுக்குத் தெரியாது.
10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்திய குளிர்பான நிறுவனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்திருக்கின்னர். நமது விவசாய பொருளாதார, தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமான மரபு வகை பானங்களை மறந்துவிட்டோம். அமெரிக்காவின் கார்பன் வாயு கலந்த ஆல கால விடத்தை குடிக்க பழக்கப்படுத்தப்படுகிறோம். பெப்சியும், கோக்கும் தமது எசன்ஸை மட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி, உள்ளூர் பாட்டில் தொழிலதிபர்களை வைத்து நீர் கலந்து, ஏஜெண்டுகளை வைத்து விநியோகித்து, விளம்ரங்களுக்கு நுகர்வோரிடமே பிடுங்கிக் கொண்டு, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் கொண்டு, டப்பா உணவு ஏற்றுமதி – கோலா விற்பனை இரண்டிலும் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.
இந்தியா மட்டுமல்ல முழு உலகும் இந்தக் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவுக்கு கீழே இருக்கும் மெக்சிகோ நம்மைப் போன்ற ஏழை நாடுதான். அங்கேயும் ஆண்டுக்கு ஒருவர் 500 பாட்டில்களை குடிக்கும் அளவுக்கு தனிநபர் நுகர்வை ஏற்றி விட்டார்கள். எங்கெல்லாம் அமெரிக்க இராணுவம் நுழைந்ததோ அங்கெல்லாம் பெப்சியும், கோக்கும் நுழைந்தன. பின்னர் இராணுவம் திரும்பினாலும் கோலாக்கள் திரும்பவில்லை.
ஜப்பான், கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து இங்கெல்லாம் கோலாக்கள் அம்மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டன. சிங்கப்பூரில் ஒரு ஓட்டலுக்கு சென்றால் முதலில் குடிநீர் வைக்கமாட்டார்கள். கோக்தான் தருவார்கள். இப்படி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு வருகிறது.
தொன்மையான புகழ் பெற்ற நாகரிகங்களெல்லாம் நதிக்கரையில் தோன்றின. மனித குலநாகரிகத்தில் நீரின் பங்கு அத்தகையது. இன்றும் நல்லநீர் கிடைக்காமல், மழை பெய்யாமல், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் ஏராளமான நாடுகள் உள்ளன. வருடா வருடம் ஒரிஸா, ராஜஸ்தான், குஜராத்தில் பிளந்து கிடக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் அந்த நீரின் அருமை தெரியும். தண்ணீர் நமது உடலில் இரண்டறக் கலந்தது. நமது பண்பாடு. விவசாயத்தின் உயிர். அத்தகைய நீரை நமது சிந்தனையில் இருந்து அழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம்?
பெப்சி – கோக்கின் ரசாயனக் கலவையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வியாபார ரகசியம் என்ற உரிமையால் பாதுகாக்கப்படும் அந்தக் கலவையின் தீங்கை மேற்குலகிலேயே பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். பெப்சி – கோக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘டயட்’ என்ற பானத்தில் (கலோரி இல்லாத இனிப்பு நீர்) உள்ள ‘ஆஸ்பார்ட்டாம்’ என்ற ரசாயனப்பொருள் உடலுக்கு நேரடித் தீங்கை விளைவிக்கக் கூடியது என அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் கிளம்பியிருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தைச் சரிகட்டி கோக் தொடர்ந்து அதை விற்கிறது.
பிரான்சில் மக்கள் அருந்தும் பானமும், ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒயின்தான். பிரெஞ்சு நாடு திராட்சை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. அந்த விவசாய பொருளாதாரத்தை வைத்து இந்த பானம் அவர்களிடையே மரபு வகை பழக்கமாக உள்ளது. கோக், பெப்சியின் வருகையால் பிரெஞ்சு விவசாயிகள் பாதிக்கப்பட்டு எதிர்த்துப் போராடுகின்றனர்.
இப்படி உலகம் முழுவதும் அந்தந்த மக்களது வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம் மூன்றும் அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நுகர்வுப் பண்பாட்டால் அழிக்கப்படுகின்றது. பிஸ்ஸா, பர்கர், எம்.டி.வி, ஹாலிவுட், துரித உணவகம், பேரங்காடி, டபிள்யூ. டபிள்யூ. எஃப், நைக், மெக்டோனால்டு போன்றவையே நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கற்றுக்கொடுக்கின்ற தேவன்களாக மாறிவிட்டன.
உழைப்பாளிகளின் பானமான தேநீரை நடுத்தர – மேட்டுக்குடி இளைஞர்களிடம் கொண்டு செல்ல நெஸ்லேயும் – கோக்கும், பெப்சியும் – இந்துஸ்தான் லீவரும் இணைந்து ஐஸ் டீ, ரெடிமேடு டீ போன்றவைகளைத் தர இருக்கிறார்கள். கோக், பெப்சி இரண்டும் உலகம் முழுவதும், ஏன் கழிப்பறைகளில் கூட கிடைக்க வேண்டும் என்பது வரை போய்விட்டன. சமீபத்தில் போன் செய்தால் கோக் டின் கொட்டும் ‘டயல் எ கோக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கொள்ளையடிக்கும் உத்திக்கு முடிவு கிடையாது.
இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.
______________________________________________________
• புதிய கலாச்சாரம், மே – 2001
_______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- புதிய கலாச்சாரம் கட்டுரைகள்
- கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
- ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி !
- டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!
- பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!
- குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்
- கென்சாரோ-விவா படுகொலை: ஷெல் நிறுவனம் தண்டிக்கப்பட்டதா?
- கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!
- தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
- பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
பெப்சி, கோக் கூட குடிக்காமல் இருந்து விடலாம். ஆனால் குடி தண்ணீர் என்றாலே இந்தக் கம்பனிக்களின் மினரல் வாட்டர் என்றாகிவிட்டதை எப்படிச் சமாளிப்பது?
அரசாங்கம் இந்த தண்ணீர் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்றால் நாம் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும்.
இங்கே அமெரிக்க சாலைகளில் விபத்து ஏற்பட்டால் இரத்தக் கரையை அலசிவிட
ரோந்து போலீசார் வைத்திருப்பது இந்த கோக் பாட்டில்கள்தான்.
காசு கொடுத்தால் கழுதை மூத்திரத்தைக் கூடக் குடிக்கும் சினிமா நடிகர்களில் ஒருவரான
விஜய் கோ கோ கோலா விளம்பரத்தில் வந்தபின் அவரது மார்கட் சரிந்தது.
காசுக்காக ஒரு தலைமுறை உடல்நலம் கெட – சிகரெட்-கோக் விளம்பரங்களில்
நடிப்பவர் படங்களை பார்க்காதே என்று தேவர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது.
டாக்டர்.இராமதாஸ் போன்றவர்கள் இதன்யும் வலியுறுத்த வேண்டும்.
சமுதாயம் என்பது சும்மா வேடிக்கை பார்பதற்கு அல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இனி, ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது- குடிப்பது- என்று நடித்தாலே- அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
அசின், திரிசா, ஆயிஸ்வர்யா, விஜய், எல்லோரையும் தேவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
http:thevarsangam.blogspot.com
மக்களுக்கு அறிவு வேணுமே. நாமும் பல வருஷங்களா சொல்லி பார்த்தாச்சு. எழுதி பார்த்தாச்சு. புரியோஜனம் என்ன. பூஜ்யம் தான். ஆனாலும், நாம் நம் விழிப்புணர்வு வேலையை செய்து கொண்டிருப்போமே. ஒருத்தர், ரெண்டு பேர் மாறினாலே, இப்போதைக்கு நம் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றி தான்.
நமக்கும் தேவை ஒரு ஹ்யூகோ சாவேஸ்.
http://www.straitstimes.com/BreakingNews/World/Story/STIStory_531501.html
//நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது//
Coke also have pesticides, stimulant for making you active (like drugs) and some more secrete formulation for keeping people addicted.
Please correct it
உங்கள் திருத்தம் சேர்க்கப்பட்டது, நன்றி.
///பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது/// என்று சொன்ன வினவு …
…இதை விட அதிகம்பேர் குடித்து சீரழியும்…. சொல்லப்போனால் இதைவிட தனக்கும், குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பெருநாசம் விளைவிக்கும்… மேலும் இதைவிட பெரிய விற்பனை சாம்ராஜ்யம் நடத்தும் வெளிநாட்டு…. (கவனிக்கவும்:வெளிநாட்டு) ….மதுபான வகைகளுக்கும்….. இவ்வரிகளைவிட ….. வேண்டாம்….. atleast … இதேபோல கண்டன வரிகளையாவது எழுதுவீர்களா?
நெத்தியடி, கோக் பெப்சிய பத்தி எழுதுனா சாரயத்த பத்தி எழுதுவியான்னு கேட்டா அது வினவு மேல உங்களுக்கு இருக்குற வெறுப்பு போதை தலைக்கு ஏறிடிச்சுன்னு அர்த்தம்… சாராயம் குடிக்காத 3 வயசு குழந்தை கூட கோக் பெப்சி குடிக்குது….. சாராயத்த எதிர்த்து யார் வேணுமின்னாலும் பக்கம் பக்கமா எழுதலாம்… ஆனா கோக் பெப்சிபை எதிரத்து இயக்கம் நடத்துனவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். உங்க வெறுப்பை கொஞ்சம் மூட்டை கட்டி வச்சிட்டு நிதானமா யோசீங்க பாய்!!!
நான் ஆரம்பத்தில் மற்றவர் வாங்கிகொடுத்தால்மட்டும் குடிப்பேன் அனால் இந்த கட்டுரையை மே 2001 படித்தபிறகு நான் இலவமாகவோ அல்லது காசுகொடுத்தோ குடிபதில்லை .முடிந்தவரை அனைவருக்கும் எடுத்து சொல்கிறேன் .உங்கள் மறு வெளிஈட்டுகிர்ற்கு மிக்க நன்றி
mikka அருமை nanba
அருமையான பதிவு.
நல்ல கட்டுரை வினவு!
பூச்சிக்கொல்லிகள் கலந்திருப்பது பற்றி கேள்விப்பட்டதிலிருந்து கோக்-பெப்சியை தவிர்க்கிறோம். தங்கள் கட்டுரையின் மூலம் தற்போது கோக்-பெப்சி பின்னாலுள்ள அரசியல் புரிகிறது.
சிலநேரங்களில் மாஸா போன்ற பழரசங்களை வாங்காமல் தவிர்க்க முடிவதில்லை! 🙁
maaza குடிப்பதற்கு நீங்கள் பழரசங்களை குடியுங்கள் என்பது என் வேண்டுகோள் முல்லை
பஸ் பயணங்களின் போது பழரசங்கள் கிடைப்பதில்லை… அதே போல் கடைகளிலும் பெப்சி, Coke in பானங்களை தவிர வேறு எதுவும் சுலபத்தில் கிடைபதில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் maaza,Slice தவிர்க்க முடியாத பானங்கள் ஆகி விடுகின்றன.
அருமையான கட்டுரை தோழர்…
நிலத்தடி நீர் கோக்,பெப்சி தயரிப்பதர்கக உரிஞ்சபடுவத்தையும் தெளிவு படுத்தி இருக்கலாம்.
மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கில் அவர்கள் பொருள் விற்க முடியாது கொடுமை
பெப்சி கோக் அடித்து விரட்டப்பட வேண்டும் .
//ப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.//
சரியான வரிகள் பல பேர் பெப்சி கோக் குடிப்பதை ஒரு முன்னேற்றத்தின் அடையாளமாய் பார்கிறார்கள் நல்ல சவுக்கடி வினவு
பிளாச்சிமடா போன்ற இடங்கள் வறண்டு போனதை சுற்றுசுழல் பாதிக்க பட்டதை
இன்னொரு பதிவு போடுங்கள் ….நான் ஏற்க்கனவே போட்டிருந்தேன் ஆனால் வினவு அளவு உள்ளே போக முடியாது ஒரு விடயத்தில் அதனால் பெப்சி கோக் எங்கே எங்கே சுற்றுசுழல் பாதிக்க பட்டதை வினவு எழுத வேண்டும் விளக்கமாய்
உங்க பிளாச்சிமடா கட்டுரைக்கு லிங்கு குடுங்க வெ.இ
http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_23.html
கோக் குடிப்பவர்களின் தரப்பு நியாயத்தை கேட்க்காமலேயே அராஜகமாக ‘மானங் கெட்டவர்கள்’ என்று எழுதுகிறது வினவு. ஒவ்வொரு விசயத்தையும் ஆய்ந்து வித்தியாசமான கோனங்களில் சிந்திக்கும் அறிவுத் திறமை வினவு கும்பலுக்கு கிடையாது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அப்படியே கோக் குடிப்பவர்களை வினவு கண்டிக்க வேண்டுமெனில் அதற்கு ஏன் இந்த் தேவையற்ற வார்த்தை பிரயோகமெல்லாம்? ஆகவே, முதலில் வினவின் இந்த அராஜகத்தை கண்டித்துவிட்டு பிறகு ஒருவேளை விருப்பமும், நேரமும் வந்தால் கோக் பிரச்சினையை பேசுவதே ஜனநாயகமாகும். கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வினவின் இது போன்ற அத்துமீறல்களை கண்டிக்க கோக் குடிப்போர் சங்கம் அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
கருத்துரிமை காவாலி தியாகுவுக்கு கவித்துவமாய் ஆப்பு வைத்திருக்கிறார் கருத்துரிமை காவலாளி . அடடா அடடடடா
சரி குடிக்கவில்லை. சரக்குக்கு மிக்ஸிங் ஆக சேர்க்கலாமா ?
சரியான கேள்வி ரவி. தோழர்கள் பலரும் மிக்ஸிங் செய்ய என்ன பயன்படுத்துகின்றனர் ? சரக்கடிக்கும் ’புரட்சியாளர்கள்’ பலர் உள்ளனர்..
அதியமான், பாத்து ரொம்ப நாளாச்சு, எதுக்கு இந்த அனானி வேசம்??? நீங்க தோழர்களுக்கு ஊத்தி கொடுத்ததா நான் கேள்விப்படவேயில்லையே ???
இந்த கட்டுரையை படிச்சுட்டு அடிக்கப்போற சரக்க பத்திதான் ரவிக்கு சிந்தனை போகுதுன்னா .. அதுக்கு கோக்கையே குடிக்கலாம். ”அமெரிக்க மூத்திரம் கோக்” அப்படினீன்னு ஒருஸ்டிக்கர் பாத்த நியாபகம்
ரவி கம்யூனிச சரக்கு அடிக்கலேன்னு திட்டுரீன்களோ கேள்விக்குறி.
வாலு சரக்கு அடிச்சா திட்ட மாட்டேங்குறீங்க. ரவி அடிச்சா மட்டும் ஏன் திட்டுறீங்க கேள்விக்குறி?
நெத்தியடி முஹம்மது ஏன் ரவிக்கு பதில் சொல்லாம வால்பையனுக்குமட்டும் ஏன் உபதேசம் பண்றார் நீங்க ஆன் த ராக்ஸ் அடிச்சுட்டு வாந்தியெடுக்குற இசுலாமிய சரக்குல போதையில்லன்னு வால்பையன் எழுதிட்டாரே அதனாலயா ஷாஜூ
இங்கு ரவி…
//சரக்குக்கு மிக்ஸிங் ஆக சேர்க்கலாமா ?//
–என்று வினவை கேட்கிறார்….
இதற்கு அனானி…//தோழர்கள் பலரும் மிக்ஸிங் செய்ய
என்ன பயன்படுத்துகின்றனர் ?
சரக்கடிக்கும் ’புரட்சியாளர்கள்’ பலர் உள்ளனர்..//
என்று கேள்வியை வலுப்படுத்துகிறார்….
ஆனால், வால்பையன்,
//நான் எந்த சூழ்நிலையிலும் மிக்ஸிங்கிற்க்கு குளிர்பானங்கள் எடுத்து கொள்வதில்லை!, தண்ணீர் மட்டுமே!//
….என்று தான் சரக்கடிப்பதையும்….அதன்மூலம்…
“சரக்கைவிட கோக்கும் பெப்சியும் தான் மோசம்”
……. என்ற ஒரு தவறான மாய பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்….
(இது பதிவுக்கு வலு சேர்க்கும் என்று நினைத்த வினவுக்கு எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது…)
ஆனால், தவறான கருத்தை சொன்ன வால்பையனை எதிர்க்கவேண்டும்
என்ற நிலை எனக்கு…
வினவுக்கு கிடுக்கிப்பிடி போட்டதால்….
‘குடிப்பவன் எக்கேடு கேட்டால் என்ன’….என்று
குடிப்பவருக்கு எதிராய் கேள்வி கேட்ட ரவியை மட்டும்
எதிர்த்தால் போதும் வினவுக்கு…
குடியை எதிர்ப்பது உங்கள் நோக்கமென்றால் முதலில் ரவியை எதிரத்திருக்க வேண்டும்.. அதை விடுத்து வாலை மட்டும் வெட்ட முனைவது எந்த வகையில் நியாயம்.. ரவிக்கு ஒரு நியாயம் வாலுக்கு ஒரு நியாயமா..
@@குடிப்பவருக்கு எதிராய் கேள்வி கேட்ட ரவி @@@ அப்படியா எதை மிக்ஸ் செய்துகுடிப்பது என்ற ரவியின் கேள்வி எப்படி குடிப்பவருக்கு எதிரானது என்று உங்கள் மேதகு மூளையைக்கொண்டு விளக்க முடியுமா???
@@@இது பதிவுக்கு வலு சேர்க்கும் என்று நினைத்த வினவுக்கு எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது…@@@
உம்மால உங்களுக்காகவே சிந்திக்க சரக்கு இல்ல இதுல வினவுக்காக சிந்திப்பு வேறையோ….. தவிர நீங்க பதில் சொல்ல பயந்து நடுங்கம் சவால் இங்கே https://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/#comment-23586 மண்டைக்குள் மூளை இருந்தால் பயன்படுத்த ஏற்ற தருணம் … இது…
கோக் பெப்சி ஒரு வகை போதை வஸ்துக்கள் என்பதை மறுக்க முடியாது… கொஞ்சம் கொஞ்சமாக அவைகளை ஒதுக்க நான் முனைய வேண்டியது அவசியம் தான்.
உங்கள் பின்னூட்டம் பதிவின் நோக்கத்தைத் திசைதிருப்புவதாக அமைகிறது.
இன்னும் நிறைய எழுத வேண்டும்.
bovonto எப்படி?
நான் இதுவரை குடித்த கோக் பானங்களில் போவோன்டோ தான் மிக சிறந்தது… அதிக கேஸ் அடைப்பு இல்லை, கூடவே அபரீதமான மணம் மற்றும் சுவை…
நல்ல ஒரு விற்பனை முகவர் இருந்தால் இந்தியா அளவில் போவோன்டோ போட்டி போட முடியும்….
Doctor, Bovonto is made by KaliMark. But,I am sure you will agree that Bovonto too is made off artificial carcinogenic coloring agents and with lots and lots of simple sugar.
என்னுடைய பதிவு
http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_23.html
உமா அவர்கள் சொன்னது போல் அவசரத்துக்கு குடிக்கும் தண்ணீர்க்கு அவர்களை விட்டால் வேறு யாருமில்லை என்ற நிலை!
நான் எந்த சூழ்நிலையிலும் மிக்ஸிங்கிற்க்கு குளிர்பானங்கள் எடுத்து கொள்வதில்லை!, தண்ணீர் மட்டுமே!
///நான் எந்த சூழ்நிலையிலும் மிக்ஸிங்கிற்க்கு குளிர்பானங்கள் எடுத்து கொள்வதில்லை!, தண்ணீர் மட்டுமே!///
ஹலோ…! வால்..! a million dollar question….for you….
‘சரக்கு’…. கோக்/பெப்சி இரண்டில் எது உடலுக்கு மிகக்கொடியது?
“ஆமாம்…ஆமாம்…. சரக்கு எல்லாம் உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லதாம்… அமிர்தம்போல….
ஆனால்,
அதில் மிக்சிங் செய்யப்பயன்படும் கோக்கும் பெப்சியும்தான் உடலுக்கு கெடுதியாம்…. அமெரிக்க மூத்திரமாம்….” == >> இப்படி புரிந்து கொண்ட இந்த ஆளுக்கு வினவு என்ன பதில் சொல்லப்போகுதோ…. வெளங்கிடும்…..
மற்றவர்களுக்கு ஓர் உபரித்தகவல்:
என் ரசாயன பரிசோதனை சாலையில் நான் சில பாணங்களின் pH என்ன என்று பரிசோதித்தேன்….
கோக்: 1.8 , பெப்சி: 2.1 , மிரிண்டா: 3.0 , பேண்டா: 3.3 ஸ்பிரிட்: 3.5 , செவன் அப்: 5.6 (இதில் 7-up என்ற பெயர்க்காரணமே அது ஏழைவிட pH வேல்யூ அதிகமாய் இருக்கும் என்பதற்குத்தானாம், ஆனால், பெயரை இனி மாத்த வேண்டும்: ”7-down ” என்று…) ஆக இவைகள் எல்லாமே ஆசிட் தான் … கார்பானிக் ஆசிட் + பெஸ்டிசைட் + இனிப்புக்கலவை….. தண்ணீரையே குடித்தாலும் அது ஆறு pH வேல்யூக்கு அதிகமாய் இருந்தால் மட்டுமே குடிப்பது உடலுக்கு நல்லது….
கொஞ்சம் கொஞ்சமா எனக்கு சாவ பிடிக்காது!, செத்தாலும் சிரிச்சிகிட்டே சாவனும்னு நினைப்பேன்!, அதுக்கு கோக்கு, பெப்ஸி லாயகில்ல!
///கொஞ்சம் கொஞ்சமா எனக்கு சாவ பிடிக்காது!,///
அட..! அப்படியா கண்ணு….
உங்களுக்காகவே தற்போது விற்பனையில் ….
டிக் 20 ….
டேமக்றான்…
ஒரு டப்பா தூக்க மாத்திரைகள்,
கொஞ்சம் பொட்டாசியம் சயனைட்…
====>இதில் எதையாவது பயன் படுத்தலாமே…
//செத்தாலும் சிரிச்சிகிட்டே சாவனும்னு நினைப்பேன்!//
–அட..! கொஞ்சம் அப்படியே உங்களுக்கு பக்கத்திலே
உள்ள ஏதாவது அரசு மருத்துவ மனைக்கோ அல்லது
குடிகாரர்கள் மருவாழுவு மையத்துக்கோ போய்
பார்த்தீர்கள் என்றால், குடித்து குடித்து
கேன்சர் வந்து வயிறு புண்ணாகிப்போன என்புதோல் போர்த்திய உடம்புகள், எப்படி கண்ணீர்விட்டு கதறி கதறி அழுது சாகின்றனர்
என்பதனை பார்த்து விட்டு வந்து அடுத்த பின்னூட்டமிடுங்க்களேன்….
அவர்களின் குடும்பத்தினர் அழுது படும் வேதனை தனிக்கதை…
வால்பையன் , இந்த நெத்தியடி முஹம்மதுவுக்கு உங்க மேல பழையை பகை… இப்படித்தான் வம்புக்க இழுப்பாரு… இவரோட மல்லுக்கு போகவேணாம்…
///பின்னூட்ட புலி/// — அட… நீங்கவேற…
இந்தியாவுல மிச்சம் இருக்குற கொஞ்ச நஞ்சம் புலியும்
தூக்குபோட்டுக்கபோகுது….
மிக அருமையான தகவல் …. மிக்க நன்றி ……. தண்ணீரை விட சிறந்த பானம் எதுவும் இல்லை ……………
மிக மிக அதிகமாக தண்ணீரை அருந்துங்கள் நண்பர்களே ……..
குளிர் பானம் குறை பானம் ………………………………சிந்தியுங்கள். …….
நான் இதுவரை குடித்த கோக் பானங்களில் போவோன்டோ தான் மிக சிறந்தது… /////////////
பொவண்டோ இருமல் மருந்து வாசனை அடிப்பதாக ஒரு குடிமகன் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்…
வால்பையன், பாரின் சரக்கை தண்ணீர் ஊற்றி அடித்தாலும் அது பெப்சிக்கும் கோக்குக்கும் சமம்.
இது மல்டி மில்லியன் டாலர் பிஸினஸ். இதில் அமெரிக்க முதலைகள் மட்டுமல்லாது லோக்கல் திமிங்கலங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஒருவகை கூட்டுக்களவானித்துவம். பணம் பாதாளம் வரை பாயும் என்பது போல இதனை எதிர்ப்பவர்களை எப்படியும் Fix செய்துவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை. நம்ம ஊருக்கே வந்து. நம்மூர் தண்ணியை. பாட்டிலில் அடைத்து. லிட்டர் பதிமூன்று ரூபாய்க்கு விற்கும் மினரல் வாட்டர் விற்று. அந்த காசை சுருட்டிக்கொண்டு போகிறான். அதையும் கேனையர்கள் மாதிரி வாங்கி குடிக்கிறோம்.
ஒரு நாட்டின் very own சொத்து அதன் இயற்கை வளங்களான தண்ணீர் போன்றவை. அதை எப்படி அடுத்தவன் நமக்கு காசுக்கு விற்க முடியும் ?
இது நம்ம வீட்டுக்குள்ளார வந்து அடுப்படியில் இருக்கும் மாவை எடுத்து இட்லி ஊத்திக்கொடுத்து காசு வாங்கிக்கொண்டு போவது போல இல்லையா ? எரிச்சல் எரிச்சலா வருது.
இன்று இந்தியா இந்த அளவுக்கு வளர்திருகுணா அதுக்கு அமெரிக்காதான் காரணம். நம்பளாலே அவுங்க வேலை இல்லாமே கஷ்டப்படும்போது இது ஒன்றும் பெரிதில்லை
இங்கே விவசாயி தண்ணீ இல்லாம கஷ்டப்படறான் . விதர்பால தற்கொலை பணிக்கிறாங்க .
பிளாச்சிமடா என்னும் ஊரின் சுற்று சுழல் கெடுக்க பட்டிருக்கு . அது எல்லாம் உங்களுக்கு முக்கியமா படல ?????????? அமெரிகானோட வேலை தான் முக்கியமா படுதா விநீதா
சும்மா ஒன்னும் காசு தரலையே கூலி மாதிரி 1000 டாலருக்கு உழைச்சா பத்து டாலர் தானே தரான்
உசா புரத்திலே (usa puram) பொறந்து வளந்த பொரப்பா நீயி
அமெரிக்கா காரன் வர்ரதுக்கு முன்னாடி இங்க என்ன எவனும் சோறு திங்கலையா? உடுப்பு போடலையா? வீடு கட்டி மானத்தோட வாழலையா? என்ன, உங்கள மாதிரி மானங்கெட்டவங்க கொஞசம் பேரு வளந்துருக்காஙக, அவ்ளோ தான்.
நல்ல கட்டுரை
23 ம் புலி கேசி படத்தில் குப்சி மற்றும் அக்க மாலா என்று இதை பற்றி எடுத்தார்கள்.
//இது மல்டி மில்லியன் டாலர் பிஸினஸ். இதில் அமெரிக்க முதலைகள் மட்டுமல்லாது லோக்கல் திமிங்கலங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஒருவகை கூட்டுக்களவானித்துவம். பணம் பாதாளம் வரை பாயும் என்பது போல இதனை எதிர்ப்பவர்களை எப்படியும் Fix செய்துவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை. நம்ம ஊருக்கே வந்து. நம்மூர் தண்ணியை. பாட்டிலில் அடைத்து. லிட்டர் பதிமூன்று ரூபாய்க்கு விற்கும் மினரல் வாட்டர் விற்று. அந்த காசை சுருட்டிக்கொண்டு போகிறான். அதையும் கேனையர்கள் மாதிரி வாங்கி குடிக்கிறோம்.
ஒரு நாட்டின் very own சொத்து அதன் இயற்கை வளங்களான தண்ணீர் போன்றவை. அதை எப்படி அடுத்தவன் நமக்கு காசுக்கு விற்க முடியும் ?
இது நம்ம வீட்டுக்குள்ளார வந்து அடுப்படியில் இருக்கும் மாவை எடுத்து இட்லி ஊத்திக்கொடுத்து காசு வாங்கிக்கொண்டு போவது போல இல்லையா ? எரிச்சல் எரிச்சலா வருது. //
செந்தழல்,
பாயிண்டை சரியாகப் பிடித்துள்ளார்(அவர மாதிரியே எழுத ட்ரை பண்னேன்). தண்ணீர் தனியார்மயம் என்பதே கோக் எதிர்ப்பின் அரசியல் என்பதை எளிமையாக எழுதியுள்ளார். ரவியின் இந்த கருத்தில்தான் அவரது சரக்குக் கருத்துக்கும் பதில் உள்ளது. கோக், பெப்ஸி குடிக்காதே என்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்று விலாவாரியாகப் பேசலாம். இங்கு அதுவல்ல நோக்கம். இந்த முழக்கத்தின் மூலம் நம்ம வீட்டுச் சொத்து திருடு போவது குறித்த அரசியல் விழிப்புணர்வு வரவைப்பதே நோக்கம். எனவே, கோக் பெப்ஸி எதிர்ப்பு எனில் சரக்கு எப்படி அடிப்பது? சரக்கே கிட்டத்தட்ட கோக் பெப்ஸிதானே? தண்ணிக் கேன் பாட்டிலை நம்பித்தானே சிட்டியில வாழ்க்க ஓடுது? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட கோக் பெப்ஸி அமெரிக்க மூத்திரம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் அவற்றை நிராகரிக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது. அதன் உடனடி விளைவு என்றால் ஒன்றுமில்லை. தாமிரபரணி கோக்கை நாம் விரட்டிவிட்டோமா என்ன? ஆனால் அந்த இயக்கம் உருவாக்கிய அரசியல் எழுச்சி? அது இன்றும் காணக் கிடக்கிறது அல்லவா?
எனக்கு தெரிந்து பல நண்பர்கள் வீட்டில் காளிமார்க் போவொண்டோ தேடி வாங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் நான் போகும் இடங்களில் போவொண்டோ கடைகளை அறிவேன்.. என் வீட்டு மளிகை பட்டியலில் போவொண்டோ என்றும் இருக்கும்..
பூச்சாண்டி…
இங்கே தேவை மனமாற்றம் மட்டுமே. இந்த ஒற்றைசொல்லில் அனைத்து பதில்களும் தங்கியுள்ளது..
மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டு, அது ஒரு அமைதிப்புரட்சியாக மாறவேண்டும். கடைகளில் வாங்க ஆளில்லாமல் திருப்பி அனுப்பபடவேண்டும். அப்போது தான் அவன் வெளியேறுவான்…ஆனால் அது நடைபெறுவது அதிகாலை கனவில் மட்டும் தான் என்ற நிலை உள்ளதே ?
ஊடகங்களின் மெகா பிரச்சாரம் எப்படி நடக்கிறது >? அதில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், சினிமா கூத்தாடிகளின் உற்சாக விளம்பரங்கள், ஹோர்டிங்குகள், க்ரியேட்டிவ் விளம்பரங்கள், அதனை குடித்தால் உற்சாகம் பிறக்கும் போன்ற கான்ஸெப்டுகள், லோக்கல் டீலர்கள், கடைக்காரர்கள், மிகப்பெரிய சர்வீஸ் மற்றும் சப்போர்ட் நெட்வொர்க் என்று இது உள்ளேயே வேர்விட்டு உடலெங்கும் வளர்ந்துவிட்ட புற்றுநோயை போன்றது.
பெப்ஸி குடித்தால் எயிட்ஸ் வரும் என்று எதாவது வதந்தி கிளப்பினால்தான் சரிப்படும் போலிருக்கிறது !!!
”ஆனால் அது நடைபெறுவது அதிகாலை கனவில் மட்டும் தான் என்ற நிலை உள்ளதே ?”
வினவை ஆதரியுங்கள், தொடர்ச்சியாக.
//இங்கே தேவை மனமாற்றம் மட்டுமே. இந்த ஒற்றைசொல்லில் அனைத்து பதில்களும் தங்கியுள்ளது..
//
இப்படி ஒவ்வோவோருவரும் தனி தனியாய் மாற முடியாது நானும் என் நண்பர்களுக்கு
பலமுறை சொல்லி உள்ளேன் ரவி , படத்திற்கு போனால் இடைவெளியில் இதை தான் குடிக்கிறார்கள் . ஊடகங்கள் பிரச்சாரம் செய்கிறது …..விளம்பரம் வேறு ………………..
இதற்க்கு ஒட்டுமொத்த சமூகமும் எழ வேண்டும் ……………தனி ஒருவனை நாம் மனம் மாற்றினால் விளம்பரம் போட்டவுடன் அவன் மனம் மாறுகிறான்
ரவி,
நீங்கள் சொல்வது 100% உண்மை.
நான் பெங்களூர் ல் வேலை பார்க்கிறேன். இங்கு Pepsi,coke தாகம் தீர்க்கும் பானமாக பார்க்க படுவதில்லை மாறாக it has become a fashion to hold a can of Pepsi. அப்படி உள்ள இந்த நிலையில் தனி மனித மனமாற்றங்கள் மட்டும் போதாது.
நல்ல விழிப்புணர்வு பகிர்வு . நல்ல குடிமக்கள் என்பதின் அர்த்தம் இப்போதுதான் புரியுது . பணநாயகம் முன்பு ஜனநாயகம் என்ன செய்ய முடியும்?.
ஒரு லிட்டர் மினரல் வாட்டர்,அல்லது பெப்ஸி, கோக் வாங்க செலவிட யோசிக்காத நாம், ஒரு(அரை) லிட்டர் பால் வாங்க யோசிக்கிறோம் பால் விலையை உயர்வை எதிர்த்து போராடுகிறோம்.
//ஒரு லிட்டர் மினரல் வாட்டர்,அல்லது பெப்ஸி, கோக் வாங்க செலவிட யோசிக்காத நாம், ஒரு(அரை) லிட்டர் பால் வாங்க யோசிக்கிறோம் பால் விலையை உயர்வை எதிர்த்து போராடுகிறோம்.//
ஒரு லிட்டர் மினரல் வாட்டர் வாங்குகிற வர்க்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் பால் விலை உயர்வையோ, பொதுவில் விலைவாசி உயர்வையோ கண்டு கொள்வதில்லை. சிறு அங்கலாய்ப்புடன் கடந்து சென்று விடுகிறார்கள்.
காற்று மட்டுமே இங்கு இலவசமாக சுவாசிக்க கிடைக்கிறது அதையும் இன்னம் கொஞ்சம் நாட்களில் விலைகூவி விற்பார்கள் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அதற்கும் துணைபோவார்கள் அதிகாரவர்க்கத்தினர்.
காற்று இலவசம் தான். ஆனால் ஆகிற சுற்றுசூழல் மாசுவிற்கு போட உபயோகப்படும் முகமூடியை (அதில்லாமல் 2035 இல் இருக்க முடியாதென்று ஓர் தகவல்) சன் டிவி குழுமம் பேடன்ட் வாங்க முயலுவதாக ஓர் பேச்சு.
எல்லாம் நம் தலை எழுத்து என்றுதான் சொல்ல வேண்டும்.நம்மால் என்னதான் செய்ய முடியும்?எங்கள் ஊரான கோவையில் இருக்கும் சிறுவாணி நீரை அரசியல்வாதிகளும்,பெப்சியும்,கோக்கும் கூறு போட்டு விற்றுக் கொண்டுள்ளார்கள்.என்ன செய்ய முடிந்தது எங்களால்?
அரசாங்கமே அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வைத்து வரவேற்கிறது.நம்ம ஊர் நடிகர்களும்,விளையாட்டு வீரர்களும்
பல்லை இளித்துக் கொண்டு அதற்காக விளம்பரத்தில் நடிக்கிறார்கள்
என்னும் பொது இன்னும் அவர்களின் வியாபாரம் அதிகரித்துக்கொண்டேதான்இருக்கும்.நீங்களும் நானும் கூவுவதால் பத்துப் பைசாவுக்கும் பிரயோசனம் இல்லை.
மானங்கெட்டவர்கள் குடிப்பது கொக்க கோலா
மானமுள்ளவர்கள் குடிப்பது கக்கா கோலா, அதுவும் இசுடாலின் லெனின் சே குவாரா போன்ற மேதைகள் கக்கா போன பிறகு அதை எடுத்து ரஷிய பொறியாளர்களும், விபச்சாரிகளும், சீன தொழிலாளார்களும், சேர்ந்து தயாரித்த கோலா.
முண்டங்களா…மானங்கெட்டவர்கள் குடிக்கும் கொக் பெப்சி எல்லாம் 100 க்கு 80 % கம்யூனிச சீனாவுல தான் தயாராகுதாம்.
இங்கே சீனா ரஷ்யாவை பற்றி யார் பேசியது, கோக் பெப்சி பற்றி உங்கள் கருத்து என்ன. இதற்கு பதில் சொல்ல நீங்கள் கம்யூனிஸ்ட் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வஜ்ரா..
நம்ம ஊர் தண்ணியை நமக்கே காசுக்கு விற்கும் அய்யோக்கியத்தனத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விருப்பம்..!!!
பிளாச்சிமடா,தாமிரபரணி,ஆற்றையே விலை பேசி மக்களை ஒடுக்கி, விவசாயத்தை அளித்துக் கொண்டிருக்கும் இது போற்ற நிறுவனங்களை புறக்கணிக்க நாம் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது கொண்டிருக்கின்றோம் , ஆனால் மறுபுறம் காசு கொடுத்தால் சிறுநீர்க்கு கூட விளம்பரங்களில் நடிக்க தயாராய் இருக்கும் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை பற்றி என்ன சொல்வது.
கங்கை கொண்டானில் தொடர்பணிகள் என்னாயின? கோக், பெப்சியை குடிப்பவன் மானங்கெட்டவன் என்கிறீர்கள் பல ம.க.இ.க தோழர்கள் வெயில்கொடுமையில் அக்வாஃபீனா, கின்லி போன்ற கோக், பெப்சி நிறுவன தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை இன்றும் நாம் பார்க்கின்றோம். பேசுவது, அறிக்கைவிடுவது எளிது. நடைமுறையில் என்ன நடக்கின்றது என்பது தான் கூர்ந்து கவனிக்கத்தக்கது. தலைமை கொஞ்சம் வெய்யகாலத்துல வெளிய வந்து என்ன நடக்குதுன்னு பார்க்கனும். அறைக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு பேசுவதுபோலத் தெரிகிறது. பொதுமக்கள் பெருவாரியாக இதுபோன்ற குளிர்பானங்களையும், குடிநீரையும் பயன்படுத்துவது மிகப்பெருகிவிட்டது. அப்படிப்பார்த்தால் பெருவாரியான தமிழர்கள் மானங்கெட்டவர்களா? எதார்த்தம் என்பது வேறு. அதை உணர்ந்து கட்டுரைகள் எழுதுங்கள். உலகச்சந்தையின் உற்பத்திப்பொருட்கள் மனிதனின் அய்ம்புலன்களையும் இன்று ஆட்டுவித்துக்கொண்டிருக்கின்றன. இது பொதுவாகவே மனிதனின் அய்ம்புல இயக்கம். தோழர் லெனின் இத்தகு மனித புலன் இயக்கத்தைப்பற்றி எழுதி இருக்கிறார். எனவே, எதார்த்த உலகை கூர்ந்து கவனியுங்கள். பின் எழுதுங்கள். சரி, கங்கை கொண்டானுக்கு என்ன பதில்? எனது கருத்துக்கள் எல்லோருடைய விமர்சனத்துக்கும். மெய்ப்பொருள் காண்பது உங்கள் அறிவு. நன்றியுடன் சிங்காரம்.
தோழரே, கோக், பெப்சியை நாம் எதிர்க்கிறோம். எதிர்க்கவேண்டும். அதில் எந்த சமரசமும் கிடையாது. ஆனால் சமூக எதார்த்தத்தில் இந்தக் கேடுகளோடும் வாழவேண்டியுள்ளது. இதை மறுக்கமுடியாது. எனவே இதைக் குடிப்பவர்கள் மானங்கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது; சொல்லத்தேவையில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப்பொருளை புறக்கணிக்கும் ம.க.இ.கவின் போராட்டம் என்னாயிற்று? பல ம.க.இ.க தோழர்களின் கைகளில் நோக்கியா, சாம்சங் தவழ்கின்றன; அவர்களின் இல்லங்களில் சோனி டி.வியை விரும்பி வாங்கிப் பார்க்கிறார்கள். ஏனென்றால் ‘சவுண்டு குவாலிட்டி’ சூப்பரா இருக்கு என்று ஒரு தோழர் சொல்கிறார். என்ன செய்வது? ம.க.இ.க தனது பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப்பொருளைப் புறக்கணிக்கும் போராட்டத்தை ‘வாபஸ்’ பெற்றுவிட்டதா? அல்லது அதன் இன்றைய நிலை என்ன? அதனை யார் யார் கடைப்பிடிக்கிறீர்கள்? யார் அதை கடைபிடிப்பதில்லை? அவர்கள் மீது என்ன நடவடிக்கை? ஒரு தோழர் ஒருவர் கடைபிடிக்கிறார் அல்லது இல்லை என்பதை எப்படி கண்டறியப் போகிறீர்கள்? அங்ஙனம் பயன்படுத்தும் தோழர்களுக்கு “மானம்” உண்டா இல்லையா? என்பனவற்றையும் தயவு செய்து அறிந்து சொல்லுங்கள். என்னத்தையாவது பரபரப்பாக எழுத வேண்டும். மக்கள் முன் தாங்கள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு என்று காட்டவேண்டும் என்று நினைப்பது. இவையெல்லாம் எதார்த்தத்தோடு பொருந்தாத செயல்பாடுகள். எல்லோரும் யோசித்துப்பாருங்கள். உண்மை புரியும். தோழர் லெனினின் புலன் இயக்கக் கோட்பாடு மனித உணர்வையும் அறிவையும் சந்தைப்பொருள்கள் எங்ஙனம் ஆக்கிரமிக்கின்றன, அதன் எதார்த்தம் என்ன என்பதை தெளிவாக விளக்குகின்றது. எனவே, மானம் உள்ள ம.க.இ.கவே உங்களுடைய மானங்கெட்ட தோழர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள். நன்றியுடன் முரசு.
முரசு… பின்னீட்டிங்க….
அடி செம அடி …
முரசு அடி…..
…நன்றி, முரசு.
இதைத்தான் நானும் கேட்கிறேன், பன்னாட்டு நிறுவங்களின் ‘குடி’பானங்களை வைத்துக்கொண்டு…
எங்கே ?????????????????????எங்கே ???????????????????????????எங்கே ???????????????????????????எங்கே ?????????????????????எங்கே ???????????????எங்கே ???????????????????????????எங்கே ???????????????????????????????????????????????????எங்கே ???????????????????????எங்கே ???????????????????????????????எங்கே ????????????எங்கே ?????????????????????????
நெத்தியடியின் சுயரூபம் தெரியும் இடம் இது… இதற்காகத்தான் காத்திருந்தேன் அய்யா… இதிலிருந்து நிரூபனமாவது என்னவென்றால் நெத்தியடி முஹம்மதுவுக்கு கோக் பெப்சி மீதோ, மது பானங்களின் மீதோ வெறுப்பு இல்லை, வினவு ம.க.இ.க மீது வெறுப்பு… அதை நேரடியாக சொல்ல துணிவில்லாமல் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஏதோ உளரிக்கொண்டிருந்தார்… எவ்வளவு நேரம் டிகல் பாச்சா காட்ட முடியும் இதோ மாட்டிக்கொண்டார்… மற்றபடி மானங்கெட்டவர்கள் குடிப்பது கோக் என்று எழுதிய பின்னர் அது அமைப்பு தோழராக இருந்தால் என்ன அவருக்கு பக்கத்து ஊட்டுகாரரா இருந்தா என்ன எல்லாருக்கும் அது பொருந்தும்… முரசுதான் முட்டாள்தனமா கேள்விகேட்டால் அதுக்கு புளாங்கிதம் அடைந்து தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நெத்தியடியை என்ன் சொல்வது .. அடி முட்டாள் என்பதை தவிர??????
தோழரே, நமக்கு ம.க.இ.க மீதோ வினவு மீதோ தனிப்பட்ட முறையில் என்ன கோவம் இருக்கப்போகிறது? ஒரே ஒரு கேள்வி தான். நீங்க பேசுறது எல்லாம் பெரிய ‘தொண்ணை’ மாதிரி பேசுறது. தலைப்புகள் இடுவது. ஆனால் விசயம் இல்லையே? சரி இதற்கு பதில் சொல்லுங்கள். பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களினை பகிஷ்கரிக்கும் உங்களுடைய ‘காந்திய’ போராட்டத்தின் இன்றைய நிலை என்ன? அதை வாபஸ் வாங்கிவிட்டீர்களா இல்லை இன்னும் ரிலையன்ஸ் கடைகள், ஸ்பென்சர்ஸ் என்று நீளும் கடைகள் சவுகரியமாகத்தானே கடை விரிக்கின்றான? எத்தனை ரிலையன்ஸ் கடைகளை இழுத்து மூடியிருக்கிறீர்கள். எத்தனை கோக் பெப்சி உற்பத்தி சாலைகளை தீவைத்துக் கொளுத்தியிருக்கிறீர்கள். கங்கை கொண்டான் என்னாச்சு. அப்படியென்றால் நிங்கள் செய்வது எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத்தானா? எங்கே உங்கள் தலைமையை இதற்கொரு பதில் சொல்லி ஒரு கட்டுரை எழுதச்சொல்லுங்கள்? ம.க.இ.க ஒரு “புரட்சிப்போலி”. நன்றியுடன் முரசு.
அப்போது படித்தது இன்னும் மறக்கவில்லை ஏனெனில் அப் பானம் பருகுவதில்லை தாகமெடுத்தாலும், காளி மார்க் மட்டுமில்லை, திருச்சி ஆதிக்கம் செலுத்திய மாப்பிள்ளை வினாயகரும் 3 ஷிப்டு இயங்கியது இன்று இல்லவே இல்லை. அவர்கள் திரையங்கிலும் பெப்சியிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் சரக்கை அவர்களே புறக்கணித்தனர். பணம் படுத்தும் பாடு
கோடிக் கணக்கில் பணம் வாங்கும் விளம்பர நடிகன்
கோடிக் கணக்கில் பணம் வாங்கும் CEO
எத்தனை கோடி பாட்டில் விற்றால் சாத்தியம்
ரூ,2 க்கு கிடைத்த கோக் ரூ,12, 24 என்று மாறியது ஏன்
10 பைசா செலவில் இயற்கையின் கொடையான தண்ணிய 2 ரூ. பாட்டிலில் அடைத்து ரூ,14க்கு விற்பனை. ஊர் சுற்றுபவனுக்கு உடல் நலம் பேண, வேறுவழி.
ஆனா, ஒரு மாசத்திற்கு முன் ஆறு மாச தண்ணியெல்லாம் கடையில் கிடைக்கு. வேற வழியில்லாம்ல் காசா கொட்டி அதைதான் குடிக்கிறோம் பாதுகாப்பு என்ற பெயரில்.
பொது இடத்தில் குடிக்க தண்ணி இலவசமா கிடைச்சா
யாரோ ஏதோ சொல்லறாங்க, திட்டுறாங்க இல்லை உள்ள தள்ளிடுவேன் மிரட்டுறாங்க
எதுக்கா, இலவசமா தண்ணி கேட்டதற்கு
ஜாக்பாட் ஜெ
அய்யனே உங்களைப் போல மொடா குடியன் என்று நினைத்துவிட்டீர்களா!?
எனக்கும் வேலை உண்டு, குடும்பம் உண்டு!, வீட்டிலேயே சிலாகித்து வாழ்வையும், உலகையும் ரசித்து வாழ்த்து கொண்டிருக்கிறேன்! புளித்த திராட்சை ரசத்தின் ஆல்கஹால் அளவே நான் எடுத்து கொள்வது! சட்டி சட்டியாக குடிப்பவனிடம் உங்கள் அறிவுரையை வைத்து கொண்டால் நலம்!
இத்தோடு நிறுத்தி கொள்கிறேன் கேள்விகுறி, இதுக்கு மேல பதில் சொல்லல!
ஓகே!!
டன்!!!
பேக் டு தி பெவிலியன்.
ஆமா நான் தெரியாமல்தான் கேக்கறேன். அன்னிக்கிருந்து இன்னக்கிவர ஒருநாளாவது சரக்கை பத்தி பேசாமல் இருந்திருக்கீங்களா?
சாருநிவேதிதாவுக்கு அடுத்து சரக்க பத்தி அதிகம் புலம்புவது நீங்கதான்.
அவரு கொஞ்சம் பாரின். நீங்க லோக்கல்.
//அவரு கொஞ்சம் பாரின். நீங்க லோக்கல்//
:-))))))))
///சாராயத்த எதிர்த்து யார் வேணுமின்னாலும் பக்கம் பக்கமா எழுதலாம்…///
—ஆனா, நீங்க ஒண்ணுமே எழுதுனா மாதிரி தெர்லையே அய்யா வினவு….
எங்கூட்ல ஒரு பெரிய கட்டுவிரியனும், ஒரு பூரானும் பூந்துடுச்சுன்னா மொதல்ல, கடிச்சா சாகக்கூடிய பாம்பை அடித்து கொன்று விட்டு அப்புறம்தான் பூரானை தேடி அடித்துக்கொல்வேன்…
ஓங்கூட்ல பூரானை மட்டும் அடிப்பீங்கலாக்கும் (அதுகூட… அதன் மேல சிகப்பு வெள்ளை வர்ணம் போட்டிருக்குன்னுதானே )…சரி…சரி …. ஓங்க்கூட்டுப்பழக்கம் ஒங்களுக்கு… எங்கூட்டு பழக்கம் எங்களுக்கு…. அய்யா வினவு … நல்லதை நாடறியும்….
நெத்தியடி உங்கூட்டல பச்ச புள்ளைங்களுக்கு விசத்த குடுங்க அது உங்க இஷ்டம்…. ஆனா விஷமுன்னு சொல்லி குடிக்க சொல்லுங்க கூல் டிரிங்குன்னு ஏமாத்தி ஊத்தி கொடுக்க வேணாம்
—ஆனா, நீங்க ஒண்ணுமே எழுதுனா மாதிரி தெர்லையே-
அது சரி வினவுல எழுதுன எல்லாத்தையும் நீங்க படிச்சி என்ன கிழிச்சீங்க…
நாங்க நேரடியா சாராய ரவுடிகளை எதித்து போராடி விரட்டியிருக்கோம்… அதுக்காக இன்னமும் தோழர்கள் ஜெயில்ல இருக்காங்க… உங்கள மாதிரி வெட்டியா பேச்சு மட்டும் இல்ல அப்பு.. இங்க அறிவால மட்டும் இல்ல அருவாளோட ஆக்சனும் உண்டு..
குடி குடியை கெடுக்கும்னு எல்லா பாட்டில்லையும் போட்டிருக்கு, அது தெரிஞ்சும் குடிக்கிற என்னை மாதிரி அடி முட்டாள்களை ஒன்னும் பண்ண முடியாது, ஆனா வஞ்சகமா சொந்த நாட்டின் வளத்தை சுரண்டி தொடையையும், மார்பையும் காட்டி விளம்பரம் செய்து அப்பாவி மக்களை ஏமாற்றும், புல்லுருவிகளையும், அதற்கு துணை போகும் உங்களை போல் குள்ளநரிகளையும் தான் நாட்டிற்கு வெளிச்சம் போட்டு காட்டனும்!,
உங்களால் தான்யா நாட்டுக்கே ஆபத்து!
அடா…அடா…அடா…நீங்க சொன்னவை அப்படியே பன்னாட்டு ‘குடிபானம்’-‘சரக்கு’ பானங்களை தயாரிக்கும் கம்பனிகளுக்கும் பொருந்துதே….
ஹலோ, வால் நீங்க பெப்சியையும் கோக்கையும் மட்டுமே ஒழிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்குபவர்கள்… நான் அவை இரண்டையும் மட்டும்ம் அல்ல.. அதுபோல கேடுதரும் அனைத்து பானங்களையும் (கோக்,பெப்சி…. மற்றும் சாராயம்,ஒயின்,பிராந்தி,பீர்,விஸ்கி….என அனைத்தையும்) ஒழிக்க வேண்டும் என்கிறேன்… … யார் ஒசத்தி..?
எது சரி என்று நடுநிலையுடன் படிக்கும் மக்கள் சொல்லட்டும்…
///குடி குடியை கெடுக்கும்னு எல்லா பாட்டில்லையும் போட்டிருக்கு, அது தெரிஞ்சும் குடிக்கிற என்னை மாதிரி அடி முட்டாள்களை ஒன்னும் பண்ண முடியாது///
எழுதிப்போட்ட பிறகே மதிகெட்டு குடிக்க உங்களைப்போல //அடி முட்டாள்கள்// இருக்கும்போது, ஒண்ணுமே எழுதாம இருக்கும் கோக்/பெப்சி பாட்டிலை குடிப்பவர்களை என்ன சொல்ல….
வேண்டுமானால், ஒண்ணு செய்யலாம் … இனி உங்களின் அந்த சரக்கு பாட்டில்களில் //குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது//(நன்றி:வினவு) என்று எழுதிவிடலாம்….
இதனால், நீங்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டால், இதே மாதிரி, கோக்/பெப்சி பாட்டிலகளிலும் எழுதி விடலாம்…..
செம புரட்சியாக இருக்கும்ல…
இதைக்குடிப்பவர்கள்
வெட்டிப்பேச்சு நெத்தியடி… வாயில வட சுட்டது போதும்… வீதிக்கு வா போராடலாம்….
ஒவ்வொரு தனியார் மற்றும் டாஸ்மாக் கடை
திறக்குபோதும் நாங்க அந்த கடைக்கு முன்னே நின்னு
மூடச்சொல்லி போராடி இருக்கோம் ஐயா வினவு…
சிலவற்றை மூடவும் வைத்திருக்கிறோம்…
இப்போ அதுவல்ல பிரச்சினை…
இது நீங்க சொன்னது…//சாராயத்த எதிர்த்து யார் வேணுமின்னாலும் பக்கம் பக்கமா எழுதலாம்…///
(அப்போ நீங்க ஒண்ணுமே எழுதலையா?)
அது ஏனுங்????????????????????? ஐயா வினவு….??????????????????????
பதிவு கூட போடாத நீங்கள் எப்படி போராட்டம் பண்ணி இருப்பாங்க என்று யாராச்சும் நெனச்சிட்டா…? அதாங்…..கேட்டேனுங்….
‘வெள்ளை – சிகப்பு கோடுகள்’ போட்ட பூரானை மட்டும் வினவு பதிவுல அடிச்சிட்டு கடும் விஷமுள்ள கட்டுவிரியனை இத்தனை வருஷமா ஒரு பதிவுல கூட கண்டுக்கலையே….வினவு அய்யா…….. அதாங்…. என் கேள்விங்… அய்யா…
இங்க கூட குடிக்கும் வாலுக்கு அமோக ஆதரவு தரும் தாங்கள்…
(குடிப்பது தவறு என்று மக்களுக்கு வேண்டாம்… அட்லீஸ்ட் வாலுக்காவது பின்னூட்டத்தில் சொல்லி இருக்கலாமே….. )
….பெப்சி/கோக் மட்டும் அல்ல, அதவிட கொடிய மது வகைகள் விற்பதும் குடிப்பதும் தவறு என்று சொல்லும் என் மீதுதானுங்களே அய்யா வினவு உங்களுக்கு காண்டு…. ஏனுங்…????????????? சர்தான்களே??????????????????
வாயிலேயே வாடா சுடாதவங்க எல்லாம்… … ஐயோ…
…..இல்லேங்…. என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடாதீங்…
அண்ணே கேள்விக்குறி: ////வெட்டிப்பேச்சு நெத்தியடி… வாயில வட சுட்டது போதும்… வீதிக்கு வா போராடலாம்….//// இந்த அழைப்பை உங்களுடைய ஆதரவளராக இருக்கும் வால் பையனை நோக்கி வைக்கமால் இருப்பது ஏன் குடியை மறந்துட்டு அமைப்பில் இருந்து இதைவிட வேகமாக வால்பையன் செயல் படலாமே
நல்லாத்தான் இருக்கு! தாராளமா எழுதலாம்! இங்கே யாரும் குடிக்காட்டி கை, காலெல்லாம் நடுங்குதுன்னு சொல்லையே!
சரக்கை மையமா வச்சு எதிர்கவிதையோ, எதிர்பதிவோ எழுதுனா என்னேரமும் சரக்கு மப்புலயே இருக்குறதா அர்த்தமா!? புல்லரிக்குதுப்பா, நடுநிலையாலர்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்! அவர்களுக்கு தெரியும் யார் முகமூடியுடன் இருப்பது, யார் தவறு செய்தாலும் ஒப்பு கொள்வது என்று!
நடுநிலையாளர் என்றால் யார்?
உங்க ஜால்ரா கோஷ்ட்டிங்களா!!!
சரக்கு மிக்சிங்கை ஆரம்பித்து வைத்தது நீங்கதான்
என்று ஒத்துக்கொண்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.
ஜாக்பாட் ஜெ அவர்களுக்கு: வால்பையன் குடிகாரர் என்பதற்காக மொத்த வினவு தளத்தை மற்றும் ம.க.இ.க வை குறை சொல்வது தேவையற்றது ம.க.இ.கவில் குடிகரர் உறுப்பினராக அமைப்பு சட்டப்படி இருக்க முடியாது அப்படியேன்றால் வால் பையன் ம.க.இ.க கிடையாது அவரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதுதான் முறையானது நேர்மையானது
அன்புள்ள ஹைதர், அவரது நோக்கமே மகஇக வினவுவை திட்டுவதுதான்,
இதை இன்னுமா நீங்கள் புரிந்து கொள்ளவில்லை???
@@@நான் அவை இரண்டையும் மட்டும்ம் அல்ல.. அதுபோல கேடுதரும் அனைத்து பானங்களையும் (கோக்,பெப்சி…. மற்றும் சாராயம்,ஒயின்,பிராந்தி,பீர்,விஸ்கி….என அனைத்தையும்) ஒழிக்க வேண்டும் என்கிறேன்… … யார் ஒசத்தி..?@@@
இங்க என்னமோ சாராயம் ஒசத்தின்னு வினவுல எழுதுனாமாதிரி ஏமாத்தி ஓலமிடும் நெத்தியடியே .. நீங்க வாயளவுல எல்லாத்தையும் எதிர்க்கராதா உதார் உட்டிகிட்டுருக்கும் போது நாங்க பீல்டுல் ரெண்டையுமே எதிரத்துகிட்டிருக்கோம்… உங்க எதிர்ப்புல நேர்மையிருந்தா வந்து எங்களோட சேர்ந்து போராடுங்க… மவனே கோக் பெப்சிலேருந்து உள்ளூர் சாராய ரவுடி வரைக்கும் ஒரு கை பாத்துடுவோம்….. வர்ரீங்களா????
Dear, உமா, சந்தனமுல்லை, Raja, rudhran, வால்பையன், வெண்ணிற இரவுகள், பூச்சாண்டி, a.chandarsingh, சிங்காரம், செந்தழல் ரவி , தாமஸ் ரூபன், TAMILSELVAN, வினவு மற்றும் பலருடைய ஆதங்கம் நன்றாக புரிகிறது.
இதை மாற்ற முடியும். ஆனால் அதற்க்கு நமது மக்கள் துணை வேண்டும். ஒரு நாளில் இதை செய்ய முடியாது. இதற்க்கு முதல் காரணம் நமது அரசாங்கம். அந்த அரசாங்கம் அந்த தலைவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? நமது மக்கள் தான் அரசாங்கம். மற்றும் மக்களில் ஒருவன் தான் அந்த தலை, sorry, அந்த தறுதலை . அந்த தலைவனை தேர்ந்து எடுக்க தேவையான் அறிவு நமக்கு இல்லை. அடிப்படை இலவச படிப்பு பிளஸ்-2 வரை எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். இருக்க இடம் உடுக்க உடை மற்றும் சுத்தமான சுற்றுப்புறம் வேண்டும். முதலில் “running water toilet” எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி மறுக்கப்படக்கூடாது. தனது உரிமை என்ன என்று தெரியாமலேயே தமிழ்க்குடிமகன் இருக்கிறான். ஒரு தமிழனை நீதிமன்றத்தில் நிறுத்தினால் அவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமால் எல்லாம் ஆங்கிலத்தில். சரி அந்த நீதிபதிக்காவது அல்லது பெரும்பான்மையான வக்கீல்களுக்காவது சரியான ஆங்கிலம் தெரியுமா என்றால் அதுவும் இல்லை. முதலில் நீதிமன்றத்தில் தன்னுடைய Case-என்ன என்று பாதிக்கப்பட்டவனுக்கு தெரிய வேண்டும். இது ஒரு அடிப்படை உரிமை. உடனே தமிழில் வாதாடினால் மாதம் மும்மாரி பொழியுமா என்ற காட்டுக் கூச்சல். அதற்க்கு ஜால்ரா அடிக்க நமது ஜாதி அடிவருடிகள்.
அடிப்படை இலவச படிப்பு பிளஸ்-2 வரை எல்லாருக்கும் கிடைத்தால் அடுத்த தலை முறையாவது தனது உரிமையை கேட்கும். அடுத்தது தலவர்களுடையை Accountability–நமது நாட்டில் சுத்தமாக இல்லை. தனிமனித உரிமை தமிழ் நாட்டில் எவனுக்கும் கிடையாது. தமிழ் நாட்டில் எல்லா அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் ஊழல் பெருச்சாளிகள் என்று சொன்னால் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். நமது ஆட்களில் ஒருவன் தான் அவன், அந்த ஊழல் பெருச்சாளி.
படிப்பு அறிவு எல்லோருக்கும் இருந்தால் இந்த Coke and Pepsi இந்தியாவிற்குள் நுழைய முடியுமா? ஊழல் பெருச்சாளி வெள்ளைக்காரன் மட்டுமல்ல. நமது மக்களும் தான். ஊசி (India) இடம் கொடுத்தால் தானே நூல் நுழையமுடியும். நான் சொன்ன நூல் அமெரிக்கா. அமெரிக்கா ஒரு வியாபாரி. Consumers Beware. இந்தியா தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மறுபடியும் அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டுமானால் போராடுங்கள். நாளைக்கு இது நடக்கப்போவதில்லை. அதனால் மேற்கூறிய அடிப்படை இலவச படிப்பு பிளஸ்-2 வரை, இருக்க இடம், குடிக்க சுத்தமான் தண்ணீர், சுத்தமான காற்று (இப்ப சுத்தமான காற்றைக்கூட தமிழ்நாட்டில் காசு கொடுத்துதான் வாங்குகிறார்கள். அதாங்க A/C), அப்புறம் இலவச மருத்துவ வசதி.
மிக மிக முக்கியம் “running water toilet” எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். அதை விட முக்கியம் உன்னோருத்தன் பீயை எந்த ஒரு மனிதனும் அள்ளக்கூடாது. அப்படி செய்தால் தமிழ்நாடே நாறும். இப்பவும் நாறுகிறது. ஆனால் இந்த Special நாற்றம் அவர்களை அரசாங்கத்தை உங்கள் வழிக்கு உடனே கொண்டுவரும். உப்பு சத்யா கிரகத்தை விட இது ஒரு பல மடங்கு powerful force–that no government can reckon with. ஆனால் நம்ம ஊரிலே இருக்கும் 24 – மணி நேர ஜாதி என்ற பாதாள சாக்கடை அதை செய்ய விடாது. மேலும் இதற்கு எதிராக நாலு பொறம்போக்கு குரல் கொடுக்கும். அதாவது பீ அள்ளுவது கடவுளுக்கு செய்யும் சேவை என்று. கடவுளே கிடையாது அப்புறம் என்ன கடவுளுக்கு சேவை? சரி அப்படி கடவுளே இருந்தாலும் அதற்க்கு சேவை செய்யத்தான் தேவநாதன் மாதிரி குருக்கள் எராளமாக நாட்டில் உலாத்திரானுன்களே? அப்புறம் என்ன தாழ்த்தப்பட்ட மக்கள் பீ அள்ளித்தான் கடவுளுக்கு சேவை செய்யனுமா?
எனவே உமா, சந்தனமுல்லை, Raja, rudhran, வால்பையன், வெண்ணிற இரவுகள், பூச்சாண்டி, a.chandarsingh, சிங்காரம், செந்தழல் ரவி , தாமஸ் ரூபன், TAMILSELVAN, வினவு மற்றும் எல்லோரும் அதற்கு, முதலில் (First Step) எல்லா குடிமகன்களுக்கும் அடிப்படை இலவச படிப்பு பிளஸ்-2 வரை என்ற குறிக்கோளுடன் போராடுங்கள். தன்னாலே வழி பிறக்கும்.
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
படிக்காத காமராஜர் ஊழல் செய்தாரா?
படிக்காத கக்கன் என்ன ஊழல் செய்தாரா?
மெத்த படித்த இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் கேத்தன் தேசாய் மற்றும் உயர்மட்டத்தில் இருந்து கொண்டு மிகப்பெரிய ஊழல்களை செய்பவரிலிருந்து டிராபிக் போலீஸ், 500 , 1000 என்று லஞ்சம் வாங்கும் மற்றும் கொடுக்கும் அனைவரும் படித்தவர்களே.
படிப்புக்கும், ஊழலுக்கும் இந்த கலி காலத்தில் சம்பந்தம் இல்லை.
சரியாக சொன்னால் படிக்காதவனை விட படித்தவன்தான் அதிகமாக
ஊழல செய்கின்றான். சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அவனுக்குதான் நன்கு
தெரியும்.
எனவே ஊழலை ஒழிக்க நீங்கள் கூறிய வழி சரியானது இல்லை.
நீங்கள் நான் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது இந்தியாவில் ஊழல் அதிகமாக இருப்பதற்கு காரணம் மக்களுக்கு அவர்களது உரிமை என என்று தெரிய வில்லை. அதனால் தான் படித்த இவர்கள் “மெத்த படித்த இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் கேத்தன் தேசாய் மற்றும் உயர்மட்டத்தில் இருந்து கொண்டு மிகப்பெரிய ஊழல்களை செய்பவரிலிருந்து டிராபிக் போலீஸ், 500 , 1000 என்று லஞ்சம் வாங்கும் மற்றும் கொடுக்கும் அனைவரும் படித்தவர்களே” ஊழல் செய்கிறார்கள். அடிப்படை படிப்பு அறிவு இருந்தால் மக்கள் கேள்வி கேப்பார்கள். இப்பொழுது 15 விழுக்காடு மக்களுக்கு தான் படிப்பு இருக்கிறது. அவர்களுடன் ஊழலும் இருக்கிறது. அதை தட்டி கேட்க படிப்பு அறிவு தேவை. இதில் மாற்றுக் கருத்து கிடையாது. எல்லா மக்களுக்கும் அடிப்படை படிப்பு தேவை இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…..
//அடிப்படை படிப்பு தேவை இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…..//
அடிப்படை படிப்பு அறிவு தேவை என்பதில் மாற்று
கருத்து இல்லை.
அடிப்படை படிப்பு தேவை இல்லை என்று நான்
எங்கும் சொல்லவில்லை. படித்தவன்தான் அதிகமாக
ஊழல் செய்கின்றான் என்று கூறுகிறேன்.
படித்தவர்கள் எல்லாம் தேர்தலில் கட்சி
பாகுபாடுயின்றி நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டு
போட்டாலே நாடு ஓரளவுக்கு உருப்படும் . ஆனால்
பெரும்பாலான படித்தவர்கள் ஓட்டு போட
போவதுயில்லை.
நம்ப ‘படிப்பு’ அப்படி தா.ரூ.
ஆ.அ.
//எனவே உமா, சந்தனமுல்லை, Raja, rudhran, வால்பையன், வெண்ணிற இரவுகள், பூச்சாண்டி, a.chandarsingh, சிங்காரம், செந்தழல் ரவி , தாமஸ் ரூபன், TAMILSELVAN, வினவு மற்றும் எல்லோரும் அதற்கு, முதலில் (First Step) எல்லா குடிமகன்களுக்கும் அடிப்படை இலவச படிப்பு பிளஸ்-2 வரை என்ற குறிக்கோளுடன் போராடுங்கள்.// தவறு. ‘போராடுவோம்’ – சரி. //தன்னாலே வழி பிறக்கும்.// 🙂
கல்விக்கடன் கொடுக்காத வங்கிகள் கார்கடன் கொடுக்க மட்டும்
துடிப்பது ஏன்? ஏன்?
நான் தமிழில் புலவன் இல்லை. இருந்தாலும் அவர்களை அதில் குறிப்பிட்டவர்களை “போராடுங்கள் ” என்று சொன்னேன். அது சரியான தமிழ் தான். எப்படி ‘போராடுவோம்’ தான் சரி என்று நீங்கள் சொல்லு கிறீர்கள்?
//ஒரு நல்ல பதிவுல மிக்ஸிங் பத்தி எழுதனது யாரு எப்பவும் உங்களுக்கு அதே நெனப்புதான்….சீக்கிரமாக திருந்துங்க.//
என் பழக்கத்தை தான் குறிப்பிட்டேன்! தவறென்று நீங்கள் நினைக்கும் ஒன்றை நான் நேர்மையாக ஆம் செய்கிறேன் என்று ஒப்பு கொள்கிறேன், என்னால் எப்பொழுது வேண்டுமானாலும் மாற முடியும், என்னிடம் எந்த திரையும் இல்லை.
இத ….இததான் எதிர்பார்தேன் நன்றி .
//எல்லா குடிமகன்களுக்கும் அடிப்படை இலவச படிப்பு பிளஸ்-2 வரை என்ற குறிக்கோளுடன் போராடுங்கள்.//
விழிப்புணர்வு ஏற்படுத்துவதே காலணி ஆதிக்கத்தையும், பார்பனீய அவலங்களையும் ஏறி மிதிக்கும் என நானும் திடமாக நம்புகிறேன்!
//காலணி ஆதிக்கத்தையும், பார்பனீய அவலங்களையும் ஏறி மிதிக்கும் எ//
வால்பையன் காலனி ஆதிக்கத்தை ஏறி மிதிக்க ஆர்வமாக இருப்பது வரவேற்க்கத்தக்கது பாராட்டத்தக்கது. அதற்காக ‘காலணி’ ஆதிக்கத்தை அவர் ஏறி மிதிப்பது தவறு என்று நினைக்கிறேன் 😉 (ச்ஸ்பெல்லிங் மிஸ்டெக்கு பல பேரு விடுறாங்க)
ஆந்திராவில் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஆழ்குழாய் அமைத்து நீர் உறிஞ்சி நாசம் செய்து கொள்ள, உடனடியாக அனுமதியும் கொடுத்தாகி விட்டது. உபகாரமாக விளையும் மாம்பழங்களையும் நண்பர் விரும்பி குடிக்கும் மாஸா தயார் செய்வதற்காகவாம்?
வினவை படித்துவிட்டு மனதிற்குள் சிரித்துக்கொண்டு ” இப்படியே நீங்கள் கத்தி எழுதி சாக வேண்டியது தான். உலக பொருளாதாரம் எதார்த்தம் புரியாத புண்ணாக்குடா” என்று நிறைய பேர்கள் நகர்ந்து போய் இருப்பார்கள்.
மிக கவனமாக இந்தியாவில் நடுத்தரவர்க்கத்திற்கும் வறுமைக் கோட்டிற்கும் இடையே ஒரு அழுகுணி வர்க்கம் உருவாகிக்கொண்டுருக்கிறது. அத்தனை பேர்களும் எப்படி வாழ்வது என்று தெரியாமலே ஊடக விளம்பரங்களை பார்த்து பார்த்து தங்கள் வாழ்க்கையை மெல்ல இழந்து கொண்டுருப்பது எவருக்கு புரியுமோ?
மற்றபடி செந்தழல் ரவி சொன்ன விசயங்கள் போதுமானது.
பவண்டோ பற்றி மருத்துவர் ருத்ரன் கேட்டுருந்தார். நான் பார்த்தவரைக்கும் கிராமப் புறங்களில் இருமல் போவதற்கு கூட பல பேர்கள் இன்று வரைக்கும் இந்த பவண்டோவை நம்பி குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையான நிவாரணியோ இல்லையோ நிச்சயம் சுடுகாட்டுக்கு வழிகாட்டாது.
இன்று வரைக்கும் உணர்ந்த காரணத்தால் எழுதுகிறேன்.
மிக மிக சிறப்பான தேவையான அக்கறையான தங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்.
நல்ல பதிவு ..வாழ்த்துக்கள்
ஒரு விசயத்திநை பற்றி ஆரோகயமான விவாதம் செய்யாமல் பெப்சி குடிப்பவர்களின் அம்மாக்களை இழுப்பது கோழைத்தனமானது. வினவு தளம் தன் மீதான மரியாதையை தானே இழக்க ஆரம்பித்துள்ளது
[…] This post was mentioned on Twitter by Bruno Mascarenhas, jalaudeen mohamed. jalaudeen mohamed said: மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !! | வினவு! http://bit.ly/duSlbd […]
இது நீங்க சொன்னது…//சாராயத்த எதிர்த்து யார் வேணுமின்னாலும் பக்கம் பக்கமா எழுதலாம்…///(அப்போ நீங்க ஒண்ணுமே எழுதலையா?)
ஐய் நான் அத மட்டும் சொல்ல்ல நெத்தியடி… ஏன் இந்த பிராடுத்தனம்
நான் எழுதுனது இது
@@@@, கோக் பெப்சிய பத்தி எழுதுனா சாரயத்த பத்தி எழுதுவியான்னு கேட்டா அது வினவு மேல உங்களுக்கு இருக்குற வெறுப்பு போதை தலைக்கு ஏறிடிச்சுன்னு அர்த்தம்… சாராயம் குடிக்காத 3 வயசு குழந்தை கூட கோக் பெப்சி குடிக்குது….. சாராயத்த எதிர்த்து யார் வேணுமின்னாலும் பக்கம் பக்கமா எழுதலாம்… ஆனா கோக் பெப்சிபை எதிரத்து இயக்கம் நடத்துனவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். உங்க வெறுப்பை கொஞ்சம் மூட்டை கட்டி வச்சிட்டு நிதானமா யோசீங்க பாய்!!! @@@@
என் கேள்வி என்ன்ன்ன 3 வயசு குழந்தைங்க விசமுன்னு தெரியாம குடிக்குற கோக்கை அம்பலப்படுத்தி எழுதறது சாராயத்த பத்தி எழுதறதவிட முக்கியமானது… ஏன்னா சாராயம் குடிக்குற யாரும் தப்புன்னு தெரிஞ்சுதான் குடிக்கறான்… பாட்டில் மேல குடி குடியை கெடுக்குமுன்னு போட்டிருக்கான், கடையிலயும் குடிச்சா நாசமா போயிடுவன்னு போட்டிருக்கான்… விளம்பரம் புண்ணாக்கு எதுவும் கிடையாது,…
ஆனா கோக்கு பெப்சி அப்படியா அப்படியா.. சாராயம் குடிக்காத மனுசங்க பொம்பளைங்க குழந்தைங்க பெரியவங்க கூட நல்லதுன்னு நெனச்சு விசத்த குடிக்கறாங்க. அது மட்டுமில்ல நம்ம நிலத்தடி நீரை உறிஞ்சி விவாசாயத்தையும் மண்ணை தரிசாக்கி விவாசாயத்தையும் அழிக்குது
இந்த கம்பெணி… உள்ளூர் பொருளாதாரத்தையும் காலி பண்ணி, ஆரோக்கியத்தையும் அழிச்சு, சோத்துக்கும் ஆப்பு வச்சு, தண்ணியையும் ஒழிச்சு பல ஆயிரம் வருசத்துல சாராயம் செய்ய முடியாத அழிவை குறுகிய காலத்துல செஞ்சிருக்குற இந்த பகாசுர கம்பெனிங்கள ஒழிப்பது சாராயத்த ஒழிப்பதை விட முக்கியமானது …
மத்தபடி டாஸ்மாக்க மூடுவது, கள்ளச்சாராயம் ஒழிப்பு , நல்ல சாராயம் ஒழிப்பு இதெல்லாம் அரசாங்கம் நினைச்சா கூட மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்து நிறுத்த முடியும் ஆனா கோக்க நம்ம அரசாங்கம் நிறுத்த முடியுமா … முடியாது .. மக்கள் போராட்டத்தாலதான் அது முடியும்.. அதனால இங்க மேல மேல உளராம அரசியல், சமூகம், பொருளாதாரம் உலக சூழல் எல்லாம் புரிஞ்சு உங்க வினவு வெறுப்பு போதையிலிருந்து தெளிய முயற்சி பண்ணுங்க ….
வினவுல சாராயத்த பத்தி எழுதும் போது சொல்லி அனுப்பறேன் அங்க வந்து ஏன் கஞ்சா ம்ற்றும போதை வஸ்துக்களை பத்தி வினவு எழுதலன்னு வெட்டியா விவாதிக்கலாம்…. நான் ரெடி
நம் நாட்டு அரசை அடிமைப்படுத்தி, நமது நீரை உறிஞ்சி, நம் வியாபாரிகளை விலைக்கு வாங்கி நம்மிடமே அநியாய லாபத்துக்கு விற்று சுரண்டி கொழுக்கும் முதலைகள் என்று மட்டும்…(கவனிக்க: மட்டும்) பெப்சி/கோக்கை நீங்கள் எதிர்த்திருந்தால்… ‘ரொம்ப நன்று இந்த பதிவு’…. என்று ஒரே வரியில் சொல்லி விட்டு போய்ட்டே இருந்திருப்பேன்… ஆனால், இதை எதிர்க்க உடல் நலம் என்ற ஒரு விஷயத்தை(அதுதான் முக்கியமானது என்றாலும்)-ஒரு வேஷமாக எதற்கு எடுக்க வேண்டும்? வினவுக்கு எதற்கு இந்த உடல் நல அக்கறை என்ற முகமூடி? அது முக மூடி இல்லை என்றால், எதற்கு இதுவரை குடிப்பதாலும், குடிச்சறக்கை விற்பதாலும் ஏற்படும் தீமைகளை பற்றி இதுவரை மூச்சு விடவில்லை?
நீங்கள் சொல்வதுபோல வீட்டிலிருந்து கடைக்கு குழந்தை தவழ்ந்து போய் கோக்/பெப்சி குடிப்பதாகவே வைத்துக்கொள்ளவும்… அதுவா பதிவின் மையக்கரு? அமெரிக்காவும்… அதன் ஏகாதிபத்திய அந்த இரு பன்னாட்டுக்கம்பெநிகளும் அல்லவா?
இதேபோல அந்த குழந்தை ‘மாப்பிள்ளை விநாயகரோ’.. ‘காளிமார்க்கோ’ குடிக்கலாமா? அவற்றில், இன்று கோக்/பெப்சியில் இருப்பவை(பூச்சிக்கொல்லி ரசாயனக்கலவை) அறவே இல்லை என்று உறுதி மொழி கொடுக்க முடியுமா? உடல் நலமாம்…. உடல்நலம்….
பெப்சி/கோக் போன்றே மதுவகைகள் தாயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இதைவிட பெருமளவில் நம் நாட்டு ‘குடிமகன்கள்’ மற்றும் குடிமக்களை சுரண்டுகிறதே? சுரண்டல்தான் முக்கிய காரனமெனில் இதுவரை இவற்றை எதற்கு எதிர்க்கவில்லை?
///இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்///
இதற்கே இவ்வளவு காட்டமான வரிகள் எனில், குடிப்பவனை இந்த உலகத்தை விட்டே பிடுங்கி எறிய வல்ல பன்னாட்டு மதுபானக்கம்பெநிகளையும் ஏன் இதுவரை சாட வில்லை? அவர்கள் சுரண்டவில்லையா? அல்லது… அவை உடல்நத்துக்கு நல்லதா? ஏனிந்த இரட்டை வேஷம்? …என்றுதானே கேட்கிறேன்….
மாறாக,
உடல் நலக்கேடுதான் உங்கள் முதன்மை அக்கறை எனில் முதலில் பெரிய விஷ ஜந்துவை அழிக்காமல் விட்டுவிட்டு சிறிய ஜந்துவை அழிக்கிறீர்களே… என்றுதானே கேட்டேன்… நான் எதோ கோக்/பெப்சிக்கு ஆதரவு கொடுப்பவனைப்போல எதற்கு போலியாய் சித்தரிக்க வேண்டும்? மூன்று வயசு சின்னக்குழந்தை கோக்/பெப்சி குடிப்பதாக எதற்கு மாய்மாலம்? உங்களுக்கே இது காமடியாக இல்லை?
சொல்லப்போனால், மதுவுக்கு எதிரான உங்களின் இந்த மவுனம்… எத்தனை சாராய கான்ராக்ட்டுகளை வினவு எடுத்திருக்கிறதோ என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது….அல்லது எதிர்த்தால், ம க இ க குடிகாரர்களின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டி வருமோ? ஐயா வினவு…. நீங்கள்/உங்கள் ஆட்கள் குடிகாரர்கள் என்பதற்காக அந்த ‘குடி’பானம் தயாரிக்கும் பன்னாட்டுக்கம்பெனிகள் மட்டும் மக்களை சுரண்டலாமா? கண்டுகொள்ள மாட்டீர்களா?
நீங்கள் சுரண்டலுக்காக பெப்சி/கொக்கை எதிர்க்கிறீர்கள் எனில் உடலநலம் அக்கறை என்ற திடீர் பொருந்தா முகமூடி உங்களுக்கு எதற்கு?
ஐயா நெத்தியடி… வாயை கொடுத்து மறுபடியும் மாட்டிக்கொண்டதற்கு நன்றி….வழக்கம் போல பதிவை படிக்காமல் 50 புண்ணூட்டம் போட்ட புண்ணியம் உம்மையே சேரும்… இங்கே உடல் நலத்தை மையமாக வைத்து பிலாக்காணம் பாடிக்கொண்டிருப்பது நீர்தான் …. பதிவில் உடல் நலத்தைப்பற்றி போகிற போக்கில் ஒரு வரி வருகிறது… மற்றபடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி ஏஜென்டாக எப்படி கோக்-பெப்சி செயல்படுகின்றது என்பதைதான் பதிவு விளக்குகிறது…அதாவது நீங்கள் எதை எழுதியிருந்தால் ‘ரொம்ப நன்று இந்த பதிவு’ என்று சொல்லியிருப்பேன் என்கிறீர்களோ அதை.
இப்படி பதிவையே படிக்காமல் உளருவதற்கு பதில் பதிவை படித்துவிட்டு உளரினால் நலம்…இதைத்தான் நிதானமாக படி நிதானமாக படி என உங்களிடம் காலையிலிருந்து கத்திக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏறவே ஏறாதா????? ஏன் இந்த கொலவெறி?????
//என்று மட்டும்…(கவனிக்க: மட்டும்) பெப்சி/கோக்கை நீங்கள் எதிர்த்திருந்தால்… //
பின்னூட்டத்தை படித்துவிட்டு எழுதவும்…
இப்படி மறுமொழியை படிக்காமல் உளருவதற்கு பதில் பதிவை படித்துவிட்டு உளரினால் நலம்…இதைத்தான் நிதானமாக படி நிதானமாக படி என உங்களிடம் காலையிலிருந்து கத்திக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏறவே ஏறாதா????? ஏன் இந்த கொலவெறி?????
நெத்தியடி முஹம்மது உமக்கு பயித்தியம் முத்திவிட்டது…. பதிவுல அது மட்டும்தான் இருக்கு.. எவ்வளவு எடுத்து சொல்லியும் பதிவை படிக்கவிடாமல் தடுக்கும் அகங்காரம் சரியில்லை. ஆத்திரக்காரணுக்கு புத்தி மட்டு. புரிந்து கொள்ளுங்கள்…
@@@உடல் நலக்கேடுதான் உங்கள் முதன்மை அக்கறை எனில் @@@@
@@@ஆனால், இதை எதிர்க்க உடல் நலம் என்ற ஒரு விஷயத்தை(அதுதான் முக்கியமானது என்றாலும்)-ஒரு வேஷமாக எதற்கு எடுக்க வேண்டும்?@@@@
@@@நீங்கள் சுரண்டலுக்காக பெப்சி/கொக்கை எதிர்க்கிறீர்கள் எனில் உடலநலம் அக்கறை என்ற திடீர் பொருந்தா முகமூடி உங்களுக்கு எதற்கு?
@@@
பதிவின் கருப்பொருளுக்கு உங்களுடைய மேற்கண்ட விமர்சனங்கள் பொருந்தும் என உங்களால் நிரூபிக்க இயலுமா??? சவால் .. ஏற்றுக்கொள்ள துணிவிருக்கின்றதா????
அப்படி உங்களால் முடியவில்லையெனில் உங்களுடைய குப்பை உளரல்களை நீக்கும் படி வினவுக்கு பின்னூட்டம் இட்டு உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்… அதுவும் வீரம்தான்…
இரண்டும் முடியவில்லையெனில் உங்கள் தரம் எங்குள்ளது என்பதை இங்கு அனைவரும் அறிந்து கொள்வர்…
கேள்விக்குறி கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் 1…2….3….
ஜாக்பாட் ஜெ said:
////என் ரசாயன பரிசோதனை சாலையில் நான் சில பாணங்களின் pH என்ன என்று பரிசோதித்தேன்….
கோக்: 1.8 , பெப்சி: 2.1 , மிரிண்டா: 3.0 , பேண்டா: 3.3 ஸ்பிரிட்: 3.5 , செவன் அப்: 5.6 (இதில் 7-up என்ற பெயர்க்காரணமே அது ஏழைவிட pH வேல்யூ அதிகமாய் இருக்கும் என்பதற்குத்தானாம், ஆனால், பெயரை இனி மாத்த வேண்டும்: ”7-down ” என்று…) ஆக இவைகள் எல்லாமே ஆசிட் தான்.///
Chemical Name Formula pH Uses
Hydrochloric acid HCl 1-3 Common laboratory acid
Nitric acid HNO3 1-3 Common laboratory acid
Sulphuric acid H2SO4 1-3 Common laboratory acid
Vinegar N/A 4-6 Common household acid
Lemon juice N/A 4-6 Common household acid
Car battery acid N/A 1-3 Common household acid
Ref: http://www.evans2chemweb.co.uk/chemwebdata/standard/topic8/acidalkali1.htm
உங்க பரிசோதனை எங்கயோ இடிக்குதே? சந்திரலேகா மேலே ஆசிட் அடிப்பதற்கு பதில் Coke and Pepsi – ஐ அடிததிருக்கலாமே?
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
ம்ம்ம்ம்ம்ம்…. ஒரு கப் குடி தண்ணீரில் (அது 8pH எனலாம்) ஒரு துளி high conc.Acid போட்டாலே போதும் pH டமால் என்று 3 க்கு வந்துவிடும்…. அதன்பின்னர் மெதுவாக குறையும்… இதெல்லாம் நாம் சேர்க்கும் ஆசிட்டின் அடர்த்தியை பொறுத்தது… 2 pH உள்ள ஒரு அமிலம் முகத்தையே சிதைக்கிறது மற்றது கண்ணை மட்டும் சிகப்பாக்கிறது..வேறொன்றும் செய்யவில்லை எனில்…. முன்னது concentrated acid பிந்தியது diluted acid எனலாம்…
அக்குளிர்பானங்களின் அமில அடர்த்தியை வெகு இலகுவாகத்தெறிந்துகொள்ள … எவ்வளவு தண்ணீரை அதன் மீது ஊற்றினால் அதன் pH-ஐ 7 க்கு கொண்டு வர முடிகிறது என்பதை பொறுத்தது. எது மிகக்குறைந்த pH கொண்டதோ அது நிறைய தண்ணீரை உள்வாங்கும்… (ஒரு துளி high con.Acid ஐ pH 7 க்கு கொண்டுவர ஒரு கப் தண்ணீர் தேவைப்படுகிறது-மேலே உள்ள சோதனையின் reverse…)
நம் இரைப்பை, செரிமானத்திற்கு தேவையான hydrochloric acid -ன் அமிலத்தன்மையை தாங்ககூடிய உட்ச்சுவர்களை கொண்டது… ஆனால், நம் வாயின் உட்புரச்சுவர், நாக்கு, பல், ஈறுகள், தொண்டை மற்றும் தொண்டையிலிருந்து இரைப்பைவரை உள்ள பாதை (esophagus) இவையாவறுக்கும் diluted acid கள் உகந்தவை கிடையாது…
//ஆக இவைகள் எல்லாமே ஆசிட் தான்./// …என்பதை… //diluted acid தான்// என்று வேதியியல் ரீதியில் எழுதி இருக்க வேண்டும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, நண்பரே.
சரி, ஒரு பெப்சி அல்லது கோகோ கோலாவை பாட்டிலில் இருந்து எடுத்து தண்ணீர் கலக்காமல் pH பரிசோதனை செய்தால் அவைகளின் pH நீங்கள் கூறியபடி (கோக்: 1.8 , பெப்சி: 2.1 ) இருக்குமா? இல்லை என்றால் என்ன pH இருக்கும் .
நல்ல கட்டுரை. தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு பழச்சாறு கடைகள் இருக்கின்றன. அதை விட்டுவிட்டு கோக் , பெப்சி என்று ! சமூக மதிப்பு ஏறுகிறது என்று நினைக்கிறார்களோ என்னவோ !
சமிபத்தில் naan neril பார்த்த kodumai ,சாதாரண idly kadaiil oru மேட்டுக்குடி elaichan rendu idly koda கோககோலா uthi சாப்பிடுறன், innoruthan samosa kuda miranda uthi sapduran ,coke pepsi உணவு kalacharathim இல்ல mathikittu irukkan
பெப்சி, கோக் போன்றவற்றின் கேடுகளை அமெரிக்கா உணரத்தொடங்கி அதனை தடுக்க நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்தியா போன்ற நாடுகள் அவர்களுக்கு புதிய சந்தைகளாகி வருகின்றனர். அமெரிக்காவில் பள்ளிகளில் கோக், பெப்சி போன்ற சோடா வகைகள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் குழந்தைகளின் obesity எனப்படும் உடல்பருமனுக்கு பெரும் காரணமாக இருப்பதால் இது குறித்த விழிப்புணர்வு சமீபகாலங்களில் அதிகளவில் பெருகி வருகிறது. பள்ளிகளில் கோக், பெப்சி போன்ற சோடா வகைகளை எதிர்த்து பில் க்ளிண்டன் தலைமையிலான ஒரு தன்னார்வ அமைப்பு இயக்கம் ஒன்றினையும் நடத்தி வருகிறது. இவர்களுடைய பிரச்சாரத்திற்கு பலன் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோக் மற்றும் பெப்சி போன்ற சோடா வகைகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தைப் பல மாநிலங்கள் அறிமுகப்படுத்தன. காரணம் விலை அதிகமாகும் பொழுது கோக் குடிப்பது குறையும் என்பதே இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம்.
உடல்பருமனுக்கு கோக் ஒரு முக்கியக் காரணமாக இருப்பதால் பலரும் டயட் கோக்கிற்கு மாறுகிறார்கள். சாதாரண கோக்கை விட டயட் கோக் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. டயட் கோக்கை குடிக்க தொடங்குகிறவர்கள், இதனைக் குடித்துக் கொண்டே இருப்பார்கள். காரணம் இதில் இருக்கக்கூடிய ஒரு வித ரசாயனக் கலவை (Caffeine & other ingredients) நம்மை தொடர்ந்து அதனை அருந்த வைக்கும். டயட் கோக் குடிப்பவர்களால் அதனை குடிக்காமல் இருக்க முடியாது. அவர்களை அறியாமலேயே அவர்கள் உடம்பை அது வசப்படுத்தி விடும். மாலை மூன்று மணியானால் காபி வேண்டும் என்று தோன்றுவது போல சரியாக கோக் குடிக்க வேண்டிய நேரத்தில் கோக் குடிக்க வேண்டும் என்ற நினைவு வந்து டயட் கோக்கை நோக்கி ஓட வேண்டும். டயட் கோக்கை தொடர்ந்து அருந்துபவர்கள் ஒரு நாள் குடிக்காமல் இருந்தாலும் லேசான தலைவலி போன்றவை ஏற்படுவதை உணர முடியும் (எல்லாம் அனுபவமே). டயட் கோக் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடியது.
அமெரிக்காவில் இது குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் சூழலில் இந்தியா போன்ற நாடுகளில் இது ஸ்டைலாக மாறி வருகிறது மிகவும் கவலைக்குரியது ஆகும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் நீர்வளம் அதிகம். இங்கு தோன்றிய இத்தகைய வியபாரங்கள் ஏற்கனவே நீர்வளம் குறைவாக உள்ள நம் நாட்டில் நம்முடைய நீரை சுரண்டி, நமக்கே விற்பது என்பது ஒரு அபாயகரமான போக்கு ஆகும். ஆனால் கண்ணை மூடிக் கொண்டு அமெரிக்காவைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங்-சிதம்பரம் மாபியா முதலாளித்துவ அரசில் நாம் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியது. மக்களின் விழிப்புணர்ச்சியே அவசியத் தேவையாக உள்ளது
கட்டுரைக்கு நன்றி…
– சசி…
மிகச்சிறந்த தகவல்கள், நன்றி தமிழ் சசி, மக்களாகவே உணர்ந்து இது போன்ற குளிர் பானங்களை தவிர்பதுதான் தீர்வு. மக்களை உணரவைப்பதுதான் நமது கடமை.
இங்கேயும் ஒரு பதிவு திருடன்.
http://organicananth.blogspot.com/2010/05/blog-post_26.html#links .
பாருங்க, பார்த்துவிட்டு திட்டுங்க.
Raja, ஏன் பதிவு திருடன்னு சொல்றீங்க.. இயற்கை விவசாய தளம் தானே போட்டுட்டு போறாங்க… நல்ல விசயம் தான்… என்ன வினவு பேர போட்டிருக்கலாம். இல்ல புதிய கலாச்சாரம் பேராவது போட்டிருக்கலாம்…
ஒரு நன்றி தெருவித்து போட்டு இருக்கலாமே. அந்த ஆதங்கத்தில தான் அய்யா பதிவு திருடன் என சொன்னேன்.
பத்து சுற்று குத்துச் சண்டையில் 9 சுற்று ஜெயித்து விட்டு 10 வது சுற்றில் நாக் அவுட் ஆன மாதிரி ஒரு சமூக சார்ந்த தலைப்பை கொடுத்து அதற்கான விளக்கமாக அழகாக பதிவிட்டு விட்டு இறுதி பாராவில் தோற்றுப் போன வரிகள்.
ஈராக்கின் வளைகுடா யுத்தப் போரில் சந்தை ரீதியிலாவது எதிர்ப்பைக் காட்டலாமே என்று (நான் பெப்சி,கோக் குடிக்காவிட்டாலும் கூட) குரல் கொடுத்ததும்,லண்டனில் போருக்கு எதிராக கூடிய பெரும் கூட்ட எதிர்ப்பு பலகையில் இதுவும் ஒன்று என்ற போதிலும் இவற்றையெல்லாம் பின் தள்ளி இன்றும் பெப்சி,கோக் போன்றவை தமது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியிருக்கின்றன.அதற்கான முக்கிய காரணங்களாய் KFC மற்றும் பிசா,ஏனைய உணவு வகைகளின் கூட்டு ஒற்றுமை என நினைக்கிறேன்.குழந்தைகள் உண்ணும் இனிப்பு,சிப்ஸ் வகைகளுக்கும் இவை பொருந்தியே போகின்றன.மேலும் அவர்களை ஊக்குவிக்கும் பதிவில் சொன்ன மூடி திறப்பு,இன்னும் பிற சந்தை படுத்தல்.
கார்பனோட் பானங்களுக்கு மாற்றாக இயற்கைக்கு மாறாத ருசியுடன் பழரசங்கள் சவுதி அரேபியாவிலிருந்து வருகிறது.ஆனால் பருகுவோர் விகிதாச்சாரம் குறைவு என நினைக்கிறேன்.
போரின் அதிநுட்ப கருவிகளையெல்லாம் உபயோகித்தவர்களின் துப்பாக்கிகள் கூட மவுனிக்கும்படியான சூது உலகில் இன்னும் அரிவாள் கலாச்சாரமெல்லாம் அப்போதைக்கான பலன்களாக மட்டுமே இருக்குமே ஒழிய நீண்ட நோக்கில் சோர்வடைந்து விடும்.
ஆட்டையாம்பட்டிக்காரர் சொன்னது போல் அடிப்படை கல்வியறிவும் கூடவே உங்கள் இடுகை,பின்னூட்டம் மாதிரியான விவாதங்கள் பலரையும் போய் சேர்வதில் இருக்கிறது சமூக மாற்றங்களின் வெற்றி.நன்றி.
////இறுதி பாராவில் தோற்றுப் போன வரிகள்/////… சரியாகச்சொன்னீர்கள் …ராஜ நடராஜன் அவர்களே….
// இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.///
இவ்வரிகள்… அமெரிக்க/பன்னாட்டு நிறுவனக்களின் எதிர்ப்பின் நீட்சி என்றால் அது ஏன் மற்ற அமெரிக்க/பன்னாட்டு நிறுவனக்களின் பொருள்களுக்கும் பொருந்தவில்லை…?(நன்றி முரசு)
அல்லது…
இவ்வரிகள்… அமெரிக்க/பன்னாட்டு நிறுவனபொருள்களின் உடல்நலக்கேடுதான் எதிர்ப்பின் நீட்சி என்றால் அது ஏன் அவர்களின் ‘உடனடியாக உடல்நலக்கேடுதரும்’… ‘குடி’பானங்களுக்கும் சிகறேட்டுகளுக்கும் பொருந்தவில்லை…? (இது நான்).
எங்கே….???????????…வினவு?????????????
மேற்கண்ட நெத்தியடியின் உளரலுக்கு பதில் https://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/#comment-23594
என்னுடைய சவாலை ஏற்றுக்கொள்ள முடியாத கோழை நெத்தியடி https://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/#comment-23586
அங்கு பதில் சொல்ல வக்கில்லாமல் மற்ற பின்னூட்டங்களில் புட்போர்ட் அடிக்கிறார்… ஐயோ பாவம்!!!
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல….
(ஒரு முந்தைய பதிவோ/ஒரு பின்னூட்ட லின்க்கோ
கொடுக்க) வக்கு இல்லையே….
அப்புறம் என்ன வெட்டி சவால்?
பின்னங்கால் முன்னால ஓடுறவன் புடனியல அடிக்குற அளவுக்கு பயந்து ஓடாதீங்க நெத்தயிடி… உங்களுக்கான சவால் இங்கே https://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/#comment-23586 முடிந்தால் உங்கள் உளரலை நிரூபியுங்கள்… இல்லை தோற்றதை ஓப்புக்கொள்ளுங்கள் கவுரவமாவது மிஞ்சும்
ம்ம் தோழர் யாருமே சிகரட் புடிகலய கேள்விகுறி அதுவும் ஏகப்பட்ட வெளிநாட்டு கம்பெனி யோடது தானே பீடி யா குடிகிரீக அப்புறம் என்ன கோக் பெப்சி ன்னு கட்டுரை போட்டு முதல்ல தோழர் எல்லாரும் தம்ம நிப்பாட்டுகைய அப்புறம் பாக்கலாம் உடம்புக்கு கேட நாட்டுக்கு கேடநு சும்மா சும்மா பின்னுடம் போட்ட பத்தாது சரியாய்
நக்கீரா… நன்றாக என் பின்னூட்டத்தை உத்துப்பார்.. நான் எங்கே உடல் நல்த்திற்காக வாதாடுகிறேன்… நான் சொல்வதெல்லாம் நம் நாட்டை அடிமையாக்கும் கோக் பெப்சியை புறக்கணிக்கவேண்டும் என்பதுதான். தோழர்களெல்லாம் பாரின் சிகரெட் குடிக்குற அளவுக்கு வசதியானவங்க இல்ல… ஆனாலும் சிகரெட் பழக்கத்தை விட்டா நல்லது… நான் எப்பவோ விட்டாச்சு…
கேள்வி குறி நீவீர் விட்டது மகிழ்ச்சியே ஆனால் பலர் குடிக்கும் இந்தியன் டோபாகோ கம்பெனி சிகரட் ஒரு ஏகாதிபத்திய சாம்ராஜ்யமே நடத்தி வருகிறது.அதை தான் சுட்டி காட்டினேன் மேலும் பின்னுட்டம் போடுவது புதிது என்பதால் சரியாக கருத்துகளை படிய முடிவதில்லை .
ஏக இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்,
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது கேள்விக்குறி. தெஹல்கா எல்லாம் தேவை இல்லை. நானே அம்பலமாகிக்குவேன் என்று கேள்விக்குறி சொல்லாமல் சொல்லிவிட்டார். இதற்கு பிறகாவது கேள்விக்குறி புர்ச்சி வேஷம் கட்டாமல் இருந்தால் நலமே.
// கேள்விக்குறி says:
May 26, 2010 at 3:02 pm
இந்த கட்டுரையை படிச்சுட்டு அடிக்கப்போற சரக்க பத்திதான் ரவிக்கு சிந்தனை போகுதுன்னா .. அதுக்கு கோக்கையே குடிக்கலாம். ”அமெரிக்க மூத்திரம் கோக்” அப்படினீன்னு ஒருஸ்டிக்கர் பாத்த நியாபகம் //
//கேள்விக்குறி says:
May 26, 2010 at 9:00 pm
வால்பையன் , இந்த நெத்தியடி முஹம்மதுவுக்கு உங்க மேல பழையை பகை… இப்படித்தான் வம்புக்க இழுப்பாரு… இவரோட மல்லுக்கு போகவேணாம்…//
அட கட்டுரை படிச்சா ரவி அண்ட் வால்பையன் ரெண்டு பேருக்கும் சரக்கை பத்தி தான் நெனப்பு வந்திருக்கு. ஆனால் ரவிக்கு திட்டு. வாலுக்கு ஷொட்டு. ஓஹோ இதுக்கு பேரு தான் கம்யூனிசமா கேள்விக்குறி? ஒரு வேளை ரவி அடிக்குறது மேற்கத்திய சரக்கு. வாலு அடிக்குறது கம்யூனிச சரக்கோ?
என்னா கேள்விக்குறி இரட்டை வேஷம் அம்பலமாச்சே!. தன்னிலை விளக்கம் அடுத்து வரும்னு நினைக்கிறேன்.
வாய்யா மச்சி ஷாஜு வரும்போது வாலோக்கும் அஸ் சல்லாமு… உன் கூஜாவ காப்பாத்த வந்தியா… டைட்டா மாட்டிகிட்டாரு நோ எஸ்கேப்பு!!! பை பை–
அப்போ அந்த ரெண்டு கமெண்ட்டும் கேள்விக்குறி போடலியா? அச்சச்சோ என்ன கொடுமை சார் இது?
நெத்தியடி முஹம்மது ஏன் ரவிக்கு பதில் சொல்லாம வால்பையனுக்குமட்டும் ஏன் உபதேசம் பண்றார் நீங்க ஆன் த ராக்ஸ் அடிச்சுட்டு வாந்தியெடுக்குற இசுலாமிய சரக்குல போதையில்லன்னு வால்பையன் எழுதிட்டாரே அதனாலயா ஷாஜூ
ஒருவேளை ஜாக்பாட் ஜெ தான் நெத்தியடியாக இருந்தாலும் அது வினவுக்கு மட்டும் தானே தெரியும். எப்படியா கேள்விக்குறிக்கு தெரியும்? ஓஹோ வினவின் பின்னூட்ட அவதாரம் தான் கேள்விக்குறியா? நல்லா இருக்குயா உங்க அவதாரம். வினவும் கேள்விக்குறியும் ஒன்னு. இதை அறியாதவங்க வாயில மண்ணு. டோண்டு எடுக்குற anonymous அவதாரம் பரவாயில்லை போல வினவு எடுக்குற அவதாரத்தைப் பார்த்தா. எப்பா உங்க அவதாரத்தைப் பார்த்து மண்டை சுத்துதுபா வினவு அல்லது கேள்விக்குறி.
நல்ல காமெடி ஷாஜூ,,, நெத்தியடியோட எத்தன வாட்டி மல்லு கட்டியிருப்பேன்… ஒத்தைக்கு ஒத்த எத்தன பின்னூட்டம்… அவர் விவாத முறை எனக்கு தெரியாதா… அதான் வேறொரு பதிவுலயே ‘பாடி சோடா’ மாதிரி கொண்டைய மறைக்காம வந்தத சுட்டிக்காட்டினேனே அத பாக்கல??? மத்தபடி என்னை வினவுன்னு நீங்க சொன்னா அது எனக்கு கவுரவம்தான்… இதே மாதிரிதான் அரடிக்கெட்டும் வினவும் ஒன்னு, அசுரனும் வினவும் ஒன்னு… அப்படின்னு எவ்வளவு பேர் பல்பு வாங்கியிருக்காங்க …… உங்களுக்கு பல்பு இல்ல சீரியல் செட்டு… 🙂
@@டோண்டு எடுக்குற anonymous அவதாரம் பரவாயில்லை @@@
அனானியை டோண்டு என்று கண்டுபிடிக்கும் திறமை பதிவுலகில் ஷாஜூவுக்கு மட்டும்தான் உண்டு….. பிளீஸ் நம்புங்கப்பா….
@ ஷாஜஹான்
நானே சொல்லிட்டேன் என்னை போன்ற அடிமுட்டாள்னு, இதுல அவர் வேற வந்து திட்டனுமா!?
உங்களால வேற விவாதம் செய்ய முடியலைனா இப்படி வம்பிழுப்பிங்களா? இந்த பார்பன புத்தியை எங்கே கத்துகிட்டிங்க!?
தாமஸ் ரூபன் said:
////படித்தவன்தான் அதிகமாக ஊழல் செய்கின்றான் என்று கூறுகிறேன்.
படித்தவர்கள் எல்லாம் தேர்தலில் கட்சி பாகுபாடுயின்றி நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டாலே நாடு ஓரளவுக்கு உருப்படும் . ஆனால் பெரும்பாலான படித்தவர்கள் ஓட்டு போட போவதுயில்லை.////
மேற்கூறிய இரண்டும் முரண்படுகிறது. படித்தவன் தான் அதிகமாக ஊழல் செய்வான் என்றால் படித்த மக்கள் மட்டும் எப்படி நேர்மையாக ஓட்டுப் போடுவார்கள். ஆகவே படிப்புக்கும் ஊழலுக்கும் சம்பந்தம் கிடையாது.
சந்தர்ப்பம் மட்டுமே. உதாரணம்: அண்ணாதுரைக்கு அப்புறம் வந்த முதல் அமைச்சர்கள் படிப்பு
கருணாநிதி – 8 -ஆம் வகுப்பு
எம்சியார் : 5 -ஆம் வகுப்பு
ஜெயலலிதா – 10 – ஆம் வகுப்பு — Plus 1 மற்றும் Plus 2 கூட படிக்க வில்லை. அப்புறம் வட்டம், மாவட்டம் , சதுரம், மகாசதுரம், எல்லாம் பெரிய படிப்பு படித்தார்களா என்று தெரியவில்லை.
வருங்கால முதலமைச்சர் (!) விசய கந்து – 9 -ஆம் வகுப்பு .
“வருங்கால முதலமைச்சர் (!) விசயகந்து” சும்மா! இது ஒரு காமெடி பீஸ்!!
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
//ஆகவே படிப்புக்கும் ஊழலுக்கும் சம்பந்தம் கிடையாது. //
நானும் (படிப்புக்கும், ஊழலுக்கும் இந்த கலி காலத்தில் சம்பந்தம் இல்லை.)
முன்பே அதைதான் கூறினேன்.
//வருங்கால முதலமைச்சர் (!) விசய கந்து – 9 -ஆம் வகுப்பு//
வருங்கால முதலமைச்சர் விஜய்
வருங்கால முதலமைச்சர் குஷ்பு
வருங்கால முதலமைச்சர் வ —–லு
இவர்கள்மீது உங்களுக்கு என்ன கோபம்.
.
கோபம் இல்லை! மறந்து விட்டேன் ஜானகி அம்மாளையும் பன்னீர் சொம்பையும், மன்னிக்கவும், பன்னீர் செல்வதையும் விட்டு விட்டா மாதிரி
எவன்கண்டான் போற போக்கில இவங்க எல்லாம் முதலமைச்சர் ஆனாலும் ஆகிவிடுவாங்க.
///வருங்கால முதலமைச்சர் வ —–லு//
இது வடிவேலு தானே. ஏன் அவர் பெயரை மறைத்தீர்கள். அப்படியே சிங்க முத்துவையும் அந்த லிஸ்டில் சேர்த்துக்குங்க
//குடியை மறந்துட்டு அமைப்பில் இருந்து இதைவிட வேகமாக வால்பையன் செயல் படலாமே //
விரைவில் இணைவோம் தோழரே!
அன்புள்ள ஹைதர் இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கி…
நான் போட்ட ம.க.இ.க கமெண்டை மட்டும் வெளியிடவே இல்லை கேள்விக்குறி. அதுக்கு பிறகு போட்ட கமெண்ட்டு பப்ளிஷ் ஆகுது.அந்த ம.க.இ.க கமெண்ட்டு மட்டும் ஆகவே இல்லை. தொழில் நுட்பக் கோளாறா அல்லது கம்யூனிசக் கோளாறா?
ஜூஜூ போய் குப்பைத்தொட்டிய நோண்டிப்பாருய்யா… சேரவேண்டிய எடத்துலதான் சேந்திருக்கு…
ஷாஜஹான், நீங்கள் பின்னூட்டம் போடும் போது, கூவத்தில் ஒரு பொருளை எரிகின்றோம் என்று நெனைக்க வேண்டும். அப்படி நினைத்தால் உங்களுக்கு இந்தமாதிரி கவலை ஏற்படாது.
நான் கூட பீல் பண்ணேன். இப்போதான் தெரியுது வினவு ஒரு கூவம்னு.
அப்போ தினமும் அதுல முத்துகுளிக்குற கேள்விக்குறி????
நெத்தியடி முகம்மத் என்ற ஜாக்பாட் ஜே வளைகுடா நாடு எண்ணெய்க் கம்பெனி ஒன்றில் கெமிஸ்ட்டாக வேலை பார்ப்பார் போல. அங்க இருக்குற ஆயில் கம்பெனிக்கு தொழில்நுட்ப சப்போர்ட் அமெரிக்காதான். அதே மாதிரி ஆயில் பணத்தையெல்லாம் ஷேக்குங்க அமெரிக்காவுலதான் முதலீடா வச்சுருக்குறாங்க. ஏழைங்கநாட்டு பணத்தை கொள்ளையடிக்கும் அரபு ஷேக்குங்க நம்ம நெத்தியடி மாதிரி அல்லக்கைங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து கவனிக்கிறாங்க. இந்த கனெக்சனை யோசிச்சுப் பாத்தா நெத்தியடி ஏன் பெப்சி, கோக்கை ஆதரிக்கிறார்ங்கறது புரியும்.
அமெரிக்காவுக்கு அரபு ஷேக்கும் அடிமை. நம்ம நெத்தியடியும் அடிமை. நெத்தியடிக்கு சொம்பு தூக்கும் மேலூஊஊஊஊஊஊஊஊஊர் ஷாஜகானும் அடிமை. நேரா கோக்குக்கு ஆதரவுன்னு சொல்றத வுட்டுட்டு நெத்தியடி இப்படி அவனா இவன்ற மாறி சீன் போட வேண்டாம்.
ஹா ரியலு சபாசு சபாசு… உங்களுக்காவது எனக்கு ஆதரவா வரணுன்னு தோணிச்சே… இதே நந்தா வந்திருந்தா வேற சிலர கூட எதிர்பார்திருக்கலாம்..ஹூம் நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்… ரொம்ப நன்றிங்க
இது உண்மாயான்னு தெரியாது, எல்லாம் வல்ல இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
தவ்ஹீத் ஜமா அத் அலுவலகம். ஆன்லைன் பி.ஜே சோகத்தோடு குந்தியிருக்கிறார். மேலூர் ஷாஜகான் கத்தியவாறு,” நம்மள தொடர்ந்து இந்த வினவுப் பயலுக எதிர்க்குறானுங்க. அதுனால அவனுங்க எத எழுதுனாலும் நாம எதுக்கணும் பி.ஜே”.
ஆன்லைன் பி.ஜே ம் ம்னு தலையை ஆட்ட, ஒரு அப்பாவித் தொண்டர்,”அண்ணே அவங்க ஆர்.எஸ்.எஸ், அமெரிக்காவையும் எதிக்குறாங்கண்ணே, நாம அதையும் எதிர்க்கணுமா” ன்னு கேட்கி, ஆவேசமான ஷாஜகான்,”அடி சொருப்பால, அமெரிக்காதான் நமக்கு படியளக்குது, அந்த ஆண்டவனைப் போய் இவனுங்க எதுப்பாங்களா, நாமதான் அமெரிக்காவுக்கு சப்போர்ட் பண்ணனும்” ன்னு தீயாய் கொதிக்க, மெயிலில் நெத்தியடி அடுத்த என்ன பாயிண்ட் எழுதணும்னு சாட்டில் கேட்கிறார்.
ஓ அப்படியா சங்கதி… இது எனக்கு தோணாம போச்சே???
“பெப்சி ஒழிக…கோக் ஒழிக…”
“இந்த நிறுவனங்களின் பானங்களை யாரும் குடிக்க வேண்டாம்…
ஒட்டுமொத்தமாய் புறக்கணிப்போம்…”
(காரணம்: வினவு இப்பதிவில் சொன்ன காரணம்) …
என நான் (வேறு வார்த்தைகளில்)சொன்னேன்..சொல்கிறேன்.. சொல்வேன்…
(சரக்கு-கோக் : இவற்றில் பெரிய தீமை எது என்று கருதுகிறீர்கள் ?என்று கேட்டேன் பதிலில்லை) யாரவுது ஒரு தோழர் சொல்லலாம்…
இதேபோல சரக்கு கம்பெனிகளையும் இதே காரணங்களுக்காக எதிர்த்து இதற்கு முன்னர் ஏன் பதிவு எதுவும் வரவில்லை?
இல்லையெனில் இதே போல ஒரு பதிவு சரக்கையும், சரக்கு தயாரிக்கும் நிருவனங்களையும், சரக்கு அடிப்பவர்களையும் எதிர்த்து இத்தளத்தில் இதேபோல காட்டமான வார்த்தைகளுடன் எப்போது ஒரு பதிவு வரும்?
வினவிடம் நான் கேட்டு விட்டேன்… ‘தோழர்களே’ உங்களால் கேட்க முடியுமா?
சவால்….எல்லா “தோழர்களுக்கும்” ஒரு சவால்….
அது உங்களால் முடியாதென்றால்….தற்போதைக்கு…
{{{{{{“பீர் ஒழிக… பிராந்தி ஒழிக… விஸ்கி ஒழிக… ரம் ஒழிக… ஒயின் ஒழிக…. கள் ஒழிக… சாராயம் ஒழிக….”
இனி இந்த ‘குடி’பானங்களை யாரும் ‘குடி’க்க வேண்டாம்…
ஒட்டுமொத்தமாய் இச்சரக்குகளை புறக்கணிப்போம்…..
மேலும், மேற்கூறிய ‘குடி’ பானங்களை //காசு கொடுத்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது//” }}}}}}}
—–என்று இதே தளத்தில் பின்னூட்டத்திலாவது சொல்ல திராணி இருக்கிறதா ‘தோழர்களே’ உங்களுக்கு ???? போலி என்கவுண்டர்????… . …வால்…????? & ????.வினவு……????????.
மறுபடி மறுபடி வாயை கொடுத்து மாட்டிக்கொள்ளும் நெத்தியடி
முஹம்மதுவிற்கு நன்றியோ நன்றி
@@@(சரக்கு-கோக் : இவற்றில் பெரிய தீமை எது என்று கருதுகிறீர்கள் ?என்று கேட்டேன் பதிலில்லை) யாரவுது ஒரு தோழர் சொல்லலாம்@@@
நேற்றே நான் எழுதிவிட்டேன் இங்கே
https://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/#comment-23551
உங்களுக்காக மறுபடியும் என் கருத்தை ஆணித்தனமாய் பதிகிறேன்
பெப்சி கோக் குடித்தால் 100 வருசம் எக்ஸ்டிராவா வாழலாம்னாலும் கூட சாராயத்தை விட அதுதான் கெடுதியானது…
நான் குடிப்பதில்லை குடிகாறர்களை வெறுக்கிறேன் குடியைவெறுக்கிறேன் ஆனால் அதைவிட அதிகமாக கோக் பெப்சியை வெறுக்கிறேன். நம்ம மானத்தையும் சுதந்திரத்தையும், ம்ண்ணையும், தண்ணியையும், உழைப்பையும், ஆரோக்கியத்தையும் இழந்து நமக்கு ஒரு கோக்கோ பெப்சியோ தேவையா?? போதுமா போதுமா போதுமா????????
வினவில் குடியை மட்டுமல்ல மக்களை பீடித்திருக்கிற எல்லா போதைகளையும் எதிர்த்து பதிவு வரவேண்டும் என்பது சரியான கருத்துதான். மதம் மனிதனுக்கு அபினி என்றார் கார்ல் மார்க்ஸ், வினவு அதை சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறது… பெரிய போதையான மதவெறியிலிருந்து எல்லாவற்றையும் அம்பலப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது..
சரி நான் பதில் சொல்லிட்டேன் உமக்கு மானம் மரியாதை இருந்தா என்னுடைய இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்
https://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/#comment-23557
https://www.vinavu.com/2010/05/26/boycott-pepsi-coke/#comment-23586
ரிப்பீட்ங்கு த கொஸ்டின்ஸ்
@@@உடல் நலக்கேடுதான் உங்கள் முதன்மை அக்கறை எனில் @@@@@@@ஆனால், இதை எதிர்க்க உடல் நலம் என்ற ஒரு விஷயத்தை(அதுதான் முக்கியமானது என்றாலும்)-ஒரு வேஷமாக எதற்கு எடுக்க வேண்டும்?@@@@
@@@நீங்கள் சுரண்டலுக்காக பெப்சி/கொக்கை எதிர்க்கிறீர்கள் எனில் உடலநலம் அக்கறை என்ற திடீர் பொருந்தா முகமூடி உங்களுக்கு எதற்கு?@@@
பதிவின் கருப்பொருளுக்கு உங்களுடைய மேற்கண்ட விமர்சனங்கள் பொருந்தும் என உங்களால் நிரூபிக்க இயலுமா??? சவால் .. ஏற்றுக்கொள்ள
துணிவிருக்கின்றதா????
அப்படி உங்களால் முடியவில்லையெனில் உங்களுடைய குப்பை உளரல்களை நீக்கும் படி வினவுக்கு பின்னூட்டம் இட்டு உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்… அதுவும் வீரம்தான்…இரண்டும் முடியவில்லையெனில் உங்கள் தரம் எங்குள்ளது என்பதை இங்கு அனைவரும் அறிந்து கொள்வர்…
கேள்விக்குறி கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் (எகெய்ன்) 1…2….3….
//காசு கொடுத்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது//
இதுக்கு ஏற்கனவே நான் சொல்லிட்டேன் சரியான வார்த்தை தான்னு, அதனால தான் மாறிக்குவேன்னு சொன்னேன்! இன்னும் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்குறிங்க!
வால்பையன், அவர்களின் நோக்கம் வினவு தோழர்கள் ஆதரவாளர்களை திட்டுவது… திட்டுகிறார்கள்… இதை தவிர அவர்களிடம் வேறு என்ன நீங்கள் எதிர்பார்த்தீர்கள்???? நேர்மையையா????
வால்பையன், துளிகூட நேர்மையே இல்லாதவர்களை நேர்மையர்ற்ற முறையில் தான் கையாள முடியும். அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்?
///அதனால தான் மாறிக்குவேன்னு சொன்னேன்! ///
நன்றி வால்பையன் அவர்களே…நேற்றே சொல்ல நினைத்தேன் மறந்துவிட்டேன்… மன்னிக்கவும்….
(உங்களிடம் மட்டுமாவது விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்ததே…)
////இன்னும் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்குறிங்க!////–நல்ல கேள்வி.!
//மாறிக்குவேன்//….. என்றுமட்டும் சொன்ன நீங்க,
” இன்று நான் மாறிட்டேன் ஜாக்பாட் ஜெ” என்று சொல்லும் அந்த பொன்னாளுக்காக காத்திருக்கிறேன்…. அதுதான் நம் உண்மையான வெற்றி….
//” இன்று நான் மாறிட்டேன் ஜாக்பாட் ஜெ” என்று சொல்லும் அந்த பொன்னாளுக்காக காத்திருக்கிறேன்…. அதுதான் நம் உண்மையான வெற்றி….//
நான் தினகுடிகாரன் கிடையாது, திருவிழா குடிகாரன், அதாவது நண்பர்களின் திருமணம், அனைவரும் ஒன்றுகூட கூடிய விடுமுறை தினம் இப்படி! மற்றவர்களை கேள்வி கேட்க எனக்கு இது தடையாக இருக்கும் பட்சத்தில் அந்த நொடியே தூக்கி போட்டாச்சு!
//மற்றவர்களை கேள்வி கேட்க எனக்கு இது தடையாக இருக்கும் பட்சத்தில் அந்த நொடியே தூக்கி போட்டாச்சு!//
—இது ஒரு சிறந்த காரணம் இல்லை என்றாலும் பரவாயில்லை…
எடுத்த முடிவு சிறப்பானது….
HATS OFF TO YOU, Mr .VALPPAIYAN …..
NOW YOU ARE SETTING A GOOD EXAMPLE FOR THE READERS..
THANKS A LOT….
@@@மற்றவர்களை கேள்வி கேட்க எனக்கு இது தடையாக இருக்கும் பட்சத்தில் அந்த நொடியே தூக்கி போட்டாச்சு@@@ மிகச்சரியான காரணம். சமூகம் எப்படி நம்மைப்பார்க்கும் என்று ஒரு மனிதன் சிந்திப்பது சமூக மனிதனாய் மாற முதல் படி … கொண்ட கொள்கைக்காக மதுவை துறப்பது என்பது மதுவையே குடித்திராததைத விட மிக மிக உயர்ந்தது….. நமது சொல்லும் செயலும் ஒரு ஹார்மனியாய் இயங்கும் போது .. ஆளுமை நிமிர்ந்து நிற்கும்… வார்த்தைகளுக்கு பன்மடங்கு வலு கூடிவிடும். …. வாழ்த்துக்கள்
வால்பையன் மதுவை விட்டுட்டேன்ற மாதிரி நம்ம நெத்தியடியும் மதம்குற போதையை விட்டுட்டார்னா எவ்வளோ நல்லா இருக்கும்?
இங்கே ஜாக்பாட் ஜெ பெயரில் எழுதும் நெத்தியடி முகம்மதுவைப் போலவே நானும் முட்டாள் தனமாக யோசித்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று ஒரு கற்பனை…………..
{{{{{{“பீர் ஒழிக… பிராந்தி ஒழிக… விஸ்கி ஒழிக… ரம் ஒழிக… ஒயின் ஒழிக…. கள் ஒழிக… சாராயம் ஒழிக….”இனி இந்த ‘குடி’பானங்களை யாரும் ‘குடி’க்க வேண்டாம்…ஒட்டுமொத்தமாய் இச்சரக்குகளை புறக்கணிப்போம்…..மேலும், மேற்கூறிய ‘குடி’ பானங்களை //காசு கொடுத்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது//” }}}}}}}
என்று பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின், கள், சாரயம் போன்றவற்றை தாக்கி எழுதும் நெத்தியடியே…ஏன் வோட்கா, சுண்ட கஞ்சி, பேட்டரி போன்றவற்றை பற்றி எழுதவில்லை.. அவையெல்லாம் உடம்புக்கு நல்லதா இல்லை நீங்களும் உங்கள் தவ்ஹீத் ஜமாத்தும் அதை தினமும் குடிப்பதாலா????????
ஆல்கஹாலின் கேடுகளை பற்றி பக்கம் பக்கமாக எழுதும் நெத்தியடியே… அதை விட கொடுமையான புகையிலை, பீடி, சிகெரட், சுருட்டு, பான் பராக், குட்கா, 420 பீடா, கைனி போன்றவற்றைபற்றி ஏன் ஒரு பின்னூட்டம் கூட எழுதவில்லை தினமும் புகையிலை உபயோகிப்பதாலா இல்லை குரானில் புகையிலை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதா???
கோக், பெப்சியின் ph வேல்யுவை புட்டு புட்டு வைக்கும் நெத்தியடியே…. உங்கள் கெமிஸ்டிரி அறிவு ஆக கொடுமையான கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர், அபின், மரிஜூவானா போன்றவற்றின் தீமைகளை ஆராயவில்லையே ஏன்…???? அது சமூக முன்றேற்றாத்துக்கு பயன் படுமா இல்லை உங்கள் ஆன்லைன்பீஜே கூட்டமே கஞ்சா குடிக்கிகளா????
நேர்மையிருந்தால் பதில் சொல்ல்ல்ல்ல்ல்….. எங்கே நெத்தியடி???? எங்கே ஷாஜஹான்????? எங்க பீ.ஜே??????
-x-x-x-x-x-xஎப்புடி??????????????????
தம்பி கேள்விக்குறி நெத்தியடி அண்ணாச்சியை இந்த வாங்கு வாங்குனீகன்னா பாவம்முலா? ஷாஜகான் அண்ணாச்சியோட சேத்துப்பாத்தா நம்ம நெத்தியடி பாவம்லா?
கேள்விகுறியே நெத்தியடியாய்!
//NOW YOU ARE SETTING A GOOD EXAMPLE FOR THE READERS..//
நல்ல மனிதனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்!, மற்ற அனைத்தும் மனிதத்திற்குள் அடங்கிவிடும்!
//வால்பையன், துளிகூட நேர்மையே இல்லாதவர்களை நேர்மையர்ற்ற முறையில் தான் கையாள முடியும். அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்?//
அவரவர் கொள்கையில் உங்களது நேர்மை வேற்படுகிறது! பொதுவாழ்வில் சகமனிதன் பிறாரால் ஏமாற்றபடும் பொழுது கொதித்தெழுவது தேவைபட்டால் ஆயுதம் ஏந்துவது சிலருக்கு நேர்மையாக படுகிறது, அவன் வந்து வியாபாரம் தானே பண்றான், அவனை ஏன் மிரட்டுற என்பது சிலருக்கு நேர்மையாக படுகிறது!, இந்தியா என் வீடு, இது கூட்டு குடும்பம், அண்னன் தம்பி என்று பல குடும்ப பொறுப்பை பகிர்ந்து செய்கிறோம், அதுல ஒரு மொள்ளமாறி காசுக்கு ஆசைபட்டு வேற நாட்டுகாரன் பொருள்களை உள்ளே விட்டான், அப்பொழுது பயனளிக்கும் நாலு பொருளை கண்ணுல காட்டி நம்மை அரிக்கும் பல பொருள்களை காட்டாமல் உள்ளே விட்டான், சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வேலை போச்சு, சோறு போச்சு, உசுரு போச்சு! ஆனா காசு வாங்குனவனுக்கு கவலையில்ல, அவன் ரெண்டு தலைமுறைக்கு உட்கார்ந்து திங்கலாம்! சாமான்யன்!
1 ரூபாய்க்க்கு தயாராகும் பானம் விளம்பர செலவெல்லாம் சேர்த்து 10 ருபாய்க்கு நம்ம தலையில கட்டுறான், நாம ஏன் விளம்பர செலவெல்லாம் கொடுக்கனும், க்கொடி கணக்குல விளையாட்டு ஸ்பான்ஸர் பண்றான், எதாவது ஒரு நலிந்த கிராமத்தையோ, ஒரு பள்ளிகூடத்தையோ தத்து எடுத்துருக்கான்னு எங்கேயாவது செய்தி இருக்கா!?
நேர்மை என்பது நம் மனசாட்சி படியும், நம் செயல் மற்றவர்களை பாதிக்காமலும் நடப்பது, அதே நேரம் சக தோழனுக்கு சோத்துக்கு வழியில்லையென்றால் ஆயுதம் தூக்குவதும் எங்களுக்கு நேர்மை தான்!
இங்கே வஜ்ரா என்ற பெயரில் வந்த பின்னூட்டம் அவருடையது அல்ல !!
ரவி, இமெயில் மற்றும் ஐபி , வஜ்ரா இதற்கு முன்னர் எழுதிய பின்னூட்ட்டங்களுடன் ஒத்துப் போகிறதே. நீங்கள் எப்படி அவர் இல்லை என்று சொல்கிறீர்கள்?
வினவு தளத்துடன் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக ஒரிஜினல் வஜ்ரா என்னுடைய தளத்தில் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்…
ஆகவே இங்கே வஜ்ரா பெயரில் வந்த அனைத்து பின்னூட்டங்களும் போலியானவை என்று ஒரிஜினல் வஜ்ரா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்…!!
நான் எழுதிய பின்னூட்டத்தை காணவில்லை. அதனால் மறுபடி எழுதுகிறேன்..
வினவு தளத்துடன் தீண்டாமையை கடைபிடிப்பதாக ஒரிஜினல் வஜ்ரா என்னுடைய தளத்தில் பின்னூட்டம் அளித்துள்ளார்..
நீங்கள் சொல்வதை பார்த்தால் வஜ்ரா பெயரில் போலி பின்னூட்டங்கள் கனகாலமாக போட்டுவருகிறார்கள் போலிருக்கிறது..
இருந்தாலும் வக்ராவ கும்மியடிக்கிறதுல இருக்குற சுகத்த விட்டுக்கொடுக்க முடியல…..
பீச்சாண்டிப்பயலே…அவன கும்மியடிக்கிறது இருக்கட்டும்….ஒங்களல்லாம் [obscured] இருக்காங்களே…அவிங்கள எல்லாம் என்ன செய்யப்போறீங்க ?
ரவி, பார்பனிய பொந்து மத ஆதரவு, இசுலாமிய வெறுப்பு கம்யூனிச வெறுப்பு ஆகியவைகளில் போலி வஜ்ராவுக்கும் ஒரிஜினல் இருட்டு கடை வஜ்ராவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல..வஜ்ரா பேருல யாராவுது ஸ்டாலின் வாழ்கன்னு சொன்னாங்களா என்ன??? அப்புறம் ஏன் அவருக்கு இந்த புலம்பல்.??? கேட்டுச் சொல்லவும்
Dear வால்பையன்,
முதலில் நீங்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். மது குடிப்பது சிகரட் குடிப்பது எல்லாம் உங்களுடைய தனி மனித உரிமை. வாழ்கை. அதை யாரும் உங்களுக்கு ஆக நிர்ணயிக்க முடியாது. அதற்க்கு நீங்கள் அனுமதிக்கவும் கூடாது. எதையும் யாருக்காகவும் நீங்கள் விட்டு குடுக்க வேண்டாம். மது அருந்துபவன் பொருக்கி அல்ல மது அருந்தாதவன் நல்லவன் மற்றும் யோக்கியனுமில்லை.
நீங்க என்ன தேவநாத குருக்களை விடவா சமூகத்திற்கு கெடுதல் செய்துள்ளீர்கள். அவனுக்கே, மன்னிக்கவும், அவருக்கே அவரது தாமிரபரணி சங்கம் உதவி செய்கிறது. அப்புறம் என்ன? உன்னோருத்தவன் குடியை நீங்கள் கெடுக்காதவரை நீங்கள் உத்தமரே.
இந்த உலகத்தில் உள்ள எல்லா சாமியாரை விட நீங்கள் உயர்ந்தவர். ஆனால் நமது சமுதாயம் இந்த சாமியார்களை நம்பும் அளவுக்கு சக மனிதனை நம்புவது இல்லை.
போலி சாமியார் என்று நான் சொல்லத்தர்க்கு காரணம் சாமியார் என்றாலே போலி தான்.
போலி சாமியார் எனபதே ஒரு “oxymoron.”
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
//மது குடிப்பது சிகரட் குடிப்பது எல்லாம் உங்களுடைய தனி மனித உரிமை. வாழ்கை. அதை யாரும் உங்களுக்கு ஆக நிர்ணயிக்க முடியாது. அதற்க்கு நீங்கள் அனுமதிக்கவும் கூடாது. எதையும் யாருக்காகவும் நீங்கள் விட்டு குடுக்க வேண்டாம். மது அருந்துபவன் பொருக்கி அல்ல மது அருந்தாதவன் நல்லவன் மற்றும் யோக்கியனுமில்லை.//
நன்றி நண்பரே!
உன் தனிபட்ட உரிமை என்ற வார்த்தையை நான் சொல்லியிருந்தால் கோக் குடிப்பதும் என் தனிபட்ட உரிமை என்ற வார்த்தை வந்திருக்கும் என்பதை கவனியுங்கள்!, சமூக அக்கறையுள்லவன் சில விசயங்களில் அதாவது என் தனிபட்ட பழக்கங்களில் சமரசம் செய்து கொள்வது தவறில்லை என்று நினைக்கிறேன்!
குடித்தாலும் என் ஆரோக்கியத்தில் எவ்வலவு அக்கறை உள்ளவன் என்பது நண்பர்களுக்கு தெரியும், வேலை நாட்களில் யார் எவ்வளவு வருத்தி அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் என்பது நெருங்கிய ப்ளாக்கர் நண்பர்களுக்கே தெரியும்!
இடையில் வந்தது தானே, இடையிலே போகட்டும் விடுங்கள்!
என் மாற்றத்தால் மதவாதிகள் மாறுவார்கள் என்றால் உயிரைக் கொடுக்கவும் தயார்!
திரு.வால்பைய’ர்’, Great answer.
//அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?//
தனது பெயரையே ஒரு கேள்விக் குறியுடன் எழுதியுள்ளாரே இது கூட ஒரு ஆக்சிமோரன்தான். சும்மா லுலுவாய்க்கி…
அன்புள்ள பூச்சாண்டி,
Thanks for your comments. Your comment is true! Precisely, நீங்கள் கூறியபடி எனது பெயரை வேண்டுமென்றே தான் அப்படி ஆச்சர்யகுரியுடனும் கேள்விக் குறியுடனும் வைத்துள்ளேன். அதாவது ஆட்டையாம்பட்டியிலாவது அம்பியா??? ஆட்டையாம்பட்டியில் குப்பனும் சுப்பனும் தானே இருப்பார்கள்!!!
கடைசியில் நீங்கள் என்னை கிண்டல் அடித்திருப்ப்பதால் உங்களுக்கு எனது கொசுறு:
நான் “oxymoron” தான். அப்ப நீங்கள் என்ன வெறும் Moron -ஆ !
அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?
.
காளஹஸ்தியும், சிவபெருமான் விட்ட குசுவும்!
http://allinall2010.blogspot.com/2010/05/blog-post_28.html
பிடிக்கலைனா, ஆகாத மறுமொழிக்கு அனுப்பியிருங்க தோழரே!
சிறப்பான கட்டுரை. பொருத்தமான கருத்து படங்களை வரைந்தது யார்? அவருக்கும் பாராட்டுக்கள்.
நான் 2001 ஆண்டில் மட்டும் இந்த கருமத்தை குடித்து கொண்டிருந்தேன்.ஆனால் சில இயக்கங்கள் நடத்திய விழிப்புணர்வு மற்றும் எனக்குள் இருந்த பன்னாட்டு எதிர்ப்பு உணர்வினால் இந்த கருமத்தை குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன்.நான் மட்டுமன்றி எங்கள் வீட்டிலும் யாரும் குடிப்பதில்லை.முடிந்தவரை பல நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதோ என்னால் முடிந்ததை செய்துள்ளேன்.ஆனாலும் இந்த அறிவுகெட்ட மாக்கள் (ஆம் மக்கள் இல்லை)திருந்த மாட்டேன்கிறார்கள்.
அவர்கள் தாங்கள் குடிப்பது மட்டுமன்றி பிஞ்சு குழந்தைகளுக்கும் இதை வாங்கி கொடுத்து அவர்களையும் இந்த பூச்சி மருந்திற்கு அடிமையாககுகிறார்கள்.
மேலும் ஆய்வுகள் மூலமும் இந்த கேடு கேட்ட பானத்தின் பக்க விளைவுகள் நிரூபிக்கபட்டிருக்கின்றன.முக்கியமாக பெண்களுக்கு இந்த கேடுகெட்ட பானம் எலும்பில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி விடுவதால் அவர்களின் எலும்புகள் வலுவிழந்து (Becomes hollow and brittle) விடும் . இது அவர்களுக்கு நாற்பது நாற்பத்தைந்து வயதை(Menopause) நெருங்கும் போது விளைவுகள் மேலும் கடுமையாக கூடும்.எனவே இதை நாம் விட்டொழிப்போம் .
.
.
வினவு எனக்கு ஓர் சந்தேகம்.இந்த சுனிதா நாராயண் என்கிற பெண்மணி ஓவராக சவுண்டு விட்டு கொண்டிருந்தார்(இந்த பூச்சி மருந்திற்கு எதிராகத்தான்)வழக்கும் தொடர்ந்தார்.அந்த வழக்கு நிலுவையில் உள்ளதா அல்லது வழக்கம் போல் இந்திய ஜனநாயகம் அதை “தள்ளுபடி”செய்து விட்டதா(அதாவது பணம் பாதாளம் வரை பாய்ந்து விட்டதா?)
பா.சிதம்பரமும் .மன்மோகன் சிங்கும்,அருன்ஜெட்லீயும் இருக்கும் வரை கோக், பெப்ஷி ,ஒழியாது.
கோக்,பெப்சிக்கு எதிரான காத்திரமான கட்டுரை என்பதில் எவருக்கும்
மாற்று கருத்து இருக்க முடியாது.
இன்று கோக் பெப்சி விற்ப்பனையில் மிகபெரும் சரிவு உண்டாகி இருக்கிறது. என்பது உண்மை மக்களிடம் அந்த பானங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்புணர்வில் பன்னாட்டு
எதிர்ப்பு என்பது ஒப்பீட்டளவில் மிக மிக குறைவானது. அப்பானன்களால்
உடல் நலத்திற்கு கேடு உண்டாகிறது என்பதை அனுபவத்தின் வாயிலாக
மக்கள் உணர்திருக்கிரார்கள்.
எப்படியோ அந்த பானங்கள் மக்களிடமிருந்து அந்நிய பட துவங்கி இருக்கிறது. அந்த பானங்களுக்கு எதிராக இன்னும் தொடர்ச்சியான
பரப்புரையை செய்ய வேண்டியதும் இருக்கிறது.
சரி அது என்ன “மானம்” கெட்டவர்களின் பானம்
மானம் அவமானம் என்கிற வார்த்தை பிரயோகம் உடமை கால
கருத்தாக்கம் இலையா
நீங்கள் தெரிந்தே பயன் படுத்துகிறீர்களா அல்லது தெரியாமலா
நான் இதுநாள் வரை அவ்வப்போது குடிப்பது உண்டு, இந்த இடுகை படித்த பின் அதையும் நிறுத்திவிட்டேன்.
ஒரு நல்ல பதிவு. ஆனால் //உழைப்பாளிகளின் பானமான தேநீரை//??
எனக்கு தெரிந்து நாம் தேநீர் அருந்தும் பழக்கத்திற்கு பின்னால் கூட வெள்ளையர்களின் சூழ்ச்சி இருந்ததாக ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.
தோழர்களே வணக்கம்…..
எவ்வளவு தான் தாகமாக இருந்தாலும், என் மனது தண்ணீரையே நாடும். அது தண்ணீரின் சுவைக்காக மட்டும் அல்ல. அது ஒரு மன திருப்தி.என்னை பொறுத்த வரையில் இவ்வுலகில் காணப்படும் மிக அதிசயமான பொருள் தண்ணீர். அதன் நிறம், சுவை என சொல்லிக் கொண்டே போகலாம்.
நண்பர்கள் கூறியது போல நம் வீடு, நாட்டு தண்ணீரையே எடுத்து நமக்கே விற்கின்றான். நம் உணவு பழக்கவழக்ககங்களும் மாறிப் போனதே கூட ஒரு காரணம் என்று நான் நினைகின்றேன் . வினவு எதைப் பற்றி தன கருத்தை வெளி இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதிக அளவில் மாமிசம் நம் உணவு வழக்கங்களில் சேர்ந்து விட்டதும் ஒரு காரணம் என்று நான் நினைகிறேன். நான் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவன் தான். மாமிசம் சாப்பிடும் போது மற்றும் சாபிட்ட பின்பு ஏற்படும் மன இரைச்சல், காய் வகைகளை சாபிட்ட பின் ஏற்படவுதில்லை. எவை என் தனிப்பட்ட எண்ணங்கள். மற்றவர்களுக்கு முரண் இருப்பின், மன்னிக்கவும்…..
நன்றி…நெடுஞ்செழியன்
நண்பர்களே ….மேலே கூறிய என் கருத்தில் சிறிய மாற்றம். மாமிசம் சாப்பிட்ட முன் மற்றும் பின் எழும் மன படபடப்பு காய் கனிகளை சாபிட்ட பின்பு வருவதில்லை. பாஸ்ட் food மற்றும் நிறைய ஓட்டல்கல் பெரிகியதும் ஒரு காரணம் என்று நினைகிறேன். கல்லூரி நாட்களில் நான் சென்னைக்கு வந்து கோகோ-கோலவிடம் sponsorship (1999 ) தேடி உள்ளேன். அப்பொழுது அவர்கள் சொன்ன தகவல்: ஒரு பாட்டில் coco -cola ‘வின், ரசத்தை தான் செய்யும் செலவு 10 பைசா தான். அதை எட்டு ருபாய்க்கு விற்பதாக சொன்னார்கள். எனவே…எப்படி லாபம் சம்பாதிகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். மோர் குடிப்பது நல்லது என்று எடுத்து உரைத்தால், அதனை எத்தனை நபர்கள் பின்பற்றுவார்கள் ?.
வினவு…. ஒரு அவா …. இத்தகைய பெப்சி மற்றும் coca -cola ௦௦௦ பற்றிய சிறிய A4 பேப்பரில் பிரிண்ட் செய்யும் அளவிற்கு தகவல்களை தாங்கள் தந்தால், அவற்றை நான் சந்திக்கும் நபர்களிடம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்…
நெடுஞ்செழியன்,
நீங்கள் தெரிவித்திருக்கும் ஆலோசனையை கூடிய விரைவில் செய்கிறோம். நன்றி
இதுக்கெல்லாம் காரணம் யார்? நம்ம கேடுகெட்ட அரசியல்வாதிகள் !
முதலில் இவர்களுக்கு எதாவது செய்யணும்!! பிறகு வெளிநாட்டு கொள்ளையர்களை ஒழிக்கலாம்!!!
தஞ்சை. ஞான.ஜெயராஜ்.
ஏழுமலை தாண்டிவந்தா ஏலேலங்கிளியே
ஏழுகடல் தாண்டிவந்தா ஏலேலங்கிளியே
பொ¢ய காடு ஒண்ணிருக்கும் ஏலேலங்கிளியே
காட்டுக்குள்ளே ஊ¡¢ருக்கும் ஏலேலங்கிளியே
மொத்ததிலே நாலே வீடு ஏலேலங்கிளியே
தண்ணியில்ல கரண்டுமில்ல ஏலேலங்கிளியே
தின்பதற்கும் ஏதுமில்ல ஏலேலங்கிளியே
கொடுமயிலும் கொடுமையாச்சு ஏலேலங்கிளியே
ஆடுமேய்க்க கிளம்பியாச்சு ஏலேலங்கிளியே
ஆறு மணிக்கு திரும்பிடுவான் ஏலேலங்கிளியே
பசியெடுத்த மதியவேளை ஏலேலங்கிளியே
வயிற்றில் போட ஏதுமில்ல ஏலேலங்கிளியே
உச்சிமரக் கிளையிலதான் ஏலேலங்கிளியே
நாவப்பழம் நெறஞ்சிருக்கு ஏலேலங்கிளியேமரமேறி
உலுக்கிவிட்டான் ஏலேலங்கிளியேகிளை
வொடிந்து விழுந்துவிட்டான் ஏலேலங்கிளியே
கழுத்து முறிஞ்சு கிடக்கின்றான் ஏலேலங்கிளியே
தண்ணீர் கேட்டு அலறுகிரான் ஏலேலங்கிளியே
குடிக்கத் தண்ணி வேணுமின்னா ஏலேலங்கிளியே
ஊ¡¢லெயும் தண்ணியில்ல ஏலேலங்கிளியே
பத்து மயிலு போய்வரணும் ஏலேலங்கிளியே
பாவி உயிரு தாங்கிடுமா ஏலேலங்கிளியே
கோகா கோலா குப்பியோடு ஏலேலங்கிளியே
குட்டிப் பையன் ஓடிவந்தான் ஏலேலங்கிளியே
ஒண்டிக் குடிசைக் கடையிலே ஏலேலங்கிளியே
இதுமட்டும்தான் இருக்காம் ஏலேலங்கிளியே”
ஆபத்துக்கும் பாவமில்ல ஏலேலங்கிளியே
அவன் வாயில் இத ஊத்து ஏலேலங்கிளியே”
ஆனாலும் அவன் செத்தான் ஏலேலங்கிளியே
போஸ்ட்டுமார்ட்டம் அறிக்கை வந்தது ஏலேலங்கிளியே
செத்ததுக்கு காரணம்தான் ஏலேலங்கிளியே
கழுத்து முறிவு ஏதுமில்லையாம் ஏலேலங்கிளியே
பூச்சிமருந்து குடித்ததாலே ஏலேலங்கிளியே
செத்துப் போனானாம் பாவிப்பய ஏலேலங்கிளியே
– புதிய பாமரன்.
மிகவும் நன்றி. கன்னத்தில் அரைத்து போல் இருந்தது. திருந்திவிட்டேன்
அமெரிக்காவில் உடல் நலத்திற்காகவும் அதிக கலோரிக்காவும் இந்த குடிவகைகளின் வியாபாரம் குறைந்துள்ளது. இதன் பாதிப்புக்கள் மற்ற நாடுகளில் இன்னமும் தெரியவரவில்லை..
புதுடில்லி:கர்ப்பிணி பெண்கள், “சாப்ட் டிரிங்ஸ்’ என அழைக்கப்படும் குளிர்பானங்கøளை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதென, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும். இதற்காக “சாப்ட் டிரிங்ஸ்’ எனப்படும் குளிர்பானங்களை பருகும் பழக்கம் கர்ப்பிணிகளிடையே அதிகரித்து வருகிறது. இது கர்ப்பிணிகளுக்கு பல வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
டில்லி போர்ட்டீஸ் மருத்துவமனை நிபுணர் அனூப் மிஸ்ரா கூறியதாவது:கர்ப்பிணி பெண்கள் முன்பெல்லாம் எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரில் சர்க்கரை (லஸ்ஸி) சேர்த்து அருந்துவர். தற்போது பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் குளிர்பானங்களை அருந்துகின்றனர். இதனால், அவர்களது உடல்நிலை பாதிக்கப்படும்.குளிர்பானங்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து முடிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், அதில் சேர்க்கப்படும் சர்க்கரை, பதப்படுத்துவதற்கு சேர்க்கப்படும் ரசாயன பொருட்களால் குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அனூப் மிஸ்ரா கூறினார்.
கோகிலபென் அம்பானி மருத்துவமனை நிபுணர் சுசித்ரா பண்டிட் கூறுகையில், “சாப்ட் டிரிங்ஸ்களில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லை. அதில், கலக்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் சுடவைத்து ஆறவைத்த வெந்நீர் அல்லது பழச்சாறு அருந்தலாம்’ என்றார்.
இதுதொடர்பாக அமெரிக்க பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை:இனிப்பு சுவை மிக்க குளிர்பானங்களில் கலக்கப்படும் பொருட்களால், பல பின்விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குளிர்பானம் அருந்துவதை தவிர்த்து, இயற்கையான பானங்களை அருந்துவது நல்லது.இதற்காக டச்சு நாட்டை சேர்ந்த, 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்திற்கு நடுவில் கர்ப்பிணிகளுக்கு செயற்கை குளிர்பானங்கள் மற்றும் இயற்கை பானங்கள் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் செயற்கை குளிர்பானங்களை அருந்திய பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. குறை பிரசவத்தால் தாய்க்கும், குழந்தைக்கும் உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.
நன்றி: தின மலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42076
excellent article
bovonto is a gud and energy drinks.why i like bovonto because its a indian and tamilnadu product.i will take a product of the company….
bovonto is a tamil nadu product.so i like very much and really tasteful…..so i will like to done my MBA main product in the company.
[…] மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி –… […]
Thanks of information!
முன் எச்சரிக்கை தந்தமைக்கு அனேக நன்றிகள்!
ணானும் இந்த மாஅஙெட்ட கோக்க குடிஷிகிட்டு இருந்தென்.