privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்மறுகாலனியாக்கம்தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!

தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!

-

வினவு குறிப்பு: சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம், நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும் இல்லை.

_________________________________________________________

அதிர்ச்சியில் உறைந்து போனோம்!

மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக துடிக்க வைத்தது.

கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே ‘ஜெயா மருத்துவமனை’ ஆம்புலன்ஸ் வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள் சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி, ”மச்சான்… ‘ஜெயா மருத்துவமனை’ வேண்டாம்டா… நேரா ராமசந்திரா கூட்டிட்டுப் போங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும் சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.

நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!

கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து இறங்கிய கரை வேட்டி மனிதர், ‘அனைத்தையும்’ தான் பார்த்துக் கொள்வதாகவும், ‘இனி எதுவுமே’ நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.

கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில் மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட சம்பவம்.

நோக்கியாவும் அதன் சகோதரத்துவ நிறுவனங்களும்!

‘நம்ம நாட்டு செல்ஃபோன்’ என்ற அடைமொழியுடன் இந்திய சந்தையில் கோலோச்சும் நோக்கியா நிறுவனத்தின் கிளை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிறது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். இந்த துணை நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், நோக்கியா தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. சந்தைக்கு வரும் நோக்கியா கைப்பேசியின் உதிரி பாகங்களை இந்த துணை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்கிட்டு தயாரிக்கின்றன.

இதில் ஃபாக்ஸ்கான் என்ற துணை நிறுவனத்தின் சைட் 3இல்தான் கடந்த வெள்ளிக்கிழமை (23.07.10) மதியம் ஒன்றரை மணிக்கு மேல் அந்தக் கொடூரம் நிகழ ஆரம்பித்தது. முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் பணிக்கு திரும்பியிருந்தார்கள். சீராக இருக்க வேண்டிய சுவாசம், எக்குத்தப்பாக மாறியது. பலருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. கண்கள் எரிந்தன. திரண்ட உமிழ்நீரில் ரத்தம். அது குளிர்பதனம் பொருத்தப்பட்ட தொழிற்சாலை. எனவே உள்ளிருக்கும் காற்று வெளியேறவும், வெளியிலிருந்து காற்று உள்ளே வரவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !

ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.

என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. ‘இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க… மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…’ என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட் லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம், மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

இப்படியாக சிகிச்சைக்கு சென்ற தொழிலாளர்கள் 127 பேர்.

இதனையடுத்து முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்து, தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். நிர்வாகமும் அதன் பின் முதல் ஷிப்டை தொடர விரும்பாததுடன், இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்தது. தொழிலாளர்கள் உடனே ஜெயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அடுத்தடுத்து சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் நுழையவிடாமல், மருத்துவமனையின் செக்யூரிட்டி அடித்து விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படி செய்யும்படி மருத்துவமனையும், தொழிற்சாலை நிர்வாகமும் செக்யூரிட்டிகளிடம் கட்டளையிட்டிருக்கிறது. இதை மீறியே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் மற்ற தொழிலாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆனால் ரத்த வாந்தி எடுத்து மயக்கமான எந்தத் தொழிலாளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவேயில்லை. முதலுதவியுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன் மருத்துவர்களிடம் நியாயம் கேட்டபோது கிடைத்த பதில்: “நிர்வாகம் முதலுதவி தர மட்டும்தான் சொல்லியிருக்கு. என்ன விஷவாயு கசிந்ததுனு சொல்லலை. அது தெரிஞ்சாதான் மாற்று மருந்து தர முடியும்”.

விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?

மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு  நிர்வாகியை தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். “நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்” என்று கதறியிருக்கிறார்கள்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: “இந்த யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு. டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க…”

இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல் நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும் சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.

ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும் தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட் 3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும், மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.

மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!

எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது… அதை சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.

இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே நிர்வாகம் குறியாக இருந்ததை – இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப் போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.

கொடூரம் நடந்த மறுநாள் – சனிக்கிழமை – இரவு வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின் பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.

சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம். இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஃபாக்ஸ்கான் தொழிலாளரின் சாலரி ஸ்லிப்.

தொழிலாளர்களை சுரண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமையகம் தைவானில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனம், தொடர்ந்து உலகம் முழுக்க செய்திகளில் அடிபட்டபடியே இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அடிப்படை சலுகைகளை கூட வழங்காமல் நிர்வாகம் கசக்கிப் பிழிகிறது என சர்வதேச மீடியாக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன. அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இந்த ஆண்டு மட்டுமே, இதுவரை உலகம் முழுக்க இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 தொழிலாளர்கள், பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறை. கடந்த மே மாதம் சீனாவில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் மாடியிலிருந்து ஒரு தொழிலாளி குதித்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து ‘சதர்ன் வீக்லி’ சீன இதழ், விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, அசெம்பிளிங், மோல்டிங், பெயிண்டிங், ஸ்டாம்பிங், எம்பிஎம் (மொபைல் ஃபோன் மெட்டல்ஸ்), ஷீட் விண்டோ, வேர் அவுஸ், குவாலிட்டி என பல பிரிவுகளாக இயங்கி வருகிறது. நோக்கியா செல்ஃபோனுக்கான போர்ட் தவிர, மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து தருவது இவர்களது பணி. தினமும் 3 ஷிப்டுகளில் உற்பத்தி நடக்கின்றன. சராசரியாக ஒரு ஷிப்டுக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் செல்ஃபோன் உதிரி பாகங்கள் அனைத்து பிரிவிலுமாக சேர்ந்து தயாராகின்றன. அதாவது ஒரு நாளைய உற்பத்தி மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்.

காஸ்ட்லியான செல்பேசிக்காக வதைபடும் தொழிலாளிகள்!

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஷிப்டுக்கு குறைந்தது ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரண்டாவது ஷிப்டில் மட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறிப்பாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறைவாக இருக்கும். ஆக சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அனைவருமே அதிகபட்சமாக முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல், பட்டம், டிப்ளமா படித்தவர்கள் வரை இங்கு தொழிலாளியாக இருக்கிறார்கள்.

அனைவரின் சம்பளமும் ஒரேயளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில், ஆரம்பம் முதல் பணிபுரியும் தொழிலாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 6 ஆயிரம் சம்பளத்தையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவே. பெரும்பாலானவர்களின் சம்பளம் 4,200 ரூபாயை தாண்டவில்லை. அத்துடன் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவேயில்லை. ஓராண்டு நிறைவடைந்த தொழிலாளிக்கு மட்டும் தீபாவளி சமயத்தில் ஒரு மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படுகிறது.

இப்படி ‘அநியாயமாக’ போனஸ் என்னும் பெயரில் பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்த நிர்வாகம் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்கிறது. அதாவது ஓராண்டு முடிந்ததுமே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. இவர்களுக்கு பதிலாக புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது. இதற்காக ஆண்டுதோறும் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் தருவதை நிர்வாகம் வழக்கமாக கொண்டிருக்கிறது.

தி.மு.க. தலைமையிலான தொழிற்சங்கம் தவிர இங்கு வேறெந்த தொழிற்சங்கமும் செயல்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். மற்ற அனைவருமே டிரெயினிஸ் – பயிற்சியாளர்கள் – என்ற பிரிவிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தொழிற்சங்கம் கட்டவும் முடியாது, சலுகை கேட்டு போராடவும் முடியாது. இந்திய சட்டத்தில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தையே அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. ஆனால், பயிற்சியாளர்களைக் கொண்டு உற்பத்தியை நடத்தக் கூடாது என்ற சட்டத்தை மட்டும் கவனமாக, பகிரங்கமாக மீறுகிறார்கள். இதற்கு அரசு உடந்தையாக இருக்கிறது.

காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு ஆகிய சிறு நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருகிறார்கள். இவர்களுக்காகவே தினமும் 45 பேருந்துகளை நிர்வாகம் இயக்குகிறது. இது தவிர சிறு சிறு கிராமங்களிலிருந்து வருபவர்களுக்காக வேன்களும் இயங்குகின்றன. இது சென்னையை சுற்றியுள்ள தொழிலாளர்களின் நிலவரம் என்றால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை செய்ய வந்திருக்கும் தொழிலாளர்களின் அவலம் இன்னும் மோசமானது. இவர்களுக்காகவே டார்மிட்ரியை(தங்கும் விடுதிகள்) நிர்வாகம் கட்டியிருக்கிறது. அறைக்கு 8 தொழிலாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம் சேர்த்து மாதந்தோறும் இவர்களது சம்பளத்திலிருந்து ரூபாய் 800 கழிக்கப்படுகிறது.

தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு எந்தளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு மோசமாக பரிமாறப்படுகிறது. கரப்பான் பூச்சி முதல் சிறு சிறு புழுக்கள் வரை அனைத்தையும் இந்த உணவில் பார்க்கலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். உணவுக்கான காண்டிராக்டை ஏற்றிருக்கும் கொடாக்ஸோ, நோக்கியா ஊழியர்களுக்கு தரமான உணவையும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு படு கேவலமான உணவையும் வழங்குவதாக குமுறலுடன் சொல்கிறார்கள். அசைவ சாப்பாடு கிடையவே கிடையாது என்பது ஒருபுறமிருக்க, சைவ சாப்பாடு அளவுடனேயே வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு கிராம் என்பதுதான் கணக்கு. அதைத்தாண்டி ஒரு பருக்கை அளவுக்குக் கூட உணவை வழங்குவதில்லை. மிக தாராள மனதுடன், ஷிப்ட் நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உண்ணும் இந்த ‘ கரப்பான் பூச்சி வாழும் கிராம்’ உணவுக்கு நிர்வாகம் எந்தவிதமான கட்டணத்தையும் அவர்களது சம்பளத்திலிருந்து வசூலிப்பதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதேபோல் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நேரத்தில் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்குக் கூட எந்த மருத்துவரையும் நிர்வாகம் நியமிக்கவில்லை. வார்டு பாய் போன்ற ஒருவரும், நர்ஸ் ஒருவரும் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு… என சகலத்துக்கும் ஒரே மாத்திரையைத்தான் இவர்கள் தருகிறார்களாம்.

நோக்கியா சுரண்டலுக்கு அடியாள் வேலை செய்யும் தி.மு.க!

இவையனைத்தையும் எதிர்த்தும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு கேட்டும் கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராடினார்கள்.  தி.மு.க.வை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன் – காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் கூட – தலைமையில் நிர்வாகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்தில் தொழிலாளர்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டதுடன், முன்னின்று போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகமும், தா.மோ.அன்பரசனும் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், இந்த வாக்குறுதி மாதங்கள் பல கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையும்  அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கட்டப்பஞ்சாயத்து ஒடுக்கியது. இந்த போராட்ட விபரங்கள் எதுவும் வெளியுலகுக்கு தெரியாது. அப்படி தெரியாதபடி நிர்வாகமும், தி.மு.க. அமைச்சரும் பார்த்துக் கொண்டார்கள்.

இந்த அடக்குமுறைக்கு பணிவதைத் தவிர இத்தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதான எண்ணத்தை நிர்வாகம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பமும் ஏற்படுத்தியிருக்கிறது. தங்கைக்கு திருமணம், தம்பியின் கல்வி, அக்கா மகளுக்கு காது குத்தல், திருமணத்துக்கான வரதட்சணை, நகை சேகரிப்பு… என ஒவ்வொரு தொழிலாளியையும் அழுத்தும் பிரச்னைகளுக்கும் குறைவில்லை.

வெளியூரில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பங்கள், நோக்கியா செல்ஃபோன் மூலமாகவே இவர்களை தொடர்பு கொள்கிறார்கள். பேசுகிறார்கள். குடும்பத்தின் சுக, துக்கங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் நோக்கியா செல்ஃபோன் வழியே யாரிடம் பேசுகிறோமோ அவரது ரத்தம்தான் அதே ஃபோனில் கலந்திருக்கிறது என்ற உண்மை மட்டும் குடும்பத்தினருக்கு தெரிவதேயில்லை.

ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.

சென்னையில் ஒரு போபால்?

இந்த பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரத்துக்கு வருவோம்.

விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது சைட் 3இல். அதாவது அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’ வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல் இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது. இப்போது விஷவாயு கசிந்து 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுவே தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதனால் இந்தப் பிரிவை மூடி வைத்தார்கள்? இடைப்பட்ட காலத்தில் என்ன பராமரிப்பு செய்தார்கள்? பராமரிப்பு சரியாக இருப்பதாக யார் சொன்னதன் பேரில் இப்போது திறந்திருக்கிறார்கள்? இங்கு என்ன விதமான ரசாயன வாயு பயன்படுத்தப்படுகிறது? அது கசிந்தால் என்ன தற்காப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூடவா நிர்வாகத்துக்கு தெரியாது?

தொடரும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பே சனிக்கிழமை இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்தி ‘ஒரு உண்மையை’ கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழை பெறவே இல்லையாம்! எனவே சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்!

அடப்பாவிகளா, 5 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சான்றிதழ் பெறாமலேயே இயங்கி வந்திருக்கிறது என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கிறார்கள்? ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள்? இதுதான் தமிழகம் ஒளிரும் பட்சணமா?

இந்த அயோக்கியத்தனம் ஒருபுறம் இருக்க, இதன் மறுபுறம் அழுகி சீழ்வடியும் இந்த அமைப்பின் வீக்கத்தில் இருக்கிறது. அதாவது விஷவாயு கசிவு என்பதையே திட்டமிட்டு மூடிமறைத்து ஏதோ சான்றிதழ் பெறவில்லை என்பதான பிம்பத்தை தோற்றுவிக்க ஃபாக்ஸ்கான் நிர்வாகமும், ஆளும் தி.மு.க. அரசும் முயல்கிறது.

உலகமயமாக்கலின் அதிகபட்ச கொடுமை இதுதான். உற்பத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உற்பத்தி கருவியை பயன்படுத்துகிறோம், எந்தவிதமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன, இந்த ரசாயனங்களை கையாள்வதால் என்னவிதமான நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம், இதில் குறுகிய காலத்தில் என்ன நோய்வரும், நீண்ட காலத்தில் என்ன பாதிப்பு வரும், இதற்கு மாற்று மருந்தாக எதை உண்ண வேண்டும்…. ஆகிய அனைத்தும் மறைக்க; மறுக்கப்படுகின்றன.

சென்னை நோக்கியா – ஃபாக்ஸ்கான் – தொழிற்சாலையில் நடந்திருக்கும் இந்த விஷவாயு கசிவு ஒரு விபத்தல்ல. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழில். இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் போபாலில் என்ன நடந்ததோ அதுவே இங்கேயும் நடக்கிறது. போபாலில் நகரத்து மக்கள் அனைவரும் வதைபட்டார்கள். இங்கே அது தொழிலாளிகளுக்கு மட்டும் நடக்கிறது.

இன்றும் ராமச்சந்திரா அவசர சிகிச்சை பிரிவில் பல தொழிலாளர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 25.7.2010 அன்று இதே மருத்துவமனைக்கு மூப்பனாரின் தம்பியைப் பார்க்க வந்த கருணாநிதி இந்த தொழிலாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா முறைகேடுகளோடும் இயங்குவதற்கான அனுமதியை தி.மு.கதான் வழங்கியிருக்கிறது. இதற்கான ஆதாயத்தை வட்டம் முதல் அமைச்சர் வரை பெறுகிறார்கள். அவர்கள் பெறும் ஆதாயம் என்பது கோடிகளில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த விபத்தை மறைப்பதற்கு நிர்வாகத்தோடு தி.மு.க உள்ளூர் தலைவர்களும் மும்மூரமாக ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தோம். ஆம்புலன்சுகளோடு தி.மு.க கொடி ஏந்திய வண்டிகளும் அன்று பூந்தமல்லி சாலையை நிறைத்திருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்திருந்த தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதில் தி.மு.க தலைவர்கள் முன்னணி வகித்தனர்.

நோக்கியாவின் காலன் ட்யூன்!

நோக்கியா ஃபோனை பயன்படுத்தாதவர் யாருமில்லை. நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை அனைத்தும் இந்த சிறிய கருவியை வைத்தே இயங்குகின்றன. புகழ்பெற்ற நோக்கியா காலர் ட்யூனை மனப்பாடம் செய்யாதவர் யாருமில்லை. ஆனால் இந்த இனிமையான எலக்ட்ரானிக் பொருளின் பின்னேதான் இத்தகைய சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது. சில ஆயிரங்களுக்காக தமது உயிரையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.

கேமரா உள்ள ஒரு செல்பேசியின் விலை கூட இங்கு தொழிலாளிக்கு சம்பளமாகத் தரப்படவில்லை. இப்படியான கடும் சுரண்டலின்றி பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரமான இலாபம் என்பது சாத்தியமில்லை. இவர்களை இந்தியாவை விட்டு விரட்டாதவரை நமக்கும் விடுதலை இல்லை. அது வரை இந்த தொழிலாளிகள் மெல்ல மெல்ல இறந்து கொண்டுதான் நமக்கான செல்பேசிகளை தயாரிக்க வேண்டும்.

நினைவுகள் அழுத்த செல்பேசியை பார்த்தபடியே ராமச்சந்திரா மருத்துவமனையை விட்டு அகன்றோம். அப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் இறைந்தபடியே ஒரு பெண்தொழிலாளியோடு வந்திறங்கியது. அந்த ஆம்புலன்சின் சத்தம் ஒரு சுடுகாட்டின் ஒலிபோல இன்னமும் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. இனி செல்பேசியின் காலர் ட்யூனைக்கேட்கும் போது அது காலன் ட்யூனாகத்தான் உணருவோம்.

காலனை தொழிலாளிகள் எதிர்கொண்டு வதம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறோம்.

________________________________________________________________________

கட்டுரை, புகைப்படங்கள், கள ஆய்வு – வினவின் செய்தியாளர்கள் குழு, சென்னை.

________________________________________________________________________

 

  1. தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!…

    இன்று நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை எனஅனைத்தையும் இயக்கும் இந்த நோக்கியா செல்போன்களின் பின்னேதான் சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது!…

    • PLEASE DONT BELEIEVE THIS

      THIS IS NONSENSE

      THERE IS NO CHANCE OF POISONUS GAS

      ASK SOME U KNOW WHO WORKING THERE

      IAM SURE U WILL FIND 1 ,IF U R IN CHENNAI

  2. இந்தச் செய்தியை தொலைக்காட்சிகளில் காட்டும் போது நிறுவனத்தின் பெயரை திட்டமிட்டு மறைத்த்து போன்று உணர்ந்தேன். இப்போதுதான் தெரிகிறது நோக்கியாவின் மகிமை என்று.

    நோக்கியா அங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களைச் சுரண்டுகிறது என்பதை விரிவாக அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகத்தில் ஒரு கட்டுரை வந்தது. சுட்டி எடுத்துத் தருகிறேன்.

    • டைடல் பார்க், அக்செண்டாஸ் போன்ற ஐடி பார்க்குகளில் இது போல நடக்காதா?

      இது போல அங்கும் நடந்தாலும் இந்த தொழிலாளர்களுக்கு வந்த உணர்ச்சி ஐடி அடிமைகளுக்கு வருமா?

      உலகமயமாக்கல், தமிழகத்தின் எல்லா இடங்களிலும், நிரந்தர தொழிலாளர்களை விஆர்எஸ்சில் அனுப்பி விட்டு, ஒப்பந்த தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் வைத்து உற்பத்தியில் ஈடுபட்டு, உழைப்பை சுரண்டலை கொண்டுவந்திருக்கிறது.

      தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்ட முதலாளிகள் கூட இன்று பன்னாட்டு கம்பெனிகளுடன் கூட்டணி வைத்து, தரகு அவதாரம் எடுத்திருக்கிறார்கள்!

      இன்னொரு போபால் நடப்பதற்க்கு வெகு முன்னரே, இது போன்ற நிறுவனங்களை விரட்டி அடிக்கவேண்டும்!

  3. வினவு தோழர்களின் அடுத்த கட்ட பயணமாக இந்த இடுகையை குறிப்பிடலாம்.

    இடுகையை வாசிக்க வாசிக்க கோபம் கொப்பளிக்கிறது.

    சனிக்கிழமை வந்த தமிழ் செய்தித் தாள்களில் பெரும்பாலானவை, ‘ஆடி வெள்ளியன்று விரதம் இருந்த பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்’, ‘ஏசியில் ஏதோ கசிவு’, ‘பூச்சி மருந்து காரணம்’ என்பதாகவே செய்திகளை வெளியிட்டன.

    இந்நிலையில் வினவு செய்தியாளர்களின் இந்த கள ஆய்வு உண்மையின் கோர முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

    அமைச்சர் துரைமுருகன், ‘காய்ச்சல்’ காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரையும் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதி சென்று பார்த்து நலம் விசாரித்திருக்கிறார்.

    ஆனால், அதே மருத்துவமனையில் என்ன காரணம் என்று தெரியாமலேயே தொழிற்சாலையில் பணிபுரியும்போது ரத்த வாந்தி எடுத்து மயக்கமான தொழிலாளர்களை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

    அதுசரி, திமுக ஆட்சியில்தானே நோக்கியா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது? தேர்தல் நிதிக்கு படியளக்கப் போவது நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்தானே?

  4. நான்கு வருடம் வேலை பார்த்தும் சம்பளம் 3270 ரூபாய். ஒரு நாளைக்கு 109 ரூபாய். என்னக் கொடுமை இது. இந்த பணத்தை வைத்து என்னவிதமான அடிப்படை வசதியைப் பெற முடியும்? வறுமை குறைந்துவிட்டது பற்றி பீற்றிய அற்ப ஜீவன்கள் மேலே உள்ளதற்கு பதில் சொல்வார்களா?

    உணவுக்காக மாதம் 208 ரூபாய். அடத் தூ…… ஊட்டச்சத்துக் குறைபாடு இங்கேதான் ஆரம்பிக்கிறது.

    ஒரு லிட்டர் பெட்ரோல் என்ன விலை விற்கிறது? அரிசி, பருப்பு, சமையல் எண்ணைய் விலை என்ன? கேஸ் சிலிண்டர் விலை என்ன? மருந்துச் செலவு, நல்ல தரமான நாப்கின் விலை என்ன? இவையனைத்தும் 3000 சொச்சம் ரூபாயில்…… அதுவும் உயிரை பணயம் வைத்து… அடப் போங்கடா நீங்களும் உங்க நாடு முன்னேறுது பிதற்றலும்.. அருவெறுப்பிலும் வக்கிரத்திலும் இதைவிட உச்சக்கட்டம் வேறெதுவும் இருந்துவிட முடியாது….

  5. கொடுமை………

    உண்மை செய்தியை வெளிக்கொண்டு வந்த வினவு தோழர்களுக்கு நன்றிகள்

  6. கண்களைத் திறந்த அறிக்கை.

    பயன்படுத்தி வந்த செல்பேசி கருவி பழுதடைந்ததால், புதிய கருவி போன வாரம் வாங்கினேன். நோக்கியாதான், 1100 ரூபாய்க்குக் கிடைத்தது.

    அந்தக் கருவியும், அதன் குறைந்த விலையும் இது போன்று சுரண்டப்படும் தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்தது என்று தெரிகிறது.

    சம்பள அறிக்கையின் படத்தைப் பார்த்ததும் மனதை ஏதோ செய்தது. மாதச் சம்பளமாக மூவாயிரத்துச் சொச்சம் வாங்கி உழைத்து தமது வாழ்க்கையைக் கரைக்கும் தொழிலாளர்களின் (21ம் நூற்றாண்டு கொத்தடிமைகளின்) நிலைமை கண்டு உறைந்து நிற்கிறேன்.

    வீட்டுக்கு அருகிலிருந்தே கொத்திக் கொண்டு போக போக்கு வரத்து வசதி, தூரத்தில் வசிப்பவர்களுக்கு அறைக்கு 8 பேர் ஒரு அறையில் என்று தங்கும் வசதி – தென் சீனாவின் காலணி நிறுவனங்களில் பார்த்த கொடூரங்களுக்கு இணையான நிலைமை நம் ஊரிலும் நடக்கிறது என்பது தெரிந்து என்ன செய்வது என்று புரியாத சோர்வு அழுத்துகிறது.

    மன்மோகன் சிங், ப சிதம்பரத்த்தின் பொருளாதாரக் கொள்கைகளை தலையில் தூக்கி வைத்து ஆடிய வர்க்கத்தின் பகுதியாக இருந்திருக்கிறேன். குடுவையிலிருந்து வெளி வந்து விட்ட பூதம் இன்னும் என்னென்ன கொடுமைகளை இழைக்கப் போகிறதோ!

    வினவு செய்தியாளர் குழுவின் பணி மகத்தானது.

    மா சிவகுமார்

  7. அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறேன்!

    வெளியிலிருந்து பார்க்க அழகாயிருக்கும் அந்தக் கட்டிடங்கள் நமது மக்களின் உயிருக்கு சமாதியை அல்லவா எழுப்பிக்கொண்டிருக்கின்றன! நேற்றைய தினமணியில் தொழிற்சாலையின் பெயர் குறிப்பிடப்படாமல் செய்தி மட்டும் வெளியாகி இருந்தது – ஆனால், இவ்வளவு விரிவாக,நுணுக்கமாக இல்லை! எனது கையிலிருக்கும் நோக்கியா ஃபோனை வெறுப்புடன் வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

  8. இந்தியாவுல வறுமையில்ல, நாடு முன்னேறிருச்சுன்னு நோவாம புளுகுறவங்களைப் பாத்தா செருப்பால அடிக்கணும்னு தோணுது. உண்மையில் இந்த ரிப்போர்ட் ஆத்திரத்தையும், கோபத்தையும் தருது.

    மக்கள் ஊடகமாக இணையத்தை மாற்றும் வினவுத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! எனக்கும் வினவுல செய்தியாளரா பங்காற்றணும், பயிற்சி பெறணும்னு ஆசையை தூண்டுது இந்த அறிக்கை.

  9. […] This post was mentioned on Twitter by வினவு and Karunanidhi, GopiKrishnAn. GopiKrishnAn said: RT @vinavu: தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !! https://www.vinavu.com/2010/07/26/nokia/ RT Pls. […]

  10. தேதி பற்றிய பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி schoolboy. திருத்தப்பட்டது.

  11. போட்ட முதலீடு அனைத்தையும்(100%) வரிச்சலுகையாக தமிழக அரசிடமிருந்து திரும்ப பெற்றுவிட்ட நோக்கிய நிறுவனம், தனது தொழிலாளர்களையும் சுரண்டுகிறது.

    http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6585%3A2009-12-28-00-14-54&catid=278%3A2009&Itemid=1

    சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!

  12. தோழர்களே வணக்கம். மிகச்சிறப்பான ஒரு மக்கள் பணியை துணிச்சலோடு செய்து முடித்திருக்கிறீர்கள். உங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். கொள்ளை லாப வெறிக்காக இன்னனும் எத்தை பேரை இவர்கள் இப்படிக் கொல்லப் போகிறார்களோ தெரியவில்லை. சமீபகாலமாக திமுக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துகிறது. அதாவது குறைந்த கூலிக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு நவீன கொத்தடிமைகளை கூட்டம் கூடமாக சேர்த்து விடும் பொறுப்பை கனிமொழி செய்கிறார். வெளியில் மக்களிடம் வேலை வாய்ப்பை வழங்குகிறோம் என்ற நல்ல பெயரை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் இப்படி இரண்டாயிரத்திற்கும், மூவாயிரத்திற்குமா தோழர்களே இந்தத் தொழிலாளர்கள் சாகிறார்கள்…. இன்று கூட இந்த நிறுவனத்தில் விஷவாஉவுக் கசிந்திருக்கிறது. ஆனால் அந்த விஷ வாயுவின் பெயரையோ, நிறுவனட்தின் பெயரையோ இபோது வரை எந்த ஊடகங்காளும் வெளியிட மறுக்கின்றன. பல்லாயிரம் மக்கள் செத்த பின்பு கலைஞர் உயிர்க்காக்கும் திட்டத்தில் கண்ணோ, கிட்னியோ கொடுத்து அதை போட்டோ பிடித்து போடுவார்கள் இவர்கள்……..

    தோழர்களே இக்கட்டுரையை பிரிண்ட் எடுத்து அந்தத் தொழிலாளர்கள் வேலை செய்யும் கிராமங்களில், ஆலைப் பகுதியில் விநியோகிக்க வேண்டும்.

  13. இதை கவனிக்காமல் சாதாரணமாகக் கடந்து செல்லும் வெகுஜன ஊடகங்கள் இருந்தென்ன பயன்? வினவுத் தோழர்களின் இந்தக் கட்டுரை தெரியாத பல விவரங்களைத் தெரியப்படுத்தியது. வாழ்த்துகள்.

  14. அதிர்ச்சி, ஏற்கனவே கைப்பேசி பயன்படுத்துவதால் கதிர்வீச்சு என ஏகப்பட்ட
    பிரச்சனைகள், இப்போது தயார் செய்யும் இடமே ஆபத்து எனும்போது, அதிர்ச்சி நீங்கவில்லை.

  15. மிகவும் அதிர்ச்சியாகவும், மன வேதனையாகவும் உள்ளது…. வருமையின் விழிம்பில், வாழ்வதற்க்காகவும் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தங்களை வருத்தி இது மாதிரி கேவளமான சுரண்டல் நிறுவனத்திடம் சிக்கிக்கொண்டு வேலையில் ஈடுபடுவதே கொடுமையில் கொடுமை… அதிலும் இத்துயரச் சம்பவத்தைக் கேள்விப் படும் பொழுது இரத்தம் கொதிக்கிறது, கண்கள் கலங்குகிறது… என்று விடியும் இதெல்லாம்….

  16. வெகு ஜன ஊடகங்கள் செய்யத்தவறியதை வினவு செய்திருக்கிறது. படிக்க படிக்க அதிர்ச்சியும், கோபமும் ஒரு சேர எழுகின்றது.

  17. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் . நேற்று போபால் இன்று நாளை . தினத்தந்தியிலும் தினகரனிலும் வேறு மாதிரி
    செய்தி போட்டார்கள் . இந்த நோக்கியா சம்பவத்தையே இப்படி திரித்து கூறி உள்ளார்கள் , போபால் விடயங்களில்
    நமக்கு கிடைத்த செய்தி பாதியாக தான் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை .

  18. மிகவும் அதிர்ச்சியாக பதிவாக இருக்கின்றது. ஆனால் இதைப் பற்றி சென்னையிலேயே வாழ்கின்ற நமக்கு தெரியவில்லை. இந்த லட்சணத்தில், நடுநிலையான நாளிதழ், தொலைக்காட்சி என்பதைப் பார்க்கும் போது வயிறு எரிகின்றது.

    இவர்கள் மட்டுமல்ல – பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் சேவைத் தொழிலாளர்கள் – பாதுகாப்பு, ஹவுஸ் கீப்பிங்க், சாப்பாட்டறை சிப்பந்திகள் முதலானோர் இது போன்று குறைவான சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். சென்ற முறை ரிசஸன் வந்த போது, இவர்களின் சம்பளத்தை ஒப்பந்த நிறுவனங்கள் குறைத்தன. இருந்தால் வேலைக்கு இரு. இல்லாவிட்டால் கிளம்பு என்பதுதான் இவர்களுக்கு நிர்வாகத்தால் தரப்படும் பதி.

    – ஆதவன்

  19. உண்மைகளை வெளிக் கொண்டு வந்த வினவுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    இதற்கெல்லாம் ஒரே காரணம் நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்கள்தான்.

    தமிழகம் ஜொலிக்கின்றது, முன்னேறுகின்றது, என்று கூவுபவர்கள் எல்லாம் இது போன்ற கொடுமைகளைக் கண்டாவது திருந்த வேண்டும் .

    நோக்கியாவின் கொடுமை ஏஷியா நாடுகள் முழுவதும் தொடர்கின்றது.

    குறிப்பாக சீனாவில் இரண்டாயிரம் ரூபாய் இந்திய மதிப்பில் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றார்கள். பல தற்கொலைகளும் நடந்துள்ளன.

    இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். விழிப்புணர்வு வேண்டும்.

    மடத்தமிழா, விரைவில் தேர்தல் வருகின்றது. இந்த முறையாவது காசு கொடுப்பவனை செருப்பால் அடித்து துரத்தி வீடு. இனியாவது நாம் திருந்துவோமா??

  20. Your comment is awaiting moderation. இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா? ஏனென்றால் முந்தய பதிவுக்ளில் எனக்கு இது போல் ஆனதில்லை. i want to directly post my views without any moderation……

    • schoolboy, தொடர்ச்சியாக ஆபாச விளம்பர பின்னூட்டங்கள் வந்த வண்ணம் இருப்பதால் சில ip குடும்பங்களிலிருந்து வரும் பின்னூட்டங்களுக்கு மட்டறுத்தல் செயல்பாட்டில் உள்ளது.

  21. இது போன்ற உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வினவின் தீரத்திற்கு முதலில் என் வணக்கங்கள்.

    ஊடகங்களில் இந்த செய்திக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்கப்படவில்லை.
    குறிப்பாக நிறுவனத்தின் பெயர் தந்திரமாக மறைக்கப்பட்டு விட்டது.

    தற்போது ஊடகங்கள் பணத்தாசையால் விலை போய் விட்டன, பலமிழந்து விட்டன.

    உண்மையை வெளியிட்டால் அரசு விளம்பரங்களின் வருமானம் நின்று போய் விடுமல்லவா??

    இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் கட்சி, மத, ஜாதி அமைப்புகள் சார்ந்து செயல்படுகின்றன.

    தமிழனுக்கும், தமிழ் நாட்டிற்கும் மிகப் பெரிய பெருமை ஒன்று ஊடகத்துறையில் இருக்கின்றது. உலகிலேயே அதிகமாக அரசியல் கட்சிகள்/அமைப்புகள்/ஜாதி சங்கங்கள் ஆளுக்கொரு சேனல் வைத்திருப்பது இங்கு தான்.

    இந்தக் குப்பை ஊடகங்களைப் பார்ப்பதையும் வாங்குவதையும் முதலில் நிறுத்த வேண்டும்.

    இணைய ஊடகம் பலம் பெற வேண்டும்.

    இது பற்றிய என் பதிவு
    http://naanummanithan.blogspot.com/2010/07/blog-post_24.html

  22. நடந்தது ஒரு விபத்து. இன்னும் முழு விபரம் வெளியாகவில்லை. அதற்க்குள் போபால் ரேஞ்சுக்கு ஒரு பில்டப் ! நிர்வாகம் உரிய முறையில் உடனடியாக உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு சரி. அதற்காக கண்டனம் செய்வது சரி.

    சம்பளம் மிக குறைவுதான். அதனால் தான் செல் போன்கள் இத்தனை மலிவாக கிடைக்கின்றன. சிறு நிறுவனங்களில் இதைவிட குறைந்த சம்பளம். கொடுமையான வேலை சூழல்கள். கோடிக்கணக்கான மக்கள் இதை விட குறைந்த சம்பளங்களில், நிலையற்ற வேலை பார்க்கும் இந்திய சூழலில், இவ்வளவு தான் இன்று கிடைக்கும்.

    விலைவாசி உயர்வை தடுத்தாலே பெரிய உதவி. இந்த 4000 ரூபாய் வருடம் செல்லச்செல்ல, விலைவாசி உயர்வினால், இன்னும் மதிப்பு குறையும். அதற்க்கு காரணிகள் பல. அரசின் வெட்டி சொலவுகள், ஊழல்கள்…

    இந்த வேலைவாய்புகள் கூட முன்பு இல்லை. அல்லது இவை கூடாது என்றால் மாற்று வேலை வாய்புகளை யார், எப்படி உருவாக்குவது ?

    கம்யூனிஸ்ட் தொழிற்சங்களை அனுமதித்தால், சில ஆண்டுகளில் நிறுவனம் பூட்டப்படும் சாத்தியம் அதிகம் என்பதால் தான் அனுமதிக்க மறுக்கின்றனர். ஆனால் முன்னேறிய நாடுகளில் இப்படி தடுக்க முடியாது. அங்கு சராசரி நேர்மை மற்றும் வேலையில் நேர்மை அதிகம். அராஜகம் மற்றும் ஊழல் (தொழிற்சங்க) தலைவர்கள் மிக குறைவு.

    நண்பர் மா.சி,

    ’பொருள் செய்ய விரும்பு’ என்ற தலைப்பில் விரிவாக பல விசியங்களை எழுதியவருக்கு, இன்னும் பொருளாதார அடிப்படைகள் பற்றி பிடிபடவில்லையே ?

    தாரளமயமாக்கல் தவறு என்றால் அதற்க்கு மாற்று என்ன ? 1991க்கு முன் இருந்த நிலையே தொடர்ந்திருதால், நிலைமை இன்று மேம்பட்டிருக்குமா ? அல்லது இந்த வேலைகள் கூட உருவாகியிருக்குமா ?

    நோக்கிய செல் வாங்கியது பற்றி குற்ற உணர்வு தேவையில்லை. தோல் பதனிடும் தொழிலில், ராணிபேட்டை பகுதிகளில் தொழிலாளர்களின் நிலையோடு ஒப்பீட்டு பாருங்கள். (உங்களுக்கு தெரிந்திருக்கும்). அவர்களின் சம்பளம், வேலை பார்க்கும் சூழழ். நோக்கியா வேலை அதைவிட பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    • உலகத்தில் எந்தக் கொடுமய வேணுமுன்னாலும் தாங்கிக்கிறலாம் போல. ஆனா அண்ணன் அதியமான் கொசுக்கடி மட்டும் தாங்க முடியல ராசா??

    • அதியமான் நீங்க இந்த மாதிரி பேசுவதற்கென்றே உங்க மூளையில் மெமரி கார்டை ஏற்றி அனுபியிருக்கங்களா? என்ன நண்பா பேசுறீங்க. விபத்து நடந்திருக்கு… அந்த விபத்துக்கு முன் மாதிரியா போபால் இருக்கு( என்ன முன் மாதிரி என்று கேட்காதீங்க ஒழுங்கா பு.ஜா போபால் சிறப்பிதழ் வாங்கி படிங்க) இருநூறு முன்னூறு பாதிக்கப்பட்டிருக்காங்க என்று கேள்விப்பட்டு ஒரு உண்மையை அம்பலப்படுத்தினா? முழு விபரமும் இன்னமும் வெளியாகவில்லை என்கிறீர்களே? இது அடி முட்டாள் தனமா இல்லை? ஆமா இவரு முழு உண்மையும் வெளிவரும்ணு மவுண்ரோட்ல காத்திக்கிட்டுருக்காரு போர வழியில ஸ்டாலின் காரிலிருந்து இறங்கி முழு விபரத்தையும் கொடுதுட்டுப் போவாரு அப்புறம் நீங்க அதை அப்படியே வாந்தி எடுத்து உண்மைணு எழுதுங்க……. அப்புறம் நமக்கு மொபைல் மலிவா கிடைக்கிறது இன்னொருத்தன் குறைஞ்ச கூலிக்கு சாகணுமா? அப்போ ஒரு பத்தாயிரம் கொத்தடிமைகளைக் கொடுத்தா நோக்கியா போன் என்னய்யா ஓசியிலயா? கிடைக்கும். ஏன் நண்பரே இப்படி காமெடி பண்றீர்………உங்க கருத்து எப்படித் தெரியுமா இருக்கு அந்த மாதிரி சாகுறதுக்கு ஆள் இருந்தாதான் நாம் போன் பேச முடியும்……என்கிறீர்……….. அப்புறம் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தை அனுமதிச்சா தொழிற்சாலையை மூடிடுவாங்களா? மூடினா யாருக்கு பாதிப்பு.போன் பேசுறவனுக்கா? வேலை பாக்குற தொழிலாளிக்கா? ஏன்யா இப்படி ஒரு தொழிற்சாலை இருக்குறதை விட இழுத்து மூட வேண்டியதுதான்…….. சும்மா வேலை வாய்ப்பு….. போன் என்றெல்லாம் பேசி மிரட்டாதீங்க………வறுமையை வறுமைக்கு எதிரான ஆயுதமாக்காதீங்க. அதியமான்…….

      • //முழு விபரமும் இன்னமும் வெளியாகவில்லை என்கிறீர்களே? இது அடி முட்டாள் தனமா இல்லை?///

        Arul, i meant about the exact reasons for the accident or gas leak. Is the version of Foxconn correct ? not yet confirmed. it will take some weeks or months for the full truth to emerge. so don’t spill harsh words fast. and using the work Bhopal and Nokia is trying to give a false picture. Are they comparable here ? and nokia is no way connected here.

        I can than ask you to compare this with Cherobyl nuclear disaster in USSR ? any takers for that here ?

        • I can than ask you to compare this with Cherobyl nuclear disaster in USSR ? any takers for that here ?////////////////

          அடுத்து அப்படியே செவ்வாய் கிரகம், மில்கி வே தான்… எல்லா பதிவுலேயும் இதே மொக்கையா அவ்வ்வ்வ்வ்…….. No Takers. Athiyaman wins Pants Down…… oops! Hands Down 🙂

        • ///சம்பளம் மிக குறைவுதான். அதனால் தான் செல் போன்கள் இத்தனை மலிவாக கிடைக்கின்றன.///
          ///I can than ask you to compare this with Cherobyl//

          நம்ம ஆளு இப்படி ஏதாவது சொல்லவில்லை என்றால் தான் நான் ஆச்சர்யப்பட்டு இருப்பேன்! நல்ல வேளை எங்கள் வயித்துல பசியை வார்த்தீர்கள்!

          அப்புறம், இதே ஃபாக்ஸ்கான் நிறுவனம் சீனாவிலும் இருக்கிறது அப்படி இப்படின்னு ஆரம்பிக்களையே? ஏன்?
          வினவு உங்களுக்கு முந்தி அதை சொல்லி அம்பலப்படுத்தி விட்டார்களா?

          நீங்கள் திரும்ப திரும்ப ஒன்றையே சொல்வது போல, நானும்!

          உங்களது இந்த பொன்னான கருத்தை, பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளர்கள் மத்தியிலும் விரைவில் பிரச்சாரம் செய்து அவர்களை, கம்யூனிசத்திடமிருந்து எப்போது மீட்டெடுக்க போகிறீர்கள்???

          வெறுமனே பொட்டியில் கருத்து சொல்வது, யாரும் தட்டி கேட்க்க மாட்டார்கள் என்பதால் தானே?

          இப்போதிருக்கும் அமைப்பு சரியில்லை, இதை மாற்றவேண்டும் என்றால், 91க்கு முன்னால் இதைவிட மோசமாக இருந்தது என்ற பிரச்சாரத்தை வெளியே வந்து பகிரங்கமாக, மக்களிடம், தொழிலாளர்களிடம் செய்ய வேண்டியது தானே?? Safeஆக Middle Class பிரச்சாரம் மட்டும் தான் செய்வீரோ?

          உங்களுக்கு அறிவு நாணயம் இருந்தால், உங்கள் கருத்தோடு மக்களை சந்தியுங்கள், நாங்களும் அதை காண ஆவலோடிருக்கிறோம்!

      • //அப்புறம் நமக்கு மொபைல் மலிவா கிடைக்கிறது இன்னொருத்தன் குறைஞ்ச கூலிக்கு சாகணுமா? ///

        i didn’t say that Arul. Do you know about the wages and working conditions of glass workers in Agra ? about millions of workers in unroganised sector in textiles, minining, etc ? compare them with Nokia working conditions, wages, etc.

        suppose if all the MNCS in Sriperumbudur are thrown out ? will it improve the workers conditions and chances ? or suppose if they are all nationalised and taken over by the govt ? would the company and workers be better off ? you are only emotional and do not under reality.

      • // ஏன்யா இப்படி ஒரு தொழிற்சாலை இருக்குறதை விட இழுத்து மூட வேண்டியதுதான்…….. சும்மா வேலை வாய்ப்பு….. போன் என்றெல்லாம் பேசி மிரட்டாதீங்க//

        Arul, that is what the communist union will try to acheive in the long run. (and people like you too will ‘help’ them in that). Try to talk to old hands from Ambattur Indl Estate who worked in the 60s and 70s. and try to visit Calcutta and learn about its industrial history.

        or try these words with the workers in S.Perumbudur first. you are incapable of providing any alternative, but ready to destroy anything you deem anti-poor.

    • முன்பு ஒருமுறை முதலாளிகளின் அநியாய இலாபத்தை பற்றிக் குறிப்பிடும்போது அதை முதலாளிகளின் நிர்வாகத்திறமைக்கானதாக சிலாகித்து நியாயப்படுத்தினார் அதியமான். ஆனால் இங்கு மலிவு விலைக்காக தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தை நியாயப்படுத்துகிறார். அடேங்கப்பா அதியமானின் பெருந்தன்மையும் ம்னிதாபிமானமும் புல்லரிக்கவைக்கிறது

    • மிஸ்டர் கே.ஆர் அதியமான் என்பது, முதலாளிகளின் – பன்னாட்டு நிறுவனங்களின் எச்சமாக – கழிவாகக் கருதுகிறேன். கழிவைப் பார்க்கும்போது மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து செல்லுங்கள், அல்லது அகற்றி வீசுங்கள். அதை ஒரு ‍பொருட்டாகக் கருதி, பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

    • mr.athiyaman sir, ungalukku mathan ondrukku rs.4000. mattum tharugirom thaniyaga valkkai nadatha mudiyuma. innum solvathendral velai illai eandtru neengal saga thayara…

    • MR.ATHIYAMAN AVARGALUKKU ,MIGA PANIVANA VENDUKOL.RS.4OOO SALARY IRU VELAI UANAVU,THANNEER,TEA ETC. CHENNAI MOUNT ROAD ,,SIMPSON OR LIC IL DAILY 8 HRS NIRKA MUDIYUMA.THUNAIYAGA YARAYUM ALAIKKAVUM.
      manam vala ninaikka thoonduma illai kudumbathukkaga ..pidikka villai yendral koovathil vilunthu govt pothu nivarana thogai peara viruppama..

      • there are millions of poor who work for even less wages. We miss them easily. look at the workers in small eateries, bakeries, etc. compared to them Nokia workers are better off. what plan do you have for their betterment ?

  23. நண்பர் அதியமான்,

    நிகழ்வின் காரணம் என்ன என்று தெரிவது ஒரு புறம் இருக்கட்டும். இப்படி அடாவடி கூலிக்கு மக்களை உறிஞ்சும் நோக்கியா / ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுங்களேன்.

    1990ல் 1,000 ரூபாய் வருமானத்தில் வாழ்ந்தவர் இன்றைக்கு அதே நிலையில் வாழ 10,000 ரூபாய் தேவைப்படலாம்.

    1. அரிசி விலை கிலோவுக்கு 40 ரூபாய். எந்த ஒரு காய்கறிக்கும் கால் கிலோ 10 ரூபாய்க்குக் குறையாமல் விலை. பருப்புகள் கிலோ 100 ரூபாயை தொட்டு விடும் விலை.

    1990ல் இந்த அடிப்படை தேவைகளின் விலை என்னவாக இருந்தது?

    2. இன்றைக்கு நோக்கியா, ஃபாக்ஸ்கானில் வேலை செய்யும் எளியவர்கள், 1990ல் தமது கிராமங்களில் விவசாய, பண்ணை வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் கையில் கிடைத்த பணம் குறைவாக இருந்தாலும், நிறைவான வாழ்க்கை இருந்திருக்கும்.

    3. இப்படி உடை உடுத்து தொழிற்சாலைக்கு வேலைக்கு போகிறவர்களுக்கு இன்னும் கூடுதல் அழுத்தங்கள்.

    செல்பேசி கையில் வைத்திருக்க வேண்டும் – அதில் புகைப்படக் கருவி, பாட்டு பாடும் கருவி இருக்க வேண்டும் என்ற அழுத்தம். – 1990க்கு முந்தைய வாழ்கையில் இது இல்லாமலேயே மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்.

    தொழிற்சாலைக்கு பயணம் செய்ய போக்கு வரத்து வசதி வேண்டும். – 1990க்கு முந்தைய வாழ்க்கையில் இது தேவையில்லை.

    சாப்பிடுவதற்கு தொழிற்சாலையில் குத்தகை எடுத்த வியாபாரியின் தயவில் வாழ வேண்டும். – 1990க்கு முந்தைய வாழ்க்கையில் வீட்டிலேயே, இயற்கை வழி (organic) உணவு சாப்பிட்டு நல் ஆரோக்கியத்தோடு இருந்திருப்பார்கள்.

    உலக மயமாக்கி, பன்னாட்டு முதலாளிகள் மேலும் மேலும் உறிஞ்ச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து எந்த வகையில் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றி விட்டோம்?

    தோல் தொழில்கள் பற்றி தனியாக அடுத்த பின்னூட்டத்தில்.

    • //1. அரிசி விலை கிலோவுக்கு 40 ரூபாய். எந்த ஒரு காய்கறிக்கும் கால் கிலோ 10 ரூபாய்க்குக் குறையாமல் விலை. பருப்புகள் கிலோ 100 ரூபாயை தொட்டு விடும் விலை.

      1990ல் இந்த அடிப்படை தேவைகளின் விலை என்னவாக இருந்தது?
      ///

      this must be compared with average wage rates then. and net employment oppurtunities then.

      • அதைத்தான் நானும் சொல்கிறேன் அதியமான். ‘1990களுக்குப் பிறகு வேலை வாய்ப்புகளும், சம்பளங்களும் அதிகமாகி விட்டன’ என்று நீங்கள் சொல்வதற்காகத்தான் இன்றைக்கு உயர்ந்து விட்ட வாழ்க்கைத் தேவைகளைச் சுட்டிக் காட்டினேன்.

        //தோல் பதனிடும் தொழிலில், ராணிபேட்டை பகுதிகளில் தொழிலாளர்களின் நிலையோடு ஒப்பீட்டு பாருங்கள். (உங்களுக்கு தெரிந்திருக்கும்). அவர்களின் சம்பளம், வேலை பார்க்கும் சூழழ். நோக்கியா வேலை அதைவிட பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.//

        உண்மை அதியமான்.

        ஐரோப்பிய சீமாட்டிகளுக்கு ஆயிரக் கணக்கான டாலர்கள் வரையிலான விலையில் விற்கப்படும் தோல் பொருட்களை, 10+ டாலர் விலையில் இந்திய முதலாளிகளிடமிருந்து வாங்கிக் கொள்கிறார்கள் அந்த ஊர் நிறுவனங்கள். பெரும் பகுதி பணம் அந்த ஊர் பெருநிறுவனங்கள் பைக்குப் போகிறது.

        இந்திய முதலாளிகள், கிடைக்கும் விலையில், தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்த சம்பளம் கொடுத்து தமது ஆதாயத்தை பெருக்கிக் கொள்கிறார்கள்.

        அழுக்குத் தண்ணீரை தூய்மைப் படுத்த காசு இல்லை என்று புலம்புபவர்கள், தொழிலாளிக்கு சம்பள உயர்வு கொடுத்தால் தொழில் நொடித்துப் போய் விடும் என்று பாடுபவர்களின் தனி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் ஆடம்பரம் பெருக்கோடும்.

        சில குழுமங்கள், தம்மிடம் குவியும் பணத்திலிருந்து அவர்கள் இருக்கும் கிராமப் பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் அமைக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு நல்ல வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் இன்னும் பலர் தாம் கொழுப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

        இந்திய முதலாளித்துவ சுரண்டலை விட ஐரோப்பிய முதாளித்துவ சுரண்டல் தேவையில்லை என்று நாம் சமாதானப்பட்டுக் கொள்ளத் தேவையில்லை. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்பது எனது கருத்து.

        மா சிவகுமார்

        • //இந்திய முதலாளித்துவ சுரண்டலை விட ஐரோப்பிய முதாளித்துவ சுரண்டல் தேவையில்லை என்று நாம் சமாதானப்பட்டுக் கொள்ளத் தேவையில்லை. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்பது எனது கருத்து.
          ///

          good. then what alternative do you propose ? communism ? or state socialism ? or get back to feudalism ?

        • //good. then what alternative do you propose ? communism ? or state socialism ? or get back to feudalism ?//

          தேசிய முதலாளித்துவம்…. இதைத்தான் இந்தியாவுக்கான தீர்வு என்கிறோம்.

  24. //அதாவது அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’ வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல் இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது///

    they were closed because of drop in order volumes due to the recession. now, the demand is picking up, and hence they were re-opened. that is all.

    Foxconn’s practises in China was intolerable and hence many suicides in the recent past. But recently they increased the average salary for them in China by some 30% or more. and further revsions are on the roll. Chinese system is worser due to lack of internal democracy there.

    and there is cut throad competition among companies and hence they are under pressure to cut costs. if there is no cost advantage here in chennai, then the companies will simply close them and shift elsewhere. And with 1.1 billion polulation and poverty, there is desparation for jobs here. but there is no easy and pragmatic alternative to this now.

    • //Foxconn’s practises in China was intolerable and hence many suicides in the recent past. But recently they increased the average salary for them in China by some 30% or more. and further revsions are on the roll. //

      இந்த விடிவு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லையே, பல உயிர்களைக் காவு வாங்கிய பின், தொழிலாளர்களின் போராட்டதிற்குப் பின் தான் கிடைத்தது’ என்று ஒத்துக்கொண்ட அதியமானுக்கு ஒரு சபாஷ்.

    • //and there is cut throad competition among companies and hence they are under pressure to cut costs. if there is no cost advantage here in chennai, then the companies will simply close them and shift elsewhere. //

      எங்க முதலாளிங்க இல்லைனா உலகமே போயிரும் என்று வழக்கமாக அழும் அதியமான் இங்கே எங்களிடையே நிலவும் போட்டி காரணமாக நாங்கள் தவிக்கிறோம் அதனால் வேற வழியில்லாம தொழிலாளர்களை சுரண்டரோம் என்கிறார்.

      இதத்தான் முதலாளித்துவ முறையின் தோல்வி, சுயமுரண்பாடு என்கிறோம்.

      இதுலயும் ஒரு பொய் இருக்கு. இன்ன தேதி வரை கம்பனி ஊத்திக்கிச்சுன்னு சொல்லி தட்டு ஏந்தின முதலாளிய பாத்திருக்கீங்களா? சமீபத்துல அமெரிக்காவே தலைகீழ கவுந்தது அங்கருந்து முதலாளி எவனாவது தட்டு ஏந்தினானா?

      வாழம்போதும் தொழிலாளர்களை கொல்லுது, சாகும் போது தொழிலாளர்களைக் கொல்லுது இந்த முதலாளித்துவம்.

      இத்தனைக்கும் நோக்கிய கம்பனி அப்படி ஒன்னும் நஸ்டத்துல போகல. விற்பனை வரியை திருப்பிக் கொடுத்துவிடுகிறது தமிழக அரசு. நோக்கியா தன்னோட முதலீட்டில் 100% மக்களுடைய வரிப்பணத்திலிருந்து திரும்ப எடுத்துவிட்டது.

      இத்தனை செஞ்ச பிறகும், பஞ்சப் பாட்டு பாடுகிறான், தொழிலாளி வயிற்றில் அடிக்கிறான் என்றால் இதுல என்னய்யா முதலாளியோட திறமை இருக்கு? இதுக்கு எதுக்குயா ‘நாங்கதான் ஒரே தீர்வு’ என்கிற பொய் முழக்கம்? உங்களால உங்க சொந்த பிரச்சினையை சால்வ் பன்ன முடியல, தொழிலாளியோட சம்பளத்துல கை வைச்சுதான் வயிறு வளக்க வேண்டியிருக்கு.

      போட்ட முதலீடு அனைத்தையும்(100%) வரிச்சலுகையாக தமிழக அரசிடமிருந்து திரும்ப பெற்றுவிட்ட நோக்கிய நிறுவனம், தனது தொழிலாளர்களையும் சுரண்டுகிறது.

      http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6585%3A2009-12-28-00-14-54&catid=278%3A2009&Itemid=1

      சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!

      • /////and there is cut throad competition among companies and hence they are under pressure to cut costs. if there is no cost advantage here in chennai, then the companies will simply close them and shift elsewhere. //

        எங்க முதலாளிங்க இல்லைனா உலகமே போயிரும் என்று வழக்கமாக அழும் அதியமான் இங்கே எங்களிடையே நிலவும் போட்டி காரணமாக நாங்கள் தவிக்கிறோம் அதனால் வேற வழியில்லாம தொழிலாளர்களை சுரண்டரோம் என்கிறார்.

        இதத்தான் முதலாளித்துவ முறையின் தோல்வி, சுயமுரண்பாடு என்கிறோம். //

        அதியமான் மேலே உள்ள கருத்தையெல்லாம் வசதியாக எஸ்கேப் செய்துவிடுவார்.

  25. இந்த செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது.உண்மை செய்திகளை அம்பலப்படுத்தும் வினவுக்கு நன்றிகள்

  26. மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது..

    சுதந்திரச் சந்தையின் போட்டி தான் பொருட்களை மலிவு விலைக்கு நுகர்வோரிடம் சேர்க்கிறது என்று வெட்கமில்லாமல் சொல்பவர்கள், அந்த மலிவின் பின்னே இப்படி குறைந்த
    கூலிக்கு சுரண்டப்படும் தொழிலாளியின் ரத்தம் இருக்கிறது என்பதை உணர்வதில்லை.

    அதற்கான ஆதாரம் அதியமானின் வார்த்தைகள்.

    //சம்பளம் மிக குறைவுதான். அதனால் தான் செல் போன்கள் இத்தனை மலிவாக கிடைக்கின்றன.//

    பிற உயிர்களையும் சக மனிதனின் வாழ்க்கையையும் மயிரைப் போல நினைக்கும் ஒரு மூளையில் இருந்து தான் இப்படியான வார்த்தைகள் பிறக்க முடியும். அந்த போனை வாங்கிப்
    பயன்படுத்துபவர்கள் தங்கள் மனதில் கொஞ்சமாவது உறுத்தலை உணர்ந்திருப்பார்கள்.

    இன்றைய சமூகத்தில் வளப்பமாகவும் வசதிவாய்ப்புகளோடும் இருப்பவர்கள் நியாயமாக வேறு ஒருவருக்குச் சேர வேண்டியதையும் சேர்த்தே அபகரித்துக் கொள்கிறார் – இந்த
    உண்மையின் பின்னணியில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையை மாற்றியமைக்க தோள்கொடுத்துப் போராடுவதே ஒருவர் செய்யத்தக்க பிராயச்சித்தமாக இருக்கும்.

    அதிகாரத்தின் பலம் கொண்டவர்களை அம்பலப்படுத்தும் விதமாக உண்மையை வெளிக்கொணர்ந்த வினவு தோழர்களுக்கு பாராட்டுக்கள்..!

    • //பிற உயிர்களையும் சக மனிதனின் வாழ்க்கையையும் மயிரைப் போல நினைக்கும் ஒரு மூளையில் இருந்து தான் இப்படியான வார்த்தைகள் பிறக்க முடியும். அந்த போனை வாங்கிப்
      பயன்படுத்துபவர்கள் தங்கள் மனதில் கொஞ்சமாவது உறுத்தலை உணர்ந்திருப்பார்கள்.
      ///

      wrong on both the points.

      • //wrong on both the points.//

        அதியமான் இங்கு பின்னுட்டமிடுபவர்களின் மனிதாபிமான உணர்ச்சியைத்தான் பொய் என்று இதன் மூலம் சொல்ல வருகிறார்.

        • //அதியமான் இங்கு பின்னுட்டமிடுபவர்களின் மனிதாபிமான உணர்ச்சியைத்தான் பொய் என்று இதன் மூலம் சொல்ல வருகிறார்.
          ///

          Asuran,

          You are twisting my answers. Actually, i am branded as inhuman by you and your comrades. i need no certificate for my ‘manithaapimaanam’ ; ok. actually, your words are more suitable for you and your comrade than me. first try not talk about my motives or persona. i can easily brand you as “….” ; but that is subjective and not objective and diverts the topic.

        • அசுரன்,

          //அதியமான் இங்கு பின்னுட்டமிடுபவர்களின் மனிதாபிமான உணர்ச்சியைத்தான் பொய் என்று இதன் மூலம் சொல்ல வருகிறார்.//

          இது கீழ்த்தரமான தாக்குதல், உங்கள் உண்மைகளை விளக்குங்கள். தனிமனிதத் தாக்குதலில் இறங்காதீர்கள்.

        • //அசுரன்,

          //அதியமான் இங்கு பின்னுட்டமிடுபவர்களின் மனிதாபிமான உணர்ச்சியைத்தான் பொய் என்று இதன் மூலம் சொல்ல வருகிறார்.//

          இது கீழ்த்தரமான தாக்குதல், உங்கள் உண்மைகளை விளக்குங்கள். தனிமனிதத் தாக்குதலில் இறங்காதீர்கள்.//

          ஏன் மா.சி. உணர்ச்சிவசப் படுகிறீர்கள்?

          தோழர் ஒருவர் சொன்னது இது:
          //அந்த போனை வாங்கிப்
          பயன்படுத்துபவர்கள் தங்கள் மனதில் கொஞ்சமாவது உறுத்தலை உணர்ந்திருப்பார்கள்.//

          இந்தக் கருத்து இங்கு பின்னூட்டமிட்டுள்ளவர்கள் வெளிப்படுத்திய ஒன்றுதான். பின்னுட்டமிட்டவர்கள் தமது மனிதாபிமான உணர்விலிருந்து தமது குற்றவுணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

          அதியமானோ ஒற்றையடியில் வழக்கம் போல. இதனை wrong என்கிறார்.

          இது பின்னுட்டமிட்டவர்களின் உணர்வை இழிவுபடுத்துவதுதானே? அதியமான் இது போல அனைவரின் பிரதிநிதியாகப் தன்னை முன்னிறுத்திக் கொண்டு அம்பலப்படுவது முதல்முறையல்ல. மா.சிக்கு இது புதுசு என்பதால் உணர்ச்சிவசப்படுகிறார்.

  27. படிக்கும் போதே மனம் பதறுகிறது.. போபால் விபத்திலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை. அதற்குள் மற்றொன்று வந்துவிடுமோ என்கிற பயம் வேதனையளிக்கிறது. எப்படி நம்மைக் காப்பற்றப்போகிறோம் …?

    • Not only Bhopal every accidents are sad only. Just because bhopal accident is caused by a foreign private company you all only talking about that.

      How about thousands of life killed every year due to railway workers negligence ????? Why you all not condemning those workers and still those workers attitude are not changed. Did any resolution made by these Railway Unions to stop these mistakes or punish those workers ??????????

      You all are just extremists making every issue which you don’t like as big thing. Here also you all just misusing the accident happen in Foxconn.

      How if this accident found happened by mistake of a worker ??? Will you give the same treatment to that worker or you will still blame the management ?

      Mistakes are painful and must make sure we learn from that. Foxconn should be fined heavily to avoid these things to happen again.

  28. //கம்யூனிஸ்ட் தொழிற்சங்களை அனுமதித்தால், சில ஆண்டுகளில் நிறுவனம் பூட்டப்படும் சாத்தியம் அதிகம் என்பதால் தான் அனுமதிக்க மறுக்கின்றனர். ஆனால் முன்னேறிய நாடுகளில் இப்படி தடுக்க முடியாது. அங்கு சராசரி நேர்மை மற்றும் வேலையில் நேர்மை அதிகம். அராஜகம் மற்றும் ஊழல் (தொழிற்சங்க) தலைவர்கள் மிக குறைவு.//

    தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய வரம்பை அதிகரித்தால், நிறுவன வரி வரம்பை அதிகரித்தால், பன்னாட்டு நிறுவனங்கள் நம்ம ஊரை விட்டு வேறு ஊருக்குப் போய் விடுவார்கள் என்று பூச்சாண்டி.

    உலகில் எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து நிறுவன ஆதாயத்தின் (corporate income tax) மீது உயர் வரி விதிப்பு (80%+), தொழிலாளர் குறைந்த பட்ச ஊதிய வரம்பு (based on ppp – purchasing power parity) என்று நிர்ணயித்தால் எங்கு போய் விடுவார்கள்? நிலவுக்குப் போய் தொழில் நிறுவனம் அமைப்பார்களா?

    எல்லாவற்றையும் இழுத்து மூடி விட்டு வீட்டில் தூங்க ஆரம்பித்து விடுவார்கள் என்று சொன்னால், அப்படிப்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதே நல்லது. சக மனிதர் மீது அக்கறை, சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்கள் உற்பத்தியையும், சேவை வழங்கலையும் செய்ய ஆரம்பிப்பார்கள்.

    • Shiva,

      you know how the market (a bad word) for goods, services and labour operates. it is like any other laws of science (like thermodynamics, etc). Economic laws and operating principles are similar to other laws of science. Costs, and the demand and supply imbalances determine the prices. The labour wages are similarly determined. The wages in developed nations are higher for the same jobs, because of these same laws. inflation rates, interest rates, tax rates, supply and demand for labour, business conditions, etc. no place for sentiments.

      • அதியமான்,

        //you know how the market (a bad word) for goods, services and labour operates. it is like any other laws of science (like thermodynamics, etc). Economic laws and operating principles are similar to other laws of science. Costs, and the demand and supply imbalances determine the prices. //

        அறிவியல் விதிகள் உயிரில்லா பொருட்களுக்கு இடையேயான உறவாடலை விவரிக்கின்றன. பொருளாதார விதிகள் சிந்திக்கும்/ தன்னிச்சையாக செயல்படும் மனிதர்களுக்கிடையேயான உறவாடல்களை விளக்குகின்றன.

        இரண்டையும் ஒரே தட்டில் வைக்க முடியாது.

        //The labour wages are similarly determined. The wages in developed nations are higher for the same jobs, because of these same laws. inflation rates, interest rates, tax rates, supply and demand for labour, business conditions, etc. no place for sentiments.//

        எதிர்கால ஆதாயத்துக்காக தொழில் செய்யும் முதலாளியும், அன்றாட(அல்லது அந்த மாத) வயிற்றுப்பாட்டுக்காக வேலைக்கு வரும் தொழிலாளியும் சம்பளம் குறித்து பேரம் பேசும் போது சந்தை தேவை/இருப்பு அளவைப் பொறுத்து சம்பளம் அமைவதில்லை. உயிர் தக்க வைத்திருக்கத் தேவையான (subsistence) அளவு சம்பளம் மட்டும் கொடுத்து, தொழிலாளியின் உழைப்பு ஈட்டும் மீதி மதிப்பை (உபரி மதிப்பு – கெட்ட வார்த்தை இல்லையே!), முதலாளி கொள்ளை அடித்துக் கொள்ள முடியும் என்ற பொருளாதார உண்மையும் படித்திருப்பீர்களே!

        அதற்காகத்தான் தொழிலாளர் கூட்டமைப்புகளும், அரசு சட்ட திட்டங்களும். முதலாளிகளுக்கு சொத்துரிமை வழங்கும் அதே அரசு சட்டங்கள்தான் குறைந்த பட்ச ஊதியம், கூட்டு பேரம் பேசும் உரிமை என்றும் வழங்குகின்றன. அது மட்டும் வேண்டும், இது வேண்டாம் என்பதுதான் முதலாளித்துவ பசப்பு வாதம்.

        அன்புடன்,
        மா சிவகுமார்

        • //எதிர்கால ஆதாயத்துக்காக தொழில் செய்யும் முதலாளியும், அன்றாட(அல்லது அந்த மாத) வயிற்றுப்பாட்டுக்காக வேலைக்கு வரும் தொழிலாளியும் சம்பளம் குறித்து பேரம் பேசும் போது சந்தை தேவை/இருப்பு அளவைப் பொறுத்து சம்பளம் அமைவதில்லை. உயிர் தக்க வைத்திருக்கத் தேவையான (subsistence) அளவு சம்பளம் மட்டும் கொடுத்து, தொழிலாளியின் உழைப்பு ஈட்டும் மீதி மதிப்பை (உபரி மதிப்பு – கெட்ட வார்த்தை இல்லையே!), முதலாளி கொள்ளை அடித்துக் கொள்ள முடியும் என்ற பொருளாதார உண்மையும் படித்திருப்பீர்களே!//

          அதியமான் இதற்கும் பதில் சொல்லவில்லை….

        • நண்பர் சிவா,

          இது ஸ்டாண்டர் மார்க்சிஸ்ட் கோணம். தினமும் 150 ரூபாய் (இலவச பஸ் மற்றும் உணவு கூட) மார்க்ஸ் சொன்ன சப்சிஸ்டனஸ் கூலி அல்ல. உண்மையில் இந்தியாவில் மிக கொடுமையான வேலை செய்பவர்கள் ஆக்ரா அருகே கண்ணாடி வலையல் செய்யும் தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள். மிக மிக அதிக வெப்பத்தில், மிக மிக அபயாகரமான சூழலில், மிக குறைந்த கூலிக்கு வேலை செய்யும் கொடுமை. அது உத்தரபிரதேசம். தமிழகம் பரவாயில்லை.

          நீங்கள் சொல்லும் மாற்று முறைகள் எல்லாம் பல முறை, பல நாடுகளில், பல விதங்களில் முயன்று பார்த்து தோற்ற பின் தான் 1991க்கு பின் இங்கு மாற்றம்.
          First wealth has to be created before it can be shared. And capitalism for all its demerits is the best way for creating wealth. It is not the perfect method but so far man has not invented a better one.

          சரி, கம்யூனிசம் தான் ஒரே தீர்வு என்று நம்புவர்களுக்கு :

          19ஆன் நூற்றாண்டில் மார்க்ஸ் கண்ட அய்ரோப்பிய தொழிலாளர்களின் நிலை, இன்றைய இந்திய தொழிலாளர்களின் நிலையை விட படு கொடுமையாக இருந்தது. 12 முதல் 16 மணி நேர வேலை, sweat shops, child labour, terrible working conditions, low pay, industrial accidents, etc. அதுதான் அவரை டாஸ் கேபிடல் எழுத உந்தியது. ஆனால் 150 ஆண்டுகளில் அய்ரோப்பிய தொழிலாளிகளின் வாழ்க்கை தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மார்க்ஸின் கணிப்பு தவறிவிட்டது.

          இந்தியாவில் வறுமை, வேலையின்மை அதிகம் தான். இதை குறுகிய காலத்தில் குறைக்க எந்த வழியும் இல்லை. அய்ரோப்பா சென்ன பாதையில், ஒழுங்காக, ஊழ்ல் இல்லாமல் நாமும் சென்றால், இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகளில் அவர்களின் இன்றைய சுபிட்ச்சத்தை அடைய வாய்ப்புள்ளது. (for that the first condition is good governance and corruption free govt ; second is free market as much as possible with good and prudent regulations as and when needed).

          செம்புர்ட்சி இங்கு கொண்டுவந்தாலும், நம் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உடனடியாக அல்லது சில ஆண்டுகளில் உயர்த்த முடியாது. முதலாளிகள் வர்கம் (அல்லது எம் பாசையில் சொன்னல் தொழில்முனைவோர்கள்) ஒழிக்கப்படும். அவ்வளாவுதான். மற்றபடி நிலைமை அப்படியே தான் இருக்கும். புரட்சி அரசும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியிருக்கும். விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகாரிகளையும், நிர்வாகிகளையும் நேர்மையாக, திறமையாக, ஒழுங்காக வேலை வாங்க வேண்டும். (நடக்கர காரியமா இது ?).
          உற்பத்தியை பெருக்க வேண்டும். சொல்வது சுலபம். ஆனால நடைமுறையில் மிக மிக மிக கடினமான காரியம்.

          சோசியலிச அரசாங்கத்திலும் பொருளாதார விதிகள் அதேதான். இயற்பியல் விதிகள் போன்றவை அவை. பாரபட்சம் இல்லாதவை. உற்பத்தியை பெருக்காமல், மக்களில் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியாது. அதே சமயம் மனித உரிமைகளையும் பாதுக்க வேண்டும். இதெல்லாம் இந்தியாவில் கம்யூனிச ஆட்சியில் சாத்தியமே இல்லை.
          முயன்று பார்த்தால் தான் புரியும். அதுவரை நான் என்ன சொன்னாலும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.

    • இந்த தாரளமயமாக்கலை 1947இல் இருந்தே தொடங்கியிருந்தால் (விவசாயத்திலும்), இன்று வறுமை அளவு மிக குறைந்திருக்கும். இந்த விவாதமே தேவையிருந்திருக்காது. ஆனால் முட்டாளதனமான கொள்கைகளால், தொழில் துறையை முடக்கி, விலைவாசியை மிக கடுமையாக உயர்த்தி (அன்று 20 சத அளவில் வருட உயர்வு), வறுமை அளவை குறைக்க முடியாமால், சீரழ்ந்தோம். அதன் நிகர விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. Cumulative effects of all the follies.
      பார்க்கவும் :
      http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html
      நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

      மிக முக்கியமாக, ஒரு தலைமுறையையே மழுங்கடித்துவிட்டோம். (1947க்கு பின் பிறந்தவர்கள்). தொழில் முனையும் ஆர்வத்தை, வேகத்தை முற்றாக மழுங்கடித்து, அரசாங்க வேலை தேடும் மாக்களாக மாற்றப்பட்டனர். 1980 வரை படித்த இளைஞர்கள் அரசு வேலைகளுக்கா அலைந்தனர். தனியாரில் வேலை வாய்ப்பு மிக குறைவு. இன்று 60 வயதானவர்களிடம் தீர விசாரியுங்கள். 1980இல் வெளியான கமல் படமான ‘வறுமையின் நிறம் சிகப்பு’ இதை அருமையாக சித்தரிக்கும்.

      1991க்கு பின் ஒரு புதிய தலைமுறை கட்டவிழ்க்கப்பட்டது. A huge potential unleashed. அதை பற்றிய ஒரு அருமையான அறிக்கை :

      http://www.knowledgecommission.gov.in/downloads/documents/NKC_Entrepreneurship.pdf

      Entrepreunership – A study by National Knowledge Commission
      தொழில் முனைவோர்கள் தான் உண்மையாக ஹீரோக்கள். ஏழைகளின் துயரை போக்கும் கடவுள்கள். ஆனால் அவர்களை வில்லன்களாக பார்க்கும் மனோபாவம் தான் அதிகம். சுரண்டல்வாதிகள், தரகு முதலாளிகள் என்று…
      போக வேண்டிய தூரம் வெகு அதிகம். பல தடைகள், ஊழல்கள், திரிபுகள்…

      • ///உற்பத்தியை பெருக்க வேண்டும். சொல்வது சுலபம். ஆனால நடைமுறையில் மிக மிக மிக கடினமான காரியம். //

        ஆகக் கூடி கடினமான வேலை என்பதால் செய்ய வேண்டாம் என்கிறீர்கள். ஆனால் பெரும்பான்மை இந்திய மக்கள் தமது வறுமை நிலையுடன் ஒப்பிடும் போது இந்த கடினமான வேலை ஒன்றுமில்லை என்று புரட்சிக்கு கொடி பிடிக்க எத்தணிக்கிறார்கள். என்ன செய்ய அதியமான்.. என்ன இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேற இல்லையா எனவே சிந்தனையும் கூட வேறதான்…

        உங்களுக்கு கடினம். அவர்களுக்கு அது தேவை

        • //ஆகக் கூடி கடினமான வேலை என்பதால் செய்ய வேண்டாம் என்கிறீர்கள். /// this is your nutty interpretation. I said it is almost impossible. History proves that. moreover, India today is not Russia of 1917 or china of 1948. Corruption in govt sectors and trade unions and pseudo communists, etc : nothing like that in 1917 or 1948. and it is impossible to reform these elements.

          anyway, why argue with you. You and your comrades can try and experiment. then reality will dawn on those who are in illusion.

        • உண்மைதான். இந்தியாவில் வறுமை ஒழிந்துவிட்டதுதான். ஒருமுறை இந்தியாவை ஒளிரவைத்த வாஜ்பாயிடம் ராஜஸ்தான் மக்கள் பாலம் கட்டும் வேலை செய்கிறோம், ரோடு போடும் வேலை செய்கிறோம் கூலியாக கோதுமை கொடுங்கள் என்றனர். முதலாளிகளைப்போல் ஓசியில் கேட்கவில்லை. ஆனால் அரசோ வக்கிரமாக கோதுமையையும் சக்கரையையும் கொண்டுபோய் கடலில் கொட்டியது. வறுமையிருக்குன்னா கடலில் கொட்டுனவன் என்ன கேனையனா!

        • /// why argue with you. You and your comrades can try and experiment.///

          என்னங்க இது? பொசுக்குன்னு இப்புடி சொல்லிப்புட்டீங்க?
          அப்புறம் இன்னாத்துக்கு இவ்வளோ நேரம் மாஞ்சு மாஞ்சு லிங்க் குடுத்தீங்களாம்??

          அதியமானுக்கு மான் கராத்தே கூட தெரியுமாம்ப்பா…

  29. மனதை உறையவைக்கும் படியான இப்படி ஒரு சம்பவத்தை மீடியாக்கள் அம்பலப்படுத்த தயங்குவது
    வருத்தமாக உள்ளது .

  30. I tried to paste in tamil font in my last comment. But unfortunatley it is not working.

    The Tier-1 suppliers supporting from inside the Nokia campus are, Perlos, Foxconn, Laird, Salcomp and Wintek.

    And the Food Supplier for the entire Nokia unit is “Sodexo”.

    Please correct. Thanks.

    • நண்பரே!

      http://www.azhagi.com க்கு சென்று software download செய்து கொள்ளவும். Transliteration முறையில் தமிழில் டைப் செய்யலாம். தமிழ் தட்டச்சு பயிற்சி ஏதும் இதற்கு தேவையில்லை. Software இலவசமாகவே கிடைக்கிறது. அல்லது Firefox Browserல் Add on Programme ஆக Tamil Key கிடைகிறது. இதனை கொண்டும் தமிழில் டைப் செய்யலாம்.

      நன்றி!

      புதிய உலகோன்

  31. கடும் கோபத்தையும் செயலூக்கத்தையும் ஏற்படுத்திய இன்னுமெரு நிகழ்வு. உலகமய தாசர்களின் ஓலங்களை சட்டை செய்யவேண்டியதில்லை. இது போன்ற அம்பலப்படுத்தல்களே அவர்கள் வாயை மொத்தமாக மூடிவிடும். துணிச்சலுடன் கள ஆய்வு செய்து செய்திகளை சேகரித்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அறிக்கையையும் புகைப்படங்களையும் 1 அல்லது 2 ரூபாய்க்கு சிறு பிரசுரமாக வடிவமைத்து உடனடியாக தமிழகமெங்கும் தொழிலாளர் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வினியோகம் செய்ய வேண்டும் என கருதுகிறேன்.

    தமிழக்கதில் கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, ராணிப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பல ஊர்களில் ஆலை ரசாயனம் மற்றும் கழிவுகளால் தொழிலாளர்களும் மக்களும் கடும் பாதிப்படைகிறார்கள். டௌ முற்றுகளை சமீபித்திருக்கும் வேளையில் இது போன்று இன்னும் சில கள ஆய்வுகளை மேற்கொண்டால் மிக பனுள்ளதாக இருக்கும்.

    • //கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, ராணிப்பேட்டை, குரோம்பேட்டை //

      Thiruppur and hosur as well..

    • ///இந்த அறிக்கையையும் புகைப்படங்களையும் 1 அல்லது 2 ரூபாய்க்கு சிறு பிரசுரமாக வடிவமைத்து உடனடியாக தமிழகமெங்கும் தொழிலாளர் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வினியோகம் செய்ய வேண்டும் என கருதுகிறேன்///

      ஆமாம் ஆக்க பூர்வமான செய்கை இதுவே. உடனே இதுபோன்ற அம்பலங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அரசை நிர்பந்தித்து பாதுகாப்பு அம்சங்களை எல்லா நிறுவனங்களும் முறையாக கையாள்கின்றனவா என்று கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

      நன்றி
      புதிய உலகோன்

  32. தாங்க முடியாத கோபமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. உண்மைகளை வெளிக் கொணரும் வினவுத் தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.

  33. வினவு,

    இங்கே.. என்ன நடந்திருக்கிறது?

    ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விஷவாயு கசிந்திருக்கிறது. அதில் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது கடுமையான கண்டனத்திற்குரியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

    இந்த சம்பவம் / விபத்து எங்கே நடைபெற்றிருக்கிறது?

    சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் நடந்துள்ளது. நோக்கியா நிறுவனம் இருப்பது ஸ்ரீபெரும்புதூரில்.

    இதில் நோக்கியா நிறுவனம் எப்படி தொடர்பிற்கு வருகிறது?

    ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியாவிற்குச் சில உதிரிபாகங்களைத் தயாரிக்கிறார்கள். இதுவே ஃபாக்ஸ்கானிற்கும் நோக்கியாவிற்கும் உள்ள தொடர்பு.

    ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியாவிற்கு மட்டுமா உதிரிபாகங்களைத் தருகிறார்கள்?

    இல்லை. மற்ற நிறுவனங்களுக்கும் சேர்ந்தே அவர்கள் தயாரிக்கிறார்கள்.

    அப்படியிருக்க நோக்கியா நிறுவனத்தை இங்கே இழுப்பது எதற்கு?

    உங்கள் இடுகையில் 90% ஃபாக்ஸ்கானைப் பற்றிக் கூறிவிட்டு நோக்கியா என்று தலைப்பிடுவது இந்த இடுகையின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. உங்கள் இடுகையின் தலைப்பு ஃபாக்ஸ்கான் பற்றியதாக இருக்க வேண்டும். நோக்கியா என்று அல்ல.. முதலில் அதை மாற்றுங்கள்.

    இந்நிறுவனங்களில் 25000க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்றைய விலைவாசிக்கு சம்பளம் போதாது என்பது உண்மையே. ஆனால், இந்த சம்பளத்திற்கே வர ஆட்கள் தயாராக இருக்கிறார்களே.. அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு மாற்று வழி என்ன?

    இது போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வேண்டாம் என்று சிலர் நினைக்கிறார்கள். நம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வினவு ஒரு ப்ளு-பிரிண்ட் தயார் செய்தால் என்ன? உங்கள் திட்டம் என்ன என்று கூறுங்கள்? தெரிந்துகொள்கிறோம்.

    அடுத்து.. ஒரு நிறுவனத்தைப் பற்றி எழுதுவதற்கு முன்பு.. அந்நிறுவனம் சமுதாயத்தில் எந்த அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

    எளிய விவசாயிகள், வியாபாரிகள் என்ன தேவை? எளிய முறையில் வானிலை, சந்தை, விலைவாசி பற்றிய தகவல்கள் எல்லாம் தேவை. இந்தத் தேவைகளை நோக்கியா நிறுவனம் வழங்கிவருகிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அடுத்து இலாபம் இல்லாமலா செய்கிறார்கள்? இலாபம் இருக்கத்தான் செய்யும் ஆனால், எவ்வளவு பயன்பாடு என்று பாருங்கள்.

    எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் அனுகுதல் நல்லதல்ல.

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    பல காலமாக நோக்கியா செல்போனைப் பயன்படுத்துபவன், நோக்கியா விசிறி என்ற அடிப்படையிலேயே இந்தப் பின்னூட்டம். நன்றி.

    • தம்பி நோக்கியா விசிறி,

      சுங்கவார்சத்திரம் நிகழ்ந்தது 23ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை.

      நோக்கியா நிகழ்ந்தது 24 ஆம் தேதி.

      கட்டுரையில் இந்த விவரம் குழப்பமில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன்.

      //நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!

      கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. //

      சச்சின் விசிறி மாதிரி இது ஏதோ நோக்கியா விசிறி போலருக்கு அதான் விவரங்களை தனது மன எழுச்சிக்கு ஏற்ப புரிந்து கொ(ல்)ள்கிறது.

      • அசுரா,

        பிரச்சனையின் தீவிரத்தை அறியாமல் இல்லை. இங்க பிரச்சனை ஃபாக்ஸ்கான் நிறுவனம் சார்ந்ததே.. அதை நீங்கள் ஏன் தலைப்பில் வைக்கவில்லை?

        நோக்கியா என்று போட்டால் தான் உங்கள் இடுகையைப் பலர் பார்ப்பார்களா? ஏன் இப்படி தவறான செய்தியைப் பரப்புகிறீர்கள்.

      • ஹூண்டாய் தொழிற்பேட்டையில் எப்படி பல நிறுவனங்கள் உள்ளனவோ.. அதே போல தான் நோக்கியா SEZலும் பல நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று ஃபாக்ஸ்கான்.

        தொழிற்பேட்டையில் உள்ளே இருப்பதாலேயே நோக்கியாவின் பெயரைத் தலைப்பில் போடுவது… செய்தியை மாற்றுவதாக ஆகாதா?

        இங்கே நான் இதைக் குறிப்பிடுவதால்.. விபத்தின் தீவிரம் புரியாமல் இல்லை.

      • ////நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!

        கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. ////

        நோக்கியா விசிறி இன்னமும் மேலே உள்ள வரிகளை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்..

        • அசுரன்,

          கட்டுரையில் முழுக்க படித்த பின்பே பின்னூட்டமிடுகிறேன்.

          ////நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!
          கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. ////

          உங்கள் கட்டுரையில் “நோக்கியா ஆலையில்” என்று குறிப்பிட்டிருப்பது நோக்கியா SEZன் நுழைவாயிலைத் தான். அந்த நுழைவாயில் வழியாகத்தான் நோக்கியாவின் உதிரபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களான பெர்லோஸ், ஃபாக்ஸ்கான், ஜெபில் போன்ற நிறுவன ஊழியர்கள் செல்ல வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பொழுது இந்த நுழைவாயிலையும் பார்க்கலாம். பெர்லாஸ், ஜெபில் போன்ற நிறுவனங்களின் பெயர்ப்பலகையையும் பார்க்கலாம்.

          அந்த நுழைவாயில் வழியாக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வந்தார்கள் என்பதற்காக நோக்கியாவைக் கூறுவது சரியா? ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்கள் “விபத்தைப் பற்றி” பதில் கூறுமாறு ஃபாக்ஸ்கான் நிறுவனத்தாரிடம் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதில் நோக்கியா எங்கிருந்து வந்தது?

          இங்கே பிரச்சனை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து.

          நீங்கள் ஏன் ஃபாக்ஸ்கானைப் பற்றி தலைப்பில் கூற வில்லை? இச்செய்தியை வெளியிட்ட அனைத்து ஊடகங்களுமே ஃபாக்ஸ்கானின் நிகழ்ந்ததாகக் கூறும்பொழுது உங்களுக்கு மட்டும் எங்கே நோக்கியா சிக்கியது?

          நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

          கட்டுரை முழுக்க ஃபாக்ஸ்கானைப் பற்றி எழுதிவிட்ட ஏன் நோக்கியா என்று கூறியிருக்கிறீர்கள்?

          நீங்கள் ஏன் ஃபாக்ஸ்கானைப் பற்றி தலைப்பில் கூற வில்லை?

    • //எளிய விவசாயிகள், வியாபாரிகள் என்ன தேவை? எளிய முறையில் வானிலை, சந்தை, விலைவாசி பற்றிய தகவல்கள் எல்லாம் தேவை. இந்தத் தேவைகளை நோக்கியா நிறுவனம் வழங்கிவருகிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அடுத்து இலாபம் இல்லாமலா செய்கிறார்கள்? இலாபம் இருக்கத்தான் செய்யும் ஆனால், எவ்வளவு பயன்பாடு என்று பாருங்கள்.///

      அடேங்கப்பா… போன முற சுனாமி வந்தப்போ கூட நோக்கிய கம்பனில் இருந்துதான் எஸ் எம் எஸ் வந்துச்சு.. இந்தியாவுல நோக்கிய பிராண்டு வச்சிருந்த மீனவர்கள் எல்லாருமே சுனாமிக்கு எனிமா கொடுத்து எஸ்கேப் ஆயிட்டாங்க… இது தெரியாம நானும் வினவுக்கு சப்போர்டா பேசிட்டேன் மன்னிச்சுருங்க

      அதுவும் இல்லாம விவசாயிங்க கூட நோக்கிய யூஸ் பன்னாக்க சரியான காலநிலை தெரிஞ்சி பயிரிட்டு லாபம் சம்பாதிச்சிருக்குறதையும் எம் எஸ் சுவாமிநாதன் நேத்து எனக்கு அவரோட நோக்கியா செட்டுலருந்து போன் செஞ்சி பேசுனாரு

      • ஹேய்ய்ய் அசுரர் கலாய்ச்சுப்புட்டாருப்பா,

        என்னென்ன வசதிகள் வந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள தயாராக இல்லாதவரிடம் கூறி என்ன பயன்?

  34. நோக்கியா SEZ பிரிவில் வருகிறது.அதாவது சிறப்பு பொருளாதார மண்டலம்.இவற்றிற்கு தரப்படும் சலுகைகளை குறைத்துக் கொள்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.அவை நீட்டிக்கப்பட வேண்டும்,குறைக்கக் கூடாது என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால் அங்கு வேலை செய்வோரின் நிலை பற்றி எந்த அமைச்சர் பேசுவார்?.

    தமிழகத்தில் எத்தனை SEZகள் உள்ளன,அவை பெறும் சலுகைகள் என்னென்ன,அதன் மதிப்பு குறித்து தகவல் திரட்டி வெளியிட்டால் சில உண்மைகள் புரியும். தொழிலாளர் பாதுகாப்பு,
    குறைந்தபட்ச உரிமைகள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவை அடிப்படையானவை. அதியமான் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார். தொழிற்சங்கங்கள் இல்லையென்றால் சுரண்டல் இருக்காது என்று அவர் கூறுவாரா.இதே நோக்கியா பின்லாந்தில் இப்படி தொழிற்சாலை நடத்த முடியாது, ஜெர்மனியிலும்,ஹாலந்திலும் நடத்த முடியாது. அங்கிருப்பவர்கள் மனிதர்கள், இங்கிருப்பவர்களும் மனிதர்கள். அங்கு உயிரின் விலை அதிகம், இங்கு குறைவு, கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு இதாவது கிடைக்கிறதே என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாரா அதியமான்.
    உலகமயமாதல் என்பதால் எல்லோரும் செல்போன் வாங்க முடியும் அதற்காக இத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டாலும் அதை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்பது குரூர நகைச்சுவை.

    • //அங்கு உயிரின் விலை அதிகம், இங்கு குறைவு, கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு இதாவது கிடைக்கிறதே என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாரா அதியமான்.
      உலகமயமாதல் என்பதால் எல்லோரும் செல்போன் வாங்க முடியும் அதற்காக இத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டாலும் அதை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்பது குரூர நகைச்சுவை.///

      this just your foolish interpretation of my comments. You are assuming that i mean this. if the Foxconn company has commited grave mistake or wrong, no arguments about the need for it to be punished. ok. read my first comment clearly.

      • //if the Foxconn company has commited grave mistake or wrong, no arguments about the need for it to be punished.//

        மிஸ்டேக் செஞ்சிருக்குன்னு சொல்றீங்களா இல்லைனு சொல்றீங்களா அதியமான்

  35. //ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.//
    நெஞ்சைத் தொடும் வார்த்தைகள். மக்கள்தான் சரியான “சவுக்கு” அடி கொடுக்க வேண்டும்.

  36. /உலகில் எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து நிறுவன ஆதாயத்தின் (corporate income tax) மீது உயர் வரி விதிப்பு (80%+), தொழிலாளர் குறைந்த பட்ச ஊதிய வரம்பு (based on ppp – purchasing power parity) என்று நிர்ணயித்தால் எங்கு போய் விடுவார்கள்//

    that was tried in various ways and forms with disastrous results. how would your company and your customers (who incl corporates) react for such a tax ? it won’t work.

    • சமீபத்தில் பாண்டிச்சேரி சென்ற போது ஒரு ஐரோப்பியரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர், ஆடிட்டர் வேலை செய்வதாக கூறினார்! அதனால் அவரிடம் தற்போதைய பொருளாதார நெருக்கடி பற்றியும் கேள்விகளை எழுப்பினோம்!

      ‘அரசு நிதிச்சந்தையில் மிகவும் தாராளமாக நடந்து கொண்டது தான் நெருக்கடிக்கு காரணம்’ என்றார்!

      ஆனால் அதியமானோ, அரசுகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதுதான் வளர்ச்சிக்கு தடை என்கிறார்!

      வினவும் தோழர்களும் தேசிய சுயசார்பு பொருளாதாரமே வளர்சிக்கு வழிவகுக்கும் என்பதோடு, இந்த அரசு எப்போதும் அதை செய்ய முன்வராது என்கின்றனர்!
      இதனால், தேசிய முதலாளிகளும்-தொழிலாளர்களும், விவசாயிகள் மற்றும் மற்ற மக்கள் கூட்டினைவு வளர முடியும் என்கின்றனர்!

      இதில் அதியமானுக்கு என்ன பிரச்சனை? அவரும் வளர வழி செய்யப்படும் தானே? என்றாலும் ஏன் அவர் இதை எதிர்க்கிறார்?
      குரைவான சம்பளத்தினால் தான் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்கிறார்.
      இவரிடம் இனி வாசகர்கள் தான் விவாதம் நடத்த வேண்டும்!
      அதற்கு முன் வந்திருக்கும் மா.சி க்கு வாழ்த்துக்கள், நன்றிகள்!

  37. //.இதே நோக்கியா பின்லாந்தில் இப்படி தொழிற்சாலை நடத்த முடியாது, ஜெர்மனியிலும்,ஹாலந்திலும் நடத்த முடியாது.//

    அங்குள்ள ஆளும் வர்க்கம் போல் இங்குள்ள ஆளும் வர்க்கம் இல்லை .

    அங்குள்ள மனிதர்கள் சிந்திப்பது போல் இங்குள்ளவர்கள் சிந்திப்பது இல்லை .

    உழைக்கும் வர்க்கத்தின் மூளை மழுங்கி விட்டது. பணம் கொடுத்து மழுங்கடிக்கப்பட்டு விட்டது.

  38. மாற்றுக் கருத்து கொண்டிருப்பதாலேயே ‘அதியமான் மனிதாபிமானம் இல்லாதவர்’ என்றெல்லாம் சொல்வது பொறுமையின்மையைத்தான் காட்டுகிறது.

    அதியமானைப் பொறுத்த வரை, ‘இப்போதைய பொருளாதாரக் கொள்கைகள்தான் மக்களின் முன்னேற்றத்துக்கும், வறுமை ஒழிப்புக்கும் உறுதுணையாக இருக்கும்’ என்று நம்புகிறார். ‘இன்னும் அரசு கட்டுப்பாடுகளை ஒழித்து, முதலாளிகள் (தொழில் முனைவோர்) கையைப் பலப்படுத்தினால் வேலை வாய்ப்புகள் பெருகி, வீணாக்கள் ஒழிந்து நாடு செழிப்படையும்’ என்று நினைக்கிறார்.

    அவர் எழுப்பும் கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள். தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்கவும்.

    மா சிவகுமார்

    • இங்கு தொழில் முனைவோரிடையே இருக்கும் போட்டி தான் சுரண்டலுக்கு காரணம் என்கிறார்!
      https://www.vinavu.com/2010/07/26/nokia/#comment-26989

      நீங்கள் (மா.சி) தனிச்சொத்துடைமையை வழங்கும் அதே அரசு சட்டங்கள்தான் குறைந்த பட்ச ஊதியம் போன்ற உரிமைகளை வழங்குகின்றன என்கிறீர்கள்.
      இதை தான் அவர் (அதியமான்) கட்டுப்பாடுகள் என்கிறார்!

      இன்னும் அரசு கட்டுப்பாடுகளை ஒழித்து, முதலாளிகள் (தொழில் முனைவோர்) கையைப் பலப்படுத்தினால், நாடு செழிக்காது முதலாளிகள் தான் மென்மேலும் கொழுப்பார்கள் என்ற எழிய உண்மையை திரித்து திரும்ப திரும்ப கூறுபவரிடம் என்ன விவாதம் நடத்திவிட முடியும்?

  39. உண்மை செய்தியை வெளிக்கொண்டு வந்த வினவு தோழர்களுக்கு நன்றிகள்

  40. வினவு தோழர்களின் பணி பாராட்டுக்குரியது! தொடர்ந்து இது போன்ற கருப்பு முகமுடிகளை முகத்திரைகளை கிழித்திடவேண்டும்

  41. உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் ஆவன செய்ய வினவுத் தோழர்கள் முயற்சியெடுக்க வேண்டும். வெளிநாட்டில் வாழும் என்போன்றவர்களால் களத்தில் இறங்கி போராட இயலாது. ஆனால் எனது ஆதரவு எப்போதும் உண்டு.

  42. nalla katturai
    anal ma ka i ka mattrum vinavu itharkaga enna seeyya thittam?
    fellows like nokia mncs are drinking the blood. they shall be thrown out of india
    s seshan

  43. //ஃபாக்ஸ்கான் தொழிலாளரின் சாலரி ஸ்லிப்.//

    Dear Vinavu,

    There are several variables in this pay slip. All employees’ salary and deductions are NOT the same. This salary output is from their database. it is very very easy to pinpoint that employee. With a couple of queries, one can easily find out. So remove the copy of the salary slip immediately. You can help to prevent an employee’s family from going into poverty.

    If that employee is fired, rehiring is difficult as no personnel manager would like to hire that employee ( potential problem, in their minds).

    • ஆட்டையாம்பட்டி அம்பி, நீங்கள் சொல்வது உண்மைதான் அதானல்தான் காட்டிக்கொடுக்க்கஃகூடிய பகுதிகைள மறைத்து பொதுவான பகுதிகளை மட்டும் வெளிக்காட்டியிருக்கிறோம்

  44. ///நடந்தது ஒரு விபத்து. இன்னும் முழு விபரம் வெளியாகவில்லை. அதற்க்குள் போபால் ரேஞ்சுக்கு ஒரு பில்டப் !//

    உண்மை!

    அதியமான் சொன்னாமாதிரி போபால் மாதிர் ஒரு பேராபத்து அல்லது ஒரு பெரிய விபத்து நடந்ததுக்கு அப்புறம் எழுதுங்களேன், வினவு

    அதுக்குள்ளே என்ன அவசரம்!!!

    • அம்பி!

      அந்தாளுதான் இப்ப என்ன நடந்திருச்சுன்னு பதிவு எழுதறீங்க? விச வாயு கசிஞ்சிருச்சு அவ்வளவு தானே? செத்தா போயிட்டாங்க?
      அப்படியே செத்தாலும் போபால் ரேஞ்சுக்கு எதுக்கு பில்ட் அப் கொடுக்கறீங்க என்று வக்கிரமாக சொல்கிறார் என்றால், நீங்களுமா??

      இவர் (இவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… என்று தான் எழுத வேண்டும், இல்லை யென்றால் தனிமனித தாக்குதல் என்பார்கள் 🙁 ) இந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மட்டுமல்ல, இந்த வக்கிர வார்த்தைகளைக் கொண்டு போபால் மக்களையும் சேர்த்தே இழிவு படுத்துகிறார்!

      • ///அப்படியே செத்தாலும் போபால் ரேஞ்சுக்கு எதுக்கு பில்ட் அப் கொடுக்கறீங்க என்று வக்கிரமாக சொல்கிறார் என்றால், நீங்களுமா??//

        அக்காகி,

        உங்களுக்கு தாய் மொழி தமிழ் தானே?

        ///உண்மை!

        அதியமான் சொன்னாமாதிரி போபால் மாதிர் ஒரு பேராபத்து அல்லது ஒரு பெரிய விபத்து நடந்ததுக்கு அப்புறம் எழுதுங்களேன், வினவு

        அதுக்குள்ளே என்ன அவசரம்!!!///

        இதற்க்கு பெயர் வஞ்சப் புகழ்ச்சி அணி என்று பெயர்!

        • அம்பி!
          //இதற்க்கு பெயர் வஞ்சப் புகழ்ச்சி அணி என்று பெயர்!///

          மன்னிக்கவும்! நேற்று இக்கட்டுரையை படித்து வந்த கோவத்தை விட, அதியமானின் வக்கிர பின்னூட்டத்தால் வந்த கோவம் அதிகமாக இருந்ததால்….. உங்கள் தமிழை சரியாக கவனிக்கவில்லை!

        • The word “BHOPAL” and NOKIA were misused in the title for this post. that is the only perversion (Vakkiram). Nokia was not involved (only Foxconn) and the use of the word Bhopal was just to grab attention and a cheap stunt.

          more workers die routinely while cleaning septic tanks at homes and while clearing blocks in metrowater sewage lines in Chennai and elsewhere. Methane gas posinnning. It is very frequent occurance. try comparing those with this Foxconn incident before using ‘vakkira’ works. ok.

          and what is the latest news and status of the affected workers ?

  45. தோழர் வினவு
    கட்டுரை படிக்க அதிர்ச்சியாக உள்ளது.

    அந்த நிறுவனத்தின் மீது பொது நல வழக்கை தொழிலாளர்கள் சார்பாக போடவும்.

  46. அதிர்ச்சியாக இருக்கிறது. போபால் போன்ற ஒரு பேரழிவு நடைபெற அனுமதிக்கக்கூடாது. போபால் வழக்கின் தீர்ப்பு நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவன அதிபர்களுக்குத்தான் உற்சாகமானதாக இருந்திருக்கும். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சட்டத்தாலோ அரசாங்கத்தாலோ ஒன்றும் செய்யமுடியாது எனும் தெனாவட்டிற்கும் போபால் வழக்கின் அந்த அராஜக தீர்ப்பே முன்மாதிரியாக இருக்கிறது.

    கள ஆய்வு நடத்தி உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த வினவு தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  47. தோழரே ,
    நீ போராட வேண்டிய இடம் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகள் தாம் ….,

  48. Identifiable Variables in the Pay Slip:

    1. June 2010 Pay slip. Those who worked in June 2010 will be identified.
    2. Department: partially shown as ‘ssembly” This will eliminate others who work for other department.
    3. Days: 26. From the above reduced list, ONLY those with days 26 will be identified.(some may have attended for lesser days or more; what if he has taken one day leave?)
    4.From the above list those with ‘OT’ zero hours will be identified.(some may have worked overtime)
    5. Those with basic salary of 2895 (some may get more some less) will be identified.
    6. Additional allowances: “0” those with additional allowances “0” will be further identified. Others with additional allowances will be eliminated.
    7. Night Allowance: 154 Unless this is Constant for all, there is no problem. I believe, this will be based on the nights worked. So one can find out how many nights the employee has worked.
    8.Deducations vary among employees with several factors:: This PF of 463 , ESI of 71, may not be CONSTANT for all employees..if it varies with employees, then it is possible to find who that is
    9. The other variables are net pay: 3270.
    My question: Are all employees getting the same net as 3270. If not, the system would pick who all received 3270 for June 2010.

    I still feel that it is highly unlikely that all employees would receive the same type of pay slip. And, if the employees count is small (say, around 1000 employees), this person can be easily sorted out.

    This can be done in a maater of minutes with querying the database.

    Anyway, you are the best judge; please take your decision.

    Thanks

  49. ஃபாலொ அப் குடுங்க பாஸ்.. அந்த மக்கள் இப்போ எப்படி இருக்காங்க.. குணமாயிட்டாங்களான்னு..

  50. This News is biased to one side and its some what looks like a Maoists website. Every where some problem is there. Is there no accidents happen in Govt industries ??

    Even accidents happen in private ..its not the owner who did that… still its operated by indians only. If you take a private industry like your enemy then millions of people wont have job in india.

    For the pay wise, yes its really to low and we should ask govt to set low wage limit and must ask them to monitor that. If any company pay low, you should able to complain to govt and your identity should not be revealed. So these things suppose to be done with govt… as long as people come to work the management will try to use that. Anyway i oppose that attitude of Foxcon.

    In 1990’s we were jobless, just waiting in employment office for jobs, and govt itself so poor to help others …..but now in 2010 everything changed we have jobs, govt is rich to spend money for poors like free insurance, ambulance, home…etc ……how we achieved this ?????????? Its all because of the investor who came here and give job to us, and other hand our worker make their business sucessful ….so its a win win game dont talk like they are only gain from us.

  51. இந்த பொறம்போக்கு விளம்பர மீடியாக்கள் இங்கெல்லாம் தைரியமாக செல்வதில்லை. செல்ல முயன்றாலும் அரசியல் வியாதிகளின் மிரட்டல், பண பலத்திற்கு அடிபணியும். இந்தக் கொடூரத்தி ஆடி விரதம், உணவு விடம் என செய்திகள் வெளியிட்டு மனித உணர்வுகளைக் கொச்சைப் படுத்தும் காசு பார்க்கும் ஊடகங்களுக்கு என் வன்மையான கண்டனங்கள்.

  52. கட்டுரை எழுதிய அசிரியருக்கு எங்கள் தொழிற்சங்கத்தின் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம் .
    நாதாரி நாய்களே
    நோக்கியா விசிறிகளே
    நோக்கியா கம்பெனி
    தொடங்க முதலீடு 330கோடி ரூபாய் ஆனால் அரசிடம் இருந்து பெற்ற வரிசலுகை மற்றும் மாணியம் 660 கோடி
    இது ஆனந்த விகடனில்
    பன்னாட்டு நிறுவனங்களால் தமிழகத்தின் நிலை பற்றிய கேளவிக்கு வந்த
    பதில்
    எல்லாம் யாருடைய பணம் ? பன்னாடைகளா அது உங்க பணம் தான்டா

  53. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்
    நோக்கியா நிறுவனத்தின்
    முதலீடு 330கோடி
    கடந்த வருடம் அரசிடம் இருந்து மாணியமாகவும்
    வரிவிலக்கும் பெற்றது
    660கோடீ இது ஆனந்த விகடனில் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தாவலாக பதிவு செய்யப்பட்டது
    ஏன்டா பன்டாகைகளா
    இந்த பணம் யாருடையது
    எல்லாம் தமிழக மக்களுடையது இனியாவது நோக்கியாவுக்கு மாமா
    வேலபாக்காம தமிழனா
    இந்தியனா இருக்க கத்துக்கங்கடா

  54. வினவின் அபார முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ஆம், நோகியா நிறுவனத்தின் உள்ளே செல்வதென்பது முடியாத காரியம். அதிலும் வெளியுலகிற்கு தெரியாத பல செய்திகளை சேகரித்து அம்பலப்படுத்தியதற்கு பாராட்டுக்கள். வேலை நிமித்தமாக பாக்ஸ்கான் உள்ளே செல்ல வேண்டிய தேவை இருந்தது. அப்போது இளம் தொழிலாளர்கள் சக்கையாகப் பிழியப்படுவதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. சார்லி சாப்ளினின் படத்தில் வரும் ஒரு காட்சியைப் போல, நகரும் பெல்டில் வரும் உதிரிபாகங்களை ஒவ்வொன்றாக (அது கடந்து செல்லுமுன்) விரைவாகப் பொறுத்த வேண்டும். அந்த பெல்டிற்கேற்ப, எந்திரத்தோடு எந்திரமாக வேலை செய்துக்கொண்டிருப்பார்கள். மூன்றடிக்கு இரண்டு ‍பேர் உட்கார்ந்திருந்தும் அவர்களால் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியாது.

    இந்த மூச்சைத் திணறச் செய்யும் வாயுவானது, எப்போதோ கசியும் விபத்தல்ல, எப்போதுமே அந்த நெடி வந்துகொண்டேயிருக்கும். இரண்டு முறை அந்த யூனிட்டிற்கு சென்றிருக்கிறேன், இரண்டுமுறையும் அதை உணர்ந்திருக்கிறேன்.

    மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம். திருபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு பேரிழப்பு ஏற்படாவிடினும், நிச்சயமாக அந்நிவனத்தில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், உயிரிழக்கவும் கூடும். ஆதலால் வினவு வாசகர்கள் ஒவ்வொருவரும் இந்த அபாயத்தை உணர்ந்து, மக்கள் மத்தியில் கொண்டுச் செல்ல வேண்டும். நம் கண்முன்னே மீண்டும் ஒரு போபால் நடக்கவிருப்பதைத் தடுக்க வேண்டும். வினவிற்கு நன்றி.

  55. மாமா வேலை செய்யும் தி.மு.கா வை ஒழித்து கட்டினால்தான், இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும்

  56. அருமையான ரிப்போர்டு.. வினவு இது மாதிரி மாசம் இரண்டு exposure வ்ரனும்.
    தோழர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த பிரச்சனையை இத்தோடு விடாம பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் நாம கூட இருக்கனும்

    • This Nakheeran’s article mentions about Foxconn and Nokia is not mentioned.

      Where does Nokia comes into picture here?

      Do you mean to say, except Vinavu all media, all newspapers and magazines are not giving correct information.

  57. CRAZY TO SEE YOU ALL TALKING LIKE TERRORISTS . SO CAN WE ASK ALL COMPANIES TO GO OUT FROM TN ??

    THEN WE WILL JOBLESS AND SITTING IN HOME. INDIA IS IN A TRANSFORMATION PHASE THERE WILL BE LOT OF TROUBLES BEFORE WE BECOME A DEVELOPED NATION, YOU CANT OMIT THAT.

    THIS IS AN ACCIDENT WHY YOU ALL PRETEND LIKE A MURDER ATTACK ?

    • Is it accident? if it means it should be broadcast in all the medias. The medias produced wrong information abt this issue. Now a days if the people tells truth means they are treated as terrorist. if we lost those 200 people’s means that time also u may said it is becoz of accident. Bcoz u got everything as ur wish. Think abt human first. If u feel India will become developed country bcoz of these factories, country may be developped in economy, but we may not be here to happy about it.

      • You are saying its planned Murder attack ?? Are you out of your mind ??

        Foxconn is not a TN company it has industries all over the world….it wont dare to do those things. If they did that and if they caught then thats all they have to close shop all over the world.

        Even brainless people also wont think to do that. Don’t let your imagination to fly all over.

        1. Is our govt run railway or indutries never face any accidents ??? Are everthing planned purposely ?? Accidents are caused by human negligence and you accept it or not this foxconn accident also should be happend by human negligence and that human too a worker only

        2. Are you saying the Foxconn owner is come here and try to kill these people ??

        3. The salary is base on supply and demand too..as like you are saying is the salary is so less compared to anyother factory then worker going to go there to work ?? We are as consumer want everything dead cheap then those manufactures are pushed to make cheap and end up cost cutting affects low level workers ………It happens all over the world not just in TN.

        Ofcourse companies should try to give reasonable salary. And that basic salary suppose to fix by govt.

        4. Every year 1.5 laks engineers coming out in TN and how many diploma, Master degree, Arts …etc ?????????

        How to create jobs for them ??? if you act so aggressive and chase away investors then we all will become africa citizens.

        You need tolerance and give & take attitude. You cant get everything in over night. Ofcourse for this kind of accidents the company should pay huge compensation and so that company should feel the pinch to avoid these accidents to happen again.

        • // Foxconn is not a TN company it has industries all over the world….it wont dare to do those things. If they did that and if they caught then thats all they have to close shop all over the world.//

          Vaare Vaavvv… Bravo…Anand,
          I strongly trust that you are one of a member of staff with Foxconn. That’s why your blood is steaming for them.

          Friend, yes… your remarks are true only if Union Carbide factories were clogged worldwide and Anderson have been enjoying in Indian Jail for the last 24 years.

          Go to Google and seek out your company, chiefly in China. You can realize the fact.

          http://en.wikipedia.org/wiki/Foxconn

          //In June 2006, the Mail reported allegations of abusive employment practices by Foxconn, which the company later denied.[14][15] Apple launched an investigation into these claims.[16] Apple’s inspection team judged the claims of employee mistreatment to be largely unfounded, but it also discovered that at peak production times some employees were working more hours than the limit of 60 outlined in Apple’s “Code of Conduct”, and that 25 percent of time workers did not get at least one day off each week.[17] These same workers complained that there was not enough overtime work during off-peak periods. The auditing team also discovered that junior employees were subjected to military-style drills,[18] and workers had been punished by being made to stand at attention for extended periods.[19]
          Foxconn admitted that it requires of employees an extra 80 hours overtime per month, while the local labour law only permits 36.[20] Foxconn sued Wang Yu and Weng Bao of China Business News, the journalists responsible for revealing these practices, for US$3.77 million and filed a successful court ruling to have the journalists’ assets frozen.[21] The court ruling was called “absurd” and heavily criticized by several Chinese law professors and legal experts.[22] Reporters Without Borders sent a letter to Apple Computer CEO Steve Jobs to implore Foxconn to drop the case.[23] Later Foxconn reduced its demand to a token 1 yuan (12 U.S. cents) and withdrew the request to freeze the journalists’ personal assets.[24]
          In a conversation between a Reuters journalist who had visited the Foxconn factory and a British Broadcasting Corporation interviewer broadcast on May 27, 2010,[25] the Reuters journalist commented that “many workers told us that throughout their shift … they are not allowed to speak at all, so there is absolutely no conversation at all between workers during their shift”.//

          They have been annoying to execute the same Chinese anguish in India too.
          This should be sternly cut out at the primary stage.

        • Faaz::

          I am not supporting Foxconn …I too says Foxconn should be punished for this acciedent and must give compensation to those affected… But you all creating wrong idea and seems you all want to chase away all MNC even its IT or Manufacturing …

          If we make investors feel TN not a place to invest then how we are going to create jobs….Why you all creating false information like MNC’s killing workers ?? Most of the MNC’s are giving good and safe envirnment to our people than a local company …is it true or not?

          Now Chennai is Asia’s Detroit and slowly becomes leader in automotive and other manufacturing and we have good potential to grow our econmy and reduce poverty …all these happens because we are able to attract all those major player then why you are so hateful about them?

          When i ask logical question you are saying i am in foxconn ….why not you answer that ??? Can i say you are leader of CITU creating angry in workers ????

        • //// Foxconn is not a TN company it has industries all over the world….it wont dare to do those things. If they did that and if they caught then thats all they have to close shop all over the world.//

          Friend, yes… your remarks are true only if Union Carbide factories were clogged worldwide and Anderson have been enjoying in Indian Jail for the last 24 years.//

          Please bestow appropriate response for the above then I will retort.

        • //Most of the MNC’s are giving good and safe envirnment to our people than a local company …is it true or not?//

          Can u please list out the companies..
          Few…may be.But only for white collar jobs. Here we are talking about the laborers.

          Can you please notify a MNC which is providing excellent facilities to the labors, the same they are providing their European/American country labors.

        • //How to create jobs for them ??? if you act so aggressive and chase away investors then we all will become africa citizens.//
          ஏற்கனவே ஆப்பிரிக்காவை விட கேவல நிலைக்கு இந்திய மக்கள் போய்விட்டனர் அன்பர்களே…

  58. This is again a mischievous and malicious propaganda indulged by Communists who try to extract maximum mileage out of the episode.As one who worked in such companies in responsible position,I can vouchsafe that there is no use of hazardous chemicals.The hype is created to spread misinformation which is typical of communists/Dravidian politics to arrive at a negotiated settlement with the affected company

  59. Vinavu,

    This incident is very bad & it should be condemned. Every industry should take care of safety.

    I have some questions.

    what is your agenda for job creation?

    What is your plan for employing 10 Lakh people entering into Job Market every year?

    What is the industry model, you are proposing?

    If you don’t want MNCs, tell us what should we do?

    Give the readers some idea on which sort of industries are good for job creation.

    Do you have any idea?

    If you don’t have any idea or suggestions, whistle-blowing articles liks this will perform only 5% of its work.

    • திரு. Common Man,

      நம் நாட்டில் நில வளங்கள் ஆகட்டும், நீர் வளம் ஆகட்டும், கனிம வளம் ஆகட்டும், மனித வளம் ஆகட்டும் எல்லாமும் நிறையவே உள்ளன. சிறு சிறு முதலீட்டில் நிறைய மாந்தர்களுக்கு வேலைவாய்பளிக்கும் குடிசை தொழில்கள் நாடு முழுதும் உருவானால் கண்டிப்பாக எல்லோருக்கும் வேறு யாருடைய உதவியின்றியே வேலைவாய்பினை வழங்கிட முடியும்.

      சிறு சிறு ஆலைகள் – அவை அரிசி ஆலைகளோ, சர்கரை ஆலைகளோ, எண்ணெய் ஆலைகளோ இப்படி நிறைய மனித வளம் தேவையிருக்கும் ஆலைகளையும் விவசாயத்தை, எப்படி குறைந்த நீர் கொண்டு, இயற்கை முறையில் பயிரிட்டு எல்லோருக்கும் எவ்வாறு உணவு அளிக்க முடியும் என்பதனை கண்டறிந்து முறைகள் வகுத்தால் கண்டிப்பாக நாடு செழிபடையும்.

      நாம் சுய கவுரவத்துடனும் தன்னம்பிக்கையுடனும், அடிமை வழ்வை அகற்றி தலை நிமிர்ந்து வாழலாம்.

      நன்றி
      புதிய உலகோன்

      • Small industries ???? You know these Nokia , Hyundai are called as mother industry which feed those industry ??

        You sugar can, rice…etc is there in india for century but how much jobs was created and Now how are become a developing country ???

        • Anand,

          ஏன் கோப படுகிறீர்கள்! 120 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் அந்நிய முதலீடுகள் கோடி கோடியாக கொட்டினாலும் எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளை நல்கிட முடியுமா சொல்லுங்கள்?

          இது போன்று அந்நிய முதலாளிகள் நம் சகோதரர்களின் உயிரை வாங்கி ஏதோ கொஞ்சம் பிச்சை இடுவதை வாங்கி தின்னும் அவல நிலை தானா சிறந்தது? மாற்று என்ன என்று யோசியுங்கள். காந்தியடிகள் சொல்லிய பாதையை, கிராமிய பொருளாதாரத்தை, சுதேசியத்தை பற்றி சிந்தியுங்கள். இது தான் எல்லோருக்கும் வேலைவாய்ப்புகளை அளிக்க வல்லது. நம் கரத்தினை வலு சேர்க்க வல்லது.

          கண்டிப்பாக இது தான் நம்மை சுய கவுரவமிக்க மணிதர்களாக வாழ வைக்கும் வழியாகும். இல்லையென்றால் இது போன்ற விபத்துகள் சர்வசாதரண நிகழ்வுகள் ஆகி நம் உணர்வுகள் மறுத்து போகும்படி தினம் தினம் நடக்கும்.

          ஏன் என்று கேள்வி கேட்க கூட நாதியற்றி நடைபிணமாகும் அவல தேவையா? சிந்தியுங்கள்!

          நன்றி
          புதிய உலகோன்

        • புதிய உலகோன் ::

          Please show me which country developed with only agriculture ??? Industrilization is must to create jobs and come over poverty. For india with this huge population only agri can not create enough jobs …that what we saw already right ?

          When mahtma gandhi say agri is only source for income that time there were no globalization there was no chance to create jobs as like now so that time only source is Agri….Now the world is diffierent.

          You are pretending like Foreign MNC’s are keep on killing workers ?? Dont only see about bhopal ..come to the present world how many times this kind of accidents happen before ? Is this accidents are unusual for us or not? Now FOxconn shut down its plant for 1 week you know ho much the loose right ….then you think they prefer to make this happen ?

          I am not supporting foxconn…ofcourse they should be punished and make sure this not happens agian ….but i am against guys who taking this chance and create false propegenda like foregin investors are criminals………..they win from us and we win from them.

  60. நோக்கியா – ஃபாக்ஸ்கான் ஆலையின் தற்போதைய நிலவரம் – 27.7.2010 3.15pm

    இராமச்சந்திரா மருத்துவமனையில் இன்னும் 20 தொழிலாளர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். அதில் அவசர சிகிச்சை பிரிவில் 7 பேர் உள்ளனர். அதில் ஒரு தொழிலாளி சுவாசிக்க மிகவும் சிரமப் படுவாதாக தொழிலாளிகள் கூறினர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த தொழிலாளிகள் பலரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இருப்பினும் நெஞ்செரிச்சல், அரை மயக்கம், இன்னும் சில உடல் உபாதைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். நிர்வாகமும், மருத்துவமனையும் தொழிலாளர்களை வேகமாக டிஸ்சார்ஜ் செய்வதிலேயே முனைப்பாக இருந்தனர்.

    நேற்று தொழிலாளர் துறை தா.மோ அன்பரசன் ஆலைக்கு வந்து பார்வையிட்டிருக்கிறார். அதன் பலனாக இன்று சைட் 1, சைட் 2 பிரிவுகள் உற்ப்த்தியை துவங்கிவிட்டன. கடைசியில் வந்த தகவலின் படி சைட் 3ன் உற்பத்தியையும் ஆரம்பித்துவிட்டனர்.

    மற்றபடி ஆலையில் விபத்து நடந்ததற்கு என்ன காரணமென்பதை இன்னும் தொழிலாளிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. முக்கியமாக அமைச்சர், அரசு துணையுடன் எந்த பிரச்சினையுமின்றி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த விசயத்தை மூடி மறைக்க ஆலை நிர்வாகம் முயன்று வருகிறது என்பது தெளிவாகிறது. தொழிலாளிகள் கையறு நிலையில் உள்ளனர்.

    மேற்கொண்டு தகவல்களை அவ்வப்போது சேகரித்து தருகிறோம்.

    – வினவு செய்தியாளர்.

    • To the Editor ::

      What your intention ? you are care about those affected or you want to create riots and close that factory ???

      Just google and see from USA to Taiwan everywhere this news created headlines …then how much damage its caused to that factory… Do you think foxconn planned purposely to get this damage ??

      If you make investors to scared about TN then no one will invest here and we wont get any job…..

      • Investments!!! and Jobs!!!

        if these investments are going to create, such low pay jobs, is it development? if you are intend to tell this is development, then we may have to ask, whose development you are talking about?

        ///sugar can, rice…etc is there in india for century but how much jobs was created and Now how are become a developing country ?////

        In the so called developed countries, there were minerals and wealth’s even before 16th century! they did nt develop well before 16th century! why??
        and Now why do they depend on our nation’s wealth, minerals, man power and market, etc ???

        the point is, why dont the investors follow basic labour laws and why dont they follow basic precautions to prevent accidents?

        why do they neglect these basic things? is negligence not a crime?

        are we going to neglect “the corporate sector’s negligence” towards our own people in the name of development and patriotism??

        then your patriotism should be questioned or it should be branded as “selfishness, etc… ” !!! same on you bravo! 🙂

      • Anand,

        Investments!!! and Jobs!!!

        if these investments are going to create, such low paid jobs, is it development? if you are intend to tell this as development, then we may have to ask, whose development you are talking about?

        ///sugar can, rice…etc is there in india for century but how much jobs was created and Now how are become a developing country ?////

        In the so called developed countries, there were minerals and wealth’s even before 16th century! they did nt develop well before that! why??
        and Now why do they depend on our nation’s wealth, minerals, man power and market, etc ???

        The point is, why dont the investors follow basic labour laws and why dont they follow basic precautions to prevent accidents?

        why do they neglect these basic things? is negligence not a crime?

        are we going to neglect the corporate sector’s ‘negligence’ towards our own people in the name of development and patriotism??

        then your patriotism should be questioned or it should be branded as “selfishness, etc… ” !!! same on you bravo! 🙂

  61. //Author: K.R.Athiyamann
    Comment:
    there are millions of poor who work for even less wages. We miss them easily. look at the workers in small eateries, bakeries, etc. compared to them Nokia workers are better off. what plan do you have for their betterment ?//

    அதியமான், அதாவது, பரம ஏழைகள் இருக்கும்போது சாதா ஏழைகளைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளலாமா?

      • ஒன்று மட்டும் புரியவில்லை, போக்ச்கோனில் அநியாயம் நடக்கின்றது, தொழிலாளர்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள் என்பது உலக அளவிலான அப்பட்டமான உண்மை.

        இதற்கு என்ன தீர்வு, இதுதான் இந்தப் பதிவின் மையப் பொருள்.

        ஆனால் சிலர், வெளி நாட்டுக்க் கம்பனிகளை மூடினால் இங்கு வேலை வைப்பு போய் விடும், அது இது என்று பதறுவதன் அர்த்தம் புரியவில்லை.

        அய்யா, இங்கு வெளி நாட்டு நிறுவனங்கள் வரட்டும். தடையில்லை.
        ஆட்சி செய்யும் குடும்பம் கோடான கோடி சம்பாதிக்கட்டும்.

        ஆனால் தொழிலாளிகளுக்கு நல்ல சம்பளம், நல்ல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

        அழுகாத குழந்தைக்கு பால் கிடைக்காது. போராட வேண்டும். நியாயமான உரிமைகளுக்காக.

        • ///அய்யா, இங்கு வெளி நாட்டு நிறுவனங்கள் வரட்டும். தடையில்லை.
          ஆட்சி செய்யும் குடும்பம் கோடான கோடி சம்பாதிக்கட்டும்.

          ஆனால் தொழிலாளிகளுக்கு நல்ல சம்பளம், நல்ல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

          அழுகாத குழந்தைக்கு பால் கிடைக்காது. போராட வேண்டும். நியாயமான உரிமைகளுக்காக./////

          அதெப்படி உங்கள் குழந்தைகள் பாலுக்காக அழலாம்??

          எங்கள் குழந்தைக்கு, செல்போன், வீடியோகேம் இதெல்லாம் மலிவு விலையில் கிடைக்கிறதே! அப்படி அழுதால், அதெல்லாம் கெட்டுவிடாதா?
          – அதியமான் அன் கோ, நோக்கியா விசிறி, காமென்மேன் அன்கோவினர்!

      • Millions of Parama Ezaihal had been pulled out into ‘ezaihal’ category in the recent decades. Otherwise, do you want them to be in the param elaihal category forever ?

        and cellphones are now used commonly by the POOR too. millions of daily wage earners, plumbers, electricians, maid servants, etc use and they were never able to communicate like this before. try to see the big picture first. 15 years ago the cell phones were for the super rich only.

        many labourers who migrate from their villages and towns now are able to communicate with their families easily and at very low cost now. Cell phones are most useful for them.

        • //Millions of Parama Ezaihal had been pulled out into ‘ezaihal’ category in the recent decades. //

          வாங்க டேப்ரிக்கார்டர்…

        • ////Millions of Parama Ezaihal had been pulled out into ‘ezaihal’ category in the recent decades. ////

          இங்கே அதியமானிடம் மா.சிவக்குமார் சில கேள்விகள் கேட்டிருந்தார் மேலும் சில தோழர்களும் அவரை அம்பலப்படுத்தி சில பின்னூட்டங்கள் எழுதியிருந்தார்கள். அவை எதற்கும் பதில் சொல்லாமல் மீண்டும் தனது வறுமை ஒழிப்பு டேப்ரிக்கார்டரை வெற்றிகரமாக 1000மாவது தடவை ஓட விடுபவரை வேறு என்ன பெயரிட்டு அழைக்க இயலும்?

          வறுமை ஒழிந்து விட்டது என்பதற்கு இதுவரை ஒரு ஆதாரம் கூட கொடுக்காதவர். ஆதாரம் என்று இதுவரை இவர் கொடுத்த சில பத்து சுட்டிகளில் ஒன்றில் கூட இவர் சொன்ன ஆதாரங்கள் இருந்ததில்லை என்ற வரலாற்றுச் சிறப்புப் பெற்றவருக்கு வேறு என்ன பெயரிடுவது என்றே எனக்கும் குழப்பமாகத்தான் உள்ளது….

  62. i worked in BIOCON Ltd is one of the leading pharma….. They treat employee very well., Starting from food provided by the canteen…here the Vice president to the sweaper have to maintain the que in the canteen to take the food. They treat everybody equal respect.

    2) medical insurance., i Met an accident outside the company., but they provide full support and they provide all insurance.,

    3) leave

    • Most of the Private esp those Foreign MNC provide all these benefits, But these workers still want more they want to take ownership of a company.

      1. They want to start union so that workers no need to work and simply go for strike everything.

      2. Every year you can ask bonus even if the company in recession.

      3. Every one will get equal bonus no matter a guy performance good or bad.

      4. Mangers and supervisors will get scared to talk to these workers due their rowdyism

      5. Workers can go and kill staff and no one can ask anything.

      6. But if accident happen due to workers negligence they will twist it like murder attack by the management

      • i too worked in a same company

        1. many of us working more than 10 hours per day

        2. during audit time we worked more 14 hours but they have not paid any ot

        3. During recession time they are not affected even they started to built new one but during increment time they said because if recession you will be given less increment.

        4.It is their duty to give quality food

        • I father is Govt official He too work over night, over time everything when things get important esp when govt check up…etc

          Even in abroad also the same, in singapore worst that this….But accept its the nature of the world. Your company is competiting with the world they have hard time too.

          Misusing recession ? Ya that’s true some are doing that. But my question if we don’t have these industries what we are going to do. We are still in developing stage at now we cant demand huge.

          Once india’s domestic market starts to work and if we get developed we will have more chance to demand.

          Simple example, in 1990 lot of farm workers beg for job and so they mistreated and misused by land lords….but as many come to city to work now the demand for farm workers increased. Now the farm demanding their requirement easily.

          We have prob with even our own brother and sister but we should not go in to rude conclusion quickly. Even countries like US, UK came across our stage.

        • அக்காகி answer for you ::

          1. அக்காகி/// why do the employer/ Owners / investors have their own union ?? ///

          **Vasu**: Of course for us we don’t not mind if any group form union if it wont affect country’s economy. These investors form union really help the in some ways to build competition between them and to face the global competition. Same like the workers union if these owners union go for frequent strike or anything bad we will sure prefer to ban owners union also. Its all brand name only. In 9 out of 10 cases worker unions always misuse their power, but in 1 out 10 cases owner unions misuse their power. And keep in mind these owner unions are only mid scale and small scale industry where there is no workers union so you can’t mix these two.

          2. அக்காகி: /// do you mean if we fight against the exploitation, then we should nt go to work and subsequently let with out food, we and our families die?? its illicit… try better logic! ///

          **Vasu**: So finally you agree without job we wont have life correct ?? Your are very good in twisting things 🙂 …. I am asking You people are fully against foreign companies and private companies ….and you are fully assuming they always mistreat workers …..and you are so sure saying there are so many other good jobs in agri and other old business …right ?????? So if thats the case why you all need to join in that company ?? if your life is so good outside then its very simple you can do your own things right ???……….there are so many other people who willing to work there …so can you please give your job to them instead of stilling in a place where you dont like ??

          3. Farmers suicide :: Ok ..so you dont want to relocate people and set up company right ?? So where to set a industry ? In the sky ? You can ask good compensation instead of saying no to them. When roads and metros comes in city ..then people in the city relocated for that….when industries come where it have to located in outer city only then villagers are relocated too…… there is no other choice …..India planned to diversify its industries and promote set up industries and education center in villages to create jobs in village and poor people.

          In india farmers only earn very little from agri due, if the monsoon fails they cant even live for 1 year due to poverty. This is because agri is not giving good return to small farmers and farm workers then just earn few cents to live everyday only. My IIM professor said in india major poverty is in rural due to too much of manpower availability. Ex in western country if 1 ton rice produced by five farmers in india the same 1 tone produced by 100 farmers …. We need to give those small farmers and farm workers some good job through this industrialization. Then you will ask who will produce food then ?? Yes we need modernize and increase farm productivity same like western and developed country. We have to allow big players to produce food to meet the huge demand too. Thats what india trying to do now.

        • ////In 9 out of 10 cases worker unions always misuse their power, but in 1 out 10 cases owner unions misuse their power. //////////////

          you got to prove this by providing the evidences!! else you have to agree that you are just parroting capitalistic propaganda! i think you are still wearing diapers!!! no one would come up with these illicit arguments, except who is stubborn to accept the reality!

          but the reality is there are 11 out of 10 cases, owner unions uses power! of course they are not at all misusing, they are just using as the unions as those are created to do the JOB! (already i ve listed JOB of owners union, Refer!)

          You all just yelling the countries economy! read this:
          8 Indian states have more poor than 26 poorest African nations
          http://timesofindia.indiatimes.com/india/8-Indian-states-have-more-poor-than-26-poorest-African-nations/articleshow/6158960.cms

          is it the growth/development?
          if you are gonna parroting again.. i suggest better you learn from Mr.Athiyaman

        • Vasu,

          you immensely twisting the things nor myself!

          you meant because of we dont have job and our government failed to create it, we got to agree with big corporations exploitation! should nt fight against them!

          இப்படி இங்லிபீஸ்ல டைப் அடிக்கிறத உட்டுட்டு, தெருவுக்கு வந்து தமிழ்ல பேசுங்க….. உங்க கொள்கையக்கூட தெருவுல பேசாத உங்களுக்கு தான் தேச பக்தி, இந்திய பொருளாதாரத்துல ரெம்ப அக்கரைன்னு மதுரை பக்கம் தூத்துக்குடி பக்கம் பேசிக்கிறாங்க!!!

      • தொழிற்சங்கம் என்றாலே இப்படி பட்ட அவதூறுகளும் அபத்தங்களும் தொடந்து பரப்பப்பட்டே வருகின்றன! இது ஒன்றும் புதிதில்லை!

        முதலாளி சங்கம் வைத்து இருக்கிறானே, அது எதற்கு??

        1) தொழிலாளர் உழைப்புக்கு தகுந்த கூலிதராமல் ஏமாற்றலாம்! கூலி கேட்டால் தொழிற்சாலையை மூடிவிடுவேன் என மிரட்டலாம்!

        2) ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு தான் லாபமீட்டினாலும், சொற்ப தொகையையே போனஸ் என்று கொடுக்கலாம்! அல்லது தொழிலாளியை வேலையில் இருந்து துரத்தி அதையும் கொடுக்காமல் தவிர்க்கலாம்!

        3) தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்து மேற்பார்வையாளர், நிர்வாகிகளை அதிகரித்து தொழிலாளர்களை மேலும் பிழியலாம்!

        4) இவற்றை எதிர்த்து உரிமைக்காக குரல் கொடுத்தால், தனது அதிகாரத்தை கொண்டு, ரவுடிகள் அடியாட்கள் மட்டுமல்லாது, போலீஸ் கொண்டும் தொழிலாளர்களை தாக்கலாம்! ஏன் கொலைகளும் செய்யலாம்!

        5) லாப நோக்கிற்காக அடிப்படை பாதுகாப்பு வசதிகளைக் கூட குறைத்து கொண்டு, விபத்து நடந்த பின்னர், தொழிலாளியின் மேல் பழியை போட்டு அவர் வயிற்றில் அடிக்கலாம்!

        6) சங்கத்தை பயன்படுத்தி வங்கிகளில் கடன் வாங்கலாம், அரசிடம் மானியம் வாங்கலாம்! வாங்கியதை திருப்பி கொடுக்காமல், மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கலாம்!

        லாம், கீம் என்றெல்லாம் இல்லை! இது தான் நடக்கிறது!

        தொழிலாளர்களால் தாக்கி கொல்லப்பட்ட நிர்வாகிகளுக்கும், முதலாளிகளின் அடியாட்களால், நிவாகிகளால், கைக்கூலி போலீஸால் கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கும் உள்ள விகிதா சாரம் என்ன?

        மேலும் தொழிற்சங்கம் பற்றிய அவதூறு பிரச்சாரங்கள் நடுத்தர வர்க்கத்திடம் தான் எடுபடும்! அறிவு நாணயம் இருந்தால் இதையே தொழிலாளர்களிடம் சென்று பிரச்சாரம் செய்து பார்க்கட்டுமே…

        வினவு,

        ஒரே நபர் வெவ்வேறு கருத்துகளை சொல்வது போல உள்ளது!
        ஐ.பி யை பார்க்கவும்! 🙂
        இந்த இடுகைக்கு ஆதரவாக பெரும்பாலான பின்னூட்டங்கள் வந்ததின் வயிற்றெரிச்சல் வக்கிரப்புத்தி எப்படியும் வேலை செய்யும்!
        கொஞ்சம் தெளிவு (அம்பலப்) படுத்தவும்…. 🙂

        • Haha …Boss why you worry about who is writing comment or from where he is writing. Just see the matter and answer that.

          A simple Question.

          1. If you and some workers so against about Foreign Companies why you all standing in Queue to job from them ?

          2. If you all say we can chase away private company and do agriculture ?? Who is stopping you to do agriculture ??? You can still go for it right ? Why you get a job in private company then start union and talk bad about them ?

          3. I agree some Owners may misuse or exploit workers. But we should have some tolerance and fight for justice without damaging countries economy or without spoiling the future of youngsters.

        • Vasu,

          No reply for why do the employer/ Owners / investors have their own union?

          when owners have right to form and be in the union, then why dont the employee, even it is described as basic right in constitution?
          do you mean our constitution is wrong, it would have given rights to exploit rather than giving basic rights to labors??

          what do you mean to say by this comment??
          //If you and some workers so against about Foreign Companies why you all standing in Queue to job from them? ///
          do you mean if we fight against the exploitation, then we should nt go to work and subsequently let with out food, we and our families die?? its illicit… try better logic!

          ///Who is stopping you to do agriculture ??? You can still go for it right?////
          this comment shows your knowledge!
          in past 15 years in india due to many reasons, above two lakhs of farmers committed suicide
          do you know, the reason behind this?
          formers are forced to relocate from villages and they are becoming economic refugees in their own country!

          ///some Owners may misuse or exploit workers.///
          ha ha ha…. If he not exploits he is not at all a owner!

          In ur previous absurd, you yelled some thing about labor unions……
          the Truth is most of the owners misuse money, muscle and manipulation power.
          Some labors/employees might have misused their unions, Not all!
          that misuse also due to the revisionist-Communist parties and the non-communist reactionary parties!

          ஸ் அப்பா இப்பமே கண்ண கட்டு தே!

  63. HI ALL,

    I WORK IN FOXCONN,GETTING A GUD SALARY

    CAN U LISTEN TO ME FOR A MINUTE PLEASE

    THANKS

    1.THERE IS NO COMPARASION BETWEEN FOXCONN ISSUE AND BHOPAL

    2.THERE IS NO LEAKAGE ARE EVEN CHANCE OF LEAKAGE IN MY COMPANY ,I CAN ASSURE EACH AND EVERYONE

    3.THIS IS NOT A DRAMA BY FOXCONN,INDEED A DRAMA BY WORKERS AND UNIONS

    4.IAM ASHMED TO WRITE THIS ,EVEN IAM IAM ONE OF THEM

    COMPANY MADE A MISTAKE BY APPOINTING WORKERS WHO WERE UNEDUCATED

    THATS THE MAIN REASON FOR ALL

    IF NOKIA IS NOT HERE IN CHENNAI ,THESE MY CO WORKERS WILL HAV TO WORK IN ANY SMALL SCALE INDUSTRY WITH MUCH LOWER SALARY

    EDUCATED AND WHO WERE INTERESTED IN THE DEVELOPMENT OF CHENNAI OR themselves please dont believe this article

    please

    this is all drama

    YES

    I ACCPET NOKIA DOING CELLPHONES AT LOWER RATES AND GET BIGGER BENIFITS

    DOES ANY 1 KNOW ,HOW MANY TAMIL PEOPLE GETTING GUD SALARY IN NOKIA

    R THEY ARE FORGINERS

    A WORKER STUDIED 10 TH R TWELTH WILL GET SALARY OF 4000 WITH FOOD AND TRANSPORT

    IS IT IS A SIN TO GIV JOB TO A UNEDUCATED PERSON IN CHENNAI

    GOD BLESS THIS STUPID BELIVERS OF THIS THREAD

    ALL THEY WANT IS COMMUNIST ATTITUDE

    • I know people who working at mess getting better salary than this .
      Then is FOXCONN giving free food , they are charging for food and salary .
      for three to four years people are working with bad salary .

      1. What is the necessary to take uneducated people , because there is a scope
      to use their poverty and give more works with less salary .

      I think You are management staff Bullshit

      • //Yes we you are right, the pay 4000 is lower. But the fact is, in the present market who ever cheap is wins. If India is costlier than china, singapore, japan, turkey …etc then what for the company come here ?? //

        அவ்வளோ கஷ்டப்பட்டு ஏழைங்க வவுத்துல அடிச்சி முதலாளிங்க வயிறு வளக்க வேண்டியிருக்குன்னு தெளிவா, அழகா எழுதிருக்காறு vasu. இதைத்தான் உங்க முதலாளித்துவத்தால செய்ய முடியும்னு நாங்க சொல்றோம்.

        இத நீங்களும் ஒத்துக்கிறீங்க. ரொம்ப சந்தோஷம்.

    • நோக்கியாவிற்கு பரிந்து பேசும் இவர் நிச்சயம் மேனெஜ்மென்ட் லெவலில் பணிபுரிபவர் என்பதில் ஐயமில்லை. 4000ம் கொடுத்து சோறு போட்டால் சென்னையில் குடும்பம் நடத்தி விட முடியுமா? விற்கின்ற விலைவாசிக்கு 4000 என்பது எந்த மூலைக்கு. படித்த்வனை வேலைக்கு வைத்தால் எங்கே சம்பள உயர்வு கேட்பானோ? அல்லது வேலையை ஒழுங்காக செய்யாமல் முரண்டு பிடிப்பானோ? அல்லது சொல்பேச்சு கேட்கமாட்டானோ? என எண்ணி ஏழைகளீன் வறுமையை காரணம் காட்டி அவர்களின் இரத்தம் உறிஞ்சப் படுவதை வெளிக்கொணரும் இந்த கட்டுரையை நம்பாமல் மேலே எழுதியிருக்கிறாரே அந்த முதலாளி அவரையா நம்ப சொல்கிறார்? கொடுமைடா……..

      • If one person ask you some logical question you used to blame him as he is a “manager” “Owner” “Blood sucker”…etc… what is he blame as CITU , Communist ..etc ?? You just answer his question instead doing personal check up.

        Yes we you are right, the pay 4000 is lower. But the fact is, in the present market who ever cheap is wins. If India is costlier than china, singapore, japan, turkey …etc then what for the company come here ??

        But i am not saying pay workers cheap. We are just in initial phase now, we have to wait for sometime and gradually demand pay. Remb when IT industry came to India it too pay them less (i am not IT though), they didnt go for strike, instead they wait and proved india as a best place for IT and business grows in india…..as the business grows now the pay grows to int standard also.

        There is no point to kill your chicken because laying less eggs !!! Obviously you wont have any egg then.

        1. Hyundai Strike: No demand about pay the pay is very good compared to any other place in inda.

        2. Pricol: The pay is good too, bonus is good too.

        3. Ford: Now workers union saying they need 10 MIn extra tea time or they will go for strike !!

        There is genuine demand from workers ….all are dirty work by CITU only.

        • //If one person ask you some logical question you used to blame him as he is a “manager” “Owner” “Blood sucker”…etc… what is he blame as CITU , Communist ..etc ?? You just answer his question instead doing personal check up. //

          இந்த அளவுக்கு வெண்னையம் பேசுற vasuதான் காஷ்மீர் பதிவில் வினவை இஸ்லாம் பயங்கரவாதி என்று முத்திரை குத்தியது. ஏன் தம்பி அப்போ மட்டும் உங்க மூளைய கழட்டி வூட்டுல வைச்சிட்டு வந்துட்டீங்களா?

          வினவு கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலன்னா உடனே அவதூறு பேசும் vasuவுக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.

        • அசுரன் :: இப்படி அநாகரிகமாக பேசுவது தான் உன்னக்கு தெரியும் .

          You still didnt answer my many questions…i am waiting answer for this

          “””I am asking You people are fully against foreign companies and private companies ….and you are fully assuming they always mistreat workers …..and you are so sure saying there are so many other good jobs in agri and other old business …right ?????? So if thats the case why you all need to join in that company ?? if your life is so good outside then its very simple you can do your own things right ???……….there are so many other people who willing to work there …so can you please give your job to them instead of stilling in a place where you dont like ??”””

          WHY YOU STILL LOOKING FOR JOB IN PRIVATE AND FOREIGN INDUSTRIES ??

        • //so can you please give your job to them instead of stilling in a place where you dont like ??”””//

          இதுதான் லஞ்சம் கொடுப்பது, அல்லது ஊழல் பன்னுவது அல்லது மிரட்டுவது என்பது. ஏண்டா தம்பி, கஸ்டப்படுற மக்களைப் பத்தி பேசுற? உனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்குல்ல அத வைச்சி என்ஜாய் பன்னு என்ற லஞ்சமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஒழுங்கு மருவாதியா உம் பொழப்பு ஓடுதான்னு அமைதியா இரு இல்லைன்னாக்க நீ இப்போ பாக்குற பொழப்பு விட்டுட்டு ஓடிப் போயிரு என்ற மிரட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

          நாட்டுல பெரும்பான்மை மக்கள் கஸ்டப்படுறதப் பத்தி பேசினாக்க அதுக்கு பதில் சொல்ல வக்கில்லாம இப்படி சமாளிக்கிறதுக்கு பெயர்தான் க்ரப்சன். மாரல் டிப்லிசன்.

          சரி இத்தனை பேசுகிறவர் வினவு குழுவினர் ம க இ கவில் தானே வேலை செய்கிறார்கள். ம க இகஒன்றும் பன்னாட்டு கம்பனி இல்லையே அவர்களுக்காவது பதில் சொல்லுவாரா என்று பார்த்தால் அதுவும் செய்யமாட்டார்.

        • //அசுரன் :: இப்படி அநாகரிகமாக பேசுவது தான் உன்னக்கு தெரியும் .//

          ஏண்டா டேய் காஷ்மீரப் பத்தி எழுதுனா பயங்கரவாதின்னு அநாகரிகமா நீ பேசுவியாம் அத இங்க வந்து சொல்லிக் காட்டுனாக்க நான் அநாகரிகமா?

      • ///மேனெஜ்மென்ட் லெவலில் பணிபுரிபவர் என்பதில் ஐயமில்லை.///////

        புலிகேசி நீங்க கொஞ்சம் லேட்!! 🙂

        மேனேஜ்மெண்ட் லெவல் வேலை பாக்கனும்ன்னு கூட அவசியம் இல்லை!
        இங்க சொகுசா உட்காந்து கிட்டு, ஒரு வேலையும் செய்யாம சும்மா இருக்குறதால பொழுது போகாம இனையத்திற்க்கு வருபவர்களும் எழுதலாம்! யாருக்கு தெரியும்???

  64. எல்லோரும் சங்கம் வைத்துக் கொள்வதற்க்கான அடிப்படை உரிமையை இந்திய அரசியல் சட்டம் வ்ழங்கியிருக்கிறது.நீதிபதிகள்,IAS,IPS,அதிகாரிகள்,ஆசிரியர்கள்,வக்கீல்கள்,அரசு அலுவலர்கள்,சினிமா நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,முதலாளிகள்…………..எல்லோரும் சங்கம் வைக்கலாமாம்.தொழிலாளர்கள் மட்டும் கூடாதாம்.அதியமான் அவர்களே ………எந்த ஊர் நியாயம் இது?

    • ஒரு விசயம் கேட்டால் அதற்கு சம்மந்தம் இல்லாமல் வேறு ஏதோ ஒன்றை புரட்சிகரமாக வன்முரைதன்மாக பேசுவது சரிதான ??

      அசுரன் :: கஷ்மீர் விசயத்தில் நான் சொன்னதை அந்தஇடத்தில் பேசுங்கள் இங்கு கலக்காதீர்கள்

    • ஏன் அதிக சங்கம் வைத்திருக்கும் மேற்கு வங்கமும் கேரளமும் உருபடாம போனது ??? இப்பொழுது எந்த நிருவன்னமும் அங்கு செல்லுவதில்லை , வறுமை அதிகமாகி பலர் வன்முரையலர்கலனது தான் மிச்சம்.

      So who is the looser that states or the Investors ?? Investors have 1000 places to go, but we workers dont have 1000 jobs to choose.

      • //ஏன் அதிக சங்கம் வைத்திருக்கும் மேற்கு வங்கமும் கேரளமும் உருபடாம போனது ??? இப்பொழுது எந்த நிருவன்னமும் அங்கு செல்லுவதில்லை , வறுமை அதிகமாகி பலர் வன்முரையலர்கலனது தான் மிச்சம். //

        கேரளாவில் வறுமை அதிகமாகியுள்ளது என்பது பொய். கேரளாவைப் பொறுத்தவரை இது இன்னொரு பொய், ஒரு நல்ல ஜனநாயக சமுதாயம் என்பது தனது மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை (social security) உத்திரவாதப்படுத்த வேண்டும்.

        கேரளா சி பி எம்ன் முதல் பரிசோதனைக் கூடம். அங்கு அவர்கள் பெற்ற பாடத்தை தமது பிழைப்புவாத அரசியலுக்கான விதையாகக் கொண்டு மே. வாவில் ஊன்றி நின்றனர்.

        கேரளாவில் சி பி எம்ன் குறைந்த பட்ச நடவடிக்கைகள் அங்கு சோசியல் செக்யூரிட்டியை இந்தியாவிலேயே மிகச் சிறப்பானதாக செய்துள்ளது. சமீபத்திய ஆக்ஸ்போர்டு குழுவினரின் MPI புள்ளிவிவரக் குறியீடுகள் காட்டுவதும் இந்த உண்மையையே. ஆயினும் இந்தியா எனும் பிற்போக்கு அரசின் கீழிருந்து கொண்டு கேரளாவில் செய்யப்பட்ட அடிப்படை மாற்றங்களை அடுத்தக் கட்டமாக வளர்க்க இயலாது என்பதுதான் கேரளாவின் தற்போதைய பிரச்சினை.

        குறிப்பாக கேரளாவில் நிலம் பங்கிடப் பட்டது மிக முக்கியமான நடவடிக்கை. இதுதான் அங்கு சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.

        • நீங்கள் சொல்லுவது சரி தான் … கேரளா வறுமை குறைவுதான் …அனால் அதற்கு காரணம் நல்ல வளமான பகுதி என்பதால் …அவர்களுக்கு வரட்சி என்றால் என்ன என்றே தெரியாது …. அனால் நான் கேட்பது ஏன் எந்த நிறுவனமும் அங்கு செல்வதில்லை ?? ஒருவேளை தமிழ் நாடு போன்ற வறண்ட படிக்காத மக்கள் அதிகம் இருக்கும் மாநிலத்தில் இது நடந்தால் எவாறு வாழமுடியும் ???

          பொருளாதாரத்தில் முன்னில் இருந்த வர்த்தக தலை நகரான மேற்கு வங்கம் என்ன ஆனது ??? இன்று அவர்கள் தமிழ் நாட்டை விட பின்னிருப்பது ஏன் ??? ஏன் அங்கு வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்து ஆடுகிறது ???

      • //ஏன் அதிக சங்கம் வைத்திருக்கும் மேற்கு வங்கமும் கேரளமும் உருபடாம போனது ??? //

        சங்கமே இல்லாத பிஹார், மத்திய இந்தியா ஏன் இந்தியாவிலேயே ஆஹ உருப்பாடாமல் போனது?

        எனவே சங்கம் சரியானது என்று மொன்னை மட்டை வாதம் செய்வது சின்னப்புள்ளதனமானது என்பது எனது தாழ்மையான கருத்து

        • கீழே இருப்பவன் மேல்வராதது வேறு (பீகார்)….மேல் இருந்தவன் கீழ் இறங்குவது வேறு (மேற்கு வங்கம்) ….

        • இன்றைக்கு இந்தியாவிலேயே அதிகமாக பன்னாட்டு கம்பனிகளின் இன்வெஸ்டுமெண்டு உலாவும் இடங்கள் எவை என்றால், காடுகள், மலைகள் செழித்தோங்கிய மத்திய இந்திய் பகுதிதான்.

          ஆந்திரா, கர்நாடகா முதல் பல்வேறு பகுதிகளில் இரும்பு உள்ளிட்ட கனிமங்களை அடிமாட்டு விலைக்கு கொள்ளையடிக்க் இதெ பன்னாட்டு நிறுவனங்களின் வெஞ்சர் கேப்பிடல் ஊடுருவியுள்ளது. இவை மிகப் பெரிய தொகைகள்.

          ஆனால், நாட்டின் மிக பிந்தங்கிய ப்குதிகளாகவும், வறுமைத் தொட்டில்களாகவும் இதே பகுதிகள் இருக்கின்றன.

          எனவே, நிறுவனங்கள் வந்தால் வறுமை ஒழிந்துவிடும் என்று வாதமும் சரி, தொழில் சங்கம் வந்தால் வேலை போய்விடும் என்ற வாதமும் சரி அப்பட்டமான பொய்கள்.

          சரியாகச் சொன்னால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சங்கங்கள் மிக வலிமையானவை அங்கெல்லாம் வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விடவில்லை, அவை வறுமையிலும் அமிழ்ந்துவிடவில்லை.

        • மேற்கு வங்கம் கீழே இறங்கியது கூட உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தது தொடங்கிய பிறகுதான்

      • //Investors have 1000 places to go, but we workers dont have 1000 jobs to choose.//

        இன்வஸ்டருக்கு ஆயிரம் இடம் இருக்குன்னாக்க ஏன் இங்க வந்து நம்ம பிரதமர் முதல் பலருக்கும் லஞ்சம் கொடுத்தும், மிரட்டியும் இண்வெஸ்ட் செய்யிராங்கோ? செவ்வாய் கிரகத்துக்கு போக வேண்டியதுதானே?

        அடிப்படையில் குறைந்த விலையில் மனித வளம், இயற்கை வளம், சந்தை கிடைக்கும் இடம் எதுவோ அங்கே ஆலாய்ப் பறந்து வந்து சுரண்டுவதே இன்வெஸ்டர்களின் நோக்கம்.

        மேலும், வேலை வாய்ப்பு என்பது ஒரு பொய் என்பதை ஏற்கனவே அதியமானிடுனான விவாதத்தில் பலவேறு அரசு, உலக வங்கி புள்ளிவிவரத்துடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர் அப்போது தப்பிச் செல்ல பயன்படுத்திய ஒரே வாதம், சிறு தொழிலில் உருவாகும் வேலைவாய்ப்பு பற்றி தெளிவான புள்ளிவிவரம் இல்லை என்பதே ஆகும்.

        அதற்கு கொடுக்கப்பட்ட பதில், ய்ர்ரும் இங்கு வேலையில்லாமல் இல்லை ஏதோ ஒரு தொழில், சிறுதொழிலில் வேலை செய்கிறார்கள். ஆனால் அவை வேலையிலிருந்தும் வறுமை என்கிற நிலையையே உருவாக்கியுள்ளது, என்பதே ஆகும்.

        இதைத்தான் ஆக்ஸ்போர்டு புள்ளிவிவரமும், பாக்ஸ்கான் கம்பனி சேலரி சிலிப்பும் சொல்கின்றன.

        உங்களது வேலைவாய்ப்பு புளுகின் வண்டவாளம் இதுதான்

  65. 55% of India’s population poor: Report
    http://timesofindia.indiatimes.com/India/55-of-Indias-population-poor-Report/articleshow/6169549.cms

    NEW DELHI: India’s abysmal track record at ensuring basic levels of nutrition is the greatest contributor to its poverty as measured by the new international Multi-dimensional Poverty Index (MPI). About 645 million people or 55% of India’s population is poor as measured by this composite indicator made up of ten markers of education, health and standard of living achievement levels.

    • Hello boss, when india got independence 75% of the people were poor. With this huge population india is trying to come over that. Now your 55% shows its reducing already .

      It will take another 50 years to reach 25%. You dont expect to change this over the night.

      • ஹா.. ஹா.. அதியாமான் சொல்கிறா இந்தியா விடுதலை பெற்ற பொழுது 50%தான் வறுமையிலிருந்தனர் என்று. எதற்கும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்களேன் வசு?

      • //It will take another 50 years to reach 25%. You dont expect to change this over the night.//

        நான் எதுக்குய்யா எதிர்பாக்குறேன். வறுமையில் உள்ள மக்கள் 50 வருசத்துக்கு பொறுமையா இருப்பாங்களாங்கறதுக்கு நான் கேரண்டி கிடையாது. அப்புறம் நாட்டுல இருக்குறவன் எல்லாம் துப்பாக்கி தூக்கிட்டு அலைஞ்சா இங்க வினவு தளத்துல வந்து புலம்பிட்டு திரியக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையா சொல்லி வைக்கிறேன்.

  66. “தமிழர்கள் பொறுமையானவர்கள் நம்மை ஒன்றும் பண்ண மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்….”
    ———————————————
    புதிய பாரதம் படைக்க !!…
    நாம் தமிழனாய் … இல்லை இல்லை …
    மனிதனாய் ஒன்று பட்டு இருப்போம் …..

    ஜெய்கிந்து ……………

    • unnai asingkamaa thittinaa thaan adangkuviyaa daa pannaadai!

      muthalaali peeya un muulai meela irunthu kittu sinthikka vitaama pannikittu irukku!

      • A good example for Violent people …

        கண்ணா நானு உன்ன மாதிரி தர டிக்கெட் range கு கேவலமா பேசமுடியும் …..கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலனா இப்படி படம் காட்டர ?? பதில் சொல்லு மா !!!

      • aamaa naanga dooring talkies thara ticket! ivaru sathyam complex ticket!
        poda pannadai!

        Bhopal la makkalai konnvan mela varaatha kovam, foxcon karan thozilaalarkalai kuranjsa sampalaththula kodumaippaduhtthurappo varaatha kovam, athe foxcon la visa vaayu thaaki thozilaalarkal kastapadum pothu varaatha kovam, pricol lukku mattum varrathulaye theriyalaiyaa? nee sathyam – maajajal ticket kaarannu!

        vennai! enna perusaa kelvi kettuta? pathil sonnaalum summaa suththi suththi varre!
        nee kuzappura kuttai yellaam, yerkanavee athiyamaan kizappinathu thaan!

        ethaavathu puthusaa yosichchuttu vaa!

  67. Latest Update:
    ****************
    Foxconn shuts India facility after 250 workers fall sick news
    28 July 2010

    After a series of suicides at its China plants earlier this year, Foxconn, the world’s largest contract electronics maker had to temporarily shut down a mobile phone components manufacturing facility in Tamil Nadu after about 250 workers fell sick.

    The Taiwan-based company had to shut down its facility at Sunguvarchatram in Tamil Nadu yesterday after 250 workers or about half the workforce had to be hospitalised when they complained of giddiness and nausea.

    The Sunguvarchatram plant, which has a workforce of about 500 people, was shut for nine months and was reopened on 23 July due to increase in orders. The company had fumigated the facility including the air-condition ducts prior to the reopening, which may have caused the sickness once the AC’s were started.

    While most of workers were treated and sent home, around 12 workers were kept back at Sri Ramachandra Medical Centre for observation and five of them are likely to be discharged today.

    “The company believes that the incident may have been caused by the routine spraying of pesticide at the production facility, but all possible causes are being investigated by the relevant local authorities in India,” Foxconn said in a statement.

    Workers at the plant use isoprophyl alcohol, which is used to clean components. This chemical is routinely used at all technology company plants globally and is not the reason for the mass scale sickness unless it is spilled in large quantities.

    The Tamil Nadu government has ordered Foxconn to keep the facility shut till all safety aspects are checked and cleared by the concerned authorities.

    Foxconn said that Sunguvarchatram plant was shut temporarily in order “to allow it to be checked and cleared by the relevant local authorities.”

    After inspecting the facility, the Tamil Nadu Pollution Control Board (TNPCB) on Monday eliminated any gas or chemical leakage including the area where some workers had complained of giddiness and nausea.

    Taipei County, Taiwan-based Hon Hai operates overseas through its wholly owned subsidiary Foxconn Technology Group, which is the world’s largest electronics contract manufacturer employing over 800,000 people globally, mostly in China.

    It mass produces products for some of the world’s biggest technology companies like Nintendo, Apple, Nokia, Sony, Hewlett Packard and Dell.

    Foxconn is the third largest industrial employer in Tamil Nadu after Hyundai Motor India and Nokia India employing around 7,000 people at its units in Sunguvarchatram and at the special economic zone (SEZ) in Sriperumbudur.

    The company’s reputation was dented this year after it was hit by a series of suicides at its walled-in industrial park of its Longhau facility in China.

    Dubbed as a “sweatshop” by activists, at least 16 people have jumped from the company’s factories in China so far this year, with 12 reported deaths.

    A further 20 employees, who attempted to commit suicides, were prevented before they could throw themselves off from the buildings. (See: Harsh working conditions at Foxconn fuel suicidal tendencies)

    Workers there have complained about the management, which enforces military-style discipline and the assembly lines move so fast that workers act more like robots than humans.

    But since the company raised wages on two occasions after the incidents, (See: Foxconn announces second pay rise in China) the suicides seemed to have stopped.

    • Yes Foxconn is a worst company in china. In china there is no safety for worker. I agree that workers should not work or they can go to flash strike if they think the working environment if not safe.

      Anyway its proved as an accident not a murder attack as like many imagined here. Govt and foxconn should make sure the saftey checked again properly.

      Question to Vinavu ???

      Why you article mixed this issue with Nokia when its not related. Some more you zoomed to by relating it to Bhopal which is crazy but pre planned imagination.

  68. You all only talking about those direct workers who is working directly in those big industries..

    1. How about thousands of small and medium scale industries which just depend on those big industry ??

    2. How about indirect workers who works in those indirect worker working in those small and medium scale industry ??

    3. In economy money is a cycle. When these direct and indirect workers spend millions of poor get jobs and life ….how about them.

    4. There are lot of youngsters become entrepreneur and stated their own micro business due to the above three …how about them.

    5. How about economy of the country, when the above four pay tax and duties country earn billion and spend that for people. Thats why we got now 6 lane roads, new shiny airports, poor farmers loans, Free medical insurance , guaranteed 100 days job for poors, Free home for 21 lak poors, free ambulance, Chennai sea water to drinking water plants , free education ?????? …etc.

    Its not mean only foreign and private industries pays all money govt….but they contribute to big share.

    6. How Tamil nadu become automobile capital of asia ??

    7. How our youngsters now have confidence that they can get job ??

    8. How Tamil nadu can give job to poor biharis, orrisa people in construction industry ???

    …etc

  69. சிறப்பானதொரு புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.

  70. Publication: The Times Of India Chennai; Date: Jul 31, 2010; Section: Front Page; Page: 1;
    http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH%2F2010%2F07%2F31&ViewMode=HTML&GZ=T&PageLabel=1&EntityId=Ar00108&AppName=1

    Workers stay away, Foxconn forced to close plants again
    Rajesh Chandramouli | TNN

    Chennai: Despite assurances from workers that they would not disrupt production, mobile component maker Foxconn was forced to shut down operations at two locations near Chennai on Friday night. Foxconn is the latest among global players in TN to face the brunt of labour unrest.
    According to sources, the morning shift on Friday at the Nokia SEZ witnessed 70% attendance but in the evening shift, it fell to less than 15%. “Only 250 people turned up for work as against 1,750. Operations at the Sunguvarchatram plant are yet to gain momentum,” sources said. Both plants were forced to shut operations for the night shift on Friday. Production had resumed at the Nokia SEZ plant of Foxconn on Tuesday and at the Sunguvarchatram unit on Thursday after days of shutdown following workers’ complaints of nausea and vomiting due to a pesticide spray.
    The president of the Labour Progressive Front unit (DMK’s labour arm) at Foxconn, CVMP Ezhilarasan, said some workers kept away on Friday due to differences with the management over pending issues. Staff demand sacking of Foxconn exec
    Workers at the Foxconn plant near Chennai went on strike after their demand to sack a management official was rejected by the company.
    The employees’ demands to enhance safety at the sites and for three days of paid holiday for workers who were hospitalised were accepted by the management. The company also agreed to the workers’ demand not to initiate disciplinary action against workers who did not go to factories last Saturday following a gas leak-like situation. “However, the workers wanted a management official to be dismissed, which they refused and since we could not arrive at a solution before the evening shift began, workmen would have assumed that there would be no production and hence might have stayed away,” said C V M P Ezhilarasan, president of DMK’s Labour Progressive Front unit at Foxconn.
    Sources inside the factory said the night shift on Thursday was similarly disrupted due to poor attendance.
    The assistant commissioner of labour has called for a meeting between the management and LPF members on Saturday to settle the dispute.
    The LPF has sought recognition of its union from the Foxconn management. Under Tamil Nadu’s laws, it is not mandatory for a company to recognise a trade union. TNN

  71. Publication: The Times Of India Chennai; Date: Jul 31, 2010; Section: Front Page; Page: 1

    http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH%2F2010%2F07%2F31&ViewMode=HTML&GZ=T&PageLabel=15&EntityId=Ar00108&DataChunk=Ar01504&AppName=1

    Workers stay away, Foxconn forced to close plants again
    Rajesh Chandramouli | TNN

    Chennai: Despite assurances from workers that they would not disrupt production, mobile component maker Foxconn was forced to shut down operations at two locations near Chennai on Friday night. Foxconn is the latest among global players in TN to face the brunt of labour unrest.
    According to sources, the morning shift on Friday at the Nokia SEZ witnessed 70% attendance but in the evening shift, it fell to less than 15%. “Only 250 people turned up for work as against 1,750. Operations at the Sunguvarchatram plant are yet to gain momentum,” sources said. Both plants were forced to shut operations for the night shift on Friday. Production had resumed at the Nokia SEZ plant of Foxconn on Tuesday and at the Sunguvarchatram unit on Thursday after days of shutdown following workers’ complaints of nausea and vomiting due to a pesticide spray.
    The president of the Labour Progressive Front unit (DMK’s labour arm) at Foxconn, CVMP Ezhilarasan, said some workers kept away on Friday due to differences with the management over pending issues. Staff demand sacking of Foxconn exec
    Workers at the Foxconn plant near Chennai went on strike after their demand to sack a management official was rejected by the company.
    The employees’ demands to enhance safety at the sites and for three days of paid holiday for workers who were hospitalised were accepted by the management. The company also agreed to the workers’ demand not to initiate disciplinary action against workers who did not go to factories last Saturday following a gas leak-like situation. “However, the workers wanted a management official to be dismissed, which they refused and since we could not arrive at a solution before the evening shift began, workmen would have assumed that there would be no production and hence might have stayed away,” said C V M P Ezhilarasan, president of DMK’s Labour Progressive Front unit at Foxconn.
    Sources inside the factory said the night shift on Thursday was similarly disrupted due to poor attendance.
    The assistant commissioner of labour has called for a meeting between the management and LPF members on Saturday to settle the dispute.
    The LPF has sought recognition of its union from the Foxconn management. Under Tamil Nadu’s laws, it is not mandatory for a company to recognise a trade union. TNN
    Advertisement

Leave a Reply to Anand பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க