privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பிரசாத லட்டு கூட 'அவா' தான் பிடிக்கணும் - உயர்நீதிமன்ற தீர்ப்பு !

பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !

-

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்

பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும்; சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறி, திமுக அரசு 2006ஆம் ஆண்டில் தொடங்கிய அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றரை ஆண்டுகாலம் பயிற்சி பெற்ற 207 மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற இம்மாணவர்களை ‘அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்’ என சங்கமாக திரட்டியது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று இச்சங்கத்தையும் ஒரு தரப்பினராக வழக்கில் இணைத்ததோடு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உடனிருந்து வழிகாட்டி வருகிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

1970இல் பொரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971ல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வந்தது திமுக அரசு. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்; ‘அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமையைக் கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்’ என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ‘அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உயர்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியது. ‘இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும்’ என்று கூறி, சாதியையும், ஆலயத்தீண்டாமையையும் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். 1972இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அடிப்படை மத உரிமை கூட இல்லாத பார்ப்பன இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் பார்ப்பனமயமான மற்றொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.

பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

இத்தனை நடக்கும்போதும் சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பன புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பன மற்றும் ‘கருப்பு’ அம்பிகள்.

இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. ‘காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்’  என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துக்கள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு, மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளை கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டு பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது ‘அரசியலமைப்புச் சட்டம்’. நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.

அதன் லட்சணம்தான் இன்று பல்லிளிக்கிறது. இந்துமத பழக்கவழக்கத்தின்படி, லட்டு, புந்தி கூட ‘அவா…’ செஞ்சாத்தான் லோகம் ஷேமமா இருக்கும்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடிகிறது.

செயலாளர்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. லட்டு கூட அவாள் தான் பிடிக்கனும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !…

    பார்ப்பனரல்லாதோர், கோயிலில் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பிரசாதம் செய்தால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது….

  2. மானக்கேடான விஷயம். நீதிமன்றம் வாயிலாக வழக்கை மேலே எடுத்துச் செல்வதுடன், தெருக்களிலும் இறங்கிப் போராடவேண்டும். அத்துடன் மக்கள் அனைவரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை மட்டுமல்ல, இந்த நடைமுறை உள்ள அனைத்துக் கோயில்களையும் பகிஷ்கரிக்கவேண்டும். இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் பிரச்னையை எழுப்ப, சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்மீதும் அனைத்துக் கட்சிகள்மீதும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

    • Did you the salary range? Govt gives special reservation for so called low caste people. Other community people are not allowed work in those jobs. Did you the salary structure of those jobs? Bhramins have reservation only in temple servant job which will hardly pay less than 10K… only few bhramins gets more than 25K… 80% of bhramins who works in temple gets less than 10K…

    • @பத்ரி,

      இதில் என்ன மானக்கேடான விஷயம்.. லட்டு பிடிக்கும் வேலை என்ன 5 ஸ்டார் ஹோட்டல் உத்தியோகமா.. இதிலும் வந்து அடிமைத்தன கதையளக்க?

      கோயில் என்பது பொது சொத்து அல்ல.. வியாபார ஸ்தலமும் அல்ல.. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.. பொதுவுடமை வாதிகளின் ரவுடித்தனம் இனி செல்லுபடியாகாது..

  3. […] This post was mentioned on Twitter by வினவு, Badri Seshadri, mugunth, கரையான், karthi and others. karthi said: RT @TBCD: #WTF RT @vinavu: பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கனும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு ! https://www.vinavu.com/2011/02/10/hrpc-thiru … […]

  4. நல்லதொரு செய்தி !!! இந்து மதத்தில் சம உரிமைக் கேட்டுக் கேட்டு போராடி சலித்துவிடும் !!! இந்து மதம் என்றால் அது பிரமணவாளின் பொது சொத்து என சொல்லாமல் சொல்லி இருக்கு நீதிமன்றம் !!! பிரமணர் அல்லாதவருக்கு இரண்டு சாய்ஸ் மட்டுமே இந்த நீதிமன்றம் கொடுக்கிறது பிரமணருக்குக் கீழ்படிந்து இந்துவாக இரு ! அல்லது இந்து மதத்தை விலகிச் செல் !!! மக்கள் எதை தேர்ந்து எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.

    //பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.//

    கடவுளை வெளியேற்ற முடியாது ! நாமே இந்து மதத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்பது எங்க் கருத்து !!!

    லட்டு பிடிக்கவும் கூட உரிமை இல்லாத சமத்துவம் கெட்ட மதக் கட்டமைப்பில் இருப்பதை விட !!! அதை விலக்குவதே நலம் !!!

    • இ.செ என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்து மதத்தை விட்டு வெளியேறலாம் ஆனால் கடவுளை ஒழிக்க முடியாது பின்னர் எங்கு செல்வது உங்கள் இஸ்லாத்துக்கா ? ஒரு மடமையில் இருந்து இன்னொரு மடமைக்கா ? அங்கே சென்று மௌலவிகளுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஜமாத்துகளுக்கும் அடிமையாக இருப்பதா?
      அல்லாவைப் பற்றி கேள்வி எழுப்பிய ரசூலின் கதி என்ன ஆனது? அவரை ஜமாத்தை விட்டே தள்ளி வைத்தார்கள். இந்து மதத்திலாவது இருந்து கொண்டே கடுமையாக தாக்கலாம் ஆனால் நிறுவனமயப்பட்ட இசுலாத்தில் என்ன ஆகும் முதலில் தள்ளி வைப்பார்கள் மீண்டும் தொடர்ந்தால் காபிர் என்பார்கள் பின்னர் பத்வா விதித்து ஒரே அடியாக கதையை முடிப்பார்கள்.
      நீங்கள் முதலில் இஸ்லாத்தை சரி படுத்துங்கள் மற்றதை பற்றி பிறகு பேசலாம்.

      • ///இ.செ என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்து மதத்தை விட்டு வெளியேறலாம் ஆனால் கடவுளை ஒழிக்க முடியாது பின்னர் எங்கு செல்வது உங்கள் இஸ்லாத்துக்கா ? ஒரு மடமையில் இருந்து இன்னொரு மடமைக்கா ? அங்கே சென்று மௌலவிகளுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஜமாத்துகளுக்கும் அடிமையாக இருப்பதா?
        அல்லாவைப் பற்றி கேள்வி எழுப்பிய ரசூலின் கதி என்ன ஆனது? அவரை ஜமாத்தை விட்டே தள்ளி வைத்தார்கள். இந்து மதத்திலாவது இருந்து கொண்டே கடுமையாக தாக்கலாம் ஆனால் நிறுவனமயப்பட்ட இசுலாத்தில் என்ன ஆகும் முதலில் தள்ளி வைப்பார்கள் மீண்டும் தொடர்ந்தால் காபிர் என்பார்கள் பின்னர் பத்வா விதித்து ஒரே அடியாக கதையை முடிப்பார்கள்.
        நீங்கள் முதலில் இஸ்லாத்தை சரி படுத்துங்கள் மற்றதை பற்றி பிறகு பேசலாம்.///
        Neenga enna solla virumburinga elill?Hindhu madha thula apdilaam illa naanga ella suthandhiramum petrirukkom nu solringala?? Oru Muslim Tholugai vaika therinja yaar venna endha masudhiyilayum tholugai nadatha mudiyum..avar elaya irundhalum sari panakarana irundhaalum sari karupana irundhaalum arabiya irundhaalum ellarum avaruku pinaadi ninnu tholuvaanga..Ulagathula endha naatla ulla pallivasala yum neenga poi thola vaikalam..,Andha urimaya ISLAM 1400 yrs munnadiye thandha Samathuvam thaan adhu!! AANAA Endha oru Hindhu va vadhu Thaaltha patta Caste nu neenga solra unga hindhu madhatha serndhavangala thanjore periyal kovil a puja panni neenga kadavula nenaikuradha kulupaati sutham senji puja panna vainga apram neenga islam pathi pesunga. ungala la adhu mudiyuma indha 21 century la idhu indha HINDU madathula SAATHIYAMA NU parunga??

        • அய்யா முற்போக்கு பட்டுக்கோட்டை -கொட்டைப்பாக்கை நினைவு படுத்துகிறீர்கள். அவர் மதத்தை விட்டு விலக வேண்டும் என்கிறார் ஆனால் அதற்கு அப்பறம் தெளிவான முடிவை சொல்லவில்லை. அவர் எல்லா புகழும் இறைவனுக்கே என்று முழங்குபவர்.எனவே அவர் இசுலாத்துக்கு தான் அழைக்கிறார் என்று முடிவு செய்யலாம். ஆனால் அது இன்னொரு அடிமைத்தனத்தில் அல்லவா சென்று முடியும்.அதற்கு மதத்தை தூக்கி வீசிவிட்டு நாத்திகர்களாக மாறுங்கள் என்று சொல்லி இருக்கலாம். நான் நாத்திகன் எனக்கு இந்த மதக் குப்பைகளில் நம்பிக்கை இல்லை.இதை நான் இந்து மதம் என்ற என் மீது திணிக்கப்பட்ட ஒரு அமைப்பில் சொல்ல முடிகிறது அதை இசுலாத்தில் இருந்து கொண்டு சொல்ல முடியுமா என்பது தான் எனது கேள்வி.தொழுகை நடத்த சம உரிமை இருக்கலாம் அப்படி உரிமை இருப்பதனாலேயே அது சிறந்த மாற்று என்று ஆகிவிடாது.ஆனால் ஏன் தொழ வேண்டும் எனக் கேள்வி கேட்க முடியுமா?.மாற்றம் என்பது தன்னளவில் தொடங்குகிறது என்று நான் நம்புகிறேன்.அடுத்தவருக்கு எளிதாக ஆலோசனை சொல்லலாம் ஆனால் நாம் பின்பற்றமுடியுமா என்று சிந்தித்துவிட்டு பின்னர் சொல்வது நலம். மதங்களை ஒழிப்பது தான் இறுதி தீர்வாக இருக்க முடியும்.

      • அண்ணே எழில் இக்பாலுன்னு பெயர் வச்சவுடனே அவர முசுலிம்ன்னு நேனச்சுட்டீகளா அவரு முசுலிமு இல்லாப்பா மெய்யலுமே கொஞ்ச நேரத்துல அவரே வந்து சொல்வாரு வெயிட்டிங் ப்ளீஸ்

      • இந்த இந்துமதத்தில் சற்றும் மூளைக்கு வேலைக் கொடுக்க விடமாட்டார்கள். இந்த அவா’க்கள் வழியில் நானும் பஜனைப் போட்டுத் திரிந்திருந்தால், நானும் உங்களை மாதிரித் தான் மக்குத் தனமாக சிந்தித்திருப்பேன். எனது பெற்றோர், எனக்கு கொடுத்த அறிவுச் சுதந்திரம் மூளைக்கு இம்மி அளவு வேலைக் கொடுத்திருக்கின்றதால் பெருமிதம் கொள்கிறேன்.

        ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், உலகின் மிகவும் பிர்போக்கு சிந்தனையைக் கொண்டவர்கள் வாழும் நாடு இந்தியா, இந்து மதம் மட்டுமில்லை, அம்மத்ததில் இருந்து எதோ ஒரு காரணத்துக்காக எம்மத்ததை பின்பற்றினாலும், இந்நாட்டில் வாழும் பலர் பலர் மூளைக்கு வேளை கொடுப்பது இல்லை.

        குறிப்பாக இந்து மதம் என்பது கடல் போன்றது, அதாவது இந்து மதம் என்ற ஒன்றே இல்லை எனலாம். இது இந்திய சுதேச மதங்கள் என்றுத் தான் கூறவேண்டும், இவற்றில் வளர்ந்துவந்த வைதிகம் அனைத்தையும் கலப்பிடமாக்கி, வெட்டி ஒட்டி இந்து மதமாக மலர்ந்தது. ஆனால் இவற்றில் ஆதிக்கச் சாதி பிரிவினர் தமது அதிகாரம், பொருளாதாரத்துக்காக இந்த மதத்தை பயன்படுத்தி வருகின்றனர். வயிற்றுப் பிழைப்புக்காக எனக் கூறலாம். இதில் சில அப்பாவி ஜென்மங்களை எப்படியெல்லாம் கொடுமை படுத்தி உள்ளது. அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் வாழ்ந்த காலத்தில் ஒரு பெட்டர் சாய்ஸாக இஸ்லாமும், கிருத்துவமும் வந்தேறின. இதற்கு முன் இருந்த பௌத்தத்தை வைதிகம் விரட்டியது தனிக்கதை.

        இஸ்லாமும், கிருத்தவமும் என்னப் பெரிய மதங்கள்? தத்துவம் இல்லை, முட்டாள்த்தனமான கொள்கைகள் என்பது இந்துமத பிடுங்கிகள் பலரின் வாதம். ஆனால் ! இந்து மதம் தராத கௌரவத்தை அவை மக்களுக்கு தந்தன. குறைந்தப் பட்சம் ஒரு தலித் பாதிரியாராக ஆக முடியும், அவர்களை ஆதிக்கச் சாதி கிருத்துவர் ஏற்றுக் கொள்வார்களா எனக் கேட்கலாம். ஆனால் குறைந்தது அய்யராக வரும் வாய்ப்பையாவது தந்துள்ளன. ஒரு தலித் முஸ்லிம் பிரியாணி சமைத்தால் அனைத்து முஸ்லிமும் சமத்துமாக பிரசாதமாக ஏற்றுக் கொள்வார்கள். இதில் சில முஸ்லிம் ஆதிக்கச் சாதியினர் மணம் பிணங்கினாலும், அனைத்து சாதிகளையும் சமத்துவமாக ஏற்றுக் கொள்ளும் சாய்ஸை அந்த மதங்கள் தந்துள்ளன.

        ஆனால் நம் இந்து மதத்தை பாருங்கோ !! பிரசாதம் பிசையவே தலித்த்களுக்கு உரிமை இல்லை என்றால் !! குறைந்தபட்ச விடுதலை உரிமையைக் கூட தர மறுத்தால். பிறகு இப்படியான மதத்தில் அதிகப் பட்ச உரிமைகளை போராடி வெல்லல்லாம் என்பது வெறும் கனவே !!! சத்தியமாக விடமாட்டார்கள் !!!

        இது தான் என்வாதம் !!! அப்புறம் அய்யா எழில் அவர்களே ! இந்து மதம் சற்றும் மூளைக்கு வேலைக் கொடுக்கவிடுவதில்லை என்பதை தாங்களே நிறுபித்துவிட்டீர்கள் !

        இக்பால் என்ற பெயர் வைத்தாலே முஸ்லிம், டேவிட் என்றாலே கிருத்துவன், வேறு மதக்காரன் தம் மதத்தை விமர்சிக்கக் கூடாது, ஆனால் நாம் விமர்சிப்போம். இது எல்லாம் ஆரோகியமான விமர்சன ஒழுக்கமா?

        நான் முஸ்லிம் இல்லை, கிருத்தவன் இல்லை சொல்லிவிட்டேன், இன்னமும் சட்டப்படி ஒரு இந்துவே !!! பூணூலை அறுத்த என்னால் ! சான்றிதழிலும், சட்டத்திலும் இந்து என்று நூலை அறுக்க முடியாததால் விட்டுவிட்டேன் !!!

        எந்தவொரு மனிதனும் எந்த மதத்தையும் விமர்சிக்கலாம் என்பது என் கருத்து !!! ஒரு பெண்ணின் மார்சேலையை நான்கு பேரி இழுத்தால், அதை தடுக்க நான் என்ன பெண்ணாகாவே போக முடியும், அப்படி போக நான் என்ன கண்ணனா?????

        அதே போல தவறுகள் எங்கிருந்தாலும், தட்டிக் கேட்பதில் தவறில்லை.

        • வெட்கக் கேடான விஷயம். இது போன்ற பார்ப்பன மனப்பாங்கை அழிக்க, முடிவு எடுக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் பார்ப்பனர்கள், மற்றும் தலித் லட்டு பிடித்தால் தின்ன மாட்டேன் என்று சொல்லும் பணம் படைத்த, கோவில்களுக்கு நிதி கொடுக்கும் பார்ப்பனர் அல்லாத பிற ஆதிக்க சாதி இந்துக்கள் இருவருமே அற வழிப் போராட்டங்களின் மூலமாக முடக்கப் பட வேண்டும்.

        • http://tamilcharam.net/end-of-pondicherryblog/

          இந்த சுட்டியில் எல்லா புகழும் இறைவனுக்கே! என்று நீங்கள் முழங்கி உள்ளதைப் பார்த்துதான் அவ்வாறு கூறினேன்.
          ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக்கு கடவுள் மத நம்பிக்கை இல்லை. நான் இந்து என்று அரசாங்கள் சொல்கிறது.இது என் மீது திணிக்கப்பட்டது அவ்வளவே. இதில் என்னை சூத்திரன் என்று சொல்கிறார்கள் என்று எங்கு செல்வது ? பல காலம் நாத்திகம் பேசிய பெரியார்தாசன் மதம் மாறிய பின் இன்று எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. அந்த அளவு இஸ்லாத்தில் ஜனநாயகம் இருக்கிறது.மதம் மாறினால் நீங்கள் ஒரு அமைப்புக்குள் சென்று விடுகிறீர்கள் பின்னர் அதன் அடிமைத்தனங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிலை இருக்கிறது அதற்கு பதில் எல்லாவற்றையும் நிராகரிக்கலாம் என்று தான் சொன்னேன்.எந்த மதத்தையும் விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மாற்றம் என்பது தன்னளவில் தொடங்குகிறது என்பதை அழுத்தமாக நம்புகிறேன் அதனால் தான் நான் மாற்றத்தை பற்றி உங்கள் அளவில் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.இதில் எனக்கு மூளை இல்லை என்றெல்லாம் கீழிறங்க வேண்டியது இல்லை. அது என் கவலை

        • Then why Shia and Sunny Killing each other.Pakistan seperated accusing India of feudal cast system..But after 65 years of seperation even now in Pakistan low cast (Musalli)people canNot go in to Masque to drink water.Seperate tape provided outside Mosque for them.Ahmadis are not reconed as Muslims there.RCs do not like Protestant. Iyers do not go with Iyengar and in Iyengar Vadakalai and Thenkalai NAAMAN. These idiotic things are all in all religions.Therefore come we all join together to remove these FOOLISHNESS instead of accusing each other.Then Iqbal Selvan if you are hindu by birth my advise is be as human being with your original name.By cahnging the name you do not change anything but fool yourself and fool others.

    • Iqbal, dont fool the people in the common forum. you are speaking as if you dont have any knowledge on history. I would suggest you to read the below link which exposes the condition of so called pure religious. Do you have any idea about the ‘slave business’?

      http://psenthilraja.wordpress.com/2009/09/10/untouchability-is-it-really-evil/

      I have replied so many times in this forum about the cast system in india. It is nothing to so with hindu religious. None of Hindu God belongs to bhramin religious as per govt record.

      Parvathi – SC, Krishna – MBC, Ram -OBC….

      The person who wrote the vedas… himself is not a bhramin… He belongs to fisher community. you please educate yourself…
      I request the people to read the history of each and every cast… before muslism and christion invading…

      Why you people are so much interested to do this job… as if it is high paid job… I am not bhramin… Still i prefer the bhramins (not only by birth) to do this job… It doesn’t mean that the bhramin community is suprior to me…They are well trained for this job. Bhramin is nothing to with community… They are free to do this job if their family converted to bhramin. means.. thier enitre family must follow the rules and regulation of bhramins…

      because, they are trained for this job from the childhood… Regarding the ladu… whether you people agree / not… Bhramins are professional in making the ladu… they are great chef… nobody can question on it?…

  5. அவல் லட்டு நல்லா இருக்கும், அவாள் லட்டு நன்னா இருக்கனும்னு அவாளையே பிடிக்க வைக்கிறாளோ என்னவோ, பிள்ளையார் பிடிக்கும் கைதான் லட்டு பிடிக்க ஏற்றக் கைன்னு எதாவது கணக்கு இருக்கனும் 🙂

    • //அவாள் லட்டு நன்னா இருக்கனும்னு அவாளையே பிடிக்க வைக்கிறாளோ என்னவோ, பிள்ளையார் பிடிக்கும் கைதான் லட்டு பிடிக்க ஏற்றக் கைன்னு எதாவது கணக்கு இருக்கனும்//

      அதுக்கும் ஆகமம் வெங்காயம்னு எதாவது இருக்கும் கோவி சார்………………………:-)

      • உண்மை தான் அவா’ள் கைகள் லட்டுப் பிடிக்க முன் மூக்கில் இருக்கும். அப்போது தான் தூக்கலாக இருக்கும் !!! கேடுகெட்ட இந்து மத கட்டமைப்பு திருத்தவும் மாட்டானுங்க, திருத்த விடவும் மாட்டானுங்க !!! ஒழிக்கவும் விடமாட்டானுங்க !!!

  6. பிராமணனை தவிர மற்ற அணைத்து ஜாதியினரும் மொத்தமாக இந்த வேலைக்கு வின்னபிக்காமல் இருக்க வேண்டும், யானை பாகன் வேலையை பார்பனனால் கண்டிப்பாக செய்ய முடியாது இப்படி செய்து தான் பார்பனனை தனிமை படுத்த வேண்டும்

      • மஸ்ஜிதில் யானையை கட்டி வைக்க மாட்டோம், அந்த யானைக்கு குறுக்குல பட்ட போடுறத , நீடல பட்ட போடுரதான்னு சண்ட போட்டுக்குட்டு கோர்ட் கேசுன்னு அலையை மாட்டோம்

      • மசூதிகளில் லட்டுக் கொடுப்பதில்லை, ஒரு தலித் பிரியாணி செய்தாலும், அனைவரும் உண்ணுகிறோம், ஏன் தலித்தை தள்ளி வைத்த ஆதிக்கச் சாதிக் கூட வாங்கி புசிக்கும் !!!

        • தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லீம்களாக மாறுவதைவிட இந்துக்களாக இருந்து போராடி சாவதே மேல். முஸ்லீம் மதம் உலகத்திலேயே மிகவும் பிற்போக்குத்தனமான மதம்.ஆண்ணாதிக்கத்தின் உச்சம் தான் முஸ்லீம்களின் மதம். RSSக்கும் ஜாமாத்துக்களுக்கும் வித்தியாசமே கிடையாது. இரண்டையும் ஒழிக்கப்படவேண்டியது.

        • I agree you have zero percentage knowledge on Hindu temple customs. It doesn’t mean that you can speak in a way you want… by they way… each and every temple has its own customs… I understand your proplem… the religious which is orginated from desert can think beyond the limit.. By the way.. Bhramins cant prepare the food in all the temples.. And also, each and every community has its own bhramin community which is bascil orginated from thier own community…

  7. ராமேஸ்வரம் கோயிலில் வெளிப் பிரகாரத்தில் ‘இங்கு பிராமனர்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை’ என்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கும். அது சமயலறைக்கான அறிவிப்பு. இதனை படித்துவிட்டும் கூட மான ரோசமின்றி சென்று கொண்டிருக்கும் பக்தர் கூட்டம்.

  8. நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பெரும்பாலும் அவாள்தான இருக்கிறா. அப்புறம் எப்படி அவாக்கிட்ட இருந்து இதுக்கு எதிரா தீர்ப்பு வரும்னு எதிர்பார்க்கமுடியும்.

    இந்த செய்தியைப் பார்க்கும்போது இதில் திமுக அரசு மீதும் தவறு இருப்பதாக தோன்றுகிறது. அவர்கள் இந்த விளம்பரம் வெளியிடும்போதே இந்த நிபந்தனையை போடாமல் வெளியிட்டிருக்கலாம் அல்லவா?

    • ஒரு பிரமணானவன் எந்த தொழிலும் செய்யக் கூடாது பிக்க்ஷை எடுத்துத் தானு உண்ண வேண்டும் ஓய் !!! அங்குள்ள அவா’க்கள் எல்லாம் பிரமணர் இல்லை, சாதி மாறியவர்கள் !!! சரி தானே !!!

      • சரியாய் சொன்னிங்க இக்பால் செல்வன்….!

        அந்தணன் என்றால் அந்த+நேரத்திற்கு மட்டும் என்று வாழ்பவன். அதாவது அடுத்த நேரத்திற்கு என்று எதையும் சேர்க்காதவன்.
        அப்படி யாராவது இருந்தால் காட்டும் ஒருமுறை பார்த்துகிறேன்.

        அப்புறம் பாகன் உத்தியோகத்தையும் நீரே பார்க்க வேண்டியதுதானே ஓய்…!
        அதுக்கு சதம் போட்டு சனி அள்ளினால் மோட்சம்மையா ….!
        ஏன் அதுக்கு மட்டும் சூத்திர வளை தேடுறேல் …?

      • அன்பு அழகா ,நீதிபதி முக்கியமல்ல ,இந்த தீர்ப்ப சொன்ன நீதிபதி பார்ப்பனர் இல்ல .இந்து மத சட்டமே மனு நீதி சட்டம் தானே .

  9. காலம் கண்டிப்பாக மாற்றங்களை ஏற்படுத்தும்! தகுதியுள்ள அனைத்து வகுப்பினரும், ஆலய வழிபாடு நடத்திக் கொடுக்க உள்ள தடை,விரைவில் விலகும்!

      • kaargi!

        ஜால்ரா அடிக்க விடமாட்டிங்களே! நான் உமது வழிக்கு வந்தாலும் விட மாட்டீரோ! ஒரு வேளை என்னிடம் இதுபோல எதிர்பார்க்கவில்லையோ?

      • m.k.radha!

        நான் நித்தியாக மாறினால், நீங்கள் தான் கேமிரா!(தற்போது விளக்கும் வீடியோகேமிராவில் இணைக்கப்பட்டுள்ளது!)

  10. நல்ல சாட்டையடியான கட்டுரை………………………..
    எங்கப்பா நம்ம கிராஸ் பெல்டுகளை இன்னும் காணோம்………………………………..

    • ஏன் பத்ரியே வந்து முதல் பின்னூட்டம் இட்டிருப்பது உங்கள் கண்ணில் படவில்லையா? பார்ப்பண அர்ச்சகர்கள் பெற்ற தடையாணை அநியாயமானது என்பதுதான் சிந்திக்க தெரிந்தவரின் கருத்து.

  11. எவ்வளவு சொன்னாலும் எவ்வளவு ஆதாரங்களைக் காட்டினாலும் மக்கள் திருந்துவதாய் இல்லை……….
    அந்த அளவிற்கு கடவுள் எனும் சொல்லை வைத்து ஒரு குறிப்பிட்ட கூட்டம் மக்களை மூளைச் சலவை செய்துள்ளார்கள் தாங்கள் அடிமைகளாக நடத்தப் படுகிறோம் என்பதைக்கூட அறியா வண்ணம் மக்களின் மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது……………………

  12. We are ready to change our thoughts If the MINORITY(and the upcoming) Government ready to cancel the quota in all departments.

    Now a days we are the people who are financially in the backward position but still we dont have any quota in all the departments.

    • கண்டிப்பா உங்களுக்கு கோட்டா தர தயார் தான். மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்ய நீங்கள் தயாரா? ரயில்வேயில் பீ அள்ளும் வேலைக்கு நீங்கள் தயாரா? இதுக்கெல்லாம் தயார் என்றால் சொல்லுங்கள் அதில் கோட்டா வாங்கித் தர முதல் குரலை நான் கொடுக்கிறேன்.

      குறைந்தபட்சம் இந்தக் கோயில் பாகன் வேலைக்காவது கோட்டா வேண்டும் என்று கேட்கலாமே?

      என்ன அய்யர்’வால்’ தயாரா?

      • நீங்க வேற கார்கி உடனே டோண்டுன்னு ஒருத்தர் பூநூல இறுக்கி பிச்சுக்கிட்டே ஓடிவந்து எங்க ஆளு ஒருத்தர் இங்கிலாந்துல பொய்
        சவுசாலயம் (“கழிப்பிடம்” இதுல கூட சமற்கிருதம் தான்) கட்டி பொது சேவை செஞ்சாரு தூர் வாரினாருன்னு கதை விடுவார் அப்படியும் கூட அவர் முதலாளியா இருந்திருப்பாரே தவிர தொழிலாளியா ஒருபோழுத்ம் இருந்திருக்க மாட்டார்…………………..

        • Mr.கோகுலகிருட்டிணன், what is your problem… Even the owner of the payed toilet is also from the same cast… have you ever think about that….

          You are asking against us because you are very well about the weekness of our community..

      • கார்கி, நீ கக்கூஸு கழுவு ஒரு பத்து நாளைக்கு. நீ கழுவுறதை பார்த்திட்டு அப்புறம் நாங்க சரின்றோம்! வெண்ணை. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்குற [obscured]

    • Iyer sir ?

      Are you ready to work toilet, street cleaning jobs if the government allot the same to you ? there is no meaning of financially backward reservation still so called upper castes are not ready for physical jobs.

      • Why are you still cleaning the toilets even the government gives all facilities to you people.

        You have free education, free for entering board examination but why are you still thinking about the toilet job…

    • ஐயர் தமிழ்ல பதில் சொல்லுங்கோ . நேக்கு ஒன்னும் புரியலை.

      நீண்ட நாள் சந்தேகம் !
      ராமா….ராமா…. என்று சொல்லிக்கொண்டே இருக்கும் நாரதரைவிட, தினமும் இருமுறை நினைத்த ( தான் பெயர் சொன்ன ) உழவன் (சூத்திரன் ) சிறந்த பக்தன் என்று விஷ்ணுவே சொன்னதாக கதை சொல்லும் நீங்கள், அந்த பக்தன் இறை பணி செய்ய தடை விதிப்பது ஏன் ?

  13. Better you people stop call those people for doing all pooja in your home/town.

    Give a chance to them as you are against to the PAARPANARKAL.

    !!!! All The Best !!!!

  14. //சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது//

    அப்புறம் என்ன மசித்துக்கு இட ஒதுக்கீடு தேவைன்றீங்கடா. சாதி வேற்றுமை தான் பார்க்ககூடாதுல்ல? அப்ப, இட ஒதுக்கீடு வேண்டாம்னு சொல்லுங்களேன் வெண்ணைகளா

  15. ஹை.. தோ பார்டா…

    குடுமிலேர்ந்து பிஞ்சி விழுந்த மசிருக்கு எம்மாம் கோவம் வர்து.. சும்மா கேட்டதுக்கே இந்தக் குதி குதிக்கிறியே.. இத்தினி வருசமா நாங்க தானே பீ அள்ளுனோம்… நீ சும்மா ஓசிச் சோறு தின்னுபுட்டு மணியடிச்சிட்டு தானே இருந்தே.

    சும்மா தின்னுபுட்டு சொகுசா கோயில்ல மணியாட்ட மட்டும் உனக்கு இட ஒதுக்கீடு வேணும்னு கேட்கத் தெரியும் – பீ அள்ற வேலைக்கு உங்காளுங்களுக்கு இட ஒதுக்கீடு தாறோம்னு பேச்சுக்கு சொன்னதுக்கே இப்புடி சவுண்டு குடுக்குறியே..

    ஏமாந்த பொண்ணுங்கள தடவிய தேவனாதன் கைகளும், சங்கர ராமனைப் போட்ட ஜெயேந்திரன் கைகளும் பிடிக்கும் லட்டை விட பீ அள்ற கைல பிடிக்கற லட்டு ஆயிரம் மடங்கு மேல். கருவறையை கக்கூசு அறையா மாத்தின உங்களாவாவுக்கு லட்டு பிடிக்க இருக்கும் யோக்கியதையை விட; இத்தனை காலமா மலம் சுமந்த எங்களவாவுக்கு இருக்கும் யோக்கியதை அதிகங்காணும்.

    நீ இடஒதுக்கீடு வேண்டாம்னு சொல்றது உண்மைன்னா கருவறையை விட்டு வெளியேறி அதில் சூத்திர பஞ்சமர்களுக்கு இடம் கொடு. இல்லை வேண்டும்னு கேட்டா எங்களோட சேர்ந்து பீ அள்ள வா.. இதப் பேச வந்தா மட்டும் மசிருகளுக்கு ரெட்டை நாக்கு வந்துடுதே?

    • Mr.kaargi,

      We are not compelling you to clean the toilet; its all about you;

      See other than the people who are working in the temple, other iyer people are choosing the filed which has the base as EDUCATION….

      The Minority Government is also against to us; you can do whatever you want..

      • மிஷ்ட்டர் சந்தோஷ் அய்யர்,

        வீ ஆர் ஆல்சோ நாட் கம்பெல்லிங் யூ டு மணியாட்டிஃபை. தென் வொய் டோன்ட் யூ கம் அவுட் ஆஃப் கருவறை அன்ட் லெட் அதர்ஸ் டு பெர்பார்ம் பூஜா? வொய் கான்ட் யூ டேக் உபூதி ப்ரம் எ பஞ்சமா? வொய் கான்ட் எ பஞ்சமா ப்ரிப்பேர் லட்டு?

        நேரடியா சொல்லுங்க சந்தோஷ், சூத்திரன், பஞ்சமன், மலமள்ளும் தொழில் செய்பவர்கள் லட்டு பிடித்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை? வெளியில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லும் நீங்கள் (கருவறைக்கு) உள்ளே மட்டும் உங்கள் இடஒதுக்கீட்டை ஏன் விட்டுத் தர மறுக்கிறீர்கள்?

        • Also we are not thinking bad about doing pooja..

          You people really think bad about cleaning the toilet, that work was not pushed on you.. you only chose the field… then why the hell you are blaming us…

          You people gave more amount to archakar and now a days you people thinking that, that business is a profitable one, so you are speaking about that job…

        • சார் கருப்பசாமி கோயில் அ வேளாளர் இருப்பாங்கல அங்க போய் நீங்க வெளில போங்க நாங்க மந்திரம் படிச்சுருக்கோம் இனிமே நாங்க அர்ச்சனை செய்யறோம் ன்னு தைரியம் இருந்தா சொல்லித்தான் பாருங்களேன்

      • sathosh iyar … dont u feel guilty for what ur cast done for daliths… over the centuries u people denied education, equality, basic human rights, etcs to them… now this is the time to repay them… if u trust in almighty, u should feel relieved from all ur ansestor’s sin.
        samooga neethi enbathu inthu than.. ethan peyaral utimaigal marukkappaddatho… athe peyaral thirumba koduththal…

        • Hello not only our cast people… Why I have to feel guilty ?

          We are not only the reasons for denying the human rights for some people…

          Have you heard in the villages[who are not from our cast] did follow the two types of classes in the tea shop and every where..

    • Why are you people always speaking about the temple and people who chants the mantra…

      The main reason for speaking about the temple job is MONEY… Nothing other than that..

      If you people are broad minded then why the hell you are coming to temple, pray in the place which is favor for you…

      • //Why are you people always speaking about the temple and people who chants the mantra…

        The main reason for speaking about the temple job is MONEY…
        //

        கரெக்ட்டுங்க சார். அப்ப மத்த இடத்துல நீங்களே போய் குந்திக்கனும்னு கேட்கறது எதுக்கு சமூக சேவை செய்யவா? நூல் கம்பேனிக்காரவுகளுக்கு மேல் மாடி காலியா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன் – இப்பத்தான் தெரியுது மேல் மாடியே இல்லைன்னு. ஸோ சேட் 🙁

        • உங்களுக்கு மேல் மாடி இருந்தும் அந்த மாடி ல கடை வைக்காம கக்கூஸ் தான் கட்டி கழுவுவேன் ன்னு சொல்றப்போ நான் என்ன சார் பண்ண முடியும்

        • நீங்க மட்டும் ஓபன் காம்பெடிஷன் அப்படிங்கற பேர்ல வரலாம் நாங்க வர கூடாதோ

    • சாதி வேற்றுமை தான் பார்க்ககூடாதுல்ல? அப்ப, இட ஒதுக்கீடு வேண்டாம்னு சொல்லுங்களேன் வெண்ணைகளா

      • உன்ன பதினேழு வயசு வரைக்கும் கண்ணா கட்டிட்டு, இப்ப பரிச்சை எழுதி கல்லூரிக்கு போன்னு சொன்னா போக முடியுமா?. கல்வி, தொழில், நில உரிமை இல்லமா நூற்று கணக்கான ஆண்டு இருந்துட்டு இத்தன நாள் ஓசி பதவி, ஓசி நிலம், விருப்பபட கல்வி, தொழில் வைப்பு இருந்த உங்களுக்கும் வித்தியாசம் இல்லையா? உடல் உழைக்கும் சாதிகளுக்கு இந்த நாட்டில் சம உரிமை இருக்கு… கல்லூரி, வேலை வாய்ப்பு உட்பட. அது உரிமை. ஒதுங்கி நில்லு.

    • நீங்க சொல்றத பாத்தா கட்ட பொம்மன் அ மாட்டி விட்ட எட்டப்பன் கூட பார்பண்ணன் ன்னு சொல்லுவேங்க போல

    • வெண்ணை.. நீ என்னைக்காச்சும் பீ அள்ளிருக்கியா? சும்மா கதை விடாதே!

  16. இந்த வழக்கு விசாரணையின் போது நானும் அந்த நீதிமன்றத்தில் இருந்தேன்.

    “நீண்ட நெடுங்காலமாக பழக்கத்தில் உள்ளதை மாற்ற முடியாது” என்று நீதிபதி கூறினார். இதே அளவுகோலை அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தினால் இந்த நீதிபதி சட்டம் படித்து நீதிபதி பணிக்கே வந்திருக்க முடியாது. வீட்டின் சமையலறையில்தான் இருந்திருக்க வேண்டும்.

    பெரியார் வழிவந்தவர்களாக கூறிக்கொள்பவர்கள் முழுவீச்சில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த தீர்ப்பும், நீதிபதியின் பார்வையும் வலியுறுத்துகிறது.

    • என்ன சார் பெரியார் வழி பெரியார் வழி ன்னு சொல்ல தானே செய்யறேங்க எல்லாத்துலயும் சம உரிமை ன்னு தீவிரமா இருங்க அப்புறம் எல்லாம் நல்ல படியா நடக்கும்

  17. யோவ் அஹ்டான் ஒனக்கும் கடவுளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாதிள்ள?அப்புறமென்ன கூவுற?சரி ஒரு அகமதியாவ மசூதிக்கு தலைவராக்க சொல்லு பாப்போம்?சொல்ல மாட்ட ஹிந்து மதத்த மட்டும் எதிர்த்து பேசு.அவன்தான் சகிப்புத்தன்மை உடையவன்.இதே போல பாகிஸ்தான்ல இஸ்லாத்த விமர்சனம் பண்ணா தூக்குதான்.தெரிஞ்சிக்க.

    • போலி நாத்திகன் சார் , நியாயமா நீங்க போலி ஆத்திகன் சார் ! இந்து மத்ததில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினா வழக்கமா மற்ற மதத்தினரையும் வம்புக்கிழுப்பது தங்களின் அறிவார்ந்த மடத்தனம் – அமதியான்னு இல்லை ஒரு மசூதியின் தலைவராவோ இல்லை இமாம் ஆகவோ , தொழுகைக்கு அழைக்கும் மோதினாராகவோ யார் வேண்டுமானாலும் வரலாம் – இன்ன சாதியைத் தான் சேர்ந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. இமாம்க்கு குராஆன் வசனங்களை ஓத படிக்கத் தெரிஞ்சு இருக்கனும் அவ்வளவுதான்

      • ஷியா பிரிவு மசூதி குள்ள சன்னி பிரிவு மக்கள் போக மாட்டங்கன்னு சொல்றாங்களே அத பத்தி என்ன சொல்லுறேங்கோ

        • அய்யா அதிமேதாவி அய்யரே ,

          ஷியா முஸ்லீம்களோட பள்ளிக்குள்ள சன்னி முஸ்லீம்கள் போறதில்லை அல்லது போகவிடுறது இல்லைனா அதுக்குக் காரணம் பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வோ , அல்லது வர்ணாசிர மலமோ அல்ல . ஷியா முஸ்லீம்களின் தொழுகை முறை வேறு சன்னி முஸ்லீம்களின் தொழுகை முறை வேறு .உதாரணமா அவங்க லுஹர் , அசர் 2 ரகாத் மட்டுமே தொழுவாங்க – ஜமாத்தோடு சேர்ந்து தொழமாட்டாங்க , சவுதிலே தனக்கு முன்னாடி ஒரு சிறு வட்டவடிவ கல்லை ஸூஜீதாவில் நெற்றி படும் இடத்தில் வைச்சு தொழுவாங்க – ஆனாலும் சவுதிலே சன்னி முஸ்லீம்கள் தொழுகின்ற பள்ளிகளில் அவர்கள் தொழத்தான் செய்கிறார்கள் – நீங்க பெரிய மேதாவி உங்க கண்ணுக்கும் அறிவுக்கும் மட்டும் இதெல்லாம் தெரியாது – சரி ஷியா முஸ்லீம்களும் ஹஜ்,உம்ரா செய்ய மக்கா மதினா போறாங்க அங்கே இருக்கிற இமாம்கள் அனைவரும் சன்னி முஸ்லீம் தான் – இவங்க மக்கா மதினா பள்ளிக்குள்ள போகாம இருக்காங்களா இல்லை வரவிடாம தடுக்கப்படுறாங்களா – அடுத்த மதங்களை குற்றம் சொல்றதுக்கு முன்னாடி அறிவோட சிந்திக்கனும் இல்லை அது பற்றிய அறிவு இருக்கிறவங்ககிட்ட கேட்கனும்

      • இந்தியா ல இருக்குற முஸ்லீம்ஸ் எல்லாரும் மதம் மாறினவங்க ன்னு சொல்றாங்களே அது எதுக்கு

        • அய்யரே

          இந்திய முஸ்லீம்கள் மதம் மாறிவங்கதான் – ஆனா அது எதுக்குன்னு கேட்குற உங்க அப்பாவித்தனம் தான் புரியலே – இஸ்லாம் பிடித்து இருந்தது ஏற்றுக்கொண்டார்கள் – இன்னும் கொஞ்சம் காரமா சொல்லலாம் – அது மற்ற மதச்சாகோதரர்களை புண்படுத்துமேன்னு நாகரீகமா சொல்றேன்

    • யோவ்! அவங்கதான் (சன்னி முசுலீமு) அஹ்மதியாவ முஸ்லீமு இல்லன்னு சொல்லுறாங்கள்ள நீயும் பாப்பானத் தவிர மத்தவாள்ளாம் இந்துக்கள் இல்லன்னு சொல்லிறேன்.

        • நாங்க அப்படி சொன்னதுனால சாதி சான்றிதழ் அ கிழிச்சு போட்டுட்டேன்க போல

  18. சிலை வடிக்க,கோயில் கட்ட ,ஓவியம் தீட்ட,பொறியியல் அறிவைக் கொடுக்க,வழிபாட்டுப் பாடல்களை இயற்ற என எல்லாவற்றையும் செய்பவர்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள்.இவற்றில் பார்பனர்களின் பங்கு என்ன?ஒடுக்கப்பட்ட பிற்பட்ட மக்கள் உருவாக்கிய கோயில்களில் கும்பாஅபிசேகம் என்ற பெயர்களில் தீட்டு கழிக்கிறீர்கள்.ஆனால் அந்த குடமுழுக்குப் பொருட்களும் சூத்திரர் உழைப்பில் விளைந்தவைதான்.தஞ்சை பெரிய கோயில் அளவுக்கு வேண்டாம் ஒரு சிறிய கோயிலை முழுமையாகக் கட்ட முடியுமா?கட்டுங்கள் ?நாங்கள்அந்தப்பக்கம் தலைவைத்து படுத்தால் கூட தீட்டு என்று கூறுங்கள்.இப்பொழுது எங்கள் உடைமைகளைவிட்டு வெளியேறுங்கள்.

    • கோயில் கட்டுறேங்க , சிலை செதுக்குறேங்க , எல்லா உதவியும் செய்யுற நீங்க கூப்பிடாம பார்ப்பனன் வருவானா , நீங்க எதுக்கு கூப்புடறேங்க , அதான் உங்க மக்கள் மந்திரம் படிசுருகாங்க ல அவங்கள கூப்பிடலாமே

      • அவனத்தான் தீண்டத்தகாதவன்னு சொல்லுறீல்ல அவன் கூப்பிட்டா மட்டும் ஏன் தட்ட தூக்கிட்டு ஓடுற?

      • ஐயரே,
        அல்லாரும் இந்துன்னா எல்லா ஜாதிக்காரனையும் உள்ள விடு. இல்லன்னா ஐயர்வாள் மட்டும்தான் இந்துன்னு சொல்லிட்டு நடைய கட்டு. எதுக்கு வீணா…… புண்ணாக்கிக்கிறே

        • அய்யர்வாள்,

          மசூதிய இடிக்கனும்னா நாமெல்லாம் இந்துன்னு கூப்புடுறே, லட்டு புடிக்கமட்டும் நாங்க (பிராமிண்) மட்டும்தான் இந்துன்னு தனியாப் போறியே! ஏன்?

  19. இந்தத் தீர்ப்பு மட்டுமல்ல ஏனைய பல தீர்ப்புகளிரும் இந்து மதம் தொடர்பான இருக்கிற நடைமுறையை மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உரிமை, அனுபவ பாத்தியதை என்றெல்லாம் சொல்வார்களே, அது போலத்தான் பல நடைமுறைகள் கட்டிக்காக்கப்படுகின்றன.

    ஒரு செயல் சரியா தவறா என்பதிலிருந்து பரிசிலிக்க பலர் தாயாராய் இருப்பதில்லை. காரணம் இது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவோ பாரம்பரிய நம்பிக்கையை தகர்ப்பதாவோ இருக்கும் பட்சத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். முடிந்த வரை போராடுவார்கள். அப்படித் தான் இன்று பார்ப்பனர்கள் பல வழக்குகளில் வாதிடுகிறார்கள். பழைய தீர்ப்பகளைக் காட்டி வெற்றியும் பெறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கும்பலின் தன்நலம் தொடர்பானது இது. தங்களின் தன்நலம் தொடர்பான ஒன்றை ஒட்டு பொத்த இந்துக்களின் பிரச்சனையாக மாற்றுகிற கலையைக் கற்றவர்கள் அவர்கள். பார்ப்பனர்கள் (ஆரியர்கள்) என்ற ஒரே இனமாக இருப்பது அவர்களின் பலம்.

    பிற இனத்தவர் அதாவது தழிழர்கள் அல்லது திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாமெல்லாம் எதார்த்தத்தில் ஒன்றானவர்கள் அல்ல. சாதியின் பேரால் நடைமுறையில் ஒருவருக்கொருவர் தங்களின் சாதி படிநிலைக்கேற்ப பிற சாதி மக்களை பார்ப்பனர்களைப் போலவே பாகுபாடு பார்த்து ஒதுக்கி வைத்து காழ்ப்புணர்ச்சியோடு நடத்துபவர்கள். ஆகையினால்தான் பார்ப்னர் அல்லாத பிற அனைத்து சாதி மக்களை இழிவு படுத்தி தீர்ப்புகள் பல வந்தாலும் ரோசம் வருவதில்லை. தனக்குக் கீழே மற்றொரு சாதிக்காரன் இருப்பதால் உயர் சாதியினரிடம் ஒரு வித பார்ப்பன மனோ நிலையே நிலவுகிறது. மேலும் கோயில் சம்பந்தப்பட்ட விசயங்கள் பிற சாதி மக்களுக்கு வாழ்வாதாரம் பற்றிய பிரச்சனையல்ல. ஆகையினாலே “அய்யய்யோ நமது எதிர்காலம் என்னாவது?” என்ற கேள்வியே எழுவதில்லை. அதனாலும் கோபம் வருவதில்லை.

    சாதி உணர்வோடும், சாதிபாராட்டும் நடைமுறையோடும் இருக்கிற எந்த சாதிக்காரனுக்கும் இத்தீர்ப்பு குறித்து கோபம் வராது. தீண்டானையின் கடைக்கோடி மனிதனுக்கோ அடுத்த மட்டத்தில் தனக்கு அருகிலேயே நிலவும் தீண்டாமை குறித்துதான் கவலை இருக்கும். தான் நுழைய முடியாத மேல் மட்டத்தில் நடக்கும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது போன்ற தீண்டாமைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே அவர்களும் போராட மாட்டார்கள்.

    பிறகு என்னதான் செய்வது? புலம்புவதும் அல்லது தனிப்பட்ட முறையில் இங்கே பின்னூட்டமிடுபவர்களைப் போல திட்டித் தீர்த்துக் கொள்வதும்தான் மிச்சம்.

    சில பிரச்சனைகளை நீதிமன்றங்களின் மூலம் தீர்க்க முடியாது. சாதியப் பாகுபாடு பார்க்காத அனைத்துவகை ஏற்றத்தாழ்வுளுக்கெதிராகப் போராடும் புரட்சியாளர்களால் மட்டுமே சில பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிதம்பரம் நடராசர் கோயிலில் திமிழில் பாட வைத்தது. அத்தகையதொரு போரட்டமே இன்றைய தேவை. அதற்காக பொதுமக்களும் புரட்சியாளர்களை நோக்கி வந்தாக வேண்டும். குறைந்த பட்சம் ரோசம் உள்ளவர்கள் உடனடியாக.

    • சாதியப் பாகுபாடு பார்க்காத அனைத்துவகை ஏற்றத்தாழ்வுளுக்கெதிராகப் போராடும் புரட்சியாளர்களால் மட்டுமே சில பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்
      wellsaid Ooraan.I beileive very recent days past Prabakaran had some what acieved these goal.Let it be by creating fear but he aceived.Any thoughts??

  20. இந்துன்னு ஒரு மதம் இருக்காடா பிராமண மதம்னு சொல்லு ஒங்களோட எந்த வேதத்திலாவது இந்துன்ற வார்த்தை இருக்கா? வெள்ளைக்காரன் மக்கள் தொகை கணக்கெடுத்தப்ப பாப்பான் மைனாரிட்டி ஆகிவிட கூடாது என்று இந்து என்கிற வார்த்தையை உருவாக்கி கோவில்களில் அனுமதிக்கப்படாத மீனவர் நாடார் தலித்களை எல்லாம் இந்து நாடார் இந்து பள்ளர் இந்து ஆதி திராவிடர் ஆக்கி உன் சாமியே என்னன்னு தெரியாத பழங்குடிகளை எல்லாம் இந்து இந்துன்னு சொல்லவச்சி நாடு முழுசும் விநாயகன் ஊர்வலம் நடத்தி ரவிவர்மா வரஞ்ச படத்தையெல்லாம் சாமின்னு கும்பிடவச்ச பார்ப்பன வரலாறு எங்களுக்கு தெரியுமப்பு…… இரும்பு அடிக்கிற இடத்துல அவாளுக்கு என்ன வேலை?

    • சபாஷ் !!! பிராமணர்களை எதிர்த்து எந்தப் பயனும் இல்லை, பிழைப்பு ஓடணும் இல்லையா ! அதனால் ஒரு மயிற்றையும் உங்களால் அசைக்க முடியாது. வெள்ளைக்காரன் காலத்தில் தேவை இல்லாமல் அனைத்து மக்களையும் இந்து என ஆக்கியதில் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளுங்கள் ! முடிந்தால் சட்டத்தை மாறும் இல்லாவிட்டால், மத்ததை மாற்றும், நாத்திகனாக இருக்க ஆசையா இருந்துவிட்டுப் போங்கள் ! நாத்திகனும் ஒரு இந்துவே என்கிறது இந்திய அரசியல் சாசனம் !

    • இந்து ன்னு ஒரு மதம் இருக்க ன்னு கேக்குறேங்க… அப்புறம் இந்து நாடார் , இந்து ***, ன்னு லாம் பேசறேங்க … வெள்ளைக்காரன் தான் இந்து மதம் ன்னு சொல்ல ஆரம்பிச்சான் ன்னு சொல்றேங்க ஆனா இந்து மதம் பத்தி எல்லாம் தெரியும் ன்னும் சொல்றேங்க …நல்ல ஜோக்

  21. தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்களில் இருந்து பிராமணர்கள் அனைவரும் வெளியேறவேண்டும் என்று சொல்ல எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்.எங்கள் கருணையில் வாழும் உங்களுக்கு இவ்வளவு கொழுப்பா?எங்கள் மாநில வளர்ச்சியில் மிகப்பெரிய திட்டமான சேது கால்வாய் திட்டத்தை நாலே நாலு பாப்பான் ஒரு மணல் திட்டை ராமன் கட்டிய பாலம் என்று சொல்லி பாப்பான் நீதிபதியாக இருக்கும் ஒரே காரணத்தால் உச்ச நீதி மன்றத்தில் தடை வாங்கி முடக்கியதை பொறுத்துக்கொண்டு இருக்கிறோமே?அது தவறா இங்கெல்லாம் வராதீங்கப்பா

    • காலம் காலமா நீங்க தானே ஆட்சியில இருக்கேங்க சொல்லியிருக்கலாம் ல , இப்போ சொல்லிட்ட உடனே மாற முடியாது [ எப்படி உங்களால இட ஒதுக்கேடு இல்லாம இருக்க முடியாதோ அதே மாதிரி தான் ]

  22. “இந்தக் காலத்தில் எல்லாம் யாரு சாதி பாக்குறா? தீண்டாமையா நஹி நஹி” என்று சொம்படிக்கும் xxxxxக்கு வேண்டுமானால் இது அதிர்ச்சியாய் இருக்கலாம். மற்றபடி இது தொன்று தொட்டுவரும் புரையோடிப் போயிருக்கும் பார்ப்பனர்களின் கேவலமான செயல்தான் இது புதிது அல்ல. :-((((

    “வெஜிடேரியனுக்குத்தான் விடுவேன்” என்ற அளவிலும் நாசமாப்போன அய்யர் அய்யங்கார் என்ற லாஸ்ட் நேம் வடிவிலும் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதுதான். “நான் அய்ங்காரா பொறந்த பொறப்புக்கு பெருமைப்படுறேன்” என்று பப்ளிக்கா விஜய் டீவில் கூட ஒரு பொண்ணு சொல்லுச்சு.

    என்ன இவாள் தெரியாமல் பேப்பரில் பப்ளிக்கா போட்டுட்டாள் அவ்ளதான். அடுத்தவாட்டி பப்ளிக்கா போடாமல் நாசுக்கா முடிங்க அண்ணாமலைகளா.

    அண்ணாமலைப் பெருமை பேசும் சில சாமியார் கூட்டத்திடம் கேட்டால் “இது மக்க‌ளின் தவறு. சாமி இன்னா செய்யும்” என்று கேட்பார்கள். தனக்கு மேனேஜராக இருந்து தனது கோவிலைப் பராமரிக்கும் ஒரு கூட்டம் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்காத , தட்டிக் கேட்காத சாமி எப்படி மற்றவற்றுக்கு பொறுப்பேற்பார் என்று நம்புவது?

    .

    • சும்மா இருக்குற ஊசிய எடுத்து பையில போட்டுக்கிட்டு அப்புறம் குத்துது கொடையுது ன்னு சொல்றேங்கலே

  23. இந்தக் காலத்துல இப்பிடி ஒரு கேவலம்!!! பூசை பண்ண முடியாத சாமியை கும்பிடுவது எதுக்கு?? அத நாம ஒதுக்கணும். இந்த மாதிரி கோயில்களுக்குப் போகவே கூடாது, அப்படிப் போனாலும் பூசை பண்ணாம பிரசாதம் வாங்காமையே திரும்பி வரணும்.

  24. ஒன்று மட்டும் புரியவில்லை..! இவ்வளவு கேவலப்பட்டு, அடிமைப்பட்டு அந்தக் கோயில்களுக்குப் போகவேண்டுமா என்ன..? வீட்டில் வளர்க்கும் நாய் கூட அதிகம் திட்டினால் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறது. தன்னை அவமானப்படுத்தும் மதத்தின் மீது மனிதனுக்கு மட்டும் கோபமும்,ரோஷமும் வருவதில்லயே ஏன்? உப்புப்போட்டு சாப்பிடுறீயா என்று கேட்பார்கள்,அதாவது சொரணை இருக்கிறதா என்பதற்காக! இவர்களைப் பார்த்தும் அப்படித்தான் கேட்கத் தோன்றுகிரது. மதங்களைப் புறக்கணியுங்கள், அதிலும் மனிதனை வேறுபடுத்திப்பார்க்கும் மதங்களை தூக்கியெறியுங்கள். நம் முன்னோர்கள் கட்டிய கோவில்களிலிருந்து பூசாரிகள் வெளியேற இதுவும் ஒரு வழி. வயிறு காய்ந்தபின் எங்கே போவான்..?

    • Example—Recent stampede in sabarimali.Only 2 Keralites killed because they knows the so called JOTHI is fake.We have lots of Iyyanar temple in TN which are equally sacred if they accept it.Why these people go there with all these struggle

    • மாயன் இதைத் தான் நானும் சொன்னேன் ! இஸ்லாமிய பெயர் இருந்தால் பேசக் கூடாதாம், எனது பூணூலைக் காட்டட்டாம், காட்டினாலும் சும்மா விடுவார்களா? தோஷக் காரன் என புதுக்கடை சொல்லுவார்கள் !!!

    • Mr.Mayan, நீங்க சொல்ற மாதிரி மக்கள் கோயில் அ புறக்கணிக்க மாட்டாங்கனா அவங்க வீட்லயோ இல்ல எங்க அவங்களுக்கு அமைதி கிடைக்குதோ அங்க போயி வழிபாடு பண்ணலாமே , இது அவங்க சொல்ற மாதிரி மறைமுகமா பார்பனீயத்த எதிக்கறது தானே ,

    • இடை தரகன் (வியாபாரி ) செய்த கலபடதிர்க்கு உழவன் என்ன செய்வன்….

      ஏழையிடமும், அன்பு கொண்டவனிடமும் இறைவன் இருப்பன் என்று கதை சொல்வா , நாங்கள் மட்டுமே பூசை செய்ய தகுதியானவன் என்று வியாக்கியானம் பேசுவா .

      நாம் அசைவம் சாப்பிடுவதால் புனிதம் கேட்டுவிட்டது என்பா !
      அவா சாப்பிடும் முட்டை சைவம் என்பா …!

      தட்சனை போடுவோருக்கு மகுடம் வைப்பா…!
      போடவில்லை என்றால் அதிலே குட்டு வைப்பா ….!

      கடவுள் முன் அனைவரும் சமம் என்பா …!
      அதிக காணிக்கை தந்தாள் மட்டும் அருகில் சென்று பார்க்கலாம் ….!

      இவைகளிடம் போய் நியாயம் கேட்கிறியே ஓய் …!
      உம்மை என்ன சொல்வது…!

      கோவில்கள் நமது பட்டன் சொத்து அதை புடுங்கி விடு
      எதற்கு ஓய் விலகிபோறேள்….!

  25. இந்து என்று சொன்னாலே ,பார்ப்பன மதத்தின் அத்துணை

    கேடுகளையும்,சாதிகளையும் ஏற்றுக்கொண்டதாக ஆகிறது

    எனவே” இந்து என்று சொல்லாதே பார்ப்பனியத்தின் பின்னே

    செல்லாதே”என்பதே சரி.தனக்கு கீழே ஒரு அடிமை

    இருப்பதையும்,தான் ஒரு அடிமையாய் இருப்பதையும்

    உணர்ந்த்தவர்கள் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வெற்றி

    பெறமுடியும். நம்மை அறிவோம், போராடுவோம், வெற்றி

    பெறுவோம்.

    • சுருங்கச் சொன்னாலும் சரியாக்ச் சொல்லியுள்ளீர்கள்.

      பொந்து மதமாக இருந்தாலும் எந்த புண்ணாக்கு மதமாக இருந்தாலும் அந்த மதத்தின் வரலாறு தெரிந்தவன் அதில் இருக்கமாட்டான். அப்புறம் எப்படி இத்தனைபேர்கள்?

      மதத்தை தொங்கிக்கொண்டு இருப்பவர்களில் முக்காலே மூணுவீசம்பேர் அந்த மதம் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல், பெற்றோர்களால் நேர்ந்துவிடப்பட்டவர்களே. வளர்ந்தபின்னும் அந்த சுமையை இறக்கமுடியாமைக்கு காரணம் கஞ்சா அடிக்காவிடில் நடுங்கும் உடல்போல பழக்கப்பட்ட ஒன்ற‌விடமுடியாமல் இருக்கும் ஜன்னி கேஸ்கள்.

      மனிதனாக இருக்க மதம் தேவை இல்லை. மதத்தில் இருப்பவன் மனிதன் இல்லை. ஏதாவது ஒரு வழியில் மதத்தின் பீடைகள் அந்த மதத்தில் இருப்பவனை ஆண்டுகொண்டே இருக்கும். வேலைக்குச் சேருமுன் ஒப்பந்த விதிகளில் கை‌யெழுத்துப்போடுவது போல புத்தகம், தூதர், ஆவி,பரிசுத்தம், வேதம் கருமம் என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதை மறுத்தால் மதத்தில் இடமில்லை. அப்புறம் எப்படி மதத்தில் இருந்துகொண்டே மனிதனாக இருக்கமுடியும்?

      .

      • புத்தகம், தூதர், ஆவி,பரிசுத்தம், வேதம் கருமம் என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதை மறுத்தால் மதத்தில் இடமில்லை. அப்புறம் எப்படி மதத்தில் இருந்துகொண்டே மனிதனாக இருக்கமுடியும்?//

        அன்பின் கல்வெட்டு ,

        நம் வீட்டு குழந்தை ஒருவன்/த்தி புகை பிடிப்பதாலோ, டாஸ்மாக் செல்வதாலோ , டேட்டிங் போவதாலோ, சரோஜாதேவி புத்தகம் படிப்பதாலோ கருமம் என ஒதுக்கி வைத்துள்ளோமா ?.. குடும்பத்தில் அப்படியானவர்களை வைத்துக்கொண்டே நாம் எப்படி மனிதனாக இருக்க முடியும்?..

        ஒட்டு மொத்த தீர்மானத்துக்கு வரக்கூடாது..

        மதத்தில் இருப்பதால் மனிதனாக இருக்க முடியாது என்று எதை வைத்து சொல்வீர்கள்..?.. ஒவ்வொருவரின் மனதையும் எப்படி அளவிடுவீர்கள்…?..

        விமர்சியுங்கள் தாராளமாக முடிவெடுக்காதீர்கள்…

        ஆத்திகனோ , நாத்திகனோ, பரிசுத்தமான மனிதன் னு எவருமில்லை இங்கே என்பதை புரிந்தோம்னா மனிதம் மிளிரும்..

      • ஏதாவது ஒரு வழியில் மதத்தின் பீடைகள் அந்த மதத்தில் இருப்பவனை ஆண்டுகொண்டே இருக்கும். //

        மதத்தில் பீடைகள் மட்டுமே காண்பவருக்கு பீடைகள் மட்டுமே தெரியும்.. நல்லவைகளை காண்பவருக்கே நல்லவை புலப்படும்…

        சக மனிதனை , சாதி , இனம், ஏழை , பணக்காரன், அழகு, பதவி, நாள் , கிழமை , என எதையும் பாராது மனிதனாக மட்டுமே பார்க்க , நேசிக்க, உதவ , மன்னிக்க சொல்லித்தந்த கிறுஸ்தவ மதத்தில் பிறந்தமைக்கு இன்றும் பெருமைப்படுகிறேன்…

        • jmms,

          Yeshua Ben Yosef என்பவர் ஒரு போராளி. யூத இனத்தவர மற்றும் யூத மத நம்பிக்கைகளின் மத்தியின் பிறந்தவர். அவரது கலகங்களை இந்தக்கால அளவுகோலில் அளக்காமல், அந்தக் கால அளவு கோலில் பார்த்தால், அவர் ஒரு போராளிதான். அவர் காலத்தில் அவர் அவருக்குச் சரி என்று பட்டதை சொல்லி கலகங்களைச் செய்தவர்.

          அவர் கனவில்கூட இப்படி ஒரு மதம் தன் பெயரில் தோன்றி பிஸ்கோத்து ட்ரெண்ட், புரோட்டா ட்ரெண்ட், கொத்தோலிக்க பரோட்டா என்று கூறுகட்டி விற்கப்படும் என்று நினைத்திருக்க மாட்டார். :-(((

          அவருக்கு மரியாதை செய்வதானால் அவரைப் போல போராளியாக இருக்கவேண்டுமே தவிர , அவரை சாமியாக்கி மதமாக்கி பூசைகள் செய்வது அல்ல.

          உங்கள் நம்பிக்கை உங்களுக்கு . மதம்தான் உங்களை மனிதனாக்குகிறது என்றால் நீங்கள் அதில் இருப்பதே நல்லது.

          ஊன்றுகோல் இல்லாமலும் நடக்கலாம் என்பவர்கள் மட்டுமே ஊன்றுகோலை விட்டுவிடலாம்.

          Yeshua Ben Yosef வை இயேசு ,கிறித்துவம் என்று பார்க்காமல் வரலாறாகப் பாருங்கள் பல புதிய விசயங்கள் தெரியலாம்.

          .

        • சூத்திரன்

          சைடுல வெலா (வில) ஓட்டறது இதுதானா?//

          சூத்திரரே, என்னை பொருத்தவரை கிறுஸ்தவம் கம்யூனிசமும் ஒன்று..

          மனிதனை மனிதனாக நடத்த சொல்லித்தருவது. சம உரிமை தர பாடுபடுவது..

          ஆக என்ன தவறு ?.

        • இதோ இன்னொரு மத வியாதி. ஆப்பிரிக்காவில் தன் போக்கில் வாழ்ந்து வந்த மனிதர்களை விலங்கு பிடிப்பது போல பிடித்து வந்து சங்கிலி இட்டு முதுகில் சூடு வைத்து வேலை செய்ய வைத்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அம்மையாரே? வாழ வந்த இடத்தில் ஆப்ரிக்க ஆண்மக்கள் ஆரம்பகாலம் முதலே பாதிரியாராக இருக்க அனுமதிக்கப் பட்டார்களா? எந்த மதமும் புனிதமானதும் இல்லை கீழ்மையானதும் இல்லை, தன் குறைகளை ஏற்று சரி செய்து கொள்ளும் வரை. கிறித்துவ மதத்தில் பெண்கள் பாதிரியாராக முடியுமா? – எனக்கு நெடு நாட்களாக இருக்கும் கேள்வி. அறிந்தால் பதில் தாரும்.

        • இந்து மதத்தில் எதை நீங்கள் நலலது என்று கூறுகிறீர்கள்? இந்து மதத்தில் இருக்கும் அறம் சம்பந்தமான அனைதது விசயங்களும் புத்தமதத்திலிருநதும், தமிழ் அற நூல்களில் இருந்து திருடியது தான் என்பதை மறநது விட வேண்டாம்.. இந்து மதத்தின் அடி நாதமே வர்ணாசிரமம் மறறும் மனு தர்மம் எனப்படும் ஜாதி ஏற்றத்தாழ்வு தான்.

  26. “இந்து என்று சொன்னாலே ,பார்ப்பன மதத்தின் அத்துணை

    கேடுகளையும்,சாதிகளையும் ஏற்றுக்கொண்டதாக ஆகிறது

    எனவே” இந்து என்று சொல்லாதே பார்ப்பனியத்தின் பின்னே

    செல்லாதே”என்பதே சரி.தனக்கு கீழே ஒரு அடிமை

    இருப்பதையும்,தான் ஒரு அடிமையாய் இருப்பதையும்

    உணர்ந்த்தவர்கள் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வெற்றி

    பெறமுடியும். நம்மை அறிவோம், போராடுவோம், வெற்றி

    பெறுவோம்.”
    மிகவும் சரி

  27. Even Periyar, dirty old man of earlier years told all the non-brahmins of his ilk that there is no God and all who worship God and go to temples are fools.Brahmins have a profession of being near temples and encourage Worship.Hence this foolish fellows want to get into certain works of the temple.Do they accept God? or simple want money from the temple.Govt and constitution cannot interfere with worship of God.Secularism may be good for vote bank politics but not for the minds of people.
    Further people who kill animals and are not given to vegan foods cannot be worshipers.For them they have black magic and animal killing and sacrificing temples.they may turn into even cannibals.Anybody who kills nature and worships is not welcome.Brahmins genetically worship Gods and are near temples managing temples.Even kings have accepted with their naked power and autocratic ways.Some nonbrahmins cannot change their genes by adopting brahminical ways or by at least unleasing racist tendencies.Such a situation will not arise.Hence society will have to develop a technology for individuals to live peacefully in their ways of happiness.After Periyar Rationalist movement has become racist movement.

    • //Even Periyar, dirty old man of earlier years told all the non-brahmins of his ilk that there is no God and all who worship God and go to temples are fools.Brahmins have a profession of being near temples and encourage Worship.Hence this foolish fellows want to get into certain works of the temple.Do they accept God? //

      சரியாகச் சொன்னீர்கள். கடவுளை நம்பாத நாத்திகர்கள் கோயில்களில் சமத்துவம் வேண்டும் என எதற்குக் கேட்க வேண்டும்? அனைத்துக் கோயில்களையும் இடித்துத் தள்ளத் தயாரா?

    • //Anybody who kills nature and worships is not welcome.Brahmins genetically worship Gods and are near temples managing temples.Even kings have accepted with their naked power and autocratic ways.Some nonbrahmins cannot change their genes by adopting brahminical ways or by at least unleasing racist tendencies.//

      சாமி கும்பிடறதுக்கே தகுதி சொல்றியா நீயி? வெளங்கிடும்.

      அடப்பாவி மனுஷா. அப்ப நீ தின்னும் சோத்தை எவன்டா வெதச்சு புடுங்கி நட்டு அறுத்து அரிசியாக்கி கொடுத்தது? அவ்வளவு சுத்தம் பாக்கற நீ, நீயே உன்னோட சோத்தையும் வெயில்ல காஞ்சு சேத்துக்குள்ள கால வச்சு வெதச்சுக்க வேண்டியது தான? அதுல மட்டும் தீண்டாமை பார்க்க மாட்டீயளோ? வெங்காயம்.

      சரி, அப்படி ஒரு புண்ணியமான கோயிலை உன் வீட்டு உள்ள கட்டி, நீயே பூசை செய்து கும்பிட்டு ஷேமமா இருந்துக்கோ. இது பொதுக் கோயில். எல்லாரும் வருவாங்க. பூசை பண்ணுவாங்க. நடக்கத் தான் போவுது.

      நெஞ்சுவலி, உடனே ஆபரேஷன் பண்ணனும். ரத்தம் வேணும்னா, பிராமண ரத்தம் தான் வேணும்ன்னு கேப்பியளோ?

  28. வினவு கடவுள் வழிபாட்டை ஆதரிக்கிறதா? கடவுளின் இருப்பை நம்புகிறதா? அப்படி ஆதரிக்கிறதென்றால், நம்புகிறதென்றால் – நான் எதுவும் பேசவில்லை. உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறேன்.

    கடவுளின் இருப்பையே கேள்வி எழுப்புகிறது வினவு – என்றால் – நான் பேசியே ஆக வேண்டும். கடவுளே இல்லையெனும்போது கோயிலைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள். இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பார்ப்பனர் அல்லாதோரையும் அனுமதிக்க வேண்டும் என ஏன் பேசுகிறீர்கள்?

    இறைவன் இருக்கிறான் என்பதில் திடீரென உங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டதா?

      • திரும்ப திரும்ப நான் கூற விழைவது இது தான். நம் இந்திய மனோபாவம் இன்னமும் பக்குவப்படாது இருப்பது வருத்தமே ! ஒருவன் இந்து மத்ததில் ஓட்டைகள் இருந்தால் அதைப் பற்றி பேச இந்துவாக இருக்கவேண்டுமாம், அதே போல கிருத்துவத்தை விமர்சித்தால் அவன் கிருதுவனாக இருக்க வேண்டுமாம், இஸ்லாத்தை விமர்சித்தால் அவன் இஸ்லாமியனாக இருக்க வேண்டுமாம். அதே போல ஆத்திகத்தை விமர்சித்தால் அவன் நாத்திகனாக இருக்கக் கூடாதாம்.

        ஒருவன் அவன் மனதுக்கு தவறு எனப் படுவதை விமர்சிக்க முழு உரிமையும் உண்டு. ஒரு இந்தியன் அமெரிக்காவை விமர்சிக்க அமெரிக்கானாக மாற வேண்டியதில்லை, ஒரு இந்தியன் பாகிஸ்தானில் நடக்கும் குற்றங்களை விமர்சிக்க அவன் பாகிஸ்தானிய மாறவேண்டியதில்லை.

        ஒருவர் இன்னொரு விசயத்தை நியாயப்பூர்வமாக விமர்சிக்க, கண்டிக்கு முழு உரிமையும் இருக்கு, இருக்க வேண்டும் அது தான் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம். இதனை மறுப்பவர் இன்னமும் கற்காலத்தில் இருந்து முன்னேறாதவர்களே !!!

        • இக்பால்
          நான் சொல்ல வருவதை நீங்க புரிஞ்சிக்கவேயில்லை! இங்கு அனைத்து பின்னூட்டங்களையும் காணும்போது பலரும் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளை கன்னாபின்னாவென கொட்டுவதாகவே தெரிகிறது. யாரும் சிந்தித்துப் பேசுவதாகவேயில்லை.

          நான் சொல்ல வருவது இதுதான். கோயில்களே வேண்டாம், கடவுளர்களே வேண்டாம் என்போர் பிரசாத லட்டை யார் பிடிப்பது என்ற அக்கப்போருக்குள் ஏன் நுழைவானேன்?

          பார்ப்பனியம் பார்ப்பனியம்னு மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்றீங்க. பார்ப்பனியம் சரி..தப்புங்கிற வாதத்துக்குள்ளேயே நான் போக விரும்பவில்லை. அது இரண்டாவதா பார்க்க வேண்டியது. கடவுளே இல்லை எனும்போது கோயில்களில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய மாட்டேங்குதுன்னு எதுக்கு கூப்பாடு போடறீங்க?

          முதல்ல களத்துல இறங்கி ஊருல இருக்கற அத்தனை கோயில்களையும் இடிச்சுத் தள்ளுங்க. அது பிராமணர்கள் வழிபாடு செய்ற கோயில்களா இருந்தாலும் சரி.. அல்லது இதர சாதியினர் வழிபாடு செய்ற கோயில்களா இருந்தாலும் சரி!! உங்களுக்கு நான் சபாஷ் போடறேன்.

          அதை விட்டுட்டு பிரசாத லட்டு, யானைப்பாகன், மணியடிக்கிறவன் அப்படியெல்லாம் எதுக்கு ஜல்லியடிக்கிறீங்க…?

          பல்லே இல்லாதவன் எதுக்கு பக்கோடா சாப்பிட ஆசைப்படணும்?
          கடவுளே இல்லையென்பவன் எதற்கு கோயில்களில் பிரசாத லட்டுக்கு அலையணும்?

          இக்கட்டுரை உருவாக்கத்தின் அடிநாதத்திலேயே கையை வச்சிருக்கேன். என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலைத்தான் காணோம்.

          (டிஸ்கி : நான் இந்து மத அடிவருடி அல்ல. எந்தக் கடவுளுடனும் எனக்கு ஈடுபாடு கிடையாது. அது எந்த மதமானாலும் – இந்துவாயினும் சரி, முஸ்லீமாயினும் சரி, கிறித்துவமாக இருந்தாலும் சரி)

        • ரிஷி அவர்களே – கடவுளைத் தொழுவது நம்பித் தொழாமல் இருப்பது இல்லை நம்பாமலே இருப்பது – என்பது தனி மனித உரிமை. வினவோ இல்லை வேறு யாரோ அதிலே தலையிடமுடியாது.

          அது போல உங்கள் வீட்டில் இருக்கும் பூசையறைக்கு யாரை அனுமதிப்பது இல்லை அனுமதிக்காமல் இருப்பது என்பது உங்கள் விருப்பம். அது எங்கள் பிரச்சனை அல்ல.

          இங்கு பிரச்சனை – ஒரு பொது இடத்தில், எல்லா மக்களும் சென்று வரக்கூடிய ஒரு இடத்தில், அரசாங்கத்துக்குட்பட்ட இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலத்தில், அந்த அரசாங்கத்துக்கு வரி செலுத்தக் கூடிய எவனும் வேலை செய்யத் தகுதி உள்ளவன் ஆவான்.

          லட்டு பிடிப்பதற்கான தகுதி, கைகளை நல்லா சோப்பு போட்டுக் கழுவிக் கொண்டு, பூந்தியைக் கையில் எடுத்து, உருண்டையாக உருட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவே. யாருக்கு உருட்ட வருகிறதோ, அவனுக்கு வேலை. அதற்கு பிராமண வகுப்பில் தான் பிறந்திருக்க வேண்டும் என்பது தகுதியாயிருக்க முடியாது.

          இதுவும் புரியல என்றால் – இதுக்கு மேல பேசறதில அர்த்தமே இல்ல.

    • சாக்கடைக்குள் இருக்கும் புழுவும் பூரானும் சாக்கடையைச் சுத்தம் செய்யாது. ஏன் என்றால் அது நமக்குத்தான் சாக்கடையே தவிர புழுவிற்கும் பூரானுக்கும் அல்ல. அது அவர்களின் வீடு.

      மதத்திற்கும் சாமிக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்கலால் சிந்திக்க முடிந்தால் ஏன் இன்னும் மதத்தில் இருக்கிறார்கள்? மதத்தில் இல்லாதவந்தான் அவனுக்கு வழியும் புத்தியும் சொல்லவேண்டியுள்ளது.

      எனவே, சாக்கடைக்குள் இருப்பவன் அதைச் சுத்தம் செய்வான் என்று வெட்டியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இருக்கலாம்.

      1. சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை தடுக்கமும் போராட்டத்தை , உடன் கட்டை ஏறும் பெண்தான் முன்னெடுக்கவேண்டும் என்று “ராஜா ராம் மோகன்ராய்” இருக்கவில்லை.

      2. தீண்டாமை என்பது பாதிக்கப்பட்டவனின் பிரச்சனை நமக்கு என்ன என்று மிட்டா மிராசு பணக்காட்ர காங்கிரஸ் ஸ்தாபன உறுப்பினர் பெரியார் சும்மா இருக்கவில்லை.

      3. கறுப்பின அடிமைகள் திட்டத்தை ஒழிக்க கறுப்பின பிரசிடென்ட் வரட்டும் என்று அமெரிக்க பிரசிடென்ட் லிங்கன் இருக்கவில்லை.

      விபச்சாரத்தை ஒழிக்க புரோக்கர்கள்தான் போராடவேண்டும் என்று காத்திருக்க முடியாது. ஆம் பல்லே இல்லாதவர்களால்தான் பல பக்கோடா பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

      • //எனவே, சாக்கடைக்குள் இருப்பவன் அதைச் சுத்தம் செய்வான் என்று வெட்டியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இருக்கலாம்.

        1. சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை தடுக்கமும் போராட்டத்தை , உடன் கட்டை ஏறும் பெண்தான் முன்னெடுக்கவேண்டும் என்று “ராஜா ராம் மோகன்ராய்” இருக்கவில்லை.

        2. தீண்டாமை என்பது பாதிக்கப்பட்டவனின் பிரச்சனை நமக்கு என்ன என்று மிட்டா மிராசு பணக்காட்ர காங்கிரஸ் ஸ்தாபன உறுப்பினர் பெரியார் சும்மா இருக்கவில்லை.

        3. கறுப்பின அடிமைகள் திட்டத்தை ஒழிக்க கறுப்பின பிரசிடென்ட் வரட்டும் என்று அமெரிக்க பிரசிடென்ட் லிங்கன் இருக்கவில்லை.

        விபச்சாரத்தை ஒழிக்க புரோக்கர்கள்தான் போராடவேண்டும் என்று காத்திருக்க முடியாது. ஆம் பல்லே இல்லாதவர்களால்தான் பல பக்கோடா பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.//

        சூப்பரு…

      • இனியும் ரிசி புரிந்துகொள்ள மறுக்கிறார் என்றால் சாதை, மதம் எனும் சாக்கடை வீட்டை விட்டுத்தர மறுக்கிறார் என்றுதான் அர்த்தம்.

  29. எந்த மதமடா தன சொந்த சகோதரனை தீண்டத்தகாதவன் என்கிறது?.அவசர அவசரமாக ஆலயப்ரவேசம் நடத்தி நாங்க எல்லோருமே ஹிந்து என்கிற மதத்தை பின்பற்றுகிறோம் என்று வெள்ளைக்காரனை ஏமாத்தி மதமே இல்லாத நாட்டில் ஒரு மதத்தை உருவாக்கிய பாப்பானின் சதியை என் தாத்தா ஏமாந்து வுட்டுட்டான் இன்னைக்கும் அதை எதிர்பார்க்காதே.சாதிய அமைப்பான சனாதன வழிமுறையை பார்ப்பன மதம் என்றே சொல்லவேண்டும்.ஒரு சந்தேகம் தலித்தை உள்ளே விடாத போதும் விட்டபோதும் கம்முன்னு நிக்கிறதை என்னன்னு சொன்னீங்க சாமியா?OK…OK.

  30. DEAR RISHI
    JUST GO BACK IN TIME WHEN RAJAJI WAS THE CM OF TN HE ORDERED CLOSURE OF AROUND 600 RURAL SCHOOLS DUE TO LACK OF FUNDS.BUT WHEN KAMARAJAR BECAME CM HE OPENED 1200 SCHOOLS IN RURAL AREAS.RAJAJI INTRODUCED THE KULAKKALVI SYSTEM IN WHICH STUDENTS ARE FORCED TO DO THEIR CASTE BASED JOBS.IF THERE WAS NO PERIYAAR IT WOULD HAVE SUCCEEDED AND BEEN A SYLLABUS IN ALL STATES IN INDIA.PERIYAAR CLIPPED IT IN THE BUD.JUST A SAMPLE OF GOODS DONE BY BRAHMINS IN POWER WE CANT FORGET THE BAN FOR GOVT RECRUITMENTS IN JAYA’S 5 YEAR RULE.TN WITHOUT BRAHMINS WILL BE A POWERFUL STATE.THEY STOPPED THE SETHU PROJECT IN THE NAME OF GOD.

    • Dear Kallapiran,

      Please read my above feedback in reply to Mr.Iqbal. I am not supporting brahmins! I am talking and delivering my points for VINAVU’s THIS PARTICULAR ARTICLE ONLY. We should not tolerate Kulakalvi thittam. That is ok.

      இங்க இப்போது கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு வாங்க முதல்ல. இந்து மதம் நல்ல மதமோ அல்லது சாக்கடை மதமோ.. அது வேற விஷயம். கோயில்ல லட்டு பிடிக்கறத கூட அவாள்தான் பிடிக்கணுமா? என்று வினவியிருக்கிறது கட்டுரை. கோயில்ல லட்டுப் பிடிக்கறவன்ல இருந்து, யானைப் பாகன்ல இருந்து பூசாரி, அர்ச்சகர், தேவஸ்தான தலைமை அதிகாரி வரை – எல்லாருமே பார்ப்பான்களாக இல்லாமல் இருந்துவிட்டால் – அதாவது பார்ப்பனர் தவிர்த்த, மீத அனைவரும் அவ்வேலைகளுக்குள் வந்துவிட்டால் அப்போது உங்கள் அனைவருக்கும் திருப்தியா??
      நீங்கள் எல்லோரும் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவீர்களா? எப்படியும் மாட்டீங்கள்ல? அப்புறம் எதுக்கு லட்டைப் புடிக்கணும் லட்டைப் புடிக்கணும்னு கூப்பாடு போடறீங்க.

      எனக்கு இதை மட்டும் புரியுற மாதிரி விளக்கிடுங்க. அப்புறம் நான் எதுவுமே பேச மாட்டேன்.

      • அநியாயத்திற்கு எதிராக குரலெழுப்பலாமா? போராடலாமா? வேண்டாமா! என்பதனை தெளிவுபடுத்திவிடுங்களேன்.

      • அப்போ கூட இவங்க வேற மாதிரி சொல்லி திரும்பவும் பார்பான் தலித் ன்னு தான் பேச போறாங்க

  31. இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியப் படிநிலைகளைக்கொண்டே உழைக்கும் மக்களை பிரிதாளும் இந்து மதத்தில் தன்மானம் கொண்ட யாரும் இருக்க முடியாது.

    • இருக்க பிடிக்கலனா உங்க சாதி சான்றிதழ் அ கிழிச்சி போட வேண்டியது தானே

      • கிளிச்சி போட்டுட்ட ஸ்கூல செக்க மாட்டங்களே என்ன செய்வது ?

        • சாதி, மத அடையாளங்கள் இல்லாமலே குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியும். திருட்டுப் பசங்க முடியாதுன்னு சொல்லுவானுங்க, ஆனால், அதற்கு சட்டத்தில் இடம் உண்டு என்று சொல்லி போராடினால் சேர்க்க முடியும். இவனுங்க போட்ட சட்டத்தையே நாமதான் காப்பாத்த வேண்டியிருக்கு. (தன்மானம் உள்ளவர்கள் இன்னும் அப்படிதான் சேர்க்கிறார்கள்.) இல்லையென்றால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பீற்றிக்கொள்ள முடியாதில்லையா?

  32. First we have to collect a the percentage of bramin peoples working in government service. Presently it may be more then 70%. Unless this percentage goes below 5% we should not remove quota system. First of all the bramins should be wipe out from government service by natural cause (such as retirement, VRS) then the quota system can be removed.

      • // Then go and wash the temples //

        கோவில் உள்ள விட மாட்டேளே . கோவில் உள்ள விட்டா தானே நாங்க சுத்தம் பண்ண முடியும் .

        மேல உள்ள உங்கள் வாசகத்தையும் படிங்க சாமீ….

  33. ரிசி, டாக்டருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக கடவுள் பக்தர்களுக்கு அந்த டாக்டர் மருத்துவம் பார்ப்பதில்லையா என்ன? சமூகம் எனும் நோயாளிக்கும் அதாவது சமூகத்தில் கோடானு கோடி உழைக்கும் மக்களை கீழ்மை படுத்தி அவர்களுக்கு மேலானவர்களாக தன்னை காட்டி ஆதிக்கம் செய்யும் பார்ப்பன கட்டமைப்புக்கு எதிராக போராடுவதற்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமா வேண்டாமா என்பது முன் நிபந்தனை அல்ல. மத பிற்போக்குத்தனத்தையும், மக்களை பிளவுபடுத்தி அடிமைப்படுத்தும் சாதி தீண்டாமையை புகுத்தும் பார்பனிய நச்சுக் கிருமியை ஒழித்துக்கட்டி மக்களிடையே உண்மையான சமத்துவத்தை உருவாக்கும் நாட்டுப்பற்று இருந்தாலே போதும்.

    • சமூகத்துல எந்த இடத்துல இப்போ பார்ப்பனன் ஆதிக்கம் இருக்கு, எந்த ஒரு சினிமா லயும் எங்கள தான கிள்ளி கீரை யா கேலி பன்றேங்கலே , இதே வேற சமூகத்த சொன்னா வரிஞ்சு கட்டிக்கிட்டு வரேங்க. கோயில் ப்ரோகிதம் ல பணம் நல்ல வருது அத பாத்துட்டு இப்போ நீங்களும் வரேங்க, அப்படி இல்லன இந்த பேச்சு இங்க வந்திருக்காது

      • இப்படி பேசற நீங்க, உங்க சந்ததி திருமணத்துக்கு போய் மந்திரம் சொல்லி பாருங்க உள்ள விடறாங்கள ன்னு பாக்கலாம் ,

      • கோயில் புரோகிதத்துல பணம் வருதுன்னு சொல்றீல்ல. அப்புறம் எதுக்கு ரிசர்வேஷன் கூடது மெரிட் தான் வேணும்னு அடம் புடிக்கிற. தட்டுல விழுவுற சில்லறையைக் கொண்டு உன் புள்ளைங்கள பேமெண்ட் சீட்ல சேத்து உடேன்.

      • @ Santosh
        எந்திரன்ல திறமையான விஞ்ஞானி ‘அவா’, கார்கில் போரில் இறந்தவர்களின் விதவைகள் பிள்ளைகள் ‘அவா’ (தேவர்கள்) ஆனால் ‘அவா’ படிக்க முடியாதபடி சத்தம் போட்டு கெடுப்பது சூத்திரர்கள் ?

  34. சந்தோஷ் அய்யர் அவர்களே சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு வேலைகளில் மிகவும் சிறுபான்மையாகவும் சிறுபான்மை பார்ப்பனர்கள் பெருமளவு இருப்பதையும் சரி செய்வவே இட ஒதுக்கீடு கொண்டுவந்தோம்.இதில் ஏதும் அநியாயம் உள்ளதா? உங்களுக்கு மூன்று சதம் ஒதுக்கவும் தயாராக இருக்கிறோம். இட ஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை.

  35. // சார் கருப்பசாமி கோயில் அ வேளாளர் இருப்பாங்கல அங்க போய் நீங்க வெளில போங்க நாங்க மந்திரம் படிச்சுருக்கோம் இனிமே நாங்க அர்ச்சனை செய்யறோம் ன்னு தைரியம் இருந்தா சொல்லித்தான் பாருங்களேன் //

    அவர்களுக்கும் சேர்த்து தான் சாமி. நீங்கள் மட்டும் மேல்சாதின்னு சொன்ன விபரீதம்னு நிறைய பிரிவு கொண்டுவந்தது நீங்க தானே சாமி ….?

  36. //பல்லே இல்லாதவன் எதுக்கு பக்கோடா சாப்பிட ஆசைப்படணும்?
    கடவுளே இல்லையென்பவன் எதற்கு கோயில்களில் பிரசாத லட்டுக்கு அலையணும்?
    இக்கட்டுரை உருவாக்கத்தின் அடிநாதத்திலேயே கையை வச்சிருக்கேன். என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலைத்தான் காணோம்.//
    ரிஷி அவர்களே,
    உங்கள் கேள்வி பல முறை துவைத்து காயபோடப்பட ஒரு கேள்வி தான். தேவனாதனை தி.க ஆட்கள் எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கூட உம்மவர் சிலர் இதே போலத் தான் கேள்வி கேட்டனர். நீங்கள் கட்டுரையின் அடி நாததத்தை இம்மி அளவு கூட புரிந்துகொள்ளவில்லை என்று தான் நான் சொல்வேன். இங்கு நடப்பது ‘கடவுள் இல்லை என்று சொல்பவனுக்கும், கடவுள் இருக்கு என்று சொல்பவனுக்கும்’ இடையே நடக்கும் வாய்க்கால் தகராறு அல்ல. அது தனி மனிதனின் சுதந்திரம் மற்றும் உரிமை பற்றியது. அது மறுக்கப் படும் தருவாயில் அதைப் பற்றி கேள்வி கேட்க அவன் அந்த துறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை (உ.ம: மீனவன் சாகும் பொது, ஐ.டி துறையினர் உண்ணாவிரதம் இருப்பது)…உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் இன்னொன்றும் சொல்கிறேன்… இங்கு சில தோழர்கள் ஒரே நேரத்தில் ‘மலம் அள்ள பார்ப்பனர்களையும், கோவில் லட்டு பிடிக்க சூத்திரனையும்’ அனுமதிக்க கோருகின்றனர். இதன் அடிப்படை காரணம் எல்லாரிடமும் சமநிலை என்பதே…நீங்கள் சொல்வது போல ‘மலச் சிக்கல்’ உள்ளவர்கள் அல்ல அவர்கள்….!!! புரிந்ததா?

  37. சந்தோஷ் அய்யர் அவர்களே
    இட ஒதுக்கீட்டை முதலில் நீக்கு, பிறகு நாங்கள் மத்தவாளைப் போல சமமா இருக்கிறோம்’னு சொல்றீங்க? இப்படி இட ஒதுக்கீடு என்ற ஒரு இரும்புச் சுவர் இருக்கும் போதே, அந்த சுவரை உம்மவாள்கள் எல்லாரும் எப்படி குட்டிச் சுவரா ஆக்கி கொண்டு இருக்காங்க என்பதை ஆதாரத்துடன் அறிய இங்கே சொடுக்கவும்.

    http://dharumi.blogspot.com/2010/05/blog-post.html.

    ஏன் அய்யரே…? இப்படி கண்ணுல விளக்கெண்ணை ஊற்றி கொண்டு இருக்கும்போதே உம்ம ஆட்கள் இப்படி அடுத்தவன் வயித்துல அடிக்கிறேலே… இதில் ‘இட ஒதுக்கீட்டை நீக்கிட்டா’ நீங்க என்னென்ன செய்ய மாட்டேள்? … இந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று நான் சொல்கிறேன்… “நீங்கள் கம்மியா கொடுக்கறதால தான் அவா இந்த மாதிரி தப்பு பண்றா. நீங்க மட்டும் இட ஒதுக்கீட்டை நீக்கி பாருங்கோ. நாடு திருந்திடும்”…. கேள்வி சரியா இருக்கா அய்யரே? சரி… பதிலுக்கு வரேன்…!!! இட ஒதுக்கீடு என்கிற ஒரு விஷயம் வந்து என்ன ஒரு ஐம்பது வருஷம் இருக்குமா? அதுக்கு முன்னாடி யார் யாரெல்லாம் படிக்க, அறிவை வளர்த்துக்க, நிர்வாகம் பண்ண அனுமதிக்கப் பட்டார்கள்? பார்ப்பனர்கள் மட்டும்… எத்தனை காலம் இந்த கூத்து நடந்தது…? குறைந்தது 2000 வருடங்கள்…!!! இப்போ சொல்லும் சந்தோஷ் அய்யரே… கடந்த 2000 வருடங்களாக சாதி பாகுபாட்டினால் மேற்ச்சொன்ன துறைகளுக்கு வர உரிமை மறுக்கப் பட்ட பார்ப்பனர் அல்லாத கூட்டம், எப்படி இந்த ‘இட ஒதுக்கீடு’ சட்டம் கொண்டு வரப்பட்ட 50 ஆண்டுகளில் அந்த ஏற்றத் தாழ்வை முற்றிலும் சரி செய்யும் என்று எதிர் பார்க்கிறீர்? ‘கயிறிழுக்கும் போட்டி’யில் பார்ப்பனர் அல்லாதவா கையில் இருந்த கயிறை இழுக்க பார்ப்பனருக்கு 2000 வருடம் தேவைப் பட்டால், அதே போல பார்ப்பனர் அல்லாதவர், பார்ப்பனரிடம் இருந்து அந்த கயிறாய் இழுத்து சமநிலைக்கு கொண்டு வர அதே 2000 வருடங்கள் தேவைப் படும் என்கிற சாதாரண கணக்கு ஏன் உங்களுக்கு புரியாமல் போய்விட்டது?…..அப்போ இட ஒதுக்கீடு நீக்கப் படாதா? என்று தானே கேட்கிறீகள்… நீக்கப்படும்…. கி.பி.4000 ஆண்டில்….!!! நீங்கள் சொன்ன சமநிலை அடைய குறைந்து அவ்வளவு காலம் ஆகும். அது வரை உம்மவாள்கள் மீண்டும் குட்டையை குழப்பாமல் இருக்க வேண்டும்…இல்லை எனில் ‘லட்டு’ பிடிக்க அது மீண்டும் ‘குரங்காகத்’தான் முடியும்…

    • நீங்க பேசறத பேசுங்க ஆனா நடந்ததும் நல்லதுக்கு தான்;நடக்கறதும் நல்லதுக்கு தான்; நடக்க போறது நல்லதுக்கு தான் ;

      • எதை சொல்றேள்? கொஞ்சம் தெளிவயா சொல்லுகோனா? ‘நான் பிராமின்ஸ்’ எல்லாம் அடி வாங்கினது நல்லது என்கிறேலா? திருப்பி அடிக்கிறானே…அது நல்லது என்கிறேலா?

  38. இந்திய அரசியலமைப்பு சட்டமே காவி நிறமானது என்பதற்கு இதை விட ஆதாரம் இருக்க முடியாது

    //இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. ‘காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்’ என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன
    ஆதரவாளராக இருப்பது. //

  39. அவங்கள்லாம் ரொம்ப நல்லவங்களா?
    அடடே ஆச்சர்யக்குறி!

    ஆப்பிரிக்க நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களை விலங்கு பிடிப்பது போலப் பிடித்து சங்கிலிகள் இட்டுக் கூட்டி வந்து முதுகில் சூடிட்டு வேலை செய்ய வைத்தது எந்த மதமடா மடச் சாம்பிராணி?

  40. jmms,

    மன்னிக்கனும்!
    இப்போ நான் பார்த்தவரை இந்து மதத்திற்கும், கிறுத்துவ மதத்திற்கும் பெரிய வித்தியசம் இருப்பதாக தெரியவில்லை !

    • jmms

      கீழ் காணும் விவிலிய வாசகங்களின் அர்த்தம் என்ன?

      1 கொரி. 14.34 சபையில் பெண்கள் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
      அவர்களுக்கு பேச அனுமதி இல்லை. மாறாகத் திருச்சட்டம் கூறுவது போல அவர்கள்
      பணிந்திருக்க வேண்டும்.

      1 கொரி. 14.35 அவர்கள் எதையேனும் அறிய விரும்பினால் அதை வீட்டில் தங்கள்
      கணவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளட்டும். பெண்கள் திருச்சபையில் பேசுவது வெட்கத்திற்குரியதாகும்.

      • @சூத்திரன் , கிறுஸ்தவ மதம் நிறைய மாறியிருப்பது நிஜம்தான்.. அதை பலர் ஒரு கார்ப்பரேட் ஆக வளர்ப்பதும் உண்மைதான்..

        அதற்காக மதத்தில் நல்ல விஷயங்களே/நல்லவர்களே இல்லை என்பதை ஒத்துக்கொள்ளமுடியாதே..

        @Ram Kameswaran

        கீழ் காணும் விவிலிய வாசகங்களின் அர்த்தம் என்ன?//

        இப்படி ஏகப்பட்ட வசங்களை எடுத்து ஆராய்ச்சி செய்யலாம் நண்பரே.. ஒரே கடவுள் என்பதிலே ஆரம்பித்து உடன்பாடில்லாத விஷயங்கள் அந்த காலத்துக்கேற்ப ஏற்பட்ட வேதாகமத்தில் உண்டுதான்..

        ஆனாலும் மாறுதலுக்கேற்ப வளர்ந்து வந்துள்ளது கிறுஸ்தவ மதம் என்பதையும் ஏற்கணும்..

        சக மனிதனை எவ்வித பாகுபாடின்றி மனித நேயத்தோடு பார்க்க கற்று தந்த மதம் என்பதில் மறுப்புண்டா ?..

        • http://www.romancatholicwomenpriests.org/

          இங்கே பாருங்கள்..

          இது போல பல இடத்தில் வந்தாச்சு.. மாற்றம்.. மெல்ல மெல்ல வந்துகொண்டுதானிருக்கிறது..

          Roman Catholic Womenpriests (RCWP) is an international initiative within the Roman Catholic Church. The mission of Roman Catholic Womenpriests is to spiritually prepare, ordain, and support women and men from all states of life, who are theologically qualified, who are committed to an inclusive model of Church, and who are called by the Holy Spirit and their communities to minister within the Roman Catholic Church.

      • ramkameshwaran பைபிள்ல சொன்னதுக்காக இப்ப எல்லா கிருத்துவ நாடுகளிலும் பெண்களை அப்படியா வைத்திருக்கிறார்கள்? பிற்போக்குத்தனத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டாச்சில்ல? அது மாதிரி நாமும் போடலாம் தானே?

  41. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள்.துறை விதிகள் அப்படி இருந்தால் அதை எதிர்த்து வழக்குத் தொடருங்கள்.உச்சநீதி மன்றம் வரை சென்று உங்கள் தரப்பினை முன் வையுங்கள்.யாரும் உங்களை தடுக்கவில்லை.அதை விடுத்து ’ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது’ என்று உளறக்கூடாது. அரசியல் சட்டம் எங்கும் தீண்டாமையை சரி என்று சொல்லவில்லை.சம வாய்ப்பு,அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என்று வாதிடுபவர்கள் அதற்கு விலக்காக உள்ள அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று போரட வேண்டும். அதையும் செய்தால் உங்கள் வாதத்தில் அர்த்தம் உண்டு. பல கோயில்களில் பூசாரியாகும் உரிமை பரம்பரையாக வருவது.அதில் அரசு தலையிடாது.அவை தனியார் கோயில்கள். சர்ச்சில் உள்ள விதிகளை மாற்றி பெண்களும் பாதர் ஆக வகை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிடாது.மத விவகாரங்களில் சமத்துவம் இல்லை, தனி நபர் சட்டங்களில் சமத்துவம் இல்லை, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவாய்ப்பு வேண்டும் என்று நீங்கள் எழுதினால் அது சரியாக இருக்கும்.அதை விடுத்து இந்து மதம்,இந்துக் கோயில்கள்,பிராமணர்கள் என்று மட்டும் விமர்சிப்பது நீங்கள் போலி செக்யுலரிசம் பேசுகிற இந்து விரோதி என்பதை காட்டுகிறது. கோயில்களில் உள்ள இந்த விதிகள் தவறு அரசியல் சட்டத்திற்கு விரோதமானவை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தால் அவை மாற்றப்படும்.அத்துடன் விவகாரம் முடிந்து விடும். சமத்துவதிற்கு எதிராக உள்ள அனைத்து விதிகளையும் மாற்ற வேண்டும், இதில் வழக்காறு, மதம், பாரம்பரியம் என்று விதிவிலக்கு கூடாது என்று ஒட்டுமொத்தமாக நீங்கள் போராட வேண்டும். செய்வீர்களா. இந்து மதத்தில் மட்டும் சமத்துவம் வேண்டும், பிற மதங்கள் என்று வரும் போது கண்ணை மூடிக்கொள்வோம் என்று இருப்பவர்கள் போலி சமத்துவவாதிகள்.

    • ///பெண்களும் பாதர் ஆக வகை செய்ய வேண்டும்///

      பெண்களை பாதர் ஆக்க மாட்டார்கள்…. அங்கிருக்கும் பாதர்கள் பெண்களை மதர் ஆக வேண்டுமானால் ஆக்குவார்கள் ஹா ஹா ஹா

  42. ////அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உயர்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியது. ‘இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும்’ என்று கூறி, சாதியையும், ஆலயத்தீண்டாமையையும் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். 1972இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அடிப்படை மத உரிமை கூட இல்லாத பார்ப்பன இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் பார்ப்பனமயமான மற்றொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.////
    கண்ணை மூடிக்கொண்டு பேசாதீர்கள். தீண்டாமையை அங்கீகரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையை பதிவிலேயே சொல்லியிருப்பதை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இந்திய நீதித் துறையே காவிமயமானதுதான் என்பது புரிய வரும்.

  43. சங்கராச்சாரியர் பார்த்தசாரதி கோயிலில் பூசை செய்ய முடியாது, அங்கு கர்ப்பகிரகத்தில் நுழைய உரிமை அற்றவர்.பிராமணர்களாக பிறந்தவர் என்ற ஒரு காரணத்தினால் யாரும் கோயில் கர்ப்பக கிரகத்தில் நுழைய முடியும் என்று நீதிமன்றம் சொல்லவில்லை.மேல்மருவத்தூர் வழிபாட்டு முறையை மாற்றக் கோரி சங்கர மடம் கோராது, சங்கர மடத்தின் முறைகளை மாற்றக் மேல்மருவத்தூர் அடிகளாரும் கோர மாட்டார். ஏனெனில் ஒருவர் மரபில் இன்னொருவர் குறுக்கிடுவதில்லை.

    ஆகம கோயில்களுக்கான விதிகள் வேறு, அங்குதான் மரபு உரிமை என்கிற போது வைணவக் கோயில்களில் உள்ள நடைமுறை, சைவக்கோயில்களில் உள்ள நடைமுறை என்ற அடிப்படையில் யார் யார் எங்கு அர்ச்சகர் ஆகலாம் என்ற விதிகள் வருகின்றன.இங்குதான் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு பொருத்தமானது. எல்லாக் கோயில்களுக்கும் அல்ல. HRPC நாளைக்கு ஒரு கோயில் கட்டி அதில் வினவையும், மருதனையும் அர்ச்சகராக நியமிக்கலாம்.எந்த நீதிமன்றமும் அதை தடுக்காது.மேல்மருவத்தூரில் வழிப்பாட்டு முறை வேறு, கருப்பணசாமி கோயிலில் வழிப்பாட்டு முறை வேறு, பழனி,மதுரையில் வழிபாட்டு முறை வேறு.ஆகம கோயில்களை புறக்கணிப்பதும், போவதும் உங்கள் விருப்பம்.இந்து என்றால் அங்கு போய்த்தான் ஆக வேண்டும் என்று விதியில்லை.முடிந்தால் கோயில் புறக்கணிப்பு இயக்கம் நடத்துங்கள். ஆகம கோயில்களை புறக்கணிப்போம், மேல்மருவத்தூர் போதும், கருப்பணசாமிகள் போதும் என்று இயக்கம் நடத்துங்கள். தமிழகமெங்கும் கோயில்கள் கட்டி அர்சகர் பயிற்சி பெற்று வேலையற்று இருப்போருக்கு வேலை கொடுங்கள்.ஸ்டாலினுக்கும், மாவோவிற்கும்,லெனினிற்கும் கோயில் கட்டுங்கள், ஆறு கால பூசை செய்யுங்கள், தமிழில் அர்ச்சனை செய்யுங்கள்.

    • புத்திசாலிதனமாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். இங்கு கேள்வி என்னவென்றால் அந்த விதிகள் ஜாதியை அடிப்படையாக கொண்டது என்றால் மற்ற ஜாதியினரையும் ஏன் இந்து என்று சொல்கிறீர்கள். நண்பர் கிள்ளி வளவன் சொன்னது போல மசூதியை இடிப்பதற்ககவா? அதற்கு உங்கள் ஆகம விதிகள் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கவில்லையோ?

    • தம்பி, நிறுத்து நிறுத்து. பாப்பாங்கறதுனாலெயே ஒருத்தன் கோயில் கர்பக்கிரகத்துக்குள்ள போக முடியாதுங்குறியே, இருள்நீக்கி சுப்புரமணி அலையஸ் ஜெயேந்திரன் திருப்பதி கோயில் கருவறைக்குள் நுழைந்து அங்கிருந்த படியில் அமர்ந்துகொண்டு பூஜை பண்ணுனானே, அப்போ எங்கே போச்சு சைவ வணைவ சம்பிரதாயலு, சாஸ்திரலு? ஏறக்குறைய நித்தி ரஞ்சிதா கூட பண்ணுனதும், சுப்புணி ஹார்லிக்ஸ் மாமி மற்றும் சொர்ணமால்யா கூட பண்ணுனதும் ஒன்னுதான். ஆனா ஏன் நித்தி அளவுக்கு அவனுக்கு அடி விழல. புடிச்சு உள்ள போட்டதும் பாப்பாத்தி, அரெஸ்ட் ஆனவனும் பாப்பான். அம்மா வர்க்க வேறுபாடு கருதி உள்ளே போட்டாலும் பார்ப்பன சார்பு ஊடகங்கள் வருண ஒற்றுமையைக் கருதி அடக்கி வாசிச்சாங்க.

      ஜெயேந்திரன் அரெஸ்ட் ஆனப்போ இந்து மதத்துக்கே ஆபத்து வந்துட்ட மாதிரி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜெ.பி, ஆதினம், பண்டாரம் எல்லாரும் கூடி கண்டனக் கூட்டம் போட்டானுங்களே, இதுவே பங்காரு மாட்டிருந்தா இவனுங்க எல்லாம் ஒன்னு கூடி கண்டம் தெரிவிப்பானுங்களா. நீ வேற ஆகம் மரபுன்னு பெருமைக்கு எருமை ஓட்டுறே. என்னமோ போ!

    • மொத்தத்தில் சாதி தீண்டாமைதான் இந்து மரபு என்று சொல்வதற்கு இப்படி சுத்து வளைச்சு விளக்க வேண்டுமா?

  44. it is the fault of the D.M.K government. but even if the ADMK comes in to power ,this things cannot be changed.There is no use to go court, as stated above the court is not ready to follow the equality rule. then what is the solution for the problem. we must follow the example of the CHIDAMBARAM koil. it is the insult to the humanity as whole particularly
    for the people of Thiruvannamalai. Youngster must come forward to form a association and make dharna before the Koil and request the people not to enter the Koil . they must make it as a LAW and ORDER problem. then the Government and Court interfere in the mater and find a way to maintain peace in the Thiruvannamalai.

  45. தென்னாபிரிக்காவிலே, வட அமெரிக்காவிலே எல்லாம் கறுப்பர்கள் போகக் கூடாத இடங்கள் என்று பல இருந்தன. அதற்கான சட்டங்களும் இருந்தன. பல இடங்களில் இந்தியர்கள் கூடக் கறுப்பர்கள் தான்.
    அநீதியான சமூதாயத்தில் அநீதியான சட்டங்கள் தான் இருக்கும்.
    அநீதிமன்றங்களும் அநீதிபதிகளுமே இருப்பர்.

    அநீதிகளைச் சட்டத்தின் பேரால் நியாயப் படுத்துவோர் சட்டம் மாறினாலும் மரபின் பேரால் நியாயப்படுத்திக் கொண்டெ இருப்பார்கள்.

    தட்டுங்கள் திறபடா, கேளுங்கள் தரப்படா, போராட வேணுமையா, மக்கள் போராட வேணுமையா

  46. தமிழ் இலக்கணத்தில் பல பொருள் குறித்த ஒரு சொல் ,ஒரு பொருள் குறித்த பல சொல் என்று ஒரு வழக்கு உண்டு. அது போல இங்கே பார்ப்பனீயத்தை ஆதரிக்கும் ஒருவரே பல பெயர்களில் வந்து அசத்துவது அவரது தமிழ் ,ஆங்கில உரைனடையிலிருந்து தெரிகிறது.அவருடைய பற்றுதல் அவரை இனம்காட்டுகிறது.ஐயரின் அடிப்படை வாதம் இரண்டு . 1)கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் கோவில் விவகாரஙகளில் தலையிடுகிறீர்கள்? 2)சமத்துவம் பேசுகிறவர்கள் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் ?பதில்:கடவுள் நம்பிக்கையே சமத்துவத்தை மறுப்பது.கடவுளை எவரானாலும் வணஙக வேண்டும்.பயப்பட வேண்டும்.கேள்வி கேட்க முடியாது.பின் கடவுளை முன்னிறுத்தும் மதம் எப்படி இருக்கும் ? ஆகவே சமத்துவதைக் கொண்டு வர விரும்புகிறவர்கள் எல்லா அசமத்துவத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.இதை கேள்வி கேட்பவர்கள் அசமத்துவவாதிகள்.2)ஏற்ற்த்தாழ்வுகள் நிலவுகிற சமுதாயத்தில் பின் தங்கி இருப்பவர்களை முன்னேற்றுவதற்காக சிறப்பு சலுகைகள் வழஙுகுவது உலக நடைமுறையில் இருந்து வருகிறது.இதை எதிர்ப்பவர்களும் சமத்துவத்தை விரும்பாதவர்கள்.ஜனனாயகத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.இந்திய சமூக அமைப்பில் ப்னனெடும் காலமாக பார்ப்பன (பிராமணர் என்கிற சமஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவம் தான் பார்ப்பனர் என்பது)சனாதன நடைமுறை நிலவி வருகிறது.1947-இல் சட்டத்தின் ஆட்சி வந்து விட்டது என்று சொன்னாலும நாட்டை ஆளும் ஆதிக்க சக்திகளிடம் பார்ப்பன சனாதன நடைமுறையே நிலவுகிறது.இதில் பார்ப்பனியம் வாழ்கிறது .அது ஏற்றத்தாழ்வை அகற்றாது.அதனால் ஒடுக்கப்படுகிறவர்களே ஏற்றத்தாழ்வை வீழ்த்த முடியும்.இந்த பொது சமூக அறிவை அய்யர் பெற வேண்டும்.இல்லாவிட்டால் விதண்டா வாதம் தான் செயயவேண்டும்.

  47. “தோழர்களே!

    எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் “குடி அரசில்’ படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.

    இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

    இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.
    ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.

    இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.
    இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.

    இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.
    இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.

    ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.

    இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.

    அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.

    சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.

    சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!

    எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?”–பெரியார்

  48. அநீதியான சமூதாயத்தில் அநீதியான சட்டங்கள் தான் இருக்கும்.
    அநீதிமன்றங்களும் அநீதிபதிகளுமே இருப்பர்.

    அநீதிகளைச் சட்டத்தின் பேரால் நியாயப் படுத்துவோர் சட்டம் மாறினாலும் மரபின் பேரால் நியாயப்படுத்திக் கொண்டெ இருப்பார்கள்.
    it is the historical truth. our political parties never comes to fight for the injustice.if they caught in wrong side,doing unlawful things , they never say their side is correct one.instead they site their opponent is doing the same thing – yesterday-today-tomorrow .in this mater our Tamil Nadu is in the first rank.
    தட்டுங்கள் திறபடா, கேளுங்கள் தரப்படா, போராட வேணுமையா, மக்கள் போராட வேணுமையா
    we request the Thiruvannamalai. youth must come forward to fight for the injustice and make the Thiruvannamalai regains its glory

  49. வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடித்த காந்தி ‘தேசப்பிதா”, குலக்கல்வி ராஜாஜி ‘மூதறிஞர்’, தேவதாஸி ஆதரவாளர் சத்தியமூர்த்தி ‘தீரர். இந்த நாடு உருப்படுமா ?

  50. மத்தியில் உச்சிகுடுமி,மாநிலத்தில் கூந்தலா!அந்தம்மா. தீர்ப்புபடியே.மரபுகளை மாற்றக் கூடாதூன்னா?அந்தம்மாமட்டும் எப்படி சமையலறையை கடந்து (அ)நிதீபதீயாக வந்தாக! எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்.எருமைமாடு மேய்க்கிற பயலுன்னு பதில் சொல்லாம சம்மந்தபட்டவர்கள் டபாயிக்கக்கூடாது.ஆமா.சொல்லிபுட்டேன்.

  51. அன்பர்களே!
    எனக்குப் பதிலுரைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
    உங்கள் பதில்களில் இருந்து நீங்கள் சொல்ல விழைவது “கோயில் வேண்டாமென்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது” என்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். கோயில்களில் தெய்வங்களை வழிபடுவதென்பது தனிமனித உரிமை என்றும் அங்கு பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்பதே உங்களில் பலரின் உணர்வாக இருக்கிறது. கோயில் என்று இந்த இடத்தில் பொதுப்படையாகக் கூறினாலும் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு மாதிரியாக வழக்கங்கள் உள்ளன – அண்ணாமலை கூறியுள்ளதுபடி. அந்த வழக்கங்களை மாற்றி அனைத்து சாதியினரும் அர்ச்சனை செய்யலாம், பூஜிக்கலாம், பணிவிடைகள் செய்யலாம், சிலைகளைக் குளிப்பாட்டலாம் என்பதாக சட்டம் இயற்ற வேண்டும் என்பதே உங்களில் பெரும்பான்மையோரின் கருத்தாக இருக்கிறது. பிராம்மணர்களை விரட்டுவது என்பது தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமானது என்றுதான் நீங்கள் எல்லாரும் கருதுகிறீர்கள் என நினைக்கிறேன்.

    உங்கள் அனைவரின் எண்ணங்களும் ஈடேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    நான் வசிக்கும் விருதுநகரில், ஏறக்குறைய ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு காளியம்மன் கோவில் அமைக்கப்பட்டிருக்கும். தெருப் பொங்கல் என ஒவ்வொரு புரட்டாசி மாதத்திலும் அனைத்துத் தெருக்களிலும் சாமி கும்பிடுவார்கள். அதில் பல தெருக்களில் இரண்டு காளியம்மன் கோவில்கள் உண்டு. காரணம், அதிகாரச் சண்டை!!

    விழாக் கமிட்டியில் தான் மட்டுமே பெரிய ஆள் என அங்குள்ளோர் கோஷ்டி சண்டையில் ஈடுபடுவார்கள். கடைசியில் ஒரு கோஷ்டி பிரிந்து தனியே காளியம்மன் கோவில் கட்டிக் கொண்டு விழா நடத்துவார்கள். என்னைப் போன்றவர்கள் வேண்டா வெறுப்பாய் இரு கோவில்களுக்கும் தனித்தனியே வரி கட்ட நேரிடும். வேறென்ன செய்வது – கோவில் என்றாலே பிரச்சனையும் சண்டையும்தான் 🙂

    பிராமணர்களாக இருந்தாலும் சரி.. இல்லாவிட்டாலும் சரி.. யார் அதிகாரத்திற்கு வந்தாலும் கோயில் சொத்துக்களைத் திருடுவது, ஏமாற்றுவது, வஞ்சிப்பது என எல்லாமே இருக்கத்தான் செய்யும்!

    இருந்தாலும் உங்கள் அனைவரின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

    பின் குறிப்பு : என்னைப் பொறுத்தவரை அன்பே சிவம்; நிபந்தனையற்ற பரிபூரண நேசமே கடவுள்; எனக்கு அது யாரிடமிருந்து கிடைத்தாலும் சரி… அவர்களே என்னைப் பொறுத்தவரை பூஜிக்கத் தகுந்தவர்கள்.

    என் கருத்துக்களைப் பொறுமையாய் படித்தமைக்கும், வாசித்துப் பதிலளித்தமைக்கும் நன்றி!

  52. jmms நான் உங்களுக்கு சில விஷயம் சொல்லட்டுமா?

    1. சிலை வழிபட்டை எதிர்த்த புத்தருக்கு சிலை வைத்தார்கள் !

    2. அதே போல் வட்டி வாங்க கூடாது என்னும் இஸ்லாம், கூட்டாளி ஆக அனுமதிக்கிரது. அதற்க்கு குறைந்த் பட்ச இலாபமாக 6% அல்லது இலாபதில் பங்கு (இலாபதில் பங்கு என்பது நன்றாக இயங்கும் நிறுவனதிர்க்கு மட்டும் பொருந்தும் மேலும் 6% இலாபம் என்பதற்க்கும் கந்து வட்டிக்கும் என்ன வித்தியசம் என்று சொல்ல முடியுமா?)

    3. ஏசு கடவுள் என்கிறது கிறித்துவம், பிறகு மேரி அன்னையை வணங்குவதை முறையாக ஒரு பிரிவு கடைபிடிப்பதேன். மேலும் சிலுவையை வைத்து வணங்கினாலும், சிலுவையினுல் சாத்தனே இருப்பான் என்று எனது நண்பன் சொன்ன ஞாபகம்.

    4. இந்து மததிலோ சைவம், வைணவம், காணபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம் என்று பிரிவுகள் உண்டு. இது கடவுளுக்கு உயிர் பலி வழக்கம் இல்லை. ஆனால் கருப்புசாமிக்கு மதுவும், உயிர் பலியும் கட்டாயமாக்க பட்டுள்ளது.

    மேலும் இன்று அனைத்து மததிலும் விளக்கங்கள் ஒரு சர்ச்கும் அடுத்த சர்ச்கும் , ஒரு பள்ளிக்கும் அடுத்த பள்ளிக்கும் , ஒரு கோவிலுக்கும் அடுத்த கோவிலுக்கும் என்று வெருபடுகிறது.

    ஆகவே இதை ஒரு உதாரணமாக கொண்டு பார்க்கும் பொது விஷயம் போசும் பொழுது மதங்களுக்கு அப்பார்பட்டு மனிதனாக மட்டும் பேசுவோம்.

    மேலும் நாம் இங்கு இணைந்திருப்பது சமுதயத்தில் உள்ள அநீதி களையவும், அதற்க்கு எதிரக போரடவும் தானே அல்லமல். தவறுகண்டு விலகிபோக அல்ல.

    நாயின் தாக்குதலுக்கு பயந்து விலகி போக நாம் பூனை அல்ல, மதம் மாரி போவதும் அதுபோல் தான்.

    அநீதிக்கு எதிராக போரடுவோம், அனைவருக்கும் போராட கற்று கொடுப்பொம்.

    • அன்பின் சூத்திரன் ,

      //நாயின் தாக்குதலுக்கு பயந்து விலகி போக நாம் பூனை அல்ல, மதம் மாரி போவதும் அதுபோல் தான்.

      அநீதிக்கு எதிராக போரடுவோம், அனைவருக்கும் போராட கற்று கொடுப்பொம்.//

      நிச்சயமாக .. எம்மதமாயிருந்தால் என்ன.?.. மனித நேயம் பேணணும். சக மனிதன் வாழ வழிவிடணும்..கண்டிப்பாக அதற்கான போராட்டம் நடத்தவே செய்யணும்..

      எனக்கு கிறுஸ்தவ மதம் ஒரு நல்ல வழிகாட்டி.. தன்னலமற்ற சேவைகளை அவர்கள் செய்வதை பார்த்தே கற்றுக்கொண்டேன்.. சொல்வதை கேட்டு அல்ல..

      அதே போல சேவை செய்பவர்கள் அனைத்து மதங்களிலுமே உண்டு..

      • jmms என் கருத்தை ஏற்றுகொண்டு பதிலளித்தமைக்கு நன்றி. தன்னால் எல்லாம் மாறும் என்பது வெறும் கூச்சல், மனிதனை சாப்பிடும் மனித வர்கத்தை அழித்து, மனிதம் தளைத்தோங்கும் நாள் கொணறல் வேண்டும்.

  53. ஏனுங்க உங்களுக்கு தான் சாமி கடையாது அப்புறம் எதுக்கு தொழுகை பண்ணும் பாய்ங்க, சர்வீஸ் போகும் கிறிஸ்துவங்க உங்க கூட சேர்ந்து ஜிங் ஜிங் னு ஜால்ரா தட்ரானுவ.
    பாப்பான் லட்டு பிடிச்சா உங்களுக்கென்ன ——-டா புடிச்சா உங்களுக்கு ஏன் வேர்த்து வடிகிறது. இந்த விளம்பரம் வெளியிட்டது மஞ்சதுண்டு போட்டுள்ள ஒர் தலைவனின் கீழுள்ள ஆட்சி வேண்டுமான தகிரியிம் இருந்தா அவன் மயிரை புடுங்கி கேளுங்க. சும்மா ஓலை பாயில நாய் ஒண்டுக்கிற்ந்த மாதிரி கூச்சல்

    • Illatha Paalatha verum manal thitta idikka venaamnu sollura!!
      Illadha Kovila Idichanaga nu Sollura!!
      Erikkadha raila erichaanga nu sollura!!
      vaikaadha gunda vachaanga nu sollura(malegon)!!!
      mudiye Illadha valukka thalaila mudiya pudungunu solra!!!

      Ellaathayum ne senjitu Appavigala Terrorist nu Sollradhu thaan un velaya??

  54. சிதம்பரம் கோயிலை பார்ப்பானா கட்டினான். தமிழன்தானே கட்டினான். அவன் கட்டிய கோயிலில் அவன் பூசை செய்யாமல் அண்டி பிழைக்க வந்த உன்னை மாதிரி பார்பன கூட்டம் மட்டுமா பூசை செய்யணும். நல்ல இருக்குது கதை.

    கோயிலை கட்ட தமிழன் ஆனா அதில் குந்தியிருந்து சுரண்டி தின்னுவது பார்பான்.

  55. ஒரு தலித் பிரியாணி செய்தாலும், அனைவரும் உண்ணுகிறோம்…enga pakkam kurbani kotuthathan muslim ulla varuvan..engayum avaa appadi .. evaa eppadi.

    • Sir, why you are deviating from the main chapter. I don’t have any idea about Islam. No comments. By the way, as I said, each and every temple has its own customs. In our temple, we (telgu kula) won’t allow bramins to enter inside the main deities place. And also, we also won’t allow them to make prasadh for the God. There are so many such examples. The bramins are not allowed to do any puja’s in ‘Mariyamman / village diety’ temple. Before blindly commenting about bhramins, you must have basic knowledge. The sathus (unmarried person) can’t do any puja in the temple.. Maintained by vellalar and koundar.

      You people are speaking as if the ladu making job is a high paid Tech Arch job…

    • நன்றி நண்பர் மதன்,

      அம்பேத்கார் ஒரு சிறந்த ஆய்வாளர் என்ற உண்மை மறைக்கப்பட்டு எதோ அவர் ஒரு சாதாரண தலித் அரசியல்வாதியாக சித்தரிக்கப் படும் வேளையில் அவர் எழுதிய அற்புதமான இந்து மத ஆய்வு புத்தகத்தை பற்றி கூறினீர்கள்.இது இணையத்தில் இலவசமாக இந்த இணைப்பில் கிடக்கிறது.அனைவரும் படித்து பயன் பெறுக‌.

      http://www.scribd.com/doc/48745286/Riddles-in-Hinduism-by-B-R-Ambedkar

  56. ஆரிய வந்தேறிகளால் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

    *இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதமும்

    *மக்கள் தொடர்பு கருவிகள் யார் பிடியில்?

    *இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.

    •சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமை.
    இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஆசிரியர் DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)

    3) வேதமும் கீழ்ஜாதி மக்களும்.

    பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும்.

    முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)

    வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும்.

    அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும்.

    வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். மனுவின் விதி 167-272 கூறுகின்றது.

    பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும், வாயிலும் ஊற்றிட வேண்டும்.

    மனுவின் விதி இன்னும் சொல்கின்றது.

    பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தைச் செய்தாலும் அவனைத் தண்டிக்க இயலாது.

    இப்படி ஒரு அநீதி வேதத்தின் பெயரால் இந்த உலகில் எங்கேயும் இருக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை.காந்தியைக் கொன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுவரும் அநீதிகள் சில சிறு மேற்கோள்கள்!

    * ஹரிஜனப் பெண்கள் நிர்வாணமாக வீதிகளில் உலாவர வைக்கப்பட்டார்கள். – கரண்ட் 6-4-1983

    * தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த ஒருவனிpன் ஆடை பிராமணன் ஒருவனின் ஆடை மீது பட்டுவிட்டது என்பதனால் அந்தத் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவன் கடினமாகத் தாக்கப்பட்டான் – டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18-11-1984

    * ஹரிஜனங்கள் குடிக்கத் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் உயர்ஜாதி ஹிந்துக்கள் இறந்த மிருகங்களையும் மனித மலத்தையும் எறிந்து, ஹரிஜனங்கள் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொள்ள இயலாமல் செய்தார்கள். காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. – டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18-11-84

    * கோயிலில் கடவுளைக் கும்பிட தனக்கும் உரிமை வேண்டும் என்று வேண்டிக் கொண்ட ஒரு ஹரிஜன் வன்மையாகத் தாக்கப்பட்டான். மனித மலம் அவன் வாயிலே திணிக்கப்பட்டது. இது தாத்தூர் என்ற கிராமத்திலே நடந்து (சோராப் தாலூகா). -டெக்கான் ஹெரால்டு நாளிதழ் 5-2-88

    * வெள்ளத்தால் சூழப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களைப் படகில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். போகும் வழியில் படகில் இருக்கும் பெண்களில் சிலர் ஹரிஜனப் பெண்கள் என்பதைக் கண்டு கொண்டனர். அவர்களைப் படகிலிருந்து தூக்கி தண்ணீரில் எறிந்தனர். -பிளிட்ஸ் 18-3-84

    * 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் பின்வரும் தகவலைச் சொன்னார்கள். (இது பிராமணர்களின் கணக்கு) கடந்த மூன்று வருடங்களில் 1117 ஹரிஜனங்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

    * தமிழத்தின் சேலம் மாவட்டத்தில் பால்மணம் மாறாத 5வயது அரிஜனச் சிறுதி தனம், தாகம் தணிக்கப் பள்ளிக் கூடத்தில் தண்ணீர் குடித்ததற்காக உயர்ஜாதி வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டு கண்பார்வை இழந்ததும் 1995ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில்தான்.

    • Murpokku

      You are so innocent.

      May I know the media which is controlled by Bhramins? If it is controlled by bhramins, why the media accuses so called bhramin community BJP party in all the way? Is there any logic in your comments? May I know the bhramin who controls any one Indian industry completely? show me the list bhramins who is in the list of india’s richest people?

      Please clarify me one thing. If Aryans are bhramins, where are they come from? Is there any perfect location / archeological proof.. which says about the actual origin of bhramins?

      Your information is laughable. You are saying that bhramins are controlling the media. In the next line, you give the information of so many incidents published in news papers. Which one should I believe?

      You are comments are meaningful only If you provide any authenticated link and the end result of the police investigation. If I have the control of news paper, I can make n number of such news against your people.

      Last but not least, Veda vysa who wrote the Vedas himself is not bhramins. He belongs to fisher community.

      Krishna belongs to MBC community as per Indian law of constitution, prepared by British.
      Ram belongs to OBC community as per Indian law of constitution, prepared by British.
      Shakthi belongs to SC community as per Indian law of constitution, prepared by British.

      So, all your comment is meaning less…

      What is this அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26 ? I have never come across such book. Who is this manu? Was he ruling this entire Bharath? Have you read the manus script completely? In my knowledge, manu script is not considered as a holy book in Bharath tradition / sanathana dharama / Hinduisum. What is your opinion on it? So I would suggest you to read the scriptures directly instead of reading them thru your so called ‘ paguthrivu’ spectacles.

      BY the way, I don’t want to reject all your comments completely. But, it all started because of mugal and britsh rule in Bharath. They corrupted the system intentionally for divide and rule policy.

      Do you know the number of nayamargal who belongs to bhramins community?

      • //What is this அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26 ?//

        அது ஆபஸ்தம்ப ஸூத்ரம். ஆங்கில மொழிபெயர்ப்பை இந்த சுட்டியில் காணலாம்
        http://www.hinduwebsite.com/sacredscripts/hinduism/dharma/apasta2.asp#k1

        ப்ரஸ்னம் 2 படலம் 10 காண்டம் 27 ஸூத்ரங்கள் 14, 15 ஆகியவை நாக்கை அறுப்பது, சவுக்கால் அடிப்பது போன்ற தண்டணைகளைப் பற்றி பேசுகிறது.

        • Are you kidding me? What is the authentication of this link? I asked you to show the scriptures which speaks about this. AS i already told, i can also write n number of such things in my blog.

          Please refer the below link … briefs about this…

          http://en.wikipedia.org/wiki/Apastamba

          After all, the quotes are not from any one of holy Hindu books. I can only agree if you get the quotation from any one of Hindu holy books. By the way, PMK party leader ramadass is also an Hindu. he makes so many comments about his community. It only represents his view. It doesn’t represent the Hinduism view / vanniayar community view.

        • Sree,

          உங்களுக்கு தமிழ் தெரியுமா, தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை.

          வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம ஸூத்ரங்கள் ஆகியவை ஸம்ஸ்க்ருதத்தில் இருப்பதால் பொது விவாதத்திற்காக, அனைவருக்கும் புரியும்படியாக ஆங்கில மொழிபெயர்ப்பை சுட்டியிருந்தேன். Buhler என்ற ஜெர்மன் அறிஞரின் மொழிபெயர்ப்பு அது.

          ஒரிஜினல் ஸம்ஸ்க்ருதத்தில் காட்டினால்தான் நம்புவேன் என்று நீங்கள் அடம் பிடிப்பதால் அதற்கான சுட்டியும் இதோ.

          http://is1.mum.edu/vedicreserve/kalpa/dharma/apastamba_dharma_sutra.pdf

          (பார்க்க பக்கம் 33)

          जिहाच्छेदनं शुद्रस्यार्यं धार्मिकमाक्रोशथ:१४

          ஜிஹாச்சேதனம் ஷூத்ரஸ்யார்யம் தார்மிகமாக்ரோஷாத்:14

          ஜிஹா என்றால் நாக்கு, சேதனம் என்றால் துண்டிப்பது என்று பொருள்.

          என்வே ஆபஸ்தம்ப ஸூத்ரம் இருப்பதும், அதில் இப்படி ஒரு விஷயம் எழுதியிருப்பதும் கற்பனையல்ல.

          ஆனால் எதற்காக அந்த காலத்தில் இப்படி ஒரு தர்ம ஸுத்ரத்தை எழுதினார்கள் என்பதும் அன்றைய சமுதாயம் எப்படி இருந்தது என்பதெல்லாம் விரிவாக ஆராய வேண்டிய விஷயங்கள்.

          இன்றைய நிலைமைக்கு தகுந்த மாதிரி வர்ண வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையான ஹிந்து சமுதாயத்தை ஏற்படுத்துவதுதான் முக்கியம்.

  57. எனக்கு ஓரளவு தமிழ் எழுத படிக்க வரும். எனது கருத்தை எனது பழைய பின்னுட்டத்தில் தெளிவாக எழுதி உள்ளேன். எனது பின்னுடத்தின் கேள்வியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறன்.

    \\வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம ஸூத்ரங்கள் ஆகியவை ஸம்ஸ்க்ருதத்தில் இருப்பதால் பொது விவாதத்திற்காக, அனைவருக்கும் புரியும்படியாக ஆங்கில மொழிபெயர்ப்பை சுட்டியிருந்தேன். Buhler என்ற ஜெர்மன் அறிஞரின் மொழிபெயர்ப்பு அது.\\

    By the way… Do you have any idea about the background of Bühler. He is an assistant of so called sanskirt prof Max muller. I request you to read the book called Lies with Long Legs. It exposes the back ground of Max muller very well. to know more about Buhler, please refer wiki.

    http://indianrealist.wordpress.com/2010/06/17/max-mueller-was-a-swindler-william-jones-was-a-fraud/

    I would also request you to read the meaning of sudhra in the below link. http://en.wikipedia.org/wiki/Shudra

    you should also know the history of ayran invastion theory. I have already provided the links in my pervious comments. It explains.. why germans were very much interested to creat the concept of aryans. why germans were very much interested in misinterruting the sanskrit langauage? How Hitlar used this concept? It also exposes the relation between hitlar and pope.

    வேதத்தை எழுதிய வியாசரே ஒரு மினவ குலத்தை சேர்த்தவர். பிறகு எப்படி இந்த வேதத்தை அடிப்படையாக கொண்டு எழுத பட்டதாக கூறப்படும் இந்த ஆபஸ்தம்ப ஸூத்ரம் மட்டும் வேதத்தை பிற வர்ணத்தவர் படிக்க கூடாது என்று சொல்லும். தயவு செய்து இந்த லாஜிக்கை கொஞ்சம் சொல்லே முடயுமா?

    இந்த புத்தகம் ஹிந்துக்களின் புனித நூல் என்று கருத படிகிறதா? எவனோ ஒரு கேணயங்கள் சேர்ந்து எழுதிவைத்ததை எல்லாம் நாங்கள் yerkka முடியாது. அப்படி பார்த்தல் பெரியார் கூட தான் அரசு பதிவு ஏட்டின் படி ஒரு ஹிந்து. அவர் எழுதியதை எல்லாம் ஹிந்துக்கள் புனித நூலாக எடுத்து கொள்ள முடியுமா? இது உங்களுக்கே ஒரு கமெடி தனமாக தெரியவில்லை.

    ஒரு நான்கு வரி மட்டும் படித்து என்னால் விளக்கம் கொடுக்க முடியாது. இதை பற்றி நான் முழுமையாக படித்து இதன் உண்மையான பொருளை தங்களுக்கு கூறுகிறேன்.

    • Anindian, Superb… From tomorrow onwards, any one wants to learn about the dravida kalagam, they must refer / contact the hindu munnai people… should refer tamilhindu.com

      Couldn’t laugh after reading you contents,. There is no reference / quote in this link… one more website published based on the theory written by irish gospel preacher caldwell

      • I don’ need links or quotes to what has been said in my site. In future content, i will provide the links wherever necessary. As for Caldwell, I don’t know about him. I will see what he has to say. Anyway ‘non-Hindus’ are well placed to judge Brahmeanism.

        • @ corel, I don’t know… why you want to bring the linguistic issues here.Any how, every ones knows about the uniqueness of Tamil language. Read the wiki link completely.

          http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell

          All ancient Tamil scripts are written based on Hindu principles. Do you know the contribution of ‘Nayanmar’ and ‘Alvar’.

          Aryan and dravidian invasion got failed completely by Genetic analysis. please refer the links mentioned in my previous comments.

          By the way, you said you will bring the ramayana document… in which ‘sati practiced’ mentioned ? I am still waiting for your documents.

          @Anindian,

          I wonder you have no idea about caldwell. All bhramianisum related document will end with calwell / Maxmuller. He is the father of Dravidian theory.

          \\ Anyway ‘non-Hindus’ are well placed to judge Brahmeanism.\\ Bhrameniusm is nothing to do with ‘Jathi’. there are just an temple servants. They were never ruled this country. For you kind information, veda vyasa himself is not bhramin. Krshna himself born in yadav community (MBC as per govt record). Parvathi devi herself born in tribal community ( SC as per govt record). Sanathan dhrama is nothing to with kula dhrama’. Don’t mix up the spiritual with ‘kula dharama’. To know more on this, i request you to read the below link in leisure time.

          http://psenthilraja.wordpress.com/2009/09/10/untouchability-is-it-really-evil/

        • tree,
          I looked at your links. They are truly pathetic.
          There is no historical basis for most of the nonsense there.
          The tragedy of Tamil historical research– or for that matter Hindu and Indian– is a grave lack of objectivity.

        • FYI: My name is sree… not tree 🙂

          \\What the Brahmin establishment could not stomach was that Caldwell and Pope shattered the Brahminist myth that Sanskrit was ‘mother’ to Tamil\\

          Is there any reference for your statement? If so, why Tamil was considered as a holy language? Each and every language has it own unique system? All Indian language shares the common grammar structure. To know more about uniqueness of Indian languages, please refer the below link.

          http://koenraadelst.bharatvani.org/articles/aid/urheimat.html

          \\The writing system in India derives from an import from West Asia that came through Phoenician traders. It was Asoka (a non-”Hindu”) who established the writing system, so much so that the system is referred to as Asokan Brahmi.
          Sanskrit was not written for centuries even after Asoka.\\

          🙂

          Ashoka ruled this country during 269 BC to 232 BC.
          Wiki reference: http://en.wikipedia.org/wiki/Ashoka

          Classical Sanskrit dated to the period of 1800 BC
          WIKI REFERENCE:
          http://en.wikipedia.org/wiki/Vedic_period
          http://en.wikipedia.org/wiki/Sintashta-Petrovka_culture

          Again, don’t make some fake statements in the common forum. It is easy to blame something without any proof 🙂

          \\ But that does not make Tamil born of Sanskrit, as much as Malay –now using Roman, earlier Arabic, and even earlier Southern Brahmi based scripts– has no European, Arab or Indian origins. \\

          Again, religious is nothing to do with language. we have never said… Tamil is derived from Sanskrit. We (hindu org) have never made any such statements. Tamil is considered as a holy language as per ancient Hindu scripts. you mush read the ‘ silapathikram’ to know more about Tamil and Sanskrit.

          \\ I looked at your links. They are truly pathetic.
          There is no historical basis for most of the nonsense there.\\

          I got this link from my friend at around 8 AM. It took more than 4Hrs to read the complete articles. But, I am surprised you read them in 50 min and commented immediately. you are a genius 🙂

          hmm… Enough ancient scripts and geological reference are provided in my link. Still you are not ready to accept 🙂 Any how…

          Without arguing on the contents mentioned in the link.. you just neglected it.

          பகுத்து அறிதலே பகுத்தறிவு… Let us discuss on the content available in the link.

          http://thamizhan-thiravidana.blogspot.com/

          \\ The tragedy of Tamil historical research– or for that matter Hindu and Indian– is a grave lack of objectivity\\

          The objective of Hinduism is spiritual. Hinduism is not an organized Abraham religious…. where they want to spread the religious all over the world.

          why you are questioning about India? It is completely unacceptable.

          வானத்தை நோக்கி எச்சில் உமிழ்தலும், தன் தேசத்தை பற்றி முன் பின் தெரியாதவரிடம் தவறாக விமர்சித்தாலும் ஒன்றே…

          இராமாயணத்தில் உடன் கட்டை ஏறுதல் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்று நீங்கள் சொன்நீரிகள். அதற்கான ஆதாரத்தை இன்னும் தங்கள் வழங்கவில்லை 🙁

        • tree (a.k.a. sree),
          if I can be “@ corel” to you, why cannot you be “tree” to me?

          The point that I made is that until Pope and Caldwell demonstrated that Tamil and several other languages belonged to a different family, the Brahmin establishment dismissed Tamil as a derivative of Sanskrit.

          As for your claims, the Vedic language was a source of Sanskrit and not the Sanskrit of later day.
          Also, there were at least two, probably three, language families used in the sub-continent when the Indo-Aryans appeared in the region.
          .
          In any event, the points I made re Caldwell remain valid, irrespective of all unscientific blabbering.

          Also, Sanskrit had no script until after Asoka.

          Show me evidence of pre-Asokan script in South Asia, other than the Mohenjadaro-Harappa seals, which too are not accepted by some as fully developed scripts like Egyptian or Chinese of that time.

      • Hi Sree,

        Still how long you people will be peddling the mean stories of vyasa, valmiki and other rishis who became brahmean by merit and not by birth? Any person with a even pea size brain would ask, what happened to this arrangement of social organisation by merit after few rishis had become brahmeans by merit? and why there are only brahmeans by birth since around 2000k?

      • What the Brahmin establishment could not stomach was that Caldwell and Pope shattered the Brahminist myth that Sanskrit was ‘mother’ to Tamil.
        (That apart, now it is even clear that it was a language that borrowed heavily from various Prakrits of the sub-continent).

        The writing system in India derives from an import from West Asia that came through Phoenician traders. It was Asoka (a non-“Hindu”) who established the writing system, so much so that the system is referred to as Asokan Brahmi.
        Sanskrit was not written for centuries even after Asoka.
        .
        To clear one of your problems: a language is not its script.

        Tamil has undergone various changes to its script system starting from what was called Tamil Brahmi / Brahmi Dravidi. The current script is based on one designed to write alien Sanskritic sounds.
        But that does not make Tamil born of Sanskrit, as much as Malay –now using Roman, earlier Arabic, and even earlier Southern Brahmi based scripts– has no European, Arab or Indian origins.

        It may be worth a try: think before you write

  58. Hi, thanks for your question.

    With reference to my perious comment, all i want to say is Hindu dhrama didnt promote the current form of caste system. The current form is the modified version of caste system gifted by invaders (mugals and christians).

    Bhramana kula dhrama is nothing do with social issues. There are people who speaks as if… temple job is like high paid engineer / collector job. As i said, kula dhrama is not completly attached with birth.

    you are confusing rituals / religious with spritual, Do you have any idea about nayenmargal? Out of 63 nayanmargal, 60 belongs to non-bhramin community. Out of 12 alvargal, 9 of them belongs to non-bhramin community. They lived few cent before. They are treated as GOD. you are free to visit any local siva and vishnu temple to see thier idol. They are given a high position when compare to GOD.

    As like our indian judicial system… they caste system of india got corrupted / misinterrupted by invader (mugal & christions). Most of the dravidan and athist books are written based on the books written by Max-muller & Caldwell…. who came to india for religious conversion.

    For spritual life (sanathan dhrama), you can belong to any community. Hindusim / sanathan dharam / bhrathian culture can’t be defined by one single book. it is the collection of millions of literatures. One single book can’t represent the hinduisum.

    I hope you have read the below link, your questions are answered in the below link.

    http://psenthilraja.wordpress.com/2009/09/10/untouchability-is-it-really-evil/

    AT LAST, caste system is one part of Hindu / bhrathian culture. Caste system alone can’t be considered as hinduisum. In fact, the defintiion of religious will not be suitable for hinduisum.

    It is very difficult for me to define the hindu dharama from religious prespective. Because, the definition of religious is dervied from abrahamic concept. It will not suitbale for hinduiusm.

    • Hi Sree,

      You have not answered my question and I know you don’t have the answer. Spare us your new stories of invading mohamedans and christians gifting caste system to India. You are giving a dead link for justifying why untouchability is not evil. I am sure you are a Brahmean. I know your kind very well. You can stoop to any level. I don’t want to waste my time with you. Bye.

      • \\I am sure you are a Brahmean. I know your kind very well. You can stoop to any level. I don’t want to waste my time with you. Bye\\

        For your kind information, i belong to chettiyar community. Person who wrote this blog (untouchability is not evil) belongs to kongu vellalar community. you are free to write your questions in his blog. I am sure you will get answer from Senthil.

        A person who opposes religious conversion = BJP / RSS person… Is that what you mean?

        I have answered for your question.

        QUESTION:

        Still how long you people will be peddling the mean stories of vyasa, valmiki and other rishis who became brahmean by merit and not by birth? Any person with a even pea size brain would ask, what happened to this arrangement of social organisation by merit after few rishis had become brahmeans by merit? and why there are only brahmeans by birth since around 2000k? \\

        ANSWER:

        you are confusing rituals / religious with spritual, Do you have any idea about nayenmargal? Out of 63 nayanmargal, 60 belongs to non-bhramin community. Out of 12 alvargal, 9 of them belongs to non-bhramin community. They lived few cent before. They are treated as GOD. you are free to visit any local siva and vishnu temple to see thier idol. They are given a high position when compare to GOD. By the way, rishis are not bhramins.

        Again, don’t confuse the caste system / rituals with spiritual. And also, you must know the difference between religious and spiritual.

        \\Spare us your new stories of invading mohamedans and christians gifting caste system to India\\

        you means to say… only dravidians / anti Hindus / westerns have the full rights to write the fake stories :). I didn’t say that they have the created caste system. Invaders created the discrimination among the various community.

        \\You are giving a dead link for justifying why untouchability is not evil.\\

        I am the strong supporter of Hindu / sanathan / bharathian culture. Did i consider vinavu as a dead link. I am not sensitive. I am ready to discuss with anybody. This is the problem with fake dravidian people. They always go behind the opinion.

        Again, don’t misunderstand.. Please read the link and come back with your questions.

        Thanks for understanding…

  59. Sorry, i didn’t notice that…

    \\Show me evidence of pre-Asokan script in South Asia, other than the Mohenjadaro-Harappa seals, which too are not accepted by some as fully developed scripts like Egyptian or Chinese of that time\\

    Did you read the link provided in my comment? It cleardly explains the exisitance of sanskit even before 1500BC.

    \\What the Brahmin establishment could not stomach was that Caldwell and Pope shattered the Brahminist myth that Sanskrit was ‘mother’ to Tamil\\

    Is there any ancient scripts / brahmin… speaks about this?

    For non-Hindus, Tamil is just an lanuage.

    For Hindus, Tamil is considered as Holy language. For more information, please refer the ‘Nayanmargal’ and ‘alvargal’ songs.

    Bye bye…

    • Vedic Sanskrit existed in 1500 BC. Who denied it?
      BUT IT WAS NOT A WRITTEN LANGUAGE. (Classical Sanskrit was a later creature).
      The inability to write was made into a virtue. Devanagari was a derivative of the Asokan Brahmi, which allowed all Prakrits to have scripts.
      The oral tradition of Sanskrit persisted even after Asoka used the Brahmi script to record his edicts on stone.
      I cannot understand your utterances about Tamil and they are irrelevant to what I said.
      Good that you are taking a break.
      That may give you some time for sober reading about Caldwell and Pope.

  60. நாம் கட்டிய கோயில்களில்- ஆண்டவனை அர்ச்சனை செய்து, அணைத்து பிறப்புக்களும் ஆண்டவன் முன் சமம் என்னும் தன்னம்பிக்கையை தடுப்பது, யாரிடம் சிறைபட்டிருக்கும் சுதந்திரம்???
    பதில்சொல்வார்களா மௌனி/ மிதவாதியாக உள்ள தலைவர்களும்/ பத்திரிகைகளும்???- பிரசுரித்தால் கோடி நன்றி சொல்வோம் – நிமிர்ந்த நடை,நேர்கொண்ட பார்வை- நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் தரும் பத்திரிகை தர்மத்தை கடைபிடிப்பதில்- தினமணி முதல்வன்/தலைவன்/ மக்கள் வழிகாட்டி என்று – இன்றையத் தேவை ஒன்றுபட்ட தமிழர் இயக்கம் (United Tamil Front).

  61. யார் பச்சை தமிழர்கள்???

    திருக்குறள், பொங்கல் விழா,தமிழர் பெருமை, தமிழ் உணர்வு, செம்மொழி தமிழ்,
    தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல்,சாதனை புரிந்த பச்சை தமிழர் – இவைகளைப்பற்றி பேசினால் ஆர்வம் காண்பிக்காதது மட்டுமல்லாமல் கிண்டலடிக்கும் நம்மக்களும்/ வீட்டில் தமிழ் பேசாத அணைத்து தமிழ் பேசும் மக்களும்- தன் சாதி அடையாளமாக சமஸ்கிருதம் கலந்த தனி அடையாள பெயர் வைத்திருப்பவர்களும் தமிழர்கள் அல்லர்….
    இந்த கூட்டம் இல்லாத மற்ற கனவிலும்/நனவிலும், வீட்டிலும், வெளியிலும்,
    உணர்விலும் உள்ள – இளிச்ச வாயன்களும்/ ஏமாளிகளும்/ சொரனையற்றவர்களும்/ வெட்டுரவனை நம்புகிறவர்களும்,பகுத்தறிவை பயன்படுத்தாததும் ஆன அனைத்து மக்களும் – தமிழரே!!!!

  62. இளிச்ச வாயன்களும்/ ஏமாளிகளும்/ சொரனையற்றவர்களும்/ வெட்டுரவனை நம்புகிறவர்களும்,பகுத்தறிவை பயன்படுத்தாததும் ஆன அனைத்து தமிழ் மக்களும் நமக்கு சம மரியாதை இல்லாத ஆலயம் செல்வதால் தானே அவன் ஆட்ட/ ஆள வந்துவிடுகிறான்/ மணிஆட்ட???

  63. //வைசூரி அய்யர் (16:24:03) :-http://mathimaran.wordpress.com/2012/03/11/514-1/

    தாராளமா பூசை பண்ணுங்கோ. ஒரு வாரம் பூசை பண்ணிட்டு சாமி என்னை குட்டுது,

    கிள்ளுதுன்னு சாக்கு போக்கு சொல்லிட்டு வேறவேலைக்கு ஒடிடப் படாது..//

    ஹி … ஹி .. ஹி …சம உரிமை கேட்கும் எங்களுக்கு குட்டா???

    “பரம்பொருளை வழக்காடு மன்றத்தில் காணும் பெரியவாள்,

    பேரின்பத்தை தொலைக் கேமராவில் தேடும் தேவநாதன்,

    தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே ,

    அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள்” –

    இவர்களுக்கு ஆதிபராசக்தி என்ன கொடுப்பார் ??? .

    பெற்றவளுக்கு பிள்ளை தீட்டா ??? அல்லது

    உருவாக்கியவனுக்கு உண்டாக்கியன் தீட்டா???

  64. லட்டு கூட அவா தான் பிடிக்கணும்.. இதுல உனக்கு என்னயா வயிற்றெரிச்சல்.. பொது மக்கள் அதை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கிறார்கள்.. நீ எதுக்கு இதுல மூக்க நுழைக்கற?

    கோயிலில் பூஜை செய்ய பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு … இதையும் எல்லா ஹிந்துக்களும் ஏற்றுக் கொண்ட நடைமுறை.. உன்ன மாதிரி கடவுள் நம்பிக்கையில்லாதவனுக்கு இங்கே வேலை இல்ல..

    மனித உரிமைக் கழகம்னு பேர் வேச்சிருக்கிறது மிகப்பெரிய காமெடி.. பத்து கோடி பேருக்கு மேல கொன்று குவித்த ஒரு சித்தாந்தந்தை ஏற்றுக் கொண்டு மனித உரிமை பேசுவது, ஆயிரம் பேருடன் படுத்து வந்த ஒரு வேசி, கற்பை பத்தி பேசுவது போல..

  65. பதிரி சேஷாத்ரி எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன்.. கோயில் என்பது பொது சொத்து அல்ல.. அவர் இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட..

  66. “தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே,
    அவனை அனுமதி மறுக்கும் பரமாத்மாக்கள்”

    ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் மாறாதோ??

    //லட்டு கூட அவா தான் பிடிக்கணும்.. இதுல உனக்கு என்னயா வயிற்றெரிச்சல்.. பொது மக்கள் அதை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கிறார்கள்.. நீ எதுக்கு இதுல மூக்க நுழைக்கற?-senthil
    June 23, 2012 at 8:45 am//

    //அர்ச்சகர் பணி: பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு- ராஜஸ்தான்.//

    “படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை”

    ஹிஹும்..ஹிஹும்….ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் மாறாதோ?? கேள்வி பிறந்தது அங்கு…. நல்ல பதில் கிடைத்தது அங்கு…

    http://myhoo.in/devasthan-dept-notification-2013-rajasthan-for-65-govt-jobs/

    http://dinamani.com/india/2013/10/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-30-%E0%AE%87/article1837342.ece

Leave a Reply to அசுரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க