privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்க கூடாது? - கேள்வி பதில்!

விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்க கூடாது? – கேள்வி பதில்!

-

கேள்வி:
பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மட்டும் இல்லையென்றால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிடும், சிறு பெண் குழந்தைகளை கூட கற்பழித்து சாக்கடையில் வீசுவது அதிகரிக்கும் என்பது என் எண்ணம், நம் இந்திய கலாசாரத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய நாடுகளை போல் நம் அரசு பாலியல் தொழிலை ஏன் ஒரு குடிசை தொழிலாக கொண்டு வரக்கூடாது?இதனால் வேலைக்கு போகுமிடங்களிலும் பொது இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குறையுமே?

– சத்யா
___________________________________________

அன்புள்ள சத்யா,

இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தை பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான ‘கற்புக்கரசிகள்’ போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளை கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு காமக்கிழத்தியாக பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூட புழக்கத்தில் இருந்தது.

தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடிய போது அதை காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தது வரலாறு. தேவதாசி குடும்பத்தில் இருந்து வந்த மூவலூர் ராமாமிருதம் அம்மையார்தான் இந்த தேவதாசி ஒழிப்பு இயக்கத்தில் பெரியார் ஆதரவுடன் முன்னணி பங்கு வகித்தார். 1999களில் கூட ஒரிசாவின் பூரி ஜகன்னாதர் கோவில் இருந்த கடைசி தேவதாசி மறைந்து விட்டாலும் தேவதாசி முறையை தொடர வேண்டும் என்று இந்துத்வவாதிகள் பேசி வந்தனர். அப்போதைய புதிய கலாச்சார இதழில் இது குறித்த விரிவான கட்டுரை வந்திருக்கிறது. வினவிலும் வெளியிடுகிறோம்.

இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மற்றும் ‘கீழ்’சாதிப்பெண்களை பொட்டுக்கட்டி விடும் சடங்கு மூலம் கிராமங்களுக்கு ‘பொது மகளீரா’க்கும் முறை அமலில் இருக்கிறது. இங்கும் ஊர்த் தெய்வத்திற்கு நேர்ந்து விடப்படும் அபலைப் பெண்கள் கிராமத்து ஆதிக்க வர்க்க ஆண்களின் காமக்கிழத்திகளாக பணி புரிய வேண்டும். இது கீழ்மட்ட அளவில் உள்ள தேவதாசி முறை என்றும் கூறலாம்.

இந்துமதப் புராணங்களிலும் தேவலோக அழகிகளான ரம்பா, ஊர்வசி, மேனகையின் ‘வரலாற்று’ பாத்திரங்களையும், முக்கியமாக முனிவர்கள் தவமிருந்து பவர் பெறும் நேரத்தில் அவர்களை முடக்கும் சல்லாபக் கதைகளையும் அறிவோம். வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும் சேர்ந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்.

அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். அதை இந்துமதக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரம், பார்ப்பனியப் பண்பாடு என்றும் சொல்லலாம். இது குறித்து அம்பேத்கரும், பெரியாரும் எழுதியவற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

முழு நாட்டு மக்களையும் வேசி மக்கள் என்று தூற்றியதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் உலகெங்கும் எல்லாக் கலாச்சாரங்களிலும் விபச்சாரம் இருந்திருக்கிறது. விபச்சாரத்தை வெறும் ஒழுக்கம் குறித்த பிரச்சினையாகப் பார்க்காமல் அதை சமூக பொருளுற்பத்தி வரலாற்றில் வைத்துப் புரிந்து கொண்டால் பல கேள்விகளுக்கு விடை தெரியும்.

இயற்கையை மட்டும் சார்ந்து, சொத்துடமை பிரிவினைகள் ஏதுமற்ற ஆதிகாலப் புராதானப் பொதுவுடமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இயங்கியது. இங்கு வாழ்ந்த இனக்குழு சமூகத்தின் மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் மக்கள் என்று அறியப்பட்டார்கள். பெண்ணே சமூகக் குழுக்களின் தலைவியாகவும் இருந்தாள். இயற்கையான வேட்டையிலிருந்து, திட்டமிட்ட வேட்டை, கால்நடை, பயிர் என்று பொருளுற்பத்தி மாறியதும் சொத்துடமைகள் தோன்றி வர்க்கங்கள் எனும் சமூகப் பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பாலின ரீதியில் வேலைப்பிரிவினையும் தோன்றுகின்றன.

பிறகுதான் மனித உறவுகள் சொத்துடமையின் நீட்சியாக பரிணமிக்கின்றன. அதாவது தனக்குரிய நிலம், கால்நடைகள், அடிமைகள் முதலான சொத்துக்களை காக்கும் வாரிசுரிமை தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. இப்படித்தான் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகம் பிறக்கிறது. இந்தப் பெண்ணிற்கு பிறந்த மக்கள் என்பதிலிருந்து இந்த ஆணுக்கு பிறந்த வாரிசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஆணுக்கு பிறந்தவர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்தப் பெண்ணுக்கு பிறந்தவர்கள் என்பது முக்கியமல்ல. குடும்பத்தின் தோற்றம் இப்படித்தான் இருந்தது என்பதை பலரும் நம்ப மாட்டார்கள். ஒரு ஆண்டை அல்லது முதலாளி அவனது சொத்துக்களை பாதுக்காப்பதற்கு குடும்பம் எனும் ஒரு தார மணமுறையே பொருத்தமாக இருக்கிறது என்பதும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்று அழைக்கப்படும் “ஒருத்திக்கு ஒருவன்” என்ற நன்னெறியின் பொருள் இதுதான். அதாவது ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே இருக்க முடியும். அப்போதுதான் வாரிசுரிமைச் சிக்கல் இருக்காது. ஆனால் ஒரு ஆணுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இது அடிமைகளுக்கும், ஆளப்படும் வர்க்கத்தினருக்கும் சாத்தியமுமில்லை, தேவையுமில்லை. பாலியல் வாழ்வில் மனித சமூகம் உருவாக்கிய சுதந்திரக்காதல் என்பது ஒடுக்கப்படும் வர்க்கத்தினரிடையேதான் ஓரளவுக்கு இருந்தது எனலாம். இன்றும் கூட அப்படித்தான்.

சொத்துடமையின் படிக்கட்டுகளில் மேலே செல்லச் செல்ல குடும்பத்தில் இருக்கும் பாலியல் வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாகவே நீடிக்கிறது. ஊருக்கும், சொத்துடமையின் வாரிசு பிரச்சினைக்காக மட்டுமே திருமணங்கள், குடும்பங்கள் தேவைப்பட்டன. ஊருக்கு “கற்பு”, ஆசைக்கு விபச்சாரம் என்பது ஆண்டைகளின் இயல்பாக மாறியது. அதே போன்று ஆண்டைகளின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள். இப்படி சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அழைக்கிறார். இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூரியேவின் மேற்கோளையும் ஏங்கெல்ஸ் காட்டுகிறார்.

இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் சொத்துடமை வர்க்கங்களில் வாரிசுரிமையை ரத்து செய்ய முடியாது என்பதால் காதல் பொய்த்துப் போனாலும் குடும்ப வாழ்க்கையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமெங்கும் உள்ள அநேக குடும்பங்கள் இந்த அச்சில்தான் சுற்றி வருகிறது என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ‘குடும்பத்தின்’ செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ‘கள்ள உறவுக்கு’ ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த கள்ளஉறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது.

மேட்டுக்குடி வர்க்கங்களின் இன்பநாட்டத் தேவைகள் அவர்களது பணத்திமிர் காரணமாக எல்லா துறைகளிலும், எல்லா உணர்ச்சிகளிலும் அளவிறந்து காணப்படுவது போலவே பாலியல் விசயத்திலும் நடைபெறுகிறது. இதுவும் இன்றல்ல, நேற்றல்ல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்கிறது. நமது பண்ணையார்களும், மிட்டா மிராசுதார்களும், ஜமீன்தார்களும் சட்டப்பூர்வமாகவும், மறைமுகமாகவும் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள். மைனர் என்ற பெயரில் அவர்களது வக்கிரங்கள் இயல்பானதென்று நியாயப்படுத்தப்பட்டன. இது போக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையும் குறிப்பாக அவர்களுக்கு மணமானால் முதலிரவில் பண்ணையாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற கொடுமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்களால் இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன.

ஆக விபச்சாரம் உள்ளிட்டு பல்வேறு பாலியல் வக்கிரங்களின் ஊற்றுமூலம் மேட்டுக்குடியினர்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து இன்று பாலியல் வக்கிரங்கள் ஏன் அதிகம் நடைபெறுகின்றது என்பதை பார்க்கலாம். அப்படி அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது உங்களது கருத்து. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.

பாலியல் உணர்வு என்பது மனிதன் உள்ளிட்ட எல்லா விலங்கினத்திற்கும் உள்ள இயற்கையான உயிரியல் உணர்ச்சிதான். ஆனால் அந்த விலங்கின உணர்ச்சியிலிருந்து காதல், ரசனை, தேர்வு, என்ற நாகரீக கட்டத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த நாகரீகம் விலங்கினங்களுக்கு கிடையாது. அதாவது நமது காதலில் விலங்குணர்ச்சி உள்ளதோடு மனிதனது நேசம், ரசனை என்ற சிந்தனைரீதியான பண்பாட்டு அம்சமும் கலந்திருக்கிறது. அதே நேரம் இந்த விலங்குணர்ச்சியும், கலாச்சார உணர்ச்சியும் கலந்த காதலில் விலங்குணர்ச்சியை மட்டும் துண்டித்து வெறியோடு வளர வைக்க முதலாளித்துவ சமூக அமைப்பின் சூத்திரதாரிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே. இன்று எண்ணிறந்த வகைகளில் பாலியல் தொழில் என்பது ஆபாசப்படங்கள், செய்திகள், சினிமாக்கள், சேனல்கள், கருவிகள், கடைகள், நடனங்கள் என்று செல்பேசி முதல் இணையம் வரை பரவிக் கிடக்கின்றது. சுற்றுலா என்றாலே அது விபச்சாரச் சுற்றுலாதான் எனும் அளவுக்கு மாறிவிட்டது. முக்கியமாக மேற்குலகின் வக்கிர நபர்களுக்கான விபச்சார விடுதிகளாக கீழை நாடுகளின் சுற்றுலா நகரங்கள் மாறிவிட்டன.

மேலும் நேரடி பாலியல் வக்கிரங்களைத் தாண்டி சராசரியான செய்தி, விளம்பரம், பாடல், புகைப்படம், மொழி என அனைத்தும் பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை பாலுணர்வின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் ஆண்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. சராசரி பெண்ணுடல் என்பது சக மனித இனம் என்பதைத் தாண்டி எப்போதும் நுகர்வதற்குரிய ஒரு பண்டமாக நம் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகு, அலங்காரம், நடை, உடை, பாவனை சகலமும் இதைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எற்றுக்கொள்ளுமளவு பெண்களும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.

சரி, இத்தகைய பிரம்மாண்டமான பாலியல் தொழில் வலைப்பின்னல் மனிதர்களின் பாலுணர்வுக்கு போதிய ‘தீனி’ போட்டு ஆற்றுப்படுத்தலை செய்திருக்கிறதா? இல்லை. அப்படி முடியாது என்பது இதன் நோக்கத்திலும், இயல்பிலும் உள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட பாலுணர்வு வெறி என்பது ஒரு போதும் அடங்காது. அதனாலேயே பழையமுறைகள் சலித்துப்போய் புதிது புதிதாக தேடும் வெறி தூண்டப்படுகிறது. விபச்சாரத்தில் கூட பெண்கள், விதவிதமான தேசிய இனப்பெண்கள், கன்னி கழியாத பெண்கள், பல வயது பெண்கள், என்று போய் தற்போது குழந்தைகள் வரை வந்து நிற்கிறது. எனினும் இந்த வேட்டை இத்தோடு நின்றுவிடாது. வேறு வேறு விதங்களில், முறைகளில் தொடரும்.

8 எம். எம் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு பணக்காரனது திருப்திக்காக ஒரு அப்பாவி இளம் பெண்ணை வன்புணர்ச்சி செய்து பின்னர் உண்மையாகவே கொலை செய்து அதை படமெடுத்து (SNUFF FILM) அவனுக்கு காட்டுகிறார்கள். அப்போதுதான் அவனது உணர்ச்சி திருப்தி அடைகிறது. அதற்காக அவன் பெரும் பணத்தை செலவழிக்கவும் தயாராக இருக்கிறான். இது உண்மையா, பொய்யா என்று பார்ப்பதை விட இவை போன்றவற்றை சாத்தியப்படுத்தும் வழிகளில்தான் பாலியல் வக்கிரங்கள் பெரும் பணத்தை அள்ள முடியும்.

மனிதர்களின் மறு உற்பத்திக்கென்று இயல்பான முறைகளில் இருக்கும் உடலுறுவு பின்னர் பாலுணர்வு வெறிக்காக விதவிதமாக மாற்றப்பட்டு ஓதப்படுகிறது. அவையெல்லாம் அறியாதவர்கள் இன்பத்தை முற்றிலும் அறியாதவர்கள், நுகராதவர்கள் என்று பொதுக்கருத்தை உருவாக்கி மிரட்டுகிறார்கள். பதற்றம் கொள்ள வைக்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்களில் இரத்தம் தெறிக்க கொலை செய்யும் விளையாட்டுக்கள் போல வன்புணர்ச்சி செய்யும் ரேப் விளையாட்டுக்களும் வந்துவிட்டன. ஆனால் இவை விளையாட்டோடு நிற்காமல் அந்த பிஞ்சு மனங்களில் ஊடுறுவி என்றாவது வினையாற்றாமல் போய்விடுமா என்ன?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் இத்தகைய சமூக சூழலே பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையான காரணம். விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றுவதன் மூலமாக இவற்றை ஒழித்துவிட முடியாது. அதனால்தான் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் கேளிக்கைகள் சட்டப்பூர்வமாகவே நிறைந்திருக்கும் அமெரிக்காவில் கூட பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்து விடவில்லை. உண்மையில் இந்த வன்முறைகள் அமெரிக்காவிலேதான் அதிகம். வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளிலும் கிட்டத்தட்ட அதே நிலைமை.

பொருளாதாரத்தில் வளராத ஏழை நாடுகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு மேற்கண்ட சமூகச்சூழலே காரணம். இந்தியாவில் “கற்பு – விபச்சாரம்” இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்பாடு இரண்டு முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அதில் ஒன்று சமூக ரீதியாக இங்கு சுதந்திரக் காதல் சாத்தியமற்ற நிலை. சாதி, மதம் விட்டு காதலிப்பது இன்றும் கூட இங்கு போராட்டம்தான். எதிர்பாலினத்தவரை பார்ப்பது, சகஜமாக பழகுவது கூட இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மறையாக பாலியல் வக்கிரங்கள் வளருவதற்குரிய பொருத்தமான சமூக நிலைமையை பார்ப்பனியம் வழங்குகிறது.

மேலும் சாதி, மதம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் நிறைந்திருக்கும் நமது நாட்டில் ஒரு பெண் காதலிப்பது என்பது இத்தனை தடைகளை தாண்டித்தான் முடியுமென்பதால் உண்மையில் பெண்களுக்கு இங்கே தேர்வு செய்யும் உரிமை இல்லை. இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதும் கூட சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி தேர்வு செய்யும் சமரச நிலைமையே. இது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல காரணமாகிறது.

சொத்துடமை தோற்றுவித்திருக்கும் வாரிசுரிமைக் குடும்பம்தான் நம்நாட்டிலும் செல்வாக்கோடு செலுத்துகிறது. இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் பாலியல் பிரச்சினைகளில் ஒரு மனிதனின் தனித்துவ விருப்பமும், அதற்கு சமூகம் விதித்திருக்கும் தடைகளும் ஒரு முரண்பாட்டை வீரியத்துடன் உருவாக்குகின்றன. அந்த முரண்பாட்டின் பிரச்சினைகளோடுதான் நாமனைவரும் வாழ்கிறோம்.

நேர்மறையில் இந்த முரண்பாட்டினை சமூக விழுமியங்களோடு, சமூக நோக்கிலான வாழ்வோடு கடந்து செல்ல வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் முதலாளித்துவ அமைப்போ இந்த முரண்பாட்டை கேடாக பயன்படுத்தி வெறியை வளர்த்து காசு பார்க்கிறது. இதை ஒழிக்காமல் பாலியல் வன்முறைகளையும், நமது குழந்தைகளையும் பாதுகாக்க முடியாது. அதற்கு விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதும் பலனளிக்காது.

அடுத்து எந்த நிலையிலும் நாம் விபச்சாரத்தை ஏற்க இயலாது. ஏனெனில் மனிதனின் அகவய தேவையை பண்பாட்டு தரத்துடன் நிறைவேற்றும் பாலியலை ஒரு தொழிலாக செய்வது என்பது மனித சாரத்திற்கு எதிரானது. இன்று ஏழ்மை, மறுகாலனியாக்க நெருக்கடிகள், மேற்குலகின் முதலாளிகள் மற்றும் அவர்களது இராணுவத் துருப்புகளுக்காக நம்மைப் போன்ற ஏழை நாட்டு பெண்கள் வேறு வழியின்றி விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.

பணக்காரர்களின் வக்கிரங்களுக்கான மேட்டுக்குடி விபச்சாரத்தைத் தாண்டி உழைக்கும் வர்க்க ஆண்களும் கீழ்தட்டு விபச்சாரத்தை நாடி செல்கின்றனர். உதிரித் தொழில்களில் அதிக உடலுழைப்பை செலவழித்து இறுதியில் தமது மனித சாரத்தை பறி கொடுக்கும் இந்த மனிதர்கள் ஒரு இயந்திரம் போல தமது கேளிக்கைகளை நாடுமாறு அவர்களது பணிச்சூழல் கோருகிறது. புகை, போதை வஸ்து, பான்பராக், மது, விபச்சாரம் அனைத்தும் இவர்களை மேலும் கடினமாக உழைப்பதற்கு ஒரு வகையில் உதவுகிறது. இவர்கள் எவரும் வக்கிரங்களுக்காக விபச்சாரத்திற்கு செல்வதில்லை. இவர்களது கொடுமையான வாழ்க்கைச் சூழலை மாற்றி அவர்களும் மனைவி, குழந்தைகளோடு ஒரு இனிமையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்தால் இவர்கள் ஏன் விபச்சாரத்திற்கு போக வேண்டும்?

காதலில் காமம் இருக்கிறது. காமவெறியில் வெறும் விலங்குணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ காதலுடன் முத்தமிடுவது வேறு, காமவெறியுடன் மிருகம் போல கடிப்பது வேறு!

காதல் சாத்தியப்படும் போது காமவெறிக்கு தேவை இல்லை. ஆனால் காமவெறி இல்லாமல் முதலாளித்துவ பாலியல் நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாது.

ஆகவே பாலியல் வன்முறைகளை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை நாம் மாற்றுவதற்கு முன்வரவேண்டும். ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் ஒரு சமூக அமைப்பில் சுதந்திரக் காதல் பூத்துக் குலுங்கும். அங்கே மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். விலங்குகளுக்கு வேலை இல்லை.

__________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

    • இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை.

  1. தேவையான ஒன்றை, தெளிவான நடையில் விளக்கியுள்ளீர்கள். மிகச்சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வினவு.

  2. பதிவருக்கு ,
    நீங்கள் சொன்ன கருத்தில் பல செய்திகள் பெற்றேன். ஒரு வகையில் நான் உங்கள் கருத்தோடு ஒத்துபோகிறேன் … ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இந்த பதிவில் ஆண் பெண் உறவு குறித்தோ அல்லது சட்டப்பூர்வமான பாலியல் தொழில் சமூகத்தில் எத்தயக தீங்கு விளைவிக்கும் என்பதை கூறுவதை விட பார்பனியர், முதலாளிகள் எதிர்ப்பில் தான் அதிகமாக கோபம் கொண்டிருப்பதாக தோன்றுகிறது …
    முதலாளிகள் செய்தால் பெரும் குற்றம் அதே பொருளாதார ரீதியில் பின் தங்கியோர் செய்தால் ‘அதற்கு காரணம் இருக்கிறது ‘ என்று சொல்வது எனக்கு சரியாக தோன்றவில்லை. நீங்கள் சொல்லும் முதலாளிகளும் மனிதர்கள் தான் … அவர்கள் ஒன்றும் விலங்குகள் இல்லையே. ஒட்டு மொத்த மனித சமூகமும் அதன் உளவியல் ரீதியான பார்வை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறைஇஒஇவாஅதிவ

  3. அப்போ என்ன சொல்ல வரீங்க……. பாலியல் தொழிலாளி கிட்ட போறதுக்கு பதிலாக ((
    பாலியலை சட்டபூர்வமாக ஆக்கு வதற்கு பதில்
    )) பெரும்பாலான ஆண்கள் செய்வது போல சுய இன்பம் செய்து கொண்டு விடலாம் என்று சொல்ல வருகிறீர்களா…
    இதை எழுதிய முகம் தெரியாத நண்பர் ஒரு முறை கூட சுய இன்பம் செய்ய வில்லை என்று சொல்ல முடியுமா… ??

    ஆணுக்கு 21 வயதில் செக்ஸ் உணர்வு உச்சத்தை அடைகிறது…சரி இதை எப்படி கடப்பது…..சரி இந்த பதிவை எழுதிய நண்பர் எப்படி காமத்தை கடந்தார் என்று சொல்ல முடியுமா

    நேர்மையாக இருப்பது போல யார் வேண்டுமானுலும் நடிக்கலாம்…கட்டுரை எழுதலாம்…..ஆனால் வாழ்வது எனது வேறு….

    சுய இன்பத்தின் போது …நெரிய ஆண்கள் தனக்கு பிடித்த நடிகை அல்லது பெண்களை புணர்வது போல நினைத்து கொண்டு தான் செய்கிராறார்கள்…இதுக்கும் பாலியல் தொழிலுக்கும் பெரிய வேறுபாடு அக நிலையில் இல்லை…..
    புற நிலையில் சில பாதிப்புகள் உள்ளன….

    அகத்தில் சுய இன்பம் செய்யும் மனிதர்கள்…..புறத்தில் பாலியல் தொழில் செய்வதை கேவலம் என்று சொல்லுகிறார்கள்….

    இது எப்படி இருக்கு தெரியுமா…. குசு விட்டவனை பார்த்து எல்லோரும் நகைப்பது போல தான்…..இது வரை நாம் ஒரு போதும் குசு விடாது இருப்பது போல……

    வேண்டுமானால் நாகரியமாக toilet க்குள் சென்று குசு,புருக்கு என்று எது வேண்டுமானாலும் விட்டு கொள்ளலாம்…. :)))

    அதைதான் பாலியல் தொழில் செய்கிறது என்று நினைக்கிறன்….

    http://thanikaatturaja.blogspot.com/2011/04/blog-post_5265.html

    • நீங்கள் சொல்லுவது சரியாகவே உள்ளது. கம்யூனிச கோட்பாடுபடி எல்லா தோழர்களும் நல்லவர்கள் 100% மற்றவர்கள்? பாலியல் சம்மந்தப்பட்ட பிரசினையை எழுதாமல் இந்த கட்டுரை சம்பந்தமில்லா ………………………….

  4. மிக அருமையான கட்டுரை. எங்கல்சுவின் குடும்பம்,தனிச்சொத்து, அரசு ஆகியவற்றீன் தோற்றம் படிக்கவும்.

  5. ஐயா,

    நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள், ஆனாலும் காஞ்சி பெரியவர் என்று ஒருவர் இருந்தார். அவர் இதைத்தான் சொல்ல வந்தார்.
    ஆனால் அது திரிபு பட்டு போனது.
    அவரின் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் சிலவற்றை நீங்கள் படித்து பார்க்கணும்.
    சத்தியமூர்த்தி ஏதோ அவர் போவதற்காக அதை வக்காலத்து வாங்கியதாக பேசுகிறீர்கள்.

  6. //அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது.//

    மேல் வருண பெண்களுக்கும் கீழ் வருண (சூத்திரர்கள் உட்பட)ஆண்களுக்கும் பிறந்தவர்களை “சண்டாளர்கள்” என 4 வருணத்திலும் சேராத பிரிவாக்கினார்கள். மேல் வருண ஆண்களுக்கு எந்த கீழ் வருணப் பெண்ணையும் மணந்து கொள்ளும் “உரிமை” உண்டு ஆணாதிக்க வர்ணாசிரமத்தில்.

    //சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது.//

    ஆதாரத்துடன் விளக்கவும். மனுஸ்மிருதியில் இருக்கிறது என்று பெரியாரைப் போல போகிற போக்கில் சொல்லாமல், பாகம்/எண் குறிப்பிட்டு மேற்கோள் காட்டுங்கள்.

  7. பொருளாதாரத்தில் வளராத ஏழை நாடுகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு மேற்கண்ட சமூகச்சூழலே காரணம். இந்தியாவில் “கற்பு – விபச்சாரம்” இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்பாடு இரண்டு முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அதில் ஒன்று சமூக ரீதியாக இங்கு சுதந்திரக் காதல் சாத்தியமற்ற நிலை. சாதி, மதம் விட்டு காதலிப்பது இன்றும் கூட இங்கு போராட்டம்தான். எதிர்பாலினத்தவரை பார்ப்பது, சகஜமாக பழகுவது கூட இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மறையாக பாலியல் வக்கிரங்கள் வளருவதற்குரிய பொருத்தமான சமூக நிலைமையை பார்ப்பனியம் வழங்குகிறது.

    சுசுதந்திர காதலை அனுமதிக்கும் மேலை நாடுகளிலும் வக்கிரம் நிறைந்து தான் உள்ளது ,இதற்க்கு இந்தியாவில் பார்பனியம் தான் காரணம் என்பது ,மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடுவது போல் உள்ளது ,பார்ப்பனியம் எதிர்க்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை ,ஆனால் இதற்க்கு காரணம் பெண்கள் தங்கள் உடலை வெளியே காட்டி இயல்பாகவே ஆண்களை கவர்வதனால்தான்,அதற்குத்தான் பெண்கள் உடலை முழுவதுமாக மறைக்க இஸ்லாம் சொல்கிறது ,இது பெண்களின் உரிமையை பறிப்பதற்காக அல்ல ,அவர்களின் உயிர், மற்றும் கற்பு, மனித வக்கிர மிருகங்களால் பறிக்கப்படாமல் இருப்பதற்காக ,பெண்கள் மேல் செய்யப்படும் பாலியல் வக்கிரங்கள் எந்த நாட்டில் அதிகம் ,எங்கு குறைவு என்பதை நாட்டு
    நடப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ,

    • இதற்கு பெயர் ஆணாதிக்கம். இதற்கு இஸ்லாமும் உடந்தை என்று நீங்களே திருவாய் மலர்ந்துள்ளீர்கள்.

      • இந்த கட்டுரையின் சாரம்சமே பெண்கள் இன்று போகப் பொருளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே, இதற்கு அடிப்படையே அவர்களின் உடல் பிறரை கவர்வதால் தான் எனவே அதை மறைத்தால் இவ்வளவு பிரச்சனையும் தீர்ந்துவிடும். இன்று ஜனாதிபதி முழு உடலை இஸ்லாம் கூறியவாறு மறைத்து வருகிறார் அது எந்த ஆணாதிக்கம்?

  8. அமெரிக்கா, முதலாளித்துவம், மேட்டுக்குடி, பார்ப்பான், பார்ப்பனியம் – இவை இல்லாமல் ஒரு நடுநிலையான கட்டுரை எழுதமுடியாதா? அது என்ன நியாயமோ. பணக்காரனுக்கு காம உணர்வு வந்து விபச்சாரியிடம் போனால் அவன் அயோக்கியன், அதுவே ஏழை, பாமரன் என்றால் சந்தர்ப்ப சூழ்நிலையா? மிக அருமை. புகைப்பிடித்தல், கஞ்சா, பான் பராக் எல்லாம் அதிகம் உழைக்க தூண்டுகிறதாம். எங்கிருந்து உங்களுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்தன?

    அது சரி. இப்படி மேதாவித்தனமாக உளவியல், இல்லறவியல் பற்றி எழுதி உள்ளீர்களே, அவைகளிக்கு எந்த ஆராய்ச்சி நூல்களைக் கொண்டு அடிப்படையாக எழுதி உள்ளீர்கள் என குறிப்பிடலாமே.

    பி.கு: அமெரிக்காவில் குற்றங்கள் அதிகம் என்று கூறுகிறீர்களே, ஏனென்றால் அங்கே குற்றங்கள் படிவு செய்யப்படுகின்றன. ஆனால் நம்மூரில் எவரும் புகார் பதிவு செய்வதில்லை. மேலும் அமெரிக்காவில் பாலியல் தொடர்பான குற்றங்கள் கடுமையாக கையாளப்படும்.

  9. இன்று விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் 105-வது பிறந்த நாள் !
    Posted on September 28, 2011 by புமாஇமு
    மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கின்றது இந்த கட்டுரை….

    http://rsyf.wordpress.com/2011/09/28/bhagath-singh-105th-birthday/

  10. கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்தப் பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: “”இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை..
    .”
    · பால்ராஜ்
    நன்றி: புதிய கலாச்சாரம்

    அந்த வீரன் இன்னும் சாகவில்லை

    http://rsyf.wordpress.com/2009/03/21/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/

  11. யு.கே.ஜி., மாணவிக்கு பாலியல் துன்பம்: 24 மணி நேரத்தில் கைது செய்ய உத்தரவு

    சென்னை : “யு.கே.ஜி., மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரில், சம்பந்தப்பட்டவர்களை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி., படிக்கும் நான்கு வயது சிறுமியை, அப்பள்ளியின் ஆசிரியைகள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். கடந்த மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தைக் கண்டித்தும், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, போலீசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், ராமலிங்கம் என்பவர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். சிறுமிக்கு நடந்த கொடுமையைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த, பொது மக்களுக்கு அனுமதியளிக்கக் கோரி, அம்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த இடைக்கால உத்தரவு: ஒரு பள்ளியின் ஆசிரியை மற்றும் முதல்வரும், இத்தகைய கடுமையான, கொடுமையான குற்றம் புரிந்ததாக, எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளியில் யு.கே.ஜி., படிக்கும் சிறுமியை, வகுப்பு ஆசிரியை போஷியா, பள்ளி முதல்வர் லசி போஸ்கோ ஆகியோர், பாலியல் துன்புறுத்தியதாக சிறுமியின் தாயார், இந்தப் புகாரில் கூறியுள்ளார். புகாரை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், “புகார் வந்த உடன் அதுகுறித்து புலன் விசாரணை செய்யப்பட்டது. ஆறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் இன்னும் கைது செய்யப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இது, ஒரு கவலையளிக்கும் விஷயம். நான்கு வயது சிறுமியிடம், கொடூரமான குற்றம் புரிந்த, பெயர் குறிப்பிடப்பட்ட நபரை, போலீசாரால் கைது செய்ய இயலாத நிலை என்பது வியப்பாக உள்ளது. விசாரணைக்குப் பின், கைது செய்யப்பட்ட நபரின் பெயரைக் கூட இன்ஸ்பெக்டர் தெரிவிக்கவில்லை. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களை, 24 மணி நேரத்துக்குள் கைது செய்து, கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். டி.ஜி.பி., உள்ளிட்ட போலீசாருக்குத் தான், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இப்பிரச்னையை கோர்ட் கவனத்துக்கு எடுத்திருப்பதால், ஆர்ப்பாட்டம் நடத்த மனுதாரருக்கு அனுமதியளிக்க விரும்பவில்லை. விசாரணை 27 ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர், விழுப்புரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், அன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, “முதல் பெஞ்ச்’ இடைக்கால உத்-தரவிட்டுள்ளது.

  12. இந்தியாவில் மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அரசாங்கத்தின் அனுமதியுடனே விபசார விடுதிகளுக்கு தனிப் பகுதிகள் செயல்படுகின்றன…

    சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தா நகரின் சோனாகச்சி பகுதிக்கு சென்றிருந்தேன்… (அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடுவோம் என்ற ஆர்வம் தான்… மற்றபடி நீங்கள் நினைப்பது போல் இல்லை…) உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது… இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வித விதமான பெண்கள்… நேபாள், பங்களாதேஷ்… உள்ளிட்ட இதர நாட்டுப் பெண்களும் இருக்கிறார்கள்… இவர்களுக்கு உள்ள பிரதான நோக்கம் தங்கள் வாடிக்கையாளரை திருப்தி செய்வது… அதற்கு பணம் பெறுவது…

    ஒரு தோல் இயந்திரம் போல் தான் இவர்கள் செயல்படுகிறார்கள்… மற்றபடி இதிகாச புராண இலக்கியங்கள் கூறுவது போல எந்தவிதமான கலை உணர்சிகளுக்கும் இங்கே இடமே இல்லை… கற்பு, மானம், ஒழுக்கம், நல்வாழ்வு இவை எல்லாம் ஒரு கனவாகவே இவர்களுக்கு இருக்கிறது…

    அந்த நாற்றமடிக்கும் தெருக்களில்… உள்ள விடுதிகளில்… வீடுகளில்… அடுக்கு மாடி குடியிருப்புகளில்… குடிசைகளில் கூட உங்கள் வசதிக்கு ஏற்றவாறு பெண்கள் கிடைக்கிறார்கள்… ஐம்பது, நூறு, இருநூறு, ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம்… என இவர்களுக்கான கட்டணம் நீள்கிறது…

    ஆங்காங்கே மதுக் கடைகள்… இதர போதை பொருள் விற்கும் கடைகள்… என அந்த சூழலே ஒரு மாய லோகத்தில் இருப்பது போல் இருக்கிறது… அங்கே பெண்கள் எவரும் அடிமைகளாக இல்லை… அவர்களுக்கான முழு சுதந்திரம் அங்கே வழங்கப் பட்டு இருக்கிறது… சொல்லப் போனால் ஆண்கள் தான் அவர்களுடன் இருக்கும் அந்தக் கொஞ்ச நேரம் அடிமைகளாக இருந்து விட்டு வெளியில் வருகிறார்கள்…
    http://duraisaravanan.blogspot.com/2010/09/blog-post_25.html

    • // ஆங்காங்கே மதுக் கடைகள்… இதர போதை பொருள் விற்கும் கடைகள்… என அந்த சூழலே ஒரு மாய லோகத்தில் இருப்பது போல் இருக்கிறது… அங்கே பெண்கள் எவரும் அடிமைகளாக இல்லை… அவர்களுக்கான முழு சுதந்திரம் அங்கே வழங்கப் பட்டு இருக்கிறது… சொல்லப் போனால் ஆண்கள் தான் அவர்களுடன் இருக்கும் அந்தக் கொஞ்ச நேரம் அடிமைகளாக இருந்து விட்டு வெளியில் வருகிறார்கள்… //

      சிறையை விட்டு வெளிவரமுடியாதவர்கள் எந்த வகையில் சுதந்திரமானவர்கள் ?

  13. கடல் எப்ப வத்த கருவாடு எப்ப தின்ன?..

    அங்கீகாரம் செய்தால் இடைத்தரகர் தொல்லையாவது நீங்குமே.. ஒரு நடிகைக்குண்டான அந்தஸ்து வரும்போது மட்டுமே இத்தொழில் குறையும்..

    நடிகையை வைத்து செய்வதும் இதே தொழில்தானே?..

    ஒரு பெண்ணின் உடம்பை ரசிக்கிறோம் என்பதே பாலியல் தொழில்தான் என்ற உண்மை புரிந்தால் மட்டுமே ஏன் வயிற்றுப்பிழைப்புக்காக செய்வோருக்கு மட்டும் அங்கீகாரம் இல்லை என யோசிக்க முடியும்..

    எழுத்தில் பாலியலை கொட்டி குமித்தாலும் மேடை போட்டு மேல்தட்டினரோடு, அரசியல் பெண்மணிகள் கொண்டு பாராட்டு விழா நடத்துவதை அங்கீகரிக்கும் நாம் ஏன் இதையும் செய்துவிட்டு போகக்கூடாது?.. இல்லையென்றால் ஹிப்போகிரசி மட்டுமே..

    நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வோம்… கடல் வற்றும் ஒருநாள் என..

    மற்றபடி நல்ல தகவல்கள் பல..

    விளையாட்டில் கூட வன்புணர்ச்சியை கொண்டு வரும் ஆணாதிக்க சமூகத்துக்கு கடுமையான கண்டனங்கள்..

  14. //காதலின் தார்மீக ரீதியான நிலையைப் பொறுத்தமட்டில், காதல் என்பது மனக்கிள்ர்ச்சி. அதாவது உணர்ச்சி வேகத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்றுதான் நான் கூறுவேன். அது ஒரு மிருக இயல்புணர்ச்சி அல்ல; ஆனால், இனியதோர் மனிதாபிமான மனக்கிளர்ச்சி. காதல் காதலாகவே இருக்கும் பட்சத்தில், மனித குணாதிசயங்களை, அது எப்போதுமே மேலான நிலக்கு உயர்த்துகிறது; கீழே சரிவதற்கு ஒரு போதுமே அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களைப் பைத்தியம் என்று ஒருபோதுமே கூறமுடியாது. நாம் திரைப்படங்களில் பார்க்கிறோமே – அங்கே அவர்கள் எப்போதுமே, மிருக இயல்புணர்ச்சியின் கரங்களில் தான் விளையாடுகிறார்கள்.

    மெய்யான காதலை ஒருபோதுமே உருவாக்கிட முடியாது; அது தானாகவே வளருகிறது. எப்போது என்று யாருமே சொல்ல முடியாது.

    இளம் ஆண்களும் பெண்களும், ஒருவரையொருவர் காதலிக்கலாம். காதலின் துணையோடு அவர்கள் தங்கள் காமவெறிகளுக்கு உயரே உன்னதமான ஒரு நிலையை எட்டலாம்; தங்கள் நேர்மையையும் தூய்மையையும், மாசுபடாமல் வைத்திருக்கலாம் என்று நான் கூறுவேன்….

    கடமையுணர்வின் அடிப்படையில் ஒரு மனிதன் முடிவெடுக்கும் போது காதலையும், வெறுப்பையும், வேறு எல்லா மன உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடிந்தால் அதுவே மிக உயரிய, இலட்சியப்பூர்வமான ஒரு மனநிலையாக அமையும்.//

    – தோழர் பகத்சிங் எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள். (இந்த பதிவுக்கு பொருத்தமானதாக கருதுகிறேன்)

  15. பாலியல் தொழில் என்ற சொல் சரியானதா?

    கட்டுரை முதலாளித்துவத்தை தோலுரிக்கிறது. சோசலிச நாடுகளில் விபச்சாரம் இருந்ததா? பாலியல் கொடுமைகள் இருந்ததா? மக்கள் நலன் நாடும் அரசு அதை எப்படி கையாண்டது? என்பதையும் விளக்கியிருந்தால் இந்த கட்டுரை முழுமை பெற்றிருக்கும்.

  16. விபச்சாரம் தடை செய்யப்பட வேண்டும். மனு தர்மத்தில் கூட விபச்சாரம் தடை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது

    • “மனு தர்மத்தில் கூட விபச்சாரம் தடை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது”

      மனு தர்ம சாஸ்த்திரத்தின் உற்பத்தி வரலாறு

      பிரம்மாவானவர் மனுஸ்மிருதி சாஸ்திரத்தை உண்டு பண்ணி விதிப்படி பிருகு ரிஷிக்கு, முன்னம் ஓதுவித்தார் ; பிருகு ரிஷியும்

      மரீசி முதலான ரிஷிகளுக்கு ஓதுவித்தார். (மனு அத் 1 சு58)

      மனுஸ்மிருதியை (வருணாசிரம தர்மமாகிய வைதீக தர்மத்தை)விளக்கி பிருகு ரிஷி மற்றுமுள்ள ரிஷிகளுக்குச் சொன்னார்.

      பிரம்மாவின் யோக்கியதை

      1. பரமசிவன்- பார்வதி கல்யாணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை பிரதட் சணம் வருகையில் இடது கையினால் முந்தானையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தாள். அப்படி வருகையில் அவளுடைய இடையை ஒட்டிய தொடை பிரம்மா கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்தவுடன் பிரம்மா மோகித்ததால் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று ; அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் அகஸ்தியன் பிறந்தான்.

      2. அதுபோலவே பிரம்மா மறுபடியும் தொடையைப் பார்க்க மேலும், இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை விருட்சபச்சை முதலிய அநேக செடிகளில்விட வால்கில்லியாதி முதலிய அநேக ரிஷிகள்

      பிறந்தார்கள்.

      3. அவ்விடம் விட்டுப்போகும்போது ஒரு சுடலைச் சாம்பலில் இந்திரியத்தை விட அதில் பூரிச்சிரவனென்கிற இராட்சசன் பிறந்தான்.

      4. அவ்விடத்திலுள்ள எலும்புகளைப் பொறுக்கி ஒன்றாய்ச் சேர்த்து அதிலே இந்திரியத்தை விட சல்லியன் என்ற பராக்கிரமசாலி பிறந்தான்.

      5. அவ்விடம் விட்டுபோகையில், சிறிது இந்திரியம் ஸ்கலித மாகிக் கீழே விழ அதை ஒரு பட்சி புசித்து அதன் வயிற்றில் சகுனி

      பிறந்தான்.

      6. பிறகு தடாகத்தில் கொஞ்சம் இந்திரியம் விட அதை மண்டூகம் (தவளை) புசித்து அதன் வயிற்றில் மண்டோதரியென்கிற பெண்

      பிறந்தாள்.

      7. மிகுந்த இந்திரியத்தைக் குளத்தில் தாமரைப் பூவில் விட அதில்பத்மை என்கின்ற புத்திரி பிறந்தாள்

      8. அந்தப் புத்திரியான பத்மையின் அழகைக் கண்டு மோகித்து சேர பிரம்மன் கேட்க, அவள் சம்மதிக்க மறுக்க அவளுக்குச் சமாதான

      மாக வேத வாக்கியத்தைச் சொல்லுகிறார் பிரம்மா:

      “மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீத

      சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,

      ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்

      மாதரம், ஸீரஞ்சதி , ரோஹதி.”

      இதன் பொருள்- புத்திரார்த்த நிமித்தம் , தாய்,தமக்கை, மகள்,

      பிள்ளை யாரோடாயினும் கூடலாம் என்பதாகும்.

      9. சேர்ந்து கர்ப்பவதியாகி திரும்ப இந்திரியத்தை சித்தன

      லிங்கத்தினால் உறிஞ்சினான்.

      10. பின் காம விகாரத்தினால் இந்திரன் உத்திரவுப்படி திலோத்தமை 4 திசையிலும் ஆடியதால் பிரம்மாவுக்கு 4 தலையும் உயரப் பறந்து ஆடி 5 ஆவது தலையும் ஆடி அவன் மீது மோகங்கொண்டு திலோத்தமையைத் தொடர்ந்து போகையில் ஈஸ்வரன் ஒரு தலையை அறுத்து எறிந்தான்.

      11. பின் பிரம்மன் காடுகளில் அலைந்து திரிகையில் ஒரு புதரிலிருந்து பெண் கரடியைக் கண்டு அதைக் கூடி அதன் வயிற்றில் ஜம்புவந்தன் என்ற கரடி முகத்தோடு ஓர் புத்திரன் பிறந்தான்.

      12. பின் ஊர்வசி என்ற வேசியிடத்தில் சில உடன்படிக்கை செய்து, முன் பத்மையிடத்தில் ஆக்குஷணஞ் செய்த அண்டத்திலுள்ள இந்திரியத்தை ஊர்வசி கர்ப்பத்தில் விட. அதில் வசிஷ்டன் பிறந்தான், அப்புத்திரனுக்குத் தன் பதவியைக் கொடுத்து பிரம்மா தபோவன

      மடைந்தார்.

      • இது மனு ஸ்மிருதியை பற்றி ராமசாமியும் ஏனைய திராவிட கட்சியினரும் கட்டி விட்ட கட்டுக் கதை. பொய்யான தவல்களை சொல்ல வேண்டாம்

      • தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும் தொன்று தொட்டு வந்த ஒழுக்க மரபும் கவலையற்ற மன நிறைவுமாகும். (2 : 6)

        மனுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில் அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி. (2 : 7)

        வேத சத்யத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையென்று தனது ஞானத்தால் உணர்ந்து அவ்வறத்தாறு ஒழுகுவோனே உண்மையான கல்விமான். (2 : 8)

        சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படா நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும் மறுமையில் சுத்தமான சுகத்தையும் பெறுவான். (2 : 9)

        வேதமே சுருதியென்றும் அறத்துணிபுகளே ஸ்மிருதியென்றும் உணர்க…. (2 : 10)

        மனு தர்ம சாஸ்திரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற செய்தியும் பிரம்மன் மற்றும் பிருகு முனிவர் ஆகியோரால் இது கூறப்பட்டது என்ற செய்தியும் மனுதர்ம சாஸ்திரம் புனிதமானது, உயர்வானது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை நிலை நாட்ட உதவுகிறது. இனி மனு தர்ம சாஸ்திரத்தின் சுலோகங்கள் சிலவற்றைக் காணலாம்.

        பிராமணர் உயர்வு

        ”மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31).

        இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் இறைவனுடைய முகத்தில் பிராமணர் தோன்றியுள்ளனர். இதன் காரணமாகப் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் சுலோகங்களில் வலியுறுத்துகிறார்.

        ”புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).

        மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)

        சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).

        மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).

        பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).

        எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).

        இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (2:31, 32) என்றும் பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றும் (2 : 176-178) வலியுறுத்துகிறார். தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு.

        ‘பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

        எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

        பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

        அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

        அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).

        சத்திரியர் – வைசியர் – சூத்திரர் நிலை
        இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு, சத்திரியர், வைசியர், சூத்திரர்களின் பணி மற்றும் சமூகநிலை குறித்துப் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.

        ”பிரஜா பரிபாலனம் செய்வது, ஈகை, வேள்விகள் புரிவது வேத பாராயணம் செய்விப்பது, விடிய சுகங்களில் மனதை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும். (1 : 89)

        வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார். (1 : 90)

        ஏவலான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார் (1 : 91).

        நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார்.

        ”நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (4 : 61).

        மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)

        நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (8 : 22).
        அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது.

        வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (8 : 417)

        …… இழி பிறப்பாளர் பெருகி வரும் நாடு விரைவில் குடிமக்களுடன் அழியும் (10 : 61).

        பிராமணனின்றி சத்திரியனுடைய சதகருமங்களும் சத்திரியனின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாதாகையால், ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக் கடவர் (9 : 322).

        வருணமற்றவர்
        நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார்.

        தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 – 49)

        இவர்கள் வாழும் இடமாக ”இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்” (10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.

        சண்டாளர்களின் இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார்.

        ”ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது” (10 : 52)

        ”இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்” (10 : 52).

        ”நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்” (10 : 53).

        ”இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது” (10 : 54).

        ”அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்” (10 : 55).

        ”மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்” (10 : 56).

        இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார்.

        ”அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு” (10 : 62).

        பெண்கள்
        அடுத்து பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.

        ”எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது” (10 : 147)

        ”இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது” (10 : 148).

        ”இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக” (10 : 154).

        ”அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு” (9 : 14).

        ”நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை” (9 : 15).

        இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).

        ‘படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்’ (9 : 17).

        மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).

      • குஞ்சுமணி,

        பிரம்மாவின் யோக்கியதை 1 to 12, மனுஸ்மிருதியில் எந்த அத்தியாயத்தில் வருது??

    • மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது.

      உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம்.

      அப்போ சுயம்புவா ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம். அதுலதான் பிரம்மன் இருந்தாராம். நாரா அப்படின்ற தண்ணியல அயணம் (வசித்தல்) செஞ்சதால அவருக்கு நாராயணா அப்படின்னும் பேராம்.
      அப்பாலிக்கா அந்த முட்டை உடைஞ்சு அவர் வெளிய வர மேல் பகுதி சொர்க்கமாவும், கீழ்ப்பகுதி பூமியாவும் ஆச்சாம். அப்புறம் அவர் உலகத்தை படைக்க ஆரம்பிச்சாராம்.
      நெருப்பு, காத்து, சூரியன் இதுல இருந்து அவர் ரிக், யஜீர், சாம வேதங்களை எடுத்து அதும்படி சிருஷ்டிய ஆரம்பிச்சாராம்.
      அப்புறம் பஞ்சபூதங்கள், காலம், நல்லது கெட்டதெல்லாம் படைச்சுட்டு மனுசப்பயலை படைக்கணும்னு முடிவு பண்ணாராம்.

      பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களை முறையே வாய், கை, தொடை, கால் இதிலிருந்து படைச்சாராம். (கதையா இருக்கே ?)

      அப்புறம் மரிகி, அத்ரி, ஆங்கிரஸ், புலஹா, கிருது, பிரகதேஸ், வஷிஸ்டர், நாரதர் எல்லாரையும் படைச்சாராம்.

      அப்புறம் யக்ஷர்கள், ராக்சசர்கள், அசுரர்கள் (யார் இவங்க?), கந்தர்வர்கள், அப்சரசுகள், நாகர்கள் எல்லாரையும் படைச்சாராம்.
      கூடவே புல், பூண்டு பூச்சி, கால்நடை, வனவிலங்கு, பறவை. பாம்பு, மீனு எல்லாம் உட்கார்ந்து படைச்சிருக்காரு.

      கிருத, திரேத, துவாபர கலியுகத்தை பத்தி அப்புறம் குறிப்பு இருக்கு.

      பிராமணனோட தொழில் வேதத்தை படித்தல் சொல்லி கொடுத்தல்.
      ஷத்ரியனோட தொழில் ஜனங்களை காத்தல், பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
      வைசியன் தொழில் கால்நடை பராமரிப்பு, வாணிகம், உழவு, பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
      இவங்க மூணு பேருமே பூணூல் தரிக்கலாம். முறையே பருத்தி, சணல், மற்றவை.

      சூத்திரனுக்கு தொழில் ஒண்ணே ஒண்ணுதான். இவங்க மூணு பேருக்கும் சேவை செய்தல். அவன் வேதம் படிக்க கூடாது.

      ஏன்னா தொப்புளுக்கு மேல இருக்கற பகுதி புனிதம். சுயம்புவான கடவுளுக்கு அதுல இருந்து பிறந்தவங்க புனிதம். அதுவும் புனிதமான வாயில இருந்து பிறந்தவங்க இன்னும் புனிதம். (வாட் ஈஸ் திஸ். மிஸ்டர் மனு.)

      பிராமணர்களே யாவரிலும் அதிபுத்திசாலிகள் என்கிறார் மனு. அது இல்லாமல் பெயர் சூட்டும் விதிகளை வகுக்கிறார்.
      பிராமணணின் முதல் பெயர் மங்களகரமானதாகவும், சத்ரியனின் முதல் பெயர் வீரமானதாக அதிகாரத்தைகுறிப்பதாகவும், வைசியனின் முதல்பெயர் செல்வத்தைக் குறிப்பதாகவும், சூத்திரனின் பெயர் விலக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.
      அதே போல் இரண்டாவது பெயர் (குடும்பபெயர்) முறையே மகிழ்ச்சி, பாதுகாப்பு, செல்வத்தை குறிக்க சூத்திரனுக்கு மட்டும் அவனது தொழிலை குறிக்க வேண்டுமாம்.

      பிராமணன் நான்கு சாதியிலும் திருமணம் செய்யலாம். சத்ரியன் சத்ரிய, வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். வைசியன் வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். சூத்திரன் சூத்திர பெண்ணை மட்டும் மணக்க வேண்டும்.
      அனைவருக்கும் முதல் மனைவி அதே வர்ணத்தில் இருக்க வேண்டும்.

      பிராமணண் கடும் விரதமேற்று குறைந்தது 9 ஆண்டுகளாவது வேதம் பயில வேண்டும். குறைந்தது ஒரு வேதத்தையாவது.

      பிராமணன் எதை சாப்பிட வேண்டம் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. மந்திர நீர் தெளிக்கப்படாத இறைச்சியை சாப்பிடக்கூடாது. பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.

      அரசன் எப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.

      பிராமணனுக்கு வெறும் ஐந்து நாள் உபவாசமும் காயத்ரி மந்திர ஜபமுமாய் போகும் தண்டனை சூத்திரனுக்கு மரணத்தை விதிக்கிறது.

      சூத்திரன் காதிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் தண்டனைகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாய் காணோம்.

      ஒரு சில தண்டனைகள் சூத்திரனுக்க 8 மடங்கு பிராமணனுக்கு 64 மடங்கு என்று இருக்கிறது. அடடே என்று பார்த்தால் அது அபராதத் தொகையாக இருக்கிறது.

      சூத்திரனுக்கு எந்த கட்டத்திலும் வேதத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறது.

      பெண்களை இன்னும் சிறப்பாக வைத்திருக்கிறது மனுதர்மம்.
      அவர்கள் வேதம் கற்கக்கூடாது. இயற்கையாகவே பெண் அலையாயும் மனம் உடையவள். அவர்கள் காவலில் வைக்கப்படவேண்டியவர்கள்.

      மொத்தம் ஒரு பன்னிரண்டு சேப்டர் இருக்கு. நாலு சேப்டர் படிச்சேன். இதுக்கு மேலயும் இந்த குப்பையை படிக்க முடியாதுன்னு விட்டாச்சு.

      மனுவோட இந்த தர்மம் தோன்றிய புண்ணிய பூமி பிரம்மவார்த்தா. மனுவே சொல்வது போல அது சரஸ்வதி நதிக்கும் திருஷ்டாவதி நதிக்கும் இடைப்பட்ட பகுதி.

      நிலைநாட்டப்பட்ட பகுதி ஆர்யவார்த்தா இமயத்தில இருந்து விந்தியம் வரைக்கும்.

      அதுக்கு கீழே இருப்பது மிலேச்சர்களின் பூமியாம்.
      நல்லது. இந்த மிலேச்சர்களின் பூமிக்கு நிச்சயம் மனு ஸ்மிருதி தேவையில்லை.

      • // மொத்தம் ஒரு பன்னிரண்டு சேப்டர் இருக்கு. நாலு சேப்டர் படிச்சேன். இதுக்கு மேலயும் இந்த குப்பையை படிக்க முடியாதுன்னு விட்டாச்சு.//

        பிடிக்குதோ இல்லையோ, குப்பையோ கூளமோ, முழுசாப் படிக்காங்காட்டி அப்பால குஞ்சுமணிகள் “சூத்திரன் வேசிமகன்”, “பிரம்மா அதில விட்டார் இதில விட்டார்” இதெல்லாம் மனுஸ்மிருதியில் இருக்குன்னு கப்ஸா விடுவதை நம்ப நேரிடும்.

      • // பிராமணன் எதை சாப்பிட வேண்டம் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. மந்திர நீர் தெளிக்கப்படாத இறைச்சியை சாப்பிடக்கூடாது. பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.//

        வெங்காயம் எல்லாம் ரொம்ப லேட்டா இறக்குமதியான அயிட்டம்ல…?

        மனுஸ்மிருதி – பெரியார் version ஏதாச்சும் படிச்சீங்களோ ?

  17. படித்ததில் பிடித்தது

    காலை நேரம். சென்னை மெரீனா கடற்கரையில் பலர் நடந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் ஒரு பெரிய பயங்கரத் தோற்றமுடைய நாயுடன் நடந்து கொண்டிருந்தார். அந்த நாய் திடீரென்று வெறிபிடித்து அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு சிறுமி மீது பாய்ந்தது. அந்தச் சிறுமி அலற அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் அந்த நாயுடன் நீண்ட நேரம் போராடி அந்தச் சிறுமியைக் காப்பாற்றினான். அங்கு நடந்து கொண்டிருந்த குந்து பத்திரிகையின் ஆசிரியர் சிங்களரத்தினா சொறிநாய்ராம் அதைப்பார்த்து வியந்து அந்த இளைஞனிடம் சென்று அம்பி உன்னைப் பாராட்டுகிறேன்டா நீ ஷேமமாய் இருப்பாய்டா. நாளை எனது குந்துப் பத்திரிகையில் உனது படமும் பெயரும் பெரிதாக வரவேண்டும். “சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய சென்னையச் சேர்ந்த இளைஞன்” என்ற தலைப்பில் செய்திவரும் என்றார். அதற்க்கு அந்தை இளைஞன் நான சென்னையைச் சேர்ந்தவன் அல்ல என்றான். அதற்கு சிங்களரத்தினா சொறிநாய்ராம் அப்படியாயின் “சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய தமிழ்நாட்டு இளைஞன்” என்று செய்திவரும் என்றார். அதற்கு அந்த இளைஞன் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்றான். ஓ அப்படியா! “சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய இந்திய இளைஞன்” என்று செய்தி வரும் எனது குந்துப் பத்திரிகையில் என்றார் சிங்களரத்தினா சொறிநாய்ராம். இப்போது அந்த இளைஞன் நான் இந்தியன் அல்ல என்றான். அந்த இளைஞனை இப்போது சிங்களரத்தினா ஏற இறங்கப் பார்த்து அப்போ நீ எந்த நாடடா அம்பி என்றார். அதற்கு அந்த இளைஞன் நான் ஈழத்தைச் சார்ந்தவன் என்றான். இப்போது குந்து பத்திரிகையின் ஆசிரியர் சிங்களரத்தினா சொறிநாய்ராம் இரண்டு மீட்டர் பின்னால் நகர்ந்து நின்று கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அந்த இளைஞனை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் பின்னர் அவ்விடத்தில் இருந்து நழுவி விட்டார்.

    அடுத்த நாள் குந்துப் பத்திரிகையில் வந்த செய்தித் தலையங்கம்: “மெரீனா கடற்கரையில் அப்பாவி நாய்மீது வெறி கொண்டு பாய்ந்து தாக்கிய விடுதலைப்புலி”.
    இந்தச் செய்தியை திரித்து வெளியிட்ட்மைக்காக கொழும்பில் இருந்து குந்துப் பத்திரிகை ஆசிரியருக்கு வழமையாக அனுப்பும் பணத்திலும் பார்க்க மேலும் ஒருஇலட்சம் சேர்த்து அனுப்பப்பட்டது.

  18. கேள்வி கேள் கேலி செய்! சரிங்கப்பா ஒலக மகா யோக்கியர்களே! “மலரினும் மெல்லிது காமம்” என்று சொல்கிறார்களே இதற்கு பதில் சொல்லுங்கள். ஏன், காதலோடு கடிக்க மாட்டார்களா? காதலோடு கடிப்பதற்கும் காமவெறியோடு முத்தமிடுவதற்கும் என்ன வேறுபாடு? இவனுங்க செய்ற லீலை எல்லாம் வெளிய தெரியாது? வெளிய வந்துட்டானுங்க வெட்கமில்லாம? தோழா சொம்பை எடுத்து உள்ளே வை?

  19. கள்ள சாரயத்தை குடிச்சு குடிமக்கள் சாகக்கூடாதுன்னுதான் அரசா….ங்கமே
    சாரயக்கடையை நட்த்துற மாதிரி.களவானி மக்கா கள்ளத்தனம் பண்ணி எயிட்ஸ்ச
    வாந்து சாகமா அரசாங்…….கமே விபச்சார பிசினஸ் நட்த்துனா சாரயக்கடையில
    கொட்டுற மாதிரி சும்மா… கோட்டோ… கோட்டோன்னு கொட்டாது. உத்தம சீகாமணிகள்
    கோபப்படாதிங்கப்பா?ஃஃஃஃ

  20. பதிலெல்லாம் சித்தாந்த ரீதியா நல்லாத்தான் இருக்கு. புதுக்கோணமாவும் இருக்கு. ஆனால் இப்போதைக்கான உடனடித் தீர்வாக எதையும் முன்வைக்காததுதான் குறை!

    • தீர்வா? காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாம் சரியாயிடும்.

      எங்கள மாதிரி பார்ப்பன, சாதி இந்து, மேட்டுக்குடி, ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நுகர்வுக் கலாச்சார அடிமைகளான பாஸிச கோமாளிகள் பணத்திமிர் பிடித்து ப்ராத்தல், ஸ்பா, க்ளப்பு, பப்பு, KTV இங்கெல்லாம் போயி ஆசையை தீர்த்துக்கொள்வோம். நீங்க அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க. வினவு சார் கோவிச்சுக்குவாரு.

  21. thenkizhakku pradesangalukku vaangappa…endha alavukku paaliyal thozhil kolochi irukkunnu puriyum. ithanala ethanai per nimmadhiya irukkanunga enbathum puriyum. arasangame nadathaavittalum, adhai nadatha ella vidhamana udhavigalaiyum seykrathu. communist vietnam aagattum, islamiya malaysiavagattum, singara singapore aagattum…summa pichu utharraanga…bhooloka sorgamana thailand patri naan sollavendiyathilla. naama paatha athanai neelapadangalayum nadichu paarthu vidalam.

    vibachara thozhil ella oorleyum supera nadanthukittuthan irukku. aana namma oorla mattumthan adhai yetrukkollum pakkuvam varala.

  22. விபச்சாரம் உண்மையில் மனித தன்மைக்கு எதிரானதுதான், முழுக்க முதாலாளித்துவ கண்ணோட்டமுடையதுதான் விபச்சாரம் என்பதும், பெண்களையும் அவர்களின் குறியையும் வியாபார பொருளாக பார்ப்பதுதானே விபச்சாரம் என்பது? இந்த கண்ணோட்டமே மனிதகுல விரோதமானது அல்லவா,
    சரி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கினால் என்ற கேள்வியில் பெண்கள் மட்டும் வரவில்லை சிலர் ஓரினசேர்க்கையாளனாக இருப்பான் அவனுக்கு பசங்க தேவைப்படலாம், இன்னும் மாற்று பாலினம் வேறு இருக்கிறது, நினைத்துப் பாருங்கள் விபச்சாரம் சட்டப்பூர்வமானால் அந்த மெனுவில் எத்தனை வகைகள் வரும் என்று, சட்டப்பூர்வ விபச்சாரம் என்பது பெண்களை மனிதானக பார்க்காமல் பாலியல் பொருளாக பார்க்கும் சீரழிவு கண்ணோட்டத்தின் அடிப்படை.

    • விபச்சாரம் என்பது சிலப்பதிகார காலத்தில் இருந்தே முடிவில்லாத விவாதத்திற்கான தலைப்பாகவே இருந்து வருகிறது.இது சரி தவறு என்று எளிதாக பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி. சட்டப்பூர்வமாக்கலாம் என்று சொல்பவர்கள் தனது தாயையோ தங்கையையோ அவ்விடத்தில் வைத்துப்பார்த்தால் அதன் வலி புரியும்.பாலியல் தேவைக்கான வடிகால் ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. பெண்கள் தங்கள் பாலியல் தேவைக்காக வேறு ஆண்களோடு உறவு கொண்டால் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆகவே கற்பு நிலை என்று பேச வந்தால் அதை இரு சாரர்க்கும் பொதுவில் வைப்போம் என்ற வரிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கற்பு ஒழுக்கம் பற்றி கடுமையான அளவுகோள்கள் கொண்ட நம் சமூகத்தில் தங்கள் பாலியல் உணர்வுகளுக்கு முறையான வடிகால் கிடைக்காத ஆண்களும் பெண்களும் தங்கள் உணர்வுகளை வெல்வதற்கு எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதும் நிதர்சனமே.ஆனால் அதற்கு தீர்வு விபச்சாரத்தையோ சோரம் போவதையோ சட்டபூர்வமாக்குவதல்ல. மாறாக கற்பு ஒழுக்கம் பற்றிய அளவுகோள்களை தளர்த்திக்கொள்ளமுடியுமா? அதுவும் முடியாது.அப்போ இது தீர்வில்லாத ஒரு பிரச்சினைதான்.

  23. விபரம் தெரிந்த ஆண்கள் சிறுமிகளையும் பெண்கள் சிறுவர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கற்றுக்கொடுத்து பின்பு பயன்படுத்திக்கொள்ளும் டொமெஸ்டிக் விபச்சாரத்தைப்பற்றியும் எழுதியிருக்கலாம். பெரியவர்கள் சிறியவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுதானே எல்லாம். குட்டைப்பாவாடையையோ இறுக்கமான உடையையோ அணியும் சிறார்களை சந்தேகிக்காமல் அவர்களது வறுமைதான் இந்த நிலைக்குக்காரணம் என்று உணர்ந்து அவர்களுக்குப் பொருத்தமான உடைகளை அளிப்பவர் இந்த வருணப்பிரிவு எதிலும் சேராத மகான்.

  24. பெண்கள் பொதுவாக்கப்படுவதற்கு எதிராக , உயர்ந்த ஒழுக்கநெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்புகின்ற கூக்குரலுக்கு பதில் இதோ, பெண்களைப் பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்துக்கு உரியதாகும்,. இன்றைக்கு அது விபசாரம் என்னும் முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், விபசாரம் தனியார் சொத்துடமையோடு அடித்தளமாக கொண்டது. எனவே , தனியார் சொத்துடமையோடு சேர்ந்து விபசாரமும் உதிர்ந்து போகும். ஆக, கம்யூனிச சமுதாயம் பெண்களை பொதுவாக்கும் நடைமுறைக்கு மாறாக உண்மையில் அம்முறைக்கு முடிவு கட்டுகிறது. – எங்கல்ஸ் – 1948

  25. if u take grown up country’s they allow prostitution as legal inorder to avoid crime against woman & children. Eg: Singapore – Asia.
    But countries like India never care about Women or children…i remember a famous dialogue in a Historical Movie. ” When Alexander the great tell his mother that soon he is going to india for a batlle, immediately his mother replied Alex please go anywhere in the world but not India..they are Devils…Demons”
    yes it is True.

Leave a Reply to nethaji பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க