privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்இசுலாமிய "உணர்வு" பத்திரிகைக்கு ஒரு மறுப்பு!

இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு!

-

உணர்வு என்ற வாரப்பத்திரிக்கையின் (செப். 2-8, 20011) கட்டுரையாளர் திரு. நிஜாம் அவர்களுக்கு, ஒருநாள் திடிரென்று அல்லா உள்ளுணர்வை ஏற்படுத்தினான். உள்ளுணர்வு என்றால் கடவுள் வானில் தோன்றி அறிவிப்பதை புரிந்துகொள்ளும் உணர்வு. இது எல்லோருக்கும் இருக்காது. சில அதிசக்தி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அப்படி நிஜாம் அவர்களுக்கு வந்த உள்ளுணர்வுதான் என்ன?

“பல பத்திரிக்கைகள் சீண்டுவதற்குக்கூட ஆள் இல்லாமல் கடைகளில் விற்பனையாகாமல் பல நாட்கள்கள் கிடக்கும்”என்ற உள்ளுணர்வுதான் அவருக்கு வந்த அற்புதம். உடல், உள்ளம் நடுங்க, வியர்த்துக்கொட்ட கொஞ்சம் நேரம் துன்ப ப்பட்ட அவர், இயல்பு நிலைக்கு திரும்பியதும் பேனாவை எடுத்தார்; எழுதினார்… ‘புத்தியிழந்த புதிய கலாச்சாரம்’ என்று பறைசாற்றினார்.

கட்டுரை கவி நயமும் இலக்கிய சுவையுடனும் இருக்க வேண்டுமல்லவா! அங்கங்கே மானே,தேனே, பொன்மானே என்று போட்டுக்கொண்டால்தானே சுவையாக இருக்கும். அதனால் ‘பழைய பேப்பர்கடைக்காரன்கூட வாங்க மறுக்கும்பத்திரிக்கை’ என்று இலக்கியச் சுவையையும் சேர்த்துக்கொண்டார். இந்து மதத்தையும், பார்பனீயத்தையும் எதிர்த்து எழுதும்போதெல்லாம் புதிய கலாச்சாரம் பிடித்தமான ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது புத்தியை இழந்துவிட்டதாக பொங்கி எழ என்ன காரணம்?

பத்திரிக்கையின் விற்பனை ரேட்டிங்கை உயர்த்துவதற்கு, இதுதான் பைபிள், இந்துமதத்தின் மூடநம்பிக்கைகள் என்று எதையாவது கிறுக்குவதைவிட்டுவிட்டு, புதிய கலாச்சாரம், இசுலாத்தை கொஞ்சம் உரசிப் பார்க்கிறது என்பதுதான் இவருக்கு வந்த உள்ளுணர்வின் ஆவேசம். இந்த உள்ளுணர்வின் உச்சகட்டம் என்ன தெரியுமா? புதியகலாச்சாரத்தின் கட்டுரையாளர் தோழர் வேல்விழி, “முயற்சி செய்து தோற்றுவிட்டார்” என்ற அறிவிப்புதான். இசுலாமியக் குழுக்களில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிஜேவின் குழுவினர் பிற இசுலாமியக் குழுக்கள் மற்றும் மத த்தவர்களுடன் விவாதம் செய்துவிட்டு பிறகு தமது பத்திரிக்கையில் ‘நாங்கள் ஜெயித்துவிட்டோம் என்று தமக்குத்தாமே முதுகை சொரிந்துகொண்டு பீற்றிக்கொள்வது வழக்கம். அதுபோல பிஜே மகானின் வாரிசு நிஜாம் அவர்களும் புதிய கலாச்சாரத்தின் கட்டுரையை படித்த அடுத்தகணமே “தோற்றுவிட்டார்” என்ற உள்ளுணர்வு மேலோங்கிவிடுகிறது.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லும் பழமொழி உங்களுக்குத் தெரியும். நிஜாம் அவர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பங்களாதேசமும், பாகிஸ்தானும் இசுலாமிய நாடுகளாக, இசுலாமியர்கள் அதிகம் வாழ்பவர்களாக இருப்பதால, குற்றம் புரிபவர்கள் எண்ணிக்கையில் இசுலாமியர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். அதுவே இந்தியாவாக இருந்தால் இந்துக்கள் கூடுதலாக இருப்பார்கள். அதற்காக இசுலாமியர்கள் அனைவரும் இல்லது இந்துக்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று சொல்ல முடியுமா? புதிய கலாச்சாரத்தின் கட்டுரையாளர் இசுலாமிய நாடுகள் என்பதை வசதியாக மறைத்துவிட்டு இசுலாமியர்கள்தான் குற்றம்  செய்கிறார்கள் என்பதுபோல் எழுதியுள்ளதாக நிஜாம் அவர்களின் நெஞ்சம் குமுறிவிடுகிறது.

புதிய கலாச்சாரத்தில் வந்த “இசுலாமியப் பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்’ என்ற கட்டுரையின் சாராம்சம் என்ன? வங்கதேசத்திலுள்ள இளைஞர்கள், பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடூரங்கள் இக்கட்டுரையின் மையக்கருத்தாகும். பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் ஆசிட்வீச்சுகளை கட்டுரையாளர் சுட்டிக்காட்டினாலும் பிரதானமாக எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் வங்க தேசத்துடையவைகள். இசுலாமியர்கள்தான் அதிகம் இக்குற்றத்தை செய்வதாக இக்கட்டுரையில் எங்குமே குறிப்பிடவே இல்லை. மதம், சமூகம், அரசு, நீதிமன்றம் ஆகியன ஆணாதிக்க சமூக கட்டமைப்பை பாதுகாப்பதால் இக்குற்றங்கள் தொடர்கின்றன, பெருகுகின்றன என்பதே கட்டுரையின் சாராம்சம்.

குறிப்பாக வங்கதேசத்தின் ஆசிட் வீச்சுகளை எடுத்துக்காட்டாக கட்டுரையாளர் கூறினாலும் “மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்களை எரிப்பதால்தான் இருக்கிறது” என்று எல்லா மதங்களும் பெண்கள் மீது வன்கொடுமையை கட்டவிழ்த்து விடுகிறது என்பதைச் சாடுகிறார். இந்து மத்தையோ, கிறித்துவ மத த்தையோ அல்லது பொத்தாம் பொதுவாகவோ கட்டுரையாளர் கூறியிருந்தால் ‘இசுலாம்தான் பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது’ என்று தமது அணிகளிடம் மாய்மாலம் செய்திகொள்ளலாம். ஆனால் கட்டுரையாளர், ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள்; அதனால் ஆண்களே பெண்களைவிட உயர்ந்தவர்கள்; பெண்கள் தவறு செய்தால் அல்லது தான் சொல்லுவதை கேட்க மறுத்தால் அடிக்கலாம்; (கொஞ்சம் லேசா ஒரு சின்ன தட்டு தட்டலாம்) போன்ற குர்ஆனின் வசங்களையும் சில சரியத் சட்ட நடைமுறைகளையும் எடுத்தாண்டு இசுலாமிய மதத்தின் கோட்பாடுகளும் ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக இருப்பதை சுட்டிக்காட்டிதால்  உள்ளுணர்வு பொத்துக்கொண்டு வந்து பட்டுக்கோட்டை கொட்டப்பாக்கு என்று சொல்ல வைத்துவிட்டது.

“மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்களை எரிப்பதால்தான் இருக்கிறது” என்றுதானே சாடுகிறார். இதுதான் இவர் எழுதியுள்ள விமர்சனத்தின் புத்தி மிகுந்த கருத்துக்கள். தோழர் வேல்விழி கம்யூனிசத்தின் தரப்பிலிருந்து எழுதியுள்ளதற்கு கம்யூனிசம் எப்படி பெண்களை அடிமைப் படுத்துகிறது கம்யூனிஸ்கள் அதிகர் வாழும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறிகளில் அந்நாட்டவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். அதனால் கம்யூனிஸ்ட்கள் குற்றவாளிகளாக உள்ளதாகவும், பாழாய்போன கம்யூனிசம்தான் இதற்கு காரணம் என்றும் சொல்ல்லாமா? புகவின் கட்டுரைப்படி அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நிஜாம் கூறுகிறார். கம்யூனிஸ்ட்கள்தான் அதிகம் குற்றம் புரிகிறார்கள் என்பதற்காக கம்யூனிஸ்டுகள் என்றாலே குற்றவாளிகள்தான்; கம்யூனிசமே இதற்கு காரணம் என்று சொல்லுவது தவறு என்பதுபோல் இசுலாம்தான் காரணம் என்று சொல்லக்கூடாது. அப்படி நாங்களும் சொன்னால் என்னவாகும் என்று சின்னதாக பயமுறுத்தி, புகவிற்கு ‘நல்ல புத்தி’ சொல்லி சொல்கிறார்.

இசுலாமியர்கள்தான் ஆசிட்வீச்சு போன்ற கொடூரங்களைச் செய்வதாக தோழர் வேல்விழி எந்த இடத்திலும் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ். காலிகள்கூட இப்படிச் செய்கிறார்கள் என்பதை சான்றுடன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் நிஜாம் அவர்கள், இச்சுலாமிய ஆணாதிக்க கோட்பாடுகளை எடுத்தெழுதிவிட்டதால் “நாங்கள கம்யூனிஸ்கள்தான் கொடுரமானவர்கள் என்று சொன்னால் என்னவாகும் என்ற தொனியில் மிரட்டிப்பார்க்கிறார். எற்கனவே அப்படி புழுகிக் கொண்டுதான் திரிகிறார்கள் என்பது வேறு விஷயம்.

நிஜாம் அவர்களே, ரஷ்யாவிலும், சீனீவிலும் உள்ள கம்யூனிஸ்ட்கள் பெண்கள் மீது ஆசிட்டை எங்கே வீசினார்கள்? கம்யூனிசத்தின் எந்தக் கொள்கை பெண்களை அடக்கி ஆளவேண்டும், கற்பழிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று கூறுகிறது என்பதைச் சொல்லவேண்டுமல்லவா? அதுதானே புத்தியுள்ள விமர்சனமாக இருக்கும். தோழர் வேல்விழி எடுத்துவைத்துள்ள சான்றுகள் சில மட்டும்தான். இன்னும் நிறைய எடுத்துச் சொல்லலாம். அதுபோல கம்யூனிச கொள்கையின் ‘ஆணாதிக்க சட்டங்களை’ எடுத்தெழுதி உங்கள் விமர்சனங்களை கூறுங்கள். ஆத்திரம் தலைக்கேறி உளற வேண்டாம்.

பதில் சொல்ல முடியாமல் சிக்கிக்கொண்டால் அந்த அவமானமே ஆத்திரமாக உருவெடுத்து தொடர்பில்லாமல் உளரவைக்கும். அதுபோல நிஜாம் அவர்கள், “அந்தப் பகுதியில் மிகவும் எளிதாக ஆசிட் கிடைக்கிறது என்று கட்டுரையாளரே கூறியுள்ளார். அதனால் அவர்கள் எளிதாக ஏந்தும் ஆயுதம் ஆசிட் என்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. கள்ளிப்பாலும், நெல்மணியும் எளிதாக கிடைப்பதால், தமிழகத்தில் உசிலம்பட்டி பகுதியில் பச்சிளங் குழந்தைகளை அதனைக் கொண்டு கொலை செய்கிறார்கள்; உசிலம்பட்டி பகுதியில் அப்படி நடக்கிறது என்றுச் சொன்னால் நியாயம் இருக்கிறது; ஒட்டு மொத்த இந்தியாவிலும் கள்ளிப்பாலைக் கொடுத்துக் குழந்தைகளை கொலைசெய்கிறார்கள் என்று சொல்லுவது முட்டாள்தனம். அதுபோலத்தான் ஆசிட் கதையும்” என்று எழுதியுள்ளார்.

இவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. ஆசிட் எளிதாக கிடைக்கிறது என்று உங்களுக்கே தெரிகிறது; அப்படியிருப்பதால் ஆசிட்டை பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது என்று கேட்கிறாரா? அல்லது துப்பாக்கி எளிதா கிடைச்சா துப்பாக்கியால சுடுவோம்ல என்று சொல்ல வருகிறாரா? வீட்டுக்குவீடு கத்தி அரிவாள்மனைகள் இருக்கும்போது, எளிதாக கிடைக்கும்  அதைப் பயன்படுத்தாமல் ஆசிட்டை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று தோழர் வேல்விழி கேட்பதாக கற்பனை செய்து கொண்டு பதில் சொல்கிறாரா? அல்லது எளிதாக கிடைக்காத துப்பாக்கிக்கொண்டு சுடுங்கள் பார்போம் என்று புக சவால் விட்டுள்ளதா? ஒன்றுமே புரியவில்லை. கள்ளிப்பால், நெல்மணி எல்லாம் இங்கே எதுக்கு சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை.

இங்கே கள்ளிப்பாலைக் கொடுத்து கொலை செய்வதைப் போல, அங்கே ஆசிட் வீசுகிறார்கள். இதில் என்ன கட்டுரையாளர் அதிசயத்தை கண்டுவிட்டார் என்று கேட்கிராறோ நிஜாம். ஒருவேளை அரிதாக கிடைக்கும் துப்பாக்கியால் சுட்டால் இக்கட்டுரை தேவையில்லாததாகிவிடும் என்று நிஜாம் கருதுகிறாரா? ஆயுதம் எதுவானாலும் ஆணாதிக்க வன்கொடுமை என்பதுதானே மையக்கருத்து. அதுபோல ஒட்டுமொத்த இசுலாமியர்கள் என்றோ, இசுலாமியர்கள் என்றாலே கொடுரமானவர்கள் என்றோ கட்டுரையாளர் கூறவில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.இசுலாமியர்களில், ஆணாதிக்க கொடூரர்களாக  இருப்பவர்களுக்கு அதற்கு காரணமாக இசுலாமியக் கோட்பாடும் உள்ளது என்பதே கட்டுரையின் சாராம்சம். அது மட்டுமல்ல,  சினிமா, விளம்பரங்கள் போன்ற நவீன முதலாளித்துவ விழுமியங்களும் இவர்களின் கொடுர மனநிலைக்கு காரணமாக உள்ளதையும் தோழர் வேல்விழி தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனாலும் பிற ஆயுதங்களைவிட ஆசிட் வீச்சில் மனித இனத்திற்கே கேவலமான கொடூரமான மனநோய் உள்ளது. பிற ஆயுதங்கள் உடலை சிதைப்பதைவிட ஆசிட் உடலை, அதிலும் குறிப்பாக முகத்தை சிதைக்கும் கொடூரம் மிக மிக வக்கிரமானது. தனக்கு கிடைக்காத அந்தப் பெண், கோரமுகத்துடன் தினம் தினம் செத்து பிழைக்கவேண்டும் என்ற வக்கிரம். கொஞ்ச நாளில் அவள் அந்த கொடூரத்தை மறந்து விடக்கூடாது என்ற மனவக்கிரம்.  எழுத்தால் சொல்ல முடியாத வக்கிரம். பின்னே சும்மாவா? “ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்” என்று முகம்மதுநபி சொல்லி இருக்கும்போது, இந்த ………… பெண்கள்,இவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தால் ஆசிட் வீசாமல், வேடிக்கையா பார்பார்கள்?

தமிழகத்தில் நடக்கும் பெண்குழந்தைகளின் கொலைக்கு காரணம் என்ன? பெண் குழந்தை என்றால் திருமணக்காலத்தில் வரதட்சிணை போன்ற நெருக்கடி ஏற்படும். அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் அக்குழந்தையை கொன்று விடுகிறார்கள். அதுபோல வங்கத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆணாதிக்கமும் அதனை வளர்க்கும் மதமும் காரணமாக அமைகிறது.  வங்கத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடந்ததாகவே இருக்கட்டும். அதனைச் சுட்டிக்காட்டியும், அதற்கு காரணமாக அமைவதையும் எழுதக்கூடாதா? ஒட்டு மொத்த வங்கத்திலும் நடந்தால்தான் எழுதனுமா? வேடிக்கையாக இருக்கிறது இவரது உள்ளுணர்வு.

அடுத்து ஒரு தொடர்பில்லாத உளறல். பிற மதங்களைவிட இசுலாம்தான் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதாக பிறமதங்களை ஒப்பிட்டு புலம்புகிறார். தோழர் வேல்விழி பிற மதங்கள் நல்ல மதங்கள் என்று எங்கேயும் கூறவில்லை. எல்லா மதங்களும் பெண்களை ஒடுக்கி வருகின்றன என்பதைத்தானே எழுதியிருக்கிறார்.

பிரான்ஸ் போன்ற நாடுகள், பொதுவிடங்களில் புர்கா அணிய தடைச் சட்டம் இயற்றி இசுலாமியப் பெண்களுக்கு உதவிட முயற்சிக்கையில், ஆசிட் வீச்சின் அலங்கோலமாகிப்போன பெண்கள் தமது அலங்கோலத்தை மறைக்க புர்காவை விரும்பி அணிய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர் என்று பெண்ண்டிமைச் சின்னமான புர்கா பற்றி எழுதியதும், புர்காவின் மாண்புகளும் மாண்புமிக்கவர்களும் பெட்டிச் செய்தியாக பரிணமித்துவிட்டது. புர்கா பற்றி சொல்ல வேண்டுமானால் பல பக்கங்கள் வேண்டும். கொஞ்சமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் எனது  “2010ல் இசுலாமியப் பெண்கள் – மதமும் வாழ்க்கையும்”   கட்டுரையை படித்துக்கொள்ளுங்கள்.

முதலமைச்சர் ஜெயலிதா முழுக்க போர்த்திக்கொண்டு வலம் வந்த போதும் அவரது முன்னேற்றத்தை தடுக்கவில்லையாம். சினாமாவில், இதற்கு முன் அரசியலில் கவர்ச்சியாக வந்தபோதும் அவரது முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கவர்ச்சியே அவரை இன்றுவரை அரசியலில் அசைக்க முடியாத(!) முன்னேற்றத்தை தந்துள்ளது. இவர்கள் (தவ்ஹீது அமைப்பினர்) உட்பட இசுலாமிய அமைப்புகள், கட்சிகள்கூட இன்று அவரின் தயவுக்கு மண்டியிட்டு காத்திருக்கும் அளவுக்கு முன்னேற்றத்தை தந்துள்ளது. அப்படி என்றால் கொஞ்சம் நாளைக்கு கவர்சியாக இருந்து எல்லோரையும் வலைச்சு போட்டுக் கொள்ளலாம் என்பது நிஜாம் அவர்களின் ஆசை என்று சொல்ல்லாமோ? நல்லவேளை, ரம்ஜான் நேரங்களில் முக்காடு போட்ட மாதிரி ஜெயலிதா பேனர்களில் காட்சி தருவது போல், புர்கா போட்ட மாதிரி ஒரு படத்தை உணர்வில் போட்டு புர்காவின் மாண்பு பற்றி பீற்றிக்கொள்ளாமல் இருந்தாரே. அதற்காக மகிழ்சியடைவோம்.

இவைகளெல்லத்தையும் விடுங்கள். தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பில் உள்ள இவர்கள் தங்களைத் தவிர பிற இசுலாமிய இமைப்பில் உள்ளவர்கள் இல்லாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று  பட்வா கொடுத்து ரொம்ம நாளாச்சுங்களே! பிறகேன் இவர் வங்கத்து (இசுலாமிய) மக்களை, முசுலீம்கள் என்று வக்காலத்து வாங்குகிறார் என்று புரியவில்லை. நாங்கள் எத்தனை குழுக்களாக வேண்டுமானாலும் பிரிந்துகொண்டு அடிச்சிக்குவோம்; காறி துப்பிக் கொள்வோம்; ஆனால் கம்யூனிஸ்கள் ஏதாவது சொன்னா ஒண்ணா கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைப்போம் என்று கூறுகிறாரோ நிஜாம்? பெண்கள் மீதான இது போன்ற கொடூரங்களுக்கு விரலைக்கூட அசைக்காத இவர்களை இசுலாமிய மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும்.

_______________________________________________________________

சாகித்
________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. கட்டுரை ulla visaiyam mikavum sari tholar sahid avarkalukku yen vanakkangal . yenakku kidaikatha நீ yarukkum kidaikka kudathu என்று mukathil aasit அடிப்பது ஒரு vakai, pennidam kollai adikkum pothu aasit adippen என்று sollikollai அடிப்பது ஒரு seyal ( yethaiyam naan niyabaduthavillai) aanal purkka podavillai என்று aasit அடிப்பது ஒரு palamaivaatha seyal . itharkku antha nabayai kurai kura mudiyathu avr karppkka patta valiyai thaan kurai solla mudium

  2. கட்டுரை உல்ல
    விசையம் மிகவும் சரி ட்கொலர் சகிட் அவர்கலுக்கு யென் வனக்கன்கல் . யெனக்கு கிடைகட்க நீ யருக்கும் கிடைக்க குடட்கு என்று முகட்கில் ஆசிட் அடிப்பது ஒரு வகை, பென்னிடம் கொல்லை அடிக்கும் பொட்கு ஆசிட் அடிப்பென் என்று சொல்லிகொல்லை அடிப்பது ஒரு செயல் ( யெட்கையம்நான்நியபடுட்கவில்லை) ஆனல் புர்க்க பொடவில்லை என்று ஆசிட் அடிப்பது ஒரு பலமைவாட்க செயல் . இட்கர்க்கு அன்ட்கநபயை குரை குர முடியட்கு அவ்ர் கர்ப்ப்க்க பட்ட வலியை ட்கான் குரை சொல்ல முடிஉம்

    • tamil,

      நாக்கிலே ஆசிட் பட்டதுபோல் ஏன் அய்யா தமிழை இப்படி வதைக்கிரீர்..!

      தோழர் சாஹித் அவர்களே,

      சேம் சைடு கோல் அடித்து கவுத்துடீங்களே..

  3. ஓரளவுக்கு நவீனமயமான இசுலாமியர்களிடம் கூட பெண்கள் குறித்த கீழ்மையான பார்வை நிலவுவதை நாம் காண முடியும். ஒரு முறை இசுலாமிய நண்பன் ஒருவர் வீட்டுக்கு சென்ற போது அங்கு தொங்கிய காலண்டரில் பெண்களை ஆண்கள் அடிக்கலாம் என்ற வாசகத்தை காண நேர்ந்தது. கூடவே ஒரு சப்பை விளக்கம் இருந்த்தது. வீட்டின் ஆண்களுக்கு வேண்டாத பிற ஆண் ஒருவரை அழைத்து வருதல் கூடாதாம். அந்த நண்பனிடம் கேட்டதற்கு லேசாக தட்டுவதற்கு மட்டுமே ஆண்களுக்கு உரிமை உள்ளது என்றான். இந்த சிறு லைசன்ஸ் ஒன்றுமே ஆண்களுக்கு போதுமானதும், அதிகப்படியானதும் ஆகும். இன்னொரு இசுலாமிய நண்பன் மொபைல் போனில் தனது பெண் நண்பர்களின் பெயர்களுக்கு கூடவே சனியன், முண்டம் இன்னும் கெட்ட வார்த்தைகளை ஸ்டோர் செய்து வைத்துள்ளான். நேர்ப்பேச்சிலும் தமது இந்த கேடு கெட்ட பார்வைக்கு வக்காலத்து வாங்கவே செய்கிறார்கள். ஓரளவுக்கு முன்னேறிய பிரிவினரே இந்த நிலைமையில் உள்ளனர் என்றால் இசுலாமிய இயக்கங்களில் பெண்கள் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில் அவை இசுலாமிய பழைமைவாதத்தின் பிரதிநிதித்துவமே அன்றி வேறல்ல.

  4. வார்த்தையை மட்டும் பார்த்து. வாய்ஜாலம் அடித்த. நிஜாமின் ஜோடிப்பை தோலுரித்து நிஜத்தை வெளிக்கொணர்ந்த தோழர் சாகித் அவர்களே வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

  5. katturai nandraga ulathu tholar shahid . unarvu ithal thangalya migavum unnatha manavargal endru nenaithu kondargal pola. tntj endra amaipinala naraya problem islamia samugathil vanthulathu. tholar shahid avaruku oru alosanai. communism ulaga varalatril migavum mosamana vilaivugalai yarpathuthi ulathu enbathai thariya paduthukiran. stalin oru dictator avarudaya atchi kalathil matum 3 million makkal koila patu ulargal. read communism in ambush. communism embathu drawinudaya philosophyla irunthu vanthulathu. oruvaru communism atharithal avar captalism mattrum fasicm atharkum atharavu tha. those who support communism they inevitably support captalism too. without darwinism there’s no communism. so communism is totaly useless .

  6. இஸ்லாமியர்கள் ஒரு போதும் தங்கள் மதத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில்லை… தங்கள் மதம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் எனபது அவர்களுடைய நெடுநாளைய நிறைவேறா அவா…!!!

  7. இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது உண்டாவதாக !
    வினவு மீண்டும் ஒரு முறை தன்அரிப்பை நன்றாக தீரத்துகொண்டுள்ளது நலம்.. சரிங்க நிஜாம் ரோசபட்டுவிட்டார் பாவம்.. அதுக்கு மறுப்பு என்ற பெயரில் வினவு ஏன் இப்படி ரோசப்படுகிறது.. வினவுக்கு மட்டும் விதிவிலக்கா…? ஹி ஹி … அப்போ நானும் கொஞ்சம் ரோசப்டுகிறேன் கேளுங்க..
    சரி உங்க பிரச்சனை தான் என்ன ? பொதுவா நீங்க எத சொன்னாலும் ,செய்தாலும் அதை விமர்சிப்பதில் வல்லவர்கள், தங்களுக்கு தாங்களே நியாயம் கற்பிப்பதில் திறமைசாலிகள் எல்லாம் ஓகே அதனால் நீங்கள் சொல்லும் அனைத்தையும் தலை அசைத்து ஏற்றுகொள்ள வேண்டுமா என்ன ? //இந்து மதத்தையும், பார்பனீயத்தையும் எதிர்த்து எழுதும்போதெல்லாம் புதிய கலாச்சாரம் பிடித்தமான ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது புத்தியை இழந்துவிட்டதாக பொங்கி எழ என்ன காரணம்? //
    யாரு சொன்னது புதிய கலாச்சாரம் எங்களுக்கு பிடித்தமானது என்று– எக்ஸ்ட்ரா பிட் லாம் போடுறிங்க… எங்கள் சமுதாயத்தில் பலருக்கு அப்படி ஒரு பத்திரிக்கை இருப்பதே தெரியாதுங்கோ…
    நீங்கள் யாரை எதிர்த்து எழுதினாலும் ,யாரை புகழ்ந்து எழுதினாலும் எங்களுக்கு எப்பவுமே “பதிய கலாச்சாரம்“ பிடிப்பதில்லை. எங்களுக்கு பிடித்தமானது இஸ்லாமிய கலாச்சாரம் மட்டுமே. அதை எங்களால் முடிந்த அளவிற்கு நாங்கள் கடைபிடிக்கிறோம் ஆனால் நீங்கள் விமர்சிப்பதை நிறுத்தக்கூடாது ஆமா.. இன்னும் உங்களிடம் எதிர்பாக்கிறோம்… அடுத்து
    // முதலமைச்சர் ஜெயலிதா முழுக்க போர்த்திக்கொண்டு வலம் வந்த போதும் அவரது முன்னேற்றத்தை தடுக்கவில்லையாம். சினாமாவில், இதற்கு முன் அரசியலில் கவர்ச்சியாக வந்தபோதும் அவரது முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கவர்ச்சியே அவரை இன்றுவரை அரசியலில் அசைக்க முடியாத(!) முன்னேற்றத்தை தந்துள்ளது //
    வினவின் உடைகழற்றும் வெறித்தனம் பளிச்சிடுகிறது வாழ்த்துக்கள்.
    ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் .. உலகிலேயே உயர்ந்த(?) கொள்கையை கொண்ட நீங்கள் பெண்களுக்கு சிபாரிசு செய்யும் உடைகள் தான் என்ன ?
    சரி புர்கா வேணாம் .. ம்ம நம்ம தமிழ் கலாச்சாரம் இருக்கே (சைடு விவ்) சாரி கட்ட சொல்லலாமா(?) சரியா தெரியாதே .. அப்போ TWO PIECE ல அலைய விடலாமா(?) இல்ல இன்னும் பேட்டரா ? பேசாம
    “நிர்வாணமா அலைய விட்டுடலாம் என்ன சொல்கிறீர்கள் – இது முழு பெண் சுதந்திரம் தானே. துணி மணி காசு வேற மிச்சம்.
    உங்கள் கூற்றுப்படி ஜெயலலித்தா அரைகுறை கவர்ச்சியில் மயங்கி நீங்களும்,அனைவரும் ஓட்டு போட்டனர் அவர் முதல்வரா ஆகிவிட்டார்.. நிர்வாணமா நின்றால் பிரதமராக கூட ஆகிவிடலாம் , ஏன் அமெரிக்க ஜனாதிபதி கூட ஆகலாம்.. என்ன சொல்றிங்க பாஸ்..
    இதற்கும் ஓகே சொன்னாலும் சொல்வீர்கள்..
    ஏனென்றால் நீங்கள் “புதிய கலாச்சாரம்” ஆச்சே…
    எது சரி – எது தவறு என்று யார் முடிவு செய்வது?
    உங்கள் புதிய கலாச்சாரத்தின் கொள்கைகளை வினவில் கொஞ்சம் விளக்கினால் எங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
    நீங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் – சில விமர்சனங்களை நாங்கள் ஏற்கிறோம் நாங்களும் கூட விமர்சிக்கிறோம்.. அதைப்போல தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று உங்களின் சில விமர்சனங்களை எதிர்க்கிறோம். ஆனால் இஸ்லாத்தை உங்களால் விமர்சிக்கவே முடியாது அப்படி நீங்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் சுவரில் அடிக்கப்பட்ட பந்துபோல் திரும்பி உங்கள் விமர்சனம் உங்களை நோக்கியே வரும்.
    நாங்கள் விமர்சனங்களுக்கு ஓடுபவர்கள் அல்ல,எங்களுக்கு புதிதும் அல்ல அதை நேருக்கு நேராக எதிர்கொள்பவர்கள். உலக அளவில் எங்களின் நிலை இது தான். காரணம் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பலவகையில் வஞ்சிக்கபடுகிறார்கள், தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள் அதனால் ஒரு முனையில் இஸ்லாத்தை திட்டி தீர்க்க ஒரு கூட்டமும் , மறு முனையில் இஸ்லாம் அப்படி என்ன தான் சொல்கிறது என்று இஸ்லாத்தை அறியும் கூட்டமும் முனைப்பு காட்ட… இன்று உலகம் முழுவதும் நாங்கள் மாற்று மத சகோதர்களுடன் , நாத்திகர்களுடனும் நேருக்கு நேராகவும்,இணைய தளத்தின் வாயிலாகவும் உரையாடி வருகிறோம். எங்களை எங்கள் மார்க்கத்தை இழிவுபடுத்த நினைபவர்களுக்கு நாங்கள் உண்மையில் நன்றி தான் சொல்ல வேண்டும்.
    இல்லையென்றால் நாகரிகத்தின் தாய்(?) அமெரிக்கா, இங்கிலாந்து,ஜெர்மனி , பிரான்ஸ், என்று உலகம் பூராகவும் இன்று இஸ்லாத்தின் கொள்கைகள் சென்றடைந்து கவரப்பட்டு இஸ்லாத்தை நோக்கி அணி ,அணியாக வருவார்களா ?..
    உங்களுக்கு பொய்யான கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு உண்மையான இறைவன் மேல் நம்பிக்கை இருக்கிறது நாங்கள் பகுத்து அறிபவர்களாக இருக்க வேண்டும் என்று எங்களுக்கு திருக்குரான் கட்டளையிடுகிறது.
    அநியாயமாக எந்த உயிர்களையும் கொள்ளக்கூடாது , அனைவரிடமும் அன்பு கட்ட வேண்டும், நீதி போற்றப்படவேண்டும் என்று இஸ்லாத்தின் உலக சமத்துவத்தை சொல்லிகொண்டே போகலாம் ஆனால் இதற்கு நீங்கள் ஒரே வார்த்தையாக நீ இஸ்லாமியன் அதனால் உன் மதத்தை நீ உயர்வாக தான் பேசுவாய் என்பீர்கள்.
    இஸ்லாத்தின் எந்த போதனைகளுக்கு மனிதகுலத்திற்கு எதிரானது கிடையாது என்று அடித்து சொல்லலாம்.
    பெண்கள் (மனைவி) வரம்பு மீறும்போது ஆண்கள் லேசாக அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருப்பது உண்மைதான். (TWO PIECEல் பெண்கள் ஆடுவதை கேலிகூத்தாக ஆணாதிக்கத்தின் உச்சகட்டமாக இருக்க.) இதில் என்ன தவறை கண்டீர்கள் ?
    ஆண்கள் பெண்களை நிருவகிப்பவர்கள் தான் என்பது இஸ்லாத்தின் கருத்து. இதை நீங்கள் ஒத்துகொண்டாலும் ,இல்லாவிட்டாலும் தற்போது உலகில் நடக்கும் எதார்த்தமும் இது.
    உலகில் ஆணின் அரவணைப்பில் வாழும் பெண்கள் தான் பாதுகாப்பாகவும் , ஒழுக்கமாகவும் , மனஅழுத்தமில்லாமல் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
    சரி அதற்காக அடிப்பதா என்றால் ? நீங்கள் நினைப்பது போல் தவறு செய்தால் இலுத்துபோட்டு சாத்து,தண்டனை கொடு என்று சொல்கிறதா இஸ்லாம் ? …
    இருவர் கணவன்,மனைவியாக வாழ்கிறார்கள் ,இவர்களில் கணவருக்கோ ,மனைவிக்கோ அல்லது இருவருக்குமா சேர்ந்து வாழவிருப்பமில்லை என்றால் அவர்கள் பிரிவதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. அதை போல் அவர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் வந்து மனைவி வரம்புமீறி தவறாக நடந்து கொண்டால் அவளை திருத்தும் விதமாக லேசாக அடிக்க மார்க்கம் எங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது உண்மை.
    இது எந்த விதத்திலும் கொடுமை கிடையாது மனைவி கணவனின் பொறுப்பில் இருப்பதால் இது அனுமதியே தவிர கடமையல்ல… ஒரு வாதத்திற்கு இந்த சட்டத்தை வைத்துகொண்டு ஒருவன் தன் மனைவியை நீங்கள் நினைப்பது போல் பின்னி எடுக்கிறான் என்று வைத்துகொள்வோம் அப்போது அவளுக்கு தெரிந்து விடும் இவன் நமக்கு ஏற்ற கணவன் கிடையாது கொடுமை படுத்துகிறான் என்று உடனே அவள் தன் கணவனை விவாகரத்து செய்ய முடியும் இஸ்லாத்தின் சட்டத்திற்கு உட்பட்டு மேலும் மனித உரிமை மீறல் என்று வழக்கும் போடலாம்..
    அப்படி இந்த சட்டத்தை வைத்து தற்போது எத்தனை பேர் மனைவியை கொடுமை
    படுத்துகிறார்கள் கொஞ்சம் லிஸ்டை சொல்லுங்கள்… ?

    ஆணுக்கும் ,பெண்ணுக்கும் மூளையிலையே வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் வணங்கும் அறிவியல் சொல்கிறது… (http://www.livescience.com/health/050120_brain_sex.html)
    ஆனால் நீங்கள் உடல் ரீதியான வித்தியாசத்தையே ஏற்க மறுகிரீர்கள்.
    ஒன்று மட்டும் புரியவில்லை சகோதரா ? உலக முழுவதும் பெண்களை இஸ்லாம் அடிமைபடுத்துகிறது என்று உங்களை போன்று ஆணாதிக்க சக்திகள் ஒய்யார ஒலமிடுகின்றன..
    ஆனால் உலகம் முழுவதும் இஸ்லாத்தை தழுவுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது அதில் 100க்கு 70% பெண்கள்.
    அதுவும் அமெரிக்க பெண்கள் தான் அதிகம்.. என்ன ஆச்சு ஏன் இவர்கள் இஸ்லாதிற்க்கு வர வேண்டும் ? கணவனிடம் அடிவாங்கவா ? புர்கா அணிந்து உங்கள் அறிவுகூற்றுப்படி தங்களை சிறுமை படுத்திகொள்ளவா ? வீட்டில் அடைபட்டு கிடக்கவா ?.. என்ன தான் உங்க பிரச்சனை… உங்களுக்கு இஸ்லாத்தை பிடிக்கவில்லை ஓகே உங்களுக்கு பிடித்தே ஆகவேண்டும் என்றும் அவசியமுமில்லை..
    இஸ்லாத்தை படியிங்கள் என்று யாரும் உங்களை கட்டாயபடுத்தியும் இருக்கமாட்டார்கள். எங்களுகே இஸ்லாத்தை பின்பற்றுவது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. நாங்கள் எங்கள் வீட்டு பெண்களை கட்டாயபடுத்துகிறோமா ? என்ன பூச்சாண்டி இது..
    இது என்ன காமெடி … ////பிரான்ஸ் போன்ற நாடுகள், பொதுவிடங்களில் புர்கா அணிய தடைச் சட்டம் இயற்றி இசுலாமியப் பெண்களுக்கு உதவிட முயற்சிக்கையில், ஆசிட் வீச்சின் அலங்கோலமாகிப்போன பெண்கள் தமது அலங்கோலத்தை மறைக்க புர்காவை விரும்பி அணிய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர்///
    நல்ல ஜோக் .. இதற்க்கு பதிலளிக்க வெக்கபடுகிறோம் – இப்படி ஒரு சுத்த முட்டாள் தனமான வாதத்தை இதுவரை நாம் கேட்டதில்லை.. இஸ்லாத்தை நோக்கி வரும் பெண்களே இதற்கு பதில்..
    இஸ்லாம் அவர்களுக்கு கண்ணியத்தை கொடுத்திருக்கிறது அதனால் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதை என்றைக்கும் சுமையாக நினைக்கவில்லை, நினைக்கவும் மாட்டார்கள்.
    உடலை காட்டி விபச்சாரத்திற்கு வித்திடும் சினிமா நடிகைகளை பார்த்து கெட்டு சீரழிவதற்காக சில முஸ்லீம் பெயர் தாங்கிகள் புர்காவை தூக்கி எரிந்தால்..அவர்கள் எரிவது இஸ்லாத்தை அல்ல – அவர்களின் புனிதமான மானத்தை.
    நாங்கள் அவர்களுக்காக அவர்களின் அறியாமைக்காக வருத்தப்படுகிறோம் ஆனால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு போனால் வேதனை படமாட்டோம்..
    நாங்கள் அதிக பிரசங்கிகள் கிடையாது எங்களுக்கு எங்கள் இறைவன் வழங்கிய அறிவு வாழ்வதற்கு போதுமானது. நாங்கள் எங்கள் மார்க்கத்தை நேசிக்கிறோம் ,உங்களையும் நேசிக்கிறோம்.. எங்கள் மார்க்கம் எங்களுக்கு வழிகாட்டி – நீங்கள் எங்களுக்கு திசைகாட்டி
    ( அதாவது முஸ்லீம்கள் உலகின் எந்த திசையிலெல்லாம் தவறு செய்கிறார்கள் என்று எங்களுக்கு update செய்து எங்களை இன்னும் வீரியமாக இஸ்லாத்தை பின்பற்றுவதறக்கும்,எங்களின் தவறுகளை திருத்திகொள்வதற்கும் உதவுவதற்காக )
    இறுதியாக சொல்கிறோம் உள்ளத்திலிருந்து சொல்கிறோம் இஸ்லாத்தை விமர்சிப்பதை தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்– உங்கள் விமர்சனங்கள் எங்களை மேலும் மேலும் உற்சாகபடுத்துகிறது..ஆனால் உங்கள் விமர்சனங்களுக்கு யார் பதிலளிகிறார்களோ இல்லையோ .. முஸ்லீம்கள் நாங்கள் எதிர்கொள்ள எப்போதும் தயாராகவே இருகிறோம் ஆதலால் இஸ்லாத்தை விமர்சிக்கும் முன்பு எந்த விசயத்திற்காக விமர்சிகிறீர்களோ அதைவிட நீங்கள் சிறந்ததாக நினைக்கும் ஒரு தீர்வை சொல்லி விமர்சியுங்கள். அதாவது இதில் இஸ்லாத்தில் தவறு அதைவிட இது தான்,இந்த சித்தாந்தம் தான் எங்கள் புதிய கலாச்சாரத்தில் சிறந்தது என்பது போன்று.
    இல்லையேல் வாய் சும்மா இருக்கு பேசுகிறேன் என்பதுபோல் தான் உங்கள் வாதத்தை எங்களால் பார்க்க முடியும்.
    ///நாங்கள் எத்தனை குழுக்களாக வேண்டுமானாலும் பிரிந்துகொண்டு அடிச்சிக்குவோம்; காறி துப்பிக் கொள்வோம்; ஆனால் கம்யூனிஸ்கள் ஏதாவது சொன்னா ஒண்ணா கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைப்போம் என்று கூறுகிறாரோ நிஜாம்?///
    ஆமா நீங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கீங்க பாருங்க(?) அப்படி எங்களால் இருக்க முடியல …சரி அப்பிடியே வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் நாங்கள் உங்களை அடிக்கவில்லை , உங்கள் மேல் கரி துப்பவில்லை நாங்கள் எங்கள் குடும்பதிற்குள் செய்து கொள்கிறோம். அதைக்கேட்பது உங்களுக்கு அவசியமில்லையே நாங்கள் உங்களிடம் நியாயம் கேட்கவில்லையே… சரிங்க இத்தோடு முடிச்சிக்கிறேன் –
    அடுத்த இன்னொருத்தரு ஏதோ கேட்குராறு.. “அட இருங்கப்பா வருசையா வரேன் “…
    (பர்தா அணியவில்லை என்று ஆசிட் அடித்தால் அது அவன் செய்த தவறு இதற்கு அவனை தண்டிக்க வேண்டும் இஸ்லாத்தின் கொள்கைபடி)

    • ஏக்க இறைவனின் திருப்பெயரால்..

      மூஃமின் சகோதரர் அப்துல்லா “பெண்கள் (மனைவி) வரம்பு மீறும்போது ஆண்கள் லேசாக அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருப்பது உண்மைதான்.” என்று கூறியிருக்கிறீர்கள். ”லேசாக” என்று எந்த திருமறை வசனம் கூறுகிறது? குர் ஆன் வசனத்தை திரிப்பவர்களுக்கும் இட்டுக்கட்டுபவர்களுக்கும் அல்லாஹ் கூலி கொடுப்பான் என்று எச்சரித்துகொள்கிறேன்.

      ”பர்தா அணியவில்லை என்று ஆசிட் அடித்தால் அது அவன் செய்த தவறு இதற்கு அவனை தண்டிக்க வேண்டும் இஸ்லாத்தின் கொள்கைபடி” என்று தாங்களாக இட்டுக்கட்டி கூறியுள்ளீர்கள். பர்தா அணிந்துதான் இருக்க வேண்டும் என்றும், பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் ஜஹிலியா காலத்தை போன்று வெளியே திரியக்கூடாது என்றும் அல்லாஹ் முஸ்லிமாக்களுக்கு அறிவுறுத்துகிறான்.

      33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்;

      அப்படி பெண்கள் பர்தா போடாமல் வெளியே சென்றால் அது அக்கிரமாகும்.அக்கிரமம் நடந்தால் ஆயுதம் கொண்டு தவிருங்கள். இல்லையேல் கையை கொண்டு தவிருங்கள்.இல்லையேல் வாயால் தவிருங்கள் என்று கூறியிருக்கிறார்கள். நம் ஈமானுள்ள மூஃமின்கள் ஆஸிட் கொண்டு தவிர்க்கிறார்கள். இதில் என்ன தவறு?

      கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை ஒன்றை பகிர்ந்துள்ளேன்

      • முஸ்லீம் பெயர்களை பொய்யாக வைத்துக்கொண்டு நயவஞ்சகம் செய்யும்
        உங்களை போன்ற வெறியர்கள் எங்களுக்கு தெரியாமலில்லை…
        முஸ்லிம்களை போல் இணையதளத்தில் உருமாறி இஸ்லாத்திற்கு எதிராக பொய்யையும் ,புரட்டையும் பரப்பி அல்ப சந்தோப்பட்டு கொள்ளும் கோழைகள் நீங்கள்.
        உன் தளத்தில் உன்னுடைய வண்டவாளங்கள் .தண்டவாளத்தில் ஏறுகிறது.
        உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது… ரொம்ப கஷ்டபடுற தம்பி…

        • ஏக்க இறைவனை உலக மக்கள் அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்பதற்காக எத்தனை கஷ்டத்தையும் ஏற்றுகொள்ளத் தயாராக இருக்கிறேன் சகோ.

          ஆனால் அதற்காக அல்குர் ஆன் வசனத்தை திரித்து கூறுவதும், இட்டுக்கட்டுவதும் சரியாகுமா சகோ?

          நாம் அல்லாஹ்வை கும்பிட வேண்டும் கும்பிட வேண்டும் என்று ஏங்கும் ஏக்க இறைவனை நாம் வணங்கி அவனை குஷி படுத்துவோம்.

          இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய சாட்சிகள் உள்ளன.

          • என்னையா எழுதி இருகிற ?
            ////ஏக்க இறைவனை உலக மக்கள் அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்பதற்காக எத்தனை கஷ்டத்தையும் ஏற்றுகொள்ளத் தயாராக இருக்கிறேன் சகோ.
            ஆனால் அதற்காக அல்குர் ஆன் வசனத்தை திரித்து கூறுவதும், இட்டுக்கட்டுவதும் சரியாகுமா சகோ?
            நாம் அல்லாஹ்வை கும்பிட வேண்டும் கும்பிட வேண்டும் என்று ஏங்கும் ஏக்க இறைவனை நாம் வணங்கி அவனை குஷி படுத்துவோம்.
            இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய சாட்சிகள் உள்ளன.////
            ஹா ஹா … Tற்Y பண்ணிருக்க BஊT Wஓற்KஓஊT ஆகல செல்லம்…
            வேணும்னா நான் பயிற்சி கொடுக்கவா ? எப்படி முஸ்லீம்கள் போல் எழுதுவது என்று .. ஏன் இந்த பொழப்பு ஹி ஹி ..
            இப்னு சாகிர் என்று பெயர் வைத்துக்கொண்டு தன்னை ஒரு முஸ்லீம் போல் காட்டிக்கொண்டு இஸ்லாத்தின் மேல் தன் வெறுப்பை கொட்டி தீர்க்கும் அன்பரே… வாழ்த்துக்கள் .. ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க . இதற்காக இணையதளம்மெல்லாம் ஆரம்பித்து தனக்கு ஏற்பட்ட வெறுப்பின் அரிப்பை ஓர் அளவிற்கு தீர்த்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன் ஆனால் இதெல்லாம் சத்தியத்தின் முன் நிற்காது அன்பரே.
            இதை விட ஈனச்செயல் வேறு இருக்கிறதா…? என்ன…
            இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல .. உலகம் முழுவதும் எங்களை ஒடுக்குவதற்கு இஸ்லாமிய வெறுப்பு வகையறாக்கள் கையில் எடுக்கும் தந்திரம் தான் இது.
            ஒன்றை மட்டும் சொல்லிகொள்கிறோம் நீங்கள் தலைகீழ நின்றாலும் இஸ்லாத்தின் கொள்கைகளை துடைத்தெறிய முடியாது மாறாக மேலும் மேலும் இஸ்லாத்தை உங்கள் அவதூறு பிரசாரத்தால் வளர்த்து விடுகிறீர்கள்.
            நீங்கள் எதை பெண் அடிமைத்தனம் , கொடுமை ,ஆணாதிக்கம் என்று கூக்குரலிடுகிறீர்களோ அவைகள் தான் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை நோக்கி பெண்கள் வர காரணம்..
            ஆதலால் நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள் சரியா ..?
            ஆனால் முஸ்லீம்கள் பெயரில் ஒளிந்துகொண்டு விமர்சிக்கும் கோழைத்தனத்தை விடலாமே ..
            யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டோம் சகோதரே, நீங்கள் இஸ்லாத்தை விமர்சியுங்கள் அதை நாங்கள் வரவேற்கிறோம் நாங்கள் விமர்சனங்களுக்கு ஓடுபவர்கள் அல்ல .. ஆனால் நாகரிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
            எங்களுக்கு எங்கள் மார்க்கம் நாகரிகத்தை தான் போதித்துள்ளது.
            நாங்கள் கருத்தோடுதான் மோதுவோமே தவிர மனிதர்களோடு அல்ல.

            • ஏக்க இறைவனின் தெருப்பெயரால்,

              அல்ஹம்துலில்லாஹ்

              //நாங்கள் கருத்தோடுதான் மோதுவோமே தவிர மனிதர்களோடு அல்ல.//

              இது சொன்னீர்களே சகோ! அப்படியே புல்லரித்துவிட்டது. ஆனால், அது நபிஹள் நாய்ஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வழி இல்லையே! அவர் தன்னை எதிர்த்தவர்களை ஆளை வைத்தல்லவா தீர்த்து கட்டியிருக்கிறார்? அவர் எப்போது கருத்தோடு கருத்தை மோத விட்டிருக்கிறார்? நீங்கள் இப்படி கருத்தோடு கருத்தை மோத விடுவது நபிவழியா சுன்னாவா என்று சிந்தியுங்கள்.

              நிச்சயமாக எந்த அவதூறு பிரச்சாரத்தாலும் இஸ்லாமை ஒழித்துவிட முடியாது. அதுவும் நபிஹள் நாயஹம் சொல்வது போல மூளையும் ஈமானும் குறைவுள்ள பெண்கள் எப்போதுமே இஸ்லாத்தின் பக்கம் வந்தபடிதான் உள்ளனர். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

              ய்ய்ய்யா அல்லாஹ்!

              • சகோதரர் ஈBணூ ஸாKஈற்க்கு இந்த தடவை இது தான் கிடைத்தது போல் அவதூறு கூறுவதற்கு ..

                //நாங்கள் கருத்தோடுதான் மோதுவோமே தவிர மனிதர்களோடு அல்ல.//
                ///இது சொன்னீர்களே சகோ! அப்படியே புல்லரித்துவிட்டது. ஆனால், அது நபிஹள் நாய்ஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வழி இல்லையே! அவர் தன்னை எதிர்த்தவர்களை ஆளை வைத்தல்லவா தீர்த்து கட்டியிருக்கிறார்? அவர் எப்போது கருத்தோடு கருத்தை மோத விட்டிருக்கிறார்? நீங்கள் இப்படி கருத்தோடு கருத்தை மோத விடுவது நபிவழியா சுன்னாவா என்று சிந்தியுங்கள். /////
                சகோதரே கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் வேறு திசையை நோக்கி போகிறீர்கள் என்ன ஆச்சு கைவசம் ஏதும் உங்களிடம் இல்லையா.. விமர்சிக்க ?
                அறையும் குறையுமாக சந்தேகத்திலேயே இருக்ககூடாது தெளிவாக விமர்சிக்கணும் அப்ப தான் உங்கள் வகையறாக்களுக்கு சந்தோசமாக இருக்கும்.
                தமிழில் சரியா டைப் செய்யவரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதலாமே ? சரி இப்ப புல்லுக்கு ஏன் அறிக்குதாம் ?
                யாரை யார் தீர்த்து கட்டியது சும்மா இந்த டகால்டி வேலைலாம் ஒன்றும் தெரியாதவனிடம் வைத்துக்கொள்ளுங்கள் சகோதரே..
                கருத்தோடு மோதுபவர்களுடன் – நாமும் கருத்தோடு மோதுவது நபிவழி தான் அதில் ஒன்றும் எங்களுக்கு சந்தேகமில்லையே…
                ஆயுதம் ஏந்தி வரம்பு மீறி நடந்து கொண்டால் நாமும் அதுபோல் நடந்து கொள்வோம் அதிலும் எங்களுக்கு சந்தேகமில்லை…
                நீங்கள் முதல்வகை என்று நான் கருத்தோடு தான் மோதுவேன் என்று சொன்னேன் புரிகிறதா தமிழ்.
                ///நிச்சயமாக எந்த அவதூறு பிரச்சாரத்தாலும் இஸ்லாமை ஒழித்துவிட முடியாது. அதுவும் நபிஹள் நாயஹம் சொல்வது போல மூளையும் ஈமானும் குறைவுள்ள பெண்கள் எப்போதுமே இஸ்லாத்தின் பக்கம் வந்தபடிதான் உள்ளனர். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை..///
                ஹா ஹா … ரொம்ப யோசிச்சி எழுதி இருகிறீர்கள் ஆனால் மூளையை பற்றி ஒளிந்துகொண்டு கள்ளதனாமாக விமர்சிக்கும் நீங்கள் பேசுவது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது .
                சரி இஸ்லாத்தை இன்னும் நல்லா படிங்க… தேடுங்க எதில் அவதூறை மிக்ஸ் பண்ணலாம் என்று..
                நேருக்கு நேராக விவாதிக்க தைரியமில்லாமல் இணையதளத்தில் தங்கள் வெறுப்பை விருப்பம் போல் எழுதி சந்தோசப்பட்டுகொள்ளும் உங்கள் வகையறாக்களுக்கு நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் தான் போங்க..
                நன்றியும் – வாழ்த்துக்களும் அடுத்த அவதூறை கூடிய விரைவில் எழுத …

                • சகோதரர் அப்துல்லா .கருத்துக்களுடன் கருத்துக்களை மோதவிடுங்ககள் நல்ல விமர்சகராக சென்கொடியுடன் வாதம் வையுங்கள் .சிங்கத்தோடு மோதலாம் ,சிங்கத்தை வென்ற சிங்கமே !என்பார்கள் .புலியுடன் மோதினால் புலியுடன் மோதிய புலியே !ஜல்லிக்கட்டில் இறங்கினால் ,இளங்காளையே என்பார்கள்.இது பெருமைதரும் .ஆனால் பன்றியுடன் மோதினால் பன்றியை வென்ற பன்றியே! என்று சொல்ல முடியுமா? வேண்டாம் .இப்னு ஷைத்தானிடம் வாதட முடியுமா? இப்னு ஷைத்தானிடம் இருந்து மக்களை காப்பாற்றவே முடியும்

          • இப்னு சாகிர் என்று பெயர் வைத்துக்கொண்டு தன்னை ஒரு முஸ்லீம் போல் காட்டிக்கொண்டு இஸ்லாத்தின் மேல் தன் வெறுப்பை கொட்டி தீர்க்கும் அன்பரே… வாழ்த்துக்கள் .. இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல .. உலகம் முழுவதும் எங்களை ஒடுக்குவதற்கு இஸ்லாமிய வெறுப்பு வகையறாக்கள் கையில் எடுக்கும் தந்திரம் தான் இது.நீங்கள் எதை பெண் அடிமைத்தனம் , கொடுமை ,ஆணாதிக்கம் என்று கூக்குரலிடுகிறீர்களோ அவைகள் தான் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை நோக்கி பெண்கள் வர காரணம்..
            ஆதலால் நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.

    • மிக அருமையான பதில். நீங்கள் சொல்வது போல இஸ்லாம் கட்டாய மதமில்லை. இஸ்லாத்தில் இருந்தால் இப்படி தான் வாழ வேண்டும் என்று நியதி உள்ளது. இது எல்லாம் மதமும் பறை சாற்றுகின்றது. simple but modern religion .வாழ்த்துக்கள் அப்துல்லாஹ்

    • அப்துல்லாஹ்

      ரெம்ப சரியான பதில் சொல்லிய்ருக்கீங்க , நல்ல ஒரு பதிவு
      அல்லாஹ் அருள் பாலிப்பானாக

    • //உலகிலேயே உயர்ந்த(?) கொள்கையை கொண்ட நீங்கள் பெண்களுக்கு சிபாரிசு செய்யும் உடைகள் தான் என்ன ?
      சரி புர்கா வேணாம் .. ம்ம நம்ம தமிழ் கலாச்சாரம் இருக்கே (சைடு விவ்) சாரி கட்ட சொல்லலாமா(?) சரியா தெரியாதே .. அப்போ TWஓ PஈஏCஏ ல அலைய விடலாமா(?) இல்ல இன்னும் பேட்டரா ? பேசாம
      “நிர்வாணமா அலைய விட்டுடலாம் என்ன சொல்கிறீர்கள் – இது முழு பெண் சுதந்திரம் தானே. துணி மணி காசு வேற மிச்சம்.
      //

      பெண் களின் உடையை தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கில்லை. அது அவர்கள் சுதந்திரம்.உன் விருப்பத்திற்கு அவர்களை உடுத்த சொல்லும் உரிமை உனக்கில்லை. ஆனாதிக்கத் திமிரை விரிவாக பின்னூட்டமிட்டிருக்கிறாய்.

      • உங்க வீட்டு பெண்கள் உரிமை என்று ஜட்டி பாடியோடு போனால் “ஆஹா நம்ம வீட்டு பெண்கள் பெண்ணுரிமை சுதந்திரத்தோடு போகிறார்கள்” என்று ரசிப்பீர்கள் போலும் ஹி ஹீ ஹீ….

    • //பெண்கள் (மனைவி) வரம்பு மீறும்போது ஆண்கள் லேசாக அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருப்பது உண்மைதான். (TWO PIECEல் பெண்கள் ஆடுவதை கேலிகூத்தாக ஆணாதிக்கத்தின் உச்சகட்டமாக இருக்க.) இதில் என்ன தவறை கண்டீர்கள் ?

      ஆண்கள் பெண்களை நிருவகிப்பவர்கள் தான் என்பது இஸ்லாத்தின் கருத்து. இதை நீங்கள் ஒத்துகொண்டாலும் ,இல்லாவிட்டாலும் தற்போது உலகில் நடக்கும் எதார்த்தமும் இது.
      உலகில் ஆணின் அரவணைப்பில் வாழும் பெண்கள் தான் பாதுகாப்பாகவும் , ஒழுக்கமாகவும் , மனஅழுத்தமில்லாமல் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

      இவர்களில் கணவருக்கோ ,மனைவிக்கோ அல்லது இருவருக்குமா சேர்ந்து வாழவிருப்பமில்லை என்றால் அவர்கள் பிரிவதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. அதை போல் அவர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் வந்து மனைவி வரம்புமீறி தவறாக நடந்து கொண்டால் அவளை திருத்தும் விதமாக லேசாக அடிக்க மார்க்கம் எங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது உண்மை.//

      இதுலயே தெரியுதே இசுலாம் பென்னுரிமைக்கெதிரானது என்று. ஆண்கள் தவறு செய்தால் அவனை அடிக்க உங்கள் மதம் ஒன்றும் சொல்ல வில்லையே? மனித துவக்கம் பெண் களின் பிடியில் தான்நிர்வகிப்பில் தான் இருந்தது. அது பின்னர் தந்தை வலி முறைக்கு மாறி பெண்களை அடிமைப் படுத்த ஒவ்வொரு மதமும் கோட்பாடு என்ற பெயரில் அவர்கள் உரிமையைப் பறித்தது.

      உங்கள் ஆனாதிக்கத்திற்கு பங்கம் வராமல் காத்துக் கொள்ள இன்னும் எத்தனை காலம் தான் பெண்களை ஏமாத்துவீங்க??????

    • Mr. Abdullah

      Sorry to post my comments in English..tried in tamil but failed…

      …யாரு சொன்னது புதிய கலாச்சாரம் எங்களுக்கு பிடித்தமானது என்று– எக்ஸ்ட்ரா பிட் லாம் போடுறிங்க… எங்கள் சமுதாயத்தில் பலருக்கு அப்படி ஒரு பத்திரிக்கை இருப்பதே தெரியாதுங்கோ…
      நீங்கள் யாரை எதிர்த்து எழுதினாலும் ,யாரை புகழ்ந்து எழுதினாலும் எங்களுக்கு எப்பவுமே “பதிய கலாச்சாரம்“ பிடிப்பதில்லை. எங்களுக்கு பிடித்தமானது இஸ்லாமிய கலாச்சாரம் மட்டுமே.

      I used to buy Pu.Ka and Pu.ja regularly in a store nearby a mosque (building owned by the mosque) wherein only islamic journals and products used for prayers will be sold. Can you please explain what is the rationale behind this?

      இறுதியாக சொல்கிறோம் உள்ளத்திலிருந்து சொல்கிறோம் இஸ்லாத்தை விமர்சிப்பதை தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்– உங்கள் விமர்சனங்கள் எங்களை மேலும் மேலும் உற்சாகபடுத்துகிறது..ஆனால் உங்கள் விமர்சனங்களுக்கு யார் பதிலளிகிறார்களோ இல்லையோ .. முஸ்லீம்கள் நாங்கள் எதிர்கொள்ள எப்போதும் தயாராகவே இருகிறோம்

      Can you please justify why the talk show (Neeya Naana) in vijay tv on Burqa has been prevented by muslim organizations? You have not even allowed to air the show despite no one has said defamatory to islam in the trailers. Where has gone your tolerance level and ‘open for criticism’ attitude?

      ..ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் .. உலகிலேயே உயர்ந்த(?) கொள்கையை கொண்ட நீங்கள் பெண்களுக்கு சிபாரிசு செய்யும் உடைகள் தான் என்ன ?
      சரி புர்கா வேணாம் .. ம்ம நம்ம தமிழ் கலாச்சாரம் இருக்கே (சைடு விவ்) சாரி கட்ட சொல்லலாமா(?) சரியா தெரியாதே .. அப்போ TWO PIECE ல அலைய விடலாமா(?) இல்ல இன்னும் பேட்டரா ? பேசாம
      “நிர்வாணமா அலைய விட்டுடலாம் என்ன சொல்கிறீர்கள் – இது முழு பெண் சுதந்திரம் தானே. துணி மணி காசு வேற மிச்சம்..

      There are several decent outfits available for women apart from Burqa, which is the most inconvenient outfit for our weather and most importantly, it should be decided by the people who wears and not you or vinavu ..Do not want to say anything to your later part as it does not deserve any comments and only Islamic fanatics can think of these and support the comments…

      .. ஆண்கள் பெண்களை நிருவகிப்பவர்கள் தான் என்பது இஸ்லாத்தின் கருத்து. இதை நீங்கள் ஒத்துகொண்டாலும் ,இல்லாவிட்டாலும் தற்போது உலகில் நடக்கும் எதார்த்தமும் இது.
      உலகில் ஆணின் அரவணைப்பில் வாழும் பெண்கள் தான் பாதுகாப்பாகவும் , ஒழுக்கமாகவும் , மனஅழுத்தமில்லாமல் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன…

      The most ugliest part of your criticism and bundle of lies..which research proved this and who has taken the survey and where are the results? Just a sweeping statement unsupported by any facts..Who used to take care or manage Benazir Bhutto, Khalida Zia and did they really need to be taken care…wondering how they have been given the task of governing the entire people of the nations… Pages will not be sufficient if I give the efficient women leaders/managers/scientists…

      …ஆனால் உலகம் முழுவதும் இஸ்லாத்தை தழுவுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது அதில் 100க்கு 70% பெண்கள்.அதுவும் அமெரிக்க பெண்கள் தான் அதிகம்..

      Again another motherhood and stupid statement…Even assuming to be true..so what? Fools/Idiots do not belong to any particular region or religion and it is a common phenomenon can be seen across the globe. Do you know how many Americans became hindus and member of Hare rama Hare Krishna movement…settling in Indian Ashrams…can we say that Hinduism revives!!!

    • Thambi Abdullah,
      Ulakil entha mathamum makkalukku viduthailaiyai petru tharathu.makkalin vaazhvirkku matham devaiellai,entha mathappatruthan namathu otrumaikku ,viduthalaikku nelvaazhvirkku thadaiyaaga irukkirathu,ungalai matra matha makkalidamirunthu piritthu odukkuvatharrku neengal thunaipokireergal ,nantraaga yosiyungal.

      Thozhamaiyuden

    • ஆணையே சிறந்த நிர்வாகியாகவும் அறிவுள்ளவனாகவும் உருவகப்படுத்தும் உங்களை ஏன் ஆணாதிக்கம் என்ற வார்த்தை கோபமூட்டுகிறது? ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே!

      • oththukollathan vendum.enevey naanum periyaar madhaththai pinpatri pengalukku thunbam tharaamal 10 maadham karuvutru naane kuzhandhai petrukollalam ena ninaikkiren. neengalum thayaraa?

    • நண்பர் அப்துல்லா. வணக்கம். இது உங்கள் பார்வைக்காக. படித்து விட்டு பதில் கூறுங்கள். ஆக்கபூர்வமாக சிறிதே விவாதிப்போம்.

      http://khalas.wordpress.com/2007/03/01/a-flat-earth-the-islamic-perspective/

      http://www.islam-watch.org/Logical/Proof-Quran-thinks-Earth-is-Flat.htm

      நன்றி

  8. Ladies are not at all permitted to drive any vehicle in Kingdom of Saudi Arabia. Recently this issue is going on there. There must be a male guardian are male care taker in Kingdom of Saudi Arabia. A women cannot take her own decisions without a legal male care taker. It seems no other religion has such control over females. No question of equal rights can be raised there. In olden days females and animals were considered as most precious wealth. If some one wins the war they will conquest females and animals only. Islam is the latest religion (out of 4 major religons) with olden concepts.

  9. ஜெயலலிதா கவர்ச்சியாக நடித்ததால் தான் இன்று முதல்வராகியிருக்கிறார் என்று கூறுவதன் மூலம் ஒட்டுமொத்த பெண்ணினத்தையும் இழிவுபடுத்தும் இந்த காம்ரேட்கள், இஸ்லாத்தைப் பற்றியோ தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றியோ பேசுவதற்குத் துளியும் அருகதையற்றவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒருவகையில் பார்த்தால் அழகிப் போட்டிகளையும் காதலர் தினத்தையும் எதிர்க்கும் சங் பரிவார்கள் இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட்களை விட சிறந்தவர்கள்.

    • ஜெயா கவர்ச்சி காட்டியதால் தான் முதல்வர் ஆனார் என்றால் ஜெயாமாலினி சில்க் அல்லவா முதல்வர் ஆகியிருக்க வென்டும்

      • ஜெயலலிதா ஆணாதிக்க அடிமையாக் இருக்கும் பொழுது அவருக்கு அரைகுறை ஆடை தேவையானதாக் இருந்தது.ஆனால் அவரது பெண்மை ஆதிக்கம் பண்ணியபோழ்து அவருக்கு பர்தாஆடை தேவையாக இருந்தது என்பதே உண்மை.

  10. //ஒருவகையில் பார்த்தால் அழகிப் போட்டிகளையும் காதலர் தினத்தையும் எதிர்க்கும் சங் பரிவார்கள் இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட்களை விட சிறந்தவர்கள்//
    birds of a feather flock together endru oru pazhamozhi undu.. ellaa madha veriyargalum ore kuttayil ooriya mattaigal enbadhaye indha marumozhi kaatugiradhu 😀

  11. ///“இசுலாமியப் பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்’ என்ற கட்டுரையின் சாராம்சம் என்ன? வங்கதேசத்திலுள்ள இளைஞர்கள், பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடூரங்கள் இக்கட்டுரையின் மையக்கருத்தாகும்.////

    நீங்கள் சொல்லுவதுதான் மையக் கருத்து என்றால் ‘வங்க பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம் ‘என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும்.ஆனால் இங்கு இஸ்லாத்தை சாடவே வழி மீது விழி வைத்து குற்றம் கண்டு பிடித்து எழுதப்பட்ட கட்டுரையாகும்.
    கேரளா கம்யுனிஸ்ட் அமைச்சர் பாலியல் குற்றத்தில் பகிரங்கமாக ஈடுபட்டார் என்றால் அது கம்யுனிச குற்றமா? நாங்கள் அவ்வாறில்லை அது போலி கம்யுனிஸ்ட்கள் என்பீர்களா?

    ///ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள்; அதனால் ஆண்களே பெண்களைவிட உயர்ந்தவர்கள்; பெண்கள் தவறு செய்தால் அல்லது தான் சொல்லுவதை கேட்க மறுத்தால் அடிக்கலாம்; (கொஞ்சம் லேசா ஒரு சின்ன தட்டு தட்டலாம்) போன்ற குர்ஆனின் வசங்களையும் சில சரியத் சட்ட நடைமுறைகளையும் எடுத்தாண்டு இசுலாமிய மதத்தின் கோட்பாடுகளும் ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக இருப்பதை சுட்டிக்காட்டிதால் உள்ளுணர்வு பொத்துக்கொண்டு வந்து பட்டுக்கோட்டை கொட்டப்பாக்கு என்று சொல்ல வைத்துவிட்டது.///

    பெண்ணுரிமை என்று இணையதளங்களில் எழுதி ஆர்பரித்து விட்டால் போதும் அதுவே பெண்ணுரிமைகளை கம்யுனிஸ்ட்கள் உயர்த்தி பிடிப்பதாக காட்டிக் கொவார்கள். ஆனால் நடைமுறையில் சாதிக் வீட்டு பெண்கள் வீட்டு வேலைகளையே கவனிப்பார் சாதிக் தான் வருமான விசயங்களையும் நிர்வகிப்பதையும் கவனித்துக் கொள்வார்.பட்டுக்கோட்டைக்கு வழி கேட்கும் கொட்டை பாக்குகளே! இதுவரை எந்த பு.க வுகளும் தனது மனைவிகளை அடித்ததே கிடையாதா? உங்க, மனைவியரை வேலைக்கு அனுப்பிவிட்டு நீங்கள் எத்தனை பேர் குழந்தைகளை கவனித்து வருகிறீர்கள்? உங்களது கம்யுனிச கொள்கைபடி திருமணம் என்பதும் ஆணாதிக்க நடவடிக்கைதான் .திருமணம் செய்யாமல் பண்ணை வாழ்க்கை வாழ புகவினர் மட்டும் ஏன் முயற்சிக்கக் கூடாது? ஏன் இந்தியாவில் சாத்தியமில்லை என்று நழுவ வேண்டும் ?இந்தியாவில் நாங்கள் தவ்ஹித் ஜமாத்தினர் எங்களது கொள்கை முறையில் செயல்பட்டு வருகிறோமே ! உங்களது புகவினர் சாதிய முறையில் திருமண உறவு முறைகளை தேடி திருமணம் செய்து வருகிறீர்கள்.

    ///நிஜாம் அவர்களே, ரஷ்யாவிலும், சீனீவிலும் உள்ள கம்யூனிஸ்ட்கள் பெண்கள் மீது ஆசிட்டை எங்கே வீசினார்கள்? கம்யூனிசத்தின் எந்தக் கொள்கை பெண்களை அடக்கி ஆளவேண்டும், கற்பழிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று கூறுகிறது என்பதைச் சொல்லவேண்டுமல்லவா? ///
    நான் அதிகம் தேடவில்லை அயிந்து நிமிடத்தில் கிடைத்த இந்த சுட்டியை பாருங்கள்.
    http://chinaview.wordpress.com/2007/03/29/list-of-china-modern-torture-methods-photo

    இஸ்லாத்தின் எந்த கொள்கை பெண்களை அடக்கி ஆளவேண்டும் ,கற்பழிக்க வேண்டும் ,கொள்ளை அடிக்க வேண்டும்?என்று கூறுகிறது என்பதை தாங்கள் சொல்ல வேண்டுமல்லவா?
    குடிகார கணவனை அடித்து திருத்த மனைவிக்கும் உரிமை உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை.
    ///அதுபோல கம்யூனிச கொள்கையின் ‘ஆணாதிக்க சட்டங்களை’ எடுத்தெழுதி உங்கள் விமர்சனங்களை கூறுங்கள். ஆத்திரம் தலைக்கேறி உளற வேண்டாம்.////
    உங்கள் கம்யுனிச கொள்கை எங்கே நடைமுறையில் உள்ளது என்று கூறினால் விமர்சனத்தை தொடங்கலாம். ஆத்திரம் தலைக்கேறி மூத்திரமாக தங்களுக்கு வடியவேண்டாம்..உங்கள் வீட்டில் உங்களது கம்யுனிச கொள்கை உள்ளதா?
    ///“ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்” என்று முகம்மதுநபி சொல்லி இருக்கும்போது, இந்த ………… பெண்கள்,இவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தால் ஆசிட் வீசாமல், வேடிக்கையா பார்பார்கள்?///
    முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கு ஒத்த கருத்துள்ள நபிமொழி .இதைத்தான் ஆத்திரம் தலைக்கு ஏறி மூத்திரமாக வடிவதாக கூறுகிறோம்.
    ///தமிழகத்தில் நடக்கும் பெண்குழந்தைகளின் கொலைக்கு காரணம் என்ன? பெண் குழந்தை என்றால் திருமணக்காலத்தில் வரதட்சிணை போன்ற நெருக்கடி ஏற்படும். அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் அக்குழந்தையை கொன்று விடுகிறார்கள். அதுபோல வங்கத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆணாதிக்கமும் அதனை வளர்க்கும் மதமும் காரணமாக அமைகிறது. வங்கத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடந்ததாகவே இருக்கட்டும். அதனைச் சுட்டிக்காட்டியும், அதற்கு காரணமாக அமைவதையும் எழுதக்கூடாதா? ஒட்டு மொத்த வங்கத்திலும் நடந்தால்தான் எழுதனுமா? வேடிக்கையாக இருக்கிறது இவரது உள்ளுணர்வு.////
    எது வேடிக்கை ? வரதட்சணை கொடுமைக்கு இஸ்லாம் காரணமா?இப்படி உளறுவது அல்லவா வேடிக்கை.
    ///2010ல் இசுலாமியப் பெண்கள் – மதமும் வாழ்க்கையும்” கட்டுரையை படித்துக்கொள்ளுங்கள்.///
    இறைவன் நாடினால் அதற்கு பதில் கட்டுரை தருவோம்.

  12. இஸ்லாத்தை விமர்சித்தால் உடனே வந்துவிடுகிறார்கள் மூட்டை முடிச்சுகளுடன்.

    இஸ்லாம் ஆணாதிக்க மதம் தான். இதில் ஐயம் இருக்கிறதா யாருக்கேனும்

    இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே – அண்மையில் நடந்த ஒரு விவாதம் படித்துப் பாருங்கள்.

    • கம்யுனிச கழிவுகளை சொன்னவுடனே கதறி வந்துவிட்டீர்கள் போலும் ,இறைவன் நாடினால் படித்து பதில் தருவோம் செங்கொடி ,இங்கும் உங்கள் தாக்கம் உண்டா?பொய் என்று பொய் கூறி வெளியிட மறுக்க மாட்டீர்கள்தானே

      • நண்பர் இப்ராஹிம்,

        பொய் சொன்னது நீங்கள். எங்கிருந்தோ எடுத்த ஒரு அவதூறை வினவு பற்றி புதிய கலாச்சாரத்தில் வந்தது என்று பொய் கூறியது நீங்கள் தான். அதை எடுத்துக் காட்டிய பிறகும் அதற்கு வருத்தம் தெரிவிக்காததால் தான்,செங்கொடியில் உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டன. இப்போது ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு உங்கள் அவதூறுகளைக் கூறுங்கள் தக்க பதில்தரப்படும்.

        • ///எங்கிருந்தோ எடுத்த ஒரு அவதூறை வினவு பற்றி புதிய கலாச்சாரத்தில் வந்தது என்று பொய் கூறியது நீங்கள் தான்///செங்கொடி ,இதற்கு விளக்கம் தேவை

    • நீங்க எழுதுவீங்க . உங்களை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது . அப்பொழுது எதற்கு “மறுமொழி “

  13. அட போங்கய்யா செத்து போன கம்னியுசத்தை இன்னும் மாரடிசிகிட்டு போயி வேர வேலைய பாருக்கையா! தோழர் சாதிக்? உன்னுடைய வீட்டில் உல்ல பென்னுகலை சுதந்திரம் என்ர பெயரில் நிர்வானமாக அழைய விடுவியா மாட்டயில்ல உனக்கு ஒரு சட்டம் ஊருக்கு ஒரு சட்டமா?? இசுலாதை குரை சொல்லுவதெ பு க??? வேலையா போச்சு.

    செய்யது

    • உங்களுக்கு புர்கா அணியாத பெண்கள் எல்லாம் நிர்வாணமாக அலைவதாகத்தான் நினைப்பு ? (அல்லது உங்கள் ஆசையா ?)

    • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

      //உன்னுடைய வீட்டில் உல்ல பென்னுகலை சுதந்திரம் என்ர பெயரில் நிர்வானமாக அழைய விடுவியா///

      சகோதரர் செய்யது வார்த்தையில் கண்ணியம் இருக்கட்டும் இது போன்ற வார்த்தைகளை தவிர்ங்கள்

    • syed said://உன்னுடைய வீட்டில் உல்ல பென்னுகலை………

      உன் ஆழ் மன வக்கிர ஆசைகளை இஸ்லாமியர் என்ற அடையாளத்தில் வெளி இட்டு இஸ்லாத் மார்கத்தை அசிங்க படுத்தாதே

  14. இறைவன் மனிதனை ஏன் படைக்கவேண்டும்?
    மனிதர்களை படைப்பதற்கு முன்னர் அந்த இறைவன் தனியாக இந்த உலகத்தில் என்ன செய்தான்? அப்படி எத்தனை ஆண்டுகாலம் தனிமையில் இருந்திருப்பான்?
    அப்படியே அனைவரையும் படைத்தவன் இறைவன் என்றால் ஏன் ஏற்றத்தாழ்வுகளை படைக்கிறான்? சண்டை சச்சரவுகளுக்கு காரணம் படைத்தலின் பிழை தானே?
    மனிதனை தன்னை நாள் தோறும் வணங்கு என ஒரு தெய்வம் கட்டளை இடுமா? அப்படி வணங்காதவர்களை தண்டிக்குமா? மனிதனின் வாழ்வியல் கடமையே இறைவணக்கம் என்றால் இந்த மனித வாழ்வே ஒரு அடிமை வாழ்வுதானா?
    இறைவன் என்ன என்ன வகை ஆடை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறுபவர்கள், இறைவன் படைக்கும்போது என்ன ஆணையும் பெண்ணையும் பர்காவோடும் வெண் ஆடையோடுமா படைத்தான்… உடைகள் உருவாக்கியவன் மனிதனல்லவா? ஆதி மனிதர்கள் அனைவரும் நிர்வானிகளே.. இறைவன் என்ன தண்டித்தா விட்டான்?
    ஆதி மனிதன் நெருப்பே கண்டுபிடிக்கா காலத்தில் தானே செத்த விலங்கை தான் தின்றான்.. எந்த ஹலால் உணவை தின்றான்?
    மசூதிகளையும் கோயில்களையும் சர்ச் களையும் படைத்தவன் மனிதனா? இறைவனா? முதல் மனிதன் படைக்கப்பட்ட பொது அவன் எந்த மசூதிக்கு போய் தொழுதான்?
    சந்திரனிலும் பிற கோள்களிலும் நட்சத்திரங்களிலும் மனிதன் நடந்து சென்று ஆராய்ச்சி செய்யும் இந்த கால கட்டத்திலும் பிறைகளையும் கோள்களையும் விண்மீன்களையும் வணங்குதல் பகுத்தறிவா?

    உங்கள் மதங்களையும் நம்பிக்கைகளையும் குறிப்பிட்ட எல்லை வரை பின்பற்றுங்கள், ஆதரியுங்கள்… அவை விமர்சனத்துக்குட்பட்டது என அறியுங்கள்… விமர்சனங்களை வரவேற்க பழகுங்கள்…

    • மதங்கள் தோன்றியது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக கூட இருந்திருக்கலாம். ஆனால் வர்க்கப் பிரிவினை உள்ள சமூகத்தில் அவை ஆண்டை பக்கம் சாய்வது தவிர்க்க இயலாதது.

      நான் சொல்வதை கேட்டால்தான் உனக்கு பலன், என்னையே நீ போற்ற வேண்டும், என் தயவால் தான் நீ வாழ வேண்டும் என்று கூறும் ஒருவன் எப்படி பட்டவனாக இருக்கமுடியும்? அவனுடைய பண்பு எப்படிபட்டதாக இருக்க முடியும்? அவன் ஒரு ஆண்டையின் பண்பை உடையவனாகத்தானே இருக்க முடியும். நம்மை அடிமைகளாக பார்க்கும் ஒருவனிடம் நமக்கான நீதி கிடைக்குமா? ஒரு எஜமானனிடம் விசுவாசமாக இருக்கும் அடியாட்களிடம் ஒரு கூலியாள் தம் தரப்பு நியாயத்திற்காக பேச முடியுமா? முடியாது. ஆண்டையான அல்லாவிடம் விசுவாசமான அடிமையாக இருக்கும் முஸ்லீம்களிடம் பேச இயலாது. அவர்கள் ஆண்டையின் குரூர புத்தியுடனேயே இவ்வுலகை பார்க்கிறார்கள். அந்தக் குரூர புத்தி இயற்கை என எண்ணுகிறார்கள். அதற்கு தமது ஆண்டையின் சொல் ஒன்றே சரியானது என நினைக்கிறார்கள். ஏற்றத் தாழ்வு இருப்பதினால்தான் சீரழிவும் இருக்கிறது என்று அவர்களுக்கும் தெரியும்,. ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரைதான் ஆண்டையாலும் உயிர் வாழ முடியும் என்றும் தெரியும். ஆண்டையின் ஆத்மா அடிமைகளின் குருதியினால்தான் உயிர் வாழ்கிறது. குருதியை கொடையளித்து தன் அடிமை விசுவாசத்தை நிரூபிக்கும் அடிமைகளிடம் பேச இயலாது.
      எனவே, ஆண்டையான அல்லாவிடம் விசுவாசமான அடிமையாக இருக்கும் முஸ்லீம்களிடம் பேச இயலாது.

    • சகோ. மனிதன் அவர்களே தங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதில் உள்ளது (www.onlinepj.com கேள்வி பதில் பகுதியை பார்க்கவும்). அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரர்களின் விருப்பம்.

      • என்னுடைய கேள்விகளுக்கு அங்கு பதில் இல்லை…என்னுடைய கேள்விகள் இஸ்லாத்தை நோக்கி அல்ல… அவை மத இறை நம்பிக்கைகளை பற்றிய பொதுவான கேள்விகள்… இஸ்லாமும் ஒரு வகை மதம் என்ற அளவில் தான் ஏன் கேள்விகள் இருக்கின்றன… நபிக்கும் அல்லாவுக்கும் முன்னால் இருந்த உலகம் பற்றிய கேள்விகளை இஸ்லாத்தை வைத்து பதில் சொல்ல முடியாது… pj வின் தளத்தின் நடையை நான் விரும்பவதில்லை… மாற்று மதத்தினரை சகிக்க மறுக்கிறீர்.. மாற்று மத துவேஷம் கொட்டி கிடக்கும் தளம் அது… அங்கு பொது நல கேள்விகளுக்கு விடை தேடுவது பொல்லாப்பை தான் தருகிறது புரிதலை அல்ல…

        அப்படி ஏன் கேள்விகளுக்கு விடை இருப்பதாக தெரிந்தால் நீங்கள் இங்கு தொகுத்து தரலாம்.. உங்கள் விடைகளையும் விளக்கங்களையும் ஏற்க தயாராக இருக்கிறோம்…

        • மனிதன் ////pj வின் தளத்தின் நடையை நான் விரும்பவதில்லை… மாற்று மதத்தினரை சகிக்க மறுக்கிறீர்.. மாற்று மத துவேஷம் கொட்டி கிடக்கும் தளம் அது… அங்கு பொது நல கேள்விகளுக்கு விடை தேடுவது பொல்லாப்பை தான் தருகிறது புரிதலை அல்ல…/////
          நீங்கள் விரும்பும் வகையில் பீஜே யின் நடை இருக்க வேண்டுமா?உங்களது எண்ணங்கள் புரிகிறது.உங்களை போன்று நாங்களும் இருக்கவேண்டும் என்பது தவறல்லவா? குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தின் உண்மை நிலை ஆய்வு செய்தால் மோடிக்கு பொல்லாப்பு.2G கனிமொழிக்கு ராசாவுக்கு பொல்லாப்பு .உங்களது கேள்விகளுக்கு அங்கு ஆப்பு இருப்பதால் நீங்கள் அதை பொல்லாப்பு என்று கொள்வது உங்கள் நடை
          . ///மாற்று மதத்தினரை சகிக்க மறுக்கிறீர்.. மாற்று மத துவேஷம் கொட்டி கிடக்கும் தளம் அது///
          இன்னும் சொல்லப்போனால் மாற்று மதம் என்ற வார்த்தையே தவறு என்பார்.மாற்று மதத்தினரை சகிக்க மறுக்கிறார் என்பது தவறு.மாற்று மதத்தை சகிக்க மறுக்கிறார் என்று சொல்லுங்கள்.சகிக்க மறுக்கிறார் என்பதை விட மற்ற மதத்திலுள்ள கருத்துக்களை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு வாழ்வதற்கு இஸ்லாமே சாத்தியமான நடைமுறைகளை கொண்டு உள்ளது என்கிறார்.இந்த அவரது விமர்சனங்களுக்கு அவரிடம் உங்களது மாற்று கருத்துக்களை தெரிவியுங்கள்.அது மறுத்து அவரது நடையே பிடிக்க வில்லை என்று தேடலில் ஒதுங்குவது சரியன்று.அவ்வாறு எனின் இறைவனைப் பற்றிய உங்களது கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடாது.
          /

          • நான் முன்பே கூறியதை போல என்னுடைய கேள்விகள் PJ – வுக்கு அல்ல.. இஸ்லாமுக்கும் நபிக்கும் முன் இருந்த உலகம் தொடர்பான கேள்விகளை ஒரு இஸ்லாமியரிடம் கேட்டல் நியாம் அல்ல… என்னுடைய கேள்விகள் அறிவியாலலர்களையும் ஆய்வாளர்களையும் நோக்கியது… மீண்டும் எம்மை PJ பக்கம் இழுக்க முயற்சி செய்ய வேண்டாம்… விதண்டாவதங்களுக்கான கேள்விகள் அல்ல இவை…

    • Really very good comment manithan….all people are always behind their religion no one is ready to speak as an Indian are as a human being generally…shame of Vinavu why will vinavu always speak about Religions or communities?why can’t you say only about the mistakes happening? you could have said in Bangladesh women are suffering like this…that is enough am a girl i know how man are against women’s improvement it is not on baasis of any religion it is on basis of the minds of the Men…vinavu please act as a journal which is showing the truth and the mistakes to the people not always speaking about Brahmins or Muslims…you know today’s generation is not behind the religion are castes….it always want a peacefull life with all human beings….if you see in one friends gang there will be a Hindu, a Muslim and a Christian also…they don’t see their caste or religion…they will eat together i have a Muslim friend who comes with me to temple and even i have went with her mom once to mosque….please we don’t want Religion only huminity….don’t speak about a particular religion you are not at all a proper journal…be a democratic journal not a particular caste sinner….

      • நல்ல கேள்விகள்.. பொதுவாக கம்யுனிசமும் அது சார்ந்த முற்போக்குவாதிகளும், ஆதிக்க வர்க்கத்தில் உள்ள முதலாளிகளியே எதிர்திருக்கின்றனர். ஆனால் வினவும் அது சார்ந்த புரட்சியை தன பெயரில் கொண்டுள்ள இயக்கங்குளும் ஒரு படி மேலே போய், முதலாளிகளின் மதத்தையும் சாதியையும் சாடுகிறது… எப்படி முதலாளி வர்க்கத்தில் அனைத்து சாதிக்காரனும், அனைத்து மதம் சார்ந்தவனும் இருக்கிறானோ அது போலவே கம்யுனிசத்திலும் அனைத்து சாதி காரனும் இருக்கிறான், எல்ல மதத்தினரும் இருக்கிறான் என இவர்கள் அறிந்திருக்கவில்லையா என என்ன தோன்றுகிறது..

        இன்று புரட்சிகர கம்யுனிசம் எனபது வெறும் சாதி, மத வெறி எதிர்ப்பு அரசியல் ஆக ஆகிவிட்டது… ம க இ க உள்ளிட்ட முகமற்ற சுவரொட்டி ஒட்டும். அமைப்புகள் தங்கள் முகத்திரையை கிழித்து வெளியே வந்து தாங்கள் புரட்சி என கருதுவது எதனை, தாங்கள் எதை எதிர்க்கிறோம் , எதை ஆதரிக்கிறோம் என தெளிவு படுத்த வேண்டும்..

        • <>

          இந்த மனிதன் இணையத்திலேயே பிறந்து இணையத்திலேயே வளர்ந்திருந்தாலும் கூட விவரம் தெரிந்திருக்கும், ஆனால் இவர் அதையும் தாண்டிய புனிதமான இடத்திலிருப்பவர் போல… ஓய் முடிந்தால்

          தொடர்புக்கு:
          அலைபேசி – (91) 97100 82506
          மின்னஞ்சல் – vinavu@gmail.com

          அப்படியன தளத்தில் மேலே கொடுத்திருக்கிறார்களே, அதற்கு ஒரு போனையோ அஞ்சலையோ போட்டு நேரில் சென்று பாரும், அப்போதான் உங்கள் முகத்தையே நீங்கள் கண்டுபிடிக்க முடியும்

          இப்படிக்கு
          ஒரு முகத்தை கண்டு கொண்டவன்!

          • என்னுடைய முகத்தை கண்டு பிடிக்க இன்னும் நேரம் வரவில்லை… நேரம் வரும்போது நிச்சயம் கண்டு கொள்வேன்… நன்றி…

  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அன்பான சகோதரகளுக்கு ஒரு வேண்டுகோள்
    இங்கு வாதம் பன்னி ஒரு பலனும் இல்லை இதை நான் அனுவபூர்வமாக உணர்ந்து சொல்கிறேன்.

    2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
    இந்த கட்டுரையில் இஸ்லாத்தை வெறித்தனமாக எதிர்க்கும் வெறியர் சாகித் அடித்து விட்ட புளுகு முட்டைகளுக்கு இதுவரை பதில் சொல்லவில்லை இவருடைய அரசியல் நேர்மை அப்படி அங்கு பின்னூட்டத்தை படித்துப் பாருங்கள் உதாரணத்திற்கு கிழே கொடுத்திருக்கிறேன்

    ///முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார்..சாகித்சாகித், எந்த ஹதீஸ் தொகுப்பில் – எத்தனையாவது ஹதீஸாக இது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை தயவு செய்து தரவும்//////“….முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும்….. ” – சாகித்.நண்பர் சாகித்… இதற்கும் நீங்கள் தக்க ஆதாரத்தை தருவீர்கள் என்று/// ஏம்பா சாகித் எங்கே பொயி தொலைஞ்ச வந்து இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லு

  16. // “ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்” என்று முகம்மதுநபி சொல்லி இருக்கும்போது, இந்த ………… பெண்கள்,இவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தால் ஆசிட் வீசாமல், வேடிக்கையா பார்பார்கள்?//

    இந்த இடத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்,என்பதை வினவு தெரிய படுத்த வேண்டும். அதற்கு பிறகு சில விஷயகளை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

    • முகமது நபியை எள்ளல் செய்து அவ்வாக்கியம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதாகப் புரிந்துகொள்ளுங்கள்.

  17. என்னுடைய முதல் கருத்து தவறான முறையில் வந்துள்ளது . கூகுளே அடித்து விட்டு வினவுவில் பேஸ்ட் செய்தததால் தவறாக போய் விட்டது . மன்னிக்கவும் …
    நான் சொன்ன கருத்து இது தான்

    கட்டுரை உள்ள விசயம் மிகவும் சரி தோழர் சாஹித் அவர்களுக்கு என் வணக்கங்கள் . எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று முகத்தில் ஆசிட் அடிப்பது ஒரு வகை , பெண்ணிடம் கொள்ளை அடிக்கும் போது ஆசிட் அடிப்பேன் என்று சொல்லி கொள்ளை அடிப்பது ஒரு செயல் ( எதையும் நான் நியாயபடுதவில்லை ) ஆனால் புர்க்கா போடவில்லை என்று ஆசிட் அடிப்பது ஒரு பழமைவாத செயல் . இதற்க்கு அந்த நபரை குறை கூற முடியாது. அவர் பின்பற்றிய கொள்கையைத்தான் குறை சொல்ல முடியும் .

    • மேற்குறிப்பில் உள்ள விஷயம் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இஸ்லாம் பர்தா போட்டால் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு! ஆண்களின் தீய பார்வை-இலிருந்து உங்களை பாதுககிறது என்று சொல்கிறதே தவிர.. அதை செய்ய வில்லை என்றால் அப்பெண் மீது ஆசிட் ஊற்று என்று சொல்லவில்லை. யாரோ ஒருவன் மறை கழன்று இந்த செயலை செய்துவிட்டதால் இஸ்லாம் பழமைவாதம் என்று சொல்லுவது முறையல்ல.
      இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று பல சகோதரர்கள் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் இருப்பது முறையல்ல. அனால் இந்த கட்டுரை மட்டுமல்ல இதற்கு ஆதரவாக பேசும் அனைவரின் போக்கும் பர்தா என்பது பெண்ணடிமை என்று நிர்பந்திப்பது போல உள்ளது.
      முதலில் ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் நம் உடலில் உள்ள நோய் தீர நாமெல்லாம் ஊசி போடுகிறோம். ஊசி போட்டால் வலிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். வலியை பொருட்படுத்தாமல் நோய் குணமாகிறது என்று என்ன வேண்டுமே தவிர வலிக்கிறது அதனால் மருத்துவம் என்பது பொய். அது கூடாது என்பது எந்த வகையில் பொருந்தும்.
      பர்தா போடுவதினால் ஒரு பெண்ணின் மானம், ஒழுக்கம் காக்க படுமே தவிர அது பெண்ணை அடிமை படுத்தும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.

      • சரி இந்த மானம், ஒழுக்கம் மன்னாங்கட்டி எல்லாம் ஆண்களுக்கு இல்லையா??? அது பெண்ணுக்கு வச்சதே அடிமைப் படுத்த தான். சும்மா ஏமாத்திக் கிட்டு திரியாதப்பா!

        நீங்க பெரிய அரசியல் வாதிப்பா… வீட்டுல உள்ள பொம்மனாட்டிங்க கிட்ட “ஏய் பர்தா போட்டு வெளிய வா” அப்புடின்னு சொல்லிட்டு வெளிய “இஸ்லாத் யாரையும் கட்டாயப் படுத்துவதில்லை” என அந்தர் பல்டி அடிப்பது.

        • கடவுள் //சரி இந்த மானம், ஒழுக்கம் மன்னாங்கட்டி எல்லாம் ஆண்களுக்கு இல்லையா??? அது பெண்ணுக்கு வச்சதே அடிமைப் படுத்த தான். சும்மா ஏமாத்திக் கிட்டு திரியாதப்பா!///
          ஆண்களுக்கும் இருக்கிறது அவர்கள் மானத்தை காப்பாற்றும் அளவில் அவர்களின் உடைகள் சொல்லப்பட்டுள்ளது,பெண்களின் மானத்தை காப்பாற்றும் அளவில் பெண்களின் உடை சொல்லப்பட்டுள்ளது.தனது முகம் கைகளை தவிர மற்ற உடல் அவயங்களை மறைக்கும் வண்ணம் கருப்பு அங்கி மட்டும் புர்கா இல்லை .இறுக்கம் இல்லாமல் பேன்ட் கோர்ட் ஸ்கார்ப் மற்றும் சுடிதார்,கமீஸ் துப்பட்டா,மற்றும் சேலை முழு ஜாக்கெட் அணிந்து கொண்டாலும் அவைகளும் புர்காவே ஆகும்.

          • //இறுக்கம் இல்லாமல் பேன்ட் கோர்ட் ஸ்கார்ப் மற்றும் சுடிதார்,கமீஸ் துப்பட்டா,மற்றும் சேலை முழு ஜாக்கெட் அணிந்து கொண்டாலும் அவைகளும் புர்காவே ஆகும்.///

            இரு கண்களை மட்டும் வெளிக்காட்டும் அந்த கருப்பு அங்கி இல்லாமல் மேலே நீங்கள் குறிப்பிட்ட உடைகளை மட்டும் போட்டுக்கொண்டு வெளியில் உலாவ உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் அனுமதியளிப்பீர்களா?

            • வெளியில் தேவைகளுக்கு செல்ல நான் அனுமதித்துக் கொண்டு இருக்கிறேன்.

              • நான் கேட்டது அந்த புர்கா என்றழைக்கப்படும் கருப்பு அங்கி அணியாமல் செல்ல அனுமதிப்பீர்களா? என்று.

                • கருப்பு அங்கி இல்லாமல் முகம் கைகளை மறைக்கும் வண்ணம் ஆடைகளை அணிந்து செல்ல அனுமதித்து கொண்டுதான் இருக்கிறேன்

                  • கருப்பு அங்கி இல்லாமல் முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை மறைக்கும் வண்ணம் ஆடைகளை அணிந்து செல்ல அனுமதித்து கொண்டுதான் இருக்கிறேன் .

              • அது புர்காவாகவே இருந்தாலும் எதை அணிவது என்பது என்பது அவர்கள் விருப்பம். அதை முடிவு செய்ய உங்களுக்கு என்ன உரிமை?

      • /// மேற்குறிப்பில் உள்ள விஷயம் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இஸ்லாம் பர்தா போட்டால் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு! ஆண்களின் தீய பார்வை-இலிருந்து உங்களை பாதுககிறது என்று சொல்கிறதே தவிர.. ///

        புர்க்கா எப்படி பெண்களை பாதுகாக்கிறது என்பதை தெளிவாக சொல்லவும்

        • இந்திரா பார்த்த சாரதி தனது ஒரு நாவலில் ,மிக கண்ணியமான கதாநாயகி ,தினசரி அலுவலகத்திற்கு பஸ்ஸில் செல்லும் வேளையில் ஆண்களின் பார்வையில் தனது சங்கடங்களை எண்ணி வருந்தும் பொழுது புர்கா ஆடை அணிந்திருந்தால் தனக்கு இது போன்ற கஷ்டங்கள் வராதே என்று எண்ணுகிறார்.ஆக புர்காவின் பாதுகாப்பு அது போன்ற பெண்களுக்குத்தான் தெரியுமே ஒழிய தங்களைப் போன்ற ஆண்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

            • கிருஷ்ணா ,கிருஷ்ணா ,நான் அவரை பெண் என்று எங்கே சொல்லியுள்ளேன் .அந்த கதாபாத்திரம் மூலம் சொல்லியுள்ளதாகவே கூறியுள்ளேன்

          • சரி அதை பாதுகாப்பாக கருதி பெண்கள் அணியட்டும். அது அவர்களின் விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து அணியவில்லை என்றால் ஆசிட் என்பதும், அணிய சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஆணாதிக்கமும் எப்படி சரியாகும்?

            • ///அதை விடுத்து அணியவில்லை என்றால் ஆசிட் என்பதும், அணிய சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஆணாதிக்கமும் எப்படி சரியாகும்?///

              இங்கே பர்தா அணியாமைக்காகவா ஆசிட் ஊற்றப்பட்டது? சிகரெட்டின் தீமைகளை சொல்லி அதனை புகைப்பதை தவிர்க்குமாறு நீங்கள் நெருங்கிய உறவினர்களை கட்டாயப் படுத்த மாட்டீர்களா?

              • என்னங்க இது கொடுமையா இருக்கு…நீங்க எதுக்கு பெண்களை மட்டும் இந்த உடை தான் போடனும்னு சொல்றீங்க? அவங்களுக்கு எது பாதுகாப்புன்னு தெரியும். அவங்க பாத்துப்பாங்க பாஸ்.

                • கடவுள் ////என்னங்க இது கொடுமையா இருக்கு…நீங்க எதுக்கு பெண்களை மட்டும் இந்த உடை தான் போடனும்னு சொல்றீங்க? அவங்களுக்கு எது பாதுகாப்புன்னு தெரியும். அவங்க பாத்துப்பாங்க பாஸ்.////
                  ஆண்களும் முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை மறைத்துத்தான் உடை அணிகிறோம்.முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு இதுதான் பாதுகாப்பு என்று கருதியே அந்த உடை அணிகிறார்கள் .இதி உங்களுக்கு எதற்கு தேவை இல்லாத அக்கறை?கம்யுனிஸ்ட் யூனியனில் உள்ளவர்கள் சிவப்பு ஆடைதான் அணிய வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது சரியா?

                  • என்ன இப்ராகிம், கம்யூனிஸ்ட் எல்லாம் சிவப்பு ஆடைதான் அணியனுனம்னு யாரும் கட்டாயப் படுத்தலையே! ஆனா உங்க ஆளுங்க பர்தா அணிய கட்டாயப் படுத்துறீங்களே???? கம்யூனிஸ்டுகள் எல்லோரும் சிவப்பு ஆடை அணிவதில்லை.

                    • ///கம்யூனிஸ்டுகள் எல்லோரும் சிவப்பு ஆடை அணிவதில்லை.///

                      பணக்கார கம்யுனிஸ்ட் அணிவதில்லை என்பது உண்மைதான் .கூலிகளை கட்டாயப்படுத்துவது யார்?

                      பர்தா அணிய கட்டாயாபடுத்துவது யாருமில்லை.பெண்களின் ஆடையாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளதை அவர்கள் விரும்பி அணிகிறார்கள்.ரோட்டில் பர்தா அணிந்து செல்பவர்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என்று நினைத்துக் கொண்டால் அது உங்களது உங்கள் தவறு.

              • ஏன் நீங்க உங்க சொந்தக் காரங்க கிட்ட இப்புடி கட்டாயப் படுத்த கூடாது.. “இங்க பாருப்பா நம்ம வீட்டு பொண்ணுங்களும் நம்மள மாதிரி மனுசங்க தான். அதனால அவங்க உரிமையில நாம தலையிடக் கூடாது.” ட்ரைப் பண்ணி பாருங்களேன்.

                • முஸ்லிம் பெண்கள் எல்லாம் எங்களுக்கு பர்தா வேண்டாம் என்று உங்களிடம் முறையிட்டதுபோல் நீங்கள் வாதம் வைக்க வேண்டிய அவசியம் என்ன?பெண்களின் கவர்ச்சி மையங்களை மறைப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம்?பெனகை கவர்ச்சி பொருளாக்காமல் ,அவளை மனுசியாக காட்டுவதிலே உங்களுக்கு என்ன கோளாறு? மது ,சிகரெட் ,கார் விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் பெண்களை காட்டுவது ஏன்?இதைவிட பெண்களுக்கு ஏன் இழிவு இருக்கிறது?அதை தடுப்பதிலோ கண்டிப்பதிலோ இல்லாத அக்கறை முஸ்லிம் பெண்கள் மீது ஏற்பட்டிருப்பது ஏன்?அலுவலகங்களில் ஆண்கள் டவுசர் ,டி சர்ட் அல்லது பனியன் ,லுங்கி என்று அவரவர் விருப்பபடி உடை அணிந்து வர அனுமதிக்கலாம் அல்லவா? ஏன் உயர் அலுவலகங்களில் கோர்ட் ,சூட் கழுத்து கூட தெரியாத அளவி டை,கால் விரை தெரியாத அளவில் சூ,சாக்ஸ் அணிந்து வரவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்?அவரவர் விருப்பபடி ஆடை அணிந்து வர அனுமதிக்க வேண்டியது தானே

  18. ஊடகத் தீவிரவாதம் என்பது ஒருவரின் கருத்தாக்கத்தில் எப்படியெல்லாம் வார்த்தைகளை முற்படுத்தி, சிதைத்து அதற்கு வேறு ஒருவடிவம் கொடுத்து கருத்தாக்கத்தில் சிதைவுகளை உண்டு பண்ணுவது தான். இப்பொழுதும் அது நடந்துள்ளது, ஊடகத் தீவீரவாதத்தால் உலகை அச்சுறுத்தும் அமெரிக்கா, யூத ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் “ புதிய கலாச்சாரத்திற்குள்ளும் ஊடகத்தீவிரவாதம் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

    //“ஒருவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ அதனையே பெறுவான்; ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அதனையே அடைவர்” என்று முகம்மதுநபி சொல்லி இருக்கும்போது, இந்த ………… பெண்கள்,இவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தால் ஆசிட் வீசாமல், வேடிக்கையா பார்பார்கள்///

    ஒரு வசனம் அல்லது சில வார்த்தைகள் என எடுத்துக் கொண்டு ஒரு மார்கத்தை விமர்சிக்க நினைப்பது வெறும் வார்த்தை மோதலுக்கான தயாரிப்பு மட்டுமே..யூத சியோனிஸ்டுகளும், இந்துத்துவவாதிகளும் இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் சில முயற்சிகளை இது போன்ற வடிவத்தில் தான் செய்கிறது.

    கம்யூனிசத்தை விமர்சிக்க அதன் கொள்கைகளை பற்றியும், அது ஒவ்வொரு நாடுகளிலும் ஏற்படுத்திய வேறு வேறு தாக்கங்களையும் முழுஆய்வு செய்து ஒப்பிட தெரிந்தவனால் மட்டும் தான் அறிவு பூர்வமாக விமர்சிக்க முடியும்…..
    அதே போலத்தான் இஸ்லாமும், அதை நீங்கள் விமர்சிக்க முற்படும் வேளையில் அதனை பற்றிய முழு அறிவுடன் பிறகு களம் காணுங்கள்.

    இஸ்லாம் பெண்ணடிமையை வழியுறுத்தும் மார்க்கமா என்ற தலைப்பில் புதிய கலாச்சாரம் இன்னும் பல ஆய்வுகளை நடத்தட்டும், சமகாலத்திய விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை நடத்தட்டும், எல்லா காலத்திற்கும் பொறுத்தமாக இஸ்லாமிய கருத்துக்கள் இருக்கிறதா என சுய ஆய்வுகள் நடத்தட்டும் ….பிடிவாத இஸ்லாமியர்களே நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவர்கள் புரிந்து கொள்வதற்கான ,இஸ்லாத்தை முழுமையாய் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதுதான்..

    இஸ்லாம் என்ன விமர்சிக்க கூடாத மார்க்கமா? விமர்சிப்பதால் அதன் புனிதம் குறைந்து விடும் என்று பிடிவாத இஸ்லாமியர்களின் நம்பிக்கை மிகவும் வருந்ததக்கது.
    அதை இறைவன் பாதுகாப்பது உண்மை என்றால் பிறகு எதற்கு இந்த வீண் தர்க்கங்கள் ,வார்த்தை விளையாட்டுகள்… இஸ்லாமை புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவுங்கள்,

    எதற்கெடுத்தாலும் வீண் தர்க்கம் செய்து எளிதாய் சென்றடைய வேண்டிய இஸ்லாத்தை மிகவும் கரடுமுறடாய் ஆக்கி அச்சமடைய வைக்கும் சில இஸ்லாமிய சக்திகளின் தீவிர பிரச்சார முறை மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.

  19. இங்கு இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்று யாரும் சொல்லவில்லை மாறாக விமர்சனங்களை நேர்மையாகவும் உரிய ஆதாரங்களோடும் வையுங்கள் என்று கூறினால் புத்தி காய்துபோன இந்த கம்யூனிச கழிவுகளின் பதில் //இஸ்லாத்தை விமர்சித்தால் உடனே வந்துவிடுகிறார்கள் மூட்டை முடிச்சுகளுடன் // என்பதுதான்

    அது என்னா? // “இந்து மதத்தையும், பார்பனீயத்தையும் எதிர்த்து எழுதும்போதெல்லாம் புதிய கலாச்சாரம் பிடித்தமான ஒன்றாக இருந்துவிட்டு”// யோவ் ஆனாலும் உங்களுக் லெல்லு ரொம்பதான் அதிகம் பழைய போப்பா வாங்குகிறவன் கூட உங்க புதிய கலாச்சாரத்தை(!) பார்த்தா தலைதெரிக்க ஓடிவிடுவான் அது எப்படி கொஞ்சம் கூட வெக்கபடாம இப்புடி எழுதிபுடிங்க

    அப்புறம் //தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிஜேவின் குழுவினர் பிற இசுலாமியக் குழுக்கள் மற்றும் மத த்தவர்களுடன் விவாதம் செய்துவிட்டு பிறகு தமது பத்திரிக்கையில் ‘நாங்கள் ஜெயித்துவிட்டோம் என்று தமக்குத்தாமே முதுகை சொரிந்துகொண்டு பீற்றிக்கொள்வது வழக்கம்// ஏம்பா இணையதளம் என்றால் வினவு மட்டும்தான்னு நினச்சுகிட்டிங்களா, உங்க கம்யூனிச காமரேடுகளின் கோவனத்தை உறுவி ஓட விட்டதை இப்பவும் யூடிபில் பார்களாமே

    அப்புறம் கடைசியா என்டுகார்டுதான் பிரமாதம் //பெண்கள் மீதான இது போன்ற கொடூரங்களுக்கு விரலைக்கூட அசைக்காத இவர்களை இசுலாமிய மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும்// பெண்களுக்கு எதிரான கொடுமையை விடுங்க பொதுவாக மனிதநேயத்திற்க்கு அநீதி இழைக்கபட்டால் இவர்கள் என்ன செய்தார்கள் என்று புதிய கலாச்சாரத்தில் விளம்பரம் செய்து அறிந்துகொள்ளும் நிலையில் இசுலாமிய மக்கள் இல்லை. முச்சந்தியில் உண்டியல் குலுக்குவதும் தலையில் துணியைக் கட்டிகொண்டு பெண்களை தப்பட்டை அடித்துகொண்டு ஆட விடுவட்டதையும் தவிர பெண்களுக்காக தாங்கள் எதை கிழித்தீர்கள்?

    • //பழைய போப்பா வாங்குகிறவன் கூட உங்க புதிய கலாச்சாரத்தை(!) பார்த்தா தலைதெரிக்க ஓடிவிடுவான்//

      பு.க.வில் காஞ்சி சங்கராச்சாரியரைப் பற்றிய கட்டுரைகள் வந்தபோது பர்தாவுக்குள்ளிருந்து இனிக்க இனிக்க பேசியதும், ஷகீலா தொடர்பான கட்டுரையின் போது பர்தாவை விலக்கி காறி துப்பியதும் எங்களுக்கும் தெரியும்.

  20. கழியாத அல்லது இதுவரை கழிக்கவே செய்யாத யூஏஇ தமிழனே,

    அந்த சுட்டியில் இருப்பதை தரவிறக்கி படித்துப் பார்த்தீர்களா? ஆதாரத்தோடு தானே எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் புத்தி ஈரமாக இருப்பதாக நீங்கள் நம்பினால் ஏன் பதில் கூற முயலக்கூடாது.

    அது என்ன? கோமணத்தை உறுவிப்பார்ப்பது தான் உங்கள் முழுநேரத் தொழிலா? அந்த யூடியூப் சுட்டியை கொடுங்கள். நீங்கள் உறுவிய அழகைப் கொஞ்சம் பார்க்கிறோம்.

    பறையடிப்பதையும், தலையில் சிவப்புத் துணி கட்டியிருப்பதையும் மட்டும் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா.எங்கள் பெண் தோழர்களுடன் பேசிப்பாருங்கள்.பெண்மை என்றால் என்ன என்பதை மட்டுமல்ல, தேவைப்பட்டால் ஆண்மை என்றால் என்ன என்பதற்கும் அவர்கள் உங்களுக்கு பாடம் எடுப்பார்கள்.

    • சகோ. செங்கொடி அவர்களே, கம்யூனிச கழிசடைகள் என்று எழுதிவிட்டு அதன் கீழ் தாங்களின் பின்னுட்டத்தை எடுத்து எழுதியது தங்களை வருத்தமடைய செய்துள்ளது என்று நினைக்கின்றேன். வினவு வலைதளம் கம்யூனிச கொள்கைகளை ஆதரிப்பவர் மட்டுமே இங்கு உள்நுழையவும், வாசிக்கவும், கருத்துகளை பதியவும் அனுமதி என்ற நிபந்தனை வைத்திருந்தால் மாற்று கொள்கை உடையவர்கள் இங்கு வரப்போவதும் இல்லை பின்னுட்டம் இடப்போவதும் இல்லை. ஆனால் வினவின் அழைப்போ! ‘மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஓத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக’ என்பதுதான் இப்படிபட்ட ஒரு தளத்தில் ‘மூட்டை முடிச்சுடன் வந்துவிடுகிறார்கள்’ என்று எள்ளி நகையாடுவதுதான் தங்களின் கம்யூனிச சித்தாந்தம் கற்றுகொடுத்த ஒழுக்க நெறியா. விமர்சனங்களும் விவாதங்களும் அறிவுத் தேடலின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர உன்னை கேவலப்படுத்தி கோவப்படுத்தி எப்பாடு பட்டாவது என் கருத்தை நிலை நிறுத்துவேன் என்ற முன்முடிவோடு அமையக் கூடாது. இங்கு கருத்து என்ற பெயரில் காரி உமிழும் காமரேடுகள் அனைவருக்கும் என்னுடை பொதுவான கேள்வி இதுதான். நிங்கள் விரும்பும் கம்யூனிசத்தை விமர்சித்தால் உங்களுக்கு ஏற்படும் கோபம் நியாயமானதாகவும் மற்றவர்களின் கொள்கைகளை நீங்கள் விமர்சிக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் கோபம் மட்டும் அநியாயமாவும் உங்களுக்கு தெரிவது ஏன்? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாரையும் எப்படியும் வசைபாடிவிட்டு அதன் அடியில் இங்கு வரும் பின்னுட்டங்களுக்கு நாங்கள் பொருப்பள்ள என்று பொருப்பாக எழுதிவைக்கும் இதுபோன்ற இனைய தளங்களிலும்; இதை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களிடமும் கருத்து பரிமாறத்திற்கு வருவதே எங்களின் முதல் தவறு மேலும் இதுபோன்ற கட்டுரைகள் மூலமாகவும் அதன் தொடர்ச்சியான பின்னுட்டங்களின் மூலமாகவும் சமுகதில் நிலவியிருகின்ற மத இன துவேஷங்களை மேலும் வளர்க்க செய்கிறீர்களே தவிர வேறு ஒன்றும் செய்துவிட போவதில்லை. TNTJ Debate என்று யூடிபில் தேடினால் கிடைக்க கூடியது தான் ஆனால் நீங்கள் அதை அவர்கள் போட்டிருப்பது கருப்பு சட்டை நாங்கள் போட்டிருப்பது சிகப்பு சட்டை என்று எளிதாக புறம்தள்ளி விடுவீர்கள். கடவுள் மறுப்பில் நீங்கள் இருவரும் ஒரேபக்கதில் தான் நிற்கின்றீhகள் என்ற கருத்தின் அடிப்படையில் தான் அப்படி எழுதினேன். முடிந்தால் கண்ணியமாக நேரடி விவாததிற்கு வாருங்கள் இல்லை நான் நெட்டில் விவாதம் என்ற பெயரில் சிந்துபாத் தொடர் எழுதுவேன் என்றால் தாரளமாக தொடருங்கள் அது உங்கள் கம்யூனிசத்திற்கு எந்தவித பயனையோ அல்லது கடவுள் கொள்கைக்கு எந்தவித பாதிப்பையோ ஏற்படுத்திவிட போவதில்லை.

  21. அன்புள்ளம் கொண்ட வினவு நிர்வாகிகளுக்கு, சகோதரர். அப்துல்லாஹ்வின் கருத்துக்களை சற்று ஆழமாக சிந்திக்கவும். அதே போல தோழர் செங்கொடிக்கு, உங்களது எழுத்துக்களால் கவரப்பட்ட வாசகர்களில் நானும் ஒருவன் என்கின்ற அடிப்படையில் சொல்கிறேன். தயவுசெய்து இஸ்லாத்தைப் பற்றி உங்கள் மனதில் உள்ள தவறான எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு இஸ்லாத்தை படியுங்கள். பின்னர் விமர்ச்சனம் செய்யுங்கள்.

    • நண்பர் முகம்மது ஷஃபீக்,

      இஸ்லாம் குறித்த சரியான எண்ணங்கள் என்பது என்ன? இஸ்லாமியர்களாகிய நீங்கள் எப்படி நம்புகிறீர்களோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் இஸ்லாம் குறித்த சரியான எண்ணமா? இதுவரையான என்னுடைய விமர்சனங்கள் இஸ்லாத்தை படிக்காததன் விளைவு என்று எண்ணுகிறீர்களா? ஆம் என்றால் சுட்டிக் காட்டுங்கள். தவறாக இருக்கும் பட்சத்தில் திருத்திக்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறேன். ஆனால் இந்த ஆயத்தம் உங்களிடம் இருக்கிறதா என்பதே கேள்வி.

      • செங்கொடி ////இதுவரையான என்னுடைய விமர்சனங்கள் இஸ்லாத்தை படிக்காததன் விளைவு என்று எண்ணுகிறீர்களா? ஆம் என்றால் சுட்டிக் காட்டுங்கள். தவறாக இருக்கும் பட்சத்தில் திருத்திக்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறேன்.////
        இஸ்லாத்தின் வாழ்வியலை படிக்காததன் விளைவே .இஸ்லாத்தை படிக்கு முன் கம்யுனிஸ்ட்கள் இந்தியாவில் மிகக் குறைவு.அதிலும் உண்மை கம்யுனிஸ்ட்கள் என்று நீங்கள் சொல்லும் புகவினர் அதை விட பலமடங்கு குறைவு .உங்களை உண்மை கம்யுனிஸ்ட்கள் என்று போலிகள் ஒப்புக்கொள்வர்களா? என்பதை நான் அறியமாட்டேன்.ஆதலால் போலிகள் உங்களை உண்மை கம்யுனிஸ்ட்கள் என்று ஒப்புக் கொள்ளும் அளவில் நடந்து கொண்டு அதன் பின்னர் அவர்களையும் உண்மை கம்யுனிஸ்ட்களாக மாற்றி விட்டு அப்புறம் சோஷலிச பாதை பயணத்தை முடித்து கம்யுனிச வாழ்க்கையை தொடங்கும் வேளையில் இஸ்லாத்தை விமர்சிக்க வாருங்கள்

  22. அரேபியா, ஆப்கானிஸ்தான் அங்கேயெல்லாம் பொம்மனாட்டிகள் பர்தா போடறா.. ஆம்படையாள் புதர் கணக்கா தாடி, மீசை வச்சுக்கறா.. சட்டுன்னு பாத்தா ரெண்டு கண்ணும், பாதி மூக்கும் தான் தெரியறது.. ரெண்டு பேருமே எட்டி எட்டித் தானே வெளி லோகத்த பாக்குறா?? இதிலே எங்கே ஓய் பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் வர்றது??

    ப்ரச்னை எப்போ வர்றதுன்னாக்கா ஆம்பிள பசங்க ஷாருக் கான் கணக்கா ட்ரிம்மா மழிச்சுண்டு ஒரு கைல செல் போனும் இன்னோரு கைல க்வாட்டருமாத் திரியறப்ப, பொம்மனாட்டி மாத்ரம் பர்தாவோட இல்லேன்னா கெட்டுப் போவள், பர்தா போட்டு மூடறியா இல்ல ஆசிட் ஊத்தி மூடவைக்கவான்னு முல்லா முதக்கொண்டு எல்லாப் பசங்களும் சொல்றப்போதான்.

    பர்தாவிலும் ஒரு சேஃப்டி இருக்குன்னு பொம்மனாட்டிகளா இஷ்டப்பட்டு போட்டுக்கிட்டா அது அவாளோட உரிமை.

    யாரோ ஒரு பாய் ஓடி வர்றாமாதிரி இருக்கு.. அப்றமா வந்து மிச்சத்தை சொல்றேண்ணாவ்…

    • அம்பி, அந்த பாய் தயிர்சாதம் வாங்கினாரா, புளியோதரை வாங்கினாரா? சரி, விட்ட இடத்திலேருந்து தொடரலாமில்லையோ உம்ம உபன்யாசத்தை?

      • போன வருசம் எந்த பாய் என்ன வாங்கினார்ங்கறதைத் தெரிஞ்சுண்டு என்ன ஆகப் போறது ஓய்.. உபன்யாசம் கேட்க உம்மப் போல ஒரு நாலு பேராச்சும் இன்னும் இருக்காளே இந்த லோகத்திலெ.. ஏன் சொல்றேன்னா, இந்த 9 மாசத்திலெ கலி ரொம்ப முத்திப் போயிடுத்து போங்கோ..

    • இதில் பல பொய்யான ஹதிகள் உள்ளன ஆயின் அளிசினாவை பொதி சோக்கும் கழுதையாக வரும் முன்னர் இஸ்லாத்தை விட சிறந்த வாழ்க்கை நெறிகளை அடையாளம் காட்ட வேண்டுகிறேன்.

  23. அன்புச் சகோதரர் செங்கொடி அவர்கள் பீஜேவுடன் நேருக்கு நேர் விவாதிக்க வருகிறேன்
    என்று சொல்லிவிட்டு,எப்போது வருவீர்கள் , உங்கள் பயண டிக்கெட் தங்குமிடம் என
    அனைத்து செலவுகளை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என தவ்ஹீத் ஜமாத் சொல்லி பல வருடஙக்ள் ஒடி விட்டது. ஆனால் அதற்கு துப்பில்லாமல் பர்தா போட்டு பெட்டையாகத் திரியும் இந்த செங்கொடி எல்லாம் நியாயம் பேச வந்துட்டார்பா. வினவுக்கும், செங்கொடிக்கும் இதையே விவாத அழைப்பாக நாங்கள் வைக்கிறோம். வரத்தயார் என்றால் இப்போதே என் மெயிலுக்கு பதில் அனுப்பலாம். ஆனால் நேரில் வரத்துப்பின்றி இப்படி உள்ளே ஒழிந்து கொண்டு வெப்சைட்டில் எழுதுவதற்குப் பெயர் பெட்டைத்தனம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

    அப்படியும் மீறி நீங்கள் விவாதத்திற்கு வந்தால் செத்துப்போன அழுகிய பிணமான கம்னியூச கொள்கை பற்றி எங்களுக்கு இருக்கும் சந்தேகத்தையும், வாழும் இஸ்லாமி கொள்கை பற்றிய உங்கள் குற்றச்சாட்டுக்களையும் நேருக்கு நேர் பேசிக்கொள்ளலாம்.

    கம்னியூசம் செத்து நாறிப்போன பிணமாக மாறிவிட்டது என சீனா,ரஷ்யாவே கைவிட்டு விட்ட போது இங்கே கூலிக்கு மாறடிக்கும் வினவு, செங்கொடி, இப்னுசாகிர் போன்றவர்கல் லபோதிபோ என மாரடித்துக் கொள்வது சிரிப்பைத் தருகின்றது

    விவாதத்திற்கு தயார் என்றால் உடனே கீழ்க்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்பவும்

    mazeeh1981@gmail.com

    • //ஆனால் அதற்கு துப்பில்லாமல் பர்தா போட்டு பெட்டையாகத் திரியும் இந்த செங்கொடி எல்லாம் நியாயம் பேச வந்துட்டார்பா// what do you think about girls….what is meant by pottaithanam….pengal ellorum ondru thirandaal antha sakthiyai ungalaal ethir kolla mudiyaathu….ithilaye ungal aanathikkam theriyavillai….pengal eppothum ullaye adangi kidappavargal endru solli vitirgale….adangi kidanthaal pottaithanam veliye thirinthaal aambalathanama???//ஆனால் நேரில் வரத்துப்பின்றி இப்படி உள்ளே ஒழிந்து கொண்டு வெப்சைட்டில் எழுதுவதற்குப் பெயர் பெட்டைத்தனம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.//speak only about them not about the women ningalum piranthathum oru pennin vayitril thaan enbathai maranthu vidathirgal muthalil ithai sari seithu piragu ungal madhathai niyayapaduthungal

      • \\ningalum piranthathum oru pennin vayitril thaan enbathai maranthu vidathirgal\\

        எம்மை படைத்தது ஒரு பெண் அல்ல,,, யாம் அல்லாவால் படைக்கப்பட்டோம் என்று பதில் வந்தாலும் வரலாம்…:)

        • sariyaaga sonnirgal….eppothu paarthalum matham, jathi endru alayum ivargalukellam veru velaye illaya…ippadi irupathaal than sudhanthiram kidaithu 65 aandugaluku mel aagiyum naam innum munneramal irukirom en jathi perusu en matham perusu endru namakkul name adithu kondu saagirom….ethavathu oru sandai vanthal en mela kai vechitila en jathi karana ellam kutitu varen nu prachana panna vendiyathu…enniki thiruntha poringa ellarum….ipdiye adichikitu iruntha INDIA ulaga varaipadathula irunthe tholanju poidum….mothalla ellarum manithargala irunga appuram Hinduva Muslima Christiana irukalam….namma otrumai inmai than thiviravathikalukum adutha naatavargalukum saathagama iruku….kadaisiyil namma nattaye tholachitu nikka porom anniki theriyum…amma nu aluthalum varathu appa nu aluthalum varathu…

      • சகோ.மீனாட்சி ,அவர் தமிழன் சொல் வழக்கில் எழுதியுள்ளார்.இங்கே பெட்டை என்ற சொல் குத்து சண்டையில் மல்யுத்தத்தில் இன்னும் பல விளையாட்டுக்களில் ஆணும் பெண்ணும் சமமின்மையே கருத்தில் கொள்ளப்பட்டு கையாளப்பட்டுள்ளது.பெண்களை அவமானத்த வேண்டும் என்ற நோக்கில் அல்ல.

    • உங்களால் ஒருவரை திட்டுவதற்கு கூட ஒரு பெண்ணை (பெட்டை என்று ) ஏன் அடையலப்படுத்த படுத்தவேண்டும். . இது உங்களுக்குள் இருக்கும் ஆணாதிக்க திமிரின் அடையலாம் தான் இது ….

    • ஏம்பா மஸீஹு,

      எழுத்து விவாதத்துக்கு தயார் என நான் அறிவித்தும் ஆண்டுக் கணக்காகிறதே தெரியாதோ உங்களுக்கு? மெய்யாகவே நீங்கள் பர்தா போடாமல் தாடி வைத்திருந்தால் உங்கள் பீஜேவை அழைத்து வாருங்கள் எழுத்து விவாதத்திற்கு, என்னுடைய மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே செங்கொடி தளத்தில் இருக்கிறது, தேதி கேட்டு மின்னஞ்சல் செய்யப்பா. முடியவில்லை என்றால் கோழைக் கூச்சல் வேண்டாம்.

      • செங்கொடி நாங்கள் முதலில் கம்யுனிசத்தை விமர்சித்தால் நீங்கள் சொல்லுவது போல் உங்கள் அழைப்புக்கு முதலிடம் கொடுக்கலாம் .ஆனால் நீங்கள் அல்லவா இஸ்லாத்தை முதலில் விமர்சிக்கக் ஆரம்பித்தீர்கள் .நேரடி விவாதத்திற்கு வருகிறேன் என்று சொன்ன நிலையிலே எழுத்துவிவாதம் என்று மறுத்து விட்டீர்கள்.நீங்கள் தேடுதலில் இருந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய நீங்கள் அல்லவா முதலில் பீஜே போன்ற அறிஞர்களை சந்தித்து இஸ்லாத்தை பற்றிய உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் தெரிந்து அதன் உண்மை தன்மை ஆயிந்திருக்க வேண்டும்?

    • விவாத்தை நேரில்தான் செய்வோம் எழுத்து மூலமாக விவாதிக்க மாட்டோம் என்பதுதான் இசுலாமா? தோழர் செங்கொடிதான் விவாதத்திற்கு தயாரக இருக்கிறேன் என்கிறார். இணையத்தில் எழுத்து விவாதத்திற்கு வரவேண்டியது தானே? அத வுட்டு போட்டு நேர்ல வா! நேர்ல வா ! ன்னா என்னயா அர்த்தம், பெரிய மாபியா ரவுடி கும்பல் தொனியில் இருக்கிறது உம்முடைய விவாதம். முதலில் எழுத்து விவாதத்துக்க வா பிறகு நேர்ல வர்றத பத்தி பேசலாம்.

      //பர்தா போட்டு பெட்டையாகத் திரியும் இந்த செங்கொடி எல்லாம் நியாயம் பேச வந்துட்டார்பா. //

      பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க கொழுப்பு வழிந்தோடுகிறது இதைத்தானே உன் மதம் சொல்லிக் கொடுத்திருக்கிறது? இதை படிக்கும் முசுலிம் சகோதரிகள் சிந்திப்பீர்!.

      //அப்படியும் மீறி நீங்கள் விவாதத்திற்கு வந்தால் செத்துப்போன அழுகிய பிணமான கம்னியூச கொள்கை பற்றி எங்களுக்கு இருக்கும் சந்தேகத்தையும், வாழும் இஸ்லாமி கொள்கை பற்றிய உங்கள் குற்றச்சாட்டுக்களையும் நேருக்கு நேர் பேசிக்கொள்ளலாம்.

      கம்னியூசம் செத்து நாறிப்போன பிணமாக மாறிவிட்டது என சீனா,ரஷ்யாவே கைவிட்டு விட்ட போது இங்கே கூலிக்கு மாறடிக்கும் வினவு, செங்கொடி, இப்னுசாகிர் போன்றவர்கல் லபோதிபோ என மாரடித்துக் கொள்வது சிரிப்பைத் தருகின்றது//

      கம்யூனிசத்தின் மீதான சந்தேகத்தை எழுத்து மூலம் நீக்கி கொள்ளலாம் மற்றபடி உண்மையில் இசுலாம் அழுகி நாறி பிணமாய் மாறிக்கொண்டிருக்கிறது பாடைகட்ட வேண்டிய மதத்தை தூக்கிவைத்துக்கொண்டு சொரக்கத்துக்கு மாரடிக்கும் உம்மை போன்ற அன்சாரி வகையறாக்களுக்கு புரிவதில்லை.

      • விடு,தலை///கம்யூனிசத்தின் மீதான சந்தேகத்தை எழுத்து மூலம் நீக்கி கொள்ளலாம் மற்றபடி உண்மையில் இசுலாம் அழுகி நாறி பிணமாய் மாறிக்கொண்டிருக்கிறது பாடைகட்ட வேண்டிய மதத்தை தூக்கிவைத்துக்கொண்டு சொரக்கத்துக்கு மாரடிக்கும் உம்மை போன்ற அன்சாரி வகையறாக்களுக்கு புரிவதில்லை///

        பெரியார் போனவுடனே உங்கள் நாத்திகம் கபர்ஸ்தான் குழியில் புதைக்கப் பட்டுவிட்டது.மிச்ச மிருந்த நாத்திகம் கழுதை தேஞ்சி கட்டெறும்பாகி இப்போது சிற்றேரும்பாகி விட்டது.தமிழ்நாடு இப்போது ஆன்மிகத்தில் ஜொலிக்கிறது திக வீட்டு பிள்ளைகளெல்லாம் இப்போது கோவில் குளம் என்று அலைவதை அறிவீரா?

        • ஒசாமா இறந்தவுடன் உலகத்தில் ஒட்டுமொத்த தீவிரவாதமும் ஒழிந்துவிட்டது என்று கூட புளுகித் தள்ளலாம் பாய்…!!! இதுபோன்ற செய்திகளை சொல்லும்போது அதற்கான தரவுகளை கொடுத்தால் நல்லது. கருணாநிதியும், வீரமணி மட்டுமே பெரியாரின் வாரிசுகள் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது உங்களின் அறியாமையே இப்ராகிம் பாய்….!!!

      • விவாதம் விசயமாக எங்களது பழைய உடன்பிறப்பு செங்கொடி பதில் அளிப்பார் விடு தலை நீங்கள் அதில் தலை விடுவதை நிறுத்துங்கள்

  24. ஏப்பா மதத்தை பத்தி பேசினா மட்டும் கூட்டம் கூட்டமா வரீங்க. சாமி அவ்வலவு முக்கியமா? சாமியை படைச்சதே நாம தானய்யா. அவ அவனுக்கு வசதிபட்டத படைச்சிட்டு அப்புரம்நான் பெருசு,நீ பெருசு சண்ட வேற, பொதும்ம்யா உங்க சாமி சங்காத்தம் (எ ல்லாத்தையும் தான் சொல்றேன்) நாறிப்போச்சு.
    நான் டெக்ரானுல்ல இருந்திருக்கேன். அங்க ஆண்களெல்லாம் அழகா தாடி இல்லாம இருக்காங்க, ஆனால் பெண்கள் முகத்தை காட்டலாம், அதுக்கு மேலே ஒரு ஆடைக்கு மேல இன்னொரு ஆடை முட்டி வரை போடனும். அதே டெக்ரானுலதான் அடிக்கடி செல்லும் ஒருகடைகாரர் பெண்கள் வேண்டுமா என்று கேட்டார். சாராயம் தடை செய்யப்பட்டுள்ள டெக்ரானிலே சாராயம் கிடைக்கும். ஒருத்தன் மூனுநாலு பொண்டாட்டி கட்டுரான்.

    இது ஏன் ஒருதடவ ஆசிய பெண்கள் கபடி போட்டியில் நம்ம ஊர் பெண்கள் இறுதியாட்டத்தில் ஆடினார்கள், அதை பார்க்க கூட எஙகளுக்கு அனுமதி இல்ல. இது ஏன்?

    வெளியூர் பெண்கள் அங்கு சென்றாலும் பர்தா போடனும்(த்லை முதல், முட்டி வரை ) முகத்தை தவிர மூடனும். இதுலாம் ஏன்?

    இத விட கொடுமை, ரம்சான் நேரத்தில் அங்கு இருந்தால் நாங்களும் பகலில் பட்டினி கிடக்கனும், அலுவலகத்தில் தண்ணி கூட வைக்கமாட்டாங்க. இது ஏன்?

    எனக்கு டெக்ரான் ரொம்ப பிடிக்கும், இந்த மத கோட்பாடைத் தவிர. அங்கு அவ்வளவு மத சம்பந்தமான விதிகள் இருந்தாலும் அந்த விதிகளை மீறுபவர்களே அதிகம். அதை விட்டு இருந்தால் டெக்ரான் உலத்தில் ஒரு வலிமைமிக்க நாடாகியிருக்கும். அதை தடுப்பது அவர்கலின் மதம் தான்.

  25. தோழர் சாகித்துக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் மதவெறியர்களுடனான போராட்டத்தை ஒரு கம்யூனிஸ்டின் விடா முயற்சியோடு !
    இசுலாம் சமாதானம் என்ற பெயரில் ரீல் விடும் மோசமான உணர்வுக்கு பதில் சொல்லும் கட்டுரை, தேவையான ஒன்று.
    மதவெறியர்கள் மறுமொழி என்ற பெயரில் நாறடித்து தங்களின் மதயோக்கியதையை காட்டிடிடிடியுள்ளனர்

    • நீங்கள் நாத்திகர் என்றால் நீங்கள் சாதி அடிப்படையில் திருமணம் செய்ய வில்லை.உங்களது மனைவி உங்களைப்போல் நாத்திகர் உங்களது குழந்தைகள் நாத்திகர் .நீங்கள் பிறப்பில் என்ன சாதி?இப்போது அதைவிட தாழ்ந்த சாதியாக சமுதாயம் கொள்ளும் சாதியில் உங்களது திருமண உறவுகளை வைத்துக் கொள்வீர்களா? உங்கள் மனைவி உங்களை பெயர் சொல்லி அழைக்கிறாரா?அல்லது “என்னங்க “தனா?

      • இதை என்னமோ பெரிய புலானய்வு கேள்வியா நெனச்சுகிட்டு கேட்டிருக்கிறீர்களே அதற்காக ஒரு 😛

        //நீங்கள் நாத்திகர் என்றால் நீங்கள் சாதி அடிப்படையில் திருமணம் செய்ய வில்லை.உங்களது மனைவி உங்களைப்போல் நாத்திகர் உங்களது குழந்தைகள் நாத்திகர் .நீங்கள் பிறப்பில் என்ன சாதி?இப்போது அதைவிட தாழ்ந்த சாதியாக சமுதாயம் கொள்ளும் சாதியில் உங்களது திருமண உறவுகளை வைத்துக் கொள்வீர்களா?//

        நான் நாத்திகன்தான் எங்கள் தோழர்கள் அனைத்தும் சாதிகளிலிருந்து அதன் நச்சுவேரை அழித்துவிட்டு பொதுவுடைமைவாதிகளாக வாழுகின்றனர் அவரகளின் தகுதிகேற்ற தோழர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் கண்டிப்பாக அது சாதி ஒழிப்பு திருமணமாகவே இருக்கிறது. பிறப்பால் தாழ்ந்ததாகவும் உயர்ந்ததாகவும் புனையப்பட்டுள்ள சாதியில் இருந்து வந்தவர்கள்தான் இவர்கள் மேல் சாதி கீழ் சாதி என்ற பேச்சுக்கே இடமில்லை
        பிறப்பால் சாதியென்று ஒன்று இல்லை பாயி !

        மனைவியும் கணவனும் ஒரே வயது என்றால் பெயர் சொல்லி கூப்பிடுவதுதான் சரியானது. வயது வேறுபாடு இருக்கும்போது மரியாதையாக அழைப்பதுதானே சரி, இது மனைவி மட்டுமல்ல அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும், அதே சமயம் கணவனின் பெயரை உச்சரிக்ககூடாது என்பது மடமைத்தனம். அப்துல்லா எங்க போயிருக்காறு என்று கேட்டால் அவுங்க வெளிய போயிருக்காங்க என்பது தவறு அப்துல்லா வெளிய போயிருக்கிறார் என்று சொல்லலாம் வயதுக்கான மரியாதை என்பது குறிப்பிட்ட நபரின் பெயரையே சொல்லக்கூடாது என்பது முட்டாள்தனம்.

        • விடு,தலை ///எங்கள் தோழர்கள் அனைத்தும் சாதிகளிலிருந்து அதன் நச்சுவேரை அழித்துவிட்டு பொதுவுடைமைவாதிகளாக வாழுகின்றனர் அவரகளின் தகுதிகேற்ற தோழர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்////
          பொதுவுடமைவாதி என்றால் திருமணம் என்பது ஆணாதிக்கம் விஷயம் அல்லவா?திருமண வாழ்க்கையையும் பொதுவுடமையாக இருக்கும் என்றல்லவா செங்கொடி அண்ணன் சொல்லித்தந்துள்ளார்கள்.
          ///மனைவியும் கணவனும் ஒரே வயது என்றால் பெயர் சொல்லி கூப்பிடுவதுதான் சரியானது. வயது வேறுபாடு இருக்கும்போது மரியாதையாக அழைப்பதுதானே சரி, இது மனைவி மட்டுமல்ல அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும்,////
          நீங்களும் ஆணாதிக்கவாதிகள் போலவே ஆணைவிட குறைந்த வயதுள்ள பெண்களை திருமணம் செய்து வருகிறீர்கள்.சரி இருக்கட்டும் தினசரி உங்களது மனைவிதான் உங்களுக்கு ஆக்கி போட்டு வைப்பாரா?இல்லையெனில் தினசரி மாற்றி மாற்றி ஆக்கி போடுவீர்களா?

          • //தினசரி உங்களது மனைவிதான் உங்களுக்கு ஆக்கி போட்டு வைப்பாரா?இல்லையெனில் தினசரி மாற்றி மாற்றி ஆக்கி போடுவீர்களா?//
            [1]When we start talking the equal rights for women, it should be started from our home. Cooking food, doing all home work should be shared by husband and wife.
            [2]I have seen Male MKEK people who cook food in their home. During 1994, In my college days at Trichy I meet the cultural committee of MKEK several time. Both male and women are sharing their jobs in the home including cooking work.
            [3]The dressing style of human is based on the climate, cultural values of own race, cultural influence of other races and religion too. But everything is intermixed. So do u think all the Muslims in the world are wearing dress in the same manner? Are u wearing the dress of Thiru Bin ledan ? No way. Mostly Tamil Muslims are following Tamil people style and also the dressing style of Europeans.
            [4]Your question is absolutely correct. “ //தினசரி உங்களது மனைவிதான் உங்களுக்கு ஆக்கி போட்டு வைப்பாரா?இல்லையெனில் தினசரி மாற்றி மாற்றி ஆக்கி போடுவீர்களா?//”
            [5]We male people should respond for this question positively and truly. You are also should answer along with viduthalai for this question.
            [6]Except some works like delivery of child, feeding mother milk ALL OTHER woks like child care and home making should be shared by male and female. Then only the real love will blossom between Husband and wife.
            [7]One more thing I like to tell u and communist people about marriage system. The marriage system is influenced by the people who are rulings this state.[Nation] .I do not mean the political parties. But I mean the political CLASS[capitalist or land lords or communist].
            [8] My Final point and question is
            The women who conceive a child in her, who develop the child in here, who deliver the child, who feed the mother milk, who dress the child, who educate the child informally and formally and who also earn bread for her family, DO NOT THEY [WOMEN] KNOW HOW TO DRESS BY OWN?

          • [1]Your question is absolutely correct. “ //தினசரி உங்களது மனைவிதான் உங்களுக்கு ஆக்கி போட்டு வைப்பாரா?இல்லையெனில் தினசரி மாற்றி மாற்றி ஆக்கி போடுவீர்களா?//”

            [2]We male people should respond for this question positively and truly. You are also should answer along with viduthalai for this question.

          • Except some works like delivery of child, feeding mother milk ALL OTHER woks like child care and home making should be shared by male and female. Then only the real love will blossom between Husband and wife.

          • தினசரி உங்களது மனைவிதான் உங்களுக்கு ஆக்கி போட்டு வைப்பாரா?இல்லையெனில் தினசரி மாற்றி மாற்றி ஆக்கி போடுவீர்களா?//
            [1]When we start talking the equal rights for women, it should be started from our home. Cooking food, doing all home work should be shared by husband and wife.

  26. நாகரீகமற்ற மறுமொழியை அல்லாவின் ஆணைப்படி எழுதி தள்ளியிருக்கின்றன
    மதம் என்ற பெயரி வேசம் போட்டுக்கொண்டு திரியும் கூட்டம். ஒருத்தன் புடவை கட்ட சொல்லறியாங்றான், இன்னொருத்தன் நிர்வாணமா அலையவுடுங்றான், ஏண்டா ! இசுலாம் பொம்பளைங்க யாரும் புடவை கட்றதேயில்லியா? புருகா மட்டும் போட்டுகிட்டு இருக்காங்ளா? ஒரு வேளை தமிழ்நாடே(!) இஸ்லாம மாறுதுன்னு வெச்சுக்கோங்க புர்கா மாட்டுகிட்டு எப்டி விவசாய வேலைய செய்ய முடியும், ஓ ! நீங்கதான் பொம்பளைங்கள வெளியவே வுட மாட்டிங்க இல்லியா பெண்கள பாலியல் பொருளாவே பார்க்கிறததான இசுலாம் சொல்லி குடுக்குது. புடவை கட்டும் உழைக்கும் பெண்களக்கூட உங்கள் முஸ்லீம் பார்வையோட சல்லு ஒழிக்கிக்கிட்டுதான் பார்க்கறீங்களா? புடவை பாதுகாப்பான உடையில்ல என்பது உண்மைதான் புர்க்காவும் அப்படிதான் இரண்டுமே அவசரத்திற்கு ஓட முடியாத காட்டுமிராண்டி உடைகள்தான், இன்றைய காலத்தில் ஆபாசமில்லாத பேன்ட் சட்டையே சரியானது, இசுலாம் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை , இந்து மதம் போலவே இசுலாமிலும் சாதி வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதற்கு நடைமுறைகளே உதாரணங்களாக இருக்கின்றன. அரே ராம் என்பதும் யா அல்லா என்பதும் ஒரே அரசியலையே குறிக்கிறது, இரண்டுமே சமத்துவத்திற்கு எதிரான நாறிப்போன் கோசங்கள்தான்.

    • //இசுலாம் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை , இந்து மதம் போலவே இசுலாமிலும் சாதி வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதற்கு நடைமுறைகளே உதாரணங்களாக இருக்கின்றன//

      எந்த ஜாதியை கண்டீர் எம்மார்க்கத்தில் இஸ்லாம் மீது விமர்சனம் வைபதாக இருந்தால் நீங்கள் குரான் மற்றும் நபி அவர்களின் ஹதீஸ் இருந்து ஆதாரம் காட்டவேண்டும். மரைக்கார் மற்றும் ரவூதர் ஆகியவை ஜாதி இல்லை. இது அவர்களுடைய குடும்ப பெயர்.

    • விடு, தலை ////ஒரு வேளை தமிழ்நாடே(!) இஸ்லாம மாறுதுன்னு வெச்சுக்கோங்க புர்கா மாட்டுகிட்டு எப்டி விவசாய வேலைய செய்ய முடியும், ஓ ! நீங்கதான் பொம்பளைங்கள வெளியவே வுட மாட்டிங்க இல்லியா பெண்கள பாலியல் பொருளாவே பார்க்கிறததான இசுலாம் சொல்லி குடுக்குது. ////
      அய்ய, இப்போது தமிழ்நாட்டில் பலவிவசாய வேலைகளை செய்ய இயந்திரங்கள் வந்தாயிற்று .நீங்கள் சொல்லுவது போல் தமிழ்நாடு இஸ்லாமாக மாறிவிட்டால் அனைத்து வேலைகளையும் இயந்திர யுகமாகிவிடும்.என்பது வேறு விஷயம் .னங்கள் நினைப்போது போல் இஸ்லாம் இல்லை.விவசாய வேளைகளில் எந்த அளவில் பர்தாவை கடைபிடிக்க முடியுமோ அதாவது பர்தா என்பது கருப்பு அங்கி அல்ல.எந்த அளவில் உடலை மறைக்க முடியுமோ அவ்வாறு மறைத்து விவசாய வேலைகளை செய்யலாம்.

      • இப்பீ ர கிம்

        எந்த அளவில் பர்தாவை கடைபிடிக்க முடியுமோ அதாவது பர்தா என்பது கருப்பு அங்கி அல்ல

        சரி எந்தளவுக்கு பர்தாவ கடைபிடிப்பீ்ங்க? அதுக்கு எதாவது அளவுகோல் அல்லா வெச்சிருக்கானா அல்லது நீங்கள் வெச்சிருக்கீங்ளா? பர்தா கருப்பு அங்கியில்லியா? அப்ப கறுப்பு அங்கி பெயரென்ன? பர்தாவில் எத்தன வகையிருக்கு?மொத்தத்துல பருதாவ வுட மாட்டீங்க இல்லியா?

        • ///சரி எந்தளவுக்கு பர்தாவ கடைபிடிப்பீ்ங்க? அதுக்கு எதாவது அளவுகோல் அல்லா வெச்சிருக்கானா அல்லது நீங்கள் வெச்சிருக்கீங்ளா? பர்தா கருப்பு அங்கியில்லியா? அப்ப கறுப்பு அங்கி பெயரென்ன? பர்தாவில் எத்தன வகையிருக்கு?மொத்தத்துல பருதாவ வுட மாட்டீங்க இல்லியா?///

          பர்தா என்றால் பெண்கள் தங்களது முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை ஆடை கொண்டு மறைப்பது .மனிதன் உயர் அந்தஸ்தில் இருக்கும் நிலையில் அவனது ஆடை முகம் கைகளைத்தவிர எவ்வாறு மற்ற உறுப்புகளை மறைக்கும் வண்ணம் சட்டை,பேன்ட் ,கோட் ,டை,சாக்ஸ் ,சூ அணிந்து தன்னை கண்ணியமானவனாக காட்டிக் கொள்கிறானோ அதை போன்று பெண்கள் கோட் தான் பர்தா.கருப்பு அங்கி மட்டும் பர்தா அல்ல ,இறுக்கமில்லாத லூசாக சுடிதார்கமீஸ் துப்பட்டா பேன்ட் கோட் ஸ்கார்ப் மற்றும் சேலைமுழு அளவிலான ஜாக்கெட் எல்லாவற்றையும் பர்தா வாகா வைத்துக்கொள்ளலாம்.

    • விடுதலை அய்யா ,

      பாய் என்ன தவறாக கேட்டார் ?

      “தினசரி உங்களது மனைவிதான் உங்களுக்கு ஆக்கி போட்டு வைப்பாரா?இல்லையெனில் தினசரி மாற்றி மாற்றி ஆக்கி போடுவீர்களா????”

      கேள்வியில் என்ன தவறு? பாய் கேள்விக்கு பதில் சொல்ல என்ன தயக்கம் ?

      உடை விசயத்தில் நம் கேள்வி சரியானது போல , உணவு விசயத்தில் அவர்[ பாய் ] கேள்வி சரியானது தான்

      அன்புடன் ,
      கி.செந்தில் குமரன்

  27. பாய் அஸ்ஸலாமு அலைக்கும்
    //எந்த ஜாதியை கண்டீர் எம்மார்க்கத்தில் இஸ்லாம் மீது விமர்சனம் வைபதாக இருந்தால் நீங்கள் குரான் மற்றும் நபி அவர்களின் ஹதீஸ் இருந்து ஆதாரம் காட்டவேண்டும். மரைக்கார் மற்றும் ரவூதர் ஆகியவை ஜாதி இல்லை. இது அவர்களுடைய குடும்ப பெயர்.//

    அஷ்ராப்- சையத்,ஷேக்,மொகல்,பத்தான்ஸ்
    அஜ்லபுகள்
    அர்சால்கள்

    இவையெல்லாம் குடும்ப பெயர்தானா? அப்படியென்றால் ஒரு அர்சால் ஆணுக்கும் அஷ்ரபு பெண்ணுக்கும் திருமணம் முறைப்படி நடக்குமா ? பாப்பான் கூட சாதியில்ல குடும்ப பெயர்னுதான் கப்சா விட்டுட்டு திரியறான் , சரி அதீஸ் மற்றும் குரானில் இல்லாத நடைமுறையென்றால் அதை ஏன் உங்களால் ஒழிக்க முடியவில்லை அதற்கு விடை இது தான்
    // 49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்….//http://www.tamililquran.com/qurandisp.php?start=49

    கோத்திரம் கவனித்தீர்களா நபியிடமு தன்னுடைய குரைஷி இன வெறி இருந்ததை மறுக்கமுடியாது பாய்

    //3495. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    மக்கள் அனைவரும் இந்த (அட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்மாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்மாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். //http://www.tamililquran.com/bukhari.asp?start=3489

    இதற்கெல்லாம் நீங்கள் நியாயமான பதில் சொல்லபோவதில்லை, வழக்கம்போல்
    சந்தைக்கடை பசாரி வேலையை காட்டுவீர்கள். அதனால் ஒன்று சொல்கிறேன் தயவு செய்து சிந்தியுங்கள்! குறைந்த பட்சம் உங்களயே ஏமாற்றுவதையாவது நிறுத்திக்கொள்ளுங்கள். நன்றி !

    • // பாப்பான் கூட சாதியில்ல குடும்ப பெயர்னுதான் கப்சா விட்டுட்டு திரியறான் //

      பேலன்ஸிங் பண்றதுக்காக கேப்பு கெடச்சா பாப்ப நோண்டப்படாது. அய்யர், அய்யங்கார், தீட்சிதர், நம்பூதிரி இதெல்லாம் குடும்பப் பெயர்னு எந்த பாப்பான் உம்மிடம் சொன்னாங்காணும்?

      // அதனால் ஒன்று சொல்கிறேன் தயவு செய்து சிந்தியுங்கள்! குறைந்த பட்சம் உங்களயே ஏமாற்றுவதையாவது நிறுத்திக்கொள்ளுங்கள். நன்றி ! //

      சாஷ்ட்டங்கமாய் விழுந்துட்டீர்.. எந்திரியும் ஓய்.

      • அம்பீ அம்பீ அம்பீ
        நான்தான் தெளிவா கப்சான்னு சொல்லியிருக்கிறேனே புரியலையா?
        இந்து மத சாதி படி நிலைகளின் தொடர்ச்சி இசுலாமில் இருக்கிறது என்பது என் நிலைப்பாடு. சமத்துவம் சமாதானம் என சொல்லிக்கொள்ளும் இசுலாமில் அப்படி ஒன்று இல்லை. கேட்டால் உங்களுக்கு இசுலாம் புரியவில்லை அதீஸ்,குர்ஆனை சரியாக புரிந்து கொள்ளவில்லையென்று தற்போதைய சூழலுக்கேற்ப திரித்து புது விளக்கங்களை கொடுத்து இசுலாமின் புனிதத்தன்மை கெடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழலில் மதங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது என கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

        //சாஷ்ட்டங்கமாய் விழுந்துட்டீர்.. எந்திரியும் ஓய்.//

        இதில் விழுவதற்கு என்ன இருக்கிறது விழுந்து கிடப்பவர்களை எழுப்பும் வேலையைதான் செய்கிறோம்.
        கீழே சகதியில் விழுந்து கிடப்பது நீ

        • // கீழே சகதியில் விழுந்து கிடப்பது நீ //

          knee யா ??

          அது சரி, சூறைக்குட்டிகள்னா என்ன? நெஜமாவே தெரியாமத்தான் கேட்கிறேன்.

  28. இதுவும் புடிங்க………….

    // 3501. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.
    என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். //
    http://www.tamililquran.com/bukhari.asp?start=3489
    🙂

  29. பல துணிகடைகளில் பண்டிகைகளின் போது கிருத்துவ,இசுலாமிய,இந்து பெண்மணிகளின் கூட்டம் அலை மோதும். இங்கே பல இசுலாமிய நண்பர்கள் சொல்வது போல ‘பர்தா’ பெண்ணுக்கான மானத்தை காக்கும் உடை என்றால், இப்படி துணிமணிகளை வாரிக்குவிக்கும் இசுலாமிய சதோதரிகள் அதை எதற்கு வாங்குகிறார்கள்? பல ஆயிரம் போட்டு வாங்கும் துணிமணிகளை எம் இசுலாமிய சகோதரிகள் ப்ர்தா போட்டு மறைப்பதன்நோக்கம் தான் என்ன? பர்தாவை யாருக்காக அணிகிறார்கள்? அந்த பர்தாவுக்குள் அணிந்திருக்கும் உடையை யாருக்காக அணிகிறார்கள்? தனக்காக ஒர் உடையையும், ஊருக்காக ஒரு உடையையும் அணிகிறார்களா?

    • பொன்ராஜ் ,கணவருக்காக ஓர் உடையும் கணவர் மற்றும் குடும்ப உறவினர் அல்லாதவர்களுக்காக வேறொரு உடையும் அணிகிறார்கள.இதனால் துணி கடைகளுக்கு லாபம்.உங்களுக்கு என்ன நஷ்டம் ?

      • இதே பதிலை இசுலாமிய சகோதரிகள் சொல்வார்களா? சொல்ல மதமும்,ஆண்களும் அனுமதிப்பீர்களா?

      • இப்ராகிம் பாய்…
        பெண்களுக்கான உடையை முடிவு செய்யவேண்டியவர்கள் பெண்களே. இடையில் ஆண்கள் யார் பாய்? உங்களுக்கு என்ன வேலை? அடிக்கிற வெயிலுக்கு கோவணம் தான் சரியான உடை என்று இசுலாமிய சகோதரிகள், இசுலாமிய ஆண்களை அதை கட்ட சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா வராதா? இசுலாமிய மதத்தை பொருத்தவரை பெண்கள் பர்தாவை விரும்பியே அணிகிறார்கள் என்று அரிதியிட்டு சொல்ல முடியுமா? அப்படி என்றால் மற்ற உடைகள் எதற்கு? பர்தா அணிவதால் காக்கப்படும் சகோதரிகளின் மானம், பர்தா அல்லாத வேறு உடைகளை அணிந்தபோது எத்தனை முறை போயுள்ளது? பெண்கள் தனக்கான உடையை தீர்மானிக்க தெரியாது என்று இசுலமிய ஆண்கள் கருதுகிறீர்களா? இதை வாதத்திற்காக சரி என்று கொண்டாலும், இத்தனை காலம் தனக்கான உடையை கூட தீர்மானிக்க தெரியாத வகையில் சகோதரிகளை வைத்திருந்த பெருமை யாரை சாரும்? இசுலாமிய ஆண்களுக்கா, அல்லது அந்த மதத்திற்கா?

  30. தெரிஞ்சே ஒரு நல்ல விசயமும் சொல்லியிருக்காங்க. அது உருவ வழிப்பாடு கூடாது என்று. இல்லையென்றால் எத்தனை குருபூசைகளோ, எத்தனை கொலைகளோ ….. நினைக்கவே பயமாக இருக்கிறது.

    • உருவ வழிபாடுக்கும் குரு பூசைக்கும் என்ன தொடர்பு… குரு பூசை என்பது நன்றாக பலர் போற்ற வாழ்ந்து இறந்த மனிதனுக்கு அவனின் நினைவு நாளில் மக்கள் வழிபாடு செய்வது… மனிதர்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் இஸ்லாத்தில் கூட உண்டு.. முக்கியமான தொரு நபர் இறந்து அவர் அடக்கம் செய்யப்பட்டதும், அவர்கள் இறந்து போன பின்பும் கூட, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என நம்பி அவர்களின் புதைகுழிக்குச் சென்று அவைகளை வழிபடுவதும், அந்த இடத்தில் அறுத்துப் பலியிடுவதும்தான் தர்ஹா வழிபாடு.

      • மனிதன் உங்களுக்கு பொழுது போகவில்லையா?///மனிதர்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் இஸ்லாத்தில் கூட உண்டு.. முக்கியமான தொரு நபர் இறந்து அவர் அடக்கம் செய்யப்பட்டதும், அவர்கள் இறந்து போன பின்பும் கூட, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என நம்பி அவர்களின் புதைகுழிக்குச் சென்று அவைகளை வழிபடுவதும், அந்த இடத்தில் அறுத்துப் பலியிடுவதும்தான் தர்ஹா வழிபாடு.////

        இதிலிருந்து நீங்கள் ஆன்லைன் பீஜேவுக்கு நுழையவே இல்லை என்பது புரிகிறது தயவு செய்து கொஞ்சம் அங்கே பயணியுங்கள்

  31. இஸ்லாமில் சாதிய/இன அடிப்படையிலான வேறுபாடுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிவிட்டனர் சூறைக்குட்டிகள். ஒரு விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள் அது கடவுளுக்கு ஆதரவாக வாதிட்டு கடவுளை எப்டியாவது “கரெக்ட்” பண்ணி சொர்க்கத்தில் நல்ல வசதியான இடம் பிடித்து விட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தங்களது மூளையை இறைவனிடம் அடகுவைத்து விட்டு வாதம் செய்கிறார்கள்.

    • சொர்க்கத்தில் கூட ஆணாதிக்கம் தொடர்கிறதாம். பூமியில் ஆணுக்கு 5 மனைவிகளை பெண்டாள அனுமதியளித்ததைப் போன்றே சொர்க்கத்திலும் பூமியில் மணமுடித்த மனைவிகளுடனும் + பல ஹூர்ளின் அழகிகளுடனும் சல்லாபிக்கலாமாம். ஆனால் பெண்களுக்கு சொர்க்கத்திலும் கூட நோ சான்ஸ், கணவன் ஒருவன் மட்டுமே. இதில் பெண் சொர்க்கவாசியாகவும் ஆண் நரக வாசியாகவும் இருந்துவிட்டால் பெண்களுக்கு துறவறம்தானாம்.

        • ஒய்யார நீரருவி, வற்றாத நல்லூற்று, குளிர்ந்த நீரோடை, பாலாறு, தேனாறு. நன்னம்பிக்கை கொண்ட முசுலிம் பெண்களை இன்பத்தில் திளைக்கச் செய்ய 72 கட்டிளங்காளைகள், ஈமான் கொண்ட முசுலிம் ஆண்களுக்கு பரிசு 72 கன்னியர்கள். ஒரே ஜமாய்தான் போங்கள். கணக்கு பண்ணினால் 20 நிமிடங்களுக்கு ஒரு கலவி ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு. மொத்தத்தில் சுவர்க்கம் என்பது ஒரு கூட்டு காமக் களியாட்ட அரங்கு. அர்சியின் குர்சியில் வீற்றிருக்கும் எல்லாம்வல்ல மாஇறைவன் ஒரு நீலப்பட தயாரிப்பாளர். திருக்குர்ரான் அதற்கு நுழைவுச்சீட்டு.

    • விடு,தலை ///இஸ்லாமில் சாதிய/இன அடிப்படையிலான வேறுபாடுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிவிட்டனர் சூறைக்குட்டிகள். ///
      இஸ்லாத்தில் சாதி இன வேறுபாடுகள் இருக்கிறது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இங்கே வைக்கப் படவில்லை

    • //பரங்கிப்பேட்டையாரே, இந்த இடைவெளியில் நீங்கள் பெண்களை எவ்வாறு திட்டுகிறீர்களோ அச்சொல்லை இட்டு படித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ஆலிம்களும் உலமாக்களும் பெண்கள் ஷைத்தான்கள் என்று திட்டுகிறார்கள். முண்டச்சி, பொட்டைநாய், பொட்டக் கழுதை, பொம்பளச் சிறுக்கி, தே……, என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் இரத்தத்தில் ஊறிய சொல்லாக சட்டென்று வெளிப்படுபவைகள். நீங்கள் எவ்வாறு கூறுகிறீர்களோ அச் சொல்லை இந்த இடைவெளியில் நிரப்பி படித்துக்கொள்ளுங்கள்//

      எந்த ஆலிம் உலமாக்கள் இந்த சொற்களை பயன்படுதுகிரர்கள் என்பதை சகோ. சாகித் தெளிவு படுத்தினால் நல்லது.

      //அஷ்ராப்- சையத்,ஷேக்,மொகல்,பத்தான்ஸ்
      அஜ்லபுகள்
      அர்சால்கள்

      இவையெல்லாம் குடும்ப பெயர்தானா? அப்படியென்றால் ஒரு அர்சால் ஆணுக்கும் அஷ்ரபு பெண்ணுக்கும் திருமணம் முறைப்படி நடக்குமா ?//

      நபி மொழி: ஒரு அரபி அரபி அல்லாதவரை விட சிறந்தவர் அல்லர், ஒரு வெள்ளையர் கருப்பரே விட சிறந்தவர அல்லர்.

      இவர்கள் திருமணம் செய்ய வில்லை என்றால் அவர்கள் இஸ்லாத்தை தெளிவாக புரிந்து கொள்ள வில்லை என்று தான் அர்த்தம்.

      மகஇக தோழர் மார்க்சிஸ்ட் தோழரை திருமணம் செய்வாரா?

      கோத்திரம் என்பது மரத்தை போல, எவ்வாறு மரத்தின் கிளைகள் படர்து உள்ளதோ அது போல் ஒவ்வாரு கிளையும் ஒரு குடும்பத்தின் பேரை குறிக்கும். ஆனால் வித்து ஒன்று தான்.

      // 49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்

      • //மகஇக தோழர் மார்க்சிஸ்ட் தோழரை திருமணம் செய்வாரா?//

        புரிதல் இல்லாத தரமற்றக் கேள்வி இது.

        மகஇகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு மார்க்சிஸ்டு கட்சியின் மீதான விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளும்போது சாத்தியமே.

        //.கோத்திரம் என்பது மரத்தை போல, எவ்வாறு மரத்தின் கிளைகள் படர்து உள்ளதோ அது போல் ஒவ்வாரு கிளையும் ஒரு குடும்பத்தின் பேரை குறிக்கும். ஆனால் வித்து ஒன்று தான்//

        வித்து ஒண்ணுதானா……………..? அப்பறம் ஏன் நபி குறைஷி இன வெறி கொண்டு இருந்தார்.

        //3495. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
        மக்கள் அனைவரும் இந்த (அட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்மாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்மாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார்.
        என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.//

        http://www.tamililquran.com/bukhari.asp?start=3489

        // 3501. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
        இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.
        என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். //

        http://www.tamililquran.com/bukhari.asp?start=3489

  32. வினவு, செங்கொடி,இப்னு சாகிர் போன்ற அயோக்கியர்கள் எழுத்து விவாதம் என்று ஜகா வாங்குகிறார்கள். எழுத்து விவாதம் என்றால் நீங்கள் இதுபோல கதை எழுதத்தான் காலம் இருக்குமே தவிர நேரடி விவாதம் தான் மக்களைச் சென்றடையும். இப்படி பயந்து கொண்டு ஓடுபவர்கள் எல்லாம் ஏண்டா இப்படி கேவலமா சவால் விடுறீங்க கேவலப்பயலாக இருக்கீங்க!

    • //இப்படி பயந்து கொண்டு ஓடுபவர்கள் எல்லாம் ஏண்டா இப்படி கேவலமா சவால் விடுறீங்க கேவலப்பயலாக இருக்கீங்க!//

      டேய் இது உனக்குதான்டா முழுமையா பொருந்தும்.

  33. லண்டனில் இருந்து வீசப்படும் எலும்புத்துண்டுக்காக இந்த வினவு, செங்கொடி,விடுதலை,இப்னு சாகிர் போன்ற அயோக்கியர்கள் சென்னையில் முத்துக்குமார், செங்கொடி(பெண்) போன்ற மனவலிமை குன்றியவர்களை மூளைச்சலவை செய்து தீக்குளிக்க வைத்த கொடுமையை யாறும் மறக்க முடியாது. இவன்ல ஒரு பய சாக மாட்டான். ஆனால் முத்துக்குமார், செங்கொடி போன்ற முட்டாள்களை தீக்கிரையாக்கி தங்களின் சுய அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் இந்த அயோக்கியர்கள் இஸ்லாமை சீண்டிப்பார்க்க தைரியமிருந்தால் நேரடி விவாதத்துக்கு வரவேண்டும். அதை விடுத்து கோழைத்தனமாக ஓடுவது கேவலத்தில் கேவலம். தைரியமிருந்தா நேரடி விவாத்தற்கு வாங்களடா!

    • 1. லண்டனில் இருந்து வீசப் படும் எலும்புத் துண்டு — யாரு வீசுகிறார்கள்?
      2. செங்கொடி,முத்துகுமார் மனவலிமை குன்றியவர்கள் — எதனை வைத்து சொல்கிறீர்கள்? அவர்கள் சோத்துக்கு வழி இல்லாமல் செத்ததாக உங்களிடம் சொன்னார்களா? அல்லது எவ்வித படிப்பறிவும் அற்ற முட்டாள்களா? என்றாவது ‘முத்துகுமாரின்’ இறுதிக் கடித்தத்தை நீங்கள் பேருக்காவது படித்திருக்கிறீர்களா?
      3. இசுலாம் பற்றிய கட்டுரையில் முத்துகுமாருக்கு என்ன வேலை? உங்களுக்கு புரியிர மாதிரியே கேக்குறேன். ‘அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?’

      • ௩///. இசுலாம் பற்றிய கட்டுரையில் முத்துகுமாருக்கு என்ன வேலை? உங்களுக்கு புரியிர மாதிரியே கேக்குறேன். ‘அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம?////

        பொன்ராஜ் உங்களுக்கு இங்கு என்ன வேலை?
        பேனா பிடித்து உணர்வுகளை தூண்டும் ஏசி கம்யுனிஸ்ட்கள் இப்படி உயிரை மாயப்பதில்லையே என்ற ஆதங்கம் மஸிஹ்வுக்கு இருக்கலாம்.

        • செத்த முத்துகுமாரும்,செங்கொடியும் தமிழர்கள் என்ற ரீதியில் கேட்க எனக்கு உரிமை உண்டு. இப்போ சொல்லுங்க பாஸ்…!!! உங்க பிரச்சனை கம்யூனிஸ்டோட மோதுவது என்றால் அதோடு நிறுத்திகொள்ள வேண்டியது தானே? அதை விட்டுவிடடு சக தமிழனுக்காக ஆற்றாமையால் உயிர்தியாகம் செய்த தமிழர்களை இன்றிறுக்கும் கம்யூனிஸ்டுகளுடன் முடிச்சு போட்டு, இசுலாம் பற்றிய கட்டுரையில் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதே என் கேள்வி.

  34. குடிகார கணவனாக அல்லது கணவன் தவறு செய்தால் மனைவி அடிக்கலாம் அல்லது தண்டிக்கலாம் என்று ஒரு குர்ஆன் வசனம் அல்லது நபிமொழியைக் காட்ட முடியுமா இபுராகிம்? அல்லது தற்காலத்தில் ஜமாத்துகள் அனுமதியளித்துள்ளதாகவோ அல்லது உலமாக்களின் பத்வாக்களையோ காட்டமுடியுமா? கணவன் தவறு செய்தால் மனைவி தண்டிக்கலாம் என்று இசுலாத்தில் உள்ளதாக புளுக வேண்டாம்.

    • Exசாகித், உங்களில் ஆண்களுக்கு பெண்கள் மீது என்ன உரிமை இருக்கிறதோ ,அதே போன்று பெண்களுக்கும் ஆண்கள் மீது உரிமை இருக்கிறது ,,என்ற குர்ஆன் வசனம் உள்ளது அல்லவா?பெண்கள் தவறு செய்யும் பொழுது ஆண்களுக்கு இருக்கும் உரிமை ,ஆண்கள் தவறு செய்யும் பொழுது பெண்களுக்கும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

      • //பெண்கள் தவறு செய்யும் பொழுது ஆண்களுக்கு இருக்கும் உரிமை ,ஆண்கள் தவறு செய்யும் பொழுது பெண்களுக்கும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்//

        ஏட்டளவில் மட்டுமா?

        • பொன்ராஜ் ///ஏட்டளவில் மட்டுமே //
          இங்கே ஏட்டளவில் தான் விவாதித்து கொண்டிருக்கிறோம் .கம்யுனிஸ்ட் கொள்கையை செயலளவில் முழுமைபடுத்திய ஒருவரை காட்டுங்களேன் இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்தும் வோரை எண்ணிக்கையில் அடங்காத அளவில் காட்டுகிறோம்.

          • தாடி வச்சவனெல்லாம் தாகூரா? இசுலாம் சார்ந்த கட்டுரையில், ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் உடனே அவன் கம்யூனிஸ்டா? நான் கேட்டது பதில் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு மிக சாதாரண கேள்வி. எகத்தாளம அல்ல. அப்படி கேள்வி கேட்க அவன் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே?

  35. ஜெயலிதாவின் ‘கவர்ச்சி’ அவருக்கு அதிகமாக கட்சியில் ஆளுமையைத் தந்தது என்பது மறுக்க முடியாதது. திமுக எம்ஜியாரின் ‘கவர்ச்சியை’ பயன்படுத்தியது. எம்ஜியார் ஜெ.வின் கவர்ச்சியை பயன்படுத்தினார். பிற அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரங்களில் சினிமா நடிகைகளின் ‘கவர்ச்சி’யை பயன்படுத்தவே செய்கின்றன. அமெரிக்க தேர்தலில் கூட கிளின்டன் தனது சினமா கவர்ச்சி’யை பயன்படுத்தித்தான் அதிபரானார். கவர்ச்சி என்பதை அவுத்துப் போட்டுட்டு நிற்பது என்று புரிந்து வைத்திருப்பவர்கள் தங்களின் அறியாமையைத்தான் வெளிப்படுத்துகின்றனர்.
    ஜெயாவின் கவர்ச்சி பற்றி எழுதியது பெண்ணினத்தையே கேவலப்படுத்தியதாகாது. சோப்பு சீப்பு விளம்பரங்கள்கூட பெண்களின் கவர்ச்சியைத்தான் பயன்படுத்துகின்றன. அதனை சுட்டிக்காட்டுவதும் பெண்களை சிறுமைப்படுத்துவதாகாது. பெண்களின் கவர்ச்சியை இவர்கள் பயன்படுத்துவதும், சேலை இடுக்கில் ——- யை ரசிக்கும் நமது பின்னோட்ட கருத்துரையாளர் சிலரைப் போல ஆண்கள் பலரும் இருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா?
    இக் கட்டுரையில் போர்த்திக் கொண்டு உலாவருவதால் (சேலை உடுத்திக்கொண்டு வருபவர்கள் கண்ணியம் இழந்தவர்களோ?) அரசியலில் முன்னேற்றம் தடைபடவில்லை என்பது போல கவர்சியிடன் வரும்போது கூடுதலாகவே முன்றேற்றம் இருந்தது என்பதை சுட்டிக்காட்டவே ஜெபற்றி குறிப்பிட்டிருந்தேன். அபுராஜிதா அவர்களே கொஞ்சம் நிதானமாக படியுங்கள்.

  36. பரங்கிப்பேட்டையாரே, இந்த இடைவெளியில் நீங்கள் பெண்களை எவ்வாறு திட்டுகிறீர்களோ அச்சொல்லை இட்டு படித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ஆலிம்களும் உலமாக்களும் பெண்கள் ஷைத்தான்கள் என்று திட்டுகிறார்கள். முண்டச்சி, பொட்டைநாய், பொட்டக் கழுதை, பொம்பளச் சிறுக்கி, தே……, என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் இரத்தத்தில் ஊறிய சொல்லாக சட்டென்று வெளிப்படுபவைகள். நீங்கள் எவ்வாறு கூறுகிறீர்களோ அச் சொல்லை இந்த இடைவெளியில் நிரப்பி படித்துக்கொள்ளுங்கள்.

  37. இசுலாத்தில் நிர்பந்தம் இல்லையா? உணர்வின் பெட்டிச் செய்தி என்ன சொல்கிறது? திருமதி சகுந்தலா நரசிம்மன் சௌதியிலுள்ள ரியாத் நகரில் நடந்த மாநாட்டிற்கு புர்கா அணிந்து வந்தால்தான் உள்ளே விடுவோம் என்று சொன்னதால்தான் புர்கா போட்டதாகத் தானே சொல்லியுள்ளதாக உணர்வு எழுதியுள்ளது. இது நிர்பந்தம் இல்லையா? மாற்று மத பெண்ணிற்கு கூட கட்டளைகள் பொட்மெ இவர்கள் நிர்பந்தம் இல்லை என்று சொல்லுவது வேடிக்கையாக இல்லையா!
    பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்ற நிர்பந்தத்தை மீறியதால்தானே சவுக்கடி? அது அப்பெண்ணின் விருப்பம் என்றா விட்டுவிட்டார்கள்? அதே சமயம் ஈராக் போர் நடந்தபொழுது அமெரிக்க அழகிகள்ளின் ஆபாச உலாக்களை அனுமதித்ததும் இந்த சௌதி அரசுதான். பணம் என்றால் …… யையும் தின்பார்கள். இசுலாமியதரப்பிலிருந்து பின்னோட்டமிடுபவர்கள் அண்டப்புளுகர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

    • //மாற்று மத பெண்ணிற்கு கூட கட்டளைகள் பொட்மெ இவர்கள் நிர்பந்தம் இல்லை என்று சொல்லுவது வேடிக்கையாக இல்லையா///
      சவுதியை பொறுத்த வரை பெண்களின் ஆடை என்பது பர்தா தான்.எப்படி இந்தியாவில் பெண்கள் டாப்லெஸ் அனுமதி இல்லையோ அதுபோன்று சவுதியில் முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை மறைக்காமல் செல்ல அனுமதி இல்லை.
      மக்காவிலிருந்து அறுநூறு கி.மீ தூரம் உள்ள ] ஹீராவிலிருந்து ஒரு பெண் குதிரையில் தனியாக ஹஜ் செய்ய வருவாள் என்ற நபி வழி செய்தி இலிருந்து பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கும் வாய்ப்பு வரலாம்.
      ரஷ்யாவே ,சீனாவே பயப்படும் அமெரிக்காவுக்கு சவூதி பயபடாதா?

      • //சவுதியை பொறுத்த வரை பெண்களின் ஆடை என்பது பர்தா தான்.எப்படி இந்தியாவில் பெண்கள் டாப்லெஸ் அனுமதி இல்லையோ அதுபோன்று சவுதியில் முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை மறைக்காமல் செல்ல அனுமதி இல்ல//

        பாயி! பார்த்து ஜாக்கிரதயாக பேசவும் ! தாயிமார்கள் பற்றி மரியாதையாக பேசவும்!

  38. ஜீன்ஸ் பேன்ட், டி சர்ட், குறுந்தாடி, கூலிங்கிளாஸ் என்று நவீன ஹீரோக்களாக, டாமினோஸ் பீசா ஹட், பார்பிகியூ பார், பிக் சினிமா என்று சுற்றிக்கொண்டு, கம்யூட்டரே உலகம், இணையதளமே நாட்டு நடப்புகள் என்று உட்கார்ந்து தின்பவர்களுக்கு புதிய கலாச்சாம் இசுலாமிய மக்களுக்கு பிடித்தமானதா இல்லையா என்று எப்படித் தெரியும்? தெருவில் இறங்கிப் பாருங்கள். புதியகலாச்சாரத்தை இசுலாமியர்கள் வாங்குகிறார்களா இல்லையா என்பது தெரியும். ஓ…. தவ்ஹீது கூட்டதாரைத் தவிர (72-ல் ஒன்று) மற்றவர்கள் எல்லாம் இசுலாமியர்கள் இல்லையோ !!!

  39. வந்துட்டார்யா…. விவாதத்தின் உலகமகா மேதை. உங்களின் விவாதத்தையும் அதன் இலட்சணத்தையும் வீடியோக்களில் பார்த்தோமே. இரண்டுநாளுக்கு முன் காரைக்காலில் நடந்த விவாத்தின் இலட்சணத்தையும் பார்த்தோமே. அங்குள்ளவர்கள் சிரிப்பதையும் ‘இவர்களுடன் பேசுவதைவிட ஒரு மடத்தனமான செயல் வேறு எதுவும் இல்லை’ என்று சொல்லுவதையும் கேட்டேனே. புகவின் கட்டுரைக்கு மறுப்புக்கூட எழுதத் தெரியாமல் உளறியது மட்டுமல்லாது தோழர் வேல்விழி தோற்றுவிட்டார் என்று வஹி வந்து முதுகை சொறிந்து கொண்டதையும் பார்த்தோமே. அதன் பிறகும் உங்களுடன் விவாதமா !!! ஹி…. ஹி… ஹீ (வாயால் அல்ல)

  40. மீனாட்சி அவர்களே, ஆண்களின் குற்றச் செயல்களுக்கு மதம் காரணமல்ல; தனிப்பட்ட விருப்பு வெறுப்புதான் காரணம் என்றீர்களே.## that is enough am a girl i know how man are against women’s improvement it is not on baasis of any religion it is on basis of the minds of the Men…## பின்னர்,
    //ஆனால் அதற்கு துப்பில்லாமல் பர்தா போட்டு பெட்டையாகத் திரியும் இந்த செங்கொடி எல்லாம் நியாயம் பேச வந்துட்டார்பா// what do you think about girls….what is meant by pottaithanam….pengal ellorum ondru thirandaal antha sakthiyai ungalaal ethir kolla mudiyaathu….ithilaye ungal aanathikkam theriyavillai….pengal eppothum ullaye adangi kidappavargal endru solli vitirgale….adangi kidanthaal pottaithanam veliye thirinthaal aambalathanama???//ஆனால் நேரில் வரத்துப்பின்றி இப்படி உள்ளே ஒழிந்து கொண்டு வெப்சைட்டில் எழுதுவதற்குப் பெயர் பெட்டைத்தனம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.//speak only about them not about the women ningalum piranthathum oru pennin vayitril thaan enbathai maranthu vidathirgal muthalil ithai sari seithu piragu ungal madhathai niyayapaduthungal என்று கூறியுள்ளீர்கள்.

    இந்த பெட்டைத்தனம் மதங்கள் போதித்த தில்லையா? எந்த மதமாவது இதற்கு விதிவிலகாக உள்ளதா?

    • பண்ணை வாழ்க்கையை துவங்க தயங்கும் கம்யுனிஸ்ட் களிடம் தைரியம் இல்லையே !இது என்ன தனம்?

      • பண்ணை வாழ்க்கை என்ற புரிதல் உங்களிடம் எதிலிருந்து தொடங்குகிறது?

        • கம்யுனிசத்தில் ஆணாதிக்கம் இல்லை என்றும் திருமணம் ஆணாதிக்க நடவடிக்கையே என்றும் கொள்கையிலிருந்து

          • பண்ணை வாழ்க்கை என்று குறிப்பிட்டதற்கும் நீங்கள் மேற்சொன்னதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. தயவுசெய்து பண்ணை வாழ்க்கை என்றால் என்னவென்று விளக்குங்களேன்?

            • உங்களது மேதாவித் தனத்தை இங்கே காட்ட வேண்டாம் .கம்யுனிச கொள்கைப்படி திருமணம் செய்வது ஆணாதிக்க நடவடிக்கை என்கிறீர்கள்.அவாறேனின் உங்களது இனபெருக்க உத்திகளை சொல்லுங்கள்

              • பண்ணை வாழ்க்கை என்று உங்களது ஒரு அரைவேக்காட்டுத் தனமான புரிதலையும்,பின்பு திருமணத்தை ஆணாதிக்கம் என கம்யூனிசம் கூறுவதாக ஒரு புளுகையும் நீங்கள் தான் வெளிப்படுத்தினீர்கள்.இதனிடையில் நான் மேதாவித்தனம் காட்டுவதாக குர்றச்சாட்டு வேறு.
                எங்களது இனப்பெருக்க உத்தி இருக்கட்டும். முதலில் பண்ணை வாழ்க்கையைப் பற்றி நீங்கள் புரிந்து வைத்திருப்பதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்கள்.

                • கலை///முதலில் பண்ணை வாழ்க்கையைப் பற்றி நீங்கள் புரிந்து வைத்திருப்பதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்கள்./////

                  பண்ணை வாழ்க்கை பற்றி நான் அரை வேக்காடுத்தனமாகவே புரிந்து இருக்கிறேன் என்பது உண்மையே .அதைப் பற்றி கேட்டால் செங்கொடி வாய் திறக்க மாட்டிருக்க்கிறார்.exசாகித் மவுனியாகி விடுகிறார், தாங்களாவது முழுமையாக விளக்குங்களேன்.கலைஅய்யா கலக்குவீர்களா?

                  • வர்க்கத்தை ஒழிக்க உழைப்புச் சாதனங்களை பொதுவில் வை என்றால், பிறகு பெண்ணும் பொதுவில்தான் இருப்பாளா! என்று பெண்ணையும் பொருளையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத, பெண்ணை ஒரு மனிதப் பிறவியாக பார்க்கத் தவறிய ஆன்மாக்களால் உருவாக்கப்படும் அவதூறு கருத்துக்களுக்கெல்லாம் விளக்கம் தர முடியுமா?

                    • கலை ,திருமணம் என்பது தனியுடமையா?பொதுவுடமையா?

                    • /பெண் தலைமை தாங்கியபோது சமூகம் பொதுவுடமையாய் இருந்தது. அதனால் அங்கு பாலியல் குற்றம் உட்பட எந்தக் குற்றங்களுக்கும் இடமில்லாமல் இருந்தது. ஆண் எந்த விதத்திலும் பெண்ணைவிட தாழ்ந்தவனாக கருதப்படவில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொண்டிருந்தனர். இன்று நாம் வளர்த்தெடுத்திருக்கும் விவசாயம், கட்டடக் கலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெண்களின் கண்டுபிடிப்பாய் இருந்தது.///

                      ///பெண்ணிடமிருந்து தலைமை பிடுங்கப்பட்டபின்பு சமூகம் தனியுடமைக்கு மாறுகிறது. கிடைக்கும் பலன்களை பொதுவில் பகிர்ந்த நிலை மாறி தனித்தனி உடமைகளாய் மாறின. ///
                      \ஆதிகாலத்தில் பெண் தலைமையில் ………. குற்றம் நடைபெறாது என்று சொல்ல வருகிறீர்கள்ஆம் இதுதான் வீரியமான கருத்து// ஆம். இது வீரியமான கருத்துதான். திருமணம், பதிவு, இனிசியல் எல்லாம் ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது. தொடரும் விவாதங்களில் இதுகுறித்து விரிவாக பார்க்கலாம், போதுமான வீரியத்துடன் உங்கள் தேடல்கள் இருந்தால்.டிசம்பர் 15 2010
                      செங்கோடியுடனான விவாதத்தில் பதில்கள் எடுத்து வைத்துள்ளேன்..அதாவது பெண்கள் தலைமை
                      தாங்கியபோது சமூகம பொதுவுடமையாக இருந்ததாக கூறுகிறார் செங்கொடி .பெண்களிடமிருந்து தலைமை பிடுங்கப்பட்ட பிறகு தனியுடமையாக மாறிவிட்டது என்கிறார் /திருமணம் தேவை இல்லை என்கிறார். இதற்கான விளக்கத்தை தாருங்கள்

                • கலை ///திருமணத்தை ஆணாதிக்கம் என கம்யூனிசம் கூறுவதாக ஒரு புளுகையும் நீங்கள் தான் வெளிப்படுத்தினீர்கள்.////
                  திருமணம் என்பது ஆணாதிக்க வடிவமே என்றாலும், ஆணாதிக்கத்தை எதிர்த்து ஏற்பட்ட சமரசம் எனலாம்.
                  [செங்கொடி லிவ்விங் டுகெதர் பற்றிய கேள்விக்கான பதிலில்]

  41. மஸீஹ் அவர்களே!
    மளிகை கடைநடத்தியும் கட்டுப்படியாகாமல் மஞ்சப்பையுடன் சென்னை வந்து சௌதிகாசிலு அமைப்பு கட்டி, 50 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து, அதி நவீன வெளியாட்டுப் பொருள் அங்காடிகளுக்கெல்லாம் நேர்முக மறைமுக உரிமையாளர்களாக வலம் வருபவர்கள் வினவைப்பார்த்து இலண்டன் காசு என்று சொல்லுவது வேடிக்கையா? அல்லது அறியாமையா?

    • எக்ஸ்.சாகித் நீங்கள் பீஜே பற்றி சொல்லியிருப்பது உண்மையா?நிருபனம் உண்டா? உங்களைப் பற்றி மஸிஹ் கூறியிருந்தால் அதற்கு அவரிடம் ஆதாரம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்?சமுதாயத்தால் அடி,உதை வெட்டு குத்து பட்ட பீஜே வுக்கு செல்வம் அவரது அல்லது அவரது பிள்ளைகளை வைத்து சேர்க்க வாய்ப்பில்லையா?அவர் மளிகை கடை கட்டுபடியாகவில்லை என்று சென்னைக்கு வந்ததாக பச்சை பொய் கூறியிருப்பது சொல் வதை அல்லவா?

  42. ///தமிழகத்தில் நடக்கும் பெண்குழந்தைகளின் கொலைக்கு காரணம் என்ன? பெண் குழந்தை என்றால் திருமணக்காலத்தில் வரதட்சிணை போன்ற நெருக்கடி ஏற்படும். அதனை தாங்க முடியாத பெற்றோர்கள் அக்குழந்தையை கொன்று விடுகிறார்கள். அதுபோல வங்கத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆணாதிக்கமும் அதனை வளர்க்கும் மதமும் காரணமாக அமைகிறது. வங்கத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடந்ததாகவே இருக்கட்டும். அதனைச் சுட்டிக்காட்டியும், அதற்கு காரணமாக அமைவதையும் எழுதக்கூடாதா? ஒட்டு மொத்த வங்கத்திலும் நடந்தால்தான் எழுதனுமா? வேடிக்கையாக இருக்கிறது இவரது உள்ளுணர்வு.////
    எது வேடிக்கை ? வரதட்சணை கொடுமைக்கு இஸ்லாம் காரணமா?இப்படி உளறுவது அல்லவா வேடிக்கை.##

    இபுராகிமின் அறிவுக்கு இதுவும் ஒரு சான்று.
    வரதட்சினைக் கொடுமைக்கு காரணமாக இசுலாம் உள்ளது என்றோ வரதட்சினைக்காக ஆசிட் வீசப்படுகிறது என்றோ கட்டுரையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    • சாஹித் இதெற்கெல்லாம் பதில் கிடைக்காதோ உங்களது அறிவு அகலவில்லையா?
      பெண்ணுரிமை என்று இணையதளங்களில் எழுதி ஆர்பரித்து விட்டால் போதும் அதுவே பெண்ணுரிமைகளை கம்யுனிஸ்ட்கள் உயர்த்தி பிடிப்பதாக காட்டிக் கொவார்கள். ஆனால் நடைமுறையில் சாதிக் வீட்டு பெண்கள் வீட்டு வேலைகளையே கவனிப்பார் சாதிக் தான் வருமான விசயங்களையும் நிர்வகிப்பதையும் கவனித்துக் கொள்வார்.பட்டுக்கோட்டைக்கு வழி கேட்கும் கொட்டை பாக்குகளே! இதுவரை எந்த பு.க வுகளும் தனது மனைவிகளை அடித்ததே கிடையாதா? உங்க, மனைவியரை வேலைக்கு அனுப்பிவிட்டு நீங்கள் எத்தனை பேர் குழந்தைகளை கவனித்து வருகிறீர்கள்? உங்களது கம்யுனிச கொள்கைபடி திருமணம் என்பதும் ஆணாதிக்க நடவடிக்கைதான் .திருமணம் செய்யாமல் பண்ணை வாழ்க்கை வாழ புகவினர் மட்டும் ஏன் முயற்சிக்கக் கூடாது? ஏன் இந்தியாவில் சாத்தியமில்லை என்று நழுவ வேண்டும் ?இந்தியாவில் நாங்கள் தவ்ஹித் ஜமாத்தினர் எங்களது கொள்கை முறையில் செயல்பட்டு வருகிறோமே ! உங்களது புகவினர் சாதிய முறையில் திருமண உறவு முறைகளை தேடி திருமணம் செய்து வருகிறீர்கள்.

      ///நிஜாம் அவர்களே, ரஷ்யாவிலும், சீனீவிலும் உள்ள கம்யூனிஸ்ட்கள் பெண்கள் மீது ஆசிட்டை எங்கே வீசினார்கள்? கம்யூனிசத்தின் எந்தக் கொள்கை பெண்களை அடக்கி ஆளவேண்டும், கற்பழிக்க வேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்று கூறுகிறது என்பதைச் சொல்லவேண்டுமல்லவா? ///
      நான் அதிகம் தேடவில்லை அயிந்து நிமிடத்தில் கிடைத்த இந்த சுட்டியை பாருங்கள்.
      http://chinaview.wordpress.com/2007/03/29/list-of-china-modern-torture-methods-photo

  43. ##Exசாகித், உங்களில் ஆண்களுக்கு பெண்கள் மீது என்ன உரிமை இருக்கிறதோ ,அதே போன்று பெண்களுக்கும் ஆண்கள் மீது உரிமை இருக்கிறது ,,என்ற குர்ஆன் வசனம் உள்ளது அல்லவா?பெண்கள் தவறு செய்யும் பொழுது ஆண்களுக்கு இருக்கும் உரிமை ,ஆண்கள் தவறு செய்யும் பொழுது பெண்களுக்கும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்##

    பெண்கள் தனக்கானதை கேட்டுப்பெறுவதைக் குறிக்கும் வசனம் இது. இதுவும் அதுவும் ஒன்று என்றால் அடிக்கலாம் என்ற வசனம் தனியாக எதற்கு? சால்ஜாப்பெல்லாம் வேண்டாம். நேரடியாக கணவன் தவறு செய்தால் மனைவி தண்டிக்கலாம் எனபதற்கு ஆதாரத்தை தாருங்கள் இபுராகிம்.

    • எக்ஸ் சாகித் ,எது சால்ஜாப்பு என்ற படிப்போர் புரிந்து கொள்ளட்டும் .இன்னும் சொல்லப்போனால் ,மாணவர்களே என்று பாடப் புத்தகத்தில் குறிபிட்டால் அது மாணவிகளுக்கு பொருந்தாது என்று நீங்கள் கூற மாட்டீர்கள் .குர்ஆனில் ஆண்களுக்கு பெண்களுக்கு என பிரத்யோகமாக கூறப் பட்டதை தவிர மற்றவை இருபாலருக்கும் பொதுவானவையே .ஜனாதிபதியே பெண்கள் உரிமையில் கை வைக்க முனனைந்த போது ஒரு பெண் குர்ஆன் வசனத்தை சுட்டிக்காட்டி அவர்களது உரிமையினை காத்தார்.அது போல் குடிக்கும் கணவனை அடிக்க பெண் இந்த குர்ஆன் வசனங்களை ஆதார படுத்தும் வேளையில் முஸ்லிம்கள் தடை கல்லாக இருக்க மாட்டார்கள்.////பெண்கள் தனக்கானதை கேட்டுப்பெறுவதைக் குறிக்கும் வசனம் இது/// ஆம் ,தனக்காக குடிகார கணவனை அடித்து திருத்துவதற்காக உரிமையை கேட்டும் பெறுவதற்காக இந்த வசனம் அவர்களுக்கு உதவும் .கல்லானாலும் கணவன் ஆதலால் அவர் என்ன கேடு செய்தாலும் நீங்கள் அவரை எதுவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் எந்த இடத்திலும் சொலவே இல்லை.கணவனே அடிக்கவே கூடாது அவன் என்ன செய்தாலும் சரியே என்று இஸ்லாத்தில் கூறப்பட்டிருந்தால் நீங்கள் எடுத்துக் காட்டுங்கள்.

  44. ##சவுதியை பொறுத்த வரை பெண்களின் ஆடை என்பது பர்தா தான்.எப்படி இந்தியாவில் பெண்கள் டாப்லெஸ் அனுமதி இல்லையோ அதுபோன்று சவுதியில் முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை மறைக்காமல் செல்ல அனுமதி இல்லை.சவுதியை பொறுத்த வரை பெண்களின் ஆடை என்பது பர்தா தான்.எப்படி இந்தியாவில் பெண்கள் டாப்லெஸ் அனுமதி இல்லையோ அதுபோன்று சவுதியில் முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை மறைக்காமல் செல்ல அனுமதி இல்லை.##

    இசுலாத்தில் நிர்பந்தம் உள்ளதா? இல்லையா? என்பதே கேள்வி.
    சௌதியில் அமெரிக்க அழகிகள் மட்டும் அரை நிர்வானத்துடன் வரலாம், இதற்கு பதில் சொல்லுங்கள் இபுராகிம்.

    • எக்ஸ் சாகித்,நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன் .உலகமே பயப்படும் அமெரிக்காவுக்கு சவூதி மட்டும் என்ன விதி விலக்கா? இந்திய ஜனாதிபதி அமெரிக்காவுக்கு செல்லும் வேளையில் நிர்வாண சோதனை.அதே சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வரும்போழ்து அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பக்கத்தில் கூட இந்தியா பாதுகாப்பு அதிகாரிகள் நெருங்க முடியாது.இந்த உலக நியதி தெரிந்து கொண்டு இஸ்லாத்தையும் சவுதியையும் போட்டு குழப்ப வேண்டாம்

      • அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாவிற்கே …… இஸ்லாமிய பழமொழி
        அஞ்சுவதும் அடிபணிவதும் அமெரிக்காவிற்கே …… இஸ்லாமிய புதிய பயமொழி

        • tamilaman
          ///அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாவிற்கே …… இஸ்லாமிய பழமொழி
          அஞ்சுவதும் அடிபணிவதும் அமெரிக்காவிற்கே …… இஸ்லாமிய புதிய பயமொழி///

          சவூதி இஸ்லாத்தின் முழுமையான சான்று அல்ல .இஸ்லாத்தின் நெறிகளை அதிக அளவில் பின்பற்றக் கூடியது.

  45. தேவைக்காக பெண்கள் வெளியே சென்ற காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் கூட இப்பொழுது செல்வதில்லை. இன்று கிராமங்களில்கூட அந்நிலை இல்லை. மிகவும் குக்கிராமங்களில் சில இடங்களில் இருக்கலாம். அப்படி நவீனமயமாகிவிட்ட காலத்தில் தன் மனைவியை ‘தேவைக்காக’ வெளியுல் அனுப்புவதாக பீற்றிக் கொள்கிறாரே இபுராகிம்.

    • exசாகித், வாதங்கள் வற்றும்போது உளறுவது வாடிக்கை நிலை உங்களிடமும் வந்து விட்டது

      • இவ்வளவுக்குப் பிறகும் இந்த சாஹித் என்ற மனிதரை சகோதரர் என்று நீங்கள் அழைக்கத்தான் வேண்டுமா?
        எப்படி ஒரு மட்டமான கருத்தை இவன் உளறி இருக்கிறான் பாருங்கள். எனக்கு தெரிந்து வினவு கட்டுரையாளர்கள் யாரும் இவ்வளவு கீழ்த்தரமாக பேசியதில்லை.
        அப்படியானால், இவனும் இவன் எழுத்துக்களும் மட்டமானவை என்று தெரிந்து இருந்தும் தனது இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக வினவு இவனது கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

        வினவின் இந்து எதிர்ப்பு கட்டுரைகளை இங்கு முஸ்லிம்கள் யாரும் ரசிக்க வில்லை. மனுதர்மத்தால் உங்களை தீண்ட தகாதவர்களாக ஆக்கியதால் நீங்கள் அவர்களை எதிர்கிறீர்கள் என்ற அளவில் மட்டுமே நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதில் உங்களுக்கு ஒரு நியாயமும் இருக்கலாம். உங்கள் இஸ்லாமிய எதிர்ப்பின் புள்ளி எங்கு இருந்து தொடங்குகிறது என்று புரியவிலல்லை.

        நீங்களும் பார்ப்பனப் பெண் ஏன் மடிசார் அணிகிறாள், பார்ப்பான் ஏன் புலால் உண்பதில்லை என்ற அளவில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது இஸ்லாமியப் பெண் ஏன் பர்தா அணிகிறாள் என்ற விவாதத்திற்கான காரணம் என்ன? அது எந்த வகையில் உங்கள் பாதிப்படைய செய்கிறது? (இஸ்லாமிய பெண்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று கூறி விடாதீர்கள்.) இஸ்லாமியப் பெண் பர்தா அணிவதுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று எழுதுவது இஸ்லாமிய வெறுப்பில் ஆதிக்க இந்துக்களுக்கும் உங்களுக்கும் சிறிதும் வேற்றுமை இல்லை என்பதையே உணர்த்துகிறது.

        ஒரு வேளை ஆதிக்க இந்துக்கள் உங்களை தீண்ட தகாதவர்களாக பார்க்கா விட்டால், அந்த இந்துக்களுடன் நின்று முஸ்லிம் பெண்களின் வயிற்றை கிழிக்கும் உங்கள் ஆசையை இந்த கட்டுரை வெளிப்படுத்துகிறது.

  46. மொத்தத்தில் தமிழ்நாட்டில் 10000 உறுப்பினர்கள் கூட இல்லாத இந்த பு.க வினர் தன கொள்கையால் லட்ச கணக்கானோரை வென்றேடுத்தவர்கள்போல் வாய் சவடால் அடிக்கின்றனர். சாதிய தீ கொழுந்துவிட்டெரிந்த அந்த காலத்தில் கூட உங்களால் அந்த வஞ்சிக்கப்பட்டமக்களை உங்கள் பக்கம் ஈர்க்கமுடியவில்லை. உலக வாழ்க்கைக்கு சிறிதும் ஒவ்வாது என்று முடிவுகட்டி உலக மக்களால் புதைக்கப்பட்ட கம்யூனிசத்தை வைத்து கொண்டு இனி என்னத்தை சாதிக்க போகிறீர்கள் என்று தெரியவில்லை உண்டியல் குலுக்குவதை தவிர.

  47. ## இசுலாத்தில் நிர்பந்தம் உள்ளதா? இல்லையா? என்பதே கேள்வி.## சகோதரர் சாகித் அவர்களே.. உங்கள் வீட்டு பெண்கள் சகோதரியோ மனைவியோ டாப் லெஸ்ஸாக வருவதுதான் ஆண்களை போல் சுதந்திரமாக இருக்கிறது என்றால் அனுமதிப்பீர்களா ? அனுமதி இல்லை என்றால் நீங்கள் நிர்பந்தம் செய்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ?

    • இசுலாம்,நிர்பந்தம் இவற்றுக்குள் போக விரும்பவில்லை. மிக மேலோட்டமாக எனது கேள்வியை வினவுகிறேன். இங்கு பின்னூட்டமிட்ட இசுலாமிய நண்பர்கள் தமது இசுலாமிய பெண்மணிகளின் உடை குறித்தும், உடை அணிவது குறித்தும் தத்தமது கருத்துகளையும்,அதற்கு எதிரான விமர்சனஙளையும் வைத்துள்ளனர்.நிற்க. இதே போல ‘இசுலாமியத்தில்’ உள்ள ஆண்கள் இந்த மாதிரி தான் உடை அணிய வேண்டும் என்று வினவு போல் வேறு எங்காவது பொதுவெளியில் இசுலாமிய பெண்கள் தனது கருத்துக்களை இதுநாள் வரை முன்வைத்துள்ளார்களா? ஒருவேளை அப்படி ஒன்றும் இல்லை என்றால் நீங்கள் யார் சார் பெண்களின் உடையை முடிவு செய்ய? பெண்கள் அதுபோல உங்களுக்கான உடைகளில் கட்டுபாடு விதித்தால் உங்கள் ஈகோ கோபம் கொள்ளாதா? ஏன் அதுபோல பெண்களுக்கும் உள்ள ஈகோ கோபம் கொள்ளாது? பெண்கள் பர்த அணிந்தால் மட்டும் அணிந்தால் மானம் காக்கப் படுமா? அதை ஆண்கள் அணிந்தாலும் பெண்களின் மானம் காக்கப் படுமே? அதுகுறித்து என்றாவது முயற்சித்துள்ளீர்களா?

      • ஒரு ஆண் தன வீட்டில் தன சகோதரிகள் தாயார் முன்னிலையில் வெறும் அரைகால் ட்ரவுசரை போட்டுக்கொண்டு சகஜமாக இருக்க முடியும்.இப்படி ஒருபெண் இருக்க முடியுமா?ஆக இயற்கையே உடை அணிவதில் ஆண் பெண்ணுக்கு வித்தியாசம் இருக்கிறது என நமக்கு உணர்த்துகிறது.இப்படி அரை குறை ஆடைகளுடன் பெண்கள் திரிவதால் பெண்களுக்குத்தான் ஆபத்து. எவ்வளவோ ஈவ்டீசிங் பிரச்சனைகளை நாம் செய்திகளில் படிக்கிறோம்.ஒரு ஆணுக்கு இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டதாக நாம் செய்திகளில் படித்ததில்லை.ஒருஆண் அணியும் பேன்ட் முழு கைசட்டை அவன் உடலை எவ்வளவு மறைக்குமோ (முகம் முன் கைகள் தவிர)அதே அளவில்தான் இஸ்லாமிய பெண்களும் மறைக்கிறார்கள்.இப்படி மறைப்பதினால் எந்த ஆணும் தன்னுடைய முன்னேற்றம் தடைப்படுவதாக நினைப்பது இல்லை.இதுவே ஒருபெண் அணிந்தால் இது பெண் அடிமைத்தனம்,கொடுமை செய்கிறார்கள்,இப்படி உடை அணிந்தால் அவளின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று கூப்பாடு போடுகிறார்கள்.அலுவலகங்களில் பெண்கள் தன மார்பு பகுதியை,இடுப்பு பகுதியை தொப்புள் பகுதியை காண்பித்து அலுவல்கள் செய்தால்தான் பெண்கள் முன்னேறமுடியுமா?

        • நேராக கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. சரி. உங்களைப் போல சுற்றிவளைத்தே கேட்கிறேன். “பெண்கள் இவ்வாறு தாறுமாறாக உடை அணிந்து செல்வதினால் சமூகம் கெடுகிறது,பெண்களின் மானமும் கெடுகிறது. எனவே அப்படி பட்ட பெண்களுக்கான நாகரிகமான உடையை தீர்மானிக்கும் பொறுப்பை உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பொறுப்பான பெண்களிடமும் கொடுத்தோம். அப்புறமும் இந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எனவே ஆண்களாகிய நாம் பெண்கள் இப்படி உடையணிந்தால் நல்லது என்று தீர்மானிக்கிறோம்” — இப்ப்டி ஏதாவது நபிகள் நாயகம் குறிபிட்டுள்ளாரா? ‘பெண்கள் இவ்வாறு உடையணிந்தால் அனைவருக்கும் நல்லது’ என்று யார், எப்படி பட்ட சூழலில், எந்த தரவுகளின் அடிப்ப்டையில், எத்தனை பெண்களின் முழு சம்மதத்துடன் அதை முடிவு செய்தனர்?

          • திரு பொன்ராஜ், நீங்கள் நேராகவும் வரவில்லை, குறுக்காகவும் வரவில்லை. விதண்டாவாதம் மட்டும் செய்கிறீர்கள். உங்களுக்கு இது ஒரு பொழுது போக்காகவும் இருக்கலாம்.
            உங்கள் கேள்விக்கு இது தான் பதில். இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான உடை உடுத்தி வெளியில் வர சொல்கிறது.
            உங்கள் வீட்டுப் பெண்கள் வெளியில் செல்வதாக இருந்தாலும் அவர்கள் கண்ணியமான உடை உடுத்த நீங்களும் பரிந்துரை செய்வீர்கள் என நம்புகிறோம். அவர்கள் விருப்பப்படி உடை அணிவார்கள், அதை கேட்க எனக்கு என்ன உரிமை உள்ளது என வாதிட மாட்டீர்கள். ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு இல்லை என்றால் அது உங்களுடைய குடும்பமே அல்ல.

            ஒரு பெண் தனது தந்தை, சகோதரன் முன்பு கவர்ச்சியாக ஆடை அணிய விரும்ப மாட்டாள். அந்த ஒரு கண்ணியத்தை தான் அவள் மற்ற ஆண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே இஸ்லாம் சொல்வது. அதற்கு பர்தா தான் அணிய வேண்டும் என்பது இல்லை. இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிகிறார்கள். அவ்வளவு தான்.

            அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், பர்தா அணிந்து கொள்ளுங்கள் என்று மாற்று மதத்தினரை யாரும் வற்புறுத்தவில்லை. அப்படி செய்யவும் முடியாது. பிறகு ஏன் இந்த கட்டுரை, இந்த நீலிக்கண்ணீர் என்று தான் புரிய வில்லை.

          • இயற்கை நமக்கு உணர்த்தும் ஆன் பெண் உடல் அமைப்பின் வித்தியாசத்தையும், சமுதாய வாழ்கையின் எதார்த்த பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டியும் உங்களுக்கு புரியவில்லையா? அல்லது புரியாததுபோல் நடிக்கிறீர்களா ? சகோதரர் பொன்ராஜ் நீங்கள் 54 .1 ல் கேட்ட கேள்விக்கு நான் அதற்கு கொடுத்த விளக்கத்தில் பதில் இருக்கிறது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ###இதே போல ‘இசுலாமியத்தில்’ உள்ள ஆண்கள் இந்த மாதிரி தான் உடை அணிய வேண்டும் என்று வினவு போல் வேறு எங்காவது பொதுவெளியில் இசுலாமிய பெண்கள் தனது கருத்துக்களை இதுநாள் வரை முன்வைத்துள்ளார்களா?###

            இயற்கையில் ஆண் இனத்தைவிட பெண் இனம் பலவீனமானது என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு ஆண் எந்த மாதிரி உடை அணிந்து சென்றாலும் அவனுக்கு எந்த ஒரு பெண்ணாலும் அல்லது பெண்களாலும் பாலியல் தீங்கு ஏற்படுத்திவிடமுடியாது. ஒரு ஆண் விரும்பி விறைப்பு தன்மை அடைந்து ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முடியுமே தவிர விருப்பமில்லாமல் விறைப்பில்லாமல் உறவுகொள்ள முடியாது. இதனால் ஆண்களின் உடையை நிர்ணயிக்க பெண்களுக்கு அவசியமில்லை. ஆனால் ஒரு பெண்ணின் நிலை அப்படி இல்லை. அவள் விருப்பப்படவில்லை என்றாலும் ஒரு ஆணோ இல்லை ஆண்களோ அவளை பாலியல் தீங்கு ஏற்படுத்திவிட முடியும்.ஆன் பார்த்தவுடன் கிளர்ச்சி அடையக்கூடிய உடற்பாகங்கள் கொண்டவளாகத்தான் பெண்ணின் இயற்கை உடலமைப்பு இருக்கிறது. ஆணுக்கு அப்படி இல்லை.ஆக பெண்ணுக்கு உடை கட்டுப்பாடு அவசியம் தான். பெண்ணின் நலனுக்காக. சமுதாயத்தின் நலனுக்காக. இதில் பெண்ணின் ஈகோ ஆணின் ஈகோ என்பதெல்லாம் அர்த்தமில்லாத ஒன்று.

            ####எனவே ஆண்களாகிய நாம் பெண்கள் இப்படி உடையணிந்தால் நல்லது என்று தீர்மானிக்கிறோம்” — இப்ப்டி ஏதாவது நபிகள் நாயகம் குறிபிட்டுள்ளாரா? ‘பெண்கள் இவ்வாறு உடையணிந்தால் அனைவருக்கும் நல்லது’ என்று யார், எப்படி பட்ட சூழலில், எந்த தரவுகளின் அடிப்ப்டையில், எத்தனை பெண்களின் முழு சம்மதத்துடன் அதை முடிவு செய்தனர்?####

            “பெண்கள் மார்பு பகுதியை மறைத்தால் மறைத்து உடை அணிந்தால் அனைவருக்கும் நல்லது” என்று யார், எப்படி பட்ட சூழலில், எந்த தரவுகளின் அடிப்ப்டையில், எத்தனை பெண்களின் முழு சம்மதத்துடன் அதை முடிவு செய்தனர்? இப்படி நானும் கேட்கலாம். உங்கள் கேள்வி எப்படி தெரியுமா இருக்கு ? ஏன் பெண்கள் மட்டும் பிரசவிக்கும் கடைமையும், வலியையும் ஏற்றுக்கொள்ளணும்? ஏன் ஆண்களும் ஏற்றுக்கொள்ள கூடாது என்பது போல் மடைமையாக இருக்கிறது. உங்களுக்கு பிரச்னை எல்லாம் இஸ்லாமும் நபியும் சொன்னதால் தான் என்று நினைக்கிறேன்.இதையே கம்யூனிசமோ, லெனினோ சொல்லி இருந்தால் ஏற்றுகொண்டிருப்பீர்களோ என்னவோ ?

            • //ஆண் இனத்தைவிட பெண் இனம் பலவீனமானது என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்//
              மன்னிக்கவும் பாய்…!!! இந்த மனநிலையில் நீங்கள் இருப்பது தெரிந்திருந்தால் நான் பேசியிருக்கவே மாட்டேன்.

              • உடல்ரீதியாக ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்று உலகமும், அறிவியலும் ஏற்றுக்கொண்ட ஒன்றை நீங்கள் ஏற்றுகொள்ளாதது உங்கள் விதண்டாவாதத்தைதான் காட்டுகிறது. உண்மையிலும் எதார்தத்திலும் கிடையாத நடக்காத ஒன்றை ஏட்டளவில் நடத்திக்காட்டும் உங்களை போன்ற வாய்வீச்சுக்காரர்களிடம் வாதம் பண்ணினால் பயன் இருக்காது என்பது எனக்கும் தெரியும். இந்த தளத்திற்கு வரும் மற்ற சகோதரர்களில் ஒருவரேனும் புரிந்துக்கொண்டால் சரி என்பதற்காகவே என் கருத்தினை பதியவைத்தேன். நன்றி

  48. i saw this one website this very usefull for all
    http://onlyoneummah.blogspot.com/2011/09/blog-post_08.html

    நாத்திக மாக்களுக்கு.இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தயம்”

    Posted by பாத்திமா ஜொஹ்ரா

    ரொம்ப நாளக்கி பின்னாடி சந்திக்கிறதுல மகிழ்ச்சி. எல்லாருக்கும் அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக. கண்ணியம் வாய்ந்த, அருள் பெற்ற ரமலான் மாதம் நம்மை விட்டு விடை பெற்று விட்டது. நம் அனைவர் பாவங்களையும் ஏக இறைவன் அல்லாஹ் மன்னித்து அருள்வானாக ஆமீன்.

    ரொம்ப நாளக்கி பின்னாடி சந்திக்கிறதுல – ரொம்பவே நிறைய மாற்றங்கள்.

    நாத்திகம் பேசிக் கொண்டு, நாட்களைக் கடத்திக் கொண்டு நரக விளிம்பில் இருக்கும் நாத்திக மாக்களுக்கு – இஸ்லாம் விடும் சவால்களை நம் சகோதரர்கள் அழகான முறையில் எடுத்து வைக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

    தங்கள் மூளையை ஒழுங்காக உபயோகித்து, சிந்தித்து, ஆய்ந்து, உணர்ந்து ஏக இறைவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கே நன்மையாகும், “இல்லை இல்லை நான் நாசமாகத்தான் போகிறேன் என்ன பந்தயம்” என் அவர்கள் (நாத்திகவாந்திகள்) இருப்பார்களேயானால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.

    அந்த நாத்திகர்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

    ஒரு நாத்திகன் ஒரு முஸ்லிமிடம் சொன்னான், “இல்லாத கடவுளுக்கு ஏன் இப்படி நீங்கள் வணங்குகிறீர்கள்,சொர்க்கம்,நரகம் உண்டென நம்புகிறீர்கள்? இப்படி இறைவன்,இறைவன் என்று அவனுக்கு பயப்படுகிறீர்கள்? என்று.

    அதற்கு பொறுமையாக அந்த முஸ்லிம் சொன்னார் ,”நீ சொல்வது போல், உன் கூற்றுப் படி இறைவன் இல்லையென்றாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,ஆனால் அப்படி ஒரு இறைவன் இருந்தாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை, காரணம் நான் அவனை – அந்த ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளேன், தொழுகிறேன், வணங்குகிறேன், எனக்கு எப்படி இருந்தாலும் கவலையோ, துக்கமோ இல்லை. எனவே எனக்கு அவன் சொர்க்கம் தருவான், ஆனால் நீயோ,அந்த ஏகனை மறுக்கிறாய்? உன் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார், உனக்குத்தான் நஷ்டம்” என்றார்.

    அந்த முஸ்லிமின் மறுமொழி கேட்டு வாயடைத்துப் போனான, அந்த நாத்திகன்.

    நீங்களும் சிந்தியுங்கள் இன்றைய நாத்திகர்களே, நஷ்டம் யாருக்கென்று!

    • //ஒரு நாத்திகன் ஒரு முஸ்லிமிடம் சொன்னான், “இல்லாத கடவுளுக்கு ஏன் இப்படி நீங்கள் வணங்குகிறீர்கள்,சொர்க்கம்,நரகம் உண்டென நம்புகிறீர்கள்? இப்படி இறைவன்,இறைவன் என்று அவனுக்கு பயப்படுகிறீர்கள்? என்று.

      அதற்கு பொறுமையாக அந்த முஸ்லிம் சொன்னார் ,”நீ சொல்வது போல், உன் கூற்றுப் படி இறைவன் இல்லையென்றாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,ஆனால் அப்படி ஒரு இறைவன் இருந்தாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை, காரணம் நான் அவனை – அந்த ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளேன், தொழுகிறேன், வணங்குகிறேன், எனக்கு எப்படி இருந்தாலும் கவலையோ, துக்கமோ இல்லை. எனவே எனக்கு அவன் சொர்க்கம் தருவான், ஆனால் நீயோ,அந்த ஏகனை மறுக்கிறாய்? உன் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார், உனக்குத்தான் நஷ்டம்” என்றார்.

      அந்த முஸ்லிமின் மறுமொழி கேட்டு வாயடைத்துப் போனான, அந்த நாத்திகன்.

      நீங்களும் சிந்தியுங்கள் இன்றைய நாத்திகர்களே, நஷ்டம் யாருக்கென்று!//

      நல்ல ஜோக்கு போங்க 🙂 🙂 😛

      • இது ஜோக்கா இல்லா உனக்கு நீயே வக்கிர ஆப்பாநு நீ போன பிரகு தெரிஉம்

        • போன பிறகு தான் ஒன்னும் தெரியாதே பாய்….!!!
          சொர்க்கத்துல இருந்து போனவாரம் தான் ரிடர்ன் ஆனவர் மாதிரி பேசுறீர்? 🙂

    • மாலிக் பாய்….
      போகிற போக்கை பார்த்தால் சாமி கும்பிட வில்லை என்றால் ஆள் வைத்து அடிப்பீர்கள் போல? கடவுள் இருக்கு என்று சொல்வோர் இருக்கும்போது, கடவுள் இல்லை என்று சொல்லும் நபர்கள் இருக்கவே செய்வார்கள். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட யாரையும் மல்லுகட்டியோ, பயமுறுத்தியோ நம்பச்சொல்வதில்லை. கடவுள் இருக்கு என்று சொல்பவர்கள் அதுபோல செய்யும்போது தான் தமாஷாக உள்ளது. ஆத்திகர்களாக இருந்தாலும், நாத்திகர்களா இருந்தாலும் இவர்கள் இருவரும் சந்திக்கும் ஒரே புள்ளி ‘மனிதநேயம்’ மட்டுமே…!!! இந்த கோட்பாட்டிற்கே ஆப்பு வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறாதே?

      • if you have face book id please go to this link very useful for you

        மண்ணறை வேதனை

        இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது… இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் புதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

        http://www.facebook.com/media/set/?set=a.138636952860887.24528.100001437481796&type=3

        • மாலிக் பாய்…!!!
          ஒரு இந்து ஒருவரின் உடலை தகனம் செய்து அந்த சாம்பல் கடலில் கரைக்கப் படுகிறது. அல்லா என்ன செய்வார் பாய்? “இவன் இசுலாமியன் கிடையாது எனவே என்னால் தண்டனை கொடுக்க முடியாது” என்று சிவனுக்கு ‘பார்வர்ட்’ செய்துவிடுவாரா? இல்லை ‘அல்லா’ எல்லாருக்கும் பொதுவான கடவுள் என்றால் கடலில் கரைத்த சாம்பலை எப்படி பிரித்தெடுப்பார்? எப்படி தண்டனை கொடுப்பார் ?. இவை சாமானியனுக்கு தோன்றும் கேள்விகள்.நிற்க. பின்வருபவை நீங்கள் காட்டிய ‘முகப்புத்தகம்’ சுட்டியை படித்ததால் வந்த கேள்விகள். ஒருவன் இறந்த பின்பு அவன் சொர்கத்துக்கு போகிறானா, இல்லை நரகத்துக்கு போகிறானா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும் அல்லவா? அதை தெரிந்துகொள்ள நீங்கள் மிக எளிமையான வழியை கூறியுள்ளீர்கள். சரிதானே? இனி வரும் காலங்களில் ஒரு பிரேதத்தை உட்பக்கம் கேமராவுடன் புதைத்து அதை ஒரு டீவியில் இணைத்துவிட்டால் ‘அல்லா’ இறந்தவனுக்கு சொர்கத்தை காட்டுகிறாரா இல்லை நரகத்தை காட்டுகிறாரா என்று ‘லைவ்’வாக அனைவருக்கும் காட்டலாமே? இதையே நாத்திகர்களுக்கும் காட்டி ‘பார்த்துக்கோ தம்பி. கடவுளை வணங்கு. இல்லை என்றால் உன் கதியும் இப்படித் தான்’ என்றும் கூறலாமே? யாராவது முயற்சி செய்து சொல்கிறீர்களா? பாய்… ‘தன் அறிவுக்கு அப்பாற்பட்டு உள்ள சங்கதிகளை’ தனக்கு தெரியாது (அல்லது) தெரிந்துகொள்ள ஆராய்பவன் நாத்திகன். அவை அனைத்துக்கும் ‘கடவுள்’ என்று பெயர் வைப்பவன் ஆத்திகன்.நீங்கள் சொன்ன அந்த பிண விசயத்துக்கும் அறிவியல் புர்வமாக ஆராய்ந்ந்தால் விடை என்றாவது கிடைக்கலாம். இன்று அறிவியல் அதிசயங்கள் அனைத்துமே ஒரு காலத்தில் மத போதகர்களால் எதிரிக்கப் பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள் பாய்…!!!

          • பலர் தீயிட்டு சாம்பலாக்கப்படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர்களின் சாம்பல்கள் பரப்பப்பட்டுள்ளன. இவர்களுக்கு மண்ணறையே இல்லை என்பதால் மண்ணறை வேதனை கிடையாது எனக் கூறினால் அனைவரும் மண்ணறை வேதனையைச் சந்திப்பார்கள் என்ற ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.
            அது போல் ஒரு மனிதனைக் காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிட்டு விடுகின்றன; அல்லது கடலில் மூழ்கிச் செத்தவனை மீன்கள் உணவாக உட்கொண்டு விடுகின்றன. இவர்களுக்கெல்லாம் மண்ணறை ஏது?

            அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தான் – அந்த மண்ணுக்குள் தான் வேதனை நடக்கிறது என்று நாம் நம்பினால் உலகில் பெரும்பகுதியினருக்கு மண்ணறை வேதனை இல்லாமல் போய்விடும்.

            இறந்தவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய இறைவன் நம்மால் காண முடியாத உலகில் வைத்து தண்டிக்கிறான் என்பது தான் இதன் பொருளாக இருக்க முடியும்.

            குறிப்பிட்ட சில மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக் காட்டியிருப்பதாக ஹதீஸ்கள் உள்ளன. அவை இறைத் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதாகும் என்று கருத வேண்டும்.

            எரிக்கப்பட்டவர்களுக்கும், மிருகங்களுக்கு உணவாகிப் போனவர்களுக்கும் மண்ணறை வாழ்க்கை கிடையாது என்ற விபரீதமான நிலை ஏற்படுவதைத் தவிர்க்க மண்ணறை வாழ்க்கை பற்றி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும்.

            more information please download this books. available pdf format

            http://onlinepj.com/books/arthamulla_kelvikal/

            http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/

            • இறந்தபின் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.அதை கண்டவரும் இல்லை,நம்பத் தகுந்த ஆதாரங்களும் இல்லை,ஐய்யமுற நிரூபித்தவரும் இல்லை.நிலைமை இப்படி இருக்க, இறந்தபின்பு கிடைக்கபோகும் நல்லது கெட்டதை பற்றி வாழும்போது நான் எதற்கு பாய் கவலை படவேண்டும்? வாழும்நாளில் ‘இறப்பிற்கு பிறகான வாழ்க்கையை’ பற்றியே சிந்த்தித்துகொண்டிருந்தால், இறந்தபின்பு ‘வாழ்ந்த்திருக்கவேண்டிய’ வாழ்க்கையை பற்றி சிந்திப்பீர்களா? இப்படியே மாறி மாறி சிந்தித்துகொண்டிருந்தால் எப்போது தான் பாய் வாழ்வது? நபிகள் நாயகம் வாழும்போதே சொர்கத்தை அனுபவிக்க ஏதும் உரைக்கவில்லையோ? கண்டிப்பாக சொல்லியிருப்பார். அப்படி வாழ்ந்த்துவிட்டு போவோமே? இன்று கிடைக்கும் கலாகாய், நாளை கிடைக்க இருக்கும் பலாகாயை விட மேல் ‘பாய்’…!!

              • அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

                “ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்… (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
                “ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் – நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் – பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ எனக் கேட்பர். அதற்கவன் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான்.

                பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

                இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?
                ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.

                அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.
                ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.

                அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து,நல்வழிப்படுத்தி,இந்த மாதிரி கொடுமைகளை எல்லாம் சந்திக்காவண்ணம் நம்மை சொர்க்கவாசியாக்கி வைப்பானாக!

                • மாலிக் பாய்,

                  ரொம்ப அப்பாவியா இருக்கேளே. இந்த நாஸ்திக ப்ரம்மஹத்திகள்ட்ட இப்டில்லாம் பயங்காட்டினா குஷியாயிடுவா. விட்டுடுங்கோ.

                  • நான் நினைகிறேன் இது ஒன்றே அவர்களுக்கு போதும் என்று

                    அவர்கள் கூற்றுப் படி இறைவன் இல்லையென்றாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை,ஆனால் அப்படி ஒரு இறைவன் இருந்தாலும் எனக்கு நஷ்டம் ஏற்படப்போவதில்லை, காரணம் நான் அவனை – அந்த ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளேன், தொழுகிறேன், வணங்குகிறேன், எனக்கு எப்படி இருந்தாலும் கவலையோ, துக்கமோ இல்லை. எனவே எனக்கு அவன் சொர்க்கம் தருவான், ஆனால் நீயோ,அந்த ஏகனை மறுக்கிறாய்? உன் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார், உனக்குத்தான் நஷ்டம்”

                    அல்லா நமக்கு அறிவ எதற்கு கொடுதுருக்க கொஞ்சமது சிந்திக்கிறதுக்கு
                    மற்றவங்க சொல்ல கேட்கிறதுக்கு இல்ல

                    so think about that

                  • அம்பி, சூட்சுமமாப் பாத்தேள்னாக்க இந்த ஆஸ்திகப் ப்ரம்மஹத்திகள் ஒண்ணு சேர்ற இடம் இந்த நாஸ்திகப் ப்ரம்மஹத்திகளை இல்லாமப் பண்ணிடுறதுலதான். ஒருத்தர்க்கொருத்தர் வதம் பண்ண இடைஞ்சலா இருக்குறவா இவங்கதானே, என்ன சொல்றேள்?

              • பொன்ராஜ் பாய் , ///இன்று கிடைக்கும் கலாகாய், நாளை கிடைக்க இருக்கும் பலாகாயை விட மேல் ‘பாய்’…!!///
                நாளை கிடைக்கும் பலாக்காய் பற்றி நாங்கள் சொல்லியுள்ளோம். இன்று கிடைக்கும் கலாக்காய் பற்றி சொல்லுங்களேன்.

  49. இங்கே இஸ்லாத்துக்கு எதிராக கருத்து எழுதும் காஃபிர்களுக்கும், ஈமானுள்ள முஸ்லீம்களுக்கும் ஒரு அறிக்கை

    இண்டர்நேஷனல் கொரில்லா திரைப்படம் காணத்தவறாதீர்கள்.

    பறக்கும் குரான்கள் பாய்ந்து வந்து காஃபிர் சல்மான் ருஷ்டியை அழிக்கும் இறுதிக்காட்சி. கலிமா சொல் என்று பர்தா போடாத பாண்டிட் குவின் முஸ்லிமா சல்மான் ருஷ்டியை மிரட்டும் காட்சி, முஸ்லிமாக்கள் டைட்ஸ் போட்டுகொண்டு டப்பாங்குத்து போடும் கண்ணுக்கினிய காட்சிகள். உங்கள் ஈமான் பலப்பட, காஃபிர்கள் வெருண்டோட இன்றே காணத்தவறாதீர்கள்

    காஃபிர்களுக்கு மின்னல் எச்சரிக்கை வீடியோ.. சல்மான் ருஷ்டியை அழிக்கும் அல்குரான்

    • முதலில் குரான் பறந்துவந்து தாக்கட்டும் பாய்…!!! அப்புறம் ஊர் உலகமே சொல்லும் ‘இசுலாத்தின்’ மகிமையை…!!!

    • டைரக்டர் யாரு பாய்? இராம.நாராயணன் அசிஸ்டண்டா? கிராபிக்ஸ் ஒன்னும் பெரிசா சொல்லிகிற மாதிரி இல்லியே? பார்ட் டூ’வையாவது தரமாக கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

  50. ibnushakir appadathai ungalaipondra arivaaligalthan aaivu seikiren endru paarpaargal. matravargal pozhupokkukaga parargal. padaththaipaarthu islaathai edai podaatheergal.Quranai padithu unarungal.

  51. To the author..

    //ஆசிட் வீச்சுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், சட்டங்களையும் இயற்றி இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், குற்றவாளிகளில் ஒன்றிரண்டு பேரைத் தவிர பெரும்பாலோனோர் தண்டிக்கப்படுவதேயில்லை. அவர்கள் சட்டங்களின் துணை கொண்டே வெளியில் வந்து வழக்கம் போல் நடமாடுகின்றனர். சகஜமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களுக்கு எவ்விதக் குற்றவுணர்வும் ஏற்படுவதில்லை.//

    ==
    அந்த சட்ட ஓடை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை எதாவது இருக்கா?இவர்கள் அனைவரும் இசுலாமிய செஷரிய சட்டபடி தண்டிகபடாமல் அரசாங்க சட்டம் இவர்கள் சுதந்த்ரிரமாக நடமாட விட்டுருந்தால் தங்கள் கூறும் மதவாதம் என்று eatrukolalam.. தாங்கள் நோக்கம் பெண் அடிமை மட்டுமே என்றல் “வங்காள தேசத்து பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்” என்று அல்லவா தலைப்பை வைத்து இருக்க வேண்டும்? எதோ ஒரு இசுலாமிய மத தாக்குதலை தொடுத்தால் தாங்கள் ஹிந்து மத மீதான தாக்குதலை தொடருவதற்கு அங்கிகாரம் என்று earka இயலாது..

  52. dear sis kalai,
    சொர்க்கத்தில் கூட ஆணாதிக்கம் தொடர்கிறதாம். பூமியில் ஆணுக்கு 5 மனைவிகளை பெண்டாள அனுமதியளித்ததைப் போன்றே சொர்க்கத்திலும் பூமியில் மணமுடித்த மனைவிகளுடனும் + பல ஹூர்ளின் அழகிகளுடனும் சல்லாபிக்கலாமாம். ஆனால் பெண்களுக்கு சொர்க்கத்திலும் கூட நோ சான்ஸ், கணவன் ஒருவன் மட்டுமே. இதில் பெண் சொர்க்கவாசியாகவும் ஆண் நரக வாசியாகவும் இருந்துவிட்டால் பெண்களுக்கு துறவறம்தானாம்.

    please go to this link and read this

    http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/pengalukkum_hoorul_ean_unda/

    • மாலிக்,
      அந்த லிங்கில் பிஜேக்கு நன்றாக ஜிலேபி சுடத் தெரியும் என்றுதான் தெரிகிறது.

      • உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.)

        (திருக்குர்ஆன் 3:195)
        ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

        (திருக்குர்ஆன் 4:124)
        ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.

        (திருக்குர்ஆன் 16:97)
        யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.

        (திருக்குர்ஆன் 40:40)
        சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

        (திருக்குர்ஆன் 4:32)
        நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

        (திருக்குர்ஆன் 9:72)
        நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.

        (திருக்குர்ஆன் 57:12)
        முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

        (திருக்குர்ஆன் 33:35)

  53. DEAR SISTER & BROTHERS,

    PLEASE REED THIS BOOK IT’S NOT STORY IT’S REAL

    RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம்

    http://vanjoor-vanjoor.blogspot.com/2011/09/rss.html

    முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.

  54. பொன்ராஜ் ///ஒசாமா இறந்தவுடன் உலகத்தில் ஒட்டுமொத்த தீவிரவாதமும் ஒழிந்துவிட்டது ///

    தனது சொந்த மண்ணில் வெளிநாட்டிலிருந்து புகுந்த எண்ணை திருடர்களை எதிர்த்து போராடியவர் தீவிரவாதி .
    இலங்கையில் வம்சாவளிகள் சொந்த மண்ணை சேர்ந்தவர்களை எதிர்த்து போராடினால் போராளிகள்.
    இது பொன்ராஜ் நியாயமா?
    ///இதுபோன்ற செய்திகளை சொல்லும்போது அதற்கான தரவுகளை கொடுத்தால் நல்லது. கருணாநிதியும், வீரமணி மட்டுமே பெரியாரின் வாரிசுகள் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது உங்களின் அறியாமையே இப்ராகிம் பாய்….!!!///

    இவர்களை இல்லை என்பதால்தான் சிற்றெறும்பு என்கிறேன்.பெரியார் சிலை எடுத்த கருணாநிதியை விடவா நீங்கள் கொள்கைவாதிகள். நீங்கள் சாதாரண ஆள் .நீங்கள் ஒரு கவுன்சிலரானால் கூட உங்களது கொள்கை கோமணம் பாச்சிவிடும் .ஆனால் கருணாநிதியோ கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் முதல்வராக இருந்து பெரியாரிசத்தை தானும் பின்பற்றி ஆட்சியதிகாரத்திலும் அந்த கொள்கையை கொண்டு வந்தவர்.இன்று எம்ஜியார் அவரை வென்றார் என்றால் சினிமாகவர்ச்சியுடன் ஆதிக்க சக்தியின் பக்கபலமே .ஆதிக்க சக்தியின் பலம் இல்லைஎன்றால் என்டியார் போல் வீழ்ந்திருப்பார். கருணாநிதியை வீழ்த்துவதே பெரியாரிசத்தின் வீழ்ச்சியாக கருதியே ஆதிக்க சக்திகள் செயல்பட்டு வெற்றி கண்டுவிட்டனர்.ஆனால் எம்ஜியாரின் வளர்ச்சி கருணாநிதியை படிப்படியாக கொள்கையை இழக்க செய்து ஜெயலிதாவின் வளர்ச்சி முற்றிலுமாக இழக்க செய்துவிட்டது.

    • ///பெரியார் சிலை எடுத்த கருணாநிதியை விடவா ///////
      பெரியாரால் சிலை எடுக்கப்பட்ட கருணாநிதியை விடவா ?

      • ரெண்டு அபிஷ்டுகளும் மாத்தி மாத்தி சிலை வச்சுண்டு, மாலை மரியாதையெல்லாம் அமோகமா நடக்கறது. சீக்கிரமா கூரையும் போட்டுண்டா கும்பம் வச்சுடலாம்.

    • ஒசாமா பற்றியது:
      —————-
      தேவையில்லாமல் டென்சன் ஆகாதீங்க பாய்…!!! ஒசாமாவின் தீரத்தை நான் மதிக்கிறேன். “ஒசாமா ஒழிந்ததும் தீவிரவாதம்” — இந்த கருத்தை உலக நாடுகள் தான் சொல்லிவருகின்றன. தவறாக எடுத்தாளப்பட்டதற்கு வருந்துகிறேன்.

      • அனுபமா ஜெயகுமார் ,வம்சாவளிகள் இல்லை பூர்விக மக்கள் என்றால் ஆதாரம் வையுங்கள் ,கொன்னுவிடாதீர்கள் ஐய்யா .வேலுப்பிள்ளை பிரபாகரன் மூதாதையர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தை சேர்ந்தவர் என செவி வழியாக கேள்விபட்டேன் .அது தவறு என்றால் மறுக்க செய்யுங்கள்

  55. பொன்ராஜ் ,பல நிறுவனங்களில் பெண்கள் அவர்கள் விருப்பம்போல் அரைகுறை ஆடையுடன் வர அனுமதிக்கிறார்கள் .ஆனால் ஆண்கள் மட்டும் பேன்ட் சர்ட் ,கோடையிலும் கழுத்து தெரியாதவாறு டை,சூ சாக்ஸ் ஆகியவை அணிந்து வரவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள் .ஆண்களும் கொஞ்சம் காற்றோட்டமாக டவுசர் பனியன் அணிந்து வர அனுமதி இல்லை .பெண்கள் அணிந்து வந்தால் மட்டும் கண்குளிர ரசிக்கும் ஆண்கள் ,பெண்களும் அவ்வாறு ரசிக்க அடிக்கடி கமல் சினிமாவில் ஜட்டியுடன் வருவது போல் அலுவலகங்களுக்கு ஆண்களுக்கு டவுசர் டி சர்ட் அனுமதிக்க கூடாதா?விலை உயர்ந்த டவுசர் ,பனியன் சர்ட் எல்லாம் ஜவுளிக்கடையில் வாங்கி அதற்கு மேல் பேன்ட் ,கோர்ட் எல்லாம் போட்டு மறைப்பது சரியா?

  56. அப்தல்லா என்னும் மூஃமின் சகோதரர் //நாங்கள் கருத்தோடுதான் மோதுவோமே தவிர மனிதர்களோடு அல்ல.//
    என்று கூறியிருக்கிறார். இது போல ஒரு காஃபிர் கருத்தை ஒரு மூஃமின் தன் கையால் எழுதி படிக்க நேர்வதற்கு நான் மிகவும் பாவம் செய்திருக்கிறேன். எனக்காக ஏக்க இறைவனிடம் துஆ செய்துகொள்ளுங்கள்.

    மூஃமின்களின் குணம் கருத்துக்கு எதிராக கருத்தை வைப்பதல்ல. அதனை அல்லாஹ்வின் இறைதூதர் ஆதரிக்கவும் இல்லை. இஸ்லாமுக்கு எதிராக கருத்தை கூறுபவனின் தலையை எடுக்க வேண்டும் என்பதே நபி பெருமானாரின் அழகிய நெஞ்சம் நெகிழும் போதனை. அதுவே அவரது சுன்னா. இது கூட தெரியாமல் இஸ்லாத்தை என்ன இவர் பிரச்சாரம் செய்து யார் இஸ்லாத்தில் சேருவார்கள் என்று தெரியவில்லை.

    இவர் ஒருவேளை காஃபிர் கருத்துக்களால் கவரப்பட்டு திசை மாறி சென்றுவிட்டாரோ என்ற அச்சத்தினால் ஈமானை இறுக்கப்பற்றிக்கொள்ள ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

    கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்

    • ibnushakir

      இஸ்லாத்தை ஒழுங்கஹி புரியாதவங்க தான் இப்படி எழுதுவான்
      நீங்கள் எழுதியததை பார்த்தால் ஒழுங்கா படித்து விளங்க தெரியாத மக்கு பய்யன்னு
      தெரியுது.

      so please read qran very well
      if you reply anything comment give the proof ok

      for examble: like this give examble

      2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.

      not like this below mention
      2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;
      ur explantion like this have so please read very well

  57. சகோ மாலிக்கு
    உங்கள் தலை மீது ஏக்க எறைவனின் சாந்தியும் சமாதானமுல் நெலவுவதாக(இந்த இரண்டுக்கும் தற்போதைய காப்பிரைட் உரிமத்தை காஃபிர்களிடமிருந்து மூஃமின்கள் கைப்பற்றியுள்ளார்கள் என்று அறியவும்)

    இஸ்லாத்தை ஒழுங்காக படிக்காமல், ஹதீஸை ஒழுங்காக படிக்காமல், அல்குரானை ஒழுங்காக படிக்காமல் தாவாப்பணியில் ஈடுபடும் மார்க்க சகோதரர்களுக்கு விளக்கத்தான் நான் பதிவெழுதவே ஆரம்பித்தேன். ஆகையால் உங்களது தவறான புரிதல்களை கண்டு அஞ்சவில்லை.

    வாருங்கள் http://pagadu.blogspot.com ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் பெறுவோம் (காப்பிரைட் முஸ்லீம்கள்)

    யா அல்லாஹ்

  58. பண்ணை வாழ்க்கை என்று உங்களது ஒரு அரைவேக்காட்டுத் தனமான புரிதலையும்,பின்பு திருமணத்தை ஆணாதிக்கம் என கம்யூனிசம் கூறுவதாக ஒரு புளுகையும் நீங்கள் தான் வெளிப்படுத்தினீர்கள்.இதனிடையில் நான் மேதாவித்தனம் காட்டுவதாக குர்றச்சாட்டு வேறு.
    எங்களது இனப்பெருக்க உத்தி இருக்கட்டும். முதலில் பண்ணை வாழ்க்கையைப் பற்றி நீங்கள் புரிந்து வைத்திருப்பதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்கள்.

    கலை///முதலில் பண்ணை வாழ்க்கையைப் பற்றி நீங்கள் புரிந்து வைத்திருப்பதைப் பற்றி கொஞ்சம் விளக்குங்கள்./////

    பண்ணை வாழ்க்கை பற்றி நான் அரை வேக்காடுத்தனமாகவே புரிந்து இருக்கிறேன் என்பது உண்மையே .அதைப் பற்றி கேட்டால் செங்கொடி வாய் திறக்க மாட்டிருக்க்கிறார்.exசாகித் மவுனியாகி விடுகிறார், தாங்களாவது முழுமையாக விளக்குங்களேன்.கலைஅய்யா கலக்குவீர்களா?

  59. சகோதரர்,மாலிக் ,கருத்துக்களுடன் கருத்துக்களை மோதவிடுங்ககள் நல்ல விமர்சகராக சென்கொடியுடன் வாதம் வையுங்கள் .சிங்கத்தோடு மோதலாம் ,சிங்கத்தை வென்ற சிங்கமே !என்பார்கள் .புலியுடன் மோதினால் புலியுடன் மோதிய புலியே !ஜல்லிக்கட்டில் இறங்கினால் ,இளங்காளையே என்பார்கள்.இது பெருமைதரும் .ஆனால் பன்றியுடன் மோதினால் பன்றியை வென்ற பன்றியே! என்று சொல்ல முடியுமா? வேண்டாம் .இப்னு ஷைத்தானிடம் வாதட முடியுமா? இப்னு ஷைத்தானிடம் இருந்து மக்களை காப்பாற்றவே முடியும.

    • சகோ இப்ராஹிம்
      உங்கள் மீதும் ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக(காப்பிரைட் மூஃமின்கள்)
      மறை கழண்டவர்களுடன் மோதினால் பெருமைமிகு திருமறை கழண்டவனே என்று கூடத்தான் சொல்வார்கள். அதற்காக மூஃமினகளுடன் பேசாமல் இருக்கமுடியுமா?
      சிந்தியுங்கள். இதனால்தான் சிந்திக்க மாட்டீர்களா என்று ஏக்க இறைவன் மூஃமின்களிடம் கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சுகிறான்..

      ய்ய்ய்ய்ய்யாஆ அல்லாஆஆஆஆஹ்

  60. இபுராகிம்,
    இசலாத்தினை அரைகுறைகளாக அறிந்துள்ள நாங்கள் ஏதேனும் எழுதினால் குர்ஆன் வசனம், ஹதிதுகளை எடுத்துக்காட்டாக தருகிறோம். அரைகுறைகளான நாங்களே அவ்வாறு செய்யும் பொழுது ‘மேதாவி’ களான நீங்கள் ‘பண்ணை வாழ்க்கை’ப் பற்றிய விளக்கத்தை நீங்கள் கூறுவதுதானே சரியானது.
    மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸடாலின், மாவோ போன்ற கம்மயூனிச ஆசான்கள் எந்த இடத்தில் இவ்வாறு கூறியுள்ளார்கள்? கம்யூனிசக் கொள்கையில் எந்த விதியாக வருகிறது? அதனுடைய விளக்கம்தான் என்ன? இவைபற்றி கொஞ்சமும் கூறாமல் “பண்ணை வாழ்க்கை” என்று தத்து பித்தென்று உளறியுள்ளதை புறக்கனிக்கும் எங்களிடம் மேலும் மேலும் அதி மேதாவி தனத்தை காட்ட வேண்டுமென்று சப்பாணிபோல் நச்சரிக்கலாமா? பண்ணை வாழ்க்கைப் பற்றிய குறிப்புகளை தந்துவிட்டு பதில் எதிர்பாருங்கள்.

    • எக்ஸ்.சாகித் நீங்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்கள் ,ஆதலின் இஸ்லாத்தை பற்றி அறைவேக்காடுத்தனமாக அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.நான் கம்யுனிஸ்ட் என்றால் வலது இடது கட்சிகள் என்று மட்டுமே நினைத்திருந்தேன் .ஆனால் நீங்களோ அவர்களை போலி கம்யுனிஸ்ட் கள் என்று கூறி வருகிறீர்கள்.உண்மையான கம்யுனிஸ்ட்கள் ஆகிய தங்களின் திருமண கொள்கை என்ன?
      \\ஆதிகாலத்தில் பெண் தலைமையில் ………. குற்றம் நடைபெறாது என்று சொல்ல வருகிறீர்கள்ஆம் இதுதான் வீரியமான கருத்து// ஆம். இது வீரியமான கருத்துதான். திருமணம், பதிவு, இனிசியல் எல்லாம் ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது. தொடரும் விவாதங்களில் இதுகுறித்து விரிவாக பார்க்கலாம், போதுமான வீரியத்துடன் உங்கள் தேடல்கள் இருந்தால்.டிசம்பர் ௨௦௧௦
      செங்கோடியுடனான விவாதத்தில் பதில்கள் எடுத்து வைத்துள்ளேன்..அதாவது பெண்கள் தலைமை
      தாங்கியபோது சமூகம பொதுவுடமையாக இருந்ததாக கூறுகிறார் செங்கொடி .பெண்களிடமிருந்து தலைமை பிடுங்கப்பட்ட பிறகு தனியுடமையாக மாறிவிட்டது என்கிறார் /திருமணம் தேவை இல்லை என்கிறார். இதற்கான விளக்கத்தை தாருங்கள்

  61. இபுராகிம்,

    வரட்சி என்றல்லெல்லாம் பூசி மெழுகவேண்டாம். ‘தேவை’ என்றால் என்ன என்று நபிமொழி தெளிவாகவே உள்ளது. தேவை என்பது மலம் கழிக்கச்செல்வது என்பதை மறைத்து புழுக வேண்டாம்.

  62. மாலிக் அவர்களே,
    புதைகுழியில் வேதனை செய்யப்படுவதைப் பற்றிய நபிமொழிகளை எடுத்தெழுதி அசத்திவிட்டீர்கள். கூடவே ஒரு வீடியோ ‘சுட்டி’யையும் கொடுத்து செத்தபின் என்ன நடக்கிறது என்று விஞ்ஞானத்திற்கே அல்வா கொடுத்து தெளிவுபடுத்திவிட்டீர்கள். அப்படியே கீழே உள்ளு குர்ஆன் வசனத்திற்கும் விளக்கம் தருவீர்களானால் என் போன்ற மரமண்டைகளை அதாவது இசுலாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களை வாயடைக்கச் செய்துவிடலாம்.
    குர்ஆன் வசனம் 2;259 ஒரு கிராமத்தின் பக்கம் சென்ற ஒருவரை (நீர் கவனிக்கவில்லையா? அந்த கிராமமானது அதனுடைய (வீட்டு) முகடுகளின் மீது இடிந்து விழுந்து கிடந்தது. இவ்வாறு இது அழிந்துவிட்டபின் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான் என்று அவர் கூறினார். அப்போது அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணமடையச் செய்தான். பிறகு அவரை ( உயிர் கொடுத்து ) எழுப்பி ~எவ்வளவு நேரம் (இந் நிலையில் இங்கு ) தங்கி இருந்தீர்? என்று கேட்டான். (அதற்கு) ‘ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் தங்கி இருந்தேன்’ என்று அவர் கூறினார். ~அவ்வாறில்லை. நீர் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) தங்கியிருந்தீர். (இதோ) உம்முடைய உணவையும், பானத்தையும் பார்ப்பீராக. அவை மாறிவிடவில்லை. ஆனால் (மக்கி மடிந்துவிட்ட) உனது கழுதையைப் பாரும். உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக்குவதற்காக (உம்மை மரணிக்கச் செய்து எழுப்பினோம்.) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும். (உம் கண்முன்) அவற்றை எவ்வாறு நாம் ஒன்று சேர்க்கிறோம்; பின்னர் அவற்றிற்கு (எவ்வாறு) சதையை அணிவிக்கிறோம்~ என்று அவன் கூறினான். எனவே (இவை அனைத்தும்) அவருக்கு தெளிவானபோது’நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின்மீதும் சக்கியுள்ளவன் என்று (உறுதியாக) அறிகிறேன்’ என்று கூறினார்.

    குறிப்பு : http://www.youtube.com/watch?v=sA7pPrSZEtc இந்த சுட்டியிலுள்ள வீடியோவையும் பாருங்கள். இது போன்று நிறைய நான் பார்துள்ளேன். அவைகளை சேமித்து வைக்க தவறிவிட்டேன். இவைகளையும் மேலும் தங்களுக்கு கிடைக்கும் கிராபிக்ஸ்களையும் தவராமல் இசுலாமியர்களுக்கு கொடுத்து பயபீதியை உருவாக்கவும். இப்னு சகிர் இணைத்த சுட்டியில் உள்ள பாகிஸதானின் படத்தையும் அவசியம் பாருங்கள்.
    காபிர்களை பயமுறுத்தவும் பயன்படுத்தலாம்.

    • malik link koduthathu poto link athu vidio illa
      popa nalla paru
      malik enna explain pannirukka nee etha explain pannirukka
      athukku ithukkum sammanthame illayappau unakku athiham vilakkam vanummuna
      poi nalla badi

      again and again again angain again and again again angain
      again and again again angain again and again again angain again and again again angain
      un manasila erutha varaikum

    • ஆஹா,
      ஸனாதிக்கா சாகித், உங்கள் மீது ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக(கோப்பிரைட் மூஃமின்கள்)

      இங்கே ஸனாதிக்கா சாகித் ஒரு இணைப்பு தந்திருக்கிறார்.

      அல்குரானை எட்டி உதைத்த பெண்ணை குட்டிசாத்தானாக மாற்றிய அல்லாஹ்

      அல்குரானை எட்டி உதைத்த ஒரு பெண்ணை அல்லாஹ் ஒரு குட்டிசாத்தானாக மாற்றிவிட்டாராம்.

      இதன் மூலம் அல்லாஹ்தான் ஏக்க இறைவன், அல்குரான் நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற வழிப்பறி கொள்ளைக்காரரிடம் அல்குரானை சொன்னான், ஆகவே அவரே இறுதி இரைதூதர் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கலாம்.

      கார்பன் கூட்டாளி அல்லது, மாலிக், இப்ராஹிம் ஆகியோர் இப்போது எல்லோருக்கும் முன்பாக அல்குரானை எட்டி உதைப்பார்கள்.
      உடனே அல்லாஹ் அவரை குட்டிசாத்தானாக கிரீச் கிரீச் என்று கத்த வைப்பார்.
      உடனே எல்லோருக்கும் அல்லாஹ்வின் அல்குரான் பற்றி புரிந்து இஸ்லாத்தை ஏற்றுகொண்டுவிடுவார்கள்.

      இஸ்லாத்துக்காக இந்த தியாகத்தை செய்ய கார்பன் கூட்டாளியும், சிட்டிஜனும் மற்றவர்களும்மனமுவந்து வருவார்கள்.

      தேதி நேரம் இடம் அவர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்

      யா அல்லாஹ்

  63. இங்குள்ள சில பின்னூட்டங்களுக்கான பதில் தனி இடுகையாக,

    உணர்வில்லாத ‘உணர்வு’ வார இதழும், சில ரசிகர்களின் விசில் சத்தமும்.

    படித்துப் பாருங்கள். குறிப்பாக, இப்ராஹிம், அப்துல்லா, யுஏஇ தமிழன்

  64. சம்மர் வெப்பமேறியவரே,
    புதைகுழி வேதனை சமாச்சாரமும், ஒரு கிராமத்தானை சாகடித்து எழுப்பிய கதையும் வேறு வேறா என்பதை அதற்கான குர்ஆன் வசனம் 2;259 ஒரு கிராமத்தின் பக்கம் சென்ற ஒருவரை நீர் கவனிக்கவில்லையா?## விளக்கத்தைக் நீங்கள்கூறிய பிறகு முடிவு செய்யலாம்.

  65. ஏக்க அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக

    முஸ்லிமாக்கள் குரானை எட்டி எட்டி உதைக்கிறார்கள் என்று நமது ஆண் முஸ்லீம்கள் இணையத்தில் பல வீடியோக்களில் ஆவணப்படுத்தியிருப்பது நாம் அறிந்த விஷயம்தான்.

    முஸ்லிமாக்கள் ஏன் குரானை எட்டி உதைக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்பதை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

    ஏன் முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

    ய்ய்யாஆஆஆஅல்லாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!

  66. நடுநிலை என பீற்றிக்கொள்ளும் “வினவு” அந்த நடுநிலை விலை எவ்வளவு..? என நாம் கேட்கும் நிலைக்கு “வினவு” வந்து விட்டது!
    புதிய கலாச்சாரம் என பீற்றிக் கொண்டு அந்த புதியக் கலாச்சாரத்திற்கு “அரிப்பு” என கூடுதலாக ஒரு வார்த்தையை சொல்லிக் கொண்டால் ரொம்ப பொருத்தமாக இருக்கும்!
    யாருமே தீண்டாத தன் தளத்தை அரிப்பெடுத்து ஏதாவது உளறினாலாவது பார்ப்பார்களா..? என்பதற்காக வேண்டி, இது(அவதூறு) போன்ற விஷமத்தனத்தை தொடர்ந்து “வினவு” என்ற கேடு கேட்ட இந்த தளம் வாந்தி எடுத்து வருகிறது!

  67. The women who conceive a child in her, who develop the child in here, who deliver the child, who feed the mother milk, who dress the child, who educate the child informally and formally and who also earn bread for her family……….

    DO NOT THEY [WOMEN] KNOW HOW TO DRESS BY OWN?

Leave a Reply to ibnushakir பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க