privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாவானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

-

 வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்! – திரைவிமரிசனம்

மகால தமிழ் சினிமாவின் முன்னுரிமை என்பது வெகுமக்கள் ‘ரசனையை’ அடிப்படையாகக் கொண்டது. ’மக்கள் எதை விரும்புறாங்களோ, அதைத்தான் நாங்க சினிமாவில் காட்டுறோம்’ என்பது சினிமாக்காரர்களின் டெம்ப்ளேட் ஸ்டேட்மெண்ட். ’சமூகத்தின் விருப்ப ரசனையை நாங்கள் காட்சிப் படுத்துகிறோம்’ எனச் சொல்லும் இவர்கள், அதில் எந்த அளவுக்கு நேர்மையோடு இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். அன்றாடம் நாம் காணும் புறவயமான உண்மைகளை, சமூக யதார்த்தங்களை திரையில் கொண்டு வருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ’வானம்’ திரைப்படம், மேற்கண்ட புள்ளிகளில் இருந்து விலகி, சமகால இந்தியாவை அதன் அசல் முகங்களோடு அணுகுகிறது.

ஐந்து வகை இந்தியா… ’வானம்’ கதையை இப்படி சுருக்கமாக மதிப்பிடலாம். ஆந்திரா, பெங்களூரூ, கோவை, தூத்துக்குடி, சென்னையின் சேரி என அசலான ஐந்து வகை இந்தியாவிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக ஐந்து வகையான பாத்திரங்கள் சென்னையை நோக்கி வருகிறார்கள். விபச்சாரி, யுப்பி வகை மேல்தட்டு இளைஞன், குப்பத்து ஏழை இளைஞன், வறுமையில் வாடும் நெசவாளி, நேர்மையாக வாழும் நடுத்தர வரக்க முசுலீம் என்று அந்த ஐந்து பாத்திரங்களும் சமகால இந்தியாவின் கதைகளை விவரிக்கின்றன.ஒரு திரைக்கதைக்குள் ஐந்து கதைகளைத் தனித்தனியே விவரித்து, அதன் இயல்பில் எதிர்பாராப் புள்ளி ஒன்றில் ஐந்தையும் சந்திக்க வைத்திருக்கும் இந்த திரைக்கதை யுத்தி வடிவத்தில் மட்டுமல்ல, அது எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்காகவும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தெலுங்கில் ‘வேதம்’ என்னும் பெயரில் வெளியான இந்த படத்தை இயக்கிய க்ரிஷ் என்பவரே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

நகர்ப்புற குப்பத்து இளைஞனாக வரும் சிம்புவின் பாத்திரப் படைப்பு ஒரு துல்லியமான சித்திரம். குப்பத்தில் பிறந்தாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவள், புத்தாண்டில் ஒரு  பார்ட்டிக்கு அழைத்துப் போகச் சொல்கிறாள். பார்ட்டிக்குச் செல்வதற்கு ஒரு இரவுக்கு 40 ஆயிரம் கட்டணம். இந்தப் பணத்தை ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருந்து செயின் அறுப்பது, திருடுவது என எந்த எல்லைக்கும் போகிறார் சிம்பு.

இன்றைய நகர்ப்புறத்து இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துடன் பின்னி பிணைந்திருக்கிறது. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும், வாழ விரும்பும் வாழ்க்கைக்குமான தொலைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்குச் செல்லவும் தயங்குவதில்லை.

இதை, செயின் அறுக்கும் சிம்புவின் பாத்திரத்தோடு நேரடியாக பொருத்திப் புரிந்துகொள்வது ஒரு பக்கம்.. மறுவளமாக பார்த்தால் உழைப்பு, மேலும் உழைப்பு, மேலும் மேலும் உழைப்பு என தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைத்து, தான் ஆசைப்பட்ட சுகவாழ்வை அடைவது இன்னொரு பக்கம். தனது உழைப்புக்கும், சம்பளத்துக்குமான இடைவெளி அதிகமாய் இருப்பதைப் பற்றியும், தான் சுரண்டப்படுவது பற்றியும் இவர்கள் யோசிப்பதில்லை. மாறாக, மேற்கொண்டு ஓவர்டைம் செய்து கூடுதலாக சில ஆயிரம் சம்பாதித்துவிட முடியாதா என்றுதான் தேடித் திரிகின்றனர். இப்படி நுகர்வுக் கலாசாரம் தின்று துப்பிய சக்கைகளாய் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நகர்ப்புறத்து அடித்தட்டு இளைஞர்களின் பிரதிநிதிதான் சிம்பு.

பொதுவாக தமிழ் சினிமாவில் குப்பத்து இளைஞர்கள் என்றால் அவர்களை அரசியல்வாதிகளின் அடியாட்களாக மட்டுமே சித்தரிக்கும் போக்கில் இருந்தும் இப்படம் விலகி நிற்கிறது. உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் விட்டேத்தியான இளைஞர்களாக சிம்புவும், சந்தானமும் வருகிறார்கள். இவர்கள்தான் இன்றைய சேரிகளின் யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பேசும் பல வசனங்கள் மிக கூர்மையாகவும், இயல்போடும் இருக்கின்றன. ‘சாவு நல்லாயிருக்கனும்னாக் கூட பணம் வேணும் போலருக்குதே’ என்பதில் தொடங்கி, ‘பணக்காரன்னா சிரிக்க மாட்டான், கை தட்ட மாட்டான், விசில் அடிக்க மாட்டான்’ என்பது போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

சிம்புவுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமான காதல் என்பதும் வழக்கமான தமிழ் சினிமாவின் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதே. காதலுக்காக எதையும் செய்யலாம் என புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஒரு ஏழை இளைஞனின் கோணத்தில் இருந்து பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என கணக்குப் போடுவதும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பெண் பார்ட்டிக்கு பாஸ் வாங்கும் 40 ஆயிரம் பணத்துக்கு சிம்புவைவே முழுக்க டார்ச்சர் செய்வதும்… காதல் என்பது காரியவாதமாக மாறிவிட்டிருப்பதையே நினைவூட்டுகிறது. தமிழ் சினிமா சித்தரிக்கும் ‘புனிதக்’ காதலில் இருந்து இந்தக் காதல் நிச்சயம் மாறுபட்டிருக்கிறது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சொந்த ரசனையை மட்டுமே பெரிதெனப் பேசித் திரியும் பரத் பாத்திரம் மேல்தட்டு இளைஞர்களின் அசல் பிம்பம். பல பணக்கார நண்பர்கள் தங்களின் மிகப்பெரிய சோகமாக சொல்லும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வரும். ‘நான் நாலு வருஷம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்போ நானே துணி துவைப்பேன். நல்ல ஹோட்டலைக் கண்டுபிடிச்சு சாப்பிடுறதே பெரிய டார்ச்சரா இருக்கும். ஆனால், நான் அவ்வளவு கஷ்டப்பட்டது எங்க வீட்டுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது.’ என்று சொன்னார் பணக்கார பிரபலம் ஒருவர். துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?

பரத் அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர். இறந்து விட்ட தந்தையைப் போல இராணுவத்தில் சேருவதற்கு தாய் வற்புறுத்துவதை அவர் மறுக்கிறார். இசைதான் தனது எதிர்காலம் என்று கூறுகிறார். ஓர் இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து தன் குழுவுடன் சென்னையை நோக்கி காரில் வரும் பரத், லாரி டிரைவர் சிங் ஒருவரை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார். பலர் அடிபட்டு சாலையில் விழ, அதைப்பற்றி கவலையேப்படாமல் காரை ஓட்டிக் கடந்துபோகிறார். ’காப்பாற்ற வேண்டாமா?’ என்கிறாள் கூடவே வரும் தோழி ‘அதுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க. பார்த்துப்பாங்க’ என்கிறார் பரத்.

தன்னால்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல், அடிபட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதையே அலட்சியமாக கருதும் அவரது நடத்தைதான் பணக்கார இந்திய இளைஞர்களின் பொதுப் பண்பு. மும்பையிலோ, டெல்லியிலோ அதிநவீன பி.எம்.டபிள்யூ காரில் குடி போதையில் அதி வேகத்துடன் ஓட்டி பாதசாரிகளைக் கொல்லும் இளைஞர்களெல்லாம் வேறு எப்படி இருப்பார்கள்? ஜெசிகாலால் எனும் மது பரிமாறும் பெண்ணைக் கொன்ற மனுசர்மா எனும் அதிகார வர்க்கத்து இளைஞன் மிகச்சாதாரண விசயத்துக்காக கோபம் கொண்டு துப்பாக்கி எடுத்தவன். பரத்தின் இந்த சுபாவம் கண்டு அவனது தோழி வருத்தம் கொள்கிறாள்.

அதையே அவனிடமும் தெரிவிக்கிறாள். அவனிடம் ஏதோ கொஞ்சம் மியூசிக் சென்ஸ் இருக்கிறது என்றாலும் அவன் பாடும் போது உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதில்லை என்று கூறுகிறாள். அந்த உணர்ச்சியற்ற பாவனைக்கும், சக மனிதர்களது துக்கத்தை உணர்ச்சியற்று பாராமுகமாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதை அந்த அழகான காட்சி கவித்துவமாக உணர்த்துகிறது.

எந்த சிங் டிரைவரை முந்திச் சென்று பரத் விபத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே சிங்-தான் பிற்பாடு பரத்துக்கு காவி காலிகளால் பிரச்னை ஏற்படும்போது தைரியத்துடன் இறங்கி நின்று அவர்களை அடித்து விரட்டி பரத்தின் உயிரை காப்பாற்றுகிறார். இதில் குறிப்பாக பரத் – வேகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ’ஃப்ரெண்ட்ஸா இருந்தா ராக்கி கட்டு. காதலர்கள்னா தாலியைக் கட்டு’ என பிரச்னை செய்கிறது இந்துத்துவ ரவுடிக் கும்பல். ’என்ன பாஸ் இதெல்லாம்?’ என அதிர்ச்சியாகும் பரத்தும், வேகாவும் முதல் முறையாக இப்படிப்பட்ட இந்துத்வ வன்முறையை எதிர் கொள்கின்றனர். இந்த அடாவடித்தனத்தை நிஜமாகவே வருடா வருடம் செய்யும் ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி காலிகள் நம் நினைவுக்கு வருகிறார்கள். கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த காவி ரவுடிகளின் வன்முறையை எதிர்த்துத் தாக்கி பரத்தையும் அவரது காதலியையும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிங் காப்பாற்றுகிறார். அதன்மூலம் பரத்தின் சுயநலப் பண்பு கடும் குற்ற உணர்ச்சி கொள்கிறது. அதற்கு பின் ஒரு சில நிமிடங்களே வரும் பாடலில் முதன்முறையாக பரத் உணர்ச்சி பாவத்துடன் பாடுகிறார். பாடல் வரிகளோ சக மனிதன் துன்பம் கண்டு ஒரு துளி கண்ணீரையாவது சிந்தும் மனிதாபிமானத்தை குறிக்கிறது. பெங்களூரூ நட்சத்திர விடுதிகளில் ராக், பாப் டான்சில் படுவேகமாக கிதாரை மீட்டி கடுமையான முகபாவனையோடு பாடும் இல்லை கத்தும் பரத் இங்கே மென்மையான அசைவில் பாடல் வரிகளோடு தோய்ந்து பாடுகிறார். படத்தில் இது ஒரு கவித்துவமான காட்சி.

பாலியல் தொழிலாளியாக வரும் அனுஷ்காவின் பாத்திரமும், ஊரும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமாக இருந்தாலும் காவல்துறையினருடன் அவர் பேசும் பல வசனங்கள், குறிப்பாக… ‘நாங்க டிரஸ்ஸை அவுத்துட்டு செய்யுறதை நீங்க டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு செய்யுறீங்க’ போன்றவை கூர்மையானவை. ஆந்திரா எல்லையில் ஒரு விபச்சார கும்பலில் மாட்டிக் கொண்ட அனுஷ்காவும், அவரது தோழியான திருநங்கையும் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்னையில் தனியாக தொழில் நடத்த ரயிலேறுகிறார்கள். திருநங்கை ஒருவருக்கு ஹீரோயின் முத்தம் இடும் காட்சி அநேகமாக தமிழ் சினிமாவில் இது முதல்முறையாக இருக்கக்கூடும். இறுதிக் காட்சியில் இந்த தொழிலை விட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் மறைகிறார்கள்.

கிராமப்புறங்களில் வாழ வழியற்று கந்துவட்டிக்கு பணம் வாங்கி, அந்தக் கடனை அடைப்பதற்கு மகனை அடகு வைத்து, அவனை மீட்பதற்கு கிட்னியை விற்று… என விவரிக்கப்பட்டிருக்கும் சரண்யாவின் பாத்திரத்தைப் பார்த்து, ‘இப்படியெல்லாமா நடக்குது?’ என்று பலர் நினைக்கக்கூடும். இந்தக் கதையிலாவது சரண்யா, தனக்குத் தெரிந்து தன் கிட்னியை விற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனைகள், பல அப்பாவி ஏழைகளிடம் அவர்களுக்கேத் தெரியாமல் கிட்னித் திருடிய கதைகளை நாம் படித்திருக்கிறோம். ’இந்தியா முன்னேறுகிறது, தொழில்வாய்ப்புகள் பெருகிக்கிடக்கின்றன’ என பிரசாரம் செய்யப்படும் இதே இந்தியாவில்தான் விவசாயம் பொய்த்துப்போய் வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது. சரண்யாவும் அவரது வயதான மாமனாரும் சென்னை வந்து கிட்னி விற்க முனையும் காட்சிகள் யதார்த்தமாகவும், ஏழ்மையில் அவலத்தை கூர்மையாகவும் காட்டுகின்றன.

‘வானம்’ படத்தின் மற்றொரு முக்கியமானதும், சிக்கலானதுமான பாத்திரம் பிரகாஷ்ராஜினுடையது. ’இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாதவதற்கான காரணமாக இருப்பது இந்துத் தீவிரவாதமே’ என்ற கருத்து முதல்முறையாக தமிழ்த் திரையில் மிக வெளிப்படையாகப் பேசப்படுகிறது. ஒரு சராசரி இஸ்லாமிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இந்து தீவிரவாதத்தின் வேர்களையும், அது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கான காரண சக்தியாக எப்படி விளங்குகிறது என்பதையும் ஓர் எளிய கதையோட்டத்தில் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் தெரு வழியே கர்ப்பிணி மனைவியுடன் டூ-வீலரில் போகிறார் பிரகாஷ்ராஜ். இந்துத்துவ காலிகள் பிரகாஷ்ராஜின் மனைவியை வம்புக்கு இழுத்து அனைவரையும் அடித்து நொறுக்குகின்றனர். அவரது மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிடுகிறது. இதில் தானும் அடிவாங்கி தன்னால் எதையும் செய்ய முடியாத பிரகாஷ்ராஜின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்கிறார்.. என்பதாகப் போகிறது பிரகாஷ்ராஜ் அத்தியாயத்தின் கதை.

3 வருடம் கழித்து தனது தம்பியைத்தேடி பிரகாஷ்ராஜூம் அவரது மனைவியும் சென்னை வருகிறார்கள். கோவையில் அவரை அடித்து நொறுக்கும் இந்துத்வ ஆதரவாளரான போலீஸ் ஒருவன் சென்னையில் அவரை தீவிரவாதியாக்கி கைது செய்கிறான். அப்பாவி முசுலீம்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பிரகாஷ்ராஜின் பாத்திரச் சித்தரிப்பு நேர்மையாக உணர்த்துகிறது.

பிரகாஷ்ராஜின் ஊர் கோயம்புத்தூர் என்பதில் தொடங்கும் அரசியல் மொத்த படத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த பாத்திரத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் சிலர், “இந்துக்கள் தங்களது ஊர்வலத்தின் இடையில் புகுந்த இஸ்லாமியர்களை மதவெறியோடு அடித்தார்கள். ஆனால், அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” என்கிறார்கள்.

இதை நாம் ஒரு பகுதி அளவில் பரிசீலிக்க வேண்டும் என்றாலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது இயக்குநருக்கு இப்படி நிறுவுவதற்கான அடிப்படைகள் இருப்பதாக தோன்றவில்லை. அதுபோலவே, பிரகாஷ்ராஜ் குடும்பம் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் எதிர்வன்முறையையும் இணை வைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறோம். ஏனெனில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களின்படி, இந்துக்களின் தீவிரவாதம், ஒரு சமூக வன்முறையாகவும், முஸ்லீம்களின் எதிர்வன்முறை தனிப்பட்ட தீவிரவாதக் குழுக்களுடையதாகவுமே சித்தரிக்கப்படுகிறது. எனினும் இறுதிக்காட்சியில் சில தீவிர இசுலாமிய இளைஞர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொதுமக்களை காக்காய் குருவி போல சுட்டுக் கொல்வது பொருத்தமாக இல்லை. இயக்குநர் அதை மும்பை தாக்குதலிருந்து எடுத்திருக்கலாம் என்றாலும் அந்தக் களம் வேறு. கோவையிலிருந்து வரும் ஒரு முசுலீம் இளைஞனது பார்வையில் இப்படி நடந்ததாக காட்டுவது பொருத்தமாகவும் இல்லை, சரியாகவும் இல்லை.

’வானம்’ படத்தின் மிக முக்கிய அரசியலாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, போலீஸின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி இருப்பதைத்தான். பிரகாஷ்ராஜின் கதையில் இந்திய இந்து மனநிலையின் கூட்டுவன்முறை மட்டும் சொல்லப்படவில்லை… அதற்கு இசைவான வகையில், இந்துத்துவத்தின் மொத்த அஜண்டாவையும் நிறைவேற்றித் தரும் கூலிப்படையாக இந்தியக் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டராக வரும் நபர் அப்படியே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நேரடியாக கிளம்பி வந்தது போலவே இருக்கிறார். அதைப்போலவே அனுஷ்காவிடம் பணம் பிடுங்கும் இன்ஸ்பெக்டர் ராதாரவியின் பாத்திரம், அதே ராதாரவி பாத்திரம் சிம்புவிடம் பணம் பிடுங்குவது, மாமியிடம் போனில் பம்முவது…  என அனைத்தும் நுணுக்கமான பதிவுகள்.

சில கதைக்களங்களின் அந்நியத்தன்மை, அவசியம் இல்லாத, ரசிக்கவும் முடியாத பாடல்கள், இழுத்தடிக்கப்படும் இறுதி மருத்துவமனைக் காட்சிகள் போன்றவற்றை விட, படத்தின் அபாயகரமான அம்சம் அதன் இறுதிக் காட்சிகள்தான். ஐந்து வகை இந்தியாவின் பிரச்னைகளை ஐந்து கதைகளாக சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர் கடைசியில் ஐந்தையும் ஒரு அரசியலற்ற வெறும் மனிதாபிமான செண்டிமெண்டில் இணைக்கிறார். ஐந்துக்குமான தீர்வாக செண்டிமெண்டையே முன் வைக்கிறார்.

அப்பாவியான தன்னை தீவிரவாதி போல சித்தரித்து கொடுமைபடுத்தும் இந்துத்வ இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் பிரகாஷ்ராஜ். இதைப்பார்த்து மட்டும் அந்த ஆர்.எஸ்.எஸ் இன்ஸ்பெக்டர் திருந்துகிறார் என்றால் பொருள் என்ன? அப்பாவி முசுலீம்கள் அனைவரும் இப்படித்தான் இந்துமதவெறியர்களை திருத்த வேண்டுமென்றால் ஒவ்வொரு திருந்தலுக்கும் ஒரு சில முசுலீம்கள் சாகவேண்டுமோ? இந்து மதவெறி வெறும் மனிதாபிமானத்தால் மட்டும் திருத்தப்படும் ஒன்றல்ல. அது உழைக்கும் மக்களை அணிதிரட்டி வன்முறை மூலம் ஒழிக்கப்பட வேண்டிய கிருமி.

இதைத்தவிர இந்தப்படம் சமகாலத் தமிழ்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் யதார்த்தமான கதைக் களங்களிலிருந்து பயணிக்கிறது. ஐந்து வகை இந்தியாவையும் காட்சிப்படுத்தியதிலிருந்து, கதையை கொண்டு போன விதத்திலும் சரி நாம் அசலான இந்தியாவைப் பார்க்கிறோம். அரசியல் களங்களை கதையாகக் கொண்டு அதை சுவராசியமான கதை சொல்லல்  காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கும் இயக்குநர் க்ரிஷ் உண்மையிலேயே ஆச்சரியமான இயக்குநர்தான். அவருக்கும், படக்குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்!

________________________________________________________________

– வெற்றிவேல்
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. சும்ம்மாவே காவி தீவிரவாதம் அது இதூன்னு எழுதி சந்தோசப்படுவ…னீ இந்த படத்த விமர்சனம் பன்ட்ரதே அதுக்குத்தான்னு எனக்குநல்லாத்தெரியும்…பாராவுக்கு பாரா காவி தீவிரவாதம்….

    //////////அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” //////////

    உன்னுடைய வருத்தம் கடைசி காட்சஷியில் மூஸ்லிமை திவிரவாதியாகக் காட்டியது தான்..

    இன்டியாவில் பிரகாஷ் ராஜின் பாதிரப்படைப்பு பொலநல்ல மனிதர்கள்நிரைய இருகிரார்கள்…சில பேர் திவிரவாதியாகவும் மாருகிரார்கள்…இங்கு அப்சல் குருவும் கசாபும் சைய்த திவிரவாதத்தை விட உன்னைப்போன்ர ஆட்களே மக்களிடம் பிரிவினையை உன்டாஅக்கிவிடுவீர்கள்..

    • Maruthu//

      பிரிவினைக்கு பெயரே இந்துமதம் தான்.அதை புரியாமல் பிரிவினைக்கு மற்றவர்கள் காரணம் என்று சொல்றீங்க! நீங்க வரலாற்றை இன்னும் ஒரு முறை மனப்பாடம் பண்ணிட்டு வாங்க.

    • எப்ப மருது வெளியே வந்தீங்க! உங்களுடைய பேவரைட் கமெண்ட் கன்னுக்குட்டி வருவல் எப்பவும் நெஞ்சிலேயே நிக்குதுங்க! முதன் முறையாக பதிவை பற்றி கருத்து சொன்னதற்கு ரெம்ப நன்றிங்க!

    • மருது .. உன் பேரை முதலில் மாத்து. கண்டிப்பாக இது உன் சொந்தப் பெயராக இருக்க வாய்ப்பில்லை. உன் காவி தீவிரவாதம் தான் பச்சைத் தீவைரவாதத்தின் ஆணி வேர்.

      அதனை பாபர் மசூதியும், மாலேகான், அஜ்மீர் தர்கா போன்றவை எடுத்துரைக்கும்.

      வரலாற்றைப் படி. பின்னர் பிளிரலாம்

      • உன் பேச்சிலேயே தெரியுது அந்த மாவீரனது பெயர் உனக்கு இருக்காது என்று…

        தொப்பி…தொப்பீ…

  2. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது.//

    அதே..

    இதேதான் ரசிகர் மன்றம் அமைப்பதும், தலைவனைப்பற்றி கிறுக்கு பிடித்து அலைவதும் , கொந்தளிப்பதுமாய்..

  3. துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?//

    அவர்களைப்பற்றி எனக்கென்ன கவலை.. ரஜினி சூப் குடிச்சாரா , நகம் வெட்டினாரா என்ற கவலைதான் எனக்கு பெரிசு..

  4. கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.//

    இதை படத்தில் துணிவா சொன்னதுக்காகவே ஒரு சபாஷ்

  5. வினவு, உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். ஆனால், ஹிந்துதுவாதான் முஸ்லீம் தீவிரவாதம் உருவாக காரணம் என்று சொல்லி இருப்பது ஏற்றுகொள்ள முடியாது ஒன்று. என்னமோ ஹிந்துக்களால் தான் முஸ்லீம் தீவிரவாதம் உருவான மாதிரி விமர்சனம் இருக்கிறது. ஆப்கனில், பாக்கிஸ்தானில், ஈராக்கில், கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஹிந்துக்களே இல்லையே ஆனால் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறதே? ஆனால் அவர்களின் ஆதிக்கம் இந்தியாவில் எப்படி வந்தது? நீங்கள் விமர்சம் செய்திருப்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முஸ்லீம் ஆதரவும் ஹிந்து எதிர்ப்பும் போல இருக்கிறது. இந்தியாவில் ஹிந்துத்துவா எப்போது ஆரம்பித்தது? நீங்கள் சொல்லும் இந்த ராமசேனா ஆரம்பித்தது எப்போது? முஸ்லீம் தீவிரவாதம் ஆரம்பித்தது எப்போது? ஒருதலை பட்சமாக, முஸ்லீம்களுக்கு ஆதரவாக உங்கள் விமர்சனம் இருக்கிறது. நம் நாட்டில் எப்போது வெளிநாட்டு தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவு அளித்து நாட்டில் தீவிரவாதம் தலை தூக்கி அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் குண்டு வைத்தும், சுட்டும் கொல்ல ஆராம்பித்தார்களோ அப்போதுதான் ஹிந்துத்துவா என்ற ஒன்று இந்தியாவில் தலை தூக்க ஆரம்பித்தது. வானம் ஒரு சினிமா அவ்வளவே, அதில் சில விசயங்கள் மிகை படுத்தப்பட்டும் இருக்கலாம், படாமலும் இருக்காலாம். ஆனால் காவிகள் ராக்கி கட்டு இல்லையென்றால் தாலி கட்டு என்று சொல்வதில் என்ன தவறு? மெரீனா பீச்சில் மதியம் ரெண்டு மணிக்கு ஷாலை போர்த்தி கொண்டு முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் கை வைத்து கொண்டு இருப்பதுதான் காதலோ? உங்கள் வீட்டு பெண்கள் இப்படி இருந்தால் பார்த்து கொண்டு சந்தோஷ படுவீர்களோ? ஒரு முஸ்லீம் வீட்டு பெண் இந்த மாதிரி இருந்தால் அவர்கள் என்ன பார்த்துகொண்டு சும்மா இருப்பார்களோ? இந்த விஷயம் வானம் படத்தில் மிகை படுத்த பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லா முஸ்லீம்களும் இருந்துவிட்டால் நாட்டில் ஏன் மத சண்டை வர போகிறது? எந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் முஸ்லீமை கொன்றார்கள்? முஸ்லீம் இளைன்ஞர்களை திசை திருப்பி எப்படி தீவிரவாதியாக்குகிரார்கள் என்பதையும் சொல்லி இருப்பார்கள் அதை விட்டு விட்டேர்களே ஏன்? நான் ஹிந்துதுவாவிற்கு ஆதரவாக பேசவில்லை, நீங்கள் ஏன் ஒருதலை பட்சமாக விமர்சம் செய்துள்ளீர்கள் என்றுதான் கேட்கிறேன். ஒரு கட்சி தலைவர் உங்கள் ஊருக்கு வரும் போது குண்டு வைக்கவேண்டும் என்று யார் சொல்லி கொடுத்தது? (கோயமுத்தூர் பிரச்சினை) காஷ்மீரில் உள்ள முஸ்லீம் மதவாத, பிரிவினைவாத தலைவர் மிக சுலபாமாக இந்தியா முழுவது செல்லலாம் ஆனால் அத்வானி வந்தால் மட்டும் குண்டு வெடிக்கும் அப்படித்தானே? இயேசு அழைக்கிறார் வாருங்கள் முடவர் நடக்கிறார், குருடன் பார்கிறார் என்று மெரினாவில் வருடாவருடம் மாநாடு போடுகிறார்கள் அது உங்களுக்கு தவறாக தெரியவில்லை, அப்போது ட்ராபிக் ஜாம் ஆகவில்லை, விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் பெரிதாக தெரிகிறது அப்படித்தானே? மிகை படுத்தப்பட்ட விசயங்கள் நிறைய உள்ளன. முஸ்லீம்கள் ஊர்வலமோ அல்லது மாநாடோ நடத்தினால் எந்த ஹிந்துத்துவா காரன் வந்து குண்டு வைக்கிறான்? ஆனால் விநாயகர் சதூர்த்தியில் மட்டும் ஏன் குண்டு வைக்க வேண்டும்? நாட்டின் சுதந்திர தினத்தை கூட ராணுவ பாதுகாப்புடன் கொண்டாடுகிறோமே ஏன்? ஹிந்துதுவாவிர்க்கு பயந்து கொண்டா?

    • ////வினவு, உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். ஆனால், ஹிந்துதுவாதான் முஸ்லீம் தீவிரவாதம் உருவாக காரணம் என்று சொல்லி இருப்பது ஏற்றுகொள்ள முடியாது ஒன்று ///

      நண்பர் பாலா .. இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் ஆரம்பித்ததற்கு காரணம் இந்துத்துவ வெறி மட்டுமே … பாபர் மசூதி இடிப்புக்கு முன் எங்கு இஸ்லாமிய பயங்கரவாதத்தால் குண்டு வெடித்தது ?.. அதற்கு பிறகு பல இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் இவை தான் அவ்ர்களை தூண்டுகின்றன.

      அத்வானி எல்லாம் ஒரு ———— என்று அவனுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். கர சேவையின் நாயகன். இந்திய அமைதியைக் கெடுத்த ———- அவன்.

      மூலக்காரணம் அவன் தான். டிசம்பர் 6 எங்காவது குண்டு வெடித்ததா ?.. அரசாங்கம் கொடுக்கும் பில்டப்புகள் தான் அதிகம். மாலேகான் , அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புக்கு யார் காரணம். பதில் கூறவும். பாபர் மசூதி பகுதியை மூன்றாய் பங்கிட்டு கேவலமான தீர்ப்பு வழங்கிய அன்று எங்கவது பொட்டு வெடி கூட வெடித்ததா ?..

      ஒரு வேளை மசூதி இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்திருந்தால் எவ்வலவு பெரிய கலவரம் செய்திருப்பார்கள் இந்த இந்துத்துவ வெறியர்கள்.

      சிந்தியுங்கள். நீங்கள் பிராமனராக இல்லாத பட்சத்தில் முதலில் நீங்கள் இந்துவா என்பதையே வரலாற்று ரீதியாக பரிசீலனை செய்து கொள்ளுங்கள். பிராமணர் இல்லாத பட்சத்தில் நீங்கள் கோவில் கருவரைக்குள் நுழைய முடியுமா?..

      முயற்சி செய்யுங்கள் .. வாழ்த்துக்கள்…

    • //இந்தியாவில் ஹிந்துத்துவா எப்போது ஆரம்பித்தது? நீங்கள் சொல்லும் இந்த ராமசேனா ஆரம்பித்தது எப்போது? முஸ்லீம் தீவிரவாதம் ஆரம்பித்தது எப்போது?//

      ஹிந்துத்துவா என்பது சாவார்க்கர் முதலான நான்கு மராத்திய ஆதிக்க சாதி வெறி பிடித்த மருத்துவர்கள்தான் ஆரம்பித்து வைத்தார்கள். அவர்களது கொள்கை நாயகன் ஹிட்லர். அப்பொழுது அதன் பெயர் வேறு. ஹிந்துமகா சபா என்பதாகும். அதன் பின்னரேநாடு இரண்டாக உடைந்ததும் இசுலாமிய எதிர் தீவிரவாதம் உண்டானதும்.

      //மெரீனா பீச்சில் மதியம் ரெண்டு மணிக்கு ஷாலை போர்த்தி கொண்டு முத்தம் கொடுப்பதும், கண்ட இடங்களில் கை வைத்து கொண்டு இருப்பதுதான் காதலோ?//
      அது காதல் இல்லைதான். ஆனால் கிந்து கலாசாரம் என்று இவர்கள் தங்கள் மதவெறியை காட்டுகிறார்கள்.
      //எந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் முஸ்லீமை கொன்றார்கள்?//

      திலகர் என்னும் மற்றும் ஒரு மத பயங்கரவாதியினால் உண்டாக்கப்பட்டதே இந்த வினாயகர் ஊர்வலம்

  6. வினவில் இந்த படத்திற்கு இப்படி நல்ல விமர்சனம் செய்விங்களா!அதிசயமாக இருக்கிறது.

  7. திருடி/கொலை/கொள்ளை/விபச்சாரம்/எப்படியாவது “வானம்” பார்க்கவும்.

  8. பஞ்சபூத “வானம்” போல்

    பஞ்ச முகமாக காணக்கிடக்கும்

    இந்தியாவிற்கு கம்யூனிஸமே “சர்வ ரோக நிவாரனி”

    என்ன ? வினவு !!!

      • உலகத்திற்கே அது தான் நிவாரணி. நமக்கு எப்படி ’காவி’யா காம்ரேட் ?…

        “நான் அப்புரானி” பாஸ் !!!

  9. தமிழில் சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் , ஜீவா நடித்த கோ படத்தப் பற்றிய உங்கள் விமர்சனத்தை எழுதவும். அதில் ஏனோ தெரியவில்லை நக்சலைட்டுகள் எனும் கருத்தை உள்ளே நுழைத்திருக்கிறார்கள். நீங்கள் விமர்சனம் எழுதினால் என்னுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

    • குருதி புனல் படம் நக்சல் எல்லாம் மீன் குழம்புக்கும் விலை மாதுக்கும் மயங்குவதை போல் கான்பித்து சேறு வாரி வீசினார் கமல் ஆனால் கே.வி.ஆனந்த் அதை மற்றொரு வடிவில் அவர்கள் பதவிக்காக எதயும் செய்வர்கல் என்றும் எல்லா இடத்திலும் அவர்கள் இறுப்பார்கள் அதாவது வினவு போன்று பினாயக்சென், அருந்த்ததி ராய் போன்று பதவி வெறியுடன் இருப்பார்கள் என்பது போன்று காட்டியுள்ளார் ஆனந்த். ஆனால் சட்டிஷ்கர், பீகார் மக்கள் சொலுவார்கல் யார் பதவி வெறியுடன் உள்ளார்கள் என்பதை,இது நாம் கவலை கொல்லும் அளவு எடுதுக்கொல்ல வேண்டிய விசயம் இல்லை.நீங்கள் நக்சல் பற்றி நடுநிலையக தெரிந்து கொள்ல வேண்டுமென்றால் மாவோயிஸ்டுகலின்புரட்சிகருவிலே சிதைக்கப்படுவது ஏன் என்ற நூலினை படிக்கவும் கீழைகாற்று நூலகத்தில் இது கிடைக்கும்.
      நன்றி.

  10. இன்னும் நான் படம் பார்க்க வில்லை .,சரியான அலசல் .,.,இப்ப ஷென்னயில் விமானநிலயடதில்.,.,என்னை விட வில்லை.,காரனம் .,என் பெயர் அப்படி.,இதில் வெடிக்கை என்ன தெரியுமா ???நான் 30 வருசமா பயனம் சென்ரு வந்து கொன்டு இருக்கென் .,.,.,அதுவும் ஒரெ நாட்டில்., மஷ்கட்டில்.,.,.மனம் ரொம்ப வலிக்குது .,.,.,

    • வணக்கம் ஃபிரோஸ். நான் இன்னும் படம் பார்க்கவில்லை, எனினும் உங்களுடைய விமர்சனத்தையும் வாசித்தேன். இந்த திரைப்படத்தை நீங்கள் காவி ஆதரவுப் படம் என்று கூறியுள்ளீர்கள், உங்களுடைய கருத்து சரியானதாகக்கூட இருக்கலாம் ஆனால் அது உங்களுடைய விமர்சனத்தில் நிறுவப்படவில்லை,அதாவது காட்சிகளை உங்களுடைய கூற்றுக்கு ஆதாரமாக நீங்கள் முன்வைக்கவில்லை,எனவே உங்களுடைய விமர்சனத்தை முழ்ழுமையாக ஏற்க இயலவில்லை. எனினும், நீங்கள் கூறியதைப்போலவே தான் படத்தை பார்த்துவிட்டு வந்த வேறு ஒரு தோழரும் கூறினார், இசுலாமிய பயங்கரவாதம் குறித்த இயக்குனரின் கண்ணோட்டம் மிதவாத இந்துத்துவ கண்ணோட்டம் தான் என்று கூறினார். பாடத்தை பார்த்தால் தான் தெரியும்.

  11. If we look back at the history, we can see how Muhammad(founder of Islam) treated people of other religion. He slaughtered thousands of pagans and Jews. The evidence is their own Hadith. If you want I can give many references from their “holy scripture”. There was no Hinduism, no America, no Israel etc during his life. Then why he commanded muslims to fight unbelievers? Why he asked muslims not to be friends with Jews and Christians? Why he killed people of other faith?

    You fail to acknowledge that the man Muhammad and his irrational character is the core motivation of Islamic terrorism. When some atheists in Denmark drew cartoons of Muhammad, muslims killed innocent Christians as response. Where is the kavi or america?

    • மிஸுட்டர் பொலவு ..

      இங்கே இந்தியாவில் இருக்கும் சூழ்னிலை குறித்து பேசுவோமா ?>.. பாபர் மசூதியை முதலில் இடித்தார்களா ?.. அல்லது அதற்கு முன்னால் எதாவது கோவிலை முதலில் இஸ்லாமியர்கள் இடித்தார்களா ?..

      பாபர் மசூதியைஅ என்ன மசுத்துக்கு அத்வானி கும்பல் இடிச்சது?..

      அதை இடிக்கிறதுக்கு முன்னாடி இந்தியாவுல எங்கயாவது குண்டு வெடிச்சதா ?..

      பதில் சொல்லுங்க பொலவு.

      • இங்கே இந்தியாவில் இருக்கும் சூழ்னிலை குறித்து பேசுவோமா ?>.. பாபர் மசூதியை முதலில் இடித்தார்களா ?.. அல்லது அதற்கு முன்னால் எதாவது கோவிலை முதலில் இஸ்லாமியர்கள் இடித்தார்களா…………….Who destroyed Nalanda University in India during Mogul rule.2000 temples destroyed in Kashmir any thought.At the same time 100s of Mosque daily worshiped are demolished in Pak for Highway projects funded by WB any thoughts

      • What is the reason behind creating Sikh relegion.who unskinned Sikh religious gurus 2 or 3? during Islamic rule in India………SO KEEP DISTANCE TO ALL RELIGION and point finger to that deficiancies in serving to mankind

      • Bhgath Singh, It shows your knowledge on History.I would request you to read the below History which will throw you more light. I have already commented; Still i would like tp paste them.

        http://en.wikipedia.org/wiki/Islam_in_India

        http://www.kashmirherald.com/featuredarticle/indiacensus.html

        http://www.cfr.org/india/indias-muslim-population/p13659

        http://en.wikipedia.org/wiki/Political_history_of_Mysore_and_Coorg_(1565%E2%80%931760)

        பகத் சிங்க் என்று பெயர் வைத்து கொண்டு பொய் பேசுவது கொஞ்சம் ஓவர்.

        \\பாபர் மசூதியைஅ என்ன மசுத்துக்கு அத்வானி கும்பல் இடிச்சது?..\\

        ஒசாமா பின் லேடன் எந்த மசுருக்கு WTO வை இடித்தரோ அதே மசுருக்கு தான் அத்வானி கூட்டம் அந்த கட்டிடத்தை இடித்தது.

      • திரு பகத் சிங்க் அவர்களே முகலாய மன்னர்கள் இந்திய நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்ற போது இங்கே இருந்த பல உருவ வழிப்பாட்டு இடங்களை இடித்தார்கள் என்பது வரலாறு. அதன் மீது நிருவப்பட்டதே இந்த “பாபர்” மசூதி இடிப்பு சம்பவம். சம்பவம் நடை பெற்றது தற்கால வரலாறு ஆகினும் அதன் ஆணி வேர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் இருக்கிறது. அதை வைத்து அரசியல் செய்ததே இன்றைய இன் நிலைமைக்கு காரணம். மெய்யான கம்யூனிஸ்ட் ஆக தன்னை கூறிக்கொள்ளும் வினவு எந்த ஒரு மதத்தையும் ஆதரிப்பதுபோல் கருத்துக்கள் அமைக்காமல் இருந்தால் நல்லது. பெரும்பான்மை மதம் சிறுபான்மை மதத்தை அல்லது குழுவினரை அடக்கி ஆழ நினைப்பது எல்லா மத, மொழி இனங்களிலும் உள்ளது. இதை பற்றி விவாதித்தல் எந்த ஒரு முடிவையும் தந்து விடாது. மதத்தை விட்டு அரசியல் நீங்கும் வரை இந்த பிரச்சனை உலகில் இருந்து கொண்டுதான் இருக்கும்.

    • And to note, the brahmin prakash raj will not take up a role which justifies the plight of innocent and peaceful Muslims of India. So please double check if the film is really in opposition of saffron terror. Unless these religions are eradicated, freedom is theory… 😉

    • Qualities of MUHAMMAD from the Final Testament:

      003:159. It was a mercy from God that you were soft towards them; had you been harsh and mean hearted, they would have dispersed from you; so pardon them and ask forgiveness for them, and consult them in the matter; but when you are convinced, then put your trust in God; God loves those who trust.

      quranist@aol.com

    • Question:

      Why he asked muslims not to be friends with Jews* and Christians**?

      Answer:

      005:051. O you who believe, do not take the Religious Professionals*/Spiritual leaders* and the Political volunteers/reformers** as allies, for they are allies to one another; and whoever takes them as such from amongst you is one of them.

      quranist@aol.com

  12. அருமையான விமர்சனம்.

    கோ படத்திற்கு தோழர்கள் இவ்வளவு நாள் விமர்சனம் எழுதாததைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. வினவின் பார்வையை எதிர்பார்க்கிறோம்.

  13. படம் பார்த்தே நீண்ட நாட்கள் ஆகிற்று. தங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது

  14. தத்தெடுக்கப்பட்ட கிராம மக்களுக்கு துரோகம் செய்த கந்தசாமி பட இயக்குனரும் தயாரிப்பாளரும்

    கந்தசாமி படம் வெளியாவதற்கு முன்பு அந்த படத்தின் விளம்பரத்திற்காக சில கிராமங்கள் தத்தேடுக்கப்பட்டன.அதை ஊடகங்கள் மிகை படுத்தி காட்டின. இதில் ருசி கண்ட கந்தசாமி பட இயக்குனரும், தயாரிப்பாளரும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்திற்கு ஒரு கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்தனர், அது விளம்பரமாக பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது. பல கிராமங்களில் இருந்தும் தங்கள் கிராமங்களை தத்தேடுக்கவேண்டி பலரும் கடிதம் எழுதினர். இதில் இருந்து முப்பது கிராமங்கள் ததேடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அந்த கிராமங்களுக்கு நேரடியாக கந்தசாமி பவுண்டேசன் பார்வையாளர்கள் பார்வையிட்டுவிட்டு வந்தனர் . அந்த முப்பது கிராமமக்களும் அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டனர். நந்தம்பாக்கம் வர்தக மையத்தில் மே 17 , 2009 அன்று தத்தெடுக்கப்பட்ட அனைத்து கிராம மக்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தத்தேடுக்கப்பட்டதிற்கு அடையாளமாக அந்தந்த ஊரின் பெயர் , ரூபாய்.3,00,000/- அச்சிடப்பட்ட பெரிய அளவிலான காசோலையை நடிகர் விக்ரம் , ஸ்ரேயா, எ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை கொண்டு வழங்கப்பட்டது, தத்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு மருத்துவ உதவி திட்டங்கள் , கல்வி உதவி தொகைகள் அறிவிக்கப்பட்டன. இதற்காக கந்தசாமி பவுண்டேசன் என்ற ட்ரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு 30 தொழிலதிபர்களிடம் இருந்து தல ரூபாய்.3,00,000/- லட்சம் விதம் நன்கொடை வாங்கப்பட்டது.அந்த தொழிலதிபர்களும் அந்த மேடையிலையே கவுரிவிக்கப்படனர்.இந்த நிகழ்ச்சி முழுவதும் சன் தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டது. கந்தசாமி படம் 21 ,ஆகஸ்ட் 2009 இல் திரைக்கு வந்தது , படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    படத்திற்கு 100 வது நாள் விழா 30 டிசம்பர் 2009 அன்று தென் னிந்திய நடிகர்கள் சங்கத்தில் வைத்து எளிய முறையில் நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் சுசி கணேஷன் சொந்த ஊரான வன்னி வேலம்பட்டியை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள் ,அந்த கிராமத்திற்கு மட்டும் நல உதவித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மற்றுமுள்ள 29 கிராமங்களுக்கு இன்றுவரை எந்த உதவி திட்டமும் செய்யவில்லை . 3 மாதங்களுக்குள் அனைத்து நல உதவியும் செய்யப்படும் என்றார்கள். ஆனால் ஆண்டுகள் இரண்டு ஆகிவிட்டது பல முறை கடிதங்கள் அனுப்பியும் , போன் செய்து கேட்டும் எதற்கும் பதில் இல்லை இவ்வாறு அப்பாவி கிராம மக்களை ஆசை காட்டி அவர்களின் புகழுக்கு உபயோகப்படுத்தி விட்டு துரும்பை போல தூக்கி எரிந்து விட்டனர்.பல தொழிலதிபர்களும் நல் இதயத்தோடு ,உதவி செய்ய ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா ரூபாய்.3,00,000/- கொடுத்த பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை உங்களை போன்ற பத்திரிக்கைகள் தான் இந்த செய்திகளை வெளிக்கொண்டு வரவேண்டும் . தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு நல உதவி திட்டங்கள் செய்யப்படுமா அல்லது ஐயோ தானா என்பதும் தெரியவேண்டும்.

  15. விபச்சாரி என்ற சொல்லை தவிர்த்து பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டிருக்கலாம்.

    • விபச்சாரி என்ற சொல்தான் சரி,அதை கவுரவமான தொழிலாக ஏற்றுக்கொள்வது

      முறையல்ல.சமுதாயத்தால் இழிவான செயலாக கருதப்படும் ஒன்றை தொழிலாக

      குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ள இயலாது.

      • கணவனுக்கு பணிவிடை செய்தால் உபச்சாரம்.

        கள்ளக்காதலனுக்கு பணிவிடை செய்தால் விபச்சாரம்.

        அதை விடுங்க பாஸ்.

        கம்யூனிஸ [obscured] அகராதியில்/அரசியலில்/ஆட்சியில் என்ன செய்தாலும்

        “பாலியல்”

        ரொம்ப கிண்டினீங்கன்னா வந்துடும் அசிங்கமா !!!

    • பாலியல் தொழிலாளி என்றால் அவருக்கு துணை சேருபவர் பாலியல் முதலாளி என்றாகிறது. ஆகவே கட்டுரையில் விபச்சாரி என்று குறிப்பிட்டிருக்கலாம்.

    • இல்லை, அங்காடி தெரு படத்தையும் விமரிசனம் செய்தாலும் நல்ல முயற்சின்னு வரவேற்றிருக்காங்க..
      https://www.vinavu.com/2010/04/08/angadi-theru/
      அவங்க சினிமா விளம்பரத்தில் கூட வினவு தளத்தின் பெயரையும் வரிகளையும் எடுத்து போட்டிருந்தாங்களே

  16. தலைவா yeh mera india மற்றும் traffic signal போன்ற இந்திப்படங்களும் ஓப்பிட்டு பார்க்கவும்

  17. இங்கே இந்தியாவில் இருக்கும் சூழ்னிலை குறித்து பேசுவோமா ?>.. பாபர் மசூதியை முதலில் இடித்தார்களா ?.. அல்லது அதற்கு முன்னால் எதாவது கோவிலை முதலில் இஸ்லாமியர்கள் இடித்தார்களா…………….Who destroyed Nalanda University in India during Mogul rule.2000 temples destroyed in Kashmir any thought.At the same time 100s of Mosque daily worshiped are demolished in Pak for Highway projects funded by WB any thoughts

    வீரா அவர்களே ! நீங்கள் இரண்டு களங்களை ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.

    நாலந்தா அழிக்கப்பட்டது ஜாதி மதவெறி கோலோச்சிய காட்டுமிராண்டித்தனமான வரலாற்றுக் காலக்கட்டத்தில்.

    சோழர்கள் படை செய்த கொடூரங்களை கலிங்கத்துப் பரணியில் காணலாம். ஆர்.எஸ்.எஸ் அம்பி மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் நூலிலேயே, பல முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பின் போது பல மசூதிகளையும் சேர்த்து சூறையாடி விட்டுச் சென்றனர். ஜாதிய இன மாச்சரியங்கள் மற்றும் வல்லவனே ஆள்வான் என்னும் காட்டுமிராண்டித்தனமான காலக்கட்டத்தில் நடந்தது இவை !

    காஷ்மீரை யார் முதலில் ஆக்கிரமித்தார்கள் ? இந்து அமர்நாத் யாத்திரைக்கு சகல உதவிகளையும் செய்த – மற்ற இஸ்லாமிய சமூகங்களிலிருந்து முழுதும் மாறுபட்ட – சகோதரத்துவம் நிறைந்த உன்னதமான அந்த ரோஜா தேசத்தை ஆக்கிரமித்தது யார் ? அதனால் தான் முஸ்லீம் வெறியர்களால் அந்த மக்கள் பலியெடுக்கப்பட்டு தீவிரவாதம் மேலோங்குகின்றது. வினவின் காஷ்மீர் பற்றிய பதிவுகளை தேடிப் பிடித்துப் படியுங்கள் !

    பாக்கிஸ்தானில் மசூதிகள், இந்தியாவில் கோவில்கள், இந்திய இதயங்களான கிராமங்கள் என்று எல்லாம் இடிக்கப்படுகின்றதே ? உத்திரப்பிரதேசம் பற்றி எரிகின்றதே ? ஏன் ? இது ஏகாதிபத்தியக் காலக்கட்டம். அமுல் பேபி மற்றும் உத்திரப்பிரதேச பிரச்சனை பற்றிய வினவின் கட்டுரை இதனை விரிவாக விளக்குகின்றது.

  18. தோழரே,

    படங்களுக்கு விமரிசனம் எழுதி நேரத்தை வீணடிக்கும்/கம்யூனிஸ அரிப்பை தீர்த்துக்கொள்ளும்

    நீங்கள் உங்கள் கம்யுனிஸ சகாக்கள்

    செய்த வரலாற்று பிழையை அதாவது போலிக்கம்யூனிஸ்டுகள் செய்தவற்றை கரையை ஸ்ரீ

    ராமஜெயம் என்ற நாமகரணம் போல் எழுதி பரிகாரம் தேடலாமே ?

    Criticism

    Some of the primary criticisms of socialism and by extension communism are distorted or absent price signals,[51][52] slow or stagnant technological advance,[53] reduced incentives,[54][55][56] reduced prosperity,[57][58] feasibility,[51][52][53] and its social and political effects.[59][60][61][62][63][64]

    Part of this criticism extends to the policies adopted by one-party states ruled by communist parties (known as “communist states”). Some scholars are specially focused on their human rights records which are claimed to be responsible for famines, purges and warfare resulting in deaths far in excess of previous empires, capitalist or other regimes.[65][66][67] The Council of Europe in Resolution 1481 and international declarations such as the Prague Declaration on European Conscience and Communism and the Declaration on Crimes of Communism have condemned some of the actions that resulted in these deaths as crimes.

    Stéphane Courtois argues that Communism and National Socialism are slightly different totalitarian systems, and that communism is responsible for the murder of around 100 million people in the 20th century. He also argues that Nazi repressive methods were largely adopted from Soviet methods.[68]

  19. தாடி வச்ச ஒரெ கரானத்திர்காக .6 மனிநெரம் காவல் துரை இடம் அடி வாங்கிய அனுபவம் உன்டு எனக்கு.,.,கெட்டென் .,திவிரவாதி பொல இருக்கெனாம்.,.,இப்பொ தினமும் கிலின் செவிங்.,.,அந்த் அடி இப்ப்வும்??????? அம்மா?????.,பயமா இருக்கு.,.என் பெயரும் அப்படி .,.,இப்பொ கால் வலி.,காரனம் காலில் மிதித்து.,.,அடித்தார்கல் என் அருமை காவல் துரை .,.,

  20. சார் கொஞம் அவ்வாலுக்க்கும் .,.,சப்பொர்டா எழுதுங்கல் .,.,அப்பொதான் .,.,.,???????????????????

    • வணக்கம் பிரோஸ். நான் ஏற்கெனவே உங்களுக்கு இட்டிருந்த பின்னூட்டத்தில் ( பி.எண்- 14.1) உங்களுடைய விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல என்றும் அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளேன், அதற்கு பதிலளிக்காமல் மீண்டும் இங்கே சுட்டி கொடுப்பது சரியல்ல.

      நான் இப்போது தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன், ஒரு முறை அல்ல இரு முறை, நேற்றும் இன்றும். இப்போது உறுதியாக கூறுகிறேன் உங்களுடைய விமர்சனம் அடிப்படையற்றது !

      அப்பாவி இசுலாமியர்களையும் இசுலாமிய பயங்கரவாதிகளையும் இயக்குனர் தெளிவாகவே வேறுபடுத்திக் காட்டியுள்ளார். விமர்சனத்தில் கூறியுள்ளது போல மருத்துவமனையில் நடக்கும் இறுதிக்காட்சிகளை மட்டுமே ஏற்க இயலாது மற்றபடி நீங்கள் கூறுவது போல இசுலாமியர்களை காவிக்கண்ணோட்டத்தில் அவதூறு செய்யவில்லை. படத்தில் மிகப்பெரிய குறையாக நான் கருதுவது, இசுலாமிய பயங்கரவாதத்தின் அடிப்படை உறுதியாகவும், திருத்தமாகவும் கூறப்படவில்லை, அதாவது அதற்கு போதுமான காட்சிகளை அமைக்கவில்லை. வேறு வகையில் சொன்னால் அவர்களை, அதாவது நசீரையோ, மன்சூர் கானையோ பேச வைத்திருக்க வேண்டும். அவ்வாறான ஒரு காட்சியை பயணம் என்கிற படத்தில் பேருக்கு வைத்திருப்பார்கள் ஆனால் அந்த படம் ஒரு மிதவாத RSS படம். இந்தப்படத்தை அவ்வாறு கூற இயலாது. இதை ஒரு மதச்சார்பற்றவரின் பார்வை என்று உறுதியாக கூறலாம்.

      திரைப்படத்தில் மேற்கூறியது ஒரு அம்சம் மட்டுமே இது தவிர இன்றைய மறுகாலனியாக்க இந்தியாவின் வேறு ’சில’ முகங்களையும் தமிழ் சினிமாவின் வரம்பிற்குள் நின்று இயக்குனர் கூறியுள்ளார். அந்த வகையில் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல இது வரவேற்க்கப்பட வேண்டிய படம் என்றே கருதுகிறேன்.

      • தமிழ்
        மன்னிக்கவும் எதோ தவறுதலாக எனது பதிவு இருமுறை ஆகிவிட்டது . நான் இப்போதுதான் பார்த்தேன் .இப்பொழுதும் சொல்கிறேன் இது மிதவாத இந்துத்துவ படம்தான் . உன்னைப்போல் ஒருவன் பார்த்து சில இசுலாமிய இளைஞர்களே படம் நடுநிலையாக இருப்பதாக கூறினார் எங்கள் பகுதி R S S காரனுக ஓசில டிக்கெட் வாங்கி குடுக்கும் வரை இந்த உண்மை உரைக்காமல் என் கருத்துடன் நீண்ட விவாதம் நடத்தியவர்கள்தான் அந்த அப்பாவி இளைஞர்கள். எனது கருத்து சரியாக இல்லை என்கிறீர்கள் . உங்களுக்கு எல்லாம் வெறும் செய்திகா இருந்த குண்டு வெடிப்பு எங்களுடைய வலிகள்(அதாவது கோவை மக்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின்) எனவே இங்கே என்ன நடந்தது உண்மையில் . படத்தில் காட்டுவது போல விநாயகர் ஊர்வலத்தில் ஒரு அரை அறைந்து அனுப்பி வைக்கும் காவலர்கள் அல்ல 97 நவம்பர் படுகொலையில் நா(ன்)ங்கள் கண்ட காவலர்கள் . அவர்கள் துப்பாக்கியுடன் முசுலீம் இளைஞர்களை துரத்தியவர்கள் சிக்கியவர்களை சுட்டுக்கொன்றவர்கள் . பார்க்க உண்மை அறியும் குழுவின் ரிப்போர்டில் முஸ்தபா எனும் இளைஞனுக்கு நேர்ந்த கொடுமையை . எனவே வானம் மீண்டும் வெற்றியடைந்த பார்ப்பனீயம்

  21. வினவு அண்ணன்… பயணம் படத்த பத்தின விமர்சனம் எழுதணும்’னு ஒரு வேண்டுகோள்.. அதுல எந்த தீவிரவாதத்த ஆதரிக்கிறீங்க.. எதை எதிர்க்கிறீங்க’னு பாக்கணும் அண்ணன்…

  22. 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
    வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
    ‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
    ‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
    பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
    இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
    ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
    இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
    அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
    அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
    இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
    இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
    வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
    இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
    கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
    திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
    துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
    கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
    அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
    இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
    கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
    இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
    இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.
    அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.
    ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.
    அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
    இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
    அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
    இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
    இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
    ‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
    அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
    ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
    அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
    ”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
    அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
    மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
    அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
    நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
    எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
    இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
    அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
    ‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
    இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
    அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
    குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
    கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
    பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
    ‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
    இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
    இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
    கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
    லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
    குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
    அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
    ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
    அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
    கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
    இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
    மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
    துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
    இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
    இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
    இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
    இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
    200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
    உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
    பாபர் கோவிலை இடிப்பவரா?
    இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
    ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
    கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
    மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
    பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
    பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
    ”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
    இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
    பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
    கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
    பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
    பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
    பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
    கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
    அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
    வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
    ”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
    1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
    இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
    1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
    எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
    இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.
    ஆங்கிலத்தில்..
    1949 On December 23rd, Muslims finished their night prayer and left to their home. A shock was waiting for them, who came for fajr prayer. Inside the Mosque a mob kept Rama, Laxamana, Sita statues and claimed that their God took avatar (appeared) inside the mosque and they started agitating against innocent Muslims.
    An FIR was filed at faizabad police station. Afterwards central and state government banned Muslims to conduct prayer inside the mosque and this became one of the important issue in Indian history.
    Then Innocent Hindu’s mind were brain-washed with hatred feeling against Muslims by spreading a false propaganda that “Babri Majid was built by demolishing Ram Temple”
    If the propaganda of Saffron Group ” Babri majid was built after demolishing Ram Temple” is true then no Muslims will fight for this issue. Because in Islam, demolishing other religious Temple is strictly prohibited. Due to their false claim about Ram Temple, Muslims are fighting to get back their mosque.
    We don’t want to divert the subject by exposing the comment of Chatterji, AK majumdhar, Nehru that RAM is an imaginary character.
    Because the subject is to discuss by doing research whether any Ram temple exists in the disputed location ? Whether Majid was built in that location by demolishing Ram temple? Not about the existence of Ram or whether it is imaginary character or not!!!
    Even Ram is an imaginary character; no Muslims will accept the demolition of Ram temple and build a mosque in that location.
    Was Ram born at Ayodhya ?
    We’ll see how the claim of Ram born in that disputed location will be true.
    Whatever the decision Hindus want to take, it should not be fundamentally taken from the comment of RSS or any other saffron organization. It should be taken from Hindus Vedas and Purunas. In fact, it would be opposite to Hindu ideology, if some decision taken apart from this jurisdiction of Vedas.
    Valmiki wrote first about Ram and his words explained everything about Ram in crystal clear format. Valmiki explained in his Ramayana that he born at DHIREDHA Yuga.
    A basic measurement unit of time, to denote the Hindu’s belief of time is Yuga. There are four Yugas.
    Kirudha yuga 17,28,000 ( 17 lakhs, 28 thousands ) years
    Dhiredha Yuga 12,96,000 ( 12 lakhs, 96 thousand) years
    Duvaba Yuga 8,64,000 ( 8 lakhs, 64 thousand ) years
    Kali Yuga 4,32,000 ( 4 lakhs, 32 thousand ) years
    Now we are living in the time of Kali Yuga. Kali Yuga starts before 3102 years of Christ. Now 2009 finished after Christ. So 5110 years finished after kali yuga starts.
    Duvaba yuga was before Kali Yuga and Ram didn’t born during this time. Before this was Dhiredha Yuga and even Ram born during last stage of this Yuga and according to Valmiki Ramayana’s Judgment ” Ram should have born before 8,69,110 years ( 8,64,000 + 5110 )
    Like Valmiki Ramayana told about Ram’s Yuga, he specified the birth place too that is “He born at Ayodhya city ”
    That means ” Ayodhya” should exists before 8 Lakhs, 64 thousand years. A report was submitted on 1976, 77 by central government archeological department regarding ” when Ayodhya appeared?”. This report in its 52, 53 page explained that “A place name called Ayodhya in which people started dwelling was before 700 BC.
    That means, before 2708 years, there would be no Ayodhya according to their archeological research.
    Afterwards this was re-researched by C.P.Lal and K.N Theetjit , a notable historian. They also found that it was true whatever the archeological department found.
    Valmiki told that Ram born before 8 lakhs 69 thousand years at Ayodhya, but it is crystal clear that there was nothing called Ayodhya at that time.
    How Hindus can conclude by neglecting Ramayana and archeological finding?
    The age of this Ayodhya is 2708 years. But this is not the one explained by Ramayana. May be it is in different place. It is general to find many places in the same name. By considering these facts, they have to come for conclusion, which will not contradict with Ramayana and research facts.
    There is lot of testimonials in Ramayana that Ram born at Ayodhya which is different from the existing one.
    While speaking about Ayodhya, Ramayana spoke about Sarayu River. Sarayu River exists 1.5 yojan distances from Ayodhya. (1.5 yojan means 23 kilometers )
    Even though there’s one river called Sarayu at Ayodhya, it’s running inside the city, not 23 kilometers away from the city.
    That means, Ayodhya and Sarayu River told by Ramayana is not the existing one. Ramayana teachings will be correct when you believe Sarayu River flows 23 kilometers away from Ayodhya.
    People are simply neglecting Hinduism, if they consider existing Ayodhya is same like Ayodhya explained in Ramayana.
    Also Valmiki Ramayana explains that “ Sarayu River join with Ganga”. But this Sarayu River mingles with Raabthi River. What we learnt from this? Ramayana doesn’t denote this Ayodhya and Sarayu river. Also Valmiki Ramaya explains Sarayu river flows from east to west. But Sarayu river in UP flow from west to east.
    A researcher, Saer Singh Identified a truth. There is one Ayodhya at Nepal. 20 kilometers away from that city one river is flowing from east to west. Also it mingles with Ganga.
    So, those who believe Ram born at Ayodhya, which is at Uttarpradesh, are neglecting Ramayana and its ideology.
    Real Ayodhya should be one, which was explained by the Ramayana with all testimonials.
    was Ram temple existed at Ayodhya ?
    Babar Majid was build at 1528. We’ll see whether any truth present with the opinion of ” Mir Baahi” a minister of Baber, who was accused for demolishing Ram Temple in the disputed location”
    RSS claimed that Ram temple was built by king Vikramathithya. Vikramathidya is general name like Chola,Pandya kings. Chandra Gupta, samutra Gupta kings are called in the name of Vikramathidya.
    They contradict in specifying the actual king who really built the Ram temple. There is not fact in their claim.
    Gupta kings ruled some part of U.P during the period 300 AD to 1100 AD. These kings who ruled for 800 years are called as Vikramathidya.
    During the period 300 AD to 1100 AD, there was not even a smell of human at Ayodhya, according to the chief of Indian Archeological department.
    P.P Lal who submitted research report and was published at famous magazines” The Week” (25.02.1990) and “Sunday Times” (20.11.1987 ). In that report, after showing several evidences, he was confidently explained that, at Ayodhya during that period of 300 – 1100 AD, there was no human, building, temple or anything.
    In some place, which is untouched by human, how can they build a temple? How Baber can demolish a temple which was not existed? I request Hindu Brothers and sisters to think about this.
    When Ram was worshipped as God?
    If temple to be built for Ram, it should be built after Ram was worshipped as God. Now Hindus are worshiping Ram as God, but they didn’t do it before. Ram was not considered as God, Especially during the period of 300-1100 AD, which was claimed by RSS, the time when Ram temple was built.
    Amar Simha of AD 600, released many Sanskrit Poetry resources in the name of ” Amara Kosa”. In that, those who are worshipped as God in India were specified. Ram name was not in the list. So Hindus during that period were not considering Ram as GOD’s Avatar and its considered as big testimonial.
    A Sadhu called Lakhsmidhar, collected the information of all sacred place up to 11th century (until last time of Gupta Dynasty). Ayodhya Ram temple is not existed in that.
    If Ram temple was build during Gupta period, why it was not included in the list of sacred place?
    Same like that, S.S.Iyer , a notable research scholar, published book called ” Indian Temples, Historic notes”. He didn’t specify anything about Ram temple. He noted five temples which was built by Vikramathidya. Ayodhya Ram temple is not there.
    At 1989 November 12, IAS officer Ramachandra Kadri wrote one article at “Radiance”. He referred so many evidences with Encyclopedia like Britannica and comment that only after 1100 AD, Ram was worshipped as God.
    That means, until the last period of Gupta kings, Ram was not worshipped as God. Can any Hindu who has real conscience, believe that Ram temple was build during the Gupta period?
    If we want to tell more clearly, Valmiki wrote Ramayana in Sanskrit. Sanskrit was not popularly spoken by all people and only Brahmins knew about that. Because of this Ram was not considered as God.
    Valmiki Ramayana was translated and released in Hindi by Tulsi Das. After that, Ramayana was very famous among people. After Tulsi Das translated Ramayana in Hindi, people start considering Ram as God’s Avatar.
    What’s the time of Tulsi Das ? Tulsi Das Lived during the period of Baber (in Ayodhya ), which was claimed for demolition of Ram temple. Baber ruled during 1500 AD and Tulsi was living under that rule.
    Ramayana was translated in Hindi during the rule of Baber and that time Ram was not considered as God. So it becomes true that Hindu people didn’t have any knowledge about him.
    How Ram was worshiped as GOD when Ramayana was not spread across people? How temple was build for him? Dear Hindu Brothers and sisters, think about this.
    India’s first president was Dr. Radha Krishnan. His son Gopal who was good Hindu devotee and very good research scholar too. In his research article, he proclaimed that “There was no temple for Ram before 1750 AD, in any part of India. He confidently declared that “All Ram temple belongs to 18th century”.
    if Ram temple was not existed before 200 years, how Baber demolish Ram temple at Disputed location of Ayodhya. I request every citizen, to think about this.
    The truth is, the foundation of Babri Majid was laid by Ibrahim Lodi, on 1524. He was unable to continue the service for long time and he was killed in war by Baber. Then, Baber build a Majid, with the foundation laid by Ibrahim Lodi. So it is untrue to tell that Baber demolished the temple.
    Will Baber Demolish temple ?
    So far, the evidences provided here is enough for everyone, who can really able to distinguish between good and bad. For debate purpose, even though if any temple was there in the disputed location, Baber would not demolish that.
    Because, in same Ayothya, for five temples like Hunumangiri ,Jenmasthan, Baber provided incentives by writing in brass . This been safeguarded still now by temple management and was reiterated with evidences by Ramrasha Thiribathi.
    How a person will demolish a temple, who provided incentives to many temples?
    Also the population of Muslims during Baber reign would be meager when compared with present population. Sovereignty of the kingdom will be maintained only by the support of majority Hindus. Baber would be thrown-out from his throne, by agitators of Hindu Majority, if their temple was demolished. No king will be involved in such activities, if he really wants to retain his power.
    Hindus during that time were not involved in any riots or agitation, but only welcomed all Mughal heirs like Babar, his son Humayun, his son Akbar. This shows the courtesy and kindness were showered by Mughal emperors towards Hindu majority.
    During the last time of Baber, he wrote one WILL to his son Humayun written in Persian language and it is been preserved still today at Central government’s National museum at Delhi. In that he gave advise as “Dear son, you are going to rule a country where Hindus are in majority. They are respecting COW as God. So don’t eat Cow’s meat (Beef) at any instance.
    How a Good Citizen can believe that Baber demolished a temple, who advised his son to renounce the eating habit of Cow’s meat (beef)?
    Guru Nanak who founded Sikh religion was considered as big enemy during Baber’s reign. He rigorously opposed Baber, especially for the issues related with women. If Baber demolished the temple, he would have indicated that with his strong resentment. But history commenting that he went to Ayodhya and enjoyed the beauty of Babri Majid’s Structure.
    Person like him who lived in those years only knew that whether Baber constructed Majid by demolishing temple. In such case, he would never enjoy its building structure.
    Some falsely imagine and claim that people didn’t oppose the rule because of Babar’s tyrant nature.
    Baber was neither hated by Hindu people nor was he was a tyrant king. This is the truth. For debate purpose, if we consider Baber was a tyrant king, it would not be true.
    After Baber, his kingdom was ruled by his son Humayun. After 25 years of Baber’s death, his grandson Akbar ruled the kingdom. He gave up Islam and was following New Religion Din-ilahi, for which he was the founder. Akbar was like a Hindu king and even he got appreciation from many saffron organizations.
    If Baber demolished the temple, it should have been noticed by many people who lived during the period of Akbar too. They don’t need to worry about Akbar and they would have asked to rebuild the temple which was demolished by his grandfather. Surely, Akbar would have satisfied such people, if his grandfather would have demolished such structure. People could have requested, only if temple was demolished!!! But there happened no such incidents.
    We’ll leave that. Even after the Mughals era was ended by Britishers, this issue was not raised by anyone until 1948. There was no case registered too.
    In 200 years rule of British:
    No case was registered during British rule against the demolition of mosque and nobody requested British government to get back their temple.
    Problem suddenly rose to its full vigor only after December 23, 1949, when a mob placed Ram idol inside the mosque.
    In Ayodhya there are more than 30 Temples which manifest about Ram’s birth place. Hindu scholars identified many places as Ram’s birth place and they didn’t include Babri Majid among them.
    This was the reality, until saffron group diverted the attention of Hindus by such false claims.
    Saffron Group discovered that by evoking extreme hatred among Hindus and Muslims, they can capture the opportunity to rule India from Congress. Finally they captured the rule by cheating innocent Hindu citizens who believe that” All the glitters are Gold “.
    Dear Hindu Brothers and Sisters!!!
    We’ll strive to preserve the UNITY.
    We’ll neglect communal forces, which have vested interest in creating extreme friction to the development of our country.
    We’ll work hard for the economic development of our country and for its prosperous future.
    -English Translation Anis Rahman

  23. இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
    இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
    இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.
    அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்…
    இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.
    அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.
    இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?
    விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)
    அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?
    விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.
    இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.
    ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.
    இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?
    Source from: http://www.ibujdesign.com
    http://kadayanalluraqsa.com/
    more information go to youtube

    • Malik,

      Thanks for long explanation.
      Am getting couple of questions after read your comment.
      Can you explain why Parliament and Mumbai blast happened, if possible give all proofs like this.
      Thanks

  24. Malik,

    இந்த பதிவை நீங்கள் இந்த இடத்தில இடுவதன் காரணம் என்ன? தலைப்பை திசை திருப்புவது சரியல்ல. சரி நீங்கள் கேட்ட கேள்விக்கு எனது பதில்.

    \\ எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு. \\

    அது என்ன மொக்கை திறப்பு. நான் சேலத்தில் பிறந்தேன். ஆனால் அமெரிக்காவிலும் ஒரு சேலம் உள்ளது. சேலம் என்ற ஒரே காரணத்திற்காக நான் அமெரிக்காவில் பிறந்தவனா?
    பிரபஞ்ச அளவிலான கணக்கை, மக்கள் வாழ்க்கையுடன் முடிச்சு போடவே இந்தக் குழப்பம வருகிறது. ஹிந்து / பாரத / psecudo கம்யூனிஸ்ட் பார்வையில் பார்பன முறைப்படி, கால கணக்கிடு இடத்திற்கு ஏற்ப மாறக்குடியவை. நீங்கள் சொன்னது பிரபஞ்ச அடிப்படையிலான கால அளவு. மனித வாழ்கையின் கால அளவு கிடையாது.

    சதுர் மஹா யுக அளவில், விண்வெளி சார்ந்த கால அளவு:: (சூரியனை அடிப்படையாக கொண்டது. பால் வெளிக்கு அல்ல)

    இந்தக் கலி யுகத்தின் கால அளவு, 4,32,000 வருடங்கள். இது அடிப்படை அளவு.
    இதைப் போன்ற இரண்டு மடங்கு கால அளவு, அதாவது 8,64,000 வருடங்கள் உள்ளது துவாபர யுகம்.
    கலி யுக அளவைப் போன்ற மூன்று மடங்கு கால அளவு கொண்டது த்ரேதா யுகம் (12,96,000 வருடங்கள்)
    கலி யுக அளவைப் போன்ற நான்கு மடங்கு கால அளவு கொண்டது கிருத யுகம் (17,28,000 வருடங்கள்)

    சதுர் மஹா யுக அளவில், மனிதன் சார்ந்த கால அளவு:

    கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம்
    கி.மு. 11,716 முதல் கி.மு.7,396 வரை = த்ரேதா யுகம்
    கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 வரை = துவாபர யுகம்
    கி.மு. 4,516 முதல் கி.மு.3,076 வரை = கலி யுகம்

    இதன் படி ராமர் பிறந்தது,, கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 இடைப்பட்ட காலத்தில். சரி இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள லிங்கை படிக்கவும்.

    யுகங்களும், இதிஹாச காலங்களும்: http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/15.html
    ராமனும் , ராவணனும் சரித்திர உண்மைகளே:http://thamizhan-thiravidana.blogspot.com/2010/12/14.html

    ஹிந்து மத்தம் பற்றி sangh பரிவார் அமைப்பு சொல்வதை எல்லாம் அப்படியே நாங்கள் ஏற்று கொள்வது கிடையாது. சங்க பரிவார் குரல் மட்டும் ஹிந்து குரல் கிடையாது. ஆனால் பல ஆயிரம் ஹிந்து அமைப்புகளின் குரலை போலே, இவர்கள் குரலும் ஒரு ஹிந்து குரலே. அதை கேட்பதும் கேட்காததும் அவரவர் இஷ்டம்.

    \\ மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்\\

    அதே தொல் பொருள் துறை தான் உலகின் தலை சிறந்த ஸ்பெயின் ஸ்பெயின் அறிவியல் அறிஞர் உடன் நடத்திய ஆய்வில் கட்டிடத்தின் கீழ் ஒரு மிகப்பெரிய கோயில் உள்ளது என்று கூறியுள்ளனர். இதை பற்றி நான் மேலும் விவாதம் செய்வது தேவை அற்றது. இதை பற்றி முழுமையாக அறிய விக்கிபீடியாவை தொடர்பு கொள்ளவும். wikipediavai நடத்துவது சங்க பரிவார் அல்ல.

    http://en.wikipedia.org/wiki/Ram_Janmabhoomi
    http://en.wikipedia.org/wiki/Conversion_of_non-Muslim_places_of_worship_into_mosque

    \\இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
    இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் \\

    ஹீ ஹீ ஹீ… இதை கேட்டால் கம்யூனிஸ்ட்கள் கூட சிரிப்பார்கள். தயவு செய்து கொஞ்சம் தஞ்சாவூர் கும்பகோணம் சென்று வாருங்கள். அங்கு 600 வருடதிருக்கும் மேற்பட்ட ராமர் கோயில்கள் மற்றும் அதன் சந்நிதிகள் உள்ளன்.

    \\இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.\\

    உங்கள் தரவின் படி ராமர் கோயில் 200 வருடங்களுக்கு முன் இல்லவே இல்லை. இல்லாத கோயிலுக்கு பாபர் எப்படி மானியம் வழங்கினர். ஒன்று முதலில் சொன்னது பொய். இல்லை இரண்டாவது சொன்னது பொய்.

    \\பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?\\

    உங்கள் சரித்திர அறிவை நினைத்து வியப்பாக உள்ளது. தயவு செய்து சரித்திரத்தை படிங்கள். இவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தனை போர்கள் நடந்தது என்று ஒரு BA வரலாறு படிக்கும் மாணவனிடம் கேட்டால் கூட சொல்வார்கள்.

    \\பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.\\

    தயவு செய்து பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். குரு நானக் முஸ்லிம்களை, ராம ஜன்ம பூமியை ஹிந்துக்களுக்கு விட்டு கொடுக்கும் படி கூறியுள்ளார். இதை பற்றி பல் சரித்திர சான்றுகள் உள்ளன். இதை பற்றி மேலும் அறிய மேலே உள்ள ராம ஜென்ம பூமி தொடர்பன லிங்கை படிக்கவும்.

    நீங்கள் கவலை பட வேண்டாம். உங்கள் மக்கள் தொகை உத்திர பிரதேசத்தில் பல மடங்கு பெருகி உள்ளது. இதே வேகத்தில் சென்றால் நீங்கள் அங்கு பெரும்பான்மை சமூகமாக மாறி, பாகிஸ்தான் மக்களை போன்று மகிழ்ச்சியாக வாழலாம். என்னக்கு என்ன ஒரே வருத்தம் என்ன வென்றால், இஸ்லாமிய ஆட்சியில் கம்யூனிஸ்ட் மக்கள் இருக்க முடியாது என்பது தான். கடவுள் இல்லை அது பொய் என்று sonnal இவர்களை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள் என்பது தான். 🙁

    கடைசியா கொடுக்கப்பட்ட தலைப்புக்கு ஏற்ப பின்ன்டம் இடுங்கள். இது வீணாக நேரத்தை வீணடிக்கிறது.

  25. முஸ்லீம்களின் ஓட்டை வாங்க ஓட்டுபொறுக்கும் தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல நீங்களும் முஸ்லீம்களுக்கு சொம்பு தூக்குவது ஏன்?சோவியத் யூனியன் 1979 இல் முஸ்லீம் நாடான ஆப்கன் மீது போர் தொடுத்தது ஏன்?கேட்டா ஸ்டாலினுக்கு பின் வந்தவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்று சப்பை கட்டு கட்டினால் நான் கேக்கும் கேள்வி இந்தியாவில் ஆட்சி பிடிக்க துடிக்கும் நீங்கள் ரஷ்யாவை போல போலி கம்யூனிஸ்டுகளும் ஆத்சிக்கு வருவர் என்ற வாதத்தை ஒப்பு கொள்கிறீரா?சீனா முஸ்லீம் நிறைந்துள்ள படுதியில் ஒடுக்குமுறை செய்வதை என்ன சொல்லி சமாளிக்கிறீர்கள்?

  26. முஸ்லீமுக்கு சொம்பு தூக்காத நீ கம்யூநிச்டுனா மத நம்பிக்கைகளை கண்டிக்கனும் ஆனா ஒரு மதத்தை கண்டித்து இன்னொரு மடத்தை தூக்கி பிடிப்பது கருணாநிதி செய்யும் மலிவான ஓட்டரசியல்தான் நீங்கள் செய்வது .செங்கொடி கூட முஸ்லீம் மடத்தின் ஓட்டைகளை இடிக்கிறார்.ஆனால் நீயோ எப்போ பாத்தாம் பார்ப்பனன் ஹிந்துன்னு கருணாநிதி மற்றும் ஓட்டை ஒடிசல் திராவிட கட்சி போலதான் வினவும்

    • கம்யூனிஸ்ட்டு மதநம்பிக்கைகளித் திட்டிக் காலம் கழிப்பவனல்ல.
      எங்கெல்லாம் மதத்தின் பேரால் சமூக முன்னேற்றமும் சமூக நீதியும் தடுக்கப் படுகிறதோ அங்கெல்லாம் கம்யூனிஸ்ட்டு குறுக்கிடத் தேவை உண்டு.

      மற்றது, அடக்குமுறையாளனின் தேசியவாதமும் மதவாதமும் அடக்கப்படுபவனின் தேசியவாதமும் மதவாதமும் ஒரே விதமாக விமர்சிக்கப்பட இயலாது.

  27. ரெட்டை குவளை முறை ,வாயில் மலத்தை ஊற்றுவதுன்னு தீண்டாமை செய்வது வன்னிய,தேவர் சாதிகள்தான் பெரும்பாலும்.,எந்த பார்ப்பனரும் இதை செய்வதில்லை.ஆனா நீ அதெல்லாம் கேக்க மாட்ட.கருணாநிதியின் ஒட்டு போரிக்கிதனம்தான் ஒனக்கும் தெரியும்

  28. read this websites ok brothers

    http://kadayanalluraqsa.com/?p=616

    இந்திய வரலாற்றின் கரும்புள்ளியாகவும் மதவாத அரசியலுக்கு அடித்தளமாகவும் இருக்கும் அயோத்திப் பிரச்சனை குறித்து ஒரு பார்வை:
    கி.பி. 1528: முகலாய மன்னர் பாபரிடம் பணியாற்றிய மீர்பாகி அயோத்தியில் மசூதியைக் கட்டினார்.
    கி.பி. 1853: இந்த இடத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இருந்தது என்றும், இது ராமர் பிறந்த இடம் எனவும் இந்துக்கள் உரிமை கொண்டாடினர். அயோத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
    கி.பி. 1857: மசூதி இருந்த இடத்தின் ஒரு பகுதியை இந்து சமயத் துறவிகள் கைப்பற்றி ஆலய வழிபாட்டை நடத்தினர்.
    கி.பி. 1859: வழிபாட்டுத் தலங்களைப் பிரிக்கும் வகையில் சுற்றுச் சுவரை அப்போதைய பிரிட்டிஷ் அரசு கட்டியது.
    கி.பி. 1934: இந்தியா முழுவதும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. பாபர் மசூதியின் ஒரு பக்க சுற்றுச் சுவரும் மேல் பகுதியும் சேதப்படுத்தப்பட்டன.
    கி.பி. 1949: மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ராமரின் சிலையை அங்கு வைத்தனர். இதையடுத்து இப்பகுதியை சர்ச்சைக்குரிய இடமாக அரசு அறிவித்து பூட்டிவிட்டது.
    கி.பி. 1983: ராமர் பிறந்த இடத்தை (?) மீட்டு, அங்கு ராமர் ஆலயம் கட்டுவதற்கான குழுவை விசுவ இந்து பரிசத் இயக்கம் உருவாக்கியது. இதற்காக எல்.கே. அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றது.
    கி.பி. 1986: பாபரி மஸ்ஜித் தலத்தின் வாயிற்கதவின் பூட்டைத் திறந்து இந்துக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்குமாறு பைசாபாத் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் பாபர் மசூதி செயல்கமிட்டி அமைக்கப்பட்டது.
    கி.பி. 1989: மசூதிக்கு அருகில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிலைவழிபாட்டுக்கு முந்தைய ராஜீவ் காந்தி அரசு அனுமதி வழங்கியது. அங்கு ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
    கி.பி. 1990: ராமர் கோயில் கட்டும் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அத்வானி ரத யாத்திரை நடத்தினார்.
    அயோத்தியில் ஒரு லட்சம் கரசேவகர்கள் திரண்டனர். சர்ச்சைக்குரிய இடத்தைத் தகர்க்க முயற்சித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 30 பேர் உயிரிழந்தனர்.
    கி.பி. 1992: ஜூலை மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
    கி.பி. 1992: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அங்கு தற்காலிக ராமர் கோயில் அமைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
    கி.பி. 1993: பாபர் மசூதி இடத்தைச் சுற்றியிருந்த 67 ஏக்கர் நிலத்தை முந்தைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு கையகப்படுத்தியது. அங்கு ராமனின் வரலாறு பற்றி கதாகலாட்சேபம் நடத்தும் பூங்கா அமைக்கத் திட்டமிட்டப்பட்டது.
    கி.பி. 1994: அரசு கையகப்படுத்திய இடத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அது தீர்ப்பளித்தது.
    கி.பி. 2002 ஜனவரி: ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளப் போவதாக விசுவ இந்து பரிசத் இயக்கம் அறிவித்தது.
    கி.பி. 2002 பிப்ரவரி 16: சர்ச்சைக்குரிய அயோத்திப் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பே சரியான தீர்வாக அமையும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். நீதிமன்றத் தீர்பபுக்குக் கட்டுப்படுவதாக விசுவ இந்து பரிசத்தும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பும் அறிவித்தன.
    கி.பி. 2002 மார்ச் 6: அயோத்தி வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு அலாகாபாத் உயர்நீதி மன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
    கி.பி. 2002 மார்ச் 10: பாபர் மசூதி இடத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பிவிட்டு பூஜை நடத்த அனுமதிக்கலாம் என்ற காஞ்சி சங்கராச்சாரி முன் வைத்த ஒரு திட்டத்தை இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்தது.
    கி.பி. 2002 மார்ச் 11: அயோத்தியில் பூஜை நடத்துவதில் நீதிமன்றத் தீர்ப்புப்படி மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.
    கி.பி. 2002 மார்ச் 13: அயோத்தியில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அங்கு பூஜையோ இதர நிகழ்ச்சிகளோ நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    http://whokilledkarkare.com/ go to this link and get this
    book available in tamil RS.150

  29. திரு. சோலன்.

    “கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம்
    கி.மு. 11,716 முதல் கி.மு.7,396 வரை = த்ரேதா யுகம்
    கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 வரை = துவாபர யுகம்
    கி.மு. 4,516 முதல் கி.மு.3,076 வரை = கலி யுகம்.”

    இதற்க்கு பெயர் தான் பார்பன சூழ்ச்சியோ.. இந்து மதத்தில் இருக்கும் விஷயத்தில் நூற்றுக்கு அய்ம்பது விழுக்காடு( அதாங்க உங்க வேதாந்தம்) அறிவுக்கு பொருத்தம் இல்லாத அற்ப விஷயங்கள் தான். மீதி அறிவுள்ள அயிம்பது விழுக்காடு தமிழர்களின் சித்தாந்த கோட்பாடுகளில் இருக்கிறது. அதனால் தான் இப்படி அனைவரும் எள்ளி நகையாடிய இந்த ஆண்டு கணக்கு விஷயத்திற்கு புது புது விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் ஏற்படுத்தி வைத்து விட்டீர்களோ. சபாஷ் சும்மா சொல்ல கூடாது. சாணக்கியன் உங்களிடம் தோற்றான். என்னே மதி நுட்பம். நீங்கள் கண்டுபிடித்த இந்த ஆண்டு கணக்கின் விஞ்ஞான வியாக்யானதிர்க்கு இந்து மதத்தில் எங்கே ஆதாரம் இருக்கிறது என்று காட்ட முடியுமா. ராமர் கிருஷணர் போன்றவர்கள் இருந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் என்ன இருக்கிறது. இன்று இந்து மதம் உயிரோடு இருப்பது உங்கள் வேதாந்ததால் கிடையாது தமிழர்களின் சித்தாந்த அறிவால் தான் அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். விஞ்ஞான ரீதியாக தோற்று போன மதம் இந்து மதம் என்று எள்ளி நகை ஆடிய பின்பு தான் இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை எல்லாம் நீங்கள் வலிந்து இந்து மதத்தில் நீங்கள் புகுத்திநீர்கள். அதற்கு நீங்கள் தசாவதாரத்திற்கு கொடுத்தீர்களே ஒரு விஞ்ஞான விளக்கம். யாப்பா யாராலும் முடியாது. இந்த ஆரிய பார்பனிய வலைபூக்களை எல்லாம் ஒரு ஆதாரமாக கொண்டு வந்து காட்டாதீர்கள். ஏனென்றால் ஆரிய பார்ப்பனியத்திற்கு ஆதரவாக நீங்கள் ஒரு இணையதளத்தை காட்டினால் நான் ஆரியத்தின் முகத்தில் காரி உமிழும் பத்து இணையதள முகவரிகளை காட்ட முடியும். இனியாவது ராமருக்கு கோயில் என்கிற கேவலமான வாதத்தை விடுங்கள். ராமர் என்றுமே ஒரு கடவுள் கிடையாது அது ஒரு கற்பனை வாதாமே. விரைவில் அது தோற்று போகும் .

  30. \\மீதி அறிவுள்ள அயிம்பது விழுக்காடு தமிழர்களின் சித்தாந்த கோட்பாடுகளில் இருக்கிறது\\

    சரி தமிழனின் சித்தாந்த கோட்பாடு என்று எதை சொல்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?

    \\நீங்கள் கண்டுபிடித்த இந்த ஆண்டு கணக்கின் விஞ்ஞான வியாக்யானதிர்க்கு இந்து மதத்தில் எங்கே ஆதாரம் இருக்கிறது என்று காட்ட முடியுமா\\

    முதலில் ஹிந்து மதம் என்பதே ஒன்று கிடையாது. சிந்து என்பது மருவியே ஹிந்து என்று ஆனது என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. நாங்கள் என்ன பைபிள் அல்லது குரான் என்று ஒரு புத்தகத்தைய வைத்து கொண்டு இருக்கிறோம். எண்ணற்ற புத்தகங்கள் உள்ளன.

    \\ராமருக்கு கோயில் என்கிற கேவலமான வாதத்தை விடுங்கள். ராமர் என்றுமே ஒரு கடவுள் கிடையாது அது ஒரு கற்பனை வாதாமே\\

    ஏசு வாழ்ந்தார் என்று கிருத்துவர்கள் நம்புகிறார்கள். முகமது நபி வாழ்ந்தார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதை போலே ராமர் வாழ்ந்தார் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வளவு தான். உங்களுக்கு கற்பனையாக பட்டாள் இருந்து விட்டு போகட்டும். அதற்காக நான் என்ன செய்ய முடியும். ஏசுவுக்கும் முகமது நபிக்கும் birth certificate கேட்காத கூட்டம் ராமருக்கு மட்டும் ஏன் கேட்கிறது என்று தெரியவில்லை.
    அது சரி, இதற்க்கு பெயர் தான் இங்கு பகுத்தறிவு.

    \\இந்த ஆரிய பார்பனிய வலைபூக்களை எல்லாம் ஒரு ஆதாரமாக கொண்டு வந்து காட்டாதீர்கள். ஏனென்றால் ஆரிய பார்ப்பனியத்திற்கு ஆதரவாக நீங்கள் ஒரு இணையதளத்தை காட்டினால் நான் ஆரியத்தின் முகத்தில் காரி உமிழும் பத்து இணையதள முகவரிகளை காட்ட முடியும்\\

    என்னது கமெடி யாக இருக்கிறது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பார்வையில் ஆரிய / பார்பன மொழியான சமஸ்கிரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்க்கு நான் என்ன செய்ய?

    சரி நீங்கள் அதை பொய் என்றே நினைத்து கொள்ளுங்கள் நஷ்டம் எனக்கும் இல்லை. உங்கள் பார்வையில் ஆரிய / பார்பன மதத்திற்கும் இல்லை. என்னுடைய வாதத்தை தான் வைக்க முடியும். வாதத்தின் மீது விவாதம் நடத்த வேண்டுமே அன்றி, நீங்கள் இவ்வாறு சொல்வதை நான் ஏற்க்க இயலாது.

    இப்படி தான் நீங்கள் மாட்டு மூத்திரத்தை குடிக்கும் பண்டாரங்கள் என்று கூறினீர்கள். ஆனால் அதே மாட்டு மூத்திரத்தில் இருந்து எத்தனயோ ஆயர்வேத மருந்துகள் தயாரிக்கபடுகின்றன,

  31. கேட்கப்பட்ட கேள்வி ஹிந்து / சனாதன / அல்லது மிலேச்சர்களின் பார்வையில் பார்பனியம் தொடர்பானது. அந்த கேள்விக்கு நான் இது தொடர்பான வலை தளங்களில் தான் எடுத்து தர முடியும். அதை விடுத்து, நான் என்ன அமெரிக்க முதலாளிகள் கொடுக்கும் பணத்தை வைத்து இலவசமாக பைபிள் கொடுப்பது போலே, இலவசமாக புத்தகத்தையா கொடுக்க முடியும்.

    எந்த ஒரு புத்தகமும் ஒரு சில நூற்றாண்டுகள் மேல் பாதுகாக்க முடியாது. காலம் காலமாக பிரதி எடுத்துதான் அது வழிவழியாக கொண்டு செல்லப்படுகிறது என்பது பகுத்தறிவாதி பட்டம் பெற்ற உங்களுக்கு தெரியாதா என்ன?

    வலை தல தகவல்களை, பார்பனிய வலை தளம் என்று கூறிவிடீர்கள் (இந்த வலை தல எழுத்தாளர் அந்தணர் இல்லை என்பது வேறு விஷயம்)
    புத்தகங்கள் ஏதேனும் ஆதாரமாக வழங்கினால், அதையும் பார்பனிய புத்தகம் என்று சொல்லிவிடுவீர்கள்.
    இதற்காக உங்களை என்ன டைம் மெசினில் வைத்து, இதை எழுதியவர் இடமா கூடி கொண்டு செல்ல இயலும்.

    ராமர் கோயில் விவகாரத்தில் கார்பன் டேட்டிங் ஆதாரத்தை பொய் என்று ஒரே வார்த்தையில் கூறி, அதற்கும் காவி சாயம் பூசிய உங்களுக்கு… நான் கொடுக்கும் ஆதாரத்தை பொய் என்று சொல்லே எத்தனை நேரம் ஆகும்.

    வரும் கட்டுரைகள் மற்றும் பின்னூட்டங்களை பார்த்தால் இது கம்யூனிஸ்ட் வலை தளமா அல்லது சௌதி அரேபிய முதலாளி துவ ஆட்கள் நடத்தும் வலை தளமா என்று தெரியவில்லை.

    உங்கள் பரிவார அமைப்புகளான மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட்டுகள் செய்யும் கொலையை காணும் பொழுது, மதத்தின் பெயரால் நடக்கும் தவறுகள் மிக மிக குறைவு. இதை பற்றி மேலும் அறிய, sapt.org என்ற வலை தளத்தை பார்க்கவும். இந்த வலை தளம் சிறுபான்மை சமுகத்தை சார்ந்தவர் நடத்தும் வலைத்தளம் என்பதால் இந்த வலை தளத்திற்கு பூணுல் போடவோ அல்லது காவி நிற சாயம் பூசவோ முடியாது 🙂

    • ம்ர் சொலன் இது சவுதி.,இல்லை.,இனி அவ்வாலுக்கும் .,.,ஆதரவா எலுதுவார்.,.,பிலிச்ச்ச்ச்.,.,

  32. mohammad அண்ணன்.. தமிழ் கத்துக்கிட்டு அப்புறமா தமிழ்ல பின்னூட்டம் போடுங்க

    • Mr Manidhan .,.,this all of tamil typing mistake .really very sorry.,.i will try to next time.,.,.,pls .,.,upologies.,.,Manidhan .realy nice nick name.,.,Nandri

  33. Telugu version is more precise and the screenplay is relatively clear and good. Find a opportunity to watch vedham too.
    Amongst the Contemporary movies and film makers, this definitely is a good start !

  34. மும்பை மெரி ஜான் சினிமாவை பார்த்தபோது கிடைத்த நிறைவு வானத்தை பார்த்தபோதும் கிடைத்தது. இந்திய மொழிகளில் இது போன்ற சினிமாக்கள் வருவது ஆச்சரியமான விசயம்தான். அருமையான படம் அருமையான விமர்சனம்.

  35. கேள்விகேள் கேலிசெய்:: ’அங்காடித்தெரு’ என்ற திரைப்படத்தில் சொல்லப்படாதது என்னவென்று ஆராய்ந்தீர்கள். ’வானம்’ திரைப்படத்தில் சொல்லப்படாதது இந்தியாவின் மிகவும் அடிப்படையான சமூக சிக்கல் ஒன்று இருக்கிறது என்பதைக் காண எது உங்கள் கண்களை மறைத்தது? இருக்கிறது ரெண்டே ரெண்டு ‘கேஸ்டு’ என்ற டயலாக்கா? இந்தியாவின் சாதிக்கொடுமையும் தீண்டாமைக்கொடுமையும் அதனால் செய்யப்படும் கொலைகள், கற்பழிப்பு என ஒவ்வொரு நாளுமாய் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இம்மக்கள் அனுபவிக்கும் பிரச்சனையைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத இப்படத்தை விழுந்து விழுந்து பாராட்டும் உங்கள் பார்ப்பன பாசம் அருவருக்கின்றது. முரசு.

  36. ///….பிரகாஷ்ராஜின் ஊர் கோயம்புத்தூர் என்பதில் தொடங்கும் அரசியல் மொத்த படத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த பாத்திரத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் சிலர், “இந்துக்கள் தங்களது ஊர்வலத்தின் இடையில் புகுந்த இஸ்லாமியர்களை மதவெறியோடு அடித்தார்கள். ஆனால், அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” என்கிறார்கள்….

    ஏன்?. அந்த கடைசி காட்சியையும் காவி இந்து பார்ப்பன தீவிரவாதிகளே முஸ்லிம் வேஷத்திலே வந்து செஞ்சாங்க-நு இருந்தா நல்லா இருந்திருக்குமோ. 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க