மோகன்-சி-லாசரஸ்
மோகன் சி லாசரஸ்

 “ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார்.  அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்”

“ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும்” என்கிற சப்தம் வெளிப்பட்டது. இரண்டு பெரிய தேவ தூதர்கள் தங்களது ரெக்கைகளை விரித்துப் பறந்து வந்து அந்த புத்தகத்தைத் திறந்தனர். பிரியத்துக்குரிய பிள்ளைகளே… அது தான் உங்கள் பாவக் கணக்குப் புத்தகம். சீக்கிரமே வருவேன் என்று சொன்ன தேவன் இதோ வந்து கொண்டேயிருக்கிறார். அவரைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா?”

வின்சென்ட்-செல்வகுமார்
”தீர்க்கதரிசி” வின்சென்ட் செல்வகுமார்

நண்பர்களே… குழம்பிப் போகாதீர்கள். நீங்கள் வினவு தளத்தினுள் தான் இருக்கிறீர்கள். இன்னும் இந்த சாத்தானின் தளத்தை ‘தேவ’ பிள்ளைகள் யாரும் ஹாக் செய்து விடவில்லை. மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமா கதைகள் எல்லாம் ‘தீர்க்கதரிசி’ என்று தமிழகக் கிருத்துவ வட்டாரத்தில் கொண்டாடப்படும் வின்சென்ட் செல்வகுமாரால் சொல்லப்பட்டவைகள் தான்.

‘தீர்க்கதரிசி’ வின்சென்ட் செல்வகுமாரும், இன்னொரு ‘தீர்க்கதரிசி’ சாது சுந்தர் செல்வராஜ் என்பவரும் இணைந்து ஏஞ்சல் டி.வி என்று ஒரு அல்லேலுயா அக்கப்போர் சேனலை நடத்தி வருகிறார்கள். இந்த தொலைக்காட்சியில் இருபத்து நான்கு மணிநேரமும் மேலே சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற “பரஞ்சோதியும் பாயும் நாகமும்” பாணி தீர்க்கதரிசனங்களை அவ்விருவருமாக சேர்ந்து அவிழ்த்து ஆராதனை செய்து வருகிறார்கள்.

இவர்களது ‘தீர்க்கதரிசனங்கள்’ பெந்தெகோஸ்தெ வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஊரில், உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள். அது மட்டுமல்ல, யாருடைய வாழ்வில் எப்போது ‘ஆவி’ குறுக்கிடும், அது என்ன விதமான ‘தரிசனங்களையும்’ ‘அபிஷேகங்களையும்’ அள்ளித்தரும் என்பது பற்றிய கன்சல்டேசனும் உண்டு.

இப்படி ஊர் உலகத்துக்கே குறி சொல்லும் தீர்க்கதரிசன வரத்தை வின்சென்ட் செல்வகுமாருக்கு அளித்த ‘ஆண்டவர்’ அவரைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யாரிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அதைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள் – அதற்கு முன் மேற்படி அம்புலிமாமா பற்றி நக்கீரனின் சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையின் விவரங்களைப் பார்த்து விடுவோம்.

வின்சென்ட் செல்வராஜ் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமாக் கதைகளை உற்பத்தி செய்யும் பாக்டரி ஒன்றை ராமநாதபுரம் அண்ணா நகரில் நடத்தி வருகிறார். அதன் பெயர் ‘தீர்க்கதரிசன மையம்’. முதலில் பத்து குடும்பங்களை சேர்த்துக் கொண்டு ஒரு ஜெப ஆலமாகத் தான் இந்த தீர்க்கதரிசன தொழிற்சாலை துவங்கப்பட்டது. காலப் போக்கில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் வின்சென்டின் கதைகளால் ஈர்க்கப்பட்டு வரத் துவங்கியுள்ளனர். காசும் குவியத் துவங்கியுள்ளது.

வாயில் வந்ததையெல்லாம் உளற ஒரு மேடை; அந்த உளறல்களைக் கேட்க ஒரு கூட்டம்; கேட்டு விட்டு கை நிறைய காசு கொடுக்க சில நூறு முட்டாள்கள் என்று ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார். கடந்த சில வருடங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துள்ளார். போதுமான அளவுக்கு நண்டு கொழுத்து விட்ட பின் ஊர்மேயத் துவங்கியிருக்கிறது.

சாது-சுந்தர்-செல்வராஜ்
சாது சுந்தர் செல்வராஜ்

அஸ்தரோத்தின் (விபச்சாரம் தொடர்பாக பைபிளில் வரும் பாத்திரம்)  ஆவி என்பது விபச்சாரத்துக்குரியது என்றும், அதை அழிக்கும் வரலாற்றுக் கடமையை தேவன் தன்னிடம் தந்திருக்கிறார் என்றும், இதற்காகவே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக மாற்றி வருவதாகவும் நெருங்கியவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். அவசரப்பட்டு சிரித்து விடாதீர்கள் நண்பர்களே – காமெடியே இனிமேல் தான் ஆரம்பம். பெண்ணாக மாறி வரும் தனது உடலில் ஆண்டவர் கர்ப்பப் பையையும் உருவாக்கி வருவதாக அடித்து விட்டுள்ளார்.

பெண் குழந்தைகள் வைத்துள்ள விசுவாசிகளிடம் இந்தக் கதையைச் சொல்லி, அவர்கள் வீட்டிலிருந்து பெண் பிள்ளைகள் அணியும் துவைக்காத உடைகளை வாங்கியிருக்கிறார். அவற்றைத் தனிமையில் இருக்கும் போது அணிந்து கொண்டு அலைந்திருக்கிறார். பெண்களை மடியில் அமர வைத்துக் கொள்வது, மேலே கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். இந்தக் கூத்துக்களை ‘ஆண்டவராகிய யேசுக் கிருஸ்துவின் பெயரால்’ இராமநாதபுரம் விசுவாசிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பெண்களோடு பாலியல் ரீதியில் பொறுக்கித் தனமாக நடந்திருப்பதும், அதிலும் சின்னப் பிள்ளைகளிடமும் கூட அத்துமீறியிருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் துவங்கியிருக்கிறது. பல பெண்களிடம் தான் ஆணில்லை பெண் என்று சொல்லியே உறவு வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்த பத்து குடும்பங்கள் விலகத் துவங்கியிருக்கிறார்கள் – இதில் அவரது நெருக்கமான உறவினர்கள் குடும்பங்களும் அடக்கம். உச்சகட்டமாக, தேவ லீலைகளின் கவுச்சி நாத்தம் தாங்காமல் அவரது வளர்ப்பு மகனாக சொல்லப்படும் ஜாய்ஸ்டனே விலகியிருக்கிறார்.

விலகியவர்கள் வின்சென்டின் நெருங்கிய கூட்டாளிகளான சாது சுந்தர் செல்வராஜிடமும், மோகன் சி லாசரஸிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு மொள்ளமாரியின் இதயத்தை இன்னொரு மொள்ளமாரியால் தானே புரிந்து கொள்ள முடியும்? மோகன் சி லாசரஸ் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கியுள்ளார். மட்டுமின்றி, கடந்த சில வருடங்களாகவே இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் எழுந்து வந்த நிலையில், மோகன் சி லாசரஸ் இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாகவே வின்சென்டோடு கூட்டணி வைத்து கொண்டு தனது பங்குக்கு அம்புலிமாமாவின் சுவிசேஷத்தை ஏஞ்சல் டீ.வியில் அளிக்கத் துவங்கியிருக்கிறார்.

டி.ஜி.எஸ் தினகரின் சீடரான மோகன் சி லாசரஸ், தனது குருவைப் போலவே கூசாமல் கட்டுக்கதைகளைத் தொடர்ந்து சொல்லும் திறன் கொண்டவர். உதாரணமாக, சமீபத்தில் அவர் விருதுநகரில் நடத்திய ஜெபக் கூட்டமொன்றில் “பெட்ரோல் விலை உயர்கிறது, அரிசி விலை உயர்கிறது, பருப்பு விலை உயர்கிறது; இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் பலனைத் தாருங்கள் ஆண்டவரே” என்று மேடை போட்டு ‘ஜெபிக்கிறார்’ அதையும் அங்கே வந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிகள் எந்தக் கேள்வியுமின்றி கேட்டுக் கொண்டு மார்பில் அடித்து ஜெபிக்கிறார்கள்.  ஆனால், மோகனுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அவரிடம் சரியான ஊடகம் இல்லை.

தற்போது தனது நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார்’ கம்பெனியை விரிவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் மோகனுக்கு வின்சென்டிடம் இருக்கும் ஏஞ்சல் டி.வி ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு பிரதியுபகாரமாக வின்சென்டின் மேல் எழும் புகார்களை மறைக்க இவரும் அவருக்குத் துணை போயிருக்கிறார்.  இன்னொரு தீர்க்கதரிசியான சாது சுந்தர் செல்வராஜ் வின்சென்டின் நேரடிக் கூட்டாளி.

மோகன்-சி-லாசரஸ்
மோகன் சி லாசரஸ்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேன்சி ட்ரஸ் போட்டிக்கு வருவது போல் யேசு கிருஸ்துவைப் போல் வேடமிட்டு தோற்றமளிக்கும் சுந்தர், வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் ஜீன்ஸிலும் டீசர்ட்டிலும் தான் கலக்குவாராம். இப்படித்தான் நித்தியானந்தாவும் அமெரிக்காவில் அலைந்ததாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருக்கின்றனர். ஏஞ்சல் டி.வியில் காம்பயரிங் செய்ய வரும் பெண்கள் மேல் கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களில் துவங்கி முழு பொறுக்கித்தனங்களையும் செய்யக் கூடியவர் தான் சாது சுந்தர் செல்வராஜ். இதில், இவர் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் குடியுரிமை வைத்திருக்கும் சர்வதேச பிரசிங்கியார்.

வின்சென்டின் வளர்ப்பு மகன் ஜாய்ஸ்டன், வின்சென்டிடம் இருந்து விலகிய போது ஏஞ்சல் டி.வியில் தீர்க்கதரிசனம் உரைத்த சாது, ‘ 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தக்காளியைப் பிழிஞ்சா எப்படி சிதறி கிடக்குமோ அந்த மாதிரி நீ உடல் சிதறி செத்துப் போவாய்’ என்று ஆண்டவரின் ‘விருப்பத்தை’ பகிரங்கமான தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார். இன்றுவரை ஆண்டவரின் விருப்பத்தை மீறி நல்ல ஆரோக்கியமாக வாழும் ஜாய்ஸ்டன், மேற்படி விசயத்தையும் நக்கீரன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அம்பலமாக்கியுள்ளார்.

எல்லா பிக்பாக்கெட்டுகளும் சொல்லி வைத்தது போல ஒரே டெக்னிக்கை பயன்படுத்துவது சாமியார்கள் மடாதிபதிகள் உள்ளிட்ட எல்லா மத ஆன்மீக குருக்களுக்கும் பொருந்தும். ஏறக்குறைய நித்தியானந்தா பயன்படுத்திய அதே டெக்னிக்கைத் தான் வின்சென்ட் செல்வக்குமாரும் பயன்படுத்தியிருக்கிறார். நித்தியின் ஆன்மீக செக்ஸ் காண்டிராக்ட் ஷரத்துகளின் படி, செக்ஸின் மூலமும் ஆன்மீக உச்சத்தை அடைய முடியுமாம். இதற்காக நித்தியைக் கிருஷ்ணனாகவும் பக்தைகள் தங்களை ராதையாகவும் பாவித்துக் கொண்டு ஆன்மீக ஆராய்ச்சியில் மூழ்க வேண்டியிருக்குமாம்.

தனது விசுவாசி ராஜ்குமார் என்பவரின் மனைவியின் மேல் தீர்க்கதரிசன வரம் இறங்கியிருப்பதாக ஒரு ஜெபக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் வின்சென்ட். பின்னர் தனியே அந்தப் பெண்ணை அழைத்த வின்சென்ட், மேற்படி தீர்க்க தரிசன வரம் முழுமையடைய வேண்டுமானால் தன்னோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணோ எதிரே இருப்பது தேவ ஆட்டுக்குட்டியல்ல – ஓநாய் என்பதைப் புரிந்து கொண்டு அங்கேயிருந்து தப்பிச் சென்று தனது கணவர் ராஜ்குமாரிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராஜ்குமார் போலீசுக்குப் போயிருக்கிறார். சென்னையின் பாரம்பரிய பார்ப்பனக் குடும்பத்து பெண்ணான ஆர்த்தியும் இப்படித்தான் நித்தியானந்தாவிடம் ஏமாந்திருக்கிறார்.

அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தனியே சொல்ல வேண்டுமா நண்பர்களே? நீங்கள் நினைத்த அதே தான். போலீசு வழக்கம் போல் காசு வாங்கிக் கொண்டு பஞ்சாயத்துப் பேசி ராஜ்குமாரை மிரட்டி விரட்டியடித்து விட்டது.

லோக்கல் ரவுடியாக இருந்தாலும் சரி – ஆன்மீகக் கேடியாக இருந்தாலும் சரி; முதலில் ஓடிவந்து கிரிமினல்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் காக்கி கும்பல் தானே!

இதில் நக்கீரனுக்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் ரெவ்ரன்ட் பாஸ்டர் சாம் ஜேசுதாஸ் சொன்னது தான் மொத்த கதையின் அவல நகைச்சுவை. வின்சென்டின் லீலா வினோதங்களை தாங்களும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன ஜேசுதாஸ், “எந்தக் கடவுளுமே நேரில் வந்து தண்டிக்காது, இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வின்சென்ட் செல்வக்குமாரை தண்டிக்க என் இயேசு தான் நக்கீரன் மூலம் வந்திருக்கிறார்” என்று சுவிசேஷம் அருளியிருக்கிறார். அந்தப்படிக்கு சங்கம் வளர்த்த மதுரையின் நக்கீரனார், இறையனாரை மட்டுமல்ல, ஏசு புரோக்கர்களையும் கேள்வி கேட்டவர் என்று இனி வரலாற்றில் பதிந்து கொள்ளலாம்.

சாம் ஜேசுதாஸின் வார்த்தைகளை விட சிறந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேறு எவராலும் கொடுத்து விடமுடியாது. இரண்டாயிரம் வருடங்களாக ‘ இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும் கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்.

இந்தக் கேடி கிரிமினல்களை இல்லாத ஆண்டவனால் ஒருநாளும் தண்டிக்க முடியாது. தங்கள் வாழ்வை நெருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இந்தக் கயவர்களை நாடும் மக்களின் லௌகீக அறியாமை விலகும் போது ஆன்மீக ஒளியின் பீஸ் பிடுங்கப்பட்டு விடும்.  நித்தியானந்தா துகிலுரிந்த போது மட்டும் கிருஷ்ணனா காப்பாற்ற ஓடிவந்தார்? மக்களிடம் அம்பலப்பட்டு அவர்களே காறித் துப்பிய பின் தானே ஆன்மீக பீடத்திலிருந்து ஒரு காமெடிப் பீஸாக கீழிறங்கியிருக்கிறார்.

மக்கள் தங்கள் மேல் மூடத்தனமான பக்தியும் முட்டாள்தனமான நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்பதும், தங்கள் வாயிலிருந்து வழியும் உளறல்களையெல்லாம் தத்துவங்களாகவும் தீர்க்கதரிசனங்களாகவும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நிலையும் தான் இந்த அயோக்கியர்களின் மூலதனம். அளவற்ற பணமும் அந்த பணம் தரும் அதிகார வர்க்க பரிச்சையமும், அந்த அதிகாரத் திமிர் தரும் மமதையும் தான் இவர்களை திமிரோடு தவறு செய்யத் தூண்டுகிறது.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது கொஞ்சமும் சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் பாஸ்டர்கள்  மேடை போட்டு குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்குகிறோம் என்று வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?

அப்படிச் செய்தால் அந்தச் செயலின் நியாயத்தை அந்திக் காலத்தில் தேவன் அங்கீகரிக்கிறாரோ இல்லையோ உங்கள் குடும்பத்தின் பெண் பிள்ளைகளாவது அங்கீகரிப்பார்கள்.

______________________________________

– சாத்தான் லூசிஃபர்

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

__________________________________________

__________________________________________

178 மறுமொழிகள்

  1. தம்பியாபிள்ள லூசிஃபர்,

    நக்கீரன்ல இதை படிக்கப்பயவே எழுதணும்னு நினைச்சேன் பாத்துக்கிடுங்க. ஆனா நீங்க சாத்தானா இருந்து அனுபவிச்சு எழுதன மாதிரி என்னால முடியாது. நல்லா எழுதியிருக்கீக, நல்லா வருவீக! என்ன அம்பி நித்தியானந்தா மேட்டரை இன்னும் கொஞ்சம் சேத்து எழுதியிருக்கலாம். எது எப்படியோ பொறுக்கி சாமியாருங்கன்னா அது நித்தியானந்தாதான்னு ஆகிப் போச்சு,

  2. ” இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும் கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்.”

    Yes, கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்

    • shut up you dont know about jesus ok surely your going to face judgement you are critizising the 2 nd coming of jesus. be careful one day you have to answer….. jesus is the one true living god you dont know about him………………

      • . praise the lord only..not the pastors சொகுசு வாழ்க்கை வாழாத போதகர் யாராவது உண்டா? கிறிஸ்தவம் பாழாய் போனதற்க்கு காரணம் போதகர்களே..ஆண்டவர் எப்படி வாழ்ந்தார்? சொத்து சேர்த்தாரா? பைபிள் சொல்கிறது….சாத்தானையும் அந்திகிறிஸ்த்துவையும் எதிர்த்து நில்….ஆம் போதகர்களே அந்திகிறிஸ்த்து..போதகர்களே வேதாகம திரிப்பாளர்கள்..ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்க்கு அப்பாற்ப்பட்டு இருக்கவேண்டும்….ஏன் சந்தேக வலைக்குள் வருகிறீர்கள்….பேதுருவே உன் வலையை விட்டுவிட்டு வா என்றார்…நீங்கள் எல்லாரும் ஏதாவது ஒன்றை விட்டுஇருக்கிறீர்களா? அப்படி ஆண்டவர் சொன்னது போல …ஒரு துளீ அளவு…ஒரு சதவீதம் வாழும் போதகர் யாரேனும் இருந்தால்….அவர் முகவரி…செல் நம்பர் தாருங்கள்…நான் ஓராயிரம் போதகர்களீன் சொத்துகுவிப்பை தருகிறேன்.பைபிளில் உள்ளதை புரட்டி போட்டு ..போதகர் என்ற போர்வையில் ..உலா வரும் அந்தி கிறுஸ்த்துகளே….ஆண்டவர் இதோ வருகிறார்…போலிஸு சட்டம் வடிவில்….அவரிடம் உங்கள் வேதபுரட்டு பலிக்காது…அந்திகிறிஸ்தவ போதகர்களே…உங்கள் சொத்து கணக்கை நீங்களாக முன்வந்து சமர்ப்பிக்க தயாரா? அந்திகிறிஸ்தவ போதகர்களே..உங்களால் தான் கிறிஸ்தவம் எனும் மார்க்கம் பாழாய்போனது…பாவம் விசுவாசிகள்….உண்மை தெரியவில்லை…ஊழியரை தவராக பேசினால் சாபம் வரும் என்ற ஒரு தவறான போதகத்தை வைத்துக்கொண்டு..நீங்களேல்லாம் கும்மியடித்துக்கொண்டு இருக்கீறீர்கள்…..ஆனால் எனக்கு சாபம் வராது..ஏனென்றால் நான் ஊழியரை எதிர்க்கவில்லை….அந்திகிறிஸ்தவ போதகர்களையும்…வேத புரட்டர்களையுமே எதிர்க்கிறேன்….ஆண்டவரும் கூட தேவ ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை அடித்து விரட்டினார்….நான் அந்தி கிறிஸ்தவ போதகர்களை விரட்டுகிறேன்…அல்லேலுயா….aamen

        • இயேசு ஆண்டவரில்லை ஒரு சாதாரண மனிதர் தான் எதுக்கு தேவையில்லாத பில்டப்…
          ஒருவன் நாத்திகனாக இருந்தாலும் ஒருவர் பல அற்புதங்களை செய்தால் அவரை இறைவனாகவோ இல்லை ஏதோ ஒரு சக்தி கொண்டவராகவோ ஏற்றுக்கொண்டுத்தான் ஆகவேண்டும். அப்படியிருக்கும்போது கூடவே இருந்து அவரின் அற்புதத்தை பார்த்த யூதாஸ் வெறும் சொர்ப வெள்ளிகாசுகாக தேவக்குமாரனை காட்டிகொடுப்பானா? பைத்தியம்கூட இதைசெய்ய மாட்டான்.

          உண்மை: ஒருவேளை இயேசு என்பவர் ‘இருந்திருந்தால்’ ”நான்தான் தேவனின் மகன்” என்று பொய்சொல்லிருக்க வேண்டும்.

          மக்களை நம்பவைக்க அற்புதம் செய்தார் என்று கட்டுக்கதையை பரப்பியுள்ளனர். இவர் செத்தது உண்மை, திரும்பி பித்தார் என்பது பொய்! ஏனென்றால் இறந்தவனை கடவுள் என்று ஏத்துக்க மாட்டாங்கதானே? இது பத்தாதுனு திரும்ப வருவாருனு இன்னொரு பொய்!

          இந்த வசனம் இவருக்கு பொருந்தும்: இயேசு வருவாரு…
          ஆனா வரமாட்டாரு…..

          • அன்பு சகோதரி அவர்களே!
            ஒருநாள் அதை உண்மை என்று உணர்ந்து கொள்வேர்கள்

          • நாடு வெலங்காது. புலுகுனி பயலுக. மோகன்,செல்வம்,வின்சென்லட்,ஜபகுமார்,டினகரன் போல இன்னும் பல கேடிங்க மனுஷன கடவுலாக்கி வயிரு வலகானுக. ஏசுவும் மனுஷன் தான். அவரகாப்பாத்திக்க அவராலயே முடியல……..இந்த லட்சனத்துல இவனுக சொல்ரது அன்ட புலுகு.ஆகச புலுகு டோய்

        • well done!

          This society need we like people brother.I Knew the tears of many young girls those who affected by vincent selva kumar.When I Will keep quiet God “ll question me.

          Annie

        • அல்லேலூயா!

          திருவிவிலியம் சத்யவேதம் என்பது நம்மையும் பரிசுத்தரையும் இணைக்கும் பாலம் என்பதை ஒரு சுவிஷேசகனும் அல்லது பிரசங்கிக்கும் எவனும் சொல்லமாட்டான்.

          கர்த்தராகிய ஏசுவே வாரும் உமது பெயரை தவறாக உபயோகம் செய்யும் இந்த நயவஞ்சகரிடமிருந்து உமக்கு சொந்தமான ஆத்துமாக்களை இரட்சியும்.

          ஆமென் அல்லேலூயா!

      • Dear army of christ,

        இயற்கையின் விதிகளே கடவுள். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டவன் கடவுளை புரிந்து கொண்டவன் ஆகிறான். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டு மீறாமல் ஒத்திசைந்து வாழ்பவன் கடவுளை வணங்குபவனகிரன்.

        அந்த வகையில் இயேசு என்பவரும் ஒரு முன் மாதிரியாக கடவுளை வணங்கியவர் அவ்வளவே. அவரை மதித்து போற்றுவதில் குறை ஏதும் இல்லை. (அந்த வகையில் நானும் கடவுளை வணங்குபவன்)

        இயற்கைக்கு எதிராக இயங்குபவர்கள் எல்லோரும் கடவுளை மிதிப்பவர்கள் அல்லது இழிப்பவர்கள் ஆகிறார்கள்.

        சமுக குற்றங்களில் ஈடுபடும் ஒருவன் முகமுடியாக அவரை (இயேசுவை) பயன்படுதிகொல்வதில் உங்களுக்கு சம்மதமா?

        இப்பொழுது சொல்லுங்கள் உங்களில் இருந்து நான் முரண் படுகிறேனா?

      • My dear friend in Christ. God will forgive everyone if they talk bad about Christ , but he will not firgive those who speak bad about his disciples. Sure Nakeeran are going to face bad time , not on the judgement day but very shortly

      • Oh my dear

        Jesus will never come back. Even one day he came back before your samugam, they will kill him and vanish his records. So that they can continue the as usual (???) activities.

    • God will Judge anyone who stand against His words and His peoples… Wait and see the doing of our Lord Jesus Christ…. He is coming soon….. Jesus Loves everyone of you

    • I fully agree and second the complaints that those pastors @ bastards are making business out of the religion…
      You can do the needful to get the people rid of those cheaters..
      But Vinavu or the author of this article can not doubt and comment about Christianity. I strongly disagree with this statement “கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்”

      First, let the author go and ask his father and mother for the proof and authenticity of them being his parents.
      Christians have belief in their religion; infact, every religion do so…. Its just the matter of believing…. like the same way how the author believes his mom that his father is his “actual” father…

      So, have control over your statements..

      • @vinavu:

        The above commentor’s words are highly objectionable… The question posted to the article’s author is cheap and appears in a bad taste…This is what such blind religious faith preaches them. Kindly remove the above post

        • நீங்க யேசுவ வணங்குறீன்களா? இல்ல வின்சென்ட் செல்வராஜ வணங்குறீன்களா?
          கட்டுரைக்கு எந்த பதிலும் சொல்லாம சும்மா objection , bad taste nu சொன்ன என்ன அர்த்தம்?

      • இயற்கையின் விதிகளே கடவுள். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டவன் கடவுளை புரிந்து கொண்டவன் ஆகிறான். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டு மீறாமல் ஒத்திசைந்து வாழ்பவன் கடவுளை வணங்குபவனகிரன்.

        அந்த வகையில் இயேசு என்பவரும் ஒரு முன் மாதிரியாக கடவுளை வணங்கியவர் அவ்வளவே. அவரை மதித்து போற்றுவதில் குறை ஏதும் இல்லை. (அந்த வகையில் நானும் கடவுளை வணங்குபவன்)

        இயற்கைக்கு எதிராக இயங்குபவர்கள் எல்லோரும் கடவுளை மிதிப்பவர்கள் அல்லது இழிப்பவர்கள் ஆகிறார்கள்.

        சமுக குற்றங்களில் ஈடுபடும் ஒருவன் முகமுடியாக அவரை (இயேசுவை) பயன்படுதிகொல்வதில் உங்களுக்கு சம்மதமா?

        இப்பொழுது சொல்லுங்கள் யார் கடவுளை அவமதிபவர்கள்?

    • ஊருக்கு ஒரு சாமிய கும்புடுரவன் பேசுர பேச்சு இப்படி தான் இருகும்………….

  3. எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயராலே சொல்கிறேன்.. செம போஸ்ட்டு.. டாப்டக்கர்

  4. சாமி கண்ணை குத்தும்….
    (யார் கண்ணை?)
    போனது போகட்டும்…..
    உஙளுக்கு ஒரு பெரிய சைச் ஜீவ அப்பம் தருகிரோம்…..
    வாயில் அப்பிக்கோண்டு மெரினா பீஷ்ஷில் அடுத்த ஆராதனை கூட்டத்துக்கு கண்டிப்பா வரணும்…
    (மறக்காமல்,காசு எடுத்து வரவும்…..

  5. இரண்டு பெரிய தேவ தூதர்கள் தங்களது ரெக்கைகளை விரித்துப் பறந்து வந்து அந்த புத்தகத்தைத் திறந்தனர்.///வாவ்…லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸில் வரவேண்டிய அற்புதமான காட்சி.

  6. ரொம்ப நாளைக்கப்பறம் படு பயங்கர எள்ளடுடன் கிழித்துத் தோரணம் கட்டி எழுதப்பட்ட கட்டுரை… தமிழில் இது போன்று எழுதினால்தான் பலரை போய் அடையும்.. மனங்களைத் தொடும்… உண்மையான அம்பலப் படுத்தும் மார்கசீய கட்டுரை…பாராட்டுக்கள்

    • இத ….இத…இத….. எதிர்பார்த்துதானே இந்த மாதிரி கட்டுரைகள் எல்லாம் ‘மிகவும் கஷ்டப்பட்டு’ எழுதப்படுகிறது நண்பரே……….

      கடைய தொறக்குறதே உங்களுக்காகத்தான் ‘நண்பர்களே’

  7. this is verymuch need in current world. People are cheated and still afraid to raise their voice against truth. Being a christian, people dont afraid of God. But they afraid of these kind of preachers and their unwanted speach. Good one and hats off to the writings.

      • Ha Ha Ha. That is true article. All Paster are enjoying their life with 2 wife and many children’s. Jesus never come to earth because he already died he is a common man not god

          • யாரு…” தேவனே… தேவனே.. ஏன் என்னை கைவிட்டீர்”னு சிலுவை இருந்த தபா சொன்னாரே அவருங்களா…

          • அப்புடியே இந்த வின்சென்ட் வெளக்குமாறையும் சிலுவையில அறையுங்கள். எலியா வந்து காப்பாத்துறாரான்னு பாப்போம்.

  8. மோகன் சி லாசரஸ் 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு வரதட்சிணை வழக்கில் புகாருக்குள்ளானவர்தான்

    • கோர்ட்டு மன்னித்து மறந்தாளும்…
      மறக்காமல்…..ரொம்பத்தான் லோள்ளு…….

    • அதுக்கு என்ன குறைச்சல் இருக்க போகுது…பொறாமை, வன்மம், மதத்தை பரப்புகிறவர் என்கின்ற வெறுப்பு அப்படிப்பட்ட பொய் புகார்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே

  9. //கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது கொஞ்சமும் சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் பாஸ்டர்கள் மேடை போட்டு குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்குகிறோம் என்று வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?//

    U r expecting too much from us… Our skin is already have become skin of buffallo… We will still continue to follow these kind of people.. Give money to them and expect GOD to bless us…. Ellam thalai yeluthu…

  10. அருமை.மக்கள் தங்களின் பிரச்சனைக்குத் தீர்வு சாமியார்களிடமும் , சமய புரோக்கர்களிடமும் இல்லை என்று உணர வேண்டும்.பெண்களின் கற்பையும் வாழ்வையும் சூறையாட நினைக்கும் காமச் சாமியார்களைத் தோலுரிக்கும் கட்டுரை . வாழ்த்துக்கள்

  11. அர்ர்ர்ருமைய்யான
    உண்ண்ண்மையான
    உன்ன்ன்னதமான
    மகத்த்துவமான்ன
    கிர்ர்றங்ங்க வைக்க்கும்
    பதிவு!

    விருதுநகர்ல நடந்த அந்தக் கூட்டத்துக்கு எவ்ளோ கூட்டம்னு பார்த்தீங்க.. ஊருல இருக்கற அத்தனை கிருத்துவப் பயபுள்ளைகளும் அங்கதான் கும்மியடிச்சதுங்க. நாங்கூட ஏதாவது மீட்டிங்கு போலாமான்னு பார்க்கறேன்.

  12. அந்தி கிறிஸ்த்து என்பவர் ஒருவர் அல்ல….சாத்தான் ஒரு ஆள் அல்ல….அந்திகிறிஸ்த்தும் சாத்தானும் கிறிஸ்தவ போதகர்களே….எங்கள் ஊரில் அருள் பிரகாஸ் எனும் போதகர் பல கோடி மதிப்புள்ள நிலங்களை ஆண்டவரின் வருகைக்காக வாங்கி போட்டுள்ளார்…ஊர் ராஜபாளையம்…சபை.. AG சபை…மொகன் சி லாசரசின் வரதட்சனை பற்றி யாராவது சொல்லவும்.

  13. விலைவாசி போன்ற அரசியல் அதிகாரத்தால் கட்டுப்படுத்த வேண்டிய பிரசினைகளுக்கு ”மெய்யான” ஆண்டவரை நாடுகிர்ரர்கள்! விளைவாக ஆண்டவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட போதக பொறுக்கிகள் புகுந்து பெண்களின் உடலில் தங்களின் உண்மையுள்ள தேவ மகனை கண்டடைகிறார்கள்.ஆமென்!!!!!!!!!!!!

  14. உங்களுக்குள் பிசாசு ஒளிந்து கொண்டு இதைப்போல எழுதச்செய்கிறது.அமேரிக்காவிலேயே இப்படித்தான் ஊழியம் செய்பவர்களை நிந்திக்கிறார்களாம்…

    http://stalinwesley.blogspot.com/2011/03/blog-post.html

    • பிசாசு அல்லது சாத்தான், லூசிபர் எல்லாமே ஒண்ணுதானே, அந்த லூசிபர் கிட்ட அமெரிக்க உழியர்கள் அல்லது இந்திய உழியர்கள் என்கின்ற பாகுபாடெல்லாம் எங்கே இருக்க போகுது, அந்த பிசாசு என்கிற சாத்தான் லுசிபரிடம் ஜெகோவாவை பற்றியோ இயேசு கிறிஸ்த்துவை பற்றியோ எடுத்து சொல்லி திருத்த பார்க்கிறீங்களே, அது மனிதனால் இயலாத காரியம், அவனையும் அவனது குழுக்களையும் சர்வ சங்காரம் செய்வதற்கு இன்னும் காலம் அதிகமில்லை, விவிலியத்தில் சொல்லியிருக்கிறபடி, ‘அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும், இதோ எல்லாவற்றிற்கும் முடிவு மிகவும் சமீபமாய் இருக்கிறது’ என்ற கூற்றின்படி காலம் இன்னும் அதிகமில்லை சாத்தானை அடியோடு அழிப்பவர் இவற்றையெல்லாம் கவனித்து கொண்டிருக்கிறார்.

  15. வின்சென்ட் செல்வக்குமாரின் பாதிக்கப்பட்ட சொந்தக்காரணாகட்டும்,நித்தியால் பாதிக்கப்பட்ட ஆர்த்தி ராவ் ஆகட்டும் பாதிக்கப்பட்ட பிறகாவது மதம், கடவுள், கடவுளின் ஏஜன்ட்டா சொல்லிக்கிற இந்த பொம்பள பொறுக்கிங்க அனைத்தும் பித்தலாட்டம் என்று (சொல்லாமல்) திருந்தாமல். இது ஒரிஜினல் இல்லை ஒரிஜினலான மதகுருமார்களை தேடிப்போங்கள் என்கிறார்கள். கீழவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலங்கரது இதுதான்.

    • Hi Preety,

      If there is a God means these culprits, should have been already punished.
      What is there to mind our words to describe a cheap culprits like them?
      If you pupil will never change after knowing these things, then not only you,
      No one will protest against these culprits.

    • Pretty i really feel shame on you ! even after seeing the truth u still support those bad pastors it shows how deep u have been mesmerized…May the Real God bless you if exists…i hope God is always there but i dont think these humans as gods eg: jesus / budha / naabi /hindu saints etc…they are all humans, if they teach you good just respect them dont worship them…christianity is the ugly religion blackmail others and force them to convert in to their religion..other religions also convert but not as bad as chiritians.. i really hate to be in this kinda world…everywhere cheat…cheat…cheat… trying to cheat other or else cheat themselves…

  16. அந்தி கிறிஸ்த்து என்பவர் ஒருவர் அல்ல….சாத்தான் ஒரு ஆள் அல்ல….அந்திகிறிஸ்த்தும் சாத்தானும் கிறிஸ்தவ போதகர்களே….எங்கள் ஊரில் அருள் பிரகாஸ் எனும் போதகர் பல கோடி மதிப்புள்ள நிலங்களை ஆண்டவரின் வருகைக்காக வாங்கி போட்டுள்ளார்…ஊர் ராஜபாளையம்…சபை.. AG சபை…மொகன் சி லாசரசின் வரதட்சனை பற்றி யாராவது சொல்லவும்…..???

  17. நல்ல அருமையான கட்டுரை நாங்கள் எல்லாம் ஆண்டர் இயேசுவை நாங்கள் ஏற்றுக்கொண்டு இன்று வரைக்கு விசுவாசிக்கிறோம்.. ஏதோ ஆனால் நீங்கள் இந்த கட்டுரை எழுதிய எழுத்தாளர் ஏதோ சாத்தான் லூசிபேர் என்று எழுதி இருக்கிறீர்கள். விழுப்புணர்வு கட்டுiரின் எழுத்தாளர் சாத்தான் என்று பெயரா? தயவு செய்து பெயரை மாற்றுங்கள்.

    • டேவிட், லூசிஃபெர் என்று அவர் பெயர் வைத்துக் கொண்டதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

      யார் லூசிஃபெர்? இவன் முன்பு கர்த்தரின் முதன்மையான தேவதூதனாக இருந்தவனாம். லூசிஃபெர் என்றாலே ஒளி என்று தான் அர்த்தம். இருக்கும் அத்தனை தேவதூதர்களிலும் லூசிஃபெர் தான் ஆற்றல் அதிகம் கொண்டவனாம். சொந்தமாகச் சிந்திப்பவனாகவும், கடவுளையே கேள்வி கேட்பவனாகவும் இருந்ததால் கடவுளின் ஆத்திரத்திற்கு ஆளாகி அவரால் தள்ளப்பட்டவனாகிறான். கடவுள் அவனைப் பாதாளத்துக்குள் தள்ளி விடுகிறாராராம். அதனாலேயே லூசிஃபெர் தள்ளப்பட்ட தேவதூதன் என்று அழைக்கப்படுகிறான்.

      முதன் முதலில் பூவுலகில் ஆதிமனிதர்களான ஆதமயும் ஈவையும் படைத்த ஆண்டவர் அவர்களுக்கு பகுத்தறிந்து சிந்திக்கும் அறிவைக் கொடுக்கவில்லை. சாத்தானாகிய லூசிஃபெர் பாம்பு வடிவில் வந்து ஈவை நடுமரத்துக் கனியைப் புசிக்கச் செய்கிறான். அதிலிருந்து அவர்களிருவருக்கும் பகுத்தறிவும், ஆண்/ பெண் என்கிற புரிதலும், வெட்கமும் உண்டானதாம்.

      தன்னால் படைக்கப்பட்ட முட்டாள்களுக்கு லூசிஃபெர் அறிவூட்டினான் என்பதே அவன் மேல் ஆண்டவர் கோபிக்கக் காரணமாம். முட்டாள்களாக மக்கள் இருப்பதால் தானே வின்சென்ட், சாது, மோகன், தினகரன், பால் தங்கைய்யா, ஜெயேந்திரன், நித்தி, தேவநாதன் போன்ற சில்லறைகளின் பின்னே செல்கிறார்கள்? அதிலிருந்து மீட்டு அறிவூட்டுபவர்கள் நவீன லூசிஃபெர்கள் தானே?

      கடவுள் / சொர்க்கம் / நரகம் போன்ற கருத்தியல்களால் மயங்கி அதன் பொருட்டு நித்தியானந்தா வின்சென்ட் செல்வகுமார் போன்ற பொறுக்கிகளின் பின்னே செல்லும் மக்களுக்கு அறிவூட்டும் கடமையை கம்யூனிஸ்டுகளாகிய இவர்கள் செய்வதால் கம்யூனிசம் தான் லூசிஃபெரின் இரண்டாம் வருகை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

      இந்தத் தத்துவம் தான் பரலோக சொர்க்கத்தைக் காட்டி இகலோகத்தில் மக்களைப் பாவங்களைப் புரியவைத்து சீரழிக்கும் வின்சென்ட்டைப் போன்ற ‘ஆண்டவரின்’ தூதர்களிடம் இருந்து மக்களை அறிவூட்டி மீட்டு இந்த மண்ணிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்கப் போகிறது – அந்த வகையில் எழுதியவர் யோசித்துத் தான் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று கருதுகிறேன்.

      உண்மையில் கிறுத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளத் தான் வெட்கப்பட வேண்டும். உலகெங்கும் கிறுத்துவம் அழித்த உயிர்களின் எண்ணிக்கை வானத்திலிருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமல்லவா?

      ஆனால், இந்த மன்னிலேயே சொர்க்கத்தைப் படைக்க துணிந்துள்ள இவர்கள் லூசிஃபெர் என்று அழைத்துக் கொள்வது மிகவும் பொருத்தமானது தானே?

      • ippadi eludiyadai vasikka nerndu vittadaye kavalayaga ninaikkiren….ippadi patta kevalamanavargalukku kadavule thandanai koduppar,,,idatkaha jebiyungal

        • graceshakeela…there is no grace…u are a cheap since becoz of u converted. i really feel shame on you ! even after seeing the truth u still support those bad pastors it shows how deep u have been mesmerized…May the Real God bless you if exists…i hope God is always there but i dont think these humans as gods eg: jesus / budha / naabi /hindu saints etc…they are all humans, if they teach you good just respect them dont worship them…christianity is the ugly religion blackmail others and force them to convert in to their religion..taking advantage of others due to their personal/financial problems…other religions also convert but not as bad as chiritians.. i really hate to be in this kinda world…everywhere cheat…cheat…cheat… trying to cheat other or else cheat themselves…

        • இந்த அக்கிரம பெந்தகொஸ்தே கூட்டத்தில் சேர்ந்து கொண்டு அல்லேலூயா, அல்லேலூயா என்று சாமியாடி ஊளையிடுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே. இது யாரும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் மறுக்க முடியாத உண்மையாகும். அடிமை சமூகத்தை அழிக்க வந்த ஒரு மாபெரும் சமூகசீர்திருத்தவாதி இயேசு கிறுஸ்து. இன்று அவர் பெயராலேயே இந்த அநியாயம் நடந்தேருவது அவலமாகும். (தேவ அக்கினி இற்ற்றங்கும் பல எழுப்புதல் கூட்டங்கள், இறுதி கால இறை வருகை திருக்கூட்டங்கள் பல உங்கள் அருகாமையிலும் நடைபெரும். அங்கே ஒரு எட்டு போய் வாருங்கள். அப்புறம் தெரியும், எத்தனை பேருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று. சமூகத்தை பிடித்த இந்த பேய் அகல வேண்டுமானால் அதை ஓட்ட ஒரே தீர்வு பொதுவுடைமை சீர்திருத்தமே. முன்னர் ஒரு காலத்தில்நாத்திகனாக இருக்கும் பொழுது இந்த கூட்டங்களில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறேன் ஒரு பொழுதுபோக்கிற்காக. பின்னர் பொதுவுடைமை பயிலும் மாணவனாக மாறிய பின்னர் அந்த தவறு அறியப்பட்டது. இப்பொழுது அவர்கள் மேல் இரக்கமே வருகிறது, அவர்களை ஏமாற்றுபவர்கள் மேலெல்லாம் சொல்லொணா கோபம் வருகிறது).

      • சூப்பர் மன்னாரு.

        லூசிபர் இன் பெயர்காரனத்தையும் சொன்னதுக்கு ரொம்ப Thanks.
        கட்டுரையாளர் சொல்லாத ( சொல்லியிருக்க வேண்டிய ) விசயங்களையும் நீங்க சொன்னது ஒரு நல்லா முடிவுரையாக இருந்தது.

  18. கடவுள் என்ற ஒன்று இருக்கிறது என்று சொல்பவர்களில், இரண்டே வகைதான் ஒன்று ஏமாறுபவர்களாக இருப்பார்கள் மற்றொன்று ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள்.

    • என்ன ஒரு அருமையான தத்துவத்த சொல்லி இருக்கீங்க …. நீங்க எல்லாம் ‘எங்கேயோ’ இருக்க வேண்டியவங்க…..இது மாதிரியெல்லாம் யோசிக்க ஒரு தனி திறமை தேவைபடுது இல்லையா ….அதைதானே நீங்க ‘பகுத்தறிவு’ன்னு சொல்லிக்கிறீங்க…..
      என்ன பண்றது ….. ஆண்டவன்கிட்டே ‘பகுத்தறிவ’ குடுன்னு கேட்க்க முடியாது, ஏன்னா நீங்க ஆண்டவனே இல்லைன்னு சொல்லுறீங்க, பேசாம ஒன்னு செய்யுங்க எல்லா ஊர்லயும் ஒரு மேடை போட்டு, வின்சென்ட் செல்வகுமார், சாது சுந்தர் செல்வராஜ், மோகன் லாசரஸ் இயேசு கிறிஸ்த்துவை பற்றி பிரசங்கம் செய்வது போல பிரசங்கம் செய்யுங்க…….ஒரு கூட்டத்துக்கு தலா ஒரு லட்சம் பேராவது ‘பகுத்தறிவை’ பற்றி தெரிந்து கொண்டு ‘லூசிபர்’ ஆக மாற மாட்டாங்களா என்ன ……

  19. Very well written with more insight about the issue . People should change their attitude I based on some incidents like ninthI or else cant stop this. I share this article in my fb. Thanks.

  20. பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் திரையுலகினருக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நக்மா ‘பைபிள்’ பிரசங்கம் செய்து கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.

  21. படிக்க,படிக்க சிரிப்பு தாளவில்லை. இந்த கடவுளின் ஏஜண்டுகளின் யோக்கியாம்சங்களை நகைச்சுவையோடு சந்தியில் தொங்கவிட்ட வினவின் இந்த கட்டுரை அருமை,அருமை.

  22. nobody can follow bramacharyam in world. every man has to live with woman. it is iyarkais rule. these so called bramacharis in hindu, fathers/pastors and nuns in christianity do not understand. so at sometime they are in search of such pleasure. but in islam you need not to be single. also islam rejects unnatural homosexual marriages. But one thing to be noted here. These are mischiefs of individual leaders. Only in India/TN some christians believe such brokers. But all ohters do believe in Christ directly. they do not divert their faith..

  23. நல்ல பதிவு,
    மத பிரச்சாரம் என்ற பெயரில் இந்த கிரிமினல் கோமாளிகள் அடிக்கும் கூத்துக்கு இன்னொரு சாட்சி இந்த வின்சென்ட் செல்வக் குமார்[இந்த ஆள் கம்யுனிஸ்ட் ஆக இருந்து கிறித்த்வன் ஆனாதாக கதை சொல்வான்].இந்த மாதிரி ஆட்கள் பின்னால் செல்ப‌வர்கள்தான் இந்த கிரிமினல்கள் உருவாக முதல் காரணம்.இவனிடம் சென்றால்,ஆலோசனை கேட்டால் மட்டுமே சரியாக இருக்கும் என்னும் நம்பிக்கைதான் இந்த கிரிமினல்களை உருவாக்குகிறது.
    இவன் சொல்படி நடந்தால் மரணத்திற்கு பின் சொர்க்கம் என உண்மையிலேயே நம்புவதும்,மாதம் இவர்களுக்கு பணம் அனுப்ப்புவது,இந்த கிரிமினல்களின் பேச்சு,பாட்டு ஆகியவற்றின் ஒலி ஒளி பேழைகளை பணம் கொடுத்து வாங்குவதும் கொடுமை.

    இன்னும் பாருங்கள் ஜூலை 12,13,14ல் மதுரையில் திருட்டுத் தரிசன கூட்டம் நடத்தப் போகிறார்கள்.
    http://www.jesusministries.org/itinerary.php?reloaded=true
    2012

    July 11-15, Madurai, India
    Voice of Trumpet, Madurai Prophetic Festival 2012
    Speakers: Sadhu Sundar Selvaraj and Vincent Selvakumar
    Time: 6-10pm
    Venue: UC Higher Secondary School
    Ground, Arasaradi, Madurai, India
    Contact: 95665 44044, 94421 33044, 0452 4504044

    //கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் இந்த கார்ப்பரேட் பாஸ்டர்கள் மேடை போட வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?//

    இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா மதுரைவாசிகள்!!!!!!!!!!!

  24. துன்பத்தில் உழலும் அப்பாவி மக்களை ஏய்ப்பதில் கிருத்தவ பிரசங்கிகளே மற்ற எல்லா மதப் பிரசங்கிகளைவிட முன்னணியில் இருக்கிறார்கள். பிரசங்கம் செய்யும் போது இவர்கள் செய்யும் அஷ்டகோணலான முக பாவனைகளைப் பார்க்கும் போது செவாலியே சிவாஜி எல்லாம் எம்மாத்திரம் என்றுதான் தோன்றுகிறது.

    அன்றாடம் பைபிள் படிக்கும் நண்பர் ஒருவரிடம் இந்தக் கட்டுரையை பிரதி எடுத்துக் கொடுத்தேன். அவரால் எதுவும் பேச முடியவில்லை. எப்படிப் பேச முடியும்?

    மதத்தின் பெயரால் மக்களை ஏய்க்கும் இத்தகைய பிரசங்கிகளை எந்தச் சட்டத்தாலும் தண்டிக்க முடியாது; முச்சந்தியில் நிற்க வைத்து முகத்திரையை கிழிப்பதைத் தவிர!

    • ஆன்மிகவாதி என்றாலே நடிகன்னு தான அர்த்தம் , அப்புறம் ஆச்சரிய பட என்ன இருக்கு? இவனுங்கள ஊரே காரி துப்புது ஆனாலும் வெக்கம் இல்லாம பேட்டி எல்லாம் குடுத்துட்டு இருக்கானுங்க. இந்த சுந்தர் செல்வராஜ் ஒரு தேடப்படும் குற்றவாளின்னு நினைக்கிறன் , அதான் மூஞ்சிய மறைக்க இயேசு கெட்டப்பு போட்டு அலையறான் , யாராவது அவன புடிச்சு ஷேவ் பண்ணி பாக்கணும்.

  25. I have gone through. Your writings about Christianity. Christianity is not Vincent Selva Kumar, Sadu Sunder Singh or Mohan C. Lazarus. Christianity is something beyound that. It is absolutely based on Jesus and His life. Whatever happens now is according to the word of the Jesus. In the last days there will be mockers who will criticize Jesus comes here and there. There will be false prophets, there will be famine, earthquake, divisions, betrayals, no faith, no love etc. These are to be fulfilled according to His words. Whether you like it or not you will have to face his Second coming. He is not coming by bus or plane or ship or train rather He comes with glory covers on the cloud with the voice of the trumpet.He is not coming to save you but judge according to his words. Therefore this is your time and repent and be saved.

    • I totally second you brother. There is no need to relate mistakes of individuals with the faith they claim to belong. Jesus taught nothing like this. His words are true and some of His follwers are false/fake/fraud. Even Judas was like that. What can we do?

  26. Good expose. Believers in christ should go to church and pray rather than seeking these middlemen. All middlemen in politics/business/religion/spirituality are bad. Particularly women should not go to these men padhiriyars to seek blessings. Be wary of these people and seek solace in churches temples and mosques-srinivasan sundaram

  27. Judge not, that ye be not judged
    Blessed are ye, when men shall revile you, and persecute you, and shall say all manner of evil against you falsely, for my sake.
    12. Rejoice, and be exceeding glad: for great is your reward in heaven: for so persecuted they the prophets which were before you.

    • வினவு பக்கத்துக்கு வந்தா இந்த மாதிரி அரை வேக்காடுங்க போடுற விவிலிய குப்பையெல்லாம் படிக்க வேண்டியது இருக்கு , கொடுமை…..
      நீங்க பொய் இந்த வின்சென்ட் செல்வக் குமாருக்கு சொம்பு தூக்குங்க இங்க வந்து கேனத்தனமா கமெண்டு போட்டு எதுக்கு டைமா வேஸ்ட் பண்றீங்க?

  28. இது புதிதல்லதானே. திருச்சியில் ஒரு பாதிரி கன்னியாஸ்திரியிடமே எப்படி நடந்து கொண்டான் என்பது தெரியும் . இனியும் சபைகளில் உள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பன இந்து மதத்தின் சாதி ஆதிக்கத்திற்கு மாற்றாக சிலர் சபைகளுக்குள் போய் தஞ்சம் புகுந்தால் அங்கே இப்படிப்பட்ட பயபுள்ளைகள் இருக்குது . இயேசு சாட்டையை சுழற்றமாட்டார் என்ற நம்பிக்கை பாதிரியார்களுக்கு உண்டு.

  29. பரதேசியாகப் பிறந்து வாழ்ந்து இறந்து போன இயேசுவின் பெயரால் .. இன்று பல பரதேசிகள் .. உலகெங்கும் வியாபாரம் நடத்தி வருகின்றார்கள் … அவர்களுக்கு பணம், மது, மாது என அனைத்தும் கிடைக்கின்றன … !!! மக்கள் கடவுளை கும்பிடுவதும் கும்பிடாததும் அவர்களின் உரிமை என விட்டுவிட்டாலும் .. கடவுளின் பெயரால் ஏமாற்றும் மனிதர்களிடம் ஏமாந்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள் …

    என்னத்த சொல்ல .. இந்து, கிருத்தவம், இஸ்லாம், பௌத்தம் என எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது நிரூபணமாகிவிட்டது … !!!

    • இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பது வாசிக்கும்போதே தெளிவாகிறது. தேவப் பிள்ளைகள் மீது குற்றம்சாட்டுவது பிசாசின் வேலை என்று (வெளிப்படுத்துதல் 12:10)ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஊழியத்தை தடுக்க வேண்டும் என்று பிசாசு செய்யும் சூழ்ச்சி இது. தேவப் பிள்ளைகள் ஒன்றுகூடி பொய்யான பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்… நக்கீரன் தங்கள் பத்திரிக்கை பரப்பரப்பாக விற்க வேண்டும் என்பதற்காக இது கற்பனையான செய்தி என்று தெரிந்தும் இதை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இணைய தளமும் அதற்கு சளைத்தது அல்ல என்று நிறுபித்திருக்கிறது. இப்படிபட்ட செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

      • சொகுசு வாழ்க்கை வாழாத போதகர் யாராவது உண்டா? கிறிஸ்தவம் பாழாய் போனதற்க்கு காரணம் போதகர்களே..ஆண்டவர் எப்படி வாழ்ந்தார்? சொத்து சேர்த்தாரா? பைபிள் சொல்கிறது….சாத்தானையும் அந்திகிறிஸ்த்துவையும் எதிர்த்து நில்….ஆம் போதகர்களே அந்திகிறிஸ்த்து..போதகர்களே வேதாகம திரிப்பாளர்கள்..ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்க்கு அப்பாற்ப்பட்டு இருக்கவேண்டும்….ஏன் சந்தேக வலைக்குள் வருகிறீர்கள்….பேதுருவே உன் வலையை விட்டுவிட்டு வா என்றார்…நீங்கள் எல்லாரும் ஏதாவது ஒன்றை விட்டுஇருக்கிறீர்களா? அப்படி ஆண்டவர் சொன்னது போல …ஒரு துளீ அளவு…ஒரு சதவீதம் வாழும் போதகர் யாரேனும் இருந்தால்….அவர் முகவரி…செல் நம்பர் தாருங்கள்…நான் ஓராயிரம் போதகர்களீன் சொத்துகுவிப்பை தருகிறேன்.பைபிளில் உள்ளதை புரட்டி போட்டு ..போதகர் என்ற போர்வையில் ..உலா வரும் அந்தி கிறுஸ்த்துகளே….ஆண்டவர் இதோ வருகிறார்…போலிஸு சட்டம் வடிவில்….அவரிடம் உங்கள் வேதபுரட்டு பலிக்காது…அந்திகிறிஸ்தவ போதகர்களே…உங்கள் சொத்து கணக்கை நீங்களாக முன்வந்து சமர்ப்பிக்க தயாரா? அந்திகிறிஸ்தவ போதகர்களே..உங்களால் தான் கிறிஸ்தவம் எனும் மார்க்கம் பாழாய்போனது…பாவம் விசுவாசிகள்….உண்மை தெரியவில்லை…ஊழியரை தவராக பேசினால் சாபம் வரும் என்ற ஒரு தவறான போதகத்தை வைத்துக்கொண்டு..நீங்களேல்லாம் கும்மியடித்துக்கொண்டு இருக்கீறீர்கள்…..ஆனால் எனக்கு சாபம் வராது..ஏனென்றால் நான் ஊழியரை எதிர்க்கவில்லை….அந்திகிறிஸ்தவ போதகர்களையும்…வேத புரட்டர்களையுமே எதிர்க்கிறேன்….ஆண்டவரும் கூட தேவ ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை அடித்து விரட்டினார்….நான் அந்தி கிறிஸ்தவ போதகர்களை விரட்டுகிறேன்…அல்லேலுயா….

      • தேவபிள்ளைகளே! உங்க தேவனுக்கு எதனை பிள்ளைகள்? பரலோகத்தில் அவர் பிள்ளைகளை உருவாக்கும் வேலையை மட்டும் தான் செய்கிறார் போல…. ஒ அதான் அவர் இங்கே வர முடியவில்லையா? உன்ன மாதிரி மடையனா இருக்குறத விட நாங்க பிசாசகவே இருந்துக்குறோம்.

    • இக்பால், எந்த வகையில் இந்து, கிருத்துவதுடன் இஸ்லாமை ஒப்பிடுகிறீர்கள்?. இது போன்ற பைத்தியக்காரத்தனங்களை இஸ்லாம் ஆதரிக்க வில்லை. இஸ்லாமில் தனி மனிதனை கடவுளாக்கும் வழிபாடு கிடையாது. இறைவனை வணங்குவதற்கு பூசாரி தேவை இல்லை. தன்னை வணங்கினால் தேவபிள்ளைகள் என்றும் மற்றவர்களை —-பிள்ளைகள் என்றும் சொல்வது கிடையாது.

  30. அப்ப ஆதாரம் இல்லைனா குற்றமில்லை அப்படித்தானே?

    உலகத்தில் எந்த தொழில் செய்தாலும் மற்றவருக்கு ஏதோஒரு விதத்தில் பயன்படும், ஆனால் இந்த பாதிரியார், பூசாரி போன்ற வெங்காயங்களால் எதாவது நன்மையிருக்கா… (இவனுங்களால் ஊடகங்களுக்கு மட்டும் கிடைக்கும்)

  31. God will fight for His peoples….. We need to be still and wait for God…. he will bind all overcome all Satan’s plea…. Jesus will glorify in every deeds…. Amen

    • praise the lord only..not the pastors சொகுசு வாழ்க்கை வாழாத போதகர் யாராவது உண்டா? கிறிஸ்தவம் பாழாய் போனதற்க்கு காரணம் போதகர்களே..ஆண்டவர் எப்படி வாழ்ந்தார்? சொத்து சேர்த்தாரா? பைபிள் சொல்கிறது….சாத்தானையும் அந்திகிறிஸ்த்துவையும் எதிர்த்து நில்….ஆம் போதகர்களே அந்திகிறிஸ்த்து..போதகர்களே வேதாகம திரிப்பாளர்கள்..ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்க்கு அப்பாற்ப்பட்டு இருக்கவேண்டும்….ஏன் சந்தேக வலைக்குள் வருகிறீர்கள்….பேதுருவே உன் வலையை விட்டுவிட்டு வா என்றார்…நீங்கள் எல்லாரும் ஏதாவது ஒன்றை விட்டுஇருக்கிறீர்களா? அப்படி ஆண்டவர் சொன்னது போல …ஒரு துளீ அளவு…ஒரு சதவீதம் வாழும் போதகர் யாரேனும் இருந்தால்….அவர் முகவரி…செல் நம்பர் தாருங்கள்…நான் ஓராயிரம் போதகர்களீன் சொத்துகுவிப்பை தருகிறேன்.பைபிளில் உள்ளதை புரட்டி போட்டு ..போதகர் என்ற போர்வையில் ..உலா வரும் அந்தி கிறுஸ்த்துகளே….ஆண்டவர் இதோ வருகிறார்…போலிஸு சட்டம் வடிவில்….அவரிடம் உங்கள் வேதபுரட்டு பலிக்காது…அந்திகிறிஸ்தவ போதகர்களே…உங்கள் சொத்து கணக்கை நீங்களாக முன்வந்து சமர்ப்பிக்க தயாரா? அந்திகிறிஸ்தவ போதகர்களே..உங்களால் தான் கிறிஸ்தவம் எனும் மார்க்கம் பாழாய்போனது…பாவம் விசுவாசிகள்….உண்மை தெரியவில்லை…ஊழியரை தவராக பேசினால் சாபம் வரும் என்ற ஒரு தவறான போதகத்தை வைத்துக்கொண்டு..நீங்களேல்லாம் கும்மியடித்துக்கொண்டு இருக்கீறீர்கள்…..ஆனால் எனக்கு சாபம் வராது..ஏனென்றால் நான் ஊழியரை எதிர்க்கவில்லை….அந்திகிறிஸ்தவ போதகர்களையும்…வேத புரட்டர்களையுமே எதிர்க்கிறேன்….ஆண்டவரும் கூட தேவ ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை அடித்து விரட்டினார்….நான் அந்தி கிறிஸ்தவ போதகர்களை விரட்டுகிறேன்…அல்லேலுயா….aamen halleliyah

    • என்ன தங்கராசு, சுவிசேச கூடத்துல குடுத்த ஒலிநாடாவ முழுங்கிட்டியா? ரெகார்ட் மாதிரி ஒப்பிக்கிற…?

  32. i really feel shame on you ! even after seeing the truth u still support those bad pastors it shows how deep u have been mesmerized…May the Real God bless you if exists…i hope God is always there but i dont think these humans as gods eg: jesus / budha / naabi /hindu saints etc…they are all humans, if they teach you good just respect them dont worship them…christianity is the ugly religion blackmail others and force them to convert in to their religion..other religions also convert but not as bad as chiritians.. i really hate to be in this kinda world…everywhere cheat…cheat…cheat… trying to cheat other or else cheat themselves…

  33. எலலா மத்தாருக்கும் ஒண்ணு சொல்தென் , அட யாம்ல பூசாரி பயலுவள கும்புடுத்திய. சாமிய கும்புடுன்கல மக்கா

  34. சராசரி மனிதனாய் பார்க்காமல் அவருக்கு எல்லா சக்தியும் இருப்பதாக நினைக்கும் பொழுது
    அம்மனிதன் இது போல தவருகல் செய்ய தூன்டப்படுகிரான்

  35. praise the lord only..not the pastors சொகுசு வாழ்க்கை வாழாத போதகர் யாராவது உண்டா? கிறிஸ்தவம் பாழாய் போனதற்க்கு காரணம் போதகர்களே..ஆண்டவர் எப்படி வாழ்ந்தார்? சொத்து சேர்த்தாரா? பைபிள் சொல்கிறது….சாத்தானையும் அந்திகிறிஸ்த்துவையும் எதிர்த்து நில்….ஆம் போதகர்களே அந்திகிறிஸ்த்து..போதகர்களே வேதாகம திரிப்பாளர்கள்..ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்க்கு அப்பாற்ப்பட்டு இருக்கவேண்டும்….ஏன் சந்தேக வலைக்குள் வருகிறீர்கள்….பேதுருவே உன் வலையை விட்டுவிட்டு வா என்றார்…நீங்கள் எல்லாரும் ஏதாவது ஒன்றை விட்டுஇருக்கிறீர்களா? அப்படி ஆண்டவர் சொன்னது போல …ஒரு துளீ அளவு…ஒரு சதவீதம் வாழும் போதகர் யாரேனும் இருந்தால்….அவர் முகவரி…செல் நம்பர் தாருங்கள்…நான் ஓராயிரம் போதகர்களீன் சொத்துகுவிப்பை தருகிறேன்.பைபிளில் உள்ளதை புரட்டி போட்டு ..போதகர் என்ற போர்வையில் ..உலா வரும் அந்தி கிறுஸ்த்துகளே….ஆண்டவர் இதோ வருகிறார்…போலிஸு சட்டம் வடிவில்….அவரிடம் உங்கள் வேதபுரட்டு பலிக்காது…அந்திகிறிஸ்தவ போதகர்களே…உங்கள் சொத்து கணக்கை நீங்களாக முன்வந்து சமர்ப்பிக்க தயாரா? அந்திகிறிஸ்தவ போதகர்களே..உங்களால் தான் கிறிஸ்தவம் எனும் மார்க்கம் பாழாய்போனது…பாவம் விசுவாசிகள்….உண்மை தெரியவில்லை…ஊழியரை தவராக பேசினால் சாபம் வரும் என்ற ஒரு தவறான போதகத்தை வைத்துக்கொண்டு..நீங்களேல்லாம் கும்மியடித்துக்கொண்டு இருக்கீறீர்கள்…..ஆனால் எனக்கு சாபம் வராது..ஏனென்றால் நான் ஊழியரை எதிர்க்கவில்லை….அந்திகிறிஸ்தவ போதகர்களையும்…வேத புரட்டர்களையுமே எதிர்க்கிறேன்….ஆண்டவரும் கூட தேவ ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை அடித்து விரட்டினார்….நான் அந்தி கிறிஸ்தவ போதகர்களை விரட்டுகிறேன்…அல்லேலுயா….aamen

  36. அருமையான பதிவு. தற்போதைக்கு தேவையான பதிவும் கூட. கிறித்துவ சாமியாரை அம்பலப் படுத்தியதால், கண்டிப்பாக சாத்தான் உங்கள் பக்கத்தில் இருப்பதாக கூறுவர். அதற்கு முன்பே தங்கள் பெயரிலேயே சாத்தான் இருப்பதால், அவர்களுக்கு அந்த வேலை மிச்சம். இதைப் போல எங்க ஆசுபத்திரியில கூட 40,000 சம்பளம் பெற்று தன் தேவைகளை முழுவதுமாக பூர்த்தி செய்துக் கொண்டு, வேலை நேரத்தில், (முழுவதுமாக)தனக்கு கீழ் இருப்பவர்களிடமும், உயிருக்கு போராடும் நோயாளிகளிடமும் ஏசுவை (உயிரற்ற) உயிர்ப்பிக்க வேலை செய்கிறார்கள். பார்பனியத்தில் எல்லாம் ஆகம விதி என்றும், கிறித்துவத்தில் கடவுளின் வருகைக்கு என்றும் கூறி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். இவர்கள், இங்கும் சொர்க்க வாழ்க்கை வாழ்கின்றனர். இறந்த பிறகும் சொர்க்கத்துக்கு பதிவு செய்துக் கொள்கின்றனர்.

  37. வினவு எதற்காக நித்தியை இழுக்க வேண்டும். உங்களுக்கு எல்லாம் தைரியம் இருந்தால்

    நித்தியை நேரே சென்று அவன் குடுமியை இழுத்து நடு ரோட்டில் நிற்க வைத்து அடியுங்கள்.

    அதை விட்டு விட்டு இப்படி வலை தள புலிகளாக இருப்பது மானங்கெட்ட தனம்….

    • நீர் தான் பரதேசி ஸ்ரீ நித்யானந்தரின் சீடரோ? சோழா நியாயமா அவன அடிக்க வேண்டியது அவனிடம் எமாந்தவுங்கதான் , போய் அவுங்க கிட்ட சொல்லுங்க ஓகே வா?

  38. இந்த மறுமொழி பக்கம் செம ரகளைய இருக்கப்போகுது ஐ ஜாலி ஜாலி! நான் இந்த நவீன ஏசுநாதரின் ரசிகன் . கொய்யால என்னமா நடிக்றான் தெரியுமா? நித்தி ராம் தேவ் எல்லாம் பிச்சை எடுக்கணும் இவன் கிட்ட.. அது சரி நீ எப்படி இவனுக்கு ரசிகன ஆனேன்னு தானே யோசிக்றீங்க..கேளுங்க!.எல்லா சாமியாருங்களும் ஆண்டவன் கிட்ட பேசுவன்னு தான் சொல்வாங்க ஆனா நம்ம செல்லு, பிசாசு சாத்தான் அப்பறம் ஆவிங்க கிட்ட தினமும் வாக்குவாதம் பண்ணுவாராம். ஏஞ்சல் டிவிய அவரே சொன்னாரு, நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். இந்த புசு புசு மண்டையன் ஒரு வாயுள்ள சாயிபாபான்னு சொல்லலாம், செம கேப்புமாரி. பரிசுத்த ஆவியில் சுட்ட இட்லி தின்னவர்களே! வாங்கடா வந்து சண்ட போடுங்க, வினவு அப்பப்போ பார்ப்பானுங்க சந்தொசபடுற மாதிரி பதிவெல்லாம் போடறாங்க. இப்பவே 72 மறுமொழி இன்னும் என்னவெல்லாம் வர போகுதோ ….

  39. ஆஊன்னா எங்க மதத்துல அப்புடி இல்ல இப்புடியில்ல, நித்தி மாதிரி, வின்செண்ட் மாதிரி, பாக்கர் மாதிரி ஆளுங்கல்லாம் எங்க மதத்துக்கு அத்தாரிட்டி இல்லைன்னு கெளம்பி வந்துடறாய்ங்கப்பா. இதுல இருந்து என்ன புரியுதுன்னா இந்த மாதிரி சொல்லுற ஆளுங்கல்லாம் அவைங்க மதப் புத்தகத்த படிக்கறது இல்லைன்னு தெரியுது. அதுங்கல்ல இல்லாத கில்மா கதைகளா உலகத்துல இருக்கு.

    எல்லாவல்ல ஆண்டவராகிய பெயர் தெரியாத பாலினம் தெரியாத அந்த ஒரு ஆண்டவரே மதங்களின் பின் செல்லும் இந்த பாவிகளை மன்னிப்பாயாக. ஆமென்.

  40. See friends.. I am not supporting any religion.. the discussion started with why poor people are being cheated in the name of god.. but the discussion has turned towards criticizing one’s belief.. i dont think this is a healthy way of discussing. but criticizing one’s belief, we will still create unnecessary unhappiness between people of different religion. so please consider only the CONTEXT in which it has to be seen.. either christian or hindu or muslim, or buddhist etc., first be human.. so called GOD is within us.. so think good. do good. if someone believes in hindu, let him/her.. or in christican, let him/her believe.. as long as he/she is human with humanitarian thoughts, religion is not a matter at all.. religion has been “developed” or “created” only to have humankind in a control to prevent them from going in wrong ways. because as evenryone knows, people will do good things or atleast fear to do wrong things only if they think there is “SOME SUPERNATURAL POWER” that will PUNISH THEM. so PLEASE dont criticize religions. it is up to each individual to choose or believe any religion..

  41. Hi, I am a tru Christian, the writer of this article may be not belonging to any religion, thats fine, however do not write bad words about any religion, I totally agree about these kind of people like Nithyananda, Vincent , etc. But, not every chritian or Hindu follow these corporate criminals who do everything for money, power, women, etc. Every individual has his/her own faith and thats the right. If you dont want to follow thats your wish , but dont criricize, you have rights to write about bad guys like this, but not any religion..Also everybody knows about Nakkeeran, how they increase thier revenu, business by writing articles like this, read http://www.savukku.net to know about Nakkeeran, Please dont write bad about Jesus, Bible and Christians in general, Bad people are there in all caste/religion/state/country..

    • Many of Children’s in the Christian orphans are nothing but the children’s born to the nuns and father it is true. If you believe in Jesus believe this also

  42. இந்த கட்டுரையை முழுவது படித்தேன்…. இதி கூறப்பட்டிருக்கும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரியாது. ஒருவேளை உண்மையாகவே இருக்கட்டும். அப்படியென்றால் கூட குற்றம் சாட்டபடுபவர்களை பற்றி ஆதாரத்துடன் அவர்களில் உண்மை முகத்தை கிழிக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை, அல்லது மத நம்பிக்கையை கேலி செய்வது நல்லதல்ல. நீங்கள் குறிப்பிட்ட போகதகர்களை பற்றி உண்மையை(உண்மையாக இருக்கும் பட்சத்தில்) மக்களுக்கு எடுத்து சொல்வது நல்ல விடயமே. ஆனால் கட்டுரையின் பல இடங்களில் கிருத்துவ மத நம்பிக்கையை கேலி பண்ணியிருக்கிறீர்கள். இதை எழுதியவர் நாத்திகனாகவே இருக்கட்டும் அதுக்காக இப்படியா???
    wordpress உங்களுக்கு இலவசமாக எழுத இடம் அளித்தால் எதை வேண்டுமானாலும் எழுதுவீர்களா நண்பர்களே…?
    நாத்திகன் என்றால் ஆத்திகனை கிண்டல் செய்பவன் என்பது பொருளல்ல என்பதை புரிந்து கொண்டால் நல்லது…
    கிறிஸ்துவையும், கிறித்துவ மதத்தையும் நம்புபவன் நான்(உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுனு இதுக்கு மறுமொழி வேற இப்போ வரும்”). போதகர்கள் உண்மையில்லாதவர்களாய் இருக்கலாம்… ஆனால் கிறிஸ்துவும், கிறிஸ்தவமும் பொய்யல்ல. அது ஒருநாள் அனைவருக்கும் புரியும். 🙂

    நன்றி…..!!!!!!!

    • ஒருநாள் புரியும் என்று தானே சொல்கிறீர்கள், என்றைக்கு புரியம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

      • இவரு உலகத்தலைவருப்பா இவரட்ட சொல்லுங்க ..

        இல்லான பல மக்களின் வாழ்க்கை சீரளிஞ்சுடும்

      • @Mohan : புத்திசாலி மாதிரி கேள்வி கேட்கிறீர்கள் என நினைக்கிறீர்களா நண்பர்களே..? சில விடயங்கள் மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது ! என்று நடக்கும் என சொல்ல முடியாத ஒரு விடயம் நடக்கவே நடக்காது என சொல்வது முட்டாள்தனமானது.! என்றைக்கு புரியும் என்பதை எதிர்காலம் சொல்லும்…

        • @R Chandrasekaran : இதெல்லாம் உங்களுக்கு இப்பொழுது புரியாது நண்பரே ! நீங்க தமிழ் சினிமா காமெடியன் மாதிரி வசனம் பேசிட்டே இருங்க ! 😉

        • என்றைக்கு புரியும் என்பதை எதிர்காலம் சொல்லும்…//

          என்றைக்கு புரியும் என்பதையே எத்ர்காலம் தான் சொல்லுமாம். அந்த எதிர்காலம் எப்போ தான் வரும்.

          வரும் ஆனா வராது போலவா?

          அதெப்படி மிக தெளிவா குழப்பரிங்க

  43. மோகன் சி லாசரஸ் – இவர் தினமும் இரவு 10.30மணிக்கு சத்தியம் செய்தி தொலைகாட்சியிலும் ஆன்மீக சேவை செய்து வருகிறார்.

  44. Guys

    I agree with the points,Its the individuals who make use of the GOD ( particle ) as what they require,that doesnt mean that God is not exist or he exist.
    Its happening in and around INDIA in the recent years,Dont blame a religion which is being belived by many individual.

    Lets belive in ourself instead of a third person

  45. If u are a true christian, please kneel pray for them. Instead dont critize the christian ministry and the people. If they fail in God’s minitry, God will judge them, u dont have the right to judge. Refer the story of David and Saul in the bible. Stop ur nonsense story and seek forgiveness

  46. வினவு கிறிஸ்துவ மத மாற்ற நடவடிக்கைகளை பற்றி எழுத வேண்டும். இதை மத விஷயமாக கேட்கவில்லை. சமூக விஷயமாகவே பார்கிறேன் (பார்பன அயோகியங்கள் போல).

    • every human being has his rights to decide his life,he also have sixth sense to decide his likes so no one needs to convert them..every one will convert only if he accepts wit their whole heart.not bcos of third person forces

  47. vungaluku ellaam vera velayea illaya da…. pongada poi vela vetty ya parunga da… National highways la Ovvoru mile kum vunga samyathanda vachurukanuga atha ellam eduthutu poi kovil katti kumbabishegam (!) panra valiya parunga… apram vanthu comment anupicalaam.

  48. I am not smart enough to judge or say the content of this message is true or false. But nothing can be hidden from the sight of the CREATOR, the greatest Judge. By hearing these types of messages we can’t say all the pastors are humbug. In my opinion, never set human beings as your moral; don’t believe anyone for any reason blindly as their sayings are good. Set JESUS before your eyes. He is good enough to shower the rain on the wicked and righteous. More than all, my humble request is not to make comment against sayings from the HOLY BIBLE (the word form Almighty), second coming of JESUS CHRIST. We can criticise the people and their behaviour, but I want to know: is there anyone who is dare enough to speak or fight against the CREATOR OF THE WHOLE UNIVERSE. I hope no one is there and if so, his end would be pathetic. So before spelling out the words from our mouth against the HOLY BIBLE, it would be nice to think twice.

    Thanks for allowing me to share this message with you.

    • Esther..
      I think thrice before these word from my mouth. Bible have many versions. Somebody edited many times. Now we got Lutherian Bible. Many of your peoples also refuse the second coming of Christ. But Bible is a great Literature work. Old Testimony have manuscripted by a poet of David. Paul have take next one and give some good images in New Testimony. So it is not HOLY. Literature only. Anybody can critique this with good argument

  49. //இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும்//

    இதை ‘உண்மை’யாக்கவும் சில முயற்சிகள் நடக்கலாம் என்பதை Babylon A.D. என்ற ஆங்கில படத்தில் சொல்லியிருப்பார்கள்.

  50. I BROKE IN TO LAUGHTER BY YOUR HUMOR IN THE LANGUAGE.CHRIST WOULD HAVE BEEN A REBEL IN HIS TIMES .BUT A FAITH OR IDEOLOGY CORRODES
    IN COURSE OF TIME AND THE AGENTS OF SUCH FAITHS-CULT FIGURES ARE
    REAL SATAN S
    . I LIVED IN PALAYAMKOTTAI FOR A LONGTIME AND I WAS AWARE OF SUCH
    MESSENGERS FROM GOD .EVANGELISM IS A GOOD SOURCE OF EMPLOYMENT
    AND SUCCESSFUL PEOPLE BECOME VERY RICH.MUSLIM YOUTHS ALSO SHOULD BE BEWARE OF THEIR FANATICAL LEADERS WHO BRAIN WASH THEM . NO COMMENTS ON HINDU SAMIYARS ,MEDIAS ARE FULL OF NEWS ABOUT THEM

  51. Dear friends ,Veena christiansa Titrada Vitutu,Vara ethavadu work irunda parunga,Bcos Enda Christians um Ungala madi Madaveri pidicha dogs Kidyadu ,Dogs Bark panrada pati kavalyum yarum padala….Nennga Christians Ku oppositea Eludirka paitiya kara thanathuku,kandipa Eludinavangalum,ada like pannai Comment podravangalum,Avanga family members ellarum Surely goping to punish by god very very badly….that time panna thappuku inda Platform dogs Feel pannum nga…

  52. no ones got any rights to write about God’s chosen people…and also you cannot judge people its left to God not to us. this is a real fake one..its written by a person who has not got the salvation of God..please don’t believe all these fake stories dear Christians.

  53. இந்த மனிதர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க நீங்கள் ஒரு டிவி சேனல் ஆரம்பித்தால் தான் இந்த மனித சமுதாயம் உருப்படும். உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்

  54. who ever wrote this article dnt have any proof of wat they speak ,bt the people who wrote this article developing their own imagination to make their personal vengence to be satisfied through this against the god chosen people,all human beings have sixth sense,they can decide which is wrong and rite..whoever wrong will be punished by god.

    • no one can be/become a god’s men. All are equal. No one has extra power to do extraordinary. God is within everyone. Worship the god within u and others. DO NOT WORSHIP THESE fake GOD-MEN as they can never be a god’s men.

  55. dear in Jesus. peace be to all. this article is woven by someone who is unbearable about the growth of great prophets of god.The people who are criticized here are also Christians. so I need to tell them if you are a real and trustworthy servant of god you will never hurt or wound another one’s heart. you are not a good follower of god Jesus. so please repent now itself for the dirty words you used against the prophets of god.surely Jesus will come. No one knows the time except him, Jesus. all the eyes will see him coming,also the people denied him. repent soon for he is coming soon.
    May God bless you all.

  56. The only reason India never did wrong to christianity/Islam was because the faith in god and the good things thata rise out of it.

    But when the religious concepts become political,there is no choice but to retaliate.

  57. கிறிஸ்து உலகிற்கு வந்தது மனிதனுக்கு ஒருநல்ல வழியை காட்டதானே தவிர, மதத்தை பரப்ப அல்ல.
    ஒரு போதகர் தவறு செய்தார் என்பதற்காக, எல்லாரையும் குற்றம் சொல்வது தவறு. இன்றும் தனக்காக எதுவும் இல்லாமல், மற்றவற்களுக்காக தன் சொத்துகளயும் விற்று உதவி செய்யும் எனக்கு தெரிந்த போதகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
    உங்களில் எவன் பாவம் இல்லாதவனோ, அவன் முதலில் தவறு செய்த அந்த பெண்ணின் மேல் கல் எறியட்டும் என்று இயேசு சொன்னார்.
    அது போல், அடுத்தவர் வாழ்க்கையை எட்டி பார்ப்பதை நிறுத்தி விட்டு,நம்ப வாழ்க்கையை கொஞம் திரும்பி பார்ப்போம்.
    புலி வருது, புலி வருதுன்னு ஒரு நாள் உண்மையாகவே புலி வர போகுது. அப்போ என்ன செய்யலாம்னு, இப்பவே யோசிங்க.
    அவரவர் செய்த தவறுக்கு, அவரவர் தான் அனுபவிப்பாங்க.னித்தியானந்தா தவறு செய்தார்னா, அதுக்கு தண்டனை அவர் தான் அனுபவித்தார்.நீங்க இல்லயே. அதனால, முடிஞசா தவறு செய்ரவங்களுக்கு திருந்த உதவி செய்ங்க. அத விட்டுட்டு, இப்படியெல்லாம். வேண்டாங்க ப்ளீஸ்.

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  58. என்னைக்கு ஏசு உடம்ப ஆட்டய போட்டுட்டு அவர் உயிர்த்து விட்டார்னு கத விட்டானுகலோ அப்பவே இவனுக ஒரு அன்ட புலுகுனி கோஷ்ட்டினு தெரியவேன்டாமா ஜனங்கலெ…………

    • I too oppose the frauds like angel tv and such people. But Christian faith is far superior than most other religions. Virgin birth and resurrection may not sound rational. But read the teachings of Jesus. They are more rational than things in any other religion for His time. Even later many religions and reforms are not up to His level of progressiveness.

  59. இவனுக கதயெல்லாம் யூதர்கட்ட பலிகாது. அதான் ஏசு பத்தின உன்மையான தகவல் சொன்ன டால்மோட் அ எரிட்ச்சிட்டானுக. எல்லாம் வெலிநாட்டு காசு பேசுது………

    • So, what those Jews did?
      1. stoned people for working on Saturday
      2. Married multiple wives
      3. Even today they run many corporates and control economy
      4. Occupied Palestine against international laws

  60. வாயி கிலிய பேசுரவனுகட்ட ஒரு கீதயயோ,குரானயோ கொன்டு போயி குடுங்க. அது சாதனுடயதுனு வாங்க மாட்டானுக…..மத்த மதத்துகாரங்க இவனுகலுக்கு அடிமனுநெனப்பு…………

        • I say, believe whatever you want unless it harms you or others. Also don’t cheat and make people believe in falsehoods. I am almost sure that neither Sadhu selvaraj nor Vincent Selvakumar believe in God. If they believe in God, they will not cheat people. They just use Jesus’ name to cheat people. We are almost on the same page 🙂

  61. ஒரு நாள் இந்த பாக்கிக பேசுறத AngelTV-la கேட்டுட்டேன்
    கொக்குகளுக்கும் நாரைகளுக்கும் என்ன வித்யாசம் அவைகளின் வருகைக்கான அறிகுறிகள் எதை உணர்த்துகின்றன அப்புடின்னு பேசிட்டு இருந்தாங்க, அத கேட்டுட்டு நமக்குதா தமிழ் மறந்துபோச்ச இப்படியுமா பேசுவாங்கன்னு ரெண்டுநாள் தூக்கமே வரல..
    இந்த படிச்சப்புறம் மனசுக்கு கொஞ்சம் அறுதல இருக்கு

  62. இந்தக் கட்டுரையின் அடிப்படையில் தவறு இருக்கிறது.
    இந்தக் கட்டுரையில் ஒருசில போதகர்களின் தவறான நடத்தை மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்தல் என்பன பற்றி ஆரம்பித்து கடைசியில் இதனால் கிறிஸ்தவமே தவறு என்று முடித்திருக்கிறீர்கள்.
    முதலில் கிறிஸ்தவத்தில் பல குழுக்கள் பிரிவுகள் உள்ளன. இவற்றின் வேறுபாடுகளை கருத்தில் கொள்ளவில்லை.
    மார்க்ஸிஸ்டுகளில் இருந்து ஆரம்பிப்போம்.
    தேர்தல் சார்பு “இடதுசாரிகளை” அளவீடாக வைத்து நக்சல்பாரி இயக்கத்தை அளவிடுவது போன்றது இது
    மார்க்ஸ் முதலாளித்துவம் முன்னேறிய நாடுகளில் தான் முதலில் புரட்சி நடக்கும் என்றார். கடைசியில் அரை நிலப்பிரபுத்துவ ரஷ்யாவில் புரட்சி தொடங்கியது. இதனால் மார்க்சியம் தோற்றுவிட்டது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் சோவியத் ஒன்றியம் கைப்பற்றிய நாடுகளிற்கு புரட்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மார்க்சியத்தின் அடிப்படைகளிற்கு மாறானது. இதனால் மார்க்ஸிஸ்டுகள் புரட்சி என்ற பெயரில் நாடு பிடிக்கத்தான் முற்படுகின்றனர் என்று நான் சொன்னால் பேசாமல் கேட்டுக்கொள்வீர்களா?
    பின்னர் சோவியத் சீன முரண்பாடுகள் தோன்றின. இதற்காக சோவியத்தின் சாயம் வெளுத்துவிட்டது. சோவியத்துடன் இருந்து நாடுபிடிக்க முடியாது. நானும் நாட்டாண்மையாகப் போகிறேன் என்று சீனா முயற்சிக்கிறது அதுதான் கம்யுனிஸ்டுகளின் உண்மைச் சொருபம் என்று எல்லாக் கம்யுனிஸ்டுகளையும் குற்றம் சாட்டினால் நம்புவீர்களா?
    பல இடதுசாரிக்குழுக்களில் இருந்தவர்கள் பலர் சாயம் போய் பிற்காலத்தில் காங்கிரஸ் திமுக அதிமுக என்று போனார்கள். இதனால் கம்யுனிசமே தவறாகி விட்டது என்றால் சரியென்று தலையாட்டுவீர்களா?
    மதத்தலைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதனால் மதம் தவறாகி விடாது. பல பிரிவுகள் மக்களால் உருவாக்கப்பட்டதே மதத்தலைவர்களின் தவறுகளினால் தான் – இடதுசாரித் தலைவர்கள் பலரின் காட்டிக் கொடுப்புகளால் புதிய அமைப்புகள் உருவானதைப் போல.
    இந்தியாவில் வேட்டியில் திரியும் கம்யுனிஸ்டுகள் வெளிநாடு போகும் போதும் அதையா உடுத்துவார்கள்? அந்தந்த சீதோஷ்ணத்திற்கு ஏற்ற உடை அணிவதில்லையா? நீங்களே இப்படிச் செய்து கொண்டு “இவர் இங்கே இப்படித்தான் உடுத்துகிறார் வெளிநாடுகளில் வேறுமாதிரி உடுத்துகிறார்” என்று கிறிஸ்தவ போதகர்களைக் குற்றம் சாட்டினால் எப்படி?
    கிறிஸ்தவம் தவறானதா? அதனை அதன் போதனைகளை வைத்து விளக்குங்கள். தனிநபர்களை வைத்து அல்ல.
    கடைசியில் சோசலிசம் பல நாடுகளில் பரீட்சிக்கப்பட்டு தோல்வி கண்டுள்ளது – ஏறத்தாள முழுமையாக. ஆனால் நீங்கள் இன்னமும் சோசலிசம் சாத்தியமென்று நம்புகிறீர்கள் மற்றவர்களையும் நம்பச் சொல்கிறீர்கள். அந்தந்த நாடுகளின் தவறுகள் தனிப்பட்டவை என்கிறீர்கள். ஆனால் எந்த வொரு மத போதகராவது தவறு செய்ததாகச் சொல்லப்பட்டால் அவர்கள் சார்ந்துள்ள மதமே தவறு என்கிறீர்கள். இதுதான் இயங்கியல் பொருள் முதல் வாதத்தின் அடிப்படையிலான விஞ்ஞான பூர்வ அணுகுமுறையோ?

  63. இவர்கள் முக திரை கிழிக்க வேண்டும் மக்கள் இனியும் ஏமாற கூடாது

  64. It is really paining to read this article> The allegation against Bro. vincent selvakuamr, mohan C. Lazarus are utterly false and malicious. There is no iota of truth in these allegation. We pray that the likes of Nakkeeran and vinanvu surely understand the truth shortly. I pray Jesus that to make these people as HIs servants.

  65. One can say these people in question did not follow the Christian teachings. Saying or implying that since these people have done these things Christianity is false is not logical. Regarding who is making efforts to destroy Christianity worldwide, one can get information from realjewnewsdotcom.

  66. Dear Readers

    Yes i agree with your words. Some people are using Jesus name for their personal needs. But, don’t speak bad about Jesus Christ the Savior.

    If Jesus is not true, there won’t be any B.C or A.C to indicate time or date.

    If anyone wants to tell an incident or history 100 years back or 1000 years back or 2000 years back they should mention as Before Christ or After Christ. Jesus is the worlds past and present indicator. Please keep this in mind.

    Bible is the only book you can find how the world is created. This is the book with History, Maths, Geography and Science. We should worship the Creator not the Creations.

  67. நீங்களே உங்களை சாத்தான் என்று சொல்லி விட்டீர்களே! அப்புறம் என்ன? இயேசுவே உண்மையான தெய்வம்…..

  68. அட மரமண்ட தமிழன் அவர்களே! இயேசு கிறிஸ்து தான் உண்மையான தெய்வம், அவர் கண்டிப்பாக இரண்டாம் முறை வருவார். இந்த உலகத்தின் பாவம் போக்கும் ரட்சகராக அல்ல. நீதியுள்ள நியாதிபதியாக வருவார். அவரை குத்தின பலித்த கண்கள் எல்லாம் காணும். உலகத்தில் சமீபத்திய நிகழ்வுகளும் , சம்பவங்களும் அவருடிய அவருடைய வருகையை அறிவிக்கின்றன. எங்கு பார்த்தாலும் யுத்தங்கள் , கலவரங்கள், பூமி அதிர்ச்சி, கொள்ளை நோய்கள், அன்பு இல்லாமை, மந்திர்கள் தற்பிரி யார்கலாக காணப் படுவது, தேசத்திற்கு தேசம் , நாட்டிற்க்கு நாடு சண்டைகள் அவர் ஏன் இன்னும் வர தாமதிக்கிறார் என்றால் நீயும் உன் வீட்டாரும், உன் ஜனங்களும் இரட்சிக்கப் படனும், மனம் திருந்த வேண்டும் என்று நீ வெறுக்கிற இயேசு விரும்புகின்றார். அவருடைய கையின் கிரியையாகிய நீ நரகத்துக்கு போகக் கூடாதென்று அவர் விரும்புகிறார். ஆனால் நீயோ அவரை ஏற்றுக் கொள்ளாமல் அவர் கட வந்ட்பியில் வருவாரா அல்லது அவர் வரும் வண்டி பஞ்சர் ஆகிவிட்டதா என்ற அவரை கேலி செய்கிறாய். ஒன்ற தெரியுமா இதற்காக அவர் உன்னை தண்டிக்கப் போவதில்ல. இன்னும் இயேசு உன்னை நேசிக்கிறார். அவரை நம்பு அவர் வருகையின் காலதாமதம் எதற்கென்றால் நீ மனம் திரும்ப வேண்டும் என்று. உன்னைப்போல இங்கு எல்லோரும் கிறிஸ்தவர்களையும் ஆண்டவார்கிய இயேசுவை பழித்தும், இழித்தும் ஏசி வருகிறீர்கள். ஆனால் எல்லாவற்றையும் தேவன் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார் என்ன்று அறி. அவனவன் செய்கைக்கு தக்க பலன் அவரோடு கூட வருகிறது. எரிகிற அக்கினி கடலில் தள்ளப் படுவதற்கு முன் உன்னை நீயே திருத்திக் கொள். மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை நீ அறியாயே.

  69. இங்கு ஒருவன் பதிவிட்டிருக்கிறான்.. இரண்டாயிரம் வருடங்களாக இயேசு வருகிறார் என்று சொல்லிகொண்டிருக்கிரீர்களே என்று. அவருக்கு ஆயிரம் வருடங்கள் ஒருநாளைபோன்றது. ஒரு நாள் ஆயிரம் வருடங்களைப் போன்றது. இது விவிலியத்திலிருந்து எடுக்கப் பட்டது. உண்மை தெரியாமல் வாய் நீளப்படாது.

    • one day is 24 hours for in our Earth. for saturn one day is 10 hours 39 minutes. For Venus 5832 hours for one day. It is in our solar only. If search in other Milky way you cannot calculate. Think about the Universe. Universe end is not yet identified by the sceince

Leave a Reply to Dhiva பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க