privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ஆனந்த விகடனும் அவாள் மொழியும்!

ஆனந்த விகடனும் அவாள் மொழியும்!

-

செய்தி-21

ஆனந்த-விகடன்

ந்தக் காலத்து ஆனந்த விகடன் இதழ்களின் படங்கள், செய்திகள், நேர்காணல்கள் எல்லாம் பொக்கிஷம் என்ற தலைப்பில் இந்தக் காலத்து ஆ.வியில் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. இன்று (23.8.12)வந்த இதழில் அட்டைப்பட ஜோக்குகள் என்ற பகுதியில் இடம் பெற்றிருக்கும் வசனங்களைப் பாருங்கள்:

“தலையைப் பின்னிண்டு பூ வெச்சுண்டு இருக்கேன் பார், அப்பா!”
சித்த இப்படி வாயேன்டி பார்க்கலாம்!” -31.8.1941

“டாக்டர்! நீங்க தூக்க மருந்து அனுப்புறேன்னு சொல்லிட்டுப் போனேளே… அதுக்காகத் தூங்காமக் காத்துண்டு இருக்கேன்!” – 8.2.1942

“பார்த்துப் பார்த்து ரவிக்கைக்குத் துணி வாங்கிக் கொடுத்தேளே…அந்தக் குரங்கு என்ன போட்டுண்டு இருக்கு பாருங்கோ!”

“உங்க கண் என்ன எங்கெல்லாமோ சுத்தறது?”
“ஒண்ணுமில்லே….உனக்கும் அதே மாதிரி புடவை வாங்கித் தரலாமேனுதான் பார்க்கிறேன்!” – 22.11.1942

இந்த நகைச்சுவைகளில் இடப்பெற்றிருக்கும் மொழி பார்ப்பன வழக்கு என்பதைப் கவனியுங்கள்! கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பே ஆ.வியில் அவாள் மொழிதான் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்திருக்கிறது. இந்த ஜோக்குகளின் மாந்தர்கள் அநேகமாக பார்ப்பன அடையாளங்களோடுதான் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களே அதிக அட்டைப்படங்களில் இடம் பெற்றிருக்கக் கூடும். பார்ப்பன அடையாளம் இல்லாத நகைச்சுவைகளில் பார்ப்பன வழக்கு இல்லை என்றாலும் அக்ரஹாரத்து மொழியே அன்று ஊடகங்களில் செல்வாக்குடன் இருந்தது.

இன்றும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சமையல் குறிப்பு, டாக் ஷோ, நடனம் உள்ளிட்ட எல்லா அரட்டைகளிலும் பார்ப்பனரல்லாதவர்கள் கூட அவாள் ஸ்லாங்கில் பேசுவதைக் காணலாம். இவர்களுக்கு இது அவாள் மொழி என்பது கூட தெரியாது. ஆனால் அப்படிப் பேசுவதுதான் நாகரீகம் என்ற அடிமைத்தனம் உள்ளவர்கள். எஸ்வி.சேகர், கிரேசி மோகன் போன்ற அக்கிரகார அரட்டைகளையே நாடகமாக்குபவர்களும், துக்ளக் சோவும் கூட அப்படித்தான் பார்ப்பன மொழியை இன்றும் பயன்படுத்துகிறார்கள். தட்டுத் தடுமாறி பேசும் சுப்ரமணிசுவாமியும் கூட தடுமாறாமல் பார்ப்பன மொழியில் பேசுவார் அல்லது உளறுவார்.

பொதுத் தமிழில் இருந்த மணிப்பிரவாளக் கொலை நடையை திராவிட இயக்கம் ஒழித்தது. பின்னர் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் சமூக போராட்டம் காரணமாக திரைப்படம், ஊடகங்களில் பார்ப்பனரல்லாத தமிழர்களின் மொழி பொது மொழியாக உருப்பெற்றிருக்கிறது. இன்று ஆ.வியில் அக்கிரஹாரத்து மொழியில் வரும் ஜோக்குகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அன்று அவாள்கள் அதிகம் வாங்கிய ஆ.வியை இன்று கருப்புத் தமிழர்களாக இருக்கும் நடுத்தர வர்க்கம் அதிகம் வாங்குகிறது. அதாவது பார்ப்பனர்களை விட பார்ப்பனரல்லாத வாசகர்கள் ஆ.விக்கு அதிகம்.

இதே பொக்கிஷம் பகுதியில் மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டிலை அவரது கவர்ச்சியான ஸ்டில்லோடு நேர்காணல் கண்டவர் பெயர் சுகந்தா ஐயர் என்று இருக்கிறது. இன்று ஆ.வியின் நிருபர்களில் பார்ப்பனர்களே இருந்தாலும் அப்படி ஐயர், ஐயங்கார் என்று போட முடியாது. வட இந்திய ஊடகங்களில் இன்றும் அப்படி ஐயர் பாணி பட்டங்களை போட்டு எழுதும் பார்ப்பனர்கள் பலர் இருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படி சாதி பெயர் போட்டு எழுதுவது அநாகரீகம் என்பதை திராவிட இயக்கம் செய்து காட்டியிருக்கிறது.

சரி ஆ.வியின் மொழியில் பார்ப்பன நீக்கம் இருந்தாலும் அதன் அரட்டை, அக்கப்போர் நகைச்சுவையில் ஏதும் மாற்றம் இருக்கிறதா என்றால் இல்லை. அதே மாமியார்-மருமகள் ஜோக்குகள், மனைவிக்கு அடங்கிய கணவனது காமடிகள் என்ற பெயரில் பெண்ணடிமைத்தனத்தை போற்றும் பார்வைகள், சீசனல் க்ரைம் செய்திகளை ஜோக்காக்குவது என்று தீவிரமான சமூக விசயங்களைக் கூட அரட்டையாக கற்றுத்தரும் அரசியலற்ற பார்வை என்று பழைய ஆ.வி அப்படியே தொடர்கிறது. மொந்தை மாறினாலும் கள்ளு அதேதான்!

படம் – நன்றி சாத்தான்

_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. நன்னாவே சொன்னேள் போங்கோ…1970 தினமணியில் முதல் பக்கத்தில் செய்தி வந்ததாக இப்போதைய தினமணி பொக்கிஷத்தில் படித்தேன்…அதன் தலைப்பு ‘காவிரியில் ஜலம் விடப்பட்டது’

    • தினமணி மட்டும் என்ன அதுவும் பார்ப்பன பத்திரிகை தான் இந்தியன்.

  2. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் !
    மதுரைக்கார ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதி ரெண்டுவேரும் ஒரே மாத்ரி தான் பேசுறாங்கேய் !
    கோய்ம்பட்டூர்க்கார ஆதிக்க சாதியும் ஒடுக்கப்பட்ட சாதியும் ஒரே மாத்ரி தான் கொஞ்சி கொஞ்சி பேசுறாங்க !
    நாகர்கோவில் கார ஆதிக்க சாதியும் ஒடுக்கப்பட்ட சாதியும் ஒரே மாத்ரி தான் கதைக்கறாங்கடெய் !

    ஆனா எப்புடிலெ எல்லா ஊருல இருக்குற பார்ப்பார பயலுகளும் ஒரே மாதிரி “சொன்னேள்” , “நன்னா” , “வெச்சுண்டு ” பேசுறாங்க !

    இவங்க ஆதி கால தொடர்புல இருந்து இயற்கையுடன் வளர்ந்து வராமெ நடுவுல அங்கங்க செட்டில் ஆனவிங்களா இருப்பாங்கன்னுநினைக்கேன் !

    • // ஆனா எப்புடிலெ எல்லா ஊருல இருக்குற பார்ப்பார பயலுகளும் ஒரே மாதிரி “சொன்னேள்” , “நன்னா” , “வெச்சுண்டு ” பேசுறாங்க ! //

      சொன்னீர்கள் ..> சொன்னீகள்..> சொன்னியள்..> சொன்னேள்

      நன்றாக..> நன்னாக …> நன்னா

      வைத்துக்கொண்டு ..> வச்சுக் கொண்டு ..> வச்சுண்டு ..> வெச்சுண்டு

      பாப்பானுக்கு நிலமா, நீச்சா, ஆண்டையா, அடிமையா.. சாதி சனத்தோட செட்டிலாக..? எங்கெங்கே கோவில், வழிபாடு, திருவிழா, கலைவிழா, தானம், தர்மம், கல்வி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள்… போகுமிடமெல்லாம் தங்கள் பேச்சு வழக்கையும் கொண்டு போனார்கள்.. இருந்தாலும் சோழநாட்டு, பாண்டிய நாட்டு, கொங்கு நாட்டு, தொண்டை நாட்டு, பாலக்காட்டு, நாஞ்சில் நாட்டு பார்ப்பன பேச்சு வழக்குக்கள் மாறுபட்டிருக்கும்..

      ரொம்ப நாளாவே இருந்த சந்தேகம் இப்ப போயிடுத்தா? (போய் விட்டதா..> போயிட்டுதா..> போயிடுத்தா என்ற வரிசையில் படிக்கவும்)..

      நீரு பாப்பாரப் பயலக் கிள்ளினாலும், அவன் உம்மக் கிள்ளினாலும் ரெண்டு பேர்ல ஒருத்தர் ஆ ன்னு கத்தாம மே ன்னு கத்தாத வரைக்கும் பெரிய பிரச்சனை ஒண்ணும் இருக்காது..

      • //எங்கெங்கே கோவில், வழிபாடு, திருவிழா, கலைவிழா, தானம், தர்மம், கல்வி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள்…//

        இப்படி பார்பனர்களுக்கு வக்காளத்து வாங்குரீர்களே……..
        து……..

        எங்கெல்லாம் ஏமாற்ற முடிகிறதோ, எங்கெல்லாம் அண்டிபிழைக்க முடிகிறதோ அங்கெல்லாம் தங்கி கொள்வார்கள், இந்த பார்பன பரதேசிகள்.
        இப்பொழுது இந்தியாவில் அவ்வளவாக ஏமாற்ற முடியாததால் வெளிநாடு சென்று விடுகின்றனர்.

        சில காலம் முன்பு எங்க ஊரில் நடந்த நிகழ்ச்சி:

        ஒரே ஒரு பார்பனர் குடும்பம் இருந்தது, ஆனால் அதிகாரமா பயங்கரமாக இருக்குமாம். அவன் வீட்டின் வழியாக யாரும் செருப்புடன் கடந்து செல்ல முடியாது. ஒரு நாள் வெளியூர்காரர் செருப்புடன் நடந்துவிட்டார் உடனே அந்த பார்பனன், அவரை அதிகாரத்துடன் அருகில் அழைத்து ‘செருப்பை கலட்டுடா’ என்று அதட்டியள்ளான், உடனே அவர் செருப்பை கலட்டி அவன் கண்ணத்தில் ”பளார், பளார்’ என்று அரைந்துவிட்டார், அதற்குபின் அந்த குடும்பம் ஊரிலே இல்லை…..
        Ha Ha Ha….

        • வக்கலதில்ல,அவர் சொன்னது உண்மை. வெள்ளையர்கள் வந்த பிறகு தான் வக்கீல், ஆப்பீசர், கிளெர்க், எஞ்சினியர், டாக்டர் இந்த மாதிரி வேலை. அதுக்கு முன்னால பொழப்பு எப்படி ஒடிச்சு? கோயில், குளம், மந்திரம், வேதபாராயணம், பூஜை…இதெல்லாம் தானே செஞ்சுகிட்டு இருந்தாங்க.

        • // இப்படி பார்பனர்களுக்கு வக்காளத்து வாங்குரீர்களே……..
          து……..//

          தூ வை து ன்னு சுருக்கிட்டேள்.. (சுருக்கி விட்டீர்கள் என்பதன் சுருக்கம்)

          // சில காலம் முன்பு எங்க ஊரில் நடந்த நிகழ்ச்சி:

          ஒரே ஒரு பார்பனர் குடும்பம் இருந்தது, ஆனால் அதிகாரமா பயங்கரமாக இருக்குமாம். அவன் வீட்டின் வழியாக யாரும் செருப்புடன் கடந்து செல்ல முடியாது. ஒரு நாள் வெளியூர்காரர் செருப்புடன் நடந்துவிட்டார் உடனே அந்த பார்பனன், அவரை அதிகாரத்துடன் அருகில் அழைத்து ‘செருப்பை கலட்டுடா’ என்று அதட்டியள்ளான், உடனே அவர் செருப்பை கலட்டி அவன் கண்ணத்தில் ”பளார், பளார்’ என்று அரைந்துவிட்டார், அதற்குபின் அந்த குடும்பம் ஊரிலே இல்லை….. //

          சில பார்ப்பான்களுக்கு பட்டாத்தான் புத்தி வரும்ன்னு ஒரு பேச்சு இருக்குறது உண்மைதான்.. அதுக்காக இப்படியா ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு பார்ப்பான்’ கதை சொல்றது..?!!!

          கதையில் வெளியூர்க்காரர் செருப்பால் அறைந்தார் என்பதற்கு பதில் உள்ளூர்க்காரர் அறைந்தார் என்று சொல்லியிருந்தால் ஊருக்கு கொஞ்சம் கவுரதையா இருந்திருக்குமேப்பு.. அடுத்த வாட்டி இப்படி மாத்தி சொல்லுங்க..

          // Ha Ha Ha…. //

          பிசாசு ஓடிப் போச்சு, ஊர் தப்பியது.. சுபம்… ஒரே சந்தோசம்தான்..

          எல்லாம் இந்த வினவு பண்ற வினை.. இப்படி பார்ப்பன பூதம் படம் போட்டு சின்னப் புள்ளங்கள எப்படி மிரட்டி வெச்சுருக்கு பாரு… :

          https://www.vinavu.com/wp-content/uploads/2012/08/பார்ப்பனர்-பிராமணர்.jpg

          • சில பார்ப்பனர்கள் மட்டும் கெட்டவர்கள் மற்றவர்கள் எல்லாம் யோக்கியர்கள் என்பதுபோல் சொல்வது, தப்பை சிலர் மீதுமட்டும் இருப்பதுபோல் சொல்வது, என்ன ஒரு வில்லத்தனம்,
            பார்பனர்களுக்கு சப்போர்ட் செய்வதால் உங்களுக்கு சொர்க்கத்தில் நிச்சயமாக இடம் உண்டு.

            எவ்வளவு அர்த்தமுள்ள கார்டூன், அதை நினைவுபடுத்தியதற்கு நன்றி,
            நான் அப்பவே அதைமறந்துவிட்டேன் ஆனால் உங்களால் மறக்கமுடியாததால் தான் அதன் ஆழம் புரிகிறது….

        • அட பரவாயில்லை… அந்தப் பார்பனன் செருப்ப கலட்டுடா என்று மட்டும் சொல்லி அடியும் வாங்கிவிட்டார்… நாமாக இருந்தால் திண்ணியத்தில் நடந்தைப் போல நடத்தியிருப்போம்…அல்லது மேலவளவில் நடந்தைப் போல நடத்தியிருப்போம்.. அதுவும் இல்லை என்றால் உத்தபுரத்தில் நடந்ததைப் போலாவாது நடத்திக் காட்டுவோமுல்ல

          • சரியான பெயர்தான் ”P” Nagaraj.

            பார்ப்பனர்கள் எல்லாரையும் தம்மைவிட கீழானவர்கள், தம்மை தவிர யாரும் கோவில் கருவரைக்குள் செல்லும் தகுதியில்லாத இழிவானவர்கள், அதுமட்டுமா தமிழ் நீசபாசை என்று சொல்லுகிறான், ஆனால் கொஞ்சம்கூட மானம் இல்லாமல் அவனுக்கு ஜால்ரா போடுரீங்க. சாதி, மதத்தை தூக்கியெரியம் அளவுகூட அறிவில்லை உங்களையெல்லாம் என்னவென்று சொல்வது……

      • ” எங்கெங்கே கோவில், வழிபாடு, திருவிழா, கலைவிழா, தானம், தர்மம், கல்வி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள்…”

        ஓகோ ! அப்புடின்னா சரி தான் !
        இப்ப அமெரிக்காவுக்கு ஓடுறானுங்கெளே படிச்சி போட்டு ! அந்த மாதிரி !
        சோறு கண்ட எடம் சொர்க்கம் !
        ஒரு சமூக பற்று ! மண் பற்று ! ஒரு மண்ணும் கிடையாது !

        • திரைகடல் ஓடி திரவியம் தேடு — பொழப்புக்காக தமிழன் எத்தன வருஷமா ஊர் உலகமெல்லாம் சுத்திகிட்டு இருக்கான். அவனுங்கள பத்தியும் இப்படிதான் பேசுவீங்களா?

          • // இப்ப அமெரிக்காவுக்கு ஓடுறானுங்கெளே படிச்சி போட்டு ! அந்த மாதிரி !
            சோறு கண்ட எடம் சொர்க்கம் !
            ஒரு சமூக பற்று ! மண் பற்று ! ஒரு மண்ணும் கிடையாது ! //

            கவருமெண்டுதான் பார்ப்பனர்களை ஒதுக்கி வெச்சுடுச்சு.. நீங்களாவது உங்க கம்பெனில அவங்க படிப்புக்கேத்த வேலை போட்டு கொடுத்திருந்தா ஏன் ஓடுறானுங்க..

            • //கவருமெண்டுதான் பார்ப்பனர்களை ஒதுக்கி வெச்சுடுச்சு.. நீங்களாவது உங்க கம்பெனில அவங்க படிப்புக்கேத்த வேலை போட்டு கொடுத்திருந்தா ஏன் ஓடுறானுங்க./

              good

      • \\பாப்பானுக்கு நிலமா, நீச்சா, ஆண்டையா, அடிமையா.. சாதி சனத்தோட செட்டிலாக..? எங்கெங்கே கோவில், வழிபாடு, திருவிழா, கலைவிழா, தானம், தர்மம், கல்வி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள்//

        வரலாறு நெடுக பார்ப்பனர்கள் நாடோடிக் கூட்டம்தான் என்று நான் சொன்னபோது கிண்டல் பண்ணுன அம்பியே இப்போ அத சொல்றாரே.சரி ஏத்துக்கிட்ட வரைக்கும் சந்தோசம்.

        ஆனால் பாப்பானுக்கு நிலமா, நீச்சா, ஆண்டையா, அடிமையா ன்னு வேஷம் போடுரததான் சகிக்க முடியல.அம்பியே சொல்லியிருக்காரே , ”தானம், தர்மம்” ன்னு. அவுங்க நிச்சயமா கொடுத்துருக்க மாட்டாங்க.வாங்கித்தான் அவுங்களுக்கு பழக்கம்.எப்படியெல்லாம் விதம் விதமா ஆட்டையை போட்டுருக்காங்கன்னு உதாரணம்.பார்க்க சுட்டி.

        http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20603171&format=print&edition_id=20060317

        சுட்டியிலிருந்து,
        தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் நூலில், அவர் பிறந்த உத்தமதானபுரம் உருவான வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.
        தஞ்சையை ஆண்ட மகாராஜா, பல ஊர்களையும் சுற்றிப்பார்த்து வரி வசூல்களை சரி பார்த்து விட்டு, இந்த ஊரின் அருகில் ஒரு மரத்தடியில் தமது பரிவாரங்களுடன் தங்கினாராம். அப்போது நண்பகல். நல்ல வெய்யில். மதிய சாப்பாடு முடிந்து விட்டது. உண்ட உணவு சீரணமாக தாம்பூலம் தரித்துக் கொண்டாராம். அதன் பிறகுதான் நினைவுக்கு வந்தது. இன்று என்ன திதி என வந்தவர்களிடம் கேட்டார். (சில நாட்களில் வெற்றிலை போடக்கூடாது. அவ்வாறு போட்டால் அது சாஸ்திர விரோதம் என்பது கருத்து) வந்தவர் எவரிடமும் சரியான பதிலைக்காணோம். அவ்வூரில் வேதம், சோதிடம் பழுதறக்கற்றவர்களை அழைத்து வருமாறு பணித்தார். இக்கலைகளில் வல்லவர்கள் வந்தனர். அவர்களிடம் இதைக் கேட்டார். அவர்கள் சொன்னார்கள் ‘ஆம் ராஜா! இன்று நீங்கள் தாம்பூலம் தரிக்க உகந்த நாளில்லை. இது தோஷம் என்றனர் ‘. ராஜாவும், இதற்குரிய பரிகாரம் என்ன என வினவ அவர்களும் நூறு பிராமணாளுக்கு மனையும் நன்செய்யும் தானம் அளித்தால் இந்த தோசம் விலகும் எனச்சொன்னார்கள். ராசாவும் ஒத்துக்கொண்டு ஓர் அக்ரகாரத்தையும், அதில் குடி இருக்கும் மக்களுக்கு நிலமும், கிணறும் உண்டாக்க ஆக்கினைகள் செய்தார். அவ்வூரே உத்தமதானபுரம் என்று வழங்கலானது.

        • // வரலாறு நெடுக பார்ப்பனர்கள் நாடோடிக் கூட்டம்தான் என்று நான் சொன்னபோது கிண்டல் பண்ணுன அம்பியே இப்போ அத சொல்றாரே.சரி ஏத்துக்கிட்ட வரைக்கும் சந்தோசம். //

          நிலமற்றவர்கள், கடன்,பகை, யுத்தங்களால் நிலத்தை இழந்தவர்கள், பஞ்சம், கொள்ளைநோயால் உயிர், உடமைகளை இழந்தவர்கள், எந்த சாதியாக இருந்தாலும் வாழ்வாதரங்களையும், இணக்கமான சூழலலையும் தேடி இடம் பெயர்வது வரலாறு நெடுக காணக்கிடைக்கும் நிகழ்வு. கடிவாளப் பார்வை கொண்டு பார்ப்பனர்களை மட்டும் நாடோடிகள் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தீர்களே, நீங்கள் எத்தனை தலைமுறைகளாக அதே ஊரில் இருக்கிறீர்கள் என்று நான் அங்கே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே..?!

          // ஆனால் பாப்பானுக்கு நிலமா, நீச்சா, ஆண்டையா, அடிமையா ன்னு வேஷம் போடுரததான் சகிக்க முடியல.அம்பியே சொல்லியிருக்காரே , ”தானம், தர்மம்” ன்னு. அவுங்க நிச்சயமா கொடுத்துருக்க மாட்டாங்க.வாங்கித்தான் அவுங்களுக்கு பழக்கம்.எப்படியெல்லாம் விதம் விதமா ஆட்டையை போட்டுருக்காங்கன்னு உதாரணம்.பார்க்க சுட்டி. //

          நாலஞ்சு நாளா சகிச்சுப் பாத்துட்டு முடியாம பார்ப்பனர்கள் ஆட்டைய போட்டுட்டாங்கன்னு வந்து குமுறுகிறீர்கள்…

          // அவ்வூரில் வேதம், சோதிடம் பழுதறக்கற்றவர்களை அழைத்து வருமாறு பணித்தார். //

          ஏற்கனவே அந்த ஊரில் செட்டில் ஆயிருந்த பார்ப்பனர்களை குறிப்பிடுகிறார் என்று எடுத்துக் கொண்டாலும், 2 காணி நிலம் வெச்சிருந்த விவசாயிகிட்ட தோசம், பரிகாரம்ன்னு சொல்லி ஒரு காணிய பிடுங்கிட்ட மாதிரி ஆட்டையப் போட்டது, தேட்டையப் போட்டது என்று விட்டையப் போடுவது நியாயம்தானா, நேர்மைதானா…

          • வம்படியாக வந்து பார்ப்பனர்கள் நாடோடிகள் என்று ”கடிவாள பார்வை” ஆராய்ச்சி நான் செய்யவில்லை.நியாயமா அதை முகப்படாம் பார்வைன்னு சொல்லணும்.உங்களுக்கு தமிழ் அறிவும் குறைவா இருக்கு.எந்த கட்டத்துல அதை சொல்லியிர்க்கேன்னு பாக்கணும்.

            \\அயோத்தியா மண்டபத்துல பூணூல் விக்கற பஞ்சைப் பார்ப்பான் எங்கே போவான்..?! திராவிட வீர சூரர்களால் வெட்டிவீழ்த்தப்பட்ட பார்ப்பன பாசிசத் தீவிரவாதியாகச் செத்தாலும் சாவானே தவிர போவதற்கு வேற போக்கிடம் இல்லாத அவனைப் போன்ற பஞ்சைகள் தான் பார்ப்பனர்களில் பாதிக்கு மேல் இங்கே…//

            திராவிட இயக்க தோழர்களை கொலைகாரர்கள் என்று அவதூறு சொல்லிய உங்கள் அயோக்கியத்தனத்தை கண்டித்தும் பார்ப்பனர்கள் போக்கிடம் இல்லாமல் தமிழ் நாட்டையே சுத்தி சுத்தி வர்றதா புனைந்துரைத்த பித்தலாட்டத்த தோலுரித்தும் எழுதப்பட்டதே அந்த ”ஆராய்ச்சி”. பார்க்க,சுட்டியும் அதன் முந்தய வாதங்களும்.

            https://www.vinavu.com/2012/07/31/gujarat-sit/#comment-65756

            \\நீங்கள் எத்தனை தலைமுறைகளாக அதே ஊரில் இருக்கிறீர்கள் என்று நான் அங்கே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே..//

            பொதுவா நான் உங்கள மாதிரி வளவளன்னு வாதம் பண்ணிக்கிட்டே இருப்பதில்லை.வினவை படிப்பவர்களின் வாதங்களை சீர்தூக்கி பார்த்து உண்மையை உணரும் ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து முடித்துக் கொள்கிறேன்
            இநத கேள்வி மூலம் எனது வாதத்தை முறியடித்து விட்டதா நினைச்சுகிட்டு இருக்கியளா.உங்க ”மகிழ்ச்சிய” கெடுத்துருவோம்.

            மத்த சாதிக்காரர்கள் இடம் பெயர்வதற்கும் பார்ப்பனர்கள் இடம் பெயர்வதற்கும் பாரிய வேறுபாடு இருக்கு.ஐநூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஊரில் எந்த சாதிக்காரகள் இருந்திருந்தாலும் இப்போதும் இருப்பார்கள்.மொத்தமாக ஊரை காலி செய்து விட மாட்டார்கள்.பார்ப்பனர்கள் மட்டுமே இருந்த சுவடே இல்லாமல் ஊரை காலி செய்து விட்டு ஓடுகிறார்கள்.அதுதான் நாடோடிகளின் அடையாளம்.

            \\நாலஞ்சு நாளா சகிச்சுப் பாத்துட்டு முடியாம பார்ப்பனர்கள் ஆட்டைய போட்டுட்டாங்கன்னு வந்து குமுறுகிறீர்கள்…
            // அவ்வூரில் வேதம், சோதிடம் பழுதறக்கற்றவர்களை அழைத்து வருமாறு பணித்தார். //

            ஏற்கனவே அந்த ஊரில் செட்டில் ஆயிருந்த பார்ப்பனர்களை குறிப்பிடுகிறார் என்று எடுத்துக் கொண்டாலும், 2 காணி நிலம் வெச்சிருந்த விவசாயிகிட்ட தோசம், பரிகாரம்ன்னு சொல்லி ஒரு காணிய பிடுங்கிட்ட மாதிரி ஆட்டையப் போட்டது, தேட்டையப் போட்டது என்று விட்டையப் போடுவது நியாயம்தானா, நேர்மைதானா…//

            ஓகோ.நீங்க பின்னூட்டம் போட்ட மறுநாளே பதில் போட்டாதான் ஒத்துக் கொள்வீர்களோ.நீங்க கூடத்தான் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்ல வினவு பக்கம் எட்டிப்பாக்க மாட்டீங்க.நாங்க அதுக்கெல்லாம் கோபித்து கொள்வதில்லையே. மேலும் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.விவாதம் சிக்கலாக இருந்தால் உங்களுக்கு ஆத்திரம் வந்து நிதானம் தவறி தனிநபர் தாக்குதல்ல இறங்குறீங்க.இப்போது கூட ”விட்டய”போடுறதா உளர்றீங்க.

            அரசன் ஒன்னும் அவன் உழுதுகிட்டிருந்த வயலை தானமா கொடுத்துருக்க மாட்டான்.ஏற்கனவே மேல்வாரம் குடிவாரம் ன்னு விவசாயிகள் வேளாண்மை செய்து கொண்டிருந்த நிலத்ததான் உரிமை மாற்றி தந்திருப்பான்.அதாவது இதுவரை அரசன் அட்டையாக ரத்தம் உறிஞ்சிக் கொண்டிருந்தான்.அதற்கு பிறகு பார்ப்பனர்கள் உறிஞ்சிக் கொள்ளலாம் அதுதான் தானத்தின் மகிமை.

            • // வம்படியாக வந்து பார்ப்பனர்கள் நாடோடிகள் என்று ”கடிவாள பார்வை” ஆராய்ச்சி நான் செய்யவில்லை.நியாயமா அதை முகப்படாம் பார்வைன்னு சொல்லணும்.உங்களுக்கு தமிழ் அறிவும் குறைவா இருக்கு.//

              யானைக்குப் போடுவது கண்ணை மறைக்காத முகப்படாம், குதிரைக்குப் போடுவது பாதிப்பார்வையை மறைக்கும் முகப்படாம், சரிதானா அய்யா..

              // திராவிட இயக்க தோழர்களை கொலைகாரர்கள் என்று அவதூறு சொல்லிய உங்கள் அயோக்கியத்தனத்தை கண்டித்தும் பார்ப்பனர்கள் போக்கிடம் இல்லாமல் தமிழ் நாட்டையே சுத்தி சுத்தி வர்றதா புனைந்துரைத்த பித்தலாட்டத்த தோலுரித்தும் எழுதப்பட்டதே அந்த ”ஆராய்ச்சி”. பார்க்க,சுட்டியும் அதன் முந்தய வாதங்களும்.//

              அயோக்கியத்தனம், பித்தலாட்டம், தோலுரித்தேன், வெங்காயம் உரித்தேன் என்று வார்த்தைகளைப் போட்டு வதைப்பதைப் போல், அந்தந்த இழைகளில் பதில் சொல்லாமல் அப்பீட்டு ஆகிவிட்டு வேறு வேறு பதிவுகளில் பழைய சுட்டிகளைக் கொடுத்து டார்ச்சர் பண்ணுவதே வழக்கமாப் போச்சு உங்களுக்கு..

              // பொதுவா நான் உங்கள மாதிரி வளவளன்னு வாதம் பண்ணிக்கிட்டே இருப்பதில்லை.வினவை படிப்பவர்களின் வாதங்களை சீர்தூக்கி பார்த்து உண்மையை உணரும் ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து முடித்துக் கொள்கிறேன்
              இநத கேள்வி மூலம் எனது வாதத்தை முறியடித்து விட்டதா நினைச்சுகிட்டு இருக்கியளா.உங்க ”மகிழ்ச்சிய” கெடுத்துருவோம். //

              எஸ்கேப் ஆவதை இப்படி பெருமையாக வேறு சொல்லிக் கொல்கிறீர்கள்…

              // மத்த சாதிக்காரர்கள் இடம் பெயர்வதற்கும் பார்ப்பனர்கள் இடம் பெயர்வதற்கும் பாரிய வேறுபாடு இருக்கு.ஐநூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஊரில் எந்த சாதிக்காரகள் இருந்திருந்தாலும் இப்போதும் இருப்பார்கள்.மொத்தமாக ஊரை காலி செய்து விட மாட்டார்கள்.பார்ப்பனர்கள் மட்டுமே இருந்த சுவடே இல்லாமல் ஊரை காலி செய்து விட்டு ஓடுகிறார்கள்.அதுதான் நாடோடிகளின் அடையாளம். //

              கூட்டமாக ஒரு இடத்திலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு தொடர்ந்து குறுகிய காலகட்டத்தில் மாறிக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கும்,

              கால ஓட்டத்தில் சிறுகுழுக்களாயோ தனித்தனியாகவோ பல்வேறு காரணங்களால் திசைக்கொன்றாய் சிதறும் சமூகத்திற்கும்

              நாடோடிகள் என்று ஒரே பெயர் சூட்டுவது உங்களுக்கு வசதியாக இருந்தாலும் பகுத்தறிவுப்படி அது சரியா என்று சிந்திக்க வேண்டும்..

              ஒரு ஊரில் ஐநூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாதியைச் சேர்ந்த 50 குடும்பங்கள் இருந்து 40 குடும்பங்கள் இடம் பெயர்ந்து விட்டாலும் நீங்கள் அதைக் கணக்கில் எடுப்பது கிடையாது, மிச்சமிருக்கும் 10 குடும்பங்கள் உங்கள் வாதத்திற்கு வசதியாக அங்கு இருந்தாலே போதும்..

              ஆனால் அந்த ஊரில் இருந்த 4 பார்ப்பனக் குடும்பங்களில்

              ஒன்று கீழூருக்கும்,மற்றோன்று மேலூருக்கும் வெவ்வேறு காலக்கட்டங்களில் இடம் பெயர்ந்து,

              3வது குடும்பம் ஆண் வாரிசுகள் இல்லாமல், பெண்களை வேறு ஊர்களில் கட்டிக் கொடுத்துவிட்டு, முதியவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்து அந்தக் குடும்பம் ஊரில் இல்லாமல் போய்,

              4வது குடும்பம் ஊரில் வந்த கொள்ளை நோய், வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளில் இல்லாமல் போன, பல சாதிகளைச் சேர்ந்த, ஏழெட்டு குடும்பங்களில் ஒன்றாக இருந்தாலும்,

              ‘அன்று இருந்த பார்ப்பனர்கள் இன்று இல்லை, ஏன்னா பார்ப்பனர்கள் மட்டும் கூட்டாக வெளியேறி வேறு ஊரில் டேரா போட்டனர்’ என்று அபத்தமான முடிவுகளுக்கு வந்து சேரும் உங்கள் ஆராய்ச்சித் திறமையைக் கண்டு வியக்க வேண்டியிருக்கிறது..

              // ஓகோ.நீங்க பின்னூட்டம் போட்ட மறுநாளே பதில் போட்டாதான் ஒத்துக் கொள்வீர்களோ.நீங்க கூடத்தான் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்ல வினவு பக்கம் எட்டிப்பாக்க மாட்டீங்க.நாங்க அதுக்கெல்லாம் கோபித்து கொள்வதில்லையே. //

              என்று வருகிறேன், என்று வரவில்லை என்று அக்கறையுடன் அவதானிக்கும் உங்கள் அன்பே அன்பு அன்பு..!! 24 X 7 எந்நேரமும் வினவு தளத்துக்கு வர மடிக்கணிணி ஒன்று வாங்கலாம் என்று நெடுநாட்களாகவே யோசித்துக் கொண்டிருக்கிறேன்..!

              // மேலும் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.விவாதம் சிக்கலாக இருந்தால் உங்களுக்கு ஆத்திரம் வந்து நிதானம் தவறி தனிநபர் தாக்குதல்ல இறங்குறீங்க.இப்போது கூட ”விட்டய”போடுறதா உளர்றீங்க.//

              நானும் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.. கேள்விகளுக்கு பதில் சொல்வதைவிட்டுவிட்டு என்னை பித்தலாட்டம், மோசடி, அயோக்கியத்தனம் உள்ளவனாக சித்தரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருப்பது நீங்கள்தான்..

              // அரசன் ஒன்னும் அவன் உழுதுகிட்டிருந்த வயலை தானமா கொடுத்துருக்க மாட்டான்.ஏற்கனவே மேல்வாரம் குடிவாரம் ன்னு விவசாயிகள் வேளாண்மை செய்து கொண்டிருந்த நிலத்ததான் உரிமை மாற்றி தந்திருப்பான்.அதாவது இதுவரை அரசன் அட்டையாக ரத்தம் உறிஞ்சிக் கொண்டிருந்தான்.அதற்கு பிறகு பார்ப்பனர்கள் உறிஞ்சிக் கொள்ளலாம் அதுதான் தானத்தின் மகிமை. //

              மன்னன் பார்ப்பானுக்கு குடிவாரம் செய்யும் நிலத்தைக் கொடுத்தானோ, காணி உரிமையுள்ள நிலத்தைக் கொடுத்தானோ.. எதுவாயிருந்தாலும் இதனால் எந்த விவசாயிக்கும் லாபமோ, இழப்போ, எந்த மாறுதலோ இல்லை, அதே கஷ்டத்தைத்தான் தொடர்ந்து அனுபவித்தார்கள் என்று கூறும் நீங்கள், பார்ப்பனர்கள் ஆட்டையப் போட்டார்கள் என்று கூறுவதேனோ..?! இதனால் இழந்தது யார்..?!

              • எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய விவாதம் இங்கு நிறைவு பெறுகிறது.ஆனால் நான் எஸ்கேப் ஆவுறேன்னு அம்பி குத்தம் சொல்றதால இதை எழுத வேண்டியிருக்கு. இந்த பின்னூட்டம் இல்லையென்றாலும் உண்மையை வாசகர்கள் உணர முடியும்.

                இந்த விவாதம் பார்ப்பனர்களுக்கு நிலமா, நீச்சா, ஆண்டையா, அடிமையா.. சாதி சனத்தோட செட்டிலாக.என்று அம்பி எழுதியதை மறுத்து ஆரம்பித்தது.நடந்த விவாதத்தின் மூலம் பார்ப்பனர்கள் நிலம்,நீச்சு,குடியிருப்பு மனை அதில் அக்கிரகாரம்,விவாசய நிலம் அதில் உழைத்து வாரம் அளக்க விவசாயிகள்,என செட்டில் ஆகியிருக்கிரார்கள என நிருபனம் ஆகியுளளது.

                • தஞ்சாவூர் ராஜா ஊர் ஊராப் போய் வெத்தலை போட்டுப் போட்டு அபசாரம் பண்ணிப் பண்ணி நாட்டிலுள்ள எல்லாப் பார்ப்பனர்களையும் கூப்பிட்டு கூப்பிட்டு ஆளுக்கு 10 காணி தானம் பண்ணியே தீருவேன்னு அடம் பிடிச்சு கொடுத்துட்டுப் போனதால எல்லாப் பார்ப்பனர்களும் நிலம், நீச்சு, வீட்டுமனை, வீடோட செட்டில் ஆனார்கள்..! அற்புதமான ஆராய்ச்சி அன்பு..!

                  • இந்த தானங்களுக்கு என்ன சொல்ரீங்க அம்பி,

                    ‘மன்னராய் அரியணை ஏறுபவர்கள், தங்கத்தால் ஒரு பசுமாட்டை செய்து, அதன் வயிற்றுக்குள் நுழைந்து திரும்பி வருவர். அதன் பின்னர் அந்தத் தங்கம் அந்தணருக்குத் தானமாய் அளிக்கப்படும் ‘ இது ‘ஹிரண்ய கெர்ப்ப தானம் ‘ எனச் சிறப்பிக்கப்பட்டது.

                    கிரகணத்தன்று சோறுண்ட பாவப் பரிகாரம்

                    23-5-1737ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி செய்த கொடைக்கான காரணம் மிகவும் வேடிக்கையானது.
                    இதை உதயனேந்தல் செப்பேடு பதிவு செய்துள்ளது.
                    அரசர், கிரகண நாளன்று உணவு உட்கொண்ட பாவத்தைப் போக்க கெளதம கோத்திரத்து போதாநய சூத்திரத்து ராமலிங்க நம்பியார் மகன் மங்களேஸ்வரக்குருக்களுக்குக் கொடையாக, கதயநேந்தல் எனும் ஊரினை அளித்தான்.

                    அந்தணர்களுக்கு சேதுபதிகள் அளித்த கொடைகள் பின்வருமாறு:

                    1)கெளண்டின்ய கோத்திரத்து ஆபஸ்தம்ப ஸூத்ரத்து செவிய்யம் ராமய்யன் புத்ரன் அஹோபாலய்யனுக்கு, திருமலை தளவாய் சேதுபதி காத்த தேவர் 25/1/1658ல் காளையார் கோவில் சீமையில் ஆனையேறி வயல், சூரநேம்பல், கீளைச்சூரநேம்பல், மாவூரணி, திருப்பராதியான் வூரணி, பெரிய நேந்தல் ஆகிய ஊர்களை புத்ர, பெளத்ர பாரம்பரியமாக சந்திராதித்திய சந்திரப்பிரவேசமாக சறுவ மான்னியமாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளச் செய்தார்.

                    2)1684ல் சுந்தரபாண்டியன் பட்டணத்துக்குள் உள்ள அக்ரகாரம், மடம், ஏகாம்பர நாதர் கோவில் பூசைக்காக எட்டு கிராமங்கள் – புல்லூரும், மருதூரும் உள்ளிட்ட- அக்ரகாரத்துக்காக வழங்கப்பட்டன.

                    3)ரகுநாத சேதுபதியால், 13-1-1682ல் முருகப்பன் மட தர்மத்துக்கும், அக்ரகாரத்துக்கும் கொடையாகத் திருப்பொற்கோட்டை, பகையனி, பிராந்தனி ஆகிய ஊர்கள் கொடையளிக்கப்பட்டன.

                    4) 1709ல் கிழவன் சேதுபதியின் 47 மனைவியரில் அரசியான காதலி நாச்சியார், குமரண்டூர் வீரமநல்லூரில் இருந்த வெங்கடேசுவரய்யன் மகன் சங்கர நாராயணய்யனுக்கு தேர்போகி நாட்டு களத்தூரின் 55 சதவீத நிலத்தை இறையிலியாகத் தந்தார்.

                    5) விசய ரகுநாத சேதுபதி, 1719ல் காக்குடி, கணபதியேந்தல் எனும் 2 ஊர்களை கற்றறிந்த அந்தணருக்குத் தானம் செய்தார்.

                    6) முத்து விசய ரகுநாத சேதுபதி 1722ல் காஸ்யப கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்த யசுர்வேதம் தாதாசிவன் என்பார் மகன் ரகுநாதக்குருக்கள் எனும் அந்தணருக்கு ‘பால்குளம் ‘ எனும் ஊரைக் கொடையளித்தார்.

                    7)சிவகங்கை பிரதானி தாண்டவராயன் தனது தர்மத்தின்பொருட்டு, 1727ல் சங்கரய்யர் பேரன் வேங்கிட கிருட்டிண அய்யரிடத்தில், சேதுமூலத்தில் ஆதிசேது நவ பாஷாணத்தின் கிழக்கே தோணித்துறை சத்திரக்கிராமம் தேர்போகித்துறையில் நிலதானம் அளித்து, அக்கிரகாரம் கட்டிக்கொள்ள அனுமதி தந்தார்.

                    8)1731ல் குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, கற்றறிந்த அந்தணர்கள் 24 பேருக்கு ராமநாதபுரம், பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அக்கிரகாரம் அளித்துள்ளார்.

                    9) 1737ல் காசியப கோத்ரம், ஆசிவிலயன சூத்திரம் ரிக்வேதம் பயின்ற கலாநிதி கோனய்யர் மகன் ராமனய்யருக்கு கோவிந்த ராச சமுத்திரம் எனும் முதலூரை, ரகுநாத சேதுபதியின் மருமகன் தானம் செய்தார்.

                    10) முத்து விசய ரகுநாத சேதுபதி 1760ல் உத்திரகோச மங்கை மங்களேஸ்வர சுவாமி கோவில் ஸ்தானிகரான ராமலிங்க குருக்கள் மகன் மங்களேஸ்வரக் குருக்களுக்கு கருக்காத்தி கிராமம் கொடையளிக்கப்பட்டது.

                    செப்பேடுகளை வாசிக்க, வாசிக்க, தானமாய்த் தந்த ஊர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

                    முத்து விசய ரகுநாத சேதுபதி சூரிய கிரகணத்துக்காக, 1762ல் சின்ன நாட்டான், பெரிய நாட்டான் ஊர்களைக் கற்றறிந்த அந்தணருக்குத் தந்தார்.
                    பரத்வாஜ கோத்திரம் ஆவஸ்தம்ப சூத்திரம் யஜூர் வேதம் வல்ல அவதானம் செய்ய வல்ல சேஷ அவதானியின் மகன் சந்திரசேகர அவதானிக்கு 1763ல் அரியக்குடியை தானம் செய்தார்
                    .
                    தண்ணீர்ப்பந்தல், அன்னதானமடம், அக்ரகாரம் ஆகியன வேதாளை கிராமத்தில் இருந்தன. இத்தர்மங்கள் தொடர, ரெங்கநாதபுரம் வெங்கிட நாராயண அய்யங்காருக்கு ‘அனிச்சகுடி ‘ 1768ல் முத்துராமலிங்க சேதுபதியால் வழங்கப்பட்டது.

                    இச்சேதுபதிதாம் 1772ல் கப்பம் கட்ட முடியாத காரணத்தால் நவாப் வாலாஜா முகம்மது அலியால் திருச்சியில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்,கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். வரிகட்ட முடியாமைக்கு கம்பெனி எதிர்ப்பு ஒரு காரணமானாலும், தான தருமங்களால், அரசின் வருவாயும் குறுகிக்கொண்டே போனதும் முக்கியக் காரணமாய் இருந்தது.

                    1781ல் சிறை மீண்டு வந்து, அமாவாசை புண்ணிய நாளில், அனுமனேரிக்கிராமத்தை கற்றறிந்த அந்தணர் 10 பேருக்கு அளித்தார். 1782ல் அய்யாசாமிக்குருக்களுக்கு சொக்கானை, மத்திவயல் ஊர்களையும், திருப்புல்லாணியில் உள்ள புருசோத்தம பண்டிதர் சத்திரத்தில் பிராமணருக்கு அன்னமிட கழுநீர் மங்கலம் ஊரையும்,1782ல் யஜூர் வேதம் வல்ல ராமசிவன் மகன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டிக்கிராமத்தின் பாதியையும், 1783ல் யஜூர் வேதம் கற்ற கிருஷ்ணய்யங்காருக்கு செப்பேடுகொண்டான் எனும் ஊரையும் தந்தார்.

                    ஆதாரத்துக்கும் அதிக விவரங்கலுக்கும் பார்க்க.

                    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20603171&format=print&edition_id=20060317

                    • தஞ்சாவூர் ராஜா 100 பிராமணர்களுக்கு தானம் செய்தது போல், காசியைப் போன்றே இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களுக்கு ராமேஸ்வரம் ஒரு புனித யாத்திரைத் தலம்.. அதன் காவலர்களான இராமநாதபுர சேதுபதி மன்னர்கள் சுமார் ஒரு 1000 பிராமணர்களுக்கு தானம் செய்திருக்கிறார்கள் என்று செப்பேடுகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.. தமிழகத்தில் உள்ள மிச்சப் பிராமணர்களுக்கு யார் என்ன செய்தார்கள் என்று கண்டுபிடித்துச் சொன்னால் ஏன் பிராமணர்களிடையே வர்க்கங்கள் நிலவுகிறது என்று தெரியவரும்..

              • \\அயோக்கியத்தனம், பித்தலாட்டம், தோலுரித்தேன், வெங்காயம் உரித்தேன் என்று வார்த்தைகளைப் போட்டு வதைப்பதைப் போல், //

                \\கேள்விகளுக்கு பதில் சொல்வதைவிட்டுவிட்டு என்னை பித்தலாட்டம், மோசடி, அயோக்கியத்தனம் உள்ளவனாக சித்தரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருப்பது நீங்கள்தான்..//

                ”வெங்காயம் உரித்தேன்” இந்த நக்கலை வெகுவாக ரசிக்கிறேன் .நல்ல நகைச்சுவை.ஆனால் என்ன தோலுரிப்பது எனக்கு பொருந்தும் .வெங்காயம் உரிப்பது உங்களுக்கு பொருந்தும்.

                ஆம் உங்கள் வாதம் பித்தலாட்டமானது என விமர்சித்தேன் .எதற்காக .இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு நான் கொம்பு சீவுவதாக குற்றம் சாட்டினீர்கள் .இல்லை அப்படி இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு வெறியூட்டும் வகையில் நான் எழுதியதில்லை.இருந்தால் எடுத்துக்காட்டுங்கள் என்று சொல்லி உங்கள் வாதம் பித்தலாட்டம் என்று சொன்னேன் .இல்லாததை இருப்பது போல் இட்டுக்கட்டுவது பித்தலாட்டம் என்றுதான் நான் நெனச்சுக்கிட்டு இருக்கேன் .உங்க ஊர்ல அதை எப்படி சொல்லுவீங்க .

                உங்கள் வாதம் அயோக்கியத்தனம் என விமர்சித்தேன்.எதற்காக.திராவிட இயக்க தோழர்களை கொலைகாரர்கள் என அபாண்டமாக பழி சுமத்திநீர்கள் .அவர்களது ஒரு நூற்றாண்டு கால பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு பார்ப்பனர் கூட கொல்லப்பட்டதில்லை என்பதை எடுத்துக்காட்டி அதை மறுத்து உங்கள் வாதம் அயோக்கியத்தனமானது என விமர்சிக்கிறேன்.பின்னே அணிநாயமாக கொலை பழி சுமத்தும் உங்களை போற்றி புகழவேண்டும் என எதிர் பாக்குறீங்களா .செய்யாத குற்றத்துக்காக பழி சுமத்துவது அயோக்கியத்தனம் இல்லையா .

                • சூடானில் பஞ்சம் வந்தாக்கூட பார்ப்பான் மேல் பழி சுமத்துவதை வழக்கமாகவே கொண்டிருப்பது மட்டும் யோக்கியத்தனமா.

                  • \\சூடானில் பஞ்சம் வந்தாக்கூட பார்ப்பான் மேல் பழி சுமத்துவதை வழக்கமாகவே கொண்டிருப்பது மட்டும் யோக்கியத்தனமா.//

                    இது போன்று பார்ப்பனர்கள் மேல் அபாண்டமாக பழி சுமத்தி ஏற்கனவே எழுதி இருந்தாலோ எதிர்காலத்தில் எழுதினாலோ அதை சுட்டிக்காட்டி இது அயோக்கியத்தனமில்லையா என்று கேட்டு எம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துங்கள் .இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்பது நீங்கள்தான் .

                    • எம்மை என்று யாரைச் சொல்கிறீர்கள்..?! அன்புவாகிய உங்களையா, உங்களுக்குள் இருக்கும் பல ரூபங்களையா, உங்கள் திராவிட இயக்கத் தோழர்களையும் சேர்த்தா..?! முந்தைய பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டது திராவிட இயக்கத்தினரின் அவதூறுகளை..

                    • \\முந்தைய பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டது திராவிட இயக்கத்தினரின் அவதூறுகளை..//

                      அன்புவோ,வினவுவோ,திராவிட இயக்க தோழர்களோ யார் அந்த ”அவதூறுகளை” சொல்லியிருந்தாலும் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டலாமே.

                    • கட்டாயமாக.. அதற்குமுன் தெரிந்து கொள்ள வேண்டியவை :

                      திராவிட இயக்கத்தின் அவதூறுகள் தான் அவர்கள் கூறும் உண்மைகளைவிட அதிகம்.. அதன் தத்துவார்த்த அடிப்படை எதுவென்றால் :

                      ” நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல உங்கள் மனசாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டியதுதான். “ – பெரியார், மே 1948-ல் நடந்த தூத்துக்குடி மாநாடு.

                    • முதல்ல அந்த அநத ”அவதூறுகளை” ஆதாரத்தொட சொல்லுங்க.அப்புரம் அதன் தத்துவார்த்த அடிப்படை பத்தி பெசலாம்.

    • கண்முடித்தனமான பார்பனிய எதிர்ப்பு தற்போது போலி என நிருபிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் டிஎன்எ 60000 வருடங்களாக மாறவில்லை. கடவுள் இல்லை என நம்புவர்கள் இந்த டிஎன்எ பதிவைப் படிக்கலாமே..

      ஆனா பிரச்சனை என்னா இந்த மக்களுக்கு டிஎன்எ என்ன என்று தெரியாது.. நமக்கு பார்ப்பான் எதிர்ப்புதான் முக்கியம்.நம்பள்கி மாதிரி ஆயிரம் பேர் வந்தாலும் இவங்களத் திருத்தமுடியாது..

      தயவு செய்யு பதில் எழுதும்போது தகுந்த மேற்கோள்கள் காட்டி, நான் கொடுத்த சுட்டிகளை ஆங்கிலப் புலமை இருந்தால் படித்து அறிவுப்புர்வமாக அறிவியல் ரீதியாக ஆரியர்கள் வந்தோரிகள் என நிருபிக்கலாமோ…

      http://www.archaeologyonline.net/artifacts/genetics-aryan-debate.html

      All Indians have the same DNA structure. No foreign genes or DNA has entered the Indian mainstream in the last 60,000 years,” Dr Chaubey said.
      Dr Chaubey had proved in 2009 itself that the Aryan invasion theory is bunkum. “That was based on low resolution genetic markers. This time we have used autosomes, which means all major 23 chromosomes, for our studies. The decoding of human genome and other advances in this area help us in unraveling the ancestry in 60,000 years,” he explained.

      • ஆவியெழுப்பும் கூட்டங்கள் நடத்தி குருடர்கள் பார்க்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் என்று ஏமாத்தி பிழைக்கும் பித்தலாட்ட பேர்வழிகள் பின்னால் ஆட்டு மந்தை போல் அலையும் படிச்ச முட்டாள்கள் எல்லாம் எங்களை பாத்து அறிவியல் தெரியுமா ஆங்கிலம் தெரியுமா ன்னு சவுண்டு வுட என்ன யோக்கியதை இருக்கு.போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவரையோ செவிட்டு ஊமை ஒருவரையோ எந்த அற்புதமும் குணமாக்க முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத மூடர்கள் DNA பற்றி பேசுவது என்ன ஒரு விந்தை.

        இது குறித்து ஏற்கனவே வினவில் விவாதம் நடந்துள்ளது போய் படித்துக் கொள்ளவும்.

        https://www.vinavu.com/2012/07/31/gujarat-sit/#comment-66041

        https://www.vinavu.com/2012/07/31/gujarat-sit/#comment-66066

        உடனே அதுக்கு பதில் சொல்லி இருக்கேன் நீங்க பதில் சொல்லன்னு அம்பி ஓடி வரலாம்.அவருக்கு இப்பவே சொல்லிர்றேன்.அந்த விவாதத்துல அம்பி சொல்ற .scandalous ன்னு எப்படி சொல்றாங்கன்னு பார்க்கவும்.

        \\ I mean, if I find three ancient clusters in Eastern Europe, Southern Siberia and Hindustan, of which I have no direct proof that they are recently related, then I would normally conclude that the dispersal of these people took place already in ancient times.//

        அதாவது எந்த காலகட்டத்துல இடப்பெயர்ச்சி நடந்ததுங்கிரதுல கருத்து வேறுபாடு.இடப்பெயற்சி நடக்கவேயில்லன்னு சொல்லப்படவில்லை.

        • அன்பு நான் எந்தவொரு மதத்தையும் வம்புக்கு இழுக்கவில்லையே…

          டிஎன்எ ராக்கெட் கணிணி என பல்வேறு தொழில் நூட்பங்களை நீங்கள் சொல்லித்திரியும் கிறித்தவ நாடுகள் தந்ததுதான்.

          அதாவது சுமார் 500 வருடங்கள் முன் வந்த இந்தியா வந்த இஸ்லாத்தையும். 100 வருடங்கள் முன் வந்த கிறித்தவர்களையும் ஏற்றுக்கொள்ளும் நீங்கள்.. சுமார் 3000 வருடங்கள் முன் வந்தவர்களாக் கருதப்படும் ஆரியர்களை இன்னும் வந்தோரிகள் நாடோடிகள் என இழிபடுத்தும் நோக்கத்தை அறியலாமா..

          சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு கொள்கையுடைய நீங்கள் ஏன் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே செல்ல போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன..

          கடவுள் மறுப்பு கொள்கையுடையவனுக்கு கோயிலில் என்ன வேலை….

          பின்குறிப்பு.. நான் கிறித்தவன் என்று இதுவரை சொல்லவில்லை.. சொல்லிக்கொள்ளும் வழக்கமும் இல்லை…

          • பூமி தட்டையானது, நிலையானதுனு நம்புமிக்கொண்டு அழையும் அறிவாளி மற்றவனை முட்டாள் என்று சொல்லுது, DNA பற்றியெல்லாம் பேசுது!

            ராசா, நீங்கள் முதலில் உங்க UNCLE கிட்ட போய் சொல்லுங்கள் ”பைபிள் வெறும் கட்டுகதை , கலிலியோ 400 ஆண்டுக்கு முன்னறே பைபிளை கிழிகிழியென்று கிழித்து விட்டார், அதனால் ஊரை ஏமாற்ற வேண்டாம்” என்று சொல்லுங்க இங்கவந்து, வகுப்பெடுக்க வேண்டாம்!

            ///டிஎன்எ ராக்கெட் கணிணி என பல்வேறு தொழில் நூட்பங்களை நீங்கள் சொல்லித்திரியும் கிறித்தவ நாடுகள் தந்ததுதான்.///

            இந்த பிரச்சாரம் செய்யும் புத்தி போகமாட்டேங்குது, ஒருவேளை (Gene) ஜீன்லே கலந்திருக்குமோ?

            ///சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு கொள்கையுடைய நீங்கள் ஏன் கோயில்களில்தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே செல்ல போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன..///

            இதை புரியும் அளவுக்கு அறிவு இருந்தால் நீங்கள் ஏன் இப்படி பேச போரிங்க……

          • சில நாட்களுக்கு முன்பு D.G.S.தினகரனுக்காக மூச்சை பிடித்துக் கொண்டு வாதம் பண்ணிய கல்லு இப்போ வந்து கிறித்துவன் இல்லைன்னு சொன்னா நம்ப முடியலையே .சரிஅது என்னவா இருந்தா எமக்கென்ன.ஏமாத்து பேர்வழிகள் பின்னால் புத்தியின்றி போகின்றவர்கள் மத்தவங்களை பாத்து இளக்காரமா பேசும்போது உண்மையை குத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. இருக்கட்டும்.இப்போ எழுதுன மறுப்பை பத்தி பாக்கலாம்.

            \\அதாவது சுமார் 500 வருடங்கள் முன் வந்த இந்தியா வந்த இஸ்லாத்தையும். 100 வருடங்கள் முன் வந்த கிறித்தவர்களையும் ஏற்றுக்கொள்ளும் நீங்கள்.. சுமார் 3000 வருடங்கள் முன் வந்தவர்களாக் கருதப்படும் ஆரியர்களை இன்னும் வந்தோரிகள் நாடோடிகள் என இழிபடுத்தும் நோக்கத்தை அறியலாமா..//

            நரித்தந்திரத்துல கைதேறுனவர் போல இருக்கே.இஸ்லாமும் கிருத்தவமும் இந்தியாவுக்கு வந்தவை.உண்மை.ஆனால் அம்மதங்களை பின்பற்றுபவர்கள் வந்தவர்கள் அல்ல.ஏற்கனவே இங்கு இருந்தவர்கள்தான் அவர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள் என யாரும் ஏற்க வேண்டியதில்லை.உண்மையே அதுதான்.பார்ப்பனர்களை வந்தேரிகள் ன்னு இழிவு படுத்துவது எமது நோக்கமில்லை .இது பத்தி கொடுத்த சுட்டியிலேயே சொல்லி இருக்கிறேன்.
            பார்க்க
            https://www.vinavu.com/2012/07/31/gujarat-sit/#comment-66041

            பார்ப்பனர்கள் வந்தேறிகள் என்று சொல்றது அவர்களை இந்த நாட்டை விட்டு வெளிஏத்தணும் என்ற கெட்ட நோக்கத்தில் அல்ல.பிற பிரிவு மக்களை போல அவர்கள் இந்த நாட்டில் வாழ சகல உரிமைகளும் படைத்தவர்கள்.நானூறு ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் வந்து குடியேறிய தெலுங்கு கன்னட மொழி பேசும் மக்களையே தமிழினம் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த பார்ப்பனர்கள் வெளியே போகட்டும் என சொல்வதில்லை. அவர்களை வந்தேறிகள் என ஏன் ”சொல்லிக்”காட்ட வேண்டியிருக்கிறது என்றால் பிற பிரிவு மக்களை கொல்லனும் தொரத்தனும் என்று வெறியாட்டம் போடும்போது ”நீயே வந்தேறி உனக்கு ஏது அந்த உரிமை” என கேட்க வேண்டியிருக்கிறது.

            • //சில நாட்களுக்கு முன்பு D.G.S.தினகரனுக்காக மூச்சை பிடித்துக் கொண்டு வாதம் பண்ணிய கல்லு இப்போ வந்து கிறித்துவன் இல்லைன்னு சொன்னா நம்ப முடியலையே//

              ஐயா சாமி… நான் அங்கு வாதம் பண்ணியது கல்விக்கட்டணம் மற்றும் நிலமதிப்பு பற்றி கதைவிட்ட ஓருவருக்காக என் கல்விக்கட்டணம் மற்றும் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவாத்தில் காருன்யா யார் யாரிடம் வாங்கியது என்ற விவரம் அடங்கிய ஆதாரங்களை வெளியிட்டதுதான்.

              இதில் பைபிளில் ஓர் வார்த்தை கூட மேற்கோள் காட்டவில்லை. ஏன் பைபிளில் சொல்லியது என்று பிரங்கம் கூட செய்யவில்லை. என் பெற்றோர் மதத்தினால் நானும் அந்த மதங்களை பின்பற்ற வேண்டும் அவசியம் எனக்கு இல்லை.

              //”நீயே வந்தேறி உனக்கு ஏது அந்த உரிமை” என கேட்க வேண்டியிருக்கிறது.//

              2009 மற்றும் 2011 ஆண்டில் அறிவியல் ஏடுகளான american human genetic journals களில்
              60000 வருடங்களாக இந்தியர்களின் டிஎன்எ மாறவில்லை என்பதும். 1930களில் திராவிட இயக்கத்தால் பரப்பப்பட்ட ஆரிய எதிர்ப்பு வந்தேரி என செல்லப்பட்ட வதந்திகள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் ஆரிய இடப்பெயர்ச்சி இல்லை என்பது நிருபனம் ஆகியுள்ளது..

              http://www.cell.com/AJHG/abstract/S0002-9297%2811%2900488-5

              திராவிடனும் ஆப்பிர்க்காவை சேர்ந்தவர்கள்தான்.நாமும் வந்தயேறியவர்கள் தானே. கீழேயுள்ள அட்டவனைகளை பார்கவும்.

              http://www.archaeologyonline.net/indology/2007/horse/map-genetic.jpg
              http://www.archaeologyonline.net/indology/2007/horse/genetic-distance.jpg

              • கல்நெஞ்சம்,

                நண்பர் அன்பு அறிவியல் என்று பேசுவாரே தவிர தனது திராவிடக் கொள்கைக்கு எதிரான அறிவியல் ஆதாரங்களை மதிக்கமாட்டார் என்பது என் அனுபவம்.. இதற்கும் பதிலுக்கு நான்கைந்து பழைய பதிவுகளின் சுட்டிகளைப் போட்டு சுற்றவிடுவார்..

          • \\டிஎனெ ராக்கெட் கணிணி என பல்வேறு தொழில் நூட்பங்களை நீங்கள் சொல்லித்திரியும் கிறித்தவ நாடுகள் தந்ததுதான்.//

            தம்பி நீங்க இன்னும் வளரனும்.அறிவு எனபது மனித குலத்தின் பொது சொத்து.மனித இனத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு கால கூட்டு முயற்சியில் விளையும் செல்வம் அது.அதற்கு உரிமை கோர தனிப்பட்ட எந்த ஒரு நாட்டுக்கும் மதத்துக்கும் இனத்துக்கும் உரிமையில்லை.

            \\சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு கொள்கையுடைய நீங்கள் ஏன் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே செல்ல போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன..

            கடவுள் மறுப்பு கொள்கையுடையவனுக்கு கோயிலில் என்ன வேலை….//

            வினவில் இந்து மதம் னு இடது பக்கம் உள்ள பிரிவை தேர்ந்தெடுத்து படிச்சுட்டு வாங்க

          • ஒரு தரப்பு மக்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்வது இழிவாக தெரியவில்லை அதுவே ‘வந்தேரிகள்’ என்று சொல்வது இழிவாக தெரிகிறதா?
            என்ன ஒரு கிரிமினல் புத்தியா உமக்கு?

            //சொல்லிக்கொள்ளும் வழக்கமும் இல்லை…//
            என்னமோ பெரிய அறிவாளி ஒருவர் தன்னடக்கத்துடன் நான் ஒரு அறிவாளி என்று சொல்லிகொல்வது இல்லை என்று சொல்வது போல் நீங்கள் சொல்வது சிரிப்பா இருக்கு,
            நீங்கள கிறிஸ்துவன் என்று சொன்னாலும் யாரும் மதிக்கபோவது இல்லை. சரி அதவிடுங்க இந்த வினவு ஒரு முறை RSSகாரர்கள் ஒரு பாதிரியார் குடும்பத்தை எரித்ததை கண்டித்தது அன்று நீங்கள் எங்குசென்றீர்கள் பார்ப்பீனியத்து ஆதரவு தராமல்?

            • //RSSகாரர்கள் ஒரு பாதிரியார் குடும்பத்தை எரித்ததை கண்டித்தது அன்று நீங்கள் எங்குசென்றீர்கள் பார்ப்பீனியத்து ஆதரவு தராமல்///

              Graham Stuart Staines மற்றும் அவரது இரன்டு குழந்தைகளை உயிரோடு கொழுத்தியவர்களை மன்னித்து விட்டோம். அவர்களை கொழுத்திய கும்பலின் தலைவன் பெயர் Dara Singh (Ravinder Kumar Pal) இதில் pal என்பது சாதி பெயர். வேண்டுமானால் pal பார்பனியத்தில் எந்த சாதி என்று சொல்லமுடியுமா. வேண்டுமானல் எனது கல்லுரியில் என்னுடன் படிக்கும் pal இன மாணவனிடமும் கேட்டு அறியலாம்.. .

              மன்னித்துவிட்டோம் அவர்களை..அந்த அறிக்கையை படிக்கவும்..
              http://www.lifepositive.com/mind/ethics-and-values/forgiveness/gladys-staines.asp

              தயவுசெய்து இந்த சுட்டி மதம் பரப்பது அல்ல..அது என் நோக்கும் அல்ல.. மன்னித்துவிட்டோம் என்பதை ஆதாரத்துக்காக தான் தவிர வேறு எந்த உள்நோக்குமும் இல்லை..இது இனவெறியல்ல ஆதாரங்களுக்காக.

              • உமக்கு ஒவ்வொனறையும் புரியவைக்க முடியாது, பார்ப்பீனியத்திற்கு ஜால்ராபோட்டுகிட்டே இருக்கவும்!

                நிறைய மக்கள் பார்ப்பீனிய கொடூரம் தாங்க முடியாமல் தான் கிறிஸ்த்துவ மதத்தை நாடிவந்தார்கள், ஆனால் அங்கேயும் உம்மைபோல் பார்ப்பன அடிவருடி இருப்பது தெரியாமல்….

                ஒன்று மதம், கடவுள் என்ற மூட நம்பிக்கையை பற்றி பேசும் இல்லை அறிவியலை பற்றி பேசும் இரண்டையும் உமது கருத்துக்கெல்லாம் ஒத்துபோவது போல் சோடிக்க வேண்டாம்.

                • //ஒரு தரப்பு மக்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்வது இழிவாக தெரியவில்லை அதுவே ‘வந்தேரிகள்’ என்று சொல்வது இழிவாக தெரிகிறதா?//

                  பிற இனத்தை இழிவாக பேசும் நீ.. உன் இனத்தை எப்படி அழைக்கலாம் என நானும் பதிலுக்கு சொல்லாமா..

                  நீயும் அவர்களைப் போல் படித்து முன்னேராமல் எல்லோரையும் இழிவாய் எவ்வளவு காலம் பேசிக்கொனண்டே இருப்பாய்..

                  • நீங்கள் புத்தி சொல்லும் அளவிற்கு இங்கு யாருமில்லை.

                    உமது விவாதத்திலிருந்தே தெரிகிறது உங்கள் நரிதனம்……..

                    உங்களது முன்னுக்குபின் முரணான கருத்துக்களை நீங்களே ஆய்வு செய்து பாருங்கள் புரியும்…….

                    • அதுசரி நீங்கள் திராவிடக் கொள்கைகளையும் அறிவியலையும் மீது நம்பிக்கையுடையவர்கள் தானே..

                      ஆரிய இடப்பெயர்ச்சி குறித்த journals, scientific evidence, gene conference, research ஆவணங்களை உங்கள் திராவிட கம்யுனிச கட்டுரைகள் எத்தனை அறிவியல்புர்வமாய் உள்ளது..

                      நீங்கள் அதாவது உங்கள் திரவிட இயக்கம் மேற்கொண்ட டிஎன்எ சோதனைகள் genetic mapping gene analysis பற்றி கட்டுரை சுட்டிகளைக் கொடுக்கவும்..

                      1930 முதல் தற்போது வரை நடைபெற்ற அறிவியல் புர்வமான முடிவுகளை கொடுக்கலாமே….

              • தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்க சக்தி இருந்தும் அப்படி செய்யாமல் விட்டு விடுவதுதான் மன்னிப்பு என பொருள்படும்.எதிரியின் ஒரு முடிக்கு கூட சேதாரம் விளைவிக்க முடியாதவன் மன்னிக்கிறேன் எனபது கேலிக்கூத்து. அந்த தீயவனை நல்வழிப்படுத்த பயன்படுகிறது என்று பார்த்தாலும் சங்க பரிவார் கும்பலை திருத்துவது எனபது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பானது.மதவெறியர்களை மன்னிப்பது விழலுக்கு இறைத்த நீர்.

                பாதிரியார் எரித்து கொல்லப்பட்டதை அவர் மனைவி ”மன்னித்த” பின்னர்தான் குஜராத்தில் டாங் மாவட்டத்தில் கிருத்துவர்கள் ஆதிவாசிகளை மதம் மாற்றுகிறார்கள்ன்னு மத வெறியாட்டத்தை சங்க பரிவார் கும்பல் கட்டவிழ்த்து விட்டது.நீங்க ”மன்னிச்ச”பிறகுதான் அதே ஓடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிருத்துவர்களை தொரத்தி தொரத்தி வேட்டையாடியது சங்க பரிவார் கும்பல்.கிருத்துவ கன்யாஸ்திரீகளை கேங் ரேப் செய்தார்கள்.

                உம்மை போல் மானம் கெட்டவர்கள் வேண்டுமானால் அதை மன்னிக்கிறேன் என உளறி திரியலாம்.பழி தீர்க்கவும் வக்கற்றவர்கள் நீங்கள்.அதற்கு நாங்கள்தான் வர வேண்டும்.புரட்சிகர ஜனநாயக சக்திகள் தலைமையில் உழைக்கும் மக்களாகிய நாங்கள்தான் மதவெறியர்களை எந்த தெருக்களில் எம்மக்களை கொன்றோழித்தார்களோ அதே தெருக்களில் களம் அமைத்து மோதி வீழ்த்துவோம்.

                • // தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்க சக்தி இருந்தும் அப்படி செய்யாமல் விட்டு விடுவதுதான் மன்னிப்பு என பொருள்படும்.எதிரியின் ஒரு முடிக்கு கூட சேதாரம் விளைவிக்க முடியாதவன் மன்னிக்கிறேன் எனபது கேலிக்கூத்து. //

                  எதிரி வல்லானோ, புல்லானோ மன்னிப்பதைத்தான் அவர்கள் கர்த்தர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.. இதை உணரும் இந்துக்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பது பெருகும்..

                  // உம்மை போல் மானம் கெட்டவர்கள் வேண்டுமானால் அதை மன்னிக்கிறேன் என உளறி திரியலாம்.பழி தீர்க்கவும் வக்கற்றவர்கள் நீங்கள். புரட்சிகர ஜனநாயக சக்திகள் தலைமையில் உழைக்கும் மக்களாகிய நாங்கள்தான் மதவெறியர்களை எந்த தெருக்களில் எம்மக்களை கொன்றோழித்தார்களோ அதே தெருக்களில் களம் அமைத்து மோதி வீழ்த்துவோம். //

                  சிலுவைப் போராளிகளும், KKK பாணி தீவிரவாதிகளும் ஏற்கனவே இருக்கும் இந்து, முஸ்லீம் தீவிரவாதிகளுக்குப் போட்டியாக களமிறங்கினால், உங்கள்(?) புரட்சி அம்பேலாவது உறுதி… கொம்பு சீவுவதை நிறுத்தவே முடியாதா..?!

                  • \\ கொம்பு சீவுவதை நிறுத்தவே முடியாதா..//

                    கொம்பு சீவுவதாகவும் ,கொலைகாரர்கள் என்றும் வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டது ரெம்ப வலிக்குதா அம்பி.எப்படியாவது ”கொம்பு சீவுவதாக” நிரூபிக்க நீங்கள் துடிப்பது புரிகிறது.

                    அங்கு நீங்கள் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு கொம்பு சீவுவதை நிறுத்துங்கள் என்று சொன்னீ ர்கள்.அப்பாவி இந்து பொது மக்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு வெறியூட்டும் வகையில் எழுதியதில்லை என்பதுதான் எமது வாதம்.

                    இங்கு எழுதிருப்பது அதற்கு நேர் எதிரானது. கிறித்தவ மக்களை வேட்டையாடி கொன்று ஒழிக்கும், கன்யாஸ்திரிகளை கேங் ரேப் செய்யும் இந்து மத வெறி சங்க பரிவார் கும்பலை மோதி வீழ்த்த மத வேருபாடு இன்றி உழைக்கும் மக்களை அணி திரட்டுவதற்காக எழுதப்பட்டுள்ளது.இந்து மக்கள் வேறு,இந்து மத வெறி கும்பல் வேறு இந்த வித்தியாசத்தை கூட உங்களுக்கு சொல்லி தர வேண்டுமா.

                    இந்து மத வெறி மட்டுமல்ல இஸ்லாமிய கிறித்தவ மதவெறி உள்ளிட்ட அனைத்து வகையான மத வெறியையும் மாயக்காமல் உழைக்கும் மக்களுக்கு அமைதியும் நல்வாழ்வும் சாத்தியமில்லை. ஆகவே மத வெறியர்களுக்கு எதிராக இந்த ”கொம்பு சீவுதலை” நீங்கள் கோபப்பட்டாலும் விடுவதாக இல்லை.

                    \\எதிரி வல்லானோ, புல்லானோ மன்னிப்பதைத்தான் அவர்கள் கர்த்தர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்..//

                    கடவுளுக்காக மன்னிப்பது என்றால் அவர் அதன் பொருட்டு நமக்கு நன்மை தருவார் என்று நம்பினால் அதை தங்கள் மனதோடு வைத்துக் கொள்ள வேண்டியதுதானே.பாதிரியாரின் மனைவி வேண்டுமானால் மன்னிக்கிறேன் என்று சொல்ல தகுதி உள்ளவர்.கல்நெஞ்சம் போன்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கு.எதுக்காக இணைய வெளியில மன்னிக்கிறோம்ன்னு போஸ்டர் ஒட்டி திரிய வேண்டும்.இதுவும் ஒரு பிரசாரமா.

                    \\இதை உணரும் இந்துக்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பது பெருகும்..//

                    எவ்வளவு அடிச்சாலும் தாங்குரானே ன்னு நீங்க ஆதரிப்பீங்கலாக்கும்.அப்ப கூட கொலை செய்யும் கற்பழிக்கும் மதவெறியர்களை நாங்கள் கண்டித்து தடுப்போம்னு சொல்ல உங்களுக்கு வாய் வரலையே.

                    கல்நெஞ்சம் மன்னிக்கிறாரே அவருக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கும் முகமாக ”கிருத்துவ மக்களை தாக்கிய, கன்யாஸ்திரிகளை கற்பழித்த அயோக்கியர்களை கண்டிக்கிறேன்” என்று சொல்லுங்களேன்.நம்ம அம்பி மதவெறியர்களை கண்டிக்கிராரே என்று வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெறும் மகிழ்ச்சியை நாங்களும் உணர்வோம்.

                    • // கொம்பு சீவுவதாகவும் ,கொலைகாரர்கள் என்றும் வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டது ரெம்ப வலிக்குதா அம்பி.//

                      ஆமா, குட்டி குட்டி கைதான் வலிக்குது..!

                      // எப்படியாவது ”கொம்பு சீவுவதாக” நிரூபிக்க நீங்கள் துடிப்பது புரிகிறது. //

                      கொம்பு சீவுவதைச் சுட்டிக் காட்டும்போதெல்லாம் துடிப்பது நீங்களே..

                      // பழி தீர்க்கவும் வக்கற்றவர்கள் நீங்கள் //

                      இதற்கு என்ன அர்த்தம்.. இந்து மதத்துக்காக என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தையே கேவலப் படுத்தும் இந்து மத வெறியர்களைப் போல் கொலை, கற்பழிப்பில் இறங்கவில்லையே என்றா..?!

                      // கடவுளுக்காக மன்னிப்பது என்றால் அவர் அதன் பொருட்டு நமக்கு நன்மை தருவார் என்று நம்பினால் அதை தங்கள் மனதோடு வைத்துக் கொள்ள வேண்டியதுதானே.பாதிரியாரின் மனைவி வேண்டுமானால் மன்னிக்கிறேன் என்று சொல்ல தகுதி உள்ளவர்.கல்நெஞ்சம் போன்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கு.எதுக்காக இணைய வெளியில மன்னிக்கிறோம்ன்னு போஸ்டர் ஒட்டி திரிய வேண்டும்.இதுவும் ஒரு பிரசாரமா. //

                      கிறித்தவர்களை கிறித்தவர்கள் அல்லாதவர்களைப் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.. இதைத் தானே இந்து மத வெறியர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்..?!

                    • \\ஆமா, குட்டி குட்டி கைதான் வலிக்குது..!//

                      உங்கள் வாதம் அயோக்கியத்தனமாகவும் பித்தலாட்டமானதாகவும் இருக்குன்னு உங்கள் வாதங்களை சுட்டிக்காட்டி சொல்லி இருக்கேன். பதிலுக்கு திராவிட இயக்கத்தினரின் ”அவதூறுகள்” யோக்கியததனமா எனறுதான் கேக்குரீங்களே தவிர நான் சரியாத்தா எழுதி இருக்கேன்னு சொல்ல முடியலே.அப்படின்னா குட்டுப்படுவது யார்.அம்பிதான்.

                      \\இதற்கு என்ன அர்த்தம்.//

                      அதான் அங்கேயே சொல்லிருக்கேனே,உங்களுக்கு தமிழ் தெரியும்தானே

                      ”.பழி தீர்க்கவும் வக்கற்றவர்கள் நீங்கள்.அதற்கு நாங்கள்தான் வர வேண்டும்.புரட்சிகர ஜனநாயக சக்திகள் தலைமையில் உழைக்கும் மக்களாகிய நாங்கள்தான் மதவெறியர்களை எந்த தெருக்களில் எம்மக்களை கொன்றோழித்தார்களோ அதே தெருக்களில் களம் அமைத்து மோதி வீழ்த்துவோம்.”

                      அப்பறம் கல்நெஞ்சம் மன்னிக்கிறாரே அவருக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கும் முகமாக ”கிருத்துவ மக்களை தாக்கிய, கன்யாஸ்திரிகளை கற்பழித்த அயோக்கியர்களை கண்டிக்கிறேன்”என்று சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு பதில் இல்லயே.இதான் ‘\\இதை உணரும் இந்துக்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பது பெருகும்..// இதற்கு அர்த்தமா

                    • // உங்கள் வாதம் அயோக்கியத்தனமாகவும் பித்தலாட்டமானதாகவும் இருக்குன்னு உங்கள் வாதங்களை சுட்டிக்காட்டி சொல்லி இருக்கேன். பதிலுக்கு திராவிட இயக்கத்தினரின் ”அவதூறுகள்” யோக்கியததனமா எனறுதான் கேக்குரீங்களே தவிர நான் சரியாத்தா எழுதி இருக்கேன்னு சொல்ல முடியலே.அப்படின்னா குட்டுப்படுவது யார்.அம்பிதான். //

                      அயோக்கியத்தனம், பித்தலாட்டம் என்று கூச்சலிடுபவரின் தரப்பினர் யோக்கிய சிகாமணிகளா என்று கேள்வி கேட்டால், எதிர்க் கேள்வி கேட்பதால் நீ அயோக்கியனே தான் என்று உங்கள் பித்தலாட்டத்தைத் தொடர்கிறீர்கள்..

                      //// அதான் அங்கேயே சொல்லிருக்கேனே,உங்களுக்கு தமிழ் தெரியும்தானே

                      ”.பழி தீர்க்கவும் வக்கற்றவர்கள் நீங்கள்.அதற்கு நாங்கள்தான் வர வேண்டும்.புரட்சிகர ஜனநாயக சக்திகள் தலைமையில் உழைக்கும் மக்களாகிய நாங்கள்தான் மதவெறியர்களை எந்த தெருக்களில் எம்மக்களை கொன்றோழித்தார்களோ அதே தெருக்களில் களம் அமைத்து மோதி வீழ்த்துவோம்.”

                      அப்பறம் கல்நெஞ்சம் மன்னிக்கிறாரே அவருக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கும் முகமாக ”கிருத்துவ மக்களை தாக்கிய, கன்யாஸ்திரிகளை கற்பழித்த அயோக்கியர்களை கண்டிக்கிறேன்”என்று சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு பதில் இல்லயே.இதான் ‘\\இதை உணரும் இந்துக்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பது பெருகும்..// இதற்கு அர்த்தமா /////

                      என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்காவது புரிகிறதா..?!

                    • //RSSகாரர்கள் ஒரு பாதிரியார் குடும்பத்தை எரித்ததை கண்டித்தது அன்று நீங்கள் எங்குசென்றீர்கள் பார்ப்பீனியத்து ஆதரவு தராமல்//

                      என்று நீ கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்தான்.அந்த பதில்களிலே நான் இதை ஆதாரங்களுக்கத்தான் அந்த சுட்டியை இணைத்தேன். இதை அந்த கருத்தை வெளியிடும் போதே ஆதாரங்களுக்கத்தான் என்பதை பின்குறிப்பில் தெரிவித்தும் இருந்தேன்..

                      பாதிரியாரையும் அவர்களது மகன்களை கொன்றவர்கள் மற்றும் வேறு சம்பத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த சிஸ்டர்களையும் கற்பழித்தவர்கள் SC மற்றும் ST இனத்தை சேர்ந்தவர்கள். சிஸ்டர்களின் பெயர்களைக் கூறி அவமானம் செய்யவிரும்பவில்லை.

                      எனவே இந்த கருத்துக்கு ஆதார இணைப்புகள் தேவை இல்லை.

                    • \\அயோக்கியத்தனம், பித்தலாட்டம் என்று கூச்சலிடுபவரின் தரப்பினர் யோக்கிய சிகாமணிகளா என்று கேள்வி கேட்டால், எதிர்க் கேள்வி கேட்பதால் நீ அயோக்கியனே தான் என்று உங்கள் பித்தலாட்டத்தைத் தொடர்கிறீர்கள்..//

                      எதிர் கேள்வி கேட்பது அயோக்கியத்தனம் என்று யாராவது சொல்வார்களா.என்ன பேசுறீங்க அம்பி.உங்க விதண்டாவாதத்துக்கு ஒரு அளவில்லையா.குறிப்பா உங்க வாதத்தை சுட்டிக்காட்டித்தான் இந்த குற்றசாட்டை வைக்கிறேன்.

                      \\கூச்சலிடுபவரின் தரப்பினர் யோக்கிய சிகாமணிகளா என்று கேள்வி கேட்டால்,//

                      போற போக்குல யார் வேணும்னாலும் யார் மீதும் குத்தம் சொல்லலாம்.தக்க சான்றுகளோடு அதை substantiate பண்ணாத வரைக்கும் அதுக்கு ஒரு மதிப்பும் இல்லை.

                      \\என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்காவது புரிகிறதா..?!//

                      முதல் பகுதிக்கு உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சுருக்கு.அதுனாலதான் சந்தானத்துக்கு சொன்ன பதில்ல அதை மேற்கோள் காட்டியிருக்கீங்க.ரெண்டாவது பகுதிக்கு அர்த்தம்.

                      ”எதிரி வல்லானோ, புல்லானோ மன்னிப்பதைத்தான் அவர்கள் கர்த்தர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.. இதை உணரும் இந்துக்கள் இவர்களுக்கு ஆதரவளிப்பது பெருகும்.” இது நீங்கள் எழுதுனது.

                      கல்நெஞ்சம் கர்த்தர் சொன்னபடி மன்னிக்கிறார்.நீங்கள் சொன்னபடி இந்துக்கள் ஆதரவுக்கு அடையாளமா ”கிருத்துவ மக்களை தாக்கிய, கன்யாஸ்திரிகளை கற்பழித்த அயோக்கியர்களை கண்டிக்கிறேன்”என்று சொல்லுங்களேன் என்று உங்களுக்கு வேண்டுகோள் வைத்தேன்.அதுக்கு பதில் எதுவும் இல்லையா என்றுதான் கேட்கிறேன்.

                  • அம்பி என்ன சொல்லுறாருன்னா நாங்க வெட்டுவோம் குத்துவோம், அப்படித்தான் செய்யுவோம். வெட்டு வாங்கினவனும் குத்து வாங்கினவனுமே சும்மா அடங்கிப் போகும்போது நீங்க ஏன்யா இடையில வந்து கொம்பு சீவி வுடறீங்க. நாங்க வெட்றதுனாலயா பிரச்சினை வருது? நீங்க கொம்பு சீவி விடுறனாலதான் பிரச்சினையே வருது. அதனால இனிமே யாரும் வினவாதீங்கன்னு சொல்லுறாரு. குறிப்பா மனுசனா இருக்காதீங்க ஆடு மாதிரி பே..ன்னு இருங்கன்னு சொல்லுறாரு.

                    • கணிணி முன்னால் உட்கார்ந்து கொண்டு களம் பல கண்டவர்களே..!

                      மன்னித்துவிட்டோம் என்று சொல்பவர்களை ”பழி வாங்கு, நாங்கள் இருக்கிறோம், விடமாட்டோம்” என்று இப்படி வீரம் பேசுவது எளிது.. :

                      // பழி தீர்க்கவும் வக்கற்றவர்கள் நீங்கள்.அதற்கு நாங்கள்தான் வர வேண்டும்.புரட்சிகர ஜனநாயக சக்திகள் தலைமையில் உழைக்கும் மக்களாகிய நாங்கள்தான் மதவெறியர்களை எந்த தெருக்களில் எம்மக்களை கொன்றோழித்தார்களோ அதே தெருக்களில் களம் அமைத்து மோதி வீழ்த்துவோம் //

                      —-

                      // குறிப்பா மனுசனா இருக்காதீங்க ஆடு மாதிரி பே..ன்னு இருங்கன்னு சொல்லுறாரு.//

                      நான் சொன்னால் கேப்பாங்களா..?! சர்ச்சில பாதிரியார்கள் சொன்னா கேப்பாங்க.. கேட்காமல், அடித்தால் திருப்பி அடிப்போம் என்று முடிவெடுத்தால் நீங்களும், அன்பும் கட்டாயம் அவங்களுக்குத் துணையா வழி நடத்தணும்.. மலைக்குப் போகணும், தொழுகை இருக்குன்னு கழண்டுக்ககப் படாது..

                    • santhanam,

                      athu eppadi sambandame illama oru olaral pinootam podureenga?

                      Appadi indiavula hindukalukku muslim mela ivalavu veruppu iruntha,appuram ithanai muslim eppadi indiavula sugama irukkanga?

                      athuvum tamizhnaatula yaarukku enna prachanai?

                    • //கணிணி முன்னால் உட்கார்ந்து கொண்டு களம் பல கண்டவர்களே..! //

                      24 அவர்ஸ் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பவர்கள் இப்படி எல்லாம் சொல்லப்படாது.

                      /”.பழி தீர்க்கவும் வக்கற்றவர்கள் ………எம்மக்களை கொன்றோழித்தார்களோ அதே தெருக்களில் களம் அமைத்து மோதி வீழ்த்துவோம்.”//

                      மோடியைப்போல அப்பாவி மக்களை கொல்வதாகச் சொல்லவில்லையே. மதவெறியர்களை என்றுதானே சொல்லப்பட்டிருக்கின்றது. ஆம் நாளைய உழைக்கும் மக்களின் சர்வாதிகார ஆட்சியில் மக்களைக் கொன்ற மதவெறியர்கள் தயவு தாட்சயனம் இன்றி கொல்லப்படுவார்கள். எந்த ஒரு மதவெறியனும் இதற்கு விலக்கல்ல.

                    • \\கணிணி முன்னால் உட்கார்ந்து கொண்டு களம் பல கண்டவர்களே..!//

                      பேனா முனை வாளை விட கூர்மையானது.

                      \\—-//

                      ஆச்சரியமா இருக்கு.மரியாதை கொடுத்து எழுதும் வழக்கம் கொண்ட அம்பியின் எழுத்துக்கள் மட்டுறுத்தல்ல அடிபட்டிருக்கே.கணிணி முன்னால உட்கார்ந்து கொண்டு எழுதுனதுக்கே உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதுன்னா எழுதுனது சரியா வேலை செய்யும்னு நம்பிக்கை வருது.

                    • உங்களிடமிருக்கும் பல மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்..

        • // உடனே அதுக்கு பதில் சொல்லி இருக்கேன் நீங்க பதில் சொல்லன்னு அம்பி ஓடி வரலாம்.அவருக்கு இப்பவே சொல்லிர்றேன்.அந்த விவாதத்துல அம்பி சொல்ற .scandalous ன்னு எப்படி சொல்றாங்கன்னு பார்க்கவும்.

          \\ I mean, if I find three ancient clusters in Eastern Europe, Southern Siberia and Hindustan, of which I have no direct proof that they are recently related, then I would normally conclude that the dispersal of these people took place already in ancient times.//

          அதாவது எந்த காலகட்டத்துல இடப்பெயர்ச்சி நடந்ததுங்கிரதுல கருத்து வேறுபாடு.இடப்பெயற்சி நடக்கவேயில்லன்னு சொல்லப்படவில்லை. ////

          அன்பு,

          ” I would normally conclude that the dispersal of these people took place already in ancient times “

          மேலே நீங்கள் சுட்டி கொடுத்த தளத்தில் பதில் கூறியிருப்பவர் சொல்வது, 3500 ஆண்டுகளுக்கு வெகுகாலம் முன்பே இடப்பெயர்ச்சி நடந்திருப்பதாக..! காலக் கணக்கு மிக முக்கியம்.. ஏனென்றால் அது உங்கள் ‘ஆரியப் படையெடுப்பு’ கொள்கையை பணாலாக்குகிறது..

          கல்நெஞ்சம் இங்கு கொடுத்த சுட்டியும், நான் அந்த பதிவில் கொடுத்த சுட்டிகளும் விளக்கியிருப்பது இதைத் தான். ஆப்ரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் இந்தியாவுக்கு முதலில் வந்து வெகு,வெகு பழங்காலத்திலேயே இந்தியாவிலிருந்து மத்திய ஆசியா, அய்ரோப்பாவுக்கு இடம் பெயர்ந்திருப்பதைத்தான் மரபணு ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன… உண்மையை வெளிக்கொணரும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தால் ’ஆரியர்களின்’ இந்தியத் தன்மையும் வெளிச்சத்துக்கு வரும்..

          • Ambi,

            After arguing with the likes of Anbu for such a longtime,do you still not realise the very basis of this anti-brahmin movement.They confuse people by saying we are not against brahmins,we are only against brahminism.

            Till that much it is fine but the reality is they do not know what is brahminism,they think brahmins came up with some ideas and imposed it on other people but the reality is most people who follow or believe in hindu orthodoxy do it because they think it is useful.

            All the smoking,drinking,womanising liberal culture that the depressed,failed marxists apparently want,it is not happening.People are not attracted by such lifestyle ideas and these guys keep cribbing on a website,thats all.

            • // After arguing with the likes of Anbu for such a longtime,do you still not realise the very basis of this anti-brahmin movement.They confuse people by saying we are not against brahmins,we are only against brahminism. //

              ஹரிகுமார்,

              என்னோட முன்ஜென்ம வினை அன்பு என்ற பெயரில் என்னைத் துரத்துகிறது..

              // All the smoking,drinking,womanising liberal culture that the depressed,failed marxists apparently want,it is not happening. //

              உங்களுடன் உடன்பட முடியவில்லை.. தவிர, பொருளாதார ஏற்ற தாழ்வும், சுரண்டலும் உள்ளவரை மார்க்சீயமும் இருக்கும்..

              • அம்பி,

                பார்ப்பனீய மதமான இந்து மதம் ஏன் இருக்கிறது என்பதையும் சொல்ல முடியுமா?

                மார்க்சியம் – அது நல்லவன் வேடத்துக்கான ஊறுகயோ?

                • பார்ப்பனியத்தை ஒழித்துவிட்டாலும் இந்து மதம் இருக்கும்.. இந்து மதத்தை ஒழித்துவிட்டாலும் பார்ப்பனியம் இருக்கும்.. பார்ப்பனர்களை ஒழித்து விட்டாலும் பார்ப்பனியம் இருக்கும்.. பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் ஒழித்துவிட்டாலும் இந்துமதம் இருக்கும்.. இவையெல்லாம் ஒன்றே என்று கூறுபவர்கள் இந்து மதத்தையும், பார்ப்பனர்களையும் வெறுப்பவர்கள்.. அவர்கள் வசதிக்காக இந்த மூன்றும் ஒன்றாகிவிடாது..

                  // மார்க்சியம் – அது நல்லவன் வேடத்துக்கான ஊறுகயோ? //

                  மார்க்சீயத்தைப் பாராட்டி ஒரு கருத்தை வெளியிட நான் மார்க்சீயவாதியாக இருக்க வேண்டியதில்லை..

                  பார்ப்பனர்களின் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு மார்க்சீயத்தை ஊறுகாயாக்கிக் கொண்டிருப்பது சரியா..?!

  3. அவுகவுகளுக்கு அவுகவுக பேச்சு வழக்குல போட்டாத்தேன காசு குடுத்து வாங்கிப் படிக்குதுக.. அவாள ஏம்வே குத்தம் சொல்லுதீரு.. நீரு என்னமோ திருவிக அய்யாவுக பாசையில எளுத மாரியில்லா அளக்கீரு.. போயி உருப்படியா எதானும் பண்ணுத வழியப் பாப்பீரா.. பாப்பான் பின்னாலயே சுத்திக் கத்தி பகுத்தறிவ வளக்கீராக்கும்.. வெளங்கிரும்வே..

  4. பார்ப்பனர்களுடைய மொழித்தீண்டாமையைப் பற்றி பேசினால் உமக்குப் பொத்துக் கொண்டு வந்து விடுகிறதோ? தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழை நீஸ பாஷை என்றும், தமிழில் கடவுளை வழிபட்டால் தீட்டு என்றும் கூறிய பார்ப்பனர்களைக் கொஞ்ச வேண்டும் என்று எதிர் பார்க்கிறார் போலும் அம்பி…

    • தமிழை வளர்க்க வாழ்ந்து செத்த பார்ப்பனர்களை எல்லாம் பாராட்டி, கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறீர்களாக்கும்… அட அதுகூட வேண்டாமய்யா.. ஏசாமலாவது இருக்க முடியுதா..?

      • அவர்களெல்லாம் விதி விலக்குகள்தான். ஒரு சராசரிப் பார்ப்பனர் (பெருபாலான பார்ப்பனர்கள்) மொழித் துவேஷம், சாதித் துவேஷதுடன்தான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

        • நீங்கள் சராசரி மாணவனா இல்லை விதிவிலக்கான மாணவனா..?! சராசரி என்பதை எத்தனை பேர்களை எடுத்துக் கொண்டு தீர்மானிக்கிறீர்கள்..?!

          • நான் சராசரி பார்ப்பனர் என்று கூறியது, ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் தமிழுக்கு தொண்டு செய்திருக்கலாம், ஆனால் பெரும்பாலான பார்ப்பனர்கள் தமிழ் விரோதிகளாகதான் இருக்கிறார்கள் என்பதைத்தான்.

            • // ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் தமிழுக்கு தொண்டு செய்திருக்கலாம் //

              ஒன்றிரண்டு பார்ப்பனர்களே உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் எனபதால்தான் சராசரியை எப்படி தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டேன்..

              // ஆனால் பெரும்பாலான பார்ப்பனர்கள் தமிழ் விரோதிகளாகதான் இருக்கிறார்கள் என்பதைத்தான் //

              உங்களுக்குத் தெரிந்த ‘பெரும்பாலான’ பார்ப்பனர்கள் வீட்டிலே ஏன் விரோதிகளின் ‘நீச’ மொழியைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்..?!

  5. //எங்கெங்கே கோவில், வழிபாடு, திருவிழா, கலைவிழா, தானம், தர்மம், கல்வி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள்//

    எங்க ஏமாத்த முடியுமோ அங்க போயி செட்டில் ஆனாங்க

    • செட்டில் ஆகாத இடமெல்லாம் ஏமாறாத பகுத்தறிவுத் தாத்தாக்கள் வாழ்ந்த இடமாயிருந்திருக்கும்..

  6. I WILL SAY THAT CHENNAI TAMIL HAS MANY TELUGU AND URUDU WORDS.TAMIL SPOKEN BY KEEZHAKARAI, KAYALPATINAM, THENGAI PATINAM MUSLIMS WILL CONSIST OF ARABIC WORDS LIKE NIKHA,RAHMATH, MOUTH, HARRAM ECT.TAMIL SPOKEN BY NAGERCOIL CHRISTIAN NADARS WILL HAVE MORE MALAYALAM ACCENT. THERE IS NOTHING WRONG BECAUSE LOCAL GEOGRAPHY AND CULTURAL ROOTS SHAPE THE ACCENT OF A LANGUAGE.

    MANY EARLY AUTHORS OF RELIGIOUS TEXTS IN TAMIL WOULD HAVE BEEN BRAHMINS AND MANIPRAVALAM MIGHT HAVE BEEN USED. I BELIEVE EVEN JAIN AND BUDDHIST TEXTS ALSO FOLLOWED MANIPRAVALA NADAI. BIBLE ONE OFTHE EARLY WORKS TO BE TRANSLATED ALSO HAS MANY SANSKRIT WORDS. ANADHA VIKATANS EARLY READERS IN 1940-1970 MAJORITY OF THEM BRAHMINS AND THE CONTRIBUTORS OF ARTICLES ALSO BRAHMINS AND BRAHAMINICAL TAMIL USAGE MIGHT HAVE BEEN COMMON. IT IS COMMON PRACTICE FOR EVERY WEEKLY OR DAILY TO NOSTALGICALLY REPUBLISH THIER EARLIER WORKS. BUT WHY VINAVU TAKES NOTICE OF THIS ALSO

    LIKE JEWS WERE TARGETED FOR THIER BELIEVES AND CUSTOMS IN GERMANY AND OTHER COUNTRIES IN EUROPE.IT IS OUR OWN BRAND OF RACIAL HATRED AGAINST MINORITY BRAHMINS NURTURED BY OR BRITISH RULERS
    AND THEORIES PROMOTED BY BISHOP CALDWELL ECT. I HOPE OUR VINAVU COMRADES SHALL KEEP THEMSELVES AWAY FROM THIS KIND OF NEO NAZI HATRED.

    • Dear friends,let us not talk casually.as MKV sees, we need to look into this issue deeply.The historical back ground shall add more meaning into this issue. forget about the Bhramins, in the last 5 decades we are governed by dravidian parties.there are enough opportunities to do so much to the tamil communities,but miserably failed. Where are the Tamil medium schools?Why isn’t Tamil included in deciding the professional course admissions.?Where is the common political platform to unify all the people of Tamil ? During the erstwhile British-Raj, bhramins were closer to the ruling elite as they were able to speak two or more languages and acted as link between the different groups.As the masses accepted British rule,adapted their practices.they accepted and adapted bhramins.That was the need .After PERIYAR and Few more Visionaries the scene changed. But there is none to really care for all this issues. the masses now are concerned with only one thing-how to earn money and move up?. the society itself is promoting this culture. then why do VINAVU talk about Vikatan?

    • dear MKV sir,

      you are making erroneous argument in equating braminical tamil and the slight variations of tamil spoken by people from other parts of tamil nadu. the problem here is the projection of braminical tamil as a standard and elitist one and the craze of ordinary innocent Tamils twisting their tongue to speak this braminical tamil. I think vinavu satirises this attitude in the news report. Bernard Shaw satirised many of the usages in English and said most are irrelevant. He was vehement in criticising the RP {RECEIVED PRONUNCIATION}. Are you aware of this? Is Shaw a Nazi?

      • Sukdev,

        I dont know anyone who tries to speak in brahminical slang and even many brahmins speak neutrally these days and most people i know make fun of the way brahmins speak,i wonder who is trying to imitate brahminical slang here?

        Regarding avaal,ivaal i have seen people in southern districts especially the pillaimaar saying the same things and also in yaazhpanam,where they say vaango pongo.

        what i find is hilarious is that,most people in TN cannot pronounce ZH whereas everyone in Kerala does it.How come vinavu is not bothered about that?

        and whats wrong if brahmins talk like that,today brahmins living everywhere in TN can speak the local slang,swear in local slang and what not?

        vinavu is still stuck up here?

  7. ஆகவே யாரும் இனி பார்ப்பன வழக்கு மொழியிலோ, வடமொழி சொற்கள் கலந்தோ பேசக் கூடாது. தூய தமிழிலேயே பேச வேண்டும்.
    உதாரணம்: “பர லோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே! உமக்கு ஜெயம் உண்டாகட்டும். எம்மீது கிருபை செய்வீராக. ஆசீர்வாதம் செய்வீராக. எம்மை ரக்ஷியுங்கள். தேவ குமாரன் எங்களோடு இருப்பாராக”.

  8. MKV

    I disagree with this Vinavu post, but you’re wrong to compare the Dravidian movement’s anti-Brahminism with the persecution of Jews. Jews were murdered by the millions and attacked and driven out from place to place for centuries. (That’s how one group even ended up in Kerala long ago.) There is no instance of any Brahmin having been murdered or raped in Tamil Nadu (please correct me if I am wrong). Some Brahmins were beaten up and their sacred threads were cut, but nothing more serious ever happened. It’s ridiculous to compare what the Jews went through with the current state of Brahmins (who are actually still doing pretty ok, despite their breast beating about reservations).

  9. As for Bishop Caldwell, I think he knew what he was talking about when it came to caste. He was a very smart guy–his assessment of Brahmins is spot on. I have uploaded his Lectures on Tinnevelly Missions at Wikisource. If you have the time, check it out:

    http://en.wikisource.org/wiki/Lectures_on_the_Tinnevelly_Missions/Chapter_II

    An excerpt:

    “I may here remark, that it is the peculiar policy of the Brahmans to render all the religious systems of India subservient to their purpose by making friends of them all. Brahmanism repudiates exclusiveness ; it incorporates all creeds, assimilates all, consecrates all. People are permitted to entertain any opinions they please, and to practise any ceremonies they please, provided only that the supremacy of the Vedas and of the Brahmans is acknowledged.

    “When that acknowledgment has been duly made, the new heterodoxy becomes another new authoritative orthodoxy, especially revealed by the Supreme Being himself for the enlightenment and salvation of the parti cular class of people amongst whom it has become popular.

    “Thus Brahmanism yields and conquers ; and hence, though the demon- worship of Tinnevelly is as far as possible repugnant to the genius of orthodox Hinduism, and was not only independent of it in origin, but, as I believe, long anterior to it, yet even it has received a place in the cunningly-devised mosaic of the Brahmans, and the devils have got themselves regarded as abnormal developments of the gods.”

  10. He also pays the non-Brahmins of Tamil Nadu the highest compliment.

    “No Indian people, not even, I think, the Brahmans, have reached a higher point of civilization than the Tamilian Shudras; but their civilization, like that of every Asiatic people, is partial and unequal. One meets with as many degrees of civilization as of complexion. Stupendous hewn-stone temples and mean mud-built habitations, a scrupulous regard for ceremonial purity, and a shameful disregard of decency and drains, institutions of consummate policy and follies of which sensible children would be ashamed, exist everywhere side by side.”

  11. ஏங்க ஐயா இது உங்களுக்கே அதிகமா தெரியல அது அவங்க பேசற தமிழ். இன்னும் சொல்ல போனால் வினவுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன தொடர்பு. வினவோட உண்மையான நோக்கம் என்ன இங்கு மொழிக்கு என்ன வேலை, இந்த வினவு தொழிலாளி வர்க்கத்தை விழிப்புணர்வு அடைய வைக்க ஆரம்பிச்சதுன்னு நினைச்சேன் ஆனா நீங்களும் இந்த திராவிட மாயையில் இருப்பீங்கன்னு நினைக்கல. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெலுங்கு பேசுறேன் நான் அதனால் என்னை அடிச்சுடாங்கனு ஒரு _________அனுப்புனதுக்கு என்னை ஜால்ரா போட்டீங்க. அப்படி இருக்கும் போது தமிழ் பேசும் பிராமண மக்களை எதுக்கு எப்படி இழிவு செய்றீங்க. அப்படீன்னு இஸ்லாமியர் பேசும் உருது கலந்த தமிழை பற்றியும் எழுதுங்க.

    • சவுந்தர்,

      உருது பாய்மார்கள் எல்லாம் வடஇந்திய இறக்குமதி. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அந்தந்த பகுதி வழக்கிற்கு ஏற்பவே தமிழை பேசுகின்றனர்.

      • அதெல்லாம் விட முசுலிம திட்றது பிற்போக்கு… அய்யர திட்றது முற்போக்கு… முசுலிம் தீவிரவாதம் பயங்கர முற்போக்கு… அய்யரு பாசையே படு பிற்போக்கு போன்ற எளிய வாய்பாட்டை அய்யரு வேதம் போல வினவு சாஸ்திரிகள் எளுதி வச்சுருக்காங்க….

        • பார்ப்பானைத் திட்டி ஒரு கட்டுரை போட்டால் அதில் முஸ்லீமையும் திட்ட வேண்டுமாக்கும்? என்னையா உங்க நியாயம். தேவை ஏற்படும் போது விமர்சிப்பார்கள்.

        • ஆ.. ஊ னா முஸ்லீம் தீவிரவாதம் சொல்ல வேண்டியதுங்க நீங்க.. முஸ்லீம் தீவிரவாதம்னா என்ன Mr நாகராஜ்?

          உங்க எண்ணப்படியே மும்பைல தாஜ் ஹோட்டல் சம்பவம் ஒரு முஸ்லீம் தீவிரவாதம் என்று வைத்து கொள்வோம். இதில் முஸ்லீம் பெயர்தாங்கிகள் ஈடுபட்டதாக சொல்கிறார்கள். இந்த சம்பவத்தை எந்த முஸ்லீமும் கொண்டாட வில்லை.. மாறாக வெறுக்கிறார்கள்.

          ஆனால், இந்திய வரலாறு நெடுகிலும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்து தீவிரவாதத்தால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் அஸ்ஸாம். இதனை இந்து என்று சொல்லிக்கொள்ளும் பலர் ஆதரிக்கிறார்கள்.. சந்தோசப்படுகிறார்கள். முகம் தெரியாத யாரோ ஒரு அப்பாவி கொல்லப்படுகிறான், அவன் முஸ்லீம் எனும் காரணத்தால் அவர்கள் இதனை கொண்டாடும் அளவுக்கு அவர்கள் இதயம் தீவிரவாத காவி சிந்தனையால் நிரம்பி வழிகிறது. இப்போது சொல்லுங்கள் யார் தீவிரவாதி என்று..

          மாமிசம் சாப்பிடாததால் பிராமணர்களை அஹிம்சா வாதிகள் என்று எடை போட்டு விடாதீர்கள்.. அவர்கள் எப்போதும் மனித ரத்தத்தை பார்க்க ஆசை படுபவர்கள்.. மோடி பிரதமர் ஆனால் மீண்டும் ஒருமுறை மனித ரத்த வாடையை நுகர ஆசைப்படும் அயோக்கியர்கள்.. இப்போது சொல்லுங்கள் யார் பயங்கரவாதிகள் என்று..

          தங்கள் கிரிமினல் புத்தியால், ஏதோ வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாகவும் அதனுடன் முஸ்லீம் பெயர்களை சேர்த்து அவர்களை தீவிரவாதியாகவே எப்போதும் பிரசங்கப்படுத்தி தனிமைப்படுத்த நினைப்பது எந்த வகையான தீவிரவாதம் Mr நாகராஜ்.

          இந்தியாவில் பயங்கர வாதத்தை நுழைத்து இந்து மதம்.. நுழைத்தவர்கள் பிராமணர்கள்.. அதனை செயல் படுத்துபவர்கள் மற்ற இந்து அடிமைகள்.. உங்களுக்கு முஸ்லீம் தீவிரவாதம் என்று சொல்ல எந்த அருகதையும் கிடையாது..

          • // ஆனால், இந்திய வரலாறு நெடுகிலும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்து தீவிரவாதத்தால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். //

            ஒண்ணுமே புரியல உலகத்துல… என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..

      • ஐயருங்க மட்டும் என்ன தெற்கே இருந்து வந்தவுங்களா அவங்களும் வடக்க இருந்து வந்தவுங்கதான். எப்படி இஸ்லாமியர்கள் கொள்ளைஅடிக்க வடக்க இருந்து வந்தாங்களோ அதே மாதிரிதான் இவங்களும் வந்தவுங்க. என்ன வந்து பார்த்தாங்க எல்லாம் முரட்டு பயலுகளா இருந்தாங்க அதனால இவிங்கள அடிக்க முடியாதுன்னு ஏமாத்தி வாழ திட்டம் போட்டாங்க. வேற என்ன சொல்றது. இப்ப நாம் வாழும் காலம் சரியான எடுத்துக்காட்டு எப்படினா அவுங்க ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருந்ததுனால எல்லோரும் சமஸ்கிருதம் கலந்த தமிழ் பேசுறாங்க. இவங்களும் ஒரு அறநூறு வருஷம் ஆனதால உருது கலந்த தமிழ் பேசுறாங்க. இன்னும் கொஞ்ச நாள் போச்சுனா இவங்களோட சேர்ந்து நாமளும் ஆங்கிலம் பேசுவோம். சொல்றதுக்கு என்ன இருக்கு வேலை செய்தால் சோறு. நம்மளோட வேலை என்னன்னா செய்த வேலைக்கு ஊதியத்தை மறக்காம கேட்டு வாங்கணும் இல்லேன்னா ஒற்றுமையா இருந்து தட்டி கேட்கணும். அதுக்குதான் இந்த மாதிரி தளங்கள் உதவனும். அத விட்டுட்டு இனப் பிரச்ச்சனயையோ இல்ல மொழி பிரச்ச்சனயையோ உருவாக்ககூடாது. இன்னொரு பொது உண்மை என்னன்னா இப்ப நீங்க இங்க இருக்கீங்க ஆனா உங்க முன்னோர் எங்க இருந்தாங்கன்னு யாராலும் கை நீட்ட முடியாது. அதுபோல இங்க யார் இருந்தாங்கன்னு யாராலும் சொல்ல முடியாது. அதுக்கு பல்லவர்களே சரியான எடுத்துக்காட்டு. இன்னும் அவங்க எந்தப்பகுதியை சேர்ந்தவுங்கனு யாராலையும் நிருபிக்க முடியலை. வரலாற்றில் களப்பிரர் காலம்னு நீங்க கேள்விபட்டிருபீங்க உங்க முன்னோர் ஏன் அந்த காலத்துல இந்த மண்ணுக்கு வந்திருக்க கூடாது. அதனால மனிதன் எல்லாம் காட்டில் இருக்க மிருகம் மாதிரிதான் காட்டுல தண்ணி இல்லைனா ஊருக்குள வரத்தான் செய்யும் அதுபோல இல்லாத இடத்துல இருக்க மனிதன் இருக்க இடத்த தேடிதான் வருவான். அறிவோட இருகிறவந்தான் எதிர் காலத்துல வாழ முடியும் அதனால எல்லோரும் புள்ள குட்டிகளா படிக்க வைங்க.

    • இங்கே பிரச்சினை தூய தமிழ் இல்லை. பார்ப்பனர்களின் தமிழ் மொழி மீதான வெறுப்புதான் இங்கே பிரச்சினை.

  12. No one calims the slangs used by iyer/iyengar are superior or inferior. Indirectly these are used to identify their own caste sometimes. Let us Go and do some useful work.

  13. மிகவும்நல்ல பதிவு. எனக்கு என்ன ஒரு சந்தெகஎன்ட்ரால் நமக்கு இப்ப உல்ல

  14. எனக்கு தெரிந்து அந்த அந்த பகுதியின் வட்டார மொழிகள், அந்த பகுதியில் வாழும் எல்லா மக்களாலும் பேசப்படுகிறது, சாதி, மதம் வேறுபாடு இன்றி.. உதாரணமாக மதுரை தமிழ் சாதி வேறுபாடின்றி அனைவராலும் மதுரை மக்களால் பேசப்படுகிறது.
    ஆனால் இந்த பார்பனரின் மொழி வழக்கு மட்டும் அவாளுக்கு உள்ளே மட்டும் இருப்பது ஏன்?

    • அதற்கான காரணம் மேலவளவில் திண்ணியத்தில் உத்தபுரத்தில் நாம செஞ்சத அவர்ள் செய்ய மாட்டாங்க அந்த ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்..

      • அதுக்கு பதிலா மற்ற இந்துக்களை தூண்டி விட்டு அப்பாவிகளின் குரல் வளைய அறுப்பாங்க.. அப்புறம் அசைவம் சாப்பிட கூடாது.. உயிர்களிடம் அன்பு வேண்டும்னு பஜனை பாட போயிடுவாங்க.. இது தான் வித்தியாசம்.

  15. “எங்கெங்கே கோவில், வழிபாடு, திருவிழா, கலைவிழா, தானம், தர்மம், கல்வி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள்”

    உடல் வருந்தாமல், நோகாமல் அடுத்தவனுடைய உடல் உழைப்பில், அடுத்தவனுடைய வேர்வையில் எப்படி முத்து குளிக்கலாம் என்பதை அறிந்து அப்படிப்பட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள் என்று இருந்தால் சரியாக இருக்கும்.

      • பொறாமைக்கும், ஆதங்கத்திற்கும், கோபத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது அம்பி சகோதரரே!! (இந்தி சொல்லான பாய் – க்கு தமிழாக்கம் தான்)

      • ஒன்று எங்களுடன் இரு அல்லது எங்கள் எதிரியுடன் இரு.. அப்படிதானே அம்பி.

        கிரிமினல் புத்தி, நிச்சயமாக நீங்கள் பிராமணன் தான்.

  16. பொறாமையா? மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு சுக வாழ்வு வாழ்ந்ளிடம் உழைப்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? உழைப்பு என்றால் மணியாட்டுவது தானே.

  17. உழைக்காமல் உண்ணும் உணவு திருடி தின்பதற்கு சமம்.நான் மட்டும் சொல்லவில்லை அம்பி.காந்தியாரும் சொல்லியிருக்கிறார்.

    • அவர் மட்டுமா.. தன்னை மார்க்சிஸ்ட் என்று கூறிக்கொண்ட போல் பாட் என்ற கம்போடிய கம்யூனிசத் தலைவர் உடலுழைப்பில் ஈடுபடாத ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், மொத்தத்தில் கல்வி கற்றவர்கள் அனைவரும் உழைக்காமல் எதையோ செய்து கொண்டிருக்கும் எதிரிகள் என்று கூறிக்கொண்டு அவர்களையெல்லாம் ஆயிரக் கணக்கில் போட்டுத் தள்ளினார்.. கம்யூனிச வியட்நாம் உள்ளே புகுந்து இந்தக் கொல வெறிக் கேசை விரட்டாமல் இருந்திருந்தால் கம்போடியா சுடுகாடாயிருக்கும்..

      பார்ப்பான் பூசை, ஆராதனை, அர்ச்சனை, அபிசேகம், அலங்காரம், சூடம் காட்டுவது, மணியடிப்பது, தேங்காய் உடைப்பது, கருவறைக்கும் பக்தகோடிகளுக்கும் இடையே படிதடுக்கி விழாமல் ஓடி ஓடி விபூதி, குங்குமம், சந்தனம், துளசி போன்ற பிரசாதங்களை – தட்டிலே காசு போட்டாலும், போடாவிட்டாலும் – விநியோகம் செய்வது, இவை அனைத்தையும் மந்திரம் ஓதிக் கொண்டே செய்வது என்று நாள் முழுவதும் பகவானுக்கு தொண்டு செய்து கொண்டே இருக்கும் வேலைக்காரன்.. பகவான் இந்த வேலைக்காரனுக்கு லௌகீகக் கூலியை, நேரடியாக வந்து கொடுத்தால் கூலி உயர்வு கேட்டுவிடுவானோ என்று பயந்து கொண்டு, பக்த கோடிகள் மூலமாக கொடுத்தருளுகிறான்… அவனைத் திருடித் தின்கிறான் என்கிறீர்கள்….?!!!

      ஊர் ஊராக சென்று மேடையில் மைக்கு முன்னால் தொண்டை வற்றப் பேசி தொண்டு செய்து வரும் உழைப்பாளிகளான அரசியல்வாதிகள் செய்யும் தொண்டுகளைப் பட்டியல் போட முடியுமா..? நாட்டில் இருக்கும், நிலக்கரி, பாறைகள், மணல் போன்ற கழிவுப் பொருட்களை குறைந்த செலவில் அகற்றுவது, சாதிக்கொரு கல்வி என்ற மனுசாத்திரக் கொள்கையைத் தகர்த்து காசு மட்டும் இருந்தால் போதும் படிப்பும் பட்டமும் உறுதி என்று சாதி வித்தியாசமில்லாமல் கல்வி கிடைக்கச் செய்வது போன்ற பணிகளை அல்லும் பகலும் அயராத உழைப்பால் ஆற்றி வரும் அவர்களை இந்த நன்றி கெட்ட மக்கள் ‘திருட்டுப் பயல்கள்’ என்று வசைபாடுவதைக் கேட்டு உள்ளம் கொதிக்கவில்லையா, மணியடித்துப் பிழைக்கும் பார்ப்பானுக்கு ஒரு நீதி, அயராத உழைப்பாளிகளான அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி என்ற பார்ப்பனக் கொடுமை தீர பொங்கி எழ வேண்டாமா…

      • //பார்ப்பான் பூசை, ஆராதனை, அர்ச்சனை, அபிசேகம், அலங்காரம், சூடம் காட்டுவது, மணியடிப்பது, தேங்காய் உடைப்பது, கருவறைக்கும் பக்தகோடிகளுக்கும் இடையே படிதடுக்கி விழாமல் ஓடி ஓடி விபூதி, குங்குமம், சந்தனம், துளசி போன்ற பிரசாதங்களை – தட்டிலே காசு போட்டாலும், போடாவிட்டாலும் – விநியோகம் செய்வது, இவை அனைத்தையும் மந்திரம் ஓதிக் கொண்டே செய்வது என்று நாள் முழுவதும் பகவானுக்கு தொண்டு செய்து கொண்டே இருக்கும் வேலைக்காரன்.. பகவான் இந்த வேலைக்காரனுக்கு லௌகீகக் கூலியை, நேரடியாக வந்து கொடுத்தால் கூலி உயர்வு கேட்டுவிடுவானோ என்று பயந்து கொண்டு, பக்த கோடிகள் மூலமாக கொடுத்தருளுகிறான்… அவனைத் திருடித் தின்கிறான் என்கிறீர்கள்….?!!!/

        இதற்காக பார்பனரை யாரும் திட்டுவதில்லை ,பார்பனர் என்கிறவர்கள் நிலபிரபுத்துவ சமூகத்தின் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்தவர்கள் அவர்களது பங்கு அத்துடன் முடிஞ்சு போய்விட்டது இப்போது மிச்சமிருப்பது அதன் மிச்ச சொச்சங்களே

        • அப்படின்னா நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பே இன்னைக்கு இல்லை முடிஞ்சு போச்சுன்னு சொல்றீங்களா ? அப்படியானால் நிலப்பிரபுத்துவ சமூகத்தை சேர்ந்த மனிதர்கள் மட்டும் இருக்கிறார்களே அது எப்படி, புரியவில்லை விளக்கம். அன்னா ஹசாரே போன்ற நிலப்பிரபுத்துவ சமூக மனிதர்களை எப்படி பார்ப்பது. இது ஒரு தத்துவஞான குழப்பம் தயவு செய்து விளக்கமளிக்கவும்.

        • \\இதற்காக பார்பனரை யாரும் திட்டுவதில்லை ,பார்பனர் என்கிறவர்கள் நிலபிரபுத்துவ சமூகத்தின் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்தவர்கள் அவர்களது பங்கு அத்துடன் முடிஞ்சு போய்விட்டது இப்போது மிச்சமிருப்பது அதன் மிச்ச சொச்சங்களே//

          இதுக்கு முன்னால

          \\//கவருமெண்டுதான் பார்ப்பனர்களை ஒதுக்கி வெச்சுடுச்சு.. நீங்களாவது உங்க கம்பெனில அவங்க படிப்புக்கேத்த வேலை போட்டு கொடுத்திருந்தா ஏன் ஓடுறானுங்க.//

          என்ற அம்பியின் பொய்மை நிறைந்த பின்னூட்டத்துக்கு ”good” போட்டு வரவேற்றதுடன் இப்போது நிலப்பிரபுத்துவ காலத்துடன் பார்ப்பனிய ஆதிக்கம முடிந்துவிட்டது இன்றைய தினம் அதன் மிச்ச சொச்சமா கொஞ்சமா ஆதிக்கம் இருக்குன்னு பார்ப்பனியத்துக்கு முட்டுக் கொடுக்க ஓடோடி வரும் மார்க்சிஸ்ட் வேடமிட்ட பார்ப்பன அடிமை தியாகுவே வருக,

          பார்ப்பனர்கள் இட ஒதுக்கீடு காரணமாக படிப்புக்கேத்த வேலை கிடைக்காமல் வெளிநாடுகளுக்கு ஓடுவதாக அம்பி கூசாமல் புளுகுகிறார்.அதுக்கு நீங்க ”ஆமாஞ் சாமி” போடுறீங்க.உண்மை என்னவென்று புத்தியை பயன்படுத்தி யோசிக்க வேணாமா.பார்ப்பனர்கள் IIT,IIM,IISc,இன்னபிற அரசு உயர்கல்வி நிறுவனங்கள்,அரசு மருத்துவ,பொறியியல் கல்லூரிகள் இவற்றில் கோடிக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பண செலவில் படித்து விட்டு வெளிநாட்டுக்கு ஓடுகிறார்கள்.இந்த படிப்புகளை படித்தவர்களுக்கு எந்த சாதியாக இருந்தாலும் இந்தியாவில் வேலை நிச்சயம். யாராவது மறுக்க முடியுமா.உண்மையில் அவர்களுடைய பணி இந்த நாட்டுக்கு அவசியமாக தேவைபடுகிறது.ஆனாலும் ஓடுகிறார்கள் என்றால் என்ன காரணம்.துட்டுக்கு ஆசைப்பட்டு பிறந்த நாட்டுக்கும் படிக்க வைத்த மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்த நன்றி கெட்டவர்களை ஆதரிப்பவர்கள் நிச்சயம் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ள தகுதி அற்றவர்கள்.

          உடனே அம்பி வேறு சாதிக்காரர்கள் ஒடுவதில்லையா என ஓடி வரலாம்.எல்லா சாதி துரோகிகளையும் சேர்த்தே நாம் கண்டிக்கிறோம்.எவனா இருந்தாலும் அப்படி ஓடுவதற்கு தடை விதிக்க கோருகிறோம்.

          நிலப்பிரபுத்துவ காலத்துடன் பார்ப்பனிய ஆதிக்கம முடிந்துவிட்டது என்பதும் உண்மையல்ல. பார்ப்பனியம் தொடர்ந்து பல்வேறு அவதாரங்களை எடுத்து பார்ப்பனிய ஆதிக்கத்தை தக்க வைப்பதில் குறிப்பிட தக்க அளவில் வெற்றி பெற்றே வந்துள்ளது.காலனி ஆட்சி காலத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் பற்றி சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.போலி சுதந்திரத்துக்கு பின் காங்கிரசை வைத்து செய்ய முடியாததை சுதந்திரா கட்சியாக வந்து பொது துறையை ஊத்தி மூடி தனியார் துறையை கொண்டு இட ஒதுக்கீட்டை நீர்த்து போக செய்ய முயன்றது.ஜன சங் ஆக வந்து எல்லோரும் இந்துக்கள் என ஏய்த்து ஒதுக்கீட்டை நீர்த்து போக செய்ய முயன்றது.இறுதியாக தனியார் தாராள உலக மயமாக்கல் மூலம் இட ஒதுக்கீடு என்பதையே கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்குவதில் கணிசமாக வெற்றி பெற்றுள்ளது.அதனால்தான் பார்ப்பனர்கள் தனியார் மயமாக்கலை முழு மூச்சாக ஆதரிக்கின்றனர்.

          • why should people be banned from going abroad?

            It is common history that there are not enough jobs in India or opportunities to do good quality graduate studies.

            Most of the government institutions are ridden with caste & regional politics and too much bureaucracy.It doesn’t help the people it is supposed to serve or any action taken by an officer/employee to streamline the process and make it efficient will be nipped by the management and the person’s career will be killed if not the person himself.

            There is no professionalism itself,all the students of India want to stay in India and give their best but it doesn’t happen.

            And General category guys have no chance of making it to Many Govt engg colleges/medical colleges.

            They are all filled by quote students who also take the chance and go abroad.

            Basically,the only fact i understand from your post is that you do not understand the value of ideas,value creation,merit etc.

            You basically do not want to work,you want to eat food for free and according to you human brain is of no use.

            You want to enjoy all the benefits of the creativity and innovation of man but you dont want to pay a price for that.

            According to you,just because some people do physical work all the others have to put them on a pedestal.

            Government had and has failed in India and the government machinery is hell bent only to loot the nation’s resources.

            So the good people,quality people of the work force seek to go elsewhere as they have no way of livelihood.

            These people dont want to sit and do politics for survival,they would rather work to make a living.

            People get reservation in colleges to get good education and also reservation to get jobs in the government,but they dont get any benefit at school level.

            Thats why most people who get reservation are not ready to face the level of competition at college level and dont do that well.

            Instead of complaining against the poor standards of government schools,u r sitting here and talking about problems at a much advanced level.

            Reservation is still alive and people are taking benefit,if it has proven to be a failure and the general category is still doing well,thats what is your problem.

            Your problem is people receiving reservation are not getting the real benefit of it which is closing the gap with the general category.

            But,saapada ooti thaan vida mudiyum,muzhunga veikka mudiyathu.

            Government jobs are for people who dont want to work but just exploit the government schemes and make money.

            Most NRIs rather go abroad,work well,make money and invest it back in India.

            Doing that is better than staying back in India and recieve stagnant salary for doing no work.

          • ///
            \\//கவருமெண்டுதான் பார்ப்பனர்களை ஒதுக்கி வெச்சுடுச்சு.. நீங்களாவது உங்க கம்பெனில அவங்க படிப்புக்கேத்த வேலை போட்டு கொடுத்திருந்தா ஏன் ஓடுறானுங்க.//

            என்ற அம்பியின் பொய்மை நிறைந்த பின்னூட்டத்துக்கு

            ///

            பொய்மை நிறைந்த பின்னூட்டமா..?!

            // பார்ப்பனர்கள் IIT,IIM,IISc,இன்னபிற அரசு உயர்கல்வி நிறுவனங்கள்,அரசு மருத்துவ,பொறியியல் கல்லூரிகள் இவற்றில் கோடிக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பண செலவில் படித்து விட்டு வெளிநாட்டுக்கு ஓடுகிறார்கள். //

            1000 பார்ப்பன மாணவர்களில் 50 பேருக்கு IIT,IIM,IISc,இன்னபிற அரசு உயர்கல்வி நிறுவனங்கள்,அரசு மருத்துவ,பொறியியல் கல்லூரிகள் இவற்றில் இடம் கிடைப்பதே கடினம்.. அங்கு படித்த பார்ப்பனர்களெல்லாம்(?) வெளிநாட்டுக்கு ஓடுவதால் பார்ப்பனர்கள் ‘தேசச் துரோகிகள்’..! ஓடாமல் இந்தியாவிலேயே அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்தான் பார்ப்பனிய ஆதிக்கம், தனியார்மயம், தாராளமயமாக்கத்திற்குக் காரணம்..! வெளிநாடு,அரசு,தனியார் வேலைக்குப் போகாமல் புரோகிதம் செய்பவர்கள் உங்கள் வார்த்தைகளில் திருடர்கள்..!!

            உங்களுக்கு தேசத் துரோகம், தனியார்மய, தாரளமயமாக்கல், கோவில், சமூகம், மொத்தத்தில் பார்க்கும் இடமெல்லாம் பார்ப்பானே தெரிவதால் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பார்ப்பனர்கள் இருப்பார்கள் போல் தெரிகிறது.. கைபர் கணவாய் வழியா இன்னும் கூட்டம் கூட்டமா இந்தியாவுக்குள்ள வந்துகிட்டு இருக்கானுங்களோ என்னமோ..

            • வழக்கம் போல் பேசும் பொருளை உட்டுட்டு வேறு ஒன்னை பத்தி சொல்லி குழப்பி விடும் முயற்சி.

              கவருமெண்டுதான் பார்ப்பனர்களை ஒதுக்கி வெச்சுடுச்சு.. நீங்களாவது உங்க கம்பெனில அவங்க படிப்புக்கேத்த வேலை போட்டு கொடுக்காததுனால அவங்க வெளிநாட்டுக்கு ஓடுவதாக அம்பி சொன்னார்.

              அதற்கு கொடுக்கப்பட்ட பதில்தான் இது.

              ”பார்ப்பனர்கள் IIT,IIM,IISc,இன்னபிற அரசு உயர்கல்வி நிறுவனங்கள்,அரசு மருத்துவ,பொறியியல் கல்லூரிகள் இவற்றில் கோடிக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பண செலவில் படித்து விட்டு வெளிநாட்டுக்கு ஓடுகிறார்கள்.இந்த படிப்புகளை படித்தவர்களுக்கு எந்த சாதியாக இருந்தாலும் இந்தியாவில் வேலை நிச்சயம். யாராவது மறுக்க முடியுமா.உண்மையில் அவர்களுடைய பணி இந்த நாட்டுக்கு அவசியமாக தேவைபடுகிறது.ஆனாலும் ஓடுகிறார்கள் என்றால் என்ன காரணம்.துட்டுக்கு ஆசைப்பட்டு பிறந்த நாட்டுக்கும் படிக்க வைத்த மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்த நன்றி கெட்டவர்களை ”

              இதற்கு அம்பியின் பதில்

              \\1000 பார்ப்பன மாணவர்களில் 50 பேருக்கு IIT,IIM,IISc,இன்னபிற அரசு உயர்கல்வி நிறுவனங்கள்,அரசு மருத்துவ,பொறியியல் கல்லூரிகள் இவற்றில் இடம் கிடைப்பதே கடினம்.. அங்கு படித்த பார்ப்பனர்களெல்லாம்(?) வெளிநாட்டுக்கு ஓடுவதால் பார்ப்பனர்கள் ‘தேசச் துரோகிகள்//

              ஓடுபவன் வேலை கிடைக்காமல் ஓடவில்லை. கிடைக்க கூடிய வேலையை உதாசீனபடுத்திவிட்டு காசு பார்க்க ஓடுகிறான் என்று சொன்னால் அதை மறுக்க முடியாமல் பார்ப்பன மாணவர்களில் கொஞ்சம் பேருக்குத்தான் அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது என்கிறார். இதுக்கு பேர் மறுக்கும் விவாதமா.

              \\ புரோகிதம் செய்பவர்கள் உங்கள் வார்த்தைகளில் திருடர்கள்..!!//

              “எங்கெங்கே கோவில், வழிபாடு, திருவிழா, கலைவிழா, தானம், தர்மம், கல்வி பெருக்கெடுத்து ஓடுகிறதோ அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள்”

              என்ற உங்கள் கருத்துக்கு தமிழ் இப்படி பதில் சொன்னார்.
              உடல் வருந்தாமல், நோகாமல் அடுத்தவனுடைய உடல் உழைப்பில், அடுத்தவனுடைய வேர்வையில் எப்படி முத்து குளிக்கலாம் என்பதை அறிந்து அப்படிப்பட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்கங்கே அந்தந்த காலங்களில் போய் செட்டில் ஆனார்கள் என்று இருந்தால் சரியாக இருக்கும்.

              அதற்கு நீங்கள்
              பொறாமையா இருக்கா தமிழ் பாய்..?! என்று பதில் சொன்னீர்கள்.இந்த பதிலில் நிலப்பிரபுத்துவ காலத்தில் பார்ப்பனர்கள் உழைக்காமல் வாழ்ந்தார்கள் என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள்.அதற்கு போட்ட பதில்தான் இது.
              ”உழைக்காமல் உண்ணும் உணவு திருடி தின்பதற்கு சமம்.நான் மட்டும் சொல்லவில்லை அம்பி.காந்தியாரும் சொல்லியிருக்கிறார்.”
              ஆம்.ஏற்கனவே நாம் நடத்திய விவாதத்திலேயே பார்த்துள்ளோம்.விவசாய நிலங்களை தானமாக பெற்ற பார்ப்பனர்கள் குத்தகைக்கு விட்டு வாரம் வாங்கி உண்டு களித்திருக்கிறார்கள்.இதுதான் காந்தியின் சொற்களில் திருடி தின்பது.

              இப்போது புரோகிதம் செய்து பிழைப்பவர்கள் ”கடும் உழைப்பாளிகள்” என்று சொல்றீங்க.அவர்கள் உழைப்பால் விளையும் ”பயனை” வைத்து வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

              • // விவசாய நிலங்களை தானமாக பெற்ற பார்ப்பனர்கள் குத்தகைக்கு விட்டு வாரம் வாங்கி உண்டு களித்திருக்கிறார்கள்.இதுதான் காந்தியின் சொற்களில் திருடி தின்பது. //

                உங்களுக்கு இப்ப 2 ஏக்கர் விவசாய நிலம் கிடைத்தால் உடனே களமிறங்கி உழைக்க ஆரம்பிச்சுருவீங்க.. ஏன்னா திருடித் தின்னக் கூடாது பாருங்க…

                • இப்போதே நான் உழைத்து தான் உண்கிறேன்.யாருடைய உழைப்பிலும் உட்கார்ந்து திங்கவில்லை.மேலும் அது என்ன ”உங்களுக்கு இப்ப 2 ஏக்கர் விவசாய நிலம் கிடைத்தால்” என்று எழுதி இருக்கீங்க.அப்படி எல்லாம் ஓசியாக கிடைத்தாலும் பல்லை காட்டிக் கொண்டு வாங்கும் ஈனப்புத்தி எனக்கு இல்லை.

                  • உங்களுக்கு ஓசியாகத்தான் நிலம் கிடைக்கப் போகிறதென்று யார் சொன்னது..?! நடைமுறை வழக்கத்தால் உங்களுக்கு உரிமையுள்ள நிலம் தற்போது கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அல்லது ஏற்கனவே சொந்த நிலம் இருந்தாலும் சரி.. நீங்கள் அதில் இறங்கி உழைத்துப் பிழைப்பீர்களா.. இல்லை ’திருடித் தின்பீர்களா’ என்று உடனே அறிவிக்கவும்..

                    ஏனென்றால் உங்கள் தமிழ் நாட்டு மார்க்ஸ் பெரியாரும், திராவிட இயக்க நிலச்சுவான்தார்களும் தங்களது பரந்த நிலங்களில் இறங்கி உழைத்தது போக மீதி நேரங்களில்தான் ஊர் ஊராகப் போய் நிலம் வைத்திருந்த, வைத்திருக்காத (பெரும்பான்மை) பார்ப்பானைத் திருடிப் பிழைப்பவன் என்று திட்டியதாகத் தோன்றுகிறது..

                    • அடேங்கப்பா,என்ன ஒரு வாத திறமை.

                      அம்பி,உங்க அறிவுக்கும் வாத திறமைக்கும் சுப்ரீம் கோர்டுக்கே ஜட்ஜா ஆகியிருக்கணும்.”முன்ஜென்ம வினை” யால் வினவுல வந்து பின்னூட்டம் போட்டுட்டு இருக்கீங்க.நல்வாய்ப்பாக ”அரியானா லாட்டரியில ஒரு கோடி விழுந்தா என்ன பண்ணியிருப்ப ன்னு கேக்காம உட்டீங்களே.அது வரைக்கும் சந்தோசம்.அப்படி கேட்டிருந்தால் பதில் சொல்ல முடியாம திணறி போயிருப்பேன்.

                      ”நாடக கம்பெனி நடத்துறயான்னு கேட்டுட்டானய்யா” என்று ஆற்றாமையால் புலம்பும் வடிவேலுவின் நிலையை ஒத்திருக்கிறது உங்கள் நிலைமை.திருடி தின்றார்கள் பார்ப்பனர்கள் ன்னு சொல்லிட்டானய்யா என்று உங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமா வருவது புரிகிறது.என்ன செய்வது அம்பி,ஏடாகூடமா வாயை கொடுத்தால் அப்படித்தான் வலிக்க வலிக்க வாங்க வேண்டியிருக்கும். உங்கள் முன்னோர்கள் செயலை நியாயப்படுத்த முடியாத ஆத்திரத்தில் நீ யோக்கியமா திராவிட இயக்க தலைவர்கள் யோக்கியமான்னு சேறடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கீங்க.

                      என்னை பொறுத்தவரை உழைத்து வாழ்வது,சொந்த உழைப்பிலிருந்தே உண்பது என்ற கொள்கையை வாழ்வின் எந்த நிலையிலும் கடுகளவு மாற்றமும் இல்லாமல் செயல்படுத்துவது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

                      திராவிட இயக்க தலைவர்களை பொறுத்தவரை இன உரிமைக்காக போராட வந்து சொத்துக்களை இழந்தவர்கள் அவர்கள்.ஆனந்த பவன் என்ற ஒரே ஒரு சொத்தை கொடுத்து விட்டு நாட்டையே சொத்தாக வாங்கி அனுபவிக்கும் நேரு பரம்பரையை போல அதிகார பித்து பிடித்த அற்பர்கள் அல்ல அவர்கள்.அதிலும் தமிழினத்தின் அறிவு தந்தை பெரியார் அவர்களின் தியாகம் எண்ணி எண்ணி போற்றத்தக்கது.அவர் நினைத்திருந்தால் தனது திரண்ட சொத்துக்களை அனுபவித்துக் கொண்டே காங்கிரசில் இருந்தவாறே பார்ப்பன சாதி வெறியுடன் சமரசம் செய்து கொண்டு காலத்தை ஓட்டியிருக்க முடியும்.முதல்வர் பதவிக்கு ராஜாஜியுடன் மல்லுக்கட்டி இருக்கலாம்.குறைந்த பட்சம் அமைச்சர் ஆகியிருக்கலாம்.ஆனால் காங்கிரசை விட்டு வெளியேறி இன விடுதலைக்காக இனத்தின் இழிவு நீக்குவதற்காக இன உரிமைக்காக ஏச்சு பேச்சுகளுக்கு மத்தியில் அடி உதைகளுக்கு அஞ்சாமல் தன வாழ்நாளெல்லாம் ஓடி ஓடி உழைத்தவர் அவர்.அவரது சிக்கனமும் சிரமங்களை முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உலகறிந்த விஷயங்கள்.அவரை ஒத்த தலைவர்கள் விமானம் ஏறி பறந்து திரிந்த போது அவர் மக்களோடு மக்களாய் ரயிலில் ஏறி பயணித்தார்.அதிலும் பெரியார் ஒரு நாளும் ரயிலில் உயர் வகுப்பில் பயணித்ததில்லை.

                      அப்பேற்பட்ட தமிழினத்தின் அருந்தவப் புதல்வர் எங்கள் அய்யாவை குறை கூற ,வெத்தல போட்டது தோஷம்,கிரகணத்தன்னைக்கு சோறு தின்றது பாவம் அதுக்கு பரிகாரமா எங்களுக்கு சொத்தை எழுதி கொடு என்று ஏய்த்து பிழைத்த நயவஞ்சக பார்ப்பன கூட்டத்துக்கு வெட்கம் ஏதுமின்றி வக்காலத்து வாங்கும் அம்பிக்கு கடுகளவும் அருகதை கிடையாது.

                    • // அப்பேற்பட்ட தமிழினத்தின் அருந்தவப் புதல்வர் எங்கள் அய்யாவை..//

                      நீங்கள் ரொம்ப பக்திப் பரவசத்தில் இருப்பதால் என்னை கேள்வி கேட்க அருகதை இல்லாதவன் என்கிறீர்கள்.. நிதானத்திற்கு எப்போது வருகிறீர்களோ அப்போது பதில் சொன்னால் போதும்..

                    • \\நீங்கள் ரொம்ப பக்திப் பரவசத்தில் இருப்பதால் என்னை கேள்வி கேட்க அருகதை இல்லாதவன் என்கிறீர்கள்//

                      \\வெத்தல போட்டது தோஷம்,கிரகணத்தன்னைக்கு சோறு தின்றது பாவம் அதுக்கு பரிகாரமா எங்களுக்கு சொத்தை எழுதி கொடு என்று ஏய்த்து பிழைத்த நயவஞ்சக பார்ப்பன கூட்டத்துக்கு வெட்கம் ஏதுமின்றி வக்காலத்து வாங்கும் அம்பிக்கு கடுகளவும் அருகதை கிடையாது.//

                      \\நிதானத்திற்கு எப்போது வருகிறீர்களோ அப்போது பதில் சொன்னால் போதும்..//

                      \\என்னை பொறுத்தவரை உழைத்து வாழ்வது,சொந்த உழைப்பிலிருந்தே உண்பது என்ற கொள்கையை வாழ்வின் எந்த நிலையிலும் கடுகளவு மாற்றமும் இல்லாமல் செயல்படுத்துவது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
                      திராவிட இயக்க தலைவர்களை பொறுத்தவரை இன உரிமைக்காக போராட வந்து சொத்துக்களை இழந்தவர்கள் அவர்கள்//

                    • // குத்தகைக்கு விட்டு வாரம் வாங்கி உண்டு களித்திருக்கிறார்கள்.இதுதான் காந்தியின் சொற்களில் திருடி தின்பது. //

          • // பார்ப்பன அடிமை தியாகுவே வருக //

            பார்ப்பனத் துவேசத்தை ஏற்க மறுப்பவர்கள் எல்லாம் பார்ப்பன அடிமைகளா..?!
            தமிழ் புலவர்கள், தமிழ் மன்னர்கள், தமிழர் ஆளுமைகள் எல்லாம் பார்ப்பன அடிமைகள் என்று சாடி, தம் முன்னோர்களை முட்டாள்கள் என்று எண்ணுமளவுக்கு தமிழர்களை மூளைச் சலவை செய்த பெரியாரின் உத்தி இன்னும் வீரியத்துடன் இருந்து பலருக்கும் பயனளித்துக் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை, வேதனை..

            • நாங்கள் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர்கள்.துவேசிகள் அல்ல.பார்ப்பனர்களை இந்த நாட்டை விட்டு தொரத்தனும் என்றோ,பார்ப்பனர்களை கொல்லனும்னோ ஒரு நாளும் பேசியவர்களில்லை.நாங்கள் அப்படிப்பட்ட கயவர்கள் அல்ல.

              துவேஷம் என்பதற்கும் துவேசிகள் யார் என்பதற்கும் இந்து மத வெறி சங் பரிவார் கும்பல்தான் சரியான உதாரணம்.அவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மத சிறுபான்மையினர் மீது துவேஷம் கொண்டு திரிகிறார்கள். கொலை,கற்பழிப்பு என அம்மக்கள் மீது வெறியாட்டத்தை நடத்துகிறார்கள். முஸ்லிம் கிறித்தவ மக்களை நாட்டை விட்டு தொரத்தனும் அல்லது கொல்லணும்னு வெறி பிடித்து பேசி திரிகிறார்கள்.அவ்வளவு ஏன் அந்த துவேஷம் உங்களிடமும் இருக்கிறது.அதனால்தான்

              ”கல்நெஞ்சம் கர்த்தர் சொன்னபடி மன்னிக்கிறார்.நீங்கள் சொன்னபடி இந்துக்கள் ஆதரவுக்கு அடையாளமா ”கிருத்துவ மக்களை தாக்கிய, கன்யாஸ்திரிகளை கற்பழித்த அயோக்கியர்களை கண்டிக்கிறேன்”என்று சொல்லுங்களேன் ”

              என்று விடுத்த வேண்டுகோளுக்கு கள்ள மவுனமே பதில் என கல்லாய் சமைந்து விட்டீர்கள்.ஒரு பேச்சுக்கு கூட மத வெறியர்களை கண்டிக்கிறேன் என்று சொல்ல மனம் இல்லாத நீங்கள்தான் உண்மையில் கிறித்தவ இஸ்லாமிய துவேஷம் கொண்டவர்.

              • பின்னூட்டம் 3.2.1.1.4.1.2.1.1.1 – ல்

                ////

                // பழி தீர்க்கவும் வக்கற்றவர்கள் நீங்கள் //

                இதற்கு என்ன அர்த்தம்.. இந்து மதத்துக்காக என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தையே கேவலப் படுத்தும் இந்து மத வெறியர்களைப் போல் கொலை, கற்பழிப்பில் இறங்கவில்லையே என்றா..?!

                ////

                என நான் இந்து மத வெறியர்களையும் சாடுவது செல்லாதா..?!

                • செல்லாது.இது உங்கள் நரித்தந்திரம் மிக்க குதர்க்கமான பின்னூட்டம்.

                  பழி தீர்ப்பதற்கான அர்த்தம் ”தெருவில் இறங்கி மத வெறியர்களை மோதி வீழ்த்துவதுதான் ” என்று அங்கேயே சொன்ன பின்னும் கொலை கற்பழிப்பில் ஈடுபடுவதுதான் பழி தீர்ப்பதா என்று கேடான முறையில் திரித்து விட போடப்பட்ட குதர்க்கமான பின்னூட்டம்.இதிலும் கூட இந்து மத வெறியர்கள் இந்து மதத்தை கேவலப்படுத்துவதாக ”ஆதங்கமே” உள்ளது.அவர்களுக்கான கண்டனம் எங்கே உள்ளது.

                  • உங்களது கண்டனம், பழி தீர்த்தல் போன்ற வெற்றுக் கூச்சல்களை விட இந்து மதத்தின் பெயரால் கொலை, கற்பழிப்பை நடத்துவது மதத்துக்கும், மனிதர்களுக்கும் எதிரான குற்றம் என்னும் பெருவாரியான இந்துக்களின் நிலைப்பாடே இந்து மதத்தின் பெயரால் நடத்தப்படும் குற்றங்களுக்கு இந்துக்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வலுப்படுத்தும்.

                    என்னால் கண்டனம் தெரிவிக்க முடியாது என்ற உங்கள் கற்பனை வேடிக்கையாக இருக்கிறது.. இதோ என் கண்டனம் :
                    எந்த மதத்தின் பெயராலும் மக்களின் மீது கொலை,வன்முறை, கற்பழிப்புகளை நடத்துவோரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

                    // எந்த ஒரு மதவெறியனும் இதற்கு விலக்கல்ல. //

                    என்று சந்தானம் எல்லா மத வெறியர்களையும் விதிவிலக்கின்றி எச்சரிக்கிறாரே, அதே போல் நீங்களும் ஒரு அறிக்கை விடுறதுதானே..

                    • \\எந்த ஒரு மதவெறியனும் இதற்கு விலக்கல்ல.

                      என்று சந்தானம் எல்லா மத வெறியர்களையும் விதிவிலக்கின்றி எச்சரிக்கிறாரே, அதே போல் நீங்களும் ஒரு அறிக்கை விடுறதுதானே.//

                      நீங்கள் சொல்லிக் கொடுத்து மதவெறி எதிர்ப்பை தெரிந்து கொள்ள வேண்டிய அவல நிலை எமக்கில்லை.ஏற்கனவே சொன்னது
                      https://www.vinavu.com/2012/08/23/aval-vikatan/#comment-66973

                      ”இந்து மத வெறி மட்டுமல்ல இஸ்லாமிய கிறித்தவ மதவெறி உள்ளிட்ட அனைத்து வகையான மத வெறியையும் மாயக்காமல் உழைக்கும் மக்களுக்கு அமைதியும் நல்வாழ்வும் சாத்தியமில்லை”

                      சந்தானம் சொன்னதுல சந்தேகமே வேண்டியதில்லை.மக்களை கொன்ற மதவெறியர்களுக்கு விதிவிலக்கின்றி மக்கள் நீதி மன்றத்தில் ”உரிய” தீர்ப்பு வழங்கப்படும்.

  18. இங்கு இருக்கும் பின்னூட்டத்தையும் படித்த பின் தெரிந்து கொண்டது, பார்ப்பான்கள் திருந்த மாட்டார்கள். மாருதி போல ஒருநாள் எரிமலை வெடிக்கும். தனியார் துறை உடன் கைகோர்த்த அவர்கள் இந்தியாவில் ஏற்பட போகும் (எப்பொழுது என்று தெரியவில்லை) பொருளாதார சமுக கலவரத்தில் பாதிக்கப்படப் போகிறார்கள் – அவாள் விகடன் உள்பட, பிழைத்தவர்கள் அமெரிக்காவை ஆட்டைய போடா கிளம்பிடுவாங்க

    • // (எப்பொழுது என்று தெரியவில்லை) //

      வேத, சூத்திரங்களிலே என்னைக்குன்னு சூட்சும குறிப்புகள் இருந்தாலும் இருக்கும்..

  19. ஆரிய கட்டுக்கதையும், வந்தேறி கதையும் கழித்துபார்த்தால், பார்பனர் பிழைப்புக்காக எல்லா சாஸ்திரத்தையும் மாற்றிக்கொள்ளும் போக்கு உண்மையே! எங்கு பிழைப்பு இருக்கிறதோ அங்கு செல்வர். போன சுவடே இருக்காது. ஆக்ராஹர்ரம் தமக்குத்தான் என்று சொல்லிவிட்டு, வேறு பிழைப்பு வரும்போது அதை மற்றவருக்கு விற்று விட்டு போக வேண்டியது. கேட்டால் இவனுங்க வந்துட்டனுங்க, இனிமே இந்த ஊரு உதவாது என்று சொல்லவேண்டியது. பிழைப்புக்காக எல்லாரும் செய்வதுதான் என்று சப்பை கட்டு கட்டினாலும், பிராமணன் தான் சொன்ன சாஸ்த்ரத்தை தானே மீறுவதால் கேள்வி வரத்தான் செய்யும்!

  20. // பார்ப்பன அடிமை //

    பார்ப்பனத் துவேசத்தை ஏற்க மறுப்பவர்கள் எல்லாம் பார்ப்பன அடிமைகளா..?!
    தமிழ் புலவர்கள், தமிழ் மன்னர்கள், தமிழர் ஆளுமைகள் எல்லாம் பார்ப்பன அடிமைகள் என்று சாடி, தம் முன்னோர்களை முட்டாள்கள் என்று எண்ணுமளவுக்கு தமிழர்களை மூளைச் சலவை செய்த பெரியாரின் உத்தி இன்னும் வீரியத்துடன் இருந்து பலருக்கும் பயனளித்துக் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை, வேதனை..

Leave a Reply to அன்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க