privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோயஸ் அடிமை தா.பாண்டியனின் வைர விழா!

போயஸ் அடிமை தா.பாண்டியனின் வைர விழா!

-

தா-பாண்டியன்ந்திய கம்யூ கடசியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியனுக்கு 80 வது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் (25.9.2012) சென்னை காமராசர் அரங்கத்தில் நடந்திருக்கிறது. தா.பா வின் அரசியல் வாழ்க்கை பற்றி வெளியிடப்பட்ட சிறப்பு மலரை உ.த.பே.த. நெடுமாறன் (அதாவது உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்) பெற்றுக்கொண்டாராம்.

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்காக  நட்பை விட்டுக் கொடுத்ததில்லை. நட்புக்காக அரசியலை விட்டுக் கொடுத்ததில்லை. இந்தப் பண்பாட்டைப் பின்பற்றும் தலைவர் தா. பாண்டியன் ” என்று விழாவில் பேசினார் அக்கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா.

இந்த  “இயங்கியல் தத்துவத்துக்கு” என்ன பொருள் என்று நமக்கு முதலில் புரியவில்லை. வைகோ, திருமா, சீமான், பண்ருட்டி, ஜி.கே.மணி, மூவேந்தர் முன்னணி சேதுராமன் உள்ளிட்ட பலரும் வாழ்த்த வாழ்த்தத்தான் மேற்படி தத்துவம் லேசாகப் புரியத்தொடங்கியது.

“மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்,  தமிழக  பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா ஆகியோர் எனக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர்” என்று தா.பா தன்னுடைய உரையில் குறிப்பிட்ட போதுதான் தெளிவு பிறந்தது.

அடடா, நட்பு என்றால் இதுவல்லவோ நட்பு ! கம்யூனிஸ்டு என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் கொலைவெறி கொள்ளும் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, ராம கோபாலன் மாதிரியான பாசிஸ்டுகளெல்லாம் தாபாவை வாழ்த்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு இடையிலான நட்பு, எத்தகைய உயர்ந்த நட்பாக இருந்திருக்க வேண்டும்.

“தா.பா அரசியலுக்காக நட்பை விட்டுக் கொடுப்பதில்லை” என்று டி.ராஜா சொன்னாரே, இதான் அதுவா?

எண்ண எண்ணப் புல்லரித்தது. சொறிந்து முடிப்பதற்குள், அடுத்த அதிர்ச்சி.

நேற்றைக்கு (26.9.2012) மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களே நேரில் தா.பா வின் வீட்டுக்குச் சென்று மலர்க்கொத்து கொடுத்திருக்கிறார். முந்தா நாள் தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ வை குண்டர் சட்டத்தில் போட்டுவிட்டு, நேற்றைக்கு தா.பா வுக்கு மலர்க்கொத்து கொடுத்து, அவரது “அரசியல் விசுவாசத்தை” அம்மா சோதித்துப் பார்த்திருக்கிறார்.

தளி ராமச்சந்திரனுக்கும் தா.பாவுக்கும் இடையிலான உறவு என்பது சாதாரண தோழமை அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. தளி தொகுதியை பெறுவதற்காக தாபாவுக்கும் கட்சியின் மாநிலத் தலைமைக்கும் ராமச்சந்திரன் லஞ்சம் கொடுத்தார் என்று குற்றம் சாட்டினார் வலது கம்யூ கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலர் நாகராஜரெட்டி. உடனே அவரை கட்சியிலிருந்து நீக்கியவர் தாபா.

அதுமட்டுமல்ல, பெரியார் தி.க பழனிசாமியை கொலை செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பின்னரும், கிரானைட் குவாரியில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாக வழக்கு போடப்பட்ட பின்னரும், ராமச்சந்திரனின் அண்ணன் தம்பி மாமனார் மச்சான் என்று மொத்த குடும்பமுமே குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட பின்னரும், ஓசூர் நகரமே கட்சியைப் பார்த்துக் காறித்துப்பிய சூழ்நிலையிலும், “நண்பேன்டா” என்று ராமச்சந்திரனுக்காக அதே ஊரில் பப்ளிக்காக பொதுக்கூட்டம் நடத்தியவர் தாபா.

தான் மட்டுமல்ல, தன்னோடு எளிமையின் திருவுருவமான  கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், எம்எல்ஏக்கள் ஆறுமுகம், உலகநாதன், முத்துப்பாண்டி, சுந்தரம், எம்பி லிங்கம் உள்ளிட்ட அத்தனை பேரையும் மேடையில் வரிசையாக நிற்க வைத்து, “நாங்கள் மானத்துக்கு அஞ்சாத மறவர்கள்” என்று நாட்டுக்கே காட்டியவர் தா.பா.

அப்பேர்ப்பட்ட கெழுதகை நண்பரான தளியை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிவிட்டு, அதே கையால் மலர்க்கொத்தை நீட்டும்போது தா.பா வின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? மலர்க்கொத்தைக் கொடுத்து என்ன ரியாக்ஷன் காட்டுகிறார் என்று என்று தா.பா வை சோதனை செய்து பார்த்திருக்கிறார் புரட்சித்தலைவி.

யாரு கிட்ட? ராத்திரி அமைச்சர் பதவி பறிபோன பின்னரும், காலையில் சிரித்த முகத்துடன் புரட்சித்தலைவியை வணங்குவதற்கு செங்கோட்டையனாலேயே முடியும் என்றால், தா.பா வால் முடியாதா? அந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். முகமலர்ச்சியோடு புரட்சித்தலைவியிடம் மலர்க்கொத்தைப் பெற்றுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் தாபா.

சிறையில் இருக்கும் தளி ராமச்சந்திரன் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து  புலம்பலாம், தான் கொட்டி அழுத கணக்கையெல்லாம் சொல்லிப் பொருமலாம். அது அறியாமை !

“அரசியலை, அம்மாவிடம் கொண்டிருக்கும் அரசியல் விசுவாசத்தை நட்புக்காக ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தனது சிரிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார் தாபா.

“நட்புக்காக அரசியலையோ, அரசியலுக்காக நட்பையோ விட்டுக் கொடுக்காதவர் தாபா” என்று டி.ராஜா பாராட்டியதன் பொருள் இப்போது புரிகிறதா?

  1. செய்தித்தாள்களில் ஜெயலலிதா, தாபா, படத்தை பார்த்ததும், இன்னாது த.பா அதிமுகவுல சேர்ந்துட்டாரான்னு தோனுச்சி, அப்புறந்தான் பிடிபட்டது, ஏற்கனவே அதுமுகவுல இருக்குறவர் எப்புடி மறுபடியும் சேரமுடியும்ன்னு..

    • அந்த படத்தை நான் பார்க்கும் போது தா. பாண்டியன் அவர்கள் போயஸ் தோட்டம் பொய் தனது பிறந்தநாளுக்காக ஜெயலலிதாவிடம், ஆசிர்வாதம் வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்தேன்… (தினமும் அப்படி பட்ட படங்கள் தான் நாளிதழ்களில் வருகிறது, அதே போல் நினைத்து விட்டேன்)

  2. மேடையில் பேசும் போது ஏதோ எதுகை மோனையுடன் பேச வேண்டும் என்பத்ற்காக டி. ராஜா அவர்கள் அப்படி பேசிவிட்டார்கள். அதைப் பிடித்துக் கொண்டு இந்த தாளிப்பு தாளித்து விட்டீர்களே.

  3. பின்னே பெரியார் தி.க பழனிசாமி என்ன சாதாரணமான ஆளா…அவர் கொலை செய்யப்பட்ட விதமே துப்பாக்கி குண்டு பாய்ந்து பின்னர் தலை அறுக்கப்பட்டுத்தான். இதே முறையில் பழனிசாமியும் கொலை செய்திருக்கிறார் என்பதெல்லாம் வினவு வெளியிடாதா…வினை விதைத்தான் அதைத்தானே அறுவடை செய்யமுடியும்.கட்டப் பஞ்சாயத்து தகறாரு…வேறு எப்படி முடியும்…

    தா.பாண்டியன் கையில் வாள் வைத்துக்கொண்டு எதிர்க்கருத்து வைத்திருக்கிறவர்களையெல்லாம் போட்டுத்தள்ளுவதா சரியான அணுகுமுறை. அப்படிப் பார்த்தால் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்திருப்பவர்கள் உங்களை எப்போதோ போட்டுத்தள்ளியிருப்பார்கள்….

  4. 12:25க்கு முகப்பேர் த.பா வீட்டுக்கு வந்து பிறந்த நாள் வாழ்த்து; 12:50க்கு அண்ணா ஆர்ச் விசிட்டிங்.

    அதாவது, ஆப்பசைத்த குரங்கா நிற்கும் அண்ணா ஆர்ச்சை நேரடியா வந்து பார்த்தா மக்கள் கிண்டல் அடிப்பாங்க அப்படீங்கற ஒரே காரணத்துக்காகத்தான் தபாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்றாப்புல சீன் செட்டப் பண்ணிட்டாங்க அம்மா. இதையெல்லாம் புரிஞ்சிக்கத் தெரியாம, வாயெல்லாம் பல்லா சிரிக்கிறாரு நம்ம பலே பாண்டி…

  5. “முதல்வர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறித்து கேட்டதற்கு தா.பாண்டியன் கூறியதாவது,

    ஜெயலலிதா அரசியல் நாகரீகம் தெரிந்தவர், மனிதநேயம் மிக்கவர். தனக்கு பல வேலைகள் இருந்த போதும், தோழமை கட்சித் தலைவரான எனக்கு நேரில் வாழ்த்து சொல்ல வந்துள்ளார். இதன்மூலம் தமிழர்களின் பண்பாட்டிற்கு அவர் புகழ் சேர்த்துள்ளார். இந்த சந்திப்பில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. கொள்கை, லட்சியம் அடிப்படையிலான, நட்புறவை வெளிப்படுத்தும் சந்திப்பு அவ்வளவு தான். தேர்தலுக்காக மட்டுமே கூட்டு வைக்கும் மலிவான அரசியல்வாதிகள் நாங்கள் அல்ல என்றார்.”

    தோழரே, என்னமோ நீங்க ஒரு பக்கம் கட்டுரையா எழுதிருக்கீங்க. அய்யா தா.பா. நாலே வரியிலே நச்சுன்னு கொன்னுப்புட்டாரு பாருங்க.

  6. சரியா சொன்னீங்க தமிழ்.
    தேர்தலுக்காக மட்டுமே கூட்டு வைக்கும் மலிவான அரசியல்வாதிகள் நாங்கள் அல்ல அதையூம் தாண்டி….என்று தெளிவாக சுருக்கமாக சொல்லியிருக்கிரார். தபா.வசனம் அதிமுக அல்லக்கைகளை விட……..அப்பா தாங்கள.

    • வயதை வைத்து மதிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல வ்ருவதானது எப்படி இருக்கிறது என்றால்: எங்கள் ஊரில் சலவைத் தொழில் செய்யும் குடும்பத்தினரிடம் ஒரு வயதான கழுதை இருக்கிறது. அதற்கும் மதிப்பு, மரியாதை கொடுக்க வேண்டும் !!!

  7. தா.பா மாதிரி சிறங்தநடிகர்கள் இருந்தும் நம்மால் ஏன்
    சிறந்த படஙளை தயாரிக்க முடியவில்லை?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க