privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 04/10/2012

ஒரு வரிச் செய்திகள் – 04/10/2012

-

செய்தி: அதிமுக 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 12 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

நீதி: புரட்சித் தலைவி செருப்பு மாற்றுவதெல்லாம் ஒரு செய்தியா?

______

செய்தி: அடுத்த 6 மாதங்களில் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்தித் தரவேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதி: கல்வியைத் தனியார்மயமாக்கிவிட்டு கக்கூசுக்கு கவலைப்படும் கனவான்கள்!

______

செய்தி: டீசல் விலை உயர்த்தப்பட்டதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் லாரிகளின் வாடகையை 20 சதவீதம் உயர்த்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நீதி: விலைவாசி உயர்வுக்காக வயிற்றையும் வாயையும் கட்டுவதற்கு பதில் வீதியில் இறங்கி போராடலாம்.

_______

செய்தி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து, பெங்களூர் தமிழ்ச்சங்கம் தலைமையில் தமிழ் அமைப்புகள் பெங்களூரில் புதன் கிழமை தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டன.

நீதி: என்னடா இது இனவாதிகளுக்கு வந்த சோதனை!

________

செய்தி: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணுஉலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அணு மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதி:  அமெரிக்க அணுவுலை ஆண்டைகளுக்கு அடிமைகளின் ஸ்டேடஸ் அப்டேட்!

________

செய்தி: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் ஒரே நாளில் ஒடுக்கி விடுவார் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

நீதி: பாம்பின் கால் பாம்பறியும். ஒரு பாசிஸ்டின் மனது இன்னொரு பாசிஸ்ட்டுக்குத்தான்  தெரியும்!

_________

செய்தி: அ.தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த மனிதச் சங்கிலி போராட்டம் போலீசின் அனுமதி மறுப்பால் கைவிடப்பட்டதாக திமு.க தலைமை அலுவலகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

நீதி: பெர்மிஷன் கொடுத்தால் பாயும் எலி !

________

செய்தி: வியாழக்கிழமை நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், காப்பீட்டுத் துறையில் 26சதவீதமாக உள்ள அன்னிய முதலீட்டை 49சதவீதமாக அதிகரிக்கவும், ஓய்வூதியத் துறையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

நீதி: அடிமடியில் கைவைத்த பின்னராவது அமெரிக்க அடிமைகள் ஆபத்தை உணர்வார்களா?

________

செய்தி: இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியாவில் பயிற்சி பெறும் நடைமுறை தொடரும்; இம்மரபை மாற்றி, சீனாவில் பயிற்சி பெறும் எண்ணமில்லை என்று இலங்கை அமைச்சர் பசில் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

நீதி: ஆக இந்தியாவில் பயிற்சி வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வது இந்தியா அல்ல, இலங்கைதான். நல்ல வல்லரசு!

_________

செய்தி:  “இலங்கை விவகாரத்தில், என்னைப் போல பிரதமர் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

நீதி:  ஆமாமா நீங்க சிவப்பா பயங்கரமா இருக்கீங்க அவரு பயங்கரமா சிவப்பா இருக்காரு!

________

செய்தி: “கொள்ளை சம்பவங்களும், ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களும், ஆசிய கடல் பகுதியின் அச்சுறுத்தலாக விளங்குகின்றன; இவை, ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன,” என, ராணுவ அமைச்சர் அந்தோணி பேசினார்.

நீதி: அவர் சொல்லவில்லை என்றாலும் அது அமெரிக்காதான்!

_______
செய்தி:
பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்காக, வாதாடிய வழக்கறிஞர்கள், தங்களின் சம்பள தொகையை, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த, போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு வழங்க முன் வந்ததற்காக, சுப்ரீம் கோர்ட், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

நீதி:  இது போல நரோடா பாட்டிய வழக்கில் இந்து வெறியர்களுக்காக வாதாடிய வக்கீல்கள், கிடைத்த ஃபீசை கலவரத்தால் பாதிக்கப்பட்ட இசுலாமிய மக்களுக்கு கொடுக்கவில்லை யுவர் ஆனர்!