privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் - வீரமணியின் கபட நாடகம் !

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – வீரமணியின் கபட நாடகம் !

-

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தி.க செய்தது என்ன?

ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் –கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 1-ம் தேதியன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொள்வார்களென கருணாநிதி அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்துக்கு இந்த கோரிக்கையின் மீது தோன்றியிருக்கும் திடீர் அக்கறை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மதுரை
மதுரையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசும் அர்ச்சகர் மாணவர் (கோப்புப் படம்).

1970-ல் பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய திமுக அரசு. அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பார்ப்பனர்கள், ஆகம விதிப்படி தாங்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும், பிற சாதியினர் சாமியைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்றும் வாதிட்டனர்.

“அர்ச்சகர்கள் தங்கள் வேலைக்கு வாரிசுரிமை கோர முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும், “மத சம்பிரதாயப்படி தகுதியான நபர்களை மட்டுமே அரசாங்கம் அர்ச்சகராக நியமிக்க முடியும்” என்றும் கூறியது. சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை இத்தீர்ப்பு எடுத்துக் காட்டியது. இந்நிலையை மாற்றும்பொருட்டு அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு திமுக முயற்சிக்கவில்லை. மாறாக, “அர்ச்சகர் பணி வாரிசுரிமையல்ல” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பின்னரும், 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.

பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியை 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டமாக ம.க.இ.க நடத்தியது. தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து ம.க.இ.க நடத்திய இப்போராட்டத்தில் பெரியார், அம்பேத்கர் படங்களுடன் எமது தோழர்கள் கருவறைக்குள் புகுந்து அரங்கநாதன் சிலையைத் தீண்டினர். தோர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது பார்ப்பனக் கும்பல். கோயிலுக்கு தீட்டுக் கழிப்பு சடங்கும் நடத்தியது. அன்று தமிழகமே ஆதரித்த இந்தப்போராட்டத்தைக் கண்டித்தவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ராம.கோபாலன், இன்னொருவர், “வன்முறைப் போராட்டம்” என்று இதனைக் கண்டித்த வீரமணி.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக 1992-லேயே அறிவித்தார் ஜெயலலிதா. சமூக நீதிகாத்த வீராங்கனையென்று அவருக்குப் பட்டமளித்த வீரமணி, 1996 வரை அதனை அமல்படுத்துமாறு போராடவில்லை. 2001 -ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கிடா வெட்டுத் தடை சட்டம் கொண்டு வந்து, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கிடாவெட்டி சாமி கும்பிடுவதையே கிரிமினல் குற்றமாக்கினார். ம.க.இ.க அதனை எதிர்த்து கிடா வெட்டும் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகமோ சட்டத்தை ஆதரித்து காவடி எடுத்தது.

பத்திரிகை பேட்டி
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, சிவனடியார் ஆறுமுகச் சாமி மற்றும் அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன். (கோப்புப் படம்)

2006 -ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அவசர சட்டம் கொண்டுவந்தார். உடனே கருணாநிதிக்கு தஞ்சையில் பாராட்டு விழா நடத்தினார் வீரமணி. பார்ப்பனரல்லாத அர்ச்சகர் கருவறையில் பூசை செய்வது போலவும், பார்ப்பனர்கள் வெளியே நின்று சாமி கும்பிடுவது போலவும் சிலை செய்து கருணாநிதிக்கு பரிசளித்தார். கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்திய சாதனைக்காக வீரமணியைப் பாராட்டி சென்னையில் ஒரு ஆடம்பர விருந்து வைத்தார்கள் அவரது தொண்டர்கள். விருந்து செரிப்பதற்குள் அந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.

இதன் விளைவாக 2007-08 இல் அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி முடித்த 206 மாணவர்கள் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள். கட்சித்தலைவர்கள் மனது வைத்தால் நடந்து விடும் என்று நம்பிய அந்த அப்பாவி மாணவர்கள் எல்லா தலைவர்களையும் பார்ப்பதற்கு நடையாய் நடந்து கால் தேய்ந்தார்கள். தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் முதல் கருப்புச் சட்டை ஆதீனம் வரை அனைவரையும் பலமுறை பார்த்தார்கள். “வழக்கு இருப்பதால் எதுவும் செய்யமுடியாது” என்பதுதான் மாணவர்களுக்கு கிடைத்த பதில்.

இம்மாணவர்களை, தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களை சங்கமாகத் திரட்டினார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த எமது வழக்குரைஞர்கள். உச்ச நீதிமன்ற வழக்கில் மாணவர்களையும் ஒரு தரப்பாக சேர்த்தார்கள். மாணவர்களை வைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாளேடுகள், வார இதழ்கள், ஆங்கிலப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை பிரபலப் படுத்தினார்கள். படித்து முடித்து தீட்சையும் பெற்று விட்ட இம்மாணவர்களுக்கு சான்றிதழைக் கூட திமுக அரசு வழங்கவில்லை. அதனைப் போராடிப் பெற்றுத் தந்தார்கள். தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அர்ச்சக மாணவர் சங்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து உண்ணாநிலைப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கும் மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்களை எதிர்த்தும், வழக்கை விரைந்து நடத்த முயற்சிக்காத தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை மீனாட்சி கோயிலை முற்றுகையிடும் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.

வழக்கறிஞர் ராஜு
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் தோழர் ராஜு (கோப்புப் படம்).

செப், 2010 பெரியார் பிறந்தநாளன்று, திருவண்ணாமலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள் அர்ச்சக மாணவர்கள். அந்தப் புகைப்படம் ஊடகங்களில் பிரபலமாகவே, ஆத்திரம் கொண்ட இந்து முன்னணிக் காலிகளால் தாக்கப்பட்டார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன். “திருவண்ணாமலைக் கோயிலில் பிரசாத லட்டு பிடிப்பதற்குக் கூட பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்று திமுக ஆட்சியில் அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்தது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவுடன் அதனை அரசு திரும்பப் பெற்றது.

2009 முதல் இன்றுவரை உச்ச நீதிமன்ற வழக்குக்காக சுமார் 15 முறையாவது டெல்லிக்கு அலைந்திருக்கிறார்கள் எமது வழக்குரைஞர்கள். பார்ப்பன அர்ச்சகர்கள் மூத்த வழக்குரைஞர் பராசரனை அமர்த்தியிருப்பதால், அதனை எதிர்கொள்ளும் பொருட்டு நமது தரப்புக்கு காலின் கன்சால்வேஸ், அந்தி அர்ஜுனா போன்ற மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தியிருக்கிறார்கள். வழக்கு தொடர்பாக இதுவரை ஆகியிருக்கும் செலவை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மட்டுமின்றி ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு போன்ற எமது அமைப்புகள் திரட்டித் தந்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகத் தீர்வுக்கு வரவிருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் 6 மாத அவகாசம் பெற்றது தமிழக அரசு. “இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சி; ஆகம விதிப்படி அமையாத சிறு கோயில்களில் சூத்திர அர்ச்சகர்களுக்கு வேலை போட்டுக் கொடுத்து வாயை அடைத்துவிட்டு, பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்வதற்கான சூழ்ச்சி” என்று அம்பலப்படுத்தி ஜனவரி 2013-ல் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகுதான், “ஆறுமாதம் தவணை வாங்கி அரசு செய்தது என்ன” என்று அறிக்கை விட்டார் கருணாநிதி.

அர்ச்சகர் மாணவர்
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் அர்ச்சகர் மாணவர்.

இவையெல்லாம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எமது தோழர்கள்தான் என்பதற்கான ஆதாரங்கள். ஆனால் ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டத்தையொட்டி தி.க போட்டிருக்கும் வெளியீட்டில் இவை பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. உண்மையைச் சொன்னால் இந்த வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் என்பதே ஒரு நாடகம் என்பதனால்தான் இதில் கலந்து கொள்ள முடியாதென்று ம.உ.பா.மைய வழக்குரைஞர்களும் அர்ச்சக மாணவர் சங்கத் தலைவரும் தி.க வினரின் அழைப்பை பல ஊர்களில் நிராகரித்து விட்டார்கள்.

பெரியாரின் மறைவுக்குப் பின், கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கைக்காக வீரமணி உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதை தி.க வின் வெளியீட்டைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும். கல்வி வியாபாரம் செய்து கல்லா கட்டுவதும், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மேலும் பெருக்குவதும்தான் வீரமணி நடத்திவரும் தொழில் சாம்ராச்சியத்தின் இலட்சியம். பெரியாரின் சொத்துககு மட்டுமின்றி, அவரது எழுத்துக்கும் வாரிசுரிமை கோரியவரல்லவா வீரமணி! அர்ச்சக மாணவர்களுக்காக மற்றவர்கள் போராடினாலும், பெரியார் எழுப்பிய கோரிக்கை என்பதால், வாரிசுரிமை என்ற அடிப்படையில் அதற்குரிய பெருமை தனக்கே சேரவேண்டும் என்றுகூட அவர் எண்ணக்கூடும்!

இதுவரை இக்கோரிக்கையில் அக்கறை செலுத்தாத வீரமணி தற்போது திடீரென்று களத்தில் குதித்திருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “ஆலயத் தீண்டாமையை மத உரிமையாக அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா அல்லது அதனைக் குற்றம் என்று கூறப்போகிறதா” என்பதுதான் இவ்வழக்கின் மையமான கேள்வி. இதனைப் புறந்தள்ளிவிட்டு, மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு. இந்த திட்டத்தை சுமுகமாக நிறைவேற்றித் தருவதுதான் வீரமணிக்கு வந்திருக்கும் திடீர் அக்கறையின் நோக்கமா?

அல்லது தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிவெறியை ராமதாசு தூண்டி வருகின்ற சூழலில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடாமல் திசைதிருப்புவதற்காக இந்த பார்ப்பன எதிர்ப்பா? “அரசியல் சட்டத்தை திருத்தினால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும்” என்று கருணாநிதியும், “திருத்தாமலேயே ஆக முடியும் “என்று வீரமணியும் முரண்பட்டுப் பேசிக்கொண்டே ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறிக் கொள்கிறார்களே, அடிப்படையான இந்த வேறுபாட்டுக்கு என்ன விடை? இந்தப் போராட்டமென்பது தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவும், இக்கோரிக்கைக்காக உண்மையாகவே உழைத்தவர்களை இருட்டடிப்பு செய்வதற்காகவும் வீரமணி நடத்தும் நாடகம் என்பதில் ஐயமில்லை. இப்போது இதனை நடத்துவதற்கான நோக்கம் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

பெரியாரின் தொண்டர்களே, சாதி மறுப்பாளர்களே, தமிழ் மக்களே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!

31.7.2013
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

கேப்டன் டிவி விவாதம்

மக்கள் டிவி விவாதம்

மதுரை உண்ணாவிரதப் போராட்டம் – 1

மதுரை உண்ணாவிரதப் போராட்டம் – 2

  1. 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.

    பெரியாரின் தொண்டர்களே, சாதி மறுப்பாளர்களே, தமிழ் மக்களே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!

  2. அடுத்தவன் உழைப்பை பிடுங்கி தின்னுவது இந்த அரசியல்வாதிகளின் தனி திறமை ஆயிற்றே !!!! இந்த கொள்ளை கும்பலை மக்களுக்கு காட்டுவதே நம் முதன்மை பணியாக இருக்க வேண்டும்,இப்போதைக்கு ..மேலும் இந்த கும்பல் ஒரு புல்லை(மரியாதையான வார்த்தை என்பதால் ) கூட புடுங்க வில்லை என்பதை இன்னும் நன்றாக வெளிச்சம் போட்டு கண்பிக்க வேண்டும்

  3. Maariamman is with the head of Renuka devi (Parasuraman mother) and body of her maid.
    where ever the temples where full maariamaman idol is worshipped in those place have only non bramin priest. Maariamman full idol is worshipped only in south India. In north India only the head of themaariamman is worshipped with the bramin priest. more over maariamman temples are located outside the ratha veethi. for maariamman temples only non bramins only will come forward to work. Sorry for commenting in english because i do not know typing and i do not have tamil key board.

    • பரத்வாஜன்:-புறத்தே வாசம் செய்தவன். பிறந்தவுடன் காக்கை கூட்டில் விட்டு விட்டார்களாம். அதனால் கருப்பாக இருப்பாராம். நீங்கள் என்ன கோத்திரம் சுவாமி?

      • மணமகனும்-மணப்பெண்ணும் ஒரே கோத்திரத்தவர்களாக இருக்கக் கூடாது, திருமணத்திற்குப் பின் மனைவி கணவனின் கோத்திரத்திற்குள் வந்துவிடுவாள் என்ற வழக்கத்தின்படி, திருமணம் ஒரே கோத்திரத்துக்குள் நடக்காமல் இரண்டு வெவ்வேறு கோத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கே நடக்கும் என்பதால், எல்லா கோத்திரத்திலும் கருமை, பழுப்பு, சிவப்பு, வெள்ளை என்று மல்டிகலர் பார்ப்பனர்கள் உண்டு.. மேலும் வர்ணம் என்பது பிறப்பு அடிப்படையில் என்று இறுகுவதற்கு முன்பு ஒரே குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் பல வர்ணங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.. இதனால் ஒரே வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வெவ்வேறு நிறமுள்ள குடும்பங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருப்பதுண்டு.. எனவே கலரை மட்டுமே நம்பி வர்ண, கோத்திர கணிப்பில் இறங்குவது உசிதமல்ல..

        • திரு.k.k அவர்கள் கேட்டது கருப்பாக இருக்கும் பலசாதி அர்ச்சகர்கள் எப்படி அய்யர் ஆக முடியும் என்று. பார்பனரிலும் கருப்பு நிறத்தவர் உண்டு. கருப்பு நிறம் பார்பனரால் மிகவும் விரும்பப்பட்டது என்பதால் நான் உதாரணமாக கிண்டலாக சொன்னேன். வேறு ஒன்றும் இல்லை. நன்றி.

      • I am not belong to so called forward caste Iyers. Caste nothing to do with individual growth those who born in scheduled caste seriously have problem in education life style, self discipline etc. I was not given any privilege because I belongs to xyz but I could able to make my life from Zero , So stop blaming others for your mistake. Move your ass and start working.

        • Ok Sir.
          Please explain your above statement: “How come this blackies can be iyers”.
          We do not want to interpret your statement in a wrong way.
          So we request you to explain it to lesser mortals like us and enlighten.

        • Thanks for the advice.But it does not come from you whole heartedly.Every one knows that he has to work hard to come up in life.But here the debate is about denial of opprtunity to others by a section of people on the basis of their birth.

  4. மதச்சார்பற்ற அரசுக்கு கோவிலே என்ன _______ வேலை?

    அரசு கோவில்களில் இருந்து வெளியேறிவிடட்டும். இந்துக்கள் கோவில்களை பார்த்துக்கொள்வார்கள்.

    இப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் தனியார் கோவில்களில் பணிபுரிவதையும் வீடுகளுக்கு போய் யாகங்கள் செய்வது பற்றியும் வெளிநாடுகளுக்கு கும்பாபிஷேகம் செய்ய போவது பற்றியும் இன்றைக்கு வந்திருக்கும் செய்தி

    Chennai: The right to perform pooja in government temples mi­ght have been refused to tra­ined archakars belonging to the lower castes, but se­veral private temples ha­ve opened the doors to th­em.

    Almost 150 out of the 200 odd students who have taken the archarkar training course conducted by st­ate government are now pl­aced in private temples ac­ross Tamil Nadu and there are cases of these trained archakars being called to countries like Australia to perform homam and kumbabhishekam.

    There are archakars who serve in temples full-time, and a few are part-time priests, taking up jobs like mec­hanics, or running com­puter centres in their ne­ighbourhoods – some ha­ve even joined college for studies.

    A case in the Sup­reme Court by the Ma­du­rai­ based Adhi Saiva Si­va­chariyargal welfare union against the appointment of these trained archarkars in 2006 has affected their placement in government temples. The court had issued a stay order on their appointment.

    Nevertheless, trained ar­chakars, belonging to various castes perform poojas in good spirit and are preferred in many private temples. Take the case of 29-year-old D. Shan­mugam who has been serving at the 50-year-old Murugan te­mple in Thu­raiyur, Tir­uchy, for the last four ye­ars. “Priesthood gives me satisfaction. Devotees are ha­ppy as I perform pooja in Sanskrit and Tamil, ba­sed on their request,” he said.

    He earns Rs 7,000 a month in the temple and is called for Ganapathy homam, marriages and naming ceremonies in his neighbourhood.

    A month ago, a Chennai couple whose native place is Thuraiyur, invited Shanmugam to the city for naming their child and to perform rituals.

    Arguing that trained archakars are in no way inferior, V. Ranganathan, coordinator of the Trained Archakar Sangam, said, “We perform poojas wholeheartedly. We are very specific about the agamas and follow them faithfully. We wear the professional att­ire of the priest and so­me of us even have tufts.”

    His cla­ssmate Thiy­agarajan is in Australia for the last two months, performing kumbabhishekam and other ri­tuals in temples there. “Ca­ste has no meaning in the sanctum sanctorum. Any individual who is spiritual can perform poojas,” he said.

    http://www.deccanchronicle.com/130729/news-current-affairs/article/trained-archakars-get-placed-private-temples

    இந்த திராவிட புர்ச்சியாளர்கள் புரச்சி பேசியே சொத்தை திருடியது போதும். இந்து கோவில்களை இந்துக்களிடம் விட்டுவிடுங்கள். யார் பூசை செய்யலாம் வேண்டாம் என்பதை இந்துக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    அப்புறம் இந்த எல்லாச்சாதியினரும் அர்ச்சகர்கள் என வந்துவிட்டால் இந்து மதத்தை திட்ட வேறு ஏதும் இருக்காதே? அப்புறம் எப்படி ஆ ஊன்னா பார்ப்பான் என திட்டுவது?

    • அரசாங்கத்தின் கீழிருக்கும் கோயில்களிலேயே பார்ப்பன ஆதிக்கம் தாங்க முடியவில்லை, இந்த இலட்சணத்தில் கோயிலை இந்துக்களிடம் விட்டு விட்டால், உயர்ந்த சாதி தமிழர்களில் சிலருக்கு ஆலவட்டம் பிடித்துக் கொண்டே கோயில்கள் அனைத்தையும் தமதாக்கிக் கொள்வார்கள் பார்ப்பனர்கள். முதலில், பார்ப்பானோ பறையனோ, அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் வேலை செய்யும் போது பூணூல் அணியக் கூடாதென்ற சட்டம் கொண்டு வந்தால், எந்த சாதி அர்ச்ச்சகர் பூசை செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டுக் கோயில்கள் தமிழாக்கப்பட வேண்டும். அதற்கு முதல் படி, பார்ப்பனர்கள் மட்டும் பூசை செய்யும் கோயில்களில் சாதி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் அர்ச்சகர்களாக்கப் பட வேண்டும்.

      • // பார்ப்பனர்கள் மட்டும் பூசை செய்யும் கோயில்களில் சாதி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் அர்ச்சகர்களாக்கப் பட வேண்டும். //

        அதன் பின் கருவறைக்குள் சாதி வேறுபாடு வந்தால் என்ன செய்வது..?! நிரந்தரமாக கோவில்களுக்குள் டெண்ட் போட்டு கொண்டு சாதி மறுப்பு போராட்டம் நடத்தலாமா..?!

        • சபாஷ்! சரியான போட்டி!
          அர்ச்சகராவது புண்ணாக்காவது. வட மாநில கோயில்களில் உள்ளது போல் மக்களே கருவறைக்குள் சென்று மூலவரை தொட்டு பூசை செய்யும் உரிமையை கேட்போம்.
          ஆகமம் நேற்று வந்தது. புரட்டு வேலை. அர்ச்சா மூர்த்தி தொட்டு வணங்கும் உரிமை அதற்கும் முந்தியது. திருமூலரின் திருமந்திரம் ஒரு பொருள்படும் செய்யுளே. அதை வெள்ளாள வித்தகர்கள் முறுக்கி திரித்து ஆலய வழிபாட்டுக்கான ஆகமமாக புரட்டு பேசுகிறார்கள். மென்னியை பிடித்தால் கைவல்ய நவநீதத்தை தூக்கிகொண்டு ஓடி வருவார்கள். கதைக்கு உதவாது நண்பர்களே.
          புரட்டு பொருள் சொன்னவனே இன்று முழி பிதுங்கி நிற்கிறான்-கருவறை நுழைய முடியாமல்-திருவாசகம் ஓத முடியாமல். என்னே வேடிக்கை?

          • இந்து மதத்தை காப்பாற்றும் உங்களுடைய யோசனைக்கு நன்றி. இதற்குரிய சன்மானத்தை பார்ப்பன கும்பலிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

            • என்ன சொல்ல வரிங்க?
              அப்படின்னா பல சாதி அர்ச்சகர்களை விட்டு இந்து மதத்தை அழிக்க தான் நீங்கள் நீதிமன்றம் போகிறீர்களா?
              பேஷ், பேஷ்! திராவிடர் கழகத்துகாரர்கள் தேவலாம். அறிவு காது வழி வடியுது. துடைச்சுக்குங்க.

              • ஆமா பின்ன இந்து மதத்தை காப்பாற்றுவதா புரட்சியாளர்களின் வேலை, அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே. இந்த விசயத்தை பற்றி அந்த அளவுக்கு உங்களுக்கு அறிதல் புரிதல் எல்லாம் இல்லாமல் இருக்கலாம் அதுக்காக இந்து மதத்தை காப்பாற்றத்தான் புரட்சிகர தோழர்கள் இலட்சக்கணக்கில் செலவு பன்றாங்கன்னு நினைக்கிற அளவுக்கா உங்களுக்கு அறிவு இல்லை. நம்ப முடியல.

                • Thank you for your suicide note.
                  Can you attach your above statement in the affidavit filed in the Supreme court? Can you tell the same thing to the Non Brahmin caste archakas for whom you are fighting the case? Can you tell this to the public by printing and issuing pamphlets to the effect?
                  I don not know your political affiliations. I think Vinavu will escape by disowning you.
                  Hats of to Dravidian Intelligence!!!

  5. இப்போது நீங்கள் சொல்கிறீர்களே அந்தச்சட்டம் வந்ததே திமுகவினால்தான் அதற்கு அடிகோலியது திராவிடர்கழக கபடதாரி வீரமணிதான் அந்த அடிப்படையிலேயே 206பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது…இது தொடர்பில் பல கட்டுரைகளும் தலையங்கங்களும் விடுதலையில் வந்துளளன…தொண்டர்களும் இந்துமதம் பற்றிய கருத்துரையாடல்களில் இந்த 206 பேர் அர்ச்சகர் ஆகமுடியாமல் வழக்குப்போட்டுள்ளது பார்ப்பனர்கள்தான் என்பதைச் சொல்லி வாதாடிககொண்டுவருகிறார்கள்.. பிரச்சனை வழக்குமன்றத்தில் இருக்கும போது வீதிமன்றத்தில் நீங்கள் கருத்துரைப்பரப்பலாம் என்றால் ஏன் திராவிடர்கழகம் மக்கள்மன்றத்தில் போராட்டங்கள் நடத்துவதால் என்ன குறைந்து விடப்போகிறது …. இன்னும் வலுதானே சேர்க்கும் போராட்ட அழைப்புக்கு இணங்க வில்லையாம் போராட்டத்தில் கலந்து கொண்டு

  6. உங்கள் வீரதீர பராக்கிரமங்களை வைக்கலாமே ? வைக்கலாம் ஆனால் கபட வேடதாரி என்று திட்ட முடியாதே, அதுதான்…. வழக்குமன்றம் போனது அதற்காகப்பாடுபட்டது எல்லாம் வரவேற்கப்பட வேண்டியதே ஆனால் கல்விவியாபாரி இதெல்லாம் எதிலிருந்து வருகிறதென்றால் …இந்தப்பிரச்சனையை கையில் திராவிடர் கழகம் எடுத்தவுடன் அதன் எதிரிகளிடம் இது என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படத்தும் என்பது அனைவரும் அறிந்ததே….அதுதான் அதுதான் உங்கள் குதறல்களுக்குக் காரணம் அதனால்தான் பெரியார்சிலைக்கு மாலை போட்டவுடன் இந்து முன்னணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது….ஆகவே ரொம்பத்தான் குதிக்காதீர்கள்

    • கோடி கோடியாய் பெரியாரின் பணத்தை முடிந்து வைத்துக்கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்யாமல் கல்வி வியாபாரமும், வட்டிக்கடையும், பெரியாரின் கொள்கைக்கே எதிராக அல்லேலூயா ஜெபக்கூட்டங்கள் நடத்தவும் பெரியார் திடலை வாடகைக்கு விட்டு கல்லா கட்டி வரும், தன்னைத்தானே பெருமையுடன் தமிழர் தலைவர் என்று அழைத்துக் கொள்ளும் வீரமணி இந்தப் வழக்கிற்காக இதுவரை ஒரு பைசா கூட செலவு செய்ததில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இவ்வழக்கிற்காக உச்சநீதிமன்றம் சென்ற செலவு மட்டும் கோடி ரூபாயை எட்டும் என்றும் நினைக்கிறேன். ஏதாவது செஞ்சிருந்தா தமிழக மக்களிடம் சொல்லுங்கள். பெரியார் வாழ்க !

    • அட நீங்க வேற, தி.க. எப்பவோ ‘திருடர் கழகமாகவும்’, ‘திருடர் முன்னேற்றக் கழகமாகவும்’ மாறிடுச்சு. இவர்கள் எதற்காக போராடுவார்கள் தங்கள் திருட்டு தொழிலை தக்கவைத்து கொள்ளதான்!

  7. இந்த திராவிட புர்ச்சியாளர்கள் புரச்சி பேசியே சொத்தை திருடியது போதும்.///வழக்கம் போல பாப்பானே திருடட்டும்

  8. இவர்கள் யாரை நோக்கி போராடுகிறார்கள்? நாலு முழக்கம் போட்டு, சோடா குடித்து விட்டு போய் விட்டால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? இந்த பிரச்சனையில் முக்கியமான விஷயம் உச்ச நீதிமன்ற வழக்கு. நீதிமன்றத்தில் அல்லவா போராட வேண்டும்?

    வழக்கில் வெற்றி பெற வினவுக்கு வாழ்த்துக்கள்.

    • சரியாக சொன்னீர்கள் வெங்கட். உச்சநீதிமன்றத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்காத இந்த வீரமணி இப்போ நாங்களும் தான் போராடினோம்னு உரிமை கோர வந்துவிட்டார். இது நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களும் தனித்து நின்று நடத்திய போராட்டம்.இந்த புரட்சிகர அமைப்புகளைத் தவிர இப்பிரச்சினையில் தமிழகத்திலிருந்து வேறு யாரும் தலையிடவில்லை, போராடவோ போராடும் மாணவர்களுக்கு துணை நிற்கவோ இல்லை. இப்படி கூறுவதில் பெருமை ஒன்றும் இல்லை மாறாக போராட்டத்தில் பங்கேற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் தான் இதற்காக வெட்கப்பட வேண்டும்.

      தமிழகத்தில் முற்போக்கு பார்ப்பன எதிர்ப்பு பேசுபவர்கள் எல்லாம் ஏன் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, போராட்டங்களுக்கு உதவி செய்யவில்லை அல்லது என்ன செய்திருக்கிறோம் என்கிற கேள்வியை அவர்களே அவர்களிடம் கேட்டுக்கொள்ளட்டும், அதே போல பார்ப்பன எதிர்ப்பை கொள்கையாகக் கொண்ட வீரமனியின் தி.க என்ன செய்தது என்பதையும் வீரமணியிடம் கேட்கட்டும்.

    • அது என்ன வழக்கு திரு. வெங்கடேசன்? எல்லா சாதியினரும் பூசாரி ஆகனும் அப்படித்தான?
      இல்ல எல்லா சாதியினரும் பார்ப்பான் ஆகணுமுன்னா?[குண்டக்க மண்டக்க கேள்விக்கு மன்னிக்கனும்]
      மனிதன் மலம் அள்ளுவதை தடை செய்யவேண்டும் என்று கூட ஒருத்தர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். பாராளுமன்றம் இன்னும் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறது.
      உச்சநீதிமன்றத்தில் கொள்கை பூர்வமாக நம்பிக்கை வைத்து போராடும் வினவுக்கு வாழ்த்துக்கள்.
      கிடக்குறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை.

      • // கிடக்குறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை. //

        வழி மொழிகிறேன்..

      • நக்சல்பாரிகளை உச்சிக்குடுமி மன்றத்தின் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு கெட்டவர்களாக நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். பரவாயில்லை இன்னும் நிறைய படிங்க புரிஞ்சிக்கலாம்.

        எல்லோரும் பாப்பானா ஆக முடியாது அப்படி ஆனால் பார்ப்பான் இருக்க மாட்டான் இந்து மதமும் இருக்காது. எனவே இது அனைவரையும் பார்ப்பானாக்கும் வழக்கல்ல, இந்து மதத்தை அசைத்துப்பார்க்கும் வழக்கு, அனைவரும் இந்து என்பதை அம்பலமாக்கும் வழக்கு.

        • உங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் நம்புங்க.

          • ஆனால் நான் கவனித்தவரை உங்கள் மீசையில் மண் ஒட்டிக்கொண்டல்ல அப்பிக்கொண்டிருக்கிறது.

            • அவர் மீசையில் ஒரு லோடு மண்ணு ஒட்டுனாலும் ‘விட்ரா விட்ரா சுனா பானா’ னு போய்ட்டே இருப்பாரு. பரலோகம் பூலோகம்னு கமென்ட் போட்டு மாட்டிகிட்டாலும் அண்ணே எதுக்குமே கவலைப்படமாட்டாரு. 😀

        • இந்து என்ற சொல் ஒரு கற்பனை கட்டுதளை. அதை நிறைய இந்துகள் ஏற்கவில்லை. எல்லோரையும் இந்துக்கள் என்று உச்சா மன்றத்தில் தீர்ப்பு வாங்கி பெருந்திரளான மக்களை முத்திரை குத்தி கதவடைத்து காயடிக்க நீங்கள் எந்த பார்பன மடத்துடன்/RSS/BJP யுடன் கூட்டு சதியில் ஈடுபட்டு உள்ளீர்கள்? எனக்கு தெரிந்து இந்த மாதிரி அவாளே யோசிச்சதில்லையே?
          சாதிகளாய் பிரிந்து வாழ்வதே இவர்களுக்கு பாதுகாப்பு. சமயமாய் சேர்ந்து நிற்பார்கள் என்ற உங்கள் ஆசை பலிக்காது. தேர்தல் வரும் நேரம் பார்த்து இப்படி காமடி பண்ணாதீங்க.
          வாழ்க அண்ணா சமயம்!!!

          • இந்து மத்திற்குள் எல்லா சாதியும் ஒன்னா சமத்துவமா இருக்கனும்கிறதுக்காக பார்ப்பன கும்பலுக்கு ஐடியா கொடுப்பது நீங்கள், இந்து மத்த்தை ஒழிக்க வேண்டும் என்றால் இல்லை இல்லை இந்து மதத்தை காப்பாற்ற வேண்டும் என்று சாமியை தொட்டுக்கும்பிட உரிமை இருந்தால் போது என்று அந்த உரிமை வேண்டும் என்று கேட்பவர் நீங்கள். இப்படி சில பல ஐடியாக்களை கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல ஜால்ராவாக இருந்து வரும் நீங்கள், பார்ப்பன கும்பலை எதிர்த்து வரும் தோழர்களைப் பார்த்து உங்களை அழைக்க வேண்டிய பெயரில் அழைப்பது நியாயமா பரலோகபாண்டி.

            • “தோழர்கள் இந்து மதத்தை ஒழிக்கபோகிரார்கள்”. சரிதானே. பின்னால் பல்டி அடிகப்படாது.
              சரி எந்த தோழர்கள்? வினவு தோழர்களா இல்லை திராவிடர் கழக தோழர்களா? தெளிவா சொல்லீருங்க.
              முடிவு பண்ணியாச்சா?
              எங்க மூணு தடவ திரும்பி சொல்லுங்க:

              இந்து மதத்தை அழிப்போம்
              இந்து மதத்தை அழிப்போம்
              இந்து மதத்தை அழிப்போம்

              புரட்சி ஓங்குக.
              உலக பாட்டாளி வர்க்கமே ஒன்று திரள்வோம்.

              அப்படியே போய் தெருவுல நின்னு சொல்லுங்க.

              ஒரே வருசத்துல உங்க கட்சி ஆட்சிய பிடிசுரும். இந்து மதம் செத்துரும்.

              • ஆம் இந்து மதத்தை ஒழிப்போம். இதை ரோட்டிலும் முழங்குவோம் எங்கள் வீட்டிலும் முழங்குவோம்.

                எங்க இப்ப நீங்க உங்க முழக்கத்தை சொல்லுங்க பார்ப்போம்.

                இந்து மதத்தை காப்பாற்றுவேன்
                இந்து மதத்தை காப்பாற்றுவேன்
                இந்து மதத்தை காப்பாற்றுவேன்

                நடுத்தர வர்க்கமே வாழ்க

                நடுத்தர வர்க்க ஆடுகளே ஒன்று திரள்க

                இதைப் போய் நடுத்தர வர்க்கம் மட்டுமே வாழும் உங்க தெரு முக்குல நின்னு மூனு தடவை சொல்லுங்க. உடனே அனைத்தும் உங்கள் முன் திரண்டு நின்று உங்களுடைய உத்தரவுக்காக காத்திருக்கும். பிறகு அடுத்த தேர்தலுக்கு எவன் அதிகமா காசு குடுக்கிறானோ அவன்கிட்ட வெட்கப்படாமா கைய நல்லா நீட்டி காசை வாங்கிக்கிட்டு ஓட்டைப் போட்ருங்க.

                அப்புறம் தி.க கம்பெனிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இல்லை என்கிற உலகில் யாருக்குமே தெரியாத இரகசியத்தை உங்களுக்கு மட்டும் நான் இப்போது சொல்கிறேன். இந்த இரகசியத்தை அறிந்து கொண்ட பிறகு அவர்கள் இந்து மதத்தை ஒழிப்பார்களா அழிப்பார்களா என்பதை எல்லாம் உங்களுடைய ஆட்டு மூளையை வைத்து சிந்தித்து முடிவு செய்துகொள்ளுங்கள்.

                • D.K. is not having the proper intellectual setup to carry on the legacy of Periyar. They themselves have admitted to it.
                  Only M.L. parties like you can carry on Periyars’ legacy. Because you are the only cult left now to destroy Hinduism.
                  In politics we need comedians to spruce up the drab discourses conducted by the squibs. We cannot depend on Dravidian parties because they have become serious of late. Only you people fit the slot. Thank you for your services.

        • //எல்லோரும் பாப்பானா ஆக முடியாது அப்படி ஆனால் பார்ப்பான் இருக்க மாட்டான் இந்து மதமும் இருக்காது.//
          I recommend you for Nobel prize in Social anthropology? for your above statement.
          Actually I would have recommended for Medicine but alas brain transplantation is yet to be proved successful.

    • அம்பியும், பாண்டியனும் பூடகமாக பேசுகிறார்கள். சரியாக புரியவில்லை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால் ஜாதி ஒழிந்து விடுமா என்பதே கேள்வி என நினைக்கிறேன். இதனால் மட்டும் ஒழியாது என்றே நினைக்கிறேன். ஜாதி ஒழிப்பில் இது ஒரு அங்கம் அவ்வளவே. மேலும், அம்பி சொல்வது போல அனைவரும் அர்ச்சகர் ஆன பின்பு கருவறைக்குள் ஜாதி முளைக்கலாம். நாலு ஜாதி அர்ச்சகர் இருக்கும் கோயிலில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளலாம். பக்தர்கள், எங்க ஜாதி அர்ச்சகரை கூப்பிடுங்க. அவரு கையாலதான் திருநீறு, சடாரி வாங்குவோம்னு சொல்லலாம். இப்படி எல்லாம் ஆகாது என்று நம்புகிறேன். பல ஜாதிக்காரர்கள் வேலை செய்யும் அரசு அலுவலகங்கள் இயல்பாக நடக்கின்றன. இதே போன்று கோயிலும் மாறும். பார்ப்போம்.

      இந்து மதத்தில் இருந்து ஜாதியை பிரிக்க வேண்டும் என்பதே என் அவா. ஜாதிதான் அதன் மூலதனம், ஜாதி ஒழிந்தால் இந்து மதம் திவால் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. கோவிலுக்குள் குறைத்துக் கொண்டிருக்கும் சொறி நாய் இது. வெளியே துரத்த வேண்டும். “வெளியே போய் குறைக்குமே, என்ன செய்வாய்” என்றால், அது வேறு பிரச்சனை. வேறொரு தீர்வு காண வேண்டும்.

      இந்து மத்தில் இருந்து ஜாதியை பிரிக்க அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பதை ஒரு முக்கிய அங்கமாக காண்கிறேன். திருமால் ஆலயத்தில், திருமாலடியார் என்ற ஒற்றை அடையாளமும், ஈசன் ஆலயத்தில் சிவனடியார் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே இருக்க வேண்டும். அடுத்து, வேத, பிரபந்த கோஷ்டிகள் அனைத்து ஜாதியினருக்கும் பொதுவாய் இருக்க வேண்டும். ஒரு முறை காஞ்சி வரதராஜ பெருமாள் பிரபந்த கோஷ்டியில், பனிரெண்டு திருமண் சாற்றிக் கொண்டு வந்த முதியவரை, பூணூல் இல்லை என்ற காரணத்தால் துரத்தி விட்டார்கள். அது மனதில் பதிந்து விட்டது. “நுமர்களை பழிப்பராகில், நொடிப்பதோர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும், அரங்கமா நகருளானே” என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் வாக்கு படி, இந்த பூணூல் போட்ட புலையர்களை கோவிலை விட்டு விரட்ட வேண்டும். திருமால் அடியார் என்ற ஒற்றை நிலையில், ஜாதி வேறுபாடற்ற கோஷ்டியில், அதே வரதராஜ பெருமாள் முன்பு, “இமையோர் தலைவா, மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே ” என உரக்க ஓத வேண்டும். இதே என் கனவு.

      இந்த கனவு நினைவேற ஒரு முக்கிய அங்கமாக “அனைவரும் அர்ச்சர்கர்” சட்டத்தை காண்கிறேன். இது அமலாக்கப்பட ஒரு முக்கிய முட்டுக்கட்டை உச்சநீதிமன்ற வழக்கு. இந்த விஷயத்தில், அது உச்சிக்குடுமி மன்றமா, உச்சா போகும் மன்றமா என எனக்கு கவலை இல்லை. வழக்கில் வெற்றி பெற வேண்டும். அவ்வளவுதான்.

      (தோழர்களே அடிக்க வந்துடாதீங்க. “புலையர்” என்பதை, “கஸ்மாலம்”, “பேமானி” என்பது போல, “இழிந்தவன்” என்பதை குறிக்கும் ஒரு குறியீட்டு சொல்லாகவே காண்கிறேன்).

      • பூடகமாக தெரிந்தால் மன்னிக்கவும் நண்பரே.
        ஆண்டவனுக்கும் அவனை நம்புவனுக்கும் நடுவில் புரோக்கர்/புரோகிதர் என்ன அவசியம்?
        பக்தனே அர்ச்சா மூர்த்தியை தொட்டு வணங்கும் உரிமை இன்றும் வட மாநில கோயில்களில் உண்டு. காசி விஸ்வநாதர் கோயிலிலும் உண்டு. இதன் பின்னணி என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
        புரோக்கர் பதவியின் அவசியத்தை மறுக்காதவர்களை சந்தேக கண் கொண்டு பாருங்கள். அவர்கள் பின்னர் மேய்ப்பர் பதவிக்கு அடி போடுபவர்கள்.அர்ச்சகர்களின் அவசியத்தை நிலைநாட்டுவதே இவர்கள் வேலை. இதிலே இட ஒதுக்கீடு கேட்டு புல்லரிக்க வைப்பார்கள். நீங்கள் மெய்சிலிர்த்து போவீர்கள்.
        மக்கள் அர்ச்சகதன்மையை கேள்வி கேட்டு விடாமல் பார்த்துக்கொள்வதில் ஓட்டு பொறுக்கும்/பொறுக்காத கட்சி கழகங்கள் அனைத்தும் ஒரு மனதோடு செயல்படும்.எல்லாம் கழுதை விட்டைகளே-முன் விட்டை என்ன பின் விட்டை என்ன!
        இது ஒன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை. நீங்கள் வழக்கம் போல் கோயிலுக்கு போய் வாருங்கள். ஆண்டவனை அர்த்த மண்டபத்தில் இருந்து தொழுங்கள். அர்ச்சகர் தட்டிலோ உண்டியலிலோ ஒரு பைசா கூட போடாதீர்கள். ஊரெல்லாம் சேர்ந்து இப்படி செய்து பாருங்கள்.பின்னர் மூலவரை முறை வைத்து வீட்டுக்கு கூட கொண்டு போக உங்களுக்கு அனுமதி கொடுப்பார்கள். காசு சாமி காசு. காசு கொடுத்து அடிக்காமல்-‘கொடுக்காமல்’ அடியுங்கள். விக்கிரக ஆராதனையை விடப்போகிறோம் என்று சொல்லுங்கள். வர்மம் பார்த்து அடியுங்கள்.ஒரு சூத்திரத்தை இன்னொரு சூத்திரத்தால் முறிப்பது ஒரு பெரிய விசயமே இல்லை. இதற்க்கு போய் புரட்சி புண்ணாக்கு என்று பெரிய பெரிய வார்த்தைகளை போடுவது வீண்.

        • நாம் இந்து மதத்தின் சாதி தீண்டாமையை அம்பலப்படுத்தி அதை ஒழிக்க வழி சொன்னால் பரலோகப்பாண்டியன் அதைக் காப்பாற்ற வழி சொல்கிறார். அய்யா பட்டுக்கோட்டைக்கு எங்களுக்கு வழி தெரியும் நீங்கள் கொட்டைப்பாக்குக்கு மட்டும் விலையை சொல்லுங்கள்.

          • சாதி தீண்டாமையை சாதிகள் பார்த்துக்கொள்ளும். அவர்களே பேசி/வெட்டி தீர்த்து கொள்ளட்டும். உங்களை பஞ்சாயத்து பண்ண யார் கூப்பிட்டார்கள்? இந்து பொந்து என்று இத்துப்போன ஆணியை தூக்கிக்கொண்டு சிலுவைக்கு மரம் தேடி டில்லி போக நீங்கள் விருப்பப்பட்டால் அது உங்கள் சுயநல அரசியல். அவ்வளவு எளிதாக மந்தைக்கு ஆடுகள் கிடைக்காது நண்பரே.

            • சிவலோகபாண்டியனை இங்கு பஞ்சாயத்து பண்ண யாராவது கூப்பிட்டீர்களா?

              • சந்தானம், பஞ்சாயத்து பன்ன கூப்பிட்டால் தான் போக வேண்டுமா என்ன ? மேய்ப்பனுக்கு ஒரு பிரச்சினை என்றால் மந்தையில் உள்ள விசுவாச ஆடுகள் முட்டித்தள்ளுவது இயல்பு தானே. எனினும் பரலோகபாண்டி என்கிற இந்த ஆடு மற்ற ஆடுகளைப் போல மந்தையில் உள்ள ஒரு சாதாரண ஆடு அல்ல இது புனித ஆடு. ஆனால் மற்ற ஆடுகளை விட மேய்ப்பனுக்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொள்ளும் ஆடு. அதாவது வெட்டுபவனை அதிகமாக நம்புவது மந்தையில் இல்லாத இந்த ஆடுதான்.

        • எத்தனை ஆண்டுகளாக ஆலயங்களில் காசு வருதுனு சொல்லுங்க பார்போம் காசு வருதுனு ஒரே காரனத்தாலே கடவுளை விளைப்பொருளாக ஆக்கரிங்க

      • வெங்கடேசன்,

        இப்போது டெசோ கூட்டத்தாருக்கு அவசரமாக மாற்று ‘தமிழினப் பகைவர்கள்’ தேவைப்படுகிறார்கள்.. அர்ச்சகப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரை அப்படி ‘தமிழினப் பகைவர்களாக’ காட்டினாலும் டவுசர் கழட்டப்படும்.. இது எல்லாத் தமிழர்களுக்கும் தெரியும்.. எனவே நீங்களும், வினவும் இந்த திராவிடக் கூத்தைப் பார்த்து ஆதங்கப்படுவதை விடுத்து வழக்கை நம்பி காத்திருங்கள்..

        • Ambi,TESO is not against Tamils.TESO has nothing to do with this problem.You are showing your true colour by linking TESO with this problem.The enemies of Tamils need not be searched.We know who they are and our struggle will continue.

        • அம்பி,
          உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். 2G வழக்கில் பெரிய வக்கீல்களை ஏற்பாடு செய்ய முடிந்த கலைஞரால், இந்த வழக்கிற்கு சிறந்த வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்ய முடியாதா? அல்லது, தேர்தலுக்கு பெரிய அளவில் நிதி வசூல் செய்ய முடியும் போது, இந்த வழக்கிற்கு வசூல் செய்ய முடியாதா? மத்திய அரசு அங்கீகாரம் பறிபோகும் அளவிற்கு, கந்தர்வ கோலத்தில், “பல்கலைக்கழகம்” நடத்தும் வீரமணியால் இந்த வழக்கிற்கு ஆகும் செலவை கிள்ளிக் கொடுக்க முடியாதா? இந்த வழக்கு செலவில் வக்கீல் கட்டணம் பெரும் பகுதி என நினைக்கிறேன். இவர்கள், பெரியார் வழி வந்தவர்கள் என பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் வெற்றி பெறத்தக்க திறமையும், வழக்கை இலவசமாக நடத்தும் மனமும் கொண்ட ஒரு வக்கீல் கூடவா திமுக-திக இயக்கங்களில் இல்லை?

          இவர்களை மட்டும் குறை சொன்னால் போதாது. எல்லாரும் இந்துக்கள் என முழங்கும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்றவை இந்த விஷயத்தில் எதிர் அணியில் அல்லவா இருக்கிறார்கள்.

          • சொந்த செலவில் சூனியம் வைக்க கருணாநிதிக்கு யோசனை சொல்கிறீர்கள். கேட்பாரா?
            கீரிக்கும் பாம்புக்கும் சண்டைவிடுகிறேன் என்று கடந்த இருநூறு வருடங்களாக டபாய்த்து கொண்டே ஏமாந்தவனிடம் ரெண்டு ரூபாய்க்கு தாயத்து விற்கும் மோடி மஸ்தான் வேலைகாரனைவிட இந்த திராவிட அரசியல்வாதிகள் திறமையானவர்கள். பிரச்சினை தீர்ந்துபோனால் பின்னர் எதை வைத்து அரசியல் செய்வது?
            சாதியை கண்டுபிடித்தவன் தமிழன். அதற்கு காப்புரிமையும் தமிழனிடமே. அதை அறிவியல் பூர்வமான விஷயம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள். அந்த நம்பிக்கையை திராவிடமோ, RSS/BJP/ இன்னபிற அமைப்புகளோ கேள்வி கேட்பது இல்லை. கேட்டால் முதலுக்கு மோசம் வரும்.
            தயவு செய்து ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்து என்று சொல்லப்படுவது ஒரு கட்டுக்கதை. உங்கள் அடையாளம் சாதியே. சமய வரலாற்றை உற்று நோக்குங்கள். பார்பானுக்கு தாய்மொழி சமஸ்கிருதம் அல்ல.[ஒரு குழுவை தவிர]. பார்பானுக்கும் குலதெய்வம் என்ற பெயரில் சிறு தெய்வ வழிபாடு உண்டு. இயற்கை வழிபாடும் முன்னோர் வழிபாடுமே நம் வேர்கள். பெருந்தெய்வ வழிபாடு நம் ரத்தத்தில் ஒட்டவில்லை. எனவேதான் பல கடவுள் வழிபாடு நம்மிடையே இன்றும் கலாச்சாரமாக உள்ளது.
            சாதிய அடையாளம் தவறில்லை.அது பிறப்பினால் வருவது.சாதீயம்-பற்றும் வெறியுமே தவறு. சாதீயத்தை மறுப்பது என்பது புத்தியால் ஆய்ந்து விடுவது. வெறும் கருத்து கவர்சிக்காக சொல்லி திரிவதில்லை. அவ்வாறு வெற்றுக்கூச்சல் போட்டு அரசியல் வெளியில் திரிந்தவன் எல்லாம் இன்று சாதி கட்சி பாவாடைக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள். இங்கே வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் எல்லா சாதியினருமே அதிகாரத்தில் இருந்தவர்களே;அடிமையாயும் இருந்தவர்களே. உங்கள் சாதியை பற்றி நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ள தேவையில்லை.ஒடுக்கப்படுதல் என்பது உளவியல் போர்.வாழ்வியல் ஆதாரங்களை பிடுங்குவதனால் மட்டும் ஒரு மனிதனை/குழுவை ஒடுக்கிவிட முடியாது. அடிமைகள் திரண்டு அரசமைத்த வரலாறு இங்கே அநேகம் உண்டு. நாங்கள் அடிமைகளாய் இருந்து பின்னர் ஆட்சி அமைத்தவர்கள் என்று தங்களின் கல்வெட்டிலேயே கவுரவமாக பதிந்தவர்கள் உண்டு.

            • //உங்கள் சாதியை பற்றி நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ள தேவையில்லை// சரி பரலோக பாண்டியன், நீங்கள் பெருமை கொள்ளும் உங்கள் சாதி எது? அதன் பெருமைகள் என்ன?

              • தன் சாதி வரலாறை சுயவிமர்சனத்துடன் பார்பவனுக்கு தாழ்வு மனப்பான்மை மட்டுமல்ல உயர்வு மனப்பான்மையும் வராது. கேள்வியின் கேவலம் கூட உங்களுக்கு புரியவில்லை.
                ஒட்டு மொத்த மனஅழுத்தத்துக்கு ஆளான ஒரு சமூக குழுவில் கற்பித்தல் என்பது பொதுவான முறையில் இருந்து மாறுபடும். சற்று அறிவியல் சாராமலும் இருக்கும். சிறுவர்களிடம் நீ கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டது என்று சொல்லும். உடுக்கடிப்பது என்று கூட சொல்லலாம். பின்னர் பெரியவர்கள் ஆனதும் அவர்களே மாற்று கருத்துகளை கற்றுக்கொள்வார்கள்.மன அழுத்தத்தில் இருப்பவனை புறக்காரணிகளை காட்டி பூச்சாண்டி காட்டுவது ஆடு களவானி அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படும். தனிமனிதனை மீட்டெடுக்க பயன்படாது.ஒடுக்கப்பட்டவனின் விடுதலை ஒவ்வொரு மனிதனும் அடையும் தனி விடுதலையின் தொகுப்பே. அது கல்வியின் பால் சாத்தியமாகும். இன்றைய கல்வி முறை அதற்கு சாதகமாக இல்லை. மாற்று கல்வி முறை கொண்டு வர வேண்டும். தனி மனித விடுதலையை இரண்டாம் பட்சமாக்கி ஒட்டுமொத்த இனத்தின் விடுதலையே பிரதானம் என்று கூறுவது கோடாரிக்காம்புகளின் கூற்று.

                • இத்தனை நாளாக முரளி ஒந்தி… என்பவர் அவருக்கும் புரியாமல், மற்றவருக்கும் புரியாமல் பேசுவார், ஆனாலும் சாதி உணர்வில் மட்டும் சரியாக நிற்பார். அதே மாதிரியே பேசுரீங்க!

                  (ஒருவேள அவரோட செகன்ட் பார்ட்டாக இருக்குமோ! )

                  • இரண்டு அர்த்தம் உள்ள சொற்றொடரில் முதல் அர்த்தமே தெரியாதவர் சிலர் உண்டு. புரியவேண்டியவர்களுக்கு புரியும் நண்பரே. உங்கள் மற்றொரு பின்னூட்டத்தில் நாட்ராயன் என்ற பெயரின் பல அர்த்தங்களை தெரியாமல் இழிவாக பேசி இருக்கிறீர்கள் நண்பரே. அதை கவனிக்கவும்.

                • எல்லோரும் திருந்தினா ஊரு திருந்திடும், நாடும் திருந்திடும். சூப்பர், அப்துல்கலாமும் இதைத்தான் சொல்லுது. இதைச் சொல்ல இவ்வளவு பெரிய வெண்ணெய்வெட்டி விளக்கமா பரலோகம். ஆக மொத்தத்தில் நீங்கள் பேசுவதெல்லாம் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதை மட்டும் அனைவரும் புரிந்துகொள்வர். குட்டி முதலாளித்துவ வாழ்க்கையிலிருந்து வெளியே வாருங்கள்.

                  • நீங்கள் மந்தையில் ஒரு ஆடு என்று தவறாக நினைத்துவிட்டேன். நீங்கள் உண்மையில் ஆடேதான்.

                    நான் சொன்னது ஒடுக்கப்பட்டவனுக்கு கொடுக்கப்படும் கல்வி பற்றிய உளவியல் ரீதியான சிந்தனைகளை பற்றி நண்பரே. “Pedagogy of the Oppressed’ புத்தகம் படியுங்கள். மனிதன் கற்றுகொள்ளும் முறை பற்றிய உடலியங்கியல்/உளவியல் கோட்பாடுகள் கருத்துக்கள் பல இணையத்திலேயே கிடைக்கும். ஆப்பிரிக்க இனக்குழுக்களிடையே கல்வி போதித்த ஆசிரியர்களின் அனுபவம் இணையத்தில் கிடைக்கும். இன்னும் நிறைய கிடைக்கும். புத்தகமாக தேட வேண்டியதில்லை. இங்கே உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் உள்ள உளவியல் சிக்கல்களை பற்றி சொல்லிகொண்டிருந்தேன்
                    “திருடனா பார்த்து திருந்த விட்டால்” என்று நான் எம்.ஜி.ஆர். மாதிரி பாடிக்கொண்டு திரிபவன் இல்லை.அப்படை ஒரு அதீத கற்பனை உங்கள் ஆட்டு மூளையில் உதித்ததுக்கு இயங்கியல் ரீதியாக கூட நான் காரணமில்லை.நீங்கள் கற்ற கல்வி உங்களை மலடாக்கி இருக்கலாம். முயற்சி செய்தால் அதையும் நீங்கள் மாற்றலாம்.
                    நிற்க.
                    மொட்ட மாடியில நின்னுகிட்டு கல்லு எறியறத விட்டுட்டு வேட்டிய கட்டிக்கிட்டு கீழ இறங்கி வாங்க. கோதாவுல இறங்குங்க. வரும் போது மறக்காம ஜட்டி போட்டுட்டு வாங்க. எல்லாம் வேட்டிய உருவுற பூர்ஷ்வா பயகளா திரியிறாங்க.
                    வாங்கன்னே வாங்க.

      • Venkatesan It was a good comment quoting Thondaradipodi Alwar.In the same Varadarajaperumal temple,non-brahmins are not allowed to sit while receiving prasadam.But brahmins are allowed.In spite of HR&CE instructions to the temple administration not to discriminate devotees on the basis of caste,the unjust practice continues.

        • நடுத்தரவர்க்க நாகரிகம் பார்க்காமல் சத்தம் போட்டு கேக்கணும் சாமி. கேக்காமல் கிடைக்காது. பிடிக்கலையா? விஸ்வகர்மாக்கள் நிர்வகிக்கும் கோயில்கள் இருக்குது. அங்க போங்க.
          உங்க ஊரு சின்னதா இருந்து நீங்க கொஞ்சம் வசதியானவரா இருந்தா உங்களை தொட்டு பிரசாதம் கொடுப்பார்கள். கச்சி வரதர் கோயில் பெரு நகரத்து கோயில். அங்கே உங்களை அடையாளம் தெரியாது. காஞ்சியில் உள்ள எல்லா கோயிலும் ஒவ்வொரு சாதிக்கு சொந்தமானது. அங்கே அவர்களுக்கே முதல் மரியாதை கிடைக்கும். நாம் வருத்தப்பட தேவையில்லை.
          காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயில் மட்டுமே பிராமணர்களுக்கு சொந்தமானது. வரதர் கோயில் இல்லை. நீங்கள் உள்ளூர் வாசியானால் உங்கள் முகம் தெரியும். மரியாதையாக நடத்துவார்கள். சரி மரியாதை இல்லாத இடத்துக்கு போவானேன்? அதே காஞ்சியில் சமணர் கோயில் உள்ளது. அங்கே செல்லுங்கள். வேறு பல சைவ வைணவ கோயில்கள் உள்ளன. அங்கே அர்ச்சகர் உங்களை தொடுவதை தீட்டு என்று நினைப்பதில்லை. எல்லாம் வரும்படி தான் பிரச்சினை.
          ஒரு காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருமானம் கம்மி. அர்ச்சகர்கள் உங்கள் மேல் விழுந்து புடுங்குவார்கள். இன்று வரும்படி அதிகம்.[திராவிட கட்சிகளின் உபயம்]. உள்ளூர்காரனையே கண்டும் காணதது போல் இருப்பார்கள். ஒரு முறை முறைத்தால் அப்புறம் ஒழுங்காக சேவை செய்வார்கள். தமிழ் நாட்டில் நிறைய கோயில்களில் பக்தர்களை தீண்டினால் தீட்டு என்று பாகுபாடு பார்க்காத அர்ச்சகர்கள், கோயில்கள் நிறைய உண்டு.[எல்லாம் சில்லறை விசயமா என்றும் ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாது]. அது சரி பெரும்பாலும் நாம கோயிலுக்கு போறதே சில்லறை வேணும் என்று தானே? எனக்கு பொருளைகொடு உனக்கு நான் மயிரை கொடுக்கிறேன் என்று பேரம் பேசும் போது பூசாரி கட்ஸ் கேட்பது தவறா?

        • இந்தக் கோவில் நடைமுறைகளை ஓரளவிற்கு அறிவேன். நீங்கள் சொல்லும் விஷயத்தை நேரில் கண்டிருக்கிறேன். இது பற்றி வினவு கட்டுரை ஒன்றும் உண்டு.

          இந்த வேறுபாட்டில் இரண்டு இழைகள் உண்டு. முதலாவது பார்ப்பனர்-அல்லாதோர் என்பது. இரண்டாவது வேத-பிரபந்த கோஷ்டியில் இருப்போர், இல்லாதோர் என்பது. திருவிழா-பூஜை நடக்கும் சமயம் கோஷ்டியில் ஓதுவோர், கோஷ்டியில் சேராதோர் என இரண்டு குழுக்கள் இயல்பாக அமைந்துவிடும். விழா முடிந்து பிரசாதம் தரும்போது இரண்டு குழுக்களும் அப்படியே இருப்பதும் இயற்கையே. இதில் கோஷ்டியில் இருப்போர் அமர்ந்து கொண்டும், இல்லாதோர் நின்று கொண்டும் பிரசாதம் வாங்குகிறார்கள். சில விழாக்களில், கோஷ்டிக்கு சன்னதிக்கு உள்ளேயும், மற்றவருக்கு வெளியேயும் பிரசாதம் என்ற பாகுபாடும் உண்டு. கோஷ்டியில் இல்லாதோர் தாமாக அமர்ந்து விட்டால், எழுப்பி விடுவார்களா என்பது பற்றி எனக்கு தெளிவில்லை. முயன்று பார்க்கலாம். கோவிலுக்கு வந்துவிட்ட அனைவரும் திருமால் அடியார் என்ற வகையில் யாரையும் இழிவு படுத்தக்கூடாது. இயற்கையாய் அமையும் கோஷ்டி-அல்லாதோர் என்ற இரண்டு குழுவாக இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. இருவரையும் சன்னதிக்கு உள்ளே அமர்த்தி பிரசாதம் தரப்பட வேண்டும்.

          இந்த விஷயத்தில் எனக்கு பிரச்சனை யார் கோஷ்டியில் சேர முடியும் என்பதில் தான் உள்ளது. இப்போதுள்ள நடைமுறையில், கோஷ்டியில் சேர பார்ப்பனனாக இருக்க வேண்டும். மேலும், மரபு ரீதியில் உடை-தோற்றம் கொண்டிருக்க வேண்டும். பேன்ட், ஷர்ட், அரை டவுசர் அனுமதி இல்லை. வேட்டி, துண்டு, நெற்றியில் திருமண் என தோற்றம் தேவை. இரண்டும் இருந்தால், வேத-ப்ரபந்தம் ஓதத் தெரியாவிட்டாலும் கோஷ்டியில் சேர்ந்து விட முடியும். ஆனால், பார்ப்பனர் அல்லாதோர் உடை-தோற்றம் கொண்டு, வேதம்-ப்ரபந்தம் ஓதத் தெரிந்தாலும் கோஷ்டியில் சேர முடியாது. இது எனக்கு ஏற்புடையாதாய் இல்லை.

          மொத்தத்தில், இந்த விஷயத்தில், என் கருத்து இது. வேதம்-ப்ரபந்தம் ஓதத் தெரிந்து இருத்தல், அல்லது மற்றவர் ஓதுவதை கேட்பதில் ஈர்ப்பு. அடுத்து, மரபு ரீதியான தோற்றம். இரண்டும் உள்ள எவரும், ஜாதி-வேறுபாடின்றி, கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். விழாவில் கோஷ்டியில் இருப்போர், இல்லாதோர் என்ற பாகுபாடு இயற்கையாய் அமைகிறது. எனவே பிரசாதம் தரும்போது இது தொடர்வதில் தவறில்லை. இருப்பினும் , கோஷ்டியில் இல்லாதோரும் அமர்ந்து கொண்டு, சன்னதிக்கு உள்ளே பிரசாதம் பெற வேண்டும்.

          இங்கே எனக்கு ஒரு நெருடல் உண்டு. பிரபந்தத்தில் அதிகமாக ஓதப்படுவது ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை. அதிக உரைகள் கொண்ட பகுதியும் இதுவே. அதிகமாக உபன்யாசம் செய்யப்படுவதும் இதுவே. இப்படி ஆண்டாள் என்ற பெண் திருமால் அடியார் உயர்த்திப் பிடிக்கப்பட்டாலும், பெண்களை கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லும் அளவிற்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை. பார்ப்போம்.

  9. புரட்சியின் சோல் டிரேடர் கன்சர்ன்களான உங்களை விட்டுவிட்டு போராட்டம் நடத்துவது தான் பிரச்சினையா? வீதிவீதியாய் இந்தப் பிரச்சினையைப் பேசியதும், பேசிக் கொண்டிருப்பதும், 2006 தேர்தல் ஆதரவுக்கு முதன்மையான பிரச்சினையாக அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினையை முன்வைத்து, தி.மு.க. அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் முடிவாக இதனையே வெற்றிகண்டதும் திராவிடர் கழகம் தான். சிதம்பரம் கோவில் பிரச்சினைக்குப் பின் பாராட்டு நடத்திய போது, தி.க. அழைத்த பின்னும் ம.உ.பா. மய்யத்தினர் வராமல் முறுக்கிக் கொண்டு போனதும் ஏன்? இதே போலத் தானா?

    • தில்லை பிரச்சினை, அர்ச்சகர் பிரச்சினையில் திகவின் புரட்சி படங்கள் இருந்தால் எடுத்து வுடுங்கண்ணே. இன்னிக்கு வினவா? நாமலான்னு பாத்துருவோம்.

      வெங்காயம், அம்மா பின்னாடி போன நீ என்ன பாராட்டு விழா நடத்துறது.

    • போராட்டத்தை பெரியார் திடலுக்குள்ளயும், கோபாலபுரத்துலயும் நடத்தக்கூடாது எதிரியின் கோட்டைக்குள், உச்சிக்குடுமி மன்றத்திற்குள் நடத்தனும். அதை செஞ்சிங்களா இல்லையா, இல்லைன்னா ஏன் இல்லைன்னு சொல்லுங்கள்.

      பெரியாரின் சொத்துக்களை இதுபோன்ற பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு செலவு செய்யாமல் வேறு எதுக்காக உங்க தலைவர் சேர்த்து வச்சிட்ருக்காரு ? இந்த வழக்கை நடத்துவதற்கு பல இலட்சம் ரூபாய்கள் செலவாகிறது என்று தோழர்கள் தமிழகத்தின் பேருந்துகளிலும், இரயில்களிலும் பிரச்சாரம் செய்து ஐயாயிரம், பத்தாயிரம் என்று சில இலட்சங்களை திரட்ட மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு நீங்கள் இந்தவகையில் உதவலாமே ? இதுவரை எவ்வளவு ரூபாய் செலவாகியிருக்கிறது என்று கணக்கு கேட்டால் அர்ச்சகர் சங்கத் தலைவர் ரங்கநாதன் உடனடியாக பார்த்து சொல்லிவிடுவார். இதுவரை செலவான தொகையில் சரி பாதியையும் இனிமேல் ஆகக்கூடிய செலவுகளையும் உங்க தலைவர் வீரமணி பகிர்ந்துகொள்ளத் தயாரா ?

      தில்லை நடராசன் கோவிலில் தமிழில் பாட கருணாநிதி உத்தரவு போடவில்லை ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் கருணாநிதியை அப்படி உத்தரவு போட வைத்தன. அதுவும் புரட்சிகர அமைப்புகள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களின் விளைவாக ஈட்டிய வெற்றி தான். அப்படி இருக்கும் போது ம.உ.பா.மையத்திற்கு பாராட்டு விழா நடத்த நீ யாருங்கிறது தான் கேள்வி.

      ஒழிக்க வேண்டியது சங்கரமடத்தை மட்டுமல்ல பெரியாருக்கு எதிராகச் செல்லும் தி.க மடத்தையும் தான் ஒழிக்க வேண்டும்.

    • பிராமணணை நாம் எல்லாரும் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும். இதில் பிளவு வேண்டாம் நண்பர்களே.

  10. சின்ன கோவில்களில் வேலை போட்டு கொடுத்தால் மறுத்து பெரிய கோவில்களில்தான் வேலை வேண்டும் என்று பல சாதி அர்ச்சகர் மாணவர்கள் உங்கள் கருத்தை கேட்டு போராடுவார்களா? இல்லை இப்போதுக்கு கிடைத்த வேலை போதும் பின்னர் பார்த்துகொள்ளலாம் என்ற திராவிட புரோக்கர்களின் வாதத்தை ஏற்று வேலைக்கு போவார்களா?
    பேரம் ஏற்கனவே முடிந்துவிட்டதே!!! இப்போது வந்து பதிவுபோடுகிரீர்களே? ரொம்ப லேட் தோழர்களே.

  11. நோக்கம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக பார்ப்பனர்கள் தாக்கியபோதும் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்த்தின் போது அமைதி காத்தனர் ம.க.இ.க வினர். ஆனால் ம.க.இ.க வினர் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை வன்முறை போராட்டம் என்றவர்தானே இந்த வீரமணி. திருச்சி பாலக்கரையில் ஒரு முறை அவர் பேசியதை நான் எனது காதால் கேட்டபோது இந்த ஆளுக்கு எதுக்கு பெரியாரும் கருப்புச் சட்டடையும் என அப்போதே எண்ணியவன் நான். இவரிடம் வேறேன்ன எதிர்பார்க்க முடியும்? இவருக்குப் பொருத்தமான உடை காவிதான்.

  12. சரி ஒத்து கொல்கிரோம் . ஆனால் மசூதிகலிலும் சர்ச்கலிலும் யாரை வேன்டுமானலும் பதரியார் மட்ரும் தலமை பொருப்புகலில் அர்சு அமர்தட்டும்.

    எல்லா மசூட்கி மட்ரும் சர்ச்கலையும் அரசு எர்கட்டும்

    entha alaiyathayum neengal kattiyathu illai, entha kalathilo yaralo kata pattathu,appothu entha kalathil kata pata rules thane seyal padavendum……………..

    matrum matha nambikai illatha neengal yen em mathathil matram seiya varukireerkal ….moodikondu utkarum…

  13. ————
    ஆட்டம் ஆடுவேன்
    சோக்கா பாட்டு பாடுவேன்
    நேக்கா தேட்டை போடுவேன்.

    என்று பாடிவரும் கள்ளபார்ட் காராமணியை பற்றி இன்னுமா நீங்கள் கவலை படுகிறீர்கள் தோழரே?

  14. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்துடன் அனைத்து ஜாதியினரும் செருப்புத்தைக்க வேண்டும், அனைத்து ஜாதியினரும் சவரம் செய்ய வேண்டும், அனைத்து ஜாதியினரும் சலவை செய்ய வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளையும் ஒரே சேர வைத்து போராடினால் அனைத்து ஜாதியையும் ஒழித்து விடலாம்!!!!!!!! என்ன சரியா?

    அட போங்கையா நீங்களும் ஒங்க போராட்டமும்!!!

    மக்கள் வேலை இல்லாமலும் வறுமை கொட்டுக்குள்ளும் இருந்து படாத பாடுகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். இது போன்ற மக்களுக்கான போராட்டங்களை விட்டு விட்டு உப்பு சப்பில்லாத பிரச்சனைக்கு போராட்டமாம்!!

    லஞ்சத்திற்கு எதிராக யாரும் போராடவில்லை!!! கேட்டால் மக்கள்தான் அதனை செய்ய வேண்டும் என்கிறார்கள் இந்த கூட்டங்கள். முதலில் மக்கள் படும் துயரத்தில் பங்கு கொண்டு அதனை களைய வேண்டாமா?

    • நான்தா மணியாட்டுவேன்னு பார்ப்பான் அடம் புடிக்கிறான்.நான்தா செருப்பு தைப்பேன் நான்தா சவரம் செய்வேன்னு யாரும் புடிவாதம் பண்ணலையே.ஏன் நீங்களே கூட இந்த தொழிலை செய்து உங்கள் வார்த்தைகளுக்கு முன்னுதாரணமா ஆகலாமே.

      ஆகவே மகாஜனங்களே நாளை முதல் நம்ம நட்டுராயன் இந்த தொழில்களில் இறங்க கூடும்.அனைவரும் ஆதரவு தாரீர்.

      • அட நீங்க வேற அவருடைய கவலை என்னவென்றால் உப்புசப்பில்லாத போராட்டம் என்பதால் ஆகவே நாளைக்கு அண்ணன் நட்ராயன் அனைத்து சாதியினரும் மலம் அல்லவேண்டும் என்று, அதையும் அவரே முன்னின்று ஆரம்பித்து வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

        • நாட்ரயான் என்ற பேர் பின்புலம் தெரியாமல் பேசிவிட்டீர்கள். தயவுசெய்து இனிமேல் இவ்வாறு பேசவேண்டாம். அவர் மனம் காயமடைந்திருக்கலாம். பழனி பக்கம் நண்பர்கள்/தோழர்கள் இருந்தால் தயவு செய்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.வினவு மேல உள்ள பின்னூட்டத்தை நீக்கி விடலாம்.

          • அதென்ன நட்டுக்கு பின்புலம்.அந்த புலத்தை கொஞ்சம் எடுத்து விடுங்களேன்.நாங்களும் தெரிஞ்சுக்குவோம்.இல்லாட்டி தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு பக்கத்துலையே உக்காந்துக்கங்க. பின்னாடி வர்ற சந்ததிகள் படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க.

            இன்னொன்னு பரலு,அவர் எப்பேர்பட்ட லார்டு லபக் தாஸ் ஆக இருந்தாலும் வாய வச்சுகிட்டு சும்மா இருக்கணும்.பார்ப்பனர்களுக்கு சொம்பு தூக்குனா இப்படிதா வாங்கி கட்டனும்.

            • தூரப்பார்வை ரொம்ப முத்திபோச்சு. கிட்டத்துல இருக்கிறது ஒன்னும் தெரியல. கண்ணாடிய மாத்தின நல்லது.
              திரு. நாட்ராயன் அவர்களே நீங்கள் மார்க்சுக்கு செம்பு தூக்கினால் இந்த பேச்செல்லாம் வருமா?
              அவரு சொன்னது தப்புன்னு நினச்சா விளக்கம் சொல்லுங்க-உங்க தத்துவ பார்வையினாலே அவருக்கு தெளிவை உண்டாக்குங்க.
              ஒருவேளை காறித்துப்புவது தான் உரையாடலோ? புரியவில்லை நண்பரே.

  15. யார் உண்மையில் போராடினார்கள் என்ற சச்சரவுதான் பெரும்பாலும் நமக்கு பின்னடைவாக அமைந்துவிடுகிறது. முடிந்தவரை அதைத் தவிர்ப்பது நல்லது.

    2. இதே வேகத்தில் பழனி கோவிலையும் பார்ப்பனர்களிடம் இருந்து மீட்க முடியுமா? பழனி முருகன் கோவிலில் பண்டாரங்கள்தான் பூஜைகளைச் செய்து வந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். வருமானம் பெருகிய சூழ்நிலையில், பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இப்போதும் சிலையைத் தொட்டு பூஜை செய்வது பார்ப்பனர்கள்தான். பண்டாரங்கள் வெளியில் நின்றுதான் பூஜை செய்வதை அங்கு போனால் பார்க்கலாம். 5 பண்டாரங்களின் குடும்பத்தினர் மட்டுமே உள்ளே போக அனுமதி உண்டு. அவர்கள் அந்தக் காலத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்பதால் விதிவிலக்கு போலும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நானும் குடும்பத்தினரும் பழனிக்குப் போனால், அங்கு தண்டபாணி என்ற பண்டாரம் குருவிடம்தான் பூஜை பொருட்களைத் தருவோம். செல்போன் இல்லாத காலத்தில்கூட, 5 பைசா, 10 பைசா, 15 பைசா கார்டில் (அந்தந்தக் காலத்தில்) தகவல் தெரிவித்தால், அவர் கோவிலில் எங்களுக்கு காத்திருப்பார். ஆனால் இப்போது பண்டாரங்களை பார்ப்பனர்கள் ஓரங்கட்டிவிட்டது போல் தெரிகிறது. காலங்காலமாக நாங்கள்தான் பூஜை செய்கிறோம் என்று மற்ற கோவில்களில் கூறும் பார்ப்பனர்கள், பழனியில் ஏன் இடைப்பட்ட காலத்தில் ஆக்கிரமித்தனர்? இதை ஏன் நம்மால் மாற்ற முடியவில்லை?

    • /யார் உண்மையில் போராடினார்கள் என்ற சச்சரவுதான் பெரும்பாலும் நமக்கு பின்னடைவாக அமைந்துவிடுகிறது. முடிந்தவரை அதைத் தவிர்ப்பது நல்லது./

      இங்கு யார் போராடினார்கள் என்பதற்கான பிரச்சனையில்லை.

      கலைஞர், வீரமணி கும்பல் சும்மா பெயருக்காக மட்டும் செய்வார்கள் என்று விடமுடியாது, எதாவது சதி திட்டம் இருக்கதான் வாய்ப்பு அதிகம். உதாரணம் தருமபுரி இளவரசன் கொலைக்கு இவர்கள் எந்த ஆர்பாட்டமோ இல்லை அதை கண்டிக்கக் கூட இல்லை. ஆனால் திசை திருப்ப அப்பவே சம்மந்தமே இல்லாமல் சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பதுப்போல் நடித்தனர். ஆனால் இப்பொழுது யோசித்து சாதி வெறியை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொள்ளாம் எனபதற்காக இப்படி நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

      பாஜக ஓநாய் கும்பல் என்றால் இவர்கள் நரிக்கும்பல்.

    • தமிழ்நாட்டு கோயில்களில் பிராமணர் அல்லாத மற்ற சாதியினர் அந்த கோயிலுக்கு உரிமையானவர்களே பூசை செய்து வந்தனர். சோழர் காலத்தில் பிராமணர்களிடம் அர்ச்சகர் வேலை ஒரு சில பெரிய கோயில்களில் கொடுக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சி காலத்திலேதான் எல்லா கோயில்களிலும் பிராமணர்களின் அர்ச்சக உரிமை நிலை நிறுத்தப்பட்டது.

      • தவறு. திரு.விஜய். அவர்களே. நீங்கள் 16.2 பின்னூட்டத்தை பற்றி சொல்லியிருந்தால்-அது என் கருத்து அல்ல. அது பொதுவான ஒரு கருத்து. பலராலும் ஏற்றுகொள்ளபடும் ஒரு கருத்து. ஆனாலும் அது தவறான கருத்து. விமர்சனம் வரும் என்று நினைத்து சொன்னேன். வரவில்லை.
        பிராமணர்களை கோயிலுக்குள் கொண்டு போய் உட்கார வைத்தது எப்போது நடந்தது? சைவ கோயில்களிலா, வைணவ கோயில்களிலா? அவர்களுக்கு முன் யார் இருந்தனர்? இல்லை அர்ச்சகர் இல்லையா? சேர சோழ பாண்டிய வம்சத்தினர் இன்று எந்த தமிழ் சாதிகள் என்று அடையாளம் காண்கிறீர்கள்? சமண கோயில்களில் எப்படி இருந்தது?

  16. வினவின் கட்டுரை வீரமணி மற்றும் அவரது கட்டுப் பாட்டில் உள்ள தி க வின் தற்போதைய , போராட்டத்தை மட்டுமே விமர்சிக்கிறது! ஆனால் இங்கு பின்னூட்டமிடும் அன்பர்கள், வினவின் வாதத்தை விமரிசிக்காமல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையை திசை திருப்பி விமரிசிக்கிறார்கள்! வினவு தன் அங்கலாய்ப்பை பகிர்ந்து கொள்ள இது தருணமில்லை! பெரியார் காலத்திலிருந்தே , அவரை நேரடியாக எதிர்கொள்ள வக்கற்று, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையும், பிற்படுத்தபட்ட சமுதாயத்தையும் மோதவிட்டு அரசியல்நடத்தும் பார்ப்பன வியூகத்தை வினவு கூட மறந்துவிட்டது விந்தையே!

    • இப்படி யோசிச்சு பாருங்களேன்? ஒரு பேச்சுக்கு.
      பெரியாரும் வினவும் ஒரே குறிக்கோளுக்காகவே போராடினர். “பார்பனியத்தை காப்பாற்றுவதற்காக”.
      பலமாக இருப்பவனை நேரடியாக ஆதரித்து போராடலாம்.
      பலமில்லாதவனை, பகை எங்கு உள்ளது என்று தெரியாதவனை எப்படி காப்பாற்றுவது? அவனுடைய பலவீனங்களை தாக்குவதுபோல் அடையாளம் காட்டினால்? வெளியில் இருந்து மற்றவர்கள் தாக்கி முற்றிலும் அழித்து விடுமுன் உள்ளிருந்து தாக்குதல் நாடகம் நடத்தி அவனை எச்சரிக்கை செய்து காப்பாற்றலாமே? தாக்குவதக்கு உள்ளேயே ஆள் இருக்கிறான் என்றால் எதிரியும் சற்று அசால்ட இருந்துவான் இல்ல?
      போற பாதை முக்கியமா போற இடம் முக்கியமா? இன்றைக்கு சரியான இடத்துக்கு தானே வந்திருக்கிறோம்?
      இந்த மாதிரி உபாயத்துல ரெண்டு வசதி உண்டு.அழிக்கிறேன் என்று சொல்லி எதிரி கிட்ட காசு பார்க்கலாம். காப்பதுனவன்கிட்ட தலைமையை புடிங்கிக்கலாம்.
      என்ன நல்ல இருக்கா?
      கொதிச்சி குழம்பு காச்சுறதுக்கு முன்னால இன்னைக்கு பார்பனியம் தளர்ந்திருக்கா இல்லை இறுகி இருக்கான்னு ஒரு பார்வை பாருங்க. இது சம்பந்தமா சாய்பாபா பற்றிய பதிவுல வள வளன்னு பின்னூட்டம் போட்டு வைச்சிருக்கேன். படிச்சிட்டு தாண்டிருங்க.
      நன்றி.

      • //இது சம்பந்தமா சாய்பாபா பற்றிய பதிவுல வள வளன்னு பின்னூட்டம் போட்டு வைச்சிருக்கேன். படிச்சிட்டு தாண்டிருங்க.//

        அய்யோ இப்பமட்டும் நீங்க என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க. புரியும்படியா எழுதற உத்தேசம் இருக்கா இல்லையா

    • ஹரிகுமார் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதவும். தமிங்கிலீசில் எழுதப்படுவைகளை வெளியிடுவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். நன்றி

      • ok.

        In our village temple,there are two of them,one vaishnavite perumal koil,with one priest and generally i have seen only brahmins go into that temple.

        There is another murugan koil,also managed by brahmins but everyone goes inside.

        But i dont know about any koshti poosal,but it is very likely to happen.

  17. My opinion on this issue is,i do not want any athiest,non hindu,agnost to give opinions on this.

    If it is a matter of Hindu theists,then lat all the hindu theists and their respective associations sort out this issue.

    Everyone have a strong association except the brahmins so,it should not be a big deal.

    PP sir sonna maadhiri,malam aaluratha niruthunnu porattam illai,ithukku porattamam.

    En kelvi ithu thaan,archaragalukku ellam ida odhukeedu kedayathu,adhu maadhiri ippo vinnapikkura pudhu archagarkalukkum dia odhukeedu vendamnnu ezhuthi kuduppangala?

  18. Why atheists should not give opinion?It is a question of eliminating discrimination on the basis of one”s birth.Whether the atheists are going to temples or not.All who go there should be treated equally.That is their view.In TN,there are no dry latrines.This argument is only for side tracking the issue.Why not reservation in these posts also.Which rule says that there should not be reservation?

    • நான் பொறக்கும் போது இந்து அப்படின்னு ஆணி அடிச்சுட்டாங்க.மாத்த முடியாது. ஆனா நான் நாத்திகன். இந்து சமய விசயங்களை பற்றி பேச எனக்கு உரிமை இருக்கு.சீர்திருத்தம், புரட்சி, புரட்டிப்போடுன்னு எதையாவது சொல்லிக்கிட்டு இருக்க எனக்கு உரிமை இருக்கு.
      கிருத்துவம், இசுலாம் போன்ற மற்ற சமயங்களை நான் விமர்சனம் செய்யணும் என்றால் என்னுடைய பாதையில் குறுக்கிடும் விசயத்தில் மறுத்து சொல்லலாம். மற்றபடி அவர்கள் சமயத்தை திருத்துகிறேன் என்று கூவ எனக்கு உரிமை இல்லை. அது அவர்களே செய்ய வேண்டிய வேலை.
      இந்துக்கள் இந்து சமய விசயங்களை பற்றி எவ்வளவு கடுமையான விமர்சனம் வைத்தாலும் அது தவறாக எடுத்துகொள்ளபடாது. அப்படிதான் நிறைய பேர் உள்ளிருந்தே சண்டை போட்டிருக்கிறார்கள். ஆனால் புற சமய மக்கள் சொல்லும்போது அரசியலாக பார்க்கப்படும். புற சமய பொருள் உதவியுடன் இங்கே புரட்சி செய்ய வந்தால் கட்டாயம் கேள்வி கேட்பார்கள்.
      சமயம் நிறுவனமாகி போய்விட்டது. நான் நாத்திகனாக இருக்க எனக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்டால் கொடுத்துவிடும். அதற்கு மேல் நான் நிறுவனத்தை உடைக்க வேண்டும் என்று சொன்னால் அது பெரும்பான்மை மக்களால் ஏற்றுகொள்ளப்பட வேண்டும். அதற்கான காரணங்களை நான் நியாயப்படுத்தவேண்டும். என் கையில் அதிகாரமே இருந்தாலும் பாசிச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது. உள்ளே இருக்க முடியவில்லை என்றால் நான் வெளியேற வேண்டும். அம்பேத்கர் அதனால் தான் வெளியேறினார். பாசிச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவில்லை. பிறப்பினால் அனைவரும் சமம் என்று எழுதியவர் அனைவரும் அர்ச்சகராக முடியும் என்று நேரடியாக அவர் அரசியல் அமைப்பு சாசனத்தில் எழுதாமல் போனதுக்கு காரணம் இதுதான். பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சட்டம் உதவாது. ஒருபக்கம் தளர்வாக இருந்த சமயத்தை இருகச்செய்து விட்டு இன்னொரு பக்கம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கி வந்து சமத்துவத்தை கொண்டுவந்து விடுவோம் என்பது வெற்று அரசியல். வெகு ஜன ஆதரவை திரட்ட வக்கற்ற சோம்பேறிகள் அதிகாரத்தை காட்டி மிரட்டுவது வேடிக்கை. சட்டத்தை காட்டி மிரட்டுபவன் முதுகுக்கு பின்னால் துப்பாக்கி வைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். துப்பாக்கி வைத்து மிரட்ட அரசு இருக்கிறதே? இன்னும் ஒரு கூட்டம் எதற்கு?
      Dry Latrines are still there in some areas. The newer drain manholes are more dangerous. It is a problem which needs legal safeguard-unfortunately it is not there and parliament is not taking it seriously. There is a case in Supreme court. Once you have legal safeguard nobody will come and say that they will still support manual scavenging. But the issue of all caste archakas is a religious issue. If the people practicing the religion do not support it wholeheartedly then they will sabotage it cleverly. By the bye why do you need archakas? Why don’t you go and worship the Moolavar idol directly?

      • I dont have a problem with it but it is these archakars who protected many of these ancient idols when they were raided by malik kafur and other invaders.

        It is them who protected these idols,maybe we dont need archakars but many idols ll dissappear oevrnight considering the presece of parties like DK or whoever.

        My only problem is all these people who have a problem with the existing rules should come clean with their religious affiliation,we have so many christians using Hindu names and caste titles and trying to tell hindus whatw e should do.

        If there are genuine atheists,let them come forward and pose debates.

        Other castes never tried to be archakar because they had their own temples and professions better than being an archakar,being vulnerable.

        I think manual scavening is morally very very wrong but if at all there are no solutions, these guys need protection,insurance,mask,safety gear,a good salary,benefits and reservation for their kids and above all respect in the society,their job is as dangerous as an army soldier’s.

        You give that,a logical thing.

        we live in urbanized societies and not like our villages where we can sit in a corner and provide free manure to the crops.

        Unless we fix our sanitation system and drains,we might need manual scavenging to continue,which is very very sad.

        • I am not an Atheist.I took interest in Saiva Sidhaantha and have done a 3 year course on Saiva Sidhaantha.But I still hold the view that even an atheist has perfect right to question inequality in any public place including temples.Just because I am pointing out the ills in Hinduism,nobody can paint me as a person belonging to other religion.So also by highlighting the ills of other religions,we can not tolerate the ills in Hinduism.Generally certain so called religious people have the practice of mentioning the ills of other religions only to side track the issue.

          • Ok,let everyone have the view.

            Being an archakar is a very sensitive issue and issue that involves integrity,there is no ill here.

            Hinduism lets you build your own temple,question everything including the vedas and build your own ideas and nobody gets prosecuted for this.

            But if you want to say that you ll let imbeciels like Veeramani or whoever judge things for me,i am sorry.

            I only see such forces as a mere continuation of christian subversion and not as a genuine issue because there are probably hundreds of things to be fixed before this.

            This is a small issue worth nothing.

            My only question is this,will the new archakars appointed by the government give up reservation for their kids since this was a privileged position dominated by brahmins?

            Because the present archakars dont have it,why should u have the same?

            • கட்டாயம் இடஒதுக்கீடு விட்டு கொடுக்க மாட்டோம். பூசாரி வேலையும் பார்போம். ஒடுக்கப்பட்டவன் என்றும் சொல்வோம். எங்க பிள்ளைகளுக்கு பரம்பரையா பூசாரி வேலை வேணும் என்றும் கேப்போம்[நல்ல வருமானம் இருந்தால்].
              நாங்கெல்லாம் ஒரு கல்லுல ஒம்போது மாங்க அடிப்போமுள்ள!

              • what social reformers?

                The ones who killed the credibility of public institutions and used govt teachers as booth agents for bogus voting,u really must be desperate,that alone is clear.

  19. If u build a temple and appoint anyone/you yourself to be a priest then nobody is going to object.

    why r u not doing that? why should there be reservation,nobody asked the government to take over the temples?

    Let the government build its own temples and appoint priests there,these temples were built by the cholas and they decided these ll be the rules for being a priest and that alone ll be the law,let the government be secular and not interfere.

    Is it not enough that they steal the loot from hundi?

    They have already ruined Education/Law/Banking with reservation and now we need to ruin the temples also?

    please.

    • யன்ன மயித்துக்கு நாங்க கோவில் கட்டனும். பார்ப்பன அர்ச்சகன் இருக்கும் கோவில்களை பார்ப்பன _______ தான் கட்டியதோ ?

        • அரசர்கள் கட்டிய கோவிலாய் இருந்தால், நிர்வாகக் குழுவில் ஊர்த்தலைவர்களும், அரசு அதிகாரிகளும் இருந்தனர்..

          ஊர்மக்கள் கட்டிய கோவிலாய் இருந்தால் சுழற்சி முறையிலோ, பிரதிநித்துவ முறையிலோ நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது..

          தனிமனிதர்களால் கட்டப்பட்ட கோவிலாய் இருந்தால், நிர்வாகம் அந்த குடும்பத்திடம் இருந்தது..

          ஏதேனும் ஒரு சாதி / உறவின்முறையால் கட்டப்பட்ட கோவிலாய் இருந்தால் நிர்வாகமும் அவர்கள் கையில் இருந்தது..

          எனவே, கோவில்களைக் கட்டியது யாராக இருந்தாலும் பூசை செய்யப் பார்ப்பனர்களையும், நிர்வாகம் செய்ய பார்ப்பனரல்லாதவர்களையும் நியமித்தார்கள்.. பார்ப்பான் தானாகப் போய் கருவறையை ஆக்கிரமிக்கவில்லை.. பல கோவில்களில் பூசை உரிமை பார்ப்பனரல்லாதவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு பரம்பரையாக அக்குடும்பத்தாரால் பூசை நடத்தப்பட்டு வருகிறது..

          அந்த முறையில், அஸ்வினுக்கு உரிமைப்பட்ட, அவரது கொள்ளுத்தாத்தா கட்டிய கோவிலில் பூசை செய்யும் பார்ப்பனர்கள் உடனடியாக கோவிலை விட்டு வெளியேறுவதுதான் மரியாதை..

        • You are contradicting yourself.Chola kings were not Brahmins.With their Manuneedhi, Brahmins controlled the Kshatriyas.Rama was a Kshatriya.Yet he obeyed Brahmins.Only to save a Brahmin,he killed Samboogan,a Shudra for his “sin”of doing penance.Even though Vaisya was also called twice-born,at later stages,he,along with Shudra was prevented from studying Vedas.Women,who once performed yajna by herself chanting vedic mantras,women,to whom vedic texts were revealed,the same women during later era of “Smiritis” got degraded as is evidenced by Manusmiriti.

          The above paragraph from “Even though” onwards is quoted by me from an article by Ramdas and published in Bhavan”s Journal dated 15th July,2013 as Bhavan”s Essay.

          • I know they are not but they built the temple,decided the aagamavidhi and appointed xyz as the priest.so,who are you to go and oppose it?

            If you dont like it,dont go to the temple.

            Manu was a Kshatriya himself and the Manu Code was decided by everyone that it is the best fit to follow,Women dont get degraded,they just start assuming a passive role,it is not the same as degradation.Dont give out your missionary brainwashing here,please.

            • It is a typical right wing reaction.Bhavan”s Journal is not run by christian missionaries.I can quote slogans from Manusmriti which degrade women.I am writing about Manusmiriti after reading all its slogans.Mr.Harikumar,just branding the questioners will not do.Are you ready for a debate on Manusmiriti?

              • I am not saying ManuSmirit is flawless,nor am i saying your source is christian missionary subversion but am just saying what happens in the background.

                I am from kanyakuamri district and we know how DMk drives missionary activities here in the last 20 years.

                We can debate on Manusmirit,u can go ahead.

            • Manusmiriti which is considered to be the best by Harikumar contains more than 40 slogans degrading women and many slogans degrading Shudras.Periyar and Ambedkar told the general public about these evil teachings throughout their lifetime.That is why Harikumar&Co vehemently write nasty things about those great men.Vinavu readers should identify these people..

              • Nothing wrong with that but the real issue is that people should be angry at being called shudra and try to reinvent what a shudra means.

                Even the women thing is not wrong

      • நல்ல தமிழில் பேசலாம் நண்பரே. கனியிருக்க காய் கவர்ந்தற்று.[இதை பார்பான் சொல்லல]
        சுயமரியாதை உள்ள ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் சுய மரியாதையை காயப்படுத்த மாட்டார்.
        உங்கள் பேச்சு உங்களை பற்றிய உயர்வான எண்ணத்தை உண்டாக்கவில்லை.
        கடுமையாக விமர்சனம் செய்யுங்கள். ஆனால் வார்த்தைகளை/உணர்சிகளை உங்கள் கட்டுப்பாட்டில் வையுங்கள்.

        நிற்க.
        உங்கள் கேள்வியை சற்று கூர்மையாக கேளுங்கள். யார் கட்டியது என்பதல்ல பிரச்சினை. அப்படி பார்த்தால் நிறைய கோயில் நாம் சமணர்களிடம் இருந்து புடுங்கியது.
        நீங்கள் உங்கள் வேண்டுதலை ஆண்டவனிடம் அர்ச்சகர் மூலமாக வைக்க வேண்டும் என்ற விதி ஒன்றும் இல்லையே!

        • I type from office and it is difficult to type in Thamizh,no otehr reason.

          I personally do not have a problem whoever be the archakar,i dont feel many of today’s archakar have the moral leverage to continue as an archakar.

          But i dont want these pseudo forces like the DK or any of its illegitimate consequences,Communists in any form and basically christians in hindu names to intefere in this decision.

          I feel let all the hindu castes including the dalits decide in every local area to find a way to decide who ll be the archakar and in big temples,i see no reason to change the status quo.

          I am not disrespecting anyone but in this website,if you talk politely they ll think you are weak,thats the level of self esteem which exists here.

          • நான் பின்னூட்டம் இட்டது 22.1 திரு.அஸ்வின் அவர்களுக்கு. திரு ஹரிகுமார் அவர்களுக்கு அல்ல. பார்க்க-22.1.3
            வினவு கொட்டாவி போதும். வரிசையா போடுங்க.

    • To prevent looting by a section of people only,HR&CE Act was brought into force.DK during Periyar period broke Ganesh idols to highlight the superstitious beliefs among the general public.Those who are stealing the idols do not belong to DK.Even in the recent Uttarakhant floods,the hundis were looted by the priests only.Your view about the alleged ruination in Education,Law and Banking is subject to intensive debate.In fact,there are number of eminent Educationists/Lawyers/Bankers among the reserved category.

      • Please sir,

        we know who steals the temple hundis using scientific corruption for all tehse eyars,we know who stole from the kankyakuamri temple and who steal the statues and temple gold and so on….

        The HR & CE is the biggest looter of public money,they solemnly belong to the DK’s philosophy and it is Periyar who gave the moral courage to do all this.

        we have managed temples in the village and it is sivan sothu kula naasam for us,even today that temple in trivandrum is full of its gold and wealth,it would never happen in TN.

        All the diealists ever ready to siphon off temple gold in govt welfare schemes,the beauty of democracy in India with slaves like you.

        • After all the wealth at Padmanabasamy Temple must have been accumulated from out of taxes collected from the citizens by the kings.In those days,there were no treasuries to store the wealth.Its estimated value must be around 80000 crores.Instead of keeping it idle,it can be utilized to pay off the public debt of Kerala.It seems that State has that much public debt.Once the public debt becomes zero,the State will be eligible for inviting investments for industrialization of that State.Keralites returning from gulf countries can be given employment.

          • There is no proof where the money came from and it need not just be from taxes,Travancore is one of the best provinces of India never looted by muslim invaders or the east india co.

            It was a hindu kingdom built exclusively for hindus and is one of the best places with good literacy and good agriculture and hardworking people.

            why should the wealth saved for the famine or bad day be spent for christians/muslims/non believers.

            who r u to judge it,let the mallus stop drinking/doing hawala transactions etc.

            The money is governed by the devaswom board,the raja is still alive even though he has no title.

            This is to prove who swindles temple wealth and who doesn’t,the money saved for a longtime through the prudence of people with integrity cant be spent on drunkards and lazy nobodies.

            Kerala has enough ability to invite FDI if it fixes itself and its ideals.

            Until then even padmanabhaswamy cant save it,just like no god can save tamils from voting for half retards.

            • I have every right to tell my views.Since you could not stomach my radical suggestion,you are unnecessarily calling all Keralites as drunkards/lazy people/hawala traders. First of all,stop calling them as Mallus.You can not have exclusive Hindu kingdom under Indian Constitution,my friend.Some body please take care of this gentleman who is so frustrated that he blames everybody except himself.

              • U can continue begging from the govt and u won’t get a paisa from that temple and I m from kanyakumari and I knw better about mallus than u travancore wealth is gods own n not for random people outside travancore

              • You mean to say that you sometimes blame yourself Sir?
                Your argument is like that of a child: lot of sweets are their in the sweet shop-why cant I go and eat it. Please do not lower the dignity of labor.
                Your argument may seem rational but it is not moral. Please come out of this Chengis Khan mentality Sir. Thank God nobody has suggested that Non Brahmin archakas should be allowed in to Padmanathaswamy temple so as to loot the gold and diamonds and restore social equality.
                If you ask me I want all the riches to be buried along with Padmanathaswamy and not be recovered for ages.We have to blame our politicians and intelligentsia for the immoral state of our people. When one gets not more than 10 lakhs by toiling in his 5 acre land for 20 years, who will resist the idea of selling it for 10 crores for real estate? It is pragmatic. Isn’t’ it? Will the rationalists and communists object? To hell with morals and ethics.

                • Your argument is only childish.The accumulated wealth as a result of tax collection by the kings from their citizens go back to the citizens.What is wrong in it?Well,sell all agricultural lands for real estate and import food grains.Rationalists and communists are already objecting to this practice.You can be awarded with some fancy prize for your suggestion of burying the wealth with Padmanabasamy.

                  • yeah and in return the kings fought for them and gave them protection and all the donations also came in the name of the god and the king,anyway u wont get a single anna,u can complain as long as u want.

  20. பெரியார் திடலில் குரு பூசை….
    மஞ்சள் துண்டு மகான் சிறப்பு உபன்யாசம்….
    அனைவரும் வருக….அனைத்தையும் கழட்டி தருக!

  21. கடவுளை நம்பாத பகுத்தறிவு பகலவன்கள் ஏன் வழிபாட்டு விடயங்களில் தலை இடுகிறார்கள் முரண்பாடாக இருக்கே கடவுளை நம்பவில்லை ஹிந்து மதத்தை மதிக்கவில்லை அனால் எல்லோரையும் அருச்சகர் ஆக்கும் நோக்கம் தான் என்ன இவர்கள் முதலில் தங்கள் கொள்கையில் உறுதியாக இருக்காட்டும் கடவுளை நம்பினொமா கோவிலுக்கு போனோமா கும்பிட்டோமா என்று இருக்கவேண்டும் கருவறைக்குள் போகிறோம் விக்கிரகத்தை தொடுகிறோம் என்பது எல்லாம் வேண்டாத வேலை

  22. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களையும் கட்டியது பார்பனர்கள் அல்ல. இதனை கட்டியவர்கள் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள். கோவிலை கட்டிய இந்த அரச வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு யாரை அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும் என்ற உரிமை உண்டு. அந்த அரச வம்சத்தினர்தான் அப்போது பிராமினர்களை அர்ச்சகர்களாக நியமித்தனர். அந்த அரச வம்சதவர்கள் மட்டுமே இதனை மாற்ற முடியும். மற்றவர்களுக்கு இந்த உரிமை கிடையாது. நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை பல முறை விமர்ச்சித்த வினவு போன்ற “இஸ்லாமிய” பயங்கரவாத அமைப்புக்கு அர்ச்சகர் நியமனம் குறித்து கருத்து சொல்ல எந்த உரிமையும் இல்லை.

    அரசர்கள் செய்ததுபோல் பெரிய கோவில்களை கட்டி பிராமினர்கள் அல்லாத தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக்கி வழிபாடு நடத்த வினவு மேற்கொள்ளவேண்டும்!!!

    எதெர்க்கேடுத்தாலும் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துவது சரியா என்று சிந்திக்க வேண்டும்.
    ஒருபக்கம் ஜாதி ஒழிப்பு நாடகம்!! மறுபக்கம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாகப் போகிறார்களாம்!!!!!! விந்தையிலும் விந்தை.

    முரண்பாடுகளே இதுதான் உனது ஜாதி ஒழிப்பா!!!

    கடவுள் நம்பிக்கை இல்லாத இவர்கள் இல்லாத கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்போகிரார்கலாம். மேலும் இல்லாத கடவுளைப் பார்க்க கர்ப்பக்கிரகம் வரைப் போகப்போகிரர்கலாம்!!!! விந்தை மனிதர்கள். இவர்களுக்கு ஆதரவாக சிலர் கோசமிடுகிரார்கள்!!!!!

  23. ஹரிகுமார்,
    ஆகமம், மரபு, கோவில் கட்டியவரின் விருப்பம் எல்லாம் பின்பற்றப் பட வேண்டும் என்பது சரி தான். ஆனால், சமத்துவம் போன்ற மத சார்பற்ற சமூக அறங்களுக்கு அவை முரண்படாமல் இருக்கும் வரை தான், அவற்றிற்கு மரியாதை தர முடியும்.

    பார்ப்பனர் அல்லாத ஒருவர் பதின்மர் பாடிய அரங்கனுக்கு கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்டால், பிறப்பை காரணமாக்கி தடுப்பது தவறில்லையா? அல்லது, அவர் திருஞானசம்பந்தன் பாடிய கபாலீச்சரத்தானை முப்போதும் திருமேனி தீண்டக் கூடாதா? குடுமித் தேவருக்கு “கலை மலிந்த சீர்நம்பி” கண்ணப்பர் செய்த பூஜை எல்லாம் கப்சாவா? சொந்தமாக கோவில் கட்டி அர்ச்சகர் ஆகலாம் தான். ஆனால், பதின்மரும், மூவரும் பாடாத சாதாரண கோவில் அல்லவா அது?

    நீங்கள் சொல்லும் அதே காரணங்களை சொல்லித்தான் திருப்பாணரும், திருநாளைப்போவாரும், சோக்கமேளரும் கோவிலுக்குள் செல்ல முடியாது என தடுத்து விட்டு, என்னைப் போன்ற சொறி நாய்களை உள்ளே விட்டனர்.

    சோக்கமேளர் பாடுகின்றார், “ஆதி, அந்தம் இல்லாத பரப்பிரம்மமாகிய விட்டலன், இடுப்பில் கை ஊன்றி, செங்கல் மேல் நிற்கின்றான். பண்டரிபுரத்தில் உள்ள இந்த ஆனந்த ஊற்றை அடைய தகுதி உடையவர்களாக ஆக்கிக் கொள்வீர்”. இந்துக்கள் என உணரும் நாம் தகுதி உடையவர்களாக முயல்வோம். ஆகமங்கள் சற்று தள்ளி நிற்கட்டும்.

    • சரி வெங்கடேசன், எல்லோரும் பூசை பண்ணட்டும்.. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.. ரங்கனாத குருக்கள் பெரியார் படத்தை கருவறைக்குள் மாட்டி வைத்து சூடம் காட்டப்படாது.. ஓ.கே.யா..

      • அதெப்படி? இந்து மதத்தை காப்பாற்ற தன் பெயரையே கெடுத்துக்கொண்ட மகான் அவர். ஒரு ஓரமா வச்சி சூடம் காட்டிக்கிறோம். ஒரு ஊதுபத்தியாவது காட்டிக்கிறோம். ப்ளீஸ்!

      • அதெப்படி? இந்து மதத்தை காப்பாற்ற தன் பெயரையே கெடுத்துக்கொண்ட மகான் அவர். ஒரு ஓரமா வச்சி சூடம் காட்டிக்கிறோம். ஒரு ஊதுபத்தியாவது காட்டிக்கிறோம். ப்ளீஸ்!

        • அதான் புத்தரை பகவான் ஆக்கி,நாமத்தை போட்டு, புத்தா அவதாரம் என்று மூலையில் உதாரவைத்து விட்டீர்களே! ஒரு பக்கம் புத்தரே பகவான் நாராயணின் அவதாரம் என்பது, இன்னொரு இடத்தில் புத்தன் சொல் கேளாதே என்று கீதையில் பகவானே சொல்வது, என்ன அபத்தம் அயயா இது?

          • நாளை பெரியாருக்கும் ஒருநாமத்தை போட்டு பெரியார் ஆழ்வார் இவர்தான் என்றுகூட கூறலாம்!நல்ல வேளை, அவரது கருத்துக்களை அவரே அச்சிட்டு வைத்திருக்கிரார்! இந்த காரிய கிறுக்குகளின் கூற்றுகளுக்கு அவரே, அவர் படைப்புகளே பதிலளிக்கும்!

            • அப்பொ கீதை மகாபாரதத்தில் இல்லை என்று ஒப்புகோள்கிறீர்களா? அதென்ன ஒரு டிஸ்கிலைமெர் ?

    • Venkatesan,

      We are shaivite people and we dont have a say on Vaishnava people and their temples.All i am saying is that i dont have a problem in anyone being the priest but the decision cannot be from the government as a unified policy.

      We dont want reservation in these things,let the government get out of the temples,Theistic Hindu mutts/socieities know how to take care of their temples.

      Let the government and HR & CE build its own temples.

      • மத ரீதியான மரபுகள், சமுதாய ரீதியான சட்டங்களுக்கு முரண்படாத வரைதான் அவை மத ரீதியான விஷயங்கள். முரண்பாடு வரும்போது அரசும், நீதிமன்றமும், மத நம்பிக்கை அற்றவர்களும் தலையிடலாம். அரசு இந்து ஆலயங்களை நிர்வகிப்பது எனக்கு தவறாகப் படவில்லை. மத விஷயங்களில் தலையிடாதவரை இது அனுமதிக்கப் படலாம்.

        • Are you sure Mr. Venkatesan?
          Historically it is the other way round. Religious powers were dictating secular power. The king have to go and loot adjacent regions and when they come back they have to build temples-not palaces for themselves. Do you know of any palace of living before Nayaks?
          The army is supplied by the same people who control the religious and local secular authority. If a King protests then people like Manickavasagar will build their own temple-Kings have to ultimately agree. To avoid unnecessary conflict of interest the Kings themselves assumed the religious as well as the secular rule. Only during Nayak rule, the temples were relegated to the back as centers of tax collection. Instead they appointed secular taxmen:-palayakkarars. Money was collected in the name of the Emperor. Money spent on temples was directed from centralized treasury. In previous Chera, Chola Pandya eras-tax was collected in the name of the local temple. The king cannot loot the temple at his will. He will be overthrown. Even then there were tensions-the reason for rapid changes in the castes of ruling dynasties.

      • // We are shaivite people

        யாரை “We” ன்னு சொல்றீங்கன்னு புரியல! நான் காலைல கேசவப் பெருமாள், சாயங்காலம் கபாலீஸ்வரர்னு சுத்தற ஆசாமி!

  24. //தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களையும் கட்டியது பார்பனர்கள் அல்ல. இதனை கட்டியவர்கள் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள்//……தவ்று நாட்ராயன் அவர்களே!
    பெரிய பெரிய கோவில்கள் எல்லாம், அன்னியநாட்டு மக்களை கொள்ளையடித்த பணத்தில், அரசன் புண்ணியம் தேடிக்கொள்ளவும், அரசாங்க பொக்கிஷத்தையும், அரச குடும்பத்தையும் ஆபத்து காலங்களில் பாதுகாத்துக்கொள்ள கட்டப்பட்டவை! சிறிய கோவில்கள் உள்ளூர் மக்களை சுறண்டி, மக்களிடம் அச்ச உணர்வை வளர்க்க கட்டப்பட்டவை! ஆக, எல்லாமே மக்களின் சொத்துதான்! பார்பனர்கள் அரசர்களுக்கு ஆலொசனையும், அறனெறியும் கூறும் அமைச்சர்களாகவும், மேற்குடியை மகிழ்விக்கும் கலைஞர்களாகவும் வந்தனர்! போரினால் வென்ற அரசு செல்வத்தை, சூதினால் கோவில் கட்டுவித்து பதுக்கினர்! இபோது சொல்லுஙகள் கோவிலும், அதன் செல்வங்களும் யாருக்கு சொந்தம்? யார் பூசை செய்தால் என்ன?

    • கோவில் மட்டும்தான் மக்கள் சொத்தா..? எல்லாமே மக்கள் சொத்துதான்.. யாரும் 20 ஏக்கர் நஞ்சை, 100 ஏக்கர் புஞ்சை என்று நிலத்தை கையில் பிடித்துக் கொண்டு வந்து பிறக்கவில்லை.. உங்கள் நிலத்தை உருவாக்கியது உங்கள் மூதாதையரா.. இல்லை அடித்துப் பிடுங்கியதா.. யாரால் கூறமுடியும்..?

  25. //கடவுள் நம்பிக்கை இல்லாத இவர்கள் இல்லாத கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்போகிரார்கலாம்..// உண்மையில், கொவில் கட்டியவனுக்கு கடவுள் பயம் உண்டு(பண்ணிய பாவம் கொஞ்சமா?), கும்பிடப்போகும் பக்தனுக்கும் நம்பிக்கை உண்டு! ஆனால், பூசாரிக்கு நம்பிக்கை இருக்க முடியாது! அதிலும் சுமார்த்த பூசாரிக்கு சுத்தமாக கிடையாது! நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே, கொள்ளையடிப்பவனை பிடிக்க வேண்டும் என்பீர்களா? இந்துக்கள் அனைவரும்(நாத்திகர்களும்) கேள்வி கேட் கலாம் ! மோசடி பேர்வழிகளின் முகத்திரையை, ஏமாந்தவர்கள் மட்டுமே கிழிக்கவேண்டும் என்பீர்களோ !

    • // மோசடி பேர்வழிகளின் முகத்திரையை, ஏமாந்தவர்கள் மட்டுமே கிழிக்கவேண்டும் என்பீர்களோ ! //

      சாமி கும்பிடுபவனை ஏமாந்தவன் என்று கூறுகிறவர்கள் ஏன் எல்லோரையும் பூசாரிகளாக்க-மோசடிப் பேர்வழிகளாக்க நினைக்கிறீர்கள்..?! அதை ‘ஏமாந்தவர்கள்’ தீர்மானிக்கட்டும்.. நீங்கள் ஏமாந்தவர்களை பகுத்தறிவுள்ளவர்களாக மாற்றும் உங்கள் கனவை நனவாக்க முயலுங்கள்.. குறுக்கு வழிக்கு முயன்றால் யார் மோசடி பேர்வழிகள் என்று குழப்பம் வந்துவிடும்..

    • who r to judge all these things?

      Is it the same set of blatant lying that you continue to do so?

      if you have proof,go and file cases against people doing misdeeds.

    • அய்யா காக்கி டிரௌசர் பற்றிய விமர்சினங்களில் கேப்பீங்களே ஒரு கேள்வி ஹிந்துனா யாருன்னு. கேட்டுக்குங்க.

  26. //எனவே, கோவில்களைக் கட்டியது யாராக இருந்தாலும் பூசை செய்யப் பார்ப்பனர்களையும், நிர்வாகம் செய்ய பார்ப்பனரல்லாதவர்களையும் நியமித்தார்கள்.. பார்ப்பான் தானாகப் போய் கருவறையை ஆக்கிரமிக்கவில்லை.. பல கோவில்களில் பூசை உரிமை பார்ப்பனரல்லாதவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு பரம்பரையாக அக்குடும்பத்தாரால் பூசை நடத்தப்பட்டு வருகிறது.// பழனி முருகன் கோவிலில் பரம்பரை அர்ச்சகராக இருந்து வந்த சைவ பண்டார குருக்களைநீக்கி, பார்ப்பன பூசாரியை , ராமப்பைய்யன் என்ற பார்பன அமைச்சன் நியமித்ததும், சிதம்பரம் கோவிலிலில் பூசை செய்ய அலகாபாத்திலிருந்து பிராமனர்களை அந்தக்கால அரசன் கொண்டுவந்ததும் சரித்திர உண்மை! பார்ப்பன அரசியலும் , பார்ப்பன பூசாரியும் ஒரே சமயத்தில், வந்திருக்க வேண்டும்! அப்பொதைய அரசு மக்கள் மீது ஆன்மீக அடக்குமுறையை கொண்டுவந்தது! இப்பொதைய மக்கள் அரசு அதைநீக்கினால் என்ன?

    • // இப்பொதைய மக்கள் அரசு அதைநீக்கினால் என்ன? //

      மக்கள் அரசு அப்படியெல்லாம் அரசர்கால மந்திரிகள் போல விருப்பப்படி செயல்பட முடியாது..

      ராமப்பைய்யன் பார்ப்பன அமைச்சன் என்று எதை வைத்து சொல்கிறீர் நைனா..?! பெயரை வைத்தா..?!

      சிதம்பரம் கோவில் பூசாரிகளை அலகாபாத்திலிருந்து கொண்டு வந்தானோ, ஸ்டெப்பி புல்வெளிக்கே போய் கொண்டு வந்தானோ யாம் அறியோம்.. வேதாகமப் பூசாரிகளாக நியமித்தது அரசன்.. கோவிலைக் கட்டிய அரசன் ஆணை இப்போது செல்லாது என்றால் நாட்டில் பெரும்பான்மை தனியார் நிலங்கள் பறி போய்விடும்..

    • Then let the family of those individual people come and claim the post or atleast claim the position by appointing someone,this wont be decided by communists and athiets.

        • Please go and read the replies given above and the statements given above by the Communist and Atheist comrades. They are bragging about destroying Hindu Religion by using the archakas case. Do you agree Sir?
          I was telling them why not let everyone in to the sanctum? It is done in Kasi Viswanatha Temple-the highest seat of power for Saivaits.
          The comrades do not agree.
          They want the idols with their jewels. Not idols without jewels.
          They want to imitate Brahmin archakas and loot. When you have a combination of same caste archaka and Executive officials it will be easy to loot.
          People will keep on pouring their hard earned and ill gotten wealth in to temples and you are planning to have an all caste theocracy to loot it.
          You accept looting. You only want that let all castes loot. If somebody questions it then you people say keep quite and get out if you don’t want a share.
          Well I was worrying about the moral depredation.

          Kudos to your morals and ethics!!!

    • உங்கள் வரலாற்று அறிவு புல்லரிக்க வைக்கிறது.
      தரவுகளை சரிபார்த்து பேசுங்கள்.
      சிதம்பரம் தீஷிதர்கள் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை. தெரிந்து கொண்டு வாருங்கள் நண்பரே.

  27. ராமப்ப அய்யன் மதுரை நாயக்க அரசர் காலத்திய அமைச்சன்! அம்பி தான் ஒரு அரை வேக்காடுதான் என்பதைநிரூபித்துவிட்டார்! அயொத்தியில் மட்டும் அரசன் ஆணை செல்லாதோ? அரிகுமார் வழக்கம் போல தான் ஒரு அடாவடி என்று காட்டி கொள்கிரார்! தனக்கு என்றால் இந்த பார்ப்பனர்களின் வியாகியானத்தை பார்த்தீர்களா!

    • ராமப்பைய்யன், நரசப்பைய்யன் எல்லாம் நாயக்கர் காலத்திய அமைச்சர்கள்தான்.. கூடவே தளபதிகளாகவும் செயல்பட்டதால் தளவாய்கள் என்றழைக்கப்பட்டார்கள்.. அதிருக்கட்டும், ராமப்பய்யன் பார்ப்பன அமைச்சன் என்று நீங்கள் கூறுவதைக் கேட்டு சில பார்ப்பனர்கள் சந்தோசப்படலாம்.. ஆனால் ராமப்பய்யா என்ற நாயக்கர் தன்னை ராமப்பய்யன் என்று கூறிக்கொள்வதோ, அவருடைய வயது, பதவியை வைத்து மற்றவர்கள் அவரை ராமப்பய்யர் என்று அழைப்பதோ, எல்லாவற்றிலும் பார்ப்பானைத் தேடும் உங்களைப் போன்றவர்களுக்கு தேவையில்லாத விசயங்களாயிற்றே.. தமிழ் அய்யர்கள் ராமப்பன்(ர்) என்பது போன்ற பெயர்கள் வைத்துக் கொள்வது கிடையாது.. ராமன் என்றோ, ராமய்யா என்றோ வைத்துக் கொள்வதுண்டு.. ராமப்பா, கிருஷ்ணப்பா, திம்மப்பா, நரசப்பா, அப்பப்பா போன்ற பெயர்கள் இன்றைய ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் சாதாரணமாக காணப்படும் பெயர்கள்.. ராமப்பய்யர் என்றழைக்கப்பட்ட ராமப்பய்யா ஒரு நாயக்கர்.. ராணி மங்கம்மாள் அரசின் தளவாயான நரசப்பய்யன்-நரசப்பய்யர் என்றழைக்கப்பட்ட நரசப்பய்யாவின் மைத்துனர் பெயர் வீரப்ப நாயக்கர், திருவிதாங்கூர் போரில் கொல்லப்பட்ட ஒரு நாயக்க தளபதி..

      உங்களுக்கு பிடிக்காத வியாக்கியானம்தான், ஆனால் உண்மை வரலாறு முக்கியம் அஜாதசத்ருவப்பய்யரே..

      • Ramappaiyan,Thalavay of Thirumalai Naicker was a Brahmin only.Not only that.He was very much against Non-Brahmins doing pujas in temples.The Murugan idol at Palani was made in Navabashanam by Bhogar.Ramappaiyan visited Palani temple when Pulippaani Paathira Udayar,one of the descendants of Bhogar was doing pujas.Ramappaiyan did not like the idea of getting prasadam from a non-brahmin.By misusing his enormous powers as Thalavay,he coerced Pulippaani Udayar and 24 other Pandaarams to enter into an agreement with five Brahmins selected by Ramappaiyan to do pujas at Palani.The following were the five Brahmins selected by Ramappaiyan.1.Kodumudi Saraswathi Aiyan 2.Marudur Thamba Aiyan 3.Naattarayan Koil Subbaiyan 4.Karur Muthaiyan 5.Kadambar Koil Akilandayyan.Among these five,Kodumudi Saraswathi Aiyan was made as Chief Priest.The other four were made as Pujaiparkaara Nambis.

        Pulippaani Udayar was given one fourth share of Nirmaalya Sorna Pushpams after Abishekam of Muruga and right to do certain miscellaneous pujas.Menial jobs were given to other 24 Pandaarams.Pulippaani Udayar and the Pandaarams were either enticed or threatened by the following statements made by Ramappaiyan.”Those who accept the above agreement will be blessed as if they have installed one crore Sivalingams in the banks of Ganga at Kasi.Those who object will be cursed as if they killed the sacred cows in the banks of Ganga at Kasi”

        The descendants of Bhogar were doing pujas in Tamil only.Pulippaani Udayar was the last poosari who did pujas in Tamil at Palani.Kodumudi Saraswathi Aiyan was the first person who stopped pujas in Tamil and started pujas in Sanskrit.

        Source:-The extract of the copper plate containing the above information was published by Palani Temple in its publication titled,”Palani Koil Varalaarum Thirukkoil Vazhipaadum”1964 Edition-pages-73,74&75.

        • கீழே அஜாதசத்ரு கொடுத்த விடுதலை சுட்டியில் உள்ள தகவல்களை ஆங்கிலத்தில் பின்னூட்டமாகக் கொடுத்திருக்கிறீர்கள்.. மேற்படி தளவாய் ராமப்பய்யன் ஒரு பார்ப்பனர் அல்ல என்ற என் பின்னூட்டத்துக்கு மறுப்பாக அவர் பார்ப்பான்தான் என்று ஒற்றைவரியில் மறுப்பு தெரிவித்துவிட்டு அவர் செய்தவற்றை விளக்கியிருக்கிறீர்கள்.. உங்கள் பின்னூட்டத்திலோ, விடுதலைக் கட்டுரையிலோ, இதன் பின்னணியில் இருந்த திருமலை நாயக்கரைப் பற்றியோ, பழனிப் பகுதியின் பாளையக்காரரைப் பற்றியோ தப்பித்தவறிக் கூட ஒரு விமரிசனமும் இல்லாதையும் அவதானிக்க முடிகிறது.. பாய்ச்சலெல்லாம் ராமப்ப அய்ய்ர் என்ற ‘பார்ப்பனர்’ மீதுதான்.. புலிப்பாணி பாத்திர உடையாரின் குடும்பத்தாருக்கே மீண்டும் முழு பூசை உரிமைகளையும் மீட்க பெரியார் ஏன் போராட்டம் எதையும் நடத்தவில்லை..? இதைப் பற்றி ஏதேனும் பேசியாவது இருக்கிறாரா என்பதையும் தயவுசெய்து மேற்கோள் காட்டவும்..

          • அம்பி விவாதத்தின் மைய்ய கருத்தை ஏன் திசை திருப்புகிறீர்? தமிழ கோவில்கள் யாரால் கட்டப்பட்டிருந்தாலும், பார்பன அர்ச்சகர்களை கட்டாயமாக அன்றைய அரசுகள் புகுத்தின! பார்பனர்களும் தஙகள் பஙகுக்கு ஆடல், பாடல், தெவதாசிகள் கலாச்சாரஙகளை வடக்கிலிருந்து கொண்டுவந்தார்கள்! இதில் போட்டியிட முடியாமல் தமிழ் கலாச்சாரம் ஒளியிழந்தது! றாகுல சங்கிருத்தியானின் நூல்களை 69-ல் படித்தநினைவு! அஜாதசத்ரு, அம்ரபாலி வரலாறு என்னை கவர்ந்தது! ராஜாக்கள் ராஜ்யத்தை ஆளலாம்! அவர்களின் அந்தபுரத்தை ஆண்டது யார்? திருமலைநாயக்கரின் கடைசி காலத்தில், அவர் தனிமை சிறையிலிடப்பட்டு, தள்வாயும்,ரானியுமே அரசாண்டனர்! திருமலையின் நண்பர் சேதுபதி, திருமலைக்கு தெரியாமலேயே கொல்லப்பட்டார்! இன்னும் விவரமாக அறிய கோவி.மணிசெகரனின் நாயக்கர் வரலாறு பார்க்கவும்!

            • // பார்பனர்களும் தஙகள் பஙகுக்கு ஆடல், பாடல், தெவதாசிகள் கலாச்சாரஙகளை வடக்கிலிருந்து கொண்டுவந்தார்கள்! இதில் போட்டியிட முடியாமல் தமிழ் கலாச்சாரம் ஒளியிழந்தது! //

              கலாச்சாரப் போட்டி இதிலா இருக்கிறது..?! உங்களைப் போன்ற ஞானசூரியன்கள் அப்போது இல்லை போலிருக்கிறது..

              // ராஜாக்கள் ராஜ்யத்தை ஆளலாம்! அவர்களின் அந்தபுரத்தை ஆண்டது யார்? //

              அரசியல் வரலாற்றை விட அந்தப்புர கிசுகிசு வரலாற்றில் தங்களுக்கு ஆர்வம் அதிகமாயிருக்கிறதே..

              • எப்பொதும் அந்தப்புரங்கலுக்கும் அரசியலுக்கும் தொடர்புண்டு! அம்பிகள் அறியாததா?

                • உங்கள் அளவிற்கு அது போன்ற ஆராய்சிகளில் ஈடுபடும் ஆர்வம் இது வரை இல்லை.. உலகம் முழுவதும் மேற்படி கனெக்சன் இருப்பதாக படித்திருக்கிறேன்.. சில பல நன்மைகளையும், தீமைகளையும் ஊக்குவிக்க அந்தப்புர அழுத்தங்களால் முடியும் என்றாலும் அதுவே அரசியலைச் செலுத்தும் தீர்மானகரமான சக்தி என்று தங்களைப் போன்ற ஃபிராய்டிய ( ஃபிராடு அல்ல) சிந்தனையாளர்கள் கருதலாம்..
                  ஆனால் சமூக இயங்கியல் போன்ற காரணிகள் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு, அந்தப்புர இயங்கியலானது அரசியலை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததா என்ற சந்தேகம் எனக்கு உண்டு..

          • According to you every evil under the sun,Periyar or Kalaignar should have fought.You people will still ridicule them.First,you will tell no such evils happened and all were imagined by us.When we present relevant information,you will ask us whether Periyar has fought against that evil.About one and half year back,when I brought these Archagar issue in Thinnai,the people who dominated that magazine,made fun of me saying that no training was given to any Archagar.After presenting several documents,the same Thinnai magazine published 3 more articles on the same issue.Now,straight away answer us.Whether the deeds of Ramappaiyan was ethical or not?Do not beat around the bush?Or just start branding us as persons with no sense of history and what not.

            • // According to you every evil under the sun,Periyar or Kalaignar should have fought. //

              பெரியாரைப் பற்றி வேறோரு பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம்.. :

              // Do you know how many lectures were delivered by Periyar during his life time.Periyar visited every town and village in the knook and corner of TN. //

              தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போய் பார்ப்பன எதிர்ப்பு பிரசாரம் செய்த பெரியார், பழனி கோவில் பூசை உரிமை நாயக்கர் காலத்தில் புலிப்பாணி பாத்திர உடையாரிடம் இருந்து பிடுங்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து பழனிப் பகுதிகளிலாவது பேசியிருக்கிறாரா..?! தமிழ் மன்னர்களெல்லாம் பார்ப்பன சொம்புகள் என்று சாடியவர், நாயக்க மன்னர்களையும், பாளையக்காரர்களையும் இதற்காக விமரிசனம் ஏதும் செய்திருக்கிறாரா..?! தளவாய் ராமப்பைய்யர் ஒரு நாயக்கர் என்பது என் வாதம்.. இல்லை, நீங்கள் விரும்புவது போல் அவர் ஒரு பார்ப்பனர் என்றே வைத்துக் கொண்டாலும், மன்னர் திருமலை நாயக்கர் அனுமதியில்லாமல் தளவாய் தாமிரப்பட்டயம் எழுதித் தரமுடியுமா..? அப்பகுதி பாளையக்காரருடன் சேர்ந்தேதான் இந்த நிகழ்ச்சி நடந்தது என்று விடுதலை கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பட்டய விவரங்களிலிலேயே இருக்கிறதே.. நாயக்கர் மன்னர்-பாளையக்காரர் செய்த ஏற்பாட்டையோ, பட்டயத்தையோ கேள்வி கேட்கக் கூடாது என்ற உங்கள் அய்யாவின் மவுனம் சரி, அதே நேரம் தளவாய் ராமப்பைய்யா ஒரு பார்ப்பனர் என்று கூறி பார்ப்பனர்களைச் சாடவும் வேண்டும்.. இதை என்னவென்று அழைப்பீர்கள்.. சாதிப் பாசமா..?!

              திருமலை நாயக்கர் மீதும், ராணி மங்கம்மாள் மீதும் எனக்கு மரியாதை உண்டு, அதே வேளை இது போன்ற சில பல செயல்களுக்காக நாயக்க மன்னர்களை விமரிசனம் செய்ய நன்றி உணர்ச்சியோ, சாதிப்பாசமோ குறுக்கிடக்கூடாது.. குறிப்பாக பெரியாருக்கு..

              • //இது போன்ற சில பல செயல்களுக்காக நாயக்க மன்னர்களை விமரிசனம் செய்ய நன்றி உணர்ச்சியோ, சாதிப்பாசமோ குறுக்கிடக்கூடாது.. குறிப்பாக பெரியாருக்கு.// அம்பி ஆதங்கத்தில் அரை ட்ரவுசர் மாதிரி பேசலாமா? பழனி கோவில் அராஜகம், பேரளம் சூரியனார் கோவில் இடிப்பு இவை குறித்து பெரியார் எழுதியிருக்கிரார்!

                //நீங்கள் விரும்புவது போல் அவர் ஒரு பார்ப்பனர் என்றே வைத்துக் கொண்டாலும், மன்னர் திருமலை நாயக்கர் அனுமதியில்லாமல் தளவாய் தாமிரப்பட்டயம் எழுதித் தரமுடியுமா..?//

                இது மட்டும் அந்தர் பல்டி அல்லவா? திருமலைநாயக்கரின் கடைசி காலத்தில், அவருக்கு பயித்தியம் என்று வீட்டு காவலில் வைத்து, ராமப்ப அய்யன் ஆட்சியெ நடந்து இருக்கிறது!

                அதுவேநாயக்கர் ஆட்சியின் சீரழிவுக்கு வித்து ஆனது!

                • // பழனி கோவில் அராஜகம், பேரளம் சூரியனார் கோவில் இடிப்பு இவை குறித்து பெரியார் எழுதியிருக்கிரார்! //

                  அப்படியா.. மிக்க மகிழ்ச்சி.. ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா.. அல்லது நீங்களாகவே பெரியார் எழுதியிருப்பார் என்று நம்புகிறீர்களா..?!!!

                  // திருமலைநாயக்கரின் கடைசி காலத்தில், அவருக்கு பயித்தியம் என்று வீட்டு காவலில் வைத்து, ராமப்ப அய்யன் ஆட்சியெ நடந்து இருக்கிறது! //

                  திருமலை நாயக்கர் தம்பித் தேவருக்கு ஆதரவாக சேதுபதி சடைக்கத் தேவருடன் நடத்திய போரின் போது தளவாய் ராமப்பைய்யன் திடீரென்று இறந்துவிட்டார்.. இது நடந்தது திருமலை நாயக்கரின் ஆட்சி காலத்தின் மத்தியில்.. இதன் பிறகு திருமலை நாயக்கர் சுமார் 17 ஆண்டுகள் உயிரோடு இருந்தார்.. அவரது இறுதிக் காலத்தில் மைசூருடன் ஒரு மூக்கறுப்புப் போரும் நடந்தது.. அப்போது திருமலை நாயக்கருக்கு உதவியது ரகுநாத சேதுபதி..

                    • எழுதியிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதால் என்ன எழுதியிருக்கிறார், எங்கே எழுதியிருக்கிறார் என்று நீங்கள்தானய்யா ஆதாரம் காட்டவேண்டும்.. தெரியாமல்தான் கேட்கிறேன்..

                  • From wikypedia..http://en.wikipedia.org/wiki/Madurai_Nayak_Dynasty#Muthu_Alakadri_281659.E2.80.941662.29

                    ……….Thirumalai Nayaka was assisted by his Dalavay Ramappayan, who was also the Prime Minister and Commander-in-Chief of the Madurai Army. Ramappayan helped crush the rebellion of the Setupatis of Ramnad.[33] The Setupathi and his Maravas withdrew to the island of Pamban and procured the assistance of Europeans. While at the verge of attaining victory of the Setupathi, Ramapayyan suddenly fell sick and died. He was succeeded by his son-in-law Siva Ramaya who proved himself well worthy of the post and captured a nephew of the Setupati, Tanakka Tevan. With the Setupathi himself imprisoned, the Maravas of Ramnad quietly submitted to the authority of Siva Ramaya.[34] From a historical document Ramappayyan Ammanai, we know that the Dalavoy Ramappayan, a Brahmin, had also proven his mettle in the war against Randaula Khan and Sriranga III between 1639 to 1641.[35][36]
                    After a glorious rule of 36 years, Thirumalai Nayaka died in 1659 in his capital Madurai, between the ages of 60 and 70 years of age.[37]………

                    During Thirumalai’s reign, two rebellions occurred amongst his feudatories. The first was by the Setupati of Ramnad. It was due to an order of Thirumalai in 1635 regarding the succession to the chief of that territory, which was resisted by the rightful claimant. Thirumalai was successful in placing his nominee on the throne and in imprisoning the rival aspirant, but he was ultimately compelled to allow the latter to succeed. His heir reciprocated this action by supporting Thirumalai in his final war with Mysore…….

                    His death
                    Thirumalai Naik died in 1659. He was between sixty-five and seventy years of age at the time and had reigned for thirty-six years. His territories at his death comprised the present districts of Madurai (including the territories of Ramnad and Sivaganga), Thirunelveli, Coimbatore, Salem and Thiruchirapalli, with Pudukkotai and parts of Travancore. According to legends that were current regarding his death,a story states that he had an intrigue with the wife of a priest and that as he was returning from visiting her one dark night he fell into a well and was killed. Thirumalai was succeeded by his son Muttu Alakadri Nayak in 1659. A letter written by one of the Jesuit priests just after his death states:It is impossible to refuse him credit for great qualities, but he tarnished his glory at the end of his life by follies and vices which nothing could justify. He was called to render account to God for the evils which his political treachery had brought upon his own people and the neighbouring kingdoms. His reign was rendered illustrious by works of really royal magnificence. Among these are the pagoda of Madura, several public buildings, and above all the royal palace the colossal proportions and astonishing boldness of which recall the ancient monuments of Thebes.

                    • // While at the verge of attaining victory of the Setupathi, Ramapayyan suddenly fell sick and died. //

                      மேலே கூறப்பட்ட சேதுபதி, சடைக்கத் தேவர்.. போரின் போது தளவாய் ராமப்பைய்யன் இறந்தாலும் போரின் இறுதியில் சடைக்கத் தேவர் கைதாகி, மீண்டும் சேதுபதியாகி, பின்னர் 1645-ல் இறந்தவர்.. திருமலை நாயக்கர் இறந்தது 1659-ல்..

                      திருமலை நாயக்கரின் இறுதி ஆண்டுகளில் (குறைந்தது 15 ஆண்டுகளாவது) தளவாய் ராமப்பைய்யன் உயிரோடு இல்லை..

                      மேலும் ராமப்பையன் அம்மானை (ராமைய்யன் அம்மானை)-ல் ராமப்பய்யன் சேதுபதியை கைது செய்து கொண்டுபோனதாக வருகிறது.. ராமப்பய்யன் அதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார் என்கிறது வரலாறு.. இந்த அம்மானையை எந்தளவுக்கு நம்புவது..?!!!

              • பெரியாருக்கு ஏதய்யா சாதிப்பற்று! அம்பிகளுக்கு வேண்டுமானால் பார்ப்பன சாதிபற்று என்று கொள்ளலாம்! ராமப்பய்யன் அய்யன் இல்லை என்று சாதிததீர்! இப்போது பெரியாருக்கு சாதிபற்று என்று உள்றுகிறீர்! உண்ட மயக்கமோ?

                • திருமலை நாயக்கர் காலத்து ராபர்ட் டி நொபிளி பாதிரியார் தன்னை ரோமனிய அய்யர் என்று அழைத்துக் கொண்டார்.. பெயருக்குப் பின்னால் அய்யர் என்று கிறித்தவ மிசனரி பாதிரியார்களும் போட்டுக் கொண்டதுண்டு.. விசுவநாத நாயக்கரே விசுவநாத நாயக்க அய்யர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.. சவுராட்டிர வகுப்பைச் சேர்ந்தவர்களின் பெயருக்குப் பின்னாலும் அய்யர் இருப்பதுண்டு.. தளவாய் நரசப்பய்யர் என்ற நரசப்பய்யாவின் சகோதரியின் கணவர் பெயர் வீரப்ப நாயக்கர்.. அதே போல் நாயக்கர் காலத்திலும் அதற்கு முன்னும் பிள்ளை, முதலி பட்டங்களை பார்ப்பனர்களும் சேர்த்து கொண்டதுண்டு.. மேற்படி காலகட்டத்தில், பெயரை வைத்து சாதியை உறுதியாக கூறுவது கடினம்..

                  ராமப்பய்யர் நாயக்கரோ, அய்யரோ, கிறித்தவரோ யாராக இருந்தாலும் ஒரு தளவாயாக/அரசு அதிகாரியாக பட்டயம் வழங்குமுன் மன்னரின் அனுமதி வேண்டும்.. அதைக் கேட்டதற்கு, மேற்படி ராமப்பய்யர் திருமலை நாயக்கரின் இறுதிகாலத்தில் அவரை தனிமைப் படுத்தி தன்னிச்சையாக செயல்பட்டார் என்று கூறி நீங்கள் அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டீர்கள்.. திருமலை நாயக்கரின் இறுதி காலத்தில் ராமப்பய்யர் உயிரோடு இல்லை என்று எடுத்துக் கூறினால், பதில் சொல்வதைவிட்டு நான் உளறுவதாகக் கூறுகிறீர்கள்.. பெரியார் என்ன எழுதியிருக்கிறார், எங்கே எழுதியிருக்கிறார் என்று கேட்டதற்கும் பதில் இல்லை.. பெரியாருக்கு சாதிப்பற்று இல்லை என்று நம்புவது உங்கள் உரிமை.. அதை மற்றவர்கள் நம்ப முடியாமல் சில கேள்விகள் கேட்டால் உளறுவதாகக் கூறுகிறீர்கள்..

                  போகட்டும், பெரியாராழ்வாருக்கு எப்போது கோவில் கட்டப்போகிறீர்கள்.. தாத்தாச்சாரியாரைப் போல் ஒருவரைப் பிடியுங்கள்.. அருமையாக பூசை செய்வார்..

  28. பணம் கொழிக்கும் கோவிலென்றால், அங்கு பார்ப்பன பூசாரிகள் ஊடுருவி, ஆகமங்கள் ஏற்படுத்திக்கொள்வார்கள்! உதாரணம் திருப்பதி கோவில் ! முதலில் அது சமண முனிவர் ஒருவருக்கு ஏற்படுத்தப்பட்ட கோவிலாம்! சமணர்கள் துரத்தப்பட்ட பின்னர், சோழ மன்னன் ஆளுகையில் அருகன் முருகன் ஆனார்! பின்னர், வைணவ மன்னன் ஆட்சியில், சிதம்பரத்தில் திருச்சித்ரகூடம் இடிக்கப்பட்டதன் பழிக்கு பழியாக, மலைக்கோவில் முருகனுக்கு நாமம் இட்டு வைணவ கோவிலாயிற்று!ஊரை,நாட்டை, அரசு கஜானாவை கொள்ளையடித்தேனும் கோவில் கட்டு என்பது தானே பார்பன பண்டிதர்களின் உபதேசம்!

    • மாலை நேர மயக்கங்களுக்காக கஜானா காலியாவதைவிட கோவில் கட்டுவதால் குறைவது நல்லதுதானே..

    • // சமணர்கள் துரத்தப்பட்ட பின்னர், சோழ மன்னன் ஆளுகையில் அருகன் முருகன் ஆனார்! பின்னர், வைணவ மன்னன் ஆட்சியில், சிதம்பரத்தில் திருச்சித்ரகூடம் இடிக்கப்பட்டதன் பழிக்கு பழியாக, மலைக்கோவில் முருகனுக்கு நாமம் இட்டு வைணவ கோவிலாயிற்று //

      என்ன சார், யுவான் சுவாங் ரேஞ்சுக்கு நேர்ல பாத்தா மாதிரி பேசறீங்க!

      ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஆழ்வார்கள் பத்து பேர் பாடிய மலை திருவேங்கடம். சிலப்பதிகாரம் அதை திருமால் தலமென்று கூறும் (http://madhavipanthal.blogspot.in/2010/08/silapathikaram.html). அருகர் கோவில், முருகர் கோவில் எப்போது இருந்தது என குறிப்பு தாருங்கள். “வைணவ மன்னன்” ஆட்சியில் தில்லை திருச்சித்திரகூடம் இடிக்கப்பட்டதா? என்னய்யா சொல்றீர்?

      • //“வைணவ மன்னன்” ஆட்சியில் தில்லை திருச்சித்திரகூடம் இடிக்கப்பட்டதா? என்னய்யா சொல்றீர்?// சிதம்பரத்தில் சைவ சோழமன்னன் இடித்த பிறகு, கொய்ஷல வைணவ மன்னன் திருப்பதியில் அதே கோவிந்தராஜ பெருமாள் கோவில் கட்டிக்கொடுத்தான்! பின்னர் மலைக்கொவிலும் வைணவ தலமாயிற்று! இன்னொரு முறைநன்றாக படியுஙகள் பாலகிருஷ்ணன்! உஙகள் தரவுக்கு நன்றி! அதைப்பற்றி, முக்கியமாக, நெடியோன் என்பது திருமாலா? சமணர் வழீபட்ட அருகனே என்று காலஞ்சென்ற குரானா அவர்கள் தமது திருப்பதி தல வரலாறு என்ற நூலில் வாதிட்டு இருக்கிரார்கள்! மேலும் ராமானுஜர் மகாத்மியம் என்ற நூலில் வேட்டுவர் கடவுளுக்கு, இரவில் நாமம் இட்டு வெற்றி கொண்டதையும் எழுதியுள்ளார்கள்! நாகையில் தங்க புத்தர் சிலையை திருடி வந்து, சீரங்கம் கொவில் கட்டியதும் உள்ளது! கப்பல் தலைவனை ராமானுஜர் ஏமாற்றிய கொட்டைபாக்கு கதையும் உள்ளது!

        • // இன்னொரு முறை நன்றாக படியுஙகள் பாலகிருஷ்ணன்!

          என்னைத்தானே “பாலகிருஷ்ணன்” என தவறுதலாக சொன்னீர்கள்?

          ஹொய்சால பரம்பரை பத்தாம் நூற்றாண்டில் இருந்து பதினாலாம் நூற்றாண்டு என விக்கிபீடியா சொல்கிறது. அப்போதுதான் மலை கோவில் வைணவ கோவில் ஆயிற்று என்கிறீர்களா? அதற்கு முன்பே ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஆழ்வார்கள் பத்து பேர் யாரை பாடினார்கள்? திருவரங்கத்துக்கு அடுத்த படியாக அதிக பாசுரங்கள் பெற்றவன் திருவேங்கடமுடையான். சிலப்பதிகாரம் “நெடியோன்” என்று மட்டும் சொல்லவில்லை. ஆழியும், சங்கமும் உடையவன் என சொல்கிறது (கீழே பார்க்கவும்). நீங்கள் சொல்லும் அருகர் –> முருகர் –> திருமால் மாற்றம் நடந்திருந்தால், சிலப்பதிகாரத்துக்கு முன்பு நடந்திருக்க வேண்டும். ராமானுஜர், ஹொய்சால பரம்பரை எல்லாம் மிகப் பிந்தியது. சிலப்பதிகார காலத்திற்கு முந்திய தரவு ஏதாவது தாருங்கள்.

          வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
          ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை

          பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
          தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
          ….
          செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

          • //ராமானுஜர், ஹொய்சால பரம்பரை எல்லாம் மிகப் பிந்தியது. சிலப்பதிகார காலத்திற்கு முந்திய தரவு ஏதாவது தாருங்கள்// ..ராமனுஜர் காலத்தில் தான் பெரியநாமம் போடப்பட்டு உரிமை வழக்கு அன்றைய அரசால் முடிக்கப்பட்டது! இது ராமானுஜ மகாத்மியம் அல்லது ராமானுஜ விஜயம் என்ற நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது! மற்றபடி .//பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
            தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி// எல்லாம் திருப்பதியில் கிடையாது! திருமாலுக்குரிய எந்த போர் ஆயுதமும், குறைந்த பட்சம் கதாயுதம் கூட இல்லாத திருமேனி, சமணர்களின் தர்னெந்திரர் என்னும் சமண முனிவர், அவரது மனைவி பத்மாவதியும் 23வது சமண் தீர்த்தங்கரர் பாரஸ்வதனாத் பகவான் என்பரிடம் தீட்சை பெற்று தனியே தவமியற்றினார்! தர்னேந்திரர் முக்தியடந்தபின் சந்திரகிரி அரசன் அவருக்கு கோவில் செய்வித்தான்! அன்பையும், சாந்தியையும் போதித்த அவருக்கு எந்த ஆயுதமும் கொடுக்கப்பட இயலவில்லை! இந்த கதை எனக்கும் புதிராகத்தான் இருக்கிறது! என்ன செய்யநம்பும்படியாக இருக்கிறதே! அந்தக்காலத்தில் வட தமிழ்னாடு முழுவதும் சமணர் செல்வாக்குடன் இருந்தனர்! பின்னர் சைவமும், வைணவமும், தமிழில் பக்தியை வளர்த்து(புத்தியை மழுங்கடித்து) சமணர்களை ஒழித்தனர்! ஏற்கேனவே சமணரின் சைவ கொள்கை வேரூன்றியிருந்ததால், பின்னர் வந்த பெளத்தம்நாகை வழியாக இலங்கை சென்றுவிட்டது!மூட பக்தியினால் முழுவதும் கெட்டது தமிழகம்!

            • // சமணர்களின் தர்னெந்திரர் என்னும் சமண முனிவர், அவரது மனைவி பத்மாவதியும் 23வது சமண் தீர்த்தங்கரர் பாரஸ்வதனாத் பகவான் என்பரிடம் தீட்சை பெற்று தனியே தவமியற்றினார்! தர்னேந்திரர் முக்தியடந்தபின் சந்திரகிரி அரசன் அவருக்கு கோவில் செய்வித்தான்! //

              பர்ஸ்வநாதரின் கருணயால் இரு நாகங்கள் தர்னேந்திரர், பத்மாவதி என்ற பெயர்களுடன் அவருக்கு பணிவிடை செய்யும் தேவதைகளாயின.. இது சமண நம்பிக்கை.. திருப்பதியில் இருப்பது தர்னேந்திரர் என்ற சமண முனிவரின் கோவில் என்பது எத்தனை அபத்தம் என்பதை சமணர்களிடம்/ஜைனர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்..

              • நீங்கள் சொல்வது சரி, அம்பி. அவர்கள் இருவரும் பர்ஸ்வநாதருக்கு பணிவிடை செய்யும் நிலையிலேயே சிலைகள் கிடைக்கின்றன. அவர்களுக்கு தனி கோயில் இருப்பதாக தெரியவில்லை.

            • // ஏற்கேனவே சமணரின் சைவ கொள்கை வேரூன்றியிருந்ததால், பின்னர் வந்த பெளத்தம்நாகை வழியாக இலங்கை சென்றுவிட்டது!மூட பக்தியினால் முழுவதும் கெட்டது தமிழகம்! //

              தமிழகத்தில் ஹவுஸ்ஃபுல் என்பதால் ஆட்டோவில் ஏறி இலங்கைக்கு சென்றுவிட்டதைப் போல் சொல்கிறீர்கள்.. தமிழகம் கெட்டது, இலங்கையில் சாந்தி, சமாதனம், மனித நேயத்துடன் சிங்கள பவுத்தர்கள் சிறந்தோங்கிவிட்டார்களா..?! தமிழகம் ஏன் கெட்டது என்று இப்போது தெரிகிறது..

      • னன்றி! வெஙகடெசன்! உஙகள் வலைத்தள சிந்தனைகள் அருமை! முழுவதும் படித்துவிட்டு !கருத்துக்கள் சொல்கிறேன்!

      • யார்யா உன்னைய பெரிய பெரிய கோவிலை கட்ட சொன்னது.அப்படி கட்டினா பாப்ஸ் அடிச்சுதா புடுங்குவானுங்க இதானே பரலு சொல்ல வருது.இதுக்கு வினவு தளத்தில் பார்ப்பனியத்த்க்கு சப்போர்ட் பண்ணவே அவதாரம் எடுத்த அம்பியும் சொம்பு தூக்குறார்.

        பரலுவை அப்படியே திருட்டு பயல்களுக்கும் மொள்ளமாரி கேடி பயல்களுக்கும் மொழி பெயர்த்தால்

        யார்மா உன்னைய சங்கிலி போட்டுக்கிட்டு வெளியே வர சொன்னது.அப்படி வந்தா செயின் பறிப்பு நடக்கத்தான் செய்யும்.

        யார்யா உன்னைய இவ்வளவு பணத்த எடுத்துக்கிட்டு பாங்குக்கு வர சொன்னது.அப்படி வந்தா வழிப்பறி நடக்கத்தான் செய்யும்.

        யார்யா உன்னைய ரெண்டு சூட்கேஸ் எடுத்துக்கிட்டு ரயில் ஏற வர சொன்னது.அப்படி வந்தா ஒன்னு பேக் லிப்டிங்ல போகத்தான் செய்யும்.

        ஆகவே மகா ஜனங்களே இதன் மூலம் கோவிலை புடுங்குன பாப்ஸும் இந்த கேடிகளும் ஒன்று என்று நான் சொல்வதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நானே பொறுப்பு.

        • //உதாரணம் திருப்பதி கோவில் ! முதலில் அது சமண முனிவர் ஒருவருக்கு ஏற்படுத்தப்பட்ட கோவிலாம்! சமணர்கள் துரத்தப்பட்ட பின்னர், சோழ மன்னன் ஆளுகையில் அருகன் முருகன் ஆனார்! //

          //ஊரை,நாட்டை, அரசு கஜானாவை கொள்ளையடித்தேனும் கோவில் கட்டு என்பது தானே பார்பன பண்டிதர்களின் உபதேசம்! // என்று அஜாதசத்ரு கூறியதற்கு பதில் கேள்விதான் பரலோக பாண்டியன் கேட்டது : “சமணப் பெருங்கோவில்களை கட்டச் சொன்னதும் பார்ப்பனர்களா?”

          • எந்தக்காலத்திலும் அவர்கள் இருந்திருக்கிரார்கள்! எல்லா சமயங்களிலும் இருந்திருக்கிரார்கள்! சமணராகவும்,பவுத்தராகவும், சைவராகவும்,வைணவராகவும் பரிணமித்து தங்கள் ஆரியகருத்துக்களை பரப்பி மூலகருத்துக்களை அழித்து விடுவார்கள்!

            நமது காம்ரேடுகள் தலைமை அவர்கள் கையில்தானே! அண்ணா பெயரில் உள்ள கட்சி இப்பொது அவாள் கட்சியாகிவிட்டது! யார் கண்டது,நாளை பெரியார் கழகத்தையும் பிடிக்கலாம்! ராமானுஜர் ஆரம்பித்த அனைத்து சாதியினரும் வேதியராக்கும் முறை, பின்னர் வந்தவர்களால் கைவிடப்பட்டதே! இப்போது வரிந்து கட்டிக்கொண்டு எதிர்க்கவும் செய்கிரார்களே!

            • // எந்தக்காலத்திலும் அவர்கள் இருந்திருக்கிரார்கள்! எல்லா சமயங்களிலும் இருந்திருக்கிரார்கள்! சமணராகவும்,பவுத்தராகவும், சைவராகவும்,வைணவராகவும் பரிணமித்து தங்கள் ஆரியகருத்துக்களை பரப்பி மூலகருத்துக்களை அழித்து விடுவார்கள்! //

              இதிலுள்ள முரண்நகை என்னவெனில் ‘ஆரியக்கருத்துகளை’ எதிர்த்து அவைகளை முன்பைவிட இளக்கமாக மாற்றியதில் முன்னணியில் இருந்தவர்களும் அவர்களே.. சுருக்கமாக, ஒரு சுயநலப் பார்ப்பானை எதிர்க்க ஒரு சுயநலமற்ற பார்ப்பான் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறான்..

  29. //அரசன் ஆணை இப்போது செல்லாது என்றால் நாட்டில் பெரும்பான்மை தனியார் நிலங்கள் பறி போய்விடும்..// அரசு என்பதே அடாவடி அதிகாரம்தானே! ஏழை பங்காளன் டாடா விற்கு, சிங்பூர் நிலம் ஆயிரம் ஏக்கர்கள், அதன் உரிமையாளர்களை கேட்டு அவர்கள் விருப்பத்தின் பேரிலா கொடுத்தார்கள்? கூடஙகுளம், கல்பாக்கம் மக்கள் விருப்பத்தின் பேரிலா அங்குள்ள மக்களின் பேரில் அபாய சூழ்னிலை திணிக்கபட்டது? தஞ்சையில் எண்ணை கம்பனி களும், எரிவாயு கம்பனிகளும், அங்குள்ள உடமையாள்ர்களை கேட்டா, குழாய் பதிக்கிரார்கள்? அந்தக்கால அரசர்களின் அரன்மனைகள் இன்று யாரிடம் இருக்கின்றன? அன்றைய அரசர்களின் வாரிசு இன்றைய ஆள்வோராகிய அரசுதான்! பொது சொத்தாக அறிவிக்கபட்ட கோவில்களை அரசு சொத்தாக பாவிப்பதில் என்ன தவறு?

    • மக்கள் அரசு என்றீர்கள், இப்போது பல்டியடிக்கிறீர்கள்.. ஏன்..?!!!

  30. //மக்கள் அரசு என்றீர்கள், இப்போது பல்டியடிக்கிறீர்கள்.. ஏன்..?!!!// எப்பொதுமே பல்டியடித்தது இல்லை! அம்பி! மக்கள் விழிப்புடன் இருக்கும்வரை மக்களரசு! அவ்வப்போது அம்பி போன்றவர்களின் மாயவலையில் சிக்கி மதியிழக்கும்போது மக்கள் விரோத அரசு! விளக்கம் போதுமா அம்பி!

  31. //உங்களுக்கு பிடிக்காத வியாக்கியானம்தான், ஆனால் உண்மை வரலாறு முக்கியம் அஜாதசத்ருவப்பய்யரே..//
    ராமப்பய்யன் அய்யரா,அய்யங்காரா என்பதல்ல பிரச்சினை! அவனால் ஆரிய ஆகமங்களும், அர்ச்சகர்களும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டன! அடக்குமுறையில்! பிராமண அர்ச்சகர்களில்லாத பேரளம் சூரியனார் கோவில் ராமப்பய்யனால் இடிக்கபட்டது வரலறு !

    • சொன்னதை மறந்துவிட்டு மனதுக்கு அவ்வப்போது தோன்றுவதையெல்லாம் பேசிட்டிருக்கப்படாது.. // ராமப்பைய்யன் என்ற பார்பன அமைச்சன் // இதை சொன்னது நினைவிருக்கிறதா.. மேலே பார்க்கவும்.. தளவாய் ராமப்பய்யர் என்பவர் அய்யர் அல்ல ராமப்பய்ய நாயக்கர் என்று குறிப்பிட்டால், அவர் அய்யரா-அய்யங்காரா என்பதல்ல பிரச்சினை என்கிறீர்கள்.. பிரச்சினை வெளியில் வேறெங்குமில்லை..

  32. மொழிபெயர்ப்புக்கு, 30.1.1, நன்றி சூரியன்! அறிவு கொழுந்துகள் இப்பொது என்ன சொல்கிறார்கள்?

    • Thanks Ajaathasathru,I am your admirer.I have read your comments here as well as at Viduthalai site.If you just give Viduthalai reference,some people will not read it due to their prejudice.That”s why I put that translation.Let us continue our struggle to make sense at least with some sensible persons.

      • // I am your admirer //

        நியூட்டனும் ஐன்ஸ்டீனும் பேசிக் கொள்வது போலவே இருக்கிறதே..

        • We do not mind including Archimidis also.This is a democratic country Mr Ambi.Are you distributing licenses to call any one as Admirer.Vaitherichal Vaithilingam yendra pattam umakku vazhangapadugirathu.Namakku illaadha ondrai kondu iruvarum pesikolgiraargale yendru vaitherichal.Have some iced buttermilk.

          • why is the sun becoming a red giant too soon,so nobody can mock you now?

            I can see parallels between the behaviour of your so called leaders and the adivarudis like you.

  33. குட்டையை குழப்பி, குழம்பிய குட்டையில் மீனையும் பிடிக்க முயலும் அம்பிகள் இப்பொதாவது ஒப்புக்கொள்வார்களா? இவர்களின் பார்ப்பன பம்மாத்து பார்த்து நாம்தான் ஒதுஙகிக்கொள்ள வேண்டுமா?

    • what r u trying to say now?

      The true buddhists/jains have already made peace and most Jain people of North India & Gujarat are fine too,your efforts and whoever is funding it and their goals,we know everything clearly.

      You wont get any medal for doing it,so please.

  34. அய்யா வெஙகடெசன் அவர்களே! நீங்கள் குறிப்பிடும் மாயோனும், சேயொனும் தமிழ்கடவுளர் தான்! அதுவும் மருதம், முல்லை திணை சார்ந்த மக்களே வழிபட்டு வந்த கடவுளர்கள்! பொய்மையான புராணக்கலப்பில்லாத அப்பாவி மக்களின் ஆடல் பாடலுக்காக ஏற்பட்ட கடவுளர்கள்! சஙகாலம் முதற்கொண்டு வடவேங்கடம் என்பதால் மலைமேலுள்ள கடவுள் திருமால்தான் என கூறமுடியாது! மருதத்திணையில்,முல்லை நில கடவுள் இருப்பது முரணானது! வேங்கடத்தான் கையில் சங்கு,சக்கரம், தாமரை எதுவும் இல்லை. மேலும் ஒரு வழக்கு உண்டு:அஙகு இருக்கும் சிலை சாஙகிய கடவுள் காளியின் உருவம் என்று தாத்தாச்சாரியார் கூறுகிரார்! எது எப்படியொ போகட்டும் ! அஙு பெரியார்(ஆழ்வார்) சிலை வைத்து, அம்பிகளை அழைத்து குரு பூசை செய்ய ஆசை!

    • // மருதத்திணையில்,முல்லை நில கடவுள் இருப்பது முரணானது! //

      இது தெரியாமல்தான் நெய்தல் திணையிலுள்ள திருச்செந்தூரில் குறிஞ்சி திணை முருகன் வந்து நிற்கிறாரோ.. முருகன் மலையைவிட்டு இறங்கக் கூடாது, திருமால் மலையேறக் கூடாது என்று கட்டாயச் சட்டம் இயற்ற நாம் யார், தமிழ் கடலே..?!!

      // அஙு பெரியார்(ஆழ்வார்) சிலை வைத்து, அம்பிகளை அழைத்து குரு பூசை செய்ய ஆசை! //

      இந்து தெய்வங்களை அவர் போற்றிப் பாடிய திருவாசகங்களாலேயே அவருக்கும் அர்ச்சனை செய்வதில் எமக்கு இரட்டை மகிழ்ச்சி உண்டாகும்.. உங்கள் ஆசை நிறைவேற பெரியாராழ்வாரை நானும் வேண்டிக் கொள்கிறேன்..!!!

    • தாதாசாரி சொன்னாரா ! சிலப்பதிகாரம் படித்தால் தெரியும் . திருமால் கோவில் என !

  35. குறிஞ்சி திணையில் முல்லை திணைக்குரிய கடவுள் என்று திருத்தி வாசிக்கவும். மேலும் இளஙகோவடிகள் கண்ட ஆழி சக்கரம் முதலியவை இல்லாத மூர்த்திதான் மலைமேல் இருப்பதால், அது இடைச்செருகலாக இருக்கலாம்! பக்தி என்ற கலர் கண்ணாடியின்றி நடைமுறை சாதியப்படி ஆராய வேண்டும்! பக்தியாளர்கள் பரவசப்படலாம்! ஆராய்ச்சியாளர்கள் அவசரப்படலாகாது !! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், ஆராய்ந்து உண்மை தெளிய வேண்டும்! அது அம்பி வாயிலாக் வந்தாலும் சரி! வெஙடெசன் மூலமாக வந்தாலும் சரி! ஆனால், மத மாச்சரியங்கலால் புனையப்பட்ட கதைகள், புராணங்கள், ஒன்றுக்கு ஒன்று முறணாவது கண்கூடு! ஆளும் அரசனது,அவனவன் ஆச்சாரியனின் விருப்படி கோவில்களும்,நாமங்களும் பலமுறை மாற்றப்பட்டிருக்கலாம்! ராமானுஜர் வரலாற்று குறிப்பு பொய்யாக இருக்க முடியாது!

    • அஜாதசத்ரு,

      // பக்தி என்ற கலர் கண்ணாடியின்றி நடைமுறை சாதியப்படி ஆராய வேண்டும்

      நியாமான பேச்சு. அதே போல, வரலாற்று ஆய்வின் போது, இந்து மத வெறுப்பு என்ற கண்ணாடியையும் கழற்றி விடுவது நல்லது. நீங்கள் சமணத் துறவி இளங்கோ அடிகள் எழுதிய காப்பிய வரிகளை இடைச்செருகல் என்கிறீர்கள். ராமானுஜ மஹாத்மியம் போன்ற மத நூல்கள் கூறும் செய்திகளை “வரலாற்று குறிப்பு பொய்யாக இருக்க முடியாது” என்கிறீர்கள். எனில், ராமானுஜர் ஒருமுறை காட்டில் வழி தவறி தடுமாறும் போது, காஞ்சி வரதராஜ பெருமாளும், தாயாரும் வேடுவர் வடிவம் கொண்டு அவரை காப்பாற்றினர் என்பதையும் வரலாற்று குறிப்பாக ஏற்பீர்கள் என நம்புகிறேன். அதே போல, ராமானுஜரின் குரு திருக்கச்சி நம்பிகள் வரதராஜ பெருமாளோடு நேரில் பேசுபவர் என்பதையும், அவர் மூலமாக ராமானுஜர் ஏழு கேள்விகள் பெருமாளிடம் கேட்டு விடை பெற்றார் என்பதையும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

      திருவேங்கடம் திருமால் கோவில் என்பதற்கு தெளிவான, நேரடி ஆதாரங்கள் உள்ளன. தொல்காப்பியம் தொடங்கி, பரிபாடல், சிலப்பதிகாரம், நாலாயிரம் என தொடர்ச்சியாக திருமால் “நெடியோன்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். தொல்காப்பியம் திருவேங்கடம் என்பது நெடியோன் குன்று என சொல்கிறது. திருமலை தவிர, அருகர், புத்தர், முருகன் போன்றோர் தமிழ் நூல்களில் “நெடியோன்” என எங்காவது அழைக்கப்படுகிறார்களா? சிலப்பதிகாரம் தெளிவாக திருவேங்கடம் ஆழியும், சங்கமும் உடையவன் இருப்பிடம் என்கிறது. பன்னிரு ஆழ்வார்களில், பத்து பேர் திருவேங்கமுடையான் மீது பாசுரம் பாடியுள்ளனர். ஆழ்வார்கள் பாடிய 108 திவ்ய தேசங்களில், அரங்கனுக்கு அடுத்தபடியாக அதிக பாசுரங்கள் பெற்றவன் திருவேங்கமுடையான் (205 பாசுரங்கள்). மாற்று மத கடவுள் கோவில் மீது ஆழ்வார்கள் இவ்வளவு ஈடுபாடு காட்டுவார்களா?

      இவ்வளவு தெளிவான நிலைக்கு எதிராக நீங்களும், மற்ற சில “ஆய்வாளர்களும்” அது அருகர், புத்தர், முருகர் கோவில் என்கிறீர்கள். இப்படி ஒரு கூற்றை சொல்லும்போது, நீங்கள் பல விளக்கங்கள் தர வேண்டும். திருமலையில் முதலாக அருகர் (அ) புத்தர் கோவில் எப்போது, யாரால் கட்டப்பட்டது? அங்கு அருகர் (அ) புத்தர் கோவில் இருந்தது என்பதற்கு கல்வெட்டு, செப்பேடு, இலக்கிய குறிப்பு போன்ற ஆதாரம் ஏதேனும் உள்ளதா? இது எப்போது முருகர் கோவில் ஆயிற்று? அங்கு முருகர் கோவில் இருந்தது என்பதற்கு கல்வெட்டு, செப்பேடு, இலக்கிய குறிப்பு போன்ற ஆதாரம் ஏதேனும் உள்ளதா?

  36. 39.1 மறுமொழியின் தொடர்ச்சி. நீங்கள் எழுப்பும் சில ஐயப்பாடுகள் பற்றி.

    குறிஞ்சி, முல்லை போன்றவை இலக்கியத்தில் இருந்தனவே அன்றி சமூகத்தில் இருந்தனவா என்பது நிச்சயமில்லை. போகட்டும். மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நில தெய்வம் முருகன் எனினும், மலை மீது திருமால் கோவில் கட்டும் வழக்கமும் உண்டு. சிங்கவேள்குன்றம் என்ற அஹோபிலம் ஒரு உதாரணம். பழந் தமிழ் நூல்களில் குறிப்பிடப் படும் நெடியோன் குன்றங்கள் இரண்டு. ஒன்று திருவேங்கடம். இரண்டாவது, அழகர் மலையாம் திருமாலிருஞ்சோலை (இது முருகன் குன்று என சொல்லாதீர்கள். பரிபாடலில் திருமால் பற்றிய பாடலில் குறிப்பிடப் படும் மலை இது). சிலப்பதிகாரத்தில், காவிரி பூம்பட்டின நெய்தல் நில மக்கள், மருத நில தெய்வமான வேந்தன் எனப்படும் இந்திரனுக்கு விழா எடுத்தனரே! வேறொரு விதமாக சொல்வதனால், பாபர் மசூதி விவகாரத்தில், ‘மசூதிகள் அரபியாவில் அல்லவா இருக்க வேண்டும், இந்தியாவில் எப்படி” எனக் கேட்கலாமா? அதே போல, மலை மீது இருப்பதால், செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள புனித தோமையார் ஆலயம் முருகன் கோவில் என சொல்ல மாட்டோம் அல்லவா?

    சிலப்பதிகாரம் கூறும் ஆழியும், சங்கமும் அற்றவன் திருவேங்கடவன் என்கிறீர்கள். ஆழியும், சங்கமும் திருமாலின் பொது அடையாளங்கள். எல்லா சிலையிலும் இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை. ஆழியும், சங்கமும் உள்ள இறைவன் சிலையையே “ஆழியும், சங்கமும் உடையவன்” என கூற வேண்டும் எனபதும் இல்லை. இது பற்றி சிந்தித்தபோது எனக்கு உடனடியாக தோன்றிய உதாரணம், திருபேர்நகர் (திருச்சிக்கு அருகில் தற்போது “கோவிலடி” என அழைக்கப் படும் ஊர். 108 திவ்ய தேசங்களில் ஒன்று). இந்த கோவிலை பாடும் திருமங்கை ஆழ்வார், “கையிலங்கு ஆழி சங்கன்” என்கிறார். ஆனால், அங்குள்ள திருமாலுக்கு சங்கு, சக்கரம் கிடையாது. இங்கே பார்க்கவும்: http://trichydivyadesams.blogspot.in/2009/01/thirupper-nagar.html. வேறொரு விதமாக சொன்னால், பாண்ட்-ஷர்ட் போட்டு கலைஞர் ஒரு விழாவிற்கு வந்தால், வேட்டி-சட்டை போடாதவர் கலைஞராக இருக்க முடியாது என்போமா?

    நீங்கள் எழுப்பும் ஐயப்பாடுகளில் என்னை ஈர்ப்பது ஒன்று தான். திருமலை கோவில் சிலைக்கு சங்கு, சக்கரம் உண்டா என்பது. திருப்பேர்நகர் திருமால் சங்கு, சக்கரம் இன்றி இருந்தாலும், அவன் படுத்து இருப்பவன். நின்ற தோற்றமுடைய திருமால் சிலை சங்கு, சக்கரம் இன்றி நான் கண்டது கிடையது. எனவே, திருமலையில் உள்ள சிலைக்கு சங்கு சக்கரம் உண்டா என்பது முக்கியக் கேள்வி. இதற்கு, சாதாரண காலண்டர் பாலாஜி படங்களை பார்த்து முடிவு செய்ய முடியாது. எந்த ஆடை, அலங்காரமும் அற்ற சிலையை பார்த்தால்தான் உண்டு. இந்த கோலத்தில் இப்போதும் (பணம் கட்டி!) சர்வ அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். உங்களுக்கு சிரமம் வைக்காமல் இந்த அபிஷேக பழைய வீடியோ ஒன்று இதோ: http://www.vidoevo.com/yvideo.php?i=VHVHM1JBcWuRpSENXY0k&thirupathy-original-tt-xvid. சிலைக்கு நான்கு கைகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. இந்திய பாரம்பரியத்தில் நான்கு கைகள் கொண்ட சிலைகள், எனக்கு தெரிந்து நான்கு பேருக்கு உண்டு. திருமால், ஈசன், முருகன், சக்தி. இங்கே உங்களுக்கு ஒரு முக்கிய கேள்வி: அருகர், புத்தர் ஆகியோருக்கு நின்ற நிலையில் நான்கு கைகள் வைத்து சிலை செய்யும் வழக்கம் இருந்ததா?

    நான்கு கைகள் சரி. பின் கைகளில் என்ன இருக்கிறது என்பது கேள்வி. மேலே உள்ள வீடியோவில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஆகியவற்றை காணலாம்! ஆனால், சிலையின் ஒரு பாகமாக இல்லாமல், சங்கும், சக்கரமும் ஒட்டி வைக்கப் பட்டிருப்பதும் தெரிகிறது. எனில், மூல சிலையின், பின்னிரு கைகளில் இருந்தது என்ன? அதை வைத்தே என்ன தெய்வ சிலை என்பதை கூற முடியும். இதில், ஈசனுக்கு மூலவராக லிங்கம் அமைப்பதே வழக்கம் என்பதையும் நினைவில் வைக்க முடியும். சிலையின் தோற்றத்தை பார்க்கும் போது திருச்செந்தூர் முருகன் நினைவிற்கு வருகிறார் என்பதையும் சொல்ல வேண்டும்.

    மேலே சொன்ன விஷயத்தையும், ராமானுஜர் கதை குறிப்புகளையும் காணும் போது எனது கணிப்பு இது. தொல்காப்பிய, சிலப்பதிகார, நாலாயிர அடிப்படையில் அது திருமால் கோவில் என்பதே என் கருத்து. ஆழ்வார் காலத்திற்கு பிறகு, கோவில் பழுதடைந்து, சிலையின் கைகள் பின்னப் பட்டு இருக்கலாம். இதன் காரணமாக, அதை சிவன், முருகன் என சிலர் கூற, பிரச்னை ஆகியிருக்கலாம். ராமானுஜர் காலத்தில், அரசன் முன்னிலையில் இது திருமால் ஆலயமே என தீர்ப்பு வந்திருக்கலாம்.

    நான் முதலில் தந்த சுட்டியில் உள்ள கட்டுரை நான் எழுதியது அல்ல. அது கண்ணபிரான் ரவிஷங்கர் என்பவர் எழுதியது. “அரைபிளேடு” என்ற வலைப்பூவில் இதே போன்ற ஒரு விவாதத்தில், அவர் பல கருத்துகளை முன்வைக்கிறார். அதை இங்கே பார்க்கவும்: http://araiblade.blogspot.in/2007/12/blog-post_16.html. நான் மேலே சொல்லியுள்ள கருத்துகளில் சில அங்கிருந்து சுட்டவை.

    • // சிலையின் தோற்றத்தை பார்க்கும் போது திருச்செந்தூர் முருகன் நினைவிற்கு வருகிறார் என்பதையும் சொல்ல வேண்டும். //

      எம்பெருமான் முருகன் கீழ்நோக்கிய வலது கர அபய ஹஸ்த முத்திரையுடன் காணப்படும் தோற்றத்தை நான் எங்கும் கண்டதில்லை.. திருப்பதியில் இருப்பது முருகன் திருவுரு அல்ல.. அஜாதசத்ரு அள்ளிவிட்டுக் கொண்டிருப்பதற்கெல்லாம் கஷ்டப்பட்டு ஆதாரத்துடன் நீங்கள் மறுப்பு தெரிவித்து விவாதித்துக் கொண்டிருப்பது விரக்தியில்தான் முடியும்.. எந்த ஆதாரத்தையும் மதிக்காத ஆஃப் பாயில்ட் அவர் என்பது போகப் போகப் புரியும்..

      • அம்பி,
        நீங்கள் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. கூகுளில், நான் தேடியவரை அபய ஹஸ்த முருகப் பெருமான் சிலை கிடைக்கவில்லை.

        • வெங்கடேசன்,

          முருகப் பெருமானின் வலக்கர அபய ஹஸ்த முத்திரை அனேகமாக அவரது எல்லா திருவுருக்களிலும் காணலாம்.. 180 டிகிரி திருப்பினால் கிடைக்கும் கீழ்நோக்கிய விரல்கள் கொண்ட அபய ஹஸ்த முத்திரை (இப்படியான முத்திரையை வரத ஹஸ்தம் என்பார்கள், திருப்பதியில் உள்ளது போல்) காட்டும் தோற்றத்தை காணக் கிடைக்கவில்லை.. திருச்செந்தூரில் முருகன் வலக்கர உள்ளங்கையில் மலர் ஏந்தியிருக்கிறார்.. அதை விட்டுவிட்டு விரல்களை விரித்துவிட்டால் வரத ஹஸ்த முத்திரையாகிவிடும்.. இப்படி இருந்தால் திருப்பதியில் உள்ளது போலவேயான தோற்றம் செந்தூராண்டவனுக்கும் இருக்கும் – நான்கு கரங்கள், இடது காலைப் பற்றுவது போன்ற இடக்கை, வலது கர வரத ஹஸ்தம் இருவருக்கும் பொதுவாயிருந்திருக்கும்.. கடைச்சங்க கால நக்கீரரின் திருமுருகாற்றுப்படையில் திருவேங்கடத்தைப் பற்றி கோடு காட்டியிருந்தால் திருப்பதியில் இருப்பது முருகனாயிருக்கலாம் என்றும் சந்தேகிக்க இடமுண்டு.. எனவே சிலப்பதிகாரம் கூறுவது போல் ஏழுமலையான் திருமால் என்பதே என் தனிப்பட்ட நம்பிக்கை..

          புத்தர் மற்றும் சாக்கிய துறவிகள், சமண தீர்த்தங்கரர்கள் மற்றும் முனிகள் – இவர்களின் சிலைகளில் தலையில் மகுடத்துடன் கூடிய சிலைகள் இந்தியாவில் எங்கும் இருக்கிறதா.. அப்படி இருப்பதாக தெரியவில்லை.. ஆனால் நீங்கள் கொடுத்த காணொளி சுட்டியில் அபிசேகத்தின் போது ஆடை அணிகலன்கள் இல்லாத ஏழுமலையானின் திருவுருவ சிலை தலையில் மகுடத்துடன் இருப்பதைக் காணமுடிகிறது..

          தென் எல்லையில் குமரி அம்மனின் திருவுருவும், செந்திலாண்டவனையும் ஏழுமலையானையும் போன்றே (ஆனால் இரு கரங்களுடன்) நிற்பதும் ஏதோ ஒரு தொன்மமான தொடர்பு இழை பண்டைய தமிழகம் முழுவதும் நிலவி இருந்ததாகவே தோன்றுகிறது..

          • Ambi,
            Sorry, unable to type in Tamil, due to some internet connection issues.

            I guess I am confused about the terminology. My understanding was that, if the fingers point downwards, then it is called Abhaya Hasta (as in Tirumalai), as if suggesting that surrender at lord’s feet. On the other hand, if the fingers point upwards, as in Varadaraja Permula, it called Varada Hasta. Under this understanding, I did not find any Murugan idols with Abhaya hastha.

            • சாதாரணமாக ஏற்படும் இந்த குழப்பத்தை தவிர்க்க யாமிருக்க பயமேன் என்று முருகன் காட்டுவது அபய ஹஸ்தம் என்று நினைவில் வைத்துக் கொள்வேன்..!

              ” இறைவன் அல்லது இறைவியின் வலக்கை விரல்கள் மேல்நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது அபய ஹஸ்தம் அல்லது அபய முத்திரை எனப்படும். “

              http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6839&ncat=20&Print=1

              ஆனால் வைணவ பரிபாஷையில் ஹஸ்த விளக்கம் நீங்கள் கூறுவது போல்தான் இருக்கிறது..

  37. திரு.வெஙடெசன், திருமலை கோவில் யாரால், எப்போது கட்டப்பட்டது என்பதற்கு நீங்கள் குறிப்பிட்ட ஆதாரஙள் கிடைத்திருந்தால் இந்த விவாதமே தோன்றியிருக்காது! கல்வெட்டுக்கு நிகராக கல் மூர்த்தம் கையில் எந்த ஆயுதமும் இன்றி, இளஙகோவடிகள் கண்டதாக கூறும் ஆழியும், சங்கமும், தாமரையும் எங்கே?

    // அருணகிரியார் என்றுமே “பொய்” உரைப்பதில்லை! என்னவென்றே புரிந்து கொள்ளாமல், ஆர்வக் கோளாறால், சில மக்கள் தான் “பொய்” உரைப்பது!

    மேலும் அந்தத் திருப்புகழில் எல்லாம் “வடமலை நின்ற பெருமாளே”-ன்னு தான் பாடுறாரு? “வடமலை”-ன்னா அது வேங்கடம் தானா? ஸ்ரீசைலத்தைக் கூடத் “திருமலை”-ன்னு சொல்றாரே, அதுக்கு என்ன பண்ணப் போறீங்க? 🙂

    க்ட்ட்ப்://ந்ந்ந்.கெளமரம்.சொம்/ட்கிரு_உனி/ட்புன்0554.க்ட்ம்ல்
    திருச்சிராப்பள்ளி மலையுறை முருகா-ன்னு பாடுறாரே! திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் தானே? 🙂 அருணகிரிப் பெருமான் “பொய்” சொல்றாரா? 🙂

    திருச்சிராப்பள்ளித் தலத்தில், தாயுமானவ சுவாமி கோயிலில் இருக்கும் முருகன் சன்னிதியை மட்டுமே அருணகிரி அப்படிப் பாடுகிறார்! உடனே, உச்சிப் பிள்ளையார் கோயில், இனி முருகன் கோயில் தான், அருணகிரியே பாடிட்டாரு-ன்னு கிளம்புவீங்களா? 🙂

    அதே போல் தான் திருவேங்கடமும்!
    வேங்கடமலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஸ்வர சுவாமி ஆலயத்தில் உள்ள முருகனைப் பாடும் போது, அவ்வாறு பாடுகிறார்! //

    இந்த வாதம் உஙகளுக்கும் பொருந்தாதா?

    கடைசியாக, ராமானுஜர் சரித்திரத்தில் அவரது சாதனைகள் அல்லது ஏமாற்றுவித்தைகள் பற்றியே மேற்கோள் காட்டியிருந்தேன்; அப்படியே கதைசரடுகளையும் ஒப்புக்கொள்ள இது என்ன பன்டில்டு ஆஃபெரா? அப்பெடியென்றால் ராமனுஜர் புளுகரே என்று வைணவ வெஙடெசன் மொத்தமாக புறக்கணிப்பாரா?

    மனசாட்சிக்கும், கொஞ்சம் அறிவுக்கும் வேலை கொடுங்கள் அய்யா! சங்க இலக்கியங்களோ, வேறு பக்தி இலக்கியங்களோ ஆராய்ச்சிக்காக எழுதப்பட்டதல்ல! பக்தியை வளர்ப்பதே அவைகளின் நோக்கம் ! முரண்படும் காலத்து மேலும் நன்றாக ஆய்வு செய்தாக வேண்டும்!

    சிலப்பதிகாரம் யாத்த இளஙகோ, கோமான் வீட்டு பிள்ளை! அவரது எழுத்தில் பல விடயங்கள் நெருடலாக இருக்கிறது! முக்கியமாக, கனக, விசய அரசர்களை வென்று இமய மலை கல் கொணர்ந்து கண்ணகி படிமம் செய்ததாக கூறுவது சாத்திமற்றது! அவ்வாறெ கண்ணகி விண்ணேகியதும்! நமது புலவர்கள் திண்ணையில் அமர்ந்தவாறே ஈரெழு லொகம் படைத்தவர்கள், பார்த்தவர்கள்! அமைதி கொள்க வெஙகடேசன்!

    • // முக்கியமாக, கனக, விசய அரசர்களை வென்று இமய மலை கல் கொணர்ந்து கண்ணகி படிமம் செய்ததாக கூறுவது சாத்திமற்றது!//

      வரலாற்று நிபுணர் தீர்ப்பு சொல்லிவிட்டார்..

      // அவ்வாறெ கண்ணகி விண்ணேகியதும்! நமது புலவர்கள் திண்ணையில் அமர்ந்தவாறே ஈரெழு லொகம் படைத்தவர்கள், பார்த்தவர்கள்! //

      மாலை நேர மயக்கத்தில் மூளயில் உதிப்பதையெல்லாம் வரலாறு என்று எடுத்துவிடும் தங்கள் வழக்கம் இளங்கோவுக்கு இல்லை.. கண்ணகி விண்ணேறியதைப் தான் நேரில் பார்த்ததாக இளங்கோ உங்களிடம் வந்து சொல்லிவிட்டுப் போனாரா..

      • அது மாலைநெரத்து மயக்கம் அல்ல!நன்றாக பாரும்! காலைநேரம்! பாவம் அம்பிகலளுக்கு உண்ட மயக்கம் போலும்!

    • // ராமானுஜர் சரித்திரத்தில் அவரது சாதனைகள் அல்லது ஏமாற்றுவித்தைகள் பற்றியே மேற்கோள் காட்டியிருந்தேன்; அப்படியே கதைசரடுகளையும் ஒப்புக்கொள்ள இது என்ன பன்டில்டு ஆஃபெரா? //

      பல்டி பகலவனே,

      // ராமானுஜர் வரலாற்று குறிப்பு பொய்யாக இருக்க முடியாது! //

      இதை திருவாய் மலர்ந்தருளியது நீங்கள்தானே..

  38. தமிழில், தொல்காப்பியத்திற்கு முந்தியது என்று சொல்கிறார்கள், முக்கூடற்பள்ளூ என்ற பள்ளு (பாமர) இலக்கியமுண்டு! பாமர மக்களின் பார்வையில் படைப்புத்தெய்வஙகளை தோலுரித்தார் அன்றைய புலவர்! நகைச்சுவையுடன் சிந்தனையை தூண்டுவது ! அதைபற்றியும் வலைத்தடமுள்ளதா வெஙடேசன்?

  39. அஜாதசத்ரு,

    எனது மறுமொழியின் தொடர்ச்சியான 39.1 படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் முன் பேசியுள்ளீர்கள் என நினைக்கிறேன். அதையும் படித்து விட்டு சொல்லுங்கள். விவாதத்தை தொடரலாம்.

    ——————————————————————————–

    முக்கூடல் பள்ளு பற்றி இணையத்தில் தேடியபோது நாஞ்சில் நாடன் கட்டுரை ஒன்று கிடைத்தது.

    http://nanjilnadan.com/2011/10/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/

    http://nanjilnadan.com/2011/10/21/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

    இதில் நூலின் பகுதிகளை மேற்கோள் காட்டுகிறார். திருவாய்மொழி பற்றி குறிப்பு, புராண கதை குறிப்புகள், நவீன தமிழ் நடை போன்றவற்றை வைத்து பார்க்கும் போது, இது தொல்காப்பியத்துக்கு முந்தைய நூல் என எனக்கு தோன்றவில்லை. நாஞ்சில் நாடன் இது கி பி 1680 இயற்றப்பட்டது என குறிப்பு தருகிறார். நிற்க. எனது கவனம் திருவேங்கடத்தின் மீது தான் உள்ளது. பள்ளு பற்றி மேலும் பேச விரும்பவில்லை.

  40. உங்கள் விருப்பம் எனக்கு புரிகிறது! உண்மையை தேடும்போது மதநம்பிக்கை கண்ணை மறைக்க கூடாது ! மேலும் உங்கள் பார்வைக்கு:

    + ஏழுமலையான் திருமேனியில் உள்ள சஙகு, சக்கரத்தை அகற்றினால், யோக-போக முத்திரையே காணப்படுகிறது!

    +கிழக்கு இந்திய கம்பெனி 1801-ம் ஆண்டு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது! கலக்டர் நியொ ஸ்டிராட்டென் தலைமையில் இக்கொவிலின் பூர்வீக வரலாறு பற்றி அதிகார பூர்வமாக விசாரணை செய்யப்பட்டது!

    +அப்போதைய அர்ச்சகர்கள், “ஏழுமலையான் ஆரம்பத்தில் சிவனாக பூஜிக்கப்பட்டதாகவும், ஆதி சஙரர் இங்கு வந்து யந்திரம் பிரதிஷ்டை செய்ததாகவும், பின்னர் ராமானுஜர் வந்து விஷ்னுவாக மாற்றியதாகவும்,நாமம் போட்டதாகவும் ” வாக்கு மூலம் கொடுத்திருக்கிரார்கள்!

    +1880-ல் மேலும் ஆராய்ந்து கலக்டர் ஏ.எஃf.காக்ஸ் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிரார். அதில், “முதலில் இந்த கோவில் சுப்ரமணியசுவாமி கொவிலாக இருந்தது! அர்ச்சகரை தீட்சிதர் என்று சைவ பெயராலழைக்கிரார்கள், ஆனால்நாமம் போடப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது!

    +ராமானுஜர் காலம் கிபி 1017-1138ஆகும்.

    +திருமலையில் 1180 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது! அதில் 236 பல்லவர், சோழ்ர், பாண்டியர் காலத்தது; 169 சாளுவ அரசர்கள் காலத்தது! 229 கிருஷ்ண தேவராயர், 251 அச்சுதராயர், 147 சதாசிவ ராயர், 135 க் ஒன்ட வீடு அரசர் காலத்தவை. 50 கல்வெட்டுகள் தாம் தெலுகு ,கன்னட மொழியில் உள்ளது; மற்ற 1130 கல்வெட்டுகள் தமிழிலேயே உள்ளது!

    +1932-ல் கொவில் மகந்து என்பவர் கட்டுப்பாட்டிலிருக்கும்போது அவர் ஏழுமலையான் நகைகளை திருடியிருக்கிரார்! பிரிட்டிஷ் அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டு தற்கொல செய்துகொண்டார்!

    +400வருடங்களுக்கு முன்னர் பாவாஜி என்ற வடனாட்டவர் ஏழுமலையானுக்கு கோவில் புதுப்பித்தார், அப்போது ஏழுமலையான் நகைகளையும் தன் சொந்தமாக்கிகொண்டார்! பொது மக்கள் கேட்டபோது ஏழுமலையானே தனக்கு கொடுத்தாக கூறிவிட்டார்! சீரங்கம் விப்பிரனாராயணன் கதை போல இல்லை?

    +பாலாஜி என்ற பெயரில் வசூல் மன்னனாக ஏழுமலையானை மாற்றிய பெருமை இவரையே சாரும்!

  41. இந்த சர்ச்சை பற்றி முன்பே கேள்விப்பட்டு இருந்தாலும், மேலும் அறியும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. இது பற்றி மேலும் விஸ்தாரமாக பேச இந்த தளமோ, இந்த பதிவோ சரியான இடம் இல்லை என்பதால், கூகுள் உதவியோடு எனக்கு இது வரை கிடைத்த புரிதலை சுருக்கமாக பதிவிட்டு விட்டு மூட்டை கட்டுகிறேன். இங்கே தகவல்கள் தந்த அஜாதசத்ரு, அம்பி இருவருக்கும் நன்றி.

    இந்த பிரச்சனையை ராமானுஜருக்கு முன், பின் என பிரிக்கலாம். ராமானுஜருக்கு முன் கிடைப்பவை தொல்காப்பியம், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்கள். இவற்றின் அடிப்படையில் திருவேங்கட மலைக்கும், திருமாலுக்கும் உள்ள தொடர்பு தெளிவு. மேலும், தந்தி வர்மன் (~800 கி பி) என்ற பல்லவ மன்னன் கல்வெட்டு கிடைக்கிறது. இவன் ஒரு வைணவ மன்னன் என்பதும், காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவில் கட்டியவன் என்பதும் வரலாற்று அறிஞர்கள் கருத்து. இவன் தகப்பன் இரண்டாம் நந்தி வர்மன் காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவன். இவனை மேற்சொன்ன கோவில் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் புகழ்ந்து பேசுகிறார். தந்தி வர்மன் கல்வெட்டு திருமலை கோவிலில் அணையா விளக்கு எரிக்க நன்கொடை தந்ததை சொல்கிறது. இதில் இறைவன் “திருவேங்கடத்து எம்பெருமானடிகள்” என்று சுட்டப் படுகிறார். மேலும், சாமவை என்ற பல்லவ அரசி (கி பி 600 முதல் 900 வரையான இடைப்பட்ட காலம்) கோவிலுக்கு இப்போதும் பூஜையில் உள்ள போக மூர்த்தியை தானம் தந்து, அதன் நினைவாக பல்லவர்களின் சிம்ம சின்னத்தை பொறித்தாள் என்ற கல்வெட்டும் கிடைக்கிறது. இவற்றின் அடிப்படையில், இப்போதுள்ள கோவிலுக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்பு தெரிகிறது.

    ராமானுஜர் காலத்தை ஒட்டி சைவ-வைணவ பூசல் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் வரை தொடர்ந்ததாக தெரிகிறது. மேலும், இந்த கோவில் கௌமரம், சாக்தம், சமணம், சாக்கியம் ஆகிய மதக் கோவில்கள் என்ற கருத்தும் கிடைக்கிறது. திருமலைக்கும் மேலே சொன்ன மதங்கள் எவற்றிற்க்கும் தொடர்பு இருந்ததற்கான ராமானுஜர் காலத்திற்கு முற்பட்ட ஆதாரம் ஏதும் இல்லை. சாக்தம், சமணம், சாக்கியம் ஆகியவற்றை பொருத்தவரை இவற்றுக்கும் திருமலைக்கும் தொடர்பு சொல்வது கூட இன்டெர்நெட் காலத்தில்தான் தொடங்கியதாக தெரிகிறது. இந்த அனைத்து வாதங்களுக்கும் மையமாக இருப்பது மூலவர் சிலையின் தோற்றம் மட்டுமே.

    மேலே சொன்னவற்றில், சாக்கியம் தவிர மற்ற மதங்கள் பற்றி தீவிர ஆராய்ச்சி நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் கிடைக்கவில்லை. என்னைப் போன்ற டுபாக்கூர் ஆசாமிகளின் வலைப்பூ கும்மிகள்தான் கிடைக்கின்றன. இந்த வாதங்களை என்னால் ஏற்க முடியவில்லை. உதாரணமாக, சிலையின் காலில் கொலுசு, நீண்ட பின்னால் முடி ஆகியவற்றை வைத்து இது சக்தி கோவில் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சிலையில் முலைகள் இல்லை என்பதும், பூணூல் உள்ளது என்பதையும் என்ன சொல்ல? வேறொரு உதாரணம் சமண மத வாதம். முதலில் இது யார் சிலை எனபதை தெளிவு படுத்த வேண்டும்.
    அஜாதசத்ரு தர்னெந்திரர்-பத்மாவதி என உட்டாலக்கடி கருத்து சொல்கிறார். இவர்கள் பார்சுவநாதருக்கு பணிவிடை செய்யும் கோலத்திலேயே காணக் கிடைக்கின்றனர். இவர்களுக்கு தனி கோவில் கட்டும் வழக்கம் உண்டா? சிலை 24 தீர்த்தங்கரர்களில் ஒருவர் என்றால், இவர்களுக்கு நான்கு கை சிலைகள் வைக்கும் வழக்கம் உண்டா? பீடத்தில் குறிப்பிட்ட தீர்த்தங்கரர் சின்னம் எங்கே? இது போன்ற அரைகுறை வாதங்களை நீக்கிவிட்டால் எஞ்சியிருப்பது சாக்கியம் மட்டும்.

  42. மறுமொழி 46 இன் தொடர்ச்சி.

    திருமலை கோவில் சாக்கிய கோவில் என நிறுவ முயலும் விரிவான புத்தகம் ஒன்று கிடைக்கிறது. கே. ஜமனதாஸ் என்பவரால் எழுதப்பட்டது. ஒரு வரலாற்று ஆய்வு நூலுக்கு தேவையான அனைத்து அங்கங்களும் கொண்ட அருமையான புத்தகம். இது பற்றி சுருக்கமான எனது கருத்துகள்.

    பெரியாருக்கு நூலை சமர்ப்பித்துவிட்டு நூலை தொடங்குகிறார். பார்ப்பனர்களின் அடாவடிகள், அவர்களது சாகிய-சமண மத வெறுப்பு போன்றவற்றை பேசுகிறார். பின்னர், பூரி ஜகன்னாதர், பண்டரிபுரம் விட்டலன், சபரி மலை ஐயப்பன் ஆகியவை சாக்கியக் கோவில்கள் என்று கூறுகிறார். இத்துடன் நூலின் முதல் பகுதி முடிகிறது. நூலின் இரண்டாம் பகுதியில் நூலின் முக்கிய விஷயமான திருமலைக்கு வருகிறார். நான் நூலின் முதல் பகுதியை நோட்டம் விட்டு விட்டு, இரண்டாம் பகுதியை முழுதும் படித்தேன்.

    முதலில் நூலின் கடைசி பகுதியை பார்த்து விடுவோம். இதில் திருமலை திருமால் கோவில் என்பதற்கு சாட்சியாக உள்ள ராமானுஜர் காலத்துக்கு முந்தைய தரவுகளை அலசுகிறார். தொல்காப்பியர் பற்றி குறிப்பு இல்லை. சிலப்பதிகார வரிகள் இடைசெருகல் என்கிறார். மேலும், இளங்கோ அடிகள் மலை மீது ஏறி சென்று பார்த்திருக்க முடியாது என்கிறார். இந்த வாதங்களை ஏற்றால், பழந்தமிழ் இலக்கிய வரலாற்று தரவுகள் பலவற்றை கழித்துக்கட்ட வேண்டி இருக்கும்.

    தந்தி வர்மன் கல்வெட்டு கூறும் “எம்பெருமான்” புத்தர் என்கிறார். இப்படி புத்தரை அழைக்கும் வழக்கம் உண்டா? மேலும் இந்த மன்னன் ஒரு வைணவன் என்ற கருத்து பற்றி ஏதும் சொல்லவில்லை.

    ஆழ்வார்கள் பற்றி இவர் கூறும் கருத்துக்களை மட்டும் (இது என் சொந்த ஏரியா என்ற வகையில்) சற்று விரிவாக பார்ப்போம். ஆழ்வார்கள் சாக்கிய-சமண வெறுப்பு கொண்டவர்கள் என்பதால் இவர்கள் பாடல்கள் ஒரு பொருட்டு இல்லை என்கிறார். மேலும், இவர்களும் மலை மீது சென்று பார்த்திருக்க முடியாது என்கிறார். ஆழ்வார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடி அதிக ஈடுபாடு கொண்ட தலங்கள் திருவரங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருக்கண்ணபுரம் ஆகியவை. இது போன்ற தலங்கள் இருக்க, என்ன கோவில் என நிச்சயம் இல்லாத, அல்லது சாக்கியர்களிடம் இருந்து திருடப்பட்ட திருவேங்கடம் கோவிலின் மீது இவ்வளவு ஈடுபாடு ஏன்? ஆண்டாள், தனது முதல் பாசுரத்திலேயே, “வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே” என காம தேவனை வேண்டுகிறாள். வேறொரு இடத்தில, திருமாலை தவிர வேறு ஒருவருடன் மணம் செய்தால், தனது முலைகளை பிடுங்கி எறிவேன், என்று சொல்பவள் மாற்று சமய தெய்வத்தையா காதல் கொல்வாள்? அல்லது அடித்து பிடுங்க வேண்டும் என்ற அளவுக்கு திருமலையில் இருந்த மூல சாக்கிய கோவில் அப்படி ஒரு அப்பாடக்கர் கோவிலா? எனில் அங்கு சாக்கியக் கோவில் இருந்தது என்பதற்கு கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் என ஒரு ஆதாரமும் ஏன் இல்லை? மேலும், வைணவர்கள் கோவிலை சாக்கியர்கள் இடமிருந்து அடித்து பிடுங்கியவுடன் சங்கு-சக்கரம் கொண்ட புதிய சிலை ஒன்றை நிறுவி இருக்க மாட்டார்களா? சாக்கிய சிலையையா வணங்குவார்கள்?

    இவருக்கு ஆழ்வார் பாசுரங்கள் பற்றி பரிச்சயம் உண்டா என தெரியவில்லை. வேறொரு நூலை தரவு தந்து சில பாசுரங்களை மேற்கோள் காட்டுகிறார். இந்த பகுதியில் இவர் கூறும் சில கருத்துகள் நகைப்புக்குரியவை. ஒரு உதாரணம் மட்டும். ஆழ்வார்கள் காலத்தில் பெரிய கோவில் ஏதுமின்றி, சிலை மட்டும் வானம் பார்த்து நின்றது என்கிறார். இதற்கு ஆதாரமாக அவர் திருமழிசை ஆழ்வார் பாடலை சொல்கிறார். இதற்கான பாடல் எண் தராததால், கிட்டத்தட்ட இந்த பொருள் வரும் ஒரு வரி தான் எனக்கு நினைவுக்கு வருகிறது, “தெரிந்தெங்கும் வானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே” என்பது. ஐயா, இந்த வரியை இப்படி குண்டக்க-மண்டக்க பொருள் கொள்ளலாமா? “வானோங்கி” என்பது திருவிக்கிரமனை குறிக்கும். “தெரிந்தெங்கும்” என்பது அதற்கு முன் அடியில் வந்த “புரிந்து” என்பதற்கு எதுகைக்காக போட்ட சொல்!

    இப்படி திருமால் மதத்துக்கு ஆதரவான எல்லா ஆதாரங்களையும் நிராகரிப்பவர் சாக்கிய கோவில் என்பதற்கு கல்வெட்டு, இலக்கியம் என ஒரு தரவும் தரவில்லை.

    தொடரும்

  43. முந்தைய மறுமொழியின் தொடர்ச்சி.

    இவரது வாதத்தில் எனக்கு முக்கியமாக படுவது ஒன்றுதான். கோவிலோ, சிலையோ வைணவ ஆகமங்கள் படி இல்லை என்பது. இங்கே, ஆழ்வார்கள் காலத்திய கோவில்கள் எல்லாம் ஆகமப்படி கட்டப்பட்டவையா என்று கேள்வி எழுகிறது. இது பற்றி ஆசிரியர் திருவரங்கம் ஆகமப்படி கட்டப்பட்டது என்று ஒரு கருத்து மட்டும் சொல்கிறார். அடுத்து, இந்தியாவில் திருமால் ஆலயங்களில் திருமலை கோவில் மட்டுமே ஏக-மூர்த்தி கோவில் என்கிறார். இதன் பொருள் எனக்கு சரியாக விளங்கவில்லை. மூல சந்நிதியில், மூலவர் துணை ஏதுமின்றி தனியாக இருப்பதை குறிக்கிறாரா? எனில், இது சரியல்ல. திவ்ய தேசங்களிலேயே, சில கோவில்களில் திருமால் மட்டும் இருப்பதை காண முடியும். உதாரணம், திருவயீந்திரபுரம், திருச்சேறை, திருநாகை, திருஅத்தியூர் போன்றவை. மேலும், நந்தி வர்மன் கட்டிய வைகுண்ட பெருமாள் கோவிலில் பெருமாள் தனித்து இருப்பார். அதே போல தந்தி வர்மன் கட்டிய அஷ்டப்புஜ பெருமாள் கோவிலும் அப்படியே.

    இனி முக்கியமான விஷயம். அனைத்து சச்சரவுகளுக்கும் மூல காரணமான மூலவர் சிலை. அஜாதசத்ரு சொன்ன ஆயுத மேட்டர். நிற்கும் நிலையில் திருமாலுக்கு கண்டிப்பாக சங்கு-சக்கர சின்னங்கள் இருக்க வேண்டாமா? திருமலை சிலையில் இல்லை. எனவே, இது திருமால் சிலைதானா என்ற சந்தேகம் நிச்சயமாக கிளம்புகிறது. இது தொடர்பான புராண விளக்கங்கள் மீது எனக்கு ஈர்ப்பில்லை.

    திருமால் இல்லை என்றால், இது யாருடைய சிலை? ஆசிரியர் இது போதிசத்துவரின் அம்சமான அவலோகிடேஷ்வரரின் சிலை என்கிறார்! பாகியான், யுவான் சுவாங் போன்றோரின் குறிப்புகளில் இருந்து இவரது வழிபாடு இந்தியாவில் பரவலாக இருந்தது தெரிகிறது. அவலோகிடேஷ்வரர் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இவர் சீனா போன்ற நாடுகளில் இன்றும் வழிபடப்படுகிறார். இவரை சிவா-விஷ்ணு-பிரம்மா ஆகியோரின் கூட்டு கலவை என்ற கருத்தும் உண்டு. இவரது சிலை பல விதமான வடிவங்களில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட நவீன கால பிள்ளையார் சிலைகள் போல! விஷ்ணு ஒருபுறம், பிரம்மா மறுபுறம், நடுவில் அவலோகிடேஷ்வரர் என்ற அமைப்பில் சிலைகள் கிடைக்கின்றன. கருடன், அவர் மேல் விஷ்ணு, விஷ்ணு மேல் அவலோகிடேஷ்வரர் என்ற அமைப்பில் சிலைகள் உள்ளன!

    முக்கியமாக, இவருக்கு நான்கு கை சிலைகள் உண்டு. இந்த சிலைக்கு பூணூல் போன்று தோன்றும் அணிகலனும் இருக்கிறது! நான்கு கை சிலைகள் விஷ்ணுவின் சாயலில் வடிக்கப்படும் வழக்கமும் உண்டு. எனில், விஷ்ணு சாயலில் உள்ள சிலை அவலோகிடேஷ்வரர் அல்லது விஷ்ணு என எப்படி அடையாளம் காண்பது? இதற்கு மேனாட்டு இந்தியவியல் அறிஞர் ஒருவரின் கூற்றை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். “இரண்டுக்கும் வித்தியாசம் காண ஒரு எளிய வழி உண்டு. சங்கு-சக்கர ஆயுதம் இருந்தால் விஷ்ணு. இல்லையேல் அவலோகிடேஷ்வரர்”. அதாவது, மீசை இருந்தால் சந்திரன், இல்லாவிட்டால் இந்திரன் என்பது போல! நான் இணையத்தில் தேடியவரை இவ்வளவு அப்பட்டமாக இந்த கருத்தை சொல்லும் வேறு ஆய்வாளர்கள் கூற்றுகள் கிடைக்கவில்லை.

    இப்படிப்பட்ட நான்கு கை அவலோகிடேஷ்வரர் புகைப்படங்கள் இணையத்தில் நிறைய உள்ளன. அசப்பில் விஷ்ணு போல் தோன்றும் சிலைகளும் உண்டு. ஆனால், திருமலை சிலை போல் ஒரு கை இடுப்பிலும், மற்றொரு கை அபய ஹஸ்தமாகவும் உள்ள சிலை ஏதும் எனக்கு தட்டுப்படவில்லை. இந்த அவலோகிடேஷ்வரர் சிலை பின் கைகளில் தாமரை பூவை வைத்திருப்பது மரபு. திருமலை சிலையில் இப்படி ஏதும் இல்லை. ஆசிரியர் தாமரை உடைக்கப்பட்டது என்கிறார். எனில், இந்த சிலை பின்னப்பட்டது என அருகில் இருந்து பார்த்தவர்கள் எழுதிய குறிப்புகள் உள்ளனவா என தெரியவில்லை. எப்போது தாமரை உடைக்கப்பட்டது என்பது பற்றி குறிப்பு இல்லை. மேலும், தாமரை உடைந்தது என்றால், சங்கு-சக்கரம் உடைந்ததற்கும் சாத்தியக் கூறு உண்டு.

    சுருங்க சொன்னால், இது சாக்கியக் கோவில் என்பதற்கு வேறெந்த ஆதாரமும் தராமல், சிலையின் உருவத்தை மட்டும் முன் வைக்கிறார்.

    —————————————————————————-

    நாட்டாமை தீர்ப்பு சொல்லும் நேரம் வந்து விட்டது! ம்ம்ம். தற்போதைய எனது புரிதல் இது. சிலையை தவிர மற்ற ஆதாரங்கள் திருமால் மதத்துக்கு ஆதரவாக உள்ளது எனலாம். மாற்று சமயங்களுக்கு சிலையை தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. சிலையைப் பொருத்தவரை அவலோகிடேஷ்வரர் என்றோ மற்ற சமயங்களை சார்ந்தது என்றோ கூற வழி உண்டு. சங்கு-சக்கரமற்ற சிலையை திருமால் என்று கூறும் கருத்து முழுங்குவதற்கு கடினம்தான்! மேலே சொன்ன புத்தகத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ யாரும் கருத்து சொன்னதாக கிடைக்கவில்லை. சிலையியல் அறிஞர் ஒருவர் சிலையை நெருங்கி பார்த்து, ஆராய்ந்தால் இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும். ஆனால், இது நடக்கப் போவதில்லை! எனினும், எதிர்காலத்தில், வேறாவது வழியில் தெளிவு கிடைக்க திருமால் அல்லது அவலோகிடேஷ்வரர் அருள் புரிவார் என நம்புகிறேன்.அது வரை, திருவேங்கடவன் எனக்கு கையிலங்காழி சங்கனாகவும், அஜாதசத்ருவுக்கு தர்நேந்திரராகவும், புத்தக ஆசிரியருக்கு அவலோகிடேஷ்வரர் எனவும் இருக்கட்டும்!

    உணர்வார் ஆர் உன்பெருமை? ஊழிதோறூழி,
    உணர்வார் ஆர் உன் உருவந்தன்னை?, உணர்வாரார்?
    விண்ணகத்தாய். மண்ணகத்தாய். வேங்கடத்தாய் நால்வேதப்
    பண்ணகத்தாய். நீகிடந்த பால்?

    சுபமஸ்து.

    ————————–

    சுட்டிகள்:

    ஜமணதாஸ் அவர்களின் புத்தகம்:

    http://www.ambedkar.org/Tirupati/

    மேலே நான் சொன்ன கருத்துகள் பல இடங்களில் இருந்து சுட்டவை. தனித்தனியாக சுட்டி தர பொறுமையில்லை. இந்த கருத்துகள் பலவற்றை உள்ளடகிய, திருமலை கோவில் பற்றி விரிவாக பேசும், புத்தகம் கீழே. சிலையின் குளோசப் படங்களும் உள்ளன. பக்திமயமாக எழுதப்பட்டாலும், நம்பத் தகுந்த பல செய்திகள் இதில் உள்ளன.

    http://xa.yimg.com/kq/groups/23451465/398237107/name/Tirupati+-+Pdf.pdf

    —————————————————————-

    ஸ்ஸ்சப்பா. கண்ணை கட்டுதே சாமி. ஒரு கட்டுரை எழுதறதுக்குள்ள மூச்சு முட்டுது. வினவு, நீ எப்படி பொழுதன்னிக்கும் ஒரு கட்டுரை எழுதற?

  44. ஏராளமான பணம் புழங்கும் இந்த கோவிலை, ஆதிசங்கரர் வந்து, சக்கரம் பதித்து,அம்பாளாக பூஜித்ததிலிருந்து, சர்ச்சை தொடங்கியது!

    ஏழுமலயான் வாரத்தில் 4நாள் அம்பாளாகவும், 2 நாள் விஷ்ணுவாகவும், ஒருநாள் சிவனாவும் பூஜை செய்யப்டுகிறது! ஆதிசங்கரரின் ஏற்பாட்டின்ப்டி சைவ கொவிலைபோன்ற அபிஷெக ஆராதனை செய்யப்படுகிறது! சைவ-வைணவ ஒற்றுமையை ஏற்படுத்த செய்திருக்கலாம்!

    எனக்கு சாமி முக்கியமில்லை! பக்தனை மொட்டையடிது ,நாமம் பொடுவது புரிந்த கதை! புரியாத புதிர், சாமிக்கும், ‘செங்கண் நெடியோன்’ கண்ணையும் மறைத்து சாத்தப்படும் நாமம் எதை குறிக்கிறது?

    சமணமும்,பவுத்தமும் இன்றைய சைவ, வைணவ மதங்களின் புராண வடிவங்களே! தொண்டை மண்டல சைவ கோவில்கள் பல சமண கோவில்களே !

    பொதுவாக, சிறு கள்வர்கள் ஊருக்கு வெளியில் தனியாக இருக்கும் கோவில்களிலேயெ தஙகள் கொள்ளையை பஙகு போட்டுக்கொள்வர்! இப்பொது கொள்ளையர்களே ஆள்பவர்களாகிவிட்டதால், மக்களின் பக்தி தாகத்தை பயன்படுத்திக் கொள்கிரார்கள் போலும்!

    அன்றைய தமிழர் ஆன்மீகம் தனித்திரு, பசித்திரு என்றது! முனிவர்களும் தனிதிருந்து, தூய்மை காத்தனர்! கடவுளை தியானித்தலின்றி, மதவாத சாக்கடையில் விழவில்லை! தனக்கு ஆதரவாக எம் ஜி யார் பச்சை குத்த சொன்னது போல, இடையில் வந்த சைவரும், வைணவரும் முத்திரை வைத்துக்கொண்டு கட்சி கட்டினர்! அப்பொதிலிருந்தே, பக்தி அரசியலாக்கப்பட்டுவிட்டது!

    எனக்கு, தந்தை வழியிலும், எனது சம்பந்திகள் வழியிலும் சைவ கோவிலும், வைணவ கோவிலும் குடும்ப சொத்தாக உள்ளது! ஆதனால், வீட்டிலேயே சைவ,வைண்வ முரண்பாடுகளை சந்தித்திருக்கிறேன்! சந்தித்து வருகிறேன்!

    வினவுக்குநன்றி! வெஙடெசனுக்கும் நன்றி!

    • // எனக்கு, தந்தை வழியிலும், எனது சம்பந்திகள் வழியிலும் சைவ கோவிலும், வைணவ கோவிலும் குடும்ப சொத்தாக உள்ளது! ஆதனால், வீட்டிலேயே சைவ,வைண்வ முரண்பாடுகளை சந்தித்திருக்கிறேன்! சந்தித்து வருகிறேன்! //

      அந்த முரண்பாடுகளை மூட்டிவிடுதே நீங்களாகத்தான் இருக்குமோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.. அக்கோவில்களில் பார்ப்பன அர்ச்சகர்கள் இருக்கிறார்களா அல்லது விரட்டிவிட்டீர்களா..?

  45. இருக்கிறார்கள்! எங்கு அய்டியா கொடுப்பதே அவர்கள் தானே!கிராமத்தில் பைச வரும்படியில்லை! படித்தவர்கள், அனைத்து சாதியினரும், ஊரைவிட்டு பிழைப்பு தேடி பட்டணம் வந்துவிட்டர்கள் (என்னையும் செர்த்து)! இப்போது உள்ளவர்கள் புதியவர்கள்!விவ்சாயிகள்!

    அம்பி ததாஸ்து சொன்னால் முடித்துவிடலாமே!

    • // எங்கு (எனக்கு?) அய்டியா கொடுப்பதே அவர்கள் தானே! //

      அதனால்தான் இப்படி ஆகிவிட்டீர்களோ..?!!!

  46. பின்னூட்டங்கள் 250-அய் நெருஙகுகிறது! இருந்தாலும் அம்பிக்கு பதில் சொல்லத்தான் வேண்டும்! இல்லையென்றால் அஜாதசத்ரு ஓடிவிட்டார், பல்டியடித்தார் என்று சம்பந்தமில்லாமல் பகல்வார்!

    //அதனால்தான் இப்படி ஆகிவிட்டீர்களோ..?!!!//

    ஆமாம் அம்பிகளே! பக்தி என்ற மூடத்தனத்தால், கோவில்களை கட்டி, குடும்ப சொத்துகளை விற்று, பார்ப்பனர்களை பராமரித்து, சொத்துக்களை இழந்து பட்டணம் வந்து பிழைத்து கொண்டோம்! இப்பொதும் சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு பரிவட்ட மரியாதை உண்டு! ஆனால், கடவுள் நம்பிக்கையற்ற சிலர் சொந்த ஊருக்கே செல்வதில்லை!

    கோவில்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவைகள்!

    சாமிகளின் லீலைகளும், சாதி பிரிவினைகளும் என் இறை நம்பிக்கையை தகர்த்தது!

    திரு மூலர் பிடிக்கும்! அவருக்கு இட்டுகட்டிய கதை பிடிக்காது!

    திரு வள்ளுவர் பிடிக்கும்! அவருக்கு இட்டுகட்டிய கதை பிடிக்காது!

    விவெகானந்தர் பிடிக்கும்! அவர் சொன்ன சமய சீர்திருத்தங்கள் செய்யாமல், அவர் பெயரில் இந்துத்வா குளிர் காய்வது பிடிக்காது!

    வள்ள்லார், அவரின் இறுதி விருப்பமான சமரச சன்மார்க்கம் பிடிக்கும்! அவரை மோட்சத்துக்கு அனுப்பிய விதம் பிடிக்காது!

    பிழைப்புக்காக கற்பனை கதைகள் கட்டும் புலவர்களை சாடிய(சின்ன சங்கரன் கதை),
    பரங்கியை துரை என்ற காலமும் போச்சே என்றதுடன் நில்லாது பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்று கனவில் சுதந்திரத்தை கண்ட பாரதியை பிடிக்கும்!

    நந்தனாரின் பக்தி பிடிக்கும் ! அவரை மோட்சத்துக்கு அனுப்பிய விதம் பிடிக்காது!

    சமண முனிவர் ஆச்சாரிய துளசி அடிகளின் அணுவிரதம் பிடிக்கும்!

    கடைசியாக பெரியாரையும் பிடிக்கும்!

    சுருக்கமாக, உண்மையைத் தேடும் அனைவரையும், சாதி சமயம் கடந்து, பிடிக்கும்!

    இனியொருமுறை இப்படி கேட் க மாட்டீர்கள் இல்லையா!

  47. உங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று நான் கேட்கவேயில்லையே..

  48. உம்மை அறிந்தோ தமிழ் ஓதினோம்-என்ற கம்பன் மொழி பிடிக்கும்! அதை சொல்லவே இல்லையே! புரிந்து கொண்டால் சரி!

Leave a Reply to Vijay பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க