privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !

மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !

-

ள்ளிப் பேருந்தின் சக்கரத்தில்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறங்கள்.
துளிர்களின் பிராண வாயுவில்
தனியார் பள்ளியின் துருக்கள்.
பள்ளியின் கட்டளைகள்,
பிள்ளையின் ஒப்பனைகள்,
எல்லா புத்தகங்களும் கவனம் வரும்..
பிள்ளையின் இதயம் மறந்து போகும்.

பள்ளிக்கூடம்அவசர அவசரமாய் கிளம்புகையில்
அம்மாவின் முத்தத்திற்கு
கன்னத்தில் இடமில்லை,
நூடுல்ஸ் நுழையவும்
பிள்ளைக்கு நேரமில்லை.
பறக்கின்றன பள்ளி வாகனங்கள்.

ஒரு லோடு எல்.கே.ஜி.
இரண்டு லோடு ப்ரீ கே.ஜி.
எல்லா திசையிலிருந்தும்
கொண்டு வந்து கொட்டப்படுகின்றன
குழந்தைகள்.

பிள்ளைக் கனியமுதில்
கல்விச் சாறெடுக்க
இன்னும் தருகிறேன்,
என்னவோ செய்து
எங்களுக்கு ‘ஃபர்ஸ்ட் மார்க்கை’
பிழிந்து தாருங்களென
தனியார் பள்ளிக்கு
கரு வளர்க்கும் பெற்றோர்கள்.

பிழியப்படும் தலைகளின் வரவில்
கற்றனைத்தூறும் லாபம்
கல்வி முதலாளிக்கு.

யூனிஃபார்ம், கோட்டு, டை…
அவனே துணி வியாபாரம்.
ஷூ, பெல்டு, ஸ்கவுட்டு…
அவனே செருப்பு வியாபாரி.
நோட்டு, புத்தகம்…
அவனே ஜெனரல் மெர்ச்சன்ட்!
பேருந்து, வேன், ஆட்டோ…
அவனே மோட்டார் முதலாளி.
ஆயா, வாட்ச்மேன், கேசியர்..
எல்லாம் அவன் ஏற்பாடு.

ஒத்துக் கொள்கிறான்
அம்மா, அப்பா மட்டும் நம் ஏற்பாடு.
பணம் கட்ட மட்டும்
ஆள் வந்தால் போதும்.
மற்றபடி பெத்த தாயே ஆனாலும்
பிரேயருக்கு பிறகு
உள்ளே விட மாட்டார்கள்..
அவ்வளோ ‘ஸ்ட்ரிக்டாம்’ தனியார்.
பிள்ளையைப் பறிகொடுத்தவனுக்கு
பெருமை வேறு!

படித்து
பெற்றவர்களுக்கு சம்பாதிக்கிறானோ இல்லையோ,
படிப்பதற்காக
முதலாளிக்கு சம்பாதித்துக் கொடுக்கும்
இந்தத் ‘தரம்’ முட்டாள்தனம்.

எச்சரிக்கை, தனியார் பள்ளிகள்ஐம்பொறிகளையும்,
மனிதனின் உடல் துவாரங்களையும் கூட
தனது லாபத்திற்கான வாசலாக்கி விட்ட
தனியார்மயத்தைத் தகர்ப்பதே நமது முதல் பாடம்.

இழுத்து வைத்து கழுத்தறுப்பதைப் பார்த்து
மெட்ரிக் பள்ளி பக்கம்
மேயப் போவதில்லை கோழிகள்.
தனியார் பள்ளி தாளாளரைப் பார்த்தால்
காம்புகளைக் காட்டுவதில்லை எருமைகள்.

காக்கை எச்சமிட்டால் திட்டுகிறாய்.
‘கரஸ்பாண்டென்ட்’ எச்சமிட்டால்
மெச்சுவதா?

“அனைத்து தனியார் பள்ளிகளையும்
அரசுப் பள்ளியாக்கு”!
இதைத் தெரிந்து கொள்வது தான்
அறிவு உனக்கு!
இதை வீதிப்பாடமாய் வெளியில் நடத்து!
கல்விக் கண் திறக்கும் தானாய் நமக்கு!

– துரை.சண்முகம்
__________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________________________