மத்திய காலத்தில் மதம் அதிகாரத்துடன் கோலோச்சிய போது சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்த காரணத்திற்காக கலீலியோவை வீட்டுச் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியதுடன், கலீலியோ ஆய்வு செய்யவும், முடிவுகளை வெளியிடவும் தடைசெய்து வைத்திருந்தது கத்தோலிக்க திருச்சபை.
கலீலியோவுக்கு பின் விஞ்ஞானம் வளர்ந்து மனிதனால் எட்ட முடியாத தூரங்களையும் கடந்து வெகு தூரம் சென்றுவிட்டது. வாயேஜர் என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 36 ஆண்டுகளுக்கு பின் 1,800 கோடி கிலோமீட்டர்களை கடந்து சூரியக் குடும்பத்தையே தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளி ஆய்வுகளை நடத்தி வந்தன. விண்வெளி ஆய்வுகளில் முதன்மையடைவது தேசிய பெருமிதமாகவும், தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானதாகவும், தொழில்நுட்ப மற்றும் சித்தாந்த மேலாண்மையை நிறுவுவதற்கு தேவையானதாகவும் இருநாடுகளும் கருதின. குறிப்பாக 1957-1975ம் ஆண்டுகளுக்கிடையில் இப்போட்டி உச்சத்திலிருந்தது.
இப்பின்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 1977-ம் ஆண்டு வாயேஜர் – 1, 2 என்ற இரு விண்சோதனை கலங்களை சூரிய குடும்பத்தின் அனைத்து கோள்களையும் தாண்டி பயணம் செய்து ஆராய விண்ணில் ஏவியது. வாயேஜர் -2 முதலில் ஏவப்பட்டது. அதற்கு 16 நாட்களுக்கு பின்னரே, பல முறை தள்ளிப் போடப்பட்ட வாயேஜர்-1 செப்டம்பர் 5, 1977 அன்று ஏவப்பட்டது. 36 ஆண்டுகளுக்கு பின் வாயேஜர்-1 பூமியிலிருந்து சுமார் 1820 கோடி கிலோமீட்டர் தூரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இவ்விரு விண்கலங்களும் கோள்களின் சுழற்சி, இயக்கம், அமைப்பு, வளிமண்டல உள்ளடக்கம், நிறை, ஈர்ப்புவிசை, நிலவியல், காந்தப்புலம், துணைக்கோள்கள், அவற்றின் பண்புகளை அறிவதுடன் சூரியக் குடும்பத்தின் கோள்களுக்கிடையேயுள்ள வெற்றிடத்தில் இருக்கும் காந்தப்புலம், ஆற்றல் துகள்கள், பிளாஸ்மா துகள்களை ஆய்வு செய்து வரையறுக்கும் முக்கிய நோக்கங்களுடன் ஏவப்பட்டன.
நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகத்தால் (Jet Propulsion Laboratory) உருவாக்கப்பட்ட வாயேஜர் விண்கலங்கள் 12 அடி (3.7 மீட்டர்) விட்டமுள்ள டிஷ் ஆண்டனாவையும், அதை எப்போதும் பூமியின் திசையை நோக்கி திருப்பி வைக்க சூரிய உணர்கருவியும் (Sun Sensor) அகத்திய (Canopus) நட்சத்திர கண்காணிப்பு (Tracker) கருவியும் கொண்டுள்ளன. பயண திசையை சரிசெய்ய மூன்று அச்சு உறுதிப்படுத்தும் சுழல்காட்டிகளுடன் (gyroscopes), 16 ஹைட்ரஜன் உந்துவிப்பான்களும் உள்ளன. இவற்றுடன் விண்பொருட்களை, கிரகங்களை ஆய்வுசெய்ய 11 அறிவியியல் ஆய்வுக் கருவிகளும் உள்ளன. வாயேஜர் விண்கலத்திலுள்ள கணினியின் நினைவுத்திறன், செயல்திறன் இப்போதைய ஐ-போன்களின் செயல்திறனைவிட 2 லட்சம் மடங்கு குறைவாகும்.
இவற்றில் விமானத்தை போல் இறக்கைகளோ, ஓட்டும் கருவியோ, இயந்திரங்களோ இல்லை. பின்னர் எப்படி 35 ஆண்டுகளுக்கும் மேல் பறக்கின்றன? ஏவப்படும் போது கிடைத்த ஆரம்ப உந்து விசையோடு, கோள்களின் ஈர்ப்பு விசையையும் பயன்படுத்திக் கொண்டு தனது பயண திசையை மாற்றிக் கொள்கின்றன.
175 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியக் குடும்பத்தின் வெளிக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வரிசையாக வரும். புவியிலிருந்து ஏவப்பட்ட பின் இக்குறிப்பிட்ட கால இடைவெளியில் வியாழன் கோளை நெருங்கி அதன் ஈர்ப்பு விசையால் கிடைக்கப்பெற்ற கவின் விசையால், சனிக்கோளை அடைந்து, அதன் ஈர்ப்பு விசையால் சூரியமண்டலத்தின் விளிம்பை நோக்கி பயணிக்கிறது. இப்பயணப் பாதை சிக்கலானதென்பதால் ஆய்வாளார்கள் விண்கலத்தை ஏவுவதற்கு சுமார் 10,000-த்திற்கும் மேற்பட்ட சாத்தியமான வீசுபாதைகளை (Trajectory) கணக்கில் எடுத்துக்கொண்டு, அதில் துல்லியமான ஒன்றை தேர்வுசெய்துள்ளனர். பயணத்தின் போது விண்கலத்தின் பயண பாதையில் சிறு சிறு திருத்தங்களை, மாற்றங்களை செய்ய அதில் 16 ஹைட்ரஜன் உந்துவிப்பான்கள் உள்ளன.
வாயேஜர்-1 விண்கலம் 1979-ல் வியாழன் கோளின் அருகாமையில் பறந்தும் 1980-ல் சனிக் கோளின் அருகாமையில் பறந்தும் கடந்தது. வியாழன் கோளின் பெரும் சிவப்பு புள்ளி, சனியின் வளையங்கள், இக்கோள்களின் 23 துணைக்கோள்கள் ஆகியவற்றை படமெடுத்து அனுப்பிய பின் வாயேஜர்-1 சனிக் கோளின் ஈர்ப்புவிசையால் பெற்ற கவின் விசையின் மூலம் புளூட்டோவை தாண்டிய தனது பயணத்தை ஆரம்பித்தது.
1990-ல் வாயேஜரின் காமெராக்களை திருப்பி சுமார் 60 பிரேம்கள் கொண்ட மொத்த சூரியக்குடும்பத்தின் முதல் “குடும்ப புகைப்படம்” எடுக்க வைக்கப்பட்டது.
சூரியனின் ஈர்ப்புவிசை, எக்ஸ்-ரே, காமா கதிகள், ஆற்றல் துகள்கள் மற்றும் பிளாஸ்மா ஆகிவை சூரிய மண்டலத்தை சுற்றி கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரம் எல்லை வரை இருக்கும். அதன் பின் இவற்றின் அளவு படிப்படியாக குறைந்துவிடும். எல்லா நட்சத்திரங்களுக்கும் இது பொருந்தும். வாயேஜர்-1 கலம் சென்ற ஆண்டு இந்த எல்லையை கடந்ததாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விண்கலத்திலுள்ள ஆய்வுக்கருவிகளுக்கு அதில் உள்ள மூன்று புளுட்டோனியம் அணுசக்தி பேட்டரிகள் மின்னாற்றலை வழங்குகின்றன. அணுச்சிதைவில்(Decay) இருந்து நேரடியாக மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இவற்றின் ஆற்றல் 1977 விண்ணில் ஏவும் போது 470 வாட் ஆக இருந்ததாகவும், 1997ல் 335வாட்டாக சரிந்துவிட்டதாகவும், இது 2020 வரை மட்டுமே விண்கலத்திற்கு மின்சாரத்தை வழங்குமென்பதால் 2020-க்கு மேல் விண்கலத்திடமிருந்து எந்த தகவலையும் பெற இயலாதென நாசா அறிவித்துள்ளது.
சூரிய மண்டலத்தை விட்டு வெளி நோக்கி சென்று கொண்டிருப்பது வாயேஜர் கலங்கள் மட்டுமே அல்ல. 1972-ல் ஏவப்பட்ட பயோனியர்-10, 11 ஆகிய இரு கலங்களும் கூட வெளிச்சென்று கொண்டிருக்கின்றன. முன்னர் புவியிலிருந்து அதிதூரம் சென்றிருந்த பயோனியர் கலத்தை 1998-லேயே வாயேஜர் விஞ்சிவிட்டது.
கோள்கள் சூரியனை சுற்றுவது போலவே நட்சத்திரங்களும், மொத்த சூரியக் குடும்பமும் பால்வெளி மண்டலத்தை சுற்றி வருகின்றன. வாயேஜர் விண்கலம் தற்போது பயணிக்கும் திசையில் சென்டரி (centauri) நட்சத்திரம் 26,000 ஆண்டுகள் கழித்து 3.1 ஒளிஆண்டுகள் தூரத்திலும், க்ளைஸ்-445 (Gliese 445) நட்சத்திரம் 40,000 ஆண்டுகள் கழித்து 1.6 ஒளி ஆண்டுகள் தூரத்திலும், சூரிய மண்டலத்துக்கு அருகாமையில் வருகின்றன.
ஒளியின் வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் ஒரு ஆண்டில் கடக்கும் தூரம் ஒரு ஒளி ஆண்டு எனப்படுகிறது. விண்கலம் தற்போது பயணிக்கும் வேகமான வினாடிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் அதே திசையில் பயணித்தால் 40,000 ஆண்டுகளில் 1.6 ஒளி ஆண்டுகள் தொலைவை கடந்திருக்கும். இப்போதைக்கு இந்த பயணம் மனிதகுலத்திற்கு என்ன மாதிரியான அறிவை நலனை பெற்றுத் தருமென்று கூறுவது கடினம்.
எதிர்காலத்தில் வேற்றுகிரக உயிரினம் வாயேஜரை சந்திக்க நேர்ந்தால் அதற்கு பூமியை பற்றி அறியத் தரும் முயற்சியாக வாயேஜரில் ஒரு அடி விட்டமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு பதிவுத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. அதில் பூமியில் உயிரினங்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகளாக அலை, காற்று, இடி, மற்றும் பறவைகள், திமிங்கிலங்கள், விலங்குகளை உள்ளிட்ட இயற்கை ஒலிகளையும், பல்வேறு கலாச்சாரங்களின் இசை துணுக்குகளையும், 56 மொழிகளில் பேச்சு வாழ்த்துக்களையும், சூரியமண்டலம், பூமியின் வரைபடம், புவிவாழ் உயிரினங்களின் வரைபடங்களை உள்ளிட்ட 116 படங்கள் தொகுப்பாக பதியப்பட்டுள்ளன. ஒருவேளை விண்வெளியில் பயணிக்கும் எதிர்கால மனிதர்கள் வாயேஜரை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு இத்தகடு காலப்பதிவாக இருக்கும்.
அறிவியல் பல படிகள் முன்னேறி செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களையும் சூரியனையும் பற்றியும் ஆய்வுகள் நடந்து பல உண்மைகளை கண்டறிந்த பின்னரும் கூட நம் நாட்டில் ஐந்தாமிடத்தில் சுக்கிரன், ஆறாமிடத்தில் சந்திரன், சூரிய தசை, சனி தசை என்று மக்களை ஏமாற்றும் பித்தலாட்டங்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நடந்து வருகின்றன. இந்த மோசடியாளர்களை எல்லாம் வாயேஜர்களில் ஏற்றி அனுப்பி வைப்பதுதான் அறிவியலை வளர்ப்பதற்கான வழி.
மேலும் படிக்க
- 5 Facts About NASA’s Far-Flung Voyager Spacecraft
- Voyager 1 is Leaving Solar System – Video
- Cosmic Journeys : Voyager Journey to the Stars
- Voyager –
- Voyager 1 leaving solar system matches feats of great human explorers
- Voyager 1 leaves solar system
- How Nasa’s Voyager is bringing the sound of space down to Earth
- Voyager 1 – Wikipedia
“அறிவியல் பல படிகள் முன்னேறி செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களையும் சூரியனையும் பற்றியும் ஆய்வுகள் நடந்து பல உண்மைகளை கண்டறிந்த பின்னரும் கூட நம் நாட்டில் ஐந்தாமிடத்தில் சுக்கிரன், ஆறாமிடத்தில் சந்திரன், சூரிய தசை, சனி தசை என்று மக்களை ஏமாற்றும் பித்தலாட்டங்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நடந்து வருகின்றன. இந்த மோசடியாளர்களை எல்லாம் வாயேஜர்களில் ஏற்றி அனுப்பி வைப்பதுதான் அறிவியலை வளர்ப்பதற்கான வழி.”
இவர்களை மட்டுமா ….. ஏழு வானத்துக்கு மேலே அல்லா அர்ஷ் என்ற ஆசனத்தில் இருக்கின்றார். அங்குதான் சுவனமும் அங்கு போகும் மனிதர்கள் அனுபவிக்க ஒருவருக்கு தலா 72 கன்னிகள் காத்திருக்கின்றார்கள் என்று இன்றுவை பொய்யுரைக்கும் பொய்யர்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
(அல்லாவுக்கு உருவம் இருக்கின்றதா இல்லையா என்பது வேறு சர்ச்சை )
Agreed!!!!
அய்யா கருங்கொடி … எதையும் முழுதாக அறியாமல் இப்படி சொரிந்துக்கொல்வதில் உங்களுக்கு என்ன சுகம் இருக்கிறது ?
நாத்திகருடன் இஸ்லாமியர்களின் விவாத வீடியோவை கவனமாக பாருங்கள். onlinepj .com தளத்தில் வீடியோ பதிவாக இருக்கிறது. மிக சுவாரசியமான காரசார விவாதம் அது. சிந்திப்போருக்கு இந்த விவாதத்தில் பல விஷயங்கள் புரியும்.
What? You citing onlinepj.com as a credible site for atheist-Theist debates!! 😀
Grow up buddy.. Nothing more to say!
பிஜே இன் பித்தலாட்டங்களை பற்றி எமக்கு நீர் கதைவிட வேண்டாம்..
முதலில் பிஜேக்கும் ஷாக்கிர் நாயக் க்கும் இடையில் ஒரு பொதுவான குரான் விளக்கத்தை ஏற்படுத்த ஏதாவது செய்யுங்கள்.
அடுத்தது நான் சொன்ன கருத்துக்கு மாற்றாக உம்மிடம் கருத்து குரான் அல்லது ஹதீஸ் ரீதியாக ஆதாரம் தர முடிந்தா சொல்லவும்.
எதுக்கு மற்றவர்களை இழுக்கின்றீர்கள்.
செங்கொடியும் , பறையோசையும் போட்ட இஸ்லாமிய விமர்சன கருத்துகளுக்கு உங்க பித்தலாட்டக்காரன் பிஜே இடம் பதில் இருக்கின்றதா ???
நான் பிறப்பால் இஸ்லாமியனாக இருந்து இப்போ அங்கிருந்து தப்பி நல்வாழ்வு வாழ்பவன்
“” நான் பிறப்பால் இஸ்லாமியனாக இருந்து இப்போ அங்கிருந்து தப்பி நல்வாழ்வு வாழ்பவன் “”
கருங்கொடி அப்படி யானால் உன்னுடைய உண்மை பெயரில் வரலாமே ? கையில் இஸ்மாயில் என்று பெயர் குத்திகொண்ட கூட்டத்தினை சேர்ந்தவானா நீ ?
உன்போன்ற பயலுகளை நம்பவே கூடாது ஓய் ?
As noted, also write about muslim irrationality and Christian morons who ridicule science. Your soft corner for islamic backwardness is really counter-productive.
ஏனங்க.. அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடு.. அவன் என்ன பண்ணா நமக்கு என்ன? விட்டுத்தள்ளுங்க..
ஏம்பா பீட்டு, வினவில் ஏராளமான கட்டுரைகள் கிறித்துவ முஸ்லீம் முட்டாள்கள் பற்றி நிறைய கட்டுரைகள் வருகின்றன. ஆனால் உமது காமாலை கண்ணுக்குதான் தெரிவதில்லை. மேலும் செங்கொடி தளத்திற்கு போய் நிறைய கட்டுரைகள் ஆழமான தரவுகளோடு படித்துப் பார்.
எனக்கு ஒரு சந்தேகம். கலிலியோ தொலைநோக்கியை கண்டுபிடித்தது 16ம் நூற்றாண்டு காலகட்டத்தில். ஆயினும் அதற்கு முன்னரே வானவியல் அறிவு என்பது மனிதர்களிடம் இருந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சிக்கு முன்னரே கோள்களை, நட்சத்திரங்களை நம் முன்னோர் ஆராய்ந்து பதிவு செய்திருக்கின்றனர். அவையெல்லாம் எப்படி சாத்தியமானது?
வானவியல் அறிவிலிருந்துதான் ஜோதிடக் கலையும் முகிழ்த்து வந்தது என்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. மனிதர்களுக்கும் இப்பிரபஞ்சத் துகள்களுக்கும் தொடர்பிருக்கிறதா என ஆய்ந்ததன் மூலம் இது உருவாக்கப்பட்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இவ்விடயத்தைப் பற்றி ஆழமாக அறிந்தவர்கள் அதை எடுத்துரைத்தால் பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன். அதை ஒட்டி விவாதம் வளர்ந்தால் நல்லது. சம்பந்தமில்லாமல் மதங்களைப் பற்றிய சர்ச்சையால் இங்கு பின்னூட்டப் புலம் குப்பையாகக் காணப்படுகிறது.
ரிஷி,
நினைவில் உள்ளதை, புரிந்ததை விக்கிபீடியாவில் சுருக்கமாக சரி பார்த்துவிட்டு எழுதுகிறேன். தகவல் பிழைகள் இருக்கலாம். எழுதி முடித்தபின் குழந்தைத்தனமாக இருப்பதாக தோன்றியது. உங்களுக்கும், மற்ற வாசகருக்கும் இதை விட அதிகம் தெரிந்திருக்க கூடும். மன்னிக்கவும்.
கலீலியோவின் காலம் பதினாறாம் நூற்றாண்டு. அவர் காலத்தில் மற்றொருவர் கண்டுபிடுதிருந்த தொலைநோக்கி பற்றி கேள்விப்பட்ட கலீலியோ தானே ஒன்றை வடிமைத்தார். மூலத்தில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்து மிகவும் மேம்பட்ட தொலைநோக்கி ஒன்றை உருவாக்கினார். இன்றைய பொழுதில் ஒரு நூறு டாலர் கொடுத்தால் அவரிடம் இருந்ததை விட அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கி வாங்க முடியும் என்பது வேறு விஷயம்!
கலீலியோ காலத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வானியல் ஆராய்சிகள் தொடங்கிவிட்டன. கிரேக்கம், பாபிலோன், பாரசீகம், இந்தியா போன்ற பிரதேசங்களில் இந்த ஆராய்சிகள் தொடர்ச்சியாக நடந்தன. ஆனால் இவை மொத்தமும் வெறும் கண்ணுக்கு தெரிகிற நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றி பற்றி மட்டுமே இருந்தன (நட்சத்திரம், கோள்கள் இரண்டையும் சேர்த்து கோளங்கள் என அழைப்போம்). இவர்களது முக்கிய நோக்கம் வானில் இந்த கோளங்களின் சரியான இருப்பிடத்தை (coordinate) ஆவணப்படுத்துவது. இதை நாள்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் செய்து வந்தனர். எப்போது, எங்கே, எது தெரியும் என்று குறிப்பு எடுத்தனர். இதுவே முக்கிய ஆராய்ச்சி. பொதுவாக இயற்கயை பற்றி அறிவதில் இருந்த ஆர்வம் ஒரு உந்து சக்தி. ஜோதிடம் மற்றொரு நோக்கம். கோளங்களின் இருப்பிடம் சரியாக தெரிந்தால் தான் ஜோதிட “கணிப்புகள்” செய்ய முடியும். இப்படி குறிப்புகள் எடுப்பது கடினமான பணி என்றாலும், எப்படி செய்திருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
ஓர் இரவு முழுதும், ஒளியற்ற இடத்தில் இருந்து வானத்தை நோக்கினால் கோளங்கள் நகர்வதை காணலாம். புதிய கோளங்கள் உதயமாகி, சில அஸ்தமித்து தொடர்ந்து நிகழும் ஒரு திரைப்படம். மறு நாள் அமர்ந்து பார்த்தால் திரைப்படம் சிறிய அளவில் மாறுபடுவதை காண முடியும். ஒரு மாதம் கழிந்தால் பெரிய அளவு மாற்றம் இருக்கும். ஆனால், ஒரு வருடம் கழிந்தால் அதே நிலை திரும்பும். அதாவது, ஏதாவது ஒரு மாதம், குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் (உதாரணமாக ஜனவரி 26, இரவு 2:30) எடுத்துக் கொண்டால் எந்த வருடமாயினும் துல்லியமாக அதே நிலையில் தான் வானம் தெரியும். அதே திரைப்பட காட்சி! இதை கண்டுபிடிக்க வருட கணக்கில் குறிப்பெடுத்து அவற்றை ஆராய வேண்டி இருந்திருக்கும். இந்த உண்மைகள் ஆதிகால ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருந்தது. இது போன்ற கண்டுப்டிப்புகளே “வருடம்” என்ற கோட்பாட்டின் மூலம்.
கோளங்கள் இரு வகைப் படுவன என்பதையும் அறிந்திருந்தார்கள். ஒன்று நிலையான நட்சத்திரங்கள் (fixed stars); இரண்டாவது கோள்கள் (planets அல்லது wanderers). Planet என்ற கிரேக்க (அல்லது இலத்தீன்?) மொழி சொல்லின் பொருளே “ஊர் சுற்றி’ என்பது! ஒரு வருடம் கழித்து கோளங்களின் திரைப்படம் அதே காட்சி இருக்கும் என்று பார்த்தோம். ஆனால், ஐந்து கோளங்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தன. அவை, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி. இவற்றின் ஊர்வலம் வேறு விதமானது. அடுத்த வருடம், அதே நாள், அதே நேரம் வானத்தை பார்த்தால் fixed stars அதே போன்று இருக்கும். ஆனால், கோள்கள் அப்படியிருக்காது.
மேலும் ஒரு முக்கிய வித்தியாசமும் உண்டு. நட்சத்திரங்கள் தமக்குள் நகர மாட்டா. அதாவது, ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொன்று எங்கே இருக்கிறதோ, அங்கேயே தான் இருக்கும். மொத்தமாக நகருமே தவிர, ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. உதாரணமாக, ரயில் வண்டி மொத்தமாக நகரும். எனவே பெட்டிகளும் நகரும். ஆனால், ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டி நகராது. கோள்கள் இப்படி அல்ல. நட்சத்திர பின்னணியில் இவை நகர்வதை காணலாம். சனி கிரகம் இன்று ஒரு நட்சத்திரம் அருகில் இருக்கும், அடுத்த மாதம் வேறொரு நட்சத்திரம் அருகில். எனவே தான் இந்தக் ஐந்தை “ஊர் சுற்றி” அல்லது “planet” என்றார்கள். இதற்கான நவீன விளக்கம், கோள்கள் அருகிலும், நட்சத்திரங்கள் மிக தொலைவிலும் இருப்பதே. ஆனால், இந்த விஷயம் ஆதிகால ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியாது.
ஐந்து கோள்களோடு, சூரியன், சந்திரன் சேர்த்தால் ஏழு (ராகு, கேது பற்றி சில வானியல் பூர்வமான கருத்துகள் உண்டு. இதை வேறொரு பின்னூட்டத்தில் பகிர்கிறேன்). விநோதமாக இருப்பதால் இவற்றை பற்றி ஆர்வம் அதிகமாக இருந்தது. இந்த ஏழு கோள்களின் ஊர்வலம் பூமியை மையப்படுத்தி பார்க்கும் போது தலை சுற்றி, குண்டக்க, மண்டக்க இருக்கும். உதாரணாமாக, சனி கிரகம் ஒரு நட்சத்திர கூட்டத்தை விட்டு அடுத்தது என நகர்ந்து சென்று கொண்டிருக்கும். திடீரென ரிவர்ஸ் அடித்து பின்னோக்கி செல்லும்! (இதை ஜோதிடத்தில் வக்கிர கதி என்கிறார்கள்?). முன்பொரு சமயம் சுமார் ஆறுமாத காலம் சனி எங்கே இருக்கிறது என தினமும் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். இந்த ரிவேர்ஸ் அடிப்பதை நேரில் பார்த்தது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். இவர்கள் சேகரித்த குறிப்புகள் பரந்து, விரிந்தவை.சனி கிரகம் அதே நிலைக்கு வர 30 வருடங்களும், வியாழன் அதே நிலைக்கு திரும்ப வர 12 வருடங்களும் எடுக்கின்றன என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதனால்தான், பனிரெண்டு ராசிகள் உள்ள நிலையில் சனி கிரகம் ஒரு ராசியில் இரண்டரை வருடம் நிற்கிறது (12 x 2.5 = 30). இவை மட்டும் இன்றி, கிரகணங்களை கூட அவர்களால் கணிக்க முடிந்தது. மேலும், ஒரு குச்சியையும், சயன் நகர கிணறு ஒன்றையும் வைத்துக் கொண்டு எரடோஸ்தனஸ் பூமியின் circumference கண்டறிந்தது வேறு விஷயம்! “தலைவா, பின்னிட்டீங்க தலைவா” என சொல்ல வைக்கும் நிகழ்வு இது! மேலே, ஒரு கிரகண ஆராய்ச்சியின் மூலம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவை கண்டறிந்தார்கள்!
முடிவாக, கிடைத்த குறிப்புகளை கொண்டு கோட்பாடு உண்டாக்க வேண்டும் அல்லவா. இங்கே ஒரு கிரேக்க ஆராய்ச்சியாளர் சூரியனே எல்லாம் மையம் என்றார் (பெயர் நினைவில் இல்லை). ஆனால், அவரது கருத்து எடுபடவில்லை. தனது முன்னோர்களின் ஆராய்சிகளை மேலும் வளர்த்து தோலமி (Ptolemy) உருவாகிய கோட்பாடே நிலை பெற்றது. இந்த கோட்பாடு பூமியே அனைத்துக்கும் மையம் என்றது. இப்படி சொன்னபின் கோள்களின் கோணல்மாணலான பாதையையும் விளக்க வேண்டும் அல்லவா? அவர்கள் மிக மிக சிக்கலான சில விளக்கங்கள் கொடுத்தார்கள். மேலும், இந்த கோட்பாடு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட கோள் எங்கே இருக்கும் என சரியாக கணிக்க வேண்டும் அல்லவா. அதற்காக மிக சிக்கலான சூத்திரங்கள் உருவாகினார்கள். இந்த சூத்திரங்கள் கோள்களின் இருப்பிடத்தை சரியாக கணித்தன என்பதை கூற வேண்டும். அன்றைய வளர்ந்த பிரதேசங்களில் எல்லாம் இந்த இந்த சூத்திரங்கள் பிரபலமாக இருந்தன.
இவ்வளவு சிக்கலுக்கும் காரணம் பூமியே மையம் என்றதே! அவர்கள் அப்படி நம்பியதற்கு காரணம் இரண்டு. ஒன்று சாமான்ய ஞானம். பூமி நகரும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. எனவே பூமி நகரவில்லை என்பது ஒன்று. இரண்டாவது மதம். அண்டம் அனைத்தும் மனிதனுக்காக கடவுள் படைத்தபடியால், பூமிதானே எல்லாவற்றிற்கும் மையமாக இருக்க முடியும்!
இந்த நிலையே 1500 வருட காலம் நீடித்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் எம்பெருமான் நிக்கோலஸ் கோபர்நிகஸ் பிறக்கும் வரை. ஏற்கனவே இருந்த அனைத்து குறிப்புகளின் துணை கொண்டு ஆராய்ந்ததில் கோபர்நிகஸ் ஒரு முடிவுக்கு வந்தார். சூரியனே அனைத்துக்கும் மையம்! இதை விளக்க ஒரு சிறிய புத்தகமும் எழுதினார். இந்த கோட்பாடு கோள்களின் விசித்திர பாதைகளை எளிமையாக விளக்கியது. துரதிருஷ்டவசமாக அவரது கோட்பாடு அவர் காலத்தில் நிலை பெற வில்லை. அதிக பிரபலமும் ஆகவில்லை.
அவருக்கு பின்னால், பதினாறாம் நூற்றாண்டில் கலீலியோ அவதரித்தார். இவர் எல்லாவற்றையும் ஆராய்ந்த பின், கோபர்நிகஸ் சொல்வதே சரி என்ற முடிவுக்கு வந்தார். எனினும், இதற்கு நேரடி ஆதாரம் ஏதும் கிடைக்குமா என ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆபத்பாந்தவனாக வந்தது தொலைநோக்கி! அவர் தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்தை பார்த்தபோது அதற்கு மிக, மிக அருகில் நான்கு கோளங்கள் இருப்பதை கண்டார். இவை வெறும் கண்களுக்கு தெரியாது. இந்த நான்கு கொளங்கில் பாதைகளை குறிப்பெடுக்க தொடங்கினார். சில நாட்களிலேயே புரிந்து விட்டது! அவை வியாழனை சுற்றிவருகின்றன தெள்ள தெளிவாக தெரிந்து விட்டது! பூமியே அனைத்துக்கும் மையம் என்றால், இந்நான்கும் வியாழனை சுற்றி வருவது எங்கனம்? பூமி மையக் கோட்பாட்டுக்கு (Geocentric theory) சமாதி கட்டப்பட்டது. அடுத்து அவர் கண்டது வெள்ளி கிரகத்தின் phases! (இதை விளக்க சில படங்கள் தேவைப்படும் என்பதால் லூசில் விடுகிறேன்). இதை எல்லாம் அடிப்பையாக கொண்டு சூரியனே மையம் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் அவருக்கு மத ரீதியான பிரச்சனைகள் எழுந்து, ஒரு கட்டத்தில் தனது முடிவை மாற்றிக் கொள்வதாக சொல்லி விட்டார்.
பிறகு வரும் கதையின் அடுத்த நாயகன் ஜோஹானஸ் கெப்லர். கலீலியோ காலத்தில் வாழ்ந்த டைகோ பிராஹீ என்ற ஆராய்ச்சியாளர் பழங்கால கோள இருப்பிட வரை படங்களை சீரமைத்து இன்னும் துல்லியமாக ஆக்கியிருந்தார். இவற்றை கொண்டு ஆராய்ந்த கெப்லர் கொபர்நிகசின் கோட்பாட்டை விரிவுபடுத்தினார். கோள்கள் சூரியனை சுற்றி வரும் பாதை பற்றி எளிய சூத்திரங்கள் வடிவமைத்தார். அடுத்த வந்த நியூட்டன் கோள்கள் ஏன், இப்படியான ஒரு சூத்திரத்தின் படி சுற்றுகின்றன என்ற கேள்வி குறித்து ஆராய்ந்தார். அதற்கு விடையாக அவர் முன்வைத்தது பிரபலமான நியூட்டனின் ஈர்ப்பு விதிகள் (Newton’s law of gravitation).
இதே கால கட்டத்தில் பாரலக்ஸ் முறை கண்டறியப் பட்டு மற்ற கோள்களின் தூரம் தெரிய வந்தது. பிறகு நட்சத்திரங்களின் தூரத்தை கண்டறிந்தார்கள். இங்கே அடுத்த முக்கிய விஷயம் புலப்பட்டது. இந்த கோள்கள் பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ளவை.உதாரணமாக சனி கிரகத்தில் இருந்து புறப்படும் ஓளி நம்மை வந்தடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும். மறு புறம், வானின் மிக பிரகாசமான் நட்சத்திரமான சிரியஸ் இல் இருந்து புறப்படும் ஒளி நம்மை வந்தடைய சுமார் எட்டு ஆண்டுகள் ஆகும்! இது தெரிந்த பின், சூரியனே மையம் என்ற கோட்பாடு உடைந்தது. கோள்களுக்கு மட்டுமே சூரியன் மையம். நட்சத்திரங்கள் வேறெங்கோ உள்ளன என புரிந்தது.
அடுத்த முக்கிய மனிதர் எட்வின் ஹப்பிள். அன்ட்ரோமேடா ஒரு தனி காலக்சி என நிரூபித்தார். ஹென்றியட்டா லீவிட் என்ற பெண் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த cepheid நட்சத்திர கோட்பாட்டை பயன்படுத்தி அதன் தூரத்தை அளந்து பார்த்தபோது இருபத்தைந்து லட்சம் ஓளி ஆண்டுகள் என தெரிந்தது! அதாவது, இப்போது அங்கிருந்து நம்மை வந்து அடைந்துள்ள ஒளி அத்தனை ஆண்டுகள் முன்பு புறப்பட்ட ஒளி! அதன் பிறகு இப்படி கோடிக்கணக்கான காலக்சிக்கள் உள்ளன என்றும், அண்டம் விரிவடைவது, பிக் பாங்க் என நீளும் கதை.
மேலே சொன்னவற்றை விரிவாக பேசும் பல புத்தகங்கள் உள்ளன. நம்மை போன்ற பொதுஜனங்களுக்கான (laymen) புத்தகங்களும் உள்ளன. சைமன் சிங் என்பவர் எழுதிய “Big bang” என்ற புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.
இப்படியாக இந்த பேரண்டம் பல கோடி காலக்சிக்கள், ஒவ்வொன்றிலும் பல கோடி நட்சத்திரங்கள் என பரந்து விரிந்துள்ளது. இதை எல்லாம் படித்து மலைத்து நின்றாலும், மறுபுறம் இப்படி பரந்து விரிந்த “அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்கமா நகரமர்ந்தானே” என்பதும் என் எண்ணம்! சுபம்.
வெங்கடேசன், உங்கள் மறுமொழியைப் (கட்டுரையை!!) படித்தேன். வேலைப்பளு காரணமாக பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்க. நிறைய சொல்லத் தோன்றுகிறது. சற்று ஆதாரங்களுடன் பேச வேண்டுமாகையால் அவற்றை முறைப்படுத்தியபின் பதிலை அனுப்புகிறேன்.
மும்பை: செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பும் விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா வரும் 28ம் தேதி விண்கலத்தை அனுப்பவிருக்கிறது. பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலத்திற்கு நேற்று பூஜை போட்டனர். மாலை 6 மணி அளவில் விண்கலம் அதன் ஏவுதளமான சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. விண்கலம் ஒரு டிரக்கில் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு பாதுகாப்பாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் சென்றனர். இந்த டிரக் சென்ற வழி ரகிசயமாக வைக்கப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் வைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு முன்பு பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/news/india/mars-spacecraft-taken-sriharikota-for-october-28-launch-184680.html
ஒரு சின்ன விசயம் வினவுவிடம் பதில் வேண்டும், அமெரிக்க எகாபத்தியன், பிரிட்டன் ஒரு எகாபத்தியன், தற்போது ரசியா கூட தற்போது எகாபத்தியன் தான் இவர்களை சாடும் வினவு, அவர்கள் கண்டு பிடித்த இந்த கிரகங்கள் மற்றும் கடவுள் இருக்கும் இடம் கண்டறிவு என்று மதங்ளை குறை கூறும் வினவிடம் ஒரு கேள்வி அதற்க்கு ஆகும் செலவு எவ்வளவு அதை உங்களை என் போன்ற உழைக்கும் வர்க்கம் பணம் கொடுக்க முடியுமா ? அப்படி முடியாது ஆனால் இந்த ஆய்வுக்கு எல்லாம் ஆகும் செலவினாத்தினை தான் அந்த முதலாளி வர்க்கம் தொழிலாளி யின் வயிற்றில் மற்றும் விற்க்கும் விலைவாசி யில் பொருளின் கொள்ளை லாபம் மூலம் சம்பாதிக்கின்றன எனவே நாம் அதனை அதரிக்கலாமா அல்லது கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருந்து இதை அனுமதிக்கலாம கூறவும், ஏனெனில் நீஙகள் கூறும் முடிவினை பொருத்து தான் என் போன்றோர் இனி இந்த மூட நம்பிக்கை எதிர்ப்பு கொள்கையில் இருக்கலாமா கூடாத என்பதை முடிவு செய்யும். சரியான பதிலை எதிர்பார்க்கின்றேன்.
மனிதனின் அறிவு எவ்வளவுதான் விசாலமானாலும், ஏமாற்றும் மனிதன் முன்பு ஏமாறும் கோமாளிகளை மாற்றக்கூடிய அறிவில் அறிவாளிகள் தோற்றுக்கொண்டுதானே இருக்கிறார்கள். பாபுபகத்.
நன்று.