privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பொது தீட்சிதர்களா, பொதுக் கோவிலா ?

பொது தீட்சிதர்களா, பொதுக் கோவிலா ?

-

பக்தர்களே சிந்தியுங்கள்!

சிவனடியார் ஆறுமுகசாமி
தொண்ணூறு வயதில் போராடும் சிவனடியார் ஆறுமுகசாமி.

தொண்ணூறு வயது… தள்ளாத முதுமை… ஆனால் தன்மான மனது, சுயமரியாதை உணர்வை தள்ளாத உறுதியுடன் கொட்டும் மழையில் சிவனடியார் ஆறுமுகசாமி தமிழ் மக்களின் குறிப்பாக பக்தர்களின் உரிமையை நிலைநாட்ட தில்லையம்பலத்திலே ”தேவாரம் பாடியே உயிர்துறப்பேன், கோயில் மக்களின் பொதுச்சொத்து!” எனப் போராடும் காட்சி, வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று! தமிழ்ச் சுவடிகளையே அழித்து, பெற வந்த சோழனையே எதிர்த்து, தொழ வந்த நந்தனையே எரித்து வெறியாடும் தீட்சிதர்களின் குகைக்குள் நுழைந்து கோயிலின் பொது உரிமைக்காகப் போராடுவது என்பது சாதாரண விசயமல்ல. தமிழுக்கும், சைவத்திற்காகவும் ‘மடம்’ வளர்ப்பதாகச் சொல்லும் எந்தத் தொந்திகளும் முன் வராத நிலையில், தமிழுக்காகவே உயிர் வளர்ப்பதாகச் சொல்லும் எந்தத் ‘தலைகளும்’ சுரணையற்ற நிலையில் ”சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுச்சொத்து, தீட்சிதர்களின் கொள்ளைக்கு அரசே துணை போகாதே!” என ஆறுமுகச்சாமி எழுப்பும் உரிமைக் குரல் பக்தர்களுக்கு அப்பாற்பட்ட விசயமா என்ன?

கோயிலை அரசு நிர்வாகம் செய்ய போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிக்காத பக்தர்கள் உண்டா? அரசு நிர்வாகம் ஏற்ற குறுகிய காலத்திலேயே உண்டியல் வசூலின் லட்சங்களும், முறையான தரிசனம், விழாக்களும் கொள்ளைக் கூடாரத்தின் இருட்டை விலக்கி வெளிப் பிரகார வெளிச்சங்களும்… இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் பெற்று வந்த பலனை, தனி ஒரு தீட்சிதர் கும்பலுக்கு தர வேண்டிய அவசியமென்ன?

சிவனடியாரும், அவரோடு சேர்ந்து போராடுபவர்களும் முன் வைக்கும் கோரிக்கை என்ன? கோயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கேட்டார்களா? இல்லையே! இல்லை கோயில் தொடர்பான பூஜை, நைவேத்யங்கள், நடராச தரிசனங்களை நாங்கள் மட்டும்தான் செய்வோம் என்று வம்புக்கு வந்தார்களா? இல்லையே! அவர்கள் முன் வைப்பது கோடிகளில் புரளும் கோயிலின் நிர்வாகத்தை மட்டும் மக்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு அரசு அமைப்பிடம் மேற்பார்வையிடச் செய்வது, கோயில் நகைகள் உட்பட வரவு செலவு கணக்கை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த அதிகாரிகளை நியமிப்பது என்ற ஜனநாயகமான, நியாயமான கோரிக்கைகளைத்தானே முன் வைக்கிறார்கள், இது பக்தர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாம்தானே! இதற்கு தீட்சிதர்கள் ஏன் முரண்டு பிடிக்கவேண்டும்! நெடுநாள் கோயில் பணி செய்வதாலேயே கோயில் எனக்குத்தான் சொந்தம் என்றால்? இந்த நியாயத்தை எல்லா இடத்துக்கும் பொருத்த ‘அவாள்’ தயாரா? சட்டப்படியும், ஆதாரப்படியும் உரிமையில்லாத ஒரு கோயிலை தங்களது ‘தனிச்சொத்து’ என்று தீட்சிதர்கள் வாது செய்வதை நியாய உணர்வுள்ள எந்த பக்தனும் ஏற்க முடியுமா?

நெடுநாள் ஒரு காலை உயர்த்திக் காட்டி கால் கொலுசு களவாடப்பட்டதை அம்பலவாணன் குறிப்பாக அம்பலப்படுத்திக் காட்டியும், மது, மாமிசம், மர்டர் என தீட்சித லீலைகள் ‘காவல்’ புராணத்தில் பதிவான நிலையிலும்… கேட்பதற்கே நாதியற்ற நிலையில் கோயிலின் ‘இறைப் புனிதத்தையும்’ நிலைநாட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகச்சாமியும் வாராது வந்தது பக்தர்களுக்கு அந்த நடராசனே தந்த வரமல்லவா? அரசிடம் போனால் கோயில் அவ்வளவுதான் என்று புரளி கிளம்பிய தீட்சிதர்களின் குரலில் குழப்பமடைந்த பக்தர்களே… இந்த இடைப்பட்ட காலத்தில் முன்னை விட கோயிலின் தரிசனங்களும், விழா விமர்சைகளும், கோயில் பராமரிப்பும் நீங்கள் கண்ணாரக் கண்ட போராட்ட தரிசனங்கள் அல்லவா!

தீட்சிதர்கள்
போராடியவர்கள் யாரும் தீட்சிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவுமில்லை, அவர்களின் மந்திர ஒலியை மறைக்கவுமில்லை.

போராடியவர்கள் யாரும் தீட்சிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவுமில்லை, அவர்களின் மந்திர ஒலியை மறைக்கவுமில்லை, இல்லை இவ்வளவு நாள் பக்தர்களின் நிதியை கொள்ளையடித்து, கோயிலுக்கு ஒரு வெள்ளை கூட அடிக்காத ‘அவாளை’ விரட்டிடவுமில்லை, இப்படியிருக்க, கோயில் அரசு நிர்வாகத்திற்குப் போனால் பூலோகமே இருண்டு விடும் என்பது போல் தீட்சிதர்கள் அலறுவதும், அதை நாம் நம்பும்படி அவர்கள் பிரச்சாரம் செய்வதும் எவ்வளவு பொய் என்பதை உணரமுடியாத அளவுக்கு பக்தர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! இறைவன் தாள் பணிவதுதான் பக்தி உணர்வு, திருட்டு தீட்சிதனின் காலில் விழ வேண்டிய அவசியம் பக்தர்களுக்கில்லை!

யோசித்துப் பாருங்கள், இறைப் பணியாளர்களாய் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் தீட்சிதர்களின் கவனம் இறைவனின் அருள் வேண்டி நிற்கிறதா? ஏக்கரா கணக்கில் உள்ள கோயிலின் பொருள் வேண்டி நிற்கிறதா? பூஜை பண்ண எனக்கு இன்னும் பூ கொடு, நெய் கொடு, ஆலயத்தை சுத்தப்படுத்து, குளத்தை தூர்வாரு, கொடி மரத்துக்கு தகடு சுற்று, வரும் பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடு, கட்டணம் இல்லாத தரிசனம் கொடு என்றெல்லாம் தீட்சிதர்கள் வாயிலிருந்து ஒரு நாளும் ஒரு வார்த்தை உண்டா? இப்படி கோயில் நலன் சார்ந்து ‘அவாள்’ குரல் கொடுத்தால், அடடா! பக்தி பரவசம் என்று தீட்சிதர்களை நாமும் கொண்டாடலாம், இதையெல்லாம் பற்றி குடுமிக்கும் கவலைப்படாமல், கோயிலை எங்களுக்கு சொத்தாக்கு, நகைகளை நாங்களே வைத்திருப்போம், தேவாரம் பாடக்கூடாது, உண்டியல் கூடாது… என்று பொருள் நோக்கிலேயே குதியாட்டம் போடுபவர்கள் குருக்களா இல்லை கொள்ளைக் கும்பலா? பக்தர்களே அர்ச்சனை தட்டை அவாளிடம் கொடுத்ததோடு நம் வேலை முடிந்துவிட்டது என்று கண்ணை மூடிக்கொள்ளாமல், சன்னதியில் நடக்கும் விவகாரங்களை கொஞ்சம் கண்னைத் திறந்து பாருங்கள்! போராடுபவர்களின் குரல் பக்தர்களின் நலனுக்கானது என்ற உண்மை தரிசனமாகும்.

விருதகிரீஸ்வரர் கோயில்
விருத்தாசலத்தில் விருதகிரீஸ்வரர் கோவிலில் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம் (2012-ம் ஆண்டு)

பக்தர்கள் கேள்வி கேட்க கூடாதென்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை! நக்கீரரை கேள்வி கேட்க வைத்து, அஞ்சாமல் உண்மை பேசிய அவருக்கு அருள் கொடுத்தவர்தான் சிவன், பக்தனுக்கு பகுத்தறிவு தப்பு என்றும் எந்தக் கடவுளும் சொன்னதில்லை. பஸ்சுக்கும், செலவுக்கும் காசை வைத்துக்கொண்டு உள்ள நிலைமைக்கு ஏற்ற மாதிரி உண்டியலில் காசு போடும் பகுத்தறிபவர்கள்தான் பக்தர்களும். கும்பிட நமக்கொரு கோயில் வேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பாய் இருக்க முடியுமே ஒழிய, அந்தக் கோயிலை தீட்சிதனுக்கு சொந்தமாக்க வேண்டும் என்பது எந்த பக்தனின் வேண்டுதலுமல்ல! பக்தர்களே உங்கள் மவுனத்தை தீட்சிதர்கள் தங்களுக்குச் சாதகமாக்க அனுமதிக்காமல், பொதுக்கோயில் உரிமைக்காக உங்கள் பக்திக்கடனை வெளிப்படுத்துங்கள்! தீட்சிதர்களின் அநீதிகளுக்கு எதிராக பக்தர்களிடம் நியாயம் கேட்டு போராடுபவர் இன்றைய சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமல்ல, அன்றைக்கு வடலூர் ராமலிங்க அடிகளார் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முறைகேடுகளையும், அநீதிகளையும் தட்டிக்கேட்டு இவர்கள் தகாத கும்பல் என்று எட்டிச் சென்றவர்தான். இந்த வரலாற்றின் வரிசையில் பக்தர்களே தீட்சிதர்களின் அக்கிரமங்களுக்கு எதிராக உங்கள் காணிக்கையாக போராட்ட உணர்வை தாருங்கள்! குருக்களுக்கே கோயில் சொந்தம் என்று தீட்சிதர்கள் சொல்லும் போது இதெல்லாம் ரொம்ப அநியாயம் என்று ஆர்த்தெழவேண்டாமா?

பல்லாயிரம் உழைக்கும் மக்கள் கட்டியெழுப்பிய கோயிலை, தமிழக உழைக்கும் மக்களின் பணத்தாலும், அரிசி, பருப்பாலும் நைவேத்திய மணம் கமழும் தமிழகத்தின் கோயிலில், தமிழுக்கும், தமிழனுக்கும் தீண்டாமை என்ற கொடுங் குற்றம் மட்டுமன்றி, தமிழக மக்களின் பாரம்பரிய சொத்தான கோயிலை, பிட்சைக்கு வந்த தீட்சிதர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்தாக்குவது என்ன நியாயம்? ஓமம் வளர்க்க வீட்டுக்குள் நுழைந்தவன் ஒட்டு மொத்த சொத்தையும் எழுதிக் கேட்டால் எந்த பக்தனும் எழுதித் தருவானா? நாம் பக்தர்களாக இருக்கலாம், அது தனிப்பட்ட விவகாரம், அதற்காக தீட்சினுக்கு அடிமையாயிருக்க வேண்டிய அவசியம் இல்லை!

போராடிப்பெற்ற சிறு உரிமைகளால் பலன் பெற்ற பக்தர்களே, சிந்தியுங்கள்! சிதம்பர ரகசியம் எளிமையானது! நமக்குத் தேவை பொது தீட்சிதர்களா? பொதுக் கோயிலா? இரண்டில் ஒன்றுதான் சிதம்பர ரகசியம்! பக்தர்களே பதில் சொல்லுங்கள்!

– துரை.சண்முகம்

  1. போராடிப்பெற்ற சிறு உரிமைகளால் பலன் பெற்ற பக்தர்களே, சிந்தியுங்கள்! சிதம்பர ரகசியம் எளிமையானது! நமக்குத் தேவை பொது தீட்சிதர்களா? பொதுக் கோயிலா? இரண்டில் ஒன்றுதான் சிதம்பர ரகசியம்! பக்தர்களே பதில் சொல்லுங்கள்!

  2. பொது தீக்ஷிதர்கள் அர்ச்சகர் மட்டுமே! கோவில் எந்த காலத்திலும் அவர்களின் சொத்து அல்ல! பொது மக்களின் சொத்துதான்! தமிழ்னாட்டில் எந்த கோவிலுக்கும் இது பொருந்தும்!

    • அவசரப்படாதீர்கள் ராஜா! மொட்டையடித்துக்கொள்ளவும், காது குத்திகொள்ளவும், ஊர்கூடி? பொங்கல் வைத்து திருவிழா கூத்தாடவும் நமக்கு கோவில் என்று ஒரு பொதுமடம் தேவை! அதில் மந்திர தந்திர வித்தைகள் காட்டி நமது பாமர மக்களுக்கு சொர்க்கத்தை ஊறுதி செய்ய பூசாரிகளும் தேவை! ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியானதும் அவர்கள் ஆடும் ஆட்டத்தைதான் சகிக்க முடியவில்லை! இவர்களின் பிழைப்புக்காக ஏற்படுத்திய கடவுள் மனித இனத்துக்கு தேவையா என்று ஆராயவேண்டியுள்ளது! ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்; சாதி பலவானால் பார்ப்பனுக்கே கொண்டாட்டம்! வேறு யாருக்கும் லாபமில்லை!

      • இதை நான் சொன்னால் தேவாரனாயனார் காதில் விழுவதில்லை

  3. தமிழில் பாடும்போது நடராசன் காதைத் திருப்பி வேறு பக்கம்
    வைக்கவில்லை”தீட்சதன் கள் ஏன் தமிழில் பாடுவதை
    எதிர்க்கவேண்டும்?

  4. Every class people have their own aim for fighting for the temple rights.

    [1] Bramins want to dominate the property’s of Temple through their meaning less vadas

    [2] Vellan people who are land lords in tamil nadu want to dominate the temple property so they are promoting [drug-abbin ] like Tamil davaram inside the temple and make common people to forget about their real problems

    [3] Working class people [communist] are fighting for temple rights to convert them in to schools for kids

    Hello public you decide which is good for socity!!!!

    • தேவாரம் தமிழர்களின் வேதம். அதனால் தமிழர்களின் கோயில்களில் தமிழ்வேதங்களாகிய தேவாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தேவாரம் வெள்ளாளருக்கு மட்டும் சொந்தமானதல்ல. தமிழ்ச்சைவத்தின் அடிப்படையே அறுபத்து மூன்று நாயன்மார்கள் தான், அதில் எல்லா சாதியினரும் அடங்குவர். புலையரும், மீனவரும், வேடரும், அரசரும், அந்தணரும், வேளாளரும் யாவரும் உண்டு. அவர்கள் யாவரும் சமமானவர்கள் அவர்களிடம் ஏற்றத் தாழ்வு கிடையாது என்பதைக் காட்டத் தான் சிவாலயங்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளையும் ஒரே பீடத்தில் வைக்கும் வழக்கம் உண்டு. அதனால் சமக்கிருத வேதங்களை விட தமிழ்நாட்டில் தேவாரங்கள் பாடுவது ஊக்குவிக்கப்பட வேண்டும். தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழில் தேவாரம் பாடபடுவது தமிழர்களின் மானப் பிரச்சனை. இதில் யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது. கம்யூனிசம் பேசிக்கொண்டே தமிழரக்ளைச் சாதியடிப்படையில் பிளவு படுத்தும் குமரனிஸ்டாக்கள் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

      • [1]Who is the real owner of this Temples?

        Bramins? No
        Vellala land lords? No No
        Working class people? Yes yes yes

        [2]For my working class people ,we do not want Ditch-vethas or Drug[abin]-Devram but we need schools for kids.

        [3]When u and bramin have the rights for fighting for Devram or vetha, Why should not we–working class fight for converting temples into schools?

        [4]If my policy of converting temples into schools will divide the Tamil then I will be happy.
        The reason is then only Tamil people will have clear classification about them self as Working class ,capitalist and landlard

        [5] If u r not accepting the use of temples into school then how can u allow working class people to improve themselves?

        [6] Anyway people like u unacept

        • பெரிய,பெரிய கோவில்களை
          பள்ளிகளாக மாற்றலாம்-தவறில்லை:
          சேர,சோழ,பாண்டியனின் வம்சம் என்மிது சூடு வைக்கும்:பரவாயில்லை!

          • //சேர,சோழ,பாண்டியனின் வம்சம் என்மிது சூடு வைக்கும்:பரவாயில்லை!// சரி அடிச்சுட்டு பொங்கடான்னு விட்டுட்டேன்/ஏன் மொதலாளி நீங்க திருப்பி அடிக்கல/இல்ல/ஏன்/அடிக்கிறப்ப ஒருத்தன் சொன்னான் இவந் எவ்வளவு அடிச்சாலும் தாங்ரான் ரொம்ப நல்லவன் ஒரு வார்த்த சொல்லிபுட்டாம்மா நானும் எவ்வளவு நேரந்தான் வழிக்காத மாரியே நடிக்கிறது.

            • காவடி தூக்குபவர்கள் தானாகவே பழக்கத்தை விடவேண்டும்…
              மகனும் ஆரம்பித்துவிடுவான்..பேரனும் “பெரிய காவடி” தூக்குவான்

              • அண்ணே, உங்க நலன் கருதி 3வது முறையா சொல்றேன் நல்ல டாக்டர போயி உடனே பாருங்க!

                • நல்லது தேவரா நாயனார்: தொடர்ந்தும் ஒரு மனிதன்
                  முட்டாள்தனமான,மத சம்பிரதாயங்களை கடைப் பிடிப்பது
                  சிலருக்கு “தேவார்(மிதம்”):
                  டாக்டரைப் பார்க்கவேண்டியது யார்?
                  நீங்கள் இருக்கும் ஊரில் கூட மனநல வைத்தியர்கள் இருக்கக்கூடும்…
                  முயற்சி செய்யுங்கள்

                  • நான் பொதுவா டாக்டர பாக்க சொன்னதுக்கு மனநல டாக்டர்தான்னு கண்டுபிடிச்சிங்க பாருங்க,அங்கதான் உங்க அனுபவம் கைகொடுக்குது.

                    • உங்களுக்கு மன நல டாகடர்தான் நல்ல சிகிச்சை
                      அளிக்க முடியும்:போகும்போது,தோல் டாக்டர்
                      கிலினிக்கில் ஜெயேந்திரன் இருப்பார்:
                      வாழ்த்து சொல்லி,விபூதி பிரசாதம் வாங்குங்க:
                      வீட்டுல எல்லாருக்கும் பூசி விடுங்க: அடுத்த தலைமுறை
                      அமோகமாக “அறிவுக் கொழுந்தா” இருக்கும்!

      • Hello VIYSA,

        [1] If our Tamil society is supporting the cast system them I do not want this identity of being a Tamilan any more.Instead of Thinking myself as a Tamilan I will think and act myself as a Communist.

        [2] If my language and my race is against even its own people by suppressing them based on cast system then what is the hell reason for belonging to that race.?

        [3]If this temple struggle is not giving any gain for my working class people then what is the hell reason for me to support this temple struggle?

        [In real scenario the communist people are fighting for the convention of temple administration form private parpana people to government. So it is a progressive action in favor of Tamil people]

        [4] By promoting the singing of Devaram inside the temple you are trying to replace the meaning less vetha’s to drug-abbin like devarams. By singing these vetha’s or devarams what is the use of Tamil people?

        [5] If i am asking these logical questions then with out answering my questions you start blaming me as a Parpanan and cast dividing person!

        //கம்யூனிசம் பேசிக்கொண்டே தமிழரக்ளைச் சாதியடிப்படையில் பிளவு படுத்தும் குமரனிஸ்டாக்கள் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.//

  5. Dear vinavu,

    I need not explain the Temple issue is not a separate issue!!! You know clearly that it is related with the Land lord system and Bramin and vellala people are dominating in Tamil Nadu inside the Temple.

    So Bramin promote their custom of vetha in side the temple
    So Vellala people promote their culture of Davarm in side the temple
    AS I am member of a working class I like to promote my idea of converting temples into schools for kids.[Bast on communist cultural revolution program]

    Whats wrong in my point of view?

    Yours sincerely,
    K.Senthil kumaran

  6. Hello sir துரை.சண்முகம்,

    Your essays are very informative and enthusiastic than your poems.

    pls write more essays related to temple issue

    yours friendly,
    k.senhil kumaran

  7. பெரியாரின் வேண்டுகோள் (பக்தர்களுக்கு);

    ” கடவுள் என்பது என்ன? அது எதற்காக வேண்டும் என்பதாக ஆராய்ந்து பாருங்கள். குருட்டு நம்பிக்கையால் கடவுளுக்கென்று பணத்தை செலவு செய்து பாழ்படுத்துகின்றோம்!

    கிறிஸ்துவர்களும், மகமதியர்களும் சாமி கும்பிடுவதில்லையா? அவர்கள் கடவுளுக்காக என்ன செலவு செய்கிறார்கள்?

    நாம் சுவாமிக்காக உற்சவமும், பொங்களும், பூசையும் செய்ய வேண்டும்.மேலும் இவைகளை சாமிக்கு எடுத்துச் செல்லவும் ஊட்டவும் தரகர்களை வேறு ஏற்படுத்துகிறோம். இதனால் நமது பணம் வீணாகிறது. அறிவு மோசமாகிறது.

    கடவுள் நமக்கு அவசியந்தான். ஆனால் எந்த விஷயத்தில்? நாம் தப்பிதம் செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார் என்ற முறையில் கடவுளை வைத்துக் கொள்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.

    ஆனால் கும்பிடுவதற்கும், பூசை செய்வதற்கும், தேரில் வைத்து உற்சவம் செய்வதற்கும், தேவடியாள்களை விட்டு நடனம் செய்வதற்கும், பொங்கல், புளியோதரை சாப்பிடுவதற்கும், கடவுளை உபயோகப்படுத்துவதென்றால் அப்படிப்பட்ட கடவுள் இருக்கக் கூடாது.

    ஏனென்றால் ஒரு பாபம் செய்த பிறகு சாமிக்கு அர்ச்சனையும், பூசையும் செய்தால் பாபம் போய்விடும் என்ற எண்ணத்தை மக்களிடையே கடவுள் ஏற்படுத்துவாரேயானால் பாபம் அதிகரித்து சாமிக்கு லஞ்சம் கொடுத்து பாபத்தை போக்கி தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற அபிப்பிராயத்தில் மக்கள் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

    அதனால் மக்களின் ஒழுக்கம் கெடுவதற்கு கடவுள் அநுகூலமாயிருக்கின்றது.மக்கள் குற்றம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கடவுளின் கடமை. அப்படி குற்றம் செய்துவிட்ட பிறகு லஞ்சம் வாங்கிக் கொண்டு மன்னிக்கலாம் என்ற கடவுளை ஒழிக்க வேண்டியது தான். கடவுளை வணங்குவதற்கு தேங்காய், பழம், சூடம், பொங்கல் இவைகளெல்லாம் எதற்காக வேண்டும்?நீங்கள் கடவுளிடத்தில் அன்பு பூண்டிருப்பதாக அவருக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்டவருக்கு இதெல்லாம் எதற்காக?

    முன்காலத்தில் கிராமங்களில் பயிர் நன்றாக விளைந்தது. அதை ஊர்கட்கு அனுப்பாமல் அந்த கிராமத்து தொழிலாளர்கட்கு கொடுத்து சும்மா இருக்கவிடாமல் கோயில்களைக் கட்டினார்கள். ஆனால் இப்போது அக்கடவுளுக்கு எதற்காக செலவு செய்ய வேண்டும்?

    சாமிக்காக செலவிடப்படும் பொருளை படிப்பு விஷயத்திற்காகவும் ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்காகவும் உபயோகிங்கள். கோயில் கோயில் ரூ.50.000 ஆயிரம் போட்டு கட்டாவிட்டால் சாமி இந்த உலகத்தில் சாமீந்த உலகத்தில் இருக்காதா?

    நமது தயவினால் சாமி இருக்க வேண்டியதில்லை.

    உலகில் உள்ள மக்களின் மூன்றில் ஒரு பங்கு பவுத்தர்களும் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர். அவர்கள் தர்ம சொத்துக்களை பள்ளிக் கூடங்கட்கும், பொது விஷயங்களுக்கும் செலவிடுகின்றனர்.

    சுவாமிக்கு கற்பூரம் எதற்காக கொளுத்த வேண்டும்? கோயிலை கரியாக்குதற்காகவா?

    முன் காலத்தில் தூபம் தான் இருந்தது. கற்பூரம் இருந்ததாக தெரியவில்லை. கற்பூரம் கொளுத்தும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டதென யூகிக்க இடமிருக்கின்றது.

    பார்ப்பனர்கள் ஜப்பான் தேசத்துக்காரருடன் ஒப்பந்தம் பேசி நாங்கள் சூடம் கொளுத்த ஏற்பாடு செய்கிறோம். நீ செய்து அனுப்பு என்பதாக தரகு பேசி செய்திருப்பார்கள் என சந்தேகிக்கிறேன்.

    நாம் சாமிக்காக எவ்வளவோ கோடிக்கணக்காக செலவிட்டும் அந்தச் சாமி நமக்கு ஊசிகூட செய்ய சொல்லிக் கொடுக்கவில்லை. காகிதம் பென்சில் எல்லாவற்றிற்கும் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.(14-03-1929 அன்று லால்குடி அருகிலுள்ள நகர் என்னும் கிராமத்தில் தந்தை பெரியார் செய்த சொற்பொழிவின் ஒரு பகுதி. திராவிடனில் வெளியானது. “பெரியார் களஞ்சியம்” என்ற நூலில் இருந்து…. பக்கம்:138)

    • Hello sir,

      [1]if i am telling this matter [temple to school convertion] then vellala land load people are calling me as parpanan!!!!

      [2] Which true parpanan will accept my idea of temple to school covert ion?

      [3] from your comment i came to know that Periyar also accept my policy[temple to school convention] even before my birth.So according to these vellala land lords

      ” periyar is also a parpanar “!!!!

      [4] What i am asking from them. We need school for kids inside the temple.

      ” If kids are like God then why they are not allowing them to learn inside the temple? “

    • // முன் காலத்தில் தூபம் தான் இருந்தது. கற்பூரம் இருந்ததாக தெரியவில்லை. கற்பூரம் கொளுத்தும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டதென யூகிக்க இடமிருக்கின்றது.

      பார்ப்பனர்கள் ஜப்பான் தேசத்துக்காரருடன் ஒப்பந்தம் பேசி நாங்கள் சூடம் கொளுத்த ஏற்பாடு செய்கிறோம். நீ செய்து அனுப்பு என்பதாக தரகு பேசி செய்திருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். //

      பெரியாரின் சந்தேகம் அடிப்படையற்றது..

      சங்க கால பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள மலைபடு கடாம், நன்னன் அரண்மனை முற்றத்தில் குவிந்து கிடந்த பல்வேறு பொருட்களில் கற்பூரத்தையும் குறிப்பிடுகிறது..

      • //சுவாமிக்கு கற்பூரம் எதற்காக கொளுத்த வேண்டும்? கோயிலை கரியாக்குதற்காகவா?

        முன் காலத்தில் தூபம் தான் இருந்தது. கற்பூரம் இருந்ததாக தெரியவில்லை. கற்பூரம் கொளுத்தும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்டதென யூகிக்க இடமிருக்கின்றது.//

        அம்பி அவசரப்படுகிரார்! பெரியார் சொன்னது கடவுளுக்கு கர்ப்பூர ஆரத்தி காட்டுவதையே! ஆண்டுக்கு ஆண்டு சூட இறக்குமதிக்கு ஆன செலவை தவிர்க்கவே அவ்வாறு கூறினார்!
        அப்போதைய அம்பிகள் அதை உணர்ந்துதான் எதிர்க்கவில்லை!

        ஆனால் இன்றைய அம்பி, மிகவும் பிரயாசைப்பட்டு, வாசனைப்பொருளாக கற்பூரம்,நன்னன் காலத்தில் இருந்ததை கண்டுபிடித்துவிட்டார்! பெரியார் சொன்னதில் உள்ள நியாயத்தை விமரிசிக்க முடியவில்லை! இப்போதும் பல கோவில்களைல் கற்பூரம் கொலுத்துவதை தடை செய்துவிட்டனர், முக்கியமாக சிறு கோவில்களில்! அதனால் ஏற்படும் புகை அர்ச்சகருக்கு ஒத்துகொள்ள வில்லை! மேற்கூரையில் படிந்து தீவிபத்துகள் ஏற்படுகின்றன!

  8. செந்தில்குமரன் என்பவர் ஒரு தமிழெதிரிப் பார்ப்பான் என்பது என்னுடைய கருத்து. அவர் கம்யூனிஸ்டாக, சிதம்பரத்து தீட்சிதர்களுக்கு எதிராக போராடும் மனிதவுரிமைக் கழகத்தை ஆதரிப்பது போல் நடித்துக் கொண்டே அவர்களைக் கொச்சைப்படுத்தி உள்வேலை பார்க்கிறார். ‘அவா’ இந்த வேலைகளில் கைவந்தவர்கள் என்பது தமிழ்நாடுத் தமிழர்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தும் கம்யூனிச தோழர்களை நக்கலடிப்பது மட்டுமல்ல, அவர்களின் நோக்கம் தமிழர்களின் சைவத்தை இழிவு படுத்துவது தான் என்ற கருத்தை, இந்த கருத்துப்பரிமாறலை வாசிக்கும் கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களுக்கு ஏற்படுத்த முனைகிறார்.

    உதாரணமாக “Yes temples are having huge properties and which are the belonging to working class so we want to CONVERT ALL THE TEMPLES INTO SCHOOLS TO EDUCATE OUR PEOPLE IN THEIR MOTHER LANGUAGE.Why are u having pain for this conversion.” 🙂

    • கம்யூனிஸ்டை ஒருத்தன் திட்டினால் அவன் பார்ப்பான். அதாவது யாருக்காவது யாரையாவது பிடிக்கவில்லை என்றால், அவனைத் திட்ட வேண்டும் என்று நினைத்தால் அவனைப் பார்ப்பான் என்று சொல்லலாம்.

      அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் சூரியன் மாலையில் மறைவதற்குக் காரணம் பார்ப்பனர்களே என்றுநேற்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

      • சிவா, பார்பனரை ஏன் தமிழின எதிரியாக கூற கூடாது? 1.தேவார சுவடிகளை அறைக்குள் பூட்டி வைத்து அதை பாதிக்கு மேல் கரையான் அரிக்க வைத்தது பார்ப்பன்ர் 2.திருமந்திரத்தை கருவறைக்குள் ஒளித்து வைத்து நாடகமாடியது பார்ப்பனர். 3.சிற்றம்பலத்தில் தமிழில் பாடிய மாணிக்கவாசகரை கீழே தள்ளியது பார்ப்பனர். ஒரு மொழியில் உள்ள இலக்கியத்தை அழிப்பது ஒரு திட்டமிட்ட அழித்தொழிப்பு செயல்தான். இலங்கையில் நடந்தது அப்பட்டமான இன அழித்தொழிப்பு என்று உலகமே ஏற்கையில் பார்ப்பன சோக்களும்,சுப்ரமனியம் சுவாமிகளும் மட்டும் அதை கொண்டாடி வரவேற்பது ஏன்?

        • // 1.தேவார சுவடிகளை அறைக்குள் பூட்டி வைத்து அதை பாதிக்கு மேல் கரையான் அரிக்க வைத்தது பார்ப்பன்ர் //

          தேவார சுவடிகள் எழுதப்பட்டு சில நூற்றாண்டுகள் கடந்த பின்னரே நம்பியாண்டார் நம்பியும் (பார்ப்பனர்), திருமுறை கண்ட சோழரான ராஜராஜரும் தில்லைக் கோயில் மூடி சீல் வைக்கப்பட்ட அறையில் சுவடிகள் இருப்பதை அறிகிறார்கள்.. அங்கே புத்தம் புதிய காப்பியை எதிர்பார்க்க முடியாது.. தற்போது எழும் கேள்வி என்ன..?! அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சியில் லாக்கர் வசதியுள்ள ஒரு வங்கி கூடவா இல்லை என்று ர.கோ.சீத்தாபதி அவர்களது பாணியில் கேட்கமாட்டேன்.. ஆனால் நான் கேட்பது, பார்ப்பான் மட்டும்தான் சுவடிகளை கரையானால் அரிக்கவிட்டானா.. வேறு எங்கும் சுவடிகள், பிரதிகள் பாதுகாக்கப் படவில்லையா.. சுவடிகளை இரண்டு மூன்று நூற்றாண்டுகள் சீல் வைத்துப் பூட்டிய அறையில் பத்திரமாக பாதுகாத்ததற்காகவா பார்ப்பனர்களைத் திட்டுகிறீர்கள்..?! அதுவரை யாரும் கவலைப்படாத சுவடிகளை தில்லைவாழ் ’தமிழின எதிரிகள்’ யாக குண்டத்தில் போட்டு சுவாகா சொல்லியிருந்தால், அந்தக் கால நம்பிக்கும், இந்தக் கால உ.வே.சாமிநாதையருக்கும் கூட எந்த மூவர் தேவார சுவடியும் கிட்டியிருக்காதே..

          // 2.திருமந்திரத்தை கருவறைக்குள் ஒளித்து வைத்து நாடகமாடியது பார்ப்பனர். //

          ’தமிழின எதிரிகள்’ பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை கருவறைக்குள் ஒளித்து வைக்காமல் யாக குண்டத்தில் போட்டு ஒழிக்காததன் காரணம் என்ன..?!

          // 3.சிற்றம்பலத்தில் தமிழில் பாடிய மாணிக்கவாசகரை கீழே தள்ளியது பார்ப்பனர். //

          இதை எங்கே படித்தீர்கள்..?! மாணிக்கவாசகர் என்ற பார்ப்பனர் எட்டாம் திருமுறை பாடியிருந்தாலும் அவரை ஒரு பார்ப்பான் பிடித்து தள்ளியதால் எல்லா பார்ப்பனர்களும் தமிழின எதிரிகள்..?! தமிழ் மீதுள்ள பற்றைவிட, பார்ப்பனர் மீதுள்ள வெறுப்புதான் இங்கும், எங்கும் காணப்படுகிறது..

          • அம்பி, அந்தகால அரசர்கள் அரண்மனையைவிட பாதுகாப்பான இடமாக கருதியது கோவில்களைதான்,ஏனென்றால் முஸ்லிம் மன்னர்களைதவிர வேறு பகைநாட்டு அரசர்கள் யாரும் கொவில்களை கொளுத்தியதாகவோ,கொள்ளையிட்டதாகவோ,சரித்திரம் இல்லை.தமிழ் சுவடிகள் ஆலயங்கலுக்கு வந்தது அந்த அடிப்படையில்தான்.ஆனால் அவர்கள் அறியவில்லை திருடன் கையில் சாவியை தருகிறோம் என்று.ராஜ ராஜ சோழனுடன் அவர்கள் செய்த தர்க்கமே சான்று,அவர்கள் மறைத்து வைத்து இருந்தனர்,பாதுகாத்து வைக்கவில்லை என்பதற்கு. ஓலைசுவடிகள் பராமரித்து சிதிலமடைந்ததை படி[காப்பி செய்வது] எடுத்து வைக்காவிட்டால் அவை அழிந்துவிடும் என்று தெரிந்தும் 2,3 நூற்றாண்டுகள் பாதுகாத்து வைத்தனர் என்ற தங்கள் வாதம் எனக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது.நம்பியாண்டார் நம்பிக்கு பொல்லாபிள்ளையார்தான் சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை நீங்கள்தான் விளக்க வேண்டும்.சண்டையிட்டு பெற்றதே திருமந்திரமும்,தேவாரமும்.உலகிற்கு தெரியாமல் அழிந்தது ராமபாணத்திற்கே[கரையான்] வெளிச்சம்.

            • // அந்தகால அரசர்கள் அரண்மனையைவிட பாதுகாப்பான இடமாக கருதியது கோவில்களைதான்,ஏனென்றால் முஸ்லிம் மன்னர்களைதவிர வேறு பகைநாட்டு அரசர்கள் யாரும் கொவில்களை கொளுத்தியதாகவோ,கொள்ளையிட்டதாகவோ,சரித்திரம் இல்லை.தமிழ் சுவடிகள் ஆலயங்கலுக்கு வந்தது அந்த அடிப்படையில்தான்.ஆனால் அவர்கள் அறியவில்லை திருடன் கையில் சாவியை தருகிறோம் என்று.ராஜ ராஜ சோழனுடன் அவர்கள் செய்த தர்க்கமே சான்று,அவர்கள் மறைத்து வைத்து இருந்தனர்,பாதுகாத்து வைக்கவில்லை என்பதற்கு. //

              ”மாமன்னா.. தேவாரமா, சுவடிகளா, எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே” என்று சொல்லியிருந்தால் மறைத்து வைத்தார்கள், ஒளித்து வைத்தார்கள் என்று கருத இடமுண்டு.. மூவர் முதலிகள் வந்து கேட்டால்தான் லாக்கரைத் திறப்போம் என்று வெளிப்படையாகத்தானே கூறியிருக்கிறார்கள்..! 7,8-ம் நூற்றாண்டுகளில் பட்டை போட்ட மன்னர்கள் மொட்டை போட்டுக் கொள்வதும், மொட்டையாக இருந்த மன்னர்கள் பட்டை போடுவதுமாக சமணத்துக்கும், சைவத்துக்கும் இடையே உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில், சுவடிகள் பத்திரமான கைகளில் சேரவேண்டுமே என்று அஞ்சியிருக்கலாம்.. ஆனாலும் ஆதித்தர், பராந்தகர், கண்டராதித்தர் போன்ற சிவபக்தர்கள் பரம்பரையில் வந்தவரும், சைவத்தின் பாதுகாப்பு உறுதிப்பட்டுவிட்ட 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவருமான சிவனருட் செல்வரான அருள்மொழிவர்மரிடம் எந்த வித தயக்கமுமில்லாமல் சுவடிகளை முதலிலேயே கொடுத்திருக்கலாம்..!

              // ஓலைசுவடிகள் பராமரித்து சிதிலமடைந்ததை படி[காப்பி செய்வது] எடுத்து வைக்காவிட்டால் அவை அழிந்துவிடும் என்று தெரிந்தும் 2,3 நூற்றாண்டுகள் பாதுகாத்து வைத்தனர் என்ற தங்கள் வாதம் எனக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது. //

              மூலிகைக் காப்பிட்டு பல நூற்றாண்டுகள் வரை பாதுகாக்கப்பட்ட சுவடிகள் உண்டு..
              அய்யா தெரியாதய்யா கருங்கல் அறைக்குள்ளும் கரையான் வந்து கபளீகரம் செய்யும் என்று..!
              எல்லாம் ஆடவல்லானின் திருவிளையாடல்..!!! அது சரி, தில்லைவாழ் ‘தமிழின எதிரிகள்’ ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டும்.. சுவடிகளை காணாமல் போக வைக்க யாக குண்டத்தின் வழியாக கையிலாசத்துக்கு அனுப்பும் எளிய நம்பகமான வழி இருக்கும்போது..?! தங்கள் கருத்து என்ன..?!

              // நம்பியாண்டார் நம்பிக்கு பொல்லாபிள்ளையார்தான் சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை நீங்கள்தான் விளக்க வேண்டும். //

              நான் மட்டும் என்ன பக்கத்திலா இருந்தேன்..?! திருமுறைகளைத் தேடி, தொகுத்து வழங்கிய நம்பி ஆண்டார் நம்பி அய்யரிடம் சைவப் பெருமக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமய்யா..! பார்ப்பானை நம்பமுடியாது என்றால், நம்பி ஒரு மலைக் குறவர் என்று ஆய்வுகள் செய்து கண்டுபிடித்து கொள்வோம்..

              // சண்டையிட்டு பெற்றதே திருமந்திரமும்,தேவாரமும்.உலகிற்கு தெரியாமல் அழிந்தது ராமபாணத்திற்கே[கரையான்] வெளிச்சம். //

              இதெல்லாம் ஒரு சண்டையா.?! அறிவார்ந்த மன்னரின் ஆணை, சுவடிகள் கைக்கு வந்துவிட்டது..

              • //யாக குண்டத்தின் வழியாக கையிலாசத்துக்கு அனுப்பும் எளிய நம்பகமான வழி இருக்கும் போது// விட்டா அவரா செத்துபோற கெழவரை கொலை செய்வதுதான் எளிய நம்பகமான வழியா? கொலவிசயம் வெளிய தெரிந்தால் தூக்குல போட்ருவாங்க அம்பி. அவருக்கு சாப்பாடு கொடுக்காம கண்டுக்காம விடுவதுதான் எளிய நம்பகமான வழி.எச்சரிக்கை உணர்வுமிக்க அவா அதைதான் செய்வா.

          • மாணிக்கவாசகரை மருத்துவ சமூகத்தை சேர்ந்தவர் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.அவரை கீழெதள்ளியது அவர் வரலாறு அனைத்திலும் உள்ளது.

          • அப்பரும்,சம்பந்தரும் உருவாகிய தமிழ் சைவம், இவர்களின் பாடல்களை தேவாரப்பண்களில் மெட்டமைத்து கோவில்கள் தோறும் பாடப்பட்டும், அபினயிக்கப்பட்டும் வந்தது! சம்பந்தர் கூடவே யாழ்பாணர் என்பவரும் இருப்பார்!

            சம்பந்தருக்கு நாளாக நாளாக தமிழ்பற்றும், மத நல்லிணக்க சிந்தனையும் ஆரம்பித்தது சிலருக்கு பிடிக்கவில்லை! அவரது கல்யாணம் நடந்து கொண்டிருக்கும்போதே, அவரது பந்து மித்திரர்களுடன் , கதவை பூட்டி தீவைக்கப்பட்டது! ஒருவரும் உயிர்தப்பவில்லை!

            அரசுகள் மாறியபின், ஆதரவில்லாமல் தமிழ் பாடல்கள் அழிந்தன! தமிழ் நீச பாஷையானது! வழக்கம்போல வெள்ளாளர்கள் முதலியோர் தமிழ் ஏடுகளை புதுப்பிக்க அஞசினர்! அப்போதும்நம்பியான்டார் நம்பியின் உறவினரான ஒரு தீக்ஷிதரே அதை பாதுகாத்து வைத்திருந்தார்! அப்போதுதான் திருவாசகம் என்ற ஒருநூல் இருப்பதே தெரிய வந்தது! மாணிக்க வாசகர் என்பதே காரணப்பெயர்தான்! திருவள்ளுவர் போல! பார்பனர்களில் சிலநல்லவர்களால் தமிழ் பிழைத்தது!

            • நன்பர் அஜாத்சத்ரு அவர்கள் பின்னூட்டம் 10ல் எனக்கு மறுமொழியாக பொத்தாம் பொதுவான கருத்துகளை கொண்ட பதிவை எழுதினார்.அது குறித்து சில கேள்விகளை எழுப்பிய எனக்கு எந்த மறுமொழியும் தராமல் மீண்டும் ஒரு பொத்தாம் பொதுவான பதிலை எழுதுகிறார்.இதில் உள்ள அபத்தத்தின் உச்சம் திருஞான சம்பந்தர் சமய நல்லிணக்கம் பேனியதால் திருமண கூட்டத்தோடு வைத்து கொளுத்தப்பட்டார் என்பது.அண்ணனிண் சமய நல்லிணக்கம் பற்றிய கருத்து சமணர் காதில் விழாமல் இருப்பது நலம்.

              • உண்மைதான் ! அவரின் சமயநல்லிணக்கம், சமணம் ஒழிந்தபின், சைவ-வைணவ மதநல்லிணக்கம் பற்றியதே! சீர்காழியில் உள்ள ஒரு வணவ தலததையும் பாடியிருக்கிரார்! அவரை உயிருடன் கொளுத்தியவர்கள் , னிச்சயம் சமணர்களாயிருக்க முடியாது! ஏனென்றால், கொளுத்திய ஊர், சைவம் தழைத்த ஆச்சாள்புரமாகும்! சைவர்களுக்குள்ளேயே காழ்ப்புணர்வு இருந்திருக்கலாம்!

                • அப்பர்,சம்பந்தர் காலத்திற்கு பின்னர் சைவமும் வைணவமும் வெகு ஆக்ரொஷமாக சண்டையிட்டுக்கொண்டன ! தில்லை மாறி மாறி சொழர்களிடமும் கொய்ச்சளர்களிடம் இருந்தது! கொய்சளர்நிருவிய வைணவ கோவில் சைவ மன்னனால் இடித்து சிலை கிள்ளை கடலில் கரைக்கப்பட்டது! கூரத்து ஆழ்வான் முகம் தீயினால் சிதைக்கப்பட்டது! ராமானிஜர் உயிதப்பி திருப்பதி சென்றடைந்தார்! இறுதியில் விஜYஅநகர பேரரசு சிதம்பரத்தை கைப்பற்றி சமயநல்லிணக்கத்தைநடைமுறைபடுதும் முகத்தான், மீண்டுனம் வைண்வ கோவிலை புதுப்பித்து கொடுத்தது! வடக்கு கோபுரம் கட்டிகொடுத்தது!

      • சிவா…நாசா இருக்கட்டும்:
        தமிழன் வாழ்வு தலைகீழாக
        போனதற்கு, மேற்படி பூணூல்& நிறுவனம்
        3 ஷிப்ட் ஓச்சல் ஒழிசல் இல்லாமல்
        வேலை பார்த்தது உண்மைதானே?
        ராசாசி இதே வேலையாக(குச்சி ஊணியாவது)
        செய்து வந்ததை வரலாறு கூறுகிறதே?

        • // தமிழன் வாழ்வு தலைகீழாக
          போனதற்கு, மேற்படி பூணூல்& நிறுவனம்
          3 ஷிப்ட் ஓச்சல் ஒழிசல் இல்லாமல்
          வேலை பார்த்தது உண்மைதானே? //

          நிறுவன முதலாளிகள் நீங்கள் தானே நைனா..

          • பூணூல்களுக்கு ஒன்னுமே தெரியாது: பட்டப் பகலாக இருந்தாலும்
            சங்கரராமனை சதக்,,சதக்…

    • //செந்தில்குமரன் என்பவர் ஒரு தமிழெதிரிப் பார்ப்பான் என்பது என்னுடைய கருத்து.//

      [1]If u say I am a parpanan then ok i am really happy!!!

      [2]I am happy because I am having support for my idea of temple to school convention FROM PERIYAR,MARX,LENIN AND MASO TUNG. SO you can call all of us “PARPANARKAL”

      [3]In This temple rights struggle in the name of Tamil people u-vellala land loads want to get all the gains.!!
      But i need only place for education kids inside the temple in our mother language.

    • //அவர் நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சிதம்பரத்தில் போராட்டம் நடத்தும் கம்யூனிச தோழர்களை நக்கலடிப்பது மட்டுமல்ல, //

      Hello viysan,

      [1] Do you think communist people who are fighting for temple rights are foolish?

      [2] When they are fighting for temple rights it is also including the rights of the working class people.

      [3] Temple administration should me belonging to Government not parpanarkal who sing vetha’s. This is the aim of the communist people now. After achieving this goal next communist people will go for the next stage of the temple rights struggle.[temple to school convention]

    • //செந்தில்குமரன் என்பவர் ஒரு தமிழெதிரிப் பார்ப்பான் என்பது என்னுடைய கருத்து. //
      Hello parpana-vellala viysan!,

      [0] In my school days I learned the books of periyar and in my college days i was educated by communist people from MKEK about the ideology of Marx and Lenin.All these knowledge helps me to live in this world with human face in all issues.

      [1] In my life I took steps to eliminate the cast system even in my personal life.I did inter-cast marriage just because I am inspired by the polices of Periyar and Communist people.

      [2] I give a nice Tamil name to my kid as “Siva karthikeyan” just because i and my wife are Tamilians. That does not mean that I am supporting the cast system of our Tamil society.

      [3]In EElam issue also I am supporting the creation of separate Tamil EElam. Since one of a center minister of India is against our EElam people,Tamil fisher man community and Kuttngulam people[atomic power station issue] I stop all my relationship with him even though he is my “Pangali” and close relative.

      [4]You should not and can not expect me to change my polices which I derived from Periyar and communist people from my mind.

      [5] What else u need from me to prove that I am not a Parpanan.?

      [6] If singing Devaram will stop all the problems of our Tamil people and Eelam Tamil then only I am ready to die while singing Devaram. But what is real? Singing devaram only create a Drug effect in Tamil people and make them to forget our real problem.

      [7] So that I am telling you that politically and scientifically educating kids inside the temple only create a new modern and progressive Tamil society in the near feature.

      [8] If u r not understanding my words or if u r acting for not understanding my words then THAT MEANS U START SPOILING OUR TAMIL SOCIETY

      [9] Any way THIS WILL BE MY LOST COMMENT AND DISCUSSION WITH U.

      • செந்தில் குமரன்,

        இறைநம்பிக்கை உள்ளவர்களிடம் கூட சமூக, பண்பாட்டு, சாதி ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் விதமாக பேசுவது சரியாக இருக்கும். மாறாக முத்திரை குத்தி எதிர் நிலையில் இருத்தி பேசுவதால் எந்தப்பயனும் இல்லை. சிதம்பரம் கோவில் போராட்டம் என்பது தமிழின மக்கள் மீது நடத்தப்படும் மொழி, பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அந்த சொத்து மக்கள் வசம் இருக்க வேண்டும் என்பதால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். இறை நம்பிக்கை உள்ளவர்களின் உரிமைக்காகவும் போராடுகிறார்கள். வர்க்க போராட்டத்தின் ஒரு அங்கமாக அவர்கள் இதை செய்கிறார்கள். ஒரு வேளை இந்த உரிமைகளுக்காக தமிழின ஆர்வலர்கள், பக்தர்கள் சரியாக போராடும் போது கம்யூனிஸ்டுகளுக்கு இங்கே வேலை இல்லை. மாற்றுக் கருத்து உள்ளவர்களிடமும் பொறுமையாக பேசி, விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

        • //சிதம்பரம் கோவில் போராட்டம் என்பது தமிழின மக்கள் மீது நடத்தப்படும் மொழி, பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அந்த சொத்து மக்கள் வசம் இருக்க வேண்டும் என்பதால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்க//

          I already said this to viysan:

          [1] Do you think communist people who are fighting for temple rights are foolish?

          [2] When they are fighting for temple rights it is also including the rights of the working class people.

          [3] Temple administration should me belonging to Government not parpanarkal who sing vetha’s. This is the aim of the communist people now. After achieving this goal next communist people will go for the next stage of the temple rights struggle.[temple to school convention]

        • Dear vinavu.., There is a conflict in your two statements..!

          [1]வர்க்க போராட்டத்தின் ஒரு அங்கமாக அவர்கள் இதை செய்கிறார்கள்.

          [2]ஒரு வேளை இந்த உரிமைகளுக்காக தமிழின ஆர்வலர்கள், பக்தர்கள் சரியாக போராடும் போது கம்யூனிஸ்டுகளுக்கு இங்கே வேலை இல்லை.

          First statement is only correct.It[temple issue struggle] is a part of the class struggle because it is the communist people WAR strategy to improve our class struggle.

          The second statement is wrong..
          IF communist people are not fighting for this issue and some Tamil organization is only fighting THEN that means we are away from the cultural and language issues and problems of Tamil people. For example in Hindi agitation struggle, we communist people are away from it and only DMK is gaining the political ground in tamil nadu[We failed in our war strategy in Hindi agitation dtruggle]

          “so according to my political knowledge it is also our duty to fight along with other Tamil organizations against parpanerkal damination in side temple. ”

          Vinavu said: //வர்க்க போராட்டத்தின் ஒரு அங்கமாக அவர்கள் இதை செய்கிறார்கள். ஒரு வேளை இந்த உரிமைகளுக்காக தமிழின ஆர்வலர்கள், பக்தர்கள் சரியாக போராடும் போது கம்யூனிஸ்டுகளுக்கு இங்கே வேலை இல்லை.//

      • லண்டன் துரை, இங்கிலிபிஸ்லதான் கதப்பிங்களா? உழைக்கும் மக்களுக்காக போராட போரதா சொல்ற உங்களுக்கும் நீங்கவுடுர பீட்டருக்கும் சம்மந்தம் இல்லையே வினவு தமிழ்தளம்தானே???!!

          • ராமனை திட்டும் உங்கள் பெயர் ஏன் ராமசாமி என்று உள்ளது என பெரியாரை கேட்ட அதே புத்திசாலிதனமான???!! கேள்வியை என்னை கேக்கிறார் செந்தில்.பெயர் முக்கியமில்லை கருத்துதான் முக்கியம். அவரின் அடுத்த வாதம் தமிழ்,ஆங்கிலத்தை கலந்து எழுதுவதுதான் தவறு என்பது.அவரின் வாதப்படி 1.தியாகராஜர் ஆராதனையில் தமிழில் பாட சொல்வது தவறு ஏனென்றால் தமிழ் கலக்காமல் சமஸ்கிரதம்,தெலுங்கில் மட்டுமே பாடப்படுகிறது.2.தமிழில் அர்ச்சனை,தமிழில் வழிபாடு போன்றவையையும் இதே காரணத்திற்காக மறுக்கலாம்.தமிழ்நாட்டு கோவில்களில் தமிழில் பாடுவது தீட்டு என நினைக்கும் பார்ப்பனருக்கும் தமிழ் தளத்தில் தமிழில் எழுதுவது தீட்டு என நினைக்கும் இவருக்கும் என்னளவில் வேறுபாடு இல்லை.தமிழில் எழுதாதவரை இவருடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை.நன்றி

            • I am telling u to write your name also in Tamil in the heading of your message.

              see the heading of my message.Like this you pls write u r name

            • //ராமனை திட்டும் உங்கள் பெயர் ஏன் ராமசாமி என்று உள்ளது என பெரியாரை கேட்ட அதே புத்திசாலிதனமான???!! கேள்வியை என்னை கேக்கிறார் செந்தில்.பெயர் முக்கியமில்லை கருத்துதான் முக்கியம்.//

              நான் உங்கள் பெயரை தமிழில் எழுத தானே சொன்னேன் !!!

        • //லண்டன் துரை, இங்கிலிபிஸ்லதான் கதப்பிங்களா? உழைக்கும் மக்களுக்காக போராட போரதா சொல்ற உங்களுக்கும் நீங்கவுடுர பீட்டருக்கும் சம்மந்தம் இல்லையே வினவு தமிழ்தளம்தானே???!!//

          [1]உழைக்கும் மக்கள் இங்கிலாந்திலும் உண்டு

          [2]என் எளிய ஆங்கிலத்தை பகட்டு [பீட்டர் ] என்றால் 8 ஆம் வகுப்பு மாணவன் கூட சிரிப்பான்

          [3]உங்கள் கருத்து நல்ல தமிழில் உள்ளதா ? //இங்கிலிபிஸ்லதான் ,நீங்கவுடுர பீட்டருக்கு

          • //உழைக்கும் மக்கள் இங்கிலாந்திலும் உண்டு//- இங்கிலாந்து உழைக்கும் மக்களுக்காக பின்னுட்டமிட்ட தங்களை புரிந்துகொள்ளாமைக்காக வருந்துகிறேன்.

            • உங்கள் பெயரை தலைப்பில் தமிழில் எழதவும்

              இரு வேறு மொழிகளை கலப்பது நன்றா? சிந்திப்பீர் !

              • தமிழ்ச் செயலியில் உள்ள பழுதுதான் காரணம்.தாங்கள் உடனடியாக!! சரிசெய்துவிட்டீர் எனக்கு சிறிது காலமாகலாம்.தங்கள் தமிழில் பின்னுட்டமிட்டதற்கு நன்றி கூற மறந்துவிட்டேன்;தற்பொழுது கூறிவிடுகிறேன் மிக்க நன்றி.

                • கடந்த சில மாதங்களாக செந்தில் குமரனின் ஆங்கிலத் தாக்குதல்களால் நிலை குலைந்து போயிருந்த எம்மை தமிழால் காத்தருளிய தேவாரநாயனாருக்கு போற்றி போற்றி.. 🙂

          • //என் எளிய ஆங்கிலத்தை பகட்டு[பீட்டர்] என்றால் 8 ஆம் வகுப்பு மாணவன் கூட சிரிப்பான்//-நான் 7-ம் வகுப்புடன் கல்வியை நிறுத்திக்கொண்டவன்.//உங்கள் கருத்து நல்ல தமிழில் உள்ளதா ?//-மாற்றி கொள்கிறேன்.

  9. //சிவா, பார்பனரை ஏன் தமிழின எதிரியாக கூற கூடாது? //

    எனது பால்யநண்பர் ஒருவர் தீக்ஷிதர்தான்! அந்த காலத்திலேயே, சிதம்பரத்திற்கு அருகில் உள்ள நடராஜபுரம் என்று நினைவு, சொந்தநிலத்தில் அவரே ஏர் பூட்டி உழுதார்! பார்பனர்களில்நல்லவர்களும் இருக்கிரார்கள்! ஆனால், ஆண்டாண்டு காலமாக அவர்கள் சமுதாய மேல்தட்டில் இருப்பதால், அதை இழப்பது அவர்களுக்கு அச்சமூட்டுகிறது! அதனாலும், அகில இந்திய அளவில் செய்யப்படும் துர்ப்பிரச்சாரத்தினாலும் அவர்கள் தற்காப்புநிலை எடுக்கிரார்கள்! அவர்களில் எப்பொதும், தமிழுக்கு ஆதரவான ஒரு பிரிவினர் உண்டு! வடமொழி புராணக்கதைகள் தமிழ்னாட்டில் எடுபடாததை கண்டு, தனியாக தமிழில் பக்தி இலக்கியம் தோன்றிற்று! நாலாயிர திவ்ய பிரபந்தம் வேததிற்கு நிகரானது என்று வைணவர் கொண்டாட, போட்டியாக சைவர்களும் சைவ இலக்கியங்களை படைத்தனர்! மாணிக்கவாசகரது திருவாசகம் தனி! அவர் மறைந்து பல்லாண்டிகள் கழிந்த பின்னரே அப்படி ஒரு பக்தி இலக்கியம் இருப்பது கண்டுபிடிக்கபட்டது! அப்பர் சைன சமயத்திலிருந்து சைவத்திற்கு கொணரப்பட்டார்! மதுரை, காஞ்சி அரசர்கள் சைவத்திற்கு மாறினார்கள்! பின்னணியில் இருந்தது தில்லை தீட்சிதர்களே!

    • //சொந்தநிலத்தில் அவரே ஏர் பூட்டி உழுதார்!பார்பனர்களில் நல்லவர்களும் இருக்கிரார்கள்//- சொந்தநிலத்தில் உழுதால் நல்லவர்களா? இதுநாள்வரைக்கும் எனக்கு தெரியாம போச்சே.

      • பார்பனர்கள் உழவுத்தொழில் செய்யக்கூடாது என்ற மனுநீதியை மீறியவர்! ஓரளவு முற்போக்கானவர்!நண்பர்களுக்குள் சாதி வித்தியாசம் பார்க்காதவர்!

    • //பின்னணியில் இருந்தது தில்லை தீட்சிதர்களே!// என திருத்தி படிக்கவும்.நன்றி.

    • நன்பரே: ஆச்சாள்புரம்(கொள்ளிடம்) கிராமத்தில் உள்ள நிலம்
      முன்பு கோவிலுக்கு சொந்தமானது…இப்போது?
      நடராசர் தன் காலில் உள்ள கொலுசை களவாண்டவனையே
      “கண்டு” கொள்ளாத ஜடம்…
      நிலம் களவு போனதை…என்ன செய்வது? இன்னொரு காலைத்
      தூக்கி ஆடவேண்டியதுதான் பாக்கி…
      நடராசரையே ஆட்டையைப் போட தீக்சதர் முயற்சி செய்யும்!

  10. // அப்பர் சைன சமயத்திற்கு சமயத்திலிருத்து சைவத்திற்கு கொணரப்பட்டார்// யாரால? தீட்சிதர்களாலயா? விளக்கமுடிமா?

    • ஜைன சமயம் உச்சத்திலிருந்தபோது, அப்பர் அதன் முக்கிய தலைமை துறவியாக இருந்தார்! அவரது தமக்கையோ பஎற்றோரையும், மணக்க இருந்த கலிப்பகையாரையும் இழந்த பின்னர் விதவை கோலம் பூண்டு சிலகாலம் தனியாகவே இருந்தார்! அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, சைவ பக்தீயக்கம் வளரும் சூழ்னிலையில், வேற்று மதமாக போய்விட்ட சமணத்திலிருந்து, தமிழ் மதமான சைவத்திற்கு வந்தார் அப்பர்! அப்பர் சைவ மதத்திற்கு தலைமை ஏற்க வந்ததும், அவர் பெயரில் சோழ நாடெங்கும் சத்திரங்கள் ஏற்படுத்தப்பட்டு அன்னதானங்கள் , அவருக்கே தெரியாமல், நடந்து வந்தது! பின்னரே , சிறுவனான திருஞான சம்பந்தரும் சேர்ந்துகொண்டார்! சம்பந்தர் பாண்டிய அரசனை சைவத்திற்கு மாற்றி சமணரை கழுவிலேற்ற,அப்பரோ ‘யாமார்க்கும் குடியல்லோம்,நமனை அஞசோம்’ என மகேந்திர வர்மனை சைவனாக்கினார்! இதெல்லாம் அந்தக்கால அரசியலே!

      • அப்படியே சுந்தரர்(சுந்தர வளாகம்)
        பற்றியும் சொல்லுங்கள் தம்பி

  11. //மதுரை,காஞ்சி அரசர்கள் சைவத்திற்கு மாறினார்கள்// ஏன்? //பின்னனியில் இருந்தது தீட்சிதர்கள்// எப்படி?

    • சைவ சமயத்தின் தோற்று வாயாகவும், சோழ ராஜ்யத்தின் தலைனகராகவும் இருந்த தீக்ஷிதர்களே, சோழ அரசனின் ஆதரவில், சைவம் பிற அரசுகளுக்கும் பரவ, அமைச்சர்களாயிருந்து ஆலோசனை நல்கியவர்கள்!

      • //சைவ சமயத்தின் தோற்று வாயாகவும், சோழ ராஜ்யத்தின் தலைனகராகவும் இருந்த தீக்ஷிதர்களே,//

        இது நம்பக் கூடியதல்ல. சும்மா சப்பைக் கட்டு கட்டுகிறீர்கள் போல் தெரிகிறது. சோழர்கள் தீட்சிதர்களிடம் ஆலோசனை கேட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம். உண்மையில் வரலாற்றாசிரியர் நடன.காசிநாதனின் கருத்துப்படி. ராஜ ராஜ சோழன் தீட்சிதர்களிடம் மட்டுமல்ல பிராமணர்களிடமே அவ்வளவு நம்பிக்கை வைக்கவில்லையாம். அதை விட “ஆதித்த கரிகாலனைப் பிராமணர்கள் கொன்றதன் காரணத்தாலோ என்னவோ, இராச ராசன் தம் நாட்டில் வேதம் ஒலிப்பதற்குப் பதிலாக திருமுறை ஓதுவதற்கு முக்கியத்துவம் தந்திருக்கிறான். ”

        அத்துடன்:

        ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை கண்டு பிடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டாலும், அவர்களை ராஜ ராஜன் சரியாக அடையாளம் கண்டு அழித்தான். இவ்வெற்றியை திருவாலங்காட்டுச் செப்பேடு “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடுகிறது.

        Ref. இராஜ ராஜனின் காந்தளூர்ச் சாலைப் போர் page 73.

        ராஜ ராஜ சோழனின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருந்தது அவனது தமக்கையார் என்பதை சிங்களவர்களின் வரலாற்று நூல்களே கூறுகின்றன. தேவார திருமுறையைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் அடம்பிடித்ததால், மன்னனின் எரிச்சலைச் சம்பாதித்துக் கொண்ட தீட்சிதர்கள், அவனைக் குளிர (Ice) வைக்க, சிவபாதசேகரன் என்ற பட்டமளித்துக் கெளரவித்தனர், அவ்வளவு தான். 🙂

  12. திரு.தேவாரநாயனார் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அப்பரை சமணசமயத்திலிருந்து சைவத்துக்கு கொண்டுவந்தவர் அவரது தமக்கையாராகிய திலகவதியார், அதன்பின்னர் திருவதிகைச் சிவன் கோயிலில் சிவபெருமான் அவரை ஆட்கொண்டார். இதில் எங்கே தில்லித் தீட்சிதர்கள் வந்தார்கள்?

    திருஞானசம்பந்தரின் உதவியுடன் மதுரை அரசன் கூன்பாண்டியனை அல்லது நின்றசீர்நெடுமாறனை சைவத்துக்கு கொண்டுவந்தவர்கள் அவனது மனைவி அரசி மங்கையர்க்கரசியாரும்ம், அமைச்சர் குலச்சிறையாரும் தான். இதிலும் எங்கே ஐயா தீட்சிதர்கள் வந்தார்கள். இலங்கையில் சைவசமயம் மூன்றாம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்படுகிறது அதனால் எங்களுக்கும் சைவத்தின் வரலாறு தெரியும். 🙂

    • சிதம்பரத்தை தலைனகராகக்கொண்டு சைவம், அடுத்துள்ள அரசுகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது, சிதம்பரத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த தீக்ஷிதர் ,வெள்ளாளர் கூட்டணியினால்தான்! மதுரையின் அரசி,சோழனாட்டை சேர்ந்தவர், சைவ மரபில் ஊறியவர் அல்லவா? திருஞான சம்பந்தரே தில்லை உமாபதி தீக்ஷிதர் உறவினர்தானே!

  13. ///அதுவரை யாரும் கவலைப்படாத சுவடிகளை தில்லைவாழ் ’தமிழின எதிரிகள்’ யாக குண்டத்தில் போட்டு சுவாகா சொல்லியிருந்தால், அந்தக் கால நம்பிக்கும், இந்தக் கால உ.வே.சாமிநாதையருக்கும் கூட எந்த மூவர் தேவார சுவடியும் கிட்டியிருக்காதே..///

    அக்காலத்தில் சாதியடிப்படையில் பல தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. பல பழம்பெரும் தமிழ்நூல்கள் பார்ப்பனர்களால் சமக்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், சமக்கிருத நூல்களை மொழிபெயர்த்த பார்ப்ப்பனர்களால் எரிக்கப்பட்டு ஸ்வாஹா சொல்லப்பட்டு விட்டது. ஆந்த வழக்கத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாகக் கூட ஒருவர் இறந்தால் அவரிடமிருந்த ஏட்டுச்சுவடிகளை அந்தியேட்டியன்று எரித்து விடும் பழக்கம் இருந்ததாம். இந்த வழக்கத்தைக் கூட பார்ப்பனர்கள் ஏர்படுத்தியிருக்கலாம். யார் கண்டது.

    இதே கதி தான் ஆகமங்களுக்கும் நடந்தது. ஆகமங்கள் முதலில் தமிழில் தான் இருந்தன, ஆகமங்களில் சாதியைப்பற்றி குறிப்பிடவேயில்லை. தமிழர்களின் ஆகமத்தில் வருண வேறுபாடு கிடையவே கிடையாது. சமக்கிருத வேதங்களைப் போலல்லாமல் யாரும் ஆகமங்களைக் கற்கலாம். சிவதீட்சை கேட்கலாம், சிவபூசையும் பண்ணலாம். அதனால் ஆகமத்தை சமக்கிருதத்தில் மொழிபெயர்த்து, அதில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பல இடைச்செருகல்க்ளைச் செய்த பின்னர் தமிழிலிருந்த மூல ஆகமத்துக்கு சுவாகா சொல்லி விட்டனர் அக்காலத்தில் கல்வியை தமது கக்கத்தில் ஒழித்து வைத்திருந்த பார்ப்பனர்கள்.

    இதே கதி தான் தமிழர்களின் பல்வேறு நாட்டியங்களை விவரிக்கும் நாட்டியநன்னூலுக்கும் நடந்தது. பாரத முனிவரால் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்படும் சமக்கிருத நாட்டியசாசத்திரத்துக்கு முன்னோடி தமிழரக்ளின் நாட்டிய நன்னூல்.. அது மட்டும் என்ன, எங்கள் கண்முன்னாலேயே தமிழர்களின் சதிராட்டத்தை இரவல் வாங்கி, தமிழன் மீனட்சிசுந்தரம்பிள்ளையிடமே கற்று விட்டு, அதற்கு பரத நாட்டியம் என்ற fancy name ஐக் கொடுத்து விட்டு, அதை வடஇந்திய பரதமுனிவர் இயற்றியதாக கலாசேத்திரப் பார்ப்பனர்கள் கதைகட்டி விட்டனர். அதைச் சில தமிழர்களும் நம்பி தாமும் அதையே ஒப்பிக்கின்றனர். அது உண்மையில் தமிழர்களின் கலை என்றறியாத பெரியாரின் சீடர்களும் பார்ப்பனர்களின் கலை என நினைத்து இழிவு படுத்தியதால், தமிழ்நாட்டில் சதிர் (பரதநாட்டியம்) இன்று தமிழர்களின் கைகளை விட்டுப் போய்விட்டது, ஆனால் ஈழத்தமிழர்கள் இன்றும் தமது குழந்தைகளுக்கு கற்பிக்கின்றனர். நான் பார்ப்பனர்களை வெறுக்கவுமில்லை, பெரியாரிஸ்டுமல்ல, நான் அறிந்த, கேள்விப்பட்ட உண்மைகளைச் சொல்கிறேன். 🙂

    • // பல பழம்பெரும் தமிழ்நூல்கள் பார்ப்பனர்களால் சமக்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், சமக்கிருத நூல்களை மொழிபெயர்த்த பார்ப்ப்பனர்களால் எரிக்கப்பட்டு ஸ்வாஹா சொல்லப்பட்டு விட்டது. //

      பார்ப்பனர்கள் தங்களிடமிருந்த தமிழ்நூல்களை எரித்தார்கள் என்றால், ஏன் திருமுறைகளை விட்டு வைத்தார்கள் என்பதுதான் என் கேள்வியே..

      மேலும், பல தமிழ் நூல்களெல்லாம் முற்றிலும் காணாமல் போய்விட்டதன் காரணத்தையும் நீங்களே கூறுகிறீர்கள்.. :

      // ஆந்த வழக்கத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாகக் கூட ஒருவர் இறந்தால் அவரிடமிருந்த ஏட்டுச்சுவடிகளை அந்தியேட்டியன்று எரித்து விடும் பழக்கம் இருந்ததாம். இந்த வழக்கத்தைக் கூட பார்ப்பனர்கள் ஏர்படுத்தியிருக்கலாம். யார் கண்டது. //

      இப்படி தமிழ் ஏடுகளையெல்லாம் உடன்கட்டை ஏற்றிவிட்டு அந்தப் பழியையும் பார்ப்பானின் மீது போடுவது ஏனோ..?!

      // இதே கதி தான் ஆகமங்களுக்கும் நடந்தது. ஆகமங்கள் முதலில் தமிழில் தான் இருந்தன, ஆகமங்களில் சாதியைப்பற்றி குறிப்பிடவேயில்லை. தமிழர்களின் ஆகமத்தில் வருண வேறுபாடு கிடையவே கிடையாது. சமக்கிருத வேதங்களைப் போலல்லாமல் யாரும் ஆகமங்களைக் கற்கலாம். சிவதீட்சை கேட்கலாம், சிவபூசையும் பண்ணலாம். அதனால் ஆகமத்தை சமக்கிருதத்தில் மொழிபெயர்த்து, அதில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பல இடைச்செருகல்க்ளைச் செய்த பின்னர் தமிழிலிருந்த மூல ஆகமத்துக்கு சுவாகா சொல்லி விட்டனர் அக்காலத்தில் கல்வியை தமது கக்கத்தில் ஒழித்து வைத்திருந்த பார்ப்பனர்கள். //

      ஆக, ஆகமங்களில் உள்ள ’விரும்பத்தகாதன’ எல்லாம் பார்ப்பானின் வேலை..! எஞ்சியிருப்பது என்னவோ..?!

      // இதே கதி தான் தமிழர்களின் பல்வேறு நாட்டியங்களை விவரிக்கும் நாட்டியநன்னூலுக்கும் நடந்தது. பாரத முனிவரால் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்படும் சமக்கிருத நாட்டியசாசத்திரத்துக்கு முன்னோடி தமிழரக்ளின் நாட்டிய நன்னூல்..//

      நீங்கள் கூறுவது போல் பரத நாட்டியம் தமிழகத்தின் நாட்டிய வடிவமே.. பரதநாட்டியம் தமிழர்களின் கலை என்று நீங்கள் கூறுவது மகிழ்சியளிக்கிறது.. கர்நாடக சங்கீதத்தின் மூலம் கூட தமிழ்ப் பண்களே.. தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் கூட, பூசையின் போது பாடப்படும் திருமுறைப் பாடல்களான பஞ்ச புராணத்தின் இசைவடிவின் தாக்கத்தில் உருவானவை என்று கூறுவார்கள்..

      • //பார்ப்பனர்கள் தங்களிடமிருந்த தமிழ்நூல்களை எரித்தார்கள் என்றால், ஏன் திருமுறைகளை விட்டு வைத்தார்கள் என்பதுதான் என் கேள்வியே..//

        நான் பார்ப்பனர்கள் என்னும் போது தீட்சிதர்களை மட்டும் குறிப்பிடவில்லை, இன்றைக்குப் போல் அன்றும் தில்லைத் தீட்சிதர்கள் சும்மா தேமே என்று இருந்து தண்டச்சோறு தின்றவர்கள் போல் தான் தெரிகிறது. அவர்கள் பாடியதாகவோ அல்லது இயற்றியதாகவோ எந்த பாடலையும், அல்லது நூல்களையும் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை (அப்படியிருந்தால் சொல்லுங்கள்). தேவாரங்கள் மட்டும் தான் தில்லைத் தீட்சிதர்களின் கைகளில் இருந்தன. ஏனைய தமிழ் ஏட்டுச் சுவடிகளை சமக்கிருதத்தில் மொழி பெயர்த்து விட்டு அழித்தவர்கள், தீட்சிதர் அல்லாத பார்ப்பனர்கள். தமிழை நீசபாசை என்று கூறிய, காஞ்சி சங்கராச்சாரி, சுப்பிரமணியம் சுவாமி போன்ற பார்ப்பனர்கள் அக்காலத்திலும் இருந்திருப்பார்கள், அவர்கள் தான் அப்படியான வேலையை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்,

        • தில்லை உமாபதி சிவாச்சாரியார் சில தமிழ்நூல்களை செய்திருக்கிரார்;திருமூலர்,மெய்கண்டாருக்கு அடுத்து சைவ சித்தாந்தத்தை விரிவுபடுத்தி விளக்கியவர்!
          அன்னார் தமிழில் இயற்றியது: சித்தாந்த அட்டகம், சிவ பிரகாசம், கொவில்புராணம், திருமுறை கண்ட புராணம்,திருதொண்டர் புராண சாரம், கொடி கவி,நெஞ்சு விடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கரனிரகரணம், திருவருட்பயன் முதலியன.

          மற்றும் அருள்னந்தி சிவச்சாரியார்: சிவஞானசித்திகள்!

          திரு வெங்கடேசன் இன்னும் பல சேர்க்ககூடும்!

          • அஜாதசத்ரு சித்தம். அடியேன் பாக்கியம் 🙂

            திருஞானசம்பந்தர், திருநாளைப்போவார், திருகண்ணப்பர் போன்ற சிலர் தவிர மற்ற அடியார்கள் என்ன சாதி என இதுவரை அறிந்ததில்லை. இங்கே எழுதுவதற்காக கீழே உள்ள சுட்டியில், ஒவ்வொரு அடியாரையும் கிளிக் செய்து சாதி அறிய வேண்டி வந்தது. ஏம்பா இப்படி சோதிக்கறீங்க!

            http://www.thevaaram.org/nayanmar.php

            ——————————————————

            வியாசன் தில்லை வாழ் அந்தணர் இயற்றிய நூல்களை பற்றி கேட்கிறார் என் நினைக்கிறேன். அந்த வகையில் உமாபதி சிவத்தை சொல்லலாம். அருணந்தி சிவம் திருதுறையூரில் பிறந்தவர். தில்லை வாழ் அந்தணருள் சேர்க்க முடியுமா என தெரியவில்லை.

            பொதுவாக சைவ தமிழ் நூல்கள் ஆக்கிய அந்தணர் என்றால் இன்னும் பலரைக் கூற முடியும்.

            ஒன்பதாம் திருமுறையில் பாடல்கள் பாடிய கருவூர் தேவர். கீழ்க்கோட்டூர், திருக்களந்தை, திருமுகத்தலை என தேவாரத்தில் இடம் பெறாத தலங்களை பாடியவர்! “கீழ் கோட்டூர் மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனங்கவர்ந்தானே!” இந்த மணியம்பலத்தை தரிசிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ளது!

            ஒன்பதாம் திருமுறையில் திருமாளிகை தேவர், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, பூந்துருத்தி காடநம்பி,

            தவிர நம்பியாண்டார் நம்பிகள், திருவாதவூர் அடிகள்.

          • அருள்நந்தி சிவாச்சாரியார் தில்லை தீட்சிதராக தெரியவில்லை.. அவர்கள் மரபில் வந்திருக்கலாம்..

          • பார்ப்பனரல்லாத மறைஞானசம்பந்தரை தனது குருவாகக் கொண்டு அவர் கையிலிருந்து வழிந்த கூழைப்பருகியதால் உமாபதி சிவாச்சாரியாரை தீட்சிதர்கள் ஒதுக்கி வைத்து அவர் பூசை செய்யும் உரிமையையும் பறித்து விட்டார். தீட்சிதர்களை விட்டு விலகிய பின்பு தான் உமாபதி சிவாச்சாரியார் பல நூலைகளை எழுதினார். அவரை சந்தான குரவர்களில் ஒருவராக சைவசித்தாந்திகள் போற்றுகின்றனர். அதனால், அவர் எழுதிய நூல்களை தீட்சிதர்கள் எழுதியதாகக் கொள்ள முடியாது. 🙂

        • // இன்றைக்குப் போல் அன்றும் தில்லைத் தீட்சிதர்கள் சும்மா தேமே என்று இருந்து தண்டச்சோறு தின்றவர்கள் போல் தான் தெரிகிறது. //

          பூசை, யாகம், வேத-தமிழ் கல்வி, கோவில் நிர்வாகம், விழாக்கள் என்று ஆன்மிக விசயங்களில் பிசியாக இருக்கும் ஒரு சாராரும்; அடிதடி, அடாவடி, லௌகீக நாட்டம், ஜம்பம் என்று ஒரு சாராரும் என அவரவர் மனப் பக்குவம், பக்குவமின்மை சார்ந்து இருந்து வருகிறார்கள் போல் தோன்றுகிறது.. அவர்கள் எண்ணிக்கை குறைய குறைய இரண்டாவது சாராரின் கை ஓங்கி வருவது அவர்களுக்கே நல்லதல்ல..

          // தேவாரங்கள் மட்டும் தான் தில்லைத் தீட்சிதர்களின் கைகளில் இருந்தன. ஏனைய தமிழ் ஏட்டுச் சுவடிகளை சமக்கிருதத்தில் மொழி பெயர்த்து விட்டு அழித்தவர்கள், தீட்சிதர் அல்லாத பார்ப்பனர்கள். //

          பன்னிரு திருமுறைகளில் தேவாரம் தவிர்த்த பிற திருமுறைகளையும் நம்பியார் கண்டுபிடித்து தொகுத்தது எப்படி..?! திருமுறை தொகுப்புக்குப் பின்னும் சைவ (வைணவ) தமிழ் நூல்கள் எழுதப்பட்டு இன்றும் கிடைப்பது எப்படி..?! ஏனைய தமிழ் ஏட்டுச் சுவடிகளை ஒன்று விடாமல் எரிக்க வேண்டுமாயின் அவற்றையும், பிரதிகளையும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடி கண்டுபிடிக்க வேண்டுமே..

          • //பன்னிரு திருமுறைகளில் தேவாரம் தவிர்த்த பிற திருமுறைகளையும் நம்பியார் கண்டுபிடித்து தொகுத்தது எப்படி..?! //

            Historical Study Of Thevaram Hymns என்ற புத்தகத்திலும் இன்னுமொரு google book இலும் நான் பார்த்தேன். நாயன்மார் காலத்திலேயே திருவொற்றியூர் மடமும். திருவாவடுதுறை மடமும் சைவமடங்களாகத் திகழ்ந்தன. பல கோயிலக்ளின் திருமுறைகளின் ஓலைச் சுவடிகள், அங்கிருந்தும் பாதுகாப்புக்காக சிதம்பரத்துக்கு அனுப்பப் பட்டிருக்கலாம். இதே காரணத்துக்காகத் தான் எல்லாக் கோயில்களின் நகைகளும் திருவனந்தபுறம் பத்மநாப சுசுவாமி கோயில் நிலவறைக்கு அனுப்பப்பட்டன, அதை விட சைவர்களுக்கு சிதம்பரம் தான் மெக்காவாக இன்றும் கருதப்படுகிறது. கோயில் என்றாலே அது சிதம்பரத்தை தான் குறிக்கும் அல்லவா. இந்தக் காலத்தில் உலகில் எந்த நாட்டில் ஏதாவது கிறித்தவ சிலை அதிசயங்கள் செய்தாலும், அந்த சிலைகளின் புனிதத்தன்மையைக் காப்பதற்காக அவை எல்லாம் வத்திக்கானுக்கு தான் அனுப்பபடுமாம் . அது போலவே புனிதமான ஓலைச்சுவடிகளை சைவ மடங்களும் கோயிலகளும் சிதம்பரத்துக்கு அனுப்பியிருக்கலாம். ஒரு சில திருமுறைகள் அந்தந்த மடங்களிலே கூட வைக்கப்பட்டிருக்கலாம் யார் கண்டது. 🙂

            • //திருமுறை தொகுப்புக்குப் பின்னும் சைவ (வைணவ) தமிழ் நூல்கள் எழுதப்பட்டு இன்றும் கிடைப்பது எப்படி..?! ஏனைய தமிழ் ஏட்டுச் சுவடிகளை ஒன்று விடாமல் எரிக்க வேண்டுமாயின் அவற்றையும், பிரதிகளையும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடி கண்டுபிடிக்க வேண்டுமே.//

              எல்லாப் பார்ப்பனர்களும் தமிழ் எதிரிகளல்ல. சிலர் அவற்றை சமக்கிருதத்தில் மொழி பெயர்த்த பின்னர் அதாவது Plagiarism செய்த பின்பு அழித்திருக்கலாம். தம்மை தமிழர்களாக கருதிய சம்பந்தர் போன்ற பார்ப்பனர்கள் திருமுறைகளை பாதுகாத்திருக்கலாம். ஒரு சில தமிழ்ப்புலவர்கள் கூட சில ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்திருக்கலாம். ஓலைச் சுவடிகளை அச்சு இயந்திரமேற்றும் பணியை முதல் முதலில் தொடங்கியவர் யாழ்ப்பாண ஆறுமுகநாவலர், அவரும் பல ஓலைச் சுவடிகளை திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்தும், சில தமிழ்ப்புலவர்களிட்மிருந்தும் தான் பெற்றுக் கொண்டார்.

              அதை விட சைவர்களை விட வைணவர்கள் (திருமாலியம்) தமிழில் பற்றுக் கொண்டவர்கள் போல் தெரிகிறது. இன்றும் கூட வைணவ ஆலயங்களில் தான் சசச்சரவு ஏதுமின்றி தமிழுக்கு சமவுரிமை அளிக்கப்படுகிறது. அதனால் வைணவ பார்ப்பனர்கள் காழ்ப்புணர்வு ஏதுமின்றி திருவாய்மொழி அனைத்தையும் பாதுகாத்திருக்கலாம், சைவ பார்ப்பனர்கள் காட்டும் சமக்கிருத வெறியை வைணவப் பார்ப்பனர்கள் காட்டுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கோயிலிலும் தீபத்தை உயர்த்தி மூலவரை பார்க்கக் கூடியதாகப் பிடித்து தமிழில், நன்னா சேவித்துக் கொள்ளுங்கோ என்று அழகான கலப்பில்லாத தமிழ்ப்பெயர்களை ஒவ்வொரூ கோயில் பெருமாளுக்கும் கூறினார்கள். அதை விட மகாலக்ஷ்மி அந்த லக்ஸ்மி, இந்த லக்ஷ்மி என்று சமக்கிருதம் பேசாமல், இந்தக் கோயிலில் தாயாரின் பெயர்…… என்று அழகாக தமிழில் கூறுகிறார்கள் என்னைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே வைணவக் கோயில்களில் தான் தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. அங்குள்ள பார்ப்பனர்கள் தமிழை நீசபாசையாகக் கருதுவதாகத் தெரியவில்லை.

      • தமிழர் கலையை சதிர் எனற அதன் உண்மையான பெயரால் இனியேனும் தாங்கள் அழைக்கலாமே? 1930 களில் அதை பரதமுனிவருக்கு அர்பணித்து பரதநாட்டியமாக்கிய திருட்டுப் பெயரால் அழைப்பதை தவிர்க்கலாம்.
        தியாகராஜ கீர்த்தனைகளின் இசை வடிவம் நாட்டுப்புற தாலாட்டுப் பாடல்களின் இசை வடிவத்தை மூலமாக கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் அவர் உஞ்ச விருத்தி செய்யப்போகும் போது தெருக்களை கடக்கும் வேளைகலில அதை கேட்டிருக்கக் கூடும் எனவும் திரு.புஷ்பவனம் குப்புசாமி(நாட்டுப்புறப்பாடகர்)கீர்த்தனைகளையும்,தாலாட்டுப்பாடல்களையும் தொலைக்காட்சியில் பாடிக்காட்டினார்.இதை ஆராய்ச்சி செய்தே அவர் ph.d பட்டம் வாங்கியதாகவும் கூறினார்.திரு.புஷ்பவனம் குப்புசாமி கர்நாடக இசையும் கற்றவர் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

  14. நண்பர்கள் தேவாரநாயனார்,வியாசன்! கீழே இணைப்பில் உள்ள யூ டியூப் வீடியோக்களில்
    “Vinayaka Worship – a Great Mystery Solved”
    என்னும் தலைப்பில் 9 பகுதிகளில் ஆசீவகம் குறித்து இருக்கிறது.உங்களுக்கு உதவக்கூடும் என்று நம்புகிறேன்!

    http://www.youtube.com/user/tamilsantham/videos

      • மகிழ்ச்சி சகோதரரே.வீடியோக்களில் இருக்கும் பின்னூட்டங்களிலும் நிறைய செய்திகள் இருக்கிறது.நன்றி.

  15. ///Vinayaka Worship – a Great Mystery Solved”
    என்னும் தலைப்பில் 9 பகுதிகளில் ஆசீவகம் குறித்து இருக்கிறது.உங்களுக்கு உதவக்கூடும் என்று நம்புகிறேன்!///

    சகோ.kavin,

    இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிள்ளையார் கோயில் இல்லாத கிராமமே கிடையாது. பிள்ளையார் அல்லது விநாயகர் தமிழர்களின் கடவுள் அல்ல, விநாயகர் வழிபாடு வாதாபியிலிருந்து தமிழ் மண்ணுக்கு வந்திருந்தால் எப்படி யாழ்ப்பாணத்தில் இந்தளவுக்கு பரவியது என்ற என்னுடைய கேள்விக்கு, என்னுடைய அம்மம்மா(பாட்டி) தந்த பதில், பிள்ளையார் வெள்ளாளரின் கடவுள், அதாவது விவசாயிகளின் கடவுள் என்பது. ஆனால் இந்த காணொளிகளைப் பார்த்த பின்பு தான், பிள்ளையார் தமிழர்களின் கடவுள் அதனால் தான் யாழ்ப்பாணத்தில் எல்லா ஊர்களிலும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. நன்றி.

    • உண்மை சகோ..பிள்ளையார் குறித்து,எனக்கும் பல கேள்விகள் இருந்தது.
      கடவுளரெல்லாம் தமிழரது என்பதையும், தமிழ் மட்டுமல்ல, தமிழர் மதமும் அறிவியல் அடிப்படையில் சித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.நன்றி.

  16. //”மாமன்னா.. தேவாரமா, சுவடிகளா, எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே” என்று சொல்லியிருந்தால் மறைத்து வைத்தார்கள், ஒளித்து வைத்தார்கள் என்று கருத இடமுண்டு.. மூவர் முதலிகள் வந்து கேட்டால்தான் லாக்கரைத் திறப்போம் என்று வெளிப்படையாகத்தானே கூறியிருக்கிறார்கள்..!//

    அம்பி,

    அவாள் அப்படி சொல்ல முடியாதே, தேவாரச்சுவடிகள் அவர்களிடம் தாம் இருக்கின்றன என்று உறுதி செய்து விட்ட பின்பு தான் மாமன்னன் ராஜராஜன் அங்கு வந்திருக்கிறான் என்பது அவாளுக்கும் தெரியும். அதை விட ராஜ ராஜ சோழனின் சகோதரன் *ஆதித்த கரிகாலனை பார்ப்பனர்கள் கொன்றதால் அவர்கள் மீது மன்னன் கோபம் கொண்டிருப்பதுடன், அவா சொல்வதையெல்லாம் இலகுவில் நம்பமாட்டான் என்பதும் அவர்களுக்கும் தெரியும் அதனால் தான் அவா அப்படி எந்த stunt ஐயும் விட முயற்சிக்கவில்லை. அப்படியிருந்தும் தேவாரசுவடிகளை கொடுக்காமல் இருக்க மூவரும் வரவேண்டுமென்று அடம்பிடித்து ஏமாற்றப் பார்த்தார்கள். அந்த புருடா எல்லாம் ராஜராஜ சோழனிடம் எடுபடவில்லை. 🙂

    *ஆதித்த கரிகாலனை பிராமணர்கள் கொன்றதன் காரணத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பதிலாக திருமுறை ஓதுவதற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறான். (Epi.ind.vol xxii, no.34, pp 213-266) –Book: இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப்போர். Page 73)

    • // அவாள் அப்படி சொல்ல முடியாதே //

      அப்படி சொல்லியிருந்தால்தான் மறைத்தல், ஒளித்தல் என்று கூறமுடியும்.. இது மறுத்தல் வகைப்படும்..

      // *ஆதித்த கரிகாலனை பிராமணர்கள் கொன்றதன் காரணத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பதிலாக திருமுறை ஓதுவதற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறான். (Epi.ind.vol xxii, no.34, pp 213-266) –Book: இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப்போர். Page 73) //

      பாண்டிய மன்னர் வீரபாண்டியனின் தலை கொய்த ஆதித்த கரிகாலரை பாண்டிய நாட்டுப் பார்ப்பனர்கள் கொன்று பழிதீர்த்ததாக கூட ஒரு கருத்து இருக்கிறது.. எதுவாயினும் இது ஒரு அரசியல் கொலை என்பதால்தான் அருள்மொழி வர்மர் எல்லா பார்ப்பனர்களையும் நம்பிக்கையின்றி ஒதுக்கவில்லை.. அவரது தளபதியாகக் கூட ஒரு சோழநாட்டு பார்ப்பனர் (கிருஷ்ணன் ராமன்) பணியாற்றியிருக்கிறார்.. திருமுறை கண்ட ராஜராஜர் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய பெரும் பணிகளில் ஒன்று திருமுறைகளைத் தொகுத்து முதன்மைப்படுத்தியது..

  17. //அது சரி, தில்லைவாழ் ‘தமிழின எதிரிகள்’ ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டும்.. சுவடிகளை காணாமல் போக வைக்க யாக குண்டத்தின் வழியாக கையிலாசத்துக்கு அனுப்பும் எளிய நம்பகமான வழி இருக்கும்போது..?! தங்கள் கருத்து என்ன..?!//

    அம்பி,

    நிகழ்காலத்தில் கூட சிதம்பரத்தில் நடைபெறும் ஊழல்களையும், களியாட்டக் கூத்துக்களையும் வெளியுலகுக்கு முதலில் தெரிவித்து போலீசுக்குப் போனதே தீட்சிதர்களில் ஒருவர் தான். அதை விட ராஜ ராஜ சோழன் மட்டுமன்றி, அவனுக்கு முந்தைய அரசர்களும் திருமுறைகள் எங்கேயோ இருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன் திருமுறைகளின் இருப்பிடத்தை தேடுகிறான் என்ற செய்தி தீட்சிதர்களையும் சென்றடைந்திருக்கும். மற்ற தமிழ் ஏடுகளுக்கு சுவாகா சொல்லியது போல திருமுறைகளுக்கும் சொன்னால், அவர்களில் யாராவது ஒரு தீட்சிதர், மற்றவரில் உள்ள பொறாமையால் உண்மையைச் சொல்லி விட்டால், சுவாகா சொன்னவர்களின் தலை உருளும் என்று பயந்து கூட அவர்கள் யாக குண்டத்தின் வழியாக கைலாசத்துக்கு திருமுறைகளை அனுப்ப தயங்கியிருக்கலாம். 🙂

  18. //திருமுறைகளைத் தேடி, தொகுத்து வழங்கிய நம்பி ஆண்டார் நம்பி அய்யரிடம் சைவப் பெருமக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமய்யா..! //

    எல்லாப் பார்ப்பான்களும் Fraud என்று சைவப்பெருமக்கள் ஒருநாளும் நினைத்ததில்லை. ஞான சம்பந்தர் போல், நம்பியாண்டார் நம்பி போல்ல, பாரதியார் போல பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைத் தேடிப்பிடிப்பது தான் கடினம். 🙂

    //பார்ப்பானை நம்பமுடியாது என்றால், நம்பி ஒரு மலைக் குறவர் என்று ஆய்வுகள் செய்து கண்டுபிடித்து கொள்வோம்.//

    அகத்தியர், தொல்காப்பியர் எல்லோரும் பார்ப்பனர்கள் என்று பல பார்ப்பனர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்திருக்கிறார்கள், தமிழ்க் கடவுள் முருகனே இன்றைக்கு பூணூலோடு நிற்கிறார். உங்களால் இவ்வளவு முடிந்தால்,எங்களால் ஒரு நம்பியை மலைக்குறவர் ஆக்க முடியாதா? 🙂

  19. //2, 3 நூற்றாண்டுகள் கால அவகாசம் இருந்ததே..?!//

    அதன் கருத்து இன்று போல் அன்றும் தீட்சிதர்கள் மத்தியில் போட்டியும், பொறாமையும், அடுத்துக் கெடுக்கும் தன்மையும், பொய்யும் பித்தலாட்டமும் இருந்திருக்கிறது. அதனால் தான் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற காரணத்தால், அவர்கள் திருமுறைகளில் கைவைக்கவில்லை. அதாவது சுவாகா சொல்லத் துணியவில்லை என்றும் கொள்ளலாம். ராஜ ராஜ சோழன் மட்டுமல்ல, அவனுக்கு முந்தைய அரசர்களுக்கும் திருமுறைகள் எங்கேயோ இருக்கின்றன என்பது தெரியும். அதை விட எல்லாப் பார்ப்பனர்களும் தமிழெதிரிகள் அல்ல, அதனால் ஒரு சிலர் திருமுறைகளுக்கு சுவாகா சொல்லும் முயற்சியைத் தடுத்திருக்கலாம். சும்பிரமணிய பாரதியாரைத் தமிழர்களுக்கு தந்த பார்ப்பனர்கள் தான் இன்று எங்களைக் கழுத்தறுக்க சுப்பிரமணிய சுவாமியையும் தந்திருக்கிறார்கள். 🙂

  20. இந்த கட்டுரைக்கான மறுமொழிகள் ஒரு மார்கமாக சென்று கொண்டிருக்கின்றன! மனதில் தோன்றியதை எல்லாம் சொல்லிக் கொண்டே போக வரலாறு என்ன வாரமலர் சிறுகதையா? இருந்தாலும், கண்டினியு பண்ணுங்க. கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

    • உண்மை வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகறிய தாங்கள் கூறுங்கள் வெங்கடேசன் அவர்களே! அவ்விதம் கூறுவிறாயின் இந்த தொல்தமிழினம் தங்களுக்கு நன்றி கடன் பட்டதாகும்!!.[குறிப்பு:என்னை நல்ல தமிழில் பின்னுட்டமிடும்படி திரு.கி.செந்தில் குமரன் பனித்துள்ளார்].

      • ஐயா , உங்கள் பெயரையும் தமிழில் தட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

        • என் நிலையை பின்னுட்டம் 9.4.2.3.1.1.1ல் விளக்கி உள்ளேனே தாங்கள் வாசிக்கவில்லையா?

          • உங்கள் பெயரை தமிழிட்டு, நகலிட்டு [copy] கருத்து பெட்டிக்கு மேல் உள்ள பெயர் பெட்டியில்[Name (required) Box ] பசைக்கவும் [ paste ]

            • சிவ பக்தர்களளே !

              “நட்ட சிவ சிலைக்கு” உயிர் ஊட்ட

              அவர்கள் வேதத்தாலோ அல்லது உங்கள் தேவாரத்தாலோ முடியாது

              நமது குழந்தைகளால் மட்டும் தான் முடியும்.

              அன்புடன்,
              கி.செந்தில் குமரன்

          • -சிவவாக்கியார் –
            நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பஞ் சாத்துகிறீர்
            சுத்தி வந்து முணு முணுவென்று சொல்லு மந்திரமேதடா
            நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
            சுட்ட சட்டி சட்டுவங்கறிச் சுவை அறியுமோ
            ——————————————
            சித்தர் சிவவாக்கியார் அவர்கள் துற்றுவது வேத மற்றும் தமிழ் மரபு படியான முறைகளான மந்திரம் ,சிலை வழிபாட்டை தான் .

            எனவே “நட்ட சிவ சிலைக்கு” உயிர் ஊட்ட நமது குழந்தைகளால் மட்டும் தான் முடியும்.

            • சிவவாக்கியர் கூறுவது நாதனை[தலைவனை] உள்ளே காண்பது பற்றி அதாவது யோகமரபை பற்றி.புற வழியில் பூசிப்போரை யோகமரபினர் பழிப்பது வழக்கம்தான் ஏனென்றால் பக்தியைவிட யோகமே சிறந்த வழி.அவர் கூற்றுபடி கோயிலை யோகமையமாக மாற்றலாம்.பள்ளிகூடமாக அல்ல.

      • [1]கோவில் மண்டபங்கள் எதற்காக பயன்பட்டது என்று ஆய்ந்தால் நலம் !

        [2]ஆடல், பாடல் கலைகளை வளர்க்கவும் மற்றும் வட மொழயை வளர்க்கவும் தானே பயன்பட்டது?

        [3]அதே கோவில் மண்டபங்கள் குழந்தைகளுக்கு பாட சாலை ஆனால் ….., கோவில் தெய்வத்துக்கு உயிர் கிடைக்கும் அன்றோ ?

        [4]”சிவா குரு நாதனை ” பெற்ற இனம் அன்றோ நம் தமிழ் சமூகம் !

        [5 சிதம்பரம் சிவன் கோயிலில் குழந்தைகளுக்கு [சிவா குரு நாதர்களுக்கு ] பாட சாலை அமைக்க உரிமை இல்லை என்றால் அந்த சிவனை நீங்கள் கல்லில் மட்டும் தான் காணமுடியும். அவன் ஆன்மா கோயிலுக்கு வெளியே குழந்தைகளிடம் தான் இருக்கும் !!

        • தமிழ் நாட்டு குழந்தைகள் பள்ளிகூடம் அற்று தவிப்பதாக உங்களுக்கு யார் கூறியது? அரசு தொடக்க பள்ளிகள் குழந்தை சேர்க்கை குறைவினால் ஈராசிரியர் பள்ளிகளாக மாறி வருவதை நீங்கள் அறியவில்லயா?

          • குழந்தைகள் கோவில்களிள் கல்வி கல்வி கற்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

  21. சிவவாக்கியர்
    ————-
    ஓசையுள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய்ச் செய்துமே..
    வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்…
    பூசைக்கு வைத்தகல்லை பூவும் நீரும் சாத்துறீர்.
    ஈசனுக் குகந்த கல் எந்தக் கல்லு சொல்லுமே…?
    ——————————————-

    சொல்லுமே…?

    • சித்தர்கள் தாந்திரிக மரபினர் வைதிகநெறிக்கு எதிரானவர்கள் என்வே புற வழி பூசையை பழிப்பது இயல்பு, நீங்கள் கோயிலை பள்ளியாக்க சிவவாக்கியரை துனைக்கு அழைப்பது நல்ல பகடி.

  22. சிவவாக்கியர்

    கோவிலாவது ஏதடா குளங்கள் ஆவது ஏதடா..
    கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே..
    கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே..
    ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

    • கோவிலையும்,குளத்தையும் தன் மனதிற்குள் கண்டவன் ஆவதும் இல்லை அழிவதும் இல்லை என்று கூறுகிறார்,அதாவது நித்திய தேகம்[அழியாத உடல்] பெறலாம் என்று கூறுகிறார்.ஏற்றுகொள்ள தயார?

      • //ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

        ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது – நியூட்டன்

  23. சிவவாக்கியர்

    கட்டையால் செய்தேவரும் கல்லினால் செய்தேவரும்..
    மட்டையால்செய் தேவரும் மஞ்சலால்செய் தேவரும்..
    சாட்டையால் செய்தேவரும் சாணியால் செய்தேவரும்..
    வெட்டவெளி யதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே…

    • வெட்ட வெளி யோகமரபு கூறும் துவாதசாந்த பெரு வெளி.பவுத்தம் கூறும் மகா சூன்யமும் இதுதான் ஏற்றுகொண்டு பின்பற்றுவீரா.

      • //வெட்டவெளி யதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே…

        வெட்டவெளி யதன்றி ‘[இயற்கை]’ மற்று வேறு தெய்வம் இல்லையே…

        சிவவாக்கியர் கூற்று அறிவியல் பூர்வமாக உள்ளது

          • [1]இயற்கை என்பது இயல்பாக இருப்பது.

            [2]இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம்.

            [3] உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும்.

            Devara nayanar asked://இயற்கை என்றால் என்ன?

            • நல்லது,அந்த இயற்கையில் இருந்து தன்முனைப்பும் தன்னை பொலவே இனத்தை பெருக்க வல்ல உயிர் எப்படி வந்தது? சிவவாக்கியர் கூறும் வெட்டவெளியை அறிய இந்த கேள்வி அவசியம்.

              • [1] உயிர்வேதியியல் எதிர்வினை [biochemical reaction] காரணமாக பூவியில் ஒரு செல் உயிர் அமீபா உருவானது.
                [2]மற்ற உயிர்கள் டார்வின் கோட்பாடு-பரிணாம வளர்ச்சிக் கொள்கை அடிப்படையில் தோன்றின

                • இயற்கை பரிணாமத்தை மனுசனோட நிறுத்திவிட்டது ஏன்? இல்லை மனிதனும் பரிணாம அடைந்து அடுத்த கட்டத்துக்கு போவானா? அப்படி போனா அதுக்கு என்ன பெயர்?

          • devara nayanar asked://இயற்கை என்றால் என்ன?
            என்ன நாயனார் , நக்கீரன் போல கேள்வி கேட்கிறீர்?
            அடுத்த கேள்வி .. செயற்கை என்றால் என்னவா ?

            • சிவவாக்கியர் இயற்கையைதான் வணங்கினார் என்று நீங்கள்தான் கூறினீர் என் கேள்வியில் என்ன தவறு?

          • [1] உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க யாம் தயார் ?
            [2]பதில் உரைத்த பின் தாங்கள், எம் தமிழ் குழந்தைகளுக்கு கோவில்களில் கல்வி அளிக்க தயாரா ?அனுமதி கிடைக்குமா ?

        • மிகைதிருத்தம்:

          //வெட்டவெளி யதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே…

          வெட்டவெளி யதன்றி ‘[— இயற்கை தவிர— ]‘ மற்று வேறு தெய்வம் இல்லையே…

          சிவவாக்கியர் கூற்று அறிவியல் பூர்வமாக உள்ளது

  24. அன்பான சிவ பக்தர்களே !

    “நட்ட சிவ சிலைக்கு” உயிர் ஊட்ட அவர்கள் வேதத்தாலோ அல்லது உங்கள் தேவாரத்தாலோ முடியாது , நமது குழந்தைகளால் மட்டும் தான் முடியும்.

    சித்தர் சிவவாக்கியார் அவர்கள் துற்றுவது வேத மற்றும் தமிழ் மரபு படியான முறைகளான மந்திரம் ,சிலை வழிபாட்டை தான் குழந்தைகள் கோவிலில் கல்வி கற்பதை அல்ல

    • சித்தர்கள் ஜீவ சமாதியில்தான் புகழ் பெற்ற கோயில்கள் உள்ளது.பழனி-போகர்,மதுரை- சுந்தரானந்தர்,திரு அண்ணாமலை-இடைக்காடர்,திருப்பதி- கொங்கனவர்,சிதம்பரம்- பத்ஞ்சலி என்று பட்டியல் நீள்கிறது.சிவவாக்கியர் வைணவ மதத்திற்கு மாறி திருமழிசை ஆழ்வார் என்று பெயர் கொண்டதாக புராணம் உண்டு.

      • என் கேள்விக்கு என்ன பதில் : கோவில் மண்டபங்கள் குழந்தைகளுக்கு பாட சாலை ஆனால் கோவில் தெய்வத்துக்கு உயிர் கிடைக்கும் அன்றோ ?

        //வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே//
        பொருள் :புராணக் கதைகளில் நடந்த வல்லபங்களை கூறி வேறுபடுத்தி பேசுபவர்கள் தன் ஆன்மாவை அறியமாட்டது வாய்புழுத்து மடிவார்கள்.

        சித்தர் சிவவாக்கியார் அவர்கள் துற்றுவது வேத மற்றும் தமிழ் மரபு படியான முறைகளான மந்திரம் ,சிலை வழிபாட்டை தான் குழந்தைகள் கோவிலில் கல்வி கற்பதை அல்ல!!!

        • ஜீவ சமாதிகளை பற்றி நான் கூறியது அவை கோவிலை உயிரோட்டம் உள்ளதாக வைத்திருக்கும் என்ற பக்தர்களின் நம்பிக்கையை சுட்டிகாட்ட.சிவவாக்கியர் ஆன்மாவை அறிவதுதான் சிறப்பு என்று கூறுவதாக நீங்களே கூறுகிரீர் அது பற்றிய தங்கள் கருத்து என்ன?

          • //சிவவாக்கியர் ஆன்மாவை அறிவதுதான் சிறப்பு என்று கூறுவதாக நீங்களே கூறுகிரீர் அது பற்றிய தங்கள் கருத்து என்ன?

            சுய பரிசோதனை அல்லது சுய விமர்சனம்

            • சுய பரிசோதனை ஆன்மாவை அறிவதாவாது.மேலை உளவியல் மனித மனதை உணர்வுறு மனம்[கான்சியஸ் மைன்ட்] ,உணர்வறு மனம்[அன் கான்சியஸ் மைன்ட்] என்று பகுத்துள்ளது.உணர்வறு மனதை தங்களால் ஆளுமை செய்ய முடியாத போது சுயபரிசோதனைதான் ஆன்மாவை அறிவது என்ற வாதம் சிறுபிள்ளைதனமானது.

      • தங்கள் ஊர் கோவில் சிறப்படைந்து,நிறைய பக்தர்கள் வந்தால் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் தானே! அதனாலேயே பண்டிதர்களுக்கும், பாகவதர்களுக்கும் எல்லா ஊரிலும் மரியாதை! ஒரு சிலர் எங்கு சன்மானம் அதிகம் கிடைக்கிறதோ அங்கு சாய்வர்! அப்பனை பாடும் வாயால், சுப்பனை பாடுவேனோ என்றவர் கடைசியில் முட்டையை பாடினாராம்!

        திருக்காளத்தி அப்பனை பாடியவரை, பொன்னும் பொருளும் கொடுத்து தேவ தாசிகள் திருப்பதி அழைத்து சென்றனராம்! பின்னர் சிவனை மறந்தார்! மதுர கவி ஆழ்வாரானார்! இன்று அரசியலில் கட்சி மாறுவதில்லையா!

        • // அப்பனை பாடும் வாயால், சுப்பனை பாடுவேனோ என்றவர் கடைசியில் முட்டையை பாடினாராம்! //

          என்னப்பன் சுப்பனை அலட்சியம் செய்த பிரம்மனே வேலையிழந்து கம்பி எண்ணினான்.. இவர் முட்டையைப் பாட வேண்டிய நிலை வந்ததற்குக் காரணம் அகந்தை.. முருகன் எதைப் பொறுத்தாலும் அகந்தையைப் பொறுக்கமாட்டான்..!

  25. @கி.செந்தில் குமரன்,

    போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
    தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
    ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
    ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே!

    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே!:)

    • //ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே!

      [0]என் கேள்விக்கு என்ன பதில் : கோவில் மண்டபங்கள் குழந்தைகளுக்கு பாட சாலை ஆனால் கோவில் தெய்வத்துக்கு உயிர் கிடைக்கும் அன்றோ ?
      [1] என்ன வியாசன் சிதம்பரம் சிவன் கோயிலில் இராம நாமன் ஒலிக்கிறது
      [2] சைவர் எப்போது வைணவர் ஆனீர் !
      [3]//வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே//
      பொருள் :புராணக் கதைகளில் நடந்த வல்லபங்களை கூறி வேறுபடுத்தி பேசுபவர்கள் தன் ஆன்மாவை அறியமாட்டது வாய்புழுத்து மடிவார்கள்.
      [4]சித்தர் சிவவாக்கியார் அவர்கள் துற்றுவது வேத மற்றும் தமிழ் மரபு படியான முறைகளான மந்திரம் ,சிலை வழிபாட்டை தான் குழந்தைகள் கோவிலில் கல்வி கற்பதை அல்ல!!!

    • //வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே!:)

      [1]சிவவாக்கியார் அவர்கள் துற்றுவது உங்களையும்[சைவர்களையும்] ,வைணவர்களையும் தான்.!

      [2] ஐயா வியாசன், சிவவாக்கியார் பாடல்களை உடைத்து அங்கும் இங்குமாக நகலிட்டு பசைக்க வேண்டாம்.பொருள் மாற்ற வேண்டாம். நான் தொடராக தருகிரேன்

      56 வது பாடல்:
      —————
      தில்லை நாயகன் அவன் திருவரங்கனும் அவன்
      எல்லையான புவனமும் அமர்ந்து ஏகமுத்தியானவன்
      பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
      வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே!

      [3]பொருள் புரிந்ததா ? சிவவாக்கியார் துற்றுவது உங்களையும்[சைவர்களையும்] ,வைணவர்களையும் தான்.

      [4]59 வது பாடல்
      ——————
      போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
      தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
      ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
      ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே

      [5]சிவவாக்கியாரின் 56 வது பாடலையும் 59 வது பாடலையும் ஏன் ஒன்றாய் குழைத்ததீர் ? ஏன் சிவவாக்கியார் மீது இந்த கொலை வெறி தாக்குதல்

      [6] சிவவாக்கியார் சைவ,வைணவ மக்கள் இடம் உள்ள சண்டையை தீர்கத்தான் இந்த இரு பாடல்களும் பாடினார் [தசவதாரம் படம் முதல் 25 நிமிடம் பார்தீர்களா ??]

  26. “எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான்
    முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
    சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
    அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே”

    சிவாயம் என்ற அட்சரஞ் சிவனிருக்கும் அட்சரம்
    உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
    கபாடம்அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
    உபாயம்இட் டழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே. 🙂

    • //எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான்
      முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
      சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
      அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே.//

      பொருள் புரிந்ததா ?
      [1]சிவவாக்கியார் கோவில் உள்ளாகவா தியானம் செய்ய சொன்னார் ?

      [2]மக்கள் திரளும் கோவில் உள்ளாகத்தான் தியானம் செய்ய தான் முடியுமா ?

      [3]…..உள்ளமாகிய கோயிலின் வாசலை திறந்து ஈசனின் நடனங்கண்டு ஆனந்தம் அடைந்து அமைதி பெறலாம் என்று தானே கூறுகினான் !!//கோயிலும் திறந்தபின் அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே

      [4]பார்பனர்கள் தமிழையும் தமிழ் மக்கள் பண்பாட்டையும் சிதைத்தது போல சிவவாக்கியார் பாடல்களையும் நீங்கள் திரித்து பொருள் மாற்ற முயல வேண்டாம் !

      • //மக்கள் திரளும் கோவில் உள்ளாகத்தான் தியானம் செய்ய தான் முடியுமா?// முடியாது.பள்ளிகூடம் மட்டும்தான் நடத்த முடியும்.அண்ணே நீங்க ஆவேசமா பின்னூட்டம் போடுறேன்னு உங்களுக்கு எதிராவே போய்கிட்டு இருக்கீங்க ஆவேசத்தை கொறங்க.

        • தம்பி .., நான் கற்ற பள்ளிகள் மிகவும் எளிமையானவை . ஒரு வகுப்பு இரைச்சல் மறு வகுப்புக்கு கேட்கும்.

          • வகுப்பில் மாணவர்களின் பேச்சொலியும் பக்தர்களின் நாமகோசமும் ஒரே அளவில்தான் இருக்குமா? அண்ணே சீக்கிரமா ஒரு இ.என்.டி யை போய் பாருங்கண்ணே.

  27. வேத மோது வேலையோ வீணதாகும் பாரிலே
    காத காத தூரமொடிக் காதல் பூசை வேணுமோ
    ஆதிநாதன் வெண்ணையுண்ட அவனிருக்க நம்முளே
    கோது பூசை வேதமோது குறித்துப் பாரும் உம்முளே.
    -சிவவாக்கியார்-

    பொருள் புரிந்ததா ?
    இந்த பூமியெங்கும் ஓடி ஓடி ஆசையினால் செய்யும் பூசைகள் மூலம் இறைவனை அடைய முடியுமா?

    • //குறித்துப் பாரும் உம்முளே// அவர் உள்ளே பாத்து தியானம் பன்ன சொல்றார் நாளைலேர்ந்து தியான வகுப்புக்கு போங்க.

      • //குறித்துப் பாரும் உம்முளே//
        “சுய பரிசோதனை அல்லது சுய விமர்சனம் “

  28. சருகருந்தி நீர்குடித்துச் சாரல் வாழ் தவசிகள்
    சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே
    வருவிருந்தோடு உண்டுடுத்தி வளர் மனை சுகிப்பிரேல்
    வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.

    வியாசன் பொருள் புரிந்ததா ?
    உழைத்து உண்டு நல்ல உடைகள் உடுத்தி எல்லாம் சிவன் செயலே என எண்ணி உங்கள் வீட்டிலேயே இல்லறத்தோடிருந்து சகல செல்வ யோகம் ஞானம் மிக்க வாழ்வில் அன்பே சிவமாய் தியானித்து சுகமாய் இருந்து வாருங்கள். ஈசனே உங்களைத் தேடி விருந்தாக வருவான்

    • முக்கியமானத விட்டுட்டு என்ன பொருள்விளக்கம் கொடுக்கிரிய? “வருவிருந்தோடு” அதுக்கு என்ன அர்த்தம்? அடுத்தவன பாத்து காப்பியடிச்சா இப்படிதான்.சொந்தமா யோசிக்கனும்னா.

      • ஐயா தேவாரனயனர்…,

        ஐயா கே எம் தர்மா இங்கு முன்றாம் மனிதர்.அவரை “அடுத்தவன” என என்று மரியாதை குறைவாக பேசவேண்டாம். எமக்கு முயன்று கற்று தான் வழக்கம். தானாக கற்கும் சிவ ” ஞானப்பால் ” எமக்கு கிட்டவில்லை.

        devanayanar said://அடுத்தவன பாத்து காப்பியடிச்சா இப்படிதான்
        நன்றி :

        சிவவாக்கியார் பாடல்களை உரையுடனும் , ஒலியுடனும் இணையத்தில் விளக்கிய “ஐயா கே எம் தர்மா” அவர்களுக்கு மிக்க நன்றி

        http://keyemdharmalingam.blogspot.in/2012/01/531-535.html

        அன்புடன் ,
        கி.செந்தில் குமரன்

    • தேவாரனயனர்…,

      //வருவிருந்தோடு—–>விருந்தினருடன்
      //உழைத்து “–விருந்தினருடன்–” உண்டு நல்ல உடைகள் உடுத்தி

      பொருள் புரிந்ததா ?

      • என்னத்தை புரியருது? யாண்ணே மேதாவிமாரி மத்தவங்ககிட்ட புரியுதா புரியுதான்னு கேக்கிரிய நீங்க மொதல்ல புரிஞ்சுக்க பாருங்க.வருவிருந்துன்னா அதிதி உபசரிப்புண்ணே “அதிதி தேவோ பவ”ன்னு அய்யமாருங்க சொல்றாங்கல்ல அதுண்ணே.அதீதி உபசரனை செய்தால் சிவன் ஒரு நாள் அதிதியா வருவான் என்பது நம்பிக்கைண்ணே.2பாட்ட படிச்சுட்டு குதிக்காம போய் முழுசா படிச்சுட்டு வாங்கண்ணே.

  29. கட்டையாற் செய் தேவரும் கல்லினாற் செய்தேவரும்
    மட்டையாற் செய் தேவரும் மஞ்சளாற் செய்தேவரும்
    சட்டையாற் செய் தேவரும் சானியாற் செய்தேவரும்
    வெட்டவெளி யதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே.
    -சிவவாக்கியார்-

    வியாசன் பொருள் புரிந்ததா ?

    மரக்கட்டையால் செய்த தெய்வச் சிலைகளும், கருங்கல்லினால் செய்த தெய்வச் சிலைகளும், தென்னை மட்டையால் செய்த தேவரும், மஞ்சளால் செய்து வைத்த பிள்ளையாரும், சட்டைத் துணியால் செய்யும் தேவரும், பசுஞ்சாணியால் செய்த தேவரும், வெட்ட வெளியாக உள்ள மெய்ப் பொருளையே காட்டும். நமக்குள் வெட்ட வெளியாக உள்ள மெய்ப் பொருளை அன்றி மற்ற வேறு தெய்வம் ஏதும் இல்லையே.

  30. நன்றி :

    சிவவாக்கியார் பாடல்களை உரையுடனும் , ஒலியுடனும் இணையத்தில் விளக்கிய “ஐயா கே எம் தர்மா” அவர்களுக்கு மிக்க நன்றி

    http://keyemdharmalingam.blogspot.in/2012/01/531-535.html

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

  31. // உண்மை வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகறிய தாங்கள் கூறுங்கள் வெங்கடேசன் அவர்களே!

    நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன். தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?

    பக்தி என்பது வேறு. இதன் அடிப்படையில் விரி பொழில் சூழ் வியன் நாரையூர் விநாயகனையும் ஏற்கிறேன். அவன் நம்பிக்கு அருளியதையும் ஏற்கிறேன்.

    வரலாறு என்பது வேறல்லவா? சொல்வதெற்கெல்லாம் ஏற்கத்தகுந்த ஆதாரம் கொடுத்து பேசினால் அது வரலாறு. இல்லாவிட்டால் அது வாரமலர்.

    தேவார முதலிகள் காலத்துக்கும் ராஜராஜன் காலத்துக்கும் இடையே தேவாரம் முழுதும் மறைந்து போய், தில்லை கோவிலில் மட்டும் ஒரே ஒரு பிரதி இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? இந்த பிரதியை யார் எப்போது தில்லையில் கொண்டு வந்து வைத்தார்கள்?

    • உண்மை வரலாறு உங்களுக்கு தெரியாது ஆனால் மற்றவர் கூறுவது உண்மை வரலாறு இல்லை என்று மட்டும் தெரிகிறது அது எப்படி? என் பின்னுட்டத்தில் வரலாற்று ஆதாரமற்றது இருந்தால் கூறுங்கள்.கோவில்களுக்கு சுவடிகள் வந்த விதம் பற்றி நான் முன்பே கூறிவிட்டேன்.

      • // அந்தகால அரசர்கள் அரண்மனையைவிட பாதுகாப்பான இடமாக கருதியது கோவில்களைதான்,ஏனென்றால் முஸ்லிம் மன்னர்களைதவிர வேறு பகைநாட்டு அரசர்கள் யாரும் கொவில்களை கொளுத்தியதாகவோ,கொள்ளையிட்டதாகவோ,சரித்திரம் இல்லை.தமிழ் சுவடிகள் ஆலயங்கலுக்கு வந்தது அந்த அடிப்படையில்தான் //

        இது அனுமானம். நான் கேட்டது ஆதாரம். பொதுவாக இல்லாமல், தேவாரம் தில்லைக்கு எப்போது, யாரால் கொண்டு வரப்பட்டது என கூறுங்கள்.

        நான் கூறியது உங்களை தனித்து அல்ல.

        // அதன் கருத்து இன்று போல் அன்றும் தீட்சிதர்கள் மத்தியில் போட்டியும், பொறாமையும், அடுத்துக் கெடுக்கும் தன்மையும், பொய்யும் பித்தலாட்டமும் இருந்திருக்கிறது. அதனால் தான் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற காரணத்தால், அவர்கள் திருமுறைகளில் கைவைக்கவில்லை. //

        // அதை விட எல்லாப் பார்ப்பனர்களும் தமிழெதிரிகள் அல்ல, அதனால் ஒரு சிலர் திருமுறைகளுக்கு சுவாகா சொல்லும் முயற்சியைத் தடுத்திருக்கலாம். //

        இதெல்லாம் அனுமானங்கள் தானே. ஆதாரம் என்ன?

        • ஆதாரம் கிடைக்கபெறாமையின் தானே அனுமானம் தேவைப்படுகிறது! மேலும், தீட்ஷிதர்கள் தமிழ் பக்தி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, சேர, சோழ, பாண்டியருக்கு முடிசூட்டியவர்கள் அல்லவா? அரசர்கள் மாறினாலும், தலைனகரம் மாறினாலும், சைவம் எஙகெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் இவர்களின் உறவினரான சிவாச்சாரியார்கள் சென்றிருப்பார்கள் அல்லவா! எல்லாமே சமஷ்க்ரித மயம் ஆனாலும், சைவ சித்தாந்தம் குறைந்த பட்சம் ஒரு குடும்பத்தின் பரம்பரை சொத்தாகவாவது பராமரிக்கப்பட்டு இருக்கலாம்!

          இந்தொனஷியாவில் புத்தர் கோவிலில் ஒரு பட்டர் திருப்பாவை சொல்லி புத்தருக்கு அர்ச்சிக்கிராராம்! பொருள் அறியாமலேயே!

          அனுமானங்களும், சாத்தியகூறு இருப்பின் நம்பலாம்! கண்ணால் கண்ட நேரடி சாட்சி இல்லாவிடினும் சந்தர்ப்ப சூழ்னிலை சாட்சியங்களை வைத்து குற்றவியல் தண்டனை கூட தரப்படுகிறதே ! இங்கு யாருக்கும் தண்டனை பரிந்துரைக்கவில்லையே! இன்னும் என்ன தயக்கம், வெங்கடேசன்?

  32. தேவாரனயனர்…,

    1]நன்றி .//யோகமையமாக மாற்றலாம்

    //கோயிலை பள்ளிகூடமாக அல்ல.

    [2]தேவாரனயனர் .., உங்கள் “பார்பன-வெள்ளாள” மன நிலை புரிகிறது .

    [3]கலை வளர்ச்சி என்ற பெயரில் உங்கள் நாட்டியத்திற்கும் இசை பயிற்சிக்கும் இடம் கொடுக்கும் கோவில் ஏன் நம் குழந்தைகளை கல்வி கற்க அனுமதிகாது ?

    [4]”யோக பயிற்சி,நாட்டியப்பயிற்சி, இசை பயிற்சி” போன்று தானே “தமிழ் மொழி பயிற்சி,அறிவியல் ,கணித பயிற்சியும்” !!!!!

    [5]கோவில்கள் தமிழ் மொழி பயிற்சி,அறிவியல் ,கணித பயிற்சிகளை அனுமதிகாவிட்டால் தமிழ் சமூகம் உருப்படுமா?

    [6] இதற்கு முன்பு கோவில்களில் அவர்கள் வட மொழியையும் நீங்கள் நாட்டிய,இசை பயிற்சிகளையும் மேற்கொண்டது ஏன் ?

    [7] பார்பனன் வேதம் கற்க ,வெள்ளாளன் இசைத்து நாட்டியமாட மட்டும் தான் கோவிலா ?

    [8] உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு கோவிலில் கல்வி கற்க ஏன் இடம் இல்லை ?

    • 1.அவர்[சிவவாக்கியர்] கூற்றுபடி என்பதை வெட்டிவிட்டு பொருள் கொண்டதற்கு நான் பொருப்பல்ல.2.நான் பார்ப்பனரும் அல்ல வெள்ளாளரும் அல்ல,ஆனால் இந்த சாதிக்கு இந்த மனநிலைதான் இருக்கும் என்ற தங்களின் சோசலிச!!!! மனநிலை என்னை வியக்க வைக்கிறது.3.குழந்தைகளின் கல்விக்காக அரசு பள்ளி கல்விதுறை என்ற துறையை தொடங்கி தமிழ்நாட்டு குக்கிராமங்களில் எல்லாம் கல்விசாலை திறந்திருக்கும்போது கோயில் மண்டபங்களில் சென்று படிக்கும் அவலம் அவர்களுக்கு தேவை இல்லை.4.ஆம் 5.வேறு இடங்களில் அவர்கள் அவைகளை பயில்வதால் நிச்சயமாக உருப்படும்.6.வேறு பயிற்சி கூடங்கள் இல்லாததால் கற்றார்கள்,சத்தியமா நான் எந்த நடனமும் கத்துகலை.7.அதுக்கு மட்டும் இல்ல பக்தர்கள் வழிபடவும்.8.அவங்களுக்கு அரசு கட்டிய நல்ல பள்ளிகள் உண்டு.

  33. தேவாரனயனர்…,

    //தமிழ் நாட்டு குழந்தைகள் பள்ளிகூடம் அற்று தவிப்பதாக உங்களுக்கு யார் கூறியது? அரசு தொடக்க பள்ளிகள் குழந்தை சேர்க்கை குறைவினால் ஈராசிரியர் பள்ளிகளாக மாறி வருவதை நீங்கள் அறியவில்லயா?//

    நேரடியான பதில் தேவை !

    உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு கோவிலில் கல்வி கற்க ஏன் இடம் இல்லை ?
    பார்பனன் வேதம் கற்க ,வெள்ளாளன் இசைத்து நாட்டியமாட மட்டும் தான் கோவிலா ?

  34. அஜாதசத்ரு,
    // சம்பந்தருக்கு நாளாக நாளாக தமிழ்பற்றும், மத நல்லிணக்க சிந்தனையும் ஆரம்பித்தது சிலருக்கு பிடிக்கவில்லை! அவரது கல்யாணம் நடந்து கொண்டிருக்கும்போதே, அவரது பந்து மித்திரர்களுடன் , கதவை பூட்டி தீவைக்கப்பட்டது! ஒருவரும் உயிர்தப்பவில்லை! //

    பிரமாபுரத்தில் தொடங்கி திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) வரை தமிழில் தானே பாடினார்! பின்பு எப்படி நாளாக, நாளாக தமிழ் பற்று வளர்ந்தது என்கிறீர்கள்? முதலில் இருந்தே தமிழ் பற்றோடு தானே இருந்தார்?

    திருஞானசம்பந்தர் பதிகங்கள் பெரும்பாலானவற்றில் பத்தாவது பாடலில் சமண-சாக்கிய மதங்களை சாடுவதை காண்கிறோம். அவரது இறுதிப் பதிகமான திருநல்லூர் பெருமணம் பதிகத்திலும் இந்த அமைப்பை பார்க்கிறோம். எனில், நாளாக, நாளாக மத நல்லிணக்கம் வளர்ந்தது என எப்படி கூறுகிறீர்கள்.

    திருநல்லூர் பெருமணத்தில் அவருக்கு திருமணம் நடந்தது. உடன் இருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கர், மற்றும் திருமணதிற்கு வந்திருந்தோர் என அனைவரும் சோதியில் ஐக்கியமாயினர் என்பது பெரிய புராணம். சோதியை தீவைத்தல் என மாற்றியதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?

    திருநல்லூர் பெருமணம் தொடர்பான கல்வெட்டுகள், மற்ற செய்திகளை இங்கே காணலாம்.

    http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=159

  35. வியாசன் மற்றும் தேவாரனயனர் அவர்களே ,

    விளை நிலம் குறுக்கே சால் ஒட்டினால் தான் ,நில தகராறு பொதுவுக்கு வரும், நியாயம் கிடைக்கும். அதுபோல தான் என கேள்விகளும் !

    நேரடியான பதில் தேவை !

    [1] உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு கோவிலில் கல்வி கற்க ஏன் இடம் இல்லை ?

    [2] பார்பனன் வேதம் கற்க ,வெள்ளாளன் இசைத்து நாட்டியமாட மட்டும் தான் கோவிலா ?

    [3]இதற்கு முன்பு கோவில்களில் அவர்கள் வட மொழியையும் நீங்கள் நாட்டிய,இசை பயிற்சிகளையும் மேற்கொண்டது ஏன் ?

    [4]கலை வளர்ச்சி என்ற பெயரில் உங்கள் நாட்டியத்திற்கும் இசை பயிற்சிக்கும் இடம் கொடுக்கும் கோவில் ஏன் நம் குழந்தைகளை கல்வி கற்க அனுமதிகாது ?

    [5]“யோக பயிற்சி,நாட்டியப்பயிற்சி, இசை பயிற்சி” போன்று தானே “தமிழ் மொழி பயிற்சி,அறிவியல் ,கணித பயிற்சியும்” !!!!!

    [6]கோவில்கள் தமிழ் மொழி பயிற்சி,அறிவியல் ,கணித பயிற்சிகளை அனுமதிகாவிட்டால் தமிழ் சமூகம் உருப்படுமா?

    Viyasan said://கம்யூனிசம் பேசிக்கொண்டே தமிழரக்ளைச் சாதியடிப்படையில் பிளவு படுத்தும் குமரனிஸ்டாக்கள் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.//
    viyasan said://செந்தில்குமரன் என்பவர் ஒரு தமிழெதிரிப் பார்ப்பான் என்பது என்னுடைய கருத்து. அவர் கம்யூனிஸ்டாக, சிதம்பரத்து தீட்சிதர்களுக்கு எதிராக போராடும் மனிதவுரிமைக் கழகத்தை ஆதரிப்பது போல் நடித்துக் கொண்டே அவர்களைக் கொச்சைப்படுத்தி உள்வேலை பார்க்கிறார்.//

  36. வியாசன் மற்றும் தேவாரனயனர் அவர்களே ,

    [1] என்னுடைய எளிய கேள்விகளும் அதற்கு உங்கள் மர்மமான அமைதியும், யார் பார்ப்பான-வெள்ளாள மரபின் அட்படையில் சிந்தனை செய்கிறோம் என்பதை உணர்தும் .

    [2] கோவில்கள் பார்பனர் பிறவி சொத்தோ இல்லை சைவ வெள்ளாளர்களின் தனிசொத்தோ அல்ல !

    [3] கோவில்கள் நம் தமிழ் நாட்டின் சொத்து ,எல்லா மனிதர்களுக்குமானது ,பொது சொத்து .

    [4] எனவே கோவில்கலின் பயன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் .

    [5] எனவே தான் கோவில்கள் பாட சாலை ஆகவேண்டும் என கூறுகிறேன்

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

  37. தகவலுக்கு நன்றி! இருந்தாலும் ஒரு கேள்வி! அது எப்படி அய்யா, உங்கள் ஜோதி , சம்பந்தரை மட்டுமல்லாது அவரது சைவ பரிவாரம் அனைத்தையும் ஆட் கொண்டது? நந்தனாரை ஆட் கொண்ட ஜோதியும், சம்பந்தரை ஆட் கொண்ட ஜோதியும், மற்றவர்க்கு அருளாதது ஏன்? கூரத்தாழ்வானையும் அந்த ஜோதிதான் எரித்ததோ?

    எனது கருத்து:

    திருஞானசம்பந்தர் எனும், மிக புத்திசாலியான குழந்தை, அன்னி பெசன்ட் அம்மையாரால் யேசுவின் மறு அவதாரம் என்று போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதைபோல, இறைக்குழந்தையாக இல்லாவிடினும், இறைவியிடம் முலைப்பால் அருந்திய குழந்தையாக , தமிழ்ஸைவ மறுமலர்ச்சிக்காக திட்டமிட்டே வளர்க்கப்பட்டது! அப்பரும் திட்டமிட்டே சைவத்திற்கு, அவரது தமக்கையார் செல்வாக்கினை உபயோகித்து அழிந்துவரும் சமணத்திலிருந்து சைவத்திற்கு கொண்டுவரப்பட்டார்! இதற்கு கல்வெட்டு ஆதாரம் கேட் க மாட்டீர்கள் என நம்புகிறேன்! சாத்தியமானது எது என ஆராயும் பகுத்தறிவு தான் ஆதாரம்!

    • // அது எப்படி அய்யா, உங்கள் ஜோதி , சம்பந்தரை மட்டுமல்லாது அவரது சைவ பரிவாரம் அனைத்தையும் ஆட் கொண்டது? //

      அது என் ஜோதி அல்ல. ஈசனின் ஜோதி. அவன் திருவிளையாடல். சம்பந்தரோடு, அவரது மனைவி, திருமணத்திற்கு வந்திருந்தோர் என அனைவைரையும் ஆட்கொண்டார். அப்படித்தான் சேக்கிழார் பெருமான் சொல்கிறார். பக்தி ரீதியில் இந்த கதையை நம்பலாம். அந்த வகையில், நான் நம்புகிறேன்.

      ஆனால், வரலாற்று ரீதி வேறு. இங்கே சேக்கிழார் சொல்லும் கதையை ஏற்க முடியாது. சம்பந்தர் எப்படி இறந்தார் என்பதற்கு பல சாத்தியக் கூறுகளை (hypothesis) முன்வைக்க முடியும். ஒன்று நீங்கள் சொன்னது. தமிழ் எதிரியான பார்ப்பனர்கள் அவரையும், மற்றவரையும் கோவிலில் வைத்து எரித்து விட்டு, ஜோதி ஆட்கொண்டதாக கதை அளந்தனர் என்பது ஒரு சாத்தியக் கூறு. இதற்கு பார்ப்பனர்களுக்கு தமிழ் மீது வெறுப்பு என்ற பொதுக்கருத்தை நீங்கள் ஆதாரமாக காட்டலாம். வேறொரு சாத்தியக்கூறை நான் கூறுகிறேன். அவர் எதோ வியாதி வந்தோ, முதுமை அடைந்தோ இயற்கையான வகையில் இறந்தார். பெரும்பான்மையோர் இப்படித்தான் இறக்கிறார்கள் என்ற வகையில் சம்பந்தரும் அப்படி இறந்திருக்க முடியும் என்பது இதற்கு ஒரு சான்று. இப்படி அறிவுப் பூர்வமான பல சாத்தியக் கூறுகளை முன்வைக்க முடியும். இவற்றில் எது உண்மை என்பதை ஆதாரங்களை கொண்டுதான் நிறுத்துப்பார்க்க முடியும். ஆதாரங்களின் வலிமையைப் பொறுத்து ஒரு சாத்தியக் கூறின் வலு அமைகிறது. சம்பந்தர் வாழ்க்கையைப் பற்றி பெரிய புராணம் தவிர பெரிய சாட்சி ஏதுமில்லை. பெரிய புராண செய்திகளையும் ஒப்பு நோக்க வெளி ஆதாரம் இல்லாத போது நம்ப முடியாது. எனவே சம்பந்தர் வாழ்வு பற்றி வரலாற்று பூர்வமாக எதுவும் சொல்லிவிட முடியாது என்பதே என் கருத்து.

      திருநாளைப்போவாரை எரித்தார்களா என்ற சர்ச்சையை விடுங்கள். அவரை கோவிலுக்குள் விடாததே எரித்ததற்கு சமம். இதற்கு தில்லை வாழ் அந்தணர்களோடு சேர்த்து, தில்லை வாழ் ஈசனையும் தண்டிக்க வேண்டும். அந்தணர்களை சிகைச்சேதமோ, சிரச்சேதமோ செய்து விடலாம். ஈசனை எப்படி தண்டிப்பது? அவனை புறக்கணிப்பதே தண்டனை என தோழர்கள் சொல்லக் கூடும்! அல்லது பிள்ளைக்கறி கேட்டது போல, இயற்பகையாரின் மனைவியை கேட்டது போல, திருப்புன்கூர் நந்தி விலகியதும் ஒரு விளையாட்டு என சொல்லி மனதை தேற்றிக் கொள்ளலாம்.

      • //ஒன்று நீங்கள் சொன்னது. தமிழ் எதிரியான பார்ப்பனர்கள் அவரையும், மற்றவரையும் கோவிலில் வைத்து எரித்து விட்டு, ஜோதி ஆட்கொண்டதாக கதை அளந்தனர் என்பது ஒரு சாத்தியக் கூறு. இதற்கு பார்ப்பனர்களுக்கு தமிழ் மீது வெறுப்பு என்ற பொதுக்கருத்தை நீங்கள் ஆதாரமாக காட்டலாம்//

        திரு.வெங்கடேசன்,

        நான் கூட இந்தக் கதையை வெறும் கட்டுக்கதையாகத் தான் நினைத்தேன், ஆனால் இளவயது தில்லைத் தீட்சிதர்கள் தள்ளாடும் முதியவராகிய சிவனடியார் ஆறுமுகசுவாமியுடன் நடந்து கொண்ட விதம், நான் பார்த்த காணொளிகளில் அவர்களின் முகங்களில் தெரிந்த மிருக வெறி, அவர்களின் முன்னோர்களும் இப்படியான, செயலை திருநாளைப்போவாருக்கும், மாணிக்கவாசகருக்ம்கு, ஏன் சம்பந்தருக்குக் கூட செய்திருக்கலாம் என்ற எண்ணத் தோன்றுகிறது.

        சிவனடியார் ஆறுமுகசுவாமி செய்த தவறு அவர்களை மீறி, தமிழைப் போற்றி, சிற்றம்பல மேடையில் பாடியது தான். அதைத் தான் சம்பந்தரும் செய்தார், தமிழைப் போற்றினார், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் தீட்சிதர்கள், சுப்பிரமணியம் சுவாமி, தமிழை நீசபாசை என்றழைத்த காஞ்சி சங்கராச்சாரி, ஈழத்தமிழர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்யும் சோ ராமசாமி, இந்து ராம் போன்றவர்களைப் பார்க்கும் போது, அவர்களின் முன்னோர்களில் சிலர் கூட இவர்களைப் போலவே தமிழ் எதிரிகளாக இருந்திருக்கலாம் அல்லவா? அதனால் அவர்கள் தன்னை தமிழனாக அடையாளப்படுத்திய சம்பந்தரை உயிரோடு கொழுத்தி விட்டு, அவர் சோதியுள் புகுந்தார் என்று கதை பரப்பி விட்டிருக்கலாம். அந்தக் கொலையை மறைக்க அவரது திருமணத்துக்கு வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கூட அவருடன் சேர்த்து ஒரே மண்டபத்துக்குள் வைத்து உயிரோடு கொழுத்தியிருக்கலாம் என்று கூட கருதுவதில் தவறேதுமில்லை அல்லவா?

        அண்மைக் கால வரலாற்றைப் பார்த்தால் கூட, பார்ப்பனர்கள் பாரதியாரை எதற்காக ஒதுக்கி வைத்தார்கள், அவர் தன்னை தமிழனாக அடையாளப்படுத்தி தனது பூனூலையும் கழற்றி எறிந்ததால் தானே. அந்த மகாகவியின் இறுதி ஊர்வலத்தில் அவரது உறவினர்கள் ஒரு சிலர் மட்டும் தான் பங்கேற்றனர் அவரது இறுதிச் சடங்கில் மொத்தம் பதினான்கு பேர் தான் கலந்து கொண்டனர்.

        • // அவர்களின் முகங்களில் தெரிந்த மிருக வெறி, அவர்களின் முன்னோர்களும் இப்படியான, செயலை திருநாளைப்போவாருக்கும், மாணிக்கவாசகருக்ம்கு, ஏன் சம்பந்தருக்குக் கூட செய்திருக்கலாம் என்ற எண்ணத் தோன்றுகிறது//

          //அவர்களின் முன்னோர்களில் சிலர் கூட இவர்களைப் போலவே தமிழ் எதிரிகளாக இருந்திருக்கலாம் அல்லவா? //

          அதாவது…
          திருடன் மகன் கண்டிப்பாகத்திருடன்…
          குயவன் மகன் குயவன்….
          நல்லவன் மகன் நல்லவன்…

          இப்படியே போய்க்கொண்டே இருக்கலாம்…இது தான் சாதி வெறி / சாதிய சித்தாந்த்ததின் அடிக்கோள்…

          ஆதாரமில்லாமல் அனுமானம் மேல் அனுமானமாகப்பின்னூட்டம் இட்டுக்கொண்டே போகிறீர்கள்…

          // அந்த மகாகவியின் இறுதி ஊர்வலத்தில் அவரது உறவினர்கள் ஒரு சிலர் மட்டும் தான் பங்கேற்றனர்//

          அப்போ தமிழுக்குக்கொடி பிடித்ததாக நீங்கள் அனுமானிக்கும் மற்ற பார்ப்பனரல்லாதோர் என்ன செய்து கொண்டிருந்தனர்?

          தமிழ் சமூகம்நாசமாகப்போக இத்தகைய சிந்தனைகள் வளர்ந்திருப்பதும் ஒரு முக்கியமான காரணம்…

          இதே ரீதியில் சென்றால் ஒரு நாள் வாயுத்தொல்லையா – பார்ப்பன சதி…பேதியா – எல்லாம் அவாள் செயல் என்று சொன்னாலும் சொல்வீர்கள்…

          • //அதாவது…
            திருடன் மகன் கண்டிப்பாகத்திருடன்…
            குயவன் மகன் குயவன்….
            நல்லவன் மகன் நல்லவன்…
            இப்படியே போய்க்கொண்டே இருக்கலாம்…இது தான் சாதி வெறி / சாதிய சித்தாந்த்ததின் அடிக்கோள்…//

            திரு வீரன்,

            உவமான, உவமேயத்தில் நீங்கள் ஒரு விண்ணனாக இருக்க வேண்டும். தமிழ்ப்பண்டிதர்களையே வென்று விட்டீர்கள். 🙂

            நான் குறிப்பிட்டது குலத்தொழிலையல்ல, குணாதிசயங்களை. எமது முன்னோர்களின் குணாதிசயங்கள் (characteristics) எங்களுக்கு தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவது இயற்கையே.

            • //அப்போ தமிழுக்குக்கொடி பிடித்ததாக நீங்கள் அனுமானிக்கும் மற்ற பார்ப்பனரல்லாதோர் என்ன செய்து கொண்டிருந்தனர்?//
              அக்காலத்தில் அவரது சமுதாயத்தில் எல்லோரும் வெள்ளைக்காரர்களுக்கு கொடிபிடித்துக் கொண்டிருந்தார்களே தவிர, தமிழுக்கல்ல, பாரதியார் மட்டும் விதிவிலக்கு. 🙂

              • //தமிழ் எதிரிகளாக இருந்திருக்கலாம் அல்லவா? //
                இது குனாதிசியமா? சும்மா பூ சுற்ற வேண்டாம்…
                உ தா:
                துரோகம் இழைப்பது தலைமுறை தலைமுறையாக வரக்கூடிய குனாதிசயமா?
                ஒரு மொழிக்கு எதிரான போக்கு தலைமுறை தலைமுறையாக வரக்கூடிய குனாதிசியமா?

                இது சாத்தியமே இல்லாத ஒன்று…

                //அக்காலத்தில் அவரது சமுதாயத்தில் எல்லோரும் வெள்ளைக்காரர்களுக்கு கொடிபிடித்துக் கொண்டிருந்தார்களே தவிர, தமிழுக்கல்ல, பாரதியார் மட்டும் விதிவிலக்கு. :)//

                இதில் ‘அவரது சமுதாயம்’ என்ன?
                – தமிழர் என்றால் விடுகிறேன்…
                – பார்ப்பனர் என்றால் என் கேள்வி: தமிழுக்குக்கொடி பிடித்ததாக நீங்கள் அனுமானிக்கும் மற்ற பார்ப்பனரல்லாதோர் என்ன செய்து கொண்டிருந்தனர்

          • இன்றும் கோவில் கருவறைகுள் புக விடாமல் நம்மை தட்டுப்பது எது ?
            “———பார்பனர்களின் சாதீய அடக்கு முறை———”

            veeran said://இதே ரீதியில் சென்றால் ஒரு நாள் வாயுத்தொல்லையா – பார்ப்பன சதி…பேதியா – எல்லாம் அவாள் செயல் என்று சொன்னாலும் சொல்வீர்கள்…//

      • காரணமில்லாமல் எந்த அதிசயமும் நடப்பதில்லை! திருனாளைபோவாருக்கு கிடைத்த மோட்சமும், திருவாதவூராருக்கு கிடைத்த மோட்சமும் அப்படித்தான்! ஏன், வள்ளலாருக்கும் அப்படித்தான்! தீட்ஷிதர்கள் உள்ளிட்ட மேட்டு குடியினர் அனைவரும் குற்றவாளிகளே! நந்தி விலகியது எதற்கு?நந்தனார் உள்ளே சென்று தரிசிக்கவா? வெளியில் நின்று பார்த்துகொள்ளட்டும், ஆனால் உள்ளே வர அனுமதியில்லை என்ற சிரு சலுகைதான்! ஆனால், ஆறுமுகசாமி போல அருகே சென்று ‘எங்கள்’ ஆடல் வல்லானை தரிசிக்க நினைத்தால்? மோட்சம்தான் வழி!

        சம்பந்தர் திருமண்த்திற்குப்பின் பலகாலம் இருந்தார் எனில், இளம்வயதி எழிதிய பாடல்கள் தவிர ஏனைய பாடல்கள் எங்கே? அவரின் சந்ததி என்று யார் இருந்தார்கள்?

        கன்னி மரியாளுக்கு ஒரு முறைதான் ஆண்டவர் குழந்தை யேசுவை மகவாக அருளினார்! ஆனால் இன்று பல அதிசயங்கள்?, இது போல நடக்கின்றனவே! ஆனால் ஏசு மீண்டும் வரவே இல்லையே ?எதை நம்புவது? எப்படி நம்புவது?

        பெரியார் எல்லா கூட்டத்திலும் மொழிவது, எனக்கு பிடித்தது, திருவள்ளுவர் வாக்கான, ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், மெய்ப்பொருள் காண்பது அறிவு!’

      • // ஈசனை எப்படி தண்டிப்பது? //

        என் பக்தன் ஏன் வெளியே நிற்கிறான், உள்ளே விடுங்கள் என்றுதான் ஈசன் கூறியிருப்பான்.. என்ன செய்து உள்ளே விட வேண்டும் என்றுமா கூறியிருப்பான்..?! அப்படியே கூறியிருந்தாலும், நந்தனார் எரிந்து போயிருந்தால் அவர் எப்படி நாயனார் ஆகி இருப்பார்..?! அக்னி பிரவேச மூடத்தனத்துக்கு ஆடவல்லான் கொடுத்த அடியல்லவா அது..

        • ஈசனை எத்ற்கு தண்டிப்பது? அவர்தான் ஏற்கெனவே கல்லாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறாரே!கடவுள் ஏன் கல்லானார்? பிழைப்புவாதிகளின் புராண குப்பைகளை களைந்து, மக்களை இன்னும் அறியாமையிலேயே வைத்திருக்கநினைக்கும் சுயனலக்காரர்களின் பிடியிலிருந்து விடுதலை அல்லவா செய்யவேண்டும்!

  38. [1]devaranayanar said://சித்தர்கள் தாந்திரிக மரபினர் வைதிகநெறிக்கு எதிரானவர்கள் என்வே புற வழி பூசையை பழிப்பது இயல்பு, //

    சிவவாக்கியர், உங்கள் இந்து மத பார்ப்பான-வெள்ளாள மரபின் அடிப்படை அம்சங்களான வேத மற்றும் தமிழ் மரபு படியான முறைகளான மந்திரம் ,சிலை வழிபாட்டை கறி துப்புவது புரியவிலையா ?

    [2]devanayanar said://நீங்கள் கோயிலை பள்ளியாக்க சிவவாக்கியரை துனைக்கு அழைப்பது நல்ல பகடி.//
    [i]கோவில்களில் உள்ள இந்து மத பார்ப்பான-வெள்ளாள மரபினை கறி துப்பும் சிவவாக்கியரின் மனப்பாங்கு,மன ஓட்டம் உமக்கு புரியவிலையா ?

    [ii]கோவில்கள் பார்பனர் பிறவி சொத்தோ இல்லை சைவ வெள்ளாளர்களின் தனிசொத்தோ அல்ல ! கோவில்கள் நம் தமிழ் நாட்டின் சொத்து ,எல்லா மனிதர்களுக்குமானது ,பொது சொத்து . எனவே கோவில்கலின் பயன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் .எனவே தான் கோவில்கள் பாட சாலை ஆகவேண்டும் என கூறுகிறேன்

    • சிவவாக்கியர் பாடல் குறித்து நான் எழுப்பிய பல கேள்விக்கு பதில் அளிக்காமல் கள்ள மவுனம் சாதித்து கீரல் விழுந்த ரெக்கார்டு போல் சொன்னதையே திரும்ப சொல்லும் செந்தில் அவர்களே! உங்கள் இஸ்லாமிய- கிரிஸ்தவ மனநிலை நன்றாக புரிகிறது.

      • //உங்கள் இஸ்லாமிய- கிரிஸ்தவ மனநிலை நன்றாக புரிகிறது.
        சித்தர் சிவவாக்கியர் எப்போது இஸ்லாமிய,கிரிஸ்தவ வாழ்கை முறைமைக்கு மாறினார் ?

        ஏன் இந்த வீண் கூச்சல் “உங்கள் இஸ்லாமிய- கிரிஸ்தவ மனநிலை நன்றாக புரிகிறது.”

  39. தேவாரனயனர் அவர்களே ,

    “பார்பன-வெள்ளாள மன நிலை” பொருள் புரியவிலையா ?

    [1]வல்லோன் எளியோனை வதைக்கும் மன நிலை!
    [2]பார்பனர்களின் சாதீய அடக்கு முறை
    [3]வெள்ளாள-நில பிரபுத்துவ அடிமைத்தனம்

    // நான் பார்ப்பனரும் அல்ல வெள்ளாளரும் அல்ல,ஆனால் இந்த சாதிக்கு இந்த மனநிலைதான் இருக்கும் என்ற தங்களின் சோசலிச!!!! மனநிலை என்னை வியக்க வைக்கிறது//
    [4]சாதீய ,நில பிரபுத்துவஅடிமைத்தனத்திற்கு எதிராக பொது உடைமைவாதிகள் பேச கூடாதா ?

    //கோயில் மண்டபங்களில் சென்று படிக்கும் அவலம் அவர்களுக்கு தேவை இல்லை//
    [5]என்ன அவலம்??

    //வேறு இடங்களில் அவர்கள் அவைகளை பயில்வதால் நிச்சயமாக உருப்படும்//
    [6]குழந்தைகள் கோவில்களிள் கல்வி கல்வி கற்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

    //வேறு பயிற்சி கூடங்கள் இல்லாததால் கற்றார்கள்,சத்தியமா நான் எந்த நடனமும் கத்துகலை

    [7]ஆம் அந்த காலத்தில் வேறு பயிற்சி கூடங்கள் இல்லை தான். ஆனால் பார்பன-வெள்ளாள மக்கள் மட்டும் கோவில் உள் அனுமதிக்கப்பட்டு ,அவர்களின்[பார்பன-வெள்ளாள] மக்கள் குழந்தைகள் ” மட்டும் ” கோவில் உள் கல்வி கற்றனர்.

  40. தேவாரனயனர் அவர்களே ,

    [1]தொல் தமிழ் நாட்டின் கோவில் மற்றும் சைவமத வரலாற்றை பக்கம் பக்கமாக இங்கு கூறும் உங்களுக்கு ,பார்பனர்களின் சாதீய அடக்கு முறை,வெள்ளாள-நில பிரபுத்துவ அடிமைத்தனம் பற்றி தெரியாதா ?

    [2]இன்றும் கோவில் கருவறைகுள் புக விடாமல் நம்மை தட்டுப்பது எது ?
    “———பார்பனர்களின் சாதீய அடக்கு முறை———”

    [3]தருமபுரி மாவட்டதில் ‘இளவரசன்’ ஊரை முற்றுகை இட்டு தலித் மக்களின் வாழ்வாதரங்களை அழித்தது யார் ? ராஜா பட்சவா ? இல்லை வெள்ளாள-நில பிரபுத்துவ அடிமைத்தனமா ?
    “————-வெள்ளாள-நில பிரபுத்துவ அடிமைத்தனம்———-”

    devaranayanar said://நான் பார்ப்பனரும் அல்ல வெள்ளாளரும் அல்ல,ஆனால் இந்த சாதிக்கு இந்த மனநிலைதான் இருக்கும் என்ற தங்களின் சோசலிச!!!! மனநிலை என்னை வியக்க வைக்கிறது//

  41. ஆம் அந்த காலத்தில் வேறு பயிற்சி கூடங்கள் இல்லை தான். ஆனால் பார்பன-வெள்ளாள மக்கள் மட்டும் கோவில் உள் அனுமதிக்கப்பட்டு ,அவர்களின்[பார்பன-வெள்ளாள] மக்கள் குழந்தைகள் ” மட்டும் ” கோவில் உள் கல்வி கற்றனர்.

    devaranayanar said://வேறு பயிற்சி கூடங்கள் இல்லாததால் கற்றார்கள்,சத்தியமா நான் எந்த நடனமும் கத்துகலை

  42. என் தீர்வு :

    “கோவில்கள் பார்பனர் பிறவி சொத்தோ இல்லை சைவ வெள்ளாளர்களின் தனிசொத்தோ அல்ல ! கோவில்கள் நம் தமிழ் நாட்டின் சொத்து ,எல்லா மனிதர்களுக்குமானது ,பொது சொத்து . எனவே கோவில்கலின் பயன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் .எனவே தான் கோவில்கள் பாட சாலை ஆகவேண்டும் என கூறுகிறேன்”

  43. தேவாரனயனர் அவர்களே ,

    உங்களின் அனைத்து நுட்பமான கேள்விகளுக்கும் நான் பதில் அளிக்க தயார் .தாங்கள் என் எளிமையான கேள்விகளுக்கும் நான் பதில் அளிக்க தயாரா ?

    என் தீர்வு :
    “கோவில்கள் பார்பனர் பிறவி சொத்தோ இல்லை சைவ வெள்ளாளர்களின் தனிசொத்தோ அல்ல ! கோவில்கள் நம் தமிழ் நாட்டின் சொத்து ,எல்லா மனிதர்களுக்குமானது ,பொது சொத்து . எனவே கோவில்கலின் பயன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் .எனவே தான் கோவில்கள் பாட சாலை ஆகவேண்டும் என கூறுகிறேன்”

    என் தீர்வு சரியா தவறா ?

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

    • மிகைதிருத்தம்: நான்—> நீங்கள்

      உங்களின் அனைத்து நுட்பமான கேள்விகளுக்கும் நான் பதில் அளிக்க தயார் .தாங்கள் என் எளிமையான கேள்விகளுக்கும் ” நான் ” பதில் அளிக்க தயாரா ?

      நான்—> நீங்கள்

      உங்களின் அனைத்து நுட்பமான கேள்விகளுக்கும் நான் பதில் அளிக்க தயார் .தாங்கள் என் எளிமையான கேள்விகளுக்கும் ” நீங்கள் “பதில் அளிக்க தயாரா ?

    • என் கேள்வியும் எளிய கேள்விதான்.//கொவில்கள் பாட சாலை ஆக வேண்டும்// திரும்ப திரும்ப ஒரே கேள்வி அதே பதில கூற எனக்கு அலுப்பா இருக்கு.

  44. என் உள் இருப்பது பொது உடமை சிந்தனை !
    உங்கள் உள் மெய்பொருள் என்ன ? RSS BJP-பார்பன இந்து மத கொள்கையா ?
    devaranayanar said://உங்க உள்ள இருக்குற மெய்பொருளை உடனே தேட ஆரம்பிங்க.

    • கணம் கோர்ட்டார் அவர்களே,
      அப்படியே சட்டமன்றமாய் இருந்து மருத்துவமனையான கட்டிடடத்தையும் பள்ளிக்கூடமாக்க வேண்டும். நுங்கம்பாக்கம் நடுவில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தை ரியல் எஸ்டேட் ஆசாமிகளிடம் கொடுத்தால் கோடி கோடியாக லம்பாக கிடைக்கும். அதை வைத்து இன்னும் நிறைய பள்ளிகள் கட்டலாம். அண்ணா நூலகம் படித்தவர்கள் மட்டுமே பயன் படுத்த முடியும். பொதுசொத்தான அது அனைவருக்கும் பயன்படும்படி டாஸ்மாக் கடையாக்கலாம். பூங்காக்களில் இளைப்பாரவெல்லாம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு நேரம் கிடையாது. எனவே பூங்காக்களை பேருந்து நிலையமாக்கலாம். இப்படி ஒன்றை மற்றொன்றாக மாற்றி செத்து செத்து விளையாடலாம். முடிவில் அதிமுகவில் சேர்ந்து விடலாம்.

      ——————————————————

      கோவிலை எப்படி பள்ளிக்கூடமாக்குவீர்? கருவறையில் ஒன்னாம் வகுப்பு, அர்த்த மண்டபத்தில் இரண்டாம் வகுப்பு, குளக்கரையில் மூன்றாம் வகுப்பா? மொத்தமாக இடித்து விட்டுதான் பள்ளிக்கூடமாக்க முடியும். அப்படி செய்தால் கோவில் அமைந்துள்ள நிலம் மட்டும் கிடைக்கும். பள்ளிக்கூடம் அமைக்க அரசுக்கு நிலப் பஞ்சமா உள்ளது? அப்படியே தேவை என்றால், அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தை பயன்படுத்தலாமே! கோவில்களை எதற்கு இடிக்க வேண்டும்?

      அல்லது கோவில் மண்டபங்களில் மாலை வேளைகளில் தனிப் பாடம் நடத்துவது பற்றி கூறுகிறீரா? அவசியம் செய்யலாம். சில கிராமப்புற கோவில்களில் இப்படி ஏற்கனவே நடப்பதை நான் கண்டிருக்கிறேன். எனக்கிதில் உடன்பாடு உண்டு.

      • Dear Venaket,

        Your wishes like changing of vallurvar kotam to real estate ,library to tasmac are very different from my idea ‘use of temple place for educating children’

        So I can not accept u r wishes.

        But
        you said://அல்லது கோவில் மண்டபங்களில் மாலை வேளைகளில் தனிப் பாடம் நடத்துவது பற்றி கூறுகிறீரா? அவசியம் செய்யலாம். சில கிராமப்புற கோவில்களில் இப்படி ஏற்கனவே நடப்பதை நான் கண்டிருக்கிறேன். எனக்கிதில் உடன்பாடு உண்டு.//
        It is Good
        If there is a will then only there is a way

        with regards,
        K.Senthil kumaran

    • @கி.செந்தில் குமரன் – அங்கிங்கெனாதபடி எல்லா topic லயும் புகுந்து உங்க மொக்க கேள்விகளுக்கு சிவப்பு சாயம் பூசி பதில் சொல்லு பதில் சொல்லுனு டார்ச்சர் பண்ணுவதால் இன்று முதல் வினவின் காமெடி பீஸ் என வழங்கபடுவீராக.

      • //இன்று முதல் வினவின் காமெடி பீஸ் என வழங்கபடுவீராக.

        Thanks for offering new degree.

        Thiru kalivanar is having more knowledge then MGR

      • //மொக்க கேள்விகளுக்கு சிவப்பு சாயம் பூசி

        If my questions are sharp less[மொக்க] then why do not u try for answering my questions?

        If u start answering my sharp less [மொக்க] questions then only your mind will be shown here.

        Let u try for answering my questions

      • உங்கள் கொள்கையின் நிறம் என்ன ?
        “காவி ” பயங்கரவாதமா ? இல்லை “பச்சை” அடிப்படைவாதமா ?

        kaapi said://கேள்விகளுக்கு சிவப்பு சாயம் பூசி பதில்

  45. திரு.வெங்கடேசன் அவர்களே, மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திர நடுநிலை பள்ளி கட்டிடம் இடிந்து விட்டது என ஏறக்குறைய 1ஆண்டு காலத்திற்கு மேலாக மன்னார்குடி ராஜகோபால சாமி கொவில் மண்டபத்தில் பள்ளியை நடத்தினார்கள்.எப்படா கட்டிடத்தை கட்டி முடிப்பார்கள் என ஆசிரியைகளும்,மாணவர்களும் பட்ட துயரம் நான் அறிவேன்.விதண்டா வாதம் பேசும் செந்தில் குமரனிடம் எப்படி வாதம் செய்வது.

  46. செந்தில் குமரன் கேக்கிறார்//நீங்கள் நாட்டிய,இசை பயிற்சிகளையும் மேற்கொண்டது ஏன்?// நான் எப்பண்ணே அதெல்லாம் மேற்கோண்டேன் என்னாச்சு உங்களுக்கு?

    • //நான் எப்பண்ணே அதெல்லாம் மேற்கோண்டேன் என்னாச்சு உங்களுக்கு?

      hello devaranayanar, my questions are very clear.

      [1] உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு கோவிலில் கல்வி கற்க ஏன் இடம் இல்லை ?

      [2] பார்பனன் வேதம் கற்க ,வெள்ளாளன் இசைத்து நாட்டியமாட மட்டும் தான் கோவிலா ?

      [3]இதற்கு முன்பு கோவில்களில் அவர்கள் வட மொழியையும் நீங்கள் நாட்டிய,இசை பயிற்சிகளையும் மேற்கொண்டது ஏன் ?

      you r trying to skip from valid and logical questions. Here “நீங்கள்” refers “வெள்ளாளன்” and ‘அவர்கள்’ refers ‘பார்பனன்’.

  47. I said in feed back 9.4.2.1: //You do not know how to write your name in Tamil!!!!?
    “thevaranayanar”!!!!!!!? use either any one of the language here. Do not mix Tamil and English.//

    Devaranayanar replay:9.4.2.1.1//ராமனை திட்டும் உங்கள் பெயர் ஏன் ராமசாமி என்று உள்ளது என பெரியாரை கேட்ட அதே புத்திசாலிதனமான???!! கேள்வியை என்னை கேக்கிறார் செந்தில்……….

    All this feed backs shows your great understanding level! Good! keep it up!
    Till now u r writing your name in English and comments in Tamil. Why?

    • என் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதால் என்னுடன் விவாதிப்பது கடினம் என்ற வாதம் அற்புதம்.இதில் வெளிபடுவது தங்கள் குட்டி முதலாளிய தன்னகங்காரம்[நன்றி:வினவு] மட்டுமே.நீங்கள் கம்னிஸ்டு என்று கூறுவது உண்மை கம்ணியுஸ்டுகளை அவமதிப்பதாகும்.எனவே நீங்கள் கம்னியுஸ்ச முகமூடியை அகற்றி விட்டு விவாதத்தை தொடருங்கள்

      • Your interest in Communism and Tamil Language is excellent !!!! Yes I am going to prove it in the following way! I am telling u to write your name also in Tamil in the heading of your message. That’s all!

        You only put the precondition for discussion that…
        //”தமிழில் எழுதாதவரை இவருடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை”//

        Who said this!!!: YOU!!//லண்டன் துரை, இங்கிலிபிஸ்லதான் கதப்பிங்களா? உழைக்கும் மக்களுக்காக போராட போரதா சொல்ற உங்களுக்கும் நீங்கவுடுர பீட்டருக்கும் சம்மந்தம் இல்லையே வினவு தமிழ்தளம்தானே???!!

        Who said this!!!: YOU!!//என் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதால் என்னுடன் விவாதிப்பது கடினம் என்ற வாதம் அற்புதம்.//

        wHO SAID THIS!!!: YOU!!//இங்கிலாந்து உழைக்கும் மக்களுக்காக பின்னுட்டமிட்ட தங்களை புரிந்துகொள்ளாமைக்காக வருந்துகிறேன்.//

        Who said this!!! YOU!!//இதே காரணத்திற்காக மறுக்கலாம்.தமிழ்நாட்டு கோவில்களில் தமிழில் பாடுவது தீட்டு என நினைக்கும் பார்ப்பனருக்கும் தமிழ் தளத்தில் தமிழில் எழுதுவது தீட்டு என நினைக்கும் இவருக்கும் என்னளவில் வேறுபாடு இல்லை.தமிழில் எழுதாதவரை இவருடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை.நன்றி//

        Now tell me…. who is having capitalistic ego “குட்டி முதலாளிய தன்னகங்காரம்” ?

      • //என் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதால் என்னுடன் விவாதிப்பது கடினம் என்ற வாதம் அற்புதம்.//
        am I telling u this? No. You only told me that “தமிழில் எழுதாதவரை இவருடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை”

        From the beginning I am telling u only to write your name in the heading of your comment also in Tamil language!

        You only put the precondition for discussion that…
        //”தமிழில் எழுதாதவரை இவருடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை”//

  48. செந்தில் குமரன் கேக்கிறார்://மக்கள் திரளும் கோவில் உள்ளாகத்தான் தியானம் செய்யதான் முடியுமா// நான் சொல்கிறேன்: முடியாதுதான், ஆனால் பள்ளிகூடம் நடத்த மட்டும் முடியுமா? கோவிலில் மக்கள் கூட்டம் மட்டுமே பிரச்சனை அல்ல.இன்று கொவில் எளிய மக்களின் திருமண கூடமாக உள்ளது.திருமணத்தில் ஒலிபெருக்கியில் நாதஸ்வர இசையும்,மந்திரமும் ஒலிக்கும் என்பது நமக்கு தெரியும்.அப்பொழுதெல்லாம் பள்ளிக்கு விடுமுறை விடவேண்டுமா?பதில் சொல்லுங்கள் செந்தில் அவர்களே!!

    • ஐயா தேவாரனயனர் அவர்களே ,

      [1]மனம் இருந்தால் மட்டுமே மார்க்கம் உண்டு

      [2] திருமணம்[5 am to 8 am],பள்ளிகூடம்[9 am to 4 pm],வழிபாடு[5pm to 10 pm] என்ற நேர திட்டத்தில் இயங்கினால் ,யாவும் நலமே !

      அன்புடன் ,
      கி.செந்தில் குமரன்

      • அப்படி செய்ய இயலாது 1.திருமண நேரம் ஆகிய முகூர்த்தம் என்பது மதநம்பிக்கை சார்ந்த விசயம் அதை நீங்களோ நானோ கட்டாய படுத்தி குறிப்பிட்ட நேரத்திற்குள் வைக்கும்படி கூற இயலாது. 2.வழிபாட்டு நேரமும் அப்படிதான் அதையும் மாற்றமுடியாது.

  49. devaranayanar said://உங்க உள்ள இருக்குற மெய்பொருளை உடனே தேட ஆரம்பிங்க.
    என் உள் இருப்பது பொது உடமை சிந்தனை !
    உங்கள் உள் மெய்பொருள் என்ன ? RSS BJP-பார்பன இந்து மத கொள்கையா ?

    • viyasan refers ://அமெரிக்க ஜனாதிபதி பேசும் போது வானத்திலிருந்து Angels அல்லது வான தூதர்கள் வந்திறங்குவதைப் பார்த்ததாகவும் கூறியுள்ளார். //

      Yes I came to remember the genocide held in 2009.

      Just because of President Obama words about sending war ship to EElam to rescue Tamil people YOU PEOPLE AND LTTE WERE CHEATED BY usa!!!

      Till now that incident flashing in my mind painfully.

    • Dear viyasan..,

      [1]Not only this also every thing I have read from your blog.

      [2]You worked hard for collecting facts and info about eelam.Good Job.

      [3]Most of the essays are showing the pains of the eelam people.

      [4]Some essays are showing your pride about dominating cast[vellalar] of jafna
      ex
      http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_18.html

      [5]Some essays are showing your confused thinking
      ex
      http://www.viyaasan.blogspot.in/2013/05/blog-post_18.html

      [6]Since you are working hard for the formation of Tamil Eelam, My advice for you is please read the books related to working class and national race issues.And try to get a solution for our eelam issues. Till that your mind will be in a “confused-schizophrenia” state.I am very sorry to say this!

      [7] There is no short cut method for Eeelm formation.

      Note :
      I “understand” the inner meaning of the link u refereed me.
      http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_13.html
      I am sorry to say that I have seen that person in your faces.

      With real care,
      K.Senthil kumaran

    • Just because Thamsanqa Jantjie do not know sign language and he is a Ex-schizophrenia person ,he did this blender mistake! BUT

      [1]How did u expect support from Indian government which killed Eelam people along with Sri lankan raja batcha gov? What is the logic or tactic in your action?//இந்தியாவின் ஆத‌ர‌வில்லாம‌ல் த‌மிழீழ‌ம் ஒருபோதும் அமைய‌ப் போவ‌தில்லை, அதை இந்தியா அனும‌திக்க‌ப் போவ‌துமில்லை.//
      http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_3.html

      [2]What is the intention of showing your “Jafna Vellala pride” through your blog even in this pain full time of Eelam people?
      http://www.viyaasan.blogspot.in/2013/04/blog-post_18.html

      Do not you think all these attitudes are showing your “schizophrenia” mind set?????

    • நண்பர் வியாசன் அவர்களே!அவருக்கு சைகை பாசை மொழிபெயர்ப்புதான் தெரியாதாம் சித்தர் பாடல்களின் பொருள் குறிப்பாக சிவவாக்கியர் பாடல்களின் பொருள் நன்றாக தெரியுமாம்.நிலமை இப்படி இருக்க நீங்கள் அவரை அவமதித்து விட்டதாக வழக்கு தொடர வாய்ப்புள்ளது பார்த்துகொள்ளுங்கள்.

  50. ஐயா தேவாரனயனர் அவர்களே ,

    நீங்கள் இடும் பின்னுட்ங்கள் உங்கள் மன எரிச்சலை வெளிக்காட்டுகின்றன.

    நீங்கள் எந்த கொள்கை அடிப்படையில் விவாதம் செய்கின்றீர் என் கூறினால் நலம் .

    பொதுஉடமையா ? பெரியாரின் கொள்கையா ? பார்பன-இந்து மத கொள்கையா? சிதர்களின் கொள்கையா? வள்லளார் கொள்கையா ?

    கூறினால் தான் மேலும் விவாதிக்க இயலும்

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

    • பெரியாரை ஒரு சார்வாக ரிசியாக தான் காண்பதாக கன்னட தலித் இயக்க தலைவர் ஏ.டி.நாகராஜ் ஒரு முறை கூறினார்[காலச் சுவடு நேர் காணலில் என்று நினைவு] மேலும் இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே.பொதுவுடமை சித்தாந்தத்தில் மனித மனங்கள் கவனத்தில் கொள்ளபடவில்லை என்பது முக்கிய குறைபாடாக உள்ளது.[பிராய்டியம் வந்த பிறகு மார்க்சியத்தின் கவர்ச்சி குறைந்தது என்ற வாதம்] மாறாக இந்திய யோக மரபு ஆழ்மன விழிப்பை பற்றி பேசுகிறது.இரண்டும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும் வகையிலே உள்ளது என்பது என் கருத்து.ஒட்டுமொத்த இந்து மரபை பார்ப்பானியம் என்று புறந்தள்ளுவது முட்டாள்தனம். தேவிபிரசாத் சட்டோபாத்யாயா,டி.டி.கோசாம்பி போன்ற மார்க்சிய அறிஞர்களின் நூல்களை வாசித்தால் இந்தமுடிவிற்கு நீங்கள் வரமாட்டீர்கள் என நினைக்கிறேன்.பெயரிலே சிவனை உடைய சிவவாக்கியரை நாத்திகவாதம் பேசும் நீங்கள் துனைக்கு அழைக்கையில் நான் பெரியாரை துனைக்கழைப்பதில் என்ன தப்பு.பெரியார் தமிழர்களின் சொத்து.

      • இல்லாத கடவுளுக்கு, எழுதாத வேதம்! அதைப்படித்து புரிந்து கொள்ள முடியாதால், அதற்கு நூற்றியெட்டு உபநிஷத்துகள்! அவற்றையும் சூத்திரன் படிக்ககூடாது என்பதால், பதினெட்டு புராணங்கள் ! அவற்றிலும் சங்கரன் தொகுத்தது எட்டு மதங்கள் அல்லது நெறிகள்! இது எதுவுமே தமிழருக்கு உரித்தானது அல்ல! தமிழனை, தமிழை இழிவு படுத்தும் ஒரு கூட்டத்தார் கைவசம் மாட்டி கொண்டவை! பெரியார் இவற்றை படித்து வாதிடவில்லை! சுயமரியாதை உள்ள சாதாரண மனித மூளைக்கு எட்டியதைதான் கேட்டார்! சாமி கண்ணை குத்தும் என்று சிரு பிள்ளைத்தனம் அவரிடம் இல்லை! எதையும்நாசுக்கு,முகதாட்சனியமின்றி கேள்விகெட்டு தெளிவானவர்! அவர் துணைக்கு ட்ட் கொசாம்பி, தேவிபிரசாத்சட்டோபதியாயா கருத்துக்கள் பெரியாரை எப்படி கட்டுபடுத்தும்? அவரவர் கருத்து அவரவர் அனுபவ அறிவை பொறுத்ததே! யாராவது ஒப்பாராய்ச்சி செய்து எழுதலாமே!

      • ஐயா தேவாரனயனர் அவர்களே ,

        நமது அறிவு ஆசாசன்,தமிழர் வாழ்வியல் வழிக்காட்டி பெரியாரை துனைக்கு அழைக்கும் நீங்கள்……….,

        “அப்படி செய்ய இயலாது 1.திருமண நேரம் ஆகிய முகூர்த்தம் என்பது மதநம்பிக்கை சார்ந்த விசயம் அதை நீங்களோ நானோ கட்டாய படுத்தி குறிப்பிட்ட நேரத்திற்குள் வைக்கும்படி கூற இயலாது. 2.வழிபாட்டு நேரமும் அப்படிதான் அதையும் மாற்றமுடியாது.”

        என கூறி பார்பன இந்து மத மூட பழக்க வழக்கங்களை ஆதரிப்பது ஏன் ?
        ஏன் இந்த சுய முரண்பாடு ??

        அன்புடன் ,
        கி.செந்தில் குமரன்

        deavranayanar said://….பெரியார் தமிழர்களின் சொத்து. feed back: 52.1
        devaranayanar said://1.திருமண நேரம் ஆகிய முகூர்த்தம் என்பது மதநம்பிக்கை சார்ந்த விசயம்…… feed back: 49.1.1

        CON…..

        • இதற்கான பதில் பின்னூட்டம் 57.1ல் உள்ளது[ஒரே கேள்வியை ஏன் பல இடங்களில் பின்னூட்டமிருங்க?]

      • ஐயா தேவாரனயனர் அவர்களே ,

        எங்கள் பெரியாரை துனைக்கு அழைக்கும் நீங்கள்……….,

        “இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே”

        [1]என கூறி பெரியாரையும் பார்பன இந்து மத சாக்கடையில் நிங்கள் தள்ளுவது ஏன் ?
        [2]பார்பனர்கள் தமிழையும் தமிழ் மக்கள் பண்பாட்டையும் சிதைத்தது போல பெரியாரையும் அவரின் கொள்கைகளையும் நீங்கள் திரித்து பொருள் மாற்ற முயல வேண்டாம் !
        [3]இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் பற்றி அடுத்த மறுமொழியில் கூறுகிரேன்

        DEVRANAYANAR SAID://இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே.//

        அன்புடன் ,
        கி.செந்தில் குமரன்

        • சார்வாகம் ஒரு பார்பானிய தரிசனம் என்னும் தங்கள் தத்துவ அறிவு??!! என்னை புல்லரிக்க வைக்கிறது.சாங்கியம்,நியாயம்,யோகம் போன்ற தரிசன மரபு பற்றி மேலோட்டமான விளக்கமாவது நீங்கள் கொடுத்தால் தான் இந்துமதம் பற்றி தங்களுடன் விவாதிக்க இயலும்

          • This is the commnet you should say only to Jayamohan.
            Till now i am not registering my openion about Sarvakam. But u are telling lie that

            //சார்வாகம் ஒரு பார்பானிய தரிசனம் என்னும் தங்கள் தத்துவ அறிவு??!! என்னை புல்லரிக்க வைக்கிறது.//

            This discussion is electronically recorded. So either u or I CAN NOT LIE AND ESCAPE. MIND THIS PLS.

  51. தேவாரனயனர் அவர்களே ,

    [1]பெரியாரையும் நினைக்கும் உங்கள் மனம் “படைப்புவாத சிந்தனையில் “[கிரியேஷனிசம்] மூழ்கியது ஏன் ?படைப்புவாதம் (Creationism) என்பது மனிதன், உயிரினங்கள், புவி மற்றும் அண்டத்தை ஒரு கடவுள் தோற்றுவித்தார் எனும் சமய நம்பிக்கையாகும்.

    devaranayanar said://ராமனை திட்டும் உங்கள் பெயர் ஏன் ராமசாமி என்று உள்ளது என பெரியாரை கேட்ட அதே புத்திசாலிதனமான???!! கேள்வியை என்னை கேக்கிறார் செந்தில்.//

    Devaranayanar Said://இயற்கை பரிணாமத்தை மனுசனோட நிறுத்திவிட்டது ஏன்?—–>படைப்புவாதம்!

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

  52. Dear Viyasan!!,

    I “understand” the inner meaning of the link u refereed me.

    http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_13.html

    I am sorry to say that I have seen that person for the past 5 days in YOUR FACE!

    Viyasan asked me ://உங்களுக்கு இந்த வீடியோவிலுள்ள Sign language மொழிபெயர்ப்பாளரைத் தெரியுமா, அதாவது முன்பே எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
    http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_13.html //

  53. அஜாதசத்ரு,
    // சம்பந்தர் திருமண்த்திற்குப்பின் பலகாலம் இருந்தார் எனில், இளம்வயதி எழிதிய பாடல்கள் தவிர ஏனைய பாடல்கள் எங்கே? அவரின் சந்ததி என்று யார் இருந்தார்கள்? //

    பெரிய புராணத்தை நிரகாரித்தபின், அவர் பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்பதையும், சிறு வயதில் பாடல்கள் எழுதினர் என்பதையும் கூட நிராகரித்து விடலாம். தமது ஆயுட்காலம் முழுதுமே எழுதியவையே முதல் மூன்று திருமுறைகள் எனலாம். அல்லது, திருமணமானபின் சம்சார சாகரத்தில் மூழ்கி, பாடல் எழுதுவதை நிறுத்தி இருக்கலாம். அவர் எழுதிய பிற நூல்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அவருக்கு குழந்தை பிறக்காமல் போயிருக்கலாம். அல்லது சந்ததி நடுவில் அறுந்து போயிருக்கலாம்.

    கலாம், கலாம், கலாம். அப்துல் கலாம்.

    நான் மேலே கூறிய “கலாம்” களை சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் வார்த்தைகளால் வானில் எழுப்பப்படும் கோட்டைகள். வாதத்திறமை அதிகமிருந்தால் இன்னும் கூட வண்ண மயமான கோட்டை கட்ட முடியும. இதில் நாமெல்லாம் ஜூஜூபி. வெறும் ஐநூறு பாடல்கள் கொண்ட பிரம்ம சூத்திரத்துக்கு பக்கம் பக்கமாக, புத்தகம், புத்தகமாக வியாக்கியானம் எழுதிய சூரப்புலிகள் இருந்திருக்கிறார்கள். தன்னில் முரணற்றதன்மை (self-consistency) என்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு, பெரிய ஆதாரங்கள் எதுமின்று பேசும் முறை. வாதம் என்பது பரபக்கத்தில் ஓட்டை காட்டுவது.

    // ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், மெய்ப்பொருள் காண்பது அறிவு!’

    நிச்சயமாக மிக நல்ல முறை. ஆனால், பகுத்தறிவு பக்கம் வந்தபின் அதில் முழுதுமாய் இறங்கி விடுங்கள். சாத்தியக் கூறு இருப்பதனாலேயே ஒன்று சத்தியமாகி விடாது. வெறும் சாத்தியக் கூறுகளை ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி கோட்பாட்டுக் கோட்டை கட்டுவது அறிவியல் முறை அன்று. ஆதாரங்கள் தேவை. ஆதாரங்களின் வலுவிற்கு தகுந்தே சொல்லப்படும் கூற்றிற்கு நம்பகத்தன்மை கூடுகிறது.

    சார்லஸ் டார்வின் படைப்புக் கோட்பாட்டை (creationism) நிராகரித்த பின் அடுத்த நாளே பரிணாமக் கோட்பாட்டை கூறிவிடவில்லை. அவர் காலத்திலேயே, இப்போதுள்ள விலங்குகளின் குணாதிசியங்கள் கொண்ட primitive விலங்குகள் பல காலம் முன்பு இருந்தன என்பதை கண்டறிந்து இருந்தனர். லாமார்க் என்னும் அறிஞர் பரிணாமக் கோட்பாட்டின் சில தத்துவக் கூறுகளை ஏற்கனவே சொல்லி இருந்தார். இவற்றை எல்லாம் வைத்து டார்வின் வாதங்களின் அடிப்படையில் சாத்தியக் கூறு என காற்றில் கோட்டை கட்டி இருக்க முடியும். “கடவுள் மனிதனைப் படைத்தார் என்றால், அவரை யார் படைத்தது” என்று சாதுரியமாக பரபக்கத்தில் ஓட்டை போட்டு விட்டு சும்மா இருந்திருக்க முடியும். அவர் அப்படி செய்யவில்லை. பல வருட கடல் பயணம். அதில் கிடைத்த சான்றுகள். அவற்றை அசை போட்டு தமது கோட்பாட்டை உருவாக்க பல ஆண்டுகள். இதன் பிறகும் குணாதிசியங்கள் ஒரு தலை முறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படும் போது நீர்த்துப் போகக் கூடும் என்ற ஐயப்பாடு இருந்தது. அதை தெளிவிக்க மெண்டல் வர வேண்டி இருந்தது. எல்லாம் கடந்த பின்தான் பரிணாமக் கொள்கை ஏற்கப்பட்டது. மற்றொரு உதாரணம். Big bang theory. பல ஆதாரங்கள் கிடைத்த பின்னும், CMB radiation என்ற அதிரடி ஆதாரம் சிக்கும் வரை சந்தேகத்தோடு தான் இதை பார்த்துக் கொண்டிருந்தனர். இதுதான் அறிவியல் முறை ஐயா. நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறனும் கொண்ட முறை. சம்பந்தன் பற்றியோ, திருநாவுக்கரசன் பற்றியோ பெரிய புராணம் என்ற நம்ப முடியாத மத நூலுக்கு வெளியே ஆதாரம் இதுவரை இல்லை என்றால் தேட வேண்டியதே ஒரு ஆராய்ச்சியாளனின் நோக்கமாக இருக்க முடியும்.

    ———————————————————————–

    இரு வேறுபட்ட குரல்களில் பேசிக் கொண்டிருப்பதால் என் நிலைப்பாடு பற்றி ஓரிரு வார்த்தைகள். என்னிடம் இரண்டு தொப்பிகள் உள்ளன. பக்தித் தொப்பியை அணிந்து குறுக்காகவோ, நெடுக்காகவோ நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு பெரிய புராணத்தை நம்பி “வைகலோங்கி வளமதி தடவிய மாடக்கோவிலே” என புளகாங்கிதம் அடைவது உண்டு. அதை கழற்றிவிட்டு, அறிவியல் தொப்பி அணிந்து பிளாக் ஹோல் பற்றி படிப்பதும் உண்டு. மீசை வைத்தால் சந்திரன். இல்லாவிட்டால் இந்திரன். இந்த இரட்டை வேஷம் போடக் காரணம் எனக்கு இரண்டும் பிடித்திருக்கிறது. அவ்வளவே.

    “தில்லை கோவில் யாருக்கு” என்ற கட்டுரைக்கான மறுமொழிகள், சிவவாக்கியர், மதுர கவிகள், சார்லஸ் டார்வின் என போய்க் கொண்டிருக்கிறது. ஐந்நூறு மறுமொழிகள் தொட வாழ்த்துக்கள். வழக்கம் போல இணைய விவாதங்களில் ஒரளிவிற்கு மேலே நின்று பேசிக் கொண்டிருக்க எனக்கு திராணி கிடையாது. விடை பெறுகிறேன். நன்றி.

    • நன்றி வெங்கடேசன்! பெரும்பாலானோர், காம்ரேடுகள், பெரியாரிஸ்டுகள் உட்பட பலர்நிலையும், தங்கள் ரெட்டை தொப்பி நிலையே!நம்பத்தகுந்த ஆதாரங்கள் அற்ற நிலையிலேயே சாத்திய கூறுகளை, விஞான அடிப்படையில் ஆராய்கிரோம்! புராணங்களின் நம்பகத்தன்மை பற்றிநீங்களே கூறிவிட்டீர்கள்! அடுத்து என்ன? உண்மையை தொடர்ந்து தேடிக்கொண்டுதானே இருக்கவேண்டும்? பெரியார்மேல் கோவித்துக்கொண்டு புராண, இதிகாச கதைகளை எத்தனை நாளுக்குதான் மக்கள் நம்புவார்கள்? அப்படி நம்பும் மக்கள் எப்படிபட்டவர்களாய் இருப்பார்கள்? பிற மததை சகித்து கொள்ளாதவர்கள், பிற சாதியினரை எப்படி சகித்துக்கொள்வர்? வோட்டுக்காகவே எல்லோரும் இந்துவாக முடியுமா? சமயம் வாய்க்கும்போது மீண்டும் வருக!

      • அஜாதசத்ரு,
        “மாலை வானம் ஏன் சிவப்பு என கேட்டால்”, இரண்டு பதில்கள் சொல்ல முடியும். “வான மகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்” என்பது ஒரு பதில். ராலே ஸ்காட்டரிங், ராமன் விளைவு என்ற ரீதியில் இரண்டாவு பதில் அமையும். நான் முதல் தொப்பி அணிந்து முதல் பதிலையும், இரண்டாவது தொப்பி அணிந்து இரண்டாவது பதிலையும் அனுபவிப்பவன். உலகம் எப்படி உருவாயிற்று என்றால், முதல் தொப்பி அணிந்து “உலகு தன்னை நீ படைத்தி” என நாலாயிரம் பாடலாம். அல்லது, இரண்டாவது தொப்பி அணிந்து பிக் பாங்க் பேசலாம். என்னளவில் ஒரு தொப்பி மற்ற தொப்பியை தொல்லை செய்வதில்லை.

        • நான் எப்பொதும் ஒரெ தொப்பியுடன் இருக்கவே விரும்புகிறேன்! விஞ்ஞான அணுகு முறை அல்லாத , எந்த புராணப்புழுகு மூட்டையையும் நம்பத்தயாரக இல்லை! கற்பனை செய்யப்பட்ட கடவுள் கதைகள் அந்தக்காலத்தில், ஒவ்வொரு கூட்டத்தாரின் ஆதிக்கத்திற்காக புனையப்பட்டதுதான்! கவிதையை, இசையை ரசிக்கலாம்! ஆனால் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதே! பாரதியின் சின்ன சஙகரன் கதை புலவர்கள் அனைவருமே சமுதாய சிந்தயாளர்கள் அல்ல என்பதையே காட்டுகிறது! பஞ்சமர் சமுதாயத்தை செர்ந்த சிவ வாக்கியர், திருமழிசை ஆழ்வாராக ஏற்றுக்கொள்ளப்பட்டது, திருமணக்கோலத்திலேயே சிவனடிமையான சுந்தரருக்கு, சிவனே இரு துணைவிகளை, அதிலும் வேறு சாதியில், திருமணம் செய்வித்தது போன்ற கருத்துக்கள், அந்தக்காலத்தில் சாதி பெரிய தடையாக பார்க்கபடவில்லை என்று உணர்த்துகிறது! ஒருவேளை, ஆபத்துக்காலங்களில் மட்டும் சனாதன தர்மங்கள் விலக்கி வைக்கப்படுமோ என்னவோ! அனைத்து சாதியினரும் அர்ச்சகராக போராடும் இத்தருணத்தில், தில்லை தீக்ஷிதர்கள் கோவில் உரிமை கோருவது நியாயமாக தோன்றவில்லை! இது எல்லா கோவிலுக்கும் பொருந்தும்! உழவனின்நிலத்தை எடுத்துகொள்ள அரசுக்கு உரிமை வழங்கும் சட்டங்கள், முறையாக நிர்வகிக்கபடாத பச்சையப்பன் ட்ரஸ்ட் அரசால் எடுத்துக்கொள்ளப்பட உரிமை வழங்கும் சட்டங்கள், தில்லை கோவில் என்றால் ஏன் நெளிகிறது? இனிநீதியும் சாதி பார்த்து தான் வழங்கப்படுமா?நீதி தேவதை தன் கண்கட்டை அவிழ்த்துவிட்டு கலர் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறதா?

          • // நான் எப்பொதும் ஒரெ தொப்பியுடன் இருக்கவே விரும்புகிறேன்! விஞ்ஞான அணுகு முறை அல்லாத , எந்த புராணப்புழுகு மூட்டையையும் நம்பத்தயாரக இல்லை! //

            என்ன தொப்பி அணிவது என்பது உங்கள் விருப்பம், உரிமை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

            // அனைத்து சாதியினரும் அர்ச்சகராக போராடும் இத்தருணத்தில், தில்லை தீக்ஷிதர்கள் கோவில் உரிமை கோருவது நியாயமாக தோன்றவில்லை! //

            ஆம். அதுதான் என் கருத்தும். கோவிலை அரசு நிர்வாகத்திற்கு கொண்டு வந்து அனைத்து ஜாதியினரும் அங்கே அர்ச்சகராக வழி செய்ய வேண்டும். இவற்றை ஏற்கனவே கூறியுள்ளேன்.

  54. ஐயா தேவாரனயனர் அவர்களே ,

    ஏன் இந்த கொலை வெறி தாக்குதல் ?
    சைகை பாசை மொழிபெயர்ப்பு தெரியாதது பெருங்குற்றமா ?

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

    devaranayanar said://அவருக்கு சைகை பாசை மொழிபெயர்ப்புதான் தெரியாதாம் சித்தர் பாடல்களின் பொருள் குறிப்பாக சிவவாக்கியர் பாடல்களின் பொருள் நன்றாக தெரியுமாம்………

  55. நமது அறிவு ஆசாசன்,தமிழர் வாழ்வியல் வழிக்காட்டி பெரியாரை துனைக்கு அழைக்கும் நீங்கள்……….,

    “அப்படி செய்ய இயலாது 1.திருமண நேரம் ஆகிய முகூர்த்தம் என்பது மதநம்பிக்கை சார்ந்த விசயம் அதை நீங்களோ நானோ கட்டாய படுத்தி குறிப்பிட்ட நேரத்திற்குள் வைக்கும்படி கூற இயலாது. 2.வழிபாட்டு நேரமும் அப்படிதான் அதையும் மாற்றமுடியாது.”

    என கூறி பார்பன இந்து மத மூட பழக்க வழக்கங்களை ஆதரிப்பது ஏன் ?
    ஏன் இந்த சுய முரண்பாடு ??

    • நீங்களோ நானோ என்றுதானே சொன்னேன்? பெரியார் சொந்தமாக செய்த சிலையை தானே உடைத்தார் கோவில் சிலைகளை இல்லையே? அடுத்தவர் நம்பிக்கையில் தலையிட நமக்கு உரிமை இல்லை என்றுதான் கூறினேன்.

  56. ஐயா தேவாரனயனர் அவர்களே ,

    இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு இடம் பற்றி எளிய வரையரை :

    [1]நாத்திகம் என்பது “நாஸ்திக்-nastika” என்னும் சமஸ்கிருத சொல்லின் தமிழ் மருவு.நாஸ்திக் என்றால் நான்கு வேதங்களை ஏற்க மறுப்பவன்.

    [2]ஆத்திகம் என்பது “ஆஸ்திக்-Astika” என்னும் சமஸ்கிருத சொல்லின் தமிழ் மருவு.ஆஸ்திக் என்றால் நான்கு வேதங்களை ஏற்றுக்கொள்பவன்.

    [3]நாத்திகம்,ஆத்திகம் ஆகியவை பார்பன-இந்து மதத்தின் இரு பிரிவுகள். நாத்திகம்,ஆத்திகம் கடவுளை மறுப்பது இல்லை.

    [4]ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை நாத்திகம்,ஆத்திகம் ஆகியவை பார்பன-இந்து மதத்தின் இரு பிரிவுகளுக்கும் எதிரானது.இறைமறுப்பு-“Atheism” என்பதே இதன் சரியான பெயர். இறைமறுப்பு கொள்கை அறிவியல் அடிப்படையிளானது [Darvin Terory]

    [5]எனவே நீங்கள்…

    “இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே” என கூறி

    பெரியாரையும் பார்பன-இந்து மத சாக்கடையில் நிங்கள் தள்ள வேண்டாம்

    • மொத்த விவாதமுமே[உலகெங்குமே] 1.கருத்து முதல் வாதம் 2.பொருள் முதல் வாதம் என்ற அளவிலேயே நடை பெறுகிறது. இந்து மரபில் பூர்வமீமாம்சை,உத்திர மீமாம்சை என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே வேதத்தை ஏற்கிறது. அறிவியலை ஒரு தரப்பாக அறிவியலாறே ஏற்பதில்லை ஏனென்றால் அறிவியல் ஆண்டாண்டும் மாறக்கூடியது.மனிதனின் அடுத்த பரிணாமம் குறித்த என் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதிலலிக்கவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

      • ref feed back 53

        deva siad://அடுத்த பரிணாமம் குறித்த என் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதிலலிக்கவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

      • “இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே” என கூறி
        பெரியாரையும் பார்பன-இந்து மத சாக்கடையில் நிங்கள் தள்ள வேண்டாம்

      • ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை நாத்திகம்,ஆத்திகம் ஆகியவை பார்பன-இந்து மதத்தின் இரு பிரிவுகளுக்கும் எதிரானது.இறைமறுப்பு-”Atheism” என்பதே இதன் சரியான பெயர். இறைமறுப்பு கொள்கை அறிவியல் அடிப்படையிளானது [Darvin Terory]

        • அறிவியலை அடிப்படையா கொண்டு ஒரு இறைமறுப்பு கொள்கை உருவாக முடியாது. டார்வின் தியரி குறித்து என் கேள்விக்கு பதில் சொல்லாம மழுப்பாதிங்க.மனிதனோட அடுத்த பரிணாமம் என்ன?

        • corretion
          ஆகியவை–>ஆகிய
          ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை என்பது; நாத்திகம்,ஆத்திகம் ஆகிய பார்பன-இந்து மதத்தின் இரு பிரிவுகளுக்கும் எதிரானது.இறைமறுப்பு-”Atheism” என்பதே இதன் சரியான பெயர். இறைமறுப்பு கொள்கை அறிவியல் அடிப்படையிளானது [Darvin Terory]

      • பெரியாரையும் நினைக்கும் உங்கள் மனம் “படைப்புவாத சிந்தனையில் “[கிரியேஷனிசம்] மூழ்கியது ஏன் ?படைப்புவாதம் (Creationism) என்பது மனிதன், உயிரினங்கள், புவி மற்றும் அண்டத்தை ஒரு கடவுள் தோற்றுவித்தார் எனும் சமய நம்பிக்கையாகும். ref feedback 53.

        deva said://அடுத்த பரிணாமம் குறித்த என் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதிலலிக்கவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
        deva said://இயற்கை பரிணாமத்தை மனுசனோட நிறுத்திவிட்டது ஏன்?

  57. ஒண்ணுமே புரியலே உலகத்திலே….எது உண்மை என்று தெரியவில்லை.

    //…….இராஜராஜன் தமிழனாம்! தமிழ்ப் பேரரசனாம்! இராஜராஜனை ஒரு தமிழன் என்று சொல்வதைப் போன்ற மானக்கேடு தமிழனுக்கு இனி எப்போதும் நேரக்கூடாது……///

    http://naickernaidu.blogspot.in/2011/05/blog-post_7618.html

  58. ********மார்சிய பள்ளியில் தேவா நாயனாருக்கு கொடுக்கப்படும் அறிவுசார் புதிர் : ******

    நீங்கள் கற்று அறிந்த பொதுஉடமை, பெரியாரின் கொள்கை, பார்பன-இந்து மத கொள்கை, சிதர்களின் கொள்கை, வள்லளார் கொள்கை மற்றும் பல ஆகியவற்றில்….

    [1]எவை எவை ஒன்றுடன் ஒன்று நட்பானது ? எதிரானது?

    [2]நட்பான கொள்கைகள் எந்த புள்ளியில் இணைகின்றன ,எங்கே வேறுபடுகின்றன ?

    [3]நேர் எதிரான கொள்கைகள் எந்த ஒரு புள்ளியிலாவது இணைகின்றனவா ?

    உங்கள் பதில்கள், சமுகத்தின் மீதான உங்களின் தெளிவான பார்வைக்கு உதவும் .

    • ராகுல சாங்கிருத்தியான்,டி.டி.கோசாம்பி,தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற மார்க்சிய பேரறிஞர் பயின்ற மார்க்சிய பள்ளியில் இருந்து இப்படி ஒரு கத்துகுட்டிதனமான புதிர் கேக்கபட மாட்டாது என நான் நினைப்பதால் புதிருக்கு விடை கூற விரும்பவில்லை.

      • dava said://புதிருக்கு விடை கூற விரும்பவில்லை.

        உங்கள் பதில்கள், சமுகத்தின் மீதான உங்களின் தெளிவான பார்வைக்கு உதவும் .

        By the way u will not confuse Periyar ideology with Hindu religion !

        • உங்கள் கேள்வியாக கேளுங்கள் மார்க்சிய பள்ளி என்ற பீடிகை வேண்டாம்.நான் பதில் கூற மறுத்தது அதனால்தான்.

      • If u r clear about all these ideology then why are u having confusion in your mind and relating Periyar ideology with Hindu religious belief?

        Deva siid://“இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே” //

  59. பார்பன இந்து மதத்துக்கு எதிரான பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை [இறைமறுப்பு-”Atheism”] ,பார்பன இந்து தத்துவ மரபில் சேர்க்கும் உங்கள் அறிவு மிக்க சிறப்பு வாய்ந்தது !!

  60. [1]You and and Jayamohan are seems to be differing about the ideology ‘SARUVAGAM’.

    [2]But u people are clear about one thing! That is when ever a new concept comes to the people , you people are diluting and making that concept sharp less and adding them with Hindu religious wrong belief!!

    [3]In the same sense now u r adding “Periyar ideology” in to Hindu religious genetics !!

    [4]Great work you r doing in favor of Parpan Hindu Religion

    Hindu ideology writter jayamohan ://இந்து ஞான மரபுகள் அனைத்துக்கும் வேதம் முதனூல் அல்ல. தத்துவார்த்தப்படி வேதங்களை சுருதிப்பிரமாணமாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது வைதிகம். ஆகவே சார்வாகம் அவைதிக மதமே. ஆறு தரிசனங்களில் சாங்கியம், யோகம் , நியாயம், வைசேஷிகம் ஆகிய நான்கும் அவைதிகங்களே.//

    Devaranayanar ://இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே” //

  61. @செந்தில் அவர்களே, பெரியாரை பற்றி எனது பார்வையைதான் கூறினேன்.நான் பெரியாரிஸ்டு என்று கூறவில்லை மேலும் பெரியாரை மேற்கோளுக்காக மட்டுமே பயன்படுத்தினேன், ஆனால் சிவவாக்கியரின் சீடராகிய நீங்கள் எப்ப பெரியாரின் சீடரானீர்கள்? ஏன் இந்த முரன்பாடு? உங்களுக்கு தேவைப்பட்டால் எதில் வேண்டுமானாலும் மாறிகொள்வீர்களா?

    • Dear Devaranayanar,

      My answer for your question is available in the following questions.

      பொதுஉடமை, பெரியாரின் கொள்கை, பார்பன-இந்து மத கொள்கை, சிதர்களின் கொள்கை, வள்லளார் கொள்கை மற்றும் பல ஆகியவற்றில்….

      [1]நட்பான கொள்கைகள் எந்த புள்ளியில் இணைகின்றன ,எங்கே வேறுபடுகின்றன ?

      Deva said://ஆனால் சிவவாக்கியரின் சீடராகிய நீங்கள் எப்ப பெரியாரின் சீடரானீர்கள்?ஏன் இந்த முரன்பாடு? உங்களுக்கு தேவைப்பட்டால் எதில் வேண்டுமானாலும் மாறிகொள்வீர்களா?

      My Answer:சித்தர் சிவவாக்கியார், பெரியார் அவர்கள் துற்றுவது வேத மற்றும் தமிழ் மரபு படியான முறைகளான மந்திரம் ,சிலை வழிபாட்டை.

      with regards,
      K.Senthil kumaran

    • ஐயா தேவாரனயனர் அவர்களே ,

      [1]சித்தர் சிவவாக்கியார், பெரியார் அவர்கள் துற்றுவது வேத மற்றும் தமிழ் மரபு படியான முறைகளான மந்திரம் ,சிலை வழிபாட்டை.

      [2]இந்த நட்பான கொள்கைகள் எந்த புள்ளியில் இணைகின்றன ,எங்கே வேறுபடுகின்றன என்ற புரிதல் உங்களுக்கு ஏற்பட தான் முன்பாகவே நான் இந்த கேள்விகளை கேட்டேன் !

      [i]எவை எவை ஒன்றுடன் ஒன்று நட்பானது ? எதிரானது?

      [ii]நட்பான கொள்கைகள் எந்த புள்ளியில் இணைகின்றன ,எங்கே வேறுபடுகின்றன ?

      [iii]நேர் எதிரான கொள்கைகள் எந்த ஒரு புள்ளியிலாவது இணைகின்றனவா ?

      உங்கள் பதில்கள், சமுகத்தின் மீதான உங்களின் தெளிவான பார்வைக்கு உதவும் .நேரம் எடுத்துக் கொண்டு சிந்தித்து பதில் கூறவும்.

      devaranayanar said://சிவவாக்கியரின் சீடராகிய நீங்கள் எப்ப பெரியாரின் சீடரானீர்கள்? ஏன் இந்த முரன்பாடு? உங்களுக்கு தேவைப்பட்டால் எதில் வேண்டுமானாலும் மாறிகொள்வீர்களா?//

  62. [1]Jayamohan and Devaranayanar are adding Marx ideology[Materialism] and Periyar ideology [Atheism] into the main stream of Parpana Hindu religious fake beliefs.

    [2]Great job have done by very great people like you.keep it up. RSS is ready to award a degree for u people. Go and get it.

    Jayamohan ://இந்து ஞான மரபு கண்டிப்பாக வைதிகம், அவைதிகம் என்ற இரு பெரும் பிரிவைத் தன்னுள் கொண்டதுதான். நாத்திகம் ,ஆத்திகம் இரண்டையும் உள்ளடக்கியதே. கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டையும் உள்ளடக்கியதே. அப்படி இருப்பதே அதன் அழகு, தனித்தன்மை ,சிறப்பு.//

    Deav said://பெரியாரை ஒரு சார்வாக ரிசியாக தான் காண்பதாக கன்னட தலித் இயக்க தலைவர் ஏ.டி.நாகராஜ் ஒரு முறை கூறினார்[காலச் சுவடு நேர் காணலில் என்று நினைவு] மேலும் இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே//

    • நான் கன்னட தலித்திய தலைவர் ஏ.டி.நாகராஜ் கூறியதாகதானே கூறினேன்.அவர் அர்.எஸ்.எஸ்.காரரா? எனக்கு அப்படி தெரியவில்லையே.சார்வாகம் பற்றிய எனது கருத்து மார்க்சிய அறிஞர்கள் கூறியதே. மார்க்சியர் என்று கூறும் நீங்கள் மார்க்சிய அறிஞர்கள் கருத்துகள் பொய் என்று கூறுகிறீர்களா? உங்கள் மார்க்சிய சித்தாந்தம் அற்புதம்.இதே விவாதத்தில் பார்ப்பானியத்திற்கு எதிரான கருத்துகளை பதிவு செய்துள்ள என்னை பார்பனன் என்பதும் நல்ல கண்டுபிடிப்பு.ஜெயமோகன் கூறினாலும் கூறாவிட்டாலும் சார்வாகம் பார்ப்பானியத்திற்கு எதிரான சித்தாந்தம் அதில் தமிழர்களின் பங்களிப்பு உண்டு என்பதே என் கருத்து.

      • deva said://நான் கன்னட தலித்திய தலைவர் ஏ.டி.நாகராஜ் கூறியதாகதானே கூறினேன்.

        Deav said://பெரியாரை ஒரு சார்வாக ரிசியாக தான் காண்பதாக கன்னட தலித் இயக்க தலைவர் ஏ.டி.நாகராஜ் ஒரு முறை கூறினார்[காலச் சுவடு நேர் காணலில் என்று நினைவு] மேலும் இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே//

        WHO SAID THIS?? //பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே

  63. Dear vinavu,

    We need to write a essay about this remixing…

    “Jayamohan and Devaranayanar are adding Marx ideology[Materialism] and Periyar ideology Atheism] into the main stream of Parpana Hindu religious fake beliefs”

    shall I write? I hope mr. Durai sanmugam or Mr marudiyan is a correct person to do so in vinavu and PJ.

    with regards,
    K.Senthil kumaran

    Jayamohan ://இந்து ஞான மரபு கண்டிப்பாக வைதிகம், அவைதிகம் என்ற இரு பெரும் பிரிவைத் தன்னுள் கொண்டதுதான். நாத்திகம் ,ஆத்திகம் இரண்டையும் உள்ளடக்கியதே. கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டையும் உள்ளடக்கியதே. அப்படி இருப்பதே அதன் அழகு, தனித்தன்மை ,சிறப்பு.//

    Deav said://பெரியாரை ஒரு சார்வாக ரிசியாக தான் காண்பதாக கன்னட தலித் இயக்க தலைவர் ஏ.டி.நாகராஜ் ஒரு முறை கூறினார்[காலச் சுவடு நேர் காணலில் என்று நினைவு] மேலும் இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே//

  64. [1]Now you are abolishing Peryar ideology from your mind.

    [2]I am thankful to u for accepting this at least now.

    [3]In the same manner u r going to abolish all the ideologies what u have refereed in feed bak 52.1 one after another!

    [4] finally u will think and live as told by vallalar!

    “இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
    என்று வருமோ அறியேன் என் கோவே – துன்று மல
    வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
    சும்மா இருக்கும் சுகம்” — திரு அருட்பா

    [5]Good ideological transformation held in your mind! Keep it up!!!

    Reference:
    I asked://நீங்கள் எந்த கொள்கை அடிப்படையில் விவாதம் செய்கின்றீர் என் கூறினால் நலம் .// ref feed back 52

    You replay://பெரியாரை ஒரு சார்வாக ரிசியாக தான் காண்பதாக கன்னட தலித் இயக்க தலைவர் ஏ.டி.நாகராஜ் ஒரு முறை கூறினார்[காலச் சுவடு நேர் காணலில் என்று நினைவு] மேலும் இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே// ref feed back 52.1

    Now Yor replay://செந்தில் அவர்களே, பெரியாரை பற்றி எனது பார்வையைதான் கூறினேன்.நான் பெரியாரிஸ்டு என்று கூறவில்லை மேலும் பெரியாரை மேற்கோளுக்காக மட்டுமே பயன்படுத்தினேன்// ref feed back 63

  65. தமிழர்களின் பல தத்துவ மரபுகள் வைதீக சாயம் பூசபட்டு பார்ப்பானியத்திற்குள் இழுக்க பட்டது என்பதே என் கருத்து.இன்றும் யோக மரபை பார்ப்பானியமாக பார்க்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது.ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த பசுபதி சிலை திருத்தமான யோகமுத்திரையில் உள்ளது.தமிழன் திராவிட மாயையால் இன்னும் எதையெல்லாம் இழக்க போகிறானோ.

  66. Hello Deva,

    If u do not want to follow periyar ideology then I do not have any problem.

    BUT “Why are u trying to add periyar ideology into “Parpana Hindu religious” fake beliefs?”

    I know your “Kalasuvadu Gang” and its members like u and jayamohan are always doing this kind of fraud work in Tamil literature and now u people are doing same in Periyar ideology and Marx ieology !

    Keep it up!

    Devaranayanar said://செந்தில் அவர்களே, பெரியாரை பற்றி எனது பார்வையைதான் கூறினேன்.நான் பெரியாரிஸ்டு என்று கூறவில்லை மேலும் பெரியாரை மேற்கோளுக்காக மட்டுமே பயன்படுத்தினேன்// ref feed back 63
    Devaranayanar said://பெரியாரை ஒரு சார்வாக ரிசியாக தான் காண்பதாக கன்னட தலித் இயக்க தலைவர் ஏ.டி.நாகராஜ் ஒரு முறை கூறினார்[காலச் சுவடு நேர் காணலில் என்று நினைவு] மேலும் இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே// ref feed back 52.1
    With regards,
    K.Senthil kumaran

  67. HELLO DEVA…..,DO NOT SAY LIE.

    Till now I am not registering my own opinion about “Sarvakam”.I asked u only that ”

    இந்து தத்துவ மரபில் நாத்திகத்துக்கு விரிவான இடம் இருக்கையில் பெரியார் அது குறித்து ஏனோ பேசவில்லை என்றும் கூறினார்.பெரியார் குறித்த என் மதிப்பீடும் அதுவே”

    என கூறி பெரியாரையும் பார்பன இந்து மத சாக்கடையில் நிங்கள் தள்ளுவது ஏன் ?

    But u said:
    //சார்வாகம் ஒரு பார்பானிய தரிசனம் என்னும் தங்கள் தத்துவ அறிவு??!!

    [1]I will register my openion about “saruvagam” very soon.I need to learn this and understand this. So I really need some time.

    [2]Till now I did not read books about “Saruvagam” written by Marxist people .

    [3] With out learning a concept I should not register my opinion.

  68. My aim is very simple.

    “You Please do not add Periyar ideology into Hindu religious fake beliefs” in the name of Hindu culture[இந்து தத்துவ மரபில்]

    Now u accept this. Thanks. Reff your feed back 67.

  69. நீங்கள் ஆங்கிலத்தில் பின்னுட்டமிட தொடங்கிவிட்டது என்னுடன் விவாதிக்க விரும்பவில்லை என்பதை காட்டுகிறது.நானும் விரும்பவில்லை நன்றி.

    • Good Sir. Finally U write ur name in Tamil . Good attitude.

      pls forgive me for typing in English.

      When I do not have time there is no other way.

      I can type faster than in English than Tamil.

      But now My Tamil s/w is working properly.

      For u?

    • தேவாரனயனர் ஐயா,

      தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் உச்சரித்து தட்டுவது மனதிற்கு விகர்பமாக உள்ளது.

      தமிழ் விசை பலகையில் தமிழில் தட்ட கற்க போகிறேன்.

      மேலும் பெரியாரிய-மார்க்சிய இன்னும் மிக்க ஆழமாக கற்று உங்களுடன் மீண்டும் விவாதிக்கின்ரேன்.

      உங்களின் தமிழ் அறிவு நன்று , நீங்களும் பெரியாரிய-மார்க்சிய கொள்கைகளை கற்பீராக !

  70. திரு.கி.செந்தில் குமரன் அவர்களே! எனக்கும் தமிழ் தட்டச்சு தெரியாது எனவேதான் எனது பின்னுட்டங்கள் மிக சுருக்கமாக வருகிறது.நானும் தமிழ் தட்டச்சு கற்று பிறகு வருகிறேன்.

  71. ஒருவரின் தத்துவம், அவர்களின் சீடர்களால் கூட அப்படியே ஏற்றுக்கொள்ளபடுவதில்லை! அவரவர் தங்கள் தனிதத விளக்கத்தை அளித்து, குருனாதரின் தத்துவத்திற்கு உருகொடுக்கிரார்கள்! மார்க்சும்,எங்கெல்ச், லெனின் , மசெதுங் போன்றொர் முறண்படாமலில்லை! அவரவர் சூழ்னிலைக்கேற்ப தத்துவங்களை கடைபிடிக்கிறார்கள்! மத அடிப்படைவாதிகள் ஒருகாலத்தில் அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபடவே மதக்கோட்பாடுகளை உருவாக்கினார்கள்! தற்போது ஆதிக்கம் செலுத்தவும், இழந்துவரும் ஆதிக்கம் காக்கவுமே மதத்தை இழுக்கிரார்கள்! பணக்கார இந்துக்கள் ஏழை இந்துக்கள் உருவாகமலிருக்க எதுவும் செய்வதில்லை, பிச்சை காசை எறிந்து மனசாட்சியை தூய்மைபடுத்திவிடுகிரார்கள்! மற்ற மதக்காரர்களும் அவ்வாறே! மதங்கள் எல்லாமே ‘உழைப்பது உன் கடன்; பலனை பற்றி கவலைப்படாதே’ என்ற ரீதியில்தான் உபதேசிக்கின்றன! பெண்கலை மதிக்கும்நாட்டில் பெண்கள் தனியேநடமாட முடியவில்லை; விபச்சாரத்தை, திருட்டை எல்லா மதங்களும் எதிற்கின்றன; ஆனால் விபச்சாரம், திருட்டு ஒழியவில்லை! மதம் எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல! போர்களை தடுத்த வரலாறு இல்லை, ஆனால் பல போர்கள் மதங்களாலேயே ஏற்பட்ட்ன!
    இந்திய ஜனனாயக சோஷியலிச குடியரசில்,நகரஙகளில் குடிருப்புகள் கோபுரங்களாக உயர்கின்றன; ஆனால் கிராமங்கள் புறக்கனிக்கப்படுகின்றன! கொவில்களில் தங்கத்தேர் பவனிக்கு குறவில்லை, ஆனால் இருசக்கரவாகனம் ஓட்ட பெட்ரோல் விலையை எண்ணி கவலையாய் உள்ளது! இந்தியாவில் பல பெரியார்கள் தோன்றியும் ஏன் இந்தநிலை?

  72. 2999 பூணூல்கள்+ புலித்தோல் ஆசாமி
    வானத்தில் இருந்து தொப்க்கடீர் என்று குதித்து
    சிதம்பரம் வந்து…போதும்,போதும், நீங்கள் கிழித்தது:
    திரும்பவும் நீங்கள் உடனடியாக வந்த இடத்துக்கே திரும்பி செல்லலாம்:

    டூர் வழிகாட்டி: சிதம்பரத்தில் ஏர்போர்ட் இல்லை: சென்னை சென்று
    விமானம் ஏரலாம்…நடராசர் கோவில் விமானத்தில் இருந்து நேரே “மேலே”
    போக வசதி இருப்பதாக தெரியவில்லை!

Leave a Reply to K.Senthil kumaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க