வானரங்கள் கனி கொடுத்து
மோடியோடு கொஞ்சும்
மோடிசிந்தும் கனிகளுக்கு
தமிழ் நரிகள் கெஞ்சும்.
‘தமிழருவி’ திரையெழும்பி
தினமணியில் ஒழுகும்
தறு ‘தலைகள்’ பரிக்காலும்
நரிக்காலும் வழுகும்.
காவிகளோ விழியெறிந்து
ராஜ்நாத்தை அழைப்பர்
வடகுரங்கு வந்து வந்து
ராமதாஸ், விஜயகாந்தை வளைப்பர்!
சுக்ரீவனுக்கு தம்பியாகி
கேப்டன் குரங்கு நடக்கும்
காவிபோதை தலைக்கு ஏறி
கண்டபடி கடிக்கும்.
பார்ப்பனிய பேனெடுத்து
கொங்கு குரங்கு சாயும்
மோடிமுதுகை சொறிந்தபடி
பாரி குரங்கு பாயும்.
சாதிவெறி குரங்கெல்லாம்
பா.ஜ.க.வில் அலையும்
சனம் கூட்டி ஒதுக்கிய
குப்பைக்கெல்லாம்
ஆர்.எஸ்.எஸ் மலர் வளையம்.
விபீடணன் வேலை காட்டி
தாவும் மேடைதோறும்
வை.கோ. வாயைத் திறந்தாலே
திரிகூட மலைதாண்டி நாறும்.
அந்தர்பல்டி, தாண்டி குதிப்பு
ராமதாசின் பந்தடிப்பு
அனுமாரையே மிஞ்சும்
சேலத்து மாம்பழத்தை
செழுங்குரங்கு பிய்த்தெடுக்க
ஓலமிட்ட அன்புமணி
சிறுநரியின் பிச்சையிலே
அடங்கும்!
போயசிலே தாவி நின்று
அம்மாவே சரணமென்று
ஆடிநின்ற
செங்குரங்கு ரெண்டு,
போட்ட அடியில் தாவி வந்து
எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு
இஞ்சி தின்ன குரங்காக இன்று!
இமயமலை என்னுடைய
தமயன் மலை என்று எண்ணி
காத்திருக்கும் பெண் குரங்கு இரண்டு,
எலக்சன் முடிந்தபின்பு கலெக்சனென்றால்
மம்தாவும், ஜெயாவும் சேர்ந்திடும்
பூணூல் கண்டு!
வேடுவர்கள் வினை விதைத்து
தேடுவார்கள் தெருக் கோடி…
தேர்தலென்று, ஓட்டென்று
திரும்பவும் நீ போய்விழுந்தால்
இனி தேடினாலும் கிடைக்காது
உன் ‘பாடி’.
– துரை.சண்முகம்