சென்னை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் அடிபட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான முருகன், இன்னொரு விபத்தில் காயமடைந்த 23 வயதான ரவி ஆகிய இருவரும் மே 5-ம் தேதி அதிகாலையில் 4.30 மணி முதல் 8 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருந்ததன் காரணமாக செயற்கை சுவாசம் தடைபட்டு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
உயிர் காக்கும் மருத்துவமனைகளுக்குக் கூட தடையற்ற மின்சாரம் கொடுக்க முடியாத லேடியின் தமிழக அரசுதான், மோடியின் குஜராத் அரசை விட சிறப்பாக செயல்படுகிறது என்று தனது முதுகை தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறார் அம்மா. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடி அல்லது லேடி அல்லது வேறு ஏதாவது கேடி நாட்டின் பிரதமர் ஆனால் இந்த அவல நிலை தீர்ந்து விடுமா?
$100 கொண்டு வரும் வெளிநாட்டவரை மனம் குளிர வைத்து கையில் இருக்கும் பணத்தை செலவழிக்க வைப்பது போல $1 லட்சம் டாலர் கொண்டு வரும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு நிலம், வரிச்சலுகைகள், குறைந்த வட்டியில் கடன் என்று குளிப்பாட்டி குஜராத்தை ‘முன்னேற்றி’யிருக்கிறார் மோடி.
மோடி பாணியில் பணமூட்டைகளை குளிப்பாட்டி செலவழிக்க வைப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறையை முன்னேற்றி வருகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள். எப்படி என்று கேட்கிறீர்களா?
இம்மருத்துவமனைகள் பணக்காரர்களுக்கு உடம்பு சுகமில்லாமல் போனால் வீட்டுக்கே சொகுசு வாகனத்தை அனுப்பி அழைத்துக் கொள்வது, குணமானதும் பத்திரமாக அதே போன்ற சொகுசு வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவதில் ஆரம்பித்து அடுக்கடுக்காக அதி ஆடம்பர வசதிகளை தயாரித்திருக்கின்றன.
மருத்துவமனைக்குள் கொண்டு போகப்பட்டதும் ஐந்து நட்சத்திர வசதியிலான அறைக்குள் கிங் சைஸ் (ராஜ அளவு) படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். விருந்தினரை (நோயாளி) கவனிப்பில் திணறடிக்கும் மருத்துவர் அணி மட்டுமின்றி, கார்ப்பரேட் சி.ஈ.ஓ அல்லது அவர்களுக்கு சேவை செய்யும் அமைச்சர் போன்ற பை நிறைய பணத்தை குவித்துள்ள யாராயிருந்தாலும் தமது அலுவலக பணிகளை மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்ட நடத்துவதற்கான வைஃபை இணைய இணைப்பு, எல்.ஈ.டி தொலைக்காட்சி, தொலைபேசி இணைப்புகள் என வசதிகள் அறையில் நிறைந்திருக்கும். சாப்பிடுவதற்கு இன்னதுதான் வேண்டும் என்று கறாராக இருப்பவர்களுக்கு மிகச் சிறந்த உணவுகளை பரிமாறும் நட்சத்திர சமையல் கலைஞர்கள் தயாராக இருப்பார்கள்.
திருப்பதியில் நிலவும் இந்து தர்மம் போல வி.ஐ.பி தரிசனம், சிறப்பு தரிசனம், முன்பதிவு தரிசனம் என்று காசுக்கேற்ற மருத்துவ சேவை கிடைக்கிறது. அப்பல்லோ குழுமங்களின் மருத்துவமனையில் நோயாளிக்கான மொழிபெயர்ப்பாளர், தனி ஊழியர்கள் அனைவரும் தங்கி ‘நோயாளி’க்கு சேவை செய்யும் வகையில் சமையல் அறை இணைக்கப்பட்ட அறைக்கான ஒரு நாள் வாடகை ரூ 30,000 மட்டும்தான்.
தெற்கு டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையின் சொகுசு அறைகளுக்கான ஒரு நாள் வாடகை ரூ 37,000-தான். ஓபராய் ஐந்து நட்சத்திர விடுதியில் இதே செலவில் இரண்டு இரவுகள் தங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத் தக்கது. மும்பையின் ஹீராநந்தானி மருத்துவமனையின் அதிசொகுசு அறைக்கான தினசரி வாடகை ரூ 30,000.
பாரதத் தாய் ஐஸ்வர்யா ராய் தன் தங்கக் குழந்தையை பெற்றெடுக்கப் போன மருத்துவமனையில் ஒரு நாள் அறை வாடகை ரூ 20,000. மருத்துவ செலவு இதை விட பல மடங்கு ஆகும். ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்கான பேக்கேஜ் ரூ 4 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை ஆகிறது.
ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் மின்வெட்டு உத்தரவாதத்துடன் கூடிய உயிரைப் பறிக்கும் சேவை கிடைக்கும் போது அப்போல்லோக்களும், ஃபோர்டிஸ்களும் பல நாடுகளிலிருந்தும் வரும் நோயாளிகளுக்கு கற்பனைக்கெட்டாத வகையில் சேவைகளை வழங்குவதாக பீற்றிக் கொள்கின்றன.
“பல நாடுகளிலிருந்து வரும் நோயாளிகளுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. மொசாம்பிக்கிலிருந்தோ, மாஸ்கோவிலிருந்தோ வருபவருக்கு இட்லி சாம்பாரையா கொடுக்க முடியும். அதனால் அதற்கான காசை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற உணவை போடுகிறோம். மங்கோலிய நோயாளிக்கு மங்கோலிய மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்கிறோம்” என்கிறார் அப்பல்லோ குழுமத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அனுபம் சிபல்.
“வெளியூர் நோயாளிகளுக்கு ஹோட்டல் முன்பதிவு செய்து கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களின் பிரார்த்தனை தேவைகளையும் நிறைவேற்றி வைக்கிறோம்” என்கிறார் சிபல். “ஒரு ரசிய நோயாளி ரசிய பாரம்பரிய தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய விரும்பினாலோ யூத ஆலயத்துக்கு போக விரும்பினாலோ அதையும் நிறைவேற்றி வைக்கிறோம்” என்கிறார் அவர். வெளியூர் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டு பார்ப்பன இந்துமத பிரார்த்தனை தேவைகளையும் இந்த மருத்துவமனைகள் நிறைவேற்றி வைக்கின்றன. சில மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் போது காயத்ரி மந்திரத்தை ஒலிக்க விடவும் சிறப்பு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குர்கானில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆய்வுக் கழகத்தின் மண்டல இயக்குனர் தில்பிரீத் பிரார், “10-15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல மருத்துவமனைக்கு போய் மருத்துவருக்கு காத்திருக்க வேண்டிய காலம் போய் விட்டது. இப்போது நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் மாறிவிட்டிருக்கின்றன. நோயாளியின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அவர்.
அதன்படி, காசு இருக்கும் நுகர்வோருக்கு (நோயாளிகளுக்கு) தடையற்ற மின்சாரம், தடையற்ற ஆக்சிஜன் மட்டுமின்றி, கூட வரும் உறவினர், நண்பர் கூட்டம் பொழுதுபோக்குவதற்கு வசதியாக திரைப்பட அரங்குகள், உணவு வளாகங்கள், நீராவி குளியல் வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் ஷாப்பிங் வளாகங்கள் கூட வழங்கப்படுகிறது.
“சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வழங்கும் காலம் என்று வரும்” என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், அதற்கு பதிலாக ‘அமெரிக்கா அல்லது மத்திய கிழக்குடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஆடம்பர மருத்துவத் துறை இப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கிறது’ என்கிறார்கள் நிபுணர்கள். அந்நாடுகளில் 5 நட்சத்திர மருத்துவமனைகளில் ஒரு தளம் முழுவதும் ஆடம்பர சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றனவாம்.
1% மேட்டுக் குடியினருக்கு ஐந்து நட்சத்திர மருத்துவ வசதி, 99% உழைக்கும் மக்களுக்கு உயிர் வாழக் கூட உரிமை மறுப்பு, இதுதான் நவீன இந்தியா, மோடியின், மன்மோகன் சிங்கின் வளரும் இந்தியா, ஏன் ஏகாதிபத்தியங்களின் உலகமும் கூட.
– அப்துல்
மேலும் படிக்க
wow… what a article.Really impressed with the manner it was written.sadly its true.
நானும் ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்த அனுபவம் உண்டு எனக்கு மூக்கில் தொடர் ரத்த போக்கு ஏற்ப்பட்டது என் பெற்றொர்கள் மிகவும் பயந்து விட்டார்கள் எனவே காசு செலவளிந்தாலும் பரவாயில்லை என்று ஒரு தனியார் மருத்துவமணையில் அனுமதித்து சிகிக்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள் அந்த மருத்துவமணை தலமை மருத்துவர் ஒரு மீட்டர் நீலமுள்ல கட்டுதுணியை தண்ணீரில் நனைத்து மூக்கில் வைத்து அடைத்தார் கொஞ்ச நேரத்துக்கு ரத்த போக்கு நின்றது அனால் சில மணி நேரத்துற்க்கு பிறகு வாய் வழியாக ரத்த போக்கு ஏற்ப்பட்டது அந்த டாக்டர் உடனே என் படுக்கைகு வந்து x ரே கருவி மூலம் என் தலயை குப்புற படுக்கவைத்து x ரே எடுத்தார் சுட சுட X ரேய பாத்தவர் எனக்கு ஒன்னும் புரியல ஏன் ரத்த போக்கு பிளட் பிரஸ்ஸர் ரெம்ப கையா இருக்கு ஏன்னு தெரியலா அதால அப்பல்லோ ஆஸ்பிடலுக்கு லெட்டர் தர்ரேன் கொன்டு போங்க அப்பிடினு என் அண்ணன் கிட்ட சொல்லி இருக்கார் எங்க அண்ணனு அய்யோ அப்பலோ ஆஸ்பிடலுக்கு கொண்டுபோக எங்க கிட்ட வசதி இல்ல வேற ஏதானும் நல்ல ஆஸ்பிட்டலா கொண்டு போறொம் அப்பிடினு சொல்லி இருக்கார் அவரும் விஜாயா காஸ்பிடலுக்கு லெட்டர் குடுத்தார் அத வாங்கிட்டு 5000 பணமும் அழுதுட்டு அங்க போனா அவன் நல்லா நடந்து போன என்னய மயக்க மருந்து குடுத்து படுக்க வச்சுட்டான் காலையில எழுந்த்து பார்த்தா மூக்குல நெஞ்சுல எல்லாம் வயரா சொருகி வச்சு இருக்கனுக நான் டாய்லெட் போகனும் அப்பிடினா மூனு சக்கர வண்டி கொண்டு வந்து இதுல ஏறுங்க அப்பிடினானுக போங்கடா பக்கிகளா நான் நடந்தே போய்கிறேன் அப்பிடினுடேன் என்னா அதுக்கும் சேத்துலா சார்ஜ் பன்னுவானுக அப்புறமா அவனுகட்ட இருக்குற எல்லா மிசின்யும் டெஸ்ட் எடுத்தானுக நான் எங்க பேரண்ட்ஸ் ட அய்யோ இதெல்லாம் வேனாம் நான் வீட்டுக்கு போறேன் என்னால சும்மா படுத்து இருக்க முடியதுனுட்டேன் அப்புறமா 7 நாள் வச்சு டீரிட்மென்ட் எடுத்து வீட்டுக்கு அனுப்புனானுகா ஏன் இத சொல்லுறென்னா ஒருத்தருக்கு ஏதாவது ஆயிட்டா பீதிய தன்னால டாக்டருக ஏற்ப்படுத்தி நம்மட்ட காசு புடுங்குறதுதான் அவனுக வேலையே இவனுக திருந்தனும் நான் நல்லா ஆரோக்கியமா இருக்கேன் அவனுக சொன்ன எதுவும் எனக்கு வரல அவனுக குடுத்த மாத்திரைகளையும் சாப்பிடல சாப்பிட்டிறுந்தா நானும் நேயாளி ஆகீருப்பேன்
தனியார் மருத்துவமனைகள் மக்களின் நோயாளியின் பரபரப்பை பயன்படுத்தி காசு சம்பாதிக்கிறது
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடி அல்லது லேடி அல்லது வேறு ஏதாவது கேடி நாட்டின் பிரதமர் ஆனால் இந்த அவல நிலை தீர்ந்து விடாது என்பதே உண்மை
இதெல்லாம் இப்படியிருக்க…
ஆள் மண்டையை போட்டு நான்கு நாட்கள் இருந்தும் நான்கு நாட்களும் உயிரோடு இருந்ததாக மருத்துவசெலவுக்கான “பில்” அனுப்பியிருக்கிறார்கள் மருத்துவமனை நிர்வாகம். -இந்தவார இந்தியசெய்தி-
அடுத்தடுத்து மூன்று நான்கு மரணங்கள் என் சொந்த அண்ணன் உட்பட.அரசஉதவி என்று இப்பொழுது எதுவுமே கிடையாது.அவரவர் தாமே ஏலுமானவரை தான்.
மரணவீடு செலவுத்தொகையை கேட்ட மணைவி “முப்பத்தைந்து வருடங்கள் இந்த நாட்டிற்கு வந்து என்னத்தை வைத்திருக்கிறாய் சாகிறதாக இருந்தாலும் பத்தாயிரம் யூரோக்கள் வேண்டுமே! என ஒவ்வொரு நேரமும் ஒரே நச்சரிப்பு”
வாழ்வதற்காக தான் சமூகபுரட்சியை விரும்புவார்கள்.இனி சாவதற்கும் அதை விரும்பவேண்டியதாக இருக்கிறது பொருள் வயப்பட்ட இந்த சமூகஅமைப்பு.