privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம்

வினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம்

-

சென்னை வாசக நண்பர்களை சந்திப்பதற்கான அறிவிப்பு வினவில் வெளியானதை அறிந்திருப்பீர்கள். தொடர்பு கொள்வதற்கான நேரம், இடம் ஆகியவற்றை அப்பதிவில் குறிப்பிட்டிருந்தோம். வினவின் அந்த அழைப்பை ஏற்று மே 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சில நண்பர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். வினவு சார்பாக புதிய கலாச்சாரம் அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

முல்லாஅப்போது ஒரு 10 பேர் கூட்டமாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் யார் என்ன என்று அறிமுகம் செய்து கொள்ளவில்லை. கேட்ட பிறகு ‘நாங்கள் தவ்ஹீத் கொள்கைகளை பின்பற்றுபவர்கள்’ என்றனர். எனவே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தோழர் பாண்டியனுக்கு தெரியாது. அப்படி ஒரு ஊகம் இருப்பினும் வந்தவர்கள் யாரும் பகிரங்கமாக இன்ன இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் ஆரம்பத்திலேயே அப்படி அறிவித்திருந்தாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அப்படி பகிரங்கமாக அறிவிப்பதில் அவர்களுக்கு பிரச்சினை இருந்தது என்று இப்போது தெரிகிறது.

அவர்களில் ஃபாருக் என்பவர் (இவர் டிஎன்டிஜே-வின் மாநில பேச்சாளராம், அப்போது தெரியாது) வினவு தளத்தை போற்றி புகழ்ந்தார். “ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக நீங்கள் மிக சிறப்பாக செய்கிறீர்கள், உங்களுடைய பணி மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் நீங்கள் மட்டுமே இப்படி செய்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் தொடர்பாக எத்தனையோ முக்கியமான விசயங்களை அம்பலப்படுத்துகிறீர்கள்” என்றெல்லாம் சலிக்காமல் புகழ்ந்து தள்ளினார்.

இது சும்மா ஒரு முகதாட்சண்யத்திற்கு சொல்லப்பட்ட புகழ்ச்சி, பேசுவதற்கு ஒரு ஆரம்பம், வந்தவர்களின் நோக்கம் வேறு என்பது உடன் புரிய வந்தது.

“நீங்க மத பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்தி எழுதுறீங்க, மக்களிடம் பகுத்தறிவை பரப்புறீங்க, நல்ல விசயம் தான். வரவேற்கிறோம். ஆனால் இசுலாத்தை பற்றி நீங்கள் எழுதியிருக்கின்ற பல கட்டுரைகளில் விசயங்கள் தவறாக இருக்கின்றன. நீங்கள் எழுதியிருப்பதில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை எங்களால் சொல்ல முடியும்” என்றனர்.

“சரி சொல்லுங்க” என்றோம்.

“இங்கே இல்லை, ஒரு பொதுமேடை அமைத்து அங்கே வைத்து அனைவருக்கும் முன்பாக சொல்கிறோம். நீங்கள் உங்களுடைய வாதங்களை வையுங்கள். நாங்கள் எங்களுடைய வாதங்களை வைக்கிறோம் அனைத்தையும் வீடியோ எடுப்போம் மக்கள் பார்க்கட்டும்” என்றனர்.

இப்படி ஃபாருக் பேசிய பிறகு அவருடன் வந்திருந்தவர்கள் ஆளுக்கொரு கேள்விகள் கேட்டனர். அவர்களோடு பொறுமையாக விவாதித்த தோழர் பாண்டியன் பேசியதின் சாரம் இதுதான்.

“அதெல்லாம் பேசி விவாதம் பண்ணி பதில் சொல்ற விஷயம் கிடையாது. எல்லா பிரச்சனைக்கும் குரானில் தீர்வு இருக்கு என்பது உங்க கொள்கை. 1300 வருஷத்துக்கு முன்னால எழுதிய புத்தகத்தில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. குரானை, ஹதீசை படிச்சிட்டு நாங்க பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நாங்க எழுதியிருக்கிற விஷயங்கள் எல்லாம் சரி. அதில் என்ன தவறு என்று சொல்லுங்க”

“அதற்கான இடம் இதுவல்ல” என்றனர்.

இவ்வாறு விவாதித்துக்கொண்டிருக்கும் போது அவர்களோடு வந்திருந்தவர்களில் நான்கு பேர் நான்கு மூலைகளில் அமர்ந்துகொண்டு தங்களுடைய கேமரா போனில் விவாதத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

“என்ன பாய் பண்றீங்க, எதுக்கு போலீஸ்காரன் மாதிரி வீடியோ எடுக்கிறீங்க” என்றதும் முதலில் திகைத்தனர். பிறகு அணைத்து எடுத்து உள்ளே வைத்தனர். பிறகு செல்பேசி மூலம் ஆடியோவை மட்டும் மறைவாக பதிவு செய்ததாக இப்போது தெரிகிறது.

விவாதத்தின் போது தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தினர் பகிரங்க விவாதம், இசுலாம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்ற வரம்பிற்குள் நின்று மட்டுமே பேசினர். தோழரோ அத்தகைய மத விவகாரங்கள், குர் ஆனில் இத்தனாவது அத்தியாயத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது போன்றதாக விவாதம் போவதை அனுமதிக்காமல் நடப்பு வாழ்க்கை, அரசியலுக்கு இசுலாம் என்ன தீர்வு என்பதை மீண்டும் மீண்டும் கேட்டு வந்தார்.

“நாங்கள் எளிமையாக கேட்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற எந்த பிரச்சினைக்காவது இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறதா? மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்று மக்களின் அடிப்படையான பிரச்ச்சினைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கூறுகிறது” என்றதற்கு “இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு உண்டு. இந்த பிரச்சினைகள் எதையும் கம்யூனிசத்தால் தீர்க்க முடியாது. ஆனால் அனைத்து வகை பிரச்சினைகளையும் இஸ்லாத்தால் தீர்க்க முடியும்” என்றனர்.

“எப்படித் தீர்ப்பீர்கள்” என்று கேட்டதற்கு, “ஒரு மேடையை போடுங்க, பகிரங்க விவாதம் வைத்துக்கொள்வோம். அனைத்து பிரச்சினைகளையும் அங்கே வைத்து பேசிக்கொள்வோம்” என்றனர். இப்படி விவாதம் திரும்பத் திரும்ப ஒரே எல்லைக்குள் நடந்து வந்தது. மேலும் வந்தவர்கள் கேள்விகளுக்குரிய பதில்களை பேச முடியாமல் திசை திருப்பவதிலேயே குறியாக இருந்தனர்.

“உங்களோடு பகிரங்க விவாதம் நடத்துவதா இல்லையா என்பதை எல்லாம் பிறகு முடிவு செய்யலாம், அதற்கு முன்பு இங்கே ஒரு ரிகர்சல் பார்க்கலாமே” என்றார் தோழர். அதற்கும் அவர்கள் தயாராக இல்லை. மீண்டும் மேடை, வீடியோ, பகிரங்கம் என்றே வலியுறுத்தினர்.

“பார்ப்பன பாசிஸ்ட்டான ஜெயலலிதாவை உங்கள் இயக்கம் ஆதரித்துவிட்டு பிறகு மூக்குடைபட்டதால் ஆதரவை வாபஸ் வாங்கியது ஏன்?” என்கிற கேள்விக்கு பதில் இல்லை. பதில் இல்லை என்பதோடு கூச்சலிட்டுக் கொண்டு கேள்வியை அமுக்க முயன்றனர். இருப்பினும் தோழர் அவர்களோடு நிதானமாகவே பேசி வந்தார். இதனால் அவர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டார்கள் என்பதல்ல. பதில் தெரியாத பாமரத்தனம்தான் அப்படி ஆளுக்கு ஆள் பேசி திருப்ப முயன்றது என்றும் சொல்லலாம்.

“தண்ணி குடிப்பதில் துவங்கி, தொழும் போது விரலை நீட்டிக்கொண்டு தொழ வேண்டும் என்பது வரை இது இது தான் இசுலாம், இது இதெல்லாம் இஸ்லாம் இல்லை என்று தடிக்கம்பை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை கற்பிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? மக்கள் எதை பின்பற்றுகிறார்களோ அது தான் இசுலாமிய மதம். சந்தனக்கூடு திருவிழா, தர்கா வழிபாடு, சூஃபி போன்று உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு தவ்ஹீத் என்கிற குண்டாந்தடியை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டுவதற்கு நீங்கள் யார்?” என்ற கேள்விக்கு, “நாங்கள் தான் உண்மையான இசுலாத்தை பின்பற்றுகிறோம்” என்றனர். இப்படி ஒரிஜினல் இசுலாத்திற்கு அத்தாரிட்டி என்று யாரும் இல்லை என்பதை தோழர் வலியுறுத்தினார். மாறாக, ‘இதுதான் இசுலாம், இப்படித்தான் பின்பற்ற வேண்டும்’ என்று சொல்வது பாசிசம் என்றார்.

பிறகு, பின்லேடனை தீவிரவாதி, பயங்கரவாதி என்று ஏன் எழுதுகிறீர்கள் என கேட்டனர். அவர் அமெரிக்காவை எதிர்த்து போராடிய போராளி என்றும் கூறினர். அவர் போராளி அல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய கைக்கூலி என்று அம்பலப்படுத்தியதும் அடுத்த விசயத்திற்கு தாவினர்.

இவர்களோடு இப்படி மூச்சுக் கொடுத்துக்கொண்டிருந்ததில் முக்கால் மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. இனி இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து, “இத்துடன் நிறுத்திக் கொள்வோம் எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன, இது பற்றி பேசுவதற்கு நாளை மதியம் 2 மணிக்கு அலுவலகத்துக்கு வாங்க” என்றார் தோழர்.

அப்படின்னா “நீங்க பயந்துட்டீங்களா” என்றனர். “இன்று மற்ற வாசகரோடு பொதுவாக பேசவதற்கு திட்டமிட்டிருப்பதால் உங்களோடு தனிச்சிறப்பாக நாளை பேசலாமே” என்று தோழர் கேட்டுக் கொண்டார். அதற்கு “கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்து விட்டு இப்போது நாளைக்கு பேசலாம் என்பது சரியா” என்று கேட்டனர். “இன்று வினவு பேசும் அரசியல் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் வரும் வாசகர்களோடு பேசுவதற்கு திட்டமிட்டுள்ளோம். நீங்கள் வினவை எதிர்த்து பேச விரும்புகிறீர்கள், அதற்கு பதில் சொல்லவே விரும்புகிறோம், எனவே நாளையே கூட வாருங்கள்” என்று தோழர் தன்மையாக பேசினார்.

பிறகு கிளம்பியவர்கள், போகும்போது “மனம் புண்படும்படியா நாங்கள் எதாவது பேசி இருந்தால் மன்னியுங்கள்” என்று சொல்லி விட்டு போனார்கள். ஆனால் அவர்கள் மனத்தை பண்படுத்த வேண்டும் என்பதாலேயே, தோழர் பாண்டியன் கடுமையாக பேசியிருந்தாலும் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை.

குறிப்பாக இந்துமதவெறிக்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் செய்து வரும் பணியினை பற்றி அவர்கள் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டனர்.

“அடுத்து, நீங்க எங்களுக்காக நிறைய பன்றீங்க நாங்க அதையெல்லாம் மதிக்கிறோம் ஆனால்..” என்று துவங்கியதுமே தோழர் குறுக்கிட்டு பின்வருமாறு பேசினார்.

“நாங்க உங்களுக்காக அதை பண்ணவில்லை. நாங்கள் உங்களுக்காக இந்துமதவெறியை எதிர்க்கிறோம் என்று நீங்களே நினைத்துக் கொண்டால் அது உங்களுடைய தவறு. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கபரிவாரங்கள் எங்களுடைய பரம விரோதிகள். அவர்களை ஒழித்துக் கட்டுவது தான் எங்களுடைய நோக்கம். அதை உங்களுக்காக செய்யவில்லை. பார்ப்பன பாசிசம் என்பது இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. அதனால் தான் அதை எதிர்க்கிறோமே தவிர அது இசுலாமியர்களுக்கு எதிரானது என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை.”

“அதே போல பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்பது இஸ்லாமிய மதவெறியர்களையும் கடுங்கோட்பாட்டுவாதிகளையும் ஆதரிப்பதாகாது. ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல் எப்படியோ அப்படித்தான் நீங்களும். அவர்கள் பெரும்பான்மை மதவெறியர்கள் நீங்கள் சிறுபான்மை மதவெறியர்கள். உங்களை நாங்கள் என்றைக்கும் ஆதரித்ததில்லை, ஆதரிக்கவும் மாட்டோம். உழைக்கும் இசுலாமிய மக்கள் வேறு, மத அடிப்படைவாதிகளான நீங்கள் வேறு என்று மக்களையும் உங்களையும் நாங்கள் பிரித்து தான் பார்க்கிறோம். எனவே உங்களை நட்பு சக்திகளாக கருத முடியாது” என்று தோழர் பாண்டியன் கடுமையாகவே பேசினார்.

இந்த கடுமையை எதிர்பார்க்காததால் அவர்கள், “எங்களையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் ஒன்றாக கருதலாமா” என்ற கேள்வியை பலவீனமாகவே கேட்டனர்.

வந்திருந்தவர்கள் சொந்த கோபமோ, சொந்த வேகமோ இல்லாமல் மண்டபத்தில் சொல்லிக் கொடுத்ததை இங்கு பேச முயன்றனர் என்றே கூறவேண்டும். வினவு மீது அவர்கள் தலைமை கொண்டிருக்கும் ஜன்மப் பகை இவர்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஜெயலலிதாவோடு கூட்டு, ஆர்.எஸ்.எஸ்-ஐ வளர்ப்பதற்கு உதவுகிறீர்கள் என்று தோழர் பேசியபோது அவர்கள் திணறியதற்கு காரணம், ஏதோ ஒரு வகையில் நியாயங்களை பரிசீலிக்க கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.

நடந்த நிகழ்வின் சுருக்கம் இதுதான். இப்படி நடக்கவில்லை, அப்படி பேசவில்லை என்று வந்தவர்கள் கனவிலும் கருதமுடியாது. ‘அல்லா மீது சத்தியமாக’ இப்படித்தான் நடந்தது என்பதை அவர்கள் மறுக்க முடியாது. அப்படி மறுக்க மாட்டார்கள் என்று அவர்களது நேர்மை மீது எமக்கும் நம்பிக்கை இருக்கிறது.

வினவோடு நேருக்கு நேர் முடித்து விட்டு இந்த அப்பாவி ‘வீரர்கள்’ மண்ணடிக்கு சென்று தலைமையிடம் சொல்லியிருப்பார்கள். நடந்தது என்ன என்று பதிவு செய்து போட்டு காட்டினார்களா, அல்லது வாய் வழியாக சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்பார்த்த அளவுக்கு சந்திப்பு காட்டமாக நடக்கவில்லை என்று மண்ணடியில் இருக்கும் தலைமைக்கு தெரிந்து விட்டது.

பொதுவாக சண்டையில தோற்று போனவர்கள், “அப்படி அடிச்சிருக்கணும், இப்படி அடிச்சிருக்கணும், அங்க விட்டுட்டோம், இங்க பிடிச்சிருக்கணும்” என்று பேசிக் கொள்வது போன்ற ஒரு சுற்று விவாதம் போயிருக்கிறது. ஆடியோவில் தோழர் பாண்டியன் கடுமையாக பேசிய விமரிசனங்களை சமாளிக்க பல ஆராய்ச்சி செய்து சில வார்த்தைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பிறகு அதை வைத்து புதிதாக ஒரு ஸ்கிரீன் பிளே எழுதுவோம் என்று தயாரித்து, விருப்பத்துக்கு திட்டி, “வினவு எனும் காகிதப் புலிகளுடன் TNTJ நேருக்கு நேர்” என்ற பெயரில் ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவில் TNTJ மாநில துணைத்தலவர் எம்.எஸ்.சையது இப்ராஹிம் என்பவர் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் சசிகுமார் பேசுவது போல பேசுகிறார். தோழர் பாண்டியனோடு நேரில் பேசியவர்களின் நாகரீகம் இவரிடம் இல்லை. வினவு, மார்க்சியம், பெண்கள் அனைவரையும் ஒருமையில் பேசுவதோடு ஏகத்துக்கும் திட்டுகிறார் இந்த ‘சசிகுமார்’. நிறையற்ற குடம் மட்டுமல்ல, நேர்மையற்ற குடம் கூட தளும்பும், அதுவும் இது மதுரை தளும்பல் என்பதால் சவுடாலும், வசவும் அதிகம்.

புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் சண்டமாருதம் பண்ணியது போல காட்ட வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் நடந்தவற்றை சன் டி.வி போட்டது போல எமது அலுவலகத்தில் பதிவு செய்தவற்றை வீடியோவில் பிட்-பிட் ஆக சொருகியிருக்கிறார்கள்.

இந்த காமெடி காட்சியை நேரில் இருந்து நாங்கள் பார்த்தவர்கள் என்ற முறையில், வந்து போனவர்களின் கதி என்ன ஆகியிருக்கும் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது, அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

“தேர்தலில் மோடி பிரதமாரகப் போகிறார் என்று எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்களும் நாங்களும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்வது என்று தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஆட்கள் இங்கு வந்து வம்புக்கிழுத்திருக்கிறார்களே, இதிலேயே அவர்கள் முல்லா ஜோக்குக்கு உரியவர்கள் இல்லையா” என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் கவலை வேறு. தங்களை இசுலாத்தின் ஒரே பிரதிநிதியாக காட்டிக் கொண்டிருந்த வேசம், இந்த தேர்தல் புழுதியில் கரைந்து விட்டது. ஜெயலலிதாவை ஆதரித்து பிஜே பேசியதும், போயஸ் தோட்டத்திற்கு வெட்கம் கெட்டு போய் நின்றதும் இசுலாமிய மக்கள் மத்தியிலேயே கடும் விமரிசனத்தை ஏற்படுத்தின. ஆரம்பத்தில் ‘திமுகதான் பாஜகவின் நட்பு சக்தி, அம்மாதான் இசுலாமியர்களுக்கு உரிய சக்தி’ என்று பேசிவிட்டு பின்னர் பிளேட்டை அப்படியே திருப்ப வேண்டிய கேவலம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது. இடையில் மோடியின் தமிழக வருகை குறித்து எமது அமைப்புகள் வீச்சாக நடத்திய பிரச்சாரம் இசுலாமிய மக்களிடம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதிலிருந்தெல்லாம் வீழ்ந்து விட்ட தமது தலைமையை தூக்கி நிறுத்தவே, அவர்கள் வினவை எதிர்த்து தமது கெட்டப்பை காட்ட முனைகிறார்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியிலில் இவர்களது சரணடைவு தோற்றுவிக்கும் இழிவை மதத்தின் காவலன் என்ற வெத்து வேட்டு பட்டத்தினால் நிறைவு செய்ய விரும்புகிறார்கள்.

இனி தேர்தல் முடிவுகள் வெளிவந்து, மோடி பதவியேற்கும் பட்சத்தில் அவரை ஆதரித்து ஜெயலலிதா அமைச்சரவையில் பங்கேற்றால் மார்க்க தலைவர் கதி என்ன? அவரது கதி குறித்து குர்ஆனில் விளக்கத்தையா தேட முடியும்? ஏற்கனவே சென்ற தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காசு வாங்கியது சந்தி சிரித்ததால் இந்த தேர்தலில் காசு வாங்காமல் அதிமுகவே எல்லா ஏற்பாடுகளும் செய்து பிரச்சாரம் செய்யலாம் என்று இருந்தவர்களின் நிலை என்ன?

எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமது பெயரை காப்பாற்றிக் கொள்வதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சனை.

உங்களுக்கும் எங்களுக்கும் மோடி வரப் போகிறார் என்பது பிரச்சனை. தவ்ஹீத் ஜமாதுக்கு கோவணம் பறி போய், மானம் கப்பலேறியதுமே காலமெல்லாம் அச்சுறுத்தும் பிரச்சனை.

நமக்கு தெரிந்தவரை தமிழக தேர்தல் அரசியலில் மிகவும் மட்டமான அரசியல் செய்யும் நபர்களாக ராமதாசும், வைகோவும்தான் இருந்தார்கள். அவர்களையும் முந்திக்காட்டுவேன் என்று இந்த தேர்தலில் சாதனை செய்திருப்பவர் பி. ஜெயினுலாபிதீன்.

ஆகவே, இந்த சாதனை தரும் இழிவை துடைக்கவே இவர்கள் எம்மை குறிவைக்கிறார்கள். புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் பிரச்சனை செய்தது போல இனி வரும் நாட்களில், அப்பாவி பெண்கள் பர்தா போடாமல் போனால் மிரட்டி தங்கள் வீரத்தை காட்ட வாய்ப்பு இருக்கிறது. அல்லது சந்தனக்கூடு நிகழ்விற்கு போகும் ஏழைகளுக்கு பத்வா போட்டு எச்சரிக்கை விடுத்தும் தமது ‘புனித’த்தை காட்டுவார்கள். இப்படி அப்பாவிகளை வதைத்துதான் இசுலாமியர்களிடம் தமது பெயரை தக்க வைக்க வேண்டியிருக்கிறது. அதனால் இசுலாமிய மக்கள் அவர்களுடைய எதிர்கால நலனை வேண்டியாவது இவர்களை சும்மா இருக்கச் சொல்லி கேட்டுக் கொள்ள வேண்டும்.

மாறாக, இத்தகைய வேலைகளை செய்வதன் மூலமாக ஆர்.எஸ்எஸ் தரப்புக்கு மேன்மேலும் வலு கூட்டுகிறார்கள்.

இவர்கள் அழைக்கும் பகிரங்க விவாதம் குறித்து முன்னர் வினவு சார்பில் பின்னூட்டத்தில் தெளிவாக தெரிவித்திருக்கிறோம். இவர்களை அம்பலப்படுத்துவதே எமது பணி, விவாதிப்பதல்ல என்று பல முறை தெரிவித்திருக்கிறோம். மேலும் விவாதத்துக்கு தயாரா என்ற இவர்களது கேள்வியே ஒரு பெரிய காமெடி. கடவுள் இருக்கிறாரா இல்லையா, குரான் வசனம் சரியா தப்பா என்று விவாதிக்கும் உரிமை எந்த இசுலாமிய நாட்டிலாவது இருக்கிறதா? இல்லை இதே விவாதத்தை எந்த இசுலாமியராவது நடத்த தவ்ஹீத் ஜமாஅத் அனுமதிக்கிறதா?

மதத்துக்குள் ஜனநாயக உரிமை கிடையாது என்பதுதான் உங்கள் மதத்தின் முதல் கோட்பாடு. இந்த அக்மார்க் ஆதிக்கத்தை பின்பற்றும் இவர்கள் எம்மை ஜனநாயக ரீதியில் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பது கேலிக்கூத்தல்லவா? இது சாதி வெறியர்களுக்கும் அப்படியே பொருந்தும். ராமதாசோடு போய் பகிரங்க விவாதம் நடத்தி என்ன பலன் ஏற்படும்? அது போலவே ஜனநாயகத்தை மறுக்கும் இசுலாமிய இயக்கங்களோடு எப்படி விவாதிப்பது?

கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அனைத்து மக்களும் தமது தனிப்பட்ட வாழ்வில் கடவுள் நம்பிக்கை, வழிபாடு செய்வதும், ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதும் அடிப்படை உரிமை என்று அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஷரியத் ஆட்சி நடக்கும் இசுலாமிய நாடுகளில் ஒருவன் தன்னை கம்யூனிஸ்டு என்றோ இல்லை நாத்திகன் என்றோ அறிவித்து கொள்ளத்தான் உரிமை உண்டா? இப்படி அடிப்படை ஜனநாயகத்திற்கே எதிரான மதவெறியர்களை அம்பலப்படுத்துவதே எமது பணி அன்றி, அவர்களை சரிக்கு சமமாக கருதி உரையாடல் நடத்துவதல்ல.

விவாதத்துக்கு வரவில்லை என்றால் எங்களுக்கு சேலை, ஜாக்கெட் அனுப்பி வைப்போம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதாவிடம் போய் ‘ஏம்மா மோடியை எதிர்த்து பேச மாட்டேங்கிறீங்க’ என்ற கேள்வியைக் கூட எழுப்ப முடியாமலும், போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து பிரச்சனை செய்யாமலும் பயந்து ஓடிய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஜெயலலிதா எதை அனுப்பி வைப்பார்?

பின் குறிப்புகள் :

      1. இது போல சேலை ஜாக்கெட் அனுப்புவதாக தவ்ஹீத் ஜமாஅத்தார் கூறியிருப்பது ஃபாத்திமா உள்ளிட்ட பெண்ணினம் முழுவதையும் அவமதிக்கும் செயல் என்பது எங்கள் கருத்து. இதற்கு தனியாக கண்டனம் தெரிவிக்கிறோம். இது தொடர்பாக பெண்களும், பெண்களின் உரிமைக்கு ஆதரவாக போராடும் அனைவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கோருகிறோம். கர்நாடகவில் காதலர் தினத்தன்று காதலர்களை அடித்து விரட்டியும், பெண்கள் மது அருந்தினார்கள் என்று கன்னத்தில் அறைந்தும் அச்சுறுத்திய சிறீராம் சேனா எனும் இந்துமதவெறி ரவுடிகளுக்கு பெண்கள் பிங்க் ஜட்டி அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தது போல தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்துக்கு அனுப்ப விரும்புபவர்கள் அனுப்பலாம்.
        முகவரி :
        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
        30, அரண்மனைக்காரன் தெரு,
        மண்ணடி, சென்னை-1
        போன்- 91 044 25215226
        மின்னஞ்சல்- tntjho@gmail.com
      2. தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசுபவர், புதிய கலாச்சாரம் அலுவலகம் பத்துக்கு பத்து அளவுள்ள இடத்தில், ஒரு கக்கூசை இடித்துவிட்டு கட்டிய தம்மாத்துண்டு இடத்தில் இருக்கிறது என்று நம்மை பணக்காரத்திமிருடன் கேலி செய்கிறார். அய்யா, நாங்கள் உழைக்கும் மக்களிடம் உதவி பெற்றுக் கொண்டு கட்சி நடத்துவதால் கக்கூஸ் அளவுள்ள இடத்தில்தான் அலுவலகம் நடத்துகிறோம். அமெரிக்காவின் அடியாள் சவுதி அரேபியாவில் இருந்து வரும் நிதியால் நீங்கள் மாளிகையில் கட்சி நடத்துகிறீர்கள். மேலும் எமது அலுவலகத்தை போல பெரும்பான்மையான இசுலாமிய உழைக்கும் மக்களும் குடிசைகளிலும், பத்துக்கு பத்து அளவுள்ள இடங்களிலும்தான் வாழ்கிறார்கள். அந்த வகையில் அம்மக்களுக்கு நாங்கள்தான் பிரதிநிதி என்பதை உங்கள் வாயாலேயே ‘அல்லா’ வரவழைத்து விட்டான்.
      3. எமது அலுவலகத்திலிருந்து தவ்ஹீத் ஜமாஅத்தில் சிக்கியுள்ள சகோதரர்கள் கிளம்பிய பிறகு, ஏற்கனவே வந்திருந்த நண்பர்களோடு மீண்டும் உரையாடலை துவங்கினோம். அவர்களில் ஒரு நண்பர் பின்வருமாறு கூறினார்.’நான் வினவை வாசித்த இத்தனை ஆண்டுகளில் எனக்குள் நெருடலாக இருந்த ஒரு விசயத்தை பற்றி இன்றைக்கு நேரடியாக கேட்டுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதற்கான தேவை இப்போது இல்லாமல் போய்விட்டது’‘வினவில் எல்லா மதவெறியர்களை பற்றியும் நிறைய எழுதுறீங்க. ஆனால் குறிப்பா இந்து மதத்தை பற்றி மட்டும் தான் காட்டமா எழுதுறீங்க, மற்ற மதங்கள் மீது ஒரு மென்மையான போக்கு இருப்பதாக தான் நானும் நினைத்திருந்தேன். இதே கேள்வியை தான் பலரும் பின்னூட்டங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இப்போது விடை கிடைத்து விட்டது.” என்றார்.
      4. இசுலாமிய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் என்பது இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதால், நாம் ஒன்றுபட்டு அதை எதிர்த்து போராடுவது அவசியம். அதே நேரம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த இசுலாமிய மக்களையும் ஆர்.எஸ்.எஸ் தனிமைப்படுத்தி ஒடுக்க முனைகிறது. எனவே, நீங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை பகிரங்கமாக கண்டிப்பது அனைத்து உழைக்கும் மக்களிடையே ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்கும் இந்து மதவெறியை முறியடிப்பதற்கும் உதவி செய்யும். ஆகவே உரிமையுடன் கோருகிறோம்.
      5. பார்ப்பனர்கள் மோடியை ஏன் ஆதரிக்கிறார்கள் என்ற டி.எம். கிருஷ்ணா கட்டுரையை வினவில் வெளியிட்டு அது தமிழ் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது தொடர்பாக அக்மார்க் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளும் வயிறு எரிந்து புலம்பித் தீர்த்தனர். அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு சூப்பர் கட்டுரை வெளியிடலாம் என்று யோசித்த தருணத்தில்தான் டி.என்.டி.ஜே எமது உழைப்பையும் நேரத்தையும் எடுத்துக் கொண்டது. எப்டீல்லாம் யோசிச்சு ஆர்.எஸ்.எஸ் க்கு எல்ப் பண்றாய்ங்கப்பா. இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!

வீடியோ – இனி காமெடி டைமை பாருங்கள்

  1. என்னா வினவு அய் என் டி ஜே காரங்கட்ட சொன்னா அவங்கலே டிஎன் டி ஜே ய எதிற்க்க போராங்க யார் பொய் சொன்னது இசுலாம பத்தினு தருதலை ஜமாத்னு அய் என் டி ஜே வும் பொய்யன் டி ஜேனு டி என் டி ஜே வும் இணையத்துல அடிச்சுக்கிறாங்க இதுல வினவுட்ட வேறயா இவங்களுக்கு வேற வேலையே இல்ல போல இருக்கு நானும் உங்க அலுவலகத்துக்கு அன்னய தேதிக்கு வந்து இருந்தா இந்த காமடிய பாத்து ரசிச்சு இருக்கலாம் வர முடியாது போச்சே

    • TNTJ முஸ்லீம் மக்களுக்கு தன்னை ஏகப்பிரதிநிதியாக காட்டிக்கொள்வது தவறு. முஸ்லீம் சமுதாயம் அப்படி யாரையும் ஏற்கவில்லை. வினவு ம.க.இ.க போன்றவர்கள் முஸ்லீம் சமுதாயத்தின் சகோதர சக்திகள் என்பதை எந்த நேர்மையான முஸ்லீமும் மறுக்கமாட்டார்கள். எனவே இந்த தோழர்களின் கருத்துரிமையை மறுக்கும் கோழைத்தனத்தை முஸ்லீம் என்று அழைத்துக்கொள்பவர்கள் செய்யக்கூடாது. ஆனால் TNTJ அப்படி செய்கிறது. மேலும் PJ கூறுவதை இங்கே யாரும் ஏற்கத்தயார் இல்லை, இது தான் இஸ்லாம் என்று இவர் கூறுவதை நம் ஊரிலேயே பலர் ஏற்பதில்லை. இதற்கு எதிரான வெவ்வேறு விளக்கங்கள் உலகம் முழுவதும் வழங்கப்படுகின்றன. அதில் பி.ஜே கூறுவது தான் அக்மார்க் இஸ்லாம் என்று இலாமிய உலக அறிஞர்கள் யாரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை:) இப்படி மதத்திற்கு புது புது விளக்கங்களை கூறி முஸ்லீம் மக்களை மத மூடநம்பிக்கைக்குள்ளும், முட்டாள்த்தனத்திற்குள்ளும் மேலும் மேலும் ஆழமாக தள்ளிவிட்டு சமுதாயத்தை இன்னும் பின்தங்கிய நிலைக்கு இவர்கள் கொண்டு செல்கின்றனர். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இவர்கள் எந்த உதவியையும் செய்வதில்லை.

      முஸ்லீம் சமூகத்தை மதவெறியர்களாக்கி ஆர்.எஸ்.எஸ்சுக்கு இவர்கள் காவுகொடுக்கின்றனர் என்று வினவு கூறுவது முற்றிலும் சரியே. சமூகத்தை நேசிக்கும் சகோதரர்கள் (அவர்களில் காபிர்களும் அடங்குவர், அவர்களும் முஸ்லீம்கள் தான். ஆனால் காபிர்களை இந்த மதவெறி போதை ஏறியவர்கள் முஸ்லீமே அல்ல என்று ஒதுக்குகின்றனர்) பெண்களின் உடைகளை குறிப்பிட்டதன் மூலம் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டு அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தியதையும், ஏழை மக்களை இழிவுபடுத்தும் வகையில் வினவு அலுவலகத்தை கக்கூஸ் என்று கூறியதையும் வன்மையாக கண்டிக்கிறேன். வினவு தோழர்களிடம் இவர்கள் இப்படி முட்டாள்த்தனமாக நடந்துகொண்டது மொத்த சமுதாயத்திற்கும் எதிரானது. இது ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு உதவி செய்வது என்பதை பிற முஸ்லீம் சகோதரர்கள் உணர்ந்து சமுதாயத்தின் நன்மை கருதி இவர்களை கண்டிக்க வேண்டுகிறேன்.

  2. இஸ்லாமிய மக்களை பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் இஸ்லாமியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த பொறுக்கி கூட்ட்ம், வளைகுடா நாடுகளில் தமது இளமையை துளைத்து சம்பாதிக்கும் உழைக்கும் மக்கள் பணத்தில் வயிறு வளர்க்கும் இவர்கள் வினவின் அலுவலகத்தை பற்றி பேசுவதற்கு துப்பில்லதவர்கள். மூஸ்லீம் நாடுகளில் நிதி வாங்கிகொண்டு பிழைப்பு நடத்தும் இவர்கள் பார்ப்பன – பாசிட் ஜெயலலிதாவிடமும் – கருணாநிதியிடமும் பெட்டி வாங்கிகொண்டு கேவலமான அரசியல் செய்யும் நாதரிகளுக்கு ஒரே ஒரு கேள்வி முன்னால் உங்கள் தழிழகத்து நபி பி. ஜெய்னுலாப்தீனுக்கு 2005க்கு முன்பு, பின்பு சொத்து மதிப்பு குறித்து பொது மேடையில் விவாதம் நடத்தலமா? 2005க்கு முன்பு ஒரு மஞ்சள் பை தான் சொத்து. குரானையும், ஹதிசையும் பேசி தொழில் செய்த்தாலேயே இந்தவசதி. இது அல்லா கொடுத்தது அல்ல. அப்பாவி இஸ்லாமிய மக்கள் பெயரை சொல்லி ஏமாற்றியது.

  3. முகமது மதத்தின் கண்ணியமும் அடுத்தவர்களை மதிக்கும் பண்பும் இந்த வீடியோவில் அழகுற வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது நெஞ்சம் நெகிழ்கிறது இப்ப வினவுக்கு இசுலாம் என்னும் அழகிய மார்கம் பற்றி தெரிந்து இருக்கும்

    • நீங்கள் ஏன் இங்கே குறுக்குச்சால் ஓட்டுகிறீர்கள். ஆனால் நான் எந்த மதத்தையும் ஆதரிக்கவில்லை.

      • ஜிஜு சார் நான் யாருக்கு குருக்குசால் ஒட்டுரேன் ஒன்னும் புரியல நீங்க யாருக்கு பின்னூட்டம் போட்டு இருக்கிங்க எனக்கு ஒன்னும் புரியல

    • unkalin kurikkool islaatthai kevalappadutthavendum enpathaa? allathu islaatthil ulla sila kevalamaanavarkalai kevalappadutthavendum enpathaa? oru kuluvai vaitthu avarkal pinpatrum mathatthai nirnayekkalaam endru kondaal unkalil etthanai kulukkal ullathu avarkal ssaiyum atttuuliyatthittkkum jesusukkum yethenum sambantham undaa?

      • ஜாகிர் எனக்கு எந்த மதத்தயும் கொச்சை படுத்தும் நோக்கம் இல்லை அந்த குழுவின் பேச்சயும் அவர்களின் செய்கையயும் வைத்து இசுலாம் இப்பிடித்தான் இருக்கும்னு சொன்னேன் இதுல என்ன தப்பு அவர்கள் இசுலாத்தின் கொள்கை முழக்கமான பாடலை போட்டு விட்டுதான் மத்தத பேசுராங்க அதாவது பிஸ்மிலில்லாகி இர் ரக்மான் இது இறைவனின் பெயரால் தொடங்கப்படுகிறது என்பதுதானே அந்த முழக்கம் ,அப்புறம் நீங்க யேசுவ திட்டுங்க அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை அதுக்கெல்லாம் கோவப்பட மாட்டேன்

        • unkalai thittuvathu ennudaiya nookkam alla, melum oru silarai vaitthu avarkal pinpatrum mathatthin mel avathuurai parappaatheerkal endruthaan solkiren. ennai porutthavarai alla mathamum ooreraiyai thaan solkirathu aanaal athanai adaiyum vishayatthil thaan vetrumai etpadukirathu . jesus kadavulaaka christians paarkkum athe velaiyil islaamiyarkal avarai irai thuutharaaka paarkkindranar. moses vishayatthilum athuve innum pira theerkkatharisikal vishayatthilum ithe nilaippaaduthaan minjukirathu. Unkalukku appadi iraivan mel nambikkai illai endraal athu unkal viruppam matrum suthanthiram athil naan thalai iduvathu anaakareegam . intha naakareekatthai unkalidamirunthu naan ethirpaarppathil thavarillai endru ninaikkiren. thanks.

  4. கம்யூனிசம், மார்க்சியம், பெரியாரிசம் அனைத்தும் கிறுக்குத்தனமானவை என்று தவ்ஹீத் ஜமாத் புரட்சியாளர் கூவுகிறார்.

    மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்று மக்களின் அடிப்படையான பிரச்ச்சினைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கூறுகிறது என்பதை எத்தனை முறை கேட்டாலும் இவர்கள் பதில் சொல்ல போவதில்லை.

    பாஜக கும்பல் அரசியல் செய்ய இந்து மதம் தேவைப்படுகிறது.

    தவ்ஹீத் கும்பல் அரசியல் செய்ய இஸ்லாமிய மதம் தேவைப்படுகிறது.

    • guru , appadiye saambaar rasam idiyaappam paaya ithaiyellam saivathu patrium islaam enna solkirathu endru kelunkal enandraal ithuvum thinasari vaalvil atthiyaavasiyam thaane. muthalil petrolai patri pesa aarambitthaal atharkku munnaal vaakanatthai patri arivikka vendum , upayokikkum vaakanatthai patri sinthikkum munnere athai saivatharkkaana moolapporulpatri sollavendum……..etc ippadiyellaam sollikkonde poratharkku quran ariviyal nool illai enpathai pathivu saiya virumbukiren.

  5. கொடுக்கப்பட்ட வீடியோவை பார்த்தேன்.

    தன்னை அம்பலபடுத்தியவனை எப்படியாவது வம்புக்கு இழுத்து தன்னுடைய மானத்தை காப்பற்ற முயற்சியாகத்தான் இந்த விவாத அறைக்கூவல் இருக்கிறது.

    என்னுடைய பயணத்தின் போது ஏற்பட்ட விவாதத்தை இங்கே பகிற விரும்பிகிறேன்.

    நாங்கள் இந்துவ பயங்கரம் பற்றி பேசிகொண்டு வந்தோம் அப்போது எதிரில் இருந்த ஒரு முஸ்லீம் ஒருவர் இன்றைய முதலாளித்துவ ஒடுக்குமுறைக்களை கேட்டு கொண்டே எங்கள் மதம் அப்படி யில்லை. ஒரு ஏழை முஸ்லீமுக்கு தன் சொத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கை தானமாக வழங்கவேண்டும் என்று சட்டம் எல்லாம் உண்டு நாங்கள் அதன் படித்தான் நடப்போம் என்று நியாயபடுத்தினார். நாங்கள் அதற்கு மதம்மானது ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தை பாதுக்காக்கிறது. மேலும் இவ்வளவு நியாயம் சட்டம் சொர்க்கம் என்று கூறினீர்களே. உங்கள் ஆட்சி நடைபெறும் இடத்தில் கூட ஏன் தனி சொத்துடைமை இருக்கிறது என்றோம். அவர் இப்படி நான் சிந்த்தித்தது இல்லை என்று கூறினார். பிறகு பெண்கள் பர்தா அணிவதை பற்றியும், அவள் சக உயிரினம் என்பதை அங்கீகரிக்காதததையும் தர்க்கரீதியாக போட்டுடைத்தோம்.

    விவாதம் என்பது இயல்பாக அறிவை பெறுவதற்காக மட்டும்தான் இருக்கவேண்டும். இவர்களோ தன்னிலையை சுற்றியிருப்பவர்களிடம் HEROISM காண்பிப்பதற்க்காக “Wanted ஆக நானும் ரெளடிதான் ” என்பதாகத்தான் தோன்றுகிறது. மேலும் தனியான ஒருவரிடம் 4 பேர் சேர்ந்து உரையாடுவதை அதுவும் அவர் அனுமதி இல்லாமல் அதை படம்பிடித்து போடுவதன் நோக்கம் சமூகத்தின் பார்வையில் மீசையில மண்ணு ஓட்டல என்பதை நிருபிக்கவேண்டும் என்பதையே காட்டுகிறது.

    என்னுடைய வேண்டுகோளாக இந்த கழிசடைகிட்ட எல்லாம் விவாதம் வைப்பது என்பது நேர விரயம்.

  6. ததஜவின் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது! இத்தகைய செயல்கள் மூலம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. சமீபத்தில் ததஜவினரின் அரசியல் ஸ்டண்டுகளைப் பார்த்து ததஜவின் பல்வேறு கிளைகளில் உள்ள சகோதரர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளதை இயக்கம் அறியும்.

    முதன் முதலில் TNTJ வெளியிட்ட வீடியோவை கண்ட நேரத்திலேயே Bits & pieces ஐ எடிட் செய்து ஒட்டி ஒரு தயாரிப்பை உருவாக்கியது போலுள்ளதே என்று நினைத்தது மிகச் சரியாக உள்ளது. குர்ஆன் வசனங்களை முன் பின் விட்டுவிட்டு இடையிலுள்ள வசனத்தை மட்டும் எடுத்து மேடையில் பேசி இந்து மக்களிடையே மதவெறி கிளப்பும் அருண்ஷோரி ஏனோ நினைவுக்கு வருகிறார்.

    இவர்களைக் கண்டிக்க, நடுநிலை சிந்தனை இருந்தால் போதுமானது. எதிர் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. (அப்படி ஒரு முத்திரை எனக்கும் குத்தி விடாமல் இருந்தால் சரி)

    // “நாங்க உங்களுக்காக அதை பண்ணவில்லை. நாங்கள் உங்களுக்காக இந்துமதவெறியை எதிர்க்கிறோம் என்று நீங்களே நினைத்துக் கொண்டால் அது உங்களுடைய தவறு. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கபரிவாரங்கள் எங்களுடைய பரம விரோதிகள். அவர்களை ஒழித்துக் கட்டுவது தான் எங்களுடைய நோக்கம். அதை உங்களுக்காக செய்யவில்லை. பார்ப்பன பாசிசம் என்பது இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. அதனால் தான் அதை எதிர்க்கிறோமே தவிர அது இசுலாமியர்களுக்கு எதிரானது என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை.”//

    வினவு நினைப்பது போன்று இல்லை. பொது எதிரி பற்றிய இந்த தெளிவு பெரும்பான்மையான முஸ்லிம்களிடத்தில் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கம் நடத்துபவர்களிடம் இல்லாதது பரிதாபம் தான்.

    – அபூ ஹஸன்

  7. அவர்களில் ஃபாருக் என்பவர் (இவர் டிஎன்டிஜே-வின் மாநில பேச்சாளராம், அப்போது தெரியாது) வினவு தளத்தை போற்றி புகழ்ந்தார். “ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக நீங்கள் மிக சிறப்பாக செய்கிறீர்கள், உங்களுடைய பணி மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் நீங்கள் மட்டுமே இப்படி செய்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் தொடர்பாக எத்தனையோ முக்கியமான விசயங்களை அம்பலப்படுத்துகிறீர்கள்” என்றெல்லாம் சலிக்காமல் புகழ்ந்து தள்ளினார்.

    // உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எங்களுக்காக பல இடங்களில் உங்கள் குரல் ஒலித்துள்ளது என்பதை நாங்கள் யாரும் மறுக்க தயாராக இல்லை…

    விவாதத்தின் போது தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தினர் பகிரங்க விவாதம், இசுலாம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்ற வரம்பிற்குள் நின்று மட்டுமே பேசினர். தோழரோ அத்தகைய மத விவகாரங்கள், குர் ஆனில் இத்தனாவது அத்தியாயத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது போன்றதாக விவாதம் போவதை அனுமதிக்காமல் நடப்பு வாழ்க்கை, அரசியலுக்கு இசுலாம் என்ன தீர்வு என்பதை மீண்டும் மீண்டும் கேட்டு வந்தார்.

    // இதை நாங்கள் கேட்பதற்கு காரணம் இஸ்லாத்தின் அடிப்படைகள் தான் தீவிரவாதத்திற்கு துணை போகிறது என்று நீங்கள் உங்கள் சில கட்டுரைகளில் எழுதினீர்கள். அந்த அடிப்படை என்று நீங்கள் எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறோம். பெரும்பாலானவர்கள் எதை பின்பற்றுகிறார்களோ அது தான் இஸ்லாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் எல்லாம் இடதுசாரிகள் ஆகிவிட முடியாது. அந்தக் கொள்கையின் மைய்ய கருத்துக்களை பின்பற்றுபவர்கள் மற்றும் தான் இடதுசாரிகள் ஆக முடியும். அது போன்று தான் இஸ்லாமும், தன்னை இஸ்லாமியன் என்று அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் இஸ்லாமியன் ஆகிவிட முடியாது, இஸ்லாத்தின் மைய்ய கொள்கையை(குரான்) பின்பற்றுபவர்கள் மற்றும் தான் இஸ்லாமியன் ஆக முடியும் என்று நாங்கள் கூறுகிறோம்.

    மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்று மக்களின் அடிப்படையான பிரச்ச்சினைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கூறுகிறது”

    // இஸ்லாமிய பொருளாதார கொள்கைகள் என்று ஒன்று இருப்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

    “தண்ணி குடிப்பதில் துவங்கி, தொழும் போது விரலை நீட்டிக்கொண்டு தொழ வேண்டும் என்பது வரை இது இது தான் இசுலாம், இது இதெல்லாம் இஸ்லாம் இல்லை என்று தடிக்கம்பை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை கற்பிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? மக்கள் எதை பின்பற்றுகிறார்களோ அது தான் இசுலாமிய மதம். சந்தனக்கூடு திருவிழா, தர்கா வழிபாடு, சூஃபி போன்று உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு தவ்ஹீத் என்கிற குண்டாந்தடியை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டுவதற்கு நீங்கள் யார்?” என்ற கேள்விக்கு, “நாங்கள் தான் உண்மையான இசுலாத்தை பின்பற்றுகிறோம்” என்றனர். இப்படி ஒரிஜினல் இசுலாத்திற்கு அத்தாரிட்டி என்று யாரும் இல்லை என்பதை தோழர் வலியுறுத்தினார். மாறாக, ‘இதுதான் இசுலாம், இப்படித்தான் பின்பற்ற வேண்டும்’ என்று சொல்வது பாசிசம் என்றார்.

    // எந்த நிலையிலும் நாங்கள் செய்வது தான் 1௦௦% சரி, எங்களை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்து திணிப்பை என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்தது இல்லை. நாங்கள் சொல்வது தவறு என்று உங்களுக்கு தெரிந்தால் பொது மேடையில் எங்களுடன் விவாதம் செய்யுங்கள், தவறு என்று நிரூபித்து விட்டால் பொது மன்னிப்பு கோருவோம் என்று தான் எப்பொழுதும் கூறி வருகிறோம். பொது மன்னிப்பு கோரியும் இருக்கிறோம்.

    பிறகு, பின்லேடனை தீவிரவாதி, பயங்கரவாதி என்று ஏன் எழுதுகிறீர்கள் என கேட்டனர். அவர் அமெரிக்காவை எதிர்த்து போராடிய போராளி என்றும் கூறினர். அவர் போராளி அல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய கைக்கூலி என்று அம்பலப்படுத்தியதும் அடுத்த விசயத்திற்கு தாவினர்.

    // இந்த செய்தியை TNTJ அமைப்பினர்களே அதிகார்பபூர்வ மேடைகளில் பல முறை பேசி இருக்கிறார்கள்.

    ஜெயலலிதாவோடு கூட்டு, ஆர்.எஸ்.எஸ்-ஐ வளர்ப்பதற்கு உதவுகிறீர்கள் என்று தோழர் பேசியபோது அவர்கள் திணறியதற்கு காரணம், ஏதோ ஒரு வகையில் நியாயங்களை பரிசீலிக்க கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.

    // இதில் திணற ஒன்றும் இல்லை. பெரியாரே திராவிட கட்சியை விட்டு விட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார் என்பதற்காக அவர் ஆர்.ஸ்.ஸ் அமைப்பில் பங்குகாரராக ஆகி விடப்போவதில்லை. இந்திய அரசியலில் அரசியல் மூலம் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் வாக்கு என்றும் ஆயுதம் மட்டும் தான் உள்ளது(நீங்கள் இந்த அரசியல் முறையை நம்புபவர்கள் இல்லை,என்றாலும் உங்கள் கோரிக்கைகளை போராட்டங்கள் மூலம் தான் வெளிப்படுத்துகிறீர்கள்). இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டு உரிமைகளை பெற வாக்குகளை ஆயுதமாக பயன்படுத்தினார் பெரியார். அது தான் வெல்ல ஒரே வழி. அதே வழியை (அரசியலில் மட்டும்)பின்பற்றி தான் TNTJ செயல்படுகிறது.(திமுகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் ஆர்.ஸ்.ஸ். வளர உதவுகிறீர்கள் என்ற வார்த்தையை சொல்ல முடியும்.திமுக-அதிமுக எந்த வேறுபாடும் இல்லை)

    ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் கவலை வேறு. தங்களை இசுலாத்தின் ஒரே பிரதிநிதியாக காட்டிக் கொண்டிருந்த வேசம், இந்த தேர்தல் புழுதியில் கரைந்து விட்டது. ஜெயலலிதாவை ஆதரித்து பிஜே பேசியதும், போயஸ் தோட்டத்திற்கு வெட்கம் கெட்டு போய் நின்றதும் இசுலாமிய மக்கள் மத்தியிலேயே கடும் விமரிசனத்தை ஏற்படுத்தின. ஆரம்பத்தில் திமுகதான் பாஜகவின் நட்பு சக்தி, அம்மாதான் இசுலாமியர்களுக்கு உரிய சக்தி என்று பேசிவிட்டு பின்னர் பிளேட்டை அப்படியே திருப்ப வேண்டிய கேவலம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது. இடையில் மோடியின் தமிழக வருகை குறித்து எமது அமைப்புகள் வீச்சாக நடத்திய பிரச்சாரம் இசுலாமிய மக்களிடம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

    // நாங்கள் எதற்காகவும் ஜெயலலிதாவிடம் போய் நிற்கவில்லை. நின்றோம் என்று கூறுவதாக இருந்தால் ஆதாரத்துடன் நீங்கள் கூற வேண்டும். அவதூறாக கூற கூடாது. நாங்கள் ஆளும் கட்சியிடம் எங்கள் கோரிக்கையை வைப்போம் அவர்களுக்கு கேடு விதிப்போம். அவர்கள் எங்கள் கோரிக்கை ஏற்க முன்வந்தால் அவர்களுக்கு நாங்கள் திரட்டிய வாக்குகளை அளிப்போம். இல்லை என்றால் அவர்களுக்கு மாற்றாரிடம் கோரிக்கை வைப்போம் அவர்கள் ஏற்றால் அவர்களை ஆதரிப்போம். இது தான் என்றுமே எங்கள் நிலைப்பாடு. எங்கள் நிலைப்பாடு கோரிக்கையும் கொள்கையும் சார்ந்தும் இருக்குமே தவிர பணமோ வேறு சிலவற்றையோ எதிர்நோக்கி இருக்காது. இடஒதுக்கீடு கேட்டு ஜெயலலிதாவை அணுகினோம் தருவதாக கூறினார். பாஜகவுடன் அதிமுக உறவு என்ற சொல்லுக்கே இடம் இல்லாத சூழ்நிலையாக இருந்தது அந்த நேரம். பின்னர் தேர்தல் நெருங்க அவர் பாஜகவை விமர்சிப்பதாக தெரியவில்லை. அமைச்சர்கள் மூலம் அணுகினோம். பதில் இல்லை. ஆதரவை வாபஸ் பெற்றோம். திமுக பாஜகவை ஆதரிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தோம் அவர்கள் ஏற்றுக் கொடு பொது மேடையில் அறிவித்தார்கள். அதற்க்கு பின்னரே திமுகவுக்கு ஆதரவு அளித்தோம்.(திமுக பொய் வாக்குறுதி அளித்தால் என்று அவர்கலின் அமைச்சர்களுக்கு முன்னாள் பேசும் காணொளி http://www.youtube.com/watch?v=R4l-1yi4l10 தொடர்ச்சியாக பேசிய உரையை காணவும்)

    மோடி பதவியேற்கும் பட்சத்தில் அவரை ஆதரித்து ஜெயலலிதா அமைச்சரவையில் பங்கேற்றால் மார்க்க தலைவர் கதி என்ன?

    // யாருக்கும் பயப்பட வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இல்லை. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் எங்கள் வாக்குகள் தான் இருக்கிறது. உயிருக்கு பயந்தவர்கள் நாங்கள் அல்ல….

    சென்ற தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காசு வாங்கியது சந்தி சிரித்ததால் இந்த தேர்தலில் காசு வாங்காமல் அதிமுகவே எல்லா ஏற்பாடுகளும் செய்து பிரச்சாரம் செய்யலாம் என்று இருந்தவர்களின் நிலை என்ன?

    // ஆதாரம் இருந்தால் தயவு செய்து காட்டவும்…அவதூறு கிளப்ப வேண்டாம்

    புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் பிரச்சனை செய்தது போல இனி வரும் நாட்களில், அப்பாவி பெண்கள் பர்தா போடாமல் போனால் மிரட்டி தங்கள் வீரத்தை காட்ட வாய்ப்பு இருக்கிறது. அல்லது சந்தனக்கூடு நிகழ்விற்கு போகும் ஏழைகளுக்கு பத்வா போட்டு எச்சரிக்கை விடுத்தும் தமது ‘புனித’த்தை காட்டுவார்கள். இப்படி அப்பாவிகளை வதைத்துதான் இசுலாமியர்களிடம் தமது பெயரை தக்க வைக்க வேண்டியிருக்கிறது. அதனால் இசுலாமிய மக்கள் அவர்களுடைய எதிர்கால நலனை வேண்டியாவது இவர்களை சும்மா இருக்கச் சொல்லி கேட்டுக் கொள்ள வேண்டும்.

    // ஊகங்களை ஒதுக்கி வைக்கவும்…ஒரு நிகழ்வு இத்தனை வருடங்களில் நீங்கள் காட்ட இயலுமா???

    ராமதாசோடு போய் பகிரங்க விவாதம் நடத்தி என்ன பலன் ஏற்படும்? அது போலவே ஜனநாயகத்தை மறுக்கும் இசுலாமிய இயக்கங்களோடு எப்படி விவாதிப்பது?

    // ஜனநாயகத்தை மறுத்தார்கள் என்று போகிற போக்கில் ஏன் பொய் கூற வேண்டும். ஏதேனும் ஜனநாயகத்தை மறுத்த ஒரே ஒரு நிகழ்வை காட்ட முடியுமா??

    விவாதத்துக்கு தயாரா என்ற இவர்களது கேள்வியே ஒரு பெரிய காமெடி. கடவுள் இருக்கிறாரா இல்லையா, குரான் வசனம் சரியா தப்பா என்று விவாதிக்கும் உரிமை எந்த இசுலாமிய நாட்டிலாவது இருக்கிறதா? இல்லை இதே விவாதத்தை எந்த இசுலாமியராவது நடத்த தவ்ஹீத் ஜமாஅத் அனுமதிக்கிறதா?

    // இஸ்லாமிய நாடுகள் இஸ்லாத்தை கடைபிடிக்கவில்லை என்று தான் நாங்கள் இத்துனை ஆண்டுகளாக கூறி வருகிறோம். நாங்கள் எந்த இஸ்லாமிய நாட்டிற்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாம்(குரான்) சொல்லக்கூடிய கிரிமினல் சட்டங்களில் சிலவற்றில் உடன்படுவோம் அவ்வளவு தான்.

    கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அனைத்து மக்களும் தமது தனிப்பட்ட வாழ்வில் கடவுள் நம்பிக்கை, வழிபாடு செய்வதும், ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதும் அடிப்படை உரிமை என்று அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஷரியத் ஆட்சி நடக்கும் இசுலாமிய நாடுகளில் ஒருவன் தன்னை கம்யூனிஸ்டு என்றோ இல்லை நாத்திகன் என்றோ அறிவித்து கொள்ளத்தான் உரிமை உண்டா?

    // எந்த இஸ்லாமிய நாட்டிலும் அவ்வாறு உரிமை இல்லை என்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்…இஸ்லாம்(குரான்) அதை கூறவில்லை. அந்த நாடுகள் செய்வது இஸ்லாத்திற்கு உடன்பட்டது இல்லை. (சீனாவில் எத்துனை வருடங்கள் பள்ளிவாயில்கள் மூடப்பட்டு இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்)

    சேலை ஜாக்கெட் அனுப்புவதாக தவ்ஹீத் ஜமாஅத்தார் கூறியிருப்பது ஃபாத்திமா உள்ளிட்ட பெண்ணினம் முழுவதையும் அவமதிக்கும் செயல் என்பது எங்கள் கருத்து. இதற்கு தனியாக கண்டனம் தெரிவிக்கிறோம்.

    தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசுபவர், புதிய கலாச்சாரம் அலுவலகம் பத்துக்கு பத்து அளவுள்ள இடத்தில், ஒரு கக்கூசை இடித்துவிட்டு கட்டிய தம்மாத்துண்டு இடத்தில் இருக்கிறது என்று நம்மை பணக்காரத்திமிருடன் கேலி செய்கிறார். அய்யா, நாங்கள் உழைக்கும் மக்களிடம் உதவி பெற்றுக் கொண்டு கட்சி நடத்துவதால் கக்கூஸ் அளவுள்ள இடத்தில்தான் அலுவலகம் நடத்துகிறோம்.

    // என்னை போன்றவர்களும் கண்டனத்தை தெரிவித்தோம். கண்டிப்பாக இதற்கு பகிரங்க மன்னிப்பு தலைவர்கள் கோருவார்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் இந்த இயக்கத்தை விட்டு என்னை போன்றவர்கள் கண்டிப்பாக வெளியேறி விடுவோம்…அதற்காக சவூதியில் இருந்து பணம் வருகிறது என்று அவதூறு கூறவேண்டியது இல்லை. நீங்கள் ஆதாரத்துடன் கூற வேண்டும்.

    # முக்கியமான ஒரு கேள்வி. நீங்கள் செய்வது தான் சரி என்று ஏன் நீங்கள் மேடையில் அவர்களுடன் விவாதித்து நிரூபிக்கக் கூடாது???

    • மானம் கெட்டவன் கக்குஸ்ல கரித்துண்டுல எழுதுறவன் இப்பிடியெல்லாம் சொல்லியாச்சு இப்ப மன்னிப்பு கேட்டா அது நமக்கு மானம் இல்லேனு ஆயிடாதா மன்னிப்பு கேக்காட்டி வினவுக்கு சொரனை இல்லனு ஆயிடும் லா அதால நீ ஆபிஸுக்கு வா ffff பேசி முடிவு எடுக்கலாம் அப்புறம் அவங்கள 28 ஆம் தேதி சாப்பிட்டுட்டு 1 டஜன் அரரூட் மாவு பாக்கடோட மண்ணடி வரச் சொல்லு மன்ன கவ்வ வச்சுரலாம்

      • தவ்ஹீத் ஜமாத் சார்பாக பேச நான் அதிகார்வப்பூர்வமானவன் இல்லை…தனி மனித தாக்குதல்கள் தவறு என்பதை தலைமைக்கு தனிப்பட்ட கருத்தாக பதிந்து இருக்கிறேன்…

        # ஒரு ரூமுக்குள் வைத்துக்கொண்டு 1௦ பேருக்குள் மட்டுமே பேசாமல் பகிரங்கமாக மேடையில் பேசினால் என்ன தவறு…அதில் என்ன தயக்கம் உங்களுக்கு???

        (கொள்கைகளை பற்றி மட்டும் விமர்சிப்பதோடு இரு அமைப்பினர்களும் நிறுத்திக் கொள்வது தான் மக்களுக்கு நல்லது, பொருளாதார குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் அவதூறாக கூற வேண்டாம்.)

        • பொருலாதார குட்ரச்சாட்டு ந்னு வந்தா மட்டும் யென் ஜகா வாங்குரிங்க.

          • யாரும் ஜகா வாங்கவில்லை…இணையத்தில் எழுதுவதை நேரில் வந்து சொல்லுங்கள், முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் என்று கூறுகிறோம்??? ஏன் தயக்கம்….யாராக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல்ல முன்வர வேண்டியது தானே…

        • ஜனநாயக பண்புகளே இல்லாதவர்களிடம் எப்படி ஜனநாயகப்பூர்வமாக பேச முடியும்? இவர்களுடன் பேச முடியாது என்று தோழர்கள் கூறுவது சரி தான். எனவே நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் இதுவல்ல. த.த.ஜ செய்யும் வேலைகள் யாருக்கு பயன்படுகிறது. அதன் விளைவுகளை யார் அறுவடை செய்துகொள்கிறார்கள் என்பதே நாம் கவனம் கொள்ள வேண்டிய விசயம். வினவு போன்ற ஜனநாயகப்பூர்வமான, முற்போக்கான அமைப்புகள் இந்து மக்களிடம் இந்து மதவெறியை அம்பலப்படுத்திவருகின்றன அந்த அமைப்புகளிடமும் அந்த தோழர்களிடமும் த.த.ஜ இப்படி எதிரியை போல நடந்துகொள்வது சரியா என்பதே நேர்மையான முஸ்லீம் சகோதரர்கள் த.த.ஜ வை நோக்கி எழுப்ப வேண்டிய கேள்வி. இன்றைய அபாயகரமான சூழலில் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் முற்போக்கு அமைப்புகளையும் எதிரிகளாக்குவதன் மூலம் இவர்கள் யாருக்கு வேலை செய்கிறார்கள். யாருக்கு உதவுகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டிய கண்டிக்க வேண்டிய விசயம்.

          • ஆதரவாக இருப்பவர்கள் என்பதால் எதையும் பேசி விட முடியாது…உணர்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்…இந்திய நாட்டில் நம் அனைவரும் சகோதரர்கள் தான்…அவர்கள் எவ்வாறு நமக்கு கை கொடுக்கிறார்களோ அதே அளவு நாமும் அவர்களுக்கு கை கொடுக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம்…அவர்களின் சாத்திய ஒழிப்பு போராட்டத்தில் நம் பங்கு அதிகமாக இருந்ததை அவர்களும் உணர்வார்கள்…இங்கு பிரச்சனை அதுவல்ல…ஒரு தனி மனிதன் மீது பொருளாதார குற்றச்சாட்டு வைக்கப்பட்டது, இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது…உங்களால் முடிந்தால் உங்கள் இணையத்தில் எழுதும் இந்த குற்றச்சாட்டுகளை விட்டுவிட்டு நேரடியாக மக்கள் மத்தியில் இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என்று கூறுவது தவறா??? ஏன் தயக்கம்?? வந்து நிரூபிக்கட்டுமே??? ஜனநாயக உரிமையை எங்கே மீறினார்கள் என்று ஒரே ஒரு எடுத்துக்காட்டு கூற முடியுமா தோழரே???

    • என்னா தம்பி வினவ மானம் கெட்டவங்க ,கழிவறை எழுத்தாளர்கள்னு திட்டியாச்சு இப்ப மன்னிப்பு கேட்டா நமக்கு மானம் இல்லனு ஆயிடாதா ,மன்னிப்பு கேக்காட்டி வினவுக்கு சொரனை இல்லனு சொன்னது உண்மை ஆயிடும்ல அதால் நீ நம்ம ஆபிஸ் வாப்பா பேசிக்கலாம் அப்புறம் அவுங்கள 1 டஜன் அரரூட் மாவு பாக்கெட் வாங்கிட்டு மண்ணடி வரச்சொல்லு மண்ன கவ்வ வச்சுரலாம் 250 வாயல் சேலை வேற ஆர்டர் குடுத்தாச்சு இப்ப மன்னிப்பு கேட்டா அந்த சேலைய எல்லாம் நம்ம ஆளுகளுக்கே டிஸ்டிரிபூட் பன்ன வேன்டும் இது தேவயா

    • Hi fffffff,

      If You have guts then tell your vice caption M.S சையது இப்ராஹிம் to answer my questions in my comments 16,17,19,20,21,22!

      • இதற்க்கு முன்னர் இதே குற்றச்சாட்டு வினவு ஊடகம் வைத்தது. அதற்காக தான் தைரியம் இருந்தால் பொது மேடையில் இதை கேட்கத் தயாரா என்று விவாதத்திற்கு அழைத்தார்கள். இன்னும் ஒன்றும் ஆகிவிடப் போவது இல்லை. இந்த கேள்வியை நீங்கள் தாராளமாக TNTJ தலைமையகத்திற்கு சென்று கேட்கலாம். இதை பற்றி நீங்கள் எழுதுவதை பற்றி பேச தான் உங்களை நேரில் அழைக்கிறார்கள்….

        • சரவணனையா விவாதத்திற்கு அழைக்கிறீர்கள்? அவ்வளவு துணிச்சலா உங்களுக்கு?

          • நாங்கள் எப்போவோ அழைத்து விட்டோம்…பொருளாதார குற்றச்சாட்டோ கொள்கை ரீதியான குற்றச்சாட்டோ எதுவாக இருந்தாலும் உங்கள் இணையத்தில் எழுதாமல் நேரில் வந்து சொல்லுங்கள் என்கிறோம்!!! யார் உடன்படவில்லை என்பது மக்களுக்கு தெரியும்…

            • நண்பர் ffff அவர்களே,

              விவாதத்தை நேரில் தான் செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்.
              இணையத்தின் மூலம் பல விவாதங்களை நடத்தலாமே.
              நண்பர் சரவணன் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தாங்கள் இணையத்தின் மூலமே பதிலளிக்கலாமே. நேரில் வந்து பேசி என்ன ஆகப்போகிறது?

              • Dear KK,

                Not Doubts!

                But Challenges posted from me to Dirty TNTJ guys!

                For every matter I have solid proof with me!

                //நண்பர் சரவணன் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தாங்கள் இணையத்தின் மூலமே பதிலளிக்கலாமே. நேரில் வந்து பேசி என்ன ஆகப்போகிறது?//

        • ffffffffff,

          [1]அப்ப ffff சவாலுக்கு தயார் இல்லை தானே ?

          [2]TNTJ தலைவனும் ,துணை தலைவனும் விவரங்கலீல் முரண் படுவதை வினவு இது வரை அம்பல படுத்த வீல்லை !நான் தான் இதனை முதலில் அம்பல படுத்துகீன்றேன்

          [3]எனவே நீர், உமக்கு திராணி இருந்தால்,உம் நெஞ்சில் வலு இருந்தால் சவாலை சந்திக்கவும்!

          [4]என் சவாலை சந்தீக்க முடியாவிட்டால் பெயர் ,முகவரி கொடுங்கள் !பிங்க் ஜட்டி அனுப்பி வைக்கின்றேன்

          //இதற்க்கு முன்னர் இதே குற்றச்சாட்டு வினவு ஊடகம் வைத்தது.

          • ffff ,

            [1]முதலில் நீர் என் சவாலை சந்தித்து மறுத்து பேசி என் feedback தவறு என்று நீருபிக்க முயற்சி செய்யவும் !

            [2]நீர் இச் சவாலை சந்தித்து தர்க்கம் செய் , அப்போது உமக்கு உண்மையிலேயே அறிவு இருப்பது நீருபணம் ஆனால் உம்முடன் நேரில் மேடை போட்டு வீவாதிக்கலாம் !

            //இந்த கேள்வியை நீங்கள் தாராளமாக TNTJ தலைமையகத்திற்கு சென்று கேட்கலாம். இதை பற்றி நீங்கள் எழுதுவதை பற்றி பேச தான் உங்களை நேரில் அழைக்கிறார்கள்….//

            • இதை தான் நாங்கள் கேட்கிறோம்…இணையத்தில் எழுதிக்கொண்டு இருக்காமல் நேரில் வாருங்கள்…வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்று கூறுகிறீகள்…வாருங்கள் மக்கள் மத்தியில் வந்து வெளிச்சம் போட்டு காட்டுங்கள்…ததஜ பதில் தரும்…யாரிடம் உண்மை இருக்கிறது என்று மக்கள் தெரிந்துக் கொள்ளட்டும்…பேசும் செய்திகளை காணொளி பதிவு எடுப்போம்…அதற்காக தான் அழைக்கிறோம்…வர மறுப்பது ஏன்? வருவதற்கு விருப்பம் இருந்தால் http://www.tntj.net/contact-us தொடர்பு கொள்ளுங்கள்…

              • ffff,

                முதலில் என் சவாலை நீர் சந்தியும் ;உம் தலைவனுக்கும் ,துணை தலைவனுக்கும் உள்ள கருத்து முரண்பாடுகளை நான் சுட்டி காட்டியுள்ளேன் அல்லவா ? [Ref my feedback 17,19,20,21,22 ]அதற்க்கு வீளக்கம் கொடும் !; உம் வீளக்கத்தில் இருந்து தமிழ் நாட்டு மக்கள் உம் அறிவை புரிந்து கொள்கீன்றேம் ! அதன் பின் நேரடி விவாதம் வைத்து கொள்வதை பற்றி முடிவு செய்யலாம்!

                [நீர் இச் சவாலை சந்தித்து தர்க்கம் செய் , அப்போது உமக்கு உண்மையிலேயே அறிவு இருப்பது நீருபணம் ஆனால் உம்முடன் நேரில் மேடை போட்டு வீவாதிக்கலாம் ! ]

                  • சவால் TNTJ வுக்கு சவால் !
                    ————————————————————–

                    [1][ffff], முதலில் என் குற்றச்சாட்டுகளுக்கு நீர் மறுப்பு தெரிவிக்கவும்!

                    [2]என் பின்நூட்டங்கள் 17,19,20,21,22 ஒவ்ஒன்றுக்கும் மறுப்பு தெரிவிக்கவும்!

                    [3]உடனே ஆதாரங்களை நொடி நேரத்தில் தருகின்றேன் !

                    [4]என் feedback தவறு என்று உம்மால் நிருபிக்க முடியாவிட்டால், ஒலி/ஒளி யில் வாந்தி,போதி செய்த உம் துணைதலைவன் M.S சையது இப்ராஹிம் நாகூர் தர்காவில் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டும் !
                    இல்லை என்றால் நான் !

                    |————————-TNTJ சவாலுக்கு தயாரா ?———————————–|

                    • நான் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்…கண்ணை மூடிக்கொண்டு ஒரு இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்க நாங்கள் முன்படவில்லை…நீங்கள் ஒரு குற்றச்சாட்டை வைத்தால் ஆதாரத்தையும் நீங்கள் தான் வைக்க வேண்டும்,அப்பொழுது தான் அந்த குற்றச்சாட்டு முறையானதா என்பதே தெரியும்…குற்றச்ச்சாட்டு முறையானதா என்பதே தெரியாமல் மறுப்பு தெரிவியுங்கள் , என்னை மறுப்பு தெரிவிக்க வேண்டும்,தெரிவித்தால் தான் ஆதாரம் தருவேன் என்பது எந்த வகையில் சரி…தலைவரோ துணைத்தலைவரோ எவனுக்கும் சொம்பு பிடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை…

                    • ffff,

                      I am ready to display the evidence to vinavu web site now .

                      But at least you should conform my following challenge by consulting with your wise caption.

                      Ok?

                      என் feedback தவறு என்று உம்மால் நிருபிக்க முடியாவிட்டால், ஒலி/ஒளி யில் வாந்தி,போதி செய்த உம் துணைதலைவன் M.S சையது இப்ராஹிம் நாகூர் தர்காவில் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டும் ! இல்லை என்றால் நான் !

                      |————————-TNTJ சவாலுக்கு தயாரா ?———————————–|

                      Are TNTJ people read to face my challenge NOW?

                      ffff, replay soon. Do not run away!

                  • ஆடியோ/வீடியோ ஆதாரங்களை முழுமையாக எடிட் செய்யாமல் வெளி இட தயங்கும் TNTJ கோழைகள் :

                    [1]வினவு ஆபீஸ்ல் நீர் ரெகார்ட் செய்த ஆடியோ/வீடியோ ஆதாரங்களை எடிட் செய்யாமல் fully வெளியீடுவதில் உமக்கு என்ன சிக்கள் fff ?

                    [2]உலகீன் முதல் ,தலை சிறந்த கோழைகளா TNTJ ?

              • ffff ,

                BEFORE DIRECT DISCUSSION……, YOU FIRST DO THIS IF U HAVE GUTS…..

                [1]If You have guts then release the audio/video content completely without editing which you have recorded in vinvu office. By the way we understand the real conversation held between u and vinavu!

                [2]You should refuse the allegations which I told about your captain and vis captain!

        • யேன் பன்டார பரதேசி H.ராஜா முஸ்லிம் பத்தி பேசும் பொது அவன் கிட்ட போய் விவாதம் பன்ன வேன்டியது தான்_____?

    • ///இதை நாங்கள் கேட்பதற்கு காரணம் இஸ்லாத்தின் அடிப்படைகள் தான் தீவிரவாதத்திற்கு துணை போகிறது என்று நீங்கள் உங்கள் சில கட்டுரைகளில் எழுதினீர்கள்.///

      அடிப்படைகள் என்பது மதத்தின் அடிப்படைவாதம் தான். இந்துவெறிக்கு இந்து அடிப்படைவாதம் இஸ்லாத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம். இஸ்லாத்திற்கு உலகம் முழுவதும் பல விளக்கங்கள் கூறப்படும் போது. இது தான் இஸ்லாம் என்று எப்படி பி.ஜே வால் கூற முடியும், நாம் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் கூறுவது தான் சரி நாங்கள் கூறுவதெல்லாம் தவறு என்று இஸ்லாமிய உலகம் அதை ஏற்றுக்கொள்கிறதா? அவர் கூறும் விளக்கங்களுக்கு வேறு இஸ்லாமிய அறிஞர்கள் வேறு விளக்கக்ங்கள் தருகின்றனர்.

      மேலும் மதவெறியால் மதவெறியை ஒழிக்க முடியாது மாறாக அவை ஒன்றை ஒன்று வளர்க்கவே செய்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்து அடிப்படைவாதத்தையும் இந்து அடிப்படைவாதம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பரஸ்பரம் வளர்க்கிறது. ஆனால் சிறுபாண்மை சமுதாயமான முஸ்லீம் சமுதாயத்தை த.த.ஜ எவ்வளவு தான் மதவெறி போதையூட்டி வளர்த்தாலும் அதனால் பெரும்பாண்மை இந்து மதவெறியை வெல்ல முடியாது, மாறாக த.த.ஜ செய்யும் வேலை சொந்த மக்களுக்கே குழி தோண்டி இந்துமதவெறி கும்பலுக்கு உதவி செய்வதாகும்.

      // இஸ்லாமிய பொருளாதார கொள்கைகள் என்று ஒன்று இருப்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

      முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன. மார்க்சிய பொருளாதார கொள்கைகள் இருக்கிறது. இஸ்லாமிய பொருளாதார கொள்கைகள் என்று கூறுவது எந்த நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. அது எப்படி சமூகபிரச்சினைகளை தீர்க்கும். இஸ்லாம் தோன்றியதிலிருந்து உலகில் எங்கேயாவது மக்களின் அடிப்படி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கிறதா? மேலும் அது எப்படி சரியானது?

      ///இதில் திணற ஒன்றும் இல்லை. பெரியாரே திராவிட கட்சியை விட்டு விட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார் என்பதற்காக அவர் ஆர்.ஸ்.ஸ் அமைப்பில் பங்குகாரராக ஆகி விடப்போவதில்லை. இந்திய அரசியலில் அரசியல் மூலம் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் வாக்கு என்றும் ஆயுதம் மட்டும் தான் உள்ளது(நீங்கள் இந்த அரசியல் முறையை நம்புபவர்கள் இல்லை,என்றாலும் உங்கள் கோரிக்கைகளை போராட்டங்கள் மூலம் தான் வெளிப்படுத்துகிறீர்கள்). இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டு உரிமைகளை பெற வாக்குகளை ஆயுதமாக பயன்படுத்தினார் பெரியார். அது தான் வெல்ல ஒரே வழி. அதே வழியை (அரசியலில் மட்டும்)பின்பற்றி தான் TNTJ செயல்படுகிறது.(திமுகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் ஆர்.ஸ்.ஸ். வளர உதவுகிறீர்கள் என்ற வார்த்தையை சொல்ல முடியும். திமுக-அதிமுக எந்த வேறுபாடும் இல்லை)///

      ஜெயலலிதாவிடம் எதற்காகவாவது போய் நின்ரால் தான் குற்றமா? அவரை போன்ற பாசிச சக்திகளை ஆதரிப்பதே குற்றம் இல்லையா? மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம் சகோ? மோடியை விட இந்த இந்த லேடி தான் நெம்பர் ஒன் கேடி என்று சவால் விடும் ஜெயலலிதாவை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் ஆதரித்து சமூகத்திற்கு துரோகம் செய்துவிட்டு, அதற்கு இப்போது இப்படி ஒரு விளக்கம் வேறு. ஜெயலலிதா போன்ற பாசிச கொலைகாரர்களை ஆதரித்து தான் முஸ்லீம் சமூகத்தை த.த.ஜ முன்னேற்ற வேண்டும் என்றால் அதை செய்ய வேண்டாம். முஸ்லீம் மக்களின் பெயரை சொல்லி பாசிச சக்திகளை ஆதரிக்கும் மோசமான செயலை உங்களைப் போன்றவர்கள் ஆதரித்து நியாயப்படுத்துவது தான் த.த.ஜ தனது தவறை மேலும் துணிச்சலாக செய்வதற்கு அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஒன்று சமூகத்திற்காக என்று கூறி இவர்கள் செய்கின்ற அனைத்து வேலைகளும் சமூகத்தை மேலும் தனிமைப்படுத்தவும், ஒடுக்கவுமே உதவுகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ் வேலையை செய்யாமல் இருப்பதே இவர்கள் சமூகத்திற்கு செய்யும் நன்மையாக இருக்கும்.

      ///யாருக்கும் பயப்பட வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இல்லை. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் எங்கள் வாக்குகள் தான் இருக்கிறது. உயிருக்கு பயந்தவர்கள் நாங்கள் அல்ல….///

      உங்களுக்கு எப்படி பயம் இருக்கும்? ஏழைகளை இழிவாக பார்க்கும் பேசும் த.த.ஜ வுக்கு அந்த பயம் எல்லாம் இருக்காது. முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினை என்றால் மதவெறியர்களுக்கு என்ன பிரச்சினை. மக்கள் மீது அக்கரை உள்ளவர்களுக்கு தான் அந்த பயம் இருக்க முடியும்.

      ///ஜனநாயகத்தை மறுத்தார்கள் என்று போகிற போக்கில் ஏன் பொய் கூற வேண்டும். ஏதேனும் ஜனநாயகத்தை மறுத்த ஒரே ஒரு நிகழ்வை காட்ட முடியுமா??///

      பின்னே ஜனநாயகம் இருக்கிறதா என்ன? மதத்தைப்பற்றி எவனாவது சமுதாயத்திற்குள் பேச முடியுமா? நாத்திகம் என்கிற வார்த்தையை கூட பேச முடியாதபடியும், அப்படி பேசினால் யார் வீட்டு பையன் இவன் என்று அடையாளப்படுத்தி குறிவைப்பதையும் அறியாதவர்களா நாங்கள்? எத்தனை பேஎரை பார்த்திருக்கிறோம் பாய்.

      ///என்னை போன்றவர்களும் கண்டனத்தை தெரிவித்தோம். கண்டிப்பாக இதற்கு பகிரங்க மன்னிப்பு தலைவர்கள் கோருவார்கள் என்று நம்புகிறேன். இல்லை என்றால் இந்த இயக்கத்தை விட்டு என்னை போன்றவர்கள் கண்டிப்பாக வெளியேறி விடுவோம்… அதற்காக சவூதியில் இருந்து பணம் வருகிறது என்று அவதூறு கூறவேண்டியது இல்லை. நீங்கள் ஆதாரத்துடன் கூற வேண்டும்.///

      உங்களுடைய பதில்களில் இது மட்டும் தான் சகோ சரியானது. அதாவது பாதி சரியானது. உங்களிடம் ஜனநாயகப்பண்புகள் இருப்பதால் தான் இப்படி கோபமாக கண்டிக்கிறீர்கள். அந்த வகையில் நீங்கள் சரியாக கூறியுள்ளீர்கள். மற்றொரு பாதியான சவ்தி பணம் என்பது உண்மை தான். ஏனென்றால் வகாபியிசம் என்பதை ஊட்டி வளர்ப்பது யார்? அமெரிக்கா தான், அமெரிக்கா மட்டுமல்ல அமெரிக்காவும் சவுதி சேக்குகளும் தான். அவர்களிடமிருந்து உதவிகள் வருகிறதா இல்லையா என்பதை த.த.ஜ காரர்களிடம் கேட்டுப்பாருங்கள். எனக்கு தெரிந்து வருகிறது. இதற்கு அவர்களும் வினவும் விளக்கமளித்தால் உதவியாக இருக்கும்.

      • //இஸ்லாத்திற்கு உலகம் முழுவதும் பல விளக்கங்கள் கூறப்படும் போது. இது தான் இஸ்லாம் என்று எப்படி பி.ஜே வால் கூற முடியும், நாம் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் கூறுவது தான் சரி நாங்கள் கூறுவதெல்லாம் தவறு என்று இஸ்லாமிய உலகம் அதை ஏற்றுக்கொள்கிறதா? அவர் கூறும் விளக்கங்களுக்கு வேறு இஸ்லாமிய அறிஞர்கள் வேறு விளக்கக்ங்கள் தருகின்றனர்.//

        தன்னை ஒருவர் பெரியாரியவாதி என்றோ அல்லது தன்னை ஒருவர் மார்க்சியவாதி என்று சொல்லிக்கொள்வதாளோ அவர் அவ்வாறு ஆகி விட முடியாது…அந்தக்கொள்கையை பின்பற்றினால் தான் அவன் அவ்வாறு ஆக முடியும்….தன்னை பெரியாரியவாதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் குண்டு வைத்தான் என்றால் அவனை பெரியாரிய தீவிரவாதி என்றோ, தன்னை மார்க்சியவாதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் குண்டு வைத்தால் அவனை மார்க்சிய தீவிரவாதி என்றோ கூறிவிட முடியாது…ஏன் என்றால் மார்க்சிய அடைப்படை கொள்கையோ அல்லது பெரியாரிய அடிப்படை கொள்கையோ அதை கற்று தர வில்லை…ஓருவரை பெரியாரிய அடிப்படைவாதி என்று சொல்லுவதாக இருந்தால், முதலில் பெரியாரிசம் என்றால் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் பெரியாரிசத்துடன் அவனது செயலை தொடர்புப்படுத்தி பார்த்து உண்மையில் அவன் பெரியாரிசத்தை பின்பற்றுகிரானா என்பதை அறிய வேண்டும்…அதன் பின்னரே ஒருவரை பற்றி பெரியாரிய அடிப்படைவாதி என்று கூற முடியும்…அது போல தான் இஸ்லாமும்…இஸ்லாம் கொள்கை சார்ந்தது…இஸ்லாமிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் அவன் இஸ்லாமியன்,இல்லை என்றால் இஸ்லாமியன் என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டாலும் அவன் இஸ்லாமியன் அல்ல…***எப்படி CPM கட்சியை மார்க்சியவாதி இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களோ அது போல தான். CPM மார்க்சியவாதி அல்ல என்று சொல்ல உங்களுக்கு உரிமையை யார் கொடுத்தார் என்று கேட்டால் எப்படி இருக்குமோ, அப்படி தான் இருக்கிறது உங்கள் கேள்வி***.

        //முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன. மார்க்சிய பொருளாதார கொள்கைகள் இருக்கிறது. இஸ்லாமிய பொருளாதார கொள்கைகள் என்று கூறுவது எந்த நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. அது எப்படி சமூகபிரச்சினைகளை தீர்க்கும். இஸ்லாம் தோன்றியதிலிருந்து உலகில் எங்கேயாவது மக்களின் அடிப்படி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கிறதா? மேலும் அது எப்படி சரியானது?//

        இஸ்லாமிய பொருளாதார கொள்கைகளில் தங்களுக்கு அதிக அளவு விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. மிக முக்கியமான கொள்கையாக வட்டியை இஸ்லாம் தடை செய்கிறது…உலக வங்கியில் இருந்து அனைவரும் இந்த வட்டியை தான் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் உள்ள அத்துணை பொருளாதார பிரச்சனைகளுக்கும் வட்டி முதன்மையான காரணமாக இருக்கிறது. ஒரு நாட்டிற்கு கடன் கொடுத்து அதற்க்கு வட்டி கட்டியே அந்த நாட்டை bankrupt செய்து ஆள்கிறார்கள். இஸ்லாமிய நாடுகள் வட்டியை அனுமதிப்பதில்லை. இதை பற்றி தெரிந்துக்கொள்ள இதை பாருங்கள்..http://www.onlinepj.com/bayan-video/thotar_uraikal/poruliyal_thalaipu_variyaka/…கூகுளிலும் தேடி அறிந்துக் கொள்ளல்லாம்.

        //மோடியை விட இந்த இந்த லேடி தான் நெம்பர் ஒன் கேடி என்று சவால் விடும் ஜெயலலிதாவை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் ஆதரித்து சமூகத்திற்கு துரோகம் செய்துவிட்டு, அதற்கு இப்போது இப்படி ஒரு விளக்கம் வேறு. ஜெயலலிதா போன்ற பாசிச கொலைகாரர்களை ஆதரித்து தான் முஸ்லீம் சமூகத்தை த.த.ஜ முன்னேற்ற வேண்டும் என்றால் அதை செய்ய வேண்டாம். முஸ்லீம் மக்களின் பெயரை சொல்லி பாசிச சக்திகளை ஆதரிக்கும் மோசமான செயலை உங்களைப் போன்றவர்கள் ஆதரித்து நியாயப்படுத்துவது தான் த.த.ஜ தனது தவறை மேலும் துணிச்சலாக செய்வதற்கு அடிப்படையாக இருக்கிறது. //

        இப்பொழுது தமிழ்நாட்டை ஆண்டுக்கொண்டிருப்பது ஜெயலலிதா தான்..அவரிடம் ஆதரவு தெரிவித்துவிட்டு அவர் செய்த துரோகங்களை பட்டியலிட்டு, இவை எல்லாம் நீங்கள் செய்த துரோகங்கள் இருப்பினும் உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவது எங்க மக்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமே.உங்கள் துரோகங்களை நாங்கள் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை..ஆளும் கட்சி என்ற ஒரே காரணத்திற்க்காக தான் எங்கள் கோரிக்கைகளை உங்களிடம் வைத்துள்ளோம் என்று கூறியது ததஜ…ஆளும் ஆட்சியிடம் போய் உரிமைகளை கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்…ஆளும் கட்சியிடம் எங்கள் கோரிக்கையை வைத்தோம்…கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி இல்லை…மாற்று கட்சியிடம் போய் வைத்தோம்…ஜனநாயக ரீதியாக இதை தான் செய்ய முடியும்…

        //உங்களுக்கு எப்படி பயம் இருக்கும்? ஏழைகளை இழிவாக பார்க்கும் பேசும் த.த.ஜ வுக்கு அந்த பயம் எல்லாம் இருக்காது. முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினை என்றால் மதவெறியர்களுக்கு என்ன பிரச்சினை. மக்கள் மீது அக்கரை உள்ளவர்களுக்கு தான் அந்த பயம் இருக்க முடியும்.//

        யாரும் ஏழை எளியவர்களை தரைக்குறைவாக பேசவில்லை. ஏழைகளுக்கு ததஜ செய்யும் உதவிகளை tntj.net என்ற இணையத்தில் நீங்கள் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். உங்களை விட மிக சிறிய கட்டிடத்தில் வாடகைக்கு இருந்தவர்கள் தான் ததஜவினர். ***அனைவரையும் பேச அழைப்பு கொடுத்துவிட்டு ஒரு சிறிய இடத்தில் ஏற்பாடுகளை செய்ததை தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டு விட்டார். மனிதன் பேசும்போது தவறு இழைப்பது தான் இயல்பு***…ஏழை எளியவர்களை இழிவாக பேசியமைக்கு ஏதேனும் உதாரணம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்.(இதை தவிர)…இஸ்லாத்தின் முக்கியமான விதியை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.. இறைவனை தவிர யாருக்கும் பயப்படுவது இஸ்லாத்தின் அம்சமே அல்ல…

        //மற்றொரு பாதியான சவ்தி பணம் என்பது உண்மை தான். ஏனென்றால் வகாபியிசம் என்பதை ஊட்டி வளர்ப்பது யார்? அமெரிக்கா தான், அமெரிக்கா மட்டுமல்ல அமெரிக்காவும் சவுதி சேக்குகளும் தான். அவர்களிடமிருந்து உதவிகள் வருகிறதா இல்லையா என்பதை த.த.ஜ காரர்களிடம் கேட்டுப்பாருங்கள். எனக்கு தெரிந்து வருகிறது. இதற்கு அவர்களும் வினவும் விளக்கமளித்தால் உதவியாக இருக்கும்.// இதை தான் நானும் கூறுகிறேன்…பணம் வருகிறது என்று வினவு கூறுகிறது…அதை பற்றி பேச தான் நேரில் வரும்படி அழைக்கிறார்கள்…ஏன் வர மறுக்கவேண்டும்? உண்மை தன் பக்கம் இருப்பவர்கள் சென்று நிரூபிக்க வேண்டியது தானே?

        //வகாபியிசம் என்பதை ஊட்டி வளர்ப்பது யார்? அமெரிக்கா தான், அமெரிக்கா மட்டுமல்ல அமெரிக்காவும் சவுதி சேக்குகளும் தான்.// அமெரிக்காவுக்கும் சவூதியும் மற்றவர்களை தாக்க இதை கேடையமாக பயபடுத்திக் கொள்கிறார்கள்…இஸ்லாமில் வஹாபிஷம் சூபிசம் போன்று எதுவும் கிடையாது…குரானும் நபிகளின் பொன்மொழிகளும் மட்டும் தான் இஸ்லாம், அதை தான் இஸ்லாம் சொல்கிறது…பெரியாரிசம் தன்னை எப்படி அறிமுகப்படுத்திகொள்கிறதோ அது தான் பெரியாரிசம், மார்க்சிசம் தன்னை எப்படி அறிமுகப்படுத்திகொள்கிறதோ அது தான் மார்க்சிசம்…அதே போல இஸ்லாம் தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்திகொள்கிறதோ அது தான் இஸ்லாம்…இஸ்லாமிய பெயர் கொண்டவர்கள் அறிமுகப்படுத்திகொள்வது இஸ்லாம் ஆகி விடாது.

        //பின்னே ஜனநாயகம் இருக்கிறதா என்ன? மதத்தைப்பற்றி எவனாவது சமுதாயத்திற்குள் பேச முடியுமா? நாத்திகம் என்கிற வார்த்தையை கூட பேச முடியாதபடியும், அப்படி பேசினால் யார் வீட்டு பையன் இவன் என்று அடையாளப்படுத்தி குறிவைப்பதையும் அறியாதவர்களா நாங்கள்? எத்தனை பேஎரை பார்த்திருக்கிறோம் பாய்.//

        இதை தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது…http://www.tntj.net/head-office/bylaw..இது தான் எங்கள் அமைப்பின் விதி..எங்கள் விதிப்படி இது எந்த வகையிலும் அனுமதிக்கப்பட்டது அல்ல….உங்களை யாரேனும் அடையாளப்படுத்தி குறிவைத்தால் தயவு தாட்சணம் இல்லாமல் காவல்துறையை அணுகவும்…

    • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்களின் பிரச்சாரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

      பொதுமேடைகளில் இயக்கத்தினரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தாலும் மாற்றுக் கர்டுத்துடையவர்களை விமர்சித்தாலும் நாகரீகமாகவும் பண்பாடுடனும் தான் விமர்சிக்க வேண்டும். ஏக வசனத்தில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.

      தவறான கொள்கையில் உள்ள மக்கள் தமது தவறுகளை உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களை வென்றெடுக்கும் வகையில் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.

      – ததஜ

  8. ததஜ-வின் இத்தகைய ரவுடித் தனங்களை முஸ்லிம்களே ஆதரிப்பதில்லை. ஏனெனில், இஸ்லாத்தில் இது போன்ற செயல்களுக்கு அனுமதியில்லை.

    எனவே, இதை சாதகமாக பயன்படுத்தி, வினவின் பதிவில் வந்து இஸ்லாத்திற்கு எதிராக பின்னூட்டத்தில் சிங்கி அடிக்கக் கிளம்பும் காவிக் குஞ்சுகளை வரவேற்கிறேன்.

    அபூ ஹஸன் சரியாகவே சொல்லியிருக்கிறார்…

    • யூசுஃப் கூறுவது உண்மை. இதை பயன்படுத்திக்கொண்டு காவி கும்பல் முஸ்லீம்களை தாக்குவதை அனுமதிக்கக்கூடாது. வினவு அது போன்ற பின்னூட்டங்களை வெளியிடக்கூடாது. அல்லது வெளியிட்டு அம்பலப்படுத்த வேண்டும்.

  9. பொழுது விடிஞ்சு பொழுது போனா எல்லாரையும் திட்டிட்டு இருந்தீர்! அதுக்கு அல்லா கொடுத்த தண்டனை இது! இந்தக் கிறுக்கு பசங்கள்ட்ட மாட்டிண்டீர். போங்கோ! இருவத்தி நாலாம் தேதி அவா எடத்துக்கு போய் மார்க்சீய சித்தாந்தம் பத்தி பாடம் படிச்சிட்டு வாங்கோ. என்னோட ஆசீர்வாதம்!

    இந்த மனுஷன் வார்த்தைக்கு வார்த்தை பேதி பத்தி பேசறார்! எதுக்கும் ஒரு சேப்ட்டிக்கு நாலு பக்கட் ஜலம் எடுத்துண்டு போங்கோ.

    Just kidding 🙂

    • வெங்கடேசன் நல்லா சொன்னீங்க.. வினவால் அவர்களிடம் போய் மல்லுக்கு நின்னு சமாளிக்கும் அளவிற்கு எந்த படைபலமும் பண பலமும் இல்லை…வினவு ஏதோ பிராமனீய இந்து மதத்த தாக்கறத நெனச்சு அங்க போனால், அப்பறம் வினவு மாறி வுனவி ஆகிவிடும்…. நன்றாக வினவை அல்லா தண்டித்தார்.. வேணும் கட்டிக்கு வேணும்.. வெங்கலக்ட்டிக்கு வேணும்….

  10. தோழரே அடுத்து வினவு வாசகர்களுடனான கலந்துரையாடல் எப்போது?

  11. ஹாட்ஸ் ஆஃப் வினவு! இஸ்லாமிய பார்ப்பனீயர்களைச் சரியாக தோலுரித்துள்ளீர்கள். இவர்கள் நிச்சயமாக முஸ்லிம் சமுதாயத்துக்குப் பெரியதொரு தலைவலிதான். இஸ்லாத்தின் காவலர்களாக தங்களுக்குத்தாங்களே சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு, பேச்சு செயல்பாடுகள் அனைத்திலும் இஸ்லாத்தின் அடிப்படை பண்புகளுக்கே வேட்டு வைக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். பேச்சில் சிறு அளவுகூட நாகரீகத்தைக் கடைபிடிக்காத இவனுங்க சொல்ற இஸ்லாம் இங்கே யாருக்கு வேண்டும்? இந்தக் கழிசடைகளை ஒரு பொருட்டாக பெரும்பாலான முஸ்லிம்களே எடுத்துக்கொள்வதில்லை. நீங்களும் கண்டுகொள்ளாதீர்கள். இல்லையேல் அநாவசிய டைம் வேஸ்ட்!

  12. சகோ இபுராஹிம் சொல்வது போன்று கழிவறையில் இருந்து எழுதுபவன் போல் சம்பந்தம் இல்லாத இவ்வளவு பெரிய கட்டுரை எழுதி உள்ளீர். ஒரு சித்தாந்தம் பற்றி விமர்சிப்பது என்றால் அதை நன்கு படித்து பின்பு விமர்சிக்க வேண்டும். ஆனால் உங்கள இஸ்லாம் பற்றி தெரியாது என்று தெளிவாக சொல்லி உள்ளீர்கள். தொழில் தெரியாதவன் அறுவை சிகிச்சை செய்தால் மரணம் தான் ஏற்படும் அது தான் உங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    யார் வேண்டும் என்றால வரலாம் என்று கூறி விட்டு அறிமுகம் செய்யவில்லை என்ற அற்ப காரணம் கூறி பக்கம் பக்கமாக எழுதி உள்ளீர்கள். யாருன்னு சொன்ன தான் பதில் சொல்லுவிங்களா ? கேமரா எடுக்க கூட அனுமதிக்காத தாங்கள் உங்களிடம் ஆரம்பத்தில் நாங்கள் இன்னார் என்று கூறினால் உள்ளே கூட அனுமதித்து இருக்க மாட்டிர்கள்.

    எவர் நல்ல காரியம் செய்தலும் அந்த காரியத்தை சொல்லி பேசுவதில் என்ன தவறு? அதற்காக உங்களுக்கு அறிவில்லாத விசயம் பற்றி எழுதுவதை சரி என்று கூற வேண்டுமா ?

    எழுத்து மூலம் விவாதிக்க தயாராகும் தாங்கள் நேருக்கு நேர் சந்திக்க ஏன் பயம். மக்கள் மன்றத்தில் தொங்கவிட்டு விடுவார்கள் என்றா ?

    நீங்கள் வைக்கும் எல்லா வாதம் பாற்றியும் போது விவாதித்து மக்களிடம் கொண்டு செல்ல முழுமையாக் தய்ராகுவோம் வாருங்கள். கமுநிசம் தோற்று உள்ளதா இஸ்லாம் தோற்றதா நிருபிக்கலாம்.

    • //////////////இவர்கள் அழைக்கும் பகிரங்க விவாதம் குறித்து முன்னர் வினவு சார்பில் பின்னூட்டத்தில் தெளிவாக தெரிவித்திருக்கிறோம்///////////// (ஏதோ பின்னூட்டத்தில் தெளிவாக தெரிவித்தார்களாம் (எவனுக்குதெரியும்) ////////////////இவர்களை அம்பலப்படுத்துவதே எமது பணி, விவாதிப்பதல்ல என்று பல முறை தெரிவித்திருக்கிறோம்./////////// இந்த இடத்துல வினவு ரொம்பவே வீக்காதெரியுது. வேறு ஏதாவது வெயிட்டான காரணமா சொல்லிஇருக்கலாம். நீங்களே இஸ்லாம் பற்றிய எந்த அறிவும் எங்களுக்கில்லை என்று ஒப்புகொள்கிறீர்கள். ஆனால் இவர்களை அம்பலப்படுத்துவதே எமது பணி என்றும் கூறிக்கொள்கிறீர்கள். ஆக இஸ்லாம் பற்றி எந்த அறிவும் இல்லாமலே அதைபற்றி அவதூறாக எழுதுவீர்கள். ஆனால் எந்த ஆதரத்தை வைத்து இப்படி எழுதுனீர்கள் என்று யாரும் கேள்வி கேட்ககூடாது (வினவு என்று பெயரை வைத்துக்கொண்டு நியாயம் நல்லா பேசுறீங்க தோழரே)

      • நல்லா உசுப்பேத்திவிடுங்க சகோ உங்களுக்கு என்ன பிரச்சினை. இங்கே மதவெறியால் பாதிக்கப்படப்போறது சாதாரண அப்பாவி முஸ்லீம் தானே? நீங்கள் எல்லாம் நல்லா சவுதியில இருப்பீங்கன்னு நினைக்கிறேன். செய்யது இப்ராஹிம் பேசியது ஒரு இஸ்லாமியன் பேசுகின்ற பேச்சா அது எல்லோருக்கும் அல்லவா(மொத்த சமுதாயத்திற்கும் அல்லவா) கெட்டப்பெய்ரை ஏற்படுத்தும். அதைப்பற்றி உங்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை இல்லையா.

    • ////ஒரு சித்தாந்தம் பற்றி விமர்சிப்பது என்றால் அதை நன்கு படித்து பின்பு விமர்சிக்க வேண்டும். ஆனால் உங்கள இஸ்லாம் பற்றி தெரியாது என்று தெளிவாக சொல்லி உள்ளீர்கள். தொழில் தெரியாதவன் அறுவை சிகிச்சை செய்தால் மரணம் தான் ஏற்படும் அது தான் உங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.////

      இவர்கள் என்ன குர்ஆன், ஹதீஸ்படி கையாட்டுவது கூடுமா கூடாதா என்று விவாதிக்கிறார்கள் குர்ஆன்,ஹதீஸ்களின் உள்சட்டங்களை தெரிந்து கொள்ள. ததஜவின் மொள்ளமாறி தனத்தையும் ஜனநாயகமற்ற மாற்றுக் கருத்துக்களை மதிக்க தெரியாத வெளிப்படையான தன்மையை விமர்சிக்க எதுக்கு ஓய் குர்ஆன், ஹதீஸை தெரிந்து கொள்ள வேண்டும்?

      • ஓய் அறிவுகெட்ட _____. அவர்கள் ஒன்றும் தவ்ஹித் ஜமாத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கவில்லை. அவர்கள் ஷரிஅத் படி கொடுக்கப்பட்ட ரிசானா மரணதண்டனையையும் மற்றும் வங்கதேசத்தில் சில கழிசடைகளின் செயலை இஸ்லாத்தின் பெயரால் செய்யப்பட்டது என்று சித்தரித்ததும் தான். இப்படி அவதூறாக எழுதினால் இதை படிக்கும் மற்ற சமூகத்தினருக்கு இஸ்லாமியர்கள் மேல் ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு விளக்கம் கேட்கும் உரிமை இஸ்லாமியர்களுக்கு உள்ளது, அதை எழுதிய வினவுக்கு விளக்கம் கொடுக்கும் கடமையும் உள்ளது.

    • Hi sithik,

      Your vice caption M.S சையது இப்ராஹிம் do not have guts to answer my questions in my comments 16,17,19,20,21,22!

    • இஸ்லாம் பற்றி தெரியலைன்னா என்ன! அவர்களுக்கு மதங்கள் பற்றி நன்றாகவே தெரியும். உனக்கு இஸ்லாம் பற்றி நல்லா தெரியும்னா இதை அல்லா கொடுத்த விதின்னு போவியா!

    • நல்லா விவாதிப்பாங்க சாதிக். இவங்களிடம் எவ்வளவு ஜனநாயகம் இருக்குன்னு அருகில் இருந்து பார்த்தவன் நான். நாத்திகம் என்கிற கருத்தையே தடை செய்யும் சர்வாதிகாரிகள் இவர்கள். எனக்கு எது சரின்னு தோனுதோ அதை செய்யக்கூட இங்கே உரிமை இல்லை. நான் முஸ்லீமா இருக்கனுமா நாத்திகனா இருக்கனுமான்னு நான் தான் முடிவு பன்னுவேன். ஆனால் அப்படி யோசிக்கவோ விவாதிக்கவோ கூட இங்கே இடமில்லாத போது, ஜனநாயகம் இல்லாத போது இவர்கள் பெரிய ஜனநாய்சகவாதிகளைப் போல ஜனநாயகத்தை பற்றி பேசுவதெல்லாம் சும்மா ஏமாற்று வேலை. ஜனநாயகம் ஜனநாயகம் என்கிறார்களே அதை முதலில் இவர்கள் தமது சொந்த சகோதரர்களுக்கு வழங்கட்டும். அதன் பிறகு மற்றவர்களை ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்க அழைக்கலாம்.

      செய்யது இப்ராகிம் பேசியிருக்கும் பேச்சு ஜனநாயகப்பண்புகள் உள்ள ஒருவர் பேசுகின்ற பேச்சா, இஸ்லாமிய பண்புகளை கற்ற ஒருவர் பேசுகின்ற பேச்சா? இந்த பேச்சை வைத்துக்கொண்டு மொத்த சமுதாயத்தையும் எவன் வேண்டுமானாலும் இழிவுபடுத்துவான். பார்த்தியா முஸ்லீம் எப்படி வெறித்தன்மா பேசுறான் இப்படி தான் பேசுவானுங்க வெறிபிடிச்சவனுங்க என்று அனைவரையும் அவதூறு செய்வார்கள். இப்படி மட்டமாக பேசியதற்கு த.த.ஜ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது த.த.ஜ முஸ்லீம் மக்களுக்கு பிரதிநிதி அல்ல என்று அறிவிக்க வேண்டும்.

      • த.த.ஜ முஸ்லீம் மக்களுக்கு பிரதிநிதி அல்ல என்று அறிவிக்க வேண்டும்.

        // என்று நாங்கள் தான் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதி என்று ததஜ அறிவித்துக்கொண்டது???

    • I think Vinavu had lost very badly to the core to TNTJ in a debate held earlier, Vinavu dont have the patience and guts to face intellectual scholar like P.jainulabdeen.

  13. கண்ணியக்குறைவாக பொது மேடையில் பேசிய திரு எம்.எஸ்.சையது இப்ராஹிம் அவர்களுக்கு என் கண்டனங்கள். ஒரு அமைப்பின் மாநில துணைதலைவரின் மாற்றோரை மதிக்கும் பண்பு இதுதானா? முகம் சுளிக்க வைக்கும் உங்கள் கண்ணியமற்ற பேச்சு, உங்கள் கருத்தை விழுங்கிவிட்டது.

    டிஎன்டிஜெ வினர் நடந்துகொண்ட விதம் வருத்தம் கொள்ள செய்கிறது. முறையாக அறிவிப்பு செய்யாமல் ஒரு அமைப்பின் சார்பாக குழுவாக சென்று விவாதம் செய்தது தவறு. அந்த குறிப்பிட்ட நிகழ்வானது ஒரு குழுவிற்கும் (வினவு) வாசகர்களுக்குமான சந்திப்பே ஒழிய ஒரு குழுவிற்கும் மற்றொரு குழுவிற்குமான சந்திப்பு அல்ல. இது உங்களின் மேலாதிக்க மனப்பான்மையையே காட்டுகிறது. உங்களுக்கு வினவு குழுவினரை விவாதம் செய்ய அழைக்கும் எண்ணம் இருந்திருப்பின், வேறொரு நாளில் முன் அறிவிப்புடன் அங்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து இருக்கலாமே, அவர்களின் அலுவலகம் அங்கு தானே செயல்படுகிறது. அதை விடுத்து, இவ்வாறு நீங்கள் நடந்துகொண்டதை மலிவான விளம்பர உத்தியாகவே நான் பார்க்கிறேன்.

  14. ரிசானா வழக்கில் பொய் சொல்பவ__ TNTJ தலைவனா ? இல்லை TNTJ துணை தலைவனா ?
    ——————————————————————————————————————————————

    M.S சையது இப்ராஹிம் [துணை தலைவன் TNTJ ] said :
    ————————————————————————————————————————

    பால் ஊட்டும்போது குழந்தையை தகுந்தவாறு வைக்கவில்லை என்றால் எளிதில் “தசை பிடிப்பு “சுளுக்கு போன்றவை ஏற்படும் .இதனால் பால் வெளியாகிறதே என்று கழுத்தில் அதிகமாக தடவி கொடுத்திருக்க வேண்டும் .பிஞ்சு கழுத்தும் நெறிபட்டிருக்கும் .அதனாலே போஸ்ர்மார்த்டம் ரிபோர்ட் கழுத்துநெறி பட்டதாக கூறுகிறது .

    P .J [தலைவன் TNTJ ] said :
    ————————————————————————-

    மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதும் இவர் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர். உண்மையில் மிருக புத்திரன் என்றுதான் இவரைச் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால் கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தைக்கு இரக்கம் காட்ட முன்வராத இந்த மனிதர், கொடூரமான முறையில் கொலை செய்த கொலைகாரப் பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவர் மனித ஜாதி அல்ல; மிருக ஜாதிதான் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது.

    [1]குழைந்தை இறப்புக்கு இரு _______ கூறும் காரணத்தில் ஏன் முரண்பாடு. துணை தலைவன் பால் கொடுக்கும் போது ஏற்பட்ட விபத்து என்று கூறுகீன்றா__.

    [2] தலைவன் கொடூரமான முறையில் நடந்த கொலை என்கீன்றா_______ !

    எது உண்மை ! ___________ இருங்க___ உம்மோட ஒவொரு matter ஆ நாரடிக்க வேக்கின்றேன் !

    Note: vinavu pls do not edit my comment ; I am ready to face any consequence

    • சரவணன் ,நான் செய்யது இப்ராஹிம் இல்லை .நான் எஸ்.இப்ராஹிம் .நான் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட டிஎன்டிஜே பொருளாளர் .

      பீஜெவும் சையது இப்ராஹிமும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்து தங்களது சொந்த அபிப்பிராயங்களை கூறியுள்ளனர் .கொள்கையளவில் அவர்கள் கருத்து மாறுபட்டது போல் நீங்கள் ஆர்ப்பரிப்பது அர்த்தமற்றது

      • S.Ibrahim தப்பி ஓடுவது ஏன் ?
        ————————————————————————–

        S.Ibrahim,

        [1]தாய் பால் அல்லது புட்டி பால் குடிக்கும் குழந்தைக்கு புரை ஏறினால் தாய் என்ன செய்வாரோ அதைத்தானே ரிசானாவும் செய்தார்கள்.[தடவி கொடுத்தார்கள்].

        [2]முட்டாள் சவூதிகாரன் ரிசானாவுக்கு கொடுத்த மரண தண்டனையை TNTJ குழு ஆதரித்து,ஆர்ப்பரிப்பது எப்படி சரியாகும்?

        [3]மேலும் குழந்தைக்கு தடவி கொடுத்த ரிசானாவுக்கு உம் ஷரியா (ஷரியத்) சட்டம் மரண தண்டனை கொடுக்கும் போது அதை இந்தியாவில் நடை முறை செய்தால் நம் தாய்மார்கள் நிலை என்ன ஆகும் ?

        [4]S.Ibrahim,Pj இருவருமே ரிசானா வழக்கில் முரண்படும் போது அதை நான் சுட்டிகாட்டுவதில் என்ன தவறு ?

        [5]S.Ibrahim பதில் சொல்லாமல் தப்பி ஓடுவது ஏன் ?

  15. என்னய்யா விளவு, பாவம் உன்னுடைய வார்த்தை ஜாலத்தையும் தாண்டி, உன் கட்டுரையிலேயே உண்மை என்ன என்பது தெரிந்துவிடுகிறது. அவன்தான் பொதுமேடை போட்டு விவாதிக்க கூப்பிடுறான்ல. போகவேண்டியதுதானே. உன்னிடம் சத்தியம் இருக்கிறதா, இல்லை போலி வாதங்கள் இருக்கிறதா என்பது வெட்ட வெளிச்சம் ஆகுமா இல்லையா.. கார்ல் மார்க்ஸ் என்ற யூத சாத்தானின் வறட்டு தத்துவங்களை வைத்துக்கொண்டு என்னமா சவுண்டு விடுற.. விலங்குப் பண்ணை என்ற ஆர்வெல்லின் சம்மட்டி அடிக்கு பதில் சொல்ல முடியுமா உன்னால்.. தவ்ஹீத் ஜமாத்காரன் குர்ஆனை மட்டும் படிக்க மாட்டான். ஜார்ஜ் ஆர்வெல்லையும் படிப்பான். ரெட் சிம்போனியையும் படிப்பான். தொழிலாளர் புரட்சியின் முன்னணி தோழர்கள் இப்படி களத்திலிருந்து பின்வாங்கி ஓடலாமா?

    • ////என்னய்யா விளவு, பாவம் உன்னுடைய வார்த்தை ஜாலத்தையும் தாண்டி, உன் கட்டுரையிலேயே உண்மை என்ன என்பது தெரிந்துவிடுகிறது. //// தெரிஞ்சிட்டாலும்.

      //////அவன்தான் பொதுமேடை போட்டு விவாதிக்க கூப்பிடுறான்ல. போகவேண்டியதுதானே. உன்னிடம் சத்தியம் இருக்கிறதா, இல்லை போலி வாதங்கள் இருக்கிறதா என்பது வெட்ட வெளிச்சம் //// விவாத இலட்சணமும் வீடியோ எடிட்டிங்கும் ஊரே காறித்துப்பின சம்பவங்கள் ஏற்கனவே நடந்தவை தானே ஒருமையில் விளிக்கிற வாய்ச் சவடால் விவாதித்து என்ன ஆகப் போகிறது போறம்போக்குத்தனமாக பேசுபவனிடம் விவாதிப்பது வெட்டி வேலை.

      /////கார்ல் மார்க்ஸ் என்ற யூத சாத்தானின் வறட்டு தத்துவங்களை வைத்துக்கொண்டு என்னமா சவுண்டு விடுற.. ////// அவ்ன் சாத்தானா ஆணவம் கொண்ட நீங்கள் ஷைத்தானா என்று குர்ஆனை பாருங்கள் எளிய மனிதர்களை ஆணவமாக எள்ளி நகையாடுவதுதான் ஷைத்தானிய சாத்தானியத்தனம்.

      /////தவ்ஹீத் ஜமாத்காரன் குர்ஆனை மட்டும் படிக்க மாட்டான். ஜார்ஜ் ஆர்வெல்லையும் படிப்பான். ரெட் சிம்போனியையும் படிப்பான். தொழிலாளர் புரட்சியின் முன்னணி தோழர்கள் இப்படி களத்திலிருந்து பின்வாங்கி ஓடலாமா?////

      உங்கள் அறிவாளித்தனத்தைதான் இந்த தேர்தல் நிலைப்பாட்டில் பார்த்தோமே இடஓதுக்கீட்டுக்காக ஆதரிக்கிறோம் என்பது எவ்வளவு கூத்தானது தெரியுமா?

      மொத்த அரசியல் செட்டப்பே முதலாளிகளின் பாக்கேட்டில் அதாவது தெரியுமா?

      இவுக இடஒதுக்கீடுக்காக செயலலிதாவை ஆதரிப்பாகளாம் அவர் பி.ஜே.பியை ஆதரிப்பார் பி.ஜே,பி யின் அஜண்டாவே சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதுதானே கருணாநிதியும் பி.ஜே.பியை ஆதரிக்க தயங்க மாட்டார் என்கிற அடிப்படை அறிவும் உங்களிடம் இருந்ததில்லை. வக்குறுதி கொடுத்து விட்டார் என்று இஸ்லாமிய மக்களை ஏமாற்ற மட்டும் நல்லா கத்து வச்சு இருக்கிங்க

      • சலீம் பாய்க்கு காதர் நன்றாக பதிலளித்திருக்கிறார். நடுநிலையான ஜனநாயகப்பூர்வமான இஸ்லாமிய சகோதரர்களே இதுபோன்ற தவறான கருத்துக்களை மறுத்து வாதிட்டு பிறர் புகுந்து குட்டையை குழப்பி ஆதாயமடைய அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த முயல வேண்டும்.

        சகோ சலீம் நிதானமா யோசிங்க. த.த.ஜவுக்கு வினவு ஆட்களோட முரண்பாடு இருக்கலாம். கருத்துவேறுபாடு இருக்கலாம், கோபம் இருக்கலாம் எது இருந்தாலும் ஒரு விசயத்தை எப்படி அணுகுவது என்கிறதுல ஒரு நாகரீகம் வேண்டாமா? இஸ்லாத்தின் பெயரில இஸ்லாமிய மக்களின் பெயரில் அமைப்பை வைத்துக்கொண்டு மற்றவங்கள் இப்படி தான் தரம்கெட்ட முறையில் ஏசுவதா? அப்படி செய்தால் அது யாருக்கு வலு சேர்க்கும், யாருக்கு ஆதாயம்? ஆதாயம் முஸ்லீம் சமுதாயத்துக்கோ வினவு தோழர்களுக்கோ அல்ல. காவி கூட்டத்துக்கு தான் இதனால ஆதாயம்.

  16. ரிசானா வழக்கில் M.S சையது இப்ராஹிம் [துணை தலைவன் TNTJ ] இரட்டை பேச்சு :
    ——————————————————————————

    He said:[1]பால் ஊட்டும்போது குழந்தையை தகுந்தவாறு வைக்கவில்லை என்றால் எளிதில் “தசை பிடிப்பு “சுளுக்கு போன்றவை ஏற்படும் .இதனால் பால் வெளியாகிறதே என்று கழுத்தில் அதிகமாக தடவி கொடுத்திருக்க வேண்டும் .பிஞ்சு கழுத்தும் நெறிபட்டிருக்கும் .அதனாலே போஸ்ர்மார்த்டம் ரிபோர்ட் கழுத்துநெறி பட்டதாக கூறுகிறது .

    He Said in the video/audio:ஒரு இலங்கை பெண் வந்து ஒரு குழைந்தையை கொலை பன்ன வீசயத்தில் மரணதண்டனை அளித்து இருக்கும் போது சரியான காரணத்துக்காக அந்த மரணதண்டனை வழங்க பட்ட நீலையீல் …..

    [1]M.S சையது இப்ராஹிம் துணை தலைவன் TNTJ, நீ கஞ்சா அடித்து விட்டு தான் ஒவொரு முறையும் மாத்தி மாத்தி பேசுவியா ?

    • சரவணன் ோஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அடிப்படையில்தான் ரிசானாவுக்கு மரணதண்டனை கொடுக்கப் பட்டுள்ளது .அதை யாரும் தவறு காண முடியாது .அதே வேளையில் குழந்தைக்கு தடவி கொடுக்கும் நிலையிலும் கழுத்து நெரிப்பட வாய்ப்புகள் உள்ளதையும் தனது அபிப்பிராயமாக தெரிவிக்கிறார் .சவூதி அரசின் முடிவையும் விமர்சிக்க வாய்பில்லை .ரிசானவையும் குறைகூற வாய்ப்பில்லை என்பது அவரது அபிபிராயம் .

      • TNTJ முட்டாள்கள் நடைமுறை படுத்தும் ஷரியா (ஷரியத்) சட்டம் :
        ———————————————————————————————————

        S.Ibrahim,

        [1]உம் ஷரியா (ஷரியத்) சட்டத்தை எவ்வளவு அழகாக விளக்கி உள்ளீர்கள்! நன்றி !

        [2]ரிசானவையும் குறைகூற வாய்ப்பில்லை என்றால் M.S சையது இப்ராஹிம் [துணை தலைவன் TNTJ ] ஏன் இதனை பேச வேண்டும் ?

        “ஒரு இலங்கை பெண் வந்து ஒரு குழைந்தையை கொலை பன்ன வீசயத்தில் மரணதண்டனை அளித்து இருக்கும் போது சரியான காரணத்துக்காக அந்த மரணதண்டனை வழங்க பட்ட நீலையீல் …..”

        [3]மேலும் ஷரியா சட்டத்தை நடைமுறை படுத்தும் சவூதி அரசின் முடிவை விமர்சிக்க ஏன் வாய்பில்லை?[is Money flows in to TNTJ in favor of that southi Gov?]

        Note:
        Not only You and me but many of them are reading vinavu. So discuss your points logically!

        S.Ibrahim://சவூதி அரசின் முடிவையும் விமர்சிக்க வாய்பில்லை .ரிசானவையும் குறைகூற வாய்ப்பில்லை என்பது அவரது அபிபிராயம் .//

      • “ஒதிப் படிச்சு ஊர்புகழ வாழ்ந்தாலும் ஏழைக்குச் செய்த தீங்கை அல்லா எள்ளளவும் பொறுக்கமாட்டான்.”

        -ஈழத்து(இஸ்லாமிய)நாட்டார்பாடல்-

        ///சரவணன் ோஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அடிப்படையில்தான் ரிசானாவுக்கு மரணதண்டனை கொடுக்கப் பட்டுள்ளது .அதை யாரும் தவறு காண முடியாது//

  17. அமெரிக்க என்றால் பம்மும் M.S சையது இப்ராஹிம் [துணை தலைவன் TNTJ]
    ————————————————————————————————————————————————————
    M.S சையது இப்ராஹிம் இடம் கேட்கபட்ட கேள்வி :
    ———————————————————————————————-

    அந்த ஆப்கான் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஈராக்கிய குழந்தைகளையும் கொன்ற அமெரிக்காவுக்கு துணை நின்ற சவுதி மன்னனை ஷரியத் ஏன் தண்டிக்கவில்லை? அப்பாவி ரிசானாவை கொல்வதில் காட்டும் உங்கள் ரத்த வெறி சவுதி மன்னன் என்ற உடன் அடக்க ஒடுக்கமாக ஒளிந்து கொள்ளும் மர்மம் என்ன?

    M.S சையது இப்ராஹிம் கூறும் கோழைதனமான பதில் :
    ——————————————————————————————————————
    சவூதி அப்படி கண்டிக்குமானால் ,அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் சவுதியாகத்தான் இருக்கும் .அப்புறம் சவூதி குழந்தைகள் கதியும் ஆப்கான் ,இராக் குழந்தைகள் கதைதான் .வடகொரியாவுக்கு ஆதரவாக சீனா இருக்கிறது .அமேரிக்கா தாதா சவுதியில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டால் எல்லோரும் ஆமாம் ஆமாமா ஆமாம் என்று சிங்கு சக்கா பாடுவீர்கள் .அடுத்தாற்போல அரைகுறை ஆடை மகள் வயிற்றில் கட்டிபிடித்து மவுத் கிஸ் அடிக்கும் கலாச்சார புரட்சிவாதி கமல் சவூதி அரபியா தீவிரவாதிகள் பற்றி சினமா எடுக்க வேண்டும் .நாங்கள் அதை தடை செய் என்று போராடவேண்டும் .எங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டீகளா?

    [1] அமெரிகாவுக்கு எதீரா ஒரு வார்த்தை பேச வக்கில்லாத,துப்புஇல்லாத ,தூணிவு இல்லாத, திரணி இல்லாத நீ நீசமா முஸ்லிம் தானா ?

    • சரவணா கொஞ்சம் முழுமையாக சிந்தியுங்கள் .சையது இப்ராஹிம் அமெரிக்காவை மிக கடுமையாக அதில் விமர்சித்துள்ளார் .

      • அமெரிக்கா, சவூதி என்றால் TNTJ அடிபணிந்து தலைவணங்கி பம்முவது ஏன் ?
        ————————————————————————————————————————-

        S.Ibrahim,

        [1]ஆப்கான் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஈராக்கிய குழந்தைகளையும் கொன்ற அமெரிக்காவுக்கு துணை நின்ற சவுதி மன்னனை ஷரியத் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் தண்டிக்கவில்லை?

        [2]அப்பாவி ரிசானாவை கொல்வதில் காட்டும் உங்கள் ரத்த வெறி சவுதி மன்னன் என்ற உடன் அடக்க ஒடுக்கமாக ஒளிந்து கொள்ளும் மர்மம் என்ன?

  18. M.S சையது இப்ராஹிம் [துணை தலைவன் TNTJ],

    [1]ஆதாரம் உம் இடம் தான் இருக்குமா ? நாங்களும் நீ உதீர்த்த மொக்ககைகளை record செய்வோம் தானே !

    [2]இதுங்களை [துணை தலைவன்,தலைவன்] நம்பி இதுங்க கூட சேர்ந்து உள்ள இஸ்லாமிய நண்பர்களை நீனைத்தால் தான் சிரிப்பு வருது!

  19. ரிசானா மேஜரா ? மைனரா? பொய் சொல்பவன் தலைவனா ? இல்லை துணை தலைவனா ?
    ——————————————————————————————————————————————————————-

    P .J [தலைவன் TNTJ ] said :
    ————————————————————————-
    இந்தக் கூறுகெட்டவருக்கு ரிசானா என்ற பெண்மணி சிறுமி அல்ல என்பது தெரியாதா? அந்தப் பெண்மணி கொடுத்த பாஸ்போர்ட் ஆவணத்தின் பிரகாரம் அவளது பிறந்த தேதி 1982ஆம் ஆண்டு பிப்ரவரி. அவளுக்கு தற்போது 30வயது பூர்த்தியாகிவிட்டது.

    M.S சையது இப்ராஹிம் [துணை தலைவன் TNTJ ] said :
    ————————————————————————————————————————

    17 வயது பெண்ணை 23 வயது பெண்ணாக காட்டி பாஸ்போர்ட் வழங்கிய தவறை இங்கு யாரும் கண்டுக்கவில்லை .நான்கு மாத குழந்தையை கவனித்துக்கொள்ள 23 வயது பெண்ணை அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள் .ரிசானாவுக்கு 17 வயது என்று தெரிந்து இருந்தால் அவளை வேலைக்கு சேர்த்திருக்க மாட்டார்கள்

    [1]தலைவன் PJ ரிசானாவுககு வயது 30 என்கின்றான்!துணை தலைவன் ரிசானாவுககு வயது 17 என்றும் மாற்றி மாற்றி பேசும் மர்மம் என்ன ?

    [2]சவுதி காரன் எவ்வளவு US dollar உம் இருவருக்கும் கொடுத்தான் ?

    • உங்களது கேள்விகளுக்கு பதில் சொன்னது தப்பாக போயிவிட்டது .நீங்கள் அரைவேக்காடு .

      • பதில் பேச வக்கில்லாத,துப்புஇல்லாத S.Ibrahim :
        ———————————————————————–

        S.Ibrahim,

        [1]தலைவன் PJ ரிசானாவுககு வயது 30 என்கின்றான்!துணை தலைவன் ரிசானாவுககு வயது 17 என்றும் மாற்றி மாற்றி பேசும் மர்மம் என்ன ?சவுதி காரன் எவ்வளவு US dollar இவர் இருவருக்கும் கொடுத்தான்?

        [2]என் கேள்விக்கு பதில் பேச வக்கில்லாத,துப்புஇல்லாத ,தூணிவு இல்லாத, திரணி இல்லாத நீ நீசமா —– தானா ?

        //உங்களது கேள்விகளுக்கு பதில் சொன்னது தப்பாக போயிவிட்டது .நீங்கள் அரைவேக்காடு .//

  20. TNTN reminds of the cycle of events when al-umma was formed and subsequent fanatic implementatioin of islam and eventually violence in coimbatore, and crackdown – finally innocent muslims are affected. Now the cycle started again in the form of TNTJ.. Those who think Muslim in Tamilnadu decide ruling party!!.. kids grow up… your 3% voters divided by 23 muslim organisation will never do any good, this time you will see what if majority votes converge… After this election no party will consider muslim vote bank here. Muslim liberal should come forward to fight this fundamentalist.. PJ is a comedian calling for FAst-Track course in islam..if islam does teach violence and women slavery pls go and tell those muslims who indulge in terrorism, kill innocent and proudly say they did it for islam and allah… go tell them……

  21. It is in 1980’s after the oil boom in gulf islam fundamentalism rooted in TAmilnadu and south india.. It has grown alarmingly now.. But there is a natural balance in the world. The growth of islam(terrorism and fundametalist in civil society) dependes on a non-renewable resource called oil and one day it is certain to cease, this is the set up of allah himself!!! so you can expect next 30 years a growth in islam terror and from there it will decline….

  22. மார்க்கத்தின் பண்புகளை ஏழைகளிடத்தில் காண முடியும். அதனால் தான் அடுத்தவர்கள் உதவி செய்தால் அவர்களுக்கு நன்றி சொல்லாமால் இன்ஷா அல்லாஹ் என்று இறைவனுக்கு நன்றி சொல்கிறார்கள்.

    ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாத் காலிகள் விஸ்பரூவம் படச் பிரச்சனையில் ஜெயலலிதாவிற்கு நன்றி என்று சொல்லி அல்லாவை ஆணையிலே வைக்காமால் இழிபிறவிக்கு நன்றி சொன்னார்கள். உண்மையான காபிர்கள் இந்த தவ்ஹீத் ஜமாத் தான்.

    மானங்கெட்டவனுக்கு காவித்துணி என்ற கதையாக வெட்கங்கெட்டவனுக்கு விவாதம் ஒரு கேடா?

    • /////மார்க்கத்தின் பண்புகளை ஏழைகளிடத்தில் காண முடியும். /////

      பணக்கார திமிர் எடுத்த (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) பாசிசவாதிகளிடம் காணமுடியாது மிக உண்மை தோழரே

    • உண்மை உண்மை மார்க்க பண்புகளை சாதாரண மக்களிடம் தான் காண முடியும். ஆதாமின்ட மகன் அபு என்கிற மளையால படம் கூட இதுக்கு நல்ல உதாரணம். இவங்களுக்கு பணபலம் இருக்கு என்பதால தான் இப்படியெல்லாம் திமிராக பேசுகிறார்கள். ஆனால் பெரும்பாண்மை முஸ்லீம் மக்கள் ஏழை மக்கள். அவங்ககிட்ட தான் உண்மையான நேர்மை இருக்கு, மார்க்க பண்புகள் இருக்கு. வினவு ஆபீசை கக்கூஸ் என்று கூறி அனைத்து ஏழைகளையும் இவர்கள் அவமானப்படுத்துகிறார்கள் ஏழை மக்களை கேவலப்படுத்தும் இவர்களா நல்ல முஸ்லீம்கள்? த.த.ஜ ஆட்களே தப்பு தவறாக பேசி மொத்த முஸ்லீம் சமுதாயத்தின் பெயரையும் கெடுக்காதீர்கள். காவிகும்பலுக்கு உதவி செய்யாதீர்கள்.

  23. விவாதத்ர்கு அழைத்தால் வர துப்பு இல்லை, கக்கூசில் உக்கார்ந்து எழுத மட்டும் தெரியும்.

    • /////விவாதத்ர்கு அழைத்தால் வர துப்பு இல்லை, கக்கூசில் உக்கார்ந்து எழுத மட்டும் தெரியும்.////

      அதே பாத்தோமே அழைத்த இலட்சனத்தை முதலில் செய்யது இபுராஹீமை மரியாதையாக பேச கத்து கொடுங்க கண்ணியமாக எப்படி பேசுவது எப்படி என்பதை குர் ஆனை பாத்து கத்துக்கிற சொல்லூங்க.

      “நபியே! விவேகத்துடனும் அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும் மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!” (குர்ஆன் 16: 125)

      அழகிய முறையில் பேசத் தெரியாதவன் எல்லாம் தாயி அழைப்பாளன் வெளங்கிரும்

  24. The way TNTJ and its members, sorry goats, did is THEIR OWN WAY. They will behave with other groups always in such a WAY. They Think That TNTJ is the only Group with full of BRILLIANTS.
    These goats, (members) do not follow Al-Quran & Sunnah, TNTJ goats are the followers of PJ.

  25. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல, அவர்களின் வெட்டி தற்பெருமை விவாத்த்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கம் கொடுத்து உங்கள் நேரத்தை வீனாக்காதீர்கள், விதண்டவாதிகள், செய்து நாகரீகம் இல்லாமல் 10*10 அடி கக்கூசை இடித்து வினவு அலுவலகத்தை கட்டினார்கள் என குடிகாரர் போல் பேசி பிறரை இழிவுபடுத்த குரான் அனுமதிக்கவில்லை. ஒரு தனி முஸ்லிமாக வினவிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்

    • அஸ்லம் கான் உளுந்தூர் பேட்டை அவர்களே

      ////குடிகாரர் போல் பேசி பிறரை இழிவுபடுத்த குரான் அனுமதிக்கவில்லை. ஒரு தனி முஸ்லிமாக வினவிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்//// நானும் தனி முஸ்லிமாக வினவிடம் மன்னிப்பு கோருகிறேன்.

      10,10 அடி அலுவலக எளிமையை பாரட்டியிருக்க வேண்டும் உலகத்துக்கே இஸ்லாத்தை சொன்ன நபியவர்களின் வீட்டின் மொத்த அளவு அஞ்சுக்கு அஞ்சுதான்

    • [1]TNTJ தலைவனும் , துணைதலைவனும் பேசிய தரம் கெட்ட பேச்சுக்கு இஸ்லாமீய மக்கள் ஏன் மன்னிப்பு கோர வேண்டும் அஸ்லம் கான் பாய் ?

      [2]எந்த மதத்தில் தான் இது போன்ற கழிச்சடைகள் இல்லை செல்லுங்கள்? நீங்கள் கூறுவது போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்[TNTJ] இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதிகள் இல்லாத போது நீங்கள் ஏன் மன்னிப்பு கோர வேண்டும் அஸ்லம் கான் பாய் ?

  26. வினவுவை வாழ்த்துகிறேன் இதுபோன்ற எல்லா அற்ப கேள்விகளுக்கும் முறையான பதில் அளித்து இருக்குரிர்கள், வடிவேல் மாதுரி “நீ வாடா எங்க ஏரியாக்கு” கக்கூசெல உண்காந்துகிட்டு பதிவு எழுதுறீங்கன்னு சொல்றத வன்மையா கண்டிக்குறேன். அவங்க சொல்ற இடம் சின்னதா பெருசான்னு பாக்காம சொல்லவந்த கருத்துக்கு மறு கருத்து சொல்லாம வசை பாடுறதுதான் உங்க அழகா ??? வெளிநாட்டில் இருந்து ஒருத்தன் கேள்விகேட்டா நீங்க டிக்கெட் எடுத்து கொடுத்து மண்ணடிக்கு கூப்பிடுவிங்க போல இருக்கு?
    இந்த கேள்விய பார்த்துட்டு நான் இஸ்லாத்திலுள்ள வேற அமைப்பை சேர்ந்த்தவன்னு நினைக்கவேண்டாம்.

    • tntj vai patriyum antha iyakkathin nirvagigalai patriyum avathooru pesum ariveenargale!
      Oruvarai patri pesa vendumaanaal avarai patri ungalukku therinthirukka vendum appadi theriyaamal naalu suvatthukkulla otkaanthukittu pathivugalittu kondiruppathu… Kazivaraiyil otkaanthu karikkattaiyil suvatthula ”kasamusa” ezuthuravanukkum ungalukkum verupaade illa
      Tntj vil nirvagigalaaga irukkakkoodiya yaarum antha amaippai payanpadutthi 1 rubai kooda sambaathitthathu illai ithuthaan nitharsana unmai….
      tntj vin thalaimai nirvaagigal ovvoruvarum vaadagai veedugalilthaan kudiyirukkiraargal appadiyaana ezmaiyaana nilaiyilum kolgaiyil uruthiyodum iraivanukku anchi nermaiyaagavum nadakkiraargal ithu anaivarum arintha thelivaana unmai…

      Tntj iraivanukku anchi seythuvarum Manitha neya panigal….
      Rattha thaana mugaamgal.. (tntj Rattha thaanathil Thamizagathil pala varudangalaaga thodarnthu muthalidathil ullathu) Avasara kaala Rattha thaanam… Marutthuva uthavigal…. Kalvi uthavigal…. Innum eraalamaan samuthaaya panigalai
      islamiya kolgaiyai il ullathaalum engalai pontror iraivanukku anchuvathaalum seythuvarugirom…….

      • இதுவரை இலவசமா கிடைக்க வேண்டிய கல்வி கிடைக்கவில்லை என்று நீங்க போராட்டம் நடத்தியது உண்டா? ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் உங்க அமைப்பு கூட்டம் நடத்தி , குடந்தை குலுங்கட்டும் , தஞ்சை தினரட்டும்” ( பேனரில் அணைத்து முஸ்லிம்ன்னு போட்டு கொள்கை வேறுபாடின்றி) மாநாடு நடத்தி அணைத்து உழைக்கும் இஸ்லாமிய மக்களை ஒன்றுதிரட்டி இவர்கள் எல்லாம் TNTJ நு காட்டி எங்களுக்கு பெரும்பான்மை இருக்குனு மற்ற அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கொடுப்பது அப்புறம் பின்வாங்குவதுன்னு உங்க விளையாட்டு, அப்புறம் திமுகவுக்கு ஆதரவு ஆனால் மயிலாடுதுறை தொகுதியில் நிற்கும் ஹைதர் அலிக்கு ஆதரவு இல்லை மணிசங்கர் அய்யர் காங்கிரசுக்கு ஆதரவுன்னு உங்க அரசியல் நிலைப்பாடு என்ன?

      • குஜராத்தில் நடந்த கலவரத்துக்கும் (முகுல் சின்ஹா) ,பாப்ரி மஸ்ஜித் இடிப்புகளில் உள்ள உண்மை நிலையை மக்களுக்கு போராடி தெரியபடுத்தியது (கோப்ர போஸ்ட் ), காவி பயங்கரவாதத்தை வெளியில் கொண்டுவந்து உண்மை உலகுக்கு தெரியபடுத்திய வீரன் கர்கரே ஒரு இஸ்லாமியன் அல்ல, இது போன்ற இஸ்லாத்துக்கு எதிராக நடந்த அதனை சதிகளையும் வெளியில் கொண்டுவந்து போராடுறது எந்த இஸ்லாமிய அமைப்பும் இல்லை, மாறாக டிசம்பர் 6 மட்டும் துக்க தினமாக அனுசரிச்சு விட்டுவிடுறது. அப்படி உங்களுக்காக போராடுரவங்களை நீங்க ஆதரிக்கமா சும்மா விவாதம்னு செய்து புரியவச்சு நீங்க என்ன பண்ண போறீங்க ?

  27. ???????vinavu??????? Pathivargale! Ungal kolgai vibachaarathai thoonduvathu naattil aids undaakku kaaranamaanavargal neengal thaan…… naattil orinacherkkaiyai aarambitthu vaitthathe Ungal kolgaithaan… Aangaangu nadaiperum gunduvedippukku kaaranam Ungal kolgaiyaalthaan… pengalai karuvigalaaga mattum payanpaduttha vendum enbathuthaan Ungal kolgai…. Ippadiyellaam ungalai patri Naan pesi inaiyathalangalilum bit noticegalilum parappinaal Ungal nilai eppadi irukkum…. Vaada! vanthu neradiyaaga vanthu niroobikka solli kooppiduveergala? illaiya? Appadi kooppidaamal sollappatta avathoorugalukkellam vaaimoodiyirunthaal avan kolgai vaathiyalla…eenappiravi….
    naangal etrirukkum (islamiya) kolgaiyai patri onrume ariyaatha neengal naalu suvatthukkulla otkaanthukittu engal kolgaiyai patri avathooraga ezuthiyirutheergal enraal athai makkal munnaal unmaiyai thelivupadutthi engal kolgai Manitha samuthaayatthirkku nanmaiyai payakkum kolgai enbathai nirubikkave neradi vivaatha azaippu……

  28. சென்ற வாரம் நீயா நானா விஜய் டிவியில் தலைப்பு கடவுள் இருக்கிறரா? இல்லையா ? அதில் தி ஹிந்து மூத்த பத்திரிகையாளர் பேசும்போது கதவை மூடிகிட்டு கடவுள் இருக்கார்னு விவாதம் பண்ணாம கதவை தொறந்து வச்சுக்கிட்டு அறிவுபூர்வமான அறிவியலை உள்வாங்கனும்னு சொன்னாரு, அனால் இங்கே உள்ள நிறைய நண்பர்கள் கதவை மூடிவச்க்கிட்டு வினவுகிட்ட விவாதம் பண்ணா தெளிவு கிடைக்காது.

  29. வினவு…

    சலீம் அவர்களின் மறுமொழிகளுக்கு நான் கொடுத்த பதிலை ஏன் வெளியிடவில்லை.. இதற்க்கு பெயர் தான் ஜனநாயகமா? மார்க்சை சாத்தான் என்று கூறியதை வெளியிட முடிந்த உங்களால், ஏன் என்னுடைய மறுமொழியை வெளியிட முடியவில்லை ஒரு வேளை இஸ்லாமியர்களை பகைத்து கொள்வதில் எதாவது பயமோ?இதே இந்து மதத்தை பற்றி இந்நேரம் “Criticism” கூறி இருந்தால். அது எவ்வளவு ஆபாசமானதாக இருந்தாலும் இந்நேரம் எந்த “Edit”ம் இல்லாமல் பிரசுரமாகி இருக்கும் அப்படி தானே. என்ன மார்க்சியமோ.

    • நான் போட்ட பின்னூட்டம் கூடத்தான் வரல. நான் ஏதாவது கேட்டனா?

    • உங்களை யாரும் இங்கே பதில் சொல்ல கூப்பிடலை மேடம். இது எங்க பிரச்சினை இதை நாங்களே பேசி தீர்த்துக்கொள்கிறோம். நீங்க எதுக்கு நைசா சந்துக்குல்ல வர்றீங்கன்னு எங்களுக்கு நன்றாவே தெரியும். உங்க உதவி எங்களுக்கு வேணாம் நன்றி அம்மா கிளம்புங்க.

  30. //தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசுபவர், புதிய கலாச்சாரம் அலுவலகம் பத்துக்கு பத்து அளவுள்ள இடத்தில், ஒரு கக்கூசை இடித்துவிட்டு கட்டிய தம்மாத்துண்டு இடத்தில் இருக்கிறது என்று நம்மை பணக்காரத்திமிருடன் கேலி செய்கிறார். ///

    பீக்காட்டில் உக்காந்து கஞ்சா குடித்து விட்டு உளறுவது போல் பேசும் செய்யது இபுராஹீம் உண்மையில் இஸ்லாமிய மார்க்கம் தெரிந்திருந்தால் இந்த எளிமையை பாராட்டியிருக்க வேண்டும் மார்க்கத்தை கற்றுக் கொடுத்த முஹம்மது நபிகளாரின் வீடு அஞ்சுக்கு அஞ்சுதான்.அளவு முக்கியமல்ல என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

    இஸ்லாமிய மார்க்கம் எளிய சமானிய மனிதர்களின் மார்க்கம் என்பதை மறந்து மமதையில் உளறுகிறார்கள்.

    • kather avargale nadanthathu ennavenre theriyaamal pesaatheenga tntj etharkkaga vinavu aluvalagatthirkku senrathu theriyuma ungalukku??? http://www.vinavu.com/2014/05/01/invitation-to-friends-of-vinavu/ ippadi oru azaippai vidutthathu vinavu anaivarum varuga enru azaitthiruppathaal makkal varugaikkaga periya idam erpaadu seyyappattirukka vendum appadiyaana entha erpaadum illai 10kku10 aluvalagatthilthaan santhippu nigaznthirukkirathu

      Piragu een anaivarum varuga enru azaippai vidukka vendum
      Ithu vinavu inemaatru velai……

  31. குளத்தில் குளித்து முடித்து மிக சுத்தமாக கம்பீரமாக நடந்து கொண்டிருந்தது களிறு ஒன்று. ஒரு சேற்றுக்குட்டையை தாண்டுகையில் அதனுள் இருந்து குபுக் என எழுந்த ஒரு மிருகம் குறுக்கே வந்து நின்றதாம். யானை சற்று ஒதுங்கி சென்றதாம்.
    உடனே அது என் கூட சண்டைக்கு வா….? பயந்து ஓடாதே என்றதாம்….!
    அது போலத்தான் இருக்கிறது. வந்தவர்களை மதித்து பேசி நடந்த உண்மையை தெளிவாக விளக்கி விமர்சனத்தையும் நாகரீகமான முறையில் கூறி அதன் பின்னர் எதிர்த்து போடப்பட்ட காணொளிக்கும் இணைப்பு கொடுத்து வாசகர்களை பார்க்க சொன்ன வினவுக்காரர்கள் எங்கே…?
    சொன்னாற்போல் பிட்டு பிட்டாக சொருகி அதையும் விடுத்து தரம் தாழ்ந்த மொழியில் அசிங்கமாக பேசி அதை காணொளியாக்கி பதிவேற்றும் நீங்கள் எங்கே…?
    பகிரங்க விவாதத்திற்கு அழைப்பது இருக்கட்டும். மதவாதம் எனும் போதையில் ஊறித்திளைக்கும் நீங்கள் குறிப்பாக உங்களை மட்டுமே கேவலமாக பேசும் பாகிஸ்தானுக்கு போக சொல்லும் கொல்லத்துடிக்கும் இந்து மத வெறியர்களுக்கு எதிராக செயல் படுவதை சாதுர்யமாக தள்ளி வைத்து விட்டு ஜனநாயக சக்திகளிடம் உங்களை மதித்து பேசுபவர்களிடம் எகிறுகிறீர்கள். ஜெயலலிதாவிடம் நபி தான் போக சொன்னாரா..? ஜெயலலிதா என்ன இசுலாமிய பிரதிநிதியா குறைந்த பட்சம் அவர் ஒரு ஜனநாயக சக்தி கூட கிடையாது பி‌ஜெ‌பியின் B டீம் என கிண்டல் செய்யப்படும் கட்சியின் தலைவி. இதையெல்லாம் சாதுர்யமாக பேச்சில் இருந்து அந்த இபூராகிம் பேச மறுக்கிறார்.
    பாகிஸ்தானுக்கு போங்கடா என்று சொல்பவர்களிடம் சென்று ஏன் போக வேண்டும் இது எங்கள் நாடு என பேசலாம் வாருங்கள் என நீங்கள் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கலாமே…..? இந்து மத வெறியர்களை அழைக்கலாமே….? அதையெல்லாம் விடுத்து மிக பாதுகாப்பான இடத்தில் கத்தி வீசுவது. உங்களை மதித்து ஒருவர் பேசினால் அதை ஒரு கேவலமான முறையில் விடுத்து வீடியோ எடிட்டிங் பண்ணி பதிவேற்றும் குரூரமும் பிரபலமாகும் முயற்சியுமே தெரிகிறது. ஜெயினுலாபுதீனை விமர்சிச்சிட்டாங்கலாமா…..? விமர்சன தராதரத்தை பற்றி யார் பேசுவது என தெரிய வில்லை. மனுஷ்ய புத்திரணை அவர் விமர்சித்தது மிக நாகரீகமான முறையில் அல்லவா…. அப்படித்தான் இருக்கும்.
    இதற்கெல்லாம் மேல் மார்க்சியத்தை பற்றி விமர்சிக்கிறாயே….? இதை விட ஒரு கேவலம் இழிசெயல் இருக்குமா…? பெரியாரிஸ்டுகளை ஓட விட்டார்களாமா……? இந்து மதத்தை மிக கேவலமாக விமர்சித்து கிழித்து தொங்க விட்ட பெரியாரை கிட்டத்தட்ட உங்கள் நட்பு சக்தியை விமர்சிக்கிறீர்கள் என்றால் அரசியல் ஆண்மை கொஞ்சமும் அற்று உங்கள் எதிரிகளிடம் மோதாமல் சக நட்புகளிடம் மோதும் அறிவின்மையே மேலோங்குகிறது. மதத்தை காட்டி சம்பாதித்து வாழும் தன்மையே மேலோங்கு கிறது. கம்யூனிசத்தை விமர்சிக்கும் நீ….? உனது கட்சி….? உங்கள் கொள்கையை கூறு பார்க்கலாம் சமூக மாற்றத்திற்கு.

    • “இந்து மதத்தை மிக கேவலமாக விமர்சித்து கிழித்து தொங்க விட்ட பெரியாரை, கிட்டத்தட்ட உங்கள் நட்பு சக்தியை, விமர்சிக்கிறீர்கள் என்றால்…..”

      பெரியார் தன் வீரத்தை இந்து மதத்தவரிடம்தான் காட்டினார் என்பது உலகம் அறிந்த விஷயம். அதாவது இந்துவைத் திட்டினால் அவர் முஸ்லீம்களின் நட்பு சக்தி என்பது திலீபனின் கருத்து. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதெல்லாம் இந்துக் கடவுள்களைப் பற்றி மட்டும்தானோ ?

      • //பெரியார் தன் வீரத்தை இந்து மதத்தவரிடம்தான் காட்டினார் என்பது உலகம் அறிந்த விஷயம்.//
        பெரும்பான்மை சமூகம் யாரால் அடிமைபட்டிருக்கிறதோ அதற்கு எதிராக பெரியார் போராடியிருக்கிறார். இந்த சமூகத்தில் பார்ப்பான் இதர மக்களை அடிமைப்படுத்துவதற்கு பதிலாக வேறு யார் செய்திருந்தாலும் எதிர்த்து போராடியிருப்பேன் என அவரே சொல்லியிருக்கிறார்.
        பெரியார் இந்து மதத்தை எதிர்த்து போராடினார்.
        வினவு பி‌ஜெ‌பி ஆர்‌எஸ்‌எஸ் டி‌என்‌டி‌ஜெ வை எதிர்த்து போராடுகின்றனர்.
        திலீபன் வினவுவிற்கு ஆதரவாக பேசுகிறார்.
        மணவை சிவா சகலரையும் குறை கூறுகிறார். மாற்று கருத்து மட்டும் சொல்ல மறுக்கிறார்.
        //அதாவது இந்துவைத் திட்டினால் அவர் முஸ்லீம்களின் நட்பு சக்தி என்பது திலீபனின் கருத்து.//
        திரிக்காதீர்…., இந்து வை அல்ல இந்து மத வெறியர்களை சங் பரிவார் கும்பலை. இஸ்லாமிய மக்களுக்கு முக்கிய எதிரி இந்து மத வெறியர்கள் எனவே மத வெறியை எதிர்ப்பவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு நட்பு சக்தி என கூறினேன். இஸ்லாமிய அடிப்படை வாதிகள் இதை அரசியலாக்கி லாபம் பார்க்கின்றனர்.

        //பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதெல்லாம் இந்துக் கடவுள்களைப் பற்றி மட்டும்தானோ ?//
        இதை நான் எங்கு கூறியிருக்கிறேன் என சுட்டி காட்டவும் பேச வேண்டும் என்பதற்காக பேச கூடாது.

  32. தவ்கீத் ஜமாஅத் ரவுடி பேசியதை கேட்டேன். கோபம் மட்டுமே வருகிறது… ஆனால் இந்த _________ மீதுள்ள கோபம் ஒரு நிமிடம் எனக்கே இஸ்லாமிய கோட்பாடுகள் வளர்ந்தால் தேசம் சுடுகாடாகும் என்பது புரிகிறது. சின்ன சறுக்கலில் _____________ மோடி வந்தா கூட பரவால்லன்னு தோணிச்சி. ஆனால் இவர்கள் கல்ப்ல செட்டில் ஆயிடுவாஇங்க…ஆனா சாவப்போறது நம்ம மக்கள்ன்னு பொறுமை காத்த உங்கள் பொறுமைக்கு நன்றி…இவர்கள் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். ன் கைக்கூலிகளோ என்று தோன்றுகிறது…மதவெறியனுக்கு மதத்தின் மீதோ கடவுள் மீதோ நம்பிக்கை இருக்க வாய்ப்பே இல்லை. மோடியை எதிர்ப்பதாக காட்டிகொல்பவர்கள் நாளை சொந்த மத மக்களை காட்டிகொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது… இதுகளை என்னதான் செய்றது…

  33. குரான் ஹதீஸ் பற்றிய அறிவு இல்லை, ஆனால் இஸ்லாமிய சட்டத்தை குறை சொல்லுமாம் இந்த சாத்தான், உங்களுக்கு உண்மையிலேயே திராணி இருந்தால் விவாதம் செய்யவேண்டியது தானே மூடர்களே, ஏன் பயம்?, தவ்ஹீத் ஜமாத்துக்காரன் உங்களுடைய முகமூடியை கிழித்து தொங்க விட்டுருவான் என்ற பயமா?, இஸ்லாத்தை இழிவுபடுத்தி பேசினால் அது ஒவ்வொரு இஸ்லாமியனுடைய மனதையும் பாதிக்கின்ற விஷயம் (சில பெயர் தாங்கி முஸ்லிம்களை தவிர) எனவே உங்களை எவ்வளவு இழிவாக பேசினாலும் அது சரியே!.

    • @Abdulah:
      Ali Sina, ex-muslim, is ready to argue against quran and hadith. He is even ready to give 50,000USD to win the debate with him. Why don’t you try there.

    • நல்லா இழிவா பேசுங்க. செய்யது இப்ராகிம் பேசியது ராம்கோபாலன் பேசியதை போன்று இருந்துச்சு. நீங்கள் தொக்காடியா மாதிரி இன்னும் எவ்வளவு கேவலமா பேச முடியுமோ பேசுங்க அப்ப தானே மொத்த சமுதாயத்துக்கும் கெட்ட பேரு வரும். காவி கும்பல் வளரும் நல்லா செய்ங்க ராசா.

  34. //எனவே, நீங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை பகிரங்கமாக கண்டிப்பது… // என்னது கண்டிப்பதா? இன்னமுமா ! வெட்ககேடு !

  35. ffff,sathik,Abdullah,

    [1]சவால் TNTJ வுக்கு சவால் !

    [2]உம் தலைவனும் , துணைதலைவனும் பேசிய பேச்சுகள் எப்படி எல்லாம் முரண்படுது பாருங்கள்! [feedback 16,17,19,20,21,211]

    [3]என் feedbackல் உண்மை இல்லை என்று தலைவனும் , துணைதலைவனும் நீருபிக்க முடியுமா ?

    [4]என் feedback தவறு என்று உம்மால் நிருபிக்க முடியாவிட்டால், ஒலி/ஒளி யில் வாந்தி,போதி செய்த உம் துணைதலைவன் M.S சையது இப்ராஹிம் நாகூர் தர்காவில் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டும் ! இல்லை என்றால் நான் !

    |————————-TNTJ சவாலுக்கு தயாரா ?———————————–|

    • Ji M,Abdullah PDKT,

      உம் இருவருக்கும் சேர்த்து தான் இச் சவால் !
      முடிந்தால்,உண்மையிலேயே திராணி இருந்தால் இச் சவாலை சந்திக்கவும் !

  36. பிஜே அடிப்பொடிகளுக்கு சவுக்கடி கொடுத்த தோழர்களுக்கு வாழ்த்துகள்

  37. விவாதக்காரர்களே! வெவாதம் வெவாதம்னு இங்க வந்து சவுண்டு வுடுறத விட்டுட்டு குரான 1108 விதமா மொழிபெயர்த்து ஜிகினா வேலை காட்டும் நீங்கள் எல்லாம் உக்காந்து முதல்ல வெவாதம் நடத்தி எது உண்மையான அர்த்தம்னு வெளக்கமா சொல்லுங்க பிறகு எங்களுக்கு வெவாத அழைப்பு விடுக்கலாம்.

    • ////குரான 1108 விதமா மொழிபெயர்த்து ஜிகினா வேலை காட்டும் நீங்கள் எல்லாம் உக்காந்து முதல்ல வெவாதம் நடத்தி எது உண்மையான அர்த்தம்னு வெளக்கமா சொல்லுங்க பிறகு எங்களுக்கு வெவாத அழைப்பு விடுக்கலாம்.////

      கலை விவாதத்தை திசை திருப்ப வேண்டாம் அப்படி பார்த்தால் மர்க்சியத்தை புரிந்து கொள்வதில் கம்யூனிஸ்ட்களிடம் பல உதிரிகளிடம் வேறுபாடு இருக்கிறது இது இங்கு பிரச்சனையல்ல

  38. மாற்று மத பின்னுட்டமிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் டின்டிஜெ யயும் அது பரப்புகிற இசுலாமின் தரத்தையும் தெரியாமல் சேற்றில் அல்லது மலக்குட்டையில் கல் எறிய வேண்டாம்

  39. TNTJ வுக்கு சவால் !
    —————————————————-

    இங்கு பின்னூட்டங்களீடும் ,இடப்போகும் மதம் மூலம் காசு பார்க்கும் TNTJ மத________ உண்மையிலேயே திராணி இருந்தால் நான் கூறும் சவாலை முதலில் சந்திக்கட்டும். பின்பு வேறு விடயங்களை பேசட்டும் !

  40. ரசிய முதலாளித்துவமும் மைனாரிடிக் கொள்கைகளும்

    On February 4th, 2013, Vladimir Putin, the Russian president, addressed the Duma, (Russian Parliament), and gave a speech about the tensions with minorities in Russia:

    “In Russia live Russians. Any minority, from anywhere, if it wants to live in Russia, to work and eat in Russia, should speak Russian, and should respect the Russian laws. If they prefer Sharia Law, then we advise them to go to those places where that’s the state law. Russia does not need minorities. Minorities need Russia, and we will not grant them special privileges, or try to change our laws to fit their desires, no matter how loud they yell ‘discrimination’. We better learn from the suicides of America, England, Holland and France, if we are to survive as a nation. The Russian customs and traditions are not compatible with the lack of culture or the primitive ways of most minorities. When this honorable legislative body thinks of creating new laws, it should have in mind the national interest first, observing that the minorities are not Russians.”

  41. “நாங்கள் எளிமையாக கேட்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற எந்த பிரச்சினைக்காவது இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறதா? மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்று மக்களின் அடிப்படையான பிரச்ச்சினைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கூறுகிறது” என்றதற்கு

    7372. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்..

    வினவு என்னும் காகிதப் புலிக்கு அன்பான வேண்டுகோள்… உண்மையிலேயே உங்களுக்கு விவாதம் பற்றிய பயம் இல்லை என்றால் விவாதத்திற்கான அழைப்பை ஏற்க வேண்டும்.. ஒரு கருத்தை,உண்மையிலே மார்க்சியம் நாட்டில் உள்ள அணைத்து பிரச்னை களுக்கும் தீர்வு கொடுக்குமென்றால் விவாதத்துக்கு வாருங்கள்..கருத்துக்களை எடுத்து வையுங்கள் அது சரியாக இருப்பின் நாங்கள் உங்கள் கொள்கைக்கு வந்து விடுகின்றோம்..என்னை போன்ற சாதாரண மக்களுக்கு எது உண்மை,எது அறிவார்ந்த சித்தாந்தம் என்பது விளங்க வேண்டுமல்லவா…அதை விட்டு விட்டு மொக்கை காரணங்கள் கூறி தப்பிக்க முடியாது…உங்களுக்கு வேண்டுமானால் தௌஹீத் ஜமாஅத் பற்றி தெரியாமல் இருக்கலாம்…நீங்கள் புலி வாலை..பிடுத்துல்லீர்கள் என்பது போக போக விளங்கும்..

    சும்மா நீங்கள் என்ன சொன்னாலும் நம்ப நாங்கள் என்ன சரவணா காந்த் போன்றோர்களா..அவ_தான் ஆயிரம் பேஸ்ட் பண்ணி ஒட்டுவா_____….

    • மீரான் அண்ணாசி,

      [1]நீங்கள் என் சவாலை ஏற்று என் feedback அய் தவறு என்று நேரடியாக வாதம் செய்தால் தானே ,என் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் உண்மையா இல்லை பொய்யா என்று முடிவு செய்ய முடியும் !

      [2] சரவணா காந்த் போன்று ,.. ஆயிரம் கட் /பேஸ்ட் பண்ணி ஒட்டியது யாருங்க மீரான்அண்ணாசி? நீங்களா ? நானா? முடிந்தால் கட் /காபி /பாஸ்ட் இல்லாமல் 4/5/2014 அன்று நீங்கள் record செய்த audio /video பதிவை முழுவதுமாக வெளியீட்டு தான் பாருமையா ! யாரு சாயம் வெளுக்கும் என்று பார்க்கலாமே !

      [3]நான் M.S சையது இப்ராஹிம் [துணை தலைவன் TNTJ ] கூறியவற்றை முழுமையாக ஆதாரத்துடன் வெளியீட தயார் !M.S சையது இப்ராஹிம் துணைதலைவன் TNTJ , நாகூர் தர்காவில் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்க தயாரா என்று கேட்டு செல்லும்!

      [4]மீரான் அண்ணாசி ,ஆளு மட்டும் வளந்த பத்தாது , அறிவையும் பயன் படுத்தனுங்கோ !

      //சும்மா நீங்கள் என்ன சொன்னாலும் நம்ப நாங்கள் என்ன சரவணா காந்த் போன்றோர்களா..அவ_தான் ஆயிரம் பேஸ்ட் பண்ணி ஒட்டுவா_____….//

    • அன்னன் மீரான் ஏன் கொதிக்கிறிங்க செல்வந்தர்களிடம் இருந்து வசூல் பன்னி ஏழைகளுக்கு குடுக்கும் நபி வழியை பின்பற்றி கொழுத்த முசுலாமான் கிட்ட இருந்து பணம் வாங்கி எத்துனை ஏழகளை அடுத்த மதத்துக்காரன் இல்ல ஏழை முசுலீம்களை செழிப்பாக வாழச்செய்து இருக்கிறீர்கள் அதற்க்கு ஆதாரம் குடுங்கள் அப்புறம் வினவு போன்ற ஏழைகளுக்கு போராடும் இயக்கங்களை நாம நபி வழியில் கூட்டு கொலை பன்னிறலாம்

    • மீரான் அண்ணாசி ,

      இன்று நான் வேலைக்கு போய் விட்டு ஐயாவுக்கு[என் அப்பாவுக்கு] துணையா எங்க மளிகை கடைக்கு வந்த போது என் ஐயா[என் அப்பா] என்ன சொன்னாங்க தெரியுமா ?

      “காலையில் என்னமே பிராச்சனை என்று சொன்னீயே…..,இந்த ம க இ க பிள்ளைகள் நமக்காக என்னமா reliance/walmartக்கு எதீரா கொடி பிடித்து போராடினாங்க ….; அவிங்களுக்கு ஒரு பிராச்சனை என்றால் ….;விடாத சரவணா….. ”

      அதிகம் படிக்காத என் ஐயாவுக்கு இருக்கும் அரசியல் அறிவு கூட உமக்கு இல்லையே மீரான் அண்ணாசி!

    • மீரான் அண்ணாசி!

      கொஞசம் பாத்து பேசுங்க அண்ணாசி! என் பேருக்கு பின்னால வேறு பேரு போட்டு என்ன அசிங்க படுத்திட்டதா ரொம்ப மகிழ்ச்சியா இருக்காதிங்க! உங்க பேருக்கு பின்னால பின்லேடன் பேரை போட ரொம்ப நேரம் எனக்கு ஆகாது.!

      மேலும் பார்திங்கன , இந்த 68 வயசுலையும் என் ஐயா ,நான் 4 தென்ன மரம் ஏறி இளநீ /மட்டை இறக்குவதற்கு முன்னே 7 மரம் ஏறி கத்தியால இளநீ /மட்டை வெட்டி இறக்குவாரு !

      கொஞ்சம் பாத்து பக்குவமா பேசுங்க மீரான் அண்ணாசி! இல்லை என்றால் அப்புரம் அதை காணவீல்லை /இதை காண வீல்லை என்று உங்களுக்குள் _______ தேட வேண்டி வரும் !

      வினவு கிட்ட பேசுவது போல என் இடம் தர குறைவா பேசுவது நல்லதா என்று யோசித்து பாருங்கள் மீரான் அண்ணாசி!

      //சும்மா நீங்கள் என்ன சொன்னாலும் நம்ப நாங்கள் என்ன சரவணா காந்த் போன்றோர்களா..அவ_தான் ஆயிரம் பேஸ்ட் பண்ணி ஒட்டுவா_____….//

      note to vinavu : Since He is insulting me , I am giving this first and final warning to meeran annachi!

      • “Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience.” ― Mark Twain

    • பணக்காரன் கிட்ட வாங்கி ஏழை கிட்ட கொடுக்கும் முன் பணக்காரன் எப்படி பணக்காரன் ஆனான்…? ஏழை ஏன் வாங்கும் நிலையிலேயே இருக்கிறான்..? இதற்கு அல்லாஹ் என்ன சொல்லுகிறார்…?
      வர்க்கங்களை ஒழிக்க பாடுபடும் கட்சியை எந்த வித அடிப்படையுமே இல்லாத இப்படியான ஏழை பணக்காரன் போன்ற மொன்னையான வெட்டி சவடால் மூலமே சமாளிக்கிறீர் பாரும் பெரும் திறமை சாலிகள் போங்கள்.
      வினவு காகித புலியா….?
      ரசத்துல கரைக்கிற புளி அளவு கூட வொர்த் இல்லாத ஆளுக எல்லாம் பேச வந்துட்டாய்ங்கையா…..!
      சங் பரிவாரின் பிரதிநிதி மோடியை எதிர்த்து இயக்கமெடுத்த தோழர்களை பார்த்து வெட்டி பந்தா மூலமாக அரசியல் பண்ணி லாபம் சம்பாதித்து கொழுக்கும் நீங்கள் பேசுவது வேடிக்கையாக அல்லவா உள்ளது. உங்கள் பரம வைரியான ஆர்‌எஸ்‌எஸ் க்கு எதிராக என்னையா செஞ்சீங்க அத சொல்லிட்டு இவிங்கள காகித புலினு சொல்லு பார்க்கலாம் துணிவும் நெஞ்சுரமும் இருந்தால்.

      //நீங்கள் புலி வாலை..பிடுத்துல்லீர்கள் என்பது போக போக விளங்கும்..//
      ஃப்ர்‌ர்ர்‌ர்ர்‌ர்ர்‌ர் ஜோக் ஆப் தி இயர்…..!

    • நான் சில ஆண்டுகளாக வினவின் வாசகன். இதுவரை எந்த விவாதங்களிலும் பங்கேற்றதில்லை. வெறும் பார்வையாளன் தான். இவ்வளவு நேரம் விவாதத்தை கவனித்துக்கொண்டு தான் இருந்தேன், உணர்ச்சிகள் உந்திதள்ளுவதால் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் சில கருத்துக்களை வைக்கிறேன்.

      இஸ்லாமிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு டின்.என்.டி.ஜே வினர் வினவு தோழர்களிடம் நடந்துகொண்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர்களுடைய நடைமுறை அடிமுட்டாள்த்தனமானது. ஒரு முட்டாள் கூட்டம் தான் நட்பு பாராட்ட வேண்டியவர்களிடம் இவ்வாறு நடந்துகொள்ளும். இவர்களுடைய இந்த செயல் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதைப்போன்றது.

      வீடியோவில் செய்யது பேசியிருப்பதை அனைத்து சகோதரர்களும் வண்மையாக கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு மொத்த சமுதாயத்தையும் பொறுப்பாக்குவார்கள். ஏழைகளையும், பெண்களையும் இழிவுபடுத்துபவன் நல்ல மனிதனாகவே இருக்க முடியாது. பிறகு எப்படி முஸ்லீமாக இருக்க முடியும்? இந்த இழிபேச்சை பேசியதுடன் அதை பெருமையாக பதிவேற்றிக்கொண்ட இவர்கள் மிக கேவலமானவர்கள். இவர்களுக்கும் சாதாரண முஸ்லீம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலே சகோதரர் அல்ஹாஸ் தொடர்ந்து பல பின்னூட்டங்களில் கூறியிருப்பதை போல இவர்களைக் கொண்டு யாரும் முஸ்லீம் சமுதாயத்தை எடை போடாதீர்கள். ஏழை முஸ்லீம் மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் யாரும் உங்களிடம் இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள். வினவு தோழர்கள் பெரும்பாண்மை முஸ்லீம் மக்களுக்காக இவர்களை மதியாமல் புறந்தள்ள வேண்டும்.

      சமுதாயத்தை நேசிக்கும் சகோதரர்கள் சமுதாயத்தின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் இவர்கள் செய்யும் செயல்களை கடுமையாக கண்டிக்க வேண்டும்.

    • மீரான் பாய்,

      தற்கால பிரச்சனைகளுக்கு என்ன தீர்வை குரான் அல்லது ஹதீஸ் சொல்கிறது என்று கேட்டால் – செல்வந்தர்களிடம் இருந்து செல்வத்தை வசூலித்து ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற வசனத்தை ஆதாரம் காட்டுறீங்க?

      இதைத்தானே எல்லா மதங்களும் சொல்கின்றன? பணக்காரர்கள் தர்மம் செய்ய வேண்டுமென்று எல்லா மதங்கள் சொல்லியும் சமூகத்தில் இத்தனை ஒடுக்குமுறைகள் ஏற்றதாழ்வுகள் நிலவுவது ஏன்?

      சரி, இதை மாதிரி எத்தனை இடத்துல என்ன என்ன நடவடிக்கை எடுத்தீங்க? எத்தனை ஏழைகள் வாழ்வு உயர்ந்திருக்கு ?
      எங்க எங்க மின்வெட்டு, மின் கட்டண உயர்வை கட்டுபடுத்தியிருக்கிறீர்கள் என்ற பட்டியலை குடுங்க பாய்.

      அடுத்து சவுதி போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சிமுறை நடக்கிறதா? இல்லை ஈரான்ல நடக்குதா? எங்க நடப்பது இஸ்லாமிய ஆட்சின்னு சொல்லுங்க. அதை தொடர்ந்து மேற்கொண்டு பேசலாம்.

      எங்க ஆபீஸ்ல ஒரு பாய் டிரைவரா வேல பாக்குறார். அவர் ஒரு நாளும், வெள்ளிக்கிழமை உட்பட ஒரு நாளும் 5 முறை தொழுது நான் பார்த்தது இல்லை. அத அவர் கிட்டயே கேட்டேன், நமக்கு எங்க சார் நேரம்ன்னு சொன்னாரு. அவர் தாடி கூட வச்சுகிறது இல்லை. அவர் இஸ்லாமியரா இல்லையா?

      //அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள்.///

      ஒப்புக்கொள்ளவில்லை என்றால்? என்ன செய்வது என்ன செய்வீர்கள் ? என்ன செய்துள்ளீர்கள் ?

  42. வினவு ரஷ்ய மக்களுக்காக போராடவில்லை, நம்ம இந்திய உழைக்கும் மக்களுக்காக அவர்கள் வாழுரிமைக்காக போராடுகிறது மதங்களுக்காக அல்ல, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்கிறார்கள். அதற்காக TNTJ போன்ற அமைப்பு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இதனால் பாதிக்கபடபோவது இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சிறுதொழில் நிருவனகளுந்தான் என்பதை ஏன் உணர மறுக்குறீர்கள் அவர்களுக்கும் சேர்த்துதான் வினவு போராடுகிறது, பழம் ( RSS, SANGPARIVAAR ) கிடைத்தால் அதை பகிர்ந்துகொள்ளும் நீங்கள், சில கசப்பான உண்மையை சொன்னால் வசை பாடுவதேன்?

  43. ஏன்____ TNTJ நோன்னைங்களா… உங்களுக்கு தான் RSS எதிர்க்க துப்பில்லை, RSS செல்லபிள்ளை ஜெயா காலில் விழுந்து கிடந்தீங்க. எப்போதுமே RSS எதிர்க்கிற கம்யுனிஸ்ட்’கிட்ட ஏன்___ வம்பு பண்றீங்க. ஏலே இவங்க கிட்ட வச்சுகிடாதீக. பின்ன உங்க டவ்செர் அவுந்து அம்மணமா தான் நிப்பீக…

  44. தோழர் பாண்டியனுக்கு வாழ்த்துக்கள். அந்த ஒளிப்பதிவில் தோன்றும் ________ வருணனைகள் ஆபாசமாக இருக்கின்றன. இஸ்லாமிய மதவாதிகளை விமர்சித்தால் ஆர்.எஸ்.எஸ் முத்திரை குத்தும் நபர்கள், ஆர்.எஸ்.எஸுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை என்பதை இந்த காணொளி பார்த்து புரிந்து கொள்ளட்டும்.

    • இஸ்லாமிய மக்கள் வேறு , TNTJ போன்ற இஸ்லாமிய மதவாதிகள் வேறு என்பதை இங்கு வினவுக்கு ஆதரவாக பீன்னூட்டம் இடும் இஸ்லாமிய சகோதரர்கள் மூலம் சுகதேவ் கண்டிப்பாக புரிந்து கொள்வது நல்லது !

  45. சகோதரர் செய்யத் இப்ராகிம் மரியாதை குறைவாக பேசுவதை யாருடைய வழிமுறையை பின்பற்றுகிறார் என்று தெரியவில்லை! ஒருவேளை நபிகள் பெருமானார் அவர்களின் வழிமுறையோ என்னவோ?!

    இவர் விமர்சனத்தை ஒவ்வொரு முறையும் பார்த்து வருகிறோம்! ஒரு தெருவில் நின்று சண்டை போடும் குடிகாரனை போல இவருடைய பேச்சு!
    அடுத்தவரை தரம்தாழ்த்தி பேசுவது,கேட்டால் நாங்கள் பேசுவதற்கு தகுதியானவர்களைதான் பேசுகிறோம் என்று சொல்லவேண்டியது,வினவு தளத்தை விமர்சிப்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?,அதுவும் இந்த மாதிரி பேசும் ஒரு நபருக்கு என்ன தகுதி இருந்து விட போகிறது?

    உங்கள் குரானுடைய யோக்கியதை என்னவென்று தெரியாத விஷயாமா?
    இறையில்லா இஸ்லாம் என்ற இனைய தளத்திற்கு வந்து பதில் எழுதி இவர்களின் விவாத திறமையை காட்டட்டும்!
    நேரடி விவாதம் மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்று கூப்பாடு போடும் இந்த மதவாதிகள், குறி வைத்து தாக்க ஆள்,முகவரி தேடி அலையும் பிறவிகள்!
    இவர்களுக்கு இவர்கள் சொல்லுவது மட்டுமே சரி என்று நினைப்பு!
    எங்களை போன்ற முன்னாள் முஸ்லிம்களை கேள்வி கேட்டதற்கே கூட்டமாக அடிக்க வந்த உத்தமர்கள் இவர்கள்!
    இந்த தீவிரவாதிகளுடன் விவாதமா? சரியா போச்சி!

  46. Dear Vinavu & Comrade Pandian

    Great work. I wish I could have been there.

    //புதிய கலாச்சாரம் அலுவலகம் பத்துக்கு பத்து அளவுள்ள இடத்தில்//

    This moved me to tears and I just could not control myself at the thought of what great things we can do with so little and what is the use of big built spaces without any proportional use.

    //வீடியோவில் பேசுபவர்//

    He must be S. Ibrahim who used to comment in Vinavu and other blogs. Since I started commenting and rebutting him he has disappeared from Vinavu. (I think I can take credit for his disappearance)

    • நீ எப்படா திருந்த போறே? அளிசென அலி சேனா என்று அவரோட கருத்தை சொன்ன , அது ஒரு புளுகு மூட்டை என்றாகி விட்டது. ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட கேள்விகளையே இன்னும் பரிசு தரேன் என்று ஏலம் விட்டு விளம்பரம் தேடுகிற அவனுக்கு தாங்கள் ஒரு எடுப்பு என்று நன்றாகவே தெரிகிறது.

  47. அன்பார்ந்த தோழர்களுக்கு,

    நானும் ஒரு இஸ்லாமியனே

    நான் முழுமையாக கட்டுரைகலையும் வீடியோ வையும் பார்த்தேன்,உங்கள் அனுமதி இல்லாமல் விவாதத்தை வீடியோ எடுத்து அதனை வெளியட்டது முதலில் தவறு,

    உங்களை திறந்த மனத்தொடு குரானையும் ஹதீசையும் உங்களுக்கே உரிய திறன்ஆய்வுடன்,ஆராய வேண்டுகிறேன்,காரணம் இஸ்லாம் பரிபூரன ஜனநாயக தன்மையோடு இருக்கும் மார்க்கம், அதன் அதொரிட்டி குரானும், ஹதீசுமே, tntj அல்ல, அதை பின்பற்றும் மக்களும் அல்ல,

    நான் பள்ளி பருவத்தில் இருந்து வினவயும்,புதிய கலாச்சாரம்,புதிய ஜனநாயகம்,கீழைகாற்று பதிப்பக நூல்கள்லின் உடாகவே இந்திய,மற்றும் சர்வதேச அரசியலின் போக்கை தெரிந்துகொண்டேன்,

    அரசியல் மற்றும் சமூக தலத்தில் இஸ்லாமிய மற்றும்,மதசார்பற்ற சக்திகள் அனைவரும் உங்களை போன்ற புரட்சிகர இயக்கங்களோடு இணைந்து நீதிக்கா போராடவேண்டிய காலகட்டத்தில் இதுபோன்ற சச்சரவுகள்,தேவையற்றது,

    பத்திரிகைகளில் விமர்சனம் எழுதினால் இணையத்தில் விமர்சனம் எழுது என்பதில் உள்ள நீயாயத்தை
    நான் ஏற்கிறேன்,அதற்காக விவாதத்தில் பங்கெடுத்தே ஆகவேண்டும் என்பது நிர்பந்தம் அல்ல,

    பத்துக்கு பத்து,அறையில் அமர்துகொண்டு சர்வதேசிய அரசியலின் அராஜகத்தை ,சுரண்டலையும் உழைக்கும் மக்களுக்கு உணர்த்தும் வினவின் வீரியம் ,தன் முன்னால் உள்ள camara விளக்குகளின் வெளிச்சம் நின்றஉடன் விழுந்து போகும் இந்த விட்டில்களுக்கு புரியபோவதில்லை,

    கையில் கரிகட்டைகள் இருந்தாலும் மக்களுக்கு கல்வி ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து,பணியாற்றும் வினவின் செயல் பாராடுதளுக்கு உரியது,

    tntj இது போல் rss, இந்து முன்னணி,ஜெயலலிதா,கருணாநீதி ,ஆகியோரை விவாதத்திற்கு அழைத்தாள் சிறந்தது,

    dmk,admk விட மகாஇகா கூட்டுசேர்த்து பணியாற்ற தகுதிஉடைய அமைப்பு,

    மத்தபடி tntjசொன்ன சேலை,ஜாக்கெட் தரம் கேட்ட வழிமுறை

    கருத்துவேறுபாடு இருந்தாலும் அதை புறம்தல்லி உடன் பாடு உள்ள விடையத்தில் வீரியமாக நாம் பணியாற்றவேண்டும், tntj செய்தது தவறு

    நீதிக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் இஸ்லாமிய சமுகம் உங்களோடு இணைந்து பணியாற்றுவதே சிறந்தது,

    • if u cant read quran th miracle of miarcle then why are u propagating the false message about islamic religion
      islam is the solution for all the problems in this world

      the way of zakath is the remedy for all finiancial crisis in this world

      if you dont know some thing then why are u throwing you blind belife on it ?

      dont show yourself greatest

      if you dare to debate about islam you need to encounter tntj

      you dont have the guts

      i heared seyed ibrahims speech he is asking good quoestion for hipo carts like you
      you cant answer for the quoestions

      so still you are vomiting that same shit what you do in all aspects

      that articles posted by you regarding islamic society is a clean shit’

  48. இஸ்லாத்தை பற்றி விமர்சித்து வினவு நிறைய எழுதுகிறது.நான் நிறைய கட்டுரைகள் வினவில் படித்திருக்கிறேன். ஏன் அப்படி எழுதுகிறீர்கள்? அப்படி எழுதுவது தவறு அதைப்பற்றி தெளிவு பெற விவாதித்து முடிவு செய்யலாம் என்று அழைக்கிறார்கள் முஸ்லீம்கள். தன் பக்க நியாயத்தை நிலை நாட்ட விவாதத்திற்கு அழைப்பது தவறா ?(அது மிகப்பெரிய தவறாக இங்கு சித்தரிக்கப்படுகிறது) அதை நியாயமாக எதிர்கொள்ள வேண்டியதுதானே? வினவிற்கு என்ன தயக்கம்? விவாதம் என்பது ஆரோக்கியமானது தானே… நட்பாக அதை நடத்தலாமே…. தவ்கீது ஜமாஅத் அது போன்ற விவாதங்கள் நிறைய நடத்தியிருக்கிறார்கள். இரு தரப்பும் பங்கேற்கும் விவாதத்தை வீடியோவில் பார்க்கும் மக்களுக்கும் தெளிவு கிடைக்கும் தானே ? நாட்டுல இவன் செய்யுறது அவன் தப்பு என்பான், அவன் செய்யுறதை இவன் தப்பு என்பான் இப்படிதான் நாட்டு நடப்பு இருக்கிறது. ஆனால் இவர்கள் அப்படி இல்லாமல் விவாதம் செய்து ஒரு முடிவு காண்போம் என்கிறார்கள். இது ஒரு அறிய நிகழ்வு. அதை நிகழ்த்த ஏன் மறுக்கிறீர்கள் ? அப்போ வினவு வெறும் காகித புலி தானா ? இஸ்லாத்தை பற்றி எதுவும் தெரியாது என்று இப்போது ஒத்துக்கொள்கிறீர்கள். அப்போ…. தெரியாத விஷயத்தை பற்றி கேவலமாக எழுதுவது நியாயமான செயலா ? தங்களையும் இஸ்லாத்தையும் கேவலமாக விமர்சிக்கிறீர்கள்… வாருங்கள் விவாதம் செய்து தெளிவு பெறுவோம். தவறு எங்களிடத்திளிருந்தால் (விவாதத்தில் நிரூபித்தால்) நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று நட்பாக அவர்கள் அழைக்கும்போது அதை ஏற்க உங்களுக்கு முடியவில்லை. உங்கள் நிலையை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது ஆனால்…. அதை மறைக்க திசை திருப்ப இங்கு ஒரு பதிவை போட்டு…. (காமெடி டைமாம்) பாவம் ….. கைப்புள்ள ரேஞ்சிக்கு எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் …… உண்மையான கமெடிடைம் தான் இது.

  49. ////“நாங்கள் எளிமையாக கேட்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற எந்த பிரச்சினைக்காவது இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறதா? மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்று மக்களின் அடிப்படையான பிரச்ச்சினைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கூறுகிறது” என்றதற்கு

    7372. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்..////

    ஏம்லே மீரான் அவுக என்ன கேள்வி கேக்கிராங்க, நீ என்னாலே பதில் சொல்ற… உனக்கு ஹதீஸ் பத்தியும் தெரில, இஸ்லாம் கூறும் பொருளாதாரம் பற்றின அறிவும் இல்ல. பேசாம இறுக்க வேண்டியது தான. ஏம்லே மானத்த வாங்கிற. இதுல அரை வேக்காடு அறிவ வச்சிக்கிட்டு விவாதத்துக்கு வேற அவுகள கூப்பிடற. முதல நீ இஸ்லாமிய பொருளாதாரத்தையும் , ஹதீசையும் படிச்சிட்டு வாலே, அப்புறம் விவாதத்துக்கு கூப்பிடலாம்…

  50. ஏற்கனவே ஒற்றுமையா இருந்த முஸ்லிம்களுக்குள்ள குழப்பத்த உண்டு பண்ணி, ஒரு குடும்பத்திலையே நாலு பள்ளிவாசலுக்கு தொழுக போற அளவுக்கு கொண்டு வந்தவைங்க இந்த TNTJ காரனுவ. ஒரு பள்ளிவாசல் இருக்கும்போது அதுக்கு போட்டியா இன்னொரு பள்ளிவாசல் கொண்டு வரது நபி வழியாலே. பணத்திமிர் பிடித்த பயலுவதான் TNTJ ல இருக்கிறவைங்க, மீதி 95 சதவீதம் ஏழை முஸ்லிம்கள் 10-10 வீட்ல இருக்கிரவைங்கதான். எங்க சார்பா பேசறதுக்கு இவங்களுக்கு எந்த தகுதியும் இல்ல. இவங்கள நாங்க முஸ்லிமா எத்துகிடறதே இல்ல. இவங்கள கண்டுக்காம ஏழை பட்டவங்களுக்காக தொடர்ந்து உங்க பணிய செய்ங்க வினவு…

    • முற்றிலும் உண்மை ! மேலும் முஸ்லிம்களுக்குள் அடிதடி வரை போய் கொலை விழக்கூட காரணமாக இருந்தது இந்த மூளைச்சலவை செய்யப்பட்ட கும்பல். இவர்களை சொல்லி குற்றமில்லை. இவர்கள் அம்புதான் வில்லெறிபவன் தான் கடைந்தெடுத்த அயோக்கியன்.

  51. பெரியார் பிறந்த தழிழ்நாட்டில் பி.ஜே.பியை தேர்தலுக்கு தலைமை தாங்கும் சக்தியாக வளர்த்துவிட்டது இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லக் கூடிய ________ அமைப்பான பி.ஜேயின் TNTJ தான். பாக்கருக்கும் – பி.ஜே பிரிவுக்கும் காரணம் கொள்கையா? சொத்து பிரச்சணையா? என்று பொது மேடையில் விவாதம் நடத்து. H.ராஜாகிட்ட விவாதம் நடத்து, சு.சாமிகிட்ட நடத்து. எவன் கேட்க போறான். நீ பிழைப்புவாத கழிசடையினு எல்லாருக்கும் தெரியும். என்ன ம்யிருக்கு மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யும் தோழ்ர்ககிட்ட போறிங்க!!!! உங்களுக்கு பொழுது போகலையினா வாங்க பாக்கர் ஆம்னி பஸ்ல அந்த பொண்ணோட ஒரே சீட்ல எப்படி போயிருப்பாருனு விவாதீங்க

  52. உண்மையில் வினவு தளம் ஒரு பொது கழிவறை சுவராகவே மாறிவிட்டது … ஆள் அடையாளம் யாருக்கு தெறிய போகுதுன்னு கழிவறை சுவர்களில் கதை எழுதுறவனுங்கள போலவே அவதூறுகள அள்ளி வீசரிங்களேடா……….

    • சகோதரர் முத்தலிப் ஏன் ஒருமையில் பேசறிங்க இதுதான் நபி வழியா, வினாவை காகித புலின்னே வச்சுக்குவோம் நீங்க சொல்லுங்க அரசாங்கத்துக்கு எதிரா என்ன போராட்டம் நடத்துரிங்கன்னு ? எந்த ஒரு குற்றம் செய்யாம்மல் முஸ்லிம் இளைங்கர்கள் விசாரணை கைதியாய் பல வருடங்களாக கோவை சிறையில் வாடுரார்களே அவர்களை மீட்க என்ன விதமான நடவடிக்கை போராட்டம் தொடர்ந்து நடத்துரிங்க ? இஸ்லாமை காப்பாத்தும் முனைப்பு உள்ள உங்களிடம் இஸ்லாமிய மக்களை காப்பாத்துறது இல்லையே ஏன் ?
      வினவு இஸ்லாம் மீது அவதூறு பரப்புதுன்னு சொல்றிங்க ஆனால் முஸ்லிம் அப்பாவி மக்கள் மீது (உங்களை இல்லை) தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடும் போது அதற்கு எதிரா என்ன மாதிரியான உங்க நிலைப்பாடு என்னன்னு கொஞ்ச விளக்கமா சொல்லுங்க ?
      சென்னையில் நடந்த ரயில் குண்டு வெடிப்புக்கு விசாரணை நடக்கும் முன்னே அது முஸ்லிம் மக்கள்தான் செய்திருப்பாங்க மாதிரி சொன்னாரே நீங்க ஆதரிச்ச திருவாளர் சொக்கத்தங்கம் கலைஞர் அவர கண்டித்தீர்களா இல்லையா ?????

  53. ஒரு மதவெறி அமைப்பு இன்னொரு மதவெறி அமைப்போடு தானே வாதம் செய்ய வேண்டும்…அது தானே நியாயம்..அதை விட்டுட்டு கடவுளே இல்லைன்னு இருக்குறவங்கள வடிவேலுவை கிட்னி திருட கூப்பிடுற மாதிரி ‘வா வா’ ந்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கு..23ம் புலிகேசி மாதிரி மதச்சண்டை மைதானம் அமைத்து RSS-காரர்களையும் TNTJ காரர்களையும் பத்து பத்து பேரா (சிறுபான்மை பிரச்சினை வந்துரக்கூடாதுல்ல)மோதவிட்டு விவாதம் பண்ணியோ அல்லது குண்டுவைச்சோ சாவுங்கடான்னு விட்டு விடணும்…ரொம்ப பொறுமைய சோதிக்கிறானுங்க..வினவுக்கு ஒரு கேள்வி..ஜனநாயகம் நல்லது தான்..ஆனா இந்த மாதிரி கடைந்தெடுத்த மடையர்களிடம் ஜனநாயகமாக பேசி விளக்கி ஆவதென்ன? மார்க் ட்வைன் எப்பவோ சொல்லிட்டு போய்ட்டான்..”Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience”

    • அவங்க உழைக்கும் மக்கள்கிட்ட நிதி வாங்கி நடத்துறாங்க மத்தவங்கள போல ஊர் பணத்த கொல்லையடச்சு நடத்தல.

  54. அவுக எல்லா பிரச்சனைக்கும் குரானில் தீர்வுண்டுனு சொல்றது பொதுவாகத்தான். அதுக்காக EB பிரச்சனைக்கெல்லாம் குரானில் பதில் எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா?

    அப்புறம் “குரானைப் பற்றி தெரியாம ஏன் அதை பற்றி எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதற”னு கேக்காவ. அந்த pointம் சரின்னுதான் தோணுது.

  55. த த ஜ பற்றி சில குறிப்புகள்
    1. முஸ்லிம்களின் அறியாமையில் வளர்ந்தவர்கள்.
    2. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல் 1980 களில் முஸ்லிம் நாத்திகம் பேசித்திரிந்த இவர்கள் ஊர்களில் ஜமா அத்துக்களில் பதவி கிடைக்காத, அல்லது சர்வாதிகாரத்தால் பதவி இழந்து அனாதைகளாக இருந்தவர்களை வளைத்துப்போட்டுக்கொண்டு எல்லா முஸ்லிம் ஊர்களிலும் குழப்பததை விதைத்தவர்கள்.
    3. பிறந்து முப்பது வருஷம் ஆகியும் இன்னும் தெளிவான விளக்கங்களை குரானுக்கு சொல்லத் தெரியாத அறிவீனங்கள். (இதற்கு 1980 முதல் 2014 வரை வருஷத்துக்கு ஒரு சட்டமும் நிமிஷத்துக்கு ஒரு மாற்றமும் செய்யும் முட்டாள்தனங்களே உதாரணம்)
    4. குடந்தையில் திரளுவோம்னு சொன்னா, முஸ்லிம் தலைகளை கணக்குக்காட்டி அய்யாகிட்டே அடமானம் வைக்கவும், தஞ்சையில் திரளுவோம்னு சொன்னா அம்மாகிட்டே அடமானம் வச்சி பெட்டி வாங்கப்போரங்கண்ணு அர்த்தம்.
    5. எல்லாம் இருக்கட்டும். 24 மணி நேரமும் பேசுரார். 365 நாளும் பேசுரார். எப்படி சாப்புடறார்? ஒரு வேளை மண்ணத்தின்று மழைத்தண்ணீரை குடிக்கிறாரோ? (இவர் குணத்துக்கு மழையே வராதே?)எதுக்குக் கேக்குறேண்ணா, குர் ஆன் ஹதீஸை பேசிப்பேசி விக்கிறது இவர் தத்துவத்திலே கூடாதைய்யா?
    6. அல்வா வாசு சொன்ன மாதிரி, குற்றங்களை அவங்க வாயாலயே சொல்ல வச்சி சி பி ஐல குடுத்து காசு வாங்குற யாவாரம் ஓடுற மாதிரி இந்த அல்வா வாசுகளுக்கு விவாத் சி டி யாவாரம் ஓடுது. அதுக்காக வாயப்புடுங்குற வித்தைதான் மேலே உள்ள எல்லாமே.

  56. இசுலாமிய இயக்கத்தின் பொறியமைவுகளை பாட்டாளிகளிடமும் படித்தவர்களிடமும் தெரிந்து கொள்ளலாம். இசுலாமிக் ரிசர்ச் ஸ்டடி சென்டர் சமூக அரசியல் பொருளாதார தளங்களில் இசுலாம் போன்ற சீர்திருத்த இயக்கங்களை வெட்டியும் ஒட்டியும் விவாதம் நடத்தியிருக்கிறார்கள்.

    சான்றாக டாக்டர் அஸ்கர் அலி இஞ்சினியரின் இஸ்லாம் மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (படிப்பகத்தில் தரவிறக்கலாம்) ஏழாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை அரசியல் தளங்களில் இசுலாம் அடைந்த மாற்றங்களை ஆதாரப்பூர்வமாக ஆய்வு முறையில் சமர்பித்திருக்கிறது.

    பதூயின்களுக்கு நாகரிகத்தை பண்பாட்டை வழங்கிய இசுலாம் எவ்வாறு பாசிஸ்டுகளுக்கு பகடையாக போயிருக்கிறது என்பது பற்றியும் விவாதிக்கிறது. சமூக அவலங்களைத் தடுப்பதற்கு வட்டியை (ரூபாயா) தடை செய்தால் போதாது, லாபத்தை தடை செய்ய வேண்டும் என்ற பல பருண்மையான ஆய்வுகளையும் முன்வைக்கிறது.

    குரானையும் ஹதீசையும் ஆதாரமாக கொள்கிற அஸ்கர் அலி, முகம்மதுவின் காலத்திலேயே வட்டி எவ்வாறு நூதனமாக வசூலிக்கப்பட்டது என்பதையும் விளக்குகிறார். நான்கு இமாம்களின் அரசியல் சார்புகளையும் சொத்துப் பிரச்சனைகளையும் விளக்குவதற்கு இசுலாமின் மூல நூல்களையே ஆதாரமாகக் கொள்கிறார்.

    இப்படி இசுலாமில் விவாதிக்க எவ்வளவோ விசயங்கள் இருக்கும் பொழுது, தொழும் போது குசு போடலாமா கூடாதா என்று டிஎன்டிஜே மற்றும் சுன்னத் ஜமாத்கள் நேரடி விவாதம் நடத்துகின்றன.
    கழுதையை புணரலாமா கூடாதா? ஹஜ் போது சுய இன்பம் செய்யலாமா கூடாதா? குரானில் எழுத்துப் பிழை உண்டா? இல்லையா? என்று அதிமுக்கியமான விவதாங்களை நடத்துகிற டிஎன்டிஜே இசுலாமை பற்றி பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா?

    இந்த விவதாங்கள் நடந்த காலகட்டம் இந்திய சூழ்நிலையில் ஆர் எஸ் எஸ் காலிகள் ஊடுறுவி வேலை செய்த கால கட்டம். புரட்சிகர அமைப்புகள் தமீம் அன்சாரிக்காக அப்சல் குருவிற்காக போராடிய பொழுது குசு விடுவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தெரிந்த இசுலாம் இவ்வளவுதான்!

    முகம்மது, செல்வந்தர்களிடம் இருந்து பதூயிங்களை விடுவிக்க எளிய மக்களை மார்க்கத்தில் இணைத்தார். ஆனால் இவர்கள் மாறி மாறி திமுகவிலும் அதிமுகவிலும் மையத்து செய்கிறார்கள்!
    இவர்கள் இசுலாமை பற்றி விவாதிப்பதற்கு தகுதியானவர்களா?

    இசுலாம் பற்றி விவாதிக்க விரும்புவர்கள் முதலில் களத்திற்கு வந்து போராட வேண்டும். புரட்சிகர அமைப்புகள் உலகவங்கியை எதிர்த்து போராடுகிற பொழுது வட்டி தவறு என்றும் மைக்ரோ பைனான்ஸ் தவறு என்றும் அங்கு வந்து போராடி விவாதிக்க வேண்டும்.

    இதைவிடுத்து ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் மூட்டை தூக்கிப் பிழைக்கிற பாயிடம் கற்றுக்கொள்ள முடியும்.

    குறைத்து நிறுத்துப் போட்டால் அல்லா அதற்கு கூலி கொடுப்பான் என்று சொல்கிற கொட்டாம்பட்டியில் பழம் விற்கும் பாய் எங்கே? ஒது முறிந்தால் என்ன செய்யவேண்டும் என்று விவாதிக்கிற பிஜே எங்கே?

    இசுலாமை வெள்ளிடை மலையாக தங்கள் ஈமானிலே ஏற்றிருக்கிற ஏழைகளிடத்தில் கற்றுகொள்ளலாமே தவிர டிஎன்டிஜே இதற்கு தகுதியானவர்கள் அல்ல.

    ஆக தோழர்களே இசுலாம் பற்றி விவாதிக்க போராட்டக் களத்திற்கு வாருங்கள். அரசின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிற ஒரு இசுலாமியர் இதனால் மேலும் ஈமானை இறுகப்பற்றுவாரே ஒழிய டிஎண்டிஜேவைப் போன்று ஈனர்களாக இருக்க மாட்டார்கள்.

    இதைச் சொல்லுகிற கம்யுனிஸ்ட் காபிர் தான்! ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயம் இசுலாம் எங்களிடத்தில் மற்றொன்றையும் கோருகிறது. மறுமை நாளில் இசுலாமியன் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அத்தாட்சியாக இரு என்பது!

    அத்தாட்சியாக காபீர்களான நாங்கள் இருப்போம். ஆனால் வர்க்கப் போராட்டத்தில் இணையாத இசுலாமியனை அல்லா ஏற்றுக்கொள்வானா?

    • ungalidathil ooril ulla sila Ungal thanthai ivarthaan illai Ungal thanthai ivarthaan enru maatri maatri sollappattaal neengal Enna seyveergal aamaam amam neengal solgira ellorum en thanthai thaan enru solveergala””” allathu ungal thaayidam ketpeergala”””
      Athu pola
      islaathai patri theriya vendumaanaal athan thaayaag ulla quranai aayvu seyyungal aatharapoorvamaana nabi moziyai paarungal…. Athai vittu vittu islamiya sattatthai patri ivargal ithai sonnaargal avargal athai sonnaargal enru ezuthiyirutheergal

      Islatthai patri avan enna solraan ivan Enna solraannu paarthu pesaathinga Ungalukku irukkura arivai konjam payanpadutthi sinthithu paarungal

      kazuthaiyai pola putthagangalai mentru thinnuttu inga vanthu thuppaathinga………..

    • தென்றல் அவர்கள் மேலே குறிப்பிட்டதை நான் ஏற்கிறேன் அதேசமயம் காபிர் என்ற வார்த்தை நெருடலாக உள்ளது மனிதனுக்குள் ஏற்ற தாழ்வு மற்றும் பிரிவினை உண்டாவதே இதுபோன்ற காபிர் என்ற வார்த்தைகள்தான். இப்படியே காபிர் என்று சொல்லி புரட்சிகர அமைப்பை வேறுபடுத்தி பார்க்கவேண்டாம்.
      காபிர் என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் மக்களிடம் உண்மை கம்யூனிஸ்ட் விரோத போக்கை கடைபிடிக்கவில்லையே மாறாக உண்மையான முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம் அப்பாவி மக்களை வேறுபடுத்தி பார்க்குறதுதான் இதுபோன்ற அமைப்புகள்.
      கொத்து கொத்தாக 2000 முஸ்லிம் படுகொலை செய்துவிட்டு மீதம் இருக்கும் முஸ்லிம்களை சொந்த நாட்டிலேயே அகதிகள் போன்று வாழும் அவலம் வேறு இங்கே உள்ளது.வெறும் நாலு பேரை முஸ்லிமாக மாறிவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடுமா?

  57. வினவுடன் வாசகர் சந்திப்பு என்பது கருத்துகளை மட்டுமல்ல செயல்முறைகளையும் பரிமாறிக் கொள்ளவவும் ,வினவு தம்முடைய கொள்கை மற்றும் கோட்பாடுகள் என்று இதுகாறும் கூறி மற்றும் செயல்படுத்‌தி வந்ததை விளக்குவும் தானே ஒழிய மத அடிப்ப்படைவாதிகளுடன் மல்லுக் கட்டுவதற்க்கானதன்று. இது ஒரு நட்புமுறையில் அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. கட்டுரையை படித்த்து பின் அந்த காணொளியை பார்த்த பின்பு, அந்த அடிப்படைவாதிகளிடம் ஒரு சிறிய அளவு ஜனநாயகப் பண்புக் கூட இல்லை என்பது கண்கூடு. தரங்கெட்டத்தனத்த்தில் பேசுவது , காணொளியை வெட்டி,ஒட்டி திருட்டுத்தனம் செய்வது இது எல்லாம் கோழைகள் மற்றும் நேர்மையற்றவர்கள் செய்யும் செயல்களே.

    உலகம் முழுதும் கோடிக்கணக்கான இசுலாமியர்கள் விதவிதமான முறையில் வழிப்பாடு செய்வதும், கலாச்சாரத்தை ஒழுகுவதும் , குர் ராணை ஓதுவதும் பின்பற்றி வருகிறார்கள். இவர்கள் யார் இதை பின்பற்று அதை பின்பற்று, நீ யார் அதை சொல்வதற்க்கு?. இவர்களுக்கும் இந்து மத வெறியர்களுக்கும் என்ன வேறுபாடு எண்ணிக்கையைத் தவிர்த்து?

    கொஞ்சம் கூட ஜனநாய பண்பாடு இல்லாத இவர்களிடம் எப்படி விவாதிப்பது?

    நம்மைப் பொருத்த வரை இந்து மத வெறியும் இசுலாமிய மதவெறியும் ஒன்று தான் . என்ன அவங்க எண்ணிக்கை பெரிது அதனால கொஞ்சம் அதிகமா கவனிக்க வேண்டி இருக்கு.

    கடைசியாக ஒருக் கேள்வி?

    மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குர்ரானில் என்ன தீர்வு இருக்கு ?

    புது மைய அரசும் உருவாக போகுது. மின்க் கட்டணம்,எரிவாயு விலை உயர்வு, இயற்க்கை வளங்கள் சூறையாடல் போன்ற பிரச்சினைகளுக்கு இசுலாத்தில் என்ன தீர்வு?

    படிக்காத பாமர மக்களிடம் கூட அறிவியலையும், பிரச்சினைக்ளீயும் சொல்லி புரிய வைக்க முடியும் ஆனால் உம்மைப் போன்ற மத வெறியர்களுக்கு புரிய வைக்க முடியாது.

    நன்றி

    • அன்புள்ள சிவப்பு !

      \\மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குர்ரானில் என்ன தீர்வு இருக்கு ?\\

      மிகவும் சர்வ சாதாரணமாக இந்த கேள்வியை கேட்டு விட்டீர்கள்.
      தாங்கள் குர் ஆனின் தமிழாக்கத்தை படித்து விட்டால் இப்படி ஒரு கேள்வி கேட்க மாட்டீர்கள். தாங்கள் கற்பனைக்கும் எட்டாத விஷயங்களுக்கெல்லாம் தீர்வு குர் ஆனில் இருக்கிறது. விருப்பமிருந்தால் படித்து பாருங்கள்.
      ஒரு தாழ்மையான வேண்டுகோள் : முஸ்லிம்களை வைத்து இஸ்லாமை எடை போடாதீர்கள்.
      கலீபா உமர் என்றொரு ஆட்சியாளர் அரபு நாட்டில் இருந்தார் முடிந்தால் அவரது வரலாற்றை படித்து பாருங்கள். (மகாத்மா காந்தியாலும் பாராட்டப்பட்டவர்)

      ஒரு சிறிய வார்த்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.
      இஸ்லாமில் சிறிய அடிப்படை விஷயம் “பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க வயிறார உண்பவன் பாவி”
      சிறிய விஷயம் தான் ஆனால் இதில் அத்தனை சகோதரத்துவமும் ஒளிந்து இருக்கிறது.

      மேற்கொண்டு விபரம் வேண்டுமென்றால் தங்களுக்கு தர காத்திருக்கிறேன்.

  58. இதோ மோடியே வந்துவிட்டார் இனி இவர்கள் ஜனநாயகத்தை அவரே கவனிப்பார். இனி சிறுபான்மை மக்களுக்காக போராடாமல் கவட்டைகுள் தலையை நுழைத்து பதுங்கும் இவர்களை தெளிவாக பார்க்க முடியும்.

    • நண்பர் குடை அப்படி பேச வேண்டம் அது தவறு, இந்த முட்டாள்கள் செய்த தவறுக்கு முஸ்லீம் சமுதாயம் என்ன செய்யும். முஸ்லீம் மக்களை ஜனநாயகப்பூர்வமான, முற்போக்கான, புரட்சிகரமான அமைப்புகளால் தான் பாதுகாக்க முடியும். மோடி அல்ல எந்த கொம்பன் வந்தாலும் அவனையும் இது போன்ற சமுதாய அக்கறை உள்ள அமைப்புகள் எதிர்த்து நின்று முறியடிப்பார்கள். இந்த கோழைகளால் நட்பு சக்திகளை எதிரிகளாக்கும் வேலையை தான் செய்ய முடியுமே தவிர எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாது. எதிரிகளை எதிர்ப்பதில்லை என்பதுடன் அவர்களை ஆதரிக்கிறார்கள். முஸ்லீம் சமுதாயத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு ஜெயலலைதாவை ஆதரிக்கும் த.த.ஜ போன்ற துரோகிகளையும் அவர்களுக்கு ஆதரவாக பேசும் நபர்களையும் சமுதாயம் மண்ணிக்காது, தண்டிக்கும்.

      • //முஸ்லீம் சமுதாயத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு ஜெயலலைதாவை ஆதரிக்கும் த.த.ஜ போன்ற துரோகிகளையும் அவர்களுக்கு ஆதரவாக பேசும் நபர்களையும் சமுதாயம் மண்ணிக்காது, தண்டிக்கும்.//
        ஜெவை ஆதரித்தால் சமுதாயம் மன்னிக்காது சரி, மு.க வை ஆதரித்தால் …?
        ஜெ வோடு ஒப்பிடுகையில் மு.க முஸ்லிம்களின் துரோகி
        உ.ம் சென்னை குண்டுவெடிப்பைப்பற்றி மு.க. கொடுத்த பேட்டியை காணவில்லையா…?
        கோயம்புத்தூரில்நடந்த கலவரங்களில் எடுத்தநடவடிக்கை மறந்து போனதா?
        இராமனாதபுரதில் நடந்த கலவரங்களில் எடுத்தநடவடிக்கை மறந்து போனதா?
        முஸ்லீம் தீவிரவாதிகள் என்ற சொல்லின் தந்தையே மு,க என்ப்து மறந்துபோனதா?
        பஜகவுடன் 5 ஆண்டுகள் ஆட்ச்சியில் இருந்தது மறந்து போனதா?
        மோடி என்நன்பர் சிறந்த நிர்வாகி என்ற பொழுது அவர் யார் பாக்கம் என்பதும் தெரியாவில்லையா?
        மு.க & ஜெய இரண்டுமே முஸ்லீம்கள் சமதூரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்களே

        • உங்களின் கருத்தில் உள்ள உண்மையின் ஆழம் மற்றவர்களுக்கு புரிந்தால் சரி.

  59. Islam is the religion of desert Tribes,they didn’t have the ability to understand any sophistication or knowledge.

    So some people took advantage of prophet mohammad’s illiteracy and developed a political system called islam.

    It is a normal religion with defined rules borrowing concepts from the older religions like Hinduism/Judaism.

    Today it is a mere political ideology with zero spiritual basis and the poison called wahhabism is a cancer that eats islam from inside stopping people from even recognizing the existence of their basic senses.

    • ஹரிகுமார் //Islam is the religion of desert Tribes,they didn’t have the ability to understand any sophistication or knowledge.///
      உனக்கு ஒரு மனிதன் எழுந்து வரவேற்பான் ஆனால் ,அவனுக்கு நீ எழுந்து வரவேற்பு கொடு .அவன் பணக்காரன் ,உயர்ந்தவன் அதிகாரி அரசன் என்ற காரனத்திர்க்காக ஒருவனுக்கு எழுது மரியாதை கொடுக்காதே என்று கூறும் இஸ்லாமை விட மனித நாகரிகத்தை எங்கு காண முடியும்?
      எதிரி தனது இல்லத்திற்கு வந்தவுடன் இன்முகம் காட்டி வரவேற்று அனுப்பிய முஹம்மது நபிசல் அவர்களின் வழி காட்டலை விட சிறந்த பண்பை எங்கு காண முடியும்?

      • S.Ibrahim,

        காபிர்கள் (முகமதியத்தை ஏற்காதவர்கள்) சிறுநீரைப்போல தீட்டானவர்கள் என்பதுதான் முகமதின் புன்மொழி.

        It is not that you don’t know about Dhimmi Pact of Umar, the person who is spoken highly of in one of your comments here. Others should learn about it.

      • S.Ibrahim,

        முகமதியத்தின் ஆட்சியில் வாழும் காபிர்கள் (முகமதியத்தை ஏற்காதவர்கள்) தங்கள் செலுத்த வேண்டிய ஜிஸ்யா (அதாவது முகமதியத்தை ஏற்காமல் இருப்பதற்காக கொல்லாமல் விடுவதற்காக செலுத்த வேண்டிய) வரியை செலுத்தும் போது மிகவும் தாழ்மையுடன் செலுத்த வேண்டும் அதாவது மண்டியிட்டு வாயைத்திறக்க வேண்டும். முகமதிய கலெக்டர் திறந்த வாயில் போடும் மண்ணை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் முகமதிய நாகரீகம்.

          • Hi Zahir,

            ஜிஸ்யாவை காபிர்கள் தாழ்மையுடன் செலுத்த வேண்டும் என்பதை [குரானில் சொல்லப்பட்டிருப்பதால்] நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.

            வாயில் மண்ணைப் போடுவது என்ற சொல்வழக்கைக் நீங்கள் கேள்விபட்டதில்லையா?

            ஜிஸ்யாவை எப்படி செலுத்தினால் தாழ்மையுடன் செலுத்தியதாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்?

            I think Babasaheb Ambedkar has mentionned this in one of his works. I read it long back. I am searching for it now. When i find it, i will give you the reference.

      • நீங்கள் கூறியவை எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை.

        ஒரு வேளை அரேபியா மிகவும் பின் தங்கிய நாடக இருக்கலாம்,அவர்களுக்கு இவை எல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்கலாம்,விரல்களை வைத்து கணக்கு போட்டு கொண்டிருந்த உலகத்ிர்க்கெ எண்களை கொடுத்த எங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

  60. யாருப்பா நீங்க? எங்கேருந்துதான் வர்றீங்க? இஸ்லாத்தை பத்தி எதுவும் சொன்ன போதும் உடனே உங்களுக்கு இஸ்லாத்தை பத்தி என்ன தெரியும்? என்றும் இதுதான் உன்மயான மார்க்கம் என்றும் பிதற்ற வேண்டியது!

    ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன் உங்களுக்கெல்லாம் சுயமாக சிந்திக்கிற புத்தி கிடயாதா? அப்படி இருந்தால் முதலில் விவாதம் பண்ணி கிழிக்க வேண்டிய விஷயம்:

    உங்களுடய pj அண்ணன் பண்ணிய மொழிபெயர்ப்பில் 107 ஆம் அடிமைப்பெண்கள் என்ற விளக்கத்தில் அது அந்த காலம் என்றும், திருமண பந்தம் இல்லாமல் (அடிமை)பெண்களுடன் உடலுறவு கொள்ளலாம் என்று விளக்கம் தந்துள்ளாரே! அது சரியா? என்று நம்ம இஸ்லாமிய பெண்களிடம்,இன்னும் சொல்லப்போனால் எல்லா தரப்பு பெண்களுடன்

    இத விவரமாக சொல்லி கருத்து கேட்டு முடிவை பகிரங்கமாக அறிவியுங்கள்! அப்புறம் தெரியட்டும் உங்க குரானை பத்தி.

  61. மதங்கள் அனைத்தும் ஒன்றுதான் – அவை பரப்பும் மூடநம்பிக்கைகளில். எம்மதமும் விதிவிலக்கல்ல. மதத்தை தங்கள் வாழ்வாதாரமாக வைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்தான் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பலவிதமான சடங்குகளை இங்கு உருவாக்கி அதில் தாங்களும் தங்கள் சந்ததியினரும் நிரந்தரமாக குளிர் காய மதப் போர்வையைப் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் ஆளுமையைத் தொடர்ந்து காத்துக் கொள்ளும் பொருட்டு தம்மைச் சேர்ந்தவர்களையே பலியும் கொடுக்கிறார்கள். மேற் சொன்னவற்றில் எந்த மதத்தையும் வைத்துப் பார்க்க முடியும்.

    வெகுஜனப் பார்வையைத் தாண்டி இஸ்லாத்தையும் இன்ன பிற மதக்கொள்கைகளையும் பகுத்து ஆராய்ந்தவன் என்ற முறையில், வேதம் புதிது படத்தில் அய்யர் பையன் சொல்வது போல் நான் கரையேறிவிட்டேன். இன்னமும் பலர் பல மதங்களுக்குள், இந்த அடிப்படை புரிதல் இருந்தும், தாம் வரித்துக் கொண்ட வேஷத்திற்காக கூத்துநடத்திக்கொண்டிருக்கிறார்கள். மோடியாகட்டும், PJ ஆகட்டும், வினய் கட்டியாராகட்டும்… எல்லாரும் இதற்குள் அடக்கம்.

    வினைக்கு எதிர்வினை இருப்பது போலத்தான் வினவின் பணி. பணி தொடர வாழ்த்துக்கள். மூடநம்பிக்கைகள் ளம் மதத்திலிருந்தாலும் தொடர்ந்து அந்த இருளைப் போக்கப் போராடட்டும் வினவு.

  62. உங்க பக்கத்தில் உள்ள காமெடி பதிவு நல்லா இருந்துச்சு,அதுல காமடி பீசா வினவு எழுத்தாளர்கள் தான் தெரியுது. இல்ல நாங்க காமடி பீசு இல்லன அவங்களோட விவாதம் செய்து அந்த வீடியோவ போடுங்க.
    இல்லயின்ன, நான் என்ன சொல்ல அதான் TNTJ காரங்களே சொல்லிட்டாங்களே………

  63. // இதை நாங்கள் கேட்பதற்கு காரணம் இஸ்லாத்தின் அடிப்படைகள் தான் தீவிரவாதத்திற்கு துணை போகிறது என்று நீங்கள் உங்கள் சில கட்டுரைகளில் எழுதினீர்கள். அந்த அடிப்படை என்று நீங்கள் எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறோம். //
    தினந்தோறும் ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் வெடிக்கும் குண்டுகளும், கொலைகளும், பெண்களின் மீதான வன்முறைகளும் இசுலாமிய மக்கள் மீதே இசுலாமிய மதவெறியர்களால் நடத்தப்டுவதற்கு இசுலாமிய அடிப்படையான குரானும் ஹதீதும் காரணமாக இல்லையா? இந்தியாவிலும் வெடித்த பலகுண்டுகளுக்கும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் குர்ஆன் தானே அடிப்படை. அவ்வளவு ஏன். நீ இப்போ மதவெறியிடன் பேசும் பேச்சுக்கூட கூர்ஆன் தானே காரணம். முழுப்பூசனிக்காயையும் சோற்றிலே அமுக்கி மறைக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்கள் இசுலாமியர்கள்தான்.

    // இஸ்லாமிய பொருளாதார கொள்கைகள் என்று ஒன்று இருப்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம். //
    அட அப்படி போடு….. 100ரூபாயை புடுங்கிக்கிட்டு 2.50 ரூபாயை கொடுத்து பணக்காரனாக ஆக்கும் ஜகாத் தானே உங்க பீத்தல் பொருளாதாரம். முதலாளித்துவ பொருளாதார நாய்கள்கூட இதை கேட்டா ……….. சிரிக்கும்.
    ஒரு எடுத்துக்காட்டுக்கு, ஒரு கடையில ஒரு முதலாளியும் இரண்டு வேலைகாரர்களும் இருக்காங்கன்னு வைச்சுக்குவோம். மாதம் ஒன்றுக்கு 300 ரூபாய் இலாபம் கிடைக்குதுன்னு வச்சுக்க. முதலாளி இரண்டு வேலைக்காரர்களுக்கு சம்பளமா 10 ரூபாய் வீதம் கொடுத்கிறாரு. தானும் கல்லாவுல உங்காந்து கடுமையா உழைச்சேன்னு தனக்கும் 10 ரூபாய் எடுத்துக்கிட்டாரு. மிச்சம் 270 ரூபாயை தானே எடுத்துகிட்டு இந்தாங்கடா ஜகாத்துன்னு ஆளுக்கு 3.35 ரூபாயை கொடுத்துட்டு நீங்கலெல்லாம் இப்போ என்னவிட பணக்காரர்களாகிட்டீங்ப்பா. நான்தேன் இன்னும் ஏழையா இருக்கிறேன்னு சொன்னா ……… சிப்பாங்க.
    ஹலோ இரு… இரு.. முதல்போட்டவன் இலாபம் எடுக்கத்தானே செய்வான்னு சொல்லுறியா? எல்லா வியாபாரியும் தான் போட்ட முதலீடவிட வங்கில கடனாக வாங்கி போட்டுள்ள முதலீடு அதிகம். அதுக்கு 2 சதவீதம்தான் வட்டியா கொடுக்கிறாங்க. அதுபோல முதல்போட்ட முதலாளியும் 270 ரூபாய்க்கு 2 சதவீதம் 5.40 ரூபாய்ய போனா போகுதுன்னு எடுத்துக்கிடட்டும். இப்போ கணக்கை போட்டுபாரு. இங்கே நான் 1 பணக்காரனுக்கு 2 ஏழைன்னு கணக்கிலதான் சொல்லி இருக்கேன். ஆனால் உலகத்துல 10 பணக்காரனுக்கு 90 ஏழைங்க இருக்காங்கலாம். உன் ஜகாத்து எப்படி ஏழைங்கல பணக்காரனாக்குதுன்னு புரிஞ்சுக்க. புரியலன்னா பொருளாதரம் படித்த இசுலாமியர்கள்ட போய் சூத்திரங்களைபோட்டு காட்டச்சொல்லு.
    //எந்த நிலையிலும் நாங்கள் செய்வது தான் 1௦௦% சரி, எங்களை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்து திணிப்பை என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்தது இல்லை.//
    ஆமாம்பா, இப்பொகூட உங்க அவுலியா பீத்தல் விஞ்ஞானி பிஜே ஊருக்கு பக்கதுல உள்ள ஊருல கந்தூரி கொண்டாடுனதை கலாட்டா செய்து போலிஸ் நிலையத்துக்கு இரண்டு கோஷ்டிகளும் நடக்கிறாங்களா. அதனால நீ, அல்லாமேல சத்தியாமா நாங்க கருத்துத் திணிப்பை செய்து கலாட்டா பன்னமாட்டோம்னு சொல்லனும். மொட்டையா “கருத்து திணிப்பை என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்தது இல்லை.” என்று சொல்லக்கூடாது.. அல்லா கோவிச்சுக்குவான்
    //இதில் திணற ஒன்றும் இல்லை. பெரியாரே திராவிட கட்சியை விட்டு விட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார் என்பதற்காக அவர் ஆர்.ஸ்.ஸ் அமைப்பில் பங்குகாரராக ஆகி விடப்போவதில்லை//
    பெரியாரைப்பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கு. அது கிடக்க்டும். காங்கிரஸ் ஆர்எஸ்எஸ்ஸும் இல்ல. பெரியாரு கடவுளும் இல்ல. ஆனால் அனைத்து அதிகாரமும் பெற்ற அல்லா வழியில இருக்கிற நீ அல்லா சொல்லறதை கேட்கனும்ல. அல்லா என்ன சொல்றாரு?
    குர்ஆன் வசனம் 4:32 — உங்களில் சிலரை சிலரைவிட எதைக்கொண்டு அல்லா மேன்மையாக்கி வைத்த்தானோ அதைத்தாமும் பெற வேண்டும் என்று ஆசை வைக்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. எனவே வேறு எவரிடமும் எதனையும் கேளாமல் அல்லாவிடமே அவனுடைய அருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லா எல்லா பொருட்களையும் முற்றிலும் அறிந்தவனாக இருக்கின்றான்.
    அலிப் பேயும் தெரியாது. அனா ஆவன்னாவும் தெரியாது. ஊருக்கு ஊரு செயலாளரு, பொருளாலருன்னு ஒரு கூட்டம் சுத்தமா மண்டையை கழுவி அவுலியாகிட்ட அடகு வைச்சுட்டு எதைக்கேட்டாலும் அவுலியாகிட்ட வந்து கேளுன்னு சப்பாணியாட்டம் தேய்ந்த ரிக்கார்டா உளரிகிட்டு திரியிராய்ங்க. ஒருவேளை இந்த பிஜே அவுலியா கூட்டத்துக்கு அம்மாதான் அல்லாவோ?
    புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் பிரச்சனை செய்தது போல இனி வரும் நாட்களில், அப்பாவி பெண்கள் பர்தா போடாமல் போனால் மிரட்டி தங்கள் வீரத்தை காட்ட வாய்ப்பு இருக்கிறது. அல்லது சந்தனக்கூடு நிகழ்விற்கு போகும் ஏழைகளுக்கு பத்வா போட்டு எச்சரிக்கை விடுத்தும் தமது ‘புனித’த்தை காட்டுவார்கள்.
    ஊகங்களை ஒதுக்கி வைக்கவும்…ஒரு நிகழ்வு இத்தனை வருடங்களில் நீங்கள் காட்ட இயலுமா???
    எத்துனையோ நிகழ்வுகளைக் காட்டலாம். வெளியில போற ஒவ்வொரு பொண்ணுங்க பின்னாடியும் போய் அல்லா போலீஸ் வேலை பார்பதையும் மிரட்டி பணியவைப்பதையும் நிறைய எடுத்துக்காட்டுகளுடன் சொல்லலாம். ஆனால் அவுங்க பயந்து ஒதுங்குவதால் இங்கு சொல்ல முடியல. கீழக்கரையில அப்படி ஒரு பெண்ணை கட்டிவைச்சு அடிச்சு போலீசுல மாட்டிக்கிட்ட ஒரு உதாரணம் போதும் உன் அல்லா போலீஸ் வேலைக்கு.
    ///யாருக்கும் பயப்பட வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இல்லை. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் எங்கள் வாக்குகள் தான் இருக்கிறது. உயிருக்கு பயந்தவர்கள் நாங்கள் அல்ல….///
    இப்படியே மனக்குதிரையை ஓட்டிக்கிடே இருங்கப்பா. உங்கள் வாக்குகளுக்கு என்ன நிலைமை என்று இந்த தேர்தல்ல பார்தாச்சில்ல. நாய்க்கு கிடைக்கு மரியாதைகூட இனி திராவிட கட்சிகள் உங்களுக்கு கொடுக்காது fff..
    sathik
    நீங்கள் வைக்கும் எல்லா வாதம் பாற்றியும் போது விவாதித்து மக்களிடம் கொண்டு செல்ல முழுமையாக் தய்ராகுவோம் வாருங்கள். கமுநிசம் தோற்று உள்ளதா இஸ்லாம் தோற்றதா நிருபிக்கலாம்.
    1400 ஆண்டுகாளாக தொண்டை கிழிய கத்திக்கிட்டு இருக்கீங்களே. எங்கதான்பா இசுலமிய ஆட்சி நடக்குதுது? கொஞ்ச சொல்லு சாதிக்.

  64. sago haasif Intha thalatthil pathividum vinavu aatharavaagal anaivarume ganniyam thavariya vaathigalai thaan payanpadutthugiraargal
    Islam suyamariyathaiyodu vaazasolgirathu … ”””Aditthaal thiruppi adikka vum anumathikkirathu… Islam

    Intha vinavu thalam naan etrirukkum islaamiya kolgaiyai varambu meeriya vaarthaigalai payanpadutthiyullathu nee (vinavu ) solvathil unakku unmaiyullathaaga unakku theriyumaanaal Neradiyaaga vanthu engalidatthil un satthiyatthai sol appothu nee islathai patri nee kooriya avathoorugalukku sariyana bathiladi koduppom ……

    tntj:
    kovai sirai kaithigalukkaaga muthan muthalil poraattatthai aarambitthathe tntj varalaatrai thedi paarungal….
    arasaangatthaal intha samuthaayam vanjikkappattullathai intha samuthaayatthirkku pala pirachaarangal vaayilaaga vizippunarvai erpadutthi pala kattangalil porattangalai nadatthiyullathu…… Varthatsanai ponra samooga theemaigalukkethiraagavum vizippunarvai erpadutthiyullathu…

    Intha naattil ulla tharpothaiya arasiyalamaippai kondu ethu nanmai kidaikkakuudiya saatthiyakkoorugal ullatho athai aatciyaalargalidatthilirunthu samuthaayathirkku Enna nanmaiyai petru tharamudiyum enbathai kondu Arasiyal mudivugal eduppome thavira samuthaayatthai kaatti seettugalaiyo notttugalaiyo oru pothum petrathumillai perapovathumillai athuthaan tntj………………..

    • சகோதரர் முத்தலிப் இப்ப இருக்குற அரசியல் அமைப்பு சரி, ஆனால் அரசியல்வாதிகள் யாவரும் கொள்கையில் முரண்பட்டு சந்தர்பவாத கூட்டணியே விரும்புகிறார்கள் இவர்களிடம் எந்தமாதிரியான நன்மைகளை நீங்கள் எதிர்பார்கிறிர்கள், 2002 குஜராத் கலவரத்தின் போது மத்திய ஆட்சியில் பங்கு ஆற்றிய திமுகஉடன் மீண்டும் 2016 கடைசி நேரத்தில் ஆதிமுகவிடமிருத்து வாபஸ் வாங்கி ஆதரவு கொடுக்குறிங்க இப்படியே நம்ம வீண்போன ஓட்ட பயன்படுத்தி என்ன மாதிரியான பயன் அடைந்தோம். அப்ப நீங்க காலத்துக்கும் திமுக அல்லது ஆதிமுகவுக்கு தேர்தலுக்கு தேர்தல் மாறி மாறி ஆதரவு கொடுத்து நாம தாழ்ந்துகொண்ட இருக்கவேண்டுமா ? நீங்க சொல்றது நாட்டில் பஞ்சம் ஏற்பட காரணமாக இருந்தவர்களிடத்தில் ஒரு வேட்டி,சேலை கிடைச்சா போதும்னு சொல்றிங்களா, மக்கள் வீதியில் இறங்கி போராடும்வரை நமக்கு எந்த அரசியல் தீர்வும் ஏற்படாது.

      • //”””Aditthaal thiruppi adikka vum anumathikkirathu… Islam //
        விஸ்வரூபம் படம் மற்றும் innocence of இஸ்லாம் போன்ற சினிமாக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி அரசை அடிபணியவைக்கும் நீங்கள் இஸ்லாமிய மக்களை கூறுபோட நினைக்கும் பாசிச சக்திகளிடம் எதிர்த்து போராடாமல் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து பயன் என்ன. இல்லாமை இருந்தால்தான் அவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். மதசார்புனு சொல்லியே உங்க ஓட்ட வாங்கி மத கலவரத்த தூண்டியவங்களுக்கு என்ன தண்டனை வாங்கிகொடுதாங்க. தயவு செய்து சிந்திச்சு செயல்படுங்க TNTJ ஒன்னும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட அமைப்பு இல்லையே ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து கொண்டு கல் எறியவேண்டாம் பொதுவெளியில் இருந்து அணைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றுதிரட்டி ஒரு களம் அமைத்தால்தான் எல்லாம் சாத்தியப்படும்

  65. எதுகெடுத்தாலும் நேரடி விவாதம் நேரடி விவாதம்… ஏன் எழுத்து மூலமா விவாதம் பண்ணத்தேரியாதா ?
    (அதான் பார்த்தோமே பல குரானை கரைத்து குடித்த புலிகள் – வினவு, செங்கொடி, பகடு, இறையில்லா இஸ்லாம், அலிசினா, பறையோசை, போன்ற கட்டுரைகளின் மறுமொழிகளில் நியாயமான மறுப்பு தெரிவிக்க முடியாமல் ஓடியதை – உதா. S இப்ராஹீம் போன்றோர்).
    நேரடி விவாதத்துல இவங்க ஒன்னு சொல்வாங்க அதை தேடி கண்டு புடிக்கணும் – அதுக்கு பலபேரு பலவகையில் மொழி பெயர்ப்பு / அர்த்தம் சொல்லியிருப்பாங்க… அத இவங்க ஏத்துக்கமாட்டாங்க. மறுபடியும் வீடியோ வெட்டி ஒட்டி… வெற்றி வெற்றி அப்படின்னு புலிகேசி டயலாக் பேசுவாங்க.. இவங்க சொல்றத பாத்தா முஹம்மதுக்கு அப்புறம் pj (அவரை பின்பற்றுபவர்கள்) மட்டுமே முஸ்லீம் மாதிரியும்… வேறு யாரும் கிடையாது மாதிரியும் அர்த்தமாகுதுள்ள

  66. தவிகீத் ஜமாத்து மட்டுமல்ல இன்று ஏகத்துவ கொள்கை பேசும் செயல் வீரர்கள் அதை விவாததிற்கு மட்டுமே பயன் படுத்துகிறார்கள்
    இஸ்லாம் கூறிய வாழ்க்கை முறையை அவர்கள் தன் வாழ்வில் நடைமுறை படுத்தியதே இல்லை. சக சகோதரனிடம் எப்படி கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற இஸ்லாமிய அறிவு இல்லாதவர்கள் அவர்கள்
    நல்ல வேளை வினவுக்கு வீடியோ மட்டும் தான்
    இதுவே எங்களில் யாராவது இருந்து இருந்தால்
    இவர்களின் பெண்கள் படை சாணி மற்றும் துடைபதுடன் வந்து இருப்பார்கள்
    இஸ்லாமியர்களை தவறாக உருவக படுத்தி இஸ்லாமியர்கள் பற்றிய தவறான பொதுபுத்தியை ஏற்படுத்தும் சங்கபரிவாரின் வேளையை தான் இவர்களும் செய்ந்து கொண்டு உள்ளார்கள்

  67. பன்னி சேத்த பூசிக்கிட்டு என் கிட்ட மல்லுக்கட்டு மல்லுக்கட்டுனு கூப்பிடரதோட அர்த்தம் எதிராளியயும் அசிங்கத்துக்குள்ள புரள வைக்கனும்றத தவிற வேற என்ன அத மாரித்தான் இதுவும் நல்ல மனுசன் எட்ட நின்னு உன் கருத்துகள எடுத்து சொல்ல வேன்டியதுதான ஏன் மல்லுகட்ட கூப்புடுற நீ சேத்துல புரளுரன்றுக்காக நானும் உன் கூட சேத்துல புரளனுமா எட்ட நின்னு விவாதம் பன்னு அப்பிடினு சொல்லுங்க பாஸ்

  68. வினவுக்கு தெரியாததில்லை. இருந்தாலும் சில உண்மைகள். இந்த கும்பல் முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் மூளைச்சலவை திறமையில் உருவானது. இந்த தறுதலைகளில் தலைவன் யாரென்று உங்களுக்கு தெரியும். முஸ்லிம் சமுதாயத்துக்கு ஒரு மரியாதை இருந்தது. பள்ளிவாசலுக்குள் சத்தமாக கூட பேச மாட்டார்கள். ஆனால் பள்ளிவாசலுக்குள் அடிதடி ஏற்பட்டு கொலை வரை சென்றது இந்த மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டத்தினால் தான். (2010 ஜூலை ஆம் ஆண்டு. திருவிடைச்சேரி என்ற ஊரில் என்ன நடந்தது என்று செய்திகளை பார்க்கவும்). இந்த கும்பலுடன் பேசி நேரத்தை வீணாக்கவேண்டாம். இவர்கள் கணைகள் எய்பவன் வேறு.

  69. சொர்க்கம் குறித்த ஆசைகாட்டுதலில்
    நரகம் குறித்த அச்சமூட்டுதலில்
    அரசியலற்ற ஒரு சமூகத்தை
    அனாதைகளாய் நிறுத்தியிருக்கிறீர்கள்…

    இசுலாம் என்கிற மார்க்கத்தை – இன்று
    மதமாக்கி விற்றுப் பிழைக்கிறீர்கள்…

    இல்லை என்று பொய்சொல்லி
    தப்பித்துவிட நினைக்காதீர்

    உங்களுக்கு போஸ்டர் ஒட்டிய
    இசுலாமியத் தொழிலாளி வர்க்கம் –
    இன்னும் தொழிலாளியாகவே நீடிப்பதை
    இப்போதும் நாங்கள் அறிவோம் …

    ஆக்டோபஸ் கரங்களைப் போல
    அகல விரிந்திருக்கும் – உங்கள்
    சொத்துமதிப்பையும் நாங்கள் அறிவோம்…

    ஐந்து கலிமா சொல்லி
    ஐவேளை தொழுது
    ஐம்பெருங் கடமை முடித்து
    அல்லா ரசூலுக்கு அஞ்சி வாழும்
    அப்பாவி மக்களின் சந்ததிகளுக்கு
    சம சமூகவாழ்வைகூட உறுதிப்படுத்தாமல்
    சொர்கத்துக்கான ‘விசா’ வை
    கூவிக் கூவி விற்கிறீர்கள் …

    உங்களுக்குப் பின்னே அணிதிரண்ட
    அத்துணை பேரையும்
    முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

    இனி இருட்டுக்குள் கும்பலாய் வந்து
    பழிதீர்க்கும் அவசியமில்லை
    பட்டப்பகல் வெளிச்சத்தில் சட்டங்கள் தீட்டி
    நாடாளுமன்றமே அதை நடத்தத் துணியும்..

    ஒன்றும் தலைமுழுகிப் போய்விடவில்லை
    எப்போதும் போலவே இப்போதும்
    அறிவு நாணயமின்றி
    அடிப்படை வெட்கமின்றி
    பயனற்ற விவாதங்களை செய்து
    தூய்மைவாதங்கள் பேசித் திரியுங்கள்

    நரகம் இருப்பது ஒருவேளை உண்மையானால்
    இந்த நிலைக்கு உள்ளாக்கிய பாவத்திற்கு
    இப்போதே நீங்கள்,

    பொசுங்கிச் செத்தொழியுங்கள் ……
    – ஃபேஸ்புக்கில் தோழர் சம்சுதீன் ஹீரா

  70. யோவ் அதான் தேர்தல் முடிஞ்சிடிசுள்ள அடுத்து நோன்பு வருது பிரை பார்க்கனும்… அதுக்குள்ள யாரு இந்த வினவு காரங்க கிட்ட வாய் சவடால் விட்டது… நாம செய்யாதத அவுங்க செய்யுராங்க அதுலயும் மண்ண போடனுமா? வினவு நண்பர்களே உங்கள் பனியை தொடருங்கள் இவுககிட்ட நெரத்த வீனடிச்சிப்புடாதீங்க!

    அப்புறம் அந்த செய்யது இபுராஹீம்… அதிகாலை தொழுகையில் அதிலும் கண்ணியமா பேச வேண்டிய இடத்துல நின்னு சாபம் விட்டு கொச்சைப்படுத்துவாரே…வேணாம்பா!! அவர பத்தி பேச போய் அவுக வீட்டு பொம்பளை புள்ளை கைல விளக்குமாற கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவாரு………

  71. ///“நாங்கள் எளிமையாக கேட்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற எந்த பிரச்சினைக்காவது இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறதா? மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்று மக்களின் அடிப்படையான பிரச்ச்சினைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கூறுகிறது” என்றதற்கு “இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு உண்டு. இந்த பிரச்சினைகள் எதையும் கம்யூனிசத்தால் தீர்க்க முடியாது. ஆனால் அனைத்து வகை பிரச்சினைகளையும் இஸ்லாத்தால் தீர்க்க முடியும்” என்றனர்.////

    வினவு ,இன்றைய அனைத்து பிரச்னைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது .இதையெல்லாம் குர்ஆன் நேரடியாக சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது உங்களது இஸ்லாமிய அறியாமையை காட்டும் .உமர் [ரலி] அவர்கள் போன்று இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி செயல்படும் அரசுக்கு இந்த பிரச்னைகளை எழாது .இல்லாத பிரச்னைகளுக்கு தீர்வை தேட வேண்டிய அவசியமில்லை .
    இன்றைய இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணை என்னும் கொடுமையால் மிகவும் பாதிக்கப் பட்டு வந்தது அதனால் சமுதாயம் எத்துனை கடுமையாக பாதிக்கப் பட்டது என்பதை நீங்கள் அறிய மாட்டர்கள் .முந்தைய மதத்தில் இருந்து வெளியாகியும் அதன் தாக்கம் பெயர் மருவி இருந்து வந்தது .ஆனால் அதற்கு தரும் இஸ்லாமிய தீர்வை தவ்ஹித் ஜமாஅத் நடைமுறை படுத்தி வருவதை இந்த சமுதாயம் கண்டு வருகிறது .அதனாலே எளிய மக்கள் அதிகமாக வாழும் மேலப்பாளையம் ,கடையநல்லூர் பகுதிகளில் அதன் வளர்ச்சியின் வீரியத்தை நீங்கள் நேரில் காணலாம் .
    பணக்காரர்களை விட உழைக்கும் வர்க்கமும் நடுத்தர வர்க்கமும் தவ்ஹித் ஜமாத்தின் பால் தங்களது ஈர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் .1990 க்கு முன்னர் இந்த சமுதாயத்தில் இருந்த திருமணங்களும் இப்போது நடைபெறும் திருமணங்களும் தவ்ஹித் ஜமாத்தின் செயல்பாட்டிற்கு சாட்சி.
    உங்களது காகித புலி கொள்கைகளை நடைமுறைப் படுத்தி காட்டுங்கள் என்று சொன்னால் உலகம் முழுவதும் கம்யுனிசம் வந்தால் தான் அதை நடைமுறை சாத்தியம் என்று கூறி வருகிறீர்கள் .அதற்கு எத்தனை மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதை உங்களால் கணிக்க முடியாது .ஆனால் எங்களது இஸ்லாமிய கொள்கைகளை இந்தியா முஸ்லிம் நாடு இல்லாவிட்டாலும் எங்களது அமைப்பு அளவில் எங்களது கொள்கைகளை நடைமுறை படுத்தி வருகிறோம் .

  72. சாகித் ////தினந்தோறும் ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் ,,,,,,,,,,,,,,,, குரானும் ஹதீதும் காரணமாக இல்லையா? ///
    இஸ்லாத்தை விட்டு வெளியேறினாலும் அதன் அரபு பெயரை சொல்லுவதிலே தங்களுக்கு பெருமை இருக்கிறதை என்பதை என்னால் உணர முடிகிறது நன்றிகள் .ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் குர்ஆன் ,ஹதிது இல்லாததை அங்கு நீங்கள் சொல்லும் வன்முறைகளுக்கு காரணம் .அதிலும் ஆப்கான் சீரழிவுக்கு கொலைவெறி கம்யுனிசரசியாவும் பொருளாதார வெறி அமெரிக்காவுமே காரணம்

    ///இந்தியாவிலும் வெடித்த பலகுண்டுகளுக்கும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் குர்ஆன் தானே அடிப்படை. ////
    இந்தியாவில் நடந்த வன்முறைகளுக்கு இன்று பதவியேற்றிருக்கும் மூன்றில் இரண்டு பகுதி எம்பிக்கள் கிரிமினல்கள் என்று இன்று மீடியாக்கள் பட்டியல் போடும் சங்க பரிவார கும்பலும் அதன் பதவி மோகமும் மட்டுமே காரணம்
    ///அவ்வளவு ஏன். நீ இப்போ மதவெறியிடன் பேசும் பேச்சுக்கூட கூர்ஆன் தானே காரணம். முழுப்பூசனிக்காயையும் சோற்றிலே அமுக்கி மறைக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்கள் இசுலாமியர்கள்தான்.////
    இஸ்லாத்தின் அடிப்படைவாதம் என்பது என்ன என்று தெரியாமல் எழுதி வரும் வினவுவை அதன் குற்றச்சாட்டை தவறு என்று நிருபிக்க விவாதத்திற்கு அழைத்தால் அதற்கு பெயர் மதவெறியா?

  73. அட அப்படி போடு….. 100ரூபாயை புடுங்கிக்கிட்டு 2.50 ரூபாயை கொடுத்து பணக்காரனாக ஆக்கும் ஜகாத் தானே உங்க பீத்தல் பொருளாதாரம். முதலாளித்துவ பொருளாதார ___________கூட இதை கேட்டா ……….. சிரிக்கும்.
    ஒரு எடுத்துக்காட்டுக்கு, ,,,,,,,,,,,,,,ஜகாத்துன்னு ஆளுக்கு 3.35 ரூபாயை கொடுத்துட்டு நீங்கலெல்லாம் இப்போ என்னவிட பணக்காரர்களாகிட்டீங்ப்பா. நான்தேன் இன்னும் ஏழையா இருக்கிறேன்னு சொன்னா ……

    எடுத்துக்காட்டவேண்டும் என்றால் ,ஒரு முதலாளிஇடம் A ,B என்ற இரு வேலைக்கார்கள் இருக்கிறார்கள் .அவர்களது மாத சம்பளம் கொடுத்த பிறகு வருடத்தில் 10 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .இந்த லாபத்தில் 2.5 சதவீதம் 25000 ரூபாயை A வேலைக்காரரிடம் கொடுக்கிறார் .அதை பெற்றுக் கொண்டு அவர் கடையிலிருந்து விலகி 25000/=முதலீட்டில் பெட்டி வைக்கிறார் .அவருக்கு பதிலாக இப்போது C என்பவர் வேலைக்கு சேருகிறார் .மறு வருடத்தில் கிடைக்கும் 12 லட்ச ரூபாய் லாபத்தில் சக்காத் பணம் 30000/=ரூபாயை B க்கு கொடுக்கிறார் .அவர் அதைக் கொண்டு டீ கடை வைக்கிறார் .அதன் பின்னர் அவர் ஓ .பன்னீர் செல்வம் போல அமைச்ச்சராகிவிடுகிறார் .இல்லைஎன்றால் மோடி போல பிரதமர் ஆகிவிடுகிறார் .இப்படித்தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் .100 ரூபாயை காட்டி கனவு கம்யுனிசத்தை போல இஸ்லாத்தையும் நினைவில் கொள்ளவேண்டாம்

    • நீங்கள் கூறும் இந்த லாபத்தில் பங்கு கொடுக்கும் முறை,வளைகுடா நாடுகள் உட்பட எந்த நாட்டிலும் இல்லை.

      துருக்கியிலும் இல்லை, பாகிஸ்தானிலும் இல்லை,பாகிஸ்தானில் இன்றும் கோத்தடிமைகள் கூட உள்ளனர்.

      வளைகுடா நாடுகளில் பலருக்கு சம்பளமே ஒழுங்காக கிடைப்பது இல்லை.

      இதெல்லாம் கூறானில் இருக்கலாம்,ஆனால் அரபு நாடுககளிலேயே நடைமுறையில் இல்லை.

      ஆதலால் இதை எல்லாம் நீங்கள் முதலில் அந்த நாடுகளில் நடைமுறை படுத்திவிட்டு இங்கு முயற்சி செய்யலாம்.

      • சக்காத்தை வசூலித்து சவூதி அரேபியா பல் எளிய நாடுகளுக்கு உணவு மற்றும் உதவிகள் அனுப்பிவைக்கிறது

  74. சாஹித் ///இப்படியே மனக்குதிரையை ஓட்டிக்கிடே இருங்கப்பா. உங்கள் வாக்குகளுக்கு என்ன நிலைமை என்று இந்த தேர்தல்ல பார்தாச்சில்ல. நாய்க்கு கிடைக்கு மரியாதைகூட இனி திராவிட கட்சிகள் உங்களுக்கு கொடுக்காது fff..///
    உங்களுக்கு அரசியல் அறிவும் கிடையாது .முஸ்லிம்கள் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கவில்லைஎன்றால் கன்னியாகுமரி தொகுதி போல 39 தொகுதிகளிலும் திமுகவுக்கு 4 வது இடமும் கிடைத்திருக்கும் டெப்பாசிட்டும் இழந்திருக்கும் .

  75. சாகித் ////அலிப் பேயும் தெரியாது. அனா ஆவன்னாவும் தெரியாது. ஊருக்கு ஊரு செயலாளரு, பொருளாலருன்னு ஒரு கூட்டம் சுத்தமா மண்டையை கழுவி அவுலியாகிட்ட அடகு வைச்சுட்டு எதைக்கேட்டாலும் அவுலியாகிட்ட வந்து கேளுன்னு சப்பாணியாட்டம் தேய்ந்த ரிக்கார்டா உளரிகிட்டு திரியிராய்ங்க. ஒருவேளை இந்த பிஜே அவுலியா கூட்டத்துக்கு அம்மாதான் அல்லாவோ?////
    எத்தனையோ சப்பாணி இயக்கங்களுக்கு காசு கொடுத்த ஜெயலலிதா எங்களுக்கு காசு கொடுத்திருக்க மாட்டாரா ?
    நாங்கள் அவரிடம் காசு வாங்கி,அதன் பின்னர் அவர் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பார்த்ததில்லையா? நாங்கள் காசு வாங்கி ஆதரவை மாற்றிவிட்டோம் என்று அவர்கள் சொல்லட்டும் .பாஜகவிடம் விஜயகாந்த் 400 கோடி கேட்டதாக வைக்கோ சொன்னாரே ,அதைப்போல சொல்லட்டும்

  76. //கமுநிசம் தோற்று உள்ளதா இஸ்லாம் தோற்றதா நிருபிக்கலாம்.////

    இஸ்லாம் தோற்றதா ?வெற்றி பெற்றதா ?என்றுதானே விவாதிக்க முடியும் .சந்தடி சாக்கில் தோத்து ,தோத்து மண்ணாகிப்போன கம்யுனிசம் தோற்றதா என்பதை பற்றி விவாதிக்க அழைக்கிறீர்கள் ,சாகித் ஒருத்தரது சிரிப்பொலியும் உங்க காதில் விழவில்லையா?

  77. SAGOTHARAN//உங்களுடய pj அண்ணன் பண்ணிய மொழிபெயர்ப்பில் 107 ஆம் அடிமைப்பெண்கள் என்ற விளக்கத்தில் அது அந்த காலம் என்றும், திருமண பந்தம் இல்லாமல் (அடிமை)பெண்களுடன் உடலுறவு கொள்ளலாம் என்று விளக்கம் தந்துள்ளாரே! அது சரியா? என்று நம்ம இஸ்லாமிய பெண்களிடம்,இன்னும் சொல்லப்போனால் எல்லா தரப்பு பெண்களுடன்////

    இஸ்லாம் கூறும் அடிமை பெண்கள் இந்த காலத்தில் இல்லை .இல்லாத ஒன்றை இப்போது கேட்பது எப்படி சரி?

    • S.Ibrahim

      //இஸ்லாம் கூறும் அடிமை பெண்கள் இந்த காலத்தில் இல்லை. இல்லாத ஒன்றை இப்போது கேட்பது எப்படி சரி?///

      கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்க விவாதிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உளறக்கூடாது.

      SAGOTHARAN கேட்டது, அது அந்த காலமே என்றாலும் கூட “திருமண பந்தம் இல்லாமல் (அடிமை)பெண்களுடன் உடலுறவு கொள்ளலாம் என்று விளக்கம் தந்துள்ளாரே” அது சரியா?
      இதற்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும்.

      அந்த காலத்திற்கு சரி. இந்த காலத்திற்கு தவறு என்றால், அடிமை சமூகம் நிலவிய காலத்தின் இஸ்லாமும், குரானும், அவை இல்லாத இந்த காலத்திற்கு எப்படி பொருந்தும் என்று தான் நாங்கள் கேட்கிறோம். குரானின் வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது என்பதை ஏற்க வேண்டும். ஏற்கிறீர்களா இல்லையா?

      அக்காலத்திற்கும் சரி, இந்த காலத்திலும் சரியே என்றால், நம்ம இஸ்லாமிய பெண்களிடம், இன்னும் சொல்லப்போனால் எல்லா தரப்பு பெண்களுடன் பொது விவாத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எப்போது செய்யப்போகிறீர்கள் ?

      • அந்த காலத்தில் போரில் வென்றவர்கள் ,தோல்வியுற்ற படையினரின் பெண்களை ஆளாளுக்கு வரம்பு இல்லாமல் மனம் போல கற்பழித்தும் அவர்களை பெண்ணாக கருதாமல் போதை பொருளாக பாவித்தும் அனுபவித்தும் வந்தனர் .அந்த நிலைய்ல்தான் இஸ்லாம் வெற்றிபெற்றவர்கள் தோல்வியுற்ற நாட்டின் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை வரைமுறை படுத்தியது .அந்த பெண்கள் உங்களது வலக்கரத்தை ஏற்றுக் கொண்டால் ,அதாவது உங்களுடன் திருமணமின்றி சம்மதித்தால் ,அவர்களுடம் திருமண பந்தமின்றி தாம்பத்தியத்தை தொடருங்கள் .அவர்களுக்கு உங்கள் மீது உங்கள் மனைவியருக்கு இருக்கும் உரிமைகளில் பாதி உரிமைகள் உண்டு .மேலும் அவர்களை விடுதலை செய்து திருமணம் செய்து வாழ்வதை அறிவுறுத்தியது .தோல்வியுற்ற ஆண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் .பெண்கள் போரில் பங்கு பெற்ற வீரர்களுக்கு அடிமையாகவும் அல்லது மனைவியாகவும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டனர் .
        பெண்களை சிறையில் வைத்து பராமரிக்கும் அளவில் அன்றைய பொருளாதாரம் இல்லை .சிறை வசதிகளும் இல்லை .அவ்வாறு சிறைகள் இருந்தாலும் விபச்சாரம் பெருகும்

      • ஆணி ,அந்த காலத்திற்கு சரி. இந்த காலத்திற்கு தவறு என்றால், அடிமை சமூகம் நிலவிய காலத்தின் இஸ்லாமும், குரானும், அவை இல்லாத இந்த காலத்திற்கு எப்படி பொருந்தும் என்று தான் நாங்கள் கேட்கிறோம். குரானின் வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது என்பதை ஏற்க வேண்டும். ஏற்கிறீர்களா இல்லையா?////

        இந்தகாலத்தில் சரியில்லை என்று சொல்லவில்லை .போரின் விதிமுறைகள் வகுக்கப் பட்டுவிட்டது இனி பெண்களை அடிமைப்படுத்த முடியாது .ஆதலால் அந்த சட்டங்களை இப்போது செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை திருடர்களே இல்லாமல் போனாலும் திருட்டுக்குரிய சட்டங்கள் அப்படியேத்தான் இருக்கும் .அந்த சட்டங்கள் இப்போது தேவை இல்லை என்று சொல்லமுடியாது .
        இராக் பெண்களை அமெரிக்காவினர் கற்பழித்த இந்த காலத்தில் ,அடிமைகளைவிட ஆண்களை முகத்திரையிட்டு மல்லாக்க படுக்கவைத்து கைகளை கட்டி கொடுமைபடுத்தியதொடு ,வெளிச்சத்திற்கு வராத பெண் கொடுமைகளை யார் கேட்டார்?அங்கு அமெரிக்க என்ன சட்டத்தை பயன்படுத்தியது? வரம்பில்லாமல் இராக் பெண்களை கிள்ளு கீரையாகக்வில்லையா?இஸ்லாமிய அடிமை சட்டங்களை விட கேவலமாக நடத்தப் படவில்லையா? வாயளவில் ஜனநாயகமும் ,அந்நிய நாட்டில் புகுந்து பேரழிவு ஆயுதங்கள் என்று உலக வரலாற்று பொய்களை சொல்லி எண்ணெய் திருடியதை ,கற்புகளை பறித்ததை ,அந்நாட்டு மக்களை அடிமைகளை விட கொடுமை படுத்தியதை இந்தக்கால நவ நாகரிக வேடிக்கை பார்க்கும் சட்டங்களை விட இஸ்லாமிய சட்டங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை என்பதை காலம் உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது

    • எம்.எஸ் சையது இப்ராஹிம் மாநில துணைத் தலைவர் TNTJ மீண்டும் வினவுக்கு வந்துட்டார் !
      —————————————————————————————————————————————————–

      துணைதலைவன் M.S சையது இப்ராஹிம் TNTJ,

      நீர் [S.Ibrahim துணைதலைவன் TNTJ] நான் இடும் சவாலை சந்தீக்க தயாரா ?

      என் பின்நூட்டங்கள் 17,19,20,21,22 ஒவ்ஒன்றுக்கும் மறுப்பு தெரிவிக்க முடியுமா ?

      என் feedback தவறு என்று உம்மால் நிருபிக்க முடியாவிட்டால், ஒலி/ஒளி யில் வாந்தி,போதி செய்த நீர் [துணைதலைவன் M.S சையது இப்ராஹிம்] நாகூர் தர்காவில் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டும் !இல்லை என்றால் நான் !

      |————————-TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிம் சவாலுக்கு தயாரா ?———————————–|

      NOTE:

      நீர் வினவை பேசியது போல் மரியாதை குறைவாக என்னிடமும் பேசும் எண்ணம் உமக்கு இருப்பின் அதற்கு முன் மீரான் அண்ணாசிக்கு நான் அளித்த பின்னூட்டம் 44.4 அய் ஒருமுறை படித்து பார்க்கவும் !

      • நான் செய்யது இப்ராஹிம் இல்லை .நான் எஸ்.இப்ராஹிம் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட TNTJ பொருளாளர்

    • TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிம்[ S.Ibrahim],

      [1]திரு நபி அவர்கள் வடிவமைத்த இஸ்லாம் மார்கம் ,TNTJ தலைவர் PJ வையும் TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிமையும் ரிசானா வழக்கில் முரண்பட்டு பேச சொல்கின்றதா என்ன ?

      [2]திரு நபி அவர்கள் வடிவமைத்த இஸ்லாம் மார்கம் , TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிமை மரியாதை குறைவாக பேச சொன்னதா ?

      [3]திரு நபி அவர்கள் வடிவமைத்த இஸ்லாம் மார்கம் , TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிமை வினவில் 4/5/2014 அன்று TNTJ record செய்த ஒலி,ஒளி காட்சிகளை முழுமையாக வெளிஇட கூடாது ,edit செய்து தான் வெளி இட வேண்டும் என்று கூறுகீன்றதா ?

      குறிப்பு :
      என் பின்நூட்டங்கள் 17,19,20,21,22 ஆகீயவற்றை பார்க்கவும்!

    • S.Ibrahim

      //இஸ்லாம் கூறும் அடிமை பெண்கள் இந்த காலத்தில் இல்லை. இல்லாத ஒன்றை இப்போது கேட்பது எப்படி சரி?///

      அத தான் நானும் கேட்கிறேன்.. அடிமை பெண்கள் இல்லாத இந்த காலத்துக்கு இஸ்லாம் பொருந்தாது என்பது சரி தானே? குர்ரான் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பது தவறு தானே ?

      ஏன் இப்படி சேம் சைடு கோல் போடுறீங்க?

      • குர்ஆன் அடிமை பெண்கள் இருந்த காலத்துக்கும் பொருந்தும் .அதற்கான சட்டங்களை தந்தது .
        இபோதைய காலத்திற்கும் பொருந்தும் .நீங்கள் போர் செய்து எதிரி நாட்டு பெண்களை அடிமைகளாகபிடித்து வைத்து உடலுறவு கொள்ளுங்கள் என்று இஸ்லாம் சொல்லவில்லை .அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கான சட்டத்தை சொல்லியுள்ளது .கொலை செய்தால் தான் அதற்குரிய சட்டத்தை இபிகோ சொல்லுகிறது .கொலைகளே நடக்கவில்லை என்றால் அந்த சட்டங்கள் அப்படியேத்தான் இருக்கும் .செயல்படுத்த வாய்ப்புகள் இல்லை என்றுதான் நாம் மனதிற் கொள்வோம் .
        குர்ஆன் அடிமைகளை பற்றிய மட்டும் சொல்லவில்லை .அடிமைகள் இல்லைஎன்றால் குர்ஆன் தேவை இல்லை என்று சொல்லுவதற்கு .
        அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி உள்ளதால் இனி வரும் காலத்திலும் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்

    • கபிர் என்போர் யார் ?
      ———————————–

      TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிம்[ S.Ibrahim],

      [1]திரு நபி அவர்கள் வடிவமைத்த இஸ்லாம் மார்கத்தை பொறுத்த வரை கபிர் என்போர் வேற்று மார்கம் சார்ந்தவர் அன்று.

      [2]இஸ்லாம் மார்கத்தை பின் பற்றுவதாக கூறிகொண்டு அதற்கு மாறாக நடக்கும் கயவர்கள் தான் “கபிர்” என்போர் !

      [3] இதன் அடிப்படையில் ரிசானா வழக்கில் முரண்பட்டு பேசும் TNTJ தலைவர் PJ ,TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிம் இருவருமே “கபிர்” தான் .

      [4] பிறரை மரியாதை குறைவாக போசும் TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிம் “கபிர்” தான் .

      [5]வினவில் 4/5/2014 அன்று TNTJ record செய்த ஒலி,ஒளி காட்சிகளை முழுமையாக வெளிஇடாமல், அறிவு நாணயம் இல்லாமல் edit செய்து வெளி இட TNTJ குழுவே இஸ்லாம் மார்கத்தை பொறுத்த வரை “கபிர்” தான்.

    • அய்யோ அண்ணன் இப்புறாகிம்(கைப்புள்ள்) குரானோட(அருவாள்) கிளம்பிட்டாரே இன்னிக்கு எத்தன தல உருளப்போகுதோ தெரியலயே

  78. Thoongubavarai ezhuppi vidalaam,
    Aanaal Thoongubavarai pol nadippavargalai ezhuppa mudiyaadhu.

    Madhaththai udharungal, Manidhaththai kadai pidiyungal!

    Pazhaiya vidayangalai pesi pesi kaalaththai naam anaivarum veenadiththathu podhum nanbargale.

    • எழுப்புவது போல் நடிப்பவர்களால் தூங்குபவர்களை எழுப்ப முடியாது

  79. S.Ibrahim,

    So, you are back after a long break.

    //இஸ்லாம் கூறும் அடிமை பெண்கள் இந்த காலத்தில் இல்லை .இல்லாத ஒன்றை இப்போது கேட்பது எப்படி சரி?//

    If some Muhamadans from Pakistan take a boat, come to India’s shore armed with some weapons, enter a village, shoot all men, capture all young women and return back to Pakistan, those women are slaves to those Muhamadans. It is possible any time. It is in practice all the time in Africa. Nigerian Boko Haram is the latest example which has enslaved more than 200 Christian girls. It is practiced in other forms all over the world. Raping of white girls who venture out alone by gangs of Muhamadans is another form. Abuse of women domestic workers in Gulf is another form. After all, இஸ்லாம் is for all the time.

    By the by, are you the speaker in that video? I just want to be sure.

    • பாக்கிஸ்தானிகள் இந்தியாவில்படகில் வந்து தாக்குவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை .
      மற்ற உங்களது கற்பனைகளை வின்வுவை குப்பை தொட்டியாக நினைத்து கொட்ட வேண்டாம்

  80. விஜய் டி.வியில் ஒளிபரப்ப இருந்த விவாதத்தை வெளில வராம இருக்க கமிஷனர் ஆபிசு வரை போனவங்க விவாதத்துக்கு கூப்பிடராங்கலாம். எங்க போய் சொல்ல..

    வினவுக்கு – முஸ்லிம் இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்கிறவைகள்கூட பேச முடியாத, சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளை விவாதத்திற்கு பொதுத்தளத்தில் வைக்கும் உங்களை இஸ்லாமிய மக்கள் நன்றியுடன் நினைவில் கொள்வார்கள்.

    • /விஜய் டி.வியில் ஒளிபரப்ப இருந்த விவாதத்தை வெளில வராம இருக்க கமிஷனர் ஆபிசு வரை போனவங்க விவாதத்துக்கு கூப்பிடராங்கலாம். எங்க போய் சொல்ல.////

      விஜய் டிவியில் இஸ்லாம் பற்றி முழுமையாக தெரியாத பெண்களை வைத்து கோபிநாத் கருத்தை வலுவாகக் முயற்சித்ததை எதிர்த்தோம் .விஜய் டிவியின் விவாதத்திற்கு நாங்கள் பெண்களை அனுப்புகிறோம் விவாதத்திற்கு கோபிநாத்தை வர சொல்லுங்கள்

      பெண்கள் முகம் மட்டும் கைகளை தவிர மற்றவற்றை மறைக்கும் பர்தாவை எதிர்க்கும் கோபிநாத் முகம் மட்டும் தெரியும் அளவில் கோட் சூட் சாக்ஸ் சூ அணிவது என்பது பற்றி கேட்டதும் இதுவரை பதில் தர தெரியவில்லை

  81. வினவு
    இஸ்லாம் பற்றி எங்களுக்கு முழுமையாக தெரியாது என்பதால் அது பற்றி விவாதிக்க தயாராக இல்லை என்று நீங்கள் விவாதத்திற்கு சமயத்தில் ,உலகில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் மார்க்சியத்தில் தீர்வு உள்ளதாக கூறுகின்றீர்கள் ,நாங்கள் அதை மறுக்கிறோம் ,மார்க்சிய கொள்கைகள் ஏற்கத்தக்கவை அன்று என்பதை ஆதாரத்துடன் நிருபிக்க தயாராக இருக்கிறோம் என்று தவ்ஹித் ஜமாத்காரர்கள் கேட்டது பற்றி தங்களது கட்டுரையில் குறிப்பிடவில்லையே ! இது மறைத்தல் இல்லையா/?

    • வினவில் 4/5/2014 அன்று TNTJ record செய்த ஒலி,ஒளி காட்சிகளை முழுமையாக வெளிஇடாமல், அறிவு நாணயம் இல்லாமல் edit செய்து வெளி இட TNTJ குழுவே இஸ்லாம் மார்கத்தை பொறுத்த வரை “கபிர்” தான்.

  82. S. Ibrahim,

    //போரின் விதிமுறைகள் வகுக்கப் பட்டுவிட்டது இனி பெண்களை அடிமைப்படுத்த முடியாது .ஆதலால் அந்த சட்டங்களை இப்போது செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை//

    முகமதியர்களுக்கு மனிதனின் சட்டம் செல்லாது. குறிப்பாக காபிர்களின் சட்டம் செல்லவே செல்லாது முகமதின் சட்டம் தான் செல்லும். ஆதலால் நீங்கள் கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம். Muhamadans will enslave women any day if they have upper hand and are doing it in Africa.

    //இஸ்லாம் வெற்றிபெற்றவர்கள் தோல்வியுற்ற நாட்டின் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை வரைமுறை படுத்தியது//

    Wonderful directive. Kill as many men as possible for 3 days, regardless of civilian or soldier. Enslave all remaining men, women and children. Muhamadan rulers can get all the enslaved men to make them work to create the ugly monuments like Taj Mahal. Jihadists can get their share of women and keep them for sex, work and sell the surplus to other non-jihad muhamadans.

    //.அந்த பெண்கள் உங்களது வலக்கரத்தை ஏற்றுக் கொண்டால் ,அதாவது உங்களுடன் திருமணமின்றி சம்மதித்தால் ,அவர்களுடம் திருமண பந்தமின்றி தாம்பத்தியத்தை தொடருங்கள்//

    கேணத்தனமாக இல்லையா. எந்தப் பெண் இதை ஏற்றுக் கொள்வார். பெண்கள் உங்களது வலக்கரத்தை ஏற்றுக் கொள்வதல்ல. உங்களது வலக்கரம் பற்றிய பெண்கள் என்று பொருள். அதாவது நீங்கள் பலவந்தமாக கைப்பற்றிய பெண்கள். அவர்களை விற்கவும் செய்யலாம். எவ்வளவு வேண்டுமானாலும் அடித்தும் வேலை வாங்கலாம்.

    // .அவர்களுக்கு உங்கள் மீது உங்கள் மனைவியருக்கு இருக்கும் உரிமைகளில் பாதி உரிமைகள் உண்டு//

    அதென்னய்யா பாதி உரிமை? இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

    // .மேலும் அவர்களை விடுதலை செய்து திருமணம் செய்து வாழ்வதை அறிவுறுத்தியது//

    அதென்னய்யா ‘விடுதலை செய்து’. Jihadists can only free 4 women at the max. Beyond that they can only keep them as slaves or sell them. The buyer won’t be interested to ‘free’ them.

    //அமெரிக்க என்ன சட்டத்தை பயன்படுத்தியது? வரம்பில்லாமல் இராக் பெண்களை கிள்ளு கீரையாகக்வில்லையா?//

    Americans did not enslave Iraqi women and sell them to others. Muhamadans will enslave women any day if they have upper hand and are doing it in Africa.

    • யுனிவர்பட்டி ///முகமதியர்களுக்கு மனிதனின் சட்டம் செல்லாது. குறிப்பாக காபிர்களின் சட்டம் செல்லவே செல்லாது முகமதின் சட்டம் தான் செல்லும். ஆதலால் நீங்கள் கூறுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம். Muhamadans will enslave women any day if they have upper hand and are doing it in Africa.////

      முஸ்லிம்கள் சட்டம் பற்றி பெயர் இல்லாதவர் சொல்லுவது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை .இவரது கற்பனைகள் இஸ்லாமிய சட்டம் ஆகாது .
      இந்தியாவிலே இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை இஸ்லாத்தின் மீது சுமத்தும் உங்களை போன்றோர் ஆப்ரிக்கா முஸ்லிம்கள் பற்றி பேசுவது பீ,,,,த்தலாட்டம்

    • ////Wonderful directive. Kill as many men as possible for 3 days, regardless of civilian or soldier. Enslave all remaining men, women and children. Muhamadan rulers can get all the enslaved men to make them work to create the ugly monuments like Taj Mahal. Jihadists can get their share of women and keep them for sex, work and sell the surplus to other non-jihad muhamadans.///
      உங்களுக்கு இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியவில்லை என்பதற்கு மேலே உள்ள வாசகங்கள் சாட்சி.முதலில் இஸ்லாத்தை படித்துவிட்டு அப்புறம் விமர்சிக்க முயற்சி செய்யுங்கள் .முகலாய மன்னர்களுக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை .நேரு கூட தனது டிஸ்கவரி ஆப் இந்தியா நூலில் பார்சி மங்கோலியர் கலப்பினமான அரை முஸ்லிம்கள் என்றுதான் முகலாயர் பற்றி வர்ணிக்கிறார் .பிரேததத்தைஅடக்கிய பிறகு அதன் மீது கல்லறை எழுப்பக் கூடாது என்பதுதான் இஸ்லாம் .ஒரு ஆடம்பர நினைவு சின்னத்தை எழுப்பிய ஒருவரை இஸ்லாம் அடிபடையில் விமர்சிப்பது அறிவுடமை அன்று.சமகாலத்து முஸ்லிம் அல்லாத மன்னர்கள் போரில் வெற்றி பெற்ற பின் தோல்வியுற்ற நாட்டு பெண்களை எப்படி நடத்தினார்கள் என்பதை தெரிந்து கொண்டு இஸ்லாம் பற்றி பேசுங்கள் .அசோகருக்கு எண்ணிலடங்காத மனைவிகள் ,அதில் முதல் மனைவியின் மகன் மீது கடைசி மனைவி காதல் கொண்டு கண்ணை பறித்த வரலாற்றை எல்லாம் படித்து விட்டு இஸ்லாம் பற்றி பேசுங்கள்

    • ////கேணத்தனமாக இல்லையா. எந்தப் பெண் இதை ஏற்றுக் கொள்வார். பெண்கள் உங்களது வலக்கரத்தை ஏற்றுக் கொள்வதல்ல. உங்களது வலக்கரம் பற்றிய பெண்கள் என்று பொருள். அதாவது நீங்கள் பலவந்தமாக கைப்பற்றிய பெண்கள். அவர்களை விற்கவும் செய்யலாம். எவ்வளவு வேண்டுமானாலும் அடித்தும் வேலை வாங்கலாம்.///
      இப்போதைய பெண்களை பழைய காலத்து போரில் தோற்ற பெண்களின் மன நிலையோடு ஒப்பிடுவது நம்பர் ஒன கேணத்தனம் .
      50 ஆண்டுகளுக்கு முன்னர் 65 வயது எம்ஜியார் 15 வயது பெண்ணுடன் காதல் வசனங்கள் பேசி டூயட் பாடியதை ரசித்த மக்கள் வேறு .இப்போதைய இளைஞர்கல் ரசனை வேறு அப்போது எம்ஜியார் டூயட்டை ரசித்தவனை இப்போது விமர்சிக்க முடியாது
      முந்தைய காலத்தில் போரில் தோற்ற படையினர் மற்றும் பெண்கள் நிலை எப்படி இருதது என்பது பற்றி தெரிந்து கொண்டு இஸ்லாமிய படைகள் பற்றி விமர்சிக்க வாருங்கள்

    • ///அவர்களுக்கு உங்கள் மீது உங்கள் மனைவியருக்கு இருக்கும் உரிமைகளில் பாதி உரிமைகள் உண்டு//

      அதென்னய்யா பாதி உரிமை? இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?////

      இஸ்லாம் அல்லாத படைகள் வென்றால் தோல்வியுற்ற பெண்களின் நிலையை விட பாதி உரிமைகள் பெற்ற பெண்களின் நிலை உயர்வாக இருந்தது .
      பெண்கள் காமப் பொருளாக பாவிக்கப்பட்ட நிலையில் அவளுக்கு பெண்ணின் உரிமைகளில் பாதியலவிலும் அதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதையும் கருத்தில் கொண்டு சிந்தியுங்கள் வெட்கம் அற்றவர்கள் யார் என்பது புரியும்?
      அதற்காக தேவதாசிகள் பற்றி நான் பேசியதாக மனதில் கொள்ளவேண்டாம்

    • /Americans did not enslave Iraqi women and sell them to others. Muhamadans will enslave women any day if they have upper hand and are doing it in Africa.////
      அடிமை என்ற வார்த்தைதான் அமெரிக்க ஜனநாயக அகராதியில் இல்லை .ஆனால் அவர்கள் மக்களை அனைவரையும் அடிமைகளாக வைத்துள்ளார்கள் .ஒரு கண்டெஇனரில் 900 மக்களை அடைத்து கவுடிமாலாவுக்கு அனுப்பி அவர்கள் செய்யும் கொடுமைகளை காட்டுமிராண்டிகள் காலத்தில் கூட நடந்தது இல்லை .

      • S.Ibrahim,

        // இந்தியாவிலே இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை இஸ்லாத்தின் மீது சுமத்தும் உங்களை//

        Tell me what is the accusation that does not exist in India. I give you proof. Anyway, I speak about Muhamadism globally. I don’t have to limit myself to India.

        // முகலாய மன்னர்களுக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை//

        இன்றைய இந்திய முகமதியர்களுக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

        // [முகலாய மன்னர்கள்] பார்சி மங்கோலியர் கலப்பினமான அரை முஸ்லிம்கள்//

        கலப்பில்லா அரேபியர்கள் தான் முழு முகமதியர்களா? தமிழ் முகமதியர்கள் எத்தனை விகிதம் முகமதியர்கள்?

        // அசோகருக்கு எண்ணிலடங்காத மனைவிகள்//

        அசோக மதத்தைப் பற்றி கேள்விபட்டதில்லை. அசோகிய தீவிரவாதிகளைப்பற்றியும் கேள்விபட்டதில்லை.

        // இப்போதைய பெண்களை பழைய காலத்து போரில் தோற்ற பெண்களின் மன நிலையோடு ஒப்பிடுவது//

        இடது கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டு வலது கையில் பற்றினால், அருகில் உதவிக்கு வர தன்னவர்களோ பொதுவானவர்களோ யாருமில்லா நிலையில் பெண்களை எக்காலத்திலும் அடிபணிய வைக்க முடியும். ஆண்களைக் கொன்றுவிட்டு பெண்களை இடது கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டு வலது கையில் பற்றி அவர்களை அடிமை விலங்கிட்டு ஆடுகளைப் பற்றிச் செல்வதைப் போல் தூர தேசத்திற்கு இழுத்துச் சென்றவுடன் அவர்களால் என்ன செய்ய.முடியும்.

        // பாக்கிஸ்தானிகள் இந்தியாவில்படகில் வந்து தாக்குவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.//

        முகமதியர்கள் தங்கள் கை வலுத்திருக்கும் போது எங்கிருந்து வேண்டுமானாலும் காபிர்களை தாக்கலாம். ஆண்களைக் கொன்றுவிட்டு பெண்களை அடிமைப்படுத்தலாம். See Boko haram. Also. At the time of independence struggle of Bangladesh from Pakistan, Bengalis muhamadans were declared kaafirs and their women were raped in lakhs for many weeks, till they were liberated by Indian kaafirs. Many were alos killed.

        // இஸ்லாம் அல்லாத படைகள் வென்றால் தோல்வியுற்ற பெண்களின் நிலையை விட பாதி உரிமைகள் பெற்ற பெண்களின் நிலை//

        அதென்னய்யா அந்த பாதி உரிமை என்பதுதான் கேள்வி.

        //கண்டெஇனரில் 900 மக்களை அடைத்து//

        Give details.

        // பெயர் இல்லாதவர்//

        ஆளே இல்லாமல் போவதை விட Univerbuddy என்று இருப்பது பரவாயில்லையில்லையா?

  83. /இஸ்லாம் கூறும் அடிமை பெண்கள் இந்த காலத்தில் இல்லை. இல்லாத ஒன்றை இப்போது கேட்பது எப்படி சரி?///
    இந்த வசனங்களை குர்ஆனிலிருந்து தூக்கிடலாமா? இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் படிக்கச்சொல்லி நினைவூட்டி மஜா பண்ணுவதை தடுத்திடலாம்ல.

    • ///இந்த வசனங்களை குர்ஆனிலிருந்து தூக்கிடலாமா? இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் படிக்கச்சொல்லி நினைவூட்டி மஜா பண்ணுவதை தடுத்திடலாம்ல.///
      பழைய வரலாற்றை அனைத்தையும் அழித்துவிடலாமா?

  84. இதில் விவாதம் செய்வதற்கு என்ன இருக்கிறது . உங்கள் மதத்தில் எல்லா தீர்வுகளும் இருப்பதால் , உங்கள் மத கொள்கைப்படி நடக்கும் நாடுகளை கண்ணுறுகிறேன் .

    ஆகா ! மனிதர்கள் அங்கே மகிழ்ச்சியுடன் இருகிறார்கள் .
    சவூதி இளைஞர் கூறினார் , “நாங்கள் வோட்டு கூட போடா போக வேண்டாம் . அவ்வளுவு சொகுசு ” என்கின்றார்

    மற்றொரு இளைஞரோ , நாங்கள் வேற்று நாட்டு ஏழை பெண்களுக்கு போதும் பொது என்னும் அளவிற்கு வீட்டு வேலை கொடுத்து பணக்காரர்களாக மாற்றுகிறோம் . அவர்களுடைய கடவு சீட்டை கூட கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்கிறோம் . ஏனென்றால் அடிமை முறையை எங்கள் மதம் ஒழித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்றார்

    இன்னொருவர் அஹாமதியர் பாகிஸ்தானில் , அஹமாதியர்களின் கடினமான பூவுலக வாழ்க்கை என்னும் தேர்வினை இங்கே எங்களுக்கு விரைவில் முடித்து இறைவனிடம் அனுப்புகிறார்கள் , நாங்கள் பாகியவான்கள் என்கிறார் .

    சூடாநின்ல் , எங்களுக்கு தனி நாடு கொடுத்து சிறப்பித்தது அந்த புனித மதம் என்று கிருத்துவர் நெகிழ்கிறார்

    அடடா அடடா தீர்வுகள் என்னை நெகிழ வைத்துவிட்டது .

    • Raman,சவூதி அரசு முழுமையாக இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றவில்லை முஹம்மது நபிசல் அவர்கள் தனக்கு பிறகு தனது வாரிசுகளை அரசராக நியமிக்கவில்லை .மக்களின் கருத்துப்படியே அபுபக்கர் ரலி அவர்கள் ஆட்சிக்கு வந்தார்
      முகம்மது நபி அவர்கள் தனது சொத்துக்களை அரசுக்குரியதாக ஆக்கினார் .தந்து சொத்துகளுக்கு கூட வாரிசு இல்லை என்பதை பகிரங்கமாக அறிவித்தார் .அவரது ஒரே மக்ள பாத்திமா ரலி வறுமையில் வாடிய பொழுதும் கூட அவர் அபுபக்கரிடம் விண்ணப்பித்தும் அவரது தந்தை சொத்தில் பங்கு கொடுக்கவில்லை

    • //சவூதி இளைஞர் கூறினார் , “நாங்கள் வோட்டு கூட போடா போக வேண்டாம் . அவ்வளுவு சொகுசு ” என்கின்றார்///
      சவூதி இஸ்லாமிய ஆட்சியை முழுமையாக கடைபிடிக்கும் நாடு அல்ல .முஹம்மது நபிசல் அவர்கள் தனக்கு பிறகு தனது சொத்துக்களுக்கூட வாரிசு நியமிக்க மறுத்துவிட்டார்கள் .அவரது ஒரே மகள் வறுமை வாடிய பொழுதும் கூட ,தனது தந்தை சொத்தில் பங்கு கேட்டபொழுது அரசுடமையாகக்ப்பட்ட அவரது சொத்தில் பங்கு கொடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னராக இருந்த அபூபக்கர் ரலி அவர்கள் மறுத்து விட்டனர் .நபிசல் அவர்களின் வாரிசான அலி ரலி அவரட்கு மன்னர் உரிமை கொடுக்கப்பட வில்லை என்ற ஆதங்கத்தில் பிரிந்தவர்கள் தான் ஷியத்துல் அலி .பின்னர் ஷியா வாக மருவியது

    • ///மற்றொரு இளைஞரோ , நாங்கள் வேற்று நாட்டு ஏழை பெண்களுக்கு போதும் பொது என்னும் அளவிற்கு வீட்டு வேலை கொடுத்து பணக்காரர்களாக மாற்றுகிறோம் . அவர்களுடைய கடவு சீட்டை கூட கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்கிறோம் . ஏனென்றால் அடிமை முறையை எங்கள் மதம் ஒழித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்றார்////
      என்னோவோ , வேலைக்கார பெண்களை அடிமையாக, கள்ள காதலியாக வைத்துக் கொள்வது சவுதியில் மட்டும் நடப்பது போல கற்பனித்துள்ளீர்க்ள

  85. சையத் இப்ராகிம்-ன் பேச்சை கவனிக்கும் போதே, அவர் எவ்வளவு தரம் தாழ்ந்தவர் என்பது தெரிகிறது. இது தான் இஸ்லாத்தின் பார்வையில் விமர்சனமா? யாருடைய வழிமுறையை பின்பற்றுகிறார்? வெறி பிடித்த இவரின் மனதில் துளி அளவேனும் இவர் கூறும் இறைவன் மீதும், தன் மக்கள் மீதும் அன்பு என்ற உணர்வு இருக்குமா? “மதவாதிகள் பல சிந்தனாவாதிகளை கொலை செய்துள்ளார்கள். சிந்தனாவாதிகள் யாரேனும் மதவாதிகளை கொலை செய்துள்ளார்களா?”. மதவாதம் பேசுபவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. இவர்களை புறந்தள்ளுவதே, வினவுக்கு நல்லது.

  86. சரவணன் என்ற ________ கபிர் என்றால் பெரியவன் என்று பொருள்
    காபிர் என்றால் NON MUSLIMS என்று பொருள்

    • வினவு ,

      [1]S.Ibrahim என்னிடம் கூறும் கருத்துகளை sensor செய்யாமல் வெளிஇடவும்.

      [2]அப்படி செய்வது TNTJ கோமாளி S.Ibrahim பற்றி வினவு வாசகர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள உதவுமே !

      • காபிர் S.Ibrahim,

        [1]காபிர் என்றால் NON MUSLIMS என்று பொருள் அல்ல !

        [2]உம்மை போன்று இஸ்லாம் மார்கத்தை பின் பற்றுவதாக கூறிகொண்டு அதற்கு மாறாக நடக்கும் கயவர்கள் தான் “காபிர்” என்போர் !

      • சரவணன் நீங்கள் என்னை பற்றி சொன்ன அதே அடைமொழியை தான் நானும் கூறியுள்ளேன் .ஆனால் நீங்கள் சொன்னதை வெளியிட்டுள்ள வினவு நான் சொன்னதை மறைத்திருக்கிறது .வினவு நான் யாரையும் கண்ணிய குறைவாக எழுதிவிடக் கூடாது என்பதில் உங்களைவிட என் மீது எச்சரிக்கையாக இருக்கிறது .நன்றிகள் வினவு

        • S.Ibrahim,

          என்னுடைய மீதி கேள்விகளுக்கு நீர் மறுப்பு தெரிவிக்காததால் நீர் காபிர் என்பதை ஏற்றுகொள்கீன்றீர் அல்லவா ?!

          Ref my questions and comments 94.1.1 and 96

        • ###காபிர் S.Ibrahim,

          பதில் சொல்ல துப்பு இன்றி “அரைவேக்காடு” என்று அடைமொழியுடன் அழைக்கும் மொக்கை யாரு ? சரவணனா ? இல்லை s .இப்ராஹிமா ? நீர் தானே ?

          ###காபிர்—>இஸ்லாம் மார்கத்தை பின் பற்றுவதாக கூறிகொண்டு அதற்கு மாறாக நடக்கும் கயவர்கள் தான் “காபிர்” என்போர் !

  87. S.Ibrahim,

    தொடா…., ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு பிடிக்கும் தமிழ் வாத்தியார் வந்துட்டார் !

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் துப்பு உமக்கு இல்ல , உமக்கு எல்லாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு பிடிப்பது ஒரு மயீர் பூடுங்க்கும் வேலையா ?

  88. காபிர் S.Ibrahim,

    [1]மாற்று கருத்து உடையவருடன் நீர் விவாதம் செய்யும் போது அதன் record [ஆடியோ/video ] அய் எடிட் செய்து தான் வெளிஇட வேண்டும் என்று திரு நபிகள் வடிவமைத்த இஸ்லாம் கூறுகின்றதா ? இல்லயே !

    [2]வினவில் 4/5/2014 அன்று TNTJ கோமாளிகள் record செய்த ஒலி,ஒளி காட்சிகளை முழுமையாக வெளிஇடாமல், அறிவு நாணயம் இல்லாமல் edit செய்து வெளி இட TNTJ குழுவே இஸ்லாம் மார்கத்தை பொறுத்த வரை “காபிர்” தான்.

    [3]பிறரை மரியாதை குறைவாக போசும் TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிம் “காபிர்” தான் .

    [4]ரிசானா வழக்கில் உண்மைக்கு புறம்பாக முரண்பட்டு பேசும் TNTJ தலைவர் PJ ,TNTJ துணைதலைவர் M.S சையது இப்ராஹிம் இருவருமே “கபிர்” தான் .

    [5] உம்மால் இதனை மறுக்க முடியுமா ?

    • *காபிர் S.Ibrahim,

      [1]மேல் உள்ள என் கேள்விகளுக்கு நீர் சொல்லாமல் காட்டும் மவுனம் உம் சம்மதம் என்று வினவு வாசகர்கள் எடுத்துகொள்ளலாம் அல்லவா ?

      [2]எனவே காபிர் ஆகிய “நீர் and TNTJ” இஸ்லாமிய சகோதரர்களுக்கு துரோகிகள் தானே ?

      *காபிர்–>இஸ்லாம் மார்கத்தை பின் பற்றுவதாக கூறிகொண்டு அதற்கு மாறாக நடக்கும் கயவர்கள் தான் “காபிர்” என்போர் !

      • Mr.saravavan, Kaafir is the one who does not accept Allah as god.
        But those who claim as Muslims and yet does not practise and do things against it is called munaafiq.

        • உங்கள் தகவலுக்கு நன்றி ஜிடேன் !

          திரு நபி அவர்களீன் நீதி நெறிமுறைக்கு எதீராக பொய் பேசும், ஆபாசமாக பேசும்,அறிவு நாணயம் இன்றி நடக்கும் TNTJ காரர்கள் காபிர்[Kaafir] அல்ல ஆனால் முனாபிக்[munaafiq] அப்படி தானே? !

  89. பழைய வரலாறுகள் அடங்கிய புத்தகமும் குர்ஆனும் ஒன்றா? குர்ஆன் காலத்திறுகும் வழிகாட்டி என்றலைலவா கூறுகிறீர்கள். ஆனால் இபுராகிம் தன்னையும் அறியாமல் குர்ஆனை பழைய வரலாறுகள் அடங்கிய புத்தகம் என்று தரம் இறக்கி உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார். மதவெறியில் சிந்திக்கவிடுவதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  90. S Ibrahim
    சவுதியை விடுங்கள் , நீங்கள் கூறுகிற சரியான இஸ்லாம் மார்க்க ஆட்சி இவ்வுலகில் எங்காவது இன்றைய நாளில் கடைப்பிடிக்கபடுகிறதா ? இஸ்லாம் என்ற பெயரில் ஆளப்படுகின்ற இத்தனை நாடுகளில் அவ்வாறு ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியாவிடின் இஸ்லாம் ஒரு failed religion எனக்கொள்ளபடலாமா?

  91. பழைய வரலாறுகள் அடங்கிய புத்தகமும் குர்ஆனும் ஒன்றில்லை என்பதால்தான் அந்த பழைய வரலாறுகளை பாதுகாக்கப்படும் பொழுது புனித நூலான குர் ஆன் பாதுகாக்கப் பட வேண்டாமா?

  92. பாதுகாப்பதல்ல பிரச்சனை. காலத்திற்கும் வழிகாட்டியாக உள்ளதில் தவரானதை நீக்குவதுதான் சரியாக இருக்கும். குறைந்தபட்சம் அந்த வசனங்கள் இப்பொழுது செல்லது என்றாவது அறிவிக்கவேண்டாமா? இல்லையேல் அதனை கையிலெடுப்பவர்கள் அதனையும் நடைமுறைபடுத்தினால் என்னாவது? இதோ ஆப்பிரிக்க தடியர்கள் குர்ஆன் அனுமதிப்பதாக கடத்திக்கொண்டு போன குழந்தைகளை அடிமைகாளாக விற்கப்போவதாக அறிவித்துள்ளனரே. அதனால் நீக்குவது அல்லது செல்லாது என்று அறிவிப்பது தான் சரியானது.அப்படி அறிவிக்க தயாரா இபுராகிம்?

    • பாராளுமன்ற படிக்கட்டுகளை வணங்குகிறார் பாரதமாதாவின் தவப்புதல்வன் என்கிறார் .
      ஆனால் பாரதத்தில் வறுமை ஒழிக்கப்படவில்லை
      திருட்டு முதல் தீண்டாமை வரை குற்றங்கள் ஒழிக்கப்படவில்லை
      மது ஒழிக்கப்படவில்லை .மாதுக்கள் மீது பாலியல் கொடுமை ஒழிக்கப்படவில்லை .குஜராத்தில் தலித் மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர் ,குஜராத்தில் படித்தவர்களின் சதவீதம் மற்ற பல மாநிலங்களைவிட குறைவு
      ஆனால் ராமர் கோயில் கட்டுவேன் என்கிறார் பொது சிவில் சட்டம் கொண்டு வருவேன் என்கிறார்
      இதைப்போலத்தான் ஆப்ரிக்கா தடியர்களையும் எடுத்துக் கொள்ள முடியும்

      • S.Ibrahim,

        [1]மோடி பெயரை கூறுவதற்கு உங்ளுக்கு என்ன அச்சம் !

        [2]உங்களின் நைஜீரியா போகோ ஹராம் சகேதரர்கள், குர்ஆன் அனுமதிப்பதாக கடத்திக்கொண்டு போன குழந்தைகளை அடிமைகாளாக விற்கப்போவதாக அறிவித்துள்ளனரே! குரான் நீதி படி அதில் என்ன தவறு ? அவர்களை ஏன் திட்டுகின்றீர்கள் இப்ராஹிம் ?

        [3]குரானை மேற்கோள் காட்டி உங்களின் நைஜீரியா போகோ ஹராம் சகேதரர்கள் செய்த புனித செயலை நீர் தவறு என்று கூறுவதன் மூலம் நீங்கள் குரானின் நீதி நெறி முறைகளில் இருந்து வழுவிச் சென்று இஸ்லாமுக்கு எதிராக காபிர் ஆனது ஏன் ?

        • S.Ibrahim,

          உங்கள் அறிவுக்கே , மனசாட்சக்கே விட்டு விடுகின்றேன் !

          திரு நபி அவர்களீன் நீதி நெறிமுறைக்கு எதீராக பொய் பேசும், ஆபாசமாக பேசும்,அறிவு நாணயம் இன்றி நடக்கும் TNTJ காரர்கள் காபிரா அல்லது முனாபிக்கா ?

  93. வினவு, nagaraj அவர்கள் அனுப்பிய youtube comedy pj us vadivelu போல நானும்

    அனுப்பினேன் ஆனால் அதை நிங்கள் வெளியிடவில்லை எதற்காக வெளியிடவில்லை என்று நான்

    கேட்ட போதும் அதையும் நிங்கள் வெளியிடவில்லை

  94. திருக்குர்ரானை எழுதியது யார் என்பது குறித்து வரலாற்று ரீதியான ஆய்வுகள் ஏதேனும் மேற்கொள்ளப் பட்டுள்ளனவா?

    • திருக் குர்ஆன் எழுதியது உஸ்மான் ரலி அவர்களின் ஆட்சிகாலத்தில் சில நபித்தோழர்கள்

    • தொகுத்தது, சுவடிகளில் எழுதியது யார் என்ற அர்த்தத்தில் கேட்கவில்ல்லை. திருக்குர்ரானில் உள்ளவை எவருடைய கருத்துக்கள் என்ற பொருளில் கேட்டேன். “எழுதியது” என்பதை “இயற்றியது” என திருத்தி வாசிக்கவும். இது இறைவன் சொல் என்பது மத ரீதியான நம்பிக்கை. “திருக்குர்ரானை இயற்றியது யார்?” என்பது குறித்து வரலாற்று ரீதியான ஆய்வுகள் நடந்துள்ளனவா?

  95. உசைன் போல்ட்அய் வெல்லும் TNTJ S.இப்ராகிம்!
    ——————————————————————————————

    [1]S.இப்ராகிம் பதில் சொல்லாமல் ஓடும் வேகத்தை பார்த்தால் ,அடுத்த ஒலீம்பீக் ஓட்ட பந்தயத்தில் அனைத்து விதமான ஓட்ட பந்தயத்திலும் [ sprints, middle and long-distance events, and hurdling ]TNTJ காரர்கள் முதல் வந்து இந்தியாவுக்கு நிறைய தங்க பதக்கம் வாங்கி தந்து என் நண்பன் உசைன் போல்ட்அய் யும் வென்று விடுவார்கள் போல் உள்ளது !

    [2] முயற்சி செய்யுங்கள் S.இப்ராகிம் ! முயன்றால் முடியாதது ஏதும் இல்லை !

    Note :

    ### Bolt runs the 100 metres at an average speed of 37.6 km/h
    ###100 metres 9.58sec
    ###150 metres 14.35sec
    ###200 metres 19.19sec
    ###300 metres 30.97sec
    ###400 metres 45.28sec
    ###4 × 100 metres relay 36.84sec

  96. அப்படி ஆய்வுகள் செய்ய முனைந்தவர்கள்,இது போன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது குர்ஆன் என்று நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாகி விட்டார்கள்

    • நீங்கள் குறிப்பிடும் வகை நபர்களுக்கு சில உதாரணங்கள் தர முடியுமா? நன்றி.

      • silent ஆ கேள்வி கேட்டு பச்ச புள்ளை S.Ibrahim ஐ இப்படி வம்பில் மாட்டி விட்டுடிங்களே வெங்கட் !

    • காசே தான் கடவுளடா படத்தில் ஒரு வசனம் வரும்.

      டீக்கடை நடத்தும் தேங்காய் சீனிவாசன் சுவாமி சுக்கிரானந்தா என்ற பெயரில் மனோரமா வீட்டுக்கு கொள்ளையடிக்க வந்திருப்பார். அப்போது…

      மனோரமா: சுவாமி, உங்களை பார்க்கிறதுக்காக DSP இங்கே வர ஆசைப்படுகிறார்.

      தே.சீனிவாசன்: (ஷாக் ஆகியபடி), அவரு எதுக்குங்க என்னைய வந்து பாக்கோணும்?

      மனோரமா: இல்லை சுவாமி, DSP சார், ரொம்ப தீவிர ஆன்மீக பக்தர், அவருக்கு ஆன்மீகத்தில் சில சந்தேகங்கள் இருக்கிறதாம், அதான் உங்களை பார்த்து கேட்டு தெளிந்து கொள்ளலாம்னு ஆசைப்படுறார்.

      தே.சீனிவாசன்: முடியாது, சந்தேகம் இருக்கிறவன் ஆன்மீகவாதியா இருக்க முடியாது, அவரை நான் பார்க்க முடியாது.

      ——————————

      ஆய்வுக்கு அப்பாற்பட்டது குர்ஆன் என்று மேலே நண்பர் இப்ராகிம் சொல்வதை பார்த்தால் எனக்கு இந்த பழைய காமெடி நினைவுக்கு வருகிறது. 🙂

      • தமிழ் சினிமாவின் தலை சிறந்த காமெடி காட்சிகளில் இந்த சுக்ரானந்தா காமெடியும் ஒன்று என எண்ணுகிறேன். தேங்காய் சீனிவாசன், மனோரமா, வெ ஆ மூர்த்தி, சுருளி என செம செட்டப். மங்களும் உண்டாகட்டும், மங்களும் உண்டாகட்டும்!

      • கற்றது கையளவு,

        என்ன ஊருங்க நீங்க? பச்ச புள்ளை S.Ibrahim I இப்படி கலாக்கின்றீர்களே !

      • எச்சரிக்கை p.joseph!,

        பச்ச புள்ளை S.Ibrahim உங்கள் கூரல் கேட்டு வினவுக்கு மீண்டும் வராமல் போனால் அதற்கு நீங்கள் தான் முழு பொறுப்பு ! 🙂

  97. பாராளுமன்ற படிகட்டு அது இதுன்னு உளர வேண்டாம். இப்போ அடிமை பற்றி வசனம் செல்லுமா செல்லாதா? அதை சொல்ல இபுராகிமுக்கு ஏன் பயம்?

    • நாட்டு வேங்கைக்கு ஒரு வேண்டுகோள் ![regarding S.Ibrahim]
      ——————————————————————————————-

      நாட்டு வேங்கை,

      [1]உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் போது S.Ibrahim, நைஜீரியா போகோ ஹராம் தடியர்களை மோடியுடன் ஒப்புமை செய்து “இதைப்போலத்தான் ஆப்ரிக்கா தடியர்களையும் எடுத்துக் கொள்ள முடியும்” என்று கூறுவதன் பொருள் என்ன ?

      [2]S.Ibrahim அவர்கள் “குரானில் உள்ள அடிமை பற்றி வசனம் செல்லாது” என்று கூறுவதாக தானே பொருள் !

      [3] குரானை மேற்கோள் காட்டி திரு S.Ibrahim அவர்களீன் நைஜீரியா போகோ ஹராம் சகேதரர்கள் செய்த புனித செயலை S.Ibrahim தவறு என்று கூறுவதன் மூலம் S.Ibrahim குரானின் நீதி நெறி முறைகளில் இருந்து வழுவிச் சென்று இஸ்லாமுக்கு எதிராக காபிர் அல்லது முனாபிக் ஆனது தானே உண்மை ?

      [4]S.இப்ராகிம் “பதில் சொல்லாமல் ஓடும் வேகத்தை பார்த்தால்” ,அடுத்த ஒலீம்பீக் ஓட்ட பந்தயத்தில் அனைத்து விதமான ஓட்ட பந்தயத்திலும் அவர் முதல் வந்து இந்தியாவுக்கு நிறைய தங்க பதக்கம் வாங்கி தந்து விடுவார் போல் உள்ளது ! எனவே அவரை disturb செய்யாமல் practice செய்ய அனுமதிக்கும் படி நட்புடன் உங்களை கேட்டு கொள்கின்றேன் ! 🙂

      ————————————————————————
      நாட்டு வேங்கை asked://பாதுகாப்பதல்ல பிரச்சனை. காலத்திற்கும் வழிகாட்டியாக உள்ளதில் தவரானதை நீக்குவதுதான் சரியாக இருக்கும். குறைந்தபட்சம் அந்த வசனங்கள் இப்பொழுது செல்லது என்றாவது அறிவிக்கவேண்டாமா? இல்லையேல் அதனை கையிலெடுப்பவர்கள் அதனையும் நடைமுறைபடுத்தினால் என்னாவது? இதோ ஆப்பிரிக்க தடியர்கள் குர்ஆன் அனுமதிப்பதாக கடத்திக்கொண்டு போன குழந்தைகளை அடிமைகாளாக விற்கப்போவதாக அறிவித்துள்ளனரே. அதனால் நீக்குவது அல்லது செல்லாது என்று அறிவிப்பது தான் சரியானது.அப்படி அறிவிக்க தயாரா இபுராகிம்?//
      ———————————————————————————
      S.Ibrahim replayed://பாராளுமன்ற படிக்கட்டுகளை வணங்குகிறார் பாரதமாதாவின் தவப்புதல்வன் என்கிறார் .
      ஆனால் பாரதத்தில் வறுமை ஒழிக்கப்படவில்லை
      திருட்டு முதல் தீண்டாமை வரை குற்றங்கள் ஒழிக்கப்படவில்லை
      மது ஒழிக்கப்படவில்லை .மாதுக்கள் மீது பாலியல் கொடுமை ஒழிக்கப்படவில்லை .குஜராத்தில் தலித் மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர் ,குஜராத்தில் படித்தவர்களின் சதவீதம் மற்ற பல மாநிலங்களைவிட குறைவு
      ஆனால் ராமர் கோயில் கட்டுவேன் என்கிறார் பொது சிவில் சட்டம் கொண்டு வருவேன் என்கிறார்
      இதைப்போலத்தான் ஆப்ரிக்கா தடியர்களையும் எடுத்துக் கொள்ள முடியும்//
      ——————————————————————————–

  98. இங்கபாருடா! 25000 முதல் போட்டு 30 இலட்சம் சம்பாதித்து முதலாளியா ஆயிட்டாரா தொழிலாளி. இபுராகிம் காலமெல்லாம் உளருவேன் என்று ஏதேனும் சபதம் உண்டா?

    • சாகித்,

      ஏன் இப்படி ஒரு பச்ச புள்ளையை [S.Ibrahim] ஆளு ஆளுக்கு கிள்ளி விடுகின்றீர்கள் ? கொழந்தைக்கு வலிக்கும் அப்புரன் கொழந்தை ஓ ஊ னு அழபோவுதுங்க !

    • சாகீத்து ////இங்கபாருடா! 25000 முதல் போட்டு 30 இலட்சம் சம்பாதித்து முதலாளியா ஆயிட்டாரா தொழிலாளி. இபுராகிம் காலமெல்லாம் உளருவேன் என்று ஏதேனும் சபதம் உண்டா?////
      மில்லியன் ஆண்டு கனவு கம்யுனிச கொள்கையாளர்கள் 25000 முதலீடு செய்ததும் 30லட்ச ரூபாயை சம்பாதித்து முதலாளி ஆகிவிட கனவு காண்பது ரொம்பவும் அதிக்கப்படியான அபரிதம் .
      ஆனால் நேர்மையான உழைப்பால் அப்படி முதலாளி ஆனவர்கள் பலரை என்னால் காண முடியும் .எல்லோரும் அப்படி ஆவார்களா ?என்பது கம்யுனிச கேள்வி என்றால்

  99. முடிவு 1:
    ————————-

    [1]திரு நபிகள் வடிவமைத்த குரானில் உள்ள “—–அடிமை பற்றி வசனம்—-” தற்காலத்துக்கு செல்லாது என்று திரு நாட்டு வேங்கை அவர்களால் நிருபிக்க பட்டு உள்ளது

    [2] TNTJ வின் முதல் முக திரை[first layer of face mask ] கிழிந்தது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க