privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதிருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு - படங்கள்

திருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு – படங்கள்

-

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பு தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு” என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரையும் அழைக்கும் விதமாக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக (22-8-2014) அன்று காலை பல்வேறு கல்லூரிகளில் பிரசுர விநியோகம் செய்யப்பட்டது. கல்லூரி பேராசிரியர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

மோடி அரசு அகண்ட பாரத கனவோடு, இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துத்துவா கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மீட்பு நடவடிக்கைகள், தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு, தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபு இவை குறித்து விளக்கி பேசி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

குறிப்பாக, பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை விளக்கி திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பெரியார் போல் வேடமணிந்து மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பிரசுர விநியோகம் செய்து கருத்தரங்கிற்கு பிரச்சாரம் செய்யப்பட்டது. பார்ப்பனிய மரபுக்கு எதிராக தந்தை பெரியாரே நேரில் வந்து பிரச்சாரம் செய்தது போல் உணரப்பட்டது. பெரியார் வேடமணிந்தவர் கல்லூரிக்கு வரும் மாணவர்களை அழைத்து, “பார்ப்பனிய மரபுக்கு எதிராகவும், சமஸ்கிருதத்திற்கு எதிராகவும், தமிழ்மொழியை மீட்கவும் நாம் போராட வேண்டும்” என்று பேசியது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கல்லூரிக்கு வரும் பேராசிரியர்களும் பெரியார் வேடமணிந்ததைப் பார்த்து அவரிடம் கைகுலுக்கி, கருத்தரங்கிற்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர். இதே போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் பெரியாரே நேரில் வந்து பிரசுரம் கொடுத்தது போல் உணர்ந்து மரியாதையுடனும் வாங்கிக் கொண்டனர். பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ் மரபு மீட்பு என்ற தந்தை பெரியாரை நினைவு கூறும் வண்ணம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அன்று மாலை நடந்த (22-08-2014) கருத்தரங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக ம.க.இ.க தோழர். ஜீவா வரவேற்புரையாற்றினார்.

2.jeeva

பேராசிரியர். கருணாநிதி (UDC கல்லூரி) இவர் வைத்ததிருந்த நூல்கள் அனைத்தையும் நமது அமைப்பிற்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

4.karunanithi

அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பேசுகையில், “ம.க.இ.கவை 30 ஆண்டுகளாக எனக்கு தெரியும். இவர்களது பிரச்சாரம், கலைநிகழ்ச்சி, பத்திரிக்கை அனைத்தையும் பார்க்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் உணர்வுப்பூர்வமாக போராடக் கூடியவர்கள் இவர்கள் தான். நான் செய்தது உதவியல்ல (நூல்கள்), ஒவ்வொரு போராளிகளுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை” என்று கூறினார்.

தலைமை உரை : தோழர்.காளியப்பன்

3.kaliyappan

”யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதெங்கும் காணோம்” என்று பாரதி பாடினார். இன்னும் பல பேர் தமிழ் மொழியைப் பற்றிப் பாடினார்கள். இவற்றையெல்லாம் அறிமுகப் படுத்தியவர் கால்டுவெல். இதுவரைக்கும் சமஸ்கிருதம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று பேசி வந்ததை முறியடித்து, அருமையான மொழி தமிழ் மொழிதான் என்ற உண்மையை எழுதினார். சமஸ்கிருதமே தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்டது. இந்தியாவிலேயே நாம் முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் கால்டுவெல்.

இந்த உண்மைகளை அழித்து அறிவியல் ரீதியில் எந்த ஒரு விசயத்தையும் பார்க்க கூடாது என்று மூர்க்கத்தனமாக எதிர்ப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். சாதி அமைப்பு முறை சரியானது என்பது இவர்களது கொள்கை. சாதி, மத மோதலை உருவாக்குவது அதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது, அகண்ட பாரதம் என்கின்ற கோட்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டு்ம் என்று துடிக்கிறார்கள். இந்த தருணத்தில் கால்டுவெல் நமக்கு கொடுத்த செல்வத்தை பயன்படுத்தி இந்துத்துவ கருத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றார்.

கருத்துரை : பேரா. அரசு

6.arasu

ம.க.இ.க தோழர்களை பல ஆண்டுகளாக போராட்டம், பிரச்சாரம், ஒலிப்பேழை, கலைநிகழ்ச்சி, பத்திரிக்கை இவற்றின் மூலம் நன்கு அறிவேன். கால்டுவெல்லுக்கு கருத்தரங்கம் நடத்துவதில் பெருமைப்படுகிறேன். கால்டுவெல்லின் பின்புலத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம். கி.மு 2-ம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றில் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், அறிவியல் அறிஞர்கள் கிடைத்தார்கள். பிறகு உலகம் முழுவதும் காலனிய ஆதிக்கத்தை 16-ம் நூற்றாண்டில் இருந்து காலனியவாதிகள் கொண்டுவந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்வேறு அறிவியல் நிகழ்வு ஏற்பட்டன. பண்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பா நாடுகளில் மொழி பற்றிய ஆய்வை கையில் எடுத்திருக்கிறார்கள். மனிதர்கள் பேசும் மொழிகள் பற்றி ஆராய்ச்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் தான் கால்டுவெல் வளா்ந்தார்.

ஐரோப்பிய காலனிய ஆட்சி உருவான பிறகு 1784-ல் வில்லியம் ஜோன்ஸ் மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்தியாவும் சமஸ்கிருதம் வேதம் பற்றிய இந்தியவியல் ஆராய்ச்சி செய்தது. இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு வேதம், இராமாயணம், சமஸ்கிருதம் அடிப்படை என்று கூறினார்கள். அயோத்தியில் இராமன் பிறந்தான் என்று உச்ச நீதி மன்றம் சொல்வது என்றால் இதை விட கேவலம் எதுவும் இல்லை. பார்ப்பனிய கருத்தைதான் இந்துத்துவ கருத்து என்கிறார்கள்.

இந்த வரலாற்றுச் சூழலில் கால்டுவெல்லின் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும். மொழி பற்றிய ஆய்வில் கால்டுவெல்லின் பங்களிப்பை நாம் மறக்க முடியாது. 1830-ல் தொடங்கி பழங்குடி மக்கள் பேசக் கூடிய மொழி எவை. அவை பழமையான மொழியா என்று ஆய்வு செய்தார் கால்டுவெல். 24 திராவிட மொழிகள் பேசியதை கண்டு பிடித்தார். ஏறக்குறைய 37 திராவிட மொழிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 75 சதவீதம் பேர் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், 25 சதவீதம் ஆரிய மொழி பேசக் கூடியவர்கள் என்றும் அவர் கண்டுபிடித்தார்.

ஒடுக்கப்பட்ட பள்ளர், பறையர், சக்கிலியர் போல அதே முறையில் சாணார்களும், இதர சூத்திர மக்களும் ஒடுக்கப்பட்டனர். 200 ஆண்டுகளில் தான் மாற்றம் ஏற்றப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களை ஆரியர்கள் அடிமையாக்கி வைத்துள்ளனர். இவர்களையும் சேர்த்து விடுதலை பெற செய்ய வேண்டும் எழுதினார் கால்டுவெல்.

19-ம் நூற்றாண்டின் இறுதியில் அயோத்திதாசர் சூத்திரர் பற்றி எழுதுகிறார். ஆனால் கால்டுவெல் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அயோத்திதாசர் சொல்லும் திராவிட மொழி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம். பார்ப்பனிய சார்ந்த கருத்துக்களை இந்து மதத்தை ஒழிப்பதன் மூலம் தான் தமிழ் விடுதலை பெறும் என்று எந்த சமரசமும் இன்றி எழுதினார். கால்டுவெல், அயோத்திதாசர், பெரியார் பேசிய திராவிட கருத்துக்கள் எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு கருத்துக்கள். எனவே, நாமும் பார்ப்பனிய கருத்துக்களை எதிர்த்து போராட வேண்டும் என்று பேசினார்.

புலவர். பொ. வேலுசாமி

8.velusamy

கால்டுவெல்லை பற்றி தமிழ் வரலாற்றில் அதிகமாக பேசப்படவில்லை. 17,18 நூற்றாண்டில் வடமொழி தான் தமிழுக்கு அடிப்படை என்று எழுதினர். இதை திருத்தி தமிழ் மொழி தான் அனைத்திற்கும் அடிப்படை என்று நிரூபித்தார் கால்டுவெல்.

ராஜராஜன் காலத்திலேயே தமிழ் மொழியில் படித்தார்களா என்று சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழியில் படித்ததற்கான சான்றுகள் உள்ளன. ராஜராஜ சோழனுடைய குருவாக பார்ப்பனர்கள் இருந்தனர். இதனால் தமிழ் படிப்பவர்கள் இல்லாமல் போனதால் ஓலைச்சுவடிகள் கேட்பாரற்று போனது.

1888-ல் உ.வே. சாமிநாதர் ஐயர் தமிழர்களுக்கு தனி அடையாளம் பிறந்தது என்று கூறினார். நமது கலாச்சார பண்பாடு வாயிலாகத்தான் நமது அடையாளம் கண்டறியப்படும். மொழி ஒரு இனத்திற்கு அடையாளம் என தத்துவார்த்த ரீதியாக நிலை நிறுத்தியவர் கால்டுவெல். தமிழுக்காக போராடிய மாவீரனை நினைவு கூா்வது தேவையா இல்லையா என்று முடிவு செய்யுங்கள் என்று பேசினார்.

பாராளுமன்றத்திலேயே இந்துத்துவா தான் இந்துவின் அடையாளம் என பகிரங்கமாக பேசுகிறார்கள். மறுபுறம் தமிழினவாதம் பேசுகிறவர்கள். பெரியாரை கொச்சைப்படுத்தி பேசும் போக்கு உள்ளது. சீமான், இராமதாசு போன்ற தமிழ் பற்றி பேசக்கூடியவர்கள் சாதிக் கட்சிகளுக்கு அங்கீகாரம் தருவது,சாதி பெருமையை பேசுவது, சாதி நிலை புதுப்பிப்பது என்பது தான் உள்ளது. இவா்களுடன் இன்று ஒன்று சேர்வது தான் பார்ப்பனிய கொள்கை.

நாம் வேதமறுப்பு, சமஸ்கிருத மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என போராட வேண்டும் என்று இறுதியாக தோழர். காளியப்பன் பேசினார்.

மேலும் இக்கருத்தரங்கத்தை சிறப்பிக்கும் வண்ணம் கல்லூரி மாணவர் பு.மா.இ.மு உறுப்பினர் தோழர். ராஜா, தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கவிதை வாசித்தார்.

9.raja

இக்கருத்தரங்கத்திற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் சரவணன் நன்றியுரையாற்றினார்.

10.saravanan

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
திருச்சி
9095604008

  1. வினவு, இதுவரை நடத்தப்பட்ட கால்டுவெல் நினைவு குறித்த கூட்டங்களில் அறிஞர்கள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் ஆற்றிய உரைகளை அப்படியே ஒலி நாடாவாக உங்கள் வெப்சைட்டில் வெளியிட்டால் அனைவரூம் கேட்டுப் பலன் பெற முடியும். வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்பன், இராஜேஸ் குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க