privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவர் உயிரை காவு வாங்கும் தனியார் பள்ளிகள் - தொகுப்பு

மாணவர் உயிரை காவு வாங்கும் தனியார் பள்ளிகள் – தொகுப்பு

-

லாரல் பள்ளி
லாரல் பள்ளி

னியார் கல்வி நிறுவனங்கள் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் கொள்ளைக் கூடாரங்களாக மட்டுமல்ல; மாணவர்களின் உயிரையும் காவு வாங்கும் கொலைக்கூடங்களாகவும் மாறிவருகின்றன என்பதைத்தான் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மர்ம மரணங்களும் தற்கொலைச் சாவுகளும் உணர்த்துகின்றன.

நமது கவனத்திற்கு வந்த சில சம்பவங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம். பெட்டிச் செய்தி அளவிற்குக்கூட, இடம்பெறாமல் மூடி மறைக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கக்கூடும்.

மாணவர்களை அவமானப்படுத்துவது அவர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள்:

பூஜா, மணலி
பூஜா, மணலி

எம்.அருண்ராஜ், 12ஆம் வகுப்பு
லாரல் மேநிலைப்பள்ளி,
குரும்பகாடு, புதுக்கோட்டை

கல்வி கட்டணம்20,000 கட்ட தாமதமானதால் அவமானப்படுத்தப்பட்டதன் விளைவாக விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
(தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 04.02.2014)

பூஜா, எட்டாம் வகுப்பு.
SRFவித்யாலயா பள்ளி,
சி.பி.எல். நகர், மணலி, சென்னை.

கல்வி கட்டணம் கட்டாததால் வகுப்பு வெளியே நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் தூக்கில் தொங்கினார். (தினகரன், 23.03.2014)

தமிழரசன், கூடுவாஞ்சேரி
தமிழரசன், கூடுவாஞ்சேரி

தமிழரசன், எட்டாம் வகுப்பு.
தனியார் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி.

மதிப்பெண் குறைந்ததால் வேறுபள்ளியில் சேர்க்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, 02.05.2014)

திவ்யா, பொறியியல் மாணவி.
வேல்டெக் பொறியியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

விடுதியில் கைப்பேசி பயன்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி விடுதிக்காப்பாளர் மாணவிகள் மத்தியில் தரக்குறைவாக பேசியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹேமலதா, பொறியியல் – 4ஆம் ஆண்டு மாணவி
சத்யபாமா பல்கலைக் கழகம், சென்னை.

திவ்யா, வேல்டெக்
திவ்யா, வேல்டெக்

விடைத்தாளில் தேர்ச்சிக்கான மதிப்பெண் வழங்குமாறு எழுதியதற்காக சக மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டார். பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மன்னிப்புக் கோரினர். பின்னரும், ஒருநாள் முழுவதும் முதல்வர் வளாகத்தில் நிற்கவைத்து அவமானப்படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அருண்குமார், 12ஆம் வகுப்பு.
எஸ்.ஆர்.வி. மேநிலைப்பள்ளி,
ராசிபுரம், நாமக்கல்.

தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றார் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெங்கடேசன், 12ஆம் வகுப்பு.
குறிஞ்சி மேநிலைப்பள்ளி, நாமக்கல்.

ஆசிரியைக்கு ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தற்காக ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டதோடு, பள்ளியைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(ஜன-4, 2014)

ஹேமலதா, சத்யபாமா
ஹேமலதா, சத்யபாமா

வினோதினி, பி.டெக்.முதலாமாண்டு.
தனியார் பொறியியல் கல்லூரி, மதகப்பட்டி, புதுச்சேரி.

பேராசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.

பிரபாகரன், பாலிடெக்னிக் மாணவர்.
ஏழுமலை பாலிடெக்னிக், விழுப்புரம்.

பாடம் நடத்தும் பொழுது ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பதற்காக ஆசிரியரால் அடித்தே கொல்லப்பட்டார்.

சுஜீத், பத்தாம் வகுப்பு.
வீராநல்லூர், திருநெல்வேலி.

பள்ளியில் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, 28.08.2012)

வினோதினி, புதுச்சேரி
வினோதினி, புதுச்சேரி

தட்சிணாமூர்த்தி, 12ஆம் வகுப்பு.
விருதகிரி எஜூகேசனல் டிரஸ்ட் மேநிலைப்பள்ளி,விருத்தாசலம்.

பாடச்சுமை கொடுமையின் காரணமாக பள்ளி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
(தினத்தந்தி, 28.06.2012)

எம்.ராகுல், 10ஆம் வகுப்பு.
இ.எல்.எம். பள்ளி, புரசைவாக்கம், சென்னை.

பள்ளியில் சட்டையை கழட்டி ஆசிரியர் அடித்து அவமானப்படுத்தியதால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
(தினமலர், 3.09.2011)

வைஷ்ணவி, எட்டாம் வகுப்பு.
சிறீ சங்கரவித்யாலயா கேந்த்ரா மெட்ரிக் பள்ளி,
திருவொற்றியூர், சென்னை.

காலையில் பள்ளிக்குச் சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை; இரவு 7.30 மணியளவில் பள்ளியின் ஒவ்வொரு அறையாக பெற்றோர்கள் தேடிக்கொண்டிருக்கும் பொழுதே, மர்மமான முறையில் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து தம் பெற்றோர்கள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்துபோனார்.

கொலையென்று சந்தேகிக்கத் தக்க வகையில் நிகழ்ந்துள்ள மர்ம மரணங்கள்:

வைஷ்ணவி, திருவொற்றியூர்
வைஷ்ணவி, திருவொற்றியூர்

போஸ், ஆல்வின் ஜோஸ், பரதன், மற்றும் ராம்குமார்.
செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி, கடலூர்.

கடந்த ஓராண்டு காலத்தில் அடுத்தடுத்து, கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

வினோத்,
குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.

தண்ணீர்த் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கு முன்னர் இதே பள்ளியில் 4 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

மோகன்குமார், 11-ஆம் வகுப்பு
நாமக்கல் குறிஞ்சி மேநிலைப்பள்ளி

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(செப்.14,-2013)

ராகுல் சென்னை
ராகுல் சென்னை

பரணிதரன், 12ஆம் வகுப்பு.
எம்.ஏ.எம்., மேல்நிலைபள்ளி, மேட்டூர்.

பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்த மரணங்கள்:

சந்தியா
வித்யாலயா மெட்ரிக் பள்ளி,
தொட்டகாஜனூர், தளவாடி.

பள்ளி மைதானத்தில் நிர்வாகிகள் ஜீப் ஓட்டி பழகியபோது ஜீப் மோதி பலியானாள்.
(தினகரன், 8.01.2013)

தீபக், 9-ஆம் வகுப்பு.
சென்னை

பள்ளி பேருந்து கவிழ்ந்து மரணமடைந்தான்.
(தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 27.06.13)

தமிழரசன், கூடுவாஞ்சேரி
தமிழரசன் தற்கொலை, கூடுவாஞ்சேரி

இரண்டாம் வகுப்பு மாணவன்.
புனித மிக்கேல் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, டி.அத்திப்பாக்கம், திருக்கோவிலூர்.

பள்ளி வளாக தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து பலியானான்.
(தினமலர், 25.06.2013)

ரஞ்சன், நான்காம் வகுப்பு.
சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளி

நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோனான்.
(தினகரன், 18.08.2012)

சுருதி, இரண்டாம் வகுப்பு.
சென்னை சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து இறந்து போனாள்.
(தினத்தந்தி, 26.07.2012)

பிரபாகரன் கொலையைத் தொடர்ந்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
பிரபாகரன் தற்கொலையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

கார்த்திக்கேயன், எல்.கே.ஜி.
தனியார் பள்ளி,
பெருமூளை ரோடு, திட்டக்குடி.

தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து போனான். (தினகரன், 22.06.2011)

கிஷோர், 2ஆம் வகுப்பு.
புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி,
கங்கணாங்குப்பன், கடலூர்.

பள்ளி சுவர் இடிந்து விழுந்து மரணம்.
(தினமணி, 08.10.2011)

வ்வித உரிமைகளுமற்ற கொத்தடிமைகளைப் போல மாணவர்களை நடத்துவது; மாணவர்கள் இழைக்கும் சிறு தவறுகளைக் கூட பெரிய கிரிமினல் குற்றம் போல சித்தரித்து அவமானப்படுத்துவது; மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துது, நூறு சதவிகித தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களை கசக்கிப்பிழிவது கடும் மன உளைச்சலுக்குள்ளாக்குவது போன்ற தனியார் கல்வி முதலாளிகளின் வக்கிரமான நடவடிக்கைகள்தானே மாணவர்களின் உயிரைப்பறித்திருக்கின்றன.

“புள்ள இங்கிலீஸ் படிக்கட்டுமே” என்றுதான் தனியார் பள்ளிகள் மீதான மயக்கத்தில் தம் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர் குடந்தை குழந்தைகளின் பெற்றோர்கள். “இலட்சமாக இலட்சமாக கொட்டியது; உன் பிணத்தைப் பார்ப்பதற்குத்தானா?” என்று அழுது புலம்புகிறார், சத்யபாமா பல்கலைக் கழக மாணவி ஹேமலதாவின் தாய்.

தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவ்வளவுக்குப் பின்னரும், தனியார் பள்ளியின் மீதான மோகம் குறையவில்லையென்றால், இன்னும் எத்தனை பிணங்களைப் பார்த்த பின்னர் கலையும்? சொந்தப் பிள்ளைகளை இழந்தால்தான் புத்திவருமென்றால், சொல்வதற்கொன்றுமில்லை!

தொகுப்பு.

திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்.
9345067646

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க