privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைஅவாக்கள் யாருமில்லை – ஃபேஸ்புக் பிள்ளையார் பதிவுகள்

அவாக்கள் யாருமில்லை – ஃபேஸ்புக் பிள்ளையார் பதிவுகள்

-

1. உண்மைத்தமிழன் (truetamilan)

பிள்ளையார் பெயரில் நச்சைப் பரப்பும் இந்துத்துவ அமைப்புகள்
பிள்ளையார் பெயரில் நச்சைப் பரப்பும் இந்துத்துவ அமைப்புகள்

தமிழ்க் கலாச்சாரத்திலேயே இல்லாத இந்த பிள்ளையார் கரைப்பு.. ஊர்வலமாகக் கொண்டு செல்வது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் பாரதீய ஜனதா கட்சி தலையெடுத்த பின்புதான் நாட்டில் அதிகமாகப் பரவியது.. மத பின்னணியில் ஆட்சியைப் பிடித்தவர்கள் செய்த கோலம் இது..!

ஊர்வலத்துல தண்ணிய போட்டுட்டு ஆடிக்கிட்டே போயிருக்காங்க..! ஆக… ஒரு பக்கம் தண்ணியை போட்டுட்டு தலையை விரிச்சுப் போட்டு கிராமத்துல பிள்ளையாரோட அப்பன் முனியாண்டியை பிரியாணி விருந்து போட்டு வணங்குற ஒரு கூட்டம்.. இன்னொரு பக்கம் இப்படி புல்லா ஒரு கட்டுகட்டிட்டு.. ஒரு ஆஃப் அடிச்சிட்டு மவனைத் தூக்கிட்டு போய் கடல்ல தூக்கி வீசுற எந்தக் கொள்கையுமில்லாத இன்னொரு கூட்டம்..!

பக்தியை நல்லா வளர்க்குறாய்ங்கய்ய நாட்டுல.!

பிள்ளையாரப்பா உன்னால் முடிந்தால் இவர்களை தண்டித்து பார்..! நீயே இந்த நாட்டுல இருக்க மாட்ட..!!!

2. பிரகாஷ் ஜே பி (prakash.jp.73)

இன்று காரில் “U” டேர்ன் சிக்னலுக்காக காத்துகொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தங்களின் இருசக்கரவாகனத்தில் அதே சிக்னலுக்கு காத்திருந்தனர்… கணவன், மனைவி, பிள்ளைகள் (பர்தா & தொப்பி அணிந்து)…

மசூதிக்கு அருகில்
மசூதிக்கு அருகில் வலிந்து நிறுத்தப்படும் பிள்ளையார் ஊர்வலம்.

அப்போது பக்கத்தில் ஒரு மினி டெம்போவில் ஒரு பத்து பேர் காவி துண்டுகள் அணிந்து, ஆட்டமும் பாட்டமுமாய், அந்த இரு சக்கர வாகனத்தை மிக நெருங்கி வந்து, அவர்களை பார்த்து ஏளனமாய் சத்தத்துடன் ஊளையிட்டு, நேராக சென்றுவிட்டது… விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு வருகிறார்கள் போல்..

இடது பக்க சாலையில் நேராய் செல்ல காலியாக இருந்தபோதும், இவர்கள் நின்றுகொண்டிருந்த வலதுபக்கம் தேவையில்லாமல் நெருங்கிவந்தனர்… அந்த முஸ்லிம் குடும்பம், அமைதியாய், தலைதொங்க, மீடியன் பக்கமாக தள்ளிவந்து நின்றுகொண்டார்கள்….

இன்று பார்த்த இதுபோன்ற பல மினி டெம்போக்களில் “அவாக்கள்” யாரும் கிடையாது.. நமது ஆட்கள்தான் இப்படி வழிதவறி ஹிந்துத்துவா அடியாட்களாய் இருக்கிறார்கள்…

3. கார்ட்டூனிஸ்ட் பாலா (cartoonistbala)

(பழைய மும்பை அனுபவம்) பாவம் அந்த பிள்ளையார்!
—————————————
மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. இதேப்போன்ற ஒரு விநாயகர் சதுர்த்தியின் மழை நாளில் தான் அவரை நான் பார்த்தேன்.

பத்தாண்டுகள் இருக்கும். அப்போது `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் உதவி ஆசிரியராக பணியிலிருந்தேன். அன்றைய பணி முடிந்து நானும் அலுவலக சகாக்கள் இருவரும் தாதர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தோம். நேரம் இரவு மணி பத்தரை இருக்கும். லைட்டாக மழை தூறிக் கொண்டிருந்து.

தாதர் ரயில் நிலையத்தில் எல்லா நாளும் கூட்டம் அள்ளும். அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் அழகான குட்டி பிள்ளையார் சிலைகளை தங்கள் பகுதிக்கு ரயில் கொண்டு செல்ல காத்திருந்தனர்.

சில நிமிடத்தில் சர்ச்கேட் டூ போரிவலி ரயில் வந்தது. சிலைகளை வைத்திருந்த குரூப் ஒன்று முண்டியடித்து ஏறியது. அவர்களுக்குப் பின்னாடியே என் சகாக்கள் இருவரும் ஏறிவிட்டிருந்தனர்.

நான் மட்டும் கூட்டம் உள்ளே போகட்டும். வாசல் ஓரம் நின்றுக் கொள்ளலாம் என்று வாசலை ஒட்டி இருந்த சிறு கைப்பிடியை பிடித்துக் கொண்டு ரயிலில் ஒரு காலும் பிளாட்ஃபார்மில் ஒரு காலும்வைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.

ரயில் கிளம்புவதற்கான `பூம்ம்ம்ம்ம்ம்..’ அலாரம் ஒலித்தது. மெதுவாக ரயில் நகர ப்ளாட்ஃபார்மிலிருந்த எனது காலை எடுத்து ரயில் வைக்க முயன்றபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.

மெலிந்த உடலும், பரட்டை தலையும், தாடியும், அழுக்கு உடையுமாக இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் ரயிலின் உள்ளிருந்த கூட்டத்தை பிளந்தபடி மிதித்து தூக்கி வீசப்பட்டார்.

ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் மிதித்து வீசப்பட்டது நிஜம்.

விழுந்த நபர் கூட்டத்துக்கு நடுவே அப்படியே சுருண்டு கிடந்தார்.

யார் அந்த நபர்.. உள்ளே என்ன நடந்தது எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் யாரோ ஒருவரை ஓடும் ரயிலிருந்து மிதித்து தள்ளியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

கோபத்துடன், “ அரே க்யூம் அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்கா..” (ஏன் இப்படி அடிச்சு வீசுறீங்க.. அந்த ஆள் செத்துப்போவான்” ) என்று சத்தம் கொடுத்தேன்.

பிள்ளையார் ஊர்வலம்
பிள்ளையார் மீது நகம் பட்டால் கூட பொறுக்காத பக்தர்கள் (சென்னை ஊர்வலத்தில்)

அவ்வளவுதான்.. அடுத்த நொடி,

“ஆய்லா.. கோன் ஆய்ரே த்தோ..” (..த்தா.. யார்ல அது..) என்று உள்ளிருந்து தடித்த குரல் ஒன்று வந்தது.

குரல் மிதித்து தள்ளியவனுடையதுதான். 40 வயது இருக்கும். மராட்டியர்களுக்கான பாரம்பரிய வெள்ளை உடையுடன் ஆள் வேறு பார்க்க கொஞ்சம் `பல்க்காக’ இருந்தான்.

கூடவே அவனுக்கு ஆதரவாக இருக்கையில் உட்கார்ந்திருந்த குஜராத்தி, மார்வாடிகள் வேறு குரல் எழுப்பினார்கள். அவர்கள் எப்போதுமே அப்படிதான்.. சண்டைபோட மாட்டார்கள்.. வெட்ட மாட்டார்கள்.. குத்தமாட்டார்கள். ஆனால் மத கலவரத்தை பின்னிலிருந்து நன்கு ஊதி பெருசாக்குவார்கள்.

கேள்வி எழுப்பியது நான் தான் என்பதை பார்த்துவிட்டான் அந்த தடியன்.. பதுங்கவும் முடியாது. என்னுடைய குரலுக்கு ஆதரவாக யாராவது வந்திருந்தால் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கும்.

ஆனால் நான் நிற்கும் இடம் மதவெறியர்களுக்கு மத்தியில். எதிர்த்து நின்றால் அடுத்து ரயில் நிலையத்தில் மிதித்து தள்ளப்படப்போவது நானாகக்கூட இருக்கலாம். வேறு வழியில்லை.. இந்த இடத்தில் பதுங்க வேண்டும் என்று என் ஏழாம் அறிவு அவசரமாக எச்சரித்தது.

இந்த ரகளை நடந்து கொண்டிருக்கும்போது என்னுடன் வந்த சகாக்கள் இருவரும் கூட்டத்துக்கு நடுவில் குனிந்து தலையை மறைத்து எஸ்ஸாகியிருக்க கூடும்.

கொழுப்பெடுத்துப்போய் கேள்வி கேட்ட குற்றத்திற்காக நான் அடிவாங்கலாம். கூட வந்த பாவத்திற்காக அவர்கள் அடி வாங்க முடியாதில்லையா..

என்னை நோக்கி முன்னேறி நகர்ந்து வந்த அந்த நபரை நோக்கி,

“பாய்.. அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்ஹாதோ க்யா கரேகா தும்..” என்றேன் குரலை தாழ்த்தியபடி..

(அண்ணே.. இப்படி மிதிச்சு தள்ளுறீங்களே.. அவன் செத்துப்போனா என்ன பண்ணுவீங்க..)

அந்த முரடன் அதற்கு பதில் சொல்லாமல் முறைத்தபடி, `

“தூ கோன் ஆய்ரே..” என்றான். ( நீ யார்ரா..)

அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும். ஒரு மதபோதை ஏறியவனின் கண்களை நீங்கள் நேருக்கு நேராக சந்தித்திருக்கிறீர்களா.. நான் பார்த்தேன்.. அவன் கண்களில் அத்தனை வெறி.

அந்த முரடன் மராட்டியன் என்பது தெரிந்ததால்,

“மீ… பிரஸ்ச்சா மானூஷ்..” என்று மராட்டியில் பதிலளிக்க ஆரம்பித்தேன்.

பிரஸ் என்றதும் அவன் மூர்க்கம் லைட்டாக குறைந்தது. ஆனால் குரலின் கடுமையை குறைக்காமல்,

“பிரஸ் மஞ்சே காய்பன் போல்னார் காய்..குட்சா பிரஸ்?”

( பிரஸ்னா என்ன வேணும்னாலும் சொல்வியா .. எந்த பத்திரிகை?) என்று அடுத்த கேள்வியை கேட்டான்.

அப்போதுதான் என் `மீடியா புத்தி’ கூடுதலாக வேலை பார்க்க ஆரம்பித்தது. சும்மாவே வட இந்தியர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு எரிச்சல் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் இழிவு படுத்துவார்கள்.

அதனால் தமிழ் டைம்ஸ் என்று தமிழ் பத்திரிகை பெயரை சொல்லாமல், எங்கள் குழுமத்திலிருந்து வெளிவரும் மராட்டி பத்திரிகையானா `மும்பை சவ்ஃப்பர்’’ என்ற பெயரை குறிப்பிட்டேன்.

மராட்டியர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகை அது. அவனும் அதன் வாசகனாக இருந்திருக்க கூடும் என நினைக்கிறேன். கொஞ்சம் கூலாகிவிட்டான்.

“அரே.. அப்லா சவ்ஃப்பர்ச்சா மானூஷ் ஆய்காய்.. கசா.. அசா போல்தே துமீ.. தோ பாஹல் அப்லா கண்பத்திலா டச் கேலே.. மாய்த்தேகாய்.. தெஜா சாட்டி மீ மார்லே..” என்று சொல்லிவிட்டு இருக்கையை நோக்கி நகர்ந்து சென்றுவிட்டான்.

நடந்த விசயம் இதுதான்..

அந்த பிச்சைக்காரர் இருக்கையில் படுத்து கொண்டு வந்திருக்கிறார். இவர்கள் உள்ளே நுழைந்த வேகத்தில் அவரை தட்டி எழுப்பியிருக்கிறார்கள். அப்போது பதறி எழுந்ததில் அந்த பிச்சைக்காரரின் கை தடியன் கையில் வைத்திருந்த பிள்ளையார் சிலை மீது பட்டுவிட்டது.

பிள்ளையார் சிலையை தொட்டுவிட்டான் என்ற ஒற்றை காரணத்திற்காகதான் அந்த பிச்சைக்காரர் மிதித்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்..

சிலையை ஒரு பிச்சைக்காரன் தொட்டுவிட்டான் என்ற அல்ப காரணத்திற்காக ஓடும் ரயிலில் இருந்து ஒருவரை மிதித்து தள்ள மனம் வர முடியுமா என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. என்ன செய்வது என்று தெரியவில்லை.

“கண்பத்தி பப்பா மோரியா..’’ கோஷம் காதுகளை பிளக்க.. ரயில் வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது..

அமைதியாக வாசல் ஓரம் நகர்ந்து வெளியே எட்டிப்பார்த்தேன்..

ரயிலிலிருந்து மிதித்து தள்ளப்பட்டு ப்ளாட்ஃபார்மில் பரிதாபமாக விழுந்து கிடைந்த பிள்ளையாரை சிலர் கைதூக்கி எழுப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள்…

-கார்ட்டூனிஸ்ட் பாலா

29-8-14

கலையரசன் (Kalaiy Arasan)

விநாயகர் சதுர்த்தி அன்று, இந்து மக்கள் கட்சி விநாயகர் சிலையை கொண்டு சென்று கடலில் கரைக்கும் ஊர்வலம் ஒன்றை ராமேஸ்வரத்தில் நடத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யோகேஸ்வரன், அதில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து சென்றிருந்தார். ஆனால், தமிழக பொலிசார் அவர் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்கவில்லை. யோகேஸ்வரன் இது குறித்து “ஈழத் தாய்” ஜெயலலிதாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்லும் இந்து மக்கள் கட்சியும், சிறிலங்காவில் புத்தர் சிலையுடன் ஊர்வலம் செல்லும் பொதுபல சேனாவும், ஒரே மாதிரியான கொள்கை கொண்ட மதவெறி அமைப்புகளாகும். பத்து வருடங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை கொண்டு செல்லும் ஊர்வலங்கள் இஸ்லாமியருக்கு எதிரான மதவெறியை தூண்டியதால், பல தடவை மதக் கலவரங்கள் நடந்துள்ளன. யோகேஸ்வரன் எம்.பி., ஒரு மதவெறி அமைப்பின் ஊர்வலத்தில் கலந்து கொண்டது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை அறிய முடியவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க