privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கசமஸ்கிருத வாரம் இந்துத்துவா அதன் சாரம் - புமாஇமு கருத்தரங்கம்

சமஸ்கிருத வாரம் இந்துத்துவா அதன் சாரம் – புமாஇமு கருத்தரங்கம்

-

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மோடி அரசின் சமஸ்கிருத வாரம் !
இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

‘உலக மொழிக்கெல்லாம்
தாய்மொழி சமஸ்கிருதம்’ என்று
பொய் நெல்லைக் குத்திப்
பொங்குகிறார் மோடி.

மோடி - இந்துத்துவா
மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு !
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

மறுகாலனியாக்கக் கொள்கையை
பார்ப்பனப் பாசிச வழியில்
உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி,
‘கடவுள் மொழி சமஸ்கிருத’த்தின்
ஆர்.எஸ்.எஸ் புத்திரனே
என்று புரிந்து கொள்வோம்!

நூறாண்டு முன்பே
பார்ப்பனப் பொய்களைச் சுட்டெரித்து
சமஸ்கிருதத்திலிருந்து
முற்றாக வேறுபட்ட
தனி மூல மொழி திராவிடத் தமிழ் என்று
முழங்கினார் கால்டுவெல்.

சமஸ்கிருதம் – இந்தி என்று
எங்கு எப்போது திணிக்கப்பட்டாலும்,
அதை எதிர்த்து முறியடிப்போம்!

கல்வியில் தமிழ் பயிற்றுமொழி
அரசு அலுவலகங்களில் தமிழே நிர்வாக மொழி
நீதி மன்றங்களில் தமிழே வழக்காடும் மொழி
என அனைத்து துறைகளிலும்
தமிழை ஆணையில் வைப்போம்.

மோடி அரசின் பார்ப்பனீய பண்பாட்டுத் திணிப்பு, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு
இந்து – இந்தி-இந்தியா என்ற இந்து ராட்டிரத் திணிப்பே !

பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்துக்கு எதிரான இன்றைய போரில்
தமிழ் மரபைக் களத்தில் நிறுத்தும் போர்வாளான கால்டுவெல்லை உயர்த்திப் பிடிப்போம்!

பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனீயத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்!
மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என திரளாக கருத்தரங்கில் கலந்து கொள்வோம்!

கருத்தரங்கம்

நாள் :
செப்டம்பர் 16, 2014

நேரம் :
காலை 10.30 மணி

இடம் :
கல்யாணி ஸ்ரீநிவாசா பத்மாவதி மகால்,
ஆவடி ரோடு,
கரையான் சாவடி, சென்னை.

சிறப்புரை :
தோழர் துரை.சண்முகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் நாடு.

நோட்டிஸ்
Sanskrit

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675

  1. ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

    மதமென்ற‌ பெயரால் அழியாதே.

    மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

    பிராமணத்துவத்தை (இந்துதுவம்) பின்பற்றினால் அதில் சூத்திரர் , பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணத்துவம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.
    இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகமரீதியாக இன்னமும் இது உயிர் வாழ்ந்து வருகிறது.

    ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

    If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So, according to constituion Bhraminism is antilaw. பிராமணிசத்தை பின்பற்றினால் அதில் சூத்திரர், பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணிசம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.

  2. Dear Vinavu,

    Fantastic initiative, Appreciate your effort at this moment. However you could have invited another speaker also from the Dravidian movement who have taught us the caliber to stand against the Sanskrit hegemony for years.

  3. அய்யா ஜோசெப்! உமக்கு ஏனய்யா இந்த வேசம்? வைண்வத்தை காப்பாற்ற வெங்கடேசன் மேல் உமக்கு நம்பிக்கையில்லையா? பதிலளிக்க தரமற்ற பதிவுகள்! வெறும் வள வளா!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க