privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்அடக்குமுறைக்கு அஞ்சாது புஜதொமு - திருப்பெரும்புதூர் கூட்டம்

அடக்குமுறைக்கு அஞ்சாது புஜதொமு – திருப்பெரும்புதூர் கூட்டம்

-

ன்பார்ந்த தொழிலாளர்களே!

லாக்- அப் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கட்டை பஞ்சாயத்துகள், பொய்வழக்கு குறித்த நீதிமன்ற கண்டனங்கள் என்றெல்லாம் போலீசின் யோக்கியதை தினந்தோறும் நாறிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சமுதாயமும்  வெறுத்து ஒதுக்குகின்ற போலீசு கும்பலை ஆளும் வர்க்கம் தான் மெச்சிக் கொள்கிறது. ஏனென்றால், போலீசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடியாள் படை!

உழைக்கும் மக்களது போராட்டங்களை ஒடுக்குவது துவங்கி பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைப்பது வரையிலும் போலீசு செய்து வருகின்ற அட்டூழியங்கள் ஏராளம்… ஏராளம், தனியார்மயம்- தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடக்கின்ற இந்தத் தருணத்தில் முதலாளிகளைப் பாதுகாத்தும், தொழிலாளர்களை அடக்கியும் தன்னுடைய ராஜவிசுவாசத்தைக் காட்டி வருகிறது, போலீசு!

வேலை நேரத்தை அதிகரிப்பது, வேலை நிரந்தரத்தை மறுப்பது, உழைப்புக்கேற்ற கூலியை தராமல் அற்ப சம்பளம் கொடுத்து ஒட்ட ஒட்ட சுரண்டுவது, பாதுகாப்பற்ற இயந்திரங்களில் வேலை செய்ய வைத்து தொழிலாளர்களை சாகடிப்பது, சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால் வேலையை விட்டே துரத்துவது என்றெல்லாம் தொழிலாளி வர்க்கத்தின் ரத்தத்தை குடித்து வருகின்றனர், முதலாளிகள். வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் பட்டினியால் அல்லல்படுகின்றனர், சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக தொழிலாளர்கள் எப்போது போராடினாலும் அரசு போலீசை வைத்து அடக்குகிறது.

பத்தாண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்ட நோக்கியா கம்பெனி, திடீரென பல்லாயிரம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து விட்டு ஓடிப்போனது. நோக்கியாவுக்கு உதிரிப்பாகங்களை சப்ளை செய்த பி.ஒய்.டி கம்பெனி இரவோடு இரவாக 700 பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

நிசான் கம்பெனியோ புரபேசன் முடிகின்ற தருவாயில் மாதத்துக்கு 50 பேரின் வேலையைப் பறிக்கிறது. பல வருட உழைப்பு திருடப்பட்டு, ரோட்டுக்கு துரத்தப்படும் போது, “டேக்-இட் ஈசி” என்று கும்மாளம் போட முடியுமா? இதென்ன அநியாயம் என்று கேட்டால் வேலைக்கும், உயிருக்கும் உத்திரவாதமில்லை. ரவுடிகளை வைத்தும் தொழிலாளர்களை மிரட்டுகிறான், முதலாளி. ஒரு பக்கம் போலீசு; மற்றொரு பக்கம் ரவுடி! எத்தனை நாட்களுக்கு அடிவாங்கிக் கொண்டே இருப்பது.

முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கு தொழிற்சங்கம் கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படித்தான் திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிலாளர்கள் தொழிற்சங்க இயக்கங்களை நாடிச் சென்று ஐக்கியப்பட்டார்கள். இவர்களுக்கு உணர்வூட்டி, அமைப்பாக்க முயன்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. சட்டங்களை மதிக்காத முதலாளிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியது, முதலாளிகள் மீது பாய வேண்டிய அரசு எந்திரம், எமது சங்கத்தின் முன்னணியாளர்கள் மீது பாய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழிலாளர் துறை உதவி ஆணையர் என்கிற பெயரில் முதலாளிகளுக்கு புரோக்கராக செயல்படுகின்ற தர்மசீலன் என்பவரது பொய்ப்புகாரை அடிப்படையாக வைத்து, தோழர் சிவா கைது செய்யப்பட்டார்.

தர்மசீலன் கொடுத்த பொய்ப்புகாரில் கைது செய்யப்பட்ட தோழர் சிவா மீது காஞ்சிபுரம் மாவட்ட போலீசு குண்டர் சட்டத்தை ஏவிவிட்டுள்ளது. தொழிலாளர்களை அச்சுறுத்திய முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்களைத் திரட்டி போராடியதுதான் தோழர் சிவா செய்த குற்றச் செயல். ஜி.எஸ்.எச் என்கிற தென்கொரிய நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்த காஞ்சிபுரம் கலெக்டருக்கு எதிராக போராட்டத்துக்கு தலைமை தாங்கியது மற்றொரு குற்றம் என்கிறது போலீசு. தோழர் சிவா தன்னந்தனி ஆள் அல்ல. ஆயிரமாயிரம் தொழிலாளர்களை அணிதிரட்டியுள்ள ஒரு புரட்சிகர சங்கத்தின் பிரதிநிதி.

முதலாளிகளுக்கு எதிராகப் போராடினால் சட்டவிரோதம் என்கிறது,  போலீசு. சட்டத்தை மதிக்கின்ற போலீசின் லட்சணத்தை தெரிந்து கொள்ளுங்கள். 21.9.2014 ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு தோழர் சிவாவை கைது செய்த போலீசு, மதியம் வரை கோர்ட்டில் ஒப்படைக்காமல் சட்டவிரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடக் கூடாது என்று 25.9.2014 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை மதிக்காமல் 26.9.2014 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தினை ஏவிவிட்டது, போலீசு. உயர்நீதிமன்ற தடை இருந்த போதிலும், அதனை மதிக்காத யோக்கிய சிகாமணிகள் தான் சட்டத்தின் ஆட்சியைப் பற்றி போதிக்கின்றனர்.

திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலமானது முதலாளிகளின் சொர்க்கபுரியாகி விட்டது. தொழிலாளர்களை எவ்வளவு அடித்தாலும், வேலை பயத்தின் காரணமாக தாங்கிக் கொள்ளுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, தொழிலாளர்களை அணிதிரட்டும் எந்த நடவடிக்கையையும் முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் மீது தங்கு தடையற்ற அடக்குமுறையையும், சுரண்டலையும் முதலாளிகள் நடத்துவதற்கு பு.ஜ.தொ.மு தடையாக நிற்கிறது.

ndlf-meeting

பு.ஜ.தொ.மு தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை லட்சியமாகக் கொண்டுள்ள புரட்சிகர சங்கமாகும். முதலாளித்துவத்தின் ஜென்ம எதிரியான கம்யூனிசத்தை நெஞ்சிலும், செயலிலும் சுமந்து கொண்டிருக்கின்ற ஆயிரமாயிரம் செஞ்சட்டை வீரர்களை தளபதிகளாகக் கொண்டிருக்கின்ற சங்கமாகும். அதனால் தான் எமது சங்கத்தை ஒடுக்கிட முதலாளிகள் வெறி கொண்டு அலைகின்றனர். அவர்களது அடியாள் படையான போலீசும் வெறிகொண்டு பாய்கிறது. எம்மீதான அடக்கு முறையானது, தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறையாகும். முதலாளிகள் போலீசை நம்பிக் கொண்டிக்கின்றனர், எமது இயக்கமோ தீரமிக்க தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் சார்ந்திருக்கிறது. முதலாளிகள் வைத்திருப்பது, கூலிப்படை. எமது படை மக்கள் படை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!

  • தொழிலாளியின் ரத்தம் குடிக்கும் முதலாளிகள்!
  • அடியாள் வேலை செய்யும் போலீசு!
  • நாசகாரக் கூட்டணியை முறியடிப்போம்!

[துண்டறிக்கையை பெரிதாகப் படிக்க படங்களின் மீது சொடுக்கவும்]

  • தொழிலாளி வர்க்கமாக ஒன்றிணைவோம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

பொதுக் கூட்டம்

நாள் : 17.10.2014
நேரம் : மாலை 5 மணி

இடம் : திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில்

தலைமை
தோழர் சி. வெற்றிவேல் செழியன்
மாநில அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை
தோழர் ராஜூ, வழக்குரைஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

தோழர் ம.சி.சுதேஷ்குமார்
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு

ம.க.இ.க மைய கலைக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் –திருவள்ளுர் மாவட்டம்

தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

110\63,மாநகராட்சி வணிக வளாகம், 2-ஆம் தளம்.
என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை-24
தொ.பே.-9444834519, 8807532859, 9444213318