privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்உசிலை போலீசு உதவியுடன் சாதிவெறியர் அராஜகம்

உசிலை போலீசு உதவியுடன் சாதிவெறியர் அராஜகம்

-

மீபத்தில் விவிமு, மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் உசிலை வட்டாரத்தில் ஒட்டிய ஜெயா கைது, விமலாதேவி கௌரவக்கொலை சம்பந்தமான போஸ்டர்களை பழனி என்ற பழனியப்பன் எனும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு சேர்ந்து தொடர்ந்து கிழித்தெறிந்து அம்மா மற்றும் ஆதிக்க சாதி விசுவாசத்தைக் காட்டினார்கள்.

உசிலை சட்டமன்ற உறுப்பினர் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த கதிரவன் தலைமையில் 4.11.2014 அன்று மீனவர்களுக்கு தூக்கு, பால்விலை உயர்வு, விமலாதேவி கொலை சம்பந்தமாக கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீனவர் தூக்கை கண்டித்து நெஞ்சை உயர்த்தியும், பால்விலை உயர்வுக்கு கொஞ்சம் பம்மியும், விமலாதேவி கொலைக்கு சாதிவெறி விசத்தைக் கக்கியும் ரெட்காசி மற்றும் கதிரவன் ஆகியோர் பேசினர்.

“விமலாதேவி கொலை சம்பந்தமாக அந்தப் பகுதியில்ஆ ர்ப்பாட்டம் நடத்த யாருக்கும் அனுமதி மறுத்தபோது இவர்கள் எப்படி போஸ்டர் அடித்து பேசுகிறார்கள்” என ஒருவர் உளவுத் துறையை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘பா.பி கட்சியினரிடம் இது பற்றி பேசமாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொண்ட’தாகக் கூறினார். “ஏன் தடுக்கவில்லை” எனக் கேட்டதற்கு, “தடுக்க எல்லாம் முடியாது, கேஸ்தான் போட முடியும். இந்தக் கூட்டத்துக்கு டி.எஸ்.பிதான் அனுமதி கொடுத்தார்.அவரைப் போய் கேளுங்க” எனத் திமிராக பதில் சொன்னார்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த பொழுது அருகில் உள்ள நாடார் வணிகவளாக மாடியில் விவிமு தோழர் குருசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்னரசு ஆகியோர் நின்று கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த ரெட்காசி ஆபாச வார்த்தைகளால் திட்டி ஆட்களை அனுப்பி அவர்களை அடித்து விரட்ட கட்டளையிட்டான். காவல்துறை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. குரைக்கிற நாயைப் போல் அருகே வரை வந்து விட்டு தோழர்கள் அஞ்சாமல் எதிர்கொள்ள தயாராய் இருந்ததைப் பார்த்து விட்டு பேசாமல் திரும்பிப் போனார்கள்.

அதன்பின் அங்குவந்த ஆய்வாளர் தென்னரசை நோக்கி, “இங்க என்னய்யா பண்ற வெண்ண” (காவல் துறை உங்கள் நண்பன்) என்றார். அதற்கு தென்னரசு, “மரியாதையாக பேசுங்க” என்றதும் சுருதி குறைந்தது. “பிரச்சனை வந்துவிடும், தயவுசெய்து வாருங்கள் தோழர்” எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு இருவரையும் அவ்விடத்தை விட்டு 10 காவல்துறையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது போலீசு. குருசாமியை அருகில் உள்ள தெருவிலும், தென்னரசு அவர்களை மதுரை ரோட்டில் கொங்கபட்டி அருகிலும் இறக்கிவிட்டு அவர் ஆட்டோ பிடித்து வீடு செல்லும் வரை காத்திருந்து அனுப்பி வைத்தது காவல்துறை. மேற்கண்ட அமளியில் சில காவல்துறையினர் மட்டும் பா.பி கட்சியினரை தடுக்க ஓடி வந்தனர். ஆனால், அவர்கள் அராஜகத்தை சட்டரீதியாக தட்டிக் கேட்கவில்லை.

பார்வர்ட் பிளாக் கூட்டத்தில் அவர்கள் பேசியதன் சாராம்சம்,

இந்த உசிலை பகுதியில் உள்ள நாடார், செட்டியார், ஆசாரி, வெள்ளாளர் போன்ற அனைத்து சாதியினரையும் காப்பவர்கள் நாங்கள். நாடார்கள் வணிகம் செய்து சம்பாதித்து எங்கள் சாதியினரின் உழைப்பில்தான் உயர்ந்தவர்கள். எங்களுடைய காடுகளில் வேலை செய்வதற்கு பறையர், பள்ளர், சக்கிலியர்கள் உதவி புரிந்தார்கள் என்ற பரப்புரையோடு ஆதிக்கசாதிக்கு துணை போகாத காரணத்தால் சி.பி.எம் தோழர் செல்லக்கண்ணுவை “நாயே, பேயே” என்ற பலவாறும் பழித்தனர். நாங்கள்தான் உண்மையான இடதுசாரி அமைப்பு, எங்களிடம் சாதிபிரிவினை கிடையாது என்று கூறினார்கள்.

ஆனால், மதியம் 3 மணியளவில் வணிக வளாகத்தில் இருந்த டீக்கடையின் பாத்திரங்களை உடைத்து நொறுக்கி எறிந்து நாடார் சாதி என்ற சொல்லவியலாத வார்த்தைகளால் திட்டி எங்களுக்கு எதிராக மாடியில் போட்டோ எடுக்க உதவி செய்கிறீர்களா என சண்டை போட்டு கடை அடைக்கச் சொல்லி மிரட்டினர். காவல்துறை அவர்களது ரவுடியிச அரசியலுக்கு எந்தவித சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உசிலை காவல்துறை பெரும்பான்மையாக ஆதிக்கசாதியினருக்கு துணையாகவே உள்ளனர்.

_____________________

சிலம்பட்டியில் 06.11.2014 அன்று மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை ஆர்.டி.ஓ அலுவலகம், பஸ் நிலையம் அருகில் தேனிரோடு, தாலுகா அலுவலகம் அருகில் என மூன்று இடங்களில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக பிரச்சாரம் நடத்தப்பட்டது.

தோழர் குருசாமி தனது உரையில் மேற்கண்ட விஷயங்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக  தலைப்பில் உள்ள மூன்று விஷயங்களின் அபாயத்தை பற்றியும் விளக்கிப் பேசினார்.  இறுதியாக “காவல்துறை, ஊடகங்கள், பார்வர்ட் பிளாக் கட்சியினர் எல்லாம் நக்சல்பாரிகள் ஊடுருவல் என்கிறார்களே, நக்சல்பாரிகள் எங்கேயும் ஊடுருவவில்லை. நாங்கள் பாகிஸ்தானில் இருந்தோ, ஆப்கானிஸ்தானில் இருந்தோ வரவில்லை. நக்சல்பாரி என்பதன் அர்த்தம் நாட்டுப்பற்றுள்ளவன், சாமானியனுக்கு அதிகாரம் கிடைக்கப் பாடுபடுபவன்” எனறு கூறி நக்சல்பாரி தோற்றத்தை விளக்கினார்.  கதிரவன் கூட்டத்தில் ஏற்படுத்திய அமளியின்போது கண்டுகொள்ளாத காவல்துறையையும் கடைகளை சேதப்படுத்திய ரெட்காசியையும் எச்சரிக்கை செய்து, “நக்சல்பாரி அரசியல் கொண்ட நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம், எல்லாவற்றிற்கும் தயார்” எனக்கூறி முடித்தார்.

மூன்று இடங்களிலும் வழக்கத்திற்கு மாறாக என்னவெல்லாம் பேசுவோம், ஏதும் பிரச்சனை நடக்குமோ என எதிர்பார்ப்புகளோடு மக்கள் கவனித்தனர். பிரச்சார இயக்கத்தில் வி.விமு தோழர்களுக்கு 70-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நான்கைந்து வாகனங்களோடு காவல் நின்றனர்.

தோழர் அ. சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்தப் பிரச்சார இயக்கத்தில் உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி, தோழர் ஆசை உரையாற்றினார்கள். தனியார்மய, தாராளமயத்தை எதிர்த்து தோழர்களால் முழக்கம் எழுப்பப்பட்டது.

usilai-milk-price-eb-demo-3

இந்தியாவில் தனியார்மயக் கொள்ளைக்குப் பின் கார்ப்பரேட், தரகு முதலாளிகளால் எப்படி சுரண்டப்படுகிறது. உழைக்கும் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தோழர் சந்திரபோஸ் தனது தலைமை உரையில் தொகுப்பாக எடுத்துரைத்தார்.

usilai-milk-price-eb-demo-1

தோழர் ஆசை உழைக்கும் மக்கள் மொழி நடையில் ஆவின் நஷ்டத்திற்கு காரணமாய் மக்கள் பணத்தை சுருட்டிய அதிமுக கொள்ளையர்கள் மாதவரம் மூர்த்தி, வைத்தியநாதன் சொத்தை பறிமுதல் செய்யாமல் பால்விலை ஏற்றம் மூலம் மக்கள் பணத்தை பறிக்கும் செயலைக கண்டித்து பேசினார்.

usilai-milk-price-eb-demo-2

உசிலை பகுதியில் சமீபகாலமாக உசிலையில் தேனிரோட்டில் முருகன் கோவில்வரை, வத்தலக் குண்டு ரோட்டில் டவுன் போலீஸ் ஸ்டேசன் வரை, மதுரை ரோட்டில் கண்ணன் தியேட்டர் வரை, பேரையூர் ரோட்டில் ஆர்.டி.ஓ அலுவலகம் வரை வாய்மொழி உத்தரவாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி, காவல்துறை நமது அரசியல் ரீதியான போஸ்டர்கள் ஒட்ட விடாமல் கிழிப்பது, வழக்கு போடுவது, மேலும் இந்த இடங்களுக்குள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது என்று ஜனநாயகத்தைக் காத்து வந்தது.

ஆனால், சமீபத்தில் அம்மாவுக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்தவுடன் அதிமுக காலிகளுக்கு பேருந்து நிலையம் அருகில் ஏற்கனவே சொன்ன 144 தடை உத்தரவு உள்ள இடத்தில் உண்ணாவிரத மேடை அமைக்க அனுமதி கொடுத்தது. அடுத்து தேவர் ஜெயந்தியை ஒட்டி அவர்கள் சொன்ன 144 மைய இடமான தேவர் சிலையைச் சுற்றி போஸ்டர், பிளக்ஸ் மற்றும் முருகன்ஜீ மேடை அமைத்து பேச அனுமதி அளித்து மேலும் தனது ஆதிக்கசாதி ஜனநாயகத்தைக் காட்டியது.

usilai-milk-price-eb-demo-4

செய்தி
புஜ செய்தியாளர்

உசிலம்பட்டி.

  1. உழைக்கும் மக்களை சட்டம் ஒழுங்கின் பெயரால் அச்சுறுத்தி ஒடுக்கும் போலீசு சட்டவிரோதமாக செயல்படும் ஆதிக்க சாதியினருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் அடியாளக இருக்கிறது. மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமுல்படுத்தும் இந்த சட்ட விரோத அரசை பாதுகாக்கும் அரச நிறுவனங்களில் போலீசு தான் உழைக்கும் மக்களின் முதல் எதிரி . எனவே இந்த முதல் எதிரிகளை அம்பலப்படுத்தி புரட்சிக்காக மக்களை அணிதிரட்டவேண்டிய தேவையை இந்த பதிவு உணர்த்துகின்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க