privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 01/12/2014

ஒரு வரிச் செய்திகள் – 01/12/2014

-

blue-flameசெய்தி: மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த ‘தி இந்து’ ஆதரவாக இருக்க வேண்டும் என்று விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன் கேட்டுக் கொண்டார்.

நீதி: என்ன மாற்றம்? சுயநிதிக் கல்லூரி வள்ளல்கள் குறித்த மக்கள் வெறுப்பை, போதிய அளவு ‘தி இந்து’ மாற்றவில்லையோ?
_________

செய்தி: ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதங்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் உளவுத் தகவல் சேகரிப்பை பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

நீதி: ஆமாமாம்! குஜராத்தில் இளம்பெண்ணை உளவு பார்த்ததெல்லாம் ஊடகங்களுக்கு தெரிய வந்தது போலல்லாமல் சிஐடி துறையை பலப்படுத்த வேண்டும்.
__________

செய்தி: “திரைப்படங்களில் காவல் துறையினரைப் பற்றி மோசமாக சித்தரிக்கப்படுகின்றன. இதனால் காவல் துறையினரை பொதுமக்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. இது தவறு.” – கௌகாத்தியில் ஐபி உளவுத்துறை சார்பில் நடந்த காவல் துறையின் 49-வது மாநாட்டில் மோடி.

நீதி: மிகச் சரி. இர்ஷத் ஜஹான் தொட்டு எண்ணிறந்த போலி மோதல் கொலைகளை நடத்திய குஜராத் போலிசாரை சிறை வைப்பதும், விமரிசப்பதும் எந்த விதத்தில் நியாயம்?
_________

செய்தி: திரிபுராவை ஆளும் சிபிஎம் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி, திரிபுரா அமைச்சரவை முன் உரையாற்றுகிறார்.

நீதி: இருக்கும் ஒரே மாநிலமும் காவியில் சரணடைவதைப் பார்க்கும் போது எதற்கய்யா சிவப்பு கொடியும் பொதுவுடமைப் பெயரும்?
__________

செய்தி: எண்ணெய் வடியும் பெண்களைக் கொண்ட சென்னை நகரம்தான் இன்று நவீன அழகு நிலைய சங்கிலித் தொடரிலும், அழகு கலை பொருட்களின் விற்பனையிலும் முதலிடத்தை நோக்கி போகிறது.

நீதி: அரசியல் போராட்டங்களில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம், அழகு பாவனையில் முன்னணியானால் கிடைப்பது அடிமைத்தனமா, அழகுப் பெருமிதமா?
_________

செய்தி: “அமைதியான உலகம் அமைய வேண்டுமென்றால் சைவ உணவுமுறையை பின்பற்ற வேண்டும்” – சர்வதேச சைவ உணவாளர்கள் சங்கத்தில் கூட்டத்தில் சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன்.

நீதி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அப்பாவிகளை வதைத்து வாக்குமூலங்கள் வாங்கியவர்களும், பாசிச ஹிட்லர், சிங்கள ராஜபக்சேவும் கூட சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான். எனில் உலக அமைதி என்பது மயானத்தின் அமைதிதானே கார்த்திகேயன் சார்?
_________

செய்தி: “எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக்கும் வகையில் செயல்படுவோம்” – டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் செய்தி.

நீதி: காலில் விழும் அடிமைகள் இல்லாத சமுதாயம் எப்போது உருவாகும் பாஸ்?
_________

செய்தி: கடந்த நிதியாண்டில் தனியாரிடமிருந்து 16,280 கோடி ரூபாய் மின்சாரத்தை தமிழக மின்வாரியம் வாங்கியுள்ளது.

நீதி: மத்திய அரசின் மின் நிலையங்களிலிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.1.80-ம், தனியாரிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.14 ரூபாயும் கொடுத்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு யாருடைய அரசு?
________

செய்தி: “பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களைப் பற்றி பேசினால், வைகோ பாதுகாப்பாக இருக்க முடியாது, அவரது நாவை எப்படி அடக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

நீதி: பெரியாரை அவமதித்த ராஜாவின் நாக்கை வருடிக் கொடுத்து பாஜக கூட்டணியில் மோடிக்காக பொளந்து கட்டிய வைகோவுக்கு இதெல்லாம் உரைக்காது, வலிக்காது, கேட்காது!
________
செய்தி: பிரதமர் மோடியை யாரும் ஒருமையில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

நீதி: கொலைகார மோடி, நரவேட்டை மோடி, பாசிச மோடி என்று அழைப்பதை ராஜா எதிர்க்கவில்லை. பன்மைதான் முக்கியம், பாசிசம் பிரச்சினையில்லையாம்!
_________

செய்தி: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த வைகோ, அங்கே தமிழிசை சவுந்தராஜனை சந்தித்து பேசினார்.

நீதி: “பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே வைகோவும், ராமதாசும் மோடியை விமரிசித்து எதிர்க்கட்சி போல் செயல்படக்கூடாது” என்று செய்தியாளர்களிடம் எச்சரித்த தமிழிசை நேரில் எப்படியெல்லாம் மிரட்டியிருப்பார்! அய்யகோ வைகோ!
________

செய்தி: ஒடிசாவில் பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையின் போது சைக்கிள் பம்ப் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீதி: மோடியின் கிளீன் இந்தியாவுக்காக அனில் அம்பானியும், பிரியங்கா சோப்ராவும் தெருவில் இறங்கி ஷோ காட்டுவதற்கே கையுறை போடும் நாட்டில் பெண்களின் வயிற்றில் காற்றடைக்க சைக்கிள் பம்ப் பயன்படுத்துவதுதானே நீதி?
_________

செய்தி: இந்த ஆண்டின் சிறந்த மனிதருக்கான டைம் பத்திரிகையின் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார்.

நீதி: இதற்கு முன்னாடி ராஜபக்சே கூட இப்படி இருந்தார் என்பதால் மோடியும் சிறந்த மனிதருக்கான போட்டியில் இருப்பது சரிதான்.
_________

செய்தி: பல விமான பயணங்களை ரத்து செய்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சுமார் 5000 ஊழியர்களுக்கான சம்பளத்தையும் தராமல் இழுத்தடிக்கிறது.

நீதி: மூடப்பட்ட கிங்பிஷர் விமான கம்பெனிக்காக ஆட்டம் போட்ட மல்லையா அரசு வங்கிகளை நாமம் போட்ட மாதிரி, கலாநிதி மாறன் யாரிடம் ஆட்டையை போட்டுள்ளார்?
_________

செய்தி: பெர்கூசனில் கருப்பின இளைஞனை சுட்டுக் கொன்ற வெள்ளையின போலீஸ் அதிகாரி டேரென் வில்சன் தனது மற்றும் சக போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

நீதி: என்னதான் வெள்ளையர்கள் பெரும்பான்மை, அரசு ஆதரவு, நீதிமன்ற ஆதரவு இருந்தாலும் ஏதுமற்ற கருப்பின மக்களின் போராட்டம் ஒரு நிறவெறியனுக்கு பயத்தை ஏற்படுத்தியதா இல்லையா?
_____________

  1. “Non-vegetarian food is not Tamil”s food”says Avvai Natarajan-Dinamani News-30-11-2014.I can quote poems in Purnaanooru where the poets who praise the Tamil kings who provided them with sumptuous non-vegetarian food.Will Natarajan say that Puranaanooru is not a collection of Tamil poetry.V.S.Raghavan,IAS,in the same meeting has told that 98%o persons who indulged in terrorist activities were meat eaters according to a survey.But he has not disclosed the name of the survey,where it was conducted,when it was conducted etc.Dinamani Vaithyanathan,who never bothered about multinational coke companies bottling our river water,is much worried about our youth holding Kentucky Fried chicken in one hand and holding coke in another hand and army of street dogs in front of that eatery.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க