privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்

தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்

-

சென்னை ஒரகடம் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டி துப்பப்படும் இடம்.

ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சொந்த ஊரில் வாழ்வாதாரங்களை தொலைத்த உழைக்கும் மக்கள் இங்கு வந்து சேர்கின்றனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள் இவற்றை அறிய ஒரகடத்தில் இயங்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பொருள் வாங்க வரும் தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் பேசி தகவல் திரட்டினோம்.

நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை முன்பு வந்த தொழிலாளர்கள் 4 பேரை நிறுத்தி பேசினோம்.

டாஸ்மாக் கடை
நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை
கொல்கத்தா தொழிலாளர்கள்
“கொல்கத்தா சணல் தொழிற்சாலையிலிருந்து சென்னைக்கு பிய்த்து எறியப்பட்டோம்”

அவர்கள் கொல்கத்தா ஜூட் (சணல்) ஆலையில் வேலை பார்த்தவர்கள். ஆலை மூடப்பட்ட பிறகு தெரிந்தவர் மூலம் இங்கு வந்திருக்கிறார்கள். அப்பல்லோ தொழிற்சாலையில் துப்புரவு பணி செய்கிறார்கள். மாதம் 9,900 ரூபாய் சம்பளம். அதில் 7,000 ரூபாய் ஊரிலுள்ள குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். 5,000 ரூபாய் வாடகைக்கு எடுத்த வீட்டில் 11 பேர் தங்கியிருக்கின்றனர்.

தமிழர் அல்லாதவரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதைப் பற்றிக் கேட்டதும், “அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்” என்றார்கள்.

“பொழுதுபோக்காக தொலைக்காட்சி இல்லை, ஆனால் மொபைலில் படம் பார்ப்போம்” என்றார்கள். மொழி புரியாத மண்ணிலும் அவர்களது ஓட்டை செல்பேசி மூலம் திரைப்படங்களை பார்க்கும் வசதியை தொழில் நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்க தொழிலாளர்
“அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்”

6 மாதத்துக்குப் பிறகு ஊருக்குப் போய் விட்டு திரும்பி வருவார்களாம். வேலையில் நிற்கச் சொல்லும் வரை வேலை செய்வார்களாம். அடுத்த வேலை என்ன, எங்கே போக வேண்டும் என்ற கவலையெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. எப்படியாவது பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் சலிப்புடனாவது இருந்தது.

எதிரில் லாட்ஜ் அல்லது மேன்சன் போலத் தெரிந்த கட்டிடத்துக்குள் போனோம். நூற்றுக்கணக்கான தேனீக்கள் தங்கியிருக்கும் தேன்கூடு போல தென்பட்டது அந்த கட்டிடம். ஒரு அறைக்குள் நுழைந்தோம். கொஞ்சம் நடுத்தர வயதான 2 பேர் ஸ்டவ்வில் குழம்பு வைக்க தாளித்துக் கொண்டிருந்தார்கள். அறை முழுவதும் கமறலாக இருந்தது. இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் என்று சொல்லக் கூடிய 3 பேர் மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். 2 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

தொழிலாளர் தங்குமிடம்
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தங்கியிருக்கும் தேன்கூடு

உத்தர பிரதேசத்தில் வாரணாசியிலிருந்து வந்தவர்கள் நிசான் நிறுவன கேன்டீனில் சமைக்கும் வேலை செய்கிறார்கள். சோடக்சோ என்ற நிறுவனம் இந்தப் பணிக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. காலையில் 7 மணிக்கு புறப்பட்டு போனால், இரவுதான் திரும்புவார்களாம். ஞாயிற்றுக் கிழமை மட்டும் தேன்கூட்டு சிறையில் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

தேன்கூட்டு சிறை சமையல்
ஞாயிற்றுக் கிழமை மட்டும் தேன்கூட்டு சிறையில் சமையல்

“மாசம் 5,000 ரூபாய் தர்றாங்க, இங்க இந்த இடத்தில (10க்கு 15 அடி) 14 பேருக்கு தங்க இடம் கொடுத்திருக்காங்க. படுக்க ஒழுங்கான போர்வை கூட இல்ல பாருங்க” என்றார் ஒருவர்.

வாரணாசி தொழிலாளர்
“படுக்க ஒழுங்கான போர்வை கூட இல்ல”

தமிழினவாதிகள் பிற மாநில தொழிலாளர்களை எதிர்ப்பது பற்றிக் கேட்டதும் “போகவா சொல்றாங்க? நாங்க நாளைக்கே கிளம்பிர்றோம். வேலை செய்ற எங்களுக்கு எங்க போனாலும் பொழைப்பு உண்டு. ஆனா, இங்க உள்ளவங்கல்லாம் பட்டினி கெடக்க வேண்டியதுதான். எங்க மேனேஜர் 60,000 ரூபா சம்பளம் வாங்குறாண்ணா நாங்கள்ளாம் அவனுக்கு வேல செய்றதாலதான் வாங்குறான். நாங்க போயிட்டா அவன் என்ன செய்வான்.”

அப்போது குண்டாக ஒருவர் உள்ளே வந்தார். அவர்தான் இந்த கட்டிடத்துக்கு மேனேஜர். சோடக்சோவில் மேனேஜராக இருக்கிறார்.

உழைக்கும் கைகள்
“எங்க மேனேஜர் 60,000 ரூபா சம்பளம் வாங்குறாண்ணா நாங்கள்ளாம் அவனுக்கு வேல செய்றதாலதான் வாங்குறான்”

“நீங்க இப்படில்லாம் வந்து பேசக் கூடாது. கம்பெனில பெர்மிசன் வாங்கிகிட்டுதான் பேசணும்” என்றார். மும்பையில் பல ஆண்டுகள் வேலை செய்த இவருக்கு இந்தி நன்கு தெரியும்.

“நான் ஒரு தமிழன்ங்க, தமிழனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, இவங்க இல்லைன்னா நமக்கு வேலை நடக்காது. நம்ம ஆளுங்க இந்த மாதிரி வேலை செய்ய கிடைக்க மாட்டாங்க” என்றார். “தமிழ் ஆளுங்களை எடுக்க மாட்டேன்னா சொல்றோம். அவங்க யாரும் வேல கேட்டு வர்றதில்ல. போன வாரம் கூட பேப்பர்ல விளம்பரம் போட்டோம். யாரும் வரவில்லை. இவங்கதான் வர்றாங்க, அதான் எடுக்கிறோம்.” என்றார்.

“சோடெக்சோ நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. சென்னையில் மட்டும் 40,000 பேர் வேலை செய்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களுக்கு ஹாஸ்பிடாலிட்டி (அலுவலக பராமரிப்பு) சேவைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது” என்றார்.

இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கான்டீன் காண்டிராக்ட் எடுக்கக் கூட சோடக்சோ என்ற பன்னாட்டு நிறுவனம் வந்து விட்டது. இந்நிறுவனத்தில் சென்னையில 40,000 பேர் வேலை செய்கிறார்கள். நிசானில் மட்டும் 500 பேர் என்று கூறினார். மலிவான விலைக்கு மனிதர்கள் எங்கே கிடைப்பார்கள் என்ற விவரங்கள், ஆவணங்கள், தொடர்புகள், எல்லாவற்றிலும் பன்னாட்டு நிறுவனங்கள் கச்சிதம். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம், எங்கே தங்க வைப்பது, அதற்கு உள்ளூர் தரகர்கள் என்று விரிந்திருக்கிறது இந்த வலைப்பின்னல். அதில் சிக்கிக் கொண்டு உழைப்பே வாழ்க்கை என ஓடுகிறார்கள் இந்த தொழிலாளிகள்.

ஆஸ்பெஸ்டாஸ் தங்குமிடங்கள்
தனி வீட்டு லட்சணம்

“இவர்கள் குடும்பத்தினருடன் இங்கே வீடெடுத்து வாழ முடியுமா” என்று அந்த மேனேஜரைக் கேட்டால் அது அவர்களது சொந்த பொறுப்பில் செய்யலாம் என்றார். அதுவும் கணவன், மனைவி இருவரும் அருகருகே வேலை செய்ய வேண்டும்.

இந்தக் கட்டிடத்துக்கு எதிரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடுகளுக்கு வெளியே சில இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். நிசான் கார் தொழிற்சாலையில் கான்கிரீட் தொட்டி கழுவும் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ 200 சம்பளம்.

“பொழுதுபோக்கெல்லாம் கிடையாது. வேலை முடிஞ்சு வந்து எல்லாரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்போம், அப்புறம் படுத்து தூங்கி விடுவோம்” என்கிறார்கள். ஒரு டிவி பெட்டி அல்லது சினிமா பார்க்கும் வசதி கூட கிடையாது.

“மகாராஷ்டிராவில் ஏன சாதிக் கொடுமைகள் அதிகமாக இருக்கிறது” என்றால்,

மகாராஷ்டிரா தொழிலாளர்கள்
நிசான் கார் தொழிற்சாலையில் கான்கிரீட் தொட்டி கழுவும் வேலை

“நாங்க எல்லாம் பாபா சாஹிப் அம்பேத்காரின் பிள்ளைகள்” என்றார் ஒருவர். அவர்களில் ஒரு சிலர் தெலுங்கு பேசுபவர்கள், ஒரு சிலர் மராத்தி மொழி பேசுபவர்கள். சாப்பாடு சமைத்துக் கொள்கிறார்கள். மொத்தமாக மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து சமைப்பதற்கு என்று 4 பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

ஒரு அறை/வீட்டில் இருந்த லாரி ஓட்டுனர்களிடம், “தமிழ்நாட்டுக்குள் அன்னியர்கள் வரக்கூடாது” என்ற முழக்கத்தைப் பற்றிக் கேட்டதும்,

வடஇந்திய தொழிலாளர்கள்
“நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?”

“பஞ்சாப்ல எத்தனை தமிழன் இருக்கிறான், அவங்களை எல்லாம் திருப்பி கூப்பிட்டுக்கலாமா?” என்றார் ஒருவர்.

“மனுசங்க எங்க வேணும்னாலும் போகலாம். வேலை செஞ்சு பொழைக்கத்தானே போறாங்க. அது போல பிசினஸ் மேனை போகக் கூடாதுன்னு சொல்லுவாங்களா. நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?” என்று ஒரே போடாக போட்டார் இன்னொருவர்.

தமிழினவாதிகளை விட வட இந்தியத் தொழிலாளிகள் முற்போக்கானவர்கள்தான். என்ன இருந்தாலும் தொழிலாளிகள் அல்லவா!

வட இந்தியத் தொழிலாளிகளுக்காக நடக்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு.

ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு
ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு

செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை செய்பவர் இடைவெளியில்லாமல் வேலையில் மூழ்கியிருந்தார். அடுத்தடுத்து யாராவது வந்து கொண்டிருந்தனர்.

“வட நாட்டுக் காரங்களுக்காகத்தான் நாங்க ஞாயிற்றுக் கிழமை கடையை தொறந்து வெச்சிருக்ககோம். 10 ரூபா, 20 ரூபான்னு அவங்க வசதிக்கேற்ப போடுவாங்க. சம்பளம் வந்த ஒரு வாரத்துக்கு கொஞ்சம் அதிகமா ரீசார்ஜ் பண்ணுவாங்க” என்றார்.

“இவங்க வந்ததால நமக்கு வேலை வாய்ப்புகள் இல்லாம போனது உண்மைதான். ஆனா இவங்க கிட்டதான குறைஞ்ச சம்பளம் கொடுத்து நிறைய வேலை வாங்க முடியும். சாப்பாடு போட்டு கொஞ்சம் பணமும் கையில கொடுத்திட்டா போதும். நம்ம ஆளுங்க அப்படி வேலை செய்ய மாட்டாங்க” என்றார்.

குறைந்த சம்பளத்தில் வேலை
“இவங்க கிட்டதான கொறைஞ்ச சம்பளம் கொடுத்து வேலை வாங்க முடியும்”

ஒரு ரெடிமேட் துணிகள் கடையில் விற்பனையாளராக 3 பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

“வடமாநிலத் தொழிலாளர்கள் வருவாங்க. நாங்களும் 1 வருஷத்தில அவங்களோட பேசி ஹிந்தி பேச கத்துக்கிட்டோம். உடனே எல்லாம் வாங்க மாட்டாங்க. நிறைய கேள்வி கேட்டு பேரம் பேசுவாங்க. அப்புறம்தான் வாங்குவாங்க. இதுவரைக்கும் எந்த தகராறும் வந்ததில்ல”

வட இந்தியத் தொழிலாளர்
“நாங்களும் 1 வருஷத்தில அவங்களோட பேசி ஹிந்தி பேச கத்துக்கிட்டோம்.”

“அவங்கள எப்படி சார் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும். நம்ம ஆளுங்க எவ்வளவு பேரு மத்த இடத்துக்கு போய் வேலை செய்றாங்க, வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்றாங்க. அவங்களை எல்லாம் துரத்திட்டா ஒத்துப்போமா. அது போலத்தான் இதுவும். அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க. அவங்களை போய் விரட்டணும்னு ஏன் சொல்றாங்க” என்றார்கள். ஆக தமிழ் பெண்களும் கூட வட இந்திய தொழிலாளிகளை புரிந்து கொள்கிறார்கள்.

அருகிலேயே காய்கறி/சிக்கன் கடை போட்டிருந்தார் சலாம் என்பவர். “எழுதுங்க சார், நல்ல ஃபோட்டோ புடிங்க. போன வருசம் இந்த கடைகள எல்லாம் ஹைவேஸ்காரன இடிச்ச போது வந்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும். நிறைய கடைகள்லாம் இருந்திச்சி, பின்னால வீடுங்க இருந்திச்சி. எல்லாத்தையும் பணம் கொடுத்து இடிக்க வைச்சான் அந்த ஆளு. அவன் அதிமுக.ல இருக்கான்னு சொல்றாங்க.

காய்கறிக் கடை
“எழுதுங்க சார், நல்ல ஃபோட்டோ புடிங்க”

நிறைய ரூம் கட்டி விட்டு ஒரு ஆளுக்கு 1000 ரூபான்னு சம்பாதிக்கிறான் சார். எங்க கடைகளை இடிக்கறதுக்கு முந்தின நாள்தான் சொன்னாங்க. 1.5 லட்சம் ரூபாய் சரக்கு எல்லாம் போச்சு. பின்னால பாருங்க எத்தனை வீடுகள இடிச்சிருப்பாங்க. ஆனா, இன்னும் ரோடு போடல. எதுக்காக இடிச்சானுங்க” என்றார்.

ஒரகடம் மார்க்கெட்
பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி புரோக்கர்கள் பிழைக்க வந்த மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள்.

இது போல பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி புரோக்கர்கள் பிழைக்க வந்த மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள். அது தனிக்கதை.

“வியாபாரமே கொறைஞ்சு போச்சு சார். ஒரு வருசத்துக்கு முன்ன நல்லா இருந்தது. இப்போ எல்லாம் திரும்பப் போய்ட்டாங்க. இந்த காண்டிராக்டருங்க ஒழுங்க பணம் கொடுக்கறது இல்லை. இவங்க சம்பாதிக்கிறதே 200 ரூபாதான். அதையும் கொடுக்காம ஏமாத்தியிருக்கானுங்க. எல்லாம் போயிட்டானுங்க.” என்றார் சலாம்.

ஒரு ஷேர் ஆட்டோ டிரைவர் “ஆவோ பாய், ஆவோ, ஜல்தி சலே ஜாயேங்கே, பைட்டோ” என்று இந்தியில் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் இந்தத் தொழிலாளர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று சொல்பவர்களைப் பற்றி கேட்டால் “அவன் கெடக்குறான். ஏதோ பொழைப்புக்கு வந்திருக்காங்க, அவங்கள துரத்தி என்ன செய்யப் போறாங்க” என்று வண்டியை கிளப்பினார்.

வடஇந்திய தொழிலாளர்
“அவன் கெடக்குறான். ஏதோ பொழைப்புக்கு வந்திருக்காங்க, அவங்கள துரத்தி என்ன செய்யப் போறாங்க”

ஒரகடம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன். சலூன் கடை நடத்துகிறார்.

“அப்பா 40 வருசமா கடை நடத்தினார், அப்புறம் நான் நடத்துகிறேன்” என்றார்.

“நான் ஐடிஐ படிச்சேன் சார். வெல்டிங் மெக்கானிக். எம்எஃப்எல்-ல அப்ரண்டிசா 2 வருசம் வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் நம்ம தொழிலையே செய்யலாம்னு வந்துட்டேன்.” என்றார்.

வட இந்தியத் தொழிலாளர்கள்
“இந்த கம்பெனிங்க வந்ததில ஊருக்கு எந்த உபகாரமும் இல்ல, உபத்திரவம்தான் மிச்சம்”

“ஒரு சுனாமி போல வந்துச்சு சார், 2007-லேர்ந்து 4 வருசம் கொஞ்சம் வருமானம் வந்திச்சி. இப்போ பழையபடி ஆயிப் போச்சி. இந்த கம்பெனிங்க வந்ததில ஊருக்கு எந்த உபகாரமும் இல்ல, உபத்திரவம்தான் மிச்சம்”

“2 வருசமா எல்லாம் போச்சு. நோக்கிய கம்பெனி மூடினதுல 28,000 பேருக்கு வேலை போச்சி. பி.ஒய்.டி கம்பெனில லாக்-அவுட் பண்ணிட்டாங்க. இவங்களுக்கெல்லாம் வேற எந்த கம்பெனிலையும் வேலையும் கிடைக்காது.”

அஜய் போரா, ஜாது சைக்கியா இருவரும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள், இங்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்கள்.
ரூ 91-க்கு செல் ரீசார்ஜ் செய்து கொண்டால் 2-3 படங்கள் டவுன்லோட் செய்து கொள்வார்களாம். “ஒருத்தரை இன்னொரு ஊருக்கு வரக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் சேர்ந்து வாழணும்.” என்றார்கள்.

அசாம் தொழிலாளர்கள்
“ஒருத்தரை இன்னொரு ஊருக்கு வரக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் சேர்ந்து வாழணும்

கடைத்தெரு தமிழ் வியாபாரிகள் “சஸ்தே மேம் பிக்தா ஹை, கரீத் லோ, ஆவோ பாய் ஆவோ” என்று இந்தியில் பொருட்களை வாங்க அழைப்பதும், “பேன்ட் 30 ரூபாய்க்கு தருவீங்களா. 50 ரூபாய்க்கு குறையாதா. சரி இந்தாங்க 50 ரூபாய்” என்று இந்தி தொழிலாளர்கள் தமிழில் பேரம் பேசுவதும் என்று களை கட்டியிருந்தது.

பேரம் பேசும் தொழிலாளர்கள்
“பேன்ட் 30 ரூபாய்க்கு தருவீங்களா. 50 ரூபாய்க்கு குறையாதா. சரி இந்தாங்க 50 ரூபாய்”

ஆந்திராவைச் சேர்ந்த சிவா ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்கிறார். பி.ஏ/பிஎட் படித்திருக்கிறார். வெளியில் கடைகளில் விலை அதிகம், அதுவும் சிவில் வேலைக்கு இது போன்ற உடைகள் போதும் என்று இங்கு வாங்க வந்திருக்கிறார்.

ஆந்திர தொழிலாளர்
“சிவில் வேலைக்கு இது போன்ற உடைகள் போதும்”

தண்ணீர் புகாத வாட்ச் வாங்க இரண்டு தொழிலாளர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். “செவன்டி ரூபீ வாட்ச், ஓகே” என்று அருகில் நின்ற நம்மிடம் ஆலோசனை கேட்டார்கள். இரண்டு பேரும் ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டார்கள். “நேரத்துக்கு டூட்டிக்கு போகணுமே, அதுக்கு தேவைப்படுது” என்றார் ஒருவர். அவர் பெயர் புனிலால் சௌத்ரி. அவரது மகன் பிரபோத் சௌத்ரியும் இங்குதான் வேலை செய்கிறார்.

“எங்க ரூமுக்கு வாங்க, மொத்தம் 400 பேரு சேர்ந்து வந்திருக்கோம். எல்லாத்தையும் பார்த்து பேசுங்க” என்று அழைத்தார்கள்.

பீகார் தொழிலாளர்
“பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு இருக்கறது எந்த மனுசனுக்கும் கஷ்டமானதுதான் சார்”

“பீகார்ல படகு ஓட்டியா இருந்தேன். இப்போ ஆத்துக்கு குறுக்கே 3 பாலம் கட்டிட்டாங்க, அதனால் படகு வேல இல்ல. அப்புறம் நோய்டா, லூதியானான்னு போய்ட்டு இப்போ இங்க இருக்கேன். அப்பல்லோ கம்பெனில துப்புரவு வேலைல இருந்தேன். இப்போ பக்கத்து கம்பெனில” என்றார்.

எந்த ஊர் என்று விசாரித்ததும் “நாங்க பீகார் பாகல்பூரை சேர்ந்தவங்க” என்றார்கள்.

ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறை
ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறை

பாகல்பூரில் முஸ்லீம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது குறித்து கேட்டதும் ஒருவர், “ஹிந்து முசல்மான் க்யா பாத் ஹை, ஐசா காட்கே தேகா தோ சப் கா கூன் ஏக் ஜைசா ஹீ ஹை” (இந்து, முசுலீம் எல்லாம் என்ன பேச்சு. இப்படி வெட்டி பார்த்தா எல்லா ரத்தமும் ஒரே மாதிரிதான்) என்றார்.

வயதானவர் ராமாயண கதை சொல்ல ஆரம்பித்தார். “கோயிலுக்கெல்லாம் போவீங்களா” என்று கேட்டதும்.

“இங்க கோயிலுக்கெல்லாம் எங்க சார் போறது. கம்பெனி, ரூம், தூக்கம் என்று போகிறது” என்றார்.

“வெளியூர்க்காரனுங்கன்னா எல்லாரும் ஏமாத்துறாங்க, ஒரு காய்ச்சல்னு டாக்டர்கிட்ட போனா நம்மள பார்த்ததுமே வெளியூர் காரன்னு தெரிஞ்சு, ஒரு ஊசி போட்டு 200 ரூபா வாங்குறாரு. அதுவே தமிழ்காரங்களா இருந்தா குறைச்சு வாங்குவாங்களா இருக்கும்”. மருத்துவக் கொள்ளை என்பது மொழி பேதம் பார்ப்பதில்லை என்று அவருக்கு தெரியவில்லை, பாவம்.

வடஇந்தியத் தொழிலாளர்கள்
இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள்.

மாடியில் ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அதற்கு வாடகை மாதம் ரூ 3,000. 11 பேர் தங்கியிருக்கிறார்கள். வீட்டு சொந்தக்காரரின் சுமார் 7 வயதான குழந்தை மேலே வந்து பேசிக் கொண்டிருந்தது, இந்தியில்.
“எங்க கூட சேர்ந்து ஹிந்து கத்துக்கிச்சு” என்றார்கள்.

“கெரசின் ஒரு லிட்டருக்கு 55 ரூபாய்க்கு வாங்குறோம். அரிசி கிலோ 32 ரூபா. கீழ் வீட்டில ரேஷன் அரிசி கிலோ 11 ரூபாய்க்கு தருவாங்க. குடிக்க தண்ணீ கீழ பிடிச்சிப்போம்” என்றார்.

“தண்ணிய கொதிக்க வைச்சி குடிப்பீங்களா”

“55 ரூபாய கெரசின் வாங்கி சூடு பண்ணி எல்லாம் எப்படி குடிக்கிறது. அப்படியேதான் குடிக்கிறோம்”

வடஇந்தியத் தொழிலாளர்கள்
இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள் தமிழினவாதிகள்.

“பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு இருக்கறது எந்த மனுசனுக்கும் கஷ்டமானதுதான் சார். தீவாளி அன்னைக்கு சிலர் ஊருக்கு போனாங்க. நாங்க போக முடியல. ஒண்ணும் செய்யலை. சாப்பிட்டுட்டு படுத்து தூங்கினோம், வேற என்ன செய்ய முடியும்”.

“சமைச்சுருவோம், சாப்பிட்டு விட்டு போங்க” என்று வற்புறுத்தினார்கள், அந்த தொழிலாளிகள்.

இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள் தமிழினவாதிகள்.

– வினவு செய்தியாளர் குழு

  1. மனதை நெகிழவைக்கும் கருத்து மற்றும் காட்சி உலா.

    நாம் எல்லோரும் இவ்வுலகின் சக உயிர்கள். மதம் மொழி போன்றவைகள் நமது தடைகள். தடைகளை விரைவில் தகர்க்க வேண்டும். பொது வழி போடவேண்டும்.

    // தமிழ் வியாபாரிகள் *** இந்தியில் பொருட்களை வாங்க அழைப்பதும்//
    //இந்தி தொழிலாளர்கள் தமிழில் பேரம் பேசுவதும்.//
    //7 வயதான குழந்தை மேலே வந்து பேசிக் கொண்டிருந்தது, இந்தியில்.//

    அருமையான பரிமாற்றங்கள்.

  2. வினவுக்கு புத்தி பேதலித்து விட்டதா??
    வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது.

    வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று வினவிடம் சொன்னது யார்?
    தமிழர்கள் இவ்வாறு சொல்வதாக வெளி மாநில நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்??
    ஏன் இந்த சிண்டு முடியும் வேலை??

    வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.
    அதில் என்ன தவறு?
    பல நாடுகளிலும் உள்ள நடைமுறைதானே!!
    குறைந்த விலைக்கு அழைத்துவரும் நபர்களை சென்று நேர்காணல் எடுக்கலாமே!
    அவர்கள்தானே தமிழனையும், வெளிமாநில நண்பர்களையும் சுரண்டுகிறார்கள்.
    அது குறித்த விழிப்புணர்வை வெளியாட்களுக்கு ஊட்டலாமே!
    அவர்கள் கையிலும் சிவப்புக் கோடியைக் கொடுக்கலாமே!
    அதை விடுத்து ஏன் இந்த சிண்டு முடியும் வேலை?

    குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.
    அவர்களின் குடும்பம், குழந்தைகளின் படிப்பு எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது..
    அவ்ர்கள் தங்கள் ஊரிலேயே நிம்மதியா வாழ்வு வாழ வழிவகை செய்யல்லாமே!
    வெளிமாநில நபர்கள் இங்கே வர என்ன காரணம்? அம்மாநிலங்களில் நிலவும் வறுமைதானே!
    அதனை நீக்க என்ன வழி சொல்கிறீர்??
    வெளிமாநிலங்களில் உள்ள சிவப்புக் கோடி ஆட்கள் என்ன செய்கிறார்கள்?
    இல்லாத இந்தியாவுக்கான புரட்சிக்கு ஆள் சேர்க்கிறார்களா??

    அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?

    சீனாவில் வெளியாட்கள் வேலை பார்க்க அடையாள அட்டை வேண்டும்.
    அதுவும் நிரந்தர வேலை கிடையாது. பல கட்டுப்பாடுகள் உள்ளன.
    அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த சொல்லி உங்க சீனா பொதுவுடைமைவாதிகளிடம் சொல்லுங்க..

    அது என்ன மாயமோ, மர்மமோ தெரியல.
    தமிழன் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டால் வினவுக்கு வயித்தெரிச்சல்!!
    ஒருவேளை இறுதிவரைக்கும் சாதி, மத சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா?

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது வெளியாட்களுக்கு புரியும்.
    ஆனால் இதுபோன்ற சிண்டு முடியும் வேலையை வினவு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    • ”வினவின் ரசிகனான எனக்கு இந்தக் கட்டுரை எரிச்சல் ஊட்டுகிறது” —-
      ரசிகனாக இருக்காதீர்கள். மாணவனாக இருந்துபாருங்கள். எரிச்சல் போய்விடும்.

    • வாங்க குருநாதன்,இது மாதிரியான பதிவுகளில் முன்னல்லாம் தமிழினவாத வெறியை கக்குவதற்கு பெரியசாமி என்று ஒரு அண்ணன் வந்து சேருவாறு.அவர் இல்லாத குறையை தீக்க வந்துருக்கீங்க,வாங்க.

      வெளி மாநிலத்தவர் உள்ளே வரக் கூடாது என்று சொல்ரது யார்னு கோவப்படுறீங்க.தமிழ் தேசிய பேரியக்கத்தின் அண்ணன் மணியரசன் சொல்றது உங்களுக்கு தெரியாதா.இது பற்றி முன்னர் நடந்த விவாதம் உங்கள் பார்வைக்கு.

      https://www.vinavu.com/2012/07/16/tamil-fascists-3/#comment-65064

      https://www.vinavu.com/2012/07/16/tamil-fascists-3/#comment-65174

      பெரியசாமி இந்த விவாதத்திற்கு மவுனத்தையே விடையாக தந்தார்.நீங்களாவது ஏதாவது பதில் சொல்லுங்களேன்.

      https://www.vinavu.com/2012/08/22/raj-thackarey/#comment-66512

      • மணியரசனெள்ளாம் ஓரு பெரிய ஆளா?. தமிழ்நாட்ல அவர 99.99% யாருக்குமெ தெரியாது.

        தொழிளாலர்களுக்கு ஏது இணம், மொழி,நாடு? அணைவரும் தொழிளாளர்களே….!

    • அருமையான பதிலடி. இதை விடத் தெளிவாக இந்தக் கட்டுரைக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. நன்றி.

    • குரு நாதன் கருத்து சரியானது வெளி மாநில தொழிலாளிக்கு வீடு வாடகைக்கு குடுத்து அவங்க சாப்பிடிவதற்க்கு ரேசன் அரிசி வாங்கி குடுத்து இருக்கிற தமிழர்கள் நிறைய பேரை எனக்கு தெரியும் அதே நேரத்தில் கட்டிட வேலை ,மரவேலை போன்ற அடிப்படை தொழிலாளர்கள் வேலை சரியாக கிடைக்க வில்லை என்று புலம்புவதையும் கேட்டு இருக்கிறேன் எனது பக்கத்து வீட்டில் வெல்டர் வேலை பார்க்கும் ஒருவர் வேலை சரியாக கிடைக்க வில்லை என்பார், வெளி மாநில தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால் இவர்களின் பிழைப்பில் பெரிய அடி விழுந்து விட்டது என்றே சொல்லலாம் ,வெளி மாநில தொழிலாளர்களுக்கு தாங்கள் கொத்தடிமைகள் என்பதை புரிய வைத்து அவர்கள் மீதான உழைப்பு சுரண்டலுக்கு எதிராக போராட தூண்டலாம் அவர்களின் உழைப்பு சுரண்டலை அவர்கள் சார்ந்த மாநில அரசுகளின் கவன த்துக்கு கொண்டு போகும் பணியை வினவு செய்யலாம,வெரும் இனவாதம் பேசுவதால் தமிழர்களுக்கும் விடிவு கிடைக்காது அந்த வட மாநில தொழிலாளர்களுக்கும் விடிவு கிடைக்காது , பாதி சோசலிஸ நாடா இருந்த இந்தியாவ அரசியல் வாதிகளும் முதலாளிகளும் மீண்டும் அடிமை தேசமாக மாற்றி விட்டார்கள் வளர்ச்சி என்ற பெயரில் இனி இதில் இருந்து அவர்கள் திரும்ப மாட்டார்கள் மக்கள் தான் உணர வேண்டும் எதுக்கெதுக்கோ கருத்தரங்கு நட்த்தும் நீங்கள் வெளி மாநில ,தமிழ் நாட்டு தொழிலாளிகளுக்கு கருத்தரங்கு நடத்தி முதலாளிகளிம் மோசடியை புரிய வைக்கலாம்,

    • குருநாதன்ஸ்

      //வேலைவாய்ப்பில் தமிழனுக்கு முன்னுரிமைக் கொடு என்றுதானே கேட்கிறோம்.

      அய்யா உங்க தமிழ் பாசம் புல்லரிக்க வைக்கிறது. உங்க கேள்விக்கான பதில் இந்தக் கட்டுரையிலே இருக்கு.

      “நான் ஒரு தமிழன்ங்க, தமிழனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, இவங்க இல்லைன்னா நமக்கு வேலை நடக்காது. நம்ம ஆளுங்க இந்த மாதிரி வேலை செய்ய கிடைக்க மாட்டாங்க” என்றார். “தமிழ் ஆளுங்களை எடுக்க மாட்டேன்னா சொல்றோம். அவங்க யாரும் வேல கேட்டு வர்றதில்ல. போன வாரம் கூட பேப்பர்ல விளம்பரம் போட்டோம். யாரும் வரவில்லை. இவங்கதான் வர்றாங்க, அதான் எடுக்கிறோம்.” என்றார்.”

      சும்மா முன்னுரிமை குடுன்னா எதுல …கெவுருமெண்டு வேலையிலா? அமாம் இதை யாருக்கிட்ட கேக்கணும். அந்த கெவுருமெண்டுக்கிட்டதான? அதா உட்டுபுட்டு சும்மா முன்னுரை பின்னுரைன்னு பினாத்திகிட்டு.

    • குருநாதன்ஸ்

      //குறைந்த வேலைக்கு வெளியாட்கள் வருவதால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழர்கள் அல்ல, வெளியாட்கள்தான்.//

      //அளவுக்கு அதிகமான வெளியாட்கள் வரவால் தமிழ்நாட்டு தொழிலாளிகள் பாதிக்கப்படுவார்களே! அதற்கு என்ன பதில் இருக்குது?//

      ஏன் இப்படி?

      அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாமல் பொளந்துக் கட்டுவது எதற்காக. தமிழகத் தொழிலாளர்கள் துபாய், குவைத்துன்னு போவதும், வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே வருவதும் ஒன்னும் நாடு புடிக்கவல்லவே. அவர்களுடைய சமூகப் பொருளாதாரம் இட்டவரம்பு அவர்களை வெளித் தள்ளுகிறது. இதுவொன்றும் அவர்கள் திட்டமிட்டு செய்வது அல்ல. இது நிகழ்ச்சிபோக்கு, உலகமயமாக்குதலுக்கு முன்பு எந்தத் தமிழன் இப்படி உலகின் மூலைகளுக்கு இப்படி ஓடினான். அதே போல தான் வட இந்தியத் தொழிலாளியும்.

      அப்புறம் இங்கே இருக்கிற பச்சை தமிழ் மென்பொருள் பொறியாளர்கள் எல்லாம் ஆன்சைட் போகனும்முன்னு தவியாய் தவிக்கிரார்கலாமே அவன்கிட்ட போய், நீங்க இப்படி அங்க போறனால அமெரிக்காவுல,இங்கிலாந்துல இருக்குற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கபடுதாமே அதனால நீங்க அமெரிக்க எல்லாம் போகக் கூடாதுன்னு சொல்லிப் பாருங்களே என்ன சொல்றாங்கன்னு கேட்டுச் சொல்லுங்க.

      சரி வினவுக் கதை தான் நமக்கு தெரிந்தது,. சும்மா சிவப்பு, கம்யுனிசம், தொழிலாளிகல்னு பினாத்திட்டு இருப்பாங்க. உங்களை மாதிரி தமிழ் மக்கள் மீது மிகவும் அக்கறைக் கொண்ட பச்சைத் தமிழர்கள், தமிழ் முதலாளிகளிடம் சென்று கொஞ்சம் கூலி உயர்வு கேட்டு வாங்கிக் கொடுக்கலாமே. இதனால் தமிழக தொழிலாளிகள் இங்கேயே வேலைப் பார்ப்பார்கள் இல்லையா. அதேப் போல தமிழ் தொழிலாளிகளிடமும் சென்று, என்ன இருந்தாலும் இது நம்மோட மண்ணு, இங்க தான் நாம பொறந்தோம். இந்த மண்ணிற்காக தான் நாம உழைக்கனும். இத விட்டுட்டு வெளிநாடு எல்லாம் போக கூடாது ன்னு அறிவுரை சொல்லலாமே.

      அப்புறம் இந்த இணைய சூரப் புலிகளும், இந்த தமிழ் தேசியம்னு பம்மாத்து காமிச்சுட்டு இருக்குற தமிழ் புலிகளும் தாம் இத கலந்து கட்டி அடிச்சிட்டு இருக்காங்க. ஹ்ம்ம் என்ன இருந்தாலும் அல்லல்படுகிரவர்கள் தொழிலாளர்கள் தானே. அவர்களுக்கு மொழி பேதம் கிடையாது, சாதி மதமும் அப்புறம் தாம். குறுக்கும் நெடுக்குமாய் நாட்டின் அடிக் கட்டுமானத்துக்காக தம்மைக் களப் பலியாக்கும் அவர்களுக்கு நிறம் ஒன்று தான் அதாங்க சிவப்பு நிறம்.

      நன்றி.

      • சிவப்பு அண்ணாச்சி அவர்கள் தமிழ்த்தேசியத்துக்கும், ‘தமிழ்ப்புலி’களுக்கும் எதிராகக் காட்டும் காழ்ப்புணர்வைப் பார்க்கும் போது, இவருக்கும் தமிழுக்கும், ஏன் தமிழர்களுக்கும் கூட பெரிய தொடர்பிருக்கும் போலத் தெரியவில்லை.

        //அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாமல் பொளந்துக் கட்டுவது எதற்காக. தமிழகத் தொழிலாளர்கள் துபாய், குவைத்துன்னு போவதும், வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே வருவதும் ஒன்னும் நாடு புடிக்கவல்லவே. ///

        சிவப்பு அவர்களுக்கு அடிப்படையே புரியவில்லை என்பதைத் தான் மேலேயுள்ள அவரது கருத்துக் காட்டுகிறது. துபாய்க்கும், குவைத்துக்கும் போகும் தமிழர்கள் , நினைத்தவுடன், போட்டிருக்கும் உடுப்புடன், ஒரு வழிப்பயணச் சீட்டுடன் கூட்டம், கூட்டமாகக் கிழம்ப முடியாது மட்டுமல்ல, அவர்கள் அங்கு நினைத்தால் தங்கவும் முடியாது. ஆனால் இந்த வட இந்தியத் தொழிலாளர்களால் தமது குடும்பங்களையும், உறவினர்களையும், ஏன் அவர்களின் ஊரவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் நிரந்தரமாகத் தங்கவும் முடியும். அது தான் துபாய்க்கும், தமிழ்நாட்டுக்குமுள்ள வேறுபாடு. 🙂

        • அய்யா வியாசரே

          நீங்க இப்போ எந்த நாட்டுல இருக்கீங்கன்னுத் தெரியாது. ஆனா கண்டிப்பாக இலங்கைல இல்லன்னு தெரியுது. தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாதீர். உம்மை விட இந்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவும் இங்கேயே இருந்து போராடவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள்.அப்புறம் இங்க வட இந்தியத் தொழிலாளர்கள் எதற்கு அழைத்துவரப்படுகிரார்கள் என்ற அடிப்படையே புரிந்துக் கொள்ளாமலோ அல்லது கண்டுகொள்ளாமலோ சும்மா வட இந்தியாக்காரன் இங்க வரான் சொம்ப எடுத்து உள்ள வைன்னு ஏன்யா பம்மாத்து காட்டுறீங்க.

          அவர்கள் எதற்காக இங்கு வருகிறார்கள், அவர்கள் தனதுக் குடும்பத்தை விட்டு விசிறியடிக்கபடுகிரார்களோ ஒழிய, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற எண்ணத்திலோ அல்லது உல்லாசப் பயணம் மேற்கொள்ளவோ அல்ல. நீர் மட்டுமல்ல எந்த ராஜராஜ சோழன் நினைத்தாலும் அவர்கள் இங்கு வருவதை தடுக்க முடியாது. ராஜராஜனின் வாரிசுகள் மட்டும் சொகுசான வாழ்க்கைக்காக வெள்ளைக்காரனின் காலை நக்க சென்று விட்டதால், குறைந்தக் கூலிக்கு வட இந்தியத் தொழிலாளர்களை விட்டால் இங்கே ஆளில்லை. அதே வேலையை இங்கேயுள்ள தமிழ் தொழிலாளர்கள் ஏன் செய்யவில்லை? அவர்கள் ஏன் வெளிநாட்டிற்கு கட்டுமான வேலைக்காக செல்கிறார்கள்.ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளிக்கு சேவை மனப்பான்மையோட வேலைக் கொடுப்பதில்லை. இலாப நோக்கிற்காக தான் வேலைக் கொடுக்கிறான். வெளிநாட்டுக்காரன் அவன் நாட்டுத் தொழிலாளிக்கு வேலைக் கொடுப்பதைக் காட்டிலும் கீழைத் தேய நாடுகளின் தொழிலாளிகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கிறான். தன் நாட்டின் தொழிலாளிகளை விட இந்திய நாட்டுத் தொழிலாளிகள் எந்த விதத்தில் சிறந்தவர்கள்.ஒன்றேயொன்று தான் , குறைந்த கூலியும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் செய்யும் வேலையும் தான்.

          அப்புறம் உங்கக் கற்பனை மித மிஞ்சி உள்ளது. அவர்கள் இங்கே வருவார்களாம்.வீடு வாங்குவார்களாம். தொகுதிக் கேட்பார்களாம்.ஆட்சி அதிகாரத்தில் பங்குக் கேட்பார்களாம். கேட்பதற்கே கேவலமாய் இருக்கிறது. இதுல வேற தமிழர்களின் வெள்ளைத் தொலாசையாம். ராஜராஜனுக்கு இல்லாத வெள்ளைத் தொலாசையா இங்கு இருக்கும் தமிழர்களுக்கு உள்ளது.

          தமிழ்நாட்டு அரசுக்கு மனுப் போடுவது இருக்கட்டும், முதல்ல ராஜராஜனின் வாரிசுகள் எல்லாம் வெளிநாட்டுச் சுற்றுபயனத்தை முடித்துக் கொண்டு இங்கே வரட்டும்.வந்து நாங்களே கட்டடம் கட்டுறோம், பாலம் கட்டுரோம்னு சொல்லட்டும் அப்புறம் வட நாட்டுக்காரனைப் போக சொல்லலாம்.என்ன சரி தானே?

          நன்றி.

        • வியாசன்,

          கிட்டத்தட்ட தமிழ் தேசியம் இலங்கையில் அரசியல் ரீதியில் அழிவுற்ற நிலையில், அதற்க்கு அரசியல் முலாம் பூசிய வெள்ளாள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, அதற்கு ராணுவ முலாம் பூசிய விடுதலைப் புலிகளும் அழிபட்டுப்போக, தமிழ் தேசியம் , தமிழ் புலிகள் மேலக் காழ்ப்புணர்வுக் கொள்ள யாதொருக் காரணமும் எனக்கில்லை. அப்புறம் தமிழ் தேசியத்திற்கு எதிராக நான் என்ன பேசினேன்? உங்கள் கருத்துக்கு எதிர்க் கருத்திட்டால் உடனே தமிழுக்கும் எனக்கும் சம்மந்தமில்லையா, நல்ல வேடிக்கை. ஈழத் தமிழ் மக்களுக்காக உலக நாடுகளின் ஆதரவைப் பெற வெளி நாட்டு பயணம் மேற்கொண்ட ராஜராஜனின் வாரிசுகள் இன்னும் ஈழம் திரும்பியபாடில்லை. பாவம், இவர்களின் அரசியலுக்கு இராணுவ முலம் பூசிய புலிகளோ மண்ணிற்குள். ஆனால் நான் அப்படியல்ல. இன்னும் இதே தமிழ்நாட்டுல தான் இருக்கேன். இங்கே தான் வேலை செய்கிறேன்.இந்த மக்களோட தான் உறவாடுகிறேன்.
          உங்களை விட தமிழ் மீதும்,தமிழ்நாட்டின் மீதும் உரிமைக் கொள்ள எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது.அப்புறம் என்னதான் உள்ளுக்குள்ள டெரர் மாதிரு இருந்தாலும் எல்லா புன்னூட்டத்திர்ற்கும் முற்றுப் புள்ளியாய் ஒரு சிரிப்பு போட்டுரீங்கள்ளே அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

          • தோழர் சிவப்பு,

            //தமிழ் தேசியம் இலங்கையில் அரசியல் ரீதியில் அழிவுற்ற நிலையில்…..அரசியல் முலாம் பூசிய வெள்ளாள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, அதற்கு ராணுவ முலாம் பூசிய விடுதலைப் புலிகளும் அழிபட்டுப்போக, …..இந்த தமிழ் தேசியம்னு பம்மாத்து காமிச்சுட்டு இருக்குற தமிழ் புலிகளும்…..அப்புறம் தமிழ் தேசியத்திற்கு எதிராக நான் என்ன பேசினேன்?///

            மேலே கூறிய உங்களின் கருத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள், நான் உங்களுக்கும் தமிழுக்கும் தொடர்புண்டா என்று சந்தேகப்பட்டதன் காரணம் புரியும்.

            ///நான் அப்படியல்ல. இன்னும் இதே தமிழ்நாட்டுல தான் இருக்கேன். இங்கே தான் வேலை செய்கிறேன்.இந்த மக்களோட தான் உறவாடுகிறேன்.///

            தமிழர்களைத், தமிழை, தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதைக் கூட எதிர்க்கும், கூட இருந்தே தமிழர்களுக்குக் குழிபறிக்கும், பல லட்சக்கணக்கான தமிழெதிரிகள் தமிழைப் பேசிக்கொண்டே தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எல்லோரும் தமிழர்களாகி விடுவார்களா?

            //உங்களை விட தமிழ் மீதும்,தமிழ்நாட்டின் மீதும் உரிமைக் கொள்ள எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது.///

            உண்மையில் பார்க்கப்போனால், வட இந்தியக் கூலிகளுக்குள்ள உரிமைகள் கூட தமிழ்நாட்டில் எங்களுக்குக் கிடையாது. அது எங்களுக்கும் தெரியும். ஆனால் தமிழர்கள் என்ற முறையில், தமிழ்நாட்டின் மீது எங்களுக்குள்ள உணர்வு பூர்வமான, வரலாற்றுத் தொடர்புக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், எங்களுக்குமுள்ள இனரீதியான பாசத்துக்கும் தடையாக இருக்க முடியாது. நாங்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் மட்டும் தான், தமிழ்நாட்டில் தமிழர்களின் நலன்களில் எங்களின் கருத்தைத் தெரிவிக்கிறோம், உரிமையுடன் விமர்சிக்கிறோம், அதை எந்த இந்தியனும் தடுக்க முடியாது.

            //எல்லா புன்னூட்டத்திர்ற்கும் முற்றுப் புள்ளியாய் ஒரு சிரிப்பு போட்டுரீங்கள்ளே அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.//

            இந்த தளத்திலேயே முதல் முறையாக சில நிமிடங்களுக்கு முன்னர், அம்பி அவர்களின், இலங்கைத்தமிழ் மண் சம்பந்தமான கருத்து மட்டும் தான், எனக்கு உண்மையில் எரிச்ச்சலையூட்டி, கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் படி செய்து விட்டது. அதைத் தவிர. உண்மையில் நான் இங்கு பதிலெழுதும் போது சிரித்துக் கொண்டு தான் எழுதுகிறேன், சிலரின் வாதங்கள் உண்மையில் சிரிப்பையூட்டுகின்றன. அதைக் குறிப்பது தான், இது 🙂

            • வியாசன் அய்யா,

              உங்க மூத்திரப் பரிசோதனை(உபயம்: தோழர் தென்றல்) அவ்ளோ தானா? உங்களை என்னமா நெனெச்சிட்டு இருந்தேன் கடைசியா இப்படி கவுத்துபுட்டீங்களே. உங்க மூத்திரச் சோதனைப் படி நான் தமிழன் தானுங்கோ. ஆனா இப்போ நீங்க சொன்ன சோதனை எனக்கு புச்சா இருக்கு. ஈழம் மலரா விட்டால் நான் தமிழன் இல்லையா. ராசாரசனை மதிக்காவிட்டால் நான் தமிழன் இல்லையா, தமிழ் புலிகளை மதிக்காவிட்டால் நான் தமிழன் இல்லையா. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றுக் கூறி அம்மாவையே மறத் தமிழச்சி ஆக்கினார்களே, நான் என்ன ஈழம் அமைவதை தடுத்தேனா?அல்லது உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் தான் போனேனா? பிறந்தது முதல் ஒன்னு ரெண்டு தடவ பெங்களூருக்கு போயிருக்கேன். அவ்ளோ தான் அப்புறம் இங்க தான் இருக்கேன். ஆனால் உம்மைப் போன்ற தமிழ் தேசியம் பேசுபவர்களின் யோக்கியதை என்ன? தேசியம் பேசிக்கொண்டே வெள்ளையனிடம் சரணாகதி அடைந்து விட்டீர்கள். ஆனால் அதை சொன்னா என்னை தமிழனே இல்லை என்கிரீர்கள். ஈழம் மலர தற்சமயம் தங்கள் கைவசம் இருக்கும் திட்டங்கள் என்ன என்பதை ஐயம் திரிபுறத் தெரிவித்து விட்டால் நலம்.

              என்னைத் தாங்கள் தமிழன் இல்லை என்று கூறியதால் நான் ஆச்சரியப் படமாட்டேன். அதிர்சியடையவும் மாட்டேன். ஏனென்றால் ராஜராஜனின் வாரிசுகளுக்கு மட்டுமே அது நேந்துக் கொடுக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். அப்புறம் தமிழ் நாட்டின் மீதான தங்களது பாசத்திற்கு எனது வந்தனங்கள். அப்புறம் அந்த வட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றிய டீலிங்க் இன்னும் முடியலையே.

              அவுங்களை உள்ள விடக் கூடாது, வருகையை கட்டுபடுத்த வேண்டும் , கண்காணிக்க வேண்டும், குடும்ப அட்டையைக் கொடுக்க கூடாதுன்னு சொன்னீர்கள் என்றால், முதலில் அவர்களுக்கான வாழ்வுரிமைக்காக தார்மீக ரீதியில் குரல் கொடுக்க வேண்டும். அப்புறம் இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு குண்டுமணியாவது உங்களால் ஏதாவது பயன் இருந்ததா என்பதையும் தாங்கள் விளக்க வேண்டும். அவர்கள் இல்லையென்றால் வளர்ச்சி என்ற பம்மாத்தும் இல்லை.அவர்களின் வருகை ஏன் உலகமயமாதலுக்குப் பின்பு அதிகரித்தது என்பதோடு சேர்த்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

              வட இந்தியத் தொழிலாளர்கள் ஒன்னும் இங்க வந்து குளுகுளுன்னு ஏ.சி அறையில உக்காந்து வேலை பார்க்கவில்லையே . அது மட்டுமலாமல் அவர்கள் இங்கு வருவது அவர்களே திட்டமிட்டு செய்வது அல்ல மாறாக தூக்கியடிக்கபடுகிரார்கள். இதையேத் தான் மகாராஷ்டிராவிலும் நடந்தது, அங்கு பால் தாக்கரே என்ற பாசிஸ்டு அவர்களை அடித்து விரட்டினான். இங்கே வியாசன் அங்கே பால் தாக்கரே. இங்கே தமிழன் அங்கெ மராட்டியன் வேறுபாடு அவ்ளோ தான்.

              நீங்கள் நினைத்தாலும் யார் நினைத்தாலும் அவர்கள் இந்தியாவெங்கும் விசிறியடிககபடுவதை தடுக்க இயலாது. ஏனென்றால் குறைந்தக் கூலிக்காக அவர்கள் தேவைப்படுகிறார்கள். நீங்க வேண்டுமென்றால் இங்கே வந்து அதைத் தடுக்க முயற்சி செய்து பாருங்கள்.

              அப்புறம் தாங்கள் சிரிப்பது, கருத்துத் தெரிவிப்பது போன்ற உரிமைகளை நான் மதிக்கிறேன்.

              நன்றி.

  3. போலி தமிழ் தேசியம் பேசும் சிமான், மணியரசன், வியாசன்! போன்றவர்களின் வடநாட்டு -தொழிலாளர் எதிர்ப்பு குரலுக்கு பதில் குரல் கொடுப்பாதாக நினைத்துக்கொண்டு இந்த கட்டுரையை எழுதிய வினவு சவுகார்பேட்டைக்கு பேயிருக்கலாமே ! வட இந்திய பானியாக்களின் முகதிரையை கிழித்து இருக்கலாமே ! அதை விட்டு விட்டு நம் தமிழ் மக்களிடம் ரேசன் அரிசியை rs 3 க்கு வாங்கி உண்ணும் அவல நிலையில் ,வறுமை நிலையில் உள்ள வடநாட்டு தொழிலாளர்களிடம் பேட்டி எடுக்கின்றேன் என்ற பெயரில் தமிழ் மக்களிடம் கொஞ்சம் நஞ்சம் உள்ள தமிழ் இன உணர்வையும் மட்டு படுத்தும் முறையில் வினவு அரசியல் சதி செய்கின்றது. வடநாட்டு தொழிலாளர்களிடம் பேட்டி எடுத்த போது தமிழ் மக்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்ற கேள்வியை கேட்டு இருந்தால் தமிழரின் ஈர நெஞ்சம் வெளிப்பட்டு இருக்குமே ! வினவுக்கு வட இந்திய பானியாக்களை அம்பலபடுத்த , சவுகார்பேட்டை நுழைய அரசியல் மனோவலிமை இருக்கின்றதா ? வயிற்று பிழைப்புக்கு உழைக்கு வடநாட்டு -தொழிலாளர் floating population வகைமை சார்தவர்கள். தமிழ் நாட்டில் வீடு ,நிலம் ,தொழில் செய்யும் வகைப்ட்டவர்கள் அல்ல. வேலை ,கூலி ,ஆறு மாதம் கழித்து டாட்டா பாய்பாய் செல்லும் நிலையில் உள்ளவர்கள் இவர்கள். இவர்களால் தமிழ் சமுகத்துக்கு துயரம் ஏதும் ஏற்படுவது இல்லை. அதே சமையம் வட இந்திய பானியாக்களின் ஊடுறுவல் மிகவும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழ் மக்களின் சமுக பொருளாதார நிலைகளை சீர்குலைப்பதாக இருகின்றது .

    • வியாசன் ,

      தமிழ் நாட்டுக்கு வந்து உள்ள வட இந்திய தொழிலார்களை நாம் தமிழ் நாட்டில் தமிழர் உழைப்பில் பிழைத்து ஒட்டுண்ணியாக வாழும் பார்பன்ர்கலுடன் ஒப்பிட முடியாது. ஆனால் சவுகார்பேட்டையில் டேரா போட்டு தமிழ் மக்களை சுரண்டும் வட இந்திய பானியாக்களை வேண்டுமானால் தமிழ் நாட்டு பார்பனர்களை ஒப்பிடலாம். நான் முன்பே கூறியது போல வயிற்று பிழைப்புக்கு உழைக்கும் வடநாட்டு -தொழிலாளர் floating population வகைமை சார்தவர்கள். தமிழ் நாட்டில் வீடு ,நிலம் ,தொழில் செய்யும் வகைப்ட்டவர்கள் அல்ல. வேலை ,கூலி ,ஆறு மாதம் கழித்து டாட்டா பாய்பாய் சொல்லி செல்லும் நிலையில் உள்ளவர்கள் இவர்கள். ஆனால் தமிழ் நாட்டினுள் வட இந்திய பானியாக்களின் ஊடுறுவல் மிகவும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. அத்தகைய ஊடுருவல் தமிழ் மக்களின் சமுக பொருளாதார நிலைகளை சீர்குலைப்பதாக இருகின்றது. உங்கள் மாற்று அல்லது ஏற்பு கருத்துகளை எதிர்பார்கின்றேன்

      • நண்பர் தமிழ்-தாகம்,

        அப்புறம் நீங்க நம்ம தமிழ்குடிதாங்கியும், வட இந்தியத் தொழிலாளிகளிடம் மிக்க மதிப்பும் மரியாதையும், வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் சார்பாக அவர்களை கருத்தியல் ரீதியாக நொங்கி எடுக்கும் திருவாளர் வியசரிடமா கேட்கிறீர்கள். நீங்கள் யாரைப் பற்றிக் கருத்து கேட்கிறீர்கள்? தாங்களே சொல்வது போல இந்தியா முழுமைக்கும் ஓட்டச் சுரண்டிக் கொளுத்த பார்ப்பன பணியாக்களையா இல்லை தமது வியர்வையைக் கலந்து அடிக்கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்படும் அந்த தொழிலாளர்கலையா? முன்னவரைக் கூட வியாச பகவான் ஏற்றுக் கொள்வார் ஆனால் பின்னவர்களை ஹ்ம்ம். முடியவே முடியாது.

        நன்றி.

    • தமிழ்-தாகம்,

      தமிழருடைய மட்டுமல்ல எவருடைய ஈர உணர்விற்கும் மொழிக்கும் திழியும் சம்மந்தமில்லை. இல்லை த்மைலருடைய ஈர உணர்வை வினவுப் பதிவு செய்யவில்லை என்று தாங்கள் கருதினால், பின்வரும் ஒரு வரியே அதற்கு பதில் சொல்கிறது,,

      //“அவங்கள எப்படி சார் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும். நம்ம ஆளுங்க எவ்வளவு பேரு மத்த இடத்துக்கு போய் வேலை செய்றாங்க, வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்றாங்க. அவங்களை எல்லாம் துரத்திட்டா ஒத்துப்போமா. அது போலத்தான் இதுவும். அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க. அவங்களை போய் விரட்டணும்னு ஏன் சொல்றாங்க” என்றார்கள். ஆக தமிழ் பெண்களும் கூட வட இந்திய தொழிலாளிகளை புரிந்து கொள்கிறார்கள்.//

      வினவில் தொழிலாளர்களைப் பற்றி ஏற்க்கனவே பல கட்டுரைகள் வந்து இருந்தாலும், குறிப்பாக வட இந்தியத் தொழிலாளர்களை நெருங்கி நாடிப் பிடித்து பார்க்கும் தனித்துவமானக் கட்டுரை இது தான். இப்படி வட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றிய கட்டுரையில் செட்டுகளைக் கேள்விக் கேட்டு கிழிக்க சொல்வது முட்டாள்தனமானது.

      கட்டுரைத் தெளிவாக வட இந்தியத் தொழிலாளர்கள் பற்றி தமிழினவாதிளின் கருத்திற்கு ஒரு பதிலடி தானேயொழிய சேட்டுகளைப் பற்றியது அல்ல.

      நன்றி.

      • நண்பர் சிகப்பு ,

        முட்டாள் தனமாக சிந்திப்பது யார் என்று பார்ப்போமா சிகப்பு ?

        ஒரு மொழியும் அதன் ஊடாக வளரும் ஒரு மண்ணின் நாகரிகமும் மனிதனை சொழுமை படுத்தாது என்றா சொல்ல வரீங்க ? திரு லெனின் அவர்கள் தன் ருஷ்ய மொழியை சொர்கத்துக்கு இணையாக உருவக படுத்திய நிகழ்வை நினைத்து பார்க்க எல்லாம் நண்பர் சிகப்புக்குநேரமில்லாமல் இருப்பது ஏன் ?

        பொத்தாம் பொதுவாக யாரை தமிழினவாதிகள் என்று நீங்களும் ,வினவும் கூருகின்றிர்கள் ? சீமானா ? மணியரசனா ? தியாகுவா ? எதையெல்லாம் இக் கட்டுரை அம்ப்பல படுத்தாமல் பொத்தாம் பொதுவாக பேசுவது என்பது யாருக்கு பயன் ? தமிழினவாதிககளை காச்சு காச்சு என்று காட்டும் இக்கட்டுரை தமிழின எதிரிகளான [பார்பன ,பானியாக்களை],ஏன் இந்தியாவின் பல்வேறு பட்ட தேசிய இனங்களின் ஊடாக ஊடுருவி , அத் தேசிய இனங்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பார்பன ,பானியாக்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது சரியா ? வினவின் நோக்கம் இனவாதத்தை அம்பல்ப்டுதுவது என்றால் அதே வினவுக்கு இந்திய தேசிய இனங்களின் மீது பொருளாதார மோலன்மை செய்யும் பார்பன ,பானியாக்களை அம்பல படுத்துவதும் தானே நோக்கமாக இருக்க வேண்டும்.?

        இப்போது முட்டாள் தனமாக சிந்தித்தது யார் என்று விளங்கியதா சிகப்பு ?

        • நண்பர் தமிழ்-தாகம்,

          மீண்டும் தவறாக புரிந்துக் கொள்கிறீர்கள்.
          கிழே உள்ள வரிகள் தான் வினவுக் குழு அவர்களின் ஆய்வின் சாரமாகத் தொகுத்து அளித்து உள்ளனர்.

          //ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சொந்த ஊரில் வாழ்வாதாரங்களை தொலைத்த உழைக்கும் மக்கள் இங்கு வந்து சேர்கின்றனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள் இவற்றை அறிய ஒரகடத்தில் இயங்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பொருள் வாங்க வரும் தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் பேசி தகவல் திரட்டினோம்//

          உங்களுக்கு என்னப் பிரச்சினை. அவர்கள் தெளிவாக கூறி விட்டார்கள் இந்த ஆய்வு எதற்காக என்று.

          உங்கள் பிரச்சினை தமிழ் மக்களின் ஈர உணர்வை வினவு பதிவு செய்யவில்லை என்பது. கிழே உள்ள வரிகள் அழகாக தமிழ் மக்களின் உணர்வை எடுத்தியம்புகிறது.

          //அவங்கள எப்படி சார் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும். நம்ம ஆளுங்க எவ்வளவு பேரு மத்த இடத்துக்கு போய் வேலை செய்றாங்க, வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்றாங்க. அவங்களை எல்லாம் துரத்திட்டா ஒத்துப்போமா. அது போலத்தான் இதுவும். அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க. அவங்களை போய் விரட்டணும்னு ஏன் சொல்றாங்க” என்றார்கள். ஆக தமிழ் பெண்களும் கூட வட இந்திய தொழிலாளிகளை புரிந்து கொள்கிறார்கள்.//

          பார்ப்பன பனியாக்களை தோலுரித்து ஏகப்பட்டக் கட்டுரைகள் வினவில் எழுதப்பட்டு இருக்க, அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு , இந்தக் கட்டுரையில் ஏன் எழுதவில்லை என்று அடம் பிடிப்பது ஏன்? ஒவ்வொருக் கட்டுரையிலும் உங்கள் விருப்பமான அனைத்தும் எதிர்ப்பர்க்க முடியுமா?

          அப்புறம் பின்னூட்டம் எதற்கு? நீங்கள் தாரளாமாக அவர்களைத் தோலுரித்துத் தொங்க விடலாமே.

          நன்றி.

          • நண்பர் சிவப்பு,

            எமது இறுதி முன்று அடிகளில் தெளிவாக தானே வியாசனுக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். வியாசன் பஞ்சம் பிழைக்க இடம் பெயரும் வட இந்திய தொழிலாளர் மீது வைக்கும் வன்மத்தை,கவனத்தை தமிழ் மக்களின் ரத்தத்தை அடகு கடைகள் முலம் உறிஞ்சி குடிக்கும் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டும் வடநாட்டு பானியாக்கள் மீது திசை திருப்ப வேண்டும் அல்லவா ? விவாதம் இத்தகைய திசையில் செல்லாமைக்கு காரணமே வினவு தான் ! தமிழினவாதிகள் பற்றிய ஒற்றை கேள்வியுடன் கட்டுரை பயணிக்கும் போது அதே சமயம் பானியாக்கள் மீது வினவு கட்டுரை கருத்துக்களை எடுத்து வைக்காத போது வாசகர்களின் மன நிலை தமிழினவாதிகளுக்கு ஆதராவாக தான் திரும்பும் என்ற எளிய மனோவியல் கூட வினவுக்கும் ,சிவப்புக்கு தெரியவில்லையே ! வட நாட்டு தொழிலாளர் மீது இக் கட்டுரை அனுதாபத்தை பெற்று தர வேண்டும் என்றால் வட நாட்டு தொழிலாளர்களையும் ,வடநாட்டு பானியாக்களையும் சமுக,பொருளாதார நிலைகளில் ஒப்பீடு செய்ய வேண்டும் அல்லவா ?இடம் பெயந்த வடநாட்டு மக்களில் யார் தமிழ் மக்களை சுரண்டி ஒட்டுண்ணியாக பிழைக்கின்றனர் ?[பானியாக்கள்.]யார் தமிழ் நாட்டில் வேலை செய்து தன் வயிற்றை கழுவுகின்றனர் ? [வட நாட்டு தொழிலாளர்] என்ற விடயத்தை வினவு எடுத்து காட்ட தவறியதாகவே கருதுகின்றேன்.

            மேலும் வடநாட்டு பானியாக்கள் மீது வினவின் பார்வை என்ன ?சிமான் ,மணியரசன் ,தியாகு போன்ற தமிழினவாதிகளின் பார்வை என்ன என்பது எல்லாம் இக்கட்டுரையில் தொகுக்கபட்டு இருப்பின் இக் கட்டுரை முழுமை பெற்று இருக்கும்.இக்கட்டுரைக்கு வருகின்ற பின்னுட்டங்கள் கட்டுரையின் நோக்கத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு எதிர்பு குரலாக இருக்க காரணமே இக்கட்டுரை நான் முன்பே கூறியபடி முழுமை அற்று இருப்பது மட்டும் தான்

            //இந்தியா முழுமைக்கும் ஓட்டச் சுரண்டிக் கொளுத்த பார்ப்பன பணியாக்களையா இல்லை தமது வியர்வையைக் கலந்து அடிக்கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்படும் அந்த தொழிலாளர்கலையா? //

            //பார்ப்பன பனியாக்களை தோலுரித்து ஏகப்பட்டக் கட்டுரைகள் வினவில் எழுதப்பட்டு இருக்க, அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு , இந்தக் கட்டுரையில் ஏன் எழுதவில்லை என்று அடம் பிடிப்பது ஏன்? ஒவ்வொருக் கட்டுரையிலும் உங்கள் விருப்பமான அனைத்தும் எதிர்ப்பர்க்க முடியுமா?//

            • தமிழ்-தாகம்,

              தாங்கள் வியாசரிடம் இன்னும் என்ன எதிர்பார்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் தெளிவாக கூறி விட்டார். தமிழ் நாடு தமிழர்களுக்குத் தானேயொழிய வந்தேறிகளுக்கு அல்லவென்று. அவருக்கு நாம என்னதான் ஆத்து ஆத்துன்னு ஆத்துனாலும் ஒன்னும் நடக்க போவதில்லை. சரி, குறிப்பாக சீமான்,மணியரசன் என்று சொல்லியிருந்தாலும் அவர் தன்னோட கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதற்கு அவரோட பலப் பின்னூட்டங்கள் சான்று பகர்கின்றன.
              நீங்கள் வேண்டும் என்றால் முயன்று பாருங்கள்.

              நன்றி.

    • நண்பர் தமிழ்-தாகம்,

      மணியரசன் வகையறாக்கள் floating population வகைத் தொழிலாளர்களுக்கு எதிராகத்தான் பேசுகிறார்கள் சவுகார்பேட்டை பனியாக்களைப் பற்றியல்ல என்று நினைக்கிறேன்.

      • Univerbuddy,

        மணியரசன் வகையறாக்கள் floating population வகைத் தொழிலாளர்களுக்கு எதிராகத்தான் பேசுகிறார்கள் சவுகார்பேட்டை பனியாக்களைப் பற்றியல்ல என்பது உண்மை எனில் , என்றால் அதைதானே இக்கட்டுரை அம்பலபடுத்தி இருக்கவேண்டும் ? அதனை வினவு கட்டுரை செய்யலாம் சரியான மொன்னையாக ,மொக்கையாக அல்லவா இக்கட்டுரை இருகின்றது ?

  4. தமிழ் தேசியர்களின் கருத்துக்களுக்கு பதிலடி என்கிற ஒற்றைப் புரிதலில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.அந்த தொழிலாளர்கள் சராசரியாக 200 ரூபாய் நாள் சம்பளத்தில் சுரண்டப் படுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பேட்டி எடுக்கப் போனவர்கள் விளக்கினர்களா என குறிப்பில்லை.அவர்களை அமர்த்தும் கங்காணிகள்,மேலாளர்கள் அதற்கான நிறுவனங்கள் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 100 ரூபாய் என சுருட்டுகின்றனர்.முறைசாராத இந்த தொழிலாளிகளுக்கு பணிபாதுகாப்பும் கிடையாது.எல்லா குழம்பிய குட்டையிலும் மீன் பிடிக்க அலையும் பாஜகவின் ராகவன் ஒரு விவாதத்தில் நாம் இந்தி படிக்காததால் வடநாட்டிலிருந்து இங்கே வந்து எல்லோரும் வேலை வாய்ப்பை எடுத்துக் கொள்வதாக(?!) தமிழ் தேசியர்களின் பீலிங்கை பிரதிபலித்தான்.இந்த 200 ரூபாய் சம்பளம் என்பது அந்தந்த மாநிலத்தில் “பெரிய” சம்பளம் என்பதை நினைத்தால் நாட்டின் சமனற்ற நிலை தலையை சுற்றுகிறது.தென் தமிழகத்தின்,ஏன் தஞ்சை கூலி விவசாயி கூட கேரளா சென்று விறகு வெட்டவும், தோட்டத்தை கொத்தவும் போகின்றனர்.ஏனென்றால் அங்கு ஒரு நாள் வேலைக்கு 500-600 கிடைப்பதாக கூறுகின்றனர்.

    • ராஜன்,

      வினவு குழுவினர் வட இந்தியத் தொழிலாளிகளுக்கு புரட்சி கற்றுக் கொடுக்க போகவில்லை. கட்டுரைத் தலைப்பு சொல்வது போல இங்கு இருக்கும் இங்கு இருக்கும் தமிழினவாதிகளுக்கு ஒரு பதில் தான் இந்தக் கட்டுரை. வட இந்தியத் தொழிலார்கள் சுரண்டுப்படுவதைக் குறித்த பலக் கட்டுரைகள் வினவில் ஏற்கனவே வந்து உள்ளன.

      நன்றி.

      • நண்பர் சிவப்பு ,தலைப்பிற்கேற்ற கட்டுரை தான் என்பது சரியாக இருக்கலாம்.அதே சமயம் அந்த கட்டுரை தயாரிக்க போனபோது அங்கு அந்த வட இந்திய தொழிலாளர்களிடம் வினவு குழு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் முக்கியமானது என்பது தான் எனது அக்கறை. ” தமிழர்கள் இவ்வாறு சொல்வதாக வெளி மாநில நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்கிற குருநாதனின் கவலையில் (மட்டும்) எனக்கு உடன்பாடு உண்டு.ஏனென்றால் தமிழ் இனவாதிகள் மத்தியில் (ஒரு சிறு வட்டத்தில்) உள்ள ஒரு குறுகிய சிந்தனையை (அது பெரும்பான்மை தமிழர்கள் ஏற்கவில்லை என்கிற யதார்த்தத்தில்) வட இந்திய தொழிலாளர்களிடம் சொல்லி கருத்து கேட்பது சரியான நடைமுறையா? இந்த பதிவில் பதிலளித்த பலருக்கும் அது ஒரு புதிய தகவல் என்பது அவர்கள் பதிலளிக்கும் முறையில் தெரிகிறது தானே? இந்த கசப்பான உணர்வை அவர்களுக்கு அறிமுகம் செய்வது வினவின் நோக்கமாக இருக்க முடியாதல்லவா? அவர்களின் வறுமை அவர்களை இந்த தமிழ்நாட்டில் ஒரு அவலமான வாழ்வில் தள்ளியுள்ளதற்கு காரணம் என்னவென்பதை அவர்களிடமும்,அந்த தோழர்களின் வருகை அருகாமை தமிழ் தொழிலாளர்களிடமும் சிறு வர்த்தகர்களிடமும் ஒரு ஒத்திசைவான இணக்க சூழலைத் தான் உருவாக்கியுள்ளது என்பதற்கு தமிழக ஊழியர்,வர்த்தகர்களிடமும் கருத்து கோரி பெறுவதே சரியாக இருந்திருக்க முடியும் என்பது எனது கருத்து.”வினவு குழுவினர் வட இந்தியத் தொழிலாளிகளுக்கு புரட்சி கற்றுக் கொடுக்க போகவில்லை” என்பதை வினவே ஏற்க முடியாது.முதளித்துவ பத்திரிகைகள் செய்திகளை தேடித் தேடி அலைந்து பொறுக்குகின்ற அதே தரத்தில் வினவும் ஒருமுகப் பட்ட சிந்தனையாக ஒரு தேவையை மட்டும் கருத்தில் கொள்ள இயலாது. மாறாக அவர்களின் அந்த பேட்டியின் முயற்சியில் கூடுதலான அந்த சிந்தனையை விதைத்திருக்க வேண்டும்.அதை செய்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.”வட இந்தியத் தொழிலார்கள் சுரண்டுப்படுவதைக் குறித்த பலக் கட்டுரைகள் வினவில் ஏற்கனவே வந்து உள்ளன”ஏற்கனவே எல்லாம் செஞ்சாச்சு என்கிறதன் தொனி எனக்கு விளங்குகிறது.ஆனால் வினவு எனக்கு புதிதல்ல.ஒவ்வொரு பதிவிலும் திட்டமிட்ட முறையில் விவாதங்களை திசை திருப்பி மழுங்கடிக்கிற வியாசன் போன்றவர்கள் நேரத்தை செலவழிப்பது போல என்னால் முடியவில்லை என்பதால் நான் பிரபலமானவன் அல்ல அவ்வளவு தான்.இந்த விவாதத்தில் வியாசன்,அம்பி போன்றவர்களிடம் உங்களது முரணை நான் ஏற்கிற நிலையிலும் உங்களின் கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்பதை விளக்கவே இதனை தோழமையுடன் பதிகிறேன்.குறைந்த பட்ச ஊதியம் என்பது கேரளாவில் ஓரளவேனும் கறாராக இருப்பதைப்போல தமிழகத்திலும் இல்லை வட மாநிலங்கள் பலவற்றிலும் இல்லை அதனால் விளைவதே இந்த தொழிலாளர்கள் இங்கே வந்து குழுமுவதன் காரணம் என்பது போல பல்வேறு காரணிகளை அலசாமல்

        ” ………… போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவார் என்று, பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்பின் வரிசையில் சென்று நானும் புகுந்தேன், அதைத் தான் பிராமணரல்லாத நாவுக்கரசர் கூறுகிறார்.இதே கருத்தைத் தான் நானும் கூறுகிறேன்”

        என்கிற வியாசனின் வழியில் இந்த விவாதம் செல்கிறது. வளரட்டும் !!(யார் வேண்டுமானாலும் நாகரீகமான வார்த்தைகளை மட்டுமே பேசிக்கொண்டு விவாதத்தை பயனற்ற வழியில் செலுத்த முடியும் என்பதை வினவு அனுமதிக்கிறது என்பதும் எனது ஆதங்கம்)

        • திரு.RAJAN

          நடுவர் ஒருவர் இருந்து, விவாதிக்கப்படும் தலைப்பில் மட்டும் பேசவேண்டுமென்று விவாதிப்பவர்களை வழிநடத்திச் செல்ல, இது ஒன்றும் பட்டிமன்றம் அல்லது கல்லூரிகளில் நடைபெறும் விவாதமல்ல. சில தலைப்பின் கீழ் பேசிக்கொண்டிருக்கும் போது கலந்துரையாடல்கள் திசைமாறிப் போவது தவிர்க்க முடியாதது. வினவு தனக்குப் பிடித்தமான கட்டுரைகளை மட்டும், பதிவு செய்து விட்டு, எல்லோரும் அதைப்பற்றி மட்டும் தான் பேச வேண்டுமென்றால் கம்யூனிச நாடுகளிலுள்ள பேச்சுச் சுதந்திரம் தான் வினவிலும் இருக்கும். உங்களுக்கு அது ஒருவேளை சரியாகப் படலாம் ஆனால் இங்கு கலந்துரையாடல்களில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே கம்யூனிஸ்டுகள் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும், அப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்துப் பாருங்கள், இங்குள்ளவர்களில் எத்தனைபேர் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்பதையும் அறிய அது உங்களுக்கு உதவும்.

          • திரு.வியாசன்,
            பட்டிமன்ற பேச்சுக்கள் முன்னரே தயார் செய்துகொள்ளப் பட்டவை .அது மாதிரி இங்கு இயலாது என்பது நானும் உடன்படக் கூடியதே. ஆனால் நான் இங்கு சுட்டிக் காட்டிய மேற்படி உங்களது விவாதங்கள் சற்றும் தொடர்பற்ற வேறொரு தளத்திற்கு செல்வதை நெறிப்படுத்துவதும் வினவின் கடமை தான்.அதியமான் போன்றவர்கள் நடத்திய விவாதமுறை முற்றிலும் எதிரான நிலையில் இருந்து நிகழ்த்தப்பட்டாலும் அது மைய செய்தியை சுற்றியே வரும்.அதனூடே விவாதம் செல்லும் போது பல்வேறு அவதூறுகளுக்கு, தவறான புரிதல்களுக்கு புதியவர்களுக்கும் விளக்கமளிக்கிற வாய்ப்பாக அது இருந்தது.ஆனால் உங்களது விவாதமுறை அதுவல்ல. நீங்கள் விட்டேற்றியாக இங்கு வந்து பொழுது போக்கி விவாதங்களை சீர்குலைக்கிறீர்களோ என நினைக்கத் தோன்றுகிறது.இந்த நேரத்தில் இன்று உங்களது 15.1.1.1.1 ல் ” இந்தக் கட்டுரை இங்கு பதியப்பட்டதன் காரணம், அதைப் பற்றி விவாதம் அல்லது கலந்துரையாடல் நடப்பதற்காகத் தானென்று நான் நம்புகிறேன்” என எழுதியுள்ளீர்கள்.அதை செவ்வனே செய்யவே விழைகிறேன்.அதே பின்னூட்ட பட்டியலில் எண் 9,10,11 போன்றவை அத்தகைய செம்மையான விவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும் நம்புகிறேன்.அதிலும் ஆச்சர்யமாக எண் 10எனக்கு முழுமையாக உடன்பாடானது தான்.மற்றபடி கம்யுனிஸ்டுகளே வந்து போகிற இடமாக இது இருக்க வேண்டுமென்று நான் நினைக்கவில்லை.அவ்வாறு வினவும் கருதவில்லை என்றே நம்புகிறேன்.இன்னொன்று நானே கூட இடதுசாரி சிந்தனைகளில் ஆர்வமிருப்பதாக,உடன்பாடு உள்ளதாக சொல்லிக் கொள்ளலாமே தவிர கம்யுனிஸ்ட் அல்ல.ஆனால் திடமாக சொல்வதெனில் தமிழ் தேசியர் அல்ல.தமிழர் என்ற ஒற்றை வார்த்தையில் பார்ப்பனரையும் அடக்கி அவர்தம் சதிகளையும் திரை போட்டு மறைப்பதால்.

        • நண்பர் ராஜன்,

          //வட இந்தியத் தொழிலார்கள் சுரண்டுப்படுவதைக் குறித்த பலக் கட்டுரைகள் வினவில் ஏற்கனவே வந்து உள்ளன”ஏற்கனவே எல்லாம் செஞ்சாச்சு என்கிறதன் தொனி எனக்கு விளங்குகிறது//

          ஏற்கனவே எல்லாம் செஞ்சாச்சு என்ற தொனியுடன் எனது கருத்து இருந்திருந்தால் அது எனது தவறாகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் இங்கு பதியப்படும் எனதுக் கருத்துக்கள் வினவினுடையக் கருத்துக்கள் ஆகாது. தொழிலாளர்கள் நலனிற்காக மட்டுமல்லாமல் அனைத்து மக்களின் நலனிற்காகவும் தான் வினவில் கட்டுரை வருகின்றார. இனியும் வரும்.

          என்னைப் பொறுத்த வரை தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட நாடு என்று இருக்க முடியாது.இது யதார்த்தம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் காலத்தை வென்ற பாடல் வரி அந்த தொழிலாளிகளுக்கு அருமையாக பொருந்துகிறது.

          தாங்கள் கூறியது போல கட்டுரையின் மையப் பொருளில் இருந்து பின்னூட்டங்கள் விலகி தேசியம்,இனவாதம் போன்றவற்றில் மையம் கொண்டுள்ளது என்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

          நன்றி.

          • புரிதலுக்கு நன்றி. அதே சமயம் “தேசியம்,இனவாதம்” பற்றியே பேசக் கூடாது என்பது எனது நிலையல்ல.அதைப் பற்றி பேசினால் தான் அந்த தளைகள் இனம் மொழி தேசியம் தாண்டியும் தொழிலாளர் பிரிந்து நில்லாமல் ஒன்றுபடுத்துவதை சாத்தியமாக்க முடியும்.நான் வியாசன் தேவாரம், ராஜராஜன் என்று பழம் ‘பெருமைகளை’ கிண்டிக் கொண்டு விவாதத்தை மடை மாற்றி விட்டதையே விமர்சித்தேன்.நன்றி

            • //ஒவ்வொரு பதிவிலும் திட்டமிட்ட முறையில் விவாதங்களை திசை திருப்பி மழுங்கடிக்கிற வியாசன் போன்றவர்கள்//
              //வியாசன் தேவாரம், ராஜராஜன் என்று பழம் ‘பெருமைகளை’ கிண்டிக் கொண்டு விவாதத்தை மடை மாற்றி விட்டதையே விமர்சித்தேன்.//
              //நீங்கள் விட்டேற்றியாக இங்கு வந்து பொழுது போக்கி விவாதங்களை சீர்குலைக்கிறீர்களோ என நினைக்கத் தோன்றுகிறது.///

              திரு. ராஜன்,
              நான் ஏதோ திட்டமிட்டு, இங்கேயுள்ள விவாதங்களைத் திசை திருப்புவதாகக் கூறும் உங்களின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எந்த சந்தர்ப்பத்தில், எந்தக் கேள்விக்கு நான் பதிலளித்தேன் என்பதையும் படித்துப் பார்த்து விட்டுப் பதிலெழுதுங்கள். மற்றும்படி, வினவில், அதிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில கம்யூனிஸ்டுகளின் மூலம் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இராச இராசனுமில்லை, தேவாரங்களுமில்லை. கலந்துரையாடல்களை ஒரு போதும் ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது. நான் முன்பு கூறியது போன்றே கம்யூனிசநாடுகளிலுள்ள பேச்சுச் சுதந்திரத்தை, அதாவது தலைப்பையும் கொடுத்து, அந்த தலைப்பின் கீழ் எதைப் பேசலாம், எதைப்பேசக் கூடாது என்பதையும் அட்டவணைப்படுத்திப் பார்க்கலாமே. இதன் மூலம், நீங்கள் விரும்பிய விடயத்தை மட்டும் மற்றவர்கள் பேசுவதையும் உறுதிப்படுத்தலாம். கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் ஸ்டாலினிஸ்டுகள் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் – அக்கரைக்கு இக்கரைப் பச்சை.. 🙂

              • திரு.வியாசன்,
                “இந்தக் கட்டுரை இங்கு பதியப்பட்டதன் காரணம், அதைப் பற்றி விவாதம் அல்லது கலந்துரையாடல் நடப்பதற்காகத் தானென்று நான் நம்புகிறேன் என எழுதியுள்ளீர்கள்.அதை செவ்வனே செய்யவே விழைகிறேன்” இது தான் நான் உங்களிடம் சொன்ன செய்தி .அந்த இணக்கமான அழைப்பை ஏற்றிருக்கலாம்.ஆனால் அது உங்களால் முடியாது .ஏனென்றால் நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்வது என்னவென்றால் ” எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை 🙂 நான் உங்கள் மீது சொன்ன குற்றச்சாட்டு இதுதான் .எல்லா விவாதங்களும் உங்களது தனிச்சிறப்பான விவாத முறையால் தனிநபர் சாடலாக மாறி விடுகிறது.ஒரு நல்ல விவாதத்தில் உங்களுக்கு ஏன் அப்படி சிரிப்பு வரவேண்டும் என்றால் அல்லது அந்த smiley ஏன் உபயோகிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு இங்கே பலரும் விவாதிக்கும் முறை உங்களுக்கு சிரிப்பை வரவைப்பதாக கூறிக் கொள்கிறீர்கள் .இப்போதும் அதே :). இதற்கான உளவியலை என்னால் விளக்க முடியும்.அது இப்போதைக்கு தேவையில்லை. முடிந்தவரை அந்த smiley யை இடமறிந்து பயன்படுத்துங்கள் என்ற வேண்டுகோள் மட்டுமே.

                நீங்கள் விட்டேற்றியாக இங்கு வந்து பொழுது போக்கி விவாதங்களை சீர்குலைக்கிறீர்களோ என நினைக்கத் தோன்றுகிறது என நான் கூறியது வேறொரு விவாதத்தில் “அவருக்குப் பதிலெழுதுவது வீண்வேலை என்று தெரிந்தும் கூட, உண்மையில் ஒரு Fun க்காகத் தான் நான் பதிலெழுதுகிறேன்” என்று நீங்களே அறிவித்துக் கொண்டதும் ஒரு காரணம்

        • நண்பர் இராஜன்,

          தோழர் சிவப்புக்கு தாங்கள் அளித்த மறுமொழியில் இரு மையமான கேள்விகள் இருந்தன. அதற்கு சில பார்வைகளை முன் வைக்கலாம் எனக் கருதுகிறேன்.

          \\ குறைந்த பட்ச ஊதியம் என்பது கேரளாவில் ஓரளவேனும் கறாராக இருப்பதைப்போல தமிழகத்திலும் இல்லை வட மாநிலங்கள் பலவற்றிலும் இல்லை அதனால் விளைவதே இந்த தொழிலாளர்கள் இங்கே வந்து குழுமுவதன் காரணம் என்பது போல பல்வேறு காரணிகளை அலசாமல்\\

          மேற்படி இக்கருத்தில் பல்வேறு வட மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாமையால் தான் தொழிலாளர்கள் இங்கே குழுமுகின்றனர் என்பது பிரச்சனையின் மிக சன்னமான பகுதி மட்டுமே. உள்நாட்டிலேயே மக்கள் அகதிகளாக்கப்படுவது மறுகாலனியாதிக்கம் உருவாக்கியிருக்கும் திட்டவட்டமான சமூக-பொருளியல் நிகழ்வு ஆகும். சட்டீஸ்கரில் மட்டும் 2004 கணக்கின் படி 200 இலட்சம் கோடி கனிமவளங்களுக்கான போட்டி காரணமாக இந்திய அரசு தன் மக்களின் மீதே பசுமை வேட்டை என்ற பெயரில் போரை நிகழ்த்தியதையும், அடுத்தகட்ட போருக்கு தயாராகி வருவதையும் நாம் நன்கு அறிவோம். அப்பொழுது ப, சிதம்பரம் வெளிப்படையாகவே தெரிவித்த கருத்து 85% மக்கள் நகர்புறங்களிலே வாழ வேண்டுமென தான் ஆசைப்படுவதாக அறிவித்தார்.

          நகர்மயமாதல், மாஸ் மொபிலைசேசன், இண்டஸ்டிரியல் மொபிலைசேசன், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் தாக்கம் என்று தண்டி தண்டியாக சமூகவியல் துறையிலே பி.ஹெச்டி செய்துகொண்டிருக்கிறார்கள் அறிவு சீவியினர். ஆனால் வெள்ளம் தலைக்குமேலே பாய்ந்துகொண்டிருக்கிறது. ஊதியப் பிரச்சனை காரணமாக தொழிலாளிகள் இடம்பெயர்வு ஒரு காரணி மட்டுமே. ஆனால் அதுவல்ல பிரச்சனைகளின் மூலம்.

          பல்வேறு மக்கள் விவசாய நீக்கம் (De-agriculturalization) செய்யப்பட்டிருக்கிறார்கள். விவசாயத்திலிருந்து அடித்து துரத்தப்பட்டிருக்கிறார்கள்.

          தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி பேசுவோம். கர்நாடக கோலார் தங்கச் சுரத்தில் உழைப்பைச் சுரண்ட அள்ளிக்கொண்டுபோன பெரும்பாலான தொழிலாளர்கள் தமிழகத்து தலித்துகள் ஆவர். எந்த தமிழ் தேசியவாதியாவது இது பற்றி வாய்திறந்திருக்கிறார்களா? இதே மக்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் கொத்தடிமைகள். கர்நாடகா போனாலும் கொத்தடிமைகள் தான்! ஆனால் இந்தப் பிரச்சனையை முழுக்கவும் மறைத்துவிட்டு பீகார் தொழிலாளிக்கு ரேசன் கார்டு கொடுக்காதே என்று மணியரசன் கும்பல் பிரச்சாரம் செய்கிறது என்றால் அவர்களின் முதன்மையான நோக்கம் என்ன? இப்படிப்பட்ட சமயத்தில் தொழிலாளர்களுக்கிடையேயான வர்க்க உணர்வை ஒன்றுபடுத்துவதும் இனவாதிகளை அம்பலப்படுத்துவதும் தான் பிரதானமாக இருக்க முடியும். இந்தப் பதிவு அதைச் செய்திருக்கிறது.

          மும்பையில் குடியேயிருக்கிற பல இலட்சம் தாராவி தமிழர்களையும் மற்ற மக்களையும் வர்க்க அடிப்படையில் ஒன்றுபடுத்த வேண்டுமானால் சிவசேனையை அம்பலப்படுத்த வேண்டுமானால் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும்-மும்பை மக்களுக்கும் இதே போன்றதொரு பேட்டியின் மூலமாகச் செய்ய இயலும் என்பது எமது துணிபு.

          இங்கு நிலவுகிற பிரச்சனை என்னவென்றால் கணிசமான நண்பர்கள் தமிழ் உணர்வு என்பதன் அடிப்படையில் பதிவை நோக்குகிறார்கள். தமிழ் உணர்வும் இனவாதமும் வேறு என்பதை கறாராக எந்தச் சலுகைக்கும் இடமின்றி நாம் ஊன்றி நிற்கவேண்டியதுதான் அவசியம். இதுவன்றி எந்த மாநில மக்களுக்கும் தீர்வில்லை.

          இதன் அடிப்படையில் தாங்கள் முன் வைத்த மற்றொரு கருத்தான இனவாதிகளை பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்கவில்லை என்கிற கருத்தின் மீதான பார்வையை அடுத்த பின்னூட்டத்தில் முன் வைக்கிறேன்.

          • நண்பர் தென்றல்,
            முதலில் எனது பின்னூட்டத்திலிருந்து இரண்டு கேள்விகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டமைக்கு நன்றி.இதனையும் மையப் படுத்தி இந்த விவாதத்தை தொடர பலரும் இணைவார்கள் என நம்புகிறேன். நான் இங்கே உள்ளே புகுந்ததன் நோக்கம் அதுவே.

            அதேசமயம் ” தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும்-மும்பை மக்களுக்கும் இதே போன்றதொரு பேட்டியின் மூலமாகச் செய்ய இயலும் என்பது எமது துணிபு” என்பது மிகையான மதிப்பீடு என்பது எனது கருத்து. முதலில் இந்த பேட்டியின் கேள்வி பட்டியலைப் பற்றியே எனக்கு உடன்பாடு இல்லை.அது தவிர சரியான கேள்விகளுடன் இந்த பேட்டி நிகழ்த்தப் பட்டிருந்தாலும் கூட அது மட்டுமே போதுமானதல்ல.அது பேட்டியில் கலந்து கொண்ட சில பத்து பேர்களான தொழிலாளர்களை மட்டுமே சென்றடையும்.வினவின் தளத்தில் இதனை அலசுவதும் அப்படித்தான்.மாறாக அங்கு ஒரு தொழிற்சங்கம் இனவாதமின்றி செயல்படும் போதுதான் அது முழுமையடையும்.அதே நேரத்தில் ‘அந்நிய’ தேசத்து முதலாளிகள் எவ்வித நெருக்கடியுமின்றி தழைத்தோங்குவது எப்படி என்பதை சாமானியருக்கு புரிகிற எதிர் கேள்விகளை விதைக்க வேண்டும்.கேரளாவை சேர்ந்த முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், முத்தூட் பின்கார்ப் ஆகியவை தங்கத்தின்பேரில் கடன் வழங்குகின்றன. இவ்வாறு இந்த மூன்று நிறுவனங்களிலும் அடமானம் வைக்கப்பட்டுள்ள தங்கம் 195 டன்களாகும்.இது பணக்கார நாடுகளாக கருதப்படும் ஸ்வீடன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளின் தங்கம் இருப்பை விட அதிகம்.நமக்கெல்லாம் நன்கு தெரியும் இந்த மூன்றும் தமிழகத்தில் எல்லா சிறு நகரங்களிலும் கூட கிளை பரப்பி அடமானம் பெற்ற நகைகளே அவை.இத்துணை பெரிய அசுர வளர்ச்சியை மணியரசன் பேசும் தமிழ் தேசியம் என்ன செய்தது என்பதை மக்களிடமே கேட்கலாம்.
            “கணிசமான நண்பர்கள் தமிழ் உணர்வு என்பதன் அடிப்படையில் பதிவை நோக்குகிறார்கள்” என்பது சரியல்ல என்பதும் என் கருத்தாக உள்ளது.பொதுவாக முல்லைப் பெரியார்,காவிரி பிரச்சினைகளில் தமிழகம் ஒருமித்து நிற்பதைப் போல ஈழப் பிரச்சினையில் அல்ல என்பதை ஒப்புக் கொள்வீர்கள்.அது போலவே வடநாட்டு தொழிலாளர் விசயத்திலும் இனவாத தலமையின் கருத்துக்களை தமிழ் உணர்வாளர்கள் முழுமையாக ஏற்பதில்லை.இதற்கு உலக தொழிலாளர் ஒற்றுமை முழக்கம் எல்லாம் காரணமல்ல.தமிழனும் பல்வேறு மாநிலங்கள் ,நாடுகளுக்கு பிழைப்பு தேடிப் போகிறான் , போகவேண்டியுள்ளது என்கிற யதார்த்த சூழல் தரும் நியாய உணர்வே .உங்கள் முழுமையான கருத்தை பார்த்தபின் என் நிலை மாறக்கூடும் .நன்றி

          • தோழர் தென்றலின் கருத்து, சிங்களவர்களின் கருத்தை ஏனோ எனக்கு நினைவு படுத்துகிறது. அவர்கள் கூட, தமிழீழத்துக்கு (வடக்கு & கிழக்கு) வெளியேயும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அதனால் வடக்கு, கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்கள் தமக்கென தனிநாடு கேட்கக் கூடாது, தமது வரலாறு பூர்வமான பாரம்பரிய தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கக் கூடாது என்கிறார்கள். தெற்கில் தமிழர்கள் பொருளாதார காரணங்களுக்காக இடம்பெயர்ந்து வாழ்வதைக் காரணம் காட்டி, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் பறிபோவதை எதிர்க்காது விட்டால், நாளடைவில் தமிழர்கள் இலங்கையின் எந்தப் பகுதியிலுமே பெரும்பான்மையாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கென சொந்தமாக ஒரு நிலப்பரப்பு இருக்காது.

            அதேபோல் மும்பைத் தமிழர்களையும், கோலார் தமிழர்களையும், கர்நாடகா தமிழர்களையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டை கட்டுப்பாடின்றி, ரேசன் கார்டு போன்ற வசதிகளையும் செய்து கொடுத்துக் குடியேற்றத்துக்குத் திறந்து விட்டால், எதிர்காலத்தில், மும்பை, கோலார், கர்நாடகா தமிழர்களுக்கு அடி விழும்போது திரும்பி வருவதற்கு அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மாநிலம் கூட இருக்காது. இதை திரு. மணியரசன் போன்றவர்கள் உணர்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.

            மனிதன் மண்ணாசை பிடித்தவன், மனிதனுக்கும் அவனது மண்ணுக்கும் பிரிக்க முடியாத உறவுண்டு. என்ன தான் வர்க்கம் பேசினாலும் மண் என்று வரும்போது, வர்க்கம், கம்யூனிசம் எல்லாவற்றையும் கடாசி விட்டு, அந்த மண்ணின் சொந்தக்கார்கள் மற்றவர்களை அடித்து விரட்டத் தான் செய்வார்கள். இலங்கையில் மார்க்ஸிட், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜேவிபியினர் அதைத் தான் செய்தார்கள். அன்றைய ரஷ்யன் கம்யூனிஸ்டுகளும் இன்று தமது முன்னாள் கம்யூனிஸ்ட் தோழர்களுடன் எல்லைச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சீனக் கம்யூனிஸ்டுகள் ஒரு தீவுக்காக வியட்நாமிய கம்யூனிஸ்டுகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அதனால் போரும் மூளக்கூடிய நிலையுண்டு.. ஏன், கர்நாடகத்தில் தமிழ்த் தொழிலாளர்களை இனக்கலவரத்தில் அடித்து விரட்டியதும் கன்னட தொழிலாளர்கள் தான். பாரம்பரிய மண் என்று வரும்போது வர்க்க உணர்வுகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை.

  5. கூடங்குளத்தில் நாலு மேலும் 4 அணு உலைகள் அமைக்கப் போகிறார்களாம்!

    தமிழகம் முழுக்க அணு உலைக்கு எதிரான குரல் உள்ளது.
    நீங்கள் சொல்லுற தமிழினவாதிகளின் குரல்.

    உங்க குரலும் இருக்குது. நல்லது.
    ஆனால் உங்களைப் போல பிற மாநிலங்களில் இருக்கும் அமைப்புகளின் குரல் எங்கே போனது?
    நீங்க சொல்லுற இந்திய தேசியம், சர்வ தேசியம், பிறமாநில உழைக்கும் வர்க்கம் எங்கே??

    தமிழ்த்தேசிய அணி திரட்டலே தமிழனைக் காக்கும். மற்றவை எதுவும் சரியாகாது.

  6. வினவு அங்கிகரிக்கும் இந்தியாவின் இழிவு – படிக்க வேண்டிய அருந்ததி ராய் கட்டுரையில் இருந்து . …….. [ அருந்ததி ராய் கட்டுரையை வினவு முழுமையாக வெளியிடுவதில் என்ன சிக்கல் ? ]

    பனியாக்கள் பெருவணிகம் மட்டுமல்ல, நகரங்களின் சிறு வணிகங்கள் மீதும் உறுதியான பிடியை வைத்துள்ளனர். தறிகெட்டுயரும் கடன் பொறியில் மாட்டித் தவிக்கும் கோடிக்கணக்கான ஏழை உழவர்களையும் மத்திய இந்தியாவின் ஆழ் காடுகளில் வாழ்வோருள்ளிட்ட ஆதிவாசிகளையும் கொண்ட இந்த நாடெங்கிலும் பனியாக்கள் பாரம்பரியக் கிராமக் கடன்வணிகத்திலும் செழித்து வளர்கின்றனர். அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய பழங்குடிகள் அதிகம் வசிக்கும் இந்திய வடகிழக்கு மாநிலங்கள் ‘விடுதலைக்கு’ பிறகு போராட்டங்களையும் இராணுவமயமாக்கலையும் இரத்தக்களரிகளையும் சந்தித்து வருகின்றன. இவை அனைத்துக்கும் நடுவில் மார்வாரிகளும் பனியாக்களும் அங்கு குடியேறி அடக்கி வாசித்துத் தங்கள் வணிகத்தை நிலைநிறுத்திக் கொண்டு விட்டனர். அவர்கள் இப்போது இந்தப் பகுதியில் பொருளியல் நடவடிக்கை அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ளும் பனியாக்களின் ஊடுருவல் அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் நடந்தது போன்று அல்லவா உள்ளது. மேலும் இடஒதுகிட்டின் அவலங்களையும் வெளிகாட்டும் அக்கட்டுரையை முழுமையாக வெளியிடுவதில் வினவுக்கு என்ன சிக்கல் ?

  7. இக்கால வட இந்திய கூலி வேலையாட்களைப் போலவே தான், பிராமணர்கள் கூட, கங்கைச் சமவெளிப் பிரதேசங்களிலிருந்தும், வட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வேலை தேடியும், பஞ்சம் பிழைக்கவும், பின்னர் தமிழ் மன்னர்கள் கட்டிய பெருங்கற்றளிகளில் கழுவித் துடைக்கவும் வந்தார்களாம்.பிறகு என்ன நடந்தது என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னர், இந்த வட இந்தியக் கூலிகளின் பரம்பரையினருடன், தமிழர்கள் மல்லுக்கட்ட வேண்டிய நிலை வராதென்று என்ன நிச்சயம். 🙂

    (Note: தமிழ்நாடு, தமிழ்மண்ணாக, தமிழர்களின் மண்ணாகவே தொடர்ந்து ஆயிரமாயிரமாண்டுகளானாலும் நிலைக்க வேண்டும் என்று விரும்பும் தமிழன் என்ற முறையில் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.)

    • குறைந்த கூலிக்கு வட இந்திய தொழிலாளர்களை அழைத்து வந்து, வேலைக்கு வைத்து சுரண்டும் இன்றைய தமிழ் தரகர்கள், முதலாளிகள் போல்தான் அக்கால மன்னர்களும் (ராசராசர் உட்பட) பார்ப்பனர்களை பெருங்கற்றளிகளை கழுவித்துடைக்க வைத்தார்கள் என்று கூறுகிறீர்கள் போலிருக்கிறது.. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வட இந்திய கூலிகளின் பரம்பரையினர் இங்கே இருப்பார்கள் என்று தங்கள் ’வெள்ளைத்தோல் ஆசை’ கோட்பாட்டினடிப்படையில் கூறுவதன் மூலம் தமிழக தமிழர்களை இழிவுபடுத்துகிறீர்கள்.. மாறாக, வர்க்க அடிப்படையில் அத்தகைய கலப்பு ஒருக்கால் நிகழ்ந்தாலும் தமிழகத்தைப் பற்றி தாங்கள் கவலைப்படுவதை விடுத்து, மேல் நாட்டில் பஞ்சம் பிழைக்கப்போன தங்களது பரம்பரையினர் இங்கிலீசு பேசிக் கொண்டு தமிழீழத்தை இங்கிலீசு ஈழமாக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் தங்களது முதன்மைக் கவலையாக இருக்கவேண்டும்..

      • // முதலாளிகள் போல்தான் அக்கால மன்னர்களும் (ராசராசர் உட்பட) பார்ப்பனர்களை பெருங்கற்றளிகளை கழுவித்துடைக்க வைத்தார்கள் என்று கூறுகிறீர்கள் போலிருக்கிறது.///

        நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள். இராச இராசன் தலை சிறந்த நிர்வாகியும், தீர்க்க தரிசனமுள்ள ஆவணக் காப்பாளரும் என்பதற்கு அவனுடைய கல்வெட்டுகள் சாட்சி பகர்கின்றன. அவர் உண்மையில் ஒரு கறாரான முதலாளி என்பதற்கு, ஊதியம் கேட்டு சதுரி மாணிக்கம் மட்டுமல்ல, பார்ப்பனர்களும் கூடத் தீக்குளித்தது காட்டுகிறது, அதாவது கோயில் நிர்வாகம், ஊதியம் என்று வரும் போது சில முதலாளிகளைப் போன்று, பார்ப்பனர்களுடனும் அவன் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறான் என்பது தெரிகிறது.

        அத்துடன் விட முற்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழர்கள் கருவறை சென்று சிவனை வழிபட்டனர் என்பதை:

        “மாதர்ப்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
        போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவாரவர் பின்புகுவேன்
        யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
        காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
        கண்டேனவர் திருப்பாதங்கண்டறியாதன கண்டேன்.”

        என்ற நாவுக்கரசர் தேவாரம் தெளிவாகக் கூறுகிறது. அதாவது, திருவையாற்றுச் சிவன் கோயிலில், பார்ப்பனர்கள் மட்டும், கருவறை புகுந்து பூசை செய்யவில்லை, தமிழர்கள் எல்லோரும் பூசை செய்தனர். அப்படியானால், வடக்கிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த பிற மண்ணராகிய பிராமணர்கள், தமிழர்களின் கோயிலைக் கழுவித் துடைப்பதை விட வேறென்ன வேலை செய்திருப்பார்கள். தமிழர்கள் எல்லோரும் கருவறை புகுந்து பூசை செய்தால், கோயிலைக் கழுவித் துடைக்கத் தானே ஆட்கள் தேவை, அதைத் தான் பஞ்சம் பிழைக்க வந்த பார்ப்பனர்கள் செய்திருப்பார்கள். 🙂

        //ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வட இந்திய கூலிகளின் பரம்பரையினர் இங்கே இருப்பார்கள் என்று தங்கள் ’வெள்ளைத்தோல் ஆசை’ கோட்பாட்டினடிப்படையில் கூறுவதன் மூலம் தமிழக தமிழர்களை இழிவுபடுத்துகிறீர்கள்.///

        வெள்ளைத்தோல் கோட்பாடு தான் இன்றைக்கும் தமிழரல்லாதார் சிலர் தமிழ்நாட்டில் முன்னேற வாய்ப்பைக் கொடுக்கிறது, உதாரணமாக, தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள் பலவற்றில், தமிழில் ல, ள, ழ, ர, ற வை ஒழுங்காக உச்சரிக்கத் தெரியாத பெண்கள் பலர் செய்தியறிவிப்பாளர்களாக இருப்பதற்குக் காரணம் கூட, தமிழர்களின் வெள்ளைத் தோல் மோகம் தான். நான் குலசேகரப் பட்டணத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் தசராவுக்குப் போயிருந்த போது, தமிழ்நாட்டில் நான் எங்கும் காணாத அளவு, அழகான முகவெட்டும், மூக்கும், கண்களும் நிறைந்த, மாசு மருவல்லாத முகமும், உயரமும் கொண்ட எத்தனையோ தமிழ் ஆண்களையும், பெண்களையும் பார்த்தேன். அவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் தொலைக்காட்சியில், திரைப்படங்களில் வாய்ப்புக் கிடைப்பதில்லை, ஏனென்றால் அவர்களின் தோலின் நிறம் கறுப்பாக இருப்பதால் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

        //மேல் நாட்டில் பஞ்சம் பிழைக்கப்போன தங்களது பரம்பரையினர் இங்கிலீசு பேசிக் கொண்டு தமிழீழத்தை இங்கிலீசு ஈழமாக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் தங்களது முதன்மைக் கவலையாக இருக்கவேண்டும்.///

        மேல்நாட்டில் பஞ்சம் பிழைக்கப் போன எங்களின் பரம்பரையினர், எங்களை விடத் தமிழுணர்வும், தமது தமிழ் அடையாளத்தையும் எண்ணிப் பெருமைப் படுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் எங்களுக்கு எந்த வித சந்தேகமுமில்லை. அதை நாங்கள் இப்பொழுதே காணக் கூடியதாக இருக்கிறது. அப்படி ஒரு சிலர் வெள்ளையர்களைக் கலப்பு மணம் புரிந்தாலும் கூட, அவர்களையும், அவர்களின் வாரிசுகளையும் தமிழில் தேவாரம் பாடவும், தமிழில் எங்களை விட நன்றாகப் பேசவும் கூடியவர்களாக, கிட்டத்தட்ட தமிழர்களாகவே மாற்றி விடுவோம் என்பதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும். அதனால், நீங்கள் எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல், நாங்கள்- ஈழத்தமிழர்கள், வந்தாரை வைக்கும் இழிச்ச வாயர்களாக இருந்திருந்தால், இலங்கையிலேயே எப்போதோ காணாமல் போய்ச் சிங்களவர்களாகி இருப்போம்.

        https://www.youtube.com/watch?v=ANYvB8H9drs

        யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மானிய பெண்! 🙂
        http://viyaasan.blogspot.ca/2014/03/blog-post_18.html

        • அதாவது ஒழுங்கா கூலி கொடுக்காம வேலை செஞ்சவனை தற்கொலைக்கு தள்ளுவதுதான் கறாரான முதலாளிக்கு அடையாளம்னு சொல்றாரு . அதை செய்யுறவன் முதல்ல மனுசனே இல்ல.மிருகம்.

          மேலும்

          மாதர்ப்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
          போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவாரவர் பின்புகுவேன்
          யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
          காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
          கண்டேனவர் திருப்பாதங்கண்டறியாதன கண்டேன்

          இந்த பாட்டுக்கு அர்த்தம்.
          விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்பின் சென்ற அடியேன். கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு, கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில், விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு, அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம், சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன்.
          நன்றி;
          http://www.tamilvu.org/slet/l4140/l4140uri.jsp?song_no=21&book_id=112&head_id=62&sub_id=1914
          இதுல மீளா ஆளாய அப்பர் கருவறையில பூந்து பூசை செய்தது பத்தி குறிப்பு இருக்கான்னு விளங்கவில்லை.விளக்கம் தருவாரா வியாசன்.

          • ///…. அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்பின் சென்ற அடியேன்….///

            ‘போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவார் என்று, பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர்பின் வரிசையில் சென்று நானும் புகுந்தேன், அதைத் தான் பிராமணரல்லாத நாவுக்கரசர் கூறுகிறார்.

            இதே கருத்தைத் தான் நானும் கூறுகிறேன். பூவையும் அபிடேக நீரையும் தலையில் தாங்கிப் போகும் அடியார்கள், அந்த அபிடேக நீரை ஐயரின் தலையில் ஊற்றப் போவதில்லை, சிவலிங்கத்தின் தலையில் ஊற்றி, சிவலிங்கத்தைத் திருமுழுக்காட்டி, அவர்கள் கொண்டு செல்லும் மலர்களால் அரச்சனை செய்யத் தான் போவார்கள்/போனார்கள். இன்றும் போகிறார்கள் என்பதை, அந்த வழக்கம் இன்றும் வடநாட்டுக் கோயில்களில் மட்டுமல்ல, இலங்கையிலும் திருக்கேதீஸ்வரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறதென்பதை, கீழேயுள்ள எனது வலைப்பதிவின் இணைப்பில் காணலாம். இதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை வேட்கை இருக்கிற அளவுக்கு உங்களிடம் தமிழ் இல்லை, ஆனால் பெயர் மட்டும் தமிழ்வேட்கை. 🙂

            ராஜ ராஜ சோழனுக்கு சன்னதி – ஈழத்துச் சிவபூமியில் மகா சிவராத்திரி விழா –

            http://viyaasan.blogspot.ca/2014_02_01_archive.html

            http://viyaasan.blogspot.ca/2013/03/blog-post_10.html

        • // இராச இராசன் தலை சிறந்த நிர்வாகியும், தீர்க்க தரிசனமுள்ள ஆவணக் காப்பாளரும் என்பதற்கு அவனுடைய கல்வெட்டுகள் சாட்சி பகர்கின்றன. அவர் உண்மையில் ஒரு கறாரான முதலாளி என்பதற்கு, ஊதியம் கேட்டு சதுரி மாணிக்கம் மட்டுமல்ல, பார்ப்பனர்களும் கூடத் தீக்குளித்தது காட்டுகிறது, அதாவது கோயில் நிர்வாகம், ஊதியம் என்று வரும் போது சில முதலாளிகளைப் போன்று, பார்ப்பனர்களுடனும் அவன் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறான் என்பது தெரிகிறது.//

          கற்றளிகளை கழுவித்துடைத்துக் கொண்டிருந்த ஒரு பார்ப்பனரையா தங்கள் முதலாளி சோழப் பெரும்படையின் தளபதியாக்கினார்..? அடேங்கப்பா.. உங்க முதலாளி, தங்க முதலாளிதான்..

          // அத்துடன் விட முற்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழர்கள் கருவறை சென்று சிவனை வழிபட்டனர் என்பதை:

          “மாதர்ப்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
          போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவாரவர் பின்புகுவேன்
          யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
          காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
          கண்டேனவர் திருப்பாதங்கண்டறியாதன கண்டேன்.”

          என்ற நாவுக்கரசர் தேவாரம் தெளிவாகக் கூறுகிறது. அதாவது, திருவையாற்றுச் சிவன் கோயிலில், பார்ப்பனர்கள் மட்டும், கருவறை புகுந்து பூசை செய்யவில்லை, தமிழர்கள் எல்லோரும் பூசை செய்தனர். அப்படியானால், வடக்கிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த பிற மண்ணராகிய பிராமணர்கள், தமிழர்களின் கோயிலைக் கழுவித் துடைப்பதை விட வேறென்ன வேலை செய்திருப்பார்கள். தமிழர்கள் எல்லோரும் கருவறை புகுந்து பூசை செய்தால், கோயிலைக் கழுவித் துடைக்கத் தானே ஆட்கள் தேவை, அதைத் தான் பஞ்சம் பிழைக்க வந்த பார்ப்பனர்கள் செய்திருப்பார்கள். :)//

          திருநாவுக்கரசர் கருவறைக்குள் போனதாக பாடலில் எங்கே இருக்கிறது என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.. பார்ப்பனர்கள் கோயிலைக் கழுவித்துடைத்தார்கள் என்பதற்கான இது போன்ற அருமையான ஆதாரங்களை தங்களைத் தவிர வேறு யாரால் தர இயலும்..! இன்றைக்கும் கவனிப்பாரற்ற சிறு கோயில்களில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் கோவிலை கழுவித்துடைக்கும் வேலைகளையும் செய்து கொண்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது தங்கள் ஞானதிருசுட்டியின் மகிமை புலப்படுகிறது.. கூடவே மஞ்சப்பந்தின் தெய்வீக மகிமையும் கூட புலப்படுகிறது..

          // அவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் தொலைக்காட்சியில், திரைப்படங்களில் வாய்ப்புக் கிடைப்பதில்லை, ஏனென்றால் அவர்களின் தோலின் நிறம் கறுப்பாக இருப்பதால் தான் என்று நினைத்துக் கொண்டேன். //

          வசூலை அள்ளும் சூப்பர் ஸ்டாரும், வசூலை அள்ளிய கேப்டனும் இன்றைக்கும் கருப்பாகத்தான் இருக்கிறார்கள்..

          // அப்படி ஒரு சிலர் வெள்ளையர்களைக் கலப்பு மணம் புரிந்தாலும் கூட, அவர்களையும், அவர்களின் வாரிசுகளையும் தமிழில் தேவாரம் பாடவும், தமிழில் எங்களை விட நன்றாகப் பேசவும் கூடியவர்களாக, கிட்டத்தட்ட தமிழர்களாகவே மாற்றி விடுவோம் என்பதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும்.//

          வெள்ளைக்கார அம்மணிகள் கோயில் உள்ளே தேவாரம் பாடி தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கும் போது வெளியே தாங்கள் இங்கிலீசையும், செர்மனியையும் பதிலுக்கு வளர்த்துவிடாமல் இருக்கவும்..

          // தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல், நாங்கள்- ஈழத்தமிழர்கள், வந்தாரை வைக்கும் இழிச்ச வாயர்களாக இருந்திருந்தால், இலங்கையிலேயே எப்போதோ காணாமல் போய்ச் சிங்களவர்களாகி இருப்போம். //

          சிங்களவர்களுடன் வரலாற்றுப் பகைமை இல்லாமலிருந்திருந்தால் யாழ்ப்பாணத்தின் பெயரையே இன்று சிங்களப் பெயராக்கிவிட்டிருப்பீர்கள்.. வந்தாரை வாழ வைக்கும் இளிச்சவாயர்களாக இல்லாததால்தான் மலையகத் தமிழர்களை வந்தேறிகள் என்றீர்களோ..!

          • // ஒரு பார்ப்பனரையா தங்கள் முதலாளி சோழப் பெரும்படையின் தளபதியாக்கினார்..? அடேங்கப்பா…///

            இதில் வியக்கத்தக்கதொன்றுமில்லை, முகலாய மன்னர்கள் அரவாணிகளையே(அலிகளை) படைத்தளபதியாக்கின கதையும் இந்தியாவில் உண்டு. முஸ்லீம் மன்னர்களும் இராச இராச சோழனிடமிருந்து தான் ‘அந்தப் பாரம்பரியத்தை’ கற்றுக் கொண்டார்களோ என்னவோ யார்கண்டது?? 🙂

            //திருநாவுக்கரசர் கருவறைக்குள் போனதாக பாடலில் எங்கே இருக்கிறது என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்///

            ஒரு தேவாரத்தின் பொருளைக் கூடப் புரிந்து கொள்ளுமளவுக்கு உங்களுக்குத் தமிழறிவு கிடையாதா. இந்த தேவாரம் தமிழர்கள் அனைவரும் சாதிவேறுபாடின்றி கருவறைக்குள் நுழைந்து பூசை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச்சேர்க்கிறது என்பதால், அதை மறுத்து விதண்டாவாதம் பண்னுமாறு உங்களின் பார்ப்பன சாதி வெறி உங்களைத் தூண்டுகிறது போல் தெரிகிறது.

            “போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்” என்ற திருநாவுக்கரச நாயனாரின் தேவார அடிகள், இக்காலத்தில் வடநாட்டில் சில கோயில்களில் (காசியிலும் அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்) எவ்வாறு மக்கள் தாமே நீரை மொண்டு, சிவனை நீராட்டி, பூக்களை இட்டு வணங்குகிறார்களோ, அது போன்றே நேரடியாகச் சென்று வழிபடும் முறை இருந்தது என்பதைக் காட்டுகிறது.

            போது என்றால் தமிழில் மலர்கள்

            ஏத்தி அல்லது ஏற்றி என்றால் வணங்குதல் அல்லது தொழுதல் அல்லது பூசித்தல்

            புகுவார் என்றால் நுழைவோர் (அடியார்கள்)

            மலர்களும் நீரையும் சுமந்து கொண்டு, அதாவது சிவலிங்கத்தை நீரால் திருமுழுக்காட்டி, மலர்களால் பூசிக்க செல்பவர்களின் பின்னால் நானும் செல்வேன். அக்காலத்தில் அடியார்கள், கருவறைக்குள் நுழைந்து திருமுழுக்காட்டாது விட்டால், நீரைச் சுமந்து செல்ல வேண்டிய தேவை கிடையாது. திருநாவுக்கரசர் பார்ப்பனருமல்ல, மலர்களையும், நீரையும் சுமந்து சிவனைப் பூசிக்கச் செல்பவர்களின் பின்னால் (வரிசையில்) செல்வேன் என்பது தான் அந்த தேவார அடிகளின் கருத்தாகும்.

            //வசூலை அள்ளும் சூப்பர் ஸ்டாரும், வசூலை அள்ளிய கேப்டனும் இன்றைக்கும் கருப்பாகத்தான் இருக்கிறார்கள்..///

            ஆண்களின் உலகில், வெள்ளைத்தோல் மோகம் என்று நான் குறிப்பிட்டது, தமிழ் ஆண்களின் வெள்ளைத்தோலாசை அதாவது பெண்கள் வெள்ளைத்தோல்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், என்பதைக் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கேப்டனும்(எந்தப் படைக்கு கேப்டனோ கடவுளுக்குத் தான் தெரியும்), ரஜனியும் ஏன் தமிழ்நாட்டில் வசூலை அள்ளினார்கள் என்பதற்கு தமிழ்நாட்டுத் தமிழர்களின் சுயவெறுப்பு கூடக் காரணமாக இருக்கலாம். எது தமிழ் இல்லையோ, அதில் அவர்களுக்கு(தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு) மோகம் அதிகம்.

            //வெள்ளைக்கார அம்மணிகள் கோயில் உள்ளே தேவாரம் பாடி தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கும் போது வெளியே தாங்கள் இங்கிலீசையும், செர்மனியையும் பதிலுக்கு வளர்த்துவிடாமல் இருக்கவும்.///

            நான் இலங்கையில் சிறுவயதிலேயே தேவாரங்களைப் பாடமாக்கி, தேவாரம் பாட்டுப் போட்டிகளில், பேச்சுப் போட்டிகளில் எல்லாம் பங்குபற்றி பரிசுகளும் பெற்றிருக்கிறேன். அதை விட ஈழத்தமிழர்கள் தேவாரங்களை மறக்க மாட்டார்கள், ஏனென்றால் ஈழத்தமிழர்களின் வாழ்விலும், சாவிலும் அதாவது சுடலையில் எரியும் வரை தொடர்வது தேவாரங்கள் மட்டும் தான்.

            //சிங்களவர்களுடன் வரலாற்றுப் பகைமை இல்லாமலிருந்திருந்தால் யாழ்ப்பாணத்தின் பெயரையே இன்று சிங்களப் பெயராக்கிவிட்டிருப்பீர்கள்.///

            சிங்களவர்களுடன் வரலாற்றுப் பகைமை எல்லாம் கிடையாது. பெரும்பாலான சிங்கள மன்னர்கள் அனைவருக்கும் தமிழ்த் தொடர்புண்டு. ஆனால் ஈழத் தமிழர்கள் தமது தமிழடையாளத்தை இழக்கவில்லை, மாறாக, இந்தியாவிலிருந்து குடியேறிய கூலிப்படைகள், மலையாளிகள், வடுகர்களைக் கூட தமிழர்களாக்கி விட்டோம். சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தின் பெயரை ‘யாப்பபட்டுண’ என்று மாற்ற இன்றைக்கும் முயன்று கொண்டு தானிருக்கிறார்கள்.

            //வந்தாரை வாழ வைக்கும் இளிச்சவாயர்களாக இல்லாததால்தான் மலையகத் தமிழர்களை வந்தேறிகள் என்றீர்களோ..!///

            இந்தப் பார்ப்பனச் சிண்டு முடிப்புக்குத் தான் இங்கே எல்லோரிடமும் வாங்கிக் கட்டுகிறீர்கள். மலையகத்தமிழர்கள், தமிழர்களாகையால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறியிருந்தால் அவர்கள் ‘வந்தார்’ அல்ல பங்காளிகள் ஆனால் அவர்கள் குடியேறியது சிங்களநாட்டிலேயே தவிர, தமிழீழத்தில் அல்ல, அது கூடவா உங்களுக்குத் தெரியாது.

            • // இதில் வியக்கத்தக்கதொன்றுமில்லை, முகலாய மன்னர்கள் அரவாணிகளையே(அலிகளை) படைத்தளபதியாக்கின கதையும் இந்தியாவில் உண்டு. முஸ்லீம் மன்னர்களும் இராச இராச சோழனிடமிருந்து தான் ‘அந்தப் பாரம்பரியத்தை’ கற்றுக் கொண்டார்களோ என்னவோ யார்கண்டது?? 🙂 //

              எந்த முகலாய மன்னர்கள் அரவாணிகளையே (அலிகளை) படைத்தளபதியாக்கினர்..?

              முகலாய மன்னர்களுக்கு முன் ஆண்ட அலாவுதீன் கில்ஜி ஒரு அரவாணியான மாலிக் கஃபுரை தளபதியாக்கினார் என்றுதான் வரலாறு இருக்கிறது.. அந்த அரவாணி தளபதி எதிர்ப்பையெல்லாம் துவம்சம் செய்து கொண்டே தென் தமிழகம் வரை வந்து கோயில்களை இடித்து கொள்ளையிட்ட போது பார்ப்பனர்கள்தான் சிலைகளைத் தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினார்கள்.. உம்மைப் போன்ற கிங்க்கி பிங்க்கி பாங்கிகள் அப்போது இருந்திருந்தால் மாலிக்-கஃபுரை உமது மொழியிலேயே பேசி, கும்மி அடித்து, தாஜா செய்து திருப்பி அனுப்பியிருப்பார்கள் (மாலிக்-கஃபுர் அதற்கெல்லாம் மசியாமல் பதில் கும்மியடித்து கும்மியிருக்கவும் வாய்ப்பு உண்டு).. பல ஆண்டுகளுக்குப் பின் குமார கம்பண்ணர் என்ற விசய நகர ’வடுக’ தளபதி படையோடு வந்து சுல்தானிய படைகளை விரட்டியதால் உமது தமிழ் சைவம் தப்பியது.. இல்லையெனில் வெள்ளாள பாய்களாகத்தான் இன்று உலவிக்கொண்டிருப்பீர்..

              அலாவுதீன் கில்ஜி-மாலிக் கஃபுர் ஜோடியைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் கூறும் கதைகளை ராசராசருக்கும் அவர் படைத்தளபதிக்கும் பொருத்தும் உமது கழிசடைத்தனம் உமது தமிழ் தேசிய முகமூடியை கிழிக்கிறது.. ராசராசரை இவ்வளவு கீழ்த்தரமாக யாரும் இதுவரை சித்தரிக்கவில்லை.. இந்த மானங்கெட்ட அவதூறைக் கூறிவிட்டு ஒரு மங்களகரமான மஞ்சப்பந்து கிளுகிளு புன்னகையும் காட்டி வைக்குது இந்த கிங்க்கி பிங்க்கி பாங்கி..!

              // கருவறைக்குள் நுழைந்து திருமுழுக்காட்டாது விட்டால், நீரைச் சுமந்து செல்ல வேண்டிய தேவை கிடையாது. //

              பால்குடம் மற்றும் பூக்களையும்தான் கோவிலுக்கு சுமந்து கொண்டு செல்கிறார்கள்.. கருவறைக்குள் போய் நீராட்டி, பாலாட்டி, பூசை செய்கிறார்கள் என்று அளந்துவிடுவது சரியா.. உண்மையில் அப்படி செய்ய முடிந்தால் நல்லது.. கற்பனையில் அப்படி செய்ய வைத்து அதை உண்மை என்று அடித்துவிடுவது மோசடி..

              // ஆண்களின் உலகில், வெள்ளைத்தோல் மோகம் என்று நான் குறிப்பிட்டது, தமிழ் ஆண்களின் வெள்ளைத்தோலாசை அதாவது பெண்கள் வெள்ளைத்தோல்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், என்பதைக் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. //

              நீர் கூறியதை முழுதாக மேற்கோள் காட்டியிருக்க வேண்டுமோ..:

              ” நான் குலசேகரப் பட்டணத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் தசராவுக்குப் போயிருந்த போது, தமிழ்நாட்டில் நான் எங்கும் காணாத அளவு, அழகான முகவெட்டும், மூக்கும், கண்களும் நிறைந்த, மாசு மருவல்லாத முகமும், உயரமும் கொண்ட எத்தனையோ தமிழ் ஆண்களையும், பெண்களையும் பார்த்தேன். அவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் தொலைக்காட்சியில், திரைப்படங்களில் வாய்ப்புக் கிடைப்பதில்லை, ஏனென்றால் அவர்களின் தோலின் நிறம் கறுப்பாக இருப்பதால் தான் என்று நினைத்துக் கொண்டேன்.”

              // சிங்களவர்களுடன் வரலாற்றுப் பகைமை எல்லாம் கிடையாது. பெரும்பாலான சிங்கள மன்னர்கள் அனைவருக்கும் தமிழ்த் தொடர்புண்டு. //

              அதை வெள்ளாள-கோவிகம பாசம் என்றும் கூறுவார்கள்..

              // இந்தப் பார்ப்பனச் சிண்டு முடிப்புக்குத் தான் இங்கே எல்லோரிடமும் வாங்கிக் கட்டுகிறீர்கள். மலையகத்தமிழர்கள், தமிழர்களாகையால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறியிருந்தால் அவர்கள் ‘வந்தார்’ அல்ல பங்காளிகள் ஆனால் அவர்கள் குடியேறியது சிங்களநாட்டிலேயே தவிர, தமிழீழத்தில் அல்ல, அது கூடவா உங்களுக்குத் தெரியாது. //

              வாங்கிக் கட்டவும், திருப்பிக் கொடுக்கவும்தான் இங்கு வருகிறேன்.. இலங்கைத் தீவு தமிழர் மண் என்றும், சிங்களவர்கள் வந்தேறிகள் என்றும் மகாவம்சமே குறிப்பிடும் போது உமக்கு தென் இலங்கை சிங்களநாடாகவே தெரிகிறது; அம் மண்ணுக்கு உரிமையுள்ள தமிழின வாரிசுகள் அங்கே கொத்தடிமைகளாகப் போனால் அவர்கள் சிங்களநாட்டில் வந்தேறிகள்தான் என்று கூறும் அளவுக்கு இருக்கிறது உமது வெள்ளாள-கோவிகம பங்காளி உறவின் ஆழம்..

              • //.. இலங்கைத் தீவு தமிழர் மண் என்றும், சிங்களவர்கள் வந்தேறிகள் என்றும் மகாவம்சமே குறிப்பிடும் போது உமக்கு தென் இலங்கை சிங்களநாடாகவே தெரிகிறது;…..//

                புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைப்போ? உங்களின் நக்கலும், பம்மாத்தும் வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையில் தமிழர்களின் அழிவுக்கு, தமிழீழப் போராட்டத்தின் தோல்விக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் முக்கிய காரணமாவர். ஈழத்தமிழர்களுக்கெதிராக, சிங்களவர்களுக்கு ஆதரவாக அவர்களும், அவர்களது ஊடகங்களும் மேற்கொண்ட பொய்ப்பிரச்சாரங்கள், அவர்களின் உட்குத்து வேலைகள், கூடவிருந்தே குழி பறித்த செயல்கள் எல்லாவற்றையும் ஒவ்வொரு உலகத்தமிழனும் அறிவான். உண்மையில் சொல்லப் போனால், தமிழர்களுக்கு உலகில் ஒரு தனிநாடு உருவாவதை, சிங்களவர்களை விட மோசமாக எதிர்த்தவர்கள், இன்றும் எதிக்கிறவர்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள். அது உங்களுக்கும் தெரியும், அப்படியிருக்க, “இலங்கைத் தீவு தமிழர் மண் என்றும், சிங்களவர்கள் வந்தேறிகள் என்றும் மகாவம்சமே குறிப்பிடும் போது….” கொவிகம- வெள்ளாளர் என்றெல்லாம் உளறி, இங்கேயும் நீங்கள் சிண்டு முடித்து விட முயல்வதை உணரமுடியாதவர்களல்ல இங்குள்ள தமிழர்கள்.

                ஒருகாலத்தில் இந்தியா முழுவதுமே தமிழர்களின் மண், எல்லோரும் தமிழைத் தான் பேசினார்கள். ஆதிக்குடிகளாகிய நாகர்கள் கூடத் தமிழர்கள் தான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அப்படியானால், அந்த வரலாற்றின் அடிப்படையில், வட இந்தியா மட்டுமல்ல, ஏன் இந்தியா முழுவதுமே தமிழர் மண் என்று வாதாடுவீர்களா? அல்லது அதை பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்வார்களா?

                “The word ‘Dravida’ is not an original word. It is the sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’ when imported into Sanskrit became ‘Damilla’ and later on ‘Damita’ became Dravida. The word Dravida is the name of the language of the people and does not denote the race of the people. The third thing to remember is that Tamil or Dravida was not merely the language of South India but before the Aryans came it was the language of the whole of India, and was spoken from Kashmir to Cape Comorin. In fact, it was the language of the Nagas throughout India. The next thing to note is the contact between the Aryans and the Nagas and the effect it produced on the Nagas and their language.”

                http://www.mulnivasibamcef.org/pages/page3s.asp

                உண்மையில் உங்களின் Patronizing வார்த்தைகள், அதாவது நீங்கள் எதோ பெரிய தமிழீழ ஆதரவாளர் போன்ற பம்மாத்து எனக்கு மிகவும் எரிச்சலையூட்டுகிறது. தமிழீழத்தை, தமிழீழ விடுதலையை, அல்லது இலங்கையில் ஒரு தமிழர் தாயகம் அமைவதை ஆதரிக்கும் ஒரு பார்ப்பான் அதிலும், ஒரு தமிழ் பேசும் பார்ப்பான் கூட தமிழ்நாட்டில் கிடையாது என்பது தான் உண்மை.

                //முகலாய மன்னர்களுக்கு முன் ஆண்ட அலாவுதீன் கில்ஜி ஒரு அரவாணியான மாலிக் கஃபுரை தளபதியாக்கினார் என்றுதான் வரலாறு இருக்கிறது..///

                எப்படியோ நான் சொல்ல வந்தது உங்களுக்குப் புரிந்தால் சரி. முகலாயர் என்றதை முஸ்லீம் மன்னர் என்று திருத்திக் கொள்ளுங்கள். நான் சொல்லவந்தது புரியாத படியால், உங்களின் கோணல் புத்தியால், நீங்கள் தவறாக எதையோ கற்பித்துக் கொண்டு என்னவோ எல்லாம் உளறுகிறீர்கள். கோயிலில் கழுவித்து துடைக்க வந்த பார்ப்பனர்களில் ஒருவரை அவரது திறமையின் அடிப்படையில் படைத்தளபதியாக்கியது ஒரு பெரிய விடயமல்ல, அது ஒன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றில் நடைபெறாத ஒன்றல்ல, ஒரு முகலாய (முஸ்லீம்) அரசன் கூட ஒரு அரவாணியை படைத்தளபதியாக்கினான் என்பது தான் என்னுடைய கருத்து.
                அவன் கோயிலைக் கொள்ளையடித்ததும், பார்ப்பனர்கள் சிலைகளைத் தூக்கிக் கொண்டு ஓடியதும், நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் விடயத்துக்குத் தொடர்பற்றவை. உங்களின் பதிலைப் பார்த்தால், நான் ஏதோ மாலிக் கபூரை ஆதரிக்கிறேன் என்பது போலல்லவா இருக்கிறது. பேசப்படும் விடயத்துக்கு மட்டும் பதிலளித்துப் பழகுங்கள்.

                //பால்குடம் மற்றும் பூக்களையும்தான் கோவிலுக்கு சுமந்து கொண்டு செல்கிறார்கள்.. கருவறைக்குள் போய் நீராட்டி, பாலாட்டி, பூசை செய்கிறார்கள் என்று அளந்துவிடுவது சரியா..///

                “போதொடு நீர் சுமந்தேத்தி”, என்ற வரிகளிலுள்ள ஏத்தி என்றால் பூசித்து அல்லது வணங்கி என்ற கருத்தை இன்னும் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீர்க்குடத்தைச் சுமந்து கொண்டு போகிறவர்கள் ஐயரிடம் கொடுத்ததாகவோ அல்லது ஐயரின் தலையில் ஊற்றியதாக அந்த தேவாரம் குறிப்பிடவில்லை. போதொடு, நீர், சுமந்து ஏத்தி (சிவலிங்கத்தைத் திருமுழுக்காட்டி), புகுவார், அவர் பின் புகுவேன். தயவு செய்து ‘தமிழ்வேட்கைக்கு’ நான் அளித்த பதிலையும் பார்க்கவும். காசியில் மட்டுமன்றி இலங்கையில் திருக்கேதீச்சரத்திலும், மகாசிவராத்திரி நாட்களில், சாதி வேறுபாடின்றி எல்லோரும், இராவணனாலும் சோழர்களாலும் கும்பிடப்பட்டதாகக் கருதப்படும் மகாலிங்கத்துக்கு, போதொடு (மலர்கள்), நீர் சுமந்தேத்தி – திருமுழுக்காட்டுவது வழக்கம். அதைப் படத்தில் காணலாம்.

                //நீர் கூறியதை முழுதாக மேற்கோள் காட்டியிருக்க வேண்டுமோ..///

                நான் கூறியது உங்களுக்குப் புரியவில்லை. அழகான, முகவெட்டும், உயரமும், தீர்க்கமான மூக்கு, கண்கள் போன்றவற்றைக் கொண்ட அழகான தமிழ் ஆண்களையும், பெண்களையும் தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கண்டேன், ஆனால் அவர்களின் தோல் கறுப்பாக இருப்பதால், அவர்களுக்கு தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் வாய்ப்புக் கிடைப்பதில்லை போலிருகிறது, என்று நான் நொந்து கொண்டதற்கு- தமிழரல்லாத மராட்டி/கன்னட/வடுக விஜயகாந்தும், ரஜனி காந்தும் வசூலில் அள்ளுகிறார்கள் என்று கூறும் உங்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. 🙂

                • தொடர்ச்சி:

                  அம்பியின் தமிழ்மண் பற்றிய பம்மாத்துக் கருத்து, தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்குச் செய்த கழுத்தறுப்புகள் நினைவுக்கு வந்ததால், இதை முன்பே விளக்க மறந்து விட்டேன். நான் ‘அந்தப் பாரம்பரியம்’ என்று குறித்ததும் (தவறான quotation mark), அம்பி அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டார் போலிருக்கிறது. அந்தப் பாரம்பரியம் என்று நான் குறித்தது, சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் இருந்த அரவாணியை முஸ்லீம் அரசன் படைத்தளபதியாக்கியது போலவே கழுவித் துடைத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களில் ஒருவரை இராசன் படைத்தளபதியாக்கினான். அந்தப் பாரம்பரியம், அதாவது நலிந்தவர்களுக்கும், பலமற்றவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் பாரம்பரியத்தை, முஸ்லீம் மன்னர்கள் இராச இராசனிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கலாம் என்பது தான்.

                  உண்மையில், ஒரு அரவாணிப் படைத்தளபதி மதுரையைத் தாக்கினான் என்பது மட்டும் தான் நான் கேள்விப்பட்டது. ஆனால் அலாவுதீன் கில்ஜி-மாலிக் கஃபுர் ஜோடியின் பாலியல் தொடர்புகள் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. எனக்கு இப்பொழுது தான் புரிகிறது, ஏன், அம்பி அவர்கள் அந்தப் பாரம்பரியம் என்ற எனது வார்த்தைகளைப் பார்த்து ஒரேயடியாக உணர்ச்சிவசப்பட்டு விட்டார் என்பது. அதற்கிடையில் மஞ்சள் பந்தையும் போட்டு விட்டேன் போலிருக்கிறது. அதன் மூலம், எனது மரியாதைக்குரிய மாமன்னன் இராச இராசனையும் அவமதித்து விட்டதையும் என்னால் உணர முடிகிறது. 🙁

                  அம்பியைப் போன்றவர்களுக்கு இவ்வளவு விளக்கம் அளிக்கத் தேவையில்லை. இருந்தாலும், நான் உண்மையில் அவர் நினைப்பது போன்று, வேண்டுமென்றே அவ்வாறு அவமதிக்க வேண்டுமென்று நினைத்து எழுதவில்லையாகையால், கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

                  //அலாவுதீன் கில்ஜி-மாலிக் கஃபுர் ஜோடியைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் கூறும் கதைகளை ராசராசருக்கும் அவர் படைத்தளபதிக்கும் பொருத்தும் உமது கழிசடைத்தனம்…//

                  • // ஒருகாலத்தில் இந்தியா முழுவதுமே தமிழர்களின் மண், எல்லோரும் தமிழைத் தான் பேசினார்கள். ஆதிக்குடிகளாகிய நாகர்கள் கூடத் தமிழர்கள் தான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அப்படியானால், அந்த வரலாற்றின் அடிப்படையில், வட இந்தியா மட்டுமல்ல, ஏன் இந்தியா முழுவதுமே தமிழர் மண் என்று வாதாடுவீர்களா? அல்லது அதை பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்வார்களா? //

                    சிங்களவர்களின் மகாவம்சம் ஒப்புக்கொள்வதைப் போல் பார்ப்பனர்களின் புராணங்கள் ஏதாவது அப்படி ஒப்புக் கொள்கிறதா..? அது சரி, சிங்களவர் என்னிடம் கேட்க வேண்டிய இந்தக் கேள்வியை நீர் ஏன் கேட்கிறீர்..?!

                    // எப்படியோ நான் சொல்ல வந்தது உங்களுக்குப் புரிந்தால் சரி. முகலாயர் என்றதை முஸ்லீம் மன்னர் என்று திருத்திக் கொள்ளுங்கள். நான் சொல்லவந்தது புரியாத படியால், உங்களின் கோணல் புத்தியால், நீங்கள் தவறாக எதையோ கற்பித்துக் கொண்டு என்னவோ எல்லாம் உளறுகிறீர்கள். //

                    உமது திருவாய் உதிர்க்கும் முத்துக்களை நான் தான் சரியாக கோர்க்கவில்லையாக்கும்.. அதுவும் என் கோணல் புத்தியால் தானாக்கும்..

                    // போதொடு, நீர், சுமந்து ஏத்தி (சிவலிங்கத்தைத் திருமுழுக்காட்டி), புகுவார், அவர் பின் புகுவேன். //

                    முதலில் கருவறைக்கு வெளியில் இருந்து கொண்டே சிவலிங்கத்தை திருமுழுக்காட்டுவாராம்.. அதன் பின் கருவறைக்குள் புகுவாராம்.. திருவாய் முத்துக்கள் இப்படி கன்னா பின்னா என்று வந்து விழுந்தால் எப்படி சரியாக கோர்ப்பது..?!

                    // …….எனது மரியாதைக்குரிய மாமன்னன் இராச இராசனையும் அவமதித்து விட்டதையும் என்னால் உணர முடிகிறது. //

                    தான் போட்டிருந்த தமிழ் தேசிய முகமூடியை தானே கிழித்துக் கொண்டதை உணர்ந்து கொண்ட கிங்க்கி பிங்க்கி, இப்போது கோமாளி போல் சங்கி மங்கி வேசம் போட்டு நாடகமாடி காதில் பூ வைக்கப் பார்க்கிறது..

                    • //சிங்களவர்களின் மகாவம்சம் ஒப்புக்கொள்வதைப் போல் பார்ப்பனர்களின் புராணங்கள் ஏதாவது அப்படி ஒப்புக் கொள்கிறதா..?///

                      ஒன்றும் தெரியாமல் உளறுவது என்பது இது தான், எந்த மகாவம்சத்தில் இலங்கை முழுவதும் தமிழர்களின் மண் என்று உள்ளது என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள். நீங்கள் இவ்வளவு தீர்க்கமாக வாதாடுவதைப் பார்க்கும் போது, அந்த மகாவம்சத்தை சிங்களவர்களுக்கு காட்டி, இலங்கை முழுவதும் தமிழ்மண் தானென்று நிரூபிக்க வேண்டுமென்று எனக்கு ஆவலாக இருக்கிறது.

                      //அது சரி, சிங்களவர் என்னிடம் கேட்க வேண்டிய இந்தக் கேள்வியை நீர் ஏன் கேட்கிறீர்..?//

                      இலங்கையின் மகாவம்சத்தை விட வேறொரு பார்ப்பன மகாவம்சம் உங்களிடம் இருக்கிறதோ என்ற ஆவலில் தான் கேட்கிறேன்.

                      //உமது திருவாய் உதிர்க்கும் முத்துக்களை நான் தான் சரியாக கோர்க்கவில்லையாக்கும்.. அதுவும் என் கோணல் புத்தியால் தானாக்கும்.///

                      உங்களுக்குப் புரியவில்லை அல்லது புரியும் வகையில் நான் தெளிவாகக் கூறவில்லை. அவ்வளவு தான்.

                      // போதொடு, நீர், சுமந்து ஏத்தி (சிவலிங்கத்தைத் திருமுழுக்காட்டி), புகுவார், அவர் பின் புகுவேன். ///

                      தமிழர்களும் நேரடியாக கருவறை சென்று இறைவனை திருமுழுக்காட்டி வழிபட்டார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள உம்முடைய பார்ப்பன சாதி வெறி மறுக்கிறதே தவிர, உமக்கு இந்த தேவார அடிகள் புரியவில்லை என்று நான் நினைக்கவில்லை. அதனால், தான் நான் விளக்குவதற்காக, அந்த அடியைப் பிரித்துக் காட்டியதை வைத்துக் கோமாளித்தனம் காட்டுகிறீர்.போதொடு நீரைச் சுமந்து கொண்டு போவது அங்குள்ள பார்ப்பான்களின் தலையில் ஊற்றுவதற்காக அல்ல, சிவலிங்கத்தை திருமுழுக்காட்டத் தான். அந்த தேவார அடிகளின் அடிப்படையில் தான், இலங்கையில் திருக்கேதீச்சரத்தில் திருமுழுக்காட்டு நடத்தப்படுகிறது. உம்மைப் போன்ற பார்ப்பான்களைச் சொல்லிக் குற்றமில்லை, தமிழர்களின் கோயில்களில் பார்ப்பன ஆதிக்கத்தைப் பொறுத்துக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் இந்த வாய்க்கொழுப்புக்கெல்லாம் காரணம்,.

                      //தான் போட்டிருந்த தமிழ் தேசிய முகமூடியை தானே கிழித்துக் கொண்டதை உணர்ந்து கொண்ட கிங்க்கி பிங்க்கி,///

                      தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் எல்லோரும் இராச இராசனைப் போற்றுவதில்லை, போற்ற வேண்டுமென்ற எந்த நியதியும் கிடையாது. ‘கிங்க்கி பிங்க்கி’ வரலாறெல்லாம் பார்ப்பான்களுக்குத் தானுண்டே தவிர, தமிழர்களுக்குக் கிடையாது. அதனால் அதைப் பற்றி உமக்குத் தான் நன்றாகத்தெரியும். 🙂

                    • // எந்த மகாவம்சத்தில் இலங்கை முழுவதும் தமிழர்களின் மண் என்று உள்ளது என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள். //

                      விசயன் அண்ட் கோ இலங்கையில் வந்திறங்குவதற்கு முன்பாகவே அங்கிருந்தவர்களாக மகாவம்சம் குறிப்பிடும் ’அதிமானுட’ இயக்கர்களும், வட இலங்கையின் நாகதீபத்தில் வாழ்ந்தவர்களும், தென்னிலங்கையின் கஜ்ஜரகாமா / கதிர்காமத்தில் வாழ்ந்தவர்களும், சமந்தகூட ( தமிழ் சைவர்களால் சிவபாதம் என்று அழைக்கப்படும்) மலையில் வழிபாடு நடத்தியவர்களும் தமிழ் பழங்குடிகள் அல்லாமல் யவனர்களாக இருக்குமோ..?

                      // நீங்கள் இவ்வளவு தீர்க்கமாக வாதாடுவதைப் பார்க்கும் போது, அந்த மகாவம்சத்தை சிங்களவர்களுக்கு காட்டி, இலங்கை முழுவதும் தமிழ்மண் தானென்று நிரூபிக்க வேண்டுமென்று எனக்கு ஆவலாக இருக்கிறது. //

                      ஆவலாக இருந்தால் “ஒன்றும் தெரியாமல் உளறுவது என்பது இது தான்” என்று ஏன் சிங்களவர் சார்பாக சீறினீர்..?

                      // இலங்கையின் மகாவம்சத்தை விட வேறொரு பார்ப்பன மகாவம்சம் உங்களிடம் இருக்கிறதோ என்ற ஆவலில் தான் கேட்கிறேன். //

                      இந்த ஆவல், எதிர் வாதம் வைக்கவேண்டிய உந்துதலால் வருவது, சிங்களவர்களுக்கு..

                      // உம்மைப் போன்ற பார்ப்பான்களைச் சொல்லிக் குற்றமில்லை, தமிழர்களின் கோயில்களில் பார்ப்பன ஆதிக்கத்தைப் பொறுத்துக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் இந்த வாய்க்கொழுப்புக்கெல்லாம் காரணம்,.//

                      தேவாரப் பாடலுக்கு நீர் கொடுக்கும் பசப்புரையை வாய் மூடி கேட்டுக் கொண்டிருக்க இங்கு யாரும் உம் ஊர் அப்பாவி காணிக் கூலிகள் இல்லை.. உமது பசப்பலை மோசடி என்று கூறும் ’வாய்க்கொழுப்பை’ அடக்கச் சொல்லி ஆண்டையைப் போல் உத்தரவிட இது யாழ்பாணமும் இல்லை..

                      மேல் நாட்டில் உட்கார்ந்து கொண்டு வாய்க்கொழுப்பைக் காட்டிகொண்டிருக்கும் நீர் எப்போது சொந்த நாட்டில் போய் வீரமுழக்கம் செய்யப் போகிறீர்..?

                      // தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் எல்லோரும் இராச இராசனைப் போற்றுவதில்லை, போற்ற வேண்டுமென்ற எந்த நியதியும் கிடையாது. //

                      சைவ வெள்ளாள வகை தமிழ் தேசியம் பேசும் உம்மை போன்றவர்களுக்கு ஒரு நியதியும் தேவையில்லைதான், உமது திருவாயிலிருந்து என்னென்ன கண்றாவிகள் வந்து விழுகிறதோ அதுதானே உண்மையான ’தமிழ் தேசியம்’..!

                      // ‘கிங்க்கி பிங்க்கி’ வரலாறெல்லாம் பார்ப்பான்களுக்குத் தானுண்டே தவிர, தமிழர்களுக்குக் கிடையாது.//

                      அப்ப நீர் தமிழரில்லையா..? கோவிகம கலப்போ..?

                      // 🙂 //

                      அதேதானா..

                    • அம்பி போன்ற சாதி வெறி பிடித்த தமிழெதிரிகள் இக்காலத்தில் தமிழர்கள் சாதி வேறுபாடின்றி கருவறை புகுந்து தமிழில் கடவுளை வணங்குவதை மட்டும் தான் எதிர்க்கிறார்கள் என்று நினைத்தால், தமிழர்கள் நாயன்மார் காலத்தில் சாதி வேறுபாடின்றி கருவறை புகுந்து இறைவனை, திருமுழுக்காட்டி, மலர்களால் அர்ச்சித்து வழிபட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டும் தேவார அடிகளைக் கூட, திரித்தும் மறுத்தும் விதண்டாவாதம் செய்கின்றனர். அம்பி எப்படி மறைக்க முயன்றாலும், அவரது சுயரூபம் அவரது பதில்களில் தெரிந்து விடுகிறது. “போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்” என்ற தேவார அடிகளின் கருத்தை சில ‘அவாளும்’ ஒப்புக் கொள்கின்றனர். இந்த்துத்துவ, பார்ப்பனீய சார்பு, ஆர் எஸ் எஸ் ஆதரவுகட்டுரைகள் வெளிவரும் Tamil Hindu இணையத்தளத்தில் கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதுகிற சிவஸ்ரீ. விபூதிபூஷண் கூட இந்த தேவார அடிகளுக்கு நான் கூறிய கருத்தை ஒப்புக் கொள்கின்றார்.

                      ஆரியர்களுக்கு நான் பதிலெழுதினால், இங்குள்ள பெரியாரியர்கள் சிலர் இங்கு நடக்கும் விவாதத்தை ஏதோ நான் திட்டமிட்டு திசை மாறுவதாகக் குற்றஞ்சாட்டுவதால், அம்பிக்குப் பதிலை எனது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளேன்.

                      http://viyaasan.blogspot.ca/2014/12/blog-post.html

                      //விசயன் அண்ட் கோ இலங்கையில் வந்திறங்குவதற்கு முன்பாகவே அங்கிருந்தவர்களாக மகாவம்சம் குறிப்பிடும்……///

                      மகாவம்சத்தில் எங்குமே இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழரக்ள் கூறப்படவில்லை. மகா வம்சம் அப்படிக் கூறுவதாக உளறி விட்டு, சும்மா சப்பைக் கட்டுக் கட்டுகிறார். தமிழர்கள் கருவறை சென்று வழிபட்டனர் என்பதை ஒப்புக் கொண்டால், தமிழ்நாட்டுப் பார்ப்பான்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில், தேவாரத்தில் உள்ளதை மறுத்து விட்டு, மகாவம்சத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக உளறுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. 🙂

                  • அம்பி என்ற பெயரிலேயே பார்ப்பன மேலாண்மையை அம்மணமாக அம்பி பேசுகிற பொழுது தெரியாத சாதி வெறி வியாசனுக்கு தேவார விவாதத்தில் மட்டும் வருகிறதென்றால் வியாசனின் பார்ப்பனிய நக்கத்தனம் எந்தளவுக்கு அருவெறுப்பானது என்பதைக் கவனிக்க வேண்டும். தற்பொழுது அம்பி போன்ற சாதிவெறி பிடித்த தமிழ் எதிரிகள் என்று வியாசன் எழுதுவது வியாசனின் பச்சையான துரோகமாகும்.

                    இதே வியாசன் என்னிடம் விவாதிக்கிற பொழுது தமிழரல்லாத கன்னட, வடுக, பெரியாரிய திராவிட வர்க்கப்போராளிகள் என்று பாசாங்கு காட்டிவிட்டு முழுக்க அம்பியை ஆதரித்தவர். அம்பி கூட பார்ப்பனரல்லாமல் பெரியாரின் திராவிட கொள்கைகளை வெறுப்பவராக இருப்பதால் தான் அவர் தமிழ் தேசியம் சார்பாக வாதிடுகிறார் என்று சர்ட்டிபிகேட் கொடுத்தவர் வியாசன்.

                    இதற்கு நேராக தமிழ்தேசிய முகமூடிக்குள் இருந்துகொண்டு பார்ப்பனியம் பேசிய வியாசனை ஆரத்தழுவி அமைதிகாத்தவர் அம்பி. பூணுல் அணிந்தாலும் முருகன் தமிழ்கடவுள் என்று வியாசன் அம்பியின் கருத்தை அள்ளிப்பருக இருவருமே கவன ஈர்ப்புபிரச்சாரத்தை மாத வாரமாக நடத்திவிட்டு, இன்று ஒருவருக்கொருவர் மனக்கொலை செய்வதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.

                    இப்பொழுது அம்பி சாதிவெறி பிடித்த தமிழ் எதிரியாக வியாசனுக்கு தெரிவதன் முக்கிய நோக்கம் வெள்ளாளர்களின் சைவப் பார்ப்பனியம் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக வாதாடுகிற அம்பிக்கு அரிக்கிறது என்கிற உள்முரண்பாடே.

                    இதில் வியாசன் கட்டமைப்பது முழுக்கவும் வரலாற்று மோசடியும் இருட்டடிப்பு மட்டுமே. கோயில் கருவறைக்குள் தமிழர்கள் சென்றதை தேவார அடிகள் சுட்டுகிறதாம். இது உண்மையென்றால் ஆவுரித்து தின்னும் புலையர் என்று ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தியதும் தேவாரம் தான். சைவ மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதாகச் சொல்லும் ஆறுமுக நாவலர் சாதிவெறியைக் கடைப்பிடித்ததும் வெளிப்படையே. இதற்கென்ன பதில்? இதில் தமிழ் ஹிந்து தளத்தில் சிவஸ்ரீ, விபூதிபூசன் கூட வியாசனின் கருத்தை ஒத்துக்கொள்கிறார்களாம். தமிழர்கள் சாதிவேறுபாடின்றி கோயில் கருவறையில் வழிபட்டனர் என்று இட்டுக்கட்டி ஆயிரம் ஆண்டுகால பார்பனிய இழிவை சைவ வெறியால் தமிழர்களின் போராட்டங்களை இவ்விதம் காயடிப்பதை எந்த இந்துத்துவக் காலிகள் இல்லையென்று மறுப்பர்?

                    இப்படிப்பட்ட சைவப் பூனைகளும் உழவாரப்பணி என்பதன் பெயரில் தமிழ் ஒரு மாயை என்று சொன்ன பார்ப்பனக்கூட்டத்திற்கு சப்புக்கொட்டியவர்கள் தான். அது மட்டுமல்ல, சைவம் என்று சொல்கிற பொழுது பலகோயில்களை இராஜபக்சே இடித்த காலத்தில் சைவ ஆதின மடங்கள் அதனை எதிர்த்து கேள்வி கேட்காமல் இந்துமதத்தின் ஊத்தநாறி காமகேடி ஜெயந்திரேனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைவிட்டனர். இதைக்கண்டித்து தமிழ் தேசியவாதி என்று அறியப்படுகிற நெடுமாறன் கூட அறிக்கைவிட்டிருக்கிறார்! அப்பொழுது இந்துத்துவ தமிழ்தேசியவாதிகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? அந்த தமிழ்தேசியவாதியும் அவர் பேசிய தமிழ்தேசியமுமே சீரழிந்து பிழைப்புவாதியாக மாறிப்போயிருக்கிற பொழுது சைவத்தை எதிர்க்கிறவர்கள் தமிழ் எதிரிகள் என்று வியாசன் போன்ற இந்துத்துவ காலிகள் தமிழ்தேசிய வேசம் போடுகின்றனர். இவருடைய வாதத்தில் இவ்விதம் தமிழ், தமிழர் நலன் எதுவும் அல்லாமல் வெறும் பார்ப்பன நக்கத்தனம் மட்டுமே இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது அவசியமாகும்.

                    இதன் பிண்ணனியில் தான் பார்ப்பன சிங்கி அடிக்கும் அம்பி வியாசனுக்கு சாதிவெறி தமிழ் எதிரியாக தெரிகிறார். இவ்விதம் வராலாறு முழுவதுமே ஒருவர் காலை ஒருவர் வாரிவிட்டு பிழைப்புவாத வாழ்க்கை வாழ்கிற கூட்டம் தான் தமிழகத்தில் கோலோச்சுகிறது என்பதை இந்தவிவாதத்தில் இவர்களின் நிலைப்பாடு நிரூபிக்கிறது.

                    இது எவ்விதத்திலும் ஆரோக்கியமானதல்ல. ஈவு இரக்கமின்றி முறியடிக்கப்படவேண்டியது.

    • பார்ப்பனர்களின் குடியேற்றத்தொடு இன்றைய வட இந்திய தொழிலாளர்களின் புலம் பெயர்வை ஒப்பிட முடியாது.பார்ப்பனர்கள் உழைக்கும் மக்களாக இங்கு வரவில்லை.தமிழ் மக்களின் உழைப்பில் விளையும் செல்வத்தில் உழைக்காமல் பிழைப்பு நடத்தும் வித்தையோடு வந்தார்கள்.அதனால் அவர்கள் எந்த செல்வத்தையும் உருவாக்கவில்லை.இருக்கின்ற செல்வத்தை பங்கு போட ஒட்டுண்ணிகளாக வந்தார்கள்.

      வட இந்திய தொழிலாளர்களோ உழைக்கும் மக்களாக வந்து தங்கள் உழைப்பால் இம்மண்ணை வளப்படுத்துகிறார்கள்.அந்த உழைப்பில் விளையும் செல்வத்தில் சொற்பமான பங்கை பெற்றுக்கொண்டு தங்கள் பிழைப்பை ”ஓட்டுகிறார்கள்”.அவர்கள் ஒன்றும் தமிழ் மக்களை சுரண்டி சுக போக வாழ்க்கை நடத்தவில்லை.ஆகவே தன் உழைப்பால் தமிழ் மண்ணுக்கு வளமூட்டும் ஒரு தமிழனுக்கும் அதே உழைப்பை தரும் வட இந்திய தொழிலாளிக்கும் வேறுபாடு ஏதுமில்லை.தமிழ் மண்ணை காக்கும் உண்மையான அக்கறை இருப்பவர்கள் எதிர்க்க வேண்டியது உழைக்கும் தொழிலாளர்களை அல்ல.எதிர்க்க வேண்டியது தமிழகத்தை கொள்ளையிடும் வட இந்திய பனியா கும்பலைத்தான்.

      \\இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னர், இந்த வட இந்தியக் கூலிகளின் பரம்பரையினருடன், தமிழர்கள் மல்லுக்கட்ட வேண்டிய நிலை வராதென்று என்ன நிச்சயம்//

      தனது தாயக பகுதியின் மீதான ஒரு தேசிய இனத்தின் உரிமை வெறுமனே அப்பகுதியின் மொழியை பேசுவதால் மட்டும் வருவதில்லை.மாறாக அந்த மண்ணில் அவர்களின் முன்னோர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் உழைத்திருக்கிறார்கள்,அவர்களின் குருதியும் சதையும் அந்த மண்ணில் உரமாய் படிந்திருக்கிறது என்ற அடிப்படையில்தான் உரிமை வருகிறது.மொழியை மட்டுமே அளவுகோலாக கொண்டால் அப்பகுதியில் வாழும் மொழிச்சிறுபான்மையினருக்கு அந்த மண்ணில் உரிமை ஏதுமில்லை என்றாகி விடும்.இது ஒரு நாகரீக சமூகம் ஏற்கத்தக்கதல்ல.

      ஆகவே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வட இந்திய தொழிலாளர்கள் இந்த மண்ணில் உழைப்பார்களேயானால் அவர்களும் தமிழ் மக்களுக்கு இணையான உரிமையை இம்மண்ணின் மீது பெற்றவர்கள் ஆவார்கள்.

      ஆமாம்,அவர்களோடு தமிழ் மக்கள் ஏன் மல்லுக்கட்ட வேண்டும்.உழைக்கும் மக்களுக்கு இடையே எப்போதுமே பேதமும் குரோதமும் ஏற்படுவதில்லை.அவர்களின் வாழ்க்கை நிலைமையும் அதற்கு இடம் தருவதில்லை.பிரிவினை எண்ணத்தையும் மோதலையும் உருவாக்குவதே மேட்டுக்குடி கழிசடை பொறுக்கிகள்தான். அந்த கும்பலை அம்பலப்படுத்தி முறியடிப்பதே தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை நிலவுவதற்கும் தமிழ் மக்களுக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதற்கும் அவசர அவசிய தேவையாக உள்ளது.

      • // பார்ப்பனர்கள் உழைக்கும் மக்களாக இங்கு வரவில்லை.தமிழ் மக்களின் உழைப்பில் விளையும் செல்வத்தில் உழைக்காமல் பிழைப்பு நடத்தும் வித்தையோடு வந்தார்கள்.அதனால் அவர்கள் எந்த செல்வத்தையும் உருவாக்கவில்லை.இருக்கின்ற செல்வத்தை பங்கு போட ஒட்டுண்ணிகளாக வந்தார்கள். //

        எல்லா மதங்களிலும் புரோகித வர்க்கம் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை, முல்லாக்கள் உடல் உழைப்பில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதைச் சொன்னால் தங்களுக்கு கோவம் வரும்..

        // வட இந்திய தொழிலாளர்களோ உழைக்கும் மக்களாக வந்து தங்கள் உழைப்பால் இம்மண்ணை வளப்படுத்துகிறார்கள். //

        வட இந்திய தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் என்பது உண்மையே, இம்மண்ணை அதிகம் வளப்படுத்துகிறார்களா அல்லது காண்டிராக்டர்கள், முதலாளிகளின் பாக்கெட்டை அதிகம் வளப்படுத்துகிறார்களா என்பது விவாதத்துக்குரியது..

        //உழைக்கும் மக்களுக்கு இடையே எப்போதுமே பேதமும் குரோதமும் ஏற்படுவதில்லை. //

        வட இந்திய, தமிழ் முதலாளிகளுக்கிடையே சுரண்டுவதில் இணக்கம் இருக்கிறது, மாறாக பேதத்தையும் குரோதத்தையும் உழைக்கும் மக்களிடையே ஏற்படுத்துவதுதான் எளிது என்பதே இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது.. அதை யார் ஏற்படுத்துகிறார்கள் என்பதை தாங்கள் கூறிவிட்டீர்கள்.. சத்தியமாக நான் இல்லீங்கோ..

        • அம்பி,

          தங்களின் சினத்துக்கு ஆளாகி சின்னாபின்னமாகி விடுவோமோ என்று பயந்து கொண்டேதான் பார்ப்பனர்கள் பற்றிய இந்த குறிப்பை எழுதினேன்.அஞ்சியவாறே வந்து விட்டீர்கள்.வாங்க;

          \\எல்லா மதங்களிலும் புரோகித வர்க்கம் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை//

          உண்மை.யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.ஆனால் ஒரு சமூகமே புரோகிதத்தை உழைக்காமல் வாழ்வதற்கான தந்திரமாக வைத்திருப்பது பார்ப்பனியத்தில் மட்டும்தான்.மற்ற மதங்களில் அதற்கான கல்வியை கற்றவர்கள் யார் வேண்டுமானாலும் புரோகிதர் ஆகலாம்.நீங்க வுடுவீங்களா.காதுல ஈயத்தை காச்சி ஊத்தாம விடுறதே நீங்க காட்டுற பெரிய சலுகை இல்லையா.

          • _______.. இந்தியாவில் இன்றுள்ள அரசியல் தலைவர்களும் இந்த ’பாரம்பரிய உரிமையை’ நிலைநாட்டத் தொடங்கி விட்டார்களே..

            • வினவு ஏன் முதல் வரியை மட்டுறுத்தியது என்று புரியவில்லை.. டில்லி ஜும்மா மசூதி இமாம் பதவி இமாமின் வாரிசுக்குத்தான் போகமுடிகிறது என்று சுட்டிக்காட்டி நான் கூறியதில் என்ன பிரச்சினையோ..?!

              • அம்பி,

                டில்லி ஜும்மா மசூதி இமாம் பதவி இமாமின் வாரிசுக்குத்தான் போகமுடிகிறது என்பதற்காக அம்பியின் மூதைக்லின் வாரிசுகள் `மட்டுமே கோவில்களில் அர்சகர் ஆகலாம் என்ற அடாவடி தனத்தை எப்படி ஏற்பது அம்பி ? மற்றவர்களும் அர்சகர் வேலைக்கு படித்தும் வேலை கிடைக்க பெறாமல் இருக்க காரணமானவர்களை பற்றியும் அம்பி பேசலாமே ! திப்பு கூறும் …

                “ஒரு சமூகமே புரோகிதத்தை உழைக்காமல் வாழ்வதற்கான தந்திரமாக வைத்திருப்பது பார்ப்பனியத்தில் மட்டும்தான்.மற்ற மதங்களில் அதற்கான கல்வியை கற்றவர்கள் யார் வேண்டுமானாலும் புரோகிதர் ஆகலாம்”

                என்ற விவாதிப்பதில் அம்பிக்கு என்ன பிரச்சனை ?

                • இந்த ’வாரிசு உரிமை’யால் பார்ப்பனர்களைத் தவிர வேறு யார் யாரெல்லாம் பயனடைந்தார்கள், பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்று விரிவாக விவாதிப்பதில் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.. தற்போதைய விவாதத்திலிருந்து அது திசைதிருப்பி விடும்.. வேறு பொருத்தமான ஒரு பதிவில் விவாதிப்போம்..!

                • நண்பரே,இவ்வளவு நாள் அம்பியோடு விவாதிக்கிறீர்கள்.இன்னுமா அவரை நம்புகிறீர்கள்.பாருங்க இப்ப கூட என்ன சொல்றாரு.

                  \\இந்த ’வாரிசு உரிமை’யால் பார்ப்பனர்களைத் தவிர வேறு யார் யாரெல்லாம் பயனடைந்தார்கள், பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்று விரிவாக விவாதிப்பதில்//

                  அதாவது நீங்க செய்றது தப்புன்னு சுட்டிக்காட்டினால் மத்தவாளும் பண்றாளே அப்படின்றார்.இதுல ஏதாவது யோக்கியமான மறுப்போ,விவாதமோ இருக்கா.

                  மேலும் விவாதம் திசை திரும்பிருமாம்.அதுனால பேச மாட்டாராம்.இவர் பண்ணாத திசை திருப்பல்களா.

                  அதாவது ”புலிப்பாண்டி ”வடிவேலு சொல்வாருல்ல.

                  ”இன்னைக்கு அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாய்ங்க போல இருக்கே.சிக்குவேனா நான்”

                  அவ்வளவு சுளுவா சிக்குவாரா அம்பி.

                  • வினவில் நான் அம்பியிடம் கேள்வி கேட்டு அவர் வாயை பிடுங்குவது எதற்காக திப்பு ? அவரை ,அவர் தோல் சுமக்கும் பார்பனியத்தை முடிந்த அளவிற்கு வினவு வாசகர்களிடம் அம்பல படுத்த தானே !

                  • // அதாவது நீங்க செய்றது தப்புன்னு சுட்டிக்காட்டினால் மத்தவாளும் பண்றாளே அப்படின்றார்.இதுல ஏதாவது யோக்கியமான மறுப்போ,விவாதமோ இருக்கா.//

                    பார்ப்பனர்களைப்பற்றி மட்டும்தான் விவாதிக்கவேண்டும் என்ற தங்களுக்கு பிடித்தமான கண்டிசன் மட்டும் யோக்கியமானதாக எனக்கும்தான் தெரியவில்லை..

                    // ”இன்னைக்கு அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாய்ங்க போல இருக்கே.சிக்குவேனா நான்” //
                    //வினவில் நான் அம்பியிடம் கேள்வி கேட்டு அவர் வாயை பிடுங்குவது எதற்காக திப்பு ? அவரை ,அவர் தோல் சுமக்கும் பார்பனியத்தை முடிந்த அளவிற்கு வினவு வாசகர்களிடம் அம்பல படுத்த தானே !//

                    ஆகா, வினவு தளத்தோட உமர் முக்தாரும், லெனினும் சேந்துண்டு நோக்கு எதிரா ஏதோ சதியாலோசன பண்ணிண்டுருக்கா போலருக்கேடா அம்பி, எஸ்கேப்..!

                    • \\பார்ப்பனர்களைப்பற்றி மட்டும்தான் விவாதிக்கவேண்டும் என்ற தங்களுக்கு பிடித்தமான கண்டிசன் //

                      இல்லை.விவாதம் எந்த பொருள் குறித்ததாக இருந்தாலும் அதனை இசுலாம் நோக்கி நீங்கள் திருப்பி விட்ட போதெல்லாம் அதற்கு பதில் சொல்லி விட்டுத்தான் உங்கள் திசை திருப்பலை சுட்டிக்காட்டி இருக்கிறேன். .தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதுதான் விவாத நேர்மை.அதனை எதிராளி ஏற்கிறாரா மறுக்கிறாரா என்பது பிரச்னை இல்லை என்று கூட உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.நீங்கதா எதை பத்தியும் கவலைப்படாம குருட்டு கோழி தவுட்டை முழுங்குன மாதிரி பேசு பொருள் பற்றி பேசாம ”உங்க வேலையை ” திரும்ப திரும்ப காட்டிட்டு இருக்கீங்க.

                      \\சதியாலோசன பண்ணிண்டுருக்கா போலருக்கேடா அம்பி, எஸ்கேப்..!//

                      வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.நன்றி.

                    • அம்பி இரவு 2:20 am மணிக்கு தனிமையில் ஏன் இப்படி புலம்பல் ? ஆமாம் அம்பிக்கு என்ன ஊரு? நாடு ? பின்னுட்டம் எல்லாம் அர்த்த ராத்திரியில் வருதே !

                      //ஆகா, வினவு தளத்தோட உமர் முக்தாரும், லெனினும் சேந்துண்டு நோக்கு எதிரா ஏதோ சதியாலோசன பண்ணிண்டுருக்கா போலருக்கேடா அம்பி, எஸ்கேப்..!//

              • தில்லி ஜும்மா மசூதியில் மட்டுமே இப்படி பரம்பரையாக மதகுருமார்கள் நியமிக்கப்படுகிறார்கள்.தனிச்சிறப்பான சூழலில் இந்த வாரிசுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.இநத ஒரு மசூதி தவிர்த்து உலகின் எந்த ஒரு மசூதியிலும் பரம்பரை வாரிசுரிமை கிடையாது.இது குறித்து இணையத்தில் கிடைக்கும் தகவல்கள்.

                http://en.wikipedia.org/wiki/Shahi_Imam#cite_note-jmuf-1

                http://www.jmuf.org/about_jamia.htm

                இந்த ஒத்த மசூதியை உங்களின் மொத்த கோயில் குத்தகையோடு ஒப்பிடலாமா அம்பி. ஒத்த ரூவா கூட கொடுக்காம குத்தகையை கைப்பற்றி அனுபவிக்கிறீன்களே உங்க திறமைக்கு முன்னால புகாரி இமாம்லாம் சும்மா ஜுஜுபி.

            • \\இந்தியாவில் …………. இந்த ’பாரம்பரிய உரிமையை’ நிலைநாட்டத் தொடங்கி விட்டார்களே.//

              அரசியல்ல வாரிசுரிமை வந்துட்டதுனால கோயில்ல எங்க வாரிசுரிமை தொடரனும்னு சொல்றீங்களா.

        • அம்பி,

          //அல்லது காண்டிராக்டர்கள், முதலாளிகளின் பாக்கெட்டை அதிகம் வளப்படுத்துகிறார்களா என்பது விவாதத்துக்குரியது..//

          இந்த வரி ஒரு இடைச் செருகலாய் இருப்பதை தாங்கள் அவதானிக்கவில்லையா. இது தங்களுடைய வட இந்தியத் தொழிலாளர் மீதான வன்மமாக நான் கருதுகிறேன். ஏனெனில் இங்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் தாங்கள் உழைத்து உருவாக்கியப் பொருட்களுக்கு உரிமைக் கொண்டாட முடியாமல் இருப்பதையும், உற்பத்தியின் உரிமை ஏகபோகமாய் முதலாளிகளிடம் இருப்பதையும் அறியாத ஒருப் பச்சைக் குழந்தையாய் “விவாதத்துக்குரியது” என்று தாங்கள் நாக் கூசாமல் சொல்வது மிகுந்தக் கண்டனத்துகிரியது மற்றும் கயமைத்தனமானது.

          நன்றி.

          • என்னை கயவனாகக் காட்ட முடிவு செய்து விட்டீர்கள்.. தங்களுக்கு உதவ ஒரு எடுத்துக்காட்டையும் தருகிறேன்.. கருவாடு மூளையை வளர்க்கிறதா, கண் பார்வையை வளர்க்கிறதா என்பது விவாதத்துக்குரியது என்று சொன்னால், அதை மீன் வர்க்கத்தின் மீதான வன்மமாகக் கருதுவீர்களா.. மீன் என்ன அதன் விருப்பதுடனா செத்து கருவாடாகி மனிதர்களின் மூளையையோ / கண் பார்வையையோ வளர்க்கிறது..?!

            • அம்பி,
              தங்களைக் கயவனாக காட்ட எனக்கேதும் ஆசையில்லை. ஒரு சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி தனிப்பட்ட நபரின் கரங்களுக்கு செல்வதும் , மீன் கருவாடு ஆவதும் ஒன்றா. இடைசெருகளை நியாயப்படுத்த முயன்று மீசையில் மண் ஒட்டவில்லை என்றுக் கூறாதீர்கள்.

            • அம்பி,

              உண்மையில் தாங்கள் கூறிய வரிகளில் உள்ள பொருளை நான் தவறாக எடுத்துக் கொண்டதால் ஏற்ப்பட்ட பிரச்சினை தான் இது. இது தவறு தான். இதை சுயவிமர்சனமாக ஏற்றுக் கொண்டு இனிமேல் இது போன்று நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். உண்மையில் “விவாதத்திற்குரியது” என்று கூறியவுடன் சிறிது உணர்ச்சிவசப்பட்டு தான் உங்களுக்கு பின்னுரையிட்டேன் மாறாக விவாதத்தை மட்டறுக்கவல்ல.

              நன்றி.

              • // உண்மையில் தாங்கள் கூறிய வரிகளில் உள்ள பொருளை நான் தவறாக எடுத்துக் கொண்டதால் ஏற்ப்பட்ட பிரச்சினை தான் இது. இது தவறு தான். இதை சுயவிமர்சனமாக ஏற்றுக் கொண்டு இனிமேல் இது போன்று நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். //

                இது போன்று நிகழ்வது ஒன்றும் பெரிய குற்றமில்லையே தோழர்.. உடனே சுயவிமர்சனம் செய்து கொள்ளும் நேர்மை அதை சரி செய்துவிடும்.. நானும் தமிழ்-தாகம் விரிவாகக் கூறியதைப் போன்று (நியாயமாக கிடைக்க வேண்டிய கூலி வட இந்திய தொழிலாளர்களுக்கு கிடைக்காத நிலையில் அது லாப வெறிபிடித்த தரகு முதலாளிகளின் செலவமாகதானே குவியும்.) கூறியிருக்க வேண்டும்.. திப்பு புரிந்து கொள்வார் என்று சுருக்கமாக கூறிவிட்டேன்.. தங்களது சுயவிமர்சனம் செய்து கொள்ளும் நேர்மைக்கு நன்றி..

          • சிகப்பு , ஏன் அம்பியின் இக்கருத்தை விவாதிக்க முடியாத அளவுக்கு அதில் என்ன பிரச்சனை உங்களுக்கு ?

            “வட இந்திய தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் என்பது உண்மையே, இம்மண்ணை அதிகம் வளப்படுத்துகிறார்களா அல்லது காண்டிராக்டர்கள், முதலாளிகளின் பாக்கெட்டை அதிகம் வளப்படுத்துகிறார்களா என்பது விவாதத்துக்குரியது..”

            நியாயமாக கிடைக்க வேண்டிய கூலி வட இந்திய தொழிலாளர்களுக்கு கிடைக்காத நிலையில் அது லாப வெறிபிடித்த தரகு முதலாளிகளின் செலவமாகதானே குவியும். சிவப்பு நினைப்பது போன்று எவ்விவாதத்தில் எல்லாருடைய வாயையும் எளிதில் அடைக்க முடியாது. சிவப்புக்கு விவாதிக்க பிடிக்கவில்லை என்றால் செல்லலாம். அதைவிடுத்து விவாதங்களை நிறுத்த முயல்வது எப்படி சரியாகும் ! ஒரு பக்கம் S/W மென்பொருள் பணியாளர்களின் அதிகபடியான ஊதியம் காரணமாக ஏற்படும் பணவீக்கத்தால் விலைவாசி உயர அதனால் தமிழ்நாட்டில் எளிய மக்கள் படும் அவதிகள். மறுபக்கம் வட இந்திய தொழிலாளர்களால் கூலி குறைய அதனாலும் தமிழ்நாட்டில் எளிய மக்கள் படும் அவதிகள் பலவாறாக இருக்க இவற்றை எல்லாம் பேசாதே என்று வாயடைக்க முனையும் சிவப்பின் குரல் கண்டனத்துக்கு உரியது. வட இந்திய தொழிலாளர்களுக்கு கூலி குறைக்க படுவதால் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சமுக பொருளாதார பிரச்சனைகளை பற்றி பேசகூடாது என்று நினைக்கும் சிவப்புக்கு சிறிது கூட தமிழ் நாட்டு மக்கள் மீதோ அல்லது பிழைப்பு தேடி வந்து உள்ள வட இந்திய தொழிலாளர்கள் மீதோ அக்கறை இல்லை. S/W மென்பொருள் பணியாளர்களை எல்லாம் உழைப்பாளிகள் பட்டியலில் சேர்க்கும் இவர் கொண்டு உள்ள சிவப்பு சீந்தனை சிரிப்பிற்கும் ,கண்டனத்துக்கும் உரியது !

            • தமிழ்-தாகம்,

              //வட இந்திய தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் என்பது உண்மையே, இம்மண்ணை அதிகம் வளப்படுத்துகிறார்களா அல்லது காண்டிராக்டர்கள், முதலாளிகளின் பாக்கெட்டை அதிகம் வளப்படுத்துகிறார்களா என்பது விவாதத்துக்குரியது..//

              உண்மையில் அம்பிக் கூறிய வரிகளில் உள்ள பொருளை நான் தவறாக எடுத்துக் கொண்டதால் ஏற்ப்பட்ட பிரச்சினை தான் இது. இது தவறு தான். இதை சுயவிமர்சனமாக ஏற்றுக் கொண்டு இனிமேல் இது போன்று நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். உண்மையில் “விவாதத்திற்குரியது” என்று கூறியவுடன் சிறிது உணர்ச்சிவசப்பட்டு தான் அவருக்கு பின்னுரையிட்டேன் மாறாக விவாதத்தை மட்டறுக்கவல்ல.

              //வட இந்திய தொழிலாளர்களுக்கு கூலி குறைக்க படுவதால் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சமுக பொருளாதார பிரச்சனைகளை பற்றி பேசகூடாது என்று நினைக்கும் சிவப்புக்கு சிறிது கூட தமிழ் நாட்டு மக்கள் மீதோ அல்லது பிழைப்பு தேடி வந்து உள்ள வட இந்திய தொழிலாளர்கள் மீதோ அக்கறை இல்லை. S/W மென்பொருள் பணியாளர்களை எல்லாம் உழைப்பாளிகள் பட்டியலில் சேர்க்கும் இவர் கொண்டு உள்ள சிவப்பு சீந்தனை சிரிப்பிற்கும் ,கண்டனத்துக்கும் உரியது !//

              வட இந்திய தொழிலாளர்கள் பற்றியும், அவர்கள் வருகையால் இங்கு ஏற்படும் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி தாராளமாய் பேசுங்கள். நான் என்னுடையக் கருத்தை தெரிவித்து விட்டேன் என்பது விவாதத்தை முற்றுப் பெற செய்து விடுமா?

              அப்புறம் , மென்பொருள் நிறுவனங்களில் ஈடுபடுபவர் தொழிலாளிகள் இல்லையா. உடலுழைப்பில் ஈடுபடுபவர் மட்டுந்தான் உழைப்பாளிகளா? மூளை உழைப்பில் ஈடுபடுபவர்? அவர்கள் ஏதும் உழைப்பை செலுத்துவதில்லையா? அவர்களும் நேரத்தை மட்டுமே விற்று கூலியை மாத சம்பளமாக பெறுகிறார்கள். இது என்னோட கருத்து மட்டும் தான். முதலில் உழைப்பு என்பது என்ன என்பதை பற்றியத் தங்களது புரிதலை பகிரவும். உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் மேற்கொண்டு நாம் விவாதிக்கலாம்.

              நன்றி.

              • சிவப்பு

                உங்களின் தனி நபர் தாக்குதல் விவாதத்தை திசை திருப்புமே தவிர விவாதத்தை முற்றுப் பெற செய்யாது///வட இந்திய தொழிலாளர்கள் பற்றியும், அவர்கள் வருகையால் இங்கு ஏற்படும் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி தாராளமாய் பேசுங்கள். நான் என்னுடையக் கருத்தை தெரிவித்து விட்டேன் என்பது விவாதத்தை முற்றுப் பெற செய்து விடுமா?//

                குட்டி முதலாளி //மூளை உழைப்பில் ஈடுபடுபவர்?//

                • தமிழ்-தாகம்,

                  மூளை உழைப்பில் ஈடுபடுபவர் அனைவரும் குட்டி முதலாளி என்பது உமதுப் புரிதல். ஐ.டி நிறுனங்களில் வேலை செய்பவரும் ஒருத் தொழிலாளியே. அவரிடம் இழப்பதற்கு நேரம் மட்டுமே இருக்கிறது. அவரும் சந்தையில் தன்னை விற்று தான் மாதக் கூலி பெறுகிறார். அவர் ஏனையத் தொழிலாளர்களை விட சம்பளம் அதிகம் வாங்குவதால் கருத்து ரீதியில் ஒரு குட்டி முதலாளித் பார்வை இருக்கும் என்பது ஒரு பொதுவானக் கருத்து. ஆனால் எத்துனை விழுக்காடு அப்படி அதிகமாய் சம்பளம் பெறுகிறார்கள்? 1௦௦ விழுக்காடும் அப்படியா. மாதம் சம்பளம் கூட வாங்காமல் வேலைப் பார்க்கும் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். 1௦ ஆயிரங்கள் விட குறைவாக மாதக் கூலி பெரும் தொழிலாளிகள் எவ்வளவு பேர். ஏனையத் தொழிலாளிகள் போல பணி நிரந்தரம் என்பது அவர்களுக்கும் இல்லை. ஐ.டி என்ற ஒரேக் காரணத்துக்காக அவர்கள் அனைவரையும் குட்டி முதலாளி வர்க்கத்தில் சேர்க்க முடியாது என்பது என் கருத்து.

                  நன்றி.

                  • சிவப்பு ,இவ் விடயத்தை நீங்கள் மார்சியம் கற்கும் தோழரிடமோ ,அல்லது வினவிடமோ கேட்டு தெளிவு

                    //ஐ.டி என்ற ஒரேக் காரணத்துக்காக அவர்கள் அனைவரையும் குட்டி முதலாளி வர்க்கத்தில் சேர்க்க முடியாது என்பது என் கருத்து.//

        • \\இம்மண்ணை அதிகம் வளப்படுத்துகிறார்களா ,,,,,,,,,,,,,,,,,,,என்பது விவாதத்துக்குரியது..//

          அற்ப கூலிக்கு உழைக்கும் வட இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கை முறை இலட்சங்களில் பொருளீட்டும் உங்களை போன்ற நடுத்தர, மேட்டுக்குடி மாந்தர்களை விட கூடுதலாக தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கிறது.

          நீங்கள் துணி எடுக்க அஞ்சு மாடி குமரன்,நல்லி,RMKV என்று தேடி ஓடும்போது அவர்கள் சோழிங்கநல்லூர் ,நாவலூர்,தாம்பரம் தரைக்கடை வணிகர்களிடம் துணி வாங்குகிறார்கள்.

          நீங்கள் உயர் தர சைவ உணவகங்களில் உண்டு களிக்கும்போது அவர்கள் கையேந்தி பவன்களை தேடி வருகிறார்கள்.

          நீங்கள் ரிலையன்சு பிரசு.E.A மால்களில் புர்ர்ர்ரோவிசன்களை வாங்கும்போது அவர்கள் தங்கள் தகரக்கொட்டகை அருகிலேயே தெருமுனை அண்ணாச்சி கடையில் காய்கறி,மளிகை பொருட்களை வாங்குகிறார்கள்.

          நீங்கள் காதிம்.பாட்டா,பூமா அடிடாசு தனிச்சிறப்பு அங்காடிகளில் சில ஆயிரங்களை அள்ளி வீசி காலணிகளை வாங்கும்போது அவர்கள் சாலையோர பாய் கடையில் ஐம்பதுக்கும் நூறுக்கும் செருப்பு வாங்குகிறார்கள்.

          ஆகவே உங்களை விட அந்த மக்கள்தான் உழைக்கும் தமிழ் மக்களுக்கு அணுக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

          பி.கு.சிவப்பு அருமையாக சொல்லி இருக்கிறார்.உழைப்பது தமிழர்கள் என்றால் தமிழ் முதலாளிகள் தங்கள் ஆதாயத்தில் பங்கு தரப்போகிறார்களா என்ன.

          என்ன நோக்கத்தில் இங்கு வந்து இதனை பேசுகிறீர்கள்.

          • // ஆகவே உங்களை விட அந்த மக்கள்தான் உழைக்கும் தமிழ் மக்களுக்கு அணுக்கமானவர்களாக இருக்கிறார்கள். //

            காண்டிராக்டர்/முதலாளி உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கினால் வட இந்திய தொழிலாளியும், தமிழ் தொழிலாளியும் தரைக்கடையையும், அண்ணாச்சி கடையையும், கையேந்தி பவனையும் விட்டுவிட்டு சூப்பர் மார்க்கெட், ஓட்டல்கள் என்றும் போவார்கள்.. வட இந்திய தொழிலாளி பேரம் பேச ஆரம்பித்தால் தெரியும் இந்த அணுக்கமெல்லாம் எப்படி சுணக்கமாகிறது என்று.. இந்த எதார்த்தத்தைக் கூறுவதால் ஒரு தவறுமில்லை என்று நினைக்கிறேன்.. உழைக்கும் தமிழ் மக்களுக்கும், வட இந்திய தொழிலாளர்களுக்கும் தெளிவான வர்க்க உணர்வு இல்லாதவரை தங்களுக்குள் எந்த நேரமும் முரண்பட வாய்ப்புகள் உண்டு..

            // பி.கு.சிவப்பு அருமையாக சொல்லி இருக்கிறார்.உழைப்பது தமிழர்கள் என்றால் தமிழ் முதலாளிகள் தங்கள் ஆதாயத்தில் பங்கு தரப்போகிறார்களா என்ன.//

            தமிழ் தொழிலாளர்களுக்கு ‘அதிக’ ஊதியம் கொடுக்க விரும்பாததால்தானே தமிழ் முதலாளிகள் குறைந்த கூலிக்கு வட இந்திய தொழிலாளர்களைக் கொண்டுவந்து சுரண்டுகிறார்கள்.. வட இந்திய தொழிலாளர்கள் தமிழ் முதலாளிகளுக்கு இவ்வகையில் லாபம் பார்த்துக் கொடுக்கிறார்கள் என்றால் அது அவர்கள் விரும்பி, வேண்டுமென்று செய்வதல்ல.. அவர்கள் வறுமை நிலை அப்படி.. ஒரு வட இந்திய தொழிலாளி இங்குள்ள தமிழ் மக்களுக்கு தன் வியாபார பரிமாற்றங்களில் சில நூறுகள் பங்களிக்கிறார் என்றால் முதலாளிக்கு குறைக்கப்பட்ட கூலி என்ற வகையில் அது பல ஆயிரங்களில் இருக்கிறது..

            // என்ன நோக்கத்தில் இங்கு வந்து இதனை பேசுகிறீர்கள். //

            80 ரூபாய் பேண்ட்டை 100 ரூபாய்க்கு பேரம் பேசாமல் வாங்கும் வரையில்தான் வட இந்திய தொழிலாளியிடம் காட்டும் இந்த அணுக்கம், நுணுக்கம் எல்லாம் இருக்கும்.. அதற்குள் உங்கள் தரப்பில் எப்படி இந்த இரு தரப்பு உழைக்கும் வர்க்கத்தையும் தயார் செய்ய வேண்டுமோ அந்தப்படிக்கு தயார் செய்து கொள்ளவேண்டியது.. இல்லாவிட்டால் இவர்களை மோதிக்கொள்ளச் செய்ய தமிழினவாதிகள் என்று யாரும் தனியாக வந்துதான் தூண்ட வேண்டும் என்பதில்லை..! தாங்களாகவே முரண்பாடுகளால் மோதிக் கொள்வார்கள்.. இது ஒரு விவாத தளம் என்பதால் என் சிற்றறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.. இதைச் சொல்வதற்கு என்ன நோக்கம் என்றெல்லாம் கேட்டு கயவனே, கசுமாலமே என்று திட்டுவதாயிருந்தால் இதை சொல்லவில்லை என்றே நினைத்துக் கொள்ளவும்.. ஆள வுடு..

            • \\உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கினால்………………கையேந்தி பவனையும் விட்டுவிட்டு சூப்பர் மார்க்கெட், ஓட்டல்கள் என்றும் போவார்கள்.//

              அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிறார் அம்பி.அட அட என்ன ஒரு திறமையான வாதம்.உழைக்கும் வர்க்கத்தோடு இயைந்து வாழாத உங்க நடுத்தர வர்க்கத்தின் இயல்பை சுட்டிக்காட்டினால் அதை மறுக்க முடியாம கற்பனையில ”உழைப்புக்கேற்ற ஊதியம்” வழங்குறீங்க அம்பி.உங்களையே உழைக்கும் மக்கள் சகிச்சுக்கிட்டு ஏத்துக்கும்போது வட இந்திய தொழிலாளிகளை ஏன் ஏத்துக்க கூடாது.

              \\ஒரு வட இந்திய தொழிலாளி இங்குள்ள தமிழ் மக்களுக்கு தன் வியாபார பரிமாற்றங்களில் சில நூறுகள் பங்களிக்கிறார் என்றால் //

              அதைத்தான் நாங்கள் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறோம்.நன்றி கொன்ற நயவஞ்சகம் மக்களிடம் இருக்காது.

              \\என்றால் முதலாளிக்கு குறைக்கப்பட்ட கூலி என்ற வகையில் அது பல ஆயிரங்களில் இருக்கிறது..//

              என்னதான் சொல்ல வர்றீங்க.வட இந்திய தொழிலாளிகள் மிகை எண்ணிக்கையில் தமிழகத்தில் குடியமர்வதாகவும்,அது தமிழ் மக்களுக்கு பாதகமானது என்றும் தமிழினவாதிகள் கூச்சல் போட்டு வருகிறார்கள்.இல்லை,அவர்களால் தமிழ் மக்களுக்கு பாதகம் இல்லை நன்மையே விளைகிறது என சொன்னால் மக்களுக்கு ஏற்படும் நன்மையை விட முதலாளிகளுக்கு கூடுதல் நன்மை ன்னு சொல்றீங்க. அதற்காக வட இந்திய தொழிலாளிகளை தொரத்தனுமன்னு சொல்ல வர்றீங்களா.

              \\80 ரூபாய் பேண்ட்டை 100 ரூபாய்க்கு பேரம் பேசாமல் வாங்கும் வரையில்தான் வட இந்திய தொழிலாளியிடம் காட்டும் இந்த அணுக்கம், நுணுக்கம் எல்லாம் இருக்கும்.//

              மக்களிடம் ஒற்றுமை நிலவுரத பாத்தா உங்களுக்கெல்லாம் கண்ணுல பச்சை மிளகாயை புழிஞ்ச மாதிரி இருக்குமா அம்பி.ஒன்னு தெரியுது.நீங்க தரைக்கடை வணிகர்களிடம் ஒரு கைக்குட்டை கூட வாங்கி இருக்க மாட்டீங்கன்னு தெரியுது.அய்யா அங்க வர்ரவுங்கள்ள 90 விழுக்காடு பேரம் பேசாம வாங்குறதில்லை.நல்ல தமிழ்ல பேரம் பேசுனா வராத கோபம் இந்தி கலந்த தமிழ்ல பேசுனா ஏன் வரப்போகுது.

              \\தாங்களாகவே முரண்பாடுகளால் மோதிக் கொள்வார்கள்.. //

              இதற்குத்தானே ஆசைப்படுகிறீர்கள் பாலகுமரர்களே,

              \\என்ன நோக்கம் என்றெல்லாம் கேட்டு ……………ஆள வுடு.//

              தமிழினவாதிகளின் கள்ளப்பரப்புரைக்கு துணை போவதாக உங்கள் வாதம் இருப்பதால் அதை உணர்த்தவே நோக்கம் என்ன என்று கேட்டது.மற்றபடி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நாம் விவாதிக்கும்போது ஒரு பின்னூட்டத்தில் கூட உங்களை ஒருமையிலோ தரக்குறைவாகவோ அழைத்ததில்லை.இனியும் அவ்வாறு பேசுவதாக இல்லை.ஏனெனில் நமது விவாதங்களில் கண்ணியமாக பேசும் பண்பை கடைப்பிடித்து வந்திருக்கிறீர்கள்.

              [உங்கள் வாதங்களின் தன்மை பித்தலாட்டமானது,மோசடியானது என்று சொல்லி இருக்கிறேன்.அவை கருத்துக்கள் மீதான பார்வையே அன்றி தனிப்பட்ட முறையில் உங்களை தாழ்த்துவன அல்ல]

              இந்த பின்னூட்டத்தில் நீங்கள் ஒருமையில் ”ஆள வுடு” என சொல்லி இருந்தாலும் உங்களுக்கான எனது மரியாதை எப்போதும் போல் தொடரும்.

              • // அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிறார் அம்பி.அட அட என்ன ஒரு திறமையான வாதம். //

                அது அத்தையல்ல சித்தப்பாதான் என்று காட்டுவதுதான் உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்கும் கம்யூனிஸ்டுகளின் போராட்டம்..

                // அதைத்தான் நாங்கள் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறோம்.நன்றி கொன்ற நயவஞ்சகம் மக்களிடம் இருக்காது. //

                இதற்கு நான் பதிலளித்தால் அது நமது முரண் நட்பை பாதிக்கும்..! எனவே உரிமையோடு மீண்டும் சொல்கிறேன் ஆள வுடு..!

  8. //தமிழ்நாடு, தமிழ்மண்ணாக, தமிழர்களின் மண்ணாகவே தொடர்ந்து ஆயிரமாயிரமாண்டுகளானாலும் நிலைக்க வேண்டும் என்று விரும்பும் தமிழன் என்ற முறையில் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.)//

    who is Tamilan? What is TamilMan?

  9. தமிழ்நாட்டு தமிழர்களின் நிலை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள், தமிழநாட்டில் தொழிலாளர்கள் இல்லையா ?அல்லது தமிழனுக்கு வேலைக்கு ஆகமாட்டான் என்று நினைக்கிறீர்களா ?

    இந்த கோரிக்கையை மராட்டிய மாநிலத்தில் சொல்லிபாருங்கள் உங்கள் பருப்பு வேகுமா?வேகுதானு?தெரியும்.

    காரிதுப்பும் கட்டுரை.

  10. வினவு அதன் வாசகர்களுக்கு விளக்கம் கொடுக்காமல் மொவுனம் காப்பது நியாயம் இல்லை!

  11. னீ என்ன பெரிய பருப்பா மனியரசன் சொல்வதை கேட்கவில்லை என்ரால் தமில்நாடு கலப்பின தாயகமாக மாரிவிடும்

  12. இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியர்கள் அனைவருக்கும், இந்தியா முழுவதும் நடமாடும், குடியேறும் உரிமை உண்டென்பது எனக்கும் தெரியும். ஆனால், பல மொழிகளைப் பல தேசிய இனங்களை ஒன்றிணைத்து, அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை கேட்டறியாமல், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தியா போன்ற நாடுகளில், இன்னொரு மொழி அல்லது இனக்குழுவினர் குறிப்பிட்ட இன்னொரு மொழி வழி மக்களின் மாநிலத்தில் கூட்டம், கூட்டமாகக் குடியேறுவது எதிர்காலத்தில் இன, மொழிப் பிரச்சனைகளையும், கலவரங்களையும் உண்டாக்கும் என்பதை யாவருமறிவர்.

    கனடாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமல்ல, இந்தியாவைப் போன்ற மாநிலங்களின் கூட்டடமைப்பைக் கொண்ட ஜேர்மனி போன்ற நாடுகளிலும் கூட தொழிலாளர் இடம்பெயர்வு, வர்த்தக பண்டமாற்று, போக்குவரத்து, தொழிற்சாலைகள் அமைத்தல், இடம்பெயர்தல், மாநிலம் விட்டு மாநிலம் முதலீடு செய்தல் போன்ற பல விடயங்களில் கட்டுப்பாடுகளும், சட்டங்களும், மாநில அரசு சம்பந்தமான விடயங்களில் மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் நடை பெறுவதுண்டு. குறிப்பாக கனடாவின் ஒரு மாகாணத்திலிருந்து, அல்லது அமெரிக்காவின் ஒரு மாநிலத்திலிருந்து மக்கள் பெருமளவில் இன்னொரு மாகாணத்தையோ அல்லது மாநிலத்தையோ நோக்கி கூட்டம் கூட்டமாக மக்கள் இடம்பெயர்வார்களேயானால், அந்த மாநிலங்கள் அதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும். அல்லது, இன்னொரு மாநில மக்களின் இடம்பெயர்வை ஏற்றுக் கொள்ளும் அடுத்த மாநிலம், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அல்லது அந்தச் செலவுகளை ஈடு செய்ய, மத்திய அரசிடம் மானியம் (Transfer Payment) கேட்டுப் பெற்றுக் கொள்ளும். இந்த வட இந்திய, நேபாளி, வங்காளி மக்களின் சேவைகளுக்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் செல்வழிக்கப்படுவதை ஈடுசெய்ய, இந்திய மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு உதவுவதாகத் தெரியவில்லை.

    இவர்கள் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின்னர், இன்னும் 20 -30 வருடங்களில், இவர்களும் தமது பிரதிநிதிகளை சட்டசபைக்கு அனுப்புவார்கள், அவர்களும் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வர ஆசைப்படுவது மட்டுமல்ல, அப்படி வரக்கூடிய சாத்தியக்கூறும் உண்டு. ஏனென்றால் வெள்ளைத் தோலைக் கொண்ட இவர்களின் குழநதைகள் நடிகர், நடிகைகளாகினால் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக வாக்களிப்பார்கள். 🙂

    தமிழ்நாடு அரசு தமிழர்கள் மத்தியில் குடும்பக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்திக் கொண்டு, இப்படி தமிழரல்லாதவர்களை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி, தமிழ்நாட்டில் குடியேற அனுமதித்தால், இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டின் நகரங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராவர்கள். தமிழ்நாட்டு வேலைவாய்ப்ப்புகளில், தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அல்லது அந்த வேலைக்கு தமிழ்நாட்டில் ஆளில்லை என்றால் மட்டுமே, தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருபவர்களை வேலைக்கு அமர்த்தலாம், என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கூடிய சம்பளம் கேட்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் வேலையில்லாமல் இருக்க, மற்றவர்களை குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்துவதை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

    • அய்யா தமிழிகுடிதாங்க வந்த வியாச பெருமானே,

      எதிர் காலத்தில் கலவரம் வருவது இருக்கட்டும், இப்போ அதை வைத்து கலவரம் செய்வது யார். திரும்பவும் சொல்கிறேன். முதலில் ராஜராஜ சோழனின் வாரிசுகள் வெளிநாட்டுச் சுற்றுபயனத்தை முடித்துக் கொண்டு தமிழ் தொண்டாற்ற இங்கே வரட்டும். பிறகு பேசிக் கொள்ளலாம். கட்டடம் கட்டுவது, பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை வட நாட்டுத் தொழிலாளர்கள் செய்வதும் ,உங்களைப் போன்ற தமிழரின் கருங்காலிகள் நோகாம வெள்ளைக்காரனுக்கு காலமுக்கி விட்டுக் கொண்டே இங்கே ராஜராஜனின் வீரத்தைப் பறை சாற்றுவது ஏனோ?

      நன்றி.

      • சிவப்பு !, வியாசனின் முதல் இரு பத்திகளுக்கு [para ] நீங்கள் பதில் அளிக்காமல் அவரின் கடைசி இரு பத்திகள் வேற்று கூச்சலாக இருப்பது போன்றே நீங்களும் கூச்சல் செய்கின்றிர்கள் சிவப்பு ! இதில் வேறு கட்டடம் கட்டுவது, பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை தமிழ் நாட்டு உழைப்பாளிகள் செய்யாதது போன்றும் தமிழ் நாட்டு மக்கள் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் போன்றும் வியாசனுக்கு எதிர் மனோ நிலையில் நின்று தமிழ் நாட்டு உழைப்பாளிகள் இழிவு செய்து வெற்று கூச்சல் செய்கின்றிர்கள் சிவப்பு ! வடநாட்டு தொழிலார்கள் தமிழ் நாட்டுக்கு வருகை தருவதன் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சாதக ,பாதகங்களை ஆய்வு செய்வது கூட தமிழ் இனவாதமா ?அப்படி அதனை தவறு என்று நினைத்தால் அது தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் கடைந்தெடுத்த துரோகம் ஆகும். பானியாகளின் வருகையால் 100% நமக்கு மன்னிக்கவும் தமிழராகிய எமக்கு பாதகமே ! அதே சமயம் வடநாட்டு தொழிலார்கள் வருகையில் சாதகமும் ,பாதகமும் கலந்து இருபதை கருத்தில் கொண்டு ஆய்வு செய்யாமல் தமிழினவாதிகள் பற்றிய ஒற்றை கேள்வியுடன் கட்டுரை பயணிப்பதால் யாருக்கு என்ன பயன் ?

        //பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை வட நாட்டுத் தொழிலாளர்கள் செய்வதும் ,உங்களைப் போன்ற தமிழரின் கருங்காலிகள் நோகாம வெள்ளைக்காரனுக்கு காலமுக்கி விட்டுக் கொண்டே இங்கே ராஜராஜனின் வீரத்தைப் பறை சாற்றுவது ஏனோ? //

        • தமிழ்-தாகம்,

          மீண்டும் அவசரமா!!!!

          வியாசரின் முதலிரண்டு பத்திகளுக்கு பதில் ஏற்கனவே வைத்தது தான். இந்திய பல்வேறு இனமக்களின் கூடாரம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த தொழிலாளிகள் இங்கே வருவதும் இங்கிருக்கும் தொழிலாளிகள் வேறெங்கும் செல்வதையும் நாம் தடுக்க முடியுமா இந்த உலகமயமாதல் காலத்தில்.மேற்க்கத்திய நாடுகளின் சமூகப் பொருளாதாரமும் பல்தேசிய இந்தியக் கூடாரத்தின் சமூகப் பொருளாதாரமும் ஒன்றா? தாங்கள் சொல்வதுப் போல நடக்கவே இங்கே ஒரு சமூக மாற்றம் தேவைப் படுவதை தாங்கள் அறியவில்லையா.

          நான் எங்கே தமிழ் தொழிலாளர்கள் இங்கே கடினமான வேலைகள் செய்வதில்லை என்றுக் கூறினேன். கட்டுரையைப் படித்தீர்களா?

          பிவரும் வரிகளை சொன்னது நானில்லைங்கோ!!

          //“நான் ஒரு தமிழன்ங்க, தமிழனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, இவங்க இல்லைன்னா நமக்கு வேலை நடக்காது. நம்ம ஆளுங்க இந்த மாதிரி வேலை செய்ய கிடைக்க மாட்டாங்க” என்றார். “தமிழ் ஆளுங்களை எடுக்க மாட்டேன்னா சொல்றோம். அவங்க யாரும் வேல கேட்டு வர்றதில்ல. போன வாரம் கூட பேப்பர்ல விளம்பரம் போட்டோம். யாரும் வரவில்லை. இவங்கதான் வர்றாங்க, அதான் எடுக்கிறோம்.” என்றார்.//

          அது மட்டுமில்லாமல் தமிழக தொழிலாளர்கள் துபாய்,குவைத் போன்ற நாடுகளுக்கு அடிக்கட்டுமான வேலைகளுக்கு செல்வதும், வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே வருவது உலகமயமாக்கலுக்குப் பிறகு அதிகமாக நடக்கிறது என்று தானே கூறினேன்.

          அப்புறம் தங்களை உறுத்திய வரிகள் இது தான்னு நினைக்கிறேன்,

          //குறைந்தக் கூலிக்கு வட இந்தியத் தொழிலாளர்களை விட்டால் இங்கே ஆளில்லை. அதே வேலையை இங்கேயுள்ள தமிழ் தொழிலாளர்கள் ஏன் செய்யவில்லை? அவர்கள் ஏன் வெளிநாட்டிற்கு கட்டுமான வேலைக்காக செல்கிறார்கள்.ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளிக்கு சேவை மனப்பான்மையோட வேலைக் கொடுப்பதில்லை.இலாப நோக்கிற்காக தான் வேலைக் கொடுக்கிறான்//

          இதுல எங்க உங்களுக்கு உறுத்துற மாதிரி இருக்கு. இந்தக் கேள்விகள் நான் அவருக்கு வைத்தது. அவர் அதற்க்கு பதில் சொல்லவில்லை. தாங்கள் என்னிடம் மல்லுக் கட்ட வந்து விட்டீர்கள். குறைந்தக் கூலிக்கு வேலை செய்வது என்பது இன்றைய பொருளாதாரத்திற்கு உகந்தது இல்லை என்று நமக்குத் தெரியாதா. இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று தமிழகத் தொழிலாளிகள் வெளி மாநிலங்களுக்கும் வெளி நாட்டிற்கும் செல்வதில்லையா?. உலகப் பாட்டாளி வர்க்கம் ஒன்றுடன் ஒன்று எந்த முன் திட்டமும் இல்லாமல் கலக்கவில்லையா?
          என்னைப் பொறுத்த வரை குறைந்தக் கூலிக்கு தான் ஆள் எடுக்கிறார்கள். அந்தக் கூலிக் கட்டுபடியாகத்தினால் தமிழக தொழிலாளிகள் இங்கே வேலைப் பார்ப்பதில்லை. நம்மை விட பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள வட இந்தியத் தொழிலாளர்கள் குறைந்தக் கூலிக்கு வேலைக்கு அமர்த்துகிறார்கள். இது தான் எதார்த்தம். குறைந்தக் கூலிக்கு கடினமான வேலை செய்ய தமிழர்களால் முடியாதன்னு கேட்டால் முடியும் என்று தான் நான் கூறுவேன். ஆனால் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

          நன்றி.

          • செங்கொடி தாங்கிய செம்மல், தோழர் சிவப்பு வீரரே!

            ஆனானப்பட்ட கம்யூனிஸ்டுகள் எல்லாம் தமது மொழியுமும், தேசிய இனமும் தான் எல்லாவற்றையும் விட முக்கியமானவை, மேன்மையானவை என்று உணர்ந்து கொண்டு, தனித்தனி நாடுகளாகப் பிரிந்து, பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தி ஆளுக்கொரு தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது, அண்ணன் சிவப்பு மட்டும் ஈழத்தமிழர்களையும், அவர்களின் விடுதலைப்போராட்டத்தையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் இழிவு படுத்தி, வசை பாடி தனது கம்யூனிச, சோசலிசத் தகைமைகளை இந்த தளத்தில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கனவு காண்கிறார் போலத் தெரிகிறது.

            “மூத்திரப் பரிசோதனை” செய்து தமிழர்கள் தான் என்று நிறுவினாலும் கூட, தமிழர்கள் அனைவருக்கும் தமிழுணர்வோ, இனவுணர்வோ இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பலரை உதாரணம் காட்டலாம். தமிழர்கள் அனைவருக்கும் இனவுணர்விருந்திருந்தால், வரலாற்றில் எந்த தமிழரசையும் மாற்றார்கள் வீழ்த்தியிருக்கவோவோ அல்லது கைப்பற்றியிருக்கவோ முடியாது. அதனால் தான், உங்களைப் போல் மூத்திரப் பரிசோதனையை எல்லாம் நான் வலியுறுத்துவதில்லை. ‘நானும் தமிழன்’ தான் என்று இணையத்தளங்களில் வாதாடுகிறவர்கள் எல்லோருமே, உண்மையில் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. பார்ப்பனர்கள் கூடத் தான் தமிழினவுணர்வு கொண்ட தமிழர்களாக இணையத்தளங்களில் வேடம் போடுகிறார்கள். வட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றித் தமிழர்கள் எதிர்மறையான கருத்தைக் கொள்ள அனுமதித்தால், அது எதிர்காலத்தில், தமிழ்நாட்டில் தங்களின் இருப்பைப் பாதித்து விடுமென்று பயப்படும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதவர்கள் கூட, , நானும் தமிழன் தான் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு, தமிழ்த்தேசியம் பேசும் தமிழர்களை வசைபாடுவதுண்டு. உதாரணமாக, திரு சீமான், திரு மணியரசன் போன்றவர்களை, அவர்களின் கருத்துக்களைத் திரித்து, அவர்களை இழிவுபடுத்தும் வகையில் தாக்குகிறவர்களில் பெரும்பாலானோர் இந்த வகையினர் தான். ஆகவே நீங்கள் கூறுவது போல், மூத்திரப் பரிசோதனை செய்வதெல்லாம் வீண் வேலை, அது சரி வராது.

            இதற்கு மேல் இந்த விடயத்தில் கருத்துத் தெரிவிக்க என்னால் முடியாது ஆனால் நீங்கள் விரும்பினால் நேரடியாகப் பதிலெழுதுவதை இலகுவாக்க, நான் வரிசையாக இலக்கமிட்டு எழுதுகிறேன்.

            1. எதிர்காலத்தில் கலவரம் வரலாம் என்பதற்கு இந்தியாவிலேயே வேறு மாநிலங்கள் பல எடுத்துக்காட்டாக உள்ள போது, சுட்டிக்காட்டிய என்னை வசை பாடுவதேன். நாங்கள் வெள்ளைக்காரனுக்கு கால் அமுக்கிறோமேன்றால் நீங்கள் ஹிந்தியனுக்கு (வடஇந்தியனுக்கு) கால் அமுக்கிறீர்கள் என்று நாங்கள் கூற எவ்வளவு நேர எடுக்கும்.

            2. உலகெங்கும் பரந்து வாழும் ‘ராஜராஜ சோழனின் வாரிசுகள்’ தமிழ்நாட்டில் தமிழர்களின் நலன்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென, அல்லது தமிழ்த் தொண்டாற்றலாம் என்று விரும்பினால் கூட, அவர்களால் தமிழ்நாட்டுக்கு இலகுவில் வர முடியாது. அவர்கள் விரும்பியபடி எதையும் செய்து விட முடியாது. அதிலும் தமிழ்த்தொண்டு என்று வந்தால், அவ்வளவு தான். ஏதாவது கோயிலுக்கு நிதியுதவி, பார்ப்பனர்களுக்கு தமிழர்களின் வெளிநாட்டுக் கோயில்களில் வேலைவாய்ப்பு என்று வந்தால் மட்டும் தான் வெளிநாட்டுத் தமிழர்கள் ஏதாவது செய்யலாம். ஏனென்றால் தமிழ்நாடு ஒரு தனிநாடல்ல. தமிழ்நாட்டுத் தமிழர் – உலகத் தமிழர்களுக்கிடையேயான நேரடித் தொடர்பை, உறவு பலப்படுவதை, தமிழரல்லோதோரும், இந்தியாவில் அரசியல் அதிகாரமும், ஊடக பலமும் கொண்ட தமிழெதிரிப் பார்ப்பனர்களும் விரும்புவதில்லை. இந்திய மத்திய அரசில் தமிழ்நாட்டுக்கு அல்லது தமிழர்களுக்கோ பெரிய செல்வாக்கெல்லாம் கிடையாது. அதனால் தான், வட இந்தியக் கூலிகளுக்குள்ள உரிமைகள் கூட தமிழ்நாட்டில் உலகத் தமிழர்களுக்குக் கிடையாது என்பதை நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டேன்.

            3. சிவப்பு என்று பெயரையும் வைத்துக் கொண்டு இன்னும் லெனின் காலத்து செஞ்சட்டை வீரரகள் போல, இன்னும் கம்யூனிசத்தைப் பற்றிக் காதல்கீதம் பாடுவதைப் பார்த்தே, நீங்கள் பெங்களூரைத் தவிர வேறெங்கேயும் போகவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.

            4. நீங்கள் வெள்ளைக்காரர்களின் தத்துவங்களில் மயங்கி, வெள்ளைக்காரர்களே கைகழுவி விட்ட கொள்கைகளையும், நடைமுறைக்கொவ்வாத தத்துவங்களையும் இன்றும் கைவிடாமல், அதில் கட்டுண்டு கிடந்தது கொண்டு, தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் மட்டும் வெள்ளைக்காரர்களிடம் சரணாகதி அடைந்து விட்டதாக நீங்கள் கூறுவது தான் வேடிக்கையானது. நீங்கள் மார்க்சிடமும், லெனினிடமும் சரணடைந்ததை வைத்துக்கொண்டு, தமிழ்த்தேசியமும் வெள்ளைக்காரர்களிடம் சரணடைந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ்த்தேசியத்துக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் எந்த தொடர்புமில்லாத போது, சரணாகதி என்ற பேச்சே வெறும் பேச்சு, என்பது உங்களுக்குத் தெரியாதா?

            5. ஈழம் மலர்வதற்கும் இப்பொழுது இங்கே பேசப்படும் விடயத்துக்கும் ஏதாவது தொடர்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், ஈழம் மலர வேண்டுமாயின், எண்ணிக்கையில் பலம் வாய்ந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள், அவர்கள் மத்தியிலே வாழும் தமிழெதிரிகளை இனங்கண்டு ஒதுக்கி, தமிழர்களாக ஒன்று பட வேண்டும். தமிழ்நாட்டைத் தமிழுணர்வுள்ள தமிழர்கள் ஆள வேண்டும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் தமிழர்களின் கைகளில் இருக்க வேண்டும். ஈழம் மலர தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எல்லாவற்றையும் விடத் தமிழ்நாட்டில் தமிழர்கள் தொடர்ந்து அறுதிப் பெரும்பான்மையினராக இருக்க வேண்டும்.

            6. நான் ஒன்றும் ஏதோ வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாமல், அல்லது தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களின் நிலையை அறியாமல் பேசவில்லை. எனக்கு தமிழ்நாட்டில் நேரடித் தொடர்புண்டு, நெருங்கிய உறவினர்களும் உண்டு. அது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் எனது நண்பர்கள் பார்ப்பனர்களும், பனியாக்களும் மட்டும் அல்ல. அவர்களை விடத் தமிழ்நாட்டில் எந்த வித தொழிலாளர் உரிமைகளும் இல்லாமல் 18 மணிநேரம் நின்ற படி வேலை தலித்துகளும், முஸ்லீம்களும் கூட எனக்கு நண்பர்களாக உள்ளனர். ஆனால் வட இந்தியக் கூலிகளுக்காக குரல் கொடுக்கும் உங்களை போன்றவர்கள் எவருமே, அவர்களுக்காகக் குரல் கொடுப்பதைக் காணோம்.

            7. ‘Charity begins at home’ என்பார்கள், முதலில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுங்கள், அவர்களின் நலன்களைக் கவனித்த பின்னர், எவரையும் தமிழ்நாட்டில் வரவேற்று வாழ வைக்கலாம் என்பது தான் எனது கருத்தாகும். ‘தனக்கு மிஞ்சித் தான் தானமும் தவமும்’ என்பார்கள். அதுவும் உங்களுக்குப் புரியுமென்று நம்புகிறேன்.

            8. வட இந்திய தொழிலாளிகள் தமிழ்நாட்டுக்கு வருவதைத் தடுக்க முடியாது என்பது எனக்கும் தெரியும் அதை நான் ஏற்கனவே எனது பதிலில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தலாம், ஒழுங்கு படுத்தலாம். சட்டத்தின் மூலம் அவர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதைத் தடுக்கலாம். இந்தியாவைப் போன்று பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிராத, ஒரே இன மக்களைக் கொண்ட, ஐரோப்பிய நாடுகளில் கூட, ஒரு மாநிலத்தின் தொழிலாளர்கள், எழுந்தமானமாக, கூட்டம் கூட்டமாக, தமதிட்டத்துக்கு இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயர முடியாது. அந்தந்த மாநில அரசுகள் அதற்கான காரணங்களை அறிந்து ஆவன செய்ய முயலும். அல்லது மத்திய அரசு தலையிட்டு, இந்த இடம்பெயர்தலைக் கட்டுப்படுத்த அல்லது அவற்றை ஒழுங்கு படுத்த ஆவன செய்ய வேண்டுமென மாநிலங்கள் கேட்டுக் கொள்ளும். அந்த உண்மையை நான் குறிப்பிட்டதற்கு என்னை நீங்கள் இவ்வளவு வசைபாடுவதைப் பார்த்தால், உங்களுக்கு ஈழத்தமிழர்கள் மீது தனிப்பட்ட, கோபதாபம் இருக்கிறது, அதை என்னிடம் தீர்த்துக் கொள்கிறீர்கள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

            9. என்னுடைய நண்பர் ஒருவர் கூட, தமிழ்நாட்டில் தான் செய்த வேலையை சம்பளம் காணாது என்று விட்டு, விட்டு, கத்தாருக்குப் போய் ரோடு போடும் வேலையைச் செய்தார், அதுவும் அவர்களின் வாழ்க்கையில் பெரிய வேறுபாட்டையும் ஏற்படுத்தாததால் மீண்டும் தமிழ்நாட்டுக்கே திரும்பி விட்டார். பாலம் கட்டுவதற்கும், சாலைகள் போடுவதற்கும் சாராசரி தமிழ்நாட்டுத் தமிழர்களை விட Scrawny ஆகக் காட்சியளிக்கும் வடநாட்டுத் தொழிலாளர்கள் தேவை, அவர்களால் தான் முடியும் என்பது போன்ற கருத்தைப் பார்க்க எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. உதாரணமாக, பாரிய பாரந்தூக்கிகள்(Crane) எதுவுமில்லாத காலத்தில் தனிக்கருங்கல்லால் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டியெழுப்பிய தமிழர்களின் வாரிசுகளால், இந்த விஞ்ஞான யுகத்தில் சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தைக் கட்ட முடியாதா? அவர்களால் முடியும் . ஆனால் அவர்களுக்கு அதற்கேற்ற உரிய ஊதியம் கொடுத்திருக்க வேண்டும்.

            10. எந்த நாட்டிலும் எந்த மாநிலத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றனவோ அந்த மாநிலத்தில், அந்த நகரத்தில் வாழும் உள்ளூர் வாசிகளுக்குத் தான் வேலைவாய்ப்பில் முதலுரிமை கொடுக்க வேண்டுமென்ற விதி நடைமுறையில் உண்டு. அங்குள்ளவர்களுக்குத் தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் அதிகம் ஊதியம் கேட்கிறார்கள் என்பதற்காக, அல்லது வேறு மாநிலங்களிலிருந்து குறைந்த ஊதியத்துக்கு ஆட்களை இறக்குமதி செய்ய முடியாது. குறைந்த சம்பளத்தில் அடிமைகள் போல வேலை வாங்கி, வட இந்திய தொழிலாளர்களின் உழைப்பை ஒப்பந்தக்காரர்கள் சுரண்டுவதைத் தடுத்து, தமிழ்நாட்டு ஊழியர்களையும் ஈர்க்கும் வகையில் சம்பளத்தை நிர்ணயிக்க தமிழ்நாடு அரசு தவறி விட்டது என்பது தான் எனது கருத்தாகும்.

            11. அவ்வாறு செய்யாததால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் அபிவிருத்தி அல்லது வேலைத் திட்டம், தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தைக் குறைக்கத் தவறி விட்டது. அது மட்டுமன்றி, மலிவான வட இந்திய தொழிலாளர்களின் வருகையால், தமிழ்நாட்டின் பொது மருத்துவ வசதிகள், வீடு, போக்குவரத்து, கழிவுகளை அகற்றுதல்,வருங்காலத்தில் அவர்களின் குழந்தைகளின் கல்வி, குற்றத்தடுப்பு போன்ற சமூக சேவைத் திட்டங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுவதால், ஏற்கனவே குறைபாடுகள் நிறைந்த அந்த சேவைகள் மீது, தேவையில்லாத அழுத்தமும், பற்றாக் குறையும் ஏற்படுகிறது.

            இந்தக் கட்டுரை இங்கு பதியப்பட்டதன் காரணம், அதைப் பற்றி விவாதம் அல்லது கலந்துரையாடல் நடப்பதற்காகத் தானென்று நான் நம்புகிறேன். ஆனால் உங்களின் பதில்களைப் பார்த்தால், எல்லோரும், எந்த வித எதிர்ப்பும் கருத்தும் தெரிவிக்காமல், இந்தக் கட்டுரையை அப்படியே ஆதரிக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 🙂

            • வியாசன்,

              வட இந்தியத் தொழிலாளர்கள் வருகையைத் தடுக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் தாங்கள் அவர்கள் வருகையைக் கட்டுப்படுத்த எப்படி முடியும் என்பதற்கு திரும்பி இந்த அரசிடமும் அதன் சட்டத்திடமும் தான் ஓடுகிறீர்கள்.

              முதலாளிகளுடைய இலாபத்திற்காக தான் அவர்கள் இங்கே மட்டும் அல்ல நாடெங்கும் வீசியடிக்கபடுகிரார்கள் என்பதை தாங்கள் அறிந்திருந்தால், முதலாளிகளின் சட்டைப் பாக்கெட்டில் தான் இந்த அரசு இருக்கிறது என்பதை புரிந்திருந்தால் இப்படி கேட்டு இருக்க மாட்டீர்கள். அதெல்லாம் புரியாமல் சும்மா வட இந்தியத் தொழிலாளிகள் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் எப்படி? இந்த நாட்டை ஆள்வதாக சொல்லிக் கொள்ளும் மைய அரசே பன்னாட்டுத்/தரகு முதலாளிகளின் பக்கெட்டில் தானென்றால் தமிழ்நாடு அரசு மட்டும் எப்படி சுயேச்சையான அதிகாரம் கொண்டதாக இருக்கும்.

              1.//வேறு மாநிலங்கள் பல எடுத்துக்காட்டாக உள்ள போது, //
              எந்தெந்த மாநிலங்கள் என்பதையும் அதற்க்கு காரணம் என்ன என்பதையும் தாங்கள் கூறவில்லை. யார் கலவரம் செய்வது? கூலிக்கு வேலை செய்ய வந்த தொழிலாளர்களா இல்லை அவர்களை விரட்டியவர்களா/விரட்டுபவர்களா?

              2. தமிழரல்லாத வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கே வந்து கூலியுழைப்பில் ஈடுபட முடியும் பொது, மேலும் தாங்கள் கூறுகிற மாதிரி இங்கேயே செட்டில்(!!) ஆகி பதவிக்கும்(!!) வர முடியும் பொது, தங்களால் ஏன் முடியாது? சும்மா தமிழ் பார்பனர்கள் தான் கரணம் என்று கூறாமல், ஏன் உங்களால் தமிழக அரசிற்கு மனு போட முடியவில்லை? வட இந்தியரை கட்டுபடுத்த சட்டமியற்ற கோரும் தாங்கள், இங்கே வந்து வேலை செய்யவோ,வாழவோ என்ன முயற்சி எடுத்தீர்கள்?

              3. தாங்கள் எங்கோ இருந்துக் கொண்டு இங்கிருக்கும் அத்தனியும் விரல் நுனியில் வைத்திருக்கும் பொது, இங்கேயே இருக்கும் நான் இங்கிருக்கும் கொஞ்சமாவது தெரிந்திருக்கபடாதா.அப்புறம் சிவப்புன்னு பேரும் வைக்கபடாதா. நல்லத் தமிழ் பேரா தானே இருக்கு.

              4. கவுன்ட்டர் அட்டாக் செய்வதாக நினைத்துக் கொண்டு ஏன் இப்படி, சரி, கம்யுனிசம் வேண்டாம், தமிழ் தேசியம் சரின்னு வச்சுக்குவோம், எப்படி அதை முன்னிறுத்தி தனி ஈழமோ, தனி தமிழ்நாடோ பெறுவதோ ,வட தொழிலாளர்கள் வருகையைத் தடுக்கவோ முடியும்.

              5.தமிழ்நாட்டின் பொருளாதாரம் தமிழர்கள் கையில் இருக்க வேண்டும் என்ற ஒரு வரியின் பொருள் என்ன? இந்தியாவின் பொருளாதாரமே இந்தியன் கையில் இல்லாத பொழுது தமிழனின் பொருளாதாரம் மட்டும் என்ன தனியாக தமிழன்( முதலாளியின்) கையில் இருக்குமா?. சரி சும்மா தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும், பொருளாதாரம் தமிழன் கையில் இருக்க வேண்டும், தமிழர் உணர்வுடன் ஒன்றுபட வேண்டும், இன எதிரிகளை கண்டுபிடித்து ஒதுக்க வேண்டும். ஹ்ம்ம். சொல்லீட்டீங்க. செய்யுனுமுள்ள. அதை எப்படி செய்வீங்க..

              6.அய்யா, தாங்கள் எங்கோ இருந்துக் கொண்டு அனைத்தும் அறிந்து வைத்துள்ளதாக அளக்கின்றீர்கள். நான் இங்கு இருந்து கொண்டு என் உழைப்பை தமிழ் மக்களுக்கு அளிக்கிறேன் என்றுக் கூறினால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.ஹ்ம்ம் . வட இந்தியத் தொழிலாளிகளுக்கு நான் குரல் கொடுக்கிறேன் என்பது உண்மையானது. அதே போல இங்குள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் மட்டுமல்ல களத்திலும் இருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தன்னடக்கத்துடன் அவையில் பதிவு செய்கிறேன். 18 மணி நேரம் நின்று உழைக்கும் நண்பர்கள் தங்களுக்கு இருக்கிறார்கள் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியே.தாமிரபரணி ஆறு கொள்ளைக்கு எதிரானப் போராட்டம் ,ஆற்று மணல் கொள்ளைக்கு எதிரானப் போராட்டம் , தாது மணற்கொள்ளைக்கு எதிரானப் போராட்டம் , சிதம்பரம் கோவில் தமிழ்பாடும் உரிமைக்கான போராட்டம் , தமிழக அரசுப் பள்ளிகளை சீர்திருத்தப் போராட்டம் , தமிழக அரசு மருத்துவமனைகளைப் பற்றிய கட்டுரைகள், தமிழக விவசாய நிலைமைகள் பற்றிய ஆய்வுகள் போன்றவைகளெல்லாம் என்ன வட இந்தியாவிலா நடந்தது.

              7. தற்போதய சூழல் ஏதோ தமிழர்களுக்கு மட்டுமே வந்துள்ளது போல ஏன் அங்கலாய்ப்பு. இங்கு போல தான் ஒரு கன்னடனும்,தெலுங்கனும்,மலையாளியும், வட இந்தியனும், இந்துவும்,இசுலாமியனும்,கிருத்துவனும் சுரண்டபடுகிரார்கள். அவர்களின் பொது எதிரி ஒன்று தான். அது இந்த தாமிரபரணி ஆத்த கொள்ளையிடுகிற ஏகாதிபத்தியமும், அதற்க்கு சேவகம் செய்கிற டாட்டா போன்ற தரகு முதலாளிகளும் தான். இப்படி பொது எதிரிக்கு எதிராக தேசியம் பார்க்காமல் ஒன்று சேர்ந்து எதிர்ப்பது தான் பின்னர் தமிழ் தேசியம் மலர வாய்ப்பளிக்குமே தவிர தனக்குப் பின் தானம் என்று பேசிக்கொண்டு இருந்தால் அல்ல.

              8.//இந்தியாவைப் போன்று பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிராத, ஒரே இன மக்களைக் கொண்ட, ஐரோப்பிய நாடுகளில் கூட, ஒரு மாநிலத்தின் தொழிலாளர்கள், எழுந்தமானமாக, கூட்டம் கூட்டமாக, தமதிட்டத்துக்கு இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயர முடியாது.//

              இப்படித் தொழிலாளிகள் கூட்டம் கூட்டமாக செல்வது என்ன நேர்த்திக் கடன் செலுத்தவா. இப்படி தொழிலாளிகள் கூட்டம் கூட்டமாக ஏன் 20 ஆண்டுகளுக்கு முன்பு செல்லவில்லை. தொழிலாளிகள் கூட்டமாக செல்வது ஏற்கனவே அங்கிருக்கும் சமூக பொருளாதாரம்(பல்வேறுக் காரணங்களால்) அவர்களுக்கு உகந்ததாக இல்லை என்பதாலும், எப்படியாவது பிழைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயிர்களின் பொதுவான உள்ளுணர்வாலுமே தவிர இன்னும் பிறக் காரணங்கள் கூட இருக்கலாம். இங்கே ஒருவேளை அப்படி ஒரு சட்டம் போட வேண்டும் என்றால் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல எல்லா மாநிலங்களிலும் தான் போட வேண்டி வரும். ஒன்று வெளியேறாமல் தடுக்க மற்றொன்று உள்ளே வருபவர்களைக் கட்டுப்படுத்த. இப்படிப்பட்ட சட்டங்கள் போட முடியுமா என்பதற்கு தங்களின் தேசியவாத கண்ணாடியைக் கழட்டி விட்டு இந்திய நிலைமைகளில் பார்க்கவும். அங்கே இருந்து விட்டு எல்லாம் எனக்குத் தெரியும் என்று சொன்னால் எப்படி.

              9.தமிழர்களை விட வட இந்தியத் தொழிலாளர்கள் மட்டுமே கடினமான வேலைகளை செய்ய முடியும் என்று நான் கூறவில்லையே. அப்புறம் அவர்கள் Scrawnyயாக காட்சியளிக்கும் என்று கூறுவதன் கெடுநோக்கம் என்ன? இங்கே யாரும் அப்படி கூறவில்லையே. இந்த நவீன யுகத்திலேயே தொழிலாளிகள் பாலம் கட்டும்போதும், கட்டடம் கட்டும் போதும் பலியாகிறார்கள். ராஜராஜன் காலத்தில் மட்டும் என்ன களப்பலிகள் கொடுக்காமல் கட்டி விட்டானா என்ன?

              10. நடைமுறைகளும்,விதிமுறைகளும் ,சட்டங்களும்,நீதி மன்றமும்,இராணுவமும், அரசும் மக்கள் நலன் சார்ந்து இயங்குவதாய் இருந்தால் இதைப் பற்றி நாம் பேசுவதற்க்கே தேவை இல்லாமல் இருக்கும். இவையனைத்தும் நாட்டின் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு எதிராய் இருக்க, அதற்க்கு வட தென் என்று பேதம் இல்லாமற் இருக்க, தாங்கள் மட்டும் ஏதோ தமிழன் மட்டுமே பாதிக்கபடுவதாய் அங்கலாய்ப்பது ஏன். மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசு அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என்று கூறுகிறீர்களே இங்கே எந்த நட்டு அரசு அதை செய்கிறது என்று கூறினால் நலம். எதிரிப் பொதுவாய் இருக்க அவனை எதிர்க்க அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டிய நேரத்தில் தேசியம் பேசி அவனை மறுப்பது நம்மை நாமே களப்பலி கொடுப்பதற்கு சமம்.

              11.மேலிருந்து கீழாக, அனைத்து வரிகளிலும் தங்களது புலம்பல் மட்டும் தான் இருக்கிறது தவிர ஆக்கபூர்வமாக ஒன்றும் இல்லை. நிலவுகின்ற அரசும் அதன் அங்கங்களும் அதிகார வர்க்கமும் பொது எதிரியாய் இருக்க, வட தென் பகுதி மக்களை மாநிலம் விட்டு நாடு விட்டு அலைகழிக்க வைப்பதாக இருக்க, அதற்கெதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரத்தில் தேசியம்(அதுவும் போலித்தனமாக) பேசிக்கொண்டு வட இந்தியரை தடுப்பது(அது முடியாத செயல் என்பதை தாங்கள் ஒப்புக் கொண்டும் உள்ளீர்) அந்த பொது எதிரிக்குத் தான் நல்லது. உங்களைப் போன்ற சுகவாசிகள் வெளிநாட்டில் இருந்துக் கொண்டு சொகுசாய் கட்டுரையும் எழுதி கொண்டு இருங்கள் அது போதும். இலங்கையில் சிண்டு முடிந்து விட்டு ஈழதமிழ் மக்களை காவுக் கொடுத்தது போதும்(உடனே நான் தமிழருக்கு எதிரானவன் என்று கூவாதீர்கள்) இங்கேயும் உங்களதுத் திருவிளையாடலை நடத்தாதீர்.

              கட்டுரை பொதுவில் வைக்கப்பட்டிருக்க, அதற்க்கு நான் ஆதரவாய் கருத்துரைக்க, தாங்கள் அதை எதிர்த்துக் கருத்துரைக்க இதுகாறும் சென்றுக் கொண்டுதானே இருக்கிறது. கட்டுரையை நான் ஆதரிக்கிறேன். உண்மையாய் இது வெறுமனே ஒரு கட்டுரை மட்டும் கிடையாது. ஒரு கள ஆய்வு. இதற்காக வினாவுக் குழுவினர் அவர்களது உழைப்பை கொடுத்து இருக்கிறார்கள். வட இந்தியத் தொழிலாளிகளை நாம் ஆதரிப்பதால் தமிழகத் தொழிலாளிகளை நாம் எதிர்ப்பதாகிவிடுமா. உம்மைப் போன்ற தேசியவியாதிகள் இப்படி சிண்டு முடியும் வேலையை செய்யாமல் இருந்தாலே போதும். நல்லதை இருக்கும்.

              நன்றி.

              • சிவப்பு,

                எப்படித்தான், எவ்வளவு நாள் வாதாடினாலும் கொள்கையளவில் நாங்கள் இருவரும் இருதுருவங்கள். அதை விட, ராஜன் போன்றவர்கள் நான் இங்குள்ள தலைப்புகளை வேண்டுமென்றே திசை திருப்புவதாக வேறு முறைப்பாடு செய்கிறார்கள். எனவே, இறுதியாக உங்களின் கருத்துக்களுக்கு எனது விளக்கத்தைக் கொடுத்து, இந்த கருத்துப் பரிமாற்றத்தை முடிவு செய்யலாமென நினைக்கிறேன்.

                இந்தியா முதலாளித்துவக் கொள்கைகளைக் கொண்ட நாடு. அதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களால் சனநாயக வழியில் தான் இந்திய அரசு தெரிவு செய்யப்பட்டது. இந்தச் சட்டங்களை உருவாக்குகிறவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஆகவே மக்கள் விரும்பி, அடுத்த தேர்தலில் சோசலிஸ்டுகளை ஆட்சியமைக்க தேர்ந்தெடுக்கும் வரை, இந்திய அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டு, அதனூடாக தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களுக்குள்ள வசதிகளும் உரிமைகளும், கம்யூனிச நாடுகளில் கிடையாது. என்பது தான் உண்மை.

                1. உங்களின் நாட்டிலுள்ள மாநிலங்களில் நடைபெறும் இனக்கலவரங்கள் என்ன காரணங்களுக்காக் நடைபெறுகின்றன என்பதைக் கூட நான் விவரமாகக் கூற வேண்டுமா? உதாரணமாக, கட்டுப்பாடற்ற முறையில், வேற்றின மக்களின் அத்து மீறிய குடியேற்றத்தின் விளைவு தான் அசாமில் நடைபெறும் இனக்கலவரங்கள். வங்காளி முஸ்லீம்களும் தொழிலாளர்கள் தான், அஸ்ஸாமிய பூர்வீக குடியினரும் தொழிலாளர்கள் தான்.

                2. உங்களுக்கு விசா நடைமுறைகள், ஒவ்வொரு நாட்டினதும் குடிவரவு, குடியகல்வுச் சட்டங்கள் பற்றித் தெரியாதா? தமிழரல்லாத வட இந்தியர்கள், இந்தியக்குடிமக்கள், அவர்கள் உங்களின் பாட்டனின் ஊரில் கூட குடியேற முடியும், அவர்களைத் தமிழர்களால் தடுக்க முடியாது. தமிழர்கள் 5000 ஆண்டுகளுக்கு மேல் கட்டிக்காத்த தாயகத்தின் சாவியை ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் இந்தியாவிடம் இழந்து விட்டார்கள். கம்யூனிச மாயையில் கட்டுப்பாடில்லாமல் எல்லோருக்கும் திறந்து விட்டால், ஈழத்தமிழர்களின் நிலையை விட மோசமான அழிவை தமிழ்நாட்டின் எதிர்கால தலைமுறைகள் எதிர்நோக்க நேரிடலாம். வெளிவிவகாரம், விசா , பாஸ்போர்ட் எல்லாம் தமிழ்நாட்டு அரசின் கையில் இல்லை. இந்தியாவின் வெளிநாட்டமைச்சு பூணூலால் வரிந்து கட்டப்பட்டுள்ளது. வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பவர்கள் அவர்கள் தான். அவர்கள் உலகத் தமிழர்கள் – தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை விரும்புவதில்லை. அவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்குச் சார்பாக நடந்து கொள்ள மாட்டார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சனையை ஆராய்ந்தால் அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

                3. சிவப்பு நல்ல தமிழ்ப்பெயர் தான். ஆனால் அந்தச் சிவப்பிலிருந்து வரும் கம்யூனிச வாடையைத் தான் என்னால் தாங்க முடியவில்லை. 🙂

                4. தமிழ் தனி நாடாக இருந்தால், ஏனைய நாடுகள் எவ்வாறு சட்டவிரோத குடிவரவைக் கட்டுப்படுத்துகிறார்களோ அவ்வாறு தமிழ்நாடும் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் இப்பொழுது இவையெல்லாம் வெறும் கற்பனையில் மட்டும் தான் சாத்தியமாகும்.

                5. தமிழ்நாட்டின் பொருளாதாரம் தமிழனின் கையில் இருக்க வேண்டுமானால், தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டும். அதாவது தமிழனுக்கு ஒரு ரூபாய்க்கு ஐந்து இட்லியும், ஒரு ஆட்டுக்குட்டியும் கொடுத்து விட்டு பெரிய பண முதலைகள் தமிழ்நாட்டைச் சுரண்டும் வகையில் ஒப்பந்தங்களைக் கொடுக்கும் நிலை மாறி, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தமிழ்நாட்டு மக்களுக்கு தொழில் வாய்ப்பளிக்கும், தமிழுணர்வுள்ள தமிழர்களுக்கு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என்பவற்றை அமைக்க அரசு உதவ வேண்டும், தமிழர்கள் சிறு தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் என்பவற்றை அமைக்க நிதியுதவி அளிப்பது மட்டுமன்றி, தமிழர்களின் உணவகங்கள், நிறுவனங்களின் சேவைகளைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்கும் மரக்கறி உணவுக்குப் பிராமணாள் ஹோட்டலையும், மீன், இறைச்சி சாப்பாட்டுக்கு மலையாளி ஹோட்டலையும் மட்டும் தேடுகிறவர்கள் தமிழர்கள் மத்தியில் உள்ளனர், உதாரணமாக, சென்னையில் தி.நகரில் தேநீர் அல்லது பழச்சாறு குடிக்க தமிழர்களுக்குச் சொந்தமான ஒரு கடை கூடக் கிடையாது.

                6. வட இந்தியத் தொழிலாளிகளுக்கு நீங்கள் குரல் கொடுக்க முன்பு தமிழ்த் தொழிலாளிகளுக்குக் குரல் கொடுங்கள், ‘தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமமும்’ என்கிறேன் நான். நீங்கள் போராட்டங்களில் முன்னணியில் நிற்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

                7. அமெரிக்காகாரன் உள்ள வந்து இங்க தாமிரபரணி ஆத்துல இருந்து நோக்கியா தொழிலாளர்கள் வேலை பறிப்பு வரைக்கும் ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிகிட்டு இருக்கான் அதுக்கு ஒன்னும் பண்ண முடியல” இது நியாயமான் கேள்வி. ஆனால் அதையும், வடமாநிலத் தொழிலாளர்களின் கட்டுபாடற்ற வருகையுடன் ஒப்பிடுவது தான் வெறும் முட்டாள்தனம்.அமெரிக்காகக்காரன் இட்டத்துக்கு, தானாக அனுமதியில்லாமல் இங்கே வரவில்லை. தமிழ்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் அனுமதியுடன் தான் உள்ளே வந்தார்கள். ஆகவே இந்தக் கேள்வியை அவர்களுக்கு அனுமதி அளித்த அரசிடம் கேட்கவேண்டும். அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் ஆட்சியில் அவர்கள், அமெரிக்காக்காரன் உள்ள வர அனுமதியளித்தால் அவர்களைக் கேள்வி கேட்கலாம். ஆனால் இப்பொழுது இந்தக் கேள்வியைத் தமிழ்த்தேசிய வாதிகளிடம் கேட்பது வெறும் அபத்தம்.

                8. மனிதவுரிமைகளை, தொழிலாளர்களின் உரிமைகளை, தொழிற்சங்கங்களை மதிக்கும் மேலைநாட்டிலேயே மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம், போக்குவரத்து, தொழிலாளர் இடம்பெயர்வு, குடியேற்றம் என்பவற்றில் கட்டுப்பாடுகளும், சட்டங்களும் இருக்கும் போது, இந்தியாவில் மாநிலங்கள் அந்தச் சட்டங்களை ஏன் நடைமுறைப்படுத்த முடியாதா?. தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள், கடின வேலைக்கேற்ற ஊதியம் இல்லை என்பதால், விண்ணப்பிக்காத வேலைகளுக்கு, வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்து அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது, தமிழ் நாட்டுத் தொழிலாளர்களுக்கும் மட்டுமன்றி, வட இந்திய தொழிலாளர்களுக்கும் இழைக்கும் கொடுமையல்லவா? இதை அனுமதித்தால், நாளைக்கு தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு அல்லது, வேறு காரணங்’களுக்காக வேலை நிறுத்தம் செய்யும் போதும், வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வர மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

                9. அதாவது Scrawnyயாகக் காட்சியளிக்கும் வட இந்தியக் கூலித் தொழிலாளர்களால் பாலம் கட்ட முடியுமென்றால், தமிழர்களால் முடியாதா என்பது தான். Scrawny என்று நான் குறிப்பிட்டதன் காரணம், சாராசரி தமிழர்களை விட அவர்கள் உயரத்திலும், தோற்றத்திலும் சிறியவர்களாக இருப்பதால் தான். அவர்கள் கடினமான வேலைகளாகிய பாலம் கட்டுதல், ரோடு போடுதல் என்பவற்றை அவர்கள் தான் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டதில், தமிழர்களால் கடின வேலை செய்ய முடியாது, அவர்களால் தான் முடியும் என்ற கருத்தும் தொக்கி நிற்கிறது.

                10. உங்களது, ஈழத்தமிழ் விடுதலைப் போராட்டம் பற்றிய கருத்து உங்களுக்கு விளக்கம் குறைவு என்பதைக் காட்டுகிறது. உங்களுக்கு விளக்குவதும் வீண் வேலை, ஆகவே. அதை அப்படியே விட்டு விடுகிறேன். 🙂

                • வியாசன்,

                  அசாம் இனகலவரம் தாங்கள் பூசும் சேருக்கு கிழேயுள்ள வினவின் கட்டுரைகளை வாசிக்கவும்.
                  https://www.vinavu.com/2012/09/07/assam-riots/
                  https://www.vinavu.com/2012/09/11/assam-riots-myth-fact/

                  வட நாட்டு தொழிலாளிகளை கட்டுபடுத்த வேண்டும் என்று கூறிய வாய் தற்போது அது கற்பனையால் மட்டுமே முடியும் என்கிறது. ஹ்ம்ம் அது வேற வாய்.இது நார வாய்? :).

                  தமிழன் ஆள வேண்டும் அவன் தமிழுணர்வும் பெற்றவனாய் இருக்கவும் வேண்டும்..மறுபடியும் அதே இழுவை. மீண்டும் முயற்சி செய்யவும்.

                  வட இந்தியருக்கு முன் தமிழருக்கு முன்னுரிமைக் கொடுக்கவும். வியாசரேக் கட்டளைப் போட்டால் இது நடக்காது.

                  இங்கே பச்சைத் தமிழன் வந்து ஆட்சி செய்தாலும் இதே நிலைமை தான் இருக்கும்.
                  அரசு என்பது என்ன என்று புரிந்துக் கொள்ளாமல் சும்மா உணர்வுள்ள தமிழன் என்று உசுப்பேத்திக் கொண்டு இருந்தால் என் செய்வது.

                  திரும்பவும் அதே சட்டங்களைப் பிடித்துக் கொண்டீரா.ஏற்கனவே சொன்ன பதில் தான். மையப்படுத்தப்பட்ட அரசும் சட்டமும் இராணுவமும் அதிகார வர்க்கமும இருக்கும் ஒரு நாட்டில் ஒரு தன்னலமற்ற தன்மானமிக்க தமிழுணர்வு மிக்க ஒரு தமிழ்குடிதாங்கி தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஆனாலும் ஒன்றும் ஆட்ட முடியாது என்பதை இந்திய நிலைமையில் பொருத்தி சொல்கிறேன்.தாங்களே சொல்லியபடி ஈழத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாததால்(அதனால் நான் தமிழரில்லை என்று சொல்லி விடாதீர்) அதைப்
                  பற்றி ஏதும் நான் இப்போது சொல்லவில்லை.

                  கடினமான வேலை செய்ய தமிழர்களால் முடியாது என்று நான் ஒருபோதும் கூறவில்லை.குறைந்த கூலிக்கு கடினமான வேலை செய்வது வட இந்தியத் தொழிலாளர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே போல குறைந்தக் கூலிக்கு தமிழர்கள் மட்டுமல் எவரும் கடினமாக வேலைகள் செய்வது எமக்கு ஏற்புடையதன்று.
                  இங்கே தமிழன் கடினமாக வேலை செய்யமாட்டன் என்று நான் கூறியதாக கற்பிதம் செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல.

                  ஈழ விடுதலையைப் பற்றி எமக்கு உண்மையில் உமக்குத் தெரிந்த அளவிற்குத் தெரியாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். என்ன இருந்தாலும் வெளிநாட்டில் டாலரில் சம்பாதித்தாலும் தமிழகத்திலும் இந்தியாவிலும் நடைபெறும் அத்துனை விசியங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் தங்களைப் பார்த்து பிரமிப்பு அடைகிறேன்.

                  தங்களின் மேலானக் கருத்திற்கு எனது நன்றிகள். தாங்கள் கூறியபடி, இது முற்றுப் பெறாத விவாதமாய் போய்க் கொண்டிருப்பதால் இத்துடன் இதை நானும் முடித்துக் கொள்கிறேன்.

                  நன்றி.

        • தமிழ்-தாகம்,

          //
          வடநாட்டு தொழிலார்கள் தமிழ் நாட்டுக்கு வருகை தருவதன் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சாதக ,பாதகங்களை ஆய்வு செய்வது கூட தமிழ் இனவாதமா //

          அவர் அப்படி என்ன ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து விட்டாரென்று காவடித் தூக்குகிறீர்கள். அப்புறம் தமிழ் தேசியம் பேசும் அறிவு சீவிகள் அதை எப்படி பெறுவது என்பதைப் பற்றி குசு கூட விட மாட்டேன் என்கிறார்கள். ஆனால் அவன உள்ள விடாத இவன உள்ள உடாத ன்னு சும்மா அதார் உதார் விடுறது. அப்படி சொல்ற இந்த இனவாதிகள் , அமெரிக்ககாரன் உள்ள வந்து இங்க தாமிரபரணி ஆத்துல இருந்து நோக்கியா தொழிலாளர்கள் வேலை பறிப்பு வரைக்கும் ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிகிட்டு இருக்கான் அதுக்கு ஒன்னும் பண்ண முடியல அல்லது குறைந்த பட்சம் ஒரு புன்நூட்டமாவது போட்டு இருக்கலாம். அதுக்கு எங்கே ராஜராஜனின் வாரிசுகளுக்கு நேரம் இருக்கிறது. காலமுக்கி விடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

          சரி, ராஜராஜன் தான் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார் எனில், தாங்களாவது அவருக்கு நினைவூட்டியிருக்கலாம் அல்லவா? தமிழ் -தேசியம் என்றவுடன் அவருடன் கூட்டு சேர முயற்சி செய்வது ஏனோ?

          இங்கே உள்ளப் பிரச்சினைகளைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைக் கொள்ளாமல் சும்மா தமிழ்,தமிழ் தேசியம் என்று நாம் கூறுவதால் என்ன நடந்து விடும்.

          நன்றி.

          • சிவப்பு ,

            [I ]நீங்கள் பின்னுட்டம்15.1.1.1 மற்றும் 15.1.1.2 விவாதிக்கும் முறைமை முறையற்று செல்கின்றது. விவாதத்தில் நான் வடநாட்டு தொழிலார்கள் தமிழ் நாட்டுக்கு வருகை தருவதன் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்படும் சாதக ,பாதகங்களை ஆய்வு செய்வது கூட தமிழ் இனவாதமா? என்ற கேள்வியை எழுப்பும் போது அப்பட்டமாக கிழ்கண்ட முறையில் தனிநபர் அர்சனை செய்கின்றிர்கள் !

            1அவர் அப்படி என்ன ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து விட்டாரென்று காவடித் தூக்குகிறீர்கள்

            2அப்புறம் தமிழ் தேசியம் பேசும் அறிவு சீவிகள் அதை எப்படி பெறுவது என்பதைப் பற்றி குசு கூட விட மாட்டேன் என்கிறார்கள். ஆனால் அவன உள்ள விடாத இவன உள்ள உடாத ன்னு சும்மா அதார் உதார் விடுறது.

            3சரி, ராஜராஜன் தான் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார் எனில், தாங்களாவது அவருக்கு நினைவூட்டியிருக்கலாம் அல்லவா? தமிழ் -தேசியம் என்றவுடன் அவருடன் கூட்டு சேர முயற்சி செய்வது ஏனோ?

            4இங்கே உள்ளப் பிரச்சினைகளைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறைக் கொள்ளாமல் சும்மா தமிழ்,தமிழ் தேசியம் என்று நாம் கூறுவதால் என்ன நடந்து விடும்.

            இதுதான் என் எளிய கேள்விக்கு சர்வதேசியம் பேசும் கம்யுனிஸ்டு சிவப்பின் பதிலா ?

            மேலும்

            [II] வட நாட்டுத் தொழிலாளர்கள் பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை செய்கின்றனர் என்றால் வேறு என்ன பொருள் சிகப்பு ?தமிழ் நாட்டு தொழிளாலர்கள் பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை செய்வதில்லை என்று தானே பொருள் !பின் வரும் வரிகளை சொன்னது நானில்லைங்கோ என்று சொல்ல மாட்டிர்கள் அல்லவா ?

            “பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை வட நாட்டுத் தொழிலாளர்கள் செய்வதும் ,உங்களைப் போன்ற தமிழரின் கருங்காலிகள் நோகாம வெள்ளைக்காரனுக்கு காலமுக்கி விட்டுக் கொண்டே இங்கே ராஜராஜனின் வீரத்தைப் பறை சாற்றுவது ஏனோ? ”

            காலமுக்கி விடுவது எல்லாம் அம்பியிடம் கற்றுகொண்ட பாடமா ?

            [I I I ]//அப்புறம் தங்களை உறுத்திய வரிகள் இது தான்னு நினைக்கிறேன்,// சிவப்பு என்ன நினைத்து கொண்டு பின்னுட்டம் எழுதியுள்ளிர்கள் ? உங்கள் கற்பனையான சந்தேகத்தையும் அதற்கான் பதிலுக்கும் நான் எப்படி பொறுப்பேற்க முடியும் ? பதில் சொல்லமுடியும் ?

            • நண்பர் தமிழ்-தாகம் ,

              உண்மையில் தனிநபர் தாக்குதல் ஏதும் தொடுக்க காரணம் ஏதுமில.அப்படி தாங்கள் கருதும்பட்சத்தில் அதற்காக வருந்துகிறேன்.

              //
              “பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை வட நாட்டுத் தொழிலாளர்கள் செய்வதும் ,உங்களைப் போன்ற தமிழரின் கருங்காலிகள் நோகாம வெள்ளைக்காரனுக்கு காலமுக்கி விட்டுக் கொண்டே இங்கே ராஜராஜனின் வீரத்தைப் பறை சாற்றுவது ஏனோ? ”//

              இது மட்டுமல்ல ஏனைய நான்கு வரிகளும் தங்களுக்கனது அல்ல. வியாசனுக்கு கேட்ட கேள்விகளுக்கு தாங்கள் பதில் கூறியதால் வந்த வினை இது.

              //வட நாட்டுத் தொழிலாளர்கள் பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை செய்கின்றனர் என்றால் வேறு என்ன பொருள் சிகப்பு ?//

              வேறு பொருளே இருக்க முடியாதா. இதற்க்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன்.அதாவது குறைந்தக் கூலிக்கு வேலை செய்ய இன்றையப் பொருளாதாரம் அனுமதிப்பதில்லை. அதனால் தமிழ் தொழிலாளிகள் குறைந்தக் கூலிக்கு வேலை செய்வதில்லை(நான் இங்கே வட இந்தியத் தொழிலாளர்களை ஒப்புமைப்படுத்தி தான் பேசுகிறேன்) வட இந்தியத் தொழிலாளர் நிலைமை இதை விட மோசமானது. அதைப் பயன்படுத்தி குறைந்த கூலிக்கு அவர்களை இங்கே ஓட்ட சுரண்டுகின்றனர்.

              இங்கே தமிழ் தொழிலாளர்கள் குறைந்தக் கூலிக்கு வேலை செய்ய மறுப்பது என்ன கௌரவக் குறைச்சலா? நியாயமான ஒன்று தானே. அதனால் தமிழ் தொழிலாளிகள் துபாய் போன்ற நாடுகளுக்கு அடிக்கட்டுமான வேலை செய்ய செல்கின்றனர்.

              அப்புறம், தாங்கள் சொல்வது போல அவர்கள் இங்கு வருவதை ஆய்விற்கு உட்படுத்துவதை நான் எதிர்க்கவில்லை மாறாக தாங்கள் அப்படி ஏதேனும் ஆய்வு செய்திருந்தாலோ அல்லது யாரேனும் செய்திருந்தலோ தயைக் கூர்ந்து படிக்கத் தாருங்கள்.

              நன்றி.

              • சிவப்பு ,இங்கு நடைபெறும் விவாதமே கலந்தாய்வாக இருக்கும் போது அதற்கு தனிநபர் வசைபாடல் மூலம் சிவப்பு இடையுறு செய்யாமல் இருபதே விவாதத்தை செழிப்புட்டுவதாக இருக்கும். மேலும் நீங்கள் கூறிய “பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை வட நாட்டுத் தொழிலாளர்கள் செய்வதும் ,உங்களைப் போன்ற தமிழரின் கருங்காலிகள் நோகாம வெள்ளைக்காரனுக்கு காலமுக்கி விட்டுக் கொண்டே இங்கே ராஜராஜனின் வீரத்தைப் பறை சாற்றுவது ஏனோ? ” விடயத்துக்கு இப்போது தான் “குறைந்தக் கூலி” என்ற விடயங்களை,இறக்கைகளை சேர்கின்றிர்கள். ஆனால் நீர் முதலில் கூறிய விடயத்தில் அதை நீர் யாருக்கு கூறியிருந்தாலும் “தென்னாட்டு [தமிழ்நாட்டு]தொழிலாளர்கள் பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளைசெய்வது இல்லை என்ற பொருள் தான் வருகின்றது.நிங்கள் இப்போது கூறும் குறைந்தக் கூலி என்ற பண்புகள் எல்லாம் முன்பு கூறிய கடினமான வேலை என்ற பண்புடன் எப்படி ஒன்றுபடும் என்று உமது மூளையை கசக்கி முயன்று சமாளிக்க பாரும் சிவப்பு ! அப்போதாவது புதியதாக ஏதாவது புது விளக்கம் கிடைகின்றதா என்று பார்போம் !

                • தமிழ்-தாகம்,

                  கடினமான வேலைகளை தமிழர்கள் செய்யமாட்டார்கள் என்று நான் எங்கு கூறினேன் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

                  கிழே உள்ள வரிகளை நான் தொகுத்து கொடுத்து இருக்கிறேன்.

                  1.//நீர்(வியாசர்) மட்டுமல்ல எந்த ராஜராஜ சோழன் நினைத்தாலும் அவர்கள் இங்கு வருவதை தடுக்க முடியாது. ராஜராஜனின் வாரிசுகள் மட்டும் சொகுசான வாழ்க்கைக்காக வெள்ளைக்காரனின் காலை நக்க சென்று விட்டதால், குறைந்தக் கூலிக்கு வட இந்தியத் தொழிலாளர்களை விட்டால் இங்கே ஆளில்லை. அதே வேலையை இங்கேயுள்ள தமிழ் தொழிலாளர்கள் ஏன் செய்யவில்லை? அவர்கள் ஏன் வெளிநாட்டிற்கு கட்டுமான வேலைக்காக செல்கிறார்கள்.ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளிக்கு சேவை மனப்பான்மையோட வேலைக் கொடுப்பதில்லை. இலாப நோக்கிற்காக தான் வேலைக் கொடுக்கிறான். வெளிநாட்டுக்காரன் அவன் நாட்டுத் தொழிலாளிக்கு வேலைக் கொடுப்பதைக் காட்டிலும் கீழைத் தேய நாடுகளின் தொழிலாளிகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கிறான். தன் நாட்டின் தொழிலாளிகளை விட இந்திய நாட்டுத் தொழிலாளிகள் எந்த விதத்தில் சிறந்தவர்கள்.ஒன்றேயொன்று தான் , குறைந்த கூலியும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் செய்யும் வேலையும் தான்.//

                  குறைந்தக் கூலிக்கு(குறிப்பாக அடிக்கட்டுமானம்) வேலைகளை வட இந்தியத் தொழிலாளர்கள் தான் செய்கிறார்கள். உங்களுக்கு கேள்வி வரலாம் ஏன் தமிழன் செய்யமாட்டானா?.. தமிழனாலும் செய்ய முடியும். அதில் பெருமைபட என்ன இருக்கு. ஒப்பீட்டளவில் பீகாரை(ஏனைய வட மாநிலங்களை) விட தமிழகம் முன்னேறி தான் இருக்கிறது.சாதிக்கட்டுமானம்(நகரமயமாதல் குறைவு) இன்னும் உறுதியாக இருக்கும் பீகார் போன்ற மாநிலங்களில் அடிக்கட்டுமான வேலைகள் குறைவு. விவசாயம் போன்ற வேலைகளில் கூலி தமிழகத்தை விடக் குறைவு. அதனால் வேறு வழியில்லாமல் நாடு முழுவதும் செல்கிறார்கள் அதன் போக்கில் தமிழகமும் வருகிறார்கள்.

                  2.//தமிழ்நாட்டு அரசுக்கு மனுப் போடுவது இருக்கட்டும், முதல்ல ராஜராஜனின் வாரிசுகள் எல்லாம் வெளிநாட்டுச் சுற்றுபயனத்தை முடித்துக் கொண்டு இங்கே வரட்டும்.வந்து நாங்களே கட்டடம் கட்டுறோம், பாலம் கட்டுரோம்னு சொல்லட்டும் அப்புறம் வட நாட்டுக்காரனைப் போக சொல்லலாம்.என்ன சரி தானே.//

                  சும்மா வட இந்தியாக்காரன் உள்ள வரான் ன்னு பயமுறுத்துனா எப்படி. அவங்க பொழப்புக்கு இங்க வராங்க. இங்க வேலையும் செய்யுறாங்க. கண்டிப்பாக அதை அறுவடை செய்வது முதலாளிகள் தான். வெளிநாட்டில் இருந்துக் கொண்டு அவன உடாத இவன உடாதன்னா எப்படி. அப்போ முதல்ல நீங்கல்லாம் வாங்க. வந்து இங்க வேலை செய்யுங்க.

                  3.//கிட்டத்தட்ட தமிழ் தேசியம் இலங்கையில் அரசியல் ரீதியில் அழிவுற்ற நிலையில், அதற்க்கு அரசியல் முலாம் பூசிய வெள்ளாள தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, அதற்கு ராணுவ முலாம் பூசிய விடுதலைப் புலிகளும் அழிபட்டுப்போக, தமிழ் தேசியம் , தமிழ் புலிகள் மேலக் காழ்ப்புணர்வுக் கொள்ள யாதொருக் காரணமும் எனக்கில்லை//

                  முதலில் தமிழ் தேசியம் என்பதற்கு நான் எதிரியல்ல. அதே போல ஈழத்திற்க்கான கனவிற்கும் நான் எதிரி அல்ல. ஆனால் இன்றைய எதார்த்தம் புரியாமல் வெளிநாட்டில் இருந்துக் கொண்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசுபவரைப் பார்த்தால் எனக்கு எரிகிறது. உடனே தமிழ்குடிதாங்கி என்னை தமிழ் நீக்கம் செய்தும் விட்டார். சரி, தமிழ் தேசியம் பேசினால் மட்டும் தான் தமிழனா? சரி, இங்கே பெரும்பாலான மக்களுக்கு தேசியம்னா(nationality) இந்தியன் தான் சொல்லுவாங்க(இந்திய அரசியலைப்பு சட்டத்தின் படி). அப்போ அவிங்க எல்லாம் தமிழன் கிடையாதா?

                  4.//அவுங்களை உள்ள விடக் கூடாது, வருகையை கட்டுபடுத்த வேண்டும் , கண்காணிக்க வேண்டும், குடும்ப அட்டையைக் கொடுக்க கூடாதுன்னு சொன்னீர்கள் என்றால், முதலில் அவர்களுக்கான வாழ்வுரிமைக்காக தார்மீக ரீதியில் குரல் கொடுக்க வேண்டும். அப்புறம் இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு குண்டுமணியாவது உங்களால் ஏதாவது பயன் இருந்ததா என்பதையும் தாங்கள் விளக்க வேண்டும். அவர்கள் இல்லையென்றால் வளர்ச்சி என்ற பம்மாத்தும் இல்லை.அவர்களின் வருகை ஏன் உலகமயமாதலுக்குப் பின்பு அதிகரித்தது என்பதோடு சேர்த்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.//

                  தேசிய உரிமைக்கான போர் என்பது வெறுமனே வட இந்தியனை வெளியேற்றுவதோ அல்ல அவர்கள் வருகையைக் கட்டுபடுதுவதிலோ இருக்க முடியாது. அவர்களுக்கான பிரச்சினையை முன்னிறுத்துவதிலும் தான் அடங்கி இருக்கிறது. ஆனால் இங்கே தமிழ் தேசியம் பேசுவோர் அவர்களுக்கான வாழ்விற்கு எண்ணத் திட்டம் வைத்துள்ளனர். முதலில் அதைப் பற்றிப் பேசட்டும். வெறுமனே அவர்களை எதிர்ப்பது என்பது சரியான தீர்வு அல்ல.

                  5. //கட்டடம் கட்டுவது, பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை வட நாட்டுத் தொழிலாளர்கள் செய்வதும் ,உங்களைப் போன்ற தமிழரின் கருங்காலிகள் நோகாம வெள்ளைக்காரனுக்கு காலமுக்கி விட்டுக் கொண்டே இங்கே ராஜராஜனின் வீரத்தைப் பறை சாற்றுவது ஏனோ?//

                  இதுக் குறிப்பாக வியாசருக்காக சொல்லியது. அது மட்டுமல்லாமல் அவருக்கான கேள்விக்கு முண்டியடித்துக் கொண்டு தாங்கள் பதில் சொல்லியதால் அவருக்கான பதிலும் உங்களுக்கான பதிலிலேயே இட வேண்டியதாகிவிட்டது.
                  அப்புறம் அதை நான் உங்களுக்கு சொல்லியதாக கற்பிதம் செய்துக் கொண்டு விளையாடுகிறீர்கள்.

                  அப்புறம் கடைசியாக ஒன்னு சொன்னீர்களே //இங்கு நடைபெறும் விவாதமே கலந்தாய்வாக இருக்கும் போது அதற்கு தனிநபர் வசைபாடல் மூலம் சிவப்பு இடையுறு செய்யாமல் இருபதே விவாதத்தை செழிப்புட்டுவதாக இருக்கும்//.

                  அப்படியா, இங்கே என்ன விதமான(எனது வசைபாடல் பின்னுரைகளைத் தவிர்த்து) விவாதம் நடைபெற்றது என்பதை தயைக் கூர்ந்து விளக்கினால் தேவலை.

                  நன்றி.

                  • சிவப்பு,

                    அம்பி விடயத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்களை திரும்ப பெற்றது மிகவும் நேர்மையானது. வாழ்த்துக்கள் சிவப்பு. சரி உங்கள் கருத்துக்கே வருவோம். “கட்டடம் கட்டுவது, பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை வட நாட்டுத் தொழிலாளர்கள் செய்வதும் ,உங்களைப் போன்ற தமிழரின் கருங்காலிகள் நோகாம வெள்ளைக்காரனுக்கு காலமுக்கி விட்டுக் கொண்டே இங்கே ராஜராஜனின் வீரத்தைப் பறை சாற்றுவது ஏனோ?” இது வியாசனின் பின்னுட்டம் 15க்கான உங்கள் பதில் பின்னுட்டம் 15.1.

                    வியாசன் தன் பின்னுட்டம் 15 ல் விவாதிக்கும் விடயத்துக்கும் [தொழிலாளர்கள் இடப்பெயர்வதால் ஏற்படும் சிக்கல்கள்] நீங்கள் அவருக்கு கொடுக்கும் பதிலில் [பின்னுட்டம் 15.1] உள்ள விடயத்துக்கும் ஏதேனும் தொடர்பிருகின்றதா ? வியாசனை தனிநபர் அர்சனை செய்வதற்க்காக தமிழ் நாட்டு மக்களையும் ,தமிழ் இன மொழி உணர்வாளர்களை சிறுமைபடுத்துவதுடன் , வட நாட்டுத் தொழிலாளர்கள் கட்டடம் கட்டுவது, பாலம் கட்டுவது,பாதை போடுவது போன்ற கடினமான வேலைகளை செய்கின்றார்கள் என்பதன் மூலம் தமிழர்கள் அத்தகைய வேலைகளை செய்யவில்லை என்பதாக தானே பொருள் வரும்படி பேசுகின்றிர்கள் .

                    சரி வியாசன் அவர் பின்னுட்டம் 15 ல் விவாதிக்கும் விடயத்துக்கும் வியாசனை தமிழரின் கருங்காலிகள் நோகாம வெள்ளைக்காரனுக்கு காலமுக்கி விட்டுக் கொண்டே இங்கே ராஜராஜனின் வீரத்தைப் பறை சாற்றுவது ஏனோ? என்று நீர் கோருவதற்கும் ஏதாவது தொடபிருகின்றதா ? அறிவு நாணயம் இருப்பின் மிண்டும் அவர் பின்னுட்டம் 15 படித்து மீண்டும் தர்க்க பூர்வமான அறிவு பூர்வமான பதிலை அளிக்கவும் !அவர் பின்னுட்டத்தில் 15ல் …..

                    முதல் பத்தயில்

                    இந்தியா என்பது தேசிய இனங்க்ளின் சிறைக்கூடம் என்று விவாதிக்கின்றார்

                    இரண்டாம் பத்தியில்

                    உலகநாடுகள் தன் நாட்டினுள் ஏற்பட்டும் தொழிலாளர் இடபெயர்வுகளை எப்படி எதிர்கொள்கின்றன என்பதை இந்தியாவினுள் நடைபெறும் தொழிலாளர் இடபெயர்வுடன் ஒப்பிட்டு அதனை சமாளிக்க இந்திய மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு உதவுவதாகத் தெரியவில்லை என்று இந்திய அரசை தான் குறைகூறுகின்றார்

                    முன்றாம் நான்காம் பத்திகளில்….

                    குடும்ப கட்டுப்பாடு சிறப்பாக தமிழ் நாட்டில் நடைமுறை இருபதால் பிற்காலத்தில் தமிழ் மக்கள் தொகை குறைவதற்கான சாத்தியத்தையும் ,அதே சமயம் வட இந்திய தொழிலாளர்கள் அலையலையாக தமிழ் நாட்டை நோக்கி படை எடுப்ப்தால் ஏற்படும் விளைவுகளையும் கூறுகின்றார்.

                    வியாசன் கூறும் “வெள்ளைத் தோலைக் கொண்ட இவர்களின் குழநதைகள் நடிகர், நடிகைகளாகினால் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக வாக்களிப்பார்கள்” என்ற கருத்தாகத்துக்கு பதில் dec புஜா வின் MGR ,ஜெயா பற்றிய கட்டுரை மிக சிறந்த உதாரணம்.

                    சரி நீங்கள் இவரின் கருத்துக்கள் தவறு என்றால் அவற்றை தர்க்க பூர்வமான அறிவு பூர்வமான எதிர்கொள்ளாமல் 15.1ல் அவரை தமிழர் கருங்காளி ,வெள்ளைக்காரன் காலமுக்கி என்று எல்லாம் அடித்து துவைப்பதன் காரணம் என்ன ?விவாதத்தை திசை திருப்பும் நோக்கமா ? அல்லது வியாசன் மீது உள்ள வன்மமா ?

                    மேலும் உங்கள் விவாத முறையை தவிர்த்து மீதம் உள்ள அனைவருமே சிறப்பாக தான் வாதாடுகின்றனர். வாசகர்களின் விவாதங்கள் வினவு எழுதியுள்ள இக் கட்டுரையைவிட மிக சிறப்பாகவும் ,பொருள் பொதிந்தும் தான் உள்ளது.

                    • தமிழ்-தாகம்,

                      தங்களது விமர்சனத்திற்கு நன்றி. ஏற்கனவே அவருக்கு தனியாக பதிலளித்து விட்டேன். அது போல எனது விவாத முறையைத் தவிர ஏனையோரது விவாத முறை சிறப்பாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள. இது உங்களது கருத்து தான். அனைவரின் கருத்து இது தானென்றால் கண்டிப்பாக எனது விவாத முறையை மாற்றிக் கொள்ள தான் வேண்டும்.

                      நன்றி.

          • சிவப்பு ,
            இந்தியா என்பது இந்திய அரசின் கொள்கை படி தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்க பார்பன ,பானியாக்கள்,பார்சிக்கள் அதனை பயன்படுத்தி தேசிய இனங்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அதனை எப்படி தேசிய இனங்கள் எதிர்கொள்வது என்ற பிரச்சனைக்கு தீர்வு என்னவென்றால் Article 370யை ஜம்மு காஷ்மீர் மாநிலம் போன்று அனைத்து மாநிலமும் கோருவது தான் சரியான திர்வாக இருக்கும் . நம்மை போன்றே ஒரு தேசிய இனத்துக்கு[ஜம்மு காஷ்மீர்] Article 370 சிறப்பான உரிமைகளை [குறைந்த பச்ச தன்னுரிமையை ] கொடுத்து உள்ள பொது அதனை நாமும் கோருவது தான தமிழ் மக்களை பார்பன ,பானியாக்கள்,பார்சிக்களிடம் பொருளாதார ரீதியில் பாதுகாக்கும். இதுவே இந்திய தேசிய இனங்களை இந்திய சிறையில் இருந்து குறைந்த அளவிலாவது விடுவிக்கும்.

            மேலும் Article 370யை மேலும் வலிமை படுத்துவதன் மூலம் ஒரு தேசிய இன மக்கள் பிற தேசிய இன மக்களின் வேலை வாய்ப்புகளை குறைந்த கூலியின் மூலம் பறிப்பதை தவிக்கலாம். இதனால் வேலைக்கான கூலி ஒவொரு தேசிய இனத்து தொழிலாளர்களுக்கும் அதிகரிக்கும். முதாளித்துவ அமெரிக்காவிலேயே ஆண்டுக்கு இத்துனை வேலை வாய்ப்புக்கள் உள்நாட்டு மக்களுக்கு[அமெரிக்கர்களுக்கு ] கண்டிப்பாக கொடுக்கபடவேண்டும் என்ற சட்டங்கள் இருக்க நாம் ஏன் அத்தகைய நிலையை ஒவொரு தேசிய இனத்துகான மாநிலத்துக்கும் அடிப்படை உரிமையாக கோரக்கூடாது ?

            இந்திய தேசிய இனங்களுக்கான விடுதலைக்கான தீர்வின் பாதை Article 370 யின் ஊடாக தான் சாத்தியபடும்

            //அந்த தொழிலாளிகள் இங்கே வருவதும் இங்கிருக்கும் தொழிலாளிகள் வேறெங்கும் செல்வதையும் நாம் தடுக்க முடியுமா இந்த உலகமயமாதல் காலத்தில்.மேற்க்கத்திய நாடுகளின் சமூகப் பொருளாதாரமும் பல்தேசிய இந்தியக் கூடாரத்தின் சமூகப் பொருளாதாரமும் ஒன்றா? தாங்கள் சொல்வதுப் போல நடக்கவே இங்கே ஒரு சமூக மாற்றம் தேவைப் படுவதை தாங்கள் அறியவில்லையா.//

  13. நண்பர் தமிழ்-தாகம்,

    பார்ப்பனர்கள், பனியாக்கள் இங்கே வந்து நிலை பெற்றுவிட்டார்கள். இனியும் அவர்களை வந்தேறிகள் என்ற விதத்தில் அனுகி நமது நேரத்தை ஆற்றலை வீணாக்கிக் கொள்வது சரியல்ல. அவர்களை வர்க்கம் என்ற முறையில் அணுகுவதே போதும்.

    • பார்ப்பனர்கள், பனியாக்கள் வந்தேறிகளா அல்லது வர்க்க எதிரிகளா என்பது தான் இப்போது பிரச்சனையா ? அவர்கள் வீழ்த்தபடவேண்டியவர்கள் ,அவர்கள் ஆதிக்கம் வீழ்தப்டவேண்டியது என்பது தானே சரி ?

  14. நண்பர் சிவப்பு,

    வெளிநாடு செல்லும் IT தொழிலாளி மட்டும் அந்நாட்டு தொழிலாளர்களின் வேலையைப் பறிப்பது இல்லை. இங்கிருந்தே செய்பவர்களும் அந்நாட்டு தொழிலாளர்களின் வேலையைப் பறித்துத்தான் செய்கிறார்கள். மெய் நிகர் உலகம் அனுமதிப்பதால் இங்கிருந்தே வேலை செய்ய முடிகிறது.

  15. திரு வியாசன்,

    நீங்களும் வேறு நாட்டிற்குப் போயிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அல்லது இலங்கையில் அமைதி திரும்பியவுடன் திரும்பி வந்து விடுவீர்களா. கனடாவில் குடியுரிமை பெறாமல் இன்னும் அகதி பாஸ்போர்ட்தான் வைத்திருக்கிறீர்களா.

    • உங்களின் கேள்வியைப் பார்த்தவுடன், அப்படியானால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எல்லாம் கூலிப் பாஸ்போர்ட் தான் வைத்திருக்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது. எந்த நாடும் அகதிப் பாஸ்போர்ட் என்ற ஒன்று கொடுப்பதாக எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் அதை விளக்கவும். எந்த நாடும் அந்தந்த நாட்டுப் பாஸ்போர்ட்டை மட்டும் தான் கொடுக்குமே தவிர, கூலிப்பாஸ்போர்ட், அகதிப்பாஸ்போர்ட் என்று வெவ்வேறு பாஸ்போர்ட்களைக் கொடுப்பதில்லை. அப்படி நீங்கள் கூறுகிற மாதிரி, அகதிப்பாஸ்போர்ட் என்ற ஒன்றிருந்தாலும், அத்துடன் இந்தியாவுக்குள் நுழைய இந்தியா அனுமதிக்குமென நான் நினைக்கவில்லை.

      • வியாசன்,

        கேட்கப்பட்ட முதல் கேள்வியை விட்டுவிட்டு இரண்டாவது கேள்விக்கு உங்களின் வழக்கமான நேர்மையற்ற பதிலைக் கொடுக்கிறீர்கள்.
        எந்த நாடும் தனது அகதிகளுக்கு உடனே தனது நாட்டு பாஸ்போர்ட்டைத் தருவதில்லை. refugee travel document அல்லது Geneva passporஎன்ற அடையாளச் சீட்டைத்தான் தருகின்றது.
        விவரங்களுக்கு,
        http://en.wikipedia.org/wiki/Refugee_travel_document

        A quote from the above article:
        //A refugee travel document (also called a 1951 Convention travel document or Geneva passport) is a travel document issued to a refugee by the state in which she or he normally resides allowing him or her to travel outside that state and to return there. Refugees are unlikely to be able to obtain passports from their state of nationality (from which they have sought asylum) and therefore need travel documents so that they might engage in international travel. //

        இதை வைத்து அகதிகள் நாடு விட்டு நாடு பயணம் போகலாம் எனும் போது இதை தமிழில் அகதி பாஸ்போர்ட் என்று கூறினால் என்ன தவறு.
        நீங்கள் இந்த அடையாளச் சீட்டைப் பெறாமலேயே நேராக கனடா பாஸ்போர்ட் பெற்று விட்டீர்களா. அல்லது அகதியாக போகாமலேயே கனடா குடியுரிமை பெற்றீர்களா.

        • Univerbuddy,

          நீங்கள் இப்படி தலைப்புக்குச் சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்க, அதற்கு நான் விவரமாகப் பதிலளித்தால், நான் தலைப்பைத் திட்டமிட்டுத் திசை திருப்புவதாக என்மீது பாயப் போகிறார் ராஜன். அப்பொழுது நீங்கள் எனக்குப் பாதுகாப்பளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பதிலெழுதுகிறேன். (நான் ஒரு சில நாட்களுக்கு இங்கு வரமாட்டேன், ஆகவே இன்றைக்கே பதில்களை முடித்து விடுகிறேன். :))

          //எந்த நாடும் தனது அகதிகளுக்கு உடனே தனது நாட்டு பாஸ்போர்ட்டைத் தருவதில்லை.///

          முற்றிலும் உண்மை. அகதிகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து மேலைநாடுகளுக்குச் செல்லும் கூலிகளுக்குக் (தொழிலாளர்கள்) கூட பாஸ்போர்ட்டை உடனடியாகத் தருவதில்லை. அகதிகளுக்கு பாஸ்போர்ட் கொடுக்கும் காலத்தை விட, தொழில் விசா (Work permit) இல் வருகிறவர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்க அதிக காலம் எடுக்கும்.

          //refugee travel document அல்லது Geneva passportஎன்ற அடையாளச் சீட்டைத்தான் தருகின்றது.///

          எனக்கு முழு விவரமும் தெரியாது. ஆனால் “refugee travel document அல்லது Geneva passport” கொடுப்பது, UNHCR இல் பதிவு செய்யப்பட்டு, வேறு நாடுகளில் அகதி முகாம்களிலிருந்து அகதிகளாகத் தேர்ந்தேடுக்கப்பட்டவர்களை, ஒவ்வொரு நாடும் அவர்களைப் பிரித்தெடுத்து, அதன் மூலம் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகளுக்கு மட்டும் தான் என்று நம்புகிறேன்,
          உதாரணமாக, சோமாலிய அகதிகள், சிரிய அகதிகள், ஆரம்ப காலத்தில் வியட்நாமிய Boat people போன்றவர்கள். அவர்களின் செலவுகள், (விமானச் செலவுகள் உட்பட)அனைத்தையும் அந்தந்த நாடுகள் ஏற்றுக் கொள்ளும். ஆனால் இலங்கைத் தமிழ் அகதிகள் இந்த வரிசைக்குள் வருவதில்லை. அவர்கள் தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்து, அந்தந்த நாட்டின் எல்லைகளில், விமான நிலையங்களில் சென்று அகதி விண்ணப்பம் செய்தவர்கள்.

          இலங்கைத் தமிழர்கள் பலவிதமாக நாட்டை விட்டு இடம்பெயர்ந்தனர்/ பெயர்கின்றனர்.

          1. Refugee Category: பெரும்பாலான புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இந்த வகையில் தான் அடங்குவர். இவர்கள் தாம் விரும்பிய நாடுகளுக்கு அவர்களின் சொந்தப் பணத்தில் சென்று அகதி விண்ணப்பம் கோரியவர்கள். படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குப் போகிறவர்கள் கூட, அவர்களின் செலவில் தான் போகிறார்கள்.

          2. Professional Category: இன அடிப்படையிலான இட ஒதுக்கீடு இலங்கையில் நடைமுறைக்கு வருமுன்னர், திறமை அடிப்படையில் மட்டும் பல்கலைக்கழக அனுமதி நடைமுறையிலிருந்த போது, இந்தியாவில் பார்ப்பனர்களைப் போல், தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் தமது சனத்தொகை வீதாசாரத்தை விட அதிகளவில் இருந்தனர். அவர்கள் மருத்துவம், பொறியியல், கணக்காய்வாளர், சட்டம், Dentistry போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இலங்கையில் கிடைக்காததால், பெரும்பாலானோர், தென்னாபிரிக்கா, தன்சானியா, கரிபியன், இங்கிலாந்து, அமெரிக்க போன்ற நாடுகளில் தொழில் பார்க்க (அந்தந்த நாட்டின் அனுமதியுடன்) சென்றனர் இனப்பிரச்சனை தொடங்கியதும், கனடா போன்ற நாடுகளுக்குக் குடியேறிய அவர்கள் தமது குடும்பங்களைப் பின்னர் இலங்கையிலிருந்து அழைத்துக் கொண்டனர். அவர்களின் குடும்பங்களும் அகதிகளாக அல்லாமல் Sponsored Immigrants ஆகச் சென்றனர்.

          3. அகதி அந்தஸ்து பெற்ற தமிழர்களும் கூட, தமது குடும்பங்களையும், குழந்தைகளையும் உடனடியாக அழைத்துக் கொள்ளாமல்,. கொழும்பில், சென்னையில், பெங்களூரில் கல்வி கற்க அனுப்பி விட்டு, அவர்கள், பல்கலைக்கழகத்துக்குப் போகும் வயதில் மட்டும், அழைத்துக் கொண்டனர். அவர்களும் அகதிகளாக அல்லாமல் Sponsored Immigrants ஆகச் சென்றார்கள்.

          4. ஆரம்ப காலத்தில் கனடா போன்ற நாடுகளில் வாழும் சில தமிழ்ப்பெற்றோர்கள், தமது பெண்குழந்தைகள் கனடாவில் High schoolக்குப் போனால் யாரும் வெள்ளை அல்லது கறுப்பர்களோடு காதல் கொண்டு விடுவார்கள், (இப்பொழுது நிலைமை வேறு, பல பாடசாலைகளில் தமிழ்மாணவர்கள் தான் பெரும்பான்மையினர், மகள் ஓடிப்போனாலும் ஒரு தமிழனோட தான் போவா என்ற நம்பிக்கையுண்டு.) ஆண் குழந்தைகள் ‘தமிழ்ப்பண்பாட்டை’ மறந்து விடுவார்கள் என்ற பயத்தில், தமிழ் படிப்பிக்கவும் பரதநாட்டியம் கற்பிக்கவும் என்ற சாட்டில் சின்ன வயதிலேயே இலங்கையில் (கொழும்புக்கு) பாட்டன்/பாட்டி/உறவினர்களுடன் அல்லது தமிழ்நாட்டில் Hostelகளில் விட்டுப் படிப்பித்து விட்டும் பலகலைக்கழகம் செல்லும் வயதில் கனடாவுக்கு அழைத்துக் கொண்டதுமுண்டு. அவர்களும் அகதிகளாகப் போனதில்லை.

          5. அதாவது குடும்பத்தில் ஒருவர் அகதியாகப் போய் அகதி அந்தஸ்து பெற்றால், ஏனைய குடும்பத்தவர்கள், அகதிகளாகப் போவதில்லை, Sponsored Immigrants ஆகத் தான் போவார்கள். அப்படிச் சென்றவர்களுக்கு நீங்கள் கூறும் அகதிப்பாஸ்போர்ட் பற்றிய விவரங்கள் எல்லாம் தெரியாது.

          6. அகதி அந்தஸ்து பெற்ற ஒருவர் ஒரு வருடத்தில் Permanent Residencyக்கு விண்ணப்பிக்கலாம். அது கிடைத்து மூன்று வருடங்களில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். குடியுரிமை கிடைத்தவுடனேயே பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிக்கலாம். இன்று ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் மூன்றாவது தலைமுறையை அடைந்து விட்டார்கள் ஆகவே அகதிகள் என்று யாருமில்லை (அண்மையில் வந்தவர்களை விட) எல்லோரும் அந்தந்த நாட்டின் குடிமக்கள் தான். ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டின் பாஸ்போர்ட்டைத் தான் வைத்திருப்பார்கள்.

          7. ஆனால் இலங்கைத் தமிழர்கள் அனைவருமே வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதில்லை. உதாரணமாக, என்னுடைய பெற்றோரைப் போன்றே, பல இலங்கைத் தமிழர்கள் இலங்கைக் குடியுரிமையைத் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களின் காணிகள், வீடுகள் பரம்பரை நிலங்களை ராஜபக்ச ஆட்டையைப் போட்டு விடுவாரோ என்ற பயத்தினால் தான்.

          ///நீங்களும் வேறு நாட்டிற்குப் போயிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்///

          1. சனத்தொகை குறைந்த, செல்வம் நிறைந்த கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது முட்டாள்தனமாகும்.

          2. எந்த மேலை நாட்டிலும் தமிழ்நாட்டைப் போல், பெரும்பான்மையான சொந்த நாட்டு மக்கள் வறுமையிலும், வேலைவாய்ப்பில்லாமலும், அடிப்படை கல்வி, மருத்துவ வசதிகளுக்குக் கூட தட்டுப்பாடான நிலையில் இருப்பதுடன் அடுத்த வேளைச் சோறு எங்கிருந்து வருமென்று கூடத் தெரியாத நிலையில் இருந்தால், எந்த மேலை நாடும் வெளிநாட்டவர்களை வரவேற்று, அங்கு குடியேற அனுமதிக்காது. தனக்குப் பின்பு தான் தானமும் தருமமும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

          3. தமிழர்களைப் போல் “வந்தாரை வாழவைக்கும்” என்ற பத்தாம் பசலித்தனம் எல்லாம் அவர்களிடம் கிடையாது. அவர்கள் வெளிநாட்டவர்களின் உழைப்பும், மூளையும் தமது நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்பதாலும், பிறப்பு வீதம் குறைவாக இருப்பதால், சனத்தொகை வீழ்ச்சி ஏற்படாமலிருக்கவும் தான் வெளிநாட்டவர்களை அங்கு குடியேற அனுமதிக்கிறார்கள். இந்தக் காரணங்கள் தமிழ்நாட்டில் இல்லை.

          4. அகதிகளை மேலைநாடுகள் அனுமதிப்பதன் காரணம் அவர்கள் ஐக்கியநாடுகளின் அகதிகள் சம்பந்தமான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட காரணத்தால் தான் அல்லது ஒருவரைக் கூட அங்கு தங்க விடாமல் நாடுகடத்தி விடுவார்கள். இந்தக் காரணங்கள் எல்லாம், தமிழ்நாட்டில் கிடையாது.

          5. இந்தியாவிலுள்ள தேசிய இனங்களிலொன்றாகிய தமிழ்நாட்டுத் தமிழர்கள், அவர்களின் மொழி, கலாச்சாரம் என்பதை அழியாமல் பாதுகாத்துக் கொண்டு, ஒரு இந்தியனாகவும் உணர வாய்ப்பளித்த தமிழ்நாடு மாநிலத்தில் தமிழரல்லாதவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களும் தாம் தமது சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையினராக்கப்படுவதை, நாளடைவில் உணர்வார்கள். அதுவேஇந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

          6. ஈழத்தமிழர்களின் பிரச்சனையிலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சுதந்திரத்தின் பொது, இலங்கை மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதையே எதிர்த்து, இலங்கை எந்த வகையிலும் பிரிக்கப்படாமலிருக்க வேண்டுமென விரும்பிய ஈழத் தமிழர்கள் தனிநாடு கேட்டு இரத்தம் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முதல் காரணம், இலங்கை அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால், தமிழர்கள் வரலாறு பூர்வமாக வாழும் வட-கிழக்கு மண்ணில், சிங்களக் குடியேற்றங்களால், அவர்களின் நகரங்களிலும், கிராமங்களிலும் திடீரென்று அவர்கள் சிறுபான்மையினராக்கப் பட்டது தான்.

          • வியாசன்,

            கேள்வி தலைப்புக்கு சம்பந்தமில்லாதது அல்ல. உங்கள் பதில்தான் கேள்வியை மட்டும் தவிர்த்துவிட்டு வீணாக நீள்கிறது. Sponsored Immigrants ஆகத் சென்றவர்களுக்கு அகதிப்பாஸ்போர்ட் பற்றிய விவரங்கள் எல்லாம் தெரியாது என்பது நாணயமற்ற விட்டேத்தியான பதில். லட்சக்கணக்கான புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் இருந்து கொண்டு இது பற்றித் தெரியாது என்றால் அது நாணயமான பதிலில்லை.

            2. உங்களிடம் பணமிருந்ததால் ஏழுகடல் தாண்டி மக்கள் குறைவான பரப்பளவு அதிகமான கனடாவுக்கு புலம்பெயர்ந்தீர்கள் (நிரந்தரமாக). வசதியற்ற தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும். ரயிலில் பயணம் தொலைவில் வேலை கிடைக்கும் இடத்திற்கு செல்ல மட்டுமே முடியும். இன்னும் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் அகதிகளாகத்தான் இருக்கிறார்கள்.

            3. தமிழ்நாடு ஒரு நாடு இல்லை ஒரு உப கண்டத்தின் சிறு மாகாணமே என்பதை கருத்தில் கொள்ளாமல் நிறைய எழுதியிருக்கிறீர்கள். தும்பை விட்டு வாலைப் பிடிக்க முடியுமா. ஈழப்போராட்டத்தின் முடிவும் நம்மிடமிருக்கிறது. என்ன வந்தாலும் இந்தியாவின் ஒற்றுமைக்கு பங்கம் வருவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவே.

            முற்றும்.

            • Univerbuddy,

              தலைப்புக்குச் சம்பந்தமில்லாத பதிலை நீங்களே கேட்டு விட்டு விளக்கமாக பதில் தந்த பின்னர், அதிலிருந்து உங்களின் கேள்விக்குப் பதிலை பெற்றுக் கொள்ளத் தெரியாமல், நீங்கள் கேள்வியைத் தொடர்வதற்கு நான் என்ன செய்ய முடியும்? அகதிப்பாஸ்போர்ட் என்ற ஒன்று UNHCR இல் பதிந்து, முகாம்களிலிருந்து, நாடற்ற, அடையாள அட்டைகள் அற்ற, Government sponsored refugees க்கு மட்டும் தான் கொடுக்கப்படுவது என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் இதுவரை இலங்கைத் தமிழர்களை வெளிநாட்டு அகதி முகாம்களிலிருந்து நேரடியாக எந்த நாடும் ஏற்றுக் கொண்டது பற்றி எனக்குத் தெரியாது. மன்னிக்கவும், நண்பர்களிடமே, அவர்களாகக் கூறினாலே தவிர, அவர்களின் சம்பளம், மற்றும் அவர்களின் Immigration status பற்றிக் கேட்பதெல்லாம் பண்பற்ற செயல் என்பார்கள், ஆனால் நீங்கள் என்னடாவென்றால் ஒரு இணையத்தளத்தில் வந்து கேள்வி கேட்பது மட்டுமன்றி, நான் பதிலளித்த பின்பும், நாணயமற்ற பதில் என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு எப்படிப் பதிலளிப்பதென்று எனக்குத் தெரியவில்லை.

              //இன்னும் தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் அகதிகளாகத்தான் இருக்கிறார்கள்.///

              அது தான் இந்தியா எந்தளவுக்கு தமிழர்களை வெறுக்கிறது, தமிழர்களைப் பாரபட்சமாக நடத்துகிறது என்பதற்குச் சான்றாகும். ஆனால் திபெத்திய அகதிகளுக்கு சகல உரிமைகளையும், வசதிகளையும் இந்தியா வழங்குகிறது. வசதியற்ற காரணத்தால் இந்தியாவுக்குச் சென்ற ஈழத்தமிழ் அகதிகள் தான் உண்மையில் பாவப்பட்டவர்கள். வேறு ஏதாவது நாடுகளுக்குப் போயிருந்தால், அவர்களின் இரண்டாவது தலைமுறையினரின் தலையெழுத்தே மாறியிருக்கும்.

              //என்ன வந்தாலும் இந்தியாவின் ஒற்றுமைக்கு பங்கம் வருவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவே.///

              உங்களின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். இதைத் தான் நான் ‘தமிழ்நாடு, தனி நாடாக இருந்தால், ஏனைய நாடுகள் எவ்வாறு சட்டவிரோத குடிவரவைக் கட்டுப்படுத்துகிறார்களோ அவ்வாறு தமிழ்நாடும் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் இப்பொழுது இவையெல்லாம் வெறும் கற்பனையில் மட்டும் தான் சாத்தியமாகும்.’ என்று முன்பே குறிப்பிட்டேன். சில சாம்பார்வாய்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 🙂

  16. வினவுக்கு ,

    வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றிய இப்பெண்களின் புரிதலில் உடன்படும் வினவுக்கு என் கேள்விகள் :
    [1]வேலை தேடி செல்பவர்கள் அம்மாநிலத்தின் மொழியை கற்க வேண்டுமா ? அல்லது அம்மாநிலத்தவ்ர்கள் வேலை தேடி செல்பவர்கள் மொழியை கற்க வேண்டுமா ? என்ன கொடுமை வினவு இது ?வடமாநிலத் தொழிலாளர்கள் தானே அவர்கள் பிழைப்பு தேடிவந்த தமிழ் நாட்டின் மொழியை கற்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்பெண்களின் முட்டாள் தனமான வாதத்திற்கு வினவு உடன்ப்டுகின்றது.

    [2]”அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க” என்ன வினவு அவர்கள் அவர்கள் ஊரில் நல்லா இருந்தும் தான் பிழைக்க தமிழ் நாடு வந்தார்களா ?

    //ஒரு ரெடிமேட் துணிகள் கடையில் விற்பனையாளராக 3 பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

    “வடமாநிலத் தொழிலாளர்கள் வருவாங்க. நாங்களும் 1 வருஷத்தில அவங்களோட பேசி ஹிந்தி பேச கத்துக்கிட்டோம். உடனே எல்லாம் வாங்க மாட்டாங்க. நிறைய கேள்வி கேட்டு பேரம் பேசுவாங்க. அப்புறம்தான் வாங்குவாங்க. இதுவரைக்கும் எந்த தகராறும் வந்ததில்ல”

    “அவங்கள எப்படி சார் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும். நம்ம ஆளுங்க எவ்வளவு பேரு மத்த இடத்துக்கு போய் வேலை செய்றாங்க, வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்றாங்க. அவங்களை எல்லாம் துரத்திட்டா ஒத்துப்போமா. அது போலத்தான் இதுவும். அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க. அவங்களை போய் விரட்டணும்னு ஏன் சொல்றாங்க” என்றார்கள். ஆக தமிழ் பெண்களும் கூட வட இந்திய தொழிலாளிகளை புரிந்து கொள்கிறார்கள்.//
    //

    • தமிழ்-தாகம்,

      திரும்பவும் முதல்ல இருந்தா?

      //வேலை தேடி செல்பவர்கள் அம்மாநிலத்தின் மொழியை கற்க வேண்டுமா ? அல்லது அம்மாநிலத்தவ்ர்கள் வேலை தேடி செல்பவர்கள் மொழியை கற்க வேண்டுமா //

      முட்டாள்தனம் உங்களிடம் தான் உள்ளது. வட இந்திய தொழிலாளிகள் மேல் பரிவு உள்ளதாக காட்டிக் கொள்ளும் உமது தேசியம் இங்கே பல்லிளிக்கிறது. மொழியைக் கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம் மற்றும் தேவையைப் பொருத்தது. இந்தி மொழியைக் கற்றுக் கொண்டு என்ன திருக்குறளுக்கு விளக்கமா எழுதப் போறாங்க. அல்லது தமிழ் மொழியை கற்றுக் கொண்டு பெருவுடையார்கொவில் கல்வெட்டை படிக்கதான் போகிறார்களா.அவர்கள் மொழியை ஆய்ந்தறிந்து அகம் புறம் பேசவில்லை. அந்தப் பெண்களிடம் பொருட்களை வாங்க வரும் வட நாட்டுத் தொழிலாளி தமிழ் கற்றுக் கொள்வதும், அந்த பெண்கள் இந்திக் கற்றுக் கொள்வதும் இயல்பாய் , முன்திட்டம் ஏதும் இல்லாமல் இருப்பது உங்களது தேசியப் பார்வைக்குத்த் தெரியவில்லையா.

      //2]”அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க” என்ன வினவு அவர்கள் அவர்கள் ஊரில் நல்லா இருந்தும் தான் பிழைக்க தமிழ் நாடு வந்தார்களா ?//

      வினவு கட்டுரைல, அவங்களுக்கு புரட்சி கத்துகுடுக்கவோ, அல்லது மணியரசன் வகையறாக்களைப் பற்றி பாடமேடுக்கவோ போனதாக சொல்லவில்லையே. இது ஒரு கள ஆய்வேத் தவிர பிரசாரக் கூட்டம் அல்ல,அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே சொல்வது தான் நேர்மையானது அதுதான் தேவையானது. உண்மையில் முதலாளித்துவம் பற்றியோ, மறுகாலனியாக்கம் பற்றியோ அதனால் தான் அவர்கள் இங்கு வீசியடிக்கபடுகிரார்கள் என்பதுப் பற்றியோ அவர்களும் ஏதும் தெரியாது. வார்த்தைகளில் தொங்கி கொண்டு செக்கு மாட்டைப் போல சுற்றி வரும் நீங்க, என்னை இங்கு நடக்கும்.விவாதத்தை வசை பாடி கெடுக்க வேண்டாம் என்று வேறு அங்கலாய்ப்பு.

      நன்றி.

  17. சிவப்பு,

    தமிழகத்தை தேடிவந்த பாதிரியாரு அவருடைய ஐரிஸ் தாய் மொழியை நமக்கு கத்துதரவில்லை. அவர் தமிழ் மொழியை கற்றுத்தான் நமக்கே நாம் திராவிடர் என்றும் நமது மரபு ஆரிய மொழி மரபு அன்று என்றும் கற்றுகொடுத்தார். நம்ம மக்கள் மும்பாய்-தாராவியில் குடியேறிய போதும் அவர்கள் தமக்குள் தமிழ் மொழியை பேசினார்களே தவிர மாராதியர்களுடன் அவர்கள் மொழியில் தானே தொடர்பு கொண்டார்கள்.கர்நாடகா செல்லும் தமிழ் மக்கள் அம்மக்களின் மொழியை கற்கவில்லையா ? கன்னட மக்களுடன் தமிழ் மொழியிலா தொடர்பு கொள்கின்றனர். ஏன் ஈழ தமிழ் அகதி வியாசன் என்ன கனடாவில் தமிழ் மொழியிலா அம்மக்களுடன் தொடர்பு கொள்கின்றனர் ? இங்கு யாருடைய மொழி உணர்வு,மொழிபற்று பல்லிளிக்கின்றது சிவப்பு ?

    இக்கட்டுரை இருமுறைகளில் கட்டமைக்கபட்டு உள்ளது . ஒன்று வட நாட்டு தொழிலாரர்கள் மற்றும் தமிழ் மக்கள் கொடுக்கும் பேட்டி. மற்றது அதை சார்ந்து வினவு எழுதியுள்ள கருத்துக்கள். தமிழ் மக்கள் கூறும் தவறான விடயத்தை, கருத்துக்களை வினவு அப்படியே தன் கட்டுரையில் ஏற்பதை தான் நான் காட்டியுள்ளேன்.

    • தமிழ்-தாகம் ,

      1)வட இந்திய தொழிலாளிகள் கண்டிப்பாக கட்டாயமாக தமிழ் கற்றுத் தான் ஆக வேண்டுமா? பிழைக்க வந்த ஒரேக் காரணத்திற்காக அவர்களை இப்படி கட்டயப்படுத்தலாமா? வினவு என்ன தமிழ் தேசியமா பேசுகிறது. சர்வதேசியம் பேசும் ஒருவர் தாங்கள் கூறுவதை நிராகரிக்கவே செய்வர்.

      2)எனது அலுவலகத்தில் இருக்கும் அலுவலக பாதுகாவலர்கள் பெரும்பாலும் இந்தி பேசக் கூடியவர்கள் தான். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அரைகுறையாக, ஏதோ அவர்களின் தேவைகளுக்காக தமிழ் பேசக் கற்றுக் கொண்டு உள்ளனர். நாங்கள் யாரும் அவர்களிடம் இந்திப் பேசுவதில்லை.தமிழில் தான் பேசுகிறோம்.

      3)அடிக்கட்டுமான வேளைகளில் ஈடுபடும் வட இந்தியத் தொழிலாளிகள் தங்குமிடம்,வேலை செய்யுமிடம் பெரும்பாலும் அவர்கள் தான் இருக்கிறார்கள்.போலிஸ் தொல்லை,வாடைகைக்கு வீடு மறுப்பு,மணியரசன் போன்ற தேசியவியாதிகளின் கொசுத் தொல்லை, வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேலை போன்றக் காரணங்களிளால் அதாவது கிட்டத்தட்ட என்னதான் தமிழ்நாட்டில் வேலை செய்தாலும் ஒரு ஒதுக்கப்பட்ட சேரி மக்கள் போல தான் அவர்கள் வாழ்கிறார்கள். இந்த நிலையிலும் அவர்கள் தேவைக்காக ஓரளவிற்கு தமிழ் பேசுகிறார்கள். இதை தான் வினவும் பதிவு செய்திருகிறது. வட இந்திய மக்கள் தமிழ் பேசுவதும், தமிழ் மக்கள் இந்தி பேசுவதும் நல்லது தானே.இங்கே எதுவும் கட்டாயம் இல்லை. புறச் சூழலின் அழுத்தத்தால் அனைத்தும் நடக்கின்றன. அகச் சூழலிலும் இது நடக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ஒரு வீடும் குடும்ப அட்டையும் கிடைத்தால் திருக்குறளையும் அருட்ப்பவையும் கூட கற்றுக் கொள்வார்கள்.ஹ்ம்ம் விடுவார்களா போலி தமிழ் தேசியம் பேசுவோர்.

      உண்மையில் அந்த மக்களுக்கு , அந்தத் தொழிலாளிகள் இங்கே கொண்டு வரப்படும் மூலக்காரணங்கள் ஏதும் தெரியா. ஆனால் அதுவல்ல பிரச்சினை, உழைக்கும் மக்களின் கருத்துக்களும் போலி தேசியம் பேசுவோரின் கருத்துக்களும் முழுக்க முழுக்க எதிராக இருக்கின்றனவே அது தான் இன்றியமையா. இரண்டுக் கருத்துக்களையும் மோத செய்து, போலி தேசியத்தின் முகத்திரையைக் கிழிப்பதில் அந்த மக்கள் பேசிய உண்மையானக் கருத்துக்கள் அப்படியே கொண்டு வந்திருக்கும் வினவிற்கு எனது பாராட்டை மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்.

      நன்றி.

      • சிவப்பு ,

        நீங்கள் இன்னும் என் பின்னுட்டத்துக்கு பதில் அளிக்கவே இல்லை சிவப்பு !சரி மிகவும் நேரடியான உதாரணத்துக்கு வருவோம். நாம் பஞ்சம் பிழைக்க, மீன் வெட்டும் தொழில்-வேலை செய்ய வட துருவ ரஷ்ய நாட்டுக்கு , தமிழ் நாட்டில் இருந்து செல்வதாக வைத்து கொள்வோம். வேலை செய்யும் எடத்தில் ,தங்கும் குடியிருப்புகளில் , பொது இடத்தில் நான் அவர்கள் மொழியை கற்று பேசி நட்புகளை உருவாக்கி கொள்கிறேன்.அதற்கு மாறான நிலையில் வட துருவ மக்கள் நம் மொழியை-தமிழை தான் பேச வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தேனீர் குடிக்க கூட அதன் பெயரை தேனீர் தேனீர் தேனீர் என்று பெனாத்திக்கொண்டு நிற்க வேண்டியது தான். அதே சமையம் நான் அவர்களின் ரஷ்ய மொழியில் чай [chay] என்று கூறி கேட்டு வாங்கிகுடித்து விட்டு என் ருஷ்ய சிநேகிதியுடன்[சக தொழிலாளி] அவளின் மொழியிலேயே அவள் விரும்பும் எளிய ரஷ்ய மொழி கவிதையை பூங்காவில் அமர்ந்து மொக்கை போட்டு ,அவளையே ருஷ்ய மொழியை கற்பிக்கும் என் ஆசிரியை ஆக கொண்டு ருஷ்ய மொழியை கற்று ,அவள் மனதில் உள்ளதை அறீந்து காதல் கடிதம் கொடுத்து ……..

        இவ்வாறாக நான் என் அக ,புற வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்வேன். [இன்னும் வெகு தொலைவில் இருந்து தேனீர் தேனீர் தேனீர் என்று யாரோ ருசியர்களுக்கு பொருள் புரியாமல் பெனாத்திக்கொண்டு இருக்கும் ஓசை கேட்கிறது….. பாவம் சிவப்பு !]

        • தமிழ்-தாகம்,

          //1]வேலை தேடி செல்பவர்கள் அம்மாநிலத்தின் மொழியை கற்க வேண்டுமா ? அல்லது அம்மாநிலத்தவ்ர்கள் வேலை தேடி செல்பவர்கள் மொழியை கற்க வேண்டுமா ? என்ன கொடுமை வினவு இது ?வடமாநிலத் தொழிலாளர்கள் தானே அவர்கள் பிழைப்பு தேடிவந்த தமிழ் நாட்டின் மொழியை கற்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்பெண்களின் முட்டாள் தனமான வாதத்திற்கு வினவு உடன்ப்டுகின்றது.//

          மொழியைக் கற்றுக் கொள்வது விருப்பதாலும் தேவையினாலும் தான் நடக்கும். சும்மா செத்த மொழியை திணிக்கிற மாதிரி அவர்களை தமிழ் கற்றுக் கொள்ள கட்டபயடுத்த முடியாது. அது மட்டுமல்லாமல் இதைப் பற்றி நாம் விவாதம் செய்வதே வீணானது. ஏனெனில், அவர்களுக்குத் தேவையான அளவு தமிழ் பேசுகிறார்கள் என்பது யதார்த்தம். தமிழ் தேசியவாதிகள் வரம்பிடும் அளவிற்கு அவர்களால் தமிழ் கற்றுக் கொள்ள போதுமான சூழல் இங்கே இல்லை. இது தமிழ் தொழிலாளிகளுக்கும் பொருந்தும்.

          //[2]”அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க” என்ன வினவு அவர்கள் அவர்கள் ஊரில் நல்லா இருந்தும் தான் பிழைக்க தமிழ் நாடு வந்தார்களா ?//

          உண்மையில் வட இந்தியத் தொழிலாளர்கள் என்ன விதமானப் புறச் சூழலினால் இங்கே வருகிறார்கள் என்று இங்கேயிருக்கும் அந்த தமிழ் பெண்களுக்குத் தெரியா. அதே போல வினவுக் குழுவும் அந்தப் புறச் சூழலை விளக்கவும் செல்லவில்லை என்று கட்டுரையை வாசிக்கும் பொது தெரிகிறது.அப்படிஎன்றால் வினவுக் குழுவின் நோக்கம், அவர்களே சொல்வது போல,
          “வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள்”
          என்பது தான்.

          அவ்ளோ தான். மிகவும் எளிமையாக இருக்கும் இந்தக் கட்டுரையில் உமது தமிழ் தேசிய ஊதுகுழலை வைத்துப் பார்ப்பதால் வரும் பிரச்சினை இது. இது சரி செய்யகூடிய பிரச்சினை தான்.

          அப்புறம், ஐரிஸ்,ரஷ்ய வட துருவம்,தேனீர் என்று பம்மாத்து காண்பிப்பது எதற்காக. தேசியவாதம் ஒருபுறமும், சர்வதேசியம் மறுபுறமும், சேத்துல ஒருகால் ஆத்துல ஒரு காலும் வைக்காதீங்க. அப்புறம் உங்களுக்கு தான் பிரச்சினை.

          இதற்க்கு மேல் இந்த மொழி விவகாரத்தில் விவாதிக்க எனக்கு ஒன்றும் இல்லை. முன்முடிவுடன் கேள்விகளைக் கேட்டு அதற்க்கு அதே முன் முடிவுடன் பதிலை எதிர்பார்ப்பது உங்களது ஜனநாயக உரிமை. அனால் என்ன செய்ய. செக்கு மாடு போல என்னால் சுத்தி சுத்தி வர முடியாது.

          புரிதலுக்கு நன்றி.

          • சிவப்பு,

            என் பின்னுட்டம் 20.1.1ல் நான் விளக்கியுள்ள உதாரணம் நான் பஞ்சம் பிழைக்க, மீன் வெட்டும் தொழில்-வேலை செய்ய வட துருவ ரஷ்ய நாட்டுக்கு செல்வதால் அது சர்வதேசியவாதத்தையும் , மேலும் வட துருவ ரஷ்ய நாட்டு மக்களின் ருசிய மொழியை கற்பதால் அவர்களின் தேசிய இன உரிமையையும் மதிக்கின்றதாக தானே பொருள் ? பிழைப்பிற்காக வேறு தேசியத்துக்கு இடம் பெயரும் தொழிலார்கள் தன் மொழியையும் ,இனத்தையும் அங்கு முதன்மை படுத்த வேண்டிய அவசியம் என்ன ? அவர்கள் இடம் பெயர காரணம் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் சரியான ஊதியமும் அளிக்காத அவர் தேசியத்து முதலாளிகள்,மக்கள் என்னும் போது அத் தேசிய மொழியையும் ,தேசிய இனத்தையும் உதிரும் மயிர் அளவுக்கு மட்டுமே மதிக்க வேண்டும். நாம்[தொழிலாளர்கள் ] எந்த தேசிய இனமக்களை நோக்கி வேலை தேடி செல்கின்றோமோ அவர்களின் மொழியையும் ,இன மரபுகளையும் நாமும் பயின்று அவர்களுடன் ஒன்றுவதே அறிவு பூர்வமானது,இயற்க்கையானது .

            ஐரிஸ்,ரஷ்ய வட துருவம்,தேனீர் என்று பேசுவது எல்லாம் பம்மாத்து அல்ல சிவப்பு ! வேலை தேடி செல்பவர்கள் அம்மாநிலத்தின் மொழியை கற்க வேண்டுமா ? அல்லது அம்மாநிலத்தவ்ர்கள் வேலை தேடி செல்பவர்கள் மொழியை கற்க வேண்டுமா ? வடமாநிலத் தொழிலாளர்கள் தானே அவர்கள் பிழைப்பு தேடிவந்த தமிழ் நாட்டின் மொழியை கற்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்பெண்களின் முட்டாள் தனமான வாதத்திற்கு வினவு உடன்ப்டுகின்றது.

            என்ற என் கருத்தை வளிமையுட்ட நான் கொடுத்த எதார்த்தமான உதாரணங்கள்.

            சிவப்புக்கு தொழிலாளர் இடம் பெயர்வது சர்வதேசியமாக தெரிவது மிகசரியான கருத்தே ! ஆனால் அவ்விட பெயர்வுகளால் ஏற்படும் மொழி ,இன மரபு சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.தொழர் லெனின் அவர் கட்டமைத்த USSRல் தேசிய இன பிரச்சனைகளை எப்படி எதிர் கொண்டார் என்று சிவப்பு படித்து அறிவது நல்லது.

            //அப்புறம், ஐரிஸ்,ரஷ்ய வட துருவம்,தேனீர் என்று பம்மாத்து காண்பிப்பது எதற்காக. தேசியவாதம் ஒருபுறமும், சர்வதேசியம் மறுபுறமும், சேத்துல ஒருகால் ஆத்துல ஒரு காலும் வைக்காதீங்க. அப்புறம் உங்களுக்கு தான் பிரச்சினை.//

            • தமிழ்-தாகம் ,

              வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழர்களை இந்தி கற்றுக் கொள்ளுமாறு கட்டயபடுத்தவில்லை. அதே போல தமிழ் தொழிலாளர்களும் அவர்களை இந்தி படிக்குமாறு கட்டயபடுத்தவில்லை. பின் எப்படி, கற்றுக் கொண்டார்கள்? அது தான் அவர்களிடம் இருந்த ஒரே தெரிவு.தேவைக்காக கற்றுக் கொண்டனர். இதற்க்கு எதற்கய்யா தாங்கள் ரஷ்யா வரைக்கும் பயணம் செய்து தோழர் லெனினை தொல்லை செய்கிறீர்கள்?

              தாங்கள் கூறியபடி,இன,மொழி மரபுச் சிக்கல்களை ரஷ்யாவில் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுத் தெரியாது தான் .

              அதற்காக இந்த எளிய உண்மையைப் புரிந்துக் கொள்ள வலியனே லெனினை ஏன் இழுப்பானேன்.

              நன்றி.

              • சிவப்பு ,

                பிற மொழி மக்கள் தமிழ் நாட்டில் இடம் பெயரும் போது அவர்கள் மொழியில் தமிழ் நாட்டு மக்களுடன் பேசவேண்டிய அவசியம் மயிரலவிற்காவது இருக்கின்றதா சிவப்பு ?வடகிழக்கு ஒரியா ,மேற்கு வங்க ,ஆந்திர தொழிலார்கள்,இத்தகைய மொழி திணிப்பு வேலையை தமிழ் மக்களிடம் காட்டுவது இல்லை. ஆனால் ஹிந்தி மொழிபேசும் வட நாட்டு தொழிலாலர்கள் மட்டும் ஹிந்தி மொழியிலேயே தமிழ் நாட்டு சிறுவணிகர்களிடம் உரையாடுவது எப்படி சரியாகும் ?

                சோவியத் யூனியனின் தலைவராக இருந்த திரு லெனின் பலவேறு தேசிய இன மக்களையும் எப்படி ஒருங்கினைத்தார் என்பது மிகவும் கற்று அறிய வேண்டியது ஆகும். திரு லெனின் அவர் கட்டமைத்த குடியரசில் பலவேறு தேசிய இன மக்களையும் ஒருங்கினைத்தை கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் அல்ல அனைவருமே கற்க வேண்டியது மிகவும் அவசியமானது தான்.

                //வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழர்களை இந்தி கற்றுக் கொள்ளுமாறு கட்டயபடுத்தவில்லை. அதே போல தமிழ் தொழிலாளர்களும் அவர்களை இந்தி படிக்குமாறு கட்டயபடுத்தவில்லை. பின் எப்படி, கற்றுக் கொண்டார்கள்? அது தான் அவர்களிடம் இருந்த ஒரே தெரிவு.தேவைக்காக கற்றுக் கொண்டனர். இதற்க்கு எதற்கய்யா தாங்கள் ரஷ்யா வரைக்கும் பயணம் செய்து தோழர் லெனினை தொல்லை செய்கிறீர்கள்?
                தாங்கள் கூறியபடி,இன,மொழி மரபுச் சிக்கல்களை ரஷ்யாவில் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுத் தெரியாது தான் .//

      • சிவப்பு,

        குடும்பத்துடன் தமிழ் நாடு வந்து உள்ள பானியாக்கள் இங்கு ஒரு குடும்ப அட்டையும், அவர்கள் சொந்த ஊரில் இன்னும் ஒரு குடும்ப அட்டையும், வைத்துக்கொண்டு தான் இருகின்றனர்.எம்மால் ஆதாரத்துடன் நிருபிக்க முடியும்! அவர்கள் எல்லாம் என்ன தேவாரமும்,திருவாசகமும் பாடிக்கொண்டா இருகின்றனர் !! வட இந்திய தொழிலாளர்களை பொருத்த வரையில் அவர்கள் குடும்பத்துடன் இங்கு வருவது இல்லை. தனிநபராக தான் வேலைதேடி வருகின்றனர். அவர்கள் எடபெயர்ப்பு தற்காலிகம் எனவே அவர்கள் தன் ஊரில் உள்ள குடும்ப அட்டையில் தன் பெயரை விடுவித்துகொள்வது இல்லை. அதனால் இங்கு அவர்கள் குடும்ப அட்டை கோரவேண்டிய அவசியமும் இல்லை! //அவர்களுக்கு ஒரு வீடும் குடும்ப அட்டையும் கிடைத்தால் திருக்குறளையும் அருட்ப்பவையும் கூட கற்றுக் கொள்வார்கள்.//

        • தமிழ்-தாகம்,

          இங்கே பேசு பொருளாக இருப்பது, மற்றும் நான் பேசிக் கொண்டு இருப்பதும் வினவுக் குழு சந்ந்தித்துப் பேசிய வட இந்தியத் தொழிலாளர்களே.

          இடையில் கொண்டு வந்து பணியாக்களையும் குனியாக்களையும் சொருகி,அவர்களுக்கு குடும்ப அட்டை இருப்பதையும் நிரூபிப்பதாக சொல்லி விவாதத்தை செக்கு மாடு செக்க சுத்தி வர மாதிரி பண்ணாதீங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.

          நன்றி.

          • ஆத்திரத்தில் அறிவிழகின்றார் சிவப்பு :

            நான் கூறியதை முழுமையாக படிக்கவும்,பின்பு பதில் அளிக்கவும் சிவப்பு:

            வட இந்திய தொழிலாளர்களை பொருத்த வரையில் அவர்கள் குடும்பத்துடன் இங்கு வருவது இல்லை. தனிநபராக தான் வேலைதேடி வருகின்றனர். அவர்கள் எடபெயர்ப்பு தற்காலிகம் எனவே அவர்கள் தன் ஊரில் உள்ள குடும்ப அட்டையில் தன் பெயரை விடுவித்துகொள்வது இல்லை. அதனால் இங்கு அவர்கள் குடும்ப அட்டை கோரவேண்டிய அவசியமும் இல்லை!

            //இடையில் கொண்டு வந்து பணியாக்களையும் குனியாக்களையும் சொருகி,அவர்களுக்கு குடும்ப அட்டை இருப்பதையும் நிரூபிப்பதாக சொல்லி விவாதத்தை செக்கு மாடு செக்க சுத்தி வர மாதிரி பண்ணாதீங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.//

            • தமிழ்-தாகம்

              //வட இந்திய தொழிலாளர்களை பொருத்த வரையில் அவர்கள் குடும்பத்துடன் இங்கு வருவது இல்லை. தனிநபராக தான் வேலைதேடி வருகின்றனர். அவர்கள் எடபெயர்ப்பு தற்காலிகம் எனவே அவர்கள் தன் ஊரில் உள்ள குடும்ப அட்டையில் தன் பெயரை விடுவித்துகொள்வது இல்லை. அதனால் இங்கு அவர்கள் குடும்ப அட்டை கோரவேண்டிய அவசியமும் இல்லை!//

              இதை தீர்மானிக்க நீங்கள் யார்? குடும்ப அட்டையைக் கோர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்று கூறுவதற்கு நீங்கள் யார்?இடபெயர்சி தற்காலிகமானது தான் என்று எப்படி எடித்து சொல்கிறீர்கள்? அதற்க்கான முழு உரிமையும் அவர்களுக்குத் தான் இருக்கிறது. தாங்கள் சொல்வது போல அல்லாமல் குடும்பமாக வந்து வசிக்கும் வட இந்தியத் தொழிலாளரும் இருக்கத் தான் செய்கின்றனர். சரி, இங்கே வேலை செய்யும் அவர்கள் இங்கேத் திருமணம் செய்து தங்க நினைத்தால் என்ன செய்வீர்கள், தேசியவாதிகளே?

              ஆத்திரத்தில் நான் அறிவிலக்கலாம் ஆனால் தாங்கள் தேசியவாத சகதியில் முழுகி முத்தெடுக்கலாமா?

              நன்றி.

              • சிவப்பு,

                சிவப்பின் கண்கள் சிவக்க வர்க்க போரை என்மீது செலுத்துகின்றார் ! குடும்ம்பத்துடன் நிரந்தரமாக தமிழ் நாட்டில் குடியேறாத தனித்த வட இந்திய தொழிலாளர்களுக்கு நான் கூறுவது …

                “வட இந்திய தொழிலாளர்களை பொருத்த வரையில் அவர்கள் குடும்பத்துடன் இங்கு வருவது இல்லை. தனிநபராக தான் வேலைதேடி வருகின்றனர். அவர்கள் எடபெயர்ப்பு தற்காலிகம் எனவே அவர்கள் தன் ஊரில் உள்ள குடும்ப அட்டையில் தன் பெயரை விடுவித்துகொள்வது இல்லை. அதனால் இங்கு அவர்கள் குடும்ப அட்டை கோரவேண்டிய அவசியமும் இல்லை”

                மிகவும் பொருந்தும் என்பது சிவப்பின் அறிவிற்கு புரியவில்லை.

                அடுத்த சாத்தியமாக குடும்ம்பத்துடன் நிரந்தரமாக தமிழ் நாட்டில் குடிஏறும் வட இந்திய தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை உண்டா என்பது பற்றி கேட்கின்றார் சிவப்பு ! அவர்கள் அவர்களது மாநிலத்தில் அவர்களின் பழைய குடும்ப அட்டையை கொடுத்துவிட்டு அங்கு உள்ள மாநில சிவில் அதிகாரிகளிடம் அதற்கான ஆதாரத்துடன் வந்து தமிழ் நாட்டில் ஒரு வாடகை வீட்டில் முகவரியை அவர்கள் ஏற்ப்டுத்திக்கொண்டால் மட்டுமே தமிழ் நாட்டில் குடும்ப அட்டைக்கு மனு அளிப்பதே சாத்தியம். முதலில் அவர்கள் மாநிலத்தில் அவர்கள் குடும்ப அட்டை விடுவித்துக்கொள்ள தயாரா ?

                அடுத்த சாத்தியமாக இங்கே வேலை செய்யும் அவர்கள் இங்கேத் திருமணம் செய்து தங்க நினைத்தால் என்ன செய்வீர்கள் என்று சிவப்பு கேட்கின்றார்.

                இதற்கு தான் என் பின்னுட்டம் 23.1 மூலம் பதில் அளித்து உள்ளேன். மேலும் விரிவாக கூற வேண்டும் என்றால் மீண்டும் நாம் ருஷ்ய உதாரண கதைக்கு [23.1] தான் செல்லவேண்டும். அங்கே நான் கூறியதை இங்கே பொருத்தி பார்பதில் சிவப்புக்கு ஏதும் பிரச்சனை இருக்காது என்று நம்புகின்றேன்

                //இதை தீர்மானிக்க நீங்கள் யார்? குடும்ப அட்டையைக் கோர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்று கூறுவதற்கு நீங்கள் யார்?
                இடபெயர்சி தற்காலிகமானது தான் என்று எப்படி எடித்து சொல்கிறீர்கள்? அதற்க்கான முழு உரிமையும் அவர்களுக்குத் தான் இருக்கிறது.

                தாங்கள் சொல்வது போல அல்லாமல் குடும்பமாக வந்து வசிக்கும் வட இந்தியத் தொழிலாளரும் இருக்கத் தான் செய்கின்றனர். சரி, இங்கே வேலை செய்யும் அவர்கள் இங்கேத் திருமணம் செய்து தங்க நினைத்தால் என்ன செய்வீர்கள், தேசியவாதிகளே?//

      • சிவப்பு,

        தொழிலாளர்களின் தேசம் கடந்த இடபெயர்வுகளை சர்வதேசியம் என்று கூறுவது மிகசரியானது தான் சிவப்பு.அத்தைகைய இடபெயர்வுகளின் போது ஏற்படும் மொழி சிக்கல்களை எப்படி எதிர் கொளவது என்பதை நாம் அறீந்து இருக்க வேண்டாமா ? அதற்காக தான் இவ் விவாதம்.

        உங்கள் முதன்மையான கேள்விகளான

        [1]வட இந்திய தொழிலாளிகள் கண்டிப்பாக கட்டாயமாக தமிழ் கற்றுத் தான் ஆக வேண்டுமா?
        [2]பிழைக்க வந்த ஒரேக் காரணத்திற்காக அவர்களை இப்படி கட்டயப்படுத்தலாமா?

        ஆகியவற்றுக்கு என் பின்னுடம் மூலம் ஐரிஸ்,ரஷ்ய வட துருவம் எல்லாம் சென்று பதில் அளித்து உள்ளேன். என் பதில் உமக்கு ஏற்புடையதாக இருக்காது . என் என்றால் நீர் கூறுவது படி நீர் தேசியத்தை நிராகரிப்பது தான் காரணம்

        //வட இந்திய தொழிலாளிகள் கண்டிப்பாக கட்டாயமாக தமிழ் கற்றுத் தான் ஆக வேண்டுமா? பிழைக்க வந்த ஒரேக் காரணத்திற்காக அவர்களை இப்படி கட்டயப்படுத்தலாமா? வினவு என்ன தமிழ் தேசியமா பேசுகிறது. சர்வதேசியம் பேசும் ஒருவர் தாங்கள் கூறுவதை நிராகரிக்கவே செய்வர்.//

        • தமிழ்-தாகம்

          //வேலை தேடி செல்பவர்கள் அம்மாநிலத்தின் மொழியை கற்க வேண்டுமா ? அல்லது அம்மாநிலத்தவ்ர்கள் வேலை தேடி செல்பவர்கள் மொழியை கற்க வேண்டுமா //

          தாங்கள் கேள்வி கேட்ட தோரனையை பாருங்கள். இது ஒரு பாசிசத்தனமான கேள்வியாக உங்களுக்குப் படவில்லையா? இது வட இந்தியத் தொழிலாளிகள் மேல் கட்டளையிட்டுத் தமிழைக் கத்துக்க சொல்வது போல் உள்ளது.

          ==>வேறு நண்பர்கள் யாரேனும் எனதுப் புரிதலை தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்

          எனது பதில்,

          முதல் பாதிக்கு : வட இந்தியத் தொழிலாளிகள் அவர்களுக்குத் தேவையான அளவிற்கு தமிழ் பேசத் தான் செய்கின்றனர். நான் வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள வட இந்திய காவலாளிகள் முடிந்த வரை எங்களிடம் தமிழ் தான் பேசுகிறார்கள்.

          இரண்டாவது பாதிக்கு : அதே போல இங்கேயுள்ள தொழிலாளிகளும் இந்தி ஓரளவிற்கு கற்றுக் கொண்டுள்ளனர்.இது அவர்களாகவே தேவைக்காக கற்றுக் கொண்டது.
          இங்கே புறச் சூழல் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறதெத் தவிர தங்களது கேள்வியல்ல.மேற்சொன்ன பதில் இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.

          அப்புறம் , இங்கே நான் எங்கே தேசியத்தை நிராகரிக்கிறேன் என்பதை தாங்கள் தான் விளக்க வேண்டும்.மையப்படுத்தப்பட்ட ஒரு அதிகார மையத்தின்(மறுகாலனியாக சூழலில் வாழும்) குடையில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதும், ஒருவர் மொழியை மற்றொருவர் பேசுவதும் தவிர்க்கவியலாதது.ஒரு மாநில அரசு மட்டும் எந்த சிறப்பான சட்டமும் இயற்றி இப்படிக் கலப்பதை தடுக்க முடியாது(குறைந்தது இந்திய சமூகப் பொருளாதார அமைப்பு படி). இங்கே எனது புரிதலின் படி, முதலில் நிலவுகின்ற அரசமைப்பை தகர்த்து விட்டு,பாட்டளிகளின் புதிய அரசில் மட்டுமே பிரிந்து போகும் தேசியம் ஏற்பட முடியும் என்று நான் கூறினால் , நான் தேசியத்திற்கு எதிரி என்று கூறுகிறீர்.

          நன்றி.

          • சிவப்பு,

            உலகம் முழுவதும் உள்ள நடைமுறை, இடம் பெயரும் தொழிலாளர்கள் இடம் பெயரும் தேசிய இனத்தின் ,நாட்டின் மொழியை கற்பது தான் என்பது தெரியாமல் சிவப்பு பாசிசம் ,நாசிசம் என்று போலியாக கூவுகின்றார். இதற்க்கான உதாரங்களை எவ்வளவு தான் கொடுத்தாலும் சிவப்பின் அறிவிற்கு ஏறுமா என்று தெரியவில்லை.

            **தமிழ் நாட்டில் இருந்து மும்பைக்கு ,கர்நாட்காவிர்ற்கு இடம் பெயர்ந்த தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சென்று உள்ள மாநில மக்களிடம் தமிழ் மொழியை திணிக்காமல் அம்மாநில மக்களின் மொழியில் தான் பேசுகின்றார்கள்.

            **ஈழ மக்கள் அகதியாக ஐரோப்பிய நாடுகளுக்கு உதாரணமாக ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்த போது அந்நாட்டின் மக்களிடம் தமிழ் மொழியை திணிக்காமல் ஜெர்மனி மொழியை கற்று தான் வேலை செய்து பிழைக்கின்றனர்.

            **என் பின்னுட்ட உதாரணம் 23.1

            உலக நடைமுறை இப்படி இருக்க “வேலை தேடி செல்பவர்கள் அம்மாநிலத்தின் மொழியை கற்க வேண்டுமா ? அல்லது அம்மாநிலத்தவ்ர்கள் வேலை தேடி செல்பவர்கள் மொழியை கற்க வேண்டுமா” என்ற கேள்வி சிவப்புக்கு பாசிசமாக இருப்பது ஏன் என்றால் பாசிசம் ,நாசிசம் என்று கூறுவதன் மூலம் என் கருத்துக்களை அடைத்து விடலாம் என்று கணவுகானுகின்றார் சிவப்பு.

            //தாங்கள் கேள்வி கேட்ட தோரனையை பாருங்கள். இது ஒரு பாசிசத்தனமான கேள்வியாக உங்களுக்குப் படவில்லையா? இது வட இந்தியத் தொழிலாளிகள் மேல் கட்டளையிட்டுத் தமிழைக் கத்துக்க சொல்வது போல் உள்ளது.//

            • தமிழ்-தாகம்,

              //வடகிழக்கு ஒரியா ,மேற்கு வங்க ,ஆந்திர தொழிலார்கள்,இத்தகைய மொழி திணிப்பு வேலையை தமிழ் மக்களிடம் காட்டுவது இல்லை. ஆனால் ஹிந்தி மொழிபேசும் வட நாட்டு தொழிலாலர்கள் மட்டும் ஹிந்தி மொழியிலேயே தமிழ் நாட்டு சிறுவணிகர்களிடம் உரையாடுவது எப்படி சரியாகும் ? /

              அப்போ இந்திப் பேசும் தொழிலாளர்கள் இங்கே இந்தியைத் திணிக்கிறார்களா?இதுப் புதுசா இருக்கே.
              அய்யா, வட நாட்டு தொழிலாளர்கள் அனைவரும் இந்தியிலேயே தான் இங்கு பேசுகிறார்கள் என்றால் இங்கிருக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர் அனைவருக்கும் இந்தி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அது உண்மையா?

              தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு இந்தி பேசுபவர் தமிழில் பேரம் பேசுவதும், ஒரு ஆடோக்கரர் இந்தியில் பேசுவதும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் குண்டக்க மண்டக்க வரட்டுத் தமிழ் தேசியமும் பேசி அதில் ஊறுகாய் போல சர்வதேசியமும் பேசி பணியாக்களையும் இழுத்து வுட்டு ரஷ்யா வரைக்கும் சென்று ரஷ்ய மொழியைக் கற்று ரஷ்ய தேசியமும் பேசிவிட்டு லைட்டா லெனினையும் இழுத்து விட்டு கடைசில் பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது.

              இதில் வேறு தோழர் ” கலாஷ்நிகோவ்” உடன் இவர் நடத்திய உரையை படிக்குமாறு சொல்லுகிறார். உண்மையில் தோழர் கலாஷ்நிகோவ் அருமையாக பேசியிருக்கிறார். இவர் அறுத்த அறுப்புக்கு, போட்ட ரம்பத்திற்கு அவர் உண்மையில் பொறுமையாக விளக்கியிருக்கிறார். உண்மையில் அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் அவரை மேற்கோள் காட்டிய நமது அருமைப் பூனைக்குட்டி “தமிழ்-தாகம்” என்ன கற்றுக் கொண்டுவிட்டார். திரும்பியும் அதே அரவை.

              உண்மையில் இவருக்கு சரக்கு ஒன்றுமில்லை என்பது தெரிந்து விட்டது. சும்மா ரஷ்ய, ரஷ்ய தேசிய இனப்பிரச்சினை, லெனின் என்று கூறினால் ஒன்றும் தேறாது.

              நண்பர்களின் கவனத்திற்கு,
              இவரது ஒட்டுமொத்த சரக்கும் கிழேயுள்ள செக்கில் சுற்றி வருகிறது என்பதை தாழ்மையுடன் சொல்லி உரையை முடித்துக் கொள்கிறேன்,

              //வினவின் நோக்கம் இனவாதத்தை அம்பல்ப்டுதுவது என்றால் அதே வினவுக்கு இந்திய தேசிய இனங்களின் மீது பொருளாதார மோலன்மை செய்யும் பார்பன ,பானியாக்களை அம்பல படுத்துவதும் தானே நோக்கமாக இருக்க வேண்டும்.?//
              பரப்பான பணியாக்களை அம்பலபடுத்த வேண்டும் என்பது சரி தான். ஆனால் இது பார்பன-பனியாக்களை அம்பலபடுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கட்டுரையல்ல. இது ஒரு கள ஆய்வை(பேட்டின்னு கூட வெச்சுக்கலாம்) வினவு அதன் வாசகர்களுக்கு எழுத்து வடிவில் தந்திருக்கிறது. மேலும் பார்பன-பனியாக்களை பின்னூட்டங்களில் கூட அம்பலபடுத்த முடியும். அதை நீங்கள் செய்திருக்கலாம், நானும் கூட தங்களிடம் அதைத் தெரிவித்தேன். மாறாக செக்கு மாடு போல இந்த வரியையே பிடித்துத் தொங்கி கொண்டிருந்ததால் அனைவருக்கும் நேரம் தான் விரயம்.

              //வேலை தேடி செல்பவர்கள் அம்மாநிலத்தின் மொழியை கற்க வேண்டுமா ? அல்லது அம்மாநிலத்தவ்ர்கள் வேலை தேடி செல்பவர்கள் மொழியை கற்க வேண்டுமா ? என்ன கொடுமை வினவு இது ?//
              இது வினவு குழு, பேட்டியெடுத்த அந்தத் தொழிலாளர்கள் யாரும் தமிழ் பேசவேயில்லை என்றுக் கூறவில்லையே. அப்படி அவர்கள் பெசவில்லை என்றாலும் அது அவர்கள் தவறு அல்லவே. அவர்கள் கற்றுக் கொள்ளாததிற்கு பலக் காரணங்கள் இருந்திருக்கலாம். தாங்கள் அதைக் கூட விவாதிக்க வினவின் வாசகர்களை அழைத்திருக்கலாம். ஆனாலும் அதை இங்கே உங்களை பேசவிடாமல், உங்கள் வறட்டு தேசியவாதம் எனும் பூனைக்குட்டி சத்தம் போட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் மீண்டும் அதே செக்கு மாட்டுக் கதை தான்.

              //அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க” என்ன வினவு அவர்கள் அவர்கள் ஊரில் நல்லா இருந்தும் தான் பிழைக்க தமிழ் நாடு வந்தார்களா ?//

              உண்மையில் வினவுப் பேட்டிக் கண்டது, அது தமிழராக இருந்தாலும், வட இந்தியனாக இருந்தாலும் ஏழை எளிய மக்கள் தான். உண்மையில் அவர்களது ஏழ்மைக்குக் காரணம் அவர்கள் தான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி மக்கள் தான். அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு , அவர்களின் நிலைமைக்கு காரணம் இந்த மறுகாலனியாக்கம் தான் என்று தெரியாது. இந்த பின்னணியில், அவர்களை சந்தித்தது வினவுக் குழு. எதற்காக?

              “வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள் இவற்றை அறிய ஒரகடத்தில் இயங்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பொருள் வாங்க வரும் தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் பேசி தகவல் திரட்டினோம்.”

              இது ஒன்றும் வழக்கம் போல வினவில் எழுதப்படும் கட்டுரையல்ல. அதவது அவர்கள் கூறிய கருத்தை அப்படியே இங்கு வினவு வாசகர்களிடம் சேர்ப்பது(பேச்சு மொழியை-எழுத்தாக மாற்றுவது) தான் இதன் நோக்கமேத் தவிர அதில் இடைசெருகளாய் பணியாக்களையும் பார்ப்பனர்களையும் செருகுவது அல்ல. உண்மையில், நாம் என்ன செய்திருக்க வேண்டும், அவர்களது நிலைமைக்குக் காரணம் யார், ஏன் அவர்கள் இங்கே பெறுகின்றனர் என்று வினவு வாசகர்கள் பயன் பெரும் வகையில் கொண்டு போய் இருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல வேதாளம் முருங்கை மரம் ஏறியக் கதையாக, செக்கு மாடு சுற்றி சுற்றி வருவது போல நீங்களும் சுற்றி கட்டுரையையும் சுற்ற வைத்து விட்டீர்கள்.

              நன்றி.

  18. மும்பையில் ஒரு ம்ராட்டியர் தன் வீட்டுக்கு வெளியே இந்தியில் பேசினால் தான் தன் சொந்த மாநிலத்தில் பிழைக்க முடியும். அவர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே இப்படி ஒரு நிலை. அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் வர வேண்டும் என வினவு விரும்புகிறது. பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென்னிந்தியாவுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் தொழிலாளர் என்னும் பெயரில் போய் குடியேறுவது மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி. நம்மை பொறுத்தவரை அசாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு பகுதியில் இருந்து வருபவர்களை தமிழ்நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கலாம். அவர்களும் நம்மைப்போல் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட இந்திய அரசால் ஓரங்கட்டப்பட்டு அனைத்து விதங்களிலும் வஞ்சிக்கப்படுபவர்கள். இந்தி பேசும் வட இந்தியர்கள் (அவர்கள் ஏழைகளோ, பணக்காரர்களோ, படித்தவர்களோ, படிக்காதவர்களோ, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களோ அல்லது உயர்சாதியினரோ யாராக இருந்தாலும்) மிகவும் அபாயகரமானவர்கள். இங்கெ இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வகைதொகை இல்லாமல் வட இந்தியர்கள் தமிழகத்துக்குள் வந்து குடியேறுவதை “இந்து ஒற்றுமை” “தேஷ பக்தி” பற்றி பேசும் இந்துத்துவ பார்ப்பனீய சக்திகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து வரவேற்கிறார்கள். இந்த இடத்தில் தான் இந்துத்துவ சக்திகளும் வினவு கும்பலும் ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைந்தது குறித்து இந்துத்துவ சக்திகளுக்கு மிகுந்த வெறுப்பு உண்டு.

    மேலும் தொழிலாளர்கள் என்றால் அவர்கள் எப்போதும் யோக்கியர்கள் தான் என்பதும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் சூழ்நிலையும் மற்றவர்களும் தான் காரணம் என்பது இவர்களின் கொள்கை வக்கிரம்.

    இந்த உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தொழிலாளி நாடு, முதலாளி நாடு என்னும் அடையாளங்களை கொண்டிருப்பவை அல்ல. அவை இன, மத, மொழி முதலான அடையாளங்களையே கொண்டிருக்கின்றன.

    உழைப்பு, உபரி ஆகிய வார்த்தைகளை வைத்து சொல்லாடல் நடத்தி வரும் வினவு ஒன்றை தெரிந்து கொள்ள வேன்டும். உழைப்பால் பலனோ உபரியோ கிடைப்பதில்லை. அவை அதிகாரத்தினால் கிடைக்கின்றன. உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளர்களை எடுத்துக்கொள்வோம். இரண்டு பேரும் ஒரே வேலையை எட்டு மணி நேரம் செய்கிறார்கள், ஒரே மாதிரியாக உழைக்கிறார்கள் . இருந்தாலும் ஒருவருக்கு மட்டும் சீனியாரிட்டி, அதிக அனுபவமுள்ளவர் என்னும் பெயரில் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. ஆக உழைப்புக்கேற்ற பலன் இல்லை. எங்குமே இது இல்லை. இருக்கவும் முடியாது. இரண்டு பேருக்கும் தொழிலாளர்கள் என்னும் அடையாளம் தான். ஆனால் இருக்கும் அதிகாரம் வேறு வேறு. இந்த இரண்டு பேரில் ஒவ்வொருவரும் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அளவு படி தான் சம்பளம் பெறுகிறார்கள். உழைப்பின் அளவு படி அல்ல. தங்களுக்கு இருக்கும் இருவேறு விதமான அதிகாரத்தை உறுதி படுத்திக்கொள்ளத்தான் இருவரும் ஒரே மாதிரியாக ஒரே கால அளவு உழைக்க வேண்டியிருக்கிறது.

    பாடுபட்டு விளைவித்த விவசாயிக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. ஆனால் இடைத்தரகர்களுக்கோ பலமடங்கு லாபம் கிடைக்கிறது. காரணம் விவசாயிக்கு தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை வைக்கும் அதிகாரம் இல்லை. இடைத்தரகருக்கோ தான் விற்கும் பொருளுக்கு மட்டுமல்லாமல் வாங்கும் பொருளுக்கும் விலை வைக்கும் அதிகாரம் இருக்கிறது. அதனால் அவர்கள் கொழிக்கிறார்கள். மேலும் தங்களுக்கு மேல் அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் அள்ளிக்கொடுத்து அவர்களின் அதிகாரத்துக்கும் நெருக்கமாக ஆகி பலன் அடைகிறார்கள். ஒன்று அதிகாரத்தில் இருக்க வேன்டும். அல்லது அதிகாரத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் பலன் அடைய முடியும். ஆக பலனை தீர்மானிப்பது அதிகாரம் தான். உழைப்பு அல்ல. சில வகையான அதிகாரங்களை அல்லது அதிகாரத்துடனான நெருக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ள உடல் உழைப்போ மூளை உழைப்போ தேவை. சிலவற்றுக்கு அதுவும் தேவையில்லை.
    அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவதும் விடியவிடிய உழைத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சொற்ப சம்பளம் பெறுவதும் அதிகாரத்தின் காரணமாகத்தான். ஆகையால் எல்லா வகையிலும் அதிகார சமநிலை கொண்ட சமுதாயத்தை நிறுவுவது தான் சரியானதாக இருக்கும்.

    வட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து வகையான குடியேறிகளால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் அதிகாரம் பறிபோகும் அபாயம் நேர்ந்துள்ளது.

  19. யாரங்கே. நம்ம பெரியசாமிக்கு ரெண்டு பின்னூட்டம் போடுங்க. ரொம்ப நாட்கள் கழித்து வராப்ல.

    • Periyasamy,

      //மும்பையில் ஒரு ம்ராட்டியர் தன் வீட்டுக்கு வெளியே இந்தியில் பேசினால் தான் தன் சொந்த மாநிலத்தில் பிழைக்க முடியும். அவர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே இப்படி ஒரு நிலை. அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் வர வேண்டும் என வினவு விரும்புகிறது.

      comment: yes true

      //பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென்னிந்தியாவுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் தொழிலாளர் என்னும் பெயரில் போய் குடியேறுவது மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி.

      comment: what is the Conspiracy?

      //நம்மை பொறுத்தவரை அசாம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு பகுதியில் இருந்து வருபவர்களை தமிழ்நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கலாம். அவர்களும் நம்மைப்போல் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட இந்திய அரசால் ஓரங்கட்டப்பட்டு அனைத்து விதங்களிலும் வஞ்சிக்கப்படுபவர்கள்.

      comment: true

      //இந்தி பேசும் வட இந்தியர்கள் (அவர்கள் ஏழைகளோ, பணக்காரர்களோ, படித்தவர்களோ, படிக்காதவர்களோ, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களோ அல்லது உயர்சாதியினரோ யாராக இருந்தாலும்) மிகவும் அபாயகரமானவர்கள்

      comment:why are they Dangerous?

  20. தமிழ்-தாகம்,

    உங்களுக்கு இந்த விவாதத்தில் நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் நேரமில்லை.

    //வேலை தேடி செல்பவர்கள் அம்மாநிலத்தின் மொழியை கற்க வேண்டுமா ? அல்லது அம்மாநிலத்தவ்ர்கள் வேலை தேடி செல்பவர்கள் மொழியை கற்க வேண்டுமா ?//

    இது ஒரு வழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இரு வழிப்பாதையாக இருப்பது Ideal.
    வடதுருவத்திற்கு மீன் பதப்படுத்தப்போகும் முன் அந்த மொழியில் சில சொற்களை வரிகளை கற்றுக் கொள்ள முடியலாம். அதிலும் கூட உச்சரிப்பு கண்டிப்பாக சரியாக இருக்காது. அங்கே போனவுடன் தான் மேலும் கற்றுக் கொள்ளமுடியும். அந்த வடதுருவ மக்கள் தமிழ் என்ற மொழியைப் பற்றிக் கேள்விகூட பட்டிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களிடம் நாம் தமிழை எதிர்பார்க்கமுடியாது.
    வடதுருவ மக்களுக்கும் தமிழுக்கும் இடையையான தொடர்பை விட தமிழர்களுக்கும் இந்திக்கும் இருக்கும் தொடர்பு மிகமிக அதிகம். எனவே இரு வழிப் பரிமாற்றம் வரவேற்கத்தக்கது தான். கூடுதலாக நம் தமிழ் வியாபாரிகளுக்கு இந்தித்தொழிலாளர்கள் வாடிக்கையாளர்கள் எனும் போது அவர்கள் தேவைக்காகவும்தான் குறைந்தபட்ச இந்தி மொழியைக்கற்றுக்கொள்கிறார்கள். இந்திய IT தொழிலாளர்கள் வியாபாரிகள் தங்கள் Client களின் மொழிகளை யெல்லாம் (English in different accents, French, Spanish, German, Japanese, Chinese, etc) கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்ததில்லையா.

    மக்கள் தங்கள் பரஸ்பர பரிமாற்றங்களின் வழியாக பொது மொழிகள் உருவாகும். படிப்படியாக மொழிகளின் எண்ணிக்கைக் குறைந்து ஒரே பொது மொழி உருவாகும்.

    • Univerbuddy,

      நான் பஞ்சம் பிழைக்க வடதுருவத்திற்கு மீன் வெட்ட போகும் வேலை உதாரணத்தில் ….

      மீன் рыба [ryba ]

      வெட்டுதல் сдвиг [ sdvig ]

      பதப்படுத்துதல் обработка [ obrabotka ]

      எடைபோடுதல் судейство [ sudeystvo ]

      விலை цена [ tsena ]

      போன்ற ருசிய சொற்களை என் வேலை காரணமாக நான் கற்று தான் ஆகவேண்டும் அல்லவா ?அவ்வாறு நான் என் வேலை நிமித்தமாக கற்கும் போது Fish என்ற பொருளுக்கு ஒலி குறியீடு Mīṉ என்பதற்கு பதிலாக ryba என்று என் மூளை செல்களில் பதிய படபோகின்றது. அதேநேரம் எனக்கு வேலை கொடுக்கும் ருசிய முதலாளியோ ,அல்லது என் சக தொழிலாளி [சிநேகிதி ] என் தமிழ் மொழியில் Fishக்கான ஒலி குறியீட்டை அறிய வேண்டிய அவசியம் என்ன ? நான் அவர்களுக்கு fish க்கு தமிழ் மொழியில் மீன் என்று கற்றுகொடுக்க வேண்டிய அவசியம் என்ன ? எனவே மீன் வெட்டும் தொழிலாளியாக நான் ருசியாவிற்கு சென்றால் ருஷிய மொழியை என் தொழில் தேவைக்கும் ,ருஷ்ய பொது மக்களிடம் உறவடுவ்தற்கும் கற்பேனே தவிர என் மொழியை அவர்கள் மீது திணிக்க மாட்டேன். ஒருவேளை நானும் என் சக தொழிலாளி [சிநேகிதியும் ]மனம் கவரபட்டால் நான் முன்புகூறியது போல ருஷ்ய மொழியை இன்னும் செழுமையாக கற்று அவளின் மனதிற்கு இனிய நாயகனாக மாறுவேனே தவிர என் மொழியை அவள் மீது திணிக்க மாட்டேன்.

      அதுவே நான் ஒருவேலை ருஷ்யனாக இருந்து, தமிழ் நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க மீன் வெட்ட வந்தால் இங்கு என் சக தொழிலாளி [சிநேகிதி ] தமிழ் பெண்ணாக இருந்தால் நான் அவளின் மொழியை கற்று ,உறவாடி வாழ்வேனே தவிர அவளுக்கு என் ருஷ்ய மொழியை திணிக்க மாட்டேன்.

      இது தான் சர்வ தேசியம் பேசும் என் மனம் நான் பிழைக்க போகும் தேசியத்துக்கு [நாட்டுக்கு ] கொடுக்கும் சிறப்பான மரியாதை ! எனக்கு பஞ்சம் பிழைக்க வேலையும் ,ஊதியமும் கொடுக்கும் எந்த தேசிய இனத்துக்கும் நான் கொடுக்கும் மரியாதை ,நன்றி நான் அவர்களின் தேசிய இனமணிதனாக மாறுவதும் அவர்கள் இன ,மொழி மரபுகளை கற்று பயன்ப்டுத்துவதுமே ஆகும்.

      //இது ஒரு வழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இரு வழிப்பாதையாக இருப்பது Ideal.//

      • தமிழ்-தாகம்,

        ஒன்று உங்களுக்கு IDEAL என்ற வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை. அல்லது உங்கள் வாதத்தின் தரம் குறைந்து விட்டது.

        வடதுருவ மக்களிடம் நீங்கள் தமிழை எப்படி முயன்றாலும் திணிக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் வியாபாரத்திற்காக தொழிலுக்காக இந்தியைக் கற்றுக் கொள்வது மிக எளிது.

        நம்மிடையை பஞ்சமே இல்லாது போது பஞ்சம் பிழைப்பது என்று கூறி நம் சக தொழிலாளர்களை சிறுமைப் படுத்தவும் தேவையில்லை. அவர்கள் வேறு வழியில்லாமல் வருவதால் அவர்களிடம் சிறிது இந்தி பேசுவதால் நமது தமிழ் ஒன்றும் கெட்டுப்போய்விடாது.

        தேவையில்லாமல் ரஷ்ய மொழியெல்லாம் Copy paste செய்து நம் நேரத்தை வீணாக்குகிறீர்கள். பரிசீலிக்கவும்.

  21. சிவப்பு ,
    விவாதங்கள் எப்படி திர்வை நோக்கி செலுத்த பட வேண்டும் என்பதை ஒரு தோழரின் பின்னுட்டங்களில் இருந்து காட்ட போகின்றேன்.

    https://www.vinavu.com/2014/06/18/sivakami-ias-degeneration-of-dalit-politics/

    இதில் தோழர் கலாஷ்நிகோவ் [kalashnicov] அவர்கள் நடத்திய விவாதங்களை படியுங்கள்.அவர் விவாதங்களில் கலந்துகொள்வது வினவு விவாதத்தை சிறப்படைய வைக்கும்.அல்லது நாம் அவர் போன்று தீர்வை நோக்கி விவாதத்தை செலுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

  22. வியாசன்,

    //சனத்தொகை குறைந்த, செல்வம் நிறைந்த கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது முட்டாள்தனமாகும்.//

    கனடா, அமெரிக்கா சனத்தொகை குறைந்த பரப்பளவு அதிகமான நாடுகள் தான். அதற்காக அது வட இந்திய கட்டிட தொழிலாளர்களை ஏற்றுக் கொள்வதில்லையே. (ஐரோப்பாவில் முகமதியர்களை இது போன்ற வேலைகளுக்கு வரவேற்றதன் மூலம் அவர்கள் கற்ற கற்கும் பாடம் மிகவும் வலிமையானது.) அதனால் ஏன் IT தொழிலாளர்களைக்கூட ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் விவரமாகிவிட்டார்கள். எல்லாவற்றையும் இங்கிருந்தே செய்விக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.

    அங்கே வட இந்திய கட்டிட தொழிலாளர்களை வரவைத்து வேலை வாங்குவதற்கு பதிலாக தமிழகம் போன்ற பகுதிகளிலேயே SEZ களை உருவாக்கியும் அதில் வேலை செய்யும் IT தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளை கட்டச்செய்தும், சாலைகள் போன்ற போக்குவரத்துக் கட்டுமானங்களை அமைக்கச்செய்தும், வேலை வாங்குகிறார்கள். இந்த தொழிலாளர்கள் கட்டும் கட்டடங்களில் தான் அவர்களுக்குத் தேவையான பொருள்கள் IT சேவைகள் செய்யப்படுகின்றன. கார்கள் முதல் எல்லாமே இங்கிருந்தே இறக்குமிதி செய்து கொள்கிறார்கள். இந்த இடப்பெயர்வுக்கு அந்த நாடுகள் தான் முக்கிய காரணம். இனி எவ்வளவு கதரினாலும் ஒன்றும் செய்யமுடியாது. வர்க்கமாக ஒன்று திரளாத வரை. ஆனால் இந்த வார்த்தையே உங்களுக்கு எரிச்சலூட்டக்கூடியது. தமிழர்களின் திராவிடர்களின் இந்தியர்களின் இழிநிலை தொடரத்தான் செய்யும்.

    தொடரும்…

  23. சிவப்பு , Univerbuddy,

    சிவப்பு ,

    தமிழ் நாட்டுக்குள் இடம் பெயரும் தொழிலாளர்கள் பல மொழியினரும் இருக்க , அவர்கள் மொழிகளும் பலவாக இருக்க ஆனால் தமிழ் நாட்டு ஆட்டோகாரர் ஹிந்தி மொழி பேசுவதும் ,சிறுவணிக விற்பனை பெண்கள் ஹிந்தி கற்பதும் எதனை காட்டுகின்றது சிவப்பு ? ஹிந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வட இந்திய எடபெயர்வு தொழிலாளர்களால் ஹிந்தி மொழி தமிழ் நாட்டுக்குள் திணிக்க படுவதை தானே காட்டுகின்றது ? நானும் சென்னையில் தொழில் மயம் ஆக்க பட்ட புற நகரில் தான் வாழ்கின்றேன். மாற்று மொழி தொழிலாளர்களை சந்தித்து பேசும் வாய்பை பெற்று தான் இருகின்றேன். அவர்கள் ஹிந்தி தெரியாத தமிழ் நாட்டு சிறுவணிகர்களின் கடைகளில் பொருட்கள் வாங்க பேசும் மொழியையும் தொடர்சியாக கவனித்து கொண்டு தான் இருகின்றேன். ஹிந்தி மொழியில் தான் பேசுகின்றனர். ஹிந்தி மொழியை நான் மும்பையில் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்தபோது நான் பேச மட்டும் ஹிந்தியை சிறுக சிறுக பேசி அனுபவத்தில் கற்றதால் , இவர்கள் பேசும் ஹிந்தி மொழியையும் எம்மால் புரீந்து கொள்ள முடிகின்றது. ஹிந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வட இந்திய எடபெயர்வு தொழிலாளர்கள் தமிழ் நாட்டிலும் ஹிந்தியை தான் ஹிந்தி தெரியாத தமிழ் மக்களிடமும் பொது இடத்தில் பேசுகிறார்கள் என்பதை எம்மால் அறுதியிட்டு கூறமுடியும்.

    கர்நாடாகவுக்கும் ,மும்பைக்கும் இடம் பெயரும் தமிழ் நாட்டு தொழிலாளர்கள் அம்மாநில மொழியை கற்று பேசும் போது ஹிந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வட இந்திய எடபெயர்வு தொழிலாளர்கள் இங்கு தமிழ் மொழியை கற்று தமிழ் மக்களிடம் பேசுவதற்கு இவர்களுக்கு யார் தடை செய்கின்றனர் ? இவர்களுக்கு தமிழ் பேச தடையாக இருப்பது இவர்களின் ஹிந்தி மொழி வெறியை தவிர வேறு என்ன ?

    //அப்போ இந்திப் பேசும் தொழிலாளர்கள் இங்கே இந்தியைத் திணிக்கிறார்களா?இதுப் புதுசா இருக்கே.
    அய்யா, வட நாட்டு தொழிலாளர்கள் அனைவரும் இந்தியிலேயே தான் இங்கு பேசுகிறார்கள் என்றால் இங்கிருக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர் அனைவருக்கும் இந்தி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அது உண்மையா?//

    தோழர் ” கலாஷ்நிகோவ்” அவர்களுடன் நான் விவாதிக்கவில்லை. ஆனால் வினவு உட்பட பலருடனும் அவர் விவாதித்து உள்ளார்.
    //இதில் வேறு தோழர் ” கலாஷ்நிகோவ்” உடன் இவர் நடத்திய உரையை படிக்குமாறு சொல்லுகிறார். உண்மையில் தோழர் கலாஷ்நிகோவ் அருமையாக பேசியிருக்கிறார். ….//

    சரக்கு யாருக்கு இல்லை என்பதை உங்கள் வாதமே உணர்த்துகின்றது சிவப்பு ! “சோவியத் யுனியன் தேசிய இனங்களின் பிரச்சனை” என்பதை ரஷ்ய தேசிய இனப்பிரச்சினை என்று நீங்கள் கூறும் போதே உங்கள் சரக்கு பல் இளிக்கின்றதே சிவப்பு. ரஷ்யாவிற்குள் எத்துனை தேசிய இனங்களை கண்டீரோ நீர் ! ரஷ்யா என்பது ஒரு தேசம் அது ஒரு தேசிய இனம் தான் என்பது கூட தெரியாமல் ரஷ்ய தேசிய இனப்பிரச்சினை என்று பிதற்குகின்றீர் !

    //உண்மையில் இவருக்கு சரக்கு ஒன்றுமில்லை என்பது தெரிந்து விட்டது. சும்மா ரஷ்ய, ரஷ்ய தேசிய இனப்பிரச்சினை, லெனின் என்று கூறினால் ஒன்றும் தேறாது. //

    Univerbuddy,

    எமது வாதம் உலகம் முழுவதும் நிகழும் தொழிலாளர் இட பெயர்வுகளை அவதானித்தே அவர்கள் இட பெயர்வுக்கு பின் பேசும் புதிய தேசியத்து மொழியை கண்டு உணர்தே உள்ளது. எனவே மொழி விடயத்தில் உலக நடைமுறை எதுவோ அதை அனுசரித்தே ஹிந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வட இந்திய எடபெயர்வு தொழிலாளர்களும் தமிழ் நாட்டில் நடந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றேன்.

    //ஒன்று உங்களுக்கு IDEAL என்ற வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை. அல்லது உங்கள் வாதத்தின் தரம் குறைந்து விட்டது.//

    பஞ்சம் என்ற சொல்லுக்கு இயற்கையாக வரும் உணவு பற்றாக்குறை என்று மட்டும் பொருள் படுத்துகிறீர்கள். நான் கூறுவது வேலைவாய்ப்பு இன்றி அதனால் வாழ வழியின்றி ஏற்பபடும் நிலையும் தான். தமிழ் மக்கள் தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கும் ,பிற மாநிலத்துக்கும் இடம் பெயருவது எதற்காக ?

    //நம்மிடையை பஞ்சமே இல்லாது போது பஞ்சம் பிழைப்பது என்று கூறி நம் சக தொழிலாளர்களை சிறுமைப் படுத்தவும் தேவையில்லை. அவர்கள் வேறு வழியில்லாமல் வருவதால் அவர்களிடம் சிறிது இந்தி பேசுவதால் நமது தமிழ் ஒன்றும் கெட்டுப்போய்விடாது.//

    • பிழை தான். சோவித் யூனியன் என்று தான் இருக்க வேண்டும்.சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி.

      • நண்பர் சிவப்பு ,

        திரு லெனின் தலைமை ஏற்று நடத்திய ருஷ்ய பாட்டாளி வர்க்க புரட்சிக்கு முந்தைய ஜார் அரசால் அடிமைபடுத்த பட்ட பல்வேறு தேசிய இன பிரச்சனையை பற்றி குறிப்பிடும் போது “மாருஷ்ய தேசிய இனப்பிரச்சினை”என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். திரு லெனின் அவர்களும் தன் நூட்கலில் அவ்வாறு தான் பெருதேசிய ருஷ்ய-Jar அரசால் அடிமை படுத்த பட்டு இருந்த பல்வேறு தேசிய இன பிரச்சனைகளை பற்றி குறிப்பிடும் போது “மாருஷ்ய தேசிய இனப்பிரச்சினை” என்று எழுதுகின்றார்.

        தோழன்மையுடன்,

        தமிழ்

  24. வட இந்திய தொழிலாளர்களிடம் வினவு எடுத்த பேட்டியே ஹிந்தியில் நடத்தபட்டு பின்பு தமிழ் மொழியில் மொழி பெயர்க்க பட்டு உள்ளது என்பதை உணர சிவப்புக்கு என்ன சிக்கல் ?

  25. சிவப்பு ,

    “எல்லாவித வேலைகளிலும் அப்ரன்டீஸ் தொழிலாளர்களை ஈடுபடுத்தி நிரந்தரத் தொழிலாளர்களை காவுகொடுப்பது” என்ற மோடியின் செயல் தவறு என்னும் போது ,அதற்கு எதிராக கம்யுனிஸ்டுகள் போராடும் போது , வட இந்திய தொழிலாளர்களை கொண்டு குறைந்த கூலியில் முதலாளிகள் வேலையை முடித்துகொளவ்து என்பதும் தொழிலாளர் வர்கத்துக்கும் எதிரானது தானே ? அதற்கும் எதிராக தானே போராட வேண்டும் ?

    https://www.vinavu.com/2014/12/12/ndlf-to-fight-against-modi-governments-anti-labour-anti-people-policies/
    //எங்கும், எதிலும் அப்ரண்டீஸ் தொழிலாளர்களை திணித்து, நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டும் சதித்தனத்தை ஊக்குவிக்கின்றனார். அப்ரண்டீஸ் என்றாலே குறைந்த செலவில், அதிக வேலை செய்வது என்பது உலகறிந்த உண்மை. இந்த லட்சணத்தில் அப்ரண்டீஸ் தொழிலாளர்களுக்கு தரப்படுகின்ற சம்பளத்தில் (ஸ்டைபண்டு என்கிற உதவித் தொகையில்) பாதித் தொகையை மத்திய அரசே முதலாளிகளுக்கு திருப்பித் தந்து விடுமாம். உழைக்கும் மக்கள் பயன்படுத்துகின்ற ரேசன் பொருட்களுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் மானியம் தரமுடியாது என்று திமிர்த்தனம் செய்கின்ற அரசு, முதலாளிகளுக்கு செய்கின்ற சேவைகளைக் கண்டு நெஞ்சு கொதிக்கிறது.//

    • உண்மை தான் நண்பரே, அதற்க்கு எதிராக நாம் கண்டிப்பாக போராட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உண்மையில் முதலாளித்துவத்திற்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பொதுவாய் ஒட்டுமொத்தமாய் இந்த சுரண்டல் முறைக்கு எதிராய் தான் வினவும் புரட்சிகர அமைப்புகளும் போராடுகின்றன என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறன்.கட்டுரைகள் அந்தந்த காலகட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதபடுகின்றன என்பது என் கருத்து. அந்தக் கட்டுரை குறிப்பாக மோடி அரசுப் பதவி ஏற்றப் பிறகு ஒழித்துக் காட்டப்படும் நலச்சட்டங்கள் குறிப்பாக தொழிலாளர் நல சட்டங்களை பற்றி பேசுகிறது.

      மொத்தத்தில் முதலாளித்துவம் மனிதகுலத்திற்கே விரோதமானது என்றும் அந்தக் கட்டுரை சொல்கிறது.
      “ஒட்டுமொத்த சமூகத்துக்கே எதிரியாக இருக்கின்ற முதலாளிகள் மீது காட்டுகின்ற அக்கறையை, நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் தங்களுடைய உழைப்பால் உருவாக்கி வருகின்ற தொழிலாளி வர்க்கத்தின் மீதும், ஏனைய உழைக்கும் மக்கள் பிரிவினர் மீதும் காட்ட மறுக்கிறது, அரசு”

      அந்தக் கட்டுரைத் தொடர்பான விவாதங்கள் அங்கேத் தொடருவது தான் நல்லது. அங்கே நமது விவாதங்கள் வைத்தால் நண்பர்களும் அதில் பங்கெடுக்க வசதியாய் இருக்கும்.

      புரிதலுக்கு நன்றி.

  26. சிவப்பு ,

    தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் – லெனின்

    தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் வருமாறு:

    எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எந்தவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை; தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்; எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாக இருக்கும்படியான எந்த நடவடிக்கையும் சட்ட விரோதமானதென்றும் செயலுக்கு வர முடியாததென்றும் பிரகடனம் செய்து, இம்மாதிரியான நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும், இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை அனைத்து அரசுக்குமாகப் பிறப்பித்தல்.

    சிவப்பு ,

    தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் இது வென்றால் பின்பு ஏன் ஒடுக்கபடும் தேசிய இனமான தமிழ் நாட்டின் மீது , ஒடுக்கும் தேசிய இனத்து வட இந்திய தொழிலாளி வர்க்கம் ஹிந்தியை திணித்து தமிழ் நாட்டு ஆட்டோகாரரையும் சிறுவணிக விற்பனை பெண்களையும் ஹிந்தி மொழியை பேச வைக்கின்றது ?

  27. சிவப்பு ,

    தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் கீழ் உள்ள இரு அம்சங்களை அடிப்படையாக கொண்டது :

    [1]முதலாவது தேசிய இனப்பிரச்சினை எழுந்துள்ள நிலையில், தேசிய இனங்களின் மொழிகளின் சமத்துவத்துக்காவும், ஒடுக்கும் தேசிய இனத்தின் தனியுரிமை எதிர்ப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. அதாவது, பெரும்தேசிய இனத்தின்[ஹிந்தி] ஒடுக்கு முறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களின்[தமிழ்] உரிமைக்காகவும் போராடுவதைக் குறிக்கிறது.

    [2]இரண்டாவதில், முதலாளித்துவ தேசியவாதத்தால் பாட்டாளி வர்க்கம் மழுங்கடிக்காமல் இருப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. அதாவது, ஒடுக்கப்பட்ட தேசிய இன பாட்டாளிகள்[தமிழ்] முதலாளித்துவ தேசியவாத்துக்கு ஆட்படாமல் காப்பாற்றும் நோக்கில் போராடுவதைக் குறிக்கிறது.

    சிவப்பு ,

    பின்பு ஏன் பல்வேறு மொழி தொழிலாளர்களும் தமிழ் நாட்டுக்குள் இடம் பெயரும் போது ,இந்தி மொழி மட்டும் பிரதானமாக ,தனியுரிமையுடன் ஹிந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட வட இந்திய எடபெயர்வு தொழிலாளர்களால் தமிழ் நாட்டு தொழிலாளர்கள் மீது [ஆட்டோகாரர் சிறுவணிக விற்பனை பெண்கள் ] மீது திணிக்கப்டுகின்றது ?

  28. சிவப்பு ,

    தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-லெனின்

    மொழிப்பிரச்சினை குறித்தும் இதையொத்த பிற பிரச்சினைகள் குறித்தும் பல்வேறு பூர்ஷ்வாக் கட்சிகளும் நடத்தும் தேசியவாதச் சச்சரவுகளுக்கு எதிராகத் தொழிலாளி வர்க்க ஜனநாயகம் என்ன கோருகிறது என்றால்:

    எந்த விதமான பூர்ஷ்வா தேசியவாதத்துக்கும் நேர் மாறான முறையில் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களும் எல்லாத் தொழிலாளி வர்க்க நிறுவனங்களிலும் – தொழிற்சங்கங்களிலும், கூட்டுறவுக் கழகங்களிலும் நுகர்வாளர் சங்கங்களிலும் கல்விக் கழகங்களிலும் ஏனைய எல்லாவற்றிலும் – நிபந்தனையின்றி ஐக்கியமடையவும் ஒருங்கிணையவும் வேண்டும். இம்மாதிரியான ஐக்கியத்தாலும் ஒருங்கிணைவாலும் மட்டுமே ஜனநாயகத்துக்காக முனைந்து நின்று பாடுபட முடியும்.

    சிவப்பு ,

    இதைத்தானே நான் தமிழ் நாட்டில் இருந்து ருஷியாவிற்கு இடம் பெயர்ந்து மீன் வெட்டி தொழிலாளியாக வேலை செய்தபோது செய்தேன் ! [feedback 23.1]

  29. தமிழ்த்தாகம் அவர்களே,

    எல்லோராலும் பிறமொழிகளை கற்றுக்கொள்வது இயல்பாக எளிதில் வருவதில்லை.
    நானும் வேலை நிமித்தமாக அடிக்கடி வடஇந்திய நகர்களுக்கு பயணம் செய்யும் அவசியம் இருந்தாலும் என்னால் அவ்வளவு எளிதாக இந்தி மொழியை கற்க முடியவில்லை. தட்டு தடுமாறி சில வார்த்தைகள் மட்டும் தான் வருகிறது. ஏதோ ஆட்டோ ஓட்டுபவரிடம் இந்த இடத்திற்கு செல்லுங்கள் சகோதரரே, கடைகளில் பேரம் பேசுவது என்ற எளிய நிலையிலேயே எனது இந்தி நிபுணத்துவம் இருக்கிறது. கொஞ்ச காலம் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து பாருங்கள், தமிழை மெல்ல மெல்ல கற்றுக்கொள்வார்கள்.

    அதே சமயம், இன்னொன்றையும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வடஇந்தியர்களிடம் எனக்கு இந்தி அவ்வளவாக தெரியாது என்று கூறி ஆங்கிலத்தில் நான் பேசினால் அவர்கள் ஆங்கிலம் நன்கு தெரிந்தாலும் என்னிடம் இந்தியிலேயே பேசுவதை என்னவென்று சொல்ல. இத்தனைக்கும் அவர்கள் வெள்ளைக்காரர்களிடம் மிக தெளிவாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். எனக்கு இந்தி அவ்வளவாக தெரியாது என்று சொன்னால் பேருக்கு ஒன்றிரண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் பேசிவிட்டு உடனே இந்திக்கு தாவி விடுகிறார்கள். எத்தனை முறை தான் அவர்களுக்கு நான் விளக்குவது?

    • கற்றது கையளவு ,

      “தட்டு தடுமாறி சில வார்த்தைகள் மட்டும் தான் வருகிறது. ஏதோ ஆட்டோ ஓட்டுபவரிடம் இந்த இடத்திற்கு செல்லுங்கள் சகோதரரே, கடைகளில் பேரம் பேசுவது என்ற எளிய நிலையிலேயே எனது இந்தி நிபுணத்துவம் இருக்கிறது.”

      இதைத்தான் நானும் மும்பையில் கற்றேன். இதுபோன்று தான் வடஇந்திய ஹிந்தி பேசும் தொழிலாளர்களிடமும் தமிழ்நாட்டில் குறைந்த அளவாவது அவர்களும் தமிழ் பேச வேண்டும் என்று எதிர்பார்கின்றேன்! வடஇந்திய ஹிந்தி பேசும் தொழிலாளர்களி ஹிந்தியில் ,ஹிந்தி மொழியறியாத தமிழ் மக்களிடம் ஹிந்தியில் பேசி அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்த கூடாது அவர்களை சிறுமை படுத்த கூடாது என்கிறேன்.

      இத்தகைய நிலை செங்கல் பட்டில் இருந்து சென்னைக்கு electric trainல் செல்லும் போது பலமுறை ஏற்பட்டது! ! ஒருமுறை சண்டையில் முடீந்து. ஒரு வட ஹிந்திய தொழிலாளி எனக்கு புரியாத அசென்ட்டில் ஹிந்தியில் எதோ கேட்க அதற்கு நான் Hindī nahī patā hai, bōlō Tamil ,English[ஹிந்தி தெரியாது ,தமிழ் ,ஆங்கிலம் பேசுங்க] என்றேன். அதற்கு அவர் ஹிந்தி மொழியில் கத்த தொடங்கினார். அருகில் இருந்தவ்ர்கள் அவருடன் தமிழ் மொழியில் வாக்கு வாதத்தில் ஈடுபட ,அவர் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி அடுத்த கம்பார்ட்மேன்ட்க்கு
      சென்றுவிட்டார்
      //வடஇந்தியர்களிடம் எனக்கு இந்தி அவ்வளவாக தெரியாது என்று கூறி ஆங்கிலத்தில் நான் பேசினால் அவர்கள் ஆங்கிலம் நன்கு தெரிந்தாலும் என்னிடம் இந்தியிலேயே பேசுவதை என்னவென்று சொல்ல. இத்தனைக்கும் அவர்கள் வெள்ளைக்காரர்களிடம் மிக தெளிவாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். எனக்கு இந்தி அவ்வளவாக தெரியாது என்று சொன்னால் பேருக்கு ஒன்றிரண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் பேசிவிட்டு உடனே இந்திக்கு தாவி விடுகிறார்கள். எத்தனை முறை தான் அவர்களுக்கு நான் விளக்குவது?///

      • சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில், கைவினைப்பொருட்கள், படுக்கை விரிப்புகள் விற்கும் சில வட இந்தியர்களின் கடைகளில், அங்குள்ள வட இந்தியர்களிடம், சிரித்துக் கொண்டே, இது தமிழ்நாடு, முதலில் தமிழைப் பேசக் கற்றுக்கொள், எல்லோரும் ஆங்கிலம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்காதே, என்னுடைய தாய்மொழி தமிழ், எதற்காக நான் தமிழ்நாட்டில் இந்தியோ, ஆங்கிலமோ பேச வேண்டும் என்று கேட்டதற்கு, என்னுடன் சண்டைக்கு வந்து விட்டார்கள். நான் இந்தியாவுக்கு வந்திருப்பதால், ஹிந்தி கற்றிருக்க வேண்டுமாம். தமிழ்நாட்டில் பிழைக்க வந்தாலும், சரியான திமிர் பிடித்தவர்கள். எல்லோரும் ஹிந்தி பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர்கள் அங்குள்ள வட இந்தியர்கள்.

  30. தமிழ்-தாகம்,

    முதலில் தமிழகத்தில் தேசிய இனப்(பிரச்சினை) போராட்டம் நடக்கிறதா என்பதை தாங்கள் கூற வேண்டும்.அப்படி நடக்கிறதென்றால் யார் தலைமையில் அது நடக்கிறது அல்லது யார் அதை நடத்துகிறார்கள் என்பதையும் கூறுங்கள். எனக்குத் தெரிந்து இங்கே தேசிய இனப் போராட்டம் நடப்பதாகத் தெரியவில்லை. மணியரசன் போன்ற கும்பல் தேசிய இனவெறிப் போராட்டம் தான் நடத்துகின்றனர்

    இந்திய தேசியம், தமிழ் தேசியத்தை மட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்கள், காசுமீர் மணினால் உள்ளிட்ட தேசிய இனங்களையும் தான் ஒடுக்குகிறது. உண்மையில் நம்மை விட அவர்களைத் தான் அதிகம் ஒடுக்குகிறது. ஒடுக்கும் தேசிய இனத்திற்கு எதிராக அம்மக்கள் கடுமையாக போராடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அந்த அளவிற்கு நிலைமைகள் தற்போது இல்லையென்றே கருதுகிறேன். .

    இதை முதலில் நாம் தெளிவடைந்தப் பின்னர் தான் அந்த இரண்டு அம்சங்களை விவாதிக்க முடியும்.

    //பிரதானமாக ,தனியுரிமையுடன் //
    பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கே வந்து வேலைப் பார்த்தாலும் அவர்களுக்குப் பொதுவாக இந்தி இருப்பதால் அவர்களுக்குள் பொதுமொழியாக இந்திப் பேசிக் கொள்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் சமூக கட்டுமானத்தின் மேலடுக்கில் இந்திக்கான பிரசாரமும், முக்கியத்துவமும் மற்ற மாநில மொழிகளுக்குக் கிடைக்கவில்லை. மைய அரசின் இந்தத் திட்டமிட்ட இந்தித் திணிப்பே குறிப்பாக அந்தத் திணிப்பைப் பற்றித் தெரியாத மக்களிடம் அதைப் பற்றிய ஒரு மாயையைத் தோற்றுவிக்கிறது. இந்த இரண்டும் சேரும் போது அதன் விளைவுகள் தங்களது விருப்பத்திற்கு மாறாக நிகழ்கிறது.
    கிழே உள்ள நிகழ்வில் யார் திட்டமிட்டு இந்தியைத் திணிக்கிறார்கள் என்பதில் புரிதல் ஏற்படாலம்,
    1)எனது ஆந்திர பார்ப்பன நண்பர் ஒரு முறை, இந்தி நமது தேசிய மொழி , ஆனால் தமிழர்கள் அதைக் கற்றுக் கொள்வது இல்லை என்றார். அது மட்டுமல்லாமல் வட இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்கள் எண்ணமும் கிட்டத்தட்ட அவ்வாறே உள்ளது.

    2)நான் பணிபுரியும் அலுவலகத்தில்,உள்ள வட இந்தியாவைச் சேர்ந்த காவலாளிகள் என்னிடம் தமிழில் தான் தடுமாறியாவது உரையாடுகிறார்களே தவிர,இந்தியில் ஒரு நாளும் இல்லை.இதற்கு காரணம் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு.ஏனெனில், அங்கெ நிறையப் பேர் தமிழர்களே உள்ளனர்.

    3)நான் உரையாடிய ஒரு இந்தித் தொழிலாளி(குடும்பத்துடன் வசிக்கிறார்) ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார்,அவரது 4 வயது மகனை ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்ததாகவும்,கட்டணம் 15கே கேட்டதால் சேர்க்கவில்லை எனவும் கூறினார். நான் உடனே அரசுப் பள்ளியில் சேர்க்கலாமே என்றேன். அதற்க்கு அவர், சேர்க்கலாம் ஆனால் இங்கேத் தமிழில் தானே பாடம் எடுப்பார்கள்.இங்கே எவ்வளவு காலம் தங்கி இருப்பேன் எனத் தெரியாது.ஊருக்குத் திரும்பி செல்லும் போது பிரச்சினையாக இருக்கும். அதனால் வேலை வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஆங்கில பிரிவில் சேர்க்கலாம் என்று நினைக்கிறன் என்றார்.

    4)நான் பெங்களூரில் கிட்டத்தட்ட 17 மாதங்கள் வேலைப் பார்த்துள்ளேன். ஆனால் கடைசிவரை கன்னடம் கற்றுக் கொள்ளவில்லை. அதற்காக எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை.ஏனெனில் நானிருந்தவரை அதைக் கற்றுக் கொள்ளும்படியான புறச் சூழல் எழவில்லை.ஒரு சில வார்த்தைகள் எனது நண்பர்கள் கற்றுக் கொடுத்தார்கள். அதை வைத்து கடைசி வரை ஒட்டி விட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை வட இந்தியத்(கூலித்) தொழிலாளிகள் இந்தியைத் திணிப்பதில்ல்லை மாறாக இங்கேத் தமிழ் தொழிலாளிகள் தான் அதுத் தேவை என்றுக் கருதி இந்திக் கற்றுக் கொள்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.அது தேவையா இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    தாங்கள் சொல்வது போல் அவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை மாறாக அதை நாம் அவர்களிடம் திணிக்க/கோர முடியாது. ஒரு தமிழ் தொழிலாளி வேறு மாநிலங்களுக்கு சென்று அவர்கள் மொழியைக் கற்றுக் கொள்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் அப்படியே எதிர்பார்க்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.

    நன்றி.

    • சிவப்பு,

      திரு லெனின் வரையறை செய்யும் “தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம்” என்பது ருசிய கம்யுனிஸ்டு கட்சிக்கு மட்டும் அல்ல ,ருசிய கம்யுனிஸ்டுகளுக்கும் பொருந்தும் ,தமிழ் நாட்டு கம்யுனிஸ்டுகளுக்கும் பொருந்தும் ,என்னும் போது அவரின் தேசிய இன வேலைத்திட்டம் வரையறை அடிப்படையில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சிவப்பு “முதலில் தமிழகத்தில் தேசிய இனப்(பிரச்சினை) போராட்டம் நடக்கிறதா ” , “யார் அதை நடத்துகிறார்கள் என்பதையும் கூறுங்கள்” எனறு கேள்விகளை எழுப்புவது அதனை முன் நிபந்தனையாக கோருவது எல்லாம் விவாதத்தை திசை திருப்புவது ஆகும்! திரு லெனின் அவர்களின் தேசிய இன வேலைத்திட்டதை ஏற்கும் எவருமே ,எந்த கம்யுனிஸ்டுமே அதனை நடைமுறையில் சாத்திய படுத்த வேண்டும் அல்லவா சிவப்பு ? அதைவிடுத்து ஒடுக்கபடும் தேசிய இனத்துக்கும் [தமிழ் ] ஒடுக்கும் தேசிய இனத்துக்கும்[hindi] இடையில் ஏற்படும் சிக்கலை தீர்க்க தேசிய இனப்(பிரச்சினை) போராட்டம் நடக்கிறதா ,யார் அதை நடத்துகிறார்கள் என்று கோருவது திரு லெனின் அவர்கள் வர்க ஐக்கியத்துக்கு வரையறை செய்யும் …..

      “எந்த விதமான பூர்ஷ்வா தேசியவாதத்துக்கும் நேர் மாறான முறையில் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களும் எல்லாத் தொழிலாளி வர்க்க நிறுவனங்களிலும் – தொழிற்சங்கங்களிலும், கூட்டுறவுக் கழகங்களிலும் நுகர்வாளர் சங்கங்களிலும் கல்விக் கழகங்களிலும் ஏனைய எல்லாவற்றிலும் – நிபந்தனையின்றி ஐக்கியமடையவும் ஒருங்கிணையவும் வேண்டும். இம்மாதிரியான ஐக்கியத்தாலும் ஒருங்கிணைவாலும் மட்டுமே ஜனநாயகத்துக்காக முனைந்து நின்று பாடுபட முடியும்.”

      கருத்துக்கும் ,பல் தேசத்து தொழிலாளர் ஒற்றுமைக்கும் எதிரானது. எனவே தமிழ் நாட்டில் தேசிய இன போராட்டம் நடக்கின்றதா என்ற கேள்வியையும் ,அதற்கு யார் தலைமை என்ற கேள்வியையும் நாம் மறந்து கம்யுனிச அறிவியலின் அடிப்படையில் நாம் விவாதிக்கும் மொழிபிரச்சனையை அணுகுவோம்.

      நன்றி

    • சிவப்பு ,

      இந்திய தேசியம் என்று ஒரு மண்ணும் ______ கிடையாது. அதற்கு பெயர் வைப்பது என்றால் “இந்திய பல் தேசிய பிற்போக்கு அரசு ” என்று வேண்டுமானால் திருத்திக்கொள்ளுங்கள்.அதில் ஒடுக்கும் இனமாக இருப்பது ஹிந்தி பேசும் மாநிலங்கள் என்னும் போது ஓடுக்கபடும் இனமாக இருப்பது ஹிந்தி பேசாத மற்ற மானிலங்கள் தானே ! இதில் ஹிந்தி பேசாத அனைத்து பிற இனங்கலுமே சம அளவில் தான் ஒடுக்க படுகின்றன ! அதற்கான எதிர் வினைகள் வேண்டுமானால் வேறு வேறு அளவில் இருக்கலாம். ஜம்மு-காஷ்மீரில் ,வட கிழக்கில் நடைபெறும் இந்திய அரசு செய்யும் ஒடுக்கு முறையும் ,ஈழத்தில் இதே இந்திய அரசு செய்த தமிழ் இனத்துக்கு எதிரான படுகொலை ,ஒடுக்கு முறையும் இதை பிரதிபளிகின்றது சிவப்பு ? சம அளவில் தான் ஹிந்தி பேசாத மற்ற மானிலங்கள் ஒடுக்க படுகிறோம் என்பதை தானே ?

    • சிவப்பு,

      ஹிந்தி மொழி பேசும் வட இந்திய இட பெயர்ப்பு தொழிலாளர்களால் ஹிந்தி திணிக்க படவில்லை என்பது உண்மையென்றால் பின்பு ஏன் தமிழ் நாட்டு ஆட்டோ ,சிறுவணிக தொழிலாளர்களுக்கு ஹிந்தி பேசும் தேவை ஏற்படுகின்றது?

    • சிவப்பு,

      ஒடுக்க படும் தேசிய இனத்தை சேர்ந்த தமிழ் தொழிலாளி இட பெயர்வின் போது மற்ற தேசியத்து மொழிகளை கற்பது எப்படி இயல்பாக நடைபெறுகின்றதோ அதுபோன்று ஒடுக்கும் தேசிய இனத்தை சேர்ந்த ஹிந்தி தொழிலாளி தமிழ் நாட்டுக்குள் இட பெயரும் போது தமிழ் மொழியை கற்று பேசவேண்டும் என்பதுதானே தொழிலாளர் ஐக்கியத்துக்கு வலு சேர்க்கும் என்ற உண்மை உமக்கு தெரீந்தாலும் அதனை மறுத்து “திணிக்க/கோர முடியாது” என்று அராஜகவாதம் ,திரிபுவாதம் பேசாதீர்கள் சிவப்பு !

  31. நண்பர்களுக்கு,

    வட இந்திய உதிரி தொழிலாளர்கள் பற்றி சில அவதானிப்புகள்.

    1. மிகவும் வறியவர்கள். அவர்களுக்கு வேறு மொழி கற்கும் வாய்ப்பு இல்லை.
    2. அவர்களில் இந்திகாரர்கள் மட்டுமில்லை. வங்கத்தினர், ஒரியாவினர், அசாமினர் ….கூட.
    3. இவர்கள் எல்லோரும் சிறிது இந்தி பேசுதல்.
    4. இங்கு வருவதற்கு முன் தமிழையோ கன்னடத்தையோ தெலுகையோ கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமை.
    5. வந்த அடுத்த நாளே வேலை தொடக்கம்.
    6. பெரும்பாலும் கட்டுமான இடங்களிலேய தகரக்கொட்டகைகளில் தங்கல்.
    7. வாரத்தில் 6-7 நாட்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம்
    8. நாளில் 10 க்கும் மேற்பட்ட மணிகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம்.
    9. வாரம் ஒரு நாள் உணவுப் பொருட்களை வாங்க சந்தை வருகை.
    10. உள்ளூர் சமூகத்திடம் அவர்களுக்கு பெரிதாக பரிமாற்றம் ஏதுமில்லை. (Even Tamils don’t have much of interaction with other Tamils beyond their relatives)
    11. ஒரே இடத்தில் சில மாதங்கள் அ வருடங்கள் வேலை.
    12. அடுத்த வேலை கர்னாடகாவிலேயோ ஆந்திராவிலேயோ இருக்கலாம்.
    13. வேலையில் சக தொழிலாளர்களும் பெரும்பாலும் வட இந்தியர்களே.
    14. கங்காணிகள் இந்தி பேசுபவர்கள்.
    15. வேலையின் முதலாளிகள் மேலான்மையினர்கள் பெரும்பாலும் வட இந்தியர்கள் அ இந்தி பேசுபவர்கள்.
    16. இப்படியாக அவர்கள் தமிழையோ கன்னடத்தையோ தெலுகையோ கற்றுக்கொள்ள தேவையில்லாமை. முடியாமை.
    17. இதையும் மீறி சிலர் நம்மிடையே சிறிது தமிழ் கன்னடத்தை தெலுகை கற்றுக் கொள்கிறார்கள்.
    18. நீண்ட நாட்கள் தங்கியவர்கள் மிகவும் நன்றாகவும் பேசுகிறார்கள்.

    இப்போது தமிழர்களுக்கு வருவோம்.
    ஆட்டோக்காரர்கள் வியாபாரிகள் தங்களின் வெள்ளைக்கார கஸ்டமர்களிடம் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். தங்களின் வேலையின் வசதிக்காக சில பல வாக்கியங்களை பல மொழிகள் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

    வட இந்திய உதிரி தொழிலாளர்கள் இங்கே வரும் வெள்ளைக்காரர்களை விட அதிகமாக உள்ளூர் சமூகத்திடம் பரிமாற்றம் செய்து கொள்ளவில்லை. வெள்ளைக்காரர்களை விட வட இந்திய உதிரி தொழிலாளர்கள் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டார்கள். வேறுபாடு என்ன. வெள்ளைக்காரர்கள் வருடக்கணக்கில் இங்கே தங்கினாலும் நம் மொழியை கற்கவேண்டும் என்று கேட்போமா. வெள்ளைக்காரர்களின் மொழி அவர்கள் வலம் வரும் வட்டத்தினருக்குத் தெரியும் போது தொடர்புக்கு அது போதுமென்பதுதானே யதார்த்தம். அதே போல வட இந்திய உதிரி தொழிலாளர்கள் வலம் வரும் வட்டத்தில் இந்தி தெரிந்தாலே போதுமென்பது யதார்த்தம். இதைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை.

    இரு மனிதர்கள் கூடிக்கொள்ளும் போது தேவையிருந்தால் ஏதோ ஒரு வழியில் செய்தித் தொடர்பு நடக்கும். சைகையிலாவது. தேவையில்லாவிட்டால்…

  32. நண்பர்கள் ,சிவப்பு ,வியாசன் ,தென்றல் ,திப்பு ,அம்பி ,உணிவேர் ….மற்றும் பிறருக்கு …,வரும் 28/12/14 ஆம் நாள் அன்று கணினி விரிவுரையாளர் ugc -net தகுதி தேர்வு இருப்பதாலும் ,போனமுறை அதனில் Border ல் அதில் தேற தவறியதாலும் ,இம்முறை வெல்வதற்கு முயல்வதாலும்,அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவதாலும் வரும் 7 நாட்கள் எனக்கு வினவு பின்னுட்டத்தில் இருந்து விடுப்பு கோருகின்றேன். நன்றி

    • தேர்வில் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள். தேர்வுக்குப் படிப்பதற்குப் பதிலாக, முருகனையும் தமிழையும் பிரிக்க முயன்றவர்களிடம் முருகனின் சார்பாக வாதாடுவதற்காக உங்களின் நேரத்தைச் செலவிட்டதால், அந்த தமிழ்முருகன் உங்களை இந்த முறை நிச்சயமாக தேர்வில் தேற வைப்பான். 🙂

    • தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே,கடந்த ஆண்டின் தோல்வியறியும்போது சற்றே வருத்தமாக இருந்தாலும் தோல்விகள் வெற்றியை நோக்கி செல்வதற்கான படிக்கட்டுகள் என மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு நீங்கள் மகத்தான வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

  33. நண்பர்களுக்கு,

    தமிழர்களைப் (திராவிடர்களை மற்றும் இந்தியர்களை) பற்றி சில அவதானிப்புகள்,

    நம்மிடையே தனியார் பள்ளி மோகம் தலைவிரித்தாடுகிறது. (இந்த பள்ளிகள். சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகு CBSE பள்ளிகளாக மாறி வருகின்றன.)
    இந்த பள்ளிகளில் பெரும்பாலானவை ஆங்கில வழிக்கல்வியில் (என்று சொல்லிக்கொள்கிறார்கள்)
    இந்த பள்ளிகளில் LKG யிலேயே ஆங்கிலம் பேச கற்றுக்கொடுத்துவிடுவோம் என்ற ரீதியில் பேசுகின்றன.
    குழந்தைகளுக்கு அஆஇஈ கற்றுக் கொடுப்பதற்கு முன்னரே ABCD கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள்.
    ஒன்று இரண்டு என்பதற்கு முன்னரே one two three.
    ஐந்தாறு புத்தகங்கள் ஆங்கிலத்திலும் ஒரே ஒன்று தமிழிலும்.
    எனவே வீட்டுப்பாடங்களும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டும்.

    இந்த தலைமுறையின் தமிழ் (அல்லது மற்ற இந்திய மொழிகள்) எப்படியிருக்கும்?
    அடுத்த தலைமுறை எப்படியிருக்கும்?

  34. நண்பர்களுக்கு,

    நம்மைப் பற்றி மேலும் சில அவதானிப்புகள்,

    அவர்களில் பெரும்பாலானவர்களின் தோலின் நிறம் நம்மைப் போன்ற தமிழ்/திராவிட நிறம்தான். அவர்கள் வடக்கிலேயே வாழம் நம் தமிழ்/திராவிட சகோதரர்கள் என்றால் அது மிகையில்லை. அவர்கள் ஆரியர்களால் விலக்கிவைக்கப்பட்டதால் அவர்களின் தோலின் நிறம் மாறாமல் இருக்கின்றது.

    அவர்கள் Scrawny யாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்த வியாசனால் மற்றவர்களால் அவர்கள் தமிழ்/திராவிட நிறத்தில் தான் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கமுடியவில்லை என்பது மர்மாகத்தான் இருக்கிறது.

    இங்கே, தெற்கில் பார்ப்பனர்களை பூசாரிகளாகக் கொண்ட கோயில்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்ட மக்கள் தங்கள் தமிழ்/திராவிட நிறத்தை பெருமளவு இழந்து இருப்பதையும் அது போன்ற கோயில்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படாத மக்கள் தங்கள் தமிழ்/திராவிட நிறத்தை இழக்காமல் வைத்திருப்பதையும் நாம் கவனிப்பது இன்னும் சற்று கடினமே.

    • திருத்தம்:

      மேலே //அவர்களில் பெரும்பாலானவர்கள்// என்பது வடஇந்திய புலம்பெயர் தொழிலாளர்கள்.

    • ஆம் இந்திய பழங்குடி மக்கள் அனைவரும் திராவிடர்கள் தான் .அவர்கள் வட இந்தியாவில் வாழ்ந்தாலும் திராவிடர்கள் தான் .

    • இந்தியா முழுவதுமே பெரும்பான்மை மக்கள் தமிழர்களின் நிறத்தையுடையவர்களே, என்னுடைய அனுபவத்தில் மிகவும் சிறுபான்மை இந்துக்களும், வட இந்திய முஸ்லீம்களும் (அவர்களிலும் சாதி குறைந்தவர்கள் கறுப்பு அல்லது மாநிறம் தான்) மட்டும் தான் அதிகளவில் வெள்ளையாக உள்ளனர். கணிசமான அளவில் வெள்ளை நிறத் தோலையுடையவர்களும், தம்மை ஆரியர்கள் என்று பீற்றிக் கொள்ளும் வழக்கம் கொண்ட சீக்கியர்களில் கூட, தமிழர்களைப் போன்ற நிறம் கொண்ட சீக்கியர்கள் உள்ளனர்.

      Univerbuddyயின் சொல்லைக் கேட்டு , ஏற்கனவே தமக்கென சொந்தமாக நாடில்லாத தமிழர்கள், இருக்கிற ஒரேயொரு மாநிலத்தில் கூட தமது சொந்த மொழியைக் கூட ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வலுவற்ற, அரசியல், பொருளாதார அதிகாரமற்ற தமிழர்கள், தமிழர்களைப் போல் தோலின் நிறத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்ற காரணத்தால், வட இந்தியர்கள் அனைவரையும் திராவிடர்களாக ஏற்றுக் கொண்டு, எந்தவிதக் கட்டுப்பாடுமில்லாமல், தமிழ்நாட்டில் குடியேற்றி, வழக்கம் போல் ‘வந்தாரை வாழ வைத்தால்’, தமிழர்கள் எல்லோரும் ஒட்டு மொத்ததமாக ஓடிப்போய் பாக்கு நீரிணையில் குதிக்க வேண்டியது தான், அங்கேயும் அரைவாசி தூரத்தில் சிங்களவன் நின்று கொண்டு, இந்தப் பக்கம் வராதே, நீயாகச் சாக முன்னர் நானே உன்னை சாக வைக்கிறேன் என்று தனது துப்பாக்கியை நீட்டுவான், இது தான் Univerbuddy யின் Grand plan. 🙂

      • வியாசன்,

        அவர்கள் இங்கேயே தங்கிவிடுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே வந்திருப்பதும் குடும்பம் தங்கள் சொந்த ஊரிலேயே இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். அவர்களின் வருமானமும் மிகமிக குறைவு என்பதால் எதிர்காலத்திலும் குடும்பங்களை இங்கே கொண்டுவர முடியாது. வேலை செய்யும் இடமும் மாறிக்கொண்டே இருக்குமென்பதாலும் இதற்கு சாத்தியமில்லை. எனவே நீங்கள் கற்பனை செய்யும் நிலை வரவாய்ப்பில்லை.
        இருந்தாலும் நாமெல்லோரும் சகோதரிரர்கள் தான். ஆரியர்கள் உட்பட. நாம் சகோதரிரத்துவத்துடன் இணைவதை யாராலும் தடுக்கமுடியாது. இல்லையென்றால் மனிதஇனத்திற்கு எதிர்காலம் இருக்காது.

Leave a Reply to Univerbuddy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க