திருச்சி ஸ்ரீரங்கத்தில் 10.01.2015 அன்று நடைபெற்ற பிரம்ம ரத பல்லக்கு தூக்கும் விழாவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்பட்டோர் இந்த பார்ப்பனிய பண்பாட்டு நிகழ்ச்சியை தடைசெய்யக் கோரி ஸ்ரீரங்கத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த விழாவில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பட்டரை பல்லக்கில் உட்கார வைத்து அதே சமூகத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் தூக்கிச் சென்று அவரது வீட்டில் விடுவதை ஒரு முறையாக வைத்து நடத்துகின்றனர். மனிதனை மனிதன் சுமந்து செல்லும் இந்த பார்ப்பனிய இழி செயலுக்கு எதிராகத்தான் இந்த போராட்டம் நடைபெற்றது.
மனிதனை மனிதன் சுமப்பது குற்றம் என்று வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே இந்த பார்ப்பன பண்பாட்டு அடிமைத்தன விழாவை எந்த சட்டத்தையும் மதிக்காமல் எடுத்து நடத்துகிறது இந்த பார்ப்பனக் கூட்டம். அதற்கு பாதுகாப்பு கொடுக்கிறது போலீசு அடியாள் கூட்டம்.
இதைக் கண்டித்து போராடிய அமைப்பினரை கைது செய்து இந்த நாட்டின் சட்டத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். கைதாகி மண்டபத்தில் இருந்த போது நிகழ்ச்சி ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. இதில் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதுவரை நமது பாடல்களை நேரடியாக நெருக்கமாக கேட்காத தி.க தோழர்கள் நமது பார்ப்பனிய எதிர்ப்பு பாடல்கள், மீத்தேன் எதிர்ப்பு பாடல்களை கேட்டதும் உற்சாகமாகி, “உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் பாடுகிறீர்கள்” என பாராட்டினர்.
தி.க வை சேர்ந்த தோழர். விடுதலை அரசு அவர்கள் பேசும் பொழுது, “தமிழகத்தில் பார்ப்பனியத்தை எதிர்த்து ஒரு எழுச்சிகர போராட்டம் ம.க.இ.கவின் கருவறை நுழைவு போராட்டம் தான். நாம் பார்ப்பனிய பாசிச கருத்தை முறியடிக்க வேண்டுமானால் ம.க.இ.க தோழர்கள் போல் வீதிக்கு வீதி பறையடித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் இந்த பார்ப்பனியத்திற்கு எதிராக மக்களை திரட்ட முடியும்” என்று பேசினார்.
ம.க.இ.க தோழர் லதா திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் நாம் நடத்திய போராட்ட அனுபவம் பற்றி பேசினார்.
புரட்சிகர கலை நிகழ்ச்சியை தோழர். சத்யா தொகுத்து வழங்கினார். நமது பாடல்களை கேட்டு கொண்டிருந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நமது தோழரை அழைத்துச் சென்று, “பாடல்கள் எல்லாம் சிறப்பாக உணர்ச்சியூட்டும்படி இருக்கிறது. அந்த பாட்டை எல்லாம் எனது செல்போனில் ஏத்திவிடுங்கள்” என கேட்டு ஏற்றிச் சென்றார்.
திராவிட கழகத் தோழர் ஒருவர் பேசும் பொழுது, “எல்லா தோழர்களும் பார்பனியத்தை கண்டித்து உணர்வு பூர்வமாக பேசினார்கள். இதில் கலந்து கொண்ட சில தோழர்கள் 50 வயதிற்கும் மேலானவர்கள். ஆனால் அவர்களின் பேச்சும், போராட்ட துடிப்பும் 20 வயது இளைஞர்களின் துடிப்பை காண முடிந்தது. தொந்தியை வளர்த்துக் கொண்டு பாலும், நெய்யுமாக தின்று கொழுத்த பார்ப்பனர்கள் நடக்க கூட முடியாமல் மற்ற மனிதர்களை சுமக்கச் சொல்லி பிரம்ம ரதம் என்ற பெயரில் சோம்பேறியாக உட்கார்ந்து போகும் பார்ப்பான் தன்மான மனிதனா? இல்லை 60 வயதிலும் உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் இந்த பார்ப்பன பன்பாட்டுக்கு எதிராக களத்துலே இறங்கி போராடும் இந்தத் தோழர்கள் தன்மானமுள்ள மனிதர்களா?” என்றார்.
பெரியார் சொன்னார், “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்று அந்த மானத்தை காக்க இன்று கட்சி பாராமல் முற்போக்கு சிந்தனையுள்ள அமைப்புகள் இந்த பார்ப்பனிய பண்பாட்டுக்கு எதிராக களம் இறங்கி உள்ளார்கள். இந்த பார்ப்பனிய பண்பாட்டை பாடைக்கு அனுப்பும் வரை போராட்டம் ஓயாது.
இப்படைக்கு தோற்பின் எப்படை வெல்லும்………
செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை
இதை கண்டிக்கின்ற அதே வேளையிலே , கம்ம்யோநிசம் வந்தால் மாறிவிடும் என்று நினைக்கும் அப்பாவிகள் கவனத்திற்கு , நான் 2005 ஆம் வருடம் கொல்கொத்தா சென்று இருந்த போது, மனிதர்கள் இழுக்கும் ரிக்சாவை பார்த்தேன் . அதற்கு முன்னாள் எம் ஜி ஆர் படத்தில் தான் பார்த்து இர்கிறேன் . அது போன்ற ஒரு தொழிலை கம்மிகள் ஆட்சியில் செய்யும்படியான அவலம் .
தொழில் வளர்ச்சியை முடக்கி , ஏழைகளை ஏழைகளாகவே வைத்தி இருப்பார்கள் .
முதலாளித்துவத்திற்கு கால் அமுக்கி பொறுக்கித்தின்னும் கைக்கூலிகளின் கவனத்திற்கு, தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக டாடாவிற்கு சேவை செய்ய சிங்கூரில் விவசாயிகளைச் சுட்டுக்கொன்றதும் இதே மேற்வங்கு அரசுதான். அப்பொழுது மட்டும் பாங்குபால் அருந்தப்போனதா ‘ஏழைகளை ஏழைகளாக வைத்திருக்கிறது’ என்று சொல்லும் இராமன் போன்ற பிணந்தின்னிகளின் கூட்டம்? நக்சல்பாரி புரட்சியில் விவசாயிகள் நிலப்புரபுக்களுக்கு எதிராக போராடியபொழுது இதே மேற்குவங்க அரசு அடக்கி ஒடுக்கியதே, அப்பொழுது ஏழைகள் என்று கண்ணீர்விட்டவர்கள் அவர்களின் சதைகளைத் தின்றுதானே பல்குத்திக் கொண்டிருந்தார்கள்? அப்பொழுது தெரியவில்லையா தொழில்வளர்ச்சி? பிழைப்புவாத இராமன்கள் மாபூமி படம் பார்த்து கேரளா மற்றும் மேற்குவங்க கம்யுனிஸ்டுகள் எப்படி முதலாளிகளுக்கு கால்கழுவி விட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். எது கம்யுனிசம் என்றாவது தெரிந்து கொள்ளலாம். தொட்டி கொமரய்யா பிறந்த ஊரில் இப்படியும் ஒரு கைக்கூலி! முதலில் பாங்குபாலை குறைத்துக்கொண்டு முதலாளித்துவ போதையில் இருந்து தெளியவும்.
என்ன வேணா திட்டுங்க சார் , யெண்ட் ஆப் தி டே கொல்கத்தாவில் மனிதனை மனிதன் இழுக்கும் அவலம் .
கம்யூன்சிடுகள் ஆட்சி வந்தாலும் , நல்ல கம்யூனிஸ்டுகள் ஆட்சி வர வேண்டுமா ?
வானத்தில் இருந்து இறங்கி வந்தால் தான் உண்டு!
ராமன் சார் கொல்கத்தாவுக்கு முன்பே மெட்ராஸ் ல் கை ரிக்ஸாகள் ஒழிக்க பட்டன. இன்று ரிக்ஸாகலை யே மெட்ராஸ்சில் பார்க்க முடியா து
இராமன், கொல்கொத்தாவில் மனிதனை மனிதன் இழுக்கும் அவலம் மட்டுமில்லை. டாடா முதலாளித்துத்துவ மிருகத்திற்காக விவசாய மனிதர்களுக்கும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். முதலாளித்துவத்தை ஆதரிக்கிற உங்களைப்போன்ற ஒட்டுண்ணிகள் அப்பொழுது வாய் திறக்கவில்லையே! ஏன்? அதுதானே இங்கு அம்பலப்படுத்தவேண்டியது. ஒட்டுண்ணிகளால் ஒரு ஐந்து நிமிடம் ஏழைகளுக்காக மனப்பூர்வமாக நிற்க இயலாது என்பதற்கு உங்களது பின்னூட்டம் ஒரு சான்று. ஏனெனில் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறவர் தொழில்வளர்ச்சிக்காக ஏழைகளைச் சுடுவதை மெளனமாக நோக்குகிறவர் அதற்காக மேற்குவங்கத்தை கடுகளவும் கண்டிக்க துப்பில்லாதவர் கம்யுனிசத்தை எதிர்க்க மட்டும் கைவண்டி என்று கதறுவாரயேனால் எவ்வளவு வெட்கட்ட முறையில் உங்களது தாரதரம் சீரழிந்து நிற்கிறது பார்த்தீர்களா?
ஆக மேற்வங்கத்தைத் தாங்கள் கம்யுனிசம் என்று சுட்டிக்காட்டுவது வெறும் பாசாங்கு என்றும் பிழைப்புவதாக் கூட்டணிக்காக டாட்டாவிற்காக தாங்கள் அதே அரசை உச்சி முகர்ந்து பாராட்டுகிற நடுத்தரவர்க்க பிழைப்புவாதி என்பதும் தெரிகிறது அல்லவா? இதுதான் எண்ட் ஆப் தி டேவில் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது; தாங்களும் தான்.
தென்றல்,
நான் தற்சமயம் கொல்கத்தாவில் தான் உள்ளேன். நேற்றும் இன்றும் இங்கிருக்கும் வாடிக்கையாளர்களிடமும் நண்பர்களிடமும் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரிடமும் பொதுவான ஒரு ஆதங்கம் இருந்தது தெரிந்தது. இந்தியாவின் மற்ற வளர்ந்த மாநிலங்களை விட மேற்கு வங்கத்தில் வளர்ச்சி ஒரு பத்து, பதினைந்து வருடம் பின்னே இருப்பதாக அவர்கள் அனைவருமே வருத்தப்பட்டனர்.
வளர்ச்சி என்றால் தேனும் பாலும் ஓட வேண்டும் என்று அவசியம் இல்லை. மக்கள் நிம்மதியாக இருந்தாலே போதும். ஆனால் இத்தனை காலம் மேற்கு வங்கத்தை ஆண்ட கம்மியுநிஸ்ட் ஆட்சியிலும், தற்போது ஆளும் மம்தா ஆட்சியிலும் தாதாகிரி தான் பெருகி உள்ளதாக வருத்தப்படுகின்றனர். நான் உரையாடிய யாரும் பெரும் முதலாளிகள் அல்ல, சாதாரண நடுத்தர வர்க்க மக்களே. எல்லா தொழிலிலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமான கும்பல்கள் அட்டூழியம் செய்வதாக கூறுகிறார்கள்.
இதற்கு என்ன காரணம் தென்றல் அவர்களே?
சமீபத்தில் வரும் செய்திகளை தென்றல் படித்திருப்பார் என்று நம்புகிறேன்.
டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயற்சித்த கம்மியுநிஸ்ட் அரசுக்கு எதிராக போராடிய மம்தா பானர்ஜி இப்போது முதலாளிகள் காலில் விழுந்து தொழிலை தொடங்குங்கள் என்று கூறுகிறார். இதற்கு தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
\\ இந்தியாவின் மற்ற வளர்ந்த மாநிலங்களை விட மேற்கு வங்கத்தில் வளர்ச்சி ஒரு பத்து, பதினைந்து வருடம் பின்னே இருப்பதாக அவர்கள் அனைவருமே வருத்தப்பட்டனர்.\\
வளர்ச்சி என்று தாங்கள் எதைக் கருதுகிறீர்களோ அந்த வளர்ச்சி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தரகு வர்க்கங்கள் மட்டும் தான் பெற்றிருக்கின்றன.
குஜராத்தில் விவசாயிகள் தற்கொலையும் மேற்கு வங்கத்தில் விவசாயிகள் தற்கொலையும் ஒரே அளவில் அதிகரித்துதான் வருகின்றன. குஜராத்தில் நில அபகரிப்பும் மேற்குவங்கத்தில் நில அபகரிப்பும் துரிதகதியில் நடைபெற்றிருக்கின்றன. குஜராத்தில் மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைகள் என்றால் மேற்குவங்கத்திலும் மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகள் தான் இருக்கின்றன. இதில் உங்கள் பார்வையில் வளர்ந்தவர்கள் யார்?
மேற்குவங்கம் என்று மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியாவிலும் 80% மக்களின் வளர்ச்சி என்பது கற்காலத்தில் தான் இருக்கிறது. தரகுமுதலாளிகளின் மறுகாலனியாக்கச் சுரண்டல் ஒருபக்கம் என்றால் ஒட்டுமொத்த வட இந்தியாவும் நிலப்புரத்துவத்தின் கோரப்பிடியில் தான் இன்றளவும் சிக்கியிருக்கின்றன. இதைத்தான் ஒப்பீட்டு அளவில் பார்க்கிற பொழுது வளர்ச்சி என்பதாக தெரியும். ஆகையால் தான் நிலங்களில் சுரண்டப்படும் வட இந்திய மக்கள் பிழைப்பு தேடி தமிழ்நாடு என்று வருகின்றனர்.
நிலச்சீர்த்திருத்தம் செய்ததாக பீற்றும் மேற்குவங்கம், விவசாயிகளின் பொருளாதார கொள்கைகளைப் பொறுத்தவரை தனியார் மய தாராளமய, தரகுமுதலாளித்துவ கொள்கைகளை மூர்க்கமாக திணித்து மக்களைச் சுரண்டின. இதே சமயம் தமிழ்நாட்டிற்குள்ளும் மேற்குவங்கம் உண்டு. இணையவாசிகளான நமது கண்களுக்குத்தான் அது தெரிவதில்லை.
சட்டிஸ்கரில் மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காக போராடுகிற பொழுது எப்படி ஆளும் வர்க்கம் கனிம வளங்களைச் சுரண்டுவதற்காக பசுமை வேட்டை நடத்தியதோ அதே போன்று மேற்குவங்கத்தில் லால்கர்மக்கள் போராடிய பொழுதும் இதே மேற்குவங்க அரசும் ஆளும்வர்க்கமும் அடக்கி ஒடுக்கின. ஆக மேற்குவங்கத்தை ஒப்பிடுகிற பொழுது அதே மேற்குவங்கத்திற்குள் இருக்கிற பச்சைவேட்டைக்கு பலியான லால்கர் மக்களின் காலத்தை எதனுடன் ஒப்பிடப்போகிறீர்கள்?
ஒட்டுமொத்த மேற்குவங்க கம்யுனிஸ்டுகளின் 34 ஆண்டுகள் தேர்தல் பாதை என்னவாக இருந்தது என்பதற்கு வினவில் வந்த பதிவு இருக்கிறது; படித்து மறக்காமல் பதில் எழுதுங்கள்.
மேற்கு வங்கத்தில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி ஏன்?
https://www.vinavu.com/2011/05/17/cpm-bengal-defeat/
போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
https://www.vinavu.com/2008/12/13/midnapur1/
லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!
https://www.vinavu.com/2009/07/08/lalgarh1/
திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு
https://www.vinavu.com/2009/10/20/cpim-sca/
\\ ஆனால் இத்தனை காலம் மேற்கு வங்கத்தை ஆண்ட கம்மியுநிஸ்ட் ஆட்சியிலும், தற்போது ஆளும் மம்தா ஆட்சியிலும் தாதாகிரி தான் பெருகி உள்ளதாக வருத்தப்படுகின்றனர். நான் உரையாடிய யாரும் பெரும் முதலாளிகள் அல்ல, சாதாரண நடுத்தர வர்க்க மக்களே. எல்லா தொழிலிலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமான கும்பல்கள் அட்டூழியம் செய்வதாக கூறுகிறார்கள். இதற்கு என்ன காரணம் தென்றல் அவர்களே? \\
தேர்தல் பாதை திருடர் பாதை; புரட்சி ஒன்றே மக்களின் பாதை என்பதை பல முறைச் சொல்லியும் அப்பொழுதெல்லாம் பதிலளிக்காதவர் என்ன காரணம் என்ன காரணம் என்று செக்குமாடாக சுற்றினால் என்ன அர்த்தம்? இப்பொழுது உங்களது பின்னூட்டம் நிதர்சனத்தை அறைந்து கூறுகிறது. எல்லா தொழிலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமான கும்பல்கள் அட்டூழியம் செய்கிறார்கள் என்று மக்கள் கூறுவதை நச்சென்று பதிவு செய்கிற உங்களுக்கு இக்கருத்தின் தன்மையை பிற மாநிலங்களுக்கும் ஒப்பிட்டு பார்க்கும் மனத்திட்பம் இல்லாது இருப்பது ஏன்?
தமிழ்நாட்டிலும் எல்லா தொழில்களிலும் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் தான் உள்ளன. இந்தியாவில் எல்லா தொழில்களிலும் பிஜேபியும் காங்கிரசும் உண்டு. ஆதர்ஷ், நிலக்கரி, 2ஜி என்று எல்லா ஊழல்களிலும் முதலாளிகளின் சுரண்டலுக்கு துணையாயிருந்து கணிசமாக சுரண்டித்தின்றவர்கள் அனைத்து கட்சிகளும் தான்.
அம்பானி அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் நிதி கொடுப்பது எதற்காக? இப்பொழுது நாம் சந்தித்து வரும் பாராளுமன்ற சனநாயகம் தரகுமுதலாளித்துவ, மறுகாலனிய ஏகாதிபத்தியத்தின் கொட்டடியாகும். இதுதான் காரணம்.
\\ டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயற்சித்த கம்மியுநிஸ்ட் அரசுக்கு எதிராக போராடிய மம்தா பானர்ஜி இப்போது முதலாளிகள் காலில் விழுந்து தொழிலை தொடங்குங்கள் என்று கூறுகிறார். இதற்கு தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.\\
முதலாளிகளின் பாராளுமன்ற சனநாயகத்தை சிபிஎம் அலங்கரித்தால் என்ன? மம்தா அலங்கரித்தால் என்ன? ஆள்மாறாட்டம் செய்தால் ஆளும்வர்க்கத்தின் தன்மை மாறிவிடுமா என்ன? தமிழ்நாட்டில் எப்படி கருணாநிதி-ஜெயலலிதா தரகுமுதலாளிகளின் செல்லப்பிள்ளைகளோ அதே போன்று தான் டாடாவுக்கு சிபிஎம்மும் மம்தாவும் செல்லப்பிள்ளைகள். இதர உதிரிக்கட்சிகள் இதில் பொறுக்கித் தின்பவர்கள். யாரும் யாரையும் எதிர்க்கமாட்டார்கள்.
மேலும் படியுங்கள்.
வங்கத்தின் ஜெயலலிதா – மம்தா பானர்ஜி!
https://www.vinavu.com/2012/08/29/mamta-didi/#tab-comments
வடிவேலு பேக்கரி VS தா.பா. பேக்கரி
https://www.vinavu.com/2014/03/17/pseudo-communists-make-a-mockery-of-communism/
டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !
https://www.vinavu.com/2013/08/09/parliament-powers-cpm-dreams/
மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !
https://www.vinavu.com/2009/04/17/elec0907/
தென்றல்,
கம்மியுனிசம் மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்றதற்கு கம்மியுனிசம் காரணம் என்கிறீர்கள். அது தற்போது தோற்றதற்கு போலி கம்மியுனிசம் தான் காரணம் என்கிறீர்கள்.
தாங்கள் அளித்த பதிவுகளை படித்த பின் ஒன்று தெளிவாக விளங்குகிறது.
ஆட்சியை பிடிக்கும் வரை புரட்சி, தொழிலாளர் நலம் என்று பேசுபவர்கள் ஆட்சியை பிடித்தவுடன் தாதாகிரி, கட்சி ஆட்களுக்கு முதலுரிமை என்ற சாதாரண அரசியல் கட்சியை போலவே செயல்படுகிறார்கள்.
பின்னர் மக்களின் ஆதரவு போன பின்பு, சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டோம் என்று வீராவேசமாக பேசுகிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது அவர்களை நம்மவர்கள் என்று பாராட்டிய குழுக்கள் பின் அவர்களை போலி கம்மியுனுஸ்டுகள், நாங்கள் தான் உண்மையான கம்மியுனுஸ்டுகள் என்று மீண்டும் ஒரு பிட்டை எடுத்து போடுகின்றனர்.
இது எங்கே போய் முடியுமோ?
ஜனநாயக வழி சரியில்லை என்கிறீர்கள்.
தங்களது தோழர்களை நம்பி மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் வாக்களித்த மக்களின் நிலை கூட அதே அளவில் தானே உள்ளது. முடிவில் அவர்கள் போலி கம்மியுனுஸ்டுகள் என்று ஒரே போடாக போட்டு விடுகிறீர்கள்.
கம்மியுநிசத்தில் குறைகளே இல்லை என்றால் பின் எப்படி மேற்கு வங்கம் இப்படி ஆனது? உண்மையான கம்மியுனிச ஆட்சி வர வேண்டும் என்று தானே மக்கள் 34 வருடங்கள் காத்திருந்தார்கள். அவர்களுக்கு அழகாக பெப்பே காட்டி விட்டு இப்போது மீண்டும் உண்மையான கம்மியுநிசத்தை நாங்கள் காட்டுகிறோம் என்று சவடால் விடுகிறீர்கள்.
கம்மியுனுஸ்டுகளை நம்பி நம் தமிழ் மக்கள் ஆதரவு அளித்தால் அவர்களின் கதியும் இதே தானா?
கற்றது கையளவு அவர்களே,
தங்களது பதில் முழுக்கவும் பித்தலாட்டமானது.
தேர்தல் பாதை திருடர் பாதை, புரட்சி ஒன்றே மக்களின் பாதை என்பது தான் பாட்டாளிகளிக்கான அரசியல்;
பாராளுமன்றம் பன்றித்தொழுவம் என்கிற பொழுது அதில் முதலாளிகளுக்கு ஆதரவாக 34 வருடம் பாட்டாளிவர்க்க அரசியலை காயடித்தவர்களை நான் பாராட்டுவதாக கூறுவதும் அவர்களின் ஆட்சி சிறப்பானதாக இருப்பதாக கூறுவதும் காறித்துப்புவதற்கும் தகுதியில்லாத பொய்.
நக்சல்பாரி புரட்சியில் விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நிகழ்த்திய பொழுது அடக்கி ஒடுக்கியதே இந்த மேற்குவங்க அரசு தான். அதாவது உங்களது புளுத்து நாறும் பாராளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகம் தான்.
எனவே எந்தப் பாராளுமன்றம் முதலாளிகளின் மஞ்சமாக இருக்கிறதோ அந்த பாராளுமன்ற ஜனநாயகத்தை ஒழிக்கப்போராடுகிற புரட்சிகர இயக்கங்கள் தான் பாட்டாளிகளுக்கான அரசியலைப் பேசுபவர்கள் என்பது தெரியாதா? வினவை இத்துணை காலம் படித்துவருகிறீர்களே!
ஆகையால் தோழர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்பதும் மேற்குவங்கத்தில் கம்யுனிச ஆட்சி என்றும் கேரளத்தின் கம்யுனிச ஆட்சி என்றும் யார் சொல்வார்கள்? உங்களைப் போன்ற பித்தலாட்டக்கார்கள் தற்போதைய பாராளுமன்ற சனநாயகமே சிறந்தது என்று சொல்கிற புல்லுருவிகள் தான் சொல்வார்கள்.
தா. பாண்டியன் ஜெயலலிதா காலில் விழுவதற்கும் கற்றது கையளவு முதலாளித்துவ சனநாயகம் தான் சிறந்தது என்று சொல்வதற்கும் என்ன வித்தியாசம் அய்யா? இருவருமே ஆளும் வர்க்க கைக்கூலிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது இல்லையா?
இப்படி ஒருபக்கம் முதலாளிகளுக்கு கால்கழுவி விட்டு விட்டு மறுபக்கம் கம்யுனிஸ்டுகள் ஆட்சி செய்தார்கள் என்று சொல்வதால் தங்களின் பிரச்சாரமும் தாங்களும் ஒரு சேர அம்பலப்பட்டு போகிறது அல்லவா? சிபிஐயும் சிபிஎம்மும் தாங்கள் விரும்புகிற பாராளுமன்றத்தை அலங்கரித்தவர்கள் தான். பேசி வைத்த மாதிரி மூன்றுபேரும் ஏன் அசிங்கப்பட்டு நாறுகிறீர்கள்?
அந்த தேர்தல் பாதைக்காவது வாக்கெடுப்பில் 60 முதல் 70 சதவீத மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். உங்கள் புரட்சிப்பதைக்கு எத்தனை பேர், எத்தனை பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்?
மேற்கு வங்கத்தில் 34 வருடங்கள் கம்மியுனுஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து என்ன பிரயோசனம். அவர்களும் உங்கள் பார்வையில், திருடர் பாதையை தானே தேர்ந்தெடுக்கிறார்கள்? உங்கள் குழுவை நம்பி ஒரு நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்தால் நீங்களும் திருடர்பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
ஜனநாயகத்திலாவது ஆட்சியில் உள்ளவர்களை தூக்கி எரியும் சக்தி மக்களிடம் ஓரளவு உள்ளது. சர்வாதிகாரத்தில் அப்படி இல்லையே? பின் உங்களை நம்பி ஒரு நாட்டினை ஒப்படைத்த பின்னர் நீங்கள் பசுந்தோல் போர்த்திய புலியாக ஆனீர்கள் என்றால் பின் நாட்டை எப்படி தேற்றுவது?
கற்றது கையளவு,
விடுங்க பாஸ்.
ஏற்கனவே பசுந்தோல் போர்த்திய பேய் பிசாசு தானே இருக்கு. தாங்கள் தோழர் தென்றலிடம் விவாதித்ததில் இருந்து எனக்கும் பயம் வந்து விட்டது. இவர்களை நம்பி நாம் நாட்டைக் கொடுத்து விட்டால் என்ன ஆவது. ஹ்ம்ம். என்ன செய்வது? பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு கொஞ்சம் வாய்ப்பு குடுத்து பாப்போமே.
பேய் பிசாசுக்கு புலிகள் பரவாலா தானே.
நன்றி.
சிவப்பு அவர்களே,
புரட்சி என்ற வார்த்தை உன்னதமானது. ஆனால் பாருங்கள், தற்போது புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சிக்களலைஞன், புரட்சி நடிகன் என்று புரட்சி என்பதே கேலிக்கூத்தாக மாறி விட்டது.
தற்காலத்தில் புரட்சி என்பது ஒரேயடியாக ஒட்டுமொத்தமாக நடப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஆனால் படிப்படியாக, செங்கல் செங்கலாக நடக்கலாம்.
நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான்.
ஒரு பொருளின் விலை என்பது முதலாளிகளின் பேராசை காரணமாகவும், இடைத்தரகர்களின் பதுக்கல்களாலும், விளம்பரத்திற்கு அதீத செலவு செய்வதாலும் அதிக விலைக்கு விற்கிறது.
சோஷலிச முறையில் அதே பொருளை குறைந்த விலைக்கு விற்க முடிந்தால் (அந்த பொருளை தயாரிக்க உதவி புரியும் அனைத்து தொழிலாளர்களின் நலனையும் பேணி பாதுகாத்தவண்ணம் இருக்க வேண்டும்), நல்ல தரமான பொருட்களை தந்தால் மக்கள் ஆதரவு அந்த பொருளுக்கு தானாக வரும். தனியாக விளம்பரம் செய்யத்தேவை இல்லை.
உலகம் முழுக்க சீன பொருள்கள் விற்கப்படுவது எதனால்? சீனத்தில் கம்மியுனிசம் இருப்பதாலா? இல்லை முதலாளித்துவம் இருப்பதாலா? இரண்டும் இல்லை. அந்த பொருள்கள் விலை குறைவாக உள்ளன. சென்னையில் மற்ற கடைகளை விட சரவணா ஸ்டோர் கடையில் வியாபாரம் குவிய என்ன காரணம்? குறைந்த விலை தான், வேறென்ன.
நான் செங்கல் செங்கலாக உருவாக்க சொன்னது இதைத்தான்.
மக்களின் பர்சில் உள்ள பணத்தை உங்களால் மிச்சப்படுத்த முடிந்தால் அவர்களின் நெஞ்சினில் விரைவில் இடம் பிடிக்கலாம். இது புதுமொழி.
மக்களிடம் தேவை இல்லாமல் இருக்கும் அனைத்து பழைய பொருட்களையும் மறு உபயோகப்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம். வெளிநாடுகளில் தேவை இல்லாத சாமான்களை வீட்டிற்கு வெளியே வைத்து விட்டு இலவசமாக யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று போர்டு வைத்து விடுவார்கள். அதே போல நம்ம ஊரிலும் இருப்பவர், இல்லாதவர் இடையே ஒரு பரிமாற்றம் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும்.
ஒட்டுமொத்த மாற்றம் ஒரே நாளில் நிகழாது.
மக்கள் மனதில் முதலில் இடம் பிடிக்க என்ன வழி என்று பாருங்கள்.
பின்னர் மக்கள் உங்களுக்கு தானாக ஆதரவு தெரிவிப்பார்கள்.
மணல் மாபியாக்களுக்கு எதிராக போராடுவது அத்துனை எளிதன்று. ஆனால் மணலின் தேவையை நாம் குறைக்க முடியும். நமது ஊரில் தான் மணலுக்கு இத்தனை டிமாண்டு உள்ளது. வெளிநாடுகளில் பெரும்பாலான வீடுகள் ஸ்டீல் மற்றும் போர்டு மூலமே கட்டுகிறார்கள். இதனால் மணல் உபயோகப்படுத்தும் தேவை குறைகிறது. ஆற்றுமணல் கொள்ளையடிப்பதை தவிர்க்க ஸ்டீல் கட்டிடங்களை கட்டலாம். வேகமாகவும், விலை குறைவாகவும் கட்ட முடியும்.
// மனிதர்கள் இழுக்கும் ரிக்சா//
ரிக்சா இழுப்பவர்களை கேவலமாக பார்க்காத பட்சத்தில் இதில் என்ன இழுக்கு. வயதானவர்கள் கர்ப்பிணிகள் வெளியே சென்றுவர உதவுவது ஒரு பண்புள்ள செயல். எந்திரங்கள் இருக்கிறதோ இல்லையோ, பெட்ரோல் கிடைக்கிறதோ இல்லையோ, இவர்களுக்கு உதவவேண்டும். நகரத்தில் இது காற்றுச் சீர்கேட்டையும் குறைக்கும். பல மலைக்கோயில்களில் கூட இதுபோன்ற ஏற்பாடு இருக்கிறது. Key board ல் தட்டுவது கூட கையுழைப்புதான்.
கையுழைப்பை விட்டுவிட்டால், எல்லாவற்றிறகும் எந்திரங்களையே நம்பினால் கைகள் சூம்பிப்போய் ஒரு காலத்தில் இல்லாமலே போய்விடும்.
//ஸ்ரீரங்கத்தில் பார்ப்பன அடிமை விழா//
இது பார்ப்பனர் அல்லாதவரான நம்பாடுவார் என்னும் அடியாரின் திருவிழா. வினவு இதை மிகத் தவறாகச் சித்தரிக்கின்றது.
PATTARAI EMBAA PALLAAKULA THOOKKURINGA? PAADAIYILA THOOKA VENDIYATHU THAANE? NIMMATHIYA POI SERUVAARU.
//இதை கண்டிக்கின்ற// which one are you condemning? you dont even have time to mention that. Got that much rush to reach the next sentences 🙂
எனக்கென்றால் இது கொஞ்சம் ஓவராகத் தான் தெரிகிறது. தமிழ்நாட்டில் போராட வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கும் போது, இவையெல்லாம் சும்மா பார்ப்பனர்களைச் சீண்டிப் பார்ப்பதற்காக செய்யும் போராட்டங்கள் போலத் தான் தெரிகிறது. “ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு” என்ற அந்தப் போராட்டத்தில் நியாயம் உண்டு. ஏனென்றால் சூத்திர தமிழர்களை இழிவு படுத்தும் வகையில், பார்ப்பனர்களைப் பல்லக்கில் வைத்து பார்ப்பனரல்லாதோர் தூக்குவதை எதிர்த்துப் போராடத் தான் வேண்டும். அப்படியான நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டில் தடுக்க வேண்டும். ஆனால் இங்கே ஸ்ரீரங்கத்தில் உள்ள பட்டரை பல்லக்கில் உட்கார வைத்து, பார்ப்பனர்கள் தானே தூக்குகிறார்கள். அந்த பட்டரின் மீது அவர்களுக்குள்ள மரியாதை, பய பக்தியின் காரணமாக, அவர்களின் பாரம்பரியச் சடங்குகளில் ஒன்றாக அவரைப் பல்லக்கில் வைத்து தூக்குகிறார்கள். அதில் ஆண்டானும், அடிமையும் இருப்பதாக எனக்குத் தெரிரியவில்லை. அதை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்த வேண்டும்? யாரவது தெரிந்தவர்கள் விளக்கவும்.
1. உதாரணமாக, திருமாவளவன் அவர்கள் அடுத்த தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வென்றால் அவரது கட்சியினர், தமது மகிழ்ச்சியையும், மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் அவரைத் தமது தோளில் தூக்கினால், அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால், அது எப்படியானதோ, அது போன்றது தான் இதுவும் என்று தான் எனக்குப் படுகிறது.
2. தேவர் சாதியினர் அவர்களின் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை கடவுள் போலவே பாவனை செய்து, அவரது சிலைக்கு தங்கக் கவசம் போட்டு, அபிடேக, ஆராதனைகள் கூட செய்கிறார்கள். அதை எதிர்த்து, மனிதனை, மனிதன் வணங்கும் அடிமைத் தனத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோமென்று முற்போக்குகள் எவருமே தேவர்களை எதிர்த்துப் போராட நிச்சயமாக துணிய மாட்டார்கள்.
__________
//ஸ்ரீரங்கத்தில் உள்ள பட்டரை பல்லக்கில் உட்கார வைத்து அதே சமூகத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் தூக்கிச் சென்று அவரது வீட்டில் விடுவதை ஒரு முறையாக வைத்து நடத்துகின்றனர். //
வியாசன்,
பட்டர் எந்த தேர்தலில் வென்றார். அதுவும் வருடாவருடம். முன்னர் நடந்த போராட்டத்தில் நியாயத்தைக் காணும் போது இந்த போராட்டத்தில் என்ன தவறு. முன்னர் நடந்த இழிவைத்தான் வேறுவிதத்தில் தொடர்கிறார்கள். திருமாவளவனை பல்லக்கில் யாரும் தூக்கவில்லை. அப்படி அவர்கள் நாளை செய்யலாம். பிறகு ஆளாளுக்கு கும்பல் கூட்டிக்கொண்டு பல்லக்கை hire ல் எடுத்து வீதிவீதியாக வலம் வருவார்கள். வருமுன் காப்பது நல்லதுதானே.
முத்துராமலிங்கச்சிலைக்கு கவசம் பூட்டியது ஒரு பாப்பாத்தி. நாளை தனது சிலைக்கும் அப்படிப்பட்ட நிலை வரவேண்டும் என்ற ஆசையால் செய்யப்பட்டது இது. இது போன்ற இழிநிலைக்கு உருவ வழிபாட்டிற்கு முதன்மைக்காவலர்களாக இருக்கும், உருவங்களுக்கு அருகிலேயே நின்று அதற்கு grooming செய்யும் பார்ப்பனர்கள் தான் முக்கிய பொறுப்பு. லட்சம் சிலைகளில் புதிதாக இன்னமொன்று முளைத்திருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா சிலைகளும் புதிய சிலையைப்போன்றதுதான். சிலைகளுக்கு grooming செய்பவர்கள் சமூகத்தில் மரியாதையாக வலம் வரும் வரை, இதை எதிர்த்து யாரால் என்ன செய்யமுடியும்.
வெறும் உதாரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், அதிலும் கூட குழம்பிப் போய்விடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. முதலில் நடந்த போராட்டம்- சூத்திர ஊழியர்களை, அவர்களின் விருப்பு வெறுப்பை அறியாமல், பார்ப்பனர்களைப் பல்லக்கில் ஏற்றி அவர்களைச் சுமக்க வைத்தது, அவர்களும் தமது வேலையை இழக்க விரும்பாத நிலையில் பல்லக்கைச் சுமந்தனர். ஆனால் இங்கு, பார்ப்பனர்கள், தமது சம்பிரதாயத்தின் அடிப்படையில், அவர்களாகவே முன்வந்து அவர்களில்(பார்ப்பனர்) ஒருவரைச் சுமக்கிறார். அதவாது, தேர்தலில் திருமாவளவன் வென்றால், மகிழ்ச்சியில் அவரது கட்சியினர் அவரைச் சுமப்பது போன்றது இது. தமிழ்நாட்டில் போராட வேண்டிய எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, இதை எதிர்த்து ‘முற்போக்குகள்’ ஏன் போராட வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி. இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன்.
அந்த ‘பார்ப்பாத்தி’ முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்குக் கவசம் பூட்ட முன்பே தேவர் சாதியினர் அவரைக் கடவுளைப் போலத் தான் பூசை, பொங்கலுடன் வழிபட்டு வருகிறார்கள். ஒரு அரசியல்வாதியின் சிலையைக் கும்பிடும் முட்டாள் தனத்தைக் கண்டிப்போம் என்று இவர்கள் எல்லாம் ஏன் போராட்டத்தில் இறங்கவில்லை, முக்குலத்தோர் ஓட்ட அறுத்து விடுவார்கள் என்ற பயத்தினால் தானே? 🙂
வியாசன்,
இரு கேள்விகளுக்கும் முந்தைய பதிலிலேயே பதில் இருக்கிறது. உங்களுக்கு புரியவில்லை. சரி. இன்னுமொரு முயற்சி செய்கிறேன்.
பல்லக்கு வியாதி பலருக்கும் பரவக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த போராட்டம் இருக்கிறது என்று கூறியிருந்தேன். அதைப்பற்றி உங்களுக்கு கருத்து ஏதுமில்லை. சரி. கோயில் ஒரு பொதுச் சொத்து பொது இடம். அங்கே பார்ப்பனர்கள் மட்டும் ஏதோ செய்து கொள்வதும் சரியல்ல. இது பழைய செயலின் புதிய வடிவமே. புதிய வடிவமும் சாதி பாகுபாட்டின் ஒரு வடிவம்தான். பார்ப்பனர்கள் தங்களுக்குள் ஏதேனும் செய்ய வேண்டுமானால் அதை அவர்களின் தனிப்பட்ட இடங்களில் செய்து கொள்ளட்டும். ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கே செய்து கொள்ளட்டும். பொது இடத்தை தவிர்த்துக்கொள்வதுதான் சரி. போதிய பலம் இல்லாததால் நண்பர்களின் முயற்சி முழுப்பலனை அளிக்கவில்லைதான். ஆனால் அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்.
நம் நாட்டில் ஒரு மனிதன் இறந்துவிட்டாலே போதும் சிலை வடிக்க தகுதி வந்து விடுகிறது. எனவே இங்கே சிலைகளுக்கு பஞ்சமில்லை. சில பழமையானவை. சில நூற்றாண்டுகளே ஆனவை. சில பத்தாண்டுகளே ஆனவை. இன்று கூட சில சிலைகள் முளைத்திருக்கலாம். இதில் புதிய சிலைகளுக்கு சிறப்பு கவனம் கொடுக்கவேண்டி எந்த சிறப்புத் தேவையுமில்லை. லட்சம் சிலைகளுக்கு மத்தியில் இன்னுமொரு சிலையை மட்டும் தனியாக எப்படி எதிர்ப்பது என்பதன் நியாயத்தை நீங்கள் தான் கூற வேண்டும். அதே சமயம் புதிய சிலைக்கு அரசாங்க சார்பாக விழா எடுக்கப்படுவது நண்பர்களால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. புதிய சிலையை விட பரவலாக காணப்படும் சில சிலைகளுக்கு நண்பர்கள் செருப்புமாலையையும் அணிவித்திருக்கிறார்கள். பட்டர் இறந்ததும் அவர்களுக்கு மற்ற பட்டர்கள் தங்கள் சொந்த செலவில் இடத்தில் சிலை வைக்கும் போது நண்பர்கள் தலையிட்டால் அப்போது உங்கள் கேள்வி சரியாக இருக்கும்.
நண்பர்கள் இப்போது கவனஈர்ப்புப் போராட்டங்களே செய்யமுடிகிறது. உன்மைதான். அதற்காக அவர்கள் அவமானப்படத்தேவையில்லை. அவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பது அவர்களின் பலவீணமில்லை. இந்த சமூகத்தின் இழிநிலை. அவர்களுக்கு பக்கத்தில் நிற்காமல் ஒதுங்கி நின்று வாளாவிருப்பவர்கள்தான் அவமானப்படவேண்டும். இந்த சிலைகளால் வரும் நன்மையைவிட தீமைகள்தான் அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு சிலைகளை புறக்கணிக்க வேண்டும். எதிர்ப்புப் போராட்டத்தில் சேரவேண்டும். அப்போது சிலைகள் தானாக காணாமல் போகும்.
I think to divert Perumal murugan saga, they are doing this.
they – Who ?…
//திருச்சி ஸ்ரீரங்கத்தில் 10.01.2015 அன்று நடைபெற்ற பிரம்ம ரத பல்லக்கு தூக்கும் விழாவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்பட்டோர் இந்த பார்ப்பனிய பண்பாட்டு நிகழ்ச்சியை தடைசெய்யக் கோரி ஸ்ரீரங்கத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்//
மனம் நிறைவான செய்தி. முற்போக்கு சக்திகளின் கூட்டியக்கமே பார்ப்பனியத்தை வெல்லும்.
மாச்சர்யங்களை மறந்து, பார்ப்பனிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைய பண்பாட்டு புரட்சி செய்ய முன்வரும் இந்த மாற்றத்தை வரவேற்று ஒத்துழைக்க ஒவ்வொருவரும் அணியமாக இருத்தல் இன்றைய தேவை.
Nice ! Good to know that MKIK is doing things like this that will absolutely help in bringing the downtrodden up. What a bunch of jokers! LOL!
ஸ்ரீரங்கம் பராசர பட்டருக்கு ஏன் ப்ரம்ம ரத மரியாதை நடக்கிறது?
——————————————————————————
பகுத்தறிவுப் பகலவன் எந்தை பெரியார் சொன்னதையே அவர் சொல்கிறார்.
எம்மான் அண்ணல் அம்பேத்கர் சொன்னதைதான் அவர் சொல்கிறார்.
அவர் அப்படி என்ன தான் பிரசங்கம் செய்கிறார் என்று கேண்மின். பிறகு நம்முடைய எதிர்ப்பினைக் காட்டுவோம்.
முன் ஜன்மத்தில் அந்தணனாயும் – பில்லி சூனியம் வைத்து -ப்ரம்மராக்ஷசனாய்ப் போன ஒருவனை அச்சாபத்திலிருந்து விடுதலை அளித்த ஒரு அடியாரின் கதையாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளியூர் (அ) ஏர்வாடி ஊருக்கு அருகில் திருக்குறுங்குடி என்னும் திருமாலவன் திருத்தலமுண்டு. அங்கு ஜாதி அந்தணர்களால் பொய்யாக கீழ்சாதியன் இவனென்று வகுக்கப்பட்ட, ஒரு அடியார்தாம் நம்பாடுவார்.
இந்த கோயிலில் சென்று காண்மின் ,கொடிமரமும் -பலிபீடமும்-வாஹனமும் சற்று தள்ளியே நிற்கும். இந்த நம்பாடுவார் வந்து இறைவனைத் தொழவுமாம்.
நம்பாடுவார் இவ்வூருக்கு சற்றுத் தொலைவில் வாழ்ந்து வந்தார். பத்து ஆண்டுகளாக தினமும் இக்கோயிலுக்கு வரவேண்டி நடுவிலுள்ள ஒரு கானகத்தையும் தாண்டி அதிகாலை 3 மணியளவிலே ,தன் இனிய யாழினாலும் தன் கானத்தாலும் இறைவனைத் திருப்பள்ளி எழுப்புவார். பத்து ஆண்டுகள் கழித்து ஒரு கார்த்திகை இரவு ஒரு ப்ரம்மராக்ஷஸனிடம் பிடிபட்டு பிறகு எங்ஙணம் அச்சாபத்திலிருந்து விடுதலை அளித்தார் என்பதேயாம்.
இது வராஹ புராணக்கதையாம். இதை ப்ரசங்கம் செய்த பிறகே பட்டருக்கு ப்ரம்ம மரியாதை.
இதில் எங்கே வந்தது சாதிச் சண்டை?
இதனால் அறிவது –
1. பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை.
(சாதிகள் இல்லையடி பாப்பா).
2. எவராயினும் பிறரைத் துன்புறுத்துவார் கேட்டினை அடைவார்.
3. உதவி செய்வார் மேன்மை அடைவார்.
ஒவ்வொருவரும் அவரவர் கலாச்சாரத்தையே பேண முயல்வர். பழங்குடி இன மக்களை, நம்மைப் போல் திருமண நிகழ்ச்சிகளை நடத்துமாறு சொன்னால் நடத்துவார்களா? அவர்களது அன்றாட செயல்கள் அறிவியல் பூர்வமாக இல்லை என்று நாம் நிரூபித்தால் ஏற்றுக்கொள்வார்களா?
நமக்கு எதிராக பிராமணர்கள் ஏதும் செய்யாத வரை, அவர்களைத் தாக்குவது அர்த்தமற்ற செயல். அவர்கள் பட்டரை பல்லக்கில் வைத்து தூக்கிச்சென்றால் உங்களுக்கு என்ன? அல்லது காரில் வைத்து ஓட்டிச்சென்றால் உங்களுக்கு என்ன?
எத்தனை பிராமணர்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று பாருங்கள். நாம் அவர்களுக்காகவும் போராட வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து வளங்களும் எல்லோருக்கும் சொந்தம் என்றால் பிராமணர்களுக்கு அதில் பங்கு இல்லையா? இல்லை என்றால் எப்படி?
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களைக் கொல்லும் படி குரானில் கட்டளை இடப்பட்டுள்ளது தெரியுமா? இதற்கு எதிராக நீங்கள் போராடினால் உஙகள் நிலைமை என்னவாகும் என்று உங்களுக்கு நன்கு தெரியும்.
வலுவற்றவர்களை ஏறி மிதிப்பது வீரமல்ல தோழர்களே.
Aassaami,
//பழங்குடி இன மக்களை, *** அவர்களது அன்றாட செயல்கள் அறிவியல் பூர்வமாக இல்லை என்று நாம் நிரூபித்தால் ஏற்றுக்கொள்வார்களா?//
நமது அன்றாட செயல்கள் தான் அறிவியல் பூர்வமாக இல்லை. பழங்குடி இன மக்கள் தான் இயற்கையாகவும் அறிவியல் பூர்வமாகவும் வாழ்கிறார்கள்.
//எத்தனை பிராமணர்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கண்ணீர் வடிக்கிறார்கள்//
ஒரு குடும்பத்தைக் காட்டுங்கள். நன்றி. பல்லக்குத் தூக்குபவர்களிடமும் சொல்லி வைக்கலாம்.
//பல்லக்கு வியாதி பலருக்கும் பரவக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த போராட்டம் இருக்கிறது என்று கூறியிருந்தேன்//
இவ்ளோ நாளா பரவாதது இப்போ பரவிடுமா?
மனிதனை மனிதன் தூக்குவதை விட கல்லுக்கு மனிதன் மாலை போடுவது அசிங்கமில்லையா (ஓட்டு பொறுக்கிகள் சிலைகள்) ? அதை முதலில் நிறுத்த வேண்டியது தானே ?
வாங்கின காசுக்கு கூவின கணக்கு கட்ட தான் இந்த போராட்டம் ?
Goiyala,
இவ்ளோ நாளா பரவாட்டி இனி எப்பவுமே பரவாதா?
கல்லுக்கு மனிதன் மாலை போடுவது அசிங்கமுன்னு தானய்யா நானுஞ்சொல்றேன். அது என்ன அடைப்புக்குறியில (ஓட்டு பொறுக்கிகள் சிலைகள்) . நான் சொல்றது எல்லா சிலையவும்தான். அதாவது மால போடப்படற, சோப்பு இத்தியாதி போட்டு கழுவப்படற எல்லா சிலையவும்தான்.
பகுத்தறிவற்றவர்கள் செய்யும் செயலை தடுப்பதை விட, பகுத்தறிவுள்ளவர்கள் செய்யும் பகுத்தறிவற்ற செயலை கண்டிப்பது முதல் காரியம் இல்லையா ?
அதனால, பிறந்த நாளுக்கு சிலைகளுக்கு மாலை போடுவதை எதிர்த்து முதலில் போராடுங்கள்
Goiyala,
பொது நலனுக்காக உழைத்த முன்னோடிகளை பெரியார்களை பொது நலனில் அக்கறையுள்ளவர்கள் நினைவு கூர்வது பகுத்தறிவான செயல்தான். இதற்காக அவர்களுக்கு சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பெரியார்களின் பொதுநலச்செயல்களை நினைவு கூர்வதன் மூலம் அடுத்தடுத்த தலைமுறை தங்களின் உத்வேகத்தை புதுப்பித்துக் கொள்கிறார்கள். பூக்கள் மாலைகள் நன்றியுணர்வை காட்டக்கூடிய சிறு அடையாளங்கள்.
சுயநலகுறுநலமக்கள் தங்கள் குறுநலத்தலைகளைக்கூட இதே போன்று தான் நினைவுகூர்கிறார்கள். அந்த சிலைகளிடம் எந்த சிறப்பான வழிகாட்டலும் இல்லை. இருந்தாலும் இது போன்ற சிலைகளை அடையாளங்களை அவர்கள் ஒரே நாளில தெய்வங்களாக்கி அனுதினமும் நீராட்டி சீராட்டி பூவிட்டு வணங்குவார்கள். இதுதான் பகுத்தறிவுக்கு மாறானது.
சுயநலகுறுநலமக்கள் பொதுநலனுக்காக உழைத்த முன்னோடிகளை பெரியார்களை மதிப்பதில்லை. இந்தவர்க்கம் பெரியார்களுக்கு மக்களிடம் உள்ள மரியாதையை சிறிதுசிறிதாக மறக்கடிக்க முயற்சி செய்வர். போலிக்கதைகளை ஏற்றி உன்மை செயல்களை அழித்து மறைத்து பெரியார்களை வெறும் சிலைகளாக மாற்ற முயல்வர். இது தொடர்ச்சியாக படிப்படியாக நிகழ்வது. சிலைகளை தெய்வங்களாக்கி கடைசியில் சாரமற்ற சிலைகள் மட்டுமே எஞ்சும். இதுபோன்ற சாரமற்ற ‘Icon’ களையும் முன்னர்கூறிய ஒரே நாளில் தெய்வங்களாக்கப்பட்ட சிலைகளையும் அனுதினமும் நீராட்டி சீராட்டி பூவிட்டு வணங்குவது தான் பகுத்தறிவுக்கு மாறானது.
இப்போது புரிந்ததா வித்தியாசம்?
பராசர பட்டர் இன்றிருந்தால், வினவுவில் பார்ப்பனர்களைத் தாக்கி கட்டுரைகள் வரைந்திருப்பார். பார்ப்பனர்கள் மாறாமல் அன்றிருந்த மாதிரியே இன்றுமிருக்கின்றனர் என்று அவர் நம்பினால்.
அன்றிருந்த பார்ப்பனர்கள் தீண்டாமையை அனுசரித்ததைக்கண்டு மனம் வெதும்பி பட்டரால் எழுதப்பட்ட கதையே நம்பாடுவான் புராணம். அக்கதையில் ஒரு தீண்டத்தகாதவன் என பார்ப்ப்னர்களால் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒருவனால் மோட்ச கதியை அடைகிறான் என்ற செய்தி இன்றே பல பார்ப்பனர்கள் எதிர்ப்பார்கள். ஆனால் அந்த நாடகம், திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி இரவில் (நவம்பரில் வரும்) நடக்கும்போது பார்வையாளர்கள் 90 மேல் விழுக்காடு பார்ப்பனர்களே. இவர்களனைவரும் பட்டரின் கருத்தை ஆதரிப்பவர்கள்; பார்ப்பனரோ எவரோ, எல்லாருமே தங்கள்தங்கள் வாழ்க்கை நடத்தையாலே மட்டுமே திருமாலை அடைவர் என்ற தத்துவத்தைப் போதிக்கும் கதை. இதில் பார்ப்பனரையும் பறையரையும் ஒன்றாக்குகிறார். (நம்பாடுவான் பறையர் குலத்தைச்ச் சார்ந்தவர்) கொடி மரம் விலகி திருமால் தரிசனம் தந்தது பார்ப்பனர்களுக்குச் சொல்லவே: எவ்வளவுதான் எழுதி நீர் தடுத்தாலும் திருமாலுக்கு உகந்தவனை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது ஓய்! நீவிர் அவனைப்போலாகவேண்டுமானால், திருமாலுக்கு அடிமை செய்வீர். திருமாலுக்கடிமை என்றால், நடத்தையிலும் வரும். சும்மா சொன்னால் கேட்கமாட்டார்கள் என்று புராணத்திலேயே எழுதிவிட்டார். சாமிக்குத்தத்திற்கு பயப்படுபார்கள் பார்ப்ப்னர்கள். எனவே பட்டர் செய்தது ஒரு workable trick!
இப்படிப்பட்ட பராசர பட்டர் ஒரு புரட்சிக்காரர். வினவு குழு இன்று செய்கிறது. அன்று இக்குழுவால் ஒன்றும் செய்திருக்க முடியாது. The time was such that only a very courageous person can oppose entrenched vested interests against Dalits. பட்டர் செய்தார். பட்டரின் புரட்சியைக் கண்டு விதந்தோதியவருள் பார்ப்பனர்கள் அதிகம் இன்றும் அன்றும் என்பதை உணர்க.
இன்று ஆதிக்க இடை சாதியினரால் அழுந்தப்பட்டு நைந்து வாழும் தலித்துகளுக்கு பட்டர் போன்ற புரட்சிக்காரர் இல்லாதததுதான் பெருங்குறை. பட்டரை பல்லக்கில் வைத்து சுமந்து செல்லும் பார்ப்பனர்கள் பட்டரின் புரட்சிக் கருத்தை ஏற்றவர்கள். அவர்கள் சுமப்பது ஒரு குறைவான விடயமன்று. அஃது அவர்களின் பாக்கியம் என்று நினைப்பவர்கள். அல்லது, தம்மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு அப்பாவி ஏழைக்கூட்டத்தைத் தள்ளிவைத்தார்கள் எனபதற்கு, அந்த மக்கள் சார்ப்பாக வாழ்ந்த தம்முள் ஒருவரைச் சும்ப்பது பரிகாரம் என்று நினைந்தாலும் சரியே. நான் விரும்புவதென்னவென்றால், ஒவ்வொரு தமிழ்ப்பார்ப்ப்னரும் ஒரு முறையாவது பட்டரைச்சுமந்து தலித்துகளுக்கெதிராக பிழை செய்த தம் முன்னோர்கள் பலருக்காக பிராய்ச்சித்தம் செய்யவேண்டும்.
எப்படி அம்பேத்கரை நாம் புகழ்கிறோமோ, அவருக்கு எங்கெங்கும் சிலைகள் வைத்துப்போற்றுகிறோமோ, அப்படி தலித்து மக்களுக்கு இந்து மதத்தில் ஓர் உயர்விடம் வேண்டுமென நினைத்தும் செய்தும் வாழ்ந்த பட்டரும் போற்றப்படவேண்டும். பட்டர் படைத்த நம்பாடுவான் புராணம் பள்ளி நூல்களில் வைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை வைத்து வினவு போராடினால் அதற்கு நான் வரத் தயார்.
அப்போற்றுதலில் சிறு காணிக்கை யாம் செய்யும் பட்டரைச் சுமத்தல்.
பட்டரை இகழ்வதும் பட்டரைப் போற்றுபவர்களைப் பழிப்பதும் இச்செயலைப்புரியாமல் இடித்துரைப்பதும், ஆம். தலித்துகளை எதிர்ப்பதும் அவர்களை மீண்டும் பழைய இடத்துக்கே தள்ளிவிடும் சூழ்ச்சிகளாகும். அன்றும் இன்றும் நம்பாடுவான் புராணத்தையும் அஃதை எழுதிய பட்டரையும் இகழ்ந்த பார்ப்பனக் கூட்டத்தில் வினவு வீழ்ந்து கிடப்பது ஒரு அருவருப்பான காட்சி.
பட்டர் ஒரு புரட்சிக்காரராம்.
அன்று வினவுக் குழுவால் அவரைப்போன்று ஒன்றும் செய்திருக்க முடியாதம். பட்டர் செய்தாராம்.
அப்படி என்னய்யா செஞ்சாரு வெண்ண?
நம்பாடுவார்னு ஒரு கதையை கட்டி 90 % மேல் பார்ப்பனர்களே இருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில அந்த கதைய பாட்டா படிச்சார்.
அப்படி என்னய்யா இந்த கதைல புரட்சிகரமா இருக்கு? எல்லோருமே கோயிலுக்கு உள்ள அனுமதிக்கப்படனும்னு இருக்காய்யா?
இல்ல இல்ல. உள்ள அனுமதியில்லாம வெளியவே நிக்கற மனிதனுக்கு அவருக்கு பக்தி இருந்தா கொடி மரமே விலகி சிலைய தெரிய கொடுக்குமாம்.
இது ஒரு புரட்சியாய்யா?
அப்படி சொல்லாதீங்க. இன்றும் அன்றும் பார்ப்பனருங்களுக்கு இது தான் புரச்சி. ஒவ்வொரு தமிழ்ப்பார்ப்ப்னரும் ஒரு முறையாவது இந்த புரச்சிய செஞ்ச மனுசன சுமந்து தலித்துகளுக்கெதிராக பிழை செய்த தம் முன்னோர்கள் பலருக்காக பிராய்ச்சித்தம் செய்யவேண்டும்னு கூட சில BS ங்க விரும்பறாங்க பாத்துகோங்க. இத புரச்சியா பாக்கர பார்ப்பனருங்கதான் வழிவழியா அந்த பட்டரோட பரம்பரையில ஒருத்தருகிட்ட இந்த கதைய கேட்டுட்டு அவர பல்லக்ல வைச்சு சுமக்கறாங்க.
நீதி: அற்பர்களின் அற்பத்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லை. முன்புத்தியும் இருக்காது பின்புத்தியும் இருக்காது. அற்ப புத்தி மட்டும் தான் இருக்கும்.
//அல்லது, தம்மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு அப்பாவி ஏழைக்கூட்டத்தைத் தள்ளிவைத்தார்கள் எனபதற்கு, அந்த மக்கள் சார்ப்பாக வாழ்ந்த தம்முள் ஒருவரைச் சும்ப்பது பரிகாரம் என்று நினைந்தாலும் சரியே. //
இப்படிபடிக்கவும்:
//அல்லது, தம் மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்றொரு அப்பாவி ஏழைக்கூட்டத்தைத் தள்ளிவைத்தார்கள் என்பதற்கு அத்தள்ளிவைக்கப்பட்ட மக்கள் சார்பாக வாழ்ந்த ஒருவரைச் சுமப்பதுதான் சரியான பரிகாரம் என்று நினைத்தாலும் சரியே//
PS: This drama is played in Srirangam on the same night it is played in Thirukkurangudi.
ஐயா,
கூரத்தாழ்வார் திருமகனாரான பராசர பட்டர் என்ற ஒரு வைணவ அடியாரின் வழிவந்தவர்களை பராசர பட்டர் குழாம் என்று திருவரங்கத்தில் அழைப்பதுண்டு. இந்த பட்டர்களின் பங்காளி குடும்பம் பெருகி விட்டது. வருடாவருடம் நடக்கும் கார்த்திகை வளர்பிறை துவாதசி ஐ கைசிக துவாதசி என்பார்கள். அன்று நம்பாடுவார் என்ற அடியார் ஒரு ப்ரம்மராக்ஷ சனுக்கு விடுதலை அளித்த வரலாறு கைசிக புராணம். இதைக் கோஒயிலில் வாசிக்கும் பட்டரை பல்லக்கு மரியாதையுடன் அவர் வீட்டில் இறக்கிவிட்டு வருவார்கள்.
இந்த பட்டர்களின் பங்காளி குடும்பம் பெருகி விட்டது. ஒவ்வொரு வருடமும் ஒரு குடும்பத்துக்கு அந்த மரியாதை வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. இது மனித உரிமை மீறல் வரை சென்று விட்டதே கொடுமை.
பட்டரைச்சுமக்க எல்லாருக்கும் உரிமை வேண்டுமென்று பார்ப்பனர்களே, அல்லது அனைத்து வைணவர்களும் போராட வேண்டும். வினவு அப்போராட்டத்தை சிரிரங்கத்தில் செய்தால் வைணவ மக்களுக்குச் செய்த சேவையாகும். அல்லது அனைத்து வைணவருக்கு செய்த சேவையாகும். எல்லா பார்ப்ப்னரும் நன்றி தெரிவிப்பர்.
ஆளவந்தார், பராசர பட்டர், இராமானுஜர், கூரேசர், என்று முன்வாழ்ந்தோர் மக்களைனைவரையும் இறைவன் ஒன்றாக்க போராடியவர்கள். அவர்கள் போராட்டத்தை வீணடிக்க முயன்று கொண்டிருக்கும் பார்ப்பனரை எதிர்ப்போம்.
அய்யா,
பீய அள்ளறது மனித குல மானத்திற்க்கே இழிவு என்று இருக்கும் பொது இவரு எல்லோரும் பீய அல்ல போராடனும் என்று சொல்றீங்களே.
பராசரபட்டர் சாதிப்பிரிவினையை எதிர்த்திருந்தால் அவரைத் தானே பாராட்ட வேண்டும், பல்லக்கில் தூக்கில் வேண்டும், அவருடைய வாரிசுகளையும் பங்காளிகளையும் எதற்காகப் பல்லக்கில் தூக்க வேண்டும். உதாரணமாக, பெரியார் சாதிப்பிரிவினையை எதிர்த்தார் என்பதற்காக, அவரைக் கொண்டாடும் கம்யூனிஸ்டுகளிடமும், ஏனையே தோழர்களிடமும் பெரியாரின் பரம்பரையில் வந்தவராகிய இளங்கோவனைப் பல்லக்கில் தூக்குங்கள் என்றால் செருப்படி தான் விழும்.
அண்ணன் சிவப்பு வின் அழகு தமிழைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இங்கே ஓடிவந்தால், இங்கே என்னடாவென்றால் BS இன் ரோதனை தாங்க முடியவில்லை. தோழர் தென்றலோடு வாதாடுவதற்குப் பதிலாக மாமல்லபுரத்துக்குப் போய் அங்கேயுள்ள பாறையொன்றில் தன் தலையை மோதியிருக்கலாம் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறார் கற்றதுகையளவு, அவர்களை இடையூறு செய்ய விரும்பவில்லை, ஆகவே சில நாட்களுக்கு(மட்டும்) வினவிலிருந்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். 🙂
@Red
// பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு கொஞ்சம் வாய்ப்பு குடுத்து பாப்போமே.//
ஊழல் பெருச்சாளிகள் சுரண்டினாலும் மதிய தர வர்க்கம் பாதிப்படையாமல் வாழ்க்கை நடத்தலாம் . வாழ்க்கை தரம் மேம்பட்டு இருக்கும் .
கம்மிகள் வந்தால் , எல்லோரும் க்யூவில் நின்றே வாழ்கையை தொலைக்க வேண்டியத் தான் .
http://www.voanews.com/content/reu-venezuelan-shortages-long-queues-violence-arrests/2595224.html