வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், நாத்திகருமான அவ்ஜித் ராய், நேற்று வியாழன் – 26.02.2015 அன்று இரவு சிலரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இவரது மனைவி ரஃபிதா அகமதுவும் தாக்கப்பட்டு, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
டாக்கா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர் அஜய் ராயின் மகனான அவ்ஜித் ராய் பிரபலமான முக்தோ மோனா எனும் வங்க மொழி இணைய தளத்தின் நிறுவனராவார். நாத்திக சிந்தனைகளையும், மதவெறியர் – மத அடிப்படைவாதத்தை எதிர்த்தும் இந்த இணைய தளம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் தஸ்லிமா நசுரீன் நாடு கடத்தப்பட்டு அதை வங்க நீதித்துறை அனுமதித்த போதெல்லாம் இவர் அதை கண்டித்து குரல் கொடுத்திருக்கிறார். பிறப்பால் இந்துவாக இருந்தாலும் வங்க மொழியையும், கலாச்சாரத்தையும் நேசித்தவர். அதனாலேயே மதவெறியர்களை எதிர்த்து எழுதி வந்தார். வங்க தேச மரபில் மதவெறிக்கு இடமில்லை.
பெரிய கத்திகளைக் கொண்டு இருவர் தாக்கியதாக மருத்துவமனையில் இருக்கும் இவரது மனைவி தெரிவித்திருக்கிறார். டாக்கா புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இருவரையும் அக்கும்பல் கொடுரமாக தாக்கியிருக்கிறது.
காவல்துறை அதிகாரியான சிராஜுல்,”இந்தக் கொலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால் பேராசிரியர் ஹுமாயூன் ஆசாத்தை தாக்கிய கும்பல்தான் இதை செய்திருக்க கூடும்” என்று தெரிவித்திருக்கிறார்.
பிப்ரவரி 17, 2004 அன்று இதே போல புத்தகக் கண்காட்சி சென்று திரும்பிய ஆசாத்தை இப்படித்தான் தாக்கினார்கள். பிறகு அவர் அதே வருடம் ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் இறந்தார். அவரது நாவல் ஒன்றில் இசுலாமிய மதவாதிகளை அம்பலப்படுத்தியும், கேலி செய்தும் எழுதியிருந்தார் என்று பல்வேறு இசுலாமிய மதவெறிய அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பையும், மிரட்டலையும் தெரிவித்திருந்தன. வங்கதேச பாராளுமன்றத்திலேயே இவரை கைது செய்து புத்தகத்தை தடை செய்ய வேண்டுமென்று மதவாதிகள் குரல் கொடுத்திருக்கின்றனர். இறுதியில் ஒரு மதவெறியரால் தாக்கப்பட்டு பிறகு அதன் பாதிப்பால் இறந்தும் போனார். இந்த வழக்கின் இன்றைய நிலை குறித்து தெரியவில்லை.
2013-ம் ஆண்டு துவக்கத்தில் 1971 போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் இ இசுலாமி மதவெறியர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென்று ஷாபாக் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக எழுதிய ரஜீப் ஹைதர் எனும் நாத்திக வலைப் பதிவரை ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி குண்டர்கள் 2013 -பிப்ரவரி 15ம் தேதி படுகொலை செய்தனர். ரஜீபின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மத பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
தற்போது அவ்ஜித் ராயின் மரணத்திற்கு பிறகும் பல்வேறு மக்கள் உடன் திரண்டு டாக்கா மருத்துவமனையின் முன் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேராசிரியர் அன்வர் ஹுசைன் பேசும் போது,” நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், கருத்து சுதந்திரம் அனைத்தையும் எதிர்ப்பதோடு, ஹுமாயூன் ஆசாத் போன்றோரை கொன்றவர்களுமே இந்த கொடூரத்தை செய்திருக்கின்றனர்” என்று பேசினார்.
டாக்கா பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்க தலைவரான லிடன் நந்தி, விரைவில் இந்தக் கொலையைக் கண்டித்து தீப்பந்த ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் ரொபாயத் பெர்டோஸ் பேசும் போது, ஆசிரியர்களும் மாணவர்களும் வெள்ளியன்று ஊர்வலம் போக இருப்பதாக கூறினார். இன்னும் பல்வேறு மாணவர் சங்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் கொலையைக் கண்டித்து போராடி வருகின்றனர்.
வங்கதேசத்தில் செயல்படும் இணைய புத்தக விற்பனை நிறுவனமான ரோகோமாரி, 2014 ஆரம்பத்தில் அவிஜித் ராயின் புத்தகங்களை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டது. ஃபேஸ்புக்கில் ஃபாரபி ஷைஃபர் ரஹ்மான் எனும் ஜமாத் ஏ இசுலாமி இயக்க மதவெறியர் மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்த விற்பனை தடை. அவிஜித் ராய் இசுலாமையும், நபியையும் இழிவுபடுத்துவதாகவும், ரோக்மாரி நிறுவனம் இத்தகைய நாத்திக புத்தகங்களை விற்றுவருவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார். ரோக்மாரி அலுவலகத்தின் முகவரியை கொடுத்து இசுலாமிய நண்பர்கள் அதை தாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அகமது ராஜிப் ஹைதருக்கு நடந்தது அவிஜித்துக்கும் நடக்குமென்றும் கூறினார். இத்தனைக்கும் பிறகும் கொலையை யார் செய்தார்கள் தெரியவில்லை என்று போலீஸ் தெரிவிக்கின்றது.
பொறியியலாளரான அவிஜித் ராய் அமெரிக்கா சென்று செட்டிலானவர். தத்துவம், அறிவியல் சிந்தனைகள், மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். (Among his books are Biswas and Bigyan (Belief and Science), Abishwasher Darshan (philosophy of atheism), Samakamita: Baigyanik ebong Samajmanastattik Anusandhan (Homosexuality: Scientific and socio-psychological intervention), Satantra Bhabna o Buddir Mukti (individual thoughts and freedom of thoughts) etc. )
இந்த வருடம் டாக்கா புத்தகக் கண்காட்சியில் அவரது இரு புத்தகங்கள் வெளிவருவதை ஒட்டி அவர் வங்கதேசம் வந்திருந்தார். வந்தவருக்கு மதவெறியர்கள் சமாதி எழுப்பி விட்டனர்.
சென்னை புத்தகக் கண்காட்சியின் போது எழுத்தாளர் பெருமாள் முருகனது நாவலை எரித்து, அவரை முடக்கி இந்துமதவெறியர்களும், கவுண்டர் சாதிவெறியர்களும் ஆட்டம் போட்டனர். தற்போதும் கரூரில் புலியூர் முருகேசன் எனும் எழுத்தாளரை தாக்கி அடவாடி செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பொதுவுடமை, பெரியார் கருத்து தாக்கத்தினால் இன்னும் கொலை அளவுக்கு போகவில்லை. ஆனால் வங்க தேசத்தில் இத்தகைய முற்போக்கு மரபு இருந்தாலும் மதவெறியர்கள் இன்னும் இத்தகைய அடாவடிகளை செய்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர். இவையெல்லாம் இசுலாத்தில் இல்லை, குர் ஆன் அப்படிச் சொல்லவில்லை, நபிகள் அப்படி போதிக்கவில்லை என்று சலீப்பூட்டும் வாதத்தை இப்போதும் கேட்கலாம்.
ஆனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையுடன் வாழும் ஒரு இடத்தில் ஒரு நாத்திகருக்கோ இல்லை ஒரு கம்யூனிஸ்டுக்கோ இடமில்லை, அவர்கள் தமது கருத்துக்களை பேசக்கூடாது என்பதில் மிதவாத முசுலீம்கள் கூட ஏற்றுக் கொள்வர். இவர்கள் ஆயுதம் எடுத்து அடுத்தவரை தாக்குவதில்லை. ஆனால் கருத்தளவில் மதவெறியர்களுக்கு களம் அமைத்து கொடுக்கின்றனர். எப்படி குஜராத்தில் இந்துமதவெறியர்கள் முசுலீம்களை தாக்கும் போது பெரும்பான்மை இந்துக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தார்களோ அது போலத்தான் மிதவாத முசுலீம்களும் மதம் சார்ந்து ஜனநாயகத்தை எதிர்க்கின்றனர்.
வங்கதேசம் எனும் ஏழை நாடு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது. வால்மார்ட் ஏற்படுத்திய தீ விபத்தின் புகை மூட்டம் கூட இன்னும் அணையவில்லை. இத்தகைய சூழலில் இசுலாமிய மதவெறியர்கள் வங்கதேசத்தின் அறிவுச் செல்வங்களை, மண்ணின் மைந்தர்களை ஒவ்வொருவராக கொலை செய்கின்றனர்.
1971 போரில் வங்கதேச இளைஞர்களைக் கொன்று, பெண்களை வன்புணர்ச்சி செய்து ஆட்டம் போட்டதும் இதே மதவெறியர்கள்தான். இன்று அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பி வரும் வங்க தேசம் இன்னும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.
பிறப்பால் முசுலீம்களாக இருக்கும் ஒருவர் அவர் சமூகத்திலேயே நாத்திக பிரச்சாரம் செய்யும் உரிமையை பெற்றிருக்க வேண்டும், மற்ற மதத்தினரை காதலித்து மணமுடிக்கும் உரிமை வேண்டும், இசுலாமிய சடங்குளை தவிர்க்க நினைத்தால் அனுமதிக்க வேண்டும் போன்ற மதச்சார்பற்ற, ஜனநாயக உரிமைகளுக்காக போராட வேண்டும்.
இதன்றி இது இசுலாத்தில் இல்லை, குர்ஆன் பேசவில்லை என்று பேசினால் அவர்கள்தான் முசுலீம் மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்து சித்ரவதை செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள்.
வங்கதேச எழுத்தாளர் கொலைக்கு கண்டனம் தெரிவிப்போம். இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்துவோம்.
தொடர்புடைய செய்திகள்:
Writer Avijit Roy hacked to death
A Statement from Mukto-mona : Stop Muzzling Taslima Nasrin a la Bangladeshi style
படுகொலை செய்யப்பட்ட வீரர்களுக்கு எனது செவ்வணக்கம்.
இஸ்லாமியர்களை மற்றும் இஸ்லாத்தைப் பற்றிய வினவின் பதிவுகளில் இந்த பதிவு ஒரு புதிய கோணத்தில் இருக்கிறது. அளவுகடந்த மகிழ்ச்சி.
யெப்பப்பா இன்னிக்குதான் இசுலாமியர்களை பத்திஅ உண்மை முகத்த எழுதி இருக்கு வினவு மித வாத முஸ்லீம் அப்பிடிங்கிறவக இந்த கொலைகளை மறைம்க மாக அல்ல நேரடியாகவே ஆதரிப்பார்கள் இங்க இந்து மதம் கொஞ்சம் பலத்தோடும் பயமுறுத்தும் அமைப்புகளும் இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறானுக இல்லனா இவங்கள கண்ட்ரோல் பன்றது கஸ்டம்தான் இந்தியால மற்ற மேற்க்கத்திய நாடுகளைப்போல மதத்துக்கு எதிராகவும் மத வெறியர்களுக்கு எதிராகவும் குரல் குடுப்பது இசுலாமிய நாடுகளில் ரெம்ப கஸ்டம் ஏன்னா அல்லா சொன்னாறு நபி சொன்னாறு அப்பிடினு மாற்று மத்த்தவரையும் நாத்திகர்களையும் கொடுமைப்படுத்தும் சட்டங்களை___ இசுலாமிய அரசியல் சட்டமுனு வச்சுக்கிட்டு வாய் பேசவே விட மாட்டாக மீறி பேசுனா அம்புடுதே தலை வெட்டும் தண்டனை தான் ,ஆனா வங்க தேசம் கொஞ்சம் பரவா யில்ல போல தோனுது, ___________
ada arakkirukku nee innum thirunthalayaada..
அல்லாவின் அடிமைகளுக்கு வரும் கோவத்த பாத்தாலே தெரியுது நான் சொல்லுறது 100% உண்மையிமனு
பாயுங்க மேட்டர்னா பாய்ந்தோடி வருவாரு சோசப்பு அண்ணன்.
ஏன் இதுக்கு முன்னால இஸ்லாமிய மத வெறியர்களை பற்றி
வினவு எழுதியதே இல்லையா?
உங்க அரிப்பு அடங்கற அளவுக்கு எழுதல போல.
ஐசிஸ் பற்றி எத்தனை கட்டுரைகள் எழுதியிருக்காரு நம்ம வினவு…?
பங்களாதேஷ்ல “மாதொருபாகன்” எழுதி இருந்தா என்ன கதி ஆகும்னு தெரிஞ்சுதா? உங்க so-called இந்து மத வெறியர்களோட பொருமைய இப்பவாவது உணருங்க வினவு
ஒரு மனிதனை அவனின் எழுத்துகளுக்காக அவனை வெட்டி எறிவதும் ,அவனை அவன் மண்ணில் இருந்து வேரோடு வெட்டி வேறு இடத்துக்கு துரத்துவதும் ஓன்று தானே மனிதன் ? முதல் வன்முறையில் உடலும் ,மனமும் முடக்கபடுகின்றது.இரண்டாவது வன்முறையில் மனம் முடக்கபட்டு, உடல் மட்டும் உயிர் வாழ்கின்றது. மாதொருபாகனை தொடர்ந்து தமிழ்நாட்டில் எழுதாளர்கள் அடித்து உதைக்கப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் மறந்து விட்டதா உங்களுக்கு ? அத்தகைய வன்முறையில் எழுத்தாளர்களின் உயிர் போனால் மட்டுமே இரண்டு வன்முறைகளையும் ஒன்று என்று சமன் செய்து பேசுவிர்களா மனிதன் ?
அப்படியா? பெருமாள் முருகன் உயிரோட தான் இருக்கிறார்.
மேலும் அவர் வேறு ஒரு இடத்திர்க்கு குடிபெயர்ந்து புத்தகங்கள் எழுத முடியும்,ஆனால் அவிஜித் ராய்?
இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்கள் ஏதோ ஒரு விதத்தில் மனத்துயரம் அடையவே செய்கிறார்கள்.
ஆனால் அதை மேற்கொண்டு மனவலிமை வளர்த்து வாழ்கின்றனர்.
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
ஆனால் அவிஜித் ராய்?
பாபா மர்கயா!!!!!!
//அப்படியா? பெருமாள் முருகன் உயிரோட தான் இருக்கிறார்.
மேலும் அவர் வேறு ஒரு இடத்திர்க்கு குடிபெயர்ந்து புத்தகங்கள் எழுத முடியும்,ஆனால் அவிஜித் ராய்?
இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்கள் ஏதோ ஒரு விதத்தில் மனத்துயரம் அடையவே செய்கிறார்கள்.
ஆனால் அதை மேற்கொண்டு மனவலிமை வளர்த்து வாழ்கின்றனர்.
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
ஆனால் அவிஜித் ராய்?
பாபா மர்கயா!!!!!!//மானங்கெட்டு ஆர் எஸ் எஸ் பொழப்பு நடத்தும் அரிகுமாரிடம் கேட்கிறேன். மும்பையில் காவி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பன்சாரே தபோல்கர் என்ன பதில் உன்னிடம் உள்ளது. உன் கண்க்கில் அவர்கள் மனிதர்களே கிடையாது என்பது தெரியும். இந்திய சமூகம் பலி வாங்கும் போது அந்த கண்க்கிலேயே நீ வரமாட்டாய். அற்பப் பதர்.
//ங்களாதேஷ்ல “மாதொருபாகன்” எழுதி இருந்தா என்ன கதி ஆகும்னு தெரிஞ்சுதா? உங்க so-called இந்து மத வெறியர்களோட பொருமைய இப்பவாவது உணருங்க வினவு
// An animal under the name of Manidhan. Let yourself check the facts right it is periyar pumi. you do this much here tells how much you will do elsewhere in India – Shoot and kill (Mumbai and North India).
உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
இப்படி எல்லாம் புத்தகம் எழுதினால் பொறுக்க முடியுமா மதவெறியர்களால் ?:
[1]முரண்பட நம்பிக்கையும் , அறிவியலும் [Belief and Science]
[2] நாத்திக தத்துவம் [philosophy of atheism]
[3] ஓரினச் சேர்க்கை: அறிவியல் மற்றும் சமூக உளவியல் தலையீடு [ Homosexuality: Scientific and socio-psychological intervention ]
[4 தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் சுதந்திர சிந்தனைகள் [ individual thoughts and freedom of thoughts]
என் தம்பி அவ்ஜித் ராயை கொலைசெய்த மதவெறி _____””கார்டூனில் அறுக்க”” சார்லி இல்லையே கிழக்கு வங்கத்தில். அங்கு ஜமாத் இ இஸ்லாமி இங்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்[TNTJ] அவ்வளவு தான் வேறுபாடே தவிர சிந்தனையில் எந்த வேறுபாடும் இவர்களுக்குள் கிடையாது .
The people who believe in the cardinal principals of freedom of expressing one’s thought, securalism and will strongly condemn this heinous crime and the guilty must be punished strongly
//இவையெல்லாம் இசுலாத்தில் இல்லை, குர் ஆன் அப்படிச் சொல்லவில்லை, நபிகள் அப்படி போதிக்கவில்லை என்று சலீப்பூட்டும் வாதத்தை இப்போதும் கேட்கலாம்.//
//இசுலாமியர்கள் பெரும்பான்மையுடன் வாழும் ஒரு இடத்தில் ஒரு நாத்திகருக்கோ இல்லை ஒரு கம்யூனிஸ்டுக்கோ இடமில்லை, அவர்கள் தமது கருத்துக்களை பேசக்கூடாது என்பதில் மிதவாத முசுலீம்கள் கூட ஏற்றுக் கொள்வர்.//
//பிறப்பால் முசுலீம்களாக இருக்கும் ஒருவர் அவர் சமூகத்திலேயே நாத்திக பிரச்சாரம் செய்யும் உரிமையை பெற்றிருக்க வேண்டும், மற்ற மதத்தினரை காதலித்து மணமுடிக்கும் உரிமை வேண்டும், இசுலாமிய சடங்குளை தவிர்க்க நினைத்தால் அனுமதிக்க வேண்டும் போன்ற மதச்சார்பற்ற, ஜனநாயக உரிமைகளுக்காக போராட வேண்டும்.
இதன்றி இது இசுலாத்தில் இல்லை, குர்ஆன் பேசவில்லை என்று பேசினால் அவர்கள்தான் முசுலீம் மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்து சித்ரவதை செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள்.//
எங்கே ஒரு இஸ்லாமிய_________ காணும். எங்கே_ போனிங்க யோக்கிய சிகாமணிங்களா …..
தனது குற்றங்களை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காக மற்றொரு பார்ப்பானை
கோராமாக படுகொலை செய்துவிட்டு எந்தத் தண்டனையில்லாமல் விடுவிக்கப்பட்டு, தனது பஞ்சமாபாதகங்களை தொடரும் இந்துத்துவ வெறிபிடித்த பார்ப்பன பாசிஸ்டு காஞ்சி சங்கராச்சாரியை உலகமே அறிந்திருக்க இந்துத்துவவாதிகளுக்கு மற்ற மதங்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. இன்றும் பல இஸ்லாமிய நாடுகளில் அம்மக்கள் ஏகாதிபத்யத்தை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் இந்துவவாதிகள் எங்கே போராடுகிறார்கள்?
ஒன்றுமில்லை.
பள்ளன்,பறையன் சக்கிளீயன் அவன் இவன் என்று சாதிய பயங்கரவாதத்தை தாங்கி பிடிக்கும் இந்துத்துவத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக ஒரு விசயம் மனித சமூகத்தில் நாத்திகர் மற்றும் கம்யூனிஸ்டுகளால் எந்த வித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அனைத்து இன மதவெறியர்களாலும் மனித சமூகம் அழிக்கப்பட்ட வரலாறு,
வரலாற்று நெடுங்கிலும் பதிவுகள் இருக்கிறது.
எந்த இஸ்லாமிய நாட்டில் எந்த மக்கள் ஏகாதிபததியத்தை எதிர்த்து போராடுகின்றனர்?
அரபிய நாடுகளில் இருந்து துவங்கி துருக்கி கூட வெள்ளையன் கண்டுபிடித்த கச்சா எண்ணையை நம்பித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
RSS இயக்கம் இன்றும் சுதேசி இயக்கமாக தான் உள்ளது.
மேலும் இது போன்று தான் அன்றைக்கி ரஷியா உடன் கூடு வைத்து கொண்டு பாகிஸ்தான் அமெரிக்க அடிமையாகி நாம் திருவொடு எடுத்து திரிய வேண்டிய நிலமை ஏற்பட்டது.
என்னாத சொல்லி என்னாத செஞ்சி,அட போங்க ஸார்.
இசுலாமியர்கள், இசுலாமிய அமைப்புகள், இசுலாமிய பத்திரிக்கைகள் ஆகியன எதுவும் இசுலாமிய மதவெறியர்களால் நடத்தப்படும் படுகொலைகளை எப்பொழுதும் கண்டித்தது இல்லை. பாகிஸ்தானில் 135 குழந்தைகளை ஈவிரமன்றி சுட்டுக் கொன்றதை உலகமே கண்டித்து கண்ணீர்விட்டபோதும் கள்ள மௌனம் சாதித் இவர்கள் அவிஜித் ராய் கொலைக்கா வந்து கருத்துச் சொல்லப்போகிறார்கள். மனதில் சந்தோஷத்துடன் இருப்பார்கள்.