உத்திரப் பிரதேச மாநிலம், ஹாஷிம்புராவில் 1987-ம் ஆண்டு முசுலீம் மக்கள் 42 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 16 பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து சனிக்கிழமை 21-03-2015 அன்று உத்திரவிட்டது. உத்திரப்பிரதேச மாநில ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த போலீஸ் கயவாளிகள்தான் மேற்கண்ட படுகொலையைச் செய்த குற்றவாளிகள்.
இந்த படுகொலை வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
இந்தியாவின் படுகொலைகளில் முக்கியமான ஒன்றான ஹாஷிம்புரா படுகொலை 1987-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்தது. உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரத்தின் போது உ.பி மாநில சிறப்பு ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் ஹாஷிம்புரா பகுதியைச்சேர்ந்த முசுலீம் இளைஞர்கள் 65 பேரை லாரியில் ஏற்றிச் சென்றனர். அவர்களை காசியாபாத் மாவட்டத்தின் முராத் நகருக்கு அருகில் சுட்டுக் கொன்ற போலீஸ் கயவர்கள், உடல்களை அருகாமையில் உள்ள கால்வாய்களில் வீசிச் சென்றனர்.
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இன்று செய்யும் படுகொலைகளுக்கு இந்திய துணை இராணுவப் படைகளும் இந்துமதவெறியர்களும் இப்படித்தான் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர். கால்வாயில் வீசிச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு பிணங்கள் மிதந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இக்குற்றம் எப்படி நடந்தது, யார் யாரை கொன்றார்கள் அனைத்திற்கும் ஆதாரங்கள் இருந்தும் மனு தர்மம் வழுவாத நாட்டில் இந்து மதவெறிப் படுகொலையாளர்களை அதிலும் அவர்கள் போலீசு எனும் போது கைது செய்வது குறிப்பாக தண்டிப்பது சாத்தியமா என்ன?
இக்கொலையினைச் செய்த உ.பி மாநில ஆயுதப்படை பல்வேறு கலவரங்களில் சிறுபான்மை மக்களையும், பொதுவில் மனித உரிமையை நசுக்குவதற்கும் புகழ் பெற்றது. இவர்கள் செய்த குற்றங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். பா.ஜ.க ஆட்சியில் அமராத காலத்திலேயே வட இந்தியா இப்படித்தான் இந்துமதவெறியின் செல்வாக்கில் இருந்தது. போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம், அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மயமாகியே இருந்தது.
13 வருடங்களுக்குப் பிறகு 2000-ம் ஆண்டு மே மாதத்தில்தான் குற்றவாளிகளில் 16 பேர் சரணடைந்து சில நாட்களில் பிணையில் வெளிவந்தனர். இதற்கு முன்பே மூன்று போலிசார் இயற்கையாக மரணமடைந்து விட்டனர். காசியாபாத்தில் நடைபெற்ற வழக்கை உச்சநீதிமன்றம் 2002-ம் ஆண்டு, தில்லி விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்து மதவெறிக்கு ஒத்தூதுவதில் காசியபாத்திலிருந்து தில்லி மட்டும் வேறுபடுமா என்ன?
படுகொலை நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007, மே, 24-ம் தேதி கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினர் லக்னோ சென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 615 மனுக்களை தாக்கல் செய்து காவல் துறை அதிகாரியிடம் வழக்கு குறித்த நிலையைக் கேட்டனர். அப்போதுதான் கொலைக்குற்றவாளிகள் அனைவரும் பணியில் இருப்பதும், அவர்களது பணிக்கால இரகசிய அறிக்கையில் இக்கொலை குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது.
இக்குற்றவாளிகளால் சுடப்பட்டு காயமடைந்து பிழைத்துக் கொண்ட ஐந்து பேர் வழக்கின் நேரடி சாட்சிகளாக 2007-ல் சேர்க்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. வட இந்தியாவில் இந்து முசுலீம் கலவரம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்தான். அதில் இந்துக்கள் சிறு எண்ணிக்கையிலும், முசுலீம்கள் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்படுவதும் உண்மை என்றாலும் அரசு, இராணுவம் என்று வரும் தாக்குதலில் முசுலீம்கள் மட்டும்தான் கொல்லப்படுவார்கள். அந்த வகையில் இது ‘இந்து நாடாகவே’ இருக்கிறது.
பிளாட்டூன் கமாண்டர் சுரீந்தர் பால் தலைமையில் ஆயுதப்படை போலிசார் ஹாஷிம்புரா சென்று மக்களை சுற்றி வளைத்து அதில் வயதானவர்கள், குழந்தைகளை விலக்கி 65 பேர்களை மட்டும் லாரியில் அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளிகளும், நெசவாளர்களும் ஆவர். முராத் நகரின் கங்கை கால்வாயில் அவர்களை நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக தலையில் சுட்டு தண்ணீரில் தள்ளி ரசிப்பதற்கு ஒரு பெரிய இந்து ஞான மரபின் பயிற்சி வேண்டும். அப்படி சுடும் போது சாலையில் பிற வண்டிகள் வந்த நிலையில் போலீசுக் குற்றவாளிகள் அப்படியே மிச்சம் இருந்தவர்களுடன் லாரியில் ஓடி விட்டனர். இப்படித்தான் ஐந்து பேர் உயிர் தப்பினர். அதில் ஒருவர் முராத் நகர் காவல் நிலையியத்தில் புகார் பதிவு செய்தார்.
பிறகு லாரியில் இருக்கும் மக்களை ஹிண்டான் ஆற்று கால்வாய் அருகே சுட்டுக் கொன்று வீசினர். அதிலும் இருவர் சுடப்பட்டு உயிர் பிழைத்து அருகாமை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதே உ. பி மாநிலத்தின் அருகாமை பீகாரில் உள்ள பாகல்பூரில்தான் போலீசு கயவாளிகள் 1980-ம் ஆண்டில் 31 விசாரணை கைதிகளின் கண்ணில் ஆசிட் ஊற்றி பார்வையை பறித்தனர். அந்த வகையில் இவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகளை விஞ்சுகிறார்கள்.
ஹஷிம்புரா படுகொலை குறித்து பி.யூ.சி.எல் அமைப்பு 87-ம் ஆண்டிலேயே ஒரு குழு அமைத்து விரிவாக விசாரித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. இந்தியாவின் உண்மை முகத்தை அறிய வரும்புவோர் அதைப் படித்து பாருங்கள். 19 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கில் அரசின் அனைத்து உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்று பி.யு.சி.எல் மற்றுமொரு அறிக்கையையும் வெளியிட்டது.
படுகொலை நடந்த காலத்தில் அங்கே பணிபுரிந்த காவல் துறை அதிகாரி விபூதி நாராயண் ராய், இதை உ.பி. போலிஸ் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் என்று குறிப்பிடுகிறார். காசியாபாத்திலிருந்து தில்லிக்கு வழக்கு மாற்றப்பட்டாலும் உத்திர பிரதேச அரசு எந்த ஆர்வத்தையும் இவ்வழக்கில் காட்டவில்லை என்று 2005-ல் வெளிவந்த ஃபிரண்ட்லைன் ஏடு குறிப்பிடுகிறது.
இப்படி இருக்கும் போது குற்றம் நடந்து 27 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வரும்போதே அது எப்படி இருக்கும்? தற்போது தில்லி கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சய் ஜிண்டால் அளித்த தீர்ப்பின் படி, குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரம் இல்லையாம். குற்றவாளிகள் சரியாக அடையாளம் காட்டப்படவில்லையாம். ஆக சந்தேகத்தில் பலனை அளித்து கொலையாளிகளை அவர் விடுதலை செய்து விட்டாராம்.
மனுவின் நீதியை மரபாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பினை கேள்விப்பட்ட மாத்திரத்தில் ஹஷிம்புராவின் முசுலீம் மக்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்? இனி இந்தியாவில் மதச்சிறுபான்மை மக்கள் வாழ முடியுமா, இங்கே அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்விகள் நிச்சயம் எழுந்திருக்கும்.
“இந்தப் படுகொலை நடக்கும் போது பிறந்தவன் நான். தீர்ப்பைக் கேட்டதும்தான் புரிகிறது, என்னுடைய பக்கத்து வீட்டு மாமா போலிசால் சுட்டுக் கொல்லப்பட்டு கால்வாயில் வீசப்படவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று. இதுதான் அரசியல் சாசனம் நமக்கு அளித்திருக்கும் நீதி உத்திரவாதமா?” என்கிறார் இருபதுகளின் முடிவில் இருக்கும் மெகர்பான் எனும் இளைஞர்.
ஒரு இந்தி நாளிதழை வைத்திருக்கும் அப்துல் ஹபீஸ், ஐம்பது வயதுகளின் இறுதியில் இருப்பவர், “இங்கே முசுலீம்களுக்கு எந்த எதிர்காலமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களுக்கு இங்கே நீதி இல்லை. 28 வருடங்களுக்கு பிறகு எனக்கு புரிந்தது இதுதான்” என்று கூறுகிறார். அவருடைய உறவினர் ஜமில் அகமது, படுகொலை நடந்த நாளில் போலிசால் அடித்துக் கொல்லப்பட்டார்.
“இப்போது எங்களிடம் என்ன கேட்கிறார்கள்? நாங்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தோமென்றும், அதிலும் கார்வாப்சி செய்து இந்துவாக மாற வேண்டும் என்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்த தீர்ப்பு எங்களது மக்கள் 42 பேர் கொல்லப்படவில்லை என்று எங்களிடம் கூறுகிறது” என்று பொருமுகிறார் அந்த முதியவர்.
பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இனி சட்டப்படியே ஹாஷிம்புரா படுகொலையில் குற்றவாளிகள் தவறு செய்யவில்லை என்று இந்துமதவெறியர்களும், அவர்களை ஆதரிக்கும் அறிவுஜீவிகளும், ஊடகங்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள். ஏற்கனவே மும்பை படுகொலையில் சிவசேனாவும் தாக்கரேக்களும் குற்றம் சாட்டப்படாமேலேயே விலக்களிக்கப்பட்டனர். மோடியும் அவரது கேடிகளும் கூட அவ்வாறு காப்பாற்றப்பட்டனர். தற்போது ஹாஷிம்புராவின் போலிசுக் குற்றவாளிகள்.
இதுதான் நிலைமை என்றால் ஹாஷிம்புராவில் உறவினர்களை பறிகொடுத்த முசுலீம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் இன்று என்ன செய்வான்? அவனுக்கென்று இங்கே நீதி இல்லை, அரசு இல்லை, ஆதரிப்போர் யாருமில்லை எனும் போது அவன் குண்டை எடுக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
இந்தியா இனி இப்படியே இருக்காது என்பதற்கு ஹாஷிம்புரா ஒரு வலுவான அறிகுறி. இல்லை இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இங்கே உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்துமதவெறியர்களுக்கு பாடை கட்ட வேண்டும்.
இது தொடர்பான செய்திகள்
- Meerut’s communal holocaust
- Meerut riots of May 1987
- A day after verdict, anger and anguish in Hashimpura
- Hashimpura massacre trial after 19 years– Failure of all organs of state
- Hashimpura massacre
- Hashimpura: the black chapter in the history of UP Police / Vibhuti Narain Rai
- Justice out of sight
- ஹாஷிம்புரா சம்பவம்: 42 பேர் படுகொலை தொடர்பான வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 16 பேரும் விடுதலை
பூனூல் அம்பி அந்நியனுக்கு ஒரு ஞாயம் ? தொப்பி அல்லா பாயுக்கு வேறு ஞாயமா ?
ஷங்கர் படத்துல மழையில் லீக் ஆன மின்சாரம் காரணமாக உயிர் இழந்த அம்பியின் தங்கைக்காக அவன் மனநிலை பிழர்ந்து அந்நியன் ஆகி , கிடைத்தவனை எல்லாம் போட்டு “ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி மனோநிலையில் மிதித்து ஷங்கர் கற்பனையில்” கொல்லும் போது கை தட்டி கொக்கரகோ என்று சிரித்த தமிழ் தியட்டர் சமுகம், போலிசு அராசகத்தில் உயிர் இழந்த இஸ்லாமிய மக்களின் உறவுகளுக்கு நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காத இந்நிலையில் “அதே போன்ற-அந்நியன் போன்ற ” எதிர் வினையை காட்டினால் தமிழ் சமுகம் கொக்கரகோ என்று சிரித்து மகிழுமா ? அல்லது தீவிரவாதி என்ற ருக் வேதம் பாடுமா ? அம்பிகள் ஜூட் விவாதத்துக்கு வரலாம்.
இசுலாமியர்களுக்கு எதிராக தொடைத் தட்டும் இந்து மத வெறியர்கள் இதற்க்கு பதில் சொல்ல இது ஒன்றும் முற்றும் முதலான விடயமல்லவே. இன்று இந்தியாவெங்கிலும் அவ்வப்போது வெடிக்கும் குண்டுகள் இந்த படுபாதக செயல்களுக்கான எதிவினைகளே.
பூணூல்களின் சொந்த சுயநலத்திற்காக ஒட்டு மொத்த மக்களையும் இந்துவாக்கி அவர்களுக்கு இசுலாமிய மக்களை எதிரிகளாக்கி பலியிடுகிறார்கள் இந்த காவிகள்.
பாசிசம் உச்ச நிலையை அடையும் போது நம் முன்னே இரண்டே இரண்டு வழிகள் தாம் உள்ளன. ஒன்று அதற்க்கு நாம் பலியாவது. இல்லையெனில் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி(இந்து,இசுலாமியர் உள்ளிட்ட) அதை தாக்கி அழிப்பது.
ஊழியிடும் ஓநாய்கலான இந்துத்வா வெறியர்களையும் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் சொந்த மக்களையே ஒடுக்கும் இசுலாமிய அடிப்படைவாதிகளையும் ஒழித்துக் கட்டுவது என்பது முன்னெப்போதுமில்லாத வகையில் இன்று நம் தேவையை உள்ளது. அதற்க்கு தக்கன போல இந்த கட்டமைப்பு முழுதும் நொறுங்கி விழுந்துக் கொண்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்கையும் நாட்டு மக்களையும் காப்பதற்கென்றே உருவாக்கப்பட்டதாக ஜம்பமடிக்கபடும் போலிசு ,இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்டவை அதற்கெதிராக செயல்படுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று உச்ச நிலையை அடைந்து உள்ளது.
——————–
தமிழ்,
அம்பிகளிடம் சவால் விட்டு விட்டீர்களா . இனி அவ்வளவு தான். அம்பிகள் தொடைகளைத் தட்டிக் கொண்டு வருவார்கள். 🙂
Amanga Manu dharmam follow panra indha naatil Akramam than..
___________
ISIS, Alqaeda ellarukkum Manu dharmam padi RSS karargal training kodukirargal…
Ada Vinavu.. Onu motha commentayum block pannanum
Illa mothamma comment publish pannanum. Nan sonna tha paathiya cut pannitu, meedhiya unakku sadhagaman vishayatha mattum publish panra kulla nari
Vinavu neeyellam karuthu suthanthiram pathi pesara thooooo
அய்யா தீவிரவாதிகளின் தீவிர ரசிகர் தமிழ் இங்கன எனக்கு ஒரே ஒரு கேள்விதான் பா போலிஸி அராசகம் அரசியல் கொலை மதவாத கொலைகள் எல்லா இடத்துலயும் நடக்கதான் செய்யுது அனா அது போலிஸு அராசகத்தால பாதிக்கப்படாத மக்கள் இல்லை அத வினவே பல கட்டுரைல விளக்கி இருக்குது அப்பிடி பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் தீவிராவாதியா மாற பேடன்ட் ரைட் குடுக்காத நீங்க தொப்பி வச்ச பாய்களுக்கு மட்டும் குடுக்குறிகளே அதுதான் ஏன்யா இதுக்கு பதில் சொல்ல எதுக்குயா அம்பிகளயெல்லாம் இழுக்குதீரு அப்பப்ப அறிவ அதிகமா பயன்பறுத்துற ஆள் நீங்க சொல்லுங்க தொப்பி போட்ட பாய்க மட்டும் அன்னியனாகி யாரவேனாலும் கொல்ல எதுக்கு முன் ஜாமின் குடுக்குறீகய்யயா…
இந்த கட்டுரைல இசிஸ் தீவிரவாதிகளுக்கு வக்கீலா வேற மாறிட்டாக வினவு தளத்துல அதுவும் ஏன்னு தெரியல இந்தியாவுல நடந்த கொலைகளுக்கும் இசிஸ் பன்ன கொலைகளுக்கும் சரியா போச்சு அம்புடுத்தேன் அகா என்ன அறிவு…
அம்பிகள் சார்பா வக்காலத்து வாங்க வந்துள்ள ஜோசப் அவர்களே , அம்பிகளுக்கு ஒரு ஞாயம் ,பாய்களுக்கு வேறு நாயமா ?! என்ற என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லையே ! அம்பிகள் சார்பா பதில் சொல்வதற்கு வந்த ஜோசப் இதுக்கும் பதில் சொல்லலாமே ! அடிப்பட்டவன் அம்பியா இருந்தாலும் பாயா இருந்தாலும் திருப்பி அடிக்கத்தானே செய்வாங்க.? நியுட்டன் முன்றாம் விதி என்ன சொல்லுது என்றால் நான் ஜோசப்பை ஒரு அடிபோட்டா அவரு எனைய பலமா எதிரடி போடுவாரு என்று. இது கூட புரியாம என்னமோ முன் ஜாமீன் , பின் ஜாமீன் என்று கரகாட்டம் ஆடுரிங்கலே ஜோசப். தன் காதலிக்கு பாட சான்ஸ் கிடைக்கல என்ற காரணத்துக்காக சபா மேனேஜரை திருப்பிப்போட்டு விளக்குல ஆய்போற இடத்தில் குத்த வந்த அந்நியனுக்கு விசில் அடித்த தமிழ் தியேட்டர் கூட்டம் இதுக்கு என்ன பதில் சொல்ல போவுது . முந்திரிக்கொட்டை ஜோசப் பதில் சொன்னாலும் தேவலாம் :
[1] “”ஹாஷிம்புரா படுகொலை 1987-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்தது. உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரத்தின் போது உ.பி மாநில சிறப்பு ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் ஹாஷிம்புரா பகுதியைச்சேர்ந்த முசுலீம் இளைஞர்கள் 65 பேரை லாரியில் ஏற்றிச் சென்றனர். அவர்களை காசியாபாத் மாவட்டத்தின் முராத் நகருக்கு அருகில் சுட்டுக் கொன்ற போலீஸ் கயவர்கள், உடல்களை அருகாமையில் உள்ள கால்வாய்களில் வீசிச் சென்றனர். “”
ஏன் இப்படி ஜோசப் ? ஜோசபின் உறவு முறையை இப்படி சுட்டுக்கொன்றால்,,, ஜோசப் வேடிக்கை பார்பாரா ?
[2]””” இக்கொலையினைச் செய்த உ.பி மாநில ஆயுதப்படை பல்வேறு கலவரங்களில் சிறுபான்மை மக்களையும், பொதுவில் மனித உரிமையை நசுக்குவதற்கும் புகழ் பெற்றது. இவர்கள் செய்த குற்றங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். பா.ஜ.க ஆட்சியில் அமராத காலத்திலேயே வட இந்தியா இப்படித்தான் இந்துமதவெறியின் செல்வாக்கில் இருந்தது. போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம், அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மயமாகியே இருந்தது. “”
ஜோசப்க்கு இந்தியா காவிமயமாகவே இருப்பதை பற்றி ஏதேனும் அறிவு உண்டா ?
[3]படுகொலை நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007, மே, 24-ம் தேதி கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினர் லக்னோ சென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 615 மனுக்களை தாக்கல் செய்து காவல் துறை அதிகாரியிடம் வழக்கு குறித்த நிலையைக் கேட்டனர். அப்போதுதான் கொலைக்குற்றவாளிகள் அனைவரும் பணியில் இருப்பதும், அவர்களது பணிக்கால இரகசிய அறிக்கையில் இக்கொலை குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது. “””
கொலையாளிகள் எல்லாம் போலிசு சர்வீஸில் தொடர்ந்து இருபதை பற்றி அம்பிகளின் லாயர் ஜோசப்க்கு எதுவும் objection இல்லையா ?
எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று குமாரசாமிக்கு ஒரு பாலபாடம்.
ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தீர்ப்புக்கு ஒரு முன்னோடி.
ஆகா என்ன அறிவா பேசுறாரு ஜோசப் ! “இந்தியாவுல நடந்த கொலைகளுக்கும் இசிஸ் பன்ன கொலைகளுக்கும் சரியா போச்சு அம்புடுத்தேன்” என்று இவரே கூறிக்கொண்டு பெனாத்துராறு. ஆனால் வினவில் கூறப்பட்டு உள்ளது என்னவென்றால் :
“”””ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இன்று செய்யும் படுகொலைகளுக்கு இந்திய துணை இராணுவப் படைகளும் இந்துமதவெறியர்களும் இப்படித்தான் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர்.”””
மண்டை முழுக்க பித்தம் ஏறிப்போயி பிதற்ற தெடங்கிட்ட ஜோசப்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்புள்ள வினவு,
இந்த கட்டுரையின் மூலம் இந்துமதவெறியர்களின் கொடூரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி.
குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருப்பது நமது சமூகத்தின் இழிநிலையைக் காட்டுகிறது. இதில் எனது பங்கும் சிறிது இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
//ஐ.எஸ் பயங்கரவாதிகள் இன்று செய்யும் படுகொலைகளுக்கு இந்திய துணை இராணுவப் படைகளும் இந்துமதவெறியர்களும் இப்படித்தான் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர்.// என்ற இந்த வரி தேவையற்றது என்று நான் நினைக்கிறேன். யாருக்கு யார் முன்னோடி என்று எவ்வளவு தூரம் பின்னோக்கி போவது?
பாகல்பூர் நகரம் உ.பி.யில் இல்லை. பீஹாரில் இருக்கிறது.
சினிமா விரும்பி
நன்றி. தவறுக்கு வருந்துகிறோம். பிழை திருத்தப்பட்டது.
“”””ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இன்று செய்யும் படுகொலைகளுக்கு இந்திய துணை இராணுவப் படைகளும் இந்துமதவெறியர்களும் இப்படித்தான் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர்.”””
நான் எழுதினதுக்கும் இதுக்கும் ஒன்னும் வித்தியாசம் தெரியல எனக்கு, உங்களுக்கு 6 வித்தியாசம் தெரியுது போல இருக்கே பெரிய அறிவாளிதான் நீங்க இங்க நடந்த தவறும் இசிஸ் செய்வதும் ஒன்னுதான் இசிஸ கண்டுக்காம விட்டுடுவோம் சரிதான அண்ணே அல்லது இசிஸை மறைமுகமாக ஆதரிப்போம் …
மனசுக்குள்ளார மத-கொலை வெறி வன்மம் இருந்தால் தவறு என்று எழுதப்படுவது கூட சரியென்று தானே தெரியும் ஜோசப்க்கு. இஸ்[I S ] பற்றி கட்டுரை எழுதப்படும் போது அதில் ஹிந்து மதவெறியர்களையும் குற்றம் சொன்னா அப்பவும் வயிறு எறியும் உங்களுக்கு. அட்டுத்ததா ஹிந்து மதவெறியர்களை பற்றி எழுதும் போது அதில் இஸ்க்கு ஹிந்து மதவெறியர்கள் தான் முன்னோடி என்று எழுதினாலும் வயிறு எறியும் உங்களுக்கு. இப்படி hypocrisy மனோ நிலையில் வாழும் உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ஜோசப். வினவு மத வெறியர்களை ஒப்புமை படுத்தி எழுதுவதில் ஜோசப்க்கு என்ன பிரச்சனை. ஏன் இந்த கட்டுரையில் கிருஸ்துவ மதவெறியர்களை பற்றி விமர்சிக்கவில்லை என்ற துயரமா ஜோசப்க்கு? நாம வாழும் இந்தியாவில் ஹிந்து மதவெறி தலைவிரித்து ஆடுது. சிரியாவிலும் , வடக்கு ஈராக்கிலும் இஸ்லாமிய மத வெறி தலைவிரித்து ஆடுது. இதில் என்ன சந்தேகம் ஜோசப்க்கு ?
உளறாதிக அண்ணே மதக் கொலை வேறியர்கள் உங்கள இசுலாமிய வழிகாட்டி இணைய தளத்துக்கு கூப்பிடுறாக அங்க போய் சொல்லுங்க …
முத்திப்போன மதவெறி தேங்கா கடைத்தெருவுக்கு வந்து இருக்கு. ஏன் இப்படி ஆகிட்டிர்கள் ஜோசப் ? மதவெறியில் is க்கு இந்து மதவெறியாளர்கள் முன்னோடியாக திகழ்கின்றார்கள் என்கின்றது கட்டுரை. அதில்,அந்த கருத்தில் என்ன தவறு ?இஸ்லாமிய மதவெறியை ஹிந்து மதவெறியுடன் இந்த கட்டுரை எந்த இடத்தில் சமன் செய்து உள்ளது ஜோசெஹ்ப்? அப்படி சமன் செய்யாத நிலையிலும் நீங்கள் “இந்தியாவுல நடந்த கொலைகளுக்கும் இசிஸ் பன்ன கொலைகளுக்கும் சரியா போச்சு அம்புடுத்தேன் அகா என்ன அறிவு” என்ற வினவு கூறாத கருத்தை வினவின் கருத்தாக கூறி பிதற்றுகின்றிர்கள் ஜோசப். இதற்காக தான் கூறுகின்றேன் முத்திப்போன ஜோசப் என்ற மதவெறி தேங்கா வினவு கடைத்தெருவுக்கு வந்து இருக்கு என்று .ஒரு குறிப்பிட்ட மதத்தின் மதவெறி செயல்பாடுகளை வேறு ஒரு மதத்தின் மதவெறி செயல்பாடுகளுடன் ஒப்புமை செய்வதில் எதுவும் தவறு இருப்பதாக எனது தர்க்க அறிவிற்கு தெரியவில்லை. வினவு இரண்டு [ஹிந்து,இஸ்லாமிய ]மதவெறி செயல்பாடுகளையுமே ஒரே வரியில் கீழ்கண்டவாறு எதிர்கின்றது :
“”””ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இன்று செய்யும் படுகொலைகளுக்கு இந்திய துணை இராணுவப் படைகளும் இந்துமதவெறியர்களும் இப்படித்தான் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர்.”””
இந்த கருத்தை நேர்மையாக புரிந்து கொள்ள தகுதி இன்றியா உங்கள் மூளையின் செயல்பாடு மட்டுப்பட்டு உள்ளது ஜோசப் ? ஐந்தாம் வகுப்பு குழந்தை கூட சரியாக கூறும் இரண்டு மதவெறியர்களுமே தவறானவர்கள் என்று வினவு கூறுகின்றது என்று. நீங்கள் எவ்வளவு தான் படித்து இருந்தாலும் மதவெறி கருத்தியல் சார்ந்த தடை உங்கள் மூளையில் சதிராட்டம் போடும் போது ஐந்தாம் வகுப்பு குழந்தையின் அளவுக்குக்கூட உங்கள் மூளை செயல்படாது என்பதை நிருபிக்கின்றிர்கள் ஜோசப்.ஆனால் உங்களுக்காக வாசகர்களோ ,அல்லது வினவோ கவலை பட ஏதும் இல்லை. அதே சமையம் உங்கள் மதவெறி கருத்துகளை வினவில் அம்பலபடுத்தி உங்களை வெட்கி தலை குனிய வைப்பது ஒன்றே சரியான தீர்வாக இருக்க முடியும். நண்பர் தமிழ் அதனை தான் உங்களிடம் செய்து கொண்டு உள்ளார்.
தேவையில்லை ரெட் ஜீவா .ஜோசப்க்கு விளக்கங்களும் ,ஆலோசனைகளும் தேவையில்லை என்று உணருகின்றேன். அவரின் அறிவை, அவரின் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்புணர்ச்சி வென்றுவிட்ட பின்பு நாம் கொடுக்கும் விளக்கங்களும் ,அறிவுரைகளும் அர்த்தமற்று தான் போகும்.
அண்ணன் தமிழ் உலகம் பூராத்தயும் இசுலாமிய ஆதிக்கத்துல கொண்டு வரனும் சரியா சட்டப்படித்தான் உலக மக்கள் வாழனும் அல்லாவத்தான் வணங்கனும் அப்பிடினு லட்சியத்துலதான் இசுலாமிய தீவிரவாதிக வாராக இத நான் சொல்லல இசுலாமிய தீவிரவாதிகள்தான் சொல்லுறாக அப்பிடி இருக்கும் போது எப்பிடியா இந்து மத வெறியர்கள் அவர்களுக்கு முன்னோடியா இருப்பாக அவுகளுக்கு முன்னோடியா இருக்குறது குரானும் முகமதின் சுன்னாவும் தான் இந்திய துணை ரானுவம் இசுலாமியர்கள் கொன்னுபோட்டதால இசுலாமிய தீவீரவாதம் வந்துடுச்சுன்றது இசுலாமிய தீவிரவாதிகளின் செயலுக்கு வாக்கிலாக மாறுவது என்றுதான் கருத முடியும் அண்ணே இசுலாமிய தீவிரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாம் யாரை பலிவாங்குறது இசுலாமியர்கள் மட்டுந்தானா போலிஸ் அராசகத்தால பாதிக்கப்பட்டு இருக்காக மத்தவகளும் இருக்காக ஆன இத பயன்படுத்தி இசிஸ் தீவிரவாதிகளுக்கு வக்காளத்து வாங்குறீகளே இது என்ன நியாயமோ தெரிலய்யா…
[…] : வினவு […]