மாட்டுக்கறி பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் – மே 2015 வெளியீடு
அன்பார்ந்த நண்பர்களே,
புதிய கலாச்சாரம் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 2015 மே நாள் முதல் மாதம் ஒரு வெளியீடு கொண்டுவர இருக்கிறோம். மோடி தலைமையில் பா.ஜ.க கும்பல் ஆட்சி அமைத்த பின், ஒருபுறம் நாட்டு மக்களின் வாழ்வை நாசமாக்கும் பொருளாதாரக் கொள்கைகள் ஏகாதிபத்திய விசுவாசத்துடன் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் இந்துமதவெறி நிகழ்ச்சி நிரலும் திணிக்கப்படுகிறது.
சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், கல்வித் துறை பார்ப்பன மயமாக்கம், ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அரசு விருதுகள்.. என்று நீளும் இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு மாட்டுக்கறி மீதான தடை.
இந்தியாவின் உழைக்கும் மக்கள் குறிப்பாக நகர்ப்புறத் தொழிலாளிகள் உண்ணும் மாட்டுக்கறியை மராட்டியத்தில் தடை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே குஜராத்தில் இருக்கும் இத்தடைச்சட்டம் இனி இந்தியாவெங்கும் கொண்டு வரப்படலாம்.
இதன்படி, இனி நாம் எதை உண்பது என்பதை இனி பார்ப்பனக் கூட்டம் கும்பல்தான் முடிவு செய்யுமா என்பதே நம் முன் உள்ள கேள்வி. புனிதப்பசு என்ற பார்ப்பன – ஆதிக்க சாதிக்கருத்தியலின் அடிப்படையில்தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்ற போதிலும், அதனை மறைத்துக் கொண்டு விவசாயிகளின் நன்மைக்காக என்று விளக்கம் சொல்கிறது பா.ஜ.க. மாட்டுக்கறி உண்டால், வெட்டினால், விற்றால், வாங்கினால் சிறைத் தண்டனை என்று மிரட்டுகிறது.
பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். சாதி ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடாகவும் அது இருக்கிறது. அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.
நன்றி!
தோழமையுடன்,
புதிய கலாச்சாரம்.
பொருளடக்கம்
- மாட்டுக்கறி தடைச்சட்டம் வலக்கரத்தில் கோமியம் இடக்கரத்தில் ஹாம்பர்கர்
- பண்டைய இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது! வரலாற்று அறிஞர் டி.என்.ஜா நேர்காணல்
- இந்தியாவில் மாடுகள் : புனிதமா… பொருளாதாரமா?
- கோசாலை – காப்பகமா, காட்சிக்கூடமா?
- மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை பா.ஜ.க பாசிசம்
- சிறுகதை கொழுப்பு – சா. செல்வராசு
- குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம்!
- தமிழ் மக்களின் உணவு புலால்
- விரைவில் பிரியாணிக்குத் தடை மோடி அரசு அடக்குமுறை
- யாகத்திற்கு பசுவை வெட்டலாம் மகா பெரியவாள் வாக்குமூலம்
- பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!
- ஆவின்றி அமையாது உலகு நாம் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்
- மாட்டுக்கறி தின்பவர்கள் மாவோயிஸ்டுகளாம்!
- கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர்!
- மாமி-மாட்டுக்கறி-நக்கீரன் : பார்ப்பன கும்பலின் தீண்டாமை வெறி!
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________