privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அசுரக் குரல்

-

அசுரக்குரல்

பேசுவதுதான்
ஜனநாயகம் என்றார்கள்!

பேச ஆரம்பித்தவுடன்
பேசினால் பிரச்சனையாகும்
என்கிறார்கள்.

அம்பேத்கர்
“அடுத்தவனை கேள்வி கேட்க விடாமலே தடுத்துவிட்டு அவாள் மட்டுமே அறிவாளி என்று பேசித்திரிவதுதான் பார்ப்பனோ டெக்னாலஜி!”

சரி
பிரச்சனைகள் பற்றி பேசினால்?
அதுதான்
பிரச்சனையே என்கிறார்கள்!

இந்த
தொழில்நுட்பத்திற்கு பெயர்தான்
“இந்துவெறி இன்ஸ்டூயுட் ஆஃப் டெக்னாலஜி”!
அடுத்தவனை
கேள்வி கேட்க விடாமலே தடுத்துவிட்டு
அவாள் மட்டுமே அறிவாளி
என்று பேசித்திரிவதுதான்
பார்ப்பனோ டெக்னாலஜி!

இவ்வளவு காலம்
கேட்பாரற்ற
வேதக் கடிகையாகவும்
பார்ப்பனர் மட்டுமே பயிலும்
பிரம்ம புரியாகவும்
தனிக்காட்டு ராஜாங்கம் நடத்திய
தயிர்சாதக் கோட்டையில்
பெரியார்- அம்பேத்கர் குரல்
ஒலிக்கும் போது
அவாளுக்கு எப்படி இருந்திருக்கும்?

பெரியார்
ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கம்பியில் விடலாம் ‘பூணூல்’ தாங்குமோ?

ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை
கம்பியில் விடலாம்
‘பூணூல்’ தாங்குமோ?

அனுமார்களும், ராமனும் மட்டுமே
கொட்டமடித்த
அய்.அய்.டி-ன்
அடர்ந்த கானகத்தை
பிளந்த சம்புகக்குரல்
இதோ….
இந்தியாவெங்கும் எதிரொலிக்கிறது….

அய். அய். டி. யை
இயக்குவதற்கு
அரசியல் இருக்கும் போது
அய். அய். டி மாணவனுக்கு
ஏன் அரசியல் கூடாது?

பன்னாட்டுக் கம்பெனித் திட்டங்களுக்கு
மெட்ரோ வளர்ச்சித் திட்டங்களுக்கு
உயர்கல்விக் கூடத்தை நீ பயன்படும் போது
உழைக்கும் மக்களின்
அரசியல் திட்டங்களுக்கு
நாங்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது?

பன்னாட்டு கார்ப்பரேட்டுக்காக
நீங்கள்
சொம்பு ராமாயணம் நடத்தும் போது
எங்கள் பரம்பரை நிலங்களை பறிப்பதை எதிர்த்து
நாங்கள் ஏன் பேசக்கூடாது?

அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் தடை - போராட்டம்
பேசுவோம்… பெரியார் குரலில், அம்பேத்கர் குரலில்…

பேசுவோம்…
பெரியார் குரலில்,
அம்பேத்கர் குரலில்…

விசாரிப்போம்…
ராமன் செய்த கொலையை
மோடி செய்யும் அழிவை!

பேசுவதற்கென்றே உங்களை
பிரம்மன் படைத்ததாய்
நீங்கள் நம்பலாம்,
கேட்ப்பதற்க்கு
நாங்கள் தயாராயில்லை!

பேசுகிறோம் கேளுங்கள்..
நாட்டை வைத்து சூதாடும்
உங்கள் ‘மாகாபாரத’க் குப்பையை
நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும்,

அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம்
ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!

ராமபாணம் தலை தூக்கினால்
பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!

உனக்கு-
ராமனிருக்கும் இடம்தான்
சீதைக்கு அயோத்தி என்றால்,
இனி
பெரியார்-அம்பேத்கர் இருக்குமிடந்தான்
எங்களுக்கு அய்.அய்.டி.!

– துரை. சண்முகம்