privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமூடு டாஸ்மாக்கை ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 !

மூடு டாஸ்மாக்கை ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 !

-

மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள பிரசுரம்

மூடு டாஸ்மாக்கை ! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 !

ன்புடையீர் ! வணக்கம்,

மூடு டாஸ்மாக்கைதமிழகத்தில் பெண்கள் தாலியறுக்க, மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை இருட்டாக்க அரசே டாஸ்மாக் சாராயக் கடைகளை நடத்தி வருகிறது.

எங்கள் ஊருக்குள் சாராயக் கடை வேண்டாம் என மனு கொடுத்தோம், மன்றாடினோம், பட்டினி கிடந்தோம், சாராயக் கடைக்குப் பூட்டு போட்டோம், கல்லால் அடித்தோம். ஆனால், போலீசுக் காவலோடு மீண்டும் சாராயக் கடைகளைத் திறந்து நடத்துகிறது, ’புரட்சித் தலைவி அம்மா’ அரசு. உங்களால் என்ன செய்ய முடியும் எனச் சவால் விட்டுப் பெரும்பான்மை மக்களை நாயினும் கீழாக நடத்துகிறது, போலீசும் அதிகார வர்க்கம்.

மரத்தடியில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை வேண்டும், படிப்புச் சொல்லி கொடுக்க வாத்தியார் வேண்டும், பச்சிளம் குழந்தைகளைக் காக்க ஆஸ்பத்திரி வேண்டும், உயிர் காக்கும் மருந்து வேண்டும், குடிக்க எங்க ஊருக்கு தண்ணீர் வேண்டும், சாலை வேண்டும், தெருவிளக்கு வேண்டும் என கேட்கிறோம். ஆனால், இவை எதையும் செய்ய வக்கற்ற அரசாங்கம், டாஸ்மாக் வேண்டாம் எனச் சொல்லும் மக்களை மிரட்டுவதுடன், சாராயக் கடையை வைத்தே தீருவேன் என நிற்கிறது.

மக்களுக்கு வேலை இல்லை, போதிய சம்பளம் இல்லை, விலைவாசி உயர்கிறது, நெல், கரும்புக்கு போதிய விலை இல்லை, உரிமைகளற்ற கூலிகளாக தொழிலாளர்கள், மொத்தத்தில் உழைத்து வாழும் பெரும்பான்மை கோடிக்கணக்கான மக்களுக்கு உத்திரவாதமான வாழ்க்கை இல்லை. இதுதான் ஆளும் மத்திய, மாநில அரசுகளின் யோக்கியதை. இவற்றிலிருந்து மக்களின் கோபத்தை திசை திருப்புது டாஸ்மாக் குடி. அரசுக்கு வருமானத்தை அளிப்பது மட்டுமல்ல, மக்களைப் போராடாமல் ஆட்டு மந்தைகளாக்கி வைக்கவும் டாஸ்மாக் உதவுகிறது.

சமூக விரோத கும்பல் கள்ளச்சாராயம் விற்பதை, கஞ்சா விற்பதை, விபச்சாரம் செய்வதை நாம் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம், அடித்து விரட்டுவோம் அல்லவா? மக்களுக்கு கேடு என்பதால்தானே அதைச் செய்கிறோம். அதையே சட்டப்படி அரசு செய்தால் ஏன் அனுமதிக்க வேண்டும்?

நாட்டு மக்களை, இந்த நாட்டின் இயற்கை வளங் களைப் பாதுகாக்கத்தானே நாம் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம். அவர்களின் உல்லாச, ஊதாரி வாழ்க்கைக்காக நம் வரிப் பணத்தை லட்சலட்சமாகக் கொட்டி கொடுக்கிறோம். ஆனால், இவர்களோ ஆங்கிலேய ஆட்சியைவிட மிகக் கொடுமையாக மக்களிடம் நடந்து கொள்கிறார்கள்.

  • ஆற்றுமணலையும், நிலத்தடி நீரையும், கடலோரத் தாதுமணலையும், கிரானைட் மலைகளையும் கொள்ளையடிப்பதுதானே, இந்த அரசின் கொள்கை!
  • விவசாய நிலங்களைப் பிடுங்கி ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலிடம் கொடுப்பதும், கல்விக் கொள்ளையர்களோடு கூட்டு சேர்ந்து, பெற்றோர்களிடம் கட்டணக் கொள்ளையடிப்பதும்தானே இந்த அரசின் கொள்கை!
  • பன்னாட்டு கம்பெனிகள் மீத்தேன் எடுக்க விவசாயத்தை அழிப்பேன் என்றும், மக்களின் குடி கெடுக்க சாராயத்தை விற்றே தீருவேன் என்றும் அரசு தன்னுடைய அதிகாரத்தைச் செயல் படுத்துவதை, நாம் அனுமதிக்க முடியுமா?

மக்களுக்கு எதிரியாக நிற்பதுடன், ஆளும் அருகதை யிழந்த இவர்களைத் தூக்கி எறியாமல் தீர்வு எப்படிக் கிடைக்கும்? வந்து போகும் தேர்தல் எப்படி இதற்குத் தீர்வாகும்?

தாய்மார்களின் தாலி அறுத்துகொண்டு தப்பித்து ஓடும் திருடனை விரட்டிப் பிடித்து, சுற்றி வளைத்துக் கட்டி வைத்து அடிப்பது திருட நினைப் பவர்களுக்கு ஈரல்குலை நடுக்கத்தை எற்படுத்தும். அதுபோல் அனைவரும் வேண்டாம் எனச் சொல்லும் சாராயக் கடையை நடத்தவே விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

அனைத்துக் கட்சிகளின் அறிக்கை, பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களால் டாஸ்மாக்கை மூட முடியவில்லை. அடையாளப் போராட்டத்தை கண்டு அஞ்சி அரசு மூடப்போவதுமில்லை. ஊரில் அனைத்து மக்களும் கையெழுத்திட்டு ஆகஸ்ட் 31 அன்று கெடு விதிக்க வேண்டும். அதற்குள் மூடவில்லையெனில் அடுத்த நாள் கடையை நடத்த விடக் கூடாது!

  • டாஸ்மாக் கடையின் முன்னால் பெரிய பள்ளம் வெட்டுங்கள், பெண்கள் தினம் குப்பைகளை கொட்டுங்கள்!
  • மாணவர்கள், இளைஞர்கள் கடையிலேயே ஒண்ணுக்கு அடியுங்கள்! கடையை முற்றுகையிடுங்கள் !
  • கைது செய்தால் வெளியே வந்து மீண்டும் முற்றுகையிடுங்கள்!
  • அப்பவும் இந்த அதிகாரிகளுக்குத் திமிர் அடங்கவில்லை என்றால் டாஸ்மாக் கடையை நிரந்தரக் கழிப்பிடமாக்குங்கள்.
  • டாஸ்மாக் சரக்கை இறக்கவிடாமல் லாரியை மறியுங்கள். ஊருக்குள் விடாதீர்கள்.

இப்படி அதிகாரத்தை மக்கள் தாங்களே கையிலெடுத்து அமல்படுத்த முடியும்.

டாஸ்மாக்கால் நமது வாழ்க்கை பறிபோவதற்கு எதிராக நாம்தான் போராட வேண்டும். நமது வயிற்றுப் பசிக்கு நமது கையால் சாப்பிட்டால்தான் பசியடங்கும். நமது உரிமைக்காக நாமே அதிகாரம் செலுத்த வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம்.

டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு!

குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!
தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!

மூடு கடையை, எவன் வருவான் பார்ப்போம்!
நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது.

அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு !
இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம் !!

தகவல்

மக்கள் அதிகாரம்
நெ. 5/9, எஃப்.எம். பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு,
பாரிமுனை, சென்னை – 01.
தொடர்புக்கு : 99623 66321