கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களால் சாய்பாபா காலனியில் உள்ள டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. கடை முழுவதும் நொறுக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் வரை நின்று முழக்கமிட்டு காவல் துறைக்காக காத்திருந்து தோழர்கள் கைதாயினர்.
இந்த பகுதியில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிரச்சாரம் செய்யும் போது காவல் துறையினர் தோழர்களை வெளியேற்ற முயற்சித்தனர். அப்போது பகுதி மக்கள் பலர் சூழ்ந்து கொண்டு காவல் துறையினரை கேள்வி மேல் கேட்டு துரத்தி அடித்தனர்.