privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக்கை மூடு - தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் !

டாஸ்மாக்கை மூடு – தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் !

-

1. குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர் போராட்டம்

kudanthai tasmac (1)மாணவர்கள் சாராயம் குடித்தால் பொறுக்கிகள், ரவுடிகள் என்று கூறும் அரசும், போலிசும் டாஸ்மாக்கை மூடக் கோரி போராட்டம் நடத்தினால் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது ஏன்? உண்மையில் பொறுக்கிகள் யார்? சமூக நலன் மிக்கவர்கள் யார்?

மாணவர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை அரசே நடத்துவதால் மாணவர்கள் படிக்கவா, குடிக்கவா என்ற நிலையில் தத்தளிக்கின்றனர். இதைத் தடுக்க வேண்டி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், சிறையில் இருக்கும் மாணவர்களை விடுவிக்க கோரியும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறும் குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர் போராட்டக் குழுவினர் அழைப்பு விடுவித்தனர்.

இதை ஏற்று கல்லூரியின் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராடினர்.

_______________________________________________

2. உடுமலை தேவனூர் பகுதியில் ஆர்ப்பாட்டம்

udumalai (4)திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தேவனூர் பகுதியில் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விண்ணதிர முழக்கமிட்டனர். தோழர் மணிமாறன் தலைமை தாங்க, தோழர் சூர்யா(பு.ஜ.தொ.மு), மற்றும் உமா(பு.மா.இ.மு), சிறப்புரையாற்ற ஆர்ப்பாட்டம், மூடு டாஸ்மாக்கை எனும் முழக்கம் மக்கள் முழக்கமாக மாற்றியது. மக்கள் அதிகார அமைப்பிற்கு போராட பகுதி வாழ் உழைக்கும் மக்கள் வருவார்கள் என்று நம்பிக்கையுடன் அறைகூவி அழைப்பதாய் இருந்தது ஆர்ப்பாட்டம். நிகழ்வில் தோழர் துரை. சண்முகத்தின் கவிதை படிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் பாடல்களும் பாடப்பட்டன.

______________________________________________________

3. வேதாரண்யம்  கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்

vedarnyam (4)வேதாரண்யம் பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக டாஸ்மாக்கை மூடக் கோரும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு செயற்குழு உறுப்பினர் மருது தலைமை தாங்க, வழக்கறிஞர்கள் கலியராசன், சரவணதமிழன் ஆகியோர் உரையாற்றினர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுவிக்குமாறும், நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை மூடுமாறும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 200 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

_____________________________________________________

4.  திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம்

tiruchi evra (7)சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரிமாணவர்கள், புரட்சிகர மாணவர் – இளைஞர்முன்னணி தோழர் செழியன் தலைமையில் கல்லூரி வாயில் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். திரளான மாணவர்கள் கூடி முழக்கமிட்டனர்.

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க