“இத்தனை காவலர்கள் எதற்காக அங்குமிங்கும் அலையணும், பேசாம டாஸ்மாக் சரக்கு முழுவதையும் அந்தந்த ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல வச்சி விக்கலாமே, கலவரக்காரர்களிடமிருந்து குடிமகன்களையும், சரக்கையும், கஜானாவையும் ஒண்ணா பாதுகாத்து விடலாமே” என்று ஃபேஸ் புக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கிறது.
சும்மா சொல்லக்கூடாது. “எறக்கத்துல பிரேக்கடிச்சா மாதிரி” என்னா தத்துவம்?
அம்மா இந்த திட்டத்தை மட்டும் அறிவிச்சி, ஸ்டேசன் வாசல்ல ‘டாஸ்மாக்’ னு பச்சை போர்டு மாட்டிட்டாங்கன்னா, அப்புறம் போலீசுக்கு பொற்காலம்தான்.!
குடிமகன் கிட்டே குவாட்டரைக் கொடுத்திட்டு “இதுதான் ஆஃப்” னு அடிச்சுப் பேசி கல்லா கட்டலாம்.
பார்ல குத்து மதிப்பா மாமூல் வாங்குற ‘அநீதி’க்கு முடிவு கட்டி, ஆம்லெட்டுக்கு இவ்வளவு, ஆஃப் பாயிலுக்கு இவ்வளவுன்னு பர்சன்டேஜ் போட்டு உக்காந்த இடத்திலிருந்தே வசூல் பண்ணலாம்.
சரக்கடிச்சி மட்டையான குடிமகன்களை அப்டியே லாக் அப்ல அள்ளிப்போட்டு, சகல விதமான கேசுகளையும் அவன் தலையில எழுதி கணக்கு காட்டிரலாம்.
ஸ்டேசன் வாசல்லியே டூ வீலர் ஸ்டாண்டு வச்சி, அங்ஙனயே ஒரு கான்ஸ்டபிளைப் போட்டு, வண்டிய ஸ்டார்ட் பண்ற குடிமகன்களை ஊதச்சொல்லி ஊதச்சொல்லி மடக்கிடலாம்.
சேல்ஸ் டார்கெட் அச்சீவ் ஆகலைன்னு கலைக்டர் கோவப்பட்டா, ஸ்டேசன் வாசல்ல “மென் அட் ஒர்க்” னு போர்டு வச்சி, எல்லா பயலையும் டாஸ்மாக்குல நொழஞ்சிதான் வெளியே போயாகணும்னு திருப்பி விட்டுறலாம்.
இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்! நம்ம அறிவுக்கு எட்டுனது இவ்ளோதான்.
“நாளைலேர்ந்து ஸ்டேசன்லதான் டாஸ்மாக்”குன்னு அம்மா மட்டும் அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்க.
எப்பேர்ப்பட்ட குடிகாரனுக்கும் ரெண்டே நாள்ல போதை தெளிஞ்சிடும்.
அப்புறம் தனியா மதுவிலக்கு சட்டம், மதுவிலக்கு போலீசு, போராட்டம், தடியடி எதுவும் தேவையில்லை.
கடை பக்கம் ஒரு பய வரமாட்டான்.
நல்ல ஐடியாவாகத்தான் இருக்கு 110-ன் விதியின் கிழ் இல்லாம நேரடி சட்டமே இயற்றலாம் போல..
நல்ல ஐடியாவாகத்தான் இருக்கு அம்மா வுக்கு கல்லா நல்லா ப்புல்லா ஆவும் . . . . . .