privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்ஊடகங்களை நம்பலாமா ? புதிய கலாச்சாரம் – நவம்பர் 2015 வெளியீடு !

ஊடகங்களை நம்பலாமா ? புதிய கலாச்சாரம் – நவம்பர் 2015 வெளியீடு !

-

puka nov 15 wrapper

ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனின் விருப்பம் என்ன? மற்றவர் பார்க்கத் தவறும் தருணங்களை காமராவில் பதிவு செய்ய வேண்டும், உலகப் புகழ் பெற வேண்டும்.

ஏகாதிபத்தியத்தின் தயவில் பஞ்சத்தாலும், இனக்குழுச் சண்டைகளாலும் உருக்குலைந்து கொண்டிருக்கும் கண்டம் ஆப்பிரிக்கா. கனிம வளம், விலங்கு வளம் மட்டுமல்ல, துயரத்தின் உச்சியில் சிதறும் மக்களும் அங்கே ஏராளம். அவ்வகையில் உலக மீடியாவின் கருணைப் பக்கங்களுக்கு இன்று வரை அமுத சுரபியாக பங்களிப்பது ஆப்பிரிக்க காட்சிகள்தான்.

தென்னாப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட கெவின் கார்ட்டரும் அத்தகைய காட்சிகளை தேடி சூடானுக்கு 1993-ம் ஆண்டில் செல்கிறார். பட்டினியால் உறைந்து போன அந்த மண்ணில் உலகப் புகழ் பெறப்போகும் காட்சிகளுக்கா பஞ்சம்?

கிராமம் ஒன்றில் எலும்பும் தோலுமாக இருக்கும் சிறுமி ஒருத்தி தவழ்ந்து போகிறாள். அவள் எப்போது சாவாள் என ஒரு கழுகு காத்திருக்கிறது. இடையூறு ஏதுமின்றி கழுகும் சிறுமியும் கேமராவின் சட்டகத்தினுள் வரும் வரை அவர் காத்திருந்து புகைப்படம் எடுக்கிறார். நியூயார் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகும் அந்தப் படம் 1994-ம் ஆண்டு புலிட்சர் பரிசைப் பெறுகிறது.

பிறகு படத்தில் இருக்கும் அந்தச் சிறுமி என்ன ஆனாள் என்று பலரும் கேட்கிறார்கள். படம் எடுத்த உடன் திரும்பிய கார்ட்டருக்கு இது குறித்து தெரியாது. உயிர் போகும் நிலையில் அந்தச் சிறுமியைக் காப்பாற்றாமல், புகைப்படம் மட்டும் எடுத்ததைப் பலரும் விமரிசிக்கிறார்கள். இந்தக் கேள்வி எழுப்பிய மன உளைச்சலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.

சாவதற்கு முன்பு எழுதிய கடிதத்தின் முதல் வரி I am Really, Really Sorry.

கெவின் கார்ட்டருக்கு கொஞ்சம் மனசாட்சி இருந்தது. தற்கொலைக்கு முன்பு அவர் கொண்டிருந்த அறம்தான் இன்றைய செய்தியாளர்களின் விருப்பம். இதைக் கற்றுக் கொடுத்த ஊடக நிறுவனங்கள்தான் இன்றைய செய்திகளை உருவாக்குகின்றன, கட்டுப்படுத்துகின்றன, வெளியிடுகின்றன.

ஆனால் இன்று அப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டால் தற்கொலை செய்வதற்கு கெவின் கார்ட்டர்கள் இல்லை. கார்ப்பரேட் ஊடக உலகின் ஆட்சியில் பரபரப்பான செய்திகளைக் கொறித்து விட்டு பட்டினி பஞ்சங்களை பார்ப்பதற்கு கூட மக்கள் தயாராக இல்லை.

உங்களை சிந்தையில் படியும் செய்திகளின் கதை இதுதான்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

 

 

இதழில் இடம்பெற்றுள்ள தலைப்புகள்:

  • பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம்
  • பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள்…!
  • பெரிய கோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூட நம்பிக்கை!
  • வாவ்! பாரதத்தாய் ஜஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!
  • விகடன் – மதன் லடாய்: அம்பிகளின் அடிமைப் போர்!
  • மாலையில் மெழுகுவர்த்தி, ராத்திரி குவார்ட்டர்,
    காலையில் THE TIMES OF INDIA
  • தினமணிதான் இந்துமுன்னணி!
    வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!
  • குமுதம்: ரிப்போர்ட்டரா, புரோக்கரா?
  • 24 X 7 களின் உண்மை முகம்!
  • காவி மோடியின் பாணியில் கார்ப்பரேட் மீடியா…!
  • அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத் கோபமெல்லாம் உண்மையல்ல!
  • ஜெயா நிரபராதி: ஊடகங்கள் எழுதிய விநோதத் தீர்ப்பு!
  • நேபாளம்: எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________