privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுஸ்லீம்களுக்கு வீடு என்ன.... உயிரையே கொடுப்போம் !

முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !

-

சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.
சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.

வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.

முஸ்லீம் அமைப்புக்கள், இஸ்லாம் மதம் குறித்த விமரிசனங்கள் வினவு தளத்தில் நிறைய இருக்கின்றன. இந்துமதவெறியர் குறித்து எமது விமரிசனங்களை தேடி படிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் முதலில் இதை படிக்கும் போது அதிரச்சியடைகிறார்கள். பின்னர் காலக்கிரமத்தில் அந்த விமரிசனங்களின் அடிப்படையை, நேர்மையை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு மனிதனை மதம் சார்ந்து திரட்டக் கூடாது, அப்படி திரட்டுவது ஆளும் வர்க்கத்திற்கே இறுதியில் உதவுவதாய் இருக்கும் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. மத நம்பிக்கையோ, மத சடங்குகளோ, இறை வழிபாடோ அனைத்தும் ஒரு தனிநபரின் உரிமை மட்டுமே. நமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காக எந்த மதத்திலும் தீர்வோ, வழியோ கிடையாது. அதனால்தான் அனைத்து மதங்கள், சாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்கள் வர்க்கமென்ற முறையில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறோம்.

சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.

tntj-releif-work
நிவாரணப் பணியில் ஈடுபடும் டி.என்.டி.ஜே தொண்டர்கள்

மேலும் மதம் சார்ந்து மட்டும் அதிகம் போராடும் அந்த இயக்கங்கள் முதன் முறையாக ஒரு பொதுப் பிரச்சினைக்காக அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பெருமளவில் அணிதிரண்டு வேலை செய்திருக்கின்றனர். இந்த இணைப்பு மக்களிடம் இணக்கத்தையும், ஜனநாயகத்தையும், சகோதர உணர்வையும் ஓரளவிற்கேனும் அறிமுகப்படுத்தும்.

முஸ்லீம் மக்கள் குறித்து இந்துக்களின் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் வன்மத்தையும் இந்த வெள்ள நிவாரணப் பணி அழித்து விட்டிருக்கிறது. ஊடகங்களில் முஸ்லீம் அமைப்புகள் குறித்த செய்திகள் பெரும்பான்மையாகவும், ஆர்.எஸ்.எஸ் குறித்த செய்திகள் சிறுபான்மையாகவும் வருவதைக் கண்டு இந்துமதவெறியர்கள் தாங்கவொண்ணா எரிச்சலில் இருக்க வேண்டும். உண்மையில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களின் பேரைச் சொல்லி இயங்கும் மதவெறியர்களை தோற்கடித்திருக்கிறார்கள்.

தவ்ஹித் ஜமா அத் அமைப்பினரை ஆபாசமாக வசைபாடிய கல்யாணராமன் எனும் பா.ஜ.க மதவெறியனுக்கு இந்துக்களே திருப்பி அடித்திருக்கின்றனர், முகநூலில். இவையெல்லாம் தமிழக மண்ணில் இந்துமதவெறிக்கு எதிராகவும் அதே நேரத்தில் ஜனநாயக உணர்வின் அடிப்படையிலும் மக்கள் திரள்வதற்கும் சேர்வதற்கும் வழியெடுத்துக் கொடுக்கும்.

இனி அந்த இளைஞர்கள் பேசுவதைக் கேட்போம்.

சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு – மசூதி தோட்டம் பகுதி. இப்பகுதியில் கடந்த ஏழு நாட்களாக உணவு உறக்கம் மறந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் வட்ட செயலாளர் சேட் (எ) அஷ்ரப் உசைன். நாம் சென்ற போது அங்கே போர்வைகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.

muslims-flood-relief-photos-21
சேட் என்ற உசைன், ஆட்டோ தொழிலாளி, மனித நேய மக்கள் கட்சியின் வட்டச் செயலாளர்.

“பாய் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க மாடி வீடு. கீழ் வீடுகளில் தான் பாதிப்பு உங்களக்கு கொடுக்க முடியாது”- என்று உரிமையோடு ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார், உசைன். இதைக் கேட்டு மாடியில் வசிக்கும் பாய் பின்னால் செல்ல தரைதளங்களில் வசிக்கும் ஏனைய ‘இந்து’, மற்றும் ‘முஸ்லீம்கள்’ நிவாரணப் பொருட்களை பெற்று செல்கிறார்கள். அவரிடம் பேசினோம்.

கேள்வி : கடந்த ஒரு வாரமா நீஙக செய்து வரும் பணிகள் குறித்து சொல்லுங்க?

உசைன்: முதல் நாள் பகலில் தண்ணீர் கரண்டை கால் வரை தான் வந்தது. மக்களும் இதுக்கு மேல வராதுனு நெனச்சிட்டு இருந்தாங்க. நைட்டு திடீருனு தண்ணி அளவு அதிகரிக்க ஆரம்பிச்சிருச்சு. உடனடியா மக்களை வெளியேற்றினோம். நடக்க முடியாத பெரியவர்களை டிரை சைக்கிளில் ஏற்றி கூட்டிச் சென்றோம். சீக்கிரமாகவே இந்த பகுதி தண்ணீரால் சூழப்பட்டு விட்டது.

காப்பாற்றப்பட்ட மக்களை தங்க வைக்க இடமில்லை. மசூதிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருந்தது. அது பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைக்க காவலாளி எதிர்ப்பு தெரிவித்தார். “போலீஸ் கேஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் மக்களை தங்க வைக்கணும்” என்று காவலாளிக்கு எடுத்துச் சொல்லி துணிந்து பூட்டை உடைத்து மக்களை தங்கவைத்தோம்.

சில பகுதிகளில் மக்கள் வெளியேற முடியாமல் மாடிகளில் சிக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு நாட்கள் உணவு, பால் வீடு வீடாக கொடுத்தோம். இது சபரிமலை சீசன். ஏரியா இந்து சகோதரர்கள் பலர் மாலை போட்டிருந்தார்கள். அவங்களுக்கு பிரியாணி கொடுத்தால் நம்மை தப்பா நினைக்கமாட்டார்களா. அவர்களுக்காக பிரிஞ்சி , லெமன் சாதம் சமைத்து கொடுத்தோம்.

ஓ.எம்.ஆர் கந்தன்சாவடி அருகிலிலுள்ள பகுதிகளிலும் மீட்பு பணியில் ஈடுபட்டோம். விநாயகபுரம் பகுதியில் கரண்டைகாலுக்கு மேல்வரை சேறு. அன்சர்பாஷா, அலாவுதீன் மற்றும் பகுதி இளைஞர்கள் சிறப்பாக உதவினார்கள்.

muslims-flood-relief-photos-13
நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சேற்றுப் புண்!

(நாம் பார்த்த வரை மீட்பு பணியில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்கள் பலரும் காலில் சேற்றுப்புண் மற்றும் மீட்பு பணியின் போது அடிபட்ட காயங்களோடு இருப்பதைப் பார்க்க முடிந்தது.)

கேள்வி : நீங்க என்ன தொழில் செய்யறீங்க? இந்த உதவி வேலைகள் செய்யுறதால உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பில்லையா?

உசைன்: ஆட்டோ வெச்சிருக்கேன். 7 நாள் வேலைக்கு செல்லவில்லை. பலரும் உதவி செய்து வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் சில நகைகளை அடகுவைத்திருக்கிறேன்.

கேள்வி: மறுமையில் சொர்க்கம் கிடைக்குமுனு உதவி செய்யுறதா சில முஸ்லீம் தொண்டர்கள் சொல்லுறாங்க. உங்க கருத்து என்ன?

உசைன்: மனுசனுக்கு மனுசன் மனிதநேயம் தான் சார் முக்கியம். மார்க்கம் இரண்டாவதுதான். எங்க மார்க்கமும் மனிதநேயத்தை தான் சொல்லுது. இப்போ உங்க அப்பா அம்மாவை உங்க கண் முன்னால யாராவது அடிச்சா எந்த உணர்ச்சி வருமோ அப்படி தான் சார் மக்கள் இப்படி துயரப்படும்போது இருக்கும்.

கேள்வி: எப்போதும் அடித்தட்டு மக்கள் பகுதியிலேயே வெள்ளம் வருதே, போயஸ் தோட்டம் பகுதியில வெள்ளம் ஏன்
வருவதில்லை?

உசைன் : சட்டம்னா என்ன சார்? இங்க எல்லாருக்கும் ஒரே சட்டம் கிடையாது. கனிமொழி எவ்ளோ கொள்ளையடிச்சி இப்போ வெளியே இருக்கு. ஜெயலலிதாவ ஒரு நீதிபதி ஜெயில்ல போட்டா இன்னொருத்தர் விடுதலை பண்ணிட்டார். போலீஸ் நினைத்தால் தவறுகளை தடுக்க முடியும் ஆனா அவர்களுக்கு கட்டிங் செல்கிறது. அரசு மருத்துவமனைக்கு போங்க. குழந்தை பிரசவத்துக்கு ஆண் குழந்தைக்கு 2000, பெண் குழந்தைக்கு 1000 ரூபா கொடுக்கணும். அதை கொடுக்கலேன்னா நம்மை மதிக்கவே மாட்டாங்க. என் காலுல் அடிபட்ட போது அரசு மருத்துவமனையில் கட்டு போடவே பல மணி நேரம் ஆக்குறாங்க. சாதாரண ஜனங்கள்னாலே அலட்சியம் தான்.

முஸ்லீம்ல கூட கொஞ்சம் பேரு பாதுகாப்பா வெளியூருக்கு கிளம்பிட்டாங்க. திருநெல்வேலி அங்க இங்கனு. போன் போட்டு திட்டுனேன். அங்கயும் தண்ணிவந்துட்டா எங்கடா போவீங்கணு.

கேள்வி: முஸ்லீம்களில் பலர் கோவில் பிரசாதம் சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த நிவாரணப் பணிகளில் பல கோவில்கள் மற்றும் சிலைகளை சுத்தம் செஞ்சுருக்கீங்க? அதை எப்படி பாக்குறீங்க?

உசைன்: பல அமைப்புகள் நிவாரணப் பணி செய்யுறாங்க. இந்து, முஸ்லீம் என்று தனித்தனியாக பிரிச்செல்லாம் சுத்தம் செய்ய முடியாது. இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. பிரசாதம் சாப்பிடக் கூடாது தான். ஆனா சில சமயங்களில் நண்பர்களில் மனது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சாப்பிட்டிருக்கிறேன். ஐந்து வேளை தொழுவதால் மட்டும் யாரும் சொர்க்கத்திற்கு போக முடியாது. அடுத்தவர் மனது புண்படுத்தக்கூடாதுனும் மார்க்கம் சொல்கிறது. சமூகத்திற்கு என்ன செய்தோம், குடும்பத்தை எப்படி வழிநடத்தினோம்னு பல விசயம் இருக்கிறது.

muslims-flood-relief-photos-19
நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்லும் பெண்கள்!

கேள்வி : இப்போது முஸ்லீம் அமைப்புகள் பாராட்டப்படுவதற்கு காரணம் வெள்ளம் என்ற அனைத்து மக்களுக்குமான பொதுப்பிரச்சனையில் இறங்கி உதவி செய்திருப்பதால் தான். ஆனால் சில முஸ்லீம் அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும், முஸ்லீம் மக்களுக்கான கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?

உசைன்: பிராபகரன் பையன் கொல்லப்பட்ட செய்த வந்த போது நாங்கள்தான் முதலில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டோம். எங்களுக்கு அடுத்து தான் வை.கோ-வே வந்தார். பொதுப் பிரச்சனைகளுக்கும் செல்கிறோம். நாலு பேரும் நமக்கு தேவைதான். மற்ற சமுதாயத்தை சேக்காம பண்றது தவறு.

கேள்வி : அப்படியே சென்றாலும் விஸ்வரூபம் பிரச்சனைக்கும், கார்டூன் பிரச்சனைக்கும் திரள்கிற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்கு வருவதில்லையே ?

உசைன்: எங்க பகுதியிலிருந்து எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே அளவு எண்ணிக்கையில தான் செல்கிறோம். ஆனாலும் நபிகள் நாயகம் கார்டூன் எல்லாம் உணர்வு ரீதியான பிரச்சினை அதனால் மக்கள் அதிகமாக வருவாங்க.

கேள்வி : நீங்கள் பொதுப் பிரச்சனைக்கு வருவதாக சொல்கிறீர்கள். நல்ல விசயம்தான். சில முஸ்லீம் அமைப்புகள் பொதுப் பிரச்சனைக்கு வரலேன்னாலும், உங்கள மாரி வாரவங்களை முஸ்லீம் இல்லைன்னு சொல்றாங்களே?

உசைன்: தவ்ஹீது ஜமாதை தானே சொல்கிறீர்கள். ஒருத்தர் முஸ்லீமா இல்லையா என்பதை அல்லா தான் முடிவு பண்ணனும். நானும் நீயும் முடிவு பண்ண முடியாது. அங்க பள்ளம் இருக்குப்பா பாத்துப்போ என்று சொல்லத்தான் முடியும். கேக்கமாட்டேன் போய் விழுவேனு போனா நாம என்ன செய்ய முடியும். ஆனா வெள்ள நிவாரண பிரச்சனையில அவங்க நல்லா செயல் படுறாங்க. முதல் முறையா ஒரு சமூக பிரச்சனையில தவ்ஹீது ஜமாதை பாக்குறேன். இதை முதல்லயே செஞ்சிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க. இத தொடர்ந்து செய்யனும்.

கேள்வி : மக்கள் அரசு மீது குற்றம் சாட்டுகிறார்களே, உங்க கருத்து என்ன?

உசைன்: யாருக்கும் அறிவிக்காமல் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத தவறு. இவ்வளவு தண்ணீர் வரும் என்று மக்களுக்கு தெரியாது. கால் அளவு தண்ணீர் வரும் என்று தான் நினைத்தார்கள். நாங்கள் அழைக்கும்போது கூட மக்கள் முதலில் வெளியேறவில்லை. காரணம் இவ்வளவு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி மக்கள் வரவிட்டால் கூட அரசின் கடமை அறிவிப்பதுதானே. அதை ஏன் செய்யவில்லை. அதனால் இது அரசின் மீதான தவறுதான்.

கேள்வி : நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி இதுவரை இதை கண்டிக்கவில்லையே?

உசைன்: அது பற்றி தெரியவில்லை. நிவாரணப்பணியில் இருக்கிறேன். கட்சி தலைவர்களை சந்தித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இது கண்டிக்க வேண்டிய ஒன்று. நாங்கள் கண்டிக்கச் சொல்லி வலியுறுத்துவோம்.

கேள்வி : அப்படி கண்டிக்காவிட்டால் என்ன செய்யவீர்கள்?

உசைன் : மக்களுக்கு வேலை செய்யத்தான் கட்சி. எங்கள் கட்சியில் அனைவரும் கருத்து சொல்ல முடியும். 17 வயது பையன் கூட சொல்லலாம். அப்படி சொல்லுவோம். கேட்கவில்லை என்றால் வெளியேறிவிடுவேன். இது அரசின் தவறுதான்.

அப்துல் மஜித், எஸ்.டி.பி.– சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.

muslims-flood-relief-photos-12
இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் (சட்டை, பேண்ட் அணிந்திருப்பவர்) அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தென் சென்னை வர்த்தக பிரிவில் பொறுப்பு வகிக்கிறார்.

சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதிக்கு சென்ற போது கழுத்தளவு தண்ணீரில் முஸ்லீம் இளைஞர்கள் உணவு கொண்டு தந்ததை மக்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்கள். விசாரித்த போது அப்பகுதியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ -யின் ஆட்டோ சங்கமும் அதோடு தொடர்புடைய இளைஞர்கள் குறித்தும் கூறினார்கள். அவர்களிடம் பேசினோம். அக்கட்சியின் அப்துல் மஜித், தென்சென்னை வர்த்தக அணியை சேர்ந்தவர் பேசினார்.

“செவ்வாய் இரவு இப்பகுதி முழுவதும் வெள்ளம் நிறைந்து விட்டது. மக்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். செய்தி அறிந்ததும் உடனடியாக கிச்சடி தயார் செய்தோம். ரப்பர் டியூப்கள் தயார் செய்து அதை கொண்டு உணவுப் பொருட்களை வீட்டிற்கு வீடு கொண்டு சேர்த்தோம். சிறிய குறுகலான சந்துகளில் கயிறு கட்டி சென்றோம். தண்ணீர், வத்திபெட்டி, சின்ன டார்ச், மெழுகுவர்த்திகளை விநியோகித்தோம். இரவு எங்களால் முடிந்த அளவுக்கு செய்தோம். மறுநாளும் தொடர்ந்தோம்.

தெருவில் மக்கள் அடித்துக்கொள்ளும் வகையில் கொடுக்ககூடாது என்பதால் வீடு வீடாக கொண்டு சென்றோம். மழை முடிந்ததும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டோம். சந்துகளில் இருந்த குப்பைகள், சாக்கடைகளை வாரி அரசு ஊழியர்கள் கொண்டு செல்ல வசதியாக தெருமுனைகளில் குவித்து வைத்தோம்.

மக்களை எங்களை பாராட்டும் போது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.”

கேள்வி : முஸ்லீம் அமைப்புகளை மக்கள் பாராட்டுவதற்கு காரணம் பொதுப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதால் தான். ஆனால் சில அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும் , இஸ்லாமியர்கள் சார்ந்த கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?

மஜித்: எங்கள் அமைப்பை பொறுத்தவரை நாங்கள் எல்லா அரசியல் விசயங்களுக்கு குரல் கொடுக்கிறோம். சமீபத்தில் கூட டாஸ்மாக் பிரச்சனைக்கு ஒரு மாதமாக போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். ஈழம் முதலிய எல்லா விசயங்களுக்கும் போராடுகிறோம்.

சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை. முஸ்லீம் நினைத்து மட்டும் சி.எம் ஆக முடியுமா சார். நடக்ககூடிய காரியமா? மற்றவர்களுடன் சேர்ந்து செய்வது தான் காலத்தின் கட்டாயம். சங் பரிவாரத்திற்கு எதிரானவர்களை அனைவரையும் இணைத்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஏற்படுத்தி போராடுகிறோம்.

muslims-flood-relief-photos-17
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள்.

கேள்வி : ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகள் மதப் பிரச்சினைகளைத்தானே பிரதானமாக செய்கிறார்கள்.? இப்போது கூட தவ்ஹித் ஜமாஅத் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப் போகிறார்கள்.?

மஜித் : மார்க்கம் தனிப்பட்ட விசயம். அரசியல் பொதுவான விசயம். நான் விரலை ஆட்டி தொழுவேன். தொப்பி போட்டு தொழுவேன், போடாமல் தொழுவேன். இப்படி செய்தால் தான் முஸ்லீம் செய்யாவிட்டால் முஸ்லீம் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது.

கேள்வி : மற்ற கடவுள்களுக்கு படைக்க்ப்பட்ட பிரசாதங்களை சாப்பிடக் கூடாத நீங்கள் கோயிலை சுத்தப்படுத்துவது மார்க்கப்படி சரியா?

மஜித் : இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. சிலை வணக்கம் தான் செய்யக்கூடாது. கோவிலை சுத்தம் செய்வதில் பிரச்சனை இல்லை. இஸ்லாமியர் ஒருவர் அப்படி வணங்கினாலும் அவரை இஸ்லாமியரல்ல என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. அதை அல்லா தான் முடிவு செய்வான். அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது.

கேள்வி : மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறீர்கள். சரியானதுதான். இதற்கு காரணமான அரசுக்கு எதிராகவும் போராடுவீர்களா?

மஜித் : இந்த அரசு மக்களை அலட்சியமாகத்தான் கருதுகிறது. கடந்த நாலரை ஆண்டுகளில் தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு என பல வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டாஸ்மாக்கிற்கு எதிராக பலரும் போராடினார்கள். அரசு அதை மதிக்கவிலை. இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை.

முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பகுதி மக்களான ‘இந்துக்கள்’ சிலரிடம் கருத்து கேட்டோம்.

muslims-flood-relief-photos-2
முஸ்லீம்களுக்கு வீடு என்ன உயிரையே கொடுப்போம் என்று சொன்ன அம்மா.

முஸ்லீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பார்கள், நம்மிடம் ஒட்டமாட்டார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால்
இப்பொழுது உங்கள் தெரு சாக்கடையை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

தாங்கள் அப்படி கருதவில்லை என்று பலர் கூறினார்கள். முன்னாடி எங்களுக்கு அப்படிதான் சொன்னாங்க. நாங்களும் அப்படி தான் நினைத்திருந்தோம். வீடு வாடகைக்கு விடும்போது கூட யோசிப்போம். அத எல்லாம் காதால்தான் கேட்டிருந்தோம். அது தவறு என்பதை இப்போ கண்ணால் பாக்றோம் என்றார்கள்.

அப்படியானல் இனி வாடகைக்கு வீடு கொடுப்பீர்களா? என்று கேட்ட போது, “வீடென்ன உயிரையே கொடுப்போம்” என்றார் ஒரு பெண்மணி.

–    வினவு செய்தியாளர்கள்

  1. அட வீணா போன வினவே

    செத்த வீட்ல உன்னோட ஒன்னத்தும் ஒதவாத அரசியல் பேசுறியேடா

    இந்த நேரத்துலயும் தவ்ஹீத் ஜமாஅத்த சொரிற உனக்கும் கல்யாண ராமனுக்கு எந்த வித வித்தியாசமும் இல்லை. அவன் காவி தீவிரவாதி நீ சிகப்பு தீவிரவாதி.

    என்ன சொன்ன முதல் முறையா தவ்ஹீத் ஜமாஅத் பொது விசயத்துக்கு இறங்கி இருக்கா சூனாமி வந்தப்ப நீ எங்க போய் _______ இருந்தே….. போ போய் கேட்டு பாரு சூனாமியே நேர்ல கண்ட நாகை போன்ற கடலோர மாவட்ட மக்கள்டே களத்துல முதலில் யார் வந்து நின்னது யாருனு.

    அப்ப சமுக வலைதளம் இல்ல அதான் வழக்கமா ஊடகத்தின் பாரபட்சத்தால் அதிகம் செய்தி வெளிவரல இன்னக்கி சமுகவலைதளம் வெளிகொண்டு வந்துவிட்டது.

    நீ என்ன தான் அரசியலை மையமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய கட்சியே சார்ந்தவர்களை பேட்டி என்ற பெயரில் எடுத்து போட்டு தவ்ஹீத் ஜமாஅதின் செயல்பாடுகளை மட்டம் தட்ட நினைத்தாலும் தெரிந்து கொள்.

    தவ்ஹீத் ஜமாஅத் களத்தில் நிற்க்க முக்கிய காரணம் மர்மை வெற்றிக்கும் அல்லாஹ்வின் திருப்பொருத்தை நாடியும் நபிகள் நாயகம் காட்டி தந்த மனிதநேயத்தின் அடிப்படையில் தான்.

  2. மதம் என்றாலே அபின் என்ற போதையில் இருக்கும் வினவிற்கு முஸ்லிம்களை நிவாரணப்பணியில் ஈடுபடுத்தியது இஸ்லாம் இல்லை என்ற தன் சொந்த கருத்தை கூறி இல்லாத ஒன்றை பரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது…..மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் மதசார்பற்ற முஸ்லிமை தவிர அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாம் என்ற பதிலை தவிர வேறொன்று இல்லை என்றே கூறுவார்கள்….

  3. Vவர்க்க அடிப்படையில் மனிதர்களை பிரித்துப் பார்து அரசியல்நடதுபவர்கள் பலநேரஙளிள் சிலை வணங்கி ஜாதி பார்க்கும்பார்பனர்களை விடகேவலமாக சிந்திப்பவர்கலள் என்று உனர்த்தும் பதிப்புகளில் இதுவும் ஒன்று.

    வர்க்க பேத புரட்சிகள் 19ம்நூற்றான்டின் கன்டுபிட்ப்பு என்பதும் அதை முன்னின்று பின்னின்ட்றுநடதியது மன்னரட்சியை வீழ்தி தஙகளது ஆதிக்கம்நிலை பெற யூத வங்கி முதலாலிதுவம் என்பதும் புரியாத போதயில் இன்னும் எத்தனை காலம் இருப்பார்கல் என தெரியவில்லை.

    இறை மற்றும் மறுமையின் சிந்தனை எத்தனை சுயனலமட்ரவனாக ஆக்கும் என்ட்ர உஙலின் ஆஷரியதை உன்மயாக சொல்வதை விடுது இப்படி வர்க்க இன அபின் போதயில் உளராதீர்கள்

  4. இந்த கட்டுரையில் அப்படியென்ன பிரச்சனை பாய்களுக்கு ? வினவை இவர்கள் ஆள் ஆளுக்கு வெட்டி கூறுபோடுவதை பார்த்தால் நான் மீண்டும் ஒருமுறை இந்த கட்டுரையை ஊன்றி படிக்கவேண்டுமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. எப்படி இருப்பினும் மார்க்க முதன்மை நெறியாளர் அவர்களை இந்த கட்டுரை எந்த வகையிலும் சிருமைப்டுத்த வில்லையே! பின்பு ஏன் இப்படி கடும் கோபத்துடன் பின்னுட்டம் இடுகின்றார்கள் பாய்கள்?

  5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட,ஈடுபடும் அனைவருமே சமூகத்தின் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.ஆனாலும் முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுகிறது.அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம்.

    ஒன்று மீட்பு பணியில் அவர்களது பங்கு மகத்தானது.இப்போது வழங்கப்படும் நிவாரணங்களை விட ஆபத்தான கட்டத்தில் மக்களின் உயிர் காத்த அவர்களின் மகத்தான பணி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.[அதற்காக இப்போது நடைபெறும் நிவாரணப்பணிகளை குறைத்து மதிப்பிடுவது நோக்கமில்லை].இரண்டு,முசுலிம்கள் பற்றி தவறான பிம்பம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.அதனால்தான் ”இப்படிப்பட்டவர்களையா மதவெறியர்கள்,தீவிரவாதிகள்,மற்ற பிரிவு மக்களோடு ஒட்ட மாட்டார்கள் என்றெல்லாம் கருதியிருந்தோம் என்ற ஆச்சரியம்,இப்போது உண்மையை விளங்கி கொண்ட மன நிறைவு ஆகியனவே முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுவதன் காரணங்களாக இருக்க வேண்டும்.

    அடுத்து இன்னொரு உண்மையையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.இப்படி தங்கள் உயிருக்கும் உடல்நலத்திற்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் செயலாற்றிய பிள்ளைகளை உருவாக்கித்தந்த ஒட்டு மொத்த முசுலிம் சமூகமும் பாராட்டுக்குரியது.மழையில் நனையாதே,சளி பிடிக்கும் என்று பொத்தி பொத்தி பிள்ளைகளை வளர்க்கும் இன்றைய காரியவாத சமூகத்தில் அந்த முசுலிம் பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோரும் நன்றிக்குரியவர்கள்.முசுலிம் சமூகத்தின் மனித நேயம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.ஆம்,மக்களுக்கு பயன் தரும் நன்னீரிலும் கடல் நீரிலும்தான் மீன்களும் பயிர்களும் விளையும்.

    • சகோதரர் திப்பு,
      ஆபத்தான கட்டத்தில் மக்களைக் காப்பாற்றியவர் பலர். அதில் முசுலீம் சகோதரர்களும் அடக்கம். சளி பிடித்தாலும் பரவாயில்லை, போய் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று வந்த பிள்ளைகளில் எல்லா மதமும் அடக்கம். இதன்றி அழுத்தம் கொடுப்பது உண்மையும் அல்ல, பணிவும் அல்ல.

      • \\உண்மையும் அல்ல, பணிவும் அல்ல.//

        தோழர்,

        பின்னூட்டத்தின் முதல் வரியே ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட,ஈடுபடும் அனைவருமே சமூகத்தின் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்கள் ஆனாலும் முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுகிறது” என்றுதான் ஆரம்பிக்கிறேன்.கவனிக்கவும்.நாங்கள்தான் உசத்தி என்று பேசுவதாக கருதப்பட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன்தான் எழுதியிருக்கிறேன்.

        • சகோதரர் திப்பு

          //ஒன்று மீட்பு பணியில் அவர்களது பங்கு மகத்தானது.இப்போது வழங்கப்படும் நிவாரணங்களை விட ஆபத்தான கட்டத்தில் மக்களின் உயிர் காத்த அவர்களின் மகத்தான பணி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது//
          இதில் தாங்கள் குறிப்பிட்ட கவனம் புரியவில்லை. மக்களைக் காப்பாற்றியவர்களில் முக்கியமானவர்கள் அந்தந்த பகுதி இளைஞர்கள், இரண்டாவதாக மீனவர்கள், மூன்றாவதாக மற்ற அனைவரும்…

          இசுலாமிய சகோதரர்களின் சேவை பேசப்படுவதற்கு தமிழகத்தின் பெரியாரிய, இடதுசாரிய இயக்க சிந்தனைகளே பிராதான காரணியாக கருதுகிறேன். அது மிகச்சரியானது என்றே கருதுகிறேன். ஆனால் உங்கள் பொருளில் இல்லை..

          • பணிவன்று என்று கொந்தளித்த தாங்களே பெருமையல்ல என்று மனமிரங்கி வந்திருப்பதால் தொடர்கிறேன்.

            முசுலிம்களின் மீட்பு பணி மகத்தானது என எழுதியதில் பெருமை தொனிக்கிறது என்கிறீர்கள்.முசுலிம்களின் பணி ஏன் பரவலாக பேசப்படுகிறது என்பதற்கான காரணமாகத்தான் அப்படி எழுதியிருக்கிறேன். பெருமைக்காக அல்ல.இதற்கு ஒரு நிகழ்வை பதிவு செய்வது தகுந்த விளக்கம் பெற உதவும்.

            டிசம்பர் 1-ம் தேதி இரவு யூனுஸ் என்ற நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இளைஞரும் அவரது மூன்று நண்பர்களும் [அதில் ஒருவர் இந்து சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது] சொந்த செலவில் ஏழு படகுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மீனவ சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு ஊரப்பாக்கம் பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அப்போது கழுத்தளவு நீரில் மகப்பேறு வலியால் துடித்துக்கொண்டிருந்த சித்ரா என்கிற பெண் ஒருவரை காப்பாற்றி இருக்கிறார்கள்.அதே நாளில் அந்த பெண்மணி ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.தங்களை காப்பாற்றிய யூனுசுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அந்த பெண்குழந்தைக்கு யூனுஸ் என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள் அந்த பெற்றோர்.

            யூனுசின் உதவிக்கு அதை விட மிகப்பெரிய கைம்மாறு செய்திருக்கிறார்கள் அந்த இந்து சகோதர சகோதரியர்.அந்த குழந்தை வாழப்போகும் வரவிருக்கும் நூறாண்டு காலத்திற்கும் அந்த குழந்தையும்,அதன் பெயரும் தமிழகத்தின் மத நல்லிணக்கத்திற்கு உயிர் வாழும் சாட்சியமாக இருக்கப்போகிறது.

            இது போன்ற நிகழ்வுகள் ஏராளம் நடந்திருக்கின்றன.அதனால்தான் முசுலிம்களின் மீட்பு பணி மகத்தானது என காரணம் சொன்னேன்.நீங்களோ மட்டம் தட்டும் விதத்தில் ”மக்களைக் காப்பாற்றியவர்களில் முக்கியமானவர்கள் அந்தந்த பகுதி இளைஞர்கள், இரண்டாவதாக மீனவர்கள், மூன்றாவதாக மற்ற அனைவரும்…”என்கிறீர்கள்.வினவிலேயே முதலில் மீனவர்களும் முசுலிம்களும்தான் வந்தார்கள் என்று ஒரு பதிவு வந்துள்ளது.எதையும் எண்ணிப்பார்த்து எழுதுங்கள்.யாரையும் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கமில்லை.இதை முதல் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறேன்.நம் மக்களை காப்பாற்றிய பகுதி இளைஞர்கள், மீனவர்கள்,வட இந்தியர்கள் அனைவருமே நன்றிக்குரியவர்கள்.

            \\இசுலாமிய சகோதரர்களின் சேவை பேசப்படுவதற்கு தமிழகத்தின் பெரியாரிய, இடதுசாரிய இயக்க சிந்தனைகளே பிராதான காரணியாக கருதுகிறேன்//

            என்ன பேசுகிறீர்கள்.ஒரு சேவையை பாராட்டுவதற்கு கூட கொள்கை பின்புலம் இருக்க வேண்டுமா.நன்றியுணர்வு என்பது மனிதர்களின் இயல்பு தோழரே.வியாசனுக்கு கிடைத்தது தமிழுணர்வு.உங்களுக்கு பெரியாரிய ,பொதுவுடைமை கொள்கைகளா.

            பெரிதும் இந்து சகோதரர்கள் இட்டுள்ள முகநூல் பதிவுகளை தொகுத்து தந்திருக்கும் இந்த பதிவுகளை பாருங்கள்.

            http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/3.html

            http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/2.html

            http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/1.html

            தங்களின் மீதி கேள்விகளுக்கும் வியாசனுக்கும் நாளை மறுமொழி இடுகிறேன்.

  6. உண்மையில் தமிழ் முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தின் போது ஆற்றிய சமூக சேவைப் பணிகள் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதொன்று. ஆனால் உண்மையில் அவர்களின் இந்த தொண்டுணர்வுக்கும், சேவை மனப்பான்மைக்கும் வெறும் மதவுணர்வு தான் காரணம் எனக் கூறுவது விவாதத்துகுரியது மட்டுமன்றி அவர்களின் உண்மையான மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்துவதும் கூட. அது மட்டுமன்றி, இவ்வளவு திட்டமிட்ட அரபுமயமாக்கலின் பின்பும், சக மனிதன் அதுவும் இன்னொரு தமிழன் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு இன்னும் அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழினவுணர்வு தான் அதற்குக் காரணமென்றும் கூட வாதாடலாம். ஏனென்றால் தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் காணப்படும் இந்த மனிதநேயம், முகம்மது நபியினதும், இஸ்லாத்தினதும் பிறப்பிடமான அரேபியாவிலோ அல்லது அரபுக்களிடமோ காணப்படுவதாகத் தெரியவில்லை. 21வது நூற்றாண்டிலும் பெண்களைக் கூடக் கல்லெறிந்து கொல்லத் தூண்டும் காட்டுமிராண்டித்தனமும், அவர்களின் வீடுகளில் வேலைக்காகப் போகும் ஏழை, அபலைப் பெண்களை, அதுவும் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் கூட, நாள் முழுவதும் தூக்கமின்றி, வேலை வாங்கி, உணவுமின்றி துன்புறுத்துவது மட்டுமன்றி, சித்திரவதை (பாலியல் உட்பட) செய்யும் கொடுமை தாண்டமாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போகும் எத்தனையோ அபலை, ஏழை இலங்கைப் பெண்கள் சவப்பெட்டிகளில், உருக்குலைந்து திரும்பி வருகிறார்கள். அதிலும் சிலர் திரும்பி வருவதேயில்லை. ஆகவே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதேநேயத்துக்குக் காரணம் வெறுமனே மதம் தான் என்பது விவாதத்துக்குரியது. அது மட்டுமன்றி, அதற்கு முழுக்காரணமும் அவர்களின் மதம் தானென்றால்,. அதை நாங்கள் அரபுக்களிடமோ அல்லது ஏனைய முஸ்லீம்களிடமோ ஏன் காண முடிவதில்லை. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதநேயத்துக்குக் முழுக் காரணம்மும் மதம் தானென்றால் இன்றைக்கு சிரியாவின் அரபுக்கள் எல்லாம் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குப் படையெடுக்க மாட்டார்கள் மாறாக, சவூதி அரேபியாவிலோ, அல்லது கதாரிலோ அல்லது மத்திய கிழக்கின் எண்ணெய் வளமுள்ள பணக்கார நாடுகளில் குடியேறியிருப்பார்கள்.

    அத்துடன் தமிழ்நாட்டு வெள்ளத்தில் முஸ்லீம்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சில இந்து நிறுவனங்களும், ஏன் மார்வாடிகளும் கூடத் தான் உதவிப் பணிகளைச் செய்திருக்கிறார்கள் (BBC யில் கூட செய்தியுள்ளது) ஆனால் முஸ்லீம்கள் குழுக்கள் அதிகளவில் பணிகளைச் செய்திருக்கலாம் அல்லது , அவர்களின் பணிகள் அதிகளவில் விளம்பரப்படுத்தப் பட்டதும் கூட அதற்குக் காரணம் என்றும் கூறலாம்.

    • அன்பு நண்பரே இஸ்லாம் தான் இதற்கு தூண்டுகோள் என்பதை விபரமாக விளக்கியுள்ளேன் எனது தளத்தில் காணவும் வினவுக்கு விளக்கம் என்ற தலைப்பில்…..

      • சென்னை வெள்ள நிவாரண பணிக்கு முஸ்லிம்களின் பங்குக்கு மார்க்கம் மட்டுமே காரணம் என்றால் (முஹம்மது அலீம் வினவுக்கு விளக்கம்) வியாசனின் விவாத பொருட்களையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டியுள்ளது ஆகின்றது.

        [1] சேவை மனப்பான்மைக்கும் வெறும் மதவுணர்வு தான் காரணம் எனக் கூறுவது விவாதத்துகுரியது மட்டுமன்றி அவர்களின் உண்மையான மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்துவதும் கூட.

        [2]தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் காணப்படும் இந்த மனிதநேயம், முகம்மது நபியினதும், இஸ்லாத்தினதும் பிறப்பிடமான அரேபியாவிலோ அல்லது அரபுக்களிடமோ காணப்படுவதாகத் தெரியவில்லை. 21வது நூற்றாண்டிலும் பெண்களைக் கூடக் கல்லெறிந்து கொல்லத் தூண்டும் காட்டுமிராண்டித்தனமும், அவர்களின் வீடுகளில் வேலைக்காகப் போகும் ஏழை, அபலைப் பெண்களை, அதுவும் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் கூட, நாள் முழுவதும் தூக்கமின்றி, வேலை வாங்கி, உணவுமின்றி துன்புறுத்துவது மட்டுமன்றி, சித்திரவதை (பாலியல் உட்பட) செய்யும் கொடுமை தாண்டமாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

        [3]சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போகும் எத்தனையோ அபலை, ஏழை இலங்கைப் பெண்கள் சவப்பெட்டிகளில், உருக்குலைந்து திரும்பி வருகிறார்கள். அதிலும் சிலர் திரும்பி வருவதேயில்லை. ஆகவே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதேநேயத்துக்குக் காரணம் வெறுமனே மதம் தான் என்பது விவாதத்துக்குரியது. அது மட்டுமன்றி, அதற்கு முழுக்காரணமும் அவர்களின் மதம் தானென்றால்,. அதை நாங்கள் அரபுக்களிடமோ அல்லது ஏனைய முஸ்லீம்களிடமோ ஏன் காண முடிவதில்லை.

        [4]தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதநேயத்துக்குக் முழுக் காரணம்மும் மதம் தானென்றால் இன்றைக்கு சிரியாவின் அரபுக்கள் எல்லாம் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குப் படையெடுக்க மாட்டார்கள் மாறாக, சவூதி அரேபியாவிலோ, அல்லது கதாரிலோ அல்லது மத்திய கிழக்கின் எண்ணெய் வளமுள்ள பணக்கார நாடுகளில் குடியேறியிருப்பார்கள்.

        மேலும் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அரபுமயமாக்கபட்டார்கள் என்ற வியாசனின் கருத்தை மறுதலிக்கின்றேன்.சவுதி அரேபிய முஸ்லிம்களின் ரவுடித்தனம் என்றுமே எமது தமிழ் முஸ்லிம்களின் மனதுள் நுழையாது என்பதில் இந்த கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். அரபுமயமாக்கபட்டார்கள் என்ற கருத்து தமிழ் மறந்த இலங்கை வடகிழக்கு முஸ்லிம்களுக்கு ஒருவேளை பொருந்தலாமே தவிர தமிழ் நாட்டு முஸ்லிம் மக்களுக்கு சிறிதும் பொருந்தாது. மதம் மட்டுமே ஒரு மனிதனின் எண்ணத்தையும் , உணர்வுகளையும் தீர்மானிக்க இயலாது. அவர்கள் இனம் ,மொழி , அவர்கள் விரும்பும் அரசியல் கொள்கைகள் கூட அவர்களின் எண்ணத்தையும் , செயலையும் முடிவு செய்யும் காரணிகளாகும்.

        • நண்பர் இனியன்,நீங்களுமா

          முதலில் சேவை மனப்பான்மையை பரிசீலிக்கலாம்.ஒரு மனிதனின் விழுமியங்கள் வெறுமனே வெற்றிடத்திலிருந்து தோன்றி வளர்வதில்லை.அவன் வாழும் சமூக சூழல்,ஏற்றுக்கொண்ட கொள்கைகள்,போன்றவையே அவற்றை தீர்மானிக்கின்றன.மனித நேயம்,மக்கள் மீது நேசம் ஆகியன எல்லோருக்கும் ஏதோ ஒரு அளவில் இருந்தாலும் அனைவரிடமும் அது செயலூக்கம் பெறுவதில்லை.அதனை அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே தீர்மானிக்கின்றன.இதனை ஒரு சான்று மூலம் பார்க்கலாம்.

          கல்விக்கொள்ளையை எதிர்த்து அதனால் பெரிதும் பாதிக்கப்படாத அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் குறிப்பாக இடது சாரி இயக்க மாணவர்கள் போராடி காவல்துறையினரின் குண்டாந்தடி தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.பாதிக்கப்படும் தனியார் பொறியியல்,மருத்துவ கல்லூரி மாணவர்களோ மௌவுனமாக அந்த கொடுமையை சகித்துக்கொள்கிறார்கள்.
          புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும்,இந்திய மாணவர் சங்கமும் போராடுவதற்கு காரணம் அவர்களின் மனித நேயம் பொதுவுடைமை சித்தாந்தத்தால் செயலூக்கம் பெறுகிறது.

          இதையே இப்போது வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட முசுலிம் இளைஞர்களுக்கு பொருத்திப்பாருங்கள்.அவர்களின் மனித நேயம் செயலூக்கம் பெறுவதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை [அதாங்க இசுலாமிய மதம்] தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்.

          பி.கு.
          தமிழின உணர்வு என்ற வியாசனின் வாதத்தை மேற்கோள் காட்டாதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.மனித நேயத்திற்கு மொழி,இன,வர்க்க பேதங்கள் கிடையாது என்ற எளிய உண்மை கூட புரியாமல் பேசுகிறார்.சென்னையில் வாழும் வட இந்தியர்கள் கூட மிக சிறப்பாக துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அவர்களை தூண்டியது என்ன உணர்வு.

          • நண்பர் திப்பு ,

            ஒவ்வொரு நற் செயலுக்கும் பின்னணியில் பொதுவாக மதம் மட்டுமே காரணம் எனில் கிருஸ்துவ பின்னணியில் உள்ள அமேரிக்கா என்றுமே உலக ஏகாதிபத்தியமாக இருந்து இருக்காது. உலக ரச்சகனாக தான் அது பைபிள் கோட்பாடுகளை நடைமுறை படுத்தி இருக்கும். ஆனால் நடைமுறையில் ?

            மேலும் இந்த கட்டுரை கூறும் விசயத்தில் நான் உடன் படுகிறேன்.அதாவது “சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.” என்ற விசயத்தில் நான் 100% உடன்படுகின்றேன்.

            //அவர்களின் மனித நேயம் செயலூக்கம் பெறுவதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை [அதாங்க இசுலாமிய மதம்] தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்.//

          • பி.கு: நண்பர் திப்பு ,குறிப்பிட்ட ஒரு மதத்தை தவிர்த்து நாம் விவாதத்தை பொதுமை படுத்திக்கொண்டால் நலமாக இருக்குமென்று நினைக்கிறன். மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமாக அமையுமா? என்று விவாதத்தை பொதுமை படுத்திகொள்ளலாம் என்று நினைகின்றேன்.

            • வினவு குறிப்பிடும் ”உற்சாகம்” ஏற்கத்தக்கதுதான்.அதை சொந்த முறையில் நானே உணர்ந்திருக்கிறேன்.அவ்வாறு பலரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறேன்.ஆனால் முஸ்லிம்களை சேவை செய்ய வைத்தது சிரமப்படும் மக்களை நேரில் பார்த்ததுதான் , மதமல்ல என்று சொல்லுவது ஏற்புடையது அல்ல.

              மக்களின் துயரங்களை பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே உதவிக்கு ஓடோடி செல்வதில்லை.சாலை விபத்தில் சிக்கி காயம்பட்டோரை காண்பவர்கள் பலரும் ”அய்யோ பாவம்”என்று ”உச்”கொட்டிக்கொண்டே நகர்ந்து செல்கிறார்கள்.ஒரு சிலர்தான் அவர்களை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.அந்த ஒரு சிலரை இயக்குவது எது.அதுதான் சமூகத்திலிருந்து அவர்கள் கற்று வளர்த்துக்கொண்ட விழுமியங்கள்.இங்கு அது இசுலாமிய மதமாக இருக்கிறது.அவ்வளவுதான்.

              \\ மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமாக அமையுமா? //

              நல்ல கேள்வி.நிச்சயம் மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமல்ல.ஒரு மனிதனின் பண்புருவாக்கத்தில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.மதமும் ஒரு காரணம் என்ற அளவில் ஏற்கலாம்.ஒரு தனி மனிதனின் பண்பு,குணநலன்கள அவன் வாழும் சமூகத்தின் விழுமியங்களையே பிரதிபலிக்கின்றன.

              • சகோதரர் திப்பு,

                வினவு கட்டுரை சொல்லும் மனித நேய காரணத்தை ஏற்கிறேன், நானே உணர்ந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே அந்த மனிதாபிமானம் இசுலாமிய மதமாக இருக்கிறது என்கிறீர்கள். மதம்தான் காரணமென்று வெளிப்படையாக சொல்லுவது தவறல்ல. விளக்கவும்.

                நீங்கள் சொல்வது போல மதம்தான் காரணம் என்றால் இந்த உலகில் மனிதநேயம், மனிதாபிமானம் அனைத்திலும் இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும். சரிதானே?

                • \\இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும்//

                  இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

                  • சகோதரர் திப்பு

                    //இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.// இதில் இசுலாமியர்கள் வார்த்தையை நீக்கிவிட்டு இந்துக்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்,போட்டுவிட்டு அவரவர் தரப்புகளும் எப்போதும் இந்தவாறு பேசத்தானே செய்கிறார்கள்? என்ற படியால் இசுலாமியர்கள் பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் என்ன விசேஷம் சகோதரரே? அப்படியும் தாங்கள் எதிர்காலத்தில் ஜோசியம் மாதிரி நல்லவற்றை எதிர்பார்க்கிறீர்கள், இசுலாமிய பொற்கால சிறப்புக்கு ஒரு இறந்த காலம் கூடவா இல்லை?

                    தங்களைப் போன்ற சகோதரர்களின் அடி மனத்திலும் இத்தகைய பொற்கால மத நம்பிக்கை இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.

                    • நான் உங்களுக்கு அளித்த அதிர்ச்சி இருக்கட்டும்.நீங்கள் அளிக்கும் அதிர்ச்சியையும் பார்ப்போம்.

                      பாபர் மசூதி பிரச்னை தீவிரமடைந்த 80-களின் கடைசியில் அதற்கு கூறு கெட்டதனமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டது.இருசாராருக்கும் பொதுவாக அங்கு பிரமாண்டமான மருத்துவமனை அமைக்கவேண்டும்.அது மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் என்று ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது.அதை மதசார்பற்ற,இடதுசாரி இயக்கங்கள் பலவும் ஆதரித்த போது ம.க.இ .க.மட்டுமே அப்படி செய்வது முசுலிம்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும்,மசூதியை மீண்டும் முசுலிம்களிடம் ஒப்படைப்பதே சரியான தீர்வாகும் என்று ஏடுகளில் எழுதியும் பேசியும் அதை எதிர்த்தது.

                      அப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து வரும் நீங்கள் ஒரு வேலையை செய்தவன் அதை செய்ய காரணம் என்னுடைய மதத்தின் போதனைதான் என்று சொன்னாலும் அதை ஏற்க மாட்டேன்,அவன் ஆழ் மனதில் புகுந்து வேறொரு காரணம் கண்டுபிடிப்பேன் என்று அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்.நிச்சயம் அது இசுலாமிய மதத்தின் மீதான வன்மம் என சொல்ல மாட்டேன்.ஆனால் அதன்பால் உங்களுக்கு ஒரு வெறுப்பு இருப்பதை உணர முடிகிறது. அது தேவையில்லை தோழர்.மதம் தனிநபர்களின் சொந்த வாழ்வோடு நின்று விடும்போது அதில் உங்களுக்கு என்ன பிரச்னை.இதயமற்ற உலகின் இதயமாக கடவுள் இருக்கிறார் என்றுதானே மார்க்சும் சொல்லியிருக்கிறார்

                  • \\இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும்//

                    இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

                    இதிலிறுந்தே தெரிகிறது திப்பு எனபவர் உனது கம்மூனிஸ கோமனத்த அவிழ்த்து விட்டி விட்டார் ஒன்று கம்மூனிஸம்தான் சிறந்த சித்தாந்தம் என்று திப்புவிற்கு மறுப்பு எழுதி இருக்க வேண்டும் இல்லனா இசுலாமிய நெறிகள்தான் சிறந்தது என்று ஒப்புக்கொன்று இருக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் மானமோ சுரனயோ அற்று உனது கோமனத்த மழை வெள்ள பாதிப்பை பயன் படுத்தி அவிழ்க்க நினைப்பத ஒப்புக்கொள்வதாகவே நான் நினைக்கிறேன் அல்லது எங்களுக்கு கம்மூனிஸ் கோவனத்தை விட இசுலாமிய ஆதரவு முகமுடிதான் தேவை என்றால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது நல்லது அதை விடுத்து இசுலாம் நெறிமுறைகள என்றால் என்ன என்று திப்புவிற்கு நான் கேட்ட கேள்விக்களில் எவ்வித ஆபாசமோ அருவறுப்போ இல்லாத போது அதை வெளியிட தயங்குவது ஏன்

                • தோழர்,

                  திரிக்க வேண்டாம்.”உற்சாகம்” என்பதை ஏற்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.பாராட்டுதலும் அதனால் உற்சாகமாக மேலும் பணி செய்வதும் முதலில் பணி செய்த பின் வருவது,அந்த பணியை செய்ய வைத்தது எது என்பதுதான் கேள்வி..

                • \\மதம்தான் காரணமென்று வெளிப்படையாக சொல்லுவது தவறல்ல. விளக்கவும்.//

                  தோழர்,

                  மதம் காரணமில்லை என்ற முன்முடிவோடு நீங்கள் எழுதுகிறீர்கள்.அதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் ”மக்களின் துன்பத்தை நேரில் கண்டதால் வந்த மனித நேயம் ” என்று ”தீர்ப்பு”தான் வழங்குகிறீர்கள்.

                  நான் மதம்தான் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்கிறேன். ”மனித நேயம்,மக்கள் மீது நேசம் ஆகியன எல்லோருக்கும் ஏதோ ஒரு அளவில் இருந்தாலும் அனைவரிடமும் அது செயலூக்கம் பெறுவதில்லை.அதனை அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே தீர்மானிக்கின்றன.இதனை ஒரு சான்று மூலம் பார்க்கலாம்”.என்று ஏற்கனவே விளக்கியும் இருக்கிறேன்.

                  நீங்கள் சொல்வது போல் பெருமை அடிப்பதாக படிப்பவர்கள் கருத வாய்ப்புண்டு என்பதால் இது குறித்து மேலும் விவாதிக்க விருப்பமில்லை.

                  • சகோதரர் திப்பு நீங்கள் பெருமை அடிப்பதாக அடியேன் கருதவில்லை. இருந்த போதும் இந்த உதவிடும் செயலுக்கு மதம்தான் காரணம் என்று பகிரங்கமாக ஏற்றதற்கு நன்றி. அந்த காரணம் நான்றிந்த வரை மறுமையில் சொர்க்கம் என்ற உத்தரவாதத்தைத்தான் அஸ்திவாரமாக வைத்திருக்கிறது. இந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சகோதரர் மனிதநேயம் முதலாவது, மார்க்கம் இரண்டாவது என்கிறார். தாங்கள் முதலாவதாக கருதுகிறீர்கள்.

                    இறுதியாக ஒன்று. தீண்டாமை, ஆணாதிக்கம், இதர பண்ணையார் கொடுமைகள், மத வன்மங்கள் அனைத்தையும் எதிர்ப்பதற்கு ஒரு மதமும், புனித நூலும், புனித வரலாறும் தேவைப்படும் என்றால் கண்ணெதிரே எந்த முசுலீம் சகோதரரும் அநியாயத்தை எதிர்க்க முடியாது என்றாகிறது.

                    முசுலீம் சகோதரர்கள் எப்படி மழையால் தத்தளித்த மக்களை காப்பாற்றினார்களோ அப்படித்தான் முழு சமூகமும் மழையில்லாத நேரத்தில் மற்ற மக்களை காப்பாற்ற வேலை செய்கிறது. சென்னை முழுவதையும் பிரம்மாண்டமான குப்பைகளை அன்றாடம் எடுத்து, கழிவில் முங்கி நமக்காக பணி செய்யும் அருந்ததிய சமூகத்தின் சேவையெல்லாம் நமக்கு பொருட்டே இல்லையா சகோதரரே?

          • சகோதரர் திப்பு
            கல்வி கொள்ளையை எதிர்த்து போராடுவதற்கு முசுலீம் பிள்ளைகள் ஏன் வரவில்லை? இந்த விவகாரத்தில் மனித நேயம் இல்லையா? மீட்பு பணிக்கு இசுலாமிய மதம்தான் காரணமென்று தாங்கள் வலியுறுத்துகிறீர்கள். சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த இளம் பிள்ளை ரிசானா சபீக்கை கொன்ற போது கூட இங்கேயுள்ளவர்கள் அச்சிறுமியை விலைமாது, ஷரியத் மேலானது, தலை வெட்டுவது சரியானது என்று வாதிட்டதுகூட இசுலாம் உருவாக்கிய மனிதாபிமானம்தானா? வெள்ள நிவாரணம், ரிசானா கொலை இரண்டையும் ஒரு மனம் மனிதாபிமானமாக செய்கிறதா? சகோதரர் விளக்கமளிக்க வேண்டும்.

            • \\கல்வி கொள்ளையை எதிர்த்து போராடுவதற்கு முசுலீம் பிள்ளைகள் ஏன் வரவில்லை?//

              கல்விக்கொள்ளையை எதிர்த்து முசுலிம்கள் போராடுவதே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா.

              • சகோதரர் திப்பு

                //கல்விக்கொள்ளையை எதிர்த்து அதனால் பெரிதும் பாதிக்கப்படாத அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் குறிப்பாக இடது சாரி இயக்க மாணவர்கள் போராடி காவல்துறையினரின் குண்டாந்தடி தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.பாதிக்கப்படும் தனியார் பொறியியல்,மருத்துவ கல்லூரி மாணவர்களோ மௌவுனமாக அந்த கொடுமையை சகித்துக்கொள்கிறார்கள்.
                புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும்,இந்திய மாணவர் சங்கமும் போராடுவதற்கு காரணம் அவர்களின் மனித நேயம் பொதுவுடைமை சித்தாந்தத்தால் செயலூக்கம் பெறுகிறது.

                இதையே இப்போது வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட முசுலிம் இளைஞர்களுக்கு பொருத்திப்பாருங்கள்.அவர்களின் மனித நேயம் செயலூக்கம் பெறுவதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை [அதாங்க இசுலாமிய மதம்] தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்.//

                இதில் முசுலீம் பிள்ளைகள் எதற்கு வருகிறார்கள், வரவில்லை என்று பிரித்து விளக்கியது தாங்கள் மட்டுமே. அதை வைத்த யான் கல்விக் கொள்ளையை எதிர்த்து ஏன் வரவில்லை என்று கேட்டேன். வரவில்லையா என்று தாங்கள் கேட்பது சரிதானா? கூடவே இலங்கை பெண்ணின் தலைவெட்டு குறித்தும் கேட்டிருந்தோம்.

                • செயலாற்றுவதற்கு மனித நேயம் மட்டும் போதாது.அதை தூண்டி செயலாற்ற வைப்பதற்கு ஒரு தூண்டுகோள் தேவை என்பதை விளக்கவே கல்விக்கொள்ளையை எடுத்துக்காட்டி விளக்கி இருக்கிறேன்.அதனால் பெறப்பட வேண்டிய கருத்தை விட்டு விட்டு எடுத்துக்காட்டையே விவாதமாக்குகிறீர்கள்.

                  கல்விக்கொள்ளையை எதிர்த்து முசுலிம் அமைப்புகளும் போராடியே வருகின்றன.இன்னொன்றையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.முசுலிம் அமைப்புகள் உங்களைப்போல சமூக மாற்றத்தையும் அதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றலையும் குறிக்கோளாக கொண்டவை அல்ல..அவை நிலவுகின்ற சமூக அமைப்பில் சிறுபான்மை முசுலிம் சமூகத்தின் உரிமைகளையும்,நலன்களையும் பாதுகாப்பதற்காக தோன்றி செயல்படுகின்றன.அதனால் அவர்கள் செயல்பாட்டில் எவை எவற்றிற்கு முதன்மைத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவை செயல்படுகின்றன.அதனால் அவர்களுடைய போராட்டங்கள் உங்கள் அளவுக்கு இல்லாமல் இருக்கலாம்.அதற்காக முசுலிம்கள் போராடுவதே இல்லை என சொல்லாதீர்கள்.

                • ரிசானா ரபீக் கொலையை பொருத்தவரை சவூதி நீதிபதிகளாக அமர்ந்திருக்கும் முட்டாள் முல்லாக்கள் ஆராயாமல் அளித்த தீர்ப்பை பாரபட்சமற்ற விசாரணையின் அடிப்படையிலான நியாயமான தீர்ப்பு என்று சில முசுலிம்கள் நம்பியதால் நீங்கள் சொல்வது போல் மனித நேயம் அவர்களிடம் வெளிப்படாமல் போனது,அப்படி அவர்கள் நம்புவதற்கு ஏதுவாக சவூதி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருக்கு கூட தலை வெட்டு தண்டனை வழங்கப்படுகிறது.அதனால் முல்லாக்களின் தீர்ப்பை அப்பாவித்தனமாக நம்புகிறார்கள்.அதே சமயம் ரிசானா ரபீக்குக்கு அளிக்கப்பட தண்டனை அநியாயமானது என்று கண்டிக்கும் முசுலிம்களும் உள்ளனர்,

          • நல்லது பண்ணினா மதம் தான் காரணம் . கெட்டது செய்தா அது செய்தவர்களின் பிழை . மதத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை .

        • திரு. இனியன்,

          தமிழ் முஸ்லீம்கள் திட்டமிட்டு அரபுமயமாக்கப்(Arabization) படுகின்றனர் என்பதை உங்களைப் போன்ற தமிழர்கள் உணராதிருப்பது மிகவும் கவலைக்குரியது.தமிழ் முஸ்லீம்கள் எந்தளவுக்கு அரபுமயமாக்கப்படுகின்றனர் என்பதற்கு அரேபிய நாட்டுப் பாலைவன ஆடைகளை அணிந்த முஸ்லீம் ஆண்களினதும், பெண்களினதும் எண்ணிக்கை தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் கூட அதிகரித்திருப்பதை அவதானித்த எவருமே ஒப்புக் கொள்வர். இவ்வளவுக்கும் அரபுக்களின் ஆடைகளையோ அல்லது கலாச்சாரத்தையோ தான் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என முகம்மது நபிகள் ஒரு போதும் கூறவில்லை(யாம்). கடந்த சில ஆண்டுகளில் தீவிரவாத வகாபியிசத்தின் தாக்கம் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டிகளில் எல்லாம் பரவி விட்டது என்பது தான் உண்மை. பல நூற்றாண்டுகளாக தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழின உணர்வுடன் தமிழர்களாக வாழ்ந்த தமிழ் முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்குமிடையே இந்த அரபுமயமாக்கலும், வஹாபியிசமும் ஒரு நிரந்தர இடைவெளியை ஏற்படுத்தி, இலங்கையில் தமிழைப் பேசிக் கொண்டே தமிழர்களின் முதுகில் குத்தும் முஸ்லீம்களைப் போன்றே தமிழ்நாட்டு முஸ்லீம்களும் மாறும் நிலைமை உருவாகிக் கொண்டு வருகிறது என்பதை தமிழ்நாட்டில் அரபுமயமாக்கலை அவதானித்து வரும் எவருமே ஒப்புக் கொள்வர்.

          அரபுமயமாக்கலையும், சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த தீவிரவாத வஹாபியிசத்தையும் தமிழினத்தின் ஒற்றுமையை, தமிழினத்தின் நலனை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் எதிர்க்க வேண்டுமென்பது தான் எனது கருத்தாகும். தீவிரவாத இந்துத்துவா கொள்கைகள் எந்தளவுக்கு தமிழினத்தின் நலன்களுக்கு எதிரானதோ, அதை தமிழர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டுமோ, அது போன்றே தீவிரவாத இஸ்லாமியத்துவமும், தீவிரவாத கிறித்தவமும் கூட தமிழர்களின் நலன்களுக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் எதிரானதே. அவற்றையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும்.

          உதாரணத்துக்கு –திப்பு அவர்களின் கருத்தை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டு வெள்ளத்தின் பொது தமிழ் முஸ்லீம்களின் சேவை மனப்பான்மைக்குக் காரணம் மதம் தான் என சிலர் வாதாடுவது போலவே, இன்னொரு தமிழன் துன்பப்படுவதைப் பாரத்துச் சகித்துக் கொள்ள முடியாத தமிழின உணர்வு தான், அதற்க்குக் காரணமென்றும் கூட ‘வாதாடலாம் ‘ என்ற எனது கருத்தை, அதாவது தமிழ் பேசும் , தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தும் தமிழ் நாட்டு முஸ்லீம்களுக்கு தமிழின உணர்வுண்டு, அதனால் அவர்கள் உந்தப்பட்டிருக்கலாம் என – ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்-, என்ற எனது கருத்தை, – ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக தமிழுணர்வுடன் தீக்குளித்த தமிழ் முஸ்லீம்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில்- இன்று வெறும் வாதத்துக்குக் கூட சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு திப்பு போன்ற தமிழ் முஸ்லீம்கள் மாறியதற்கு காரணம் இந்த அரபுமயமாக்கல் தான். அதை விளக்குவதற்கு இதை விட வேறு நல்ல எடுத்துக் காட்டு கிடைக்கவே முடியாது.

          சென்னையில் வாழும் சீக்கியர்களும் வட இந்தியர்களும் கூட வெள்ளத்தின் போது ‘சிறப்பான பணியில்’ ஈடுபட்டனர் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் முஸ்லீம்களுக்கு கிடைத்தது போன்ற விளம்பரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஏனெறால் சீக்கியர்களும், மார்வாடிகளும் தமிழில் வலைப்பதிவுகளோ, இணையத்தளங்களோ அல்லது பத்திரிகைகளோ நடத்துவதில்லை. தமிழ்நாட்டில் தமிழர்களுடன் வாழ்ந்து தமிழர்களைச் சுரண்டி வாழ்க்கை நடத்தும் எத்தனையொ தமிழரல்லாத இனக்குழுக்கள் பல சும்மா பார்த்துக் கொண்டிருக்க, சீக்கியர்களும், மார்வாடிகளும் நன்றிக்கடனுடன் சிறப்பான பணியில் ஈடுபட்டனர்,அவர்கள் தமிழுணர்வினால் உந்தப்பட்டனர் என வாதாட முடியாது, ஏனென்றால் அவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் முஸ்லீம்களில் பலர் இன்னும் தம்மைத் தமிழர்களாகவே அடையாளப்படுத்துவதால், அவர்களது ‘தமிழின உணர்வு’ அவர்களின் பணிக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் ‘வாதாடலாம்’, என்ற எனது கருத்தைக் கூட திப்பு அவர்களால் தாங்க முடியவில்லை.

          மண்ணடி மஸ்தான்கள், சுவனப்பிரியன்கள், ஜெய்னுலாப்தீன்கள், முத்துப்பேட்டைகள் எல்லாமே இந்த தமிழ் முஸ்லீம்களை அரபுமயமாக்கும் திட்டத்தின் கங்காணிகள் அல்லது ஏஜென்டுகள் என்ற எண்ணம் தான் அவர்களின் கருத்துக்களை, வலைப்பதிவுகளில் , இணையத்தளஙகளில் படிக்கும் போது எனக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த தளத்தில் திப்பு அவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, இதுவரை அவரை அப்படி நினைத்ததில்லை, — 🙂

          • வியாசன் இந்த கட்டுரையில் மட்டுமன்றி தமிழ் ஹிந்து நாளிதழ் பத்திரிகையிலும் முஸ்லிம் மக்கள் ஆற்றிய வெள்ள நிவாரண பணிகளை பிரசுரம் செய்யப்பட்டு இருந்து. அதில் உள்ள புகைபடங்களில் உள்ள முஸ்லிம் நிவாரண பணியாளர்களின்-தன்னார்வலர்களின் உடைகள் எமது தமிழ் நாட்டு மக்களீன் உடைகளை போன்றே லுங்கி ,சட்டை, pant ,ஜீன்ஸ் என்று மேற்கத்திய நாகரிகத்துடன் ஒன்றி போன தமிழ் மக்களின் உடை நாகரிகத்துடன் தானே உள்ளன? அரபு உடை நாகரிகம் எங்குமே இல்லையே?

          • தமிழக முசுலிம்களின் இனப்பற்றும் தாய்மொழிப்பற்றும் வியாசன்களின் சான்றிதழுக்காக காத்திருக்கவில்லை.அது ஒரு பகலைப்போல் வெளிப்படையானது.முன்னர் அப்படி இருந்தது இப்போது இல்லை என்று கதைக்கிறார்.இப்போது மட்டுமல்ல எப்போதுமே தமிழக முசுலிம்களின் இனப்பற்றும் தாய்மொழிப்பற்றும் மாறாது.அதனால்தான் ஈழப்பிரச்னைக்காக ஆந்திராவில் இருபது தமிழர்கள் கொல்லப்பட்டது என தமிழினத்துக்காக அவர்கள் எப்போதும் போராடுகிறார்கள்.இந்த பதிவில் கூட மனித நேய மக்கள் கட்சி சகோதரர் ஒருவர் ஈழப்பிரச்னைக்காக போராடுவதை குறிப்பிடுகிறார்.மே 17 இயக்கம் போன்ற தமிழ் உணர்வாளர்கள் நடத்தும் அத்தனை போராட்டங்களிலும் அரங்க கூட்டங்களிலும் இசுலாமிய அமைப்புகள் பங்கேற்கின்றன,எங்கோ ஒரு மேற்கத்திய நாட்டில் கணினி முன்னால் உட்கார்ந்து கொண்டு ஈழ விடுதலை பேசும் வியாசனை விட களத்தில் தோள் கொடுத்து நிற்கும் தமிழக முசுலிம்கள் இனப்பற்றில் ஆயிரம் மடங்கு மேலானவர்கள்.

            இப்போது தமிழக முசுலிம்கள் ஈழப்பிரச்னைக்காக தீக்குளித்தது பற்றி பேசுகிறாரே ,அந்த நிகழ்வை முன்னர் வியாசனும் கலந்து கொண்ட வினவு விவாதம் ஒன்றில் நான் பதிவு செய்த போது அதை ஏற்று பாராட்டி ஒரு சொல் கூட சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தார்.

            • தமிழ் முஸ்லீம்கள் தமது தமிழுணர்வினால் உந்தப்பட்டு தமிழ்ச் சகோதரர்களுக்கு உதவியிருக்கலாம், என்ற கருத்தை வெறும் வாதத்துக்காக கூட ஒப்புக் கொள்ள மறுத்த திப்புக்காக்காவின் இனப்பற்றையும், மொழிப்பற்றையும் எனது பதில் உசுப்பி விட்டதைப் பார்த்து நான் அப்படியே மகிழ்ச்சியில் பூரித்துப் போய் விட்டேன். நாங்களும் தமிழர்கள் தான் என்று கூறிக்கொண்டே, தமிழுணர்வை மறுதலித்தால், நான் மட்டுமல்ல, எத்தனயோ தமிழ் வியாசன்கள் உங்களின் தாய்மொழிப்பற்றிலும், இனப்பற்றிலும் சந்தேகப்பட்டு இப்படிக் கேள்விகள் கேட்கத் தான் செய்வார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். 🙂

              ஆரம்ப காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக ‘தமிழுணர்வுடன்’ தீக்குளித்தவர் ஒரு தமிழ் முஸ்லீம் என்பதே எனக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் தெரியும். நீங்கள் முன்பே கூறியதாக எனக்கு நினைவில்லை. உங்களின் கருத்தைப் படிக்கத் தவறியமைக்கு மன்னிக்கவும். ஆனால் நானும், நீங்களும் முன்னர் கலந்து கொண்ட வினவு விவாதத்தில் உங்களின் அந்த தகவல், எனது கருத்துக்கு வலுச் சேர்க்காது என்று நினைத்திருந்தால், அதைப் பெரிது படுத்தியிருக்க மாட்டேன் என்பதும் உண்மை, ஆனால் குறைந்த பட்சம் அந்த முஸ்லீம் சகோதரனின் தியாகத்தையும், தமிழுணர்வையும் நினவு கூர்ந்து ஒரு வரியிலாவது நன்றி தெரிவித்திருப்பேன், அதற்காக வருந்துகிறேன்.

              • \\.வெறும் வாதத்துக்காக கூட ஒப்புக் கொள்ள மறுத்த//

                வாதத்துக்காக ஒன்று,உண்மையில் ஒன்று என இருவிதமான நிலைப்பாடுகள் எடுப்பது பச்சோந்தித்தனம்.உண்மையை பேசுவதுதான் மனிதர்க்கு அழகு.

                \\சந்தேகப்பட்டு இப்படிக் கேள்விகள் கேட்கத் தான் செய்வார்கள்//

                இதுதான் பாசிசம்.நான் ஒரு கருத்தை சொல்வேன் அதை ஏற்காவிட்டால் அவனுடைய மொழி,இனப்பற்றை ஐயுறுவேன் என்கிறார் வியாசன்.அதான் முதல்லயே சொல்லிட்டேனே.உங்களை போன்ற இசுலாமிய எதிர்ப்பு வன்மம் கொண்டோரிடமிர்ந்து சான்றிதழ் எதுவும் எங்களுக்கு தேவையில்லை.எங்களின் இனப்பற்றும்,மொழிப்பற்றும் ஊரறிந்தது.உலகறிந்தது.

                • //வெறும் வாதத்துக்காக கூட ஒப்புக் கொள்ள மறுத்த//

                  அண்ணன் திப்பு அவர்களுக்கு தமிழில் கூட விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது,. வாதத்துக்கு என்று நான் குறிப்பிட்டது “ஒரு பேச்சுக்கு” என்று தமிழில் பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்களே, அதைத் தான்.

                  //உங்களை போன்ற இசுலாமிய எதிர்ப்பு வன்மம் கொண்டோரிடமிர்ந்து//

                  சிலரது கருத்துக்களை எதிர்ப்பவர்கள் அல்லது சில விடயங்களை விவாதிப்பவர்கள் / விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் வன்மம் கொண்டவர்கள் என்றால், இந்த தளத்தில் ஈழத்தமிழர் எதிர்ப்பு வன்மம் கொண்டோர், இந்து மத எதிர்ப்பு வன்மம் கொண்டோர், என்மீது வன்மம் கொண்டோர் என்று பலர் (திப்பு உட்பட) இருப்பதாக நானும் கூடத் தான் கூறலாம். 🙂

                  • எனது சிற்றறிவுக்கு எட்டாமல் போனதை வியாசன் பேரறிவு கொண்டு விளக்கியதற்கு நன்றி.ஆகவே எனது பதிலை இப்படி மாற்றிக்கொள்கிறேன்.

                    ”பேச்சுக்காக ஒன்று,உண்மையில் ஒன்று என இருவிதமான நிலைப்பாடுகள் எடுப்பது பச்சோந்தித்தனம்.உண்மையை பேசுவதுதான் மனிதர்க்கு அழகு.

                    ”பேச்சுக்கு ஒப்புக்கொள்” ”தமிழ் இன உணர்வு என்று கூட வாதாடலாம்” என்று சாமர்த்தியம் காட்ட இங்கென்ன வெட்டி அரட்டை பட்டிமன்றமா நடக்குது.ஒரு சமூக பிரச்னை பற்றி பேசும்போது இந்த மாதிரி ”இப்படியும் வச்சுக்கலாம்” ”ஒப்புக்கு வச்சுக்கோ” என்று பேசுவது என்ன வகை அறிவு நாணயம்.

                  • யார் யார் மீது வன்மம் கொண்டு அலைகிறார்கள் என்பதை விவாதங்களை படிப்பவர்கள் எளிதாக முடிவு செய்ய முடியும்.இந்த விவாதத்திலேயே மட்டுறுத்தலில் அடிபடும் அளவுக்கு கீழ்த்தரமான சொற்களால் முசுலிம்,மற்றும் அரபு மக்களை குறிக்கிறார் வியாசன்.அவருடன் விவாதிக்கும் மீரான்சாகிப் என்ற முசுலிம் சகோதரரை மட்டுறுத்தலில் அடிபட்ட சொல்லால் விளித்து விவாதத்தை துவங்குகிறார்.எதிர்க்கருத்து சொல்கிறார் என்பதற்காக ஒருவரை அழைக்கும்போதே -விவாதத்தின் நடுவில் கூட அல்ல- துவக்கத்திலேயே அவரை அடைமொழியிட்டு அழைப்பதற்கு என்ன காரணம்.வன்மம் அன்றி வேறு என்னவாக அது இருக்க முடியும்.

                    இலங்கை முசுலிம்கள் தமிழர்களை முதுகில் குத்தினார்கள்,தமிழர்களின் குரல் வளையை குறி பார்க்கிறார்கள் என்று ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறார். நாங்கள் ஈழத்தில் முசுலிம்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்களை பற்றி எழுதும்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை விமர்சிக்கிறோமே ஒழிய மொத்த ஈழ தமிழினத்தை குறை கூறுவதில்லை.ஏனென்றால் ஒரு சில கிறுக்கன்களின் செயலுக்கு அவர்கள் சார்ந்த சமூகத்தையே பொறுப்பாக்க முடியாது என்ற அறிவு சிற்றறிவு கொண்ட எங்களுக்கு உண்டு.ஒரு சிலரின் செயலுக்கு ஒரு சமூகத்தையே கூட்டுப்பொறுப்பாளியாக்க முடியாது என்ற அறிவு பேரறிவு பெருமான்களுக்கு கிடையாது போலும்.

                    https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-130264

                    முன்னர் நடந்த விவாதத்தின் சுட்டி இது. இந்த கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்ல வக்கற்ற வியாசனுக்கு ஈழ முசுலிம்களை குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது.

                    சுட்டியிலிருந்து —
                    \\ஆனால் நீங்கள் ஏற்றிப்போற்றும் விடுதலை புலிகளின் யோக்கியதையையும் பார்ப்போமா.உங்கள் சொற்களில் ”காட்டிக் கொடுத்த தமிழர்களை நடுச்சந்தியில் கொன்று தூக்கிய புலிகள் ” அதே போன்ற ”துரோகம்” செய்த முசுலிம்களை மட்டும் கொன்று தூக்க வேண்டியதுதானே.அதை விடுத்து 60.000 முசுலிம்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு துரத்தி அடித்தது அவர்களின் குறுந்தேசிய இன வெறியை காட்டவில்லையா.
                    அந்த கொடும் நிகழ்வை ”முசுலிம்களை பாதுகாப்பாக” வெளியேற்றியதாக சொல்லும் வியாசன் அவர்களே உங்களுக்கு சிங்கள இனவெறியன் தரக்கேடில்லை போலிருக்கிறது.இன தூய்மைவாத நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கானது என சொல்ல முடியும் என்றால் நீங்கள் உச்ச நீதி மன்றத்திற்கே நீதிபதியாக வேண்டியவர் என புலனாகிறது.

                    காத்தான்குடியிலும் எராவூரிலும் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த 200 க்கும் அப்பாவி முசுலிம்களை கொன்று குவித்த தமிழ்க் காடையர்களை ஏவிவிட்ட விடுதலை புலிகள்தான் இனவெறியர்கள்.அநியாயக்காரர்கள்.மீலாது நபி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய கொலைகார விடுதலை புலிகள்தான் இனவெறியர்கள். அநியாயக்காரர்கள். முசுலிம்கள் அல்ல.

                    ஈழ இறுதி யுத்தம் எப்படி ஆரம்பித்தது.நினைவிருக்கிறதா.மாவிலாறு அணையின் மதகுகளை திறப்பது குறித்த சர்ச்சையிலிருந்து துவங்கியது.அப்போது மூதூர் முசுலிம்களை ஊரை விட்டு வெளியேற உத்தரவிட்டது பாசிச விடுதலை புலிகள் இயக்கம்.அப்படி வெளியேறி மூன்று பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைந்திருந்த முசுலிம்கள் மீது பீரங்கி குண்டுகளை வீசி கொன்று குவித்த விடுதலை புலிகளை முசுலிம்கள் மொழிவழி சகோதரர்களாக பார்க்கவில்லை என குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம்.எட்டி உதைக்கும் கால்களையும் நக்கிப் பிழைக்கும் ஈனப்பிறவிகள் வேண்டுமானால் எதிரியையும் பணிந்து வாழ்த்தலாம்.//

                    இந்து மதத்தின் மீது எங்களுக்கு வன்மம் ஏதும் கிடையாது.இந்து மத வெறியர்களை விமரிசித்திருக்கிறோம்.அப்பாவி இந்துக்களை குறை கூறி எழுதியதில்லை.மொத்த முசுலிம்கள் குறித்தும் வியாசன் எழுதுவது போல் தரக்குறைவாக நான் இந்து மக்களை பற்றி ஒரு வரி எழுதியிருப்பதாக காட்டினாலும் வினவில் பின்னூட்டம் போடுவதையே நிறுத்திக்கொள்கிறேன்.

                    இப்போது சொல்லலாம் யார் யார் மீது வன்மம் கொண்டு அலைகிறார்கள் என்று.

                    பி.கு.
                    சுட்டி கொடுத்துள்ள பழைய பின்னூட்டத்தை படிக்கவில்லை என வியாசன் பதில் சொல்லக்கூடும் அதற்கும் பதில் இருக்கிறது,சொல்லட்டும் பார்க்கலாம்.

                    • சகோ. திப்பு,

                      நான் ஒன்றும் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தவில்லை. அப்படி எனக்குப் பழக்கமுமில்லை. முஸ்லீம்கள் என்று வரும் போது மட்டும் பயந்து நடங்கும் வினவின் மட்டுறுத்துனர் தேவையில்லாமல் எனது சொற்களை நீக்கி விடுகிறார். உதாரணமாக சகோதரர் மீரான்சாகிப்பை நான் ‘ஜனாப்’ மீரான்சாகிப் என்று குறிப்பிட்டதை அதன் கருத்து தெரியாத வினவுகாரர் ஒருவர் ‘அடித்து’ விட்டார். ஜனாப் என்பது கீழ்த்தரமான சொல் என்றால், இலங்கை முஸ்லீம்கள் ‘திரு’ என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். இப்படி நீங்கள் என்மீது குற்றம் கூறுவீர்கள் என முன்பே தெரிந்ததால் தான் இந்த விளக்கத்தை சில நாட்களுக்கு முன்பே அளித்தேன். ஆனால் வினவு அதை வெளியிடவில்லை. இந்த விளக்கத்தையாவது வெளியிடுவார்களென நம்புகிறேன். பெண்களை அடிமைப்படுத்துவதும், முகத்திரையிட்டு மறைத்து வைப்பதும் காட்டுமிராண்டித்தனம் என்று நான் கருதுகிறேன், அதையும் வினவு மட்டுறுத்துனர் அகற்றி விட்டார். உண்மையில் இப்படியான ஒருபக்கச் சார்பான நடவடிக்கைகளால் தான் வினவுகாரர்களின் கம்யூனிச லேபலின் உண்மைத் தன்மையைக் கூடச் சிலர் சந்தேகப்படுகின்றனர்.

                      உங்களின் கருத்துக்கெல்லாம் தொடர்ந்தும் பதிலளிக்க எனக்கும் விருப்பம் தான் ஆனால் அந்தளவுக்கு எனக்கு நேரமில்லை. ஆகவே நீங்கள் தமிழ்ப்பெண்களுக்கு யார் ரவிக்கை போடக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதையும், அவர்களின் ஆடையணிகளின் பரிமாண வளர்ச்சியையும் பற்றிய உங்களின் கட்டுரையைத் தொடருங்கள். நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் தமிழ்முஸ்லீம்களின் அரபுமயமாக்கலுக்கும் உங்களின் கட்டுரைக்கும் ஏதாவது தொடர்பிருப்பதாக நான் உணர்ந்தால் நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது பதிலளிக்கிறேன். நன்றி.

                    • வியாசன் பொய் சொல்கிறார்.”கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தவில்லை. அப்படி எனக்குப் பழக்கமுமில்லை.”என்று சொல்லும் அவர்தான் இந்த விவாதத்தில் ”துலுக்க” என்ற சொல்லை தயக்கமின்றி பயன்படுத்துகிறார்.இதற்கு முன்னரே அவர் அந்த சொல்லை சில சமயங்களில் பயன்படுத்திய போது அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறேன்.

                      பார்க்க சுட்டி;

                      https://www.vinavu.com/2014/06/10/remembering-robert-caldwell/#comment-142249

                      சுட்டியிலிருந்து.

                      ”அகராதியில் இருக்கிறது என்பதற்காக அனைத்து சொற்களையும் பொதுவெளியில் நாகரீக மனிதர்கள் பயன்படுத்துவதில்லை.துலுக்கன் என்ற சொல் இழிவுபடுத்தும் தன்மையிலானதுதான்.[Derogatory in nature].நடைமுறையில் முசுலிம்களை இழிவாக குறிக்கத்தான் அந்த சொல் பயன்படுகிறது. அதனால்தான் பொது இடங்களில் முசுலிம்களை குறிக்க அந்த சொல்லை யாரும் பயன்படுத்துவதில்லை………………….

                      …………..இழிவு படுத்தும் சொல் அல்ல என வியாசன் கருதினால் அதை பயன்படுத்துவது தவறில்லை என கருதினால் தமிழகத்திற்கு வரும்போது ஒரு பொது இடத்தில் அந்த சொல்லை பயன்படுத்த அவர் தயாரா.
                      யாருக்கும் முன்னறிவிப்பு செய்ய வேண்டாம் வியாசன். ”பார்த்த” ஊரின் பெயரை கேட்டதற்கே முகவரி கேட்பதாக பிலாக்கணம் பாடிய தொடை நடுங்கி வீரர் நீங்கள்.இயல்பான ஒரு பேருந்து ,தொடர்வண்டி பயணத்திலோ,உணவகங்களிலோ உங்களுக்கு தைரியம் இருந்தால் ஒரு பத்து பேர் காதுல உழுவுற மாதிரி அந்த சொல்லை பயன்படுத்தி பேசி பாருங்கள்.

                      பி.கு.

                      பாதுகாப்பான இடத்தில் அடையாளம் காட்டாமல் இருந்து கொண்டு பரமசிவன் கழுத்து பாம்பு போல் வீரம் காட்ட வேண்டாம்.

                      பதிலுக்கு நீங்களும் என்னை நோக்கி இந்த கேள்வியை எழுப்பலாம்.வினவில் நான் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் நீங்கள் சொல்லும் பொது இடத்தில் நீங்கள் சொல்லும் நேரத்தில் உங்கள் முன்னிலையில் பேசுவதற்கு நான் தயார். யாரையும் இழிவு படுத்தி பேசும் இழிகுணம் இல்லாத காரணத்தால் என் மடியில் கனமில்லை. அதனால் மனதில் அச்சமும் இல்லை.

                      அந்த பின்னூட்டத்திற்கு பதிலேதும் சொல்லாமல் ஓடிப்போன வியாசன் மறுபடியும் அதே சொல்லை இப்போது பயன்படுத்துகிறார்.

                      \\பெண்களை அடிமைப்படுத்துவதும், முகத்திரையிட்டு மறைத்து வைப்பதும் காட்டுமிராண்டித்தனம் என்று நான் கருதுகிறேன்//

                      அப்பட்டமான இழிவு படுத்தல்.ஒரு சமூகத்தின் நடைமுறை தவறு என்று கருதினால் அந்த சமூகத்தாரோடு பேசும்போது அதை நாகரீகமான சொற்களால் வெளிப்படுத்துவதுதான் பண்பாடு கொண்ட மனிதர்களுக்கு அடையாளம். இழிவுபடுத்தும் சொற்களை தயங்காமல் பயன்படுத்தும் வியாசன் என்ன வகை மனிதர் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

                      எனது கருத்தை சொன்னேன்.இழிவு படுத்தல் அல்ல என முழ நீளத்தில் எதையாவது எழுதி வியாசன் சமாளிக்க கூடும்.அதனால் சில கேள்விகள் எழுப்பி பார்க்கலாம்.என்ன சொல்கிறார் பார்க்கலாம்.

                      இந்து மதத்தில் பெண்ணடிமைத்தனம் இல்லையா என்ன.அதனால் அந்த மதத்தை பின்பற்றும் வியாசனை நான் காட்டுமிராண்டி என்று விளித்தால் ஏற்றுக்கொள்வாரா.அங்கே கூடுதல் இங்கே குறைவு என்ற தகிடுதத்தங்கள் கூடாது.தலைக்கு மேல போற வெள்ளம் சாண் இருந்தா என்ன,முழம் இருந்தா என்ன.தண்ணிக்கு உள்ளே மாட்டிக்கிட்டவனுக்கு எல்லாம் ஒன்னுதான்.

                      முகத்தை மூடியதால் அராபியர்களை காட்டுமிராண்டிகள் என முகத்தை மூடாத வியாசன்கள் சொல்லலாம் என்றால் தொடையை மூடாத குட்டைப்பாவாடையும் அரைக்கால் சட்டையும் அணிந்த மேலை நாட்டவர் அவற்றை மூடிய வியாசன்களை காட்டுமிராண்டிகள் என சொல்லலாமா.

                      அய்யன் வள்ளுவன் அழகாக சொல்லியிருக்கிறான்.

                      இனிய உளவாக இன்னாத கூறல் கனி

                      இருப்பக் காய்கவர்ந் தற்று.

                      வியாசனை பொருத்தவரை அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் போலும்.

                    • துலுக்கர்கள் என்ற சொல் துருக்கி என்ற வேர் சொல்லை கொண்டு உருவானது தான். உலக இஸ்லாமிய ஆட்சி துருக்கியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது. அப்பொழுது, இஸ்லாத்தைப் பின்பற்றும் இந்திய முஸ்லிம்களை துலுக்கன் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப் பெற்றனர். ஆரியர்களை போன்றே துலுக்கர்கள் என்ற சொல்லும் வந்தேரிகள் என்ற உண்மையை உணர்த்துகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

                    • தைமூர் இனம் சார்ந்த பாபர் துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்தும் இருந்தமையால் ,அவர் தோற்றுவித்த மொகலாய பேரரசின் வழி வந்த முஸ்லிம்கள் துலுக்கர்கள் என்ற சொல் கொண்டு அழைக்கப்ப்டனர்.

                    • வினவு முசுலிம்களுக்கு ஆதரவாக பக்க சார்புடன் மட்டுறுத்தல் செய்கிறது என்பதும் வியாசனின் அப்பட்டமான புளுகு,இப்படி முன்னர் வியாசன் குற்றம் சாட்டியபோது நடந்த விவாத சுட்டி இது.

                      https://www.vinavu.com/2015/01/22/perumal-murugan-vs-kongu-vellala-gounders-part-two/#comment-382532

                      சுட்டியிலிருந்து

                      \\வியாசன்,திப்பு என்ற இரண்டு தனிநபர்களுக்கு இடையே கணக்கு தீர்க்கும் விதமாக விவாதம் செல்வதற்காக வருந்துகிறேன்,இந்த திசையில் விவாதத்தை தள்ளுவது நானல்ல என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வினவு தோழர்கள் மற்றும் வாசகர்களின் நேரத்தை மேலும் வீணடிக்க கூடாது என்பதால் இந்த இழையில் இதுவே எனது கடைசி பின்னூட்டம்.

                      \\ திப்பு எனக்கு எப்படிப் பதிலளித்தாலும் வினவு நிர்வாகம் மட்டுறுத்தல் செய்வதில்லை ஆனால் நான் பதிலளிக்கும் போது மட்டும் அப்படியே மட்டுறுத்தல் செய்து விடுகின்றனர். //

                      ”எப்படிப் பதிலளித்தாலும்”என்று குற்றம் சாட்டும் வியாசன் அப்படி என்ன தரம் தாழ்ந்து எழுதி விட்டேன் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும். வியாசன் யுனிவர்பட்டி போன்ற இசுலாமிய எதிர்ப்பு மதவெறியர்கள் விவாதப்பொருளை விட்டு விலகி இசுலாமிய எதிர்ப்பு மதவெறியை கக்கிய போது ”மதவெறியார்களா”என்றும் ,” மதவெறி மொக்கைகள் ”என்றும் அழைத்திருக்கிறேன்.இவை உண்மைதான் என்பதை காய்தல் உவத்தல் இன்றி அவர்களது எழுத்துக்களை படிப்பவர்கள் உணர முடியும்.மேலும் மொக்கை என்பது ஆபாச சொல் அல்ல.பொருளற்ற விதண்டாவாதங்களை, வெட்டி பேச்சுக்களை அப்படி அழைப்பதை இணையத்தில் புழங்கும் எவரும் அறிவர்.

                      அது போல் வியாசனின் வாதங்களை முட்டாள்தனமானவை என்று சொல்லி இருக்கிறேன்.அது கூட நானே வலிந்து சொன்னதல்ல.அவர் எனது வாதங்களை முட்டாள்தனமானவை என்று அகங்காரத்துடன் பேசிய போது யாருடைய வாதம் முட்டாள்தனமானது பார்க்கலாமா என்று கேட்டு இருவரின் வாதங்களையும் திறனாய்வு செய்து வியாசனின் வாதங்கள்தான் முட்டாள்தனமானவை என்று முடித்திருப்பேன்.

                      இவை அனைத்துக்குமே ஆதாரமாக சுட்டிகள் தர முடியும்.இவை தவிர என்ன தரம் தாழ்ந்து எழுதி விட்டேன் என்று வியாசன்தான் இப்போது விளக்கவேண்டும்.//

                      இதற்கு வியாசன் அறிவு நாணயத்துடன் அளித்த விளக்கம் என்ன தெரியுமா.
                      Thippu,

                      Whatever you say…. 🙂

                      இதுதான் விளக்கமாம்.சிரிப்பு பொம்மை போட்டு இப்படி ஒரு வெட்கங்கெட்ட விளக்கத்தை பதிவு செய்து விட்டு விவாதத்திலிருந்து விலகி ஓடிப்போன வியாசன் இப்போது மறுபடியும் அதே குற்றச்சாட்டை சொல்கிறார்.என்ன வகை நேர்மை இது.

                    • ஜனாப். திப்பு அவர்கள் ஒன்றிலிருந்தொன்று, மாறி மாறி, அதாவது இங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்த ‘தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல்’ பற்றிய விடயத்தை திசை திருப்புவதற்காக, அதற்குச் சம்பந்தமில்லாத விடயங்களுக்கெல்லாம் தாவிக் கொண்டேயிருக்கிறார், அதைப் பார்க்க எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.

                      திப்புகாக்கா தந்த பழைய விவாத இணைப்பிலேயே, தான் சொல்வதையும் சொல்லி விட்டு அவர் எப்படியெல்லாம் “ஒவர்சீன்” போடுவார் என்பதை திரு. Univerbuddy எடுத்துக் காட்டியிருக்கிறார். அதனால் நான் எனது நேரத்தை வீணாக்கப் போவதில்லை.

                      (“நீங்கள் என்னை அக்ரினையில் அழைத்தவர்தான் என்பதை உங்களுக்கும் மற்ற வாசகர்களுக்கும் நினைவு படுத்துகிறேன். மேலும் பல பெயர்களையும் பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஒவர் சீன் போட வேண்டாம்.”- Univerbuddy)

                      //“…… இருவரின் வாதங்களையும் ‘திறனாய்வு’ செய்து வியாசனின் வாதங்கள்தான் முட்டாள்தனமானவை என்று முடித்திருப்பேன்.”//

                      இந்த தளத்தில் என்னுடைய கருத்துக்கள் எல்லாம் அறிஞர் திப்பு அவர்களின் திறனாய்வுக்குட்படுவது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் திறனாய்வின் முடிவு எப்படியிருக்குமென்றால், அவரது வாதங்கள் தான் உயர்ந்தவை, என்னுடைய கருத்துக்கள் எல்லாம் முட்டாள்தனமானவை என்று முடித்துக் கொள்வாராம். அவர் அப்படித்தான் முடித்துக் கொள்வாரென்பது திப்புநானாவின் ‘வாதங்களை’ இந்த தளத்தில் இரசித்து மகிழ்ந்த எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான், ஆனால் அதில் வேடிக்கை என்னவென்றால் அவரே அதை ஒப்புக் கொள்வது தான். அவர் தன்னைப் பற்றிப் பீற்றிக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, ஆனால் “நினைப்புத் தான் பொ(பி)ழைப்பைக் கெடுக்கும்” என்பார்கள்..

                    • திட்டமிட்ட அரபுமயமாக்கல் பற்றித்தான் பின்னூட்டம் 25 மற்றும் அதன் தொடர்ச்சியில் மறுப்பு சொல்லியிருக்கிறேனே. [வியாசன் பார்க்கவில்லை என சொல்வாரோ]..இந்துமதம் மீது,ஈழத்தமிழர் மீது எனக்கு வன்மம் இருப்பதாக வியாசன் சொன்னதற்கும்,வினவு பக்க சார்பு மட்டுறுத்தல் என்ற வியாசனின் குற்றச்சாட்டுக்கும் பதில் சொன்னால் மாறி மாறி பேசுவதாக குற்றம் கண்டுபிடிக்கிறார்.முன்னால் போனால் கடிக்குது பின்னால் வந்தால் உதைக்குது என்பது போல இப்படி விதண்டாவாதம் பண்ணினால் எப்படி.

                      ”மாறி மாறி பேசுவதில்” முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற வியாசனுக்கு ”சிரிப்பு” வருதாம்.

                      யுனிவர்பட்டியின் முதுகுக்கு பின் ஒழிஞ்சு பயனில்லை. ”ஓவர் சீனுக்கு ” அந்த பதிவிலேயே பதில் சொல்லியிருக்கிறேன்.

                    • கீழ்த்தரமான சொற்களை பயன்படுத்தவில்லை என்பதற்காகத்தான் இருவர் வாதங்களை ஒப்பிட்டதை சொல்லியிருக்கிறேன்,உயர்வு,தாழ்வு கற்பிப்பதல்ல அந்த வாதம்.இது கூட விளங்கலையா வியாசனுக்கு.புத்திசாலிதான்.

  7. அன்புள்ள வினவுக்கு தெளகீத்ஜாமாத்தொடு உஙகலுக்குள்ள குறோதம் புரிந்து கொள்ளவே முடியவில்லை.யெனக்கு தெரிந்து உங்கலைப்போலவேதான் அவர்களும் அவர்களின் கொள்கையில் உறுதியாக இருந்து செயல் படிகிரவர்கள்.னீங்கள் “களள கம்னியுஸ்டுகள்’யென்று உங்கள் சகாக்களை இழிவதில்லயா?ஷிர்க் மானாடு யென்பது அவர்கள் கொள்கயை அவர்கள் பறைசாற்றும் மானாடு.இதில் உங்களுகென்ன பிரட்ச்சனை?உங்கள் கொள்கையைநிலைநாட்ட எந்த ஒன்றிர்கும் உஙகள் கொள்கையை மய்யமாய் வைத்து எழுதுவதில்லயா?அவர்களின் கருதுகள் எதுவும் சமூகநீதிகெதிராக சமத்துவதிற்கெதிராக இருக்கிறதா?அல்லது ஒட்டு மொத்த மக்களையும் மத அடிப்படையில் ஒன்று திரட்டி விடுவார்கள் என்று அச்சப்படுகிரீர்களா? சுனாமி காலத்திலிருந்து அவர்கள் பம்பரமாய் தொண்டாடறவெ செய்கிறார்கள்.வரதட்சனைகு எதிராக,மாற்று மத மக்கள் மத்தியில்நல்லினக்க பிரச்சாரம்,தீவிரவாதத்திற்கெதிரான தொடர் பிரச்சாரம்,தொடர்ந்து ரத்த தானத்தில் பல வருடங்கலாக முத்லிடம்.சொல்லபோனால் பல இச்லாமிய இயக்கஙள் போட்டிபோட்டுக்கொண்டு இது போன்ற இடர் பாடுகளில் இறங்குவதற்க்கு முன்னோடியே இவர்கள் தான்.ஒரு செய்தியாளராய் கண்டிப்பாய் இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.இருந்தும் ஏன் இந்த வன்மமோ தெரியவில்லை.கல்யாணராம களை இனங்கண்டு ஒதுக்கி விடலாம்.ஜெயமோகன் கலே மிக ஆபத்தனவர்கள்.வினவின் மேல் எங்களுக்குநம்பிக்கை உண்டு.உஙகளையும் அறியாமல் அவர்கள் மேல் ஏதேனும் காழ்ப்பிருந்தால் பரிசீலித்து பாருங்கள்.அவர்கள் தான் உசத்தி என்றெல்லாம் நான் வாதாட வில்லை.

    • சகோதரர் மீரான்சாகிபு

      தவ்கீத் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள், இறை மறுப்பாளர்கள் ஆகியோருக்கு என்ன தண்டனை? முசுலீம்களில் கம்யூனிஸ்டுகளாகவோ,நாத்திகர்களாகவோ பலர் பல நாடுகளில் இருக்கிறார்கள். முசுலீமாக இருந்து கொண்டே பலர் வேறு மத மக்களோடு காதல் திருமணம் செய்கிறார்கள். இவர்களையெல்லாம் முசுலீம் மதத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தவ்கீத் கூறுகிறது. இது சரியா? விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்

    • meerasahib,மதத்தை அரசியலுடன் கலக்கும் விடயத்தில் நீங்கள் எப்படி RSS -> BJP உடன் வேறுபட்டுகின்றிர்கள் என்று கூறமுடியுமா? அவர்கள் பெரும்பான்மை ,நீங்கள் சிறுபான்மை என்ற நிலையை தாண்டி அதன் விளைவுகளை தாண்டி வேறு என்ன வேறுபாடு இருக்கிறது?

      அரசியல் வேறு மதம் வேறு என்ற நிலையை தாண்டி இரண்டையும் ஒன்றாய் பார்க்கும் உங்கள் நிலை மிகவும் ஆபத்தானது. RSS -> BJP போன்ற கருத்தாக்கம் கொண்டது தான் மதம் என்ற விடயத்தை, அதன் கொள்களைகளை நீங்களும் அரசியல் என்ற சாயத்துடன் முன்னிறுத்துவது. RSS -> BJP என்ற வகைமை பெரும்பான்மை மதவெறி அரசியல் என்றால் உங்களின் மதத்தை அரசியலில் முன்னிறுத்தும் நிலைப்பாடு சிறுபான்மை மதவாதம் தான். அதில் ஏதும் சந்தேகம் இல்லை.
      //தெரிந்து உங்கலைப்போலவேதான் அவர்களும் அவர்களின் கொள்கையில் உறுதியாக இருந்து ..//

      ஒட்டு மொத்த மக்களையும் மத அடிப்படையில் ஒன்று திரட்டி விடுவார்கள் என்று எல்லாம் யாரும் அச்சம் படவில்லை நண்பரே. அதற்கு எதிரான பயம் தான் ஏற்படுகின்றது. ஆம் மக்களை மேலும் மேலும் பிளவு படுத்துவார்கள் என்ற பயம் தான் ஏற்படுட்கின்றது.
      //ஒட்டு மொத்த மக்களையும் மத அடிப்படையில் ஒன்று திரட்டி விடுவார்கள் என்று அச்சப்படுகிரீர்களா? //

    • துலுக்கர் என்று துருக்கியரைக் குறிப்பிட்டால், தமிழராகிய, தமிழர்களை முன்னோர்களாகக் கொண்ட திப்புவுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. துருக்கியரைத் தான் தமிழில் துலுக்கர் எனக் குறிப்பிடுகிறேன் என்பதைக் காட்டத் தான் (துருக்கியர்) என்றும் நான் அடைப்புக்குறிக்குள் எழுதியதை திப்பு அவர்கள் கவனிக்கவில்லை போல் தெரிகிறது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள், திப்பு விடயத்தில் அது சரியாகத் தானிருக்கிறது. துருக்கியர் தான் தமிழில் பேச்சு வழக்கில் துலுக்கர் என மருவி வந்துள்ளது. அதனால் தான் திருவரங்கத்தில் கூட துலுக்க நாச்சியாருக்கென தனிச் சன்னதியுள்ளது, அது மட்டுமன்றி, பெரும்பான்மைத் தமிழர்கள் துலுக்க நாச்சியாரை வணங்குகின்றனரே தவிர அவரை இழிவுபடுத்தும் நோக்கில் அப்படி அழைப்பதில்லை. எந்த நாட்டிலும் வலைப்பதிவுகளில் இணையத்தளங்களில் தம்முடன் பேசுகிறவர்களை, விவாதிப்பவர்களை நேரில் வா, இந்த முகவரிக்கு வா என்று யாரும் அழைத்ததை நான் பார்த்ததில்லை. தமிழ்நாட்டு முஸ்லீம்கள், அதுவும் வினவு தளத்தில் மட்டும் தான் இப்படியான சண்டித்தனத்தையும், அடாவடித்தனத்தையும் நான் பார்க்கிறேன். நேரில் வந்து பார்த்து நேரத்தை வீணாக்காமல் மற்றவர்களுடன் பேசவும் தொடர்பு கொள்ளவும் தான் விஞ்ஞானிகள் இணையத்தைக் கண்டு பிடித்தார்கள். உலகில் எந்தப் பகுதியிலுள்ளவர்களுடனும் பேசவும், விவாதிக்கவும் அது எங்களுக்கு உதவுகிறது. நேரில் பேசினாலும் இங்கு பேசுவதைத் தானே பேசப் போகிறீர்கள். எங்கு பேசினாலும் சட்டியிலுள்ளது தான் அகப்பையில் வரும்.

    • “நாங்கள் தான் கடவுள், பெரியவன்,நல்லவன்,உத்தமன் மற்றும் எல்லாமே. நாங்கள் குற்றம் செய்யாதவர்கள் அப்படி குற்றம் செய்துகொண்டிருந்தாலும் அது கணக்கில் வராது. எங்கள் கொள்கைகளுக்கு நீங்கள் எல்லோரும் அடிமைகள். சுத்தமில்லாத எங்கள் கைகளால் மனிதர்களை தண்டிக்கும் சர்வ வல்லமைகளும் எங்களிடம் மட்டும்தான் உள்ளது. எங்களை படைத்ததாக கருதும் எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல தூய இறைவனிடம் கூட மனிதர்களை தண்டிக்கும் அதிகாரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை, மேலும் இறைவன் என்பவர் எது நடந்தாலும் தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவன் அவ்வளவே. அதாவது நாங்கள் நம்பும் இறைவன் எங்கே வந்து எப்போது மனிதர்களை நியாயம் விசாரித்து.. தண்டித்து… இதெல்லாம் நடக்கிற காரியமாகவே எங்களுக்கு தெரியவில்லை. அதனால்தான் மலம், ஜலம் முதலிய இயற்கை உபாதைகளை கழிக்கிற சாதாரண மனிதர்களாகிய நாங்களே எங்கள் கறை படிந்த கைகளால் மக்களை நியாயம் தீர்க்க கிளம்பிவிட்டோம். எல்லோருடைய இரத்தத்தையும் குடித்துவிட்டு இறுதியில் நாங்கள் மட்டும் சொர்க்கத்திற்கு சென்று ஜாலியாக இருப்போம்” என்கிற ஐஎஸ்ஐஎஸ் அதிமேதாவிகளின் கர்வம் மானுட வர்க்கத்துக்கு பேராபத்தை விளைவித்து கொண்டிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் தோன்ற ஆயிரமாயிரம் கதைகளை காரணம் காட்டினாலும், அதன் கொள்கைகளை ஆராய்ந்து பார்த்தால் ஐஎஸ்ஐஎஸ் முகத்தில் காரி துப்ப வேண்டும் என்றுதான் தோன்றும்.

      அதன் கொள்கைகள்:
      1. உலக நாடுகளை கைபற்றி இஸ்லாமிய பேரரசை தோற்றுவித்து மதவெறி கொள்கைகளை மக்கள் மீது கட்டாயமாக திணித்து மக்களை அடிமை படுத்த வேண்டும் என்பதே.
      2. இதனால் பெண்கள் சிறுவர்கள் அடிமைப்படுத்தபடுவார்கள்.
      3. யாரும் கல்வி பயில முடியாது.
      4.மக்களாட்சி முறை ஒழிக்கபடும்.
      5.குற்றங்களுக்கு மரணம் மற்றும் கடும் தண்டனைகள் தான்.
      6.ஷியா போன்ற முஸ்லிம்களையும், இஸ்லாமை ஏற்று கொள்ளாதவர்களையும் தலை துண்டித்து கொள்ளபடுவார்கள்.
      7.இறைவனின் திருப்பெயரால் எங்கும் மனித பிணங்களாகதான் இருக்கும்.

      ஐஎஸ்ஐஎஸ் கொடுர தாக்குதலுக்கும், இவர்களுடன் மோதும் சதிகார கூட்டு விபச்சார நாடுகளின் அதிபயங்கர தாக்குதலுக்கும் தேவையில்லாமல் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகி வருகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் மதவெறி கனவான இஸ்லாமிய பேரரசை நிறுவுவது என்பது ஒருபோதும் நிறைவேற போவதில்லை.

  8. சகோதரர் இனியன்,”அரபுக்களிடம் மனிதநேயமே இல்லை” என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள்?மனிதநேயம் என்பது எல்லா மனிதர்களிடத்திலும் இயல்பிலேயே சுரக்கக்கூடியதுதான்.இதற்க்கு ஜாதியோ மதமோ நாடோ மொழியோ எநத பேதமும் இருக்க முடியாது.ஒரு தாயின் மார்பில் சுரக்கும் பாலைப்போல அவள் உள்ளத்தில் பொங்கும் தாய்மை உண்ர்வைப்போல.எப்படி, சுரக்கும் பாலுக்கும்,பொங்கும் தாய்மைக்கும் ஒரு தாய் காரணமில்லயோ அதைப்போல ஒவ்வொரு மனித உள்ளத்திலும் சுரக்கும் மனிதநேயத்திற்க்கும் மனிதன் காரணமல்ல நம்மைப்படைத்த இறைவனின் கருணை என்பது எஙகளது நம்பிக்கை.இதிலிருந்து சுயநலம்.பேராசை, பொறாமை போன்ற குண்ங்களால் மனிதனை திருப்பி விடுவது ஷைத்தானின் சூழ்ச்சி.ஒவ்வொரு தொழுகையிலும் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து பாதுகாக்க, பிரார்திக்குமாறும் நாஙகள் பணிக்கப்பட்டிருக்கிறோம்.இவையெல்லாம் நீஙகள் மதத்தின் அடிப்படையில் கேட்டதால்தான் விளக்க வேண்டி வந்தது.அரபுக்களை பொறுத்தவரை பெரும்பாலும் மூர்க்கர்களாக மூடர்களாகத்தான் இருக்கிறார்கள்.அது பெரும் முயற்ச்சியோ பெரும் உழைப்போ இன்றி தாறுமாறாய் வந்த பணம் அதில் நிதானமிழந்து ஆடுகிறார்கள்.காட்டுமிராண்டிகளாய் இருந்த ஆதி அரபுக்களை பண்பட்டவர்களாய் மாற்றியது இஸ்லாம்தான் என்பது சத்தியம்.தென் தமிழகத்து முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் இவர்களின் குணநலனுக்கும் பங்குண்டு.ஆக இஸ்லாமிய இளைஙர்கள் உயிரை கொடுத்து வேலை செய்ததில் கண்டிப்பாய் மதத்தின் பஙுகுண்டு.இதில் மறைப்பதற்க்கு ஒன்றுமில்லை.அதாவது நான் சொல்ல வருவது இயல்பாய் எல்லா மனிதரிடத்திலும் சுரக்கும் மனிதநேயத்தை இஸ்லாமிய போதனை பன்மடஙகு அதிகப்படுத்தியது.

    • நண்பரே என்னை பொருத்த வரையில் சவுதி அரேபிய ரவுடிகளுக்கு நான் எந்த மரியாதையும் காட்டுவது இல்லை.நீங்கள் கூறுவது படி மதம் மனிதனை பண்பாடு உடையவனாக மாற்றி இருக்கும் எனில் பாக்தாத் மீது குண்டு பொழிந்த ஒவொரு கிருஸ்துவ அமெரிக்கனும் அதனை செய்து இருக்க மாட்டான். பாக்தாத் மீது அமெரிக்கங்கள் குண்டு பொழிந்து சின்னம் சிறு தளிர்களை அழித்துக்கொண்டு இருந்த அமெரிக்கன்களுக்கு சவுதி பொறுக்கிகள் சவுதி அரேபியாவில் ராணுவ தளம் அமைத்து கொடுத்து இருக்க மாட்டார்கள். அதே போன்றே மதம் மனிதனை பண்பாடு உடையவனாய் மாற்றி இருக்கும் எனில் ஹிந்துத்துவா வெறி நாய்களால் குஜராத்தில் சிறுபான்மை மக்கள் ஆயிரகணக்கில் கொல்லபட்டு இருக்க மாட்டார்கள், எம் தமிழ் மக்கள் ஈழத்தில் பவுத்த பன்றிகளால் கொல்லபட்டு இருக்க மாட்டார்கள், இன்னும் பின் சென்றால் சிலுவைபோர்களுக்கு சாத்தியமே இருந்து இருக்காது. மதத்தின் தேவையும் அதன் மதிப்பிடுகளும் இன்று சிறிதும் தேவையற்று நாற்றம் அடித்துக்கொண்டு தானே உள்ளது. இன்றைக்குசெய்த வெள்ள நிவாரண உதவிக்கு மதம் தான் காரணம் என்றால் , இது வரை மதத்தின் பெயரால் நடைபெற்ற கொலை பாதக செயல்களுக்கும் மதம் தானே காரணமாகின்றது? மதம் மக்களை நல்வழி படுத்துகின்றது என்பதனை நான் மனபூர்வமாகவும் , அறிவு பூர்வமாகவும் ஒருவேளை ஏற்றுகொண்டால் மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட அல்கொய்தாகலும், விஷ்சுவஹிந்துபரிசத்களும் , “ஆற்றிய மானுட சேவை” என்ன என்ற கேள்விக்கு பதிலையும் நான் கூறவேண்டிய கடமை உடையவனாகின்றேன் தானே ?

  9. இஸ்லாமிய நண்பர்களுக்கு ,

    இன்றைக்கு ஹிந்துத்துவா வெறி நாய்களால் நாடு மனதளவில் மத ரீதியாக 25% மற்றும் 75% என்ற விகிதாசாரத்தில் பிளவு பட்டு இருக்கும் அக சூழலில் இயற்க்கை பேரிடர் ஏற்படும் போது மத சிறுபான்மை மக்கள் மத பெரும்பான்மை மக்களுக்கு உதவுவது என்ற செயலுக்கு மதத்தின் கோட்பாடுகள் தான் காரணம் என்று கூறி மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்துவதை விட “நாங்கள் எங்கள் சக மனிதனுக்கு ஆற்றிய சிறு உதவி” என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டு செல்வது தான் அரசியல் ரீதியிலான நலனை இருபான்மை மக்களுக்கும் பயக்கும் என்பதனை இங்கு விவாதம் செய்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் அல்லவா? வாழ்வில் நாம் கேட்கும் வெட்டி வசனங்களை விட இந்தகைய தக்க நேரத்தில் செய்யபடும் உதவிகள்-செயல்பாடுகள் மிகுந்த நன்மையையும் , இரு மத மக்களிடம் நட்பு உறவையும் ஏற்படுத்தும் தானே? இந்த கட்டுரையின் நோக்கமும் அதுவாக தான் இருக்கும் போது மீண்டும் மீண்டும் மதத்தின் பெயரால் தான் இந்த உதவிகள் செய்யபட்டது என்று கூறிக்கொண்டு இருபது நன்று அல்ல அல்லவா?

    • meerasahib,

      வெள்ள நிவாரண பணிக்கு களத்தில் நின்று பணியாறிய முஸ்லிம் மக்கள் தம் சேவைக்கு தம் மதம் தான் காரணம் ,தம் மதம் மட்டும் தான் காரணம் என்று கூறுவார்கள் எனில் அந்த சேவை உதவிய மனிதர்களின் மதத்தை தான் முதன்மை படுத்துமே தவிர மனித நேயத்துடன் தக்க நேரத்தில் அவர்கள் செயல்பட்டு உதவிய செயல் பின்னுக்கு சென்றுவிடும் என்ற சிறிய உண்மைகூட மீராசாஹிப் அவர்களுக்கு புரியாதது கண்டு வருத்தம் கொள்ளவே செய்கின்றேன்.

  10. ஒரு கொள்கை கோட்பாடு எஙகளை தீவிரமாக செயல்பட தூண்டியது என்பது ஏன் சார் பிளவுகளை ஏற்ப்படுத்துகிறது?களத்தில் நின்று பணியாற்றியவன் அதுதான் காரணம் என்று கூறும்போது அப்படி சொல்லாதே என்று நீஙகள் ஏன் சார் மல்லு கட்டுகிறீர்கள்?” நீ முஸ்லிமாக இருப்பதால் தான் குண்டு வைத்தாய்,முஸ்லிமாக இருப்பதால் உனக்கு வீடு தர மாட்டோம்,என்றெல்லம் கட்டமைத்து வைதத சமூகத்தில்,” நான் முஸ்லிமாக இருப்பதால் தான் இதைச்செய்தேன் என்று அவன் கூறுவதில் என்ன சார் தவறு.சவூதி அரேபிய ரவுடிகளுக்கு உஙகளை யார் மரியாதைத் தர சொன்னது?அல் காயிதாவையோ ஆர் எஸ் எஸ் சையோ ஏன் உதவி செய்த மக்களோடு சேர்க்கிறீர்கள்?மதத்தை வைத்து பிழைப்புநடத்துகிறவர்களும் ஆட்சி அதிகார வெறி பிடித்தவர்களும்-மதத்தால் பண்பட்ட மக்க்ளும் ஒன்றா?எந்த ஒரு சித்தாந்த்த வாதிகாளும் மூர்க்கமாக மோதி பிள்வுண்டு அழிந்து இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் மதம் மட்டும்தான் அழித்தது.மதம் மட்டும்தான் மனிதனை பிரித்தது என்பது போல காட்டுகிறீர்கள்.அதற்கு மத வெறி பிடித்த சில மிருகங்கள் உஙக்ளுக்கு உரம் சேர்க்கிறார்கள்.

    • பொதுவில் மதம் அதனை மனிதன் பின்தொடர்வது தனி மனித உரிமை என்று ஆகும் போது ,பொதுவெளியில் அதனை பற்றி பேசி பெருமிதம் படுவதில் உள்ள குறை உங்களுக்கு தெரியவில்லை போலும். மதத்தை பற்றி பேசுவதல்ல மத சார்பின்மை. எம்மதத்தையும் பற்றி பொதுவெளியில் பேசாமல் இருபது தான் மதசார்பின்மை.

      //களத்தில் நின்று பணியாற்றியவன் அதுதான் காரணம் என்று கூறும்போது அப்படி சொல்லாதே என்று நீஙகள் ஏன் சார் மல்லு கட்டுகிறீர்கள்?”//

  11. இனியவன், விநாயகர் சிலையை தூக்கிக்கொண்டு பள்ளிவாசல் அருகில் நின்று”பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு,துளுக்கனை வெட்டு துளுக்கச்சிய கட்டு”.என்று கூவுபவனும் அதே விநாயகர் சிலையை பக்தி சிரத்தையோடு வணங்கி அக்கம்பக்கத்தார்க்கு கொலுக்கட்டை கொடுத்து விடும் இந்துவும் ஒன்றாசார்?

    • இப்படி பேசும் ஹிந்துத்துவா மத வெறியர்களை எப்படி எதிர்கொள்வதாகஉத்தேசம்? தனித்து நின்று உங்கள் மதத்தை முதன்மை படுத்தி போராட போகின்றீர்களா ? அல்லது ஜனநாயக பூர்வமான , மத சார்பற்ற சக்திகளுடன் இணைந்து நின்று போரட்ட போகின்றிகளா?

      //இனியவன், விநாயகர் சிலையை தூக்கிக்கொண்டு பள்ளிவாசல் அருகில் நின்று”பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு,துளுக்கனை வெட்டு துளுக்கச்சிய கட்டு”.என்று கூவுபவனும் அதே விநாயகர் சிலையை பக்தி சிரத்தையோடு வணங்கி அக்கம்பக்கத்தார்க்கு கொலுக்கட்டை கொடுத்து விடும் இந்துவும் ஒன்றாசார்?//

  12. வியாசன் அவர்களே தமிழ் முஸ்லிகள் அரபு மயமாக்க படுகிறார்கள் என்பதெல்லாம் உஙகளது தவறான புரிதல்.முஸ்லிம் பெண்களின் உடையை வைத்துக்கொண்டெல்லாம் இந்த முடிவுக்கு வராதீர்கள்.அப்படி என்றால் ஆண்கள் ஏன் அந்த உடை அணிவதில்லை?புர்கா எனற இந்த பெண்கள் உடை வருவதற்க்கு முன்பு சேலையை முக்காடிட்டு இடுப்பு பகுதி தெரியாமல் வருவார்கள்.சிலர் துப்பட்டி என்று பெரிய துணியை சேலை மேல் போர்த்திக்கொள்வார்கள்.இன்றைக்கு பல வகையிலும் இது வசதியாக இருப்பதால் அணிகிறார்கள்.ஒருவேளை இது காலப்போக்கில் மாறி வேறு வகையான உடையும் வரலாம்.தஙகளுடைய அஙகஙகளை வெளிக்காட்டும் விதமாக உடைகள் இருக்கலாகாது என்பதுதான் அவர்களுக்குரிய விதி.பொதுவாக தமிழ் பெண்கள் இன்று சுடிதாருக்கு மாறிவிட்டார்கள்.அதனால் வடக்கத்திய மயமாக்கப்படுகிறர்கள் என்று அர்த்தமா?அரபுக்களின் கலாச்சரம் என்பது வேறு இஸ்லாமியநடைமுறை என்பது வேறு.அதில் நாஙகள் தெளிவாகவே இருக்கிறோம்.எஙகளின் உணவு உடை மொழி பாரம்பரியம் எதிலும் இஸ்லாம் தலையிடுவதில்லை.அதற்க்காக பொஙகல் என்ற் பெயரில் சூரியனை கும்பிடமாட்டோம்.ஜனநாயகத்தை ஏற்றுக்கொன்டிருக்கின்றோம்.வாக்களிக்கின்றோம்.எங்களின் உரிமைகளுக்காக அற வழியில்தான் போராடுகிறோம்.எஙகளின் சக மககளை எஙகளின் பந்துக்களாகவேதான் பார்க்கின்றோம்.வகாபியிஸ்ம் என்பதை அதி பயங்கர அரசியல் சித்தாந்தமாகவே கருதி அதை அப்படியே அடியொட்டி நடக்கிற் கூட்டம் தமிழ் நாட்டில் பெருகி விட்டதாக ஒரு மாயை நடுத்தரவாதிகளிடம் கூட வந்து கொன்டிருக்கிற்து.இது தவறு .’முஸ்லிம்கள் ஆன்மீகரீதியாக பின் பற்ற தகுந்தது குரானும் நபியின் கட்டளைகளும் மட்டுமே என்பது சட்டம்.கண்டவன் காலிலும் விழுவது கண்டதையும் தெய்வாம்சம் பொறுந்தியதாக கருதுவது என்பதை இஸ்லாத்திற்க்கு முறநானதாக நாங்கள் கருதுகிறோம்.இது பொதுவான இஸ்லாமிய சித்தாம்தான்.இதை அப்துல்வகாப் என்ற் தனி மனிதர் தஙளுடைய அரசியல் போராட்டங்களுக்கு பல் வேறு இன மக்களை ஒன்றினைக்க இதையும் ஒரு பிரச்சாரமாய் செய்தார்.சிலுவை போர்களில் சிலுவையைக்கொண்டு பாதிரிகள் மக்களை திரட்டவில்லையா அது போல.அதற்க்காக சிலுவை என்றாலே போர் என்ற் அர்த்தமா?அவர் பெயரைக்கொண்டே இது வகாப் வகாபியிசம் என்று வந்தது. இந்த அடிப்படையான இஸ்லாமிய கருத்தை எத்தனையோ அறிஞர்கள் சொன்னார்கள்.ஆனால் இவர் அரசியல் ரீதியாக வலுவானவராக இருந்ததால் பெரிய அள்வில் பிரபலமானார்.

    • ___மீராசாஹிப்,

      உண்மையிலேயே நீங்கள் தெரிந்து கொண்டு தான் பேசுகிறீர்களா அல்லது சும்மா சப்பைக்கட்டு கட்டுகிறீர்களா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப்படுவது குறித்து என்னைப் போன்ற தமிழர்கள் தமது கவலையைத் தெரிவித்துக் கொள்வது மட்டுமன்றி, இஸ்லாம் அரபுமயமாக்கப்படுவது குறித்து அரபுக்களல்லாத பன்னாட்டு முஸ்லீம்களும் விவாதித்துக் கொண்டும், தமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டுமுள்ளனர் என்பதை நீங்கள் அறியாதது தான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நீங்கள் விரும்பினால் அதைப்பற்றி வெறும் கூகிள் தேடுதலிலேயே அறிந்து கொள்ள முடியும். இந்த விடயத்தில் அரபுக்கள் அல்லாத பாரசீக(ஈரானியர்), துருக்கிய முஸ்லீம்களின் நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எப்பொழுதாவது அவர்களுடன் பேசி அறிந்து கொண்டீர்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய அனுபவத்தில் இஸ்லாம் அரபுமயமாக்கப்படுவதை, இஸ்லாத்தில் அரபு ஆதிக்கத்தை அவர்களும் எதிர்க்கிறார்கள் என்பது தான் உண்மை.

      இஸ்லாம் அரேபியாவில் தோன்றியதுடன், நேரடியாக இறைவனிடமிருந்து இறங்கியதாக முஸ்லீம்கள் நம்பும் திருக்குரான் அரபு மொழியிலிருந்தாலும், கூட அரபுக் கலாச்சாரத்தையும், ஆடையணிகளையும், அரபுக்களின் பழக்க வழக்கங்களையும் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்றோ அல்லது முஸ்லீம்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சீருடையணிய வேண்டுமென்றோ நபிகள் நாயகம் ஒரு போதும் கூறவில்லை.

      இஸ்லாம் அரபுமயமாக்கப் படுவதையும், அரபு ஆதிக்கத்தையும் ஊக்குவிப்பது வஹாபியிசம் தான், இந்த விடயத்தில் வஹாபியிசத்துக்கும், இந்துத்துவத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது . இந்துத்துவாக்களும் இந்து என்ற போர்வையில் சமக்கிருத, பார்ப்பனீய ஆதிக்கத்துக்குள் தனித்துவமான வரலாறும், மொழியும், கலாச்சாரமும் கொண்ட தமிழர்களை இணைத்து தமிழர்களை இந்துத்துவ நீரோட்டத்தில் காணாமல் போகச் செய்யலாம் எனக் கனவு காண்கிறார்கள்.

      உலக முஸ்லீம்களில் அரபுக்கள் வெறும் 18% தான், அதிலும் இஸ்லாம் தோன்றி, குறுகிய காலத்தில் இஸ்லாத்தை பலநாடுகளில் பரப்பியதில், அரபுக்களை விட பாரசீகர்களுக்கும், துருக்கியர்களுக்கும் தான் பெரும்பங்குண்டு. அவ்வாறிருக்க, இஸ்லாத்தை அரபுமயமாக்குவதால், அரபு மொழியும் , அரபுக்களின் பண்பாடும், கலாச்சாரமும் அவர்கள் மீது திணிக்கப்படுவதால் தமது வரலாறும், பழமையும், வாய்ந்த மொழியும் கலாச்சாரமும் காணாமல் போவதாக, எண்ணி அவர்களும் அரபுமயமாக்கலை எதிர்க்கிறார்கள். உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடாகிய இந்தோனேசியாவில் கூட இஸ்லாம் அரபுமயமாக்கபடுவது குறித்து எதிர்ப்பு உண்டு. பல உலமாக்கள் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களைப் போன்ற தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அரபுமயமாக்கலை மகிழச்சியுடன் ஏற்றுக் கொள்வதுடன் அப்படி எதுவுமில்லை என்று மறைக்கவும் முயல்கிறீர்கள்.

      அர‌புக்க‌ளின் க‌லாச்சார‌த்துக்கும், ப‌ழ‌க்க‌ வ‌ழக்கங்க‌ளுக்கும் இஸ்லாத்துக்கும் அத‌ன் போத‌னைக‌ளுக்கும் தொட‌ர்பு கிடையாது என்ப‌து தான் உண்மை. உண்மையில் அக்காலத்தில் அர‌புக்க‌ளின் பண்பாட்டுக்கும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்களுக்கும் எதிராக‌, அவர்களைத் திருத்துமுகமாகத் தான் இஸ்லாம் என்ற‌ மார்க்க‌ம் உருவான‌து. புனித‌ குரானில் கூற‌ப்ப‌டும் பெரும்பாலான‌ போத‌னைக‌ள் எல்லாம் அக்கால‌ க‌ட்ட‌த்தில் வாழ்ந்த‌ அர‌புக்க‌ளின் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌வை. உதார‌ண‌மாக‌ பெண்க‌ளின் உரிமை என்ற‌ விட‌யத்தில் ந‌பிக‌ள் நாய‌க‌ம்(ஸல்) அவ‌ர்க‌ளின் போத‌னைக‌ளுக்கும் அர‌புக்க‌ளின் க‌லாச்சார‌த்துக்கும் பாரிய‌ வேறுபாடுண்டு. அப்படியிருக்க‌ அர‌புக்க‌ளின் ந‌டையுடை பாவ‌னைக‌ளை, ப‌ண்பாட்டைக் க‌லாச்சார‌த்தைக் க‌டைப்பிடித்தால், அர‌பு மொழியை அதிக‌ள‌வில் த‌மிழில் க‌ல‌ந்து பேசினால் தான், உண்மையான‌ முஸ்லீமாக‌லாம், அவ்வாறு க‌ருதப்ப‌டுவார்க‌ள் என்ற‌ மாதிரியான‌ உண‌ர்வூட்ட‌ப்ப‌ட்டு இன்று த‌மிழ் முஸ்லீம்க‌ள் அர‌பும‌ய‌மாக்க‌ப் ப‌டுகிறார்க‌ள் என்ப‌தை, என்னைப் போல் த‌மிழ்நாட்டிலும், இல‌ங்கையிலும் முஸ்லீம்க‌ளுட‌ன் ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளை ப‌ள்ளிக்கால‌ம் முத‌ல் ந‌ண்ப‌ர்க‌ளாக‌க் கொண்ட‌ த‌மிழ‌ர்க‌ளால் இல‌குவாக‌ உணர‌முடியும். இல‌ங்கையில் அறுப‌து வ‌ருட‌ங்க‌ள் கால‌ம் எடுத்த‌ அர‌பும‌யமாக்க‌ல், த‌மிழ்நாட்டில் வெறும் ப‌த்து வ‌ருடங்க‌ளில் ப‌ட்டி தொட்டியெல்லாம் ப‌ர‌வி விட்ட‌தென்ப‌தை, தமிழ்நாட்டில் முஸ்லீம்க‌ள் வாழும் கிராம‌ப்ப‌க்க‌ங்க‌ளுக்குச் சென்ற‌வ‌ர்க‌ளுக்குப் புரியும்.

      அர‌புமய‌மாக்க‌லின் நோக்க‌மெல்லாம் த‌மிழ் முஸ்லீம்க‌ள் பார‌ம்ப‌ரிய‌மாக‌, ப‌ல‌நூற்றாண்டுக‌ளாக‌க் க‌டைப்பிடித்து வ‌ந்த‌ த‌மிழ்க்க‌லாச்சார‌ம் சார்ந்த‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும், அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ளின் உண‌ர்வு பூர்வ‌மான‌ வ‌ழிமுறைக‌ளை, ந‌ம்பிக்கைக‌ளை எல்லாம் அர‌புக்க‌ளின் ப‌ண்பாட்டையும், அரேபிய‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளால் ஈடுசெய்வ‌தும். அத‌ன் மூல‌ம் பொதுவான, அர‌புக்க‌ளின் வ‌ர‌லாற்றுட‌ன் அவ‌ர்க‌ளின் கலாச்சார‌த்தை அடிப்ப‌டையாக‌ கொண்ட நாடுக‌ட‌ந்த‌ இஸ்லாமிய‌ அடையாள‌த்தை உண்டாக்குவ‌துமாகும். இந்த‌ அர‌பும‌ய‌மாக்க‌லால், த‌மிழ் ம‌ண்ணுட‌னும், த‌மிழ‌ர்க‌ளுட‌னும், நாம் என்ன‌ ம‌த‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தாலும் நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் என்ற‌ இர‌த்த‌த்துட‌ன் க‌ல‌ந்த‌ உண‌ர்வை, எந்த‌ உண‌ர்வு த‌மிழ‌ர்கள‌னைவ‌ரையும் ம‌த‌வேறுபாட‌ற்று ஓற்றுமையாக‌ ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ வாழ‌ வ‌ழி வ‌குத்த‌தோ, அந்த‌ உண‌ர்வை மீட்க‌வே முடியாத வேக‌த்தில் இழ‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌த‌ற்கு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் அழிவில் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் எனக்கென்ன‌ போச்சு என்று ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌மும், ஒரு சில‌ர் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் அழிவை மகிழ்ச்சியுட‌ன் புலிக‌ள் அழிக்க‌ப்படுகிறார்க‌ள் என்ற‌ போர்வையில் வ‌ர‌வேற்ற‌தும் ந‌ல்ல‌ உதார‌ண‌ங்க‌ளாகும். பி.ஜெய்னுலாப்தீன் போன்ற‌வ‌ர்க‌ள் எவ்வாறு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌, அவ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தைக் கொச்சைப்ப‌டுத்தும் வ‌கையில், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்காத‌ர‌வாக‌ பொய்ப்பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள் என்ப‌தை இன்றும் காணொளிக‌ளில் காண‌லாம்.

      அர‌புக்க‌ளல்லாத‌ முஸ்லீம்க‌ளின் மேல் அர‌பு முஸ்லீம்க‌ளின் மேலாதிக்க‌ம் திருக்குரானில் எந்த‌வித‌த்திலும் நியாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ போதிலும் த‌மிழ்நாட்டின் இஸ்லாமிய‌ ம‌றுமல‌ர்ச்சி இய‌க்க‌ங்க‌ளெல்லாம் இஸ்லாத்துட‌ன் அர‌புக்க‌ளின் க‌லாச்சார‌த்தையும் தொட‌ர்புப‌டுத்தி த‌மிழ் முஸ்லீக‌ளை அர‌பும‌ய‌மாக்கி த‌மிழர்க‌ளுக்கிடையிலிருந்த‌ இன‌ ஒற்றுமையில், பாச‌ப்பிணைப்பில் ஒரு தொய்வை ஏற்ப‌டுத்தி விட்ட‌ன‌ர் என்ப‌தை த‌மிழ்நாட்டில் முஸ்லீம்க‌ளை ந‌ண்ப‌ர்க‌ளாக‌ கொண்ட‌ அனைவ‌ராலும் உண‌ர‌ முடியும்.

      அத்துட‌ன் ந‌ல்ல‌ ந‌ம்பிக்கையுள்ள‌ முஸ்லீமாக‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளால் க‌ருத‌ப்ப‌ட வேண்டுமாயின் க‌ட்டாய‌மாக‌ பாலைவனத்துக் ______ உடைக‌ளை அணிய‌ வேண்டும் அப்ப‌டியான‌ தோற்ற‌த்தையும் கொண்டிருக்க‌ வேண்டுமென்ற‌ நிலை கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ த‌மிழ் முஸ்லீம்க‌ளின் ம‌த்தியில் தோற்றுவிக்க‌ப்ப‌டுகிற‌து. முஸ்லீம்க‌ள் எல்லோரும் ஒரே மாதிரியான சீருடையையோ அல்ல‌து அர‌புக்க‌ள் ம‌த்திய‌கிழ‌க்குப் பாலைவ‌ன‌த்தில் அணிந்த‌ ஆடைக‌ளை ம‌ட்டுமே பாலைவ‌ன‌மேதும‌ற்ற‌ த‌மிழ்நாட்டிலும், இல‌ங்கையிலும் அணிய‌ வேண்டுமென்ப‌து திருக்குரானில் இல்லை.

      இக்காலத்தில் தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணிவதையும் தமிழ் முஸ்லீம் பெண்களின் புர்காவையும் ஒப்பிடும் உங்களின் ஒப்பீடு நகைப்புக்குரியது ஏனென்றால் தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணியும் பின்னணியில் எந்த விதமான மதம் சம்பந்தமான காரணமும் கிடையாது. இந்த புர்க்கா கலாச்சாரத்தை, தமிழ்நாட்டுக்கு அதாவது பாலைவனத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் வஹாபிஸ்டுகள் தான். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாகவும், குமாஸ்தாக்களாகவும் சவூதி அரேபியாவுக்குப் போன தமிழ் முஸ்லீம்களை, அங்கு வாழும் அரபுக்கள் தமது சகோதரர்கள் என்று அரவணைத்து ஆரத் தழுவவில்லை. அவர்கள் எதிர்பார்த்த ‘Homecoming’ வரவேற்பு அவர்களுக்கு அரேபியாவில் கிடைக்கவில்லை. அரபுக்கள் தமிழ் முஸ்லீம்களை தமக்கு இணையாகக் கருதுவதுமில்லை. ஆனால் அவர்களின் சொந்த தயாரிப்பான, அரபு மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் தீவிரவாத வஹாபியிசத்தைப் பரப்ப தமிழ்/ இந்திய முஸ்லீம்களைப் பயன்படுத்த அவர்கள் தயாராக இருந்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றைக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் இணைவதற்காக மதவுண ர்வும் , வீரமும் பொங்கித் ததும்ப சிரியாவுக்குப் போகும் தமிழர்களையும் (இந்தியர்களையும்) ISI தீவிரவாதிகள் கக்கூஸ் கழுவத் தான் அனுப்புகிறார்களாம் என்பதை நிச்சயமாக நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என ந்மபுகிறேன். தமிழர்களின் விடயத்தில் அரபுக்கள் மாறவே மாட்டார்கள் போல் தெரிகிறது அல்லவா? 🙂

      அரேபியாவில், உடல், முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டு கணவனின் பின்னால் வேள்விக்கு வெட்டக் கொண்டு போகும் ஆடு போல் போகும் பெண்களைப் பார்த்தவுடன், அப்படித்தான் உண்மையான முஸ்லீம் பெண்கள் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்ட தமிழ் முஸ்லீம்களில் ஒருவர் விடுமுறையில் திரும்பு வந்த போது ஒரு புர்க்காவை வாங்கி வந்து அவரது மனைவியையும் வெளியில் கூட்டிப் போனதைப் பார்த்து மற்றவர்களும் அதைக் காப்பியடித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. ஏனென்றால் இந்த புர்க்கா இல்லாமலும், பல நூற்றாண்டு காலமாக உங்களின் முன்னோர்கள், தமிழ் முஸ்லீம் தாய்மார்கள் தமிழ்நாட்டில் உண்மையான, ஒழுக்கமான, இறைவனுக்கு பணிந்த முஸ்லீம்களாக மட்டுமன்றி தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குமுரியவர்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு தேவைப்படாத புர்க்கா இப்பொழுது ஏன் தேவைப்படுகிறது.

      -த‌மிழ்முஸ்லீம்க‌ளின் அர‌பும‌ய‌மாக்க‌ல் த‌மிழ‌ர்க‌ளை மேலும் பிள‌வுப‌டுத்தும்-
      http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_6.html

  13. பண்பட்ட மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வதற்கு மதம், சாதி, இனம் என்ற அடையாளம் தேவையில்லை. மனிதம் தழைத்திருப்பதால் நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறோம்.

    உதவியவர் எந்த சமுதாயத்தவர் என்று ஆராய்வது தேவையில்லை.
    உதவியர் அனைவரும் மேன்மக்களே.

  14. இனியவன் உஙகள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது.மதமற்ற கடவுள் நம்பிக்கையற்ற உஙகளுக்கு மதம் கடவுள் என்று நாஙகள் முன்னிருத்தும்போது அது உறுத்துகிறது.நீஙகள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்,மனித சேவை என்றில்லை,எந்த ஒன்றிர்க்கும் கடவுளை முன்னிருத்தல் என்றே நாஙகள் பழகி இருக்கிறோம்.’என்னால் நடந்தது என்னால் தான் முடிந்தது ‘என்று நாங்கள் சொல்வதே இல்லை.நாளை செய்யப்போவதை இறைவன் நாடினால் செய்வேனென்றும் செய்து முடித்ததை இறைஅருளால் செய்து முடித்தேன் என்றுமே சொல்லுவோம்.மனிதநேயம் எல்லா மனங்களிலும் சுரக்கத்தான் செய்கிற்து.கடவுளை நம்பாத உள்ளத்திலும் மனிதநேயம் இருக்கிற்து.இது படைத்தவனின் கருணை என்பதே எஙகள்நம்பிக்கை.ஆக இப்படிபட்ட இரக்க குண்த்தை எஙகளுக்கு அருளிய இறைவனுக்கே புகழ் அனைத்தும் என்பதே அதற்க்கு அர்த்தம்.தய்வு செய்து புரிந்து கொள்ளுங்கள் இனியன்.இது மனிதனை ஆண்வம் கொள்ளாமல் இருக்க செய்யலாம்.இழ்ப்புகள் ஏற்பட்டால் இடிந்து விடாமல் இருக்கச்செய்யலாம்.

  15. முஸ்லீம்களை இயக்கியது மதமல்ல மனிதநேயம்தான். இது சென்னை மழையில் பட்டவர்த்தமாகவே தெரிந்தது. முஸ்லீம்கள் தாங்கள் செய்யும் செயலை எப்போதுமே தங்களது கடவுளுடனே தொடர்பு படுத்திக்கொள்வார்கள். மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் போன்ற வார்த்தைகள் யாவும் இதற்கானதே. இந்த செயலை ஏன் செய்தாய்? நீ எப்படி செய்தாய்? எனக் கேட்டுப் பாருங்கள், அல்லாவுக்கே அனைத்துப் புகழும் என்பதுதான் அவர்களது பதில். இதையேதான் சென்னை மீட்பு பணியில் ஈடுபட்டவர்களும் பிரதிபலிக்கிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை மனிதனுக்கு மனிதன் உதவி செய்வதை மனிதநேயமாக கற்றுத்தரப்படவில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதெல்லாம் அல்லாஹூ அக்பர் தான். அதனால்தான் சென்னை மழைக்கு ஒருவிதமாகவும் ரிசானாவிற்கு ஒருவிதமாகவும் வினையாற்றுகிறார்கள். ஒருவேளை மனிதநேயத்தைக் கூட (அல்லாவின்) வரம்பிற்குட்பட்டுதான் செய்வார்கள் என நினைக்கின்றேன்.

    • Ferouce Babu,meerasahib,

      எல்லா புகழும் இறைவனுக்கே என்ற மனநிலையில் நாம் செய்யும் நற்காரியங்களை முதன்மை படுத்துவதில் எந்த விதமான தவறும் இல்லை. அதனை விடுத்து என் மதம் கூறுவதால் தான் இந்த நற்காரியங்களை செய்கிறேன் என்று கூறுவதில் தான் அதில் உள்ள மனித நேயம் துடைத்தெறியபடுகின்றது. மனித நேயமற்று மதத்தின் பால் நடத்தும் எந்த நற்காரியங்களும் மக்களிடம் பிரிவினையை தானே உருவாக்கும் என்ற எளிய உண்மையை meerasahib அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் அல்லவா? அதனை விடுத்து மத்திய கிழக்கு ஆசியாவில் மாபெரும் அழிவை உருவாக்கி உள்ள வகாபி இஸத்தை தானே meerasahibஅவர்கள் ஆதரிகின்றார். இது சரியா?

  16. விஸ்வா, எந்த அடிப்படை ஆதாரமுமற்ற கற்பனையில் இருக்கிறீர்கள்.எங்களை எவ்வளவு தவறாகவும் மோசமாகவும் எடை போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்க ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிற்து.எத்தனை மக்கள் இன்னும் எத்தனை விஷயஙகளில் இது போல் தப்பபிப்பிராய்ம் வைத்திருப்பார்கள் என்று நினைக்க வருத்தமும் பயமும் வருகிற்து.நீங்கள் சொல்வது போல் எந்த நாட்டில் சார் முஸ்லிம் அல்லாத மக்கள் விரட்டப்பட்டார்கள் கொல்லப்பட்டார்கள்?வகாபி இஸத்தை பின் பற்றுவதாக நீஙகள்நம்பும் சவூதியிலேயே யூதர்கள் கிறித்துவர்கள் ஏன் நம் தமிழ் நாட்டு பிராமணர்கள் கூட மிக உயந்த பொறுப்பில் இருக்கிறார்கள்.நீஙகள் சொல்வது போல் எந்த காலத்திலும் எந்த பகுதியிலும் நடந்ததும் இல்லை நடக்கப்போவதுமில்லை.அதிகாரவெறி பிடித்த சில ஆட்சியாளர்கள் தஙகளை தக்கவைக்க மதவெறியை கிளப்பி மக்களை மோத விட்டிருக்கலாம்.ஆனால் இஸ்லாமிய நெறிமுறையில் ஆள்பவர்கள் அப்படி இருக்க முடியாது சார்.ஒரு மனசாட்சியற்ற் மத்க்கொள்கையையா சார் நாஙகள் ஏற்று சப்பை கட்டு கட்டுவோம்.உஙகளால் ஏற்க முடியாத பல விஷயஙகள் இதில் இருக்கலாம்.ஆனால் கொடூரமானதாக கொலைகார மதமாக இதை எண்ணிவிடாதீர்கள்.சமரசமற்ற கொள்கை உறுதியை இந்த மதம் எதிர் பார்ப்பது உண்மை.’உன்னை பெற்ற தாயாக இருந்தாலும் மகனாக நல்ல முறையில்நடந்து கொள்.கொள்கையில் தளர்ந்து விடாதே என்று போதிக்கிற்து.மாற்று கொள்கையில் உள்ளவர்களை துன்புறுத்தவோ ஒதுக்கிவைக்கவோ கொல்லவோ சொல்லவில்லை.சொல்லவில்லை.சொல்லவேஇல்லை.ஒரு வேளை சமரசமற்ற அதன் கொள்கை உறுதிதான் உஙகளை தவறாக புரியவைத்ததோ தெரியவில்லை.

    • வகாபி இஸத்தை ஆதரிக்கும் தாங்கள் சிரியாவில் , ஈராக்கில் அதே வகாபி இஸத்தை நடைமுறை படுத்த ISIS ஆதரிக்கும் சன்னி முஸ்லிம்கள் நடத்தும் கோரதாண்டவத்தை பார்த்துக்கொண்டு தானே உள்ளீர்கள். ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் வெடிவைத்து தகர்க்கபடுவதும் , ஷியா முஸ்லிம்கள் வகாபி இஸத்த்தின் பெயரால் தினம் தினம் கொல்லப்படுவதும் , அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்டுவ்தும், சிரியாவின் புரதான சின்னங்கள் அழிக்கப்டுவ்தும் நடந்து கொண்டு தானே உள்ளது. ISIS இயக்கம் முழுமையான விசையுடன் வகாபி இஸத்தை நடைமுறை படுத்துவதை அதனால் விளையும் கோர மானுட தர்மம் அற்ற கொடும் செயல்களை பார்த்துகொண்டுமே நிங்கள் அந்த இசத்தை ஆதரிகின்றிர்கள் அல்லவா?

  17. இனியன்,நான் தெளிவாய் சொன்ன பிறகும் பயங்கரவாத இயக்கங்களோடும்,அரசியல் பிரிவுகளோடும் ஒரு சாதாரண மக்களின் ஆன்மீக கொள்கைகளை கோர்த்துவிடுவது பக்கா டவுசர்களின் பாணி.வாகாபி வகாபி என்று திரும்ப திரும்ப கூறுகிறீர்களே நாங்கள் எங்காவது எங்களை வகாபிகள் என்று சொன்னோமா? நீஙகளாக ஒரு பட்டத்தை எங்களுக்கு சூட்டி என்னவோ நாங்களெல்லாம் அதற்கு கொடிபிடித்து போவதுபோல் காட்டி’ அவர்கள் கொல்கிறார்களே குண்டு வைக்கிறார்களே நீஙகள் ஆதரிக்கிறீர்கள்தானே?’எனறு கேள்வி வேறு!நாங்கள் முஸ்லிம்கள் நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றக்கூடியவர்கள் வேறு எந்த இஸத்தையும் பின் பற்ற்க்கூடியவர்களல்ல.இதில் வியாசன் வேறு தமிழ் உணர்வு கொப்பளிக்க’இவர்கள் தமிழ் அடையாளத்தையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு அரபிகளாய் மாறி விடுவார்களோ’என்று விசனப்படுகிறார்.எஙகளின் தமிழ் உணர்வும் மொழிப்பற்றும் உஙகளுக்கு தெரியுமா சாதம் என்று எந்த தமிழ் முஸ்லிமும் சொல்லுவதே இல்லை.சோறு என்றுதான் சொல்கிறோம்.ரசம் என்ற் வார்த்தை எஙகள் வீட்டில் கிடையாது புளியானம்தான் நாஸ்டா என்பதை பசியாறா என்றே சொகிறோம்.மசூதி என்று நீஙகள் சொல்ல பள்ளிவாசல் என்று நாஙகள் சொல்கிறோம்.நமாஸ் போனீஙகளா என்று கேட்பவர்களுக்கு தொழுதுவிட்டு வந்தோம் என்றே நாங்கள் சொல்கிறோம்.எந்த நாட்டில் இருந்தாலும் தமிழ் அடையாள்த்தையே முன்னிலைபடுத்துகிறோம்.இதெல்லாம் உஙகளிடம் கண்க்கு காட்டுவதற்க்கல்ல.எஙகள் ரத்தத்தில் ஊறியது.இந்த விடுதலைபுலி ஈழத்தமிழர் கதையெல்லாம் வேண்டுமென்றே சீண்டிவிடுகிற் கதை என்று தெறிகிறது.இருந்தும் சொல்கிறேன் புலிகள் பயஙகரவாதிகளே அவர்கள் கொடும் ஆதிக்கசக்திகள்.அவர்களிடம் அதிகாரம் போயிருந்தால் இதை அனைவரும் உணர்ந்திருபோம்.ஈழததமிழர்களை நாஙகள் புலிகளாக பார்க்கவில்லை.இயக்க பயங்கரவாதத்திற்க்கும் அரசபயஙகரவாதத்திற்க்கும் இடையில் சிக்கிக்கொண்ட அப்பாவிகள் என்றே கருதுகிறோம்.

    • உங்க பின்னுட்டம் 16 மற்றும் 20 ஆகியவற்றை பாருங்கள் அண்ணாச்சி. அதன் மூலம் யாரு வாகாபி வகாபி வாகாபி வகாபி வாகாபி வகாபி என்று விளம்பர படுத்திகொண்டு இருப்பது தெரியும். உங்க பின்னுட்டம் 16ல் வாகாபியிசம் பற்றிய உங்களின் கருத்துகளை மீண்டும் படித்து பாருங்கள் அண்ணாச்சி. கீழ் உள்ள உங்களின் வாகாபியிச சார்பை மீண்டும் படியுங்கள் அண்ணாச்சி.:

      “வகாபியிஸ்ம் என்பதை அதி பயங்கர அரசியல் சித்தாந்தமாகவே கருதி அதை அப்படியே அடியொட்டி நடக்கிற் கூட்டம் தமிழ் நாட்டில் பெருகி விட்டதாக ஒரு மாயை நடுத்தரவாதிகளிடம் கூட வந்து கொன்டிருக்கிற்து.இது தவறு”

      இதே வகாபியிச கருத்துகளை தான் ISIS பதர்கள் ,கொலையாளிகள் நடைமுரைப்டுத்துகின்றார்கள் என்னும் நிலையில் தான் நான் உங்களுக்கு வாகபி பற்றி உண்மையை உரைக்க வேண்டியது ஆகின்றது.

    • உங்க பின்னுட்டம் 20 வகாபி இஸத்தை பற்றி என்ன சொல்லுதுன்னு பார்கலாமா அண்ணாச்சி ?

      “:வகாபி இஸத்தை பின் பற்றுவதாக நீஙகள்நம்பும் சவூதியிலேயே யூதர்கள் கிறித்துவர்கள் ஏன் நம் தமிழ் நாட்டு பிராமணர்கள் கூட மிக உயந்த பொறுப்பில் இருக்கிறார்கள்.நீஙகள் சொல்வது போல் எந்த காலத்திலும் எந்த பகுதியிலும் நடந்ததும் இல்லை நடக்கப்போவதுமில்லை”

      இதுல நீங்க எதுக்கு வக்காலத்து வாங்குறிங்க அண்ணாச்சி? சவுதி பொருக்கிக்கா ?இல்ல சவுதி பொருக்கி நடைமுறை படுத்தி உள்ள வகாபி இஸத்துக்கா ? விளக்கம் கொடுத்தால் நன்னா இருக்கும். வகாபி இஸத்தை பற்றி அதனை நீங்களே ஆதரித்து பேச ஆரம்பித்துவிட்டு பின்பு நான் தான் பேச தொடங்கினேன் என்று கூறுவதில் உண்மை கடுகளவு கூட இல்லையே அண்ணாச்சி.

    • RSS அரை டவுசர் மாதிரி நீங்க பேசிய விசயத்தை இல்லை என்று மாற்றி பேசாதிர்கள் அண்ணாச்சி. வகாபி இஸத்தை ஆதரித்து பேசியது , தெளகீத்ஜாமாத் அரசியலை மதத்துடன் கலந்தது எல்லாம் நீங்க தான் அண்ணாச்சி. அதுக்கு பதில் மட்டும் தான் நான் கொடுத்து இருக்கேன்.

      //இனியன்,நான் தெளிவாய் சொன்ன பிறகும் பயங்கரவாத இயக்கங்களோடும்,அரசியல் பிரிவுகளோடும் ஒரு சாதாரண மக்களின் ஆன்மீக கொள்கைகளை கோர்த்துவிடுவது பக்கா டவுசர்களின் பாணி.வாகாபி வகாபி என்று திரும்ப திரும்ப கூறுகிறீர்களே நாங்கள் எங்காவது எங்களை வகாபிகள் என்று சொன்னோமா?//

  18. இனியன், அரசியலோடு மதம் கலந்து நான் பேசவே இல்லையே சார்.முஸ்லிம் இளைஙர்கள் ஒரு பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றிருக்கிறார்கள்.இதற்க்கு’ நாஙகள் எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்கவில்லை.இறைபொறுத்தம் நாடியே இதைச்செய்தொம்”என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.இதுதான் விவாதப்பொருள்.அதில் நீஙகள்தான் வாகாபி ஷியா சன்னி என்றெல்லாம் போனீர்கள்.இதில் அரசியலில் மதம் கலந்து நான் எங்கு பேசினேன்.

    • விவாதத்தில் ஒரு தொடர்ச்சி இருந்தால் தான் படிக்கிறவர்களுக்கு தெளிவு கிடைக்கும் அண்ணாச்சி. உங்க பின்னுட்டம் 9 க்கு நான் அங்க கொடுத்த பதிலுக்கு எதுக்கு இங்க வந்து பேசுறிங்க? உங்க பின்னுட்டம் 9 ல் தெளகீத்ஜாமாத் பற்றி பேசுறிங்க இல்லையா? அதுக்கு தான் நான் என் பின்னுடம் 9.2 ல் அரசியலில் மதத்தை கலக்கக்கூடாது என்று பதில் கொடுத்து இருந்தேன்.

      // இதில் அரசியலில் மதம் கலந்து நான் எங்கு பேசினேன்.//

  19. இனியன் தவராகவே புரிகிறீர்கள்! தவ்கீத் ஆட்சியில் கம்னியுஸ்டுகளுக்கு நாத்திகருக்கு என்ன தண்டனை என்ற கேள்விக்கு சவூதியில் நீஙகள் சொல்கிற வகாபி ஆட்சிதானெ நடக்கிறது.அவர்களுக்கு அங்கு என்ன தண்டனை கொடுத்து விட்டார்கள் என்ற அர்த்தத்தில் கேட்டிருந்தேன்.ச்வூதியில் சிறந்த ஆட்சியும் தலைசிறந்த ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள் என்றெல்லாம் நாங்கள் எண்ணவில்லை.மீண்டும் சொல்கிறேன் வகாபிகளின் கடவுட் கோட்பாடு போன்ற சிற்சில விஷயஙகளில் நாஙகள் ஒன்றுபடலாம்.இது பொதுவானது.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று திருமூலரின் கொள்கை கூட எஙகளோடு உடன் பட்டதுதான்.அதற்க்காக அடிக்குஅடி திருமூலரையா பின்பற்றி கொண்டிருக்கிறோம்.வகாபி இஸ அரசியலுக்கும் எங்களுக்கும் எந்த சம்ம்ந்தமுமில்லை.அதோடு இந்துத்துவ சக்த்திகளை எதிற்கொள்ள யாரோடு கைகோர்க்க போகிறீர்கள்?என்று கேட் க்கிறீர்கள்.நாங்கள் எப்போதும் எல்லா நல்ல மக்களோடும் கைக்கோர்த்துதான் நிற்கிறோம்.என்ன செய்திக்காக இங்கே கருத்துகளை மாங்குமாங்கென்று பதிகிறோமோ அந்த செய்தியே சொல்லுமே எம்சாகோதரர்கள் என்ன ஜாதி மதம் இனம் ஊர் என்று பார்காமல் அனைவரோடும் கரம் கோர்த்து ஆரத்தழுவி அன்பொழுகத்தான் நிற்க்கிறோம் என்று. எஙகளை தவறாக எண்ணும் மக்களும் உள்ளார்ந்து புரிந்து எங்களோடு கைக்கோர்க்க இறைவன் அருள்வான். உங்களை போன்ற உள்ளங்களும் துணையிருப்பீர்கள் இன்ஷாஅல்லா

    • இதுவரையில் உங்கள் கருத்துகளை பொறுமையாக விளக்கியதற்கு நன்றி சகோ

  20. ஒரு சின்ன விளக்கம்.ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் வகாபிகள் என்பது கற்பனை.எஙகளையெல்லாம் அடிக்குஅடி வகாபி இசத்தை பின்பற்றுபவர்கள் என்று ஊதுவதைப்போல பயங்கரவாதிகள் அனைவரையும் வகாபிகளாக முத்திரை குத்துவது. சவூதி, அப்துல்வகாபை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்ட நாடு.சவூதி உருவாக்கத்தில் அவரின் பங்கு நீங்கள் அறிந்ததே.ஆக சவூதியை வகாபி நாடு என்று தாராளமாக சொல்லலாம்.சொகுசும் உல்லாசமும் ஊதாரித்தனமான வாழ்க்கையும்,நபியும் நபித்தோழர்களும் இருந்த நிலைக்கு நேர்மாறான நடைமுறைகளுமாய் இன்றைய அரபுக்கள் இருந்தாலும் பயஙகரவாதம் அங்கு இல்லை.அவர்களுக்கு உலகத்தை பற்றிய கவலையும் இல்லை.வகாபி இசம் பயங்கரவாதமும் இல்லை.நாஙகள் அதை பின்பற்றுபவர்களும் இல்லை

    • meerasahib, பாலியல் தொடர்பான முறைமீரல்கலுகாக இலங்கை பெண் கல்லால் அடித்து கொள்ளபடுவது தொடர்பான சவுதியின் தீர்ப்பை கூட சவுதி அரேபிய ரவுடிகளின் வாகபியிசத்தின் அடிப்டையில் குறை கூறலாம். பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு வேறு நீதி என்ற நிலைபாட்டை அப்துல் எங்கு இருந்து கொண்டு வந்தார்? குரானை அடிப்படையாக கொண்டு தானே? அப்படி என்றால் மதம் அரசியலில் நுழைய ஆதரவை தானே நீங்களும் அளிகின்றிகள். ஹிந்துதுவாகள் ஹிந்து மத கோட்பாடுகளை அரசியல் படுத்துவதற்கும் , நீங்கள் உங்கள் மத நம்பிக்கைகளை அரசியல் படுத்துவதற்கும் என்ன வேறுபாடு நண்பரே?

      http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8022327.ece

      //சவூதி, அப்துல்வகாபை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்ட நாடு.சவூதி உருவாக்கத்தில் அவரின் பங்கு நீங்கள் அறிந்ததே.ஆக சவூதியை வகாபி நாடு என்று தாராளமாக சொல்லலாம்.//

      • change : அரேபிய ரவுடிகளின் வாகபியிசத்தின் “””அடிப்டையை””” குறை கூறலாம்

    • பாலியல் தொடர்பான முறைமீரல்கலுகாக அந்த இலங்கை பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் அவருடன் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கை ஆணுக்கு 100 கசையடிகள் வழங்க வேண்டும் என்றும் சவுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. குரான்-வாகபி அடிபடையிலான இந்த நீதி ஒரவஞ்சனையை பற்றி வாழ்வியல் வழிகாட்டியாக குரானை ஆதரிக்கும், அதனை அரசியல் ரீதியாக நடைமுறை படுத்த முயலுபவர்கள் தான் பதில் கூற வேண்டும்.

  21. ஆடை அணியும் பழக்கத்தை வைத்து தமிழக முசுலிம்கள் அரபுமயமாக்கப்படுகிறார்கள் என்ற வியாசனின் கூற்று அபத்தமானது.ஆடை அணிமணிகளில் ஏற்படும் மாற்றங்கள் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.நம் கண்ணெதிரில் கடந்த இரு நூற்றாண்டு காலத்தில் இந்து,முசுலிம் இரு மதத்தவர்களிடமும் ஏற்பட்ட மாற்றங்களை பார்ப்போம்.

    19-ஆம் நூற்றாண்டு,ஏன்,20-ஆம் நூற்றாண்டு துவக்க காலம் வரை பெரும்பான்மையான தமிழக இந்து தாய்மார்கள் சட்டை அணியும் வழக்கம் இருக்கவில்லை.சேலையாலேயே உடலை மூடி இருந்தார்கள்.அப்படி சேலை கட்டிய ஒரு மூதாட்டி இன்றும் சென்னை உயர்நீதிமன்ற வாயிற்பகுதியில் வேர்க்கடலை,பட்டாணி விற்பதை அங்கு செல்வோர் காணலாம்.முன்பெல்லாம் அந்த மூதாட்டி உயர்நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே வந்து விற்பார்.இப்போது அந்த கிழவி பட்டாணி கூடையுடன் உள்ளே நுழைந்தால் நீதிபதிகள் நீதி வழங்கும்போது பாதுகாப்பாக உணர முடியாது என பாதுகாப்பு காவலர்கள் அவரை உள்ளே விடுவதில்லை.அந்த சேலையால் கூட மார்பு பகுதியை மறைப்பதற்கு சில சாதியினருக்கு உரிமை இல்லாமலிருந்தது.மார்பை மறைக்கும் உரிமையை பெறுவதற்கு கூட அவர்கள் போராட வேண்டியிருந்தது.அல்லது மதம் மாற வேண்டியிருந்தது .

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது மாற தொடங்கியது.

    வங்கப் பெருங்கவி ரவீந்திரநாத தாகூரின் சகோதரரான சத்யேந்திரநாத் தாகூரின் மனைவி ஞானதநந்தினி தேவிதான், சேலைக்கு உள்ளே பெண்கள் அணியக்கூடிய ரவிக்கை, சட்டை போன்ற மேலாடைகளை பிரபலப்படுத்தியவர் என்று கூறப்படுகிறது.
    அந்நாளில் ரவிக்கை இல்லாத வெறும் சேலையுடன் ”கிளப்”களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், இவர் ரவிக்கை அணியத் துவங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது.இப்படியாக மேட்டுக்குடி சீமாட்டிகளிடம் துவங்கிய பழக்கம் படிப்படியாக அனைத்து மக்களிடமும் பரவியது.நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்வது இயல்புதானே.
    அப்படி சட்டை அணிந்த பின்னரும் அன்றைய தமிழக தாய்மார்கள் இப்போது அணிவதை போன்று சேலை அணியவில்லை.சேலை தலைப்பு இப்போது போன்று வலமிடமிருந்து இடமாக இல்லாமல் இடமிருந்து வலமாக அணிவார்கள்.கொசுவம் வெளிப்புறமாக இருக்கும்.”தட்டு சுத்தி உடுத்துதல்”என்று அதற்கு பெயர்.அப்படி உடுத்துவதற்கு தாய்மார்கள் உள்பாவாடை அணிய வேண்டியதில்லை.விவசாய வேலை,வீட்டு வேலை என கடும் உழைப்பாளிகளான அவர்களுக்கு அது சௌகரியமாக இருந்ததால் அதுவே வெகு காலம் நீடித்தது.

    தொடரும்.

    • உண்மையில் அபத்தம் என்றால் என்னவென்று அண்ணன் திப்புவுக்கு விளக்கம் குறைவு போல் தான் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழர்களுடன் தமிழர்களாக, தமிழ்ப்பெண்களைப் போலவே புடவையணிந்து, முஸ்லீம்களாக முக்காட்டிட்டு, தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்து காட்டிய தமிழ் முஸ்லீம் பெண்கள், இன்றைக்கு கறுப்புக் கோணிப்பையால் முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு அதே தமிழர்களைப் பயமுறுத்துவதற்குக் காரணம் அரபுமயமாக்கல் தான் என்பதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் திப்பு அவர்களுக்கு இல்லை. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாத வஹாபியிசத்தின் மீது அவருக்குள்ள அளவு கடந்த ஈடுபாட்டால், – அந்த வகாபியிசத்தின் தாக்கத்தாலும், வஹாபியிச எஜெண்டுகளாலும் தான், ஆணுக்குப் பெண்ணை அடிமைப்படுத்தும் அரேபியக் __________ கலாச்சாரத்தின் அடிப்படையிலும், அரேபியர்கள் மணல்காற்று, அனல்காற்று என்பவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், உருவாக்கிய ஆடையணிகளை 21வது நூற்றாண்டில், தமிழ்நாட்டில் தமிழ்முஸ்லீம் பெண்களும் அணியும் நிலை ஏற்பட்டது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வக்கில்லாததால் – சம்பந்தமில்லாத விடயங்களை எல்லாம் ஒப்பிட்டு தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதற்கு திப்புக்காக்கா தீவிரமாக முயல்வதைப் பார்த்து எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ‘தொடரும்’ என்று அடாவடித்தனம் வேறு. 🙂

      அதிலும் வேடிக்கை என்னவென்றால் வங்காளி தாகூரின் மனைவி தான் தமிழ்ப்பெண்களுக்கு ரவிக்கை போடக் காட்டிக் கொடுத்தார் என்று கதை விடுவது தான், இலங்கையில் அரசன் காசியப்பன் (தமிழ்/சிங்கள கலப்பு) காலத்து பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்களில் கூட சில பெண்கள் ரவிக்கையுடன் காணப்படுகின்றனர். அதனால் ரவிக்கை அணிவதை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியதோ அல்லது பிரபலப்படுத்தியதோ தாகூரின் மனைவி அல்ல. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் காலநிலை மட்டும் ஆடையணிகளைத் தீர்மானிக்கவில்லை. சமூகத்தில் அவர்களின் நிலை, பணம் என்பவையும், சாதியும் கூட ஆடை அணிகளைத் தீர்மானித்தன. ஏதோ காரணங்களுக்காக முஸ்லீம்களாக மதம் மாறிய/மாற்றப்பட்ட தமிழர்களிடம், அவர்களை மதம் மாற்றிய துலுக்க(துருக்கிய)/முகலாயர்களின் கலாச்சாரத் தாக்கத்தின் விளைவால், ஆடை அணிகளில், உதாரணமாக சேலையின் முந்தானையால் முக்காடிட்டுக் கொள்வது, முழு நீளக்கை கொண்ட ரவிக்கை அணிவது போன்ற பழக்க வழக்கங்கள் ஏற்பட்டன. அதற்கு முன்னால் அவர்களின் முன்னோர்களும் ரவிக்கை அணியாமல் தானிருந்திருப்பர். இக்காலத்தில் சவூதி அரேபியாவின் பணத்தினால் அல்லது சவுதி சார்பு வஹாபியிச ஏஜென்டுகளால் தமிழ் முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளில் மட்டுமன்றி ஆண்களின் ஆடையணிகளிலும், பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன, அவர்கள் திட்டமிட்டு அரேபிய கலாச்சாரத்தின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர், அதாவது அரபு மயமாக்கப் படுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏறபட்ட துலுக்க/முகலாய மயமாக்கல் தமிழ் முஸ்லீம்களின் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ அல்லது தமிழ்ப்பண்பாட்டையோ அழிக்கவில்லை, அவர்களைத் தமிழர்களிடமிருந்து பிரிக்கவில்லை, ஏனென்றால் ______முகலாய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தில் காணப்படும் சூபியிசம் போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகளை எதிர்த்து அழிக்கவோ அல்லது ஏனைய இன, மத மக்களிடையேயும், மதங்களிடையேயும் வெறுப்பையும், இன, மத பேதத்தையும் தூண்டவோ முயலவில்லை. அதாவது இக்கால வஹாபியிசத்துடன் ஒப்பிடும்போது ________முகலாய ஆட்சியின் கீழ் மத தீவிரவாதம் காணப்படவில்லை என்றே கூறலாம். ஆனால் இக்கால தீவிரவாத வஹாபியிசம் சகோதர்களாக, தாய் பிள்ளைகளாக வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்குமிடையே நிரந்த இடைவெளியை ஏற்படுத்தி விடும். இந்த அரபுமயமாக்கல் தொடர்ந்தால் இலங்கையில் முஸ்லீம்கள் எவ்வாறு தமிழர்களின் குரல்வளைக்கு குறி பார்க்கிறார்களோ, அதே நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டு விடும் என்பது தான் எனது கருத்தாகும்.

      இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே சீருடையணிந்து, அரபுக் கலாச்சாரத்தைத் தான் கடைப்பிடிக்க வேண்டுமென்று திருக்குரானோ அல்லது முகம்மது நபிகளோ கூறவில்லை. அதனால் தான் அரபுக்களல்லாத பன்னாட்டு முஸ்லீம்கள் இஸ்லாம் அரபுமயமாக்கப்படுவதை எதிர்க்கின்றனர். ஆனால் திப்பு போன்ற தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அரபுமயமாக்கலுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அது மிகவும் கவலைக்குரியது மட்டுமன்றி தமிழர்கள் அனைவரும் கூர்ந்து நோக்க வேண்டியதும் கூட.

    • இந்த பாணி சேலை 60-களில் இப்போதைய பாணிக்கு மாறத்துவங்கியது.பழைய பாணி கட்டுப்பெட்டித்தனமாகவும் புதிய பாணி நாகரீகமானதாகவும் கருதப்பட்டது.அடுத்து 80-களின் இறுதியில் 90-களின் துவக்கத்தில் ”நாகரீகத்தின்”இடத்தை பஞ்சாபி சுடிதார் கைப்பற்றியது.கடந்த பத்தாண்டுகளில் சுடிதார் கட்டுப்பெட்டி இடத்துக்கு தள்ளப்பட்டு காற்சட்டை,T சட்டை நாகரீக இடத்துக்கு வந்துள்ளது.

      இதே கால கட்டத்தில் பார்ப்பன சமூக பெண்களிடம் மடிசார் கட்டும் பழக்கம் இருந்தது.அதை கட்டிக்கொண்டு வடாம் சுற்றலாமே தவிர வேறு எந்த வேலையும் செய்ய முடியாது.ஏன்,வேகமாக நடக்க கூட முடியாது.அதனால் மற்ற சமூக பெண்களிடம் இந்த பழக்கம் பரவவில்லை.60-களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அந்த சமூக பெண்மணிகளுக்கும் பொருந்தும்.

      ஆண்களை பொருத்தவரை இந்த கால கட்டத்தில் ஆங்கிலேயரின் தாக்கத்தால் வேட்டி சட்டையிலிருந்து காற்சட்டைக்கு மாறினார்கள்.மடிப்பு கலையாத காற்சட்டையிலிருந்து இன்றைய jeans வரை அந்த ஆடைகளிலும் ஏகப்பட்ட மாறுதல்கள் வந்து போய்க்கிட்டு இருக்கு.

      முசுலிம்களை எடுத்துக்கொண்டால் இதே காலகட்டத்தில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தை தொடர்ந்து அதுவரை விவசாயத்தையே நம்பியிருந்த அவர்கள் பிழைப்பு தேடி மலேயா,பர்மா போன்ற நாடுகளுக்கு செல்ல துவங்கினர்.சில குடும்பங்களில் ஆண்கள் மட்டும் சென்றனர்.சிலர் குடும்பத்தோடு அந்த நாடுகளுக்கு சென்றனர்.அப்படி போனவர்கள் ஆண்,பெண் இருபாலரும் அந்த நாட்டு மக்களின் உடைகளை அணியத்துவங்கினர்.ஆண்கள் வேட்டி சட்டையிலிருந்து கைலி சட்டைக்கு மாறினர்.பெண்கள் சேலை சட்டையிலிருந்து கைலி,நீண்ட மேல்சட்டை,தாவணி அணிய ஆரம்பித்தனர்.அந்த முசுலிம்கள் தாயகத்துக்கு வந்து சென்ற போது அவர்களை பார்த்தும்,அவர்களால் பரிசளிக்கப்பட்ட உடைகளாலும் இங்கிருந்த முசுலிம்களும் அந்த ஆடைக்கு மாறினர்.

      இன்றும் கைலி முசுலிம்கள் ஆண்களின் முதன்மையான ஆடையாக இருந்து வருகிறது.அவர்களை பார்த்து ஆண் இந்துக்களும் கைலி கட்ட ஆரம்பித்து இன்று கைலி தமிழக மக்களின் தவிர்க்க முடியாத ஆடையாக உள்ளது.உழைக்கும் வர்க்க இந்து ஆண்களுக்கு கைலி இயல்பான ஆடையாகவும் நடுத்தர வர்க்கத்திற்கு ஓய்வு நேர ஆடையாகவும் ஆகிவிட்டிருக்கிறது.70 – 80-க்களுக்கு பிறகு படித்த இளைஞர்கள் [இந்து,முசுலிம்,கிருத்துவர் அனைவரும்] காற்சட்டை அணிய ஆரம்பித்து படிப்படியாக காற்சட்டை தமிழக ஆண்களின் ஆடையாக ஆகி விட்டது.

      கைலி ,சட்டை,தாவாணி அணிந்த முசுலிம் பெண்கள் 70-80-களுக்கு பிறகு [இது பெரும்பாலும் தென் மாவட்டங்களின் நிலவரம்] சேலைக்கு மாற துவங்கினர்.இன்றும் கூட கைலி ,சட்டை,தாவாணி அணிந்த முசுலிம் மூதாட்டிகளை தென்மாவட்டங்களில் காணலாம்.சென்னையிலும் கூட பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த தென் மாவட்ட முசுலிம்கள் செறிவாக வாழும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர்,[வெள்ளத்தை பார்க்க அசமந்தமாக வந்த அ.தி.மு.க. அமைச்சர்களை ஓட ஓட விரட்டினார்களே அந்த ஊர்தான்] வியாசர்பாடி சர்மாநகர் ,போன்ற பகுதிகளில் கைலி கட்டிய முசுலிம் மூதாட்டிகளை இன்றும் காணலாம்.

      இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கிறது.அதை நாளை எழுதுகிறேன்.இந்த தகவலை சுருக்கமாக ”தொடரும்” என்று தெரிவித்தால் கூட அது அடாவடியாக தெரிகிறது வியாசனுக்கு.அவருக்கு பயந்து இவ்வளவு நீளமா சொல்ல வேண்டியிருக்கு.என்ன இருந்தாலும் பேரறிவு பெருமான் அல்லவா.

    • தொடர்ச்சி;

      70-களில் அரபு நாடுகளில் எண்ணெய் பொருளாதாரம் பெருக ஆரம்பித்தபின் தமிழகத்திலிருந்து முசுலிம் ஆண்கள் அந்நாடுகளுக்கு வேலை தேடி செல்ல துவங்கினர்.குடும்பத்தை அழைத்துக்கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடையாது என்பதால் ஆண்கள் மட்டுமே அரபு நாடுகளுக்கு சென்றனர்.அங்கிருந்து திரும்பி வரும்போது இந்தோனேசிய கைலி ,சிங்கப்பூர் சட்டை,ஜப்பான் சேலை என்றுதான் வாங்கி வந்தனர்,யாரும் கருப்பு புர்கா வாங்கி வரவில்லை.இந்தோனேசிய கைலிகள் 80-களில் தமிழகத்தில் மிகப்பிரபலமாக இருந்தது.அந்த வடிவத்தில் தமிழ் நாட்டிலும் நெய்யலானார்கள்.இன்றும் கூட அந்த வடிவம் [design ]விற்பனையில் உள்ளது. இப்படியே இரண்டு பத்தாண்டுகள் போயின.இந்த கால கட்டத்தில் தமிழக முசுலிம் பெண்களிடம் கருப்பு புர்கா அணியும் பழக்கம் ஏற்படவில்லை.முன்னரே நாம் பார்த்த பழக்க வழக்கங்களே தொடர்ந்தன.

      அடுத்து 90-களில் படித்த முசுலிம் இளைஞர்கள் பலர் நல்ல சம்பளத்தில் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றார்கள்.இதற்கிடையே அங்கு முன்னரே சென்றிருந்த முசுலிம்களில் சிலர் அந்நாடுகளில் சிறு வணிகர்களாக மாறி இருந்தார்கள்.இந்த பிரிவினர் நல்ல வருமானம் இருந்ததால் குடும்பத்தையும் அழைத்து செல்லலானார்கள்.இப்படியாக சென்ற முசுலிம் பெண்கள் அங்கு நிலவிய ஆடைப்பழக்கத்துக்கு மாறினர்.அவர்களை பார்த்தும் அவர்கள் பரிசளித்த உடைகளாலும் படிப்படியாக புர்கா அணியும் பழக்கம் தமிழக முசுலிம் பெண்களிடம் வந்தது.

      அப்படியும் கூட அரபு பெண்கள் அணியும் புர்காக்களுக்கும் தமிழ்நாட்டில் அணியப்படும் புர்காக்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.அவர்கள் அணிவது எந்த வேலைப்பாடுகளும் இல்லாத plain கருப்பு துணியால ஆனவை.இங்கோ சேலைகளில் இருப்பது போன்றே பூ வேலைப்பாடுகள்,வண்ணத்துணிகள் ஒட்டி தைக்கப்பட்டவை,கண்ணாடி கற்கள் பதிக்கப்பட்டவை என பல வடிவங்களில் புர்காக்கள் விற்பனை ஆகின்றன.நிற்க.

      இப்படியாக முசுலிமாகட்டும் இந்துவாகட்டும் அவர்கள் ஆடை அணியும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை.அவை பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து இயல்பாக மாறுகின்றன,யாரும் திட்டம் போட்டு ஏற்படுத்துவதில்லை.மதமும் ஒரு காரணமே அன்றி மதம் மட்டுமே காரணமல்ல.நாம் பார்த்த இத்தனை மாற்றங்களுக்கும் எந்த ”மயமாக்கலையும்” ”வெங்காயமாக்கலையும்” யாரும் காரணமாக சொல்லவில்லை.இப்போது மட்டும் வியாசன் சொல்லும் ”திட்டமிட்ட அரபுமயமாக்கல்” எங்கிருந்து வந்தது.

      நாளைக்கே முசுலிம்கள் பணி நிமித்தம் துருக்கிக்கு சென்று வர நேர்ந்தால் அந்த நாட்டு பெண்கள் அணியும் புர்க்கா தமிழகத்திலும் பிரபலமாகலாம்.ஐரோப்பிய பாணி தாக்கத்திலான துருக்கி புர்கா தளர்வான காற்சட்டை,மழைக்கோட்டு போன்ற நீண்ட மேலங்கி,தலையில் அழகு மிளிரும் வேலைப்பாடு கொண்ட பெரிய கைக்குட்டை [scarf ]என இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படி துருக்கி புர்கா அணிந்தால் அது துருக்கியமயமாக்கல் என்பார்களா.என்ன பைத்தியக்காரத்தனம் இது.

      • தமிழ்நாட்டில் பல தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கலை ஆதரிப்பது மட்டுமன்றி, தமிழ்த்தோல் போர்த்திய அரபு விசிறிகள் சில, ஒரு படி மேலே போய், தமிழ் முஸ்லீம்கள் திட்டமிட்டு அரபுமயமாக்கப்படுவதையும், அவர்கள் எவ்வாறு தமது தமிழ்க் கலாச்சாரத்தை இழக்கிறார்கள் என்பதையும். அவர்களுக்கும் அவர்களின் தமிழ்ச்ச்சகோதரர்களுக்குமிடையே நிரந்தர கலாச்சார இடைவெளி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் மறைக்க சம்பந்தமில்லாத உதாரணங்களையெல்லாம் காட்டி அரபுமயமாக்கலுக்கு வக்காலத்து வாங்கும் போது, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் முஹம்மதின் மகள் மரீனா முஹம்மது மலேசிய முஸ்லீம்கள் அரபு மயமாக்கப்படுவதையும், அரேபிய ஆடை அணிவதையும் அரேபிய காலனியாக மலேசியா மாறி வருகிறது (Arabisation” of Islam in Malaysia) என்றும், எதிர்ப்பு தெரிவிப்பதை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.

        http://www.themalaymailonline.com/malaysia/article/marina-mahathir-malaysia-undergoing-arab-colonialism

        இதில் வேடிக்கை என்னவென்றால் முஸ்லீம்கள் திட்டமிட்டு அரபுமயமாக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை துணிச்சலாக ஒப்புக் கொள்ளும் துணிவு ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இருக்கிறது ஆனால் சில ‘தமிழர்களுக்கு’ அந்த துணிச்சல் இல்லாமல் போய் விட்டது என்பதை நினைக்கும் போது இந்த ‘தமிழச்சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா; என்று பாரதியார் விதியை நொந்து கொண்டது தான் நினைவுக்கு வருகிறது.

        இதில் வேடிக்கை என்னவென்றால் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப்படுவதை (Arabization) பல முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்கள் எதிர்க்கின்றனர். வெறும் கூகிள் தேடுதலிலேயே அதைப்பற்றிய எத்தனையோ கட்டுரைகளையும், செய்திகளையும் பார்க்கலாம், அப்படியிருக்க எங்களின் திப்பு காக்கா மட்டும் அப்படி எதுவும் கிடையாது என்கிற மாதிரி மறுப்புக் கட்டுரை எழுதுகிறார். அப்படியான, உண்மையை மறைக்கும் ‘தில்’ அவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. 🙂

        “Datin Paduka Marina Mahathir has criticised the “Arabisation” of Islam in Malaysia amid the institutionalisation and growing conservatism of the faith here.
        The social activist pointed out that that it is very difficult to find traditional “baju Melayu” for women during Hari Raya as Arab attire like kaftans, which are long tunics, became more popular instead over the years.

        “THIS IS JUST ARABISATION. OUR CULTURE — it’s colonialism, ARAB COLONIALISM,” Marina told Malay Mail Online in a recent interview here.

        “Kaftans are easy to wear. But what happened to our tradition, culture, everything? It’s lost,” she lamented, pointing out that Malay women below 50 generally do not know how to tie the ‘baju kurung’ skirt so that it falls into pleats and makes it easier to walk in.”

        • ஆடை அணியும் பழக்கத்தை வைத்து அரபுமயமாக்கல் என்ற வியாசனின் அபத்தத்தையே மகாதிர் மகள் மரினாவும் உளறி வைத்துள்ளார்.அந்த அம்மையார் அதை ”அரபு காலனியாக்கம்” என்று வேறு உளறியிருக்கிறார்.ஏகாதிபத்தியம்,காலனியாக்கம்,ஏகாதிபத்திய சுரண்டல் பற்றியெல்லாம் எந்த அறிவுமற்ற முட்டாள் ஒருவரால்தான் அதை காலனியாக்கம் என்று உளறமுடியும்.[ஒரு பொருள் பற்றி தெரியாமல் இருப்பது குற்றமல்ல.ஆனால் அதை தெரிந்தது போல் பேசுவது முட்டாள்தனம்தானே].அது வியாசனுக்கு பிடித்துப்போய் அந்த குப்பையை தூக்கிக்கொண்டு வந்து இங்கு கொட்டுகிறார்.அது சரி,கற்றாரை கற்றார்தானே காமுறுவர்.

          மரினா முகமது மலேய பெண்கள் பாரம்பரிய உடைகளை அணியாமல் [அதை பஜு மலாயு என தவறாக சொல்கிறார்.பஜு மலாயு எனபது ஆண்கள் அணியும் உடை.பஜு குறுங் என்பதே பெண்கள் அணியும் உடை].கப்தான் அணிவது அரபுமயமாக்கல் என்கிறார்.இந்த கப்தானும் கூட கருப்பு வண்ண அரபு நாட்டு புர்க்கா வடிவில் அமைந்தது அல்ல.பல வண்ணங்களில் பல வடிவங்களில் அவை வருகின்றன.கப்தானுக்காக கோபப்படும் மரினா பாரம்பரிய உடையில் இல்லாமல் மேற்கத்திய பாணியில் T சட்டை அணிந்திருக்கிறார்.அவரது அளவுகோலின்படி பார்த்தால் அவர் மேற்கத்தியமயமாகி விட்டார் என்றாகிறது.அப்படிப்பட்ட அவர் பாரம்பரிய உடை பற்றி ”கவலைப்படுகிறார் ” .யாரை ஏய்க்க இந்த நாடகம்.கப்தான் அணிவது சவுகரியமாக இருப்பதாக அவரே சொல்கிறார்.எது மக்களுக்கு வசதியாக இருக்கிறதோ அதுவே புழக்கத்தில் நிலை பெறும்.பாரம்பரியம் என்ற பெயரில் அசௌகரியத்தை யாரும் தூக்கி சுமக்க மாட்டார்கள்.நம்மையே எடுத்துக்கொண்டால் வே ட்டியோ,கைலியோ கட்டிக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுவது கடினம் போன்ற காரணங்களால் காற் சட்டையைத்தானே அணிகிறோம்.வியாசன்கள் பாரம்பரியத்தை தூக்கி கடாசினால் தவறில்லை.மலாய் மக்கள் கடாசினால் தவறா.

          மரினா முகமதுவுக்கு மறுப்பும் அந்த மலேயாவிலிருந்தே வருகிறது.அவையும் இணையத்தில காணக்கிடைக்கின்றன.காமாலைக்கண்களுக்கு அவை தட்டுப்படாது.நல்ல கண்களின் பார்வைக்கு;

          https://www.reddit.com/r/singapore/comments/3d3per/arabisation_of_malay_culture/

          வியாசன்களின் கற்பனையான அரபுமயமாக்கலுக்கு ‘தமிழகமுசுலிம்கள் ‘ஆளான”பின்னும் ”புரோட்டாவும் சால்னாவும்”எங்களை விட்டு போய் விடவில்லை.”நெய்சோறும்” எலும்பு போட்டு தாளித்த ”தாள்ச்சா”வும் எங்களை விட்டு போய் விடவில்லை. அரபு நாட்டினர் போல் காய்ந்த ரொட்டியும் பேரீச்சம் பழமும் கொண்டு நாங்கள் நோன்பு துறப்பதில்லை.எங்கள் நோன்பு கஞ்சியின் சுவைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை என்று இறுமாப்பு கொண்டால் கூட அது மிகையாகாது.

          எங்கள் வீடுகளில் சாதம் உண்பதில்லை.சோறுதான் உண்கிறோம்.சோற்றுக்கு நாங்கள் குழம்பு ஊற்றுவதில்லை.”ஆணம் ” தான் ஊற்றிக்கொள்கிறோம்.ஆணம் ,வெஞ்சணம் போன்ற அழகான சங்க கால தமிழ்ச்சொற்கள் இன்றும் எங்கள் வீடுகளில் உயிர்வாழ்கின்றன .

          .பார்ப்பனியத்திற்கும்,வடமொழிக்கும் எங்கள் மொழியை நாங்கள் காவு கொடுக்கவில்லை.”பள்ளிவாசல்” ”நோன்பு” ”தொழுகை” ”பெருநாள்”என எங்களின் தூய தமிழ் கண்டு தமிழன்னை எங்கள் வீடுகளில் மகிழ்ச்சியோடு வளைய வருகிறாள்.வணக்க வழிபாடுகளை அரபு மக்களிடமிருந்து கற்றுக்கொண்டதால் சில அரபு சொற்கள் முசுலிம்களிடத்தில் புழக்கத்தில் உள்ளன.அவை இன்று நேற்று வந்தவை அல்ல .பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இசுலாம் வந்த போதே அவையும் வந்து விட்டன.அதனால் எல்லாம் நாங்கள் அரபு மயமாகி விடவில்லை.இதை வியாசனால் கூட மறுக்க முடியவில்லை.புர்க்கா வருவது வரை [இருபது ஆண்டுகளாகத்தான் புர்கா புழக்கத்தில் உள்ளது] அரபுமயமாகவில்லை என்றுதான் அவரும் சொல்கிறார்.

          ஆடைகளில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை.அது திட்டமிட்டு வருவதில்லை என இவ்வளவு விரிவாக விளக்கியபின்னும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றால் எப்படி.அதிலும் புர்க்கா அணிவதால் தமிழ் சாதிக்கே அழிவு வந்து விடும் என்று ஒரு பூச்சாண்டியை வேறு அவுத்து விடுறாரு வியாசன்.ஒரே ஒரு கேள்விக்கு வியாசன் நாணயமாக பதில் சொல்லட்டும்.

          சேலையை புறக்கணித்து சுடிதார்,காற்சட்டை அணியும் இந்து பெண்களும்,செருப்பு,வேட்டி,துண்டு ஆகியவற்றை புறக்கணித்து காற்சட்டை,ஷூ.காலுறை,டை என மாறிய இந்து ஆண்களும் ஆங்கிலமயமாகி விட்டார்கள் அல்லது மேற்கத்தியமயமாகி விட்டார்கள் என்று வியாசன்கள் கோபப்படுவதில்லையே என்ன காரணம்.

          • திப்புகாக்காவிடம் ஒளிந்திருந்த வஹாபி ஜிகாதி அவரையறியாமலே வெளியே வந்து, அவர் இந்த தளத்தில் இவ்வளவு நாளும் அணிந்திருந்த அவரது மென்போக்கு (மிதவாத) தமிழ் முஸ்லீம் என்ற முகமூடியைக் கிழித்துப் போட்டு விட்டு ஓடிப் போய்விட்டதைப் பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

            அவரது வாதம் என்னவென்றால் ஆடையணியும் பழக்கம் என்பது அரபுமயமாக்கல் அல்ல, அதாவது ரவிக்கை அணியாமல் இருந்த தமிழ்ப்பெண்கள் எல்லாம், எவ்வாறு ரவிக்கை அணியத் தொடங்கினார்களோ, அது போன்றே தமிழ்நாட்டிலுள்ள தமிழ் முஸ்லீம் பெண்கள் எல்லாம் நவீன நாகரீகத்தில் கொண்டுள்ள அளவு கடந்த ஈடுபாட்டினால், நவீன நாகரீக ஆடையணிகள் அணியும் மோகத்தில், உலகப் புகழ்பெற்ற, Trendy ஆடையணிகளில் ஒன்றாகிய, கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களை பயப்படுத்துகிறார்களே தவிர, அதன் பின்னணியில் மதவாதிகள் யாரும் கிடையாது, அதாவது முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளுக்கும் மதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, எல்லாம் ‘செகரியத்துக்காகத்’ தான் என்பது தான். ஆனால் இப்பொழுது செல்வி.மரினா மஹாத்திர், அணிந்திருக்கும் ஆடையின் அடிப்படையில் அவரது முஸ்லீம் என்ற அடையாளத்தை, இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குறியாகுவதுடன், அவர் மேலைத்தேய மயமாகி விட்டாரென, -அவர் அணிந்திருக்கும் ஆடையின் அடிப்படையில்-, அவரை அரபுமயமாக்கல் பற்றிப் பேச தகுதியவற்றவராக்க முயல்கிறார். இத்தகைய பழமைவாத சிந்தனையும் கூட அரபுமயமாக்கலின் விளைவு தான். அதையும் தான் அரபுமயமாக்கலை எதிர்க்கும் மென்போக்கு முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள் அதாவது அரபுக்களைப் போன்று தாடி வைத்துக் கொள்ளும் ஆண்களும், அரேபியாவில் பாலைவனக் காலநிலைக்கேற்பவும், அரபுக்களின் பெண்களை அடிமைப்படுத்தும் பாரம்பரியத்தின் விளைவாலும் உருவாக்கப்பட்ட கறுப்புக் கோணிப்பைகளால் தலையை மூடிக் கொள்ளும் பெண்களும் மட்டும் தான் உண்மையான முஸ்லீம்கள், அத்தகைய ஆடையணிகளையும், அடையாளங்களையும் கொண்டிராத முஸ்லீம்கள், அவர்கள் எவ்வளவு தான் இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் உண்மையான முஸ்லீம்கள் அல்ல. அதாவது இந்த ‘அரபுமயமாக்கல்’ வெளியடையாளங்களின் அடிப்படையில் இருவகையான முஸ்லீம்களை உருவாக்கிறது. ‘அரபுமயமாக்கல்’ என்பது வெறுமனே ஆடையணிகளுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.

            வகாபியிசத்தின் தூண்டுதலால் ஊக்குவிக்கப்படும் அரபுமயமாக்கலையும், அடிப்படை வாதத்தையும் கேள்வி கேட்கும் அல்லது விமர்சிக்கும் முஸ்லீம்களை, அதிலும் குறிப்பாக பெண்களை அவர்களின் ஆடையணிகளில் அடிப்படையில் தண்டிப்பது அல்லது அவர்கள் முஸ்லீம்களே அல்ல என்பதும், அவர்கள் மேற்கத்தியமயமாகி விட்டவர்கள் என்பதும், அவர்களுக்கெதிராக பாட்வா அறிவிப்பதும் அவர்களின் ஒழுக்கத்துக்கு இழிவு கற்பிப்பது போன்ற செயல்களை தலிபான்களும், இஸ்லாமிய தீவிரவாத குழுக்களும் தான் இதுவரை செய்து வந்தன என்பதை நாம் அறிவோம். ஆனால் இங்கு எங்களின் மத்தியில் தமிழனாக வாழ்ந்து கொண்டு தானும் தமிழன், அதிலும் பொதுவுடைமைக் கொள்கையிலும், பெண்ணுரிமையிலும் ஈடுபாடு கொண்டவர் போலவும் எங்களுக்கு இவ்வளவு நாளும், இந்த தளத்தில் படம் காட்டிய திப்பு மஸ்தான் அவர்கள், தலிபான்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் எவ்வாறு தீவிரவாதத்தையும், அடிப்படைவாத வஹாபியசத்தால் ஊக்குவிக்கப்படும் அரபுமயமாக்கலையும் எதிர்க்கும் முஸ்லீம்களை, அவர்கள் முஸ்லீம்களே அல்ல மேற்கத்தையமயமாகிய (கூலிகள்) என்று கூறினார்களோ அது போன்ற சிந்தனையை, புகழ்பெற்ற சமூக சேவகியும், பெண்ணுரிமையிலும், மலேசிய மக்களின் பாரம்பரிய பண்பாடுகள் அரபுமயமாக்கலால் அழிந்து போவது போன்ற விடயங்களிலும் வழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபாடும் கொண்ட முஸ்லீம் பெண்ணாகிய செல்வி மரீனா மஹாத்திர் அவர்கள் “உளறுவதாக” மட்டம் தட்டுவதைப் பார்க்கும் போது, உண்மையில் திப்பு போன்ற தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எந்தளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதை உணரக் கூடியதாக உள்ளது, இது தமிழர்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டியதும் கூட.

            இதில் வேடிக்கை என்னவென்றால், இதுவரை அரபுமயமாக்கல் என்ற ஒரு மண்ணும் கிடையாது அரபுமயமாக்கல்- “வெங்காய மயமாக்கல்” என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டது மட்டுமன்றி, தனக்குத் தெரியாத விடயத்தைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்வதை விடுத்து, மதப்பின்னணியோ அல்லது மதவாதிகளின் எந்தவித உந்துதலும் இல்லாமல் தமிழ்ப்பெண்களின் ஆடையணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சிலவற்றையும், வஹாபியிச அரபுமயமாக்கலின் விளைவால் தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்கள் மத்தியில் ஏற்பட்ட புர்க்கா கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு, முழுப்பூசணிக்காயை ஒரு பிளேட் குஸ்காவுக்குள் (குஸ்காவும் அரபுச்சொல்லோ அல்லது என்ன இழவோ எனக்குத் தெரியாது, நிச்சயமாக தமிழ் அல்ல) மறைக்கப் பார்த்த திப்புநானா, இப்பொழுது என்னடாவென்றால் “மரினா முகமதுவுக்கு மறுப்பும் அந்த மலேயாவிலிருந்தே வருகிறது.அவையும் இணையத்தில காணக்கிடைக்கின்றன” என்று அரபுமயமாக்கலுக்கு மறுப்புக் கருத்தும் காணப்படுகின்றது என்று இணைப்பையும் தருகிறார். அந்தக் கிறுக்குத் தனத்தைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

            இவ்வளவு நாளும் அரபுமயமாக்கல் என்ற ஒன்றே கிடையாது எல்லாம் “வியாசன்களின் வெறும் கற்பனை” என்று கதை விட்டவர், இப்பொழுது மரினா மஹாதிரின் அரபுமயமாக்கல் கருத்துக்கு எதிர்க்கருத்தும் உண்டென்கிறார். அதாவது அரபுமயமாக்கலுக்கு எதிராக இணையத்திலுள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார், ஆனல் அரபுமயமாக்கல் “வியாசன்களின் கற்பனை” என்கிறார். அரபுமயமாக்கல் என்ற ஒன்று இருந்தால் தானே அதைப் பற்றி விவாதம் நடைபெறும், அதற்கு சார்பாகவும், எதிர்த்தும் கருத்திருக்க முடியுமென்பதை இப்பொழுதாவது உணர்ந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன். இல்லாத ஒன்றுக்கு யாரும் எதிர்க்கருத்து தெரிவிப்பதில்லை. ஆகவே இனிமேலாவது அரபுமயமாக்கல் என்பது வெறும் கற்பனை என்பது போல், உண்மையை மறைப்பதற்காக தொடர்ந்தும் உளறி, தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்ள மாட்டாரென நம்புவோம்.

            முற்போக்கு எழுத்தாளரும், சமூக சேவகியுமான செல்வி. மரீனா மஹாதிர் அவர்கள் ‘கப்தான்’ அணிவது செளகரியமானது என்பதற்காக மட்டும் அதனை ஆதரிக்கவில்லை, அது மலேசியப் பெண்களின் பாரம்பரிய ஆடையனிகளில் முக்கியமானதொன்று, அதை நாங்கள் (மலேசியர்கள்) அரபுமயமாக்கலால் இழந்து கொண்டிருக்கிறோம் என மலேசியப் பெண்ணாகிய மரீனா முகம்மது கூறியதை தப்புத் தப்பாகத் திரிக்கிறார் திப்பு. அத்துடன் செளகரியமாக, அதாவது அணிவதற்கு இலகுவான ஆடைகள் தான் நிலைக்கும் என்பது திப்புவின் கருத்தாகும். ஆகவே கொதிக்கும் தமிழ்நாட்டு வெய்யிலில் கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டு முகத்தையும் தலையையும் மூடிக் கொள்ளும் அரேபிய ஆடையணிகள் அதிக காலம் தமிழ் முஸ்லீம்களிடம் நிலைக்காது என்று இப்பொழுதே ஆரூடம் கூறுகிறார் போலிருக்கிறது. தமிழ் நாட்டில் தமிழ் முஸ்லீம்கள் தமது தமிழ்ப்பாரம்பரியத்தைக் கடாசி விட்டு – அதுவும் அரேபிய ஆடையணிகளை ‘செளகரியத்துக்காக’ மட்டும் தான் அணிகிறார்களே தவிர அதன் பின்னணியில் அரபுமயமாக்கலும், அடிப்படைவாத வஹாபியிசமும் இல்லை என்பது தான்- இன்னும் திப்புவின் வாதமென்றால் அவரைப் போன்ற நகைச்சுவை மன்னன் வேறு யாரும் இருக்கவே முடியாது.

            ஒரு முஸ்லீம் அல்லாத என்னுடைய கருத்தை அல்லது பெண்களின் கருத்துக்களை மதிக்காத வஹாபிய அரேபிய கலாச்சாரத்தின் ஈடுபாட்டாலோ என்னவோ ஒரு முஸ்லீம் பெண்ணாகிய மரீனா மகாதிரின் அரபுமயமாக்கல் கருத்தை ஜனாப் திப்பு அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல் தெரிகிறது. பல முஸ்லீம் ஆண்கள் எழுதிய கட்டுரைகளும் இணையத்தில் உள்ளன, அவற்றைப் படித்துப் பார்த்து அதைப்பற்றி அவர் அறிந்து கொண்டால் அரபுமயமாக்கல் வெறும் கற்பனையென முட்டாள்தனமாக தொடர்ந்து உளற மாட்டாரென நம்புகிறேன். திருக்குரானோ அல்லது முகம்மது நபிகளோ முஸ்லீம்கள் அனைவரும் அரபுக்கள் போன்று ஆடையணிய வேண்டுமென்றோ அல்லது அரபுக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றோ கூறாத போதிலும், திட்டமிட்ட அரபுமயமாக்கல் தொடர்வது பற்றி எவ்வளவோ ஆதார பூர்வமான கருத்துக்களும், விவாதங்களும் இணையம் முழுவதுமுள்ள போதும், பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நம்புவது போல’ இங்கே வினவு தளத்தில் மட்டும் இன்னும் அரபுமயமாக்கல் வெறும் கற்பனையென திப்பு அவர்கள் கூறிக் கொள்வதைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை.

            சும்மா பீற்றிக் கொள்வதற்குக் கூட ஒரு தமிழ் உணவைக் கூற திப்புநானாவால் முடியவில்லை என்பதை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது. புரோட்டாவும் சால்னாவும் (தமிழர்களின் பாரம்பரிய உணவும் அல்ல) அவை தமிழ்ச் சொற்களும் அல்ல. சால்னா என்பது உருது அல்லது இந்திச் சொல்லாக இருக்கலாம். சால்னா வந்ததால் குழம்பு என்ற தமிழ்ச் சொல் தமிழ்நாட்டு வழக்கில் அருகி விட்டது, ஈழத் தமிழர்கள் இன்னும் குழம்பு என்கிறோமே தவிர சால்னா என்பதில்லை. ஆகவே உருது முஸ்லீம்களின் சால்னா உங்களை விட்டுப் போகாதது ஒன்றும் பீற்றிக் கொள்ள வேண்டிய விடயமல்ல. சங்ககாலம் தொட்டு தமிழர்களின் உணவாகிய நெய்ச்சோறு இன்னும் உங்களை விட்டுப் போகாதது எனக்கும் மகிழ்ச்சியே, நோன்புக்கஞ்சி முற்றிலும் தமிழர்களுடையதல்ல, துலுக்கர்களின் உணவுப் பழக்கத்தின் விளைவு அது. அரபுமயமாக்கலின் விளைவால் ஒவ்வொரு வருடமும் நோன்புக் காலத்தில் இலங்கை அரசால் பெருமளவு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சில வேளைகளில் பழுதாகிய, அழுகிய பேரீச்சம் பழங்களை சவூதி அரேபியா குறைந்த விலையில் நன்கொடை என்ற பெயரில் கொடுப்பதுமுண்டு. பேரீச்சம்பழம் கொண்டு நோன்பு திறப்பதுடன் அது தான் சரியான முறையென வாதாடும் தமிழ்நாட்டு முஸ்லீம்களையும் எனக்குத் தெரியும் .

            தமிழில் அரபு மொழிச் சொற்களை கண்டபடி திணிப்பதுடன், அரபுப் பெயர்களை வைத்துக் கொண்டால் மட்டும் தான் உண்மையான முஸ்லீம்களாகலாம் என்றோ என்று திருக்குரானோ அல்லது முகம்மது நபிகளோ கூறாத போதிலும் வாயில் நுழையாத, அதன் கருத்தும் தெரியாத அரபுப் பெயர்களை மட்டும் வைக்கும் நீங்கள் ( அதாவது இஸ்லாத்துக்கு மதம் மாறும் பாண்டியன் என்ற பெயர் கொண்ட தமிழரைப் பரூக் அப்துல்லா என்று பெயர மாற்றினால் தான் அவர் சொர்க்கத்துக்குப் போவார் என்றெல்லாம் குர்ஆனில் கூறவில்லை), 100 % தமிழர்கள் மட்டும் வாழும் தமிழ்க் கிராமங்களில் கூட ‘பாங்கு’ என்ற பெயரில் நேரம் காலம் தெரியாமல் அரபு மொழியில் அலறி உயிரை வாங்கும் நீங்கள், தமிழர்கள் தமிழைக் காவு கொடுத்தது பற்றிப் பேசுவது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகத் தான் எனக்குப் படுகிறது. பார்ப்பனர் மறுத்தாலும் தேவாரத்தை தமிழில் மட்டும் பாடி கடவுளை வணங்க எங்களால் முடியும், எங்களின் கடவுளுக்கும் தமிழ் விளங்கும், தமிழுக்குத் தான் அவர் முதலில் செவிமடுப்பார் என்பதற்கும் எத்தனையோ ஆயிரம் கதைகள் எங்களிடம் உண்டு, ஆனால் உங்களால் ஒரு நாளாவது தமிழில் பாங்கு கூற முடியுமா? . அப்படிப் பேசினாலே, உங்களுக்கெதிராக பாட்வா அறிவித்து விடுவார்கள்.

            தமிழன்னை உங்களின் வீடுகளில் தொடர்ந்து பெருமையுடன், வலம் வர வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கும் தமிழைப் பேசும் தமிழன்னையின் பிள்ளைகளாக தம்மையும் நினைக்க வேண்டிய தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்டது போன்ற நிரந்தர இடைவெளி, அப்படியான நிலை, வஹாபியிசத்தாலும் திட்டமிட்ட அரபுமயமாக்கலாலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினாலும், அப்படி எதுவும் நடக்கக் கூடாதென்ற ஆதங்கத்தினாலும்,அது பற்றியதொரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்தினாலும் மட்டும் தான் நான் உங்களுடன் இங்கே வாதாடுகிறேன், எனது வலைப்பதிவிலும் எழுதுகிறேனே தவிர உங்களுடன் மட்டுமன்றி எந்த முஸ்லீமுடனும் எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது,

            • அண்ணன் வியாசன் பயிற்சி பெற்ற ஆலீம்கள் முன் முடிவுடன் எதையும் பேசுவார்கள் இசுலாம் என்ற மதத்துக்கு பின்புதான் மற்றது எல்லாம் என்பது அவர்களின் நினைப்பு அந்த வகையில் பேசும் ஆலீமகளுடன் பேசினால் உங்களுக்கு மண்டை காய்வது உறுதி என்னதான் விளக்கினாலும் செந்தில் ஸ்டைலில் அந்த வாழப்பழம்தான் இது என்பார்கள் அதனால அவர்களை விட்டு விட்டு வேலைய பாருங்க முடிஞ்ச அளவுக்கு உங்கள பாணியில் இசுலாம் என்ற அரபு பாஸ்ஸத்தை காலாயுங்கள் இது எனது வேண்டுகோள் அப்பதான் இந்த மாறி ஆலிம்களை திருத்த முடியும்…

            • வியாசன் எப்போதுமே தனது முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் எந்த விவாதத்தையும் விட்டு விலகியதில்லை.இப்போதும் அதை கச்சிதமாக செய்து விட்டார்.இந்த அழகில் எம்மை பார்த்து முட்டாள்தனமாக பேசுவதாக சொல்லி சிரிக்கவா அழவா என்று தெரியாமல் கேட்கிறார்.சிரிக்கலாம்.ஏனென்றால் இங்கு கெக்கே பிக்கே என சிரிப்பதுதான் அவரது பொருளற்ற உளறலுக்கு பொருத்தமாக இருக்கும்.

              \\மரினா மஹாத்திர், அணிந்திருக்கும் ஆடையின் அடிப்படையில் அவரது முஸ்லீம் என்ற அடையாளத்தை, இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குறியாகுவதுடன், //

              அறிவாளியே,அவரது இசுலாமிய நம்பிக்கையை நான் கேள்விக்குள்ளாக்கவே இல்லையே.ஆடையை வைத்து அளவிடும் அவரது அளவுகோலை அவருக்கே பொருத்திப்பார்க்க சொல்கிறேன்.அந்த அளவுகோல் படி பார்த்தால் அவர் மேற்கத்தியமயமாகி விட்டார் என்றாகிறது என்றுதான் சொல்கிறேன். அவரே பின்பற்றாத பாரம்பரிய உடையை மற்ற பெண்கள் பின்பற்ற வேண்டும் என சொல்வதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கு என்பதுதான் அதன் பொருள்.இதில் இசுலாமிய நம்பிக்கையை எங்கே கேள்வி கேட்கிறேன்.

              \\அதாவது முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளுக்கும் மதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, எல்லாம் ‘செகரியத்துக்காகத்’ தான் என்பது தான்//

              அறிவாளியே ,நான் எழுதியதை மறுபடியும் சொல்கிறேன்.

              ”இப்படியாக முசுலிமாகட்டும் இந்துவாகட்டும் அவர்கள் ஆடை அணியும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை.அவை பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து இயல்பாக மாறுகின்றன,யாரும் திட்டம் போட்டு ஏற்படுத்துவதில்லை.மதமும் ஒரு காரணமே அன்றி மதம் மட்டுமே காரணமல்ல.”

              மதமும் ஒரு காரணி ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல மேலும் திட்டம் போட்டு யாரும் கொண்டுவர முடியாது.அது இயல்பானது என்றுதான் சொல்கிறேன்.

              \\அத்தகைய ஆடையணிகளையும், அடையாளங்களையும் கொண்டிராத முஸ்லீம்கள், அவர்கள் எவ்வளவு தான் இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் உண்மையான முஸ்லீம்கள் அல்ல.//

              அறிவாளியே,உலகின் பல பகுதிகளில் பல நாடுகளில் முசுலிம்கள் வாழ்கின்றனர்.அங்கெல்லாம் பல்வேறு வகைகளில் புர்க்கா உடை பேணப்படுகிறது.அதில் ஒன்றாக துருக்கி நாட்டு புர்க்காவை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.பின்னாளில் தமிழகத்தில் கூட அந்த புர்கா புழக்கத்திற்கு வரலாம் என்றும் சொல்லியிருக்கிறேன்.இதன் பொருள் கருப்பு புர்கா அணியாதவர்கள் முசுலிம்கள் அல்ல என்றாகுமா.முட்டாள்தனத்திற்கும் ஒரு அளவில்லையா.

              \\ அரபுமயமாக்கலையும் எதிர்க்கும் முஸ்லீம்களை, அவர்கள் முஸ்லீம்களே அல்ல மேற்கத்தையமயமாகிய (கூலிகள்) என்று கூறினார்களோ அது போன்ற சிந்தனையை,……………………………மரீனா மஹாத்திர் அவர்கள் “உளறுவதாக” மட்டம் தட்டுவதைப் பார்க்கும் போது, உண்மையில் திப்பு போன்ற தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எந்தளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதை உணரக் கூடியதாக உள்ளது//

              நான் எந்த இடத்திலும் மரினாவின் இசுலாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கவில்லை,அவரது கருத்து அபத்தமானது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.எதிர் கருத்து சொல்பவருக்கு மறுப்பு சொல்லாமல் அவர்களை அடிப்படைவாதிகள் என வசை பாடுவது யோக்கியமான செயலில்லை.

              ஆம்.மரினா உளறத்தான் செய்கிறார்.அரபு காலனியாக்கம் பற்றி கேட்டதற்கு என்ன பதில்.அந்த உளறலை வியாசனும் வாந்தி எடுத்து வைத்துள்ளார்.

              \\அரேபிய காலனியாக மலேசியா மாறி வருகிறது (Arabisation” of Islam in Malaysia) என்றும்,//

              இதுதான் அவரது வாந்தி.வியாசனுக்கு துப்பிருந்தால் மலேசியா எவ்வாறு அரபு காலனியாக மாறி வருகிறது என்று இப்போது விளக்க வேண்டும்.வியாசனுக்கு அறிவு நாணயம் என்று ஒன்று இருந்தால் மலேசியா அரபு காலனியாகி வருகிறது என்று விளக்கி மெய்ப்பிக்க வேண்டும்.அல்லது முட்டாள்தனமான உளறல்தான் என ஒப்புக்கொள்ள வேண்டும்.

              \\இவ்வளவு நாளும் அரபுமயமாக்கல் என்ற ஒன்றே கிடையாது எல்லாம் “வியாசன்களின் வெறும் கற்பனை” என்று கதை விட்டவர்,//
              \\அரபுமயமாக்கலுக்கு மறுப்புக் கருத்தும் காணப்படுகின்றது என்று இணைப்பையும் தருகிறார். அந்தக் கிறுக்குத் தனத்தைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை//

              .அரபுமயமாக்கல் பற்றிய வாத பிரதிவாதங்கள் யாரும் அறியாதவை அல்ல,வியாசன் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
              ஆடை அணியும் பழக்கத்தை வைத்து அரபுமயமாக்கல் என்று சொல்வது அபத்தம் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.வியாசன்களின் கற்பனை என்று ஒரு போதும் சொன்னதில்லை.கூசாமல் பொய் சொல்லி தனது யோக்கியதையை வெளிக்காட்டுகிறார் .விவாதங்கள் கண் முன்னால் உள்ளன,பார்த்துக்கொள்ளலாம்.

              இப்ப தெரியுதா.யார் கிறுக்கன் என்று.

              \\புரோட்டாவும் சால்னாவும்//

              அறிவாளியே;அவற்றை எதற்காக சொல்லியிருக்கிறேன்.அரபுமயமாக்கல் கள்ளப்பரப்புரையின்படி நாங்கள் ”அரபுமயமான” பின்னும் எங்களின் பழைய உணவுப்பழக்க வழக்கங்கள் மாறவில்லை என காட்டுவதற்காக குறிப்பிட்டிருக்கிறேன்,உணவும் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்பதை அறிவாளிகள் அறிய மாட்டார்களா.,மற்றபடி பேரீச்சம் பழங்களை நாங்களும் நோன்பு துறக்க உண்கிறோம்.ஆனால் அது எங்களின் முதன்மை உணவு அல்ல.அரபுக்களுக்கு அது முதன்மை உணவு.கஞ்சிதான் எங்களின் முதன்மையான உணவு.

              \\தமிழில் அரபு மொழிச் சொற்களை//

              தமிழில் அரபு சொற்கள் ஏராளமாக .கலந்துள்ளன.அவை சமத்கிருதம் போல பண்பாட்டு படையெடுப்பு காரணமாக வரவில்லை.முசுலிம்கள் ஆயிரம் ஆண்டுகள் இந்திய துணை கண்ட பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்ததால் வந்தவை.எடுத்துக்காட்டாக வக்காலத்து,வக்கீல்.ரசீது போன்றவற்றை சொல்லலாம்.

              அரபு மொழியில் பெயர் வைப்பது பழைய அடையாளங்களை முற்றிலும் துறப்பதர்காகத்தான்.அதில் சமரசம் செய்திருந்தால் பார்ப்பனிய சாதி படிநிலை இந்திய கிருத்துவத்தில் தொடர்வதை போல எங்களிடமும் தொடர்ந்திருக்கும்.அரபு பெயர்கள் இசுலாமிய அடையாளத்தை மட்டுமே காட்டும்.பழைய தமிழ் பெயரில் தொடர்ந்திருந்தால் சாதியும் பின்னாலேயே வந்திருக்கும்.

              \\ஒரு நாளாவது தமிழில் பாங்கு கூற முடியுமா?//

              பல்வேறு மொழி பேசுபவர்களும் இசுலாத்தை பின்பற்றுகிறார்கள்.அனைவருக்கும் புரியும் வகையில் பொதுவாக அரபு மொழி பயன்படுத்தப்படுகிறது.தமிழ் மட்டுமே பேசுகிற சிற்றூரில் தமிழில் பாங்கு என்று ஆரம்பித்தால் அது பல பிரிவினைகளுக்கு அழைத்து செல்லும்.ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு பாங்கு என பிற மொழியாளர்களுக்கு புரியாத ஒன்றாக இசுலாம் மாறிப்போகும்.அதை தவிர்க்கவே பொதுவான ஒரு மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது.

              \\நிரந்தர இடைவெளி, அப்படியான நிலை, வஹாபியிசத்தாலும் திட்டமிட்ட அரபுமயமாக்கலாலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடுமோ//

              வியாசன் போன்ற இசுலாமிய எதிர்ப்பு வன்மம் கொண்டோரெல்லாம் தமிழ் மக்கள் ஒற்றுமை பற்றி கவலைப்படுகிறார்கள்.இதுதான் சாத்தான் வேதம் ஓதுவதோ.இலங்கையின் இடைவெளி பற்றி கதைக்கும் யோக்கியர் பின்னூட்டம் எண் 8.1.1.2.2.1.1.1.2 க்கு ஒரு பதிலும் சொல்லாமல் சகலத்தையும் மூடிக்கொண்டிருப்பது ஏன்.

              • திப்புக்காக்கா இவ்வளவு விரைவில் தொப்பியைப் பிரட்டுவார் என்று நான் நினைக்கவேயில்லை. தொப்பி பிரட்டும் கலையில் இலங்கை முஸ்லீம்களை யாரும் வெல்ல முடியாது, இலங்கையில் தொப்பி பிரட்டிகள் என்பதன் கருத்து என்னவென்றால், தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் இருக்கும் போது தம்மைத் தமிழர்களின் சகோதரர்களாகக் காட்டிக் கொண்டு/நடித்துக் கொள்ளும் தமிழ் பேசும் முஸ்லீம்கள், சிங்களப்பகுதிகளில் வாழும் போது சிங்களச் சார்பாக மாறி விடுவார்கள். அதாவது அவர்களின் நிலைப்பாட்டை சந்தர்ப்பத்துக்கேற்றவாறு உடனே மாற்றிக் கொள்வார்கள் என்பது தான், அதை இலங்கையில் தொப்பி பிரட்டி முஸ்லீம்கள் என்பார்கள்.

                நான் இதுவரை வகாபியிசத்தின் தீவிர தாக்கத்தால் தமிழ்நாட்டில் எந்தளவுக்கு அரபுமயமாக்கல் நடைபெற்றுள்ளது என்பதற்கு “செளகரியத்துக்காக” கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்தும் தமிழ் முஸ்லீம் பெண்களை மட்டும் அரபுமயமாக்கலுக்கு ஆதரமாகக் காட்டவில்லை, தமிழ் முஸ்லீம்கள் அரபுக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பது, அரேபியாவைப் பற்றி பீற்றிக் கொள்வது, அரபுப் பெயர்களை வைத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக அரபு மொழியைத் தமிழில் கலப்பது போன்ற பல விடயங்களையும் குறிப்பிட்டேன். ஆனால் முதலில் அரபுமயமாக்கல் என்ற ஒன்றே கிடையாது, எல்லாம் கற்பனை எனவும். ‘அரபுமயமாக்கல் அல்ல வெங்காயமயமாக்கல்’ எனவும், “வியாசன்களின் கற்பனையான அரபுமயமாக்கலுக்கு ‘தமிழகமுசுலிம்கள் ‘ஆளான” பின்னும்” எனவும் அரபுமயமாக்கல் என்பதையே கற்பனையென மறுத்தவர் அல்லது மறுக்க முயன்றவர், இப்பொழுது என்னடாவென்றால் அரபுமயமாக்கல் உண்மை, அதை நான் மறுக்கவில்லை, நான் மறுத்ததெல்லாம் ஆடையணியும் பழக்கத்தை வைத்து அரபுமயமாக்கல் இல்லை என்பது தான் எனச் சளாப்புகிறார் என்பதை விடத் திப்புக்காக்கா தனது தொப்பியை மாற்றி போட்டுக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

                பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழர்களுடன் தமிழர்களாக, தமிழ்ப்பெண்களைப் போலவே புடவையணிந்து, முஸ்லீம்களாக முக்காட்டிட்டு, தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்து காட்டிய தமிழ் முஸ்லீம் பெண்கள், இன்றைக்கு கறுப்புக் கோணிப்பையால் முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு அதே தமிழர்களைப் பயமுறுத்துவதற்குக் காரணம் அரபுமயமாக்கல் தான் என்பதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் திப்பு அவர்களுக்கு இன்னும் வரவில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப் படுகிறார்கள் என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறாராம்.

                அப்படியானால், தமிழ்நாட்டிலுள்ள தமிழ் முஸ்லீம் பெண்கள் எல்லாம் நவீன நாகரீகத்தில் கொண்டுள்ள அளவு கடந்த ஈடுபாட்டினால், நவீன நாகரீக ஆடையணிகள் அணியும் மோகத்தில், உலகப் புகழ்பெற்ற, Trendy ஆடையணிகளில் ஒன்றாகிய, கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களை பயப்படுத்துகிறார்களே தவிர, அதன் பின்னணியில் மதவாதிகள் யாரும் கிடையாது, அதாவது முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளுக்கும் மதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, எல்லாம் ‘செகரியத்துக்காகத்’ தானா?.

                தமிழ் முஸ்லீம் பெண்கள் சில வருட காலமாக கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்துவ்தற்குக் காரணம் செளகரியமும், புதிய அரேபிய ஆடை அலங்காரத்தில் அவர்களுக்கு உள்ள நாட்டத்தினாலே தவிர, அல்லது அதன் பின்னணியில் மதவாதிகளும், சவூதி வஹாபியிசத்தின் தூண்டுதலும் இல்லை என்று அவர் அல்லா சாட்சியாகக் கூறுவாரா?

                நான் திப்புவை வெல்ல வேண்டுமென்ற நோக்ககத்தில் இங்கு இந்தக் கருத்துப் பரிமாறத்தில் கலந்து கொள்ளவில்லை. திப்பு அவர்களின் கையில் தேவைக்கதிகமாக நேரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. எனக்கும் அவரது கோமாளித்தனத்துகெல்லாம் பதிலளிக்க வேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும் கூட, குறிப்பாக வாரநாட்களில் அந்தளவுக்கு நேரமில்லை. ஆனால் பதிலளிக்காமல் விட்டால், “…… இருவரின் வாதங்களையும் ‘திறனாய்வு’ செய்து வியாசனின் வாதங்கள்தான் முட்டாள்தனமானவை” என்று அவரே முடித்துக் கொள்வார்.

                எந்த விவாதத்திலும் நடுவர் அல்லது பார்வையாளர்கள் தான் யார் வென்றவர், யார் முட்டாள் என்பதைத் தீர்மானிப்பார்கள் ஆனால் திப்புவுடன் யாராவது வாதாடினால் இருவரின் வாதங்களையும் அவரே “திறனாய்வு’ செய்து அவரை எதிர்ப்பவரின் கருத்துக்கள் எல்லாம் முட்டாள்தனமானவை என்று அவரே முடித்துக் கொள்வாராம். இப்படியானதொரு நகைச்சுவை மன்னனுடன் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்தவுடனேயே என்னையறியாமல் எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.

                ///வியாசனுக்கு அறிவு நாணயம் என்று ஒன்று இருந்தால் மலேசியா அரபு காலனியாகி வருகிறது என்று விளக்கி மெய்ப்பிக்க வேண்டும்///

                மரீனா மஹாதிர் கூறிய கருத்தை சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் போனதால் அவரிடம் விளக்கம் கேட்பதற்குப் பதிலாக, அவரது கருத்துக்கு என்னிடம் இவ்வளவு வலுக்கட்டாயமாக விளக்கம் கேட்கும் இவருக்கு, என்ன இசகு பிசகோ, யாருக்குத் தெரியும். அவருக்கு விளக்கம் குறைவென்றால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்.

                முதலில், மரீனா மகாதிரின் கல்விப்பின்னணி, சமூகசேவை, உலகளாவிய எழுத்தாளர்களுடனும், பெண்ணியவாதிகளுடனான தொடர்பு, முற்போக்கு சிந்தனைகள், எழுத்துகள் என்பவற்றையும், எங்களின் அருமை அண்ணன் திப்பு நானா இங்கு உளறுவதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் எவருக்குமே தெரியும், உண்மையில் செல்வி. மரீனா மகாதிரா அல்லது திப்புநானாவா உளறுகிறார்கள் என்பது. 🙂

                திப்புக்காக்கா மிகவும் குழம்பிப் போன சொல் என்னவென்றால் ஆங்கிலத்தில் Colonization (தமிழில் காலனித்துவம்) என்ற சொல். Colonization என்றால் கப்பலில் பீரங்கிகளுடன் வந்திறங்கி, அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து குதிரையில் வந்து கோயில்களை இடித்து, அவற்றைக் கொள்ளையடித்து நாட்டைப் பிடித்து ஆள்வது தான் என்ற ஒரு கருத்தைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. ஆகவே திப்பு நானாவின் குழப்பத்தைப் போக்க Colonization க்கு சில உதாரணங்களைக் காட்ட முயல்கிறேன்.

                Colonization என்றால் ஐரோப்பியர் காலத்து அந்தக் காலனித்துவம் மட்டுமல்ல. வெளியிலிருந்து அதிகளவில் குடியேறும் அல்லது அடிக்கடி வருகை தருபவர்களால் அந்த நாட்டில் அல்லது அந்தப் பகுதிகளில் வாழ்கிறவர்களுக்கு இடைஞ்சல், அவர்களின் மொழி கலாச்சாரம், வேலைவாய்ப்பு என்பவற்றில் தாக்கம் ஏற்படுவதைக் கூட ‘Colonize’ பண்ணுதல் என்ற சொல்லால் குறிப்பிடலாம். மலேசியாவுக்கு அரபுக்களின் வருகை, தீவிரவாத வஹாபியிசம் என்பனவற்றால் மலேசிய மக்களின் ஆடையணி மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்பவை அரபுமயமாக்கப் படுவதை ‘Arab Colonization’ என்கிறார் மரீனா மகாதிர். அதன் பொருள் அரபுக்கள் எல்லாம் மலேசியாவில் குடியேறி மலேசியர்களை வாள்முனையில் ஆளுகிறார்கள் என்று அவர் கூறுவதாகப் பொருள் அல்ல.

                உதாரணமாக, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் குடியேறுவது அல்லது குடியேற்றப்படுவது ‘State Sponsored Sinhala Colonization’ என அழைக்கப்படுகிறது. இலங்கைக் குடிமக்களாகிய சிங்களவர்கள் இலங்கையின் வடக்கில் குடியேறுவதையும் Colonization என்ற சொல்லால் குறிப்பிடுவதை அவதானிக்கவும். அதாவது அவர்களின் வருகையால் அங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கையில், அவர்களின் கலாச்சாரத்தில், பண்பாட்டில், மொழியில் தாக்கங்கள் ஏற்படுகின்றன. அது போலவே அரபுக்களாலும் வஹாபியிசத்தாலும் மலேசிய மக்களின் கலை, கலாச்சார, பண்பாடு, ஆடையணிகள் என்பன அரபுமயாக்கப் படுகின்றன அதனால் அதை Arab Colonization’ என அழைக்கிறார்/ஒப்பிடுகிறார் செல்வி மகாதிர்.

                இந்தியாவில் கூட பீஹாரிகள் மற்றும் ஹிந்தியர்களின் குடியேற்றத்தை மகாராஸ்டிர மக்கள் எதிர்த்த போது ‘Internal Colonization’ என்று குறிப்பிட்டனர். வட இந்தியக் கூலிகள் தமிழ்நாட்டுக்குப் படையெடுப்பதும் ஒருவகை Internal Colonization தான். அத்துடன் எறும்புகள் கூட்டமாக, அதிகளவில் வீட்டுக்குள் குடியேறுவதைக் கூட Colonization’ என்று தான் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றானர். ஆகவே என்ன கருத்தில் மரீன மகாதிர் Arab Colonization’ என்று கூறினார் என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன்.

                அரபுக்களைப் பற்றிப் பீற்றிக் கொள்வதில் அளவு கடந்த ஆசை கொண்ட தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எல்லாச் சொற்களும் அரபிளிருந்தே வந்தவை என்று கூடக் கூறுவார்கள் யார் கண்டது.

                வக்கீல் அரபுச் சொல் அல்ல. அரபுக்கள் ஆங்கிலத்திலிருந்து இரவல் வாங்கிய சொல்.

                வக்கீல் லத்தீன் வேர்ச்சொல் vocare இலிருந்து உருவாகிய சொல். to call one who intercedes for another

                Middle English advocat, from Anglo-French, from Latinadvocatus, from past participle of advocare to summon, from ad- + VOCARE to call, from voc-, vox voice — more at voice

                ரசீதும் அரபுச் சொல் அல்ல:

                late Middle English: from Anglo-Norman French receite, from medieval Latin recepta ‘received,’ feminine past participle of Latin recipere . The -p- was inserted in imitation of the Latin spelling.

                ///பின்னூட்டம் எண் 8.1.1.2.2.1.1.1.2///

                இந்த விடயத்தை திசை திருப்புவதற்காக நீங்கள் புலிகளை இழுத்து வர முயற்சிக்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு, அதாவது யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப் பட்டதற்கு நான் பலமுறை பதிலளித்து விட்டேன். முதலில் யாழ்ப்பாணத்தின் வரலாற்றிலேயே 100,000 முஸ்லீம்கள் அங்கு வாழ்ந்ததில்லை. எல்லாம் உங்களைப் போன்றவர்களும், ஈழத்தமிழர் எதிர்ப்பு பார்ப்பனப் பத்திரிகைகளும் ஊதிப்பெருக்கியவை தான். 12000 பேருக்கு அதிகமாக யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்ததில்லை. அது மட்டுமன்றி சிஙகள்- தமிழ் யுத்தத்தில் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அப்பாவிகள் அல்ல, சிங்களவர்களுக்கு உளவு பார்த்தும், துணை போயும், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுக் கொடுத்தும், இலங்கையில் தமிழினத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்தவர்கள். இலங்கை மண்ணின் மைந்தர்களாகிய தமிழரும் சிங்களவரும் தேவையில்லாமல் அடித்துக் கொண்டு சாக, அதில் பயனடைந்தவர்கள் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள்.

                கிழக்கில் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை முஸ்லீம்கள். இளைத்த கொடுமைகள், கொலைகள், கற்பழிப்புகள் எல்லாவற்றையும் ஆதார பூர்வமாக எனது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறேன். தேடுங்கள் கிடைக்கும். அல்லது நீங்கள் அந்த ‘Can of Worms’ மீண்டும் இங்கே திறக்கத் தான் வேண்டுமென்று அடம்பிடித்தால், நான் என்ன செய்ய முடியும்.

                • வியாசனின் புலம்பலை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.பாவம் விவாதத்தை விட்டு ஓடிப்போக [பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பதில்லை என்பதை இங்கு நினைவு படுத்திக்கொள்ளலாம்.]ஒரு சாக்காக நேரமில்லை,நேரமில்லை என சொல்லிக்கொண்டே கடந்த ஒரு மாதமாக இந்த பதிவில் பின்னூட்டம் போட்டுக்கிட்டேதான் இருக்கிறார்.

                  அரபுமயமாக்கல் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுவது உண்மைதான் .ஆனால் தமிழக முசுலிம்கள் அரபுமயமாகி விட்டார்கள் என்பது வியாசனின் கற்பனை என்று நான் எளிமையாகத்தான் சொல்கிறேன்.இந்த விவாதத்தை ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவனிடம் கொடுத்து படிக்கச்சொன்னால் அவன் கூட இதை புரிந்து கொள்வான்.வியாசனின் விதண்டாவாத மூளையோ பசப்புகிறது.

                  \\\நான் இதுவரை வகாபியிசத்தின் தீவிர தாக்கத்தால் தமிழ்நாட்டில் எந்தளவுக்கு அரபுமயமாக்கல் நடைபெற்றுள்ளது என்பதற்கு “செளகரியத்துக்காக” கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்தும் தமிழ் முஸ்லீம் பெண்களை மட்டும் அரபுமயமாக்கலுக்கு ஆதரமாகக் காட்டவில்லை, தமிழ் முஸ்லீம்கள் அரபுக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பது, அரேபியாவைப் பற்றி பீற்றிக் கொள்வது, அரபுப் பெயர்களை வைத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக அரபு மொழியைத் தமிழில் கலப்பது போன்ற பல விடயங்களையும் குறிப்பிட்டேன்//

                  எங்கே குறிப்பிட்டிருக்கிறார்.முன்னர் அவர் எழுதியது.

                  \\தமிழ் முஸ்லீம்கள் திட்டமிட்டு அரபுமயமாக்கப்(Arabization) படுகின்றனர் என்பதை உங்களைப் போன்ற தமிழர்கள் உணராதிருப்பது மிகவும் கவலைக்குரியது.தமிழ் முஸ்லீம்கள் எந்தளவுக்கு அரபுமயமாக்கப்படுகின்றனர் என்பதற்கு அரேபிய நாட்டுப் பாலைவன ஆடைகளை அணிந்த முஸ்லீம் ஆண்களினதும், பெண்களினதும் எண்ணிக்கை தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் கூட அதிகரித்திருப்பதை அவதானித்த எவருமே ஒப்புக் கொள்வர். இவ்வளவுக்கும் அரபுக்களின் ஆடைகளையோ அல்லது கலாச்சாரத்தையோ தான் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என முகம்மது நபிகள் ஒரு போதும் கூறவில்லை(யாம்). கடந்த சில ஆண்டுகளில் தீவிரவாத வகாபியிசத்தின் தாக்கம் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டிகளில் எல்லாம் பரவி விட்டது என்பது தான் உண்மை. பல நூற்றாண்டுகளாக தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழின உணர்வுடன் தமிழர்களாக வாழ்ந்த தமிழ் முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்குமிடையே இந்த அரபுமயமாக்கலும், வஹாபியிசமும் ஒரு நிரந்தர இடைவெளியை ஏற்படுத்தி//

                  [அய்யோ, அப்பா;கழுதை விட்டை போட்ட மாதிரி அள்ளி கொட்டுறதுல வியாசனை யாரும் மிஞ்ச முடியாது.]

                  கருப்பு புர்கா போடும் இந்த தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பற்றி வியாசன் முன்னர் சொன்னது.

                  \\ பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழர்களுடன் தமிழர்களாக, தமிழ்ப்பெண்களைப் போலவே புடவையணிந்து, முஸ்லீம்களாக முக்காட்டிட்டு, தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்து காட்டிய தமிழ் முஸ்லீம் பெண்கள், இன்றைக்கு கறுப்புக் கோணிப்பையால் முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு அதே தமிழர்களைப் பயமுறுத்துவதற்குக் காரணம் அரபுமயமாக்கல் தான்//

                  அதாவது முந்தைய தலைமுறை அரபுமயமாகவில்லை என்று சொல்கிறார்.ஆனால் அவர்களும் அரபு பெயர்களைத்தான் கொண்டிருந்தார்கள் அப்போதும் அரபு சொற்களை முசுலிம்கள் பயன்படுத்தினார்கள் என்பதை மறந்து விட்டு இப்போது இப்படி புரட்டி பேசுகிறார்.

                • \\றுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்தும் தமிழ் முஸ்லீம் பெண்களை மட்டும் அரபுமயமாக்கலுக்கு ஆதரமாகக் காட்டவில்லை, தமிழ் முஸ்லீம்கள் அரபுக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பது, அரேபியாவைப் பற்றி பீற்றிக் கொள்வது, அரபுப் பெயர்களை வைத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக அரபு மொழியைத் தமிழில் கலப்பது போன்ற பல விடயங்களையும் குறிப்பிட்டேன். //

                  எங்கே குறிப்பிட்டிருக்கிறார் என எனது ஊன் கண்ணுக்கு தெரியவில்லை.எங்கே ஞானக்கண் கொண்டு அவர் பார்த்து சொல்லட்டும்.

                • .வியாசன் திருவாய் மலர்ந்தது.[ஒன்று இந்த உளறலை எழுதிய மூளைக்கு கிறுக்கு பிடித்திருக்கவேண்டும்.அல்லது இதை படிப்பவருக்கு கிறுக்கு பிடிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்]

                  \\பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழர்களுடன் தமிழர்களாக, தமிழ்ப்பெண்களைப் போலவே புடவையணிந்து, முஸ்லீம்களாக முக்காட்டிட்டு, தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்து காட்டிய தமிழ் முஸ்லீம் பெண்கள், இன்றைக்கு கறுப்புக் கோணிப்பையால் முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு அதே தமிழர்களைப் பயமுறுத்துவதற்குக் காரணம் அரபுமயமாக்கல் தான் என்பதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் திப்பு அவர்களுக்கு இன்னும் வரவில்லை//

                  இந்த நாற வாய் அடுத்த வரியிலேயே என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்.

                  \\ஆனால் தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப் படுகிறார்கள் என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறாராம்.//

                  அடுத்து ஒரு உளறல்,

                  \\அதாவது முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளுக்கும் மதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, எல்லாம் ‘செகரியத்துக்காகத்’ தானா?.//

                  மதமும் ஒரு காரணம் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.ஆனாலும் இப்படி விதண்டாவாதம் பண்ணுறதை பார்க்கும்போது

                  ”அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் கூட்டு சேர வைக்கிற”
                  என்று கவுண்டமணி ஒரு நகைச்சுவை காட்சியில் சலித்துக்கொள்வது யாருக்கும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.

                  இந்த இணைப்பில் உள்ள படக்காட்சியில் பேசும் எச்,ராஜாவை போலவே பேசுறார் வியாசன்.

                  https://www.youtube.com/watch?v=sE9zWM5JRho

                  அனைத்து மதவெறியர்களும் இப்படித்தான் முன்னுக்கு பின் முரணாக புரட்டி புரட்டி பேசுவார்கள் போலும்.

                • \\மரீனா மஹாதிர் கூறிய கருத்தை சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் போனதால் அவரிடம் விளக்கம் கேட்பதற்குப் பதிலாக, //

                  ஒருவரின் கருத்தை மற்றொருவர் ஏற்று பரப்புரை செய்தால் அவருக்கும் அந்த கருத்தின் மீதான விமர்சனத்திற்கு பதில் சொல்ல கடமை இருக்கிறது.மேலும் மெரினா இங்கு நம்மிடையே வந்து விவாதிக்கிறாரா என்ன .

                  \\ Colonization க்கு சில உதாரணங்களைக் காட்ட முயல்கிறேன்.//

                  இவர் கூறும் எடுத்துக்காட்டுகள் எல்லாமே சிங்களர் குடியேற்றம்,வட இந்திய,பீகார் மக்கள் பிழைக்க போனது,[எறும்புகள் உட்பட ] எல்லாமே குடியேற்றத்தையே காட்டுகின்றன.ஆனாலும் அரபுக்கள் குடியேறாமல் மலேசியாவை காலனியாக்குவதை இந்த எடுத்துக்காட்டுகள் மெய்ப்பிக்கின்ரனவாம்.அரபுக்கள் மட்டும் ”ரிமோட் கண்ட்ரோல்” கொண்டு மலேசியாவை காலனியாக்குகிறர்களா.இதென்ன லூசுத்தனமா இருக்கு.

                  சுற்றுலாவுக்கு ,வணிகத்திற்கு,கலாச்சார பரிவர்த்தனைகளுக்கு என வரும் பிற கலாச்சார மக்களின் வருகையால் ஒரு நாட்டில் ஆடையணி,மொழி,உணவு பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை பண்பாட்டு தாக்கம் என்றுதான் சொல்ல முடியும்.காலனியாக்கம் என்று சொல்ல முடியாது,

                  வக்கீல் என்பது ஆங்கில சொல்லாகவே இருந்து விட்டு போகட்டும்.ஆனால் அது அரபு மொழி மூலமாக இங்கு வந்தது எனபது உண்மைதானே,அரபு சொற்கள் வந்ததால் நாங்கள் அரபுமயமாகி விடவில்லை என்பதற்காகத்தான் அவற்றை சுட்டிக்காட்டியுள்ளேன்.

                  \\‘Can of Worms’//

                  மதவெறியால் புழுத்துப்போன மூளையிலிருந்து வேறு என்ன வரப்போகிறது.ஆனாலும் நான் கேட்டதற்கு மட்டும் பதில் வரவே மாட்டேங்குது.ஒரு இலட்சமா பநிரெண்டாயிரமா என்பதல்ல கேள்வி.[எனக்கு தெரிந்த தகவலை வைத்து 60,000 என்றுதான் எழுதியிருக்கிறேன்.வகுப்பு வாத வெறி கொண்ட மூளைக்கு எல்லாமே தாறுமாறாத்தான் தெரியும் போல] .”குற்றம் செய்த நபர்களை மட்டும் தண்டிப்பதை விட்டு அவர்கள் சார்ந்த சமூகத்தையே தண்டிப்பது இனவெறி பாசிசமா இல்லையா என்ற கேள்விக்கு வியாசன் நாணயமாக பதில் சொல்லட்டும்.

          • பின் குறிப்பாக எழுதியது இது.சேர்க்கையில் விடுபட்டுவிட்டது.இதையும் சேர்த்துக்கொள்ளவும்.\\வியாசன்களின் கற்பனையான அரபுமயமாக்கலுக்கு ‘தமிழகமுசுலிம்கள் ‘ஆளான”பின்னும் ”புரோட்டாவும் சால்னாவும்”எங்களை விட்டு போய் விடவில்லை//என்று நான் சொல்லியிருப்பதன் பொருள் தமிழகமுசுலிம்கள் அரபுமயமாகிவிட்டார்கள் என்பது வியாசனின் கற்பனை என்பதுதான்.அரபுமயமாக்கல் என்ற குற்றச்சாட்டே வியாசனின் கற்பனை என ஒருபோதும் சொன்னதில்லை.

            • தமிழ் சமூகம் பேன்ட் சுடிதார் மாறியதை போல , இசுலாமிய பெண்கள் வசதிக்காக வண்ண புர்கா அணிகிறார்கள்.அதுவும் கூட வெளிநாடு போனவர்கள் பரிசாக கொண்டுவந்து கொடுத்தால் தான் என்கிறீர்கள் . வெளிநாடு போன இசுலாமிய ஆண்கள் வெள்ளை புர்கா அணியவில்லையே ?

              வண்ண புர்காவை சியா ஜாதியினரும் கருப்பு புர்காவை சன்னி ஜாதியினரும் போடுவார்கள் என்பதே ஏன் அறிவு.

              என்னுடைய நண்பன் பெண் பார்க்கும் போது புர்கா போடாத போட்டோவை பார்த்து அந்த பெண் இறை பயம் இல்லாதவள் ஆகவே வேண்டாம் என்று கூறி விட்டான்.

              தமிழ் சமூகத்தில் ,அவள் புடவை கட்டவில்லை அதனால் வேண்டாம் என்றெல்லாம் சொல்லி கேள்வி பட்டது இல்லை . வசதிக்காக ஏற்பட்ட மாற்றம் எனபது உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள சொல்லி கொள்வது .

              வியாசனுக்கு பதில் கூறும் போது இந்த கருத்தை அம்போ வென விட்டு விட்டேர்களே

              • \\\வெளிநாடு போன இசுலாமிய ஆண்கள் வெள்ளை புர்கா அணியவில்லையே ?//

                தமிழ் சமூகம் அரபுமயமாகவில்லை என்பதற்கான சான்றாகத்தான் இதை சொல்ல முடியும்.அரபு கலாச்சாரத்தின் மீது மோகம் கொண்டு அலைபவர்களாக நாங்கள் இருந்திருந்தால் ஆண்களும் அரபு உடைக்கு மாறி இருக்க வேண்டுமே.அப்படி நடக்கவில்லையே.ஆனாலும் இதை அரபுமயமாக்கலுக்கு ஆதாரமாக தூக்கிட்டு வர்றாரு இந்த அறிவாளி.அய்யோ ராமா,இவுங்களுக்கு நல்ல புத்திய குடுக்க கூடாதா நீ.

                இதைத்தான் நண்பர் இனியன் இசுலாமிய ஆண்களும் பெண்களும் அரபு உடைக்கு மாறி வருவதாக அப்பட்டமாக புளுகிய வியாசனிடம் கேட்டார்.அந்த மேதாவியோ இன்று வரை பதிலேதும் சொல்லாமல் கள்ள மவுனம் சாதிக்கிறார்.

                \\என்னுடைய நண்பன் பெண் பார்க்கும் போது புர்கா போடாத போட்டோவை பார்த்து //

                இந்த அறிவாளிகளுக்கு பல முறை சொல்லிவிட்டேன்.இணையத்தில் விவாதிக்கும்போது சொல்பவரை சாராமல் சொந்தமாக சரி பார்க்க கூடிய தகவல்களைத்தான் முன் வைக்க வேண்டும்.எனக்கு தெரியும்,நான் பார்த்தேன் என்பதெல்லாம் நானே வாதி,நானே நீதிபதி என்ற வகையில் சேரும்.எங்கே நிரூபியுங்கள் என்று கேட்டால் போச்சு.அய்யய்யோ பாத்துட்டான்,பாத்துட்டான் என கூவும் கவுண்டமணி போல மண்ணடிக்கு கூப்பிட்டுட்டான் ,மண்ணடிக்கு கூப்பிட்டுட்டான் ,என ஓலமிட வேண்டியது.என்னய்யா வாதம் இது.

                • முதலில் புர்கா ஒரு உடை என்பதே எமாற்றுவாதம் . இசுலாமிய பெண்கள் சுடிதார் அல்லது புடவை அணிந்து அதற்கு மேல் அணியும் உடை தான் புர்கா ! அதை பேன்ட் சட்டை போல உடை அலங்கார அப்கிரேடு என்று நீங்கள் எண்ணிக்கொண்டு கட்டுகிறீர்கள் .

                  மதவாதிகளுக்கு பிற மதவாதிகள் செய்யும் தவறுகள் எளிதாக புரியும் . தனது மதத்தில் உள்ள தவறுகளுக்கு சப்பை கட்டு நியாயம் வைத்திருப்பார்கள் .

                  பின் குறிப்பு :
                  புர்கா ஒரு உடை அல்ல உள்ளே உணமையான உடை அணிந்து இருப்பார்கள் எனபது எனது அனுமானம் . அதை நான் சரி பார்க்க முடியாது அதனால் இந்த கருத்தை ஏற்று கொள்ள மாட்டீர ?

                  • பெண்கள் ஆடை உடுத்துவது பற்றி உள்ளே வெளியே என்றும் அதை சரி பார்க்க முடியாது என்றும் பேசும் வக்கிரம் பிடித்த இந்த மனிதப்பதரெல்லாம் விவாதிக்க வந்து விட்டது.தனது வீட்டு பெண்கள் ஆடை பற்றி எவனாவது பொறுக்கி கிண்டல் பண்ணினால் கூட இந்த பதர் வாயை பொத்திக்கொண்டு போகும் போலும்.அதனால்தான் அடுத்த வீட்டு பெண்களின் ஆடையை சரி பார்க்க முடியாது என தடித்தனமாக பேசுது.தூ,மானங்கெட்ட ஜென்மம்.இதுலாம் மனுசன்னு உலாவிக்கிட்டு திரியுது.

                    வாதத்துக்கு ஒரு வரி கூட மறுப்பு எழுத துப்பு கெட்ட ——- லொள்ள பாரு,எகத்தாளத்த பாரு.

                    பி.கு.

                    கோடு மட்டுறுத்தல் செய்பவர் போட்டதல்ல.நானே போட்டதுதான்.பொருத்தமான சொல்லை வாசகர்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

                    • நூறு சதவீத சரிபார்த்த தகவல் வைத்து தான் விவாதம் செய்வேன் என்று நீங்கள் கூறியதை மனதில் வைத்து அதை கிண்டலடித்து எழுதியதை அனர்த்தம் ஆக்கிவிட்டீர்கள் .

                      பெண்களை புர்காவில் அடைக்கும் ஆணாதிக்கம் பிடித்த நீங்கள் இங்கே பெண்ணியத்தின் மாண்பை காப்பது போல கூப்பாடு போட்டு நடிகிறீர்கள் . செவாலியே விருது தர வழி மொழிகிறேன்

                      இந்த கூச்சலில் புர்கா , பூணூல் போல ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் என்கின்ற விவாதத்தை மறைக்க பார்கிறீர் .

  22. அடி செருப்பால ஒரு பின்னூட்டதயே வெளியிட தயங்கும் நீ என்ன மயித்குக்கு கம்மூனிஸ்ட்டு என்று சொல்லிக்கொள்கிறாய்

  23. இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்வார்கள் வினவு தள்த்தினர் என்று நான் நினைக்கவில்லை திப்பு என்பவர் இங்கு மத பர்ப்புரை செய்கிறார் அவருக்கு நான் அளித்த பதிலில் எந்த அசிங்கமே தனிநபர் தாக்குதலோ இல்லை ஆனாலும் அதை வெளியிட வினவு தளம் தயங்குவதை பார்க்கும் போது வினவின் கோழைத்க்தனம் பளிச்சென்று தெரிகிறது

  24. இனியன்,தலைப்பிற்க்கு தொடர்பில்லாமல் நாம் உரையாடுகிறோம் என்றாலும் உஙகளுக்கு சிலதை தெளிவுபடுத்த இதை பயன்படுத்திக்கொள்கிறேன்.நாம் இந்திய முஸ்லிகள் பற்றியும் இந்தியாவில் அவர்களின் வாழ்வு நிலைப்பற்றியும்தான் பேசிகொண்டிருக்கிறோம்.சவூதியைப்பற்றியோ இஸ்லாமிய சட்டஙகளைப்பற்றியோ அல்ல. நாஙகள் முஸ்லிகள். எஙகள் சமய நம்பிக்கையில் நாஙகள் உறுதியாக இருந்தாலும் நாஙகள் வாழும் இந்த நாட்டின் சட்ட திட்டங்களை இறையாண்மையை ஏற்றுக்கொண்டோம் கட்டுப்படுகிறோம்.இது மதச்சார்பற்ற நாடு.இங்கே யாரும் மதத்தை அரசியலோடு கலக்கக்கூடாது கலக்கமுடியாது.முழுக்க ஒரு மதச்சார்போடு இருக்கிற ஒரு நாட்டின், அதுவும் ஒரு குற்றவியல் சட்டத்தின் ஒரு பிரிவை மட்டும் வைத்துக்கொண்டு என்னிடம் விளக்கம் கேட்டால் சரியா?இஸ்லாமிய சட்டங்களை நான் ஏற்றுக்கொள்கிறேனா இல்லையா? அது வேறு விவாதம்.பல் வேறு கருத்துகளும் கொள்கைகளும் உள்ள, நாம் எல்லோரும் சேர்ந்து வாழும் இந்த நாட்டில் அரசியலில் மதம் கலக்கலாமா என்றால் கூடாது என்பதே என் கருத்து.இந்திய்ர்கள் அனைவரும் பொது உடைமை சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் இங்கே கம்மிநியுஸ்ட் சட்டங்கள் அமலாகும்.அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஷரியா சட்டம் அமலாகும். இப்போதைக்கு நம் அனைவருக்கும் இந்திய அரசியல் சாசன சட்டமே பொதுவாகும்.

    • மீராசாஹிப் அண்ணாச்சி இரு வேறுபட்ட மனிதர்களுடன் இங்கு விவாதம் நடத்திக்கொண்டு உள்ளேன். ஒருவர் நீங்க, மற்றுமொருவர் ஜோசப். இருவருக்கும் என்ன வேறுபட்டு என்றால் அவர் கம்யுனிச வெறுப்பின் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக இல்லாத விஷத்தை இருப்பது போன்று அதாங்க நாத்திகம் ராமசாமியின் கட்டுரையில் இல்லாத ஆபாசத்தை இருபதாக நினைத்துக்கொண்டு தன் உணர்வுகளை அறிவை நீங்கிவிட்டு கொட்டிக்கொண்டு உள்ளார். ஆனா நீங்க பாருங்க என்ன செய்கின்றிர்கள் என்று? தெரிந்தே ,அறிந்தே , உங்கள் அறிவுக்கு உட்பட்டே வாகபியிசத்தை சில நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவும், ஸ்டீபன் ஸ்பெயில்புர்க் படத்தோட முதல் காட்சி போன்று இலை மறைவாக ஆதரிக்கின்றிகள். என்னுடைய விவாதத்தின் மூலமாக நெருகடி ஏற்படும் தருணங்களில் மட்டும் இல்ல இல்ல நாங்க அப்படி இல்ல , வாகபியிசத்தை ஆதரிக்கவில்லை என்று கூருகின்றிகள்.

      கடைசியா சொன்னிங்க பாருங்க செம பஞ்சி டயலாக். என்னாது “”” இந்திய்ர்கள் அனைவரும் பொது உடைமை சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் இங்கே கம்மிநியுஸ்ட் சட்டங்கள் அமலாகும்.அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஷரியா சட்டம் அமலாகும்.””” ஒரு பக்கம் அரசியலில் மதம் கலக்க கூடாது என்ற கருத்துக்கு ஆதரவு, மறுபக்கம் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஷரியா சட்டம் அமலாகும் என்றும் முரண்பட்டு பேசுகின்றிகள். மதம் அரசியலில் கலக்க கூடாது என்ற நிலையில் இஸ்லாமிய-ஷரியா சட்டத்துக்கு மட்டும் எதற்கு தனி சிறப்பான அந்தஸ்து? அடுத்தது பாருங்க கம்யுனிச சட்டத்தை இஸ்லாமிய-ஷரியா சட்டத்துக்கு இணையாக வைத்து பேசுகின்றிகள். என்னத்துக்கு அப்படி சிந்தனை செய்ய உங்களுக்கு தோன்றியது? கம்யுனிஸம் மத உரிமைகளை தனி மனித உரிமையாக மட்டுமே பார்கின்றது. மதத்தால் ஏற்படும் தேவையற்ற பூசல்களை நீக்குவதற்காக மதத்தை அரசியலில் இருந்து விடுவித்து அதனை தனிமனித உரிமையாக மாறுகின்றது. லாப வெறியுடன் நடைபோடும் முதலாளித்துவ பொருளாதாரத்தை அது மாற்றி அமைத்து மக்கள் நலனை முன்னிட்ட சோசிலிச பொருளாதாரத்தை முன்னிறுத்துகின்றது. சரி சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்றால் முயன்று பாருங்கள் அண்ணாச்சி.

      1. அந்த ஆணுக்கும் ,பெண்ணுக்கும் வேறு வேறு நீதியை ஒரவஞ்சனையுடன் சவுதியின் குற்றவியல் சட்டங்கள் கூட எந்த அடிப்படையில் உள்ளன? குரானை அடிப்படையாக கொண்ட வாக்பியிசத்தை தான் அந்த சட்டங்கள் வேர்களாக கொண்டு உள்ளன. அப்படி என்றால் இஸ்லாமிய-ஷரியா சட்டத்துக்கு மட்டும் வேறு எது ஆணிவேராக உள்ளது அண்ணாச்சி? அதே குரான் தானே? அப்ப நீங்கள் முன்னிறுத்தும் இஸ்லாமிய-ஷரியா சட்டங்களும் மானுடத்துக்கு எதிரானதாகவும் , பாலின பேதங்கள் உடையதாகவும் தானே இருக்கும்.

      2.சரி நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். திருமணம் ஆன ஆண்-பெண் திருமணத்துக்கு வெளியே பாலியல் உறவுகளில் ஈடுபட்டால் உங்கள் இஸ்லாமிய-ஷரியா சட்டம் ஆணுக்கு என்ன தண்டனையை , பெண்ணுக்கு என்ன தண்டனையை கொடுக்கும் ?

      3. அரசியலில் இருந்து மதத்தை முழுமையாக விளக்க கோரும் கம்யுனிச அரசியலில் உங்களுக்கு என்ன பிரச்சனை? (கம்யுனிச அரசியல் பின்னணியில் தான் வெள்ள நிவாரண பணிகளுக்கு மதத்தை முன்னிருத்தாதிர்கள் என்று கூறினேன்)

      இருதியாக ஒன்று. இந்த கட்டுரையின் விவாதத்தில் மத விடயங்களை வெள்ள நிவாரண பணியுடன் கலந்துகட்டியது, வாகபியசத்தை பற்றிய தேவையற்ற விவாதத்தை தொடங்கி வைத்தது நீங்கள் தான் என்பதை மீண்டும் ஒருமுறை விவாதங்களை படிப்பதன் மூலம் உணருங்க அண்ணாச்சி.

      • அண்ணன் ஒரிஜினல் + அக்மார்க்+நயம் கம்மூனி?ஸ்டு இனியன் அவர்களே எனக்கு அறிவு இல்லை என்பதை எதைக்கொண்டு சொல்லுகிறீர் நீங்களும் நாத்தம் ராமசாமியும் சொல்லும் ஆபாசம் மற்றும் ஆபாசம் இல்லை சாதாரன எழுத்து நடை என்பதை நான் நம்பியே ஆக வேண்டும் இல்லை என்றால் நான் அறிவு அற்றவன் ஏலே ஈர வெங்காயம் இது தாண்டா ஒரிஜினல் அக்மார்க பாஸிசம் என்பது, சரி விடுங்க நியமான அசிங்கம் அதனால் அதை ஏற்றுக்கொண்டோம் என்று சொன்னால் எந்த வகையிலோ___ அசிங்கதை ஏற்று ___அவ்வளவுதான் இல்ல நாத்தம் ராமசாமியின் கருத்துகள் சமூகத்தை திருத்தவும் நல்லது செய்யவுமே என்று நம்பினால் அதுக்கு நான் என்ன செய்ய முடியும் நாத்தம் ராமசமியின் நாத்திக தொன்டரகள நடத்தும் கல்லூரிகளில் இலவசமாக அணைவரையும் படிக்க வைக்கிறாரகள் அதனால் அவர் சமூக அக்கரையுடந்தான் எழுதி இருக்கிறார் என்பதை _ இல்லை என்றால் பின்புறத்தை பொத்தி கொண்டு போய் _________ எனக்கு என்ன காண்டு கம்மூனிஸ்டுகள் மீது என்றால் இசுலாமியர்கள எல்லாம் நல்லவர்கள் அவர்கள் தொண்டு செய்வதில் சிறந்தவர்கள் என்ற பரப்புரையை கம்மூனிஸ்டுகள் வலிந்து செய்வதின் காரணம் என்னவோ எனக்கு நேரம் இல்லை என்பதால் பிறகு பேசுகிறேன்…

        • இனியன் மன்னிக்கவும் அறிவு அற்றவர் என்ற வார்த்த எனது தன் மானத்தை சீண்டுவதால் சில் வசவுக்ள் தானாக வந்து விட்டன

          • உங்களை அறிவற்றவர் என்று நான் கூறவில்லை என்பதால் உங்கள் வசவுகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் நண்பரே. [நன்றி புத்தன்] நான் கூறியது “தன் உணர்வுகளை அறிவை நீங்கிவிட்டு கொட்டிக்கொண்டு உள்ளார்” என்று.

        • ஜோசப் நான் கூறியது “தன் உணர்வுகளை அறிவை நீங்கிவிட்டு கொட்டிக்கொண்டு உள்ளார்” என்று. உங்களுக்கு அறிவு இல்லை என்று கூறவேயில்லை நண்பரே. அது சரி இந்த உங்கள் பின்னுட்டம் டாஸ்மாக் குடிகாரனின் மாடல் போன்றே உள்ளதே அது எப்படி நண்பரே? ஒரு கையில் டாஸ்மாக் சர்க்குடனும் மறுகையில் keyboard உடனும் தான் தினம் தினம் வாழ்க்கை பயணமா? வினவர் உங்கள் பின்னுட்டத்தை எடிட் செய்யாமல் அனுமதித்து இருந்தால் உங்கள் குடியின் உச்சத்தை வினவு வாசகர்கள் நன்கு உணர்ந்து இருப்பார்கள். கை நழுவி சென்றது சந்தர்பம். வெங்காய வியாபாரம் எப்படி ? கிலோ என்னா வெல ?

          • அமாம் நான் குடிகாரன் என்றே வைத்துக்கொள்ளுங்கள் அண்ணன் ஆனா பாருங்க ஒரு குடிகாரனாக இருதவர் ______________ ஒருவர் நேரமையை மட்டும் பாருங்கள் அவன் குடிகாரனா என்ற ஆராய்ச்சி தேவை அற்றது ,எனக்கு கம்மினுஸ்டுகள் மீதெல்லாம் வெருப்பு என்பது பொய் பரப்புரை செய்யாதீர்கள் இசுலாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்ற கருத்தை பரப்புகிறவன் எவ்வளவு அயோக்கியனோ அது போலத்தான் இசுலாமியர்கள் எல்லாம் அப்பாவிகள் என்ற கருத்தை வலிந்து இந்த சமூகத்தில் தினிக்க நிணைப்பவனும் அதனால்தால் இந்த கம்மூனிஸ்டுகளின் மீது கோவம் மற்றபடி அவரக்ளின் போராட்டத்தை ஆதரிக்கும் சாதாரண மனிதந்தான் பெருங்குடிகாரன் அல்ல நான் மீண்டும் என் தன்மானத்தை சீண்ட வேண்டாம்…

            • ஜோசப் ,நாத்திகம் ராமசாமியின் கட்டுரையில் ஆபாசம் ஏதும் இல்லை என்பதனை விளக்கிய பின்பும் மீண்டும் மீண்டும் தொடர்பற்று உளறிக்கொண்டு உள்ளிர்க்ளே அதற்கு பெயர் என்ன? அதுதானே குடிகாரனின் உளறல்? ஒருவேளை என் விளக்கம் தவறு எனில் அதனை பற்றி மேலும் விவாதியுங்கள். அதனை விடுத்து எதற்கு இந்த குடிகாரரை போன்ற உளறல் உங்களிடம் இருந்து வருகிறது? ஒரு பக்கம் நாத்திகம் ராமசாமியின் கட்டுரையை ஆபாசம் என்று கூறிக்கொண்டே மறுபக்கம் ஆபாச நடிகை நக்மாவுக்கும், சிம்புவின் beep ஆபாசத்துக்கும் ஆதரவு தெரிவிக்கின்றிகள் நண்பரே!

              நீங்கள் கூறுவது போன்று நாத்திகம் ராமசாமியின் கட்டுரையில் ஆபாசம் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அதே கட்டுரையில் சுட்டிக்கட்டப்ட்டு உள்ள நக்மாவின் செயல்கள் ஆபாசம் இல்லையா? மேலும் சிம்புவின் பாடல் ஆபாசம் இல்லையா? எதற்காக அவர்களை ஆதரிகின்றிகள் நண்பரே?

  25. //அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஷரியா சட்டம் அமலாகும்

    பூனை குட்டி வெளிய வந்துவிட்டது .

    ரொம்ப விளக்கம் வேணாம் சார் .வித்தியாசம் இதுதான்

    நன் முதல தமிழன் இல்ல மனுஷன் வச்சுங்க, பராம் நிரம்பும்போது போது இந்தியன் ,கோவில்கு போகும் மட்டும் ஹிந்து ,மத்த நேரத்ல மதக்கு பேச்ச இல்ல .உங்க ஆர்டர் சொல்லுங்க .

  26. அனைவரையும் இசுலாம் என்ற மதம் சேவை செய்வதில் முன்னோடியானது என்பதை நம்ப வைக்கவும் இசுலாமிய தீவிரவாதிகள் கையில் ஒரு கையில் குரானையும் வைத்து கொண்டு கழுத்தருப்பு காட்சிகளால் இசுலாத்தின் மீது மக்களுக்கு ஏற்படும் வெறுப்பு ஆதாவது வினவு பானியில் சொன்னால் பொது புத்தியில் புகுந்துள்ள இசுலாமிய மதத்தின் மீதான பெருப்பை போக்குவதற்க்கும் எங்கள் இசுலாமிய மத்த்திலும் மக்களுக்கு சேவை செய்ய சொல்லி இருக்கு என்ற புருடாவை இணையத்தில் பரப்பி இசுலாமிய அழைப்பு விடுக்கவும் _____ இவர்களுக்கு சரியா சட்டம் வர வேண்டும் இந்தியாவில் அவ்வளவுதான் சேவையின் நோக்கம் ,ஏற்கனவே இதை வைத்து இசுலாம் சிறந்தது என்று பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன இந்த தள்த்திலே ஒரு இசுலாமிய மத பரப்புரையளர் லிங்க் கொடுத்து பரப்புரையை துவக்கி விட்டார் அண்ணல் நபி சினன குழந்தய முத்த மிட்டார் முகமலர்ச்சியோடு ஷோதரனை வரவேற்க சொல்லி விட்டார் (ஆமா சின்ன குழந்தய முத்தமிடுவதும் முகமலர்ச்சிய்
    ஒடு வீட்டுக்கு வருபவரை வரவேற்ப்பது யாரும் செய்யாதது முகமதுவுக்கு முன்னும் பின்னும்)அனால் முகமது செய்த போர்களையோ இல்லை ஆயிசா என்ற 6 வயது பெண் குழந்தையை எப்பிடி முத்த மிட்டார் என்றோ இப்போது சொல்லப்போவது இல்லை எல்லாம் சரியா வந்த பிறகுதான் சரியாக சொல்லப்படும் வினவு தளத்துக்கு கம்மூனிஸம் பரப்புவதை விட இசுலாமிய மதநெறிகளதான் சிறந்தது என்ற வாதத்த வலுப்படுத்தும் பரப்புரைதான் இப்போதைய தேவையாக இருக்கிறது…

    • வினவு தளத்தின் குசும்பு இதுதான், என்னவோ எஸ்டிபிஐகும் தவ்கீத் ஜாமாஅத் என்ற அமைப்பிற்கும் சவுதி அரேபிய பணத்திற்க்கும் சம்மந்தமே இல்லை எனபது போல எனது கருத்தில் கோடு போடுகிறார்கள்

  27. இந்த மழை வெள்ள சேவைகளை நிச்சயம் பாராட்ட பட வேண்டியது என்பதில் ஐயமில்லை ஆனால் இதை வைத்தே இசுலாம் சிறந்து இசுலாமிய நெறிமுறைகள் எல்லா சித்தாந்தந்தங்களையும் விட உயர்வானது என்று பரப்ப நினைத்தால் இவர்கள் மூக்கறு பட்டு போவார்கள் எனென்றால் இசுலாத்தின் டவுசரையும் முகமதின் கண்ணியத்தையும் அவரகளின் மத நூல்களிலுல்ல ஆதாரத்தைக் கொண்டே கிழித்து கொண்டு இருக்கிறார்கள் இனையத்தில்…

  28. இந்த மழையில் அனைத்து சமூகத்தினரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டனர்.
    பெரும்பாலும் அனைவருக்கும் அவரவர் மனதில் உள்ள மனிதாபிமானமே இதற்கு உந்துதலாக உள்ளது. வினவில் சிலர் அதற்கு அவரவர் மத நம்பிக்கையினால் உந்தப்பட்டதாக கூறுகிறார்கள். காரணம் எதுவாயினும், செயல் நல்லவிதமாக இருந்தால் அதனை வரவேற்போம்.

    தனிப்பட்ட ஒரு மதம், ஒரு சாதி, ஒரு இனம், ஒரு மொழி என்றல்ல அனைவருமே இந்த சூழ்நிலையில், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துள்ளோம். இந்த சகோதரத்துவம் வரவேற்கத்தக்கதே.

    ஆபத்து காலத்தில், இந்த சாதிக்காரர், இந்த மதத்துக்காரர், இந்த மொழிக்காரர் கொண்டு வரும் படகில் தான் நான் பயணிப்பேன், அது வரை வெள்ளத்தில் காத்திருப்பேன் என்று யாரும் முரண்டு பிடிப்பதில்லை.

    ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். வெள்ளம், பூகம்பம் போன்ற பேரழிவு சமயங்களில் நாம் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம் ஆகிய இடைவெளிகளை மறந்து மனிதர்களாக வாழ்கிறோம். ஆனால் சாதாரண தருணங்களில் பொறாமை, சுயநலம் போன்றவை நம்மிடம் ஓங்கி இருக்கிறது. இதற்காகவே, மக்களிடம் நல்ல மனிதாபிமானம், சகோதரத்துவம் வருவதற்காகவே வருடம் தோறும் இயற்கை பேரழிவை கொண்டுவருவதை போல ஒரு பாவ்லா காட்டி விட்டு அழிக்காமல் பயமுறுத்தி மட்டும் விட்டு விட்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் எல்லா வகையான பேரழிவுகளும் அவ்வப்போது நடக்கிறது – பூகம்பம், வருடந்தோறும் பெரும்பாலான மாதங்களிலும் புயல் மழை, வெள்ளம், எரிமலை, சுனாமி என்று பல்வேறு பேரழிவுகளை அந்த நாடு சந்திப்பதால் அங்கிருக்கும் மக்கள் எவரும் நமது ஊர் மக்களை போல் பல தலைமுறைக்கு சேர்த்து வைப்பதில்லை. சம்பாதிக்கிற காசை அவர்களே செலவழித்து விடுகிறார்கள். நம் பிள்ளைகளின் படிப்புக்காக, திருமணத்திற்காக சேர்த்து வைத்தால் பரவாயில்லை, ஆனால் நம்மவர்கள் அடுத்த பல தலைமுறைக்கும் சேர்த்து வைக்க பேராசை படுவதில் தான் பிரச்சினை ஆரம்பம் ஆகிறது.

    வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்று தெளியும் நேரம் நாம் உண்மையான மனிதர்களாக நடக்கிறோம். அந்த தெளிவு வரவில்லையெனில், சுயநலம், பொறாமை ஆகியவை நம்மை ஆட்டிப்படைத்து நம்மை சொத்துக்கு அடிமையாக்கி கொள்கிறோம்.

    • /மக்களிடம் நல்ல மனிதாபிமானம், சகோதரத்துவம் வருவதற்காகவே வருடம் தோறும் இயற்கை பேரழிவை கொண்டுவருவதை போல ஒரு பாவ்லா காட்டி விட்டு அழிக்காமல் பயமுறுத்தி மட்டும் விட்டு விட்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது. / கற்றது அண்ணன் முசுலீம்களின் மனத நேயத்தை மக்களிடம் எடுத்துக்காட்டவே இறைவன் மழை வெள்ளதை அனுப்பி இருக்கிறான் என்று பேசுகிற சில தறுதல ஜாமாத வாதிகளும் இருக்கிறார்கள் உங்கள கருத்தும் அதை போலவே இருக்கிறது. தறுதல ஜமாத் என்று சொன்னதற்க்காக என் மீது தவ்கீது இயக்கத்தினர் என் மீது கோவம் கொள்ள வேண்டாம் இப்பெயர் உங்கள் சகோதர இயக்கம் அறிமுகபடுத்திய பெயர்தான்

      • ஜோசப்,

        என்னுடைய பின்னூட்டங்களை படித்திருப்பீர்கள். எந்த ஒரு தனிப்பட்ட ஒரு மதத்துக்கும் நான் ஆதரவாளன் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மதத்தை விட்டு மனிதத்தை பின்பற்றுவோம் என்று தான் கூறி வருகிறேன். முசுலீம்களின் மனிதநேயத்தை மட்டும் அல்ல, அனைத்து மக்களின் மனித நேயத்தையும் சேர்த்து தான் சொன்னேன்.

        நண்பர் என்ற உரிமையில் ஒன்றை சொல்கிறேன். தாங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். அதனால் வார்த்தைகளை எளிதில் விட்டு விடுகிறீர்கள். வெளியே விட்ட வார்த்தையை மீண்டும் அள்ள முடியாது நண்பரே. விவாதம் செய்பவர்களின் கருத்துக்களை நேருக்கு நேர் எதிர்த்து பேசுங்கள், விவாதம் செய்பவர்களை வார்த்தைகளால் தாக்க வேண்டாம். உங்கள் கருத்துக்கு எதிராக எவரேனும் தனிப்பட்ட வார்த்தைகளை உபயோகித்தால் அதற்கும் என் எதிர்ப்பு நிச்சயம் உண்டு.

        எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். மதத்தை வைத்து ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று முடிவு செய்வது தவறு. இந்த வெள்ளத்தில் மனிதாபிமானத்தினால் உந்தப்பட்டு உதவி செய்தோம் என்று பெரும்பாலானவர்கள் (நானும் உள்பட) கூறினார்கள். சிலர், மதத்தால் உந்தப்பட்டு உதவி செய்தோம் என்றார்கள். ஏதோ ஒன்று உதவி செய்தார்களா, போதும், அடுத்த வேலையை பார்ப்போம் நண்பரே.

        இந்த சமயத்தில் மக்கள் கொஞ்சம், சாதி, மத, இன, மொழி உணர்வுகளுக்கு தாள் போட்டு மனிதத்தன்மைக்கு முதலிடம் கொடுத்தார்கள். அதை அப்படியே கொண்டு சொல்வோம். மதச்சண்டைகளுக்கு இது நேரமல்ல. (இன்னும் சொல்லப்போனால் மதச்சண்டைக்கு எதுவுமே நேரமல்ல) கொஞ்ச நாள் எல்லோரும் ஆக்கபூர்வமான வேலையை பார்ப்போம் நண்பரே.

      • ஜுராசிக் வேர்ல்ட் படத்தில் வரும் ரேப்டைல்ஸ்(reptiles) மாதிரி என்னமா கொலைவெறி இவருக்கு, நம்ம ஜோசப்க்கு இஸ்லாமியர்கள் மீது! கற்றது கையளவு அவரின் பின்னுட்டத்தில் எந்த மதத்தையும் குறிப்பிடாவிட்டாலும் இவர் வலிய வந்து இஸ்லாமியர்களை தாகுகின்றார்.

        • இந்த கருத்தை வெளியிடுவதில் வினவுக்கு இன்னும் என்ன தயக்கம்? மத வெறி தலைமுழுவதும் ஏறிப்போன இவருக்கு வேறு என்ன உதாரணம் கொடுக்க முடியும் ?

  29. இனியன்,மிக கவனமாக நான் சொல்வதைக் கேளுங்கள் நம் நாட்டில் மதம் அரசியலில் கலக்கவே முடியாது.கலக்கக்கூடாது என்பதை காரணங்களோடு விளக்கிவிட்டேன்.அதேவேளை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை கொள்கையை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டால் அதை நடைமுறை படுத்துவதை குறைகாணமுடியாது.ஏனெனில் அவை நடைமுறை படுத்துவதற்க்குத்தான் மக்கள் அனைவரும் அதை ஏற்றிருக்கிறார்கள்.ஒன்றுபட்ட ரஷ்யாவாக இருக்கும்பொழுது அது”இரும்புத்திரை” என்று வர்ணிக்கும் அள்விற்க்கு கம்யூனிசம் சட்டமாக்கப்படவில்லயா?மக்கள் பொருந்திக்கொன்டால் அவை நீடிக்கும் இல்லையென்றால் சிதறிப்போகும்.
    வகாபியம் என்பது ஒரு அரசியல் கொள்கை.இஸ்லாமியத்தை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கிறது.ஒரு இஸ்லாமியனாக நான் ஏற்றிருக்கிற கோட்பாட்டை ஒரு இயக்கம் நாடு நடைமுறைபடுத்துமென்றால் அதன் மேல் அபிமானம் ஏற்ப்படுவது இயல்பு.இங்கிருக்கும் கம்னியூட்டுகளுக்கு ரஷ்யாமேலும் சைனாமேலும் ஏற்படுகிற அபிமானம் போல.ஆனால் வகாபியம் உண்மையில் குரானை இம்மியும் பிசகாமல் கடைபிடித்து ஆட்சி செய்கிறதா என்றால்,ஆயிரம் ஒட்டைகளை நாஙகளே சொல்ல முடியும்.வகாபியத்தில் இஸ்லாமிய அடையாளங்கள் இருக்கலாம்.வகாபியமே இஸ்லாம் ஆகாது.
    விபச்சார குற்றத்திற்க்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சட்டம் என்பதெல்லாம் தவறான பரப்புரையால் உஙகளுக்கு வருகிற குழப்பம்.ஆணோ பெண்ணொ திருமணத்திற்க்கு முன் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அதற்க்கு ஒரு வகையிலும் திருமணத்திற்க்கு பின் என்றால் அதற்க்கு ஒரு வகையிலும் என்று வகுக்கப்பட்டிருக்கிறதே தவிர ஆண் பெண் பாகுபாடு கிடயாது.ஒரு சட்டத்தை தெரிந்து கொண்டு விவாதித்தால் விமர்சித்தால் அது வேறு.அவதூறுகளுக்கு இரையாகி இல்லாததை இருப்பதாக நினைத்து கேள்வி கேட்டால் என்ன பதில் கூறுவது. நம் நாட்டில் இந்த விவாதம் தேவையற்றது.நாங்கள் எங்கள் சமய நம்பிக்கையை பிசகாமல் ஒழுகி நல்லதொரு முஸ்லிமாக வாழ்ந்து மறைய இந்த நாட்டில் எந்த குறையுமில்லை.இந்த மண்ணும் இங்குள்ள சொந்தங்களும் இதற்க்கு எந்த தடையாகவுமில்லை.இஸ்லாமும் இதில் குறைகாண்வில்லை.இதுவரை இப்படித்தான் வாழ்ந்தோம். இனியும் இவ்வாறே வாழ்வோம் இன்ஷாஅல்லா. ஜோசப் என்ற கல்யாணராமன் கூட்டாளி விரும்பாவிருந்தாளியாய் வந்து உளறுவதை பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.அது வெறுப்பின் உச்சத்தில்,மனப்பிறழ்ச்சிக்கு ஆளாகி ஒலமிடும் ஒரு நோயாளியின் உளறல்.சிந்தனையால் விளைந்த சந்தேகத்தை நிவர்த்திக்கலாம்.வெறுப்பால் வெந்துபோன மூளைக்கு நாம் என்ன செய்ய முடியும்?

    • ஒரு மதவாத ஹிந்துவின் பார்வையில் இருந்து உங்களின் கருத்தை பரிசிலனை செய்து பாருங்கள். தவறு புலப்படும். இந்த மதவாத ஹிந்துவும் உங்கள் கருத்தை தானே அவனின் மதத்தின் அடிப்படையில் கூறுவான். அப்படி அவன் கூறுவது சரியாகுமா ?
      //ஒரு இஸ்லாமியனாக நான் ஏற்றிருக்கிற கோட்பாட்டை ஒரு இயக்கம் நாடு நடைமுறைபடுத்துமென்றால் அதன் மேல் அபிமானம் ஏற்ப்படுவது இயல்பு//

    • நான் உண்மையாக இசுலாம் என்ற பாஸிஸ் சித்தாந்தை வெறுப்பவப்தான் நிச்சயமாக இசுலாம் என்ற மத கொள்கைகளின் மீது எனக்கு உட்சபச்ச வெறுப்பு இருக்கதான் செய்கிறது இதை நீங்கள் என்ன சொல்லுவது நானே ஒப்புக்கொள்ளுகிறேன் அதுக்காக என்னை மன நிலை பிறன்றவர் என்று சொன்னால் அது தவறானது

      • இவர் ஒரு கிருஸ்துவ கோட்சே , கொல்வது காந்தியை அல்ல, ஆனால் மனிதத்தை

    • /வகாபியம் உண்மையில் குரானை இம்மியும் பிசகாமல் கடைபிடித்து ஆட்சி செய்கிறதா என்றால்,ஆயிரம் ஒட்டைகளை நாஙகளே சொல்ல முடியும்/இசுலாமிய புண்ணிய பூமி நபியின் வாரிசுகள் அல்லாவின் ஆலயம் இருக்கும் நாட்டிலேயே உள்ள சரியா சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் உள்ள போது இங்கு மட்டும் ஓட்டை இல்லாத சரியாவை அமுல் படுத்த முடியும் என்பது பகல் கணவல்லவா

  30. இனியன்,இந்த விவாதத்தில் மத விஷயத்தை கலந்துகட்டியது வினவுதான்.நிவாரண உதவியில் இருந்த இளைஞர்களிடம் ஷிர்க்(இணைவைத்தல்)மாநாடு பற்றி ஏன் கேட் க வேண்டும்.அதுவும் தவ்கீத்ஜமாத் பற்றி த மு மு க விடம்.இது தேவையற்ற சீண்டல்தானே.”பொதுப்பிரச்சனைகளில் ஆர்வம் காட்டாத இஸ்லாமிய இயக்கஙகள்” என்று முன்னறிவிப்பு வேறு.அப்போது நான் இஸ்லாமிய இயக்கங்களின் பொதுச்சேவைகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அதற்கு விஸ்வாதான்’த்வ்கீத் ஆட்சியில் கம்னியூஸ்டுகளுக்கு நாத்திகர்களுக்கு என்ன தண்டனை என்று கேட்டிருந்தார்.இதற்கு நான் விளக்கமளிக்கத்தான் விஷயம் மடைமாறியது.நானாக ஒருபோதும் அரசியலோடு மதம் பேசவில்லை.இந்தியாவில் ஷரியா ஆட்சியை கொண்டுவருவோம் என்று கஙகனம்கட்டிக்கொண்டும் அலயவில்லை.அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை மறைக்கவேண்டிய அவசியமும் இல்லை.நாஙகள் எங்கள் நாட்டில எல்லா உரிமையும் பெற்று வாழ தகுதி உள்ளவர்கள்.ஏதேனும் மறுக்கப்பட்டால் போராடிப்பெறும் உரிமை உள்ளவர்கள்

    • மீராசாஹிப் அண்ணாச்சி பொதுவில் உங்க கருத்து ஏற்புடையது எனினும் சில விடயங்களில் முரண்படுகின்றேன். வினவின் இந்த கட்டுரைக்கு ஹிந்துத்துவாக்கள் தான் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று ஊகித்து இருந்தேன். ஆனால் வந்த எதிர்ப்பு பெரும்பாலும் இஸ்லாமியர்களிடம் இருந்து தான். வினவு கட்டுரையின் உள்ளடக்கம் இஸ்லாமியர்கள் சென்னை வெள்ள பெருக்கின் போது முதன்மையாக முன்னின்று உதவினார்கள் என்பது தான். உங்களுக்கு ஏன் rss vhp bjp போன்ற மதவாத அமைப்பாக தவ்கீத்ஜமாத்,த மு மு க ஆகியவை தெரியவில்லை ? அவர்கள் பெரும்பான்மை மதவாதிகள் இவர்கள் சிறுபான்மை மதவாதிகள் அவ்வளவு தான் வித்தியாசம்.

    • /இனியன்,இந்த விவாதத்தில் மத விஷயத்தை கலந்துகட்டியது வினவுதான்./வினவு தளத்துக்கு இந்த செருப்படி தேவையானதுதான் இனியன் போன்ற அப்பரசன்டி கம்மூனிஸ்டுகள் அதாகபட்டகாவது இசுலாமிய மதத்திலிருந்து கம்மூனிஸ்டாக வந்தவர்கள் இதுக்கு லைக் போடுவதில் வியப்பில்லை
      சரி விடுங்க நான் அண்ணன் காகைகு பதில் அளிக்க விரும்பியே வந்தேன் கற்றது அண்ணன் நான் உங்கள் கருத்தை குறை சொல்ல வில்லை ஒப்பீடு செய்தேன் அவ்வளவுதான் அதே நேரத்தில் நான் மத வெறியால் உணர்சி வசப்பட்டு பேசுவதாக நினைக்க வேண்டாம் உண்மையில் முஸுலீம் மத அடிப்படைவாதிகளின் சேவை (மழை வெள்ள காலத்தில் மட்டும்) என்பது பாராட்டபட வேண்டியது என்பது உண்மைதான் ஆனால் அதை வைத்தே அவர்கள் இசுலாமிய மதம் சிறந்தது அதை எல்லோறும் பின்பற்றி வரத்தக்க கொள்கை இசுலாம்தான் என்று சொல்லிக்கொண்டு அலைவாரகளானால் அவர்களின் செயலில் உள் நோக்கம் உள்ளது என்பதை சாதாரண மனிதனே அறிந்து கொள்ள முடியும் என்பது உண்மை இவ்வாறு இருக்க வினவு தளத்தாரின் இசுலாமிய செம்பு தூக்கல் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை ,ஒரு விளக்கத்தை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன் இசுலாமியர்கள் அதிகாமாக உள்ள நாடுகளில் மனிதாபிமானமற்றவனாக மாற்று மதத்தவன் கழுத்தை அருக்கிறான் அதை வீடியோவாக உலகம் முழுதும் பரப்புகின்றான் அவன் அதுக்கு குரான் விளக்கத்திஅயும் குடுக்குறான் அனால் இந்திய முஸிலீமகள் குரானில் கொலை செய்தி இருக்கு இல்லை என்று விவாதம் நடத்துவது போல நாடகமாடி அதை வீடியோவாகவும் வெளியிட்டு காசு பார்த்துக்கொண்டும் அதே பணத்தில் மழை வெள்ள சேவை செய்து அதன் மூலம் இசுலாம் சிறந்த மனித நேய மதம் எனப்து போல பேசி மதம் பரப்பும் வேலையில் இறங்கி விட்ட காரண்த்தால் இசுலாமிய மதத்தில் அதன் போதனைகளில் கடுகளவும் மனிதநேயம் இல்லை என்று நிறுவிப்பது மனிதநேயமுள்ள இசுலாம் என்ற பாஸீச சித்தாந்தை படித்த ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகையால் இசுலாமை விமர்சிக்க வேண்டி உள்ளதே தவிர மத வெறியினால் அல்ல அனா பாருங்க இங்க வினவு இணைய தளம் என்ன பன்னுதுனா இசுலாமை விமர்சிக்கும் எந்த கருத்தையும் வெளியிடுவது இல்லை இதே மாற்று மத நம்பிக்கைய எவ்வளவு இழிவாக வேண்டுமானாலும் பேசலாம் அதை அப்படியே வெளியிட்டு விடுவார்கள் மன்னாரு என்ற கம்மூனிஸ வேசம் போடும் இசுலாமியர் என்னை அவதூறாக திட்டியதை அப்படியே வெளியிட்டு விட்டு பின்பு வியாசன் சுட்டிக்காட்டியது மன்னிப்பு கேட்டதும் உங்களுக்குநினைவில் இருக்கலாம் அனால் இப்பொழுதோ இசுலாமியம் சிறந்தது என்ற பரப்புரையை முசிலீம்களை வைத்தே பரப்புவது அதை எதிர்ப்பது போல அப்பரச்ன்டி கம்மூனிஸ்டுகள வைத்து பதில் எழுதுவது என்றுநேரத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறது வினவு எனவே இதை எதிர்ப்பது எனபது மத சண்டை இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன்

      • அது மாத்திரமல்லாமல் வெள்ள சேதத்தால் பாதிக்க பட்ட மக்களைத்திரட்டி வீடு மற்றும் வாழ்வாதரத்துக்கு தேவையான பொருளகளை இழந்து வாடும் மக்களுக்கான இழப்பு எவ்வளவு நிவாரணம் எவ்வளவு என்பதையெல்லம் கணக்கிட்டு அர்சின் அலச்சியத்தான் மழை வெள்ளம் மக்களை பாதித்தது என்பதை பாதிக்கப்பட்டவர்களிடம் விளக்கி அவர்களுகான நிவாரணத்தை பெற்றுக்குடுப்பது என்று ஆக்கபூர்வமான பணிகள் கம்மூனிஸ அரசியல் செய்யும் இவர்களுக்கு இருக்கும் போது பாய்கள பேட்டி கண்டோம் அவர்களின் செயல் செயல் மனித நேயம் அல்லது மதம் என்ற சர்ச்சையை ஏற்படுத்தி தங்களின் இயலாமையை உலகுக்கு காட்டுகிறாஅர்கள் அதனால்தான் தன் மதத்தை முழுமையாககூட படித்திராத ஒரு சாதாரண முஸிலீம் பாய் கூட வினவு தளத்தை எள்ளி நகையாடும் நிலை அவர்களுக்கு வந்து விட்டது தங்களின் இசுலாமிய செம்பு தூக்கல் எவ்வளவு தூரத்துக்கு பிழையானது என்பதை இன்யாவது அவர்கள் உணர வேண்டும் …

  31. மீராசாகிப் அவர்களே,

    சென்னை வெள்ளப்பெருக்கின்போது பல்வேறு மதத்தவரும், சாதியினரும் மனிதாபிமான அடிப்படையில் உதவினர். தனியாகவும், தாங்கள் சார்ந்த சார்ந்த குழுவின் மூலமும் தன்னார்வத்தில் உதவி புரிந்தனர். இதில் இசுலாமியர்கள், கிருத்தவர்கள், இந்து, ஜைன மதத்தவர், சாதி ரீதியில் தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், பார்ப்பனர் என்று அனைவரும் தான் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர். கண் கூடாக பார்த்ததால் சொல்கிறேன்.

    ஷரியா சட்டம் பற்றிய உங்கள் கருத்தினில் நான் வேறுபடுகிறேன்.
    இந்தியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால் ஷரியா சட்டம் அமுலாகும் என்கிறீர்கள்.
    இதையே ஒரு இந்து சொன்னால் அதனை சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு கருத்தாக தானே நாம் கருதுகிறோம்? இந்தியா போன்ற பல்வேறு இனங்கள், மொழியினர், மதத்தினர் கூட்டாக வாழும் ஒரு நாட்டில் இப்படி ஒரு நிலை வருவது சாத்தியமே இல்லை.

    இந்தியா என்பது சதவீதம் இந்து மக்கள் இருக்கும் நாடு. இது வரை இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்கிறது. இதே என்பது சதவீதம் இசுலாமிய சமுதாயம் இருக்கும் நாடாக இருந்தால் அது இந்நேரம் ஒரு இசுலாமிய நாடாகவே அறிவிக்கப்பட்டிருக்கும். கிருத்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகளிலும் இதே நிலை. தான். பிலிப்பைன்ஸ் நாட்டில் கிருத்துவர்கள் என்பது சதவீதம் இருக்கிறார்கள். அதனால் அது கிருத்துவ நாடாக பிரகனப்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மிண்டனாவோ பகுதியில் தற்போது அது காஷ்மீர் போன்று சுயாட்சி உரிமை உள்ள ஒரு மாகாணமாக இருந்தாலும், இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று போராட்டங்கள் அங்கு நடைபெறுகிறது.

    மேற்கூறிய உதாரணங்களோடு ஒப்பிட்டால் இந்தியா இதுவரை மதசார்பற்று இருப்பது பெருமைக்குரிய விடயமே.

  32. என் சகோதரர்களுக்கு பலதையும் விளக்கவேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்பது உஙகள் கருத்துகளில் தெரிகிறது.இது போக மதம் காட்டி நன்ஞை பரப்பக்கூடிய கூட்டம் அதிகாரத்தில் இருப்பதும் அதன் காரணமாக சராசரி மக்களை மிக எளிதாக ஒரு சமூகத்திற்க்கு எதிராக திருப்பிவிடக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதும் எஙகளை இந்த கட்டாயத்தில் தள்ளுகிறது.
    முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டால் இது முஸ்லிம் நாடாகிவிடும் என்ற விஷத்தை தொடர்ந்து அவர்கள் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.இது பொய்.அப்படி எந்த சாத்தியக்கூறும் இல்லை.அப்படி எந்த ரகசிய திட்டத்திலும் முஸ்லிம்கள் இல்லை.”இந்தியா 80% இந்துக்கள் உள்ள நாடு அதனால்தான் மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது” என்பது அதனினும் பொய்.இந்த நாட்டின் உருவாக்கத்திலேயே முஸ்லிம்களின் பெரும்பஙுகுண்டு.நாடு வெள்ளையன் கைக்கு போனதே முஸ்லிம்களின் கைய்யிலிருந்துதான்.ஆகவே அதை மீட்டெடுப்பதில்,இயல்பாகவே இவர்களின் பங்கு மிகத்தீவிரமாகவே இருந்திருக்க முடியும்.நாடு சுதந்திரமடைந்து அனைவரின் ஒப்புதலோடே இது மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஒரு கூட்டம் விலகி பாகிஸ்தான் என்று போனாலும் இந்த நாட்டின் வேறு வேறு பகுதி மக்கள் தஙகளின் உணர்வாலும் மொழியாலும் பண்பாட்டாலும் தஙகளின் பிராந்திய அடையாளத்தோடு அவரவர் பகுதியிலேயே தங்கி இந்திய்ர்களாகவே வாழ்கிறார்கள். அடுத்து இந்தியாவில் 80%இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதாவது உண்மையா?வெள்ளைக்காரன் தன் நிர்வாக வசதிக்கு’யாரெல்லாம் முஸ்லிமில்லயோ கிறிஸ்தவரில்லயோ சீக்கியரில்லையோ அவரெல்லாம் இந்து என்று பெயரிட்டான்.அதைப் பிடித்துக்கொண்டு டவுசர் கூட்டம் இந்து இந்து கூட்டம் சேர்க்கிறது.முஸ்லிகளை தனிமை படுத்தவும் அவர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவும் இந்து என்ற வார்த்தை பயன்படுகிறது.ஒரு பேச்சுக்கு முஸ்லிகள் அனைவரும் இந்த நாட்டிலிருந்து எடுபட்டுவிட்டால் அப்போது தெரியும் இந்த நாட்டில் எத்தனை சதவீதம் இந்துக்கள் என்று! ஒவ்வொறு சாதியும் ஒவ்வொறு இனமும் தனித்தனி மதம் என்று புரிந்து கொள்ளுங்கள்.பிள்ளையார் வழிபாட்டையும் தீபாவளி கொண்டாட்டத்தையும் வைத்து 80%இந்து என்பது ஒரு தற்காலிக ஏற்பாடும் அரசியல் தந்திரமும்தான். இஸ்லாமிய நாடு என்றாலே அனைவரையும் அழித்து பொதுப்படுத்தி விடுவார்கள் என்று எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்?மலேசியா இஸ்லாமிய நாடுதான் அங்கு வேறு மக்கள் தஙகளின் அடையாளத்தோடு வாழவில்லயா?மாலத்தீவு, புருனை,இந்தோனேசியா என்று எத்தனையோ நாடுகள் இச்லாமிய நாடுகளாக அறிவித்துக்கொண்டிருக்கின்றன அங்கெல்லாம் முஸ்லிகளை தவிர வேறு மக்கள் வாழவே இல்லையா? வளைகுடா நாடுகளில் கூட குடியுரிமையோ சொந்த பெயரில் தொழில் தொடங்கவோ முடியாதே தவிர பிற இன மக்கள் வளமோடும் வாழ்கிறார்கள்.இவை எல்லாம் உங்களை வேறு வேறு விவாதங்களுக்கு அழைத்துச் செல்லாம்.நான் வாதாட்டத்திற்க்கு மட்டும் இதைஎல்லாம் எழுதவில்லை.தவறான உங்கள் புரிதல் கசப்புகளை ஏற்படுத்திவிடக்கூடாதே. சந்தேகங்கள்நிவர்த்தி செய்யப்படவேண்டுமே எனேதான்.

    • நண்பர் மீராசாகிப் அவர்களே,

      நான் இசுலாமியர்கள்/கிருத்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பெரும்பாலான நாடுகள் இசுலாம்/கிருத்துவ நாடாக பிரகனப்படுத்தப்படுவதை தான் குறிப்பிட்டேனே ஒழிய மற்ற மதத்தவர்களை கொடுமைப்படுத்துவதாக கூறவில்லை.

      பாகிஸ்தான், (கிழக்கு பாகிஸ்தான்/பங்களாதேஷையும் சேர்த்து தான்) விடுதலை அடைந்தபோது அங்கிருந்த இசுலாமியர் அல்லாத சிறுபான்மையினரின் விகிதாச்சாரத்தையும், இப்போது அங்குள்ள சிறுபான்மையினரின் விகிதாச்சாரத்தையும் இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்த்தால் அங்கு சிறுபான்மையினரின் நிலை என்ன என்பது தங்களுக்கு விளங்கும்.

      அரசியல்வாதிகளை விட்டுத்தள்ளுங்கள், சாதி சங்கங்கள், மத அமைப்புகளை விட்டு விடுங்கள். பொதுவான மக்களை பாருங்கள். இங்கு நம் நாட்டில் அவரவர் சுதந்திரமாக அவரவர் மதத்தின் வழி நடக்க முடிகிறது. மதமே வேண்டாம் என்று கூறும் என்னை போன்றவர்களும் இருக்கிறார்கள்.

      நீங்கள் உதாரணமாக கூறிய மலேசிய, இந்தோனேசியா, புருனே நாடுகளில் நூறு சதவீதம் இசுலாமியர்கள் இல்லை. மலேசியாவில் 38 சதவீதம், புருனேவில் 33 சதவீதம் மக்கள் இசுலாமியர் அல்லாதவர்களாக இருக்கிறார்கள். இருந்தும் அந்த நாடுகள் இசுலாமிய நாடாகவே பிரகனப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற மதங்கள் இருக்கின்றன, ஆனால் மதசார்பற்ற நாடாக இல்லாமல் இசுலாமிய மதம் சார்ந்த நாடாகவே அவை இருக்கின்றன.

      நீங்கள் உதாரணமாக கூறிய மாலத்தீவில் ஒருவர் குடியுரிமை பெற வேண்டும் என்றால் அவர் இசுலாமிய மதத்துக்கு மாறிய பின் தான் குடியுரிமை வழங்கப்படும்.

      ஆக, இசுலாமியர் 6௦ சதவீதம் மேலே இருந்தாலே அந்த நாடுகள் இசுலாமிய நாடாக பிரகனப்படுத்தப்பட்டு விடுகின்றன. அதனால் 80 சதவீதம் இந்துக்கள் இருக்கும் இந்திய நாடு இன்னும் மதசார்பற்ற நாடாக இருப்பது பெருமை கொள்ளக்கூடிய விடயமே. இந்த நிலை இப்படியே தொடரட்டும்.

      எல்லா மதங்களிலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது எனது கருத்து. இந்து மதத்தில் சாதிக்கொடுமை களைய வேண்டும், அனைவருக்கும் கோவிலுக்குள்ளும், வெளியேயும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். இசுலாமிய மதத்தில் இசுலாமிய கடவுளை நம்பாதோரின் மேல் சகிப்புத்தன்மை வளர வேண்டும், பெண்களுக்கு அதிக உரிமை போன்றவை வழங்கப்படவேண்டும். கிருத்துவ மதத்தில் பொய்யுரை பரப்பி அற்புத சுகமளிக்கும் கூட்டம் என்று கூட்டி பொய்யான நாடகங்களை மேடையில் ஏற்றி அப்பாவி மக்களை ஏமாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

      ஷரியா சட்டம் தற்போதைய 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏதான சட்ட வழிமுறையாக நான் கருதவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து. அதே சமயம் இசுலாமியரோ கிருத்துவரோ, இந்துக்களோ அவரவர் சாமியை கும்பிடுவதை நான் கிண்டல் செய்யப்போவதும் இல்லை.
      இந்து மதத்தில் விதவைகளை உயிரோடு எரிக்கும் சதி என்ற விதி இருந்தது. ஆனால் காலத்துக்கு ஒவ்வாத அந்த சதி இப்போது இல்லை. இன்னும் சாதிகொடுமையையும் நீக்கினால் அந்த மதத்திற்கு நல்லது. கிருத்துவர்களும் ஒரு காலத்தில் பூமி சூரியனை சுற்றுவதை நம்பவில்லை, உலகம் உருண்டை என்று நம்பவில்லை, கருத்தடை தவறு என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. அது காலத்திற்கேற்ப சில மாறுதல்களி உள்வாங்கிக்கொண்டு வருகிறது. இதே போல இசுலாமிய மதத்தில், தற்காலிக காலகட்டத்துக்கேற்ப சிற்சில நல்ல மாறுதல்கள் கொண்டு வருவதில் தவறில்லை.

    • // வளைகுடா நாடுகளில் கூட குடியுரிமையோ சொந்த பெயரில் தொழில் தொடங்கவோ முடியாதே தவிர பிற இன மக்கள் வளமோடும் வாழ்கிறார்கள்// வளைகுடா நாடுகளில் கூட குடியுரிமையோ சொந்த பெயரில் தொழில் தொடங்கவோ முடியாதே வளமோடு வாழவில்லை பிழைப்புக்காக வேலை செய்கிறார்க்ள் புண்ணிய பூமி நபியின் வாரிசுகள் வாழும் நாட்ட பத்தி பேசும் போதே முரண்பாடன கருத்தையே பேசுகிறீர்கள் /ஒரு கூட்டம் விலகி பாகிஸ்தான் என்று போனாலும் இந்த நாட்டின் வேறு வேறு பகுதி மக்கள் தஙகளின் உணர்வாலும் மொழியாலும் பண்பாட்டாலும் தஙகளின் பிராந்திய அடையாளத்தோடு அவரவர் பகுதியிலேயே தங்கி இந்திய்ர்களாகவே வாழ்கிறார்கள்/பாகிஸ்தானில் மாற்று மதத்தவர் பயத்துடனேயே வாழ்கிறார்கள் எடுத்டுகாட்டாக ஒரு சிறுமி குரான் பக்கங்களை கிழித்துவிட்டார் என்ற என்று ஜெயிலில் அடைக்கபட்டது ஒரு தம்பதியர் கொலை செய்யபட்டது என வினவு தளத்திலேயே வந்தது மற்ற இசுலாமிய நாடுகளும் வகாபியிசம் அல்லது உண்மை இசுலாம் என்பது இப்பொது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அறிமுகமாகி வருகிறது எடுத்துக்காட்டாக அல்லா என்ற பெயரை மாற்று மதத்தவர் யாரும் பயன்படுத்த கூடாது என்ற தீர்ப்பு ,தமிழ்நாடு தவ்கீது ஜமா அத் போன்ற இயக்கங்கள் யாரைஉம் திட்டுவது இல்லை என்பது பச்சை பொய் வினவு தளத்தை கக்கூஸில் கரித்துண்டால் எழுதுகிறவர்கள் என்று வசை பாடியவர்கள் மாற்று மதத்தவரோடு விவாதம் என்ற பெயரில் மாற்று சமய கடவுள் பெயர்கள் கொச்சையாக திட்டி டிவிடி போடுகிறார்கள் பெரும்பான்மை இசுலாமியர்கள் அத வாங்கி பார்த்து ரகிக்கிறார்கள் /முஸ்லிகளை தனிமை படுத்தவும் / முசுலீமகளை யாரும் தனிமைப்படுத்த வில்லை அவர்களே தனி தனி ஜமா அத்துகளாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் /தலித் மக்களுக்கே அவர்களிலிருந்தே ஒரு தலைவர் தோன்றி வழிநடத்தினாலொழிய / முசிலீம்கள் அடிக்கடி தலித் மக்களை பற்றி பேசுவார்கள் தலித்துகளுக்கு பெரிய அளவில் கொடுமைகள் நடக்கும் போது இசுல்லாம்தான் தீர்வு இசுலாத்தில் இணைந்துடுங்கள் என்ற அழைப்பு விடுவார்கள் தலித்துகள் என்றால் எளிதாக மதம் மாறி விடுவார்கள் என்ற ஆசைதான் தலித்துகள் முஸ்லீமாக மாறினால் தாடி தொப்பி என்று அடையாளம் மாறுமே தவிர வாழக்கையில் முன்னேறம் எல்லாம் காண்பது இல்லை என்பதை தலித்துகளில் இருந்து பாயாக மாறிய பலரை பார்த்து தெரிந்து கொண்டேன் தலித் என்ற வார்தையில் எனக்கு உடன்பாடு இல்லை இருந்தாலும் தலித்துகளுக்கும் மாற்று சமூகத்துக்கும் நடக்கும் மோதல் சம்பவங்களில் முஸிலீமகள் ஒரு போது தலித்டுகள் பக்கம் இருந்தது இல்லை அவர்கள் மன நிலை பெரும்பாலும் ஆதிக்க சாதியினரைத்தான் ஆதரிக்கும்

      • அண்ணன் மீரான் சாகிபுக்கு நன்றிகள் ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் இங்கு உள்ள முசுலீம்கள் மக்காவிலுள்ள காராம் சரிபு என்ற சதுர வடிவ கட்டிடத்தை நோக்கி தொழுகிறார்கள் காராம் சரிபு என்ற கட்டிடத்துக்கு மேல்தான் அல்லா__ இருபதாக ஒரு இசுலாமிய __ புத்தகத்தில் படித்ததாக நியாபகம் அது உண்மை என்றால் ஆயிரம் ஓட்டைகள் கொண்ட ச்ரிய சட்டத்தை போட்டு அரபுலகில் அல்லாவை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது மிரா சாகிபுக்கு தெரிந்தது போல அயிரம் ஓட்டை சரியாவை பற்றி அல்லாவுக்கு தெரியாமல் போனது வருத்தமே எப்பிடியோ மிரா சாகிபு அல்லாவின் டவுசரை வாண்டடாக கழட்டி விட்டார் மேலும் அல்லாவே ஏமாற்றும் அரபு பாஸிஸம்தான் வாகபியிஸம் அல்லது (உண்மை இசுலாம்) என்று உலகுக்கு எடுத்து காட்டி விட்டார் அவருக்கு நன்னிகள்…

        • அல்லாவின் அர்ஸ் என்பது அல்லாவின் சிம்மாசனம் இல்லை இருக்கை என்றே முஸிலிம்கலால் சொல்லப்படுகிறது ,அதை ஆபாச வார்க்தையாக எடுத்துகொன்டு கோடு போட அவசியம் இல்லையே…

  33. இனியன், ஒரு ஜனநாயக நாட்டில்,ஒட்டுக்காக மட்டுமே வளையக்கூடிய ஆட்சியாளர்கள் மத்தியில்,சிறுபான்மையாக வாழும் மக்களுக்கு ஓரளவுக்கேனும் உரிமைகள் கிடைப்பதற்க்கு கண்டிப்பாக இயக்கங்கள் அமைப்புகள் தேவை.பெரும்பான்மையாக இருந்தும் கைவிடப்பட்ட தலித் மக்களுக்கே அவர்களிலிருந்தே ஒரு தலைவர் தோன்றி வழிநடத்தினாலொழிய அவர்களுக்கான உரிமை முழுமையாய் இன்னும் கிடைக்காதநிலையில் சிறுபான்மைக்கு சொல்லவா வேண்டும்.அந்த வகையில் தமுமுக தவ்கீத்ஜமாத் போன்ற இயக்கங்கள் அவசியமாகின்ற்து.முஸ்லிம்லீக் எதைப் பற்றியும் கவலைப் படாமல் கருணாநிதிக்கு வால் பிடிப்பதயே கொள்கையாக கொண்டிருந்ததால் இந்த இயக்கங்கள் மக்களின் நம்பிக்கையை குறுகிய காலத்தில் பெற்ற்ன.இவர்களுக்குள் இருக்கிற நீயாநானா போட்டி தனிக்கதை.இதில் நான் யாரை ஆதரிக்கிறேன் என்பதும் எனக்கான தனிப்பட்ட விஷயம். ஆனால் இவர்களை ஆர் எஸ் எஸ்,விஎச்பி யோடு ஒப்பிடுவது இவ்வளவு பாமரத்தனமா!என்று ஆச்சர்யமாக இருக்கிறது.ஒருபோதும் தவ்கீத்ஜமாத் தமுமுக, பிற சமுதாய மக்களை இழித்தும் பழித்தும் வண்மத்தோடும் பேசியதே இல்லை.கொஞசம் போய் நீங்கள் சொன்ன அந்த அமைப்புகளின் ஆதரவாளர்களின் முகநூல் பக்கங்களை பாருங்கள்.அதன் தலைவர்களின் பேச்சுக்களை கேளுங்கள்.நான் இங்கு எழுதி கொண்டிருப்பதே அவர்கள் பேச்சால் வரும் ஆபத்துகளிலிருந்து நாம் காப்பாற்ற பட வேண்டும் என்பதற்க்காகத்தான்.ஒருபோதும் எந்த முஸ்லிம் இயக்கமும் இது போல் பேசுவது கிடையாது.ஒருமுறை ரெண்டு தரப்பு பேச்சையும் கேட்டுவிட்டு முடிவுக்கு வாருங்கள்.

    • மத சிறுபான்மை மக்கள் அவர்களின் வாழ்வுரிமைக்காக இயக்கங்கள் தொடங்குவது என்பது rss போன்ற ஹிந்துத்துவா இயக்கங்களின் எதிர்விளைவாக தான் பார்கின்றேன். இந்தியாவை போன்ற ஒரு போலியான ஜனநாயக நாட்டில் rss ,கிருஸ்துவ இயக்கங்கள் , இஸ்லாமிய இயக்கங்கள் தவிர்க்க இயலாதவைகள் தான் என்பதனையும் ஒத்துகொள்கின்றேன். இந்தியாவில் மதசார்பின்மை என்பதே ஒரு கயமையான முறையில் முன்வைக்கப்பட்ட விடயம் தான் என்பதனையும் ஒத்துகொள்கின்றேன். மத சார்பின்மை என்ற பெயரில் அனைத்து மதங்களையும் ஊக்குவிக்கின்றார்கள் என்பதனையும் வருத்தத்துடன் ஒத்துகொள்கின்றேன். உண்மையில் மதசார்பின்மை என்பது எந்த மதத்தையும் அரசு ஊக்குவிக்காமல் இருபது தான் என்பதனை கம்யுனிச கொள்கைகளின் அடிப்படையில் புரிந்து கொண்டு உள்ளேன்.

      இன்றைய போலியான ஜனநாயக ., கயமையான ம்தசார்பின்மை உள்ள இந்திய அரசியல் சூழலில் ஹிந்டுத்துவாக்ளால் ஒடுக்கபடும் மத சிறுபான்மை மக்கள் தவ்கீத்ஜமாத் தமுமுக போன்ற மதம் சார்ந்த இயக்கங்களை சார்ந்து இருந்து தன் உரிமைகளுக்காக போராடுவது சரியானதா அல்லது கம்யுனிச கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் அமைப்புகளை ஆதரித்து இயங்குவது சரியானதா ?

  34. அண்ணன் ககை கிறிஸ்தவ நாடுகளுக்கும் இசுலாமிய நாடுகளுக்கும் இடையில் மாற்று மதத்தவரை ஒடுக்குமுறை செய்வதில் வித்தியாசம் இல்லை என்பது போல எழுதி இருப்பது எனக்கு சரியான கருத்தாக தெரியவில்லை

    • ஈராக் மீதும் , லிபியா மீதும் குண்டு போட்டு அந்த மக்களை கொன்று குவித்த அமெரிக்கா ,இங்கிலாந்த் ,பிரான்ஸ் ஆகியவை கிருத்துவ மத நெறிமுறைகளை பின்பற்றும் மக்கள் வாழும் நாடுகள் தான் என்பது இந்த மத வெறியருக்கு புலப்பட வில்லை போலும். உன் உயிர் போனாலும் பரவாயில்லை ஆனால் கருகலைப்பு செய்யகூடாது என்று கிருஸ்துவ மத நெறிமுறைகள் படி வலியுறித்தி மருத்துவ அறிவியலுக்கு எதிராக பேசி ஒரு இந்திய பெண்ணை கொன்ற கிருஸ்துவ நாடு எது என்பது இந்த மத வெறியருக்கு தெரியாதா என்ன?

      • நான் நினைத்து கொண்டு இருந்த கருத்தயே இனியன் சொல்லுவார் என்று நினைத்து கொண்டு இருந்தேன் சொல்லியே விட்டார் என்னை பார்த்து நீ மட்டும் யோக்கியனா மத வெறியந்தானே என்று சுட்டு விரலை நீட்டி ஆனால் அவர் சுட்டு விரலை நீட்டும் போது அவரை நோக்கி நாலு விரலகள் நீட்டப்படுகிறது என்பதை மறந்து விட்டார் இங்கிலாந்தும் பிரான்சும் அமெரிக்கவும் கிறிஸ்தவதை பின்பறறும் பெரும்பான்மை மக்களை கொண்ட நாடுகள் என்பது அதே நேரத்தில் கிறிஸ்தவ நம்பிக்கை என்பது மேலை நாடுகளில் வடிந்து விட்ட படியினால் ஏழை நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்ற கருத்தை வினவு தளமே வலிந்து பரபுரை செய்யும் போது லிபியா மீதும் ஈராக் மீதும் கிறிஸ்தவ மத வெறியால் குண்டு போட்டன என்பது பச்சை பொய் இல்லையா மேலும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாட்டின் செயல்பாடுகளை கண்டித்து சிறை சென்ற கிறிஸ்தவ மக்கள் பலருன்டு ஆனால் இசுலாமிய மத தீவிரவாதிகளின் செயலை எதிர்த்து போராடியதாகவும் சிறை சென்றதாகவும் ஒரு இந்திய முசிலீமை கூட காட்ட முடியுமா உங்களால் இல்லையில்லை மாற்று மதத்தவரை கொலை செய்வது தவறு என்று அறிக்கை விட்டார்கள் உத்தமர்கள் என்று சொன்னீர்கள் என்றால் நான் அதை நம்பும் அளவுக்கு முட்டளோ குடிகாரனோ அல்ல..

        • அண்ணன் இனியன் கேட்ட கேள்விக்கு பதில் தெரிய வில்லை என்றால் ஆத்திரம் வரத்தான் செய்யும் இனியன் ஆனாலும் கோவத்தை கன்ரோல் செய்து உங்களை எழுதும் படி செய்த உங்கள் கம்மூனிஸ பயிற்ச்சியாளர்களிடம் கேட்டு விடை சொல்லுங்கள் அதை விடுத்து என்னை மூடிக்கொண்டு போக சொல்ல கூடாது சரி விடுங்க எனக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறது என்றால் அதை நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை அப்பிடி பணம் வந்தால் நல்லதுதானே நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்னை போன்று கிறிஸ்தவ மத வெறியர்களுக்கு பணம் குடுக்கும் அமெரிக்க நிருவனம் ஒன்றின் முகவரியாவது தர வேண்டும் தயவு செய்து தாருங்கள் தந்தையை இழந்து மனநிலை பிரண்ட தாயை வைத்து பாராமரிக்கும் ஏழை கிறிஸ்துவன் நான் எனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தும் போக முடியாத தற்குறியாக கட்டாயத்தின் பேரில் வாழ்ந்து வரும் எனக்கு பணம் வந்தால் நல்லதுதானே அப்பிடி பணம் வந்தால் கம்மூனிஸ்ம சிறந்தது என்று ஏற்று கொள்ளுகிறேன் போதுமா இனியன்..,

          • இணைய தளங்களில் , வாழ்க்கையில் மாற்று மத வெறுப்புகளை விடுத்துவிட்டு படித்த படிப்புக்கான பிழப்பை பாருங்கள் ஜோசப். அதுவே நீங்கள் சமுகத்துக்கு செய்யும் சிறந்த பணி..

            • அண்ணன் இனியன் சொல்லி விட்டார் எனது பிழைப்பை பார்த்து கொண்டு போ அதுதான் சமூகத்திற்க்கு செய்யும் சிறந்த பனியாம் எனது பிழைப்பை பார்ப்பதற்க்கு யாருடைய அறிவுறையும் எனக்கு தேவை இல்லை, அதாவது மிரட்ட ஆரம்பித்து விட்டார்

              • மதவெறியுடன் மாற்று மதத்தவரை வெறுக்கும் சமுக கிருமியாக இருப்பதை விட தன் நலனை மட்டுமே பார்த்துக்கொண்டு செல்வது நல்லது தானே ஜோசப்? இதில் என்ன மிரட்டல் இருக்கின்றது ?

                //தந்தையை இழந்து மனநிலை பிரண்ட தாயை வைத்து பாராமரிக்கும் ஏழை கிறிஸ்துவன் நான் எனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தும் போக முடியாத தற்குறியாக கட்டாயத்தின் பேரில் வாழ்ந்து வரும் எனக்கு பணம் வந்தால் நல்லதுதானே அப்பிடி பணம் வந்தால் கம்மூனிஸ்ம சிறந்தது என்று ஏற்று கொள்ளுகிறேன் போதுமா இனியன்..,//

                • அண்ணன் இனியன் போன்ற கம்மூனிஸ்டுகளுக்கு என் மீது என்னதான் கோவமோ தெரியவில்லை அப்பிடி நான் என்ன சொல்லிடேன் இசுலாம் என்ற மதத்தின் கொள்கைகளைத்தான் என் பானியில் சொன்னேன் அதுக்கு திப்புவுக்கும் மீரான் சாகிபு போன்ற இசுலாமிய தோழர்களுக்கே கோவம் வராத போது கம்மூனிஸ்டு ஆகிய உங்களுக்கு ஏன் அவசியம் இல்லாத கோவம் நான் சமூக கிருமி என்று எப்பிடி சொல்லுகிறீர் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன் அண்ணன் இனியன் நான் ஒன்றும் வெட்டியாக பொழுது போக்குபவன் அல்ல விவசாயம் செய்யும் மனிதன் நீர் தின்னும் சட்டினியிலும் கூட நான் விளைவித்த தேங்காய் இருக்கலாம் நான் உங்களுக்கும் உங்கள் கம்மூனிஸத்துகும் எதிரி அல்ல எனது எதிரியாக நான் நினைப்பது இசுலாம் என்ற பாஸிஸ அரபு சித்தாந்தம்தான் இதில் உங்களுக்கு என்ன கோவம் அட என் பெயரை ஜோசப் என்பதற்க்கு பதில் யூசும் என்று வைத்துக்கு கொண்டு பின்னூட்டமிட்டால் உங்கள் கோவம் மட்டுறுமா தெரியவில்லை எனென்றால் இனியன் என்பவர் தமிழன் என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொளும் இசுலாமியரை விட அதிகம் கோவம் கொள்ளுகிறார் என் மீது

                  • திப்பு மற்றும் மீரான் சாகிபு போன்றவர்கள் உங்கள் கருத்துக்களை மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை, அதே நேரத்தில் மாற்றுகருத்து உடையவர்களுடன் விவாதிகின்றார்கள் என்பதில் இருந்தே உங்கள் கருத்துகளின் தரம் தாழ்ந்து போய் மாற்று மதத்தின் மீதான வெறுப்பு மட்டுமே முதன்மையாக நிற்கின்றது என்பது புலப்படவில்லையா உங்களுக்கு?

                    மேலும் உங்களுக்கு ஓர் இறைகொள்கை என்பது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, குரான் ஆகிய மத நூட்கலின் சாராம்சம் என்பது என் புலப்படவில்லை? பழைய ஏற்பாட்டின் தேவை போதமையின் காரணமாக தான் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது , அதன் தொடர்சியாக தான் குரான் எழுதப்பட்டது என்ற உண்மைகூட உமக்கு தெரியவில்லையே நண்பா. ஏசுவின் பிறப்பை இறைதுதரின் பிறப்பாக நம்பும் மனங்களுக்கு நபியின் பிறப்பை இறைதுதரின் பிறப்பாக நம்ப இயலாத காரணம் என்ன நண்பா? ஓர் இறைகொள்கை, உருவ வழிபாடு போன்ற அம்சங்கள் கிருஸ்துவதுக்கும் , இஸ்லாமுக்கும் பொதுவான அம்சங்களாக இருக்க உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி? ஏசுவின் இளகிய மனம் அவரை சாந்த ரூபியாகவும் , நபியின் போர்விரனுக்கான மனம் அவரை வெற்றி வீரனாகவும் வரலாற்றில் வெளிகாட்டிவிட்டது. சூழல்கள் தான் வாழ்க்கையை தீர்மானிகிறது என்ற நிலையில் , இருவரையும் இறை துதர்கள் என்று மக்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக நீங்கள் பேசவேண்டும் எனில் இருவரையும் அவர்களின் பிற்போக்கான கொள்கைகள் அடிப்டையில் எதிர்க்கவேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு செல்லவேண்டும் அல்லவா?

                    உங்களுக்கு வசதி எப்படி ஜோசப்?

                    • Change உருவ வழிபாடு -> உருவ வழிபாடு எதிர்ப்பு

                    • ஆகா இனியன் சூப்பரான கம்மூனிஸ கருத்தை மொழிகிறீர்கள் உங்களை எப்பிடி வாழ்த்துவது என்று எனக்கே தெரியவில்லை அல்லாகு அப்பர் என்று கோஸமிட்டு மனதை ஆற்றிக்கொள்ளுகிறேன்
                      சாயா முசுலீம்களின் தீவிரவாத செயல்களுக்காக சவுதி அரசு 57 சாயா முஸ்லீம்களை தூக்கில் போட்டது சவுதி அரசு சன்னி முஸ்லீமாம் அதனால் சவுதி அரசின் தூதரகத்தை ஈரானிய சாயா முஸ்லீம்கள் அடித்து நொருக்கி விட்டார்கள் அதனால் சன்னி வகாபிய அரசான சவுதி ஈரானுள்ள தனது தூதர்களை திரும்ம்ப அழைத்துக்கொண்டது இது செய்தி இதில் அமெரிக்க ஏகதிபத்தியத்தை விஅனவு அறிஞ்கரக்ள் தேட வேண்டும் தேடினால் கிடைக்கும் என்று ஏசுவே சொல்லி இருக்கிறார்

                      சாரி நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன் எங்க ஊரு புராட்டா கடை ,கறிக்கடை ,துணிக்கடை பாய்களுக்கு சாயாவோ சன்னியோ எதுவும் தெரியாது அவர்களுக்கு தெரிந்த இசுலாம் என்பது நேரம் கிடைக்கும் போது தொழுவது வெள்ளிக்கிழமை சும்மா தொழுகையில் சும்மானாலும் பங்கு கொண்டு பயான் கேட்ப்பது ரம்ஜான் அன்னிக்கு புது டெரஸ் போட்டுக்குகொண்டு பக்கத்து வீட்டு பாய தழுவி அனைத்து ஈத் மூபாரக் என்று சொல்லுவது
                      ஆனா இப்ப என்ன ஆச்சுனா இசுலாமிய ஆலிம்கள் என்ன பன்றாகனா ,அரபு தேசத்துல உள்ள காசு வாங்கிகொண்டு இசுலாமிய ரிசர்ச் ஆர்டிகள் எழுதும் ஸ்கால்ர்கள் எழுதுகிறார்கள் இசுல்லமில அதாவது குரானுல அறிவியல் உண்டு ,கணக்குபதிவியல் உண்டு ,மிகக்பெரிய பொருளாதார சீர்திருத்த கருத்துகள் உண்டு என்று எழுதுவதும் அரபு நாட்டு அல்லா தனது தூதருக்கு எப்படி எல்லாம் டெரஸ் போட சொன்னார் தன் பொண்டாட்டிகளெளக்கு எப்படி டெரஸ் பொட்டு விட்டார் அது எப்பளாவக பெண்ருமையை தருகிறது என்று கூறி திருக்குரான் உயார்வானது அல்லாவின் புத்தகம்தான் என்று ஆணித்தரமாக எழுதுகிறொம் என்ற பெயரில் மதவெறியினாலும் அரேபிய அடக்குமுறை வெறியினாலும் மத போதை தலைக்கு ஏறி வாந்தி எடுத்துகொண்டு இருக்கிறார்கள அதே வாந்தியை கூகுலில் ட்ரான்சுலேட் செய்து இங்கு உள்ள இந்தியாவில் பரப்புகிறாரகள் இசுலாமியன் என்றால் இப்பிடித்தான் டெரெஸ் போட வேண்டும் இப்பிட்த்தான் பெண்கள் இருக்க வேண்டும் அத நம்ப செய்ய இசுலாமில் மருத்துவம் வானவியல் கணக்குபதிவியல் பொருளாதாரம் எல்லாம் உண்டு என்று பர்ப்புரை செய்கிறார்கள்..

                    • இனியன் சொல்லுகிறார் யாரும் உங்களை மயிரளவுக்கும் மதீகவில்லை என்று எனக்கு மயிரை பற்றி கவலை இல்லை மயிர் என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும் எனக்கு ஒரு குறைவும் வந்து விடப்போவது இல்லை அனாலும் அண்ணன் போன்ற அரபி கம்மூனிஸ்டுகளையும் இரைத்தூரரின் வாரிகளுக்கும் டென்சன் உன்டாக்கும் செய்தியை சொல்லுகிறேன் எனக்கு குடுக்கப்பட்ட தமிழ் குராம் அதாவது குரான் அரக்கட்டளை கோவை என்ற பதிப்பை படித்து பார்த்தேன் எனக்கு ஒன்றும் பிரியவில்லை ____ போதுமா இனியன்

                    • தம்பி ஜோசப்பு கிருஸ்துவத்தின் பெயரால “கண் தெரியாதவர்கள் காது கேட்காதவர்கலாகும்” இனிய தருணங்களை நினைத்து மெய் மறந்து கொண்டே உங்கள் பின்னுட்டத்தை படித்து மகிழ்ந்தேன். நாளைக்கு மதங்கள் மூலம் வியாபாரம் நடத்தும் கிறிஸ்துவத்தையும் பற்றி விரிவாக பார்கலாமா ?

                      குறிப்பு : அனைத்து மத அயோக்கியதனங்களையும் பற்றி விரிவாக பேசலாமே ஜோசப்.

                    • சிலுவைப் போர் :

                      சலாடின் என்று அழைக்கப்படும் சலாவுதீன் சிலுவைப் போர்களின் போது ஜெருசலத்தை மீட்டார். பிடிபட்ட கிருத்துவர்களை அந்தக் கால வழக்கப்படி அடிமைகளாக விற்கவில்லை. தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து விடுதலை செய்தார். சிலுவைப் போர் வீரகளுடனான கௌரவமான சமாதானத்துக்கும் தயாராக இருந்தார். ஆனால் வெள்ளைக்காரக்ள் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர்ந்து அரபு மண்ணைத் தாக்கிக் கொண்டே இருந்தனர்.
                      பின்பு வந்த மேமலூக் சுல்தான் பாபர்ஸ் கடைசி சிலுவைப் போர் வீரன் வரை ஒழித்துக் கட்டினார்.. அவர்களின் கோட்டைகளையும் குடியேற்றங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கினார். அப்போது ஓடிய வெள்ளைக்கார்கள் அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு மத்தியக் கிழக்குப் பக்கம் தலைகாட்டவில்லை.
                      இப்போது நாசர், லபெல்லா, அராப்த், கடாபி . . . என்று சிறந்த தலைவர்கள் இருக்கத்தான் செய்தனர்.

                      ஆனால்……

                      …… எகாதிபத்தியங்கள் அல்கைதாவையும் ஐஎஸ்ஸையும் வளர்த்தன.

                      நன்றி : எழுத்தாளர் இரா. முருகவேள்

                    • give us your bombers, we will give our baskets – பேட்ட்டில் ஆப் அல்ஜியர்ஸ் படத்தில் வரும் ஒரு வசனம். அல்ஜிரிய விடுதலைப் படை தங்கள் கிராமங்கள் நகரங்கள் மீது குண்டு வீசும் பிரஞ்சு ராணுவத்துக்குப் பதிலடியாக அல்ஜியர்ஸ் நகரில் பிரஞ்சுக்காரர்கள் நடமாடும் பகுதிகளில் கூடைகளில் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்கிறது.
                      கைது செய்யப்பட்ட ஒரு FLN அமைப்பைச் சேர்ந்த அல்ஜீரிய வீடுதலைப் படைத் தலைவரை ஒர் பிரஞ்சு பத்திரிக்கையாளர் ஏன் சிவிலியன் பகுதிகளில் குண்டு வைக்கிறீர்கள் என்று கேட்கிறார். (எங்கள் நாட்டின் மீது)குண்டு வீசும் உங்கள் விமானங்களைத் தாருங்கள் எங்கள் கூடைகளைத் தந்து விடுகிறோம் என்கிறார் புரட்சிப் படைத் தலைவர்.
                      ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இருதரப்பு நியாயங்களும் அப்படியே இருக்கின்றன. புதியது என்னவெனில் இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத முற்றிலும் வேறு அரசியலைக் கொண்டுள்ள நமது அன்புக்குரிய தமிழ்நாட்டுத் தோழர்களும் இஸ்லாமியர்களாகப் பிறந்ததற்க்காக குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டிருப்பதுதான்.

                      நன்றி : எழுத்தாளர் இரா. முருகவேள்

                    • திரு, இனியன்,

                      நீங்கள் சும்மா உங்களின் பாட்டுக்கு முஸ்லீம்களுக்கு ஐஸ் வைப்பதைப் பார்க்க உண்மையில் சிரிப்பு வருகிறது. சலாவுதீன் (அரபு அல்ல குர்திஷ்) ஏனைய அரபிய ராணுவதளபதிகளுடன் ஒப்பிடும் போது மனிதாபிமானமுள்ளவனாக காணப்படுகிறான் என்பது உண்மை. ஆனால் ஒவ்வொரு கிறித்தவ ஆண், பெண், குழந்தையும் சலாவுதீனுக்குப் பிணையப் பணம் கட்டிய பின்பே ஜெருசலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அப்படி பிணையப் பணம் கட்ட முடியாத ஏழைகள் விடுவிக்கப்பட்டனர். கிறித்தவ போர்வீரர்கள் அடிமைகளாக்கப்பட்டனர்.

                      ஆனால் தமிழ் முஸ்லீம்களுக்கும் குர்திஸ் சலாவுதீனுக்கும் என்ன தொடர்பு, மாமனா, மச்சானா? அதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அவனைப் பற்றி தமிழ் முஸ்லீம்கள் ஏன் பெருமைப்பட வேண்டும். நான் ஒரு சைவன் அல்லது சிவனை வழிபடுகிறவன், சத்ரபதி சிவாஜியும் ஒரு சிவபக்தன், அதற்காக எனக்கும் வீர சிவாஜிக்கும் ஏதாவது தொடர்பிருப்பதாக, அவனது வீரத்தில், புகழில் அல்லது ஏனைய வட இந்திய இந்து அரசர்களின் வீரத்திலும் புகழிலும், எனக்கேதும் பங்கிருப்பதாக நான் உணரவில்லை, ஆனால் தமிழ்முஸ்லீம்கள் மட்டும், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற தமிழ் மன்னர்களின் வீரத்திலும், புகழிலும், பாரம்பரியத்திலும் அவர்களுக்கும் பங்கிருந்தாலும், அவர்களை விட்டு விட்டு, சலாவுதீன் போன்ற, அரேபிய- பாரசீக மன்னர்களை கலீபாக்களை புகழ்கின்றனர், அவர்களை நினைத்துப் பெருமைப் படுகின்றனர். அதை நன்றாகப் புரிந்து கொண்ட அண்ணன் இனியனும் தன்பாட்டுக்கு வரிந்து கட்டுகிறார்.

                      ஒரு இந்தி அல்லது குஜராத்தி அல்லது மலையாளம் பேசும் இந்துவுடன் எனக்கிருக்கும் தொடர்பை விட, ஒரு தமிழ் பேசும் முஸ்லீமுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக, அவனை எனது சகோதரனாக நான் உணர்கிறேன். அது தான் இங்குள்ள வேறுபாடு.

                      ///இப்போது நாசர், லபெல்லா, அராப்த், கடாபி . . . என்று சிறந்த தலைவர்கள் இருக்கத்தான் செய்தனர்.///

                      சதாம் ஹுசைனையும், ஒசாமா பின்லாடனையும் விட்டு விட்டீர்களே. 🙂

      • Iniyan, England or USA are not bombing Iraq or Syria to spread their religion. They are not motivated by Bible. They are not shouting “Glory to Jesus” when they explode their suicide vests. Their motivation is money and land. They care least about religion. In case of Serbia, whose side West took? If West is united by religion, they should be fighting Saudi Arabia joining with Russia. But it is not happening right? Islamic terrorism is quiet different. Also there are many Christian pacifistic movements in West which vehemently oppose wars.

        • HisFeet, மீண்டும் ஒரு முறை வரலாற்றை படியுங்கள் சார். சிலுவை போர்களில் தொடங்கி சிரியா போர்வரையில் பின்னனியில் இருப்பது மதமும் அதனை சார்ந்து பொருளாதார ,நிலம் சார்ந்த விசயங்களும் தான் என்று உணருவிர்கள்.

  35. ஜோசப் அவர்களே,

    நான் ஒடுக்குமுறை செய்வதாக கூறவில்லை. கிருத்துவ நாடாகவோ அல்லது இசுலாமிய நாடாகவோ பிரகனப்படுத்தப்படுவதை தான் நான் குறிப்பிட்டேன்.

  36. ஜோசப் ,நிறைய சந்தர்பங்களில் அவதானித்து இருக்கின்றேன். பிற்படுத்த பட்ட சமுகத்தில் இட ஒதுக்கிட்டு மூலம் கல்வி , வேலைவாய்ப்பை பெரும் பிற்படுத்த பட்ட சமுகத்து நண்பர்கள் , அதே நேரத்தில் தலித் மக்கள் அத்தகைய இட ஒதுகீட்டின் மூலம் முன்னேறும் போது பொறாமை படுவதும் , தலித் மக்களுக்கான இட ஒதுகீட்டிற்கு எதிராக பேசுவதையும் பார்த்து இருக்கிறேன்.

    அதே தொனியில் தான் ஜோசப் அவர்கள் பேசிக்கொண்டு உள்ளார்.தன் கிருஸ்துவ மதத்தின் கசடுகளை பற்றி பேச துப்பின்றி மாற்று மதத்தின் மீது மதவெறுப்பு தீயை கக்கிகொண்டு உள்ளார் இந்த மதவெறியர். இஸ்லாமிய நெறிகளை கரைத்து குடித்தவருக்கு கிருஸ்துவ நெறிகள், பொதுவில் அனைத்து மத நெறிகள் ,ஹிந்து மதம் உட்பட எப்படி பட்ட பிற்போக்கு தன்மை வாய்ந்தவை என்று தெரியாமல் எல்லாம் கிடையாது. இவரின் நேக்கம், இவருக்கு வரும் ,மேற்கித்திய பணம் இவரை இஸ்லாமை நோக்கி மட்டும் எதிராக பேச வைகின்றது. இந்த மனிதம் இழந்த மா மிண்டும் மனிதன் ஆகவேண்டும் எனில் அனைத்து மத பிற்போக்கு தனங்களையும் பேசவேண்டும் அல்லது மூடிக்கொண்டு போகவேண்டும்.

  37. சகோதரர்களே வாதம் திரிந்து திரிந்து வேறு வேறு வடிவம் எடுத்து சென்று கொண்டே இருக்கிற்து.நாம் எங்கே எதற்கு துவங்கினோம் என்பதை மறக்க வேண்டாம்.இனியன்,”அனைத்தையும் விட்டு விட்டு கம்னியூஸ்ம் நோக்கி வாருங்கள்”என்று அழைப்பு விடுக்கிறார்.தவறு இல்லை.தான் சார்ந்த, தான் நம்புகிற கொள்கை நோக்கி அழைப்பு விடுத்தல் இய்ல்புதான்.எல்லா மனிதருக்குள்ளும் இருக்கிற் உளக்கிடக்கை இது.ஆனால் அடுத்தவர் இதை செய்யும்போது இடிக்கிறது.எங்களது மதமில்லை நாங்கள் மதவாதிகள் இல்லை மதம்தான் அபின் என்று சொல்லவைக்கிறது.எங்களைப் பொறுத்தவரை அதுவும் ஒரு மதம்தான்.தாராள்மாக உஙகள் மதத்தை நீங்கள் பரப்பலாம்.நாங்கள் அனைவரும் உங்களதை ஏற்றுக்கொண்டுவிட்டால் இந்தியா பழைய ரஷ்யாவாக மாறுவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. திருப்பி திருப்பி ஆர் எஸ் எஸ் வகையறாக்களோடு இஸ்லாமிய இயக்கங்களை ஒப்பிடுவது ஒன்று பச்சைப்பிள்ளைத்தனம் அல்லது டவுசர்க்ளின் பாதிப்பு.இஸ்லாமிய இயக்கங்களின் போராட்ட முறையிலோ அரசியல் செயல்பாடுகளிலோ கருத்துவேறுபாடுகள் விமர்சனங்கள் இருப்பது இயல்பு.இந்துத்துவ வெறிபிடித்த இயக்கங்களுக்கு பதிலடியை அவ்ர்கள் கொடுக்கலாம்.என்றாவது இந்து மக்களை துவேசமாய் பேசியிருப்பார்களா? ஆர் எஸ் எஸ் இந்து மக்களின் நலனுக்கும் உரிமைக்குமா இருக்கிறது?இந்த ஆட்சி வந்து ஒன்றரைவருடங்களாக ஆட்சியாள்ர்களே பேசுகிற பேச்சும் அதற்க்குநடக்கிற விவாதங்களும் காதில் விழுகிறதா இல்லையா?தெரிந்து கொண்டே அவர்களையும் இவர்களையும் ஒருதட்டில் வைப்பது எரிச்சலைத்தான் கிளப்புகிறது.

  38. கற்றதுகையளவு, பாக்கிஸ்தான் பங்களாதேஷில் சிறுபான்மையினர் அருகி விட்டார்கள் என்ற கணக்கின் மூலமாய் என்ன சொல்ல வருகிறீர்கள்? அங்கிருந்து அனைவரையும் அடித்து விரட்டிவிட்டார்கள் என்றா.அல்லது கட்டாயப்படுத்தி மதம் மாற்றிவிட்டார்கள் என்றா?இதைத்தானே டவுசர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.ஒரு நாட்டின் பொருளாதார அரசியல் காரணங்களின் அடிப்படையில் அங்கு இருக்கலாம்.அல்லது இடம் பெயரலாம்.எந்த ஒரு நாட்டின் சட்டதிட்டங்களையும் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள்தான் தீர்மானிக்க முடியும்.அதில் சிறப்பானதும் இருக்கும் குறைகளும் இருக்கும்.முஸ்லிம் நாடு என்ற ஒரு காரணத்திற்க்காக ஒவ்வொறு முஸ்லிம் நாட்டின் சட்டதிட்டங்களைப்பற்றியும் நடைமுறைகள் பற்றியும் இங்கிருக்கும் நான் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.இஸ்லாமிய நாடு என்றாலே பயங்கரவாதம்தான் இஸ்லாம் என்றாலே பயங்கவாதந்தான் என்ற கருத்தை மட்டும்தான் நான் மறுதலிக்கிறேன்.இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதில் என்னை விட்டு நீங்கள் மட்டும் பெருமை கொள்ளவேண்டியதில்லை.அந்த பெருமிதத்தோடு நாஙகளும் இருக்கிறோம். இஸ்லாம் மதத்தில் சீர்திருத்தம் செய்ய அறிவுரை செய்கிறீர்கள்.அது இஸ்லாமியர்களூக்கானது.இந்து மதத்தின் குறைபாடுகளை இந்துவாக பிறந்த பெரியாரும் அம்பேத்கரும்தான் சாடினார்கள்.அதில் இருந்த நியாயத்தால் லட்சக்கணக்கான மக்கள் அவர்கள் பின் திரண்டார்கள்.சீர்திருத்தங்களும் இந்துக்களால்தான்நடந்தது. இஸ்லாத்தின் குறைபாடுகளை நாங்கள் பரிசீலிக்கிறோம்.நீங்கள் எதையெல்லாம் குறை என் கிறீர்களோ அதைப்பற்றி முழுமையாய் ஆராயுங்கள்.பெயரிலேயே கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவராய் காட்டிக்கொள்ளும் நீங்கள் இஸ்லாமியத்தை ஆர்வமாய் ஆராயலாமே.கண்டிப்பாய் உங்களுக்கொரு வாய்ப்பு கிடைத்தால் ஆராய்வீர்கள் என்றுநம்புகிறேன். அதன் பிறகு உங்கள் விமர்சனத்தை வையுங்கள். பரிசீலிப்போம்.

    • மீரான் சாகிப் அவர்களே,

      நல்ல மனிதனாக வாழ்வதற்கு மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது எனது கருத்து. மதத்தை ஆராய்வதை விட மனிதத்தை ஆராய்வது பயன் தரும்.

  39. சகோதரர்களே நான் விஷயத்திற்கு வருகிறேன்.வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் “தங்களின் தன்னலமற்ற சேவைக்கு தங்களின் மதம் தூண்டுகோலாய் இருந்தது”என்று சொன்னது செய்தி.இது உங்களை உறுத்தியது.மனிதநேய உணர்வை மத உணர்வாய் மாற்றுகிறீர்களே என்று ஆதஙகப்பட்டீர்கள்.நான் இதை புரிந்து கொண்டு இரண்டு காரணங்களை முன் வைத்தேன்.முஸ்லிம்களை பொறுத்தவரை அது எந்த செயலாக இருந்தாலும் கடவுளை முன்னிறுத்தியே சொல்லி பழகியவர்கள்.நான் ஒரு வியாபாரி.கடை திறக்கும்போது சகுனமோ நேரமோ பார்க்க மாட்டேன்.இறைவன் பெயர்கூறி ஆரம்பிப்பேன்.அன்று என்ன வியாபாரம் நடந்திருந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறி முடிப்பேன்.எனக்கு நெருக்கமான ஒரு மரணம் ஏற்பட்டாலும் அது என் தாயாக இருக்கலாம் நான் பெற்ற பிள்ளையாக இருக்கலாம் உடனடியாக சொல்ல வேண்டியது”இன்னாலில்லாகி வ இன்ன இலைகி ராஜிவூன்” அதாவது எவனிடமிருந்து வந்தோமோ அவனிடமே திரும்பிச்செல்கிறோம் என்பதே.கடவுளே உனக்கு கண் இருக்கா காதிருக்கா என்று எந்த முஸ்லிமும் கேட் க மாட்டான்.எவ்வளவு சோகமிருப்பினும் அழுது அரற்றி புரண்டு கதருவது எங்களூக்கு தடை செய்யப்பட்டதே.மூன்று நாட் களுக்கு மேல் சோகம் அனுஷ்டிக்க உரிமை இல்லை.இப்படி எந்த ஒனறிர்கும் இறைவனை புகழ்வது அல்லது இறைவனை முன்னிறுத்தி முடிவுகளை ஏற்றுக்கொள்வது இதை சமய கொள்கையாக நாங்கள் பழகி வந்திருக்கிறோம்.இதை புரிந்து கொண்டால் உங்களுக்கு இந்த உறுத்தல் வராது.மனிதாபிமானம்தான் உதவிகள் செய்ய காரணம்.அந்த மனிதாபிமானம் என்ற உணர்வு என் இறைவன் எனக்களித்தது.இது ஒன்று.பிற்கு இன்னொரு காரண்ம் முச்லிம் என்ற காரணத்திற்க்காகவே நாங்கள் புறக்கணிக்கப்படுவது.தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவது இப்படியே அழுந்திபோன எங்கள் முத்திரையை எந்த மதம் சொல்லி எங்களிடம் ஏற்றினார்களோ அந்த மதம் சொல்லியே நாங்கள் துடைக்க எண்ண மாட்டோமா.புரிந்து கொள்ளுஙகள் நாங்கள் மத வெறியர்களல்ல.

  40. மீரான் சாகிபு தம்மால் முடிந்த அளவுக்கு கம்யுனிசத்தை மதம் என்று கொச்சை படுத்திக்கொண்டும் ,ஜோசப் அவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு வெறியுடனும் பேசிக்கொண்டு தான் உள்ளார்கள். ஹிந்துத்துவா மதவாத சக்திகளை எதிர்கொள்ள கம்யுனிடுகளுடன் அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பு தான் மத சிறுபான்மையினருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பும், வாழ்வுரிமையையும் அளிக்கும் என்ற கருத்தை கூட ஏற்க்க இயலாதா அளவுக்கு மீரான் சாகிபு மதம் கண்ணை மறைகிறது. ஜோசப் அவர்கள் இஸ்லாம் மட்டுமே பிற்போக்கு தனமானது என்ற பாணியில் பேசிக்கொண்டு பிற மதங்களின் பிற்போக்கு தனங்களை கண்டும் காணாமலும் உள்ளார். மேலும் இவர்கள் இருவரும் தாங்கள் சார்ந்து உள்ள அரசியல் இயக்க பின்னணியை இந்த விவாதத்தில் மறைத்துகொண்டு பேசிக்கொண்டு உள்ளார்கள்.

    • எனது கருத்தை வினவு தளம் வெளியிடவில்லை இனியாவது வெளியிடுறதா பார்க்கலாம் என்று மீண்டும் பின்னூட்டமிடுகிறேன் கடவுளே இல்லை அதாவது கடவுள் எனபது மனித மனத்தில் உதித்த கருத்துதான் கதை இப்பிடி இருக்க கடவுள் இருப்பை நம்பும் மதங்கள் அனைத்தும் மூட நம்பிக்கைதான் என்பதை அறியாதவன் அல்ல நான் ,அனாலும் உலகத்தில் பல மதங்கள் இருக்கின்றன எல்லா மதங்களும் மனிதர்களுக்கு சில படிப்பினைகளையும் நன்னடத்தை உள்ள மந்தனாக வாழ போதனைகள் செய்கின்றன (இசுலாம் தவிற)அனாலும் எல்லா மதங்களும் மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குதனங்களையும் போதிக்கின்றன என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதான் ஆனாலும் தன் மதத்தை பின் பற்றாதவர்களை வன்முறை மூலம் கையாண்டு அவர்களை தனது வழிக்கு கொண்டு வரச்சொல்லும் மதம் இசுலாம் மட்டும்தான் மற்ற மதங்கள் தண்ணி பாம்பு என்றால் இசுலாம் நச்சு பாம்பு அதனால் தான் என்னவோ இசுலாமின் பெயரை சொல்லிக்கொண்டு உலகம் முழுவதும் தீவிரவாத இயக்கங்கள் இயங்குகின்றன எனக்கு தெரிந்து இசுலாமிய தீவிரவாத இயகங்கள் 25 ஆவது தேரும் அப்பிடி இருக்கும் தீவிர இசுலாமிய வாதிகள் ஆள் கடத்தல் ,கொலை ,கழுத்தறுப்பு ,தனது சொந்த மத பள்ளி வாசலகளை இடிப்பது என்று இறைவன் திருப்பெயரால் செய்து வருகின்றார்கள் கம்மூனிஸிட்டுகளுக்கு இஸ்டமாக சொல்ல வேண்டுமென்றால் அமெரிக்க ஏகாதிபத்திய பணத்தின் மூலம் துப்பாக்கிகள் வாங்கி ,அப்பிடிப்பட்ட இசுலாம் என்ற பாஸிஸ் மதத்தை தனது வாழ்வியல் கொள்கையாக ஏற்றுக்கொண்ட முஸிலீம்கள் இசுலாமின் அடிப்படை கூறுகளை அறியாதவர்கள் தங்கள் மனிதாபிமானத்தால் செய்த உதவியை இசுலாம் என்ற மதம் சொல்லித்தான் நாங்கள் இதை செய்தோம் என்று இசுலாம் பற்றிய பாஸீஸ சித்தாந்தை அறியாமல் தாங்கள் செய்த மனித நேய உதவிதான் இசுலாம் என்று நினைத்துக்கொண்டு இசுலாம் சிறந்த சித்தாந்தம் என்று பேசுகிற படியினானும் இசுலாம் என்பது அவர்கள் நினைக்கும் படியான் சித்தாம் இல்லை என்று நிறுவுவதற்கு இசுலாமை விமர்சிக்கவும் குரானிலும் முகமதுவின் போதனைகளிலும் என்ன இருக்கிறது அல்லது அதில் இருப்பது அரபு பாஸிஸம் மட்டும்தான் என்று நிறுப்பதுதான் மனிதநேயமுள்ள இசுலாமை படித்த மனிதனின் கடமை அதுனால்தான் இசுலாமை விமர்சிக்க வேண்டி வருகிறது இங்கு மாற்று மதங்களை விமர்சிக்க அவசியமே இல்லை இனியன்…

      • சாத்தான் வேதம் ஓதிக்கொண்டு உள்ளது. மதவெறி சைத்தான் பிரசங்கம் செய்து கொண்டு உள்ளது. சிலுவை போர்கள், ஈராக் ,லிபியா மீதான தாக்குதல்கள், சிரியாவின் அரசு மீதான தாக்குதல்கள் இவை எல்லாம் நிகழ்த்தபடுவதற்கான பின்னியில் உள்ள நாடுகளின் பெரும்பான்மையினரின் மதம் எதுவென்று அது கிறிஸ்துவம் என்று இந்த மதவெறி * க்கு தெரியாதா என்ன?

      • இனியன் அவர்களே திரு.p.joseph அவர்கள் காவி கை கூலி அவர் அப்படிதான் பேசுவர்,

        உலகத்தில் அதிக அளவு முஸ்லிம்தன் சாவுகிறான் காரணம் ஒரு சில முஸ்லிம் திவிரவாதிகள் கிருத்துவ திவிரவாதிகளிடம் பணம் வாங்கி கொண்டு செய்யும் வேலை,

        அமெரிக்க பெட்ரேல்க்கு ஆசைபட்டு இன்று முஸ்லிம் மக்களை கொல்லும் அமெரிக்க கிருத்தவ திவிரவாதிகள்தான் காரணம்

        .p.joseph போன்ற கைகூலிகள் அதற்கு விதிவிலக்க இல்லை, அவர்களே கொல்வர்கள் பலியை பாய் மிது போடுவார்கள்.

        இது அவர்களுக்கு கைவந்த கைலை,

        by.
        tamil ( Qatar)

  41. எண்பதுகளின் தொடக்கத்தில் என்னுடய மூன்று வயதில் இஸ்லாமியா பகுதியில் வீடு வாங்கி குடி சென்றோம் அதனால் எனது நட்பு ,வாழ்கை முறை எல்லாமமே அதன் தாக்கம் இயற்கையாக இருந்தது .10 முஸ்லிம் பசங்க 6 ஹிந்து பசங்க என்றே வளர்தோம் .எங்களுடய சண்டைகளில் ஒரு தடவையாவது மதம் என்ற யோசித்து பார்கிறேன் ,ஒரு சம்பவத்தை கூட நினைவு கொள்ள முடியவில்லை .காக்க தோப்பு கந்துதுரி , சந்தனகூடு பூரியான் பத்தியா,மீராப்பள்ளி மீன் குளம் ,பள்ளிவாச கடை ,நோன்பு கஞ்சி ,27எலாம் கிழமை என்றேபள்ளிவாசளையும் ,தர்காவையும் சுற்றியே சிறுபிராயம் சென்றது ,எனது தாயார் கிஸ்தவ பள்ளியில் வேலை செய்ததால் தீபாவளிக்கு பலகாரம் 30 முஸ்லிம் வீடு ,20 கிஸ்தவ, ரம்ஜாங்கும் ,க்றிஸ்மஸ் எங்கள் வீட்டில் பத்திரங்கள் வளியும் .மதம் வழிபாடு சம்பந்த பற்ற ஒன்றாக ,சமூக வெளியில் அதன் பங்கு மிகவும் மிக மிக சிறியதாக இருந்தது இப்போதும் இருக்கிறது .
    வேலைக்காக சென்னை மேன்சன்ல் இருந்த போது இஸ்தரி போடும் முஸ்லிம் பையன் உருது பேசிya போது ,தமிழ்நாட்டில் தமிழ் பேசாத முஸ்லிம் கூட இருக்கிறார்கள்
    என்ற செய்தியை ,முஸ்லிமை தனித்து ஒரு பிரிவாக நினைக்கும் எண்ணத்தை ஜீரணிக்க சிறிது நேரம் எடுத்து கொண்டது .
    இப்போதும் பெங்களூர் எந்த இடத்தையும் விட சிவாஜி நக சுற்றி வரும் போது நகரை மனத்திற்கு இதம்தருகிறது .

    சமிப காலம்வரை யாராவது முஸ்லிமை பொதுமை படுத்தி பேசினால் ,அவர்களோடு வாதம் ,ஏன் சண்டை வரை சென்ற நான் ,தற்போது எதும் பேசுவதில்லை.உணர்வோடு கலந்து இருந்த தொப்பியும் தாடியும் ,சற்று மிரட்சி ஊட்டுவாதக,சற்று அன்னிய படுத்துவதாக மாற்றியதுஎது ? வினவு சொல்வது காவி கும்பலா ? சத்தியமாக இல்லை ,பெரியாரும் ,நாம் ஆயிரம் குறைசொல்லும் திரவிட அரசியலும் இந்த மண்ணில் மத நல்லிகணத்தை விதைத்து உள்ளனர் ,அதனால் தலையல தண்ணி குடிச்சாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வெறுப்பு அரசியலை எந்த காலத்திலும் அமைக்க முடியாது .

    பிரச்சனையாக நான் பார்ப்பது சமிப காலமாக பரவிவரும் தமிழ் இஸ்லாமியர் இடையே பரவி வரும் மத தீவரதன்மை ,சமூக வலை தளங்களில் நான் பார்க்கும் முக்கால்வாசி
    நண்பர்களின் ,குறிப்பாக 40 குறைவானவர்கள் சித்தாந்தாங்கள் கவலை அளிக்கின்றன.மத பிற்போக்குதனங்களில் முழுமையாக ஆதரிக்கின்றனர்.மதமே சர்வரோக நிவாரணி என்று கண்மூடிதனமாக நம்புகின்றனர்.வாஹாபீசம் மற்றுமே ஒற்றை வழி என்று மூர்கதனமாக கூவுகின்றனர் . சிறப்புமிக்க பலகூருகள் நிறைந்த எந்த தமிழ் இஸ்லாமியா மரபுகளில் வளர்க்கபட்டார்களோ அவற்றை எல்லாம் புறம் தள்ளி வெறுக்கிறார்கள், துவேஷம் செய்கிறார்கள்.
    தமிழின் ஒரு உட்பிரிவு என்பதில் இருந்து பிடுங்கி ,இஸ்லாமியன் என்ற ஒற்றை இலக்கை அடைய முற்படுகின்றனர்.

    மதத்தை தன்னோடு 24 மணி நேரம் சுமந்து திரியாத,பற்று இருந்தாலும் உன் வழி எனக்கு என் வழி எனக்கு என்று, எல்லாம் கடவுள் தான் என்று எளிய தத்துவத்தை கொண்டு மார்க்க கடமைகளை சத்தம் இல்லாமல் செய்து , கட்சி பிடிப்பால் மட்டுமே கருணாநிதி அல்லது எம்.ஜி .யார் படத்தை தன் கடையில் வைத்து மண்ணோடு கலந்து ,ஒரு அடியை எடுத்து வைபதற்கும் மத நூலில் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்காத ,மனசாட்சிபடி வாழும் 50 கடந்த அந்த தமிழ் இஸ்லாமிய தலைமுறை தான் நம் நாட்டுக்கு தேவை.

    • பயப்பட வேண்டாம் சுந்தர்.இளைய தலைமுறை முசுலிம்கள் தாடியும் தொப்பியுமாக அவர்களின் மதநெறிகளை பற்றி ஒழுகினால் உங்களுக்கு ஏன் மிரட்சி ஏற்படுகிறது.சக மனிதன் அவன் வேலையை பார்த்துக்கொண்டு போவது உங்களை ”மிரட்டுவதாக”தோன்றினால் கோளாறு அவனிடம் இல்லை.உங்களிடம்தான் இருக்கிறது.

      நீங்கள் யாரை பார்த்து மிரளுகிறீர்களோ அந்த இளைஞர்கள்தான் முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் [ நாம விவாதிக்கும் கட்டுரையின் தலைப்பே அதுதானே] என இந்து சகோதரர்கள் சொல்ல காரணமாக இருந்திருக்கிறார்கள்.அவர்களும் மனிதர்கள்தான்.பயப்பட வேண்டாம்.

      • மத தீவிரவாதத்தில் ஏற்பு இல்லாத ஒரு தமிழ் உணர்வாளனின் கருத்து, தமிழ் இந்துவை பார்ப்பன அடிப்படை வாத கருத்துகள் இழுக்கின்றன, ஒரு எதிர் நீச்சலில் தான் அவன் சாகாவிற்கு போகாமல், பஜனை பாடாமல் உள்ளான். அவன் எதிர்பார்ப்பது, நீங்களும் உங்களின் தீவிர அடையாளங்களை துறந்து பொதுவான இடத்துக்கு வாருங்கள் சேர்ந்து சந்திப்போம் அடிப்படைவாதத்தை என்பது தான்.

        • நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.

          ”முன்னோரை பத்தி தப்பா பேசுன நான் மிருகமா மாறிடுவேன்.”

          ”நீதா அல்ரெடி ஆயிட்டியேடா ”

          ஆமாங்க,நீங்க இனிமேலும் சாகாவுக்கு போய் கெட்டுப்போறதுக்கு ஒண்ணுமில்லீங்க.ஏற்கனவே நீங்க பேசுறது அப்படியே அரை டவுசர் குரலாகத்தான் இருக்குது..அவன்தான் முசுலிம்கள் தங்கள் மத நம்பிக்கையை கைவிடாதவரை இந்த நாட்டின் குடி மக்களாக ஆக முடியாது என்று நஞ்சு கக்குவான்.நீங்களோ உங்கள் மத அடையாளம் எதுவும் இருக்க கூடாது என முசுலிம்களுக்கு உத்தரவு போடுறீங்க.அப்படி இருந்தாத்தா இந்து மத வெறியர்களை எங்களோடு சேர்ந்து எதிர்ப்பீர்களோ.இல்லேன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுத்துருவீங்களோ.இதென்ன கோமாளித்தனமா இருக்கு.

          ஒருத்தர் தாடிய எடு ம்பீங்க.இன்னொருத்தர் வந்து அரபு பேர மாத்தும்பீங்க இதுக்கெல்லாம் பணிஞ்சு போனா எங்களை காவி கும்பல்ட்டேர்ந்து காப்பாத்துவீங்க.இல்லேன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுத்துருவீங்க அப்படித்தானே.

          அய்யா ஜி அவர்களே,நீங்க நாகரீக சமூகம் என்ற சொல்லை எங்காவது கேள்விப்பட்டதுண்டா.பல்வேறு கலாச்சாரங்கள்,மத நம்பிக்கைகள் நிலவும் நாட்டில் பிறருக்கு கேடு விளைவிக்காமல் பல பிரிவு மக்கள் தங்களின் கலாச்சார,மத நெறிப்படி வாழ்வதை ஏற்பதுதான் நாகரீகம் என்று உங்களுக்கு தெரியுமா.

          இன்னொன்றையும் இங்கு பதிவு செய்கிறேன்.இதுவரை இந்துத்துவ, பார்ப்பன , பயங்கரவாத காவி கும்பலை .அதன் வன்முறை வெறியாட்டத்தை முசுலிம்கள் சொந்த வலுவில் தன்னநதனியாகவே எதிர் கொண்டு வந்திருக்கிறார்கள்.வலுவீனமாக இருக்கும் இடங்களிலும்,இருக்கும் சமயங்களிலும் இந்து மதவெறியாட்டத்திற்கு பலியாகியிருக்கிறார்கள்.மதசார்பற்ற,சனநாயக ஆற்றல்கள் என்று தங்களை சொல்லிக்கொள்வோரும் சரி, இடதுசாரிகளும் சரி கையில் உருட்டுக்கட்டையோடு அப்பாவி முசுலிம் மக்களை காப்பாற்ற களத்தில் இறங்கியதில்லை.[கருத்து தளத்தில் அவர்களின் இந்துத்துவ எதிர்ப்பு பரப்புரைக்கு முசுலிம்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்].

          ஆகவே இன்றும் முசுலிம்கள் காவி கும்பலின் தாக்குதல் இலக்காக தன்னந்தனியாக ,அரசியல் அனாதையாகத்தான் களத்தில் நிற்கிறார்கள்.இதற்காக நாங்கள் வருந்தவும் இல்லை.காவி கும்பலை எதிர்த்து நின்று வெற்றி அல்லது வீரச்சாவு இரண்டில் ஒன்றை தழுவிக்கொள்ள நாங்கள் அணியமாகவே நிற்கிறோம்.இப்படிப்பட்ட ஒரு நிலையில் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள இருத்தி வைக்கப்பட்டுள்ளதற்காக மதசார்பற்ற,சனநாயக, இடதுசாரி ஆற்றல்கள்தான் வெட்கப்பட வேண்டும்.

          • அடையாளங்களை துறத்தல் இணைந்து செயல்படுவதன் ஒரு முக்கியமான அடையாளம். அடுத்தவர் அடையாளங்களை அழிப்பதோ குறை சொல்வதோ என்னுடைய நோக்கம் அல்ல. நீங்கள் உங்கள் அடையாளங்களை உயர்த்தி பிடிப்பதும், தெளிவான எல்லைகளாக அமைப்பதும், இதர தரப்பினரையும் அவ்வாறு செய்யவே தூண்டும்.
            உங்கள் அடையாளங்கள் அடுத்தவரை எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை என வாதிடலாம். நாங்களும் பஜனை பாடல் தானே படுகிறோம் என அவர்களும் நியாயப்படுத்தலாம்.
            மேலும் உங்களை வலுவாக்குவது உங்களை காப்பாற்றும் என்பது வலுவற்றவர்களை அழித்தொழிக்கும் சமுகத்தை உருவாக்கவே உதவும்.
            As I am not actively participating in discussions, I was not able to reply earlier.

            • \\இதர தரப்பினரையும் அவ்வாறு செய்யவே தூண்டும்.//

              இதர தரப்பினர் அவ்வாறு செய்வதற்கும் சாகாவிற்கு போவதற்கும் வேறுபாடு உள்ளது,முன்னது மதப்பற்று.பின்னது மதவெறி.இப்போது மட்டும் இந்து சகோதரர்கள் பொட்டு அணிவதும்,அய்யப்ப மாலை போட்டு காவி அணிவதும் ,ஆடி மாதம் கூழ் ஊத்துவதும்,பஜனை பாடல்களும் நடக்காமலா இருக்கிறது.அதனால் எல்லாம் பிரச்னை ஏதுமில்லை.நீ தாடி வைத்தாலே நான் சாகாவுக்கு போய் விடுவேன் என்பது மிரட்டல்.முழுக்க முழுக்க கற்பனை.

              \\உங்களை வலுவாக்குவது உங்களை காப்பாற்றும் என்பது வலுவற்றவர்களை அழித்தொழிக்கும் சமுகத்தை உருவாக்கவே உதவும்.//

              தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவதற்கும் ,கொலை கொள்ளை நடத்துவதற்காக ஆயுதம் ஏந்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது.என்னதான் வலுப்பெற்றாலும் முசுலிம் சமூகம் இங்கு சிறுபான்மைதான்.பிற சமூகத்தினருக்கு தீங்கு இழைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டால் அது யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொண்ட கதையாகத்தான் அமையும்.ஆகவே அந்த முட்டாள்தனத்தை முசுலிம்கள் செய்வார்கள் என எதிர் பார்க்க வேண்டாம்.தமிழகத்தில் முசுலிம் சமூகம் ஒன்று திரண்டு வலுப்பெறுவது பிற சமூகத்தினருக்கு எந்த வகையிலும் கேடாக முடியாது.இதை விளக்க ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டாக வைக்கிறேன்.

              மூன்று ஆண்டுகளுக்கு முன் ராமகோபாலன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு முசுலிம் எதிர்ப்பு ஆபாச கூச்சல் போட்டவாறு திரும்பி சென்று கொண்டிருந்த ஒரு காவிக்கும்பல் சென்னை பிராட்வேயில் செம்புதாசு தெரு சந்திப்பு முனையில் நடந்து போய்க்கொண்டிருந்த இரண்டு முசுலிம் இளைஞர்களை வம்பிழுத்து கடுமையாக தாக்கியது.[அந்த தெரு முனையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி பிள்ளையார் சிலை வைத்து சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுப்புவது வழக்கம்.].இதனால் விளைந்த களேபரம் பற்றிய செய்தி காட்டுத்தீயாக பகுதி முழுவதும் பரவியது.சென்னையில் தமிழ்நாடு தவ்கீத் ஜாமாத், த,மு,மு,க, SDPI ,INTJ போன்ற இசுலாமிய அமைப்புகள் ஓரளவுக்கு வலுவாக இருப்பது நாம் அறிந்த செய்திதான்.தாக்குதல் பற்றி செய்தி அறிந்த முசுலிம் இளைஞர்கள் அமைப்பு வேறுபாடின்றி நிகழ்விடத்துக்கு இருசக்கர வாகனங்களில் பறந்து வந்தனர்.காவி கும்பலை எதிர்கொள்ள ”தேவையான தகுந்த தயாரிப்புகளோடு” முதல் அணி வரும்போதே அதை பார்த்த காவிக்கோழைகள் அது தொலைவில் வரும்போதே பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்தனர்.சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான முசுலிம் இளைஞர்கள் திரண்டு விட அந்த பகுதியே பதட்டமானது..அடிபட்ட இளைஞர்களின் நிலையை கண்டு கோபத்தில் கொந்தளித்த அவர்கள் அங்கிருந்த இந்து முன்னணி பரப்புரை தட்டிகளை அடித்து நொறுக்கினார்கள்.

              பின்னர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இசுலாமிய அமைப்புகள் சாலைமறியல் நடத்தியதும் காவல் துறை வந்து உறுதியளித்து,அவர்கள் கலைந்து சென்றதும் தனி.

              இத்தனை களேபரத்திலும்,கோபத்தில் கொந்தளிக்கும் நிலையிலும்

              .,குறித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே,தோழர்களே,

              அந்த பகுதியில் வாழ்கின்ற,நடமாடுகின்ற இந்து மக்கள் ஒருவர் கூட தாக்கப்படவில்லை.இந்துக்களின் கடை ஒன்று கூட சேதமடையவில்லை.

  42. சுந்தர் நீங்கள் சுற்றி வளைத்து சொல்வதைத்தான் இந்துத்துவர்கள் எளிமையாக சொல்கிறார்கள். இங்கிருக்கும் முச்லிம்கள் அப்துல்கலாம் மாதிரி இருங்கள் சல்மான் கான் மாதிரி இருங்கள்.அதாவது நாங்கள் சொல்வது போல் நீங்கள் இருக்க வேண்டும்.இல்லயென்றால் நாஙகள் சந்தேகப்படுவோம்.தீவிரவாதிகள் என்றும் சொல்வோம்.இது எந்த வகையான மனநிலை.”எம்.ஜி.ஆர்.படத்தையும் கருணாநிதி படத்தையும் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு இளைஞர்கள் விஜய் படத்திற்கும் அஜீத் படத்திற்கும் பாலாபிஷேகம் செய்யவேண்டும் அப்போதுதான் நாஙக்ள் விரும்பும் முஸ்லிம்களாக நீங்கள் இருக்க முடியும்.குரான், மார்கம் என்று சொன்னால் நீங்கள் குண்டு வைப்பவர்கள் என்றுதான் நாங்கள் சொல்வோம்.ஒரு கிறிஸ்தவன் பெயரளவில்தான் கிறிஸ்தவனாக இருக்கவேண்டும்.பைபிளை சும்மா கையில் வைத்துக்கொள்.அதை திறந்தெல்லாம் படித்து அதன் படிநடக்க முயற்ச்சிக்க கூடாது.வெறும் அடையாளப்பூர்வமாய் இருப்பதில் எங்களுக்கு பிரச்சனையில்லை.அதை ஆராய்ந்து அதன் படி நடக்க முயற்ச்சித்தால் அது எங்களுக்கு பிடிக்காது.”இதுதான் பாயிஸம்.ஒருவன் ஒரு கொள்கை கோட்பாட்டில் பற்று கொண்டு அதை தீவிரமாக பின்பற்ற நினைத்தல் அவனுக்கான உரிமை.அவன் தாடி வைத்தால் உங்களுக்கு அரிக்குமென்றால் அதற்கு இரண்டு காரணம்தான் இருக்க முடியும்.ஒன்று “என்ன வித்தியாசமாய் இருக்கிறான் ஏதும் திட்டம் இருக்குமோ” என்ற சந்தேகம்.அதை அவனிடம் பழகிதான் களைய முடியும்.நெருங்குங்கள் பழகுங்கள். சந்தேகம் தீரும். இன்னொரு காரணம், தாழ்வுமனப்பாண்மை.”அவனுக்கு மட்டும் பற்றி பிடித்துக்கொண்டுநடக்க ஒரு சீரான வழிகாட்டல் இருக்கிறதே நமக்கு இல்லையே” என்ற இயலாமை தாழ்வுமனப்பான்மையாய் மாறி வெறுக்க வைக்கிறது.இதில் எது காரணம் என்று உங்களை உள்முகமாய் ஆய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.நமக்கான பொது அம்சங்கள் இந்நாட்டில் ஏராளம் இருக்கின்றன.அவற்றிலெல்லாம் கைக்கோர்த்து இணைந்து கூடவர நாங்கள் ரெடி.அவரவர் அவரவரின் கொள்கை கோட்பாட்டை தீவிரமாய் பின்பற்றிக்கொண்டே எவரோடும் இணக்கமாய் சகோதரத்துவத்தோடு இருக்க முடியும்.

  43. சுந்தர், 80 களில் முஸ்லிகளிடமிருந்த மதச்சடங்குகள் இன்று வெகுவாக மாறிவிட்டிருப்பதும் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரமான மத அடையாளத்தோடு இன்று வளையவருவதும், சமீபத்தில் ஏற்ப்பட்டு வருகிற் மதமாச்சர்யங்களோடு உங்களை பொறுத்தி பார்க்க வைக்கிறது.இது தவறு.மதநம்பிக்கையில் பற்றோடு மட்டும் இருப்பவர்களுக்கு மாச்சர்யங்கள் வராது.அவர்கள் பக்திமான் களாகத்தான் இருப்பார்கள்.இது எல்லா மதநம்பிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.மதத்தை வைத்து ஏய்ப்பவன் மதவெறியை தூண்டி குளிர்காய்பவன் வேறு இனம்.அவன் தான் களையப்படவேண்டியவன்,அவன் தான் அடையாளங்காணப்படவேண்டியவன்.இந்த புரிதல் இல்லாமல்தான் இப்படி ஒரு குழப்பம் உங்களுக்கு வருகிறது. சந்தனக்கூடு எடுப்பது,கத்தம் பாத்திகா(திதி) ஓதுவது,மெளலுது(பஜனை)பாடுவது என்பதெல்லாம் 80களில் முஸ்லிகளிடமிருந்தது உண்மை.அது இன்று வெகுவாக குறைந்து விட்டிருப்பதும் உண்மை. குறைவதை என்னைப்போன்றவர்கள் வரவேற்க்கவே செய்கிறோம். இஸ்லாத்திற்க்கு முரண்பட்ட மாற்று மத சடங்குகளை,அப்படியே வேறு பெயர்களில் பின்ப்ற்றுவதற்க்கு நாங்கள் ஏன் இஸ்லாத்திற்க்கு வரவேண்டும்?ஆதாரமற்ற அடிப்படையற்ற மூடத்தனங்களை சாட வேண்டாமா? இதை ஒரு பிரிவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.அதன் நியாயத்தை ஒரு பிரிவினர் ஏற்றும் வருகிறார்கள்.பழகிப்போன இந்த சடங்குகளை விடமுடியாமல் தொடர்கிறவர்களும் இருக்கிறார்கள்.இது எங்கள் மதத்தின் உள் விவகாரங்கள். தர்காவழிபாடும்,அங்கு மொட்டை அடித்து நேர்த்திகடன் கொடுப்பதும் பேய் ஓட்டுவதும் இஸ்லாமிய வழிமுறை அல்ல என்று சொல்பவர்களை “கடுங்கோட்பாட்டு வாதிகள்” என்று வினவும் பட்டம் சூட்டி விமர்சிப்பதை அறிவீர்கள்.ஆனால் பெரியாரிஸ்ட்டுகள் செய்யும் தாலிஅவிழ்க்கும் போராட்டத்தை மொட்டை அடித்து அலகு குத்தி வண்டி இழுக்கும் போராட்டத்தை பிள்ளையார் மறுப்பு போராட்டத்தை “கடுங்கோட்பாட்டுவாத” போராட்டமாக பார்ப்பதில்லை.பகுத்தறிவு போராட்டமாக பார்க்கிறார்கள்.இன்னும் சொல்லப்போனால் பகுத்தறிவுவாதிகளுக்கும் கம்னியூஸ்ட்டுகளுக்கும் இஸ்லாமிய”கடுங்கோட்பாட்டுவாதிகள்தான் கொள்கையளவில் மற்ற அனைவரையும்விட சற்று நெருக்கமாக இருக்க வேண்டும். சகுனம்,ஜோஸ்யம்,தாலிமறுப்பு,சாதிமறுப்பு,வரதட்ச்சனைஒழிப்பு,பில்லி சூனிய ஏவல் ஒழிப்பு,ஆன்மீகமோசடி,மனிதன் காலில் மனிதன் விழும்நிலை என்று பல விஷயங்களில் அவர்களுக்கு ஒத்துவரக்கூடியவர்கள் இவர்களே.பிறகு ஏன் வினவும் தோழர்களும்கூட சந்தேகக்கண்கொண்டு பார்கிறார்கள்?ஒருவேளை”இதை நாங்கள்தான் சொல்ல வேண்டும் மதவாதிகள் சொன்னால் மதம் அபின் என்பது பொய்யாகிவிடும்” என்று நினைக்கிறார்களோ என்னவோ!

  44. சவுதி அரசு வகாபியிஸம் அல்லது உண்மை இசுலாம காசு குடுத்து பரப்ப என்ன காரணமுனா பிஸினஸ் லாஸ் ஆகிட கூடாதுனுதான் உலகம் முழுதுமிறுந்து ஆயிரக்கணக்கானோர் தினமும் சவுதிய பாக்க போகிறார்கள் மக்கவிலுள்ள பள்ளிவாசல் மதினா பள்ளிவாசல், ஜம்ஜம் ஊற்று ,சாத்தான் மேல கல்லெறியுறதுனு ஒரு பத்து நாளாவது புரோகிராய்ம் இருக்கும் உலகத்துலயே பணம் வ்ருமானம் அதிகமுள்ள தொழில் டூர்ஸ் அன்டு டெவலப்மென்ட்தான் விசாவுக்கு காசு அவிங்க ஓட்டல தங்குறதுக்கு திங்கிறதுக்கு கூட்டிடுபோய் சுத்தி காமிக்கனு குறஞ்சது 1 லச்ச ரூபாயாவது புடிக்கிடும் அப்பிடி வர வறுமானம் சவுதி அரசுக்கு இசுலாம் மூலம் கிடைக்கும் போது உண்மை இசுலாம் வகாபிய்ஸத பரப்பதான் செய்வார்கள் இந்த வகாபியிஸ்டுகளின் செயலே சவுதி பணத்தைல்தான் செய்யப்பட்டதானெ சந்தேகம் வருகிறது சவுதி கூலிகள் இங்க நலல்லா வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்பாவி மக்களை உண்மை இசுலாம் என்ற அரபு பாஸிஸத்துக்கு நேராக வழினடத்துகின்றனர் அப்பிடிப்பட்ட இயக்கங்கள்தான் டிஎன்டிஜே வும் எஸ் டி பி ஐ யும் இவர்கள் பனி மந்தநேயமும் அல்ல மார்க்கநேயமும் அல்ல அரபு பாஸிஸம் அல்லது உண்மை இசுலாம் மனித நேயமிக்கது என்ற மக்களை நம்ப வைக்க சவுதி பணத்தால் செய்யப்படும் செட்டப் நாடகமோ என்று இங்கு பதிலிடும் இசுலாமியர்களின் சொற்கள் மூலமாக தெரியவருகிறது அரபு நாட்டுக்கும் அதன் மேலே அர்ஸில் உக்காந்து ஆட்சி பிரியும் அல்லாவுக்கே தெரியும் எல்லா புகழும் அல்லாவுக்கே

    • 1 லடச ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் வினவு தளத்தை எழுதுகிறவ்ரக்ளும் அதை வாசிக்குற மக்களும் சொர்க்கம் போகலாம் போன வருசம்தான் 700 பேர்களை காசு வாங்கி கொண்டு சொர்க்கம் அனுப்பினோம் என்று சவுதி அரசு சொல்லலாம் ஆனால் சொல்ல மாட்டரக்ள அவர்களுக்கு மீரா சாகிபு திப்பு போன்ற மடையர்களின் உதவி அவசியமானது அண்ணன் திப்புவும் மீராசாகிபும் கோவித்து கொள்ள வேண்டாம் என் மீது உங்களின் நம்பிக்கைதான் அவர்களுக்கு பிழைப்பு சவுதியில் மக்கா மதினாவில் போய் செத்து போனால் அவர்கள் உடனடியாக சொர்க்கம் போவாஅர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கை இது உண்மை என்றால் உங்களின் தொப்பி தாடி கரண்டை காலுக்கு மேல வேட்டி கட்டு அடையாளதடுன் சொர்க்கம் போய் சேருங்கள அரசு உதவியுடன் இங்கு வந்து உங்கள் உங்கள் மத வெறி மொக்கை கொள்கை சரி என்று வாதிட்டு அதன் மூலம் செர்க்கம் அல்லது மர்மைக்குள் நுழைவதை விட இது எளிதான வழி இல்லையா அதனாலதான் சொல்லுறேன் நிங்க அடுத்ட பிளைட்டுலயே சொர்க்கம் செல்ல ரிசர்வு செய்யுங்கள் இங்கன தமிழக அரசும் பேங்குல கடனும் நிச்சயமாக கிடைக்கும் அதனால கவலைப்படாம சொர்க்கம் போங்கள் இதை படிக்கும் திப்புவும் மீரன் சாகிப் அண்ணனும் என் மீது கோவப்பட வேண்டாம் சொர்க்கம் செல்ல வழிதான் காட்டினேன் இது சிரிப்புக்காக சொல்லப்பட்ட ஜோக் என்று நினைத்து சிரிக்கலாம் அல்லது விட்டு விடலாம் என்னை திட்ட வேண்டாம்

  45. வியாசன், உங்கள் தமிழ் உணர்வும் தமிழ் ஆர்வமும் புல்லரிக்க வைக்கிறது.நாங்களும் இதே உணர்வோடுதான் இருக்கிறோம் என்பதை இனி ஈரக்குலை பிளந்துதான் காட்டவேண்டும் போல!தமிழனின் மொழிபற்றும் மொழிஆர்வமும் வெளியில் சொன்னால் வெட் கம்.அந்த அளவிற்கு சந்திசிரிக்கிறது.தமிழ் முஸ்லிம்களாகிய நாங்கள் அதிகமான படிப்போ நுனிநாக்கு ஆங்கிலமோ இல்லாததாலும் பெரும்பாலும் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு வாழ்வதாலும் தமிழ் பாரம்பரியத்தை தொடர்ந்து பேணிக்கொண்டிருக்கிறோம். எங்களின் அன்றாட வாழ்வியலின் தமிழ் கூறுகளை ஆதாரத்தோடு விளக்கியப்பிறகும் “மலேசியா மகாதிர்மகள் வகாபி” என்று சுற்றிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? எங்களை இகழ்வதற்க்கு ஏதாவது வேண்டும், உங்களுக்கு தமிழும் தமிழ்கலாச்சாரமும் கிடைத்திருக்கிறது அப்படித்தானே! “எனக்கு தமிழ் வாசிக்க எழுத தெரியாது” என்பதை பெரிய பெருமையாக சொல்லிக் கொள்கிற மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா அய்யா? சரி நான் கேட் க்கிறேன், தமிழ் நாட்டில் இருக்கிற ஒரு முஸ்லிம் “எனக்கு அரபிதான் பிடிக்கும் அராபிய உடைதான் பிடிக்கும் அரபு உணவுதான் பிடிக்கும்” என்று சொல்கிறான்.அவனை நாடு கடத்தி விடுவீர்களா? அல்லது ஜெய்லில் அடைத்து விடுவீர்களா? என்ன அய்யா ஒட்டுமொத்த தமிழ் கலாச்சாரத்தையும் மொத்தமாக குத்தகை எடுத்துவிட்டீர்கள் போலயே! ஒவ்வொரு தமிழ் நாட்டு குக்கிராமம்வரை பாரம்பரிய உணவு மரித்து கொக்கக்கோலாவும் பிஸ்சாவும் பரவி கிடக்கிறது.ஓரினச்சேர்க்கை எங்கள் பிரப்புரிமை என்று தலைநகரத்தில் ஊர்வலம் போகிறான்.திருமணத்திற்க்கு முன் செக்ஸ் வைத்தல் தவறில்லை என்ற முற்போக்குவாதம் காதைகிழிக்கிறது. லிவிங் டு கெதர் என்ற வாழ்க்கை முறை நவீன கலாச்சாரமாய் மாறிவருகிறது.இவ்வளவும் உங்களுக்கு தெரியவில்லை புர்காவும் தாடியும்தான் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக தெரிகிறது.முஸ்லிம்தான் தமிழ் கலாச்சாரத்தை புர்கா வைத்து மூடுகிறான்.கொஞசமும் மனசாட்சி இல்லயா?

  46. நீங்கள் உங்கள் மதத்தில் தீவரமாய் பற்றுண்டன் இயங்குவதில் யாருக்கும் எந்த பேதமும் இல்லை.

    அதே சமயம் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை நான் சொல்லிதெரியவில்லை .

    நீங்கள் சொல்லும் அதே தீவர மத கோட்பாடுடன் ,குரான் வழியில் ,இறை பயத்தோடு , நியயம் தர்ம மதித்து சென்ற தலைமுறை இஸ்லாமியர் நடந்தே வந்துள்ளார்கள் ,எதோ அவர்கள் குரானை சும்மா வைத்து கொண்டு திரியவில்லை, நீங்கள் வந்துதான் அறிமுகபடுத்தி வைத்து போல் பேசுவது சரிஅல்ல.

    அவர்கள் இந்த நற்பண்புகளை மதநெறியாலும் ,உலக பொது மனித பண்புகளை கொண்டு இணைத்து , தங்கள் கோட்பாடுகளை ஆரவாரம் இன்ற்டி அதாவது இந்திய மண்ணின் விதியாகிய மதம் வேறு , சமூகம் வேறு என்பதை உணர்ந்து பிரித்து வாழ்ந்தார்கள் .

    ஆனால் இன்றய தீவர இஸ்லாம் பேசும் பலர் மதம் மட்டுமே வாழ்வியல் கோட்பாடு என்ற சித்தாந்தாங்கள் நமக்கு கவலை அளிக்கின்றன .

    உதாரணத்துக்கு அம்மா ஆதரவாளர் ஷெக் தாவுது எடுத்துபோம் ஏன்னா அவர்தான் டிவீல அடிக்கடி வந்து இப்ப டாஸ்மாக் நல்லது சொல்லுறாரு ,அவர் பேசுறது சரியில்ல சொல்லும் போது ,ஒரு தமிழக அரசியல் வாதி இப்படி பேச கூடாது ,தமிழர் அப்படி என்று விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்,யாராவது பொது விவாத்தில் நடுவில் வந்து முஸ்லிம் இப்படி நடக்கலாமா ,குரான் இப்படி எல்லாம் சொல்லவில்லை என்று சொல்லும்போது எரிச்சல் வருகிறது.
    தமிழ் வழி வந்த ஹிந்து ,இஸ்லாம்யியர் அனைவரயும் பொது அரங்கில் ஒரே நோக்கில் மனிதர் ,தமிழர் என்றே பார்க்கவேண்டும் .அந்த சுத்த பார்வையை முழு சமூகம்மும் பெற நாம் அனைவரும் பாடுபடுவோம் .

    //வனுக்கு மட்டும் பற்றி பிடித்துக்கொண்டுநடக்க ஒரு சீரான வழிகாட்டல் இருக்கிறதே நமக்கு இல்லையே” என்ற இயலாமை தாழ்வுமனப்பான்மையாய் மாறி வெறுக்க வைக்கிறது.//

    அய்யா ,16,17 நூற்றண்டில மதம் சமுக தீர்வல்ல என்பது கண்டு அறியப்பட்டு , மதம் வேறு சமுகம் வேறு என்று பிரிக்கப்பட்டு மத்திய
    கிழக்கு நாடுகள் தவிர மற்ற பெருமான்மையான நாடுகள்களின் இந்த கொள்கை கடைபிடிக்கபடுகின்றன .

    சீரான வழிகாட்டல் தேவை இல்லை என்பது எனது தனிப்பட்ட கருது.
    அதை ஒவொவ்று மனிதனும் தனி அனுபவத்தின் மூலம் ,சுய தேடல்,கல்வி,சமயம் சாரா நீதி நூல்கள் போன்ற பலவர்ட்றோ டும் ,மதத்தின் துணை கொண்டு அமைத்து கொள்ளலாம் .
    மீண்டும் சொல்கிறேன் மதத்தினால் மட்டும் அல்ல .
    மதம் தனிமனித ,சமுக வாழ்வியல் ஒழுக்கம் இரண்டயும் மதத்தில் பெற்று கூறியவற்றில் பெற்று
    இம்மி அளவும் பெசர்மல் ,என் எதற்கு என்ற கேள்வி கேட்காமல் வாழ வேண்டும் என்பது உங்கள் கொள்கை .

    மதம் தனிமனித ,சமுக வாழ்வியல் ஒழுக்கம் இரண்டயும் ஹிந்து மதத்தில் பெற 1000 வழியில் இருந்தாலும் ,நான் அதை மதத்தில் பெற விரும்பவில்லை .அதனால் நான் நாத்திகன் இல்லை, தீவர மத வழிபட்டளன்
    மதத்தை வழிபாடு சார்ந்த ஒன்றகா பார்ப்பது எனது பார்வை.
    தனிமனித ஒழுக்கத்தை , என் கல்வின் முலமோ ,ஆசிரியர் போதித்தவை பெற விரும்பிகிறேன் ,இரண்டாவதை
    பெருவதற்கு நான் பெரியார் ,காந்தி ,அம்பேத்கர் தேடுகிறேன் .முக்கிய விஷயம் இவர்கள் எல்லோர்டிலும் உள்ள வாங்கி , கால மற்றதையும் ,சுற்று சுழலயும் கருத்தில் கொண்டு என் பகுத்தருவில் மூலம் முடிவு எடுக்கிறேன்.

    இறுதியாக

    ஒத்து இருந்த தமிழ் சமூகத்தின் ஒரு முக்கிய இரண்டு பிரிவுகளுக்குள் ,மன இடைவெளியும் வெறுப்பும் தோன்றுகிறதோ என்பதே நமது அச்சம் .
    .

  47. சகோதரர்களே நான் உங்கள் அனைவருக்கும் ஒரு கருத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன்.மொழிஉணர்வு மொழிபற்று என்பது ஒவ்வொறு மனிதனின் ரத்தத்திலும் கலந்திருக்கிற ஒன்றுதான்.அதை அவன் யாரிடமும் நிரூபிக்க வேண்டியதில்லை.தேவை ஏற்ப்படும்போது அது வெளிப்படையாக தெரியும்.நான் என்ற உணர்விலிருந்து துவங்கும் நம் எண்ணம் பிறகு என் தாய் என் தந்தை என் குடும்பம் என் வீடு என் சொந்தம் என் தெரு என் மொழி என் ஊர் என் நாடு என்று வளர்ந்து கொண்டே போகிறது.இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பிறப்பிலேயே வருவது.அவ்ன் தாய்க்கு அவ்ன் மொழிக்கு அவ்ன் ஊருக்கு வேறு எவராலும் கலங்கம் என்றால் அப்போது தெரியும் அவனுடைய பற்று என்பது.ஆனாலும் சிலர் தன் மொழியை தன் ஊரை வெளிப்படுத்த தயங்கி வேறு வேஷம் போடுவானாயின் அவன் பெற்ற தாயை கூட அடுத்தவர் முன் அடையாளம் காட்ட தயங்கும் தாழ்வுமனப்பான்மை உள்ளவனாய்தான் இருப்பான்.தமிழனில் இப்படி நோய் உள்ள நிறையபேர் உள்ளான் என்பதையும் நாம் ஒத்துக்கொண்டு ஆகவேண்டும். தமிழ் இஸ்லாமியர்களில் இந்த நோய் உள்ளவர்கள் குறைவுதான் என்பதையும் உங்கள் கவனத்திற்க்கு நான் கொண்டு வரவும் கடமை பட்டிருக்கிறேன்

  48. சகோதரர்களே என்மொழி என் இனம் என்பதை, என்மதம் என் கொள்கை என்பது மிகைத்து விடும் என்று நீங்கள் அச்சப்படுவதும் தெரிகிறது.அவவாறு அல்ல.அதற்க்கு ஒரு சம்பவத்தையே உதாரணமாக கூறலாம் என நினனைக்கிறேன்.பாபர்பள்ளிவாசல் இடிக்கப்பட்டு பம்பாயில் மிகப்பெரும் கலவரம் வெடித்து பற்றி எரியும்பொழுது நான் தொழில் நிமித்தமாய் பம்பாயில் இருக்கிறேன்.ஊரடங்குசட்டம் போடப்பட்டு காலை ஆறிலிருந்து ஏழு வரை ஒருமணி நேரம் தளர்த்தப்படும்.அதில் தேவையானதை வாங்கி வைத்துக்கொள்வோம்.அப்படி ஒருமுறை தளர்த்திய அந்த நேரத்தில் பொருட் கள் வாங்கிய பிறகு எங்கள் கட்டிடத்தின் கீழே தமிழர்கள் நானகு பேராய் நின்று கொண்டிருந்தோம்.அந்த பகுதி முஸ்லிம் இளைஞர்கள், நேரம் கடந்து விட்டது என்பதை எச்சரிக்கும் விதமாக “ஏய் சல் மதராசி உப்பர் சல்லோ” என்று விரட்டினார்கள்.நாங்களும் முஸ்லிகள் என்று அவர்களுக்கு தெரியும்.ஆனால் அங்கே மதம் தெரியவில்லை.”நீ வேறு ஊர் காரன் வேறு மொழிகாரன் எங்களுக்கு சமமாய் நிற்காதே போ மேலே” என்ற தன்முனைப்பு அதிகாரம் தான் தெரிந்தது.இதுதான் எதார்த்தம். சைனாவில் ஒரு ஷாப்பிங்மாலில் நிற்கும் பொழுது திடீரென்று ஒரு தமிழ் குரல் கேட்டவுடன் எனக்குள் ஏற்பட்ட பரவசம்! கோயம்புத்தூர் கவுண்டர் குடும்பம். மொழி அப்படி ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்துகிறது.இதெலாம் போதித்து வருவதில்லை. மனிதன் அவ்வாறுதான் படைக்கப்பட்டிருக்கிறான். அநியாயத்திற்க்கும் அநீதிக்கும் தன் இனம் தன் மொழி என்று பார்த்து தடம்புரளாமல் இருக்கும் வரை மொழிப்பற்றும் இனப்பற்றும் தவ்று இல்லை. மொழிஉண்ர்வும் இன உணர்வும் இயல்பானதே.இது சொல்லி வருவது இல்லை.நிரூபிக்க வேண்டியதும் இல்லை

  49. சுந்தர்,”தனி மனித ஒழுக்கம்,சமூகவியல் ஒழுக்கம் இரண்டையும் நீங்கள் இந்து மதத்திலிருந்து எடுத்துக்கொண்டாலும் சரி வெள்யிலிருந்து எடுத்துக்கொண்டாலும் சரி அது உங்கள் உரிமை.உங்கள் விருப்பம்.ஆனால்” நாங்கள் இருப்பது போல்தான் நீங்களும் இருக்க வேண்டும்”என்று சொல்வது சரியில்லை.அது அவரவ்ர் நம்பிக்கை.அவரவர் உரிமை.

  50. மீரான் சாகிப் அவர்களே,

    ஒரு மதத்தில் இருந்து கொண்டு அடுத்த மதத்தை கிண்டல் செய்வது தவறு தான். அதே சமயம் ஒவ்வொரு மதத்திலும் உள்ள பிற்போக்கு அம்சங்களை அந்தந்த மதங்களில் உள்ளோரே உணர்ந்து அவரவர் மதங்களை சீரமைத்து கொண்டால் நன்றாக இருக்கும். மதங்களை மனதை தூய்மைபடுத்தவும், பதப்படுத்தவும் மட்டும் பயன்படுத்த வேண்டும். மதங்களில் உள்ள நன்னெறி வழிகளை முக்கியமாக கடைப்பிடித்து, தேவையில்லாத சடங்குகளை, பிற்போக்குத்தனமான மூட நம்பிக்கைகளை களைந்து அவரவர் மதங்களை அவரவர்களே சீரமைக்க வேண்டுகிறேன்.

    ” நாங்கள் இருப்பது போல்தான் நீங்களும் இருக்க வேண்டும்”
    இது போன்று எல்லா மதத்தினரும் கேட்கலாம். மதங்கள் மனிதர்களை மனிதர்களாக வழிநடத்தும் வரையில் இது சரி தான். ஆனால் மதங்களில் உள்ள சில பிற்போக்கு தனமான சடங்குகளை அந்தந்த மதத்தினர் தவிர்த்தால் அனைவருக்கும் அது நலம் பயக்கும்.

    அவரவர் மதம் அவரவருக்கு முக்கியம். அதே சமயம், பிற மதத்தினரையும், மதங்களை, கடவுள் வழிபாடை நம்பாதவர்களும் இதே உலகில் சுதந்திரத்துடன் வாழ அனுமதிக்க வேண்டும். அதற்கு மதம் ஒரு தடையாக இருக்க கூடாது.

  51. உண்மை ,அவர் அவர் வழி அவர்க்கு அவர்க்கு .
    நீங்கள் சீரான வழிகாட்டல் இல்லலமல் தாழ்வுமனப்பான்மையாய் மாறு கிறோதோ என்று கேட்டதால் அதற்கு பதில் சொல்ல பதில் சொல்ல வேண்டியது ஆயிற்று .
    ஹிந்து மதத்தில் அயிரம் வழி இருக்கிறது என்பது என் எண்ணம்.
    வாதத்துக்கு இல்லை என்று வைத்துகொண்டாலும் வழி காட்டும் தலைவர்களும் ,சிந்தனியாலர்களும் இந்த இந்திய தமிழ் சமூகத்தில் நிரம்ப உண்டு ,அதனால் தாழ்வுமனப்பான்மை ஏற்பட வழியே இல்லை .

    மீண்டும் வழியுர்த்துகிறேன் உங்கள் மார்க வழியை தீவரமாக ,முழுமையாக முன்எடுப்பதில் யார்க்கும் எந்த
    சிக்கலும் இல்லை
    அதன் அதிகபடியான வேகமும் ,நம் தமிழ் சமூக சுழலும் நமது கவலை .

    கலாம்மை போல நாம் பொதுவானவன் என்று காட்ட மெனகெட்டு இஸ்லாமியா அடையாளத்தை மறைக்க
    ஆதிக்க சக்திளோடு செய்த சமரசத்தை மேற்கொண்ட முயற்சிகளை நாம் கண்டித்தே உள்ளோம் .

    நீங்கள் திரும்ப திரும்ப வாதத்தை நான் உங்கள் மீது கருத்து திணி த்து ,முஸ்லிம் இப்ப்படி நடக்க வேண்டும் என்று சொல்லவது போலவும் ,தொப்பி வச்சவான் எல்லாம் குண்டு வைப்பவன் என்ற இழி விமர்சனம் வைப்பது போன்ற தொனியில் மாற்றுவது அழகு அல்ல .

    விவாத நோக்கம் அது அல்ல.

    வினா

    காலம் காலமாக தமிழையும் ,இஸ்லாத்தையும் தான் அடையாளமாக கொண்டு ,சொல்லும் நாடெங்கும் தமிழை தூக்கி சென்றவனின் தற்கால மத தீவிரம் ,மொழி அடையாளத்தை மூழ்க அடிக்கிரதா?

    இருக்கிறது ,இருக்கும் என்ற உங்கள் பதில் திருப்தி அளிக்கிறது ,இருக்கவேண்டும் என்பதே நம் ஆசையும்

    பாட்டன் ,பூட்டன் வழியாக வந்த நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட இனக்கம் ,கால காலமகா தொரடவேண்டும் என்பதே பொதுவான தமிழர்களின் எண்ணம்.
    மத அடிப்படைவாதம் எந்த மதமாக இருந்தாலும் ,தமிழ் மண்ணில் இடம் கொடுக்க கூடாது .

  52. Thiru meerasahib,உலக மக்களை பொறுத்த வரையில் தனி மனித ஒழுக்கம் ,சமுக ஒழுக்கம் என்பது ஒப்பீட்டளவிலான ஒன்று தான். அதற்கான உலகளாவிய வரையறைகள் ஏதும் கிடையாது.மொழி , இனம்,மதம் ,வர்க்கம் ,அரசியல் கொள்கைகள் , நிலம், கலாச்சாரம், தற்பவெப்ப சூழ்னிலை என்று பல்வேறு காரணிகள் மக்களின் ஒழுக்க அளவை தீர்மானிகின்ற போது மதம் மட்டுமே ஒருவரின் ஒழுக்கத்தை தீர்மானம் செய்கின்றது என்று கூறுவது அறிவுக்கு சிறிதும் பொருந்தாது. மறுபரிசிலனை செய்வீர்கள் என்று நினைக்கிறன். மேலும் விவாதிக்கவேண்டிய கருத்து தான் இது என்பதில் எந்த ஐயமும் எனக்கு இல்லை.

    உதாரணத்துக்கு ஹிந்து மத சாதி வெறி என்பது தமிழ் நாட்டை பொறுத்தவரையில் அது தலித் மக்களின் மீது அதிக தாக்கத்தை செலுத்துகிறது. அதே நேரத்தில் குஜராத் மாநிலத்து ஹிந்துத்துவாகள் தலித் மற்றும் முஸ்லிம் மக்கள் இருவரையுமே சமுக ஒருங்கிணைப்பில் இருந்து விளக்கி வைப்பதை பல ஆதாரங்கள் மூலம் காண்கிறோம். மதம் மட்டும் தான் ஒருவரின் உணர்வு நிலையை, ஒழுக்கத்தை தீர்மானிக்கின்றது என்றால் ஹிந்து மத உணர்வு,அந்த மதத்தின் தாக்கம் தமிழ் மற்றும் குஜராத்தி மக்களிடம் வேறுபட்டு விளங்க காரணம் என்ன?

  53. ஒரு இயற்க்கை பேரிடர் காலத்தில் மற்ற எவரையும் விட இஸ்லாமிய சமுதாயம் ஆற்றிய உதவிகளும் அதற்க்கு பொது மக்களின் நெஞசுருகிய அறிவிப்பும்தான் நாம் பதிகிற பின்னூட்டங்களுக்கான அடிப்படை.இதற்க்குத்தான் நாஙகள் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு உங்களால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.எங்களின் தேசப்பற்று மொழிப்பற்று மதச்சடங்குகள் உணவு உடை அனைத்தும் கேள்விக்குள்ளாப்பட்டு எங்களால் விளக்கம் கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது.ஆனால் இந்த நாட்டில் சாதிவெறி மொழிவெறி இனவெறி மதவெறிகளையே மூலதனமாக்கி அரசியல் செய்கிற பலரும் பெருந்தலைவன் என்ற போர்வையில் ராஜபவனி வருகிறான்.இவனையெல்லாம் கேட் க நாதியில்லை. ” நாங்கள்தான் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை” என்று ஒரு கூட்டம் கொக்கரிக்கிறது.”தமிழ் தெரியாதவன் இங்கிருந்து ஓடு” என்று இந்திய தேசிய்த்திற்க்கு எதிராக தமிழ் தேசியம் பேசுகிறது ஒரு கூட்டம்.”இந்துக்கள் இந்து கடையில்தான் பொருள் வாங்கவேண்டும் ” என்று பகிரங்கமாகவே கூவுகிறான் ஒருவன். இவையெல்லாவற்றிர்க்கும் மேலாக “மாட்டுக்கறி தின்பவன் பாகிஸ்தான் போ,ராமனை வணங்காதவன் முறைதவறி(தேவுடியா பெற்றவன்),நான் சொல்வதுபோல் இருந்தால் நீ முஸ்லிம் இல்லையென்றால் தீவிரவாதி” இதெல்லாம் பெயர் தெரியாத பொறம்போக்குகள் சொன்னவையல்ல இந்தியாவை ஆளும் ஆட்சியாள்ர்கள் சொன்னவை.இப்படி எந்த முஸ்லிமாவது எந்த முஸ்லிம் இயக்கமாவது சொன்னதுண்டா? ஆதாரம் காட்ட முடியுமா?ஆனாலும் எங்கள் தேசப்பற்றையும் மொழிப்பற்றையும் சகோதரத்துவத்தையும், ஒவ்வொறு சம்பவத்திற்க்குப்பிறகும் நடுரோட்டில் நின்று கதறி கதறி நிரூபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.இதில் இலங்கையிலிருந்துவேறு ஒருவர் எங்களை எங்களுக்கே அடையாளம் காட்டுகிறார். ” நாங்கள் எங்களை தமிழர்கள்தான் எனகிறோம்.இல்லை நீங்கள் அரபிகள் என் கிறார்.”இல்லையப்பா நாங்கள் உணர்வாலும் பண்பாட்டாலும் தமிழ்ர்களாகத்தானே இருக்கிறோம்” என்றாலும் “இல்லை நீங்கள் அரபிகள் ஆகிவிட்டீர்கள் வகாபிகளாகிவிட்டீர்கள்” என்று அடித்து சொல்கிறார்.அநேகமாக இவர் இலங்கையிலிருந்து ஒரு படை அனுப்பி எங்களையெல்லாம் கதற் கதற சவூதியில் கொண்டுபோய் விட்டுவிடுவார் என்று தோன்றுகிறது. அய்யோ அய்யோ அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

    • ஜனாப். மீரான்சாஹிப்,

      இங்கு நானோ அல்லது யாருமே உங்களை சவூதிக்குக் கொண்டு போய் விடுவதைப் பற்றிப் பேசவில்லை, நீங்கள்-தமிழ் முஸ்லீம்கள் சவூதியை (பாலைவனத்தை) தமிழ் மண்ணுக்குக் கொண்டு வருவதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அரபிகளாகி விட்டீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால் தமிழ்க்கலாச்சாரத்தை இழந்து அரபு மயமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை தமிழ்நாட்டுக்கு வருகை தரும் ஒவ்வொரு உலகத் தமிழனும் உணரக் கூடியதாக உள்ளது. ‘அரபுமயமாக்கலாவது, வெங்காய மயமாக்கலாவது’ அப்படி எதுவும் கிடையாதென்று கொக்கரித்த திப்புநானா கூட ‘அரபுமயமாக்கல்’ உண்டு, அது நடைபெறுகிறது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார். ஆகவே நீங்கள் மட்டும் சும்மா ‘சீன்’ போடுவது உண்மையில் சிரிப்பையூட்டுகிறது.

      உங்களில் பலருக்கு அரபிகள் உயர்ந்தவர்கள், அவர்களைப் போல் ஆக வேண்டும், அவர்களைப் போல் ஆடையணிய வேண்டும், தோற்றமளிக்க வேண்டுமென்ற ஆசையிருப்பதை அனுபவத்தில் நானறிவேன். நான் ஒன்றும் பன்னாட்டு முஸ்லீம்களுடன் பழகாமல், முஸ்லீம் நாடுகளுக்குப் போகாமல், தமிழ் முஸ்லீம்களை நண்பர்களாக மட்டுமன்றி, உறவினர்களாகவும் (திருமண வழியில்) கொண்டிராமல், அவர்களை நன்கு அறியாமல், அல்லது இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் இங்கு பேசிக்கொண்டிருக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கும் இஸ்லாத்தில் ஈடுபாடு உண்டு, நான் கூட முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து (ஒரு சிலநாட்கள்) நோன்பு நோற்றிருக்கிறேன்.

      பல நூற்றாண்டுகளாக தமிழர்களுடன் தமிழர்களாக ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லீம்கள் வாழும் கிராமங்கள் பல இன்று தமிழ்த் தன்மையை, தோற்றத்தை இழந்து அரேபிய கட்டிடக் கலைகளின் அடிப்படையிலான வீடுகளும் பள்ளிவாசல்களுமாக அரேபியாவிலுள்ளது போன்ற உணர்வைத் தருகின்றன. தமிழ்மண்ணை உரிமையுடனும், உணர்வுடனும் பார்க்கும் என்னைப் போன்ற உலகத் தமிழர்களுக்கு அது எரிச்சலையூட்டுகிறது. அதன் வெளிப்பாடு தான் என்னை உங்களைப் போன்றவர்களுக்குப் பதிலளிக்கத் தூண்டுகிறது. ‘யாதும்’ என்ற ஆவணப்படத்தில் காட்டப்படும் தமிழ் திராவிடக் கட்டிடக் கலையின் அடிப்படையில் பள்ளிவாசல்களைக் கட்டிய தமிழர்களாகிய உங்களின் முன்னோர்களை, அரேபியக் கட்டிடக் கலையை, வஹாபியிச பணவுதவியின் மூலம் தமிழ்நாட்டில் அளவுக்கதிகமாகப் புகுத்தி தமிழ் மண்ணின் Landsacpe ஐ மாற்றும் இக்கால தமிழ் முஸ்லீம்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் எவருமே தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லீம்கள் வெகு வேகமாக அரபுமயமாக்கப் படுகின்றனர் என்பதை உணர்வர். அந்த உண்மையை தமிழர்களாகிய நாங்கள், எங்களின் சகோதரர்களாகிய உங்களிடம் கூறுவதிலேதும் தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் இலங்கையிலிருந்தாலென்ன, இங்கிலாந்திருந்தாலென்ன தமிழன் தான், “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே” – பாரதிதாசன்

      /
      //வியாசன், உங்கள் தமிழ் உணர்வும் தமிழ் ஆர்வமும் புல்லரிக்க வைக்கிறது.நாங்களும் இதே உணர்வோடுதான் இருக்கிறோம்///

      நன்றி. நான் ஒன்றும் உங்களின் தமிழ்ப்பற்றை, தமிழ் உணர்வைக் கேள்வி கேட்கவில்லை, நான் கூறுவதெல்லாம் வஹாபியிசத்தாலும் அரபுமயமாக்கலாலும் இலங்கையில் எவ்வாறு முஸ்லீம்கள் தமிழைப் பேசிக் கொண்டே தாம் தமிழர்கள் அல்ல முஸ்லீம்கள் மட்டும் தான் என்று கூறுகிறார்களோ அதே நிலை, தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் என்பது தான். உதாரணத்துக்கு. இலங்கையில் சிங்கள- தமிழ் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கவில்லை (MGR இன் காலத்தில் ஒருவர் தீக்குளித்தார்) ஏனென்றால் விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றினார்கள் என்பதற்காக (ஆனால் கிழக்கில் இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களுக்குச் செய்த கொடுமைகள் விளம்பரப்படுத்தப்படவில்லை) , தமிழ்நாட்டு முஸ்லீம்கள், பார்ப்பனர்களைப் போலவே ஈழத்தமிழர்களை எதிர்த்தனர், ஈழத்தமிழர்களுக்கெதிராகப் பொய்ப்பிரச்சாரங்கள் செய்தனர். இலங்கை முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அவர்களின் முன்னோர்கள் கீழைக்கரை, கொல்லம், இராமநாதபுரம் போன்ற பகுதிகளிலிருந்து இலங்கையில் குடியேறிய தமிழ் முஸ்லீம்கள் என்ற உண்மையை மறைத்து. அவர்களின் முன்னோர்கள் ஈராக்கிலும், அரேபியாவிலிருந்து வந்தவர்களென வாதாடுகின்றனர் ஆனால் அது எவ்வளவு கேலிக்குரியது என்பதை அவர்களின் தோற்றமே காட்டிக் கொடுத்து விடுகிறது. இருந்தாலும் தாம் தமிழர்கள் அல்ல என்கிறார்கள் அவர்கள், ஆனால் இலங்கையில் தமிழர்கள் சாகும் போது, நீங்கள்- தமிழ்நாட்டு முஸ்லீம்கள் உங்களின் தமிழ் அடையாளத்துக்கு முன்னுரிமை கொடுத்து தமிழர்களாகிய ஈழத்தமிழர்களை ஆதரிக்கவில்லை, ஆனால் உங்களின் மத அடையாளத்துக்கு முன்னுரிமை கொடுத்து இலங்கை முஸ்லீம்களை ஆதரித்தீர்கள். இதிலிருந்து தமிழ் நாட்டு முஸ்லீம்களுக்கு அவர்களின் மத அடையாளம் தான் முக்கியமே தவிர, அவர்கள் இன அடையாளம் அல்ல என்பது தெளிவாகிறது. அல்லது அவர்கள் ஏன் தமிழ்த் தேசியத்தை எதிர்க்க வேண்டும். உண்மையான தமிழர்களுக்கு தமிழ்த் தேசியத்தை எதிர்க்க வேண்டிய தேவை என்ன?

      ///தமிழ் நாட்டில் இருக்கிற ஒரு முஸ்லிம் “எனக்கு அரபிதான் பிடிக்கும் அராபிய உடைதான் பிடிக்கும் அரபு உணவுதான் பிடிக்கும்” என்று சொல்கிறான்.அவனை நாடு கடத்தி விடுவீர்களா? ///

      அவர்களை நாடு கடத்த முடியாது, ஆனால் ஏனைய தமிழர்களுக்கு இந்த அரபுமயமாக்கல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், தமிழ்நாட்டில் தமிழ்க் கலாச்சாரமும், பாரம்பரியமும் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த முடியும் அல்லவா. அதாவது இந்துத்துவா மட்டுமன்றி தீவிரவாத இஸ்லாமியத்துவாவும் தமிழினத்தின் நலன்களுக்கு எதிரானது. தமிழர்கள் தொடர்ந்து தமிழர்களாக தமிழ்நாட்டில் நிலைக்க இரண்டையுமே தமிழர்கள் எதிர்க்க வேண்டுமென்ற உணர்வு தமிழர்களுக்கு உண்டாகலாம் என்பதால் தான் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன்.

      ///.ஓரினச்சேர்க்கை எங்கள் பிரப்புரிமை என்று தலைநகரத்தில் ஊர்வலம் போகிறான்.திருமணத்திற்க்கு முன் செக்ஸ் வைத்தல் தவறில்லை என்ற முற்போக்குவாதம் காதைகிழிக்கிறது. என்ற வாழ்க்கை முறை நவீன கலாச்சாரமாய் மாறிவருகிறது.///

      ஓரினச் சேர்க்கை/ லிவிங் டு கெதர் எல்லாம் இரண்டு தனிமனிதர்கள் சம்பந்தப்பட்டது. ஒருவரின் படுக்கையறையில் மற்றவரின் சம்மதத்துடன்(அதில் குழந்தைகள்/வயது குறைந்தவர்கள் சம்பந்தப்பட்டிராத வரை) என்ன செய்கிறார் என்பதைக் கேள்வி கேட்க ஜனநாயக நாடுகளில் யாருக்கும் உரிமை கிடையாது. ஓரினச் சேர்க்கை என்பது எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும் மனித இனத்தின் வரலாறு தொட்டு காணப்படுகிறது. எந்த நாட்டிலிருந்து யாரும், யாருக்கும் அறிமுகப்படுத்தியதல்ல. உண்மையைக் கூறப் போனால் ஆப்கானிய, பாரசீக – அரேபியக் காலச்சாரத்தில் ஓரினச் சேர்க்கை ஒரு அங்கமாக எப்பொழுதும் காணப்பட்டு வந்துள்ளது/வருகிறது. எத்தனையோ இஸ்லாமிய, பாரசீக கவிஞர்கள் ஓரினச் சேர்க்கையைப் பற்றி காதல் கவிதைகளையே புனைந்துள்ளனர். ஆனால் பாரசீக- அரேபிய ஆட்சிக்காலத்தையும், நாகரீகத்தையும் பற்றியும், அந்தப் புகழில் அவர்களுக்கும் ஏதோ பங்குள்ளது போன்று நினைத்து அதைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் தமிழ் முஸ்லீம்கள் பலர் அரேபிய-பாரசீக ஓரினச் சேர்க்கைக் கலாச்சாரத்தை மட்டும் அப்படியே மூடி மறைத்து விடுகிறார்கள்.

      ///இவ்வளவும் உங்களுக்கு தெரியவில்லை புர்காவும் தாடியும்தான் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக தெரிகிறது.///

      ஓரினச் சேர்க்கைக்காரர்களும், லிவிங் டு கெதர் வாழ்கை நடத்துகிறவர்களும் அதை தமது படுக்கையறையில் வைத்துக் கொள்வது போன்றே, முஸ்லீம்களும் அரேபிய புர்காவையும், தாடியையும் வீட்டுக்குள் மட்டும் வைத்துக் கொண்டால், மற்றவர்கள் அதைப் பற்றிப் பேச வேண்டிய தேவையே ஏற்படாது அல்லவா?

      • \\திப்புநானா கூட ‘அரபுமயமாக்கல்’ உண்டு, அது நடைபெறுகிறது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார். //

        பொய்.வடிகட்டிய பொய்.மதவெறியர்களுக்கு நேர்மையும் நாணயமும் மட்டுமல்ல வெட்க உணர்வும் கிஞ்சிற்றும் கிடையாது போலும்.வியாசன் வெட்கமின்றி கூசாமல் புளுகுகிறார்.கண் முன்னால் உள்ள விவாதத்தில் இட்டுக்கட்டினால் மாட்டிக்கொள்வோம் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் முட்டாள்தனமாக பொய் சொல்கிறார்.

        \\\MGR இன் காலத்தில் ஒருவர் தீக்குளித்தார்//

        தவறான தகவல்.பாசிச புலிகள் முசுலிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றிய பின்னர்தான் ஈழ மக்களுக்காக 1995-ல் அப்துல் ரவூப் என்ற முசுலிம் இளைஞர் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்தார்.

        • திப்புவின் பிரச்சனை என்னவென்றால் வினவில் எதைப்பற்றி யாருடன் விவாதம் நடந்தாலும் கடைசிப்பதிவு அவருடையதாக இருக்க வேண்டும். இது அவருக்கு வாழ்க்கைப் பிரச்சனை மாதிரி. அதனால் தான் அவசரக் குடுக்கையாக, முன்னுக்குப் பின் முரணாக மட்டுமன்றி, தமிழைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அரைத்த மாவையே அரைத்த்துக் கொண்டிருக்கிறார்.

          “அரபுமயமாக்கல் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுவது உண்மைதான்” என்று தானே ஒப்புக் கொண்டு விட்டு அதே வசனத்தில் “ஆனால் தமிழக முசுலிம்கள் அரபுமயமாகி விட்டார்கள் என்பது வியாசனின் கற்பனை” என்று அதை மறுத்தவர் அவர். ஆகவே நானும் திப்புநானா கூட ‘அரபுமயமாக்கல்’ உண்டு, அது நடைபெறுகிறது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்” என்று கூறினேன். (உண்மை என்பதும், ஒப்புக் கொள்வதும் தமிழில் ஒரே கருத்துப்படும்). ஆனால் திப்புநானா கூட ‘தமிழக முஸ்லீம்கள் அரபுமயமாகி விட்டார்கள்’ என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று நான் கூறவில்லை. தமிழைக் கூட ஒழுங்காக படித்துப் புரிந்து கொள்ள முடியாமல், என்னைப் பொய்யனாக்கும் இவருக்கு அறளை, கிறளை பெயர்ந்து விட்டதோ என்னவோ யார் கண்டது. ஆனால் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது திப்புவைப் பொறுத்த வரையில் நன்கு பொருந்துகிறது. அது மட்டுமன்றி கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும் ஆத்தாதவன் செயலே என்ற பழமொழிக்கேற்ப, அவரது விளக்கக் குறைவை மறைக்க, இந்த தளத்தில் அவரது கோமாளித்தனம் போதாதென்று, நகைச்சுவைக் கூத்தாடி கவுண்டமணியும் துணைக்கழைத்துக் கொண்டு படம் காட்டுகிறார். திப்புவின் நகைச்சுவைக்கு எல்லையே கிடையாது.

          இவ்வளவு நாட்களாக இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உளறித்தள்ளி விட்டு, இன்னும் அரபுமயமாக்கல் உண்டு என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம். அநேகமான எல்லா முஸ்லீம் நாடுகளிலுமுள்ள முஸ்லீம்கள் அரபுமயமாக்கலைப் பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால் திப்பு மட்டும் அப்படி எதுவுமேயில்லையாம். அதிலும் தமிழ்நாட்டில் அப்படி எதுவுமே கிடையாதாம். அவர் இப்படித் தான் அடம்பிடிப்பார் உண்மையை மறைக்க முயல்வார் என்பது யாரும் அறியாததொன்றல்ல. இந்த விடயத்தைப் பற்றி இங்கு பேசுவதைத் திசை திருப்ப, , தமிழ்ப்பெண்களின் ரவிக்கையுடன் தொடங்கி ரவீந்திரநாத்தாகூரின் மனைவியையும் விடுதலைப் புலிகளையும் விவாதத்தில் இழுத்து விட அவர் எவ்வளவோ முயற்சி செய்ததை நாமறிவோம். உலக முஸ்லீம்கள் பலர் அக்கறையுடன் விவாதிக்கும் இந்த விடயத்தை திப்பு போன்ற மண்ணடி மஸ்தான்களும், தமிழ்நாட்டு வஹாபி ஏஜெண்டுகளும் மறுப்பதும், அப்படிஎதுவுமில்லை என்று உளறுவதும், ஆச்சரியத்துக்குரியதல்ல. எதிர்பார்த்ததொன்று தான். இந்த விடயத்தை நான் இங்கே ஆரம்பித்தால் திப்புவின் பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட மென்போக்கு முஸ்லீம் என்ற முகமூடி கிழிந்து விட்டது, அவரது தீவிரவாத வஹாபிய ஈடுபாட்டை அனைவரும் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

          நான் கூகிளில் அரபுமயமாக்கல் பற்றி நிறைய உண்டு, பல முஸ்லீம் நாடுகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன படித்துப் பாருங்கள் என்ற போது எந்த மொழியில் படித்துப் பார்த்தார் என்பது அல்லாவுக்குத் தான் வெளிச்சம். தொடர்ந்து அவரது உளறல்களைப் பார்க்கும் போது படித்துப் பார்த்து, புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அரபுமயமாக்கல் என்பது நான் கண்டுபிடித்ததல்ல. ஒரு ஈரானிய நண்பனும், அவரது துருக்கிய நண்பனும் பேசிக்கொண்டதை வைத்துத் தான், நாங்கள் சமக்கிருத திணிப்பையும், பார்ப்பனீயத்தையும் எவ்வாறு எதிர்க்கிறோமோ அவ்வாறே பன்னாட்டு முஸ்லீம்களும் அரபு மேலாதிக்கத்தை எதிர்க்கின்றனர் என்பது தெரிய வந்தது. அவர்களும் அரபுமயமாக்கல் பற்றிய பேச்சைத் தொடங்கியது வெளிப்படையாகவே தெரிகிற மாற்றங்களாகிய ஆடையணிகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தான். திப்புவை விட எல்லா வகையிலும் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த மரீனா மகாதிர், அரபுமயமாக்கலைப் பற்றிப் பேசும் போது முதலில் குறிப்பிட்டதும் ஆடையணிகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றித் தான்.

          தமிழ்நாடு முஸ்லீம்களுக்கும், முஸ்லீம்களான ஈரானிய, துருக்கியர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஈரானிய(பாரசீக)ர்களுக்கும், துருக்கியர்களுக்கும் அரபுக்களை விடச் சிறந்த தனித்துவமான, பெருமைமிக்க, வரலாறும் பாரம்பரியமும் உண்டு, மதத்தின் பெயரால் அதை இழக்க, அதாவது வஹாபியத்துக்குட்பட்டு அரபு மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராகவில்லை, ஆனால் தமிழ் முஸ்லீம்களின் நிலை அதுவல்ல, அவர்களுக்கு தமது தமிழ்ப்பாரம்பரியத்தில் பெருமையோ, பற்றோ கிடையாது. அவர்கள் அரபுக்களைத் தம்மை விட உயர்ந்தவர்களாக, அண்ணாந்து பார்க்க வேண்டியவர்களாக நினைக்கிறார்கள். தமிழ் முஸ்லீம்களின் அந்த தாழ்வுமனப்பான்மை தான் அவர்களால் அரபுக்களின் ஆதிக்கத்தை, ஏனைய மொழி பேசும், ஏனைய முஸ்லீம் நாடுகளிலுள்ள முஸ்லீம்களைப் போல் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு, பெண்கள் கறுப்புக் கோணிப்பைகளை தலையிலும், மேலை நாடுகளில் நோயாளிகள் மருத்துவ மனைகளில் அணிந்து கொள்ளும் நீண்ட கவுன் போன்ற அரபுக்களின் உடையை ஆண்களும் போட்டுக் கொண்டு தமிழ்நாட்டு வெய்யிலில் அலைந்து திரிந்து தமிழர்களாகிய எங்களைப் பயமுறுத்துவது மட்டுமன்றி அவர்களைத் திரும்பிப் பார்க்கவும் செய்கிறார்கள்.

          மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள பச்சை நிறப்பூச்சுப் பூசிய பெரிய பள்ளிவாசலில் மாலைநேரம் தொழுகைக்கு வந்த தமிழ் முஸ்லீம் ஆண்கள் பலரும், அங்கே மதரசாவுக்கு ஒதி முடிந்து வெளியில் போகும் தமிழ் முஸ்லீம் சிறுவர்களும், அரபுக்களின் நீண்ட கவுனை அணிந்திருப்பதை நான் நேரில் பார்த்தேன். ஆனால் திப்பு என்னடாவென்றால் தமிழ் முஸ்லீம் ஆண்கள் அரபு உடைகளை அணிவதில்லையாம். பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைத்துக் கொள்வது போன்றது தான், திப்பு அரபுமயமாக்கல் தமிழ்நாட்டில் கிடையாதென்று அடம்பிடிப்பதும்.

          ‘இவ்வளவுக்கும் அரபுக்களின் ஆடைகளையோ அல்லது கலாச்சாரத்தையோ தான் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என முகம்மது நபிகள் ஒரு போதும் கூறவில்லை(யாம்). கடந்த சில ஆண்டுகளில் தீவிரவாத வகாபியிசத்தின் தாக்கம் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டிகளில் எல்லாம் பரவி விட்டது என்பது தான் உண்மை.’ என்ற எனது கருத்தை மேற்கோள் காட்டிய திப்புவுக்கு அரபுக் கலாச்சாரம் என்று குறிப்பிடும் போது அரபுக்களின் மொழி, பண்பாடு, அவர்களின் கட்டிடக் கலை கூட அடங்கும் என்ற சாதாரண தமிழ் கூடத் தெரியவில்லை. அதனால் தான் நான் ஆடைகளைப் பற்றி மட்டும் தான் பேசினேன் என்கிறார். அவருக்கு ஊனக்கண் இருக்கிறதோ அல்லது பூனைக்கண் இருக்கிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் அவருக்கு கொஞ்சம் விளக்கக்குறைவு மட்டும் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

          COLONIZATION என்ற ஆங்கிலச் சொல் இன்னும் திப்புவைக் குழப்பிக் கொண்டிருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது அதனால் தான் ஆங்கிலத்தில் பிரிட்டனில் மேற்படிப்பை முடித்து ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும், கதைகளையும் எழுதும் மரீனா மகாதிர் COLONIZATION என்ற சொல்லைத் தவறாகப் பாவித்து விட்டதாக அவரது ஞானக் கண்ணால் அறிந்து குற்றஞ் சாட்டுகிறார். அதனால் அதைப் பற்றி அவரிடம் மேலும் பேசுவதில் பயனேதுமில்லை.

          திப்புவைப் போன்ற மதவெறி பிடித்த வஹாபிய தீவிரவாதிகளுடன் ஒப்பிடும் போது எனக்கு மதவெறி என்ற ஒன்றே கிடையாது என்று கூறலாம். என்னைப் பொறுத்தவரையில் எனது மதம் என்பது எனது இனத்துக்கும் மொழிக்கும் பின்பு தான். தமிழினமா அல்லது மதமா என்று வரும்போது நான் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் அனைவருமே எமது இனத்தின் நலன்களுக்கும் எமது மொழிக்கும் தான் முதலிடம் கொடுப்போம். தமிழில் பற்றுள்ளதாக பீற்றிக் கொள்ளும், திப்புவால் அப்படிக் கூற முடியுமா? முடியாது.

          • சரி,வியாசன் ரெம்ப கோவப்படுறாரு..ரெம்ப்ப நல்லவரான அவரும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.அவரே கடைசி பின்னூட்டம் போட்டுக்கிரட்டும். இதுதான் எனது கடைசி பின்னூட்டம்.

            \\அரபுமயமாக்கல் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுவது உண்மைதான்” என்று தானே ஒப்புக் கொண்டு விட்டு அதே வசனத்தில் “ஆனால் தமிழக முசுலிம்கள் அரபுமயமாகி விட்டார்கள் என்பது வியாசனின் கற்பனை” என்று அதை மறுத்தவர் அவர். ஆகவே நானும் திப்புநானா கூட ‘அரபுமயமாக்கல்’ உண்டு, அது நடைபெறுகிறது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்” என்று கூறினேன். (உண்மை என்பதும், ஒப்புக் கொள்வதும் தமிழில் ஒரே கருத்துப்படும்). ஆனால் திப்புநானா கூட ‘தமிழக முஸ்லீம்கள் அரபுமயமாகி விட்டார்கள்’ என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று நான் கூறவில்லை. //

            இது என்னதனமான வாதம்.

            ”என் மேல் கொலைக் குற்றச்சாட்டு சொல்லப்படுவது உண்மைதான்””என்று ஒருவர் கூறினால் அவர் அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்கிறார் என்று பொருளா.ஆம்,ஒப்புக்கொள்கிறார் என்று சொன்னால் அதை விட கிறுக்குத்தனம் இந்த உலகில் இருக்க முடியாது.

            \\திப்புவை விட எல்லா வகையிலும் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த மரீனா மகாதிர், //

            இருக்கட்டுமே.ஆனால் யானைக்கு அடி சறுக்கிருச்சே.

            \\ ஈரானிய(பாரசீக)ர்களுக்கும், துருக்கியர்களுக்கும் அரபுக்களை விடச் சிறந்த தனித்துவமான, பெருமைமிக்க, வரலாறும் பாரம்பரியமும் உண்டு//

            காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்.அதிருக்கட்டும் ” சிறந்த தனித்துவமான, பெருமைமிக்க, வரலாறும் பாரம்பரியமும் உண்டு”என்பதில் ஓரினச்சேர்க்கையும் உண்டுங்களா.

            \\பெரிய பள்ளிவாசலில் மாலைநேரம் தொழுகைக்கு வந்த தமிழ் முஸ்லீம் ஆண்கள் பலரும், அங்கே மதரசாவுக்கு ஒதி முடிந்து வெளியில் போகும் தமிழ் முஸ்லீம் சிறுவர்களும், அரபுக்களின் நீண்ட கவுனை அணிந்திருப்பதை நான் நேரில் பார்த்தேன்//

            தவறான புரிதல்.அந்த நீண்ட அங்கி வட இந்தியர்கள் அணியும் ”ஜிப்பா”என்ற உடை.அந்த உடையை பொதுவாக மதகுருமார்கள்,மதகல்வி பயிலும் மாணவர்கள் அணிகிறார்கள்.முசுலிம் பொது மக்களின் உடை அல்ல அது.அரபுக்கள் அணிவது போன்ற உடையை தமிழக முசுலிம் ஆண்கள் அணிவதில்லை.

            \\இவ்வளவுக்கும் அரபுக்களின் ஆடைகளையோ அல்லது கலாச்சாரத்தையோ தான் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என முகம்மது நபிகள் ஒரு போதும் கூறவில்லை(யாம்). கடந்த சில ஆண்டுகளில் தீவிரவாத வகாபியிசத்தின் தாக்கம் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டிகளில் எல்லாம் பரவி விட்டது என்பது தான் உண்மை.’ என்ற எனது கருத்தை மேற்கோள் காட்டிய திப்புவுக்கு அரபுக் கலாச்சாரம் என்று குறிப்பிடும் போது அரபுக்களின் மொழி, பண்பாடு, அவர்களின் கட்டிடக் கலை கூட அடங்கும் என்ற சாதாரண தமிழ் கூடத் தெரியவில்லை.//

            வகாபியிசம் என்பது இசுலாமிய மதப்பிரிவு ஒன்றின் கொள்கைகளை குறிக்கும் சொல்.[school of thought ].அவ்வளவுதான்,அதுக்குள்ளே கொண்டு போய் அரபுக்கலாச்சாரம் மொத்தத்தையும் திணிச்சதா வியாசன் கருதிக்கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.

            \\COLONIZATION ……………அதனால் அதைப் பற்றி அவரிடம் மேலும் பேசுவதில் பயனேதுமில்லை.//

            ஆமா.இந்த பழம் ரெம்ப புளிக்கும்.சீச்சீ எனக்கு வேணாம்.

            • //”என் மேல் கொலைக் குற்றச்சாட்டு சொல்லப்படுவது உண்மைதான்””என்று ஒருவர் கூறினால் அவர் அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்கிறார் என்று பொருளா.//

              இப்படி ஒரு வாதம் வருமென்று எனக்கு முன்பே தெரியும். ஆனால் முதலில் அரபுமயமாக்கல் என்பதே என்ற கிடையாது அரபுமயமாக்கல்- வெங்காய மயமாக்கல் என்று எத்தனையோ நாட்களாக தொடர்ந்து மறுத்து சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் ஒப்பிட்டு அந்த விடயத்தையே திசை திருப்ப முயன்றவர், எவ்வளவு தான் விளக்கினாலும், அரபுமயமாக்கல் நடக்கிறது என்று உள்ளூர தெரிந்தாலும் மறுப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியான ஒருவர் குறைந்த பட்சம் அப்படி ஒரு குற்றச்சாட்டு இருப்பதாக ஒப்புக் கொண்டதே, ஒருவகை ஒப்புதல் தான். இன்னும் கூகிளில் தேடிப் படித்துப் பார்க்கவில்லைப் போலிருக்கிறது. அங்கே இஸ்லாமும் முஸ்லீம்களும் எவ்வாறு திட்டமிட்டு அரபுமயமாக்கப் படுகின்றனர் என்பதை தெளிவாக வாதாடுகின்றனர் பன்னாட்டு முஸ்லீம்கள்.

              //இருக்கட்டுமே.ஆனால் யானைக்கு அடி சறுக்கிருச்சே//

              அவருக்கு ஒன்றும் அடிசறுக்கவில்லை, உங்களுக்குச் சரியாக விளக்கம் இல்லாததாலோ அல்லது விளங்க முடியாததலோ அவருக்கு அடி சறுக்கியதாக நீங்கள் நினைத்துக் கொள்வது தான் வேடிக்கையானது.

              //காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்.அதிருக்கட்டும் ” சிறந்த தனித்துவமான, பெருமைமிக்க, வரலாறும் பாரம்பரியமும் உண்டு” என்பதில் ஓரினச்சேர்க்கையும் உண்டுங்களா.//

              இந்தக் கேள்விக்கு ஈரானியர்களும் துருக்கியர்களும் பதிலளிக்கு முன்பாக, அரேபிய பாரசீக, துருக்கியர்களின் அதாவது அவர்களின் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் கலீபாக்களின் ஆற்றலையும், அவர்களின் ஆட்சியைப் பற்றியும் அதில் தங்களுக்கும் ஏதோ பங்கிருப்பதாக நினைத்துக் கொண்டு. தமது வலைப்பதிவுகளிலும், நண்பர்களிடமும் பீற்றியும் கொள்ளும் முஸ்லீம்கள் தான் உங்களின் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். கஜினி முகம்மதுவுக்குக் கூட ஓரினச் சேர்க்கைக் காதலன் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உண்டு.

              உதாரணமாக, ஒரு ஆப்பிரிக்கக் காப்பிரி ஜேர்மனியின் கொலோன் தேவாலயத்துக்கு முன்பாக அல்லது இத்தாலியின் பாரிய தேவாலயங்களுக்கு முன்பாக நின்று கொண்டு (அவனும் இன்று கிறித்தவனாக இருப்பதால்) ,அவற்றைத் தமது முன்னோர்களின் அடையாளமாக அல்லது ஐரோப்பாவின் பழமைவாய்ந்த கட்டிடங்களிலேயும், கலாச்சாரத்திலும் தனக்கும் பங்கிருப்பதாக நினைத்துக் கொண்டால் அது எவ்வளவு வேடிக்கையானதோ, அதை விட வேடிக்கையானது சில தமிழ் முஸ்லீம்கள் அரேபிய, பாரசீக கலாச்சாரத்தையும், ஆட்சியையும், கலீபாக்களின் வீரத்தையும் பற்றிப் பீற்றிக் கொள்வது.

              //தவறான புரிதல்.அந்த நீண்ட அங்கி வட இந்தியர்கள் அணியும் ”ஜிப்பா”என்ற உடை.அந்த உடையை பொதுவாக மதகுருமார்கள்,மதகல்வி பயிலும் மாணவர்கள் அணிகிறார்கள்.முசுலிம் பொது மக்களின் உடை அல்ல அது.அரபுக்கள் அணிவது போன்ற உடையை தமிழக முசுலிம் ஆண்கள் அணிவதில்லை.///

              கெட்டித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறவேண்டாம். வட இந்திய ஜிப்பாவுக்கும் அரபுக்களின் உடைக்கும் எனக்கு வேறுபாடு தெரியும். நான் எகிப்து, துருக்கி, துபாய், கத்தார் போன்ற நாடுகளுக்கும் போயிருக்கிறேன். அடுத்த முறை மதுரைக்குப் போகும் போது படமெடுத்து பதிவு செய்கிறேன். எவ்வளவு நாளைக்குத் தான் தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல் என்ற உண்மையை மறைப்பீர்களோ தெரியாது. அண்ணல் தம்மைச் சுற்றி நடக்கிறது என்பதை அறியாத அளவுக்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்ல.

              //வகாபியிசம் என்பது இசுலாமிய மதப்பிரிவு ஒன்றின் கொள்கைகளை குறிக்கும் சொல்.[school of thought ]. அவ்வளவுதான்,அதுக்குள்ளே கொண்டு போய் அரபுக்கலாச்சாரம் மொத்தத்தையும் திணிச்சதா வியாசன் கருதிக்கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.//
              தீவிரவாத வஹாபியிசத்துடன் அரபுக் கலாச்சாரத்தையும் சேர்த்து உங்களைப் போன்ற வஹாபியிச ஏஜெண்டுகள் திணிப்பதைப் பற்றித் தான் இவ்வளவு நாளும் நாங்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.

              //ஆமா.இந்த பழம் ரெம்ப புளிக்கும்.சீச்சீ எனக்கு வேணாம்.///

              இதிலிருந்து தொடர்ந்து என்னுடன் பேசுவதை நீங்கள் விரும்புவதாகத் தெரிகிறது. உங்களின் ஆசையைக் கெடுக்க நான் விரும்பவில்லை, தொடர்ந்து பேசுவோம். 🙂

          • \\திப்புவைப் போன்ற மதவெறி பிடித்த வஹாபிய தீவிரவாதிகளுடன் ஒப்பிடும் போது எனக்கு மதவெறி என்ற ஒன்றே கிடையாது என்று கூறலாம்//

            தனது மதத்தின் மீது,மொழியின் மீது இனத்தின் மீது பற்று வருவது இயல்பானது,பெற்ற தாயின் மீது கொண்டிருக்கும் பாசம் போன்று உணர்வோடு கலந்தது.ஆனால் ,இன,மொழி மதவெறி என்பது பிற சமூகத்தினர் மீது குரோதமும்,வெறுப்பும் கொண்டு பேசுவது,சந்தர்ப்பம் வாய்த்தால் கொலை,கொள்ளை போன்ற அட்டூழியங்களை அவர்கள் மீது நடத்துவது,நேரடியாக அதை செய்யாதவர்கள் அப்படி அட்டூழியங்களை நடத்தும் கயவர்களை ஆதரிப்பது போன்றவையாகும்.இந்த இரண்டு குணநலன்களில் திப்புவிடம் எது இருக்கிறது வியாசனிடம் எது இருக்கிறது என்பது வெள்ளிடை மலை.

            \\எனது மதம் என்பது எனது இனத்துக்கும் மொழிக்கும் பின்பு தான். தமிழினமா அல்லது மதமா என்று வரும்போது நான் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் அனைவருமே எமது இனத்தின் நலன்களுக்கும் எமது மொழிக்கும் தான் முதலிடம் கொடுப்போம். தமிழில் பற்றுள்ளதாக பீற்றிக் கொள்ளும், திப்புவால் அப்படிக் கூற முடியுமா? முடியாது.//

            இந்த கேள்வியே அபத்தமானது.ரெம்ப பேர்ட்ட இந்த அபத்தம் இருக்கிறதை பார்க்கிறேன். உனது இரண்டு குழந்தைகளில் எந்த குழந்தையை அதிகம் நேசிக்கிறாய் என்று கேட்பது அபத்தம்.தாய்க்கு எல்லா குழந்தைகளும் ஒன்றுதான்,ஏதேனும் ஒரு குழந்தை நோய்வாய்பட்டாலொ,அடிபட்டாலோ அதன்பால் கூடுதல் பரிவு கொள்வது இயற்கை.அதற்காக மற்ற குழந்தைகளை நேசிக்கவில்லை என்றாகிவிடாது,

            என்னை பொருத்தவரை மதம்,மொழி,இனம் மூன்றையும் சமஅளவில் நேசிக்கிறேன்.இன,மொழி நலனுக்கா மத நலனுக்கா எதற்கு முதலிடம் கொடுப்பது என்ற கேள்வியே என்னிடம் எழுவதில்லை.ஏனென்றால் தமிழினத்தின் நலனுக்கும்,தமிழின் நலனுக்கும் எங்கள் மத நலனுக்கும் முரண்பாடு ஏதுமில்லை.தமிழினத்தின் நலனில் எங்கள் நலனும் அடக்கம். வியாசனுக்கு வேண்டுமானால் அவரது மத நலன்களுக்கும்,இன,மொழி நலன்களுக்கும் முரண்பாடு இருக்கலாம்.அதனால் எதற்கு முதலிடம் கொடுப்பது என்ற கேள்வி அவருக்கு எழுகிறது.

            • தீவிரவாத வஹாபியிசத்தை ஆதரிக்கும் திப்பு அவர்கள் தன்னிடம் மதவெறி இல்லை என்பதை இந்த தளத்தில் முன்பு சிலர் நம்பியிருந்தாலும், அவர் இந்த அரபுமயமாக்கல் விடயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் எப்படி எல்லாம் அதற்கு வக்காலத்து வாங்கினார், எவ்வாறு இன்னும் உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கிறார் என்பதை பார்த்த எவருக்குமே மதவெறி எங்கே, யாரிடமுள்ளது என்பது புரியும்.

              கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாமல் சப்பைக் கட்டு கட்டுகிறார் திப்பு நானா. தமிழ் நாட்டு முஸ்லீம்களின் மொழிப்பற்று, இனப்பற்றெல்லாம் வெறும் பம்மாத்து என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அவர்களுக்கு மதம் தான் முக்கியமே தவிர இனமோ மொழியோ அல்ல. அந்த உண்மையை ஒப்புக் கொள்ள முடியாமல் சளாப்புகிறார் திப்பு. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டு முஸ்லீம்கள் கூட தமிழை நீச மொழி என்று கருதியதால் தான் அவர்கள் நீண்ட காலமாக தமிழில் குர்ஆனை மொழி பெயர்க்கவில்லை என்பதைக்கூட நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இலங்கைப் போரிலும் இனத்தையும், மதத்தையும் சமமாக கருதியிருந்தால் ஈழத்தமிழர்களுக்கெதிராக இலங்கை முஸ்லீம்களை ஆதரிக்காமல் நடுநிலை காத்திருப்பார்கள். அதற்குப் பதிலாக ஈழத் தமிழர்களுக்கெதிராகப் போய்ப் பிரச்சாரம் செய்தவர்கள் தமிழ்நாட்டு முஸ்லீம்கள்.

              //தமிழினத்தின் நலனுக்கும்,தமிழின் நலனுக்கும் எங்கள் மத நலனுக்கும் முரண்பாடு ஏதுமில்லை.தமிழினத்தின் நலனில் எங்கள் நலனும் அடக்கம்.//

              வஹாபியமும் அரபுமயமாக்கலும் தமிழினத்தின் நலன்களுக்கும் ஒருமைபாட்டுக்கும் ஒவ்வாதது. உங்களின் மதமும் அதன் செயல்பாடுகளும் தமிழினத்துக்கும், தமிழினதும், தமிழினத்தின் நலனுக்கும் முரண்பட்டது என்பதை இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் உங்களின் கண்ணுக்கு முன்னால் நிரூபித்துக் கொண்டிருக்கும் போது, தீவிரவாத வஹாபியத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் இவ்வளவு நாளும் இங்கே வக்காலத்தும் வாங்கிக்கொண்டு. முரண்பாடு ஏதுமில்லை என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

              • \\உங்களின் மதமும் அதன் செயல்பாடுகளும் தமிழினத்துக்கும், தமிழினதும், தமிழினத்தின் நலனுக்கும் முரண்பட்டது //

                அதாவது முசுலிம் ஆக இருந்தாலே அவன் தமிழினத்துக்கு எதிரிதான் என்பதுதான் பரதேசிகளின் பஞ்சாயத்து முடிவு என்று ஆகி விட்டது.உதவாது இனி ஒரு தாமதம்.உடனே எதிரிகளுக்கு தண்டனை என்னன்னு சொல்லிருங்க நாட்டாமை.சீக்கிரம் தீர்ப்பை சொல்லி விட்டு வெத்தலை எச்சிலை துப்பிருங்க.பாருங்க,இங்க நிக்கிறவுங்க எல்லார் மேலயும் எச்சி தெறிச்சு கறையாவுது,

                தமிழ் நாட்டு தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

                நாட்டாமை தீர்ப்பை சொல்லிட்டு மறுபடியும் பரதேசம் கெளம்பிருவாரு.அப்போ யாரும் அவர் முன்னாடி வந்துராதீங்க.”ஏண்டா அவனுங்க மதமும் அதன் செயல்பாடுகளும் நம்ம இனத்துக்கு முரணாக இருக்கு.அவனுகளோட எப்படிரா நீங்க நூத்துக்கணக்கான ஆண்டுகள் ஒத்துமையா இருக்கலாம்னு திட்டி கோவத்துல உங்க மேலேயே வெத்தலை எச்சிலை துப்பிர போறாரு,பாத்து சூதானமா நடந்துக்கங்க.

    • //ஒரு இயற்க்கை பேரிடர் காலத்தில் மற்ற எவரையும் விட இஸ்லாமிய சமுதாயம் ஆற்றிய உதவிகளும் அதற்க்கு பொது மக்களின் நெஞசுருகிய அறிவிப்பும்தான் நாம் பதிகிற பின்னூட்டங்களுக்கான அடிப்படை//அப்பிடியெல்லாம் எதுவும் இல்லை மழை வெள்ளத்தில் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டாரகள் இசுலாமியர்களும் இசுலாமிய அமைப்புகளின் மூலம் உதவி செய்தார்கள் என்பதே உண்மை அவர்களுக்கனான பணம் எங்கிறீந்து வந்தது என்பது வேறு வகையானது டி என் டி ஜெ வும், எஸ் டி பி அய்யும் இசுலாமிய மத வெறி இயக்கங்கள் அவைகள் தாங்களும் நல்லவர்களே என்று காண்பிற்ப்பதற்க்காக செய்ய்ப்பட்ட மிகை நடிப்பு செவைதான் இது இதை கொண்டே இசுலாமிய இயக்கங்கள் இசுல்லம் சிறந்தது என்று மீரா சாகிப்பையோ ,இனியனயோ,திப்புவையோ,நம்ப வைக்கலாம் அனால் ஒட்டு மொத்த தமிழக மக்களையும் இசுலாம் சிற்ந்தது நம்ப வைக்கும் பரப்புரையில் ஈடுபடுவார்களே அகின் நீங்க ஒரு ஆணியும் புடுங வேண்டாம் என்று தமிழ் மக்கள் பதிலடி கொடுத்து விடுவார்கள் ஏனெண்றால் இது பெரியாரின் மண் இங்கு ஆர் எஸ் எஸ் ம் நுழைய முடியாது என்பது போல இசுலாம் என்ற அரபு பாஸிஸமும் பசுத்தோல் போர்த்திய புலி போல நுழைய முடியாது என்ர்ன்றால் தமிழக மக்களுக்கு யோசிக்கும் திறன் அல்லாவை விட அதிகமானது…

  54. இனியன்,”தனிமனிதஒழுக்கம் சமூகஒழுக்கம் ஒப்பீட்டளவிலான ஒன்று.அதற்க்கு வரையறைஇல்லை. காலமும் இடமும் சூழலும்தான் தீர்மானிக்கின்றன”என்ற் உங்கள் கருத்தின் பின்னணியை நான் புரிந்து கொள்கிறேன். ஒரு நாத்திகவாதியாக கம்னியூஸ்ட்டாக இது சரி.வெறும் அறிவை கொண்டு தேடும்பொழுது இதைத்தாண்டி உங்களால் போகமுடியாது. உங்களைப் பொறுத்தவரை ஒரு பாலைவன தனிமனிதரின் கோட்பாடே இஸ்லாம்.அவர்,அவர் வாழ்ந்த இடத்திற்க்கும் காலத்திற்க்கும் அறிவிற்க்கும் ஏற்ப வகுத்த கொள்கைகள்,எல்லா இடத்திற்க்கும் எல்லா சூழலுக்கும் எல்லா காலத்திற்க்கும் பொருந்தவே பொருந்தாது என்பதிலும் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.ஆனால் நாங்கள் இதில் நம்பிக்கை சார்ந்து வேறுபடுகிறோம்.எங்களது, பக்தியினால் மட்டும் வந்த குருட்டு நம்பிக்கையில்லை என்பது பூமிபந்து முழுக்க இந்த பாலைவன மனிதரின் கோட்பாடுகள் கொள்கைய்ள்வில் ஏற்கப்பட்டு கூடுமானவரை பின்பற்றப்படுகிறது என்பதிலும் எங்களுக்கு திருப்தி உண்டு.இதை அறிவுத்தளத்திலிருந்தும் விளங்க முடியும். உங்களுக்கு விளக்கவும் முடியும்.ஆனால் அதற்க்கு நீங்கள் ஆய்வு மனத்தோடு உள்வந்து பார்க்க வேண்டும்.இந்த தளத்தில் நாம் விவாதித்து அறிய முடியாது.விவாதிக்க புகுந்தால் மதநெடி கலந்து வேறு திசையில் போய்விடும்.”எப்பொருள் யாயார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும்” அறிவோடு வாருங்கள் நிச்ச்யம் ஒரு மாற்றம் வரும்.நாங்கள் இதை முழுமையாய் விளங்கி தெளிந்து நம்புகிறோம். நம்பிக்கையை பொழுது போக்காய் விவாதிக்க புகுந்தால் வம்பும் அரட்டையும்தான் மிஞசும்.ஆகவே நம்பிக்கை சார்ந்த உணர்வுகளை புரிந்து உறவு பாராட்டுதலே க்ண்ணியம்.நாகரீகம்.பண்பாடு.அப்படி விவாதித்தே ஆகவேண்டுமென்றாலும் நாங்கள் தயார்.இந்து மத சாதிமுறைகள் குஜராத்திற்க்கும் தமிழ்நாட்டிற்க்கும் வேறுபட்டிருப்பதையும் ஒரு உதாரணமாய் காட்டுகிறீர்கள்.முற்றிலும் வேறுபட்ட சித்தாந்தங்களுடைய இரண்டு மதங்களையும் ஒப்பிடுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.அது எந்தவகையிலும் பொருத்தமாகவும் இல்லை.

  55. வியாசன், கலாச்சாரம் என்ற பார்வையில் தெளிவே இல்லாமல் நீங்களாக ஒரு தோற்றம் உருவாக்கி “நீங்கள் அப்படியில்லையே இப்படியில்லையே” என்ற கற்ப்பனையில் குறைபட்டால் முஸ்லிகளிடம் மட்டும் இல்லை தமிழ்நாட்டில் யாரிடமும் நீங்கள் எதிர்பார்க்கும் கலாச்சாரம் கிடையாது.உடை என்பதை கலாச்சாரம் என் கிறீர்களா? உணவை சொல்கிறீர்களா? அவையெல்லாம் கணிசமாய் மாறியிருக்கிற்தே.போன தலைமுறை பயன்படுத்திய பலதை இந்த தலைமுறை மாற்றிவிட்டதே.எத்தனையோ ஆங்கிலவார்த்தைகள் தமிழ் வார்த்தைகளாய் மாறிப்போனதே.தமிழ் வார்த்தைகள் வழக்கொழிந்து போனதே.ஆனால் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களின் உடைகள் மட்டும் ஏன் உங்களை உறுத்துகிறது?ஓரினச்சேர்க்கை, ஆப்கானிய பாரசீக அரேபிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி என் கிறீர்கள்.அப்படியன்றால் அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றும் நாங்கள் கொள்கையளவில் அதை வரவேற்க்க வேண்டுமே.ஓரினச்சேர்க்கை ஆதரவு ஊர்வலத்தில் ஒரு தமிழ் முஸ்லிமும் இல்லையே.மற்ற ம்றதமிழர்கள்தானே கலந்து கொண்டார்கள்!கலாச்சாரம் என்ற பார்வையில் இலங்கை முஸ்லிகளின் வாழ்க்கை முறையையும் சேர்த்துவைத்து குழப்புகிறீர்கள்.இதில் விவாதிக்க வேண்டியது நிறய இருக்கிறது.நான் குழந்தைகள் ஆடைகள் விற்ப்பனை செய்யும் வணிகன்.இலங்கை எனக்கு மிக முக்கிய வணிகப்பகுதி. இலங்கையின் எலலா பகுதிக்கும் நான் சென்றிருக்கிறேன்.சிங்களர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் அனைவரோடும் தொடர்பு உண்டு.அங்குள்ள முஸ்லிகள் நிலைமை தமிழகத்திலிருந்து நிறைய வேறுபட்டது.நிலபரப்பின் அடிப்படையில் தமிழர்கள் ஆதியிலேயே ஒரு இடத்தில் குவிந்திருப்பது.அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் கிறிஸ்த்தவராக இருந்தாலும் தமிழ்ர்கள் என்ற இன அடையாளத்திலேயே தங்களை காட்டிக்கொள்வது. கிழக்குபகுதி முஸ்லிகள் அம்பாறை மட்டகளப்பு புத்தளம் சாய்ந்தமருது முஸ்லிகள் தமிழராக இருந்தும் சிங்கள்ம் அறவே அறியாதவர்களாக இருந்தும் தங்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை.மத அடையாளம் வைத்து முஸ்லிகள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள்.கண்டி பகுதி முஸ்லிகள் குறிப்பாய் மாத்தளை அக்குர்ன கம்பளை போன்ற பகுதி பெரும்பாலான முஸ்லிகள் சிங்களம் நன் கு தெரிந்து பொது இடத்தில் சிங்கள்த்தை பேசி பீத்திக்கொள்பவர்களாக இருந்தும் அவர்களும் தமிழர்களே.ஆனாலும் அவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை.இதற்க்கு இலங்கையின் அரசியல் சமூக நிலையே காரணம்.முஸ்லிகளில் ஜாவா முஸ்லிகள் போரா முஸ்லிகள் சிலர் தங்களை அரபுநாட்டிலிருந்து வந்தவர்களாக காட்டிக்கொள்கிற முஸ்லிம்கள் இலங்கையராக இருந்தாலும் இந்தியாவிலிருந்து போன அடையாளத்தோடு இருக்கிற முஸ்லிகள் என்று அனைவருமே தங்களின் மொழி இன அடையாளத்தை மறந்து மத அடையாளத்தோடு காட்டிக்கொள்கிற அரசியல் சூழல் உருவாகி இருக்கிறது.அதே நேரத்தில் எங்களின் வியாபார தொடர்பில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக அவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தை “இந்தியா காரங்களே இப்படித்தான்” என்பதே.அப்போது நாங்கள் முஸ்லிகள் என்பதெல்லாம் மறந்து போகும்.”நாங்கள் இலங்கையர்கள் நீங்கள் முஸ்லிகள்” என்பது மட்டுமே நிற்க்கும்.இந்தியர்கள் என்றால் கொன்ஞச்ம் மட்டம் என்ற தொனியும் அதில் கலந்திருக்கும்.இந்த எண்ணத்தை இந்து தமிழர்களிடமும் நான் பார்த்திருக்கிறேன்.இதை ஒரு பெரிய குறையாக நான் சொல்லவில்லை.எல்லோருக்குமே என் நாடு என் மொழி என்ற பெருமிதம் இயல்புதான்.இலங்கை போரில் இலங்கை முஸ்லிகள் ஆதரிக்கவில்லை என்றால் அதற்க்கு காரணம் புலிகள்.புலிகளை நாங்கள் எந்த காலத்திலும் ஆதரிப்பதில்லை.அவர்களின் சர்வாதிகார நிலைப்பாட்டால் புலிகள்தான் அந்த நிலையை உருவாக்கினார்கள்.புலிகளை எதிர்ப்பவர்களெல்லாம் தமிழ்ர்களை எதிர்ப்பவர்கள் என்பது திட்டமிட்டு உருவாக்கிய பொய்.அதை நீங்கள் திரும்ப திரும்ப சொல்வீர்களானால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.நான் இன்று இரவு இலங்கை பயணம். இனி பொங்கள் கழிந்தே திரும்புவேன்.

    • திரு. மீராசாஹிப்,

      உங்களின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். அத்துடன் இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தமிழைப் பேசிக் கொண்டே தாம் தமிழர்களல்ல எனக் கூறத் தொடங்கியதற்கும் புலிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மேலும் இலங்கையில் நாங்கள் தமிழர்கள், முஸ்லீம்களைப் போல் மத அடிப்படையில் எங்களை அடையாளப்படுத்துவதில்லை. “இந்து தமிழர்கள்” என்பதெல்லாம் கிடையாது. தமிழர் மட்டும் தான், அதில் கிறித்தவர்களும், இந்துக்களும் அடங்குவர். நீங்கள் பொங்கலுக்குப் பின்னரே திரும்புவதால், அதற்குப் பின்னர் எங்களின் கருத்துப் பரிமாறலைத் தொடர்வோம். அழகான எங்களின் தாய்நாட்டில் உங்களின் நாட்கள் வெற்றியுடன், மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.

    • திரு. மீராசாஹிப்,

      உடை, உணவு எல்லாமே கலாச்சாரம் தான் தமிழர்களின் உடை, உணவு எல்லாவற்றிலும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவையெல்லாம் எவராலும் திட்டமிட்டு தமிழர்கள் மத்தியில் புகுத்தவில்லை. அவையெல்லாம் நாளடைவில் படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்கள். அவற்றின் பின்னணியில் எந்த மதவாதிகளோ அல்லது மதவாதமோ கிடையாது. தமிழ் முஸ்லீம்களிடம் அண்மைக்காலத்தில் அவர்களின் ஆடையணிகளில் ஏற்பட்ட தீவிர மாற்றங்களின் பின்னணியில் மதமும், மதவாதிகளும், தீவிர வாத வஹாபியமும் இருப்பது தான் ஆபத்தானது என்கிறேன் நான்.

      அதிலும் இஸ்லாத்தில் அப்படியான அரேபிய, பாலைவன ஆடைகளைத் தான் அணிய வேண்டுமென்ற என்ற எந்தவித கட்டாயமும் இல்லாத போது, சில தீவிரவாத, மதவாதிகளின் தூண்டுதலால் தமிழ் முஸ்லீம்கள் அரபுக்களின் பாலைவனக் கலாச்சார ஆடைகளை அணிவதும் அவர்கள் தமது சொந்தமண்ணில், அவர்களின் சகோதர மக்களின் முன்னால் கறுப்புக் கோணிப்பைகளால் தலையை மூடிக் கொண்டு வேற்றுக்கிரகவாசிகள் போல் காட்சியளிப்பதும், தமிழர்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு நிரந்தர இடைவெளியை ஏற்படுத்தி விடும், இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் என்பது தான் என்னுடைய கருத்தாகும். நாளைக்கு இந்துத்துவா மதவாதிகள் இந்துக்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வட இந்திய ஆடையைச் சீருடையாக்க முனைந்தால், அதைத் தமிழர்கள் அணிந்து கொண்டு தமிழ்நாட்டு வீதிகளில் அலைந்தால், அதற்கும் இதே போன்ற எதிர்ப்பை நான் மட்டுமன்றி கோடிக்கணக்கான தமிழர்களும் தெரிவிப்பர். ஆனால் அப்படி எந்த எதிர்ப்பும் உங்களைப் போன்ற தமிழ்நாட்டு முஸ்லீம்களிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. அது தான் இங்குள்ள வேறுபாடு.

      ஆப்கானிய பாரசீக, அரேபிய கலாச்சாரத்தின் அங்கமாகிய ஓரினச் சேர்க்கையைப் பற்றி மட்டும் பீற்றிக் கொள்ளாத தமிழ் முஸ்லீம்கள் பாரசீக, அரேபிய கலாச்சார ஆடையணிகளை ஒரு கேள்வியும் இல்ல்லாமல் ஏற்றுக் கொள்கிறீர்கள் அவர்களின் கலீபாக்களின், மன்னர்களின் கொடூரங்களை எல்லாம் மறைத்து, அவர்களின் வீரத்தைப் புகழ்ந்து, அதில் உங்களுக்கும் ஏதோ பங்கிருப்பதாக நினைத்துப் பீற்றிக் கொள்கிறீர்களோ அது ஏன் என்பது தான் என்னுடைய கேள்வி.
      உதாரணமாக, ஒரு ஆப்பிரிக்கக் காப்பிரி ஜேர்மனியின் கொலோன் தேவாலயத்துக்கு முன்பாக அல்லது இத்தாலியின் பாரிய தேவாலயங்களுக்கு முன்பாக நின்று கொண்டு (அவனும் இன்று கிறித்தவனாக இருப்பதால்),அவற்றைத் தமது முன்னோர்களின் அடையாளமாக அல்லது ஐரோப்பாவின் பழமைவாய்ந்த கட்டிடங்களிலேயும், கலாச்சாரத்திலும் தனக்கும் பங்கிருப்பதாக நினைத்துக் கொண்டால் அது எவ்வளவு வேடிக்கையானதோ, அதை விட வேடிக்கையானது சில தமிழ் முஸ்லீம்கள் அரேபிய, பாரசீக கலாச்சாரத்தையும், ஆட்சியையும், கலீபாக்களின் வீரத்தையும் பற்றிப் பீற்றிக் கொள்வது. தமிழ் முஸ்லீம்கள் அவர்களைப் பற்றிப் பெருமைப்படுகிறார்கள் என்று அறிந்ததால் தான் திருவாளர் இனியன் சலாவுதீனைப் பற்றி இங்கே குறிப்பிட்டார்.

      ஆப்கானிய பாரசீக அரேபிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிய ஓரினச் சேர்க்கையை வெறுக்கும் தமிழ் முஸ்லீம்களில் எவராவது பச்சிளம் பாலகர்களை தமது காதலியாக்கிக் கொள்ளும் ஆப்கானிய முஸ்லீம்களின் பழக்க வழக்கத்தை எதிர்த்து எந்த வலைப்பதிவிலோ அல்லது பத்திரிகைகளிலோ எழுதியதுண்டா, அல்லது உங்களின் பள்ளிவாசல்களிலாவது எதிர்ப்பு தெரிவித்ததுண்டா. அந்தப் பழக்க வழக்கத்தை மாற்றி, ஆப்கானிய சிறுவர்களைக் காப்பதற்கு கூட மேலை நாடுகள் தான் முயல்கின்றனவே தவிர முஸ்லீம்களோ அல்லது முஸ்லீம் நாடுகளோ அல்ல.

      ஓரினச் சேர்க்கை ஆதரவு ஊர்வலத்தில் ஒரு தமிழ் முஸ்லீமும் இல்லாதது தமிழ் முஸ்லீம்களில் ஓரினச்செர்க்கையாளர் யாரும் கிடையாது என்பதற்கு ஆதாரமென நீங்கள் வாதாடவில்லையென நம்புகிறேன். 🙂

      இலங்கை முஸ்லீம்கள் ஏன் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை என்பதற்குப் பல காரணிகள் உண்டு. அவற்றை இங்கே வெறும் பதிலில் விளக்க முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் பேசும் முஸ்லீம்கள் கல்வியில் பின்தங்கியவர்களாக இருந்தனர். ஆனால் தென்பகுதியில் கொழும்பில், கண்டியில் வாழ்ந்த மலே முஸ்லீம்களும் குஜராத்தி(போறா) முஸ்லீம்களும் ஆங்கிலக் கல்வியில் முன்னணியில் இருந்ததால், இலங்கை முஸ்லீம்களின் தலைமை அவர்களின் கைகளுக்கு மாறியது. ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் தான் கீழைக்க்ரையிலும், கொல்லத்திலும், இராமனாதபுரத்திலுமிருந்து இலங்கைக்குக் குடியேறிய தமிழ் முஸ்லீம்களின் தமிழ் அடையாளத்தை இழக்கச் செய்து தனி முஸ்லீம் அடையாளத்தை எடுக்கச் செய்ததன் பின்னணியில் இருந்தவர்கள். ஏனென்றால் முஸ்லீம்கள் எல்லோரும் தமிழர் அடையாளத்துடன் தமிழர்களாக தொடர்ந்தால், மலே முஸ்லீம்கள் எப்படி அவர்களுக்குத் தலைவர்களாக முடியும். இது தான் தமிழ்நாட்டிலும் நடந்தது, தமிழரல்லாத பெரியார், தான் தமிழர்களுக்குத் தலைமை ஏற்பதற்காக, தமிழர்களின் தமிழர் என்ற அடையாளத்தை நீக்கித் தமிழர்களுக்குத் திராவிடர் என்ற கோவணத்தைக் கட்டி விட்டார். அதன் பலனை தமிழர்கள் இன்றும் அனுபவிக்கிறார்கள். அது தமிழினத்துக்கு விளைத்த தீங்கை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

      அதற்குப் பின்னர் கூட மொழி, கலாச்சரா பண்பாடுகளில் இலங்கைத் தமிழர்களும் முஸ்லீம்களும் நெருக்கிய தொடர்புகளைக் கடைப்பிடித்தே வந்தனர். அண்மைக் காலம் வரை மட்டக்களப்பு பகுதிகளில் கண்ணகி அம்மன் கோயில்களில் நடக்கும் குளிர்த்தி சடங்குகளில் முஸ்லீம்களுக்கும் முக்கிய பங்களிப்பதும், முன்னுரிமை கொடுப்பதும் வழக்கத்தில் இருந்து வந்தன. அவையெல்லாம் விட்டுப் போனதற்கு முஸ்லிம்களின் இயற்கையான சுயநலமும், தமிழ்த் தலைவர்களினதும், புலிகளின் சில செயல்களும் காரணமாக இருந்தாலும் கூட, சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ்-முஸ்லீம் பிரிவினையை சிங்கள அரசுகள் ஊக்குவித்தன. தொடர்ந்து இன்றும் வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் முஸ்லீம்களின் தலைமைகள் தெற்கில் சிங்களவர் மத்தியில் சிங்களவர்களுடன் வர்த்தக, குடும்ப, அரசியல் தொடர்புகளைக் கொண்ட தென்னிலங்கை முஸ்லீம்களின் கைகளில் தான் உள்ளன. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் தமிழர்களாக ஒன்றிணைந்திருந்தால் இலங்கையில் தமிழீழம் எப்பொழுதோ பிறந்திருக்கும். உலகில் தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக முட்டுக்கட்டையாக இருந்ததில், அந்தக் கனவு நனவாகும் போது கெடுத்ததில், இலங்கையில் ஈழத்தமிழர்களின் அழிவில் தமிழ் பேசும் இலங்கை முஸ்லீம்களுக்கும் முக்கிய பங்குண்டென்பதை எந்த ஈழத்தமிழனும் மறக்க மாட்டான்.

  56. திப்பு இன்னும் க்ரௌண்ட்ல பேட்டோதான் கிரௌண்டில நிக்கிறாரு ,பால் போடுறவுங்க போடலாம்,நீங்க என்ன சொன்னாலும் நீ எல்லாம் பேசாதே நீ எல்லாம் அர் .ஸ் .ஸ் ,வி.எச் .பி சொல்லி ஒரு சிக்ஸ்ரா தூக்கி அடிச்சி க்ரௌண்ட உட்டு பறக்கஉட்டுவாறு

    • அதெப்படி சார்வாள் ,வலிக்காத மாதிரியே நடிக்கிறதை விட அடி வாங்காத மாதிரியே நடிக்கிறது சிரமமா இல்லையா.

  57. வியாசன்,உங்கள் நோக்கம்தான் என்ன? குறை சொல்லியேஆகவேண்டும் என்ற தீர்மானத்தோடு இருக்கிறீர்களா? “இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளாததற்க்கு புலிகள்தான் காரணம் என்றா நான் சொன்னேன்?நான் மிகத்தெளிவாய் விளக்கிய்ப்பிறகும் சொல்லாததை சொன்னதாக சொன்னால்,குறை சொல்லியே ஆகவேண்டும் என்ற தீர்மானம் மூளை முழுக்க பரவி இருப்பதே காரணமாக இருக்க முடியும். 1956 லிருந்து தமிழ்ர் பொறாமை சில சிங்கள காடையரை பொசுக்க தொடங்க ஆரம்பிக்கிறது.அதன் பிறகு நடந்த போராட்டங்கள் வரலாறு.போராட்டங்களின் நடுவே வாழும் சமூகம் தன் அடையாளத்தை பிராதானப்படுத்தியே வாழும்.அடையாளத்தை பிராதானப்படுத்தல் என்பது போராட்டத்தின் ஒரு வடிவம்.ஆகவேதான் இலங்கை தமிழனின் தமிழ் உணர்வு இந்தியத்தமிழனிடம் இருப்பதில்லை.தமிழ் உணர்வை அரசியலுக்கு பயன்படுத்தும் கூட்டம் மட்டுமே தமிழ் நாட்டில் பிழைத்துக்கொண்டிருக்கிறது.”தமிழினத்தலைவர் கருணாநிதி” குடும்பத்தின் தமிழுணர்வே இதற்க்கு அத்தாட்சி. இன்னொன்றையும் நான் குறிப்பிட்டு ஆகவேண்டும்.1992ல் பாபர்பள்ளி இடிக்கப்பட்டப்பிற்கே இந்திய முஸ்லிம்களின் மத அடையாளங்கள் ச்ற்று தூக்கலானது.நிறைய இயக்கங்களும் முஸ்லிகள் மத்தியில் உருவானது.உச்சநீதிமன்றத்தியே புறக்கணித்து அரசியல் சாஸனத்தையே தூக்கிஎறிந்து ஒரு சிறு பயங்கரவாதகும்பல் ஒரு வழிபாட்டுதளத்தையே சுக்குநூறாக்க முடியுமென்பது அவ்ர்களை அச்சப்படுத்தி இயக்கங்களாலும் தீவிர மத அடையாளங்களாலும் தங்களை தற்காத்துக்கொள்ள வைக்கிறது.பொதுவாக முஸ்லிகள் மத உணர்வால் உந்தப்பட்டவர்கள் என்றாலும், அரசியல் சமூக காரணங்கள் அவர்களை இன்னும் தீவிரப்படுத்துகிறது.இங்கு மத உணர்வும் மத வெறியும் வேறு வேறு என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கை தமிழ்ர் போராட்டமுறை பல்வேறு வடிவம் எடுத்து அது புலிகளின் கைக்கு வந்த பிறகு முற்றிலும் எதேச்சதிகார போக்கிற்கே வித்திட்டது.இலங்கை தமிழ் முஸ்லிகளை விடுங்கள் அவ்ர்களின் போராட்ட முறையினை ஏற்காத இந்து தமிழர்களே அவ்ர்களால் புற்க்கணிக்கப்பட்டனரே.கருத்தால் வேறுபட்ட தமிழ் தலைவர்கள் கொடூரமாய் கொல்லப்பட்டனரே.பிறகு எப்படி முஸ்லிகள் புலிகளோடு இணையமுடியும்?தமிழராய் இருந்தும் முஸ்லிகள் தங்களின் மத அடையாளத்தையும் காப்பற்ற வேண்டுமில்லையா! புலிகளோடு அது சாத்தியமே இல்லை.முத்தாய்ப்பாக சொந்த ஊரிலிருந்தே புலிகளால்,கெடுவைத்து முஸ்லிகளால் விரட்டப்படுகிறார்கள்.தங்கள் ஊரிலிருந்து தலைநகரம் நோக்கி அகதிகளாய் துரத்தப்பட்டார்கள். அதிகாலை தொழுகை நடக்கும்பொழுது பள்ளிவாசலிலேயே சுடப்பட்டு சிதறினார்கள்.இவையெல்லாம் இந்தியாவில் பெரிதாக பேசப்படாமலேயே இருட்டடிப்பு செய்யப்பட்டது.இந்த ரணம் அவ்வளவு சீக்கிரம் அவர்களிடமிருந்து ஆறுமா? இது தமிழர்களாய் இருந்தும் அவர்களை முஸ்லிகள் என்ற ஒற்றை அடையாளத்தை பிரதானப்படுத்தி வாழ வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.ஆனாலும் அவ்ர்கள் தங்களை ஆரம்ப கால்ம் தொட்டே முஸ்லிகள் என்று மட்டுமே சொல்லி பழகியவர்கள் என்பது உண்மைதான்.ஆனாலும் இந்துக்களோடு தமிழால் வந்த நெருக்கமும் இணக்கமும் இருந்தது.புலிகளுக்குப் பிறகு சந்தேக மின்னல் தோன்றி ஒரு பெரும்சுவரை வளர்த்துவிட்டது.மொழியால் இணைந்து சந்தேகப்படுபர்களோடு இருப்பதை விட மதத்தால் இணந்து முஸ்லிகளாக மட்டும் இருக்கிறார்கள்.இது மொழியால் சிறுபான்மையாக இருக்கும் ஜாவாமுஸ்லிகள்.போராமுஸ்லிகள்,குஜராத்தி மேமன் முஸ்லிகள் அனைவரையும் இணைத்து ஒரு அரசியல் பாதுகாப்பையும் தரலாம். என்னுடைய நேர நெருக்கடியிலும் உங்களோடு சேர்த்து மற்ற சகோதரர்களுக்கும் செய்தி போய் சேரவேண்டுமே என்ற ஆவலில் எழுதுகிறேன்.இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம்.ஆனால் நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி வெறுப்பு கிளப்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கொழும்பில் இருக்கிறேன். ஜும்மாவுக்குப்பிறகு கல்முனை பயணம் இன்ஷாஅல்லா.

    • திரு.மீராசாஹிப்,

      இலங்கை முஸ்லீம்கள் தமிழைப் பேசிக் கொண்டே தம்மை தமிழர்கள் அல்ல என வாதடுவற்குக் காரணம் புலிகள் என்று நீங்கள் கூறியதாக நான் கருதி புலிகளுக்கு முன்பே முஸ்லீம்கள் தமிழர் என்ற அடையாளத்தை ஒதுக்கிவிட்டனர் என்று கூறவில்லை. இன்னும் நான் உங்களுக்குப் பதிலே எழுதத் தொடங்கவில்லை. பொங்கலுக்குப் பின்னர் எழுதலாமென்றிருந்தேன். ஆனால் இலங்கைக்குப் போயும் வினவில் பதிலெழுதுவதை நீங்கள் நிறுத்தவில்லை. அது எவ்வளவுக்கு உங்களுக்கு இந்த விடயத்தில் ஈடுபாடு உள்ளது என்பதைக் காட்டுகிறது.

      ஆனால் புலிகளால் தான் தமிழ்பேசும் இலங்கை முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்கள் என அடையாளப்படுத்துவதில்லை என்ற தவறான கருத்து பல தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் மட்டுமன்றி, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் கூட உண்டு. பல தமிழ்நாட்டுத் தமிழர்கள் இன்றும் இலங்கை முஸ்லீம்களின் தமிழர் வெறுப்பு தெரியாமல் அவர்களையும் தமிழர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள் என்பதை நான் அனுபவத்தில் அறிவேன். அதனால் தான் பொதுவாக அப்படிக் கூறினேன்.

      //“இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளாததற்க்கு புலிகள்தான் காரணம் என்றா நான் சொன்னேன்….//

  58. மதத்தால் இணைப்பதாக மீரான் அவர்கள் கூறுகிறார். அனால் அதனால் ஒரு மதத்தவர் மட்டும் இனைவார்களே ஒழிய அனைத்து மக்களும் இணைய முடியாது.

    இனத்தால், மொழியால் இணைப்பதாக வியாசன் அவர்கள் கூறுகிறார். ஆனால் அதனால் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் இணைய முடியும். அனைவரும் ஒரு குலமாக ஒரு இனமாக இணைய முடியாது.

    மனிதத்தால் இணைவோம். அதுவே அனைவர்க்கும் நன்மை பயக்கும்.
    இப்போது மதம், இனம், மொழி, சாதி என்று கூறுபவர் இன்னும்ம் ஒரு ஐம்பது வருடங்களில் எப்படியும் இறந்து தூசாக போகிறோம். அப்புறம் எதற்கு இந்த பாழாய் போன வேறுபாடுகள் நமக்குள்???

    • //ஒரு மதத்தவர் மட்டும் இனைவார்களே //

      மதம் மனிதர்களை ஒன்றிணைப்பது இல்லை . மனிதர்களால் உரு மாற்ற படாத புனித புத்தகம் கொண்டுள்ள இசுலாம் கூட , யார் அடுத்த உலக தலைவர் என்கின்ற கேள்வியில் இரண்டு சாதியாக பிரிந்து அடித்து கொள்கிறது .
      கிருத்துவத்தில் மேரி கடவுள் அந்தஸ்தை பெருகிறார இல்லையா என்கின்ற கேள்வியால் பிரிந்து நிற்கிறார்கள் .

      நம் மதத்தில் கேட்கவே வேண்டாம் .

      //மனிதத்தால் இணைவோம். அதுவே அனைவர்க்கும் நன்மை பயக்கும்//
      மட்டுமே மனிதர்கள் ஒருங்கிணைந்து வாழ் வழி செய்யும்

  59. கற்றது கையளவு,மதத்தால் முஸ்லிம்கள் இணைந்திருப்பதாக நான் கூறுவது அரசியல் சமூக ரீதியான பாதுகாப்பிற்க்கானது.ஏனெனில் ஆதிகாலம் தொட்டே தமிழ் முஸ்லிம்கள் இலங்கையில் தங்களை தமிழ்ர்கள் என்ற அடையாளத்தோடு காட்டியதில்லை.உலகமும் அவ்ர்களை முஸ்லிகள் என்றே சொல்கிறது.தமிழர்களாக கருதுவதில்லை.நிஜத்தில் அவர்கள் தமிழர்களே.கிழக்கு பகுதி முஸ்லிகள் தமிழை தாய் மொழியாக கொண்டது மட்டுமில்லாமல் சிங்களமும் தெரியாதவர்கள்.அதிகமானோர் விவசாயிகள்.வியாபாரிகள்.பெரியபடிப்போ அரசு உத்தியோகமோ மிக மிக மிக குறைவு.நேர்மாறாய் இந்துக்கள் நல்ல படிப்புள்ளவர்களாய் அரசு வேலைகளில் உயர்பொறுப்புகளிலும் இருந்தார்கள்.இலங்கையின் நிர்வாகத்தில் இந்துக்களின் பங்கு கணிசமானது.ஆகவே சிங்களர்களின் குரோதம் முஸ்லிகளை விடுத்து இந்து தமிழர்கள் மேல்தான் வளர்ந்தது.இதன் காரணமாகவே சிங்கள தமிழ் போராட்டம் என்பதும் முஸ்லிம்களை விடுத்தானதாகவே இருந்தது.தனிஈழம் என்ற குறிக்கோளும் இந்து தமிழ்ருக்கான தனிநாடு என்பதாகவே நிலைபெற்றது.இப்படி தமிழர்களான முஸ்லிம்கள் ஈழத்திறகுரியவர்கள் என்ற நிலையிலிருந்து விலகியவர்களாகவே ஆனார்கள். தந்தை செல்வா தலைமையில் துவங்கிய அறப்போராட்டம் பல்வேறு வடிவம் எடுத்து புலிகள் கைக்கு வந்தபிறகு தீவிரவாத போராட்டமாக உருவெடுத்து,மிதவாத தமிழ் தலைவர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள்.இறுதியில் ஒற்றை இயக்க விடுதலை புலிகளின் தலைமையின் கீழ் விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் கட்டுப்படவேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டது.அதன் இறுதி முடிவு நாம் அனைவரும் அறிந்ததே.தமிழர்கள் புலிகள் தலைமையில் ஒன்றினைந்து இருந்ததும்(வேறுவழியில்லாமல்)புலிகள் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து போராடியதும்தான் அவர்களை இவ்வள்வு காலம் தாக்குபிடிக்க வைத்தது.இந்திய சீன பாகிஸ்தானிய துணையை வைத்துக்கொண்டுதான் புலிகள் கட்டுப்பாட்டு பகுதியை இலங்கை அரசால் கைப்பற்றவும் முடிந்தது.இனி இந்த பேரினவாத சிங்கள அரசுக்கு அடுத்த இலக்கு முஸ்லிம்கள்தான்.ஆகவே அவர்கள் ஏதோ ஒரு வகையில் இணைந்திருக்க வேண்டி இருக்கிறது.அது மத ரீதியிலானதாக இருக்கிறது.மனிதன் சமூகமிருகம்.சமூகரீதியிலாக இணைந்திருப்பதே அவன் பலம்.குடும்பம், வட்டாரம், தெரு, ஊர்,இனம்,மாநிலம்,மொழி,நாடு என ஒவ்வொறு சூழ்நிலைக்கும் ஏற்ப இணைத்துக்கொண்டுதான் அவன் வாழ வேண்டும்.தேவைப்பட்டால் அனைத்து அடையாளமும் மறைந்து மனிதம் அவனிடம் வெளிப்படும்.சென்னை வெள்ளத்தில் ஏற்பட்டதைப்போல!வியாசன் என்னுடைய கருத்துகள் பலதில் பரிசீலித்து உடன்படுவார் என நம்புகிறேன்

    • //தனிஈழம் என்ற குறிக்கோளும் இந்து தமிழ்ருக்கான தனிநாடு என்பதாகவே நிலைபெற்றது.///

      இந்தப் பதிலிலிருந்து என்ன தெரிகிறதென்றால் மீராசாஹிப்புக்கு இலங்கையின் வரலாறு தெரியாது. முஸ்லீம்கள் மத அடிப்படையில் தம்மை அடையாளப்படுத்துவதால், இலங்கைத் தமிழர்களையும் அவர் மத அடிப்படையில் வேறுபடுத்த முனைகிறார். அல்லது அதற்குக் காரணம் அறியாமையாகக் கூட இருக்கலாம் தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த ஒவ்வொரு இலங்கைத் தமிழனும், இந்துவாகவோ அல்லது கிறித்தவனாகவோ இறக்கவில்லை. தமிழனாக மட்டும் தான் உயிரை நீத்தான். இலங்கையில் தமிழர்கள் தம்மை இந்து- கிறித்தவர்கள் என்று வேறுபடுத்துவதில்லை. தமிழீழம் என்ற குறிக்கோள் இந்துக்களுக்காக உருவாக்கப்படவில்லை, தமிழர்களுக்காக உருவானது. ஈழத் தமிழர்களின் மீதும் இந்துக்களின் மீதுமுள்ள காழ்ப்புணர்வை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தித் தீர்த்துக் கொள்கிறார் மீராசாஹிப்.

      உண்மையில் ஆங்கிலேயர் காலத்தில் இந்துக்களை விட கிறித்தவ மதத்துக்கு மதம் மாறிய கிறித்தவ தமிழர்கள் தான் கல்வியில் முன்னணி வகித்தனர். ஆனால் அதில் பெரும்பாலானோர் கல்வி, மற்றும் சலுகைகளுக்காக மதம் மாறியவர்கள், ஆகவே சுதந்திரத்துக்குப் பின்னர் அவர்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தினரும், பரம்பரையினரும் மீண்டும் சைவசமயத்துக்கு திரும்பி விட்டனர்.

      //உலகமும் அவ்ர்களை முஸ்லிகள் என்றே சொல்கிறது.தமிழர்களாக கருதுவதில்லை///

      இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தான் தாங்கள் தமிழைப் பேசினாலும் தமிழர்கள் அல்ல முஸ்லீம்கள் மட்டும் தானென்றும் உலகுக்குக் கூறியவர்கள். அவர்களின் முன்னோர்கள் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களென இல்லாத வரலாற்றை, அரபுநாடுகளை இணைத்து கட்டுக்கதைகளை உருவாக்க முனைந்து மூக்குடைபட்டும் கொண்டனர். அவர்களின் முன்னோர்கள் அரபுக்கள் என்ற கதையை இலங்கையில் மட்டுமன்றி அரபு நாடுகளில் உள்ளவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

      “Sri Lankan Muslims Are Low Caste Tamil Hindu Converts Not Arab Descendants”
      http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_5.html

  60. வியாச்ன்,உங்கள் வார்த்தைகளில் கல்யாணராமன் நெடி அடிப்பதுபோல் படுகிறது.இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளிலிருந்து இந்தியாவில் எங்கள் அர்சியல் சூழலிலிருந்து அனைத்தயும் விளக்கியாகிவிட்டது.ஆனாலும் திரும்ப திரும்ப அந்த கருப்பு பர்தாவையே பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள்.உடை என்பது சீதோஷண நிலைக்கு தக்கவாறுதான் மனிதன் உடுத்த ஆரம்பித்தான் என்றாலும் இன்று நாகரீகம் பகட்டு தன்னை வித்தியாச படுத்தி காட்டல் என்று பல காரணங்களால் மாற்றம் பெற்றிருக்கிறது.எந்த பகுதி மனிதனையும் உடை கொண்டு கட்டாயப்படுத்த முடியாது.புர்கா என்ற கருப்பு குப்பாயம் கூட எவ்வளவு நாளைக்கு முஸ்லிம் பெண்களிடம் இருக்கும் என்று கூறமுடியாது.மலேசிய பெண்களைப்போல தொள தொள பேண்டும் கோட்டும் கூட இன்னும் கொஞச நாட் களில் பேஷனாய் வரலாம்.எத்தனை முறை சொன்னாலும்” வகாபி சொன்னான் மத்தீவிரவாதி சொன்னான் அதனால்தான் புர்கா போடுறீங்க, நீங்க அரபியா மாறுறீங்க நீங்க தமிழ்னா இல்லாம இருப்பது என்னை கலஙக வக்கிது” என்ன்ய்யா எப்படிய்யா இப்படி ஒரு தமிழுணர்வு? தமிழ் நாட்டு தமிழன் உங்களிடம் பிச்சை வாங்கனும் போலயே.இதில் பெரியார் வேறு பெரும் பாதகம் செய்துவிட்டாரென்று கடும் விசனப்பாடுகிறீர்.நீங்கள் பெரியார் காலத்தில் பிறந்து தொலைக்கவில்லையே என்று எனக்கு வருத்தம் ஏற்ப்படுகிறது.அந்த அறிவுகெட்ட கிழவனுக்கு!நீங்கள் கொஞசம் அறிவை கடன் கொடுத்திற்கலாம்.நீங்கள் செந்தமிழர் அந்த கிழவன் தெலுங்கு காரர் உங்கள் அளவுக்கு அந்த கிழவனுக்கு ஏது தமிழறிவு? தமிழுணர்வு?காலதாமதமாய் பிறந்து தமிழ் காதலால் நீங்கள் கதறும்போது என் இதயம் கணத்து கலங்குகிறது.வேறு வேறு மத நம்பிக்கை வேறு வேறு நடைமுறைகள் வேறு வேறு சித்தாந்தங்கள் கலந்து வாழும் நமக்குள் பேதங்கள் வந்து விட கூடாது,ஒருவரை புரிந்து ஏற்று சகித்துக் கொண்டு வாழ்தலே நல்லிணக்கம் என்ற உயரிய நோக்கோடுதான் நான் இங்கே கருத்து பதிகிறேன். வெறுமனே வம்பு வளர்ப்பதே நோக்கமாய் கொண்டு நான் தான் செந்தமிழன் நான் சொல்வதுதான் கலாசாரம் நான் சொல்வதுதான் பண்பாடு என்று கூவிக்கொண்டிருந்தால் தெவைய்ற்ற நேர விரயமும் தமிழர்களாகிய எங்களிடமிருந்து தனிமை பட்டு நிற்பதும்தான் மிஞசும்.

    • திரு.மீராசாஹிப்,

      எனக்கு எந்தக் கல்யாணராமனையும் தெரியாது, முகம்மது சுல்தானையும் தெரியாது. ஆகவே உங்களுக்கு ராமன் நெடி அடித்தாலென்ன, சுல்தான் நெடி அடித்தாலென்ன, இரண்டுமே உங்களின் மனப்பிரமை செய்யும் வேலை. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுடைய பதிலுக்குத் தான் நான் பதில் எழுதினேன், அதற்கு மறுப்போ அல்லது எனது கருத்துடன் உடன்படவோ உங்களுக்கு விருப்பம் அல்லது தைரியம் இல்லாததால் நைசாக ‘ஜகா’ வாங்க விரும்புகிறீர்கள் போல் தெரிகிறது.

      இஸ்லாத்தில் அரேபிய ஆடைகளை அணியவேண்டிய கட்டாயம் இல்லாத போதிலும் தமிழ் முஸ்லீம்கள் தமிழ்நாட்டுக் கொதிக்கும் வெய்யிலில் கறுப்புக் கோணிப்பையைத் தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்துவதைப் பற்றி நான் எழுதியதன் காரணம், இங்கு நாங்கள் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல் (Arabization) பற்றிப் பேசிக் கொண்டிருப்பதால் தான். நீங்கள் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் காரணங்கள் எல்லாமே திப்பு நானாவும் நானும் ஏற்கனவே இங்கே பேசியவை தான், நீங்கள் ஒன்றும் புதிதாகக் கூறவில்லை. மீண்டும் அதே விடயத்தை உங்களுடனும் பேச வேண்டுமென்று நான் ஒன்றும் துடிக்கவில்லை. நீங்கள் எழுதியதற்கு நான் பதிலெழுதினேன். அவ்வளவு தான்.

      நான் எனது பதிலில் குறிப்பிட்ட எத்தனையோ பதிலளிக்க வேண்டிய விடயங்கள் இருக்க, அவற்றை விட்டு விட்டு, நீங்கள் பெரியாரின் சால்வைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு கரைசேர நினைப்பது தான் வேடிக்கை. இலங்கையில், தமிழர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்த வேண்டிய தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு எவ்வாறு தமிழ் பேசாத மலே முஸ்லீம் அரசியல் தலைமை வெறும் முஸ்லீம் அடையாளத்தைக் கொடுத்தது என்பதை உங்களுக்குப் புரிய வைக்கத் தான் நான் பெரியாரின் உதாரணத்தைக் காட்டினேன். பெரியாரின் கால கட்டத்தில் இருந்த சமூகச் சூழலில், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து அவர் ஆற்றிய சமூகத்தொண்டுகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர் தமிழர்களைத் திராவிடர்களாக்கியதால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை விடத் தீமைகள் அதிகம் என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. அதனால் தான் இன்றைக்கும் ஒரு உண்மையான தமிழன் தமிழ் நாட்டை ஆள்வதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது.

      நான் இங்கு அரபுமயமாக்கல் பற்றி எழுத வந்ததன் காரணமே இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே ஏற்பட்ட நிரந்தர இடைவெளி போன்ற நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டு விடக் கூடாதென்று தான் ஆனால் நீங்கள் என்னடாவென்றால் தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப்படுவது பற்றித் தொடர்ந்து பேசினால் “தமிழர்களாகிய” உ(எ)ஞ்களிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டு விடுவேன் என்று பயமுறுத்துகிறீர்கள். திப்பு நானா என்னடாவென்றால் ரவீந்திரநாத் தாகூரின் மனைவியையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும் எப்படியாவது இழுத்து வந்து, தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல் பற்றிய விடயத்தைத் திசை திருப்ப முயற்சித்தார், ஆனால் நீங்கள் நேரடியாகவே நான் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டு விடுவேன் பயமுறுத்துகிறீர்கள். உண்மையில் நீங்கள் அண்ணன் திப்புவை விட அதிபுத்திசாலி போலிருக்கிறது. 🙂

    • இந்த இணையத்தளத்தில் பெரியாரின் சீடர்கள் போலவும், அவரை மதிக்கிறவர்கள் போலவும் நடிப்பதுடன், நான் பெரியாரைக் குறை கூறி விட்டேன், என்று அதை வைத்துப் பெரிய வசனம் எல்லாமெழுதி பெரியாருக்கு வக்காலத்து வாங்கி, அதை வைத்து இங்குள்ளவர்களை எனக்கெதிராகத் திருப்பலாம் என்று கனவுகண்ட வஹாபிநானா, அவர்களின் தானைத் தலைவர் பி. ஜெய்னுலாப்தீன் பெரியாரை ‘பணத்தாசை பிடித்தவர், ஏழைகளுக்குத் தண்ணி கொடுப்பதற்கே காசு வாங்கியவர், அவருக்கும் பார்ப்பானர்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது, வயிற்றுப் பிழைப்புக்காக நாத்திகம் பேசியவர்’ என்று, பெரியாரை மட்டுமன்றி பெரியாரிஸ்டுகளையும் துவைத்து, கசக்கிப் பிழிந்து காயப் போட்டாரே(காணொளியைப் பார்க்க) அதை ஏன் இவர்கள் யாரும் கேள்வி கேட்காமல் அடக்கி வாசித்தார்கள். இவர்கள் பெரியாரை, அம்பேத்காரை எல்லாம் மதிப்பதாக பம்மாத்து விடுவதெல்லாம் பிள்ளை பிடிகாரர்கள் போல அப்பாவித் தலித்துகளைப் பிடித்து மதமாற்றம் செய்வதற்காகத் தான் போல் தெரிகிறது. உண்மை என்னவென்றால் இவர்கள் யாரையும் மதிப்பதில்லை, இவர்கள் மதிப்பதெல்லாம் அந்த சவுதிப் பேரீச்சை வியாபாரி அப்துல் இப்ன் வஹாபைத் (Abdul ibn Wahhab) தான்.

      https://www.youtube.com/watch?v=nAG_GXMGpqU

      -க‌ட‌வுளைச் சொல்லி ஏமாத்துற‌வ‌னுமிருக்கிறான், க‌ட‌வுள் இல்லையென்று சொல்லி ஏமாத்துற‌வ‌னுமிருக்கிறான்.-

      “க‌ட‌வுள் இல்லையென்று சொன்னாரில்ல‌ பெரியார். பெரியார் என்ன‌ தொழில் ப‌ண்ணிச்சாப்பிட்டாரு.இல்லை, க‌ட‌வுள் இல்லையென்று சொல்வ‌து தான் சாப்பாடு,பெரியார் என்ன‌ தொழில் ப‌ண்ணிச் சாப்பிட்டாரு? ம‌த‌த்தை வைத்து அவ‌ங்க‌ சாப்பிட்ட‌ மாதிரி, இவ‌ர் ஒரு வியாபாரியாக‌ இருந்து கொண்டு, ஒரு விவ‌சாயியாக‌ இருந்துகிட்டு இவ‌ர் சாப்பிட‌வில்லை, இவ‌ரும் ஒரு சித்தாந்த‌த்தை எடுத்துக்கொண்டு அதைச் சொல்வ‌த‌ன்மூல‌மாக‌வும் நிதி தான் திர‌ட்டினாரு. எந்த‌வொரு கூட்ட‌த்துக்கு வ‌ந்தாலும் காசில்லாம‌ல் வ‌ர‌மாட்டாரு.க‌ல்யாண‌த்துக்கு இவ்வ‌ள‌வு காசு,க‌ருமாதிக்கு இவ்வ‌ள‌வு, வீட்டில‌ த‌ண்ணி குடுக்க‌ கேட்டு வைச்சிருந்தாரா இல்லையா? பெரியார் வ‌ந்து எந்த‌ வீட்டுக்கு வ‌ர்ற‌தா இருந்தாலும்,உன் வீட்டில‌ நான் சாப்பிட‌ற‌தா இருந்தா என‌க்கு இவ்வ‌ள‌வு த‌ர‌ணும்,உன் வீட்டில‌ த‌ண்ணி குடிக்கிற‌தா இருந்தா இவ்வ‌ள‌வு த‌ர‌ணும், உன் குழ‌ந்தைக்குப் பெய‌ர் வைக்கிற‌தா இருந்தா இவ்வ‌ள‌வு த‌ர‌ணும்.என்று சொல்லி,இந்த‌ உஞ்சவிருத்திப் பார்ப்பான்க‌ள் என்று குற்ற‌ம் சும‌த்தினாரே, அவங்க‌ செய்த‌மாதிரி வேலையை அவ‌ர் செஞ்சாரா இல்லையான்னா, செஞ்சாரு. அதே மாதிரி தான் செஞ்சாரு.அவ‌ர் தொழில் எதுவும் ப‌ண்ண‌வில்லை. ம‌த‌த்தைச் சொல்லிக்கிட்டும் ச‌ம்பாரிக்கிறான், ம‌த‌ம் இல்லையின்னு சொல்லிக்கிட்டும் ச‌ம்பாரிக்கிறான். ம‌த‌ம் இல்லை என்ப‌தை வ‌யிற்றுப்பிழைப்புக்கு வ‌ழியாகிக் கொண்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள்.”

      • இதை விட பெரியாரை இவ்வளவு கீழ்த்தரமாக வேறு யாரும் பேசி விட முடியாது. இந்த ஒன்று மட்டுமல்ல இதைப் போன்றே பீ.ஜே பல பேசி இருக்கிறார். பெரியார் கை நிறைய குடுத்த வெடிகுண்டுகளோடு இங்கு சுத்துபவர்கள் அதை இந்துக்கள் மீதும், தமிழ் தேசிய வாதிகள் மீதும் மட்டுமே தான் எறிவார்கள் போல. இசுலாமியர்கள் என்றால் பெரியார் கொடுத்த அனைத்தும் வெத்து குண்டுகள் ஆகி விடுமோ என்னவோ யார் கண்டது?

      • நம் எல்லாரையும் விட்டு விட்டு பிஜெ என்பவரை பிடித்து தொங்க ஆரம்பித்துவிட்டார்.எவனையாவது தூக்கி எவன் மேலேயாவது அடிக்க வேண்டும்.பெரியாரை காரணமாக்கி இங்குள்ளவர்களை இவருக்கு எதிராக திருப்புகிறார்களாம்.இங்குள்ள எவனும் உங்களையும் உங்கள் கூட்டத்தையும் சல்லிகாசுக்கும் மதிப்பதாக இல்லை.இது இவருக்கும் தெரிகிறது.அதுதான் சம்மந்தேமே இல்லாமல் எங்கேயாவது தாவி யாராவது ஒருத்தரிடம் அடைக்கலம் ஆகலாம் என்று பார்க்கிறார்.எப்படி கூட்டணி சேர்ந்திருக்கிறது பாருங்கள்? இனம் இனத்தோடு சேர்ந்து தலைவன் வழியை உடனே சிஷ்யை தொடர்கிறார்.

  61. வியாசன் உங்கள் சமூக அக்கறைக்கு என் நெஞாசர்ந்த நன்றிகள்.தமிழ் நாட்டில் இருக்கிற தமிழர்களாகிய நாங்கள் புர்கா என்ற உடையை வைத்து இலஙகையைப் போல பிரிந்து விடக்கூடாதே என்ற எங்களின் ஒற்றுமையின் மேல் உள்ள உங்கள் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது.ஆனாலும் இந்த மானங்கெட்ட தமிழன் புர்காவை வைத்தோ தாடியை வைத்தோ பிரிந்து போகமாட்டேனே வியாசன்.ஒரு வட இந்தியனை கண்டால் சேட்டு சேட்டு என்று பின்னால் போவான்.தாடி வைத்து தொப்பி போட்ட முஸ்லிமை கண்டால் பாய் பாய் என்று அவனை சகோதரனாய் ஆக்கி மகிழ்வான்.இவனுக்கேது உங்களைபோன்ற தமிழுணர்வு.இருந்தாலும் இப்போது உங்களைப்போன்ற செந்தமிழர்கள் பெருகிக்கொண்டு இருப்பதால் கூடிய விரைவில தமிழனுக்கு சொரனை வந்தாலும் வந்துவிடும்.ஆகவே முஸ்லிம் தமிழர்களாகிய நாங்கள் என்னென்ன உடுத்த வேண்டும் அதை எப்படி உடுத்த வேண்டும்? பெண்கள் உடை எப்படி இருந்தால் நல்லது? உணவு முறைகளில் எது எது உணணலாம் எவ்வளவு நாளைக்கு ஒரு முறை உண்ணலாம்?சனிக்கிழமை க்றி திண்ணலாமா? இங்கே தமிழ்ன் பல மாதிரி கறி திங்கிறான்.வாரம் முழுக்க திண்பவன், வாரம் ஒரு முறை திண்பவன், சில கிழமைகளில் தவிர்ப்பவன் முழுவதுமாகவே தவிர்ப்பவன் இதில் முஸ்லிம் தமிழனாகிய நாங்கள் எந்த தமிழ்னை பின்பற்றுவது.நீங்கள் பட்டியல் கொடுத்தால் பள்ளிவாசல்கள் ஒட்ட சொல்லி வெள்ளிகிழமைகளில் அறிவிப்பும் செய்துவிடலாம்.ஜல்லிகட்டு வேறு தமிழ் கலாச்சாரம் அதையும் முஸ்லிகள் க்ற்றாக வேண்டும்.நாங்கள் உடனடியாக செய்யவேண்டியது எல்லா முஸ்லிம் பெண்களின் புர்காவையும் உருவி பொதுஇடத்தில் வைத்து கொளுத்தவேண்டும். எனக்கு தெரிந்த தமிழ் கலாச்சாரங்களின் சந்தேகங்களை குறிப்பிட்டிருக்கிறேன்.மற்றவைகளை நீங்கள்தான் விளக்க வேண்டும்.நாங்களும் தமிழர்களில்லையா? நாங்கள் தமிழர்களாய் இருந்து என்ன செய்ய அதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே நீங்கள் ஒத்துக்கொள்வதிலில்லையா இருக்கிறது நாங்கள் தமிழர்கள் என்பது! தமிழன் தமிழ்ன் செந்தமிழன்

  62. மீராசாஹிப்.

    நான் உங்களுக்குப் பதிலெழுதினால் நீங்கள் என்னைத் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விட்டு விடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது. அதனால் வேண்டாம் நான் உங்களுக்குப் பதிலெழுதி எனது நேரத்தையும் வீணாக்க விருப்பமில்லை. 🙂

  63. இந்த விவாதத்தில் கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பான மஞ்சு விரட்டு பற்றிய நீயா நானா நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட ஒரு தகவலை முத்தாய்ப்பாக பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

    http://www.tamiltvshows.net/2016/01/neeya-naana-10-01-2016-vijay-tv-talk-show-10-01-16-episode-495/

    நிகழ்ச்சியின் இறுதி பகுதியில் சல்லிக்கட்டு நிகழ்வில் சாதி பாகுபாடு பற்றி கேள்வி எழுப்பினார் நெறியாளர்.அப்போது இளங்கோ என்ற அவரது முப்பதுகளில் இருக்கக்கூடிய ஒரு படித்த இளைஞர் சாதிப்பாகுபாடு இல்லை என எடுத்துக்காட்டு ஒன்றை சொல்லி விளக்கி விட்டு மதப்பாகுபாடும் இல்லை என சொல்லி திண்டுக்கல் அருகே உள்ள மறவப்பட்டியில் கிருத்தவர்கள் சல்லிக்கட்டு நடத்துகிறார்கள்,பல இசுலாமியர்கள் சல்லிக்கட்டு காளை வளர்த்து போட்டிகளில் பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்தார்.அப்போது நெறியாளர் ஒரு கேள்வி எழுப்பினார்.

    ”ஒரு இசுலாமிய சகோதரர் சல்லிக்கட்டுக்கு மாடு கொண்டு வருகிறார்.அதை ,இளங்கோ,நீங்க பிடிப்பீங்களா.”

    ”இல்லை.நான் பிடிக்க முடியாது.”

    ”ஏன்”

    ”அவர்கள் எனக்கு சகோதர முறை.பங்காளிகள்.அவர் சித்தப்பா முறை.அவர் மாட்டை நான் பிடித்தால் வேறு முறை ஆகி விடுவேன்..அதுனால அந்த மாட்டை நான் பிடிக்க முடியாது.”

    ”அப்ப யார்தான் அந்த மாட்டை பிடிப்பது”

    ”அவர்களை மாமன் மச்சான் உறவு முறை சொல்பவர்கள் பிடிப்பார்கள்.”

    [இந்த இடத்தில் முசுலிம்களை பல்வேறு சமூகத்தினர் சகோதர உறவில் அழைப்பதையும் இன்னும் சில சமூகத்தினர் மாமன்,மச்சான் உறவில் அழைப்பதையும் அவ்வாறே முசுலிம்களும் அந்தந்த சமூக மக்களை கொண்டாடுவதையும் கவனத்தில் கொள்ளவும்].

    கடந்த முப்பது ஆண்டுகளாக மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்கு பிறகு வெறி கொண்டு கிளம்பிய சங் பரிவார் கும்பல் இந்து முன்னணியாக ,இந்து மக்கள் கட்சியாக செய்து வந்த வெறியூட்டும் பரப்புரை தமிழ் மக்களின் மத ,சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியவில்லை என்பதை உச்சந்தலையில் ஆணி அடித்தாற்போல் மதவெறியர்களுக்கு உணர்த்தி இருக்கிறார் அந்த தம்பி இளங்கோ.

    ஆனானப்பட்ட சங் கும்பலே தமிழர்களின் நல்லிணக்க உணர்வுக்கு முன் வெளுத்து சாயம் போய் கிடக்கிறார்கள்.புதிதாக நீலச்சாயம் பூசிய நரிகள் அரபுமயமாக்கல் ,முசுலிம்களின் புர்கா தமிழர்ளை பயமுறுத்துகிறது என ஊளையிடுவது எம்மாத்திரம்..

    பன்னெடுங்காலம் எங்கள் முன்னோர்கள் பேணி வந்த நல்லிணக்கத்தை தொடர்ந்து எவ்வாறு காப்பாற்றி வரவேண்டும் என்பதை இந்த நாட்டில் வாழும் இந்துவானாலும் சரி,முசுலிமானாலும் சரி தமிழர்களான நாங்கள் நன்கறிவோம்.

    ஆகவே, சொந்த நாட்டு மக்கள் சிங்கள பேரினவாத தாக்குதலுக்கு ஆளாகி துயருற்று கிடந்த போதும் அவர்களுக்காக களத்தில் நின்று போராடாமல் பஞ்சம் பிழைக்க கனடாவுக்கு ஓடிப்போன பரதேசி வியாசன்களும் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு துட்டு பாக்க அதே கனடாவுக்கு ஓடிப்போன ஓடுகாலி ராமன்களும் தமிழ்நாட்டில், இந்த மண்ணில் நின்று நிலைத்து வாழும் ,இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களான மண்ணின் மைந்தர்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என ”சொல்லித்தர” வேண்டியதில்லை.
    பொத்திக்கொண்டு போகலாம்.

    • இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக மதம் பார்க்காமல் இருந்த இசுலாமிய சகோதரர்கள் இப்போது சாஹி நாயக் போன்ற வஹாபியிசம் வளர்போரின் பேச்சை கேட்டு விலகி செல்கிறார்கள் என்கின்ற ஆதங்கத்தை தான் பகிர்கிரோமே தவிர இசுலாமியர்கள் கெட்டவர்கள் என்று பொதுவாக குறை கூறி கருத்துகளை கூறவில்லை .

      விவாதமே அரபுமயமவதால் விலகி செல்கிறீர்கள் எனபது தான்

      • \\இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக மதம் பார்க்காமல் இருந்த இசுலாமிய சகோதரர்கள்…………ஆதங்கத்தை தான் பகிர்கிரோமே தவிர இசுலாமியர்கள் கெட்டவர்கள் என்று பொதுவாக குறை கூறி கருத்துகளை கூறவில்லை .//

        இப்ப நல்ல வாய் மாதிரி படம் காட்டும் இவர்தான் கொஞ்ச நாட்களுக்கு முன்னால ”முசுலிம்கள் திருப்பதி லட்டு சாப்பிட மாட்டார்கள்.அதுனால அவுங்கல்லாம் மத வெறியர்கள் தான்னு ”நாற வாய் தொறந்தார். கறுப்பு புர்காவுக்கு [நரிகளின் மொழியில் அரபுமயமாவதற்கு ]முன்பே எப்பவுமே முசுலிம்கள் திருப்பதி லட்டு சாப்பிடுவதில்லை.இதை அறிந்தே இந்துக்கள் முசுலிம்கள நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

        இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக மதம் பார்க்காமல் இருந்த இசுலாமிய சகோதரர்கள் என்று இறந்த கால வினைச்சொல்லில் சொல்வதே ஒரு நரித்தந்திரம்தான்.இப்போதும் அப்படித்தான் இருக்கிறோம்.அதைத்தான் ராமனை போன்ற கள்ளப்பரப்புரையாளர்களின் மூஞ்சியில் சாணியை கரைச்சு ஊத்தாத குறையா தம்பி இளங்கோ அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பதிவு செய்திருக்கிறார்.அதனால்தான் சொல்கிறேன்.நாற வாயை பொத்திக்கொண்டு போகலாம்.

        \\விவாதமே அரபுமயமவதால் விலகி செல்கிறீர்கள் எனபது தான்//

        இல்லை என்று அடுக்கடுக்கான வாதங்களை வைக்கிறோம்.புர்கா வந்த 90-களில்தான் அப்துல் ரவூப் ஈழ மக்களுக்காக தீக்குளித்து மாண்டான்,இப்போதும் மஞ்சு விரட்டுகளில் பங்கேற்கிறோம், எங்கள் உணவில் எந்த மாற்றமுமில்லை,ஆண்களின் உடைகள் மாறவில்லை என்று அடுக்கடுக்கான வாதங்களை வைக்கிறோம்.அவற்றை மறுக்க முடியவில்லை.ஆனாலும் அரபுமயமாகி விட்டோம் என மீண்டும் மீண்டும் சொல்வதால் பொய் உண்மையாகி விடாது.

        • // முசுலிம்கள் திருப்பதி லட்டு சாப்பிட மாட்டார்கள்.அதுனால அவுங்கல்லாம் மத வெறியர்கள் தான்னு //

          After following shakir naik video he refused to take Laddu before he even came to hindu temples to appreciate architecture. And the irony is he drinks alcohol.
          Dont twist the facts for your need.

          //அரபுமயமாகி விட்டோம்//

          It is inprogress

    • உலக முஸ்லீம்கள் எல்லாம் விவாதித்துக் கொண்டிருக்குமொரு விடயத்தை அப்படியே மறைத்து விட முயற்சிப்பது மட்டுமன்றி, தமிழ்முஸ்லீம்கள் அரபுமயமாக்கப் படுகிறார்கள் என்ற உண்மையைப் பற்றிப் பேச விடாமல், தடுக்க, அதைத் திசை திருப்ப, பல மாதங்களுக்கு முன்னர் நான் வினவில் எழுதியவற்றைக் கிளறி மேலே கொண்டு வந்தும், ரவீந்திரநாததாகூரின் மனைவியை துணைக்கழைத்தும், பிரபாகரனை வம்புக்கிழுத்தும், பல முயற்சிகள் செய்த திப்பு இப்பொழுது சல்லிக்கட்டை வைத்து தனது சித்துவித்தையைக் காட்டி, தமிழ் முஸ்லீம்கள் சவூதி அரேபியாவின் நிதியுதவியில் வஹாபிகளால் அரபுமயமாக்கப் படுவதை மறைத்து விடலாம் எனக் கனவு காண்கிறார். இதுவரை 90 பில்லியன் டொலர்களை தீவாத வஹாபியிசத்தைப் பரப்ப சவூதி அரேபியா ஒதுக்கியுள்ளது என்கிறார் Professor Baldass Goshal அவர்கள் தனது Arabization – Changing Face of Islam in Asia கட்டுரையில்.

      சல்லிக்கட்டையும், மாமா, மச்சான் என்று அழைத்துக் கொள்வதையும் காட்டி அரபுமயமாக்கலா? அப்படி எதுவும் கிடையாது எல்லாமே ‘Hunky Dory’ என்று மூடி மறைக்க திப்பு முயற்சிக்கும் அதேவேளையில் இங்குள்ள ஏனைய வஹாபிகள் முஸ்லீம்களும் ஏறுதழுவுதலில் பங்குபற்ற வேண்டுமென எனது வலைப்பதிவில் நான் கூறியதை அவ்வளவு ரசித்ததாகத் தெரியவில்லை.

      திப்பு எத்தனை வார்த்தை ஜாலம் காட்டினாலும் உண்மையை மறைத்து விட முடியாது, வீட்டில் பன்றிகளை வளர்த்து அதை உண்ணுகிற தலித்தின் வீட்டில் முஸ்லீம்கள் சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ மாட்டார்கள் அது தான் உண்மை. ஆனால் அந்த பன்றி வளர்க்கும்/உண்ணும் தலித் கூட ஒரு முஸ்லீமைக் கண்டால் மாமு, அல்லது மாமா என்று கூப்பிடுகிறார். அதில் பெரிதாக ஏதோ அன்பும், பாசமும் பொங்கி வழிவதாக திப்பு படம் காட்டுகிற மாதிரி அங்கு ஒன்றும் கிடையாது. வீதியில் குப்பை கூட்டுகிறவர் கூட பார்ப்பனர்களையும் தான் மாமா, அல்லது மாமி என்கிறார்கள். அப்படியானால் ஐயருக்கும், அக்ரஹாரத்து மாமிக்கும் சேரித்தமிழர்களுக்கும் ஒருவர் மீதொருவர் அன்பு பொங்கி வழிகிறது என்று அர்த்தமா? ஏதோ எனக்கு தமிழ்நாடு தெரியாதது மாதிரி வித்தை காட்டுகிறார் திப்பு. 🙂

      திப்புவின் இந்த அறுவையைப் படித்த போது தி.நகரில் ஒரு பெரிய கடையில் அத்தி பூத்தாப் போல், ஒரு வெள்ளைக்காரன் நுழைந்தவுடன் அங்கிருந்த ஒருவர் வேலைசெய்கிற பையனிடம் “தம்பி, மாமாவைக் கவனி” என்று சிரித்துக் கொண்டு சொன்னது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சிங்களவர்கள் மட்டுமன்றி சிங்கள இராணுவம் கூட தமிழர்களை மல்லி(தம்பி) அல்லது மச்சாங்(மச்சான்), ஐயா (அண்ணா) என்று தான் அழைப்பதுண்டு.

      மாமா, மச்சான், மாப்பிளை எல்லாம் தமிழர்கள் சிலவேளையில் மரியாதைக்கும், சில வேளைகளில் நக்கலாகவும் கூட உபயோகிக்கும் வார்த்தைகள். அதை உதாரணமாகக் காட்டி அரேபிய பணத்தினால் முஸ்லீம்கள் தமிழ்நாட்டுக் கிராமங்களின் தமிழ்த்துவத்தை மாற்றி அரபுக்கட்டிடக் கலை, அரேபிய ஆடையணிகள், அரேபிய கலாச்சாரம் என்பவற்றை இறக்குமதி செய்வதை எல்லாம் மறைக்கலாம் எனக் கற்பனை செய்கிறார் திப்பு. அதிலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் சில முஸ்லீம் கிராமங்களில் முஸ்லீம்கள் அல்லாதோர் நுழைய முடியாதவாறு பாட்வா(Fatwa) அறிவிக்கப்பட்டிருப்பதாக தி பயனியர் (the Pioneer)ஆங்கில தினசரியில்FATWAS BAN OUTSIDERS’ ENTRY INTO RAMESWARAM VILLAGES என்ற செய்திக்கட்டுரை December 2013 இல் வெளிவந்தது. அப்பொழுதெல்லாம் தமிழர்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கு மாமாக்களும், மச்சான்களும் என்பது மறந்து போய் விட்டதா?

      http://www.dailypioneer.com/todays-newspaper/fatwas-ban-outsiders-entry-into-rameswaram-villages.html

      //தமிழர்களான நாங்கள் நன்கறிவோம்.///

      தமிழர்களாகிய நீங்கள் (தமிழ்நாட்டு முஸ்லீம்கள்), தமிழர்களாகிய நாங்கள் (ஈழத்தமிழர்கள்) போரில் செத்துக் கொண்டிருக்கும் போது தம்மைத் தமிழர்கள் அல்ல என்று வாதாடுவது மட்டுமன்றி, __________ அண்மைக் காலத்தில் கூட ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த இலங்கை முஸ்லீம்களுக்கு ஏன் ஆதரவளித்தீர்கள், நீங்கள் சும்மா இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஈழத் தமிழர்களுக்கெதிராகப் பொய்ப் பிரச்சாரம் கூடச் செய்தீர்கள். நல்ல தமிழர்கள் தான். 🙂

      வந்தேறிகளுக்கு வால் பிடித்து அவர்களின் மதத்துக்காக, தமிழர்களின் கலாச்சாரத்தையும், ஆடையணிகளையும் இழந்தவர்களுக்கா அல்லது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கா தமிழ்மண்ணைப் பற்றிப் பேச அருகதையுண்டு என்பது தமிழர்களுக்குத் தெரியும். மண்ணின் மைந்தர்கள் மட்டும் தான் தமிழ் மண்ணையும் தமிழர்களையும் பற்றிப் பேசலாமென்றால், கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே பேசியிருக்கவோ, தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவளித்திருக்கவோ மாட்டார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அநேகமானோருக்கு அட்ரசே இல்லாமல் போயிருக்கும்.

      தீவிரவாத வஹாபியத்தையும், தமிழ் முஸ்லீம்களின் அரபு மயமாக்கலையும் மறைப்பதற்காக, உலகத் தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்க முயலும் திப்புவின் நரிக்குணத்தை அறிய முடியாத முட்டாள்கள் அல்ல தமிழர்கள். (எங்களுக்கும் தமிழ்நாட்டில் சொந்தமாக வீடும், நிலமும் உண்டு. அந்த வகையில் எனக்கும் தமிழ்நாடு சொந்தமண் தான்.) இனிமேலும் இந்த விடயத்தை தொடர்வதில்லை என்றிருந்த என்னுடைய வாயைக் கிளறாமல் திப்பு பொத்திக் கொண்டிருந்திருந்திருக்கலாம். 🙂

      • அய்யோ அப்பா,வியாசன் வாயை தொறந்தா அண்ட சராசரமெல்லாம் கிடு கிடுத்து நடுங்கிறுமா என்ன.இப்படி பயங்காட்டுறாரே.

        பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாம நேரமில்லைன்னு சொல்லி தப்பி ஓடுனதும்,விவாதங்களுக்கு பதில் விவாதம் இல்லாத ஓட்டாண்டித்தனத்தை மறைக்க திப்பு இப்படித்தான் சீன் போடுவார்,அவருக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்க மாட்டேன் என்று கைப்புள்ளையாக கதறியதும்,அடி தாங்க முடியாம கடைசி பின்னூட்டம் நான்தான் போடுவேன்னு அடம் புடிக்கலாமா என்று புலம்பியதும்,மறந்து போச்சா அவருக்கு.சரி கைப்புள்ளயே கடைசி பின்னூட்டம் போட்டுத்தொலையட்டும்னு விட்டால் தலை கால் புரியாம ஆடுது.

        திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் பொய்யை உண்மையாக்க பார்க்கும் கோயபல்சு அவர்,விடுதலை புலிகளை நானாக இழுக்கவில்லை.இலங்கை முசுலிம்கள் தமிழர்களின் குரல்வளையை குறி பார்க்கிறார்கள் என்று ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தையே குற்றம் சாட்டும் அவரது வாதத்திற்கும்,ஈழத்தமிழர்களின் மீது எங்களுக்கு வன்மம் இருப்பதாக அவரது அபாண்டத்திற்கும் பதில் சொல்லியதில் விடுதலை புலிகள் பற்றி எழுதியிருக்கிறேன்,அந்த வாதத்திற்கு பதில் சொல்ல வக்கற்ற வியாசன் புலிகள் பற்றி பேசுவதே குற்றம் என்பது போல பினாத்துகிறார்,

        \\ரவீந்திரநாத் தாகூரின் மனைவி//

        அவரது அண்ணன் மனைவியைததான் எடுத்துக்காட்டாக சொன்னேன்.[அறளை பெயர்ந்து போனதாக மற்றவர்களை வக்கணை பேசும் வியாசன்தான் உண்மையில் அறளை பெயர்ந்து அலைகிறார் என காட்டும் வகையில் \ரவீந்திரநாத் தாகூரின் மனைவி என்கிறார்].தமிழ் தாய்மார்கள் 20-ஆம் நூற்றாண்டுக்கு முன் சட்டை அணியும் பழக்கம் இல்லை என்பதுதான் சொல்ல வந்த கருத்து.யார் மூலம் பரவியது என்பதல்ல கருத்து.நான் இணையத்தில் படித்த எடுத்துக்காட்டை பதிவு செய்தேன்.அது தவறாகவே இருந்தாலும் சொல்ல வந்த கருத்தில் எந்த மாற்றமும் அதனால் ஏற்படாது.இதில் என்ன திசை திருப்பலை கண்டு விட்டார் இந்த மேதாவி.

        \\வீட்டில் பன்றிகளை வளர்த்து அதை உண்ணுகிற தலித்தின் வீட்டில் முஸ்லீம்கள் சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ மாட்டார்கள் //

        இதே வாய்தான் அந்த வீடுகளில் முசுலிம்கள் பாத்திரத்தை கழுவி விட்டு சாப்பிடுகிறார்கள் என்று கொஞ்ச நாட்களுக்கு முன் சொன்னது.பாத்திரத்தை கழுவுவதே ஒரு குற்றம் என்று படம் காட்டியது.இதில் எது நல்ல வாய்.எது நாறவாய் ..

        \\அந்த பன்றி வளர்க்கும்/உண்ணும் தலித் கூட ஒரு முஸ்லீமைக் கண்டால் மாமு, அல்லது மாமா என்று கூப்பிடுகிறார். அதில் பெரிதாக ஏதோ அன்பும், பாசமும் பொங்கி வழிவதாக திப்பு படம் காட்டுகிற மாதிரி அங்கு ஒன்றும் கிடையாது//

        தமிழ் மக்களின் மதம் பாராத நல்லிணக்கம் கண்டு உடம்பெல்லாம் எரியுது போல.கள்ளமில்லா அந்த மக்களை,அந்த மக்களின் அன்பை கொச்சைப்படுத்துகிறார்.

        \\ வீதியில் குப்பை கூட்டுகிறவர் கூட பார்ப்பனர்களையும் தான் மாமா, அல்லது மாமி என்கிறார்கள். //

        பதிலுக்கு பார்ப்பனர்கள் மாமா என்று அழைப்பார்களா.ஆனால் முசுலிம்கள் வாயார,மனமார அதே மரியாதையை அன்பை திருப்பி செலுத்துகிறார்கள்.

        \\மாமா, மச்சான், மாப்பிளை எல்லாம் தமிழர்கள் சிலவேளையில் மரியாதைக்கும், சில வேளைகளில் நக்கலாகவும் கூட உபயோகிக்கும் வார்த்தைகள். //

        சொந்த இனத்தின் மாண்புகளை கொச்சைப்படுத்தும் புல்லுருவித்தனம்.

        \\ஆனால் ஈழத் தமிழர்களுக்கெதிராகப் பொய்ப் பிரச்சாரம் கூடச் செய்தீர்கள்//

        போரை நிறுத்து என தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் முசுலிம் அமைப்புகள் கலந்து கொண்டிருக்கின்றன,

        \\http://www.dailypioneer.com/todays-newspaper/fatwas-ban-outsiders-entry-into-rameswaram-villages.html//

        இந்த கட்டுரையே முழுக்க முழுக்க இந்து மதவெறியர்களின் கள்ளப்பரப்புரையை வாந்தி எடுத்து வைத்துள்ளது.மண்ணடிக்கு கூப்புட்டுட்டான் என கூப்பாடு போட்டாலும் பரவாயில்லை.இதை நேரில் நிரூபிக்க முடியுமா என சவால் விடுகிறேன்.செருப்போடு தேசியக்கொடி ஏத்துனாங்க,கோயில் முன்னால பசுவை வெட்டினார்கள் என்று சொல்லும்போதே தெரியவில்லையா இது ஒரு மத வெறி கள்ளப்பரப்புரை என்று.பொது வழி அல்ல என தனியார் சொத்துக்களில் அறிவிப்பு பலகை இருக்கலாம்.பொது வழியில் முசுலிம்கள் வைக்கிறார்கள் என்பதை குழந்தை கூட நம்பாது.

        \\வந்தேறிகளுக்கு வால் பிடித்து அவர்களின் மதத்துக்காக, தமிழர்களின் கலாச்சாரத்தையும், ஆடையணிகளையும் இழந்தவர்களுக்கா அல்லது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கா தமிழ்மண்ணைப் பற்றிப் பேச அருகதையுண்டு //

        என்ன முட்டாள்தனம் இது.இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் உடை மாறி வந்திருக்கிறது.உணவு மாறி வந்திருக்கிறது கற்பொழுக்கம்,களவொழுக்கம் இரண்டுக்குமே தமிழர்களின் கலாச்சாரத்தில் இடமிருந்திருக்கிறது.[இப்போது களவொழுக்கம் ஏற்புடையதில்லை].சமணம்,பவுத்தம்.சைவம்.வைணவம் என பல மதங்கள் மாறி இருக்கிறார்கள்.இத்தனை மாற்றங்களில் எங்கள் இசுலாமிய மத மாற்றம் மட்டும் வியாசன்களின் கண்ணை உறுத்துகிறது.காரணம் இசுலாமிய மத எதிர்ப்பு வன்மம்.

        ஒன்று மட்டும் உறுதி.தமிழ்நாட்டில், இந்த மண்ணில் நின்று நிலைத்து வாழும் ,இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களான மண்ணின் மைந்தர்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என ஓடுகாலிகளும் பரதேசிகளும் ”சொல்லித்தர” வேண்டியதில்லை.
        பொத்திக்கொண்டு போகலாம்.

        \\மண்ணின் மைந்தர்கள் மட்டும் தான் தமிழ் மண்ணையும் தமிழர்களையும் பற்றிப் பேசலாமென்றால், கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே பேசியிருக்கவோ, தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவளித்திருக்கவோ மாட்டார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அநேகமானோருக்கு அட்ரசே இல்லாமல் போயிருக்கும்.//

        ஆதரவு அளிப்பது வேறு.நாட்டாமையாக நினைத்துக்கொண்டு பேசுவது வேறு.
        பஞ்சம் பிழைக்க போனவனுக்கு பஞ்சாயத்து என்ன வேண்டிக்கிடக்கு

        • ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு’ என்பது போல் தமிழ் வஹாபிகள் இன்னும் உலக நாட்டு முஸ்லீம்கள் எல்லாம் விவாதிக்கும் அரபுமயமாக்கல் என்ற விடயத்தை மட்டும் ஒப்புக்கொள்ள மறுத்து, அன்பு, பாசம் என வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் போடுவதை தமிழர்களால் புரிந்து கொள்ள முடியாதென தப்புக் கணக்குப் போடுகிறார்கள் என்று தான் எனக்குப் படுகிறது.

          அதிலும் வேடிக்கை என்னவென்றால், ஒரு வஹாபி இன்னொரு படி மேலே போய், அண்ணல் அம்பேத்கார் கூட These ‘burka women walking in the streets is one of the most HIDEOUS sights one can witness in India.’ என்று குறிப்பிட்ட புர்க்கா கலாச்சாரத்தை குறிப்பிட்டுப் பேசுவது கூட முஸ்லீம்களின் மீதுள்ள ‘காழ்ப்புணர்ச்சி’ என்கிறார். நான் புர்க்கா கலாச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிட்டது காழ்ப்புணர்ச்சியினால் என்றால், அம்பேத்கார் அவர்கள் “ one of the most hideous sights” என்று புர்க்கா கலாச்சாரத்தைக் குறிப்பிட்டது கூட அவருக்கு முஸ்லீம்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினாலா?

          முஸ்லீம்களை விமர்சனம் செய்கிறவர்களுக்கு அவர்கள் முஸ்லீமாக இருந்தால் கூட, பாட்வாவும், கொலைப்பயமுறுத்தலும் விடுக்கிற, மண்ணடிக்கு அழைக்கிற வஹாபிகள், அரபுமயமாக்கலைப் பற்றிய உண்மையைப் பேசுகிறவர்களை ‘பாசிஸ்டுகள்’ என்பது வியப்பல்ல ஆனால் இஸ்லாமிய மதவாதிகள் மற்றவர்களைப் பாசிஸ்டுகள் எனும் பகிடியைப் பார்க்கும் போது தான் எங்கு போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை.

          தமிழ்நாட்டில் எனக்கு முஸ்லீம் நண்பர்கள் மட்டுமன்றி முஸ்லீம் உறவினர்கள் கூட உண்டு. அவர்களில் எவருமே பன்றி வளர்க்கும்/உண்ணும் தலித் வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்கள். அந்த உண்மையை எதற்காக மறைக்க வேண்டுமென்று தான் எனக்குப் புரியவில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் மாமன், மச்சான் முறை வைத்து அழைத்துக் கொள்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதில் அன்பும் பாசமும் பொங்கி வழிகிறதெனவும், அப்படி முறை சொல்லிப் பழகுவது, முஸ்லீம்களுக்கும் தலித்துகளுக்குமிடையே தீண்டாமையும் சாதிப்பாகுப் பாடும் கிடையாது என்பதற்கு எடுத்துக் காட்டாகும் என்பது போலவும் கதை விட்டு, அதை ஒருவித பாசப்பிணைப்பாக்கி பம்மாத்து விடுவதைத் தான் நான் மறுக்கிறேன்.

          உண்மையில் மரக்காயர், ராவுத்தர் போன்றவை தமிழ்ச் சொற்கள்- அவை தமிழ் வேர்ச்சொற்கள்- அரபுச் சொற்கள் அல்ல. எல்லாத் தமிழ்நாட்டு முஸ்லீமும் தமிழர்களிலிருந்து தான் மாறினான் என்றால், மரக்காயர்களுக்கும், ராவுத்தர்களுக்கும், அந்த சொற்களுக்கும் எந்த அரபுத் தொடர்பும் கிடையாது என்ற உண்மையை மறைத்து அரபுக்களுடன் தொடர்பு படுத்தி, அரபுச் சொற்களின் மூலம் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் பலரும் விளக்கமளிப்பதேன். தமிழ்நாட்டு முஸ்லீம்கள் மட்டுமன்றி, இலங்கை முஸ்லீம்களின் முன்னோர்கள் கூடத் தமிழர்கள் தான் என்பது தான் எனது வாதமும் கூட, ஆனால் அவர்கள் அதிகளவு அரபுமயமாக்ப்பட்டு, அரபுக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு, வெறும் முஸ்லீம்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் அது இலங்கையைப் போன்றே தமிழ்நாட்டிலும் பாரிய தீங்குகளை ஏற்படுத்தும், அது தான் அன்றும், இன்றும் என்னுடைய வாதம்.

          அந்த அரபுமயமாக்கலைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, அப்படி எதுவுமே கிடையாது, தமிழ் முஸ்லீம் பெண்கள், சவூதி அரேபியாவில் போன்று கறுப்புக்கோணிப்பைகளால் தலையை மூடிக் கொள்வது கூட அவர்களின் நாகரிக (Fashion) மோகத்தினால் தான் அரபுமயமாக்கல் எல்லாம் கிடையாது எனத், தம்மைத் தமிழர்கள், தமிழர்களின் உடன்பிறப்புகள் என்று கூறிக் கொள்வோர் தமிழர்களுக்கே மறுப்பதன் நோக்கம் என்ன? இஸ்லாத்தில் அரேபிய ஆடையணிகளை அணிவது முஸ்லீம்களுக்கு கட்டாயப்படுத்தப்படாத போதும் திடீரென தமிழ்நாட்டு மூலை முடுக்கெல்லாம், கறுப்புக் கோணிப்பை போர்த்திய தமிழ் முஸ்லீம் பெண்கள் காணப்படுவதன் காரணமென்ன, என அவர்களின் “அன்பிற்குரிய தமிழ்ச் சொந்தங்களுக்கு” அவர்கள் விளக்க வேண்டும். நானும் கூட அந்த அன்புக்குரிய தமிழ்ச் சொந்தங்களில் ஒருவன் என்ற முறையில் அவர்களின் விளக்கத்தைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். 🙂

          • இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களின் குரல்வளைக்குக் குறி பார்ப்பது மட்டுமன்றி, தமிழர்கள் தங்களின் பெற்ற பிள்ளைகளைப் பலி கொடுத்துப் போராடிய பின்னர், இன்று பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று சிங்களவர்கள் இறங்கி வரும் போது, இப்பொழுது அவர்களுக்கும் முஸ்லீம் தனியாட்சி வேண்டுமாம். முஸ்லீம்களுக்கு தனியாட்சி வேண்டுமானால் அவர்கள் போர்க்களத்தில் இறங்கிப் போராடியிருக்க வேண்டும், தமிழர்கள் தமதுயிரையும்,தாம் பெற்ற செல்வங்களையும் காவு கொடுத்தது முஸ்லீம்களுக்கு இலங்கையில் தனியாட்சி கிடைக்கவா? முஸ்லீம்களின் அத்தகைய சுயநல தந்திரத்தைத் தான் தமிழர்கள் எதிர்க்கின்றனர்.

            விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை (13000க்கும் குறைவானோர்) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியதன் காரணத்தை நான் பல முறை கூறியிருக்கிறேன். தமிழ் பேசும் முஸ்லீம்கள் ‘தமிழர்களாக’ தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, சிங்கள இராணுவத்துக்கு உளவு பார்த்து பல இளந்தமிழர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தனர். அதனால் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்பாக, அவர்களில் எவரும் கொல்லப்படாமல் வெளியேற்றியது இராணுவ-பாதுகாப்பு சம்பந்தமான தவிர்க்க முடியாத முடிவு- Militray strategy- அவ்வளவு தான். அதில் முஸ்லீம் எதிர்ப்பு எதுவும் கிடையாது, முஸ்லீம்கள் தான் தமிழ் எதிர்ப்புடன் சிங்களவர்களுக்கு உளவு பார்த்தனர். அதைக் கூட பல தமிழர்கள் எதிர்த்து, விடுதளைப் புலிகளின் பகையைச் சம்பாதித்துக் கொண்டனர். ஆனால் கிழக்கில் முஸ்லீம்கள் தமிழர்களைக் கொன்ற போது எந்த முஸ்லீமும் அதை எதிர்க்கவில்லை. இவ்வளவுக்கும் விடுதலைப் புலிகள் கூட அந்த முடிவை எடுக்க வேண்டிய காரணத்தை விளக்கி, முஸ்லீம்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டனர். அதை முஸ்லீம் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். _________ தமிழ் முஸ்லீம்கள், சிங்கள இராணுவத்தின் துணையுடன் தமிழர்களுக்கு இழைத்த கொலைகளையும், கொடுமைகளையும் நான் குறிப்பிட்டவுடனேயே வினவு மட்டுறுத்துனர் அகற்றி விடுகிறார். இந்த லட்சணத்தில் நான் எவ்வாறு திப்புவுக்குப் பதிலளிப்பது? அதனால் தான் நான் எனது வலைப்பதிவில் போய்த் தேடிப்பார்த்தால் கிடைக்கும் என்றேன். திப்புவுக்கு அது கூடப் புரியவில்லை.

            இந்த விவாதத்துக்கும். அதாவது அரபுமயமாக்கலுக்குச் சம்பந்தமில்லாத விடயங்களை எல்லாம் பேசி இந்த விடயத்தை திசை திருப்ப திப்பு முயன்றது இந்த விவாதத்தை தொடர்கிற எவருக்குமே புரியும் ஆகவே மீண்டும், மீண்டும் திப்புவுக்கு பதிலளிப்பதில் பயனில்லை. எனக்குத் தெரிந்த பல முஸ்லீம்கள் தலித் வீட்டில் அதிலும் பன்றி வளர்க்கும் தலித் வீட்டில் உணவு உண்ணுவதில்லை. அதே போல் ‘மாடுதின்னி’ முஸ்லீம் வீட்டில் பல யாழ்ப்பாணச் சைவர்கள் தண்ணீர் அருந்த மாட்டார்கள், அதையெல்லாம் மறைத்து அன்பும் பாசமும் பொங்கி வழிவதாகப் படம் காட்டி தமிழ் முஸ்லீம்கள் தமிழ்நாட்டை அரபுமயமாக்குவதையும், அரேபிய கலாச்சார இறக்குமதியையும் மறைக்க வேண்டிய தேவை என்ன?

            மச்சான் என்று எந்த தலித்தும் முஸ்லீம்களை அழைத்ததை நான் பார்த்ததில்லை, மாமா என்றழைத்ததைப் பார்த்திருக்கிறேன் ஆனால் வாங்க ‘மருமகனே’ என்று அந்த முஸ்லீம் தலித்தைப் பார்த்துக் கூறியதை நான் பார்த்ததில்லை. எல்லாமே ஒருவழி மரியாதை மட்டும் தான்.

            தமிழ்நாட்டு முஸ்லீம் இயக்கங்கள் தமிழீழ விடுதலைப் போரின் மீதும் போராளிகளின் மீதும் காழ்ப்புணர்வைக் கொண்டிருந்தனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது அதைப் பார்ப்பனர்கள் மட்டும் கொண்டாடவில்லை, தமிழ் பேசும் முஸ்லீம்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் அதை வரவேற்றனர் என்பது எனக்குத் தெரியும். அப்பொழுது நான் தமிழ்நாட்டில் தானிருந்தேன்.

            \\http://www.dailypioneer.com/todays-newspaper/fatwas-ban-outsiders-entry-into-rameswaram-villages.html//

            இந்தக் கட்டுரையை யாரும் சும்மா விளையாட்டுக்காக எழுதவில்லை, படங்களுடன் எழுதி, இந்தியா முழுவதும் மட்டுமன்றி, உலக முழுவதும் அறியுமாறு ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இதை நிரூபிக்குமாறு அவர்களிடம் திப்பு அப்பொழுது ஏன் சவால் விடவில்லை. இப்பொழுது கூட அந்தப் பத்திரிகைக்கெதிராக உண்மையை எழுதி ஆதாரத்துடன் நிரூபிக்கலாம் தானே. இன்னும் இந்தச் செய்திக்கட்டுரை அவர்களின் இணையத்தளத்தில் எவரும் படித்துப் பார்க்குமாறு உள்ளது. அது பொய் என்று நிரூபித்து, அந்தக் கட்டுரையை நீக்குமாறு கேட்கலாம் தானே,

            இலங்கையில் கூட எந்தக் கிராமத்திலும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருக்கும் போது மட்டும் தான் அடக்கி வாசிப்பார்கள், ஆனால் சனத்தொகைப் பெருக்கத்தால், எண்ணிக்கையில் அந்தக் கிராமத்தின் பூர்வீக தமிழர்களை விஞ்சியதும், எல்லாம் அரபுமய்மாக்கப் பட்டு விடும். இது தான் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

            உண்மையில் இஸ்லாத்தை, அல்லது இஸ்லாமிய மதமாற்றங்களை தமிழர்களோ அல்லது இந்துக்களோ எதிர்த்திருந்தால் இஸ்லாம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எப்பொழுதோ கணாமால் போயிருக்கும். தமிழர்களின் பெருந்தன்மையும், இந்து மதத்தின் சகிப்புத் தன்மையும் தான் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இத்தனை நூற்றாண்டுகளாக இஸ்லாம் வாழ்ந்து வளர்ந்து தமிழர்களையே இன்று கேள்வி கேட்கிறது என்ற உண்மையை முஸ்லீம்கள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.

            பஞ்சம் பிழைக்கவும் அரபுக்களுக்கு கழுவித் துடைக்கவும் அரேபியாவுக்குப் போனவன் எல்லாம், அரபுக்களின், பெண்களை அடிமைப்படுத்தும், அழுக்குக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்து, தமிழ்நாட்டைச் சீரழிப்பதைத் தட்டிக் கேட்க தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் உரிமையுண்டு. உலகத் தமிழன் எவனுமே, தமிழ் மண்ணின் தமிழ்க் கலாச்சாரம் அழிவதை , தமிழ்க் கிராமங்களின் தமிழ்த்துவமும், பாரம்பரியச் சின்னங்களும் அரேபிய நாகரிக கட்டிடங்களாலும், ஆடையணிகளாலும், அரபுமொழியாலும் திட்டமிட்டுச் சிதைக்கப் படுவதை, மாற்றப்படுவதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க, அதை எதிர்த்துக் குரலெழுப்ப எந்த வஹாபியிடமோ அல்லது எந்த முஸ்லீமிடமோ அனுமதி கேட்கத் தேவையில்லை. அது எங்களைத் தமிழனாகப் படைத்த கடவுள் தந்த உரிமை.

            • பாசிசவாதிகள் எப்போதுமே கள்ளப்பரப்புரையை நம்பியே காலத்தை ஓட்டுகிறார்கள்.வியாசன் 13,000-முசுலிம்கள் மட்டுமே யாழ்-லிருந்து வெளியேற்றப்பட்டதாக சொல்கிறார்.ஆனால் 1981-மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50,831முசுலிம்கள் வட பகுதியில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.அத்தனை பேரையுமே புலிகள் விரட்டி அடித்திருக்கிறார்கள்.[யாழ் மாவட்டத்தை மட்டும் சொன்னேன் என்று வியாசன் சமாளிப்பாரோ]

              அப்பாவி மக்கள் உட்பட ஒரு சமூகத்தையே விரட்டி அடிப்பது பாசிஸ்ட்களுக்கு யுத்த தந்திரமாக தெரிகிறது.யார் குற்றம் செய்தார்களோ அவர்களை மட்டும் தண்டிப்பதே சரியான நீதி பரிபாலனம் ஆகும்.அவர்கள் சார்ந்த சமூகத்தையே தண்டிப்பது இனவெறி பாசிசமா,இல்லையா என்றுதான் கேட்கிறேன்.இதற்கு நேரடியான பதில் தேவை.சாமர்த்தியம்னு நெனச்சு சுத்தி வளைச்சு யுத்த தந்திரம் னு பம்மாத்து காட்ட கூடாது.

              \\எனது வலைப்பதிவில் போய்த் தேடிப்பார்த்தால் கிடைக்கும் //

              முசுலிம்கள் மீது புலிகள் நடத்திய கொலைவெறி தாக்குதல்களை பற்றி அறிந்து கொள்ள;

              http://www.jaffnamuslim.com/2012/03/blog-post_3678.html

              \\எனக்குத் தெரிந்த பல முஸ்லீம்கள் தலித் வீட்டில் அதிலும் பன்றி வளர்க்கும் தலித் வீட்டில் உணவு உண்ணுவதில்லை””””””’மச்சான் என்று எந்த தலித்தும் முஸ்லீம்களை அழைத்ததை நான் பார்த்ததில்லை, ”””””””””””’ நான் பார்த்ததில்லை………………அதை வரவேற்றனர் என்பது எனக்குத் தெரியும்.//

              இதே வாய்தானே முசுலிம்கள் பன்றி வளர்க்கும் தலித் வீட்டில் பாத்திரத்தை கழுவி விட்டு சாப்பிடுவதாக சொன்னது,இரண்டில் எது பொய்.வேளைக்கு தகுந்த மாதிரி மாத்தி மாத்தி பேசுவது அயோக்கியத்தனம்.”எனக்கு தெரியும் நான் பார்த்தேன்”என்ற விவாத முறை என்ன வகை நேர்மை.

              பன்றி வளர்க்கும் ஒரு தலித் வீட்டில் அவர் முசுலிம் இல்லையென்றாலும் நான் சாப்பிடுவேன்.அவர் பக்கத்தில் அமர்ந்து பன்றிக்கறியே உண்டாலும் பன்றிக்கறி அல்லாத வேறு உணவு எது கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் உண்ண நான் தயார்.அந்த தலித் இந்து என்றாலும் அவர் பன்றிக்கறி உண்ண பக்கத்தில் அமர்ந்து சைவ உணவு உண்ண வியாசன் தயாரா.மாடு தின்னும் வீட்டில் தண்ணீர் கூட குடிக்காத யாழ்ப்பாண சைவர் ஆயிற்றே வாயால் கூட அவரால் சொல்ல முடியாது.

              \\‘மாடுதின்னி’ முஸ்லீம் வீட்டில் பல யாழ்ப்பாணச் சைவர்கள் தண்ணீர் அருந்த மாட்டார்கள், //

              வேணாம்யா .இந்த மாதிரி தீண்டாமை வெறி பிடித்த மிருகங்கள் எங்கள் வீட்டு வாசப்படியை கூட மிதிக்க வேண்டாம்.

              \\அது பொய் என்று நிரூபித்து, அந்தக் கட்டுரையை நீக்குமாறு கேட்கலாம் தானே,//

              இவ்வாறான கள்ளப்பரப்புரைகள் ஏராளமாக ஊடகங்களில் உலவுகின்றன.அவை எல்லாவற்றையும் பொய் என்று நிரூபிக்க முழு வாழ்நாளையும் செலவிட்டாலும் போதாது.மேலும் இவர் ஒரு குற்றச்சாட்டை சொல்வாராம்.நான் வேலை மெனக்கெட்டு அதை பொய்யுன்னு நிரூபிக்க அலையணுமாம்.யோக்கியரே,குற்றச்சாட்டு சொல்பவர்தான் அதை மெய்ப்பிக்க வேண்டும்.இதுதான் இயற்கை நீதியின் அடிப்படை.

              \\இலங்கையில் கூட எந்தக் கிராமத்திலும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருக்கும் போது மட்டும் தான் அடக்கி வாசிப்பார்கள்………………அரபுமய்மாக்கப் பட்டு விடும். இது தான் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.//

              நாம் தமிழ்நாட்டில் அரபுமயமாக்கம் என்ற குற்றச்சாட்டு பற்றி பேசுகிறோம்.இலங்கைக்கு ஓடாமல் இங்கு நின்று பேச வேண்டும்.

              \\இஸ்லாத்தை, அல்லது இஸ்லாமிய மதமாற்றங்களை தமிழர்களோ அல்லது இந்துக்களோ எதிர்த்திருந்தால் இஸ்லாம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எப்பொழுதோ கணாமால் போயிருக்கும். தமிழர்களின் பெருந்தன்மையும், இந்து மதத்தின் சகிப்புத் தன்மையும் தான்//

              ரெம்ப நன்றிங்க. இசுலாம் வாளால் பரவியது.என்று நஞ்சு கக்குவோருக்கு இதை விட சிறந்த மறுப்பு இருக்க முடியாது.இசுலாமிய மதமாற்றம் தமிழர்கள் கண்ணை உறுத்துகிறது என்று சொல்லவில்லை.வியாசனின் கண்ணை உறுத்துகிறது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.வியாசன்கள் மட்டுமே தமிழர்கள் என்று சொல்வாரோ.

              \\அது எங்களைத் தமிழனாகப் படைத்த கடவுள் தந்த உரிமை.//

              எது, மாடுதின்னி என இழிவாக பேசுவதா.இத்தகைய வகுப்புவாத வெறி கொண்டோரைத்தான் பொத்திக்கொண்டு போக சொல்கிறேன்.விமர்சனங்களை தயங்காமல் எதிர்கொள்கிறோமா இல்லையா என்பது விவாதங்களை படிப்போருக்கு தெரியும்..

              • தமிழர்களுக்கெதிரான முஸ்லீம் இணையத்தளங்களிலிருந்து “கொலைவெறித் தாக்குதல்” என்ற தலைப்பில் இணைக்கும் இணைப்புகளை ஒரு தலைப் பட்சமாக அனுமதிக்கும் வினவு மட்டுறுத்துனர், முஸ்லீம்கள் தமிழர்களுக்கு இழைத்த அட்டூழியங்களை நான் குறிப்பிட்டவுடனேயே, அவற்றை அகற்றி வெறும்- கோடு- மட்டும் போட்டு விடுகிறார். வினவின் மட்டுறுத்துனரும் ஒரு மூமினோ என்னவோ யார் கண்டது. இந்த லட்சணத்தில் வினவு தளத்தில் இந்த விடயத்தைப் பற்றிப் பேசுவதே வீண் வேலை. அதை விட இங்கு பேசப்படும் முஸ்லீம்களின் ‘அரபுமயமாக்கல்’ விடயத்தை திசை திருப்ப திப்பு நானா எவ்வளவோ நாட்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் நாமறிவோம்.

                _______

                யாழ்ப்பாணத்திலிருந்து 13000 த்துக்கும் குறைவான முஸ்லீம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியதன் காரணம் முஸ்லீம் எதிர்ப்பல்ல, இராணுவ நடவடிக்கை. _________

                யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின் சனத்தொகை 2% க்கும் குறைவானதே 98% தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தின் மேயராக யாழ்ப்பாணத் தமிழர்கள் ஒரு முஸ்லீமைத் தெரிவு செய்த வரலாறு கூட உண்டு. அந்தளவுக்கு முஸ்லீம்களை தமது சகோதரர்களாக எண்ணி தாயும் பிள்ளையுமாக வாழ்ந்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள். அந்த தமிழர்களுக்கு கைமாறாக _________முதுகில் குத்தியவர்கள் முஸ்லீம்கள் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. யாழ்ப்பாணத்திளிருந்தே 100,000 க்குமதிகமான முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதாக, ஊதிப்பெருக்கி ஈழத்தமிழர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தவர்கள் முஸ்லீம்களும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும். இந்த விடயத்தில் மட்டும் முஸ்லீம்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, இலங்கையின் வடமாகாணம் முழுவதுமே 100,000 முஸ்லீம்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை.

                யாழ்ப்பாணத்திலிருந்து தான் முஸ்லீம்கள் உடனடியாக புலிகளால் வெளியேற்றப்பட்டனர், வடக்கில் வாழ்ந்த ஏனைய முஸ்லீம்கள் பாதுகாப்பைக் காரணம் காட்டி, தாங்களாகவே கொஞ்சம் , கொஞ்சமாக வெளியேறினர். பாதுகாப்புத் தேடி தெற்கில் சிங்களவர்களிடம் போகக் கூடிய வாய்ப்பும், ஆதரவும் முஸ்லீம்களுக்கு இருந்தது. ஏனென்றால் தமிழ் – சிங்கள யுத்தத்தில் இலங்கை முஸ்லீம்கள் அப்பாவிப் பார்வையாளர்கள் அல்ல பங்காளிகள். அந்த யுத்தத்தில் அவர்கள் சிங்களவர்களின் பங்காளிகள். ஆனால் வடக்கு, கிழக்கின் மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்கள் தமது மண்ணை விட்டு, இலங்கையின் தென்பகுதிக்குப் போக முடியவில்லை. அவர்கள் தமது சொந்த மண்ணிலிருந்தே சிங்களவர்களின் குண்டடிபட்டுச் செத்தனர். தமது பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் வெளிநாடுகளுக்கு உயிரைப் பாதுகாக்குமாறு அனுப்பி விட்டு, தனது சொந்த மண்ணை, தமது குடும்பம் பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்த வீடுகளை விட்டு வர மனமின்றி, தனித்திருந்து அந்த வீடுகளுக்குள்ளேயே இறந்து, அவர்களின் மண்ணுக்கு உரமாகிப் போன ஈழத்தமிழர்களின் பாட்டன்மாரும், பாட்டிமாரும் ஆயிரக்கணக்கானோர். ____________

                இரண்டாம் உலக யுத்தத்தின் போது கனடாவிலும், அமெரிக்காவிலும் வாழ்ந்த ஜப்பானிய அமெரிக்கர்களையும், கனேடியர்களையும் சுற்றி வளைத்து, வாகனங்களில் ஏற்றி யுத்தம் முடியும் வரை முகாம்களில் அடைத்துக் கண்காணித்தது அமெரிக்காவும் கனடாவும், அதுவும் கூட பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட இராணுவ முடிவு தான். அதே போன்ற இராணுவ முடிவு தான் புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றியதும். யுத்தம் முடிந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அமெரிக்காவும், கனடாவும் அவர்களின் நாட்டு ஜப்பானிய குடிமக்களிடம் மன்னிப்புக் கேட்டன. ஆனால் புலிகள் தலைவர் பிரபாகரன் சில ஆண்டுகளிலேயே மன்னிப்புக் கேட்டார். வன்னிக்குப் போய் வயிறு முட்டத் தின்று விட்டு மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாகவும், நாங்கள் எல்லோரும் சகோதரர்கள் என்றும் கூறிய இலங்கை முஸ்லீம் தலைவர்கள் வன்னியைத் தாண்டியதும் வழக்கம் போல் தமது தொப்பியைப் பிரட்டி விட்டனர், அது தான் உண்மை.

                என்னாலும் பல இணைப்புகளைத் தர முடியும் ஆனால் வினவு அவற்றை வெளியிடாது. முஸ்லீம்களின் இணைப்புகளை மட்டும் வெளியிடுவார்கள், ஏனென்றால் மண்ணடி மஸ்தான்களிடம் அவர்களுக்கு பயம் கலந்த மரியாதை உண்டு. ஆகவே எனது வலைப்பதிவில் தேடிப் பார்க்கவும்.

                முஸ்லீம்கள் பாத்திரத்தை கழுவி விட்டுக் சாப்பிடுகிறார்களாக்கும் என்று எந்த தருணத்தில், என்ன காரணத்துகாகக் கூறினேன் என்பதை விளக்காமல் சும்மா அதையே மீண்டும் மீண்டும் ஒப்பிக்கிறார் திப்பு. பழசுகளை கிண்டுவதில் வல்லவர் அவர். (நான் தேடினேன் கிடைக்கவில்லை) ஆகவே அதைத் தேடிப் பிடிப்பார் என நம்புகிறேன்.

                நான் கூறியது என்னவென்றால் ‘சில’ யாழ்ப்பாணச் சைவர்கள் ‘மாடுதின்னி’ முஸ்லீம்களின் வீடுகளில் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள் என்பதே தவிர நான் உண்ண மாட்டேன் என்றல்ல. அந்தளவுக்குச் சைவம் பார்க்கும் வழக்கம் எங்களின் குடும்பத்தில் இந்த தலைமுறையில் இல்லை. நீங்கள் பக்கத்திலிருந்து உண்ணுவதைப் பற்றிச் சவால் விடுகிறீர்கள். சென்னையில் எனக்குப் பழக்கமான எத்தனையோ தலித்துகளினதும், முஸ்லீம்களின் வீடுகளுக்கும் அவர்களின் ஊர்களுக்கும் விழுப்புரம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தொண்டி, பரமக்குடி, குலசேகரப்பட்டணம், உடன்குடி இப்படி எத்தனையோ ஊர்களுக்குப் போனது மட்டுமன்றி அவர்களின் வீடுகளில் தங்கி அவர்கள் சமைத்த உணவையும் உண்டிருக்கிறேன். நான் மாட்டுப் பிரியாணியைத் தான் சாப்பிட மாட்டேனே தவிர, ஒரு முஸ்லீம் நண்பனின் மாட்டுப் பிரியாணியுள்ள தட்டில் இருந்த, கத்தரிக்காய்க் கறியை எடுத்து எனது தட்டில் போட்டுச் சுவை பார்த்திருக்கிறேன். ஏதோ நான் சங்கராச்சாரியாரின் சீடன் என்கிற மாதிரி நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் எந்த இறைச்சி வகையும் உண்ணாததற்கு மதம் காரணமல்ல. ஆகவே நான் மாட்டுப் பிரியாணியுள்ள தட்டில் உள்ள கத்தரிக்காயை சாப்பிடுகிறேன். பன்றிக்கறியுள்ள தட்டிலுள்ள வேறேதாவது உணவை உண்ண நீங்கள் தயாரா? 🙂

                ஐயா பெரியவரே, அந்தச் செய்திக்கட்டுரை உண்மை என்று நான் நம்புவதால் தானே நான் இணைத்தேன். அதைக் “கள்ளப்பரப்புரை” என்று கூறும் நீங்கள் தான் அது பொய் என்றும், அதிலுள்ள படங்கள் எல்லாம் உண்மையல்ல, அவர்கள் சினிமாவில் போல செட் வைத்து எடுத்துக் கொண்டவை என்றும் நிரூபிக்க வேண்டும். அந்தக் கட்டுரை முஸ்லீம்கள் மீது எவ்வளவு பாரதூரமான குற்றச்சாட்டைக் கூறுகிறது. ஆனால் எந்த மண்ணடி மஸ்தானும் அதை மறுத்து, எதிர்க்கட்டுரை எழுதி, அவர்கள் அந்தக் கட்டுரையை நீக்குமாறு செய்ய மாட்டார்களாம். அந்தக் கட்டுரை உண்மையானது என்று தான் நான் நம்புகிறேன், நேரில் சென்று பார்த்து தான் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள்.

                //இலங்கைக்கு ஓடாமல் இங்கு நின்று பேச வேண்டும்.///

                இலங்கையை உதாரணத்துக்குத் தான் காட்டினேன் அது கூடப் புரியவில்லையா. முஸ்லீம்கள் எங்கிருந்தாலும் ஒன்று அவர்கள் ஒரே தன்மையுள்ளவர்கள், உங்களின் சகோதரர்கள் என்று நீங்கள் கருதுவதால் தானே, ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படும் போது அவர்களுக்காகப் போராடாமல், பாலஸ்தீனிய முஸ்லீம்களுக்காகக் குரலெழுப்பியவர்கள் நீங்கள். அதிலும் வேடிக்கை என்னவென்றால் தனது சொந்த நாட்டு மக்களையே (முஸ்லீம்கள்) படுகொலை செய்த சதாம் ஹுசைனுக்காகக் கூட அழுதவர்கள் நீங்கள் – தமிழ்நாட்டு முஸ்லீம்கள்.

                இந்தியாவிலேயே எத்தனையோ உதாரணங்கள் உண்டு. உதாரணமாக, இந்துக்களின் புனிதபூமியாகிய காஷ்மீர் முஸ்லீம்கள் பெரும்பான்மையினரானதும் படும் பாட்டை நீங்கள் மறந்து விட்டீர்கள் போல் தெரிகிறது, தமிழ்நாட்டின் பழந்தமிழ் ஊர்களாகிய வாணியம்பாடி, மேல் விசாரம், திருவழுந்தூர் போன்றவைக்கு என்ன நடந்தது. மேலே குறிப்பிட்ட கட்டுரையில் கூட முஸ்லீம்கள் பெரும்பான்மையாகியதும், அந்த ஊரில் அரபு மொழியும், அரபுக் கட்டிடக் கலையிலான வளைவும் ஊர் வாசலில் கட்டப்படவில்லையா? தமிழர்கள் என்று கூறிக் கொள்ளும் நீங்கள் தமிழ்நாட்டைஇப்படி ஏன் அரபுமயமாக்குகிறீர்கள்?, இஸ்லாத்தில் குடும்பக் கட்டுப்பாடு அனுமதிக்கப் படாததால், முஸ்லீம்கள் விரைவில் பல்கிப் பெருகி, ஒரு ஊரில் பெரும்பான்மையானதும், ஒவ்வொரு ஊரும் அதன் பாரம்பரிய தமிழ்த் தன்மையை இழந்து விடுவது இலங்கையில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் நடக்கிறது. அதுவும் அரபுமயமாக்கல் தான்.

                // இசுலாம் வாளால் பரவியது.என்று நஞ்சு கக்குவோருக்கு இதை விட சிறந்த மறுப்பு இருக்க முடியாது.///

                _________. நான் கூறுவதென்னவென்றால் வாளாலும், கடந்த முப்பது வருடங்களாக சவூதிகளின் கறுப்புப் பணத்தினாலும், பிரியாணியாலும் பரவிய இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிலைத்து நின்றமைக்கு இந்துக்களினதும், இந்துமதத்தினதும் சகிப்புத் தன்மை தான் முக்கிய காரணமாகும்.

                தமிழர்கள் அனைவரும் இஸ்லாத்தை நன்கு கற்று, அதனைப் புரிந்து கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தையும், அவர்களின் பாரம்பரிய சைவ – திருமாலியத்தையும், சாதிப் பாகுபாடற்ற நாயன்மார்களினதும், ஆழ்வார்களினதும் வாழ்க்கையையும் வரலாற்றையும் படித்து, தேவார திருவாசக, திருவாய்மொழிகளை, இஸ்லாமிய அரபு இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின்னர், இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தால் அதை நான் முழுதாக வரவேற்பேன். ஆனால் இப்பொழுது நடப்பதென்ன, குளத்தோடு கோபித்துக் கொண்டு குண்டி கழுவாமல் இருப்பது போல் பார்ப்பனர்களுடனும், மேல்சாதிக்காரர்களுடனும் கோபித்துக் கொண்டு முஸ்லீமாகிறார்கள். பார்ப்பனீயம் எதிர்க்கப்பட வேண்டியது தான், அதற்காக முஸ்லீமாக மாறுவது ஒரு தீர்வல்ல. உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்னர் முஸ்லீம்களாக மாறிய மீனாட்சிபுரம் மக்கள் கூட இஸ்லாத்தை படித்தறிந்து கொண்டு, அது தான் சிறந்த மார்க்கம் என்ற காரணத்துக்காக மாறவில்லை. சாதிப்பிரிவினைக்கு ஒரு அடையாள எதிர்ப்பைக் காட்டத் தான் மதம் மாறினார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. தலித்துக்கள் எல்லாம் அண்ணல் அம்பேத்கார் போலவே, அவரது வழியில் இஸ்லாம் பற்றி நன்கு அறிந்து கொண்டால் அவர்கள் முஸ்லீமாக மாறுவார்களா என்பது சந்தேகமே.

                • எனதருமை வியாசனே உமக்கு இல்லாவிடினும் மற்ற என் சகோதரர்களுக்கு இந்த பதில் பயன்படலாம்.”பன்றிகறி உள்ள தட்டிலிருக்கும் மற்ற உணவுகளை நான் உண்பேன் நீங்கள் உண்பீர்களா?” என்று கேட் கிறீரே நாங்கள் ஏன் உண்ண வேண்டும்? எங்களுக்கு தடுக்கப்பட்ட உணவை நான் ஏனய்யா உண்ண வேண்டும்.நான் என் மார்க்கத்தை நம்பி ஏற்றுக்கொண்டிருக்கும் போது அதன் சட்டதிட்டங்கள் அனைத்திற்க்கும் கட்டுப்பட்டு நடப்பதுதானைய்யா கொள்கை உறுதி.பன்றிகறி மட்டுமல்ல என் உற்றநண்பன் ஒருவன் மது விருந்து பரிமாறினாலும் அதையும் நான் தொடமாட்டேன்.வட்டியை தொழிலாக கொண்ட ஒருவனோடு ஒருபோதும் நான் தொழில் கூட்டு சேரமாட்டேன்.சிலைகளுக்கு பூஜை செய்து பிரசாதம் என்று தந்தால் ஒருபோதும் அதை திண்ணமாட்டேன்.அதையே அவன் பழம் என்றோ பொங்கல் என்றோ தந்தால் மகிழ்ந்து திண்பேன்.பூஜை செய்ததால் அதில் ஒரு தெய்வீக சக்திஏறி பிரசாதம் என்று பவ்யமாக தரும்போது நான் ஏற்காத நம்பிக்கையை அங்கீகரிக்க மாட்டேன்.என் இறைநம்பிக்கையை கடவுளுக்கான இலக்கனத்தை யாருக்காகவும் எதற்க்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.அதேவேளை என் நண்பனின் நம்பிக்கைகளை கண்டிப்பாய் மதிப்பேன்.புலால் உண்ணாத என் நண்பன் ஒருவனை என் வீட்டு விருந்துக்கழைத்து அவனுக்கு பிரியாணியை சமைத்து வைக்க மாட்டேன்.”பிரியாணி தின்றால்தான் நீ என் நண்பன்” என்று பைத்தியக்காரத்தனமாய் ஒரு பிரியாணியை வைத்து நட்பை சந்தேகிக்கமாட்டேன்.இவையெல்லாம் கொள்கை சார்ந்த விஷயங்கள்.உயர்வு தாழ்வு கற்பிப்பதோ தீண்டாமை பார்ப்பதோ அல்ல.ஒவ்வொறு மனிதனுக்கும் இந்த கொள்கை உறுதி இருக்கவேண்டும்.இதை மற்றவர் புரிந்து நடக்கவேண்டும்.இதுதான் நாகரீகம்.பண்பாடு.சகிப்புத்தன்மை.

                • //இலங்கையை உதாரணத்துக்குத் தான் காட்டினேன் அது கூடப் புரியவில்லையா. முஸ்லீம்கள் எங்கிருந்தாலும் ஒன்று அவர்கள் ஒரே தன்மையுள்ளவர்கள், உங்களின் சகோதரர்கள் என்று நீங்கள் கருதுவதால் தானே, ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படும் போது அவர்களுக்காகப் போராடாமல், பாலஸ்தீனிய முஸ்லீம்களுக்காகக் குரலெழுப்பியவர்கள் நீங்கள். அதிலும் வேடிக்கை என்னவென்றால் தனது சொந்த நாட்டு மக்களையே (முஸ்லீம்கள்) படுகொலை செய்த சதாம் ஹுசைனுக்காகக் கூட அழுதவர்கள் நீங்கள் – தமிழ்நாட்டு முஸ்லீம்கள்.//

                  நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்.. முதலில் இசுலாமியர்கள் தாங்கள் சார்ந்துள்ள இனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். அதற்க்கு தேசிய இன பற்றினை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். உலகளாவிய மத பற்றை பிறகு வைத்துக் கொள்ளலாம்

                  • //நான் மாட்டுப் பிரியாணியுள்ள தட்டில் உள்ள கத்தரிக்காயை சாப்பிடுகிறேன். பன்றிக்கறியுள்ள தட்டிலுள்ள வேறேதாவது உணவை உண்ண நீங்கள் தயாரா? :)//

                    சபாஷ் .. சரியான கேள்வி? .. மனசாட்சியுடன் இதற்க்கு முதலில் பதில் கூறுங்கள் இசுலாமியர்களே ..

                • அவரது வழியில் இஸ்லாம் பற்றி நன்கு அறிந்து கொண்டால் அவர்கள் முஸ்லீமாக மாறுவார்களா என்பது சந்தேகமே.//வியாசனின் இத கருத்தை ஏற்கிறேன் மீனச்சிபுரம் மதம் மாற்றம் என்பது தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தப்ப்ட்டவர்களின் போராட்டத்தின் ஒரு வடிவதான் என்பதுவும் உண்மைதான் ஆனா தமிழக்த்திலுள்ள முஸ்லீம்கள் அனைவரும் தாழ்த்தப்ப்ட்ட இனத்திலிருந்து முஸ்லீமாக மாறியவர்கள் என்பது போல பொருள் வரும் கருத்தை ஏற்க இயலாது பெரும்பான்மை தமிழக முஸ்லீம்களாக இருப்பவர்கள் முகலாய படையெடுப்பின் போது பயந்து மத மாறிய நாயக்கர்கள் என்றே கேள்விப்ப்ட்டு இருக்கிறேன் இசுலாமியறாக மாறிய தாழ்த்தப்ப்ட்டவர்களின் எண்ணிக்கை சொற்ப்பமே இசுலாமிய்ர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் குரானை தமிழில் மொழி பெயர்த்து தருகிறார்கள் இதுக்கு முன்னாடி முகமதை புகழ்ட்னு கூறும் சிறிய புத்தகஙளையும் இசுலாமின் அடிப்படையை கூறும் சிறிய புத்தகஙளை குடுத்டு மதம் மாற்றி வந்தார்கள் சவுதி வேலை என்று கூறி ஆசை காட்டியும் சிலரை மதம் மாற்றினார்கள் அப்பிடி மதம் மாறி சவுதி போனவரின் கண்ணீர் கதையும் உண்டு சவுதில கட்டிட வேலை என்று மதம் மாறி சவுதி சென்று கட்டிட வேலைக்கு பதிலாக 50 ஆடுகளின் குடலை ஒரேநாளில் க்ழுவ வேண்டும் தப்பிக்கநினத்தாலும் முடியாது அடி வாஙகி மிதி வாங்கி பின்பு எப்பிடியோ தப்பித்டு வந்த ஒருபவர் இருக்கிறார்

                  • தீண்டாமைக்கு எதிராக போராட துனிவு இல்லாமல் கோழைத்தனாமாக மதம் மாறியவர்கள் என்னைப் பொருத்தவரையின் எனது இனத்துரோகிகள் அரபுப்பாஸிஸத்தை அதன் உண்மை தெரியாமல் ஆதைக்கும் கோடரிக்காம்புகள்…

              • ஆனை பார்த்த குருடர்கள் மாதிரி இங்கே ஒவ்வொருவரும் நான் சாதாரணமாக மாடுதின்பவர்கள் என்ற கருத்தில் குறிப்பிட்ட ‘மாடுதின்னி’ என்ற சொல்லுக்கு எத்தனை விதமான விளக்கங்கள் எல்லாம் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. ஒருவர் அதைத் தீண்டாமை வெறி என்கிறார், மற்றவர் வகுப்புவாதம் என்கிறார் அடுத்த அதிகப்பிரசங்கி என்னுடைய ஆதிக்கசாதிவெறி என்கிறார்.

                இலங்கையில் ஒரு சாதாரணமான சொல் தமிழ்நாட்டில் எப்படியான விளைவுகளை, வெவ்வேறு கருத்துக்களை உண்டாக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும். தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சாதிவெறியும், சாதியுணர்வும் தாண்டவமாடுவதாலும், தமிழ்நாட்டில் உணவுப் பழக்க வழக்கங்கள் சமுதாயத்தில் ஒவ்வொருவரினதும் இடத்தை தீர்மானிப்பதாக இருப்பதாலும் தான் இந்தப் பிரச்சனை எழுகிறது. தமிழ்நாட்டில் மரக்கறியுணவை உண்ணுகிறவர்கள் உயர்ந்தவ்ர்கள் மாட்டுக்கறியுணவை உண்ணுகிறவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற ஒரு மாயை சாதிவெறியினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைத் தமிழர்களிடையே அந்த நிலை இல்லை. இதை நான் முன்புமொருமுறை விளக்கியிருக்கிறேன்.

                தன்னைச் சைவவெள்ளாளர் என அடையாளப்படுத்துமொருவர் முழுமாட்டையும் மூன்று நாளில் தின்று முடித்து விடுகிறவராக இருந்தாலும் அவர் சைவவெள்ளாளர் தான். அங்கு சைவம் என்பது உணவைக் குறிக்கவில்லை, மாறாக அவர் திருநீற்றை முக்குறியாக அணிபவர், சிவனை முழுமுதற்கடவுளாக வணங்குகிறவர் என்பது மட்டும் தான் அதன் கருத்தாகும்.

                ஆகவே இந்த மாடுதின்னி என்ற சொல் இலங்கையில் தீண்டாமையையோ அல்லது சாதிப்பாகுபாட்டையோ குறிக்கவில்லை. மிகவும் ஆச்சாரமான யாழ்ப்பாணச் சைவர் ஒருவர், அவர் எந்தச் சாதியாக இருந்தாலும் மாடுதின்னி முஸ்லீம்கள் வீட்டிலும் உணவருந்த மாட்டார்கள் மாடுதின்னி வெள்ளாளர் வீட்டிலும் உணவருந்த மாட்டார்.

                மாடு தின்கிறவர் மாடுதின்னி, ஆடு தின்கிறவர் ஆடுதின்னி, ஆமையைத் தின்றார் என்றால் அவர் ஆமைதின்னி, அவ்வளவு தான், சாதிக்கும் தீண்டாமைக்கும் அதில் எந்தத் தொடர்பும் கிடையாது. இதற்கு உதாரணமாக, ஈழத்தில் மட்டக்களப்பு முஸ்லீம்களின் நாட்டார் பாடல்களிலேயே ஆதாரம் உண்டு. தன்னுடன் ‘சருவும்’, அதாவது பகிடிச் சேட்டை, Tease பண்ணும் ஒரு பையனைப் பார்த்து, அவன் எதையும் தின்னுவான் என்பதை நக்கலடிக்கும் விதமாக, அந்தப் பெண் பாடுகிறாள்:

                “ஆமைதின்னி தூமைதின்னி
                அடைக்கோழி முட்டைதின்னி
                சங்குவலளை தின்னி- இப்போ
                சருவாதடா என்னோட.”

                ஒருகாலத்தில் இலங்கையின் தமிழ் முஸ்லீம்களிடம் கூட மாட்டைக் கொல்வதை இழிவாகப் பார்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது போலிருக்கிறது.

                “காட்டுப்பள்ளி அவுலியாட
                காரணங்கள் உண்டுமானால்
                மாடுகொல்லி மீரானுக்கு- ஒரு
                மானபங்கம் உண்டாகணும்

                காக்கொத் தரிசியாம்
                கண்ணுழுந்த செத்தமீனும்
                போக்கத்த மீரானுக்கு
                பொண்ணுமாகா வேணுமாம்..”

                என்கிறாள் ஒரு ஈழத்து முஸ்லீம் பெண்.. 🙂

            • பஞ்சம் பிழைக்க போனவனுக்கு பஞ்சாயத்து என்ன வேண்டிக் கிடக்கு என்று கேட்டது வியாசனுக்கு ரெம்ப பட்டுருச்சு போல இருக்கு.பழி தீர்க்குறாராம் .
              \\\பஞ்சம் பிழைக்கவும் அரபுக்களுக்கு கழுவித் துடைக்கவும் அரேபியாவுக்குப் போனவன் எல்லாம் // என்கிறார்.

              அரபு நாடுகளுக்கு வேலைக்கு போனவர்களும் பிழைக்க போனவர்கள்தான்.ஆனால் அவர்களின் வேர்கள் இங்குதான் தங்கியுள்ளன.உழைக்கும் மக்களான அவர்கள் வேரோடு குடும்பத்தையே பிடுங்கி கொண்டு போய் அங்கு நிரந்தரமாக தங்கி விடும் எண்ணம் கொண்டவர்கள் இல்லை.சில ஆண்டுகள் பணியாற்றி பொருளீட்டிக்கொண்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்து விடும் எண்ணத்தில்தான் அவர்கள் இருந்தார்கள்.இருக்கிறார்கள்.அப்படி வேலை செய்து திரும்பி வந்து இங்கு சிறியதாக கடை வைத்து பிழைப்பவர்கள் பலரையும் இன்று தமிழகத்திலும் இலங்கையிலும் காணலாம்.அதனால் அவர்களும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள்தான்.

              ஆனால் மேற்குலகுக்கு போனவர்களில் ஆகப்பெரும்பான்மையோர் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடும் எண்ணம் கொண்டவர்கள்.அந்தந்த நாடுகளின் குடியுரிமையை கூழை கும்பிடு போட்டு தவம் கிடந்து வாங்கிக் கொண்டு அங்கேயே குடும்பத்தோடு நிரந்தரமாக தங்கி விட்டவர்கள்.சந்ததி ,பரம்பரைக்கும் மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்பி வரும் எண்ணம் அறவே இல்லாதவர்கள்.இவர்களின் குணாதிசயத்தை வைத்து சொல்வதென்றால் இப்போது இருக்கும் நாட்டை விட கூடுதலான காசு,பணத்தை வேறொரு நாடு தருமென்றால் அங்கு ஓடிப்போக தயங்க மாட்டார்கள்.அதனால்தான் அவர்களை ஓடுகாலிகள் என்கிறேன்.பிறந்த மண்ணின் மீது கடுகளவு கூட பற்றும் பாசமும் இல்லாத வளர்த்த மக்களுக்கு நன்றி இந்த நாடோடிகளை ஓடுகாலிகள் என சொல்வது தப்பே இல்லை.

              இந்த நாடோடிகள் தங்களுக்கும் தாய் நாட்டின் மீது,தாய் மொழியின் மீது பற்று இருப்பதாக காட்டிகொள்வதற்காக இன,மத வெறியை தூண்டும் வகையில் பேசுகிறார்கள். மண்ணின் மைந்தர்கள் ஒற்றுமையை பிளக்கும் வண்ணம் வெறுப்பு பரப்புரை செய்கிறார்கள்.அதனால்தான்

              ” பஞ்சம் பிழைக்க போனவனுக்கு பஞ்சாயத்து என்ன வேண்டிக் கிடக்கு,பொத்திக்கிட்டு போங்களய்யா ”

              என்று சொல்லியிருக்கிறேன்.அரபு நாடுகளுக்கு பிழைக்க போனவர்கள் அப்படி சொந்த நாட்டில் இன,மத மோதல்களை உருவாக்கும் வகையில் பேசுவதில்லை.தங்கள் ஆடையணிகளை மாற்றிக்கொண்டார்கள் என்றால் அது தன்னளவில் செய்து கொண்டது.அதனால் சக மனிதர்களுக்கு கேடு ஏதும் இல்லை.

              மற்றபடி ”கழுவி துடைக்கும்” வேலை எல்லாம் உழைக்கும் மக்களான அவர்களுக்கு தேவை இல்லை.அவர்கள் உழைத்து சேர்த்த பொருளோடுதான் தாயகம் திரும்பி வருகிறார்கள்.வெள்ளைக்காரனின் காலை நக்கி குடியுரிமை வாங்கியோர் வேண்டுமானால் அங்கேயே காலம் தள்ள ”வெள்ளைக்காரனுக்கு கழுவி துடைத்து ” கொண்டு இருக்கலாம்.

              • திப்புவுக்கு தமிழில் விளக்கம் குறைவு என்பதை நான் முன்பும் பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவற்றை விட அவரது சகபாடிக்கு தமிழ் அத்துப்படி. இரண்டு பேருமே வஹாபியத்தினதும், அரபுமயமாக்கலினதும் தாக்கத்துக்குள்ளாகியவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. எத்தனையோ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் புலவர்களையும் தந்த தமிழ் முஸ்லீம்கள் இன்று திப்புவைப் போன்ற, தாய்மொழி தமிழில் விளக்கம் குறைந்தவர்களைத் தந்திருப்பது கவலைக்குரிய விடயம் தான்.

                ‘பஞ்சம் பிழைக்கப் போவது’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு சரியான விளக்கம் தெரியாததால் தான் உளறுகிறார் அல்லது இலங்கைத் தமிழர்கள் மீதுள்ள காழ்ப்புணர்வினாலும், ஆத்திரத்தாலும் திப்புவின் தமிழறிவு மழுங்கி விட்டது என்றும் கருத்தில் கொள்ளலாம்.

                இலங்கை நீர்வளமும், நிலவளமும் நிறைந்த நாடு, எங்களின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த இலங்கையனும் உண்ண உணவின்றி, வரட்சியினாலோ அல்லது பஞ்சம் பிழைக்கவோ இலங்கையை விட்டு வெளியேறியதில்லை. ஆனால் இப்படி எந்த இந்தியனும் உறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால் எங்களின் நாட்டுக்கே பஞ்சம் பிழைக்க இந்தியர்கள் (பாகிஸ்தானி முஸ்லீம்கள் உட்பட) வந்திருக்கிறார்கள். இப்பொழுதும் கூட உள்நாட்டில் வியாபாரம் பண்ண வழியில்லாத, எத்தனையோ தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தங்களின் தலையில் புடவைகளைச் சுமந்து கொண்டு, எங்களின் நாட்டுக் கிராமங்களுக்குப் போய்க் கூவிக் கூவி விற்கிறார்கள். அதை வேண்டுமானால் பஞ்சம் பிழைக்கப் போவது என்று கூறலாம்.

                இலங்கைத் தமிழன் எவனுமே பஞ்சத்தினாலோ அல்லது பசியினாலோ எந்த நாட்டுக்கும் போனதில்லை. இந்தியாவுக்கு அகதிகளாகப் படகில் வந்த வசதியற்ற இலங்கைத் தமிழர்கள் கூட அவர்களின் சொந்த வீடு, நிலம் எல்லாவற்றையும் விட்டு, விட்டு, பசியினால் வரவில்லை, பாதுகாப்புத் தேடித் தான் வந்தார்கள். இப்பொழுது கனடா போன்ற நாடுகள் முஸ்லீம் அகதிகளைப் (தமிழர்களின் வரிப்பணத்திலும்) பிச்சைக்காரர் போல ஏற்றி இறக்குவது போல எந்த இலங்கைத் தமிழனையும் அழைக்கவில்லை. இலங்கைத் தமிழர்கள் லட்சக் கணக்கான அவர்களின் சொந்தப் பணத்தைக் கொண்டும், நகைகளையும், காணிகளையும் விற்றும் அவர்களின் சொந்தச் செலவில் தான் பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்குப் போனார்கள் எந்த நாடும் எந்த இலங்கைத் தமிழனையும் அவர்களில் செலவில் இலவசமாக அழைக்கவில்லை.

                சொந்தநாட்டில் அடுத்த வேளை உணவுக்கு அல்லது உழைப்புக்கு வழியில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காகப் போவததைத் தான் தமிழில் ‘பஞ்சம் பிழைக்கப் போவது’ என்பார்கள். என்பதை திப்புவுக்கு விளங்க வைக்க இவ்வளவு உதாரணங்களைக் கொடுக்க வேண்டியதையிட்டு வருந்துகிறேன். தமிழ் மிகவும் சிக்கலான மொழி தான், திப்பு வஹாபிய மத வெறியில், ஆத்திரத்துடன் பதிலெழுதாமல் கொஞ்சம் சிந்தித்து எழுதிப் பழகுவாரே என்றால் இப்படியான தவறுகளைத் தவிர்த்து, வினவு தவிர்ந்த வேறு ஊடகங்கள் கூட அவரது “தமிழ்ப்படைப்புகளை’ எதிர்காலத்தில் வெளியிடக் கூடிய வாய்ப்புண்டு, முயற்சி திருவினையாக்கும். 🙂

                • பொருள் குற்றம் ஏதாவது சொல்வார் என பார்த்தால் வெறும் சொற்குற்றம் கண்டுபிடிக்கிறாரே.புலம் பெயர்ந்ததற்கு போர்தான் காரணம் என்ற தங்கமலை ரகசியத்தை சொல்லிக்கொடுத்தற்கு நன்றி.

              • சவுதில யார்க்கும் குடியிரிமை வழங்க மாட்டான் சவுதிக்கு போய் பொட்டிக்கடை வைக்குற அளவுக்க்கு சாம்பாதிக்க முடுயும் வெள்ளைக்காரனுக்கு கழுவி துடைத்து விட்டால் அவன் குடியுரிமை தந்து விடுவான் அரபி சேக்குக்கு கால கழுவி விட்டாலும் அவன் திப்பு போன்றவர்களை மயிரளவுக்கும் மதிக்க மாட்டான் சூப்ப்ரா சேம் சைடு கோல் போடுறீகளே நல்லா வருவீகண்ணே…

        • •//கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை// இசுலாமிய ஆலீம்கள் தவிர்க்க முடியாத கேள்வி வரும்போது தனி மனித தாக்குதலில் இறங்குவார்கள் அடுத்து அடுத்து என்ன ஏய் இதை (இசுலாமை) விட சிறந்த சித்தாந்தத்தை கொண்டு வா புர்கா அணிவது சிறந்த்தது தானே அதை விட பெண்களின் உடலை மூடி மறைத்து பாதுகாக்கும் உயரிய உடையை கொண்டு வா ,குரானை விட சிறந்த புத்தகம் உலகில் இல்லை அதை விட சிறந்த புத்தகத்த கொண்டு வா என்று அல்லா உளரியதைப்போல உளர ஆரம்பித்து விடுவார்கள் அப்புறம் என்ன எவனவன் பொண்டாடிகள் எல்லாம் பத்தினியோ அவர்களுக்கு மட்டும்தான் கடவுள் தெரிவார் என்று வடிவேலு ஜோக்கு மாறீ, கீ கீ எனக்கு அல்லா தெரிகிறார் என்றும் அதிலும் பிரகாசமாக தெரிகிறார் என்று சும்மானாச்சுக்கும் ஒப்புக்கொண்டு போகவேன்டும் ,எனக்கென்னமோ வினவு தளத்துக்காரங்க எல்லாம் எனக்கு அல்லா தெரிகிறார் என்று அந்த ரீதியில் ஒப்புக்கொண்டவர்களோ என்று தோன்றுகிறது எனென்றால் இசுலாம் சிறந்தது என்று ஒருவன் சொன்னபோதே கி கி என்று சிரித்தவர்கள்தானே…

  64. முஸ்லீம் பெண்களின் முகத்தை மறைத்து பர்தா அல்லது முக்காடு இடுவதை அந்தக் காலத்திலேயே எதிர்த்த அண்ணல் அம்பேத்கார், இன்றிருந்தால் இந்திய/தமிழ் முஸ்லீம் பெண்கள் அரபுக்களின் கறுப்புக் கோணிப்பையால் தலை முழுவதையும் மூடிக் கொண்டு திரிவதைப் பார்த்தால் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருப்பார், எதிர்த்திருப்பார் என்பதை முஸ்லீம் பெண்களின் பர்தா பற்றிய கருத்தை அவரது Pakistan or the Partition of India என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் காணக் கூடியதாக உள்ளது.

    “She cannot go even to the mosque to pray and must wear burka (veil) whenever she has to go out. These ‘burka women walking in the streets is one of the most hideous sights one can witness in India.’ Such seclusion cannot but have its deteriorating effects upon the physical constitution of Muslim women. They are usually victims to anaemia, tuberculosis and pyorrhoea. Their bodies are deformed, with their backs bent, bones protruded, hands and feet crooked. Ribs, joints and nearly all their bones ache. Heart palpitation is very often present in them. The result of this pelvic deformity is untimely death at the time of delivery. Purdah deprives Muslim women of mental and moral nourishment. Being deprived of healthy social life, the process of moral degeneration must and does set in. Being completely secluded from the outer world, they engage their minds in petty family quarrels with the result that they become narrow and restricted in their outlook.
    Considering the large number of purdah women among Muslims in India, one can easily understand the vastness and seriousness of the problem of purdah.

    The evil consequences of purdah are not confined to the Muslim community only. It is responsible for the social segregation of Hindus from Muslims which is the bane of public life in India. This argument may appear far fetched and one is inclined to attribute this segregation to the unsociability of the Hindus rather than to purdah among the Muslims. But the Hindus are right when they say that it is not possible to establish social contact between Hindus and Muslims because such contact can only mean contact between women from one side and men from the other.

    Not that purdah and the evils consequent thereon are not to be found among certain sections of the Hindus in certain parts of the country. But the point of distinction is that among the Muslims, purdah has a religious sanctity which it has not with the Hindus. Purdah has deeper roots among the Muslims than it has among the Hindus and can only be removed by facing the inevitable conflict between religious injunctions and social needs. The problem of purdah is a real problem with the Muslims—apart from its origin—which it is not with the Hindus. Of any attempt by the Muslims to do away with it, there is no evidence.”

    http://www.ambedkar.org/pakistan/pakistan.pdf

    அந்த நூலில் முஸ்லீம்கள் மத்தியிலுள்ள சாதிப்பிரிவுகளையும் விவரமாகக் குறிப்பிடுகிறார் அண்ணல் அம்பேத்கார், ஆனால் வேடிக்கை என்னவென்றால், முஸ்லீம்கள் மத்தியில் சாதி இல்லை என்று கூறிக் கொண்டு இஸ்லாத்துக்கு மதம் மாறிய தமிழ்நாட்டுத் தலித்துக்களில் சிலரை எனக்குக் கூடத் தெரியும். அவர்கள் அம்பேத்காரைக் கடவுளைப் போல கருதுவதாகக் கூறுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களின் ‘கடவுள்’ என்ன கூறினாரென்று அவர்களுக்கே தெரியாது.

  65. என் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்களே, வியாசன் என்பவரின் வாதத்தை உங்கள் சிந்தனைக்கே விட்டு விட்டு என் ஆதங்கத்தை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இவரிடம் இருப்பது பட்டவர்த்தனமான காழ்ப்புணர்ச்சி.புர்கா தாடி அரபுமயமாக்கல் என்பதெல்லாம் இதற்க்கு இவர் முட்டுக்கொடுக்கும் சாக்குகள்.தமிழ் என்ற போர்வை போர்த்திய பாசிஸவாதிதான் இவர்.இவரை ஜெயமோகனின் சீடர் என்றும் சொல்லலாம்.ஜெயமோகன் என்பவர் நிரம்ப வாசிப்பறிவும் இலக்கிய ஆற்றலும் கொண்டு மிக நிதானமாய் கக்கும் பிற்போக்கு விஷத்தை இவர் தமிழ் கலாச்சாரம் என்று அவரால் இயன்ற அளவு கக்குகிறார்.தமிழ்நாட்டு மக்கள் தமிழ் முஸ்லிகளை மாமன் மச்சான் உறவுமுறை கொண்டு அழைப்பதையே இவரால் பொறுத்தக்கொள்ள முடியாத பொறுமலில் என்னவோ அவர்களின் உள்ளத்தின் உள்ளேநுழைந்து பார்க்கும் ஆற்றலைப்பெற்றவர் போல, ‘வெள்ளைகாரனை மாமா என்று அழைப்பது போல்தான் உங்களையும் அழைக்கிறார்கள்’ என்று தன் அழுகிப்போன சிந்தனையை அப்படியே வழித்து ஊற்றுகிறார்.இங்கிருக்கும் தமிழ் முஸ்லிம் அனைவரும் அவர்களில் ஒருவனாக இருந்துதான் மாறினான் என்பதை ஒவ்வொறு உள்ளமும் நன் கறியும்.அவன் மாமன் தான் மாறினான் அவன் ம்ச்சான் தான் மாறினான் அவன் சித்தப்பன் அவன் பெரியப்பன் அவன் அக்கா அவன் தங்கை மாறியவர்கள் அனைவரும் அவன் சொந்தம்.பிறகு எப்படி அழைப்பான்?இந்த சொந்தம் விட்டுப்போயடுமா? வெள்ளைகாரனை இந்த முறையிலா அழைப்பார்கள்?எவ்வளவு நஞுசு கலந்திருக்கிறது பாருங்கள் அவர் மூளையில்.உமக்கு இந்த அடையாளம் தெரியவில்லையென்றால் இஸ்லாம் எங்களை அப்படி மாற்றியிருக்கிறது.நான் யார் என்பதும் என்ன சாதியிலிருந்து வந்தேன் என்பதும் எனக்குத்தெரியாது.என் பக்கத்து வீட்டான் என்ன சாதியிலிருந்து வந்தான் என்பதும் எனக்குத்தெரியாது.ஏன் அவனுக்கே அது தெரியாது.அந்தந்த மாவட்டங்களில் உள்ள பெருவாரியான சாதிகளை வைத்து ஒருவேளை நாம் இந்த சாதியிலிருந்து இஸ்லாத்தை தழுவி இருப்போமோ என்று சும்மா யுகிக்கலாம்.அதை கண்டுபிடிக்கவே முடியாதவாறு இஸ்லாம் எங்களை மாற்றிவிட்டது.அதை பொறுக்க மாட்டாமல்தான் தலித் வீட்டில் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.பன்னி வளர்த்தால் பக்கத்தில் போக மாட்டார்கள் என்றெல்லாம் புலம்ப வைக்கிறது.முதலில் பன்றியை பற்றி இஸ்லாமியர்களின் நிலை என்ன என்பதாவது சரியாக தெரியுமா? பன்றியை நாங்கள் என்ன அருவருப்பான ஒரு விலங்காகவா நாங்கள் பார்க்கிறோம்.இதுவே பலபேருக்கு தெரியாமல் தான் உளறிக்கொண்டிருக்குதுகள்.எவன் என்னை படைத்தானோ அவன் தான் பன்றியையும் படைத்தான் எந்த ஒன்றையும் வீணாக படைக்காதவன் பன்றியை கேவலமான படைப்பாக படைக்க மாட்டான்.இதை நாங்கள் உறுதியாக நம்பக்கூடியவர்கள்.பன்றியின் இறைச்சியை நாங்கள் சாப்பிடக்கூடாது என்பதுதான் சட்டம்.பன்றி மட்டுமல்ல நாய் பூனை காகம் பருந்து சிங்கம் புலி என்று ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது நாங்கள் சாப்பிட கூடாதது.பிறகு பன்றி மட்டும் ஏன் இவ்வளவு பிரபலமானது? அதற்கு ஒரு அரசியல் உண்டு.வெள்ளைகாரன் பன்றி இறைச்சி உண்பான்.ஜாதி இந்துக்கள் பசு இறைச்சி உண்பதில்லை.முஸ்லிகளையும் இந்துக்களையும் மோத வைக்க அவனுக்கு இந்த பன்றி பசு கைகொடுத்தது.இதன் கராணமாகவே பன்றி என்பதே நாங்கள் ஒத்துக்கொள்ளாத ஒன்றாக மாறிப்போனது.இந்துக்களில் ஜாதி இந்துக்கள் பன்றி திண்பார்களா? இதோ இந்த வியாசன் பன்றி திண்கிறாரா? அதுபோலவேதான் நாங்களும்.ஒன்றை உண்பதில்லை என்பதால் அதை வெறுப்பதாக அர்த்தமா?தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிகளும் மாமன் மச்சான் முறை வைத்து அழைத்துக்கொள்ளும் பண்பு இலங்கையில் கிடையாது.அங்கு பிளவு பட்டுத்தான் நிற்க்கிறார்கள்.அதேமுறையை இங்கும் கொண்டுவர துடிக்கிறார்.இந்துத்துவ வெறிநாய்களின் குதறல் ஒருபுறம் என்றால் இந்த தமிழ் மூடர்களின் கிறுக்கத்தனம் ஒருபுறம்.இவைகளுக்கு நடுவேதான் நாம் ஒற்றுமையை பேண வேண்டியிருக்கிறது.மிகப்பெறும் சவால் வரும்காலங்களில் இவர்களால் நமக்கு இருக்கலாம்.மிக கவனமாக வேற்றுமைகள் புரிந்து கரம் கோர்த்து நடக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். இவர்களை புறக்கணித்து விலகாமல் கரம் கோர்த்து பயணிப்போம் இன்ஷாஅலலா.

    • \\ பிற்போக்கு விஷத்தை இவர் தமிழ் கலாச்சாரம் என்று அவரால் இயன்ற அளவு கக்குகிறார்//

      அதுமட்டுமல்ல.ஒரு வகையான மேட்டிமை திமிரும் இவரிடமிருந்து பெரும் நாற்றத்தோடு வெளிவருகிறது.புரோட்டா சால்னா பற்றி நான் குறிப்பிடப்போய் சால்னா மேலயும் கழிஞ்சு வைச்சுட்டாரு.

      .\\ஆடு, மாடு கோழியின் தோல், எலும்பு மற்றும் கழிவுகளைப் போட்டு ஹோட்டல்களில் செய்யும் ‘சால்னா’ புரோட்டாவை விட பயங்கரமானது. சால்னாவோ என்ன சவமோ தமிழ்நாட்டில் அதை நான் தொட்டது கூட இல்லை.//அப்படின்றார்,

      சக மனிதர்கள் சாப்பிடும் உணவை இப்படி இழிவுபட பேசுவது நாகரீகமற்ற விலாங்காண்டித்தனம் என்பதை இவர் உணர்வதில்லை.ஏனென்றால் முசுலிம்களின் பழக்க,வழக்கம் எதுவானாலும் பாய்ந்து குதற வேண்டும் என்று மட்டுமே அவருக்கு தோன்றும்.அய்யோ பாவம்,புரோட்டா கடைகளை நடத்துவோரில் ஆக பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதும்,அதை உண்பவர்களில் ஆக பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதும் இவருக்கு மண்டையில் உரைக்காமல் போய் விட்டது.

      வியாசனின் கவனத்திற்கு.

      இந்த பதிவின் தலைப்பு மிக அற்புதமானது.இது நீண்ட நாட்கள் விவாதத்தில் இருப்பதே பலரிடமும் பதிவு சென்று சேர உதவும் என்பதால் விவாதத்தை தொடர விருப்பம்.பெரிய மனசு பண்ணி கடைசி பின்னூட்டமா என கொந்தளிக்காமல் இருக்க வேண்டியது.

      • என் மீது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆசையில் திப்பு நானா ஒரு விளக்கமில்லாமல் புலம்புவதைப் பார்க்க உண்மையிலேயே பாவமாக இருக்கிறது. அவரது குழப்பத்துக்கு என்ன காரணமோ எனக்குத் தெரியாது. உதாரணமாக, எவ்வளவுக்கு ஓட்டல்களில் உணவுண்பதைத் தவிர்க்க முடியுமோ அந்தளவுக்கு அவற்றைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் மட்டும் கூறுவதில்லை, படிப்பறிவில்லாத சாதாரண தாய்மார்களே கூறுவதுண்டு. அவர்களுக்குத் தெரிந்த உண்மை கூட திப்புவுக்குத் தெரியவில்லை. ஓட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுத்தமானதாக, உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பதில்லை என்பது ஒரு பாமரனுக்குக் கூடத் தெரிந்த விடயம் தான்.

        வெறும் இலாப நோக்கை மட்டும் கொண்ட பல ஓட்டல்கள், விலங்குகளின், தலை, தோல் என்பவற்றை எல்லாம் போட்டு Chicken/beef stock என்பன செய்வதும் அதை சால்னா போன்ற Sauce வகைகள் செய்யும் போது பாவிப்பதும், இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நடப்பது தான், அதிலும் சீன உணவகங்களில் கேட்கவே தேவையில்லை. பன்றியெலும்பு, மாட்டெலும்பு, கோழியெலும்பு, நாக்கு, தோல் எல்லாவற்றையும் போட்டு அவித்து செய்யப்படும் Stock ஐத் தான் அவர்களின் சூப் வகைகளுக்குப் பயன்படுத்துவார்கள். அதை அவர்கள் மறைப்பதுமில்லை, தொலைக்காட்சிகளிலும் சமையல் நிகழ்ச்சிகளிலும் கூடக் காட்டுவார்கள். அப்படி செய்யப்படும் உணவு வகைகளை அருவருப்பில்லாமல் எல்லோராலும் உண்ணவும் முடியாது. அவையெல்லாம் உடல் நலத்துக்கு உகந்தவையும் அல்ல. அது போன்றே தமிழ்நாட்டு ஓட்டல்களில் செய்யப்படும் சால்னா வகைகளும் உடல் நலத்துக்கு உகந்தவையல்ல என்பது மட்டுமன்றி அவை சுத்தமாக செய்யப்படுபவையுமல்ல. அதைத் தான் நான் கூறினேனே தவிர, தமிழர்கள் எல்லோரும் _முகலாயர்களின் பாரம்பரிய உணவாகிய புரோட்டாவையும் சால்னாவையும் இனிமேல் தொடக் கூடாதென்று நான் கூறவில்லை.

        ///புரோட்டா கடைகளை நடத்துவோரில் ஆக பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதும்,அதை உண்பவர்களில் ஆக பெரும்பான்மையினர் இந்துக்கள் ///

        முசல்மான்களின் பிரச்சனையே இதுதான், அவர்களால் எதையுமே மதக் கண்ணாடி இல்லாமல் பார்க்க முடியாது. ஓட்டல்களில் செய்யப்படும் சால்னா போன்றவை சுத்தமும் சுகாதாரமுமானவையல்ல என்பது தான் எனது கருத்தே தவிர முஸ்லீம்களின் ஓட்டல்களில் செய்யப்படும் சால்னா மட்டும் கூடாது என்பதல்ல. ஒரு சில வேளைகளிலாவது மதம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு விலகி வெளியே வந்து மற்றவர்களிடம் பேசவும் பழகவும் முசல்மான்கள் பழகிக் கொள்ள வேண்டும். இந்துக்களின் கடைகளில் செய்யப்படும் சால்னாவும் சுத்தமானதல்ல, அவர்களும் விலங்குகளின் கழிவுகளை, தலை, தோல், எலும்பு என்பவற்றைப் போட்டு அவித்து தான் செய்கிறார்கள். இப்ப திருப்தியா?

        ///இது நீண்ட நாட்கள் விவாதத்தில் இருப்பதே பலரிடமும் பதிவு சென்று சேர உதவும் என்பதால் விவாதத்தை தொடர விருப்பம்.///

        விவாதத்தை நீங்கள் தொடர வேண்டியது தானே அதற்கு எதற்காக என்னுடைய ‘கவனத்துக்கு’ எழுதுகிறீர்கள். இந்த தலைப்பின், நான் கூற விரும்பிய எனது கருத்துக்களை கூறி விட்டதாக நினைக்கும் போது நான் நிறுத்திக் கொள்வேன். உங்களின் பொழுது போக்குக்கு, ஆள் தேவைப்பட்டால் நீங்கள் வேறு யாரையும் பார்க்க வேண்டியது தான். 🙂

        • உணவு விடுதிகளில் தூய்மையான உணவு கிடைக்காதாம்.சரி,இருக்கட்டும்.வாதத்திற்காக சால்னா தூய்மையான உணவு இல்லை என்றே வைத்துக்கொள்வோம்.ஆனால் அது தமிழகத்தில் உண்ணப்படும் உணவாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.சக மனிதர்கள் உண்ணும் உணவை ”கழிவுகளைப் போட்டு ஹோட்டல்களில் செய்யும் ‘சால்னா’ புரோட்டாவை விட பயங்கரமானது”. என்றும் சால்னாவோ என்ன சவமோ. என்று பிணத்தோடு ஒப்பிட்டு இழிவுபட பேசுவதும் நாகரீகமில்லை.அது பிற மனிதர்களின் உணர்வுகளை மதிக்காத விலங்காண்டித்தனம்.

    • //இந்துத்துவ வெறிநாய்களின் குதறல் ஒருபுறம் என்றால் இந்த தமிழ் மூடர்களின் கிறுக்கத்தனம் ஒருபுறம்.இவைகளுக்கு நடுவேதான் ………….//

      அப்படியே… tntj தெரு நாய்களை மறந்து விட்டீர்கள்

      • டிஎன்டிஜெ நாய்கள் பொதுமக்களை குதறுவதில்லையே.காவல் நாய்கள் அவசியமாய் இருக்கலாம்.உரிமைகளுக்காகவும் காவலுக்காகவும் நாய்கள் குரைப்பதில் தவறில்லை.அவை ஜனநாயகம் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்.தெருவில் போவோரையெல்லாம் கடிக்க துரத்துவது அவசியமற்று மற்ற நாய்களை கடித்து குதறுவது இது எந்த நாய்களாக இருந்தாலும் நாய் வண்டியில் ஏற்றி அனுப்புவதுதான் பொது அமைதிக்கு நல்லது.

        • அன்னன் மீரா சாகிபு டி என் டி ஜே ______அடுத்தவன் மதத்த குறித்து அசிங்கமாக பேசி குறைக்கின்றன அது காவலுக்காக குறைப்பதாக அதன் டிவிடி வாங்கி பார்க்கும் மீரா சாகிபு வியந் தேத்தலாம் அல்லா காவாலுக்காக நாய்களை குறைக்க சொல்லி இருக்கிறாரா இல்லை கருப்பு நாயகளையெல்லாம் கொல்லச்சொல்லி முகமதின் மூலம் உத்தரவிட்டாரா என்று கதிஸ் ஆதாரங்களைப்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுகிறென்

    • இப்படியும் ஒரு கள்ளப்பரப்புரை.தமிழகத்தில் இந்துக்களும் முசுலிம்களும் உறவுமுறை சொல்லி பழகுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் வியாசன் மறுக்கும்போது தலித்கள் உறவுமுறை சொல்லும் எடுத்துக்காட்டுகளாகவே சொல்கிறார். இந்த மேதாவியோ ரெண்டு பேரும் மாட்டுக்கறி திங்குரதுனால ஒருத்தர ஒருத்தருக்கு புடிச்சிருக்கு என்கிறார்.அதாவது தலித்-முசுலிம் நல்லிணக்கம் மட்டுமே தமிழகத்தில் நிலவுவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயலும் கயவாளித்தனம் இது.ஆனால் உண்மை நிலையோ வேறு விதமாக உள்ளது.பல்வேறு சாதி பிரிவு இந்து மக்களும் முசுலிம்களோடு இந்த வகையான இணக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.

  66. மீண்டும் என் தமிழ் சொந்தங்களுக்கு தமிழ், தமிழ்கலாச்சாரம் என்று சொல்லி நம்மை பிளக்க நினைக்கும் கோடாரி காம்புகளை அடையாளம் கண்டிருப்பீர்கள்.ஒருவகையில் இதுபோன்ற புல்லுருவிகள் நமக்குள் இருக்கும் தடுப்புச்சுவர்களை உடைத்து நொறுக்குவதற்க்கும் அவர்களை அறியாமல் காரணமாய் இருக்கிறார்கள்.இவர்கள் இல்லையென்னாறால் இதுபோன்ற விவாதங்கள் நீட்சிபெறாது.பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்காது.ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் மதிப்பில் சில சந்தேகங்களை மனதோடே புதைத்திருப்போம்.ஒரு சமூகம் அவர்கள் விருப்பப்படி உடுத்தும் உடையை வைத்து எவ்வளவு மல்லுகட்டி அவர்களை இகழ்கிறது பாருங்கள்.இது கலாச்சார ஆபத்தாம்.பிணமாய் போன எண்பது வயது முதியவரை தூக்கிக்கொண்டு செல்ல நாதியற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு கலாச்சாரம் பற்றி பேசுகிறது வக்கற்ற கூட்டம்.நானும் கூட இந்த நிலையில்தான் இருந்திருப்பேன் இஸ்லாத்தை தழுவாவிடில். என் பொண்டாட்டி என்ன உடுத்தவேண்டும் என்று இவர்களிடம் தான் கேட்டு அவள் முடிவு செய்யவேண்டுமாம்.! அவள் கருப்பு கோணியை தைத்து போடட்டும் அல்லது மஞசள் போர்வையை தைத்து போடட்டும்.வந்து உருவி விட்டுடுவார்களாமா?நான் தமிழன் என்று நிரூபிக்க நீங்கள் யாரய்யா? நான் முஸ்லிம் இல்லை வெறும் தமிழன் மட்டும்தான் என்று உங்களுக்கு அஞசி நான் சொல்ல வேண்டுமோ? அரைகூவல் விடுக்கிறோம்,ஓங்கி ஓங்கரமாய் ஒலிக்கிறோம். நீங்கள் என்ன வேடம் போட்டு வந்தாலும் எங்களின் ஒரு அணுவையும் அசைத்துவிட முடியாது.நாங்கள் முஸ்லிகள் நாங்கள் ஓரிறை கொள்கையாளர்கள்.எங்களிடம் ஜாதி இல்லை பேதம் இல்லை. மேலோன் கீழோன் இல்லை.இறைவனன்றி நாங்கள் எவனுக்கும் அஞுசுவதுமில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழின் சங்கநாதம் உங்களுக்கு வெறும் வார்த்தை. எங்களுக்கோ அது வாழ்க்கை. தமிழ் கலாச்சாரம் பேணி, உலக கலாச்சாரம் சமைத்தவர்கள் நாங்கள்.உங்கள் யாழ் கலாச்சாரம் இலங்கை என்ற் குருவித்தலையின் தென்பகுதி மச்சமாய் முடிந்து போனது.இங்கே அந்த பருப்பு வேகாது.தொடர்ந்து பத்துவருடங்களாக மிக அழுத்தமான மத அடையாளத்தோடு இருந்த ஒருவர்தான் எங்களின் பிரதமர்.எங்களுக்கு அவர் அடையாளம் எந்த உறுத்தலையும் தரவில்லை.அவ்ர் மத நம்பிக்கை அவருக்கு.அவரின் மத கலாச்சாரம் அவர் உரிமை.இதில் எனக்கென்ன உறுத்தல்? இதுவே எங்களின் மனநிலை.இதை பழகுவதற்க்கு நிறைய பெருந்தன்மை வேண்டும்.அதற்க்கு நிறைய பயிற்ச்சியும் பக்குவமும் வேண்டும்.நான் நினைக்கிறேன் அது இவர்களுக்கு மிக கடினம்தான்.இதையே ஒரு சவலாக ஏற்று இவர்கள் முயற்ச்சிக்கலாமே

  67. வியாசனுடைய பிரச்சனை என்னவென்று புரிகிறதா?”புர்கா ஏன் போடுகிறீர்கள் தாடி ஏன் வைக்கிறீர்கள் அரபியில் ஏன் பெயர் வைக்கிறீர்கள்”என்று கேட்டு கடைசியில் இஸ்லாத்திற்க்கு ஏன் மாறினீர்கள் என்று முடிக்கிறார்.அவருடைய பிரச்சனை இதுதான்.இதற்க்குத்தான் தமிழ் தமிழ்கலாச்சாரம் இலங்கைபோர் விடுதலைப்புலி புரொட்டா சால்னா என்றெல்லாம் சுற்றி சேரும் இடம் வந்து சேர்ந்துவிட்டார்.குளத்தோடு கோபித்து குண்டி கழுவாமல்,நாங்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்திற்க்கு போய்விட்டோமாம்.அம்பேத்கரும் கழுவாமல்தான் புத்தமதம் போயிருக்கிறார்.இப்போது அம்பேத்கருக்கு என்ன பதில் கூறுவார் என்றால்,வழக்கமான காவிகளின் வாய்ப்பாடுதான்”இந்துமதத்தின் ஒரு கூறுதான் புத்தமதம்”.இந்த லட்சணத்தில் தமிழ்கலாச்சாரம். சரி நாங்கள் யாராவது இஸ்லாத்தை அணுஅணுவாய் கற்றுதான் முஸ்லிமானோம் என்று சொன்னாமா?அது மிக மிக மிக சொற்பமாய் நடந்திருக்கலாம்.ஆனால் பெரும்பாலும் நாங்கள் ஒடுக்கப்பட்டதும் தாழ்த்தப்பட்டதும் விலங்குகளைவிட கேவலமாய் நடத்தப்பட்டதும்தான் காரணம்.நேற்றுவரை நடந்து கொண்டிருக்கிறது.கண்ணை விரித்துப்பாரும் வியாசனே. ” நாமெல்லாம் இந்து நாங்கள்தான் இந்துக்களின் பாதுகாவர்கள்”என்று கூவி கூவி வெறுப்பு வளர்த்த ஒரு வெறிநாய்களின் சத்தத்தயும் காணோம்.அறிவும் சிந்தனையும் தொலைநோக்கும் கொண்ட பெரும்படிப்பு படிக்கிற இளைஞனே அவமானம் தாளாமல் நாண்டுக்கிட்டு செத்திருக்கிறான்.இதில் இவர் பழமொழி சொல்கிறாராம்.குளத்தில் கோவிச்சிக்கிட்டு குண்டி கழுவாமல் போனோமென்று.நாங்கள் போகவில்லையென்றால் இன்னும் கழுவாத குண்டியோடுதான் நாறிக்கொண்டு திரிவோம்.இன்னொன்றையும் சொல்லி கொள்கிறேன்.அடக்குமுறையாலும் அவமானத்தாலும் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றாலும் இன்று அதன் கொள்கையாலும் நடைமுறையாலும் உயிரினும் மேலாய் மதித்துக்கொண்டிருக்கிறோம்.எங்களில் உள்ளவர்களையும், “அதன் கொள்கை கோட்பாட்டை நன்றாக விளங்குங்கள் மற்ற மற்ற மதங்களோடு ஒப்பிட்டுபார்த்து உணருங்கள்.அதன் மூலமாகவே உங்கள் நம்பிக்கை உறுதிபெறும்”என்றே மன்றாடுகிறோம்.இப்போது சொல்கிறேன்.இஸ்லாத்தை நன் கு விளங்கி ஏற்ற ஒருவன் இந்த உலகையே விலையாக கொடுத்தாலும் இஸ்லாத்தை விட்டு விலக மாட்டான்.இஸ்லாம் விள்ங்கி ஏற்றுக்கொள்ளப்படுகிற காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.என்ன அவதூறுகளை நீங்கள் அள்ளி வீசியும் அதன் பரவலை தடுக்க முடியா ஆத்திரத்தில் கடைசியில் உங்கள் வாயிலிருந்தே உண்மை வெளிவந்து விடுகிறது.இன்னும் தொடருங்கள் உங்கள் முயற்ச்சியை.எங்களில் யாராவது இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறோமா அல்லது புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களின் நிலை நின்றுவிடுகிறதா? என்று.

    • மீரா சாஹிப் அவர்களே !

      இந்து மதத்தின் அடக்கு முறை தாங்காமல் இசுலாமியராக மாறினேன் என்கிறீர்கள் . நல்லது, வரவேற்கிறேன் . ஆனால் அப்படிப்பட்ட சாதி அடக்கு முறைய எதிர்த்த நீங்கள் , சாதி அடக்கு முறையின் வேறு வடிவமான பெண் அடிமை தனத்தை அதே மதம் என்னும் போர்வை போர்த்தி கொண்டு செய்வது தகுமா ?

      அடக்குமுறை என்பதை எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்க வேண்டாமா ?

      தஜகிஸ்தான் என்னும் இசுலாமிய பெர்ம்பான்மை நாட்டிலே ஹிஜாப் அணிய தடை அங்கு மத போதை குறைய தாடியை அரசாங்கமே மழித்து விடுகிறது . அப்படி பட்ட சிந்தன வந்திரக்க வேண்டுமே ? இந்தியா பெரும்பான்மை இசுலாமியரானால் சரியா சட்டம் வரும் என்று சிந்திப்பது சரியா ? ஏன் தகிச்தான் போன்று மதசார்பற்ற நாடாக முடியாதா ?

      கடைசியாக அங்கே அரபி பேரு கூட வேண்டாம் என்று மாற்றுகிறார்கள் . நீங்கள் அரபி பெயர் வைப்பதை குறை கூறி சொல்லவில்லை ஒரு இன்பார்மேசனாக சொல்கிறேன் . சமஸ்கிருத பெயர் அதிகம் வைத்திருக்கிறோம் அதை பேசன் என்று ஏற்று கொள்கிறோம் அது போல எனக்கு அரபி பேரு எல்லாம் பிரச்சினை இல்லை . கவுண்டர் நாயக்கர் என்று சாதி பேரு வைப்பதை விட சமத்துவ பேரு தான். ( சாஹிப் சாதி பேரு இல்லை என்று நினைக்கிறன் 🙂 )

      • ராமன், மதச்சார்பற்ற நாடா மதச்சார்புள்ள நாடா கம்னியுச நாடா என்பதை அங்கு வாழும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.இதுபற்றிய என் பதிவுகள் இந்த பக்கத்தின் ஆரம்ப பதிவுகளில் மிகத்தெளிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது.சாகிப் என்பது ஒரு பட்டம்.வடக்கத்தியர்கள் சாகேப் என்று கூறுவார்கள்.பாபாசாகேப் தாதாசாகேப் என்பதெல்லாம் இதிலிருந்து வந்ததுதான்.எனக்கு பட்டம் தர நான் ஒன்றையும் கிழிக்கவில்லை.மீராசாகிப் என்று ஒரு முஸ்லிம் பெரியவர் அழைக்கப்பட்டார்.அதையே எனக்கு பெயராக வைத்திருக்கிறார்கள்.என் பெயரில் எனக்கு எந்த பங்கும் இல்லை.

    • “அழுவார் அழுவார் எல்லாம் தன் கரச்சல்(கவலை), திருவன் பெண்டிலுக்கு அழ ஆளில்லையாம்’ என்ற இலங்கைப் பழமொழி தான் மீரான்சாகிப் அவர்களின் புலம்பலைப் பார்த்தும் எனக்கு நினைவுக்கு வருகிறது

      நான் கூறியதை தவறாகப் புரிந்து கொண்டது மட்டுமன்றி எல்லாவற்றையும் தனது தலையில் போட்டுக் கொண்டு குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்கிறார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மீனாட்சிபுரத்தில் முஸ்லீமாக மதம்மாறிய தலித்துகளில் இவரும் ஒருவராக இருந்தாலோ அல்லது இந்துவாக இருந்து அண்மையில் மதம் மாறியவராக இவர் இருந்தாலே தவிர நேற்றைய பதிலில் நான் கூறிய கருத்துக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் ‘யாரோ எவருடைய செத்தவீட்டுக்குப் போன, திருவனின் பெண்சாதி எப்படித் தன்னை ஒருவரும் கட்டியழவில்லை’ என்று குறைப்பட்டுக் கொண்டு, அதற்காக அழுதாளோ அதைப் போலவே தான் மீரான் காக்காவும் என்னவோ எல்லாம் சொல்லி அழுது புலம்புகிறார். 🙂

      அவருக்காக மேலும் விளக்கமாகக் கூறுவதானால், இருபதாம் நூற்றாண்டிலேயே மீனாட்சிபுரத்தில் முஸ்லீமாக மதம் மாறிய தலித்துக்கள் எவருமே இஸ்லாத்தைக கற்று, குரானைக் கரைத்துக் குடித்து விட்டு, உலக மதங்கள் எல்லாவற்றிலும் சிறந்த மதம் இஸ்லாம் தான் என்ற முடிவுக்கு வந்த பின்னர் மதம் மாறவில்லையென்றால், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் உண்மையில் இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தான் தமிழர்கள் மதம் மாறினார்களென யாரும் வாதாட முடியாது. ஆகவே இக்கால தமிழ் முஸ்லீம்களின் தமிழ் முன்னோர்கள் கூட இஸ்லாத்தை நன்கு அறிந்து கொண்டு தான் மதம் மாறினார்களா என்பதும் விவாதத்துக்குரிய விடயம் தான்.

      பார்ப்பனர்கள் எவ்வாறு தமிழை நீசமொழி எனக் கருதினார்களோ அது போன்றே தமிழ்நாட்டு முஸ்லீம்களும் தமிழை நீசபாசை என்று தான் கருதினார்களாம் இந்துக்களின் மொழியாகிய தமிழில் “குர்ஆனை மொழி பெயர்த்தல் ‘பாவம்’ (ஹராம்) என்று மார்க்க கட்டளைகளை வேறு அன்று போட்டு வைத்திருந்தார்களாம் தமிழ்நாடு முஸ்லீம்கள், ஆனால் வஹாபியம் தமிழ்நாட்டில் பரவிய பின்பு தான் குரானை தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தனர் என்றும் நான் கேள்விப்பட்டேன்.

      இஸ்லாமிய மதமாற்றங்களையும், அவர்களின் தமிழ்நாட்டை அரபு மயமாக்கும் திட்டத்தையும், விமர்சிப்பவர்களுக்கும், கேள்வி கேட்கிறவர்களுக்கும் பூணூலை அல்லது அரைக்கால் சட்டையைப் போட்டு விட முஸ்லீம்கள், அதிலும் குறிப்பாக வஹாபிஸ்டுகள் முயல்வது இணையத் தளங்களில் வழக்கமாக நடப்பதொன்று தான். அதைத் தான் மீரானும் இங்கு செய்ய முயற்சிக்கிறார்.
      மதமாற்றத்துக்கு எதிர்க் கருத்து என்னைப் போன்ற தமிழர்களிடமிருந்து வருவதை தமிழன் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு அவருக்குள் ஒளிந்திருக்கும் வஹாபியால் தாங்க முடியவில்லை.ஆத்திரம் மீரானின் கண்களை மறைக்கிறது.

      அவரே கேள்வியையும் கேட்டு தானே அதற்குப் பதிலையும் கூறும் மீராசாகிப்பைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆபிரகாமிய மதங்களாகிய கிறித்தவ, இஸ்லாமிய மதங்களையும் கற்று, அவற்றைப் பற்றி நன்கறிந்து கொண்டது மட்டுமன்றி இஸ்லாத்திலுள்ள சாதிப்பாகுபாடுகளையும், ஆதாரத்துடன் விளக்கிய அண்ணல் அம்பேத்கார் கடைசியில் பரதக் கண்டத்தின் மக்களோடும், அவர்களின் கலாச்சார விழுமியங்களோடும் சம்பந்தப்பட்ட, பாரத மண்ணில் தோன்றிய ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்கம் குறைந்த புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார். உண்மையைக் கூறப் போனால் கெளதம புத்தர் ஒன்றும் புதிதாகக் கூறவில்லை, அவர் கூறியதெல்லாம் இந்துமதத்தில் ஏற்கனவே கூறப்பட்டவை தான். அவரது அறிவு அல்லது ஞானம் அரேபியாவிலிருந்து வரவில்லை, அவர் இந்தியாவிலிருந்து பெற்றுக் கொண்டதும், கற்றுக் கொண்டதும் தான்.

      இஸ்லாத்தில் கூட சாதிப்பாகுபாடிருக்கும் போது (நான் மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்காரும் கூறுகிறார்) இந்துக்கள் சாதிப்பாகுபாட்டினால் அடிபட்டுக் கொண்டு சாகும் போது மட்டும் வகஹாபிகளின் நெஞ்சம் பட படவென்று துடிக்கத் தொடங்கி விடுகிறது, ஏனென்றால் அவர்களின் தூண்டிலை வீச வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை அவர்கள் உணர்வதால் தான் போலும்.

      அவையெல்லாம் ஒருபுறமிருக்க, என்னைப் பொறுத்த வரையில் __________இஸ்லாத்தைப் பற்றி நன்கறிந்து கொண்டும், அரேபிய முஸ்லீம்களுடனும் பழகிப் பார்த்த பின்னர், தமிழர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாறினால் அதை நான் மிகவும் வரவேற்பேன். உண்மையில் என்னை ஆர் எஸ் எஸ் அல்லது இந்த்துத்துவா என்பதைப் போன்ற அபத்தம் வேறெதுவும் கிடையாது. வஹாபியிசம் எந்தளவுக்கு தமிழர்களின் நலன்களுக்கு எதிரனாதோ அதே போன்று இந்துத்துவாவும் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானது. அவை இரண்டையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டுமென்பது தான் எனது கருத்தாகும்.

      உண்மையில் எனக்கு இந்துத்துவாக் கொள்கைகளில் ஈடுபாடிருந்தால் ஆபிரகாமிய மதங்களில் ஒன்றாகிய கிறித்தவத்துக்கு தமிழர்கள்மதம் மாறுவதையும் நான் எதிர்க்க வேண்டும். ஆனால் நான் அதை எதிர்க்கவில்லை. ஏனென்றால் கிறித்தவர்களாக மாறும் தமிழர்கள் கிறித்தவத்தை தமிழாக்குகிறார்கள். கிறித்தவத்துக்கு மதம் மாறுவதால் அவர்களின் தமிழன் என்ற அடையாளம் அவர்களை விட்டுப் போவதில்லை. அவர்கள் தமது முன்னோர்களின் மதமாகிய சைவத்தையும் மதிக்கிறார்கள், மதவேறுபாடின்றி நடந்து கொள்கிறார்கள் (இலங்கையில் அப்படித்தான்). மத அடையாளத்தைக் கடந்து தமிழர்களாக ஒன்றுபடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஆனால் இஸ்லாம் தமிழர்களை தமிழர்களிடமிருந்து பிரிக்கிறது. தமிழர்களை ஆடை, மொழி, கலை, கலாச்சாரத்தால் வேறுபடுத்தி அரபுமயமாக்கி தமிழினத்தை நலிவடையச் செய்கிறது. அது இலங்கையில் நடந்து முடிந்து விட்டது, வஹாபிகள் எப்படி மறைத்தாலும், மறுத்தாலும் தமிழ்நாட்டில் அதன் அறிகுறிகள் வெளிப்படையாகத் தென்படத் தொடங்கி விட்டன. அதனால் தான் நான் தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கலை எதிர்க்கிறேன்.

  68. மீரான்சாகிப் உண்மையில் தலித்தாக இருந்து முஸ்லீமாக மாறியவர் என்றால், அவர் இன்னும் மணம் முடிக்காதவராக இருந்தால், அவர் உண்மையைக் கூறினால், இலங்கையிலுள்ள பாரம்பரிய குடும்பத்தின் தமிழ் பேசும் முஸ்லீம்கள், அதிலும் யாழ்ப்பாண முஸ்லீம்கள் இவருக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள். புதிதாக மதம் மாறிய முஸ்லீம்களை, இலங்கையில் பாரம்பரிய முஸ்லீம் குடும்பங்களில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். நன்றாக வரவேற்று விருந்து வைப்பார்கள், அது இலங்கை மக்களுக்கு எல்லோருக்கும் உள்ள வழக்கம் தான். எங்களின் நாடு வளமான நாடு, எங்களின் வீடுகளுக்கு வருகிறவர்களை உணவருந்தாமல் நாங்கள் அனுப்புவதில்லை. 🙂

    • மீரா சாகிபு புளுகுகிறார் அவருக்கு இசுலாம் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கலாம் ,இலங்கையில் மாத்திரம் அல்ல தமிழ் நாட்டிலும் தாழ்த்தப்ப்ட்ட இனத்திலிருந்து மதம் மாறிய முஸ்லீம் ஆண்களுக்கு பாரம்பரிய முஸ்லீம்கள் பெண் குடுப்பது இல்லை இதிலிருந்தே தெரிவது என்ன என்றால் தலித் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள்தான் தீண்டாமை கொடுமையிலிருந்து விடுபட இசுலாத்தை தேர்ந்து எடுத்து அங்கு போனார்கள் என்பது பச்சை பொய் என்பது, இசுலாமிய மதத்துக்கு பல உயர் சாதிக்காரர்கள் மாறி இருக்கிறார்கள் வியாசன் சும்மானலும் இசுலாமிய மதத்துக்கு தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே மாறினார்கள் என்ற பொய்ப்பரப்புரையை வலியுருத்த வேண்டாம் என்று தங்களை கேட்டுக்கொள்ளுகிறேன்…

  69. ராமன்,பெண்ணடிமைத்தனம் என்று முஸ்லிம் பெண்களின் உடையை வைத்து முடிவு செய்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.ஆனால் இது பெரியவிவாதத்திற்க்குரிய ஒன்றாகவே இருக்கும்.பெண்களின் உடைகளைப்பற்றிய தெளிவு, நிலையான பார்வை பெண்ணியவாதிகளிடமே இன்னும் கிடையாது.ஒருபக்கம்”பெண்களின் ஆடை சுத்ந்திரம் அவர்களின் உரிமை.அதில் யாரும் தலையிடக்கூடாது.ஆபாசம் பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது”என்பார்கள்.மறுபக்கம் ஆபாச சுவரொட்டி கிழிப்பு,பெண்களை போக பொருளாக பார்கிறார்கள்”என்பார்கள்.ஆபாசம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்றால்,பீப் பாடலின் ஆபாசம் கேட் க்கும் காதுகளில் இருக்கிறது என்பது எப்படி தவறாகும? நாங்கள் இரண்டையுமே தவறென் கிறோம்.பெண்கள் உடலால் ஈர்க்கப்படுதலைவிட ஆளுமையால் மதிக்கப்படவேண்டும்.பெண் உடல் ஆணால் ஈர்க்கப்படுதல் என்பது அடிப்படை உளவியல்.ஐந்து வயது குழந்தையை பாலியல் வ்ல்லுறவுக்கு உள்ளாக்கும் ஆண் மிருகங்களை தயவுசெயது இங்கே ஒப்பிட்டுவிடாதீர்கள்.ஒரு க்ண்ணியமான ஒழுக்க மாண்புள்ள ஆண்கூட பெண்ணின் உடல் திரட்ச்சியால் கவனம் ஈர்க்கப்படவே செய்வான்.அதிலிருந்து அவனை மாற்றி தங்களை மதிப்போடும் மாண்போடும் அவனை பார்கச்செய்ய தங்களின் அவயங்களை மறைத்துக்கொள்ளலே அவர்களுக்கு கண்ணியம்.இந்த பர்தா என்ற கருப்பு உடை,நீங்கள் பெயர்வைப்பதற்க்கு சொன்னதைப்போல அது ஒரு இப்போதைய fபேஷன்.அப்படி ஒன்றும் இஸ்லாத்தில் சட்டமில்லை.காலப்போக்கில் அது வேறு வடிவம் எடுக்கலாம்.கவனம் ஈர்க்கும் அலங்காரங்களை அன்னிய ஆண் முன் வெளிகாட்ட வேண்டாம் என்பதுதான் விதி.வியாசன் களின் உளறல்களுக்காக நாங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியதில்லை.மத போதையை குறைக்க தாடியை மழிப்பதாக கூறினீர்கள்.தாடி வைத்தால் ஏன் போதை வருகிறது?ஒருவர் தன் மத கொள்கையை பேணி நடந்தால் ஏன் போதை வருகிறது.இதற்குத்தானே மன்மோகன்சிங்கை குறிப்பிட்டிருந்தேன்.அவரின் அரசியல் செயல்பாட்டை நான் பேசவில்லை.தாடி,தாடியில் நேர்த்தியான ஒருவலை,கச்சிதமாய் வடிவமைக்கப்பட்ட ஒரு தலைப்பாகை.பத்து வருடமாய் பிரதமராய் இருந்தாரே மத போதையோடுதான் இருந்தாரா?இந்தியாவின் உணவு உற்ப்பத்தியிலும் சரி தொழிற் உற்பத்தியிலும் சரி பாதுகாப்புத்துறையிலும் சரி இன்னும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி சீக்கியர்கள் மிக அழுத்தமான இதே மத அடையாள்த்தோடுதான் இருக்கிறார்கள்.ஒருபோதும் இது போதையை தராது.போதையையும் வெறியையும் தருவது வக்கரம்,காழ்ப்பு,குரோதம்.அது தாடியிலோ தொப்பியிலோ இல்லை.உள்ளத்தில் இருக்கிறது.அதை சரிசெய்துவிட்டால் யார் அடையாளமும் நமக்கு எந்த வேறுபாட்டையும் காட்டாது.அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்ற புரிந்துணர்வை நமக்குள் ஏற்ப்படுத்திவிடும்.என் கடிதம் முழுக்க இந்த உணர்வை நமக்குள் ஏற்ப்படுத்த்வே நான் தொடர்ந்து முயல்கிறேன்.அதே வேலை தீவிரமாய் மதநெறிகளை பின்பற்ற நினைப்பவன்.என் மத நம்பிக்கை யார் மேலும் என்னை குரோதம் கொள்ள வைத்ததில்லை.மத நம்பிக்கை யாரையும் அப்படி வைக்காது.மத வெறியே அப்ப்டி உருவாக்கும்.

    • மீண்டும் மீண்டும் புர்கா -கண்ணியம் புர்கா -கண்ணியம் கூறி பெண்ணடிமை செய்து கொண்டே , சாதி அடக்கு முறைக்கு எதிரானவர் போல நாடகம் ஆடுகிறீர் .

      ஹிச்பீட் என்று ஒருவரும் உங்களை போலவே ! தன்னுடைய மத நலன் கருதி இந்து மதத்தை விமர்சிகிரீர்கள் . உங்களை போன்றவர்களை காட்டிதான் ஆர் எஸ் எஸ் வளர்கிறது . அதுவே அவர்கள் இருப்பிற்கு பிடிமானம் .

      மத நலன் கருதாமல் மானுடம் நலன் விளைந்து விமர்சிக்க ஆரம்பித்தால் அவர்கள் தேவை குறைந்து போகும் .

      http://www.examiner.com/article/imam-cologne-victims-deserved-to-be-raped-by-muslims-because-they-wore-perfume

      இதற்கு மேல் விவாதம் தொடர விருப்பம் இல்லை .முற்றும்

  70. வியாசன் நான் எப்போது உங்களிடம் யாழ்பாணத்தில் பெண்பார்க்க சொன்னேன்?நான் ஏனய்யா யாழ்பாணத்தில் பெண் பார்க்க வேண்டும்.என் ஊரில் பெண்களே இல்லையா உங்களிடம் யாழ்பாண்த்தில் பெண் பார்க்க சொல்வதற்க்கு.ஒருவேளை நான் தமிழன் என்று நிரூபிக்க என் பொண்டாட்டி புர்காவை கழட்ட சொல்வதைப்போல இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்று நிரூபிக்க யாழ்பாணத்தில் பெண் கட்ட சொல்கிறீரோ? தமிழனைய்யாநீர்!நான் என்னை குறிப்பிட்டு” நான் தலித்திலிருந்துதான் வந்தேன்? என்று எப்போது சொன்னேன்? நீங்களெல்லாம் இஸ்லாத்தை விள்ங்கியா வந்தீர்கள் என்ற கேள்விக்கு இல்லவே இல்லை ஜாதிய அடக்குமுறையே பெரும்பாலும் நாங்கள் இஸ்லாத்தை தழுவ அடிப்படை கரணம் என்ற வரலாற்று உண்மையை சொன்னேன்.நான் என்ன ஜாதியிலிருந்து வந்தேன் என்பதுதான் என் க்கே தெரியாதைய்யா.என் தந்தை வழி முப்பாட்டன் நாடாராக இருக்கலாம்.என் தாய் வழி முப்பாட்டன் தலித்தாக இருக்கலாம்.என் மனைவி வழி முப்பாட்டன் தேவராக இருக்கலாம்.இந்த அடையாளத்தைத்தான் இஸ்லாம் முற்றிலும் அழித்து விட்டதே.அத்னால்தான் உமது ஊர் துலுக்கன் நாங்களெல்லாம் அரேபிய இறக்குமதி என்று பைத்தியக்காரத்தனமாய் பெருமை அடிக்கிறான்.அப்படியே அரபியனாக இருந்தாலும் அது பெருமைக்குறிய ஒன்றா? இந்த லச்சணத்தில் தான் இலங்கையன் இருக்கிறான்.இதில் எனக்கு வேறு அங்கு பெண் பார்ர்க்க போகிறீராக்கும். சரி இவ்வள்வு நேரம் த்மிழ் தமிழ் என்று குதித்துவிட்டு இப்போது என்ன பாரத கலாச்சாரம் பக்கம் போய்விட்டீர்? அம்பேத்கர் அந்த பக்கமாய் விரட்டிவிட்டுட்டாரோ? கொஞசம்கூட கூச்சமே இல்லயா?நம் எழுத்துகள் பதிவாகிறதே படிப்பார்களே நாம் இதற்க்கு முன் என்ன எழுதினோம்?தமிழ் சாயம் பூசியது அம்பேத்கரை பார்த்ததும் கலைகிறதே என்ற சொரணையே இல்லாமல் எப்படி பேசமுடிகிறது வியாசன்.இதுதான் காவிகளின் அசுர பலம்.கவலையே படாமல் அம்மணமாய் நின்று ஆடும் கலையை இலங்கையிலிருந்து நாக்பூரில் க்ற்றிருக்கிறீர்கள்.இந்த பத்தியிலுள்ள என் எழுத்துகள் அனைத்தையும் பாரும்.நான் எங்காவது முரண்பட்டிருக்கிறேனா? என் கொள்கைகளை கோட்பாடுகளை எங்காவது ஒளித்திருக்கிறேனா?என் மத கொள்கைகளிலும் கடவுட் கோட்பாட்டிலும் எவ்வளவு உறுதியாக இருக்கிறேனோ அவ்வளவு உறுதியாக என் தமிழ் சொந்தங்களோடும் இந்திய சொந்தங்களோடும் உலக சொந்தஙகளோடும் இணக்கமாக இருக்கிறேன்.ஒன்றை விட்டு ஒன்றை அடைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.என் மார்க்கம் என்னை எல்லா வகையிலும் தெளிவாக்கியிருக்கிறது.இந்த தெளிவு இல்லாதுதான் உமக்குள் இவ்வளவு முரண்பாடு.குழப்பம்.பொக்கரிப்பு.காவிச்சிந்தனையை கழற்றி எறிந்துவிட்டு கனிவோடும் நட்போடும் மக்களை பாரும்.இவ்வளவு கேவலப்பட்டு வேஷம் கலைந்து அம்மணமாய் நிறகக வேண்டியதில்லை.கம்பீரமாக கெளரவமாக நிற்க்கலாம்

    • ஐயா மீரா சாஹிப் …………..

      //வியாசன் நான் எப்போது உங்களிடம் யாழ்பாணத்தில் பெண்பார்க்க சொன்னேன்?நான் ஏனய்யா யாழ்பாணத்தில் பெண் பார்க்க வேண்டும்.//

      யாரும் உங்களுக்கு இங்கு பெண் பார்க்கவில்லை… ஒரு வேளை நீங்கள் தாழ்த்தப்பட்ட சமுகத்தில் இருந்து இசுலாமியராக மாறியிருந்தால், இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள் என்பதைத் தான் வியாசன் அவ்வாறு கூற வந்தார். இதன் மூலம் இலங்கையில் வசிக்கும் இசுலாமியர்களின் பண்பை இன்னதென்று அவர் விளங்க வைத்தார். அவ்வளவுதான்.

      //”பன்றிகறி உள்ள தட்டிலிருக்கும் மற்ற உணவுகளை நான் உண்பேன் நீங்கள் உண்பீர்களா?” என்று கேட் கிறீரே நாங்கள் ஏன் உண்ண வேண்டும்? எங்களுக்கு தடுக்கப்பட்ட உணவை நான் ஏனய்யா உண்ண வேண்டும்.//

      நட்புக்காக தான்.. பசுவை புனிதமென கருதும் ஒரு இந்து சைவர், தங்களின் மாட்டுக் கறி பிரியாணி உள்ள தட்டில் அன்புடனும் நட்புடனும் இருந்து ஒரு பதார்த்தத்தை சுவைக்கிறார். ஆனால், அந்த பெருந்தன்மையான குணம் உங்களிடம் இல்லை பாருங்கள். தடுக்கப்பட்ட உணவு,வட்டிக்கு பணம் விடுதல், மது, கொள்கை,கொழுக்கட்டை என்று எதை எதையோ கூறி உங்களின் வக்கிரத்தை நியாய படுத்துகிறீர்கள். இதற்க்கு மாமன் மச்சான்,அண்ணன்,தம்பி என்கிற உறவு முறை பம்மாத்து வேறு. நிற்க…

      //சிலைகளுக்கு பூஜை செய்து பிரசாதம் என்று தந்தால்…..//

      அதென்ன சிலைகள் … “பிற மத தெய்வங்கள்” என்று நாகரீகமாக கூறத் தெரியாதா. நானும் கூட இயேசு பிரானின் சிலையை தான் தினமும் வணங்குகிறேன். அது என் நம்பிக்கை. எங்களின் நம்பிக்கைகளை “சிலை” என்றுக் கூறிக் கொச்சைப் படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது?. எங்களின் வழிப்பாடுகளை விமர்சிக்க உங்களுக்கோ அல்லது டி.என்.டி.ஜே___________ களுக்கு யார் அதிகாரம் வழங்கியது. இது தான் இஸ்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடா?

      //சரி இவ்வள்வு நேரம் த்மிழ் தமிழ் என்று குதித்துவிட்டு இப்போது என்ன பாரத கலாச்சாரம் பக்கம் போய்விட்டீர்? அம்பேத்கர் அந்த பக்கமாய் விரட்டிவிட்டுட்டாரோ?//

      மதம் மாற வேண்டும் என்று நினைத்த அம்பேத்கர் இசுலாமையோ கிருத்துவத்தையோ தேர்ந்தெடுக்காமல் ஏன் புத்த மதத்திற்கு மாறினார் என்பதைத் தான் அவர் விளக்கி இருக்கிறார். இதில் தவறொன்றும் இல்லையே. இதில் கிண்டல் வேறு. எதையும் புரிந்துக் கொண்டு பதில் எழுதுங்கள்.

      மீராசாஹிப் அவர்களே, தாங்கள் இசுலாமிய பற்றாளராக இருங்கள் , அதனால் தவறொன்றுமில்லை. உங்கள் மதத்தினை நீங்கள் நேசியுங்கள். உங்களின் மதத்தினை நீங்கள் நேசிப்பதில் என்ன தவறு இருக்க முடியும். ஆனால் நேசம் என்பது மத வெறியாக மாறி விடக் கூடாது. டி.என்.டி.ஜே,ஆர்.எஸ்.எஸ்,இந்துத்துவா கும்பல்களை போன்று. விஷயம் இவ்வளவு தான்.

      • அம்மா ரெபெக்காமேரி,இலங்கயிலிருக்கும் இஸ்லாமியர்களின் பண்பை ஏனம்மா அவ்ர் என்னிடம் விளக்குகிறார்.நானா கேட்டேன்.உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கரனுக்கெல்லாமா நான் பொறுப்பு அல்லது ஒவ்வொரு ஊர்கார முஸ்லிம் பண்புகளைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோமா? எந்த இந்து சைவர் மாட்டுக்க்றி உள்ள தட்டில் கிடக்கும் பதார்த்தத்தை அன்புடனும் பண்புடனும் சுவைக்கிறார்.அப்படியே சுவைத்தாலும் சுவைப்பவரைப்பற்றி இங்கு பிரச்சனையில்லையே.யார் சுவைக்க வில்லையோ அவ்ர்களை புரிந்து கட்டாயப்படுத்த கூடாது என்றுதானே கூறுகிறேன்.இதில் பெருந்தன்மை எங்கு வந்தது?கொள்கைய்ளவில் ஒன்றை தவ்று என்று நான் கருதும்போது யாருக்காகவும் எதற்க்காகவும் விட்டுக்கொடுக்காமல் இருத்தலே சரி.இதில் பெருந்தன்மை என்பதற்க்கு வேலையே இல்லை.சிலையை சிலை என்று சொல்வதில் என்ன தவறு.சிலை வழிபாடு என்றுதானே கூறுகிறோம்.சிலையை கடவுளாக உருவக படுத்துவது உங்கள் பார்வை நான் என் பார்வையிலிருந்து அந்த கருத்தை சொன்னேன்.அம்பேத்கர் புத்த மதத்திற்க்கு மாறினார்.அவருக்கு புத்த மத கொள்கைகள் பிடித்தது மாறினார்.அவர் ஏன் இஸ்லாத்திற்கு மாறவில்லை,கிறிஸ்த்தவத்திற்கு மாறவில்லை என்று கேட்டால் இது என்ன கேள்வி.அவ்ர் ஏன் ஒரு மதத்தில் பிறந்து வளர்ந்து இந்த நாட்டின் சட்ட திட்ட்ங்களையே உருவாக்கி பிறகு மனம் வெதும்பி வேறு மதத்திற்க்கு மாறினார் என்பதிலில்லையா இருக்கிறது சூட்சமம்.அதைப் பற்றி எண்ணாமல் “இஸ்லாத்துக்கு மாறல்லியே கிறிஸ்த்தவத்துக்கு மாறல்லியே” என்று “கீழே விழுந்தேன் ஆனால் மீசையில் ம்ண் ஓட்டல்லியே” என்பது ஒரு பதிலா?நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் மிகப்பெரும் படிப்பாளி உலகம் புகழும் சிந்தனையாளர் வாழ்வின் இறுதிவரை அவமானங்களை சுமந்து பொறுக்கவே முடியாத ஆற்றாமையில் தன்னோடு ஒரு பெரும்மக்கள் கூட்டத்தையே கூட்டிக்கொண்டு “நான் இந்துவாக சாகவே மாட்டேனென்று மதம் மாறியிருக்கிறார்.அதை ஆராய்வதை விட்டுவிட்டு அவர் ஏன் இஸ்லாத்திற்க்கு மாறவில்லை கிறிஸ்த்தவத்திற்க்கு மாறவில்லை என்று பேசுவது கேவலமாக இல்லை.இந்த வியாசனுடைய எழுத்தை ஆரம்பத்திலிருந்து படித்து பாருங்கள்.தமிழ் கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவர் போல பேசினார்.”வடக்கத்திய மன்னன் சிவாஜி சைவனாக இருந்தாலும் நான் அவனை பொருட்படுத்த மாட்டேன்.எனக்கு என் தமிழும் என் தமிழ் கலாச்சாரமும் முக்கியம்”ர்ன்று தீவிர தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொண்டார்.இப்போது அம்பேத்கரை சாக்காக வைத்து அகண்ட பாரத கலாச்சாரவாதியாக மறிவிட்டார்.அவ்ரின் பச்சோந்தித்தனம் புரிகிறது.முஸ்லிகளாகிய எங்களை,எங்களின் மத அடையாளங்களை வைத்து தனிமை படுத்தவேண்டும் கொச்சைப்படுத்தவேண்டும் என்பதே அவர் இலக்கு.இப்போது சாயம் வெளுத்துவிட்டது.வேறு ஏதாவது உளறிக்கொண்டு வந்தாலும் வரலாம். உங்களுகென்னம்மா பிரச்சனை.வியாசன் களுக்கு வக்காலத்து வாங்க.

        • ஆத்திரமும், மதவெறியும் மீரானின் கண்களை மறைக்கிறது அதனால் தான் அவர் எழுதியதை மீண்டும் படித்துப் பார்க்காமல் பதிவு செய்கிறார் போல் தெரிகிறது.

          இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையிலிருக்கும் இஸ்லாமியரின் பண்பைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்களுக்கு வக்காலத்து வாங்கியது மட்டுமன்றி, தானும் அடிக்கடி இலங்கைக்குப் போவதாகவும், அங்கு அவருக்கு முஸ்லீகள் பலரையும் தெரியும் என்று பீற்றிக் கொண்டதே மீரான் தான். அதனால் தான் மதம் மாறிய தலித் முஸ்லீம்களை/புது முஸ்லீம்களை இலங்கையில் வாழும் பரம்பரை முஸ்லீம்கள் மணமுடிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டேன். இப்பொழுது என்னடாவென்றால் அவர்களைப் பற்றி எதற்காக என்னிடம் பேசுகிறார், என்று ரெபெக்கா மேரியுடன் சண்டைக்குப் போகிறார் மீரான். நன்றாகத் தானே பேசிக் கொண்டிருந்தார், என்னாச்சு அவருக்கு?

          வஹாபியிசத்தின் நோக்கமே உலக முஸ்லீம்கள் அனைவரையும், அவர்களின் மொழி, கலை, கலாச்சாரங்களை இழக்கச் செய்து, அவர்களை தமது இன, மொழிக் சகோதரர்களிடமிருந்து வேறுபடுத்தி, ஒரு குடையின் கீழ், ஒரே சீருடையில், அரபு மேலாதிக்கத்தின் கீழ இணைப்பது தான். அதனால் தான் தம்மைத் தமிழர்கள் என்று கூறும் தமிழ் நாட்டு முஸ்லீம்களும், தமிழர்களை அழிக்கத் துணை போன தமிழ்பேசும் இலங்கை முஸ்லீம்களும் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படும் போது மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர், ஆனால் பலத்தீனத்தில் யாருக்கும் பல்லு விழுந்தாலோ அல்லது அரபு நாட்டுச் சர்வாதிகாரி எவராவது அவர்களின் மக்களாலேயே கொல்லப்பட்டாலோ வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி விடுகின்றனர்.

          திப்பு அவர்கள் மாட்டுக்கறி உண்பவரின் பக்கத்தில் அமர்ந்து கூட நான் சாப்பிட மாட்டேன் என்று சவால் விட்டதற்குத் தான், பக்கத்தில் உட்கார்வது மட்டுமல்ல, ஒரு முஸ்லீம் நண்பனின் மாட்டுக்கறி(பிரியாணி)யுள்ள தட்டிலிருந்த உணவையே நான் உண்டிருக்கிறேன், அவர் நினைக்குமளவுக்கு சாதி, மதவெறி பிடித்தவனல்ல நான், என்ற என்னுடைய பதிலை எடுத்து வைத்துக் கொண்டு என்னவோ எல்லாம் உளறுகிறார் மீரான்.

          மீரான் சாகிப்பின் சிலைகளுக்குப் பூஜை செய்வது பற்றிய உளறல், அவரது மதச் சகிப்புத்தன்மையின்மையைத் தான் காட்டுகிறது. எகிப்து, துருக்கி போன்ற முஸ்லீம் நாடுகளில் கூட, பழமை வாய்ந்த கிறித்தவ ஆலயங்கள், சிலைகள் எல்லாம் உள்ளன. அவற்றை எல்லாம் தமது வரலாற்றின் அங்கமாகப் பாவித்து அவற்றை பாதுக்காகிறார்கள், மதிப்பளிக்கிறார்கள் முஸ்லீம்கள். அவர்கள் அங்கு வாழும் கிறித்தவர்களை சிலை வழிபாட்டுக்காரர் எனக் குறிப்பிட்டு அவர்களை எதிர்ப்பதில்லை. குறிப்பாக துருக்கி முஸ்லீம்கள், அவர்களின் முன்னோர்கள் சிலர் இஸ்லாமிய மதவெறியால் பழமைவாய்ந்த கிறித்தவ ஆலயங்களைப் போரில் அழித்திருந்தாலும் கூட, அதற்காக மனம் வருந்துவதுடன், எஞ்சியுள்ள கிறித்தவ கோயில்களைப் பெருமையுடன் தமது வரலாற்றுச் சின்னங்களாக புகழ்வதுடன், அவை பாதுகாக்கப் படவேண்டுமெனவும் பேசுவதை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களாகிய தமிழ்நாட்டுக் கோயில்களையோ, வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியோ தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் அப்படியான பெருமையோ, சிந்தனையோ கிடையாது. அவர்களிடம் அப்பட்டமான இந்துமத எதிர்ப்பு தானுண்டு. அதைத் தான் தன்னையறியாமலே வெளிப்படுத்தி விட்டார் மீரான் சாகிப்.

          உண்மையில் இஸ்லாத்தைப் பற்றி, இஸ்லாத்திலுள்ள சாதிப்பிளவுகள் பற்றி அம்பேத்கார் கூறியவற்றை மறைத்து. அவர் இந்துமதத்தை எதிர்த்ததை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, தமது வாதங்களில் அம்பேதகாரையும் துணைக்கழைக்கும் முஸ்லீம்கள் பலர் இருக்கிறார்கள். அதனால் தான் அம்பேத்கார் ஏன் முஸ்லீமாகவில்லை என்ற கேள்வியை மற்றவர்கள் முஸ்லீம்களிடம் கேட்கிறார்கள்.

          நான் என்னை இந்துவென்று அழைத்துக் கொள்ள விரும்புவதில்லை, ஏனென்றால் இந்து எனும் போது, வேதங்களையும், சதுர்வர்ணத்தையும் வலியுறுத்தும் பகவத்கீதையையும் ஏற்றுக் கொள்கிறேன் என்பது போன்ற கருத்து ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் Hindu என்று குறிக்கப் படுவதால், இந்த இணையயுகத்தில், தவிர்க்க முடியாமல் இந்து என்ற சொல் எல்லோரையும் குறிக்கிறது. இந்து மதத்தில் குறைபாடில்லை என்று எந்த இந்துவும் வாதாடுவதில்லை. இந்து மதத்தின் முக்கிய கோளாறு சாதியும், பார்ப்பனீயமும் தான், அவையிரண்டையும் தான் அம்பேத்கார் வெறுத்தாரே தவிர, முழு இந்துமதத்தையும் அல்ல. அதனால் தான் அவர் மத்திய கிழக்கு ஆபிரகாமிய மதங்களைத் தழுவாமல், இந்து மதத்தின் கிளையாகிய புத்த மதத்தைத் தழுவினார்.

          வஹாபியிசத்தால் மூளைச் சலைவை செய்யப்பட்ட மீரானுக்கு விளக்கம் குறைவு என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழனாகிய எனக்கு ஒரு இந்தி பேசும் இந்துவிடமோ அல்லது மலையாளம் பேசும் இந்துவிடமோ உள்ள நெருக்கத்தை விட ஒரு தமிழ் முஸ்லீமிடமுள்ள நெருக்கம் அதிகமாக நான் உணர்கிறேன் என்று நான் கூறியதன் கருத்து என்னவென்றால். நான் எனது மொழிக்கும், இனத்துக்கும் முன்னுரிமை கொடுக்கிறேன் எனக்கு என்னுடைய மதம் அதற்குப் பின்பு தான் என்பது தானே தவிர, நான் தமிழரல்லாத இந்துக்களை, முஸ்லீம்களை எல்லாம் வெறுக்கிறேன் என்பதல்ல.

          அம்பேத்கார் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல. நீங்கள் தனது நாட்டு சிறுபான்மை மக்களை, அவர்கள் முஸ்லீமாக இருந்தும் கூட நச்சுக்காற்றையூட்டிக் கொலை செய்த சதாம் ஹுசையினுக்கும், தீவிரவாதி ஒசாமாவுக்கும், கடாபிக்கும் கூட அழுதவர்கள். அப்படியிருக்க தமிழை, தமிழர்களின் வரலாற்று உண்மைகளை திரிக்காமல் வெளிப்படுத்தியதுடன் தமிழ் தான் இந்தியாவின் மூத்த மொழி, தமிழர்கள் தான் இந்தியாவின் பூர்வீக குடிகள் என்று கூறிய அம்பேத்காரை நான் புகழ்வது, எப்படி என்னை அகண்டபாரதகலாச்சாரவாதியாக்கும் என்பதை நீங்கள் விளக்க வேண்டும். அப்படியானால் அம்பேத்காரையும் ஆர் எஸ் எஸ் காரராக்கி அவரையும் அகண்டபாரதகலாச்சாரவாதி என்கிறீர்களா?

          தமிழ்நாட்டில் வாழும் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தும் தமிழ்முஸ்லீம்கள் வஹாபியத்தின் தாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டு, இலங்கையில் போன்று எங்களை விட்டு விலகி விடக் கூடாது என்பது தான் என்னுடைய கவலையெல்லாம்.

      • மத்தங்க எல்லாம் வணங்குறது. சிலை முஸ்லீம்கள் வணங்குவது அரேபியாவில் உள்ள ஒரு சதுர வடிவ கட்டிடம் அதனாலதான் பாரதியார் திக்கை வணங்கும் துருக்கர் என்று பாடினார் ,கிறிஸ்தவ யூத ,சிலை வழிபாட்டு மதங்களை கேலி செய்யும் வாசங்கள் குரானில் உண்டு எங்கள் மத நம்பிக்கையை கேலி செய்கிறது குரான் என்று யாரும் கிள்ர்ந்து எழவில்லை அரேபிய முகமதையோ இல்லை குரானையோ விமர்சனம் செய்தால் கிள்ரந்து எழுந்து சண்டைக்கு வருவார்கள் மூமீஙள் இது ஒன்றே இசுலாம் அரேபிய அடிமை கலாச்சரத்தை பின்பற்றும் மதம் என்பதை தெரிந்து கொள்ளலாம் ,நபிகள் நாயகம் என்ற அரேபியரை அப்படியே பின்பற்ற வேண்டும் அவரைப்போல தொழ வேண்டும் ,டெரெஸ் பொட வேண்டும் ,அரேபிய நாட்டை நோக்கி தொழ வேண்டும் முடிந்தால் அரேபியாவிற்கு புனித பயணம் செய்ய வேண்டும் என்று அரேபியாவை சுற்றியே இத இசுலாம் என்ற அரபு பாஸிஸ அடிமை மதம் அமைக்கப்ப்ட்டு உள்ளது…

        • வியாசன் செய்வது வீண் வேலை 10 வருசத்துக்கு முன்னடி முஸ்லீம் பெண்கள் சேலை கட்டி முக்காடு மட்டும் போட்டுகொண்டும் இசுலாமிய ஆண்கள் தமிழர்களைப்போலவே வேட்டி கட்டிக்கொண்டும் அலைந்தார்கள் இப்ப என்ன்டானா அரபுக்கலாச்ச்ரத்துக்கு மாறி விட்டார்களே என்று புலம்ப வேண்டிய அவசியம் இல்லை எனென்றால் பத்து வருசத்துக்கு முன்னாடி குரான் அர்பில மட்டும் இசுல்லமியர்கள் வீடுகளில் வைத்து இருப்பார்கள் அர்த்தம் புரியாமல் படித்து விட்டு தொழுகை செய்து கொண்டும் இருந்தார்கள் இப்ப அரபு பணத்தில் குரானும் ,கதிஸுகளும் பள்ளி வாசல்களில் இசுலாமிய ஆலிம்களால் பரப்பப்டுகின்றது முகமது என்ற அரேபியர் எப்பிடி டெர்ஸ் போட்டார் ,எப்பிடி தொழுதார் .எப்பிடி தூங்கினார் எப்பிடி உச்சா போனர் எப்பிடி சாப்பிட்டார் என்று பயான் மூலம் பர்ப்புரை செய்யப்ப்டுகிறது எங்க் ஊரு பள்ளி வாசலில் முன்பு காலை 5 மணிக்கு தொழுகைக்கான அழைப்பு மட்டுமே கேக்கும் இப்ப என்னடானா முகமது எப்பிடி முகம் கழுவினார் தொழுகைக்கு முன்னாடி என்று அரை மணி நேரம்ம் மரண மொக்கை போருகிறார் ஒரு ஆலிம் இப்படியே ஒவ்வொறு நாளும் முகமது என்னவெல்லாம் செய்தார் என்று பரப்புரை செய்யப்படுகிறது அதை கேக்கும் முஸ்லீம்கள அதன் படிதான் வாழ வேண்டும் என்று நம்பவைகப்படுகிறார்கள் எனவே அவர்களை தமிழ் கலாச்சார்த்தோடு வாழுங்கள் என்றால் இப்படித்தான் வாதாடுவார்கள் எனவே முடிந்த அளவு இசுலாம் என்பது அரேபிய அடிமை கலாச்சாரம் என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்…

    • மீரான்சாகிப் அதற்கிடையில் ஒரு அரபுவாக மாறி விட்டார் போலிருக்கிறது வஹாபியிசம் அவரது தமிழறிவைக் கூட காணாமல் போகச் செய்து விட்டது போல் தெரிகிறது. நான் தமிழில் என்ன கூறினேன் என்பதைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

      நான் அவருக்கு யாழ்ப்பாணத்தில் பெண் பார்க்கவில்லை. நான் கூறியதென்னவென்றால், அவர் மட்டுமல்ல, அவர்களின் சாதி மறைந்து போய் விடும் என்ற எண்ணத்தில் முஸ்லீமாக மாறிய தலித்துகளை அல்லது புது முஸ்லீம்களை, பரம்பரை முஸ்லீம்கள் தங்களுக்குச் சமமானவர்களாகக் கருதி, தமது குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளவோ அல்லது தமது மகனுக்கோ மகளுக்கோ மணமுடித்துக் கொடுக்கவோ மாட்டார்கள். அதைத் தான் நான் குறிப்பிட்டேன். நீங்கள் இன்னும் மணமுடிக்காதவராக இருந்தால் அதை நீங்களே இலங்கை முஸ்லீம்களிடம் சோதனை செய்து பார்க்கலாமே என்பதற்காகத் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

      புதிதாக இந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மாறிய தலித்தை வரவேற்று வயிறு முட்டச் சோறும் போட்டு, போற வழிக்குக் கொஞ்சம் காசும் கொடுத்தனுப்புவார்களே தவிர, அவன் எவ்வளவு தான் படித்த, பண்பானவனாக இருந்தாலும் குடும்பத்தில் அங்கத்தவனாக எல்லாம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் தமிழ் பேசும் பரம்பரை இலங்கை முஸ்லீம்கள். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண (வடமாகாண) முஸ்லீம்கள் திருமணம் செய்யவே மாட்டார்கள். யாராவது சும்மா சோற்றுக்காக மதம் மாறுவார்களா, அதற்குப் பதிலாக திப்பு காக்காவுக்குத் தெரிந்த உணவகத்தில் புரோட்டாவும், சால்னாவும் சாப்பிட்டு விட்டு கம்முனு இந்துவாகவே இருந்திருக்கலாமே, அதைத் தான் நான் குறிப்பிட்டேனே தவிர, மீரான் சாகிப்புக்கு யாழ்ப்பாணத்தில் நான் பெண் பார்க்கவில்லை. ஒரு உதாரணத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறார் மீரான் காக்கா. 🙂

      //நான் என்னை குறிப்பிட்டு” நான் தலித்திலிருந்துதான் வந்தேன்? என்று எப்போது சொன்னேன்?///

      பார்த்தீர்களா, ஒரு பேச்சுக்கு, தலித்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறியதாகச் சொன்னதையே இவரால் தாங்க முடியவில்லை. நிச்சயமாக மீரான்சாகிப் புது முஸ்லீம் அல்ல. இவரது முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு வாள் முனையில் முஸ்லீமாக்கப் பட்டவர்கள்.

      இந்தக் குணாதிசயத்தை நான் தமிழ்நாட்டில் பல தமிழ் முஸ்லீம் நண்பர்களிடம் அவதானித்திருக்கிறேன். இதுவரை, ஒருவர் கூட எனது முன்னோர்கள் தலித்துகளாக இருந்து முஸ்லீம்களாக மாறியிருக்கலாம் என்று கூறியதில்லை, ‘எங்க ஊர்ப்பக்கம் எல்லாம் தேவர்கள் அதிகம், வெள்ளாளர்கள் அதிகம், அந்தக் காலத்தில் பிள்ளைமார் அதிகம், முதலியார் அதிகம் ஆகவே பல தலைமுறைகளுக்கு முன்னால் என்னுடைய சாதியும், அந்த சாதிகளில் ஒன்றாகத் தான் இருந்திருக்கும்’ என்று கூறியிருக்கிறார்களே தவிர எனது முன்னோர்கள் பறையனாக இருக்கலாம், புலையனாக இருக்கலாம், தலித்தாக இருக்கலாம் என்றெல்லாம் கூறியதில்லை. நான் தான்– எனது முஸ்லீம் நண்பன் ஒருவனுடன் அவர்களின் ஊருக்குப் போயிருந்த போது – வேண்டுமென்றே, எனக்கென்னவோ உங்களின் மாமாவைப் பார்த்தா, சரியாத் திருமாவளவன் போலவே இருக்கிறார் என்று கூற, எனது நண்பன் சிரித்துக் கொண்டே என்னை முறைத்துப் பார்த்தது தான் மீரான் சாகிப்பின் “நான் தலித்தல்ல” வசனத்தைப் பார்த்ததும் எனக்கு நினவுக்கு வந்தது.

      உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டில் முஸ்லீம்களிடம் சாதிப்பிளவுகள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, பெயரளவில் இல்லையானாலும், மற்றத் தமிழர்களைப் போலவே முஸ்லீம்களிடம் சாதியுணர்வு உண்டு. அவர்களின் முன்னோர்கள் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட தமிழர்கள் என்று கூறுவதை அவர்கள் விரும்புவதில்லை.

      ///உமது ஊர் துலுக்கன் நாங்களெல்லாம் அரேபிய இறக்குமதி என்று பைத்தியக்காரத்தனமாய் பெருமை அடிக்கிறான்.அப்படியே அரபியனாக இருந்தாலும் அது பெருமைக்குறிய ஒன்றா?///

      பெருமைக்குரியதொன்றாக உங்க ஊர் வஹாபிகள் நினைப்பதால் தான் இஸ்லாத்தை அரபு மயமாக்கி, அரபு ஆதிக்கத்துக்குட்படுத்தி, அரபுக்களின் ஆடையணிகளை அணிய வேண்டுமென்று குரானோ, முகம்மது நபிகளோ கூறாத போதிலும் அவர்களின் ஆடையணிகளைப் பழக்க வழக்கங்களைத் திணித்து, தமிழ் முஸ்லீம்களை அரபுமயமாக்குகிறார்கள். அதைப்பற்றித் தான் இவ்வளவு நாளும் நாங்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். அரபுக்களை முன்னோர்களாகக் கொள்வது பெருமையானதாக, அப்படி ஒரு இல்லாத வரலாற்றை இலங்கை முஸ்லீம்கள் உருவாக்க முன்னர், தமிழ்நாட்டில் இப்பொழுது என்ன நடக்கிறதோ, அதே போன்று கொஞ்சம் கொஞ்சமாக அரபுமயமாக்கப் பட்டனர்.ஆகவே அவர்கள் தமது தமிழ் அடையாளத்தை ஒதுக்கி, வெறும் முஸ்லீம்களாக மாறி, இப்ப்பொழுது அரேபியாவில் தமது முன்னோர்களைத் தேடுகின்றார்கள். வந்தேறிகள் என்று ஏனைய இலங்கையரால் அழைக்கப்பட்டாலும் பரவாயில்லை, அரபுக்களாக மாற வேண்டுமெனத் துடியாய்த் துடிக்கின்றனர். வஹாபியிசத்தால் அந்த நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படும் என்பது தான் எனது கருத்தாகும்.

      //சரி இவ்வள்வு நேரம் த்மிழ் தமிழ் என்று குதித்துவிட்டு இப்போது என்ன பாரத கலாச்சாரம் பக்கம் போய்விட்டீர்? ///

      உங்களுக்கு வரலாறே தெரியாது போலிருக்கிறது. புத்தசமயத்துக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பு இரண்டாயிரமாண்டுகளுக்கு முந்தியது. சிங்களவர்களுக்கு முன்னர், புத்தசமயத்தை புத்தரின் நேரடிச் சீடர்களிடமிருந்து பெற்றுக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டிலிருந்து ராமேஸ்வரம் வழியாகப் படகில் தான் புத்தரின் போதனைகள் இலங்கையைச் சென்றடைந்த என்கிறார். ஜப்பானிய பெளத்த ஆராய்ச்சியாளர் ஹிக்கொசாக்கா ( Japanese scholar Shu Hikosaka).

      அதை விட ஈழத்தமிழர்களின் வரலாறும், புத்தசமயத்தின் வரலாறும் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்துள்ளன. இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. குர்திஸ் சலாவுதீனைப் பற்றி உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும், அரேபிய கலீபாக்களின் வரலாற்றைக் கரைத்துக் குடித்து, அதில் உங்களுக்கும் ஏதோ பங்கிருப்பதாக நினைத்துப் பூரித்துப் போயிருப்பீர்கள், ஆனால் புத்தருக்கும், தமிழருக்கும் என்ன தொடர்பு என்றால் உங்களுக்குத் தெரியாது, அதனால் தான் அம்பேத்கர் என்னை அந்தப்பக்கம் விரட்டி விட்டதாக உளறுகிறீர்கள். இதுவும் தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கலுக்கு நல்ல எடுத்துக்காட்டு தான்.

      //தமிழ் சாயம் பூசியது அம்பேத்கரை பார்த்ததும் கலைகிறதே என்ற சொரணையே இல்லாமல் எப்படி பேசமுடிகிறது///

      என்ன உளறுகிறீர்கள்? அம்பேத்கர் தமிழுக்கோ அல்லது தமிழர்களுக்கு எதிரி அல்லவே. உண்மையில் மகாத்மா காந்தியை விட தமிழர்கள் எல்லோரும் கொண்டாட வேண்டிய, போற்ற வேண்டிய ஒரு மகான், பாரத மாதா ஈன்ற தவப்புதல்வன், சிறந்த புரட்சியாளர், சிந்தனையாளர் என்றால் அது அம்பேத்கார் தான். உண்மையில் அவர் பார்ப்பனீயத்தையும், சாதிப்பாகுபாட்டையும் தான் வெறுத்தாரே தவிர ‘இந்துஸ்தான் (முழு இந்தியாவின் மீதும், இந்திய மக்கள் மீதும்) மீது அவருக்குள்ள அன்பும், பற்றும் அளப்பரியது. அவரது கட்டுரைகளைப் படிக்கும் போது உண்மையிலேயே அவர் மீது மேலும் மதிப்பும், மரியாதையும் தான் ஏற்படுகிறது. அதைத் தவிர ஒரு காலத்தில் இந்தியா முழுவதுமே பேசப்பட்ட மொழி தமிழ், தமிழர்களின் முன்னோர்களாகிய நாகர்கள் தான் இலங்கை, இந்தியாவின் பூர்வீக குடிகள் என்றெல்லாம், வரலாற்றைத் திரிக்காமல், துணிச்சலுடன் உண்மையை தனது பேச்சிலும், எழுத்திலும் கூறியவர் அவர். அப்படியிருக்க அம்பேத்கரைப் புகழ்வதால் என்னுடைய தமிழ்ச்சாயம் எப்படிக் கலையும் என்பதை உங்களின் வஹாபிய, அரேபிய மூளையைப் பாவித்து விளக்கினால் நல்லது.

      நான் முன்பே கூறியது போலவே ஆத்தாமல் போனதும் அவர்களை விமர்சிப்பவர்களுக்கு பூணூலை அல்லது அரைக்கால்சட்டையை மாட்டி விட்டு தொப்பியைப் பிரட்டிப் போட்டுக் கொண்டு நழுவப் பார்ப்பது முசல்மான்களின் உத்தி என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் சலாவுதீனின் வீரப்பரம்பரையின் வழிவந்த நீங்கள் காவிகளை நினைத்து ஏன் இப்படிக் கதிகலங்குகிறீர்களென்று தான் எனக்குத் தெரியவில்லை.

      //இந்த பர்தா என்ற கருப்பு உடை,நீங்கள் பெயர்வைப்பதற்க்கு சொன்னதைப்போல அது ஒரு இப்போதைய fபேஷன். ///

      இது தான் வஹாபியிசம். எப்படி எல்லாம் மழுப்புகிறார் ஜனாப் மீராசாஹிப். “அப்படி ஒன்றும் இஸ்லாத்தில் சட்டமில்லை” என்பது மட்டும் தான் உண்மை. தமிழ்நாட்டு வெய்யிலில் தமிழ் முஸ்லீம் பெண்கள் கறுப்புக் கோணிப்பையை தலையில் மூடிக் கொண்டு திரிவதன் பின்னணியில் , எழுபதுகளின் பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்த சவூதி பணமும், வகாபியிசமும் உள்ளது என்பதை மறைக்க அதைப் Fபேஷன் என்றழைத்து, பல விலைமதிக்க முடியாத பாரம்பரிய புடவை, நகைகள் எல்லாவற்றையும் டிசைன் பண்ணிய தமிழ்/முஸ்லீம்களின் நாகரீக (Fபேஷன்) உணர்வைக் கொச்சைப் படுத்துகிறார் மீரான். அதை விட காபீர்களுக்கு அதாவது முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய விடயங்களை, மறைக்கவும், பொய் சொல்லவும் இஸ்லாம் அனுமதிக்கிறது என்று கூடச் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அரபு மொழியில் ‘Taqqiya’ என்பார்களாம்.

      உண்மையில் தமிழ்நாடு முஸ்லீம்கள் தன புர்க்கா வேண்டுமென்று அடம்ப்பிடிக்கிறார்கள் ஆனால் கனேடிய முஸ்லீம்கள் புர்க்காவை கனடாவில் முற்றாகத் தடை செய்யுமாறு கனேடிய அரசை 2012 இலேயே கேட்டுக் கொண்டனர். புர்க்கா அணிவ‌து இஸ்லாமிய‌ க‌லாச்சாரம் அல்ல‌ இஸ்லாமிய‌ பாசிச‌ம், இஸ்லாத்துக்கு முந்தைய‌ அர‌புக்க‌லாச்சார‌ம் என்கிறார் க‌ன‌டா முஸ்லீம் காங்கிர‌சின் த‌லைவ‌ர் ச‌ல்மா சித்தீக். இஸ்லாமிய‌ முக‌மூடி முக்காட்டு (புர்க்கா) த‌டையை நாடுமுழுவ‌தும் ப‌ர‌வ‌லாக்க‌ வேண்டுமென க‌னேடிய‌ அர‌சிட‌ம் கோறியது க‌னடா முஸ்லீம் காங்கிரஸ்.
      அதைக் கீழேயுள்ள காணொளியில் காணலாம்.

      //சீக்கியர்கள் மிக அழுத்தமான இதே மத அடையாள்த்தோடுதான் இருக்கிறார்கள்.///

      இங்கு தான் ஜனாப் மீரானுக்குச் சறுக்கி விட்டது. தாடி வளர்ப்பது முஸ்லீம்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்ட ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றல்ல. ஆனால் மயிரை வெட்டாமல் வளர்ப்பது சீக்கியர்களின் நம்பிக்கையைக் காட்டும் ஐந்து முக்கியமான அடையாளங்களில் ஒன்று, ஆகவே சீக்கியர்களின் தாடியையும், முஸ்லீம்களின் தாடியையும் ஒப்பிடுவது எப்படியானதென்றால் மதர் திரேசாவையும் மார்த்தா ஸ்ரூவர்ட்டையும் ஒப்பிடுவது போன்றது.

      முஸ்லீம்கள் எல்லோரும் தாடி கட்டாயம் வைக்க வேண்டுமென குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனால் முகம்மது நபிகள் தாடி வைத்திருந்ததால் அவர் என்ன செய்தாரோ அதையெல்லாம் செய்வது ‘நல்லது’ என்பது தான் நம்பிக்கை என்று ஒரு ஈரானிய முஸ்லீம் விளக்கம் அளித்தார். ஆனால் முஸ்லீம்கள் எல்லோரும் தாடி வளர்க்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஒரே ,மாதிரியான சீருடையை உலக முஸ்லீம்கள் அணிய வேண்டும், ஒரே கலாச்சாரத்தை, ஆடையணிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென குரானோ அல்லது முகம்மது நபிகளோ ஒருபோதும் கூறவில்லை. ஆனால் வஹாபியிசம் அதை வலியுறுத்துகிறது. ஆகவே தான் மீரான் காக்காவும் அதை வலியுறுத்துகிறார்.

  71. தாடியோ தொப்பியோ, அவரவருக்கு அவர்களது மத அடையாளங்களை அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடலாம். ஆனால் பெண்கள் உடை விடையத்தில் ஒட்டு மொத்தமாக அவர்களை கருப்பு துணியால் மூடுவது பிற்போக்காக தான் உள்ளது. பெண்களின் கால்கள் வெளியே தெரிந்தால் அவர்களை தடியால், சவுக்கால் அடிப்பது தாலிபான் ஆளும் இடங்களில் சகஜம். அப்படி ஒரு நிலைக்கு நம்ம ஊர் பெண்களை கொண்டு செல்ல வேண்டுமா?

    நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப கண்ணியமான உடைகளை அணியட்டும்.
    ஆனால் பர்தா என்ற பெயரில் அவர்களை முழுவதுமாக கட்டிப்போடுவது சரியல்ல.

  72. கற்றதுகையளவு, மீண்டும் கலாச்சர பல்லவியை ஆரம்பிக்கிறீர்களே.அதுதானே வியாசனோடு ஓடிக்கொண்டிருக்கிறது.நானும் இலங்கை பயணம் முடித்து என் சொந்த ஊருக்கு போய்விட்டு சென்னைக்கும் வந்துவிட்டேன்.இன்னும் கலாச்சாரம் முடிந்த்பாடில்லை.முத்லில் கலாச்சாரம் என்றால் என்ன?புடவைதான் கலாச்சாரமா?ஜீன்ஸ்பேண்ட் டிசர்ட் போடும் பெண்கள் என்ன கலாச்சாரம்.சுடிதார்போடுவதை தமிழ் கலாசாரம் ஆக்கிவிட்டோமா சுடிதார் என்பது முகலாயர்காலத்து உடையல்லவா? அதை அணிவதில் பிரச்சனை இல்லையா?கலாச்சாரத்திற்க்கான வரையறை என்ன? தமிழருகுள்ளேயே கலாசாரம் பல வடிவம் எடுக்கிறதே. கலாச்சாரத்தை எப்படித்தான் புரிந்து கொள்வது?”முஸ்லிம் பெண்களை கருப்புத்துணியால் மூடுவது”என்று ஏதோ நிறுத்தி வைத்திருக்கிற காரை சொல்வதுபோல சொல்கிறீர்களே.உண்மையில் அப்ப்டியா நடக்கிறது? அவர்கள் விரும்புகிறார்கள் உடுத்துகிறார்கள்.அதே நேரத்தில் இனொன்றையும் உங்களுக்கு விளக்க கடமை பட்டிருக்கிறேன்.முகத்தை மூடிக்கொள்வது உள்ளங்கைகளுக்கும் உள்ளங்கால்களுக்கும் கூட உறை அணிந்திருப்பது என்பதெல்லாம் இவர்களாகவே செய்துகொள்வது.முகம் தெரியவேண்டும் என்றுதான் இருக்கிறது.பெண்களின் உடைக்கான இலக்கனத்தை முதலில் விளங்கி கொள்ளுங்கள்.இறுக்கம் இருக்கக்கூடாது.இறுக்கத்தால் அஙகஙகளின் கணபரிமானங்கள் வெளித்தெரியக்கூடாது.பார்வை ஊடுருவும் வகையில் கண்ணாடித்தன்மையோடும் உடை இருக்கலாகாது.இந்த இலக்கணத்தோடு எந்த உடையும் எந்த வண்ணமும் அனுமதிக்கப்பட்டதே.கருப்பு குப்பாயம் என்பது சில வருடங்களுக்கு முன் ஒரு உடை வடிவமைப்பாளன் வடிவமைத்தது.அது பொருந்திபோகவே அனைவரும் போர்த்திக்கொண்டு அலைகிறார்கள்.எவ்வளவு நாளைக்கு இது இருக்கும் என்பது தெரியாது. நீங்கள் முப்பது வயதை கடந்தவராயிருந்தால் உங்களுக்கு நினவிருக்கலாம்.இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் முஸ்லிம் பெண்கள் சேலை உடுத்தி இடுப்போ முதுகோ தெரியாதவாறு மிகச்சரியாக முக்காடிட்டு போவார்கள். திருமணம் ஆகாத இளம்பெண்கள் பாவாடைதாவணிதான் உடுத்துவார்கள்.இன்று மற்ற பெண்களைப்போலவே முஸ்லிம் பெண்களும் கல்லூரி படிப்பு இருசக்கரவாகனம் ஓட்டுதல் என்று வந்துவிட்டதால் இந்த புர்கா அவர்களுக்கு நல்லதொரு செளகரியத்தை கொடுக்கிறது.லெக்கின்ஸ் என்ற காலுரையும் டாப்ஸ் என்ற மாராப்பு இல்லாத மேல் சட்டையையும் விடவா இந்த புர்கா உங்களுக்கு கேவலமாக தெரிகிறது.அவ்வாறு தெரிந்தால் உங்களிடம் இருப்பது ஒன்று வக்கிரம் அல்லது காழ்ப்புணர்ச்சி.

  73. கற்றதுகையளவு,முஸ்லிம் பெண்களை விடுங்கள்.ஆண்களாகிய நாங்கள் ஏன் லுங்கி கட்டுகிறோம் தெரியுமா?வேட்டிதான் கட்டிக்கொண்டிருந்தோம்.வேட்டி விலகும்.படுத்திருக்கும்போதோ வாகனத்திலோ தொடைவரை தெரிந்து உள்ளாடைகூட கண்ணில் படும்.இந்த சங்கடத்தை மாற்றவே வேட்டி என்பதை தைத்து லுங்கியாக மாற்றினோம்.அதுவும் கைத்தறியில் தைத்ததைத்தான் உடுத்துகிறோம்.நீங்கள் சென்னை போன்ற நகரங்களில் பார்க்கலாம்.பெர்முடாஸ் என்று சொல்லப்படுகிற முக்கால் கால் உள்ள ஷாட்சை பெரும்பாலான ஆணகள் அணிவதை பார்த்திருப்பீர்கள்.இன்றுவரை முஸ்லிம் ஆண்கள் இதை அணிவது பெரும்பாலும் இருக்காது.காரணம் இந்த உடை கண்ணியம்தான்.எதற்க்காக இவ்வளவு தூரம் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறேனென்றால் எதிலும் சமரசமற்ற எங்களின் கொள்கை உறுதி உங்களை குழ்ப்பக்கூடும்.ஏன் இவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று சந்தேகம் கொள்ள வைக்கும்.இதையே காரணமாக்கி சில பிரித்தாலும் சக்திகளால் நம்மை துண்டாட செய்யும்.இதுவரைக்குமான என் பதிவுகளில் எங்கேயும் ஆணவமோ வம்புக்கிழுக்கிற சண்டித்தனமோ வரம்பு மீறிய வார்த்தையாடலோ இருந்ததில்லை.ஆனால் என் கொள்கைகளை கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் வாதாடி இருக்கிறேன்.இது எல்லோருக்குமான உரிமை என்றே நம்புகிறேன்.நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வது அவரவர் அவரவ்ர் கொள்கை களில் உறுதியாய் இருத்தலும் அதை மற்றவர் மதித்தலுமே சிறந்த வாழ்வியல் என்று முடிக்கிறேன்

    • எல்லாம் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் கண்டு பிடித்ததாக சும்மா பீலா விடுகிறார் முகம்மது மீரான்.
      நாலு முழ வேட்டியைத் தவிர வேறு வேட்டியை மீரான் கேள்விப்பட்டதே கிடையாது போலிருக்கிறது. எல்லா வகையான வேட்டியும் தொடையைக் காட்டாது. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஒன்றும் லுங்கியைக் கண்டுபிடிக்கவுமில்லை, வேட்டியைத் தைத்து லுங்கியாக மாற்றவுமில்லை. இது அரபுக்களின் ஆடையும அல்ல. அவர்கள் அறிமுகப்படுத்தவும் இல்லை.

      தென்கிழக்காசிய மக்கள் குறிப்பாக, மலே/இந்தோனேசியா அதாவது பழங்கால கடாரநாட்டு மக்களின் உடை அது . அவர்கள் தான் அதைக் கண்டு பிடித்தார்கள். இஸ்லாம் அவர்களை வந்தடையுமுன்பே, அதாவது அவர்கள் வானளாவும் இந்து ஆலயங்களை அமைத்து இந்துக்களாக வாழும் போதே அவர்கள் அணிந்த துண்டை தைத்துப் பொருத்தி லுங்கியாக அணியத் தொடங்கி விட்டனர். அவர்களிடமிருந்து தான் இந்த லுங்கி அணியும் வழக்கம் ஏனைய ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இன்று அவர்கள் பெரும்பாலானோர் இஸ்லாமியராக உள்ளதால், வேட்டியணிந்து வாழ்ந்த தமிழ் முஸ்லீம்கள் அவர்களின் லுங்கியைத் தத்தெடுத்துக் கொண்டனரே தவிர, மீரான்சாகிப் புளுகுவது போல, தொடை தெரியாமலிருக்க வேட்டியைப் பொருத்தித் தைத்து, லுங்கியைத் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் கண்டுபிடிக்கவில்லை. இதெல்லாம் வஹாபியத்தின் புளுகுகள்.

      வஹாபியம் தமிழர்களிடையே வேரூன்ற முன்னர் தமிழ் முஸ்லீம்கள் மட்டுமன்றி தமிழர்களும் வேட்டி தான் அணிந்தனர் என்பதை மூன்று தலைமுறைக்கு முன்னைய பழைய புகைப் படங்களை எடுத்துப் பார்த்தாலே தெரியும். தமிழ்-முஸ்லீம் கல்லூரி மாணவர்கள் கூட அனைவரும் வேட்டி தான் அணிந்தனர்.

    • மீரான் அவர்களே,

      கண்ணியமான உடைகளை அணிவதை இங்கு எவரும் குறை சொல்லவில்லை.
      நீங்களே சொல்வது போல சில வருடங்களுக்கு முன்னர் இசுலாமிய பெண்கள் அனைத்து தமிழ் பெண்மணிகளை போன்று சேலை, பாவாடை, வடக்கத்திய சுடிதார் போன்ற உடைகளை அணிந்து புர்கா இல்லாமல் வெளிய நடமாடினர். ஆனால் தற்போது இசுலாமிய பெண்கள் அனைவரும் புர்கா அணியாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது எனக்கு என்னமோ அவர்களாகவே பேஷன் என்று விரும்பி எடுத்த முடிவாக படவில்லை.

      • கற்றதுகையள்ளவு, புர்கா என்பது பேஷன் மட்டும்தான் என்று நான் சொல்லவில்லை.அதில் அவர்களுக்கு பல செளகரியங்கள் இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொன்னேன்.அவர்களுக்கு பிடித்த உடையை அவ்ர்கள் அணிந்து கொள்கிறார்கள்.அதற்க்கு மேல்தான் புர்காவை போடுகிறார்கள்.வீட்டிற்க்குள்ளோ மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலோ அவர்கள் விருப்ப உடையை உடுத்துகிறார்கள்.என் மனைவி காலையில் அரக்க பரக்க பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துப் போக வேண்டியிருக்கிறது இரவில் உடுத்திய நைட்டியோடு மேலே புர்காவை கவிழ்த்திக்கொண்டு காரில் ஏறி விடுகிறாள்.எந்த அலங்காரமும் மெனக்கெடலும் தேவையில்லை.எவ்வளவு எளிமையாக முடிந்து விடுகிறது பாருங்கள்.இப்படி எந்த ஒரு அவசர வேலைகளுக்கும் இது ஒரு பெரிய செளகரியம்.நான் என் வாழ்வின் தனிப்பட்ட சம்பவம் ஒன்றை கூறுகிறேன் கேளுங்கள்.நான் இந்த புர்காவுக்கு பெரிய ஆதரவாளன் கிடையாது.” புர்கா என்ற இந்த உடைதான் இஸ்லாமிய உடை இல்லையப்பா, எந்த உடையையும் இஸ்லாமிய மரபுக்குட்படடு உடுத்த முடியும் என் தாய் உன் தாயெல்லாம் சேலையையே அவ்வாறு உடுத்தவில்லையா”என்று மனைவியிடம் வாதாடியிருக்கிறேன்.மனைவியும் புர்கா என்ற உடையில் கறாராய் இருந்ததில்லை.எனக்கு திடீரென்று தொழில் நெருக்கடி ஏறப்பட்டு பணத்தேவை உண்டானது.வேறுவழியில்லாமல் மனைவி நகையைத்தான் விற்று சமாளித்தேன்.அந்த நேரத்தில் வந்த பல கல்யாண வைபவங்கள் இன்னும் தெரிந்த குடும்ப விழாக்களில் நகை இல்லாமல் கலந்து கொள்வது பெரிய கெளரவ குறைச்சல்.அப்போது இந்த புர்காதான் கைகொடுத்தது.உள்ளே நகை இருப்பதும் தெரியாது,இல்லாததும் தெரியாது.இது சத்தியம்.இப்படி எத்தனையோ வகை செளகரியம்.நான் கேட் கிறேன்.இதெல்லாம் இந்த வியாசன் களுக்கு எதற்க்கு? அவரவ்ர் உடை அவரவர் செளகரியம்.இன்றைக்கு உடையெல்லாம் கலாச்சார அளவுகோலா?நாடே உலகமயமாக்கலாகி அனைத்தும் தாறுமாறாய் போய்க்கொண்டிருக்கிறது.தாய் மொழி மறந்து அதையே பெருமையாய் கருதிக்கொண்டிருக்கிறான்.நீங்கள் கொஞசம் கூர்ந்து பாருங்கள் விகிதாச்சார அடிப்படையில் தமிழ் முஸ்லிம்கள்தான் தங்கள் மொழியை அடையாளத்தை மரபை தொலைக்காமல் தொடர்கிறவர்களில் முதன்மையாய் இருப்பார்கள்.அதற்க்கு இரண்டு காரணங்கள் ஒன்று பெரிய படிப்பு மிகப்பெரிய உத்தியோகத்தில் முஸ்லிகள் குறைவு. யார் படிப்பால் நாகரிகத்தால் தாங்கள் உயர்ந்து விட்டதாக நினைக்கிறார்களோ அவர்கள் தான் த்ங்களின் பண்பாட்டை பாரம்பரியத்தை இழிவாக நினைக்கிறார்கள். மேல்தட்டு வர்ககமாய் தங்களை கருதிக்கொண்டு ஆங்கிலம் அரைகுறை ஆடை,வார இறுதியில் நட்சத்திர ஓட்டல் நடணம் இவையெல்லாம் இவர்களை ந்வீனர்களாய் காட்டிக்கொள்கிற அடையாளங்கள். முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்பு ரெண்டு வகையில் குறைந்து விடுகிறது.அவர்களில் பெரும்பாலோர் இந்த நிலைக்கு இன்னும் வரவில்லை.அடுத்து இஸ்லாம் இந்த அனுமதியை அவர்களுக்கு தரவில்லை. ஆனால் வியாசன் போன்றவர்கள் இஸ்லாமிய பெண்கள் அவிழ்த்து போட்டு ஆடினாலும் பரவாயில்லை புர்கா போடக்கூடாது என்றால் என்ன நியாயம்

      • க.கை.அவர்களே,

        \\சில வருடங்களுக்கு முன்னர் இசுலாமிய பெண்கள் அனைத்து தமிழ் பெண்மணிகளை போன்று சேலை, பாவாடை, வடக்கத்திய சுடிதார் போன்ற உடைகளை அணிந்து//

        இல்லை.இந்து சகோதரிகள் அணிவது போல் [அது ஏன் தமிழ் பெண்மணிகளை போல என சொல்கிறீர்கள்.இசுலாமிய பெண்கள் தமிழ் பெண்மணிகள் இல்லையா] அல்லாமல் தலை முதல் கால் வரை அந்த ஆடைகளால் மூடி அணிவார்கள்.முந்தைய பழக்கத்தை வியாச முனிவர் உள்ளிட்டு யாரும் குறை கூறவில்லை.அது சரியானது என்றே சொல்கிறார்கள்.இப்போதைய கருப்பு புர்காவை மட்டும் அனைவரும் குறை கூறுகிறார்கள்.வண்ணத்துணியால் முக்காடிட்டு கொண்டால் வராத கோபம் கருப்பு துணியால் முக்காடிட்டு கொண்டால் வருவது ஏன்.

        முசுலிம் பெண்கள் புர்கா அணிவதால் பிற சமூக மக்களுக்கு கேடு ஏதும் வந்து விடவில்லை.ஆனாலும் உங்களை போன்றவர்களும் பதறுவதற்கு என்ன காரணம்.

        முசுலிம் பெண்கள் புர்கா அணிய வேண்டி நிர்பந்தம் இருப்பதாக உங்களுக்கு தோன்றுவதாக சொல்கிறீர்கள்.ஒரு சமூக போக்கு என்ற வகையில் பலரும் ஒரு பழக்கத்துக்கு மாறுவது இயல்பானது.வேட்டியிலிருந்து நாம் காற்சட்டைக்கு மாறினோமே யாராவது கட்டாயப்படுத்தி மாறினோமா ,இல்லையே.பெரும்பாலோனோர் மாறினார்கள்.நாமும் மாறினோம்.அப்படியும் ஒரு சிலர் வேட்டி பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். .இப்போதும் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே வேட்டி அணிந்த ஆண்களை காண முடிகிறது.அதே போலத்தான் முசுலிம் பெண்கள் பெரும்பாலோனோர் புர்காவுக்கு மாறினர்,மாறாதவர்களும் இருக்கிறார்கள்.முசுலிம் பெண்களில் சிலர் கருப்பு புர்கா அணியாமல் முக்காடிட்டு ஆடை அணிந்திருப்பதை இன்றும் காணலாம்.நிர்ப்பந்தம் இருந்தால் இது எப்படி சாத்தியம்.

        நடுநிலையாளர் என தங்களை அடிக்கடி சொல்லிக்கொள்வீர்கள்.இந்த மூன்று கேள்விகளுக்கும் தகுந்த பதிலை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

        • திப்பு அவர்களே,

          அடுத்தவர் மத நம்பிக்கைக்கைகளை அதிகம் விமர்சிக்க விருப்பமில்லை.
          அதே சமயம் எல்லா மதங்களிலும் சில பிற்போக்கு அம்சங்கள் உள்ளானே. இதற்கு முன்னர் இந்து, இசுலாம், கிருத்துவ மதங்களில் உள்ள தற்காலத்திற்கு பொருந்தாத அம்சங்களை அந்தந்த மதத்தில் உள்ள சான்றோர் விவாதித்து களையலாம் என்றே பதிவிட்டுள்ளேன். இசுலாம் என்ற ஒரு மதத்தை மட்டும் தனித்து கூறவில்லை. அனைத்து மதங்களிலும் தற்போதைய நடைமுறைக்கு பொருந்தாத சில விடயங்கள் உள்ளன.

          இசுலாமிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பி புர்காவை அணிவதாக இங்கு நண்பர்கள் கூறுகிறார்கள். அது நூறு சதம் உண்மை என்று நம்ப முடியவில்லை. பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிய வேண்டும் என்று நான் கூறவில்லை. கண்ணியமான ஆடைகளை அணியலாம். ஆனால் தலை முதல் கால் வரை புர்காவை போர்த்தியபடி செல்வது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே எனக்கு படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனி கருத்து இருக்கும். புர்கா அன்பது பெண்ணடிமைத்தனத்தின் ஒரு அம்சம் என்பது எனது கருத்து.
          இதே போன்று எல்லா மதத்திலும் உள்ள பிற்போக்கு, பெண்ணடிமை, சாதிப்பிரிவினை அம்சங்களை ஒரு சேரவே நான் எதிர்க்கிறேன்.

          சேலை, பாவாடை போன்ற உடைகள் இந்து பெண்கள் மட்டும் அல்ல மற்ற மதத்தினரும் அணிந்ததால் தான் தமிழ் பெண்கள் என்று குறிப்பிட்டேன்.

          கருப்பு துணியோ, வண்ண துணியோ, முக்காடிட்டு அடையாளம் தெரியாத உருவமாக பெண்களை பின் தள்ளி வைப்பது பிற்போக்கு தனமே. இந்து மதத்தில் பார்ப்பன விதவை பெண்களை மொட்டை அடித்து, முக்காடிட்டு, வீட்டு மூலையில் உட்கார வைத்திருப்பதும் பிற்போக்குத்தனமே. விதவைகளை பொட்டில்லாமல், பூவணியாமல், வெள்ளுடை அணிந்து கொள்ள நிர்பந்திப்பதும் பிற்போக்குத்தனமே.

          திப்பு, தனியொரு மதத்தில் அல்ல, எல்லா மதங்களிலும் உள்ள பிற்போக்குத்தனத்தையும் ஒரு சேரவே நான் எதிர்க்கிறேன்.

          இதற்கு முன் நண்பர் மீராசாகிப் அவர்கள் புர்கா உடை உடுத்துவது பேஷன் என்ற ரீதியில் தான், மதநம்பிக்கை என்ற ரீதியில் அல்ல என்றார். அப்படி என்றால் இசுலாம் அல்லாத மதத்தினர் புர்கா உடையை ஏன் பேஷனாக உடுத்துவதில்லை? சவுகரியம், பேஷன் என்ற எல்லா காரணங்களும் ஏன் மற்ற மதத்தவர்களுக்கு பரவவில்லை? லுங்கி அணிவது சவுகரியம் என்ற அளவில் இருப்பதால் அனைத்து மதத்தவரும் அதை அணிவதை தயங்கவில்லை. புர்கா என்பது பேஷன் என்ற அளவில் இல்லை.

  74. வியாசன் உங்களுக்காக பரிதாபப்படுவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியாது.நீங்கள் என்ன ஆயுதத்தை கொண்டுவந்தாலும் அது கூர்மழுங்கி மொக்கையாகியே போகும்.அதோடு மக்களும் நீங்கள் யார் என்று பட்டவர்த்தனமாய் புரிந்தும் கொள்வார்கள்.இப்போது தலித் ஆயுதத்தை எடுத்திருக்கிறீர்கள்.அது நீங்கள் எடுக்கும்போதே துருப்பிடித்து கூர்மழுங்கித்தான் இருக்கிறது.ஆனாலும் உங்களின் பதட்டம் நிதானமிழந்து அதை தூக்க வைக்கிறது.முதலில் தலித் என்ற அடையாளம் யாருக்கு எங்களுக்கா? நாங்கள் எங்களில் உள்ள மக்களை என்றைக்காவது தலித் என்ற அடையாளமிட்டு அழைத்திருக்கிறோமா? தமிழ் பேசும் முஸ்லிகள் எல்லா இந்து ஜாதியிலிருந்தும் வந்து முஸ்லிகளாய் கலந்திருக்கிறோம்.சத்தியாமாய் நீங்கள் பறையன் பள்ளன் என்று ஒதுக்கி வைத்த மக்களும் வந்து கலந்தே இருக்கிறோம்.இப்போது தலித்திலிருந்து வந்த முஸ்லிம் இவர் என்று ஒருவரை காட்ட முடியுமா?இதில் உதாரண்க்கதை வேறு.இவர் ந்ண்பன் ஊருக்கு போய் முஸ்லிம் நண்பனை” உன் மாமா திருமாவளவன் போல இருக்கிறார்” என்று சொன்னதும் அவன் முறைத்தானாம்.ஆக திருமாவளவன் என்ற படித்த கடினாமாய் உழைத்து அரசு வேலையில் சேர்ந்து இன்று ஒரு அரசியல் கட்சியின் தலைவராய் உயர்ந்து நாடு முழுக்க அறியப்பட்ட ஒரு மனிதர் எப்படிப்பட்ட குறியீடாய் உங்களுக்கு இருக்கிறார்.அதிலும் உம்மை போலவே உமது நண்பன்.முஸ்லிம் நண்பன்.மதம் தாண்டி போனாலும் குணம் தாண்டி போகாத நண்பனாய் பிடித்திருக்கிறீரே வியாசன் நண்பேன்டா நீர்..!இந்த அம்பேத்கர் புராணத்தை எல்லா காவிகளும் மறந்து விடாமல் ஒப்பிக்க பழகியிருப்பார்கள்.காரணம் அம்பேத்கரின் ஆளுமை அப்படி.இதில் பெரிய முரண் என்னவென்றால் அம்பேத்கர் அளவிற்க்கு தீரா அவமானத்தை இந்த காவிகளுக்கு வேறு யாரும் பெற்றுத்தந்ததில்லை. ஆனாலும் அவரை கட்டிஅணைத்து முத்துவதுபோல பாவ்லா காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.இவர்களையும் இவர்களின் கொள்கைகளையும் காறி காறி துப்பிவிட்டு போனவர் அவர்.அந்த சொரனையே இல்லாமல் இஸலாத்திற்க்கா மாறினார் கிறிஸ்த்தவத்திற்க்கா மாறினார் என்று தன் அவமானம் யாருக்கும் தெரியாதென்று சூனா பானா வடிவேலு மாதிரி போய்க்கொண்டே இருக்கிறார்கள்.இறுதியில் சீக்கிய தாடியையும் முஸ்லிம் தாடியையும் அளந்து எடுத்து ஒரு தத்துவ முத்தை கக்குகிறார்.அது குரானில் இல்லையாம் கட்டாயம் இல்லையாம்.சீக்கியர்கள் தாடிவைப்பதை உதாரணமாய் காட்டியதில் நான் வேறு சறுக்கி விட்டேனாம்.என்னா சறுக்கல்! என்னா கண்டுபிடிப்பு!? நிபுணரய்யா நீர். மத அடையாளம் போதையை தருமென்று ஒருவர் சொன்னதற்க்கு சீக்கியர்களின் மத அடையாளத்தை நான் குறிப்பிட்டால்…..ஐயோ …ஐயோ..சரி வியாசன் தமிழ் கலாச்சாரம் இப்போது என்ன கிந்துஸ்த்தான் கலாச்சாரமாகிவிட்டதே மாத்திப்புட்டானுங்களா? அதுக்குள்ளேயா மாத்திப்புட்டானுங்க! அப்போ இப்போ மராட்டியன் சிவாஜி நம்ம கலாசசாரந்தேன்.மராட்டியன் சிவாஜி நடிகர் திலகம் சிவாஜி நீஙக எலலரும் அண்ணன் தம்பின்னு சொல்லுஙக.நாந்தான் பாவம் அரபியா ஆயிட்டேன் வகாபியா ஆயிட்டேன்.என் தாயி சகோதரி பொண்டாட்டி உறவுக்கார பொம்பளங்க எல்லாரும் கருப்பு கோணியா கவுத்தி அவளுங்களும் அரபி வகாபிய ஆயிட்டாளுவோ.. இப்ப என்ன செயறது வியாசன்.

    • மீரான் ஆத்திரத்தில் உளறுகிறார் என்பது இதைப் படித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும். இரண்டு வஹாபிகளும் தமிழ்நாட்டில் வஹாபியத்தின் தூண்டுதலால் தீவிரமாக நடைபெறும் அரபுமயமாக்கலை மறைக்க எப்படியெல்லாம் உளறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் அல்ல, வினவு விவாதங்களைப் படிக்கும் தமிழர்கள்.

      புர்க்கா கலாச்சாரத்தை தமிழ்நாட்டு வஹாபி முஸ்லீம்கள் தான் வரவேற்கிறார்கள், வலியுருத்துகிறார்கள். ஆனால் பலநாட்டு முஸ்லீம்களும் கூட அதை எதிர்க்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் காட்டிய பின்னரும் அதைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல், உளறுவதில் மட்டும் குறியாக இருப்பதில் என்ன தெரிகிறதென்றால், இந்த விவாதத்தைத் தொடர்வதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தான். 🙂

      புர்க்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி துருக்கி, ருனீசியா போன்ற முஸ்லீம் நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மதவாதிகளாகிய காவிகளைப் பற்றி, இன்னொரு இஸ்லாமிய வஹாபியக் காவியான மீரான் உளறுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் காவிகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பு கிடையாது ஆகவே அவரது உளறலைப் பார்த்து என்னால் சிரிக்க மட்டும் தான் முடியுமே தவிர அவர்களுக்காகப் பதிலளிக்க முடியாது.

  75. தமிழ்நாட்டில் இந்து-முசுலிம் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காகத்தான் ”அரபுமயமாக்கலை ” வியாசன் எதிர்த்து எழுதுகிறாராம்.இதுதான் சாத்தான் வேதம் ஓதுவது.ஏற்கனவே இங்கு இந்து-முசுலிம்களிடையே நல்ல ஒற்றுமை நிலவுகிறது என்பதற்கான சான்றுகளை நாங்கள் எடுத்து வைக்கும்போதெல்லாம் அவற்றை உண்மையல்ல என்று ”எனக்கு தெரியும்”என்ற ஒரே ஆதாரம் கொண்டு மறுக்கிறார்.அதாவது அந்த ஒற்றுமையை அவர் விரும்பவில்லை,சண்டையிட்டுக்கொண்டு சாக வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில்தான் அவற்றை ” உண்மையல்ல ” என்கிறார்.

    மாமன்.மச்சான்,சகோதரன் என்று சொல்கிறானா.அது நக்கல்.

    மாமா ன்னு கூப்பிடுறானா .அதுல அன்பு ஒன்னும் இல்லை.

    சல்லிக்கட்டுக்கு காளை கொண்டாந்தாலும் மாடு புடிச்சாலும் முசுலிம்கள் தமிழ் கலாச்சாரத்தை விட்டு விலகி அரபுமயமாகிட்டாங்க.

    நெய்ச்சோறு,ஆணம் ,வெஞ்சனம்.நோன்பு கஞ்சி என்று பாரம்பரிய உணவு இருந்தாலும் அரபுமயமாகிட்டாங்க.

    இப்படியாக தனது வாதங்களை வைக்கும் இவர் கடைசியா எனக்கு ஒரு சோதனையும் வைக்கிறார்.பன்றிக்கறி இருக்கும் தட்டிலிருந்து வேறு உணவை எடுத்து உண்பாயா என்று கேட்கிறார்.இந்த அறிவாளிக்கு சொல்கிறேன்.உதட்டளவில் சொல்லவில்லை.உள்ளத்திலிருந்து சொல்கிறேன்.பன்றிக்கறிதான் நாங்கள் விலக்கும் உணவு.அது தவிர வேறு எந்த உணவையும் நான் உட்கொள்வேன்.அது என் தட்டில் இருந்தாலும் சரி,பக்கத்தில் அமர்ந்து பன்றிக்கறி உண்ணும் சகோதரனின் தட்டில் இருந்தாலும் சரி.இதை யார் முன்னிலையிலும் மெய்ப்பிக்கவும் தயார்.

    வியாசனும் தன்னிடம் தீண்டாமை இழிகுணம் இல்லை என காட்ட மாட்டுக்கறி உள்ள தட்டிலிருந்து கத்தரிக்காயை உண்பாராம்.எப்படி மாடுதின்னி என கேவலப்படுத்திக்கொண்டே உண்பாராமா.உண்ணும் உணவை வைத்து சக மனிதனை இழிவாக அழைக்கும் இவர் தீண்டாமை வெறி இல்லாதவராம்.கேப்பையில் நெய் வடியுது.நம்புங்கள் என்கிறார்.

    திப்பு,வியாசன் என்ற இருவரும் எழுதுவதே யாரிடம் தீண்டாமை குணம் உள்ளது என காட்ட வல்லது.

    பன்றிக்கறி உண்ணும் வீட்டில் முசுலிம்கள் சாப்பிட மாட்டார்கள் என்கிறார் வியாசன்.முன்னர் தட்டை கழுவி விட்டு சாப்பிடுகிறார்கள் என்று அவர் சொன்னதாக சொல்கிறேன்.ஒன்று அவர் இதை மறுக்க வேண்டும்.அல்லது ஒப்புக்கொள்ள வேண்டும்.இரண்டும் கெட்டான் தனமாக நான் அவருக்கு தேடித்தர வேண்டும் என்கிறார்.ஏன்.அதை படிச்சு பாத்து அப்படி இல்லை,இப்படி இல்லை என முழ நீளத்துக்கு எதையாவது எழுதி சமாளிக்கவா.அறிவு நாணயம் என்று ஒன்று இருந்தால் தனது கருத்து இதுதான் என உறுதியாக சொல்லட்டும்.அதன் பிறகு நான் ஆதாரம் தருகிறேன்.இவர் கருத்து என்னன்னு இவருக்கு தெரியாதாமா.சொல்ற கருத்தில் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தால் எனது கருத்து இதுதான் என சொல்ல வேண்டியதுதானே.வழ வழா என்று விளக்கெண்ணை விளக்கம் வேண்டியதில்லை.இரண்டில் ஒன்றை இதுதான் என் கருத்து என நேரடியாக சொல்லட்டும்.

    \\அந்தக் கட்டுரை உண்மையானது என்று தான் நான் நம்புகிறேன், நேரில் சென்று பார்த்து தான் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள்.//

    கடைசியில் நம்பிக்கையை சரணடைந்து விட்டார்.நான் காரணங்களை வைத்தே அது கள்ளப்பரப்புரை என்கிறேன்.குற்றச்சாட்டு சொல்பவர் அதை மெய்ப்பிக்க வேண்டுமா குற்றஞ்சாட்டபடுபவர் அதை பொய்யென நிரூபிக்க வேண்டுமா என ஒரு வழக்கறிஞரை கேட்டு வியாசன் தெளிவு படுத்திக்கொள்ளலாம் .

    அரபு கட்டிடக்கலையை முசுலிம்கள் இங்கு கொண்டாந்துட்டாங்களாம் .காலந்தோறும் கட்டிடக்கலை மாறி வந்துள்ளது இந்த அறிவாளிக்கு தெரியாது போலும்.

    • ______

      திப்புவும் அவரது நன்பன் வஹாபிநானாவும் இங்கு வாதம் பண்ணவில்லை விதண்டாவாதம் பண்ணுகிறார்கள். எனக்கும் விதண்டாவாதம் பண்ணத் தெரியும் ஆனால் அது வீண் வேலை.
      திப்பு ஒன்றும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு சான்று வைக்கவில்லை. அரபுமயமாக்கலை மறைப்பதற்காக பேசிக் கொண்டிருக்கும் விடயத்தை திசை திருப்புவதற்காக பேசப்படும் விடயத்துக்குப் பதில் கூறாமல், தேவையில்லாத விடயத்தைப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் முஸ்லீம்களை மட்டுமல்ல, பார்ப்பனர்களையும் தான் மாமா, மாமி என்கிறர்கள் தலித்துகள். எந்த முஸ்லீமும் மாமா என்கிற தலித்தை வாங்கோ மருமகனே என்று வரவேற்பதில்லை, அதே போல் பார்ப்பனர்களும் வரவேற்பதில்லை, எல்லாமே ஒருவழி மரியாதை தான் என்பதை விளக்கிய பின்பும், உலகமுஸ்லீம்கள் அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கும், ஆடையணிகளில் அரபுமயமாக்கல், தமிழ்நாட்டில் இஸ்லாத்தில் தீவிரவாத வகாபியிச ஊடுருவல் என்பவற்றைப் பற்றிப் பேசாமல், மாமா, என்கிறோம், மச்சான் என்கிறோம், நெய்ச்சோறும், ஆணமும் சாப்பிடுகிறோம் என்கிறார். இதெல்லாம் அரபுமயமாக்கல் நடைபெறவில்லை என்பதற்குச் சான்றுகளாம், எந்தளவுக்கு வினவு வாசகர்களை திப்பு எடை போட்டுக்கிருக்கிறார் என்பதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. அவர் கூறும் நொண்டி உதாரணங்களைக் கேட்டுக் கொண்டு அவருக்கு ஆமாம் போட்டு, தமிழ் முஸ்லீம் பெண்கள் கறுப்புக் கோணிப்பையால் தலையை மறைத்துக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்துவதற்கு அரபுமயமாக்கள் காரணமல்ல, அவர்களின் அளவுகடந்த Fபாஷன் மோகம் தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமாம். 🙂

      காபிர்களுக்கு அதாவது முஸ்லீம் அல்லாதவருக்கு உண்மையை மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறதென்கிறார்கள், அதை அரபில் Taqqiya என்பார்களாம். அதைத் தான் இங்கே இருவரும் செய்து கொண்டிருக்கிறார்கள் என நம்புகிறேன்.

      மாடு சாப்பிடும் ஒருவரின் அருகிலிருந்தே நான் சாப்பிடமாட்டேன் என எனக்குச் சவால் விட்டு விட்டு இப்பொழுது நான் சவால் விடுகிறேனாம். நீங்கள் பன்றிக்கறி உள்ள தட்டிலிருந்து வேறு ஏதாவது உணவை உண்பது போலவே. நான் கூட மாட்டுக்கறியுள்ள தட்டிலுள்ள உணவை உண்பேன்/உண்டிருக்கிறேன். பிறகென்ன இரண்டு பேருமே சவாலை ஏற்றுக் கொண்டு விட்டோம். மாடு தின்பவர்களை ‘மாடுதின்னி’ என்கிறார்கள் இலங்கையில் அதே போல் பார்ப்பனர்களை பச்சரிசிப் பிராமணி, புக்கை, பூசணிக்காய் என்றெல்லாம் கூடத் தான் பேச்சு வழக்கில் பல பெயர்களுண்டு, அதெல்லாம் தீண்டாமைக்கு அறிகுறி என்று நான் நினைக்கவில்லை. மாட்டிறைச்சி என்று வரும்போது மட்டும் முசல்மான்கள் அப்படியே உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்கள். மாட்டிறைச்சி மிகவும் சுவையானதென்று கேள்விப்பட்டேன், அதனால் தான் போலிருக்கிறது.

      ஐயா பெரியவரே, நான் எழுதும் பதில் எல்லாவற்றையும் நான் பாடமாக்கிப் வைத்திருப்பதில்லை, நினைவில் வைத்திருக்க எனக்கு இதை விட எவ்வளவோ முக்கியமான வேலைகள் உண்டு. ஏதோ அப்படியொரு விடயத்தைப் பேசியது எனக்கு நினைவிலுள்ளது, ஆனால் வரிக்கு வரி எனக்கு ஞாபகமில்லை, ஆகவே தான் அது எந்த தலைப்பில் உள்ளது என்கிறேன். எந்தச் சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிக் கூறினேன் என்பது தெரியாமல்., உங்களுக்கு வேலை இல்லாமல், நீங்கள் கிளறிக் கொண்டு வரும் எல்லா விடயங்களுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை, விரும்பினால் பதிவு செய்யுங்கள் அல்லது ஆளை விடுங்கள்.

      அரபுக் கட்டிடக் கலையை வந்தேறி முகலாயர்களும், அவர்களின் வாரிசுகளும், வாலாயங்களும் தான் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தனர். ஆனால் இன்று வஹாபிகளும் அவர்களின் வாலாயங்களும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் எல்லாம், தமிழர்களின் பழமை வாய்ந்த கோயில்களுக்கு அருகிலேயே அரபுக் கட்டிடங்களைக் கொண்டு வருகின்றனர். அவை தமிழ்க்கிராமங்களின் தமிழ்த் தன்மையைக் கெடுக்கின்றன, தமிழன் என்ற முறையில் அது எனக்கு மிகவும் எரிச்சலையூட்டுகிறது.

      அடுத்த வஹாபியின் உளறல்களுக்குப் பதிலளிக்க எனக்கு இன்றைக்கு நேரமில்லை, நாளைக்குப் பார்ப்போம். 🙂

      • இந்தியாவிலோ, இலங்கையிலோ அல்லது தமிழ்நாட்டிலோ கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் ஆட்சியமைக்க மாட்டார்கள், அது கனவில் கூட நடக்காது என்பது உண்மையிலேயே ஆறுதல் தரக் கூடிய விடயம் தான். ஏனென்றால் அப்படி ஏதாவதொரு அசம்பாவிதம் நடந்தால் பேச்சு சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விடும். Politburo இலுள்ளவர்களும் நண்பர்களும், உறவினர்களும் மட்டும் தான் பேசமுடியும். உண்மையில் கம்யூனிசம் கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் யூனியனிலும் காணாமல் போனதற்கு, இதுவும் (Cronyism) முக்கிய காரணங்களிலொன்றாகும். அந்தக் கம்யூனிச வழக்கத்தைத் தான் இங்கும் நடைமுறைப்படுத்துகின்றார் வினவு மட்டுறுத்துனர். உதாரணமாக, அவர்களின் நண்பனும், இங்கு தனது எழுத்துப்படைப்புகளை வெளியிடுபவருமாகிய திப்பு அவர்கள். ஈழத்தமிழர்களுக்கெதிரான முஸ்லீம் வலைப்பதிவுகளிலிருந்து, எப்படியான பிரச்சார இணைப்புகளை இணைத்தாலும், அவர் எதைக் கூறினாலும், வெளியிடும் வினவு மட்டுறுத்துனர், திப்பு எழுப்பும் கேள்விகளுக்கு, நான் பதிலளித்தால் அவற்றை அப்படியே அகற்றி விடுகிறார். உதாரணமாக, தி பயனியர் (the Pioneer)ஆங்கில தினசரியில்FATWAS BAN OUTSIDERS’ ENTRY INTO RAMESWARAM VILLAGES என்ற செய்திக்கட்டுரை December 2013 இல் வெளியீட கட்டுரை பற்றிய திப்புவின் கேள்விக்கு எனது பதில் முழுவதையும் அகற்றி விட்டார். திப்புவிடம் இக்கட்டான கேள்விகளைக் கேட்டு அவரைக் குழப்புவதை வினவு மட்டுறுத்துனர் விரும்புவதில்லை போல் தெரிகிறது. மண்ணடி மஸ்தான்கள் மீது வினவுக்குள்ள ‘பயம் கலந்த மரியாதை’ அதற்கொரு காரணமாக இருந்தாலும் கூட, முன்பும் பலமுறை இவ்வாறு ஒருபக்கச் சார்பாக இவர்கள் நடந்து கொண்டுள்ளனர். எனது இந்தக் கருத்தைக் கூட வெளியிடுவார்களோ தெரியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

      • \\திப்பு ஒன்றும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு சான்று வைக்கவில்லை. //

        இங்கு கற்றது கையளவு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.இந்த விவாதத்தை நீங்கள் தொடர்ந்து படிப்பது தெரிகிறது.நாங்கள் அப்படி சான்று வைக்கவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா.உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

        • வெள்ளம் வந்த வேளையில் இந்து, முசுலீம் என்று மக்கள் வித்தியாசம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர். அதற்கு நானே ஒரு சாட்சி. ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் மறுபடி மதச்சண்டைகள் தலை தூக்குவது மனதை அயர்ச்சி அடைய செய்கிறது.

          1980களில் இரு மதத்தில் உள்ளோரும் அண்ணன் தம்பியாக பழகினர், ஆனால் இப்போது இடையில் இரு மதத்திலும் தீவிர மதவெறி உள்ள சிறியதோர் கூட்டம் பெரும்பான்மையான மக்களிடையே வேற்றுமை கருத்துக்களை, மாற்று மதத்தினர் மேல் வெறுப்பை கக்க வைக்கிறார்கள்.

          விநாயக சதுர்த்தி என்பது 1980களில் அமைதியாகவே நடந்தன. ஆனால் 90களில் ஊர்வலங்கள் போர்க்களங்களாக மாறின. மீண்டும் பழைய காலம் போல சகோதரர்களாக, நண்பர்களாக இரு மதத்தவரும் நடந்து கொள்ளும் காலம் எப்போது வருமோ?

          இயற்கை பேரிடர் வந்தால் தான் மனிதம் தலை தூக்க வேண்டுமோ?
          மற்ற நேரங்களில் அடித்து கொண்டு சாவது தான் பெருமையோ?

          • க.கை,அவர்களே.

            நான் என்ன கேட்டிருக்கிறேன்.நீங்க என்ன பதில் சொல்லுறீங்க.சரி.எனது கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு விருப்பமில்லை.அதற்கு பொருள் என்னவென்று நான் சொல்கிறேன். சொல்ல வேண்டிய பதில் உங்களுக்கு விருப்பமானதாக இல்லை.

            அப்புறம் உங்க பாணில மத ஒற்றுமை பேசுறீங்க.இந்த மாதிரி திசை திருப்பல்கள் நிறைய பாத்தாச்சு.இருந்தாலும் பதில் சொல்கிறேன்.கேட்டுக்கங்க.

            இரண்டு மதத்திலும் மதவெறியர்கள் என்று தாக்குபவனையும்,தாக்கப்படுபவனையும் சம அளவில் வைக்கிறீர்கள்.

            இந்த வெள்ளத்தின் போதே கல்யாணராமன் என்கிற இந்து மதவெறியன் முசுலிம் தன்னார்வ தொண்டர்களை இழிவு படுத்தி பேசினார்.இது போல் பிற மதத்தினர் மீது நஞ்சு கக்கிய ஒரு முசுலிமை உங்களால் காட்ட முடியுமா.

            \\விநாயக சதுர்த்தி என்பது 1980களில் அமைதியாகவே நடந்தன.//

            தொடர்ந்து அமைதியாக நடதிருந்தால் விநாயக சதுர்த்தி ஊர்வலங்களே இல்லாமல் போயிருக்கும்.கலவரம் தானே அதன் முதன்மையான நோக்கம்.அதே 80-களில் துவங்கப்பட்ட மீலாது ஊர்வலங்களை கலவரத்துக்கு காரணமாகின்றன என்று முசுலிம்கள் கை விட்டு விட்டனர்,அப்படியானால் அமைதியை விரும்புபவர்கள் யார்.கலவரத்தை விரும்புபவர்கள் யார்.

            \\இயற்கை பேரிடர் வந்தால் தான் மனிதம் தலை தூக்க வேண்டுமோ?
            மற்ற நேரங்களில் அடித்து கொண்டு சாவது தான் பெருமையோ?//

            முதலில் உங்கள் ”நடுநிலைமை”யை புரிந்து கொண்டால் இந்த கேள்வியின் பொருளும் புரிந்து விடும்.

  76. வியாசனும் , ரெபெக்காவும் படித்து படித்து சொல்லியும் இன்னமும் திப்புவினதும் , மீராசாகிப்பினதும் புத்தியில் ஏறியதாக தெரியவில்லை. திரும்ப , திரும்ப வடிவேலு ” என்ன கையை பிடிச்சு இழுத்தியா ” என்று கேட்டதுபோல் கேட்டு வருகிறார்கள் .பொதுவாக அரேபியர்கள் தவிர்ந்த பிறநாட்டு இஸ்லாமியர்கள் அரேபியர்களுக்கு புத்தி மட்டு என்றே சொல்வார்கள் . வாகாபியிஸத்தால் மண்டை கழுவப்பட்டிருக்கும் திப்புவுக்கும் , மீராவுக்கும் புத்தி மங்கிப்போய்விட்டது . சொல்லிப்ப்யனில்லை . விட்டுவிடுங்கள் . இந்த வாகபியிஸ்டுகளுக்கு காவியிஸ்டுகளின் டிரீட்மென்ட்தான் சரி வரும். தமிழர்கள் இன , மத பேதங்களை மறந்து ஒற்றுமையாக இருப்போமென்று சொன்னால் கேட் க மாட்டார்கள்.

  77. ரொம்ப கவலைப்பட்டு கண்ணீர் சிந்தி உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ளவேண்டாம் வியாசன். உங்களுக்கு லாலா, பி.ஜோசப் என்ற உற்ற நடுநிலைத்தவறா,உலக அறிவும்,தமிழ் கலாச்சார பற்றும் உள்ள ரெண்டு சிங்க குட்டிகள் பக்கபலமாய் இருக்கிறார்கள்.நீங்கள் மூவரும் போதாதா வகாபிகளையும் புர்காக்களையும் அடித்து விரட்ட.இப்பவே எங்களை விரட்ட என்ன ட்ரீட்மெண்ட் சரியா வரும் என்பதை லாலா என்பவர் யோசித்து வைத்துவிட்டார்.பிறகு எதற்க்கு கலாச்சரத்திற்க்காய் க்ண்ணீர் சிந்தி கவலைப் பட்டுக்கொண்டு…..ஆனால் உண்மையில் உங்களை நினைத்தால் எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்க்கிறது. தமிழ்நாட்டிலும் இருக்கிறார்களே கேடுகெட்டவங்கள். எவனுக்காவது உங்க அளவுக்கு கலாச்சாரபற்று இருக்கிறதா? ஆனால் எனக்கு ஒன்று பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது வியாசன்….அது எப்படி இலங்கை காரங்கள் நீங்கள அங்கு இருக்கும்போதே அரபியாக வகாபியாக மாறினான்? ஒருவேளை போரும் கலவரமாயும் இருந்ததால் உங்களால் கவனிக்க முடியாமல் போயிருக்கும்.சரி நான் உங்களிடம் மிக வேண்டி விரும்பி கேட்டுகொள்வது என்னவென்றால் தயவுசெய்து கவலை மட்டும் படாதீர்கள்.உங்கள் ஆரோக்கியம் மிக முக்கியம். இன்னும் உங்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய வேலைகள் காத்திருக்கிறது.இந்த அரபி வகாபிகளை அடித்து விரட்டியப்பிறகு இன்னும் தமிழ் கலாச்சார ஆபத்துகள் இருக்கும் அவைகளையும் விரட்டி கூடியவிரைவில் தமிழ்நாட்டை பரிசுத்தமான தமிழ்கலாச்சாரம்ண்ணாக மாற்றியாக வேண்டும்.எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது வியாசன்.நீங்கள் ஆரம்பத்திலேயே எங்களோடு இருந்திருந்தால் நானெல்லாம் அரபியாக வகாபியாக மாறியே இருக்கமாட்டேன். போங்க வியாசன் இவ்வளவு நாளும் விட்டு விட்டு நாங்களெல்லாம் மாறியபிறகு வந்திருக்கிறீர்களே.சரி பரவாயில்லை.இன்னும் எஞசி இருக்கிற தமிழ் முஸ்லிகளையாவது சேலை, பாவாடை தாவணி ஆண்கள் வேட்டி, பட்டாபட்டி போன்றவைகளை எப்படியாவது போடவைத்து தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றி விட்டுத்தான் நீங்கள் வேறுவேலை பார்க்கவேண்டும்.அதற்க்கு முன்னால் தயவுசெய்து கவலைபட்டு கவலைபட்டு சோர்ந்துவிடாதீர்கள் வியாசன்.சோர்ந்துவிடாதீர்கள்.

  78. வியாசனை பஞ்சம் பிழைக்க கனடாவிற்க்கு ஓடியவர் என்று திப்பு சொன்னபோதே அதற்க்கு கலங்காமல் பதில் சொன்னார் வியாசன் அகதியாக வேற்று நாட்டிற்க்கு செல்லும் கொடுமையை அவர் கேலி செய்த போதே கலங்காமல் பதில் சொன்னவர், மீரா சாகிபின் கிண்டலுக்கா கலங்கி விடப்போகிறார் கலங்க மாட்டார் வியாசன் ,ஆனா பாருங்க இதுல ஒரு உண்மை இருக்குது எந்த இலங்கை அகதியாவது இசுலாமியநாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க ஓடிப்போனான் என்று கதை இல்லை அல்லாவின் ஆதர்ச பூமியான சவுதிக்கு அகதியாக ஓடிப்போன இலங்கை தமிழன் எவரும் இல்லை அனால் பஞ்சம் பிழைக்க அரேபியா போய் அடிமைப்பட்டு செத்த தமிழர்கள் பலருண்டு இதுக்கெல்லாம் காரணம் இசுலாம் என்ற அரேபிய அடிமை மதம்தான் என்று நான் சொன்னால் எனக்கு காக்கி டவுசர் மாட்டி விட்டு ஆர் எஸ் எஸ் ஆக்கி விடுவார்கள் இசுலாமியர்களும் இசுலாமிய செம்பு தூக்கி கம்மூனிஸ்டுகளும்…

    • அகதியாக புலம் பெயர்வதை கேலி செய்யவில்லை.முதன் முதலில் இது பற்றி எழுதியது.

      \\கடந்த முப்பது ஆண்டுகளாக மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்கு பிறகு வெறி கொண்டு கிளம்பிய சங் பரிவார் கும்பல் இந்து முன்னணியாக ,இந்து மக்கள் கட்சியாக செய்து வந்த வெறியூட்டும் பரப்புரை தமிழ் மக்களின் மத ,சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியவில்லை என்பதை உச்சந்தலையில் ஆணி அடித்தாற்போல் மதவெறியர்களுக்கு உணர்த்தி இருக்கிறார் அந்த தம்பி இளங்கோ.

      ஆனானப்பட்ட சங் கும்பலே தமிழர்களின் நல்லிணக்க உணர்வுக்கு முன் வெளுத்து சாயம் போய் கிடக்கிறார்கள்.புதிதாக நீலச்சாயம் பூசிய நரிகள் அரபுமயமாக்கல் ,முசுலிம்களின் புர்கா தமிழர்ளை பயமுறுத்துகிறது என ஊளையிடுவது எம்மாத்திரம்..

      பன்னெடுங்காலம் எங்கள் முன்னோர்கள் பேணி வந்த நல்லிணக்கத்தை தொடர்ந்து எவ்வாறு காப்பாற்றி வரவேண்டும் என்பதை இந்த நாட்டில் வாழும் இந்துவானாலும் சரி,முசுலிமானாலும் சரி தமிழர்களான நாங்கள் நன்கறிவோம்.

      ஆகவே, சொந்த நாட்டு மக்கள் சிங்கள பேரினவாத தாக்குதலுக்கு ஆளாகி துயருற்று கிடந்த போதும் அவர்களுக்காக களத்தில் நின்று போராடாமல் பஞ்சம் பிழைக்க கனடாவுக்கு ஓடிப்போன பரதேசி வியாசன்களும் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு துட்டு பாக்க அதே கனடாவுக்கு ஓடிப்போன ஓடுகாலி ராமன்களும் தமிழ்நாட்டில், இந்த மண்ணில் நின்று நிலைத்து வாழும் ,இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களான மண்ணின் மைந்தர்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என ”சொல்லித்தர” வேண்டியதில்லை.

      பொத்திக்கொண்டு போகலாம்.//

      அங்கிருந்து கொண்டு இந்த மண்ணில் வாழும் மக்களுக்கு எப்படி வாழ வேண்டும் என சொல்லித்தர தேவை இல்லை என்றும்,நாட்டாமை போல ”அது அப்படித்தான்,எனக்கு தெரியும்” என்று பேசுவதை கண்டித்தும் தான் எழுதி வருகிறேன்.

      • அண்ணன் வியாசன் கணடாலறுந்து தமிழ்ர்களும் தமிழ் முஸிலீம்களும் எப்பிடி வாழனுமுனு சொல்லக்கூடாதாம் பொத்திக்கொண்டு போக வேண்டுமாம் அண்ணன் திப்பு, தாடி வைப்பதும் கரண்டை காலுக்கு வேட்டி கட்டுவதும் இடுப்புவரை ஜிப்பா அணிந்து கொண்டு தோளில் கட்டம் போட்ட துண்டை முக்கோனாமாக மடித்து போட்டுக்கொண்டு காஜியார் என்று சொல்லிக்கொண்டு அலைவதும் தனது மனைவிக்கு சேலைக்கு மேலே கருப்பு முக்காட்டை போர்த்தி விட்டு அலைய வைப்பதும் யார் சொல்லிக்குடுத்தது .நிச்சயமாக தமிழ்னாட்டு தமிழன் இல்லை கனடா நாட்டு தமிழனும் அல்ல சவுதியின் ஆதர்ச மதமான உண்மை இசுலாம் சொல்லிக்குடுத்ததை செய்கிறீர்கள் இப்பிடித்தான் டெர்ஸ் போடனுமுனு அரேபிய அடிமை ஆலிம்கள் சொல்லும் போது அது அவர்களுக்கு உவப்பாக இருக்கிறது ஏனென்றால் அவன் அவரின் மத பங்களி அல்லவா ஆனா வியாசன் கனடாலருந்து தமிழ் கலாச்சாரம் பற்றி பேசினால் நாங்க தமிழர்கள்தான் மதநல்லினக்க்த்தோடு வாழ்வதற்க்கு எங்களுக்கும் தமிழ் நாட்டினருக்கும் தெரியும் கனடாவில் இருப்பதால் பொத்திக்கொண்டு போ என்பது, அட இதத்தான் நான் மத வெறி மொக்கைத்தனம் என் கிறேன்..

        • பின் குறிப்பு :-முஸ்லீம்கள் தங்கள் மதம் சொல்லித்தான் மற்றவர்களோடு நல்லிணக்கமாக வாழ்கிறார்களா இல்லை இங்கு சிறுபாண்மையாக இருப்பதால் வேறு வழி இல்லாமல் நல்லிணக்கமாக வாழ்கிறார்களா நிச்சயமாக மதம் சொல்லி அப்படி வாழ்ந்தார்கள் என்றால் இசுலாமியர் பெரும்பாண்மையாக உள்ள நாடுகளில் மத நல்லிணக்கம் எங்கே போனது அல்லாவின் புனித பூமியில் மாற்று மதத்தவர் வெளிப்படையாக வழிபாடு கூட செய்ய முடியாது அண்ணன் திப்பு தாடிய எடுத்துவிட்டு சக மனிதனாக மீனாச்சி அம்மன் கோவிலுக்கோ திருப்பதிக்கோ போகலாம் நான் 2 லச்ச ரூபா தரேன் அண்ணன் என்னை புண்ணிய பூமி மக்கா மதினாவை ஒரு சுற்றுலா பயணியாக அழைத்துச்செல்வாரா அட்லீஸ்டு உங்க பள்ளி வாசல்யாவது விடுவிகளா இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எப்போதுமே மத நல்லிணக்கத்தில் அவர்கள் நம்பியிருக்கும் மதத்தில் எதிர்ப்பு இல்லை ஆனா இசுலாத்துல என்ன இருக்குதுனு நல்லவே தெரியும்..

          • \\அண்ணன் திப்பு தாடிய எடுத்துவிட்டு//

            நான் தாடி வைப்பதில்லை.நாள் தோறும் மழுங்க சவரம் செய்து கொள்வது என் வழக்கம்.இது பொய்யென புறப்படுவார்கள் சிலர்.அவர்களுக்கு ஒன்றை சொல்கிறேன்.எனக்கு நேரில் அறிமுகம் உள்ளவர்களும் இந்த விவாதத்தை படிக்கிறார்கள்.

            • சரிய்யா திப்பு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க அதை விட்டுட்டு நான் தாடி வைக்கவில்லை என்பது பதிலா

        • தமிழர்கள் ஒன்றுபடுவதை விரும்பாத குள்ளநரிகளின் வாயை அடக்கத் தான் “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே” என்று பாரதிதாசன் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறது.

          • மதங்களை கடந்து தமிழர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என சான்றுகளோடு நான் சொல்கிறேன்.அதெல்லாம் ஒன்றுமில்லை ,எனக்கு தெரியும் முசுலிம்கள் இன்னும் கொஞ்ச நாளில் தமிழர்களின் குரல்வளையை குறி பார்ப்பார்கள்,கருப்பு கோணிப்பையால் தமிழர்களை பயமுறுத்துகிறார்கள்,கோயிலுக்கு பக்கத்துல அரபு கட்டிடக்கலையில பள்ளிவாசல் கட்டுறாங்க,என்றெல்லாம் வெறுப்பு பரப்புரை செய்து தமிழர் ஒற்றுமையை பிளக்கிறார் வியாசன்.

            ஆகவே தமிழர்கள் ஒன்றுபடுவதை விரும்பாத குள்ளநரி யார்.

            [இந்த மண்ணில் இந்து கோவில்கள் இருப்புக்கும்,புதிதாக கோவில்கள் கட்டுவதற்கும் எந்த அளவுக்கு உரிமை உண்டோ அதற்கு எள்ளவும் குறையாத உரிமை பள்ளிவாசல் இருப்புக்கும்,புதிதாக கட்டுவதற்கும் எங்களுக்கு உண்டு.இந்த உரிமைக்கு தமிழ்மக்கள் அனைவரின் ஏற்பிசைவு இருப்பதால்தான் தமிழ்நாட்டில் இத்தனை பள்ளிவாசல்கள் கட்டப்பட்டிருக்கின்றன.புதிதாக கட்டவும் படுகின்றன.வியாசன்களின் அனுமதிக்காக நாங்கள் காத்திருப்பதில்லை.]

            “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே” .ஆம் தமிழன்தான்.ஆனால் மதமாச்சரியங்களை தூண்டி பரப்புரை செய்து ஒற்றுமைக்கு வேட்டு வைப்பவன் ,இனத்துரோகி.

            அடித்துக் கொண்டு சாகட்டும் என்ற கெட்ட நோக்கத்தில் கள்ளப்பரப்புரையில் ஈடுபடுபவன் இனத்தின் பகைவன்.பாவேந்தரின் வரிகளை அத்தகையோருக்கு நினைவூட்டுகிறேன்.

            எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
            எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
            இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
            பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
            சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

      • தமிழ் முஸ்லீம்கள் தீவிரவாத வாஹாபியிசத்தின் தூண்டுதலால் அரபுமயமாக்கப் படுவதை மறைக்க சும்மா நல்லிணக்கம், புல்லிணக்கமென்று பம்மாத்து விடுகின்றனர் இரண்டு வஹாபிகளும். ஒருவரின் சாயம் வெளுத்துப் போய் விட்டது, அவர் களைத்துப் போய் விட்டார். இங்கு பேசப்படும் கருத்துக்களுக்குப் பதிலளிக்க அவரால் முடியாது. அவையெல்லாம் அவருடைய எல்லைக்கு அப்பாற்பட்டவை. ஆகவே வெளிப்படையாகவே, அப்படித்தான் செய்வோம், இப்படித்தான் செய்வோம், செய்யிறதை செய்து பார் என்று உளறத் தொடங்கி விட்டார். ஆனால் திப்பு இன்னும், கொஞ்சமும் அலுப்புத் தட்டாமல், மச்சான் என்கிறோம் மாமா என்கிறோம், நெய்ச்சோற்றுக்குள் இப்ப கூட ஆணம் விட்டுச் சாப்பிடுகிறோம் என்று சம்பந்தமில்லாமல் புலம்புகிறார். சாதாரணமாக, திப்புவுடன் வினவில் நடைபெறும் விவாதங்களில் அவர் உளறத் தொடங்கியவுடனேயே, ‘Whatever you say’ என்று நிறுத்திக் கொள்ளும் நான், இங்கு மட்டும் தொடர்வதற்குக் காரணமே திப்புக் காக்காவின் வஹாபிய முகத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான்.

        செல்வி மரினா மகாதிர் அரபுமயமாக்கல் பற்றிப் பேசும் போது அப்படி எதுவுமில்லை என்று மறுத்தது மட்டுமன்றி. அவர் புர்க்கா போடாததால் அவரது இஸ்லாமிய மத நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கி, அவர் பெண் என்பதால் அவரது கருத்துக்கு மதிப்புக் கொடுக்க மறுத்த போதே தனது தீவிரவாத வஹாபிய முகத்தைக் காட்டி விட்டார் திப்பு. பெண்களை ஆண்களுக்கு அடிமையாக அவர்களைப் பெறுமதியற்றவர்களாக, அவர்களை ஆண்களின் உடைமைகளாக மட்டும் மாற்றுவது தான் வஹாபியக் கோட்பாடு.

        மலேசியாவில் அரபுமயமாக்கலை மறுத்தார் திப்பு, ஆனால் இந்தியாவிலும் வஹாபியத்தால் அரபுமயமாக்கல் நடைபெறுகிறது என்பதை இந்தியாவில் அசாமைச் சேர்ந்த முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர் எழுதிய கட்டுரையின் பகுதியைக் கீழே பார்க்கவும். அவர் ஒரு முஸ்லீம் அதிலும் ஆண் என்பதால் அவரது கருத்துக்கு திப்பு செவிமடுப்பார் என நம்புகிறேன். அசாமில் நடைபெறும் இந்து- முஸ்லீம் கலவரத்தின் பின்னணியில் கூட இந்த வஹாபியம் உள்ளதென்கிறார் அவர்.
        இந்தக் கட்டுரையை எழுதிய Sazzad Hussain அவர்கள் ஒரு அமெரிக்க எதிப்பு முஸ்லீம் என்பது குறிப்பிடத் தக்கது.

        உலகம் முழுவதுமுள்ள முஸ்லீம்கள் மட்டுமன்றி, இந்தியாவில் வேறு மாநிலங்களிலுள்ள முஸ்லீம்களும் கூட வஹாபியத்தால் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப்பட்டு தமது ஆயிரமாயிரமாண்டு இந்தியக் கலாச்சாரத்தை இழப்பதாகக் கவலைப்படும் போது, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அதை மூடி மறைக்கிறார்கள். இதிலிருந்தே வஹாபிய ஏஜெண்டுகள் எந்தளவுக்கு தமிழ்நாட்டு முஸ்லீம்கள் மத்தியில் ஊடுருவி விட்டார்கள் என்பதை தமிழர்கள் உணரலாம்.

        India has been exposed to Islamist terrorism over the Kashmir issue and since the Babri Masjid destruction. However, this terrorism has not yet bears the marks of SAUDI WAHHABISM. But in the cultural world the damage has already been done in DILUTING THE IDENTITY OF INDIAN MUSLIMS.
        Saudi elements have been penetrating into Indian Muslim society through charitable networks. As a result, there are signs of Wahhabism making its presence everywhere in the public space of Indian Muslims. The lifestyle prescribed for Muslims by Wahhabism is nothing but the PRACTICES OF BEDOUINS—POLYGAMY, SUBJUGATION OF WOMEN, INTOLERANCE, VIOLENCE etc. In India , this Bedouin customs have been preached to the puritanical form of Islam. This has made the deterioration of the status of Indian Muslim women and the increase of the cosmetic changeover.

        In Assam, this phenomenon has been disturbingly gaining the momentum. These days the Muslims of Assam are not identified as Assamese Muslims or Muslim of East Bengali descent. Instead they are merely homogenized as ‘Muslims’—a political generalization, THANKS TO WAHHABISM, catering the divisive agendas of all. THE USE OF BURQA AND HIJAB ARE ALARMINGLY RISING AMONG THE MUSLIM WOMEN IN ASSAM. The ankle lengthThaub, a Bedouin male dress and the red and white chequered headgear Kaffaiah are now in fashion for many Mollahs and Maulvis and Madrassa students in Assam . It has reached to such an extent that this red-white or green white chequered Kaffaiah is now replacing the Phoolam Gamocha , the symbol of Assamese culture, as the “Muslim Gamocha” in our public life.
        Any public representative—the ministers, MLAs, bureaucrats attending any Muslim function, is felicitated by this Kaffaiah in Assam presently. On this year’s Idd uz Zoha day also Chief Minister Tarun Gogoi was also felicitated with such a green-white Kaffaiah as he attended the prayers in a mosque in Hatigaon, Guwahati. Last year state Minister Dr. Nazrul Islam, ex-minister Noor Jamal Sarkar and PCCI President Bhubaneswar Kalita were also seen donned with suchKaffaiahs in a public meeting organized to see the Haj pilgrims off. Earlier AGP leaders were also seen in same dresses on similar occasions.

        The main objective of the expansionist US designs is to destroy the local and national identity of the exploited people so that much could be sucked up by taking advantage of their collective unconsciousness and ignorance. Saudi Arabia has been partnering the US in spreading this message across the world in the last half a century. As a result, Muslims in Afghanistan, Pakistan and Indian Muslims in Mumbai, Hyderabad, Kolkata have transformed into a homogenized entity, LOSING THEIR THOUSAND YEARS OLD CULTURAL IDENTITIES. The same has been tried in troubled torn Assam to make Muslims further alienated and denationalized.

        ( THE SAUDI ARABIZATION OF ISLAM By Sazzad Hussain. The writer is a freelancer based in Assam , e-mail:sazzad.hussain2@gmail.com)

        //அகதியாக புலம் பெயர்வதை கேலி செய்யவில்லை.//

        எனதருமைச் சகோதரன் திப்பு சுல்தான் அகதியாக புலம்பெயர்வதைக் கேலி செய்யவில்லையாம். அவர் கேலி செய்தால் கூட அது ஈழத்தமிழர்களைத் தாக்குவதை விட, ஈழத்தமிழர்களை விடப் பன்மடங்கில், லட்சக்கணக்கில் அகதிகளாகி, யாராவது ஆதரவு தரமாட்டார்களா என்று அலையும் அவரது சகோதரர்களாகிய முஸ்லீம் அகதிகளைத் தான் அதிகளவில் தாக்கும். அகதியாக மற்றவர்களின் நாட்டுக்குப் போய், ஆதரவு தந்த அந்த நாட்டுக்கு விசுவாசமாக, அந்த நாட்டின் பல துறைகளிலும் முன்னணியில் வகித்து, அந்த நாட்டுப் பிரதமரே வெளிப்படையாகப் பாராட்டுமளவுக்கு உண்மையாகவும், திறமையுள்ளவர்களாகவும் விளங்குகின்றனர் ஈழத் தமிழர்கள், _______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________.

        அவை ஒருபுறமிருக்க, ஈழத் தமிழர்கள் மட்டும் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தமது வீடு, நிலம், உடைமைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு அகதிகளாகப் போகவில்லை, இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தை, அரசியலையும் தமது கைக்குள் வைத்திருக்கும் அமெரிக்க யூதர்களும், அமெரிக்க கனேடிய அரசியல் தலைவர்களாக இன்றிருக்கும் ஸ்கொட், ஐரிஸ்காரர்கள் எல்லோருமே நிலமற்ற, சுரண்டப்பட்ட விவசாயிகளும் , அடுத்த நேர உணவுக்கு வழியற்று உருளைக்கிழங்கு பஞ்ச்சத்தினால் (potato famine) அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குக் குடியேறிய அகதிகள் தான். இவை எல்லாம் திப்புவுக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. அவருடைய நினைப்பெல்லாம், ஈழத்தமிழர்களை அகதி என்றால் ஏதோ எனக்குக் கோபம் வந்து விடும், அதில் அவர் என்னை விவாதத்தில் வீழ்த்தி விட்டதாக ஒரு குட்டிப்புளுகு அவருக்கு ஏற்படும், அதாவது சின்னஞ் சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் சண்டை பிடிக்கிற மாதிரி. 🙂

        தமிழ் மண்ணையும் தமிழர்களையும் பற்றி பேசுவதற்கு எந்த ஈழத்தமிழனும், எந்த ___________ அனுமதி கேட்கத் தேவையில்லை.

        ____________

        • \\செல்வி மரினா மகாதிர் அரபுமயமாக்கல் பற்றிப் பேசும் போது அப்படி எதுவுமில்லை என்று மறுத்தது மட்டுமன்றி. அவர் புர்க்கா போடாததால் அவரது இஸ்லாமிய மத நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கி, //

          அவரது இசுலாமிய மத நம்பிக்கையை நான் கேள்விக்குறியாக்குவதாக வியாசன் குற்றம் சாட்டிய போது அதை தகுந்த விளக்கத்தோடு மறுத்திருக்கிறேன்.[பின்னூட்டம் எண் .25.3.1.1.1.2.மற்றும் அதன் தொடர்ச்சி.அந்த விவாதத்தில் அதற்கு ஒரு பதிலும் சொல்லாமல் வாயடைத்து போனவர் இப்போது அதை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்.இது பித்தலாட்டம்.]

          \\அவர் பெண் என்பதால் அவரது கருத்துக்கு மதிப்புக் கொடுக்க மறுத்த //

          இது அவதூறு.என்கிறேன்.பெண் என்பதால் அவரது கருத்துக்கு மதிப்புக் கொடுக்க மறுத்தேன் என்பதை விளக்கட்டும்.

          \\மலேசியாவில் அரபுமயமாக்கலை மறுத்தார் திப்பு,//

          ஆம்.அந்த மறுப்புக்கு ஒரு பதிலும் சொல்ல முடியாமல் உளறிக்கொட்டி விட்டு ஓடிப்போனார்.மரினா ”கப்தான்”அணிவதை எதிர்க்கிறார்.இவரோ மரினா ஆதரிப்பதாக உளறிக்கொட்டினார் .

          மேலும் அரபுமயமாக்கல் என்று குற்றச்சாட்டு சொல்லப்படுவது உண்மைதான் என்று நான் சொன்னதையே ”ஒரு வகை ஒப்புதல்தான் ”என தனக்குத்தானே தட்டிக்கொடுத்துக்கொண்ட அற்பவாதிதான் இந்த வியாசன்.உண்மை என்று சொன்னதால் ஒப்புக்கொண்டதாகத்தான் பொருள் என்ற தமிழறிஞர் அவர்.இதை விட முட்டாள்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா.

          அடுத்து தமிழ்நாட்டில் தனது பருப்பு வேகவில்லை என அசாமுக்கு போய் விட்டார்.அரபுமயமாக்கல் பற்றி வாதங்களும் எதிர்வாதங்களும் நடந்துதான் வருகின்றன.அதுவல்ல நாம் விவாதிக்கும் பொருள்.தமிழ்நாட்டில் முசுலிம்கள் அரபுமயமாகவில்லை என்றுதான் சொல்லி வருகிறோம்.புர்கா ஒன்றை தவிர வேறு எதனையும் தனது வாதத்திற்கு ஆதரவாக வியாசனால் கொண்டு வரமுடியவில்லை.புர்காவுக்கு முன்னர் கூட இந்து,கிறித்தவ பெண்களை போல் அல்லாமல் முசுலிம் பெண்கள் முக்காடிட்டு ஆடை அணிந்தார்கள்.அப்ப மட்டும் அன்னியமாகி போகாத நாங்கள் இப்போது மட்டும் அன்னியமாகி விட்டோமாம்.என்ன ஒரு கேலிக்கூத்து.

          • காபீர்களுக்கு அதாவது முஸ்லீம் அல்லாதவர்களுக்குப் பொய்சொல்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறதாம். அதைத் தான் இந்த இரண்டு வஹாபிகளும் இங்கே செய்து கொண்டிருக்கின்றனர்.

            இவ்வளவு நாளும் இதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. உண்மையில் நான் தமிழ்நாட்டில் தமிழ்முஸ்லீம்கள் அரபுமயமாக்கப் படுவதைப் பற்றிப் பேசுவதற்குக் காரணம் தமிழ்நாட்டில் என்னுடய நேரடி அனுபவத்தைக் கொண்டு தான். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் நான் முதன் முதலாக தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்த போது, ஒரு தமிழ் முஸ்லீம் நண்பனுடன், துபாய் விமான நிலையத்தில் காத்திருக்கும் போது ஏற்பட்ட நட்பும், அவரால் ஏனைய தமிழ்நாட்டு முஸ்லீம்களுடன் பழகுவதற்கும் அவர்களின் ஊர்களுக்குச் செல்லவும் எனக்குக் கிடைத்த வாய்ப்பையும் உண்மையில் நான் இன்னும் அதிட்டமாகக் கருதுகிறேன். அந்த நண்பனுடன் நான் தமிழ்நாட்டில் போகாத இடமேயில்லை எனலாம் (கேரளாவுக்கும் போயிருக்கிறேன்). எனக்கு நெருங்கிய உறவினர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் கூட, நான் வரும்போது விமான நிலையத்துக்கு வருவதெல்லாம் (வந்து நள்ளிரவுக்குப் பின்பும் விமானநிலையத்தில் காத்திருப்பதும்) அந்த நண்பன் தான் .இந்தப் பத்தாண்டுகளில், குறைந்த பட்சம் ஆண்டில் இரண்டு முறையாவது நான் தமிழ்நாட்டுக்குப் போயிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவனது திருமணத்தின் போது, என்னைக் கேட்காமலே என்னுடைய படத்தையும் பானரில் அடித்துப் போட்டிருந்தார். இதற்கு மேல் நான் கூற விரும்பவில்லை. இலங்கையில் புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகள் என்று வரும் போது, அதைப் பற்றிப்பேசி நான் உன்னுடன் பிரச்சனைப்பட விரும்பவில்லை என்று மட்டும் தான் கூறியுள்ளார். அதே வேளையில் என்னுடைய வலைப்பதிவில் நான் இலங்கை முஸ்லீம்கள் பற்றி எழுதியவை எல்லாமே அந்த நண்பன் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தான்.

            நான் தமிழ்நாட்டில் பல முஸ்லீம் கிராமங்களுக்குப் போயிருக்கிறேன் அவர்களோடு பழகியிருக்கிறேன். ஆனால் இந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு முஸ்லீம்கள் எந்தளவுக்கு மாறிப் போய் விட்டார்கள் (அரபுமயமாகி விட்டார்கள்) என்பதை என்னால் உணரக் கூடியதாக உள்ளது. முன்பெல்லாம் பல முஸ்லீம் நண்பர்களோடு நான் பழகியிருக்கிறேன் ஆனால் நான் எந்த வேறுபாட்டையும் உணர்ந்ததில்லை. திருச்செந்தூருக்கு, குலசேகரப் பட்டணத்துக்கெல்லாம், என்னுடன் வந்து, கோயிலுக்குள்ளே கூட வந்த அந்த நண்பன், சவூதியிலிருந்து திரும்பி வந்த அவனது மாமாவால் மூளைச்சலவை செய்யப்பட்டு, ‘வஹாபிஸ்டாக’ மாறிய பின்னர் அவனை ஒரு தமிழனாக நான் உணரவில்லை. பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. உதாரணமாக தமிழ்-முஸ்லீம் நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூர் தர்காவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடன் வந்தது மட்டுமன்றி போகும் வழியிலேயே நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலுக்குள்ளும், அங்கிருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும் வந்த அதே நண்பன், அன்று தமிழ் முஸ்லீகளின் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவன், இப்பொழுதெல்லாம் வெறும் துணைக்குக் கூட எந்தக் கோயிலின் பக்கமும் போக விரும்பவில்லை. அவர் காரணத்தைக் கூறாது மழுப்பினாலும் மாற்றத்தை என்னால் உணர முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சும்மா சேலையால் முக்காடு போட்டுக் கொண்டு, நான் போகும் போதெல்லாம் ‘வாத்தா (வா அத்தா) எப்ப வந்தீக. இவன் சொல்லவேயில்லையே, வீட்டில அம்மா அப்பா எல்லாம் சுகமா’ என்று சுகம் விசாரிக்கும் அவனது அம்மா இப்பொழுது புடவைக்கு மேலே(முகம் மட்டும் தெரிய) இன்னும் ஒரு புர்க்காவைப் போட்டுக் கொண்டு ஓடி ஒளிகிறார். முன்பெல்லாம் நான் அவர்களின் வீட்டுக்குப் போகும் போது அவனது அப்பா கதிரையில் இருப்பார், அவன் அம்மா அவருக்கு முன்னாலேயே ஒன்றில் படிக்கட்டில் இருந்து கொண்டு பேசுவார் அல்லது நின்று கொண்டு பேசுவார், அவர் சொல்வதைக் கூட எதிர்த்துப் பதில் கூறுவார். இப்பொழுது என்னவென்றால் ஓடிப்போய் சமையலறைக்குள் ஒளிந்து கொண்டு, நான் போகும் போது மட்டும் தலையை நீட்டிப், போயிட்டு வாங்கோ என்கிற மாதிரி தலையை ஆட்டுகிறா. இந்த மாற்றம் வஹாபியத்தால் தான் வந்தது.

            எனது நண்பனின் உடையில் இன்னும் பெரியளவில் மாற்றம் ஏற்படாது விட்டாலும் சிந்தனை, செயல்கள் எல்லாம் மாறி விட்டன. அது தான் வஹாபியிசம் தமிழர்களுக்கும் – முஸ்லீம்களுக்குமிடையே ஒரு நிரந்தர இடைவெளியை ஏறப்டுத்தி விடுமென நான் அடிக்கடி கூறியதன் காரணம். வஹாபியிசம் தமிழர்களைப் பிரிக்கும், தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அரபுமயமாக்கப் படுகின்றனர் என்பதெல்லாம் என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை. இங்குள்ள வஹாபிகளை அதை ஒப்புக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவுமில்லை, ஒப்புக் கொள்ள வேண்டுமென நான் எதிர்பார்க்கவுமில்லை. தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப்ட்டு தமிழர்களுக்கும் – முஸ்லீம்களுக்குமிடையே நிரந்த இடைவெளி ஏற்படுகிறது என நான் எச்சரிக்க வந்தது தமிழ்நாட்டுத் தமிழர்களையே தவிர திப்புவையோ அல்லது மீரானையோ அல்ல. இவ்வளவு நாளும் எனது மனதில் உறுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டேன். 🙂

            இனிமேல் தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல் பற்றிய விவாதத்தை தொடருவோம்..

            • கிளைகிளையாய் தாவி தாவி பார்த்து எதுவுமே பயனற்றுப் போய இப்போது பொய் கதையை விவரிக்க ஆரம்பித்துவிட்டார்.காபிர்களுக்கு பொய் சொல்ல முஸ்லிம்களுக்கு அனுமதியாமே.எங்கிருந்துதான் இவருக்கு எங்களுக்கே தெரியாத விஷயங்களெல்லாம் தெரிகிறதோ?பல காலமாய் உயிருக்கு உயிராய் பழகிய நண்பனின் தாய் வகாபியாக மாறி புர்காவை போட்டுக்கிட்டாராமே! எங்கிருந்தைய்யா நண்பனை நண்பனின் தாயையெல்லாம் பிடிக்கிறீர்.வேற்று கிரகத்திலிருந்து அழைத்து வருகிறீரா?நாங்களும் இருக்கிறோம. எங்களுக்கும் நண்பர்கள் எல்லா தரப்பிலும் உண்டு.இதெல்லாம் பெரிய ஆச்சர்யமாய் இருக்குதைய்யா. சிலர் மற்றவர்களோடு நெருங்கி பழகும் சுபாவம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.இது ஆண்களிலும் உண்டு.பெண்களிலும் உண்டு.எல்லா ஜாதி எல்லா மதத்திலும் உண்டு.அது எப்ப்டிஅய்யா புர்காவை போட்டவுடன் வகாபியாகிறார்கள்.வகாபியானவுடன் பழகிய பேசிய மனிதர்களையே புறக்கணித்து ஒதுங்குகிறார்கள்? என்ன பொய்யை சொல்லியாவது யாராவது ஒருவரையாவது நம்பவைத்து பிரித்துவிட வேண்டும் என்ற நப்பாசை. போனவருட தசரா என்ற விழாவுக்கு என் நண்பன் ராமதாஸ் ம்ற்றும் மது ஜகன் முஸ்லிம் நண்பர்கள் மூவர் திருச்செந்தூரில் தங்கி கலந்து கொண்டு வந்தோம்.நான் என்ன கோயிலில் வணங்க போகிறேனா காணிக்கை செலுத்த போகிறேனா நாங்கள் ஏனய்யா அஞச வேண்டும்.எங்கள் இறைநம்பிக்கை தெளிவானது. உறுதியானது. எங்களோடு மாற்று கருத்துளள யாரோடும் உறவு கொள்ள எங்களுக்கு எந்த தடையுமில்லை.என்னைப் பெற்ற தாய் கடவுளுக்கு இணைவைத்து வணங்க கூடியவராக இருந்தாலும் அந்த ஒரு விஷயத்தில் என் தாய்க்கு நான் இணங்க கூடாது என்று இருக்கிறதே தவிர அவ்ர் தாய் நான் மகன் என்ற உறவோ அவருக்கு மகனாக நான் செய்ய வேண்டிய கடமையுலோ எந்த குறையும் வைக்க கூடாதென்று கட்டளை.நீர் என்ன வேடம் போட்டு வந்தாலும் எங்களில் ஒருவனையும் ஒரு இம்மியும் மாற்றிவிட முடியாது

              • பிறமத வழிபாட்டுதளங்களுக்கு போகவே கூடாது. பார்க்கவே கூடாது என்ற செய்தியை எதிலிருந்து எடுக்கிறீர்.எனக்கு ஆதாரம் தாருமைய்யா.உமது முன்னிலையில் இஸ்லாத்தை கைகழுவ நான் தயாராய் இருக்கிறேன். கண்ணால் பார்க்காத இறைவனுக்கு எந்த உருவத்தையும் இணைவைக்கலாகாது.இருப்பவனோ இறந்தவனோ தெய்வீக தன்மை கொண்டவன் என்று நம்பி இறைவனை வழிபடுவதுபோல இறைவனிடம் கேட்பதுபோல கேட் க்கலாகாது.இவையெல்லாம் இஸ்லாமிய கொள்கைகள்.கோயிலுக்கோ தேவலயத்திற்க்கோ குருத்வாராவுக்கோ ஒரு டூரிஸ்டாக போக நாங்கள் நம்பிய வகையில் எந்த தடையுமில்லை.நாங்கள் போய்க்கொண்டும் இருக்கிறோம்.ஒரு வெள்ளைக்காரன் தாஜ்மகாலையும் மதுரைமீனாட்ச்சியம்மன் கோவிலையும் தஞசைபெரிய கோயிலையும் சுற்றி பார்ப்பதுபோல நாங்களும் பார்க்கலாம்.நான் பார்த்திருக்கிறேன்.

                • புரியாத மாறி பேசியே அடுத்தவனை குழப்பும் கூட்டம் இசுலாத்தை கை கழுவ போகுதாம் முதல்ல நான் மதம் மாறாம மக்காவுக்கோ மதினாவுக்கோ ஒரு டூரிஸ்டாகூட போக முடியுமானு ஆனா ஒன்னும் பிரியாத மாறி இவரு கோவிலு சர்சுகெல்லாம் டூர்ஸ்டா போவராம் இசுலாம பின்பற்றவங்களுக்கு அறிவு கொஞ்சம் கம்மிதான் போல இருக்குட்ர

            • அப்பட்டமான பொய்.மகன் வயதுள்ள இளைஞனை பார்த்து எந்த முசுலிம் தாயும் ஓடி ஒளிய மாட்டார்.இளம் முசுலிம் பெண்கள் அந்நிய ஆண்கள் வீட்டிற்கு வந்தால் அவர்கள் முன்னால் வர மாட்டார்கள்.வயதான பெண்மணிகள் அப்படி இருக்க மாட்டார்கள்.கடைசியில் வியாசன் பொய் சொல்லியேனும் தமிழகத்தில் அரபுமயமாக்கலை மெய்ப்பிக்க முயல்கிறார்.

              \\இப்பொழுதெல்லாம் வெறும் துணைக்குக் கூட எந்தக் கோயிலின் பக்கமும் போக விரும்பவில்லை//

              http://www.thehindu.com/news/cities/chennai/muslim-group-cleans-floodhit-temples/article7959652.ece

              \\எனது நண்பனின் உடையில் இன்னும் பெரியளவில் மாற்றம் ஏற்படாது விட்டாலும்……………… தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப்ட்டு தமிழர்களுக்கும் – முஸ்லீம்களுக்குமிடையே நிரந்த இடைவெளி ஏற்படுகிறது என நான் எச்சரிக்க வந்தது//.

              https://www.vinavu.com/2015/12/11/muslims-rescue-relief-work-chennai-floo-report/#comment-463442

              • சகோ. திப்பு,

                நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு, அவசரப்பட்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களையும் இங்கே குரிப்பிட்டதையிட்டு வருந்துகிறேன். அதைப் பற்றி இனிமேலும் பேச விரும்பவில்லை. எனக்கு பொய் சொல்ல வேண்டிய தேவையில்லை. கடைசி முறையாகக் கூறுகிறேன். என்னைக் கண்டு விட்டு எனது நண்பனின் அம்மா ஓடி ஒழியவில்லை. அப்படி நான் கூறவுமில்லை. அவரை எனக்குப் பத்து வருடங்களாகத் தெரியும். அவருக்கு எங்களின் குடும்பத்தில் எல்லோரையும் தெரியும் என்னுடனும் அவர் தனது மகனுடன் பேசுவது போலவே தான் என்னுடனும் பத்து வருடங்களாகப் பேசி வந்திருக்கிறார். நான் இங்கிருந்து கூட அவருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசியிருக்கிறேன். நான் தமிழ்நாட்டில் இருக்கும் காலங்களில் தான் எனது நண்பன் வீட்டுக்குப் போகாமல் வெளியில் இரவில் தங்கலாம். அவர் மிகவும் கட்டுப்பாடான தாய். அந்தளவுக்கு என் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் சமையலறையிலிருந்து வெளியே வராதமைக்குக் காரணம் நானல்ல, வஹாபியிசம் தான் என்பது தான் எனது கருத்தாகும். முன்பு போல், வாசல் படிக்கட்டில் இருந்து கொண்டு பேசுவது, வீட்டுக்கு வருகிறவர்களை வரவேற்பது எல்லாம் பெண்களுக்கு அழகல்ல, புர்க்காவைப் போட்டுக் கொண்டு, ஆண்களின்( குறிப்பாக காபீர்களின்) கண்களில் படாமல் இருக்க வேண்டுமென்று வஹாபியம் அவருக்குப் போதித்திருக்க வேண்டும். உண்மையான் நம்பிக்கையுள்ள முஸ்லீம் பெண்ணாகிய அவர் அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார். அது தான் எனது கருத்தாகும். நான் சாலையோர உணவகங்களில் தான் சால்னாவைத் தொட மாட்டேனே தவிர எனது நண்பனின் அம்மா சமைத்த புரோட்டாவையும் சால்னாவையும் நான் பலமுறை சுவை பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் சாதாரணமாக வந்திருந்து பேசும் அவர், தனது கணவன் ஏதாவது கூறினால் அப்படியில்லை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று மறுத்துப் பேசுகிறவர், இப்பொழுதெல்லாம் வெளியில் வருவதைக் குறைத்துக் கொண்டார் முன்பு போல பேசுவதில்லை. ஆகவே தான் வஹாபியம் அவரது உரிமைகளைப் பறித்து விட்டது என்பது தான் எனது கருத்தாகும். அதனால் தான் தமிழ்நாடு முஸ்லீம்கள் வஹாபியத்தால் அரபுமயமாக்கப்படுகிறார்கள், எங்களுக்கும் தமிழ் முஸ்லீம்களுக்குமிடையே ஒரு நிரந்தர இடைவெளி உண்டாகிக் கொண்டு வருகிறது என்பதை எனது அனுபவத்தில் நான் உணர்கிறேன். தயவு செய்து இனிமேல் எனது நண்பனையோ அவனது குடும்பத்தினரையோ இந்த விவாதத்தில் இழுக்க வேண்டாம். நன்றி.

                • “ஆண்களின்(குறிப்பாக காபிர்களின்)கண்களில் படாமல் இருக்க வேண்டுமென்று வகாபியம் அவருக்கு போதித்திருக்க வேண்டும்” இப்படி ஒரு கருத்தை சொல்கிறீரா வியாசன் யதார்த்தம் நேர்மாறாய் இருப்பது உமக்கு உறுத்தவில்லை.தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்கள் சேலை உடுத்த காலத்தை விட பல பல மடங்கு அதிகமாக வெளிநிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு,அது கல்லூரி படிப்பாக இருக்கட்டும் வேலைக்கு போவதாக இருக்கட்டும் ஏன் பொது போராட்டங்களில் வீதியில் இறங்கி போராடுவதாக இருக்கட்டும்.. உமது கண்ணுக்கு தென்படுகிறதா? ஏன் இந்த வெள்ள பிரளயத்திலேயே எத்தனை புர்கா பெண்கள்(உமது வார்த்தையில் சொன்னால் வகாபி பெண்கள்)மாற்று மத ஆண் பெண் மக்களோடு உதவிக்கொண்டிருந்தார்கள். இப்படி மனசாட்சியை விற்றுவிட்டு வாதம் புரிகிறீரே இரவு படுக்கையில் படுத்த பிறாவது உறுத்துகிறதா? சினிமா தியேட்டரில் மட்டமான பல சினிமாக்களுக்கு புர்காவோடு வரிசையில் நிற்க்கிறார்களே அவர்களுமா வகாபிகள்?.அரபு கலாச்சாரத்தை இந்தியாவில் இறக்குமதி செய்யத்தான் நிற்கிறார்களா? எத்தனை கடைகன்னிகளில் எத்தனை மால்களில் எவ்வளவு மக்கள் திரள் உள்ள கடை தெருக்களில் தனியாக வண்டிகளிலோ குழந்தைகளோடோ வகாபி உடை! புர்காவில் வந்து பொருட் கள் வாங்கி பார்த்ததே இல்லையா? காபிர்கள் கடையில், கண்ணை பொத்திகொண்டே வாங்கிப்போகிறார்கள் என்று மீண்டும் ஒரு அண்டப்புழுகை புழுகப்போகிறீரா? வெட் க்கப்படுங்கள் வியாசனே.நீர் விவாதிப்பது எந்த நியாய்மும் அற்ற காழ்ப்புணர்ச்சியால் வந்த வெறுப்பு. வெறுப்பு நம்மை எறிக்கும் நெருப்பு.இதனால் அடுத்தவர்க்கு எந்த தீங்கும் இல்லை. உம் மனதை அன்பாலும் நேசத்தாலும் நிறையுங்கள். மக்களின், குண நிற மொழி வேறுபாடுகளை அவர்களை புரிந்து ஏற்றுக்கொண்டு உறவாடுங்கள் இதனால் நீங்களும் அமைதி பெறலாம். உங்களால் யாவரும் நலம் பெறலாம்.

                • மேற்கொண்டு ”நண்பனை”இழுக்க வேண்டாம் என்ற வியாசனின் வேண்டுகோளுக்கு பிறகும் அதை பேசுவது நாகரீகமில்லை.அப்படி விரும்பாதவர் இது குறித்து மேலும் எதையும் எழுதி இருக்க கூடாது.இத்தோடு இதை விட்டு விட்டால் நான் பொய் சொன்னதாக ஆகி விடும்.ஆகவே புதிதாக எதையும் எழுதாமல் அவரது இரு பின்னூட்டங்களில் இருந்து இரண்டு மேற்கோள்களை முன்வைக்கிறேன்.

                  \\ என்னைக் கண்டு விட்டு எனது நண்பனின் அம்மா ஓடி ஒழியவில்லை. அப்படி நான் கூறவுமில்லை. //

                  இது இந்த மாசம்.

                  \\சில ஆண்டுகளுக்கு முன்னர் சும்மா சேலையால் முக்காடு போட்டுக் கொண்டு, நான் போகும் போதெல்லாம் ‘வாத்தா (வா அத்தா) எப்ப வந்தீக. இவன் சொல்லவேயில்லையே, வீட்டில அம்மா அப்பா எல்லாம் சுகமா’ என்று சுகம் விசாரிக்கும் அவனது அம்மா இப்பொழுது புடவைக்கு மேலே(முகம் மட்டும் தெரிய) இன்னும் ஒரு புர்க்காவைப் போட்டுக் கொண்டு ஓடி ஒளிகிறார். முன்பெல்லாம் நான் அவர்களின் வீட்டுக்குப் போகும் போது அவனது அப்பா கதிரையில் இருப்பார், அவன் அம்மா அவருக்கு முன்னாலேயே ஒன்றில் படிக்கட்டில் இருந்து கொண்டு பேசுவார் அல்லது நின்று கொண்டு பேசுவார், அவர் சொல்வதைக் கூட எதிர்த்துப் பதில் கூறுவார். இப்பொழுது என்னவென்றால் ஓடிப்போய் சமையலறைக்குள் ஒளிந்து கொண்டு, நான் போகும் போது மட்டும் தலையை நீட்டிப், போயிட்டு வாங்கோ என்கிற மாதிரி தலையை ஆட்டுகிறா. //.

                  இது போன மாசம்.

                  • திப்புவுக்கு தமிழில் அறிவு மட்டுமல்ல விளக்கமும் குறைவு என்பதை நான் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறேன். எந்த உண்மையான தமிழனுக்கும் நான் சொல்ல வந்தது என்ன என்பது புரிந்திருக்கும். ________

                    ஒருவர் என்னைக் கண்டதும் ஓடி ஒளிகிறார் என்று கூறினால், அதன் கருத்து அவர் என்னைக் கண்டதும் கட்டிலுக்குக் கீழே போய் ஓடி ஒளிந்து கொண்டார் அல்லது கதவைப் பூட்டிக் கொண்டார் என்பதல்ல. உதாரணமாக, இலங்கைத் தமிழில்- ஒருவர் முன்பு போல, பேசுவதைப் பழகுவதைத் தவிர்த்தால், அல்லது குறைத்துக் கொண்டாலும், என்ன, கதைக்காமல் ‘ஓடி ஒளிக்கிறீர்கள்’ அல்லது ‘ஒளித்துக் கொண்டு’ போகிறீர்கள் என்று கூறுவதுண்டு- “ஓடி ஒளிகிறார்” என்பதை அந்தக் கருத்தில் தான் நான் கூறினேன் என்பது இலங்கைத் தமிழில் மட்டுமன்றி தமிழில் நன்கு பரிச்சயம் உள்ள எல்லோருக்கும் புரியும். பின்னர், நான் குறிப்பிட்ட “ஒளிவதில்” உள்ள ஒளிவது வேண்டுமென்றே ஒளிவது, அல்லது மற்றவர்களின் தூண்டுதலால், மூளைச் சலவையால் வேண்டுமென்றே ஒளிந்து கொள்வது, மறைந்து கொள்வது. இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு.

                    தமிழ் சிக்கலான மொழி அதிலும் திப்புவுக்கு அதில் விளக்கம் மிகவும் குறைவு. இப்படியான சில Trivial matters ஐப் பிடித்துக் கொண்டு, தான் விவாதத்தில் வெற்றி பெற்று விட்டதாக பீற்றிக் கொள்வதும் கூட திப்புவின் வழக்கம் தான். உண்மையில் நான் என்ன சொல்ல வந்தேன் என்பது தெரிந்திருந்தும், நான் அவசரப்பட்டு, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்களை இந்த விவாதத்தில் இழுத்து விட்டேன் தயவு செய்து அதை இனிமேலும் குறிப்பட வேண்டாம் ‘சகோதரா’ என்று கேட்டுக் கொண்ட பின்னரும், அதைப் பற்றிப் பேசியது மட்டுமன்றி, நான் ஏதோ பொய் சொல்லி விட்ட்டதாகத் திரிக்கும் இந்தக் நரிக்குணத்தைத் தான் இலங்கையில் ‘முக்கால்புத்தி’ என்று கூறுவோம்.அதாவது நிறைவில்லாத புத்தி, அதை யாராலும் மாற்ற முடியாது.

                    வஹாபி முசல்மான்களுக்குப் பொய் சொல்லி எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எனக்கு அப்படியொரு தேவையுமில்லை. அவர்களிடம் மட்டுமல்ல, எந்த வஹாபியினதும் தயவோ அல்லது அவர்களிடம் ஏதும் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலோ நானில்லை.

                    தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அரபுமயமாக்கலுக்குள்ளாக்கப் படுகிறார்கள், என்ற உண்மையை வினவிலுள்ள வஹாபிகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக நான் இவ்வளவு நாளும் எனது நேரத்தை இங்கே செலவிடவில்லை. என்னுடைய நோக்கமெல்லாம், இந்த வாஹபியிசம், நடுவீட்டுக்குள் அரபுத் தீவிரவாதிகளை வைத்திருப்பது போன்றது என்பதை தமிழர்கள் உணரவேண்டும் என்பது தான். அடுத்த முறை கறுப்புக் கோணிப்பையை தலையில் கவிழ்த்துக் கொண்டு ஒரு பெண்ணோ அல்லது அரபுக்களின் கவுனை அணிந்து கொண்டு ஒரு சிறுவன் மதரசாவுக்குப் போகும் போதோ, நிச்சயமாக, ஒரு சில தமிழர்களுக்காவது அரபுமயமாக்கலின் நினைவு வரும். அந்த அப்பாவிச் சிறுவனும் பெண்ணும் தாங்களாகவே விரும்பி இந்த அரேபிய ஆடைகளை அணியவில்லை, அதன் பின்னணியில், இந்த அரபுமயமாக்கலின் பின்னால், தமிழர் எதிர்ப்பு மதவாதி வஹாபிகளும், திருக்குறளைக் கூட இழிவுபடுத்தும் வஹாபி முல்லாக்களும் உள்ளனர் என்பது அவர்களின் நினைவுக்கு வரும். தமது ஊரில், கிராமத்தில், வீட்டின் அயலில் நடைபெறும் மாற்றங்களை அவர்கள் கூர்ந்து அவதானிப்பார்கள். தமிழ்மண்ணில் வஹாபியத் தீவிரவாதம் ஊடுருவுகிறது என்பதில் கவனம் செலுத்துவார்கள். அந்த நோக்கத்துக்காகத் தான் நான் இங்கே இந்த விடயத்தைப் பற்றிப் பேசினேன். எனக்கென்றும் ஒரு வலைப்பதிவுண்டு. நான் இங்கு வந்த வேலை முடிந்து விட்டது. 🙂

                    • \\இங்கு வந்த வேலை முடிந்து விட்டது//

                      அப்படியெல்லாம் சொல்லப்படாது.இன்னும் நிறைய வேலை இருக்கு.

        • \\அகதியாக புலம்பெயர்வதைக் கேலி செய்யவில்லையாம். //

          புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வந்தேறிகள்தான் என முட்டாள்தனமாக வியாசன் பேசியபோது நான் எழுதியதை மீண்டும் பதிவு செய்கிறேன்.

          \\ஈழத்தமிழர்கள் எந்த நாட்டிலும் வந்தேறிகள் அல்ல.சொந்த நாட்டில் அவர்களை வாழ விடாமல் அந்த நாட்டின் அரசாங்கமே ஒடுக்குமுறையை ஏவி இனப்படுகொலை செய்கிறது.அந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வக்கற்ற பன்னாட்டு சமூகத்திற்கு அந்த இனப்படுகொலையிலிருந்து உயிர் தப்பி ஓடிவரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது.புலம் பெயர் நாடுகளிலும் ஈழ மக்கள் பிச்சை எடுத்து உண்ணவில்லை.உழைத்துத்தான் உண்ணுகிறார்கள்.அதன் மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதார இயக்கத்திற்கு அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள்.ஆகவே வந்தேறிகள் என்று குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை.//

          இந்த கருத்திலிருந்து நான் என்றும் மாறப்போவதில்லை.ஆனால் புலம் பெயர் ஈழத்தமிழர் மீது ஏற்படும் பரிவுணர்ச்சியை வியாசன் போன்ற மேல் சாதிக்கொழுப்பும் மதவெறி நஞ்சும் கொண்ட தமிழினத்தின் புல்லுருவிகளுக்கு அளிக்க முடியாது.தமிழ் தமிழ் என வேடம் கட்டி ஆடும் இந்த புல்லுருவி மாட்டுக்கறி உண்பதால் அதே தமிழர்களை மாடுதின்னிகள் என இழிவாக அழைக்கிறது,

          \\ மாடு தின்பவர்களை ‘மாடுதின்னி’ என்கிறார்கள் இலங்கையில் அதே போல் பார்ப்பனர்களை பச்சரிசிப் பிராமணி, புக்கை, பூசணிக்காய் என்றெல்லாம் கூடத் தான் பேச்சு வழக்கில் பல பெயர்களுண்டு, அதெல்லாம் தீண்டாமைக்கு அறிகுறி என்று நான் நினைக்கவில்லை. //

          ஆயிரம் இழிசொற்கள் ஒவ்வொரு சமூகத்தை பற்றியும் இருக்கலாம்.ஆனால் அதை பொதுவெளியில் பயன்படுத்துவது நாகரீகமில்லை என்று இந்த படித்த ”அறிவாளிக்கு” க்கு தெரியவில்லை.இதெல்லாம் தீண்டாமைக்கு அறிகுறி என்று புல்லுருவிக்கு தெரியலையாம்.இவ்வளவு மேல்சாதிக்கொழுப்பு இருந்தா எப்படி தெரியும்.சில பேருக்கு பட்டால்தான் புத்தி வரும்.அடுத்து தமிழ்நாட்டுக்கு வரும்போது மாடுதின்னின்னு சொல்லிப்பாக்கட்டும்.கேட்கிற பொது மக்களே இது தீண்டாமைக்கு அறிகுறியா இல்லையான்னு செமத்தியா சொல்லித்தருவாங்க.

  79. அன்பின் மீரா,

    நாம் தமிழர்கள் எவ்வளவோ அன்பாக எடுத்து சொல்லியும் நீங்கள் கேட்பதாக இல்லை . அதனால் காவியிஸ்ட் கள் சொல்வது போல் உங்களுக்கு எடுத்து சொல்லி திருத்தி விடுவார்கள் என்றுதான் சொன்னேன். உங்களை விரட்டி விடுவார்கள் என்றா சொன்னேன் ? தமிழர்களுக்கு இவ்வளவு வக்கணையாக பதில் சொல்லும் நீங்கள் , காவிய்ஸ்ட் கள் என்றதும் குலை நடுங்குவதேன் ?
    காவிகள் இங்கு ஒரு மேட்டரே அல்ல . அதை நாம் பார்த்துக்கொள்வோம் .நீங்களும் எனைய கிறிஸ்தவர்கள் , கத்தோலிக்கர்கள் போல மார்க்கத்தை கடைப்பிடித்து , கலை , கலசார , உடை ,உணவு , மற்றும் பழக்க வழக்கங்களை உங்களது மூதாதையர் போல் வைத்திருந்தால் இங்கு எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை. காவிகளையும் , தமிழர்களையும் ஒரு சேர எதிர்ப்பது புத்திசாலித்தனமல்ல என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.காவிகள் தமிழர்களை பரம்பரை எதிரிகளாக பார்ப்பது போல் தமிழர்களும் இஸ்லாமியர்களும் இருந்ததில்லை . இப்போது சமீப காலமாகத்தான் இந்த சந்தேக உணர்வு தோன்றியிருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்பது இங்குள்ள பின்னூட்டத்தில் பல தடவை எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

    • \\நாம் தமிழர்கள் எவ்வளவோ அன்பாக எடுத்து சொல்லியும் //

      குள்ள நரித்தனம்.இவுரு தமிழராம்.நாங்கல்லாம் தமிழர் இல்லைன்னு சொல்ல வராரா.

      \\காவியிஸ்ட் கள் சொல்வது போல் உங்களுக்கு எடுத்து சொல்லி//

      தாராளாமாக எடுத்து ”சொல்லலாம்”.சொல்லை சொல்லாலும் உருட்டுக்கட்டையை உருட்டுக்கட்டையாலும் எதிர் கொள்ள நாங்கள் தயார்.முன்னரே சொல்லியிருக்கிறேன்.காவிகளை எதிர்த்து நாங்கள் தன்னந்தனியாகவே களத்தில் நிற்கிறோம்.

      \\காவிகள் இங்கு ஒரு மேட்டரே அல்ல . அதை நாம் பார்த்துக்கொள்வோம் //

      ஆமாமா,இவுரு மட்டைக்கு ரெண்டு கீத்தா நியாயத்தை பொளந்து கட்டிருவாரு.முதல்ல உங்களை காவிகள்ட்டேர்ந்து காப்பாத்திக்க வழிய பாருங்க.ரோகித் வெமுலாக்களை ,இளவரசன்,கோகுல் ராஜ்களை ,வரிசையா நரபலி குடுக்கிறான்,இட ஒதுக்கீட்டை ரத்து பண்னனும்னு நீதிபதிகள்,மக்களவை சபாநாயகர் போன்ற ”நடுநிலை”நாயகர்களையே பேச வைக்கிறான்.உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் திருடர்களால் நாடே கொள்ளை போகிறது.உங்க பொழப்பே அந்தல சந்தலயா கெடக்கு.இதுல எங்களை காப்பாத்த வந்துட்டாரு இவரு.

      \\நீங்களும் எனைய கிறிஸ்தவர்கள் , கத்தோலிக்கர்கள் போல மார்க்கத்தை கடைப்பிடித்து , கலை , கலசார , உடை ,உணவு , மற்றும் பழக்க வழக்கங்களை உங்களது மூதாதையர் போல் வைத்திருந்தால் இங்கு எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை//

      பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.அவனை போல நீயும் சாதி கட்டமைப்புக்குள் வா என்று சொல்லாமல் சொல்றாரு.நாங்கள் சாதி அடையாளமின்றி இருப்பதுதானே உங்களுக்கு பிரச்னை.

      அப்புறம் இந்த அறிவாளிகள் எல்லோருக்கும் ஒரு கேள்வி.முந்தைய தலைமுறை முசுலிம்களுக்கும் இப்போதைய தலைமுறை முசுலிம்களுக்கும் ஒரே வேறுபாடு.கருப்பு புர்காதான்.மற்றவை எதுவும் மாறவில்லை என எவ்வளவோ தரவுகளை முன்வைத்து சொன்னாலும் புரியாதது போலவே நடிக்கிறீர்களே ஏன்.

      • //பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.அவனை போல நீயும் சாதி கட்டமைப்புக்குள் வா என்று சொல்லாமல் சொல்றாரு.நாங்கள் சாதி அடையாளமின்றி இருப்பதுதானே உங்களுக்கு பிரச்னை.//

        இதை எப்படி என்று தாங்கள் விளக்க முடியுமா, தமிழ் அடையாளம் என்றால் சாதிக்குள் எப்படி வருவார்கள். கவிக்கோ அப்துல் ரகுமான், கா.மூ.ஷெரிப், குன்னங்க்குடி மஸ்தான், அப்துல் கலாம் இன்னும் எத்தனையோ பேர் தங்களை தமிழர்களாக உணரும் இசுலாமியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நீங்கள் கூறிய சாதி வட்டத்திற்குள் வந்து விட்டார்களா.

        • லாலா எங்கே இந்த நால்வரையும் மேற்கோள் காட்டுகிறார்.மட்டையடியா கிருத்தவனை போல இரு என்றுதான் சொல்கிறார்.கிருத்துவர்கள் சாதியோடு இருக்கிறார்கள்.அப்படித்தான் நாங்களும் இருக்கணுமா என்று கேட்கிறேன்.

          எங்கள் மூதாதையர் போல் இரு என்கிறார்.புர்காவைத்தவிர அப்படித்தானே இருக்கிறோம் என்கிறேன்,அதுக்கு யோக்கியமா பதில் சொல்லுங்க.

          நல்வாய்ப்பாக இப்போது புர்காவுக்கு எதிராக சண்டமாருதம் செய்யும் சூராதி சூரர்கள் நூறாண்டுகளுக்கு முன் பிறக்கவில்லை..பிறந்திருந்தால் முசுலிம் பெண்கள் எப்படி முக்காடு போடலாம் என சண்டைக்கு வந்திருப்பார்கள்.

          உண்மையை சொல்வதென்றால் முக்காடு,புர்கா இவையெல்லாம் பெரும்பான்மை தமிழக மக்களுக்கு ஒரு பிரச்னையே இல்லை.இதையெல்லாம் தாண்டித்தான் இங்கு மத நல்லிணக்கம் நிலவுகிறது.இசுலாமிய எதிர்ப்பு வன்மம் கொண்டோருக்குத்தான் கோபம் கோபமா வருது.வீம்புக்கு முரண்டு பிடிப்பவர்கள் பற்றி எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க.கோபம் வந்தா கோழிப் பீயில கைய ஓட்டு என்று.அதாவது அதை தாண்டி அவனால ஒன்னும் பண்ண முடியாது என்று பொருள்.அதைத்தான் நானும் இவர்களுக்கு சொல்கிறேன்.

  80. உங்களது புர்கா வெறுப்பை புரிந்து கொள்கிறேன் சகோதரர்களே தனித்துவமான ஒரு அடையாளம் உங்களை உறுத்துகிறது.இந்த புர்கா 90களில்தான் தமிழ்நாட்டில் நுழைகிறது.உங்களுக்கு இப்போது ஏற்ப்படுகிற உறுத்தல் பெரும்பாலான முஸ்லிம் பெண்களுக்கே அப்போது ஏற்ப்பட்டது.ஒன்றிரண்டு புர்கா பெண்களை பார்த்ததும் இவர்களுக்கு அவர்கள் அன்னியமாயும் நக்கல் நையாண்டிமாயுமே தெரிந்தார்கள்.நானே இதை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.பிறகுதான் இது பைய பைய பத்து வருடத்தில் பெரும்பாலான பெண்களின் உடையாய் மாறிப்போனது.இன்று இது பெரும் லாபமீட்டும் தொழிலாக மாறி ஒரு கடைத்தெருவே புர்கா மையமாக கொழிக்கிறது.பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.ஒரு காலத்தில் தாடி வைப்பவன் சாமியார் இல்லையென்றால் காதல் தோல்வியாளன். அல்லது வயதானவன்.இன்று தாடி வைத்தல் பேஷன்.தாடி வைக்காத இளைஞன் மிகக்குறைவு.ஆக பெரும்பகுதியினர் ஒன்றை செய்யும்போது அது உறுத்துவதில்லை. அம்மணமாய் திரியும் ஊரில் ஆடை அணிந்தவன் கோமாளி என்பதுவே காரணம். நீங்கள் அடிமை சின்னம் என்று கருதுகிற புர்கா எத்தனையோ மற்றுமத பெண்களையும் கவர்ந்திருக்கிறதே தெரியுமா? சிலருடைய ரசனை அதை விரும்புகிறது.மோனிகா என்ற சினிமா நடிகை தான் இஸ்லாத்திற்க்கு வர முதலில் கவர்ந்தது புர்காதான் என்றார்.கமலாதாஸ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாசுரையாவாக மாறி புர்காவோடு வலம்வந்ததோடல்லாமல் தனக்கு புர்கா பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் உணர்வை தருகிறது என்றார்.இன்னும் ஏராளமான அமெரிக்க ஐரோப்பிய பெண்கள் இஸ்லாத்தை தழுவி உடனடியாக புர்காவை போட்டுக்கொண்டு உற்சாகமான மனநிலையில் கொடுத்த பேட்டிகள் இணையதளங்களில் ஏராளம் இருக்கின்றன.திறந்த உடலோடு திரிந்தவர்களுக்கு அந்த மூடிய உணர்வு ஒரு வித்தியாசமான களிப்பை தருகிறது.அதை அவர்கள் தொடர்கிறார்களா இல்லியா என்பது தனிக்கதை.ஆனால் விரும்புகிறார்கள் என்பது உண்மை இல்லையா? ஏன் அவ்வளவு தூரம் போக நம் முதல்வர் ஜெயலலிதாவே இஸ்லாமிய உடையோடுதான் காட்சி தருகிறார்.மேனிமுழுக்க கண்ணியமாய் மூடி மணிக்கட்டு வரை மேல் சட்டையிட்டு தான் வருகிறார்.கூந்தல் மறைத்தல் என்ற ஒன்றுதான் இல்லை.அவர் இருப்பது இஸ்லாமிய வரம்பிற்க்குட்பட்ட உடையில்தான்.தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.யாருடைய மாறுபட்ட அடையாளங்களும் நமக்கு கசப்பினைத்தராது.

  81. வியாசன் போன்றவர்கள் வினவையும் சபிப்பது ஏன்? வினவு எஙக்ளுக்கு சார்பாகவா இருக்கிறது.நீங்கள் மூச்சிக்கு மூச்சி வகாபி வகாபி என் கிறீர்களே அந்த வாய்ப்பாட்டை கற்றுத்தந்ததே இந்த வினவு தளத்தினர்தானே.ஏன் இந்த கருத்து பதிவின் தலைப்பே தமுமுக தெளகீத்ஜமாத்தை சிண்டு முடிந்து விடுவதில்தானே ஆரம்பிக்கிறது.என் முதல் பதிவையே அவர்களை விமர்சித்துதானே எழுதினேன்.இந்துமத மூட பழக்கங்களை எதிர்ப்பவர்களை முற்போக்குவாதிகள் என்பார்கள்.இஸ்லாமியர்களின் மூடத்தனத்தை எதிர்க்கும் முஸ்லிகளை கடுங்கோட்பாட்டுவாதிகள் வகாபிகள் என்பார்கள்.ஆக வினவு காரர்கள் ஒன்றும் எங்களின் ஆதரவாளர்களோ சார்பாளர்களோ கிடையாது.ஒரு பொதுமக்களாக எங்களின் உரிமைக்கும் மாண்புக்கும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.மற்றபடி எங்களின் கொள்கை கோட்பாட்டில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.அவர்களுடைய கொள்கைகளில் நாங்கள் உடன்படுவதில்லை.எப்படியிருந்தாலும் தீவிரவாதிகள்,அழுக்கானவர்கள்,படிக்காதவர்கள்,சிந்தனையற்றவர்கள் என்றே பொதுபுத்தியில் பதிந்துபோன எங்களை, இந்த வெள்ள பிரளயத்தில் பொதுமக்கள் மனமுறுகி சொன்ன நன்றியை பெரிய் தலைப்பிட்டு போட்டு எங்களை குளிர செய்தமைக்கும் அதன் காரணமாய் உங்களைப் போன்ற மாற்று கருத்துள்ளவர்க்ளோடு விவாதித்து எங்களின் உண்ர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கும் நாங்கள் உளப்பூர்வமாய் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறோம்.இது தவிர அவர்களோடு எங்களுக்கு எந்த கொள்கை உடன்பாடும் இல்லை.எங்களை மட்டும் தாங்கி பிடிக்க அவர்களுக்கும் எந்த தேவையும் இல்லை.

  82. முக நூலில் கண்ட பதிவு….

    ஏன் இசுலாமியர்கள் தமிழர்கள் ஆக முடியாது?

    குடும்பத்தில் தமிழ் மொழி பேசுவதால் மட்டுமே ஒரு தமிழர் ஆகி விட முடியாது. தமிழர்களின் பணப்பாடு கலை இலக்கியம் ஆகியவற்றை மதிப்பவர் யாரோ அவரே தமிழர்..

    இஸ்லாமியர்கள் ஒருபோதும் தமிழர்களாக முடியாது.

    முகநூல் முஸ்லிம் மீடியா “பள்ளிக்கூடத்தில் ஷிர்க்” என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது, இதில் பள்ளிக்கூடங்களில் கற்ப்பிக்கப்படும் ஆத்திச்சூடியை ஷிர்க் என்றும் பள்ளிக்கூடங்களில் இருந்தே இதை ஒழிக்க தவஹீத் ஜமாத் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது.

    அது என்ன ”ஷிர்க்” ???
    பல தெய்வங்களை ஆராதிப்பது தான் “ஷிர்க்” எனப்படுகிறது, “தவ்ஹீத்” எனப்படும் ஏக இறைவனை மட்டுமே வணங்கும் இஸ்லாமிய கோட்பாடுக்கு முற்றிலும் முரணானது இது. பல தெய்வங்களை வணங்குவது தான் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழனின் மரபாக இருந்து வருகிறது. இது போன்ற தமிழர் வழிபாட்டு முறைகளை அழித்தொழிப்பதற்கு பெயர் தான் “ஷிர்க் ஒழிப்பு”.
    அதற்கு ஆத்திச்சூடியை எதற்காக ஒழிக்க வேண்டும்??

    தமிழில் உள்ள அழியாப்புகழ் பெற்ற எண்ணற்ற புலவர்களில் ஔவையாரும் ஒருவர். இவருடைய படைப்புகளில் ஆத்திச்சூடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமானை துதிக்கும் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கும் இந்நூல் திருக்குறளை போலவே சிறந்த நீதிநூலக கருதப்படுகிறது. இதில் வரும்,
    ”அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்”
    “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை”
    போன்ற வரிகள் தான் இஸ்லாமியர்கள் இதை ஒழிக்கவேண்டும் என்று எண்ணக்காரணம். தாயையும் தந்தையையும் தெய்வங்களாக மதிப்பதுதான் தமிழர் மரபு. எல்லா உயிர்களிலும் இறைவனை காணும் தமிழனுக்கு, துளியும் சுயநலமும், கலப்படமும் இல்லாத தூய அன்புடன் கூடிய தாயும், தன்னுடைய சுக துக்கங்களையெல்லாம் குடும்பத்துக்காக தியாகம் செய்யும் தந்தையும் தெய்வம் தானே.

    இப்படி தாயையும், தந்தையையும் தெய்வமாக கருதி ஏகைறைவனுக்கு இணை வைப்பதை அந்த அல்லாஹ் ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டானாம். கண்கண்ட கடவுளான தாயையும், தந்தையையும் தெய்வமாக கருதினால் அதுவும் ”ஷிர்க்” ஆகிவிடுமாம். இதை செய்பவர்களை நரகத்தீயில் தள்ளிவிடுவானாம் அந்த ஏகஇறைவன். எனவே தான் இஸ்லாமியர்கள் இந்த நீதிநூலை அழித்து ஒழிக்கவேண்டுமென்று நினைக்கின்றனர்.

    ஒரே வரியில் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய தமிழர் மரபுகளை கலந்த நல்ல நீதிகளை குழந்தைகளின் மனதில் எளிதில் பதியவைக்கும் இந்தநூல் இன்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல பகுதிகளில் உள்ள மக்களால் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. எக்காலத்திற்கும் பொருந்தும் இந்த ஒப்பற்ற நூலை தான் பள்ளிக்கூடங்களிலிருந்து ஒழிக்கவேண்டும் என்று இஸ்லாமியர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இது இஸ்லாமியர்கள் தமிழர் மரபுகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.இஸ்லாமியர்கள் ஒரு போதும் தமிழர்களாக முடியாது என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிறது.

    • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
      தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்ற வரிகளைக் காட்டி இதை யார் ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர்கள் தமிழர் இல்லை என்று ரேபெக்கா மேரி முகநூலில் போட்டிருப்பதைக் காட்டியிருக்கிறார்.இது இசுலாமியர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு நிரூபணம் என்று முடிகிறது.

      தமிழ் இலக்கியத்தில் கடுகளவு நமக்கு கொஞ்சம் பரிச்சயம் இருப்பதாலும் என்னுடைய தமிழுணர்வு நியாயம் எனும் பட்சத்தில் இப்படிப்பட்ட லிட்மஸ் டெஸ்ட் கடைந்தெடுத்த இந்துத்துவ காலித்தனம் என்பதை அவைமுன் நிரூபிக்க விரும்புகிறேன்.

      முதற்கண் அவ்வை சொன்ன இந்தவரிகளை ஏற்றுக்கொள்வது தமிழனாக இருப்பதற்கு முன்நிபந்தனை என்றால் அந்நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட நபர்கள் கீழ்க்கண்ட குறளை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

      “கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
      இல்லாதாள் பெண் காமுற்றற்று”

      மேற்படி இக்குறளின் கருத்து பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் உள்ளது. இந்த இடத்தில் எனது தாயையோ சகோதரியையோ வைத்துப் பார்க்கவிரும்பவில்லை. தாயை வணங்குவது தமிழரின் மாண்பு என்று சொல்கிற தமிழர்கள் இக்குறளை ஏற்றால் அவர்கள் தமிழர் இல்லை என்றாகிறது. அப்படித்தானே!

      சுயமரியாதையைக் கற்றுக்கொடுத்த பெரியார் கைவசம் இன்னும் நிறைய வெடிகுண்டுகளை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்.

      ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்று சிலப்பதிகாரம் சொல்லும் உண்மை தமிழர் பண்பாட்டின் உச்சம் என்று சொன்ன பொழுது மோட்சம் என்றும் கற்பு என்று ஏமாற்றுகிறானே. என்னவொரு அயோக்கியத்தனம் என்று கண்ணகிக்கு சார்பாக பேசிய ஒரே தமிழன் வெண்தாடிக்கிழவன் தான். அவரைத்தவிர்த்து வேறு யாரும் தமிழர் இல்லையென்று சொல்லுங்கள். ஏற்கலாம். ஏனெனில் புறநானூறு கூறுகிறதே

      “உலகுடன் பெறினும் கொள்ளலர்” அதுதான் தமிழ் சான்றாண்மை. கொண்ட கொள்கையில் நின்ற கிழவனுக்கு நீங்கள் உலகத்தையே கொடுத்திருந்தாலும் இலக்கியம் என்பதற்காக கற்பை ஏற்றிருப்பானா? மோட்சத்தை ஏற்றிருப்பானா?

      அவன் தான் தமிழன். மற்றபடி குறிப்பிட்ட மதத்தவரை இதுபோன்று நைச்சியமாக குதறுவது தமிழர் பண்பல்ல. அவர்கள் இந்துத்துவக் காலிகள் என்பதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!

      • ஆரோவில்லின் பாக்சர் அவர்களே ,

        காரல் மார்க்ஸ் முத்திரை கொண்ட இலக்கியங்களை தனியாக பட்டியில் இட்டு வைத்து வைத்து இருகிறீர்களா! அந்த பட்டியலை இங்கே பகிர முடியுமா ?

    • ஆத்திச்சூடியையும் இன்னொரு முறையிலும் விளக்கலாம். தமிழனுக்கு பண்டைய பொருள் முதல்வாத மரபு உண்டு. இதன்படி நின்றால் ஆத்திச் சூடி அனைவருக்கும் பொதுவானதல்ல.

      அறம் செய்ய விரும்பு என்று சொல்வது என்ன விழுமியம்? அது யாரைப் பார்த்து சொல்லப்படுகிறது? செல்வத்தை வாரிக்குவித்திருக்கும் நிலக்கிழாரின் தனியுடைமை மறைத்துவிட்டு இப்படிக்கூறுகிறது.

      ஆனால் அதற்கெதிராக உழைக்கும் மக்கள் கொதிந்து எழுந்தால் “ஆறுவது சினம்” என்று வர்க்கப்போராட்டத்தை மட்டுப்படுத்தவும் செய்கிறது.

      இங்கு தமிழன் உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிபலிப்பானா? நிலப்பிரபுக்களைப் பிரதிபலிப்பானா? தமிழன் என்றைக்கும் தமிழனாக இருந்ததில்லை. சமுதாயமே வர்க்கமாக பிரிந்துகிடக்கிற பொழுது தமிழன் என்ற அடையாளம் யாரைக் குறிக்கும்? இந்தக் கேள்வி எல்லா மதத்தினருக்கும் தான்.

      கொசுறு: நல்லவேளை கம்பராமாயணத்தைத் தூக்கிக்கொண்டு யாரும் தமிழர் என்று மூத்திரப் பரிசோதனை நடத்தவரவில்லை. மனுஸ்மிருதியின் குரலாக ஒலிக்கும் அந்தப் புத்தகத்தை ஏற்காத நாங்கள் தமிழர் இல்லையென்று அம்பலப்பட்டு போயிருப்போம்!!! எவ்வளவு சூதானமாக இருக்க வேண்டியிருக்கிறது?

      • சிர்க் என்ற பூசணிக்காயயை வர்க்கச்சோறுக்குள் மறைத்து விட்டார் அரபு தென்றல் எப்பிடியெல்லம் பேற்சுறாங்க விளங்கிடும் எவ்வளவு நேக்கா டேக்கா குடுக்குது பாத்திகளா…

      • முகநூலில் அதிகம் ஷேர் செய்ய பட்ட பதிவு ………..

        தீவிர மதபற்று கொண்ட அரபு இஸ்லாமியர் ஓருவர் லண்டனில் ஒரு வாடகை காரில் பயணித்தார்.வாடகை காரில் ரேடியோவில் இசை ஒலித்துகொண்டிருந்தது. அந்த தீவிர மதபற்று கொண்ட அரபு இஸ்லாமியர் ரேடியோவை நிறுத்தசொல்லி கேட்டுகொண்டார் ஏனென்றால் இறைத்தூதரின் காலத்தில் இசை என்பது இல்லை போலும் . குறிப்பாக மேற்கத்திய இசை இல்லை எனவே அது தடுக்கபட்டது. அதாவது ஹராம் அதனால் ரேடியோவை நிறுத்திவிடும்படி கூறினார், அந்த வாடகை காரின் ஓட்டுநர் ரேடியோவை நிறுத்திவிட்டு காரையும் ஓரங்கட்டி நிறுத்தினார். இதைகண்ட அந்த அரபு இஸ்லாமியர் ஏன் வண்டியை நிறுத்தினீர்கள் என்று கேட்டார் அதற்கு அந்த ஓட்டுநர் இவ்வாறு கூறினார் இறைத்தூதரின் காலத்தில் வாடகை கார்கள் இல்லை, வெடிகுண்டுகள் இல்லை, விமான கடத்தல்கள் இல்லை, சிறு குழந்தைகளை அலறியடித்து எழுப்பவைக்கும் மற்றும் வயதான, நோயாளிகளுக்கு தொல்லை கொடுக்கும் மேற்கத்திய கண்டுபிடிப்பாளர்களின் ஒலிபெருக்கிகள் மசூதிகளில் இல்லை, ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து இல்லை, ஏகே56 இல்லை எங்கும் அமைதி இருந்தது அதனால் மூடிக்கிட்டுபோய் ஒட்டகத்து காத்திரு. இதை கேட்ட அரபு ஷேக்கின் முகத்தில் ஈ தான் ஆடிக் கொண்டிருந்தது.

        இசை என்றால் வஹாபியத்திற்கு ஆகாதாம் ஹாராம் ஆகி விடுமாம் ………. எ.ஆர். ரெஹ்மானின் இசையை கண் மூடி ஆனந்தமாக கேட்டால் அவ்வளவு தான் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுக்கும் கோபம் வந்து மீளா நரகத் தீயில் தள்ளி விடுவானாம்..

    • பெற்ற தாயின் மீது பாசம் இருக்க வேண்டியதுதான்.அது இயல்பானது .யாரும் சொல்லிக்கொடுத்து வருவதில்லை.அதற்காக தெய்வமாக தொழ வேண்டும் என்பது லூசுத்தனம்.அம்மா என்றால் அம்மாதான்.அந்த ஒரு சொல்லிலேயே தாய்க்குரிய அத்தனை பாசத்தையும் மரியாதையும் பொதிந்து வைத்துத்தான் மனிதர்கள் அனைவரும் அழைக்கிறோம்.அதற்கு மேல் தெய்வமாக தொழுகிறேன் என்பதெல்லாம் வெளிவேடம்.

      சில கேள்விகள்.

      அம்மா,அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு தன் பெண்டு தன் பிள்ளை என்று வாழ்பவனை எல்லாம் தமிழனல்ல என்று அறிவித்து குடியுரிமையை பறித்து விடலாமா.

      மாமியார் -மருமகள் சண்டையில் மனைவி பக்கம் சேர்ந்து கொண்டு அம்மாவோடு சண்டை போடுபவனையெல்லாம் தமிழனல்ல என்று அறிவித்து விடலாமா.

      இன்னொரு பொன்மொழி கூட உண்டு.

      மாதா.பிதா.குரு தெய்வம்.இதையும் நாங்கள் ஏற்பதில்லை.அதுனால நாங்கள் தமிழனல்ல என்று தீர்ப்பு சொல்வீர்களா,

      இந்த பொன்மொழியை ஏற்பவர்களுக்கு ஒரு கேள்வி.

      எங்க ஊர் வாத்தி ஒருத்தர் வட்டிக்கு விடுறாரு.முறையா பணத்தை திருப்பி கட்டாதவர்களை கண்டமேனிக்கு திட்டுறாரு.வட்டி தராதவன் அப்பா யார் என்று சந்தேகப்படுராறு.இவரையும் தெய்வமா கொண்டாடுவீங்களா.

      அக மதிப்பீட்டு மதிப்பெண்களை வைத்து மிரட்டி மாணவிகளை பாலியல் ரீதியாக சுரண்டிய வாத்திப்பயல்களையும் தெய்வம்னு சொல்வீங்களா.

      • சகோதரர் திப்பு………..

        //பெற்ற தாயின் மீது பாசம் இருக்க வேண்டியதுதான்.அது இயல்பானது .யாரும் சொல்லிக்கொடுத்து வருவதில்லை.அதற்காக தெய்வமாக தொழ வேண்டும் என்பது லூசுத்தனம்.//

        அப்படியா … இது லூசுத்தனம் என்றால், மசுதிக்கு(அனைத்து மத வழிப்பாட்டு தளங்களுக்கும்) சென்று கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியிடம் தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க வேண்டும் என்று தொழுவதற்கு பெயர் என்ன தனம்?, புத்திசாலித்தனமா.. நிற்க.

        //அம்மா,அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு தன் பெண்டு தன் பிள்ளை என்று வாழ்பவனை எல்லாம் தமிழனல்ல என்று அறிவித்து குடியுரிமையை பறித்து விடலாமா.

        மாமியார் -மருமகள் சண்டையில் மனைவி பக்கம் சேர்ந்து கொண்டு அம்மாவோடு சண்டை போடுபவனையெல்லாம் தமிழனல்ல என்று அறிவித்து விடலாமா.//

        நிச்சயமாக அவன் தமிழன் அல்ல தான். பெற்ற தாயை, தந்தையை பேணி காக்காதவன் மனிதனே அல்ல என்கிற போது, அவனை எப்படி தமிழன் என்றுக் கூற முடியும். தமிழை பேசுவதாலா.

        தாயின் அன்பு என்பது கலப்படமில்லாத சுத்தமான அன்பு தான். நன்றி கொன்ற மகனையோ மகளையோ கூட மன்னித்து அவர்கள் வாழ்வில் நலமாக இருந்தால் போதும் என்று நினைக்கும் பேரன்புக்கு இணை உலகில் ஏதுமில்லை? அப்படிப் பட்ட அன்பை தொழுவதில் லூசு தனம் ஏதும் எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை உங்களை போன்று நான் அதிமேதாவி இல்லையோ என்னவோ?

        அவ்வையார், பெற்றோருக்கு மாலையிட்டு பாதம் கழுவி தொழுங்கள் என்றுக் கூறவில்லை, அவள் கூறுவது, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று தான்.முன்னறி தெய்வம் உன் கண் முன்னாள் இருக்கும் தெய்வங்கள் என்றுத் தான் கூறுகிறார். இன்னும் சொல்வதென்றால் தெய்வத்திற்கு இணையானவர்கள் என்றுத் தான் கூறுகிறார். இதன் மூலம் அவர் கூற வருவது என்னவென்றால் ஆண்டவனுக்கு இணையான பக்தியை, நன்றியை, அன்பை கண் கண்ட கடவுள்களான தாய் தந்தையருக்கு செலுத்து என்றுத் தான் கூற வருகிறார். வஹாபியம் புரையோடி போன சிந்தனைக்கு வேண்டுமானால் இது மூளை காய்ச்சலை ஏற்ப்படுத்தலாம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளல் பெருமானார் பிறந்த தமிழ் மண்ணில் பிறந்த தமிழ் பெண்ணான எனக்கு இதனால் எந்த வலியும் கிடையாது.

        //மாதா.பிதா.குரு தெய்வம்.இதையும் நாங்கள் ஏற்பதில்லை.அதுனால நாங்கள் தமிழனல்ல என்று தீர்ப்பு சொல்வீர்களா,//

        இங்கு ஏற்காமல் போவதால் ஒன்றும் பிரச்சனை இல்லை . ஏற்ப்பதும் ஏற்காமல் போவதும் அவரவரின் விருப்பம். ஆனால், எதிர்த்தால் நிச்சயம் அவர்கள் தமிழர்கள் அல்ல தான். இதை லட்சம் முறையும் சொல்வேன். எங்கள் குடும்பம் 4 தலைமுறையை கடந்த கிறித்துவக் குடும்பம் தான். அதுவும் மிக கட்டுக்கோப்பாக மத வழிப்பாடுகளை கடைபிடிக்கும் குடும்பம். அதற்காக என் தமிழ் மரபை, என் உண்மை அடையாளத்தை நான் மறைக்கவோ தொலைக்கவோ முடியாது. எமது மொழி இலக்கியங்கள் எதுவாயினும் அதை நேசிக்கவே செய்வேன்.

        ஆகவே,இது எங்கள் மதத்திற்கு எதிரான பாவச் செயல் அதனால் இதை பள்ளி பாடத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பாத்வா விடுவது, இதனை பிற்போக்கு தனம் என்று அதி மேதாவி தனமாக பேசுவது. இதெல்லாம் செய்பவர்கள் நிச்சயம் தமிழர்கள் ஆக முடியாது தான். பிறரின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். பெற்றோர்களை தெய்வமாக நினைத்து அன்பு செலுத்துவதால் சமுகம் ஒன்றும் குடி முழுகி போய் விடாது. இதற்க்கு காவி சாயம் பூச நினைப்பது அவரவரின் அறிவுக் கோளாறைத் தான் காட்டுகிறது.

        • மசுதிக்கு(அனைத்து மத வழிப்பாட்டு தளங்களுக்கும்) சென்று வழிபடுவது என்ன தனமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அது அவரவர் பார்வையை பொறுத்தது.அதை செய்யுமாறு யாரையும் நான் கோரவில்லை.அதை செய்தால்தான் ஒரு மனிதனுக்கு இன்னின்ன தன்மைகள் உண்டு எனவும் சொல்லவில்லை,ஆகவே இந்த கேள்வியே பொருளற்றது.ஆனால் தாயை தெய்வமாக தொழுதால்தான் நீ தமிழன் என எனக்கு நிபந்தனை விதிக்க யாருக்கும் உரிமையில்லை.அப்படி நிபந்தனை விதிப்பதால்தான் அதனை ”லூசுத்தனம்”என்கிறேன்.

          \\நிச்சயமாக அவன் தமிழன் அல்ல தான். பெற்ற தாயை, தந்தையை பேணி காக்காதவன் மனிதனே அல்ல என்கிற போது, அவனை எப்படி தமிழன் என்றுக் கூற முடியும். தமிழை பேசுவதாலா.
          தாயின் அன்பு என்பது கலப்படமில்லாத சுத்தமான அன்பு தான். நன்றி கொன்ற மகனையோ மகளையோ கூட மன்னித்து அவர்கள் வாழ்வில் நலமாக இருந்தால் போதும் என்று நினைக்கும் பேரன்புக்கு இணை உலகில் ஏதுமில்லை? அப்படிப் பட்ட அன்பை தொழுவதில் லூசு தனம் ஏதும் எனக்கு தோன்றவில்லை//.

          ஒரு கொள்கையை மற்றவர்களும் பின்பற்றக்கோருவதாக அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.எல்லா மாமியார்-மருமகள் சண்டையிலும் நியாயம் அம்மா பக்கமே இருக்காது.அப்போ மனைவியின் நியாயத்தை சொல்லும் மகன் தமிழன் இல்லை என்றாகி விடுவான்.கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனையும் குழந்தைகளும் கொன்ற ”பேய்”களும் கூட குட்டி போட்ட ”தாய்”தான்.அவர்களும் உங்கள் பார்வையில் தெய்வம்தானா.உங்களுக்கே இது லூசுத்தனமாக தெரியவில்லையா.

          \\அவ்வையார்…………….ஆண்டவனுக்கு இணையான பக்தியை, நன்றியை, அன்பை கண் கண்ட கடவுள்களான தாய் தந்தையருக்கு செலுத்து என்றுத் தான் கூற வருகிறார்.//

          தாய்களும் மனிதர்கள்தான்.மனிதனுக்கு உண்டான அத்தனை வலுவும் ,வலுவீனங்களும் கொண்டவர்கதான்.மனிதர்களுக்கு அன்பும்,நன்றியும் செலுத்தலாம்.சரியே.நீங்கள் வேண்டுமானால் பக்தியும் செளுத்திக்கொல்லுங்கள்.நான் செலுத்த வேண்டும் என சொல்ல உங்களுக்கு உரிமையில்லை.செலுத்தாவிட்டால் தமிழனில்லை என சொல்ல நீங்கள் யார்.உங்களுக்கு அந்த உரிமையை வழங்கியது யார்.

          \\ இங்கு ஏற்காமல் போவதால் ஒன்றும் பிரச்சனை இல்லை . ஏற்ப்பதும் ஏற்காமல் போவதும் அவரவரின் விருப்பம். ஆனால், எதிர்த்தால் நிச்சயம் அவர்கள் தமிழர்கள் அல்ல தான். இதை லட்சம் முறையும் சொல்வேன்.//

          அடுத்த நாட்டாமை வந்து விட்டார்.

          • திப்பு….

            ஏன் இப்படி? உங்கள் பேச்சு ஏன் இவ்வளவு பக்குவமற்றதாக இருக்கிறது. நான் கூறியது உங்களுக்கு விளங்கியதா இல்லையா…

            //மசுதிக்கு(அனைத்து மத வழிப்பாட்டு தளங்களுக்கும்) சென்று வழிபடுவது என்ன தனமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அது அவரவர் பார்வையை பொறுத்தது.அதை செய்யுமாறு யாரையும் நான் கோரவில்லை……..//

            இதைத் தானே நானும் கூறினேன்… உங்களையும் யாரும் கட்டாய படுத்தவில்லையே , ஏற்ப்பதும் ஏற்காமல் போவதும் உங்களின் இஷ்டம், ஆனால் அவ்வையின் குறளை எற்ப்பவரை, கடைபிடிப்பவரை ஏளனம் செய்வதோ இது பாவ செயல் என்று பொதுவில் பேசுவதற்கோ, உதாசீன படுதுவதர்க்கோ அல்லது அதை கடைபிடிப்பவர்களை எதிர்ப்பதற்கோ உங்கள் யாருக்கும் எந்த உரிமையும் அருகதையும் கிடையாது.

            //எல்லா மாமியார்-மருமகள் சண்டையிலும் நியாயம் அம்மா பக்கமே இருக்காது.அப்போ மனைவியின் நியாயத்தை சொல்லும் மகன் தமிழன் இல்லை என்றாகி விடுவான்…//

            சம்மந்தம் இல்லாத உளறல்.. மீண்டும் என் மறுமொழியை தெளிவாக படிக்கவும்.

            //தாய்களும் மனிதர்கள்தான்.மனிதனுக்கு உண்டான அத்தனை வலுவும் ,வலுவீனங்களும் கொண்டவர்கதான்.மனிதர்களுக்கு அன்பும்,நன்றியும் செலுத்தலாம்.சரியே.நீங்கள் வேண்டுமானால் பக்தியும் செளுத்திக்கொல்லுங்கள்.நான் செலுத்த வேண்டும் என சொல்ல உங்களுக்கு …//\

            மீண்டும் என் மறுமொழியினை தெளிவாக பார்க்கவும். நான் கூறியது இதை..

            \\ இங்கு ஏற்காமல் போவதால் ஒன்றும் பிரச்சனை இல்லை . ஏற்ப்பதும் ஏற்காமல் போவதும் அவரவரின் விருப்பம். ஆனால், எதிர்த்தால் நிச்சயம் அவர்கள் தமிழர்கள் அல்ல தான். இதை லட்சம் முறையும் சொல்வேன்.//

            //தாய்களும் மனிதர்கள்தான்.மனிதனுக்கு உண்டான அத்தனை வலுவும் ,வலுவீனங்களும் கொண்டவர்கதான்.//

            பார்த்தீர்களா.. எவ்வளவு புத்திசாலிதனமாக பேசுகிறீர்கள். இதற்க்கு தான் சொன்னேன் உங்களை போன்று நான் அதி மேதாவி அல்ல வென்று.

            அது சரி இன்னும் என் கேள்விக்கு பதில் வரவில்லையே, தன் பிள்ளையின் வாழ்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த கண்கண்ட கடவுளான தாயிடம் பக்தி செய்வது லூசுத்தனம். ஆனால், மசுதிக்கு சென்று கண்ணுக்கு தெரியாத அல்லா என்னும் இறைவனிடம் பக்தி செலுத்துவது புத்திசாலித்தனமா. இதற்க்கு நேரடியான பதில் என்ன.

        • தாய் என்பவளுக்கான சிறப்பையும் தாய்க்கு செய்யவேண்டிய கடமைகளையும் எங்களுக்கு யாரும் நினையூட்ட வேண்டியதில்லை.தாய்க்கு இணையாக யாரும் எதுவும் கிடையாது என்பதும் தாய்க்கு அடுத்த நிலையிலோ அதற்க்கு அடுத்த நிலையிலோ கூட யாரும் கிடையாது என்பதும் மூன்றாவது நிலையில்தான் தகப்பனே இருக்கிறார் என்பதும்தான் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படையில் நம்பவேண்டிய நிலை.அதே வேளை தாய்மையைப் ப்ற்றி புரிந்து கொள்ளுங்கள்.ஒரு பெண் கருவுரும் வரை மிகச்சாதாரண மனுஷியாக இருக்கிறாள்.கருவுற்றவுடன் அவளுக்குள் ஏற்ப்படும் மனமாற்றம் வியக்க வைக்கிறது.எவ்வளவு சிரமங்களை எவ்வளவு அனாயாசமாக தாங்கி கடந்து பிள்ளையை பெற்றெடுத்து பிறகு தூக்கம் மறந்து தன் ஆசைகள் மறந்து தன்னையே துறந்து தன் பிள்ளைக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்து விடுகிறாளே இதற்க்கு முன் அவள் இப்படி என்றாவது எதற்க்காவது இருந்ததுண்டா? இருக்க முடியுமா? இது எப்படி சாத்தியம்.நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அவள் தன் பிள்ளையை ஈன்றெடுத்தவுடன் அவள் மார்பில் சுரக்கும் பாலுக்கு அவள் காரணமில்லை.அது போலவே அவள் உள்ளத்தில் சுரந்து வரும் தாய்மைக்கும் அவள் காரணமில்லை.எவன் அவளை படைத்தானோ அவனே அவள் உள்ளத்தில் தாய்மையை பொங்கச் செய்கிறான்.அதன் மூலமாய் உலகில் சந்ததிகளை தழைக்கச் செய்கிறான்.பகுத்தறிவு கொண்ட பெண் மட்டுமா தாய்மையோடு இருக்கிறாள்?ஆடு மாடு கழுதை குதிரை ஏன் ஒரு சிறு கோழி.அது தன் குஞுசுகளோடு இருக்கும்பொழுது அருகில் போக முடிகிறதா? சீறிக்கொண்டு வருவதை பார்த்தில்லையா? இவை அறிவை கொண்டா செயல்படுகிறது? உள்ளுணர்வு. நீங்கள் உணர்ச்சி வயப்பட்டு தாயை வணங்குவோம் என் கிறீர்கள்.நாங்கள் என் தாயையும் அவளுக்கு தாய்மை என்ற அருளையும் தந்த இறைவனைத்தான் வ்ணங்குவோம் என் கிறோம்.என் ஒவ்வொரு தொழுகையிலும் என் தாய்க்காக பிரார்த்திக்கிறேன்.அவளின் நலனுக்கும் வளமைக்கும் வேண்டுகிறேன்.அவள் ஒருபோதும் மனம் கோணிவிடாது பார்த்துக்கொள்கிறேன்.ஆனால் எந்த நிலையிலும் என் தாயை வண்ங்க மாட்டேன் வணங்க மாட்டேன்.வணக்கத்திற்குரியவன் இறைவனன்றி யாரும் இல்லை. எதுவும் இல்லை.

          • பிரச்சனை என்னவென்றால் பல தமிழறிஞர்களையும், உமறுப்புலவர் போன்ற புலவர்களையும், சீதக்காதி, பெரியதம்பி மரக்கலராயர் போன்ற தமிழ்ப்பற்றுள்ள வள்ளல்களையும் தந்த தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வகாபியிசத்தின் தாக்கத்தால் தமிழையும், தமிழ்ப்பற்றையும் இழந்து வருகிறார்கள். இதற்கு இளமைக்காலத்திலேயே மதரசாக்களில் கொண்டு போய் அரபு மொழியைக் கற்றுக் கொள்ள முஸ்லீம் குழந்தைகளை விடுவதும் காரணமாக இருக்கலாம். வஹாபியத்தின் தீவிர மதவெறிப் போதனைகளால் தமிழில், தமிழ்ச் சொற்கள் எங்கு பேசப்படுகிறது என்பதைப் பொறுத்து கருத்தும் மாறுபடும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

            உதாரணமாக, தமிழர்கள் தாயை வணங்கு என்று கூறும்போது, இங்கு தாய் ‘வணக்கத்துக்குரியவள்’ அதாவது மரியாதைக்குரியவள் என்ற கருத்துத் தான் படுகிறதே தவிர, தாயை வணங்கி அவளிடம் கோயிலிலுள்ள அம்மனிடம் வரம் கேட்பது போல், அம்மா எனக்கு அதை அருள்வாய், இதை அருள்வாய் என்று தமிழர்கள் யாரும் கேட்பதில்லை. வஹாபியத்தில் வணக்கத்துக்குரியவன் அல்லா மட்டும் தான், ஆகவே வணக்கம் என்ற சொல்லை வேறு எவற்றையும் குறிக்கவோ அல்லது வேறு தருணங்களில் பாவிக்கக் கூடாதென வஹாபிகள் நினைத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. அது வளமற்ற அரபு மொழிக்குச் சிலவேளை பொருந்தலாம்.வளமான தமிழுக்குப் பொருந்தாது. நாங்கள் தமிழர்கள் மற்றவர்களைப் பார்த்து வணக்கம் என்று கூறும் போது அவரை வணங்கிக் கடவுளுக்கு இணைவைப்பதாகக் கருத்தல்ல, மாறாக அவரை மதித்து வரவேற்கிறோம் என்பது தான் கருத்தாகும். அதே போல் தமிழர்கள் தாயை வணங்கு என்றால், உன்னைப் பெற்று வளர்த்த அன்னையை மதித்து நட, அவளது உரிமைகளைப் பறிக்காதே, ஏற்கனவே கண் தெரியாமல் போன வயதான காலத்தில் அவளைக் கறுப்புக் கோணிப்பையால் மூடாதே என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் கூறுவதாகத் தான் கருத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வையாருக்கு எதிராக பாட்வா எல்லாம் அறிவிக்கக் கூடாது. 🙂

            • வளமான தமிழுக்கு முழு உரிமை படைத்த வியாசனுக்கு,வணக்கம் என்பது, அன்னையை மதித்து நடந்து அவளது உரிமையை பறிக்காது இருப்பதுதான் என்றால் அந்த வணக்கத்தை உங்களை விட பல பல மடங்கு மேலாக நாங்கள் செய்கிறோம்.எங்களின்(முஸ்லிம்களின்)விகிதாச்சார கணக்கை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு முதியோர் இல்லமாய் அலைந்து பாரும்.அங்கு எத்தனை முஸ்லிம் பெற்றோர்கள் கைவிடப்பட்ட நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று.”கண் கண்ட தெய்வம் தாய், தாயே கடவுள், தாயை வணங்கு” என்றெல்லாம் வசனம் பேசியவன் தான் மனைவியோடு சேர்ந்து தாயை விரட்டியவனாக இருக்கிறான்.தாயை தாயாய் மட்டும் கருதியவன் தாயாக மதித்து தன்னோடுதான் வைத்திருக்கிறான். இங்கு ஒரு வியாதி பல காலமாகவே வியாபித்து இருக்கிறது.ஒன்றை ஏன் வேறொன்றாக பார்க்க வேண்டும்? தாயை தாயாய் பாருங்கள் தந்தயை தந்தையாய் பாருங்கள்.கடவுளை கடவுளாய் பாருங்கள்.தாயும் கடவுள் தந்தயும் கடவுள் குருவும் கடவுள் குழந்தையும் கடவுள் மண்ணும் கடவுள் மரமும் கடவுள் கடைசியில் கருணாநிதி கடவுள் ஜெயலலிதா கடவுள் ரஜினி கமல் விஜய் அஜீத் என்று அனைவரும் கடவுள் பகுத்த்றிவு சுயமறியாதை தன்மானம் அனைத்தும் மறந்து எவன் காலிலும் எவனும் விழுந்து இதுதான் தமிழ் கலாச்சாரம் இதை செய்யாதவன் தமிழனே இல்லை என்று இப்படி உளறி திரியலாம்.

  83. எந்த நூல் ஒப்பற்ற நூலோ அந்த நூலை கரைத்து குடித்து நீதி நெறியை உலகம் முழுக்க பரப்பம்மா ரெபெக்காமேரி.என்னை பெற்ற தாயையும் நான் வண்ங்க மாட்டேனம்மா.இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் உங்களைப் போன்ற தமிழ் வீராங்களைகள் ஒன்று சேர்ந்தாலும் அது நடக்காது.வியாசனுக்கு அக்காவாக வாயை கிளறுவது புரிகிறது.உங்கள் தமிழன் சர்ட்டிபிகேட் எங்களுக்கு தேவையில்லை.வேறு எவனாவது உங்களிடம் ச்ர்டிபிகேட் வாங்கித்தான் தமிழன் என்று நிரூபிக்கும் கட்டாயத்தில் இருப்பான் அவனிடம் இந்த தமிழனுக்கான தகுதிகளை சொல்லுங்கள்.தாய் தந்தயை என்ன எம்ஜியார் கருணாநிதி ஜெயலலிதா ரஜினிகாந்த் கமல் விஜய் அஜித் என்று யாரை வேண்டுமானாலும் விழுந்து வணங்கி உங்களிடம் தமிழன் என்ற தகுதியை பெற்று விடுவான்.நாங்கள் மலையாளியாக தெலுங்கனாக ஐரோபியனாக அரேபியனாகவே இருந்து கொள்கிறோம். ரொம்ப தந்திரமா யோசிக்கிறியேமா! புத்திசாலி பொண்ணு.

    • நான் என்னையா தந்திரம் செய்தேன்? கவிக்கோ அப்துல் ரகுமான், கா.மூ.ஷெரிப் போன்று ஒரு உணர்வுள்ள இசுலாமிய தமிழராக இருங்கள் என்றுத் தான் கூறினேன். மேற்சொன்ன இருவருமே மத பற்றுள்ள இசுலாமியராகவும் இருக்கிறார்கள் ,அதே நேரம் தங்களின் தமிழன் என்கிற இன அடையாளத்தையும் இழக்கவில்லை. இது தான் உண்மையான மனிதப் பண்பு. அதை எடுத்துக் கூறினால் அனைவரிடமும் இப்படி சீறுகிரீர்களே!!!.

      • ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் இந்த ரெண்டு பேரும் மட்டும்தான் கிடைத்தார்களா ? இந்த ஏஆர் ரக்மான் மும்தாஜ் ஷகீலா இந்திய முஸ்லிம்களிலேயே சிறந்த முஸ்லிமாகிய அப்துல்கலாம் இன்னும் அம்மாவின்(ஜெ) காலடியே சொர்கம் என்று விழுந்து கிடக்கும் அதிமுக முஸ்லிம்கள் இப்படி ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே ரெபெக்கா அக்கா.இந்த ஒப்ப்ற்ற அக்மார்க் தமிழர்களோடு ஒப்பிட்டால் நாங்கள் தமிழர்கள் இல்லைதான்.நீங்கள் நம்முடைய வியாசன் அண்ணன் மற்றும் கடைகுட்டி சிங்கங்களான ஜோசப் லாலா போன்றவர்களோடு கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • காபீர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் அவர்களின் கழுத்தை வெட்டுங்கள் கைகளை வெட்டுங்கள் கிறிஸ்தவர்களையோ யூதர்களையோ நண்பர்கள் ஆக்கி கொள்ளாதீர்கள் அவர்களை ரோட்டில் எதிரில் கண்டால் ஒடுங்கி போகும்ப்டி செய்யுங்கள் என்று குரானில் உத்தரவிடும் ________ அல்லாவுக்குதான் இணை வைக்க கூடாது சிர்க் புர்க் என்று சொல்லிக்கொண்டு அரேபிய அடிமைக்கூட்டம் வருகின்றது…

  84. ஆகா சூப்பரப்பு அல்லா எங்க இருக்கிறார் எப்பிடி அல்லாவிற்க்கு இணை வைக்காமல் வணங்க முடியும் முஸ்லீகள் அரேபியாவிலுள்ள மக்கா பள்ளி வாசலைநோக்கி வணங்குக்றார்கள அப்ப அந்த சதுர வடிவ கட்டிடத்துக்கு அல்லாவை இணை வைக்கிறார்களா ஒன்னுமே பிரியல கேட்டா அதுக்கு விளக்கமுனு வண்டி வண்டியா வரும். சொர்க்கம் வரும் ஆண்களுக்கு அல்லா 72 கன்னிப்பெண்களா பரிசளிப்பாராம் இப்பிடி சீப்பா பேசி மக்களை கவரும் அல்லாவை வணங்குவதை விட பெற்ற தாயை வணங்குபவன் மேலானவனே __உலகமே எதிர்த்து நின்னாலும் இது போன்ற அரை குறை அடி முட்டாள் கடவுளை எந்த தமிழனும் வணங்க மாட்டான்

  85. அம்மா ரெபெக்காமேரி இந்த ஆத்தீச்சூடி கதையையெல்லாம் என்னவோ புதிதாக நினைத்து விடவேண்டாம்.உங்கள் முப்பாட்டஙளெல்லாம் விட்ட கதைதான்.இன்றைக்கும் உங்கள் மாமன், சித்தப்பன் பெரியப்பன்(ராமகோபாலன் H.ராஜா)களெல்லாம் வந்தேமாதரத்தை பிடித்து தொங்கி தேசபக்தி கதையை முடித்தபாடில்லை.இப்போது ஆத்தீச்சூடி கதையை தொடங்கி தமிழ் கலாச்சார கதையை ஆரம்பிக்கிறீங்களாக்கும்! இன்னும் கொஞசம் வேகமாக சொல்லி புகழ் பெற்றால் கண்ணகி சிலை இருந்த இடத்தில் உடனடியாக உங்களுக்கு சிலை வைக்கப்படும்.ஏனெனில் உங்கள் கருத்தோடு உடன்பட்ட கருத்து கொண்ட அரசுதான் மைய அரசாக இருக்கிறது.ஜெயமோகனுக்கு விருது அறிவித்துவிட்டார்கள்.நீங்கள் மட்டும் உங்கள் கருத்தை இன்னும் ஓங்கி ஒலித்துவிட்டால் உங்களுக்கு சிலை நிச்சயம்.சிலை அறிவித்தபிறகு வேண்டுமானால் ஜெயமோகன் பாணியில் சிலையெல்லாம் எனக்கு வேண்டாம் என்று பில்டப் கொடுத்து அகில உலக அளவில் புகழ் பெறலாம்.உங்களுக்கு இதெல்லாம் சொல்லித்தர வேண்டியதில்லை.நீங்கள் நல்ல புத்திசாலி பெண்ணாகத்தானே இருக்கிறீர்கள்.

  86. கிறிஸ்த்தவ பெயர்களில் ஒளிந்துகொண்டு சில கீழ்மட்ட அரைடவுசர்கள் ரொம்பநாளாகவே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றன. இலங்கைததமிழன் என்ற போர்வையில் வியாசன் என்ற தமிழ் கலாச்சார’காக்கி’காவல்துறை அதிகாரிக்கு முட்டு கொடுக்கும் சாக்கில் நம்மையெல்லாம் பேயன் களாக பைத்தியாரன் களாக ஆக்கிவிட்டதாக அவை கொட்டமடித்து திரிகின்றன.அதாவது கிறிஸ்த்தவர்கள் கூட தமிழ் கலாச்சாரத்திற்க்கு பங்கமில்லாமல் வாழ்கிறார்களாம்.இந்த முஸ்லிம்கள்தான் புர்கா புரோட்டா தாடி தெளகீத் என்று போய் தமிழ் கலாச்சாரத்திற்க்கு மிகப்பெரிய வேட்டு வைக்கிறார்களாம்.அத்னால் வியாசன் என்ற டவுசருக்கு கிறிஸ்தவ வேடமிட்ட டவுசர்கள் கொக்கி மாட்டி விடுகிறார்களாம். டவுசர் கொக்கி.. இவைகளோடு விவாதம் பண்ணுவது வீண்வேலை என்று தெரிகிறது.இருந்தாலும் காலம் கருதி இதுவும் ஒரு நன்மை என்று தொடரவேண்டி இருக்கின்றது.ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் வாய்ப்புளள இந்த தளத்தில், மக்கள் எடைபோட்டு யார் எப்படி என்று புரிந்து கொள்கிற வாய்ப்பு இதனால் கிடைக்குமே என்று கருதி இந்த வம்பு வாதிகளோடு வம்பளக்க வேண்டி இருக்கின்றது.

  87. தென்றல் உங்கள் தமிழ் விளக்கம் எதுவும் அவர்களுக்கு பயனளிக்காது.இந்த கூலிக்கு மாரடிக்கிற கூட்டணி கூச்சல் போடுவதற்க்குத்தான் சில்லரை வாங்கி இருக்கிறது.வாங்கிய காசுக்கு குரைத்துக்கொண்டு திரிகிறது.இதுகளுக்கு ஏது தமிழ் இலக்கிய அறிவெல்லாம்? நேரில் சந்தித்தால் இதுகளுக்கு தமிழில் சாதாரணமாக சிக்கலில்லாமல் பேசத்தெரிந்தாலே பெரிய ஆச்சர்யம்.! ஏதாவது எழுதி குழப்பிவிடச்சொல்லிதான் இவர்களுக்கு உத்தரவு.நீங்கள் எழுதியதை புரிந்து கொள்ளவோ, ஏன் வாசிக்கவோகூட துப்பு கிடையாதே இவர்களுக்கு.எழுத்தை பார்த்தால் தெரியவில்லையா?.. முஸ்லிம்களுக்கு கோபத்தை மூட்டுகிறார்களாம்!பாவம். ஒழுங்கான வேலை வாய்ப்பு இருந்தால் இப்படி ஆகியிருக்க மாட்டார்கள்.அவர்கள்தான் என்ன செயவார்கள்.இந்த வியாசன் இலங்கைகாவது அழைத்து போகலாம்.அது செழிப்பான ஊர்.இவர் தன் தேவைக்கு மட்டும் இவர்களை பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிட்டு போய்விடுகிறார்.

    • வஹாபிய அரேபியா உலகளாவிய இசுலாமிய பயங்கரவாதிகளுக்கு படியளப்பதை நிறுத்தா விட்டால் 4 குண்டுலேயே சவுதி அரேபியாவை நபியின் காலத்திற்கு மன்னிக்கவும் அதற்க்கும் முந்தைய கற்க்காலத்திற்க்கு அனுப்பிவிடுவேன் என்று எச்சரித்துள்ளார் “உண்மையான ஆண்மகன்” ரஷ்ய அதிபர் வ்ளாடிமீர் புடின்.

      http://awdnews.com/top-news/president-putin-russia-will-bomb-saudi-arabia-back-to-the-stone-age-life-unless-riyadh-desists-from-supporting-terrorism

      ” …Russia will defeat Saudis in Syria which became the epicenter of their [Saudis] malevolent plots. It is imperative for all Syrian parties that believe in a peaceful resolution for their country’s five-year civil war to sit down at the negotiation table and denounce the Saudi destructive role,” said President Putin, adding that Russia will bomb Saudi Arabia back to the Stone Age life when nomad Arabs were in the habit of living in tents unless the regime gives up assisting radical terrorists in the Middle-East.

      Moscow—According to Russian daily Novaya Gazeta, Mr. Dmitry Peskov ,the press spokesman for the Russian President, lambasted the Saudi regime in his weekly press conference for sowing terrorism and backing al-Qaeda inspired guerrillas throughout the crisis-hit Syria.

      “the Saudi leadership clings to power and hope they can possibly impede the inevitable collapse of their primitive, barbaric and inhumane political system by targeting the stability and welfare of other neighboring nations,” Pravda quoted the Russian official as saying on Monday.

      Earlier, the Russian president emphasized that his country can’t remain at rest vis-à-vis the Saudi mischievous interference in Syria which blocked any Syrian-Syrian peaceful settlement.

      ” …Russia will defeat Saudis in Syria which became the epicenter of their [Saudis] malevolent plots. It is imperative for all Syrian parties that believe in a peaceful resolution for their country’s five-year civil war to sit down at the negotiation table and denounce the Saudi destructive role,” said President Putin, adding that Russia will bomb Saudi Arabia back to the Stone Age life when nomad Arabs were in the habit of living in tents unless the regime gives up assisting radical terrorists in the Middle-East.

      The Russian President added that strong actions against Kingdom of Saudi Arabia (KSA) are justified and crucial due to the fact that Saudi-backed ISIS poses a major international security threat. At the same time, the international community should be under no illusion about the detrimental and suspicious U.S.-Saudi alliance.

  88. புர்காவுக்கு எதிராக தாண்டிக்குதிக்கும் யோக்கியர்களுக்கு,

    முதலில் எப்படி ஆடை அணிவது என்பது தனிநபர் உரிமை.அதில் தலையிடுவது பண்பாடற்ற செயல் என்பதை இவர்கள் உணர்வதில்லை.உங்க வீட்டு பெண்கள் காற்சட்டையும் T சட்டையும் அணிந்தால் நாங்கள் சண்டைக்கு வருகிறோமா,அது உங்கள் உரிமை.அதை நான் கேள்வி கேட்க முடியாது.ஏன் தொடை தெரிய குட்டை பாவாடை அணிந்த பெண்கள் கூட சென்னையில் OMR-ல் நடமாடுகிறார்கள்.நாங்கள் அதை தடுத்தோமா.

    உங்கள் வழி உங்களுக்கு.எங்கள் வழி எங்களுக்கு.

  89. மஞ்சப்பந்து வியாசன், முழுப்பக்கத்திற்கு அடிக்கும் அடாவடித்தனம் கூட இங்கு பொருட்டல்ல. ஆனால் அகதிகள் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்கிற வியாசனின் முகமூடி ஏற்கனவே கிழிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை தொகுத்து வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

    1. வியாசனின் தமிழ் உணர்வாளர் அல்லர். இலங்கையில் இசுலாமியர்களை மட்டும் தொப்பி பிரட்டி என்று சொல்வதில்லை. தாழ்த்தப்பட்ட மலைகயத் தமிழர்களையும் இவர் இழிவுபடுத்திதான் பேசியிருக்கிறார். இதற்கு காரணம் இவரது மேட்டுக்குடி ஆதிக்க சாதி வெறித்தனம். இது தெரியாத யோசேப்பு வக்காலத்து வாங்குவதன் மூலம் மலையகத்தமிழர்களை இழிவுபடுத்துகிற ஆதிக்க சாதி வெறியர்களிடம் சரணடைந்திருக்கிறார். இந்த விதத்தில் என் இனத்திற்கு துரோகம் செய்தவன் என்று இசுலாமியர்களை குறை கூறும் யோசேப்புதான் உண்மையில் கைகாட்டியாகவும் கைக்கூலியாகவும் இருக்கிறார்.

    2. முன்னொரு விவாதத்தில் தமிழர்கள் உண்ணும் உணவை தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்சமாவு என்று இந்தியர்களை இழிவுபடுத்தி இருக்கிறார். ஆனால் இங்கு திப்புவுடன் விவாதிக்கும் பொழுது மாவு தமிழர்களின் உணவு என்று பாசாங்கு காட்டியிருக்கிறார்.

    3. மாடுதிண்ணி என்று வியாசன் அழைப்பது முழுக்கவும் சாதிவெறியின் அடிப்படையில் தான். ஆதிக்க சாதிகள் வீட்டில் ஒரு முகம் வெளியில் ஒரு முகம் என்று தெரிவதற்கு வியாசன் தான் எடுத்துக்காட்டு. வியாசனது அண்ணனும் அவரது நண்பர்களும் மாட்டுக் குடல் வறுவலையும் பீரையும் விளாசியதை இங்கு குறிப்பிட்டு இருக்கிறார். அங்கெல்லாம் இந்த லும்பன் கூட்டம் மாடுதிண்ணிகளாக வியாசன் கண்ணுக்கு தெரிந்ததில்லை. ஆனால் இங்கு அதை இசுலாமியர்களுக்கு எதிராக இழிவுபடுத்த பயன்படுத்திக்கொள்கிறார்.

    4. வியாசன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு சொந்த நாட்டிலிருந்து கனடா ஓடிப்போனதாக சொல்லியிருக்கிறார். விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த கால கட்டத்தில், ஓடிப்போனவர்கள் பணக்கார ஆதிக்க சாதியினர் மட்டுமே. அதுவும் இவர்கள் மிகப்பெரும் பொருள் கொடுத்து கொழும்பு சென்று கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டு கனடா ஓடிய கூட்டம் ஆகும். இந்த வகையில் இவர் அடிப்படையில் சிங்களப் பிரஜை ஆவார். சிங்கள காடையர் என்று சொன்னாலும் தகும். அதைத்தான் ஈழத்து பாட்டாளி வர்க்கத்தின் நிணத்தின் வீச்சமும் அவர்கள் இந்தியாவில் கொத்தடிமைகளாக சாவதும் கனடாவிற்கு பஞ்சம் பிழைக்கப்போனதும் ஆகும். இதில் வியாசன் போன்றவர்கள் வருவது ஒட்டுண்ணி வகையைச் சார்ந்ததாகும். இதற்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் யாதொரு தொடர்பும் பற்றோ கிடையாது. பாரிஸ் ஈழத் தமிழர் வியாசனின் கருத்தை மறுத்ததை நினைவிருத்தினால் வியாசன் ஓர் இந்துத்துவ அரை டவுசர் என்பது மட்டுமே மிஞ்சும்.

    • மூமின்களுக்கு முதுகு சொறிந்துவிடக் களமிறங்கியிருக்கும் இந்த ‘மூதறிஞரை’ எனக்கு முன்பே தெரியும். இவர் ஒன்றும் எனக்குப் புதியவரல்ல. பிரச்சனை என்னவென்றால், பேசப்படும் விடயம் என்னவென்று அடிக்கடி இவருக்கு நினைவு படுத்த வேண்டும் அல்லது வர்க்கம், சொர்க்கம் என்று பேசப்படும் விடயத்துக்கு சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் உளறிக் கொண்டு, தன்னைத் தானே பாராட்டியும் கொள்வார். இவருடன் விவாதிக்கும் போதெல்லாம் ஆலாபனையில் அதிக நேரத்தைச் செலவிட்டு விட்டு பாட வந்த பாட்டை மறந்து போகும் சங்கீத வித்துவான்கள் எனக்கு நினைவுக்கு வருவதுண்டு. இங்கு வரும்போது புயலாகத் தான் வருவார், வந்த வேகத்திலேயே புஷ்வாணமாகிப் போய், வர்க்கப் போராட்டம் பேசுவார். ஈழத்தமிழர்களை வசைபாடுவதில் வாழ்நாளைக் கழிக்கும் சில தமிழ் பேசும் தமிழ்நாட்டுக் குடிகளில் இவரும் ஒருவர். வெறும் வாயை மெல்லும் இவருக்கு நான், ஒரு ஈழத்தமிழன் கிடைத்திருக்கிறேன் அவ்வளவு தான்.

      இப்பொழுது கூடப் பாருங்கள், வந்தவுடனேயே, இங்கு பேசப்படும் ‘தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல்’ என்ற விடயத்தை விட்டு விட்டு என்னவெல்லாம் உளறியிருக்கிறாரென்று. உண்மையில் நான் இங்கு எழுதுவதை குறிப்பெடுத்து அதைப் பத்திரமாக ஆண்டுக்கணக்கில் பாதுகாத்து வைக்கும் என்னுடைய விசிறிகள் பலர் இந்த தளத்திலுள்ளனர் என்பது எனக்கு இதுவரை தெரியாது. உண்மையில் அவர்களை நினைக்கும் போது என் கண்களில் நீர் துளிர்க்கிறது. அவர்களின் அன்புக்கு நான் அடிமை. 🙂

      எனது பதில்களை மட்டும் கடித்துக் குதறி அடையாளமே தெரியாமல் செய்து விடும் வினவு நிர்வாகம், திப்பு, தென்றல் போன்றவர்களின் எந்த உளறலையும் தொடவும் மாட்டார்கள். அப்படியான ஒருபக்கச் சார்பான சூழலில் யாரும் எந்த விவாதத்திலும் பங்கு பற்ற முடியாது. இதே காரணத்துக்காகத் தான் முன்பும் இங்கு கருத்துப் பரிமாற்றலில் கலந்து கொள்வதை நிறுத்திக் கொண்டேன். நான் இப்பொழுது நிறுத்தினால் ஏதோ பயந்து விட்டதாக நினத்துக் கொள்வார்கள் அதனால் தொடர்கிறேன்.

  90. இந்த வீரசைவன் வியாசன் தீண்டாமை வெறிபிடித்த முனிவன் என்று திருமாவ்ளவனை மிக மட்டமான குறியீடாய் உதாரணபடுத்தும்போதே தெரியும்.எதில், தான் வகையாக மாட்டிவிட்டோம் என்று தெரிகிறதோ அதை படிக்காத மாதிரி காட்டிக்கொண்டு கடந்துவிடுவதையும் நாம் பார்த்துவிட்டோம்.தமிழ்நாட்டை விட பல மடங்கு தீண்டாமை இலங்கை யாழ்பாணத்தில் உண்டு.அது மட்டுமல்ல.நம்மை அங்கு தமிழர்கள் என்றெல்லாம் உரிமை கொண்டாட மாட்டார்கள்.நாம் “இந்தியாகாரங்கள்”தான்.இது இவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலைங்கையர்களுக்கும் உள்ள குணம்.சரி அவனவனுக்கு அவனவன் ஊர் பெரிது என்று நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.ஆனால் இங்கு வந்து பெரிய தமிழ்கலாச்சார காவலனாய் காட்டிக்கொண்டு இங்கிருக்கும் சிலதையும் கையில் போட்டுக்கொண்டு ராமகோபாலனிடமும் எச் ராஜாவிடமும் சில வார்த்தைகளை கடன் வாங்கிகொண்டு,என்ன வெறி…திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு, நானும் ஆரம்பத்தில் நல்ல மனிதர் தவறாக புரிந்து கொண்டு பேசிகிறார் போல என்று நினைத்து ஓது ஓது என்று ஓதிவிட்டேன்.பிறகு தான் தெறிகிறது..இது லேசுப்பட்டது அல்ல.இதை மதித்து கருத்து எழுவது வீண் விரயம்.கஞசி காய்ச்சி ஊத்தப்படவேண்டிய ஒரு மனிதரை சீரியஸாக எடுத்துக்கொண்டு தேவையில்லாமல் வீணடித்துவிட்டோமென்று.

  91. நண்பர் திப்பு மற்று மீரான் அவர்களுக்கு,

    இங்கு விவாதிக்க வேண்டிய மற்றும் உங்கள் மீது வைக்கப்பட வேண்டிய முக்கியமான விமர்சனம் உள்ளது. இன்றைக்கு இந்துத்துவ கும்பல் இசுலாமியர்களை மட்டுமல்ல அனைவரையும் பலிகடா ஆக்குவதற்கு பின்னணியில் இசுலாமிய மதவெறியர்களின் பங்கு என்னவென்பதை விவாதிக்க வேண்டும். இதன் அர்த்தம் இங்கு மக்களின் வழிபாட்டு உரிமைகள் என்பதைத் தாண்டி அவர்களின் இறைநம்பிக்கை என்பதைத் தாண்டி மதவெறியர்களின் கூட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இதை அம்பலப்படுத்துவது அவசியம். அப்படிச் செய்யாத பொழுது பாசிசத்திற்கு மக்கள் பலியாவது தடுக்கப்பட இயலாது. இந்தவகையில் எனது விவாதத்தையும் தங்கள் விமர்சனத்தையும் இப்பதிவின் அடிப்படையில் நாளை தொடங்குகிறேன்.

    • பின்னூட்டம் எண் .45.1.1.1-ஐ எழுதியபோதே தங்கள் வருகையை எதிர்பார்த்தேன்.சற்று தாமதமாக வந்திருக்கிறீர்கள்.தரக்கேடில்லை.[பரவாயில்லை].தொடருங்கள் தோழர்.

  92. எங்களை தாராளமாய் விமர்சிக்கலாம்.இது இன்றைய காலத்திற்க்கு மிகத்தேவை என்று விவாதிக்க தயாராய் இருக்கிறோம். நியாயமான விமர்சனங்களே நமக்குள் கசப்புகளை நீக்க வாய்ப்பளிக்கும். மதவெறியர்களின் பங்கு, எந்த மதவெறியர்களின் பங்காக இருந்தாலும் அந்த பங்களிப்பை அறவே நிராகரித்து ஒதுக்குதலே அறிவுடைமை அறவுடைமை என்று உறுதி கூறுகிறோம்.அதற்க்காக சிலரின் மிரட்டலுக்கோ வியாசஙளின் உளரல்களுக்கோ ஒருபோதும் அடிபணிந்து எங்களின் கொள்கைகளை தனித்தன்மையை மாற்றிக்கொள்ள மாட்டோம்.

  93. திப்புவின் வாதம்: இந்துத்துவ, பார்ப்பன, பயங்கரவாத காவி கும்பலை அதன் வன்முறை வெறியாட்டத்தை முசுலிம்கள் சொந்த வலுவில் தன்னநதனியாகவே எதிர் கொண்டு வந்திருக்கிறார்கள். வலுவீனமாக இருக்கும் இடங்களிலும்,இருக்கும் சமயங்களிலும் இந்து மதவெறியாட்டத்திற்கு பலியாகியிருக்கிறார்கள். மதசார்பற்ற, சனநாயக ஆற்றல்கள் என்று தங்களை சொல்லிக்கொள்வோரும் சரி, இடதுசாரிகளும் சரி கையில் உருட்டுக்கட்டையோடு அப்பாவி முசுலிம் மக்களை காப்பாற்ற களத்தில் இறங்கியதில்லை.[கருத்து தளத்தில் அவர்களின் இந்துத்துவ எதிர்ப்பு பரப்புரைக்கு முசுலிம்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்].

    மறுப்புரை: இந்துத்துவ காலிகளின் வன்முறை வெறியாட்டத்தை இசுலாமியர்கள் தன்னந்தனியாகவே எதிர்கொண்டிருக்கிறார்கள்; பலவீனமான இடங்களில் வன்முறைக்கு பலியாகியிருக்கிறார்கள் என்று சொல்கிற திப்பு மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பு கருத்தளவில் மட்டுமே என்று முடிவு செய்கிறார்.

    ஆனால் இந்த வாதத்தில் உண்மையில்லை. திப்பு சொல்வதுபடியே மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி இயக்கங்கள் கருத்தளவு மட்டுமே பங்களித்தார்கள் என்று வைப்போம். ஆனால் குஜராத் கலவரத்தில் நடைபெற்றது என்ன?

    குஜராத்தைப் பொறுத்தவரை போரா முசுலீம்கள் மோடிக்கு ஆதரவாக நின்றனர். குஜராத்தில் உள்ள தப்லீகி ஜமாத் அங்கு நிலவும் சூபி கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கிறது. தீஸ்தா செதல்வாட் சொல்வதுபடியே குஜராத்தில் சிறுபான்மையின கல்வி நிலையங்களை ஆரம்பிப்பது மிகக் கடினம். ஆனால் மதராசக்களைத் திறப்பது மிகவும் எளிது. ஏனெனில் சூபி கலாச்சாரத்திற்கு எதிராக வெறிகொண்டு மக்களைப் பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலுக்கு, முசுலீம்களை மட்டுமல்ல இந்துத்துகளையும் அங்கிருந்து பிரிப்பற்கு யாரைவிடவும் அதிக கைக்கூலி வேலைகளை இந்துத்துவ கும்பலுக்கு செய்து தருவது தப்லீகி ஜமாத்தான்.

    இப்பொழுது என்னுடைய கேள்வி குஜராத் கலவரத்தை முறியபடிபத்தில் மதச்சார்ப்பற்ற குரல்கள் இடதுசாரி பங்களிப்பு இல்லையென்றே வைத்தாலும் தப்லீகி ஜமாத், பெருவணிக போரா முசுலீம்களின் பங்கு குஜராத் கலவரத்தில் இருக்கிறதா இல்லையா? சாதாரண மக்கள் வெறி கொண்டு வீழ்த்தப்படுவதற்கு பின்னணியில் இத்தகைய மதவாத சக்திகள் இருப்பதை ஏற்கிறீர்களா?

    குஜராத்தில் நிலவுகிற நிலைமைதான் நாடெங்கிலும்.

    திப்பு கூறும் “பல்வேறு கலாச்சாரங்கள்,மத நம்பிக்கைகள் நிலவும் நாட்டில் பிறருக்கு கேடு விளைவிக்காமல் பல பிரிவு மக்கள் தங்களின் கலாச்சார,மத நெறிப்படி வாழ்வதை ஏற்பதுதான் நாகரீகம் என்று உங்களுக்கு தெரியுமா?” எனும் கேள்வியில் சூஃபி கலச்சாரம் தர்கா வழிபாடு எதன் கீழ் வருகிறது?

    இசுலாமியர்கள் காவிக்கும்பலை தன்னிந்தனியாக எதிர்கொள்ளும் பொருட்டு நிற்கவைத்த நிலைமைக்குப் பின்னால் மதவாத சக்திகளின் பங்களிப்பு இருக்கிறது என்பது எமது துணிபு.
    அதைவிட்டுவிட்டு, மதச்சார்பற்ற ஜனநாயக குரல்கள் மற்றும் இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள் கருத்துதளத்தில் மட்டுமே பங்களிப்பு செய்தனர் என்ற நிலைப்பாடு தவறானதாகும்.

    இதற்கு சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

    ஹைதாரபாத் தலித் மாணவன் ரோகித் வெமுலாவின் எந்த செயல்கள் இந்துத்துவக் காலிகளை வெறுப்படையச் செய்தது?

    அவர் முசாபர் நகர் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிச்செயலை அம்பலப்படுத்தினார். யாகூப் மேமனின் தூக்கிற்கு எதிராக கருப்புநாள் அனுசரித்ததால் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டார்.

    ஓர் ஜனநாயகக் குரல் ஆற்றிய இந்த பங்களிப்பு குறித்து ஜமாத்துகள் ஏதாவது வேலை செய்திருக்கின்றனரா? தாழ்த்தப்பட்டவர்கள் இந்துத்துவத்தைக் காக்கும் காலாட்படையாக இருக்க வேண்டும் என வீரசாவர்க்கர் கூறியதை ரோகித்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பு எதிர்த்ததால் தான் இந்த விளைவு.

    இப்பொழுது தலித் இயக்கங்கள் இந்தப் பிரச்சனையை தலித் அடையாள அரசியலுக்கு எடுத்துக்கொண்டு போகிறார்கள். இந்து ஆங்கில நாளேடு கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி பிரச்சனையை தலித் அடையாள அரசியலாக திசைதிருப்பியிருக்கிறது.

    ஏற்கனவே ஸ்டாலின் இராஜங்கம் போன்ற எழுத்தாளர்கள் தலித்துகளுக்கு பெரியாரிய இயக்கத்தாலோ இடதுசாரிகளாளோ பலன் ஏதும் இல்லை என கரசேவை புரிந்துகொண்டிருக்கிறார். தலித்தும் இசுலாமியனும் சேரமுடியாது என்று அம்பேத்கர் சொன்னதாக அரைடவுசர் ஜெயமோகன் பச்சைப் பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.

    இந்தளவிற்கு இங்கு பாசிச சக்திகள் பீதியுட்டப்படும் அளவிற்கு ரோகித் போன்றவர்கள் ஏன் முசாபர்நகர் கலவரத்தை கையிலெடுக்க வேண்டும்? ஏன் யாகூப் மேமனை தலித் ஆதரிக்க வேண்டும்? என்று கேள்விகள் எழுப்புகிறார்கள். தங்கள் இருப்புக்கு இது ஆபத்து என்பதால் முறியடிக்கப்பட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார்கள்.

    ஆனால் இசுலாமிய இயக்கங்கள் என்னமாதிரியான ஆதரவை இதுவரை நல்கியிருக்கிறார்கள்? சில வாரங்களுக்கு முன்பு சவுதியில் சியா மதத் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இங்குள்ள சென்னை இசுலாமிய மக்கள் சவுதிக்கு எதிராக போராட்டம் பேரணி நடத்தினார்கள். ஆனால் முசபார் நகர் கலவரத்தை நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக போராட்டம் நடத்த முன்வருவார்களா?

    தவ்ஹீத் ஜமாத் சிர்க் ஒழிப்பு மாநாடு என்று பேசிக்கொண்டிருக்கிறது.
    ஆனால் ஏபிவிபி குண்டாந்தடிகள் ரோகித் வெமுலா பயங்கரவாதி யாகூப் மேமனை ஆதரித்தார் என்று அடுத்தகட்டமாக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்போகிறார்களாம். என்ன செய்ய போகிறோம் நாம்?

    புரட்சிகர இயக்கங்களின் மாணவர் அமைப்புகள் நாடு தழுவிய போராட்டங்களை ரோகித் விசயத்தில் கட்டியமைத்துவருகின்றனர். இன்றைக்கு போராட்டம் அவசியம் என்ற நிலையில் இசுலாமிய இயக்கங்கள் மக்களை எதிர்திசையில் நகர்த்திக்கொண்டிருக்கிறது. காவிக்கும்பலிடம் தள்ளிவிடும் வேலையை இவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

    அப்சல் குரு விசயத்தில் களத்தில் போராட்டங்களை இடதுசாரிகள் கட்டியமைத்த பொழுது திப்புவின் கூற்றிற்கு மாறாக வெறும் கருத்துதளத்தோடு நின்றவர்கள் இசுலாமிய இயக்கங்கள்.
    இந்த விசயத்தில் திப்பு உண்மையை தலை கீழாக நிறுத்துகிறார்.

    ஆனால் கம்யுனிஸ்ட் என்ற முறையில் திப்பு வைக்கும் வாதத்தில் சுயவிமர்சனம் ஒன்றை ஏற்கலாம். பெரும்பான்மைக்கான அரசியலை பேசுகிற புரட்சிகர இயக்கங்கள் இங்கு சிறுபான்மையாக இருக்கிறது என்பதுதான் அது. இதுதான் கட்டையை எடுத்துக்கொண்டு நாடெங்கிலும் களத்தில் இந்துத்துவக் காலிகளை விரட்டியடிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம்.

    அப்படியானால் இதற்கு தீர்வு என்ன? இந்த சுயவிமர்சனம் நியாயமானது என்று ஏற்பவர்கள் பெரும்பான்மைக்கான அரசியல் எங்கிருக்கிறது என்ற தேடல் உடையவர்கள் கம்யுனிஸ்டாக மாறுவதற்கு போராடுங்கள். திப்பு போன்றவர்கள் அப்படி செய்ய முடியும் பொழுதுதான் இசுலாமியர்கள் மட்டுமல்ல எந்த மத மக்களின் வாழ்வு உரிமைகளையும் காக்கமுடியும். ஏனெனில் கம்யுனிஸ்டுகள் வானிலிருந்து குதித்து வந்துவிடவில்லை. திப்புவாக இருந்துதான் வருகிறார்கள்.

    பிறக்கிற குழந்தைகள் அனைத்துமே நாத்திகர்களத்தான் பிறக்கின்றன. ஆளும் வர்க்கம் தான் கடவுளையும் மதத்தையும் திணித்துவைக்கின்றன. வல்லமை பொருந்திய கடவுள், குழந்தைக்கு தன்னை உணர்த்த வேண்டிய அவசியம் இருந்தால் அந்த கடவுளுக்கு வல்லமை இருக்கமுடியுமா? ஆக வல்லமை உண்டு. கடவுள் தான் இல்லை!

    இதைத்தான் பெரியார் நமக்கு வழங்கியது. எப்படி நியூட்டன் தன் அறிவியல் சாதனைக்கு நான் கலிலியோவின் தோள்களின் மீது நின்றேன் என்று பெருமிதத்தோடு கூறினானோ கம்யுனிஸ்டுகள் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தின் தோள்களின் மீது நின்று பாசிசத்தை முறியடிப்பார்கள்.

    இது செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்றால்

    1. மக்களின் வழிபாட்டு உரிமைகளை கம்யுனிஸ்டுகள் ஏன் எதற்காக மதிக்க வேண்டும்?

    2. கம்யுனிஸ்டுகள் பார்ப்பனியத்தையும் முல்லா தாலிபானியத்தியையும் எப்படி ஏன் மக்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்?

    3. யோசேப்பு, மேரி, வியாசனின் கருத்துக்கள் எப்படி கடைந்தெடுத்த மதவெறியாக இருக்கிறது?

    4. சோசலிச சமுதாயத்தில் மத நிறுவனங்கள் என்னவாக இருக்கும்?

    என்பதற்கு எவர் ஒருவரும் பதில் அளிக்க முடியும். இது குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

    • தென்ற்ல், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் பங்களிப்பு கருத்தளவிளா களத்தவிளா என்றெல்லாம் கணக்குப்பார்த்துக்கொண்டு பிணங்கி கொள்ள வேண்டியதில்லை.ஒரு வேளை, நாங்கள் அஞ்சி தாஜா செய்து கொண்டோ எங்களின் தனித்தன்மையை விட்டு விட்டோ யாரையும் காக்கா பிடிக்க வேண்டியதில்லை என்ற அர்த்தத்தில் திப்பு அவ்வாறு சொல்லி இருக்கலாம். போரா முஸ்லிகள் எப்போதுமே தங்களை எல்லா வகையிலும் துண்டித்துக்கொண்டு வாழ்பவர்கள்தான்.அவர்களுக்கு யாரைபற்றியும் எதைப்பற்றியும் கவலையில்லை.அரசு வேலையோ அரசின் திட்டங்களோ எதைபற்றியும் அவர்களுக்கு கவலையில்லை.அந்த வகையில் மோடிக்கும் அவர்களைப்பற்றி பிரச்சினையில்லை.மோடிக்கு ஆதரவாக அவர்கள் நின்றார்கள் என்பதைவிட மோடியை பகைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.அத்னால் பொது மேடையில் மோடியோடு படம் காட்டினார்கள்.மோடியும் தன் கொடூரத்தை குறைக்கும் நாடகமாக அதை எண்ணிக்கொண்டார். ஆனால் தப்லீக் ஜமாத்தை பற்றிய உங்கள் சித்திரம் பெரிய வியப்பை ஏற்ப்படுத்துகிறது.அவர்கள் எந்த பொது விவாதங்களையும் செய்வதில்லையே தொழுகை..தொழுகை..தொழுகை..தொழுகையைத்தவிர வேறு எதைப்பற்றியும் பேசமாட்டார்கள்.மிகப்பெரிய மாநாடு கூட்டுவார்கள் பேனரோ சுவரொட்டியோ வேறு எந்த விளம்பரமோ இருக்காது.நேரிலேயே அந்த அழைப்பு இருக்கும்.பல்லாயிரக்கணக்கான ஆண்கள் ஒரு பெரும் திடலில் கூடி தொழுகையைத்தவிர வேறு எந்த விஷயங்களும் அங்கு பேசப்படாது.பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட காலத்தில் கூட அவர்கள் மாநாடு நடந்தது.குஜராத் படுகொலை உலகம் முழுக்க எதிரொலிக்கும் போது கூட அவர்கள் மாநாடு நடந்தது.அதைப்பற்றி ஏதாவது ஒரு விவாதமோ அது சம்மந்தமாய் போராட்ட அறிவிப்போ ஒன்றும் கிடையாது.அவர்கள் எப்படி சூபிகளுக்கு எதிராக படை திரட்டியதாக சொல்கிறீர்கள்? சரி அப்படியே சூபியிஸத்திற்க்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது அந்த கருத்தியலுக்கு எதிரானவர்களாக ஆகுமே அன்றி வன்முறையாளர்கள் என்று எப்படி ஆகும்.நானும் சூபியிஸத்திற்க்கு எதிரானவன் தான் அதற்க்காக கண்ணில் காணும் சூபிகளையெல்லாம் கொன்று குவிக்கும் வெறியோடவா அலைவேன்.

      • தென்றல்.. இஸ்லாத்தில் சூபியிஸம் இல்லை என்று வேறொரு பிரிவினர் சொல்லக்கூடாதா? அப்படி சொல்வது காவிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வலு சேர்ப்பதா? நாங்கள் எங்கள் கொள்கை கோட்பாட்டை பரிசீலிப்பது அதில் கருத்து முரண்படுவது முரண்பட்ட கருத்தை பரப்புரை செய்வது அனைத்தையுமே காவிகளை மனதில் வைத்தே பயந்து பயந்துதான் செய்யவேண்டுமா? இன்னொன்றையும் கூறவிரும்புகிறேன். நீங்கள் கம்னியூஸ்ட்டாக இருக்கலாம் நாத்திகராக இருக்கலாம் ஆனாலும் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறீர்கள். உங்கள் வார்த்தையோ எழுத்தோ வெளிவந்தால்தான் நீங்கள் கம்னியூஸ்ட், நாத்திகர்.இப்படி பல்வேறு கொள்கை கோட்பாடு உள்ள மக்களை வசதியாக மறைத்து நாம் அனைவரும் ஒன்று என்று காட்டித்தான் ஒரு சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருக்கும் கூட்டம் பிரித்தாள முயற்ச்சிக்கிறது. நீங்கள்தான் அவர்களை பிரித்து தனியே விட்டுவிட்டு உங்க்ளோடு எங்களை சேர்க்க பொறுத்தமானவர்கள்.எங்களை தனிமைபடுத்தல் என்பது அவர்களுக்கு எளிது.நாங்கள் கைகோர்க்க தயார்.மூடிய சமூகம் என்று பெயர் வாங்கிய நாங்கள் இன்று பல நிலையிலும் வெளிவந்து கலந்து கொண்டுதான் இருக்கிறோம்.பல இயக்கங்கள் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இயக்கங்களோடும் தோழர்களோடும் கலக்க ஆரம்பித்துதான் இருக்கிறார்கள்.முன்னெப்போதும் இல்லாத அளவிற்குண்டான இன்றைய சூழலும் ஒன்றிணைய வைத்தும் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய இயக்கங்கள் மக்களை எதிர்திசையில் நகர்த்திக்கொண்டிருப்பதாக எதை சொல்கிறீர்கள்.தெளகீத்ஜமாத்தின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைத்தான் சொல்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன்.இது காவிகளிடம் மக்களை தள்ளக்கூடியது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.ஒரு அமைப்பு ஜனநாயக முறையில் தங்களின் கருத்தை கொள்கையை பரப்புரை செய்வது மக்களை காவிமயமாக்கிவிடுமா? இது என்ன பூச்சாண்டி? அவர் கூட்டும் மாநாட்டில் அவர்கள் செய்யும் பரப்புரையை ஏற்பவர்கள் ஏற்க்கிறார்கள் உடன்படாதவர்கள் புறக்கணிக்கிறார்கள்.ஒட்டுமொத்த தமிழ்நாட்டு முஸ்லிம்களுமா தமிழ்நாடுதெளகீத்ஜமாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்… “பெரும்பான்மை அரசியலுக்கான தேடல் உள்ளவர்கள் கம்னியூஸ்ட்டாக மாறுங்கள்” என்று அழைப்பு விடுக்கிறீர்களே.. இதை தவறென்று சொல்லவில்லை.இதைப்போல சித்தாந்த பற்று நம்பிக்கை ஒவ்வொறுவருக்கும் இருக்கலாம்.அவரவர் அவரவருடைய சித்தாந்தத்தை நம்பி அழைப்புவிடுத்தல் எப்படி தவறாகும்?”அய்யோ காவி வருகிறான் மதப்பெருமை பேசி நிற்க்காதே,அவன் பெரும்பான்மை மதம் பேசி மக்களை இணைத்து விடுவான்.மதம் அபின் என்று கம்னியூஸ்ட்டாய் மாறிவிடு அப்போதுதான் அவன் நம்மை பார்த்து பயப்படுவான் நாமெல்லாம் இணைய முடியும்”என்றால் இது பூச்சாண்டிதானே.என் மத நம்பிக்கையோடு அடையாளத்தோடு,வேறுபட்ட கொள்கை கோட்பாட்டுள்ளவர்களோடு ஏன் இணைந்து வாழ முடியாது?

    • தோழரின் மறுப்புரையில் சிற்சில விவரப்பிழைகள் உள்ளன.அவற்றை சரி செய்து கொண்டு பார்த்தால் சரியான படம் பார்வைக்கு கிட்டும்.

      குசராத் கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் போரா முசுலிம்கள்.அப்போது மோடியை கடுமையாக வெறுத்த அவர்கள் பின்னாளில் மோடியின் ஆதரவாளர்களாக மாறியதற்கு பல காரணங்கள் உண்டு. போரா முசுலிம்கள் நாம் பார்ப்பது போன்ற சாதாரண முசுலிம்கள் அல்ல.அவர்கள் சிறிய,தனியொரு சமூகம்.பார்சி சமூகத்தை போன்று மிகப்பெரும் செல்வந்தர்கள்.அவர்கள் ஒரே மத நிறுவனத்தின் கீழ் கட்டிப்போடப்பட்ட மத அடிமைகள்.அவர்களது தலைவர் ”செய்யதினா” வுக்கு மதவரி செலுத்துவதையே தலையாய கடமையாக கொண்டவர்கள்.செய்யதினா காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் அடிமைகள்.இவர்களது யோக்கியதையை தெரிந்து கொள்ள அதே சமூகத்தில் தோன்றிய சிந்தனையாளர் அஸ்கர் அலி இஞ்சினியரை செய்யதினாவுடன் ஒன்றாக பயணிக்க கூடாது என வானூர்தியிலிருந்து அடித்து இறக்கி விட்ட நிகழ்வை நினைவூட்டுகிறேன்.அவர்கள் எபோதுமே பணக்காரகளுக்கே உரிய கோழைத்தனத்துடன் மைய,மாநில அரசுகளை ,ஆட்சியாளர்களை நக்கத்தனத்துடன் அணுகி வந்திருக்கின்றனர்.அந்த நக்கத்தனமே ஆட்சியாளர்கள் கொலைகாரர்களேயானாலும் அவர்களுடன் கைகோர்க்க வைக்கிறது.எந்த ஒரு வெளிப்படையான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாத அரசியல் ரீதியாக செய்யதினாவால் காயடிக்கப்பட்ட சிறு கும்பல் அது.அவ்வளவு ஏன்.சென்னையிலும் அந்த தன்னல கும்பல் இருக்கிறது.அவர்கள் சென்னையில் வாழும் [இந்துக்களை விடுங்கள்,] முசுலிம்களுடன் கூட பேசி பழகுவதை நீங்கள் பார்க்க முடியாது. .ஆகவே அவர்களின் செயல்பாடுகள் எதுவும் முசுலிம் மக்களிடம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது .

      அடுத்து தப்லீக் ஜமாஅத்.அடிப்படையில் இதன் தோற்றமே பிரிட்டிசுகாரனுக்கு வால் பிடிக்கும் வகையிலேயே அமைநதது.இதற்கு 1857-விடுதலை போர்,இந்து-முசுலிம் ஒற்றுமையின் பாற்பட்ட அரசியல் நடவடிக்கைகள்,இவற்றில் இசுலாமிய மதகுருமார்கள் மவுலவிகளின் பங்களிப்பு ஆகியவற்றை நினைவு படுத்தி கொள்ளவும்.அதற்கு ஒரு தகவல்.

      பண்டிட் நேரு சிறையிலிருந்து மகள் பிரியதர்சினிக்கு [இந்திரா காந்தி]எழுதிய கடிதங்கள் புத்தகமாக வந்திருக்கிறது.அதில் ஒரு இடத்தில் நேரு சொல்கிறார்.

      ”தில்லியிலிருந்து லக்னோ செல்லும் சாலை நெடுகிலும் இருக்கும் ஒவ்வொரு புளியமரத்திலும் ஏதேனும் ஒரு முசுலிம் மவுலவி பிரிட்டிசாரால் தூக்கிலிடப்பட்டிருப்பார்”

      அந்த அளவிற்கு முசுலிம்கள் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி வந்திருக்கிறார்கள்.இது தேவ்பந்த் இயக்கம் என அறியப்படுகிறது.முசுலிம்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காக பிரிட்டிசார் பல்வேறு தந்திரங்களை கையாண்டனர்.[அதில் ஒன்றுதான் முசுலிம்களை பிளவுபடுத்த வெள்ளையனின் அடிமை மிர்சா குலாம் முகமது தோற்றுவித்த காதியானி அகமதியா முசுலிம் பிரிவு.].

      இந்த தேவ்பந்த் இயக்கத்திலிருந்து தோன்றியதுதான் தப்லீக் இயக்கம்.விடுதலை போரை மேலும் முன்னெடுக்கும் நோக்கில் அது அமையவில்லை.மாறாக அரசியல் நடவடிக்கையே கூடாது,எல்லாத்தையும் அல்லா பாத்துக்குவான்,நாம் முறையா தொழுது வந்தால் போதும்,விடாமல் தொழுவதும் அந்த தொழுகைக்கு முசுலிம் மக்களை அழைப்பதுமே உண்மையான ஜிகாத் என்று முசுலிம்களை அரசியல் ரீதியாக காயடிக்கும் கூட்டம் அது.இன்று வரை அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.ஊருக்கு பத்து பேர் இருப்பார்கள்.அவர்கள் உடையே பொது மக்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கும்.நேற்று நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு முசுலிம் பெரியவர் பரிசு வாங்கினார்.அவர அணிந்திருப்பதுதான் அவர்கள் உடை.[வட நாட்டு ஜிப்பா அது.இதைத்தான் வியாசன் அரபு ஆடை என உளறிக்கொண்டு திரிகிறார்.உளறலை நிரூபிக்க மதுரைக்கு வந்து புகைப்படம் புடிச்சு காட்டுறேன்னு இப்போதைக்கு தப்பிச்சுருக்காறு].

      அரசியலை விட்டே ஒதுங்கி ஓடும் இந்த இரண்டு கும்பலும் அரசியல் ரீதியாக யாதொரு விளைவையும் ஏற்படுத்தி விட வல்லவை அல்ல.

      மற்றவை குறித்து பின்னர்.

      • விவாதங்களை பின்தொடரும் நண்பர்களின் கவனத்திற்கு,

        வெள்ள நிவாரணத்தில் உதவி செய்ய வைத்தது மதமா மனித நேயமா என்ற எளிய கட்டுரைப் பொருள் எங்கெங்கோ சென்று விட்டது. பரவாயில்லை.

        இந்த நெடிய விவாதத்தில் வியாசன் போன்றோரின் இனவாதமும், பி.ஜோசப் போன்றோரின் அசட்டு வாதமும் பெரிய பிரச்சினை இல்லை. அவையெல்லாம் விவாதிக்கவில்லை என்றாலும் துருப்பிடித்து இற்று விழுந்து போகும். மீரான்சாகிப் போன்றோர் எளிய மொழியில் பேசும் மதவாதிகள் என்பதைத்தாண்டி கருத்தில் புதிய சரக்கில்லை. இவையெல்லாம் நிறைய கட்டுரைகளில் பேசி பஞ்சாயத்தே முடிந்து போயிருக்கிறது.

        ஆனால் திப்பு போன்றோரை பின்னூட்டங்கள் வழியாக அறிந்தோருக்கு என்னடா இவரும் மதவாதத்தில் விழுந்து எழுகிறாரே என்று தோன்றாலாம். இப்போது தோழர் தென்றல் அவருடன் விவாதிக்கிறார். அது குறித்து சில விளக்கங்கள்.

        தோழர் தென்றல் கம்யூனிசத்தின் சார்பில் விவாதிப்பதால் அதுதான் கம்யூனிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ கொள்கை என்று பாராமல் அவரது தனிப்பட்ட கருத்தாக விவாதிப்பது சரியாக இருக்கும். தென்றல், அவர் புரிந்து கொண்ட வகையில் எழுதுகிறார், எழுதுவார். இதில் வினவு சார்பாக சரி, தவறு பார்ப்பது தோழர்களின், வாசகர்களின் முன்முயற்சியை சீர்குலைக்கும் என்பதால் தவிர்க்கிறோம். இத்தகைய விவாதங்களில் ஈடுபடுவது மூலமாகவே ஒருவர் எது சரியான மார்க்சியம் என்பதை சொந்த முறையில் காண முடியும் என்பதால் இதை உற்சாகப்படுத்துகிறோம். ஆகவே தென்றலின் கருத்துக்களை தென்றலாக மட்டும் பாருங்கள்.

        அதே போன்று திப்பு விவாதிப்பதும் அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே. அதாவது திப்புவையும் தனிநபராக மட்டும் பாருங்கள், முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதியாக பார்க்காதீர்கள். நாங்கள் முஸ்லீம்கள், முஸ்லீம்கள் பார்த்துக் கொள்வார்கள், முஸ்லீம் மதத்தில் தலையிடாதீர்கள், தலையிட்டால் நீங்களும் ஆர்.எஸ்.எஸ் என்பதாக அவர் பேசினாலும் அவையும் அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே. திப்பு மட்டுமல்ல முசுலீம் அமைப்புக்களே கூட முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என்று சொல்ல முடியாது. அதே போன்று சாதிய அமைப்புக்கள் கூட அந்தந்த சாதி மக்களின் பிரதிநிதிகள் இல்லை.குறிப்பிட்ட மக்கள் திரளின் முழுவாழ்க்கைக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட கொள்கையோ நடைமுறையோ கொண்டவர்களைத்தான் பிரதிநிதிகள் என்று கூற முடியும். அதன்படி புரட்சிகர அமைப்புக்கள் மட்டுமே அனைத்து மத, சாதி உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாவர்.

        ஆகவே திப்புவை திப்புவாக மட்டும் வைத்து விவாதியுங்கள். இது குறித்து விரிவாக எழுத வேண்டும் என்ற விருப்பமிருக்கிறது. மக்கள் அருள வேண்டும்.நன்றி

        • எந்த விடயத்திலும் இங்கு யாருடனும் என்னால் விவாதத்தை தொடர முடியும். ஆனால் வினவு என்னுடைய விடயத்தில் மட்டும் ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்வது மட்டுமன்றி, எனது பதிலை மட்டும் கொத்திக் குதறுவதுடன், நடுநிலையாக இருப்பதற்குப் பதிலாக நீதிபதியாகவும் மாறி, அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுவதாலும் இனிமேல் இந்த தளத்தில் எந்த விவாதத்திலும் பங்குபற்றுவதில்லை என முடிவு செய்துள்ளேன். திப்பு, தென்றல் போன்ற வினவின் வாலாயங்கள் எல்லாம், நான் எதோ பயந்து போய்விட்டதாக நினைத்துக் கொட்டமடிப்பார்கள் என்பதால் போக மனமில்லைத் தான், இருந்தாலும் பரவாயில்லை.. Bye 🙂

          • என்னது, ஓரே பந்தில் கிளீன் போல்டா?

            பரவாயில்லை வியாசன் வாருங்கள், திரும்பவும் பந்து வீசுகிறோம். அடித்து விளையாடவிட்டாலும் தடுத்தாவது ஆடுங்கள்!

            • வினவு நிர்வாகத்தினருக்கு….

              //தோழர் தென்றல் கம்யூனிசத்தின் சார்பில் விவாதிப்பதால் அதுதான் கம்யூனிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ கொள்கை என்று பாராமல் அவரது தனிப்பட்ட கருத்தாக விவாதிப்பது சரியாக இருக்கும். //

              //அதே போன்று திப்பு விவாதிப்பதும் அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே. அதாவது திப்புவையும் தனிநபராக மட்டும் பாருங்கள்,//

              தென்றல், திப்பு மட்டுமல்ல வியாசனின் கருத்துக்களையும் அவரின் சொந்த கருத்துக்களாகவே பாவித்து, கூடுமானவரை வியாசன் அவர்களின் மறுமொழிகளை கோடுகளிட்டு மட்டுறுத்துவதை தவிர்க்கவும். அவர் கூற வரும் கருத்துக்களை முழுமையாக அவர் வெளிப்படுத்த அனுமதிக்கவும். அவர் என்ன கூற வருகிறார் என்பதை புரிந்துக் கொள்ள அது பேருதவியாக இருக்கும். கருத்துரிமை எனும் ஜனநாயகம் எல்லோருக்கும் உரியது, அதை அனைவருக்கும் அளிக்க வேண்டும். நன்றி.

              • மேரி அவர்களின் மேலான கவனத்திற்கு,
                வியாசன் அவர்களின் கருத்துக்களை எப்போதும் வரவேற்கிறோம். நீங்கள் பார்க்கும் கோடு அவரின் கருத்து அல்ல, வசை அல்லது தனிப்பட்ட தாக்குதல். வியாசன் அவர்கள் வாதத்தில் கருத்துக்கள் இல்லாத நிலையில் சில நேரம் கருத்துக்கள் இருக்கும் நிலையிலும் ஆத்திரமடைந்து திட்டுகிறார். அதை மட்டறுத்தி அவரை கூடுமானவரை கண்ணியமாக உங்களுக்குத் தருகிறோம். இதை வியாசனின் மனசாட்சி அறியும். தென்றலுக்கு அவர் அளித்த இரண்டாவது மறுமொழியில் போலி கம்யூனிஸ்ட், வகாபிய கைக்கூலி, கூலிக்கு மாரடிப்பவர் என்று நிறைய எழுதியிருந்தார். அதைத்தான் மறைத்தோம். இந்த ‘கருத்துக்களைக்’கூட விருப்பமாக படிக்கும் உங்கள் ஆர்வம் நிலைகுலைய வைக்கிறது. நன்றி.

                • வினவு நிர்வாகிகளுக்கு….

                  //வியாசன் அவர்கள் வாதத்தில் கருத்துக்கள் இல்லாத நிலையில் சில நேரம் கருத்துக்கள் இருக்கும் நிலையிலும் ஆத்திரமடைந்து திட்டுகிறார். அதை மட்டறுத்தி அவரை கூடுமானவரை கண்ணியமாக உங்களுக்குத் தருகிறோம். //

                  இதை நீங்கள் அனைவரிடமும் கடைப்பிடித்தால் எனக்கு மகிழ்ச்சியே .ஆனால், பல நேரம் இது உண்மைக்கு நேர்மாறானதாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் கூறியது இதை

                  //இரண்டாவது மறுமொழியில் போலி கம்யூனிஸ்ட், வகாபிய கைக்கூலி, கூலிக்கு மாரடிப்பவர் என்று நிறைய எழுதியிருந்தார். அதைத்தான் மறைத்தோம். //

                  ஆனால் வியாசன் எதை கூறினார் என்பதை மறைத்தீர்களோ, அதையே தான் மறுமொழி 96இல் எங்களை பார்த்து கூறியுள்ளார் மீரசாஹிபும் கூறியுள்ளார். அதையும் தருகிறேன்.

                  //தென்றல் உங்கள் தமிழ் விளக்கம் எதுவும் அவர்களுக்கு பயனளிக்காது.இந்த கூலிக்கு மாரடிக்கிற கூட்டணி கூச்சல் போடுவதற்க்குத்தான் சில்லரை வாங்கி இருக்கிறது.வாங்கிய காசுக்கு குரைத்துக்கொண்டு திரிகிறது.இதுகளுக்கு ஏது தமிழ் இலக்கிய அறிவெல்லாம்? //

                  மீராசாஹிப் மிகவும் அநாகரீகமாக பேசி இருக்கிறார். இதெல்லாம் உங்கள் கண்களில் படாதது ஆச்சர்யமே.

                  //தென்றலுக்கு அவர் அளித்த இரண்டாவது மறுமொழியில் போலி கம்யூனிஸ்ட், வகாபிய கைக்கூலி, கூலிக்கு மாரடிப்பவர் என்று நிறைய எழுதியிருந்தார்.//

                  பரவாயில்லை, அதையும் வெளியிடுங்கள். இதே வார்த்தைகளை வியாசன் மீதும் முந்தைய மறுமொழிகளில் பல முறை கூறி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் நீங்கள் இதை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் இப்போது என்ன திடீர் கரிசனம். மேலும் வியாசனின் மறுமொழிகளில் அவர் அளித்த பல தகவல்களை நீங்கள் வெளியிடாமல் மட்டுறுத்தி இருக்கிறீர்கள் என்றும் பல முறை கூறி இருக்கிறார். இது மிகவும் தவறு. அவரவர் தரப்பு நியாயத்தை பேச முழுமையாக அனுமதிக்க வேண்டும். அது தான் ஊடக நாகரீகம்.

                  //இந்த ‘கருத்துக்களைக்’கூட விருப்பமாக படிக்கும் உங்கள் ஆர்வம் நிலைகுலைய வைக்கிறது.//

                  எனக்கு எந்த விதமான ஆர்வமுமில்லை. நான் சொல்வது இதைத் தான், கருத்து சுதந்திரத்தை மதித்து எதையும் மட்டுறுத்தாமல் வெளியிடவும். அதற்க்காக அநாகரீக பேச்சுகளை வெளியிட வேண்டும் என்றில்லை. இந்த சம்மந்தமாக இனி நான் ஏதும் தங்களிடம் கூறப் போவதில்லை. முடிவாக,

                  “பேச்சு சுதந்திரம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு பேச்சு காயபடுத்துமானால் கூட அதற்கு தடை இருக்கக் கூடாது, பத்திரிக்கை சுதந்திரம் உண்மையாகவே மதிக்கப்படுகிறது என எப்போது சொல்ல முடியும் என்றால் , பத்திரிக்கைகளில் கடுமையான சொற்களால் விமர்சிக்க முடிகிற போதும் தகவல்களை தவறாகக் கூட வெளியிட முடிகிற போதும் தான். கூட்டங்களில் புரட்சி திட்டம் தீட்டுவதற்கு முடியும் போது தான் அதற்கான சுதந்திரம் முழுமையை அடைந்ததாக பொருள்கொள்ள முடியும்” – மகாத்மா காந்தி .

                  காந்தியார் கூறியது தான் உண்மையான ஜனநாயகம். உங்களை நீங்கள் தான் சரி பார்த்து கொள்ள வேண்டும்.நன்றி

                  • “எல்லோருக்கும் ஒரே அளவு கோலிலேயே மட்டறுக்கிறோம்’ என்ற, வினவின் இந்த அப்பட்டமான பொய்யைப் பார்த்ததும் இவர்கள் மீது எனக்கிருந்த கொஞ்சநஞ்ச நல்லெண்ணமும் போய்விட்டது, ஆகவே நான் வினவு தளத்தில் இனிமேலும் பங்குபற்றப் போவதில்லை. இருந்தாலும் சகோதரி ரெபெக்கா மேரி போன்ற நல்லெண்ணம் கொண்டவர்களுக்காக எனது பக்கக் கருத்தையும் இங்கே விளக்கிக் விட்டுப் போகலாமென எண்ணுகிறேன். வழக்கம் போல் இவர்கள் மட்டுறுத்தல் என்ற பேரில் எனது பதிலைச் சிதைத்தால், எனது வலைப்பதிவில் இதை வாசிக்க முடியும்.

                    எனது பின்னூட்டங்களை வேண்டுமென்றே இவர்கள் வெளியிடாமல் மறுப்பதும், வெட்டிக் குதறுவதும், நொண்டிச்சாட்டுகள் சொல்லுவதையும் பற்றி நான் 2014 இலிருந்தே முறைப்பாடு செய்து கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இவர்களுக்கு ஜால்ரா போடவோ அல்லது இவர்களின் உழுத்துப்போன கொள்கைகளிலும் உள்ளதையும் ஊதிக் கெடுக்கும் போராட்டங்களிலும் எனக்கு ஈடுபாடில்லாததாலும், இவர்களின் தளத்துக்கே வந்து இவர்களுக்கு ஜால்ரா போடாமல், எனது கருத்தை தெரிவிப்பதும் இவர்களுக்கு எரிச்சலையூட்டுகின்றது என்று எனக்கு நனறாகவே தெரியும். அதனால் தான் இவர்கள் மற்றவர்களைக் கடிப்பதற்கே என்று வளர்த்து வரும் சிலரை இங்கு இவர்களின் கொள்கைகளுக்கெதிராக வாதாடுகிறவர்கள் மீது ஏவி விடுவார்கள். இதனாலேயே இங்கு விவாதங்களில் பங்குபற்றாமல் நிறுத்திக் கொண்டோர் பலர். இவர்கள் ஏவி விடுகிறவர்களுக்கு கல்லடி விழும் போது தான் மட்டுறுத்தல் என்ற பெயரில் அவர்களை எதிர்ப்பவர்களின் பின்னூட்டங்களைச் சிதைக்கும் வேலை தொடங்கும். கம்யூனிசம், மனிதநேயம், முற்போக்கு எல்லாம் பேசிக் கொண்டு மாபியா போல் நடந்து கொள்கிறார்கள் என்றும் கூறலாம்.

                    நான் பாவித்த “அநாகரீகமான” வார்த்தைகள் என்று குறிப்பிட்ட வார்த்தைகளையும், அதை விட மோசமான வார்த்தைகளையும் மற்றவர்கள் என்மீது பிரயோகிக்கும் போது பேசாமலிருந்து விட்டு, அதையே நான் கூறும்போது ‘மட்டுறுத்தல்’ செய்யும் கோணங்கித்தனம் எனக்கொன்றும் புதியதல்ல. தென்றல் என்கிற வினவின் வாலாயத்தின் பதில்கள் எந்தளவுக்கு மற்றவர்களை அவமானப்படுத்துகின்றதாக இருந்தாலும் அவரது பதில்கள் இவர்களால் மட்டுறுத்தல் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆண்டான், அடியாளை அனுப்புவது போல அவரை அனுப்புவதே இவர்கள் தானே.

                    இப்பொழுது தங்களின் ஒருபக்கச் சார்பான செயல்களை மறைக்க என்னைக் கண்ணியமற்றவனாகக் காட்டுவதற்கு முயல்கின்றார் வினவு நிர்வாகி. என்னுடன் பேசுகிறவர் எந்த தொனியில் பதிலளிக்கிறாரே அதே பாணியில் அதே தொனியில் பதிலளிப்பது தான் என்னுடைய வழக்கம். ஆனால் நான் கூறும்போது மட்டும் அது மட்டுறுத்தல் என்ற பெயரில் வெட்டப்படும்.

                    இவர்களின் ஒருபக்கச் சார்பான கூத்துக்கு நல்ல உதாரணம் எதுவென்றால் இவர்களின் நேற்றைய அதிகப்பிரசங்கித்தனம் தான். சும்மா பொழுது போகவில்லைஎன்று இங்கு வந்தால், இவர்களுக்கு மற்றவர்களை விடத் தாங்கள் பெரிய புத்திசாலிகள் என்ற நினைப்பு போல் தெரிகிறது. உதரணமாக, வியாசனின் ‘இனவாதத்தையும்’, ஜோசப்பின் அசட்டுவாத்த்தையும், மீரான்சாகிப்பின் (அவர் இன்னும் வினவுக்கு ஜால்ரா போடத் தொடங்கவில்லை) மதவாதத்தையும் பற்றிக் குறிப்பிட்டவர், திப்புவின் மதவாதத்தையும், தென்றலின் உளறுவாதத்தையும் சேர்த்துக் குறிப்பிட்டிருந்தால் இவர்களின் ‘எல்லோருக்கும் ஒரே அளவு கோலிலேயே மட்டறுக்கிறோம்” என்ற பொய்யை ஓரளவுக்காவது நம்பக் கூடியதாயிருந்திருக்கும். ஆனால் இவர்களின் தொண்டரடிப்பொடிகள் இருவரையும் பற்றி இவர்கள் வசை பாடவில்லை. இங்கு நானும், மற்றவர்களும் பேசும் விடயங்கள் எல்லாம் இங்கே “பேசி பஞ்சாயத்தே முடிந்து போயிருக்கிறது” என்று நக்கலாகப் பேசி விட்டு, எதற்காக மீண்டும் வந்து கலந்து பேசுமாறு அழைக்க வேண்டும். அதுவே வெறும் போலித்தனம் அல்லவா?

                    உதாரணமாக, 2014ம் ஆண்டில் நான் இங்கு கருத்து தெரிவிக்கத் தொடங்கிய காலத்தில் இன்னுமொரு ‘பகுத்தறிவுவாதியுடன்’ நடைபெற்ற விவாதத்தில் இலங்கைப் பழமொழியாகிய “முட்டையில் மயிர் பிடுங்குவது போல”என்று நான் கூறியதை, (மயிர் இலங்கைத் தமிழில் கெட்ட வார்த்தை அல்ல என நான் விளக்கமளித்த பின்பும்) கெட்ட வார்த்தை பேசிவிட்டதாக பெரிது படுத்தினார்கள்.. ஆனால் தமிழ்நாட்டுத் தமிழில் மயிர் என்றால் கெட்ட வார்த்தை. அதன் பின்னர் நான் அந்தப் பழமொழியையே பாவிப்பதில்லை. ஆனால் தென்றல் நேற்று எனக்களித்த பதிலில் //தமிழ் பற்று மயிரளவுக்கேனும் இதில் காண முடியாது என்பதை கறாராகச் சொல்லிவிடுகிறேன்!// என்று எழுதியிருந்தார். அதை வெட்டாமல் அப்படியே விட்டு விட்டனர். அதற்காக நானும் ‘இவர் பெரிய மயிர் சொல்ல வந்து விட்டார்’ என்று எழுதிவிட்டு, ( இதை நான் சொன்னால் மட்டும் நிச்சயமாக வினவு மட்டுறுத்தனர் வெட்டி விடுவார் என்று குறிப்பிட்டேன்.) அது வெளியிடப்பட மாட்டாது என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் தென்றல் மட்டும் தான் மயிர் என்ற சொல்லை மற்றவர்களுக்கெதிராக வினவில் பாவிக்க முடியும்.

                    அதை வைத்துக் கொண்டு, என்மீதுள்ள காழ்ப்புணர்வினால் என்னுடைய கண்ணியத்தைக் கேள்விக் குறியாக்கின்றனர். ஆனால் உண்மையில் அதை விட மோசமான வார்த்தைகளை இவர்களின் அடியாள் தென்றல் மற்றவர்கள் மீது பாவித்திருக்கிறார். ஆனால் மட்டுறுத்தல், என்ற பெயரில் இவர்களின் ஒருபக்கச் சார்பான செயல்களை நான் எப்பொழுதுமே சுட்டிக் காட்டியே வந்திருக்கிறேன். அவற்றை எல்லாம் மறைத்து இவ்வளவு அப்பட்டமான பொய்யை “எல்லோருக்கும் ஒரே அளவு கோலிலேயே மட்டறுக்கிறோம்” என்று கூறும் இவர்கள் எப்படி மனச்சாட்சியுடன் மற்றவர்களை, தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் கூட விமர்சனம் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

                    உதாரணமாக, இந்தப் பதிவிலேயே திப்பு, ஈழத்தமிழர் எதிர்ப்பு இணையத்தளமாகிய ஒரு முஸ்லீம் இணையத் தளத்திலிருந்து பதிவு செய்த புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரான பிரச்சாரத்தை அப்படியே வெளியிட்ட வினவு, அதற்கு நான் பதிலளித்த போது அப்படியே வெட்டி விட்டார்கள். அதே போலவே FATWAS BAN OUTSIDERS’ ENTRY INTO RAMESWARAM VILLAGES என்ற கட்டுரையில் திப்புவின் மழுப்பல் பதிலுக்கு நான் பதிலளித்த போது அதையும் அப்படியே வெட்டி விட்டார்கள். இவர்களின் அப்பட்டமான ஈழத்தமிழர் எதிர்ப்பைப் பார்த்த பின்னர் தான் நான் கூட இவர்களை ஆதரித்து நிதியளிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

                    அவர்களுக்கு ஆதரவானவர்களால் பதிலளிக்க முடியாதவற்றை, இவர்கள் வெளியிட மாட்டார்கள். இதில் திப்புவை நினைக்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது, ஒரு உண்மையான இறை நம்பிக்கையுள்ள முஸ்லீம் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது. ஆனால் திப்பு என்னடாவென்றால் பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டிக் கொண்டு, கம்யூனிஸ்ட் ஆதரவாளராகவும், முஸ்லீமாகவும் இங்கே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார். நினைத்தாலே பாவமாக இருக்கிறது.

                    தென்றலினதும் திப்புவினதும் கருத்துக்கள் வெறும் உளறலாக, பேசப்படும் விடயத்துக்குச் சம்பந்தப்படாததாக இருந்தாலும் அவை மட்டுறுத்தல் செய்யப்பட மாட்டாது. உண்மையில் அவர்களின் வாதங்கள் கேலிக்கிடமாக இருப்பதால் தான் அதை வெளிப்படுத்த 🙂 போடுகிறேன்.

                    வினவு ஒரு காலிடப்பாவோ, போலிடப்பாவோ எனக்குத் தெரியாது ஆனால் என்னைப் பொறுத்த வரையில், ஐரோப்பாவில் அதை முதலில் கண்டுபிடித்தவர்களே இனிமேல் உதவாதென்று தூக்கிப் பரணையில் போட்டு விட்டஒரு பொருளைத் தூசி தட்டி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு விற்றுப் பிழைக்க முயலும் வியாபாரிகள் தான் வினவு என்பது வினவுபற்றிய எனது கருத்தாகும்.

                    இவ்வளவு நாட்களும் எனது பொழுதைப் போக்கவும், எனது கருத்துக்களைப் பரிமாறவும் களம் அமைத்து தந்தமைக்கு நன்றி, வணக்கம்.

                    • ஏங்க வியாசன், இவ்வளவு பொங்குகிறீர்களே உங்களுக்கு ஆதரவ்ளிக்கிறோம் என்ற போர்வையில் மூன்று நான் கு பேர் சம்மந்தமில்லாமல் உளறி காயப்படுத்துவதையே நோக்கமாகக்கொண்டு கருத்து பதிந்து கொண்டிருக்கிறார்களே அவர்களை நீங்கள் கண்டித்ததுண்டா? உங்களுக்கு பகிரங்க ஆதரவாளர்களாகத்தான் அவர்கள் காட்டிக்கொள்கிறார்கள்.இனியன் என்பவர் என்னோடு கருத்து முரண்பட்டாலும் ஜோசப் என்பவரை க்ண்டித்தார்.இவர்களோடு ஒப்பிட்டால் தென்றல் என்பவர் அப்படி என்ன மோசமாக பேசிவிட்டார் என்பது விளங்கவில்லை.எங்களின் மொழிப்பற்று இனப்பற்று நாட்டுப்பற்று அனைத்தயும் சந்தேகத்திற்க்கு உள்ளாக்கி அதற்க்கு எத்தனையோ உருப்படாத உதாரணங்களை உருவாக்கி விவாதத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததே நீங்கள்தான்.இப்படியெல்லாம் சந்தேகம் மக்களிடம் இருக்கிறதே என்ற கவலையில்தான் நாங்களும் தொடர்ந்து ஒவ்வொன்றிர்க்கும் விளக்கம் கொடுத்து கிட்டத்தட்ட மன்றாடும் தொனியில், “நாங்கள் மதப்பற்றுள்ளவர்களாக இருக்கலாம் ஒரு போதும் மத வெறியாளர்களில்லை”என்பதை தொண்டை கிழிய க்த்திக்கொண்டிருக்கிறோம்.இதில் ரோஷப்படுவதற்க்கு உங்களுக்கு என்ன இருக்கிறது?

                    • வியாசன் அவர்களே,

                      வினவில் இதுவரை நான் கூறிய கருத்துக்கள் பெரும்பாலும் மட்டறுக்கப்படாமல் வெளியிடப்பட்டு வந்துள்ளது. கம்மியுனிசம் குறித்த ஒன்றிரண்டு கருத்துக்கள் கோடிட்டு அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் எனது கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அடுத்தவர் நம்மை காயப்படுத்தும் வகையில் பேசினால் அதற்கு அதே மொழியில் எதிர்வினை ஆற்றினால் நீங்கள் விவாதத்தில் தோற்கிறீர்கள் என்று பொருளாகும். பல விவாதங்களில் என்னை இவ்வாறு இகழ்வாக பேசியவர்களிடம் இதை தான் கூறி வந்துள்ளேன். விவாதத்தில் பங்கு பெரும் இருவரும் குழாயடி சண்டை போல சண்டையிடுவதால் தோற்பது அந்த விவாதமும் தான். சொல்ல வந்த கருத்து திசை மாறி வேறு எங்கோ நம்மை கொண்டு சேர்த்து விடும். அறளை பெயர்ந்தவர்கள், மாடுதின்னி போன்ற வார்த்தைகளை தவிர்த்திடுங்கள் நண்பரே.

                      மீராசாகிப், தென்றல், திப்பு அவர்களுக்கு,

                      எந்த ஒரு விவாதத்திலும் எதிர் கருத்து சொல்பவரை எதிரியாக கருதாமல் பதிவிடுங்கள். மஞ்சபந்து வியாசன் என்பதற்கு என்ன அர்த்தம் தெரியவில்லை, இருந்தாலும், அவரை வியாசன் என்றே குறிப்பிடலாமே, எதற்கு அடைமொழி வைத்து கிண்டல் கேலி எல்லாம்? வியாசன் உங்களை தனிப்பட்ட முறையில் புண்படும் வகையில் பேசினால் அவ்வாறு பேசுவது தவறு என்று அவருக்கு சுட்டிக்காட்டி விட்டு விவாதத்தை தொடருங்கள். அவரோடு மல்லுக்கட்டி மேலும் குழாயடி சண்டையாக மாற்ற வேண்டியதில்லையே.

                      ஆக்கபூர்வமாக விவாதிப்போம்.

                    • வியாசன் தான் புலிகள்-முசுலிம்கள் பகை குறித்து இணைய தள இணைப்புகளை கொடுத்தால் வினவு வெளியிட மறுக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.அது உண்மையானால் அவரது பின்னூட்டம் ஒன்றில் அது பற்றி நிறைய இணைப்புகள் கொடுத்துள்ளார்.அது வெளியாகியுள்ளதே எப்படி.அதற்கான சுட்டி .

                      https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-132662

                      கண்டபடி கழிஞ்சு வைக்க வேண்டியது.அதை வெளியிடாவிட்டால் ஒரே கூப்பாடு போட வேண்டியது.என்ன விவாத முறை இது.

                      இதுக்கு நாலு வெள்ளை வேட்டி பெரிய மனுசங்க பஞ்சாயத்து வேற.

                      போறபோக்குல கூட அதுக்கு திமிரை பாரு.இவ்வளவு நாளும் பொழுதைப் போக்க உதவுனதுக்கு நன்றியாம்.அவனவன் வேலை வெட்டிய உட்டுட்டு சமூக நல்லிணக்கம் குறித்த கவலையில் விவாதிக்கிறான்.இதுக்கு பொழுது போக்காம்.இதெல்லாம் வெள்ளை வேட்டி பெரிய மனுசங்களுக்கு கண்ணுல ”படாது”.முசுலிமை திட்டுபவன் என்ன பேசுனாலும் இவர்களுக்கு பெரிதில்லை.

                    • வியாசன் விவாதத்தை விட்டு விலகி விட்டார் என்பதற்காக நான் விவாதத்தை நிறுத்தப் போவதில்லை.எதிரணி இல்லாத களத்தில் கோல் போட முயல்வது நாகரீகமில்லை என்றாலும் அவரது அவதூறுகள், குதர்க்கங்கள் ,சிலவற்றுக்கு பதில் அளிக்க வேண்டியிருப்பதால் தொடர வேண்டியிருக்கிறது.விருப்பப்பட்டால் வியாசனும் விவாதத்தில் கலந்து கொள்ளலாம்.இன்னொன்று விவாத நாகரீகத்திற்கும் வியாசனுக்கும் எந்த தொடர்புமில்லை.ஒரு சமயத்தில் அவரது ”நண்பனை”இழுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால் மேற்கோள் மட்டும் காட்டி விட்டு அது பற்றி புதிதாக விவாதம் எதையும் எழுதாமல் நான் தவிர்த்தபோது கூட என் மீது பாய்ந்து பிராண்டியவர்தான் அவர்.நான்தான் நாகரீகம் கருதி அந்த விவாதத்தை தொடரவில்லை.

                    • \\தென்றலினதும் திப்புவினதும் கருத்துக்கள் வெறும் உளறலாக, பேசப்படும் விடயத்துக்குச் சம்பந்தப்படாததாக இருந்தாலும்//

                      பேசப்படும் பொருளுக்கு தொடர்பில்லாமல் வெறும் உளறலாக எதையும் நான் எழுதியிருப்பதாக எடுத்துக்காட்டி விட்டு இந்த புலம்பலை புலம்ப வேண்டும்.

                      \\இவர்களின் அப்பட்டமான ஈழத்தமிழர் எதிர்ப்பைப் பார்த்த பின்னர் தான் நான் கூட இவர்களை ஆதரித்து நிதியளிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.//

                      \\ சும்மா பொழுது போகவில்லைஎன்று இங்கு வந்தால்//

                      காசு திமிர் கொப்பளிக்கும் இந்த தடித்தனத்திற்கு கற்றது கையளவு என்ன சொல்கிறார்.இதை நையாண்டி இல்லாமல் எப்படி எதிர்கொள்வது என அவர் சொல்லித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

          • வியாசன் அவர்களே,

            மீண்டும் தொடருங்கள். நேரமின்மையால் அதிகம் விவாதிக்க முடியவில்லை.

            • திப்பு மற்றும் தென்றல் அவர்களுக்கு,

              வியாசன் அவர்களுடன் தாங்கள் விவாதிக்கும்போது அவரை கேலிப்பொருளாக கருதும் வகையில் பதிவிடுகிறீர்கள். அதை தவிர்க்கலாம். கருத்து ரீதியாக அவரிடம் விவாதியுங்கள் நண்பர்களே. அவரது கருத்து சரியில்லை என்று நீங்கள் கருதினால் அது ஏன் சரியில்லை என்று தங்கள் தரப்பு வாதங்களை 1, 2, 3 என்று வரிசைப்படுத்தலாம். பழைய விவாதங்களின் பழிவாங்கல்கள் இப்போது வேண்டாம்.

              வியாசன் அவர்களே,
              கருத்து ரீதியாக ஒருவர் உங்களை எதிர்ப்பதால் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாட்டில் எல்லோரும் எல்லாம் அறிந்தவர்கள் அல்ல. வினவில் பதிவிடுவோர் அனைத்தும் சரி என்றோ அனைத்தும் தவறு என்றோ கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. சில கருத்துக்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்கும், சிலவை நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கும். அதற்காக பதிவிடுவதையே தவிர்க்காதீர்கள். தமிழர்கள் யார் என்ற கருத்தில் தங்கள் கருத்திற்கு எதிர் நிலையில் நான் இருந்தாலும், தமிழார்வம் என்ற நிலையில் நான் உங்கள் ஆதரவாளனாக இருப்பதில்லையா.வாருங்கள், விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

              வினவு குழுவிற்கு,

              இடிப்பாரிலா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடுவான்.
              வியாசன் அவர்களின் கருத்துக்கு வினவு குழு, தென்றல், திப்பு ஆகியோர் பதிவிடும்போது அவர்களின் பதிவுகளில் ஒரு எள்ளி நகையாடும் இழை ஓடுவதை கவனிக்கிறேன். இது தந்தி தொலைக்காட்சியில் பாஜக, அதிமுக அல்லாத கட்சி தலைவர்களிடம் விவாதிக்கும்போது மட்டும் பாண்டே அவர்கள் ஒரு வித நக்கல், நையாண்டி புன்னகையோடு, ஒரு வித எள்ளல் உடல்மொழியோடு பேசுவார். அதே போன்று தான் வியாசனுடன் நடக்கும் விவாதங்களும் வினவில் இருப்பதாக தெரிகிறது. எனக்கும் வியாசன் அவர்களுக்கும் தமிழர் யார் என்ற கருத்தினில் சில வேறுபாடுகள் உண்டு. அதற்காக அவருக்குரிய மரியாதையை நான் தருவதை தவறுவதில்லை. அதே போல அனைவரும் ஆக்கபூர்வமாக விவாதித்தால் நலமே.

              • பின்னூட்டங்கள், எல்லோருக்கும் ஒரே அளவு கோலிலேயே மட்டறுக்கிறோம். ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல மற்றவர்கள் திரு.வியாசன் மேல் அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை. பதிலுக்கு வியாசன், அவர்கள் மீது கருத்துரைக்கும் போது பொருள் இல்லாத தருணங்களில் ஏராளமாய் வசைகளை பயன்படுத்துகிறார். ஆனால் அவருடன் கருத்து வேறுபட்டு எழுதுவதையே நீங்கள் பாண்டேவுடன் ஒப்பிட்டு அவதூறு கற்பிக்கிறீர்கள்.வியாசன் கருத்துக்களை விவாதிக்குமளவு ஆழமில்லை என்று வினவு சொல்வது ஒரு கருத்து வெறுபாடுதான்.அநாகரீகமில்லை. பதிலுக்கு வினவை அவர் ஒன்றுமே தெரியாத காலி டப்பா என்று கூட சொல்லலாம். ஆனால் வகாபிய கைக்கூலி, வளைகுடா கூலி, கூலிக்கு மாரடிப்பது என்று எழுதுவது வசையே அன்றி கருத்து வேறுபாடு அல்ல. இவ்வளவிற்கும் அவர் வினவை அப்படி கருத்துரைத்து போட்ட பலவற்றை வெளியிட்டிருக்கிறோம். மற்றபடி இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி தாங்கள் எழுதுவது சரியல்ல, ஒருவேளை உங்களுக்கு ஏதும் கருத்து வேறுபாடு இருந்தால் தாராளமாக விவாதிக்கலாம். நன்றி

                • வினவு குழுவுக்கு,

                  நான் என்னுடைய பின்னூட்டத்தில் அவரை எள்ளி நகையாடும் இழை ஓடுவதாக தான் கூறினேன். அநாகரீகமான வார்த்தைகள் பற்றி நான் கூறவில்லை. தாங்கள் அதற்கு அளித்துள்ள பதிலில், //வியாசன் மேல் அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை// என்று கூறுகிறீர்கள்.
                  இந்த கட்டுரையின் பின்னூட்டங்களிலேயே அவரை “அது, இது, கழிந்து வைப்பது” என்று கூறப்பட்டுள்ளது. இது போன்ற பதிவுகளால் வியாசன், ஜோசப் போன்றவர்கள் கோபப்பட்டு அதே போன்ற தொனியில் பதில் கருத்துக்களை கூறி விவாதத்தின் திசை வேறு பக்கம் சென்று விடும்.

                  தனிமனித தாக்குதல் என்ற முனையில் விவாதம் சென்றால் பின் விவாதத்தின் முக்கிய கருத்துக்களுக்கு பின்னடைவு ஏற்படுவதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

              • வியாசனுக்காக வரிந்து கட்டி பரிந்து பேசுபவர்கள் கவனத்திற்கு,

                இந்த பதிவின் விவாதத்திலேயே வினவு மட்டுறுத்தாமல் விட்ட வியாசனின் வசவுகள்/

                அறளை பெயர்ந்தவர்கள்.[அதாவது லூசுங்க]

                தமிழில் அறிவு குறைந்தவர்கள்.விளக்க குறைவானவர்கள்.

                மாடு தின்னிகள்.

                கருப்பு கோணிப்பையால் தன்னை மூடியவர்கள்.[புர்கா அணிந்தவர்கள் என்பதை இவ்வளவு நாகரீகமாக சொல்கிறார்]

                வாகாபிய தீவிரவாதிகள்.

                முக்கால் புத்தி கொண்டவர்கள்.குள்ள நரிகள்,

                இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.மட்டுறுத்தாத வசவுகளே இப்படியென்றால் மட்டுறுத்தியவை எந்த தரத்தில் இருக்கும் என்பது வியாசனுக்கும்,வினவுக்குமே வெளிச்சம்.

                அப்புறம் கேலி பேசுரோமாம்.கோவப்படுறீங்க.அது வியாசனின் அடாவடிகளை கிண்டல் செய்கிறோம்.காட்டாக.”அது அப்படித்தான்,நீங்க சொல்கிற மாதிரி கிடையாது,எனக்கு தெரியும்”போன்ற அவரது தீர்ப்புகளை வைத்து நாட்டாமை என்கிறோம்.நீ சொல்ற மாதிரி இல்ல,எனக்கு தெரியும் என்ற தட்டையான குருட்டு வாதத்திற்கு என்ன எதிர்வாதம் வைக்க முடியும் கிண்டலை தவிர.அதே சமயம் நாங்கள் எடுத்து வைக்கும் நியாயமான வாதங்களை கூட அவர் கேலி பேசி புறந்தள்ளுவது உங்கள் கண்ணில் படாது.ஏனென்றால் உங்கள் நடுநிலை கண்ணாடியில் அது தெரியாது.

                காட்டாக,\\\திப்பு இன்னும், கொஞ்சமும் அலுப்புத் தட்டாமல், மச்சான் என்கிறோம் மாமா என்கிறோம், நெய்ச்சோற்றுக்குள் இப்ப கூட ஆணம் விட்டுச் சாப்பிடுகிறோம் என்று சம்பந்தமில்லாமல் புலம்புகிறார். சாதாரணமாக, திப்புவுடன் வினவில் நடைபெறும் விவாதங்களில் அவர் உளறத் தொடங்கியவுடனேயே, ‘Whatever you say’ என்று நிறுத்திக் கொள்ளும் நான், இங்கு மட்டும் தொடர்வதற்குக் காரணமே திப்புக் காக்காவின் வஹாபிய முகத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான்.//

                இதில் வாதத்துக்கு ஏதாவது மறுப்பு இருக்கா.நேர்மையான ஒரு வாதத்தை இப்படி நக்கலாக எதிர்கொள்வதை நீங்கள் கண்டுக்காதது ஏன்.ஒருவேளை இதுதான் நடுநிலையோ.

                நான் பயன்படுத்திய சொற்களையெல்லாம் வியாசனும் பயன்படுத்துகிறார்.அப்புறம் எப்படி வினவு ஓரவஞ்சனையாக மட்டுறுத்துகிறது என சொல்ல முடியும்.

                • சரி, இனி வியாசன், ஜோசப், திப்பு, தென்றல், நான், மற்றும் இந்த விவாதத்தில் பங்கு பெரும் அனைவரும் தனிமனித தாக்குதல்களை தவிர்த்து நேரடி கருத்துக்களை மட்டும் பயன்படுத்தி பார்ப்போமே.

                  சென்னை வெள்ளத்தில் இசுலாமியர் உட்பட அனைத்து சமூகத்தினரும் மக்களுக்கு உதவினர் என்பதே என் கருத்து. ஒருவர் இசுலாமிய சங்கத்தின் (TMMK) உடையை அடையாளமாக கொண்டு உதவினாலும், இந்து, கிருத்துவ அடையாளத்தோடு உதவினாலும், உதவியது யார் எவர் என்ற ஆராய்ச்சி தேவையில்லை. அவர்களது உதவும் மனப்பான்மையை, மனிதத்தை போற்றுவோம்.

                  என்ன உடை உடுத்தி, என்ன அடையாளத்தை கொண்டு உதவினார்கள் என்பது தேவையில்லை. அவர்கள் உதவுகிறார்களா, அது போதும்.

            • திப்பு அவர்களே,

              விவாதத்தின் முடிவு ஒரு தெளிவான கருத்தாக, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு வழியாக இருக்கும் என்றால் அதனை தொடரலாம்.

              விவாதத்தில் தனிமனித காழ்ப்புணர்ச்சி (எதிராளி தூண்டியதாக இருந்தாலும்) அதன் முடிவில் தோற்பது விவாதிப்பவர்கள் மட்டும் அல்ல. அந்த விவாதமே தேவையில்லாதது என்ற வகையில் தோல்வியில் முடிகிறது.

              நீங்கள் வியாசனை பார்த்து காசு திமிர், தடித்தனம் என்று கூறுவதால் விவாதத்தில் தாங்களும் சரி, வியாசனும் சரி வெற்றி பெற போவதில்லை. நீங்கள் தவறாக பேசினீர்கள் என்று அவரும், அவர் தவறாக பேசினார் என்று நீங்களும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசி விவாதத்தை தோல்வியடைய செய்து விடுவீர்கள். ஒரு முறை, நீங்களோ, அல்லது வியாசனோ “நீங்கள் கூறிய வார்த்தை பிரவாகம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. என் கருத்து இது தான்”, என்று தங்களது கருத்தினை மட்டும் ஒருநிலை படுத்தி பேசி பழகி பாருங்கள்.
              தொடர்ந்து கருத்து ரீதியில் பதில் அளித்தால் எதிராளியும் உங்களை தனிப்பட்ட வகையில் தாக்குவதை தவிர்க்க முனைவார் அல்லவா?

              வியாசன் தவறாக பேசி இருந்தால் தாங்களும் அதே தவறை செய்வதால் அவரது செயலோ, தங்களது செயலோ நியாயம் என்று ஆகி விடாது.

          • வியாசனின் அணுகுமுறை சிறுபிள்ளத்தனமாக இருக்கிறது.விவாதத்தை எப்போதுமே தனிநபர்கள் சார்ந்ததாகவும் ,தன்னைப்பற்றி பேசுவதாகவுமே கொண்டு போகிறார்.அதனால் எதெற்கெடுத்தாலும் கோபித்துக்கொண்டு ”போ.இனிமேல் உம்பேச்சு கா” என்கிறார்.இதை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

            • திப்புவின் பின்னூட்டம் 102.2.1.1.1.1.1.1.1.3 க்கு பதில் இங்கே:

              கழிந்து வைப்பது, அது, இது என்று சக மனிதர்களை குறிப்பிடுவதை தவிர்க்கவும் நண்பரே.
              அவர் அப்படி பேசினார், அதனால் நானும் அதே தொனியில் பேசினேன் என்று ஆரம்பித்தால் பின் வினவு தளம் நாறி விடும்.

              கருத்து சார்ந்த விவாதங்களை விட்டு தனி மனித எதிர்ப்பு சார்ந்ததாக விவாதம் பயணிப்பது நல்லதற்கல்ல.

              மேற்கண்ட பதில், வியாசன், திப்பு இருவருக்கும் பொருந்தும்.

              • அது,இது என்று எழுதியது தவறுதான் .வருந்துகிறேன்.

                கழிஞ்சு வைச்சது,நாறடிக்கிறது,வாந்தி எடுக்கிறது என்பதல்லாம் இணையத்தில் ,மெய்யுலகில் பயன்பாட்டில் உள்ள சொற்கள்தான்.அதில் தவறு ஏதும் இல்லை.அந்த தரத்தில் வியாசனின் பொன்மொழிகள் இருக்கிறதா இல்லையா .சொல்லுங்கள்.இல்லையென்று நினைத்தாலும் சொல்லுங்கள்.ஆதாரங்களை காட்டுகிறேன்.அப்புறம் மூக்கை பொத்திக்கிட்டு நீங்களே ஓட வேண்டியிருக்கும்.

                • இனிய உளவாக இன்னாத கூறல்
                  கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

                  தாங்கள் சொல்ல வரும் கருத்தினை நல்ல வார்த்தைகளின் மூலமும் சொல்லலாமே.
                  யாருக்கு என்ன நட்டம் வந்து விட போகிறது?

                  முயன்று தான் பாருங்களேன்.

        • வினவு நான் மதப்பற்றாளன் என்பதை எங்கேயும் மறைக்கவில்லை.நான் எந்த புதிய கருத்தையும் வைப்பதாகவும் நினைக்கவில்லை.என் மதப்பற்றோடவே எல்லோரோடும் இணக்கமாக வாழ முடியாதா என்ற கேள்வியைத்தான் தொடர்ந்து எழுப்பிவருகிறேன்.என் அறிவு முதிர்ச்சி பெற்று கம்னியுசம் சிறந்ததென்று பட்டால் மாறிக்கொள்கிறேன்.

        • திப்பு சொல்லும் இசுலாமிய நெறிமுறைகள மிகவும் சிறந்தவை உலகத்தில் முதலாம் இடத்தில் இருக்கவேண்டியவை என்பதை வினவு தளம் ஏற்றுக்கொள்ளுதா எனக்கென்னவோ அது ஆறாம் நூற்றாண்டு மொக்கை கொள்கை என்றுதான் தோன்ற்கிறது குரானோ முகமதுவோ இல்லைனா இசுலாமே இல்லை என்றாகிவிடும் 2 லச்ச ரூபாய் வரை கட்டி அரேபியா போயி கொத்துக்கொத்தா 700 பேரு செத்தானே போன வருசம் அதை பத்தி வினவு ஏன் எழுதவே இல்லை எனென்றால் இசுலாமியர்களை ஆர் எஸ் எஸ் காரன் கொல்லக்கூடது அரேபியா கொல்லலாம் அப்பிடித்தானா அய்யா உங்களைப்போல வர்க்கம் ஏகாதிபத்தியம் சோஸ்லிஸம் பற்றி அறிந்துள்ள அறிவாளி நான் இல்லை என்றாலும் அசட்டுத்தனாமக நான் கேப்க்கும் கேள்விக்கு பதிலு சொல்லுங்க இத்து போக விட்டுடாதிக…

        • இசுலாமிய மதத்தில் தலையிட்டால் ”நீயும் காவி ” என்று சொல்லவில்லை.முசுலிம்கள் தங்கள் மத அடையாளங்களை குறைத்துக்கொண்டால்தான் இந்துக்கள் உங்களுடன் இணக்கமாக இருப்பார்கள்.இல்லையேல் அவர்கள் RSS சாகாவுக்கு போய் விடுவார்கள் என்று ஒருவர் பேசியபோது அப்படி சொல்லியிருக்கிறேன்.நீ மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என காவிகள் பேசினால் அது அடாவடி என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.ஆனால் நான் சொல்கிற மாதிரி நீ இருக்க வேண்டும் ,உனது மத போதனைகள் படி நடப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடும் அடாவடியை நீங்கள் ஏற்கிறீர்களா.

          முசுலீம்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதும் ஆணவத்தின் பாற்பட்டதல்ல.அது தவிர்த்து வேறு வழியில்லை என்ற எதார்த்தத்தை சொல்கிறன்.அழுதாலும் புள்ள அவதான் பெற வேண்டும் என்பது போல கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட மிருகத்தின் முன் நிற்கும் ரோமானிய அடிமையின் நிலையில்தான் இந்திய முசுலிம்கள் இருக்கிறார்கள்.முசுலீம்கள் பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.இந்த கையறு நிலையை சொன்னால் தவறா.

          \\\புரட்சிகர அமைப்புக்கள் மட்டுமே அனைத்து மத, சாதி உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாவர்.//

          மிக்க மகிழ்ச்சி.முசுலிம்கள் என்றில்லை.அனைத்து பிரிவு மக்களின் பாதுகாப்பையும் புரட்சிகர அமைப்புக்கள் உறுதி செய்யுமேயானால் அதை விட மகிழ்வதற்கு வேறு ஏதுமில்லை.

        • வினவு தளத்துக்கு ஒரு வேண்டுகோள் மார்க்ஸியம் பத்தி நீங்க சொல்லுக்கிட்டே இருக்கீக நானும் எங்க ஊரு லைப்ரரில போயி மூலதனம் என்ற புத்தகத்தின் முதல் தொகுதியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் பொறியியல் படிக்கும் போது எத்தனையோ சிக்கலான கணித முறைகளை கற்று தேர்ந்த எனக்கு மூலதனத்தி முதல் தொகுதியே வள வள என்று எழுதப்பட்டு இருப்பதாக தோன்றியது எனது நண்பர் கூட மூலதனத்த படிக்கிறேன்னு மூளை குழம்பி மென்டல் ஆயிடாதே என்று கேலி செய்தார் ராண்டம் புராஸஸ் தியரி படிக்கும் போதே மென்டல ஆகத நான் இது என்ன சுக்கு புரிஞ்சுடும் அப்பிடினு நினைச்சுட்டு படிக்க முயற்சி செய்தே முடியல முதல் தொகுதிய கண்ண கட்டுதே அதனால் எனது முயற்ச்சி படு தோல்வியில் முடிந்தது அதனால தொடர் கட்டுரைகளாக எழுதி மார்க்ஸியத்தையும் மூலதனத்தையும் விளக்கும் படி வேண்டுகிறேன்

  94. இசுலாம் என்ற அரபு பாஸிஸ மதத்தை விம்ர்சித்தால் நாங்கள் எப்பிடி மத வெறியர் ஆகி விடுவோம் என்று தெரியவில்லை இசுலாம் என்ற அரபு பாஸிஸ சித்தாந்ததின் உண்மைகளை வெளியிடாமல் வெட்டி ஒட்டும் வேலை செய்து இசுலாமுக்கு செம்பு தூக்கும் வினவு தளம்தான் மத வெறி தளமாக எனக்கு படுகிறது சரி இசுலாம் மனித குலத்துக்கு விரோதமாக பல போதனைகளை சொல்லுகிறது குரானிலும் கதிஸ் புத்தகங்களிம் ஆதாரம் இருக்கிறது என்னால் குடுக்க முடியும் இந்த மனித குல விரோத கொள்கைதால் உலகில் முதலாவதான் கொள்கை என்று மத வெறி மொக்கை போடும் ஒருவரை இவர் ஒரு பதிவில் கம்மூனிஸ்டா மாத்த போறாரம் மாறுனா சரிதான் அவரு கம்மூனிஸ்டா மாறலனா நீங்க இசுலாத்துக்கு மாறி கட்டையோட ஆர் எஸ் எஸ் காரன் கூட சண்டைக்கு போங்க பாஸ் அதான் சுலபமான வழி

    • அப்புறம் ஒரு முக்கியமான விசயம் தென்றல் அண்ணன் திப்பு நாத்திகத்தின் தோலில் நின்று கம்மூனிஸ்டா போராட முடிவு எடுத்து அதை வெளிப்படையா அறிவிக்கும் பச்சத்தில் ஜனசா தொழுகைக்கு வருவாங்களா கபர்ஸ்தான்ல இடம் குடுப்பாகலானு ஜமாத்துல கேட்டுட்டு கம்மூனிஸ்டா ஆக சொல்லுங்க பாஸ் தென்றல நம்பி கம்மூனிஸ்டு ஆகிட்டு கஸ்டப்படமா இருக்கனும் இல்லயா அதான் சொல்லுறேன்…

  95. ## சிர்க் புர்க் என்று சொல்லிக்கொண்டு அரேபிய அடிமைக்கூட்டம் வருகின்றது…##

    அதுக்கு ஜால்ரா தட்டுகிறது ஒரு நாத்திகவாதத்தை அடிப்படையாக கொண்ட போலி வர்க்க் போராளி.
    இவர்களது வர்க்கம் புரட்சி எவ்வளவு போலியானதென்பதை இந்த வர்க்கபோலியின் பின்னூட்டங்களே சாட்சி.

  96. வியாசனின் அரபுப் புலமையும் தமிழ் பற்றும்

    மஞ்சப் பந்துவியாசன் அவர்கள் சிரத்தையோடு அரபுமயமாக்கல் குறித்து அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பார்த்தீர்களானால் அறிவியல் உலகம் 2015ஐ ஒளியின் வருடமாக கொண்டாடியிருக்கிறது. இதற்கு காரணம் ஒளியியலின் முதல் புத்தகம் ஹிதாப்-அல்-மனாசிர் எனப்படும் Treatise of Optics எழுதி ஆயிரம் வருடங்கள் ஆகப்போகிறது. இதை எழுதியவர் விஞ்ஞானி இபின்-அல்-ஹயாத்தம் ஆவார். உலகின் அனைத்து பல்கலைக்கழகங்களும் இதைக்கொண்டாடி இருப்பதைப் பார்த்தால் அரபுமயம் உலகிற்கே ஒளிபாய்ச்சி இருக்கிறது. ஆனால் மஞ்சப் பந்து வியாசன் தன்னுள்ளே ஒளிந்திருக்கும் அரபுமயத்தை மறைத்துவிட்டு மாட்டுசாணியைப் பூசிக்கொண்டு சைவன் என்று வேடம் போடுகிறார்!

    எப்படி ரெபேக்கா மேரி இசை ஹராம் என்று சொல்லிய முட்டாள் முல்லாவை நமக்கு அம்பலப்படுத்தி காருக்கு பதிலாக ஒட்டகத்தில் போ என்று சொன்னாரோ, அதோ போல் வியாசன் அவர்கள் வீட்டிலிருப்பவர்களது கண்ணாடியை (Contribution from Geometrical Optics ) தூக்கி எறிந்துவிட்டு அரபுமயமாக்கல் குறித்து அடித்துவிடுமாறு கோருகிறேன். அதுதான் அறிவு நாணயமாகும்.

    மேலும் அரபு மொழி வளமற்ற ஒன்று என்பதை வியாசன் அறிவித்திருப்பதை சபை முன் நிரூபிக்குமாறு கோருகிறேன். ஏனெனில் அரபு மொழியை மதத்தோடு தொடர்பு படுத்தும் காலிகள் முட்டாள் மட்டுமல்ல பாசிஸ்டுகளும் கூட. ‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று சொல்லும் தொல்காப்பிய இலக்கண மரபு, நிலா என்பதற்கும் மட்டும் ஆயிரம் சொற்களை வைத்திருக்கும் அரபு மொழியை பாராட்டத்தான் செய்யுமேயன்றி தூற்றாது!

    இவ்விதத்தில் தமிழர்களின் மரபு என்பதைத்தாண்டி வியாசன் அடித்துவிடக்காரணம் அவரது இந்துத்துவ முகமூடிதான் காரணம் ஆகும். தமிழ் பற்று மயிரளவுக்கேனும் இதில் காண முடியாது என்பதை கறாராகச் சொல்லிவிடுகிறேன்!

    கூடவே தமிழையே கொச்சைப்படுத்தும் விதத்தில் ராஜராஜ சோழன் தமிழையும் சமஸ்கிருதத்தையும் தன் இரு கண்களாக போற்றி வளர்த்தான் என்று மொழி இனத்துரோகிக்கு சான்றிதழை வியாசன் அவர்கள் வழங்கியிருக்கிறார். இவ்விதம் செத்த மொழியான சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு தமிழைச் சிதைக்கும் கும்பலுக்கு அட்டிகை வாசித்து தரகு வேலை பார்த்திருக்கும் வியாசனின் இந்துத்துவ முகமூடியைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

    மேலும் இந்த விவாதத்தில் இப்பொழுதுதான் தமிழ்மொழிக்கு பங்காற்றியிருக்கிற உமறுப்புலவரையெல்லாம் மேற்கோள் காட்டி அரபுமயமாக்கலை விவாதிக்கிறாராம் வியாசன். இது முற்றிலும் பாசாங்கு என்பதற்கு ஒரு சான்று ஒன்று தரவிரும்புகிறேன்.

    வியாசனின் தாயார் அவர்கள் நபிகள் நாயகத்தை போற்றும் காவியத்தை வாசித்ததையும் அவர் மீது கொண்ட மதிப்பை நம்மிடம் வேறு ஒரு தருணத்தில் பகிர்ந்திருக்கிறார். அதாவது தான் இசுலாமியர்களுக்கு எதிரியல்ல என்பதற்கு தப்பிக்க வேறுவழியின்றி தன் தாயாரின் அனுபவத்தையும் இங்கு பகிர்ந்திருக்கிறார். ஆனால் ஜோசப் போன்றவர்கள் நபி ஒரு பிடோபைல் என்று தன்னால் முடிந்த அளவு கதறிக்கொண்டு பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் பொழுது நபியைப் பற்றிய தன் வீட்டு மதிப்பை திரையிட்டு மூடவே செய்திருக்கிறார். எதிரில் ஒருவன் வேட்டையாடப்படும் பொழுது எப்படி அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டு, உமறுப்புலவர், நபி என்று எப்படி வியாசன் சிங்கியக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். இதில் எது உண்மை என்பதை ஜோசப்பு போன்றவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வியாசன் போன்ற மதவெறியர்கள் மதவெறியை எப்படி கட்டவிழ்த்துவிடுகிறார்கள் என்பதற்கு இது ஓர் சான்று.

    கைவசம் இன்னும் இரண்டு இருக்கிறது. தேவைப்படும் பொழுது பதிவிடுகிறேன்.

    • தென்றல் இப்படி ஏதாவது உளறுவார் என்று எனக்குத் தெரியும். தென்றல் மட்டுமன்றி ஏனைய பகுத்தறிவுவாதிகளும், பெரியாரிஸ்டுகளும் சமக்கிருதத்தை தாக்கும் போது, அவர்கள் எல்லோருமே சமக்கிருத்தைக் கரைத்துக் குடித்து விட்டுத் தான் பேசினார்களா/பேசுகிறார்களா, என்பதைத் தென்றல் தான் விளக்க வேண்டும். என்னுடைய கருத்தென்னவென்றால் தமிழில் வணக்கத்துக்குரிய என்ற சொல்லின் பாவனைக்கும், அரபு மொழிப்போதனைகளின் தமிழ் மொழிப்பெயர்ப்பினால் வஹாபியிசம் போதிக்கப்படும் வஹாபிகளுக்கும் வணக்கம் என்ற தமிழ்ச் சொல்லில் ஏறபட்டுள்ள குழப்பத்துக்குக் காரணம், அரபுமொழியின் வளமின்மை காரணமாக இருக்கலாம் என்பது தான்.

      எனக்கு அரபு மொழி தெரியாது, அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையோ அல்லது ஆர்வமோ எனக்குக் கிடையாது. என்னைப் பொறுத்த வரையில் தமிழ் வளமான மொழி, அதனால் தான் எங்களுக்கு இப்படியான, சொற்குழப்பங்கள் ஏற்படுவதில்லை, ஆனால் வஹாபியிசத்தின் தாக்கத்தால் முஸ்லீம்களுக்கு அந்தக் குழப்பம் ஏற்படுகிறது போல் தெரிகிறது, அரபு மொழி வளமானது என்றால் அதை நன்கு கரைத்துக் குடித்த தென்றல் தான் அதை நிரூபிக்க வேண்டும், அரபு மொழி வளமானது என்பதற்கு இவர் கூறும் ஆதாரம், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அரபு மொழியில் ஒளியியலில் புத்தகம் வந்ததாம், ஆனால் அதற்கு முன்பே தமிழில் பல அறிவியல் நூல்கள் உண்டு. ஆகவே அரபு மொழியுடன் ஒப்பிடும் போது தமிழ் மட்டுமன்றி, சமக்கிருதம் கூட வளமானது தான். ஆகவே அரபை விட தமிழ் வளமானது என்ற எனது கருத்தில் தவறேதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

      பிரச்சனை என்னவென்றால் தென்றலுக்கு அறளை பெயர்ந்து விட்டது. எனது தாயாரின் பள்ளிக்கூடக்காலத்தில் இலங்கைப் பாடத் திட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் பாடமாக இருந்தன. ஆகவே அவர் நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழின் நயத்தைக் குறிப்பிட்டார் என்று நான் கூறினேன். என்னுடைய தாயார் மட்டுமன்றி நானும் கூட அசைக்க முடியாத சைவம். ஆகவே நபிகள்நாயகத்தின் மீதுள்ள மதிப்போ அல்லது ஏசுநாதரின் மீதுள்ள மதிப்போ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது, நபிகள் நாயகத்தின் ‘சில’ கருத்துக்கள் மீது எனக்குக் கூடத் தான் பிடிக்கும், எனக்குக் கூடத் தான் அவர் மீது மதிப்புண்டு.

      அது மட்டுமன்றி, இலங்கை முஸ்லீம்கள் முன்பு வஹாபியத்துக்குட்படாத காலத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்பு, வருடமொருமுறை ஊர் நடுவில் பந்தல் போட்டு, பொங்கலிட்டு விடிய, விடிய உமறுப்புலவரின் நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் பாடுவார்களாம். இலங்கையில் முஸ்லீம் கிராமங்களில் ‘பாட்டு’ என்று அந்த விழாவைக் குறிப்பிடுவார்களாம். வஹாபியிசத்தின் வருகை அந்த தமிழுண்ர்வை அவர்களிடமிருந்து அகற்றி விட்டது, அதைத் தான் நான் குறிப்பிட்டேன். தென்றலை இனிமேலாவது ஒழுங்காகக் குறிப்பெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

      நான் இஸ்லாமியர்களுக்கு எதிரியல்ல, என்பதை தென்றல் போன்ற ஈழத்தமிழர்களின் எதிரிகளுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. என்னையறிந்த இஸ்லாமியர்களுக்கு அது தெரியும். வினவிலுள்ள அல்லது இணைய வஹாபிகள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கவலை எனக்குக் கிடையாது. _______

    • கம்யூனிச ________ தென்றலின் கருத்தின்படி பார்த்தால், உதாரணமாக, சீனர்கள் தான் முதலில் பேப்பரைக் கண்டு பிடித்தவர்கள், அந்தப் பேப்பரில் நாங்கள் எழுதுகிறோம் அதனால் சீனர் போலவே நாங்கள் நடந்து கொள்ள வேண்டும், சீனர்கள் நாயைத் தின்கிறார்கள், அதனால் தமிழர்களும் நாயைத் தின்ன வேண்டுமென்று வாதாடுவார் போலிருக்கிறது. அது போன்றது தான் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அரபு ஒருவர் ஒளியியல் பற்றிப் புத்தகம் எழுதியதால் நாங்கள் எல்லோரும் அரபுமயமாக்கலை அப்படியே ஏற்றுக் கொண்டு கறுப்புக்கோணிப்பையால் தலையை மூடிக் கொள்ள வேண்டுமென்கிற அவரது வாதமும்.

      //மேலும் அரபு மொழி வளமற்ற ஒன்று என்பதை வியாசன் அறிவித்திருப்பதை சபை முன் நிரூபிக்குமாறு கோருகிறேன்.///
      தென்றல் மட்டுமன்றி பல பகுத்தறிவுவாதிகளும், பெரியாரிஸ்டுகளும் கூடத் தான் சமஸ்கிருத்தை விமர்சனம் செய்கிறார்கள். அப்படியானால் தென்றலுக்கு சமஸ்கிருதத்தில் புலமை உண்டு அவர் சமஸ்கிருதத்தைக் கரைத்து குடித்தவர் என்று கருத்தாகுமா. ஏன் எனக்கே சமக்கிருதம் தெரியாது ஆனால் நானே சமக்கிருதத்தை விமர்சனம் செய்த போது, என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்காத தென்றல், இப்பொழுது என்னுடைய அரபு மொழிப் புலமையை மட்டும் கேள்வி கேட்கிறாரென்றால் ______.

      அது ஒருபுறமிருக்க, தம்மை இன்றும் தமிழராக அடையாளப்படுத்தும் தமிழ்நாட்டுத் தமிழ்முஸ்லீம்களுக்கும் ‘இபின்-அல்-ஹயாத்துக்கும் என்ன தொடர்பு. இனத் தொடர்பா, மொழித்தொடர்பா, அல்லது மாமனா, மச்சானா? அந்த அரபுக்காரனைப் பற்றித் தமிழ்நாட்டு தமிழ் முஸ்லீம்கள் ஏன் பெருமைப்படவேண்டும். தமிழ்முஸ்லீம்களின் இப்படியான வேடிக்கைகளைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

      //நிலா என்பதற்கும் மட்டும் ஆயிரம் சொற்களை வைத்திருக்கும் அரபு மொழியை///

      “The richness of a language not to be measured by how many of its words are collected in dictionaries or by the fixed synonyms in its dictionaries. For dictionaries are not only register of living words; they are also a cemetery of words. This is particularly true of Arabic dictionaries, since they contain an abundancy of words which are not used anymore and which have lost their value.”

      Arabic in Chains: Structural Problems and Artificial Barriers – By Robert Marzari

      ///ராஜராஜ சோழன் தமிழையும் சமஸ்கிருதத்தையும் தன் இரு கண்களாக போற்றி வளர்த்தான் என்று மொழி இனத்துரோகிக்கு சான்றிதழை வியாசன் அவர்கள் வழங்கியிருக்கிறார். ///

      உலகத்தமிழர்கள் போற்றும் ராஜராஜசோழன் போன்ற தமிழர்களின் முன்னோர்களைத் தூற்றுவதில் வந்தேறிகளும் அவர்களின் வாரிசுகளும், மூமின்களும் முன்னணியில் நிற்கிறார்கள் என்பது உலகத் தமிழர்கள் அறிந்ததொன்று தான். ஆகவே இந்த உளறல் எனக்கு வியப்பளிக்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழர் என்ற போர்வையில் எவ்வளவோ தமிழினத் துரோகிகள் உலவுகின்றனர். இவர் எந்த வகையோ யார் கண்டது, எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதென்று யாருக்குத் தெரியும்.

      ///கைவசம் இன்னும் இரண்டு இருக்கிறது. தேவைப்படும் பொழுது பதிவிடுகிறேன்.///

      நான் இங்கே அளிக்கும் என்னுடைய ‘விரிவுரைகளையும் விளக்கவுரைகளையும்’ அப்படியே குறிப்பெடுத்துப் பாதுகாத்து வைக்கிறவர்களில் தென்றல் தான் முதலிடம் வகிக்கிறார் அந்த வகையில் அவர் என்மீது வைத்திருக்கும் அபிமானத்துக்கும் அன்புக்கும் எனது நன்றிகள். _____________ ஆகவே அவர் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டிப் பிழைத்துக் கொள்ளட்டும், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பாவம் அவர்.

      • “few nations on earth can perhaps boast of so many poets as the Tamils.” As, however, all their earlier literature was in poetry, even Dictionaries and Grammars, and works on Medicine, Law, Architecture and Theology, the number of poets, so called, must have been great. The Chola, Sera, and Pandyan kings of Southern India, especially the latter, from the 6th century before Christ, to the 14th century after, were liberal patronizers of the Poets. A college of literati, called the Madura sangam, was long in existence. The sunshine of royal favor brought many poets into light, if not into life. Their works were mostly DESTROYED BY THE MOHAMMEDANS in the early part of the 14th century.”

        – MORE POLISHED, EXACT, MORE COPIOUS-

        It is not perhaps extravagant to say that in its poetic form the Tamil is more polished and exact than Greek, and, in both dialects with its borrowed treasures, more copious than Latin. In its fullness and power, it more resembles English and German more than any other language.

        -(DR. WINSLOW, GREAT CLASSICAL LANGUAGE)

        To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and OLDER THAN ARABIC); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.

        Prof. GEORGE L. HART

        • //வியாசனின் தாயார் அவர்கள் நபிகள் நாயகத்தை போற்றும் காவியத்தை வாசித்ததையும் அவர் மீது கொண்ட மதிப்பை நம்மிடம் வேறு ஒரு தருணத்தில் பகிர்ந்திருக்கிறார். //

          தென்றலுக்கு அறளை பெயர்ந்து விட்டது அல்லது வேண்டுமென்றே பொய் சொல்கிறார்.

          ……5. உதாரணமாக இலங்கையில் பதினோனொரு, பன்னிரண்டாவது வகுப்பில் தமிழிலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்த எனது தாயார் தேவாரம், திருவாசகம் மட்டுமல்ல, வீரமாமுனிவரின் தேம்பாவணி, உமறுப்புலவரின் சீறாப்புராணம், முகம்மது நபிகள் பிள்ளைத் தமிழ் போன்ற இலக்கியங்களைக் கூட +2 (G.C.E (Advance Level) இல் கற்றிருக்கிறார் ………

          1. முதலில் தமிழ்நாட்டில் +2 வரை தமிழை எல்லோருக்கும் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அவர்கள் ஆங்கில மூலம் ஏனைய பாடங்களைக் கற்றாலும் தமிழைக் கட்டாய பாடமாக்கி, தமிழில் சித்தி பெறாவிட்டால் +2 சித்தி பெற்ற சான்றிதழ் கொடுக்கப்படக் கூடாது. இலங்கையில் தாய்மொழியும், கணிதமும் இல்லாது விட்டால் எந்தச் சான்றிதழும் முழுமையானதல்ல.

          2. இலங்கையைப் போன்றே கட்டாய பாடமாகிய தமிழ்ப் பாடத்திட்டத்தில் நான்கு மதங்களைப் பற்றியும், அவற்றின் வளர்ச்சி, தமிழில், தமிழர்களில், தமிழ்நாட்டில் அதன் தாக்கம், மாற்றம் என்பவற்றைக் கற்பிப்பதுடன், ஒரு சில பாடங்கள் அந்தந்த மத இலக்கியங்களிலிருந்தும் இடம் பெற வேண்டும்.

          3. பக்தியின் மொழியாகிய தமிழில் எல்லாமத நூல்களும் அதாவது பெளத்த, சைவ, வைணவ, கிறித்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள் உண்டு.

          4. இலங்கையில் ஒரு வகுப்பிலுள்ள கிறித்தவ, இந்து, இஸ்லாமிய மாணவர்கள் அனைவரும், மத வேறுபாடின்றி, அங்குள்ள பாடத்திட்டத்தின் படி இந்து மத அறிஞர்கள் பற்றி மட்டுமல்ல, வீரமாமுனிவர், உமறுப்புலவர் போன்றவர்களின் வரலாற்றையும் இளவயதிலேயே அறிகிறார்கள்.

          5. உதாரணமாக இலங்கையில் பதினோனொரு, பன்னிரண்டாவது வகுப்பில் தமிழிலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்த எனது தாயார் தேவாரம், திருவாசகம் மட்டுமல்ல, வீரமாமுனிவரின் தேம்பாவணி, உமறுப்புலவரின் சீறாப்புராணம், முகம்மது நபிகள் பிள்ளைத் தமிழ் போன்ற இலக்கியங்களைக் கூட +2 (G.C.E (Advance Level) இல் கற்றிருக்கிறார்.

          6. திராவிட பகுத்தறிவின் அடிப்படையில் மதங்களைப் பற்றிய விடயங்களைப் பாடத்திட்டத்திலிருந்து முற்றாக அகற்றாமல் மாணவர்கள் எல்லோருக்கும், தமிழர்களின் அனைத்து மத இலக்கியங்களிலும் குறைந்த பட்சம் அடிப்படை அறிவையாவது கொடுத்தால், மாணவர்களுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ளும் அல்லது தமிழின் அருமை, பெருமைகளை, மத வேறுபாடின்றி இரசிக்கும் பக்குவமாவது ஏற்படும்.

          7. உதாரணமாக, இலங்கையிலுள்ள இந்து மாணவர்கள் மூன்றாம் வகுப்பிலேயே தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றியும், நாயன்மார்களைப் பற்றியும் கற்பதால், தமிழ்நாட்டுக் கோயில்களின் வரலாறு, அருமை, பெருமை, அவற்றையும், அவற்றின் புனித்தத்துவத்தையும் காக்க வேண்டிய கடமையையும் உணர்கிறார்கள். ஆனால் அந்தளவு விழிப்புணர்வு தமிழ்நாட்டு இளம் தலைமுறையினரிடம் கிடையாது. பலருக்கு அவர்களின் சொந்த ஊர்க் கோயில்களின் வரலாறு கூட அவர்களுக்குத் தெரியாது.

          8. அத்தகைய விழிப்புணர்வும், தமிழர்களின் வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கங்களாகிய தமிழ்நாட்டுக் கோயில்களின் முக்கியத்தையும் இளவயதிலேயே அவர்களுக்குக் கற்பித்திருந்தால், இன்றைக்கு தமிழ்நாட்டுக் கோயில்கள் பார்ப்பனர்களில் ஆட்சியில் இருப்பதற்குப் பதிலாக தமிழர்களின் ஆளுமையின் கீழிருந்திருக்கும்.

          9. இலங்கையில் எத்தனையோ இஸ்லாமிய ஆசிரியர்கள் தமிழில், தமிழ் இலக்கியங்களில், தேவார திருவாசகங்களில் கூடப் புலமை பெற்றவர்கள். ஏனென்றால் மத வேறுபாடின்றி தமிழிலக்கியங்களை கற்று, இரசித்து அனுபவிக்கும் பக்குவத்தை அவர்களின் மாணவர் காலத்தில் இலங்கையின் பாடத்திட்டம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

          10. இலங்கையிலும் வஹாபியிசம் வேகமாகப் பரவி வருவதால் அடுத்த தலைமுறை முஸ்லீம்கள் தமிழ் புத்தகங்களையே கொளுத்தலாம், அது வேறு விடயம். 🙂

          • இவர் உண்மையிலேயே முஸ்லிம்களின் தமிழ் அடையாளத்திற்க்காக கவலைப் படுகிறாரா அல்லது எங்கள் மத அடையாளத்தின் மேல் உள்ள வெறுப்பால் பீதியை கிளப்புகிறாரா? பல விஷயங்களையும் விளக்கிய பிறகும் சொன்னதையேதான் சொல்கிறார்.மதரஸாக்களில் குரானை அரபியில் படிப்பதால் வணக்கம் என்ற தமிழ் வார்த்தைக்கு முஸ்லிம்களால் பொறுத்தமான பொருள கொள்ள முடியவில்லை என் கிறார்.வகாபியம் வந்ததால் முஸ்லிம்கள் தமிழ் அடையாளத்தை தொலைத்து விட்டதாகவும் சொல்கிறார்.சிறுவர்கள் மதரஸாக்களில் போய் குரானை கற்றுக்கொள்வது இன்றைக்கு நேற்றா நடக்கிறது.எத்தனையோ நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டிலும் நடக்கிறது இலைங்கையிலும் நடக்கிறது.அவருக்கு அவரே முரண்பட்டு பேசுகிறாரே ஏன்? அவருக்கு பிரச்சனை சமீபத்தில் ஏற்ப்பட்டு வருகிற இஸ்லாமிய மறுமலர்ச்சியா ஒட்டுமொத்த்மாவே இஸ்லாமா? இதனை அதனோடு ஒப்பிடுகிறார் அதனை இதனோடு ஒப்பிடுகிறார் பிறகு எதை எதோடு ஒப்பிட்டோம் என்றே தெரியாமல் குழம்பி கோபமும் கொள்கிறார்.எப்படியோ எங்களை தமிழர்கள் இல்லை என்று நிறுவுவதற்க்கு தலைகீழாய் நின்று போராடுகிறார்.இலக்கிய ஆர்வம் ரசனை உள்ளவர்கள் அனைத்து தமிழ் இலக்கயங்களையும் விரும்பத்தான் செய்வார்கள்.செய்கிறார்கள்.ராமாயாணத்தை இலக்கியமாக பார்க்க ரசிக்க என்ன தடை? வரலாறாக நம்பசொல்கிறாரா..சரி புர்காவை கழட்டிவிட்டோம்.முக்காடை என்ன செய்வது? அது மற்ற தமிழ் பெண்களிலிருந்து தனித்து காட்டுமே..நெற்றியை என்ன செய்யலாம்? பொட்டில்லாத வெறும் நெற்றி, அப்போதும் தனித்து காட்டுமே..அரபு மயமாக்கல் என்ற ஒரு பொய்யை நிறுவி அதற்க்கு புர்கா, அரபிபெயர்,புரோட்டா சால்னா,இலங்கை, விடுதலைப்புலி,தலித், திருமாவளவன்,நண்பன்,நண்பனின் புர்கா போட்ட தாய்,நாகூர்தர்கா,வேளாங்கண்ணி,இந்துக்கோயில்கள்,தமிழ் கலாச்சாரம் தாயை வணங்குதல்,இஸ்லாமிய சிறுவர்கள் மதரஸா…..என்று எத்தனையோ அலங்காரங்களை அந்த பொய்யிக்கு சூட்டி எப்படியாவது அரபுமயமாக்களை உண்மையாக்க துடியோ துடியென்று துடிக்கிறார்.அது கண்டுபிடிக்கப்பட்டு காட்டப்படும்பொழுது தாங்க முடியாமல் ஆத்திரப்பட்டு வெளிநடப்பு செய்வேன் என் கிறார். நானும் சரி திப்புவும் சரி அவரின் விமர்சனத்திற்க்குத்தான் பதில் சொல்கிறோமே தவிர அவரை காய்ப்படுத்தும்படி பேசியதே இல்லை.அதிலும் நானும் சரி திப்புவும் சரி வேறு வேறு கண்ணோட்டத்தில் இருந்துதான் பதில் கொடுத்தோம்.இணைந்தெல்லாம் தாக்கவில்லை.அவருக்குத்தான் சில தளபதிகள் முட்டுகொடுத்து தாங்கி சம்மந்தா சம்மந்தமில்லாமல் உளறி எங்களை திசைதிருப்பி சீண்டவும் முயன்றார்கள்.நாங்கள் எந்த நிலையிலும் நிதானம் இழக்கவில்லை.பிறகு அவருக்கு மட்டுமென்ன அனுதாப வரவேற்ப்பு?

      • Vyasan says dictionaries that too Arabic dictionaries are cemetry of words.But he admires a dead language spoken by only by about 16000 Indians.
        Rationalists are the ones who would strive to remove superstitions.The fame of Rajaraja Cholan is also a superstition.

            • ராஜ ராஜ சோழன் தமிழுக்கும், சைவத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய தொண்டுக்காகவே ஆராதிக்கிறார் , புகழ்கிறாரே தவிர , சஸ்கிருதத்துக்காக அல்ல . இதனை அவரது கட்டுரைகள் மூலமும் கருத்துக்கள் மூலமும் பல தடவைகள் வெளிப்படுத்தியிருக்கிறார்.
              சஸ்கிருதத்துக்காகவும் , பிராமணர்களுக்காகவுமென்றால் நாயக்க மன்னர்களையுமல்லவா அவர் போற்றியிருக்க வேண்டும்.

            • ___________.

              ராஜ ராஜனை புகழ கூடாது , ஆதி சூடி பெருமை பேச கூடாது,
              அல்லேலூயா மோனோ போனிக் பாடல்கள் போல ,காஆஆஅரல் மாஆஆஆர்க்ச்ச்ச்ச்ச் என்று பாட வேண்டியது தான்

    • அண்ணா தென்றல் நபி பிடோபில் என்று நான் சொல்லவில்லை ஆயிசா என்ற ஆறு வயது சிறுமியை அவரது தகப்பனான அபூபக்கர் என்பரிடம் பெண்கேட்டு மனம் புரிந்து கொண்டதாக கதிஸுகள்தால் சொல்லுகின்றன 2 ஆம் வகுப்பு படிக்கிற பிள்ளய எப்பிடி கல்யாணம் பன்னிக்க எப்பிடி முடியம் அந்த அளவுக்கா அரேபியால காட்டுமிராண்டித்தனம் இருந்தது நிச்சயமாக இல்லை எனென்றால் நபியை தவிர வேறு யாரும் இது போன்ற திருமணம் செய்த்தாக அரேபிய வரலாற்றிலோ கதிஸு புத்தகத்திலோ இல்லை உங்க கமூனிஸ சிந்தனைக்கு ஒரு வேண்டுகோள் கொஞ்ச நாளுக்கு முன்னாடி பேப்பரலு படிச்ச செய்தியை நியாபக படுத்துகிறேன் 14 வயசு பொண்ணுக்கு கல்யானம் பன்னி வைக்க பாத்துச்சு ஒரு இசுலாமிய குடும்பம் அரசு அதிகாரிகள அந்த திருமணத்தை தடுத்தி நிறுத்தினார்கள் அனா அந்த குடும்பத்தினர் எங்கள் இசுலாமிய வழக்கப்ப்டி ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டாலே அவர் திருமணம் செய்ய தகுதி பெற்று விடுகிறார் இது இசுலாமிய நெறிமுறை இதில் யாரும் தலையிட முடியாது என்று கோர்ட்டுக்கு போனது ஒரு திப்பு சொல்லுவது போல எங்களின் இசுலாமிய நெறிமுறைகளில் யார் தலையிட்டாலு அவர் ஆர் எஸ் எஸ் என்று சொல்லுவது போல ஒரு ஆர் எஸ் எஸ் நீதிபதி அந்த திருமண்த்தை செல்லாது அப்பிடினுட்டார் இப்ப அவுக்க சுப்புரீமு கோட்டுக்கு போனாகளோ இல்ல பெஞ்சுக்கு போனாகலோ தெரியல..

  97. நான் ஒரு மறுமொழியை பதிவு செய்து இருந்தேன் இசுலாமிய நெறி முறைகளை பின்பற்றி நடந்தால் இசுலாம்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும் என்று திப்பு சொன்னதற்க்கான பதிலாக வெளியிட்டு இருந்தேன் அதை சுத்தமாக மறைத்து விட்டது வினவு தளம் பரவாயில்லை மீண்டும் கேக்குறேன் இசுலாமிய நெறிமுறைகள் எங்கு இருக்கின்றன குரான் புத்தகத்திலும் முகம்தின் போதனை மற்றும் வாழ்க்கை வரலாற்று தொகுப்பான கதிஸ் புத்தகங்களிலும்தான் என்னிடமும் குரான் தமிழ் பதிப்பு 2 இருக்கிறது பள்ளிவாசல்ல போயி பிரியானி சாப்ப்டிட்டு வாங்கினது குரான் புத்தகத்துல ஆரம்ப்த்டுலருந்தே பில்டப் குடுப்பாக இது இறைவனால் இரக்கப்பட்டது இதை முகமது என்பவரின் தனிப்பட்ட கூற்றாக கருதக்குடாதுனு பத்து பக்கத்டுக்கு பில்டப் அதுக்கடுத்து ஒவ்வொறு அத்தியாத்துக்கு முன்னும் பின்னும் விளக்கமுனு அந்த அத்தியாத்த விட அதிகமான பக்கங்களில் விளக்கம் இருக்கும் சரி இதெல்லாம் குரானை மொழி பெயர்த்தவர்களின் கருத்து அத்தியாத்டுக்குள்ள போய் பிராக்கெட் எல்லாம் எடுத்துட்ட படிச்சா ஒரு எழவும் விளங்காது அதுனாலதான் குரான அரபீல படுச்சா மட்டும்தான் பிரியுமுனு முஸ்லீம்கள் சொல்லுகிறாரக்ள் பில்டப் பிராக்கெட் எல்லாம் எடுத்து விட்டு குரானை படித்தால் அல்லாவி துதி பாடுதல் வண்முறை தூண்டும் வாசகங்கள் என்று குரானும் இசுலாமிய நெறிமுறைகளும் சீட்டு கட்டு கோபுரம் போல சர்ந்து விடும் ______

  98. தோழர் திருப்பூர் குணா எழுதி கீற்று இணைய தளத்தில் வெளியாகி இருக்கும் கட்டுரை இது.

    http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30171-49

    கட்டுரையிலிருந்து சில வரிகள்.

    \\இந்த பொதுபுத்தி அரசியல்தான் இன்று இந்து பயங்கரவாதமாக வளர்ந்து நிற்கிறது. “நீ இசுலாமியன்தானே?” என்ற கேள்வியையும், “அப்படியானால் நீ குற்றவாளிதான் என்ற தீர்ப்பையும்” உருவாகியிருக்கிறது. அதனால் இசுலாமியர்கள் எவர் ஒருவரையும் அவர் இசுலாமியர் என்ற ஒரே காரணத்திற்காக எவர் வேண்டுமானாலும் தண்டிக்கலாம், கொல்லவும் செய்யலாம் என்று ஞாயப்படுத்தியிருக்கிறது.

    இப்போது இசுலாமியர்களை அவர்கள் குண்டு வைத்தார்கள், சதி செய்தார்கள் என்று பெரிய விசயங்களுக்காக தண்டிக்க வேண்டியதில்லை. அவர்கள் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள், தின்றார்கள் என்றுகூட கொன்று விடலாம். அதையும் சட்டத்தின்முன் காவல்துறை மூலமாக செய்ய வேண்டியதில்லை. அதை இந்துத்துவ இயக்கங்களோ, அவற்றின் ஆதரவைப்பெற்ற சராசரி மனிதர்களோகூட செய்து கொள்ளலாம்.

    அப்படித்தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் தனி மனிதர்களாகவும், கும்பலாகவும் இசுலாமியர்கள் கொல்லப்படுகிறார்கள்.//

    நிற்க.

    இந்த பொதுப்புத்தியை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்குத்தான் முசுலிம் எதிர்ப்பு மதவெறியர்கள் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி கள்ளப்பரப்புரையில் ஈடுபடுகிறார்கள்.நாம் விவாதிக்கும் இந்த கட்டுரை போன்று சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் பதிவுகளை கண்டால் ஆத்திரம் தலைக்கேறி முசுலிம் மக்கள் மீது அவதூறு சேற்றை அள்ளி இரைக்க வந்து விடுகிறார்கள்.

    • திரு . சமஸ் அவர்கள் எழுதி தமிழ் இந்துவில் வெளியான கட்டுரை. ஒவ்வொரு தீவிர வஹாபிஸ்ட்டும் படிக்க வேண்டிய கட்டுரை..

      http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article8191819.ece?homepage=true&theme=true

      கட்டுரையில் இருந்து சில துளிகள்….

      //திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.//

      கட்டுரையின் சாராம்சம் இது தான் … வாஹபிய சிந்தனைக்கு ஆடப்பட்ட ஒருவர் எப்பொழுதும் தான் வாழும் நாட்டிற்க்கும், இனத்திற்கும் மிகவும் அந்நியமாகவே தான் இருப்பார். அந்த கட்டுரையில் வரும் பிரிட்டனை சார்ந்த ஆதம் தீன் கூறுவதைப் போல், இங்கிருக்கும் ஒரு தமிழ் பேசும் முஸ்லீம் தன்னை தமிழ்நாட்டு முசுலீமாக நினைக்கமாட்டார். மாறாக,தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு முஸ்லீம் என்றே தன்னை கருதுவார். பாசம்,பிணைப்பு,காதல், அன்பு என அனைத்து விழுமியங்களும் அரேபியாவை சுற்றி சுற்றியே தான் வரும்.

      • எடுத்த எடுப்பிலேயே சமஸ் பொய் சொல்கிறார்.அந்த மாநாட்டுக்கு போய் வந்தவர் ,போகாதவர் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பார்த்தால் சொல்வார்கள். ஆண்டவனுக்கு இணையாக வேறு ஒருவரை,அல்லது வேறு ஒன்றை வணங்குவதே ஷிர்க் [இணை வைப்பு] என்பதன் பொருள். இவரோ மூட நம்பிக்கை என்று கற்பனையாக ஒருவரிடம் ”கேட்டு”சொல்கிறார்.சரி அது போகட்டும்.

        முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.வகாபியம் என்பதும் இசுலாமிய போதனைகளைத்தான் எடுத்துச்சொல்கிறது.தீவிரவாதத்தை இசுலாம் போதிக்கவில்லை.ஆகவே வகாபியமும் அதனை போதிக்க முடியாது.தீவிரவாதத்தின் காரணங்கள் அரசியலின் பாற்பட்டவை.அதற்கும் மதத்திற்கும் யாதொரு தொடர்புமில்லை.அதனால்தான் வகாபிய சவுதி அரசு தீவிரவாத ISIS -ஐ அமைப்பை எதிர்ப்பதும்,மதசார்பற்ற துருக்கி ISIS -க்கு எண்ணெய் விற்றுக்கொடுப்பதும் நடக்கிறது.

        அடுத்தடுத்து அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.மதத்தில் கை ஓங்கி இருப்பதால் வகாபிகள் [TNTJ ] தர்காவின் மீது கை வைக்கிறார்களாம்.இது அப்பட்டமான அவதூறு.தர்காக்களை இடிக்க கிளம்பவில்லை அவர்கள்.அங்கு சென்று வழிபடுவது இசுலாமிய நெறிகளுக்கு முரணானது என்று தங்கள் மதத்தவரகளிடம் பரப்புரை செய்கிறார்கள்.இது மிக சாதாரணமாக அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை.இதை செய்வதால் இந்துத்துவ காலிகளுக்கு இணையாக வகாபிகளை கொண்டு போய் நிறுத்துகிறார் சமஸ் .விநாயகர் சிலைகளை தூக்கிக்கொண்டு போய் பள்ளிவாசல் வாசலில் நின்று கொண்டு ஆபாச வெறிக்கூச்சல் போடுவதும்,மடித்துக்கட்டிய வேட்டியை இடுப்புக்கு மேல் தூக்கிப்பிடித்துக்கொண்டு மசூதியை நோக்கி ஆபாச சைகையுடன் நடனம் ஆடுவதும் என்ற இந்துத்துவ காலித்தனத்தை ஒரு கருத்து பரப்புரையுடன் சமமாக வைப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.கொள்கை என்று பார்த்தாலும் முசுலிம்கள் தங்கள் மதநம்பிக்கையை கைவிடாதவரை இந்த நாட்டின் குடிமக்களாக ஆக முடியாது இந்துத்துவ கும்பல் நஞ்சு கக்குவதும் ஒரு கருத்து பரப்புரையும் ஒன்று என பேசுவது பித்தலாட்டம்.

        அடுத்து நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பார்கள் ஏக இறைவன் கொள்கைப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்று நஞ்சு கக்குகிறார் சமஸ்.
        அப்பட்டமான கள்ளப்பரப்புரை.இழந்த பாபர் மசூதியையே மீட்க வழி தெரியாமல் இருக்கும் முசுலிம் சமூகத்தின் ஒரு பிரிவு வகாபிகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்களாம்.கற்பனைக்கும் ஒரு கூச்ச நாச்சம் வேண்டாமா.இப்போது இந்திய மண்ணுக்கேற்ப வளர்ந்த இசுலாம் பரவாயில்லை,வகாபி இசுலாம்தான் கெட்டது என பேசும் இதே யோக்கியர்தான் இசுலாம் வாளால் பரவியது என்று அதே இசுலாத்தின் மீது சேறு வாரி அடிக்கிறார். கடைந்தெடுத்த பித்தலாட்ட பேர்வழி இல்லையா இவர்.

        இன்னொன்றையும் தெளிவாக சொல்லிவிடுகிறேன்.தர்காகள் என்பதை மதசார்பற்றவர்கள் மதசார்பின்மையின் அடையாளமாக கொள்கின்றனர்.உண்மையில் அவை ஏமாற்று பேர்வழிகளின் கூடாரம்.அங்கு அப்பாவி இந்து,கிருத்துவ மக்களை மட்டுமல்ல முசுலிம்களையும் ஏமாற்றி பணம் பறிப்பதை கண்கூடாக காணலாம்.இசுலாம் மிக தெளிவானது.கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ”புரோக்கர”கிடையாது.கடவுளை வணங்க பணம் கொடுக்கவும் வேண்டியதில்லை.ஆனால் பணம் கொடுக்காமல் தர்காக்களில் எதுவும் நடக்காது.

        பில்லி,சூன்யம்.ஏவல்.எடுப்பு,காத்து,கருப்பு,பேய் ஒட்டுதல்.என அப்பாவி மக்களின் மூட நம்பிக்கைகளை வைத்து காசு பார்க்கும் அயோக்கியத்தனம்தான் அங்கு நடக்கிறது.பைத்தியத்தை குணமாக்குகிறேன் என்று மனநிலை பிறழந்த அப்பாவிகளை சங்கிலியால் கட்டி வைத்து சாவடிக்கும் அயோக்கியத்தனமும் அங்கு அரங்கேறுகிறது.உண்மையில் இதற்கும் இசுலாத்திற்கும் எந்த தொடர்புமில்லை.இந்த மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தர்கா நிர்வாகிகள் இசுலாத்தின் பெயரால் அதனை நடத்துவதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்.

        நியாயமாக பார்த்தால் அந்த மூடத்தனத்தை ஒழிக்க போராடும் வகாபிகளை பகுத்தறிவாளர்களும் மதசார்பற்ற ஆற்றல்களும் இந்த ஒரு அம்சத்திலாவது ஆதரிக்க வேண்டும்.

        • திப்பு சமஸ்ஸின் உள்நோக்கங்களை தெளிவாக அம்பலப்படுத்தினார். ஆனால் தர்கா வழிபாடு குறித்து திப்புவின் தனிப்பட்ட கருத்து என் பார்வையில் முற்றிலும் தவறானது.

          முதலில் இணைவைப்பு குறித்து தவ்ஹீத்கள் முன்வைப்பது மோசடிமட்டுமல்ல மக்களை தூண்டாடுகிற காலித்தனம் என்பதற்கு என் தரப்பு வாதத்தை வைத்துவிடுகிறேன்.

          “உருவமில்லா உருவம் என்பது எப்படி அபத்தமோ, உருவமில்லா பொருள் என்பதும் அபத்தமே” என்பார் ஏங்கெல்ஸ் (வரலாற்றில் முதலாளியமும், ஏங்கெல்ஸ்)

          ஒருவேளை ஏங்கெல்சும் ஷிர்க் குறித்து பொருள்முதல்வாத அடிப்படையில்தான் பேசியிருப்பாரோ?! அதாவது எந்த மதநம்பிக்கையாளனாலும் இறைவன் என்ற கருத்தாக்கத்தை பொருள் வடிவன்றி அணுகவே இயலாது இல்லையா? எடுத்துக்காட்டாக மதநம்பிக்கையுடைய நமது மக்கள், அல்லா கூலி கொடுப்பான், இறைவன் ஒருவனே என்று ஆண்பால் விகுதியில் தான் அழைக்கிறார்கள். ஆனால் ஏகத்துவமுடைய இறைமை (அப்படி வரையறுக்கும் பட்சத்தில்) பால்நிலைக்கு அப்பாற்பட்டது. இது இணைவைப்பின்றி வேறு என்ன? அல்லாவை மனிதனாக ஆணாக தாழ்த்துகிற இந்த வேலை நிச்சயம் சைத்தானின் வேலையாகத்தான் இருக்குமோ?!

          ஆக ஷிர்க் ஒழிப்பு கூட்டம் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் அவர்கள் சொல்லிக்கொண்ட ஏகத்துவத்திற்கு இணைவக்கும் மோசடியை முன்நின்று செய்து கொடுக்கிறார்களேயன்றி சமாதியை வணங்கும் நமது மக்கள் அல்லர். இந்த கூட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸைப் போலவே உழைக்கும் மக்களிடம் இருந்தும் சாதாரண மக்களின் நம்பிக்கைகளிலிருந்து பிரித்து அம்பலப்படுத்தப்படவேண்டியவர்கள். மாறாக திப்பு கூறுவதைப் போன்று ஆதரிக்க வேண்டியவர்கள் அல்லர்.

          60களில் தந்தை பெரியார் பின்னால் திப்பு சொல்வது போன்ற மூடநம்பிக்கைகளை கொண்ட மக்கள் ஏன் திரண்டார்கள் என்பதை திப்பு போன்றவர்கள் யோசித்தாலே தவ்ஹீத்தும் சரி இந்துத்துவ காலிகளும் சரி மக்கள் முன் அம்பலப்படவே செய்வர். அதுவும் இன்றைக்கு ‘மக்கள் அதிகாரம்’ என்கிற புரட்சிகர அரசியல் அனைத்து அரங்கிற்கும் முனைப்பாக முன்வந்திருக்கிற பொழுது சமஸ், ஆர்.எஸ்.எஸ், தவ்ஹீத் போன்றவர்களின் நோக்கங்கள் என்னவென்பது அறிய இயலாத ஒன்றும் அல்ல.

          “இயற்கையை மீறிய தெய்வீக வெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தாலொழிய தள்ளாடிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை மதச் சித்தாந்தங்கள் எவையும் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முடியாது என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்” (வரலாற்றில் முதலாளியமும் மதமும்) என்று ஏங்கெல்ஸ் முன்வைக்கும் வாதம் மக்களின் வழிபாட்டு உணர்வுகள் எப்படி தவ்ஹீத், இந்துத்துவ காலிகளின் அடாவடித்தனத்திற்கு மதப் பாசிசத்திற்கு எதிர்ம்றையில் நிற்கின்றன என்பதை அறிவதற்கு நமக்கு பயன்படலாம்.

          • இந்த தென்றல் ஏங்கல்ஸ் என்று சொல்லிக்கொண்டு கம்மூனிஸத்துக்கு ஜால்ரா போடுதாறா இல்ல அல்லாவுக்கு இணைவைப்பது சாத்தானிஸம் என்று அல்லாவுக்கு ஜால்ரா அடிக்குறாரா ஒன்னிம் பிரியல ,ஆனா ஒன்னு இவரின் கருத்தை திப்பு மீராசாகிபு போன்றோர் கச்சிதமாக கவ்விக்கொண்டு வகாபியிஸ் சோஸலிஸம் பேசுவார்கள் அதை எதுப்பது போல பாவ்லா காட்டி விட்டி அவுகளுக்கே முதுகு சொறிவார் போல இருக்குது வியாசன் உண்மையைத்தான் சொல்லி இருக்குதாறு

            • அது வேறொன்றுமில்லை தென்றல் , வினவு போன்ற வர்க்கபோராளிஸுகளுக்கு மக்கள் ஆதரவுமில்லை , இவர்கள் சொல்லும் வர்க்கம் , பொருள் முதல்வாதம் , பூர்சுவா போன்றவற்றை கேட்பதற்கு மக்கள்ஸுக்கு ஆர்வமுமில்லை ,நேரமுமில்லை . அதனாலை வர்க்கப்போராளிஸ்களின் லேட்டஸ்ட் டிரெண்ட் என்னன்னா பற்றி எரியும் பிரச்சனையை ஆரம்பிப்பது , பின்பு மெதுவாக மூக்கை நுழைத்து யாராவது ஒரு தரப்புக்கு ( பெரும்பாலும் சிறுபான்மை , தலித் என்று இருக்கும். அப்போதுதானே உண்மையான வர்க்கபோராளிஸென்று நம்ப வைக்க முடியும் ) தடவிக்கொடுக்க ஆரம்பித்து பின்பு வேகமாக சந்தடி சாக்கில் வர்க்க போதனைகளை ஆரம்பித்து விடுவார்கள்.தென்றலின் பின்னூட்டங்களை பார்த்தால் இதனை புரிந்து கொள்ள முடியும். ஒரேயடியாக வர்க்கப்போதனைப்பக்கம் போக முடியாமல் அவ்வப்போது மத வெறி வாகாபியிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டி வந்தது வியாஸனின் வாதங்களால்தான் . அதனால்தான் வியாஸன் மீது அத்தனை காண்டு.

              என்னைப்பொறுத்தவரை காவியிஸ்டுகளின் மதவெறியாயிருந்தாலும் சரி , வாகாபியிஸ்டுகளின் மதவெறியாயிருந்தாலும் சரி கண்டிக்கபட வேண்டியது ஒழிக்கப்பட வேண்டியதுதான் . உண்மையில் வாகாபியிஸ்டுகளின் மதவெறியை ஆதரிப்பவர்கள் மத அடிப்படைவாதிகளாயிருந்தாலும் சரி , போலி வர்க்கப்போராளிஸுகளாவிருந்தாலும் சரி இவர்கள் காவிகளின் மதவெறியை நியாயப்படுத்துபவர்களாக இருக்கிரார்கள் .

              காவிகளுக்கும் வாகாபிகளுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். இந்துக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருப்பதாலும் இப்போது அவர்கள் ஆட்சியில் இருப்பதாலும் நேரடியாகவும் அ டாவடியாகவும் பேச , செயல்பட முற்படுகிறார்கள் . அதுவும் தமிழ்நாட்டில் செல்வாக்கில்லாததனால் அவர்களது செயல்பாடுகள் மந்தமாக இருக்கிறது.
              முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருப்பதனால் அவ்வாறெல்லாம் வெளிப்படையாக செய்ய முடியாது . அதனால் ” அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்களே ” என்று சொல்லி சொல்லி நாசூக்காக தமது மத அடிப்படைவாதத்தை பரப்பி வருகிறார்கள் . அண்மையில் நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை அப்படிக்கூட சொல்ல முடியாது . தமிழ்நாட்டில் இந்து அமைப்புக்கள் பலவீனாமாக இருப்பதால் அந்த மாநாட்டை தமிழ்நாட்டில் வெளிப்படையாக கோலாகலமாக நடாத்த முடிந்திருக்கிறது.

              வாகாபிஸ , வர்க்கப்போராட்டத்தை ஒரு நுகத்தடியில் கொண்டு வருவதற்கு வர்க்கப்போராளிஸ் படும்பாட்டைப்பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. தோழர் தென்றல் மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட படாதபாடு பட்டு முடியாமல் போகவே ஏங்கல்சை இழுத்து விட்டுள்ளார் . தோழர்களின் ஒரு பக்க மத வெறி சார்பு நிலைக்கு தான் இரையாவதை பார்த்து கல்லறையிலிருந்தே ஏங்கி கண்ணீர் விட்டிருப்பார் ஏங்கல்ஸ் .

              அரசியலின் பால பாடம் தெரிந்தவர்களுக்கும் தெரிந்த விடயம் ஒன்று உண்டென்றால் , அது மதவெறியும் , வர்க்கப்போராட்டமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத இரு துருவங்கள் என்பது . சம்பந்தப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் சரி , வர்க்கப்போராளிஸ்களுக்கும் சரி, தாம் கொண்டிருப்பது கூடா நட்பென்பது நன்றாக தெரிந்திருந்தும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் .இதில் தோழர் தென்றல் தமக்கு வக்காலத்து வாங்குவதைப்பார்த்து நண்பர் மீரா சிந்தை கலங்கி விட்டார் . தென்றல் தரும் ஆதரவுக்கு கைமாறு செய்ய துடிக்கிறார் . அதனால் இப்போது தான் மத அடிப்படைவாதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ளுமாறும் . என்றோ ஒருநாள் நானும் கம்யூனிஸ்டாக மாறுவேன் என்றும் அழுது வடிகிறார்.
              இரு தரப்பு கூடா நட்புகளையும் பார்த்து பரிதாபபடத்தான் முடிகிறது..

              • வேறொன்றுமில்லை என்று கூறிவிட்டு லாலா இவ்வளவு சிரமப்பட்டு வியாசன் மீது இத்துணை காண்டு என்று முடித்திருக்கிறார். வியாசனது பின்னூட்டங்களை பத்திரப்படுத்தி வியாசனது வாயாலேயே பாராட்டுப் பத்திரம் பெற்றுக்கொண்டாலும் லாலாவிற்கு பொறுக்கவில்லை போலும்! அய்யகோ என் செய்வேன்! சரி. போய்த் தொலைகிறது. இன்னொரு முயற்சியை முன்னெடுப்போம்.

                லாலாவும் ஜோசப்பும் எத்துணை பெரிய கல்லூளி மங்கன்கள் என்பதற்கு சான்றாண்மை மிகு வியாசனது வாதத்தில் இருந்து இரண்டு சாம்பிள்கள் வைக்கிறேன்.

                போகிற போக்கில் வியாசன் அவர்கள் ஒரு குண்டு போட்டார்; நபியின் சில கருத்துகள் எனக்குப் பிடிக்கும் என்று. இதைச் சொல்லித்தான் இசுலாமிய வெறுப்பை தகவமைத்து அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார். இது ஒரு தரப்பு. ஆனால் ஹதீசாக இருந்தாலும் சரி குரானாக இருந்தாலும் சரி மூர்க்கமாக இருக்கும் யோசேப்பு போன்ற பயபுள்ளைகள் எல்லாம் இசுலாம் ஒழிப்பில் அவ்வளவு தீர்க்கமாக இருக்கும் பொழுது, வியாசனுக்கு நபியின் எந்தக் கருத்துக்கள் பிடிக்கும் என்று கேட்டிருக்கவேண்டியது நாணயம் மற்றும் நேர்மையுள்ள மனிதரின் அம்சம் என்றே கருதுகிறேன். ஆனால் அந்த நேர்மை இவர்களிடத்தில் கிஞ்சித்தும் இருக்கிறதா?

                மக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளை மதிக்கிறேன் என்று நான் சொல்கிற பொழுது வியாசனைப் போன்று நபியின் பிடித்த கருத்துக்கள், பிடிக்காத கருத்துக்கள் என்று எதையும் நான் இங்கு ஆதரவாக வைக்கவில்லை என்பதையும் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

                அப்படியானால்

                1. வியாசன் இசுலாம் மதத்தை எதிர்க்கவில்லை; வஹாபிய மதவெறியைத்தான் எதிர்த்தார் என்பதை யோசேப்பு முதலில் ஏற்கிறாரா?

                2. ஏற்கனவே லாலா மதஅடிப்படைவாதம் என்று தனியாக பிரித்துக்காட்டியிருப்பதால் தான் முன்வைக்கும் “ஒரேயடியாக வர்க்கப்போதனைப்பக்கம் போக முடியாமல் அவ்வப்போது மத வெறி வாகாபியிஸ்டுகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டி வந்தது வியாஸனின் வாதங்களால்தான்” என்பதை வியாசனது வாதங்களை முன்வைத்தே ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு இயலுமா?

                மேற்படி இந்த விசயத்தில் லாலாவிற்கு உதவும் பொருட்டு வியாசனின் இன்னொரு சொற்பொழிவின் காத்திரத்தை அவைக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

                வியாசன் திப்புவுடனான வாதத்தில் தன்னுடைய நண்பனையும் நண்பனின் தாயாரையும் இழுத்து அவர்கள் சொல்லியதாக சிலவற்றை புனைந்து கடைசியில் அது அவர்களின் தனிப்பட்ட விசயம்; எனவே அதை இழுக்க வேண்டாம் என்று பின்வாங்கி அந்த புரளியை முடித்திருந்தார். ஆனால் வியாசன் வினவு தளத்திற்கு வந்த நாளிலிருந்தே தனது நண்பன் சொன்னான் என்று தன் சொந்த புனைகதைகளையே தன் நண்பன் மீது ஏற்றி நண்பனையே பிராக்சியாக பல வேடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

                குறிப்பாக தர்கா வழிபாட்டைக் கூட வஹாபியர்கள் எதிர்க்கிறார்கள் என்று சரியாக சொல்ல வருகிற வியாசன் பிறிதொரு தருணத்தில் தமிழ் முசுலீம்கள் என்றுயறிப்படுகிற ராவுத்தர்கள் என்றாலே மோசம் என்று தன் நண்பன் சொல்லியதாக வினவு விவாதத்தில் பகிர்ந்திருக்கிறார். ஒட்டுமொத்த இசுலாமியர்களை இழிவுபடுத்தும் இலங்கைச் சொலவடைகளையும் இங்கே கணிசமாக பகிர்ந்திருக்கிறார். ராவுத்தர்-கொள்ளு-குதிரை குறித்து வியாசன் சொல்லிய சொலடையும் இங்கு அவரால் பதியப்பட்டிருக்கிறது.

                ஆக “என்னைப்பொறுத்தவரை காவியிஸ்டுகளின் மதவெறியாயிருந்தாலும் சரி , வாகாபியிஸ்டுகளின் மதவெறியாயிருந்தாலும் சரி கண்டிக்கபட வேண்டியது ஒழிக்கப்பட வேண்டியதுதான் ” என்று யோக்கியமாக பேசுகிற லாலா அவர்கள் வியாசன் தன் நண்பனை வைத்துச் சொல்லிய ராவுத்தர் குறித்த இழிவுபடுத்தல்களுக்கு என்ன பதில் கொடுக்கப்போகிறார்?

                மேலும் துலுக்கன் என்று வியாசன் விளிப்பது இழிவானது என்று திப்பு இதே வியாசனிடம் முன்வைத்து சில வாதங்களை வைத்திருக்கிறார். பொதுவெளியில் அம்பட்டையன், சக்கிலியன் என்று ஆதிக்க சாதிவெறி நாய்கள் ஓலமிடுகிற வார்த்தைகளைப் போன்றே துலுக்கன் என்று கூறிவிட்டு நபி பிள்ளைத்தமிழை இலங்கையில் கூட இசுலாமியர்கள் பாடினார்கள் என்று வியாசன் போடுகிற இரட்டை வேடம் குறித்து லாலாவின் யோக்கியதை என்ன சொல்கிறது?

                வியாசனது வாதங்கள் வேறு வேண்டுமென்றால் கேளுங்கள். வரிசைப்படுத்துகிறேன். அதைவிட்டு வர்க்கப் போராட்டம் மக்கள்ஸ் என்று ஏன் முக்குகிறீர்கள்?

                பின்குறிப்பு: அடுத்த முறை வருகிற பொழுது லாலா என்ற பெயருக்கு மேலே உள்ள கொண்டையை சற்று மறையுங்கள். இல்லையெனில் ரெபேக்கா மேரியைப் போன்று இவர் மேரியே அல்ல என்று அவதூறு!!!! சொன்னது போல் ஆகிவிடப்போகிறது. பாவம் அந்த சகோதரி!!!

                • இதில் வியாசனைப்பார்த்து நீங்கள் கேட் கும் கேள்விகள் பலவற்றிற்கும் வியாசன் முன்பே பதிலளித்திருக்கிறார் . குறிப்பாக துலுக்கர் பற்றிய குற்றச்சாட்டுக்கு. எனவே திரும்ப திரும்ப ஒன்றெயே கேட்டு எதற்கு விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள் . உங்களது முன்னைய பின்னூட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு ஆதராவாக கருத்துக்கள் தெரிவித்து பின்பு வர்க்கபசப்பு பரப்புரைகளாக மடைமாற்றியிருந்தீர்கள் . ஆனால் வியாசனின் கருத்துக்கள் உங்களை அந்தப்பக்கத்துக்கு போக விடாது இழுத்து வந்ததே உங்களது இந்த எரிச்சலுக்கு காரணம்.
                  வியாசனாவது நண்பரை ப்ராக்சியாக கொண்டு வந்திருந்தார் . தாங்களோ ஏங்கல்ஸையல்லவா பிராக்சியாக கொண்டு வந்து சாதனை படைத்து விட்டீர்கள் ..

                • ஒருபக்கச் சார்பான, கொள்கையடிப்படையில் வினவுடன் உடன்படாத காரணத்துக்காக என்னை வெறுக்கும் வினவு தளத்தில் விவாதங்களில் பங்குபற்றுவதில்லை என்பது தான் எனது கருத்தே தவிர, நான் பதிலளிக்கக் மாட்டேன் என்ற துணிவில் தென்றல் தொடர்ந்து என்னைப்பற்றி உளறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன் என்று கருத்தல்ல.

                  முன்புமொருமுறை நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழை எனது தாயார் தனது பாடசாலைக் காலங்களில் இலக்கியமாக கற்றிருக்கிறார், அதில் தமிழின் நயத்தை ரசித்திருக்கிறார் என்று நான் கூறியதை“வியாசனின் தாயார் அவர்கள் நபிகள் நாயகத்தை போற்றும் காவியத்தை வாசித்ததையும் அவர் மீது கொண்ட “மதிப்பை” நம்மிடம் வேறு ஒரு தருணத்தில் பகிர்ந்திருக்கிறார்” என்று கொஞ்சம் கூடுதலாகத் திரித்துக் கூறினார். நான் ஏதாவது கூறினால் அதற்கு கண், மூக்கு, வாய் எல்லாம் வைத்து உளறுவது தான் தென்றலின் வேலை. என்னுடைய தாயார் நபிகள் நாயகத்தின் மீது மதிப்புக் கொண்டவர் என்று நான் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் நான் இங்கு பேசவில்லை. மதநம்பிக்கையுள்ள முஸ்லீம்களுடன் மட்டுமன்றி, முன்னாள் முஸ்லீம்களும் கூட நான் பழகியிருக்கிறேன். உண்மையில் முகம்மது நபிகள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் அவரது போதனைகளும், கருத்துக்களும் எனக்குப் பிடிக்கும் ஆனால் மதீனாவுக்குப் போன பின்னர் அவரது கருத்துக்களை எனக்குப் பிடிக்காது. அதனால் தான் அவரது ‘சில’ கருத்துக்களை எனக்குப் பிடிக்குமென்றேன். இதற்கு மேல் இங்கு நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கப் போவதில்லை. விவாதத்தில் பங்குபற்றாதவர்களை விவாதத்தில் இழுப்பதும், வசைபாடுவதும் நாகரீகமான செயல் அல்ல என்று தென்றலுக்குத் தெரியாமல் இருப்பது, ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

                  கீழேயுள்ள தென்றலின் உளறல்களுக்கு ஆதாரம் காட்டுவார் என நம்புகிறேன்:

                  //வியாசன் பிறிதொரு தருணத்தில் தமிழ் முசுலீம்கள் என்றுயறிப்படுகிற ராவுத்தர்கள் என்றாலே மோசம் என்று தன் நண்பன் சொல்லியதாக வினவு விவாதத்தில் பகிர்ந்திருக்கிறார்///

                  //ராவுத்தர்-கொள்ளு-குதிரை குறித்து வியாசன் சொல்லிய சொலடையும் இங்கு அவரால் பதியப்பட்டிருக்கிறது//

                  • வியாசன் கருப்பு கோணிப்பையை பற்றி தனது வலைத்தளத்திலும் எழுதி அதில் வினவில் நடந்த விவாதத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.அதில் இந்த விவாதத்திற்கான இணைப்பையும் கொடுக்கலாமே.தனது வாதத்தின் மீது நம்பிக்கை இருந்தால் விவாதத்தை குறிப்பிட்டவருக்கு அதன் இணைப்பை கொடுக்க என்ன தயக்கம்.

                  • \\விவாதத்தில் பங்குபற்றாதவர்களை விவாதத்தில் இழுப்பதும், வசைபாடுவதும் நாகரீகமான செயல் அல்ல//

                    விவாதத்தில் பங்கு பெற கூடாது என யாரும் வியாசனை தடுக்கவில்லை.விவாதத்தை விட்டு தானாக விலகி விட்டார் என்பதற்காக அவரது விவாதங்களை விமரிசிக்க கூடாது என தடை போட முடியாது.விவாதத்தை விட்டு விலகுவதாக அறிவிக்கும் பின்னூட்டத்தில் கூட எதிராளிகள் மீது ஏராளமான விமரிசனங்களை எழுதி இருக்கிறார்.அவர் விவாதத்தில் இல்லை என்பதற்காக அவற்றுக்கு பதில் சொல்ல கூடாதா.விலகியவரை விவாதத்தில் இழுப்பது நாகரீகமான செயல் அல்ல என்று புலம்புவது அழுகுணி ஆட்டம்.

                    • உலகமுழுவதுமுள்ள முஸ்லீம்கள் விவாதிக்கும் அரபுமயமாக்கல்(Arabization) என்ற விடயத்தை தமிழ்நாட்டு முஸ்லீம்கள் மூடி மறைக்க நினைத்தாலும் கூட, இங்கு இதுநாள் வரை நடந்த விவாதம், அதைப் பற்றிய விழிப்புணர்வை ஒரு சில தமிழர்களுக்காவது ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்குச் சான்றாக இங்கேயே பல தமிழர்கள் அதைப்பற்றிக் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே அதில் என்னுடைய நோக்கம் நிறைவேறி விட்டது.

                      வெள்ளநிவாரணப் பணிகளில் மதவேறுபாடின்றி ஈடுபட்ட தமிழ் முஸ்லீம்களைப் பாராட்டுவதற்குத் தொடங்கப்பட்ட இந்தப் பதிவை, முஸ்லீம்களின் ‘அரபுமயமாக்கல்’ பக்கம் திசை திருப்பியதற்கு நானும் ஒரு காரணம் என்பதால், இந்தப் பதிவின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எதைப்பற்றிப் பேசுவதற்காக இந்தப் பதிவு தொடங்கப் பட்டதோ அதைப் பற்றிக் கருத்து தெரிவித்து விட்டுப் போவது தான் நியாயமான செயலாக எனக்குப் படுகிறது.

                      ஆகவே முஸ்லீம்கள் வெள்ளத்தின் போது உதவியதற்கு அரபுக் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாகிய அவர்களின் மார்க்கமா அல்லது அது தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் உண்டாகிய மனிதநேயமா என்பதை முஸ்லீம்கள் தான் ஆதாரத்துடன் விளக்க வேண்டும்.

                      1) முஸ்லீம்களின் மார்க்கம் தான் அவர்களை வெள்ளத்தின் போது மதவேறுபாடின்றி மக்களுக்கு உதவச் செய்தது என்றால். முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அதாவது காபிர்களுக்கு உதவுமாறு, திருக்குர்ஆன் கூறுகிறதா, அப்படி ஏதாவது குரான் வசனமுண்டா? குரான் அதை அனுமதிக்கிறதா? அப்படி ஏதாவது வசனம் குரானிலிருந்தால், முஸ்லீம்கள் மார்க்கக் (அல்லாவின்) கட்டளைக்கிணங்க காபிர்களுக்கு உதவினார்கள் என அனைவரும் ஒப்புக் கொள்ளலாம்.

                      2) காபிர்களுக்கு உதவுமாறு குர்ஆனில் அல்லா கூறியிருந்தால் தமிழ் முஸ்லீம்களைப் போலவே, இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லீம் அல்லாத காபீர்களுக்கு உதவாது விட்டாலும், அவர்களைக் கண்ணியமாகக் கூட அரபு முஸ்லீம்கள் நடத்துவதில்லையே. காபீர்களை விட்டு விடுவோம், மத்திய கிழக்கில் பணிபுரியப் போகும் முஸ்லீம்களைக் கூட, அரபு முஸ்லீம்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்துகிறார்களே அது ஏன். எத்தனையோ கறுப்பின முஸ்லீம்கள் அரபுக்கள் தம்மை நடத்தும் கொடுமையை, அவர்களை இழிவுபடுத்துவதைக் காட்டிக் கண்ணீர் வடிக்கின்றனர். சிலர் காணொளிகளில் கூட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.
                      காபீர்களுக்கு உதவுவது அல்லாவின் ஆணை என்றால், அதை தமிழர் தவிர்ந்த ஏனைய முஸ்லீம்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை?

                      3) மத வேறுபாடின்றி அனைவரிடமும் தமிழ் முஸ்லீம்கள் காட்டிய இந்த மனிதநேயத்தின் உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது? இந்துத்துவாக்களை விட நாங்கள் பெருந்தன்மையானவர்கள் என்பதைக் காட்டுவதற்காக, அதாவது ஏழை எளியவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவி, இஸ்லாம் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தினால், பின்னர் மதமாற்றம் செய்வது இலகுவானது, அதாவது பிள்ளை பிடிகாரர் குழந்தைகளுக்கு இனிப்புக் கொடுக்கிற மாதிரி, என்றும் கூட வாதாடலாம். இந்த உத்தியை கிறித்தவ மிசனரிகளும் கடைப்பிடித்தனர்/கடைப்பிடிக்கின்றனர். உலகளாவிய கிறித்தவ அறக்கட்டளைகள் கூட வெறும் மனிதநேயத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு உதவுவதில்லை, கிறித்தவ மதத்தின் மீதும், கிறித்தவர்கள் மீதும் நல்லெண்ணம் வரச் செய்வதற்காகவும், விளம்பர நோக்கமும் கூட அவர்களின் உதவிகளிலும், கருணையின் பின்னணியில் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

                    • வெறுப்பும் காழ்ப்பும் கொண்ட வியாசனுக்கு ஒரு சிறு விளக்கம்.உதவி செய்வது என்ற விஷயத்தில் ஒருபோதும் குரான் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர் என்று எங்களிடம் பேதம் பார்க்க சொல்லவேஇல்லை.இஸ்லாமிய கடைமைகளுக்கும் ஒற்றுமைக்கும் மூமீன் கள் என்ற பதம் பயன்படுத்தபடும்.ஆனால் உதவுதல் என்ற விஷயத்தில் மனிதர்கள் என்றுதான் குரான் குறிப்பிடுகிறது.கட்டாயகடமையான சக்காத்தில் கூட, சக்காத் யார் யாருக்கு விநியோகிக்கப்படவேண்டும் என்ற பட்டியலில், எட்டு பிரிவினர் அடங்குவர்.அதில் ஒரு பிரிவு மாற்று மதத்தினர்.அதற்க்கான காரணத்தையும் குரான் சொல்லியே கட்டாயமாக்குகிறது.”உங்களுக்கு இடையே இருக்கும் கசப்புணர்வை நீக்குவதற்க்காக”. கசப்புணர்வு வரலாம் என்ற எதார்தமும் எங்களுக்கு சுட்டிகாட்டப்படுகிறது.மாறுபட்ட கொள்கையும் அதில் உறுதியும் கொண்டு வாழும்போது மக்களுக்கு ஒரு சந்தேகமும் கசப்பும் வரலாம்.ஆனால் “நாங்கள் உங்களை வெறுக்கவில்லை மறுக்கவில்லை கொள்கை வேறுபாட்டை தவிர உங்களோடு எங்களுக்கு எந்த பேதமுமில்லை என்பதை உணர்த்தவே இந்த சக்காத் கடமையாக்கப்படுகிறது.ஆனால் இது அறியாமையால் உள்ள மக்களை நேசமாக்கும்.அறிந்து கொண்டே விஷம் கக்கும் நல்லபாம்புகளை எதைக்கொண்டும் சரிசெய்ய முடியாது. இது போன்ற பாம்புகள் உலகம் உள்ளவரை படம் எடுத்துக்கொண்டு ஆடிக்கொண்டுதான் இருக்கும் இதுகளின் மத்தியில்தான் நாங்கள் எங்கள் நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டியவர்களாகவும் மக்களுக்கு சத்தியத்தை எடுத்துக்கூறவேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.இவ்வளவு பொய் பித்தலாட்ட அவதூறுகளுக்கு மத்தியில்தான் இஸ்லாம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் கொண்டு இருக்கிறது.

                    • \\ஆகவே அதில் என்னுடைய நோக்கம் நிறைவேறி விட்டது.//

                      எந்த அளவுக்கு நிறைவேறி இருக்கிறது என்று சொன்னால் தனது வாதங்கள் குறித்த சுட்டியை சொந்த தளத்திலேயே கொடுக்க மனமில்லாத அளவுக்கு நிறைவேறி இருக்கிறது .சாதனைதான்.தமிழக முசுலிம்கள் அரபுமயமாகி விடவில்லை என சான்றுகளோடு நாங்கள் எடுத்து வைக்கும் வாதங்களை இவரது தளத்துக்கு வருபவர்கள் படித்து விட கூடாது ,அப்படி படித்தால் தனது கள்ளப்பரப்புரை எடுபடாமல் போய் விடும் என அவருக்கே தெரிந்திருக்கிறது.அதனால்தான் இணைப்பு கொடுக்க மனமில்லை.

                      இவருக்கு ஆதரவாக கருத்து சொன்னவர்கள் அதாவது ஒத்தூதியவர்கள் பற்றி தனியாக சொல்லவும் வேண்டுமா.

                      \\அப்படி ஏதாவது வசனம் குரானிலிருந்தால், முஸ்லீம்கள் மார்க்கக் (அல்லாவின்) கட்டளைக்கிணங்க காபிர்களுக்கு உதவினார்கள் என அனைவரும் ஒப்புக் கொள்ளலாம்.//

                      எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ .அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போலாவான்’.- குர் ஆன்.(5:32)

                      \\அதை தமிழர் தவிர்ந்த ஏனைய முஸ்லீம்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை?//

                      காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்.முசுலிம்கள் என்றாலே கெட்டவர்கள் என்ற முன்முடிவை வைத்துக்கொண்டு அவர்கள் மீது சேறடிப்பது இது.

                      அரபுக்களில் ஒரு சிலர் செய்யும் செயல்களை வைத்து அந்த மக்கள் அனைவரும் அப்படித்தான் என சொல்ல முடியாது.நேற்று கூட பெங்களூரில் கறுப்பினத்தவர் என்பதற்காக ஒரு பெண்ணும் அவரது நண்பர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.அதற்காக இந்திய மக்கள் அல்லது கன்னட மக்கள் அனைவரும் அப்படித்தான் என முடிவு செய்து விடலாமா.

                      \\அதாவது ஏழை எளியவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவி, இஸ்லாம் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தினால், பின்னர் மதமாற்றம் செய்வது இலகுவானது, //

                      பதில் சொல்ல கூட தகுதியற்ற வாதம்.இப்படி ஒரு இழிவான உள்நோக்கம் கற்பிப்பதை கற்றது கையளவு ஏற்றுக்கொள்கிறாரா.

                      அதிருக்கட்டும்.இந்துவாகட்டும்,முசுலிம்,கிருத்துவர் ஆகட்டும் தமிழ் மக்களை பற்றி இவர் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்.உணவுப்பொருள் எதுவுமே கிடைக்காத நிலையில் நாலு சோத்துப்பொட்டலம் கொடுத்தால் ,தண்ணீரால் சூழப்பட்ட வீட்டிலிருந்து காப்பாத்தி வெளிய கொண்டாந்தால் அவர்கள் தங்கள் மத நம்பிக்கையை மாற்றிக்கொள்வார்களாமா.என்ன ஒரு அற்பத்தனமான வாதம்.

                    • Viyaasan,

                      Vella nivaaranam alithadharku madham kaaranam endraal irundhu vittu pogattume.

                      Udhavaamal iruppadharku madhathin peyaraalo, katchiyin peyaraalo, alladhu yedhenum oru iyakkathin saarbaagavo udhavinaal adhu nalladhu thaane.

                      Udhavubavar yaar, endha kulam, endha madham endra aaraaichi thevai attradhu.

                      (Mannikavum, Thamizh thattachu tharpodhu seyya mudiyavillai).

                • /வியாசனுக்கு நபியின் எந்தக் கருத்துக்கள் பிடிக்கும் என்று கேட்டிருக்கவேண்டியது நாணயம் மற்றும் நேர்மையுள்ள மனிதரின் அம்சம் என்றே கருதுகிறேன். ஆனால் அந்த நேர்மை இவர்களிடத்தில் கிஞ்சித்தும் இருக்கிறதா?/வியாசனை கேள்வி கேட்ப்பது இருக்கட்டும் மார்க்கத்தின் சிறப்புகளை பழம் விற்க்கும் பாய்களிடம்தான் காண முடியும் என்ற போது உம்மிடம் எதேனும் கேட்டேனா பழம் விற்க்கும் பாயின் நற்ப்பண்பு என்பது அவரது மார்க்கத்தால் வந்த்தது இல்லை இந்தியாவில் சக மத்தவருடன் வாழவதால் ஏற்ப்ப்ட்டது என்பதுதான் எனது முடிவு இதில் மார்க்கத்தை நைச்சியமாக நீர் நுழைத்த போதே அதை எதிர்த்து இருக்க வேண்டும் மட்டுமல்லாமல் நான் இங்கு பதிலிடும் நோக்கமெல்லாம் இசுலாம் என்பது சம்த்துவம் முகமதை போன்ற கருணையாளன் உலகிலேயே இல்லை என்ற இசுலாமிய ஆலிம்களின் பொய்யுரையை நம்பி எனது இன படித்த இளைஞன் யாரும் ஏமாந்து ஏற்றுவிடக்கூடாது என்பதற்க்குதான், அவரது இணைய தளத்தில் அவர் அதை தெளிவாக்கி ஒரு பதிவு இட்டுள்ளார் அதை வரவேற்க்கும் நான் அவரின் எல்லா கருத்தையும் ஏற்ப்பத்ற்க்கில்லை அதுக்காக எதுக்கெடுத்தாலும் அவரை கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்பதும் அவசியம் இல்லை வினவு என்னை அறிஞர் என்று நக்கலடித்தாலும் தென்றல் வசை பாடினாலும் மிராசாகிப் அரைடவுசர் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை…

                  • உண்மையில் எனக்கு வினவில் விவாதங்களில் தொடர்ந்து பங்குபற்ற விருப்பமில்லை. ஆனால் திப்பு அவர்களுக்கு பார்வைக்கோளாறு இருப்பது போல் தெரிகிறது. அதனால் தான் அவருக்கு விளக்கமளிக்க அடிக்கடி இங்கு வரவேண்டியிருக்கிறது. அப்படி வராது விட்டால். நான் வராமல் போனாலும், அவர் எனக்குத் தொடர்ந்து பதிலளித்தே தீருவேன் என்று வேறு அடம் பிடிக்கிறார். இங்கு வினவில் நடைபெறும் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல் பற்றிய விவாதத்தைக் குறிப்பிட்டு, இதன் இணைப்பையும் எனது வலைப்பதிவில் ஜனவரி 17 இலேயே – ‘ஜேர்மனியில் அரபு அகதிகளின் திட்டமிட்ட பாலியல் தாக்குதல் – Taharrush jamaʿi ( تحرش جماعي‎ )’- என்ற பதிவிலேயே கொடுத்து விட்டேன். என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் இணைப்புக் கொடுக்குமளவுக்கு திப்பு உதிர்த்த முத்துக்கள் எல்லாம் பெறுமதியானவையாக எனக்குத் தெரியவில்லை. ‘காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு’ என்பார்கள். ஆகவே அவர் தனது வலைப்பதிவில் இந்த இணைப்பை தொடர்ந்து கொடுத்து மற்றவர்களை அவரது கருத்துக்களை அறியச் செய்ய வேண்டுமே தவிர என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் அவரது கருத்துகளை இணைக்க வேண்டும் என்று கேட்பது வேடிக்கையானது மட்டுமன்றி கொஞ்சம் கூட நியாயமற்ற ஆசையும் கூட. 🙂

                    /// எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ .அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போலாவான்’.- குர் ஆன்.(5:32)///

                    நான் கேட்ட நேரடிக் கேள்விக்கு எப்படிச் சுற்றி வளைத்து பொருத்தமில்லாத ஒரு பதிலைக் கூறுகிறார் என்பதைப் பாருங்கள். குரானை படித்து அதன் உண்மையான கருத்தை அறிந்து கொள்ள முடியாதளவுக்கு இந்த இணையயுகத்திலே, வினவு தளத்தைப் படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று தப்புக் கணக்குப் போட்டிருக்கிறார் போலத் தெரிகிறது. இப்பொழுதெல்லாம் குரானை எல்லோரும் ஆங்கிலத்திலும், மட்டுமல்ல தமிழிலும் இணையத்திலேயே வாசிக்கலாம்.

                    நான் திப்புவின் பதிலுக்குப் பதிலளித்து அவரின் சளாப்பலை விளக்க முயன்றால் இந்த விவாதம் அப்படியே தொடர்ந்து கொண்டே போகும். அது மட்டுமன்றி, அப்படியான விவாதத்தை இங்கே தொடர்ந்தால் வஹாபியிசத்தை மட்டும் எதிர்க்கும் நான் (இந்துத்துவாவைப் போல் வகாபியிசமும் தமிழினத்தின் ஒற்றுமைக்கும் நலன்களுக்கும் எதிரானது என்ற காரணத்தால்), இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எதிர்க்கிறேன் என்றது போன்றதொரு தவறான எண்ணக்கருத்து, படிப்பவர்களின் மனதில் தோன்றி விடும். ஆகவே வெறும் கூகிள் தேடுதலிலேயே திப்பு தந்திருக்கும் குர் ஆன்.(5:32) வசனம் என்ன காரணத்துக்காக, எங்கே, எதற்காக கூறப்பட்டது, அதன் உண்மையான கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும், அதிலிருந்து -‘முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அதாவது காபிர்களுக்கு உதவுமாறு, திருக்குர்ஆன் கூறுகிறதா, அப்படி ஏதாவது குரான் வசனமுண்டா?’- என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திப்பு எப்படிச் சளாப்புகிறார் என்பதை இந்த விவாதத்தைத் தொடர்பவர்களால் அறிய முடியும்.

                    காபீர்களை (முஸ்லீம் அல்லாதவர்களை அல்லது நம்பிக்கையற்றவர்களை) கொல்லுமாறு வெளிப்படையாகக் கூறுகிற குரான், காபீர்களுக்கு உதவுமாறு கூறியதை மட்டும் காபீர்கள் என்று குறிப்பிட்டு வெளிப்படையாகக் கூறவில்லையாம். பொதுவாக ‘ஆத்மாவை வாழ வைப்பது’ என்பதன் கருத்து காபீர்களுக்கு உதவி செய்வது என்று மதரசாவில் ஒரு ஒதிப்படித்த திப்பு நானா கதை விடுவதை நம்புகிறவர்கள் நம்புங்கள், மற்றவர்கள் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

                    //அரபுக்களில் ஒரு சிலர் செய்யும் செயல்களை வைத்து///

                    வேண்டுமானால் அரபுக்களில் ஒருசிலர் மட்டும் காபீர்களையும், ஏழைநாட்டு அரபு அல்லாத முஸ்லீம்களையும் கண்ணியமாக நடத்துகிறார்கள் என்று கூறலாமே தவிர, திப்பு அவர்கள் அரபுக்கள் எல்லோருக்கும் வக்காலத்து வாங்குவது அவ்வளவு அபத்தம் என்பதை அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அரபுக்கள் வெள்ளையர்கள் தவிர்த்து ஏனைய மக்களை இப்படி மிருகத்தனமாக நடத்துவதற்கு அடிமை வியாபாரத்தில் அவர்களின் ஆதிக்கத்தையும், இஸ்லாம் அதற்களித்த ஆதரவையும் பற்றிப் படித்துப் பார்த்தவர்களுக்குப் நன்றாகப் புரியும். இன்றும் சூடான், மொறிற்றேனியா போன்ற நாடுகளில் பூர்வீக கறுப்பின மக்களை அடிமைகளாக அரபுக்கள் வைத்திருக்கின்றனர், கொடுமைப் படுத்துகின்றனர். அந்த மனப்பான்மையும், அவர்களின் அந்த அடிமை வியாபாரப் பாரம்பரியமும் தான் வெள்ளையர் தவிர்ந்த ஏனைய இனமக்களை அரபுக்கள் அடிமைகள் போல நடத்துவதற்குக் காரணம். தமிழ் முஸ்லீம்கள் மட்டும் தான் அரபுக்களை எண்ணிப் பூரித்துப் போகிறார்கள். அவர்களுக்கும் தமக்கும் ஏதோ தொடர்பிருப்பதாக எண்ணி அவர்களைப் பற்றிப் பீற்றிக் கொள்கிறார்கள். திப்பு போல் அவர்களுக்காக் வக்காலத்து வாங்கிறார்கள். ஆனால் உண்மையில் அரபுக்கள் தமிழ் முஸ்லீம்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு, வீரம் பொங்க, ஒரு கையில் குரானும், மறு கையில் AK47 உம் ஏந்தி காபிர்களுக்கு எதிராக போர் புரியலாம், என்று சிரியாவுக்குப் போன இந்தியர்களை எல்லாம் அவர்களின் கக்கூசைப் போய்க் கழுவச் சொல்லி ISIS சொன்ன கதையை திப்பு நானா செய்திகளில் படித்திருப்பாரென நம்புகிறேன். 🙂

                    உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கத்தினால் மட்டுமல்ல மக்களிடம் தம்மைப் பற்றி நல்லெண்ணத்தையும், விளம்பரத்தையும் ஏறப்டுத்துவதற்காகவும் தான் பல அறக்கட்டளைகளும் மத நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் கூட தொண்டுகளைச் செய்கின்றன ஆகவே வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இஸ்லாமிய இயக்கங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு என்று வாதாடுவது வெறும் விதண்டா வாதம்.

                    தமிழ்நாட்டில் முஸ்லீமாக மட்டுமல்ல, கிறித்தவர்களாகவும் மாறிய மக்கள் எல்லோருமே குரானையும், பைபிளையும் நன்கு கற்றுத் தேர்ந்து விட்டு மதம் மாறவில்லை. அதை விட சாதிக்காக மட்டுமல்ல, காசுக்கும், அரிசிக்கும், உணவுக்கும் கூட இந்தியாவில் மதமாற்றங்கள் நடைபெற்றுள்ளன/நடைபெறுகின்றன என்ற உண்மையை மறைப்பது அவ்வளவு இலகுவானதல்ல. என்னைப் பொறுத்த வரையில் யார் முஸ்லீமாக மதம் மாற விரும்புகிறார்களோ அவர்கள் முன்னாள் முஸ்லீம்களின் நூல்களையும் படித்துப் பார்த்து விட்டு, அவர்களின் கருத்துக்களையும், அனுபவத்தையும் தெரிந்து கொண்டு மதம் மாறுவது தான் நல்லது, என்பது தான் என்னுடைய கருத்தாகும். முஸ்லீமாக மதம் மாறுவது என்பது தமிழர்களின் சைவத்தைப் போன்று இன்றைக்குக் கோயிலுக்குப் போய் முருகனைக் கும்பிட்டு விட்டு நாளைக்கு முருகனையே இரண்டு பெண்டாட்டிக்கார கோவணாண்டி என்று திட்டி விட்டுப் போவது போன்றதல்ல, அந்தளவு சுதந்திரம் எல்லாம் அங்கே கிடையாது. முஸ்லீமாக மாறுவது என்பது ஒருவரின் இனத்தையும், அடையாளத்தையும், ஏன் மொழியையும் கூட மாற்றி விடக் கூடிய மிகவும் முக்கியமான முடிவு, அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, யார் மீதும் கோபத்தைக் காட்டுவதற்காக அல்லது அடையாளப் போராட்டத்துக்காக எல்லாம் தமிழர்கள் யாரும் எடுக்கக் கூடாது. குரானையும், முகம்மது நபிகளின் வாழ்க்கை வரலாற்றையும் நன்கு கற்று, முன்னாள் முஸ்லீம்களின் நூல்களைப் படித்து, அவர்களின் கருத்துக்களையும் கேட்ட பின்னர் முடிவெடுக்க வேண்டுமென்பது தான் என்னுடைய அவா, வேண்டுகோள் எல்லாமே.

                    நன்றி – வணக்கம்- bye

                    • ஒரு பொறுக்கி வன்முறை நிகழ்வு பற்றிய பதிவில் இந்த இணைப்பை கொடுப்பது பொருத்தமற்றது.புர்கா அரபுமயமாக்கல் பற்றி அவர் எழுதியிருக்கும் பதிவில் கொடுப்பதே பொருத்தமானது.சனவரி 17 வரை உதிர்ந்த முத்துக்களை கோர்த்தவர் அதன் பிறகு உதிர்த்தவற்றையும் கோர்க்கலாமே.

                      \\எப்படிச் சுற்றி வளைத்து பொருத்தமில்லாத ஒரு பதிலைக் கூறுகிறார் என்பதைப் பாருங்கள். //

                      எனக்கு பார்வை கோளாறா.வியாசனுக்கு பார்வை கோளாறா.[க.கை.கவனிக்கணும்.லேசா ஆரம்பிக்கிறாரு.அப்புறம் நாங்களும் எழுதினால் வெள்ளை வேட்டி ,சொம்பு சகிதம் பஞ்சாயத்துக்கு வர கூடாது] நச்னு மேற்கோள் மட்டுமே காட்டுவது சுற்றி வளைப்பதாம்.இவுரு முழ நீளத்துக்கு எதையோ உளறி கூகிள்ல தேடிக்கங்கன்னு சொல்றது நேரடி பதிலாம்.

                      \\தமிழ் முஸ்லீம்கள் மட்டும் தான் அரபுக்களை எண்ணிப் பூரித்துப் போகிறார்கள்.//

                      ஆதரிக்க வேண்டிய அம்சங்களில் அரபு மக்களை ஆதரிப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமுமில்லை.அதற்காக முசுலிம்கள் என்பதற்காக அவர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் ஆதரிப்பதும் இல்லை.

                      \\தமிழ்நாட்டில் முஸ்லீமாக மட்டுமல்ல, கிறித்தவர்களாகவும் மாறிய மக்கள் எல்லோருமே குரானையும், பைபிளையும் நன்கு கற்றுத் தேர்ந்து விட்டு மதம் மாறவில்லை. அதை விட சாதிக்காக மட்டுமல்ல, காசுக்கும், அரிசிக்கும், உணவுக்கும் கூட இந்தியாவில் மதமாற்றங்கள் நடைபெற்றுள்ளன/நடைபெறுகின்றன//

                      .ஏன் மதம் மாறுகிறார்கள்.என்றும் ”அற்ப” காரணங்களுக்காக மாறியிருந்தாலும் மாறிய பிறகு அந்தந்த மதங்களில் ஏன் உறுதியாக நீடிக்கிறார்கள் என்றும் ஏற்கனவே பலமுறை இதே பதிவிலேயே விளக்கி இருக்கிறோம்.மீண்டும் மீண்டும் ”என்ன கைய புடிச்சு இழுத்தியா”வுக்கு பதில் சொல்ல முடியாது.

                      இழிவு படுத்துரதுலயும் இந்தியாவை சேர்ந்த இந்துக்களைத்தான் இழிவு படுத்த வேண்டுமா.இலங்கை யோக்கியர்கள் காசுக்காக கிருத்துவத்துக்கு மாறி அப்புறம் இந்து மதத்துக்கு மாறி இப்படி அடிக்கடி மதம் மாறி இருக்கிறார்கள் என்று வியாசனே சொல்லிக்கீறாரே..அதையும் சொல்ல வேண்டியதுதானே.

                    • வியாசனுக்கு நன்றிகள் இந்த கமென்ட்டை வரவேற்க்கிறேன்…

              • மேலும் வியாசன் முசுலிம்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியவர்கள் என நிரூபிக்க படாத பாடு பட்டிருக்கிறார்.அதற்கும் அவரது நண்பனைத்தான் கூட்டி வந்தார்.நண்பனின் சித்தப்பா திருமாவளவன் போல் இருக்கிறார் என்று இவுரு சொன்னாராம்.நண்பன் முறைத்து பார்த்தானாம்.திருமாவளவன் போல் இருப்பது ஒன்னும் கேவலமில்லை.அதற்காக ”நண்பன் முறைத்து ”பார்த்ததுதான் கேவலம்.மேல்சாதி திமிர்தான் அந்த புனைவு நண்பனை ”முறைக்க” வைக்கிறது.உண்மையை சொல்வதென்றால் இந்த நாட்டின் ஆதிகுடிகளான தலித்களிலிருந்து இசுலாமிற்கு மாறி வந்திருப்பதில் நாங்கள் பெருமையே கொள்கிறோம்.ஆடு,மாடு ஓட்டிக்கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகள் அல்ல,இந்த மண்ணின் சொந்த மைந்தர்கள் என்பதில் நாங்கள் பெருமையே கொள்கிறோம்.

                அதே சமயம் பல்வேறு சாதிகளிலிருந்தும் இசுலாத்திற்கு மாறி வந்துதான் முசுலிம்கள் சாதியை துறந்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.சாதி ஒடுக்குமுறை போன்ற சமூக காரணங்களுக்காக பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர்களே முசுலிமாக மாறினார்கள் என்றாலும் மற்ற சாதியினரும் மாறியிருக்கிறார்கள்.சான்றாக இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் ஊருக்கு அருகில் அபிராமம் என்று ஒரு சிறு நகரம் உள்ளது.அங்குள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் போன நூற்றாண்டு துவக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சொத்து பரிமாற்ற பத்திரங்களில் சந்தானத்தேவர் குமாரர் முகம்மது அபுபக்கர் போன்ற பெயர்களை காணலாம்.

                அதே போன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் தேடிப்பார்த்தால் இராமசாமி அய்யர் குமாரர் காஜா முகைதீன் போன்ற பெயர்களை காணலாம்.

                • எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ .அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போலாவான்’.- குர் ஆன்.(5:32)
                  திப்பு கஸ்டபட்டு ஒரு வாசகத்த தெருக்குரானிலிருந்து கொண்டு வந்துட்டாரு ஆனா பாருங்க அது முழு வசனமே இல்ல இதுல அல்லா சொல்லுறது என்னனா மேற்க்கண்ட விதி இசுராயிலின் சந்ததிக்கு அதாவது யூதர்களுக்கு விதிக்கப்பட்டதாகவே அல்லா சொல்லுறாறு அனா அடுத்த வசனத்துலேயே காபிர்களுக்கு என்ன தண்டனைனும் சொல்லுறாரு துக்கிலப்படுதல் மாறுகால் மாறு கை வாங்கப்படுதல் மற்றும் நாடு கடத்தப்படுதல் இது பூமியில் அவர்களுக்காண இழிவாம் மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனையாம் அய்யோ அய்யோ முதல்ல குரானை படிங்கபா குரானுல மக்களை வாழ வைக்க சொல்லி இருக்குதுனு சிரிப்பு மூட்டிகினு இருக்கதிக…

                  • முழு வசனத்தையும் அறியத்தருகிறேன்
                    குரான் 5.32 இதன் காரணமாகவே “ஓர் ஆதமாவு(டைய கொலை)க்கு பதிலாகவோ,அல்லது பூமியில் ஏற்ப்பட்ட குழப்பதி(னைத்தடுப்பத)க்காகவோ அல்லாமல் ,நிச்சயமாக எவரொருவர் மற்றோர் ஆத்மாவைக் கொலை செய்கிறாரோ அப்பொழுது மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவர் போன்றாகிறார்,எவரொருவர் அதனை(ஒர் ஆதமாவை)வாழ வைக்கிறாரோ மனிதர்கள் அனைவரையும் அவர் வாழவைத்தவர் போன்றாகிறார்”என்று இசுராயிலின் மக்கள் மீது விதியாக்கினோம் _மேலும் அவர்களிடத்தில் நம்முடைய தூதர்கள் தெளிவான ஆதாரங்களைக்கொண்டு திட்டமாக வந்திருந்தனர் ,பிறகு அவர்களிலிருந்து நிச்சயமாக பெரும்பாலோர் அதன் பின்னரும் ,பூமியில் வரம்பு மீறியவர்களாகவே இருந்தனர்.
                    குரான் 5.33 அல்லாகுடனும் ,அவன் தூதருடனும் போர் செய்து கொண்டு ,பூமியில் குழப்பத்தை உண்டாக்கி திரிபவர்களுகுறிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல் ,அல்லது அவர்கள் தூக்கிலப்படுதல்,அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் ,அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல் -இது அவர்களுக்கு உலகில் உள்ள இழிவாகும் -மேலும் மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
                    இதுதான் ஒரிஜினல் குரான் வசனங்கள் திப்பு எப்பிடி ஏமாற்றுகிறார் எனபதை குறிப்பிடவே இந்த வசனங்களை இங்கு பதிவிட்டேன் மத வெறியன் என்று என்னை தூற்ற வேண்டாம்

                    • குரானில் உள்ள வாசகத்தை பாதி வெட்டியும் ஒட்டியும் படிப்பவர்களை ஏமாற்ற முனையும் மத பித்தலாட்டகாரரின் புனைவுக்கதைகளை , குரானின் முழு வாசகத்தையும் தந்து அதன் விளக்கத்தை முழுமையாக அறிய உதவியதற்கு நன்றி.

                    • யோசேப் எப்பேர்பட்ட அறிவாளி. அவரை துணைக்கு அழைத்துக்கொண்ட லாலா அவரை போன்றே அறிவாளிதான்.முழு வசனத்துல நான் சொன்ன பகுதி இருக்குல.அப்புறம் என்ன பித்தலாட்டத்தை கண்டுட்டீங்க அறிவாளிகளே,

                      வியாசன் மற்ற மனிதர்களுக்கு உதவி செய்ய சொல்லும் குர் ஆன் வசனத்தை காட்டு, அப்படி ஏதாவது வசனம் குரானிலிருந்தால், முஸ்லீம்கள் மார்க்கக் (அல்லாவின்) கட்டளைக்கிணங்க முசுலிம் அல்லாதவர்களுக்கு உதவினார்கள் என அனைவரும் ஒப்புக் கொள்ளலாம்.என்று சொன்னார்.அதற்கு பொருத்தமான வசனம் ஒன்றை காட்டி இருக்கிறேன்.எழுதிய எழுத்துக்கு அறிவு நாணயத்துடன் பொறுப்பேற்றுக்கொள்ளும் நேர்மை இருந்தால் ஆம்,வசனம் இருக்கிறது.ஒப்புக்கொள்கிறேன் என வியாசன் சொல்லி இருக்க வேண்டும்.அவரிடம் இப்படி ஒரு நியாய உணர்ச்சி இருந்திருந்தால் இந்த விவாதம் எப்போதோ முடிந்து போயிருக்கும்.அந்த நேர்மைதான் அவரிடம் கிடையாதே.அதனால் கூகுள்ள தேடி இதை மறுத்துக்கொள்ளுங்கள் என வாசகர்கள் தலையில கட்டுறாரு.அதுக்கு ஒத்தூத முசுலிம் எதிர்ப்பு மதவெறியர்களுக்கா பஞ்சம்.அதான் டாண்ணு வந்துட்டார்கள்.

          • யார் யாரது உள்நோக்கங்கள் பற்றி பேசுவது ? ஷிர்க் மாநாட்டின் உள்நோக்கங்கள் குறித்து
            சமஸ் தெளிவாக கூறியுள்ளார் .அதனை தாங்கி கொள்ள முடியாதவர்கள் சமஸின் உள்நோக்கம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் .

            • என்ன லாலா! தெளிவாக விளக்கிய சமஸ் இந்து குரூப்புதானே இதே பிஜேவோட மாநாட்டுக் கட்டுரையை செய்தியாகப் போட்டு தவ்ஹீத் குரூப்பை இசுலாமியர்களின் பிரதிநிதியாக காட்டினார்கள்! இப்பொழுது தெளிவாக விளக்கினார் என்று சொல்கிறீரே! உமது தெளிவு அப்பட்டக்கராக இருக்கிறதே! பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிற வித்தை இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கே உரிய உத்தி. பாக்கெட்டில் 60ரூபாய் காசு இருந்தா ம.க.இ.கவின் காவி இருள் பாடல் ஒலிப்பேழையைக் கேட்டுப்பாருங்கள். அதில் ஒருவரி இப்படி வரும்.

              “கொடுத்த சோறு செரிக்குமுன்னே குடலை அறுத்த துரோகமடா!” இந்தவரி ஒருவேளை சமஸ் குரூப்பின் உள்நோக்கம் (அதாவது பிஜேவின் மாநாட்டுச் செய்தியை கட்டுரை போட்டு தவ்ஹீத்திற்கு ஆரத்தி எடுத்துவிட்டு பின்னாடி இப்படி வஹாபியம் என்று சீறிப்பாய்வதை) எத்தகையது என்பதற்கு கட்டியம் கூறும். இந்து ஆசிரியர் அசோகன் அளவுக்கு உங்களுக்கு தெளிவு பத்தாதுப்பு!

              • சமஸ் யாரென்பது எனக்கு தெரியாது ?நான் எந்த எந்த மத அமைப்பையும் சேர்ந்தவனல்ல .
                சமஸ் யாரென்று தெரியாமலேயேதான் அந்த கட்டுரையை படித்தேன் . கருத்துக்கள் ஏற்கத்தக்கவையாகத்தான் இருந்தன . என்னைப்பொறுத்தவரை கருத்துக்கள் யாரின் வாயிலிருந்து வருகின்றது எனப்பார்ப்பதை விட சொல்லப்படும் கருத்துக்கள் சரியா ? ஏற்கத்தக்கவையா என்றே பார்க்கபட வேண்டும் .

                • கருத்துக்கள் தான் முக்கியம் அது யார் கூறினாலும் ஏற்கதக்கவையா என்று தான் பார்க்கப்பட வேண்டும் என்று கூறும் லாலா அவர்களே!!!!!

                  இசுலாமியர்கள், வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனர் என்றும் அதற்கு பதிலாக அந்த இசுலாமிய மக்களுக்கு உயிரையும் கொடுப்போம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாகவும் வினவுப் பதிவு செய்து உள்ளது. இசுலாமிய அமைப்பினர் செய்த சேவைகளை வினவு மட்டுமல்ல பொதுமக்களும் அறிவர்.

                  அப்படி இருக்கும் போது , அவர்கள் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் அவர்களின் செயல்கள் தான் மதிப்பிடதக்கவை என்பது உங்களது கருத்தாக இருந்தால் அந்த கருத்தை ஒட்டியே உங்களது விவாதம் நகர்ந்திருக்கும். ஆனால் அந்த விவதங்களை எல்லாம் விட்டு விட்டு இசுலாமிய மக்கள் மீது புழுதி வாரி வீசும் வியாசன் மற்றும் யோசேப்பு போன்றவர்களின் பேச்சுகளுக்கு முட்டுக் கொடுத்துச் செல்லும் போதே தங்களின் நடுநிலைமை வேஷம் களைந்து விட்டது ஒய்யாரக் கொண்டையும் தெரிந்து விட்டது. இன்னும் நடுநிலைமை வேடம் எதற்கு?

                  • தென்றலுக்கு பிறவு சிவப்பு வந்துவிட்டார் முதலில் தூக்கத்திலிருந்து எழுந்து கண்ணை கழுவி விட்டு முழு விவாதத்தையும் படியும் அப்புறமா பேசுறதுக்கு வாரும்

                  • பல நாட் கள் கழித்துத்தான் தளத்திற்கு வந்திருந்தேன். அப்போது பின்னூட்டங்கள் நீண்டிருந்தது மட்டுமல்ல தலைப்பும் இந்தியாவில் , தமிழ்நாட்டில் அரபுமயமாக்கல் என விவாதம் மாறியிருந்தது .மேலும் வெள்ள நிவாரணத்தில் இஸ்லாமியர்களின் பங்குபற்றி ஏற்கனவே பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள் .

                    இப்போதும்நான் சொல்லிய கருத்தில்தான் உறுதியாக இருக்கிறேன்.நான் என்ன சொல்லியிருந்தேன் ? யார் கருத்தை சொல்கிறார்கள் என்று பார்க்க கூடாது , கருத்து சரியா தவறா என்றுதான் சொல்லியிருந்தேன்.

                    இந்த விடயத்திலும் அப்படித்தான் , இஸ்லாமியர்கள் மட்டுமல்ல எல்லா இன, மத,சாதியை சேர்ந்த மக்களும் நிவாரண பணிகளில் மனிதநேய அடிப்படையில் ஈடுபட்டிருந்தார்கள் . அப்போது வந்திருந்த ஊடக செய்திகளின் அடிப்படையில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்ததாக அறிய முடிகிறது . இருந்தபோதும் அப்போதிருந்த அவலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து மக்களும் நிவாரண பணிகளை மேற்கொண்டார்கள் என்றே பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.நான் ஏற்கனவே கூறியதைப்போல் மனிதநேயப்பணிகளை யார் எந்த இன மக்கள் செய்தார்கள் என்று பார்க்கப்பட்டிருக்க தேவையில்லை.

                    ஆனால் முஸ்லிம்களின் நிவாரண பணிகள் விடயத்தில் என்ன நடந்தது ?ஊடக செய்திகளுக்கு மேலால் முஸ்லிம்களின் நிவாரண உதவி வழங்கல் மத பிரச்சாரமாக

                    • முஸ்லிமகளின் நிவாரண பணிகள் மட்டும் மத பிரசாரமாக . மத அரசியலாக முஸ்லிம் அமைப்புகளாலும் , மக்கள் ஆதரவற்ற தமது கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டு , சிறுபான்மை மத அடிப்படை வாதத்துக்கு துணை போகும் கைத்தடிகளாலும் கேலிக்கூத்தாக்கபட்டிருக்கிறது.

            • ##.முழு வசனத்துல நான் சொன்ன பகுதி இருக்குல.அப்புறம் என்ன பித்தலாட்டத்தை கண்டுட்டீங்க அறிவாளிகளே, ##

              முழு வசனத்தையும் அப்படியே போடாமல் பாதி வெட்டியும் ஒட்டியும் அதன் அர்த்தத்தை திரித்து வெளியிடலாம் என்பதை அறியாத பித்தலாட்டக்காரரா இவர் ?

              இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன் . பல வருடங்களுக்கு முன் மணல் கயிறு எனும் விசு முதன் முதல் இயக்கி நடித்து வெளிவந்த படத்துக்கு விகடன் விமர்சனம் இவ்வாறு எழுதியிருந்தது . விசு தனது முதல் படத்திலேயே முழுக்கிணறு தாண்டுவார் என நினைத்தால் , பாதிக்கிணறுதான் தாண்டியுள்ளார் . படத்தயாரிப்பாளர் இந்த வசனத்தின் பாதியை வெட்டி, அதாவது விசு தனது முதல் படத்திலேயே முழுக்கிணறு தாண்டினார் என பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தது . விகடன் இந்த மோசடியை அம்பலப்படுத்தியிருந்ததுடன் கண்டனத்தையும் வெளியிட்டு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தது.
              இதைப்போன்ற ஒரு மோசடியைத்தான் குரான் வசனத்திலும் செய்து விட்டு முழு வசனத்திலும் அந்த அரைகுறை வசனம் இருந்தததா இல்லையா என பித்துக்குளித்தனமாக கேட் கிறார் நண்பர் .

        • சமஸ் எழுதிய கட்டுரையில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. வஹாபிகளுக்கும், மார்க்சிய அறிவு சீவிகளுக்கும் அப்படித் தோன்றினால்,அதற்க்கு சமஸ் பொறுப்பாக மாட்டார் அதுவே பொதுக்கருத்தாகவும் ஆகி விடாது.

          //மிகை ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது. கூடவே, அவர்களுடைய வழிபாட்டுத்தலங்கள், தொன்மையான கலைப்படைப்புகள், தொல்லியல் சின்னங்கள் யாவும் உருவ வழிபாட்டு எதிர்ப்பின் பெயரால் அழிக்கப்பட்டன. ஏகத்துவம், ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றெல்லாம் விவரித்தாலும் அடிப்படையில் இன்றைய சவுதி கலாச்சாரத்தையே ‘தவ்ஹீது’ முன்னிறுத்துகிறது.//

          இதனை நிச்சயம் யாரும் மறுக்க முடியாது. சிரியாவில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான பால்மைரா கோவிலை குண்டு வைத்து தகர்த்தது. மொசுல் அருங்காட்சியகத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான சிற்ப கலைப் பொருட்களை உடைத்தது நாசப் படுத்தியது போன்ற வேலைகள் எல்லாம் எதற்க்காக செய்தார்களாம். சும்மா பொழுது போக்கிற்க்காகவா. ஏகத்துவ சிந்தனை ஏற்ப்படுத்திய விளைவுகள் தான் இவை அனைத்தும். ஏக இறைவனை உச்சி குளிர வைப்பதற்காக 1400 ஆண்டுகளுக்கு முன்பு காபா ஆலயத்திற்கு முன் முஹம்மது நபி எதை செய்தாரோ, அதையே தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் இப்பொழுது ஈராக்கிலும் சிரியாவிலும் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஐ.எஸ் பயங்கரவாதிகள் எதை செய்தார்களோ, அதை வார்த்தைகளால் இங்குள்ள டி.என்.டி.ஜே பொறிக்கிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். நாளை அரசியல் அதிகாரம் கிடைத்தால் அங்கு சிரியாவில் என்ன நடந்ததோ அது தான் இங்கு தமிழ்நாட்டிலும் நடக்கும். விவசாய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதையே ஒழித்துக் கட்ட வேண்டிய ஒரு பாபச் செயல் என்று கூறிய முட்டாள்கள் தானே இவர்கள்.

          சிரியாவில் உள்ள டி.என்.டி.ஜேக்கள் கலை பொருட்களை அழிப்பதை காண : http://www.dailymail.co.uk/video/news/video-1162865/ISIS-destroy-artefacts-sledgehammers-Mosul-museum.html

          http://www.dailymail.co.uk/news/article-3222123/ISIS-launches-attack-civilisation-Jihadis-blow-three-ancient-tower-tombs-Palmyra-just-days-destroying-two-Roman-temples-city.html

          http://news.nationalgeographic.com/2015/09/150901-isis-destruction-looting-ancient-sites-iraq-syria-archaeology/

          //பில்லி,சூன்யம்.ஏவல்.எடுப்பு,காத்து,கருப்பு,பேய் ஒட்டுதல்.என அப்பாவி மக்களின் மூட நம்பிக்கைகளை ………..//

          ஆமாம்… தர்கா,பில்லி சூனியம் என்பது மூட நம்பிக்கை, ஆனால் வானவர் ஜிப்ரில் மூலமாக இறைவன் தன்னுடைய வஹி எனப்படும் இறைச் செய்திகளை நபிக்கு குடுத்து அனுப்பினான் என்று நம்புவது. மேலும், மறுமை நாள் , சொர்க்கம், நரகம், ஜின்கள்,தன்னை வழிப்படாதவர்களை, மதிக்காதவர்களை நரகத் தீயில் தள்ளி ஏக இறைவன் துன்புறுத்துவான் என்று “ஹிட்லர்” தனமாக பேசுவது இதெல்லாம் நிருபணம் ஆன அறிவு சார்ந்த விஞ்ஞான நம்பிக்கைகளோ என்னவோ.

          //நியாயமாக பார்த்தால் அந்த மூடத்தனத்தை ஒழிக்க போராடும் வகாபிகளை பகுத்தறிவாளர்களும் மதசார்பற்ற ஆற்றல்களும் இந்த ஒரு அம்சத்திலாவது ஆதரிக்க வேண்டும்.//

          எதற்கய்யா.. வினவு அலுவலகத்தை பத்துக்கு பத்து அளவில் கழிவறை போல் இருக்கிறது என்று ஏகடியம் பேசியதற்க்காகவா

          • \\இதெல்லாம் நிருபணம் ஆன அறிவு சார்ந்த விஞ்ஞான நம்பிக்கைகளோ //

            அவை மெய்ப்பிக்கப்படாதவையாகவே இருக்கட்டும்.அதனால் உங்களுக்கு என்ன பிரச்னை.அவை தனிமனிதனின் நம்பிக்கைகள்.அவ்வளவுதான்.ஒரு மத நம்பிக்கையாளன் நான் இவற்றை நம்புவதால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் தட்சணை வை என்று கேட்கிறானா.பில்லி சூன்யம் வைக்கிறேன்,எடுக்கிறேன் என்று ஏமாற்றுவதை தடுப்பதும் ,தர்காக்களில் சங்கிலியால் கட்டிப்போடுவதால் மனநோய் குணமாகாது,மருத்துவமனையில் காட்டி மருத்துவம் பார்த்து குணமாக்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வதும் மதவெறி செயலா,மனிதநேய செயலா ,

            இந்த பில்லி,சூன்யம்,பேய் ,பிசாசு மூடநம்பிக்கைகள் மதங்களை கடந்து தமிழ் சமூகம் முழுவதையும் பீடித்துள்ள நோயாக இருக்கிறது,நியாயமாக பார்த்தால் கடவுள் மறுப்பாளர்களும் இடதுசாரிகளும் இந்த கொடுமையை எதிர்த்து பரப்புரை செய்து இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.அதனை செய்பவர்கள் ஒரு மத நம்பிக்கையாளர்கள் என்பதற்காக அவர்கள் பரப்புரையை ஆதரிக்க மாட்டோம் என்பது நியாயமா

            • 2000 ஆயிரம் ரூபாய் தச்சினை வைத்து சாமி கும்பிட்டால் அது மூட நம்பிக்கை பள்ளி வாசலில் போய் இல்லாத அல்லாகிட்ட( அதாவது எதிரில் இல்லாத) அல்லா கிட்ட வேண்டுனா அது மூட நம்பிக்கை இல்லையாம் கி கி கி ,காககககே யின் சீடர்களின் உளரலை நினைத்து சிரிப்பு சிரிப்பா வருது….

            • //தர்காக்களில் சங்கிலியால் கட்டிப்போடுவதால் மனநோய் குணமாகாது,மருத்துவமனையில் காட்டி மருத்துவம் பார்த்து குணமாக்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வது//
              இப்படி சொல்வது மனநோயாளி மீது இருக்கும் அக்கறையினால் அல்ல, தர்காவின் மீது உள்ள வெறுப்பினால். இரண்டுக்கும் ஆயிரம் மைல் தூரம்.

              • ஏற்கனவே இருக்குற நாட்டாமைங்க இம்சையே பெரிய இம்சையா இருக்கு.இதுல இன்னொரு நாட்டாமையா.ஆமா,நாட்டாமைங்களா ,அது எப்படிங்க எங்க மனசுக்குள்ள பூந்து நாங்க என்ன நினைக்கிறோம்னு கண்டுபிடிக்கிறீங்க.அதுவும் தப்பு தப்பா.

                எந்த காரணமும் சொல்லாமல் ஒரே வரில தீர்ப்பு சொல்றீங்களே.இதுக்கு முன்னால உச்ச நீதிமன்ற நீதிபதியா இருந்தீங்களோ.

            • யா.. அல்லாஹ்… இது மிகவும் அபத்தம்.. வஹாபிய கொடுங்கோன்மைகளையும், தர்காவின் மூட நம்பிக்கைகளையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதைப் போன்ற மடத்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது. நாச வேலைகளையே புனித கடமையாக கொண்டிருக்கும் வஹாபியத்தோடு ஒப்பிடும் பொழுது, தர்கா மூட நம்பிக்கைகள் எவ்வளவோ தேவலாம்.

              • சமஸ் ஆனாலும் சரி ஜெயமோகனானாலும் சரி வினவு ஆனாலும் சரி ரெபெக்காமேரி,வியாசன் ஆனாலும் சரி இவர்கள் யாரும் விளங்காமல் எதையும் சொல்லவில்லை என்பது புரிகிறது.முழுக்க விளங்கிக்கொண்டுதான் தங்களின் பொக்கரிப்பை பொறாமையை ஆற்றாமையை இஸ்லாத்தின் மேல் உள்ள அச்சத்தால் அவரவர் அவரவருக்கு தக்கபடி வெளிப்படுத்துகிறார்கள்.அதாவது முழுமையாக விளங்காத நடுநிலையான மக்கள் மீது இந்த இஸ்லாமிய கருத்துகள் விழுந்து அவர்கள் வந்து விடாமல் தடுத்திட வேண்டும்.”ஒட்டுமொத்த அறிவும் என்னிடமிருந்துதான் உற்பத்தியாகிறது.எல்லா ஞானமும் மரபாக என்னிடம்தான் குவிந்து கிடக்கிறது என்று எழுதி குவிக்கும் ஜெயமோகன் என் கிற,செரிமானமில்லாத புளித்த ஏப்பக்காரர்,”முஸ்லிம் கல்யாணவீடுகளுக்கு இந்துக்கள் யாரையும் கூப்பிடுவதில்லை ஐஎஸ ஐஎஸ் ஆதரவாளர்கள்தான் எல்லா முஸ்லிம் இயக்கவாதிகளும் என்று கொஞமும் நா கூசாமல் விடுக்கும் பொய்யை தான் அத்தனை பேரும் வாந்தி எடுத்து வாந்தி எடுத்து, மக்களை இஸ்லாம் என்றாலே மூக்கை பொத்தி போக வைத்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் ஆசையில் மண்தான் விழும். விழுந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இவர்கள் உறுதியாக போராடுகிறார்களாம்…ஐயோ ஐயோ..

  99. /எடுத்த எடுப்பிலேயே சமஸ் பொய் சொல்கிறார்.அந்த மாநாட்டுக்கு போய் வந்தவர் ,போகாதவர் யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பார்த்தால் சொல்வார்கள். ஆண்டவனுக்கு இணையாக வேறு ஒருவரை,அல்லது வேறு ஒன்றை வணங்குவதே ஷிர்க் [இணை வைப்பு] என்பதன் பொருள். இவரோ மூட நம்பிக்கை என்று கற்பனையாக ஒருவரிடம் ”கேட்டு”சொல்கிறார்./உன் இறைவனுக்கு அவன் இணை வைக்கிறான் என்றால் அவன் இறைவனுக்கு நீ இணை வைக்கிறாய் எனென்றால் அவனவனுக்கு அவனவன் இறைவன் இணையற்றவர் இதுல அல்லாவுக்கு மட்டும் ஸ்பெசல் பிரியாரிட்டி கேக்குறார் திப்பு என்பவர் இந்த திப்புதான் வினவில் திப்பு என்ற பெயரில் நிறைய கட்டுரை எழுதி இருக்கிறார் என்றால் வினவின் யோக்கிதை என்ன என்று தெரியவில்லை

    • அறிஞர் ஜோசப் அவர்களின் மேலான கவனத்திற்கு, நீங்கள் குறிப்பிடும் வினவு கட்டுரையாளர் திப்பு (புதிய ஜனநாயகம் இதழில் வரும் கட்டுரையாளர்) வேறு, இங்கே விவாதித்துக் கொண்டிருக்கும் திப்பு வேறு. இதே வினவு தளத்தில் திப்பு சுல்தான் பற்றிக்க கூட கட்டுரை இருக்கிறது. இந்த திப்புதான் அந்த திப்பு இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய வினவின் யோக்கியதை என்னவென்று கேட்பீர்களோ? அச்சமாக இருக்கிறது. மன்னர் திப்புவின் பெயரை முஸ்லீம்கள் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளும் கூட வைத்திருக்கிறார்கள். எனினும் இங்கே விவாதிக்கும் திப்பு தான் யாரென பல முறை தெரிவித்த பிறகும் மீண்டும் மீண்டும் ஏன் இந்த குழப்பம்? அறிஞர் என்றால் சிலது மறந்து போகுமென்றாலும் இந்த அளவுக்கு இருப்பது வருத்தத்தை தருகிறது.

      • சாரி ஒரு ஜஸ்ட் மிஸ் அன்டர்ஸாண்டிங்தான் ,எனக்கு மார்க்சியமெல்லாம் தெரியாது ஆன லெலின் காலத்துல ரஸியா எப்பிடி இருந்துதுனு ஓரளவுக்கு படிச்சி இருக்கேன் அதனால என்னய அறிஞர் என்று சொல்லியெல்லாம் கேலி செய்ய வேண்டாம் சும்மாவே உங்க பாணில திரு அல்லது தோழர்னு சொல்லாலாமே…..

  100. /அடுத்து நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பார்கள் ஏக இறைவன் கொள்கைப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்று நஞ்சு கக்குகிறார் சமஸ்./
    இப்பவே கருத்து தளத்தில் மாற்று மதநம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசியும் எழுதியும் வருகிறார்கள் விவாதத்துக்கு அழைக்கிறார்கள் மாற்று மதத்தவர்களை மட்டும் இல்லை கம்மூனிஸ்டுகள் நாத்திகர்கள் என்று இவர்கள் வம்பிழுக்காத ஆட் களே இல்லை எனலாம் சிறுபானமியினராக இருப்பதால் இவர்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை இதே 80 % கு மேல இருந்து இந்தியாவயும் அரேபியா ஆக்கி விட மாட்டார்கள் என்று சிர்க் மாநாட்டில் உருதி அளித்து இருக்கிறார்கள் போல இருக்குதே , அப்பிடி நடக்கும் பச்சத்தில் மீரா சாகிபே கேக்க மாட்டாரா எல்லோரும் இசுலாமை ஏற்றுக்கொண்டால் சரியா எங்கே என்று அனா நாம பயப்படடாண்டாம் சிர்க் புர்க்னு கூவுர அரேபிய அடிமை கூட்டாம் இசுலாமியர்ட பெருகுறதே கஸ்டம் இதுல இந்தியாமுழுமைக்கும் அரசியல் அதிகாரம் பெருவதாவது கானல் நீரில் தாகம் தீர்க்கலாம் என்று அரேபிய அடிமைகள் நினைக்கலாம் ஆனா நாம பயப்படடாண்டாம்…

  101. தென்றல்,இறைவனுக்கு” உருவம் கற்பிக்காதே”என்பது மட்டும்தான் டிஎன்டிஜெ கொள்கை.உருவம் இல்லை என்பதில் அவர்கள் கருத்து மாறுபாடு கொண்டு பல விவாதங்களை ” உருவமே இல்லை”என்பவர்களோடு நடத்திருக்கிறார்கள்.இது நம்பிக்கை சம்மந்தபட்ட விஷயம்.அதோடு கடவுளை ‘ன்’விகுதி போட்டு விளிப்பது பற்றிய விளக்கமும் பல முறைசொல்லப்பட்டிருக்கிறது.கடவுளுக்கு இணை கற்பிப்பது மட்டும் பெரும்பாவமல்ல அவனை ஆணாகவோ பெண்காகவோ பார்ப்பதும் பெரும்பாவமே.அரபு மொழியில் கடவுளை விளிப்பதற்க்கென்றே சொற்பதம் உண்டு.தமிழில் அதற்கு வாய்ப்பு இல்லை.’ன்’விகுதி பழக்கத்தின் காரணமாய் தொடர்கிறது.’ன்’விகுதி ஒருமையை அழுத்தமாய் குறிக்கும் சொல்லாகவும் இருப்பதாலும் இதை பயன்படுத்துகிறோம்.ஒருபோதும் கடவுளுக்கு பாலின வேறுபாடு கிடையாது.அப்படி நம்புவது மிகப்பெரும் பாவம்.சந்தடி சாக்கில் சமஸாக இருந்தாலும் தென்றலாக இருந்தாலும் வினவுவாக இருந்தாலும் கொஞமும் மனசாட்சியற்று இந்துத்துவ காளிகளோடு எங்களை முடிச்சி போடவேண்டும்.கம்னியூஸமே கண்கண்ட மருந்து என்பதையும் நுழைக்க வேண்டும்.

  102. சமஸ் என்பவர் எதையும் புதிதாய் எழுதிவிட வில்லை.ஓடிப்போன நம்முடைய வியாசன் எழுதியதைத்தான் நீட்டி முழக்கி பெரிய பத்திரிகையில் பெரிய எழுத்தாளர் என்ற தோரணையில் எழுதியிருக்கிறார்.இது போதாதா மாறு வேடத்தில் இருக்கும் டவுசர்களுக்கு? நான் வியாசனுக்கு எழுதிய பதிலையே இன்று தோழ்ர் அருணன் தன் முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.இங்கே ஒரு சிலுவை போட்ட காவி எல்லோரையும் வம்பிற்கிழுப்புவதாக புலம்பி கொண்டிருக்கிறது.வாததிற்க்கழைப்பது வம்பிற்க்கிழுப்பதா? வாதம் என்பது இரு தரப்பும் ஒத்துக்கொண்டு வருவது.வாதம் என்று வந்து விட்டால் ஒப்பந்த அடிப்படையில் காரசாரமாக விவாதிப்பது வாத தர்மத்திற்க்கு உட்பட்டதுதான்.அது யாராய் இருந்தாலென்ன? பார்வையாளர்கள் முடிவு செய்து கொள்வார்கள் யார் வாதம் பலமுள்ளது என்று.நான் மீண்டும் கேட் கிறேன். ஒருவன் தான் சார்ந்த கொள்கையை கோட்பாட்டை சிறந்ததென்று நம்பி அதை பரப்புரை செய்வது என்ன ஜனநாயக விரோத செயலா? அதுமாதிரி, தான் சார்ந்த மதத்தின் சீர்கேடுகளை மூடத்தனத்தை பகிரங்கமாக மக்களிடம் விளக்கி வ்ழிப்புணர்வை ஏற்படுத்தல் என்பதுவும் குற்றமா? திராவிடர் கழகமும் பெரியார் சீடர்களும் அதைத்தானே செய்கிறார்கள்.தர்காக்களில் போய் முட்டி மோதுவதையும் பேயோட்டுவதையும் பில்லி சூனியம் என்று ஏமாற்றி திரிவதையும் கண்டிப்பது சமஸுக்கு வகாபியமாய் தெரிகிறது.அதையே பெரியாரிஸ்ட்டுகள் அலகு குத்தி இழுத்து காட்டுவது,ராமாயணத்திற்க்கு’ உண்மை’விளக்கம் கொடுப்பது தாலி மறுப்பு போராட்டம் நடத்துவது பகுத்தறிவு போராட்டமாய் தெரிகிறது.முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்கிற சீர்திருத்தங்கள்,ஆட்சியை பிடிக்க ,அடுத்த மதங்களை இல்லாமல் ஆக்க என்ற பூச்சாண்டி காட்டி,இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டினால் நடுநிலையான பல இளைஞர்கள் மத்தியில் ஒருபெரிய ஆச்சர்யமும்,ஒரு மதவாதிகளின் மாநாட்டில் மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பா!?என்ற வியப்பும் ஏற்பட்டதை கண்டு அந்த பதைபதைப்பில்தான் இது போன்ற இத்து துருபிடித்துபோன காரணங்களை கூறி பெரிய கட்டுரையாக வரைந்து தள்ளியிருக்கிறார்.அதற்க்கு ஊன்றுகோலாக இந்த மடத்தனத்தில் ஊறிப்போன சில தொப்பிதாடிகளை துணைக்கு வைத்துக்கொள்கிறார்.இதெல்லாம் எங்களை கொஞசமும் முடக்காது.மக்கள் சத்தியத்தை புரிந்து தெளிந்து வருவதை தடுக்கவே தடுக்காது

  103. போகிற போக்கில் மாமணி வியாசன் அவர்கள் முசுலீம் மதத்தையும் பார்ப்பனியத்தையும் ஒப்பிட்டு பார்ப்பன இந்து மதம் அதிக சுதந்திரம் வழங்குவதாக கீழ்க்கண்டவாறு கருத்தளித்திருக்கிறார்.
    எந்தமதமும் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவில்லை என்பதுதான் நிதர்சனம் என்கிற பொழுது தமிழர்களின் கலாச்சாரத்தை பார்ப்பனக் கலாச்சாரமாக மாற்றி ஒப்பிடும் வியாசனது கருத்தை கண்டித்து உண்மையை விளக்க வேண்டியது அவசியமாகும்.

    வியாசனின் கூற்று: “முஸ்லீமாக மதம் மாறுவது என்பது தமிழர்களின் சைவத்தைப் போன்று இன்றைக்குக் கோயிலுக்குப் போய் முருகனைக் கும்பிட்டு விட்டு நாளைக்கு முருகனையே இரண்டு பெண்டாட்டிக்கார கோவணாண்டி என்று திட்டி விட்டுப் போவது போன்றதல்ல, அந்தளவு சுதந்திரம் எல்லாம் அங்கே கிடையாது.”

    வியாசனின் கூற்று தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழர்களின் பண்பாட்டையும் மூடிமறைக்கும் பார்ப்பன தரகுவேலை என்பதற்கு கீழ்க்காணும் சான்றை முன்வைக்க விரும்புகிறேன்.
    பார்ப்பன இந்துமதத்தில் கடவுள் எப்பொழுதுமே பார்ப்பனர்களுக்கு கீழ் உள்ளவர்கள் தான்.
    இதைத்தான்

    தெய்வா தீனம் ஜெகத்சர்வம்
    மந்த்ரா தீனந்து தைவதம்
    தன் மந்தரம் பிராஹ்மணாதீனம்
    ப்ராமணா மமதைவம்

    என்று சொல்கிறது பார்ப்பனமந்திரம்.

    இதன் பொருள் உலகம் தெய்வத்துக்குள் அடக்கம்; தெய்வம் மந்திரத்திற்குள் அடக்கம்; மந்திரம் பிராமணணுக்குள் அடக்கம். ஆதலால் பிராமணரே நம் தெய்வம் என்பது இதன் பொருள்.
    ஆக பார்ப்பனிய இந்துமதத்தில் கடவுளுக்கான இடமே அவ்வளவுதான். ஆனால் இதை மறைத்து விட்டு கடவுளைத்திட்டுவதை பார்ப்பனிய இந்துமதச் சுதந்திரம் என்கிறார் வியாசனின். ஆதிக்கசாதிகள் சைவப் பற்று பார்ப்பனியத்திற்கு காலம் காலமாக இப்படித்தான் சேவகம் செய்து தமிழ் பண்பாட்டை காவிமயமாக்கிவருகிறது.

    • இந்த தென்றலுக்கு உண்மையில் அரளை பெயர்ந்து விட்டதோ என்னமோ மதத்தை விமர்சிக்கும் உரிமை இசுலாமில இருக்குதானு கேட்டா பார்ப்பனியம் புஸுவானமுனு எங்கெங்கயோ போறாரே அண்ணன் நல்லா வருவிங்கன்னே …

    • ஒப்பீடு எனபது புத்தகங்களின் பக்கங்களை கொண்டு செய்வது அல்ல . இந்து மதத்தில் மத புத்தகம் படித்து , நீங்கள் சொல்லும் வாக்கியங்களை படித்து இறைவணக்கம் செளுதுவாரில்லை . கற்பனை உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு வந்து ஒப்பீடு செய்யுங்கள் .

      • ஓப்பீடு என்பது புத்தகங்களின் பக்கங்களை கொண்டு செய்வது அல்ல. நிஜ உலகத்திற்கு வந்து ஒப்பீடு செய்யுங்கள் என்று இராமன் கூறும் சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.

        1.பார்ப்பனிய இந்துமதத்தின் அடித்தளமே சாதி அமைப்புதான். சிறுநாள் கொண்ட சேரியில் தலித்துகளின் பிணம் ஆதிக்க சாதிகளால் பொதுப்பாதையில் கொண்டு செல்லப்படாததில் இருந்து உ.பியில் 8வயது தலித் சிறுவன் பார்ப்பன சாதிகளால் கைவெட்டப்பட்டதுவரை நிறைய எடுத்துக்காட்டுகள் விளக்கித்தெரிய வேண்டியதில்லை. உயர் மட்டத்தில் பார்ப்பான் கீழ்மட்டத்தில் தலித் என்பது மட்டும் பிரிவல்ல. எந்த இருசாதிகளும் புனிதம் தீட்டு எனும் கறாரான வரையறையின் அடிப்படையில் தான் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

        2. மிக சமீபத்தில் தான் கருவறைத்தீண்டாமை உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறப்பால் பார்ப்பனரைத்தவிர யாரும் கருவறைக்குள் பூசிக்க முடியாது என்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது.

        2. பிறப்பு இறப்பு சடங்குகளில் ஆதிக்க சாதி இந்துக்கள் (கவனிக்க பார்ப்பனர்கள் அல்லர்)பூணுல் அணிவிக்கிற வழக்கம் சூத்திர சாதிகளுக்கு தன் தாய் தந்தைக்கு இறுதி மரியாதை செய்யும் உரிமை கிடையாது. அவன் கணநேரம் பார்ப்பானாக மாறுவதன்றி வேறு வழியில்லை.

        3. திருநெல்வேலி மாவட்டத்தில் சிவபெருமானுக்கு மத்யானப்பறையர் என்று பெயர் உண்டு. சிவபெருமானே பறையனாக இருப்பதால், அய்யர்கள் அந்த ஒரு மணிநேரத்தை தீட்டாகவே கருதுகின்றனர்.

        4. எல்லா மதமும் பெண்களை இரண்டாம் தர குடிகளாக அடிமைகளாக கருதும் பொழுது, பார்ப்பனிய இந்துமதம் எல்லா சாதி பெண்களையும் பார்ப்பனர் உட்பட சூத்திரச்சிகள் என்றே வரையறுக்கிறது. பார்ப்பனிய இந்துமதத்தின் வேதங்களை ஓதுவதற்கு இவர்களுக்கு உரிமை கிடையாது. மிகச் சமீபத்தில் ஐயப்பன் கோயிலில் பெண்கள் வரக்கூடாது என்று சொல்லப்பட்டதன் காரணம் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதும் கோர்ட்டில் வாதமாக வைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தாண்டி திணமணி வைத்தி ஐயப்ப பக்தர்கள் ஒழுக்ககேடானவர்கள் என்று தன் தலையங்கத்திலேயே எழுதியிருக்கிறார். பார்ப்பனிய இந்துமதம் உழைக்கும் மக்களின் நம்பிக்கையை எப்படி பார்க்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

        5. பார்ப்பனிய இந்துமதம் சமஸ்கிருதம் புனிதமான மொழி என்று பிறமொழிகளை தீட்டாக வரையறுக்கிறது. தாய், தாய்ப்பால், தாய் மொழி இம்மூன்றும் எந்தமனிதனுக்கும் மிகமுக்கியமானவை என்று சொல்கிற பொழுது இதை அவமதிப்பதற்கு காரணம் பார்ப்பனிய இந்துமதத்தின் அடித்தளமே. தன்னை மொழிபற்றாளர் என்று அழைத்துக்கொள்கிற வியாசன் போன்ற தமிழ்மொழியை சமஸ்கிருதத்திற்கு கூட்டிக்கொடுக்கும் தரகர்களை இந்த அடித்தளம் தான் அம்பலப்படுத்தி காண்பிக்கிறது.

        மேற்கண்ட ஐந்து எடுத்துக்காட்டுகளிலும் எவர் ஒருவர் பார்ப்பன மேலாண்மையை கேள்வி கேட்கிறாரோ அவர் பார்ப்பனராக இருந்தாலும் அழித்தொழிக்கப்படுவார். மற்றபடி தெய்வங்களை திட்டுவதெல்லாம் இதன் அடித்தளத்தின் மீது தான். ஆகையால் தான் அம்பேத்கர் இந்துமதம் கொடூரங்களின் கூடாரம் என்றார்.

        • இந்து மதத்தின் சமூக கேடுகளை அழகாக எடுத்து கூறி இருகிறீர்கள் . ஒப்பீடு என்பதை காணவில்லை

        • தோழர். தென்றல்….

          //தன்னை மொழிபற்றாளர் என்று அழைத்துக்கொள்கிற வியாசன் போன்ற தமிழ்மொழியை சமஸ்கிருதத்திற்கு கூட்டிக்கொடுக்கும் தரகர்களை……//

          இது எப்படி என்று நிருபிக்க முடியுமா. இதுநாள் வரையில் அவர் அளித்த மறுமொழியில் இருந்தோ, அல்லது அவரின் வலைப்பூவில் இருந்தோ நீங்கள் சான்றுகள் அளிக்க முடியுமா. என்ன வகையான தரகுத் தனமான கருத்துக்களை கூறி விட்டார் என்பதை தக்க சான்றுகளுடன் மெய்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீங்கள் தக்க சான்றுகளுடன் நிருபிக்கும் பட்சத்தில் வினவு தளத்தில் மட்டுமல்ல, அவரின் சொந்த தளத்தில் கூட இனி எதுவும் எழுதமாட்டார் என்பதற்கு நான் உறுதி தருகிறேன். வெறுப்பின் பாற்பட்டு எந்த கருத்தினையும் கூறக் கூடாது. சைவமும், கத்தோலிக்க கிறித்துவமும்(கால்டுவெல்,ஜி.யு.போப்) தான் தமிழுக்கு அதிகப்படியான தொண்டினை செய்துள்ளது என்பது வரலாறு.

    • நான் போய்விட்டேன் என்று தெரிந்தவுடனே வந்திட்டார் கவுண்டமணி தென்றல். உந்த விளக்கம் எல்லாம் இருக்கட்டும், நான் “ராவுத்தர்கள் என்றாலே மோசம்” என்று இழிவாகப் பேசியதாகவும், “ராவுத்தர்-கொள்ளு-குதிரை குறித்து சொலவடை” பற்றிக் கூறியதாகவும் உளறியது மட்டுமன்றி அதைக் காரணம் காட்டி சவாலும் விட்ட தென்றல்,அதற்கு ஆதாரம் கேட்டவுடன் ஓடி ஒழித்து விட்டு, இப்பொழுது நைசாக நோட்டம் பார்த்து விட்டு, நான் இந்த தளத்தை விட்டு ஒரேயடியாகப் போய் விட்டேன் என்ற எண்ணத்தில் வந்து தனது கச்சேரியைத் தொடங்கி விட்டார். மற்றவர்கள் கூறாததைக் கூறியதாக கூறியதாக வசை பாடுவது மட்டுமன்றி சவாலும் விடும் போது, இனிமேலாவது கண்ணாடியை நன்றாகத் துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டு பார்ப்பார் என நம்புகிறேன். மற்றவர்களைப் பற்றி இல்லாத பொல்லாததையெல்லாம் உளறும் போது இருக்கிற சுறுசுறுப்பும், வீரமும் ஆதாரம் கேட்டால் மட்டும் ஓடி ஒளிந்து விடுகிறது. நான் கேட்டதற்கு ஆதாரம் தர வக்கில்லாது விட்டால், குறைந்த பட்சம் மன்னிப்பாவது கேளுமையா? நாங்கள், ஈழத்தமிழர்கள் மறக்க மாட்டோமே தவிர மன்னித்து விடும் பண்பு எங்களுக்கு நிறையவே உண்டு.

      //ராவுத்தர்கள் என்றாலே மோசம் என்று தன் நண்பன் சொல்லியதாக வினவு விவாதத்தில் பகிர்ந்திருக்கிறார்.// // ராவுத்தர்-கொள்ளு-குதிரை குறித்து வியாசன் சொல்லிய சொலடையும் இங்கு அவரால் பதியப்பட்டிருக்கிறது.//// “யோக்கியமாக பேசுகிற லாலா அவர்கள் வியாசன் தன் நண்பனை வைத்துச் சொல்லிய ராவுத்தர் குறித்த இழிவுபடுத்தல்களுக்கு என்ன பதில் கொடுக்கப்போகிறார்?”//

      இதற்கெல்லாம் ஆதாரம் எங்கே?????

      நான் இப்படி யாரும் கூறாததை கூறியதாகக் கூறி, சவாலும் விட்டு விட்டு, ஆதாரம் காட்டாதிருந்தால் திப்புசுல்தான் இங்கே என்னைக் கடித்துக் குதறிக் காயப் போட்டிருப்பார். ஆனால் தென்றல் அவருக்கு அடிக்கடி முதுகு சொறிந்து விடுவதால் அப்படியே அடக்கி வாசிக்கிறார் போலிருக்கிறது. 🙂

      ///போகிற போக்கில் மாமணி வியாசன் அவர்கள் முசுலீம் மதத்தையும் பார்ப்பனியத்தையும்..// ஒப்பிட்டு

      பேசப்படும் விடயத்துக்கு தொடர்பில்லாது விட்டாலும், சும்மா சம்பந்தமில்லாமல் பார்ப்பனீயத்தை இழுத்து விட்டு, தனக்கு அதிகம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்வது தான் பெரியவர் தென்றலின் வேலை. சும்மா முஸ்லீம்களுக்கு முதுகு சொறிந்து விடுவதற்காக பார்ப்பான்களை இங்கே இழுக்கிறார். பார்ப்பனர்களுக்கு தென்றல் போன்ற பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் கொடுக்கிற அளவு முக்கியத்துவத்தை சராசரி தமிழர்கள் கொடுப்பதில்லை. எல்லாமே பிழைப்பு வாதம் தான். அது ஒருபுறமிருக்க, சைவர்கள் (இந்துக்கள்) யாரும் முருகனைத் திட்டி விட்டு கோயிலுக்குப் போகாமல் இருந்தால் அல்லது வெளிப்படையாக நாத்திகம் பேசினால் கூட யாரும் அவர்களை ஊரை விட்டு விலக்கி வைக்கப் போவதுமில்லை, ‘இந்து ஜமாஅத்’ அவர்களைக் கூப்பிட்டு விளக்கம் கேட்கப் போவதுமில்லை. அல்லது இலங்கையில் சூஃபி இஸ்லாமிய மத குருவின் உடலை தோண்டியெடுத்து தெருவில் வீசியது போல, எல்லாம் வீசப் போவதில்லை. உண்மை என்னவென்றால் இந்துமதத்தினதும் இந்துக்களின் சகிப்புத் தன்மையால் தான் பெரியார் கூட நீண்டகால, ஆரோக்கிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார் என்று யாராவது கூறினால் அது மிகையாகாது.

      ”I am more comfortable with the belief structures of Hinduism than I would be with those of other states of which I know. As a Hindu, I claim adherence to a religion without an established church or priestly papacy, a religion whose rituals and customs I am free to reject, a religion that does not oblige me to demonstrate my faith by any visible sign, by subsuming my identity in any collectivity, not even by any specific day or time or frequency of worship. As a Hindu, I subscribe to a creed that is free of the restrictive dogmas of holy writ, that refuses to be shackled to the limitations of a single holy book”

      • வியாசன் அவர்கள் ராவுத்தர்களை இழிவுபடுத்தியது குறித்தும் ராவுத்தர்களைப் பற்றி சொலவடை சொன்னதற்கும் ஆதாரம் கேட்டிருக்கிறார். இவையனைத்திற்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்பதை இங்குள்ள வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். வியாசன் குறித்த அனைத்துவிவாதங்களையும் நாள்வாரியாக வேர்ட் பைபிலில் தொகுத்துவைத்திருக்கிறேன். ஆகையால் அதை எப்போது வேண்டுமானாலும் இங்கு பதிவது ஒரு பொருட்டல்ல. எதை எழுதினேனோ அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும் இம்மியளவும் விலகுவதாயில்ல்லை என்பதை வியாசனுக்கு தெரியப்படுத்துகிறேன். எனவே இங்கு முதன்மையாய் செய்யவேண்டியது வியாசன் ஒரு பதிலிப்பார்ப்பனர் என்பதை நிறுவுவதே. பார்ப்பனிய மேலாண்மையை இந்துத்துவ பாசிசத்தை நிறுவும் இத்தகைய மனிதர்களின் இசுலாமிய மதவெறி, சமஸ்கிருதத்திற்கு தரகு வேலை பார்க்கும் மொழிப்பற்றில்லாத களவாணித்தனம், தலித்துகளை இழிவுபடுத்தும் ஆதிக்கசாதிவெறி இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதே.

        இன்றைய நிலையில் உழைக்கும் மக்களை பிரித்தாளும் பிஜே போன்ற கும்பலும் சரி வியாசன் போன்ற இந்துத்துவ கும்பலும் சரி ஒன்றே. ஏதோ வியாசனது புண்ணியத்தால் அவர்தரப்புவாதங்களை வியாசன் தான் எழுதுகிறார் என்று அறிந்துகொள்கிறோம். அந்தமட்டில் அவரை முழுக்கவும் பயன்படுத்திக்கொள்கிறேன். மேலும் பயன்படுத்திக்கொள்வேன்!

        • தென்றலிடம் ஆதாரம் இருக்கிறது ஆனால் இல்லாத ஆதாரத்தை எப்படி எடுப்பதென்று தான் அவருக்குத் தெரியவில்லை. நான் அதையெல்லாம் கூறியதாக அவரது மண்டைக்குள் இருந்து அவருடன் பேசும் குரல்களிலொன்று ஆதாரங்களை அவருக்குக் கொண்டுவந்து கொடுக்குமென நம்புகிறார் போலிருக்கிறது. இவரது உளறுவாதத்தையும், திருகுதாளங்களையும் இந்த தளத்தில் இவருடன் கலந்துரையாடியவர்களுக்குத் தெரியும். மற்றவர்கள் போகப் போக புரிந்து கொள்வார்கள். 🙂

          • https://www.vinavu.com/2014/07/07/actors-behind-iraq-civil-war/#comment-154138

            உதாரணமாக, தமிழ்நாட்டில் ஒரு முஸ்லீம் நண்பன் என்னடாவென்றால் அவர்கள் குடும்பம் ராவுத்தர்களாம், ராவுத்தர்கள் அரேபியாவிலிருந்து வந்த குதிரை வீரர்களாம் என்றார், அதற்கு நான், இரண்டு முறை துருக்கிக்கு விடுமுறைக்குப் போயிருக்கிறேன். அங்கு துருக்கியர்கள் கூட அப்பாவை உன்னைப்போல் ‘அத்தா’ என்று தான் அழைக்கின்றனர்.. அதனால் நீ சரியான _______ப்பயலாகத் தானிருக்க முடியும் என்று ஜோக்கடித்தேன். அதற்கு அவன் வேற யாருக்கும் முன்னால் இப்படிச் சொல்லாதே, அடிக்க வந்து விடுவார்கள் என்றான்.

          • வியாசன் கேட்கும் ஆதாரம் இதோ இருக்கிறது.இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறார்.பேசக்கூட அருவருப்பான இழிவுபடுத்துதலை” நண்பனின்” மேல் ஏற்றி சொல்வதும் அதையே வரலாற்று ஆதாரம் போல் பேசுவதும் என்ன வகை நாகரீகம்.இதை அந்த பதிவில் படித்த போதே மறுமொழி எழுத கை துறு துறுத்தது.ஆனாலும் சாக்கடையில் இறங்கி சண்டை போட பிடிக்காமல் எதுவும் எழுதவில்லை.

            https://www.vinavu.com/2014/07/07/actors-behind-iraq-civil-war/#comment-154138

            \\\உதாரணமாக, தமிழ்நாட்டில் ஒரு முஸ்லீம் நண்பன் என்னடாவென்றால் அவர்கள் குடும்பம் ராவுத்தர்களாம், ராவுத்தர்கள் அரேபியாவிலிருந்து வந்த குதிரை வீரர்களாம் என்றார், அதற்கு நான், இரண்டு முறை துருக்கிக்கு விடுமுறைக்குப் போயிருக்கிறேன். அங்கு துருக்கியர்கள் கூட அப்பாவை உன்னைப்போல் ‘அத்தா’ என்று தான் அழைக்கின்றனர்.. அதனால் நீ சரியான _______ப்பயலாகத் தானிருக்க முடியும் என்று ஜோக்கடித்தேன். அதற்கு அவன் வேற யாருக்கும் முன்னால் இப்படிச் சொல்லாதே, அடிக்க வந்து விடுவார்கள் என்றான். ///

            • திப்பு…..

              \\\உதாரணமாக, தமிழ்நாட்டில் ஒரு முஸ்லீம் நண்பன் என்னடாவென்றால் அவர்கள் குடும்பம் ராவுத்தர்களாம், ராவுத்தர்கள் அரேபியாவிலிருந்து வந்த குதிரை வீரர்களாம் என்றார், அதற்கு நான், இரண்டு முறை துருக்கிக்கு விடுமுறைக்குப் போயிருக்கிறேன். அங்கு துருக்கியர்கள் கூட அப்பாவை உன்னைப்போல் ‘அத்தா’ என்று தான் அழைக்கின்றனர்.. அதனால் நீ சரியான _______ப்பயலாகத் தானிருக்க முடியும் என்று ஜோக்கடித்தேன். அதற்கு அவன் வேற யாருக்கும் முன்னால் இப்படிச் சொல்லாதே, அடிக்க வந்து விடுவார்கள் என்றான். ///

              எல்லாம் சரி தான். வியாசன் ராவுத்தர்களை பற்றி ஏதோ தவறாக இழிவுப்படுத்தி கருத்து வெளியிட்டார் என்று கூறினீர்களே. அது என்ன என்று தெரிந்துக் கொள்ளலாமா.

          • Viyasan Said this : I

            உதாரணமாக, தமிழ்நாட்டில் ஒரு முஸ்லீம் நண்பன் என்னடாவென்றால் அவர்கள் குடும்பம் ராவுத்தர்களாம், ராவுத்தர்கள் அரேபியாவிலிருந்து வந்த குதிரை வீரர்களாம் என்றார், அதற்கு நான், இரண்டு முறை துருக்கிக்கு விடுமுறைக்குப் போயிருக்கிறேன். அங்கு துருக்கியர்கள் கூட அப்பாவை உன்னைப்போல் ‘அத்தா’ என்று தான் அழைக்கின்றனர்.. அதனால் நீ சரியான _______ப்பயலாகத் தானிருக்க முடியும் என்று ஜோக்கடித்தேன். அதற்கு அவன் வேற யாருக்கும் முன்னால் இப்படிச் சொல்லாதே, அடிக்க வந்து விடுவார்கள் என்றான்

            Ref:

            https://www.vinavu.com/2014/07/07/actors-behind-iraq-civil-war/

            feedback 30.1.1

            Viyasan Said this : II
            1. முதலாவது விடயம் : தென்றலின் “காயல்குடி முஸ்லீமுக்கும் முகமதியத்துக்கும் என்ன தொடர்பு” என்ற கேள்விக்குத் தான் அரபுக்கள், காயல்பட்டணம் வந்து தாழ்த்தப்பட்ட தமிழ்ப்பெண்களை மணந்து கொண்டனர். அப்படித் தான் இஸ்லாம் பரவியது என்று பதிலளித்தேன். .
            எனது இந்தப் பதிலில் எந்த மாற்றமுமில்லை. அந்த விடயத்தைச் சுற்றி தென்றலும் சரவணனும் எப்படித் தான் குளறினாலும், எத்தனை முறை கும்மியடித்தாலும், அது தான் என்னுடைய கருத்து.

            Ref:

            https://www.vinavu.com/2014/07/07/actors-behind-iraq-civil-war/

            feedback 38

            Viyasan Said this : III

            2. இரண்டாவது விடயம்: காயல் பட்டணத்துக்கு வந்த அரபுக்கள், தாழ்த்தப்பட்டவர்களை மணமுடித்தார்கள் எனவும் முஸ்லீம்களின் பெரும்பான்மையினர்களின் முன்னோர்கள் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தான் ஆனால் இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டு முஸ்லீம்களும் தமது முன்னோர்களையும், தமது வேர்களையும் அரேபியாவில் தேடுவதில் பெருமைப்படுகிறார்கள். கிறித்தவ, இந்து தமிழர்கள் அபப்டிச் செய்வதில்லை என்ற எனது கருத்து.

            https://www.vinavu.com/2014/07/07/actors-behind-iraq-civil-war/

            feedback 38

            • இது எனக்குத் தெரியும், இதை நான் மறுக்கவில்லை. நான் இவ்வளவு நாளும் எந்த நண்பனைப் பற்றிக் குறிப்பிட்டேனோ அவர்கள் கூட ராவுத்தர்கள் தான் என்றும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இதில் எங்கே நான் ராவுத்தர்கள் “மோசம்” என்று கூறியிருக்கிறேன் என்பது தான் கேள்வி. ராவுத்தர், மரைக்கார் எல்லாமே தமிழ் வேர்ச் சொற்கள் அவர்கள் எல்லாம் தமிழர்கள், அரேபியாவிலிருந்து வரவில்லை என்றும் நான் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அதை விட கொள்ளு பற்றி எல்லாம் நான் கூறவில்லை. தென்றல் கூறுவது போல் இதில் எங்கே இழிவு இருக்கிறது என்பதை விளக்கவும்.

              • குதிரை விற்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இலங்கை, இந்திய கரையோரங்களில் கரையொதுங்கிய சில அரபுக்கள், கரையோரங்களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழ்பெண்களை மணந்தனர், இலங்கையிலும் அது நடந்தது. நான் மட்டும் அதைக் கூறவில்லை. இலங்கை முஸ்லீம் ஒருவரே அதைக் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார். உண்மையான வரலாற்றையும் எழுதக் கூடாது. நெருக்கமான நண்பர்களுடன் ஜோக்கடிப்பது கூட தமிழ்நாட்டில் இழிவு படுத்துவதாகக் கருத்துப் படுமோ என்னவோ எனக்குத் தெரியாது. 🙂
                https://www.colombotelegraph.com/index.php/sri-lankan-muslims-are-low-caste-tamil-hindu-converts-not-arab-descendants/
                இலங்கை முஸ்லிம்கள் அரபுக்களின் வம்சாவளியினரல்ல, மதம் மாறிய தாழ்த்தப்பட்ட இந்து தமிழர்களே.
                http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_5.html

                //தமிழ் முசுலீம்கள் என்றுயறிப்படுகிற ராவுத்தர்கள் என்றாலே மோசம் என்று தன் நண்பன் சொல்லியதாக வினவு விவாதத்தில் பகிர்ந்திருக்கிறார். ராவுத்தர்-கொள்ளு-குதிரை குறித்து வியாசன் சொல்லிய சொலடையும் //

                தென்றல் திரிக்கிறார், அவர் மேலே கூறியுள்ள படி, ராவுத்தர்கள் மோசம் என்று நான் கூறவில்லை என்பது தான் என்னுடைய வாதம்.

                • என்னமோ அரபுகாரர்களிடம் கலப்புற்றது தமிழ் நாட்டு பூர்வ குடிகள் தான் என்று ஆதாரம் இன்றி அடிச்சிவிடராறு இந்த வியாசன். உண்மையை சொல்லணும் என்றால் அலாவுதீன்கில்ஜி, மற்றும் அவன் தளபதி மாலிக் கபூர் இடம் தமிழ் தாயை காட்டிகொடுத்தது , கூட்டிக்கொடுத்த்து யாருணு பார்த்தா வியாசனின் மனதுக்கு இனிய தமிழ் மன்னர்களான சுந்தர பாண்டியன் தான் என்பது தான் கி.பி 1311 ஆண்டு மதுரை வரலாறு. அதற்கு பின்பு மாலிக் கபூர் மதுரையை ஆட்சி செய்த போது இஸ்லாம் மதத்தை தென் தமிழ் நாடு எங்கும் பரப்புகின்றான். அதன் பிறகும் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                  இந்த பின்னணியில் இப்ப சொல்லுங்க வியாசன் . இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறியது யாராக இருக்கும் என்று? ஆளும் இஸ்லாமிய மாலிக் கபூர் அதிகார வர்க்கத்துடன் தொடர்புடைய ஹிந்து ஆண்டைகளா அல்லது அதிகாரத்தின் கடைகோடியில் இருந்த தமிழ் நாட்டு பூர்வ குடிகளா? பதில் சொல்லுங்கள் வியாசன் !

                • வியாசனுக்கும் அவரது சொம்பு தூக்கிகளுக்கும் இதில் இழிவு எதுவும் தெரியவில்லையாம்.”எங்க முன்னோர் அரபு நாட்டுலேர்ந்து வந்த குதிரை வீரர்கள்” என்று ஒருத்தர் சொன்னாராம்.ராவுத்தர்கள் தந்தையை அத்தா என அழைப்பதை வைத்து இவுரு உடனே ”இல்ல நீ துருக்கிக்காரன் மாதிரி அப்பாவை கூப்பிடுரதுனால-சரியான ———பயலா இருப்பாய் என நகைச்சுவையாய் சொன்னாராம்.[கோடு போட்ட இடத்தில் ”துலுக்க” என்ற சொல்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்]

                  சிரிப்புக்காக எதை வேண்டுமானாலும் உளறலாமா.]இது அப்பட்டமான இழிவு படுத்தல் இல்லையா .இல்லை என்று வாதாடும் மரமண்டைகளுக்கு ஒன்று சொல்கிறேன்.தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக மம்மி-டாடி புழக்கத்தில் உள்ளது.அதற்காக ”நீ டாடி என அப்பாவை கூப்பிடுவதால் நீ சரியான ”வெள்ளைக்காரப்பயல்” ஆகத்தான் இருப்பாய் ”என அவனிடம் ஜோக்கடிப்பாரா வியாசன்,ஜோக்கடித்தால் அவன் செருப்பாலடிப்பான்.முசுலிம் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா.எங்களை பார்த்தால் அவ்வளவு இளக்காரமாக தெரிகிறதா இந்த வெறி —- கூட்டத்திற்கு.[கோடிட்ட இடத்தை பொருத்தமான சொல்லால் நிரப்பிக்கொள்க].

                  அப்புறம் எந்த ஆதாரமும் இல்லாமல் வியாசனும் அவர் மேற்கோள் காட்டும் கட்டுரையாளரும் அரபு முசுலிம் வணிகர்கள் தலித் பெண்களை மணந்து கொண்டார்கள் என்கிறார்கள்.முன்னரே சொல்லி இருக்கிறேன்.தலித்தாக இருந்து முசுலிமாக மாறியதில் எங்களுக்கு பெருமையே.சிறுமை ஏதுமில்லை.ஆனால் உண்மையையும் நாம் அறிய வேண்டும்.அரபு வணிகர்கள் அனைத்து சாதி பெண்களையும் மணமுடித்திருக்க வேண்டும்.அதனால்தான் கேரளாவில் மொத்த இந்து சமூகமுமே முசுலிம்களை ”மாப்புளா”[மருமகன்கள்]என அன்புடன் அழைக்கிறது.தமிழ்நாட்டிலும் ஏர்வாடி,கீழக்கரை போன்ற கடலோர ஊர்களில் மாப்பிள்ளை முசுலிம்,என அழைக்கப்படும் குடும்பங்கள் உள்ளன.தர்காக்களை நடத்துவோர் லெவை முசுலிம்கள் என அறியப்படுகின்றனர்.

                  .அந்த அரபுக்கள் முறையாக மணமுடித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.அந்த பெண்கள் தலித் ஆக இருந்தாலென்ன.மேல்சாதி ஆக இருந்தால் என்ன.நம்பூதிரிகள் நாயர் வீடுகளில் பிள்ளை பெத்து போட்டது போல் அப்பன் பேர் தெரியாத குழந்தைகளை அந்த தாய்மார்கள் பெத்து போடவில்லை.

                  சண்டை போட சாக்கடையில் இறங்கியாகிவிட்டது.அதனால் கேட்கிறேன்.யாழ்,வெள்ளாளர்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் கேட்கவில்லை.உண்மையை அறிந்து கொள்ள கேட்கிறேன்.யாழ் சைவர்கள்-பார்ப்பனர்கள்-தேவரடியார்கள் என சரவணன் ஒரு கருத்துரு முன் வைக்கிறாரே.அது பற்றி வியாசனின் கருத்தென்ன.

                  • //சிரிப்புக்காக எதை வேண்டுமானாலும் உளறலாமா///

                    உளறலாம், அப்படி நண்பர்கள் உளறுவதுண்டு. அது திப்புவுக்கும் நன்றாகத் தெரியும். எங்கு நட்பின் அத்திவாரம் பலமாக இருக்கிறதோ அங்கு எப்படி வேண்டுமானாலும் உளறலாம்/ஜோக்கடிக்கலாம். நண்பர்கள் அதை வெறும் ஜோக்காகத் தான் எடுத்துக் கொள்வதுண்டு. அது போன்றே என்னையும்(ஈழத்தமிழர்களையும்) தெனாலியில் கமலஹாசன் பேசுவது போல என்னுடன் தமிழில் பேசியும். இந்துக்களையும் பற்றிக் கூட, என்னுடைய முஸ்லீம் நண்பர்(கள்) ஜோக்கடித்துண்டு. நானும் பதிலுக்கு ‘பழக்க வழக்கம் தெரியாத துலுக்கப்பயல்’ என்று கூறியிருக்கிறேனே தவிர, அவர்கள் என்னை இழிவுபடுத்தியதாக நான் நினைக்கவில்லை. நண்பர்கள் ஜோக்கடிக்கும் போது அது இழிவுபடுத்தல் இல்லை. உதாரணமாக, அமெரிக்க கறுப்பின நீக்ரோ நண்பர்களைப் பார்த்து, அவர்களின்நெருங்கிய நண்பர்கள் ‘Whatsup my Nigger’ என்றால் அவர்கள் கோபிப்பதில்லை. அனால் அதையே ஒரு வெள்ளையர் அவரை இழிவுபடும் நோக்கத்தில் Nigger சொல்லைப் பாவித்தால் அவருக்கு நிச்சயமாக அடி விழும். இங்கு என்ன பிரச்சனை என்றால், நான் ராவுத்தர்களை அல்லது முஸ்லீம்களை இழிவு படுத்தியதாக எப்படியாவது வாதாடி தென்றலுக்கு முதுகுசொறிந்து விடத் துடிக்கிறார் திப்பு சுல்தான். ஆகவே இவரது உளறல்களுக்கு இனிமேல் பதிலளிப்பதாக இல்லை. 🙂

                    • இலங்கையிலும் தீவிரவாத வஹாபிய இஸ்லாம் வேகமாக வேரூன்றி வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. இலங்கை இராணுவத்தின் புலனாய்வு அறிக்கையின் படி இலங்கையில் பல வஹாபி முஸ்லீம்களின் வீடுகளில் அமர்வதற்கு கதிரைகள் கூட இல்லையாம். அவற்றை வாங்க அவர்களிடம் பண வசதியில்லை என்ற காரணத்தால் அல்ல, எல்லோரும் வசதி படைத்தவர்கள் தானாம். ஏன் கதிரைகள் இல்லையென்றால் அரேபியாவில் முகம்மது நபிகளின் காலத்தில் கதிரைகள் கிடையாதாம். இதை படித்த போது, இப்படியே வஹாபியிசம் தமிழ்நாட்டில் நன்றாக வேரூன்றினால், போகிற போக்கில் திப்பு நானா, மீரான்சாகிப் எல்லாம் தங்களின் வீடுகளை வாடகைக்குக் கொடுத்து விட்டு, நல்ல மணலுள்ள இடமாகப் பார்த்து கூடாரம் போட்டுக் குடியேறினாலும் குடியேறி விடுவார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். 🙂

                      தமிழ்நாட்டு முஸ்லீம்களை விட இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கல்வியில் மிகவும் முன்னிலையில் உள்ளனர் என்பது இங்கு எல்லோருக்கும் தெரியுமோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அது தான் உண்மை. இந்த விடயத்தில் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இலங்கை முஸ்லீம்களுக்கும் நிறைய ஒற்றுமையுண்டு. அதனால் தானோ என்னவோ, தமிழ்நாட்டில் அரபுமயமாக்கலும், வகாபியிசமும் வெகு வேகமாக ஊடுருவி, பாரம்பரிய இஸ்லாமிய தமிழ் கலாச்சாரத்துக்கும், பழக்க வழக்கங்களுக்கும் எதிராக அது போர் தொடுத்தாலும், அவற்றை இழிவுபடுத்தினாலும், இதுவரை தமிழ்நாட்டு முஸ்லீம்களிடமிருந்து வஹாபியத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எதிராக எதிர்க்குரல் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை. இதுவரை வெறும் வலைப்பதிவில் கூட அதை எதிர்த்து யாரும் பதிவிட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லீம்களோ அதற்கு எதிராக குரலெழுப்பவும், கேள்வி கேட்கவும் தொடங்கி விட்டனர். உண்மையில் அது நல்ல அறிகுறி தான்.

                      அதிலும் இலங்கை முஸ்லீம் ஒருவர் சவூதி அரேபியாவின் பணத்தினால் இலங்கை முஸ்லீம்கள், தமது ஏனைய இலங்கைச் சகோதரர்களிடமிருந்து தனிமைப்படுத்தப் படுவதாகவும், “அரபுகளின் உளுகியா” வில் ’ கட்டப்படும் தேவையற்ற மார்க்கப் பாடசாலைகளை (மதரசாக்களை) ஏனைய இலங்கையர்கள் சந்தேகத்துடன் பார்ப்பதால், இனங்களுக்கிடையேயான நல்லுறவில் விரிவு ஏற்படுகிறது எனவும் கவலை தெரிவித்துள்ளதை, கீழேயுள்ள இணைப்பில் காணலாம். தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை அது. வஹாபியிசத்தால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே நிரந்த இடைவெளி ஏறபடும் என்று இதைத் தான் நானும் குறிப்பிட்டேன். அதையே இதை எழுதிய இலங்கை முஸ்லீமும் “அரேபியர் எமக்குக் கட்டிய பள்ளிகளை விடவும் நாம் இழந்ததும் இழக்கப் போவதும் அதிகம்” என்கிறார்.

                      ‘இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு அலைக்கு யார் காரணம்?’
                      http://www.jaffnamuslim.com/2016/02/blog-post_384.html

                      அது மட்டுமன்றி. கொழும்பிலுள்ள முஸ்லீம் பெண்களுக்கான சர்வதேச பாடசாலையொன்றில் இஸ்லாமிய அடிப்படைவாத வஹாபியிசம் போதிக்கப் படுவதாகவும், காலங்காலமாக இலங்கை முஸ்லீம்கள் கொண்டாடி வந்த நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவை தீவிரவாதவகாபியிசத்தின் அடிப்படையில் அந்தப் பாடசாலை தடை செய்து விட்டதால், ஆத்திரமடைந்த ஒரு இலங்கை முஸ்லீம் தந்தை அங்கு படித்துக் கொண்டிருந்த தமது மகளை பாடசாலையை விட்டு நீக்கிக் கொண்டாராம். அந்தப் பாடசாலையில் நடைபெறும் தீவிரவாத இஸ்லாமிய போதனைகளையும் அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். ஆனால் தமிழ்நாட்டிலோ அப்படி எதுவும் கிடையாதென மூடி மறைக்கின்றனர்.

                    • \\நண்பர்கள் அதை வெறும் ஜோக்காகத் தான் எடுத்துக் கொள்வதுண்டு//

                      கிண்டல்,கேலிகளை நட்புக்காக ஏற்றுக்கொள்ளலாம்.அது நண்பர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது.ஆனால் அதை ஊரெல்லாம் சொல்லித்திரிவது நட்புக்கு அழகில்லை.

                      ஒரே ஒரு கேள்விக்குத்தான் பதில் வந்துருக்கு,மீதி கேள்விகளுக்கு பதில் எங்கே.

                  • குழாயடி சண்டை போல ஆகிவிட்டது இனி வினவு தளத்துக்கு கமென்ட் 600 வரை எகிறலாம் என்னை பொருத்தவரையில் வியாசன் அவர்கள் சாக்கடையில் கல் எரிவது போல தெரிகிறது, சாக்கடை தெரித்தால் உமது சலவை ஆடைதான் அழுக்கு ஆகும் இதில் அரபுக்காரனக்கு வக்காலத்து வாங்க சில தமிழ் அடிமைகள் அய்யோ அய்யோ…

                  • திப்பு ……

                    இப்பொழுதும் சொல்கிறேன் வியாசன் எதுவும் தவறாகவோ இழிவு படுத்தும் விதமாகவோ ஒன்றும் கூறவில்லை. அவர் கூறியது வரலாற்றை!!! நாங்கள் எந்த நோக்கில் கூறினோமோ அதையே தான் நீங்கள் முகத்தை சுற்றி மூக்கை தொட்டு இருக்கிறீர்கள். நீங்கள் கூறியது என்ன…

                    //அந்த அரபுக்கள் முறையாக மணமுடித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.அந்த பெண்கள் தலித் ஆக இருந்தாலென்ன.மேல்சாதி ஆக இருந்தால் என்ன.//

                    இது நீங்கள் கூறியது தானே.. இதையே தானே நாங்களும் கூறுகிறோம். அரபுக்காரனுக்கும் தலித் பெண்ணுக்கும் பிறந்தால் என்ன கேவலமா? ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா? எந்த முட்டாள் அப்படி சொன்னது. இப்படி ஒரு பிறப்பு கேவலம் என்றோ இழிவு என்றோ யார் சொன்னது. வியாசன் கூறினாரா அல்லது நாங்கள் அவ்வாறு கூறினோமா. தேவை இல்லாமல் இதற்க்கு டென்ஷன் ஆகி ஆரம்பம் முதலே இந்த விடயத்தை பெரிதுப் படுத்தி சண்டையிட்டது நீங்களும் உங்கள் சகா மீராவும் தான்..

                    //தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக மம்மி-டாடி புழக்கத்தில் உள்ளது.அதற்காக ”நீ டாடி என அப்பாவை கூப்பிடுவதால் நீ சரியான ”வெள்ளைக்காரப்பயல்” ஆகத்தான் இருப்பாய் ”என அவனிடம் ஜோக்கடிப்பாரா வியாசன்,//

                    தாரளாமாக ஜோக் அடிக்கலாம். எங்கள் கல்லூரியிலேயே IELTS, TOEFL போன்ற மேல்நாட்டு ஆங்கில உச்சரிப்புகளை பயிலும் எங்கள் தோழிகள், பழக்கம் விட்டு போய்விட கூடாது என்பதற்காக தொட்டதற்கெல்லாம் ஆங்கிலத்திலேயே பேசி கொண்டிருக்கும் எங்கள் சக தோழிகளை அப்படி தான் கிண்டல் செய்வோம். “அப்படியே நீ வெள்ளகாரனுக்க்த் தான் பொறந்த தமிழ் ல பேசு” என்போம். இல்லையென்றால் “எலிசபெத் மகாராணி பொண்ணு இங்கிலீஷ் ல தான் பேசுவா” என்றுக் நட்புடன் கலாய்த்துக் கூறுவோம். யாரும் இதை இழிவாக எல்லாம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். உங்களுக்கு சகிப்பு தன்மை குறைவு போல். திருத்திக் கொள்ளுங்கள். It’s all in the game.

                    • இவர்களின் அப்பன் ஆத்தா பெயரை மாற்றி கூறினால் கூட , மாற்றி கூறி இவர்களை அழைத்தால் கூட இவர்களுக்கு கோபமே வராதாம். என்ன ஒரு சகிப்பு தன்மை. இந்த சகிப்பு தன்மையை அனைத்து தமிழ் மக்களிடமும் எதிர்பார்ப்பது தானே தவறு . புரிந்தால் சரி

                    • ரெபக்கா மேரி வெள்ளைக்காரனுக்கு பிறந்ததாக தனது தோழிகளை கேலி செய்வாராம்.சரி,அதனை அவர்களது பெற்றோர் முன்னிலையில்,சிறியவர் பெரியவர் என பலரும் கூடியிருக்கும் சபையில் சொல்வாரா.அப்படி சொல்ல மாட்டார்.ஏனெனில் அது நாகரீகமில்லை என்பதை அவரும் அறிவார்.ஏன் ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவன் கூட அறிவான்.

                      வியாசனை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.அவருக்கு சொந்த புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது என இங்கும் மெய்ப்பிக்கிறார்.

                      ‘அத்தா என்று கூப்பிடுவதால் நீ சரியான துலுக்கப்பயலாகத்தான் இருக்க வேண்டும்” என்று இவர் சொன்னபோது அவரது நண்பன் ”வேற யாருக்கும் முன்னால் இப்படிச் சொல்லாதே, அடிக்க வந்து விடுவார்கள் ” என்று சொல்லியிருப்பதாக அவரே சொல்கிறார்.அதாவது இப்படி பேசுவது இழிவு கற்பிப்பது,பிறருக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துவது ,என்ற கருத்துப்பட பொதுவெளியில் பயன்படுத்தாதே என எச்சரித்திருக்கிறார்.ஆனாலும் நண்பன் சொன்னாலும் என் புத்தியில் ஏறாது என அழிச்சாட்டியமாக அதனை பொதுவெளியில் சொல்கிறார்.

                      இதில் இழிவுபடுத்தல் ஏதும் வியசனுக்கோ,அவரது தொண்டர் குழாமுக்கோ தெரியலையாம்.

                      திருமணம் போன்ற விழாக்களில் இளைஞர்கள் குழாம் தனியேதான் அமர்ந்திருக்கும்.அங்கு சிரிப்பும் கும்மாளமும் தூள் பறக்கும்.நண்பர்கள் இடையே ஆயிரம் விதமான கேலி,கிண்டல்கள் இருக்கும்.யாவரும் அறிந்ததே.அவற்றில் சிலவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டு சொல்லி சிரிக்கலாம்.சிலவற்றை நண்பர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.அதனால்தான் இளம் நண்பர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வயதில் மூத்தவர்கள் ,அல்லது தெரியாதவர்கள் வந்தால் ,அவர்கள் ஏதேனும் பேசி விட்டு செல்லும் வரை சட்டென்று ஒரு அமைதி வந்து விடுவதை கவனிக்கலாம். அதுதான் நாகரீகம் அய்யா.

                    • \\ அரபுக்காரனுக்கும் தலித் பெண்ணுக்கும் பிறந்தால் என்ன கேவலமா? ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா? எந்த முட்டாள் அப்படி சொன்னது. //

                      தலித்களை கேவலமாக கருதும் மேல்சாதி திமிர்தான் எந்த ஆதாரமும் இல்லாமல் அரபுக்கள் தலித் பெண்களை மணமுடித்தார்கள் என்று வியாசனை பேச வைக்கிறது.இது முட்டாள்தனமா இல்லையா என்று நீங்கள் வியாசனைத்தான் கேட்க வேண்டும்.என்னை கேட்க முடியாது.ஏனென்றால் தலித்களில் இருந்து முசுலிமாக மாறி வந்ததில் நாங்கள் பெருமை கொள்வதாக இதே விவாதத்தில் நான் அறிவித்திருக்கிறேன்,

                      தலித்கள் மட்டுமே எவன் கேட்டாலும் பெண்ணை கட்டிக் கொடுப்பார்கள்.நாங்கள்லாம் அப்படி இல்லை என்ற மேல்சாதி கண்ணோட்டம் வியாசனின் கூற்றில் தொக்கி நிற்கிறது.மேலும் வியாசன் அதை வரலாற்று உண்மை போல் சொல்வதைத்தான் ஆட்சேபிக்கிறேன்.

                    • நல்ல கேள்வி ரெபெக்கா மேரி அவர்களே. பல நூற்றாண்டுகளுக்கு ,முன்னர் அரபுக்கள் தாழ்த்தப்பட்டவர்களை மணந்தனர், தமிழ் முஸ்லீம்களின் முன்னோர்களில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் என்ற உண்மையை திப்பு சுல்தானால் தாங்க முடியவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்திருந்தாலும் கூட, அவரது சாதிவெறியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் அதை அவமானமாகக் கருதுகிறார். அதனால் தான் அவருக்கு கோபம் பொங்கி வருகிறது. ரெபெக்கா மேரி குறிப்பிட்டது போல் உங்களின் முன்னோர்கள் எல்லாம் தலித்துகள் ஹே, ஹே. ஹே என்று நான் கேலி செய்யவுமில்லை. யாருமே அந்த எண்ணத்தில் இங்கே அதைக் குறிப்பிடவுமில்லை. இலங்கையின் முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள், பேராசிரியர் இம்தியாஸ் போன்ற நன்கு கற்றுத் தேர்ந்தோர் குறிப்பிட்டதை மட்டும் தான் நான் இங்கே சுட்டிக் காட்டினேன். திப்பு என்ன தான் முற்போக்கு, சாதியொழிப்பு வேடம் போட்டாலும், அவரது உள்மனதில் அவர்களின் முன்னோர்களில் தலித்துக்கள் அல்லது தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கலப்பு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரையறியாமலே அந்த உணர்வு இங்கே வெளிப்படுத்தப்பட்டு விட்டது என்பதை அறிவு, விளக்கமுள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் வினவில் [புகழ் பெற்ற டியூப் லைட்டான ‘சரவணனால்’ மட்டும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே தான் நான் அவரைக் கணக்கில் எடுப்பதில்லை.

                      அரபுக்கள் தாழ்த்தப்பட்ட தமிழ்ப்பெண்களை மணந்தார்கள் என்று நான் கூறிய உண்மையை ஏற்றுக் கொள்ள திப்புவின் சாதிவெறி அனுமதிக்காத காரணத்தால், அந்த ஆத்திரத்தில் என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பில் சரவணன் யாழ்ப்பாண வெள்ளாளரைப் பற்றி உளறியதற்கு என்னிடம் விளக்கம் கேட்கிறார் திப்பு. சரவணனின் உளறல்களுக்கு சரவணனுக்கே பதில் தெரியாது. நான் எப்படிப் பதிலளிக்க முடியும். சரவணன் கூறுவதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் படி சரவணனிடம் அல்லவா கேட்கவேண்டும். சாதிவெறியும், ஆத்திரமும் திப்புவும் அறிவை மங்கச் செய்து விட்டது. ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு என்று சும்மாவா சொன்னார்கள்.

                    • பிற்ப்பட்ட ஜாதி பெண்கள் இருவர்க்குள் சண்டை வரும்போது குழாயடி சண்டைதான் ஏய் பள்ளனோழி,பறையனோழி என்று திட்டிக்கொள்வது சகஜமாக கிராமங்களில் நடைபெரும் இப்பொழுது கொஞ்சம் குறைந்து உள்ளது ஆனால் அதே விசயத்தை இனையதளத்தில் கொண்டு வந்து விட்டனர் வியாசனும் திப்புவும் ,வியாசனாவது எதார்த்தை போசுகிறார் நான் கேக்கும் கேள்வி இதுதான் ஏன்யா உங்க குழாயடி சண்டைக்கு தாழ்த்தப்பட்ட எங்கள் இனம்தானா கிடைத்தது தமிழகத்தில் பள்ளர்களோ பறையர்களோ மொத்தமாக மதம் மாறிய்தற்க்கு சான்றுகள் இருக்கிறதா வியாசன் அவர்கள் தக்க சான்றுகளை வைக்க வேண்டுகிறேன் இசுலாமியனுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் என்ன சம்பந்தம் ,அப்பப்ப தாழ்த்தப்ப்ட்ட இளைஞர்களை மதம் மாற அழைப்பு விடுப்பதை தவிர இசுலாமியனுக்கும் தாழ்த்தப்ப்ட்டவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிக்கொள்ளுகிறேன் …

                    • திரு வியாசன் அவர்கள் தன் தவறை சரி என்று நிலைநாட்ட வரலாற்றை திரிக்கின்றார். இலங்கை வரலாற்று ஆசிரியர்களை வம்புக்கு இழுக்கின்றார். பேராசிரியர் கலாநிதி எ.ஆர்.எம் இம்தியாஸ் அவர்களை வலிய அழைகின்ரார். அரபு-தமிழ் மக்கள் இன கலப்பை பற்றி அவர்கள் என்ன கூறினார்கள் என்று ஆதாரத்துடன் விளக்கவேண்டியது வியாசனின் கடமையாகின்றது. ஆனால் அதனை அவர் செய்யவில்லை. உண்மையில் நிகழ்ந்த அரபு – முக்குவர் இணகலப்பை நோக்கி அது வியாசன் கூறியது போன்று அரபு – தாழ்த்தபட்டவர் இன கலப்பு என்று எவராவது கூறுவார் எனில் அவகளின் அறிவு சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கும். முக்குவர் என்போர் பரதவர் இனத்துக்கு உட்பட்ட மக்கள். அவர்கள் பொருளாதார நிலைகளில் தனித்து இயங்க கூடியவர்கள். அவர்கள் குடிமை சாதியினரும் அல்லர். கேரளகரையோர இடைசாதியினரான முக்குவர் ஈழ கிழக்கில் குடியேறிய போது திமிலரை வென்று நிலஉடமை இடை சாதியினராக மாறினர். இது தான் வரலாறு.
                      //இலங்கையின் முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள், பேராசிரியர் இம்தியாஸ் போன்ற நன்கு கற்றுத் தேர்ந்தோர் குறிப்பிட்டதை மட்டும் தான் நான் இங்கே சுட்டிக் காட்டினேன். //

                      தனி மனிதர்களை தாக்குவது எனது நிலைப்பாடு இல்லை என்றபோதிலும் நாணும் யாழ்பானத்தவன் என்ற முறையில் சைவ வெள்ளாள – தேவரடியார் இன கலப்பை பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். அரபு – தமிழ் மக்கள் இன கலப்பை பற்றி பேசும் தருணத்தில் சைவ வெள்ளாள – தேவரடியார் இன கலப்பை பற்றி பேசுவதில் என்ன அருவருப்பு , தவறு இருக்கின்றது என்று வியாசன் தான் கூறவேண்டும். திரு பொன்னம்பலம் , சுந்திரபாண்டியன் , ஆறுமுக நாவலர் ஆகியோர் சைவ வெள்ளாள – தேவரடியார் இன கலபுற்று வந்தவர்கள் என்ற உண்மையை யாழ் தேசமே அறியும் போது அந்த விடயம் வியாசனுக்கு தெரியாமல் இருக்கு வாய்ப்பில்லை. ஆனால் உண்மை வியாசனை சுடுகின்றது.

                      //யாழ்ப்பாண வெள்ளாளரைப் பற்றி //

                  • _________தலித்திலிருந்து என் முன்னோர் மதம் மாறியதால அவர்களுக்கு ஜாதி இழிவு நீங்கிவிடும் என்று சொல்லி தமிழர்களாக வாழும் எங்களையும் அரேபிய அடிமை ஆக்க பார்க்கிறாய் இதற்க்கு செம்பு துக்க வர்க்கம் சொர்க்கம் என்று சொல்லிக்கொண்டு சிலர் வருவதை பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது…

                • வியாசனின் அப்பட்டமான சைவ வெள்ளாள சாதி வெறி வெள்ளாள சாதி வெறியர் பொன்னம்பலத்தை (பொன்னம்பலம் இராமநாதன்) பின்தொடர்கின்றது. எப்படி என்று பார்ப்போம். Sir Ponnambalam Ramanathan stated in a speech to the Ceylon Legislative Council that the In 1885, Sir Ponnambalam Ramanathan stated in a speech to the Ceylon Legislative Council that the Tamil-speaking Muslims are low caste Hindus who converted to Islam. ஈழ கிழக்கு முக்குவர் சமுகத்து முஸ்லிம் மக்களை பார்த்து இந்த பொன்னம்பலம் ஹிந்து கீழ் சாதியினர் அவர்கள் முஸ்லிமாக மதம் மாறியவர்கள் என்கின்றார். இந்த low caste என்ற ஆங்கில வார்த்தை பதத்தை வியாசன் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறுகின்றார். முதலில் பொன்னம்பலத்துக்கு ஈழ கிழக்கு முக்குவ-முஸ்லிம் மக்கள் மிது என்ன வெறுப்பு என்று பார்ப்போம். அன்றைய சிலோன் சட்டமன்றத்தில் முஸ்லிம் மக்களுக்கு தனி ஒதுகீடு வழங்ககூடாது என்று கூறுகின்றார் இந்த வெள்ளாள வெறியர் பொன்னம்பலம். Ramanathan’s thesis was that the Ceylon Moors, as the Sri Lankan Muslims were then called, were Muslim by religion and Tamil by ethnicity. Therefore, they did not deserve a separate seat in the Legislative Council. ஈழ வடக்கு (யாழ்) சைவ வெள்ளாளர்களின் சாதி வெறி தம் சொந்த தமிழ் மக்கள் மிதே சாட்டையாக அடிக்கின்றது என்பதனை தவிர வேறு என்ன சொல்லமுடியும்.

                  இந்த பொன்னம்பலத்தின் உண்மை முகத்தையும் பார்ப்போம்.பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது. இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர் பொன்னம்பலம் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக “தமிழினத் தலைவர்” சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள். லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

                  “தமிழர்களின் தலைமை” எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள்,சைவ வெள்ளாளர்கள் அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய “சைவ வெள்ளாள தமிழர்கள்” மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

                  இத்தகைய பின்னணியில் இருந்து இந்த பொன்னம்பலம் என் ஈழ -கிழக்கு முஸலிம்-முக்குவர்களை ஏன் low cast என்று குறிபிடுகின்றார் என்பதனை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். இது அப்பட்டமான சைவ வெள்ளாளரின் தலைவரான பொன்னம்பலத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறி மற்றும் முக்குவர்கள் மீது அவருக்கு இருந்த சாதிவெறி.

                  இவைகள் மட்டுமா இந்த சைவ வெள்ளாள சாதிவெறியர் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்கு செய்த துரோகம்? இந்த பொன்னம்பலம் தான் மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பில் முதன்மையாக நிற்கின்றார். இந்த தமிழ் இன துரோகியை , சைவ வெள்ளாள சாதி வெறியரை ,பொன்னம்பலத்தை பின்தொடரும் இந்த வியாசனை என்னவென்று அழைப்பது ? சாதி வெறியர் என்ற சொற்பதத்தை தவிர!

                  • கேதீஸ்வரனின் உளறல்களுக்கு எல்லையே கிடையாது போலிருக்கிறது., முதலில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் காலத்தையும், தமிழ்மண்ணில் அரபுக்களின்/இஸ்லாத்தின் வருகைக் காலத்தையும் புரிந்து கொள்ளாமல் குழப்பியடித்தார். இபொழுது என்னடாவென்றால் 1851 இல் பிறந்த சேர். பொன்னம்பலம் இராமநாதனையும் அவருக்குப் பின்னர் 1901 இல் பிறந்த G.G. பொன்னம்பலத்தையும் ஒப்பிட்டுக் குழப்பியடிக்கிறார். கேதீஸ்வரன் இலங்கைத் தமிழர்களையும், அவர்களின் தலைவர்களையும், அவர்களின் வரலாற்றையும் பற்றி உளறு முன்பு நன்கு கற்றுத் தேற வேண்டுமென்பது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.

                    // இந்த சைவ வெள்ளாள சாதிவெறியர் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்கு செய்த துரோகம்? இந்த பொன்னம்பலம் தான் மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பில் முதன்மையாக நிற்கின்றார்.//

                    இந்த உளறலில் உண்மையில்லை. மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிபோனதற்கு முதல் காரணம் ஹிந்தியன்கள் தான்.

                    ‘ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா?’
                    http://viyaasan.blogspot.ca/2014/05/blog-post_22.html

                    • இந்த சாதி வெறியர்களான பொன்னம்பலன்களை பற்றிய வரலாற்று குறிப்புகளை ,துரோகங்களை பற்றி தெளிவாகவே குறிப்பிட்டு இருந்தேன்…. வியாசனுக்கு குழப்பம் எற்படகூடாது எனில் அவர் தான் தெளிவான மனோநிலையில் படிக்கவேண்டும்…. இப்போது gg பொன்னம்பலத்தை தூக்கி பிடிக்கும் இந்த வியாசன் அதே பொன்னம்பலத்தை பற்றி எழுதிய விடயத்தை பார்ப்போமா ?

                      viyasan said…

                      //மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பில் முஸ்லிம் மட்டுமல்ல ஜிஜி பொன்னம்பலம் போன்ற யாழ் தமிழ் அரசியல்வாதிகளின் பங்குமுண்டு.///
                      உண்மை. அதை ஈழத்தமிழர்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் அப்படி வாக்களித்த ஒரே காரணத்துக்காக, அந்த தமிழினத்துரோகத்துக்காகத் தான் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் அரசியல் தலைமைத்துவத்தை மட்டுமல்ல தமிழர்கள் மத்தியில் அவரது அரசியல் வாழ்வையும் அத்தமனிக்கச் செய்தவர்கள் யாழ்ப்பாணத்தமிழர்கள் என்ற உண்மையை மட்டும் யாரும் பேசுவதில்லை.

                      ஜிஜி பொன்னம்பலத்தின் துரோகத்தை உண்மை என்று ஒத்துகொண்டவ்ர் இப்பொது வினவில் மருதளிகின்றார்.

            • வியாசன் முஸ்லிம்களை மற்றும் தமிழ் பூர்வ குடிகளை இழிவு செய்ய கருத்து வரம்பு மீறி போசுகின்றார். சில இடங்களில் கருத்தில் முரண்படுகின்றார். அதே வேலையை நாமும் செய்ய தேவை இல்லை என்றாலும் …….

              1.எனது முதல் வாதம் என்னவென்றால் வியாசனின் கருத்துரிமை வரம்பு மீறலை பற்றியது. அரபுகாரர்களுடன் தமிழ் கரை ஓர தமிழ் பூர்வ குடிகள் [வியாசன் பார்வையில் தாழ்த்தபட்டவர்கள்] கலப்புற்றார்கள் என்ற அவதூரு. அதற்கு ஆதரமாக இணைய தளத்தை காட்டுகின்றார். இவர்கள் எல்லாம் என்ன மானுடவியல் ஆய்வாளர்களா ? அல்லது மரபணு ஆய்வில் கை தேர்ந்தவர்களா ? அதன் அடிப்படையில் அந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த கருத்தாக்கத்துக்கு வந்தார் என்று வியாசன் கூறியே ஆகவேண்டும். ஒரு வேலை வியாசன் தன் கூற்றில் இணைய தள ஆதாரங்களை கூறுவார் என்றால் அதே போன்று அதே விவாதத்தில் சரவணன் என்பவர் யாழ் சைவ வெள்ளாளராக கூறிக்கொள்ளும் பிரிவினர் எல்லாம் தேவரடியார் மரபில் வந்த ஆரிய இன கலப்பு அடைந்த கலப்பினம் என்பதனை வியாசன் ஏற்கின்றாரா? அவர்களின் [யாழ் சைவ வெள்ளாளரின் ]Y குரோமோசோம்கள் ஆரியர்களின் அன்பளிப்பு என்பதனையும் வியாசன் ஏற்கின்றாரா? மேலும் நெருக்கமான நண்பர்களுடன் ஜோக்கடிப்பது கூட தமிழ்நாட்டில் இழிவு படுத்துவதாகக் கருத்துப் படுமோ என்னவோ எனக்குத் தெரியாது என்று பிதற்குகின்றார் வியாசன். ஒரு குறிப்பிட்ட இன-மத மக்களை பற்றி நெருங்கிய நண்பர்களுடன் கிண்டல் அடிப்பது அதன் பின் அதனை வினவு பின்னுட்டத்தில் வெளியிடுவது தான் வியாசனின் மனித பண்பா? இது தான் நாகரிகமா?

              2. இவ்வளவையும் செய்து விட்டு நான் எங்கு நான் ராவுத்தர்கள் “மோசம்” என்று கூறியிருக்கிறேன் என்ற கேள்வியை எழுப்பும் வியாசனை நினைக்கும் பொது தான் ஹிட்லரின் கோயபல்சுவின் நினைவு தான் எனக்கு வருகின்றது.

              3. வியாசனின் வரம்பு மீறலை பார்த்தோம். இப்பொது முரண்பாடுகளை பார்ப்போம்.இலங்கை தமிழ் முஸ்லிம்கள் அங்கு உள்ள தமிழ் பூர்வ குடி மக்கள் தான் என்பதனை உறுதியாக கூறும் வியாசன் அதே நேரத்தில் அதற்கு எதிராக தமிழ் நாட்டில் தமிழ் பூர்வ குடிகள் [வியாசன் பார்வையில் தாழ்த்தபட்டவர்கள்] அரபுகளுடன் கலப்புற்றார்கள் என்று reverce angle லில் பேசுகின்றார். அதற்கு எல்லாம் ஆதாரம் என்ன?

              இனம்-மதம் சார்ந்து பொதுவெளியில் பேசுவது தவறு என்ற சிறு உணர்வு கூட இல்லாத வியாசனை என்ன செய்யலாம்.?

              • change : இனம்-மதம் சார்ந்து பொதுவெளியில் இழிவாக பேசுவது தவறு என்ற உணர்வு கூட இல்லாத வியாசனை என்ன செய்யலாம்.?

                • ‘இனம்-மதம் சார்ந்து’ முஸ்லீம்களைப் பற்றி பொதுவெளியில் பேசுவது தான் தவறு, ஆனால் பார்ப்பனர்களைப் பற்றி மட்டும் பேசலாம். கட்டுரைகள் எழுதலாம். 🙂
                  நான் பார்ப்பனர்களின் விசிறி அல்ல, இருந்தாலும் முஸ்லீம்களின் விடயத்தில் மட்டும் வினவில் சில தமிழ்நாட்டுத் தமிழர்களின் Grandstanding ஐ நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. சரவணனின் உளறல்களுக்குப் பதிலெழுதி எனது நேரத்தை வீணாக்குவதில்லை என்பது நான் எப்பவோ எடுத்த முடிவு. ராமனாக வந்தாலென்ன, றஹீமாக வந்தாலென்ன, அந்த முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

                  //என்ன செய்யலாம்??// கடத்திப் போய்க் கழுத்தை வெட்டலாம். நல்ல காலம் நான் இந்தியாவில் இல்லை. 🙂

              • இலங்கையிலும் அதே நிலைமைதான் . குதிரை விற்பதற்காக வந்த அரேபியர்களில் அந்த இனத்துப்பெண்கள் இருக்கவில்லை . தண்ணியில்லா அரேபிய பாலைவனத்திலிருந்து வந்தவர்கள் இலங்கையில் காணப்பட்ட வளமான நிலத்தையும் , தண்ணீரையும் கண்டு அங்கேயே செட்டிலாக விரும்பினார்கள் . அப்போது அவர்களுக்கு பெண் கொடுத்தவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் .இது தவிர சிலர் இஸ்லாத்துக்கு மதம் மாறினார்கள் . இப்போது கூட கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்கள் “நாங்கள் இஸ்லாமியமானவங்க ” என்று சொல்வதை கேட் கலாம். இப்படித்தான் இலங்கையில் முஸ்லிம்கள் பெருகினார்கள் .

                எனவே அவர்கள் வியாஸன் சொல்லியதுபோல் அவர்கள் தமிழ் பூர்வ குடிகள்தான். இலங்கையில் இருந்தாலென்ன , தமிழ்நாட்டில் இருந்தாலென்ன .

                மேலும் பொது வெளியில் இனம் , மதம் , சாதி பற்றி குறி[ப்பிட்டு அவதூறாக பேசுவது அநாகரிகமானது என்று ஏகத்துக்கும் பொங்கியிருந்தீர்கள் .
                இந்த தளத்திலும் சரி , இந்த தலைப்பில் பங்கு பற்றி வருபவர்களும் சரி , இந்து மதத்தையும் , பார்ப்பனர்கலையும் , ஆரியர்கள் என்றும் , வந்தேறு குடிகள் என்றும் அவதூறு சொல்லும்போது எங்கு போய் பதுங்கியிருந்தீர்கள் ?

                • லாலா மற்றும் வியாசனுக்கு இனி தனி தனியாக எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறன். பொதுவில் பார்பனர்களை பற்றி ஏன் எழுதுகின்றிர்கள் என்று கேட்கின்றார்கள் இருவருமே. இருவரும் கருத்தோற்றுமை அடைந்து எனது கருத்துக்கு நிற்கும் போது எனது வேளையும் சுலபம் ஆகின்றது. நன்றி நன்பர்களே . நாளைய விவாதத்தின் போது விரிவாக பேசுவோம்

                  • நானும், வர்க்கப்போளிஸுகளான தென்றல் , கேதிஸ், ராம்ராஜ் , சூரியன் போன்றவர்களுக்கு தனித்தனியாக பதில் கூறுவதில்லை . எல்லாமே ஒன்றுதான்.!!??

                • 1.பூர்வகுடி தலித் மக்களுடன் மட்டும் தான் அரபு முஸ்லிம்கள் இனக்கலப்பு அடைந்தனர் என்று லாலா மற்றும் வியாசன் ஆகியோர் கூறுவதில் ஏதாவது சிறிது உண்மையாவது உள்ளதா என்று பார்ப்போம்.

                  ஈழ கிழக்கு முக்குவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த நெருக்கமான உறவு சுவாரசியமானது மட்டுமல்ல கேரளத்துடன் ஈழத்துக்கு உள்ள தொடர்பைக் காட்டுவதாகவும் இருக்கிறது.கேரளக் கரையோரத்தில் மிகப் பழங்காலத்திலிருந்தே வணிகம் செய்து வந்த அரபு வணிகர்களுக்கும் உள்ளூர் மீனவ (முக்குவ) பெண்களுக்கும் இடையேயான திருமண/சம்பந்த உறவுகளை உள்ளூர் அரசர்கள் ஊக்குவித்ததால் நாளடைவில் முக்குவப் பெண்களுக்கும் அரபு ஆண்களுக்கும் பிறந்த ஒரு இனம் உருவானது. தங்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களை உள்ளூர்காரர்கள் மாப்பிள்ளைகள் என்று அழைத்ததால் இந்த கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் (Mappila/Moplah) என்ற பெயர் வந்தது என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் இருந்து ஈழ கிழக்குக்கு இடம் பெயர்ந்த அவர்கள் இன்றும் கூட முக்குவ முஸ்லீம்கள் என்று குறிப்பிடப்படுவதும் ,மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் மத்தியில்முக்குவரின் சமூக நிறுவனமான வயித்துவார் என்ப்படும் தாய்வழிக் குடிமைப்பு (Matri Liniage ) காணப்படுகின்றது. எனவே யார் அரபுகளுடன் கலப்பு அடைந்தார்கள் என்ற கேள்விக்கான பதிலை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்

                • 2.வியாசன் அவர்கள் “” ‘இனம்-மதம் சார்ந்து’ முஸ்லீம்களைப் பற்றி பொதுவெளியில் பேசுவது தான் தவறு, ஆனால் பார்ப்பனர்களைப் பற்றி மட்டும் பேசலாம். கட்டுரைகள் எழுதலாம்””” என்றும் லாலா அவர்கள் “””இந்த தளத்திலும் சரி , இந்த தலைப்பில் பங்கு பற்றி வருபவர்களும் சரி , இந்து மதத்தையும் , பார்ப்பனர்கலையும் , ஆரியர்கள் என்றும் , வந்தேறு குடிகள் என்றும் அவதூறு சொல்லும்போது எங்கு போய் பதுங்கியிருந்தீர்கள் ?””” என்றும் விசனப்ப்டுகின்றார்கள். இந்த வருத்தம் உண்மையான வருத்தம் தானா அல்லது இது வேசமா என்று பார்ப்போம்.

                  i.பார்பனர்கள் , ஹிந்து மதம் பற்றி பேசவே கூடாது என்றால் பார்பன-ஹிந்து மதத்தில் வருனாசார பாகுபாடு இருக்கவே கூடாது என்ற சிறு உண்மை கூட இவிங்களுக்கு தெரியலையே! அதுவும் குறிப்பா சூத்திரர்கள், பஞ்சமார்கள் என்று ஹிந்து சமுகத்தில் அடித்தட்டில்ல் இருக்கும் உழைக்கும் மக்களை எந்த பார்பன நாதாரியும் கூறக்கூடாது தானே. அப்படி எழுதப்பட்டு உள்ள வேதங்களை பார்பனர்களே எரித்து நாங்கள் வருனசரத்தை கடைபிடிக்கவில்லை என்று கூறி அனைவரையுமே ஹிந்து மதத்தில் சமநிலையில் வைத்து பார்கவேண்டியாது தானே!

                  ii ஹிந்து ஆலயங்களில் அனைத்து ஹிந்து மத பிரிவினரும் அர்சகர் ஆகும் தகுதிக்காக போராடும் போது பார்பனர்கள் அதற்கு எதிராக நிற்பது ஏன் ?

                  iii.ஆரியர்கள் தான் பார்பனர்கள் கைபர் கனவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த வந்தேறிகள் அவர்கள் என்று தானே வரலாறு கூறுகின்றது. அதனை மறுதலித்து பேசும் அளவுக்கு லாலாவிடம் என்ன ஆதாரம் உள்ளது.

              • ஒருவரே மீண்டும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் வந்து இந்த இணையத்தளத்தைக் கேலிக்கூத்தாக்குவதை வினவு நிர்வாகம் ஏன் தடை செய்வதில்லை. கருத்துப் பரிமாறலும், விவாதங்களும் நடக்கும் எந்த இணையத்தளமும் இதை அனுமதிப்பதில்லை. இந்தக் கேலிக்கூத்து வினவு நிர்வாகத்தின் அனுமதியுடன் தான் நடைபெறுகிறதென்றால் அதைத் தடை செய்ய முடியாது தான். ஆறுமுகம் என்ற பெயர் நன்றாக, ஸ்ரைலாக இல்லையென்று, அதை மாற்றி பழனிச்சாமி என்று வைத்துக் கொண்டானாம் ஒருவன், அது மாதிரி, எல்லாமே சைவப் பெயரிலேயே வருகிறாரே, நல்ல ஸ்ரைலான அரபுப் பெயர்களை ஏன் வைத்துக் கொள்கிறாரில்லை. 🙂

  104. குர்-ஆன் வசனத்தைத் திப்பு எடுத்துகாட்டியவுடன் இதுதான் வாய்ப்பு என்று அறிஞர் ஜோசப்பு அவர்கள் ஆவலாதியுடன் குர்-ஆன் வசனத்தை கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் திப்புவாக இருந்தாலும் சரி யோசப்புஆக இருந்தாலும் சரி குர்-ஆனை வைத்து உழைக்கும் மக்களின் இறைநம்பிக்கை எப்படி எடை போடமுடியும்? அது எப்படி தவ்ஹீத் காலிகளின் மதவாதத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறது என்பதற்கு கொட்டாம்பட்டி பழவிற்கும் பாயை எல்லாம் எடுத்துக்காட்டியிருந்தேன்.

    என் செய்வேன்!? யோசேப்போ மார்க்கத்தை கொட்டாம்பட்டி பாயிடம் நைச்சியமாக திணிக்கிறாய் என்று குற்றம் சாட்டி காத்திரமான வாதம் ஒன்றை என்னிடம் கீழ்க்கண்டவாறு வைத்திருக்கிறார்

    “வியாசனை கேள்வி கேட்ப்பது இருக்கட்டும் மார்க்கத்தின் சிறப்புகளை பழம் விற்க்கும் பாய்களிடம்தான் காண முடியும் என்ற போது உம்மிடம் எதேனும் கேட்டேனா பழம் விற்க்கும் பாயின் நற்ப்பண்பு என்பது அவரது மார்க்கத்தால் வந்த்தது இல்லை இந்தியாவில் சக மத்தவருடன் வாழவதால் ஏற்ப்ப்ட்டது என்பதுதான் எனது முடிவு.” என்றார்.

    ஆனால் விவாதக்களத்தில் தற்பொழுதைய டிரெண்டு என்ன?

    திப்பு “எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ .அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போலாவான்” என்று சொல்கிற பொழுது யோசேப்பு முன்வைத்த “சக மத்தவருடன் வாழவதால் ஏற்ப்ப்ட்டது என்பதுதான்” எனது முடிவு என்பது எங்கே போயிற்று? ஏன் அது திப்புவிடம் வாதமாக நீட்டிக்கப்படவில்லை?

    ஆக யோசேப்பின் இந்தக் கழிசடைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். தான் மதவெறியனாக இருந்துவிட்டு மதவெறியன் என்று தூற்றாதே என்று சொல்வதும் பாசிஸ்டுகளின் உத்தி என்பதை யோசேப்பு தெரிந்துகொள்ள வேண்டும்.

    யோசேப்பினுடையது ஏன் மதவெறி என்பதற்கூ அவர்பாணியில் மேலும் ஒரு வசனத்தை ஆராய்ந்துவிடுவோம்.

    பழைய ஏற்பாடு சங்கீதம் சொல்கிறது இப்படி “இயேசுவே உம்முடைய வசனங்கள் எம் கால்களுக்கு வெளிச்சமும் என் பாதைக்கு தீபமுமாய் இருக்கின்றன”

    ஆனால் நிலைமையோ வேறு. ரோமானிய கத்தோலிக்கத் திருச்சபையை எதிர்த்து லூதர் விவலியத்தை வைத்து போராடிபொழுது அதை ஏற்றுக்கொண்ட மக்கள் அனைவரும் பண்ணையடிமைகளாக தாழ்த்தப்பட்டனர். விவசாயப்போரில் 300,000 விவசாயிகளை நிலப்பிரபுத்துவமும் கத்தோலிக்க திருச்சபையுமே கொன்றொழித்தது.

    யோசேப்பு குர்-ஆனுக்கு முன்வைக்கிற அளவுகோலை கிறித்தவத்திற்கும் நீட்டினால் புதிய ஏற்பாடு சொல்கிற “நீ எழும்பி பிரகாசி” என்பது நிலப்பிரபுக்களுக்கு ஆண்டவனே பூஸ்ட் கொடுத்து புரொட்டஸ்டெண்ட் கிறித்தவ விவசாயிகளை அதுவும் அவர்கள் ““இயேசுவே உம்முடைய வசனங்கள் எம் கால்களுக்கு வெளிச்சமும் என் பாதைக்கு தீபமுமாய் இருக்கின்றன” என நம்பியவர்களை கொன்றொழித்துவிட்டது என்பதுதான் நிதர்சனம் இல்லையா?

    எவ்வளவு இனிமையாக இருக்கிற மதபுத்தகங்களும்கூட ஆளும்வர்க்கங்களுக்கு சேவை செய்பவைதான். அப்புறமென்ன இசுலாமியனைவைத்து மட்டும் மதவெறி?

    • அண்ணன் தென்றல் கிறிஸ்தவ மதம் மக்களை கொன்றொழித்தது இசுலாமிய மதம் எல்லாரையும் வாழ வைச்சது ஒத்துக்குறேன் அண்ணம் இதுக்கு மேல தட்டையான புரிதல் குட்டையான புரிதல் இசுலாமியர்களிலும் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் நல்லவர்கள் கிறிஸ்தவர்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள் என்று 20 வரில அடுத்த மொக்கை போட ஆரம்பிச்சுடாதிக எனக்கு முடியல ,இப்பவே கண்ண கட்டுது…..

      • அதென்ன இஸ்லாமியர்களிலும் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் ? இது தென்றலே இஸ்லாமியர்களில் பலர் வர்த்தக சமூகமாகவும் , உழைக்காத சோம்பேறிக்கூட்டமாகவும் இருக்கிறார்களேன ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதுபோல் இருக்கிறதே ? மீராவும் திப்புவும் கவனிக்க .

    • அண்ணன் தென்றல் என்ன ஆனாருனு தெரியல கம்மூனிஸ சிகப்பு மிளகாய ஜோசப் தலைல அரைக்கனுமுனு பாத்தாரு முடியலன உடனே ஓடிட்டாரு போல இருக்குதே ,இவரு கிறிஸ்தவம் குறையானதுனு சொல்லுறது சரிதான் ஆனா அது சராசரி கிறிஸ்டியனுக்கு கூட தெளிவாக தெரிந்த உண்மைதான் சர்சோட மோசடிகள் திருட்டுதனம் எல்லாம் தெரிஞ்சுட்டுதான் கிறிஸ்தவ மததுல இருக்கானுக ஆனா அத இங்க வந்து கொப்பளிக்க காரனம் என்ன எப்பிடியாவது இசுலாம் என்ற மாயையை நிலை நிருத்த வேண்டும் என்ற ஆசைதான் அவர் கருத்தில் தெரிகிறது அதுக்குதான் புதிய ஏற்பாடு பழைய ஏற்ப்பாடுனு கதை விடுதாறு இந்த கதை எல்லாம் ஏற்க்கனவே இசுலாமிய மத வெறியர்கள் விட்ட குசுதான் வேண்டுமானால் அஸ்கர் அலி இன்ஞினியரிடம் விளக்கம் பெற்று கொள்ளலாம் எனக்கு ஒரு பாட்டு நியாபகத்துக்கு வர்ரது அதுவும் கம்மூனிஸ்டு பாட்டுதான் தலித மக்களை பற்றியது அரசுக்கு எதிரான பாடல் “எதையெதயோ சலுகையினு அறிவிக்கிறீங்க நாங்க எரியும் போது எவன் மயிர புடுங்க போனிகனு ” அதையே நானும் கேக்குறேன் தலித மக்கள் உழைத்து ஓடாய் தேய்ந்து கஸ்டப்பட்டு இருந்தப்ப கம்மூனிஸ்டுகள் எவன் மயிர புடுங்க போனானுக …

  105. வினவில் விவாதிக்க பிடிக்கவில்லை,விவாதிக்க எனக்கு நேரமில்லை,என்று வியாசன் அலட்டிக்கொண்டெ இருப்பது இந்த தளத்தையும்,அதன் வாசகர்களையும் அவருடன் விவாதிப்பவர்களையும் அவமதிக்கும் செயல்.இவருக்கு மட்டும்தான் வேலை இருக்கு.நேரமில்லையா.நாங்கள்லாம் வேலை இல்லாத வெட்டி ஆசாமிகளா.எங்களுக்கு இதை தவிர வேறு பொழப்பு இல்லையா..பல்வேறு கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்திலும்,கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கத்திலும்தான் பலரும் வினவை படிக்கிறார்கள்.விவாதங்களில் பங்கேற்கிறார்கள்.அதை புரிந்து கொண்டு அவர் பேச வேண்டும்.

  106. வினவு தள தோழமைக்கு ஒரு வேண்டுகோள். வியாசன், லாலா , மேரி போன்றவர்கள் எந்த அடிப்படையில் தலித் மக்கள் மட்டுமே அரபு வணிகர்களுடன் இனக்கலப்புறார்கள் என்று கூறுகின்றார்கள்/அவதூரு பரப்புகின்றார்கள் என்பதனை முடிந்தால் விளக்கவும். மானுடவியல் ஆய்வுகள் பல்வேறு தரப்பு மக்களும் நிகழ்த்திய இணகலப்பை உறுதிசெய்து உள்ளன. குறிப்பாக அதிகாரத்தில் இருந்தவர்களுடன் அவர்களுக்கு கீழ் அதிகார வட்டத்தில் இருந்தவர்கள் தானே இனகலப்பை நிகழ்த்தி இருக்க முடியும்.? புறமன முறைகள் அதிகாரத்தில் இருந்தவர்களுடன் தானே அடுத்த கட்டத்தில் இருந்தவர்கள் நிகழ்த்தி இருக்க முடியும். உதாரணங்கள் வேண்டுமானால் சோழ பேரரசில் ஏற்பட்ட திருமண கலப்புகள் ஆந்திரா வரை கூட சென்று இருபதை காண முடிகின்றதே?

    சமுகத்தில் அடித்தளத்தில் இருந்த உழைக்கும் சாதி மக்கள் வேறு வழி இன்றி அவர்களுக்கு உள்ளேயே தானே அகமனமுறையில் தன் இணைகளை தேர்ந்து எடுத்து இருக்க முடியும். வரலாறு கூறுவது போன்று நம்புதிரிகள்-நாயர் இன கலப்பு உடன்படிக்கைகள் ஏதும் சமுகத்தில் அடித்தளத்தில் இருந்த உழைக்கும் சாதி மக்கள் ஆண்டைக்ளுடன் ஏற்ப்டுத்திக்கொண்டதாக ஆதாரங்கள் ஏதும் இல்லியே?

    • இலங்கையிலும் , இந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் ஆண்டவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மண உறவுகளையும் , உயர் மேட்டுக்குடியினரிடையே ஏற்பட்ட மண உறவுகளையும் , குதிரை வியாபாரத்திற்காக எங்கோ இருந்து வந்து , அந்த இனத்தில் பெண்கள் இல்லாமையினால் தாழ்த்தப்பட்ட இனப்பெண்களை மண முடித்தவர்களையும் ஒன்றாக போட்டுக்குழப்பிக்கொள்வது , மொட்டைக்கும் முழ்காலுக்கும் முடிச்சுப்போடுவதற்கு சமமானதாகும்.

      • சமுகத்தில் அடித்தளத்தில் இருந்த உழைக்கும் சாதி மக்கள் வேறு வழி இன்றி அவர்களுக்கு உள்ளேயே தானே அகமனமுறையில் தன் இணைகளை தேர்ந்து எடுத்து இருக்க முடியும். வரலாறு கூறுவது போன்று நம்புதிரிகள்-நாயர் இன கலப்பு உடன்படிக்கைகள் ஏதும் சமுகத்தில் அடித்தளத்தில் இருந்த உழைக்கும் சாதி மக்கள் ஆண்டைக்ளுடன் ஏற்ப்டுத்திக்கொண்டதாக ஆதாரங்கள் ஏதும் இல்லியே?

  107. அரேபிய – தமிழ் இனகலப்பு மீதான விவாதம் : என் நண்பர் கருத்துக்கள ஆய்வறிக்கையாக அவர் வலை பூவில் உள்ளது. தலைப்பு :முக்குவர் – தமிழ்நாடு – கேரளா – ஈழம்
    http://thamizhmeenavan.blogspot.in/2011/11/blog-post.html

    • வியாசனும் ,பிறரும் அவதானிப்பது போன்று ஈழ-தலித் மக்கள் (திரு டேனியலின் பார்வையில் பஞ்சமர் என்று அழைக்கப்டும் நில உரிமை அற்ற உழைக்கும் மக்கள்) அரபுகளுடன் கலப்புற்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில் முக்குவர் என்ற நில உரிமை – இடைசாதியினர் அரபுகளுடன் கலப்புற்றார்கள் என்பதற்கு கேரளாவின் கடலோர பகுதியில் வாழந்த முக்குவர் சமுகம் வந்தேறி அரபுக்ளுடன் ஏற்படுத்திகொண்ட முறையான புறமண -திருமண உறவுகள் ஆதாரங்களாக உள்ளன. முக்குவர் சமுகத்தில் இருந்து அரபுகளுடன் திருமண உறவு பூண்டவர்கள் மூலமாக ஏற்பட்ட கலப்பு இனத்துக்கு மாப்பிளாக்கள் (Mappila/Moplah) என்ற பெயர் வந்தது. முக்குவர்களும் , மாப்பிளாக்கள் இரு சமுகத்தவருமே ஈழ கிழக்குக்கு இடம் பெயர்ந்தனர் , அங்கு உள்ள திமிலர் என்ற மீனவ சமுத்தவருடன் போரிட்டனர் அதன் மூலம் காணிகளை பெற்றனர். மேலும் இன்று ஈழ கிழக்கில் வாழும் தமிழ்-ஹிந்து-முக்குவர்களின் சமுக பழக்க வழக்கங்கள்(மதம் தவிர்த்து) இலங்கை முஸ்லிம் மக்களின் பழக்க வழக்கங்களுடன் ஒத்து இருப்பதை இன்றும் நாம் காண முடியும். மேலும் இந்த இரு சமுகமும் கேரளாவில் இருந்து ஈழ கிழக்குக்கு குடியேறியவர்கள் என்பதற்கு ஆதாரமாக கேரள மாட்டிறைச்சி உண்ணும் முறையை இவர்களும் பின்பற்றுகின்றார்கள் என்பதில் இருந்து நாம் உணரமுடியும்.

      • நீங்கள் சொல்வது சரிதான் . இலங்கையில் கிழக்கு கரையோர தமிழ் மீனவ சமூகத்தில் கரையார் , திமிலர் , முக்குவர் எனும் பிரிவினர் இருந்தனர் . திமிலருக்கும் , முக்குவருக்கும் மோதல் மீண்டபோது திமிலரின் கை ஒங்கி இருந்தது . அப்போது முக்குவர்கள் திமிலர்களை சாமாளிப்பதற்கும் , தமது நிலங்களை காப்பாற்றுவதற்கும் முகமதியர்களின் உதவியை நாடினார்கள் . முகமதியர்களும் முக்குவர்களுக்கு உதவி திமிலர்களை ஏறாவூர் வரை விரட்டியடிப்பதற்கு உதவினார்கள் , இதற்கு பிரதியுபகாரமாக முக்குவ இனப்பெண்களை முகமதியர்கள் மணக்க அனுமதித்ததோடு , பல முக்குவ இனத்தவர் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்கள் . இலங்கையில் முக்கவ இனத்தவர் தமிழர்களாகவே இருந்தனர் . முக்குவ இனத்தவர் இலங்கையின் கரையோரத்தில் , கேரள கரையோரத்தில் மட்டுமல்ல தமிழக கரயோரங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள் .
        இலங்கையை பொறுத்தவரை மீனவ சமூகத்தின் ஒரு பிரிவான முக்குவர்களும் தாழ்த்தப்பட்ட இனமாகவே கருதப்படுவதனாலும் , இலங்கையின் ஏனைய பகுதிகளில் முகமதியகள் முக்குவர் தவிர்ந்த ஏனைய தாழ்த்தப்பட்ட பெண்களை மணமுடித்தமையினாலுமே பொதுவாக தாழ்த்தப்பட்ட இனப்பெண்களை முகமதியர்கள் மண முடித்ததாக குறிப்பிட்டிருந்தேன் . இதற்கு விதி விலக்காக ஏனைய இனங்களிலும் முகமதியர்கள் மண முடித்திருக்கலாம் . ஆனால் பெரும்பாலும் பொதுவாக தாழ்த்தப்பட்ட இனப்பெண்களையே அவர்கள் மண முடித்தார்கள்.

        எது எப்படியிருந்தாலும் , முகமதியர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் சரி , இஸ்லாத்திற்கு பெருமளவில் மதம் மாறியவர்களும் சரி தமிழ் குடிகளே . ஆனால் அவ்வழி வந்த இலங்கை முஸ்லிம்கள் இன அடைப்படையில் தம்மை தமிழ்கர்களாக அடையாளப்படுத்துவதில்லை .
        இலங்கை வாழ் ” சோனகர்கள்” என்றே தம்மை அழைத்து வந்திருக்கிறார்கள் .

        • லாலா உங்களுடன் தகவல் பரிமாற்றம் என்ற அளவில் தான் இந்த விவாதத்தை கொண்டு செல்கின்றேன். முக்குவர்கள் தான் பெருமளவில் அரபுகளுடன் இனக்கலப்பில் ஈடுபட்டார்கள் என்று நாம் இருவருமே வரலாற்று அடிப்டையில் ஏற்றுக்கொண்ட பின்பு இபோதைய விவாதம் முக்குவர்கள் தாழ்த்தப்பட்ட இனமா? என்ற கேள்வி எழுகின்றது. நான் என் கருத்துருகளில் முன்பே விளகியது போன்று முக்குவர்கள் எமது ஈழ கிழக்கில் நில உடமை சமுகமாக தான் கடந்த 7 நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். நீங்கள் கூறுவது போன்று எங்கள் ஈழத்தில் அவர்கள் குடிமை சமுகமாக அதாவது ஆண்டைகளுக்கு அடிமை வேலையோ, பண்ணை வேலையோ செய்கின்ற நிலையில் என்றுமே இருந்து இல்லை. எனவே அவர்களை நீங்கள் தாழ்த்தபட்ட மக்கள் என்று கூறும் போது இந்த விவாதத்தில் உங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான சமுக கருத்துகளே முன்வைக்கப்படுகின்றது.

          இது தொடர்பாக ஒரு சமுக ஆய்வு கட்டுரையை பழைய அச்சுகளில் இருந்து டிஜிட்டல் முறையில் எனது நண்பருக்காக(வ.ஐ.ச.ஜெயபாலன்) சமிபத்தில் தட்டச்சு செய்ய நேர்ந்தது அதன் உள்ளடக்கத்தை நாளை உங்களுக்கு அளிக்கின்றேன்.

          Title :யாழ்ப்பாண மாவட்டத்து அடிமை முறையும் அடிமை விடுதலையும் – வ.ஐ.ச.ஜெயபாலன் (B.A பொருளியல் சிறப்பு -இறுதி வருடம். பொதிகை. யாழ்ப்பாணப் பல்கலைக் களகம் அக்டோபர் 1980}

          //இலங்கையை பொறுத்தவரை மீனவ சமூகத்தின் ஒரு பிரிவான முக்குவர்களும் தாழ்த்தப்பட்ட இனமாகவே கருதப்படுவதனாலும் , இலங்கையின் ஏனைய பகுதிகளில் முகமதியகள் முக்குவர் தவிர்ந்த ஏனைய தாழ்த்தப்பட்ட பெண்களை மணமுடித்தமையினாலுமே பொதுவாக தாழ்த்தப்பட்ட இனப்பெண்களை முகமதியர்கள் மண முடித்ததாக குறிப்பிட்டிருந்தேன் .//

        • லாலா ,

          யாழ்ப்பாண மாவட்டத்த்தில் முக்குவர்கள் என்றுமே அடிமைகள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்:

          யாழ்ப்பாணத்து நிலவுடமையாளர்களாக வெள்ளாளர் இருந்தமையும் அடிமைகளாக கோவியர்,நளவர், பள்ளர்,சாண்டாரில் ஒரு பகுதியினர் இருந்தமையும் தேசவழமையின் பழைய பதிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாண்டாரில் அடிமையாக இருந்தவர்கள் பின்னர் கோவியருடன் சேர்த்து “தோம்பு” களில் பதியப்பட்டனர்.

          திருகோணமலை மாவட்டத்த்தில் முக்குவர்கள் என்றுமே அடிமைகள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்:

          யாழ்ப்பாணத்தை தவிர்த்துப் பார்க்கும் போது திருகோணமலையில் குறிப்பிடத் தக்க அளவு அடிமைகள் இருந்துள்ளனர் எனலாம். 1824ஆம் ஆண்டின் குடிசன மதிப்புகளின் அடிப்படையில் திருகோணமலையில் 1324 அடிமைகள் இருந்துள்ளனர். இதே குடிசன மதிப்பு திருகோணமலையில் 1097 கோவியர்கள் இருந்தததாக தெரிவிக்கின்றது. கோவியர் சமூகம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கே உரிய ஒரு புதிய அடிமைச் சாதி பிரிவாகும் .

          eeza கிழக்கு மாவட்டத்த்தில்[Batticaloa,Amparai] முக்குவர்கள் என்றுமே அடிமைகள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்:

          Like mukkuwas Muslims of Eastern province also have the same matrilineal “Kudi” Systems. “”…..Mukkuwas influence among the social system…..”” of the Sri Lankan Muslims living in Batticaloa,Amparai, Puttalam and Ninadivu(Nagadipa) can also observed. The function of the matrilinral kudi system is notabale in the marriage arrangements. e.g marrying within same kudies. Long standing relationship between Muslims and Tamils belonging to Mukkuwa caste continued upto fifties. Even intermarriages betwwen Mukkuwas and Muslims were not uncommon upto that time. The relationship eroded in 60’s mainly due to power politics, political manipulation and intensified competition for land resources and opportunities.

        • நீங்கள் கூறும் இந்த விடயத்துக்கு தகுந்த ஆதாரங்கள் வேண்டும் நண்பரே. எனது முந்தைய பதிவுகளில் யாழ்பாண சைவ வெள்ளாளர்களை போன்று ஈழ கிழக்கில் முக்குவர் நிலஉடமையாளர்கள் சமுகத்தில் ,பொருளாதார நிலையில் உயர்ந்தே இருந்தார்கள் என்று ஆதாரங்களுடன் விளக்கி இருந்தேன். நீங்கள் முக்குவரை மட்டும் அன்றி தாழ்த்தப்ட்டவ்ர்களும் அரபுகளுடன் இனாகலப்பில் ஈடுபட்டார்கள் என்று மீண்டும் கூருகின்றிகள். இதற்க்கான((தாழ்த்தப்ட்டவ்ர்களும் அரபுகளுடன் இனாகலப்பில் ஈடுபட்டார்கள்)) தரவுகளை நீங்கள் அளிக்காத உங்கள் கருத்து உண்மைக்கு மாறானது தானே? எனவே சான்றுகளை அளிக்க முடியுமா?

          //இலங்கையை பொறுத்தவரை மீனவ சமூகத்தின் ஒரு பிரிவான முக்குவர்களும் தாழ்த்தப்பட்ட இனமாகவே கருதப்படுவதனாலும் , இலங்கையின் ஏனைய பகுதிகளில் முகமதியகள் முக்குவர் தவிர்ந்த ஏனைய தாழ்த்தப்பட்ட பெண்களை மணமுடித்தமையினாலுமே பொதுவாக தாழ்த்தப்பட்ட இனப்பெண்களை முகமதியர்கள் மண முடித்ததாக குறிப்பிட்டிருந்தேன் . .//

        • வியாசன், லாலா கவனத்துக்கு. இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்-சி.பத்மநாபன் என்ற வரலாற்று ஆய்வு நூலின் அடிப்படையில் முக்குவர்களின் தேசமான மட்டக்களப்பு தேசம் பற்றி சில உண்மைகளை எடுத்து கூறி அவர்கள் சமுக பொருளாதார நிலையில் என்றுமே தாழ்ந்தப்ப்ட்டவ்ர்கள் இல்லை என்ற உண்மையை கூற விழைகின்றேன்.

          1. ஈழ-கிழக்கு மட்டகளப்பு பகுதிகளில் முக்குவர்கள் சமுக,பொருளாதார நிலைகளில் உயர்த்து இருந்து அரசியல் செல்வாக்குடன் இருந்தமையால் அவர்கள் வாழ்ந்த பகுதிகள் முக்குவ தேசம் என்று அழைக்கபடுகின்றது.

          2.முக்குவர்கள் முத்துக்குளித்தல்,சங்கு குளித்தல் ,சுண்ணாம்பு செய்தல், ராணுவம், விவசாயம் என்றுஈடுபட்டு இருந்தார்கள்.

          3.இந்த நுலின் முக்குவர் சட்டம் என்ற மூன்றாம் பகுதியின் முதல் அத்தியாயம் முதல் மூன்ராம் அத்தியாயம் வரை முக்குவர்களின் சொத்துரிமையை பற்றி விரிவாக பேசுகின்றது.

          4.முக்குவரின் சாதி வழமை என்ற அத்தியாயம் அவர்கள் நிலஉடைமை சமுகதவர் என்ற உண்மையை உறுதி படுத்துகின்றது.

          மேலும் விவரங்களுக்கு :

          http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?uselang=en-issn=0266-4488

            • யாழ் சைவ வெள்ளாள சாதி வெறியுடன் அவதூராக அரபுகளுடன் தாழ்த்தபட்ட மக்கள் கலப்பு உற்றார்கள் என்று எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாமல் உளரும் இவரை, இந்த வியாசனை என்ன செய்ய? இந்த விவாதத்தில் அரபுகளுடன் தாழ்த்தபட்ட மக்கள் கலப்பு உற்றார்கள் பொய்யை ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டு இருபது இந்த வியாசன் தானே? முக்குவர்கள் தான் அரபுகளுடன் முறையான திருமண பந்தத்தில்ஈடுபட்டார்கள் அவர்கள் (முக்குவர்கள்) நிலஉடமை சமுகத்தவர்கள் அவர்கள் தாழ்த்தபட்டவர்கள் இல்லை என்று ,எனபதற்கு பல்வேறு ஆதரங்களை ஈழ சமுக வழமைகள் மூலமும், ஆய்வு கட்டுரைகள் மூலமும் கொடுத்தாலும் இந்த வியாசன் அவற்றை எல்லாம் எடுத்து எரிந்து விட்டு திமிர் தனத்துடன் நக்கல் கிண்டலில் ஈடுபடும் போக்கு எமக்கு என்னமோ பார்பன-தேவரடியார்-யாழ் சைவ வெள்ளாளர் இனக்கலப்பு மூலம் பிறந்த குழந்தைகளின் மான்ப்பான்மையை தான் நினைவுட்டுகின்றது.

              • திருவாளர் சரவணனின் அசட்டுத்தனம் மட்டுமன்றி அவருக்கேயுரிய வகையில், அவரது அறிவுக்கேற்ப புத்திசாலித்தனம் நிறைந்ததாக அவர் கருதும் அவரது பதில்களுக்கும், கருத்துக்களுக்கும் நான் எப்பொழுதுமே விசிறி தான். அது அவருக்கே நன்கு தெரியும். அதனால் தான் அவர் எத்தனையோ முறை என்னைத் தனது சகோதரனாக இங்கே வரித்துக் கொண்டார். அந்த அண்ணன் – தம்பி பாசத்தை அவர் இப்பொழுது எடுத்திருக்கும் கேதீஸ்வரன் அவதாரத்தில் அவர் மறந்தாலும் கூட நான் மறந்து விடவில்லை. ஆகவே எனது அண்ணன் சரவணன்/செந்தில்குமரன் AKA கேதீஸ்வரன் இங்கு பேசப்படும் விடயத்தைப் புரிந்து கொள்ளாமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயல்வதிலுள்ள ஓட்டையை அவருக்கு எடுத்துக் காட்டி விளக்கலாம் என நினைக்கிறேன். மற்றவர்கள் குழம்பினாலும் பரவாயில்லை என்று விட்டு விடலாம் ஆனால், அவருக்கு இங்கு பேசப்படும் விடயத்தில் குழப்பமேற்பட்டால், தொடர்பேயில்லாத, கண்டதையும் எழுதி இந்த இணையத் தளத்தையே நாறடித்து விடுவார். 🙂

                1. திருவாங்கூர் சமஸ்தான (1729-1949) காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரபுக்களும் தமிழ்மண்ணுக்கு வரத் தொடங்கி விட்டனர், இஸ்லாமும் வந்து விட்டது என்பது தெரியாமல், திருவாங்கூர் சமஸ்தான காலத்தில் அரபுக்கள் சிலர் மலபாரில் முக்குவர்களை மணந்ததையும், அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபுக்கள் தாழ்த்தப்பட்ட தமிழ்ப்பெண்களை மணந்ததையும் இணைத்து, ஒப்பிட்டுத் தானும் குழம்பி, புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு மற்றவர்களையும் குழப்ப நினைக்கிறார் கேதீஸ்வரன்.

                2. வரலாறு பற்றிப் பேசும் போது காலம்(Period) மிகவும் முக்கியம். உதாரணமாக, வேறொரு இணையத்தளத்தில் முன்னொருமுறை சிங்களவர் ஒருவர் என்னோடு வாதாடும் போது கி.பி 1140 இல் முடிசூடிய இலங்கையின் பேரரசன் பராக்கிரமபாகுவைப் (தமிழ்-சிங்கள கலப்பு -பாண்டிய இளவரசன்) பற்றிப் பேசுவதாக நினைத்துக் கொண்டு கி.பி 1410 இல் ஆண்ட பராக்கிரமபாகு(iv)வின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிட்டார். அதைத் தான் இங்கே கேதீஸ்வரனும் செய்து கொண்டிருக்கிறார்.

                3. கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் குடியேற்றம் நடந்ததும் அங்கு அவர்கள் தமிழ் முக்குவர் சாதியுடன் கலந்ததும் நடந்து 1617 க்குப் பின்னர் தான். அதற்கு முன்னே கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் கிடையாது. இலங்கையின் சிங்களக் கண்டியரசன் செனரத், போத்துக்கேயருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர், கோட்டை (கொழும்பு) அரசில் குடியேறியிருந்த தமிழ் முஸ்லீம்கள் அனைவரும், போத்துக்கேயர் அவர்களை வெளியேற்றியதால் (4000க்குமதிகமானோர்) கண்டிக்கு அகதிகளாகச் சென்ற போது அவர்களுக்குக் கண்டியில் வாழ அனுமதி மறுத்து, தமிழர்களுடன் மட்டக்களப்பில் போய்க் குடியேறுமாறு கண்டியரசன் கூறியதால் தமிழர்களிடம் போய்த் தஞ்சம் புகுந்தவர்கள் தான் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லீம்கள். அதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களே கிடையாது. அகதிகளாக வந்தவர்களை, அவர்கள் தமிழ் பேசியதால், சகோதரர்களாக நினைத்து, அவர்களை வரவேற்று இன்று முழு முஸ்லீம் நகராக உள்ள காத்தான்குடி என்ற அந்தப் பழந்ததமிழ்க் கிராமத்தில் வாழ வைத்த தமிழர்களை, இன்று காத்தான்குடியையே அரபுமயமாக்கி, அங்கிருந்து அகற்றி விட்டனர் முஸ்லீம்கள். அது வேறு கதை. அங்கு குடியேறிய முஸ்லீம்களில் பெரும்பாலானோர் கீழைக்கரை, காயல்பட்டணத் தமிழ் முஸ்லீம்களும் சில பட்டாணிகளுமே தவிர அரபுக்கள் அல்ல.

                4. இக்காலத்தில் இலங்கையில் முக்குவர்கள் நிலவுடைமைக்காரர்களாக இருப்பதால், முக்குவர்கள் எல்லாம் உயர்ந்த சாதியினராகி விட்டனர் என்று உளறும் கேதீஸ்வரனின் கருத்துப்படி பார்த்தால், தமிழ்நாட்டில் நிலச்சொந்தக்காரர்களாக உள்ள தலித்துக்கள் எல்லாம் உயர்ந்த சாதியினர் என்றல்லவா கருதப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடமாகாணத்தின் முத்தும், மட்டியும்(Clams, Scallops etc) குளித்த பகுதிகளில் முக்குவர்கள் வாழ்ந்தனர். அது மட்டுமல்ல கேதீஸ்வரனின் “நண்பர்” வ.ஜ.ச. ஜெயபாலனின் சொந்த ஊராகிய நெடுந்தீவில் கூட முக்குவர் உள்ளனராம், அவரிடமே கேட்கலாமே. உண்மையென்னவென்றால் சாதி பார்க்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் முக்குவர்களிடம் இக்காலத்தில் கூட மணவுறவு கொள்ள மாட்டார்கள். யாழ்ப்பாண சாதியமைப்பின் படி, மீனவர்களும் (கரையார்களும்) ஏனைய கரையோர சாதிகளாகிய பரவர், திமிலர், முக்குவர் எல்லோருமே (அவர்கள் வெள்ளாளர்களின் அடிமை, குடிமைகள் பிரிவில் இல்லாது விட்டாலும் கூட), தாழ்ந்த சாதிப்பிரிவினர் தான். ஆகவே நிலமிருப்பதால் மட்டும் முக்குவர்கள் உயர்ந்த சாதியினராக மாட்டார்கள். இப்பவும் சாதியடிப்படையில் தாழ்ந்த சாதியினர் தான். கிழக்கு மாகாணத்தில் வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் குறைவு என்ற படியால் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவ்வளவு தான். இலங்கைப் பெயராகிய கேதீஸ்வரன் என்ற பெயரில் வந்திருந்தாலும் சரவணனுக்கு இலங்கையைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகவே தான் இதையெல்லாம் இங்கே கூறுகிறேன். ஒருவேளை பிரபாகரன் இருந்திருந்தால் அல்லது தமிழீழம் பிறந்திருந்தால் சாதி ஈழத்தமிழர்களிடம் ஒழிந்திருக்கும் ஆனால் அதைத் தான், இந்தியர்கள் எல்லோரும் (தமிழ்நாட்டார் உட்பட) கூட்டுச் சேர்ந்து திட்டமிட்டுச் சதி செய்து அழித்து விட்டனரே.

                5. உண்மையில் பெரும்பான்மை தமிழ் முஸ்லீம்களின் மட்டுமன்றி இந்திய முஸ்லீம்களின் முன்னோர்களும் தாழ்த்தப்பட்டவர்களே தவிர அரபுக்கள் அல்ல [1] 12].. கரையோரப்பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கு வெளியாட்களிடம் முதலில் தொடர்பு ஏற்படுவது வழக்கம். கிறித்தவத்தை முதலில் தழுவிய தமிழர்களும் கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த மீனவர்கள் தான். [1] Some Critical Notes on the Non-Tamil Identity of the Muslims of Sri Lanka, and on Tamil-Muslim Relations, Mohamed Imtiyaz, Abdul Razak, Temple University, USA. [2] Social startification among Muslims in India – by Salil Kader

                6. The Cyclopedia of India and of Eastern and Southern Asia இலும் அரபுக்கள் தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பெண்களை மணந்து அவர்களின் வாரிசுகள் தான் தமிழ் லெப்பைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபுக்கள் தாழ்த்தப்பட்ட தமிழர்களை மணந்தனர் என்பதை சில வரலாற்றாசிரியர்களின் கட்டுரைகளில் கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த தமிழ்ப்பெண்களை மணந்தனர் என்றும் இஸ்லாம் தாழ்த்தபப்ட்ட தமிழர்களை ஈர்த்தது என்றும் கூறியிருப்பதையும் காணலாம். ஆரம்ப காலங்களில் பாக்கு நீரிணையின் இருபக்கங்களிலுமுள்ள தமிழ்மண்ணில் கரையொதுங்கிய அரபுக்கள், தாழ்த்தப்பட்ட தமிழ்ப்பெண்களை மணந்தனர். இஸ்லாத்தில் சாதியில்லை என்ற பொதுவான கருத்து (அது உண்மையில்லை என்பது இக்காலத்தில் பலருக்கும் தெரியும்) தாழ்த்தப்பட்ட தமிழர்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது என்பதை “Islam did attract the less privileged low caste members of the Tamil community who found the factor of equality a blessing for their status and well-being.” என்கிறார் இலங்கையின் முஸ்லீம் கட்டுரையாசிரியர் Iman Reza. தமது தமிழ் தொடர்பை மறைத்து வரலாற்றைத் திரித்து, தமது அரபுத் தொடர்பை கொஞ்சம் அதிகப்படுத்திக் காட்டுவது இலங்கை முஸ்லீம்களின் வழக்கம், இருந்தாலும். தாழ்த்தப்பட்ட தமிழர்களின் தொடர்பை இந்தக் கட்டுரையில் இலங்கை முஸ்லீமும் மறைக்கவில்லை.

                “A whole colony of Muslims is said to have landed at Beruwela (South Western coast) in the Kalutara District in 1024 A.D. The Muslims did not indulge in propagating Islam amongst the natives of Ceylon even though many of the women they married did convert. Islam did attract the less privileged low caste members of the Tamil community who found the factor of equality a blessing for their status and well-being.”

                பிரச்சனை என்னவென்றால் அரபுக்கள் தாழ்த்தபப்ட்ட தமிழ்ப்பெண்களை மணந்தனர் என்ற உண்மையை முஸ்லீம்கள் விரும்பவில்லை, ஏனென்றால் அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதும் அரபுக்கள் தாழ்ந்த சாதியுடன் கலந்து அவர்களின் முன்னோர்களாகவும் இருப்பதை ஏற்றுக் கொள்ள சாதிவெறியும், சாதியுணர்வும் கொண்ட தமிழ் முஸ்லீம்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வந்தேறி அரபுக்களுடன் தமிழர்களின் ஆதிக்குடியினரான தாழ்த்தப்பட்ட தமிழ்பெண்கள் மணவுறவு கொண்டனரா, தலித்துக்களென்றால் அவ்வளவு இளக்காரமா என்று தலித்துக்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். இரண்டு குழுவினரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த கலப்புத் திருமணங்களையே அவமானமாகக் கருதுகின்றனர். அதைப் பார்க்கும் போது தான் இவர்களின் போலி சாதியொழிப்பு வேடத்தை நினைத்து எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இரண்டு குழுவினரினதும் (உதாரணமாக திப்புவும், கேதீஸ்வரனும்) இந்த விடயம் பற்றிய விதண்டாவாதங்களுக்கு அடிப்படை சாதியுணர்வும் அவர்களுக்குள் புரையோடியிருக்கும் சாதிவெறியும் தான் காரணம். அல்லது எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்றுச் சம்பவத்தை வரலாறாக மட்டுமே பார்த்திருக்கலாம். உண்மை என்னவென்றால் என்ன தான் முற்போக்கு வேடம் போட்டாலும், அது இந்துவாக இருந்தாலென்ன முஸ்லீமாக இருந்தாலென்ன, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் சாதிவெறியும், சாதியுணர்வும் தாண்டவமாடுகிறது ஆனால் அது சிலவேளைகளில் அவர்களையறியாமலே வெளிப்பட்டு விடுகிறது, என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

                • வியாசனின் வெட்டி வாய்ஜாலத்தை ஒதுக்கிவிட்டு அதில் உள்ள கருத்துகளை மட்டும் ஆய்வு செய்வோம்.

                  என் பதில் 116.1.1.5ல் ஈழ கிழக்கில் முக்குவர்கள் -அரபுகளுடன் திருமண உறவில் ஈடுபட்ட காலம் , கேரள முக்குவர்கள் -அரபுகளுடன் திருமண உறவில் ஈடுபட்ட காலம் ஆகியவைகள் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு மிகவும் முந்தையது. இன்னும் குறிப்பாக கூறுவது என்றால் கேரள சேர அரசர்கள் காலத்தியது. நேற்று நம்பூதிரிகளால் முக்குவர்கள் அடிமைப்டுத்தப்ட்டார்கள் என்பதற்காக அதற்கு பல நூற்றாண்டு முந்தைய வரலாற்றில் அதுவும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வெளியே, திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஈழ கிழக்கில் நடந்த முக்குவர்- அரபு இன கலப்பில் ஈடுபட்ட முக்குவர்களை பார்த்து எப்படி அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறமுடியும்? என்ற கருத்தை தெளிவாக தானே விளக்கி இருந்தேன். தமிழில் சரியான புரிதல் இல்லாமல் வினவில் எதற்க்கா கும்மி அடிக்கின்றிர்கள் வியாசன் ?

                  இதற்கு தான் வியாசன் கண்ணை திறந்து கொண்டு மட்டும் படித்தால் போதாது . படிக்கும் விசயத்தில் மனதும் ஒன்றவேண்டும் .

                  //1. திருவாங்கூர் சமஸ்தான (1729-1949) காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரபுக்களும் தமிழ்மண்ணுக்கு வரத் தொடங்கி விட்டனர்,
                  2. வரலாறு பற்றிப் பேசும் போது காலம்(Period) மிகவும் முக்கியம்…..
                  3. கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் குடியேற்றம் நடந்ததும் அங்கு அவர்கள் தமிழ் முக்குவர் சாதியுடன் கலந்ததும் நடந்து 1617 க்குப் பின்னர் தான்…..
                  //

                  முக்குவர்கள் உயர் சாதியினர் என்று வியாசன் தான் உளறுகின்றார். எனது விவாதத்தில் முக்குவர்கள் சமுக பொருளாதார அடிப்டையில் தாழ்ந்த சாதியினர் இல்லை என்று தான் விளக்கி இருகின்றேன். அவர்கள் இடை சாதியினர் என்ற கருத்தையும் விளக்கி இருந்தேன். உங்கள் கூற்றுபடி அனைத்து தலித் மக்களுக்கும் நிலம் பெயரளவிற்காவது இருக்கும் எனில் அவர்களை தலித் மக்கள் என்று அழைக்கவேண்டிய அவசியமும் , ,அவர்களுக்கு என்று தனி ஒதுக்கிடு அளிக்கப்படவேண்டிய அவசியம் எழாது அல்லவா? உண்மையில் பெருமளவு தலித் மக்கள் யாழ் மற்றும் இந்தியாவில் நிலமற்ற ஏழை உழைக்கும் மக்கள் தான். இந்த உண்மை கூட தெரியாமல் வியாசன் உளறுகின்றார்.

                  //4. இக்காலத்தில் இலங்கையில் முக்குவர்கள் நிலவுடைமைக்காரர்களாக இருப்பதால், முக்குவர்கள் எல்லாம் உயர்ந்த சாதியினராகி விட்டனர் என்று உளறும் கேதீஸ்வரனின் கருத்துப்படி பார்த்தால், தமிழ்நாட்டில் நிலச்சொந்தக்காரர்களாக உள்ள தலித்துக்கள் எல்லாம் உயர்ந்த சாதியினர் என்றல்லவா கருதப்பட வேண்டும்….//

                  தொடரும்

                • திருநெல்வேலி சைவ வெள்ளாளர்கள் கூடத்தான் தமிழ் நாட்டு இடை சாதியினரா வன்னியர், தேவர், நாடார் ஆகியோருடன் திருமண உறவில் ஈடு படுவது கிடையாது… அதற்காக மேலே குறிப்பிட்ட இடை சாதியினரை இந்த வியாசன் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கூறுவாரா? அப்படி வியாசன் கூறுவார் எனில் அது பொன்னம்பலம் நிலஉடமை முக்குவரை low cast என்று குறிப்பிட்டு அவரின் சாதி வெறியை பறைசாற்றிகொண்டது போன்ற செயல் தான் என்று நம்மால் கூறமுடியும்.

                  //யாழ்ப்பாண சாதியமைப்பின் படி, மீனவர்களும் (கரையார்களும்) ஏனைய கரையோர சாதிகளாகிய பரவர், திமிலர், முக்குவர் எல்லோருமே (அவர்கள் வெள்ளாளர்களின் அடிமை, குடிமைகள் பிரிவில் இல்லாது விட்டாலும் கூட), தாழ்ந்த சாதிப்பிரிவினர் தான். ஆகவே நிலமிருப்பதால் மட்டும் முக்குவர்கள் உயர்ந்த சாதியினராக மாட்டார்கள். இப்பவும் சாதியடிப்படையில் தாழ்ந்த சாதியினர் தான்//

                • வியாசன் நீங்க பக்கம் பக்கமா எழுதனாக்கூட நீங்கள் அவதூராக கூறிய விசயமான அரபுகள் -தாழ்த்தப்பட்ட மக்கள் இனக்கலப்பு க்கு இன்னும் ஆதாரம் இல்லியே!

        • லாலாவுக்கு முக்குவர்கள் தாழ்த்தபட்டவர்கள் என்ற குழப்பம் ஏற்பட காரணம் கேரளாவில் குறிப்பாக திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை…!! தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்…. உள்ளிட்ட “18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம் என்ற கொடுர சட்டத்தின் அடிப்டையில் ஏற்பட்டு உள்ளது. இந்த 18 சாதி மக்கள் சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள், பிள்ளைமார் இந்துக்களால் உலகில் மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாகவும் நடத்தப்பட்டனர். (லாலா பார்பனர்களை பற்றி பேசலாம் தானே? பொங்கி எழ மாட்டிர்களே? )

          மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்க்கு தெய்வ குற்றம்என நம்பூதிரி(பார்ப்பனர்கள்) எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள் .அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்த புரத்துக்கு பிடித்து செல்லப்பட்டு ,நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மந்திர ,தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயரோடு புதைக்கபட்டார்கள்.

          ஏன் இந்த கருத்தை கூறுகின்றேன் என்றால் ஈழ கிழக்கில் முக்குவர்கள் -அரபுகளுடன் திருமண உறவில் ஈடுபட்ட காலம் , கேரள முக்குவர்கள் -அரபுகளுடன் திருமண உறவில் ஈடுபட்ட காலம் ஆகியவைகள் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு மிகவும் முந்தையது. இன்னும் குறிப்பாக கூறுவது என்றால் கேரள சேர அரசர்கள் காலத்தியது. நேற்று நம்பூதிரிகளால் முக்குவர்கள் அடிமைப்டுத்தப்ட்டார்கள் என்பதற்காக அதற்கு பல நூற்றாண்டு முந்தைய வரலாற்றில் அதுவும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வெளியே, திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஈழ கிழக்கில் நடந்த முக்குவர்- அரபு இன கலப்பில் ஈடுபட்ட முக்குவர்களை பார்த்து எப்படி அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறமுடியும்?

          இன்னும் கூட தெளிவாக என்னால் கேட்டக முடியும். நேற்றைய திருவாங்கூர் சமஸ்தானத்து வரலாற்றில் நம்பூதிரி பார்ப்பனர்களால் அடிமைப்டுத்தப்ட்டு ஒடுக்கப்பட்டு இருந்த நாடார்கள் இன்றும் தாழ்ந்தபட்டவர்கள் என்று தான் உங்கள் அகராதியில் கூறுவீர்களா நண்பரே?

  108. viyasan //குதிரை விற்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இலங்கை, இந்திய கரையோரங்களில் கரையொதுங்கிய சில அரபுக்கள், கரையோரங்களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழ்பெண்களை மணந்தனர், இலங்கையிலும் அது நடந்தது. நான் மட்டும் அதைக் கூறவில்லை. இலங்கை முஸ்லீம் ஒருவரே அதைக் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்.

    http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_5.html

    https://www.colombotelegraph.com/index.php/sri-lankan-muslims-are-low-caste-tamil-hindu-converts-not-arab-descendants/
    //

    வியாசன் நீங்கள் மேலே கூறியது போன்று நீங்கள் சுட்டிக்காட்டும் ஆங்கில கட்டுரையில் அதன் தமிழ் மொழி (உங்கள் மொழிபெயர்ப்பு தான் ) பெயர்ப்பில் எங்கேயும் கூறவில்லையே! எதற்கு இந்த பொய் -பித்தலாட்டம் ? ஈழ கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் மக்கள் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள் என்ற செய்தி தானே உள்ளது. பின்பு எப்படி நீங்கள் அரபுகள் – தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுடன் இனக்கலப்பு அடைந்தார்கள் என்று கூறினீர்கள். குதர்க்கம் தானே? வினவில் குதர்க்கமாக கும்மி அடிப்பதே உங்கள் வேலையாக போய்விட்டது.

    • கேதீஸ்வரன்,
      வினவுக்கு உங்களின் மீது என்ன கோபமோ எனக்குத் தெரியாது. அவர்கள் உங்களைத் தனியாகப் புலம்ப விட்டு வேடிக்கை பார்க்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. ஏனென்றால் நான் விளக்கமாக, உங்களின் கேள்விகளுக்கு எழுதிய பதிலை வெளியிடாமல் அப்படியே இருட்டடிப்புச் செய்து விட்டார்கள். எனக்கு அது பெரிய பிரச்சனை அல்ல. உங்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. உங்களின் கேள்விகளுக்கு யாராவது பதிலளித்து உங்களின் குழப்பத்தைப் போக்க வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். 🙂

  109. வியாசனிடம் இறுதியாக அதே நேரத்தில் உறுதியாக கேட்கின்றேன் :

    1. தாழ்த்தபட்ட மக்கள் இந்தியாவிலோ அல்லது ஈழக்கிழக்கிலோ அரபுக்ளிடன் இன கலப்பு அடைந்தார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் என்ன?

    2.நிலஉடமை இடை சாதி மக்களான முக்குவர்களை low cast என்று மூ(ட)த்த பொன்னபல சாதி வெறியர் குறிப்பிடுவதும் அதனை இன்றைய நவீன சாதிவெறியர் வழி மொழிவதும் ஏன் ?

    3. மூ(ட)த்த பொன்னபலம் ஈழக்கிழக்கு தமிழ் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யபட்ட கொலை வெறி சிங்களவர்களை காப்பாற்ற லண்டன் வரை சென்று வாதாடியது ஏன் ? ஒரு பக்கம் ஈழக்கிழக்கு தமிழ் முஸ்லிம்கள் தமிழ் மக்கள் தான் என்று கூறி அவர்களுக்கான உரிமைகளை பறித்துக்கொண்டே அவகளுக்கு எதிராக சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக வாதாடிய இந்த மூ(ட)த்த பொன்னபலம் சாதி வெறியர் மற்றும் தமிழ் இன துரோகி தானே?

    4. இளைய மூட பொன்னம்பலம் மலையாக தமிழ் மக்கள் மீது அவர்கள் வாழ்வியல் மீது துரோகம் செய்து கையப்பம் இட்டு அவர்களின் உரிமையை ரத்து செய்தது தவறு தானே?

    முடிந்தால் பதில் அளிக்கவும். இல்லை என்றால் வழக்கமாய் வினவில் அம்பலப்பட்டு போவது போல செல்லவும்.

    • 1915 ஆம் ஆண்டு சிங்களவர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது . இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டார்கள் .
      இது 1958 , 1977 , 1981 , 1983 இல் பெரும்பான்மை சிங்கள இனம் தமிழர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களிருந்து வித்தியாசமானது . மேற்குறிப்பிட்ட இனவெறி தாக்குதல் சம்பவங்களில் குறைந்தளவு எதிர்ப்பைக்கூட சிங்களவர்கள் மீது காட்டவில்லை . உயிரை , உடமைகளை இழந்து , எஞ்சியவர்கள் வட கிழக்கிற்கு வந்தார்கள் . ஆனால் 1915 ஆம் ஆண்டு ந டந்த சிங்கள முஸ்லிம் கலவரம் அப்படிப்பட்டதொன்றல்ல . இரு தரப்புமே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள் . அதுதான் உண்மையான இனக்கலவரம் . பிரிட்டிஷ் படைகள் அடக்கும் வரை தாக்கி கொண்டார்கள் .அதுதான் உண்மையான இனக்கலவரம் . ஆனால் தமிழர்கள் மீது சிங்களம் மேற்கொண்டது இனக்கலவரங்கள் அல்ல அது இனப்படுகொலை , இன சுத்திகரிப்பு என்றே சொல்லப்பட வேண்டும் .
      ஆனால் தமிழர்கள் குறைந்த பட்ச எதிர்ப்பை கூட காட்டாத இன சுத்திகரிப்பு சம்பவங்களை இன்று வரை இனக்கலவாம் என்றே சிங்கள் அரசு கூறி வருகிறது.

      1915 இல் நடந்த சிங்கள முஸ்லீம் இனக்கலவரத்துக்கும் . அதற்குப்பின் சிங்களவர்கள் தமிழர்கள் மீது நடாத்திய இனத்தாக்குதலகளுக்கும் இடையில் மற்றுமொரு பெரிய வித்தியாசம் உண்டென்பதை விளங்கி கொள்ள வேண்டும். 1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரத்தின்போது இலங்கை சுதந்திரமடைந்திருக்கவில்லை என்பதும் , பிரிட்டிஷ் ஆட்சியின்போதே இந்த கலவரம் நடந்ததென்பதும் , அதற்கு பின் நடைபெற்ற சிங்களத்தின் தமிழர்களுக்கெதிரான இனத்தாக்குதலகள் அனைத்தும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் , சிங்கள அரச ஆட்சிகளின் கீழேயே நடைபெற்றிருந்தன என்பது முக்கியமான விடயமாகும்.

      பொதுவாகவே காலனி நாடுகளை ஆண்ட பிரீட்ஷ் அரசு அந்த நாடுகளிருந்த பெரும்பான்மை இனத்தையே அடக்கி ஒடுக்கி ஆண்டு வந்த அதே நேரத்தில் சிற்பான்மை இஅனத்தவர்களுக்கு சலூகைகளை வழங்கி வந்ததென்பது வெளிபடையானது.
      சிங்கள முஸ்லிம் கலவரத்தின்போது பிரிட்ஷ் படைகளின் ஆதரவு சிறுபான்மை முஸ்லிம்களுக்கே இருந்தது . பெரும்பான்மை சிங்களவர்கள் பிரிட்டிஷ் படைகளின் அடக்கு முறைக்கு ஒடுக்கு முறைக்கும் ஆளானார்கள் . பிட்டிஷ் படைகளின் ஆதரவுடனே முஸ்லிம்கள் சிங்களவர்கள் மீது தாக்குதலகளை மேற்கொண்டார்கள் . பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடைபெற்ற அந்த கலவரத்தில் முஸ்லிம்களாலும் , பிரிட்டிஷ் படைகளாலும் பாதிக்கப்பட்டிருந்தது நிச்சயமாக சிங்கள மக்களே என்பதில் எந்த கருத்து வேறுபாடும் எந்த நடுநிலையாளர்களுக்கும் இருக்க முடியாது.

      அந்த கால கட்டத்தில் இலங்கையில் வாதாடி பதிக்கப்பட்ட சிங்களவர்களுக்குநீதி பெற்று கொடுக்க முடியாது என்பதை உணர்ந்த சேர். பொன் . ராமநாதன் லண்டனுக்கு சென்று வாதாடி அப்போது பிரிட்டிஷ் அரசால் ஒடுக்கப்பட்டிருந்த சிங்கள மக்களுக்காக வாதாடி நியாயத்தை பெற்று கொடுத்தார் .காரணம் அவர் உங்களைப்போல் இனவாதியாக இருந்திருக்கவில்லை.உங்களது கருத்தில் முழு இனவாதமே படமெடுத்தாடுகிறது . ஒருநாட்டின் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் அந்த நாட்டிம் பாதிக்கப்பட்ட இனத்துக்காகத்தான் வாதாட முடியுமே தவிர ,நியாயத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தன் மொழி பேசுபவன் , தன் இனத்தை சேர்ந்தவன் என்பதற்காக இனவாதமாக வாதாட முடியாது .மேலும் முஸ்லிகளுக்காக வாதாட அப்போது பிரிட்டிஷ் அரசு இருந்தது , பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாட பொன்னம்பலம் மட்டுமே தனியொருவராக இருந்தார் .

      • 1915ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம்கள் மீதான சிங்கள தாக்குதல் பின்னணி தரவுகள்

        1915 இல் அப்போதய காலனித்துவ வெள்ளை ஆளும் அரசுக்கு எதிராக பொங்கி எழ வேண்டிய சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் கோபம் அதன் முழு வலிமையையும் சமூக, பொருளாதார கலாசார தளத்தில் வசதியாக மடைமாற்றிக் கொண்டு, சிறுபான்மையினரை, இஸ்லாமியரை தமது பொது எதிரியாகக் கண்டது என்பது இலங்கை இனவாதம் காரணமாக இரத்தம் சிந்துவதான அவலத்தின் தொடக்கமாகும்.

        மண்ணின் மைந்தர்களான ஏழை சிங்கள பவுத்தரின் வறுமைக்கு காரணம் நாடெங்கும், கிராமங்கள் தோறும் சிங்களரை ஏய்த்துப் பிழைக்கும் வந்தேறி இஸ்லாமியர் என்று அநாகரி தர்மபால, அவரது சீடக் குழுக்களால் தீவிரப் பிரசாரம் செய்யப்பட்டது. இஸ்லாமியரின் கடைகளில் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணிக்க அவை கோரின. பவுத்த பிரசார ஏடுகள் குறிப்பாக கரையோர முஸ்லிம்களிடம் கொடுக்கல் வாங்கல் கூடாதென்றன. இவ்வாறே 1915இல் போர் காரணமாக ஏற்பட்ட உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டை, விலையேற்றத்தைக் கூட, இஸ்லாமியரின் ஏய்ப்புவாதமாக காட்டியபடிக்கு பலதரப்பு சிங்கள-பவுத்த மக்களின் வெறுப்புணர்வை இஸ்லாமியார் பக்கம் திருப்ப ஏதுவாயிற்று.

        ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இந்த கலவரத்தை படைபலம் கொண்டு அடக்கியது பிரித்தானிய அரசு. துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல சிங்கள இனவெறியர்கள் தூக்கிலேற்றப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னால் முக்கியத் தலைவர்களாகவும் பிரதமர்களாகவும் பரிணமித்த டி.எஸ்.சேனநாயக, எஃப்.ஆர். சேனநாயக, எஸ்.டி. பண்டாரநாயக போன்றோர் இஸ்லாமியருக்கு எதிரான அன்றய கலவரங்களை முன்னெடுத்ததில் கணிசமான பங்கை ஆற்றியிருந்தனர். வெள்ளையர் அரசு அவர்களை கைது செய்து சிறையிலடைத்தது. எனினும், தமிழ் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்காக இங்கிலாந்து சென்று வாதாடி, விடுவிக்கச் செய்தார்.

        இந்த நேரத்தில் தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்கள் முஸ்லீம்களும் தமிழர்கள் என்ற ரீதியில் முஸ்லீம்களை ஆதரித்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது நடுநிலையாவது வகித்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் தலைமை ஒரு பெரும் தவறை இழைத்தது. அன்றைக்கு தமிழர் தலைவராக இருந்த சேர்.பொன் இராமநாதன் சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

        அப்பொழுது முதலாம் உலக யுத்தம் (1914 – 1918) நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். கப்பற் போக்குவரத்து என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபத்தையும் பொருட்படுத்தாது சேர்.பொன் இராமநாதன் இங்கிலாந்த பயணமானார். அங்கே சிங்களவர்களுக்காக வாதாடினார். வாதாடி கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களையும், காடையர்களையும் விடுவிக்கச் செய்தார்.இலங்கை திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ரதத்தை சிங்களவர்களே இழுத்தனர்.

        சில தமிழர்கள் இராமநாதனை ரதத்தில் வைத்து சிங்களவர்கள் இழுத்த சம்பவத்தை பெருமையோடு குறிப்பிடுவார்கள். உண்மையில் தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய சம்பவம் அது. அன்றைய தமிழர் தலைமை முஸ்லீம்களுக்கு எதிரான சிங்களவர்களுக்கு ஆதரவாக நின்று பெரும் தவறைச் செய்து விட்டது. முஸ்லீம்களை பிரித்து வைத்து விட்டது.

        நன்றி

        கிற்று

        • அந்த பின்னணி தரவுகள் அனைத்தும் ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட தரவுகள். இதில் முஸ்லிம் தரப்புகளால் சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தபட்ட இழப்புகளும் ,பின்பு கலகத்தை அடக்குகிறேன் பேர்வழி என்றளவில் பிரிட்டிஷ் கலகமடக்கும் படை சிங்கள மக்கள் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலின்போது சிங்கள மக்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்புகளும் தாவுகளில் இல்லை . அப்போது சிங்கள மக்கள் இப்போதிருக்கும் நிலையில் இருக்கவில்லை. இப்போது தமிழ் மக்கள் இருப்பதைப்போல் அரசற்ற இனமாகவும் , பெரும்பான்மை இனமாக இருந்ததால் ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு அதிகம் முகம் கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள் .

          மாTறாக முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் வர்த்தக சமூகமாக இருந்ததால் இப்போது சிங்கள அரசை அண்டிப்பிழைப்பதுபோல் அன்று பிரிட்டிஷ் அரசை அண்டிப்பிழைத்துக்கொண்டிருந்தார்கள்.
          உண்மையில் பாதிக்கப்பட்ட இனத்தை , அவர்கள் பெரும்பான்மையினம் என்பதற்காக அவர்களை கைவிட்டு , சிறுபான்மை இனம் என்ற ஒரே காரணத்துக்காக , பிரிட்டிஷ் அரசின் ஆதரவை பெற்ற முஸ்லிம்களுக்கு வக்காலத்து வங்க வேண்டிய தேவை எதுவும் சேர்.பொன். ராமநதனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

          இனக்கலகத்தில் ஈடுபட்டைருந்த இரு தரப்பில் , முஸ்லிம்களுக்கு பிரிட்டிஷ் அரசினதும் , படைகளினதும் ஆதரவிருந்தபோது , பொன்னம்பலம் எந்த ஆதரவுமற்று ஒடுக்கப்படிருந்த மக்களாக இருந்த சிங்கள மக்களின் நியாயத்தை லண்டன் வரை சென்று எடுத்துரைத்தார்.
          இதன் மூலம் அவர் இனவாதியல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
          இதில் தமிழர் தலைவர்கள் இனவாதமற்று உண்மைக்கும் ,நியாயத்துக்குமாக செயற்பட்டிருந்தார்கள். எனவே இதில் தமிழர்கள் வெட் கப்பட ஒன்றுமில்லை.
          வெட் கபட வேண்டியவர்கள் சிங்கள மக்கள்தான்.

          • இலங்கை தமிழ் முஸ்லிம்களை அவர் low cast தமிழ் மக்கள் தான் என்று பெரிய பொன்னபலம் முன்பே உறுதியாக கூறியுள்ளார். ஆதாரம் கீழே: Sir Ponnambalam Ramanathan stated in a speech to the Ceylon Legislative Council that the In 1885, Sir Ponnambalam Ramanathan stated in a speech to the Ceylon Legislative Council that the Tamil-speaking Muslims are low caste Hindus who converted to Islam.

            இதன் அர்த்தம் என்ன? ஒரு யாழ் சைவ வெள்ளாளர் பெரிய பொன்னபலம் ஈழ கிழக்கு தமிழ் மக்களை பார்த்து low caste Hindus என்று கூறும் போதே அவரின் சாதி வெறி தான் அதில் முன் நிற்கின்றது. அப்படி அவர் ஈழ கிழக்கு முஸ்லிம்களை தமிழ் மக்கள் தான் என்று கூறும் போது அதன் பின்னணியில் அவர்களுக்கான கொழும்பு சட்ட மன்றத்தில் ஒதுகீட்டை தடை செய்யவேண்டும் என்ற நோக்கம் தான் முன்னிற்கின்றதே தவிர அவர்களும் தமிழ் மக்கள் தான் என்ற உணர்வு முன்னிற்க வில்லை.எனவே 1915 இன கலவரத்தில் அவர் சிங்களவரை ஆதரித்தது இயற்கையான ஒன்று தான்.

            //மாTறாக முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் வர்த்தக சமூகமாக இருந்ததால் இப்போது சிங்கள அரசை அண்டிப்பிழைப்பதுபோல் அன்று பிரிட்டிஷ் அரசை அண்டிப்பிழைத்துக்கொண்டிருந்தார்கள்.
            உண்மையில் பாதிக்கப்பட்ட இனத்தை , அவர்கள் பெரும்பான்மையினம் என்பதற்காக அவர்களை கைவிட்டு , சிறுபான்மை இனம் என்ற ஒரே காரணத்துக்காக , பிரிட்டிஷ் அரசின் ஆதரவை பெற்ற முஸ்லிம்களுக்கு வக்காலத்து வங்க வேண்டிய தேவை எதுவும் சேர்.பொன். ராமநதனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.//

            1915 இன கலவரத்தில் எதிர் தரப்பான கொலைகார சிங்களவர்களை ஆதரித்து பேசும் நீங்கள் தானே சிங்களவர்களுக்கு ஆதரவான தரவுகளை வரலாற்றில் ஆய்வு செய்து கொடுக்கவேண்டும்..அது என் வேலை அல்லவே.

            //அந்த பின்னணி தரவுகள் அனைத்தும் ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட தரவுகள். இதில் முஸ்லிம் தரப்புகளால் சிங்கள மக்களுக்கு ….//

            • பொன்னம்பலம் கிழக்கு முஸ்லிம்களை , கிழக்கு தமிழ் மக்கள் என்றாரா ? மேற்குத்தமிழ் மக்கள் என்றாரா ? என்பது இங்கு முக்கியமல்ல . அந்த கிழக்கு தமிழ் முஸ்லிம்களே தம்மை எவ்வாறு அழைத்துக்கொண்டார்கள் என்பதுதான் இங்கு முக்கியமானது .
              கிழக்கு முஸ்லிம்கள் தம்மை தமிழ் மக்கள் என ஒருபோதும் அழைத்துக்கொண்டதில்லை.தம்மை சோனகர் என்றே அழைத்துக்கொண்டனர்.

              ## 1915 இன கலவரத்தில் எதிர் தரப்பான கொலைகார சிங்களவர்களை ஆதரித்து பேசும் நீங்கள் தானே சிங்களவர்களுக்கு ஆதரவான தரவுகளை வரலாற்றில் ஆய்வு செய்து கொடுக்கவேண்டும் ##

              ஆரமபத்திலிருந்தே நான் உங்களைப்போன்றவர்களை போலி ஏகாதிப்பதியவாதிகள் என்றும் , வர்க்கப்பசப்புவாதிகள் என்றும் கூறி வந்திருக்கிறேன் . அது நீங்கள் எந்தப்பிரச்சனையை தொட்டாலும் பல்லிளித்துக்கொண்டு முன்னுக்கு வந்து உங்கள் வர்க்கப்போலியை , ஏகாதிபத்திய போலியை காட்டிக்கொடுத்து விடும்.
              இந்த விடயத்திலும் அப்படித்தான் . பிரிட்டிஷ் அரசு கொடுத்த தரவுகளை தலையில் வைத்துக்கொண்டாடி அதுதான் முடிந்த முடிபு என குதூகலிக்கும் உங்கள் எகாதிபத்திய போலித்தனத்தை என்னவென்பது

              மேலும் கலவரத்தில் பொன்னம்பலம் சிங்களவரை ஆதரித்தது இயற்கையானது என அவருக்கிருந்த குறைந்த சாதியினர் மீதான வெறுப்பை கண்டு பிடித்தாய்ந்து கூறியிருக்கிறீர்கள் .சரி இதனால் அவர் சிங்கள மக்களுக்காக ஏன் வாதாட வேன்டும் ? சிங்கள மக்களில் குறைந்த சாதியினர் இல்லையா ? பொன்னம்பலம் வாதாடி விடுவிக்கப்பட்டவர்களில் குறைந்த சாதியினரே இல்லையா ? அல்லது அதற்கும் ஏதாவது புள்ளி விபரக்கணக்கு வைத்திருக்கிறீர்களா ?

              நான் கலவத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பான சிங்களவரை ஆதரித்து பேசவில்லை . உங்களுக்கு பல தடவைகள் கூறியாகி விட்டது . இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்த சிங்களவர்கள் வேறு , சுதந்திரமடைந்த பின்னுள்ள சிங்களவர்கள் வேறு . 1915 ஆம் ஆண்டு கலவரத்தில் அவர்கள் முஸ்லிமகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசையும் , அதன் படைகளையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது . எந்த நாட்டில்நடக்கும் கலவரமாக இருந்தாலும் அந் த நாட்டு அரசினதும் , படைகளினது அதரவு ஒரு தரப்புக்கு இருக்குமாயின் மறு தரப்பு படு மோசமாக பாதிக்கபடும் .நீதியும் கடைசி வரை கிட்டாது . இதற்கு உதாரணமாக இலங்கை சுதந்திரமடைந்த பின் இலங்கை அரசின் ஆதரவோடு தமிழர்க்கெதிராக நடைபெற்ற பல இன அழிப்புகளையும் , மோடி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரத்தையும் குறிப்பிடலாம்.

              ஆகவே 1915 ஆம் ஆண்டில்நடந்த கலவரத்தில் முஸ்லிம்களுக்கு ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் ஆதரவும் ஆசிர்வாதமும் முழுமையாக இருந்தது. ஆனால் வர்க்கப்போராளியாக இருந்த நீங்கள் திடீர் ஏகாதிபாதிய அடிவருடியாக மாறி அந்த ஏகாதிபத்திய அரசு முண்டு கொடுத்த முஸ்லிமகளுக்கு தடவிக்கொடுத்து வருவதால்தான் அதன் எதிர்த்தரப்பான , ஏகாதிபத்தியவாதிகளால் அந்த நேரத்தில் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மீது இருந்த நியாங்களை மறைக்கப்பட்ட உண்மைகளை முன் வைத்தேன்.

              • ஈழத்தில் எங்களுக்குள்(ஈழ தமிழ் மக்கள் மற்றும் ஈழ முஸ்லிம் தமிழ் மக்கள்) ஏற்பட்ட மன கசப்புகளை பற்றி விரிவாக பேசினால் மட்டுமே அவர்கள் ஏன் ஈழ தமிழ் மக்களிடம் இருந்து சமுக பொருளாதார ,அரசியல் உறவுகளில் எங்களை விட்டு வெகு தூரம் சென்றார்கள்(அல்லது நாங்கள் ஏன் அவர்களை விட்டு விளக நேர்ந்தது) என்ற உண்மை உங்களுக்கு புலப்படும். முதல் முரண்பாடு பெரிய பொன்னம்பலத்தின் தமிழ் மக்கள் மீதாதன துரோகம் 1915 க்கு பின் சிங்களவர்களை அந்த கலவரத்தில் ஆதரித்தன் மூலம் ஏற்பட்டது. அது ஈழ தமிழ் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான தலைமையை ஏற்படுத்தும் செயலில் தவிற்க இயலாத நிலையை ஏற்படுத்திக்கொடுத்தது. மேலும் பெரிய பொன்னம்பலத்தின் ஈழ தமிழ் முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுகள் (அதாவது அவர் ஈழ தமிழ் முஸ்லிம்கள் தான் 1915 கலவரத்துக்கு காரணம் என்று கொழும்பு சட்டமன்றத்தில் பேசியது) மேலும் எங்களுக்குள் பாரிய பிரிவினையை சமுக பொருளாதார ரீதியிலும் ஏற்படுத்தியது.

                பின்பு ஈழ தந்தை செல்வாவின் சில முயற்சிகள் எங்களுக்குள் சமுக ஐக்கியத்தை ஏற்படுத்த முயன்றாலும் அவை நீண்ட கால பயனை அளிப்தாக இருக்கவில்லை. ஈழ போரில் ஒரு சில யாழ் -தமிழ் முஸ்லிம்கள் மீது கொண்ட சந்தேகம் காரணமாக ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றபட்டனர். அதற்காக மாத்தையா போன்ற தனி நபர்களை காரணமாக காட்ட விடுதலை புலிகளும் முயலவில்லை. விடுதலை புலிகள் இயக்கத்துக்கு உள்ளேயே இருந்த ஜனநாயக ஜெயபாலன்(ஈழ கவி, பேட்டைகாரர் ) போன்ற சக்திகள் தலைமையுடன் நடத்திய நீண்ட நெடிய விவாதங்கள் ஊடாக புலிகள் யாழில் இருந்து யாழ் தமிழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு மன்னிப்பு கோரும் நிலையும் ஏற்பட்டது.

                மேலும் ஈழ கிழக்கில் நடத்தப்பட ஈழ தமிழ் முஸ்லிம்கள் படுகொலையும் அதன் எதிர் மறையான பலன்களும் விடுதலை புலிகள் தலையில் தான் விழுந்தது. முதலில் முஸ்லிம்கள் வெளியேறும் படி போஸ்டர்கள் ஓட்டப்டுகின்றன. கால கேடு முடிந்ததும் தொழுகையின் போது முஸ்லிம்கள் கொல்ல்ப்டுகின்றார்கள். கொன்றவர்கள் இலங்கை உளவுத்துறை என்று புலிகளும் , விடுதலை புலிகள் தான் என்று இலங்கை அரசும் பரஸ்பர குற்றசாட்டுகளில் ஈடுபட்டார்கள். வெளியேற சொல்லி போஸ்டர் ஒட்டியது கருணாவின் தலைமையில் இருந்த ஈழ கிழக்கு விடுதலை புலிகள் தான் என்ற நிலையில் அதற்கும் புலிகள் தான் பதில் கூற வேண்டிய தருணத்துக்கு தள்ளப்பட்டனர்.

                இதற்கு எதிர் வினையாக சிங்கள ராணுவத்தின் துணையுடன் ஈழ முஸ்லிம்கள் தமிழ் மக்களை கொன்றார்கள். இந்த நிலையில் ஈழ தமிழ் முஸ்லிம்களை மட்டும் குறை கூறிக்கொண்டு இருபது என்பது எங்களது இன்றைய குறைந்த பச்ச ஒற்றுமையை கூட சீர்குலைப்தாக தான் ஆகும்.

                • யாழில் முஸ்லிம்கள் வெளியேர்ரப்பட்டதன் பின்னான காலங்களில் புலிகளின் தலைவரால் ரவூப் Hகக்கீமோடு ஏற்படுத்தப்பட்ட சந்திப்பொன்றில் மன்னிப்பு கோரப்பட்டது . முஸ்லிம்கள் மீள் குடியேறுவதற்கு விருப்பமும் தெரிவிக்கப்பட்டது . ஆனால் அப்போது யாழ் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை . அரச படைகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது .
                  மேலும் இதற்கும் ஜெயபாலனுக்கும் ஏதும் சம்பந்தமிருந்ததாக தெரியவில்லை . இவர் புலிகல் இயக்குத்துக்கும் உள்ளெடும் இருக்கவில்லை , வெளியேயும் இருக்கவில்லை.

                  அதெல்லாம் சரி , ஆனால் கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகளுக்கும் , தமிழ் கிராமங்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி இன்று வரை முஸ்லிம் கிராமங்களாக அவற்றை மாற்றி வைத்திருப்பதற்கு இன்று வரை எந்த முஸ்லிம் தலைவரும் மன்னிப்பு கோரவில்லையே . பாராம்பரிய தமிழ் கிராங்களாக இருந்து இன்று தம்மால் முஸ்லிம் கிராமங்களாக மாற்றபட்ட கிராமங்களை மீண்டும் தமிழர்களிடம் கையளிப்பதாக மறந்தும் வாய் திறந்து பேசவில்லையே ?
                  சரி அவர்களை விடுவோம் , அவர்கள் தொப்பி பிரட்டிகள் , அவர்களுக்காக இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கும் தங்களைப்போன்ற நியாயவாதிகள் அப்படி எதுவுமே நடக்காதது போல் நடிக்க எவ்வாறு முடிகிறது ?

                    • இலங்கை அரசோடு காலத்துக்கு காலம் பல்வேறு கட்சிகளிலிருந்தும் தெரிவாகி அமைச்சர்களாகி குலாவிக்கொண்டுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் , கிழக்கில் விடுதலைப்புலிகளினால் கொடுமைக்குள்ளான முஸ்லிம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி ஏன் இது வரை ஒரு விசாரணையாவது நடாத்துமாறு கோரவில்லை ? ஏன் இது வரை எந்த நிவாரணத்தையும் அந்த மக்களுக்கு அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்கவில்லை ?
                      சும்மாவல்ல இது நடந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது . பல அரசுகள் மாறி மாறி வந்து விட்டது .முஸ்லிம்கள் எல்லா அரசையும் ஆதரித்து விட்டார்கள் . எல்லா அரசிலும் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள் ஏன் இது வரை விடுதலை புலிகளின் முஸ்லிம் மக்களின் மீதான கொடுமை குறித்து நீதி விசாரணை வேண்டுமென்று கோரவில்லை ?
                      விடுதலை புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் என்றால் இலங்கை அரசும் சந்தோஷமாக அதனை நடாத்த முன் வருமே ? அப்படி இருந்தும் , இத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் இலங்கை அரசோடு குலாவிக்கொண்டிருந்தும் நீதி விசாரணை பற்றி வாய் திறக்காததன் மர்மம்தான் யாதோ ?

                    • முதலில் நீங்கள் ஈழ தமிழ் மக்களும் , ஈழ முஸ்லிம் தமிழ் மக்களும் ஒருவர் மீது மற்றவர் கூறும் கொலை, சொத்துகளை பறித்தல் , சொந்த மண்ணில் இருந்து துரத்துதல் போன்ற பரஸ்பர குற்ற சாட்டுகளை நான்/நீங்கள் மறுக்கவில்லை என்பதில் இருந்தே நடந்தவை அனைத்தும் உண்மை என்பதனை ஏற்ருகொள்கின்ரிகள். நன்றி. இலங்கை பாராளுமன்றத்தில் இரு தரபினரும் இது தொடர்பாக பேசினார்களா இல்லையா என்ற விசயத்துக்கு நாம் இப்போது புகவேண்டிய அவசியம் என்ன? நான் அறிந்தவரையில் இரு தரப்புமே ஒருவரை ஒருவர் இலங்கை பாராளு மன்றத்துக்கு வெளியே குற்றம் சாட்டிக்கொண்டு தான் உள்ளார்கள்.

      • 1915ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம்கள் மீதான சிங்கள தாக்குதல் சேத விவரங்கள் :

        ஒன்பது நாள்கள் நீடித்த இந்தக் கலவரம் மத்திய, வட மேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் சம்புரகாமுவ போன்ற மாகாணங்களுக்குப் பரவியது. மாத்தளை, வட்டகம, கடுகண்ணாவ, கம்பொல, இரம்புக்கான, பாணத்துறை மற்றும் அக்குராசா போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் ஒன்றுதிரண்டு முஸ்லிம்களையும் அவர்களது கடைகளையும் தாக்கினார்கள். சில இடங்களில் முஸ்லிம்கள் சிங்களவர்களைத் திருப்பித் தாக்கினார்கள். இத் தாக்குதலில் 25 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 189 முஸ்லிம்கள் காயப்பட்டார்கள். நான்கு முஸ்லிம் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 250 கடைகள், வீடுகள் எரியூட்டப்பட்டன. 4,075 கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன.

        • நீங்கள் தான் நண்பரே மாற்றி மாற்றி பேசுகின்றிர்கள். இலங்கை வாழ் முஸ்லிம்களை நாம் இருவருமே தமிழ் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட்டுகொண்டு உள்ளோம். 1915 ஆண்டுக்கு பின்பு கூட ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஹிந்து முக்குவர் மக்களுடன் திருமண உறவு கொண்ட வரலாறு எல்லாம் ஈழ கிழக்கில் உள்ளது. மேலும் இரு மக்களுமே ஒரே மாதிரியான சமுக பழக்க வழ க்கங்களை கொண்டு இருந்தார்கள் (மதம் தவிர்த்த)

          • இப்போது, இலங்கையிலுள்ள முஸ்லிம்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம் , அழைத்து வந்தோம் , பொன்னம்பலம் எவ்வாறு அழைத்தார் என்பதெல்லாம் முக்கியமல்லவே ?
            இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தம்மை எவ்வாறு அழைத்துக்கொண்டார்கள் , அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதுவே இங்கு முக்கியம் பெறுகிறது .

            இலங்கையில் எந்த பாகத்திலும் வசிக்கும் முஸ்லிம்கள் எவரும் தம்மை , தமிழர்கள் என்றொ , தமிழ் முஸ்லிமகள் , தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்றோ கூட அழைத்துக்கொண்டதில்லை .
            அவர்கள் தம்மை இலங்கை சோனகர்கள் என்றே அழைத்து வந்தனர்.
            இப்போது அதனக்கூட விட்டு விட்டனர் . இலங்கை முஸ்லிம்கள் என்றே அழைத்துக்கொள்கின்றனர்.

            1915 க்கும் பிறகு கூட கிழக்கில் தமிழர்க்கும் , முஸ்லிம்களுக்கும் மண உறவு ஏற்பட்டுள்ளது.
            மண உறவுக்கொண்ட தமிழர்கள் அனைவரும் இப்போது இலங்கை முஸ்லிம்களாக உள்ளனர்.

            • எங்கள் ஈழ விடுதலை போரில் தம்மை ஈடுப்டுத்திகொண்ட ஈழ முஸ்லிம் இளைஞர்களை பற்றிய வரலாறு விடுதலை புலிகள் வரலாற்றில் இருந்து எவராலுமே துடைத்து எறியமுடியாத ஒன்றாகும். ஈழ கிழக்கு தலைமை கருணா திரு பிரபாகரனுடன் ஏற்படுத்திக்கொண்ட முறன்பாடுகள் தான் ஈழ கிழக்கில் விடுதலை புலிகளை வ்லுவிழக்க செய்து விடுதலை போரை சிதைத்தது. அதன் மூலமாக ஈழ-கிழக்கு விடுதலை புலிகளின் ஆளுமையில் இருந்து கைவிட்டு போனது. அதன் தொடர்சியாக வன்னியும், முல்லையும் பாரிய இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. எங்கள் தோல்விக்கு ஈழ கிழக்கு மற்றும் வன்னி பகுதி தமிழ் மக்களிடையே ஏற்பட்ட ஊடல்கள் தான் காரணமே அன்றி ஈழ தமிழ் முஸ்லிம்கள் பிரதான காரணம் அல்ல. இன்னும் கூட சொல்லப்போனால் ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிம்களுடன் ஆரம்ப நிலைகளில் கிழக்கு கருணா நல்ல விதமான உறவையே ப்ராம்ரித்துகொண்டு வந்தார்.

            • பார்பன RSS ஆளுமையில் உள்ள இந்தியாவில் இருந்து நீங்கள் பேசுகின்றிகள் என்பதை நினைவில் கூறுங்கள்.. பல்வேறு இன மக்கள் வாழும் இந்தியாவில் RSS இயக்கம் அவர்களின் இன அடையாளங்களை கைவிட கூறி நாம் எல்லாம் ஹிந்துக்கள் என்ற எளிய மத உணர்வை தூண்டி மக்களை மத ரீதியாக பிரிக்கும் நாட்டில் இருந்து அதுவும் அந்த RSS உங்கள் நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கும் தருணத்தில் நீங்கள் பிறரை பார்த்து கை நீட்டி பேசுவது மிகவும் அவலமானது நண்பரே

              • முஸ்லீம்களுக்கும் RSSக்கும் பெரிய வேறுபாடு கிடையாதென்கிறார் கேதீஸ்வரன். அவர் சொல்வதன்படி பார்த்தால், முஸ்லீம்களும் “எளிய மத உணர்வை தூண்டி மக்களை மத ரீதியாக” பிரிக்கிறார்கள். அதிலும், வஹாபிகள் RSS ஐ விட மோசமானவர்கள், இனவுணர்வை மறந்து,அரபுக்கலாச்சாரத்தையும், அரபு ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு முஸ்லீம்கள் எல்லோரும் “எளிய” மதவுணர்வுடன் முஸ்லீம்களாக மட்டும் இணைய வேண்டுமென்பது தான் அவர்களின் நோக்கம். பேராசிரியர் கேதீஸ்வரனின் கருத்துப்படி பார்த்தால், இந்த விடயத்தில் இலங்கைச் சோனகர்கள் RSS அப்படியே தூக்கி விழுங்கி விடுவார்கள். 🙂

                • RSS என்பது ஒரு பார்பன ஹிந்த்துவா அமைப்பு. அதனுடன் ஒட்டுமொத்த ஈழ முஸ்லிம்களை ஒப்புமை செய்யும் வியாசனின் அறிவாற்றல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். ஈழத்தில் எந்த இஸ்லாமிய அமைப்பு அத்தகைய வஹாபியிச கனவுகளுடன் தம்மை விளம்பர படுத்திக்கொண்டு உள்ளது என்று கூறி வியாசன் விவாதத்தை தொடர்ந்தால் நலமாக இருக்கும். விவாதிக்க எதுவாக இருக்கும்.

                  • ஆர்.எஸ் எஸ் அமைப்பு இந்திய மக்களை அவர்களது மொழி , கலை கலாசரத்திலிருந்து விலகி ஒட்டு மொத்த இந்துக்களாக , இந்தியர்களாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.
                    இலங்லையிலுள்ள முஸ்லிம்களும் அதையேதான் செய்கிறார்கள் . தாம் பேசும் மொழியை அஙகுள்ள கலை கலாசாரத்தை வைத்து தம்மை அடையாளப்படுத்தாமல் , தாம் சார்ந்த மதத்தை வைத்து தம்மை முஸ்லிம்களாக மட்டும் அடையாளப்படுத்துகிறார்கள் .
                    அந்த வகையில் இரு தரப்பும் ஒன்றுதான்.

                    • மிக சரியான பதில் லாலா. ஆனாலும் ஒரு திருத்தம். rss இயக்கத்துடன் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் ஒப்பிடுவது எப்படி சரியாகும். அமைப்புக்கு என்று விதிகள்,கொள்கைகள் உண்டு. அதனை அந்த அமைப்பினர் பின்தொடர்ந்தே ஆக வேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்களை எந்த விதியும் க்ட்டும்ப்டுத்த முடியாது. எனவே உங்கள் பதிலை கீழ் கணடவாறு மாறுகின்றேன்.

                      ஆர்.எஸ் எஸ் அமைப்பு இந்திய மக்களை அவர்களது மொழி , கலை கலாசரத்திலிருந்து விலகி ஒட்டு மொத்த இந்துக்களாக , இந்தியர்களாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. இலங்லையிலுள்ள முஸ்லிம்களின் “வாகபிய இயக்கங்களும் ” அதையேதான் செய்கிறார்கள் . தாம் பேசும் மொழியை அஙகுள்ள கலை கலாசாரத்தை வைத்து தம்மை அடையாளப்படுத்தாமல் , தாம் சார்ந்த மதத்தை வைத்து தம்மை முஸ்லிம்களாக மட்டும் அடையாளப்படுத்துகிறார்கள் .அந்த வகையில் இரு தரப்பும் ஒன்றுதான்.

                • ஒட்டு மொத்தமாக ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிம்கள் அனைவரையுமே rss இயக்கத்துடன் ஒப்புமை செய்யும் அவர்களை வாகபிகள் என்னும் , அவர்களை இனவுணர்வை மறந்து,அரபுக்கலாச்சாரத்தையும், அரபு ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு முஸ்லீம்கள் என்ற வியாசனுக்கு ஒரு முற்போக்கு ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிமின் சாட்டை அடி :

                  சவூதி முப்தியின் முட்டாள்தனமான பத்வா
                  http://irukkam.blogspot.in/2010/08/blog-post.html

                  புனித மக்காவில் கற்பழிப்பும் படுகொலையும்: சவூதியின் மற்றொரு கொடூரம்:
                  http://irukkam.blogspot.in/2010/09/blog-post_27.html

                  ஈரானும் பெண்ணுரிமையும்
                  http://irukkam.blogspot.in/2011/09/blog-post_5527.html

                  இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள்
                  http://irukkam.blogspot.in/2010/06/blog-post_14.html

                  • ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் என்று சும்மா சிண்டு முடிய வேண்டாம். வாகாபிகள் ஆர் எஸ் எஸை விட மோசமானவர்கள் என்றுதான் வியாஸன் கூறினார் . ஆனால் ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் இலங்கை முஸ்லிம்கள் , தமிழர் உறவை மேலும் பிளவுபடுத்த உங்களைப்போன்ற குள்ளநரிகள் ஒட்டு மொத்த இலங்க முஸ்லிகளையுமே ஆர் எஸ் எஸுடன் ஒப்புமை செய்கிறார் என சொல்லாததை சொன்னதாக சொல்லி இலங்கை முஸ்லிம்களை மேலும் தூண்டி விட பார்க்கிறீர்கள் .

                    • இந்த விவாதத்தில் குள்ள நரிக்கு என்ன வேலை நண்பரே!

                      rss போன்ற ஒரு மதவாத இயக்கதை மற்றும் ஒரு மதவாத இயக்த்துடன் ஒப்புமை செய்வீர்கள் எனில் அதில் எந்த தவறும் ஏற்பட போவது இல்லை . ஆனால் நீங்கள் செய்த தவறு என்ன? “இலங்லையிலுள்ள முஸ்லிம்களும் அதையேதான் செய்கிறார்கள்” என்று RSS அமைப்பின் செயலுடன் ஓப்புமை செய்கின்றிகள். யார் அந்த செயலை செய்யும் ஈழ தமிழ் முஸ்லிம் அமைப்பு என்ற தரவுகளை எடுத்து வைக்காமல் பொதுவில்
                      “இலங்லையிலுள்ள முஸ்லிம்களும்” என்று நீங்கள் கூறும் போது உங்களீன் மனதில் உள்ள முஸ்லிம் வெறுப்பு உணர்வு தான் வெளிப்படுகின்றது.

                      ஹிந்து மக்கள் rss அமைப்பை அதன் கொள்கையை சார்ந்து உள்ளார்கள் என்றுஎவராவது கூறுவார் எனில் அதில் உள்ள அபத்தம் தான் உங்கள் கருத்திலும் வெளிப்படுகின்றது. RSS அமைப்பில் ஒரு சில ஹிந்துகளும் உள்ளார்கள் என்று கூறுவது தானே சரியாகும். இந்த விவாதத்தில் குள்ள நரிக்கு என்ன வேலை நண்பரே!

                      //ஆர்.எஸ் எஸ் அமைப்பு இந்திய மக்களை அவர்களது மொழி , கலை கலாசரத்திலிருந்து விலகி ஒட்டு மொத்த இந்துக்களாக , இந்தியர்களாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. இலங்லையிலுள்ள முஸ்லிம்களும் அதையேதான் செய்கிறார்கள் .//

                    • உங்கள் தவற்றை சரி செய்து உங்கள் கருத்தை கீழ் கண்டவாறு மாற்றினேன் .

                      ஆர்.எஸ் எஸ் அமைப்பு இந்திய மக்களை அவர்களது மொழி , கலை கலாசரத்திலிருந்து விலகி ஒட்டு மொத்த இந்துக்களாக , இந்தியர்களாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. இலங்லையிலுள்ள முஸ்லிம்களின் “வாகபிய இயக்கங்களும் ” அதையேதான் செய்கிறார்கள் . தாம் பேசும் மொழியை அஙகுள்ள கலை கலாசாரத்தை வைத்து தம்மை அடையாளப்படுத்தாமல் , தாம் சார்ந்த மதத்தை வைத்து தம்மை முஸ்லிம்களாக மட்டும் அடையாளப்படுத்துகிறார்கள் .அந்த வகையில் இரு தரப்பும் ஒன்றுதான்.

                      “இலங்லையிலுள்ள முஸ்லிம்களின் “வாகபிய இயக்கங்களும் ” அதையேதான் செய்கிறார்கள்” இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு ?

                  • ஆர் எஸ் எஸ் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்து தோன்றி இன்றுவரை நிறுவனமயமாகி நிலைத்து வருகிறது . இந்துக்கள் 80% மேல் இருந்தாலும் ஒட்டு மொத்த இந்துக்களின் இயக்கமாகவோ அல்லது பெரும்பான்மை இந்துக்களின் இயக்கமாகவோ கூற முடியாது .அப்படி இருந்தும் இன்று வரை நின்று நிலைத்து இயங்கி வருவதற்கு காரணம் இது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு.

                    இலங்கையில் முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்களின் அரசியல் ஆர்.எஸ்.எஸ் இன் அரசியலை ஒத்ததே . ஆனால் ஆர் எஸ் எஸ் ஐப்போல் நிறுவனமயபடுத்தி இயங்க முடியாது , காரணம் அவர்கள் சிறுபான்மையினர் . எனவே அடக்கித்தான் வாசிக்க வேண்டும். அதுவும் புத்த தேரோக்களிடம் வாலாட்ட முடியாது . எலும்பை எண்ணி வைத்து விடுவார்கள் . இலங்கை முஸ்லிம்கள் தம்மை தமிழர்களின் ஒரு பகுதியாக இனம் காட்டாமல் , அவர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்தி சோனகர் என்றோ அல்லது முஸ்லிம்கள் என்றொ சொல்லிக்கொள்வது சிங்கள ஆட்சியாளர்களுக்கு வசதியாக உள்ளது.எனவே அந்தளவில் முஸ்லிம்களின் அடையாளப்படுத்துதலை அனுமதிக்கிறார்கள் . அவர்களது முஸ்லிம் அடையாளப்படுத்துதல் சிங்கள பவுத்தர்களை உரசிப்பார்க்குமாக இருந்தால் , இரண்டு வருடங்களுக்கு முன் தென்னிலங்கையில் புத்த தேரோக்கள் நடாத்திய வன்முறையை எதிர்கொள்ள வேன்டி வரும்.
                    சிங்கள பவுத்தர்களும் , புத்த தேரோக்களும் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள் .
                    இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் எனும் ஒரு இனம் தோன்றியதுபோல் வருங்காலத்தில் சிங்களம் பேசும் முஸ்லிம்கள் எனும் இனம் தோன்றி விடக்கூடாதென்பதுதான் அது.
                    காரணம் அப்படி ஒரு இனம் தமிழர்களிடையே தோன்றி , இன்று தமிழர்கள் படும்பாடு என்னவென்பதை அவர்கள் பார்த்து அனுபவித்து , பயன்படுத்தியும் வருகிறார்கள்.

                    • மொத்தமாக அனைத்து ஈழ தமிழ் முஸ்லிம் மக்களை நீங்கள் rss என்ற ஹிந்து மதவாத இயக்கத்துடன் ஒப்புமை செய்த தவற்றை இன்னும் நீங்கள் உணரவில்லையே நண்பரே. அதனை விடுத்து மேலும் மேலும் வியாக்கியானம் செய்து கொண்டு உள்ளீர்கள். ஈழ தமிழ் முஸ்லிம் மக்களை எந்த இஸ்லாமிய அமைப்பு வாகபியிச கொள்கையை நோக்கி நகர்த்துகின்றது, பிரசாரம் செய்கின்றது என்ற தரவுகளை வைத்தால் அன்றி இந்த குறிப்பிட்ட விவாதம் முன்னோக்கி செல்லாது. மற்றபடி இந்த குறிப்பிட்ட விவாதம் ஈழ தமிழ் முஸ்லிம் மக்களின் மீதான உங்கள் வெறுப்பலைகளாக தான் இருக்கும்.

          • இலங்கை முஸ்லீம்கள் எல்லாம் தமிழ்முஸ்லீம்கள் என்று யாராவது இலங்கை முஸ்லீம்களிடம் உளறினார் என்றால் கேதீஸ்வரனுக்கு அடிதான் விழும். இலங்கை முஸ்லீம்கள் தமிழைத் தாய்மொழியாகப் பேசினாலும் தம்மை தமிழர் என்றோ அல்லது ‘தமிழ் முஸ்லீம்கள்’ என்றோ அடையாளப்படுத்துவதில்லை. அவர்கள் ‘தமிழ்பேசும்’ முஸ்லீம்கள் அவ்வளவு தான். இலங்கையைப் பற்றிய இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத கேதீஸ்வரனுடன் இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேசுவது முட்டாள்தனமாகும்.

            இவர் ஐம்பது வருடங்களுக்கு முன்பு பிறந்த பொன்னம்பலத்தையும், ஐம்பது வருடம் பின்பு பிறந்த பொன்னம்பலத்தையும் இணைத்து உளறிய போதே இவர் என்ன பேசுகிறார் என்பது இவருக்கே தெரியாது என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். ஆனால் ‘இலங்கை அன்னை பெற்றெடுத்த தலைமகன்’, ‘The greatest Ceylonese of all times’ என்று சிங்களவர்களே இன்றும் போற்றும் சேர் ராமநாதனைப் பற்றி எதுவுமே தெரியாமல் இவரைப் போன்றவர்கள் அவரை இழிவாகப் பேசுவதைப் பார்க்கும் போது புரிகிறது.

            ஆரம்பகாலத்தில் தமிழ்மண்ணின் கரையோரங்களில் கரையொதுங்கிய அரபுக்களுக்கு கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களுடன் தான் முதலில் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் தாழ்த்தப்பட்ட பெண்களை மணந்தனர் என்பதற்கு, சில கட்டுரைகளின் வரிகளையும் காட்டியது மட்டுமன்றி, The Cyclopedia of India and of Eastern and Southern Asia இலும் கூட “அரபுக்கள் தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பெண்களை மணந்து அவர்களின் வாரிசுகள் தான் தமிழ் லெப்பைகள்” என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறிய பின்பும், , அதைக் கூகிளில் கூடத் தேடிப்பார்க்கத் தெரியாமல், மீண்டும் என்னிடம் வந்து ஆதாரம் கேட்கும் பேராசிரியர் “கேதீஸ்வரனின்’ மாணவர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். 🙂

            இலங்கையில் தமிழ்நாட்டைப் போல இடைச்சாதி, குடைச்சாதி எல்லாம் கிடையாது. வெள்ளாளர்கள் அல்லாதோர் எல்லோருமே-அது முக்குவராக இருந்தாலென்ன, முக்காதவராக இருந்தாலென்ன- தாழ்ந்த சாதி தான். தேவர், வன்னியர், நாடார் போன்ற ‘இடைச்சாதிகள்’ எல்லாம் அங்கே கிடையாது. உதாரணமாக, பெரும்பான்மை மலையகத் தமிழர்கள் இரமாநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தேவர்கள். அவர்களது தலைவர் செமியமூர்த்தி தொண்டமான் கூட தேவர்சாதி தான், சாதி பார்க்கிற எந்த யாழ்ப்பாண வெள்ளாளச் சாதிமானும், தோட்டத் தொழிலாளர்களை அதாவது (தேவர் சாதியினரை) திண்ணையைத் தாண்டி, வீட்டுக்குள் கூட விட மாட்டார்கள். ஆனானப்பட்ட தேவர்களுக்கே அப்படி என்றால் முக்குவர்கள் எம்மாத்திரம்?

            • யாராவது பேசினால் கேதீஸ்வரனுக்கு ஏனையா அடி விழப்போகின்றது .இலங்கையில் தமிழ் மக்கள் முஸ்லிம் தமிழ் மக்கள் இடையிலான உறவுகளை முடிந்த அளவுக்கு உங்கள் யாழ வெள்ளாள தலைமைகள் மூலம் சிதைத்திர்கள். பின்பு கனடா , நார்வே, அமேரிக்கா என்று அரசியல் பஞ்சம்-தஞ்சம் பிழைக்க ஓடிப்போ னிர்கள் சைவ வெள்ளாளர்களான நீங்கள். ( யுத்தம் தான் தோல்வியில் முடிந்து விட்டதே திரும்பி தாயகம் வருவதற்கு உங்களுக்கு என்ன கேடு?) அகதி பென்சன் பெற்றுகொண்டு தாயகத்தில் சிறிதேனும் தமிழ் மக்கள் -தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஆன உறவுகளை சீர்குலைக்க இன்யங்க்களில் எழுதிக்கொண்டு
              //இலங்கை முஸ்லீம்கள் எல்லாம் தமிழ்முஸ்லீம்கள் என்று யாராவது இலங்கை முஸ்லீம்களிடம் உளறினார் என்றால் கேதீஸ்வரனுக்கு அடிதான் விழும்.//

              • விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய ஈழ தமிழ் முஸ்லிம்களின் எண்ணிக்கை, யாழில் இருந்து வெளிநாடுகளுக்கு ஓடிப்போன சைவ சாதி வெறி வெள்ளாளர்களின் எண்ணிகையை விட குறைவாக இருபினும் அது மிகவும் முக்கியமானது ,குறிபிட்ட தகுந்தது. அவர்கள் அதாவது தமிழ் முஸ்லிம்களின் இளை ஞர்களின் உயிர் தியாகம் எம் மக்களால் என்றும் போற்றுதலுக்கு உரியது. விடுதலை புலிகள் இயக்கதுடன் மட்டும் அன்றி பல்வேறு தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பங்காற்றியுள்ளனர். அவர்களை பார்த்து தான் கனடாவுக்கு தஞ்சம் புகுந்த இந்த வியாசன் அவர்கள் வெறும் தமிழ்பேசும்’ முஸ்லீம்கள் அவ்வளவு தான் என்று ஏளனம் செய்கின்றார்

                //அவர்கள் ‘தமிழ்பேசும்’ முஸ்லீம்கள் அவ்வளவு தான். இலங்கையைப் பற்றிய இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத கேதீஸ்வரனுடன் இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேசுவது முட்டாள்தனமாகும். //

            • பொன்னம்லங்கள் விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணாக பேசிய வாய் யாருடையது என்பதனை பார்ப்போமா? மலையாக தமிழ் மக்களின் வாழஉரிமையை பறிக்க காரணம் சின்ன பொன்னம்பலத்தின் கையெழுத்து தான் என்றபோது அதனை மறுத்தவர் அதே வேளையில் மற்றும் ஒரு பகுதியில் ஆம் உண்மை தான் அவர் தான் காரணம் என்று ஒத்துகொள்கின்றார்.

              பெரிய பொன்னம்பலத்தை சிங்களவர்கள் புகழுவதற்கு உள்ள ஒரே காரணம் அந்த வெள்ளாள சாதிவெறியர் ஈழ தமிழ் மக்களுக்கு குறிப்பாக ஈழ முஸ்லிம் தமிழ் மக்களுக்கு ஆற்றிய இன துரோகம் தான். 1915 ஆம் ஆண்டு சிங்கலவர்கள்ஈழ தமிழ் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தில் இந்த பெரிய பொன்… கலவரம் செய்த சிங்களவர்களின் விடுதலைக்காக லண்டன் வரையில் சென்று வாதாடியது தான். எதிரி இவரை தலையில் வைத்து ஆடுகின்றான் என்றால் இவரின் தமிழ் மக்கள் மீதான துரோகத்தை நாம் எளிதில் அறிந்து கொள்ள முடியும் அல்லவா?

              //ஆனால் ‘இலங்கை அன்னை பெற்றெடுத்த தலைமகன்’, ‘The greatest Ceylonese of all times’ என்று சிங்களவர்களே இன்றும் போற்றும் சேர் ராமநாதனைப் பற்றி எதுவுமே தெரியாமல் இவரைப் போன்றவர்கள் அவரை இழிவாகப் பேசுவதைப் பார்க்கும் போது புரிகிறது.//

              • அவர் பெரிய பொன்னமும் அல்ல சின்ன பொன்னமும் அல்ல . அவர் சேர்.பொன்.இராநாதன் ஆவார். அவரைத்தான் சிங்களவர்கள் தமது தலைவராக போற்றினார்கள் .
                தாங்கள் பெரிய பொன்னம் , சிறிய பொன்னம் என்று மாறி மாறி தவறாக குறிப்பிட்டபோது கூட எனது பதிலில் சேர்.பொன். இராமநாதன் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.உங்கலது ஒவ்வொரு தவறுகளையும் தனித்தனியே சுட்டிக்காட்டிக்கொண்டிருக்க முடியாது . காரணம் உங்களது பல நீண்ட கருத்துக்களில் தவறுகளும் , குளறுபடிகளும் ஏராளம்.

                உதாரணம். நீங்கள் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் என முக்கி முக்கி மூச்சுக்கு முன்னூறு தரம் வில்லங்கத்துக்கு அழைப்பதையே அங்கிருக்கும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
                சேர் பொன் இராமநாதனையும் , இலங்கை அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தையும் போட்டு குழப்பியிருக்கிறீர்கள் குழப்பி.

                • இன்னும் கூட மற்றும் ஒரு பொன்னமபலம் இலங்கை வரலாற்றில் இருக்கின்றார். தேடிப்பருங்கள் நண்பரே. பெரிய பொன்னம்பலத்தின் தம்பி. அவரை நடு பொன்னம்பலம் என்று வேண்டுமானால அழைத்து அவர்கள் வாழ்ந்த காலத்தை எளிமையாக நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

                  //சேர் பொன் இராமநாதனையும் , இலங்கை அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தையும் போட்டு குழப்பியிருக்கிறீர்கள் குழப்பி.//

                  • பொன்னம்பலம் இருக்கிறார் சரி .நான் இல்லையென்று சொல்லவில்லயே . பொன்னம்பலம் ராமநாதனும் இருந்தார் , ஜி.ஜி.பொன்னம்பலமும் இருந்தார் .நீங்கள் எந்த பொன்னம்பலத்தை சொல்கிறீர்கள் ?
                    ஏனென்றால் ஒரு தடவை 1915 இல் சிங்கள சோனகர் கலவரத்தின்போது , பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கது செய்து சிறையிலடைக்கப்பட்ட சிங்களவர்களை விடுவிப்பதற்காக லண்டன் வரை வாதாட சென்ற தலைவரான சேர்.பொன். ராமாநாதனையும் , பொன்னம்பலம் என்றுதான் சொன்னீர்கள் . மலையக மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு ஆதரவாக இருந்த இலங்கை அமைச்சர் ஜி.ஜி.பொன்னம்பலத்தையும் பொன்னம்பலம் என்றுதான் சொன்னீர்கள் .
                    உங்களைப்பொறுத்தவரை இருவரும் ஒருவரே . ஆனால் யதார்த்தம் , இருவாரும் வெவ்வேறு நபர்கள் , தலைவர்கள்..

                    • வரலாற்று தரவுகளை பார்த்துவிட்டு தான் இங்கே விவாதிகின்றேன். பொன்னம்ப்லங்களை பற்றிய தெளிவுடன் தான் விவாதத்தை கொண்டு செல்கின்றேன் நண்பரே…

            • (அரபு-தலித் )இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டதற்கு கீழ் உள்ள இரண்டு கட்டுரைகளை ஆதாரம் என்று காட்டினார் இந்த வியாசன்.
              http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_5.html

              https://www.colombotelegraph.com/index.php/sri-lankan-muslims-are-low-caste-tamil-hindu-converts-not-arab-descendants/

              அந்த கட்டுரைகளில் அரபு-தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி நீர் பிதற்றியதற்கு ஏதும் ஆதாரம் இல்லையே என்று நிருபித்தவுடன் இப்பொது வேறு ஒன்றை முழுமையின்றி காட்டுகின்றார். ஆதாரங்களை முழுமையாக காட்ட முடியதவ்ர்க்கு எதற்கு இந்த வாய் கொழுப்பு ?
              //ஆரம்பகாலத்தில் தமிழ்மண்ணின் கரையோரங்களில் கரையொதுங்கிய அரபுக்களுக்கு கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களுடன் தான் முதலில் ……//

            • இலங்கை மண் பலவேறு சிற்றசுகளாக பிரிந்து இருந்த உண்மை கூட தெரியாமல் பிதற்றுகின்றார். குறிப்பாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலபரப்பு பல்வேறு சிறு நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்து . யாழ் குடா நாட்டில் வேண்டுமானால் சைவ வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கலாம். அதே நேரத்தில் வன்னி நிலம் என்றுமே யாழ் வெள்ளாளனின் ஆதிக்கத்தில் இருந்து இல்லை. வன்னி மண்ணும் முல்லை மண்ணும் வெள்ளையருக்கு எதிராக நடத்திய போர்கள் வெள்ளாளர்கள் வெள்ளையர்களிடம் வீழ்ந்த வரலாற்றை விட மிகவும் முக்கியமானவை. இலங்கை முழுவதும் சைவ வெள்ளாளர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற வியாசனின் எண்ணம் பூனை கண்ணை மூடிகொண்ட…..கதை தான். வன்னியர்கள், சானார்(நாடார்) வன்னி மண்ணில் இல்லை என்று கூறும் வியாசனை பார்த்து கேட்பவர்கள் சிரிக்க தான் செய்வார்கள்.

              யாழ் சைவ வெள்ளாளனின் சாதி வெறியும் நிலத்தின் மீதான ஆளுமையும் யாழ்பாணத்துக்குள் மட்டுமே என்ற உண்மை கூட இந்த அறிவாளிக்கு தெரியவில்லையே!

              //இலங்கையில் தமிழ்நாட்டைப் போல இடைச்சாதி, குடைச்சாதி எல்லாம் கிடையாது. வெள்ளாளர்கள் அல்லாதோர் எல்லோருமே-அது முக்குவராக இருந்தாலென்ன, முக்காதவராக இருந்தாலென்ன- தாழ்ந்த சாதி தான். தேவர், வன்னியர், நாடார் போன்ற ‘இடைச்சாதிகள்’ எல்லாம் அங்கே கிடையாது. //

              • ஈழத்தில் வன்னியர்கள் யாரும் இல்லை . இருந்தால் ஆதாரத்துடன் பதில் தரவும்.

                • ‘ஊழிக்காலம்’ என்ற நாவலை எழுதிய Thamayanthy Ks அம்மாவை முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள். ஏன் கூறுகின்றேன் என்றால் விடுதலை புலிகளின் ஆளுமையில் வன்னி பிரதேசத்து சமுக அமைப்பை பற்றி அவருடன் விவாதம் செய்த போது அவர் குலம் ,கோத்திரத்துடன் அவரின் வன்னியர் சாதியை பற்றி விவரித்தார். இந்த செய்தி மிக நீண்ட ஒரு விவாத்தின் போது பெற்றேன்.

                  • வட தமிழகத்தில் பெருவாரியாக இருக்கும் வன்னியர்களுக்கும் , ஈழத்தின் வன்னி பிரதேசத்தில் வாழ்ந்த , வாழும் வன்னிப்பிரதேச மக்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை.

                    • தமிழ் நாட்டு பல்லவ ராசாக்களின் வரலாற்றை முடிந்தால் மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள். விடை கிடைக்கும். வன்னிய மக்கள் எப்படி ஈழத்துக்கு இடம் பெயர்ந்தார்கள் என்ற தரவுகள் கிடைக்கும்.

                  • கேதீஸ்வரன்,

                    ஈழத்தில் வன்னியர்சாதி கிடையாது. வன்னியை ஆண்ட பண்டாரவன்னியன் போன்ற வீரர்கள் கூட வெள்ளாளர்கள் தானே தவிர வன்னியர்கள் அல்ல. வன்னியர்கள் என்று இன்று அழைக்கப்படும் பள்ளிசாதியினருக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை உங்களுக்காக ஆதாரத்துடன் எனது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளேன். பார்க்கவும். 🙂

                    ஈழத்துப் பண்டாரவன்னியனும், வன்னியர்களும் வன்னியர்சாதியினர் அல்ல!
                    http://viyaasan.blogspot.ca/2016/02/blog-post_22.html

                    • “வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நு}லில், “வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” எனக் குறித்துள்ளார்.

                    • ஈழ வன்னி தமிழ் மக்கள் தமிழ் நாட்டை சேர்ந்த வன்னியர்களே என்பதனை நிருபிக்கும் ஆய்வு நூல் :

                      தமிழக வன்னியர்களும் ஈழத்து வன்னியர்களும் -வெல்ல வூர்க்கோபால்

                      http://noolaham.net/project/42/4188/4188.pdf

                    • பொலநறுவைக் காலத்திலும் (993-1215) அதன் பின்பும் தென்னகத்திலிருந்து வன்னியர் ஈழநாட்டிற்கு வந்தனர். ஈழத்தில் வன்னியர்வசமிருந்த படைப்பற்றுக்கள் பல வன்னிமைகள் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்தன. பொலநறுவை அரசு அழிவுற்றதும் வன்னியநாடுகள் என வழங்கிய பல குறுநில அரசுகள் எழுச்சிபெற்றுப் பல நு}ற்றாண்டுகளாக ஈழ வரலாற்றிலே சிறப்பிடம் பெற்றிருந்தன. இவை வடஇலங்கையிலும் மேற்கிலே சிலாபம், புத்தளம் முதலிய இடங்களிலும் கிழக்கிலே திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும வளர்ச்சியடைந்திருந்தன.

                      வன்னியர்

                      ஆக்கியோன் :

                      இலங்கைப்பல்கலைக்கழக வரலாற்று
                      விரிவுரையாளர்.

                      கலாநிதி
                      சி. பத்மநாதன்

                      பேராதனை, 1970

                      http://noolaham.net/project/02/196/196.htm

            • யாராவது பேசினால் கேதீஸ்வரனுக்கு ஏனையா அடி விழப்போகின்றது .இலங்கையில் தமிழ் மக்கள் – முஸ்லிம் தமிழ் மக்கள் இடையிலான உறவுகளை முடிந்த அளவுக்கு உங்கள் யாழ வெள்ளாள தலைமைகள் மூலம் சிதைத்திர்கள். பின்பு ஏன் இந்த ஒப்பாரி ராகம் ?

              //இலங்கை முஸ்லீம்கள் எல்லாம் தமிழ்முஸ்லீம்கள் என்று யாராவது இலங்கை முஸ்லீம்களிடம் உளறினார் என்றால் கேதீஸ்வரனுக்கு அடிதான் விழும்.//

        • பாராளுமன்றில் இரு தரப்பும் பேசினார்களா ? இல்லையா என்று நான் கேட் கவில்லை.
          கிழக்கில் தமது மக்கள் புலிகளால் கொடுமைபடுத்தப்பட்டார்கள் என்று வரை ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் தலைமைகள் , அரசியல்வாதிகள் , அமைச்சர்கள் இன்று வரை அது சம்பந்தமான விசாரணை கமிஷன் ஒன்றையோ , ஆணைக்குழுவையோ நியமித்து பாதிக்கப்பட்ட தமது மக்களுக்குநீதியும் ,நிவாரணமும் வழங்குமாறு ஏன் இது வரை ஒருவராவது ஒரு கோரிக்கையை கூட முன்வைக்கவில்லை என்றுதான் கேட்டிருந்தேன் ?

          • பரஸ்பர குற்றசாட்டுகளையும் ,அவ நம்பிக்கைக்ளையும் செயல்பாட்டுடன் கூடிய பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம் :

            ஈழ கிழக்கு முஸ்லிம்கள் மீதான LTTE தாக்குதல்கள் சந்தேகத்துக்கு இடமானவை தானே? சில ஈழ கிழக்கு பிரதேசங்களில் இரு தரப்பினருமே மற்றவர்களால் வலுவில் வெளியேற்றபட்டு உள்ளனர். ஈழ கிழக்கு தமிழ் மக்கள மீதும் சிங்கள உளவுத்துறை+ ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிம்கள் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல்கள் நடந்து உள்ளது. ஈழ கிழக்கு தமிழ் மக்களும் LTTE யின் துணை கொண்டு ஈழ கிழக்கு முஸ்லிம்களை அவர்களின் பூர்விக நிலத்தில் இருந்து வெளியேற்றி யுள்ளனர். இப்பொது கூறுங்கள்ஈழ கிழக்கில் நிலைமைகளை சரி செய்ய இருதரப்பினரும் நடத்த வேண்டிய பேச்சு வார்த்தைகளா ? அல்லது விசாரணை கமிசனா?

            மேலும் ஈழத்தின் யாழ் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் விக்னஷ்வரன் அவர்களும் அவர் தரப்பு தமிழ் அரசியல் வாதிகளும் யாழ் பிரதேசத்து மண்ணை ராணுவத்திடம் இருந்து மீட்கும் முயற்சியின் போதே அங்கு இருந்து LTTEயால் வெளியேற்றபட்ட முஸ்லிம் மக்களையும் மறு குடியேற்றம் செய்ய முழு முயற்சிகள் செய்ய வேண்டும்..

            • பேச்சு வார்த்தை மூலம் சில பரஸ்பரம் சில இடங்கள் விடுவிக்கப்படலாம் . ஆனால் இங்கு நடைபெற்றவை வெறும் காணி சுவீகரிப்பு மாத்திரமல்லவே . புலிகளின் தாக்குதலினால் முஸ்லிம்கள் பலர் உயிரையும் உடமையையும் இழந்தார்கள் என்றல்லவா கூறப்பட்டது ? அவை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்படாது , உறுதிபடுத்தப்படாது . எனவே முறையான விசாரணை நடைபெற்று யார் யார் ? யாரால் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பது விசாரணையில் தெரிய வரும் . பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் அப்போதுதான் வழங்க முடியும் .
              நடைபெற்ற வன்செயல் பற்றி இன்று வரை எந்த முஸ்லிம் அமைச்சரும் சரி , அரசியல்வாதிகளும் சரி மூச்சுக்காட்டவில்லை.

              • உலகமே அறிந்த இந்த காத்தான்குடி ஈழ தமிழ் முஸ்லிம் படுகொலைகளை பற்றியும் , ஈழ கிழக்கு தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் , சொந்த நிலத்தில் இருந்து அவர்களை துரத்திய காட்சிகள் பற்றியும், பிற எண்ணற்ற படுகொலைகளை பற்றியும் ஈழ தமிழ் மக்களும் , ஈழ முஸ்லிம் தமிழ் மக்களும் பேசிக்கொண்டு தான் உள்ளார்கள். இதற்கான தரவுகளை வெளியிட்டுகொண்டு தான் உள்ளார்கள். குற்றவாளிகள் அவர்கள் LTTE யின் கிழக்கு பிராந்திய தளபதியாய் இருந்த பின்பு இந்த இயகத்தை விட்டு வெளியேறிய கருணாவாக இருந்தாலும் , மத அடிப்படை வாத முஸ்லிம்களாக இருந்தாலும் , சிங்கள ராணுவமாக இருந்தாலும் தண்டிக்கபடவேண்டும் என்ற கருத்தில் எந்த விதமான முரண்பாடும் எனக்கு இல்லை. அதே நேரத்தில் 2009 ஆண்டின் போது சிங்கலவ ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட மானுட பேரழிவுகளை இன்று உலக நாடுகள் கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணையை நடத்திக்கொண்டு உள்ளன. ஐநா சபை இந்த விடயத்தில் தலையிட்டு உள்ளது முழுமையான நம்பிக்கையை ஈழ தமிழ் மக்களுக்கு சிறிது ஆறுதல் தரும் நிகழ்வு தான். ராணுவ ஆக்கிரிமிப்பில் உள்ள காணிகள் மீண்டும் மக்களிடம் திருப்பி கையளிக்க படவேண்டும் என்று ஐநா சபையின் தூதர் வலியுறித்தி உள்ளது ஈழ தமிழ் மக்களுக்கு பயன் அளிக்கும் என்றால் அது வரவேற்க தக்கதே.

                அதே நேரத்தில் இது போன்றே ஐநா சபையில் ஈழதமிழ் முஸ்லிம்கள்ஈழ கிழக்கில் அடைந்த பெரும் துயரங்களுக்கு,இழப்புகளுக்கு அவர்கள் சிறிதாவது நிவாரணம் அடையும் அளவுக்கு அவர்களுக்காக குரல் கொடுக்க நார்வே போன்ற ஜனநாயக பூர்வமான நாடுகள் முன்வரவேண்டும். இத்தகைய நிலை ஏற்படுமாயின் அது ஈழ தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அது நிரந்தர தீர்வை கொடுக்காவிட்டாலும் சிறிய நிவாரன்த்தையாவது அளிக்கும்.

                ஈழ முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பாக குரல் கொடுத்தார்களா இல்லையா என்ற விசயத்தில் என்னால் எதனையும் அறுதியிட்டு உறுதியாக கூற இயலவில்லை என்பதற்காக ஈழ தமிழ் முஸ்லிம் மக்கள் படுகொலை

                • change :ஐநா சபை இந்த விடயத்தில் தலையிட்டு உள்ளது முழுமையான நம்பிக்கையை அளிக்கவிட்டாலும் ஈழ தமிழ் மக்களுக்கு சிறிது ஆறுதல் தரும் நிகழ்வு தான்

                • change ஈழ முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பாக குரல் கொடுத்தார்களா இல்லையா என்ற விசயத்தில் என்னால் எதனையும் அறுதியிட்டு உறுதியாக கூற இயலவில்லை என்பதற்காக ஈழ தமிழ் முஸ்லிம் மக்கள் படுகொலை நடக்கவே இல்லை என்று எவருமே பொய்யாக பேச முடியாது.

      • பொன்னம்பலம் இராமநாதன் செய்த தமிழ் இன துரோகம் :

        1.தமிழ் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் அநாகரி தர்மபாலஎன்ற சிங்கள இனவெறியனின் கருத்தியில் ஆளுமையில் நடத்திய தாக்குதலை இந்த மூட பொன்னம்பலம் சிங்களவர் பக்கம் இருந்து வாதாடி அவர்களை விடுவித்து தமிழ் முஸ்லிம்களை தமிழ் மக்களிடம் இருந்து பிரித்தது.

        2.கலவரத்துக்கு காரணம் தமிழ்முஸ்லிம்கள் தான் என்று கொழும்பு சட்ட மன்றத்தில் இவர் பொய்யாய் ஆற்றிய உரை.

        3.இப்படி எல்லாம் தமிழ் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுக்கொண்டே அதற்கு முன்பாகவே 1885 ம் ஆண்டில் இலங்கைச் சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு மதம்மாறிய low cast சார்ந்த இந்து தமிழர்கள் என்றார் பொன்னம்பலம் இராமநாதன். இவரின் நடவடிக்கைகள் அனைத்திலுமே யாழ்பாண சைவ வெள்ளாள சாதி வெறி ஈழ கிழக்கு தமிழ் மக்கள் மீது அப்பட்டமாக பாய்கின்றது.

        • வம்படியாக தமிழ் முஸ்லிம் , தமிழ் முஸ்லிம் என்றைழைத்து ரொம்பத்தான் கஷ்டப்படுகீறீர்கள்.
          ஆனால் உண்மை என்னவெனில் , இலங்கை முஸ்லிம்கள் தம்மை அன்றிலிருந்து ( அதாவது 1915 முன்பிலிருந்து ) இன்று வரை , தமிழர்கள் என்று அல்ல , தமிழ் முஸ்லிம்கள் என்று கூட அழைத்தது கிடையாது. தம்மை சோனகர் எனும் இனமாகவே அழைத்து வருகிரார்கள்.
          பின் தாங்கள் மட்டும் ஏன் முக்கி முக்கி தமிழ் முஸ்லிம்கள் என முனகுகிறீர்கள்.

          • நீங்கள் தான் நண்பரே மாற்றி மாற்றி பேசுகின்றிர்கள். இலங்கை வாழ் முஸ்லிம்களை நாம் இருவருமே தமிழ் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட்டுகொண்டு உள்ளோம். 1915 ஆண்டுக்கு பின்பு கூட ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஹிந்து முக்குவர் மக்களுடன் திருமண உறவு கொண்ட வரலாறு எல்லாம் ஈழ கிழக்கில் உள்ளது. மேலும் இரு மக்களுமே ஒரே மாதிரியான சமுக பழக்க வழ க்கங்களை கொண்டு இருந்தார்கள் (மதம் தவிர்த்த)

        • கேதீஸ்வரனுக்கு ஒரு இழவும் புரியாது போல் தெரிகிறது. இலங்கையில் முஸ்லீம்கள், தாம் தமிழர்களே இல்லை என்கிறபோது, அவர்களை ஆதரிக்காதது எப்படி தமிழினத் துரோகமாகும். இதை இவருக்கு யாராவது விளக்கமாக எடுத்துக் கூறினால் புண்ணியமாகப் போகும். இலங்கை முஸ்லீம்கள் அவர்கள் தமிழர்களே இல்லை என்கிறார்கள் ஆனால் இந்த மனுஷன் என்னடாவென்றால், அவர்களைத் தமிழ்முஸ்லீம்கள், தமிழ்முஸ்லீம்கள் என்றே புலம்புகிறார். இப்படி இடக்கு முடக்காகப் பேசி யாராவது இலங்கை முஸ்லீம்களிடம் நல்லா வாங்கிக் கட்டப் போகிறார். 🙂

      • நண்பர் திரு அ.மயூரன் அவர்களின் கிழ் உள்ள கட்டுரையை படித்த பின்பாவது இனவாதியாக யார் இருகின்றார்கள் என்று லாலா முடிவு செய்யட்டும். இந்த கட்டுரை தமிழர்கள் என்றுமே இளித்த வாயர்கள் தான் என்பதனையும், சிங்களவர்கள் தான் காரியக்காரர்கள் என்பதனையும் ஈழ வரலாற்றின் ஊடாக நிருபிக்கின்றது.நான் எம் தமிழ் முஸ்லிம்கள் சிங்கள காடையர்களால் கொல்லபட்ட 1915 நிகழ்வை சுட்டிகாட்டினால் நான் எப்படி இனவாதி ஆவேன்?

        தமிழ்த் தலைவர்களை சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிய வரலாறு
        http://ibctamil.com/articles/index/547

        • இலங்கையில் சோனகர்கள் சிங்களவர்களால் கலவரத்தில் கொல்லப்பட்டதை மட்டும் கூறி , பிரிட்டிஷ் அரசின் , படையின் ஆதரவோடு முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுக்கெதிராக நடாத்திய வன்முறையை மட்டும் மூடி மறைத்து பேசுவது இனவாதம்தான் .மேலும் அந்த கலவரத்தில் ஒடுக்கப்பட்டிருந்த , பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்காக , பிரிட்டிஷ் அரசையும் அதன் படையையும் எதிர்த்து வாதாடி வெற்றி பெற்று அந்த மக்களுக்கு நியாயத்தை பெற உதவிய தமிழ் தலைவரை தூற்றுவதும் , , யார் பாதிக்கப்பட்டிருந்தார்கள் , யார் ஒடுக்கப்படிருந்தார்கள் , யாருக்கு நீதி மறுக்கப்பட்டிருந்தது ? என்றளவிலும் இந்த பிரச்சனையைநடுநிலையாக பார்க்காது வெறும் சிங்கள , தமிழ் முஸ்லிம் (???) எனும் இனவாத கண்ணோட்டத்துடனேயே அணுகியிருக்கிறீர்கள் என்பது உங்களது கருத்துக்களிலேயே தெளிவாக புலனாகிறதே ?

          • நண்பர் லாலா இந்த விவாதத்தில் போன வாரம் வரையில் அவர்களும் தமிழ் மக்கள் தான் என்று உங்களால் அழைக்கப்பட்ட தமிழ் முஸ்லிம்கள் இன்றிலிருந்து உங்களால் சோனகர்கள் என்று அழைக்கபடுவதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளாமா ? மேலும் தமிழ் முஸ்லிம்கள் 1915 ஆம் ஆண்டு கலவரத்தில் தற்காப்பு நிலையில் தானே இருதார்கள். ஒருவேளை அவர்கள் சிங்களவர்களை தாக்கி இருந்தால் அது எதிர் வினையாக தானே இருக்க முடியும். தற்காப்புக்கு கூட ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிம்கள் தாக்ககூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கின்றதா நண்பரே? சரி தரவுகள் மூலம் சிங்களவர்கள் அடைந்த இழப்புகளை பட்டியல் இடுங்கள் நண்பரே.

            • ஆமாம், எம்மைப்பொறுத்தவரை அவர்களும் தமிழ் பேசும் மக்கள்தான் . அவர்கள் தம்மை மத அடிப்படையில் முஸ்லிம்கள் என அடையாளப்படுத்துவதை விடுத்து மொழி அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் என தம்மை அழைத்துக்கொள்ள வேண்டுமென விரும்பினோம்.அதிலும் பலர் தமிழர்களாக இருந்து முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள் என்பதாலும் தந்தை செல்வா உட்பட பல தலைவர்கள் அப்படியே கூறி வந்தார்கள். .
              ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாது தம்மை இலங்கை சோனகர்கள் என்றே அழைத்து வந்தனர் . இப்போது சோனகர் என்று அழைப்பதைக்கூட விட்டு விட்டனர் நேரடியாக இலங்கை முஸ்லிம்கள் என்றே அழைத்துக்கொள்கின்றனர்.

              நான் சிறிய வயதில் இலங்கை பற்றி பட்டிக்கும்போது கூட பாட புத்தகத்தில் ” இலங்கையில் சிங்களவர்கள் , தமிழர்கள் , சோனகர்கள் , மற்றும் பறங்கியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றே படித்திருக்கிறேன் . இலங்கை முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் சோனகர்கள் என்ற பதம் அங்கு இடம்பெற்றிருக்க முடியாது.
              அதனால்தான் நான் திரும்ப திரும்ப உங்களுக்கு கூறி அலுத்துப்போய்விட்ட விடயம் , இலங்கையில் முஸ்லிம்களை நாம் எப்படி அழைக்கிறோம் அல்லது அழைக்க விரும்புகிறோம் என்பதல்ல விடயம் . அவர்கள் தம்மை எப்படி அழைத்துக்கொள்கிறர்கள் , எப்படி மற்றவர்கள் தம்மை அழைக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்பதே முக்கியம்.அதனைத்தான் வியாஸன் கூறினார் ,நீங்கள் இலங்கைக்கு சென்று அங்குள்ள முஸ்லிம்களை பார்த்து அவர்களை தமிழர்கள் என்றொ , தமிழ் முஸ்லிம்கள் என்றொ குறிப்பிடால் செருப்படி விழுமென்று . அது உண்மைதான்.

              மேலும் இதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் , இலங்கை முஸ்லிம்களையும் ஒப்பிட முடியாது.

              • சோனகர் என்ற வார்த்தை ஈழத்தில் இல்லை என்று நான் கூறியது போன்று பேசிக்கொண்டு உள்ளீர்கள். நான் என்ன கேட்டேன் உங்களுடன். இந்த விவாதத்தில் நேற்று வரையில் ஈழ தமிழ் முஸ்லிம்களும் தமிழ் மக்கள் தான் என்று கூறிய நீங்கள் இன்று அவர்களை எதற்காக சோனகர் என்று அழைகின்றிர்கள் என்று தானே?

                • இதுதான் விடிய விடிய ராமர் கதை விடிந்த பின் சீதை ராமருக்கு சித்தப்பன் என்று சொன்னது.
                  நான் அப்படி சொன்னது தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களைப்பார்த்து . இலங்கையில் வாழும் முஸ்லிம்களை பார்த்து நான் ஒரு போதும் அவ்வாறு சொல்லியதில்லை. தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தம்மை சோனகர் என்றோ , மூர் என்றொ அழைத்துக்கொண்டதில்லை. தம்மை தமிழர்களாகவே எண்ணினார்கள் . அப்போது இங்கு நடந்த விவாதத்தில் தமிழ்நாட்டில் வாகாபியிஸ அரபுமயமாக்கல் பற்றிய சர்ச்சை போய்க்கொண்டிருந்தது . வாகாபியிஸ்டுளின் அரபுமயமாக்கல் பிரசாரத்தால் தமிழ்நாட்டு முஸ்லிம்களும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போய் விடுவார்கள் என்ற அச்சம் விவாதத்தில் கலந்து கொண்டவர்களால் வெளியிடப்பட்டிருந்தது.
                  இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் வாகாபியிஸ்டுகளின் மூளைசலவை இல்லாமலேயே தம்மை தமிழர்களாக சொல்லிகொண்டதில்லை.அப்படி இருக்கும்போது இலங்கையில் வாழும் முஸ்லிம்களை நான் என்ன வில்லங்கத்துக்கு தமிழ் முஸ்லிம் என அழைக்கப்போகிறேன் ?
                  அவர்கள் தம்மை சோனகர் என்றும் இலங்கை முஸ்லிகள் என்றும் தம்மை அழைத்துக்கொள்ளும்போது நாம் எதற்கு தமிழ் முஸ்லிம்கள் என்று அழைக்க வேண்டும் ?

                  • விடிய நீங்கள் கூறிய கதையில் நீங்கள் இலங்கை தமிழ் மக்களை பார்த்து அவர்களும் தமிழ் மக்கள் தான் என்று விவரித்த கதையை இங்கு உங்கள் கண் முன்னே ஆவணமாக எடுத்து வைக்க போகின்றேன்.

                    “””எது எப்படியிருந்தாலும் , முகமதியர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் சரி , இஸ்லாத்திற்கு பெருமளவில் மதம் மாறியவர்களும் சரி தமிழ் குடிகளே “””.[116.1.1]

                    விவாதத்தில் உங்கள் தேவைக்கு ஏற்ப தமிழ் முஸ்லிம் மக்களை ஒரு இடத்தில் தமிழ் குடிகள் என்றும் மறு இடத்தில் சோனகர் என்றும் அழைகின்றிர்கள் நண்பரே !

                    //இதுதான் விடிய விடிய ராமர் கதை விடிந்த பின் சீதை ராமருக்கு சித்தப்பன் என்று சொன்னது. நான் அப்படி சொன்னது தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களைப்பார்த்து . இலங்கையில் வாழும் முஸ்லிம்களை பார்த்து நான் ஒரு போதும் அவ்வாறு சொல்லியதில்லை. தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தம்மை சோனகர் என்றோ , மூர் என்றொ அழைத்துக்கொண்டதில்லை.//

                    • இப்போது தம்மை முஸ்லிம்கள் , சோனகர் என அழைத்துக்கொண்டாலும் அவர்களது முன்னோர்கள் தமிழர்களே என இப்போதும் தான் சொல்கிறேன்.
                      ஆனால் அவர்கள் வழி வந்தவர்கள் தம்மை தமிழர்கள் என்றோ , தமிழ் முஸ்லிம்கள் என்றொ இன்று தம்மை அழைத்துக்கொள்வதில்லை . அப்படி அழைத்துக்கொண்டால் சிங்களவனிடமிருந்து சலூகைகள் பெற்றுக்கொள்ள முடியாது.
                      அதனால் நாம் அப்படி தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் , அவர்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை , தம்மை முஸ்லிம் என்றே அழைத்துக்கொள்கிறார்கள்.
                      இதற்கு பிறகும் நீங்கள் முக்கி முக்கி தமிழ் முஸ்லிம்கள் என முனகுகிறீர்கள்.

                    • நீங்கள் அவர்களை தமிழ் வழியில் வந்தவர்கள் என்று கூருகின்றிகள். அப்படி என்றால் நான் அவர்களை ஈழ தமிழ் முஸ்லிம்கள் என்று அழைக்கும் போது முன்பு நீங்கள் முக்கியது போன்று முக்க மாட்டிர்கள தானே?

          • ஈழ தமிழ் மக்களுக்கும் ஈழ தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்புக்ளுக்கு நாங்கள் இருவருமே மூல காரணம் என்பதை கடந்த 60 ஆண்டு ஈழ வரலாறின் மறுபரிசிலனை ஊடாக நாங்கள் சுய விமர்சனம் செய்து கொள்கின்றோம்.

            மூலம் :
            http://orkut.google.com/c885808-td24d7771de37fdc.html

            • நீங்கள் உங்களுக்கு நீங்களே நினைத்துக்கொள்வதுபோல் மனக்கசப்பு எல்லாம் எதுவுமில்லை.
              இலங்கயில் முஸ்லிம்கள் பெரும்பாலும் வர்த்தக சமூகம் அதனால் அப்போது ஆட்சியிலிருப்பவர்களுடன் அண்டிப்பிழைப்பதையே விரும்புவார்கள் . பிரிட்டிஷ் ஆட்சிபின்போது பிரிட்டிஷ் அரசை அண்டிப்பழைத்தார்கள் . இப்போது சிங்கள ஆட்சி நடப்பதால் சிங்களவர்களை அண்டிப்பிழைக்கிறார்கள் . இலங்கை சுதந்திரமடைந்ததன் பின் சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் , கல்வி தொழில் என தமிழர்களை ஒடுக்க முற்பட்டபோது , இலங்கை முஸ்லிம்கள் தம்மை தமிழர்களிலிருந்து வேறுபட்டவர்களாக பிரித்து இனம் காட்டி , சிங்களவர்களை குளிர்வித்து , சலூகைகள் ,நன்மைகளை அனுபவித்து சுகம் கண்டார்கள் . அதனை இன்று வரை தொடர்கிறார்கள்.

              • இந்த பின்னுட்டத்தில் வரை முறை இன்றி உளறிக்கொண்டு உள்ளீர்கள். தமிழ் முஸ்லிம் மக்கள் வர்த்தத்தை மட்டுமே சார்ந்தவர்கள் அல்ல. பிற தொழில்களான விவசாயம் போன்றவற்றையும் செய்கின்றார்கள். மீதி உள்ள உங்கள் கருத்துகள் ஈழ தமிழ் முஸ்லிம் மக்கள் மீதாதன உங்களின் காழ்புனர்சியை தான் தங்கு தடை இன்றி கொட்டுகின்றது. எதற்கும் ஆதாரம் வேண்டும் நண்பரே

                • முஸ்லிகள் இலங்கைக்கு வந்ததிலிருந்து இன்று வரை அவர்களது பிரதான தொழில் வர்த்தகமே . ஏனைய தொழிலகளை செய்து வந்தாலும் , வர்த்தகத்தில் உள்ளவர்களே அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள் .அவர்களது கட்டுப்பாட்டிலேயே ஏனைய தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள் .

                  • 14% தமிழ் முஸ்லிம் மக்களில் ஒன்று இரண்டு சதம் மக்கள் வேண்டுமானால் அவர்கள் தெற்கு இலங்கையில் வணிகத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கலாம். மற்றபடி பெரும்பான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் விவசாயம் சார்ந்த வேலைகளை, தோல் பதனிட்டு தொழில் ஆகியவற்றை சார்ந்து உள்ளார்கள் என்றே இலங்கையில் அவர்களின் பொருளாதார சூழல் உள்ளது. தமிழ் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் ஈழ கிழக்கில் அவர்கள் விவாசாயத்தையே முழுமையாக நம்பி உள்ளார்கள் என்பதனையும் , யாழ் மாவட்டத்தில் விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் அவர்கள் தங்கள் நிலங்களை இழந்ததையும் அவை இன்று இலங்கை ராணுவ கட்டுபாட்டில் உள்ளதையும் நாம் அறியமுடியும். அதே நேரத்தில் நீங்கள் கூறியது போன்று வத்தகத்தில் ஈடுபட்டு உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் தான் அரசியலில் செல்வாக்குடன் உள்ளார்கள் என்பது 100% உண்மை.

            • இலங்கையில் முஸ்லீம்கள் தமிழைப் பேசிக் கொண்டே தம்மைத் தமிழர்கள் அல்ல என்பதற்கு யாழ்ப்பாணச் சைவவெள்ளாள அரசியல் தான் காரணம் என்று கூறி முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கும் எத்தனையோ தமிழ்நாட்டாரை நாங்கள் இணையத் தளங்களில் காணலாம். ஆனால் சைவவெள்ளாள அரசியல் மட்டுமல்ல, தீவிரவாத இஸ்லாமும், the Jammathi Islami, Tabligh Jamaat and Salafi போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் எவ்வாறு இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்களை அவர்களின் மொழிவழிச் சகோதரர்களாகிய ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பியதென்பதை ‘Some Critical Notes on the Non-Tamil Identity of the Muslims of Sri Lanka, and on Tamil–Muslim Relations என்ற கட்டுரையில் இலங்கை முஸ்லீம்களில் ஒருவரும் அமெரிக்காவில் Temple University இல் பணிபுரிபவருமாகிய பேராசிரியர் முகம்மது இம்தியாஸ் அவர்கள் விளக்குகிறார். இலங்கையில் போன்றே, தமிழ்நாட்டில் வகாபியிசத்தின் வளர்ச்சியும், அதற்கு தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஆதரவும், தமிழர்களையும், முஸ்லீம்களையும் தமிழ்நாட்டிலும் பிளவுபடுத்தும் என்பது மட்டும் உண்மை.

              அது மட்டுமன்றி, (இஸ்லாத்தை) நம்பாதவர்களின் (முஸ்லீம் அல்லாதவர்களின்) இதயங்களில் பயத்தை/பயங்கரவாதத்தை நிலைநிறுத்து (அல்லது கொடூரத்தையூட்டு/பயமுறுத்து) என்று குர்ஆன் முஸ்லீம்களுக்குக் கட்டளையிடுகிறது , …. After all, it is a faith which commands its adherents to instill terror in the hearts of unbelievers (Quran, 8:12–17) என்ற உண்மையையும் அவர் வெளிப்படையாகக் கூறுகிறார். குர்ஆனில் உள்ள இப்படியான கட்டளைகளை மறைத்தும்/மழுப்பியும் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வாய்ஜாலம் போடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு முஸ்லீமாகிய பேராசிரியர் இம்தியாஸ் அந்த உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

              ….Lacking a distinct racial or linguistic identity, what else can the Muslims point to? Recently urban Muslim elites and politicians have sought to promote a communal identity based on their ancestors’ Arab-Islamic cultural orientation ‘which has severed them from the Dravidian separatist campaign of the Hindu and Christian Tamils’. Islam is appealed to here as well. Muslims are even encouraged to think of themselves as members of one ‘family’, the ummah. A potential problem with this strategy, though, is that the ummah is a family of all Muslims, not just those from Sri Lanka. Pushing their common Islamic identity has allowed the Muslims of Sri Lanka to override other non-Islamic identity markers of theirs. But these days professing Islam can send out mixed signals. After all, IT IS A FAITH WHICH COMMANDS ITS ADHERENTS TO INSTILL TERROR IN THE HEARTS OF UNBELIEVERS (Quran, 8:12–17).

              http://www.academia.edu/834275/Some_Critical_Comments_on_the_non-Tamil_identity_of_Muslims_of_Sri_Lanka

              • யாழ் வெள்ளாளர்கள் ஈழ கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்கள் :

                1.ஈழ தமிழ் முஸ்லிம்கள் ஈழ தமிழ் மக்களிடம் இருந்து விலக (vice versa) முதன்மையான காரணம் பெரிய பொன்னம்பலமே ஆகும். 1915 ல் சிங்கள இனவெறியர்கள் ஈழ தமிழ் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலில் இந்த பெரிய பொன்னம்பலம் சிங்கள காடையர்களுக்கு ஆதரவாக நின்றது மிகபெரிய தமிழ் இன துரோகம்.

                2இந்த 1915 கலவரத்துக்கு காரணமே ஈழ தமிழ் முஸ்லிம்கள் தான் என்று இந்த பெரிசு துரோகி பொன்னம்பலம் உண்மைக்கு புறம்பாக சிலோன் சட்ட ம்ன்ன்றத்தில் பேசினார்.

                3அடுத்ததாக சிலோன் சட்ட மன்றத்தில் ஈழ தமிழ் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதிதுவத்தை இதேயாழ் வெள்ளாள பெரிசு பொன்னம்பலம் தடுத்து நிறுத்தினார்.

                4இதே பெரிசு பொன்னம்பலம் ஈழ கிழக்கு மக்களை low cast என்று தன் யாழ் வெள்ளாள சாதி வெறியுடன் அவ்தூரு செய்தார்.

                5ஈழ விடுதலை போரில் ஈழ கிழக்கு மற்றும் வன்னி பகுதி தமிழ் மக்கள் உயிர் தியாகங்களை செய்து கொண்டு இருக்க இந்த வெள்ளாளர்கள் வசதியாக வெளிநாடுகளுக்கு பஞசம்-தஞ்சம் பிழைக்க சென்றனர்.

                வெள்ளாளர்களின் துரோகங்கள் தொடரும்…..

              • இது வரையில் பொதுவில் அனைத்து ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களை பற்றி அவதூராக பேசிக்கொண்டு இருந்த வியாசன் உண்மையில் இப்ப தான் ஈழ தமிழ் முஸ்லிம் மக்கள் எப்படி எல்லாம் வாகபிகளால் திசை திருப்பப்டுகின்றார்கள் என்ற விவாதத்துக்கே வந்து உள்ளார். நலலது வியாசன் தொடருங்கள்…

              • இங்கு பேசிக் கொண்டிருந்த விடயத்தை திசை திருப்பி விடுவதற்காக யாரோ உசுப்பேத்தி விட்ட ராம்ராஜ்/கேதீஸ்வரன் கண்டதையும் உளறி, மிகவும் போரடிக்கிறார். ஆகவே ஜனாப் திப்பு சுல்தான் அவர்களை எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். 🙂

                • தமிழக முஸ்லிம்கள் பற்றிய விவாதத்தை ஈழ கிழக்கு தமிழ் முஸ்லிம்கள் வரை கொண்டு சென்று விவாதத்தை திசை திருப்பிய அந்த நல்லவரும் வியாசன் தான்.

  110. உலக மகா அறிவாளி வியாசனின் கருத்தான”இலங்கையில் தமிழ்நாட்டைப் போல இடைச்சாதி, குடைச்சாதி எல்லாம் கிடையாது. வெள்ளாளர்கள் அல்லாதோர் எல்லோருமே-அது முக்குவராக இருந்தாலென்ன, முக்காதவராக இருந்தாலென்ன- தாழ்ந்த சாதி தான்” என்ற கருத்தை திரு கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் ஆய்வுகளுடன் ஒப்புமை செய்து வியாசனின் அறிவாற்றலை நாம் வியக்கலாம்.

    வேளாண்மைச் சமூகமான “வெள்ளாளர்” சமூகமே அதிகாரப் படி நிலையில் உயர்வான இடத்தில் உள்ளது. இதன் கீழ் பல்வேறு படிநிலைகளில் பல தரப்பட்ட சாதிகள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் 60க்கும் மேற்பட்ட சாதிகள் இருந்ததாகத் தெரிகிறது, தற்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சமூக அதிகார நிலையின் அடிப்படையில் யாழ்ப்பாணச் சாதிகளை,

    உயர் சாதியினர்,
    உயர் சாதி அல்லாதோர்
    குடிமக்கள் (குடிமைகள்)

    என மூன்றாகப் பிரிக்கலாம் என்கிறார் சிவத்தம்பி. முன்னர் குறிப்பிட்ட வெள்ளாளச் சாதியினர் “உயர் சாதி” வகைப்பாட்டினுள் அடங்குவர். குடியேற்றவாதக் காலத்திலும் அதற்கு முன்னரும் மடப்பளி, அகம்படியர் ஆகிய சாதிகளும் உயர் சாதிகளாகக் கருதப்பட்டன. தற்காலத்தில் இவ்விரு சாதிகளும் இல்லாமல் போய்விட்டன. “உயர் சாதி அல்லாதோர்” என்னும் பிரிவினுள் அடங்கும் சாதிகள், இடைத்தரமான சமூக அதிகார நிலையில் உள்ளவை. கோவியர், தச்சர், கொல்லர் போன்ற சாதிகள் இப்பிரிவினுள் அடங்குபவை. மூன்றாவது பிரிவில் அடங்கும் சாதிகள் மிகவும் குறைவான சமூக அதிகார நிலையை உடையவை. பள்ளர், நளவர், பறையர் போன்ற சாதிகள் இத்தகையவை. சமூகத்தின் ஒரு பிரிவினரைப் பாரபட்சமாக நடத்தி அடக்குமுறைக்கு உள்ளாக்குவதாக இந்தச் சாதி முறை அமைந்துள்ளது.-

    • உயர் சாதி அல்லாதோர் எப்படி உயர்சாதியாக முடியும், உயர்சாதிக்கு அடுத்தாதாக உள்ளவர்கள் தாழ்ந்த சாதி தானே. இடைச்சாதி எல்லாம் இலங்கையில் கிடையாது, கோவியர், தச்சர், கொல்லர் எல்லோருமே வெள்ளாளருக்கு சேவகம் செய்பவர்களே தவிர அவர்கள் யாழ்ப்பாண வெள்ளாளர்களை விட உயர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாண வழக்கப்படி அவர்கள் எல்லோருமே வெள்ளாளர்களின் குடிமைகள். பஞ்சமர்கள்(பள்ளர், நளவர், பறையர்) எல்லோரும் அடிமைகள். சாதிபற்றிப் பேசத் தொடங்கினால், இக்காலத்தில் எழுதவதற்கே சங்கடமான விடயங்களைக் கூட எழுத வேண்டியுள்ளது. அதற்கு கேதீஸ்வரனுக்குத் தான் குட்டு வைக்க வேண்டும்.

      கோவியர் என்ற சாதியினர் தமிழ்நாட்டில் கிடையாது. கோவிலார் தான் கோவிய்ராக மருவியதென சிலரும், அவர்கள் வெள்ளாளர்களால் அடக்கியாளப்பட்ட யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களவர்கள் என்றும் கூறுவர் சிங்களவர்களின் உயர் சாதியினர் கொவிகம என அழைக்கப்படும் சிங்கள வெள்ளாளர்கள். ஆனால் அக்காலத்தில் வெள்ளாளர்களுக்கு சமைப்பதும், வெள்ளாளர்களின் பிணங்களைத் தூக்குவதும், பிண ஊர்வலங்களில் ‘நமச்சிவாய வாழ்க’ என்று தேவார திருவாசகம் பாடிக் கொண்டு முன்னுக்குப் போவதும் தான் கோவியர்களின் வேலை என்று கூறுகிறார்கள். இப்பொழுதெல்லாம் தேவாரங்களை இறந்தவர்களின் உறவினர்கள் தான் பாடுகின்றனர். தமிழ்நாட்டில் போல் மரண ஊர்வலத்தில், செத்துக்கிடக்கிற ஆத்தாவுக்கு முன்னால் ஈழத்தமிழர்கள் டப்பாங் கூத்தாடுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. .

      உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
      தொழுதுண்டு பின்செல் பவர்.

      திருவள்ளுவர் கூட இந்தக் குறளில் வெள்ளாளர்கள் தான் உயர்ந்த சாதி, மற்றவர்கள் எல்லோரும் வெள்ளாளர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டும், அவர்களிடம் உணவு வாங்கி உண்டு கொண்டும் செல்கிறவர்கள் என்றல்லவா கூறியிருக்கிறார்?? 🙂 🙂

      • இலங்கையில் இடை சாதிகள் என்ற வார்த்தை பயன்பாடு

        ஐயோ சாமி வியாசனிடம் விவாதம் பண்ணி செத்தாண்டா சேகரு! இதுவரைக்கும் யாழ் குடா நாட்டில் சைவ வெள்ளாளர்கள் உயர்ந்த சாதி பிறர் எல்லாம் தாழ்ந்த சாதி என்று கூறிய அறிவாளி வியாசன் அவர்களே திரு கார்த்திகேசு சிவத்தம்பி ஐயாவின் ஆய்வுகள் என்ன கூறுகின்றது என்று மீண்டும் படியுங்கள் :

        “உயர் சாதி அல்லாதோர்” என்னும் பிரிவினுள் அடங்கும் சாதிகள், “இடைத்தரமான” சமூக அதிகார நிலையில் உள்ளவை.

        மேலும் ஒரு உதாரணத்தை இலங்கை தமிழர் கட்டுரை மூலம் தருகின்றேன் :

        தமிழரிடையேயும் சாதி வேறுபாடுகளும் பிரதேச வேறுபாடுகளும் வலுவாக இருந்தன. யாழ்ப்பாணத்திற் தமது பாரம்பரியத்தையும் கொழும்பிற் தமது தொழில்களையும் கொண்டிருந்த வசதி படைத்த யாழ்ப்பாணச் சைவ வேளாளரே அரசியலிலும் வட புலத்துச் சொத்துடைமையிலும் கல்வி, உத்தியோகங்களிலும் ஆதிக்கஞ் செலுத்தினர். “””இடை நிலைச் சாதியினரிற்””” சிலர் தனிப்பட்ட முறையில் சமூக மேம்பாடு எய்தினாலும், வேளாள மேட்டுக் குடிகளது நிலஞ் சார்ந்த பொருளாதார ஆதிக்கத்தின் பின்னணியிலும் ஏற்கெனவே கல்வியிலும் உத்தியோகத்திலும் அவர்கள் பெற்றிருந்த முதனிலையின் காரணத்தாலும் அரசியலில் அவர்கட்குச் சவாலாக எழ வாய்ப்பு இருக்கவில்லை. கரையார் சமூகத்தினர் நேரடியான வேளாள ஆதிக்கத்திற்கு உட்படாதும் அவர்களை ஆதிக்கத்திற்கு உட்படுத்தத் தேவையற்றும் இருந்தாலும்; தென் இலங்கையின் கராவே சமூகத்தின் அளவுக்குச் சமூக மேம்பாடு பெற்றிருக்கவில்லை.

        http://kalaiy.blogspot.in/2009/05/blog-post_03.html

      • வியாசனின் அப்பட்டமான சைவ வெள்ளாள சாதி வெறி :

        வியாசனுக்கு தமிழ் ஈழம் என்றால் யாழ் குடா நாடு மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் போல. யாழ் குடா நாட்டை தவிர்த்து மற்றைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மிதான இவரின் பார்வை மிகவும் சாதி துவேசம் கொண்டது. உதாரணத்துக்கு எடுத்துகொண்டால் ஈழ கிழக்கில் வாமும் முக்குவர் சமுகம் எந்த விதத்திலும் யாழ் சைவ வெள்ளாள சமுகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது அல்ல. காரணம் அந்த ஈழ கிழக்கில் யாழ் சைவ வெள்ளாளர்களின் ஆளுமை சிறுதும் கிடையாது. அப்படி இந்த சைவ வெள்ளாளர்களின் ஆளுமைக்கு சிறிதும் உட்படாத முக்குவர் சமுகத்தை பார்த்து தான் இந்த வியாசன் தாழ்த்தபட்டவர்கள் / தாழ்ந்தவர்கள் என்று அவதூரு செய்து கொண்டு உள்ளார். அதற்கு உதாரணமாக இவர் முக்குவர்களை low cast என்று கூறிய பெரிய பொன்னம்பலத்தின் வார்த்தைகளை காட்டுகின்றார். இந்த இருவருக்கும் சிறிதாவது அறிவு இருக்கின்றதா? முக்குவர்களை சாதி ரீதியாக அடக்குவதற்கு வேறு சாதி இல்லாத ஈழ கிழக்கு நிலப்பரப்பில் அவர்கள் எப்படி சமுக ரீதியில் தாழ்த்தபட்டவர்கள் / தாழ்ந்தவர்கள் ஆவார்கள்?

        இந்த பெரிசு பொன்னம்பலம் ஈழ கிழக்கு மக்களை பார்த்து கூறிய low cast என்ற சாதி வெறி வக்கிர வார்த்தைகளை வியாசன் கெட்டியாக பிடித்துகொண்டு வார்த்தையை வியாசன் இவரும் ஈழ கிழக்கு மக்கள் தாழ்த்தபட்டவர்கள் / தாழ்ந்தவர்கள் என்று அவதூரு செய்து கொண்டு உள்ளார்.

      • கோவியர் எனும் சாதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல , இந்தியா முழுவதும் உண்டு என்றுதான் நான் அறிகிறேன். ஆனால் வேறு பெயரில். கோபியர் என்பதன் திரிபுதான் யாழில் கோவியர் என்றானது.
        கோபியர் என்றால் யாதவர் , இடைய சாதியை சேர்ந்தவர்கள் . பசு வளர்த்தல் , பால் உற்பத்தி சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள்.

      • வரலாற்றில் இது வரையில் யாழ்பாணத்து தமிழ் மக்கள் எப்படி எல்லாம் ஈழ கிழக்கு தமிழ்மக்களுக்கு ,குறிப்பாக முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தார்கள் என்று பார்த்தோம். இந்த துரோகத்தின் எதிர் வினையாக தான் அந்த மக்கள் வாகாபியவாதிகளை நோக்கி சென்றார்கள் என்று நான் சப்பை கட்டு கட்ட போவது இல்லை. மதம் என்று வருமாயின் அது தம் மக்களை திவிரமாக இயக்குவிக்க அந்த மதத்தை சார்ந்த அமைப்புகள் முயன்றே தீரும் என்பது தான் மதத்தின் பாலான உலக வரலாறு. இந்தியாவில் Rss இயக்கம் ஹிந்துகளை ஓரணியில் நிறுத்த முயலுவது போன்று தானே தர்மபாலவும் புத்த மதத்தவர்களை கொம்பு சிவிவிட்டு 1915 கலவரத்தை ஈழ தமிழ் முஸ்லிம்களுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தி காட்டினார். அதை தானே இந்திய /இலங்கை வாகபிக்ளும் தம் மக்களிடம் நடத்த முயலுகின்றார்கள்.

        ஆனாலும் இந்தகைய தடைகளை அனைத்தையும் கடந்து அனைத்து மதத்திலும் உள்ள முற்போக்கு சிந்தை உள்ள மக்கள் ஜனநாய பூர்வமாக ஒருங்கிணைய வேண்டியது அவசியம் என்பது மட்டும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

      • எனக்கு நீங்கள் வைக்கும் குட்டு ஒருபக்கம் இருக்கட்டும்.. சந்ததி சாக்கில் திருவள்ளுவரை அழைத்து உங்கள் யாழ் சைவ வெள்ளாள வெறியை புனரமைப்பு செய்து கொள்ளலாம் என்று பார்கின்றிகளே வியாசன். சரியா இது தகுமா? மேலும்கேவியரை பற்றிய ஒரு விளக்கம். அவர்கள் தெலுங்கு வடுக சாதியினர். வெள்ளாளருக்கு அடியாட்களாகவும் செயல்பட்டனர். குடிமைகள் (குடிமக்கள்-விவசாய கூலிகள்) சாதிய அடக்கு முறைக்கு எதிராக போராடும் போது வெள்ளாளன் சார்பில் அடியாள் வேலை செய்யும் தடியர்கள் தான் இந்த கேவியர்கள்.

        //கேதீஸ்வரனுக்குத் தான் குட்டு வைக்க வேண்டும்.//

      • தேவார திருவாசகம் பாடிக் கொண்டு முன்னுக்குப் போவது தான் தமிழர் பண்பாடு என்று சைவ வெள்ளாள சாதியமரபை எதற்காக பிற தமிழர்கள் மீது திணிக்க வேண்டும் இந்த வியாசன். ? என் சித்தப்பாவின் இறுதி ஊர்வலத்தில் அரிசந்திர பாட்டு பட்டது இன்றும் என் நினைவில் உள்ளது. தமிழ் நாட்டில் இறுதி ஊர்வலங்களில் காமன் , அரிச்சந்திரன் பாடல்கள் பல்வேறு வடிவங்களில் பாடப்படுகின்றது என்பதே உண்மை.

        மரணத்துக்கான கானா பாடல்கள் மீது இத்துணை வெறுபிருக்கும் வியாசனுக்கு அந்த பாடல்களை தம் வாழுவுடன் இணைந்து வாழும் சென்னை உழைக்கும் தலித் மக்கள் , மீனவ சமுகத்து மக்கள் மீது எத்துனை காண்டு /வெறுப்பு இருக்கும் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது.

        //தமிழ்நாட்டில் போல் மரண ஊர்வலத்தில், செத்துக்கிடக்கிற ஆத்தாவுக்கு முன்னால் ஈழத்தமிழர்கள் டப்பாங் கூத்தாடுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. . //

        • கேதீஸ்வரனைப் போன்ற ஒரு ஜோக்கர் கிடையவே கிடையாது. தேவாரம் திருவாசகம் தமிழர் பண்பாடு இல்லையாம், ஆனால் அரிச்சந்திர புராணம் தமிழர் பண்பாடாம். வட இந்தியர்களின் அரிச்சந்திரன் கதையில், வட இந்திய அரசனாகிய அரிச்சந்திரன் கதையிலுள்ள பாடலை, அவரது சித்தப்பாவின் இறுதி ஊர்வலத்தில் பாடினார்களாம் அவரது உறவினர்கள். அப்படியானால் கேதீஸ்வரனின் குடும்பமும் வடக்கிலிருந்து தமிழ் மண்ணுக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல் தெரிகிறது. 🙂

          ஆபிரகாமிய புறச்சமயங்கள் தமிழ் மண்ணுக்கு வருமுன்பு தமிழர்கள் எல்லோரும் பிறப்பிலும் , இறப்பிலும் தேவார திருவாசகம் தான் பாடினார்கள். அது தான் தமிழர் பண்பாடு. ஆனால் அந்தப் பண்பாட்டைத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இழந்து விட்டார்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் இழக்கவில்லை. இலங்கையில் தேவாரம், திருவாசகங்கள் எந்தச் சாதிக்கும் சொந்தமானதல்ல. எல்லாச் சாதியினரும் தான் வீட்டில் நடக்கும் நல்லது கேட்டது எல்லாவற்றிலும் பாடுகிறார்கள். பேரரசன் ராஜ ராஜ சோழன் திருமுறைகளைப் பார்ப்பனர்களிடமிருந்து மீட்டு, சோழமண்டலத்திலும், ஈழமண்டலத்திலும் எல்லோரும் பாடுமாறு கட்டளை பிறப்பித்து செப்புத் தகடுகளிலும் பொறித்தான். அந்தக் கட்டளையின்படி ஈழத்தமிழர்கள் இன்றும் தேவாரம் திருவாசகங்களை எல்லா விழாக்களிலும் பாடுகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கத்தில் கூட பாடுகிறார்கள். அந்தளவுக்கு ஈழத்தில் தேவாரம் பாடுதல் தமிழர் பண்பாடாகும். கிழக்கு மாகாணத்திள் விளையாட்டுப் போட்டி – இந்தக் காணொளியைப் பார்க்கவும்.

          • தமிழ் நாட்டில் இறுதி ஊர்வலங்களில் காமன் , அரிச்சந்திரன் பாடல்கள் பல்வேறு வடிவங்களில் பாடப்படுகின்றது என்பதே உண்மை.

          • காமன் – அரிச்சந்திரன் பாடல்களை இறுதி ஊர்வலங்களில் பாடும் தமிழக தமிழ் மக்களை வடக்கிலிருந்து தமிழ் மண்ணுக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்று கூறுவது அருவருக்க தக்க செயல் :

            காமன் – அரிச்சந்திரன் பாடல்களை பற்றிய விளக்கம் :

            காமன் பாடல்:-

            தமிழகத்தில் காமன் பாடல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வடிவங்களில் பாடப்படுகிறது. குறிப்பாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் காமன் பாடல் என்றும், தஞ்சை மாவட்டத்தில் இலாவணி என்றும், மதுரை மாவட்டத்தில் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

            பல்வேறு ஊடகங்களில் பாடப்படும் காமன் பாடலின் நோக்கம் ஒன்றாக உள்ளது. எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று பாடப்படும் பாடலில் காமனைச் சிவன் எரித்தான் என்று ஒரு குழுவினரும், சிவன் அவனை எரிக்கவில்லை என்று மற்றொரு குழுவினரும் பாடுகின்றனர். எரிந்த கட்சியினர் காமதேவன் சிவனால் எரிக்கப்பட்டான் என்பதற்குத் தக்க ஆதாரங்களைக் கொடுக்கின்றனர். எரியாத கட்சியினர் காமன் எரியவில்லை, எரிந்தது காமனின் மனமே என்ற கருத்து அடிப்படையில் மறுத்துப் பாடுகின்றனர். எரியாத கட்சி எரிந்த கட்சியின் வாதத்திற்குத் தகுந்த விளக்கம் கூறித் தன் கட்சிக்கு ஆதரவாக சில கதைகளைச் சொல்கின்றனர். இந்த வாதங்கள் பிணம் வீட்டில் இருக்கும்போது பறை அறைந்து பாடுவார்கள். இதன் நோக்கம் உயிர்விட்டவுடன் பிணத்தையும் வீட்டையும் உயிரானது பிரிய முடியாமல் வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருக்கும்போது இப்பாடலைக் கேட்டு உயிரானது விண்ணுலகம் செல்லும் என்ற நம்பிக்கைக்காகப் பாடுகின்றனர்.

            காமன் பாடல் சாவுச் சடங்கில் பாடுவதற்கான காரணம் பின்வருமாறு நம்பப்படுகிறது. தொடக்கக் காலத்தில் காமன் பாடல் மதுராந்தகம் வட்டாரத்தில் இறந்துவிட்ட ஆண்களுக்கு மட்டுமே பாடப்பட்டு வந்தது. சிவன் காமனை எரித்த உடன் இரதிதேவி சிவனிடம் வந்து புலம்புகின்றாள். அப்போது சிவன் மனம் இரங்கி இரதிதேவியிடம் உன் கணவன் இரவில் மட்டுமே உன் கண்ணுக்குத் தெரிவான். அப்பொழுது அவனைக் கண்டு நீ அழக்கூடாது, அழுதால் அப்பொழுதே மறைந்து விடுவான் என்று சிவபெருமான் கூறியதாகக் கூறுகின்றனர். இந்த நம்பிக்கையில் இன்றும் விதவைப் பெண்கள் கனவில் தன் கணவன் வந்தால் அவனைப் பார்த்து அழக்கூடாது என்ற நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடையே காணப்படுகிறது. இதனால் காமன் பாடல் ஆண்களுக்கு மட்டுமே பாடப்பட்டு வந்துள்ளது. இறந்து விட்ட கணவனுக்கு இரதி புலம்புவது போன்று ஒப்பாரியாகப் பெண்கள் பாடி வந்துள்ளன.

            அரிச்சந்திரன் பாட்டு:-

            இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் பிணம் சுடுகாட்டுக்குள் நுழையும்போது அரிச்சந்திரன் பாட்டு பாடப்பட்டு வருகிறது. இடுகாடு, சுடுகாடு, நன்காடு எனப் பலபெயர் இவ்விடத்துக்கு உண்டு. குழிவெட்டிப் பிணத்தை அதில் இட்டுப் புதைத்து அடக்கம் செய்யும் இடமாதலின் அது சுடுகாடு எனவும், வாழ்ந்து அமைதியடைந்து அமரராகி உறையும் இடமாதலின் அவ்விடம் நன்காடு எனவும் வழங்கப்படுகிறது. மதுராந்தகம் வட்டாரத்தில் இசுலாமியர், கிறித்தவர்கள் பிணத்தைப் புதைத்து விடுவார்கள். இந்துக்கள் புதைப்பதும், எரிப்பதும் உண்டு. தலைச்சன் பிள்ளை இறந்தால் (முதல் பிள்ளை) எரித்துவிடுவார்கள். பில்லி, சூனியம், ஏவல் வைக்கும் மந்திரவாதிகள் தலைச்சன் பிணத்தை நிலத்திலிருந்து தோண்டித் தலையை மட்டுமே துண்டித்து எடுத்துச் சென்று மை தயாரிக்கிறார்கள் என்ற நம்பிக்கை நிலவுவதால் தலைச்சன் பிணத்தை எரித்து விடுகின்றனர். அவை மட்டுமல்லாமல் இறந்துபோன தன் பிள்ளையின் ஆவியானது தங்கள் குடும்பத்தை என்றும் காக்காது என நம்புகின்றனர். எனவே தலைச்சன் பிள்ளையை எரித்துவிடுவது மதுராந்தகம் வட்டாரத்தில் காணப்படுகிறது. சுடுகாட்டின் வாயிலில் சிறிய கோவில் ஒன்று காணப்படும். இதனை அரிச்சந்திரன் கோவில் என்பர். அரிச்சந்திர புராணத்தின்படி முன்னொரு காலத்தில் சுடுகாட்டைக் காவல் புரிந்தவன் அரிச்சந்திரன். அந்நினைவைப் போற்றும் விதத்தில் அந்நம்பிக்கையின் எச்சமாக இக்கல்லை அரிச்சந்திரனாக பாவிக்கின்றனர். பிணத்தைச் சுடுகாட்டுக்குள் கொண்டு செல்ல அரிச்சந்திரனின் அனுமதியை வேண்டுகின்றனர். இந்து மதத்தினர் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் அரிச்சந்திரனை வழிவிடும்படி வேண்டுதல் செய்கின்றனர். இந்த வேளையில் அரிச்சந்திரன் பாடல் பாடப்படுகிறது.

            நம் முன்னோர்கள் மகாபாரதக் கதை, இராமாயணக் கதை, பட்டி விக்கிரமாதித்தன் கதை, நல்லதங்காள் கதை, ஆகியனவற்றை இராகத்தோடு படிப்பதுபோல அரிச்சந்திரன் பாடலையும் பாடுகின்றனர்.

            காமன் – அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) – முனைவர் பொன். சண்முகம்

          • முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தில் தேவரம் /திருவாசகம் பாடப்படவில்லை என்பதற்காக அவன் தமிழன் இல்லை என்று ஆகிவிடுமா வியாசன்? அந்த ஊர்வலத்தில் காமன் பாடல் தானே பாடபட்டது.

            • அரை லூசுத்தனமாகப் பேசுவதில் கேதீஸ்வரனை வெல்ல யாராலும் முடியாது. தேவாரம் திருவாசகம் பாடுவதை எதிர்க்கிறாரே, ஏதும் ‘பகுத்தறிவு’ பெரியாரிய முத்துக்களை எடுத்து விளாசப் போகிறார் என்று பார்த்தால், சிவபெருமான் மீது பாடிய தேவாரங்கள் பாடுவது தமிழ்ப்பண்பாடில்லையாம். ஆனால் அதே சிவன் காமனை எரித்த புராணக் கதையைப் புகழ்ந்து காமன் பாட்டு பாடுவது தமிழ்ப் பண்பாடாம். தேவாரம், காமனை எதிர்த்த கதை, அரிச்சந்திரன் சுடலை காத்த கதை எல்லாமே சைவம் தான். எல்லாமே சிவனை நினைத்துப் போற்றுவது தான். என்ன தான் பகுத்தறிவு கோசம் போட்டாலும் சைவத்தையும் தமிழையும், தமிழர்களையும் பிரிக்க முடியாதது என்பதைத் தான் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தில் சிவன் காமனை எரித்தது பற்றியதைக் கூறும் காமன் பாடல் பாடியது காட்டுகிறது.

          • வியாசன் , அனைத்து மதத்தவரும் கலந்து கொள்ளும் இது போன்ற பொதுவான நிகழ்வுகளில் தமிழ் தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் தான் தமிழ் நாட்டில் பாடப்படுகின்றது. அது தான் சரியானதும் கூட. ஏன் தமிழ் ஈழத்துக்கு என்று தமிழ் தாய் வாழ்த்து ஏதும் தனியாக இல்லையா?

            //ஈழத்தமிழர்கள் இன்றும் தேவாரம் திருவாசகங்களை எல்லா விழாக்களிலும் பாடுகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கத்தில் கூட பாடுகிறார்கள். அந்தளவுக்கு ஈழத்தில் தேவாரம் பாடுதல் தமிழர் பண்பாடாகும். கிழக்கு மாகாணத்திள் விளையாட்டுப் போட்டி – இந்தக் காணொளியைப் பார்க்கவும்.//

          • வியாசன் உமது சட்டாம்பிள்ளை அராஜக வாதத்தை உம் சைவ வெள்ளாள சாதியுடன் மட்டும் நடைமுறைபடுத்தவும். ஈழத்தில் தேவாரம் / திருவாசகம் பாடப்படுகின்றது என்பதற்காக தமிழ் நாட்டிலும் அது பாடப்படவேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. இறுதி ஊர்வலத்தில் பாடப்படும் பாடல் எது என்பதை அந்த மக்களின் சமுக வழமையை பொறுத்தே அமையும். காமன் பாட்டு / அரிசந்திர பாட்டு தமிழ் நாட்டில் இறுதி ஊர்வலத்தில் பாடப்படுகின்றது என்பதால் தமிழ் நாட்டு மக்களின் தமிழ் உணர்வு எப்படி குறைந்ததாக அமையும், நாங்கள் எப்படி தமிழ் பண்பாட்டை இழந்த தமிழராக இருப்போம்?

            வியாசன் உமக்கே உம் பேச்சு அருவருப்பாக இல்லையா?

            //ஆபிரகாமிய புறச்சமயங்கள் தமிழ் மண்ணுக்கு வருமுன்பு தமிழர்கள் எல்லோரும் பிறப்பிலும் , இறப்பிலும் தேவார திருவாசகம் தான் பாடினார்கள். அது தான் தமிழர் பண்பாடு. ஆனால் அந்தப் பண்பாட்டைத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இழந்து விட்டார்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் இழக்கவில்லை. இலங்கையில் தேவாரம், திருவாசகங்கள் எந்தச் சாதிக்கும் சொந்தமானதல்ல. எல்லாச் சாதியினரும் தான் வீட்டில் நடக்கும் நல்லது கேட்டது எல்லாவற்றிலும் பாடுகிறார்கள்.//

  111. எனது பின்னூட்டங்கள் இதுவரை வெளியிடப்படாது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஏன் ? கேதீஸ் எனது பதிலுக்கு பதில் தரும் வரைநிறுத்தி வைத்திருக்க வேண்டுமா ? கேதிஸுக்கு பதில் தர நேரமில்லையோ என்னமோ ? அல்லது இன்னமும் பதில் யோசித்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை .
    அவர் தனது பதிலை பதிவிட்டால்தான் எனது பதிலையும் சேர்த்து வெளியிடுவீர்களோ ?
    இது என்ன வகையான கருத்து ஜனநாயகம் ?

    எனது நேற்றைய பதிலில் பிரிட்டிஷ் அரசின் தரவுகளை வர்க்கப்போராளி கேதீஸ் தூக்கிபிடித்து கொண்டாடியதை சாடி பதிவிட்டிருந்தேன் . அது நீக்கப்பட்டுள்ளது. அதில் எந்த தவறான வார்த்தை பிரயோகமும் இடம்பெறவில்லை. பின் ஏன் எனது கருத்துக்கள் தடை செய்யப்பட வேண்டும்.
    கேதீஸ் வியாஸனின் பிறப்பு குறித்து கேவலாமக கூறிய பதிவுகளை கூட வெளியிட்டு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டுள்ளீர்கள் .நீக்கப்பட்ட எனது பதிவில் என்ன குறை கண்டீர் ?
    சொற் குற்றமா ? பொருட் குற்றமா ?
    நீங்கள் செய்வது கருத்து பாஸிசம்.

    • ஐயா, உங்கள் பின்னூட்டங்கள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரியவில்லை. தவறுதலாக ஏதும் அப்படி நடந்திருந்தால் வருந்துகிறோம். மீண்டும் போடவும். வெளயிடுகிறோம்.

    • இந்த கருத்துகளை நேற்றே வினவு வெளியிட்டது நானும் படித்தேனே லாலா!பின்பு ஏன் வினவு மீது கோபம்?

      ஆகவே 1915 ஆம் ஆண்டில்நடந்த கலவரத்தில் முஸ்லிம்களுக்கு ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் ஆதரவும் ஆசிர்வாதமும் முழுமையாக இருந்தது. ஆனால் வர்க்கப்போராளியாக இருந்த நீங்கள் திடீர் ஏகாதிபாதிய அடிவருடியாக மாறி அந்த ஏகாதிபத்திய அரசு முண்டு கொடுத்த முஸ்லிமகளுக்கு தடவிக்கொடுத்து வருவதால்தான் அதன் எதிர்த்தரப்பான , ஏகாதிபத்தியவாதிகளால் அந்த நேரத்தில் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மீது இருந்த நியாங்களை மறைக்கப்பட்ட உண்மைகளை முன் வைத்தேன்.

    • திடீர் என்று ஜெய மோகன் பாணியில் பேசுறிங்க லாலா…. ஒரு வேலை ஜெய மோகனே நீங்க தானா? இங்கையின் சுதந்திரத்துக்காக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடனும் என்ற உணர்வுகூட இல்லாத மனுசங்கையா அவுங்க. அவங்களுக்கு என்று போராட ஒரு கட்சியை தொடங்கி கொடுக்க வேண்டிய செயலையும் நடு பொன்னம்பலம் தான் செய்தாரு. சிங்கள -தமிழ் மக்கள் இருவருமே சம உரிமையுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் அவர் அப்படி செய்தாரு. ஆனா பாருங்க சிங்களவங்க கொடுத்தாங்க பாருங்க ஆப்பு, அடிச்சாங்க பாருங்க ரிவிட்டு அதனை அவ்வளவு சிக்கிரமா யாழ் வியாசன் வகையறாக்கள் மறக்க மாட்டங்க சுயமோகம் மன்னிக்கவும் லாலா .

      //ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மீது இருந்த நியாங்களை மறைக்கப்பட்ட உண்மைகளை முன் வைத்தேன்.//

      • ஒன்றுமே புரியாமல் கேதீஸ்வரன் அவர்கள் “நடு பொன்னம்பலம்” என்று உளறும் சேர் பொன்னம்பலம் அருணாசலம் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமன்றி அவரது அப்பன் பிறப்பதற்கு முன்பே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து, தமிழர்கள் தமிழீழ விடுதலைக்குப் போராட வேண்டுமென பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரலெழுப்பியவர் என்ற உண்மை கேதீஸ்வரனுக்குத் தெரியாமலிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.

        IT WAS SIR ARUNACHALAM PONNAMBALAM WHO FIRST (1923) EXHORTED THE TAMILS THAT –

        `They should work towards promoting the union and solidarity of what we have been proud to call TAMIL EELAM. We desire to preserve our individuality as a people, to make ourselves worthy of inheritance. We are not enamoured about the cosmopolitanism which would make us neither fish, fowl nor red-herring.`

        “நாங்கள் பெருமையாகப் பேசும் தமிழீழத்தின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வென்றெடுக்க அதன் கோட்பாடுகளை இலங்கை முழுதும் பரப்புரை செய்தல் வேண்டும். நாங்கள் தமிழர்கள் என்ற எமது தனித்தன்மையைப் பாதுகாக்க ஆசைப்படுகிறோம். நாங்கள் எங்களது பரம்பரைப் புகழுக்கு தகுதியுடையவர்களாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் எங்களை இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளும் வாழ்க்கை முறைக்கு வசியப்பட்டவர்கள் அல்லர். ஆனால் இதன் பொருள் நாங்கள் தமிழ் இனத்துக்கு மட்டும் உழைக்கும் தன்னலவாதிகள் என்பதல்ல. நாங்கள் தமிழர்களது முன்னேற்றத்தை விட முழு இலங்கையரது முன்னேற்றத்துக்குப் பாடுபட்டிருக்கிறோம்…….. ஆனால் நாங்கள் மற்றவர்களது அடிமைகளாக இருப்பதை முற்றாக எதிர்க்கிறோம். நாங்கள் எங்களைப் பாதுகாக்கப் பலத்தோடு இருக்க விரும்புகிறோம். அதே நேரம் பொது நன்மைக்கும் பாடுபட அணியமாக இருக்கிறோம்.” (The Break-Up Of Sri Lanka )

        தமிழீழத்தின் முதல்குரல் – சேர். அருணாசலம் நினைவு நாள் – January 9
        http://viyaasan.blogspot.ca/2014/01/blog-post_9.html

        • வியாசன், வெள்ளையரை எதிர்த்து இலங்கை சுதந்திரத்துக்காக போராட வக்கற்ற ,உணர்வற்ற சிங்களவர்களுக்கு இந்த பொன்னம்பலம் தான் இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். . சிங்களவனுடன் சேராதே என்று பெரிய பொன்னம்பலம் கூறிய அறிவுரைகளை மதிக்காமல் சிங்களவர்களுடன் சேர்ந்து integrated இலங்கைக்காக முயன்றார். பெரிய பொன்னம்பலம் சிங்களவர்களிடம் தாம் பெற்ற கசப்பான அனுபவத்தின் ஊடாக தான் தன் தம்பியாகிய சின்ன பொன்னம்பலத்துக்கு அறிவுரை செய்து இருந்தார். இறுதியில் என்ன நடந்தது , சிங்களவன் கொடுத்த ஆப்பு என்ன என்ற உண்மையை நாளைக்கு விரிவாக கூறுகின்றேன்

        • பொன்னம்பலம் அருணாசலம் சிங்களவர்களிடம் அடைந்த ஏமாற்றம் (சீசி இந்த பழம் புளிக்கும் )

          இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பை தொடங்கியவர் இந்த பொன்னம்பலம் அருணாசலம்.37 உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையில் 16 இருக்கைகள் மட்டுமே ஆட்புலவாரியான தேர்தல் மூலம் சார்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர். இந்தப் 16 இருக்கைகளில் ஒன்று மேல்மாகாணத் தமிழர்களுக்கு ஒதுக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. சிங்களவர்கள் அளித்த உறுதி மொழிக்கு ஏற்ப ( சேர் ஜேம்ஸ் பீரிசும் நு. து. சமரவிக்கிரமாவும் எழுத்தில் வழங்கி இருந்தார்கள்) கொழும்புத் தொகுதியில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களை போட்டியிட முயன்றார். ஆனால் இருபெரும் சிங்களத் தலைவர்கள் எழுத்தில் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. டி.எஸ். சேனநாயக்காவும் அவரது மூத்த உடன்பிறப்பான எவ்.ஆர். சேனநாயக்காவும் சேர் ஜேம்ஸ் பீரிசை போட்டியிட வைத்தார்கள். அதாவது தமிழர்க்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்த இருக்கைக்கு ஒரு சிங்களவரைப் போட்டியிடக் களம் இறக்கினார்கள்.

          இப்ப தான் நம்ம நரி பொன்னம்பலம் அருணாசலம் அவர்களுக்கு சீசி இந்த பழம் புளிக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது வரையில் சிங்களவர்களுடன் உடன் பிறவா சகோ போன்று பழகிய இந்த புளித்துப்போன நரி பொன்னம்பலம் அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்தும் தலைவர் பதவியில் இருந்தும் விலகிக் கொண்டார். “சிங்களவர்களில் ஒரு சாராரின் முடிவு எல்லா இனமக்களிடத்திலும் நிலவிய ஆளாளுக்கான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அழித்துவிட்டது” என பொன். அருணாசலம் சொன்னார்.

          இந்தக் கசப்பான அனுபவங்கள் பொன். அருணாசலத்துக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது. தமிழர்கள் இலங்கையில் தன்மானத்தோடும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி வட – கிழக்கை உள்ளடக்கிய ஆட்புலத்தில் தமிழ் ஈழ அரசை நிறுவ வேண்டும். 1923 இல் இலங்கைத் தமிழர் சபை (Ceylon Tamil League) என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் தொடக்கக் கூட்டத்தில் பொன். அருணாசலம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது.

          “நாங்கள் பெருமையாகப் பேசும் தமிழீழத்தின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வென்றெடுக்க அதன் கோட்பாடுகளை இலங்கை முழுதும் பரப்புரை செய்தல் வேண்டும். நாங்கள் தமிழர்கள் என்ற எமது தனித்தன்மையைப் பாதுகாக்க ஆசைப்படுகிறோம். நாங்கள் எங்களது பரம்பரைப் புகழுக்கு தகுதியுடையவர்களாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் எங்களை இரண்டும் கெட்டான் நிலைக்குத் ( neither fish, flesh, fowl nor red herring ) தள்ளும் வாழ்க்கை முறைக்கு வசியப்பட்டவர்கள் அல்லர். ஆனால் இதன் பொருள் நாங்கள் தமிழ் இனத்துக்கு மட்டும் உழைக்கும் தன்னலவாதிகள் என்பதல்ல. நாங்கள் தமிழர்களது முன்னேற்றத்தை விட முழு இலங்கையரது முன்னேற்றத்துக்குப் பாடுபட்டிருக்கிறோம்…….. ஆனால் நாங்கள் மற்றவர்களது அடிமைகளாக இருப்பதை முற்றாக எதிர்க்கிறோம். நாங்கள் எங்களைப் பாதுகாக்கப் பலத்தோடு இருக்க விரும்புகிறோம். அதே நேரம் பொது நன்மைக்கும் பாடுபட அணியமாக இருக்கிறோம்.” (The Break-Up Of Sri Lanka – page )

          கொழும்புத் தொகுதியில் போட்டியிட முடியாமல் போனது பொன். அருணாசலத்துக்குப் பாரிய பின்னடைவாகப் போய்விட்டது. தென்னிலங்கையில் அவர் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டதால் யாழ்ப்பாணத்தில் அவருக்கென்று ஒரு அரசியல் ஆதரவுத் தளம் இருக்கவில்லை. இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகிய பின்னர் பொன். அருணாசம் 1923 ஆண் ஆண்டில் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவரை வரவேற்க யாரும் இருக்கவில்லை. யாழ்ப்பாண வீதிகளில் அவரைக் கண்ட மக்கள் இகழ்ந்து கூச்சல் இட்டார்கள்.

        • பொன்னம்பலம் அருணாசலம் சிங்களவர்களிடம் அடைந்த ஏமாற்றம் (சீசி இந்த பழம் புளிக்கும் )

          இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பை தொடங்கியவர் இந்த பொன்னம்பலம் அருணாசலம்.37 உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையில் 16 இருக்கைகள் மட்டுமே ஆட்புலவாரியான தேர்தல் மூலம் சார்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர். இந்தப் 16 இருக்கைகளில் ஒன்று மேல்மாகாணத் தமிழர்களுக்கு ஒதுக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. சிங்களவர்கள் அளித்த உறுதி மொழிக்கு ஏற்ப ( சேர் ஜேம்ஸ் பீரிசும் நு. து. சமரவிக்கிரமாவும் எழுத்தில் வழங்கி இருந்தார்கள்) கொழும்புத் தொகுதியில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களை போட்டியிட முயன்றார். ஆனால் இருபெரும் சிங்களத் தலைவர்கள் எழுத்தில் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. டி.எஸ். சேனநாயக்காவும் அவரது மூத்த உடன்பிறப்பான எவ்.ஆர். சேனநாயக்காவும் சேர் ஜேம்ஸ் பீரிசை போட்டியிட வைத்தார்கள். அதாவது தமிழர்க்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்த இருக்கைக்கு ஒரு சிங்களவரைப் போட்டியிடக் களம் இறக்கினார்கள்.

          இப்ப தான் நம்ம நரி பொன்னம்பலம் அருணாசலம் அவர்களுக்கு சீசி இந்த பழம் புளிக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது வரையில் சிங்களவர்களுடன் உடன் பிறவா சகோ போன்று பழகிய இந்த புளித்துப்போன நரி பொன்னம்பலம் அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்தும் தலைவர் பதவியில் இருந்தும் விலகிக் கொண்டார். “சிங்களவர்களில் ஒரு சாராரின் முடிவு எல்லா இனமக்களிடத்திலும் நிலவிய ஆளாளுக்கான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அழித்துவிட்டது” என பொன். அருணாசலம் சொன்னார்.

          இந்தக் கசப்பான அனுபவங்கள் பொன். அருணாசலத்துக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது. தமிழர்கள் இலங்கையில் தன்மானத்தோடும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி வட – கிழக்கை உள்ளடக்கிய ஆட்புலத்தில் தமிழ் ஈழ அரசை நிறுவ வேண்டும். 1923 இல் இலங்கைத் தமிழர் சபை (Ceylon Tamil League) என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் தொடக்கக் கூட்டத்தில் பொன். அருணாசலம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது.

          “நாங்கள் பெருமையாகப் பேசும் தமிழீழத்தின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வென்றெடுக்க அதன் கோட்பாடுகளை இலங்கை முழுதும் பரப்புரை செய்தல் வேண்டும். நாங்கள் தமிழர்கள் என்ற எமது தனித்தன்மையைப் பாதுகாக்க ஆசைப்படுகிறோம். நாங்கள் எங்களது பரம்பரைப் புகழுக்கு தகுதியுடையவர்களாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் எங்களை இரண்டும் கெட்டான் நிலைக்குத் ( neither fish, flesh, fowl nor red herring ) தள்ளும் வாழ்க்கை முறைக்கு வசியப்பட்டவர்கள் அல்லர். ஆனால் இதன் பொருள் நாங்கள் தமிழ் இனத்துக்கு மட்டும் உழைக்கும் தன்னலவாதிகள் என்பதல்ல. நாங்கள் தமிழர்களது முன்னேற்றத்தை விட முழு இலங்கையரது முன்னேற்றத்துக்குப் பாடுபட்டிருக்கிறோம்…….. ஆனால் நாங்கள் மற்றவர்களது அடிமைகளாக இருப்பதை முற்றாக எதிர்க்கிறோம். நாங்கள் எங்களைப் பாதுகாக்கப் பலத்தோடு இருக்க விரும்புகிறோம். அதே நேரம் பொது நன்மைக்கும் பாடுபட அணியமாக இருக்கிறோம்.” (The Break-Up Of Sri Lanka – page )

          கொழும்புத் தொகுதியில் போட்டியிட முடியாமல் போனது பொன். அருணாசலத்துக்குப் பாரிய பின்னடைவாகப் போய்விட்டது. தென்னிலங்கையில் அவர் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டதால் யாழ்ப்பாணத்தில் அவருக்கென்று ஒரு அரசியல் ஆதரவுத் தளம் இருக்கவில்லை. இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகிய பின்னர் பொன். அருணாசம் 1923 ஆண் ஆண்டில் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவரை வரவேற்க யாரும் இருக்கவில்லை. யாழ்ப்பாண வீதிகளில் அவரைக் கண்ட மக்கள் இகழ்ந்து கூச்சல் இட்டார்கள்.

          Thanks http://tamilthesiyam.blogspot.in/2009/11/blog-post_5776.html

          நக்கீரன்canada

          • எல்லாம் சரிதான் .முதலில் உமக்கு பொன்னம்பலம் யாரென்றே தெரிந்திருக்கவில்லை . சேர். பொன்ன்னையும் , ஜி.ஜி யையும் ஒன்றாக நினைத்து குழப்பிக்கொண்டிருந்தீர்கள் . ஈழ ஊடகங்களிலிருந்து பொறுக்கியெடுத்து அவர் அப்படியிருந்தார் , இப்படியிருந்தார் என சொல்லி அரிப்பை தீர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

        • 1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது கொழும்பில் மையப்பட்ட யாழ்பாணத்து மேலோர் குழுவினரதும், வர்த்தகர்களின் கைகளில் இருந்த இலங்கை தமிழர் தலைமை , முஸ்லிம் மக்களது நலன்களுக்கு விரோதமாக சிங்கள பொளத்த தேசியவாதிகளிடம் தமது சொந்த நலன்களை முதன்மைபடுத்தி , தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை துரோகத்தனமாக காட்டிகொடுத்தது.

          இக்காட்டிக்கொடுப்புக்ளின் பெறுபேறாகவே , சிங்களத் தலைவர்களால் கொழும்பு மாநகர வீதிகளில், தேரினில் ஊர்வலமாக இழுத்துச்செல்லபட்டார் என நாம் இன்று பீர்ரிக்கொல்லும் வரலாற்று பெருமையை. தமிழர் தலைவரான சேர். பொன்.இராமநாதன் துரை அவர்கள் பெறக்கூடியதாக இருந்தது.

          தேசியஇனப் பிரச்சனையும் முஸ்லிம் மக்களும் – வ.ஐ.ச. ஜெயபாலன்

        • 1915 ஆம் ஆண்டில் தமிழர் தலைமை முஸ்லிம்களைக் காட்டிகொடுத்ததை போல, 1948லும் சொந்த நலன்களுக்காக கொழும்பில் மையப்பட்ட தமிழ் காங்கிரஸ் கட்சி, இந்தியத் தமிழர்களை காட்டிக் கொடுத்தமையால் உடைவுபட்டதில் தமிசரசு கட்சி உருவானது.

          தேசியஇனப் பிரச்சனையும் முஸ்லிம் மக்களும் – வ.ஐ.ச. ஜெயபாலன்

              • தமிழ் காங்கிரஸ் காட்டி கொடுத்ததனால் தமிழரசுக்கட்சி உருவானது .பின்பு தமிழரசுக்கட்சியையே தமிழர்கள் ஆதரித்தார்கள் . தமிழ் காங்கிரஸ் செல்வாக்கிழந்து போனது .
                ஆனால் இலங்கை முஸ்லிகளுக்கு இந்த பிரச்சனையே இல்லை . எல்லோரும் சேர்ந்து காட்டி கொடுப்பார்கள்.

                • ஆதாரம் இல்லாதா லாலாவின் இஸ்லாமிய எதிர்ப்பு வெறி

                  //இலங்கை முஸ்லிகளுக்கு இந்த பிரச்சனையே இல்லை . எல்லோரும் சேர்ந்து காட்டி கொடுப்பார்கள்.//

      • இலங்கை முஸ்லிம் சமூகம் தம்மை தமிழர்கள் என்றொ , தமிழ் முஸ்லிம்கள் என்றோ அழைக்காதபோது நீங்கள் தமிழ் முஸ்லிம்கள் என்று முக்கி முக்கி கூறி வருவது படு செயற்கையாக உள்ளது.

        • நீங்கள் அவர்களை தமிழ் வழியில் வந்தவர்கள் என்று கூருகின்றிகள். அப்படி என்றால் நான் அவர்களை ஈழ தமிழ் முஸ்லிம்கள் என்று அழைக்கும் போது முன்பு நீங்கள் முக்கியது போன்று முக்க மாட்டிர்கள தானே?

          • நான் அவர்களது முன்னோர்கள் தமிழ் குடிகள் என்றுதான் சொன்னேன். இப்போதுள்ள அவர்களது , தம்மை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ளாத பரம்பரையை உங்களைப்போல் முக்கி முக்கி தமிழ் முஸ்லிம்கள் , தமிழ் முஸ்லிம்கள் என்று முனகிகொண்டிருக்கவில்லை.

            • அவர்களின் முனோர்கள் தமிழ் குடிகள் தான் என்றால் இன்றும் அவர்கள் தமிழ் குடிகள் தான் என்ற அறிவு உமக்கு இல்லாமல் தானே முக்கிக்கொண்டு உள்ளீர்கள்.

              • ஆசிரியர் திலகமே!
                மலையாளிகளின் முன்னோர்கள் கூட தமிழ்க்குடிகள் தான், ஆகவே அவர்களும் தமிழர்களா அல்லது அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா. நீங்கள் அப்படி அவர்களிடம் சொன்னால் போடா பாண்டி என்று உங்களை அடித்துத் துரத்துவார்களா, இல்லையா?

                சில மலையாளிகளாவது தமது சேரநாட்டுத் தமிழ் வரலாற்றை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் இலங்கை முஸ்லீம்களோ தமக்குள்ள தமிழ்த் தொடர்பை முற்றாக மறுக்கிறார்கள். நீங்கள் தான் கூறுகிறீர்களே தவிர அவர்கள் தமது முன்னோர்கள் தமிழ்க்குடிகள் என்பதை ஒப்புக் கொள்வதில்லை. அவர்களின் முன்னோர்கள் எல்லாம் யேமனிலும், அரேபியாவிலுமிருந்து வந்தவர்கள் என்று இல்லாத வரலாற்றை எல்லாம் புனைந்து கதை விடுகிறார்கள். அவர்களைத் தமிழர்கள் என்று வாதாடும் உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் முக்கி முக்கி இங்கு வக்காலத்து வாங்கும் இலங்கை முஸ்லீம்களே, அவர்கள் தமிழர்கள் அல்ல என்று அடித்துக் கூறும் போது, நீங்கள் மட்டும் இல்லை, அவர்கள் தமிழர்கள் தான் என்று வாதாடுவதைப் பார்க்கும் போது, தனது கட்சிக்காரருக்கு எதிராக வாதாடுகின்ற முட்டாள் வக்கீல் போலக் காட்சியளிக்கிறீர்கள்.

                தமிழன் என்பதை தமது முதல் அடையாளமாகக் கொள்ளாதவர்களும், இனத்தால் தம்மைத் தமிழர்கள் என்று மட்டும் அடையாளப்படுத்தாதவர்களும் தமிழைப் பேசினாலும் தமிழர்கள் அல்ல.

                • ஒரு தமிழ் பேசும் முஸ்லீமுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக, அவனை எனது சகோதரனாக நான் உணர்கிறேன். இந்த கருத்தை கூறியது யார் என்பதாவது உங்களுக்கு நினைவில் உள்ளதா வியாசன். ஒரு வேலை இந்த கருத்தை கூறும் போதும் நீங்கள் முக்கி முக்கி தான் பேசினிர்களா வியாசன் ? நாக்கிற்கு நரம்பு இல்லை என்பது உண்மை தான் என்றாலும் அதற்காக இப்படியா மாற்றி மாற்றி பேசுவது? ரோம்ப நல்லவருங்க நீங்க.

                  நீங்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிக்காக்கலாம் . அதே நேரத்தில் நான் தமிழ் பேசும் முஸ்லிம்களை ஈழ தமிழ் முஸ்லிம்கள் என்று அழைக்ககூடாதா?

                • இந்த நீண்ட நெடிய விவாதத்தில் “ஈழ தமிழ் முஸ்லிம்களை” அப்படி அழைக்கக்கூடாது என்று இது வரையில் எந்த இஸ்லாமிய சகோதரரும் கூறவில்லையே வியாசன் . ஈழ தமிழ் முஸ்லிம் என்ற பெயரில் அழைக்காதிர் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது நீங்களும்(வியாசனும்), லாலாவும் மட்டும் தானே? அப்படி என்றால் தம்மை ஈழ தமிழ் முஸ்லிம்கள் என்று அழைகாதிர்கள் என்று கூறும் அந்த முஸ்லிம்கள் யார்? ஒரு வேலை அந்த முஸ்லிம்கள் வியாசனும், லாலா வும் தானோ?

                  • முஸ்லீம்கள் காபிர்களுக்கு (முஸ்லீம் அல்லாதவர்க்கு) உண்மையைக் கூற மாட்டார்கள். எல்லாவற்றையும் மூடி மறைப்பார்கள் என்பதை நீங்கள் இந்த நீண்ட விவாதத்திலேயே பார்த்திருப்பீர்கள். காபீர்களுக்குப் பொய் சொல்வதை அதாவது உண்மையை மறைப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதை அரபில் Taqqiya என்பார்களாம். இங்கே எந்த முஸ்லீமும் முன்வந்து இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் தம்மைத் தமிழர்கள் என்று அடையாளப்டுத்துவதில்லை என்று உண்மையை உங்களுக்குக் கூறாததற்கு அது தான் காரணமே தவிர, அந்த உண்மை அவர்களுக்கும் தெரியாது என்பதல்ல.

                    • பிப்ரவரி மாதத்திலேயே வெறி /மதவெறி, மாற்று மத வெறுப்பு ,ஏறி போச்சு வியாசனுக்கு

                    • முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உண்மை சொல்லமாட்டார்கள் என்பது உண்மை என்றால் “இலங்கை முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் தம்மைத் தமிழர்கள் என்று அடையாளப்டுத்துவதில்லை ” என்ற உண்மையை முஸ்லிம்களின் காபிர் ஆகிய உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லையே! அப்படி என்றால் நீங்கலும் ஈழம் வாழ் முஸ்லிம் தானே? பின்பு ஏன் பெயர் மட்டும் இஸ்லாமிய பெயராக இல்லாமல் ஹிந்து மத பெயராக உள்ளது? ஆமாம் இத்துணை தமிழ் பற்றாளரான உங்களுக்கு எதற்கு வடமொழியில் வியாசன் என்ற சமஸ்கிருத பெயர்? லாஜிக் இடிகின்றதே வியாசன்.

                    • ஆனால் அதே இஸ்லாம் முஸ்லிம் அல்லாத பெயருக்குள் ராமரையும் , கேதீஸ்வரத்தானையும் புனை பெயராககொண்டு அதற்குள் பதுங்கியிருந்து காபிர்களுக்கு பொய் சொல்வதற்கும் , மூடி மறைப்பதற்கும் , புனைவு கதைகள் சொல்வதற்கும் அனுமதிக்கிறதோ என்னமோ ?

                    • ஈழ தமிழ் முஸ்லிம் மக்கள் அப்படி என்ன செய்தார்கள் என்று இந்த லாலா என்ற சுயமோகன் தான் விளக்கவேண்டும். வெத்து வெட்டு மாதிரி புலம்பக்கூடாது.

                      //அவர்கள் உண்மை கூறா விட்டால் சரியாப்போச்சா ? அவர்களது அரசியலும் ,நடவடிக்கையுமே பல தடவைகள் பன்னெடுங்காலமாக காட்டி கொடுத்து விடுகிறதே ?//

                    • “ஈழத்தமிழ் முஸ்லீம்கள்”, “ஈழத்தமிழ் முஸ்லீம்கள்” என்ற, தம்மை அரபுக்களின் வாரிசுகள் என்று மற்றவர்களை நம்ப வைக்கத் துடியாய்த் துடிக்கும் இலங்கை முஸ்லீம்களை, அழைத்து அவர்களைப் பேராசிரியர் கேதீஸ்வரன் நக்கலடிக்கிறார் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, ______ என்று ஒரு தமிழ்நாட்டு முஸ்லீம்களை அழைத்தால் அவர்களுக்கு எந்தளவுக்குக் கோபம் வருமோ, அதே போல் இலங்கை முஸ்லீம்களை தமிழர்கள் அல்லது தமிழ் முஸ்லீம்கள் என்று அழைத்தால் அவர்களுக்கு அதை விட மோசமான கோபம் வரும். இதை நன்கு தெரிந்து கொண்ட அண்ணன் கேதீஸ்வரன் வேண்டுமென்றே அவர்களை அப்படி அழைக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை எந்தளவுக்கு இலங்கை முஸ்லீம்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்டு முஸ்லீம்களும் வெறுக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் பிரபாகரனைத் தனது சொந்த சகோதரன் போலவே நேசிப்பவர் கேதீஸ்வரன்(சரவணன்) ஆகவே அவர் வேண்டுமென்று, இலங்கை முஸ்லீம்களுக்குப் பிடிக்காதென்று நன்கு தெரிந்து கொண்டு தான், அவர்களைத் ‘தமிழ்’ முஸ்லீம்களென அழைக்கிறார் போல் தெரிகிறது. “இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு” என்பது போல, என்னதான் உளறினாலும் எங்களின் (ஈழத்தமிழர்கள்) மீது அவருக்குள்ள பாசம் போகாது. 🙂

                    • வியாசன் நீர் கனடாவில் இருந்து கொண்டு என்ன தான் நீட்டி முழங்கினாலும் ஈழ தமிழ் மக்கள் கிழக்கு-வடக்கு பிராந்திய வேறுபாடுகளை களைந்து தமிழர்கள் ஒன்றுபட்டு , தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடன் ஈழ தமிழ் மக்கள் நல் உறவுகளை மேற்கொண்டால் மட்டுமே தமிழ் ஈழ விடுதல் சாத்தியம் ஆகும். அண்ணன் பிரபாகரனின் பேராட்டத்தில் பின்னனைவு ஏற்பட பிரதான காரணம் ஈழ கிழக்கு-வடக்கு பிராந்திய வேறுபாடுகள் தான் என்பது நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை அல்லவா? போராட்டத்தில் பின்னனைவு ஏற்பட இரண்டாம் நிலை காரணம் ஈழத்தில் தமிழ் பேசும் ஹிந்து- முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட ஊடல்கள் தானே ?

                    • தமிழீழ விடுதலை எப்படி சாத்தியமாகும் என்று எங்களுக்கு நீங்கள் அறிவுரை கூறும் அடாவடித்தனத்தைப் பற்றி பின்பு பேசுவோம், முதலில் உங்களுக்கு வக்கிருந்தால் தமிழ்நாட்டின் ஆட்சியில் தமிழர்களை (திராவிடர்களை அல்ல) அமர்த்திக் காட்டுங்கள். உண்மையான ஒரு தமிழனை முதலமைச்சராக்கிக் காட்டுங்கள், பார்ப்போம். அதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் கேப்டன் (எதற்குக் கேப்டனோ கடவுளுக்குத் தான் தெரியும்) என்ற ஒருவர் தமிழ்நாட்டுக்குத் தான் ‘கிங்’ ஆவதைப் பற்றி பேசுகிறார், அதை லட்சோப லட்சம் தமிழர்கள் கைதட்டி ஆரவாரித்து ஆதரிக்கின்றனர். தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் தலைவனாக உனக்கென்ன தகுதியிருக்கிறது என்று கேட்பதற்கு தமிழ்நாட்டில் எந்த தமிழனுக்கும் துணிவு இல்லை. அதிலும் கொடுமை என்னவென்றால், ஏனைய கட்சிகளின் மேடையிலாவது சும்மா பெயருக்காவது மறைந்த தமிழ்த் தலைவர்களின் படங்கள் இருக்கும், ஆனால் அந்தக் கட்சியின் மேடையில் மட்டும் அவரதும், மனைவியினதும் படம் மட்டும் தான் இருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள், தமிழரல்லாத நடிகர்களையே தம்மை ஆள்வதற்குத் தேர்ந்தெடுப்பதற்கு தமிழர்களுக்கிடையேயுள்ள சாதிப்பிளவுகள் அவர்களை ஒன்றுபடாமல் தடுப்பது காரணமாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டுத் தமிழர்களின் சுயவெறுப்பும் முக்கிய காரணமென்று தான் கூற வேண்டும்.

                      தனது சொந்த மண்ணிலேயே வந்தேறிகளுக்குச் சேவகம் செய்யும் ஒரு இனமக்கள், அயல்நாட்டிலுள்ள தமது சகோதரர்களின் விடுதலைக்கு ஆதரவளிப்போம் என்பதும் அதற்கு அறிவுரை கூறுவதும், அதைப்பற்றிப் பேசுவதும் நகைப்புக்குரியது மட்டுமன்றி வெட்கப்பட வேண்டிய விடயமும் கூட.

                    • வியாசன் அண்ணாச்சி நீங்க எங்கேயோ கனடாவில் இருந்து கொண்டு தமிழ் நாட்டு மக்களை பற்றி, ஈழ தமிழ் பேசும் முஸ்லிம்களை பற்றி, ஈழ தமிழ் பேசும் ஹிந்துகளை பற்றி வக்கனைய பேசலாம். தமிழ் தாயகத்தில் இருக்கும் எனக்கு அதே உரிமை இல்லையா?

                      //தமிழீழ விடுதலை எப்படி சாத்தியமாகும் என்று எங்களுக்கு நீங்கள் அறிவுரை கூறும் அடாவடித்தனத்தைப் பற்றி பின்பு பேசுவோம்//

                    • உங்களுக்குத் தமிழும் புரியவில்லையா. உங்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த மூலையில் வாழும் தமிழே பேசாத தமிழர்களுக்கும் கூட தமிழீழம் பற்றிப் பேசவும், ஆதரிக்கவும், ஆலோசனை கூறவும் உரிமையுண்டு. நான் கூறுவதென்னவென்றால் உங்களின் அறிவை, அறிவுரைகளை, ஆலோசனைகளை எல்லாம் தமிழ்நாட்டில் தமிழின், தமிழர்களின் நலன்களுக்காகவும் பயன்படுத்துங்கள். அதன் பின்னர், உங்களை அண்ணாந்து பார்க்கும் நாங்கள்- உங்களின் சகோதர்கள்- உங்களையும், தமிழ்நாட்டையும் பார்த்துப் பெருமைப் படுவோம், மகிழ்ச்சியடைவோம் என்பது தான்.

                    • உங்களுக்குத்தான் தமிழும் புரியவில்லையா என்ற ஐயம் எழுகின்றது வியாசன். கீழ் உள்ள உங்கள் வியாக்கனம் படிநான் கூறுவது என்னவென்றால் “”ஈழ தமிழரான நீங்கள் உங்கள் தமிழ் ஈழத்தின் கடமைகளில் மட்டுமே தலையிட்டு ஈழ தமிழ் மக்களின் நலனுக்காக மட்டும் பாடுபடுங்கள். தேவையின்றி தமிழ் நாட்டு விசங்களில் தலையிடாதிர்கள் “””என்ற பொருளும் சேர்ந்தே வருகின்றதே வியாசன்.

                  • முஸ்லிமாக இருந்து கொண்டு உங்கள் பெயரை அடிக்கடி ராமராஜ் , கேதீஸ் என மாற்றிக்கொள்வது போல் அவர்கள் மாற்றிக்கொள்வதில்லை.

                    • அவர்கள் உண்மை கூறா விட்டால் சரியாப்போச்சா ? அவர்களது அரசியலும் ,நடவடிக்கையுமே பல தடவைகள் பன்னெடுங்காலமாக காட்டி கொடுத்து விடுகிறதே ?
                      எனவே லாஜிக் எங்கேயும் இடிக்கவில்லை.

                • உண்மை தான் வியாசன். கூட மற்றும் ஒன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஈழ விடுதலை போர் முடிந்த பின்னும் பஞ்சம்-தஞ்சம் பிழைக்க வசதி மிகு மேற்குலக நாடுகளுக்கு யாழில் இருந்து பெருமளவில் சென்ற சைவ வெள்ளாள சாதியினரும் இன்னும் தாயகம் திரும்பவில்லை. எனவே அவர்கள் தமிழ் மொழியை பேசினாலும் தாயகத்தை துறந்ததால் அவர்கள் கண்டிப்பாக ஈழ தமிழர்கள் கிடையாது.வேண்டுமானால் தமிழ் பேசும் பிழைப்பு வாதிகள் என்று வேண்டுமானால் கூறலாம்.

                  //தமிழன் என்பதை தமது முதல் அடையாளமாகக் கொள்ளாதவர்களும், இனத்தால் தம்மைத் தமிழர்கள் என்று மட்டும் அடையாளப்படுத்தாதவர்களும் தமிழைப் பேசினாலும் தமிழர்கள் அல்ல.//

                • ஐயா தெய்வமே வியாசன், குமரி மாவட்டத்தை கேரளாவில் இருந்து பிரித்து தமிழ் நாட்டில் சேர்க்க போராடிய தமிழர்கள் யார் என்றாவது தெரியமா உங்களுக்கு? திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அடிமைபட்டு இருந்த எங்கள் தமிழ் மக்களான சாணார் ,நாடார், மீனவர், தலித் மக்கள் தான். இந்த எல்லை போராட்டத்தின் மூலம் தம்மை மலையாளிகள் அல்ல நாங்கள் தமிழர்கள் தான் என்று நிருபித்தவர்கள் என் மக்கள். இந்த போராட்டத்தின் போது தென் மாவட்ட தமிழக சைவ வெள்ளாள சமுகம் மொவுனமாய் அமைதி காத்து நின்றதை என்னவென்று சொல்ல? எனவே தென் தமிழக சைவ வெள்ளாள சமுகத்தை மலையாளிகள்/தமிழ் மக்கள் துரோகிகள் என்று அழைக்கலாமா வியாசன்?

                  //மலையாளிகளின் முன்னோர்கள் கூட தமிழ்க்குடிகள் தான், ஆகவே அவர்களும் தமிழர்களா அல்லது அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா. நீங்கள் அப்படி அவர்களிடம் சொன்னால் போடா பாண்டி என்று உங்களை அடித்துத் துரத்துவார்களா, இல்லையா?//

                  • முன்னோர்கள் தமிழர்களாக இருந்தும் தமது தமிழ் அடையளத்தை மறுத்து தம்மை இலங்கை முஸ்லிம்கள் என்றும் சோனகர் என்றும் அழைத்துக்கொள்ளுபவர்களை தமிழ் முஸ்லிம்கள் என எப்படி அழைக்க முடியுமென உமது தமிழ் முஸ்லிம் பேத்தலுக்கு பதிலடியாக முன்னொர்கள் தமிழாக இருந்தும் இன்று தம்மை மலையாளிகளாக கூறிக்கொள்ளும் மலையாளிகளை பார்த்து தமிழர்கள் என உம்மால் கூற முடியுமா என்று வியாஸன் கேட்டதற்கு பதில் கொடுக்க வாக்கற்ற சாதி , மத வெறி பிடித்த கேதீஸ் இதிலும் தேவையில்லாமல் சாதியை இழுத்து வந்து கேரள தமிழ்நாடு எல்லை பிரிப்பில் அந்த சாதியினர் அப்படி இருந்தனர் இந்த சாதி வாய் மூடி இருந்தனர் என சாதி வெறி தலைக்கேறி பிதற்ற ஆரம்பித்துள்ளார் .

                    • லாலா என்ற சுயமோகனின் ஆவி பேசுவதாக தான் இதனை எடுத்துகொள்ள வேண்டும். குமரி எல்லை காக்கும் போரில் யார் எல்லாம் அந்த போரில் தமிழ் நாட்டுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன். தென் மாவட்ட சைவ வெள்ளாளர்கள் அமைதி காத்தார்கள் என்பதற்கே சுயோகனின் ஆவி சாதி வெறி ஆ ஊ என்று அழுகின்றது. அப்ப இந்த விடயத்தில் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டிது தான் சரியாக இருக்கும்.

                      லாலா ,ஈழ தமிழ் முஸ்லிம்கள் தங்களை அப்படி தம்மை அழைத்துக் கொள்ளவில்லை என்பது எப்படியையா உமக்கு தெரியும்.ஒவ்வொரு முஸ்லிமும் உம்மிடம் வந்து எழுதி கொடுத்தாரா? இல்லை கூறினாரா? ஆதாரம் கொடுமையா லாலா .

                    • குமரி எல்லை காக்கும் போராட்டத்தில் வெள்ளாளர்களின் (துரோக) பங்கு ! :

                      1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணுபிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழர்களான நாடார் மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்துபேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர்.

                      துப்பாக்க்சி சூடு 11.08.1954-ல் நடைபெற்றது. 11 உயிர்கள் பலியாயினர் என்று ம.பொ.சி.யும் கூறுகிறார். இவர்களில் ஒருவர் கூட நாஞ்சில் நாட்டான் (வெள்ளாளன் )இல்லை

              • முக்கல் திலகமே அதை அவர்கள் அல்லவா ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு அவர் பெற்றோர் பார்த்து வைத்த பெயர் இருக்க , ஊரில் இருப்பவர் ஆளுக்கு ஒரு பெயர் வைத்து கூப்பிடுவது போலல்லவா உள்ளது உமது பேத்தல்.

                • எவ்வவளவு தான் நீங்கள் முக்கினாலும் உண்மை இது தான்

                  இந்த விவாதத்தில் நீர் அவர்களின் முன்னோர்களை தமிழ் குடிகள் என்கின்றிர்கள்…. வியாசன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்கின்றார்…மேலும் தமிழ் பேசும் முஸ்லீமுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக, அவனை எனது சகோதரனாக நான் உணர்கிறேன் என்று வியாசன் கூறுகின்றார்… இதற்க்கு எல்லாம் , இதனை பேசமட்டும் உமக்கும் அவருக்கும் யார் அதிகாரம் அளித்தது லாலா? அதே அதிகாரத்தில் தான் நான் அவர்களை ஈழ தமிழ் முஸ்லிம்கள் என்கின்றேன்.

                  எவ்வவளவு தான் நீங்கள் முக்கினாலும் உண்மை இது தான்

                  • ஆரம்பத்திலிருந்தே தமிழ் முஸ்லிம் , தமிழ் முஸ்லிம் என்று முக்கி முடியாமல் போய் உDகார்ந்திருப்பவர் நீங்கள்தான் . உங்களது ஒரு பதிலில் அவர்கள் தம்மை சோனகர் என்று அழைப்பதை ஒப்புக்கொண்டிருந்தீர்கள் . அப்படியானால் அதற்கு அர்த்தம் என்ன . வசதிக்கேத்தபடி சொல்லிக்கொள்வது . சிங்களவர்களுக்கு சோனகர் என்று சொல்லி தமிழர்களிலிருந்து தம்மை பிரித்து காட்டி கொள்வது . தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கு தமிழ் முஸ்லிம்கள் என்பது . இதைத்தான் தொப்பி பிரட்டி என்பது . பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டி வாழ்வது.
                    சுருக்கமாக சொன்னால் ஒருத்தன் தனது பெயருக்கு முன்னால் இரண்டி இனிஷியலை பயன்படுத்திக்கொள்வது போன்றதுதான் இது .புரிந்தால் சரி.

                    • இந்த விவாதம் ஸ்தம்பித்து போக கூடாது என்பதற்காக வியாசன் பயன் படுத்தும் சொர்தொடரான :””””தமிழ் பேசும் முஸ்லிம்கள்””” என்பதனை பயன் படுத்த போகின்றேன். சேனாக்கர் என்று அழைப்பதை நான் என்றும் ஏற்க்கவில்லை. அதே நேரத்தில் சேனாக்கர் என்ற சொல் தமிழ் பேசும் முஸ்லிம்களை குறிக்க பயன்ப்டுட்கின்றது என்பதனை ஏற்கின்றேன்.

                    • இலங்கை முஸ்லிம்களை குறிக்க வியாசன் பயன் படுத்தும் சொற்தொடரான தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பதை பயன்படுத்துவது போன்று இலங்கை ஹிந்துகளை குறிக்க தமிழ் பேசும் ஹிந்துக்கள் என்ற பதத்தை பயன்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். ஏன் கூறுகின்றேன் என்றால் தமிழ் பேசும் ஹிந்துக்கள் ஆகம விதிகளின் அடிப்டையில் தானே மத சடங்குகளை மேற்கொள்கின்றார்கள். அப்படி என்றால் அவர்கள் தமிழ் பேசும் ஹிந்துக்கள் தான். உண்மையில் தமிழனுக்கு என்றும் ஹிந்து மதம் எதிரி தானே. ஆறுமுக நாவலரின் சித்தாந்த அடிப்டையில் யாழ் வெள்ளாளர்கள் தம்மை சத் சூத்திரர்கள் என்று தானே அழைத்துக் கொள்கின்றார்கள்.

                      வியாசனுக்கும் லாலவுக்கும் உடன்பாடு தானே ?

                    • பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டி வாழ்வது தானே ஆகமத்தை நடைமுறை படுத்தும் ஈழ / தமிழ் நாட்டு தமிழ் மக்கள் வழக்கம் . ஒருபக்கம் தமிழர்கள் என்று தம்மை கூறிக்கொண்டு தமிழ் மொழி பேசிக்கொண்டு , மறுபக்கம் தமிழர் பண்பாட்டை முற்றிலும் துறந்து ஹிந்து மதத்துடன் சமரசம் செய்து கொண்டு உள்ள நாமும் பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டிகொண்டு தானே உள்ளோம்.

                      தமிழ் நாட்டில் , ஈழத்தில் தமிழர் என்று கூறிகொள்ளும் மனிதர்கள் அனைவருமே வியாசன், லாலாவின் வரையறை படி தமிழ் பேசும் ஹிந்துகள் தான். ஏன் இந்த சொற்தொடர் பயன்படுத்துகின்றேன் என்றால் தமிழ் மக்களுக்கும் பார்பன ஆகம ஹிந்து மதத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லாத நிலையிலும் தமிழர்கள் பார்பனிய ஹிந்து மதத்துடன் சமரசம் செய்து கொண்டு அதனை ந்டைமுறைப்டுத்திகொண்டு உள்ளார்கள். தமிழ் மக்களின் உண்மையான ஆன்மிகம் நாட்டுபுற தெய்வங்கள் தான் என்ற உண்மையை நான் கூறித்தான் வேண்டும் என்பது இல்லை. தம்மை சூத்திரர்கள் என்று ஏற்று கொண்ட ஈழ / தமிழ் நாட்டு தமிழ் மக்கள் அனைவருமே தமிழ் பேசும் ஹிந்துக்கள் தான்.

                      //அப்படியானால் அதற்கு அர்த்தம் என்ன . வசதிக்கேத்தபடி சொல்லிக்கொள்வது . சிங்களவர்களுக்கு சோனகர் என்று சொல்லி தமிழர்களிலிருந்து தம்மை பிரித்து காட்டி கொள்வது . தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கு தமிழ் முஸ்லிம்கள் என்பது . இதைத்தான் தொப்பி பிரட்டி என்பது .//

                    • vinavu pls delete this my comment

                      இந்த விவாதம் ஸ்தம்பித்து போக கூடாது என்பதற்காக வியாசன் பயன் படுத்தும் சொர்தொடரான :””””தமிழ் பேசும் முஸ்லிம்கள்””” என்பதனை பயன் படுத்த போகின்றேன். சேனாக்கர் என்று அழைப்பதை நான் என்றும் ஏற்க்கவில்லை. அதே நேரத்தில் சேனாக்கர் என்ற சொல் தமிழ் பேசும் முஸ்லிம்களை குறிக்க பயன்ப்டுட்கின்றது என்பதனை ஏற்கின்றேன்.

                  • நான் கூறியதை திரிக்கிறார் கேதீஸ்வரன், தமிழ் பேசும் முஸ்லீமுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக, அவனை எனது சகோதரனாக நான் உணர்கிறேன் என்று நான் இலங்கை முஸ்லீம்களைக் குறிப்பிட்டுக் கூறவில்லை, அதில் நான் குறிப்பிட்டது தமிழ்நாட்டு முஸ்லீம்களை. என்னுடைய கருத்து என்னவென்றால், என்னுடைய இனத்துக்கும், மொழிக்கும் நான் முதலிடம் கொடுக்கிறேன், எனது இனத்துக்கும், மொழிக்கும் பின்பு தான் என்னுடைய மதம். ஒரு குஜராத்தி இந்துவுடனோ அல்லது மலையாளி இந்துவுடனோ அல்லது பீகாரி இந்துவுடனோ எனக்குள்ள தொடர்பை விட என்னுடைய மொழியைப் பேசுகிற, தன்னையும் தமிழனாக அடையாளப்படுத்துகிற (தமிழ்நாட்டு)முஸ்லீமுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக, அவனை எனது சகோதரனாக நான் உணர்கிறேன். அதை நான் அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். அந்தக் கருத்தில் எந்த மாற்றமுமில்லை. அந்த உணர்வுக்கும், பாசத்துக்கும், தொடர்புக்கும் வஹாபியிசம் ஒரேயடியாக உலை வைத்து விடுமோ என்பது தான் என்னுடைய கவலை எல்லாம்.

                    • இதில் எங்குமே வியாசன் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் என்று கூறவில்லை. தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்று தான் பொதுவில் ஈழ/தமிழ் நாட்டு முஸ்லிம்களை குறிப்பிடுகின்றார்.

                      //ஒரு இந்தி அல்லது குஜராத்தி அல்லது மலையாளம் பேசும் இந்துவுடன் எனக்கிருக்கும் தொடர்பை விட, ஒரு தமிழ் பேசும் முஸ்லீமுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக, அவனை எனது சகோதரனாக நான் உணர்கிறேன்//

                    • எல்லா வக்கணை பேச்சும் சரி. தமிழ் முஸ்லிமான நீர் எதற்கு வெட் கமில்லாமல் கேதீஸ்வரத்தானின் பெயருக்குள் ஒளிந்திருந்து கொண்டு சாதி வெறிக்கதைகளையும் , புனைவுக்கதைகளையும் கூற வேண்டும் . உங்களைப்பொறுத்தவரைக்கும் காபீர்கள் அனைவரும் ஒன்றுதானே . பின் எதற்கு காபீர்களின் ஒரு பிரிவினர்களில் அனுதாபம் கொண்டவர் மாதிரி முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டும் ?

                      நீர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு என்னதான் தமிழ் முஸ்லிம் என்று சொன்னாலும் இலங்லையில் இருக்கும் முஸ்லிம்கள் தம்மை சோனகர் என்றோ இலங்கை முஸ்லிம் என்றோதான் தம்மை அழைத்துக்கொள்கிறார்கள். தமிழ் என்றும் முஸிலிம் என்றும் , சோனகர் என்றும் மாற்றி மாற்றி சொல்வதைத்தான் தொப்பி பிரட்டி குணம் என்று அழைப்பார்கள்.

                    • நீங்கள் மீண்டும் இந்த தளத்துக்கு வந்து இப்படி உளறுவீர்கள் என்று தெரிந்திருந்தால் தமிழ்நாட்டு முஸ்லீம்களைத் தான் நான் குறிப்பிடுகிறேன் என்று தெளிவாக (உங்களுக்குப் புரியும் வகையில்) கூறியிருப்பேன். ஆனால் இலங்கை முஸ்லீம்கள் எந்தளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு எதிர்க்கிறார்கள் என இந்த தளத்தில் அடிக்கடி விவரிக்கும் நான், எனக்கு அவர்களுடன் ‘நெருங்கிய தொடர்பிருப்பதாக, அவர்களை எனது சகோதரர்களாக உணர்கிறேன்” என்ற கருத்தில் கூறியதாக எந்த முட்டாளும் (உங்களைத் தவிர) நினைக்க மாட்டான். 🙂

                    • இந்த வியாசன் எவ்வளவு பெரிய அறிவாளி மற்றும் உண்மையானவர் என்று பார்ப்போம். இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம்கள் ,இலங்கை தமிழ் பேசும் ஹிந்துகளை எதிர்கின்றார்கலாம். அதனால் இவர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேனவில்லையாம் , அவர்களை எனது சகோதரர்களாக உணரவில்லையாம். அதே சமையத்தில் அத்தகைய நெருக்கத்தை இந்த பித்தலாட்டக்காரர் வியாசன் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் உடன் வைத்து உள்ளாராம். என்ன ஒரு பித்தலாட்டம் ! என்ன ஒரு கயமை… எவ்வளவு பெரிய அப்படக்கராக இந்த வியாசன் இருந்தால் இப்படி உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் !

                      இந்த வினவு இணைய தளத்தில் இவர் விவாதிக்கும் முஸ்லிம்களான திப்பு போன்றவர்களிடம் இவர் சகோதரத்துவ பன்புகளை என்றைக்கு வெளிபடுத்தி இருக்கின்றார்.? இவருடன் விவாதிக்கும் தமிழ் நாட்டு திப்பு போன்ற முஸ்லிம்களை எதிரிகளை போலத்தானே பார்த்துகொண்டு ,பேசிக்கொண்டு இருந்தார் இந்த வியாசன். ஏன்னா ஒரு கயவாளித்தனம் இந்த வியாசனுக்கு?

                • சூடு பட்டு இறந்தவர்களில் கன்யாகுமரியில் வாழ்ந்த கேதீஸ் என்பவர் முக்கும் எந்த தமிழ் முஸ்லிமும் இல்லை என்பதையும் வசதியாக மறந்து விட்டார் . அங்கு தமிழர்கள் கன்யாகுமரையை தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென போராடினாலும் , பாலாக்காட்டை கேரளாவுக்கு விட்டு கொடுத்துதான் கன்யாகுமரியை பெற வேண்டியிருந்ததென்பதை கேதீஸ் எனும் பெயரில் ஒளிந்திருக்கும் சாதி வெறியரான தமிழ் முஸ்லிம் (??) உணர்ந்து கொள்ள வேண்டும்.

                  • குமரி எல்லை காக்கும் போராட்டம் நாஞ்சில் நாட்டார் துரோகம் [கேரள நம்பூதிரி-கேரள நாயர்-நாஞ்சில் நாட்டு வெள்ளாள பிள்ளளைகள் சாதிய கூட்டமைப்பு ]

                    யார் தமிழ் மக்கள் மீதான பற்றாளர்கள் யார் எல்லாம் திருவிதாங்கூர் அடிமைகள் (வெள்ளாள பிள்ளைகள்) என்பதனையும் பார்க்கத்தானே போகிறோம். எல்லை பிரச்சனையில் எம்முடைய தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த தமிழ் நாட்டவரில் முதன்மையானவர்கள் என்றால் தமிழ் நாட்டு வடக்கு எல்லையில் அது எம் தாத்தன் ம.பொ.சி யும் தெற்கில் மார்ஷல் நேசமணியும் தான். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் தமிழர் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று போராடியது நாடார் மக்கள் தானே தவிர தம்மை நாஞ்சில் நாட்டார் என்று பிற்றிகொள்ளும் வெள்ளாள பிள்ளைகள் கிடையாது. இந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்கள் நாடார் மக்கள் தானே தவிர ஒருத்தரும் வெள்ளாள பிள்ளைகள் கிடையாது. வெள்ளாளன் குமரி எல்லை காக்கும் போராட்டத்தில் ஈடுப்டாமைக்கு காரணம் அவர்களின் திருவாங்கூர் சமஸ்தான அடிமைத்தனமும் அங்கு ஆளுமையில் இருந்த நம்பூதிரி-நாயர்-பிள்ளை கூட்டு கயவாணித்தனும் தான் என்றால் அது 100% உண்மையே. கேரள நம்பூதிரி-கேரள நாயர்-தமிழ் பிள்ளை சாதிய கூட்டமைப்பில் நம்பூதிரிகளுக்கு அடிவருடிகளாக இருந்த நாஞ்சில் நாட்டு வெள்ளாள பிள்ளளைகள் தமிழ் நாட்டவர் என்று கூருவதற்கே அருவருப்பாக உள்ளது. ஆள் காட்டி வேளையில் ஒரு சாதியே அதாவது வெள்ளாள சாதியே தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டது அவர்கள் தமிழ் மக்கள் அல்லர் என்பதனையே பறைசாற்றுகின்றது.

                    • தமிழ் முஸ்லிமான நீர் ,நம்பூதிரிகள் ,நாயர்கள் , பிள்ளைமார் சாதி பற்றி பேசுவது இருக்கட்டும் , இந்தப்போராட்டத்தில் எந்த தமிழ் முஸ்லிம் போராட்டத்தில் ஈடுபட்டு சூடு பட்டு இறந்தான் என்று இன்னும் கூறவில்லையே . இந்துப்பெயரில் ஒளிந்திருக்கும் முஸ்லிமுக்கு காபீர்கள் பற்றி அவர்கள் சாதி பற்றி என்ன அக்கறை?

                      போராட்டத்தில் இன்ன சாதியினர் இவ்வளவு பேர் இறந்தார்கள் என சாதிப்பிணங்கள் மீது நின்று உமது தமிழ் வெறுப்பையும் , இஸ்லாம் போதித்த காபீர்களின் வெறுப்பையும் ஒரு சேரக்காட்டி மத , இன , சாதி அரசியலில் ஊறிப்போனவர் என்பதை காட்டியிருக்கிறீர்.

                    • அண்மையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இந்துக்கள் அனைவரும் ( தான் சார்ந்த நாடார் வகுப்பினர் உட்பட ) ஒற்றுமையாக இருந்திருந்தால் கன்யாகுமரி தமிழகத்தோடு சேராது கேரளாவோடு சேர்ந்திருக்கும் என செப்பியிருந்தாரே ?

                  • ரஷித் போன்ற முஸ்லிம்கள் திரு ம.பொ.சி அவர்களின் தலைமையில் குமரி எல்லை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வரலாறு எல்லாம் கேரள நம்பூதிரி-கேரள நாயர் களிடம் தமிழ் மக்களை காட்டிக்கொடுதவ்ர்களுக்கு – சுயமோகன் வகையறாக்களுக்கு எப்படி தெரிய போகின்றது.

                  • தமிழ் நாட்டின் வடக்கிலும் ,தெற்கிலும் எல்லை பிரச்னைக்காக தமிழ் நாட்டின் நிலப்பரப்பை காக்க போராடிய வரலாறு எமது முன்னோர்களுக்கு உண்டு. வடக்கில் சென்னையையும் , திருத்தணியையும் காத்த பெருமை எமது தாய் வழி தாதனாகிய திரு மா பொ சி க்கு உண்டு. தெற்கு எல்லையை காத்த பெருமை திரு மார்ஷல் நேர்மணி ஐயாவுக்கு உண்டு. நாஞ்சில் நாட்டான் என்று பிற்றிகொள்ளும் வெள்ளானுக்கு என்று என்ன பெருமை உள்ளது அவர்கள் குமரி எல்லை காக்கும் போரில் திருவாங்கூர் காரனுக்கு அடியாளாக இருந்த தமிழ் மக்கள் துரோகத்தை தவிர!

                    • தமிழைக் காத்தவர்கள் வேளாளர்கள். மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் இல்லாதிருந்தால், நாங்கள் எல்லோரும் ‘நமஸ்தே; சொல்லிக் கொண்டிருப்போம். சமஸ்கிருதம் கலந்த தமிழில் பேசிக் கொண்டிருப்போம், தமிழிலிருந்து இன்னொரு மணிப்பிரவாள மலையாளம் பிறந்திருக்கும். யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் தொடக்கம் தாமோதரம்பிள்ளை வரை, வெள்ளாளர்கள் தமிழ் ஒலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுவாகனமேற்றாதிருந்தால், தமிழில் எந்த இலக்கியமும் இல்லாமல் அழிந்து போயிருந்திருக்கும், தமிழ் ஓலைச் சுவடிகளைக் காப்பதில் உ.வே. சுவாமிநாதையருக்கு முன்னோடிகள் யாழ்ப்பாண வெள்ளாளர்கள். வெள்ளாளர்களால் தான் தமிழ்நாட்டில் இன்றும் தமிழ் வாழ்கிறது. (உண்மையைக் கூறுகிறேன் அவ்வளவு தான்.. :))

                    • மளிகை கடைகாரரிடம் பருப்பு இருக்கா என்று கேட்டால் சிலநேரம் உப்பு இருக்கு என்று கூருவாரு. அவர் கூறுவதை வைத்து சரக்கு இல்லை என்று நாம் தான் புரிஞ்சிக்கனும். அதுமாதிரி குமரி எல்லை போராட்டத்தில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் திருவாங்க்கூர் நம்பூதிரிகலுக்குநாயர்களுக்கு ஆதரவாக நின்று தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை பற்றி பேசும் போது இந்த வியாசன் தொடர்பற்ற விசயங்களை பற்றி பேசுறாரு.

                      என்ன வியாசன் அண்ணாச்சி சரக்கு இருக்கா? மண்டையில் சரக்கு இருக்கா?

  112. திரு பிரபாகரன் தலைமையில் நடந்த ஈழ சுதந்திர போரில் யாழ் சைவ வெள்ளாளர்கள் நாட்டை விட்டு பஞ்சம்-தஞ்சம் பிழைக்க ஓடிய வரலாற்றை மறைக்க வன்னி பிரதேசத்து வன்னிய மக்களையும் வெள்ளாளர்கள் தான் என்று உண்மைக்கு மாறாக பேசுகின்றார். உண்மையில் அன்று நடந்த ஈழ விடுதலை போரில் திரு பிரபாகரனுடன் உடன் இருந்து இறுதி வரையில் போரிட்டவர்கள் வன்னிய சமுகத்து மக்களும், மீனவ சமுகத்து மக்களும் , தலித் சமுகத்து மக்களும் தான் என்ற உண்மையை இந்த தருணத்தில் எடுத்துரைக்க விரும்புகின்றேன். அடுத்தவனின் வீரத்தையும் சுதந்திர போராட்ட உணர்வையும் சைவ வெள்ளாளர்களின் மீது பொய்யாய் ஏற்றி மகிழும் வியாசனின் அறிவு அருவருக்க தகுந்தது.

    //ஈழத்தில் வன்னியர்சாதி கிடையாது. வன்னியை ஆண்ட பண்டாரவன்னியன் போன்ற வீரர்கள் கூட வெள்ளாளர்கள் தானே தவிர வன்னியர்கள் அல்ல. வன்னியர்கள் என்று இன்று அழைக்கப்படும் பள்ளிசாதியினருக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை உங்களுக்காக ஆதாரத்துடன் எனது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளேன். பார்க்கவும் //

    • ##மளிகை கடைகாரரிடம் பருப்பு இருக்கா என்று கேட்டால் சிலநேரம் உப்பு இருக்கு என்று கூருவாரு.##

      இது கேதீஸ்வரத்தான் பெயரில் ஒளிந்திருக்கும் தமிழ் முஸ்லீமுக்குத்தான் பொருந்தும்.
      தம்மை தமிழர்கள் என்றொ தமிழ் முஸ்லிம்கள் என்றொ அடையாளப்படுத்தாத இலங்கை முஸ்லிம்களை வம்படியாக தமிழ் முஸ்லிம்கள் என்று அழைப்பதுபோல் , பூர்வீக தமிழரான மலையாளிகளை தமிழர்கள் என அழையுங்களேன் பார்ப்போம் என வியாஸன் சவால் விட்டதற்கு பதில் சொல்ல வக்கற்று , சம்பந்தமேயில்லாமல் ” உங்களுக்கு தெரியுமா கன்யாகுமரியை தமிழ்நாட்டோடு சேர்ப்பதற்கு தமிழர்கள் போராடவில்லை . அந்த சாதியினர் போராடினார்கள் , இந்த சாதியினர் பாம்மிக்கொண்டு அம்மிக்கிடந்தார்கள் . இந்த சாதியினரில் இவ்வளவு பேர் குண்டாஇ பட்டு இறந்தார்கள் என , எல்லா போராட்டத்திலும் , எல்லா சம்பவங்களிலும் , எல்லா சாவிலும் சாதியை இழுத்து வைத்து வம்படிக்கும் சாதித்திலகமே உமக்குத்தான் பருப்பு , உப்பு கதை சாலப்பொருந்தும்.

      • அதை பற்றி தானே பேசிக்கொண்டு உள்ளோம் என்பது கூட இந்த லாலாவுக்கு-சுயமோகனுக்கு புரியவில்லையே! வியாசனின் சவாலுக்கு தான் பதில் சொல்லிகொண்டு உள்ளேன் லாலா டியுப் லைட் அவர்களே. கேரளாவில் வாழ்ந்த பூர்விக தமிழன் எவன் தம்மை தமிழ் நாட்டு காரன் என்று உணர்ந்தானோ அவன் தான் குமரி எல்லை காக்க போராடினான் என்ற உண்மையை தான் கூறிக்கொண்டு உள்ளேன். தம்மை தமிழ் நட்டான் என்று உணராதா நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் கேரள-திருவாங்கூர் அரசுடன் இணைந்து கொண்டு குமரி எல்லை காக்க போராடாமல் மொவுனம் காத்தான் என்பதனை தானே இதுவரையில் கூறிக்கொண்டு உள்ளேன். தந்த விடயத்தை மறுக்க தரவுகள் அற்ற பழைய டியுப் லைட்டாக மின்னும் நீர் எதற்க்கா குறுக்கே சால் ஓட்டிக்கொண்டு உள்ளீர்?

        இப்போதாவது புரிகின்ர்றதா கேரளாவில் வாழ்ந்த பூர்விக தமிழ் மக்களுள் நாடார், சாணார் ,முக்குவர், தலித் மக்கள் போன்றவர்கள் மட்டுமே தம்மை தமிழ் நாட்டவர் என்று உணர்ந்தார்கள் என்று. அவர்கள் தம்மை தமிழ் மரபில் வந்தவர்கள் என்று உணர்ந்ததால் தான் குமரி எல்லை காக்க போராடினாகள் . உயிர் துறந்தார்கள். இதனை கூறும் போது எங்கே வந்தது சாதிவெறி என்பதை பழைய டியுப் லைட்டை போல வேலை செய்யும் உமக்கு புரிகின்றதா?

        கேரளாவில் வாழ்ந்த திருவாங்கூர் நம்புதிரிகள்-நாயர்களின் அடிவருடிகளான வெள்ளாளர்கள்(பிள்ளைகள்) குமரி எல்லை காக்க போராட்டத்தில் தமிழ் நாட்டுக்கு சார்பாக கலந்து கொள்ளவில்லை என்பதாவது புரிகின்றதா உமக்கு? எனவே அவர்களை இன்று நாம் தமிழ் நாட்டில் வாழும் திருவாங்கூர் அடியாட்கள் என்று வேண்ண்டுமானால் அழைக்கலாம்.

        குமரி எல்லை காக்க போராடிய சமுகத்துமக்களும் பேராட்டத்தில் பங்கு பெறாமல் திருவாங்கூர் சாதி வெறியர்களுடன் ஒன்றாக இருந்த இந்த வெள்ளாள(பிள்ளை) சமுகத்து மக்களும் ஒன்றா பழைய டியுப் லைட் லாலா அவர்களே?

        //பூர்வீக தமிழரான மலையாளிகளை தமிழர்கள் என அழையுங்களேன் பார்ப்போம் என வியாஸன் சவால் விட்டதற்கு//

        • தமது ( தற்போதைய மலயாளிகள் ) முன்னோர்கள் தமிழர்களாக இருந்தும் , இப்போதிருக்கும் மலையாளிகள் தம்மை தமிழர்களக உணரவில்லையல்லவா ? ஒப்புக்கொள்ளவில்லையல்லாவா ?அதனை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே ?
          அப்படித்தான் இலங்கை முஸ்லிம்களின் முன்னோர்கள் தமிழர்களாகவிருந்தும் , அவர்கள் அதை உணரவில்லை அல்லது வேண்டுமென்றே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் . இப்போதுள்ள மலையாளிகளை உங்களால் தமிழர்கள் என்று அழைக்க முடியாததுபோல்தான் , இலங்கை முஸ்லிம்களையும் தமிழர்கள் என்று அழைக்கமுடியாது. அதனை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள் என்றுதான் இவ்வளவு நாளும் படித்து படித்து சொன்னேன்.இப்போது யார் டியூப் லைட் என்று புரிந்திருக்கும்.

          • இது என்ன லூசு தனமான ,அறிவை பயன்படுத்ததா பேச்சு…? நம்பூதிரிகலும் , நாயர்களும் என்றைக்குமே தமிழராக இருந்தது இல்லை என்ற வரலாறு கூட தெரியவில்லையே இந்த லாலாவுக்கு! சாதியே வர்கமாக நிற்கும் இந்தியாவில் தமது வர்க்க நலன்களை முதன்மையாக வைத்து தானே நிலஉடமை சாதியினரான நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களும் மேல் சாதி திருவாஞ்கூர் அரசுக்கு ஆதரவாக ,அடிவருடிகளாக இருந்தார்கள். தமிழ் மொழி பேசும் வெள்ளாளர்களான இவர்கள் கூட தன் தமிழ் மொழி உணர்வை புறம் தள்ளி மலையாள மேல் சாதியினருக்கு ஆதரவாக தானே நின்றார்கள். இங்கே வெள்ளாளர்களின் நிலஉடமை வர்க்கம் தம் மொழி உணர்வை புறக்கனிக்கின்ன்றது எனில் அங்கே அவர்கள் தமிழ்-தமிழ் நாடு ஆகிய இனஉணர்வுகளை அடியோடு அழிகின்றனர் தானே? அதே நேரத்தில் அந்த திருவாஞ்கூர் அரசால் அடிமைபடுத்தப்பட்ட தமிழ் பேசும் பிற சாதியினரான நாடார், முக்குவர் போன்ற ஒடுக்கப்பட்ட சமுகங்கள் தம் வர்க்க நலன்களை முதன்மையாக வைத்தே தம்மை ஒடுக்கும் நம்பூதிரிகள் , நாயர்கள் மலையாளிகளுடன் சேர விரும்பாமல் தமிழ் நாட்டுடன் சேர்ந்தார்கள். இதில் இருந்து என்ன அறிய முடிகின்றது? இனம் -இனஉணர்வு- மொழி உணர்வு ஆகியவற்றையும் மீறி மலையாளிகளை (நம்பூதிரிகள் , நாயர்கள்) தம் இனமாக ஏற்கும் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களை பற்றி அவர்களின் தமிழ் இன உணர்வை பற்றி சிந்தனை செய்யவேண்டியது முக்கியமாகின்றது.

            //தமது ( தற்போதைய மலயாளிகள் ) முன்னோர்கள் தமிழர்களாக இருந்தும் , இப்போதிருக்கும் மலையாளிகள் தம்மை தமிழர்களக உணரவில்லையல்லவா ? ஒப்புக்கொள்ளவில்லையல்லாவா ?அதனை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே ?//

            • சிரிப்பு காட்டுகின்றார் லாலா ! இன்றைய மலையாளிகளான நம்பூதிரிகலும் , நாயர்களும் என்றுமே மலையாளிகள் தான் என்ற உண்மை இந்த லாலாவுக்கு வெளங்கவில்லை !

            • சரி , உங்கள் வாதப்படியே வருவோம் .நம்பூதிரிகளும் ,நாயர்களும் என்றுமே தமிழர்களாக இருந்தது இல்லை . அப்படியென்றால் நம்பூதிர்களும் ,நாயர்களும் மட்டும்தான் மலயாளிகளா ?
              ஏனைய சமூகத்தவர் மலயாளிகள் இல்லயா ? அவர்களது முன்னோர்கள் தமிழர்கள்தனே மலபார் தமிழ் பேசியவர்கள்தானே ? அவர்களது பூர்வீக குடிகள் தமிழ் என்பதற்காக இப்போது அவர்களை தமிழர்கள் என்று அழைக்க முடியுமா உங்களால் ?

              • குலம் கோத்திரம், சாதி, பார்ப்பனீயம் ஆகிய தேவையற்ற அடையாளங்களை தமிழ் மக்கள் தூக்கி எறிந்த பின் வேண்டுமானால் சேனாகர் என்ற அடையாளத்துக்காக முஸ்லிம்களை நீங்கள் குறைகூறலாம்.

                வியாசனை கேளுங்கள் விரிவாக கூறுவார். எத்துனை தமிழ் குடிகள் ஈழத்தில் சிங்கள இனமாக மாற்றப்பட்ட வரலாற்றை. தமிழ் பேசிய இலங்கை கடற்கரை ஓர மக்கள் இன்று சிங்கள மொழியை பேசிக்கொண்டு உள்ள வரலாற்றை. இப்படி தமிழ் ஈழத்திலும் சரி , கேரளத்திலும் சரி பல்வேறு தமிழ் இனங்கள் வலுகட்டாயமாக மலையாள மொழி ஊடாக கல்வி அளித்தல் போன்ற காரணங்களால் இன்று அவர்கள் தமிழ் மொழியை மறந்ததும், மறக்கபட்டதும் உண்மை. அதே நேரத்தில் தமக்கு என்று தனி அடையாளத்தை தேடும் இலங்கை தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் காலனி ஆதிகத்தின் கீழும், சிங்கலவ பேரினவாத அரசுகளின் கீழும் தம் மொழியை இன்னும் இழக்காமல் உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த விடயம். ஒரு வேலை அவர்கள் (ஈழ தமிழ் பேசும் முஸ்லிம்கள்) தம் பூர்விகத்தை நிலைநிறுத்த சேனாக்கர் என்ற பதத்தை பயன்படுத்துவார்கள் என்றால் அது தமிழ் மக்கள் தம் பூர்விகத்தை நினைவுகூர சாதி பெயர்களை, முலத்தை ,கோத்திரத்தை பயன்படுத்தும் செயல் தானே அன்றி வேறு ஏதும் இல்லை. சூரிய குலம், அக்கினி குலம் என்று எல்லாம் தமிழ் இனத்தின் உட்பிரிவுகளாக பல்வேறு சாதிகளும் அடையாளம் காணப்படுவது போன்றே அவர்களும் தம் பூர்விக அடையாலங்களை இன்னும் கொண்டு இருக்கலாம். ஒரு தமிழ்-ஹிந்து தம் கோத்திர அடையாளங்களை கொண்டு இருப்பது தவறு என்றால் முஸ்லிம்களும் இந்த சேனாக்கர் என்ற அடையாளத்தை கொண்டு இருபதும் தவறு தான்.

              • கேரளாவில் தமிழ் இனத்தை அழித்ததில் நம்பூதிரி பார்பனர்கள் பங்கு :

                இந்த விவாதத்தில் கேரள மக்கள் எப்படி மலையாளிகளாக மாற்றபடுகின்றார்கள் என்று பார்த்தோம். கேரளத்தில் ஆட்சியில் இருத்தவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் செல்வாக்குடனும் இந்த பார்பனர்கள்-நம்புதிரி பாரனர்கள் தங்களின் சமஸ்கிருத மொழியை கேரளாவின் பழமையான தமிழ் மொழியுடன் கலப்படைய செய்தனர். அதன் ஊடாக உருவான மொழி தான் மலையாளம். மேலும் அவர்கள் நாயர்கள் என்ற சாதியினருடன் முறையற்ற முறையில் இனக்கலப்பு அடைந்தனர். நாயர் வீட்டு பெண்ணுக்கு பிறக்கும் முதல் குழ்ந்தை நம்பூதிரி பார்பணனின் விந்தில் இருந்து தான் பிறக்கவேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தை நம்பூதிரிகள் நடைமுறைபடுத்தினர். இவ்வளவு கொடுமைகளை செய்த இந்த நம்பூதிரி பார்பனர்களை பற்றி பேசினால் அவர்ர்களை பற்றி பேசாதீர்கள் என்று பொங்கி எழுவார் இந்த லாலா. நாம் அதற்கு என்ன செய்யமுடியும்? பேசாமலா இருக்க முடியும்.?

                • இப்போது மாற்றப்பட்ட மலையாளிகளை அவர்களது முன்னோர்கள் தமிழர்களாக இருந்த காரணத்தினால் அவர்களை தமிழர்கள் என்று இப்போது உங்களால் அழைக்க முடியுமா என்பதுதான் உங்களிடம் இவ்வளவு நாளாக கேட்ட கேள்வி ? அதற்கு பதில் சொல்லாமல் உங்களுக்கு தெரியுமா கன்யாகுமரி யாருக்கு சொந்த என்ற போராட்டம்நடந்த போது அந்த சாதிக்காரன் ரோட்டுக்கு வந்தான் , இந்த சாதிக்காரன் வீட்டிலேயே அம்மிக்கிடந்தான் என்று சொன்னது மட்டுமல்லாமல் சாதி வாரியாக போராட்டத்தில் இறந்தவர்களின் சடலங்களிலும் சாதி ஸ்டிக்கர் ஒட்டி பிரித்து மேய்ந்து விட்டீர்கள்.

                  • லாலா ,நான் கூறும் எளிய பதிலை கூட புரிந்துகொள்ளும் அறிவற்ற நீர் விவாதிக்க வந்ததே தவறு என்பதனை உணரும் தருணம் வெகு விரைவில் வரும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கேரள சமுக அமைப்பை புரிந்து கொள்ளாமல் வியாசனின் கேள்விக்கு எந்த கொம்பனாலும் பதில் அளிக்க முடியாது என்ற எளிய உண்மை குறைந்த அரசியல் சமுக அறிவு உடையவருக்கே கூட புலப்படும். அந்த அளவுக்கு கூட அறிவற்ற நீர் binaryயில் எஸ் நோ என்று பதிலை எதிர்பார்ப்பது உங்களுடைய மூடத்தனம் என்பதை இன்னும் கூட நீர் உணரவில்லையே. தமிழ் நாட்டுக்காக தமிழ் நாட்டின் எல்லை காக்க போராடிய சமுகம் எது என்று வரலாற்றின் அடிப்படையில் நான் கூறிய உண்மையை ஏற்கும் குறைந்த அளவு சனநாயக பன்பு கூட லாலா என்ற சுயமோகனின் ஆவிக்கு இல்லையே !

          • நான் பதில் கூறி 3 நாட்கள் ஆன பின்ணும் பழைய டியுப் லைட் போன்று எறியாமல் இன்னும் மின்னிக்கொண்டு இருப்பது ஏன் லாலா?

            23/2/16 அன்றே என் பதில் 120.3.2.1.1.1.2.1.1.2 ல் இது தொடர்பாக கீழ் கண்ட கருத்தை கூறியிருந்தேன் :

            இலங்கை முஸ்லிம்களை குறிக்க வியாசன் பயன் படுத்தும் சொற்தொடரான தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பதை பயன்படுத்துவது போன்று இலங்கை ஹிந்துகளை குறிக்க தமிழ் பேசும் ஹிந்துக்கள் என்ற பதத்தை பயன்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். ஏன் கூறுகின்றேன் என்றால் தமிழ் பேசும் ஹிந்துக்கள் ஆகம விதிகளின் அடிப்டையில் தானே மத சடங்குகளை மேற்கொள்கின்றார்கள். அப்படி என்றால் அவர்கள் தமிழ் பேசும் ஹிந்துக்கள் தான். உண்மையில் தமிழனுக்கு என்றும் ஹிந்து மதம் எதிரி தானே. ஆறுமுக நாவலரின் சித்தாந்த அடிப்டையில் யாழ் வெள்ளாளர்கள் தம்மை சத் சூத்திரர்கள் என்று தானே அழைத்துக் கொள்கின்றார்கள்.

            வியாசனுக்கும் லாலவுக்கும் உடன்பாடு தானே ?

            மேலும் என் பதில் 120.3.2.1.1.1.2.1.1.3 (23/2/2016)

            தமிழ் நாட்டில் , ஈழத்தில் தமிழர் என்று கூறிகொள்ளும் மனிதர்கள் அனைவருமே வியாசன், லாலாவின் வரையறை படி தமிழ் பேசும் ஹிந்துகள் தான். ஏன் இந்த சொற்தொடர் பயன்படுத்துகின்றேன் என்றால் தமிழ் மக்களுக்கும் பார்பன ஆகம ஹிந்து மதத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லாத நிலையிலும் தமிழர்கள் பார்பனிய ஹிந்து மதத்துடன் சமரசம் செய்து கொண்டு அதனை ந்டைமுறைப்டுத்திகொண்டு உள்ளார்கள். தமிழ் மக்களின் உண்மையான ஆன்மிகம் நாட்டுபுற தெய்வங்கள் தான் என்ற உண்மையை நான் கூறித்தான் வேண்டும் என்பது இல்லை. தம்மை சூத்திரர்கள் என்று ஏற்று கொண்ட ஈழ / தமிழ் நாட்டு தமிழ் மக்கள் அனைவருமே தமிழ் பேசும் ஹிந்துக்கள் தான்.

            • முஸ்லிம்களைப்போல் தமிழர்கள் தம்மை தமது மதத்தை முன்னிலைப்படுத்தி அடையாளப்படுத்துவதில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் . எல்லாவற்றையும் மதத்தோடு அடையாளப்படுத்தும் , சிந்திக்கும் உங்களைப்போன்ற மத வெறியர்களின் பைத்தியக்காரத்தனமான எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

              • என் கேள்வி லாலாவுக்கு பைத்தியகாரதனமாக இருக்க காரணம் அவர் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டே அவர் கொண்டு உள்ள மத அடையாளங்கள் தானே தவிர வேறு என்ன இருக்க முடியும். ? தமிழ் இனத்தை சேர்ந்த எந்த மதத்தவனும் தம் மத அடையாளங்களை எதோ ஒரு முறையில் காட்டிக்கொண்டு தான் இருக்கின்றான். அவன் தமிழ் ஹிந்துவாக இருந்தாலும் சரி தமிழ் முஸ்லிமாக இருந்தாலும் சரி , தமிழ் கிருஸ்துவனாக இருந்தாலும் சரி அவர்கள் கொண்டு உள்ள பெயர்களை பாருங்கள். அதில் அவர்கள் மதம் வெளியில் தெரிகின்றதா இல்லையா? 100க்கு 90% பெயர்கள் அவர்களின் மதத்தை வெளியில் காட்டத்தான் செய்கின்றன. இந்த நிலையில் முஸ்லிம்கள் மட்டுமே தம் மதத்தை முன்னிலை படுத்துகின்றார்கள் என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அனைத்து மத தமிழ் மக்களும் தம் மதத்தை தம் பெயரில் கொண்டு உள்ளார்கள் என்ற விசயத்தை பார்த்தாகிவிட்டது.

                அடுத்ததாக தமிழ் மக்கள் வெளிபடுத்தும் மத குறியீடுகளை பற்றி பார்ப்போம். தம் மதத்தின் மீது ஆழ்ந்த நம்ம்பிக்கை கொண்ட ஒரு தமிழ் முஸ்லிம் தம் மத அடையாளங்களை தம் மீசையில் தாடியில், குல்லாவில் ,உடையில் கொண்டு உள்ளது போன்று தான் தம் மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உடைய ஒரு தமிழ் ஹிந்துவும் அனைத்து விதமான ஹிந்து அடையாளங்களையும் நெற்றி திலகத்தில் உடையில் என்று பலவிதங்களிலும் வெளிகட்டுகின்றான்.

                பொதுவெளியில் தம் மத அடையாளங்களை வெளிக்காட்டாத ஒரு தமிழ் மகனை/மகளை இந்த லாலா வால் காட்ட முடியுமா?

              • இப்படி எல்லாம் பேசி நீங்கள் விவாதத்தில் இருந்து வெளியேற நினைத்தால் உங்களை விடமாட்டேன் லாலா. நம் தமிழ் இனத்துக்கு தொடர்பே அற்ற பார்பனிய கலாச்சாரம் பற்றி நான் பேசினால் உங்களுக்கு கசப்பாக இருக்கிறது தானே நண்பரே? என் கசகின்றது உங்களுக்கு ? காரணம் இதுவரையில் இந்த விவாதத்தில் தமிழ் இனத்தின் மீது பார்பனிய ஆளுமை செலுத்திய அடக்குமுறையை யாருமே கேள்வி எழுப்பவில்லை ஆனால் இவன் கேள்வி எழுபுகின்றானே என்ற வருத்தம் தானே உங்கள் மனதுள் தொக்கி நிற்கின்றது? ஆனால் நண்பரே எதார்த்தம் என்று வரும் பொது பார்ப்பனீயம் தான் தமிழ் மக்களை அவர்களின் இன அடையாளங்களை துறக்கச்செய்கின்றது.

                #முதலில் இந்த பார்ப்பனீயம் தான் தமிழ் இன மக்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமார்கள் என்றும் இழிவாக அடையாளப்படுத்துகிறது.

                #இதே பார்ப்பனீயம் தான் பார்பனிய-ஆகம விதிகளை முன்னிறுத்தி தமிழ் இன மக்களை அவர்களின் வழிபாட்டு உரிமையில் இருந்து வெளியேற்றியது.

                #இதே பார்ப்பனீயம் தான் சமஸ்கிருத கலப்பு உடைய தமிழ் மொழியை எழுத்து வடிவில் நவீன தமிழ் இலக்கியங்களிலஏற்படுத்த முயன்றது.

                இன்னும் சொல்லிகொண்டே போகலாம் லாலா .

                //சிந்திக்கும் உங்களைப்போன்ற மத வெறியர்களின் பைத்தியக்காரத்தனமான எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.//

            • தமிழர்கள் தமது இன அடையாளத்தையும் , அரசியலையும் தாம் சார்ந்த மொழி , இன அடிப்படையிலேயே வெளிப்படுத்தி வருகிறார்களே தவிர மத அடிப்படையில் அல்ல . இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை .
              ஆனால் முஸ்லிம்கள் அப்படியா ? கேரள மலயாள முஸ்லிம்கள் தவிர ஏனையவர்கள் தமது மதத்தை வைத்தே அடையாளப்படுத்துகிறார்கள் அவர்களது அரசியலும் அவ்வாறே.இதில் இலஙகை முஸ்லிம்களை கேட் கவே வேண்டாம். அதனால்தான் தமிழக முஸ்லிம்களை தமிழ் முஸ்லிம்கள் என்று அழைத்தாலும் , இலங்கை முஸ்லிம்களை அவ்வாறு அழைக்க முடியாது என்று கூறினேன். அவர்கள் விரும்பியபடி சோனகர் என்றோ முஸ்லிம் என்றோ அழைத்துக்கொள்ளாலம்.

              • லாலா உங்களுக்கு குறைந்த அளவுக்காவது அறிவு நாணயம் இருந்தால் தமிழ் சமுகம் பார்பனிய மையம் ஆக்கப்ட்டு உள்ளது என்ற என் பதில்கள் 121.1.1.1.2.1.2 , 121.1.1.1.2.1.1 , 121.1.1.1.2 ஆகியவற்றிக்கு நேரடியாக பதில் அளிக்க முயலவும்.. தமிழ் சமுகம் பார்ப்பான மையம் ஆகி உள்ளது என்ற உண்மை உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதா? தமிழ் மக்களை பார்ப்பனீயம் சூத்திரர்கள் என்றும் பஞ்சமார்கள் என்று அழைப்பது சரி என்று உங்கள் அறிவுக்கு தோன்றுகின்றதா?

      • பூர்வீக தமிழரான மலையாளிகளை தமிழர்கள் என அழையுங்களேன் பார்ப்போம் என வியாஸன் சவால் விட்டதற்கு தான் நான் பதில் கூறிக்கொண்டு உள்ளேன். வியாசன் அவர்கள் என் பதிலில் உள்ள வெள்ளாள தமிழ் துரோகத்தை பற்றி பேச துப்பின்றி விவாதத்துக்கு தொடர்பற்ற விடயங்களை , மொக்கையடித்துக்கொண்டு உள்ளார். அதற்கு தானே மளிகை கடைகாரரிடம் பருப்பு இருக்கா என்று கேட்டால் சிலநேரம் உப்பு இருக்கு என்று கூருவாரு என்று கூறினேன் நண்பர் டியுப் லைட் லாலா என்ற சுயமோகன் அவர்களே.

        மறுபடியும் வலியுறுத்தி கூறுகிறேன். கேட்டுகொள்ளுங்கள் வியாசனும், லாலாவும் . எவன் கேரளாவில் இருந்து குமரியை காக்க திருவாங்கூர் அரசின் அதிகாரத்துக்கு எதிராக போரடினானோ அந்தபூர்விக தமிழன் தான் உண்மையான தமிழ் மகன். மேலும் எவன் எல்லாம் திருவாங்கூர் நம்பூதிரி சாதி வெறியர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மண்ணை -குமரியை மலையாளிக்கு கட்டிகொடுதானோ அவன் (வெள்ளாளன்-பிள்ளை) நம்பூதிரிகளுடன் ரத்த உறவு கொண்ட கள்ள மலையாளி என்று தான் கூற முடியும். அவனை எப்படி தமிழ் மகன் என்பது லாலா சுயமோகன் அவர்களே?

        உங்கள் டியுப் லைட் இப்போதாவது எரிகின்றதா லாலா -சுயமோகன் அவர்களே?

        /// ##மளிகை கடைகாரரிடம் பருப்பு இருக்கா என்று கேட்டால் சிலநேரம் உப்பு இருக்கு என்று கூருவாரு.## //

        • வியாஸன் யார் தூய மலயாள மகன் , யார் தூய தமிழ் மகன் என்று உங்களிடம் சான்றிதழ் கேட் கவில்லயே ?
          இப்போதுள்ள மலயாளிகளின் முன்னோர்கள் தமிழர்களாக இருக்கும்போது அவர்களை பார்த்து தமிழர்கள் என்று உங்களால் கூற முடியுமா என்றுதான் கேட்டார் ,
          யார் யாரோடு கள்ள உறவு பூண்டார்கள் என்று ஆராய்பவரும், விளக்கு பிடித்து பார்ப்பவரிடமும் போய் இந்த கேள்வியை கேட்ட வியாஸனை சொல்லணும்.

          • தமிழ் நாட்டுக்கும் அதன் நிலப்பரப்புக்கும் யார் துரோகம் செய்தது என்ற உண்மையை கூறும் போது உமக்கு என்ன வலி லாலா? ஆமாம் நான் பேசுவேன் தான் … தமிழ் மக்களின் எதிரிகளை பற்றி, தமிழ் மக்களை பார்பனர்கள் எப்படி எல்லாம் கொடுமை படுத்தினார்கள் என்ற வரலாற்றை பற்றி பேசுவேன், உமக்கு பதில் கூற வக்கு இருந்தால் பதில் கூறும் நண்பரே… இல்லாவிட்டால் நடையை கட்டுமையா…

  113. தமிழ் நாட்டுக்கான குமரி எல்லை போராட்த்தில் உண்மையில் யார் உயிர் தியாகம் செய்தார்கள் என்ற கணக்கை கூறினால் கூட சுயமோகனுக்கு சுல்லேன்று வலிக்க காரணம் என்னவோ? குமரி எல்லை போராட்டத்தில் இன்னார் போராடினார்கள் , இன்னார் வெள்ளாளர் திருவாங்கூர் காரனுக்கு ஆதராவக நின்றார்கள் என்ற உண்மையை கூறி 24 மணி நேரம் ஆகின்றது. ஆனாலும் நாஞ்சில் நாட்டு சுயமோகனிடம் (லாலா)இருந்து பதில் ஏதும் இல்லை.

    திருவாங்கூர் காரனுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஒடுக்கிய நாஞ்சில் நாட்டு வெள்ளாளனுக்கு சாதிவெறியை பற்றி பேச என்ன அருகதை உள்ளது லாலா?

    //போராட்டத்தில் இன்ன சாதியினர் இவ்வளவு பேர் இறந்தார்கள் என சாதிப்பிணங்கள் மீது நின்று உமது தமிழ் வெறுப்பையும் , இஸ்லாம் போதித்த காபீர்களின் வெறுப்பையும் ஒரு சேரக்காட்டி மத , இன , சாதி அரசியலில் ஊறிப்போனவர் என்பதை காட்டியிருக்கிறீர்.//

    • நான் நாஞ்சில் நாட்டுக்காரனும் இல்லை , வெள்ளாளனும் இல்லை. ஜெயமோகனின் ஒரு நாவலை படித்தது தவிர , அவரைப்பற்றியும் பெரிதாக தெரியாது. தமிழ் முஸ்லிமாக இருந்து கொண்டு முஸ்லிம் அல்லாத ( காபீர்கள் ) தமிழர்களிடமுள்ள சாதிகளைப்பற்றியும் , அதில் உள்ள முக்கியநபர்களைப்பற்றியும் தாங்கள்தான் பி.எச்.டி செய்து , அதனை பொது வெளியில் எல்லா விவகாரங்களிலும் உள்ளிழுத்து தமிழர்களை சாதி அடைபடையில் மோத விட வேண்டுமென்ற உமது இழி குணத்தையே சுட்டி காட்டினேன்.

  114. லாலா என்ற அனாமத்து ஆசாமி சுயமோகனின் ஆவி எம்மை பார்த்து கேட்கும் இந்த கேள்வியில் வேற்று ஜம்பம்,மத துவேச வன்மம் , உண்மைக்கு புறம்பான பேச்சு தான் தான் உள்ளதே தவிர விவாதத்தை முன்னெடுக்கும் விருப்பம் ஏதும் இருபதாக தெரியவில்லை.
    //இந்துப்பெயரில் ஒளிந்திருக்கும் முஸ்லிமுக்கு காபீர்கள் பற்றி அவர்கள் சாதி பற்றி என்ன அக்கறை?//

  115. அதற்கு என்ன? பொன். ராதாகிருஷ்ணன் போன்ற ஆள் காட்டிகள் இன துரோகிகள் இல்லாத இனம் எது என்று கூறுங்கள் பார்கலாம் சுயமோகன். பொன். ராதாகிருஷ்ணன் கூறும் ஹிந்து ஒற்றுமை தமிழ் மக்களை (நாடார் சானார் முக்குவர் போன்ற பல்வேறு தமிழ் மக்களை ) திருவாங்கூருக்கு அடிமையாக வைக்க முயலுகின்றது என்பது கூடவா உமக்கு புரியவில்லை லாலா என்ற சுயமோகன் ?

    //அண்மையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இந்துக்கள் அனைவரும் ( தான் சார்ந்த நாடார் வகுப்பினர் உட்பட ) ஒற்றுமையாக இருந்திருந்தால் கன்யாகுமரி தமிழகத்தோடு சேராது கேரளாவோடு சேர்ந்திருக்கும் என செப்பியிருந்தாரே ?//

    • கேதீஸ்வரத்தான் பெயருக்குள் ஒளிந்திருக்கும் தமிழ் முஸ்லிம் ஆவிதான் இங்கு வந்து தமிழ் மொழி போராடடத்திலும் , எல்லை காப்பு போராட்டத்திலும் கலந்து கொண்ட தமிழர்களை சாதி வாரியாக பிரித்து , அதில் உயிரிழந்த உடலகஈயும் கூட சாதி வாரியாக பிரித்து குத்தாட்டம் போட்டு வருகிறது.
      கேதீஸ்வரத்தான் பெயருக்குள் ஒளிந்திருக்கும் ஆவி என்பதை மறுக்கவில்லை.

      • குமரி எல்லை போராட்டத்தில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் திருவாங்க்கூர் நம்பூதிரிகலுக்கு நாயர்களுக்கு ஆதரவாக நின்று தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை பற்றி பேசும் போது இந்த சுயமோகனுக்கு அது சாதி வெறியாக தெரியத்தானே செய்யும். திருவாங்க்கூர் நம்பூதிரி-நாயர்-வெள்ளாளர் கயவாளிகளின் கூட்டணி செலுத்திய சாதிய ஒடுக்கு முறையின் காரணமாக ஏற்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சி தான் குமரி எல்லை காக்கும் போராட்டம் என்ற உண்மைகூட இந்த சுயத்துக்கு-லாலாவுக்கு தெரியவில்லையே!

        • எந்த சாதிக்கு எதிராக உமது வெறி இருக்கிறது என்பதல்ல பிரச்சனை. தமிழ் முஸ்லிமான நீர் , முஸ்லிம் அல்லாத தமிழர்களை அல்லது காபீர்களை சாதி அடிப்படையில் பிரித்து மோத விடுவதற்கு படாத பாடு பட்டு வருகிறீர் என்றுதான் சொன்னேன்.அது உண்மைதானே , உமது கருத்துக்களில் அதுதானே நிரம்பி வழிகிறது.

          • முதலில் விவாதம் என்று வந்தால் அந்த விவாதத்துக்கு தொடர்புடைய அத்துணை அம்சங்களையும் பேசவேண்டும் என்பது தான் விவாத தர்மம். தமிழ் சமுகத்தை பார்ப்பனீயம் எப்படி எல்லாம் கொச்சை படுத்துகிறது, எப்படி எல்லாம் அது சிறுமை படுத்துகிறது என்ற உண்மையை கூறும் போது அறிவு உள்ள எதிராளி அதற்கு பதில் கூறுவான். ஆனால் அத்தகைய விவாத தர்மத்தை உம்மிடம் எதிர்பார்க்க முடியுமா லாலா என்ற சுயமோகனின் ஆவி ?

  116. தென்றல் , திப்பு போன்ற நண்பர்கள் கவனத்துக்கு . நஞ்சுண்ட சிவன் போன்று இந்த வியாசன்,லாலாவின் விசத்தனமான மத வெறி பேச்சுகளை படித்து பதில் அளித்துக்கொண்டு உள்ளேனே நீங்கள் என்ன செய்து கொண்டு உள்ளீர்கள் நன்பர்களே?ஆதரவு கோரி எல்லாம் அழைக்கவில்லை. குறைந்தது இந்த விவாதங்களை கவனிக்கின்றீர்களா என்று அறிய விரும்புகின்றேன்.

    • இப்படி உதவிக்கு ஆள் தேடி அலறுவார் கேதீஸ்வரன் என்று அவர் குழிக்குள் இறங்கி நின்று வெகு வேகமாகத் தோண்டும் போதே எனக்குத் தெரியும். அவர் தனக்குத் தானே தோண்டிய குழிக்குள் குதித்து அவரைக் காப்பாற்றப் போகிறவர்கள் யார் திப்புவா அல்லது தென்றலா. என்பது தான் இப்போதுள்ள கேள்வி. திப்புசுல்தானாவது பரவாயில்லை. ஆனால் தென்றல் இறங்கினார் என்றால் கேதீஸ்வரனை இன்னும் ஆழத்தில் கொண்டு போய் விட்டு, விட்டு, அவர் மட்டும் எப்படியாவது வெளியே வந்து விடுவார். எப்படியோ எனது அன்புக்குரிய சகோதரன் பலபெயர் மன்னன் ஆல் இன் ஆல் அழகுராஜ், இல்லை ராம்ராஜ் அவர்கள் ஈழத்தமிழர்களைச் சமாளிக்க முடியாமல், உதவிக்கு ஆள் கூப்பிடுவதைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருக்கிறது. அதிலும் ஈழத்தமிழர்களின் புனிதத்திலும் புனிதமான கோயிலிலுள்ள கேதீச்சரத்தானின் பெயரில் வந்திருந்து, வாயைக் கொடுத்து எதற்கு வாங்கிக் கட்ட வேண்டும்?? 🙂 🙂

      • வியாசனுக்கு இப்படி வேற வீரனா ! , கதா நாயகனா! வேசம் கட்ட ஆசையா? வேண்டாம் சாமி வினவு தாங்காது…. நீங்க காமடி பீசா மட்டுமே இணைய தளங்களில் இருங்க. இந்த விவாதத்தில் எத்துனை துணை விவாதங்களில் மூக்கு உடை பட்டாலும்,பதில் சொல்லாமல் ஓடினாலும் , பதில் இன்றி தவித்தாலும் வலிக்காத மாதிரி எழுந்து நின்று வாங்க வாங்க சண்டைக்கு வாங்க என்று கூருகின்றிர்களே வியாசன் அங்க தான் உங்க வீரம்(மா?) தலைகாட்டுகின்றது.

  117. யாழ்பாணத்து காரனின் இன்றைய சைவ வெள்ளாள சாதிவெறி :

    சேரன் என்ற இலங்கையை சேர்ந்த முன்னாள் பத்திரிக்கையாளர் யாழ் பல்கலைக்கழத்தில் உடை மீதான கட்டுப்பாடுகளை பற்றிய சுற்றறிக்கையை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விவாதித்து இருந்தார். அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிகுமார் தன் முக நூல் பக்கத்தில் மறு பதிவு செய்து இந்து மையம் ஆகின்றதா யாழ் பல்கலை கழகம் என்று கேள்வி எழுப்பி தம் நன்பர்களுடன் விவாதத்தில் ஈடுப்ட்டுகொண்டு இருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர் துரைரத்தினம் என்ற சுப்பையா ரத்தினம், ரவிக்குமாரை, ‘பற நாயே’ சாதிய வன்மத்துடன் பின்னூட்டமிட்டார். இந்த விடயத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பை கோரவேண்டிய ஈழ தமிழ் சமுகம் பாதிக்கபட்டவரிடமும் , அந்த சாதிவெறியரிடமும் சமரசம் செய்வதில் ஈடுபட்டது. குறிப்பாக ஜெயபாலன் என்ற ஈழத்து அரசியலில் கொட்டை போட்ட கிழட்டு நரி சமரசம் செய்வதில் ஈடுபட்டது.

    இந்த சாதிவெறியன் துரைரத்தினத்திடம் இருந்து பதில்களை வாங்குவதும் அதனை ரவிக்குமாருக்கு அனுப்புவதும், அந்த விளக்கம் போதுமானது தானா என்ற கேள்விகளை எழுபுவதுமாக செயல்ப்ட்டுகொண்டு இருந்து. அந்த செய்தியில் ஜெயபாலன் என்ற ஈழத்து கிழட்டு நரி :

    “அச்செய்தியில் தன்னை அரச ஆதரவாளன் என்று குற்றம் சாட்டியதால் கோபப்பட்டு கோப சொல்லாகவே அப்படி எழுதியதாக குறிப்பிடும் திரு துரைரத்தினம் தனக்கு ரவிக்குமாரின் சாதி தெரியாதென்றும் குறிப்பிட்டிருக்கிறார்”

    என்ன ஒரு அறிவாளி தந்த ஈழத்து கிழட்டு நரி? திட்டிய வசை சொல் சாதியை நோக்கி என்கின்ற போது ரவிக்குமாரின் சாதி தெரிந்து திட்டினாலும் தெரியாமல் திட்டினாலும் அது சாதிவெறி தானே? ஈழத்தில் தம்மை முபோக்காளானாக காட்டிகொள்ளும் இந்த நரியில் வேஷம் கலைந்தது.

    வினவு விவாதத்தில் கூட வியாசன் என்ற வெள்ளாளன் விவாதம் செய்யும் நபரை சாதிவெறியுடன் திட்டியதாக நினைவு . பிழைக்க தாய் மண் விட்டு மேற்கு உலகம் சென்ன்றாலும் தன் சாதி வெறியையும் அல்லவா இந்த வெள்ளாளர்கள் மூட்டை கட்டி எடுத்துச்செல்கின்ரர்கள். இத்தனைக்கும் அந்த சாதிவெறியன் துரைரத்தினம் ஒரு பத்திரிக்கையாளன்.

    • யாரையோ திருப்திப்படுத்துவதற்காக கேதீஸ்வரன் ஈழத்தமிழர்களை வம்புக்கிழுக்கிறார் போல் தெரிகிறது. வினவு தளத்தைப் படிக்கிற ஏனைய தமிழர்கள் இவரது உளறல்களைக் கணக்கிலெடுக்காமல் விடுவது போலவே ஈழத்தமிழர்களும் நடந்து கொள்ள வேண்டும் போலத் தான் தெரிகிறது. அல்லது இவர் இப்படியே தொடர்ந்து உளறிக் கொண்டே தானிருப்பார்.

      தமிழ்நாட்டுப் பெரியாரியர்களும், திராவிடியனிஸ்ராக்களும், சலுகைகளுக்காக சாதிச்சான்றிதழைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டு சாதியை எதிர்க்கும் சாதியொழிப்பு வீரர்களும், ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே தெரியாமல், அவர்களைப் போலவே ஈழத்தமிழர்களுக்கும் பெரியாரியத்திலும், திராவிடத்திலும் ஈடுபாடுள்ளதாக நினைத்துக் கொண்டு விமர்சனம் செய்வது தான் இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணம். ஈழத்தமிழர்களுக்கு பெரியாரியம் என்றால் என்னவென்றும் தெரியாது, அதில் அவர்களுக்கு ஈடுபாடும் கிடையாது, இணையத்தளங்களில் அவ்வாறு ஒரு சில ஈழத்தமிழர்கள் பம்மாத்து விட்டாலும் கூட அது தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலரின் பழக்க தோஷத்தால் வந்த வியாதியே தவிர வேறொன்றுமில்லை.

      ஈழத்தமிழர்கள் எல்லோரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுத்தாலும் கூட, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் சைவத்தமிழ்மையம் தான். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னோடியாகிய பரமேஸ்வராக்கல்லூரியைக் நிறுவிய சேர். இராமநாதன் அதனை சைவத்தமிழ்மையமாகத் தான் நிறுவினார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சின்னம் கூட குத்து விளக்கும் நந்திதேவரும் தான், அது தான் யாழ்ப்பாண அரசின் கொடியும் கூட. அது மட்டுமன்றி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினுள்ளேயே சிவன் கோயிலுமுண்டு. இதெல்லாம் விடுதலைச் சிறுத்தைகளின் ரவிக்குமாருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவரும் கேதீஸ்வரன் போலவே ஒரு விடயத்தை நன்கு அறியாமல் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணினால், ஈழத்தமிழர்களுக்கு எரிச்சல் வருவது நியாயமானதே. ஆனால் உண்மையில் அவர் சாதிப்பெயரைக் கூறித் திட்டியிருந்தால் அது கண்டிக்கத் தக்கது தான். ஒருவரின் தவறுக்காக முழு ஈழத்தமிழ்ச் சமூகமும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டுமென்றால், கேதீஸ்வரனின் ஈழத்தமிழர் பற்றிய உளறல்களுக்கு முழுத் தமிழ்நாடும் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்?

      ஒரு சில முஸ்லீம்களும், சிங்கள மாணவர்களும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கிறார்கள் என்பதற்காக, யாழ்ப்பாணத் தமிழர்களின் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவர்களால் யாழ்ப்பாணத் தமிழர்களின் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது விட்டால், அது அவர்களின் பிரச்சனை.

      ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் சைவமில்லாமல் தமிழில்லை, தமிழில்லாமல் சைவமில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் நினைப்பது போல் சைவமும் வைணவமும் பார்ப்பனர்களுக்குச் சொந்தமானவை அல்ல. இரண்டுமே தமிழர்களுக்குச் சொந்தமானவை. தமிழ்நாட்டில் தமிழர்களின் சிவனியத்தையும் மாலியத்தையும் காக்க, கோயில்களைப் பாதுகாக்க, எமது முன்னோர்கள் அன்னியர்களுடன் போரிட்டு தமது உயிரையும் நீத்தனர். படையெடுத்து வந்து கோயில்களைக் கொள்ளையிட்ட முகம்மதியர்கள் தமது கடவுள் சிலைகளை அவமதிப்பதை, சிதைப்பதை எதிர்க்க முடியாமல் போனதும், மண்ணுக்குள் புதைத்தனர், அவற்றைத் தூக்கிக் கொண்டு காடுகளுக்குள் ஒடினர். அது போலவே போத்துக்கேயர்களிடமிருந்து தமது கடவுள் சிலைகளைக் காக்க ஈழத்தமிழர்களின் முன்னோர்களும், கிணறுகளுக்குள் மறைத்தனர், அவற்றைத் தூக்கிக் கொண்டு வன்னிக் காட்டுக்குள் ஓடினர். அவ்வாறு பாதுகாத்த தமிழர்களின் சமய நெறிகளை பெரியார் அல்லது ரவிக்குமாரின் பேச்சைக் கேட்டு விட்டுக் கொடுக்க ஈழத்தமிழர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல.

      //ஜெயபாலன் என்ற ஈழத்து அரசியலில் கொட்டை போட்ட கிழட்டு நரி சமரசம் செய்வதில் ஈடுபட்டது.///
      வ.ஜ,ச. ஜெயபாலனைத் தனது நண்பர் என்று கேதீஸ்வரன் முன்பொருமுறை குறிப்பிட்டிருந்தார். அந்த ஜெயபாலன் வேறு இந்த ஜெயபாலன் வேறா? 🙂

      //வினவு விவாதத்தில் கூட வியாசன் என்ற வெள்ளாளன் விவாதம் செய்யும் நபரை சாதிவெறியுடன் திட்டியதாக நினைவு ///

      நான் அப்படி யாரையும் திட்டுவதில்லை. அந்தளவுக்கு என்னை யாரும் இங்கு ஆத்திரமூட்டியதாகவும் எனக்கு நினைவில்லை. அது மட்டுமன்றி கேதீஸ்வரனுக்கு நினைவுப் பிறழ்ச்சி இருக்கலாமோ என்று அவரின் சில கருத்துக்களைப் பார்க்கும் போது எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

      • கல்வி நிலையங்களில் formal dress அணியவேண்டும் என்பது ஏற்றக தக்கதே. அதே நேரத்தில் வெள்ளிகிழமை பெண்கள் என்ன உடை அணியவேண்டும் என்று கூறுவது, வலியுறுத்துவது எல்லாம் எப்படி dress code ல் வரும் ? வெள்ளிகி ழமை பெண்களுக்கு சேலை கட்டாயம் என்றால் ஆண்களுக்கு அதே சுற்றறிக்கையில் வேட்டிக்கு ஏன் வெட்டு?

        கூகுள் இருக்கும் போது எனக்கு என்ன பிரச்சனை . வியாசனின் சாதி வெறி பேச்சுகளை வினாவில் இருந்து வெளி கொண்டுவருவதில் எனக்கு ஒன்றும் சிக்கல் இல்லை.

      • என்னை கேட்டால் கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுபாடு அவசியம் என்று தான் கூறுவேன். தமிழ் நாட்டிலும் அது கடைபிடிக்க படுகின்றது. உயர் கல்வி துறையால் டிரஸ் கோடு விதியாகப்ப்ட்டு உள்ளது. ஆனால் அத்தகைய formal dress பற்றிய யாழ் பல்கலை கழக சுற்றறிக்கை வெகு விரைவிலேயே திருப்பி பெறப்பட்ட காரணம் என்ன?

      • So the University of Jaffna’s administration and Senate decided to implement their version of moral regulation: The Instructions attached here in Tamil ( With thanks to Nadarajah Kuruparan Globaltamilnews ) says:

        1. Wearing denims and T-shirts are banned during the lectures.
        2. Every Fridays women should wear sari.
        3. Students and Academic staff are not permitted in the class rooms if they have beard.
        Is this only for Tamil students? Or applicable to Muslim and Sinhalese students of the University?
        தாடியில்லாமல் என்ன படிப்பு வேண்டிக் கிடக்கிறது? அங்கு படிக்கிற முஸ்லிம் மாணவர்களின் நிலை என்ன? அறிவிப்பு தமிழில் மட்டும்தானா எனத் தெரியவில்லை. தமிழில் மட்டும் எனில் சிங்கள மாணவர்களுக்கு இந்த விதிமுறைகள் இல்லையா?
        Now I feel pretty ashamed that once I was a student there!!!

        Cheran Rudhramoorthy
        Studied at Mahajana College
        From Jaffna
        Lives in Toronto, Ontario

      • உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்” விருது!

        ஒரு முக்கிய அறிவித்தல்: வாழ்நாள் முழுவதும் சாதிவெறி, இனவெறி, மதவெறி பேசி சாதனை படைத்த நபர்கள், IBC தொலைக்காட்சியால் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கௌரவிக்கப் படுவார்கள்!

        லண்டனில் மாநகரில், த‌மிழ் தேசிய‌த்தின் குர‌லாக‌, “அனைத்துல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின்” பெய‌ரில் வானொலி, தொலைக்காட்சி ந‌ட‌த்தும் ஐ.பி.சி. நிறுவ‌ன‌ம், ஒரு சாதி வெறிய‌னுக்கு (Ramasamy Thurairatnam) “வாழ் நாள் சாத‌னையாள‌ர்” விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌வுள்ள‌து. அடுத்த‌தாக‌, பௌத்த‌ ம‌த‌ வெறிய‌ன் ஞான‌சார‌ தேரோ, சிங்க‌ள‌ இன‌ வெறிய‌ன் ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேவுக்கும், ஐ.பி.சி. விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்கும் என‌ எதிர்பார்க்கிறோம்….

        For More Essay….pls visit

        http://kalaiy.blogspot.in/2016/02/ibc.html

      • சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம் :

        அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார் தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர் சுப்பையா ரத்தினம், ரவிக்குமாரை, ‘பற நாயே’ சாதிய வன்மத்துடன் பின்னூட்டமிட்டார். இது இந்திய-இலங்கை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

        For More Essay….pls visit

        http://thetimestamil.com/2016/02/27/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/

      • சாதித் திமிராளர்களின் கடைந்தெடுத்த ஆயுதம்: “சாதியைச் சாடல்!” – என்.சரவணன்

        சாதியச் சாடல் என்பது எங்கெங்கும் மலிந்து விரவிக்கிடக்கிறது. தோழர் ரவிக்குமாரின் மீது இரா. துரைரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதிய வசவைக் கண்டிப்பது நம்மெல்லோருடைய கடமை. இத்தகைய சாதிய வசவுகளை பயன்படுத்துவோருக்கான பாடமாக இது இருக்கவேண்டும்.

        ஏற்கெனவே எனக்கும் இத்தகைய வசவு நிகழ்ந்தபோது பலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. என் போன்றவர்களை பாதுகாப்பதை விட அத்தகைய வசவாலர்களைப் பாதுகாப்பது வசதியாக பலர் கருதினார்கள். ஓடி ஒளிந்தார்கள். இப்படி தனிமைப்படுத்தலுக்கு ஆளாவது நம் போன்ற தலித்துகளுக்கு புதியதல்ல. பழகிவிட்டது. ஆனால் அந்த சூழலையும் எனது தனிமையையும் மறக்க இயலாது.

        இன்று தோழர் ரவிக்குமாருக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்படி ஆயிரம் ஆயிரம் பேருக்கு பொதுத்தளங்களில் தினசரி நிகழ்கிறது. தோழர் ரவிக்குமார் போன்றோர் பிரமுகர்களாக இருப்பதால் உடனடியாக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது வெறும் ரவிக்குமார் சம்பந்தப்பட்ட விடயம் இல்லையென்பதாலும், ரவிக்குமாரோடு நின்றுவிடப்போவதில்லை என்பதாலும் நாம் இது விடயத்தில் நமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிடுவது முக்கியமானது.

        For More Essay….pls visit

        http://www.namathumalayagam.com/2016/02/blog-post_39.html

      • ரவிக்குமாரை சாதிசொல்லி இழிவுபடுத்திய பிரச்சனை:
        “துரைரத்தினத்தை ஐபிசி ஊடக நிறுவனம் புறக்கணிக்கவேண்டும்”
        – கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்
        ஈழத் தமிழர்களின் சார்பில் துரைரத்தினத்தினத்தின் இழி செயலுக்குக்கும் சொல்லுக்குமாக ஈழத் தமிழர்களின் சார்பில் தோழர் ரவிக்குமாரிடம் தலை பணிந்து மன்னிப்புக்கோருகின்றேன்.
        ஈழத் தமிழருக்காக என்றும் வாழும் விடுதலைச் சிறுத்தைகளிடத்தும் உலக தமிழினத்தின் முக்கிய தலைவரான தோழர் திருமாவளவனிடத்தும் ஈழத் தமிழர் சார்பில் மன்னிப்புக் கோருகிறேன். தன் இழி செயலுக்கு துரைரத்தினம் நிபந்தனையற்ற மன்னிப்புகோரவேண்டும். அதுவரைக்கும் ஐ.பி.சி,போன்ற தமிழ் ஊடக நிறுவனங்கள் துரைரத்தினத்தை பகிஸ்கரிக்க வேண்டுமென கோருகிறேன். மன்னிப்புக் கோரும் வரைக்கும் உலக தமிழர்கள் சுவிசில் வாழும் துரைரத்தினத்துக்கு சாதி வெறியைக் கண்டித்து எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் வேண்டுகிறேன்.

        – கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்

      • ரவிக்குமாரை சாதிசொல்லி இழிவுபடுத்திய புலம்பெயர் ஊடகவியலாளர் துரைரட்ணத்தைக் கண்டிக்கிறேன்
        – சிவா சின்னப்பொடி
        மாணவர்களுக்கு உடைகட்டுப்பாடு விதிக்கும் யாழ் பல்கலைக்கழகம் முதலில் பாலியல் வக்கிரம் கொண்ட பேராசியர்களுக்கு ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
        யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாச்சார சீரிழிவு ஏற்படுகிறது என்றால் அது மாணவர்களால் அல்ல.பேராசிரியர்களாலேயே என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
        கைலாசபதி சிவத்தம்பி முதற்கொண்டு சமூக அக்கறையும் ஆளுமையும் உள்ள ஏராளமான கல்விமான்களால் கட்டி எழுப்பப்பட்ட யாழ் பல்கலைக்கழகம் இன்று போரசிரியர்கள் என்ற பெயரில் உலாவரும் காமுகர்களால் சீரழிந்து போயிருக்கிறது.
        தங்களது இந்த சீரழிவு கலாச்சாரத்தை மூடி மறைப்பதற்காகவே தங்களை கலாச்சாரத்தின் காவலர்களாக காண்பிப்பதற்கு யாழ்பல்லைக்கழகம் முயல்வதாகவே எனக்கு தென்படுகிறது.வெள்ளிக்கிழமைகளில் மாணவிகள் சேலை கட்டி வரும் போது அந்த சேலைக்கூடாக அந்த மாணவிகளின் இடுப்பையும் மார்பையும் வக்கிரபார்வையால் ஊடுருவப்போகும் காமுகப் பேராசிரியர்களை எதைக் கொண்டு தடுக்கப்போகிறீர்கள்.
        ஓரு இனத்தினுடைய காலாச்சாரத்தை பாதுகாப்பதென்பது அந்த இனத்தின் முற்போக்கு கருத்தியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் அது சார்ந்த அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் தான் தங்கியிருக்கிறது.
        ;ஆடை என்பது கலாச்சார அடையாளமல்ல.அது அதிகார வர்க்கத்தால் அவ்வாறு ஆக்கப்பட்டிருந்தது.
        தமிழர்களுடைய ஆடை என்ன? ஆண்களுக்கு கோமணமம் ஒரு நாலுமுள வேட்டியும் தோழில் போட்டுக்கொள்ள ஒரு துண்டும்.பெண்களுக்கு மார்பு கச்சையும் சேலையுமாகும்.யட்டியும் பிராவும் ரவிக்கையும் சேர்ட்டும் முகலாயர்கள் மற்றும் ஐரொப்பியர்களின் வருகைககு பின்னர்தான் தமிழர்களிடம் வந்தது.
        தமிழர்களில் 70 வீதமான ஆண்கள் தோழில் துண்டு போடக் கூடாதென்றும் தலைப்பா கட்டக் கூடாதென்றும் பெண்கள் மேலாடை அணிக்கூடாதென்ற கட்டுப்பாடு தேச வழமை என்ற பெயரில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
        இன்றைக்கு உடை கட்டப்பாடு விதிப்பால் கலாச்சராத்தை பேணலாம் என்பது யாழ் மேலாதிக்க கருத்தியலை உயிர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கைiயாகவே நான் பார்க்கிறேன்.
        மாணவர்கள் மாணவிகள் ஆடம்பரமற்ற, உடல் அவயங்களை வக்கிரத்தனமான முறையில் வெளிக்காட்டாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் அவர்கள் இன்ன உடைதான் அணிந்து வரவேண்டும் என்று செல்வதை கலாச்சாரத்தை காரணம் காட்டி நியாயப்படுத்த முடியாது.
        அடுத்து இந்த விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களிலே தமிழக தோழர் ரவிக்குமார் கருத்து வெளியிட்ட போது அதற்கு மறுப்பெழுதிய புலம் பெயர்ந்த ஊடகவிலாளர் இரா துரைரட்ணம் அவர் அவரை சாதியை குறிப்பிட்டு கருத்தெழுதியது மிக மிக கீழ்த்தரமான ஒரு செயலாகும். இது அனைத்து தரப்பாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ரவிக்குமாருடைய கருத்துக்கு எதிர் கருத்தெழுத துரைரட்ணத்தக்கு உரிமையிருக்கிறது.ஆனால் ரவிக்குமாரை சாதி குறிப்பட்டு இழிபடுத்தவதற்கு துரைரட்ணத்தக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.
        இரா.துரைரட்ணம் அவர்களது செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

        – சிவா சின்னப்பொடி

  118. பின்நவினத்துவ -சாதிய சக்திகளின் கை ஓங்கும் தமிழ் ஈழத்தில் இனி தமிழ் ஈழ விடுதலைக்கு தேவையான அத்துனை முற்போக்கு வாசல்களும் முடப்படுகின்றன.தமிழ் ஈழ விடுதலை முயற்சிகள் இனி சூனியதில் இருந்து…

Leave a Reply to இனியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க