ஆமா ஜி! ரெகுலர் டெக்னிக் தான்! மல்லையா அண்ணனை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள்-ன்னு நம்மாட்களை வெச்சி கிளப்பி விடுங்க… மக்கள் அடங்கிடுவாங்க!
கேலிச்சித்திரம்: சர்தார்
_____________________________
அரசு வங்கிகளிடம் 900 கோடி வாங்கிய கடனை கட்டாமல் விஜய்மல்லையா தப்பி ஓட்டம்
விவசாயி கடன் வாங்கினா ‘பலி கொடுப்போம்’…
விஜய் மல்லையா கடன் வாங்கினா பறக்க விடுவோம்… எப்புடி!
கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்
—————————————————————
மல்லையாவுக்கு சட்டப்படி விடுதலை – இர்ஷத் ஜஹானுக்கு சட்ட விரோதமாக தண்டனை !
He had left before instructions to seize his passports were sent. There was no way to stop him without the right documents.
கடவுச் சீட்டை முடக்குமாறு உத்திரவிடுவதற்கு முன்பே அவர் (விஜய் மல்லையா) சென்று விட்டார். முறையான ஆவணங்கள் இல்லாமல் அவரை தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை!
– நிதியமைச்சர் அருண் ஜெட்லி. (விஜய் மல்லையா பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலிருந்து)
2004-ம் ஆண்டில் இஷ்ரத் ஜஹான் எனும் அப்பாவி இளம் பெண்ணை, குஜராத் போலீசு கடத்திச் சென்று சுட்டுக் கொன்றதற்கு எந்த ஆணவங்களை வைத்திருந்தது உங்கள் மோடி அரசு?
—————————————————————
மார்ச் 2-ம் தேதி தலைமறைவான கேடி மல்லையா குறித்து பிப்.17-ம் தேதி வினவு வெளியிட்ட எச்சரிக்கை!
—————————————————————
மல்லையாவை உங்களுக்கு பெருமையுடன் அளிப்பவர்கள் பாரதிய ஜனதா பார்ட்டி !
2010-ல் சாராய அதிபர் விஜய் மல்லையா கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிட்ட போது அவருக்கு ஜனதா தள கட்சி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ போக 12 வாக்குகள் தேவைப்பட்டன. மல்லையாஜியின் நிலை கண்டு வருந்திய பா.ஜ.கவோ 26 வாக்குகள் அளித்து எம்.பியாக்கியது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மக்கள் பணத்தை மல்லையா ஸ்வாகா செய்தது, மேலவை உறுப்பினராக இருந்து கொண்டே நீதிமன்றங்களை தூக்கி ஏறிந்து விட்டு நாட்டை விட்டு ஓடிப் போனது அனைத்தும் பா.ஜ.க ஆசியுடன் நடக்கவில்லை என்று எவர் மறுக்க முடியும்?
மல்லையா திருடியது 900 கோடியா? 9000 கோடியா?
\\மேலவை உறுப்பினராக இருந்து கொண்டே நீதிமன்றங்களை தூக்கி ஏறிந்து விட்டு நாட்டை விட்டு ஓடிப் போனது அனைத்தும் பா.ஜ.க ஆசியுடன் நடக்கவில்லை என்று எவர் மறுக்க முடியும்?//
உளற வேண்டாம்.. மல்லையா வை தேர்ந்தெடுத்தது தேவேகௌடா .. அவருக்கு கடன் கொடுத்தது காங்கிரஸ்.. அவர் கடனை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கிறாரா என்றதும் அதைவாராக்கடன் என்றுஅறிவித்தால் தான் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அறிந்தும் அதைச்செய்யாமல் காலம் தாழ்த்தியதுகாங்கிரஸ்.. .. அரை வேக்காட்டு தனமாக ஏதோ பரபரப்புக்காக செய்தி போடும் பத்திரிக்கைகளைப்படித்து விட்டு அதை முழு உண்மை தெரியாமல் ஏதோ அறிவு ஜீவி போல கருத்துப்பதிவிட வேண்டாம்.. ..உடனே பதில் வரும் அவரை பாஜக ஆட்சிதான் தப்பிக்க விட்டது என்று.. அவரது பாஸ்போர்ட் ஐ முடக்கவும் சட்ட ரீதியிலான நடவடிக்கை மூலம் தான் செய்ய முடியும்.. அரசு ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.. ஆவணங்களை தயார் படுத்துமுன் அவர் எஸ்கேப் ஆகி விட்டது.. இதை பத்திரிக்கைகள் சாமர்த்தியமாக பழியை தூக்கிஅரசு மீது போட்டு விட்டன ..