லாகூர் இக்பால் பூங்காவில் முசுலீம் மதவெறியர்களின் கொடூரம்!
பாகிஸ்தான் தாலிபான் குழுவிலிருந்து பிரிந்த ஜமாத் அல் அஹ்ரார் எனும் பயங்கரவாதிகளின் கொடூரத்தால் லாகூரில் ஒரு படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருபது இலட்சத்திற்கும் குறைவான கிறித்தவ மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் பெரும்பான்மையினர் ஏழைகள், நடுத்தர மக்கள். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் முகமாக லாகூர் நகரத்தில் இருக்கும் இக்பால் பூங்காவில் குழுமிய இம்மக்களை 27.03.2016 அன்று முசுலீம் மதவெறியர்களின் குண்டு வெடிப்பு கொன்று குவித்தது. 72 பேர்கள் கொல்லப்பட்டனர், 300 பேர்கள் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர் குழந்தைகள். கொல்லப்பட்டு, படுகாயமடைந்தவர்களில் முஸ்லீம்களும் உண்டு. பாகிஸ்தானில் ஷியாக்கள், அஹ்மதியாக்கள், கிறித்தவர்கள் மீது வகாபிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்தும் படுகொலையினால் அந்நாடே சுடுகாடாகி வருகிறது. ஒரு நாடு மதவெறியில் சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு பாகிஸ்தான் ஒரு சான்று.
முஸ்லீம் மதவெறியை உருவாக்கி வளர்த்த அமெரிக்காவில் அதன் குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்று சவடால் அடிக்கிறார். அது உண்மையானால் அமெரிக்க அரசுதான் இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டிய முதல் குற்றவாளி.
பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐ.எஸ் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலை முதன்மைச் செய்தியாக வெளியிட்ட இந்திய நாளிதழ்கள் லாகூர் பயங்கரச் செய்தியை மூலைக்குத் தள்ளிவிட்டு கிரிக்கெட் வெற்றியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுக் கொண்டாடுகின்றன. இந்தியாவையும் இந்துமதவெறி நாடாக மாற்றும் சதி நடைபெறும் போது ஊடகங்கள் இப்படித்தானே இருக்கும்?
இந்து மதவெறியோ இல்லை முஸ்லீம் மதவெறியோ இரண்டுமே ஒரு நாட்டை கவ்விப்பிடித்தால் அங்கே அன்றாடம் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கும்!
மதவெறியர்களுக்கு எதிராக உழைக்கும் மக்களாய் ஒன்றுபடுவோம்!
மதவெறி அமைப்புக்களை புறக்கணிப்போம்!
மதவெறியர்களையும் அவர்களின் புரவலர்களான ஆளும் வர்க்கங்களையும் முறியடிப்போம்!
கார்ட்டூன் நன்றி: Cartoon Movement
வினவு ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள், கேலிச்சித்திரங்கள்.
இணையுங்கள்:
திவிரவாதிக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை , அனால் திவிரவாதிகள் தங்களை காத்துகொள்ள மதத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள் இது எல்ல மதத்திலும் உண்டு இந்து மத & இஸ்லாம் மத பற்று உள்ளவர்கள் மத வெறி பிடித்தவன் என்ன செய்தாலும் கண்டுகொள்வது இல்லை அவன் தன் மததை காக்கும் வீரன் போல் பார்க்க படுக்கிறன் அனால் பாதிக்க படுவது மத பற்று உள்ளவன்தன் மத வெறிபிடித்தவன் தப்பித்துகொள்கிறன் என்று ஜாதி மதம் ஒழிகிறதே அன்று மனிதநேயம் வாழும்
பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்களிடத்தும் இம்மாதிரியான மதவெறி தாக்குதலுக்கு கணிசமான ஆதரவு உள்ளது, சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் சல்மான் தசீரை கொன்ற கொலையாளியின் இறுதிச்சடங்கில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதே இதற்கு சாட்சி. ஷரியா சட்டத்தை அமுல் படுத்தவும், அசீயா பீவி என்ற கிருஸ்துவ பெண்ணை தூக்கிலிட கோரியும் இஸ்லாமாபாத்தில் நடந்த மாபெரும் ஆர்பாட்டம் மற்றொரு சாட்சி. http://goo.gl/iH1mZc
இது பற்றிய எனது பதிவு http://meypporul.blogspot.in/2016/03/blog-post.html
//மதவெறியர்களையும் அவர்களின் புரவலர்களான ஆளும் வர்க்கங்களையும் முறியடிப்போம்!
//
ஆமா .. கமல் “உன்னைப் போல் ஒருவன்…“ எடுத்தால் பாசிச பாயச பார்ப்பன கமல் என்பீர்கள் இதையும் சரி என்று எடுத்துக் கொள்ளுங்களேன்….
என்ன ஆச்சு வினவுக்கு எதும் உடம்பு கிடம்பு சரி இல்லய இல்ல மனசு சரி இல்லயா திடீர்ன்னு இந்து மத வெறியோ இல்ல இசுலாம் மத வெறியோ 2 ம் ஒன்னுதான் அதனால உழைக்கும் மக்களாக ஒன்றினைவோம்றீக ,கிறிஸ்த்துவர்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள் இந்து மத வெறியர்கள்தான் உலகத்தில் அயோக்கியர்கள்னு சொல்லிட்டு ஏன் திடீர்ன்னு பல்டி (மைன்ட் வாய்ஸ் இப்பதான் தெரியுது கொல்லப்பட்ட மக்களும் உழைக்கும் மக்களாம்)என்பா முத மாரியே எலும்முகளை கட்த்து நர மாமிசம் தின்னும் அப்பாவிகளுக்கு (அப்பாவிகள் இசுலாமிய தீவிரவாதிகளுக்கு)வக்காளத்து வாங்கி இது அமெரிக்க சதினு சொல்லேன்பா இது கொஞ்சம் கூட உமது கம்மூனிஸ சித்தாந்தத்துக்கு ஏற்ப்புடையது இல்லையே…
ஆனாலும் இசுலாம காப்பாத்த வாய திறந்து வாழப்பழத்த தினிக்கிறா அட அதான் இதுக்கும் இசுலாமுக்கும் சம்மந்தமே இல்லை எல்லாம் அமேரிக்க அப்போது தூண்டி விட்டதன் விளைவு என்று …
அட மங்குனியே பதிவினைப் படிக்காமலெயே பின்னூட்டம் போடும் வியாதி போக வைத்தியம் பாருங்கள்.
உன்மைதன் joseph ஒரு கிறுக்கு கிறித்தவ வெறிபிடித்த ஆளு, இங்கும் அவர்போல் நிறைய ஆளு இருக்கங்கா அனால் அப்பாவிகள் கெல்லபட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமல் மதவெறியோடு command போடு இவர்களை போல் உள்ளவர்கள் இருக்கும் வரை மத திவிரவாதிகளை ஒழிப்பது கடினம், காவி,isis,விட இந்த joseph மாதிரி கிறுத்தவ திவிராவாதிகளை ஒழிப்பது கடினம்
tamil
Qatar.
//அமெரிக்க அரசுதான் இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டிய முதல் குற்றவாளி.
//
டாஸ்மாக் பிரச்சினைக்கும் அவங்க தான் காரணம் . விடாதீங்க சார் அவங்கள 🙂
புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்