privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககளச் செய்திகள் – 27/04/2016

களச் செய்திகள் – 27/04/2016

-

1. திருவள்ளூரில் லெனின் பிறந்த நாள் விழா

ndlf-srf-lenin-birthday-3புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆசான் லெனினின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

“ஆசான் லெனினினின் பிறந்த நாளில் உறுதியேற்போம்” என்கிற வகையில் மாவட்டத்திற்குட்பட்ட கிளை மற்றும் இணைப்புச் சங்கங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி ஆசான் லெனினுடைய உருவப்படத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ், மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர், ஆலைவாயிலின் முன்பு கொடியேற்றி, ஆசான் லெனினுடைய பிறந்த நாளில் தொழிலாளிகள் உறுதியேற்க வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினர். இன்றைய மறுகாலனியாக்க சூழலில் தொழிலாளி வர்க்கமாக நாம் அனைவரும் ஒன்று திரண்டு, ஆளத் தகுதியிழந்த இந்த அரசை தூக்கியெறிய வேண்டும் என்றும், அதற்கு புரட்சிப் பாதை தான் தீர்வு எனவும் உரையாற்றினர். தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆசான் லெனின் பிறந்த நாளை சிறப்பித்தனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 9444461480

2. CPI, CPM கட்சிகளில் வர்க்க உணர்வும், கம்யூனிசத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட அணிகளின் சிந்தனைக்கு!….

(தோழர்களே, என்னதான் கோபமின்றி சிந்திக்கத் தூண்டும் வகையில் எழுத முயற்சி செய்தாலும், கம்யூனிசத்திற்கு உங்கள் தலைமை செய்யும் துரோகத்தை சகித்துக் கொண்டு மென்மையாக எழுத முடியவில்லை. இது எங்கள் தவறில்லை.)

  • தரகு முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் சர்வாதிகாரத்தை மறைக்க நடத்தும் தேர்தல் பாதையில் இறங்கி இத்தனை ஆண்டுகாலம் கண்ட பலன் ஏதாவது உண்டா?
  • தேர்தலுக்கு தேர்தல் ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடத்தி நாலு சீட்டுக்காக தன்மானத்தையும், கொள்கையையும் அடகு வைப்பது நியாயம்தானா?
  • மக்கள் நலக்கூட்டணி அமைத்து ஊழல் எதிர்ப்பு, திராவிட கட்சிகளை ஒழிப்பது என்று பேசிக்கொண்டே கல்விக்கொள்ளையன், சினிமா கழிசடை விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பது வெட்கக் கேடு இல்லையா?
  • தி.மு.க குடும்ப ஆட்சி, அ.தி.மு.க ஊழல் ஆட்சி என்பதெல்லாம் சரிதான்! தேமுதிக கும்பல் ஜனநாயக கட்சியா? தனிநபர் துதி, குடும்ப அரசியல் – வாரிசு அரசியலில் இருந்து தே.மு.தி.க எந்த வகையில் மாறுபட்டு நிற்கிறது?
  • தலைவர்களின் பதவி சுகத்திற்காக, நமது நாட்டின் வரலாற்றை திரித்து ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டிய ‘பாண்டவர்களை’ தமது அணிக்குப் பெயராக சூட்டி, பாண்டவர் அணி என்று மகிழ்வது வரலாற்றுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?
  • ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், விவசாயிகளின் இரத்தத்தில் சிவந்த செங்கொடியை கேவலம் ஒரு சினிமா கழிசடை, கல்வி வியாபாரிக்காக உயர்த்திப் பிடிப்பது பச்சைத் துரோகம் இல்லையா? கம்யூனிசத்திற்கு செய்யும் துரோகம் இல்லையா?
  • கொள்கையோ, கோட்பாடோ, தனிநபர் ஒழுக்கமோ ஏதும் அற்ற குடிகாரன் தான் சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் உங்களுக்கு வழிகாட்டியா?
  • கூட்டணி பேரத்தில் சமரசம் செய்து கொள்வது தவறில்லை என்கிறார், தா.பா. ஆரம்பத்தில் மக்கள் ஜனநாயகப் புரட்சி தான் எங்கள் கொள்கை என்று தொடங்கி, இன்று விஜயகாந்த் முதல்வர் என்பது வரை எத்தனை சமரசம்? இதற்குப் பெயர் சமரசமா? சந்தர்ப்பவாத சதிராட்டமா?
  • ஊழலை ஒழிப்பது தான் முதல் வேலை என்கிறது தலைமை. ஆனால், அரசு அலுவலகம் தொடங்கி, மின்வாரியம், வங்கி வரை லஞ்சத்தைப் பெறும் அணிகளை கண்டித்தது உண்டா? அல்லது ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தியது உண்டா?
  • இது கூட்டணி அல்ல! தேர்தல் கூட்டு தான், ஒப்பந்தம் தான் என்று பல வார்த்தை ஜாலங்களிலும், செப்படி வித்தைகளிலும் ஈடுபடும் தலைமையை நம்பி இனியும் காலத்தை வீணடிப்பது மார்க்சிய துரோகம் இல்லையா?
  • வி.சி.க.வுடன் கூட்டணி சேர்ந்தவுடன் ‘தலித் முதல்வர்’ என்று ஏய்த்தது தலைமை. இப்போது ஆதிக்க சாதி வெறி மனநிலை கொண்ட விஜயகாந்துடன் கூட்டு சேர்ந்தவுடன் இவைகளைப் பற்றி பேச மறுத்து ஓட்டு வேட்டைக்கு மட்டும் உங்களை அழைப்பது அணிகளுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?
  • ஆந்திராவில், என்.டி.ஆர்., தமிழகத்தில் எம்.ஜி.ஆர். வழியில் கவர்ச்சிவாதமும், பாசிச–இந்து மதவெறியர்களின் பங்காளியுமான விஜயகாந்துக்கு கொடி பிடிப்பதும் கோஷம் போடுவதும், ‘கிங்’ ஆக்குவதுமா மாற்றத்தைக் கொண்டு வரும்?
  • தமிழக அரசியலில் முதலில் கவர்ச்சிவாத, பாசிச கோமாளி எம்ஜிஆரை உயர்த்திப் பிடித்த இடது சாரிகள், தனக்கென்று தனிப்பாதையை அமைத்துக் கொள்ளாமல், மீண்டும் விஜயகாந்தை முன்னிறுத்துவது, வெட்கக் கேடு என்று முதலாளித்துவ ஊடகங்களே காறித்துப்புகின்றன! ஆனால், ஓட்டுப்பொறுக்கி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று துடைத்துப் போட்டுவிட்டு பிரச்சாரத்திற்கு கிளம்புவது தன்மானத்திற்கு இழுக்கு இல்லையா?
  • இறுதியாக, ஈழப்பிரச்சினை முதல் சமீபத்தில் உடுமலையில் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட சங்கர் மரணம் வரை எந்தப் பிரச்சினையிலும் போராடாத, வாயே திறக்காத விஜயகாந்த் முதல்வர் என்றால், குறைந்தபட்சம் மக்கள் பிரச்சினைக்குப் போராட வேண்டும் என்று செயல்படும் உங்களுக்கு மனசாட்சி உறுத்தாதா?

இந்தப் பிரசுரம், CPI, CPM கட்சியில் செயல்படும் உங்களை அவமானப் படுத்துவதற்காகவோ, கோபப்படுத்துவதற்காகவோ இல்லை. இந்தியாவில் 1925-ல் கம்யூனிச இயக்கம் தொடங்கியது முதல் இன்று வரை இலட்சக்கணக்கான தோழர்கள், இரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து, தியாகம் செய்து வளர்த்த இயக்கத்தை இப்படி நாசம் செய்வதற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காகவே!

  • முதலாளித்துவத்திற்கு காவடி தூக்கும் போலி கம்யூனிச கட்சிகளை தூக்கியெறியுங்கள்! புரட்சிகர கம்யூனிச அமைப்புகளில் அணிதிரண்டு செயல்படுங்கள்!
  • CPI, CPM கைவிட்டு விலகிப் போன இந்தியப் புரட்சியை முன்னெடுப்போம்!
  • விவசாயிகள் – தொழிலாளர்கள் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவோம்!

 

தொடர்புக்கு
திருச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம் – 9095604008
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – 9943176246
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 9791692512
பெண்கள் விடுதலை முன்னணி – 9750374810

புதுச்சேரி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
எண்-5, காவல்நிலையம் சாலை, ஆரம்ப சுகாதார நிலையம் அருகில்,
திருபுவனை, புதுச்சேரி.
செல்: 9597789801

3. தேர்தல் ஆணையத்திற்கு சவால்!

தேர்தல் ஆணையத்திற்கு சவால்!

தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை 100% நடத்திக் காட்ட முடியுமா? ரூ 1 கோடி பரிசு.

இலவசக் கல்வி தர வக்கில்லாத இந்திய ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு கேடா?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புரட்சிக மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி
தொடர்புக்கு 99431 76246

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க