privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்வீட்டு வேலையும் வேலையே - பெண்களின் மே தின பேரணி - படங்கள்

வீட்டு வேலையும் வேலையே – பெண்களின் மே தின பேரணி – படங்கள்

-

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் மே 2016 தொழிலாளர் தினத்தையொட்டி வெளி நாட்டு தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறையை கண்டித்து ஊர்வலம் நடத்தினர். சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட C189 அமுல்படுத்து என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி, அதாவது வாரத்தில் ஒரு நாள் விடுமுறை மற்றும் குறைந்தப்பட்ச ஊதியம் என்பது எங்களின் உரிமை என்ற முழக்கங்களொடு பேரணி நடத்தினர்.

லெபனானில் இரண்டு இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் பலர் வீட்டு வேலை செய்யும் தொழிலாளிகளாக பணிப்புரிகின்றனர் இவர்கள் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாள் போன்ற நாடுகளை சார்ந்தவர்கள். தங்களுடைய முதலாளிகளின் வெளிப்படையான கடிதமின்றி இவர்கள் எந்த காரணத்திற்காகவும் நாட்டை விட்டு வேளியேற முடியாது, இந்நிலை அவர்களை மேலும் மேலும் அதிக சுரண்டலுக்கு ஆளாக்குகிறது.

லெபனானில் இவர்கள் மீது அப்பட்டமான அத்துமீறல் நடைபெறுகிறது. குறிப்பாக வேலை நேரத்தை அதிகரிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது, அடிப்பது, துன்புறுத்துவது, பாலியல் ரீதியில் சித்ரவதை, எங்கும் செல்ல முடியாமல் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொள்வது என தொடர்கிறது. லெபனான் தொழிலாளர் சட்டம் இவர்களுக்கு பாதுக்காப்பு வழங்க மறுக்கிறது. கடந்த வருடம் தங்களின் நிலைமைக்காக போராட, இந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களுக்காக ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி போராடி வருகின்றனர்.

இந்த வருட மே தினத்தில் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பேரணி நடத்தினர்.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
KAFA என்ற மனித உரிமைகள் குழுவின் அறிக்கையில் இங்கு 62 சதவிகித புலம்பெயர் உள்நாட்டு தொழிலாளர்கள் இடைவேளையின்றி 16 லிருந்து 20 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
KAFA என்ற மனித உரிமைகள் குழுவின் அறிக்கையின் படி இங்கு 62 சதவிகித புலம்பெயர் உள்நாட்டு தொழிலாளர்கள் இடைவேளையின்றி 16 லிருந்து 20 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பல தொழிலாளிகள் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து வீட்டு காவலில் அடைத்து சித்ரவதை செய்யப்படுகின்றனர்.
இங்கு வேலைப்பார்க்கும் பல தொழிலாளிகளின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து வீட்டு காவலில் அடைத்து சித்ரவதை செய்யப்படுகின்றனர்.
” உழைக்கும் மக்களின் போராட்டம் நீடுழி வாழ்க ” – என்ற பதாகையை தன் கையில் ஏந்தியப்படி நிற்கும் தொழிலாளி.
” உழைக்கும் மக்களின் போராட்டம் நீடுழி வாழ்க ” – என்ற பதாகையை தன் கையில் ஏந்தியப்படி நிற்கும் தொழிலாளி.
எத்தியோப்பியாவை சேர்ந்த ஒரு ஆண் தொழிலாளி “ எங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், இங்கு நிறைய பேர் பல்வேறு பிரச்சினை கொண்டுள்ளார்கள், எனக்கு தெரிந்து பல பெண்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எங்களின் உரிமைக்கான குரல் இது ”
எத்தியோப்பியாவை சேர்ந்த ஒரு ஆண் தொழிலாளி கூறுகையில் “ எங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், இங்கு நிறைய பேர் பல்வேறு பிரச்சினை எதிர் கொள்கிறார்கள், எனக்கு தெரிந்து பல பெண்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எங்களின் உரிமைக்கான குரல் இது ”
அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என முழக்கமிட்டனர்
அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் கொண்டுவர
வேண்டும் என பேரணியில் முழக்கமிட்டனர்
மாலியிருந்து வேலைக்காக இங்கு வந்த பிண்டா ”என்னுடைய சம்பளம் மிக குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் நான் வேலை பார்க்கிறேன். 2 வாரங்களுக்கு ஒரு ஞாயிறு மட்டும் தான் விடுப்பு அளிக்கபடுகிறது இருப்பினும் ஒரு மாதத்திற்கு 200 டாலர்கள் தான் எனக்கு கொடுக்கிறாங்க அதனாலதான் நான் இங்க இருக்கிறேன்”
மாலியிருந்து வேலைக்காக வந்த பிண்டா ”என்னுடைய சம்பளம் மிக மிக குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் வேலை பார்க்கிறேன். 2 வாரங்களுக்கு ஒரு ஞாயிறு மட்டுமே விடுப்பு அளிக்கபடுகிறது இருப்பினும் ஒரு மாதத்திற்கு 200
டாலர்கள் தான் கொடுக்கிறாங்க அதனாலதான் நான் இங்க(பேரணியில்) இருக்கிறேன்”
மொரிசியஸை சார்ந்த மெலிண்டா என்பவர் கூறுகையில் ”எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக எதிர்த்து போராடுவது எனக்கு நன்றாக இருக்கிறது. எங்களுக்கு நல்ல ஊதியமும் விடுப்பும் வேண்டும். லெபனானலில் இனவாதம் அதிகமாக உள்ளது ”
மொரிசியஸை சார்ந்த மெலிண்டா என்பவர் கூறுகையில் ”எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக எதிர்த்து போராடுவது எனக்கு
பிடித்திருக்கிறது. எங்களுக்கு நல்ல ஊதியமும் விடுப்பும் வேண்டும். லெபனானலில் இனவாதம் அதிகமாக உள்ளது ”
KAFA அறிக்கையின் படி இங்கு 82 சத்விகித பெண்கள் வலுக்கட்டாயமாக உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
KAFA அறிக்கையின் படி இங்கு 82 சத்விகித பெண்கள் வலுக்கட்டாயமாக கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
அரபு நாட்டில் முதல் முறையாக புலம்பெயர் உள்நாட்டு தொழிலாளர்கள் கடந்த வருடம் தொழிற்சங்கத்தை நிறுவினர். இன்னும் இச்சங்கம் லெபனான் அரசால் அங்கிகரிக்கப்படவில்லை.
அரபு நாட்டில் முதல் முறையாக புலம்பெயர் உள்நாட்டு தொழிலாளர்களால் கடந்த வருடம் நிறுவப்பட்ட இத்தொழிற்சங்கம் இன்னும் லெபனான் அரசால் அங்கிகரிக்கப்படவில்லை.
மொரிசியஸை சார்ந்த ஜாக்கி என்பவர் கூறுகையில் ” கடந்த 20 வருடங்களாக இங்கு பணிபுரிகின்றேன். என்னுடைய பாஸ்போர்ட் முதலாளிக்கிட்டதான் இருக்கு. இந்த 20 வருசத்துல என்னுடைய தாய், மகள் இறந்தவிட்டனர். அவர்களின் இறப்புக்குக்கூட என்னால போக முடியல எனக்கு நீதி வேண்டும்”
மொரிசியஸை சார்ந்த ஜாக்கி என்பவர் கூறுகையில் ” கடந்த 20 வருடங்களாக இங்கு பணிபுரிகின்றேன். என்னுடைய பாஸ்போர்ட்
முதலாளிக்கிட்டதான் இருக்கு. இந்த 20 வருசத்துல என்னுடைய தாய், மகள் இறந்தவிட்டனர். அவர்களின் இறப்புக்குக்கூட என்னால போக முடியல. எனக்கு நீதி வேண்டும்”
போராட்டக்காரர்கள் முதலாளிக்கு ஆதரவாக இருக்கும் கபால அமைப்பு நீக்க வேண்டும் கோரினர்
போராட்டக்காரர்கள் முதலாளிகளின் சுரண்டலை ஏவிவிடும் கபால அமைப்பை நீக்க வேண்டும் கோரினர்
இறுதியாக ஆடல் பாடலுடன் பேரணி நிறைவுற்றது
இறுதியாக ஆடல் பாடலுடன் பேரணி நிறைவுற்றது

தொகுப்பு: கலா

நன்றி: அல் ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க